ஸ்ரீ பெரிய நம்பிகள் அருளிச் செய்த தனியன் –
ஆபாத சூட மநுபூய ஹரிம் சயாநாம்
மத்யே கவேரே துஹிதுர் முதிதாந்தராத்மா
அத்ரஷ்ட் ருதாம் நயநயோர் விஷயாந்த்ர
யோநிஸ்சிகாயா மநவை முநி வாஹநம்த –
திருமலை நம்பி அருளிச் செய்த தனியன் –
காட்டவே கண்ட பாத கமல நல்லாடை உந்தி
தேட்டரும் உதரபந்தம் திரு மார்வு கண்டம் செவ்வாய்
வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனி புகுந்து
பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே –
———————————
வ்யாசிக் யாசத பக்த்யா விரக்த தோஷாயா வேங்கடேச கவி
முகுந்த விலோக ந முதித முநி வாஹந ஸூக்தி பங்க்தி மிமாம் –
அடியாரைக் காண விழையும் அரங்கனைக் கண்டு களிக்க ஆசைப்படுபவரும் –
ஸ்ரீ லோக சாரங்க முனிவரை வாகனமாகப் பெற்றவரும் நல் கவியுமான
திருப் பாண் ஆழ்வாருடைய இந்த திவ்ய பிரபந்தத்தை
பக்தியுடன் முக்கரணங்களையும் அடக்கி சமதமதாதி குணங்கள் நிறைந்த முகுந்தனைக் காண விழையும்
அடியார்களின் மகிழ்ச்சிக்காக ஸ்ரீ வேங்கடேச கவி வ்யாக்யானம் செய்து அருளுகிறார்
ப்ரணதிம் வேங்கடேசஸ்ய பதயோர் விததீ மஹி
யத் உக்தயோ யதீந்த்ர யுக்தி ரஹஸ்யாநாம் ரஸாயநம்
எவருடைய ஸ்ரீ ஸூக்திகள் ஸ்ரீ பாஷ்யகாரர் உபதேசித்த ரஹஸ்யங்களை அறியும் குளிகையாக
அமைகிறதோ அந்த வேங்கடேசரின் திருவடிகளை வணங்குவோம்
பாவளரும் தமிழ் மறையின் பயனே கொண்ட
பாண் பெருமாள் பாடியதோர் பாடல் பத்தில்
காவலனும் கணவனுமாய் கலந்து நின்ற
காரணனைக் கருத்துற நான் கண்ட பின்பு
கோவலனும் கோமானுமான வந்நாள்
குரவை பணர் கோவியர் தம் குறிப்பே கொண்டு
சேவலுடன் பிரியாத பெடை போற் சேர்ந்து
தீ வினையோர் தனிமை யெலாம் தீர்ந்தோம் நாமே
பாக்கள் செறிந்த தமிழ் வேதமாம் திவ்ய ப்ரபந்தங்களின் உள் பொருள்களை அடக்கியவையும்
திருப் பாண் ஆழ்வாரால் அருளிச் செய்யப்பட இப் பத்து பாசுரங்களால்
காப்பவனும் -நாயகனுமாக இசைந்து நிற்கும் காரணமாம் நாரணனை நாம் நன்கு அறிந்த பின்
இடையனும் அரசனுமாக திரு அவதரித்த போது அவனுடன் திருக் குரவைக் கூத்தாடிய
இடைப் பெண்கள் கருத்தையே தானும் கொண்டு
ஆண் பறவையை விட்டு அகலாத பெண் பக்ஷி போலே அவனைச் சேர்ந்து
பாபிகளுக்கான துணை அற்ற நிலையை விட்டு ஒழிந்தோம்
ஸுலப்யம் பரத்வம் இரண்டும் ஒருங்கே அமைந்த எம்பெருமானே உபாயம் -காரணந்து த்யேயயா –
குரவைக் கூத்து உதாஹரணம்
சர்வேஸ்வரனுடைய பரத்வ மாத்ரத்தை அறிந்து அகலுகையாலே நர அதமன் என்று பேர் பெற்ற பிறந்து கெட்டானில் காட்டிலும்
இடைச்சிகளைப் போலே விவேகம் இல்லையே ஆகிலும் ஸுலபயத்தை அறிந்து
அந் நலனுடை ஒருவனை நணுகுமவனே பரம ஆஸ்திகன் -அப்புள்ளார் ஸ்ரீ ஸூக்தி
நமோ ராமாநுஜார்ய ஸவ்ம்ய மூர்த்தி ஸூ ஸூநவே
யஸ்ய ப்ரஸாதான் நிர்யாதி போக ஸ்வாது தரங்கிணீ –
காரண விசேஷம் இன்னது என்று அறுதி இட அரிதாய் இருப்பதொரு பகவத் கடாஷத்தாலே
அயத்ந லப்தமான பர தத்வ -பரம ஹித -பரம புருஷார்த்த -விவேகத்தை உடையவராய் –
(தத்வ த்ரய விவேகம் உண்டாகைக்கு ஹேது எம்பெருமான் நிருபாதிக ஸூஹ்ருத கார்யம்
விளம்ப ரஹித மோக்ஷ ஹேதுக்களான ஸூஹ்ருத விசேஷங்கள் ஆர் பக்கலிலே கிடைக்கும் என்று தெரியாது –
ரஹஸ்ய த்ரயம் -அர்த்த பஞ்சக அதிகாரம் –
நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன் -என்றும் குலங்களாய ஈர் இரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் -என்றபடி
பராதீன ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தியான தன் அதிகாரத்தில் அடங்கிய ஆகிஞ்சன்யத்தைக் காட்டுகிறது )
அநாதி கால பிரவ்ருதங்களான ஷூத்ர புருஷார்த்தராதிகளையும் –
ஷூத்ர புருஷ ஸ்தோத்ராதிகளையும் -ஷூத்ர புருஷார்த்த பிரவ்ருத்திகளையும்
தப்பின தம்முடைய கரண த்ரவ்யமும் இப்போது ப்ராப்தமான ஏக விஷயத்திலே –
(மநோ வாக் காயங்களின் வியாபாரங்கள் அல்ப அஸ்திரத்வாதிகளை தவிர்ந்து பகவத் விஷயத்தில் இருந்தமை )
அநந்ய பிரயோஜன அநுகூல வ்ருத்தியை உடைத்தான படியைக் கண்டு
சந்தோஷ யுக்தரான திருப்பாண் ஆழ்வார் -பின்பு பரம பதத்திலே பெரும் பேற்றை இங்கே
பெரிய பெருமாள் திருவருளாலே பெற்று –
(ஆழ்வார் தாம் தம்முடைய திரு உள்ளத்தால் அனுபவித்து -அவ்வனுபவ ஜெனிதமான நிரவதிக ப்ரீதியாலே
அவனை அனுபவித்த படியே பேசுகிறார் -திருவாராயிரப்படி வ்யாக்யானத்தை ஒட்டி சாதித்து அருளுகிறார் )
இப் பேற்றை அடி தொடங்கி –
அமலனாதி பிரான் முதலான பத்துப் பாட்டாலே அநுபவ ப்ரீவாஹமாக (உணர்ச்சிப் பெருக்காலே)அருளிச் செய்கிறார்-
இப்ப்ரபந்தம் அதி விஸ்தரம் அதி சங்கோசம் அதி க்ருதாதிகாரத்வம் துர்க்ரஹத்வம் ( விஷயம் விளங்காமை )
துரவபோதார்த்த்வம் ( பொருள் விளங்காமை ) சம்சயாஸி ஜநகத்வம் விரஹ க்லேசம் தூத ப்ரேஷணம்
பரோபதேசம் பர மத நிரசனம் என்றாற் போலே
மற்றுள்ள அத்யாத்ம பிரபந்தங்களில்- ( வேதாத்மா நூல்கள்) உள்ளவை ஒன்றும் இன்றிக்கே
அநுபவ கநரசமாய் ( அனுபவத்தின் திரண்ட ரசம் ) இருக்கிறது –
முதல் பாட்டான அமலனாதிபிரான் தொடங்கி
கொண்டல் வண்ணனை என்கிற தலைக் கட்டுப் பாட்டளவும்
இதில் முதல் பட்ட மூன்று பாட்டுக்கு முதல் அஷரம்
மூலமாகிய ஒற்றை எழுத்தின் முதல் -நடு -இறுதி யானவை-
——————————–
அவதாரிகை
இதில் முதல் பாட்டு -திரு மந்த்ரத்திலும் த்வயத்திலும் முமுஷுவுக்கு அவஸ்ய
அனுசந்தேயங்களான அர்த்தங்களை ஸூசிப்பிக்கிறது
அமலனாதி பிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே –1–
பதவுரை
அமலன்–பரிசுத்தனாய்
ஆதி–ஜகத்காரபூதனாய்
பிரான்–உபகாரகனாய்
என்னை–(இழி குலத்தவனான) என்னை
அடியார்க்கு–(தனது) அடியவர்களான பாகவதர்களுக்கு
ஆள்படுத்த–ஆட்படுத்துகையாலே வந்த
விமலன்–சிறந்த புகரை யுடையனாய்
விண்ணவர் கோன்–நித்யஸூரிகட்குத் தலைவனாயிருந்து வைத்து
(ஆச்ரிதர்கட்காக)
விரை ஆர் பொழில்–பரிமளம் மிக்க சோலைகளையுடைய
வேங்கடவன்–திருவேங்கடமலையில் வந்து தங்குமவனாய்
நிமலன்–ஆச்ரயிப்பார்க்கு அரியனாயிருக்கையாகிற குற்றமற்று, ஆச்ரித பாரதக்திரியத்தை வெளியிட்டு நிற்குமவனாய்
நின்மலன்–அடியாருடைய குற்றத்தைக் காண்கையாகிற தோஷமில்லாத வத்ஸலனாய்
நீதி வானவன்–சேஷசேஷி முறைவழுவாதபடி நியாயமே செல்லும் நிலமான பரமபதத்துக்கு நிர்வாஹகனாய்
நீள் மதிள்–உயர்ந்த மதிள்களையுடைய
அரங்கத்து–கோயிலிலே (கண் வளர்ந்தருளுகிற)
அம்மான்–ஸ்வாமியான அழகிய மணவாளனுடைய
திருக் கமல பாதம்–திருவடித் தாமரைகளானவை
வந்து–தானே வந்து
என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே–என் கண்ணுக்குள்ளே புகுந்தன போலிரா நின்றனவே
அமலன் –
என்கிறது மல ப்ரதிபடன் -என்றபடி -இத்தால் மோஷ ப்ரதத்வம் சொல்லிற்று ஆய்த்து –
இது பிரதானமான ரஷகத்வம் ஆகையாலே பிரியப் பேசப்படுகிறது
(ஸ்வயம் பிரகாச ஸ்வரூபனான ஜீவன் கர்ம அநு ரூபமாக பிரகிருதி சம்பந்தத்தால் அழுக்கு அடைந்து இருப்பதையும்
அத்தை விலக்கும் சக்தி எம்பெருமானுக்கு மட்டுமே உள்ளத்தையும் சொல்கிறது –
எம்பெருமானின் பிரதான அசாதாரண வியாபாரம் மோக்ஷ பிரதத்வம் பேசப்படுகிறது )
ஆதி –
ஏஷ கர்த்தா ந க்ரியதே -இத்யாதிகளில் படியே சர்வ ஜநதேக காரண பூதன்
இத்தால் காரணந்து த்யேயய–காரணமே சரண்யம் என்கிறபடியே முமுஷுவுக்கு சரணமாக பற்றப்படுமவன் என்று பலிதம்
(முமுஷுவால் பற்றப்படுபவர் நாராயணன் என்றதாயிற்று )
இக் காரணத்வமும் மோஷ பிரதத்வமும் ( ராஜாவுக்கு )சத்ர சாமரங்கள் போலே சர்வ லோக
சரண்யனுக்கு விசேஷ சிஹ்னங்கள்-
பிரான் –
கருணா க்வாபி புருஷே இத்யாதிகளில் படியே சர்வ உபகாரகன்
இங்கு ஆத்மாக்கள் உடைய சத்தாதி ஸ்தாபனம் முதலாக பரிபூர்ண கைங்கர்ய ப்ரதான
பர்யந்தமாக -ப்ரத்யுபகாராதி நிரபேஷனாவனனுடைய
அநுகம்பா அக்ருத்யங்கள் எல்லாம் சாமான்யேந -சொல்லப்படுகிறது
இது எல்லாம் பிரதம அஷரார்தமான ரஷண -பேதம்
(அமலன் -ஆதி -பிரான் -என்கிற மூன்று பாதத்தால் குறிக்கப் பட்ட
மோக்ஷ பிரதத்வம் -காரணத்வம் -உபகாரகத்வம் –
ஆகியவை நம்மை ரக்ஷிக்க மேற் கொள்ளும் செயலின் வகைகளே )
இவை தம்மளவில் பர்யவசித்த படியிலே இம் மூன்று பதத்துக்கும் தாத்பர்யம்
இது மேல் பாசுரங்களிலும் காணலாம்-
அடியார்க்கு என்னை -ஆட்படுத்த -என்கிற இடத்தில் –
அடியார்-
என்கிற இத்தால் -த்ருதீய அஷரத்திலே சொன்ன ஜீவ வர்க்கமும்
(ம -வியாகரண வ்யுத்பத்தியின் படி -ஞான ஸ்வரூபம் -அறிவிப்பது -அளவுபட்டது
அஸ்மத் -வேத இலக்கணப்படி அஸ் / அத் -மறைந்து ம -ஜீவன்)
ஜீவனில் ஈஸ்வரனைக் காட்டில் வேறுபாடும்
அந்யோந்யம் பிரிவும் -காட்டப்படுகிறது –
அடியார் –
என்றால் சர்வ சாதாரணமாக சதுர்த்தியில் சொன்ன தாதர்த்யவான்களை-( தாதர்த்தம் -அதற்காகவே ) எல்லாம்
காட்டிற்றே யாகிலும் -இங்கு
அடியார் –
என்கிறது – யோ ஹ்யேநம் புருஷம் வேத தேவா அபி ந தம் விது –(பாரதம் -தர்ம புத்திரனுக்கு மார்க்கண்டேயர் உபதேசம் )
என்னும்படி அபரிச்சேத்ய மகாத்யம்யரான சேஷத்வ ஜ்ஞான ரசிகரை –
இப்படி அடியார்க்கு –
என்று விசேஷ உபாதானம் பண்ணுகையாலே -மத்யம அஷரத்தின்
படியே நிருபாதிக சேஷிகள் வேறு இல்லாதபடியும்
கர்ம உபாதிக சேஷிகளோடு தமக்கு துவக்கு அற்ற படியும் சொல்லிற்று ஆயிற்று –
(மற்றுமோர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -பெரிய திருமொழி -8-10-3-)
சர்வ சேஷி யாகையாலே சர்வத்தையும் யதேஷ்டமாக விநியோகிக்க ப்ராப்தனாய் –
நிரந்குச ஸ்வதந்த்ரன் ஆகையாலே சர்வத்தையும் யதேஷ்டமாக விநியோகிக்க சக்தனுமான
சர்வேஸ்வரன் -அநந்ய பிரயோஜனரான ஆஸ்ரீதர்க்கு சர்வமும் சேஷமாகக் கடவது -என்று
விநியோக விசேஷத்தால் சர்வருக்கும் பாகவத சேஷத்வம் நித்ய சித்தமானால்
அநந்ய பிரயோஜனரான ஆஸ்ரீதர்க்கு பகவத சேஷத்வம் ஈஸ்வரன் தன்னையும் பாகவதரையும் ஒழிந்த
அந்யரைப் பற்ற சேஷத்வம் இல்லாதபடி-வருகிறதே
இதின் பலமான -கைங்கர்யமும் இப்படி வருகிறது ஆகையாலே –
என்னை அடியார்க்கே ஆட்படுதினான் –
என்ற அவதாரணமும் இங்கே விவஷிதம்
மற்றுமோர் தெய்வம் உளது என்று இருப்பரோடு உற்றிலேன் -என்று இறே இவர்களுடைய -பாசுரம்-
தேஷாம் ஞானி நித்ய யுக்த ஏக பக்திர் விசிஷ்யதே –கீதை -7-17-
ததீய சேஷத்வம் நிலைத்து நிற்குமே-
என்னை ஆட்படுத்த –
அத்ய ப்ரப்ருதி ஹே லோகா யூயம் யூயம் வயம் வயம் -அர்த்த காம பரா யூயம் நாராயண பரா வயம் –
வயம் து கிங்கரா விஷ்ணோ யூயமிந்த்ரிய கிங்கரா–ஸ்ரீ கீதை-16-14- -என்னும்படி
இந்திரிய கிங்கரனாய் வைத்து -அதுக்கு மேலே –ஈஸ்வரோஹம் -என்று இருக்கக் கடவ -என்னை –
தாஸ பூதா ஸ்வதஸ் சர்வே ஹ்யாத்மாந பரமாத்மந அதோஹமபி தே தாஸ இதி மத்வா நமாம்யஹம் -மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்
அதோஸஹமபி தே தாஸ -என்னப் பண்ணின உபகாரத்தில் காட்டிலும் –
(ப்ரக்ருத்யாத்ம பிரமம் -ஸ்வதந்த்ராத்மா பிரமம் -இவற்றுக்கு நிதானமான அநீஸ்வர வாத ருசி -ஆகிய
மஹா விரோதிகளை போக்கி அருளிய உபகாரங்கள் -இவற்றுக்கும் மேலே -)
உற்றதும் உன் அடியார்க்கு -அடிமை என்னப் பண்ணின இதுக்கு மேலே ஒரு உபகாரம் உண்டோ என்று –
இப் பரம உபகாரத்தையும் பிரித்துப் -பேசுகிறார்
இது நமஸில் தாத்பர்யம்
(நான் எனக்கு சேஷம் அல்லேன் -ஒன்றும் எனக்கும் சேஷமும் இல்லை -ஒன்றுக்கும் நான் சேஷியும் இல்லை –
எனக்கு ஸ்வாதந்தர்யம் இல்லை -போன்ற பல அர்த்தங்கள் உண்டே )
கீழ்ச் சொன்ன கர்த்ருத்வாதிகளாலே -எருத்துக் கொடி யுடையான் -முதலான ஆத்மாந்தரங்களுக்கு
போலே அஜ்ஞாநாதி தோஷங்கள் இவனுக்கு உண்டாகில் இவன் முன்பு சொன்ன
சாஷான் மோஷ ப்ரதானம் பண்ண வல்லனோ -என்ன –
விமலன்
நித்ய நிர்தோஷன் -இத்தால் பத்த முக்த விலஷணன் -என்றது ஆயிற்று –
இவ்வளவு சூரிகளுக்கும் இல்லையோ என்ன –
விண்ணவர் கோன் –
பராதீன ஸூத்தி யோகத்தை உடையரான சூரிகளைக் காட்டில் வேறு பட்டவன் –
இத்தாலே ஸூரி சேவ்யமான பர ரூபமும் தோன்றுகிறது
இப்படி எட்டா நிலத்திலே இருக்கும் இருப்பு இங்கு உள்ளாருக்கு நிலம் அன்றே -என்ன
விரையார் பொழில் -வேம்கடவன்
பரிமளம் வடிவு கொண்டால் போலே இருக்கிற திருச் சோலைகளை உடைய திரு மலையிலே
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -என்கிறபடியே எல்லாருக்கும்
ஆஸ்ரயிக்கவும் அநுபவிக்குமாம்படி -இருள் தரும் மா ஞாலத்துள் குன்றத்து இட்ட விளக்காய் -நிற்கிறவன்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் -ஆவேனே என்னும்படி பிறந்த ஸ்தாவரங்களுடைய
ஆமோதம் அதிசயமாய் இருக்கும் –
இப்படி சர்வ சுலபன் ஆனாலும்
அவ் வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே என்னும்படி -நிற்குமோ -என்ன
நிமலன்
ப்ரஹ்ம ருத்ராதிகளும் அஞ்சி அருளப்பாடு முன்னாக அணுக வேண்டும்படியான
ஐஸ்வர்யத்திலே குறும்பு அறுத்த நம்பிக்கு கூசாதே நிரந்தர சம்ச்லேஷம் பண்ணலாம்படி
(யா க்ரியா சம்ப்ரயுக்தா ஸ்யுஹு ஏகாந்த கத புத்திபி -தாஸ் சர்வா சிரஸா தேவ பக்தி க்ருஹணாதி வை ஸ்வயம் –
என்கிறபடியே-சிரஸால் ஏற்றுக் கொள்கிறான் )
தன் ஈஸ்வர சுணை யாகிற ஆஸ்ரயண விரோதி தோஷத்தை -மறைத்து
(ஆஸ்தாம் தே குணராசிவத் குண பரீவாஹாத்மநாம் ஜென்மநாம் சங்க்யா பவ்நிகேத நேஷ்வபி குடீ குஞ்ஜேஷு ரங்கேஸ்வர
அர்ச்சயஸ் சர்வ ஸஹிஷ்ணு அர்ச்சக பராதீன அகிலாத்ம ஸ்திதி ப்ரீணீஷே ஹ்ருதயா லுபி தவ
தத சீலாஜ் ஐடீ பூயதே –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2-74–)
அர்ச்சக பராதீன அகிலாத்ம ஸ்திதி -என்கிறபடியே ஆஸ்ரீத பாரதந்த்ர்யத்தை வெளி இட்டு நிற்குமவன்
(பத்துடை அடியவர்க்கு எளியவன் –தேர் முன்னே தான் தாழ நின்ற)
இப்படி சௌலப்ய சௌசீல்யங்கள் உண்டானாலும் ஆஸ்ரீத தோஷத்தைக் காணும் ஆகில்
அணுகக் கூசார்களோ –என்னில்
நின்மலன் –
அவிஜ்ஞாதா -என்றும் -என் அடியார் அது -செய்யார்–பெரியாழ்வார் -4-9-2- என்றும் சொல்லுகிறபடியே
ஆஸ்ரீதருடைய தோஷ தர்சனம் ஆகிற சரண்ய தோஷம் இல்லாதவன்
சர்வஜ்ஞனாய் இருக்கச் செய்தே ஆஸ்ரீத தோஷத்தை காணான் என்றது –
காணும் அதுவும் இவர்கள் உடைய தோஷத்தைக் கழிக்க உறுப்பாம் -ஈஸ்வர நிக்ரஹமும் அநுக்ரஹ சங்கல்பமே-என்றபடி –
விமலன் -என்று தொடங்கி -இவ் வஞ்சு பதங்களாலே நாராயண சப்தத்தில்
உபாயத்வ ப்ராப்யத்வங்களுக்கு உபயுக்தமான உபய லிங்கத்வமும்
உபய விபூதி நிர்வாஹகத்வமும் சொல்லிற்று ஆயிற்று
(விமலன் -ஒருபோதும் தோஷம் இல்லாதவன்
விண்ணவர் கோன் -பராத்பரன்
வேங்கடவன் ஆஸ்ரயிக்கவும் அனுபவிக்கவும் ஸூலபன்
நிமலன் -ஆஸ்ரித பரதந்த்ரன்
நின்மலன் -ஆஸ்ரிதர் தோஷங்களை காணாதவன் –இவ்வைந்துமே நாராயண சப்தார்த்தங்கள் )
மேல் -இவன் ஸ்வரூப ப்ராப்த கைங்கர்ய ரூபமான நீதியிலே நிரதரான நித்ய ஸூரிகளுக்கு
சேவ்யனானாப் போலே நமக்கும் சேவ்யனாம் என்று
(நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனாய் -நித்ய அனுபவம் பண்ணும் அந்தமில் பேர் இன்பத்து அடியரான
நித்ய ஸூரிகளோடு ஓக்க நித்ய கைங்கர்ய த்துக்கு ஸ்வரூப யோக்யதையால் இட்டுப் பிறந்து வைத்து -)
சதுர்த்தியில் கருத்தான கைங்கர்ய பிரதி சம்பந்தித்வத்தை அனுசந்திக்கிறார்
நீதி -வானவன்
இங்கு வான் -என்கிற சப்தம் ஸூரி சஹிதமான பரம பதத்தை சொல்லுகிறது
நீதியை நடத்துவிக்கும் வானிலே வர்த்திக்குமவன்–வீற்று இருந்து செங்கோல் ஒச்சுமவன் -என்னவுமாம் –
தேன வஞ்சயதே லோகன் மாயா யோ கேந கேசவ -பாரதம் –
சஞ்சயன் கிருஷ்ணன் மஹிமையை த்ருதராஷ்ட்ரனுக்கு சொல்கிறான் -என்கிறபடியே –கலக்குவாரும்
அவஜா நந்தி மாம் மூடா மானுஷீம் தனும் ஆஸ்ரிதம் பரம் பாவ மஜா நந்த மம பூத மஹேச்வரம் –ஸ்ரீ கீதை -9-11- –
என்கிறபடியே கலங்குவாரும் இல்லாத தேசம் ஆகையாலே
தாஸ்யம் ஐஸ்வர்ய யோகேன ஜ்ஞாதீ நாஞ்ச கரோம் யஹம் –
ஈஸ்வர ஸ்வபாவம் ஆகிற ஸ்வா தந்தர்யத்தாலே ஆஸ்ரித பாரதந்தர்யம் ஏறிட்டுக் கொண்டுள்ளேன் –என்றும்
பரம ஈஸ்வர சம்ஜ்ஞோஸ்ஜ்ஞா கிமந்யோ மய்ய வஸ்திதே –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-23-
ஹிரண்யகசிபு ப்ரஹ்லாதன் இடம் -நான் இங்கே இருக்க பரமேஸ்வரன் வேறே உள்ளானோ என்றது -என்றும்
(இத்தால்
பிராக்ருதாத்மா பிரம்மமும்
ஸ்வ தந்தராத்மா பிரம்மமும்
அநீஸ்வர வாத ருசியும் -சொல்லிற்று ஆயிற்று
வள வேழுலகின் முதலாய வான் இறையை அருவினையேன் கள வேழ் வெண்ணெய் தோடு உண்ட கள்வா என்பன் -1-5-1–)
இங்கு பிறக்கும் ஈசேசி தவ்யத்தின் மாறாட்டம் இல்லாத பரம பதத்தில் நித்ய வாஸம் பண்ணுகிறவன் என்றது ஆய்த்து-
இப்படி சர்வ சேவ்யனான சர்வ சேஷி -விபீடணற்கு வேறாக நல்லான் -என்கிறபடியே
தமக்கு இப்போது விசேஷித்து அனுபவிகலாம்படியைப் பேசுகிறார் –
நீள் மதிள் அரங்கத்தம்மான் –
அயோத்யை -என்றும் அபராஜிதை -என்றும் சொல்லுகிற கலங்கா பெரு நகரத்தின் படியைக்
கொடி யணி நெடு மதிள்களாலே -ஸூ ரஷிதமான ஸ்தல விசேஷத்தாலே காட்டி –
அயர்வறும் அமரர்கள் அதிபதியான -தன் படியை -செங்கோல் உடைய திருவரங்க செல்வனார் ஆன
ஆகார விசேஷத்தாலே அறிவித்துக் கொண்டு சேஷித்வத்தின் எல்லையிலே தான் நின்றால் போலே
(பரமபதத்தில் நின்றும் ஸ்ரீ வடமதுரையிலே தங்கி திருவாய்ப்பாடிக்கு வந்தது போலே
ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும் திருமலையில் தாங்கிக் காணும் கோயிலில் வந்தது -ஸ்ரீ பட்டர் )
சேஷத்வத்தின் எல்லையில் என்னை நிறுத்தின ஸ்வ தந்திர ஸ்வாமி
அரங்கத்தம்மான் –
நீர்மைக்கும் மேன்மைக்கும் எல்லை யானவன்
(அரங்கத்து -நம்மிடம் தேடி வந்த ஸுலப்யமும்-அம்மான் -பரத்வமும் )
இவனுடைய உபாயத்வ ப்ராப்யத்வங்களில் உறைப்பு உண்டான திருவடிகளை அனுபவிக்கிறார்
திருக் -கமல -பாதம்
பாவநத்வ போக்யத்வங்களாலே சுபாஸ்ரயமான திருவடிகள் –
(திரு -ஸ்ரீ ஸ்ரீ ணாதி இதி ஸ்ரீ -பிரதிபந்தங்களைப் போக்கும் பாவனத்வமும் /
கமலா -போக்யத்வமும் -ஆக இரண்டாலும் ஸூபாஸ்ரயம் )
திருவுக்கு லீலா கமலம் போலே இருக்கிற பாதம் -என்னவுமாம்-
(வடிவிணை இல்லா மலர் மகள் மற்றும் நிலா மகள் பிடிக்கும் மெல்லடி -9-2-10–)
வந்து
வந்து என்கிற இத்தால் ஓடின தம்மை துடர்ந்த படியும்
(அஜோபி சந் அவ்யயாத்மா பூதா நாம் ஈஸ்வரோபி சந் ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய சம்பவாமி ஆத்ம மாயையா -4-6–)
அயத்ந லப்தங்களான படியும் -தோன்றுகிறது –
இத் திருவடிகளில் வைத்த கண் வாங்க ஒண்ணாத படியான போக்ய அதிசயத்தை
ஓர் உத் ப்ரேஷையாலே அருளிச் செய்கிறார்
என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே
தேவாதிகளில் தலைவரான ப்ரஹ்மாதிகள் அடையவும்
சனகாதிகளான யோகிகள் அடையவும்
திவ்ய சஷூஸ் ஸு க்களுக்கும் கூட தூயமாய் இருக்கக் கடவ அவை –
மனுஷ்ய மாத்ரமான என்னுடைய மாம்ஸ சஷூஸ் ஸுக்களுக்கும்-(சகல மனுஷ நயன விஷயதாம் கத -ஸ்ரீ கீதா பாஷ்யம் )
அத்ய அசன்னமாய் இரா நின்றன -என்று ஆச்சர்யப் படுகிறார் –
(யோகேந நாத ஸூபம் ஆஸ்ரயம் ஆத்மவந்த ஸாலம்பநேந பரிச்சிந்த்ய ந யாந்தி த்ருப்திம் -சரணாகதி தீபிகா
கட் கண்ணாலும் கண்டு வியக்கின்றனர் )
நீள் மதிள் அரங்கத்தம்மான் திருக் கமல பாதம் -என்று
த்வயத்தில் பூர்வ உத்தர நாராயண சப்தார்த்தையும் -சரண சப்தார்த்தையும் அனுசந்தித்த படி –
இப்பாட்டால் –
மோஷ -பிரதத்வத்தையும்
ஜகத் -காரணத்வத்தையும்
மற்றும் சர்வ ப்ரகார உபகாரத்வத்தையும்
அவற்றில் சார தமமான உபகார விசேஷத்வத்தையும்
நித்ய நிர்தோஷத்வத்தையும்
நித்ய ஸூரி நிர்வாஹத்வத்தையும்
நித்ய விக்ரஹவத்தையும்
சர்வ சுலபத்வத்தையும்
சௌசீல்யத்தையும்
வாத்சல்யத்தையும்
கைங்கர்ய உத்தேச்யத்வத்தையும்
கைங்கர்ய ஸ்தான விசேஷத்வத்தையும்
சர்வ ஸ்வாமித்வத்தையும்
திருவடிகளினுடைய பாவனத்வத்தையும் போக்யத்வத்தையும்
அவற்றை தான் அநாயாசமாக அநந்ய த்ருஷ்டிகளாகக் கொண்டு அனுபவிக்கப் பெற்ற படியையும்
முன்னிட்டு ஸ்ரீய பதியினுடைய பராகாஷ்டாப்ராப்த குண ப்ரகர்ஷங்களை அனுசந்தித்தார்-
அகாரம் -அமலன் ஆதி பிரான் -ரக்ஷண பேதத்தை சொல்லி
லுப்த சதுர்த்தி மகாரம் -அடியாருக்கு
உகாரம் -அடியார்க்கே
நம -என்னை ஆட்படுத்த -இந்த சேஷத்வம் பகவத் பாகவதர்கள் அன்றி மற்ற எவர்க்கும் தனக்கும் கூட இல்லாத வரையறை கொண்டது –
நாராயண -விமலன் -விண்ணவர் கோன் -வேங்கடவன் -நிமலன் -நின்மலன் -ஈயதே அநேந -அஸ்மிந் -அஸ்மை –
ஆய -நீதி வானவன் -கைங்கரத்தை ஏற்றுக் கொள்பவன்
த்வயம் பூர்வ உத்தர நாராயண சப்தம் -அரங்கத்து அம்மான் -ஸுலப்ய பரத்வ காஷ்டை
திருக் கமல பாதம் -பாவனத்வ போக்யத்வங்கள்
அவற்றில்
1-சம்சார நிவர்தக காஷ்டை யாவது -களை யற்ற கைங்கர்யத்தை கொடுக்கை –
2-காரணத்வ காஷ்டை யாவது -காரணாந்தரங்கள் எல்லாம் தான் இட்ட வழக்காய் –
தனக்காதல் -தன்னுடைய ஜ்ஞான சக்திகளுக்கு ஆதல் -ஒரு காரண சம்பாவனை இன்றிக்கே இருக்கை –
3-சரண்யத்வ காஷ்டை யாவது -தன்னை ரஷகனாக பற்றினவர்களுக்கு தன்னை ஒழிய
மற்றவரை ரஷகராகப் பற்ற வேண்டாதபடி இருக்கை-( த்வயி ரஷதி ரஷகை கிமந்யை )
4-உபகாரத்வ காஷ்டை யாவது -ஒரு ஷூத்ர வ்யாஜத்தை அவலம்பித்து உபய விபூதி
விசிஷ்டனான தன்னை அனுபாவ்யனகக் கொடுத்தும் -அதுக்கு மேல் கொடுக்க லாவது
இல்லாமையாலே நித்யருணியாய் இருக்கை
(சர்வஞ்ஞ அபி ஹி விஸ்வேச சதா காருணிக அபி சந் சம்சார தந்த்ர வாஹித்வாத் ரக்ஷ அபேக்ஷம் பிரதீஷதே-
பக்ஷபாதம் இல்லாமல் லோகத்தை நியமிக்க ரக்ஷண அபேக்ஷை எதிர்பார்க்கிறான் –
அஞ்சலிம் யாசமாந -கை கூப்புதலை வேண்டுபவன் -ஸ்வேநைவ க்லுப்தமபதேசம வேஷமாண –
தானே உண்டாக்கிய சிறு வியாஜ்யத்தை எதிர்பார்க்கிறான்
கோவிந்தேதி யதா க்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாசி நம் – ருணம் ப்ரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயாந் நாபசர்பதி
ஐஸ்வர்யம் அக்ஷர கதிம் பரமம் பதம் வா கஸ்மை சித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய-
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதமித்யதாம்ப த்வம் லஜ்ஜசே கதய காயம் உதார பாவ -ஸ்ரீ பட்டர் )
5-க்ருபா காஷ்டை யாவது -சத்ருவினுடைய சம்பந்திகளும் கூட த்யாஜ்யர் என்ற பரிவர் முன்னே
சத்ரு தானும் இசையில் ஸ்வீகரிப்பேன் -என்று எதிர் பேசும்படியான இரக்கத்தை உடையனாய்
அவர்கள் தாங்களும் இவனை கைக் கொள்ளும்படி பண்ணுகை –
வத்யதாம் ஏஷ தீவ்ரேண தண்டேந சசிவைஸ் ஸஹ -ராவணஸ்ய ந்ருசம் சஸ்ய ப்ராதா ஹ்யேஷ விபீஷண –
ஈத்ருசம் வ்யஸனம் பிராப்தம் பிராதரம் யா பரித்யஜேத் -கோ நாம பவேத் தஸ்ய யமேஷ ந பரித்யஜேத் –யுத்த -18-5-6–
6-ஸ்வா தந்திர காஷ்டை யாவது -தன்னையும் பிறரையும் தான் நிறுத்தின நிலைகளிலே
நிறுத்தும் போது விலக்க வல்லார் இன்றிக்கே இருக்கை
7-நிர்தோஷத்வ காஷ்டை யாவது -தோஷ யுக்தங்களான பதார்த்தங்களோடு உண்டான
சம்சர்க்கத்தாலும் -பிறர்க்கு அஞ்ஞான துக்க ஹேதுக்கள் ஆனவற்றை தான் அனுஷ்டித்தாலும்
தனக்கு அஞ்ஞான துக்கங்கள் வராது இருக்கை
8-ஸ்வாமித்வ காஷ்டை யாவது -விபூதிமான்களை எல்லாம் தனக்கு விபூதியாக உடையவனாய் இருக்கை
9-சௌலப்ய காஷ்டை யாவது -அகல நினைப்பாருக்கும் அகல ஒண்ணாத படி அணுக நிற்கை-( வள வேழுலகம் -அனுசந்திப்பது )
10-சௌசீல்ய காஷ்டை யாவது -தன் பக்கல் ஈச்வரத்தை சந்கிப்பாருக்கும் வெளி இடுவாருக்கும்
தானே மறு மாற்றம் சொல்லி மேலும் தன்னை தாழ விட்டு பரிமாறா நிற்கை
11-வாத்சல்ய காஷ்டை யாவது -அந்தரங்கராய் இருப்பாரும் ஆஸ்ரீத விஷயத்தில்
ஆயிரம் கோடி குற்றம் காட்டிலும் அநாதரம் பிறப்பிக்க ஒண்ணாது இருக்கை –
12-ப்ராப்யத்வ காஷ்டை யாவது -தன் விசேஷணம் ஆக அல்லது மற்று ஒரு ப்ராப்யம் இல்லாது இருக்கை
(காசீ -வ்ருக -அந்தக -சராசந -பாண-கங்கா -சம்பூதி -நாம க்ருதி -சம்வதன-ஆத்யுதந்தை-
ஸ்வ யுக்தி – அம்பரீஷ பய சாபமுகைச்ச சம்பும் த்வன் நிக்னம் ஈஷிதவதாம் இஹ க சரண்ய
இவ் விருத்தாந்தங்களை அறிந்தவர்களுக்கு உன்னைத் தவிர வேறே சரண்யர் யார் )
13-ஆஸ்ரீத பஷ பாதித்வ காஷ்டை யாவது -சர்வ வர்ண சமனான தான் ஆஸ்ரீத சங்கல்பத்தோடே
விரோதித்த தன் சாமான்ய சங்கல்பத்தை அசத் கல்பமாக்கி அநிதர சுலபமான ஆபிமுக்யதைப் பண்ணுகை
14-போக்யத்வ காஷ்டை யாவது -தன் ஸ்வரூபத்தை அனுசந்தித்தால் தன் விசேஷணமாக
சர்வத்தையும் அனுபவிக்குமது அதின் திவலையோடு ஒத்து இருக்கை
15-அயத்ந போக்யத்வ காஷ்டை யாவது -போகார்தமாக கரண பிரேரணமும் வேண்டாதபடி
தென்றலும் பரிமளமும் வந்தாப் போலே -வந்தது விலக்க ஒண்ணாத படி அனுபாவ்யனாய் இருக்கை
16-இவை எல்லாம் இப் பதங்களில் அடைவே ஆழ்வார் அனுபவித்த படியை அனுசந்திப்பது-
1-மோக்ஷ பிரதத்வம் -சம்சார நிவர்த்தக காஷ்டை -அமலன்
2-ஜகத் காரணத்வ காஷ்டை-ஆதி
3-ஜகத் சரண்யத்வ காஷ்டை-ஆதி
4-சர்வ உபகாரத்வ காஷ்டை-பிரான்
5-கிருபா விசேஷத்வ காஷ்டை-அடியார்க்கு ஆட்படுத்த
6-ஸ்வாதந்தர்ய காஷ்டை-என்னை ஆட்படுத்த
7-நித்ய நிர்தோஷத்வ காஷ்டை-விமலன்
8-நித்ய ஸூரி நிர்வாஹத்வ -திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டா ஸ்வாமித்வ காஷ்டை-விண்ணவர் கோன்
9-ஸுலப்ய காஷ்டை-வேங்கடவன்
10-ஸுசீல்ய காஷ்டை-நிமலன்
11-வாத்சல்ய காஷ்டை-நின்மலன்
12-கைங்கர்ய சாதன விசேஷத்வ ப்ராப்ய காஷ்டை-நீதி வானவன்
13-சர்வ ஸ்வாமித்வ ஆஸ்ரித பக்ஷபாத காஷ்டை-அரங்கத்து அம்மான்
14-திருவடிகள் பாவானத்வ காஷ்டை-திருப் பாதம்
15-திருவடிகள் போக்யத்வ காஷ்டை- கமல பாதம்
16-அயத்ன -அநாயாசேந போக்யத்வ காஷ்டை-வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றவே
——————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .