ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளைஅருளிய-அவதாரிகை –
திரு வதரத்திலே அகப்பட்ட படி சொல்லுகிறார் –
நீஞ்சாப் புக்குத் தெப்பத்தை இழந்தேன் என்னுமா போலே
————
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-அவதாரிகை –
திரு வதரத்திலே அகப்பட்ட படி சொல்லுகிறார் –
நீஞ்சாப் புக்குத் தெப்பத்தை இழந்தேன் என்னுமா போலே-
கீழ்ப் பாட்டில் -முற்றும் உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய்யக் கொண்டது -என்று திருக் கழுத்தானது
தன்னுடைய ஆபத் சகத்வாதிகளைக் காட்டி தம்மை எழுதிக் கொண்ட படியை இறே சொல்லிற்று –
இதுக்கு மேலான -திருப் பவள செவ்வாயானது -உலகமுண்ட பெரு வாயன் -என்கிறபடியே
ஆபத் சகத்வத்திலும் முற்பாடர் நாம் அல்லோமோ -ஆஸ்ரித ரஷணத்துக்கு உறுப்பாக
சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம -என்றும் –
மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந -என்றும் –
சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி -என்றாப் போலே -சொல்லுகிற மெய்ம்மைப் பெரு வார்த்தைக்கு
எல்லாம் ப்ரதான கரணம் நாம் அல்லோமோ –
ஓர் ஆபரணத்தால் இடு சிவப்பன்றிக்கே ஸ்வாபாவிக சௌந்தர்யம் உடையோமும் நாம் அல்லோமோ –
கருப்பூரம் நாறுமோ -கமலப் பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ
என்று தேசிகரைக் கேட்கும்படியான சௌகந்தய சாரச்யம் உள்ளிட்ட போக்யதையை
உடையோமும் நாம் அல்லோமோ -என்றாப் போலே தம்முடைய ஏற்றத்தைக் காட்டி
தம்முடைய திரு உள்ளத்தை அந்தக் கழுத்தின் நின்றும் தன் பக்கலிலே வர இசித்து துவக்க
செவ்வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த அவ்வாய் யன்றி யான் அறியேன் -என்கிறபடியே
அந்த திருப் பவளச் செவ்வாயிலே தாம் அபஹ்ருதராய் அகப்பட்ட படியைச் சொல்லுகிறார்
ஆனால் -செய்ய வாயையோ என்னைச் சிந்தை கவர்ந்தது -என்ன அமைந்து இருக்க -கீழில்
விசேஷணங்களால் செய்கிறது என் என்பது என்னில் –
கீழ் -அஞ்சாம் பாட்டில் –
பாரமாயபழ வினை பற்று அறுத்து என்னைத் தன் வாரமாக்கி வைத்தான் -என்று அநேக ஜன்மார்ஜிதமான
பாபராசியை அடைய இத்தலையில் ஒரு ஹேது இன்றிக்கே இருக்கச் செய்தே -என்னுடைய
நிகர்ஷம் பாராதே ஸவாசனமாகப் போக்கினான் என்று சொல்லி -அது கூடுமோ என்கிற
அபேஷையிலே -ஈஸ்வர அபிமாநியாய் துர்மாநியாய் ருத்ரனுடைய துயரை அவன் தண்மை
பாராதே போக்கினாப் போலே -என்னுடைய நிகர்ஷம் பாராதே பாபங்களையும் போக்கினான்
என்று ருத்ரனை த்ருஷ்டாந்தமாக சொன்னாராய் இறே கீழ்ப்பாட்டில் நின்றது –
இத்தைக் கேட்டவர்கள் இது விஷம உதாஹரணம் காணும் -அந்த ருத்ரன் -ஆகிறான்
ததாதர்சித பந்தாநௌ ஸ்ருஷ்டி சம்ஹார கார கௌ -என்கிறபடியே சம்ஹார தொழிலிலே
புருஷோத்தமனாலே நியுக்தன் ஆகையாலே அதிகாரி புருஷனுமாய் -அவனுக்கு
ப்ரஹ்ம சிரஸ் க்ருந்த நத்தாலே வந்த ஆபத்து தானும் ப்ராமாதிகமாக ஒருகால்
பிறந்தது ஆகையாலே -தன் அலங்கல் மார்பில் வாசநீர் மாத்ரத்தாலே போக்கலாம் –
நீராகிறீர் -ச்ருதிஸ் ஸ்மருதிர் ம்மை வாஜ்ஞா -என்கிறபடியே பகவத ஆஜ்ஞா ரூபமான
வேத வைதிக மர்யாதையை அதிக்ரமித்தவருமாய் அதுக்கு மேலே அக்ருத்ய கரண
க்ருத்ய அகரண ரூபமான பாபங்களை அநாதி காலம் கூடு பூரித்தவருமாய் அன்றோ -இருப்பது
ஆன பின்பு உம்முடைய பக்கல் ஒரு கைம்முதல் இன்றிக்கே இருக்க உம்முடைய பாபங்களை அப்படிப் போக்க போமோ
அது கிடக்க -அந்த ருத்ரன் தானே தேவர்களுக்கு மேலாய் இருக்கையாலே ஆனை மேல்
இருந்தார் ஆனை மேல் இருந்தாருக்கு சுண்ணாம்பு இடுமோபாதி அவன் கார்யம் செய்யக் கூடும்
மனுஷ்யர்களுக்கும் கீழாய் இருக்கிற உம்முடைய பாபங்களை போக்கக் கூடுமோ -அது கிடக்க –
ப்ரஹ்மண புத்ராய ஜ்யேஷ்டாயா -என்கிறபடியே ப்ரஹ்மாவுக்கு ஜ்யேஷ்ட புத்ரனான படியாலே
தனக்கு பௌத்ரன் என்று இட்டு அவன் கார்யம் செய்யலாம் -அப்படி இருப்பதொரு பந்த விசேஷம்
உமக்கு இல்லையே –
அதுவும் கிடக்க அந்த ருத்ரன் தான் மூ வுலகும் பலி -திரிவோன்
என்கிறபடியே திருப்பாற் கடலிலே செல்ல பின்பன்றோ அவன் துயரைப் போக்கிற்று -நீரும் அப்படிப்
போனீரோ -என்ன அதற்க்கு அடைவே உத்தரமாய் இருக்கிறது
——————
ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -அவதாரிகை-
மேல் நாலு பாட்டாலே ப்ரார்த்த நீயமான கைங்கர்யத்துக்கு ப்ரசாதகமான அநுபவம்
தம்மை இப்போது பரவசம் ஆக்கின படியைப் பேசுகிறார் –
அதில் -கையினார் -என்கிற பாட்டில் –
ஆழ்வார்களோடு பொருந்தின திருக் கையை அவலம்பநமாகக் கொண்டு
திரு முடி யளவும் சென்று மீண்ட சிந்தையை தூ முறுவல் தொண்டை வாய்ப் பிரானுடைய
கோலம் திரள் பவளக் கொளுந்துண்டம் கொல் -என்னும்படியான திருப் பவளத்தில் அழகு
தன் வசம் ஆக்கிற்று என்கிறார்
———-
கையினார் சுரி சங்கனலாழியர் நீள் வரை போல்
மெய்யினார் துளப விரையார் கமழ் நீண் முடி யெம்
ஐயனார் அணி யரங்கனார் அரவின் அணை மிசை மேயனார்
செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே ——-7–
பதவுரை
கையின்–திருக் கைகளில்
ஆர்-பொருந்தி யிருக்கிற
சுரி சங்கு-சுரியை யுடைய திருச் சங்கையும்
அனல் ஆழியர்-தீ வீசுகின்ற திருவாழியையும் உடையராய்,
நீள் வரை போல்-பெரியதொரு மலை போன்ற
மெய்யனார்-திருமேனியை யுடையராய்
துளபம் விரை ஆர்-திருத் துழாயின் பரிமளம் மிகப்பெற்று (அதனால்)
கமழ்-பரிமளியா நின்றுள்ள
நீள் முடி–உயர்ந்த திரு வபிஷேகத்தை யுடையராய்
எம் ஐயனார்–எமக்கு ஸ்வாமியாய்
அணி அரங்கனார்-அழகு பொருந்திய திருவரங்கத்திற் கண் வளர்ந்தருள்பவராய்
அரவு இன் அணை மிசை மேய–திருவனந்தாழ்வானாகிற இனிய திருப் பள்ளியின் மீது பொருந்திய
மாயனார்–ஆச்சரியச் செய்கைகளை யுடையரான ஸ்ரீ ரங்கநாதருடைய
செய்ய வாய்–சிவந்த திருப் பவளமானது
என்னை-என்னுடைய
சிந்தை-நெஞ்சை
கவர்ந்தது-கொள்ளை கொண்டது;
ஐயோ–(ஆநந்தாதிசயக் குறிப்பு.)
——————————————————————-
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளைஅருளிய-வியாக்யானம் –
கையினார் -இத்யாதி வெறும் புறத்திலே -படவடிக்க வல்ல -ஆலத்தி வழிக்க வல்ல -கையிலே
அழகு நிறைந்து -சுரியை வுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் -ப்ரதி பஷத்தின் மேலே அனலை
வுமிழா நின்றுள்ள திரு வாழி -இவற்றை வுடையராய் இருக்கை –
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்துக்கு சுரி ஸ்வபாவமானாப் போலே திரு வாழி யாழ்வானுக்கும் ப்ரதி
பஷத்தின் மேலே அனல் உமிழுகை ஸ்வபாவம் –
திருக் கோட்டியூரிலே அனந்தாழ்வான் பட்டரை
ஸ்ரீ வைகுண்ட நாதன் த்வி புஜனோ சதுர் புஜனோ -என்ன -இருபடிகளும் அடுக்கும் என்ன
இரண்டிலும் அழகிது ஏது என்ன –
த்வி புஜனாகில் பெரிய பெருமாளைப் போலே இருக்கிறது -சதுர் புஜனாகில் நம் பெருமாளைப்
போலே இருக்கிறது -என்றார்
நீள் வரை –
மலையை கடலை ஒப்பாகச் சொல்லும் இத்தனை இறே
நீட்சி போக்யதா ப்ரகர்ஷம் -பச்சை மா மலை போல் மேனி -அதுக்கு மேலே ஒப்பனை அழகு –
துளப விரையார் கமழ் நீண் முடி –
பரிமளம் மிக்கு இருந்துள்ள திருத் துழாய் மாலையாலே
அலங்க்ருதமாய் ஆதி ராஜ்ய ஸூசகமான திரு அபிஷேகத்தை உடையருமாய்
எம்மையனார் –
உறவு தோற்றுகை -எனக்கு ஜனகரானவர்
அணி அரங்கனார் –
ப்ராப்த விஷயமாய் இருக்கக் கடக்க விராதே சம்சாரத்துக்கு ஆபரணமான
கோயிலிலே வந்து அண்ணியருமாய் இருக்கிற படி-
அரவின் அணை மிசை –
ரத்னங்களை எல்லாம் தங்கத்திலே புதைத்துக் காட்டுமா போலே
தன் அழகு தெரிய திருவநந்தாழ்வான் மேல் சாய்ந்து காட்டுகிற படி
மேய மாயனார் –
மின் மினி பறக்கிற படி –
ஸ மயா போதித ஸ்ரீ மான் -எல்லாருக்கும் ஒன்றிலே சாய்ந்தவாறே பொல்லாங்குகள் தெரியும்
இங்கு பழைய வழகுகளும் நிறம் பெறும்
செய்ய வாய் –
ஸ்திரீகளுடைய பொய்ச் சிரிப்பிலே துவக்குண்டார்க்கு இச் சிரிப்பு
கண்டால் பொறுக்க ஒண்ணுமோ
ஐயோ –
திருவதரமும் -சிவப்பும் அநுபவிக்க அரிதாய் -ஐயோ –என்கிறார்
என்னை –
பண்டே நெஞ்சு பரி கொடுத்த என்னை அந்யாயம் செய்வதே -என்று கூப்பிடுகிறார்
என்னை –
கல்லை நீராக்கி -நீரையும் தானே கொண்டது
இப் பாட்டில் ஸ்ரீ வைகுண்ட நாதன் படியும் இங்கே காணலாம் என்கிறார் –
——————————————————————–
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-வியாக்யானம் –
கையினார் சுரி சங்கு அனல் ஆழியர் –
கரி முனிந்த கைத்தலம் என்றும் -பரிகோபமா -என்றும் வெறும் புறத்திலே விரோதிகளை
நிரசிக்க நிரசிக்க வற்றாய் இருக்கச் செய்தே -அசிந்த்ய சக்திகளான திவ்ய ஆயுதங்களை
தரித்துக் கொண்டு -எப்போதும் கை கழலா நேமியானாய் இருக்கிறது -நம் மேல் வினை கடிகைக்கு அன்றோ -என்கிறார்
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்துக்கு சுரி ஸ்வபாவமானாப் போலே திரு வாழி யாழ்வானுக்கும் ப்ரதி
பஷத்தின் மேலே அனல் உமிழுகை ஸ்வபாவம் -இறே
வெறும் புறத்திலே -படவடிக்க வல்ல -ஆலத்தி வழிக்க வல்ல -கையிலே
அழகு நிறைந்து -சுரியை வுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் -ப்ரதி பஷத்தின் மேலே அனலை
வுமிழா நின்றுள்ள திரு வாழி -இவற்றை வுடையராய் இருக்கை –
ஸ கோஷோ தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயா நிவ்ய தாரயத் -என்றும் –
தீய அசுரர் நடலைப்பட -முழங்கும் என்றும் சொல்லுகிறபடியே விரோதி வர்க்கத்தை
தன் த்வநியாலே தானே நிரசிக்க வல்ல ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும்
கருதுமிடம் பொருது -என்கிறபடியே விரோதி வர்க்கத்தை -கூறாய் நீறாய் நிலனாகி –
என்கிறபடியே அழியச் செய்யும் திரு வாழியையும் தரித்துக் கொண்டு இருக்கிறது
என்னுடைய அறுக்கலறாப் பாபங்களை போக்குகைக்கு அன்றோ –
பட்டர் திருக் கோட்டியூரிலே எழுந்து அருளி இருக்கிற காலத்திலேயே ஒரு விசேஷ
திவசத்தின் அன்று கோளரி ஆழ்வானைப் பார்த்து தெற்காழ்வார் சொன்ன வார்த்தையை ஸ்மரிப்பது –
திருக் கோட்டியூரிலே எழுந்து அருளி இருக்க அனந்தாழ்வான் பட்டரை
ஸ்ரீ வைகுண்ட நாதன் த்வி புஜனோ சதுர் புஜனோ -என்ன -இருபடிகளும் அடுக்கும் என்ன
இரண்டிலும் அழகிது ஏது என்ன –
த்வி புஜனாகில் பெரிய பெருமாளைப் போலே இருக்கிறது -சதுர் புஜனாகில் நம் பெருமாளைப்
போலே இருக்கிறது -என்றார்-
கையினார் சுரி சங்கு அனல் ஆழியர் -நம்மைப் போல் அன்றிக்கே தெளியக் கண்டவர்கள்
பெரிய பெருமாளையும் சதுர்ப் புஜராய் யிறே அநுபவிப்பது –
நீள் வரை போல் மெய்யினார் -திவ்யாயுதங்கள் தானும் மிகை என்னும்படி மேரு மந்தர மாத்ரமான
என்னுடைய பாப ராசிகளை மலையை இட்டு நெரித்தாப் போலே நெரிக்க வற்றான பெரிய
மலை போலே திண்ணிதான வடிவை வுடையவர் -மலையை கடலுக்கு ஒப்பாக சொல்லும் இத்தனை
நீட்சி -போக்யதா ப்ரகர்ஷம் -பச்சை மா மலை போல் மேனி -இந்த வடிவை அனுபவிப்பார்க்கு
பிரகாஸ ரூபமாய்த்து இவர்கள் இருப்பது -அதுக்கு மேலே ஒப்பனை அழகு
துளப விரையார் கமழ் நீண் முடி –
பெரியவர்கள் கார்யம் செய்தவன் உம்முடைய கார்யம் செய்யப் புகுகிறானோ என்ன –
வெறும் ப்ரஹ்ம ருத்ராதி களுக்கே சேஷி என்று அன்றே அவன்
முடி கவித்து இருக்கிறது –
பிசு நயந் கில மௌளளி -பதிம் விச்வச்ய -என்றும் சொல்லுகிறபடியே
உபய விபூதி நாதன் அன்றோ –
துளப விரையார் கமழ்-
சர்வ கந்த வஸ்துவுக்கு தன் கந்தத்தாலே மணம் கொடுக்க வற்றாய்
மேன்மைக்கு உடலாய் இருக்கிறபடி –
நீண் முடி -என்னளவும் வந்து என்னை விஷயீ கரித்த முடி –
எம்மையனார் –
ருத்ரனனுக்கு பௌத்ரனாய் இருப்பதொரு பந்த விசேஷம் உண்டே -உமக்கு அது
இல்லையே என்று சொன்னதுக்கு உத்தரம் சொல்லுகிறார் -அவனுக்கு பௌத்ரத்வ நிபந்தநம்
ஒன்றுமே யன்றோ உள்ளது -மாதா பிதா ப்ராதா -இத்யாதிப் படியே சர்வவித பந்துத்வமும்
உள்ளது எனக்கே யன்றோ –
எம்மையனார் –
என்னைப் பெற்ற தமப்பனார்
பிதேவ புத்ரச்ய -இத்யாதிப் படியே இத்தலையில் குற்றங்களைப் பொறுக்க வேண்டும்படியான
பந்தம் உடையவன் அன்றோ –
அணி யரங்கனார் –
அந்த ருத்ரன் ஷீராப்தி யளவும் போய் அன்றோ கார்யம் கொண்டது -நீர் அவ்வளவும்
போந்திலீரே என்ன-அதுக்கு உத்தரமாக அவன் -மூ வுலகும் பலி திரிவோன் ஆகையாலே போய்க்
கார்யம் கொள்ள சக்தனானான் -அழும் குழவியாய் இருக்கிற என் போல்வாரை ரஷிக்கைக்கு அன்றோ
பிரஜை கிணற்றிலே விழுந்தால் கூடக் குதிக்கும் தாயைப் போலே இங்கு வந்து சாய்ந்து அருளிற்று
மாதா பிதா ப்ராதா நிவாஸச் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண -என்கிற பொது வன்று
திரு வரங்கத்துள் ஓங்கும் -இத்யாதிப் படியே பெரிய பெருமாள் தாமே என்கிறார்
அணி அரங்கனார் -அலங்காரமான கோயிலிலே வந்து சாய்ந்தவர்
ஆபரணம் ஆனது பூண்டவனுக்கு நிறம் கொடுக்கிறது -இவ் ஊரும் ரஷகனுக்கு நிறம்
கொடுக்கிறது ஆகையாலே சொல்லுகிறது
அணி அரங்கனார் –
ப்ராப்த விஷயமாய் இருக்கக் கடக்க விராதே சம்சாரத்துக்கு ஆபரணமான
கோயிலிலே வந்து அண்ணியருமாய் இருக்கிற படி-
அரவின் அணை மிசை மேய மாயனார் –
இவ்வளவேயோ உள்ளது –
யத்ர ராம ஸ லஷ்மண-என்றும் –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -என்றும்
சொல்லுகிறபடியே புருஷகார பலமும் உண்டு என்கிறார்
அரவின் அணை மிசை மேய –
ரத்னங்களை சாடியிலே பதித்துக் காட்டுமா போலே
தன் அழகு தெரியாதார்க்கு திருவந்தாழ்வான் மேல் சாய்ந்து காட்டின படி
அரவின் அணை மிசை மேய -தான் புருஷகாரமாக சிலரைக் காட்டிக் கொடுத்தால்
அவர்களை அவன் ரஷியாதே விடில் தானும் அவனை எடுத்து உதறிப் போக்கும்
அரவின் அணை மிசை மேய மாயனார் –
ஸ மயா போதிதா ஸ்ரீ மான் ஸூக ஸூப்த பரந்தப
என்கிறபடியே தான் எழுந்து இருந்து ஒரு வ்யாபாரம் பண்ண வேணுமோ
புலி கிடந்த தூறு என்றால் மிருகங்கள் எல்லாம் காடு பாய்ந்து போமா போலே
ஆஸ்ரிதர் உடைய விரோதி வர்க்கம் அடைய தான் கிடக்கிற படியைக் கண்ட போதே
கானோ ஒருங்கிற்று கண்டிலமால் -என்னும்படி கிடக்கிற ஆச்சர்ய பூதன் –
மாயனார் -மின் மினி பறக்கிறபடி
ஸ மயா போதித ஸ்ரீ மான் -எல்லாருக்கும் ஒன்றிலே சாய்ந்தவாறே பொல்லாங்குகள் தெரியும்
இங்கு பழைய வழகுகளும் நிறம் பெறும்
மாயனார் –
அங்கன் அன்றிக்கே கிடந்ததோர் கிடைக்கை கண்டும் -என்கிறபடியே இன்று
நாமும் சென்று அனுபவிக்கப் பார்த்தாலும் -ஒருக்கடித்து என்ன ஒண்ணாதே -மல்லாந்து
என்ன ஒண்ணாதே யிருக்கிற ஆச்சர்யத்தை சொல்லிற்று ஆகவுமாம்
மாயனார் செய்ய வாயையோ என்னை சிந்தை கவர்ந்ததுவே
ஸ்வ நிகர்ஷ அனுசந்தானத்தாலே பிற்காலிக்கிற என்னை -ஸ்வா பாவிக சௌந்தர்யத்தையும்
போக்யதையும் உடைய திருப்பவளமானது தன்னுடைய் ஸ்மிதத்தைக் காட்டி
அருகே சேர்த்துக் கொண்டு என்னுடைய மனஸ்ஸை அபஹரித்தது
என்னை சிந்தை கவர்ந்ததுவே –
உழக்கைக் கொண்டு கடலின் நீரை யளக்கப் புக்கு
அது தன்னையும் பறி கொடுத்தேன்
என்னை சிந்தை கவர்ந்தது-
துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கறத் துரிசனான
என்னைக் கிடீர் இப்படி அகப்படுத்திற்று என்கிறார் –
செய்ய வாய் –
ஸ்திரீகள் உடைய பொய்ச் சிரிப்பிலே துவக்கு உண்டார்க்கு இச் சிரிப்புக்
கண்டால் பொறுக்க ஒண்ணுமோ –
ஐயோ –
திருவதரமும் சிவப்பும் அனுபவிக்க அரிதாய் ஐயோ என்கிறார்
ஐயோ –
அவரும் தம்மை முழுக்க அனுபவிக்கப் பார்த்தார் -நானும் முழுக்க அனுபவிப்பேனாக
பாரித்தேன் -இத்தை திருவதரம் ஒட்டாதே இடையிலே இறாஞ்சிக் கொள்வதே ஐயோ என்கிறார் –
என்னை –
கல்லை நீராக்கி நீரையும் தானே கொண்டது -சித்த அபஹாரத்தைப் பண்ணி ஆத்ம
அபஹாரத்தை அழித்தது –
ப்ரதான சேஷியைக் கண்டவாறே த்வார சேஷி யளவில் நில்லாது இறே
இப் பாட்டில் ஸ்ரீ வைகுண்ட நாதன் படியும் இங்கே காணலாம் என்கிறார்
———————————————————–
ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம் –
கையினார் சுரி சங்கு அனல் ஆழியர் –
திருக் கைக்கு ஆயுதமாகைக்கும் ஆபரணம் ஆகைக்கும்
போரும் என்னும்படி ஆர்ந்த சந்நிவேசத்தை உடைத்தாய் -அவலம்புரியான வடிவாலே ப்ரணவ் சந்நிவேசமாய்
சப்த ப்ரஹ்ம மயமாய் -நிரதிசய ஆநந்த ஹேதுவான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் -தாநவ வநதா
வக்னியாய் -மனஸ் தத்வ அபிமானியான திருவாழி யாழ்வானையும் உடையராய் –
இத்தால் -மந்தரத்தையும் மனசையும் அநுகூல சிந்தைக்கு அனுகுணம் ஆக்கவில்ல
உப கரணங்களை உடையவர் என்றது ஆய்த்து –
திவ்யாயுத ஆழ்வார்கள் பெரிய பெருமாள் உடைய திருக் கைகளில் ரேகையில் ஒதுங்கிக் கிடந்தது –
பெருமாள் திரு மேனியிலே தோன்றி நிற்பர்கள்
நீள் வரை போல் மெய்யனார் –
ஸ்வரூபம் போலே ஸூஷ்ம த்ருஷ்டிகள் காணும் அளவன்றிக்கே
மாம்ச சஷூஸ்ஸூக்களும் காணலாம் படி மலை இலக்கான திருமேனியை வுடையவர்
துளப விரையார் கமழ் நீண் முடி எம் ஐயனார் –
சர்வாதிகத்வ ஸூசகமான திருத் துளாயின் பரிமளத்தைப் பரி பூர்ணம் ஆக்கும்படி
கமழ்ந்து -விபூதி த்வய சாம்ராஜ்ய வ்யஞ்சகமான திவ்ய கிரீடத்தை வுடைய சர்வ லோக பிதாவானவர்
அணி அரங்கனார் –
பரம வ்யோம ஷீரார்ண வாதிகளைக் காட்டில் குணா திசயத்தாலே
ஆஸ்ரீதற்கு ஹ்ருத்ய தமமான படியாலே விபூதி இரண்டுக்கும் ஏக ஆபரணம் என்னலாய்
சௌலப்ய அதிசயம் உண்டாம் படியான ஸ்ரீ ரெங்க விமாநத்தை சயன ஸ்தானமாக உடையவர்
அணிமையாலே அணி அரங்கனார் -என்கிறது ஆகவுமாம்
அரவின் அணை மிசை மேய மாயனார் –
தம்முடைய ஜ்ஞான பலங்கள் வடிவு கொண்டால் போல
இருக்கிற திருவனந்தாழ்வான் ஆகிற ஆநுகூலதிவ்ய பர்யங்கத்தின் மேலே அளவறத்
தேங்கின அம்ருத தடாகம் போலே ஆஸ்ரீதர்கு அனுபவிக்கலாய் –
சிந்தாமணி வோத்வாந்த முத்சங்ககேஸ் அநந்த போகிந -என்னும்படி அத்ய ஆச்சர்ய பூதரானவருடைய
வாலியதோர் கனி கொல் -என்னலாம் படி வர்ண மாதர் யாதிகளை வுடைத்தாய்
வையம் ஏழும் உள்ளே காணலாம் படியான செய்ய வாய் என் சிந்தையைப் பறித்துக் கொண்டது
ஐயோ என்று ஆச்சர்யத்தை யாதல்
அனுபவித்து ஆற்ற அரிதான படியை யாதல்
அநுபவ ரசத்தை யாதல் -காட்டுகிறது
————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply