சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே
நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –
———-
ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1-
ஒரு நாயகத்தின்
பின்னும் தன் செல்லாமையாலே -அல்ப அஸ்திரத்வாதி தோஷ துஷ்டமான
ஐஸ்வர்ய கைவல்யங்களைப் பற்றி நிற்கிற ஸம்ஸாரிகளைப் பார்த்து –
அவற்றை விட்டு
ஸ்ரீ யபதியைப் பற்றுகையே நிரவதிக ஸூக ரூப புருஷார்த்தம்
என்று உபதேசிக்கிறார் –
—
குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.–4-1-10-
உயர்வற என்கிற பாட்டை குறுக மிக -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தம் அளவும் ஐஸ்வர்ய கைவல்யங்களைச் சொல்கிறது –
உயர்வற -குறுக மிக
ஐஸ்வர்யாதிகள் நிலை நில்லாது என்ன
லீலா விபூதியில் ஐஸ்வர்யம் நிலையில்லை யாகிறது
அவை போல் அன்றிக்கே ஆத்ம லாபம் நிலை நின்ற புருஷார்த்தம் அன்றோ என்னில்
கீழ்ச் சொன்னவற்றைக் குறித்து ஒரு நன்மை யுண்டே யாகிலும்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்துக்கு ஏற்றம் உண்டாம் போலே
பகவத் ஆனந்தத்தைப் பற்ற ஆத்ம அனுபவம் தண்ணிது –ஆனபின்பு அவனைப் பற்றப் பாருங்கோள்
உயர் நலம் யுடையவன் எவன் அவன்
கல்யாண குணங்களால் பூர்ணனான -ஸ்ருதி ப்ரஸித்தனானவன் -அவனைப்பற்றி
குறுக மிக உணர்வத்தொடு நோக்கி-
முதலிலே ப்ரத்ய அஹ்ருத இந்த்ரயினுக்கே இறே -ஆத்ம ப்ராப்தியில் அதிகாரம் உள்ளது
பாஹ்ய விஷயங்களிலே தூரப் போய் க்ரஹிக்கும் மனஸ்ஸை ப்ரத்யக் விஷயமாக்கி
அதாவது
கண்ணை இட்டுக் கண்ணைப் பார்ப்பது போலே இருப்பது ஓன்று இறே
ஆகையால் குறுக -என்றது –
இந்த இந்திரிய நிக்ரஹம் ஸர்வேஸ்வரன் மயர்வற மதிநலம் அருளுகையாலே வந்தது –
பாஹ்யங்களிலே போன மயர்வை அறுத்துத் தர
ஸ்வ ஸ்வரூப விஷயத்திலே யாம்படி மதிநலம் அருளினவன் யாவன் ஒருவன் அவன் பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே
மிக யுணர்வத்தோடு நோக்கி
சிரகாலம் பாஹ்ய விஷயத்திலே பண்ணிப்போந்த வாஸனை யடைய ஆத்மாவிலே யாம்படி பண்ணி விசதமாக அனுசந்தித்து
எல்லாம் விட்டு
ஸ்ரீயப்பதி தோளும் தோள் மாலையுமாய் -கருட வாஹனனுமாய் வந்து நிற்க
அந்த போக்யதையைப் பாராதே சுத்தி யோகத்தையே பார்த்தது –
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன்
அயர்வற்ற நித்ய ஸூரி ஸேவ்யனாய் ஸ்ரீ யபதியான அவனுடைய துயர் அறு சுடர் அடி தொழுது எழப் பாராதே
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும்
அணுவான ஆத்ம அனுபவத்தை மோக்ஷம் என்று சொல்லுகிற ஆத்ம ஞானிக்கும்
அப்பயன் இல்லையேல்,
பகவத் அனுபவம் ஆகிற மோக்ஷ ஸூகம் இல்லை என்கிறார் இவர்
அவ்வருகு உண்டான போக்யம் கண்டவர் ஆகையாலே அத்தை ஸங்கோசம் என்கிறார்
பகவத் உபாஸனத்துக்காகச் சுடர் அடி தொழுது ஆத்ம பிராப்தி பெற வேண்டுவ
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,
அவித்யாதிகளானவை வாஸனையாலே வருமாகில் பின்னும் வீடு இல்லை
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே
ஸர்வ வாஸனையாலே பற்றாமல் ஸூத்தி யோகத்தையே பார்த்துப் பற்றி விடாமல் இருக்கில் அது ஸித்திக்கும்
விடில் அது ஸித்தியாது
வீடு அஃதே
ஸர்வ பாப விமோசகனானவனைப் பற்றி விடா விடில் -கீழ்ச் சொன்ன இந்திரிய ஜயம் முதலாக
பகவத் உபாஸநத்தைப் பண்ணி கர்ம ஷயம் பிறப்பித்து ஆத்மாவை லபிக்கப் பார்க்கும் அவனுக்கு
அந்திம ஸ்ம்ருதி பண்ணி சரீரத்தை விடப் பார்ப்பானாகில் -அந்த மோக்ஷம் இல்லை –
அஃதே
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ-என்றும்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என்னும் நான் சொல்கிற அதுவே புருஷார்த்தம் –
ஆகையாலே -தொழுது எழு என் மனனே -என்று
தன் திரு உள்ளத்துக்கு உபதேசித்துத் தன் திரு உள்ளம் போல்வாருக்கும் உபதேசித்து
உபதேஸ கர்ப்ப அனுபவம் பண்ணுகிறார் –
———–
பாலன் ஆய், ஏழ் உலகு உண்டு, பரிவு இன்றி
ஆலிலை அன்ன வசம் செயும் அண்ணலார்
தாளிணை மேல் அணி தண் அம் துழாய் என்றே
மாலுமால் வல் வினையேன் மட வல்லியே.–4-2-1-
பாலன் ஆய், ஏழ் உலகில்
மூன்று களையும் பறித்துச் ஸங்காயம் வாரின பயிர் -ஸதசாகமாகப் பணைத்த விளையுமாய் போலே
அபிநிவேசம் ஸதசாகமாய் விளைந்து
தேச கால விப்ரக்ருஷ்டமான பதார்த்தங்களையும் தத் தத் தேச கால விசிஷ்டமாகப் பெற்று
அனுபவிக்க வேணும் என்று விடாய்த்தார் –
—
பாவியல் வேத நன் மாலை பல கொண்டு,
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற
சேவடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே
கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே.–4-2-3-
உயர்வற என்கிற பாட்டை -பாவியல் வேத -என்கிற பாட்டு விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற ப்ரஹ்ம ஆனந்தம் தொடங்கி -மனுஷ்ய ஆனந்தம் அளவாக
காலோசிதமான பதார்த்தங்களை தத் தத் தேச காலங்களிலே அனுபவிப்பார் அனுபவிக்கப் பெறாதே
வந்த இழவாலே ஸூகம் அற்றார்கள் –தத் வ்யதிரிக்தங்கள் ஆகையாலே
இவர் அங்கன் அன்றிக்கே பகவத் ப்ரேமத்தாலே பூத காலத்தில் உள்ளதும் பவிஷ்யத் காலத்தில் உள்ளதும் –
வர்த்தமான காலத்தில் போலே
உயர்நலம் உடையவன் எவன் அவன் –திருவடிகளிலே அத்திருத் துழாய் பெற ஆசைப்படுகிறார் –
உயர் நலம் யுடையவனைப்
பாவியல் வேத நன் மாலை பல கொண்டு,
ஒரு ஊருக்காக உதவினதுவே அன்றிக்கே ஒரு நாட்டுக்காக உதவினவன் பக்கல்
உள்ளது பெறத் தட்டு என் என்னா நின்றாள் என்கிறாள்
பாவியல் வேதம்
பாவாலே இயற்றப்பட்ட வேதம் –சந்தஸ்ஸுக்களால் சொல்லப்பட்ட வேதம்
அனுஷ்டுப் த்ரிஷ்டுப் ப்ருஹதீ சந்தஸ் -என்றும் சொல்லப்பட்டவைகளை யுடைத்தான வேதம்
சொல்லிற்று என் என்னில்
உயர்வற உயர்நலம் உடையவன் என்றும் அவன் ஆனந்தாதி குணங்களை சொல்லப் புக்கு எவன் அவன் என்று
அப்ராப்ய மனஸா ஸஹ -என்று அளவிட முடியாமல் மீண்ட இத்தை
பாவியல் வேத நன் மாலை பல கொண்டு,
அதன் நன்றான மாலைகளைக் கொண்டு -ஸ்ரீ புருஷ ஸூக்தாதிகளைக் கொண்டு
ஸர்வே வேதா யத்பதம் ஆமநந்தி வேதைஸ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்ய -என்கிறபடியே
அல்லாத இடங்களுக்குப் பிரதிபாத்யன் அவனே யாகிலும்
ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களுக்கு வாசகமானவற்றைக் கொண்டு
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் ஆகையால் –
அவர் அருளின பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே வேதாந்த வேத்யனை சாஷாத்கரித்து
அயர்வறும் அமரர்கள் அதிபதி
அஞ்ஞான கந்த ரஹிதரான நித்ய ஸூரி சேவ்யனானவனை
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற
தேவர்களும்
ஸ்லாக்யமான ஸநகாதிகளும் -என்றுமாம்
சேவடி மேல் அணி
துயர் அறு சுடர் அடி -ஆஸ்ரிதருடைய கிட்டப் பெறாத இலவு தீர்த்த சுடர் அடியான
சேவடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே
சேவடி -சுடர் அடி
சங்கைஸ் ஸூராணாம் -என்கிறபடி ஸ்தோத்ரம் பண்ணி ஆஸ்ரயிக்கத் திரு உலகு அளந்து நின்ற
சேவடி மா முதல் அடிப் போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி -என்கிறபடி
தலையிலே பூப் போலே வந்து இருக்கிற போது -மேலே பார்த்தவாறே
அனுபாவ்யமாய் இருந்த சிவப்பை யுடைத்தாய் இருக்கை
அடியிலே ராகம் இறே இப்படி ஆக்கிற்று இவளை –
அன்றியே
செவ்விய அடி -செவ்வையான அடி -ஆஸ்ரிதருக்கு செவ்வையாயே இருக்கும்
அநாஸ்ரிதருக்கு குடிலமாய் இருக்கும்
செவ்வடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே கூவுமால்
ஸ்ப்ருஹணீயமான திருத்துழாய் என்றே கூவும்
சொல்லி மாலேறும் கோள்வினை யாட்டியேன் கோதையே.
முடித்து அல்லது விடாதே பாபத்தைப் பண்ணின நான்
என்னுடைய கோதை
தன் மாலையையும் மயிர் முடியையும் கண்டார் படுமத்தைத் தான் படுவதே –
——————-
கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்! மதிள் இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்! குல நல் யானை மருப்பு ஒசித்தாய்!
பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கேனேலும், நின்
பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே.–4-3-1-
கோவை வாயாளில்
இவர் ஆசைப்பட்ட படியே எல்லாம் பெற்றாராம் படி
தன் ப்ரணயித்வ குணங்களைக் காட்டிக் கொடுக்கக் கண்டு ஹ்ருஷ்டரானார் —
——-
உரைக்க வல்லன் அல்லேன்; உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன் நான்? காதல் மையல் ஏறினேன்;
புரைப்பு இலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே!
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த, யானும் ஏத்தினேன்.–4-3-9-
உயர்வற என்கிற பாட்டை -உரைக்க வல்லேன் அல்லேன் – என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ஒருவருக்கு ஒருவர் புகழ் உண்டாய் இருக்கும்
அதுவும் அல்ப அஸ்திரமாய் உயர்வற்றதாய் இருக்கும்
இந்த உயர்வற உயர்நலம் உடையவன் எவன் ஒருவன் அவன் ஆனந்தாதி குணங்களுக்கு
அவதி இல்லாமையால் உரைக்க வல்லேன் அல்லேன் –
வேதங்களும் அப்ராப்ய மனஸா ஸஹ -என்று மீண்ட விஷயத்தை
உன் ஆனந்தாதி குணங்கள் எல்லாம் கூடினாலும்
உன் ப்ரணயித்வ ப்ரகர்ஷம் என்னுடைய பேச்சுக்கு நிலம் அல்ல என்கிறார்
இந்த ப்ரணயித்வ குணங்களை யுடையவன் யாவன் ஒருவன் –
அவனை உரைக்க வல்லேன் அல்லேன் –
உனக்கு என்னுடைய மநோ வாக் காயங்கள் முதலானவற்றை
அங்க ராகங்கள் முதலான போக வஸ்துவாகக் கொண்ட போக்ய பூதனான நீ
உன்னுடைய ப்ரணயித்வ குணத்தை அனுசந்தித்து அனுபவித்துக்
குமிழி நீர் உண்டு போம் அத்தனை போக்கி பேசித் தலைக்கட்ட மாட்டு கிறிலேன்
எல்லாம் பேச ஒண்ணாதாகில் பேசலாம் அம்சம் பேசினாலோ என்னில்
நீ மயர்வற மதிநலம் அருளின பக்தி ரூபா பன்ன ஞானத்தால் வந்த பலம் கொண்டு பேசப்புக்கால்
உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன் நான்?
உன்னுடைய முடிவில்லாத பிரணயித்வத்தால் வந்த கீர்த்தி சாகரத்தினுடைய
கரையில் தான் என்னால் சொல்லப் போமோ
இப்படிக் கரை அருகிலும் செல்ல அறிய விஷயத்தை நீர் பேசுவதாக உத்யோகிப்பான் என் என்ன
நீ அருளினை பக்தி ரூபா பன்ன ஞானத்தினாலே
காதல் மையல் ஏறினேன்;
என் ப்ரேமத்தாலே மிக்க கலக்கத்தை உடையேன் ஆனேன்
பிச்சு ஏறினாரை
நீ இப்படிச் செய்வான் என் என்னக் கடவதோ -என்ன
இவ்விஷயத்தில் நீர் பிரமிப்பான என்
பிரமிப்பாருக்கு ஓர் ஆலம்பனம் வேண்டாவோ என்ன
அயர்வறும் அமரர்களான நித்ய ஸூரிகள் பித்தேறி ஏத்தக் கண்டேன் –
அத்தாலே செய்தேன் என்கிறார்
அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்த நித்யரோடு -நித்ய ஸம்ஸாரியான இவரோடு -அவன் தன்னோடு
வாசி அற்று இறே ப்ரணயித்வ குணம் -இவ்விஷயத்தில் ப்ரணயித்வ பிரபாவம் இருப்பது
ஸர்வஞ்ஞனாய் ஸர்வ ஸக்தியாய் தான் அறியப் புக்காலும்
தனக்கும் தன் தன்மை அறிவு அரியனாய் இறே இருப்பது
தன்னை அறியப்புக்க வேதங்கள் படும் அத்தனை தானும் படுவது
புரைப்பு இலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே!
நீ ஸர்வ சமாதி பரனாய் இருப்பில் புரை இல்லாதாப் போலே
என்னோட்டை கலவியால் வந்த வடிவில் பிறந்த புகரிலும் புரை அன்றிக்கே இருக்கிறவனே
அன்றிக்கே
நிரவதிகமான ப்ரணயித்வ குண ஸத்பாவத்தில் கண் அழிவு இல்லாதாப் போலே
என்னோட்டைக் கலவியிலும் பொய் அன்றிக்கே
அத்தாலே வந்த புகர் வடிவிலே தோன்ற இருக்கிறவனே என்னுதல்
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த, யானும் ஏத்தினேன்.
பரமபக்தி யுக்தரானவர்கள் துயர் அறு சுடர் அடி தொழுது
எழுந்து
கடல் கிளர்ந்தால் போலே இரைத்துக் கொண்டு ஏத்தக் காண்கையாலே
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் எவன் அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
என்று யானும் ஏத்தினேன் அல்லது நான் சக்தனாய் ஏத்தினேனோ
ஹேய ப்ரதிபடமான திருவடிகளும் -பிராட்டியும் -நீயும் விடிலும்
திருவடிகளை விடாத திண் கழலைப் பேசித் தலைக்கட்டப் போமோ என்கிறார் –
——————–
மண்ணை இருந்து துழாவி, ‘வாமனன் மண் இது’ என்னும்;
விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம்’ என்று கை காட்டும்;
கண்ணை உண்ணீர் மல்க நின்று, ‘கடல்வண்ணன்’ என்னும்;அன்னே!என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன், பெய் வளையீரே!–4-4-1-
மண்ணை இருந்து துழாவி யில்
கீழ்ப் பிறந்த ப்ரணயித்வ குண அனுபவம் சாத்மிக்கைக்காக எம்பெருமான் பேர நிற்க அவனோடே
ஸத்ருச பதார்த்தங்களையும்
சம்பந்தி பதார்த்தங்களையும்
அவனாகவே பிரமித்து நோவு பட்டார்
உயர்வற என்கிற பாட்டை -மண்ணை இருந்து துழாவி-விவரிக்கிறது -எங்கனே என்னில்
ஆழ்வார் தம்முடைய உபாய அத்யாவசாய ஞானத்தில் நின்று தம்முடைய திரு உள்ளத்தைப் பார்க்கும் போது
அது மயர்வற மதிநலம் அருளப் பெற்று –
அத்தாலே பகவான் இடத்திலே த்வரை விஞ்சிச் செல்கிற ப்ரேம தசையைப் பார்த்து
இது அத்புத கார்யங்களாய் இருந்தது இது ஏது என்று கேழ்க்கிற அவர்களுக்கு
அதுக்கு உத்தரமாக மானஸ த்வரை செல்லுமத்தை -வினவி வந்தவர்களுக்கு
உபாய அத்யவசாய தசையில் நின்று ஆழ்வார் அருளிச் செய்கிறார் –
உயர்வற -மண்ணையிருந்து துழாவி –
மண்ணுக்கு உயர்வாவது
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ஜங்கமாதிகளாலே நிறைந்து பஞ்சா சத்கோடி விஸ்தீர்ணமான
பூமியாகையாலே உயர்வு என்கிறது
இருந்து துழாவி
பகவத் வ்யதிரிக்தங்களைக் காரணமாகவும் காரியமாகவும் சொல்லா நின்றார்கள்
இத்தை அறிவோம் என்று ஆராய்ந்து பார்க்க அவை அஸ்திரமாக இருக்கையாலே உயர்வற என்கிறார் –
அவை எல்லாம் இவர் கைக்குள்ளே அடங்கி ஸர்வ கதத்வத்தை கரதல அமலமாகக் கண்டார்
துழாவிப் பார்த்தார்-
அதுக்கு அப்பாலும் உயர் நலம் போகையாலே வந்த பரம ஆனந்தத்தைப் பார்த்து
உயர்நலம் உடையவன் எவன் அவன் வாமனன் என்கிறார்
கீழ்ச் சொன்ன ஜகத்து அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யங்களாய் இருந்தது தவிரும்படி
வாமனனாய் மஹா பலி பக்கலிலே அர்த்தியாய்ச் சென்று தன்னதாக்கின
வாமனன் மண் இது என்னும்
நலமுடையவன் யாவன் ஒருவன் அவன் வாமனன் மண் இது என்னும் –
த்ரி விக்ரம ரூபத்தாலே ஜகதாகாரனாய் நின்றபடி
வாமனன் மண் இது என்னும்
அடியிலே பிறந்தவனுடைய கந்தவதீ பிருத்வீ இறே
பத்ப்யாம் பூமி யாகையாலே ஸர்வ கந்தமும் தோற்றின படி –
யவன் இது என்னும்
மஞ்சா க்ரோசந்தி போலே பூமியில் உள்ளாரைச் சொல்கிறது –
அவன் -இப்படிப்பட்ட பூமியை யுடையவன் –காரண பூதனான தன் ஜகதா காரதையைக் காட்டி
ஒரு திருவடிகள் அந்நிய சேஷத்வ நிவ்ருத்தியைப் பண்ண
மற்றத் திருவடிகள் ஸ்வ ஸ்வா தந்தர்யத்தைத் தவிர்த்து ஸர்வ சேஷியாய் நின்ற நிலையைக் காட்டினான் ஆயிற்று –
இவருக்கு இந்த ப்ரேமத்துக்கு அடி என் என்ன –
மயர்வற மதி நலம் அருளின வத்தாலே வந்த ஞானத்தாலே அறிந்த படி
கண்ணை உண்ணீர் மல்க நின்று, ‘
அவர தேவதா பிரதிபத்தியை நீக்கி -பராத்பரனைக் காணும் படி
திவ்யம் ததாமி தே சஷுஸ் -என்றும்
தக்க ஞானக் கண்கள் என்றும் –
சொல்லுகிற ஞானச் சஷுஸ்ஸூ க்களைக் கொடுத்தபடி
அருளின பக்தியாலே ஆனந்தாவஹமாய் ஆனந்த அஸ்ரு குடி கொண்ட படி –
எவன் -இப்படி அருளப் பட்ட சடகோபன் -ஸ ஹேதுகமாகில் தாழ்வு படும்
நிர்ஹேதுகமாகையாலே நிரவதிகமாய்ப் பொங்கி வருகிறபடியாலே
அருளப்பட்ட சடகோபன் என்கிறது –
அவன்
கடல் வண்ணன்’
ஜகதாகாரனைப் போலே ஸகல வஸ்துவையும் தன்னுள்ளே கொண்டு நோக்குகிற படி
என்னும்;
இது என்ன ஆச்சர்யம்
ஜகதா காரதையை கரதல அமலகமாகக் கண்டும்
அதற்கும் மேலே அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன்
விண் உண்டு -பரமபதம் -அதற்குப் போலியான ஆகாசத்தைக் காட்டி
அவன் மேவும் வைகுந்தம் என்னா நின்றாள்
அயர்வறும் அமரர்கள் சந்த அணுவிருத்தி பண்ண -அவர்கள் நடுவே
வீற்று இருந்து ஏழு உலகும் தனிக்கோல் செலுத்துமவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
அவன் மேவு வைகுந்தமான விண்ணைத் தொழுது துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே –
எனதுள் ஞானம் ஆகிற
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன், பெய் வளையீரே!
பெரு மையல் -பகவத் ஆனந்தத்தில் புக்கு அழிந்த மையல் –
இத்தை விளைவிக்கிற வேதாந்த வேத்யனுக்கு என் செய்கேன்
இது ஸ்வ யத்ன ஸாத்யம் அல்லவே
பெய் வளையீரே
நீங்கள் ஸ்வரூபம் குலையாது இருக்க
இவள் தொழுது எழு என்னவும் தெரியாதே பித்தேறி பிரமிப்பதே
இது என்ன ஆச்சர்யம் என்கிறாள் —
————-
வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-
வீற்றிருந்து ஏழுலகில்
கீழ் இவருக்குப் போலி கண்டு பிரமித்த விடாய் எல்லாம் தீர்க்கும்படி
நித்ய விபூதி யுடையனாய் இருக்கிற தன் படிகள் ஒன்றும் குறையாதபடி கொடு வந்து
காட்டிக் கொடுத்துக் கண்டீரே நாம் இருக்கிற படி
இந்த ஐஸ்வர்யம் எல்லாம் ஒன்றாய்த் தலைக்கட்டித்து
நீர் உம்முடைய வாக்காலே ஒரு சொல்லு சொன்னால் காணும் என்று இவர் கைத்தாளத்தைக் கொடுக்க
அவ்விருப்புக்கு மங்களா ஸாசானம் பண்ணி அருளினார் –
ஸ்ரீ யபதியாய் அவாப்த ஸமஸ்த காமனாய் உபய விபூதி யுக்தனான ஸர்வேஸ்வரன்
கீழே போலி கண்டு பிரமித்த இழவு எல்லாம் போம்படி
நித்ய விபூதியையும் லீலா விபூதியையும் உடையவனான படியைக் காட்டிக் கொடுத்துக்
கண்டீரே – நாம் இருக்கும் இருப்பு -இந்த ஐஸ்வர்யம் எல்லாம் ஒன்றாய்த் தலைக்கட்டித்தாம் –
நீர் உம்முடைய வாக்காலே ஒரு சொல்லு சொன்னால் காணும் என்று
இவர் கையில் தாளத்தைக் கொடுக்க அவ்விருப்புக்கு மங்களா ஸாஸனம் பண்ணுகிறார் –
உயர்வற என்கிற பாட்டை -வீற்றிருந்து -என்கிற பாட்டு -விவரிக்கிறது –
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் உயர்வும் தாழ்வுமாய்
வருகையாலே உயர்வற என்கிறது
லீலா விபூதியை வீற்றிருந்து ஏழுலகும் -என்றபடி
உயர் நலம் என்றது -நித்ய விபூதியை யுடையவன் என்று -உபய விபூதி யுக்தன் என்றபடி –
எவன் அவன் -ஸ்ருதி ப்ரஸித்தனானவன்
தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களும் தனக்கு சேஷமாய்த் தான் சேஷியாகையாலே
வந்த வ்யாவ்ருத்தி தோற்ற நியாந்தாவான சீர் தோற்ற வீற்று இருக்கை
இங்கன் அன்றாகில் பரஸ்பர வ்யாவ்ருத்தி எல்லாருக்கும் உண்டு இறே
ஸகல ஆத்மாக்களுக்கும் ஞான ஏக ஆகார தயா ஸாம்யம் யுண்டாய் இருக்கச் செய்தேயும்
விபுத்வ சேஷித்வ நியந்த்ருத்வங்கள் ஆகிற இவை அவ்வாஸ்ரயம் ஒன்றிலுமே கிடக்கும் அத்தனை இறே
இப்படி ஸர்வ கதனாய் வியாபித்து நிற்குமது நியமன அர்த்தமாகவே இறே
இப்படி நீர் அறிந்தபடி எத்தாலே என்ன
தன் நலமுடைய ஆனந்தத்தால் மயர்வற மதிநலம் அருளினான் -அத்தாலே அறிந்தேன்
எவன் அவன் -ஆற்றல் மிக்கு ஆளும் அம்மான் –
ஆற்றல் -என் மயர்வு -அக மமதையால் வந்த மயர்வு அற
ஆற்றல் பொறுமை -லோகத்தாரோடே என் ஆஜ்ஜா அதி லங்கனமான அபராதத்தைப் பொறுத்து
அற -ஆற்றல் மிக்கு ஆளும்
தஹ -பச -என்னாமல் பொறுத்து –
ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர் ஆற்றல் மிக்கு ஆளும் அம்மான்
யாவன் ஒருவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து ஆளும்
சுற்றுப் பயணம் வந்து ஜகன் நிர்வஹனம் பண்ணுகை அன்றிக்கே
நித்ய விபூதியில் இருந்த இருப்பிலே லோகங்கள் அடைய தன் செங்கோல் செல்லும்படி ஆளும்
மதி நலம் அருளினன் என்று
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ஜங்கமாதிகளுக்கு அனுரூபமான
பக்தி ரூபா பன்ன ஞானத்தைத் தன் நிர்ஹேதுக கிருபையாலே அருளினான் –
அம்மான்
அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஸ்வாமி -அவன்
இந்திரியாணி ஹயானி என்கிற தேஜிக் குதிரை போலே ஓடுகிற மனஸ்ஸை யுடையவனை
அவன் -வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணன்
இருடீகேசன் ஆகையாலே நியமித்தான்
இந்த க்ருதஜ்ஜை தோற்றப் போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது
அயர்வின்றிக்கே அபர்யாப்த்த அம்ருத ஆனந்த மக்நரானராய் ஆனந்திக்க
அத்தாலே அவன் ஆனந்திக்க -அது கண்டு இவர்கள் ஆனந்திக்க –
இப்படி அநந்யோன்யம் ஆனந்திக்கிற படியைக் கண்டு இவர் ஆனந்திக்கிற
இவர் ஆனந்தம் உபய விபூதியிலும் மிக்கது –
இப்படி -ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே-
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
துயர் -துக்கம் -அதாவது -ப்ரயாஸம் –
பிரயாசமான சாதனாந்தரங்களால் வந்த துயர் அன்றிக்கே நிர்ஹேதுகமாக அளவிறந்த சுடர் அடி தொழு
ஹேய ப்ரத்ய நீகமாய் நிரவதிக தேஜோ ரூபமான சுடர் அடிகளைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது சொல் மாலைகள் ஏற்ற நோற்றேர்க்கு இனி என்ன குறை எழுமையுமே –
திருக்குழலிலே ஏறும்படியாக -க்ருண்ணாதி சிரஸா ஸ்வயம் –என்கிறபடியே
நோற்றேற்கு இவர் இப்போது நோற்றது
மண்ணை இருந்து துழாவியிலே –ஆர்த்தியை ஜநிப்பித்த -கிருபையை இனி என்ன குறை எழுமையுமே –
நித்ய விபூதியில் அனுபவத்தை இங்கே லபித்தால் எனக்கு குறை உண்டோ
விண்ணுளாரிலும் சீரியரே
எனக்கு ஆர் நிகர் அகல் வானத்தே -என்று
பகவத் அனுபவத்தாலே நித்ய ஆனந்த மக்நனான எனக்கு ஒரு குறை உண்டோ என்கிறார் –
—————
தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே.–4-6-1-
தீர்ப்பாரை யாம் இனியில்
கீழ்ப் பிறந்தது மானஸ அனுசந்தான மாத்ரமாய் -பாஹ்ய சம்ஸ்லேஷ யோக்யம் இல்லாமையாலே –
மோஹித்து அந்யாபதேசமாய்ப் பேசினார்
தீர்ப்பாரை யாம் இனியில்
மோஹித்தவருக்குப் பரிஹாரமாக தேவதாந்த்ர்யாமி பரமாக ஆஸ்வசிப்பிக்கலாமோ
என்று பரிவர் பார்க்க-அவர்களைக் குறித்து
அன்பர் விலக்கின பாசுரத்தை அந்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார் –
——–
உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே.–4-6-10-
உயர்வற என்கிற பாட்டை -உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள்,-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் அவர் உயர்வற உன்னித்து
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் உற்று உற்றுப் பார்க்க
ஒன்றுக்கு ஓன்று தொழுவாரும் தொழுவித்துக் கொள்வாருமாய் அற்றது –
உயர்வற உயர் நலம் உடையவன் யவன் அவன் -வண் துவராபதி மன்னன் -அவனை அன்றி
உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
உயர்நலமான பர ப்ரஹ்ம ஆனந்தத்தை யுடையவன் எவன் அவன் -அவன்
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி
மன்னன்
ஸ்ருதி ப்ரஸித்தனாய் ஸூ லபனானவனை ஒழிய மற்ற ஒரு தேவதையைத் தொழும் அவளோ இவள்
எனக்கு அவன் அடியிலே மயர்வற மதிநலம் அருளிற்றிலன் ஆகில் அன்றோ தேவதாந்த்ர பஜநம் பண்ணுவது
பக்தி ரூபா பன்ன ஞானம் பெற்றவர் இதர தேவதையும் உண்டு என்று அறிவரோ
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மயர்வற மதிநலம் பெற்று இருக்கிற எனக்குத் தோற்றினார் தோற்றின படி சொல்லி
அணங்கு ஆடுகைக்குப் பிரயோஜனம் என்ன –
எவன் இந்த மதிநலம் பெற்றாராய் இருக்கிறவர் அவன் நிர்ஹேதுகமாக அருளினன்
அவன் யாவன் ஒருவன் -அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி –
மன்னப்படு மறை வாணன்
அஞ்ஞான அந்தகார ரஹிதரான நித்ய முக்தராலே ஸேவ்யராய்
அபவ் ருஷேயமான வேத ப்ரதிபாத்யனானவன் எவன் அவன் வண் துவராபதி மன்னன்
துயர் அறு சுடர் அடி தொழுது ஏத்துமின்!ஏத்துதலும்,தொழுது ஆடுமே.
தொழுது எழு என்று அன்பார் பரிவரைக் குறித்து வெறி விலக்கின பாசுரத்தைத்
தோழி தாயாரை வெறி விலக்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
—————-
சீலம் இல்லாச் சிறியே னேலும், செய்வினையோ பெரிதால்;
ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று
காலந் தோறும் யான் இருந்து, கைதலை பூசலிட்டால்,
கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே.–4-7-1-
சீலம் இல்லாச் சிறிய–னில்
வண் துவாராபதி மன்னன் என்கிற திரு நாம ப்ரசங்கத்தாலே மோஹம் தெளிந்து
அது தான் பேற்றுக்கு உடல் அல்லாமையாலே கூப்பிடுகிறார் –
—
அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந் துழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–4-7-7-
உயர்வற என்கிற பாட்டை –அறிந்து அறிந்து-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக பராத்பரன் ஆர் என்று பார்த்து
உயர்நலம் உடையவனே பராத்பரன் என்று
அறிந்து அறிந்து, தேறித் தேறித் தெளிந்து
பரத்வம்
பஜநீயத்வம்
ஸுலப்யம்
அபராத ஸஹத்வம்
தொடக்கமாக அறிந்து அறிந்து, தேறித் தேறி
ஓரொரு குணங்களை அனுபவிக்க மாட்டாமை -மோஹமும் தெளிவுமாய் என்னுதல்
யவன்- யான் அவன் -எனது ஆவியுள்ளே-எனது ஆவியாவியும் நீ என்று சொல்லப் பட்டவன்
எவன் அவன் மயர்வற மதிநலம் அருளினவன்
நிறைந்த ஞான மூர்த்தி யானவன் –
அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்கி ஞானப் பிரகாசத்தைப் பண்ணித் தந்தவன் –
எவன் -நின்மலமாக வைத்தவன் -நின்மலமானவன் -அவன் நிர்ஹேதுகமாக அருளினவன் –
நிர்மலமாக வைத்து -அயர்வறுகை -நிர்மலமாகை –
அயர்வில்லாத அமரர்கள் அதிபதி
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்த்தவன் எவன் அவன்
ஒழிந்தேன் என்னும்படி ஜனன மரணாதிகளை ஒழித்தவன்
நறுந் துழாயின் கண்ணி அம்மான்
துயர் அறு சுடர் அடி தொழுது -ஹேய ப்ரத்ய நீகமாய் நிரவதிக தேஜோ மயமான திருவடிகளைத் தொழுது –
நறுந் துழாயின் கண்ணி
பரிமள ப்ரசுரமான திருத்துழாய் மாலையாலே அலங்க்ருதமான ஸ்வாமியைக் கண்டு கொண்டு
ஞான சாஷாத்காரமாகக் கண்டு கொண்டு
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்கிறார் –
—————
ஏறு ஆளும் இறையோனும், திசை முகனும், திருமகளும்,
கூறு ஆளும் தனி உடம்பன், குலம் குல மா அசுரர்களை
நீறு ஆகும் படியாக நிருமித்து, படை தொட்ட
மாறாளன் கவராத மணிமாமை குறை இலமே.–4-8-1-
ஏறு ஆளும் இறையோனில்
இப்படிக் கூப்பிட்ட இடத்தில் வந்து முகம் காட்டாமையாலே
அவனுக்கு உறுப்பு அல்லாத ஆத்மாத் மீயங்களில் நசையற்றபடியைச் சொன்னார்
——
மணி மாமை குறையில்லா மலர் மாதர் உறை மார்பன்
அணி மானத் தடைவரைத் தோள் அடல் ஆழித் தடக்கையன்
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட
மணி மாயன் கவராத மட நெஞ்சால் குறை இலமே.–4-8-2-
உயர்வற என்கிற பாட்டை மணி மாமை குறையில்லா-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக தம் தாம் கரணங்களும் தாங்களுமாக
இதர விஷயத்தில் சப்தாதி போக்யங்களைப் புஜிக்க
இவர் அங்கன் அன்றிக்கே பகவானுக்கு உறுப்பு அல்லாத ஆத்மாத்மீயங்களை விடுகிறார்
உயர்வற உயர் நல –மணி மாமை குறையில்லா மலர் மாதர்-
உயர் நலம் என்று
உகார வாஸ்யையான பிராட்டிக்கு உயர்வு அறுகை யாவது
ஈஸ்வரீம் ஸர்வ பூதாநாம் -என்கிற உயர்த்தி அற -என்றது –
விஷ்ணு பத்னியாகையாலே அவனுக்கு சேஷ பூதையாய் தாழ்ந்து இருக்கும்
ஆகையால் உயர்வற உயர் நலம் என்றது –
ஆகையாலே பிராட்டிக்கும் சேஷித்வமும் சேஷத்வமும் ஸ்வ பாவமாகையாலே சொல்லிற்று –
ஆக தத் வ்யதிரிக்தங்களுக்கு ஸ்வாமிநியாய் அவனுக்கு ஸ்வம்மாய் இருக்கையாலே
ஸ்ரீயதே ஸ்ரயதே என்றது –
உயர்நலம் யுடையவன் எவன் அவன் –
மணி மாமை குறையில்லா மலர் மாதர் உறை மார்பன்
பூவில் காட்டில் ரமணீயதையும் -நிறமும் -குளிர்ச்சியும் -மேன்மையும் -மணமும் -மதுவும் -ஸுகுமார்யமுமாக
எல்லாவற்றையும் கட்டி ஒரு பெண்ணாக வகுத்தால் போலே இருக்கிற உயர்நலத்தை யுடையவன்
உறை மார்பன் -அவள் அகலகில்லேன் -என்று நித்ய வாஸம் பண்ணுகிற மார்பை யுடையவன்
எவன் அவன் -ஸ்ரீ யபதியானவன் -எனக்கு மயர்வற மதிநலம் அருளினன் -எவன் அவன்
அணி மானத் தடைவரைத் தோள் அடல் ஆழித் தடக்கையன்
மயர்வற
சாதனாந்தர -ப்ரயோஜனாந்தரமாகிற மயர்வு அன்றிக்கே
மதிநலம் என்றது பக்தி ரூபா பன்ன ஞானத்தால் தானே உபாயம் உபேயம் என்னும்படி மதி நலத்தை அருளின
அணி மானத் தடைவரைத் தோள்
அணி -அலங்காரம்
மானம் -அளவில்லாமை
அலங்காரத்தாலும் அழகாலும் அளவில்லை என்றபடி –
அடல் ஆழித் தடக்கையன்
அடலாழி -அவித்யாதிகளான கர்மங்களையும்
பாஹ்ய விரோதிகளையும் நிரஸித்து
அலம் புரிந்த நெடும் தடக்கையாகையாலே போரும் போரும் எனக்கொடுத்த ஞான பக்தி முதலா மோக்ஷம்
அதன் பலமான கைங்கர்ய சாம்ராஜ்யத்தையும் தருகிற அடலாழித் தடக்கையன்
இப்படி நிர்ஹேதுகமாக அருளினவன் யாவன் ஒருவன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி
அயராதே -சோம்பாதே
நித்ய அம்ருத தாஸிகளானவருக்கு ஸ்வாமி யானவன் –
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட
பணி என்றது கைங்கர்யம்
மானம் -அளவு
அதில் ஓர் அளவும் குறையாதே அஹம் ஸர்வம் கரிஷ்யாமி என்கிறபடியே
அடியேனைப் பணி கொண்ட
கிரியதாம் இதி மாம் வத -என்று இளைய பெருமாளை அடிமை கொண்டால் போலே
இருவரும் கூட இருந்து காணும் அடிமை கொண்டது –
இப்படி அடிமை கொண்டவன் எவன் அவன் -மணி மாயன் -துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
மணி மாயன்
நீல ரத்னம் போன்ற வடிவு அழகைக் காட்டி
துக்க கந்த ரஹிதமான நிரவதிக தேஜோ ரூபமான திருவடிகளைத் தொழப் பண்ணி
ஸ்வ யத்னத்தால் வரும் ப்ரயாஸம் அன்றிக்கே பரஞ்சோதியான பாத பங்கயங்களைத் தொழுது எழு
என் மனனே -எனக்கு பவ்யமான நெஞ்சே
அன்றிக்கே
மணி மாயன் கவராத மட நெஞ்சால் குறை இலமே.–
ரமணீயமான விக்ரஹத்தையும்
ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களையும் யுடையவன்
விரும்பாத பவ்யமான நெஞ்சாலே எனக்கு என்ன பிரயோஜனம் உண்டு
பிராட்டியும் பெருமாளுமான சேர்த்தியிலே தொழுது எழும்படி அருளினானாகில்
என் மனனே -என் மட நெஞ்சமே -என்று உன்னாலே என்ன பிரயோஜனம் உண்டு
அவனுக்கு வேண்டாத என் நெஞ்சமும் எனக்கு வேண்டா என்கிறார் –
——————-
நண்ணாதார் முறுவலிப்ப, நல்லுற்றார் கரைந்துஏங்க,
எண்ணாராத் துயர்விளைக்கும் இவைஎன்ன உலகியற்கை?
கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கே வரும்பரிசு,
தண்ணாவாது அடியேனைப் பணிகண்டாய் சாமாறே.–4-9-1-
நண்ணாதார் முறுவலிப்ப, -லில்
இப்படி உடம்பு வேண்டா உயிர் வேண்டா என்ற இடத்திலும் போதாமையால் முடிகைக்கும்
உன் தரவு வேண்டி இருந்தது -முடித்துத் தர வேண்டும் என்று இவர் அபேக்ஷிக்க
ஸம்ஸாரிகளில் தமக்கு உண்டான வ்யாவ்ருத்தியையும்
நித்ய விபூதியில் பெரிய பிராட்டியாரும் தானுமாக இருக்கிற இருப்பையும் காட்டிக் கொடுக்கக் கண்டு
தரித்த படியை அருளிச் செய்கிறார் –
—
கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகை செய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.–4-9-9-
உயர்வற -என்கிற பாட்டை -கூட்டுதி நின் குரை கழல்கள்-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்தளவும் -அவர்கள் தாரதம்யம் பாராதே
நீ யுகந்தாரைத் திருவடிகளிலே சேர்த்துக் கொள்ளுதீ
பிரமாதிகளே ஆகிலும் நீ நினையாதார் உன்னை வந்து கிட்டப்படாதே பண்ணி அலைப்பு தீ
ஆகையால் உயர்வு அற்றார்கள்
உயர்நலம் உடையவன் எவன் அவன் -ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனாய் -வேதைக ஸமதி கம்யனான நீ
ஆட்டுதீ -மயர்வு
ஆட்டுகை -உன் லீலைக்கு விஷயம் ஆக்குகை
மதி நலம் பெற்ற அடியேனும் அது அறிவேன்
சேஷசாயியான உன் படியை சேஷ பூதனான நான் நாராயணன் -என்கிற வத்தை அறிவேன் –
நீர் அறிந்தபடி என் என்ன
நீ தந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே –அயர்வறும் அமரர்கள் அதிபதியான நீ –
ஷீராப்தியிலே சேஷசாயியாகக் கண் வளர்ந்து அருளும் படியை அடியேன் அஃது அறிவேன்
என் வேட்கை எலாம் விடுத்து
என்னையும் ஏக மனசரான இவருடைய சம்சார அனுசந்தானத்தாலே வந்த விசனம் எல்லாம் தீர்க்கும்படி
திரு நாட்டில் இருந்த இருப்பைக் காட்டி அருளக் கண்டு
அனுபவிக்கப் பெற்று ஒழிந்தவையாம் அத்தனை அன்றோ வேண்டுவது ஆசைப்படுகைக்கு
உன் விபூதியில் நான் எனக்கு என்னாதது உண்டோ
நீ மயர்வற மதி நலம் அருளுவதற்கு முன்பு யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்திலையோ
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் சுடர் அடியான உன் திருவடியே சுமந்து உழலக்
துயர் அறு -பாஹ்ய விஷய ப்ராவண்யம் அற
சுடர் அடி -பரமமான சுடர் அடி தொழுது எழு
உன் திருவடியே சுமந்து உழலக்
இதர விஷயங்களிலே நசை அற்று -நிரந்தரம் உன் பக்கலிலேயாய் –
உன் திருவடிகளையே சிரஸா வஹித்து அதுவே யாத்ரையாய்ச செல்லும்படிக்காகக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே
துயர் அறு சுடர் அடி –கூட்டரிய துயர் அற்று -திருவடியைக் கூட்டினை நான் கண்டேனே
என் மனமே நீயும் தொழுது எழு
யாவர் சிலருக்கும் தம் தம்மால் சேர்த்துக் கொள்ள அரிய திருவடிகளை நான் சேரும் படி பண்ணினான்
இது தான் கேட்டார் வாய் கேட்டுச் சொல்லுகிறேன் அல்லேன்
சுடர் அடி தொழுது வர்த்தி என்கிறார் –
———–
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1-
ஒன்றும் தேவில்
எம்பெருமான் தன்னாலும் திருத்த ஒண்ணாது என்று கை விட்ட ஸம்ஸாரத்தை
பகவத் பரத்வ ஞானத்தை உபதேசித்துத் திருத்தின படியை அருளிச் செய்தார்
கீழ் நண்ணாதார் முறுவலிப்பலிலே சம்சாரிகள் படுகிற கிலேசம் பொறுக்க மாட்டாமையாலே
அவர்களைத் திருத்துவதாக நினைத்து
நீங்கள் தேவதாந்த்ர பஜனத்தாலே ஸம்ஸரிக்கிறி கோளே இத்தனை –
பராத்பரனான ஸர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து ஸம்ஸார பந்தத்தை அறுக்கப் பாருங்கோள் -என்று
பர உபதேச ப்ரவ்ருத்தர் ஆகிறார் –
—-
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந் தழகாய திருக் குருகூர தனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–4-10-2-
உயர்வற என்கிற பாட்டை -நாடி நீர் வணங்கும் தெய்வமும் -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தம் அளவாக உயர்வாக தேவதாந்தர்யத்தை ஆஸ்ரயிப்பாரும் நீங்கள் ஆஸ்ரயணீயருமாய் இறே இருப்பது
ஆகையால் உயர்வும் தாழ்வுமாய் இறே லீலா விபூதி இருப்பது இருப்பது –
உயர்நலம் யுடையவன் எவன் ஒருவன் -அவன்
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
ஆஸ்ரயிக்கிற உங்களோடு
ஆஸ்ரயணீயரான அவர்களோடு வாசி யற
மற்றும் யாதும் இல்லா அன்று, நான்முகன் தன்னொடு
தேவர் முதலானவை உண்டாக்கினான்
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
யாவன் ஒருவன் அவன் மதிநலம் அருளினன்
எவன் அவன் தேவதாந்த்ர போஜனம் ஆகிற மயர்வை அறுத்து அவர்கள் பக்கலிலே
பரத்வ சங்கையையும் அறுத்தான்
அவனே பராத்பரன் -என்கிற மதி நலத்தை அருளினான்
எவன் அவன் -வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான்-அவன்
நீங்கள் ஸேவை புரிகிற தேவதைகள் ஐஸ்வர்யத்துக்கு அடியான கர்மம் நசிக்க நசிக்கும்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் -அயர்வறும் அமரர்கள் அதிபதி
நித்தியமான கல்யாண குண பூர்ணனான -காரணமான -புருஷோத்தமனான -உபகாரகன் –
காரணந்து த்யேய
த்யேயா நாராயணஸ் ஸதா
என்று அனுபவிக்கிற நித்யருக்கு ஸேவ்யனானவன் நம் எல்லாருக்கும்
மோக்ஷ பிரதானம் பண்ணுகைக்காக த்வரிதனாய் வந்து திருக்குருகூரிலே
அவன் மேவி உறை கோயில்,
இங்கே யாய்த்து திரு உள்ளம் பொருந்திற்று
நித்ய விபூதி இங்கேயாய் -மஹா நகரமும் -மாட மாளிகைகளுமாய் அற்றது
தஸ்மின் யதந்தஸ் தத் உபாஸி தவ்யம் -என்கிறபடியே
அவனோபாதி அவன் குண விபூதிகளும் உபாஸ்யம் என்னும் இடம் சொல்கிறது
புகழ் -எல்லாரையும் ரக்ஷித்து மோக்ஷம் கொடுக்க வந்த புகழ்
ஸுலப்யமான -வீடில் சீர்ப் புகழ்-யுடையவன் -ஆஸ்ரயணீயன் நித்ய வாஸம் பண்ணுகிற
திருக் குருகூர தனைப் பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே
துயர் அறு சுடர் அடி தொழுது எழுந்து ஆடிப்பாடிப் பல்லுலகீர்! பரவிச் சென்மின்கள்
துயர் இளைப்பு -அறு -அன்றிக்கே -சுடர் அடி -மோக்ஷ ஆனந்த ப்ரதமான தேஜஸ்ஸை யுடைய
திருவடிகளைத் தொழுது எழு என் மனனே என்றும்
லௌகீகர்க்குமாகப் பர உபதேசம் பண்ணுகிறார் –
———–
நான்காம் பத்து விவரணம் முற்றிற்று
———————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-