ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-அவதாரிகை-
சர்வ லோகத்தையும் அமுது செய்து அருளின கண்டத்தின் அழகு என்னை
உண்டாக்கிற்று -என்கிறார் –
திரு மார்பின் அழகு திருக் கழுத்திலே ஏறிட்டது -என்னவுமாம்
——-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–அவதாரிகை-
சர்வ லோகத்தையும் அமுது செய்து அருளின கண்டத்தின் அழகு என்னை
உண்டாக்கிற்று -என்கிறார் –
திரு மார்பின் அழகு திருக் கழுத்திலே ஏறிட்டது -என்னவுமாம்-
கீழ்ப் பாட்டில் திரு மார்பானது ஹராத்ய ஆபரண சோபையையும் –
பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமாய் இருக்கிற மேன்மையையும் காட்டி
தம்மை திரு வயிற்றின் நின்றும் வர வீரத்துக் கொண்டு எழுதிக் கொண்ட படி யிறே சொல்லிற்று –
இதில் -அந்த திரு மார்புக்கு மேலாய் –
ரமயது ஸ மாம் கண்ட ஸ்ரீ ரங்க நே துரு தஞ்சி தக்ரமுக தருண க்ரீவாகம் புப்ர லம்பமலிம்லுச
ப்ரணய விலகல் லஷ்மீ விச்வம் பராகர கந்தளீ கநக வலய க்ரீடா சங்கராந்த ரேக இவோல்ல சன் –
என்கிறபடியே கமுகுக் கன்றின் கழுத்துப் போலே பசுகு பசுகு என்று இருப்பதாய் -ரேகாத்ரயாங்கிதமாய் –
இரண்டருகும் நெருங்கி நடுவு பெருத்து இருக்கையாலும் -ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போலே இருக்கிற திருக் கழுத்தானது-
இந்த திரு மார்புக்கு உள்ளது -அலர்மேல் மங்கை யுறை மார்பா -என்கிறபடியே
பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமாய் இருக்கிற -ஆகாரமும்
திருவாரத்தாலே அலங்க்ருதமான ஆகாரமுமே யன்றோ –
இவளைப் போலே -சங்கு தங்கு முன்கை நங்கையாய் இருப்பார் அநேகம் நய்ச்சிமார்
ஸாபரணமான தங்கள் கைகளால் அணைக்கை யாலே -அவ் வாபரணங்கள் அழுத்த
அவற்றாலே முத்ரிதராய் இருப்போமும் நாம் அல்லோமோ –
பிரளய ஆபத்து வர சகல அண்டங்களையும் தத் அந்தர்வர்த்திகளையும் ரஷித்தோமும்
நாம் அல்லோமோ -அதுவும் கிடக்க பாண்டவர்கள் தூது விடுகிற போது கட்டிவிட்ட
மடக்கோலை இன்றும் நம் பக்கலிலே அன்றோ கிடக்கிறது –
அந்த ஹாரம் தனக்கும் தாரகம் நாம் அல்லோமோ –
என்றாப் போலே தன்னுடைய ஆபரண சோபையையும் -யௌவனத்தையும் -ஆபன் நிவாரகத்வத்தையும்
காட்டி என்னை சம்சாரம் ஆகிற பிரளயத்தின் நின்றும் எடுத்து உஜ்ஜீவிப்பித்தது என்கிறார் –
—————
ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -அவதாரிகை –
கீழ்ப் பாட்டில் கைங்கர்ய அர்த்தியான தம்முடைய கைங்கர்ய விரோதிகளான
நிருபாதிக ஸ்வாமித்வ அபிமான மூலங்களை எல்லாம் நிராகரித்த படியை
அருளிச் செய்தார் –
இப் பாட்டில் ஐஸ்வர்யார்த்திகளாருடைய ஐஸ்வர்ய விரோதியான
பிஷூ தசையை கழிக்கும் படியை உதாஹரிக்கிறார்-
—————–
துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்
அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே —-6–
பதவுரை
துண்டம்–ஒரு துண்டாயிருக்கிற (கலா மாத்ரமான)
வெண் பிறையன்–வெளுத்த சந்திரனை (முடியிலே) உடையனான சிவனுடைய
துயர்-(பிச்சை யெடுத்துத் திரிந்த) பாதகத்தை
தீர்த்தவன்–போக்கினவனும்
அம் சிறைய வண்டு–அழகிய சிறகை யுடைய வண்டுகள்
வாழ்–வாழ்தற்கிடமான
பொழில் சூழ்–சோலைகள் சூழப் பெற்ற
அரங்கம் நகர்-திருவரங்கப் பெரு நகரிலே
மேய-பொருந்தி யிரா நின்ற
அப்பன்-ஸ்வாமியுமான ஸ்ரீரங்கநாதனுடைய
அண்டர்-அண்டத்துக்குட்பட்ட தேவாதி வர்க்கங்களையும்
அண்டம்–அண்டங்களையும்
பகிரண்டம்-அண்டாவரணங்களையும்
ஒரு மா நிலம்-ஒப்பற்ற மஹா ப்ருதிவியையும்
எழு மால் வரை-ஏழு குல பர்வதங்களையும்
முற்றும்-சொல்லிச் சொல்லாத மற்றெல்லாவற்றையும்
உண்ட-அமுது செய்த
கண்டம் கண்டீர்-திருக் கழுத்துக் கிடீர்
அடியேனை-தாஸனான என்னை
உய்யக் கொண்டது-உஜ்ஜீவிப்பித்தது
—————————————————-
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-வியாக்யானம் –
துண்டம் -இத்யாதி
கலா மாத்ரமாய் வெளுத்து இருந்துள்ள பிறையை -ஜடையிலே உடையனான –
ருத்ரன் தனக்கு பிதாவுமாய் லோக குருவுமாய் இருந்துள்ள ப்ரஹ்மா உடைய
தலையை அறுக்கையால் வந்த பாபத்தை போக்கினவன் –
சுமையராய் இருப்பார் சும்மாட்டுக்கு உள்ளே தாழை மடலை செருகுமா போலே
சாதகனாய் இருக்கச் செய்தே -ஸூக ப்ரதானாக அபிமானித்து இருக்குமாய்த்து –
ஆனாலும் ஆபத்து வந்தால் அவன் அல்லது புகல் இல்லையே –
சந்த்ரனுடைய ஷயத்தைப் போக்கினான் என்றுமாம்
அவனுடைய் துரிதத்தைப் போக்கினாப் போலே தம்முடைய துரிதத்தையும் போக்கும் என்று கருத்து-
அஞ்சிறைய வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்-
லோகத்தில் பிரதாநர் ஆனவர்கள் ப்ரஹ்ம ஹத்தியைப் பண்ணி அலைந்து கொடு கிடக்கப்
புக்கவாறே -தான் கடக்க நிற்க ஒண்ணாது என்று -இவர்களுடைய ரஷண அர்த்தமாக
கிட்ட வந்து கண் வளர்ந்து அருளுகிற உபகாரகன் –
அழகிய சிறகை உடைத்தான வண்டுகள் வாழா நின்ற சோலை சூழ்ந்த பெரிய கோயிலிலே
கண் வளர்ந்து அருளுகிற பிதாவானவன்
வண்டு வாழ் பொழில் –
வண்டுகள் அவன் பக்கல் செல்லாது –
திருச் சோலையின் போக்யதையிலே இள மணல் பாய்ந்து கால் வாங்க மாட்டாதே நிற்கும் –
அவ் வண்டுகளைப் போலே தம்மை அனுபவித்து விடாய் கெடுத்தான் -என்கிறார் –
அண்ட ரண்டம் இத்யாதி –
அண்டாந்தர வர்த்திகள் உடைய அண்டம் –
பகிரண்டம் -புற வண்டம்
அத்விதீயமான மஹா ப்ருதிவி
பூமிக்கு ஆணி யடித்தால் போலே இருக்கிற ஏழு வகைப்பட்ட குல கிரிகள்
ஓன்று ஒழியாமே ஆடிக் காற்றில் பூளை போலே பறந்து திரு வயிற்றிலே புகும்படி
யுண்ட கழுத்து கிடீர்
இவற்றைத் தனித் தனியே சொல்லுவான் என் என்னில்
தனியே சொல்லுகை போக்யமாய் இருக்கையாலே
பெரிய பெருமாள் திருக் கழுத்தைக் கண்டால் பிரளய ஆபத்தில் ஜகத்தை எடுத்துத்
திரு வயிற்றிலே வைத்தமை தோற்றா நின்றது ஆய்த்து –
அடியேனை உய்யக் கொண்டதே
முன்பு பெற்ற கைங்கர்யத்துக்கு விச்சேதம் பிறவாதபடி நோக்கிற்று
என்னை சம்சாரத்தில் ஒரு நாளும் அகப்படாதபடி பண்ணிற்று –
இப் பாட்டால்
ஆபத் ஸகனான சர்வேஸ்வரன் படியும் இங்கே உண்டு என்கிறார் –
———————————————————
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–வியாக்யானம் –
துண்ட வெண் பிறையன்றுயர் தீர்த்தவன் –
கீழ்ப் பாட்டிலே என்னுடைய அஜ்ஞானத்தாலே -என்னாலும் பிறராலும் பரிஹரிக்க
ஒண்ணாதபடி -அநாதி காலார்ஜிதமாய் -அவசியம் அனுபோக்ய தவ்யமாய் -பிடரியைப்
பிடித்து கொடு நிற்கிற துஷ் கர்மங்களை பெரிய பிராட்டியார் புருஷகாரமாக –
தத் ஷணா தேவ நச்யதி -என்கிறபடியே பெரிய பெருமாள் நசிப்பித்தார் என்று இறே சொல்லிற்று –
இத்தைக் கேட்டவர்கள் -பாரமாய பழ வினை யடைய அவள் புருஷகாரமாக போக்கினார்
என்னும் -இடம் ஆச்சர்யமாய் இருந்ததீ -இது உபபன்னம் என்று நாங்கள் அறியும் படி என் என்ன –
என்னைப் போலே தன்னுடைய அஜ்ஞ்ஞானத்தாலே ஈஸ்வர அபிமானியான ருத்ரன் ஆனவன்
லோக குருவுமாய் தனக்குப் பிதாவுமான ப்ரஹ்மா வினுடைய சிரஸை நகத்தாலே அறுத்து
இப்படி தன்னாலும் பிறராலும் பரிஹரிக்க ஒண்ணாத படியான துயரை சம்பாதித்து
அது போகைக்காக ஷீராப்தி நாதன் பாடேற வர -அவ்விடத்தே தானும் பெரிய ப்ராட்டியாருமாய் தோன்றி
ஸ்ரீமான் மயா பிஷாம் ப்ரயாசித -என்கிறபடியே அபேஷ அநு குணமாக அவள் புருஷகாரமாக
அவனுடைய பிரமஹத்தையால் வந்த துயரைத் தீர்த்தாப் போலே -ஸ கலு ப்ரஹ்மஹா பவேத்
என்கிற என்னுடைய ப்ரஹ்மஹத்தையையும் போக்கினான் -என்கிறார்
இந்தச் சேவகன் -மஹா பாதகாதி பாபங்களைப் பண்ணி மஹா ரௌரவாதி நரகங்களிலே
யம படர் கையிளைத்து விடுமளவும் அசித் கல்பனாய் கிடந்தது அனுபவித்து -அவர்கள் விட்டடித்தவாறே
முற்பட -ஸ்தாவர க்ரிமயோப் ஜாச்ச பஷிணச்ச ஸரீஸ்ருபா -என்கிறபடியே முற்பட
ஸ்தாவராதி யோநிகளிலே பிறந்து -மாநுஷ்யம் ப்ராப்ய லோகேஸ்மின் ந மூகோ பதிரோபி வா –
நா பக்ராமதி சம்சாராத் ஸ கலு ப்ரஹ் மஹா பவேத் -என்கிறபடியே மநுஷ்ய ஜன்மத்திலே
பிறக்கவும் பெற்று -ஸ்ரோத்ராதி கரணங்களும் விதேயமாகப் பெற்று வைத்து -இவற்றைக் கொண்டு
ஈஸ்வரனைப் பற்றி திரு நாம சங்கீர்த்தன முகத்தாலே இந்த சம்சாரத்தை கடவானாகில்
அவனை ப்ரஹ்ம -என்றது இறே -புழு நெருடுகிறவனுக்கும் -ப்ராஹ்மண சரீரத்தை
வதிக்கிறவனுக்கும் ஹிம்சை ஒத்து இருக்கச் செய்தே ப்ரஹ்மண வதம் ப்ரஹ்மஹத்யை
என்கிறது –
அவனுடைய ஜன்ம வ்ருத்த ஜ்ஞானங்களால் வந்த க்ரௌரவம் பற்ற விறே –
அப்படியே யஸ்யாத்மா சரீரம் -என்கிறபடியே பகவத் சரீர பூதமான ஆத்மாவை அபஹரித்து
நாராயணத்வத்தை ஒருவாய்ப் போக்குகிறவனை ப்ரஹ்ம என்னத் தட்டில்லை இறே-
துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் –
சலம் கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன் வாச நீர் கொடுத்தவன் -என்கிறபடியே
தீர்த்த சேவையாலும் -தன் தபசாலும் -தன் சக்தி மத்தையாலும் போக்க ஒண்ணாத வலிய துயரை
பிராட்டி புருஷாகாரமாக தன் மார்பில் வாச நீரால் போக்கினது -தம்முடைய துயரை போக்கினதுக்கு
நிதர்சநமாய் இருக்கையாலே அவனை உதாஹரணம் ஆக்குகிறார் –
தாழை மடலை சூடி
வருவாரைப் போலே ஒரு கலா மாத்ரமான வெளுத்த சந்த்ரனை சடையிலே வுடையனான
ருத்ரன் உடைய பாபத்தைப் போக்கினவன் -கலா மாத்ரமான சந்த்ரனை ஜடையிலே சூடி
வந்தான் ஆகில் இப்படி ஆபன்னனாய் வருகிற விடத்திலும் அலங்காரத்தோடே த்ருப்தனாய் வந்தான் என்கை –
வெண்மையாலே சிவந்த ஜடைக்கு பரபாகமாய் இருக்கிறபடி –
சுமையரராய் இருப்பவர் சும்மாட்டுக்குள் தாழை மடல் சொருகுமா போலே சாதகனாய் இருக்கச் செய்தே
ஸூக பிரதானாய் அபிமாநிதது இருக்குமாய்த்து -ஆனாலும் ஆபத்து வந்தால் அவன் அல்லது புகல்
இல்லை யிறே -இத்தால் ஒரு தேவதையை ஆபரணமாக உடையவன் ஆகையாலே வந்த மதிப்பும்
போக ப்ரதானன் என்னும் இடமும் முமுஷு வல்லன் என்னும் இடமும் சொல்லுகிறது —
வெண் பிறையன் துயர் –
தனக்கு தக்க வாதம் இறே
லோகத்துக்கு சங்கரனாய் இருக்கிறவனுக்கு வந்த துக்கம் இறே
இவன் தன்னுடைய கர்வத்தாலே ப்ரஹ்ம ஸிர க்ருந்தநம் பண்ணின வனந்தரம்
இவன் புத்ரத்வம் குலைந்தாலும் தான் பிதாவான படியாலே இவனை அழியாதே செருக்கு
வாட்டுகைக்காக –
கபாலீ த்வம் பவிஷ்யசி என்று ப்ரஹ்மா சபிக்க -இவன் கையிலே -முடை யடர்த்த
சிரம் ஏந்தி மூவுலகும் பலி திரிவோன் -என்கிறபடியே -கபாலத்தைக் கொண்டு பலி புக்கான
ஜெயந்தனைப் போலே த்ரீன் லோகான் சம்பரிக்ரம்ய -பண்ணிக் கொண்டு திருப் பாற் கடலிலே
சென்ற அளவிலே -இடர் கெடுத்த திருவாளன் -என்கிறபடியே -பிராட்டியும் தானுமாய் வந்து
துயரைத் தீர்த்தான் இறே –
ஸ பித்ரா ச பரித்யக்த ஸ ஸூரைச்ச ஸ மஹர் ஷிபி
த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத
ஸ -பெருமாள் திரு உள்ளத்திலே தீரக் கழிய அபராதத்தைப் பண்ண -அவர் குபிதராய்
ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட -அது பின் தொடர்ந்து கொடு திரிய -ஆவாரார் துணை -என்கிறபடியே
ரஷக அபேஷை உடைய காகமானது
பித்ரா ச பரித்யக்த-பெற்றவர்களுக்கு பரமன்றோ ரஷிக்கை-என்று பார்த்து இந்த்ரன் பாடே சென்றான் –
இந்த்ரோ மகேந்த்ரஸ் ஸூர நாயகோ வா த்ராதும் ந சக்தா யுதி ராமவத்யம் -என்கிறபடியே
எட்டுக் கதிரும் விட்டு எரிகிற பெரிய மதிப்பும் தானும் ஆனாலும் ராவத்யனை ரஷிக்கை
அரிதாகையாலே பூதாநாம் யோவ்யய பிதா -என்கிறபடியே -நிருபாதிகன்- தாய்க்கும் தகப்பனுக்கும் ஆகாதே
சர்வ பூத ஸூஹ்ருதான அவர் அளவிலே பிரதிகூல்யம் பண்ணி அவர்க்கு அவத்யன் ஆனவன் அன்றோ –
இவன் இங்கு புகுருகை யாவது என் -சேந்த்ராய -எண்ணிலோ என்று பயப்பட்டு
புத்ர மித்ர களத்ரங்களோடே எல்லோரும் காண நாற் சந்தியிலே குட நீர் வழித்து விட்டான் –
ஸூ ரைச்ச-
மாதா பிதாக்கள் கை விட்ட வளவிலும் இவர்களுக்குஉபாத்யர்த்தமாக
பந்து வர்க்கமான தேவதைகள் கொடு போய் சீராட்டக் கண்டு போருமே
அந்த வாசனையாலே அவர்கள் பாடே சென்றான் -கஸ்ய பிப்யதி தேவாச்ச ஜாத ரோஷச்ய சம்யுகே –
என்கிறபடியே அபராதம் அதுவாகையாலும் -பெருமாளுக்கு அஞ்சுகையாலும் -மாதா பிதாக்கள்
நேராக கை விட்டார்கள் என்று அறிகையாலும் அவர்களும் தள்ளிக் கதவடைத்தார்கள்
ச மஹர்ஷிபி –
இந்த்ரன் கை விட்ட த்ரிசங்குவையும் அகப்படத் தங்கள் தபஸை அழிய
மாறி ரஷித்து -ஆன்ரு சம்ச்ய பிரதாநராய் இருக்கும் ருஷிகள் பாடே சென்றான் -அவர்களும்
சத்ய ஹிம்சையிலே பண்ணுவதோர் ஆன்ரு சம்சயம் உண்டோ என்று கை விட்டார்கள்-
த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய-
தமப்பனுக்கு செல்லும் தேசம் ஆகையாலே ஆரேனும் ஒருத்தர் ஒரு காலாகிலும் புத்தி பேதம் பிறந்து
பரிக்ரஹிக்கக் கூடுமோ என்று த்ரைலோக்யத்திலும் தச்சன் கட்டின வாசல்கள் தோறும்
ஒருகால் புக்கப் போலே ஒன்பதின் கால் புகுந்து திரிந்தான் -அங்கு ரஷகர் ஆவாரைப் பெற்றிலன் –
தமேவ சரணம் கத-
கோபித்தாரே யாகிலும் நாராயணத்வ ப்ரயுக்தமான குடல் தொடக்கு உண்டாகையாலே
அவர்கள் முகத்தில் காட்டில் அம்பு விட்டவர் முகமே குளிர்ந்து இருக்கையாலும்
சக்ருதேவ பிரபன்னாய -ஏதத் வ்ரதம் மம -என்று அருளிச் செய்து வைக்கையாலும்
அந்த சீறின பெருமாளே அமையும் என்று அவரையே தனக்கு உபாயமாகப் பற்றினான் –
சர்வ பூதேப்ய –
என்கிறவிடத்தில் -சர்வ சப்தம் அசங்குசித உக்தி யாகையாலே
பிறரால் வரும் பயத்தையும் -தன்னால் வரும் பயத்தையும் ரஷகனான என்னால் வரும்
பயத்தையும் போக்கி ரஷிக்க கடவேன் என்றபடி-இப்படி இக்காகம் பட்டது பட்டு
த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய -பண்ணித் திரிந்தான் இறே-
லோகத்துக்காக சம்ஹர்த்தாவாய் பெரிய மதிப்போடே கும்பீடு கொண்டு திரிந்து
ததாதர்சித பந்தாவாய்க் கொண்டு தன் புத்யா ஒருவனை சம்ஹரிக்கப் புக்குப் பட்டபாடு இறே இது-
தத்ர நாராயணஸ ஸ்ரீ மான் மயா பிஷாம் ப்ரயாசித
விஷ்ணு பிரசாதாத் ஸூ ஸ்ரோணி கபாலம் தத் சஹஸ்ரதா
ஸ்புடிதம் பஹூதா யாதம் ஸ்வப்ந லப்த தனம் யதா –என்று துர்மாநியான தானே
தன் அபிமத விஷயத்தைப் பார்த்து சொல்லும்படி யிறே அவனுடைய துயரைப் போக்கின படி
தத்ர –
அந்த பரம பதத்திலே -நாராயண -அபராதம் பாராமல் ரஷிக்கைக்கு அடியான பந்த
விசேஷத்தைச் சொல்லுகிறது –
ஸ்ரீ மான் –
அந்த பந்த விசேஷம் கிடக்கச் செய்தேயும் – ஷிபாமி -என்றால் பொறுப்பிக்கும் அவள் –
மயா பிஷாம் ப்ரயாசித –
நாட்டை யடைய கும்பீடு கொண்டு அபேஷித பல ப்ரதனை நான் இரந்தேன் –
விஷ்ணு பிரசாதாத் –
அக வாயில் இருந்து என் அலமாப்பை அடைய அனுசந்திதுக் கொண்டு போருகிறவனுடைய பிரசாதம் அடியாக
ஸூஸ்ரோணி-
உன்னுடைய சௌபாக்ய விசேஷம் இறே –
தத் கபாலம் –
ஒரு காலும் நிரம்பாதே விடாதே கிடந்தது –
சஹஸ்ரதா –
காண ஒண்ணாத படி யாய்த்து காண் -விரோதி போக்கும் இடத்தில்
புகுந்து போய்த்து என்று தெரியாதபடி வாசனையோடே போக்கும் இடத்துக்கு நிதர்சனம் இறே-
துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் -சந்த்ரனுடைய ஷயத்தைப் போக்கினான் என்றுமாம் –
அவனுடைய துயரத்தைப் போக்கினாப் போலே என்னுடைய துரிதத்தையும் போக்கும் என்று கருத்து-
அஞ்சிறைய -இத்யாதி -லோகத்திலே பிரதாநர் ஆனவர்கள் ப்ரஹ்மஹத்யை பண்ணி அலைந்து
கொடு கிடக்கப் புக்கவாறே -நாம் கிடக்க ஒண்ணாது -என்று அவர்களுடைய ரஷண அர்த்தமாக
கிட்ட வந்து கண் வளர்ந்து அருளுகிற உபகாரகன் -அழகிய சிறகை உடைத்தான வண்டு வாழா
நின்றுள்ள சோலை சூழ்ந்த பெரிய கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற பிதாவானவன் –
அந்த ருத்ரன் -அலங்கல் மார்பில் வாச நீர் பெற்றுக் களித்தாப் போலே யாய்த்து இந்த வண்டுகளும்
அந்த சோலையிலே மது பானம் பண்ணினத்தால் பிறந்த ஹர்ஷம் சிறகிலே தொடை
கொள்ளலாம் படி களித்து வாழுகிறபடி-
வண்டு வாழ் பொழில் –
வண்டுகள் அவன் பக்கல் செல்லாது –
திருச் சோலையின் போக்யதையிலே இள மணல் பாய்ந்து கால் வாங்க மாட்டாதே நிற்கும் –
அவ் வண்டுகளைப் போலே தம்மை அனுபவித்து விடாய் கெடுத்தான் -என்கிறார் –
அங்கன் அன்றிக்கே -உபாப்யாமேவ பஷாப்யா மாகாஸே பஷிணாம் கதி -ததைவ
ஜ்ஞான கர்மப்யாம் ப்ராப்யதே புருஷோத்தம -என்கிறபடியே –
வண்டுகளோ வம்மின் -என்கிற முமுஷுக்களான சாத்விகர் சமயக் ஜ்ஞான
சத் கர்மங்கள் ஆகிற மோஷ பரிகரங்களைக் கொண்டு வாழுகிற படியை சொல்லிற்று ஆகவுமாம்-
பெரிய பெருமாளுக்கு ஆபரணமாய் ஊருக்கும் ஆபரணமாய் இருக்கும் சோலை
சோலைக்கு ஆபரணமாய் இருக்கும் வண்டுகள் –
வண்டுகளுக்கு ஆபரணமாய் இருக்கும் அழகிய சிறகு -என்கை
ருத்ரனானவன் வந்து அபேஷிக்க அவன் ஒருவனுக்கு உதவின படியை சொல்லிற்று -கீழ்
அபேஷா நிரபேஷமாக அநேக ஜனத்தினுடைய ஆபத்தைப் போக்கிற்று அன்றோ திருக் கழுத்து என்கிறார் மேல் –
அண்ட ரண்டம் –
அண்டாந்தர வர்த்திகளான சேதனரை உடைத்தான இந்த அண்டம்
பகிர் அண்டத்து -பஹி உண்டான அண்டங்கள்
ஈத்ரு சங்களான பறம்பில் உண்டான அண்டங்கள்
ஒரு மாநிலம் -ஈத்ரு சமான அண்டங்களை தரித்து கொண்டு இருக்கையாலே
அத்விதீயமான மஹா ப்ருதிவி
எழு மால் வரை -இவ் வண்டங்களையும் பூமியும் பாதாளத்தில் விழாதபடி சங்கு ஸ்தாபனம்
பண்ணினாப் போலே இந்த பூமியை ஊடுவிக்கிற குல பர்வதங்கள் ஏழும்-
முற்றும் உண்ட கண்டம் கண்டீர் –
இவற்றைத் தனித் தனியே சொல்லுவான் என் என்னில்
தனித் தனியே சொல்லுகை தான் போக்யமாய் இருக்கையாலே -பெரிய பெருமாள்
திருக் கழுத்தைக் கண்டவாறே ஜகத்தை எடுத்துத் திரு வயிற்றிலே வைத்தமை
தோன்றா நின்றதாய்த்து
உண்ட கண்டம் –
விடு காது தோடிட்டு வளர்ந்தது என்று தெரியுமா போலே
முற்றும் உண்ட கண்டம் –
பஹிர் அண்டாந்த வர்த்தி சேதனரும் பாதாளாதிகளும்
உண்ட கண்டம் –
சேஷ பூதனுக்கு கைங்கர்யம் தாரகமாய் இருக்குமா போலே
இவற்றின் உடைய ரஷணம் தனக்கு தாரகமாய் இருக்கிறபடி
அத்தா சராசர க்ரஹணாத் –
யஸ்ய ப்ரஹ்ம ச ஷத்ரஞ்ச உபே பவத ஓதந -என்னக் கடவது இறே
அடியேனை உய்யக் கொண்ட — பிறப்பித்து -சம்சார ஆர்ணவத்தின் நின்றும் எடுத்து அக்கரை ஏற்றி
சந்த மேகம் என்னும்படி பண்ணிற்று இப்படிப் பட்ட திருக் கழுத்து அன்றோ
இப் பாட்டில்
ஆபத் சகனான சர்வேஸ்வரன் படியும் இங்கே உண்டு என்கிறார்
———————————————
ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம் –
துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் –
ஈஸ்வரன் என்று பேரைச் சுமந்த தனக்கும் பூரணத்வம் இல்லை என்கைக்கு ஜ்ஞாபகம் போலே
சகல மாத்ரமாய்க் கொண்டு பிரகாசிக்கிற சந்திர கலையை தரிக்கிற ருத்ரன் ப்ரஹ்மாவினுடைய புத்ரனாய் வைத்து –
பிதாவின் திறத்திலே அபராதம் பண்ணி -அத்தாலே மஹா பாதகா க்ராந்தனாய் –
இப் பாதகத்தை தீர்க்க வல்லார் ஆர் -என்று கரகலித கபாலனாய்க்
கொண்டு திரிந்து -ஓர் அளவிலே கெடு மரக்கலம் கரை சேர்ந்தாப் போலே காருணிகனான
சர்வேஸ்வரனை வந்து கண்டு -என்னெந்தாய் சாபம் தீர் -என்ன-இவனுடைய சாபத்தைத் தீர்க்க -வல்லவன் –
இத்தால் ஈஸ்வரன் என்று பேருடைய ருத்ரன் கர்ம வஸ்யன் என்னும் இடமும்
தன்னைத் தான் ரஷித்துக் கொள்ள மாட்டாத இவன் வேறு ஒருத்தருக்கு நிரபேஷை
ரஷகனாக மாட்டான் என்னும் இடமும் சர்வேஸ்வரனே சர்வ அநிஷ்ட நிவர்த்தகன் என்னும்
இடமும் சொல்லிற்று ஆயிற்று-
அஞ்சிறைய வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன் –
ஆர்த்தி வுடையார் அபேஷித்தால் அவர்களுக்கு தூத க்ருத்யம் பண்ணுகைக்கும்
மாசில் மலரடிக் கீழ் அவர்களை சேர்க்கைக்கும் ஹேதுவான கதிக்கு சாதனங்களாய் –
அபி ரூபங்களான சிறகுகளை உடைத்தான வண்டுகள்
அபிமத போகத்தோடே வாழுகிற திவ்ய உத்யானங்களாலே சூழப்பட்ட ஸ்ரீ ரெங்க நகரத்திலே
நித்ய வாஸம் பண்ணுகிற சேவை லோக பிதாவானவன் –
இத்தால்-காரண பூதனாய் -கரண களேபரங்களை கொடுத்து உபகரித்தவன் கண்ணுக்கு
இலக்காய் வந்து கண் வளர்ந்து -கரணங்கள் பட்டி புகுராதபடி காக்கிற உபகார
அதிசயத்தை உதாஹரிக்கிறது -ஆகிறது –
ந ராஜ் ஜாதாநி தத்வான் -இத்யாதிகளின் அர்த்தமும்-இங்கே அனுசந்தேயம்
காரண அவஸ்தையில் எல்லாக் கார்யங்களையும் தன் பக்கலிலே உப சம்ஹரித்து
பின்பு ஸ்ருஷ்டிக்கும் படிக்கு உதாஹரணமாக -வெற்றிப் போர்க் கடலைரையன் விழுங்காமல்
தான் விழுங்கி உய்யக் கொண்ட உபகாரத்தைக் காட்டி -நெற்றி மேல் கண்ணானும் நான் முகனும் –
முதலாக -எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் அல்லாதார் தாமுளரே -என்னும்
அர்த்தத்தை பேசிக் கொண்டு தம்மை இப்போது சம்சார ஆர்ணவம் விழுங்காதபடி
உய்யக் கொண்ட படியை உபாலாளிக்கிறார்-
அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே-
அண்டாந்த வர்த்திகளான தேவாதி வர்க்கங்களையும் -அண்டங்கள் தன்னையும் –
அண்ட ஆவரணங்களையும் -அண்டங்களுக்கு உள்ளே பஞ்ச சத கோடி விஸ்தீரணையான
மஹா ப்ருதிவியாலும் குல பர்வதங்களாலும் உப லஷிதங்களான சர்வ கார்யங்களையும்
எல்லாம் திரு வயிற்றிலே வைத்து ரஷிக்கைக்காக விழுங்கின திருக் கழுத்து கண்டீர் –
ஸ்வரூபத்தை -உணர்த்தி என்னை ஸ்வ அனுபவத்தில் உஜ்ஜீவிப்பித்தது –
அண்டாதிகளைப் பற்ற சிறியலான குல பர்வதங்களை பிறியப் பேசுகையாலே
அவ்வளவு விழுங்குகையும் ஆச்சர்யம் என்று தோன்றுகிறது
———————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply