Archive for the ‘பெரிய திரு மடல்’ Category

பெரிய திருமடல் -9-பின்னைத் தன்னாபி வலயத்து-18-அது நிற்க -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை/ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்- வியாக்யானம்-

June 14, 2014

 

பின்னைத் தன்னாபி வலயத்துப் பேரொளி சேர்
மன்னிய தாமரை மா மலர்ப் பூ பூத்தம் மலர் மேல் —–9
முன்னம் திசை முகனைத் தான் படைக்க -மற்றவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அம்மறை தான் –10
மன்னு மறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில்
நன்னெறி மேம்பட்டன நான்கு என்றே நான்கினிலும் –11
பின்னையது பின்னைப் பெயர் தரும் என்பதோர்
தொன்னெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழிலையும் –12
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தித்
துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெஞ்சுடரோன் —-13
மன்னு மழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்-
இன்னதோர் தன்மையராய் ஈங்குடலம் விட்டு எழுந்து —-14
தொன்னெறிக் கண் சென்றார் எனப் படும் சொல் அல்லால்
இன்னதோர் காலத்து இனையார் இது பெற்றார் —-15
என்னவும் கேட்டு அறிவதில்லை உளது என்னில்
மன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள் —16
அன்னதோர் இல்லியினூடு போய் வீடு என்னும்
தொன்னெறிக் கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே —-17
அன்னதே பேசும் அறிவில் சிறு மனத்து ஆங்கு
அன்னவரைக் கற்ப்பிப்போம் யாமே அது நிற்க ——18-

—————————————————————-

பின்னைத் தன்னாபி வலயத்துப் –
பூவலயம் என்னுமா போலே திரு நாபி   வலயம் என்று-அதனுடைய பெருமையைச் சொன்னபடி –

பேரொளி சேர் மன்னிய தாமரை மா மலர்ப் பூ பூத்து –
கார்ய ரூபமான ஜகத்தும் இதுக்கு போராது என்னும்படியான விலஷணமான ஒளியை உடைய -கார்யம் பிரவர்த்தமாகா நின்றாலும்
காரணம் நசியாதே -நித்யமாய்-
ஜகத் காரணமான தாமரைப் பூவை உண்டாக்கி –
அன்றியே
மிக்க ஒளி சேர்ந்து இருக்கையாய்  -அது தான்
நித்யமாய் இருந்துள்ள தாமரை -என்றுமாம் –

அம் மலர் மேல் முன்னம் திசை முகனைத் தான் படைக்க –
அச் செவ்விப் பூவிலே நாலு பூ தோன்றினால் போலே-சிருஷ்டி காலத்திலேயே சதுர்முகனைத் தான் உண்டாக்க –

மற்றவனும்-
இவன் சிருஷ்டித்த அநந்தரம்-இவனோ ஈஸ்வரன் -என்று
மசக்குப் பாலிடலாம் படி  பெருத்த அந்தச் சதுர முகனும் –
முன்னம் படைத்தனன் நான்மறைகள் –
அந்தச் சதுர முகனும் முன்பு உண்டாக்கின நான்மறைகள் என்றால் போலே இருக்கிறது
சர்வேஸ்வரன் இவ் வேத அஷர ராசியை
ஸூ ப்த பிரபுத்த ந்யாயத்தாலே முன்புத்தை ஆநு பூர்வியை ஸ்மரித்துச் சொல்லும் என்று
வேதத்தின் உடைய அபௌ ருஷேயத்வம் சொல்லா நிற்க
இவன் சிருஷ்டித்தான் -என்னில் பிரமாண விருத்தமாம் இ றே-
இனித் தானே
யோ ப்ரஹ்மாணம் விததாதி   பூர்வம் யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை -என்று சொல்லுகிற்றவற்றோடும் விரோதிக்கும் இ றே
ஆனால் பின்னை என் சொல்லிற்று ஆகிற்றது  என்னில்
இன்னான் தன் பிதாவின் பக்கல் படைத்த த்ரவ்யம் இன்னதனை -என்னுமா போலே
அந்த ப்ரஹ்மாவும் சர்வேஸ்வரன் பக்கல் அதிகரித்த நாலு வேதங்களும் -என்றபடி-
பிறந்து படைத்தான் -என்னக் கடவது இ றே பெற்றத்தை –
அம்மறை தான் –
அந்த வேதங்கள் தான்

மன்னு மறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில்  நன்னெறி மேம்பட்டன நான்கு என்றே 
தர்மார்த்த காம மோஷங்கள் என்று லோகத்திலே நன்றான வழியாலே மேற்பட்ட நாலு புருஷார்த்தத்தோடே அடங்கப் பெற்றோம் இ றே –
முந்துற முன்னம் –அறம் என்கிறது தர்மத்தை –
மன்னு மறம்-என்கிறது சாத்திய ரூபத்தாலும் சாதனா ரூபத்தாலும்
ஒக்க கொண்டு நிற்பதொரு நிலை உண்டு இ றே
பொருள் என்கிறது -அர்த்த புருஷார்த்தத்தை
இன்பம் என்கிறது -தாம் ஆதரித்த காம புருஷார்த்தத்தை
வீடு என்கிறது நாலாவதாகச் சொல்லுகிற மோஷ புருஷார்த்தத்தை –

அந்நாலிலும்-பின்னையது பின்னைப் –
பின்னையது உண்டு -பிற்படச் சொல்லுகிற மோஷம்-அது பின்னையது-பின்னை-
அது பின்னை பின்னை என்றே போமித்தனை-இச் சரீரத்துடன் பெற்று அறிவார் இல்லை -அத்தைக் காற்கடைக் கொள்ளுகையாலும் சொல்லுகிற வார்த்தை இ றே
ஆசைப் பட்ட இச் சரீரத்தை விட்டு வேறு ஒரு சரீரத்தைப் பரிஹரித்து-ஒரு தேச விசேஷத்திலே போய்க்-காலாந்தரே அனுபவிக்குமது ஒரு அனுபவமாயற்றதோ
அது ஓன்று அல்ல வி றே-அது தான் அவ்வசனங்கள் சொல்லக் கேட்கும் இத்தனை –
கண்டு வந்தார் ஒருவரும் இல்லை –

பெயர் தரும் என்பது –
பெற்றியத் தரும்-இஸ் சரீரத்தை விட்டு வேறு ஒரு சரீரத்தை பெற்று அனுபவிக்க வேண்டியதாய் இருக்கும் –
இஸ் சரீரத்தை விட்டு வேறு ஒரு சரீரத்தைப் பெற்று அனுபவிக்கை  யாவது-ஒருவன் தபஸ்ஸூ பண்ணி-அந்த தப பலம் வேறு ஒருவன் புஜிக்கும் மாத்ரம் அன்றோ-அன்றியே
பின்னைப் பெயர் தரும் -என்றாய் அதுக்கும் பொருள் அதுவே –

ஓர் தொன்னெறியை வேண்டுவார் –
சம்சாரத்தை ஒழித்து நிரதிசய ஸூ கமான மோஷத்தை வேண்டுவார் –
இப்படிச் சொல்லப் படா நின்றுள்ள பழையதான மோஷத்தை பெற வேண்டி இருப்பார் –
அத்தேசம் பிராப்யமானால் அங்குத்தைக்குப் போம் வழியும் ப்ராப்யாந்தர்க்கதமாகக் கடவது இ றே-
வேண்டுவார் –
அத்தையும் ஒன்றாக நினைத்து அபேஷிப்பார் என்று தமக்கு அதில் உண்டான அனாதாரத்தை சொல்லுகிறார் –

இனி இப் புருஷார்த்தத்தை அனுஷ்டிக்கும் சாதனத்தின் உடைய பொல்லாங்கை உபபாதிக்கிறார் -மேல் –

வீழ் கனியும் –
தானே விழுந்து பசை அற்ற கனியும்

ஊழிலையும் –
முளையிலே விழுந்த இலையும் –
முற்றிப் பழுத்த சருகான இலையும் –

என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தித்-
அதாவது -சருகு இலை தின்றும்  காயும் கிழங்கும் தின்றும் இ றே தபஸ் ஸூ அனுஷ்டிப்பது
அவதாரணத்தாலே-ஒரு வ்ரத சமாப்தி பிறந்து பின்னை ஒரு வ்ரத ஆரம்பித்ததின் முன்னே யாகிலும்
ஏகவாரம் அன்னம் புஜித்ததும் இல்லை என்று தோன்றுகிறது  –
இத்தால் அநவரத காயக் கிலேசம் சொல்லுகிறது
நுகர்ந்து –
அந்த சாதனத்தில் பண்ணின ஆதரம் தோற்ற போக்யதை உண்டானது போலே இருக்க புஜிககை-
உடலம் தாம் வருந்தி
அபிமத விஷயத்தைக் கண்டு இங்கே அனுபவிக்கலாய் இருக்கிற சரீரத்தை கிலேசிப்பித்து
தாம் வருந்தி
இவனுடைய கர்மம் கொண்டு போய் கிலேசிப்பித்தல்
தைவம் கொண்டு போய் கிலேசிப்பித்தல் செய்யும் அது ஒழிய
தாமே கிலேசிப்பித்து-

துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் –
இலையாலே நெருங்கச் செய்த பர்ண சாலைகளிலே கிடந்தும் –
அதில் நின்றும் உதிர்ந்த புழுதியானது கண்ணிலே புக்கு நோவு படும்படியாகத் துஞ்சியும்
நித்ரை மரணத்தோடு  பர்யாயம்  ஆகையாலே துஞ்சியும் -என்கிறது –

வெஞ்சுடரோன் மன்னு மழல் நுகர்ந்தும்  –
உஷ்ண கிரணனான ஆதித்யன் உடைய
வெய்யிலை பஷித்தும்-
மன்னு மழல் நுகர்ந்தும்-என்கிறது
உள்ளுப் புக்கால் அழல் மாறாதே இருக்கையும் -இதுவே தண்ணீராக நுகருகையும் –
காற்றை பஷித்தும் வெய்யிலை பஷித்தும் இ றே சரீரத்தை ரஷிப்பது –

வண் தடத்தினுள் கிடந்தும்-
அழகியதாக ஜலக்ரீடை பண்ணிப் போது போக்கலான தடாகங்களிலே சீத காலத்திலே
புக்கு நீர்க்காக்கை போலே முழுகிப் பாசி ஏறக் கிடந்தும் –

இன்னதோர் தன்மையராய் –
தப பலம் பெற்று அதிலே வ்யுத்புத்தி பண்ணினாலும் அதுக்கு ஆளாகாதபடி
துக்கமே ஸ்வ பாவம் ஆனபடி –

ஈங்கு உடலம் விட்டு எழுந்து –
நினைத்த படி அனுபவிக்கலான இங்கே தானாக அபிமானித்து
நெடுநாள் முகம் பழகின சரீரத்தை விட்டு எழுந்து போய்-

தொன்னெறிக்   கண் சென்றார் எனப் படும் சொல் அல்லால்
மோஷத்து ஏறப் போனார்கள் என்கிற உக்தி அல்லது –

இன்னதோர் காலத்து –
ஏதேனும் ஒரு காலத்திலே –

இனையார் இது பெற்றார் என்னவும் கேட்டு அறிவதில்லை –
ஆரேனும் ஒருவர் இப் புருஷார்த்தத்தைப் பெற்றார் என்று கேட்டு அறிவது இல்லை –
பிரமாணங்கள் சொல்லக் கேட்கும் அத்தனை –
ஸூ கோ முக்தோ  வாமதேவோ முக்த -என்று வசனங்களைப் படிக்கும் இத்தனை அல்லது-கண்டு போந்தார் உண்டாகச் சொல்லுவார் இல்லை –
இன்னார் பெற்றார் என்று சொல்லக் கேட்டு அறிவது இல்லை –
ஸூ க வாம தேவாதிகள் முக்தர் என்று சொல்லா நின்றதே
கேட்டு அறியத் தட்டென் என் என்னில் -நான் போனேன் இன்னபடி அனுபவித்தேன் என்று அங்குத்தை  யாவர் படியைக்-கண்டு வந்தார் சொல்லக் கேட்டு அறிவது இல்லை –

உளது என்னில்-
முதலிலே அங்கன் இருப்பதொரு புருஷார்த்தம் இல்லை –
அக்னிநா சிஞ்சேத்-அக்னியால் நனைக்கக் கடவன் -என்னுமா போலே
அது உண்டாக வேனுமாகில் அது இருக்கிற படி கேட்கலாகாதோ –

மன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள் –
நித்யமாய் அனைய ஒண்ணாத படி கொடிதான கிரணங்களை யுடைய
ஸூ ர்ய மண்டலத்துள் இட்டுப் போக வேணுமாம் –
அவன் நூறாயிரம் யோஜனைக்கு அவ்வருகே சஞ்சரிக்க
இங்கே அவன் வெய்யில் பொறு க்க மாட்டாத இவன்
அவனை அணையப் போகையும் அன்றியே
அவனுடைய உள்ளே போக வேணுமாம்   –
அன்னதோர் இல்லியினூடு போய் 
அவன்தான் அப்படிப் போமிடத்து ஒரு பெரு வழி பண்ணிப் போகையும் அன்றியே
அப்படிப் பட்டதோர் இல்லியின் உள்ளிட்டாம் போவது-

வீடு என்னும்தொன்னெறி க் கண் சென்றாரைச் சொல்லுமின்கள் –
இவன் தான் ராஜ குலம் தோற்றப் போகக் கடவனாம் –
அவன் இவனுடைய சரீர விச்லேஷத்தளவும் அவசரம் பார்த்து நின்று முகம் காட்டக் கடவனாம் –
ஹார்த்தா நுக் ருஹீத  -பிரம்மா ஸூ தரம் -4-2-16-பரமாத்வால் அனுக்ரஹிக்கப் பட்டவனாய் வழி அறிந்து செல்லுகிறான் இந்த முக்தன் –
என்கிறபடியே ஆதி வாஹிகர் கையிலே காட்டிக் கொடுக்குமாம் –
தான் முன்னே கைவிளக்கு பிடித்துக் கொண்டு போமாம் –
இப்படி அந்த மோஷம் ஆகிற -பழையதாய் இருக்கிற தேசத்திலே
நான் போனேன் இன்னது கண்டேன் இன்னது அனுபவித்தேன் -என்று
வந்தார் ஒருவரைக் காட்டிச் சொல்லிக் காணுங்கோள்-
இப்படி அங்கே போய் வந்தான் ஒருவன் சொல்லுமாகில் அதுவும் ஒன்றாகக் கடவது –
சொல்லாதே-
இப்படி தான் பிரமாண ஸ்ரேஷ்டமான ப்ரத்யஷ அநுமா நாதிகளாலே இத்தை சாதிக்க
இதுக்கு ஒரு உப பத்தியை இட்டு ஏத்த மாட்டாதே –

அன்னதே பேசும் –
பின்னையும் இதுக்கு உத்தரமாக மேன் மேல் என
ஸூ கோ முக்த வாம தேவோ முக்த -என்று வசனம் படிக்கிற இத்தால் என்ன லாபம் உண்டு –

அறிவில் –
அவர்கள் ஆகிறார் –
தந்தாமுக்கு என்ன ஒரு விவேகம் இல்லாத அறிவு கேடர்

அறிவில்சிறு மனத்து –
இப்போது அறிவில்லை யாகிலும் மேல் அறிவு உண்டாகைக்கு ஈடான நெஞ்சில் அகலமும் இல்லை

ஆங்கு அன்னவரைக் கற்ப்பிப்போம் யாமே –
அவ் அவஸ்தா பன்னர் ஆனவர்களை கற்பிக்கை நமக்கு பரமாவதே –
கையிலே மடலை எடுத்துக் கொண்டு-இரண்டு அருகு உள்ளாறும் மலைக்க
பெரிய திரு நாளில் போலே உலாவித் திரியலாய் இருக்க-அவ்வறிவு கேடரை அறிவிக்கை நமக்கு பரமாவதே –

அது நிற்க –
இப்போது அத்தை விடுக-

————————————————————————–

பின்னைத் தன்னாபி வலயத்துப் பேரொளி சேர் மன்னிய தாமரை மா மலர்ப் பூ பூத்து –
சர்வ ஸ்ரஷ்டாவான தன்னுடைய நபி யாகிற குழலிலே மிக்க ஒளி சேர்ந்து இருப்பதாய்
ஏக ரூபமாய்ப் பெருத்து இருந்துள்ள தாமரை யாகிற பூவைப் பூப்பித்து –
தன் -என்கையாலே -ஜகத்காரண பூதன் -என்னும் இடம் தோற்றுகிறது-
நாபி வலயம் -என்கையாலே கார்ய ரூப பிரபஞ்சத்தின் உடைய  அகலத்துக்கு எல்லாம்
போரும்படியாக காரண பூதமான அதினுடைய அகலத்தைச் சொல்லுகிறது –
பேரொளி சேர் -என்கையாலே -ஸ்வேதர சமஸ்த வஸ்து வுக்கும் இது காரணம் என்றால்
அப்படிக்குப் போரும்படி காரணத்வ பிரயுக்தமான தேஜஸ் ஸில் ஒன்றும் குறையாது இருக்கை –
மன்னிய தாமரை -என்கையாலே -அப்போது உண்டான நன்மையைச் சொல்லுகிறது
அன்றிக்கே-இக் கட்டளை தான் ப்ரவாஹ ரூபேண நித்யமாய்ப் போரும் இ றே –
அத்தைப் பற்றச் சொல்லுகிறது –
மா மலர் –
நாநா வான தேவாதி கார்யங்களுக்கு எல்லாம் இது காரணம் என்றால் போரும்படியான
பெருமையை யுடைத்தாய் இருக்கை –
பூத்து -என்றது -பூப்பித்து -என்றபடி
மா மலர் பூத்துதான் கிடந்து-என்று கீழோடு அந்வயம் –

அம் மலர் மேல் முன்னம் திசை முகனைத் தான் படைக்க –
அந்தப் பூவிலே  நாலு பூ பூத்தால் போல் இருக்கை-
முன்னம் –
ப்ரஹ்ம சிருஷ்டிக்கு முன்புள்ள எல்லாம் தானே கை தொட்டுச் செய்கையாலே
நம்மோட்டைப் பரிமாற்றமும் கூடப் போறாத படியான சௌகுமார்யத்தை உடையவனுக்கு  –
ஓர் வித்தைக் கொண்டு கார்யம் கொள்ளுகையும் மிகையாய் இருக்க
இவனைப் படைக்கிற இது எதுக்கு என்று அவர்கள் நினைத்து இருக்க
அவனுக்கு அவ்வருகு உண்டானவற்றை இவனைக் கொண்டாகிலும் கொள்வோம் என்று-முந்துற முன்னம் சதுர்முகனை சிருஷ்டித்தான் –
ப்ரதமஜன் -என்னக் கடவது இ றே-
தான் படைக்க –
அவயவ தா நேன தானே உண்டாக்கினான் –
-மற்றவனும்-
சிருஷ்டித்து விட்ட அநந்தரம்-இவனோ ஈஸ்வரன் -என்று சொல்லலாம் படி பெருத்த அந்தச் சதுர முகனும் –

முன்னம் படைத்தனன் நான்மறைகள் –
தனக்குப் பிதாவான சர்வேஸ்வரன் பக்கல் இவன் பெற்றுப் படைத்தது நாலு வகைப் பட்ட வேதங்கள் –
பிதாவின் பக்கல் பெற்றுப் பரிபாலித்தது-இன்னது என்னக் கடவது இ றே –
அல்லது போக்கி வேதங்களுக்கு இவன் ஸ்ரஷ்டா வல்லன் –
ஸ்ரஷ்டா வாகாமைக்கு சர்வேஸ்வரன் தானும் ஒக்கும் இ றே –
ஆநு பூர்வியை ஸ்மரித்துச் சொல்லுமதுக்கு மேற்பட ஸ்ரஷ்டா வல்லாமைக்கு ஜீவ ஸ்ருஷ்டியோபாதி இ றே  வேத சிருஷ்டியும் –
ஆனால் இவற்றை உண்டாக்குகை யாவது என் என்னில்
ஸூ ப்த பிரபுத்த ந்யாயத்தாலே
சக்த்ய வஸத ப்ரபை போலே அவன் பக்கலில் லயித்துக் கிடக்குமத்தை
சிருஷ்டி காலம் வந்த வாறே ஸ்மரித்துச் சொல்லும் அத்தனை இ றே –
பூர்வ பூர்வ உச்சாரணத்தைப் பற்ற உத்தர உத்தர உச்சாரணம் ஆகையாலே
ஆநு பூர்வீ க்ரமத்தை ஸ்மரித்துச் சொல்லும் இத்தனை –

அம்மறை தான் –
அந்த வேதங்கள் தான் புருஷார்த்தமாகச் சொல்லுகிறது –

மன்னு மறம் பொருள் இன்பம் வீடு என்று –
இங்கனே நன்றான புருஷார்த்தங்கள் நாலு அன்றோ –
ஜீவ பேதங்கள் ஒவ் ஒரு புருஷார்த்தங்கள் உண்டாய்
அவை  முந்துற முன்னம் எடுத்துக் கழிக்க வேண்டுவது இல்லையே
அறம் -தர்மம்
பொருள் -அர்த்தம்
இன்பம் -ஸ்வ பிரயோசனமான காமம்
வீடு -மோஷம்
மன்னுகை
சாத்திய சாதனா ரூபத்தாலே நிலை நிற்கும் ஆகாரம் உண்டு இ றே -அத்தைப் பற்ற –
அன்றிக்கே
அல்லாத அர்த்த காம மோஷங்கள் இதிலே பிறந்தது ஆகையாலே
அத்தைப் பற்ற என்றதாகவுமாம் –
அன்றிக்கே
இம்மன்னுகை தான் மற்றும் உள்ளவைற்றிலே யும் ஏற்றிச் சொல்லவுமாம்-
அது இவருடைய அபிப்ராயத்தால் அல்ல –
வாதி பிரதிகள் உடைய புத்தி பேதத்தாலே
ஏவம் விதமான தர்மமும் காம  சேஷம்  –
காமமே புருஷார்த்தம்
இனி பகவத் புருஷார்த்தம் ஓன்று உண்டு என்று சொல்லுவார்கள் –
நன்னெறி மேம்பட்டன நான்கு என்றே –
என்று இங்கனே லோகத்திலே நன்றான வழியாலே பொருந்தப் பட்ட புருஷார்த்தங்கள் நாலு அன்றோ –
நான்கினிலும் –
அந் நாலிலும்-பின்னையது பின்னைப்-
அது பின்னையுமாய் இருக்கும்
அப்போது இப்போது என்று சொல்லிப் போரும் இத்தனை அல்லது பெற்று அறிவார் இல்லை-பின்னையும் அது நானா விதமாகச் சொல்லப் பட்ட புருஷார்த்தம் –

பெயர் தரும்-
பேற்றிலே தரும் என்பர்கள்
அந்த பிரகிருதி சமனந்தரம் காணப் பெறுவது என்பர்கள்
அதவா
பின்னையது பின்னை –
பின்னையது கடை வழி சொன்ன மோஷமானது
பின்னை
காலாந்தரே தேஹாந்தரே தேசாந்தரே பெயர் தரும் -பேற்றைத் தரும்

எனபது –
என்று சொல்லுகிறார்கள் -என்னவுமாம் –

ஓர் தொன்னெறியை வேண்டுவார் –
இப்படிச் சொல்லப் படுகிறனவாய்
அத்விதீயமாய்
பழையதாய்
இருக்கிற ப்ராப்யத்தை வேண்டுவோர்
அர்ச்சிராதி மார்க்கத்தை வேண்டுவோர் -என்னவுமாம்
ஜ்ஞானம் பிறந்த அநந்தரம்
கதி சிந்தையோடு
வழியில் போக்கோடு
தேச விசேஷ பிராப்தியோடு
வாசி அற ஜ்ஞான பலமாய்  வருகிறது ஆகையாலே ப்ராப்ய அந்தர்கதமாகக் கடவது –
இத்தையும் ஒரு புருஷார்த்தமாக நினைத்து பெற வேண்டி இருப்பார்க்கும்
இத்தால் ஸ்வ அபிமதம் அன்று என்னும் இடம் தோற்றுகிறது –
இப்பேறு  பெற வேணும் என்று இருப்பார் பண்ணும் சாதன அனுஷ்டாத்தின் உடைய
அருமை இருக்கும் படியை சொல்லுகிறது மேல் –
வீழ்  கனியும் ஊழிலையும் என்னும் இவையே –
இனிய வஸ்துவை புஜிக்கைக்கு இட்டுப் பிறந்த இவன் புஜிக்கிற த்ரவ்யங்கள் உடைய
அசாரத்தை நினைத்து  -இவற்றை தாம் வாய் விட்டுச் சொல்ல மாட்டாமே
இப்புடையிலே -என்னும் இவையே -என்கிறார் –

நுகர்ந்து –
இவற்றை புஜிக்கும் போது அம்ருத பானம் பண்ணுவாரைப் போலே போக்ய புத்தி கொண்டு  புஜிக்க வேணும் –
தனுடைய ஹேயதை நெஞ்சில் படில் புருஷார்த்த சித்தி இல்லை –

உடலம் தாம் வருந்தித்-
ச்தூலோஹம் க்ருசோஹம்-என்கிறபடி
நான் பொறுத்தேன் நான் இளைத்தேன் என்னலாம் படி தான் அபிமானித்த சரீரத்தை ஒறுத்து-அபிமத விஷயத்தை அனுபவிக்கைக்கு பரிகரமான சரீரத்தை ஒறுத்து   –

துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் –
நெருங்கத் தொடுத்த பர்ண சாலைகளிலே நித்ரை பண்ணியும்
நித்ரைக்கும் வினாசத்துக்கும் சாராதன சப்தமான துஞ்சுதலை சொல்லுகிறது
நித்ரை மரண கல்பமாகையாலே –

வெஞ்சுடரோன் மன்னு மழல் நுகர்ந்தும் –
சர்வ பதார்த்தங்களையும் தபிப்பிக்கும் உஷ்ண கிரணனான ஆதித்யன் உடைய பொருந்தின உஷ்ணத்தை புஜித்தும்-
பதார்த்தங்கள் உள்ள விடம் எங்கும் புக்கு வ்யாபிக்கக் கடவதே புறப்பட்ட
போதொடு உள்ளே போய் புக்க போதொடு வாசி அற சுடக் கடவதாய் இருக்கிற அழலை நுகர்ந்தும்
சந்த்யா காலத்தில் ஆதித்ய கிரணன்களே யாயிற்று புஜிப்பது
தாஹகமான கிரணங்களை போகய பூதமாய் இருப்பதொரு பலம் போலே புஜித்து –

வண் தடத்தினுள் கிடந்தும்-
அபிமதைகளான ஸ்திரீகளுக்கும் நினைத்த படி ஜலக்ரீடாதிகள் பண்ணி அனுபவிக்கைக்கு யோக்யமான
அழகிய தடாகத்திலே அகமர்ஷணம் பண்ணியும் –
உட்கிடந்தும் –
மேலே கிளம்புதல்
இல்லே வர்த்திக்கிற ஜலசர சத்வங்களில் கண் வைத்தல் செய்ய ஒண்ணாது –
கிடந்தும்
அநேகம் ஆயிரம் வஸ்த்ரம் கிடக்கும் ஆயிற்று –
இன்னதோர் தன்மையராய்
ஏவம் வித ஸ்வபாவத்தை யுடையராய்

ஈங்கு –
இங்கு இருக்கும் நான் –

உடலம் விட்டு எழுந்து
அநந்தரம்தானாக அபிமானித்த சரீரத்தை பொகட்டு
தேசாந்தரே கை கழியப் போய்-

தொன்னெறிக்   கண் சென்றார் எனப் படும் சொல் அல்லால்-
பழையதான மோஷத்து ஏறப் போனார்கள் என்று சொல்லப் படுகிற சொல்லே உள்ளது –
சொல்லால் அல்லால்-
உக்தி மாத்ரமேயாய்
ஒழியக் கண்டார் இல்லை-

இன்னதோர் காலத்து இனையார் இது பெற்றார் என்னவும் கேட்டு அறிவதில்லை –
இன்னதோர் காலத்திலே ஏவம் வித ஸ்வ பாவராய் இருப்பார் இப்பேறு பெற்றார்கள் என்று சொல்லக் கேட்டு அறிவது இல்லை –
மோஷத்து ஏறப்  போனார்கள் என்று சாஸ்த்ரங்களிலே
ஸூ கோ முக்தோ வாம தேவோ முக்த -என்று சொல்லக் கேட்டு இருக்கும் இத்தனை –
நான் கண்டேன் நான் போனேன் என்பார் இல்லை
ஆஸ்திக்யத்தாலே சில சொல்லும் இத்தனை  –
உளது என்னில்-
உண்டு என்று சொல்லில் அதுக்குப் போம் வழியின் அருமையைக் கேட்கலாகாதோ-

மன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள்-அன்னதோர் இல்லியினூடு போய்  வீடு என்னும்
நிலை நின்ற கொடிய கிரணங்களை உடைய ஆதித்ய மண்டலத்தின் நடுவிட்டுப் போக வேணும் –
இங்கே நின்று ஆதித்யனைக்  காண  ஒண்ணாதே வெறியோடும்படி கொடிதான ஆதித்யன் உடைய அப்படிப் பட்ட-அதி ஸூ ஷ்மமான வழியே போய்-

தொன்னெறிக் கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே அன்னதே பேசும்-அன்னதே பேசும் அறிவில் –
மோஷம் என்று சொல்லப் படும் பழையதான ப்ராப்யத்தை லபித்தவர்களை இன்னார் என்று சொல்லுங்கோள்-என்று கேட்டால் சொல்லாதே
இதுக்கு உத்தரமாக முன்பு சொன்னதையே சொல்லா நிற்பார்கள்
அதுக்கு அடி அறிவு கேடராகை –

சிறு மனத்து
மேல் அறிவு உண்டாக்கிக் கொள்ளவும் ஒண்ணாதபடி
அல்ப மனாக்கள்
ஆங்கு
அவ்விடத்தில்
அன்னவரை
அப்படிப் பட்டுள்ளாரை
கற்பிப்போம்  யாமே
அறிவிப்போம் நாமே
உகந்த விஷயத்தில் மடல் எடுத்து பெறலான காலத்திலே
பிறர்க்கு அறிவிக்கை நமக்கு பணியோ-
கையும் மடலுமாக நாடறிய திரியா நின்றால்-இதுவே புருஷார்ர்த்தம் என்று அறியும்படி நாட்டில் உலவா நிற்க
ஓர் இடத்திலே இருந்து உபதேசிக்கி நமக்கு பணியோ –
அது நிற்க –
அது கிடக்க கிடீர்
அது ஒரு புருஷார்த்தம் என்று நினைத்து இருப்பார்க்கு அன்றோ அது வேண்டுவது என்று அத்தை உபேஷிக்கிறார்-

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமடல்-1-மன்னிய பல் பொறி சேர்-8-துறக்கம் தலைக் கொண்ட பின்னை – -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை/ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்- வியாக்யானம்-

June 13, 2014

மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின்
சென்னி  மணிக் குடுமித் தெய்வச்  சுடர் நடுவுள்———-1
மன்னிய நாகத்தணை மேலோர் மா மலை போல்
மின்னு மணி மகர குண்டலங்கள் வில் வீசத்————-2
துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம்
என்னும் விதானத்தின் கீழால் -இரு  சுடரை————-3
மன்னும் விளக்காக வேற்றி  மறி கடலும்
பன்னு திரைக் கவரி வீச நில மங்கை———————4
தன்னை முன நாள்  அளவிட்ட தாமரை போல்
மன்னிய சேவடியை வானியங்கு தாரகை மீன்———-5
என்னும் மலர்ப் பிணைய லேய்ந்த மழைக் கூந்தல்
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்———6
என்னும் இவையே முலையா வடிவமைந்த
அன்ன நடைய வணங்கேய் அடி இணையைத்—————7
தன்னுடைய அம் கைகளால் தான் தடவத் தான் கிடந்ததோர்
உன்னிய யோகத் துறக்கம் தலைக் கொண்ட—————8

பின்னை

————————————————————————–

மன்னிய-
பத்ரம் தே-பால -73-28
வாழியரோ -திரு விருத்தம் -2-
யாமோஷதி மிவாயுஷ்மன் அந்வேஷசி மஹாவநே-ஆரண்ய 67-15 –
தன் வாக்கில் புகர் தானே அறிகையாலே-என் வாக்கிலே அகப்படாதே என் காலிலே விழுந்து பிழைத்திடுக -என்கிறாள்

பல் பொறி –
வைத்த கண் வாங்க ஒண்ணாத படி இருக்கிற அழகு –

சேர் –
சேர்ப்பாலும் கண்ட சக்கரையும் போலே இருக்கை –

ஆயிர வாய் –
சுக ச்பர்சத்தாலே -ப்ரீதிக்கு -அப்பேறு வெள்ளத்துக்கு போக்கு வீடு கண்டால் போலே இருக்கை –

வாள் அரவின் –
வாள் -ஒளி –
அஹம் புநர்–புநர் யுவேவ -அயோத்யா -12-104-என்னுமா போலே
யுவேவ வசூதேவோ அபூத் விஹாயாப் யாகதாம் ஜராம் –
சென்னி  மணிக் குடுமித் –
சென்னி -பணா –குடுமி -கொழுந்து —

தெய்வச்  சுடர் நடுவுள் –
-தெய்வம்  திவ்யம்-
பணா மணியினுடைய கொழுந்து விட்டு ஓங்குகிற அப்ராக்ருத தேஜஸ்சின்  நடுவே –
கங்கா தரங்கத்தின் உள்ளே இருக்குமவர் போலே –

மன்னி –
போக்யதையின் மிகுதியாலே
பிராட்டி திரு முலைத் தடத்தினாலே வீசி வில்லிட்டு எழுப்பினாலும் எழுப்ப ஒண்ணாது இருக்கை –

ய நாகத் –
அந்நாகம்
வாளரவாகிற நாகம் -வாள் -ஒளி

தணை மேல்-
திரு வநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையின் மேல் –

ஒர் மா மலை போல் –
ஓர் அஞ்சன கிரி படிந்தால் போல் இருக்கை –
மின்னு மணி மகர குண்டலங்கள் வில் வீசத் –
திரு மேனியின் நிறத்தால் வந்த இருட்சிக்கு கை விளக்குப் பிடித்தால் போலே இருக்கிற தாயிற்று –
திரு மகர குண்டலங்களின் புகர்-மின்னா நின்றுள்ள ரத்னன்களை உடைத்தான மகர குண்டலம்-தன்னுடைய ஒளியைப் பரப்ப

துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம் என்னும் விதானத்தின் கீழால் –
நெருங்கி இருக்கிற நஷத்ர தாரா கணங்களின் உடைய மிக்க தேஜச்சை யுடைத்தாய் இருந்துள்ள
ஆகாசம் போலே இருக்கிற திரு முத்தின் பந்தற் கீழே -என்னுதல்-
ஆகாசம் ஆகிற திரு முத்தின் பந்தற் கீழே -என்னுதல்
ஆகாசம் போலே என்ற பொதி கட்டின – என்று தோற்றி இருக்கிற படி
ஆகாசத்தை திருஷ்டாந்தமாகச் சொல்லிற்று அச்சமாய் இருக்கையாலே –

இரு  சுடரை மன்னும் விளக்காக வேற்றி –
இவன் போன இடம்  எங்கும்  கூடப் போமவர்கள் இ  றே ஆழ்வார்கள் –
ஆகையாலே திரு வாழி ஆழ்வானையும் -ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வானையும் நித்யமான விளக்காக ஏற்றி
அங்கன் அன்றிக்கே
சந்திர ஸூ ர்யர்களைச் சொல்லிற்று ஆகவுமாம்-
ஏகார்ணததிலே  சிருஷ்டி உன்முகனாய்க் கண்  வளர்ந்து அருளுகிற போதாகக் கார்ய பூதரான இவர்கள் உளரோ எப்போதும் -என்னில்
அதுக்காக இ றே முற்பட ஒரு பொருள் சொல்லிற்று
அன்றியே
கவி பாடுகிற இவர் தாம் பிற்பட்ட காலத்தில் உள்ளார் ஒருவராகையாலே தமக்கு முற்பட்டாரைச் சொல்லத் தட்டில்லை இ றே –

மறி கடலும் பன்னு திரைக் கவரி வீச-
சர்வேஸ்வரன் திரு வநந்த வாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற போதை அழகைக் கண்ட ஹர்ஷத்தாலே
கீழ் மண் கொண்டு மேல் மண் எறிகிற கடலானது –
தன்னுடைய பரம்பின திரைகள் ஆகிற கவரியை வீச
பெரும் திரையாய் வந்து முறிந்த குறும் திவலையானது
திருவடிகளிலே வந்து உதைத்து அது துடை குத்த உறங்குவாரைப் போலே யாயிற்று கண் வளர்ந்து அருளும் படி –
பன்னு  திரைக் கவரி வீச — என்கிற விடம் –மன்னிய சேவடியை -என்கிற இடத்தில் அந்வயிக்கக் கடவது –
நில மங்கை தன்னை முன நாள்  அளவிட்ட –
முன்னொரு நாள் பூமிப் பிராட்டியை அளந்த

தாமரை போல் மன்னிய சேவடியை –
திருவடித் தாமரையை நோக்கி –மறி கடலும் பன்னு திரை கவரி வீச –
அலை எறிகிற சமுத்திர ராஜன்
பரம்பின அலைகள் ஆகிற சாமரங்களை வீசப் பெற்றும்

வானியங்கு தாரகை மீன் என்னும் –
ஆகாசத்தில் திரியும் நஷத்ரங்கள் ஆகிறது –
பூர்வ ஷணத்திலே போல் தோன்றா நின்றது யாயிற்று இவர்க்கு பாவனா பிரகர்ஷத்தாலே –

அளவிட்ட –தாமரை போல்-
பண்டு திரு வுலகு அளந்து அருளின திருவடிகள் என்று மூதலிக்கலாம்   படி செவ்வித் தாமரைப் பூ போலே இரா நின்றது –

மன்னிய சேவடியை —
சௌகுமார்யத்துக்கு ஒரு போலியாகச் சொன்ன வித்தனை இ றே தாமரையை –
அனந்தர ஷணத்திலே செவ்வி மாறிப் போகையாலே
மாறாச் செவ்வியை  உடைத்தான திருவடிகளை மறி கடலும்
பன்னு திரைக் கவரி வீச -என்று அந்வயம் –

வானியங்கு தாரகை மீன் என்னும் -மலர்ப் பிணைய லேய்ந்த மழைக் கூந்தல் –
ஆகாசத்தில் சஞ்சரியா நின்றுள்ள நஷாத்ரா தாரா கணங்கள் ஆகிற
கலம்பகன் மாலையாலே அலங்க்ருதமாய்-
அத்தை உள்ளே அடக்கும்படி ஸ்ரமஹரமாய் இருந்துள்ள மேகமாகிற அளக பாரத்தை  உடைத்தாய் இருக்கை-
நாயகனாகிற சர்வேஸ்வரன் இவன் ஒரு கால் திருக் குழலை குலைத்து நுழுந்த அக்காலத்திலே சர்வ வித போக்யங்களையும் பெற்றானாய் இருக்கை

தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்என்னும் இவையே முலையா –
ஆர்யர்கள் இகழ்ந்த ம்லேச்ச பூமியில் உள்ளார்க்கு நிர்வாஹகரான ஷத்ரியர்கள்
என்னது என்னது -என்று அபிமா நிக்கும் படி இருக்கிற
தெற்குத் திருமலையும்
சம்சாரிகளும் வந்து ஆஸ்ரயிக்கலாம் படி  இருக்கிற மேன்மையிலே ஏற்றத்தை உடைய வடக்குத் திரு மலையும்
இப்படிச் சொல்லப் படுகிற இவை இரண்டும் முலையாக-
பெரியன சில மலைகளைச் சொல்ல வமையும் ஆகில் மேரு ப்ரப்ருதிகளைச் சொல்லாது ஒழி வான் ஏன் என்னில்
காந்தன் விரும்பி விடாதே கிடககுமாவை இ  றே முலை யாவன  –
அப்படியே சர்வேஸ்வரன் விரும்பி விடாதே கிடக்கிற தேசம் இ றே
நங்கள் குன்றம் கை விடான் -திருவாய் மொழி -10-7-4–இ றே –
ஆகையால் இ றே அவற்றை முலையாகச் சொல்லுகிறது –

ஸூ பக்ஸ் சித்ரா கூடோ அசௌ கிரி ராஜோபமோ கிரி -அயோத்யா -98-12-
இந்த சித்ர கூடத் தினத்தனை வீறுடையார் இல்லை –
கண்ணுக்கு அழகியதாய் இருக்கச் செய்தே விருப்பம் இல்லாதன சில உண்டு இ றே
அங்கன் அல்ல இ றே இதின் படி
திரு முலைகளோடு ஒக்கச் சேர்க்கலாம்
காகுத்ச்த யஸ்மின் வசதி –
நல்லது கண்டால் விட மாட்டாது விருப்பத்தைப் பண்ணி இருக்கிறார்
யதத் யாஸ்தே மஹா தேஜா –குபேர இவ நந்த நே –
துஷ்ட சத்வ பிரசுரமான இந்த பிரதேசத்திலே குபேரனானவன் தன் பூந்தோட்டத்தை விடாதே வர்த்திக்குமா போலே வர்த்திக்கிறார்
அப்படிப் பட்ட சித்ர கூடத்தோபாதி வீறுடையார் இல்லை –

வடிவமைந்த –
அம முலைகளுக்குத் தக்கபடி அவ்வடிவு தானும் பொருந்தி இருக்கை –

அன்ன நடைய –
அன்னத்தோடு ஒத்த நடையை யுடையளாய்
சம்போகார்த்தமாக நாயகன் முன்னே நாலடி நடந்தால் அவன் இதுக்கு அவ்வருகு பின்னை ஒன்றுக்கு ஆளாகாத படி இருக்கை

வணங்கேய் –
அப்ராக்ருதமான ஸ்வ பாவத்தை உடைத்தாய் இருக்கை –
தேவ தாபிஸ் சமா -பால -77-30-என்கிறபடியே
பிராட்டி பிள்ளைகள் மூவர்க்கும் தைவமாய் இருந்தாள்
பெருமாளுக்கு மன காந்தையாய் இருந்தாள்
ஆக நால்வர்க்கும் ஒக்குமாயிற்று ஆஸ்ரயணீயை யாமிடத்து –

அடி இணையைத் –
இப்படி அப்ராக்ருத ஸ்வ பாவையாய் இருக்கிற இவளும் கூட கூசும்படி
அதி ஸூ குமாரமான திருவடிகள் –

தன்னுடைய அம் கைகளால் –
அவன் தனக்கும் கூட பிரார்த்தித்துப்ப் பெற வேண்டும் படி
இருக்கிற தன்னுடைய அழகிய திருக் கைகளாலே –

தான் தடவத் –
திருவடிகளை வருடப் பெறில் உள்ளாய்-
இல்லை யாகில் இல்லை யாம் படியான ஆற்றாமை யுடையனாய்க் கொண்டு தடவ –
ஆக -கடலானது கவரி வீச
ஸ்ரீ பூமிப் பிராட்டி திருவடிகளை வருட வாயிற்று
கண் வளர்ந்து அருளுவது –

தான் கிடந்து –
ஸ்வ தஸ்   சர்வஞ்ஞானாய் -ஒன்றால் ஒரு காலுஷ்யம் இன்றிக்கே இருக்கக் கடவ அவன்
இவள் உடைய ஸ்பரசத்தாலே  வந்த ஸூ காத்தாலே இரண்டும் அறியாதே கிடந்தது உறங்கா நிற்கும் –

தோர் உன்னிய யோகத் துறக்கம் தலைக் கொண்ட பின்னை   –
அல்லாதார்க்கு முன்பே தானே நெஞ்சு இருண்டு இருக்கும் இ றே
அதுக்கு மேலே கண்ணைச் செம்பளித்தவாறே புறம்பு பிரகாசிக்கிற இதுவும் போய் இருளும் இ றே –
இவனுக்கு அங்கன் ஒன்றும் இன்றியே திருக் கண்களை செம்பளித்தால் அகவாயில்
பிரகாசிக்குமதுக்கு வர்த்தமானாய் இருக்கும் –
உன்னுகை –அனுசந்திக்கை -யோகத் துறக்கம் –
ரஜஸ் தமஸ் ஸூ க்களால் அபி பூதனாய்உறங்குகிறான் -அன்று
உறங்குவான் போல் யோகு செய்த பெருமான் -திரு வாய் மொழி -5-4-11-யோக நித்தரை இ றே
அவை நல வழியாக கரை சேரும் வகையதோ -என்று ஜகத் ரஷண சிந்தை பண்ணிக் கொண்டாயிற்று கண் வளர்ந்து அருளுகிறது –

தலைக் கொண்ட பின்னை  
காலப் பூ அலர்ந்தால் போலே உணர்ந்த அநந்தரம்-
ஸ்ருஷித்து அல்லது நிற்க ஒண்ணாத படி யானவற்றைச் சொல்லுகிறது –

————————————————————————–

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்- வியாக்யானம்-

மன்னிய –
மடல் எடுத்து அவனை அழிப்பதாக ஒருப்பட்ட தன் துணிவின் ஊற்றத்தை  அனுசந்தித்து என் ஒருப்பாடு சாலப் பொல்லாதே இருந்தது –
அவன் வரவு தாழ்த்து என் கையிலே தான் அழியாதே
நான் மடல் எடுப்பதற்கு முன்னே வந்து முகம் காட்டி அவன் உஜ்ஜீவித்திடுக –
மடல் எடுக்கை யாகிறது -எதிர் தலைக்கு குண ஹானியை விளைக்கை –
குணமே தாரகமாக நினைத்து இருக்கும் விஷயம் ஆகையாலே குண ஹானியை விளைக்கை யாகிறது
வஸ்துவினுடைய ஸ்வரூபத்தை அழிக்கை இ றே –
நிரூபகத்தை ஒழிய நிரூப்ய சித்தி கிடையாதே
நான் குண ஹானியை விளைத்து தன்னை அழியாமே
அதுக்கு முன்னே வந்து முகம் காட்டி உஜ்ஜீவித்திடுவான் –
அவ்வுபாயம் கொண்டு காணும் மடலூர்ந்து அவனை அழித்துப் பெறப் பார்க்கிறது –
மடல் எடுத்து வியாபரிக்கும் அதுக்கு அஞ்சுகை அன்றிக்கே
மடல் எடுப்பதாக உத்யோகித்த மாத்ரத்திலே அஞ்சுகிற இவள் எங்கனே மடல் எடுத்து அவனைப் பெற நினைத்து இருக்கிற படி –
வாழி -என்கிற வோபாதி மங்கள வாசகமாய் இருக்கும் –
வாழி -என்றது வாழ்ந்திடுக -என்றபடி இ றே
அப்படியே இங்கும் மன்னிய என்றது நித்தியமாய் உஜ்ஜீவித்திடுக -என்றபடி இ றே
அழிக்க ஒருப்பட்டாருக்கும் நினைத்தால் மங்களா சாசனம் பண்ண வேண்டும்படி யாய்க் காணும் விஷய வைலஷண்யம் இருக்கிற படி –
அதவா-
மன்னிய –
இக்காம புருஷார்த்தம் நிலை நின்றிடுக -என்றுமாம் —

இனி திரு வநந்த ஆழ்வான் உடைய வடிவைச் சொல்லுகிறது –
பல் பொறி –
பலவாய் இருந்துள்ள பொறிகளை உடையனாய்
ஆயிரம் பணங்களையும் உடையனாய் இருக்குமாகில்
பரஸ்பரம் சேராதே வைரூப்யாவஹமாய் இருக்குமோ -என்னில் –

சேர் –
இவை அடையத் தகுதியாய் இருக்கும் –
நரத்வ சிம்ஹங்கள் சேர்ந்தால் போலே –

ஆயிர வாய் –
சர்வேஸ்வரன் சாய்ந்து அருளினால் -அத்தால் வந்த ஹர்ஷத்துக்கு போக்கு விட்டு  ஏத்துக்கைக்கு  இ றே பலவாய்
வெள்ளம் மிகுந்தால் போக்கு வீடாக பல வாய்த்தலை உண்டாமா போலே ஆயிரம் வாயை யுடையனாய் இருக்கும்
இச் சேதனன் இஸ் சரீரம் விட்டால் கொள்ளும் நாநா போகத்துக்கும்  நாநா பாவனத்துவத்துக்கும்
ஸூ சகமாய் இருக்கிறது –
ஸ ஏ நான் ப்ரஹ்ம க மயதி-என்றும் –
ஸ எகத்தா பவது -என்றும்  –
சர்வேஷூ லோகேஷூ காமசாரோ பவதி -என்னக் கடவது இ றே
அநேக சரீரம் பரிக்ரஹம் பண்ணிக் கொண்டு நின்று
அடிமை செய்ய வேண்டும்படி யாயிற்று
கைங்கர்யத்தின் ருசியும் போக்யதையும் இருக்கும் படி –

வாள் அரவின்-
அரவு -ஆதி சேஷன் -வாள் -ஒளி –
இத்தால் சொல்லிற்று –
ஸ்வ இதர சமஸ்த சித் அசித் வஸ்துக்களுக்கும் நிருபாதிக சேஷி யாகையாலே
சேஷித்வ ஸூ சகமான புகர்  அவனுக்கு குறை வற்று இருக்குமா போலே
அவன் திருவடிகளிலே சர்வவித தாஸ்யத்தையும் பண்ணக் கடவனான இவனுடைய  சேஷத்வத்தால்  வந்த புகர் இருக்கிறபடி –
பரம சாம்யா பத்தி யுண்டாய் இ றே இருப்பது –
யதோசிதம்-என்னக் கடவது இ றே
சேஷ இதீரிதே ஜனை -என்று அது உள்ளவர் என்னக் கடவது இ றே
பெரு மக்கள் உள்ளவர் -என்று இ றே சொல்லுவது –

வஸ்து சத்பாவம் நித்யமாய் இருக்கச் செய்தே
முன்பு சில நாள் பிரகிருதி வச்யராய்க் கொண்டு சம்சாரித்து அத்தாலே -அசந்நேவ-என்னலாம் படியாய்
பின்பு ஏதேனும் ஒரு ஸூ க்ருத விசேஷத்தாலே பகவத் கடாஷம் பிறந்து -அவ்வருகு பட்டு
சந்த மேநம் ததோ விது-என்னும்படியாகை அன்றிக்கே
நித்யமான சேஷத்வ ஸ்வரூப சித்தியை யுடையராய்
தாங்கள் அவனை நித்ய அனுபவம் பண்ணிப் போரச் செய்தேயும்
தாங்கள் இவனுடைய பேற்றை அனுசந்தித்து
அவனும் ஒருவனே அவனுடைய பரிமாற்றமும் ஒரு பரி மாற்றமே என்று எப்போதும் ஒக்க கொண்டாடா நிற்பர்கள்-

சென்றால் குடையாம் –
யதோசிதம் -என்கிறபடியே
நான் இங்கே குடையாக நின்றேன் இங்கே போரு-என்னாதே
சர்வேச்வரனுக்கு ஒரு போது அபேஷையானால்  அப்போது குடையாய் நிற்கும் –
ஸ்ரீ மதுரையில் நின்றும் அவன் தான் திரு வாய்ப்பாடியிலே போகிற போது வர்ஷம் அவன் திரு மேனியில் படாத படி தன் பணங்களாலே மறைத்துக் கொண்டு போனான் இ றே-

இருந்தால் சிங்காசனமாம் –
நான் இங்கே சிம்ஹாசனமாய்க் கிடக்கிறேன் நீ இங்கனே போந்திரு-என்கை அன்றிக்கே
சர்வேச்வரனுக்கு துர்யோதனாதிகள் பொய்யாசனம் இட்ட போது
சிம்ஹாசனமாக என்று  நினைத்த போது சிம்ஹாசனமாய் இருக்கும் –

நின்றால் மரவடியாம் –
சஞ்சாரம் அபேஷிதமான போது சிம்ஹாசனமாய்க் கிடக்க ஒண்ணாதே -அப்போது பாதுகமாம்
மரவடியைத் தம்பிக்கு வான் பணையம் வைத்துப் போய் -இத்யாதி –

நீள் கடலில் என்றும் புணையாம் –
பரப்புடைத்தன கடலிலே சமனிலாத தன் தாளும் தோளும் முடிகளும் பல பரப்பி கண் வளர்ந்து அருளும் போது
வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தையாக விரித்து -என்கிறபடியே
திருப் பள்ளி மெத்தையாய் இருக்கும் –

அணி விளக்காம் –
திருமேனியின் நிறத்தாலும் தத் சாம்யமான திருக் குழலின் நிறத்தாலும் வந்த இருட்சியைப்-போக்குகைக்கு பிரகாசாவஹமான மங்கள தீபமாம் –

பூம் பட்டாம் –
சர்வேஸ்வரன் திரு மேனிக்குத் தகுதியான அழகிய திருப் பரிவட்டமாம் –
பரிவட்டமாவது -பும்ஸ்த்வாவஹமாய் இருக்குமது இ றே-

புல்கும் அணையாம் –
திருவடிகளை நீட்டுதல் திருக் கைகளை பொகடுதல் செய்ய வேண்டின போதைக்கு
எங்கும் பக்க நோக்கறியான் -என்கிறபடியே
பிராட்டியையும் புரிந்து பார்க்க ஒண்ணாத படி
சர்வ கந்தமான தழுவு அனையாய் இருக்கும் –

ஆர்க்குத் தான்-என்னில்
திருமாற்கு –
உத்தர கண்ட பிரக்ரியையாலே
விசிஷ்ட வேஷத்திலே யாயிற்று –

இப்படி இருக்கிற இவன்  தான் ஆர் என்னில்
அரவு
உடையவர்க்கு அழித்து வேண்டும் ஆபரணம் பண்ண லாம் படியான கட்டிப் பொன் போலே –

யதா யதா ஹி-இத்யாதி
நீயும் நானும் சேர்ந்த சேர்த்தியிலே நினைத்த கார்யம் எல்லாம் கொள்ளலாம் படி
கை வந்திருக்குமவள் மகனை -கெடுவாய் நீ காட்டிலே போ -என்கைக்கு ஒருப்படுகிறது ஏன் -என்கைக்காக சொல்லுகிறான் –

யதா யதா ஹி –
இருவருமான சேர்த்திக்கு உறுப்பாக தன்னைச் சமைத்து இருக்கும் இதுக்கு
மேற்பட தனக்கே இருக்கும் ஆகாரம் இல்லை -என்கை –

கௌசல்யா தா சீவத்-
நம்மோடு ஒக்க பட்டம் காட்டப்படும் பிரதான மகிஷியானவள்
நாம் இருவரும் சேர்ந்த சேர்த்தியிலே -இற்றைப் போகு இற்றை வருவை-என்னலாம் படி
தன்னை தாழ விடுமவள்-

சகீவச –
இப்படி தாழ நின்று பரிமாறினவளோடு நெஞ்சில் கிடந்தது சொல்ல ஒண்ணாது இருக்குமோ என்னில்
இருவரும் சேர்ந்த சேர்த்தியில் பிறந்த ஏற்றத் தாழ்வுகள் சொல்லுகைக்கு தோழியாய் இருக்கும்   –

பார்யாவத் –
பிறரோடு கலந்த போது நெஞ்சில் கிடந்ததை வாய் விட்டுச் சொல்லுகை யாவது
இத்தலையில் போக ஸ்ப்ருஹையை அறுத்ததாய் இருக்குமே
அங்கனே இருக்கச் செய்தே போக ஸ்ப்ருஹை பிறந்ததாகில் அவ்வளவிலும் பார்யையாய் இருக்கும்  –
பாரதந்த்ர்யத்தின் எல்லை இருக்கும் படி
நிலை நின்ற பார்யாத்வமும் அல்லாத வற்றோ பாதி வந்து கழியுமவையாய் இருக்கிறபடி –

பகி நீவச்ச –
பிறரோடு பரிமாறும் இடத்தில் நெஞ்சாலும் கணிசியாது இருக்கும்
இத்தை அறுக்க நினைத்தால் அதுக்குச் சொல்லும் பாசுரம் இது இ றே
கூசு முறையாய் கடக்க நிற்கும் -என்றபடி –

மாத்ருவச்சோப திஷ்டதே –
உறவற்று கடக்க நிற்கும் அளவன்றிக்கே இவன் தானும் தனக்கு வேண்டினாருமாய்ப் பரிமாறும் இடத்தில்
இவனுக்கு வேண்டும் உபகரணங்களை யும் தேடிக் கொடுத்து
இவனுக்கு பிறக்கும் ப்ரீதியும் தன் பேறாக உகக்கும் மாதாவாய் இருக்கும்
வகுத்த சேஷி பக்கல் சேஷ பூதன் ஸ்வரூப அனுரூபமாகப் பரிமாறும்
பரி மாற்றத்தை சேஷித்வம் ஔபாதிகமானவிடத்திலேயும்
சிலர் இப்படி பரிமாறக் கண்டோம் இ றே –

அரவு –
தன் மேல் சாய்கிற சர்வேஸ்வரனுக்கு நித்ய ஸ்ப்ருஹநீயமான நாற்றம் குளிர்த்தி மென்மை என்றால் போல் சொல்லுகிற இவற்றை உடைத்தாய் இருக்கை-

இப்படிப் பட்டவனுடைய
சென்னி –
சென்னி உண்டு -சிகரம்

மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்   
அதிலே உண்டான மணி உண்டு -ரத்னம் –
பிரதானங்களுக்குத் தலையிலே மஹார்க்கமாய் இருப்பதொரு ரத்னம் உண்டாகச் சொல்லக் கடவது –
அந்த மணியினுடைய குடுமி உண்டு -சிகை –
அதில் உண்டான தெய்வச்   சுடர் நடுவுள்
அப்ராக்ருதமான தேஜஸ் சின்னுள்ளே –
வாள் -என்று கீழே ஒளியைச் சொல்லிற்று
இங்கு தெய்வச் சுடர் என்று தேஜஸ் சைச் சொல்லா நின்றது –
இவற்றுக்கு வாசி என் என்னில்
சர்ப்ப ஜாதிக்கு அர்ஹமாம் படி அவன் பிரக்ருதியில் உள்ள தேஜஸ் சை சொல்லிற்று அங்கு
இங்கு அவனை அனுபவிக்கையால் வந்த தேஜஸ் சை சொல்லுகிறது –

தெய்வச் சுடர் –
நாட்டில் தேஜோ பதார்த்தங்களின் உடைய தேஜஸ் போலும்  அன்றிக்கே –
ஈஸ்வரனுடைய தேஜஸ் போலும் அன்றிக்கே
அவனை நித்ய அனுபவம் பண்ணி -அவனோட்டை ஸ்பர்ச்த்தாலே -இவனுக்கு வந்த தேஜஸ் ஸூ அவனுக்கும் கூட இல்லை யாயிற்று
தான் கிடந்து -என்கிற இடத்து இதுக்கு அந்வயம்
கங்கா தர மத்யே குடி இருப்பாரைப் போலே
திரு வநந்த ஆழ்வான் உடைய தேஜஸ் தரங்க மத்யே யாயிற்று சர்வேஸ்வரன் கண் வளர்ந்து அருளுகிறது
பணா மணி வ்ராத மயூக மண்டல பிரகாரச நா நோ தா திவ்ய தா மனி -என்னக் கடவது இ றே-

மன்னிய நாகத்தணை மேலோர் மா மலை போல்-
இத்தனையும் திருஷ்டாந்தம் –
மன்னிய நாகத்தணை-
படுக்கை ஆளும் ஒரு கால் உதறிப் படுக்க வேண்டா –
இதில் சாயுமவனுக்கு புது மாறாதே யிருக்கை-
மேலோர் மா மலை போல்–
இப்படிப் பட்ட படுக்கையிலே சாய்ந்ததொரு நீல கிரி போலே யாயிற்று
திருவநந்த வாழ்வான் மேலே சர்வேஸ்வரன் சாய்ந்து அருளினால் இருக்கும் படி –
இது தான் அபூதோபமை-
மா -என்று கறுப்பாய்-நீல கிரி -என்ற படி
நீலத் தட வரை மா மணி -இத்யாதி  –
நீக்கத் தட வரை கிடந்தது போல் மா மணி திகழ அரவணை வேலைத் தலைக் கிடந்தாய் –
ஸ்ரீ கௌஸ்துபம் ஆகிற ஆபரணம் தன பக்கலிலே உஜ்ஜ்வலமாம் படி திருவநந்த வாழ்வான் மேலே
திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளின போது
ஒரு நீலகிரி சாய்ந்தால் போலே யாயிற்று இருப்பது –

மின்னு மணி மகர குண்டலங்கள் வில் வீசத்-
ஒளியை உடைத்தாய் இருந்துள்ள ரத்னங்களாலே சமைக்கப்  பட்ட மகர குண்டலங்களில்
உண்டான தேஹஸ் ஸூ பரம்ப
வீச -பரம்ப
திரு மேனியின் நிறத்தால் வந்த இருட்சியைத் தீர்க்கும்  மகர குண்டலங்களின் பிரபை யானது
சிதற வடித்துக் கொண்டு தன் பரப்பாய் நிற்கும் –
ரத்னன்களை உடைத்தான மகர குண்டலம் தன்னுடைய ஒளியைப் பரப்ப –

துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம் என்னும் விதானத்தின் கீழால்
நெருங்கி இருந்துள்ள  நஷாத்ரா தாரா கணங்கள் உடைய மிக்க ஒளி சேர்ந்துள்ள விதானம் -என்னுதல்-
ஆகாசம் மேலே இருந்துள்ள விதானம் -என்னுதல் –
இது வாயிற்று கண் வளர்ந்து அருளுகிற இடத்தில் திரு மேற்கட்டி –
வில்வீசத் துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம் என்னும் விதானத்தின் கீழால் –
திரு மகர குண்டலங்களின் தேஜஸ் ஸூ எங்கும் ஒக்க பரம்பின படியால்
தேஜோ பதார்த்தங்களான நஷத்ரங்களான தாரா கணங்கள் ஓர் இடத்திலே போய் திரண்டால் போலே
தன்னில் தேஜோ பதார்த்தங்கள் ஒக்கிலும் தன்னில் விஞ்சின தேஜஸ் ஸூ வந்தால்
போய் ஒதுங்கக் கடவதே இருக்குமே
பூஜ்யரைக் கண்டால் குணபூதரானவர்கள் புடைவையை ஒதுக்கிக் கடக்கப் போய் ஒதுங்கக் கடவர் இ றே
கீழால் -கீழே

இரு  சுடரைமன்னும் விளக்காக வேற்றி
தன்னுடைய உஜ்ஜ்வலமான கிரணங்களாலே சர்வ வஸ்துக்களையும் தபிக்கக் கடவனாய் இருந்துள்ள ஆதித்யனையும்
தன்னுடைய அம்ருதமான கிரணங்களாலே சர்வ வஸ்துக்களையும் ஸ்ரமஹரமாம் படி பண்ணக் கடவனான சந்திரனையும் நிலை விளக்காக ஏற்றி –
சிருஷ்டி யுன்முகனாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளுகிற விடத்தை இப்படிசொல்லுகைக்கு
சிருஷ்டிக்கு  முன்பு ஆகாசமும் நஷத்ர தாரா கணங்களும் சந்த்ராதித்யர்களும் உண்டோ என்னில்
இக் கட்டளை எல்லாம் உண்டாம் படிக்கு ஈடாக கண் வளர்ந்து அருளினான் -என்னுதல் –
அன்றிக்கே
இங்குத்தைப்படி அப்ராக்ருதமாய்க் கொண்டு அங்கேயுண்டாய் இருக்கும் இ றே –
அப்படிகளில் ஒன்றும் குறையாமல் கண் வளர்ந்து அருளினான் -என்னுதல் –
அங்கனும் அன்றிக்கே  –
கார்ய ரூபமான கட்டளை ஸூ ஷ்ம ரூபேண ஆவரண லோகங்களும் எல்லாம் உண்டாய் இருக்கும் இ றே –
ஆகையாலே எல்லாம் உண்டு என்கிற பகவத் சங்கல்பமான சம்ஹாரத்தை சொல்லுதல்
சர்வ அவஸ்தையிலும் தத்வ த்ரயமும் கூடி இ றே இருப்பது
அது கார்ய அவஸ்தையில் விஸ்த்ருதமாய்க் கொண்டு   பிரகாசிக்கும் –
காரணா அவஸ்தையில் நாம ரூபவிபாக அநர்ஹ மாகையாலே
ஸூ ஷ்ம சித் அசித் விசிஷ்ட ரூபேண கொள்ளும் இத்தனை போக்கி பிரகாசியாது –
ஆகியார் கார்ய அவஸ்தையிலும் காரணா அவஸ்தையிலும் உண்டு என்னும் இடத்தைப் பற்றி சொல்லுகிறது –
ஆகச் சொல்லிற்று யாயிற்று
கார்ய ரூபமாய்க் கொண்டு இவை எல்லாம் அப்படியே -என்னுதல்
அப்ராக்ருதம் என்ற போதைக்கு
இரு சுடர் என்று -இவர்கள் படியை உடையாராய் இருக்கிற
திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் விளக்காக ஏற்றி -என்றபடி
நிலை விளக்கு -நித்யர் இ றே
விளக்காக –
அணி விளக்காம் -என்னக் கடவது இ றே –
சென்றால்  குடையாம் -இத்யாதி –

மறி கடலும்-பன்னு திரைக் கவரி வீச-
சர்வேஸ்வரன் மேலே சாயப் பெற்ற ஹர்ஷா பிரகர்ஷத்தாலே கீழ் மண் கொண்டு மேல் மண் எறிகிற கடலும் –
இப்படி இருந்துள்ள தன்னுடைய திரைகள் ஆகிய கவரியை வீச –
சர்வேஸ்வரனோட்டை பிரத்யாசத்தியாலே வந்த கிளர்த்தி
என்றும் திரு மேனி நீ தீண்டப் பெற்று –மாலும் கருங்கடலே என் நோற்றாய்-என்னக் கடவது இ றே
உன்னை அவன் விடாமைக்கு நோற்ற நோன்பைச் சொல்ல வல்லையே
நானும் இவ்வாசையை விட்டு நோன்பு நோற்கும் படி –
பன்னு திரைக் கவரி வீச–
திரு மேனியின் பரப்புக்கு எல்லாம் பண்ண வேண்டும்படி
பரப்புடைத்தாய் இருக்கிற திரை யாகிற கவரியை வீச –

நில மங்கை தன்னை –
தனக்கு ஸ்ப்ருஹணீயையாய் இருக்கிற ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு பிரகாரமான விபூதியை
மஹா பலி அபஹரிக்க -இந்த்ரனுக்காக
அவன் பக்கலில் நின்றும் இரந்து அளந்து கொடான் ஆயிற்று
தன்னை –
தான் எல்லாம் பட வேண்டும் படியான அவளுடைய வை லஷண்யம் தோற்றி இருக்கிறது
முன நாள்
அநு பூத காலமாய்க் கழிந்து போகக் செய்தேயும்
சம காலம் போல ஒரு போகியாகத்  தோற்றுகிறது காணும் -இவர்க்கு –
என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீர் ஏற்றது -என்னக் கடவது இ றே
இன்னம் கடைந்த கடல் நுரையும் மாறிற்று இல்லை இ றே
அளந்த பூமிக்குத் திருவடிகளின் ஸ்பர்சத்தாலே வந்த கந்தம் மாறிற்று  இல்லை  –

அளவிட்ட தாமரை போல்-
காடும் மலையுமான பூமியை அளந்து கொண்டது ஒரு செவ்வித் தாமரைப் பூவை இட்டாயிற்று –

மன்னிய சேவடியை –
விகாசம் செவ்வி குளிர்த்தி பரிமலங்களுக்கு தாமரை ஒப்பாக இருக்கையாலே திருஷ்டாந்தமாக சொல்லிற்று -திரிய அத்தைக் கிடந்தது சிஷிக்கிறது –
தாமரையும் அனந்தர ஷணத்தில் செவ்வி மாறிப் போருகையாலே
இது செவ்வி மாறாதே இருக்கும் இ றே –
காடுமேடையும் முன நாள் அளந்த வருத்தம் பிரளயத்திலே வந்து இளைப்பாற வேண்டும்படியாய் யாயிற்று இருப்பது
மன்னிய சேவடியை மறி கடலும் பன்னும் திரைக் கவரி வீச  -என்று அங்கே அந்வயம்
அதி ஸூ குமாரமான திருவடிகளைக் கொண்டு காடும் மேடுமான பூமியை அளந்து கொண்ட போதை
ஆயாசத்துக்கு பரிஹாரமாக கடவ தன் திரைகளாலே
சிசிரோபசாரத்தைப் பண்ண
அவ்வதாரத்தை அனுசந்தித்தால் இன்னார் என்று அன்றிக்கே எல்லார்க்கும் ஒக்க பரிய வேண்டும் படி காணும் இருப்பது –

கொடியர் மாடம் -இத்யாதி
இப்பாட்டுக்கு பட்டர் அருளிச் செய்யக் கேட்டேன் -என்று பிள்ளை அருளிச் செய்தார் –
நித்ய சூரிகள் பரிந்து கொண்டாட பரம பதத்திலே இருக்கும் சர்வேஸ்வரன்
சம்சாரிகள் உடைய ரஷண  அர்த்தமாக இங்கே சந்நிதி பண்ண வேண்டினால்
திருவாய்ப் பாடியிலே மற்று ஒன்றிலே மறைய வளர்ந்தால் போலே உகவாதார் அறியாத படி மறையச் சாய்ந்து அருளினால் ஆகாதோ –
கொடியார் மாடம் –
சத்ருக்கள் அறியும் படி கொடி கட்டிக் கொண்டு கிடக்க வேணுமோ –
கோளூர் அகத்தும் புளிங்குடியும்-
ஓர் இடத்திலே அன்றிக்கே பல இடத்திலும் படுக்கை படுக்கிறது அப்போதை ஆயாசத்தின் பெருமைஇ றே
மடியாது –
சோம்பாதே-
இடம் வலம் கொள்ளாதே-என்னவுமாம் –
ஏக ரூபமாய் கண் வளர்ந்து அருளுகிறது இவர்களுக்கு வயிறு பிடிக்கைக்கு உடல் ஆகிறது
இன்னே –
கண் வளர்ந்து அருளுகிற போதை
அழகுக்கு பாசுரம் இட்டுச் சொல்லலாவது  ஒன்றும் இல்லை –
இப்படி என்னும் இத்தனை
நீ துயில் மேவி மகிழ்ந்தது காண்
திருமேனி ஏக ரூபமாய் துயில் மேவி ஸ்ரமத்தொடே உறங்குகிறவர்களுக்கு
அவ் உறக்கத்தாலே முகத்திலே தெளிவைக் கொண்டு
முன்புற்றை ஸ்ராந்தியையும் கல்பித்து அதுக்கு வயிறு எரிகிறார்-
அடியார் -இத்யாதி
அதுக்கடி உன் திருவடிகளில் ந்யச்த பரராய்
உன் கை பார்த்து இருக்கிற பிரபன்னர்க்காக அன்று இ றே –
தேவர்களுக்கும் ருஷிகளுக்கும் விரோதிகளான அசூர ராஷசர்களை நிரசிக்க வந்த ஆயாசமோ
அன்றேல் -இத்யாதி –
அன்றிக்கே -உன்னை இரப்பாளன்   ஆக்கி இந்த்ரனுக்காக
பூமிப் பரப்பை எல்லாம் அளந்து கொண்ட ஆயாசமோ
தோள் நொந்து கிடக்கிறாயோ
பூமி எல்லாம் அளந்த தாள் நொந்து கிடக்கிறாயோ
இத்தை அருளிச் செய்ய வேணும்
அதுக்கு கருத்து
அருளிச் செய்யும் போதை ஸ்வர நாதம் கொண்டு அதுக்குத் தக்க சிசிரோபசாரம் பண்ணப் பார்க்கிறார் –
நடந்த கால்கள் நொந்தவோ -தாளால் உலகம் -இத்யாதி
அவசியம் பூமிப் பரப்பை அளக்க வேண்டினால் திருக் கைகளால் அளந்தால் ஆகாதோ
தம்முடைய ஜீவனத்தை அழி க்க இசையார் இ றே இவர்
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -என்னக் கடவது இ றே –
வடிவு அழகுக்கு இணை இல்லை யாயிற்று
இவளுடைய வடிவுக்கு அவனும் சர்வதா சாம்யம் ஆக மாட்டான்
தன் சௌகுமார்யத்துக்கு அநு ரூபமாம் படி இருக்கிற ஸ்ரீ பூமிப் பிராட்டி
மலர் மகள் பிடிக்கும் மெல்லடியை –
இது வாயிற்று சௌகுமார்யத்துக்கு எல்லை இருக்கும் படி
இவர்கள் திருவடிகளை வருடப் புக்கால் பூ வைத் தொட்டால் போலே கூசித் தொட வேண்டும் படி யாயிற்று சௌகுமார்யாதிசாயம் இருப்பது –
வாளா கிடந்தருளும் வாய் திறவான் –
இவர்கள் சென்றால் துணுக என்று எழுந்திருத்தல் குளிரக் கடாஷித்தல்
மாமக்ரூரேதி வஷ்யதி -என்றால் போலே
ஆழ்வீர் வந்தது என் என்றாப் போலே வினவுதல்
ஒன்றும் செய்கிறிலன்
அதுக்கு மேலே நீர் வாய்ப்புத் தேடி படுக்கை படா நின்றான்
நீர் தானும் உறுத்தும் என்று பார்த்து
அதின் மேலே மெல்லியது ஒன்றைத் தேடித் படா  நின்றான்
சாதனா சாத்தியங்கள் இரண்டும் இங்கே யாகையாலே
முந்துற பூமியை நிரூபிக்கிறது
ஆவது என் என்னில் அவன் உகந்து அருளின தேசங்கள் இங்கே யாகையாலே-
வானியங்கு தாரகை மீன் என்னும் மலர்ப் பிணைய லேய்ந்த மழைக் கூந்தல்-
ஆகாசத்திலே சஞ்சரியா நின்றுள்ள நஷத்ர தாரா கணங்கள் என்று சொல்லப் படுகிற
பூக்களாலே தொடுக்கப் பட்ட மாலையோடு கூடின குளிர்ந்த  மயிர் முடியை உடையளுமாய் –
வான் -என்கையாலே உச்சமான ஸ்தானத்திலே என்னும் இடம் தோற்றுகிறது-
இயங்கு -என்கையாலே அதனுடைய அசைவு தோற்றுகிறது  –
தாரகை மீன் என்னும் மலர்ப் பிணைய லேய்ந்த -என்கையாலே ஒரு பூவால் அன்றிக்கே கலம்பகன் மாலை என்னும் இடம் தோற்றுகிறது –
பிணைய லேய்ந்த மழைக் கூந்தல்–என்கையாலே ஒரு கொம்பிலே பிறந்து மற்று ஓர் இடத்திலே கொடு போந்து-சேர்க்கை யாகிற கால விளம்பத்தால் வரும் செவ்வி மாறாதே இருக்கை-மாலையாய்க் கொண்டு மயிரிலே பூத்தால் போலே இருக்கை –
மழைக் கூந்தல்–இத்தை அனுபவிக்க ஸ்ரமஹரமாய் இருக்கை
மழை போலே குளிர்ந்த கூந்தல் -என்னுதல்
மேகங்கள் ஆகிற மயிர் முடி என்னுதல்
ஸ்திரீகளுக்கு பிரதான அவயவம் தலையும் முலையும் ஆயிற்று
அதில் தலை இருக்கும் படி சொல்லி
முலை இருக்கும் படி சொல்லுகிறது மேல்-
தென்னன்
தென்னன் கொண்டாடும் -என்கிறபடியே தென்னனதான திருமலையும் –உயர் பொருப்பும் –
நீண்ட மலை
மஞ்சுயர் மா மதி தீண்ட நீண்ட மாலிருஞ்சோலை -என்கிற உயரத்தை சொல்லுகிறது –
தெய்வ வடமலையும்-
நித்ய ஸூ ரிகளதான வடக்குத் திருமலையும் –
என்னும் இவையே முலையா –
என்று சொல்லப் படுகிற திருமலைகள் இரண்டும்  முலையாக
இந்த பூமியில்  உள்ளாரையும் விட மாட்டாத நீர்மையின் ஏற்றம் செல்லும் திரு மலையும்
அறிவுடையார் விரும்பும் திருமலையும்
மேரு மந்த்ராதிகளைச் சொல்லாதே திருமலைகளைச் சொல்லுவான் என் என்னில்
முலைகள் ஆக்கின காந்தன் விரும்பி படு காடு கிடககுமாவை யாயிற்று
சர்வேஸ்வரன் விரும்பி நித்ய வாஸம் பண்ணும் இடங்கள் இ றே இரண்டு திருமலைகளும்
கிரி ராஜோபமோ கிரி -என்று சித்ர கூடத்துக்கும் ஒப்பாக சொல்லிற்று திருமலைகளை இ றே  –
வடிவமைந்த-
மயிர் முடியும் முலைகளும் இருந்த படி சொல்லிற்று இ றே-
இனி வடிவில் ஒன்றும் பார்க்க வேண்டுவது இல்லையே –
இப்படி –
வடிவமைந்த–
வடிவுக்கு அங்கன் ஒப்புச் சொல்லலாவது ஒன்றும் இல்லை –

அன்ன நடைய -வணங்கேய் –
நடை அழகைக் கண்டால் பின்னையும் மயிர் முடிகளிலும் முலைகளிலும் நெஞ்சு போகாதபடி பண்ணும் –
கால தத்வம் உள்ளதனையும் நடை அழகோடு பனி போரும் ஆயிற்று நடை இருப்பது –
நாயகனுக்கு சர்வ ஸ்வதானம் பண்ணுகை யாவது -முன்பே நாலடி நடக்கை –
அன்னத்தோடு ஒத்த நடையை உடையளுமாய் அணங்கை ஏய்ந்து இருப்பாளும் ஆனவள் –
அப்ராக்ருத ஸ்வ பாவை யானவள் –
த்ரயாணாம் பிரதாதீ நாம் தேவதா ச யா ராமஸ்ய ச மன காந்தா -சுந்தர -55-26-
பிள்ளைகள் மூவருக்கும் ஒக்கு மாயிற்று -தேவதையாம் இடத்தில்
பெருமாளுக்கு வாசி என் என்னில் -மன காந்தையாய் இருக்கும் –
ஆஸ்ரயநீயை என்று தோற்றும்படி யாய் இருக்கை-
குரு மணங்கும் தெய்வப் பெண் -என்னக் கடவதுஇ றே-
அடி இணையைத்தன்னுடைய அம் கைகளால் தான் தடவத் –
அவன் தன்னடியைத் தடவ வேண்டும்படியான ஏற்றத்தை யுடைய தான்
தன்னுடைய அழகிய கைகளாலே தடவ
அணங்கு -என்கையாலே ஆஸ்ரயநீயத்தை தோற்றுகிறது-
இப்படி ஏற்றம் உடையவளை அவன் கொண்டாட வேண்டும்படி இருக்க -அது தவிர்ந்து -தான் அவனை ஆதரியா நிற்கும்
பிராட்டியே இருக்கச் செய்தே –அடியிணையை -என்கையாலே தோற்ற தோல்வி தோற்றி இருக்கிறது –
தன்னுடைய -என்கையாலே -அவன் கொண்டாட வேண்டும் படியான பிரதாண்யம் தோற்றுகிறது –
அங்கைகளால் தான் தடவ -என்கையாலே ஸ்வ மார்த்தவ நிரீ ஷன ஷமை இல்லாமை தோற்றுகிறது  –
இவள் ஒரு கால் திருக் கைகளால் அவன் திருவடிகளைத் தடவினால்
அவனுக்கு ஜகத் வ்யாபாராதி களால் வரும் ஆயாசம் எல்லாம் ஆறும் போலே காணும் –
தான் தடவ –
இது குணம் என்று செய்கை யன்றிக்கே அபி நிவிஷ்டையாய்ச் செய்கை –

தான் கிடந்தது –
தனி கிடந்தது அரசு செய்யும் -என்கிறபடியே தான் கிடந்தது
ஆனையில் கிடந்த கிடைக்கை -என்கிறபடியே ஒரு மத ஹஸ்தி சாய்ந்தால் போலே சாய்ந்து-உலாவும் போதை அழகுக்கு மேலே சாய்ந்த போதை யழகு உறைத்து இருக்கிறதாயிற்று

ஒர் உன்னிய யோகத் துறக்கம் தலைக் கொண்ட பின்னை-
ஓர் உறக்கம் -என்னுதல்
ஒருப்படுவதான உறக்கம் -என்னுதல்
உன்னிய என்று கிடைக்கையாலே -ஒருப்பட வேண்டா அத்விதீயமான நித்ரை -என்றபடி  நித்ரைக்கு அத்விதீயமாம் -ஜகத் ரஷண சிந்தை ஒழிய தன்னை அனுசந்தித்தல்
பரம பதத்தை அனுசந்தித்தல்-செய்யுமது இன்றிக்கே இருக்கை –
உன்னிய –
ஜீவர்கள் உடைய ஆனந்த்யத்துக்கு எல்லை இல்லையே
ஒருவனே அநேகர் உடைய ரஷண சிந்தை பண்ணப் புக்கால் அதிலே சிறிது குறை உண்டாய் தோற்றுகை அன்றிக்கே
ஒருவனுடைய ரஷன சிந்தை பண்ணுமா போலே இருக்கிற ஜ்ஞான வைச்த்யத்தைப் பற்றச் சொல்லுகிறது –
யோகத் துறக்கம் –
தமோ குண அபிபூதமாய் அஸ்திரமாய் இருப்பது ஓன்று   அன்றே –
நம்முடைய கிரியா பாவத்தாலே யாதல்
மற்று ஒரு ஹேதுவாலே யாதல்
வரக் கடவதான நித்ரை அவர்களுக்கு இல்லை
இனி நித்ரை யுள்ளது -உலகு எல்லாம் நன்கு ஒடுங்க யோகணைவான் -என்கிறபடியே
சர்வரும் நல வழி போய்க் கரைமரம் சேரும் விரகு ஏது என்று பார்த்து பர ஹித சிந்தை பண்ணிக் கொண்டு கண் வளர்ந்து அருளுகிறபடி
ஆத்மா நம் வா ஸூ தேவாக்யம் சிந்தையன் -என்கிற வதுவும் அன்றிக்கே இருக்கை –
உறக்கம் -தலைக் கொண்ட பின்னை-
இனி அநந்தரம் சிருஷ்டி ப்ராப்தம் என்னும்படி நித்ரையை பிராப்தனாய்
பகல் எல்லாம் அமர்ந்து-பின்னை முருடு கொளிந்திற்று என்னுமாபோல் அன்றிக்கே
நித்ரையினுடைய குளிர்த்தியைச் சொல்லுகிறது –
அநந்தரம் வரக் கடவ ப்ரஹ்மாவின் உடைய உத்பத்திக்குக் காரணமாய் இருக்கை –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமடல் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை/ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்- வியாக்யானம்-தனியன்/அவதாரிகை – –

June 11, 2014

ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் அருளிச் செய்த தனியன்

பொன்னுலகில் வானவரும் பூ மகளும் போற்றி செயும்
நன்னுதலீர் நம்பி நறையூரர் -மன்னுலகில்
என்நிலைமை கண்டும் இரங்காரே  யாமாகில்
மன்னு மடலூர்வன் வந்து   –

————————————————————————–

அவதாரிகை –
இத் தனியன் ஆழ்வார் அபிப்ராயமே இருக்கிறது –
சர்வைஸ் ஸ்துதியனான பரிபூர்ணன்
இவ்விபூதியில் தன் கிருஷி பலமான  பரபக்தியாதி வைபவங்களைக் கண்டு தயை பண்ணாது இருப்பான் ஆகில்
அநந்ய  உபாயத்வம் குலையும் படியான    அதி ப்ராவண்யத்தை ஆவிஷ்கரிப்பன் -என்கிறது –

நல் நுதலீர் நறையூரர் நம்பி என்நிலைமை கண்டும் இரங்காரே  யாமாகில்
மன்னு மடலூர்வன் வந்து   -என்று அந்வயம் –

நல் நுதலீர் –
நல்ல நுதலை உடையவர்களே
வாண் முகத்தீர் -என்னுமா போலே சகோத்தரிகளை சம்போதிக்கிறது –

பொன்னுலகில் வானவரும் –
பரமபத வாசிகளான நித்ய சூரிகளும் –

பூ மகளும் –
பெரிய பிராட்டியாரும் –

போற்றி செயும்-
மங்களா சாசனம் பண்ணும் –
பரதனும் தம்பி சத்ருக்னனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற -என்னுமா போலே
இவர்கள் போற்றி செய்யும் நறையூர் நம்பி -என்னுதல் –

அன்றிக்கே
பொன்னுலகில் வானவராய் ஸ்வர்க்க வாசிகளான தேவர்களும்
பூ மகனும் -என்று பாடமானபோது
புஷ்பஜனான ப்ரஹ்மாவும் போற்றி செயும் -என்றுமாம் –
போற்றி செய்கைக்காக இ றே முன்னம் திசை முகனைத் தான் படைத்தது  –

நம்பி நறையூரர் –
நரையூரரான நம்பி –
திரு நறையூர் நம்பி –
இங்கு வந்து எல்லா குணங்களும் புஷ்கலமாக உடையவர் –

மன்னுலகில் என்நிலைமை கண்டும் –
தான் படைத்த படியே என் படியைக் கண்டும் –
பேராளன் பேரோதும் பெண்ணை மண் மேல் பெரும் தவத்தள் என்றல்லால் பேசலாமே -திரு நெடும் தாண்டகம் -20-என்னும் படி இ றே இவள் படி –
நித்யமாய்ப் போருகிற பூமியிலே என் தய நீய தசையைக் கண்டும்  –
தாதாடு வனமாலை தாரானோ என்று என்றே தளர்ந்தாள்-பெரிய திரு மொழி -5-5-6-என்று இ றே இவள் நிலை இருப்பது  –

இரங்காரே  யாமாகில்
இத்தசையிலும்
வண்டு திவளும் தண்ணம் துழாய் கொடீர் -திரு வாய் மொழி -2-4-5-
இரக்கம் எழீர் -திருவாய் மொழி -2-4-3-கொடாதே இரக்கம் எழாது இருப்பார் ஆகில் –

மன்னு மடலூர்வன் வந்து   –
தாம் இருக்கும் அளவும் மடலும் கையுமாய் வந்து-தம் குண பூர்த்தியை அழிப்பன் –
இத்தால் –
அவன் ஆசூவாக அங்கீ கரிக்கும் படி அதி பிராவண்யத்தை ஆவிஷ்கரிப்பன் -என்றது ஆயிற்று
இத்தலையில் வருமது சைதன்ய கார்யம் –
அத்தலையால் வருமது -சாதனம் –

————————————————————————–

அவதாரிகை –

பெரிய திரு மடல் ஆவது
கண்ணாஞ்சுழலை இட்ட ப்ரபந்தம் இன்னம் ஓன்று –
வைக்கோல் போர் சுட்டு நெல் பொரி  கொறிக்கை  –
இரண்டு தலையில் உள்ளாறும் கை விட்டால் அன்று ஒரு வழியே போகலாம் என்று தாத்பர்யம் –
வாடினேன் வாடி தொடங்கி-இவ்வளவும் வர  பகவத் குணங்களை சீலனம் பண்ணிப் போருகையாலே
அபி நிவேசம் மிக்கு -வழி அல்லா வழி யாகிலும் காண வேணும் என்று கண்ணாஞ்சுழலை இட்ட படி –
இப்பிரபந்தம் எம்பெருமானோடு கலந்து பிரிந்தாள்  ஒரு பிராட்டி
தன் ஆற்றாமையாலே மடலூர்ந்தாகிலும் காண வேணும் என்னும் தசை தமக்குப் பிறந்து பேசுகிறார் –
மடலாகிறது -இரண்டு தலைக்கும் அவத்யத்தை விளைக்குமது அன்றோ வென்ன-அது தான் அன்றோ தேட்டம் -என்கிறது –
ராமஸ்ய தயிதா பார்யா நித்யம் பிராண சமா ஹிதா – பால காண்டம் -1-26-என்றும்
மமைவ துஷ்க்ருதாம் கிஞ்சின் ம்ஹதச்தி ந சம்சய
சமர்த்தாவபி தௌ யன்மாம் நாவேஷேதே பரந்தபௌ-சுந்தர 38-47 -என்றும்
ஸ்வஸ் த்யச்து ராமாய ச லஷ்மணாய ததா பிதுர்மே ஜனகச்ய   ராஜ்ஞ-சுந்தர -32-9-என்றும்
ந மந்தராயா ந ச மாது ரஸ்யா தோஷோ ந ராஜ்ஞ்ஞோ ந ச ராகவச்ய   -என்றும்
யதி ப்ரீதிர் மகாராஜா யத்ய நுக் ராஹ்யதா மயி
ஐ ஹி  மாம் நிரவி சங்கஸ்த்வம் பிரதிஜ்ஞ்ஞாம நுபாலய -என்றும் –
வள வேழ் உலகில் –திருவாய் மொழி -1-5-படியாலும்
மிக்க சீர்த் தொண்டர் இட்ட பூந்துளவின் வாசமே -பெரிய திரு -11-1-9- என்றும்
அத்தலைக்கு சம்ருத்தியைப் பாரிக்க
உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து நாடினேன் –பெரிய திரு -1-1-1-என்றும்
பேசுகிற இவருடைய பேர் அளவுக்கு போருமோ -என்னில்
ஜ்ஞான பாரதம்  அன்று
பகவத் சௌந்தர்ய பாரதம் ஆகையாலே
பஹவோ ந்ருப கல்யாண குணா புத்ரஷ்ய சந்தித்தே -அயோத்யா -2-26-என்றும்
தாது நாமிவ சைலேந்த்ரோ குணா நாமகரோ மகான் -கிஷ்-15-21- என்றும்
உண்டாகையாலே இதுவே சேரும் –

துல்ய சீல வயோ வ்ருத்தாம் -கிஷ்-16-5-என்கிறபடியை உடையராய் இருப்பார் இருவர்
தைவ யோகத்தாலே கூடி
தைவ யோகத்தாலே பிரிந்து நெடும் காலம் வரவு பார்த்து இருந்து வரக் காணாமை யாலும்
திருஷ்ட உபாயமும் அதருஷ்ட உபாயமும் கை வாராமையாலும் ஆற்ற ஒண்ணாத அபி நிவேசம் மிக்கு
மடலூர்ந்தாலும் காண வேணும் என்கை யோக்கியம் –
கூடுவதும் பிரிவதும் இரண்டும் புண்ய பலம் என்றது –
கூடுகை புண்ய பலம்
பிரிகை புண்ய பலமான படி எங்கனே என்னில்
வாதாதப கலாந்த மிவ பிரணஷ்டம் வர்ஷேன பீஜம் பிரதி சஞ்ச்ஜஹர்ஷ-சுந்தர -29-6-என்னுமா போலே
சிநேக வர்த்தகம் ஆகையாலே –
திருஷ்ட உபாயம் -என்கிறது தௌத் யாதிகளை –
அதருஷ்ட உபாயம் என்கிறது -தை யொரு திங்களில் படி –

ஸ்த்ரியோ வ்ருத்தாஸ் தருண்யச்ச சாயம் ப்ராதாஸ் சமாஹிதா
சர்வான் தேவன் நமச்யந்தி ராமச்யார்த்தே யசச்வின -அயோத்யா -1-52-என்கிறபடியே இராதே
மடலூருகிற இது சேருமோ என்னில் சேரும் –
மடலூருகை தான் உண்ணாதே குளியாதே உகந்த விஷயத்தை ஒரு படத்திலே  லிகித்து அத்தைக் கொண்டு திரிகையும்
அற விளைததால் அதன் காற் கடையிலே  விழுகையும்
விழுந்தால் அங்கனே செல்லரிக்கக் கிடக்கையும்
அங்கனே முடிகையும்
இத்தால் பிரயோஜனம் என் என்னில் அவன் கேட்கும் என்கையும்
இல்லை யாகில் இது தானே பிரயோஜனமாகை –

காமினோ வர்ணயன் காமான் லோபம் லுப்தச்ய வர்ணயன்
நர கிம் பலமாப் நோதி கூபே அந்தமிவ பாதயன் -என்று சொல்லா நிற்கச்  செய்தே விட ப்ரவ்ருத்தியாய் அசாஸ்த்ரீயமாய் சத்துக்களும் கை விடுவது ஒன்றாகையால் இது ப்ராப்தம் அன்றே என்ன
அது சப்தாதி விஷயங்களை காமமாக கொள்ளும் போதே குற்றம் உள்ளது
இது வேதாந்தத்தில் சொல்லுகிற பகவத் பக்தியை காமம் என்கையாலே குற்றம் இல்லை
வ்யவசாயாத்ருதே பிரமன் நாசாதயாதி தத்பரம் -என்றும்
பரமாத்மனி யோ ரக்தோ விரக்தோ அபரமாத்மனி
சர்வேஷணா வி நிர்முக்தஸ் ச பை சாம் போக்து மர்ஹதி -என்கிற
பகவத் அத்யவசாயத்தைக் காமம் -என்கிறது
சன்யாச தர்மத்தை -மடல் -என்று ஆளவந்தார் அருளிச் செய்தார் –
ஆனால் தர்மார்த்த மோஷங்களை சிறிய திருமடலில் இகழ்வான் என் என்னில்
ஜாபாலி பகவான் பெருமாள் திரு முன்பே லோகாதிக சித்தாந்தத்தின் படியே சில அதர்மத்தை விண்ணப்பம் செய்ய
ஜாபாலிர் ப்ராஹ்மாணோத்தம -என்று அவனைக் கொண்டாடுகையாலே இதிலும் குற்றம் இல்லை –
தர்மார்த்த மோஷங்களை  இகழ்க்கை யன்று உத்தேச்யம்
தம்முடைய புருஷார்த்தில் உள்ள தாத்பர்யம் –
கடலன்ன காமத்தராகிலும் மாதர் மடலூரார் மற்றையார் மேல் -என்று சொல்லா நின்றதே என்னில்
அது விதி
நிஷேத வசன உக்தி அன்று
ராக ப்ராப்தம் ஆகை யாலே தோற்றார் மடலூரும் அத்தனை
விதி நிஷேதம் ஆகில் ராஜாஜ்ஞ்ஞைக்கு நிற்க வேணும் காமம் –
இப்படி மடலூர்ந்தார் ஆர் என்னில் –
சதேவ கந்தர்வ மனுஷ்ய பன்னகம் ஜகத் சசைலம் பரிவர்த்த யாம் யஹம்ம் -ஆரண-64-45-என்றும்
அசோகா சோகாப நுத சொகொபஹத செதசம்
தவன் நாமானம் குரு  ஷிப்ரம் ப்ரியா சந்த்ர்சநேன மாம் -ஆரண-60-17-என்றும்
ந மே ஸ்நானம் பஹூ மதம் , வசத்ரான்யா பரணா நிச
தம் விநா கைகயீ புத்ரம் பாரதம் தர்ம சாரிணம் -யுத்த -124-7-என்றும்
யா ந சகா புறா த்ரஷ்டும் பூதை ராகா சகைரபி
தாமத்ய சீதாம் பஸ்யந்திராஜ மார்க்க்கதா ஜனா -அயோத்ய -33-7- என்றும்
மன்னன் இராமன் பின் வைதேவி என்று உரைக்கும் அன்ன நடைய அணங்கு நடந்திலளே-பெரிய திருமடல் –
என்றும் இப்படிகளால் தோற்றார் ஊரும்   இத்தனை –
வாச்வத்தாதிகள் பக்கலிலும் கண்டோம்
இவள் ராஜ புத்ரியான படி எங்கனே என்னில்
ச ச்லாக்யஸ்  ச குணீ தந்யஸ் ச குலீ நஸ் ச புத்திமான் -ஸ்ரீ விஷ்ணு புரா  -1-9-11-
என்றும்
தேசும் திறலும் திருவும் உருவுமும்  மாசில் குடிப் பிறப்பும் -மூன்றாம் திரு-10-என்றும்
குலம் தரும்செல்வம் தந்திடும் -பெரிய திரு -1-1-9- என்றும்
பகவத் கடாஷத்தாலே ராஜ புத்ரிகளுக்கு உண்டான வேண்டப் பாடு இவளுக்கு உண்டாகையால் –

இப்பிராட்டி பகவத்  விரஹத்தாலே
துளம்படு முறுவல் தோழியர்க்கு அருளாள்-பெரிய திரு -2-7-2-என்று சொல்லுகிற படியே
ஒரு வாடல் மாலை போலே இருக்கிற இவளுக்கு அபி நிவேசம் மிக்கு
மடலூரத் துணிய
அத்துணிவாலேகாட்டுத் தீ தூவினார் முகம் போலே இராதே
நீராடி உண்டார் முகம் போலே குளிர்ந்து எழிலும் அற மிக்கது  –
நிர்க்குண பரமாத்மா அசௌ தேஹம் தே வ்யாப்ய திஷ்டதி -என்று பெருமாள் கையும் வில்லும் உள்ளே நிழலிடா நின்றதீ என்று
திருவடியை பீம சேனன் சொன்னால் போலே
இவள் உடம்பில் மடல் நிழல் ஆடுகிற படியைக் கண்ட தோழி
ஒர்ப்பால் இவ் ஒண் நுதல்   உற்ற நல் நோய் இது தேறினோம் -திருவாய் -4-6-1-என்னுமா போலே
இவள் மடலூரப் புகுகிற படியை அறிந்து
தயா ச ராஜர்ஷி ஸூ தோ அபி ராமயா சமேயிவா நுத்த மராஜ கன்யயா
அதீவ ராம  ஸூ ஸூ பே அதி காமா விபு ஸ்ரீ யா விஷ்ணு ரிவாமரேஸ் வர -பால -77-32-என்று சொல்லுகிற படியே
உன்னுடைய ஆபி ஜாத்யாதி மர்யாதைகளுக்கும்
அவனுடைய ஆபிஜாத்யாதி மரியாதை களுக்கும் போராது இத் துணிவு
நாட்டாரும் பழி இடுவர்
மாதா பிதாக்களும் பந்துக்களும் கை விடுவதும் செய்வார்கள் என்று நிஷேதிக்க
என் செய்யும் ஊரவர் கவ்வை
அன்னை என் செய்யில் என் ஊர் என் சொல்லில் என் -திருவாய் -5-3-6- என்றும்
யாம் மடலூர்த்தும் -திருவாய் -5-3-10- என்றும்
மடலூர்வது போக்கிப் புருஷார்த்தம் இல்லை என்று உப பாதிக்கிறாள் –

சடக்கென மடலூராதே தோழிக்கு நின்று உத்தரம் சொல்லுவான் என் என்னில்
சாப மா நய சௌ மித்ரே -யுத்த -21-22-என்றும்
இரைக்கும் கரும் கடல் வண்ணன் -திருவாய் -5-3-11-என்றும்
சொல்லுகிற படியே மடல் என்ன
அக்கடல் பட்டது பட்டு அவன் வந்து தோன்றும் என்று
பலகைப் புறத்தே பகட்டுகிறாள்
தோழியும் இவள் சொல்லக் கேட்டுப் போது போக்கும் அளவில் அவன் வரும் என்னுமத்தாலே-சொல்லிக் காண் -என்கிறாள் –

————————————————————————–

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானம்
அவதாரிகை –

பார்யா புத்ராஸ்ஸ தாசஸ்ஸ த்ரய ஏவாதனா ஸ்ம்ருதா
யத்தே சமதி கச்சந்தி யச்யைதே  தஸ்ய தத்த நம்
சீல வயோ வ்ருத்தாதிகள் துல்யமாய் இருப்பன இரண்டும் தம்மில் விஷயமாய்
இருவருக்கும் யாத்ருச்சிகமாக சம்ச்லேஷம் ப்ரவ்ருத்த மாம்படியே
விச்லேஷமும் பிரவ்ருத்தமாய்
அநந்தரம்-இரண்டு தலைக்கும் அபி நிவேசம் கரை புரண்டு பொறுக்க அரிதாய் இருக்க
பிறர் அறிய கலவி அல்லாமையாலே கடலேறி வடிந்தால் போலே இருக்கிற வடிவில் உள்ள வேறுபாட்டைக் கண்டு
பந்துக்கள் ஆனவர்கள் -பிரவ்ருத்தமான பிரகாரங்களை அறிந்து
இங்கனே பிறக்கலாகாது என்று நிரோதிதத்தாலும்
அபிமத விச்லேஷத்தாலும் ஆற்றாமை அறக் கை விஞ்சினால் பந்துக்கள் நசை அற்று
இத்தலையில் ஸ்த்ரீத்வாதி குணங்களையும் விட்டு
எதிர்த் தலைக்கு குண ஹானியையும் விளைப்பித்து –
இப்படி ஜகத் உப  சம்ஹாரம் பண்ணி யாகிலும் முகத்தே விழித்து அல்லது மீளுவது   இல்லை-என்னும் படியான ஆற்றாமை கை விஞ்சினால் பண்ணுவதொரு சாஹாச ப்ரவ்ருத்தி விசேஷமாய் இருக்கும் -மடலாவது –

இது தான் இருக்கும் படி என் என்னில்
அபிமத விஷயத்தை ஒரு படத்திலே எழுதி
வைத்த கண் வாங்காதே அத்தைப் பார்த்துக் கொண்டு
தன்னைப் பேணாதே
ஊண் உறக்கம் அற்று திரியா நின்ற இத் தர்ம ஹானியைக் கண்டு
ராஜாக்கள் கூட்டுதல்
தைவம் கூட்டுதல்
இரண்டும் இல்லையாகில் முடிந்து பிழைத்துப் போதல் -செய்யும் இத்தனை -யாதல்
இதுக்கு அபிப்ராயம் இது வாகில்
வள  வேழ் உலகில் படியே -ஸ்வ விநாசத்தை அங்கீ கரித்து
அத்தலைக்கு அவத்யம் வாராத படி பரிஹரிக்க பிராப்தமாய் இருக்க
அத்தலைக்கு அவத்யத்தை விளைத்து நினைத்தது தலைக் கட்டிக் கொள்ள நினைக்கிற இது சேருமோ -என்னில்
நிரூபித்தால் அங்கன் நினைக்கிற அதுவும் அத்தலைக்கு அவத்ய பரிஹாரம் பண்ணித் தலைக் கட்டுமதுவே   –

ஆனால் இவை கூடின படி எங்கனே என்னில் –
வள வ ழ் உலகில் தம் ஸ்வரூப ஜ்ஞானத்தாலே இறாய்க்கப் பார்த்தாராய்
இங்கு -ஈஸ்வர ஸ்வரூப ஜ்ஞானத்தாலே மேல் விழப் பார்க்கிறார் –
அவனுக்கு   குண ஹாநியை பண்ண ஒண்ணாது என்று தம்மைக் கொண்டு இறாய்த்தார்-
அவனுக்கு ஸ்வரூப ஹாநியை விளைக்க ஒண்ணாது என்று மேல் விழப் பார்க்கிறார் –
அவன் ரஷகன் என்கிற ஜ்ஞானம் மாத்ரமேயாய்
பெற்ற போது பெறுகிறோம் -என்று இருக்கில்
அவனுடைய வைலஷண்ய ஜ்ஞானம் பிறந்தது இல்லையாம்
அப்படி வள வே ழ் உலகில் அகன்றவாறே
மாசறு சோதியிலே மடல் எடுக்க ஒருப்பட்டார்
மயர்வற மதி நலம் அருளினான் -என்று பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் இ றே இவர் பெற்றது
அவ்விரண்டின் உடைய காரியமும் பிறந்து அல்லது நில்லாதே
ருஷிகளில் காட்டில் பகவத் பிரசாத லப்தமான   ஜ்ஞான ஆனந்தங்களை உடைய ஆழ்வார்கள் வாசி இருக்கும் படி இ றே இது –

அங்குத் தான் -சாபமா நய -என்று வில்லைக் காட்டிப் பகட்டினாப் போலே
மடலைக் காட்டிப் பகட்டி முகத்திலே விளிக்கப் பார்க்கிற இத்தனை இ றே –
அல்லது செய்து தலைக் கட்டக் கடவதாக சொல்லுகிறது அன்றே –
மடல் எடுக்கை யாகிறது -எதிர்த் தலைக்கு குண ஹாநியை விளைக்கை இ றே
குண ஹாநியை விளைக்கவே -குணாதிக விஷயம் ஆகையாலே குணத்தை ஒழிய ஜீவிக்க மாட்டான் இறே –
குணமே தாரகமாக நினைத்து இருப்பார்க்கு குணத்தை அழிக்கை யாகிறது
குணியை அழிக்கக் கடவது இ றே –
தனக்கு குண ஹாநியை விளைக்கை யாவது தன்னையே அழிக்கை
ஆகையாலே தன்னை அழிக்க மாட்டாமே
இவள் மடலூர ஒருப்பட்ட போதே
அவன் இவள் சந்நிதியிலே வந்து மேல் விழும் –
அவனுக்கு ஸ்வரூப ஹாநி வாராமே தன் அபிமதமும் பெற்றுத் தலைக் கட்டலாம் ஆகில்
இதற்கு மேல் பட்ட வாய்ப்பு இல்லை இ றே
இனி மடல் எடாது ஒழிந்த போது
அத்தலைக்கு அவத்யத்தைப் பண்ணிற்றாம் இத்தனை இ றே –

சர்வேஸ்வரன் சிருஷ்டி யுன்முகனாய்க் கொண்டு கண் வளர்ந்து அருள
சிருஷ்டி காலமானவாறே திரு நாபியிலே ஒரு தாமரை பூத்தது –
அதிலே சதுர்முகன் தோன்றினானாய்-அவனைக் கொண்டு இவ்வருகு உண்டான கார்ய வர்க்கத்தை உண்டாக்கச் சொல்லி
அவனுக்கு கை விளக்காக நாலு வகைப் பட்ட வேதங்களையும் ஒதுவித்தானாய் –
அந்த வேதங்கள் தன்னிலே புருஷார்த்தமாகச் சொல்லப் படுகிற
தர்மார்த்த காம மோஷம் என்று சொல்லப் படுகிறது நாலு –
தர்மமும் காம சேஷம்
அப்படியே அர்த்தமும் காம சேஷம்
காம புருஷார்த்தமே பிரதானம்
இனி பகவத் புருஷார்த்தம் என்று ஓன்று உண்டு என்று சொல்வார்கள்
அது பெறுகை துர்லபம் –
பெற்று அறிவார் இல்லை –
ஆகையால் இட்டு எண்ணப் படுவது ஓன்று அன்றி
புருஷார்த்தங்களில் காமமே இ றே புருஷார்த்தம்
அல்லாதவை இதுக்கு அங்கம் இ றே-

கர்மண்யேவாதி காரச்தெ மா பலேஷூ   கதாசன –
காம்ய ரூபமான தர்மங்களிலே உனக்கு அதிகாரம் –
இதில் தாளையடியில் சொல்லுகிற பலன்களில் உண்டான அபிசந்தியைப் பண்ணாது ஒழி -என்றவாறே
மா கர்ம பல ஹேதுர்பூ-
கர்மம் பல ஹேதுவாகாமே கொள் -அதாகிறது சகர்த்ருகமாக அனுஷ்டியாதே
மா தே சங்கோ அஸ்தவ   கர்மணி –
பல த்யாகத்தை பண்ணா நின்றதாகில் அகர்த்ருகமாக அனுஷ்டிக்க வேணுமாகில்
இது தான் நமக்கு என் செய்ய -என்று கொண்டு அனநுஷ்டானம் வாராத படி பரிஹரி -என்று கொண்டு இங்கனே காம்ய ரூப கர்மம் தன்னையே பகவத் பிராப்திக்கு சாதனமாக அருளிச் செய்தான் இ றே –
இப்படியே இந்த காமமும்
பாஹ்ய விஷயங்களைப் பற்றி இருக்கும் அன்று இ றே இது த்யாஜ்யம் ஆவது –
வகுத்த விஷயத்தைப் பற்றி வரும் அன்று உத்தேச்யமாக கடவது –
அப்ராப்த விஷயங்களில் காமத்தை நிஷேதித்து -வகுத்த விஷயத்தில் காமத்தை விதித்தது
நிதி த்யாசி தவ்ய-என்று கொண்டு விதி ரூபமாய் வருகிற காமம் ஆயிற்று அது –
இங்குக் காமமாக சொல்லுகிறது தான் பகவத் பக்தியை –

இந்த பக்தி தான் உபாசன பக்தியாய் வருமது அல்ல –
பகவத் பிரசாதம் அடியாக கைங்கர்யத்துக்கு பூர்வ காலீனமாய்க் கொண்டு வரும் பக்தி யாயிற்று
கர்ம ஜ்ஞான சஹ்க்ருதமாய் வரக் கடவ பக்தி யாயிற்று வேதாந்தங்களிலே சொல்லுகிற சாதன பக்தி யாவது  –
இதுக்கு அந்த கர்ம ஜ்ஞானங்கள் இரண்டின் உடைய ஸ்தானங்களில் பகவத் பிரசாதமாய்
அதடியாக பரபக்தி பரஜ்ஞான பரமபக்தியாய் இருக்கும்
பேற்றுக்கு கைம்முதலாக-மயர்வற மதி நலம் அருளினன் -என்று சொல்லி
அவ்வருள் அடியாக
சூழ் விசும்பணி முகிலுக்கு இவ்வருக்கு எல்லாம் பர பக்தி பிறந்த படியாய்
சூழ் விசும்பணி முகில் தன்னிலே பரஜ்ஞானம்  பிறந்த படியாய்
முனியே நான் முகனிலே பரம பக்தி பிறந்த படியாய்
அநந்தரம்
பெற்றுத் தலைக் கட்டினாராய்-அருளிச் செய்தார் இ றே   –

உபாசகனுக்கு தன்னுடைய பக்தி சாதனத்துக்கு உடலாய் இருக்கும் –
பிரபன்னனுக்கு கைங்கர்யத்துக்கு பூர்வ ஷணவர்த்தியாய் -ப்ராப்ய அந்தர் கதமாய் இருக்கும் –இத்தால் -பிராப்ய ருசியைச் சொன்ன படி இ றே
ஏவம் விதமானது கர்ம புருஷார்த்தம்
அங்கன் அன்றியே இதுக்கு தூஷணம் சொல்லுமவர்கள் அவஸ்துக்கள்-அவர்களை நாம் சிலராக ஆதரியோம் –
இதிலும் பழையதாய் போருகிற வழியிலே நின்றோம் வாம்
அப்படிச் செய்தோம் நாமே  யல்லோம் –
விவஷிதராய் அறிவுடையார் இருப்பார் பலரும் இத்தையே ஆதரித்தார்கள் என்னும் இடத்துக்கு பிரமாணமும் காட்டி
இப் புருஷார்த்தையே ஆதரித்து –
இத்தை ஒழிந்த வற்றை அடையக் காற்கடைக் கொண்டு
இக்காமம் தனக்கு விஷயமாக நினைக்கிறது குணாதிக்ய விஷயத்தை யாயிற்று –
பர வ்யூஹ விபவங்கள் அன்றிக்கே குணாதிக்யம் உள்ளது உகந்து அருளின நிலங்களிலே யாகையால்
இங்கு நிற்கிற நிலைக்கு அடியான குணங்களின் ஏற்றத்தை யடைய அழித்தல்-
பெறுதல் செய்தால் அல்லது மீளுவது இல்லை என்று ஒருப்பட்ட த்வரையின் ஊற்றத்தை சொல்லி  –
அதுக்காக மடல் எடுப்பதாக அத்யவசித்த ஊற்றத்தை சொல்லித் தலைக் கட்டுகிறது –

சிறிய திரு மடலில் கிருஷ்ணாவதாரத்திலே மடல் எடுத்துப் பெற நினைத்தார் –
அவ்வதாரம் பரத்வத்தோடு  ஒக்கச் சொல்ல லாம் படி யாயிற்று –
நீர்மைக்கு எல்லை நிலமாய்
அது போலே காலாந்தர பாவியாகாதே
நினைத்த போதே மடல் எடுத்து அழிக்கலாம் படி சந்நிஹிதமுமாய் இருக்கிறது  யாயிற்று -உகந்து அருளின நிலங்களிலே மடல் எடுத்துப் பெற நினைக்கிற இது –
கிருஷ்ணன் ஆகிறான் நிர் லஜ்ஜன் ஆகையாலே தானும் ஒக்க மடல் எடுக்கும்
மடலுக்கு இறாய்ப்பான் ஒருவன் அல்லன்
குணாபிமானம் பண்ணி இருக்கும் இடத்தே குணங்களை அழிக்கை யாகிறது கடுகப் பெருகைக்கு உறுப்பாய் இருக்கும் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

அருளி செயல் அரங்கம் -பெரிய திரு மடல்- சாரம் ..

December 11, 2011
 திரு மால் கவிஜன்
சின்ன அஸ்தரம் சிறிய திரு மடல்
பெரிய அஸ்தரம் பெரிய திரு மடல்
தெளியாத மறை நிலைகள் தெளிகின்றோமே
சிறந்த யக்ஜம் -இது –
சந்நிவேசம்-சிறப்பு -நம் பிள்ளை சந்நிதி -வசந்த காலம்-
நின்னையே தான் வேண்டி -திரு வல்லி கேணி கண்டேனே –
TSR
பேய் ஆழ்வார் சந்நிதி-அருகில்-அனைத்தும் மதுரம் –
நோய் பட்டு ஒழிந்தேன் ஆழ்வார் வாய் பட்டு
அருளி செயல்- எங்கனே சொல்லிலும் இன்பம்  பயக்குமே
அருளி  இச் செயல் –
நம் பெருமாள் -நம் பாணன்-தேசிகன்-நம் ஜீயர் -நம் பிள்ளை –
பெரிய பெருமாள் பெரிய திரு அடி பெரியதிரு மடல்
பெரியவனை மாயவனை -இளங்கோ அடிகள்
விரி கமல உந்தி உடையவனை ‘காணா கண் என்ன கண்ணே –
மடலூர்தல்- சத்யாக்ரகம் போல் -கீரி பாம்பு சண்டைபோல் -மடலூர வில்லை
பயமூட்டுவது தான்
சீர் கலந்த சொல் நினைந்தது அருளும் உக்தி
திரு வி கா -திரு மால் அருள் வேட்டல்-கவிதை அழகு
கடலாழி வலம் வந்து கை தொழுவேன்
கோவில் கமல முகம் கண்டு
படலாடும் அரசியலால் பக்தி மனம் போச்சு
பரமா நின் அரசியலை பரப்ப
மடலாடும் பாவையர் போல் இருக்க வேண்டும்
கடல் அன்ன காமம் -வந்தாலும் மடலூரார் பெண்கள்
நாண் -வில்-ஆசைக்கு கட்டுபடுத்த நாணம் -அங்குசம்
பயிர்ப்பு-தொட்டால் சுருங்கி போல் உணர்வு –
பிள்ளை தமிழ்-பெரிய ஆழ்வார்
மடலை-நாடும் நகரமும் நன்கு அறிய செய்தவர்
ஆரா அமுதே -பிறப்பிலியை அந்தணனை -விசேஷம் சேர்த்து இங்கே அருளி –
பிள்ளை நறையூரார்-தனியன்-எத் பாவம் -அவர் போல்- மன்னும் மடலூர்வன் –
பெண்மை ஏறிட்டு கொண்டு அருளுகிறார்
இவர் மடலூர அவர் நறையூரர்-

 நறை-தேன்
தேனில் இனிய பிரான் –
மன்னிய -நிலை பெற்ற -முதல் அர்த்தம்-
மங்கள வார்த்தை -வியாக்யானம்
பல் பொறி சேர் –ஆயிர வாய் வாள் அரவின்-
மகர குண்டலங்கள் வில் வீச –
நாஸ்திக வாதம்-ஜாபாலி வார்த்தை போல் –
உலகம் யாவையும் தாம் உள ஆக்கை -சத்தை பெற வைக்க –
பாத ஸ்பர்சம்-பர்வதம்-ஸ்தானம் போல்-
பகவத் காமம்- உண்ணும் சோறு எல்லாம் கண்ணனுக்கே ஆவது காமம்
தென்னுயர் பொற்பும்  தெய்வ வட வேம்கடமும்
மேகம்-கூந்தல் போல் /மலைகள் ஸ்தானம் /
பரம் சென்று சேர் வேம்கடம்-
குன்று எடுத்து கோகுலத்தில் -குன்றாக இருந்ததாம் கை பட்டதும் மலை
குன்றி இருந்ததாம் –ஸ்பர்சம் பட்டதும் -இல்லை எனக்கு எதிர் -ஆனதாம்
கண்ணன் அடி இணை எனக்கு காட்டும் வெற்பு
அளவிட்ட தாமரை போல் இன்றி-
தாமரை காடு-உந்தி தாமரை-மன்னிய தாமரை –
பொய்கையில்-பூ மலர -அந்த பூவிலே பொய்கை மலர்ந்தது
மன்னிய தாமரை –
பூ மன்னு-மன்னு புகழ் கோசலை தன் –
சிறிய-பாரோர் சொலப்பட்ட மூன்று -இங்கு நான்கு
பேதை பாலகன் அது ஆகும்-பெயரை கூட சொல்லாமல் –
இங்கு நான்கை சொல்லி விலக்குகிறார் –
தொன் நெறியை வேண்டுவார் –
ஆறாம் பொருள்
காமம்-இரண்டாக பிரித்து
தாமரை கண்ணன் உலகு விட –
தாம்
பிர பந்தம் விட்டால் தான் பிரபந்தம் புரியும்
சாக்கடை இருந்து சந்தானம் பூசி கொள்ள
மெய்ய்னில் வையம் தன்னை கூடாமல்
மையல் கொண்டு ஒழிந்தேன் என் மாலுக்கு
மாலை பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை -திரு மால்
கண்ணன் இல்லாத பொழுது நெய் உண்ணோம் பால் உண்ணோம்
சூடகம் தோள் வளையே பின்பு
வட நெறியே வேண்டினோம் –
குல தர்ம பத்னி-ஆறு-
ஆதி மந்தி-இருந்தால் சொர்க்கம்-நின் பிரிவினும் சுடுமோ காடு
அன்றில் பறவை-குரலுக்கும் வாடாதார் –
மாடு மணி ஓசை-கிருஷ்ண கதாம்ருதம்-
எதி தர்மம் -துறவி -ஆவதும் மடலூர்வது போல்
ஒல்லை நீ -த்வரை வேண்டும் –
ஒரு நால் செல்லலிலும் பல நாள் செல்லிலும் -முதல் நாள் போல் –
மின்னுருவில்–தன்னுடைய தாதை-கம்பன்-
பணியால் அரசு ஒழிந்து –
வெம் பரல்-வெய்யில் பரத்த -பஞ்சடியால்- அன்ன நடையால் பின் சென்றாள் –
உடனாய் மன்னி–
வேகவதி -காதலன் காணாமல்-சண்டை களம் சென்று பலாத்காரம்
ஆண்டாள் தனியன்
உய்த்திடுமின் -வீசுமின் –
புளியம் பழம்-ஆடும்-பழுத்தால் உறவை விடும்
மற்று ஒன்றும் வேண்டாம்-
வென்றி தனஞ்சயன்-
யோகேஸ்வரன் கிருஷ்ணன் வில்லாளி விஜயன் இருக்கும் இடத்தில் தர்மம் நிலைக்கும் –
தீர்த்த யாத்ரை போகும் பொழுது -தவ வேஷம்-சித்திராங்கதை உளுபி -நாக பெண் –பொன் வரை ஆகம் தழுவி –
உஷை-சித்ரலேகை-கதை-அநிருத்தன் -நாண் விரும்பும் கண்ணனின் பேரன்
தேவாதி தேவனை -சென்று நாம் -ஆவா என்று ஆராய்ந்து -இதுவும் மடலூர்வது தானே .
கோவில் -ஆவியை -தேவியை பிரிந்த பின்பு
ஓவியத்தில் எழுத ஒண்ணா-திட்டு பொழுதும் சந்திரகாந்தன் அழகு -உள்ளம் கவர் கள்வன் .
கால் ஆளும் ஆழ்வார்-அவனுக்கு  ஆளப்பட்டு ஒழிந்தேன் –
மலர் அரையன் பொன் பாவை-சைவர் பழக்கம்-காட்டுகிறார்
உமையனும் -ஜடா பாரம் தரித்து -ருத்ர தாண்டவம் ஆடின –
சுழல சுழன்று ஆடும் கூத்தன்-பித்தா பிறை சூடி- ருத்ர தாண்டவம் ஆடினாலும் அணைந்தாள்-
பன்னி உரைக்கில் பாரதமாம் –
நோக்கினேன்-யான் நோக்கும் காலை காலாலே நிலத்திலே கோலம் போட்டு -நிலம் நோக்கும்
நோக்காக்கால் தான் நோக்கி -திரு வள்ளுவர்
அன்னலும் நோக்கினால் அவளும் நோக்கினால்-கம்பர்
உணர்வும் ஒன்றிட –
கரும் கடல் பள்ளியில் -கலவி நீங்கி போய் -ஆதி அம் சோதியை அங்கு வைத்து
கரதலமும் —காடோர்-தாமரை காடு –
வீநாணும்-பிராட்டிக்கு பிரகாரம்-அரை நாண் -மதிள் போல
சேர்த்தியில் அனுபவம் வேண்டேன் மனை வாழ்க்கை-திரு விண்ணகர் அனுபவம்-முதலில்
நுண்ணுய வஞ்சி கொடி நின்றது போல் –
விருப்புற்று கேட்கின்றேன்-முதல் நேயர் விருப்பம் –
இன் இளம் பூம் தென்றல்-ஆழ்வாரின் அரும் தமிழில் அழுந்தி இருக்கும் அழகு -திரு வி க
நெஞ்சே இலக்காகா –
பொறையாகி-பாரம்-
நீள் இரவு-கல்பம் போல் –
நம்மை பிடிக்க அர்ச்சை யாகிய மடல்- ஊரை வளைத்து நம்மை பிடிக்க முயல்கிறான்
நம் பிள்ளைக்கு-ஓர் அரி -அத்வதீயம் -நலன் உடை ஒருவனை –
வள்ளலை கூத்தனை வீரனை-தன் உலகம் ஆக்குவித்த தாடாளன் –
தாமரையால்
போர் விடையை –
செம்பவள குன்றனை
வயலாளி –என்னுடைய இன் அமுதை -இயம் சீதா -மம சுதா -போல்
இன் அமுதே ராகவனே தாலேலோ
மன்னும் அரங்கத்து மா மணியை- ய காந்தாமணி தேவ சிகாமணி கோபால சூடாமணி
பேரில் பிறப்பிலியை -திரு பேர் நகர் –
எது பெயர் சொல் என்றேன் ஒன்றும் இல்லை கண்ணன் என்பார் ஊரில் உள்ளோர் என்னை
ஆனா பொழுதுக்கு அளவு இல்லை பாரதி
கடல் கிடந்த தோழா மணி சுடரைஎன் மனத்து மாலை
–அன்ன வயல் தேர் அழுந்தூர்
சித்ரா கூட என் செல்வன்
வேம்கடத்து வித்தகன்-மால் இரும் சோலை மணாளனை
உறக்கத்தை-இதுவே பெயர்
மன்னு மறை நான்கும் ஆனானை
தமிழை -தெய்வம்- வட மொழியை
கண்ணனை கண்ண புரத்தானை
கண்டு ஆங்கு கை தொழுது
தாரானேல்- அருள் முதலில்- சீறி அருளாதே -வாய் திறந்து ஒரு வார்த்தை சொன்னால் போதுமே
தன் அடியார் முன்பும்-சேரியிலும் -அறிவிப்பன் –
சேரி களவின்–கலியன்-களவு போல் இல்லை
மின்னிடையார் ஆய்ச்சி -துன்னு படல்-கீத்து கதவு -திறந்து புக்கு –
உள்ளே போய் கதவை மூடி கொள்வான்
பொன் -நீ உனக்காகா
தன் வயிறார விழுங்க
பெரும் சோறை நீயே உண்டு
நவநீத நாட்டியம்-ஏலாப் பொய்கள் உரைப்பானை
அரக்கர் பாவை-தன்னை நயந்தாளை –
பின் ஒருவர் பாரார் அயல் என்று மூக்கு அறுத்தான் -நம் இடமே இருந்து ஒழிய
தருணு ரூப சம்பனவ் -வால்மீகி
வரிவில் -மன்மதன் -தர்ம சீலர் -கம்பன்
தாடகையை மா முநிக்காக -பழியை பார்ப்பான் தலையில் போட்டு-
மற்று இவை -பல
பெண்ணை மடல்-பனை மரம் –
கலியன் ஒலி கேட்டு வலி மிக்க சீயம்
தன் அருளும் ஆகமும் தாரானால்-கம்பர்
திரு மங்கை ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்