Archive for the ‘இராமானுச நூற்றந்தாதி’ Category

ஸ்ரீ கலியனும் ஸ்ரீ ராமானுஜரும் -ஸ்ரீ திருக்குடந்தை உ. வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள்-

January 28, 2026

ஸ்ரீ ராமானுஜர் அருளிச் செய்த நவ ரத்ன க்ரந்தங்களுக்கும் அடி இப்பதிக 9 பாசுரங்கள் -சமத்காரமாக ஸ்வாமியின் நவரத்ன க்ரந்தங்களும் இப்பதிக பாசுரங்களின் அடிப்படையில் அருளிச் செய்து இருப்பதாகக் காட்டி அருளுகிறார்

ஸ்ரீ ராமானுஜர் கலியன் சம்பந்தம் மூன்று பாடல்களில் அமுதனார் காட்டி அருளுகிறார் -இதில 7 பாசுரத்திலேயே திருமங்கை ஆழ்வாருக்கு இனியவராக ராமானுஜர் -பவிஷ்ய ஆச்சார்ய விக்ரஹம் சேவித்து இருப்பாரே கலியனும் –

கள்ளார் பொழில் தென் னரங்கன் கமலப் பதங்கள்நெஞ்சிற்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரானடிக் கீழ்
விள்ளாத அன்பன் இராமானுசன்
மிக்க சீலமல்லால்
உள்ளாதென் னெஞ்சு ஒன்றறியேன் எனக்குற்ற பேரியல்வே.-2-குறைகள் இல்லாத ஆழ்வார் -திவ்யதேசங்கள் விடாமல் -நான்கு கவிகள் -மதிள் கைங்கர்யம்-வாள் வீசி படித்துறை -நம் போல்வாருக்கும் -உஜ்ஜீவிக்க அருளிய பிரான் –இராம பிரானுக்கும் குறையல் பிரானுக்கும் தென் அரங்கன் கமலப் பதங்கள் கீழ் விள்ளாத அன்பு – ராமானுசனுக்கோ-லஷ்மண னுக்கோ -இராம பிரான் அடிக் கீழ் விள்ளாத அன்பு – இவ் விராமானுசக்கோ குறையல் பிரான் அடிக் கீழ் விள்ளாத அன்பு-
திருநகரியில் இன்றும் திருமங்கை ஆழ்வார் அடிக்கீழ் எம்பெருமானாரை சேவிக்கிறோமே –

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ண மங்கை நின் றானைக் கலை பரவும்
தனி யானையைத் தண் டமிழ் செய்த நீலன் றனக் குலகில்
இனியானை எங்கள் இராமா னுசனை
வந் தெய்தினரே.–17-நீலன் பத்தராவிப் பெருமாளையே கண்களார அளவும் நின்று -கண்ண மங்கையுள் காண வேண்டும்படியான காதல் விஞ்சியவராய் -காணாது பிரிந்து இருப்பதையே துன்பமாகவும் -கண்டு கொண்டு கிட்டி இருப்பதையே
இன்பமாகவும் கொண்டு இருத்தலின் -ப்ராக்ருதமான -தேக சம்பந்தத்தால் ஆன-முனிவும் கனிவும் அற்றவர் ஆனார் –-எம்பெருமானாரும் அந்நீலன் தண் தமிழ் இன்பத்திலேயே மூழ்கி -அவருக்கு இனியராய் -அத்தகையரானார்--அவரைப் பற்றினவர்களும் தண் தமிழ் இன்பத்தைக் காட்டின நீலனுக்கு இனிய ஆசார்யன் திறத்து உரிமைப் பட்டு-இருத்தலாம் பேரின்பத்திலே திளைத்து -அத்தகையார் ஆனார் -எய்தினர் முனியார் மனம் கனியார் -என்று கூட்டிப் பொருள்

கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான்
ஒலி மிக்க பாடலை உண்டு தன் னுள்ளம் தடித்து, அதனால்
வலி மிக்க சீயம் இராமா னுசன்
மறை வாதியராம்
புலி மிக்க தென்று, இப் புவனத்தில் வந்தமை போற்றுவனே.-88–மறை வாதியரைவெல்லும் வலி -கலை பெருமான் பாடல்களினால் மிகுந்ததாம் . எம்பெருமானாருக்கு –ஆரண சாரம் அல்லவோ அப்பாடல்கள்-அடையார் சீயம் –பெரிய திரு மொழி – 3-4 10- –பாடல் வலி மிக்க சீயமாக்கிற்று-ஒலி மிக்க பாடலை உண்டு : இந்த கலியனின் பாடலே இவருக்குத் தாரகம் என்றபடி மாறன் கலை உணவாகப் பெற்றோம் என்று மாமுனிகள் சொவது போல் , எம்பெருமானாருக்கு இது தாரகம் என்றபடி


பெரும் புறக் கடலை யடல் ஏற்றினைப் பெண்ணை யாணை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை
முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-=வேதார்த்த ஸங்க்ரஹம் -அசேஷ ஜகக தித்த அநு சாசன ஸ்ருதி நிகர ஸிரஸி ஸமதிகதோ யமர்த்த ஜீவ பரமாத்ம யாதாத்ம ஞான பூர்வக வர்ணாஸ்ரம தர்ம இதி கர்தவ்யதாக பரம புருஷ சரண யுகள த்யான அர்ச்சன பிரணாமாதி அத்யர்த்தப் பிரிய 

மெய்ந் நலத் தவத்தைத் திவத்தைத் தரும் மெய்யை பொய்யினைக் கையிலோர் சங்குடை
மைந் நிறக் கடலை கடல் வண்ணனை மாலை ஆலிலைப் பள்ளி கொள் மாயனை
நென்னலைப் பகலை யிற்றை நாளினை நாளையாய் வரும் திங்களை யாண்டினைக்
கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக் கண்ண  மங்கையுள்  கண்டு கொண்டேனே —7-10-2-ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம–அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும் அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும் ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும் எவ்விதமான தோஷமும் அற்றவனும் ஆனந்த ஸமுத்ரமுமாகவும் உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

எங்களுக்கு அருள் செய்கின்ற வீசனை வாசவார் குழலாள் மலை மங்கை தன்னை
பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான் தன்னைப் பான்மையைப் பனி மா மதி யந்தவழ்
மங்குலைச் சுடரை வட மா மலை யுச்சியை நச்சி நாம் வணங்கப் படும்
கங்குலைப்  பகலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே—7-10-3-அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பேய் முலைத் தலை நஞ்சுண்ட பிள்ளையைத் தெள்ளியார் வணங்கப் படும் தேவனை
மாயனை மதிள் கோவலிடைக் கழி மைந்தனை யன்றி அந்தணர் சிந்தையுள்
ஈசனை யிலங்கும் சுடர்ச் சோதியை  எந்தையை எனக்கு எய்ப்பினில் வைய்ப்பினைக்
காசினை மணியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-4-ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம் வபு- ஹத அசேஷ அவத்யா-பரம கம் பத –வாங்க மனஸ் யோகோ அபூமிகி -நத ஜன த்ருஷான் பூமி -ஆதி புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே—ஸ்ரீ வேதாந்த தீபம்-முதல் மங்கள ஸ்லோகம்

ஏற்றினை இமயத்துள் எம் மீசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை
ஆற்றலை யண்டத்தப் புறத்து உய்த்திடும் ஐயனைக் கையில் ஆழி ஓன்று ஏந்திய
கூற்றினைக் குரு மா மணிக் குன்றினை நின்றவூர்  நின்ற நித்திலத் தொத்தினைக்
காற்றினைப் புனலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-5-॥ ஶ்ரீரங்க³க³த்³யம் ॥–அபாரகருணாம்பு³தே⁴! * அநாலோசித விஶேஷ * அஶேஷலோகஶரண்ய! * ப்ரணதார்த்திஹர-* ஆஶ்ரித வாத்ஸல்யைக மஹோத³தே⁴! அநவரதவிதி³த நிகி²ல பூ⁴த ஜாத * யாதா²த்ம்ய!* அஶேஷசராசரபூ⁴த * நிகி²லநியமநிரத * அஶேஷ சித³சித்³ வஸ்து ஶேஷிபூ⁴த * நிகி²லஜக³தா³தா⁴ர* அகி²லஜக³த்ஸ்வாமிந் * அஸ்மத்ஸ்வாமிந் * ஸத்யகாம * ஸத்யஸங்கல்ப * ஸகலேதரவிலக்ஷண* அர்தி²கல்பக * ஆபத்ஸக² * காகுத்ஸ்த² * ஶ்ரீமந்நாராயண * புருஷோத்தம * ஶ்ரீரங்க³நாத² * மம நாத², நமோঽஸ்துதே ॥

துப்பனைத் துரங்கம் படச் சீறிய தோன்றலைச் சுடர் வான் கலன் பெய்ததோர்
செப்பினை திருமங்கை மணாளனைத் தேவனைத் திகழும் பவளத்தொளி
யொப்பனை யுலகேழினை   யூழியை ஆழி ஏந்திய கையனை யந்தணர்
கற்பினை கழுநீர் மலரும் வயல் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-6—ஶரணாக³தி க³த்³யம் ॥-ௐ ப⁴க³வந் நாராயணாபி⁴மதாநு ரூப ஸ்வரூப ரூப கு³ண விப⁴வ ஐஶ்வர்யஶீலாத்³
யநவதி⁴காதிஶய அஸங்க்²யேய கல்யாண கு³ணக³ணாம் பத்³மவநாலயாம் ப⁴க³வதீம் ஶ்ரியம் தே³வீம்
நித்யாநபாயிநீம் நிரவத்³யாம் தே³வதே³வ தி³வ்ய மஹிஷீம் அகி²லஜக³ந் மாதரம் அஸ்மந்மாதரம்
அஶரண்ய ஶரண்யாம் அநந்யஶரண: ஶரணமஹம் ப்ரபத்³யே ॥ 1

திருத்தனைத் திசை நான்முகன் தந்தையைத் தேவ தேவனை மூவரில் முன்னிய
விருத்தனை விளங்கும் சுடர்ச் சோதியை விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய
அருத்தனை யரியைப் பரி கீறிய அப்பனை யப்பிலார் அழலாய் நின்ற
கருத்தனை களி வண்டு அறையும் பொழில் கண்ண மங்கையுள் கண்டேனே—7-10-7-॥ ஶ்ரீவைகுண்ட²க³த்³யம் ॥சதுர்த³ஶபு⁴வநாத்மகமண்ட³ம் * த³ஶகு³ணிதோத்தரம் ச ஆவரணஸப்தகம் * ஸமஸ்தம் கார்ய காரண ஜாதமதீத்ய வர்த்தமாநே * பரமவ்யோம ஶப்³தா³பி⁴தே⁴யே * ப்³ரஹ்மாதீ³நாம் வாங்மநஸாঽகோ³சரே * ஶ்ரீமதி வைகுண்டே² தி³வ்யலோகே *

வெஞ்சினக் களிற்றை விளங்காய் வீழக் கன்று வீசிய வீசனை பேய் மகள் துஞ்ச
நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய
நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பியைக்
கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த
வஞ்சனைக் கண்ண மங்கையுள் கண்டேனே —7-10-8-அழித்த அசுரர்கள் பட்டியல்-கீதா பாஷ்யம் தொடக்கம் -பூதனை -அகங்கார மமகார –கர்மங்களைப் போக்கவே அவதாரம்-பூபார அவதரண தேசேன அஸ்மதாதீநாம் அபி ஸமாஸ்ரயணித்வாத் அவதிர்யோர்வ்யாம்
சகல மனுஷ நயன விஜயதாம் கத பராவர நிகில ஜன மநோ நயன ஹாரி
திவ்ய சேஷ்டிதானி குர்வன்-பூதநா சகட யமளார்ஜுன அரிஷ்ட ப்ரிலம்ப தேனுக காலீய கேசீ
குவலாயாபீட சாணூர முஷ்டிக தோசல கம்சாதீன் நிஹத்ய
அனவதிக தயா ஸுஹார்த்த
அநு ராக கர்ப்ப அவலோகந ஆலாபம்ருதை- விஸ்வமாப் யாயியின் நிரதிசய ஸுந்தர்ய ஸுசீல்யாதி குண கணா விஷ்ட தாரேண அக்ரூர மாலாகாராதீந் பரம பாகவதான் பூதான் க்ருத்வா

பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய்   நின்ற
விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி தன்னை
மண்ணினை மலையை யலைநீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள்
கண்ணினைக் கண்கள் ஆர அளவும் நின்று  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-9-திருவாராதனம் யாகம் -யாக பூமி கச்சேத் நோக்கி போவதாக நித்ய கிரந்தம்-ததீயாராதனம் கண்ணாலே பார்க்கலாமே–பகவந்த மநுஸ்ம்ருத்ய தந்மந்த்ரேண பகவத் பர்யந்தாபி தாயிநா மூல மந்த்ரேண ஜலம் பீத்வாசம்ய ப்ரோக்ஷ்ய ! பரிஷிச்ய| உதகாஞ்சலி மாதாய| பகவத் பாதார விந்தயோர் நிக்ஷிப்ய ப்ராணா நாயம்ய பகவந்தம் த்யாத்வா – அஷ்டோத்தர ஶதம் மூலமந்த்ராவர்த்ய பரிக்ரம்ய| நமஸ்க்ருத்ய ஆதார ஶக்த்யாதி ப்ருதிவ்யந்தம் தர்ப்பயித்வா| ஸ்ரீவைகுண்டாதி பார்ஷதாந்தம் தர்பயித்வா | தேவாந் ருஷீந் பிதுரூந் பகவதாத்மகாந் த்யாத்வா ஸந்தர்ப்ய ஶுசௌ தேஶே வஸ்த்ரம் ஸம்பீட்யாசம்ய ! ஆவாஹித தீர்த்தம் ஆத்மநி மூல மந்த்ரேண ஸமாஹ்ருத்ய| யாகபூமிம் கச்சேத்|

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை வல்லராய் யுரைப்பார் மதி யந்தவழ்
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்மை சொல்லில் வெண் சங்கம் ஓன்று ஏந்திய
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10-ஐஸ்வர்ய ஸூசகமான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைக் கையிலே உடைய சர்வாதிகனே உனக்கும் இதில் ஆதாரம் உண்டாகில் எனக்கு சிஷ்யனாய்-உனக்கும் அதிகரிக்க வேண்டும்படி யாயிற்று இதன் உள்ளீட்டின் கணம் இருக்கிறபடி –திரு உள்ளமாகில் –ஸ்வதஸ் சர்வஞ்ஞனாய் இறுமாந்து இருந்தால் போகாது
என்னோடு அதிகரிக்கில் அறியலாம்-ஒரு வசிஷ்டனோடே ஒரு சாந்தீபனோடே தாழ நின்று அதிகரிக்கக் கடவ அவனுக்கு திரு மங்கை ஆழ்வார் உடன் அதிகரிக்கை தாழ்வோ –கலிகன்றி தாஸர் ஸ்ரீ நம்பிள்ளையிடம் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை கேட்டு அருளிச் செய்த வியாக்யானங்கள் உண்டே-

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ அருளிச் செயல்களில்-ஸ்ரீ முதல் நான்கு திருவந்தாதிகள் -ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி- -இனி பதப் பிரயோகங்கள் –

November 27, 2025

இடைகழியே பற்றி இனி – நாலாயி:2167/4
இனி யார் புகுவார் எழு நரக வாசல் – நாலாயி:2168/1
என் பாக்கியத்தால் இனி – நாலாயி:2215/4
திறம்பிற்று இனி அறிந்தேன் தென் அரங்கத்து எந்தை – நாலாயி:2269/1
எங்கு அணைந்து காண்டும் இனி – நாலாயி:2363/4
இனி அவன் மாயன் என உரைப்பரேலும் – நாலாயி:2364/1
இனி அவன் காண்பு அரியனேலும் இனியவன் – நாலாயி:2364/2
இன்று ஆக நாளையே ஆக இனி சிறிது – நாலாயி:2388/1
இடம் நாடு காண இனி – நாலாயி:2476/4
இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் – நாலாயி:2477/1
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை இனி அறிந்தேன் – நாலாயி:2477/2

நீயும் திருமகளும் நின்றாயால் குன்றேடுத்துப்
பாயும் பனி மறுத்த பண்பாளா வாசல்
கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல்
இடை கழியே பற்றி இனி —86
-இவர் இருந்த இடத்திலேயே பிராட்டியும் தானுமாக வந்து நெருக்க -அத்தைக் கண்டு அனுபவிக்கிறார் -இடை கழிக்கு உள்ளும் புறமும் காட்டுத் தீ போலே இரா நின்றது -(சேஷத்வம் அறியாத சம்சாரிகள் வெளியில் இருக்க -உபாயாந்தர ரிஷிகள் -அசித்வத் பாரதந்தர்யம் அறியாதவர்கள் உள்ளே இருக்க -) காமுகரானவர்கள் உகந்த விஷயத்தின் யுடைய கண் வட்டம் விட்டுப் போக மாட்டாதாப் போலே(காமுகரானவர்கள்-இங்கு லோக விலக்ஷணமாக மிதுனம் )-இனி -இப்போது -இனி திருக் கோவலூரிலே நிற்கிறது கர்ம பல அனுபவத்துக்கு அன்று இறே – சம்சாரிகளை நரகத்தில் புகாமல் காக்க விறே-திரு வாசலுக்கு புறம்பு போக மாட்டாதே உள்ளுப் புக மாட்டாதே ஸ்ப்ருஹணீயமாய் அழகியதாய்-திருக் கோவலூர் இடை கழியைப் பற்றி ஆஸ்ரித ரக்ஷணத்தில் முற்பாடனான நீயும் -உன்னிலும் முற்பட்ட திரு மகளாருமாக எங்களோடு கலக்கப் பெற்ற உகப்பின் கனத்தாலே பரந்த கால் பாவி இப்போது தரித்து நின்றாயே–என்று அனுபவிக்கிறார் –கீழே இருவரையும் கூறி–நின்றாய் -ஆள -என்று  சொல்லுகிறது
சாயையைத் தனித்து பேச வேண்டாமை  –ஸ்ப்ருஹணீயமாய் அழகியதாய் திருக் கோவல் இடை கழியே பற்றி இப்போது இப்படி நின்றான் -என்னுதல்இனிமேல் எல்லாம் இப்படி நிற்கும் -என்னுதல்-இனி -என்கையாலே-அநாதி காலம் இழந்தது பெற்றமை யடையத் தோற்றி இருக்கிறது –-இனி இப்பால் பட்டது யாதவங்களும் சேர் கொடேன் -திருவாய் மொழி -2-7-3-என்னக் கடவது இறே-ஆழ்வார்கள் எல்லாரையும் அவதரிப்பிக்கைக்காகப்
பொற் கால் பொலிய விட்ட தேசம் இறே

இனியார் புகுவார் எழு  நரக வாசல்
முனியாது மூரித்தாள் கோமின் கனி சாயக்
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
நன்கறிந்த நா வலஞ்சூழ்  நாடு —87-எழு வகைப் பட்டு இருந்த நரக வாசல் இனி யார் போய்ப் புகுவார்-இனி நரக விசேஷங்களும் பாப விசேஷங்களும் கொண்டு கார்யம் உண்டோ
ஒருவன் –சர்வ பாபேப்யோ மொஷயிஷ்யாமி –என்று நிற்கச் செய்தே –அன்றிக்கே
எழுகிற நரக வாசல் உண்டு -எல்லாரும் போய்ப் புகுகிற நரக வாசல் -என்னுதல்
ஆழ்வார்கள் திருவவதாரம் பண்ணின பின்பு பழைய சம்சாரம் அற்று -என்கை  –முனியாது –யம படருடைய கோபத்துக்கு இனி பலம் இல்லை என்கிறது – எங்கள் பதத்துக்கு அழிவு  சொல்லுவதே என்று பொடியாதே முனிந்தார்கள் ஆகில் யமபடர் கன்றும் விளவும் பட்டது படும் இத்தனை –மூரித்தாள் கோமின் – பெரும் தாளைப் பூட்டுங்கோள்- -இனிப் புகுவார் இல்லை -மிடுக்குடைய தாளைக் கோவுங்கோள்-அதுக்கடி இன்னம் ஒரு கால் திறக்கும் என்னும்படி இருக்கில் இறே எளிதாகக் கோர்க்க வேண்டுவது –இவ் வாழ்வாருடைய பொலிக பொலிக பொலிக -திருவாய் -5-2- இருக்கிற படி இப்பாசுரம்-

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்
புகையால் நறு மலரால் முன்னே -மிக வாய்ந்த
அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு
என் பாக்கியத்தால் இனி—34-புஷ்பாத் யுபகரணங்களைக் கொண்டு -மிகவும் செறிந்த ஸ்நேஹத்தை யுடையேனாய்க் கொண்டு சௌந்தர்யத்துக்கும் நீர்மைக்கும் தோற்று ஸ்துதித்து தேவர் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –என் பாக்கியத்தால் இனி–—
தேவருடைய கடாஷத்தாலே -என்னுதல் —என்னுடைய விலக்காமை யாகிய பாக்கியத்தாலே -என்னுதல் –

திறம்பிற்று இனி அறிந்தேன் தென்னரங்கத்து எந்தை
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் -திறம்பாச்
செடி நரகை நீக்கித் தான் செல்வதன் முன் வானோர்
கடி நகர வாசற் கதவு–88-ஸ்வ யத்னத்தால் பெறுவோம் என்றவர்களுக்குத் தப்பிற்று –இப்போது அறிந்தேன் –அர்ஜூனனுக்கு மாமேகம் என்று உன்னால் சாதிக்கப்படும் அசேதனமான க்ரியா கலாபங்களை விட்டு பரம சேதனனாய் -உன்னைப் பெறுகைக்கு  யத்னம் பண்ணுகிற சித்த ஸ்வரூபனான என்னையே பற்று -என்றான் – அது ஒருவனுக்கு ஒரு காலத்திலே என்னாத படி சர்வர்க்கும் சர்வ காலத்திலும் – மாமேகம் -என்று இருக்கிறவர் -பெரிய பெருமாள் –மாம் -என்ற சௌலப்யத்திலும்-இங்கு சௌலப்ய காஷ்டையைச் சொல்லுகிறது –மாம் -என்ற சௌலப்யத்தை -வென்று ஓட வைத்த -புடம் போட்ட -மாம் –அவ்விடம் பெறுவார்க்கும் இவர் நினைப்பிட வேணும்  –பர வியூஹ  விபவங்களுக்கு நித்ய முக்தர் முக்த ப்ராயர் பாக்யவான்கள் பக்கலிலே  கண்ணழிவு  சொல்லி ஆஸ்ரயணம் தவிரலாம் – அர்ச்சாவதாரத்திலே ஆஸ்ரயணத்துக்கு அங்கனே கண் அழிவு இல்லை-அப்ரதிஷேதம் கொண்டு பெற பெற மாட்டாதே ஸ்வரூபத்தை அழித்துக் கொண்டு பேற்றை இழப்பதே –

உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பரியன் உண்மை -இணரணையக்
கொங்கணைந்து வண்டறையும் தண்  துழாய்க் கோமானை
எங்கணைந்து காண்டும் இனி ——–82-
முதல் தன்னிலே இதில் இழியாதாது நன்று –
அதாகிறது அறிவதாக இழிந்து அறியாது ஒழிவதில் காட்டில் முதல் தன்னிலே அறிவதாக இழியாதது நன்று இறே -அறிய அரியனாய் இருப்பான் ஒருவன் –தன்னாலும் அறியப் போகாது –இவனாலும் அறியப் போகாது-தனக்கும் தன் தன்மை அறிவரியான் -திருவாய்மொழி -8-4-6-அவ்வருமை தீர அவன் தான் ஹ்ருதயத்திலே சந்நிதி
பண்ணி கலக்கும் அன்று ஒரு குறை இல்லையே என்னில் – அப்போதும் அவனை உள்ளபடி யறிந்து பரிச்சேதிக்கப் போகாது – அவனுடைய உண்மை யறியப் போகாது –வைலஷண்யத்தை பரிச்சேதிக்கப் போகாது-இவன் தான் காணும் அன்று காண வரிதாய்
அவன் தானே காட்டும் அன்றும் காண வரிதானாலும் இழந்து ஆறி இருக்க ஒண்ணாது
போக்யதையும் ஸ்வாமித்வமும் –லௌகிகர் படியிலும் காண விரகற்று-அவன் தானே காட்டும் வைதிகர் படியாலும் காண விரகற்ற பின்பு இனி நான் காண்கை என்று ஒரு பொருள் உண்டோ-கிட்டாது ஒழிய மாட்டேன் கிட்ட மாட்டேன் –

இனியவன் மாயன் என வுரைப்பரேலும்
இனியவன் காண்பரியனேலும் -இனியவன்
கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங்கழலான்
உள்ளத்தின் உள்ளே உளன்
———83–இனியவன் மாயன் என வுரைப்பரேலும்-பிரமாணங்கள் ஸூ லபன் என்று சொல்லுகிற அவனை
நாட்டார் அரியன் என்று சொன்னார்களே யாகிலும் –இப்போது அவன் ஆச்சர்ய பூதன் என்று சொல்லுவார்களே யாகிலும் – வர்த்தமான தசையில் பிரகிருதி சம்பந்தித்து மம மாயா துரத்யயா-கீதை -7-13-என்னும்படி காண வரியன் ஆகிலும்  –இனியவன் காண்பரியனேலும்-நிரதிசய போக்யனாய் யுள்ளவன் தான் கிட்டிக் காண அரியனாய் இருந்தானே யாகிலும்
இப்போது அவன் காண முடியாதான் ஒருவன் ஆகிலும்-அன்றிக்கே-சரீர சம நந்தரத்திலும் காண வரியன் யாகலும்-இனியவன் கள்ளத்தால் மண் கொண்டு–சர்வேஸ்வரனான தான் செய்தான் என்று தோன்றாதபடி பூமியை அபஹரித்து நெஞ்சுக்கு இனியனாய் தன்னுடைமையை மகா பலி பக்கலிலே அளந்து கொண்டவன் –விண் கடந்த பைங்கழலான் –ஆகாசத்துக்கு அவ்வருகாம்படி வளர்ந்து-சகல லோகங்களையும் தன் கீழே இட்டுக் கொண்ட பரந்த திருவடிகளை யுடையவன் – அன்றிக்கே-அழகிய திருவடிகளை யுடையவன் -என்னவுமாம் –இனி உள்ளத்தின் உள்ளே உளன் –இப்போது என் ஹ்ருதயத்தின் உள்ளே சந்நிஹிதன் ஆனான்-புக்க ஆயுச்சுக்கு மரணம் இல்லை இறே-மேல் செய்த படி செய்கிறான்
பெற்ற வம்சத்தை ஒருவரால் இல்லை செய்ய ஒண்ணாது இறே-இப்படி சந்நிஹிதன் என்றதே யாகிலும் கீழ்ச்   சொன்ன  அபரிச்சேத்யதையே பலித்து விடுகிறது –இனி -என்று -இப்போது -என்றபடி –அன்றிக்கே-இனியவன் என்று ஒரே சொல்லாய் அனுசந்திப்பார்க்கு நிரதிசய போக்யனாய் இருக்குமவன் என்று மூன்று இடத்துக்கும் பொருளாகவுமாம் –

இன்றாக நாளையேயாக இனிச் சிறிதும்
நின்றாக நின்னருள் என்பாலதே -நன்றாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -நாரணனே
நீ என்னை அன்றி இலை -7-இன்றாதல் நாளையாதல் சில காலம் கழிந்தாதல் உன்னுடைய கிருபை என் பக்கலிலே –அகதியான எனக்கு நீ போக்கி கதி இல்லை-அப்படியே சர்வ பிரகார பரி பூர்ணனான உன்னுடைய க்ருபைக்கு வேறு சிலரை விஷயமாக உடையை எல்லை –என்றும் ஒக்க இவ்வாத்மா உன் அருளுக்கே விஷயமாய் உன் கடாஷம் ஒழியில் என் சத்தை இல்லையானபடி-மெய்யாய் இருக்கிறபடி கண்டாயே-அப்படியே நீயும் என்னாலே உளையாய் என்னை ஒழிய இல்லை யாகிறாய்-இப்படி இருப்பது ஓன்று உண்டோ என்று வேணுமாகில் பார்த்துக் கொள்ளாய் என்று நடுவே பிரமாணத்தைப்-நாரணனே -என்று  பேர்த்திடுகிறார்-இங்கனே இருக்கை எனக்கு ஸ்வரூபம் -என்றுமாம் – –

ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை
ஆன்றேன் அமரர்க்கு அமராமை –ஆன்றேன்
கடனாடும் மண்ணாடும் கை விட்டு மேலை
இடநாடு காண வினி–95-புண்ய பலங்களை பூசிக்கும் ஸ்வர்க்காதி லோகங்களையும்
புண்யார் ஜனம்   பண்ணும் விபூதியையும் உபேஷித்து-விஸ்வதே ப்ருஷ்டேஷூ சர்வத ப்ருஷ்டேஷூ என்னும்படி இடமுடைத்தான ஸ்ரீ வைகுண்டம் காணலாம்படி இப்போது பரபக்தி யுக்தன் ஆனேன்-இத்தால் –
1-ப்ராப்யமான  கைங்கர்யத்தில் தமக்கு அளவிறந்த  சாரஸ்யம் விளைந்த படியையும்
2-அதுக்கு  விரோதியான  அஹங்கார மமகார ரூப துக்க சம்பந்தம் விட்டு நீங்கின படியையும்
3-அடிமைக்கு அடைவில்லாத சம்சாரத்தில் தமக்கு யுண்டான விரக்தியையும்
4-அடிமைக்கு ஏகாந்தமான பரமபதத்தில் புக்கு அல்லது தரிப்பது அரிதாம்படிபரமபக்தி பிறந்தபடியையும்
5-இப்படி இருக்கிற நம் அதிகார பரிதியைக் கண்டு ப்ரஹ்மாதிகள் தொடை   நடுங்கித்
தம்  கண் வட்டத்தில் வந்து கிட்ட மாட்டாமல் கிடக்கப் போம்படியான தம்முடைய வேண்டற்பாட்டையும்-அருளிச் செய்தார் ஆய்த்து-

இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-ப்ரஹ்ம ருத்ராதிகளுக்குத் தெய்வம் நீயே என்னும் இடம் இப்போது அறிந்தேன்-என்னுடைய நாதனான யுன்னை – அவர்களுக்கு நிர்வாஹகனான மாத்ரம் அன்றிக்கே உன்னுடைய அளவெல்லாம் இப்போது அறிந்தேன்-இப்போது அறிந்தேன்-சர்வ காரணமும் நீயே-பிறர் வாழ்வும்-வாழ்வாகிற நல்ல கிரியையும் உடையையாய் சகல பதார்த்தங்களை யுடையையாய் -இருக்கிறாயும் நீயே –மஹா உபநிஷத் பிரக்ரியையாலே-ப்ரஹ்ம ருத்ராதிகள் தொடக்கமான சகல பிரபஞ்சத்துக்கும் காரண பூதனான நாராயணனே  சர்வ ஸ்மாத் பரன் என்று
பிரதமத்தில் பிரதிஜ்ஞை பண்ணி ஸ்ருதி ஸ்ம்ருதி யுப ப்ரஹ்மணங்களாலும்
அனந்யதா சித்தமான ஸ்ரீ யபதித்வாதி சின்னங்களாலும் நெடுக உபபாதித்துக் கொண்டு போந்து- அடியில் பண்ணின பிரதிஜ்ஞ அநு குணமாக அவனுடைய பரத்வத்தை தலைக் கட்டுகிறார் –

நிதியைப் பொழியும் முகில் என்ன நீசர் தம் வாசல் பற்றித்
துதி கற்று உலகில் துவள் கின்றிலேன் இனித் தூய் நெறி சேர்
எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை அடியாம்

கதி பெற்றுடைய இராமானுசன் என்னைக் காத்தனனே – 21- ஆசார்ய அபிமானத்திலே ஒதுங்கி வர்த்திக்கிற -தூய்மை -பரி சுத்தி –நெறி –உபாயம் -இது -ஆளவந்தாருக்கு விசேஷணம் ஆகவுமாம்-நெறி-ஒழுக்கல்-கதி–அதாவது ப்ராப்யம்–இராமானுசன்
-எம்பெருமானார் –என்னைக் காத்தனனே -லோகத்தில் ஞாநாதிகரை ரஷித்தது ஆச்சர்யமாய் இராது -பிரதி கூலனாய் இருக்கிற என்னை -அநு கூலனாக்கி ரஷித்தான் -இது என்ன அகடிதகடநா சாமர்த்தம் என்று வித்தராகிறார் –தூய் நெறி சேர் யதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம் -கதி பெற்று உடைய -என்கிற இது -எம்பெருமானாருக்கு விசேஷணம் ஆகவுமாம் –இனி-அவர்க்கு அடியேன் ரஷ்ய பூதனாய் விட்ட பின்பு இனி -மேல் உள்ள காலம் எல்லாம்-யமுனைத் துறைவர் இணை யடி -என்பது ஆளவந்தார் திருவடியான பெரிய நம்பியை குறிப்பால் உணர்த்துகிறது என்றும் கூறுவர்-

நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றிப்
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அக்தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச இனி நாம் பழுதே
யகலும் பொருள் என் பயன் இருவோருக்கும் ஆன பின்னே – -48
-எனக்கு-ஸ்வரூப லாபமாய் -தேவரீருக்கு குண லாபமாய் -இப்படி நமக்கு இருவருக்கும் பிரயோசனமான பின்பு-இது அறிந்து இருக்கிற நாம் மேலுள்ள காலம் வ்யர்த்தமே அகலுகைக்கு காரணம் என் –அகலுகைக்கு ஹேது இல்லை என்று கருத்து –இருவர் இடமும் இருவர் தேட்டங்களும் இருக்க இழப்பேனோ-உன் அருள் -ராமன் சீதா அருள்களில் வாசி -அநாதி காலம் ராஷஷிகளாக திரிந்து உள்ளோம் -சம்சார ஆர்ணவத்தில் மக்நராக மூழ்கி உள்ளோம் -புன்மை இலோர் -நித்யர்களை சொல்லிற்று –நாம் பழுதே-யகலும் பொருள் என் -அமுதனார் தம்மையும் நம்மையும் –சேர்த்து அருளிச் செய்கிறார் – தம்மையும் உடையவரையும் என்றுமாம்-நாம் க்ர்த்ஜ்ஜராய் போம் அது ஒழிய நமக்கு-அகலுகை என்று ஒரு பிரயோஜனம் உண்டோ -கைவிடுகை அவருக்கு அவத்யமாக-தலைக்கட்ட கடவதாகையாலும் -பெறாப் பேறாக அடியோங்களை தேவரீர் விஷயீ கரித்துக்- கொள்ளுகையாலும்  -நிழலும் அடி தாறும் போலே அடியோங்களை அனந்யார்ஹராம் படி-அங்கீகரிக்கை ஒழிய தேவரீருக்கு அகலுகை என்ற ஒரு பிரயோஜனம் உண்டோ என்றது ஆய்த்து –எல்லா நீசதைக்கும் உறைவிடமாய் இருப்பவன் இந்த நான் ஒருவனேஉலகத்தில் இத்தகைய ஒருவனைக் காண முடியாது .ஆகையால் எம்பெருமானரேதேவரீர் உடைய வீறு பெற்ற கருணையே எனக்கு கதி –

இருந்தேன் இருவினை பாசம் கழற்றி இன்றி யானிறையும்
வருந்தேன் இனி எம் இராமானுசன் மன்னு மா மலர்த்தாள்
பொருந்தா நிலைவுடைப் புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மை செய்யாப்
பெரும் தேவரைப் பரவும் பெரியோர் தம் கழல் பிடித்தே – -62-அவர்கள் ஸ்வபாவத்துக்கு தோற்று ஸ்தோத்ரம் பண்ணா நின்று உள்ளமகா பிரபாவரானவர்களுடைய திருவடிகளைப் பற்றி-இன்று புண்ய பாப ரூபத்தாலே உபய விதமாய் இருந்துள்ள கர்ம பாச விநிர்முக்தனாய் -க்ருதக்ருத்யனாய் -நிர்ப்பரனாய் இருந்தேன் .–இப்படி இருந்த நான் இனி அத்யல்பமும் துக்கத்தில் அன்வயியேன்.கர்மம் கிடக்கில் இறே துக்கம் வருவது என்று கருத்து-கூரத் ஆழ்வான் திருவடிகளைப் பற்றி – இன்று இருவினைப் பாசம் கழற்றி -இருந்தேன்-இன்று யான் இறையும் வருந்தேன் இனி -இப்போது நான் ஷண மாத்ரமானாலும் சம்சார துக்கத்தால் கிலேசப்பட கடவேன் அல்லேன் –அத்ரைவ ஸ்ரீ ரெங்கே சுகமாஸ்வ –என்றபடி-சம்சார வெக்காயம் ஒரு ஷண மாத்ரமும் தட்டாதே சர்வதா ஆனந்த ரச அனுபவத்தோடு-இருக்கக் கடவேன் என்றது ஆய்த்து –யான் இன்று பாசம் கழற்றி இருந்தேன் -இனி இறையும் வருந்தேன் -என்று இயைக்க-யான் என்பதை முன்னும் பின்னும் கூட்டுக .

சோர்வின்றி வுன்தன் துணை அடிக்கீழ் தொண்டு பட்டவர் பால்
சார்வின்றி நின்ற வெனக்கு அரங்கன் செய்ய தாளிணைகள்
பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமானுச இனி யுன்
சீரொன்றிய கருணைக்கு இல்லைமாறு தெரிவுறிலே – –
81-பாகவத சேஷத்வ நிஷ்டர்க்கு ஒழிய தம் திருவடிகளை விட்டுப் பேராத நிலை இல்லையாம்படி -இருக்கும் -பெரிய பெருமாளுடைய திரு மேனி நிறத்துக்கு -பரபாகமான சிவப்பையும்-சேர்த்தி அழகையும் உடைய திருவடிகளை ஒரு காலமும் விட்டு நீங்காத படியாக இன்று பெறுவித்து அருளினவரே ! இப்படியான பின்பு தேவரீர் உடைய கௌரவ யுக்தையாய் இருந்துள்ள க்ருபைக்கு ஆராயும் அளவில் ஓர் ஒப்பு இல்லை .-பெரிய பெருமாள் உடைய திருவடிகளில் சக்தனாய் -அந்த கர்வத்தாலே ததீயர் உடைய ப்ரபாபவத்தை அறியப் பெறாதே  -தேவரீர் திருவடிகளுக்கு சேஷமாய் இருப்பவர் பக்கல் சேராது ஒழிந்த எனக்கு அத்தை இன்று லபித்தது அருளின தேவரீர் உடைய அப்ரதிம பிரபாவதியான கிருபைக்கு –ஆராய்ந்து பார்க்கில் – ஒருவரும் சத்ர்சர் இல்லை-பாகவத சேஷத்வத்தின் பயனாக அரங்கன் செய்ய தாளிணைகள் பெறுவித்ததாக கூறாமல் நேரே பாகவத சேஷத்வத்தையே பெறுவித்ததாக உரை கூறலுமாம் 

பற்றா மனிசரைப் பற்றி அப் பற்று விடாதவரே
உற்றார் என உழன்றோடி நையேன் இனி ஒள்ளியநூல்
கற்றார் பரவும் இராமானுசனைக் கருதும் உள்ளம்
பெற்றார் யவர் அவர் எம்மை நின்றாளும் பெரியவரே – – 86-ஒன்றுக்கும் பற்றாத சூத்திர மனுஷ்யரை ஆஸ்ரயித்து அந்த ஆஸ்ரயணம்  விடாதேநிற்கிறவர்களையே பந்துக்கள் என்று -அனுசந்தித்து -அவர்கள் பின்னே திரிந்து -உழன்று –அவர்கள் விஷயமான ப்ராவண்யத்தாலே -அவர்கள் முகத்திலே விழிக்க பெறுவது -எப்போது-என்று ஓடி -அவர்கள் உடைய சம்ச்லேஷ விச்லேஷங்களில் உண்டான ஹர்ஷ  சோகங்களாலே -இனி சிதிலன் ஆகேன் –தத்வ ஹித புருஷார்த்தங்களை சூவ்யக்தமாக பிரகாசிக்கும் சாஸ்த்ரங்களைஅதிகரித்து இருக்குமவர்கள் -தங்கள் கல்விக்கு பிரயோஜனம் இது என்று –பிரேமத்தாலே அடைவு கெட ஸ்தோத்ரம் பண்ணா நின்றுள்ளஎம்பெருமானாரை அனுசந்திக்கையே யாத்ரையாய் இருக்கும் மனசை நிதி பெற்றால் போலே-லபித்தது இருக்குமவர்கள் -யாவர் சிலர் –அவர்கள் குல சரண கோத்ரங்கள்  ஏதேனுமாக வமையும் –அவர்கள் நம்மை இவ்வாத்மா உள்ளளவும் ஒருபடிப்பட அடிமை கொள்ளும் மகானுபாவர் –ஓடினேன் ஓடி –வாடினேன் வாடி -முன்னம் -நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -கலியன்-நான் கண்டு கொண்டேன் ராமானுசா என்னும் நாமம் -என்கிறார்-நையேன் இனி -எம்பெருமானார் விஷயீ-காரத்தை பெற்ற பின் இப்படி செய்து சிதிலன் ஆகேன் -இது காறும் நைந்தது போதும் .இனி மேல் உழன்று ஓடி நிலை குலையும் நிலையே எனக்கு ஏற்படாது -அற்ப மனிசரைப் பற்றி அவரை உற்றாரஎன உழன்று ஓடி நைந்தேன் –-இது நானாக தேடிக் கொண்ட கேடு-இன்று பெரியவர் என்னை அபிமானித்து அங்கன் நைய விடாது ஆள்கின்றனர் .இது ஹேது எதுவும் இன்றி எனக்கு கிடைத்த பேரும் பேறு -என்ற  வியந்து பேசுகிறார் .

இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னும் நரகிலிட்டுச்
சுடுமே யவற்றைத் தொடர்தரு தொல்லைச் சுழல் பிறப்பில்
நடுமே யினி நம் இராமானுசன் நம்மை நம் வசத்தே

விடுமே சரணமென்றால் மனமே நையல் மேவுதற்கே –-98 –தம்மை உத்தரிப்பிக்கைக்காக வந்து அவதரித்த எம்பெருமானார் –தேவரே சரணம் -என்று ஓர் உக்தி மாதரம் பண்ணினால் -பிரகிருதி வச்யருக்கு சப்தாதி போக விஷயங்களாலே இனிதாக தோற்றி இருக்கும் ஸ்வர்க்கத்திலே இட்டு வைப்பாரோ –தம் திருவடிகளைப் பற்றின பின்பும் நரகத்திலே இட்டு வைத்து தபிப்பிப்பரோ – அந்த ஸ்வர்க்க நரக அனுபவத்துக்கு ஈடான கர்மம் ஜென்மத்துக்கு உருப்பாகையாலே – அவற்றை அநுசரித்து கொண்டு இருப்பதாய் -அநாதியாய் -வளைய வளைய வரா நின்றுள்ள-ஜன்மத்திலே நிறுத்துவரோ –மேலுள்ள காலம் நம்மை நம்முடைய ருசி அநு குணமாக விடுவரோ –ஆன பின்பு ப்ராப்தி நிமித்தமாக-நெஞ்சே சிதிலமாகாதே கொள் –யுக்தி மாத்திரமே அமையும்-அவன் ஈஸ்வரன் ஸ்வ தந்த்ரன் ஸ்வதந்த்ரம் கொடுப்பான் –இவர் பாரதந்த்ரர் -நமக்கு பாரதந்தர்யம் கொடுத்து நம்மை தன் வசத்தே சேர்த்து கொள்கிறார் –அவன் நம்  கர்மம் பார்ப்பான் இவர் தம் கிருபை ஒன்றையே பார்ப்பார்-எம்பெருமானார் திருவடிகளை ஆஸ்ரயித்து- தனக்கே யாக எனைக் கொள்ளும் ஏதே -என்னும்படியான நிஷ்கர்ஷத்தைப் பெற்ற   அடியோங்களை –அப்ராப்தமானவை ஒன்றும் தட்டாதபடி பண்ணி அருளுவார்எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பும் -பிரபன்னராய் -சரம பர்வ நிஷ்டராய் இருக்கும்-நம்மை உபாசகரைப் போலே ப்ராப்ய அவசான பர்யந்தம் சம்சார வெக்காயம் தட்டும்படி காட்டிக் கொடார்எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே – என்று-இவ்வர்த்தத்தை பிரதம பர்வத்தில் திரு மழிசைப் பிரானும் அருளிச் செய்தார் இறேஸ்வ தந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே பிரசங்கம்  –பயம் அபயம் -இரண்டும்-மாறி மாறி நடப்பது -தான் உள்ளது -என்னும் ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்தி

போந்ததென் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனதடிப் போதில்  ஒண் சீ
ராம்  தெளி தேனுண்டமர்ந்திட வேண்டி நின் பாலதுவே
ஈந்திட வேண்டும் இராமானுச இதுவன்றி யொன்றும்
மாந்தகில்லாது இனிமற்றொன்று காட்டி மயக்கிடலே – – 100-
மற்றொன்றை கொடுத்தருளிற்றாகிலும் -அம்ருதாசிக்குப் புல்லை இட்டால் மிடற்றுக்கு-கீழே இழியாதாப் போலே ஈது ஒழிய வேறு ஒன்றையும் புஜிக்க  மாட்டாது –-தேவரீர் நினைத்தால் அதுவும் செய்விக்கலாம் – இனி வேறொன்றைக் காட்டி மயங்கப் பண்ணாது ஒழிய வேணும் -வேறே காட்டி மயக்கிடாமல் இதிலே ஸ்திரமாக  நிற்கும் படி -பண்ணி அருள வேணும்--பல நீ காட்டிப் படுப்பாயோ இன்னம் கெடுப்பாயோ -நெறி காட்டி  நீக்குதியோ-என்று நம் ஆழ்வாரும் இவ்வர்த்தத்தை பிரதம பர்வத்தில் அனுசந்தித்து அருளினார் இறே-தெளி தேனுக்கு மாற்றாக காட்டும்மற்று ஓன்று மது சூதநனின் தேனே மலரும் திருப்பாதம் -என்பது அமுதனார் உட் கருத்து .  –இனி மற்று ஓன்று காட்டி மயக்கிடிலே -இப்படியான பின்பு வேறு ஒரு விஷயத்தை காட்டி-மோகிப்பிக்க வேண்டா –மயக்கம் -மோகம் –பகவத் விஷயத்தை என்று சொல்ல அருவருத்து மற்று ஓன்று காட்டி – என்று சொல்லுகிறார் காணும் –உனது அடிப் போதில் என்னவே அமைந்து இருக்க -நின் பால் -என்று மிகை படக் கூறியது-மற்றவர் பால் போதராது -நின்பாலே போந்து அமர்ந்திடலை வலி வுறுத்துவதால்-மற்றவருக்கு உரியர் ஆகாமை காட்டிற்றுஅதுவே ஈந்திட வேண்டும் என்பதனால் எம்பெருமானாரே இன்பம் தரும் உபாயம் என்பது பெற்றோம்-உண்டு அமர்ந்திடப் போனது தானாகவோ அன்றிப் பிறர் மூலமாகவோ அல்லாமல்-எம்பெருமானாராலேயே அதனைப் பெற வேண்டி இருத்தலின் அவரன்றி வேறு உபாயம் இன்மை-தோற்றுகிறது .இதுவன்றி ஒன்றும் மாந்த கில்லாது -என்று வெளிப்படையாகவே எம்பெருமானார் அன்றி வேறு போக்கியம்-இல்லாமை சொல்லப் படுகிறது ..இப்படி ஆகார த்ரயமும் -சொல்லிற்று ஆயிற்று –

——————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மணவாள மா முனி நூற்றந்தாதி -ஸ்ரீ அனந்தாழ்வான் எனப்படும் இராமநாதபுரம் சதாவதானம் முத்துஸாமி யையங்கார் ஸ்வாமிகள்-

September 20, 2025

ஸ்ரீ மணவாள மா முனி நூற்றந்தாதி –

காப்பு,
நம்மாழ்வார்‌.
மன்னு புகழ்க் கோயின் மணவாள மா மானிவன்‌
தன்னடி மீதந்தாதி சாத்தவே-யின்னமுதின்‌
செந் தமிழால் வேதச் செழும் பொருளை மா நிலத்தே
தந் தருண் மாறன் தாள் சரண்‌-

எம்பெருமானார்‌
தாடொடர்பு நின் பாற்றழுவா தவர்க்கிலை நம்‌
வீட்டை தலென்று விளம்ப வரி–நீடணையாய்‌
நின்றான் யதிபதியாய் நீணிலத்திலே யுதித்தான்
என் தான் நமக்கேது இடர்

நூல்
பூமாதிலங்கு மணி மார்பரங்கர் புகழ்ந்‌திடத்தென்‌
பா மாறன் வேதத் தமிழின் பொருளைப் பகர்ந் தருளஞ்‌
சீமான் குருகை மணவாள மாமுனி சேவடியாம்
தே மா நிழலுண்ட டைவார் விடாய் கெடச் செய்திடுமே
(1)

செய்யனந் தாமரைப் போதுற்று றங்கும் திருவரங்கத்‌
தையனந்தாதருண் மந்திர முண்டஃதன்‌றி வெண்மை
மெய்யனந்தாழ்வான்‌ மணவாள மாமுனி மென் கழலுண்‌டு
உய்யனர்தாப மறத் தொலைத்தின்ப முறுவதற்கே (2)

உறு பொருளின்பமுந் தாயுமெய்த்தந்தையு மொண் குருவு
நறு மலரிந்திரை நாதனு மற்று மிந் நானிலத்தோர்‌
சிறுமையை நீக்கு மிராமாநுசனெனச் சிந்தை செயுந்
திறமையன் கோயின் மணவாள மா முனித் தேசிகனே
(3)

தேசிகர் தங்களடிப்போ துளத்திடைச் சேர்த்‌தி யவர்‌
பேசிய நூல் வழிச் சேர்‌ திருவாய் மொழிப் பிள்ளை யன்பால்‌
வீசிய கீர்த்தி மணவாள மாமுனி மென் கழலை
நேசியு நீணிலத்தீரு மதுட்டுயர் நீங்கடுமே
–4-

நீங்கிய தீய வினையாளர் கூறு நெறிகளெலாந்
தேங்கின வெங்கு மகிழ் மாறன்‌ வேதச் செழுந் தமிழ்‌ க
டாங்கின மன்னுயிர் கண் மால் பரனெனச் சாற்றுதலை
யோங்கின ஞான மணவாள யோகி வந்துற்ற பின்பே-
-5-

உற்றினிதோங்கு மனமே யுனக்கோருறுதி சொல்வன்
இற்றிட வேண்டும் வினைப் பூரியருடனே சித்திடேன்
அற்றவர் போற்று மணவாள மாமுனி நம்பி யருள்‌
பெற்றிடினீதரப் பெற்றிடுவார் பலர் பேரின்பமே
-6-

பேரியல் கொண்ட பெருமாளருளிற் பெருமை பெற்ற
வாரியன் கோயினங் கந்தாடை யண்ணனை யார்ந்த பின் மெய்க்
குரியனாய மணவாள மா முனி தொல் புகழைப்‌
பாரினிற் பாடிப் பயன் பெறலெற்கொரு பாரமன்றே
-7-

பாராளு மன்னர் பதி தொறும் போயவர்பால் வருந்திச்
சிராயனந்தங் கவி பாடுவீர் நறுஞ் செங்கமலத்‌
தாராளன் கோயின் மணவாள மாமுனி தாளிணையை
யாராதனஞ் செயிலெய்திடு மிங்கும் அங்கு மானந்தமே
–8-

ஆனந்த மிக்கு மணவாள மாமுனி யன்பெனக் கொண்
ஞானந்த வாத பெரியோரவன் பெயர் நாடியதாற்‌
றேனந்துமின் சுவையாம் பா வெனத் துதி செய்வரல்லா
லீனந்தரும் பா வென விகழாரிதை யென்றைக்குமே
–9-

என்றிலங் காரணங் காணா வரும் பொருளிந் திரைப் பெ
ணின்றிலங்கஞ்சன மேனி யம்மான்‌ செய் நிய மனத்தா
லொன்றிய கீர்த்தி யிராமாநுசன் பின்‌ புயிர்க்கிரங்கி
யின்றதை யோம்ப மணவாள யோகியி னெய்தினனே
–10-

எய்‌திய நள்ளிருள் போமாறு லககலிற் கடனெய்‌
பெய்தினனாஞ் சுடரேற்றிய பொய்கைப் பிரான்‌ றமிழின்‌
மெய் தெரிந்தோது மணவாள மாமுனி மேவிய திப்‌
பொய் திகழ் ஞாலத்‌ துயிர்க்கின் மீந்து புரந்திடவே–11-

புரந்ரனாமெனப் பூ பதி யாகிப் பொருண் முழுதுந்
தரந்தரம் பெற்றிட வேண்டி வந்துன்‌றனைச் சார்ந்திலனின்‌
னிரந்தர மெய் யன்புடையார் பதத் தென்னினைவு நிற்க
வரந்தர வேண்டு மெய்த் தேவே மணவாள மாமுனியே
-12-

மா மகிழ் மாறன்‌ றமிழார் கலிக் கண் வரை யெனத்தன்‌
னாமடுத்தாரியர்‌ நூலரவார்த நலி தரச் செய்‌
தே மதிவாய்ந்த நரர்க்கமுதாப் பொருளீந்தது காண்‌
கோமலி கீர்‌த்தி மணவாள மாமுனிக் கொண்டனின்றே
-13-

கொண்ட தன்னுள்ளத் திருள் போயிறை யருள் கூடி யுய்யப்‌
பண்டை நன் ஞான நிறை விளக்கேற்றிய பண்பினன் சீர்‌த்
தொண்டர்கள் போற்றுங் கடன் மல்லை நாதன் றுணை யடியை
யண்டி நின்றேந்து மணவாள மாமுனி யாரியனே–14-

ஆரிருண் மாண்ட பின் கோவலுண் மா மலராள் பதியை
நேரினிற் கண்டு நெடுந் தமிழ் பாடிய நின்‌மலன் றன்‌
சீரினிற் செல்லு மணவாள யோகியைச் சிந்தை செயில்‌
வேரினிச் செல்லாதறுப்பான வனம் வினைகளையே
–15-

வினையாளர் கூறுஞ் சமயங்கடோறும் விழைந்து முத்தி
நினைவேதுந் தோன்‌றற் கிடந்தந்திலவென நீக்கி யரி
தனையே துதிக்கு மழிசைக் கிறைவன்‌ றமிழ்ப் பொருட்டே
னினையே பருகு மணவாள மாமுனி யென் குருவே-16-

குருகை வந்தோங்கு மகிழ் மாறன் வேதக் குரை கடல் க
டருந் தொடைச் சொல்லமுதுட் கொடு கோயிற் றடவரை நின்‌
நிரும்புவிமீதுயிர்க் கூழின் புறப் பொருளே பொழிந்து
வரும் புயல் காணு மணவாள மா முனி மாதவனே-17-

மாதவன் வேங்கடத் தெவ் வுருவாக வுமாவனென
வோதிய சேரலர் கோன் குலசேகரன் ஓண்டமிழ்க்கண்
ஆதரங் கொண்ட மணவாள மாமுனிக் கனமிலரிப்‌
பூதலத்தே வினைக் காளாக நின்று புழுங்குவரே
(18)

புழுங்கும் வழுதிப் பெருமான் மனத்‌திருள் போக வின்பத்‌
தழுங்கும்படி மால் பரமென்றுணர்த்தும் அமலனின்சொல்‌
விழுங்குங் குணங் கொண் மணவாள மாமுனி மேய பின்பே
யொழுங்கும் பொறையுங் குணமுமறிவு முயிர்க்குற்றவே —
(19)

உயிர்க்கின்ப நல்கும் பொருட்டன்று வில்லிபுத்‌தூரெழுஞ் செங்
கயற் கண்ணி யாயர் தங் கன்னிகையா யநுசாரஞ் செய்து
தயிர்க்கஞ்சி யாடும் பிரான்‌ றிருப் பள்ளி யிற்றந்த தமிழ்ப்‌
பயிர்க்கம்புதங் காண் மணவாள மா முனிப் பண்டிதனே-
-20-

பண்டரும் வேதப் பசுந் தமிழ் மாலையும் பைந் துளவத்‌
தண்டொடையுங் கொடு தென்னரகங் கேசனைத் தாழ்ந் தெழுப்புந்
தொண்டர் தம் பாதத் துகளடிப் போதைத் தொழுமவரை
மண்டி நின்றேத்து மணவாள மாமுனி வையகத்தே
(21)

வையம் புகழ வரு பாணர் கோனடிவாழ்த்‌து மெங்க
ளையன் குருகை மணவாள மா முனியன் பெவர்க்குஞ்‌
செய்யுங் கிரிசைகள் கேளீரிகத்‌தினிச் சென்‌ம வினை
நையும்படி செய்தழியாத முத்தியு நல்‌கடுமே
–22-

இடுமே வினைக் கணிடுவதல்லா னரகெய்து வித்த
விடுமே பவமிப் பவத்தை மெய்யென்று விரும்பிய வத்‌
தொடுமே யுழலுமவர்‌ தம் முறவை யொழித் தருட் கண்‌
கொடு மேனிலவு மணவாள யோகியைக் கூடுளமே (23)

கூடாரை வெல்லும் பெருமாளரங்கர் குணங்களைக் கொண்‌
டாடாவவரதருள் பெற்றிருப்பினு மாங்கவர்க்குன்‌
னேடார் மலர்ப் பதத்துண்டேற்றொடர் பவரீவர் முத்தி
வீடாருமின்ப மணவாள மா முனி மெய்ம்மை யிதே–
24-

மையார் கருங்கண் மடவார்‌ மயக்கின்‌ மயங்கியவர்‌
கையாளினின்று மவமே புரிந்துங்கலங்‌கி யிந்தப்‌
பொய்யா முலகிலுழல்கின்‌ற வென்னைப் புரந்திடுத
லையா கடமை மணவாள மா முனி யற்புதனே–25-

அற்புத நங்கை வடிவினின்‌றே மடலானறையூர்ப்‌
பொற் பமர் பூமகள் கேள்வனைப் பாடிப் புகழ்ந்திடு நங்‌
கற்பக மங்கைப் பரகாலன்‌ செஞ்சொற் கவிகளினு
ணற் பொருடேரு மணவாள மாமுனி நாயகமே–26-

நாயக நங்கை மகவெனத் தோன்‌றிய நம்பி யன்றிப்‌
பேயக மற்றொரு செய்வந் தொழாதெனப் பேசிய மெய்த்‌
தூய குணத் திருக்கோளூரறை தன் றுணை யடியை
நேயம் வைத்தேத்து மணவாள மா முனி நீணிலத்தே–27-

நிலத்‌தின்‌ மறைப் பொருண்முற்றுந் தமிழினிகழ்த்திய கோ
நலத்தின் பெருமை யவன் பாவருமை நவை யிலுயிரப்‌
புலத்திற் றெரிக்க மணவாள மா முனி போந்திலனேற்‌
றலத்திற் புதைத்த பொருள் போல நின்று தளர்வுறுமே–28-

தளரா ரிடுக்கண்கள் எய்‌தினு மின்பங்கள் சார்ந்திடினுங்‌
கிளரார் குருகைப் பெருமான்‌ மறையிற் கெழுமியசொல்‌
வளரா நிலவும்படி செய்த நாதமுனி மலர்த்தா
ளுளராரையுஞ் சொன் மணவாள யோகியை யுன்னினரே
-29-

உன்னற்கரிய மறைகளை யாயிர மொண் டமிழாற்‌
பன்னற்குலகில் வருஞ் சடகோபனைப் பத்தி யென்று
மன்னப் பதிவைத்திறைஞ்சு மணவாள மாமுனியா
மென்னப் பனுண்டெனக் கிங்கொரு நாளும் இடரில்லையே–3
0-

இட.ங்கொண்ட கீர்த்தி மணவாள மாமுனி யென்னி பம்பூச்‌
தடங்கொண்ட தென்குருகாபுரி மாறன்‌ றமிழ் மறையின்‌
நிடங் கொண்ட வின்பப்பொருண் மதம்பாயச் சினத்துந்து முக்கோ
லுடன் கொண்வந்த வப்போதற்றவா திய ரூக்கங்களே-31-

கள்ளார் மலர்ப்பொழிற் றென்னரங்கேசனைக் கண்டு தொழு
துள்ளாருறவை யொழித்‌ துய்யக் கொண்டார் தமொண் கழற்கண்‌
விள்ளாத வன்பன் மணவாள மாமுனி மென்பதநீர்‌
கொள்ளா ரிகத்தினிற்றள்ளார் பிறப்பின் கொடுமையையே
-32-

கொடுப்பா னருளைக் கொடுத்‌தும் வினைகள் குலைந்திட வந்
தடுப்பா னெதிரினடுத்‌ தின்ப மென்னு மலை கடற் கண்‌
மடுப்பானிகத்தின்‌ மடுத்ததன் பின் றிருமால் பதத்தில்‌
விடுப்பான்‌ குருகை மணவாள யோகியை மேவிடினே
-33-

மேவார் தமக்கிலை யெங்கோன ரங்கன் விரை மலர்ச் செம்‌
பூவார் கழலைப் பொருந்தி நல்லின்பம் புசித்‌திடுத
லாவாவெனத் திரிந்தாலென் பயனுண்டடை மனமே
பாவார் குருகை மணவாள மாமுனி பாதத்தையே
–34-

பாதகராயினுந் தஞ்ச நின்றாளெனப் பற்றிலவர்‌
மேதக வாய்ந்து நல்லின்ப மெய்ஞ்ஞானம் கண்‌ மேவியிகத்‌
தேதகவோடழியா முத்தராக விருப்பரென்றும்‌
போதகமங்கொண் மணவாள மாமுனிப் புண்ணியனே
-35-

புண்ணிய நோன்பு கண் முற்றுந் துறந்து புகலெனையே
நண்ணுதி யானினைச் செய்கு வல் பாவநவை யறவென்‌
றண்ணன் முன்போதிய நீதியெலா நீயவதரிக்க
மண்ணினிற்றேர்ந்ததுயிர் காண் மணவாள மாமுனியே–36-

முனிந்தாலும் தள்ளி மிதித்தாலும் சேயனை முன்பவடன்‌
மனந்தானிரங்கும் படிக்கமுமல்லது மாட்டகலா
தினன்றானிகர்க்கு மணவாளமாமுனி யென்னப்ப நீ
சினந்தாயெனினும் விடாதுன்கழலை யென் சிந்தனையே-37-

சிந்திக்க வின்பம் தருமரங்கேச ன் திருவருளால்
பந்தித்த தொல் வினை தீர் மணக்கால் நம்பி பாதத்தையே
வந்திக்குங் கோயின் மணவாள மாமுனி வைபவ நும்‌
புந்திக்கணின்பம் புகட்டும் புலவீர் புகழுமினே–
38-

புகழும் பொருளும் பொருந்தி யிப்பூதலம் போற்ற வின்பச்‌
தகழுமவரு மழியா திருந்திலராதவினால்
இகழும் புவி வாழ்வினை வெறுத் துன்னடி யெய்‌தி யன்பிற்‌
றிகழும்படி மணவாள மாமுனி செய்தருளே
-39-

௮ருளாழி யேந்தும் பெருமான் சமயத்தணி விளக்கா
லிருள் யாவு நீக்கும் யமுனைத்‌ துறைவ னிணையடி தன்‌
பொருளா யுகந்த மணவாள மாமுனி பூங்கழலைக்‌
தெருளார்ந்து இறைஞ்சு மவர்க் கினி மேலில்லை சென்மங்களே-40-

சென்‌மப் பெரும்பிணிக் குள்ளுற்றுழலுஞ் சிறியவர் தங்‌
கன்மக் கடுங் கனற் கோர் கடைக் காரெனக் கண்ண பிரான்‌
றன்மப் பயிர்க்கு நல்வித்தெனத் தோன்றிய தாழ்விலியுள்‌
வன்மத்தை நீக்கு மணவாள மாமுனி வண்மை நன்றே–41-

வண்மைப் பராங்குசன் றாளே கதியென வாழ்த்‌து மனச்‌
திண்மைப் பரம குருவாயுதித்த திருவரங்கத்‌
துண்மைப் பொருடேர் பெருமாளரைய ரொளிர் கழல் சேர்‌
தண்மைக் குணத்து மணவாள மாமுனி தாள் சரணே -42-

தாளானிலம் பண்டளந் தோனழகன்‌ றனக் கன்பு கொண்‌
டாளாகி நின்ற திருமாலை யாண்டா னருளமுதுண்‌
ணீளார் குணத்து மணவாள மாமுனி நீர்மை சொல
மாளாதிகத் திற்றலை யாயிரங் கொண்ட வாளகிக்கே-43-

வாசம் கலந்த துழாய் மாலை சூடி வரும் பெருமான்
நேசம் கலந்த திருக்கோட்டி நம்பி நிலை யுணர்ந்து
பேசும் புகழெம்மிராமா நுசனடி பெற்றிலகு
தாசன் குருகை மணவாள மாமுனி தாள் கதியே–44-

கதி காட்டு நூலிதுவோ வதுவோ வெனக் கற்று நுங்கண்‌
மதி காட்டும் பல் வழிச் சென்றுழல்வீர்‌ திருமால ருணற்‌
பதி காட்டு மின்பப் பயன் காட்டி மாறன்‌ பழ மறை யின்‌
றுதி காட்டுங் கோயின்‌ மணவாள மாமுனி சொன்னலமே–45-

சொல்லான்‌ மறைப் பொருளெல்லாந் தமிழிற்று லங்கிடச் செய்‌
நல்லார் குருகை வகுளா பரண னகு மலர்த்தா
ளல்லா திறைஞ்சாத் திருமலை நம்பி யடியலதுள்‌
புல்லான்றுதியான்‌ மணவாள மாமுனி பூதலத்தே (46)

பூதங்கவர் தெறுக்கால் கொட்டுலை கவி போன்‌ற நெஞ்சை
யேதம் படர் புலத்தூடுற்றுழலா திருத்‌தி யின்‌பப்‌
போதம் பயிற்றிய மாறனேர் நம்பி புகழ் கொளிரு
பாதம் பரவு மணவாள மாமுனி பண்பினிதே (47)

பண்பாடளி குடைந் தூதும் துளவப் பசுந் தொடையோ
டொண் பா வணியலணி தேவராசனுகப்ப வெழு
நண் பார்தவத்துத் திருக் கச்சி நம்பி நலங்கொடிந் தத்‌
திண் பார் புரக்கு மணவாள யோகி யென் சேம வைப்பே–48

வைப்பாய வான்‌ பொருளெல்லா முனது மலரடி யென்‌
றெப்போதும் வாழ்‌த்தி யிருக்கு மெய்ஞ்ஞானிய ரீட்ட மெனை
பிப்பாவியா ரென்றிகழா தணைக்கு நல்லின்ப மதி
தப்பாதெனக்கு மணவாள மாமுனி த்ந்தருளே (49)

அரு மா மறைப்பொருண் முற்றுந் தமிழிலருளிய வெம்‌
பெருமான் குணங் கண்டுவந்து வந்தேத்‌தும் பெரிய நம்பி
யிரு மா மலர்ப் பதத்துள்ளன்பு கொண்ட வெழிற் குருகை
வரு மா தவத்‌த மணவாள யோகி யென்‌ மா நிதியே (50)

நிதியா மறை வீந்துலகங் கலியா னிரப்புறுங்கால்‌
விதியாரனை யினருளா லெழுந்த விமலனின்ப
மதியார் குணத் தெம்மிராமாநுசன்‌ றன்‌ மலரடியே
கதியா யுகந்த மணவாள மாமுனி கார்முகிலே (51)

காரேய் கருணை யிராமாநுசன்‌ றன் கழற் கன்பினர்‌
யாரே யெனினு மவர் பான் மருவு மருங்குணத்துச்‌
சீரேய் குருகை மணவாள மாமுனிச் செல்வன்‌ றன்‌ வண்‌
பேரே துதிக்கிற் றருவானழியாப் பெரும் பதமே 52-

பெரும்பதம் வேண்டி யென் போலியர் போனிதம் பேதற்று நீ
கரும்பினு மின்சுவைப் பாமாலை தந்து கடலுலகந்
தரும் புகழ் கொண்ட விராமாநுசனடி தாழ்ந்திரந்து
வருந்திய தென்கொன் மணவாள யோகி யுன் மாய நன்றே–53-

மாயப் பெரும் பிணிக்குள்ளுற்று நாளுமடி தருமிக்‌
காயத்தை யான்‌ பரித்தேங்காது நிற்கக் கடைக் கணிப்பாய்
தா யொத்த வின்பத் திராமாநுசனடி தாழ்பவர் பா
னேயததைவைக்கு மணவாள மாமுனி நீ மகிழ்ந்தே –54-

நீ மகிழ்ந்து என் பாலருள்‌ செய வேண்டுவ னீணிலத்தோர்‌
கோ மகனாயினுமல்லா திரக்கும் குறை யுறினும்
நாமன நின் திரு நாமம் குணகணவின்‌ றெணத்தென்‌
பா மலி கீர்த்தி மணவாள மாமுனி பண்‌ணுதற்கே–55-

பண்ணார் பொழிலரங்கம் முதலாய பதிகளொரு
கண்ணாய் மவிந்த விராமாநுசற் கொடு காமரு சீர்
எண்ணார் பரவு மணவாள மாமுனி யெய்‌திய பின்‌
றண்ணார் மலர்க்கணிரண்டாகி நின்று தளிரந்ததனவே–56-

தளிர்த்தது சீலத்திராமாநுசன்‌ றன்‌ தரிசனமே
குளித்தது மன்னுயிரின்பக் கடற்குட் கொழுந் தமிழ்ப் பாத
துளித்தது நான்மறை யோடு உலகெங்கும் துழாயவன் பேர்‌
களித்தது கோயின்‌ மணவாள யோகியைக் கண்டவன்றே–57-

கண்டவ ருள்ளக் கசடறுத் தாட் கொளுங்கார் முகினேர்‌
மண்டலத் தோங்கு மிராமாச முனி வைபவ முட்‌
கொண்டறத்தே தளிர்‌ததாய் யுயிர்க்கீயுங் குருகைப் பிரான்‌
றண்டமிழ்ப் பாவை மணவாள மா முனி தண்ணளியே—58-

அளிக்குமினித்தாய கடுற்றுயிருழல ல்லலின்‌றிக்‌
களிக்குமது நல்லறத்தே தளிர்‌த்திடக் கண்டு மண் விண்‌
டுளிக்கும் புகழெம்மிராமாநுச னருட்டுய்த்‌ திரை வாய்க்‌
குளிக்கும் தவத்து மணவாள யோகி குணத்தியல்பே–59-

குணமேது தொண்டுட் குறியேது வேதக் கொழுந்தெழு நன்‌
மணமேது ஞான மணமேது தீய வலி கொள் வினைத்‌
தணவேது தன்‌ம நினைவேது பாரிற்றனமென வந்
தணவா திருக்கின்‌ மணவாள மாமுனி யாருயிர்க்கே (60)

ஆருண்டெனக் கிணை யென்றைவர் முன்‌பரு ளச்சுதன்‌ றன்‌
பேருண்டருங்கதி சேர்ப்பதற் கென்றெணும் பேய் மதியீர்‌
பாருண்ட கீர்த்தி மணவாள யோகி தன் பற்றிலர்க்குத்‌
தாருண்டு நீருண்டு சோறுண்டு பேருண்டு தாயுமுண்டே (61)

தாயுண்டு பண்ணிய தந்தை நீ யென்‌றிருப்பார் தமக்கு
வாயுண்டு நற்கதி தா வென்‌று கேட்க வோர் வண்மை யற்ற
தீயுண்ட நெஞ்சத் தென் போலியர்க் கென்னுண்டு சென்‌றிரக்க
நீ யுண்டு பண்ணின்‌ மணவாள மாமுனி நேருமன்‌றே (62)

நேரோதனத்திற் கிரங்கி நைந்தாயயினேர் விழியார்‌
வாரேர் தனத்திற்கவல முற்றாயிது வன்‌றி செஞ்சே
தாரோதுங் கீர்த்தி மணவாள மாமுனி தாணிலையு
ளாரோடுறவுண்டு லைந்தாய் வலி யுனக்கியா துளதே (63)

உளராகவென்று நினைந்தே யுரைப்பர் பல்லோர் தவத்‌துட்‌
டளரா வருந்துவர் வீணான தெய்வந் தனைப் பணிந்து
வளரா விரங்குவர் பாரின்‌ மணவாள மாமுனிவன்‌
கிளரா ருயிர்க்கின்ப நல்க வந்தேய்ததைக் கேட்டுமென்னே (64)

கேட்டா கமங்களுட னீறணீந்திரன்‌ கேடிலியென்‌
றூட்டா தரத்துலைந் தின் பா மறை தேர்ந்துகந்து வில்வக்‌
கோட்டூடு நின்று குதித்து வெங் கூற்றைக் குதித்த வெம்பார்‌
மாட்டோங்கு மன்பிற் சிறந்தோன் மணவாள மா முனியே (65)

மா மதங் கொண்ட பர வாரணங்கண் மடிய வெழுந்
தே மலி சிங்க மிராமாநுனடி யென்ன நின்ற
பூ மலி கீர்‌த்தி முதலியர் கோனருட் பொற்பை யுன்னிப்‌
பா மகிழ்ந்தோது மணவாள யோகி யென் பாக்கியமே —66-

எனக்கீந்த பேறிந்த நாலூரவனு மின்‌றெய்த வரு
டனத் தொன்று பூ மகள் கேள்வா வென்றேத்திய சற்குணத்தெம்‌
மனத்தொன்றி நின்‌ற வக்கூரேசன் றாணிலை வாழ்த்‌திடு நல்‌
லினத்தொன்று கீர்த்‌தி மணவாள மாமுனி யென்னப்பனே- (67)

என்னைப் பவக் கலிக்குள் ளுற்றுழலா தெடுத்தருள்வான்‌
மன்னித்‌ திகழ் வள்‌ளல் பட்டர்‌ தஞ்செய்ய மலரடியைப்‌
பன்னிப் பரவு மணவாள மாமுனி பான்மை யிலொன்‌
றுன்னப் பவம் போமெனி லென்னுறா தருளுற்றவர்க்கே (68)

உற்றார் கலிக்கணுழல்வார் தமக்குதவோர் தருவாய்க்
கற்றா நிகர்க்குங் குணங் கொணஞ்சீயர் கழறிய நூல்‌
பெற்றார்க்குமோது மணவாள மாமுனி பேர் சொலவாய்‌
சற்றே திறக்கிற்றிறந்திடு முத்தித் தலைக் கதவே (69)

தலையாயிரங் கொண்ட சேடன் றன்‌ மேற்றுயிறண்டுளவ
மலையார் புயத்‌துத்‌ திருவரங்கேசன்‌ வடிவெனவிவ்‌
வலையார் நிலத்‌திற் பொலிந்த நம்பிள்ளை யருளினுக்கோர்‌
நிலையாய கோயின் மணவாள யோகி யென்னெஞ்சத்தனே (70)

நெஞ்சிற் கறை யற்றிடத்‌ தமிழ் வேதத்‌துணீள்‌ பொருளை
யஞ் சொற்களால் வெளியாக்கும் பெரிய வாச்சான் பிள்ளையைக்‌
கொஞ்சிப் பரவு மணவாள யோகி முக்கோல் கொண்ட திக்‌
கஞ்சத்தலைப் புவிமீதுயிர்க் கின்பினைக் காட்டுதற்கே –71-

காட்டாவின்பின்‌ செஞ்சிலம்படி நோவக் களித்தெழுங்கா
ரூட்டாக மங்கை யுறை மார்பரங்கனுகக்க விரு
பீட்டாளர் தந்த வடக்குத்‌ திரு வீதிப் பிள்ளை யந்தாள்‌
சூட்டாற் பரிக்கு மணவாள யோகி யுட் சோர்விலனே (72)

சோர்வுற்ற மன்னுயிர்க்குள்ளன்பு தூண்டத் துணிந்து மறைச
சார்வுற்ற மெய்ப் பொருளெல்லாந் தமிழிடைத் தந்த நந்தாத்
தேர்வுற்ற ஞானத் துலகாரிய னருட் செவ்வி முற்று
மார்வுற்ற சிந்தை மணவாள யோகி யுண்டாள்வதற்கே –73-

ஆளாகி நிற்பவர்க் கில்லை நெஞ்சே யிகத்தல்லலென்‌று
நீளாசலாம் புயத்‌ திந்திரையோடுறை நேமி யங்கைக்‌
காளாம்புதத் தெந்தை நல் வீட்டினின்பமுங்கைக் கொள்வராற்‌
றாளாளன்‌ கோயின் மணவாள மாமுனி தாளிணைக்கே (74)

இணையாருனக்குண்டு நெஞ்சே யறிவிலிதுவதுவென்‌
றணையா தணைந்தவவரோ டுறவறலன்‌றி யன்பிற்‌
றுணையாங் குருகை மணவாள மாமுனி தொண்டர் தங்க
டிணையாரிடந் தொறும் போய்ப் பணிவானருள் செய்தனையே (75)

நையேனினி யிந்த நானிலத்தே யொளிர் ஞாயிறென
மையேயகற்றித் திருவாய் மொழிப் பிள்ளை வண்மை சொல்லி
மெய்யே பரவு மணவாள மாமுனி மேற் றுதிகள்‌
செய்யேனெனினுமுள் செய்தவர் தாடொழச் சிந்தித்தே –76-

சிந்தாகுல மறுத்தெங் கோனரங்கன்‌ றிருவடி யுட்‌
டந்தாதரத்திற் பணி பொழுதோர் துயர் சாற்ற வுன்னிச்
செந்தாதிலகிய வாடை முக்கோல் கொடு சீர் யதியாய்‌
வந்தானுலகை மணவாள மாமுனி வாழ்விக்கவே (77)

வாழ்வைப் பெரிதென வெண்ணி நையேலதுவான்‌ மினினும்
தாழ்வுற்றழி தருந்தன்மை யதாதலிற் சார்ந்திலர்‌ நூல்‌
சூழ்வுற்ற ஞானியர் நெஞ்சே வெறுத்தச்சுதனருட் க
ணாழ்வுற்ற கோயின் மணவாள மாமுனிக்கன்பு கொள்ளே (78)

அன்பே யுருக்கொடு நின்‌றது போனின்றனைத்‌ தயிர்க்குந்
துன்பே யகற்றி யறத்தே பயிற்றி யித் தொல்லுலகி
லின்பே கொடுக்கு மணவாள மாமுனி யிங்கு வந்த
பின்பே வருத்தந் தவிர்‌ந்தாரெமனும் பிரமனுமே (79)

மன மாசகற்றத் திருவரங்கேசன் மகி தலத்திற்‌
றனமா யுகந்த விராமாநுச னிரு தாளிணை மீக்
கென மா வெழுந்து மணவாள மாமுனி காதல் கொடு
தினமே பொழிந்த கலி யன்றி யுண்டு கொல் செப்புதற்கே–80-

செப்பார் குணத் தெம்மிராமாநுசன்‌ தன்‌ திருவடியை
யெப்போதும் வாழ்த்து மணவாள யோகியை யேத்தி யென்றுந்‌
தப்பாதவன் செய் திருவாய் மொழி நூற்றந்தாதியை யுள்‌
வைப்பார்‌ தமக்கிணை பாரீர் எவருண்டு மாதலத்தே (81)

தலத்தாரணந் தமிழ் தந்த நம்மாழ்வார் சரித்‌திர நூல்‌
வலத்தாசிரியா்‌ தம் வைபவ மன்னர் வரன்‌ முறை யுண்‌
மலத்தாசகற்ற வுபதேச ரத்‌தின மாலை யென்றே
நலத்தாலுரைத்தான்‌ மணவாள மாமுனி நானிலத்தே (82)

நானினி வேண்டுவதுண்டு கொன் முற்றுணர் நாயக வுன்‌
பானினை வொன்றிப் பரவுவதன்றி யோர் பற்றுமின்‌றி
மேனிலை காண மணவாள மாமுனி மெய்ச் சுடேரே
நீ நிழல் போற் பிரியாதுறு மென்னுள நேர் செயவே (83)

செயலேதுமின்றி வருந்துயிருட் கொடு தேர்‌ தரவோர்‌
புயலேய் குணத் துலகாரியன்‌ செய்த பொருவில் கலை
யயலே புதைத்த மணி போற் கிடந்த வரும் பொருளி
னியலே விரித்தான்‌ மணவாள மாமுனி யெந்தை வந்தே (84)

எந்தை யிராமாநுசனடிப் போதை யெப்போது மெண்ணுஞ்‌
சிந்தையன் கோயின்‌ மணவாள யோகி தெளிதர முன்‌
செந் தமிழ் வேதத் தரும் பொருளீட்டுள சிர்மை யெலாந்
தந்தனன் காண் பிரமாணத் திரட்டென்ற சாத்திரத்தே (85)

சாத்‌திரங் கற்றும் பிறர்க்குரைத்தும் மதிற்றா மடங்காக்‌
கோத்திரரோடும் குலாவுதல் விட்டுக் குருகைப் பிரான்‌
வாய்த்திரங் காட்டு மறைப் பொருண் முற்றும் வழங்க வந்த
பாத்‌திரன் கோயின்‌ மணவாள யோகியைப் பற்று நெஞ்சே (86)

பற்றா மனிதரைப் பற்றிய தாலென் பயனுளது
நற்றா யென வெழுந்தாரு யிர்க்கின்ப நலங் கொடுக்குங்‌
கற்றார் பரவு மணவாள மாமுனி நான்‌ மலரை
யுற்றா லொழியும் பவத்தே வருத்து நும் மூழ்வினையே–87-

ஊழிக் கடுங்கனற் குள்ளுற்ற மான் போலுலைந் துலைந்து
தாழிப் பெரு வயிற்றோடுழல்வீர் நிதி தா வெனப் போ
யாழிப் புவிக்கரசானவர் பாலிரந்தால் வருமோ
வாழிப் பதநம் மணவாள யோகியை வாழ்த்தலற்றே–88-

௮ற்றவர் போற்று மணவாள யோகி யருளிய நூன்‌
முற்றுமிந் நூலிடை முற்றிலவே யெனின் மூதுலசைச்‌
சிற்ற வரங்கை யுட் சேர்ப்பதற்கா மெனிற் சிந்து வைக்கை
யிற்றவர் நீந்துதற்கே யுமென்றாலிதிலே யுமன்றே–89-

ஏயும் குணத்து மணவாள யோகி யிருந் தெண்மரைத்‌
தீயுமு யிர்க்குத் தன்‌ போலருள் செய்ய வெண்டிக் கயங்க
ளாயும் பரமத சிங்கங்களாயு மமைத்திலனேன்‌
மாயன் பொருளென்று ரைப்பதர்காங் கொலிம் மானிலத்தே-90-

மானிலத்தோங்கு தென்‌ சீ வர மங்கை வளம்பதி யுண்‌
ஞானியர் போற்று மிராமாநுச முனி நாயகத்தை
யீனமிலென் போலியர்‌ தமைக்காக்க வினிது வைத்தான்‌
கோனிலை கொண்ட மணவாளயோகி குணக்கடலே–
91-

கடலாடை மான்‌ முலை போன்‌ மலி வேங்கடக் கார் வரைக் க
ணடலாழி யங்கைப்பெருமான் பணி கொடிங் காருயிர்க
ளிடராழி நீந்த விராமாநுசமுனியை யிருத்திச்
சுடராயிலங்கு மணவாள யோகி சுகிர்‌தமென்னே-92-

சுகத்தே யுலகத்‌துயிர் வாழ்‌ தரத் திருவுள்ளம் வைத்திச்‌
செகத்தே பரவத்தூர்ப் பட்டர் பிரானெனுஞ் சீயரைக் கொண்‌
டகத்தேய் பவத்தை யறுத்து விட்டான் குருகாதிபன் சொன்‌
முகத்தே யிலகு மணவாள யோகி முறை தெரித்தே–93-

முறையோர்ந்திலா துழல்வார்‌ தமைக் கண்டுமுதமொடவர்‌
கறையே யகற்றி யுணர்வே பயிற்றிக் கதி தருவான்‌
குறையேதுமின்‌றி நம் கந்தாடை யண்ணனைக் கோயிலுக்கோ
ரிறையாக வைத்த மணவாள யோகி யன்பென் சொல்வனே–94-

சொல்லு மெறும்பி யப்பா வொடப் பிள்ளாரைத் தூவழிக் கட்‌
செல்லுங் குணத்‌தி னப்பிள்ளேயை நீரிச் செகத்‌துயிர்க
ளல்லும் பகலு மரியே துதித்திட வாக்குவிப்பா
னில்லு மினென்றான்‌ மணவாள மாமுனி நேசம் வைத்தே–95-

நேசித்து நம் திருமாலின் சமய நெறி யிகழ்ந்து
பேசித் திரியும் பிறமதத் தீயர்‌ தம் பேரடக்க
வாசற்ற பிரதிவாதி பயங்கர வண்ணனுக்கோர்‌
தேசைக் கொடுத்தான் மணவாள மாமுனி சிந்தை செய்தே-96-

சிந்திக்க விந்த மணவாள மாமுனி செய்தது போ
னந்‌தித்‌ திரைப் புவி மீதெவர் செய்தனர் நாமினி மேற்‌
பந்தித்த தொல் வினைக்குள்ளுற்று வாடும் பரிசுளதோ
வந்தித்து வாழ்த்‌தி வழி படுவாமென்‌ மட நெஞ்சமே–97-

நெஞ்சே நமக்கு மணவாள மாமுனி நீணிலத் திற்‌
செஞ்சேம முற்றிடச் செய்த விந் நன்‌மையைச் சிந்தித்திடி
னஞ்சேய் வினையு நலமாய் வீடுமொரு நாளுமதற்‌
கஞ்சேல் வருந்தே லிருப்பா யவன்‌ றனருள்
நயந்தே–98-

நயவேனினி யொரு தெய்வத்தை நாளுமந் நான்‌ மறையி
னியலே யுணர்த்து மிராமாநசனெனி லின்‌பமுற்றி
மயலே பெருகு மணவாள யோகியை வாழ்த்‌துவர் த
மயலே திரிந்தவர்க் காட் செய்ய வென்னுள மைந்ததுவே–99-

அமையார் புயத்திந்திரை வாழு மார்பனரங்கன் பதந்‌
தமையே யடைதனின்‌ றண்ணளியால் வரிற் சார்வதல்லா
லெமையே யழைத்த வனீயினும் வேண்வதில்லை கண்டாய்‌
கமையே நிறைந்த மணவாள யோகி யென் கற்பகமே–100-

கற்புக்கணிகலமாய மின்னார்‌ தம் கணவனல்லா
லற்புக் கிடங்கொடார் நற் பரனெய்தினு மன்னரைப் போற்‌
சொற்புத்தி நின்னடிப் போதன்றி யொன்றைத் தொழாது செல்வப்‌
பொற்புற்ற கோயின்‌ மணவாள யோகிப் புகழ்ப் பொருளே–101

பொருளைப் புதல்வரைப் பூமியை மாதரைப் போற்ற வுன்னி
மருளுற்றுலகில் வருந்து நெஞ்சே பொன் மதிலரங்க
னருளைப் புநைந்த மணவாள மா முனிக் கன்பு கொண்டாற்‌
றெருளுற்ற ஞானஞ் செறிவுற்று நற்கதி சேர்குலமே- (102)

சோராதகன்ற பெண்ணாண யிர்ப்பின்‌றி வந்தே பதிபாற்
றாரா யருளை யென வேண்டல் போல நின்றாளடைந்தேன்‌
சீரார் குணத்து மணவாள யோகி யுன்‌ சிந்தை யென்னோ
வோரா தகற்றிற் கதி வேறிலை யெனக்குத்தமனே– (103)

உத்‌தமன் கோயின்‌ மணவாள யோகியை யுன்னி யுன்னி
நிச்சமும் போற்று நெறியினர் தாடொழ நேச நெஞ்சில்‌
வைத்தவர் தாமத்‌ திருநாட்டிடையின் மலர்‌மகள் கோன்‌
கைத் தலத்தாலணைப் புண்டிருப்பாருட் களிப்படைந்தே (104)

அடைந்தேன் குருகை மணவாள மாமுனி யம்புயத்தாண்‌
மிடைந்தே யினியெனை தீண்டாது தீய வினை கடலைக்‌
கடைந்தேய முதிமையோர்க் கருண் மாயன் கதி பெற உள்‌
ளுடைந்தேய்‌ வருத்த மொழிந்தேனிகக் தெவரொப் பெனக்கே (105)

எனக்குற்ற செல்வ மணவாள மாமுனி யென்‌றிருப்பார்‌
மனக்குற்ற நீங்கி மலமற்று ஞான வழிக்கணின்று
செனக் குற்ற மாற்றிப் பின்‌றம் போலருள் பெறச் செய்து நம் மா
றனக்குற்ற மெய்ப்பதம் வேண்டிய போதவர் சார்குவரே – (106)

சார்தேனுனது சரணாம்புயத்தைத் தலைக் கொடிவ
ணார்ந்தே னுனதடியார்‌ தமக்காட் செய வன்பர் தந்நோ
யீர்ந்தே யருளு மணவாள யோகி யிதிற் பெரிதோ
பேர்ந்தே யொளிரும் திரு நாட்டிடை யுறும் பேரின்பமே (107)

இன்புற்ற ஞானத்தி ராமாநுசன்‌ தன் இணை யடிக் க
ணன்புற்று நீ யிங்கிருப்பது போல் அவனும் தினமும்
துன்பத்தை நீக்கி மணவாள யோகி யித் தொல்லுலகிற்‌
புன்பற்ற கற்‌றப் புனைந்தேன் சிரத்‌து நின் பூங்கழலே -(108)

பூமாதிலங்கு மணி மார்பரங்கர் புகழ்ந்‌திடத்தென்‌
பா மாறன் வேதத் தமிழின் பொருளைப் பகர்ந் தருளஞ்‌
சீமான் குருகை மணவாள மாமுனி சேவடியாம்
தே மா நிழலுண்ட டைவார் விடாய் கெடச் செய்திடுமே
(1

———————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ராமானுஜ வைபவம்-ஸ்ரீ அமுதனின் அமுதம்-ஸ்ரீமத் பராங்குச பதாம்புஜ ப்ருங்க ராஜம்-

July 26, 2025

அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக்கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல் இராமாநுசன்.

அரங்கன்செய்ய தாளிணைகள் பேர்வின்றிப் பெறுத்தும் இரர்மாநுசன்

அரங்கன் மலரடிக்கு ஆள் உற்றவரே தனக்கு உற்றவராய்க் கொள்ளும் உத்தமன் இராமாநுசன்.

அருமுனிவர் தொழுந்தவத்தோன் இராமாநுசன்

அருள்சுரந்தெல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும் பொருள் சுரந்த இராமா நுசன்.

அற்புதன் செம்மை இராமாநுசன்.

அறம்சீறும் உறுகலியைத்துரக்கும் பெருமை இராமாதுசன்

அறுசமயச் செடியைத் தொடரும் மருள்செறிந்தோர் சிதைந்தோடவந்து
இப்படியைத்தொடரும் இராமாநுசன்.

இராமாயணமென்னும் பத்திவெள்ளம் குடிகொண்ட கோயில் இராமாநுசன்.

இருள்கொண்ட வெந்துயர்மாற்றித் தன்னீறில் பெரும்புகழே தெருளும் தெருள்தந்த இராமாநுசன்

இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கனென்று இவ்வுலகத்து அறஞ்செப்பும்
அண்ணல் இராமாநுசன்

இன்புற்ற சீலத்து இராமாநுசன்.

ஈட்டிய சீலத்து இராமா நுசன்.

ஈன்கவிகளன் பால் மயல்கொண்டுவாழ்த்தும் இராமாநுசன்.

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகந்தொறும்புக்குநிற்கும் குணந்திகழ்கொண்டல்
இராமா நுசன்.

உணீர்வின் மிக்கோர் தெரியும் வண்கீர்த்திஇராமாநுசன்.

உண்மைநன் ஞானமுரைத்த இராமாநுசன்.

உயிர்கள் மெய்விட்டு ஆதிப்பரனோடொன்றாமென்று சொல்லுமவ்வல்லலெல்லாம் வாதில்வென்ற இராமாநுசன்.

உலகோர்களெல்லாம் நண்ணருஞானம் தலைக்கொண்டுநாரணற்காமாறுவந்த
அண்ணல் இராமாநுசன்.

ஊழி முதல்வனையே பன்னப்பணித்த இராமாநுசன்

எண்ணருஞ்சீர் நல்லார் பரவும் இராமாநுசன்.

எனக்குற்ற செல்வம் இராமாநுசன்.

ஒள்ளிய நுல் கற்றார் பரவும் இராமாநுசன்.

காசினியோர் இடரின்கண் வீழ்ந்திடத்தானும் அவ்வொண்பொருள்கொண்டு அவர்பின்படருங்குணன் இராமாநுசன்.

கார்கொண்ட வண்மை இராமாநுசன்.

காரேய்கருணை இராமாநுசன்.

கீதையின் செம்மைப்பொருள் தெரியப் பாரினில் சொன்னஇராமாநுசன்.

கீர்த்திப்பயிரெழுந்து விளைந்திடும் சிந்தை இராமாநுசன்.

குறையல் பிரானடிக்கீழ்விள்ளாத அன்பன் இராமாநுசன்.

கொண்டலனையவண்மை ஏரார்குணத்து இராமாநுசன்.

கொல்லிகாவலன் சொல்பதிக்கும் கலைக்கவிபாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமாநுசன்.

கொள்ளக்குறைவற்றிலங்கிக் கொழுந்துவிட்டோங்கிய வள்ளல் இராமாநுசன்.

சடகோபனைச் சிந்தையுள்ளே பெய்தற்கிசையும் பெரியவர் சீரை உயிர்களெல்லாம்
உய்தற்குஉதவும் இராமாநுசன்

சலியாப்பிறவிப் பவம்தரும் தீவினைபாற்றித்தரும் இராமாநுசன்.

சீரரங்கத்து ஐயன் கழற்கணியும் பரன்தாளன்றி ஆதரியாமெய்யன் இராமாநுசன்.

சீலங்கொள்நாதமுனியை நெஞ்சால் வாரிப்பருகும் இராமாநுசன்

செம்மைநூற் புலவர்க்கு எண்ணருங்கீர்த்தி இராமாநுசன்.

செறுகலியால் வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்தெடுத்தளித்த அருந்தவன் இராமாநுசன்.

ஞானமென்னும் நிறைவிளக்கேற்றிய பூதத்திருவடித்தாள்கள் நெஞ்சத்து உறையவைத்தாளும் இராமாநுசன்,

தண்டமிழ்செய்தநீலன்தனக்கு உலகில் இனியான் இராமாநுசன்.

தமிழ்த்தலைவன் பொன்னடி போற்றும் இராமாநுசன்,

தவம்தரும் செல்வும்தகவும்தரும் தீதிலிராமாநுசன்.

தன்னை எய்தினர்க்குத் தன்தகவென்னும் சரண்கொடுத்து வானம் கொடுக்கும்

திக்குற்ற கீர்த்தி இராமா நுசன்.இராமாநுசன்.

திசையனைத்தும் ஏறும்குணன் இராமாநுசன்.

திருவாய்மொழியின் மணந்தரும் இன்னிசை மன்னும் இடந்தொறும்
புக்குநிற்கும் குணம்திகழ் கொண்டல் இராமாநுசன்.

துயரகற்றி உயக்கொண்டு நல்கும் இராமாநுசன்.

தெரிவுற்ற கீர்த்தி இராமாநுசன்

தென்குருகைப்பிரான் பாட்டென்னும் வேதப்பசுந்தமிழ்தன்னை தன்பத்தியென்னும் வீட்டின்கண்வைத்த இராமாநுசன்.

தென்னத்தியூரர் கழலிணைக்கீழ்பூண்ட அன்பாளன் இராமாநுசன்.

தென்னரங்கன் கழல் சென்னிவைத்துத் தானதில் மன்னும் இராமாநுசன்

தென்னரங்கள் தொண்டர் குலாவும் இராமாநுசன்

நம் தலைமிசையே பொங்கிய கீர்த்திஇராமாநுசன்.

நல்தவர் போற்றும் இராமாநுசன்.

நல்லன்பர் மனத்தகத்தே எப்போதும் வைக்கும் இராமாநுசன்.

நல்வேதியர்கள் தொழுந்திருப்பாதன் இராமாநுசன்.

நினைவார் பிறவியை நீக்கும் பிரான் இராமாநுசன்.

பண்டருமாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாயமதமாய் விண்டிட
மெய்ம்மைகொண்ட நல்வேதக் கொழுந்தண்டமேந்திக் குவலயத்தே மண்டிவந்தேன்ற இராமாநுசன்.

பரந்தாம மென்னும் திவந்தரும் தீதில் இராமாநுன்,

பல்கலையோர் தாம்மன்னவந்தஇராமாநுசன்.

பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன்தாள் பேராதஉள்ளத்து இராமாநுசன்.

பல்லுயிர்க்கும் விண்ணின்தலைநின்று வீடளிப்பான் இராமாநுசன்

பழியைக்கடத்தும் இராமாநுசன்

பாரதப்போர் முடியப் பரிநெடுந்தேர் விடுங்கோனை முழு துணர்ந்த அடியர்க்கு அமுதம் இராமாநுசன்.

பாவு தொல்ர் எதித்தலை நாதன் இராமாநுசன்.

ின்னைதன் காதலன்பாதம் நண்ணாவஞ்சர்க்கரிய இராமாநுசன்

புகழ்ப்பாண்பெருமாள் சரணாம்பதுமத்தாரியல் சென்னி இராமாநுசன்

புண்ணியர்தம் வாக்கில் பிரியா இராமாநுசன்.

புவனமெங்கும் ஆக்கியகீர்த்தி இராமாநுசன்.

புன்மையிலோர் பகரும்பெருமை இராமாநுசன்

பூமன்னுமாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த பாமனது
மாறன் அடிபணிந்துய்ந்த இராமாநுசன்.

பெருவினையைக் கிட்டிக்கிழங்கொடு தன்னருளென்றும் ஒள்வாளுருவி வெட்டிக்களைத்த இராமாநுசன்.

பொய்கைப்பிரான் மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ்தன்னையும் கூட்டி ஒன்றத்திரித்தன்றெரித்த திருவிளக்கைத்
தன் திருவுள்ளத்தே இருந்தும் பரமன் இராமாநுசன்

பொய்தவம்போற்றும் புலைச்சமயங்கள் நிலத்தவியக்
கைத்த மெய்ஞானத்து இராமா நுசன்.

பொய்யைச்சுரக்கும் பொருளைத்துறந்து இந்தப்பூதலத்தே
மெய்யைப் புரக்கும் இராமாநுசன்.

பொருவரும் சீர் ஆரியன் செம்மை இராமாநுசன்.

பொன்னரங்க மென்னில் மயலேபெருகும் இராமாநுசன் .

போற்றரும் சீலத்து இராமாநுசன்

மழிசைக்கிறைவன் இணையடிப்போது அடங்குமிதயத்து இராமாநுசன்

மன்பல்லுயிர்கட்சிறைவன் மாயனெனமொழிந்தஅன்பன் அனகன் இராமாநுசன்.

மாமலரான்புணர்ந்தபொன்மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்குநிற்கும் குணந்திகழ்கொண்டல் இராமாநுசன்

மாயவன் தன்னை வணங்கவைத்தகரணம் உமக்கன்றென்று
உயிர்கட்கு அரணமைத்த இராமாநுசன்.

மிக்கநான்மறையின் சுடரொளியால் கலியிருளைத்துறந்த இராமாநுசன்.

யமுனைத்துறைவன் இணையடியாம் கதிபெற்றுடைய இராமா நுசன்.

வலிமிக்கசீயம் இராமாநுசன் கலிமிக்க செந்நெல் கழளிக்
குறையல் கலைப்பெருமான் ஒலிமிக்கப்பாடலை உண்டு உள்ளந் தடித்து அதனால் வலிமிக்கசீயம் இராமாநுசன்.

வாணன் பிழைபொறுத்த தீர்த்தனையேத்தும் இராமாநுசன்.

வாமனன் சீலன் (வாமன துல்ய சீலன்)

வேதத்தின் உச்சிமிக்கசோதியை நாதனென அறியாது உழல்கின்ற தொண்டர்பேதமை தீர்த்த இராமா நுசன்.

வைகுந்தம், வேங்கடம், மாலிருஞ்சோலை தன்னொம்
மாயன் வந்திருப்பிடம் இராமாநுசன்.

——————————————-

மணவாளமாமுன்களின் திருவடிகளைப் பணிந்து உய்ந்தவரான எறும்பியப்பாவின் பெருமையைச் சொல்லவந்த ஒரு ச்லோகம் உலகில் ப்ரஸித்தமானது; அதாவது -“சடரிபுரேக ஏவ கமலாபதிதிவ்ய கவி: மதுரகவிர் யதா ச சடஜிந்முநிமுக்க்யகவி:, யதிகுலபுங்கவஸ்ய புவி ரங்கஸுதா கவிராட் வரவரயோகிநோ வரதராஜகவிச் ச ததா.’ என்பதாம். இதன் பொருள் யாதெனில், திருமகள் கொழு னான ஸர்வேச்வரனைக் கலிபாடித் துதித்தவர்களுள் நம்மாழ்வார் எப்படி சிறப்புப் பெற்றவரோ, அந்த நம்மாழ்வாரைக் கவிபாடித் துதித்தவர்களுள் ஸ்ரீ மதுரகவிகள் எப்படி சிறப்புப் பெற்றவரோ, எம்பெருமானாரைக் கவிபாடித் துதித்தவர்களுள் திருவரங்கத்தமுதனார் எப்படி சிறப்புப்பெற்றவரோ, அப்படியே மணவாளமாமுனிகளைக் கவிபாடித் துதித்தவர்களுள் எறும்பியப்பா சிறப்புப் பெற்றவர் என்பதாம். உண்மையில், எம்பெருமானாருடைய திருக்குணங்களைப் புகழ்ந்து பேசப்பிறந்த நூல்களுள் திருவரங்கத்தமுதனார் திருவாய்மலர்ந்தருளிய இராமானுச நூற்றந்தாதிக்கு இணையானது எதுவுமில்லையென்று சபதமிட்டுரைப்பர் பெரியோர். சொல்நோக்கும் பொருள்நோக்கும் தொடைநோக்கும் நடைநோக்குமாகிய எந்நோக்கும் மிக அற்புதமாக வன்றோ நூற்றந்தாதியில் அமைந்துள்ளது.

ஆழ்வான் ஆண்டான் எம்பார்முதலான அந்தரங்கசிஷ்யர்கள் யாவரும் அப்பிரபந்தத்தை
உற்று நோக்கி, அதில் ஸ்வாமியின் திருவுள்ளவுகப்பையும் விசேஷித்தறிந்து மிக்க குதூஹலங்கொண்டு. “இப்பிரபந்தம் ஆழ்வார்களின் திவ்யப்ரபந்தங்களோடொக்கப் பரிக்ராஹ்யமாம்படி நியமித்தருளவேணும்” என்று திருவடிகனப் பிடித்துக்கொண்டு பிரார்த்திக்க, ஸ்வாமி அதற்கு ஸஹஸா இசைந்தருளவில்லை. குசலவர்கள் பாடினதை ஸ்ரீராமபிரான் கேட்டருளி மிகவுமுகந்து “மமாபி தத் பூதிகரம்” என்று கொண்டாடின வரலாற்றை எடுத்துரைத்து அனைவரும் நிர்ப்பந்திக்க, இத்தனை பேருடைய குதூஹலத்திற்கு நாம் பங்கம் விளைக்கலாகாதென்று ஸ்வாமி திருவுள்ளம்பற்றி, அழகியமணவாளனுடைய நியமனத்தையும் பெற்று அப்படியே நியமித்தருளினார். ஸ்வாமி எழுந்தருளியிருந்த காலத்திலேயே இப்பிரபந்தம் ஸன்னிதிகளிலும் திருமாளிகைகளிலும் ஸேவிக்க உபக்ரமமாயிற்று. திருக்கார்த்திகைக்குப் பிறகு அநத்யயநக்ரமம் திவ்யப்பிரபந்தங்களுக்குப் போலவே இந்த நூற்றந்தாதிக்கும் அன்றுதொட்டு எங்கும் நிகழ்ந்து வரக் காண்கையாலே இதற்கு திவ்யப்ரபந்தத்தோடு ஸர்வாத்மநா ஸாம்யம் பூர்வாசார்ய ஸம்மதமாயிற்றென்பது அறியத்தக்கது.-மணவாளமாமுனிகள் இராமானுச நுற்றந்தாதியைப்பற்றி ஒன்றுமருளிச் செய்யாததேன்? திருவரங்கத்தமுதனார்க்கு நாள் பாட்டும் பணிக்கவில்லையே, ஏன்? என்று சிலர் கேட்பதுண்டு. ஸன்னிதிகளில் விக்ரஹப்ரதிஷ்டை பெற்றிருந்தவர்களுக்கே நாள் பாட்டு அருளிச்செய்யலாயிற்றென்பது ஸாரமான ஸமாதானம்.நூற்றந்தாதிக்கும் அமுதனார்க்குமாகவே உபதேச ரத்தினமாலையில் +இன்றுலகீர் சித்திரையிலேய்ந்த திருவாதிரை நாள்* என்று தொடங்கி மூன்று பாசுரங்கள் அருளிச் செய்தது. திருக்குருகைப்பிரான்பிள்ளான்,நஞ்சீயர், பெரியவச்சான்பிள்ளை, வடக்குத்திருவீதிப்பிள்ளை, பிள்ளை லோகாசார்யர் முதலான ஆசார்யர்களைப் பற்றியும் உபதேசரத்தினமாலையில் ப்ரசம்ஸையிருந்தாலும் அவர்கள் அவதரித்தமாதமோ நக்ஷத்ரமோ அதில் பேசப்படவில்லை. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்கள் பணித்தவர்களுக்கு மாத்திரமே*மாதங்கள் நாள்கள்தமை மண்ணுலகோர்தாமறிய ஈதென்று சொல்லியுள்ளார். அந்த வரிசையில் ”சித்திரையில் செய்ய திருவாதிரை” என்று நாள் பாட்டு அமைத்திருப்பதை ஆழ்ந்து நோக்கவேணும். திவ்யப்பிரபந்தமருளிச்செய்யாத எம்பெருமானார்க்கு மதுரகவிகட்கடுத்தபடியாக நாள் பாட்டு அமைத்தது இராமானுச நூற்றந்தாதிக்காகவேயென்பது சொல்லவும் வேண்டுமா? எம்பெருமானார்க்கேயிறே விக்ரஹப்ரதிஷ்டையுள்ளது.நாலாயிரத்திற்கும் வியாக்கியானஞ் செய்தருளின் பெரியவாச்சான் பிள்ளை நூற்றந்தாதிக்கு ஏன் வியாக்யானஞ் செய்தருளவில்லையென்று சிலர் விமர்சிப்பதுண்டு.ஸ்தோத்ரரத்த்திற்கு வியாக்யானஞ் செய்தருளினவர் பஞ்சஸ்தவாதிகளுக்கு வியாக்கியானஞ் செய்தருளவில்லையென்பதனால் ஒரு குறையில்லையே, அதுபோலவே யிங்குமென்று ஸமாஹிதராகலாம். அமுதனாருடைய திருவம்சத்திலோருவர் நுற்றந்தாதிக்கு வியாக்கியான மிட்டிருந்தாரென்றும், அது லோபித்ததனால் மணவாளமாமுனிகள் வியாக்கியானித்தருளினரென்றும் கேட்டிருந்ததுண்டு.-ஸ்வாமி காலத்திலே ஸ்வாமி நியமனங்கொண்டே கருட வாஹன பண்டிதர்பணித்த திவ்ய ரிசரிதத்தில் பதினெட்டாம் ஸர்க்கத்தில் (51)“ஸ்ரீரங்காம்ருதகவிராஹ ரங்கிப்ருத்ய; தச்சிஷ்யோ யதிபதிவைபவாநுபந்தம்,அந்தாதித்ரமிடகிரா மஹாப்ரபந்தம் காதாநாம் அம்ருதமுசாம் யுதம் சதேந.“என்னும் ச்லோக தில் இப்பிரபந்தத்தின் பெருமை பேசப்பட்டுள்ளது. இதன்பொருளாவது, திருவரங்கத்தமுதனார் அழுதப்பெருக்கான தமிழ் மொழிபாலே எம்பெருமானாருடைய வைபவங்களைப் பேசுகிற் நூற்றந்தாதி ப்ரபந்தத்தை யருளிச்செய்தாரென்பதாம்.(19.) உறுபெருஞ் செல்வமும் (29.) *கூட்டும் விதியென்று கூடுங்கொலோ ” (46.) கூறுஞ்சமயங்களாறுங்குலைய (54.) *நாட்டிய நீசச்சமயங்கள் மாண்டன* (64.) பண்டருமாறன் பசுந்தமிழ்* (88) * கலிமிக்க செந்நெல் கழனிக் குறையல்* என்கிற பாசுரங்கள் விசேஷித்து நோக்கத் தக்கன ஸ்ரீமந்நாதமுனிகள்,ஆளவந்தார் முதலான பரமாசார்யர்கள் திறத்தில் ஸ்வாமிக்கிருந்த பத்திப் பெருங்காதல்20, 21 முதலான சில பாசுரங்களில் பேசப்பட்டது. கோயில் திருமலை பெருமாள் கோயில் முதலான திவ்ய தேசங்களிலுண்டான ஆதராதிசயம் 31,35, 42, 47. 49,76, 81, 91, 106 முதலான பாசுரங்களில் பேசப்பட்டடுள்ளது.

—————–

அத்வைத, விசிஷ்டாத்துவைதக் கோட்பாடுகளுக்குள்ளவேறுபாட்டை எடுத்துக் காட்டும் மாக்ஸ்முல்லர்-The Brahman of Sankara is itself impersonal.
Sri Ramanuja’s brahman is essentially a personal God-the all-powerful and all-wise ruler of the real world permeated and animated by his spirit, the brahman is endowed with all auspicious qualities-Saguna Brahman.-என்றெழுதுவார்.

ஏரணிகீர்த்தி இராமானுசமுனி இன்னுரை சேர்
சீரணி சிந்தையினோம் சிந்தியோம் இனித் தீ வினையே”
-என்கிறஅலுஸந்தானத்தால் நம்மை உடையவருடைமை என்று காட்டியருளுகிறார் ஸ்வாமி தேசிகன் அப்படியே யதிவரனார் மடைப்பள்ளி வந்த மணம் எங்கள் வார்த்தையுள்மன்னியதே’ என்று தம் வாசகங்களுக்கெல்லாம் உடையவர் ஸம்பந்தமுண்டென்று மகிழ்ந்து பேசுகிறார். ‘ப்ரணாமம் லக்ஷ்மணமுனி: பாதிக்ருஹ்ணாது மாமகம்’ என்று
காயிகமாக வணங்கி வாழ்த்துகிறார். இப்படியாகக் கரண த்ரய சரூப்யம் தமக்கு எம்பெருமானார் விஷயத்தில் ஏற்பட்டதை அநுஸந்தித்து இனியராகிறார்.

———–

ஸ்ரீமத் பராங்குச பதாம்புஜப்ருங்கராஜம்*-நம்மாழ்வார் திருவிருத்தத்தில் வண்டுகளை விளிக்கும்போது வீசுஞ்சிறகால் பறத்தீர் ” என்னும் பாசுரத்தில் விண்ணோர் பிரானார் மாசில் மலரடிக்கீழ் எம்மைச் சோவிக்கும் வண்டுகளே என்றருளிச்செய்துள்ளார். எம்பெருமான் திருவடிகளிலே அஸ்.மதாதிகளைக்கொண்டு சேர்க்குந்திறமை எம்பெருமானார்க்கேயுள்ளது.-வண்டுகள் சிறகால் பறப்பது போல ஸ்வாமி யெம்பெருமானார் ஞானமனுட்டான மென்னுமிவற்றால் உயர்கதியடை பவர். *உபாப்யாமேவ பக்ஷாப்யாமித்யாதி-வீ சுஞ்சிறகால் பறத்தீர் * என்றவுடனே “விண்ணாடும் நுங்கட்கு எளிது என்றமையால் பரமபதமும் ஸ்வாமி யெம்பெருமானார்க்கு அதீனமான பொருள் என்பது காட்டப்பட்டது. ஸ்வாமியின் திருவடி ஸம்பந்தம் பெழுதவர்கள-்-வண்டுகளோ வம்மின், நீர்ப்பூ நிலப்பூ மரத்திலொண்பூவுண்டுகளித்துழல்வீர் “ என்பது. பூக்களானவை நீரிலும் நிலத்திலும் மரங்களிலும் புஷ்பிக்குமவை. தாமரை செங்கழுநீர் முதலானவை நீர்ப்பூக்களாம். மல்லிகை முல்லை முதலானவை நிலப்பூக்களாம். வகுளம் பாதிரி பாரிஜாதம் முதலானவை மரப்பூக்களாம். இவற்றில் தேனைப்பருகும் வண்டுகள்.
எம்பெருமானார்பக்ஷத்திலோ வென்னில்; நீர்ப்பூ என்பது வீராப்திசாயியான வ்யூஹபகவானைச் சொல்லி அவனிடத்துத் தோன்றிய பாஞ்சராத்ர சாஸ்த்ரங்களைக் கூறும்;
நிலப்பூ என்பது நிலத்திலவதரித்திருந்த ஸ்ரீராமக்ருஷ்ணாதி விபவாவதாரங்களையும், நிலத்தில் நித்யமாக அமர்ந்திருக்கின்ற அர்ச்சாவதாரங்களையுஞ் சொல்லி, வி வாவதாரபரங்களான இதிஹாஸ புராணங்களையும் அர்ச்சாவதாரபரங்களான திவ்ய ப்ரபந்தங்களையும் அநுபவித்துக் களிப்பவர் ஸ்வாமி யெம்பெருமானார் என்றவாறாம் * மரத்திலொண்பூ வென்று எட்டாநிலத்திலுள்ள பரமபதநாதனைச் சொல்லி வேதவேத்யே பரே பும்ஸி என்கிறபடியே பரம புருஷ ப்ரதிபாதகமான வேதங்களைச் சொல்லி அவற்றையநுபவிப் பவரெம்பெருமானார் என்று காட்டும்.-வண்டுக்கு சஞ்சரீக மென்று. பெயர்; எப்போதும் திரிந்து கொண்டே யிருப்பது என்று பொருள், ஸ்வாமி யெம்பெருமானாரும் *ஸ்ரீரங்கம் கரிசைலமஞ்ஜ
கிரிம் தார்ஷ்யா த்ரிஸிம்ஹாசலௌ ஸ்ரீகூர்மம் புருஷோத்தமஞ்ச பதரீநாராயணம்
நைமிசம், ஸ்ரீமத் த்வாரவதீ ப்ரயாக மதுராயோத்யாகயாபுஷ்கரம் ஸாலக்ராமகிரிம்
நிஷேவ்ய ரமாதே ராமா நு ஜோயம் முனி
: என்கிறபடியே * உலகமேத்துங்கண்டியூரரங்கம்
மெய்யம் கச்சி பேர்மல்லை யென்றுமண்டி பதியேபரவித் தொழுந்தொண்டராயிருந்தவர்.

வண்டினங்கள் காமரங்களிசைபாடும் * என்றும், யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும்* என்றும், வரிவண்டுதேதென வென்றிசைபாடும் என்றும் பணித்தபடியே வண்டுகள் யாழினிசைபோன்ற இசைகளைப் பாடுவதுபோல் *பண்ணார்பாடல் * யாழினிசைவேதம். என்னப்பட்ட திருவாய்மொழியின் கானத்தையே போது போக்காக வுடையராயிருந்தவர் ஸ்வாமி.”தமிழ்மறைகளாயிரமும் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன்” பண்டருமாறன் பசுந்தமிழானந்தம் பாய்மதமாய் விண்டிட வெங்களிராமானுசமுனிவேழம்’ என்றவை காண்க-வண்டு எந்த ஸமயத்தில் எங்குச் செல்லவேணுமென்று நினைத்தாலும் தட்டுத் தடங்கலின்றியே புகுந்து ரமிக்கும்: ஸன்னிதியில் கர்ப்பக்ருஹங்களினுள்ளும் எம்பெருமான் திருமுடிமீதும் தாராளமாகப்
புகக் காணுகின்றோம். அதுபோல, பின்னிட்ட சடையானும் பிரமனு மிந்திரனும்
துன்னிட்டுப் புகலரிய என்னும்படி திருவாசல்களிலே ஸேவாபரரானவர்கள் நிறைந்து
தலை நுழைக்கவொண்ணாதபடி நெருக்க, மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடுநாள்” என்னும்படியவதரித்தருளின எம்பெருமானார் கோயில் திருமலை பெருமாள் கோயில் முதலான எந்த திவ்யதேசங்களிலும் தடையும் சங்கையுமின்றிக்கே அதிகாரச் செல்வத்துடனே உள்ளே புகுந்து ஒழிவில் காலமெல்லா முடனாய் மன்னி வழுவிலா வடிமைசெய்து வாழ்ந்தவர்
. வண்டு சோலைகளிலேயே சுழலமிடும்; எம்பெருமானார் தாமும் *ஆராமஞ் சூழ்ந்தவரங்கம்* சிந்து பூ மகிழுந்திருவேங்கடம் விரையார்பொழில் வேங்கடம் என்னும்படியாகச் சோலைகள் மிக்க தலங்களிலேயே சுழலமிட்டவர்.-இப்படி மற்றும் பல பொருத்தங்களும் காண்க.வண்டுக்கு த்விரேப மென்று பெயர்: இரண்டு ரேபங்களையுடையது என்றபடி. ரேபமாவது ரகரம். வண்டுக்கு வாசகமான (ப்ரமர) சப்தத்தில் இரண்டு ரேபமிருப்பதால் இது பற்றியே (வண்டு) தவிரேபமெனப்பட்டது, ஸ்ரீ ராமாநுஜராகிற வண்டானது தன்னிடத்தில் இரண்டு ரேபமில்லையேயென்கிற குறையைத் தீர்த்துக் கொள்வதற்காகவே வாவர முனிகளாக மற்றோரவதாரம் செய்தருளின்படி ராமா நுஜத்திருநாமத்தில் ஒரு ரேபமேயாய், வரவர முனிதிருநாமத்தில் இரண்டு ரேபமிருக்கும்படி கண்டுகொள்வது.

வரிவண்டு தேதெனவென்றிசைபாடும் என்றும்,தென்னாதெனாவென்று வண்டுமுரல் என்றும் ஆழ்வார்கள் அருளிச்செய்தபடியே தே, தே என்று முரலும்
வண்டுகள். (அஹங்கார) மமகாரமுள்ளவர்கள் மே மே என்பர்கள். அது நீங்கினவர்கள்
தே தே என்பவர்கள். தவ, தவ. என்றபடி வெண்பல் தவத்தவர்
” என்ற திருப்பாவைப்
பாசுரத்தில் (தவ, தவ) என்பவர்கள் தவத்தவர்களாக விவக்ஷிதர்களாதலால் அங்ஙனே
மமகாரமற்றவர்களில் தலைவர் ஸ்வாமி யெம்பெருமானார் என்க.

திருமங்கையாழ்வார் திருநறையூர்ப் பதிகத்தில் *வம்பவிழும் சண்பகத்தின்
வாசமுண்டு மணிவண்டு வகுளத்தின் பலர்மேல்வைகு’
என்கிற பாசுரத்தினால் வண்டு
மகிழமலர்மேல் வைகியிருப்பதாகப் பாடினர். ஸ்வாமி யெம்பெருமானாரோவென்னில்;
*யஸ்ய ஸாரஸ்வதம் ஸ்ரோதோ வகுலாமோதவாஸிதம் (யதிராஜஸப்ததி] என்கிற
படியே மகிழமலரின் நறுமணங்கமழும் திருவாய்மொழியில் வைகியிருப்பவர். நூற்றந்தாதியயில் *உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகந்தொறும், திருவாய்மொழியின் மணந்தருமின்னிசை மன்னுமிடந்தொறும் புக்குநிற்குமிராமானுசன்’ என்ற பாசுரம் இங்கு
அநுஸந்திக்கவுரியது.வண்டுகள் சோலைகளிலும் தடாகத்திலும் மொய்த்துக்கொண்டிருக்கும். எம்பெருமானாராகிற வண்டு *வண்டின முரலுஞ்சோலை மயிலினமாலுஞ்சோலை கொண்டல் மீதணவுஞ்சோலை குயிலினங்கூவுஞ்சோலை அண்டர்கோனமருஞ்சோலை யணிதிருவரங்கத்திலும், தாமரைநீள் வாசக்கடமென்றும், தயரதன்பெற்றமரதகமணித் தடமென்றும் ப்ரஸித்தமான ஹரிஸரஸ்ஸிலும் மொய்த்துக்கொண்டிருந்தமை ப்ரஸித்தம்.வண்டு எங்குப் புகவேணுமானாலும் தடையொன்றுமின்றியே புகும்.
எம்பெருமானுடைய கர்ப்பக்ருஹத்தினுள்ளும் திருமேனியின் மேலும் தட்டுத்
தடங்கலின்றியே புகும். எம்பெருமானாராகிற வண்டும் அப்பனுக்குச் சங்காழி
யளித்தருளும் பெருமாள்* என்னும் மூதுரையின்படியே திருவேங்கடமுடையானுக்குத்
திருவாழி திருச்சங்கு அளித்தருள நுட்பமானவழியாலும் நுழைந்தமை
ப்ரஸித்தம்.

ஸ்வாமி ராமாநுஜர் விஷயமாக அருளிச்செய்யப்பட்ட கிரந்தங்கள்:

1. ஸ்வாமி மணவாளமாமுனிகள் அருளிச்செய்த யதிராஜ விம்சதி

2. ஸ்வாமி திருவரங்கத்து அமுதனார் அருளிச்செய்த ராமாநுஜ நூற்றந்தாதி

3. ஸ்வாமி வேதந்தாச்சார்யர் அருளிச்செய்த யதிராஜ சப்ததி

4. ஸ்ரீ திருமழிசை அண்ணாவப்பங்கார் அருளிச்செய்த ஸ்ரீ ராமாநுஜ அதிமாநுஷ ஸ்தவம்

5. ஸ்ரீ முதலியாண்டான் அருளிச்செய்த தாடீபஞ்சகம்

6 ஸ்ரீ திருமலை அனந்தாழ்வான் அருளிச்செய்த ஸ்ரீ ராமாநுஜ சது: ஸ்லோகி

7. ஸ்ருதப்ரகாஸிகாசார்யர் அருளிச்செய்த ப்ரார்த்தநா பஞ்சகம்

8 ஸ்ரீ வடுகநம்பி அருளிய ஸ்ரீ ராமாநுஜ அஷ்டோத்தர ஸதநாம ஸ்தோத்ரம் மற்றும் ஸ்ரீ ராமாநுஜ அஷ்டோத்தர ஸத நாமாவளி

9 ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் அருளிய ஸ்ரீ ராமாநுஜ ஸுப்ரபாதம் மற்றும் ஸ்ரீபாஷ்யகார மங்களம்

10. பகவத் ராமாநுஜ அவயவ ப்ரபாவம்

11. ஸ்ரீ எம்பார் அருளிய உடையவர் வடிவழகு பாசுரம்

12 பெரிய ஜீயர் ஸ்ரீ மணவாளமாமுனிகள் அருளிய எம்பெருமானார் வாழி திருநாமங்கள்

13 ஸ்ரீ காஞ்சி மஹாவித்வான் மஹாமஹிமோபாத்யாய ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய ஸ்வாமி, எம்பெருமானாருடைய பலவகைப் பெருமைகளை தெரிவிக்கும் விதமாக எழுதியருளிய
எம்பெருமானார் அறுபத்து இரண்டு-ஆகியவை ஆகும்.

 ஸ்ரீ ராமானுஜரது காலம், கலியுகம் பிறந்து 4118 வருஷங்களுக்குப் பின் பிங்கள வருஷம் சித்திரை மாஸம் சுக்ல பக்ஷம் குருவார பஞ்சமி ஆருத்திரா நக்ஷத்திரம் கர்க்கடக லக்னம் ஆயுஷ்மான யோகத்தில் ஆபஸ்தம்ப ஸூத்திரத்தை சேர்ந்தவராய் (பொது ஆண்டுக்கு 1017-1137) ஆதிசங்கரருக்கு (பொ.ஆ.பி. 788 – 820) பின்னால் ஸ்ரீபெரும்புதூரில்  அவதரித்தவர்- இவரது தாயார் ஸ்ரீ ஆளவந்தாருடைய சிஷ்யராகிய ஸ்ரீசைலபூர்ணரின் மூத்த சகோதரி காந்திமதி. இவர் தந்தையார் ஸ்ரீ பெரும்புதூரில் வசித்து வந்த ஆசூரி கேசவ ஸோமயாஜி. லக்ஷ்மணன் என்னும் பெயரினை குறிக்கும் வகையில் இளையாழ்வார் என இயற்பெயர் கொண்டார்.  16 வயதில் தங்கம்மாள் என்னும் பெண்ணுடன் விவாஹம்.
பாரதிதாசன் ஸ்ரீ ராமானுஜர் பற்றி …முக்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்இத்தமிழ் நாடுதன் இருந்தவப் பயனாய்இராமா நுசனை ஈன்ற தன்றோ?எனப்பாடுகிறார்.

கஜினி படையெடுப்பு பொ.ஆ.பி. 1001 பஞ்சாபில் ஜயபாலனை வென்றது. (the oxford history of India by win cat A.Smith Cie 1921) 1019 கானோஜ் பிடிபட்டது 1024 – 25ல் சோம்நாத் சிவன் கோயில் இடிக்கப்படுகிறது, 1030 கஜினி இறந்துவிடுகிறான். அதன் பின் முதல் மசூத் (1030-41) முகமது (1941), மதூத் 1041-1048, இரண்டாம் மசூத் (1048), அலி (1048-1049), அப்துல் ரஜீத் 1049-52), தோகுமூல் 1052-53, பரூக் ஜாத் 1053-59,  இப்ராஹீம் 1059-1099, மூன்றாம் மசூத் (1099- 1115) மூன்றாம் மசூத் தலைநகர் லாகூர், மூன்றாம் மசூத்தின் பெண்ணின் பெயர் பீவி.

1097-1100 காலத்தில் டெல்லியை உள்ளடக்கிய  கசானாவிட் முஸ்லீம்கள் ஆட்சி கீழ் வந்துவிட்டது. ஸ்ரீ ராமானுஜம் பத்திரிகையில் என். ஜீயபங்கார் தந்த தகவலினை Wikipedia  Ghazanavit என பதிவுசெய்தால்  உறுதி செய்கிறது. 

      எனவே, டில்லியில் முஸ்லீம் சுல்தான்களின் ஆட்சி ஸ்ரீ ராமானுஜர் காலத்தில் இல்லை என மறுப்பவர்களின் கருத்து உடைபடுகிறது. ஸ்ரீ வைஷ்ணவ குருபரம்பரையில் உள்ள தகவல் உண்மையே, சரித்திரபூர்வமானதே. ஸ்ரீ ராமானுஜர் காலத்தில் டில்லி சுல்தான்களின் ஆட்சியில்தான் இருந்தது. 1097 க்கு முன், முஸ்லீம்களின் படையெடுப்பு மைசூர் வரை வந்து சென்றதை தொண்டனூர் கல்வெட்டு ஆதாரத்துடன் காட்டுகிறது.  (The life of Ramanuja by A. Govindacharya) இஸ்லாமிய படையெடுப்பில் திருநாராயணபுரம் பெருமாள் திருமேனி கொள்ளையடிக்கப்பட்டதும், பின் பெருமாள் விக்ரஹம் மூன்றாம் மசூத் அரண்மனையில் அவனது பெண் பீபியின் அன்புக்கு ஆளானதும் உடையவர் பெருமாள் விக்ரஹத்தினை மீட்டெடுக்க சென்றதும் வரலாறு..

ஸ்ருத்யர்த்த தத்துவ விஜ் ஞாத்ரே பக்தி மார்க்க ப்ரதர்சிநே I
இராமாநுஜாய முநயே மங்களம் புவி ஸாஸ்வதம் II

தேசமெலாம் உகந்திடதே பெரும்பூதூரில் ,
சித்திரையில் ஆதிரை நாள் வந்து தோன்றி *
காசினி மேல் வாதியரை வென்று ,அரங்கர்-
கதியாக வாழ்ந்தருளும் எதிராசா ** முன்
பூசுரர் கோன் திருவரங்கத்தமுதனார் , உன் பொன்னடி மேல் அந்தாதியாகப் போற்றிப்
பேசிய நற் கலித்துறை நூற்றெட்டுப் பாட்டும் ,
பிழையறவே எனக்கருள் செய் பேணி நீயே .-பிரபந்த ஸாரம்

ராமானுஜரின்216 அடி சிலை பிரதமர் மோடி பிப்ரவரி 5ஆம் தேதி திறந்து வைத்துள்ளார் 45 ஏக்கர் வளாகத்துக்கு மத்தியில் அலமக்கப்பட்டுள்ளது. ‘சமத்துவத்துக்கான சிலை’ (Statue of Equality)என வர்ணிக்கப்பட்டுள்ளது . சிறப்பம்சங்கள்: இந்த சிலை முழுக்க முழுக்க பக்தர்களின் நன் கொடைகளைப் பெற்று சுமார் ரூ.1,000 கோடி செலவில்
வடிவமைக்கப்பட்டுள்ளது. ராமானுஜர் இந்த பூமியில் 120 வருடங்கள்
வாழ்ந்ததை நிலனவு கூரும் வகையில் 120 கிலோ தங்கத்தைக் கொண்டு இந்த
சிலையின் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.-கருவறை தங்கத்தால் செய்யப்பட்டுள்ள அதே நேரத்தில் 216 அடி கொண்ட வெளிப்புறச் சிலை, உட்கார்ந்த நிலையில் உள்ள உயரமான சிலைகளில் ஒன்றாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தங்கம், வெள்ளி, தாமிரம் பித்தளை மற்றும் துத்தநாகம் என ஐந்து விதமான உலோகங்களின் கலவையான
‘பஞ்ச லோக ‘ சிலைைாக நிறுவப்பட்டுள்ளது.உட்கார்ந்த நிலையில் உள்ள உயரமான சிலைகளில் தாய்லாந்தில் அமைந்துள்ள 302 அடி கொண்ட புத்தர் சிலையே உலகின் மிகப் பெரிய சிலையாக இருந்து வருகிறது.சிலை அலமக்கப்பட்டுள்ள 45 ஏக்கர் இந்த வளாகத்தில்108 திவ்ய தேசங்கள், இடம் பெற்றுள்ளன.-ராமானுஜரின் 1,000-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் இந்த சிலை அமைக்கும் பணி கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது –

“அனந்த: ப்ரதமம் ரூபம் த்விதீயம் லக்ஷ் மணஸ் ததா
பலபத்ர: த்ருதீயஸ் து கலௌ கஸ்சித் பவிஷ்யதி||”
காரேய் கருணை ராமானுசா என்பர் அமுதனார். மேகத்தை ஒத்த கருணையுள்ள மஹான்
மேகம் கடல்நீரை முகந்து வர்ஷிக்கும் -ஸ்வாமி ஸ்ருதி சாகரம் -திராவிட வேத சாகரம் -உபய வேத ரஹஸ்யங்களை வர்ஷித்து அருளினார் ‘உயிர் அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து சிஷ்யர்கள் உள்ள இடங்களிலே எல்லாம் சென்று உபதேசித்து அருளினார் -மும்மாரி தத்வ த்ரய ரஹஸ்ய த்ரய பேத அபேத கடக ஸ்ருதிகள் பரபக்தி பரஞான பரம பக்தி
ஹம்ஸோ யதா க்ஷீரமிவ அம்புரமிச்ரம் என்கிறபடி -நம் ஸ்வாமி
சாஸ்த்ரங்கள் ஸார அஸாரங்களைப் பிரித்து உபதேசித்து அருளினார்
சங்கமவை முரலச் செங்கமல மலர் ஏறி அன்னமலி பெடையோடு அமரும்
என்றபடி ஹம்ஸமானது சங்குகளில் முழக்கத்தை இனிமையாகக் கேட்குமா போலே ஸ்வாமியும் சிஷ்யர்கள் செய்யும் ஸ்துதிகளைக் கேட்டு எழுந்தருளியிருந்தார்.

என்ன செய்யப் போகிறோம் என்று அறியாமல் தவிக்கும் பொழுது வேடுவ
வேடுவச்சி உருவில் தேவாதிராஜனும், பெருந் தேவி தாயாரும் ஆட்க்கொண்டதை
நினைத்து புலம்பி அழுதார்.பின்பு தம்மைத் தேற்றிக் கொண்டு பெரு மகிழ்ச்சி யுடன் கீழே யுள்ள ஸ்லோகங்களால் தொழுதார்.
‘‘ஸகேதி மத்வா ப்ரஸபம் யதுக்ரம் ஹே க்ருஷ்ண, ஹே யாதவ ஹே ஸகேதி
அஜானதா மஹிமானம் தவேதம் மயா ப்ரமாதாத் ப்ரணயேன வாபி
யச்சாப ஹா ஸாந்த மஸக்ருதோஸி விஹாரம்ய்யாசன போஜனேஷு
ஏகோதவாய் யச்யுத தத்ஸமகவும் தத்ஷா மயே த்வாமஹம ப்ரமேயம்’’

‘‘அச்சுதனே ! உன்னுடைய இந்த மஹிமையை அறியாத நான்,
கவனமின்மையாலும், அன்பினாலும் உன்னை நண்பன் என எண்ணி, ஏ கிருஷ்ணா, ஏ யாதவா, நண்பா! என்று விளையாடும் போதும், படுத்திருக்கும் போதும்,உட்கார்ந்திருக்கும் போதும், உண்ணும் போதும், பலர் முன்னிலையிலும் உன்னை
அவமதித்திருக்கிறேனே , அவை அனைத்தையும் பொறுத்தருளும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்,’’ என்று அர்ஜுனனைப் போல் வேண்டிக் கொண்டார்.

முன்னே பிறந்து இறந்து மூது உலகில் பட்ட வெல்லாம்
என்னே மறந்தனையோ என் நெஞ்சே -சொன்னேன்
இனி எதிரா சன்மங்கள் இன்று முதல் பூதூர்
முனி எதிராசன் பேர் மொழி
-பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்

ராமானுஜன் என் தன் மா நிதி -என்றும் ராமானுஜன் என் தன் சேம வைப்பு -அரங்கன் தந்தது சந்நிதிக்குள்ளே யதிசம்ஸ்கார விதியின் படியே அந்தப்புரத்திலேயே தம் பெண்டிரை வைப்பாரைப் போலவே வைத்து அருளினான்

————–

தஸ்மை ராமானுஜார்யாய நம பரமயோகிநே
யஸ்ஸ்ருதிஸ்ம்ருதி ஸுத்ராநாம் அந்தர்ஜ்வர அஸீஸமது

இதிகாச புராணாப்யாம் வேதம் செளபப்ரம்மயேது
விபேத்யல்பத் ஸ்ருதாத் வேதஹா மாமயம் ப்ரதரிஷ்யதி

சம்யங் ஞாய கலாபேந மகதா பாரதேநச
உபப்ரம்மித வேதாய நமோ வியாசாய விஷ்ணவே

எதிகாஸ்தீத தன்யத்ர எந்நேகாஸ்தீ நதக்கொஸிது தர்மேச அர்த்தேச காமேச மோக்ஷ்சேச பரத ரிஷப,

மதி மந்தானம் ஆவித்ய, ஏனாசெள ஸ்ருதி சாகராது ஜகத்ஹிதாய ஜனிதஹா மகாபாரத சந்த்ரமாஹா – வியாசர் எப்ப உபநிஷத் கடலை கடைவதற்காக பார்த்தாலும், தன்னுடைய மதி, ஞானத்தையே மத்தாக நாட்டிடுவர். தன்னுடைய ஞானத்தை மத்தாக நாட்டி, உபநிஷத்துக்களாகிய கடலைக் கடைந்து, ‘பாராசார்ய வசஸ்ஸுதாம் உபநிஷது துக்தாத்பி மத்யோத்க்ருதாம், சம்சாராக்னி விதீபனப் வியபகதப் ப்ராணாத்ம சஞ்சீவனி’, இப்பேர்ப்பட்ட அமிர்தத்த கடைஞ்சு குடுத்துட்டார்

“புண்யாம்போஜ விகாஸாய பாபத்தாம் தக்ஸயாயச ஸ்ரீமான் ஆவிர பூத்பூமவ் ராமானுஜ திவாகரஹ”,

அமுனா தபநாதிசாயு பூம்னா எதிராஜேன நிபக்த நாயகஸ்ரீஹி
மஹதி குருபந்திஹாரயட்டிஹி விபுதானாம் ஹ்ருதயங்கமா விபாதி-எதிராஜரை நடுநாயகக் கல்லாக வைத்துத்தான் இந்த அட்டியல்,-தேகழி தீபந் நியாயம்’னு பேரு. தேகழி – இடைகழி, தேகழி தீபம்-னா, இடைகழியிலே வைக்கப்பட்ட தீபம். அப்படின்னா என்னன்னா, இராமானுஜரோடே சம்பந்தத்தினாலேதான் அவருக்கு முற்பட்ட மாணிக்கங்களுக்கும் ஏற்றம். அவரோட சம்பந்தத்தினாலேதான் அவருக்கு பிற்பட்ட மாணிக்கங்களுக்கும் ஏற்றம்

செளத்ரீ சங்க்யா சுபாஷீஹி, இந்த சூத்திர கணக்கு வேணும்ன்னா, செளத்ரீ சங்க்யா – சூத்திர சங்க்கை. சுபாஷீஹின்னா, சு பா ஷா, சு-ங்க்கறது அஞ்சு, य र ल व श, श அஞ்சாவது எழுத்தால்லையோ? प फ ब भ , நாலோல்லையோ, மறுபடியும் ச, அஞ்சாவது எழுத்து. 545. அதனால செளத்ரீ சங்க்யா சுபாஷீஹின்னு சொல்லுவர்கள்.

ஸ்ரீரங்கம், கரிசைலம் அஞ்சனகிரிம் தார்க்‌ஷாத்திரிசிம்மாசலவ்
ஸ்ரீகூர்மம் புருஷோத்தமஞ்ச பதரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீமத்த்வாரவதி ப்ரயாக் மதுரா அயோத்தியா கயா புஷ்கரம்
சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே இராமானுஜோயம் முநிஹி
ஸத்யம் ஸத்யம் புனஸ்ஸத்யம் உத்ருச்சபுதமுச்சதே எதிராஜோ ஜகத்குருஹு

நாத்ர சம்சயஹா சயேவ சமுத்ரத்தா நாத்ர சம்சயஹா
தேசிகர் தன்னுடைய எதிராஜ சப்ததியிலே சொல்லும்போது, இதம் அகிலதமக் கரிசனம் தரிசனம் நமஹ. த்ராதம் சம்யது யதீந்த்ரைஹி.

இராமானுசருடைய விக்கிரகத்தை ஏற்படுத்தி, மதுரகவி ஆழ்வார் மூலமாக, தாமிரபரணி ஆற்று நீரைக் காய்ச்சி, அதுல இராமானுசர் விக்ரகம் வர, அத நாதமுனிகளுக்கு ப்ரத்யக்ஷமாகக் கொடுத்ததே, நம்மாழ்வார்தான். ‘பவிஷ்யதாச்சார்ய வரசொரூபம் தம்காரீசூணு சரணம் ப்ரபத்யே’-ன்னு, ‘காரீசூணு’ன்னு நம்மாழ்வாருக்குப் பெயர். அவர்தான் இந்த பவிஷ்யதாச்சார்ய விக்கிரகத்தயே கொடுத்தார்

பூ மன்னு மாது – புஷ்பத்திலே எப்போதும் எழுந்தருளியிருக்கக்கூடிய மகாலக்ஷ்மி, மாது பொருந்திய மார்பன் – மகாலக்ஷ்மியை திருமார்பிலே கொண்டிருக்கிற ஸ்ரீமந் நாராயணன். மார்பன் புகழ் மலிந்த பா – ஸ்ரீமந் நாரயணனோட வைபவத்தைச் சொல்ற திருவாய்மொழி, பா மன்னு மாறன் – அந்த திருவாய்மொழியைப் பாடின நம்மாழ்வார், மாறன் அடி – நம்மாழ்வாருடைய திருவடி, அடிபணிந்துய்ந்தவர் – அந்தத் திருவடியைப் பற்றியே வாழ்ந்த இராமானுசர்.

பண் தரு மாறன் பசுந்தமிழ் * ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்

கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் * கலைப் பெருமான்
ஒலிமிக்க பாடலை உண்டு * தன் உள்ளம் தடித்து * அதனால்
வலி மிக்க சீயம் இராமானுசன்

பற்பமெனத் திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும்
பாவனமாகிய பைந்துவராட பதிந்த மருங்கழகும்
முப்புரி நூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்
எப்போதும் கற்பகமே விழி கருணை பொருந்திடு கமலக் கண்ணழகும்
காரிசுதன் கழல் சூடிய முடியும் கணணச் சிகைமுடியும்
எப்பொழுதும் எதிராசர் வடிவழகு என் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே

அவர் எழுதினவை ஒன்பது கிரந்தங்கள், நவரத்தினங்கள்ன்னு சொல்லுவர்கள். வேதார்த்த சங்க்ரகம், வேதாந்த சாரம், வேதாந்த தீபம், ஸ்ரீபாஷ்யம், சரணாகதிகத்யம், ஸ்ரீரங்ககத்யம், ஸ்ரீவைகுண்டகத்யம், கீதாபாஷ்யம், நித்யக்ரந்தம், என்று ஒன்பது கிரந்தங்களைச் சுவாமி சாதித்தார். ஒன்பதுமே ஒன்பது இரத்தினங்கள்தான். இரத்தின இரத்தினமான கிரந்தங்களை, இரத்தினத்திலே நாயக இரத்தினமான இராமானுசர், இரத்தினமான, இராம இரத்தினமாய், கோபால இரத்தினமாய், ரங்க இரத்தினமாக இருக்கக்கூடிய ஸ்ரீரங்கரத்தினத்திலே எப்போதும் சேவை சாதிக்கக்கூடிய எம்பெருமானுடைய திருவடிகளுக்கு, இரத்தின ஹாரமாகவே சமர்ப்பித்தார். அந்த இரத்தினமான இராமானுசரை நாம் பற்றினோமென்னால், நாம் வெறும் கண்ணாடிக்கல்லாக இருந்தாலும், நாமும் ஸ்ரீவைஷ்ணவ இரத்தினமாக ஆக்கப்படுகிறோம், என்பது நம் சம்ப்ரதாயத்திலே தேறிய உண்மை.

அத்திகிரி அருளாளர் அடி பணிந்தோன் வாழியே
அருட்கச்சி நம்பி உரை ஆறு பெற்றோன் வாழியே
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே
பதின்மர் கலை உட்பொருளைப் பரிந்து கற்றான் வாழியே
சுத்த மகிழ் மாறன் அடி தொழுது உய்ந்தோன் வாழியே
தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே

எண்டிசையெண் இளையாழ்வார் எதிராசன் வாழியே
எழுபத்து நால்வர்க்கும் எண்ணாங்கு உரைத்தான் வாழியே
பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே
பரகாலன் அடியிணையைப் பரவும் அவன் வாழியே
தண்டமிழ் நூல் நம்மாழ்வார் சரண் ஆனான் வாழியே
தாரணியும் விண்ணுலகும் தான் உடையோன் வாழியே
தெண்டிரை சூழ் பூதூர் எம்பெருமானார் வாழியே
சித்திரையில் செய்ய திருவாதிரையோன் வாழியே

சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி
திருவரையில் சாத்திய செந்துவராடை வாழி
ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி
இலங்கிய முன்னூல் வாழி இணைத்தோள்கள் வாழி
சோராத துய்ய செய்ய முகச்சோதி வாழி
தூமுறுவல் வாழி துணை மலர்க்கண்கள் வாழி
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி
இனிதிருப்போடு எழில் ஞான முத்திரை வாழியே

அறுசமயச் செடி அதனை அடி அறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிருட்டிகளை அறத்துறந்தான் வாழியே
செறு கலியைச் சிறிதும் அறத் தீர்த்துவிட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மறை அதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே
மாறன் உரை செய்த தமிழ் மறை வளர்த்தோன் வாழியே
அற மிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாரும் எதிராசர் அடியிணைகள் வாழியே

சங்கர யாதவ பாட்டப் பிரபாகரர் தங்கள் மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சதுமறை வாழ்ந்திடு நாள்
வெங்கலி இங்கினி வீறு நமக்கிலை என்று மிகத் தளர் நாள்
மேதினி நம் சுமை ஆறும் எனத் துயர் விட்டு விளங்கிய நாள்
மங்கயராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்
மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடு நாள்
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும்பூதூர்ச்
சீமான் இளையாழ்வார் வந்தருளிய நாள் திருவாதிரை நாளே!


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் கண்ண மங்கை பதிகம் பாசுரங்களின் விவரணம் -ஸ்ரீ ஸ்வாமிகள் அருளிச் செய்த ஒன்பது ஸ்ரீ திவ்ய கிரந்தங்கள்-

April 10, 2025

1-ஸ்ரீ பாஷ்யம்
2-வேதார்த்த தீபம் –
3-வேதார்த்த சாரம்
4-வேதார்த்த ஸங்க்ரஹம்
5-சரணாகதி கத்யம்
6-ஸ்ரீ ரங்க கத்யம்
7-ஸ்ரீ வைகுண்ட கத்யம்
8-நித்ய கிரந்தம்
9- கீதா பாஷ்யம்

சித்தி த்ரவ்யம் -ஸ்ரீ பாஷ்யம் -வேதார்த்த சக்கரம் -வேதார்த்த தீபம்
ஸ்தோத்ரம் ரத்னம் சாதுஸ்லோஹி -கத்ய த்ரவ்யம்
ஆகம பிரமாணம் -நித்ய கிரந்தம்
கீதார்த்த ஸங்க்ரஹம் -கீதா பாஷ்யம்
மாயாவாதக்கண்டனம் -வேதார்த்த ஸங்க்ரஹம் -ஸ்ரீ பாஷ்யம்

பஞ்ச கிருஷ்ண ஷேத்ரங்கள்
திருக்கண்ண மங்கை -பத்தராவி பெருமாள்
திருக்கண்ண புரம்
திருக்கண்ணங்குடி -தாமோதர நாராயண பெருமாள்
வரிசையாக காட்டிக் கொடுக்க அனுபவம்
திருக்கோவலூர்
கபிஸ்தலம் -மற்ற இரண்டும்
பெரிய வடிவம் -நின்ற திருக்கோலம் -பெரும் புறக் கடல்
கற்கலாம் கவியின் பொருள் தானே இதிலே -இறுதியில் –
நம்பூர் வரதாச்சார்யார் -நம்பிள்ளை-கலி கன்றி தாஸர் -கார்த்திகை கார்த்திகை –
பெரியவாச்சான் பிள்ளை -ஆவணி ரோஹிணி – –

முதல் சொல்லே பெருமாள் திரு நாமம் -ப்ருஹத் பஹிர் ஸிந்து -பாற் கடல் இல்லாமல் வெளிக்கடல்
லஷ்மீ வனம்-கிருஷ்ணாரண்யம் -கண்ணன் கடு -கிருஷ்ண மங்கள க்ஷேத்ரம்
மங்கையைக் கண்டு மணம் புரிந்த தேசம்
கடலைக் கடைந்து பெண் அமுதைக் கொண்டு உகந்தானே
பிராட்டி தபஸ் இருந்து திருக்கல்யாணம்
தேவர்கள்-வண்டு ரூபம் –
கண்ண மங்கை தாயார் -இன்றும் -தேன் வண்டுகள்
அயனம் மாறி பிறையில்
தர்சன புஷ்கரணி
சப்த அம்ருத க்ஷேத்ரம்
மூலவர் பத்தராவி
உத்சவர் -அபிஷேக வல்லி தாயார் பெரும் புற கடல்
திருக்கண்ண மங்கை ஆண்டான் -நாதமுனி சஸ் சிஷ்யர் –
நாய்கள் சண்டை -எஜமானர்கள் -வாக்குவாதம்
பார்த்து -பரமசேதனன் அபிமானம் இருக்க என்ன குறை
கௌஸ்துபம் ஸ்தானம் -நன் பொருள்
ஸ்வ வியாபாரத்தை விட்டார்
பகவத் கைங்கர்யம் ஒன்றே கார்யம்
சக்தி லஜ்ஜை வியாபாரம் விட உபாயம்
இவர் திருவரசும் இங்கே சந்நிதியில் தெற்குப்புறம்
பெரிய உடையார் இளைய பெருமாள் தீர்க்க சிந்தயந்தி நறையூர் அரையர் -உபேய த்ருஷ்டாந்தம்
இந்த பெருமாளே பெரிய வாச்சான் பிள்ளை -அனைத்துக்கும் வியாக்யானம்
உத்பல விமானம்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் -கண மங்கை -கண்ணனூர் -மடலில்
கருத்தினால் வாக்கினால் நான்மறை காணாத இவனைக் ககாணலாம் -பிள்ளைப்பெருமாள் ஐ யங்கார்

பெரும் புறக் கடல் -பிரவேசம் –

அவன் அல்லது ஆஸ்ரயணீயன் இல்லை என்று
பிறருக்கு உபதேசிக்கப் புக்கவர்
அமலா அருளாய்-7-9-8- -என்றும்
உன தடியே சரணாமே -7-9-9–என்றும்
தம்முடைய அபேஷையின் மிகுதியைச் சொல்லி  தலைக் கட்டினார் –

( கீழே இப்படி பிரார்த்தித்தவர்
பரம ப்ராப்யம் பெறாமல் –
ஸ்ரீ வைகுந்தம் பெறாமலேயே –
இதில் கண்டு கொண்டேனே-ஒன்பதில் கால் – ஹ்ருஷ்டராய் அருளுகிறார்
நாட்டார் திருந்த இன்னும் இவரைக் கொண்டு பாசுரம் பெற வேண்டுமே
நம்மாழ்வார் ஆயிரம் ப்ரதிஜ்ஜை உண்டு
இவர் இடம் அது இல்லையே )

இவர்க்கு இனிச் செய்யலாவது என் என்று பார்த்து
வேறே ஒராசனமாக ( எழுந்து அருளி ) விருந்து
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை அடைய
காட்டிக் கொடுத்து
நம்மை ஒழிந்த வஸ்துக்கள் அடைய நமக்கு உபமானமாய் இருத்தல்
பிரகாரமாய் இருத்தல் செய்யும்படி இருக்கிற நாம்
(விபூதிகள் எண்ணிறந்தவை -ஸ்ரீமத் -உயர்ந்த எல்லாம் எனது தேஜஸ்ஸின் அம்சம் –
சிறந்ததாக உள்ளேன் சில வற்றைக் காட்டி அருளி ஸ்ரீ கீதையில்-பிரகாரம் -அப்ருதக் சித்த விசேஷணம் )
உமக்கு ( மானஸ அனுபவமாக மட்டும் இல்லாமல் ) கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம்படி வந்து நின்றோம் ஆகில்
நீர் என் பெறாதாராய் தான் கிடந்தது கூப்பிடுகிறது –
இனி
மேல் உள்ள காரியமும் நாமே செய்வுதோம் காணும் -என்று சமாதனம் பண்ண –
அப்படியே அனுசந்தித்து த்ருப்தராகிறார் –
(சரீர யாத்திரை கர்மாதீனம் -ஆத்மயாத்ரை கிருபாதீனம்
அனைத்தும் உபமானம் – பிரகாரம்
கண்ண மங்கையுள் கண்ணாலே கண்டேன் களித்தேன் என்று பேசி அருளுகிறார் )

ஆருரோஹ ரதம்  ஹ்ருஷ்டஸ் சத்ருக்க்ன சஹிதோ பலீ  –
பெரிய ஆசை உடன் வந்த ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு
நினைத்து வந்த கார்யத்தில் செய்தது ஒன்றும் இல்லை –
ஆகிலும் மீண்டு போகிற போது ஹ்ருஷ்டனாய்ப் போனான் இறே-

அப்படியே யாய்த்து இவர் விஷயத்தில் சமாதானம் பண்ணின படியும் –

———————————————————–

பெரும் புறக் கடலை யடல் ஏற்றினைப் பெண்ணை யாணை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-

திரட்கோவையை-இனிமை பாக்யம் -ப்ராப்யம்
பக்தராவி -என்னது உன்னதாவியில் அவன் மதம் -பத்தருக்கு பிராணன் -என்றும்
முத்து மாலை -ப்ராப்யம் -கழுத்தில் போட்டு அனுபவிக்க
முத்துக்குவியல் -ப்ராபகம் -வித்து ஜீவிக்கலாம் -உபாயம்-ரக்ஷகனாய் -பிராபகம்
அரும்பினை யலரை-யுவா குமாரா –
திருமணம் பண்ண யுவா வாய் இருக்க வேண்டும் -பாலகன் மாறிக்கொண்டே யுவாவாய் இருப்பானே எப்பொழுதும்
மனத்தாசையை-ஆசை நிறைவேற்றுபவன் இல்லை -ஆசைக்கு விஷயமாகவே இருப்பானே –
அமுதம் பொதியின் சுவைக்கரும்பினை–அமுதமே நீராகி கருப்பஞ்சாறு போல் போக்யன் –

சென்று நாடி -ஆசையே வேண்டுவது
தபஸை -தப -ஆலோசனை பண்ணும் சர்வஞ்ஞன்

பெரும் புறக் கடலை –
சர்வ பதார்த்தங்களையும் தன்னுள்ளே அடக்கி நோக்கும் கடல் போலே
அபரிச்சேத்யனாய் உள்ளவனை –
எல்லா கடலுக்கும் புறம்பாய்
தான் பெருத்து இருக்கிற கடல் போன்று இருக்கிறவனை –

யடல் ஏற்றினைப்-
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த்த வஸ்துக்களையும்
தன்னுள்ளே இட்டு நோக்கும் படி
இவற்றை உடையன் ஆகையாலே வந்த
மேனாணிப்பை உடையவனை –

பெண்ணை –
அப்படி இருந்தால் ஒருவருக்கும் கிட்ட ஒண்ணாத படியாய்
இருக்குமோ என்னில்
பரதந்த்ரனாய் இருக்கும் இருப்பைச் சொல்கிறது –

வெறும் பாரதந்த்ரமேயாய்  இருக்கம் இத்தனையோ என்னில் –
யாணை-
நிரங்குசமான ஸ்வா தந்த்ர்யத்தை உடையவனை –

எண்ணில் முனிவர்க்கு அருள் தரும் தவத்தை –
எண்ணிறந்த தபஸை உடைய யோகிகளுக்கு
அந்த தப  பலத்தை கொடுக்கும்
தபஸ் ஆனவனை –

முத்தின் திரட்கோவையைப் –
கண்ட போதே ஸ்ரமம் எல்லாம் ஆறும்படி
உடம்பிலே ஏறிட்டுக் கொண்டு அனுபவிக்கலாம் படி
முத்தின் உடைய திரண்ட மாலை போலே இருக்கிறவனை-

பத்தராவியை –
தன் பக்கல் பரிவை உடையார்க்கு
தன்னை ஒழிய ஜீவிக்க அரிதாம்படி இருக்கிறவனை –

நித்திலத் தொத்தினை –
மேன் மேல் என நமக்கு உண்டு என்று
தேறி இருக்கலாம்படி
முத்துக் குவை போன்று இருக்கிறவனை –
நித்திலம் -முத்தும் -அழகும் -சௌந்தர்யத் தொத்தை-

அரும்பினை யலரை –
இரண்டு அவஸ்தையும் ஒரு காலே
சூழ்த்துக் கொடுக்கலாம்படி இருக்கிறவனை –
யுவா குமார –

அடியேன் மனத்தாசையை –
நான் நித்ய அனுபவம் பண்ணா நிற்கச் செய்தேயும்
இதுக்கு முன்பு அனுபவித்து அறியாதது ஒன்றில் போலே
பிறக்கிற ஆசை யானவனை –

அமுதம் பொதியின் சுவைக் கரும்பினைக்
அம்ருதத்தை நீராகப் பாய்ச்சி வளர்த்தால் போலே
நிரதிசய போக்ய பூதமான
கரும்பு போலே இனியனாய் இருக்கிறவனை –

கனியைச் –
அப்போதே நுகரலாம்படி
பக்வ பலமாய் இருக்கிறவனை –

சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே   –
பசித்த இடத்தே
ஸூக போஜனம் பண்ணப் பெறுவாரைப் போலே
அபேஷை பிறந்த இடத்தே
கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –

—————————————-

எவ்வழியால் காட்டினார்
பக்திக்கும் பிரபத்திக்கும் அவன் இட்ட வழக்கு -நிர்வாகன்
அவ்வழியால் அடைந்து பெரும் இன்பத்தை பெற்று அனுபவிக்கிறார்
நிரதிசய போக்யதையாய் -அவன் காட்டக்கண்டு பெற்று அனுபவிக்கிறார் –

மெய்ந் நலத் தவத்தைத் திவத்தைத் தரும் மெய்யை பொய்யினைக் கையிலோர் சங்குடை
மைந் நிறக் கடலை கடல் வண்ணனை மாலை ஆலிலைப் பள்ளி கொள் மாயனை
நென்னலைப் பகலை யிற்றை நாளினை நாளையாய் வரும் திங்களை யாண்டினைக்
கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக் கண்ண  மங்கையுள்  கண்டு கொண்டேனே —7-10-2-

மெய்யை-விஸ்வசீயமான பிரபத்திக்கு விஷயமானவன்-
கையிலோர் சங்குடை மைந்நிறக் கடலை -உடையவனை இல்லையே ஆகவே சேர்த்தே பொருள்
மைந்நிறக் கடலை கடல் வண்ணனை-மை நிறம் -நிறம்சொல்லி வண்ணம் ரக்ஷண ஸ்வபாவம்
நென்னலைப் பகலை யிற்றை நாளினை நாளையாய்–கடந்த வர்த்தமானம் வரும் காலம் –
நினைத்த மாத்திரமே இன்ப மயம் எப்பொழுதும் -ஆனந்தமயம் -சைந்தனம் போல் –

மெய்ந் நலத் தவத்தைத் –
ஸ்வரூப அனுரூபமாய்
சிநேக  ரூபமாய் இருக்கிற அபிமத சாதனமான பக்தியை –
(போஜனத்துக்கு ஷூத்து போல் )

திவத்தைத் தரும் மெய்யை –
பிரபத்தியை –

பொய்யினைக் –
இவ்விரண்டும் இல்லாதார்க்கு
தன் படிகளை ஒன்றும் அறிய ஒண்ணாது இருக்குமவனை –

கையிலோர் சங்குடை மைந்நிறக் கடலை –
கீழ்ச் சொன்ன இரண்டும் உடையார்க்கு
காட்சி கொடுக்கும் வடிவை உடையவனை –
கண்டத்தை எல்லாம் அடைய உள்ளே இட்டு நோக்கும்
கடல் போல் அன்றியே
ஓர் சங்குடை மைந்நிறக் கடலை –
(சேர்த்தி வெள்ளை விழி சங்கும் மைந்நிறம் -பராபக வண்ணம்-நிறம் இங்கு )

கடல் வண்ணனை –
சர்வ பதார்த்தங்களையும் தன்னுள்ளே அடக்கி
சிறியதை பெரியது நலியாத படி
தன் திரைகள் ஆகிற கைகளால் நோக்கும்
கடல் போலே இருக்கும் ஸ்வபாவத்தை உடையவனை –

மாலை –
சர்வாதிகனை –

ஆலிலைப் பள்ளி கொள் மாயனை –
அகடிதகடநா சாமர்த்தியத்தை உடையவனை –
ஒரு சிறு வடிவாலே சகல லோகங்களையும் அடக்கி
ஒரு பவனான ஆலந்தளிரிலே
கண் வளர்ந்து அருளின
ஆச்சர்ய பூதனை –

நென்னலைப் பகலை-
அபிமத லாபம் உண்டான பிற்றை நாளிலே நிர்வ்ருதி ( நினைவு )போலே
நேற்றைப் பகலிலே அனுபவம் இருந்தபடி என்-என்று
ஸ்மரித்து தரிக்கலாம் படி இருக்கிறவனை –

யிற்றை நாளினை –
அநு பூயமான நாள் ஆனவனை –

நாளையாய் வரும் –
இவ்வனுபவத்துக்கு விச்சேதம் பிறவாமே
நாளையாயும் வரப்  புகா நின்றது என்று
அனுசந்திக்கலாம்படி இருக்கிற நாளையாய்

நாளையாய் வரும் திங்களை யாண்டினைக்-
அது தான் ஒரு நாளேயாய்ப் போகாமே
அப்படி என்றும் ஒக்க யாண்டினைக்-
அப்படிப் பட்ட மாசங்களை உடைய ஆண்டு ஆனவனை –
இனி அவ்வாண்டு  தன்னை
அப்படியே இரட்டித்துக் கொள்ளும் இத்தனை –

கன்னலைக் –
நிரதிசய போக்கியம் ஆனவனை –

கரும்பினிடைத் தேறலைக் –
நெருக்கிக் கார்யம் கொள்ள வேண்டாதே
அப்போதே பருகலாம்படி இருக்கிற
கரும்பில் ராசம்சம் ஆனவனை –
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –

————————————————

கீழே தவம் மெய் இரண்டையும் வியாஜ்யமாக்கி ரஷிப்பான்
பக்தி பிரதிபத்தி -இதில்
உமக்கு எத்தாலே ரக்ஷித்தான்
நிருபாதிக கிருபையாலே ரக்ஷித்தன் என்று அருளிச் செய்கிறார் –

எங்களுக்கு அருள் செய்கின்ற வீசனை வாசவார் குழலாள் மலை மங்கை தன்னை
பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான் தன்னைப் பான்மையைப் பனி மா மதி யந்தவழ்
மங்குலைச் சுடரை வட மா மலை யுச்சியை நச்சி நாம் வணங்கப் படும்
கங்குலைப்  பகலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே—7-10-3-

எங்களுக்கு அருள் செய்கின்ற வீசனை –
அநந்ய கதிகளான எங்கள் பக்கலிலே
நிர்ஹேதுக கிருபையை  பண்ணுகிற
சர்வேஸ்வரனை –

வாசவார் குழலாள் மலை மங்கை தன்னை பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான் தன்னைப் –
எங்களைப் போல் அன்றியே -தானும் ஒரு ஸ்திரீயுமாய்
ஈஸ்வர அபிமானம் கொண்டாடி இருக்கிற ருத்ரனை
தன் திருமேனியிலே ஒரு பார்ஸ்வத்திலே வைத்து
அது தன்னை தன் பேறாக வைத்து உகந்து இருக்கிற சீலத்தை உடையவனை –

பான்மையைப் –
இந்த சீலம் தான் புழுக் குறித்து எழுத்தாமாப் போலே
ஒரு கால் உண்டாய் போமது அன்றிக்கே
இதுவே ஸ்வ பாவமாம்படி இருக்கிறவனை –

பனி மா மதி யந்தவழ் மங்குலைச் –
குளிர்ந்து நிறைந்து இருக்கிற சந்தரன் உடைய சஞ்சாரத்தை உடைய
ஆகாசம் ஆனவனை –

சுடரை –
நீர்க் களிப்பை அறுக்கைக்கு ஈடான
கிரணங்களை உடைய ஆதித்யனை –

வட மா மலை யுச்சியை –
இப்படி சாதாரணமான வடிவே அன்றியே
அசாதாரணமான விக்ரஹத்தோடே
அத் திருமலையிலே ஏக தேசமாய் இருக்கிறவனை –

நச்சி நாம் வணங்கப் படும் கங்குலைப்  –
நசையை  உடையோமாய்க் கொண்டு நம்மாலே
ஆஸ்ரயிக்கப்படுகிற போக யோக்யமான காலம் ஆனவனை –

பகலைச் –
அதுக்கு உறுப்பாக த்ரவ்யார்ஜனத்து ஈடான
காலம் ஆனவனை
சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே-

—————————————————————-

திருக்கோவலூர் சேர்த்து அனுபவம் -கிருஷ்ண க்ஷேத்ரம் அன்றோ –
நிர்ஹேதுக கடாக்ஷம் உம்மை மட்டுமேயோ -பலரையோ
முதல் ஆழ்வார்களும் கடாக்ஷித்தான்
என்றவர் திவ்ய தேசம் சொல்லாமல் போக மாட்டார்
ஆயனது பிள்ளைச் சேவகம் சேர்த்து அனுபவம்
அனைத்து ஆழ்வார்களும் கடாக்ஷித்து அருளினான் என்கிறார் இதில்
தெள்ளியார் என்று -மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் –

பேய் முலைத் தலை நஞ்சுண்ட பிள்ளையைத் தெள்ளியார் வணங்கப் படும் தேவனை
மாயனை மதிள் கோவலிடைக் கழி மைந்தனை யன்றி அந்தணர் சிந்தையுள்
ஈசனை யிலங்கும் சுடர்ச் சோதியை  எந்தையை எனக்கு எய்ப்பினில் வைய்ப்பினைக்
காசினை மணியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-4-

தேவனை-ஆழ்வார்களை பெற்றதும் தேஜஸ் மிக்கு ஆனவனை –
அந்தணர்-பட்டர் பிரான் -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -திருமழிசைப்பிரான் -த்விஜர் இரு பிறப்பு

பேய் முலைத் தலை நஞ்சுண்ட பிள்ளையைத் –
பூதனை உடைய முலை ஸ்தலத்தில் உண்டான விஷத்தை அமுது செய்து
விழுக்காடு அறியாத முக்த்தனை-

தெள்ளியார் வணங்கப் படும் தேவனை –
இப்படி முக்க்தர் அன்றியே
அறிவுடையாராய் இருப்பாராலே ஆஸ்ரயிக்கப் படுவானாய்-
அத்தாலே தீப்யம் ஆனவனை –
(தெள்ளியார் -முதல் ஆழ்வார்கள் மூவரும் )

மாயனை –
ஆச்சர்ய பூதனை –

மதிள் கோவலிடைக் கழி மைந்தனை –
இடம் இல்லாத இடத்தே
ஆஸ்ரிதரோடு புகுந்து நெருக்கின
நித்ய யௌவன ஸ்வ பாவனை –

யன்றி அந்தணர் சிந்தையுள் ஈசனை-
அதுக்கு மேலே ஆஸ்ரிதர் உடைய ஹிருதயத்திலே புகுந்து
அவர்களைத் தன் வழியே நியமித்துக் கொண்டு இருக்கிறவனை –
(அந்தணர் சிந்தையுள் ஈசனை-பெரியாழ்வார் -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் -திருமழிசைப் பிரான்
பாடுபவர் இவர் தானே
இவர்களை உப லக்ஷணம் ஆக்கி
ஆஸ்ரிதர் ஹிருதயம் -என்றது மாறன் குலசேகரப்பெருமாள் பாணன் )

யிலங்கும் சுடர்ச் சோதியை  –
இவர்கள் உடைய சரீரத்திலும் ஆத்மாவிலும்
வர்த்தியா நிற்கச் செய்தே
அவற்றைப் பற்றி வரும் தோஷங்கள் தன் பக்கலிலே தட்டாதபடி இருக்கிறவனை –

எந்தையை –
இந்த ஸ்வ பாவத்தைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவனை –

எனக்கு எய்ப்பினில் வைப்பினைக் –
எனக்கு கைம் முதல் இல்லாத வன்று
அழித்துக் கெடுத்து ஜிவிக்கலாம் படி யான
நிதியானவனை –

காசினை –
பொன் போலே ஸ்ப்ருஹணீயம் ஆனவனை –

மணியைச் –
அப் பொன்னை அழித்தும் ஸ்வீகரிக்கக் கடவ
ரத்னம் போலே ஸ்லாக்கியம் ஆனவனை –
சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே-

—————————————————

திரு நின்றவூர்
பத்தராவிப்பெருமாள் இருவரும்
சேர்த்து அனுபவிக்கப் பண்ண அருளுகிறார்
பால்யர் -ஒன்றும் அறியாதவர் போல் ஞானிகள்
கீழே தம்மை விஷயீகரித்தது த்ருஷ்டாந்தம் சொல்லி
ஆழ்வார்களைப் பெற்ற மேனாணிப்பு தோற்ற
திருப் ப்ரீதி தொடங்கி இவ்வளவும் வந்து அனுபவத்து ஹ்ருஷ்டராய்
அவனது ஐஹிக ஆமுஷ்கிக மோக்ஷ பிரதத்வம் அனுசந்தித்து அருளுகிறார்

ஏற்றினை இமயத்துள் எம் மீசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை
ஆற்றலை யண்டத்தப் புறத்து உய்த்திடும் ஐயனைக் கையில் ஆழி ஓன்று ஏந்திய
கூற்றினைக் குரு மா மணிக் குன்றினை நின்றவூர்  நின்ற நித்திலத் தொத்தினைக்
காற்றினைப் புனலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-5-

ஏற்றினை-
ஸ்வ ஆனந்த அனுபவத்தால் வந்த
செருக்கை உடையவனை –

இமயத்துள் எம் மீசனை-
ஹிம வானில் திருப் பிரிதியில் இருக்கும் இருப்பைக் காட்டி
என்னை வசீகரித்தவனை –

இம்மையை மறுமைக்கு மருந்தினை –
ஐஹிகமாயும் ஆமுஷ்மிகமாயும் உள்ள பலங்களுக்கு சாதன பூதன் ஆனவனை –

ஆற்றலை-
ஒரு வஸ்துவோ எல்லாவற்றையும் தர வற்றோ என்னில்
அக் கண்  அழிவு   சொல்ல ஒண்ணாத படி
சர்வ சக்தி உக்தனாய் உள்ளவனை –

யண்டத்தப் புறத்து உய்த்திடும் –
இந்த சர்வ சக்தித்வம் கொண்டு கொள்ள இருக்கிற கார்யம் என் என்னில் –
இவற்றை பரம பதத் தளவும் செல்ல நடத்துகை –

அது தான் அவனுக்கு வேண்டுகிறது என் என்னில் –
ஐயனைக் –
நிருபாதிக பந்துவாகை-

கையில் ஆழி ஓன்று ஏந்திய கூற்றினைக் –
ஆதி வாஹிகர் கையிலே காட்டிக் கொடுத்து
கொடு போகா நின்றால்
ஆரேனும் சிலர் விலக்கினார் உண்டாகில்
இரு துண்டம் ஆக்குகைக்கு ஈடான பரிகரத்தை உடையவனாய்
சத்ருக்களுக்கு மிருத்யு போல் ஆனவனை –

குரு மா மணிக் குன்றினைக் –
ஸ்லாக்யமான நீல ரத்ன பர்வதம் போன்ற வடிவை உடையவனை –
அங்கே கொடு போனால் காட்சி  கொடுக்கும் படியான வடிவு இருக்கிறபடி –

நின்றவூர்  நின்ற நித்திலத் தொத்தினைக் –
அவ்வளவும் போகப் பற்றாதார்க்கு
(திருமங்கை ஆழ்வார் போல் அர்ச்சாவதாரத்தில் மண்டி அனுபவிப்பாருக்கு
அங்கு போகும் வரை காத்து இருக்க முடியாத ஆர்த்தர்களுக்கு )
காட்சி கொடுக்கைக்காக
திரு நின்றவூரிலே நிற்கிற
முத்துத் திரள் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவனை –

காற்றினைப் –
ஸ்வ ஸ்பர்சத்தால் வரும்
ஸூகமாய் இருக்கிறவனை –

புனலைச் –
தாரகம் ஆனவனை –
சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே-

(வாழ் முதல் மகிழ் முதல் வளர் முதல் -தாயகம் -போக்யம் -போஷகம் )

——————————————————–

கீழ் பல பிரத உபயுக்தமான
சாமர்த்தியம் தத் கார்யமான விரோதி நிரசனத்தையும்
இவற்றுக்கு நிதானமான ஸ்ரீ யபதித்தவம் அனுசந்தானம் இதில்

துப்பனைத் துரங்கம் படச் சீறிய தோன்றலைச் சுடர் வான் கலன் பெய்ததோர்
செப்பினை திருமங்கை மணாளனைத் தேவனைத் திகழும் பவளத்தொளி
யொப்பனை யுலகேழினை   யூழியை ஆழி ஏந்திய கையனை யந்தணர்
கற்பினை கழுநீர் மலரும் வயல் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-6-

கற்பினை-சங்கல்பம் -அத்யயனம் இரண்டையும் சொல்லிற்று –

துப்பனைத்-
தான் நினைத்தது செய்து தலைக் கட்டுகைக்கு ஈடான
சாமர்த்தியத்தை உடையவனை -( ஸத்ய ஸங்கல்பன் அன்றோ )

துரங்கம் படச் சீறிய தோன்றலைச் –
கேசி உடைய வாய் கிழியும்படி
சீறிய முக்த்தனை -( அழகனை )

சுடர் வான் கலன் பெய்ததோர் செப்பினை –
ஒளியை உடைத்தாய் –
பெரிய விலையனாய் இருந்துள்ள ஆபரணங்களை
இட்டு வைக்கும் செப்பானவனே –
( பத்து ஆழ்வார்களைப் பூட்டி வைத்துள்ள பெட்டி அன்றோ இவன் )

சுடர் வான் கலன் ஆகிறது தான் என் என்னில் –
திருமங்கை மணாளனைத் தேவனைத் –
பிராட்டியும் தானுமான சேர்த்தியிலே
உண்டான ஒத்து மஞ்சளும்
செம்பஞ்சிக் குழம்பும்
மாளிகை சாந்தின் நாற்றமுமாயக் கொண்டு
திரு மேனியிலே புகர் தோன்ற நின்ற நிலை –

திகழும் பவளத்தொளி யொப்பனை-
சர்வைஸ் ஸ்ப்ருஹணீயமானவனை-

யுலகேழினை –
போக்ய
போக உபகரண
போக ஸ்தானங்களாய் உள்ளவனை  –

யூழியை –
காலமே சேஷித்த அன்று
காலமாய் நின்றவனை –

ஆழி ஏந்திய கையனை –
நித்தியமான திவ்ய ஆயுதங்களை
ஏந்தும் திருக் கையை உடையவனை –
நித்யமான திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனை -என்றபடி –

யந்தணர் கற்பினை –
பிராமணர்  உடைய மரியாதை போலே இருக்கிற
சங்கல்பத்தை உடையவனை –
பிராமணராலே   அத்யயனம் பண்ணப் படுகிறவனை-என்றுமாம் –

கழுநீர் மலரும் வயல் –
செங்கழுநீர் தொடக்கமான புஷ்பங்கள் அலரா நின்றுள்ள
வயலை உடைத்தான –
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே  –

————————————–

ஸ்ரீ யபதியாய்
பரம ஸ்வாமி -அபரமன் –அப ரமன் ரம சம்பந்தம் இல்லாதவர்
சர்வ சக்தித்வம் சொல்லி
ஆஸ்ரித விரோதி நிரஸனம் அனுபவம் –

திருத்தனைத் திசை நான்முகன் தந்தையைத் தேவ தேவனை மூவரில் முன்னிய
விருத்தனை விளங்கும் சுடர்ச் சோதியை விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய
அருத்தனை யரியைப் பரி கீறிய அப்பனை யப்பிலார் அழலாய் நின்ற
கருத்தனை களி வண்டு அறையும் பொழில் கண்ண மங்கையுள் கண்டேனே—7-10-7-

திருத்தனை-திருப்தன் –

திருத்தனைத் –
ஸ்வ ஆனந்த அனுபவத்தாலே
நித்ய த்ருப்தன் ஆனவனை –
(நித்யோதிக சாந்தோதிக திசைகள் உண்டே
த்யேயம் -த்யேயா இருவரும் அவனும்
ஸ்வரூபம் குண அனுபவம் செய்து திருப்தனாய் இருப்பானே)

திசை நான்முகன் தந்தையைத் –
இவ்வருகில் உள்ளாரைக் காட்டில் அதிகனாய் இருக்கிற
சதுர்முகனுக்கு
ஜனகன் ஆனவனே –

தேவ தேவனை-
அவன் ஒருவனுக்கும் அன்றிக்கே
தேவர்கள் ஆனார் எல்லாராலும் ஆஸ்ரயிக்கப்
படுமவனை –

மூவரில் முன்னிய விருத்தனை –
மூவருமான நிலையில்
மற்றை இருவருக்கும் தானே நியாமகனாய்
தானான நிலையில் வந்தால்
சேஷித்வத்தால் வந்த உறைப்புத் தோற்ற இருக்கிறவனை
விருத்தனை -தலைமகனை –

விளங்கும் சுடர்ச் சோதியை-
த்ரிமூர்த்தி மத்ஸ்யத் தனான நிலை ஒழிய
அசாதாரணமான
திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையன் ஆனவனை –

விண்ணை –
போக பூமிகளான ஸ்வர்க்காதிகள் ஆனவனை –

மண்ணினைக் –
அதுக்கு சாதன அனுஷ்டானம் பண்ணும்
கர்ம பூமி யானவனை –

கண்ணுதல் கூடிய அருத்தனை –
லலாட நேத்ரனான ருத்ரனை உடைத்தான
அர்த்த பாகத்தை உடையவனை –
அருத்தன் -அர்த்த பாகன் –

யரியைப் –
விரோதிகளைப் போக்குமவன் –

பரி கீறிய அப்பனை-
விரோதி நிரசனத்தை சீலமாக உடைய
உபகாரகனை –

யப்பிலார் அழலாய் நின்ற கருத்தனை –
படபாமுகாக்னி ஜலம் அடைய தன் பக்கலிலே வந்து
சுவரும்படி இருக்குமா போலே
சர்வ பதார்த்தங்களும் தன பக்கலிலே வந்து
லயிக்கும்படி இருக்கும் சக்தியை உடையவனை –

(படபாமுகாக்னி-குதிரை முக அக்னி கடலுக்குள் இருந்து -தண்ணீருக்கு லய ஸ்தானம் )

களி வண்டு அறையும் பொழில் கண்ண மங்கையுள் கண்டேனே-

——————————————————–

சர்வ ஸமாச்ரயணீயன்
அதுக்கு உறுப்பாக விரோதி நிரசனம் பலபடியாக அனுசந்தித்து
அப்ரதிஹதன் எதிர்ப்பவர்கள் இல்லாதவன் -என்கிறார் –

வெஞ்சினக் களிற்றை விளங்காய் வீழக் கன்று வீசிய வீசனை பேய் மகள் துஞ்ச
நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய
நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பியைக்
கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனைக் கண்ண மங்கையுள் கண்டேனே —7-10-8-

தோன்றலை-பாலகனாய் –

வெஞ்சினக் களிற்றை –
வெவ்விய சினத்தை உடைய மத ஹஸ்தி போலே
தர்ச நீயமானவனை –

விளங்காய் வீழக் கன்று வீசிய வீசனை-
கன்றாயும் விளவாயும் வந்த அசுரர்கள் இருவரையும்
தன்னைக் கொண்டு தன்னையே மாய்த்துத் தர
தான் நினைத்தது தலைக் கட்ட வல்லவனை –

பேய் மகள் துஞ்ச நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத் –
பூதனை முடியும்படி அவளுடைய விஷத்தைப் போக்யமாகக் கொண்டு
அமுது செய்த முக்த்தனை –

தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய நஞ்சினை-
சத்ருவாக சர்வ லோகங்களிலும் பிரசித்தனாய்
சாயுதனுமாய் இருக்கிற
ராவணன் முடியும்படி தோன்றின மிருத்யுவை –

அமுதத்தினை-
அவ் விருப்பு தானே அனுகூலர்க்கு போக்யமாய்
இருக்கிறவனை –

நாதனை-
நிருபாதிக சேஷியை-

நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பியைக் –
தன் பக்கல் ஆசை உடையார் தலை மேலே நிற்கிறவனாய்-
அது தான் பெறாப் பேறாக நினைத்து பூர்ணனாய் இருக்கிறவனை –
( உச்சி உளானே திரு முடி சேவை இன்றும் சேவிக்கிறோமே
ஆற்றாமை உள்ளாருக்கு சமகாலத்தில்
ஆசையின் தலை மேல் சடக்கென
வந்து ரக்ஷித்து அருளுவான்
ஆங்கு அப் பொழுதே தோற்றுவானே )

கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனைக் –
கம்சனுடைய துரபிசந்தியை அவன் தன்னோடு போக்கி
உகவாதாரோடு செவ்வை அழியப் பரிமாறுமவனை –
கண்ண மங்கையுள் கண்டேனே –

———————————————

விரோதி நிரசனத்துக்கு மட்டும் அன்றியே
ஒப்பனையை
நிரதிசய போக்யனாய்
சர்வபிரகார வை லக்ஷண்யம் அனுசந்திக்கிறார் –

பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய்  நின்ற
விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி தன்னை
மண்ணினை மலையை யலை நீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள்
கண்ணினைக் கண்கள் ஆர அளவும் நின்று  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-9-

மறையோர் தங்கள் கண்ணினை-வேதார்த்தம் விளங்க வைக்கும் கண் -அவனே

பண்ணினைப் –
யஆத்யஸ் ஸ்வா தூ நாம் -என்கிறபடியே
பண் போல் இனியன் ஆனவனை –

பண்ணில் நின்றதோர் பான்மையைப் –
இன்னார் இனையார் என்று அன்றியே
எல்லாரையும் ஒக்க வருத்தக் கடவதாய் இருக்கிற
அந்த பண்ணின் இசை போலே நிரதிசய போக்யன் ஆனவனை –

பாலுள் நெய்யினை –
சாராம்சத்தோடு ருஜீஷாம்சத்தோடு வாசி அற
இரண்டிலும் உண்டான உபாதேய அம்சம் ஆனவனை –

(பண்ணின் பான்மை
பாலில் நெய்
சார அம்சம் என்று மட்டும் இல்லை
சாரமாகவும் சாரா அம்சமும் அவனே
எல்லாவற்றிக்கும் போக்யம் உண்டே
பண்ணை போல் அல்லவே பால்
பாலே இனிமை -பாட்டு இசை இல்லாமல் ருசிக்காதே )

மாலுருவாய் நின்ற விண்ணினை-
த்ரிபாத்விபூதி -என்னலாம்படியான பரப்பை உடைய
நித்ய விபூதி உக்தன் ஆனவனை –

விளங்கும் சுடர்ச் சோதியை –
அங்கே நிரவதிக தேஜோ ரூபமான
திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனாய் நிற்கிறவனை –

வேள்வியை –
அத் தேசத்தை பிராபிக்கைக்கு
சாதனமான கர்மங்களாய் நிற்கிறவனை –

விளக்கின் ஒளி தன்னை –
ஸ்வ ஆயத்தமான தேஜஸ்சை உடையவனை –
(தன்னிலே தான் சார்ந்து இருப்பவன் )

மண்ணினை –
செய்தார் செய்த குற்றங்களை அடைய மறக்குமவனாய்
குற்றம் செய்வார்க்கு தன்னைப் பற்றி
நிற்கும்படி இடம் கொடுக்குமவனை -( பூமியைப் போல் )

மலையை –
இப்படிப் பட்ட தன் ஸ்வபாவத்தை ஒருவரால் சலிப்பிக்க அரிதாம்படி இருக்கிறவனை –

யலை நீரினை –
நினைத்த இடம் எங்கும் ஏற்றிப் பாய்ச்சிக் கொள்ளலாம்படி
இருக்கிறவனை –

மாலை –
ஆஸ்ரிதர் பக்கலிலே வ்யாமோஹமே வடிவாய் இருக்கிறவனை

மா மதியை-
ததாமி புத்தி யோகம் தம் -என்கிறபடியே
தன்னைப் பிராபிக்கைக்கு ஈடான
புத்தி யோகத்தை கொடுக்குமவனை –
( மதி கொடுப்பவன் மா மதி )

மறையோர் தங்கள் கண்ணினைக்-
வேதத்தை எங்கும் ஒக்க அதிகரித்து இருப்பார்க்கு
தன்னை ஒழிய பதார்த்த தர்சனம் பண்ண ஒண்ணாத படி
அவர்களுக்கு -திருஷ்டி பூதனாய் உள்ளவனை –

கண்கள் ஆர அளவும் நின்று –
காணப் பெறாமையால்
உறாவின கண்களின் உறாவுதல் தீரும்படி -நின்று
கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –

——————————————————-

பல ஸ்ருதி அவனுக்கே சொல்லி நிகமிக்கிறார் –
ஸ்ரீ கீதா உபநிஷத்துக்கு அவன்
ஸ்ரீ திராவிட உபநிஷத் சாரம் அருளவே கண்ணனாக ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை வல்லராய் யுரைப்பார் மதி யந்தவழ்
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்மை சொல்லில் வெண் சங்கம் ஓன்று ஏந்திய
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10-

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று –
ஒரு தேச விசேஷத்திலே போய் காணும் வஸ்துவை
சம்சாரத்திலே
திருக் கண்ண மங்கையிலே காணப் பெற்றேன் -என்று

காதலால் கலிகன்றி யுரை செய்த –
அபி நிவேசத்தால் ஆழ்வார் அருளிச் செய்த –

வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை –
இசையை உடைத்தாய்
அழகியதாய் இருக்கிற
இவை பத்தையும் –

வல்லராய் யுரைப்பார் –
அனுசந்திப்பார்க்கு
அடைவு படச் சொல்லுகையால் உண்டான அருமையாலே
வல்லராய் -என்கிறார் –

மதி யந்தவழ் விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் –
மதி தவழ் அம் விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் –
உபாதான லோகங்களில்
போக பூமிகள் எல்லாம் புக்கு
அங்கு உண்டான போகங்களைப் புஜிப்பார்கள்-

மெய்மை சொல்லில்-
அர்த்த தத்வம் இருந்த படி சொல்லில் –

வெண் சங்கம் ஓன்று ஏந்திய கண்ண நின் தனக்கும் –
ஐஸ்வர்ய ஸூசகமான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைக் கையிலே உடைய சர்வாதிகனே
உனக்கும் இதில் ஆதாரம் உண்டாகில்
எனக்கு சிஷ்யனாய்-உனக்கும் அதிகரிக்க வேண்டும்படி யாயிற்று
இதன் உள்ளீட்டின் கணம் இருக்கிறபடி –

குறிப்பாகில்
திரு உள்ளமாகில் –

கற்கலாம் கவியின் பொருள் தானே
ஸ்வதஸ் சர்வஞ்ஞனாய் இறுமாந்து இருந்தால் போகாது
என்னோடு அதிகரிக்கில் அறியலாம்

ஒரு வசிஷ்டனோடே
ஒரு சாந்தீபனோடே
தாழ நின்று அதிகரிக்கக் கடவ
அவனுக்கு
திரு மங்கை ஆழ்வார் உடன் அதிகரிக்கை தாழ்வோ –

அவதாரிகை

இப்படி எம்பெருமானார் செய்த உபகாரத்தை கேட்டு தத் சமாஸ்ரயண ருசி பிறந்தவர்கள் இவ் விஷயத்தை
ஆஸ்ரயித்தாலும்-சுக துக்க நிபந்தனமான -கலக்கம் வரில் செய்வது என்ன –
திருமங்கை ஆழ்வார் பக்கலிலே சிநேக யுக்தராய் -எங்கள் நாதராய் இருக்கிற
எம்பெருமானாரை ஆஸ்ரயித்தவர்கள் அவை மேலிட்டாலும் கலங்கார் என்கிறார் –

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ண மங்கை நின்றானைக் கலை பரவும்
தனியானைக் தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்
இனியானை எங்கள் இராமானுசனை வெந்து எய்தினரே -17 –

சகல சாச்த்ரங்களாலும் ஸ்துதிகப் படுபவனாய் அத்வதீயமான மத்த கஜம் போலே -அத்தால் வந்த
செருக்கை உடையனாய் கொண்டு -திருக் கண்ண மங்கையிலே நின்று அருளினவனை –நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் -பெரிய திருமொழி – 7-10 10- என்னும்படி
பிரதிபாத்யார்த்த கௌரவத்தாலே சாம்சாரிக்க சகல தாப ஹரமான தமிழை செய்து அருளின
திருமங்கை ஆழ்வாருக்கு லோகத்திலே ச்நேஹியாய் இருப்பாராய்-எங்களுக்கு நாதரான –
எம்பெருமானாரை வந்து ப்ராபித்தவர்கள் -துக்கங்கள் ஆனவை அஹமஹமிகயா வந்தாலும்
இது வந்ததே என்று வெறார்கள்–சுகங்கள் ஆனவை எகோத்யோகென வந்து திரண்டாலும்
பக்வபலம் போலே மனசு இளையார்கள் -ஆன பின்பு நீங்களும் இவற்றால்
வரும் ஹ்ருதயகாலுஷ்யத்தை-நினைத்து அஞ்ச வேண்டாம் என்று கருத்து –
முனிவு -வெறுப்பு / மொய்த்தல்-திரளுதல்

ப்ராசங்கிக்கமாக -அமைந்த பாசுரம் இது –ராமானுஜர் திருவடிகளை ஆஸ்ரயித்தால் துன்பம் வாராதோ என்று கேட்டவர்களுக்கு பதில் அளிக்க இந்த பாசுரம் -சுகம் துக்கம் ஏற்படும் -ஆனாலும் கலங்காத திடமான நெஞ்சை திருவடிகளே கொடுத்து  அருளும் என்றவாறு –
கலை பரவும் தனியான்–தனியானை–அத்விதீயம் -செருக்கு அவனுக்கு குணம் —கண்ண மங்கையுள் நின்றான் -நின்றது -இவர் பாசுரம் கேட்ட பின்பு அன்றோ –
ஆடினவன் நின்றான் —

பெரும் புறக்கடல் -பிருஹத் பஹு சிந்து -திருப் பாற் கடல் பிராட்டி தோன்றி மாலை சாத்த -முப்பத்து முக்கோடி தேவர்கள் தேனீக்கள் வடிவில் திருக் கல்யாணம் அனுபவிக்க -பஞ்ச கிருஷ்ண ஷேத்ரங்கள் –
பத்தர் ஆவி பத்தராவி -பெருமாள் -கருடனுக்கு -கட்டம் போட்ட புடவையை சாத்திக் கொள்வார் -திருப் பாற் கடலை விட்டு வந்ததால் புறக் கடல்
அநவசாதம்-அனுத்ருஷம் -துன்பம் இன்பம் கண்டு கஷ்டம் இன்பம் பெறாமல் ஸூ க துக்க சமம் -திருவடிகளில் ஈடுபட்டு இவை முக்கியம் இல்லை –
கோவையை பத்தராவியை நித்திலத் தொத்தினை -கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே -பராங்குச முகத்தாமரை ராமானுஜர் என்றாலே மலரும் –

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –
கீழ் எல்லாம் ஆழ்வார்களை இட்டே எம்பெருமானாரை கொண்டாடுகிற பிரகரணம் ஆகையாலே
இப்படி எம்பெருமானார் செய்து அருளின உபகாரங்களைக் கேட்டு -தத்சமாசரயண ருசி பிறந்தவர்கள் இவ் விஷயத்தை
ஆஸ்ரயித்தாலும் சுக துக்க நிபந்தமாக கலக்கம் வரில் -செய்வது என் என்று -திருக் கண்ண மங்கையுள் நின்று அருளின
பக்தராவி விஷயமாக திவ்ய பிரபந்தத்தை அருளிச் செய்த -திருமங்கை ஆழ்வாருக்கு பிரிய தமரான
எம்பெருமானாரை ஆஸ்ரயித்தவர்களுக்கு -சுக துக்கங்கள் வந்து மேல் விழுந்தாலும் –
ஹர்ஷாமர்ஷங்களாலே சலியார்கள்-என்கிறார் .

வியாக்யானம் –
கலை பரவும்
-சர்வே வேதாயாத் பதமாமனந்தி -வேதாஷராணி யாவந்தி படிதா நித்விஜாதிபி-தாவந்தி ஹரி நாமானி கீர்த்தி தாநி ந சம்சய
-வேதே ராமாயனே-புண்யே பாராதே பரதர்ஷப -ஆதவ் மத்யே ததாந்தேச விஷ்ணுஸ் சர்வத்ர கீயதே -என்கிறபடியே
சகல சுருதி ஸ்ம்ருதி இதிகாச புராணங்களாலும் ஸ்துத்திக்கப் படுபவனாய்-
தனி யானையை
-த்யாவாப்ர்தி வீஜ நயன் தேவ ஏக -என்றும் -சயசாயம் புருஷே யாச்சா சாவித்த்யே ச ஏக -என்றும்
திவ்யோ தேவ ஏகோ நாராயண -என்கிறபடியே -அத்விதீயமாய் -மத்த கஜம் போலே -செருக்கை உடையனாய் கொண்டு –
கண்ண மங்கையுள் நின்றானை –
முத்தின் திரள் கோவையை -பத்தராவியை -நித்திலத்தொத்தினை –யரும்பினை யலரை -யடியேன் மனத்தாசையை
-அமுதம் பொதியும் சுவைக் கரும்பினை -கனியை-சென்று நாடி -கண்ண மங்கையுள் கொண்டு கொண்டேனே -என்கிறபடி
தன்னுடைய போக்யதையை-எல்லாரும் அனுபவிக்கும் படி -திருக் கண்ண மங்கையில் எழுந்து அருளி இருக்கிற -பத்தராவியை –
தண் தமிழ் செய்த
-நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே -என்கிறபடியே
அவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளாகிற பிரதிபாத்யர்த்த கௌரவத்தாலே தன்னை அப்யசித்தவர்களுடைய
சகல தாபங்களும் மாறும்படி -சரம ஹரமாய் திராவிட பாஷா ரூபமாய் பிரபந்தீ கரித்து அருளின
நீலன் தனக்கு –
திரு மங்கை ஆழ்வாருக்கு-
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலியன் உரை செய்த வண் ஒண் தமிழ்-என்று ஆழ்வார் தாமே அருளிச் செய்தார் இறே –
உலகில் இனியானை –
இவ் விபூதியில் சமஸ்த பாப ஜனங்களும்-அதி பிரியகரரான -பரகால முகாப்ஜமித்ரம் -என்று ஜீயரும் அருளிச் செய்தார் இறே –
எங்கள் இராமானுசனை –
என்னைப் போலே எல்லாரையும் உத்தர்பிக்கைக்காக வந்து-அவதரித்து அருளின எம்பெருமானாரை –
வந்து எய்தினரே
-ஸ்ரீ மான் ஆவிரபூத பூமவ்ர ராமானுஜ திவாகர –என்னும்படியான பிரபாவத்தை அறிந்து வைத்து -சபக்தி பண்ணி ஆஸ்ரயித்த பாக்யவான்கள்
முனியார் துயரங்கள் முந்திலும் –
துக்கங்கள் ஆனவை அஹம் அஹம் என்கையாய் வந்து மொசிந்தாலும்-இவை வந்ததே என்று வியாகுலப் படார்கள் ..முனிவு -வெறுப்பு .
.இன்பங்கள் மொய்ந்திடிலும் கனியார் மனம் –
சுகங்களானவை ஏகோத் யோகென வந்து திரண்டாலும் இந்த அதிசயம் நமக்கு வந்ததே என்று பக்வ பலம்-போலே – மனசிலே ஏகாகாரங்களாய்
–மொய்த்தல் -திரளுதல் -ந பிரகர்ஷ்யதே த்ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத்-ப்ராப்யசாபிரியம் -என்றார் இறே கீதாசார்யரும் .
-மதன கதனைர் நக்லிச்யந்தே யதீஸ்வர சம்ஸ்ரயா -என்று-இவ் அர்த்தத்தை அபியுக்தரும் அருளிச் செய்தார் இறே –

————————————————————————–

அமுது உரை
அவதாரிகை

இங்கனம் கலியினால் நலி உறாது உலகினைக் காத்து எம்பெருமானாரைப் பற்றிடினும்
இன்ப துன்பங்களால் நேரிடும் கலக்கம் விளக்க ஒண்ணாதது அன்றோ என்பாரை நோக்கி-திரு மங்கை ஆழ்வாருக்கு இனியரும் எங்களுக்கு நாதருமான எம்பெருமானாரைப்-பற்றினவர்கள் இன்ப துன்பங்களால் கலங்க மாட்டார்கள் -என்கிறார் —

பத உரை –

கலை-சாஸ்திரங்கள்
பரவும் -துதிக்கும்
தனி ஆனையை -ஒப்பற்ற மதம் கொண்ட யானை போன்றவனான
கண்ண மங்கை நின்றானை -திருக் கண்ண மங்கையில் எளுந்துஅருளி இருக்கும் பத்தராவி எம்பெருமானை
தண் தமிழ் செய்த -குளிர்ந்த தமிழ் கவி பாடின
நீலன் தனக்கு -திரு மங்கை ஆழ்வாருக்கு
உலகில் -உலகத்தில்
இனியானை -அன்பரான
எங்கள் -எங்களுடைய
இராமானுசனை -எம்பெருமானாரை
வந்து -அடைந்து
எய்தினர் -பற்றினவர்கள்
துயரங்கள் -துன்பங்கள்
முந்திலும் -முன் முன்னாக வரினும்
முனியார் -வெறுப்படைய மாட்டார்கள்
இன்பங்கள் -சுகங்கள்
மொய்த்திடினும் -ஓன்று திரண்டு வந்தாலும்
மனம் கனியார் -உள்ளம் நெகிழ மாட்டார்கள் –

வியாக்யானம் –
முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும் கனியார் மனம் –
துன்பத்தையும் இன்பத்தையும் துல்யமாக பார்க்கிறவர்கள் -எம்பெருமானார் அடியார்கள் -என்றபடி –
துன்பங்களோ இன்பங்களோ -கன்ம பலங்களாக தாமே வந்து தாமே தொலைகின்றன –
கர்மம் தொலைகின்ற்றது என்று அமைதியாய் இருத்தல் வேண்டும் -என் தளரவோ கிளறவோ
வேண்டும் எனபது அவர்கள் உறுதிப்பாடு –
ந ப்ரகுருஷ்யேத் ப்ராப்ய நோத்விஜேத் ப்ராப்ய சாப்ரியம் -கீதை – 5-20 – என்று விரும்பிய பொருளைப்
பெற்று களிப்புறலாகாது –விரும்பத் தகாத பொருளைப் பெற்று வெறுப்பு உறலும் ஆகாது -எனபது
இங்கு நினைவு உரத்தக்கது -ஆன்ம தத்தவத்தின் உண்மை நிலையை தத்துவ ஞானிகள் இடம் இருந்து தெரிந்து
அதனைப் பெற முயல்வானாய் -உடலையே ஆன்மாவாக கருதும் அறியாமையை விட்டு ஒழிந்து –
ஸ்த்திரமான ஆத்மா தர்சன சுகத்தில் நிலை நிற்றலின் -அஸ்திரமான பொருள்களைப் பற்றிய களிப்பும் கவர்வும்
அற்றவனாய் இருத்தல் வேண்டும் என்கிறது இந்த கீதா ஸ்லோகம் –
எம்பெருமானைப் பற்றினவர்களும் –தத்துவம் அறிந்த பெரியோர் இடம் இருந்து ஆசார்யனுக்கு
உரிமை பட்டு இருத்தலே ஆன்ம தத்துவத்தின் உண்மை நிலை என்பதை தெரிந்து அந்நிலையிலே
ஊன்றி நிற்க முயல்வராய் உடலையும் உடல் உறவு படைத்தவர்களையும் -நான் எனது -என்று கருதும்
அறியாமையை விட்டு ஒழிந்து -ஸ்திரமான ஆசார்யனுக்கு உரிமைப் பட்டு இருத்தலாம் சுகத்தில்-நிலை நின்ற பின் அஸ்திரமான உடல் முதலிய பொருள்களைப் பற்றிய களிப்பும்-கவர்வும் அற்றவர்களாய் இருக்க வேண்டியவர்கள் ஆகிறார்கள் -எங்க –இங்கு –
ஒன்றிடுக விண்ணவர் கோன் செல்வம் ஒழிந்திடுக
என்றும் இறவாது இருந்திடுக -இன்றே
இறக்க களிப்பும் கவர்வும் இவற்றால்’
பிறக்குமோ தற்றேளிந்த பின் – ஞான சாரம் -17 – என்று
விண்ணவர் கோன் செல்வம் என்பதை முன்னும் பின்னும் கூட்டுக –
தற்றேளிந்த பின் -தன் ஸ்வரூபத்தை தெளிவாக அறிந்த பிறகு
பின் இவற்றால் களிப்பும் கவர்வும் பிறக்குமோ என்று கூட்டிப் பொருள் கூறுக –
கண்ண மங்கை நின்றானை –
திருக் கண்ண மங்கை சோழ நாட்டுத் திவ்ய தேசமாம் -அங்கு எழுந்து அருளி உள்ள எம்பெருமானுக்கு
பத்தராவி -எனபது திரு நாமம்
கலை பரவும் தனி யானையை –
பரவுதல்-துதித்தல்
சாஸ்திரங்கள் பத்தராவி பெருமாள் குணங்களை பரக்க பேசுதலின் துதிப்பன ஆயின –
வேதைச்ச சர்வை ரஹமேவ வேத்ய -என்று–எல்லா வேதங்களாலும் நான் ஒருவனே அறியப் படுகிறேன் -என்றபடி வேதம் அனைத்தும் துதிக்கும்
நோக்கம் உடையவைகளாய் இருத்தல் பற்றி செருக்கு தோற்ற ஒப்பற்ற மதம் பிடித்த யானை போலே
தோற்றம் அளிக்கிறான் -அவ் எம்பெருமான் திருமங்கை ஆழ்வாருக்கு –
வேதத்தில் சொல்லப்படுதல் என்னும்படி -நெருங்க ஒண்ணாதபடி யானைக்கு பிடித்து
இருக்கும் மதம் போன்று உள்ளது –வெஞ்சினக் களிற்றை -பெரிய திருமொழி – 7-10 8- -என்று
வெவ்விய சினம் உடைய யானை போலே இருப்பவன் -என்று இவ் எம்பெருமானைத் திரு மங்கை-ஆழ்வாரே வர்ணித்து உள்ளார் –
கிட்ட ஒண்ணாத வனேயாயினும்-யானை போல் கண்டு களிக்கத் தக்கவன் -எனபது அதன்கருத்து –
கலை பரவும் பீடு படைத்த அவ் எம்பெருமான் திரு மங்கை ஆழ்வார் உடைய
ஈடு இல்லாத தண் தமிழ்க் கவியைக் கண்டு வியக்கிறான் -வேதம் அனைத்தும் சேர்ந்து பரவுவதைத்
தண் தமிழ் காவியம் ஒரு பதிகத்திலே பொருள் ஆழத்துடன் ரசமாக காட்டுவது வியப்பூட்டுவதாக
இருந்தது அவ் எம்பெருமானுக்கு .வேதங்கள் பரவுவது கிடக்கட்டுமே-அதனால் செருக்கு உற்று என் பயன் –
இத் தண் தமிழ் கவியின் உள் ஈடான பொருள் சீர்மையை ஆராய்ந்து இன்புறுவோம் என்று கருதி அத் துறையில்
இறங்கினான் -தானாகப் பார்த்து அறியத் தக்கதாக அத் தண் தமிழ் அமைய வில்லை -வேத விதேவசாஹம்-வேதப்-பொருளை அறிந்தவனும் நானே -என்று கூறிக் கொண்ட கண்ணனுக்கும் கற்றே அறிய வேண்டும்படியாக
அமைந்து இருந்ததாம் இக் கவியின் உள்ளீட்டான கனம்-அவன் கருத்தை அறிந்து –நின் தனக்கும் குறிப்பாகில்
கற்கலாம் கவியின் பொருள் தானே -என்கிறார் ஆழ்வார் -உனக்கு இதிலே ஆதரம் உண்டாகில் எனக்கு சிஷ்யனாய்
உனக்கும் அதிகரிக்க வேண்டும் படி யாயிற்று இதின் உள்ளீட்டின் கனம் இருக்கிறபடி -எனபது பெரியவாச்சான் பிள்ளை-வியாக்யானம் .
இங்கனம் செருக்குற்ற சர்வேஸ்வரனையும் கற்பிக்கலாம் படியான கவிதை எனபது தோன்ற –
தனியானைத் தண் தமிழ் செய்த – என்கிறார் –
தமிழ் -தமிழ் ஆகிய கவிக்கு ஆகு பெயர்-தண் தமிழ் செய்த -தண் தமிழ் கவி பாடின என்றபடி –
கவி வாணர்கள் யானையை பாடுவார் -அதனைப் பரிசிலாகப் பெருவதுகவி வாணர் நோக்கம் –
திருமங்கை ஆழ்வாரும்-தனி யானையைப் பாடுகிறார் -அதனைப் பரிசிலாகப் பெறுவது இவர்க்கும் நோக்கமாகும் –
இந்த யானையை கொடுப்பார் வேறு எவரும் இலர் -தன்னையே தான் தருவது இது –
தன்னைத் தந்த கற்பகம் -என்னும் நம் ஆழ்வார் திரு வாக்கும் காண்க
கண மங்கை கற்பகத்தை -எனபது திரு மங்கை ஆழ்வார் அருளிய பெரிய திரு மடல் –
ஸ்வரூபம் ரூபம் குணம் விபவம் என்னும் இவை அனைத்தும் இறைவன் காட்ட -தம் கண்டபடியே
கற்பவர் மனத்தில் பதியும் படியும் -உலகிலுள்ள பொருள்கள் அனைத்தும் அவனுக்கு போலி யாயும் –
பிரியாது இணைந்த பிரகாரமாயும் இருப்பதை உணரும் படியும் -அவனது இனிமையை நுகரும்படியும் –
செய்து -சம்சார தாபத்தை அறவே போக்கி குளிர வைப்பதாய் இருத்தல் பற்றி –தண் தமிழ் -என்கிறார் –
நீலன்-
திருமங்கை ஆழ்வார் திரு நாமங்களில் இதுவும் ஓன்று
இந்த உலகத்தில் எம்பெருமானார் ஒருவரே திரு மங்கை ஆழ்வாருடைய தண் தமிழ் கவியின்
பொருள் உணர்ந்து தாபம் அற்றவராய் விளங்குதலின் –
நீலன் தனக்கு உலகில் இனியானை-என்கிறார் –
வந்து எய்தினர் –
சென்று ஆஸ்ரயித்தவர்கள் என்னாது வந்து ஆஸ்ரயித்தவர்கள் என்கிறார் –
தாம் எப்பொழுதும் பிரியாது எம்பெருமானார் சந்நிதியிலேயே இருப்பவர் ஆதலின் –
எய்தினர் -வினையால் அணையும் பெயர் –
நீலன் பத்தராவிப் பெருமாளையே கண்களார அளவும் நின்று -கண்ண மங்கையுள் காண வேண்டும்படியான
காதல் விஞ்சியவராய் -காணாது பிரிந்து இருப்பதையே துன்பமாகவும் -கண்டு கொண்டு கிட்டி இருப்பதையே
இன்பமாகவும் கொண்டு இருத்தலின் -ப்ராக்ருதமான -தேக சம்பந்தத்தால் ஆன-முனிவும் கனிவும் அற்றவர் ஆனார் –
எம்பெருமானாரும் அந்நீலன் தண் தமிழ் இன்பத்திலேயே மூழ்கி -அவருக்கு இனியராய் -அத்தகையரானார்-
அவரைப் பற்றினவர்களும் தண் தமிழ் இன்பத்தைக் காட்டின நீலனுக்கு இனிய ஆசார்யன் திறத்து உரிமைப் பட்டு
இருத்தலாம் பேரின்பத்திலே திளைத்து -அத்தகையார் ஆனார் -என்க-
எய்தினர் முனியார் மனம் கனியார் -என்று கூட்டிப் பொருள் கூறுக —

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரும் பூதூர்‌ வந்த வள்ளல்‌ மாலை-ஸ்ரீ எதிராஜ சதகம்-ஸ்ரீ ராமானுஜ மாலை–

December 8, 2024

உடையவராக மலரடிக் காட்படுவோர்க் கரும் பொன்‌
உடையவராக ரந்தந்தளிப்பானுறும்‌ வாதியர் வாழ்வு
உடையவராகந் துறந்து முக்கோல் கைக் கொண்டோங்கி நற்பேர்‌
உடையவராக விங்கெய்து எதிராசனை யுன்னு நெஞ்சே.

அம் பெருமானார் வயிற்றினாங் கருவி னாடாமல்
எம் பெரு மானார் இணை யடியை–நம்பாத்
துதித்திருப்பாய்‌ நின்றன்‌ றொழிலால் இடர்கள்‌
விதித்திருப்பாய்‌ நின்‌ற நெஞ்சமே.

யதிக் கோன்‌ கருணைக்‌ கிலக்காகி முத்தி
பதிக் கோவலனடியைப்‌ பற்ற–விதிக்கு
மறை யந்த வாசிரியர்‌ வண் பதஞ்சேர்ந் துய்வோத்
துறை யந்த வாசிரியத்‌ தான்‌.

பர சமய மெனும் வெய்ய கண்டக தருக்குலம்‌ பாழ்பட நிலத்திலங்கைப்‌ பற்று ௬டர்‌ வடிவாய பரசு வெனவும் பரம பாவனமுடைக் கமல மானரசனுயர்‌ மதநிலை பெறச்செய்‌து எடுத்ததொரு வம் பொன்‌ வெற்றித்‌ துவசமே யாமெனவும் ஓளிர்‌ துய்ய திரிவேணு தண்டமு மகன் மார்பி’ னுருவொடுற்றூ
விரவுமெழின்‌ மறை நாலெனத் திகழ கிற்குமுப வீதமுஞ்‌ சிகையு நேராய்‌
விரி புண்டரக்‌ குறியும்‌ வேறுதய வாதித்த விசயமென வார்த்த செம்மைப்‌
புரியாடையும்‌ பொருவி லெதிராசரிரு சரண புண்டரிகமும்‌ பணிகுவாம்‌
புகரிலா வரியைக்க ணலர் மீது மங்கை யடி புனைதமிழ்‌ நிதந் தழையவே.

ஈடரிய வியாச முனி தேர்ந்து ரைக்கு மிலகு வேதாந்த ஸூத்‌ திரங்களுக்குத்
தேடரிய பாடியந் தான்‌ றமிழ் வேதத்தின்‌ செழும் பொருள்கள் நேர்மை யுடன் ஆய்ந்த ளித்தோன்‌
பீடமையுங்‌ கண்ண பிரானருளிச்‌ செய்த பிறங்கு திருக்‌ கீதைக்குப்‌ பாடியத்தை
வீடளிக்கு மத் தமிழ் வேதத்தி னாலே மிலைச்சியரு ளுடையவர் தா டொழுது வாழ்வாம்‌.

தேசமெல்லாம் உகந்திடவே பெரும் பூதூரில்‌ சித்திரையில்‌ ஆதிரை நாள் வந்து தோன்றிக்‌
காசினி மேல்‌ வாதியரை வென்று அரங்கர்‌ கதியாக வாழ்ந்தருளும்‌ எதிராசா! முன்‌
பூசுரர் கோன்‌ திருவரங்கத் தமுதனார்‌ உன்‌ பொன்னடி மேல்‌ அந்தாதி யாகப் போற்றிப்‌
பேசிய நற் கலித்‌ துறை நூற்றெட்டுப் பாட்டும்‌ பிழை யறவே எனக் கருள் செய்‌ பேணி நீயே.

காலன்‌ குறுகான்‌ கடும் பிறவி சாராது
மாலின்‌ தனிச் சுகத்தின்‌ மன்னிடலாம்‌-சீலமுறும்‌
பாவமிலா நெஞ்சே !நீ பண் பனி ராமாநுசனாம்‌
நாவலன் செந் தாமரைத்தாள் நாடு.–தனியன்‌

தத்துவங்கண்‌ மூன்றுந்‌ தனி மந்திர மூன்றும்‌
இத்தகைய வென்றுணர்ந்த வென்னெஞ்சே! –நித்த நித்தம்‌
சாற்றுதி ராமாநுசனாஞ்‌ சாந்த குண நாவன் சீர்‌
போற்றுதி யன்‌னான் சரணப்‌ பூ.-தனியன்‌

உலகாக்கியே யுணவாக்கியே யுலை வாக்கியே யுலவா நலத்‌
தல மாக்கியே தணவாத வைந்‌ தாகும் பொரு டகையோ துறும்‌
கலை யாக்கியே காத்தாளுவான்‌ கவி நாதவென்‌ கடு வாணவ
வலை நீக்கியே வழி காட்டியாள்‌ வர யோகியே வர யோகியே. –காப்பு

என் சந்த மீசன் சந்த மா விருள் சந்த மவ்‌ விருணீக்குறும்‌
மன் சந்தமீ மகிழ் சந்தமும்‌ மறை மத்தமும்‌ மது வித்தையைத்‌
தன் சந்தமார்‌ தயை விம்மலாற்‌ றரை வீசு தாயானான் மிளிர்‌
தென் சந்தமார்ந்‌திட வேத்தினேன்‌ திருக் கோவலூர்‌ திருக் கோவலூர்—காப்பு

பூமாநிறம்‌ பொரு மா முதற்‌ பொன்னாரவிந்‌தப் பூ நலம்‌
நாமாறிலா வகை யுற்றுற நாராயணன்‌ தனையும் விடுத்
தாமாறி லோதிட வந்த பூதூரானை நீ யகமுன்னலில்‌
ஏமாறிடாதே நெஞ்சமே! யெதிராசனே யெதிராசனே.–1-

ஆருயிர முக மாறி யீராறாயிர நாமாறிவான்‌
பேராயிரம்‌ பெம்மானதாம்‌ பேறாக்கிட வந்தானவன்‌
சேராயிரம்‌ பேராசைதே வற்றாரிலாச்‌ சேறாழ்ந்தனம்‌
ஏராயிர மெணியேத்துவா யெதிராசனே யெதிராசனே–2-

மூலத்துமா யாவாணவ முதுநோயினான்‌ மொத்தாடினாம்‌
சாலத்துமா பதி காணருந்‌ தண்டாமஞ்சார்ந்‌ துறவாயினாம்‌
ஆலத்துவாய்‌ பவன் மெல்லணை யாகும் பிரா னெனினந் தமக்கு
ஏலத் துய ரென்னெஞ்சமே! யெதிராசனே யெதிராசனே.–3-

கடன் வெஃகுமா கமலைக் கிணை யாகக் கழ றுதலுக் கிணைத்
திடன் மண்டு நூல்‌ கடன் மாந்தினோன்‌ றெளி யாதவப்‌ பிரகாசனென்‌-
றிடு மன்னவ னிடமோதினா னிரண்டென்றவ னிருள் நீக்கினான்‌
எடல் வேறு சீரினை நெஞ்சமே யெதிராசனே யெதிராசனே–4-

காத்தூட்டுவான்‌ பொறி மாவுடன்‌ கலந்தோடியோர்‌ காட்டிற்குளே.
நாத்தூக்குதே நாரம்மிலேம்‌ நாமென்செய்கே மெனவந்தவர்‌
தீர்த்தங்கொளத்‌ தினமீய்ந்தனை திருவாதிரைத்‌ தினம் வந்தனை
ஏத்தற்கெனா லெண்ணாசுதீ ரெதிராசனே யெதிராசனே.–5-

புகை புக்கினும்‌ போகாக்குறும்‌ பொறை சூழுமா விந்தத்திலே
பகை புக்குணு மாயாமதப்‌ பாவக்குழு விற்கெட்டிடா
வகை புக்கி யெம்‌ மவர் வாழ்ந்திட வரதன் வழி வந்தாண்டவன்‌
எகை புக்கு நீ தொழு நா துதி யெதிராசனே யெதிராசனே.–6-

பரவாதிக ளேவற்பசா சங்கட்கெலாம்‌ படுதொண்டராப்‌
புரமோதிடப்‌ போவேற்கெலாம்‌ புணையாகிமீப்‌ புரமேற்றினாய்‌
குருவேகுரு பரனேபரன்‌ குளிர்வாசமாங்‌ கோயிற்பிரான்‌
எருதேறினான்‌ காணானடிக்‌ கெதிராசனே யெதிராசனே.–7-

மன்னாவிகண்‌ மாயாச்சுக மதுபெற்றிடப்‌ பேயின்றலைத்
தன்னாரவிந்‌ தம்மிட்டனை தகையாமண மகனாயினை
பன்னாளும் வெந்‌ தவமாற்றினாம்‌ பலியாத நின்‌. பத தாமரை
என்னாமன்மூ கற்காக்கிளை யெதிராசனே யெதிராசனே.–8-

முக் கோலமா முநியாயினை முநி யிந்திர னென வோங்கினை
அக் கோல மாயாவாதிகோ லடியுண்ணுமுக்‌ கோலீந்தனை
செக் கோலக்கூறைக் கட்டினாய்‌ திருக்கச்சி நம்‌ பிக்கன்பினாய்‌
எக்காலுமெற்‌ கேயத்தமா-மெதிராசனே யெதிராசனே.-9-

அன்பென்பதோ ரணுவும் மிலே ன துசொல்லவு மருளும்மிலேன்‌
துன்பென்பதோ தொலையாவிலேன்‌ தொலையாயெனச்‌ சொலவும்‌மிலேன்‌
முன்புள்ளவா ணவநீக்கியுன்‌ முத்தர்க்கடிப்‌ பொடி யாக்குவாய்‌
என்னின்பமே யென்றெய்வமே யெதிராசனே யெதிராசனே.–10-

தன் கண்ணுளே னானாற்பவந்‌ தணியேனென வென்றம்பிரான்‌
‘நின் கண்ணுளே யுறவாக்கினா னீயாரிய னிலைகாட்டினாய்‌
மன் கண்ணுள மநுவிட்டுமென்‌ வடிவின்னதாம்‌ வழி காட்டியும்‌
என் கண்ணுள நவை நீக்கிலே னெதிராசனே யெதிராசனே.–11-

உன் சொல்லையா முறுதிக்கொளா துலைவாகுவோ மென்றோவருள்‌
மன் சொல்லினோ ராறுப் பொருண்‌ மா கச்சி நம்‌பிக்கண்கொடுப்‌
பின் சொல்லு பா டியமாதியாற்‌ பேணிப் புர நீ தருண் மாதவ
என் சொல்லி யானிசை கூறுகே னெதிராசனே யெதிராசனே.-12

ஏனித்தனை நாளாவெனை யெண்ணாதபா தகனாயினை
நீ நித்தமென்‌ றிடின்யான்புரி நிலை யுற்ற தீ நெறி யெண்ணியே
நானித்தனை நாணாகினே னனிபீதியா லொளி வெய்தினேன்‌
ஈனத்தன் யா னென்செய்குவே னெதிராசனே யெதிராசனே.–13-

கலை மாது வாழ்த்‌ தெடு பாடியக்‌ கவிநாத செந்‌ தமிழ் வேதமாம்‌
அலை மீதெழு மம்மான் விழு மதிமோக மெல்‌லணை யாகிய
தலைவாகுருத் திரளுக்கெலாந்‌ தழலேமதத் தூலக்கெலாம்‌
இலையாயருட்‌ கெதிராயினே னெதிராசனே யெதிராசனே.–14-

அருளாளனீய்ந் தருள் வித்தமே யதியாள வந்‌த வரத் தமே
தெருளா மலர்ந்‌ திடவாக்கிய தெளி வேத வேதிய கோட்டியூர்‌
பெரியோனிடங்‌ கழலோய்ந்திடம்‌ பெயர்ந்தேமநுப்‌ பெற்றப்பினர்‌
எரி வீழ்கிலா தருள் செய்தனை யெதிராசனே யெதிராசனே.–15-

வட வேங்கடத்‌ தப்பற்கு நல்‌ வளை யாழி தந்‌தனை தென்குறுங்‌
குடி நாரணக்‌ கோமாற்கு மந்‌ திரமோதி வான்‌ குறை நீக்கினை
செடி தீரு நா ரணனைக் களிச்‌ செல்வச் சுதனாப் பெற்றனை
இடி சேரு தீப்‌ பெறுவானரு ளெதிராசனே யெதிராசனே.–16-

நாயெத்தனைத்‌ துதி கூறினு நன்றாகுமோ நாயேன்றுதி
பேயத்தனைப்‌ பெண் கொண்டவன்‌ புவியத்தனைப்‌ பிழை கொண்டவன்‌
காயத்தனைத் தாணென்றவன்‌ காண் பூப் பொனே கதி யென்றவன்‌
ஏயத்தினை யுருவானவ னெதிராசனே யெதிராசனே.–17-

பத்தாறுவே டத்தானுமே பற்றாமன்மாழ்‌ குறுவான்மகி
ழத் தானு வெண்‌ கோடிப்‌ புனைந்‌ தகன் மா நிலத் தாவிக் குழு
வைத் தாழ்விலா வின்பாகுவை யத்தான் மகிழுற வீந்தருள்‌
எய்த்தேன் விடா தெனையாள்குவா யெதிராசனே யெதிராசனே.–18-

பல்லாயிரங்‌ கலை தேர்ந்தவ ராசீவக மத பண்டித
வல்லாருட னோர்வேலையே வலியாயிர வதநங் கொடோர்‌
சொல்லாடி வென்‌ற மணக் குழுச்‌ செக்கிற்றிரித் தரசன் முனே
எல்லாருங்கண்‌ டிறும் பூ துறு மெதிராசனே யெதிராசனே.–19-

முகமொன்றிலா யிரவாநந முந்தக் கொடோர்‌ பலபாடையால்‌
அகமொன்று நா நா பேதமா வறையும்மதத்‌ தவரீட்டமிக்‌
ககமொன்று நீட்‌ கழு மாமரங்‌ கவ்விக் கிடந் திடவா துவெல்‌
இகமொன்று வானக மீந்தரு ளெதிராசனே யெதிராசனே–20-

இன்தென்கலை யினிதோதின தெதுவோவது வன்றோமுனோ
மன்நின்பமா நூற்றெட்டென வழங்கும் பதி யவை மாசற
நன்றின்பமாப்‌ புதிதாக்கிட நாடெங்கினு மோடோடிவா
தென்றெங்கு நன்‌ றீவானெழு மெதிராசனே யெதிராசனே–21-

திருமாமுத லடியார் பவந்‌ தொலை யக்குலை தேவில்லெலாம்‌
ஒருமா முதற்‌ காமாறு நன்‌றுறவாக்கியே யொரு தேவனைத்‌
தெரியாது பற்‌ பல வெண்ணி மாழ்‌ குநர்க்கு உண்மையைத் தெளிவாக்‌கிய
எரி நாளில் வந்‌ தவன் றம்பியே யெதிராசனே யெதிராசனே–22-

சைவப் பெருஞ்‌ சைலாசநி சமணப் பனி தணி ஞாயிறு :
பொய்யொப்பிலா மாயா மதப்‌ பொதி சுட்டெரி தீப் புண்ணியர்‌
கை யொப்பிலா புத்தப் பணி கருகும்பெருங்‌ ககராட்டென
எய்தற்கரும்‌ பேறானவா வெதிராசனே யெதிராசனே.–23-

பொறியைப் பொலி யாதாக்கினாய்‌ புலனைச் சலி யாதாக்கினாய்‌
வெறியைச் செயுங்‌ கரணக் கரி வீவட்புலி வீறாக்கினாய்‌ ்‌
கறியைச் செயுங்‌ காமாதிகால்‌ கடி துண்ணு கட்‌ செவியாயினாய்‌
எறியைச் செயு மெனையாண்டரு ளெதிராசனே யெதிராசனே.–24-

பன் மா மத மாயாவிருள்‌ பாறச் சிவப்‌ புடை சுற்றியே
கன் மா மனம்‌ வாக்காக்கையை கலித்தாமெனு முக்கோல் கொடு
தன் மா மலர்ப்‌ பதஞ் சார்குவார்‌ சதிரான விண்‌ணாடேறுவார்‌
என்னாதனே பொன்னாதனா ரெதிராசனே யெதிராசனே–25-

உனை யேத்திலார்‌ பவமோ யுமோ வுனை வாழ்த்திலார்‌ நரகோயுமோ-
தனையே தனக்‌ கிணையானவன்‌ றரைவானுன தாணைக்குளே
நினையே நினைந்‌ தீந்துள்ளது நெறி தேர்ந்தவர்‌ நினை வுள்ள காண்‌
எனை யேன்று கொண்‌டுன்பத்தியீ யெதிராசனே யெதிராசனே.–26-

காமக் கொடுங்‌ கண்மாந்தினேன்‌ கதமாகுவெந்‌ தடி மேவினேன்‌
வாமப் பெரு மத மச்சர மாகுங் கலைப்‌ பூண் மேவினேன்‌
சீமத் தன் மாக்‌ களவாடி தீத் திறனானவ னக மேறினேன்‌
ஏமத்தனென்‌ றிகழா தரு ளெதிராசனே யெதிராசனே–27-

ஆசாரமோ சரகுண்ணி நல்‌ லநுட்டானமோ வூர்க்கோலமாம்‌
காசாசையோ நீரட்டையாங்‌ கனியாசவே சரியேசரி
பாசாசரோ பகர்தற் கொணொப்‌ பர தேசிகா பரிவோடெனை
ஏசாதுகாத் தருள் பூதூர்வா ழெதிராசனே யெதிராசனே–28-

எல்லே யிளங்‌ கிளியேயெனு மெமதம்மையா நீ தம்மண்ணரே
அல்லும் பகலும் மாழ்கிவீ ழாழ்வார் விடும்‌ வரி வண்டரே
சொல்லாது கொண்‌மின் காணெனாச்‌ சொன்னார் தமெம்‌ பெருமா வுனை
யில்லாதவ ரில்லாதவ ரெதிராசனே யெதிராசனே–29-

வஞ்சத்திலோ கடலானவன்‌ வளர் பொய்யிலோ மலையானவன்‌
பஞ்சத்தினும்‌ பதருந்தராப்‌ பழிலோபகாஞ்‌ சிரமானவன்‌
நஞ்சத்தினு நனிதீயன்யா னானும் பிறப்‌பற வெண்ணினேன்‌
எஞ்சத்துளே னெனை யாள்குவா யெதிராசனே யெதிராசனே–30-

ஒன்றேனுநன்‌ றுணராதவ னொரு போதுமே பணியாதவன்‌
பொன்றாத மூ வாசைச் சுழிப்‌ புரண்டாடு புன்‌ புலையர்க்குளேன்‌
நன்றீ துதீ தென்றோதுநூ னனி யோதிலேனினை யோதிலேன்‌
என்றாலு நீ யெனை விட்டிடே லெதிராசனே யெதிராசனே-31

பெண்ணாயினார்‌ கண்ணோயினும்‌ பிறழன்னரல்‌ குன்னோயினும்‌
அண்ணாந்தெழுங்‌ குயநோயினு மவர் வாயழகுடனோயினும்‌
பண்ணா வுடல்‌ பல கோடியான்‌ படு பீழை பாரதமாகுமே
எண்ணாதெனை யினிதாளுவா யெதிராசனே யெதிராசனே–32-

என் போல யா ரியானென்றவ னென்போல யா ரென தென்றவன்‌
என் போல யார்‌ பழி செய்தவ னென் போலயார்‌ நன்றற்றவன்‌
இன் பாநல மொன்றேனு நன்‌ றியலோடு தேர்ந்‌ திலனையனே
என் பாவமோ வென் சன்மமோ வெதிராசனே யெதிராசனே–33- .

என்றீமைகண்‌ டெமன்வெள்கினா னெழுத்தாடுவான்‌ கழுத்தாடினான்‌
நன்றாம் விதி குன்றாயினா னாராயண னலிவெய்தினான்‌
நின்றாகுமைந் தாம்பூதமு நெடு மூச்சு விட்‌ டுடல் சேர்ந்தன
இன்றாகு நின்‌ னடி வந்தநா ளெதிராசனே யெதிராசனே–34-

மண்ணுற்றவான்‌ நழையாவிகண்‌ மகன்றந்தைமா துலனாயினேன்‌
கண்ணுற்றகா தலனாதியாக்‌ கழறும் பிறப்‌ பினிலோய்ந்தனன்‌
எண்ணற்றதாய்‌ பெற்றேங்கின ளினிதீனுவா ளெவளும்மிலேன்‌
எண்ணற்க வென்‌ பிழையாரிய வெதிராசனே யெதிராசனே-35-

நானோ நினை நினைவிட்டிலே னாராயண னடியார்களா
நீ நோவு செய்‌ யுபகாரமே நினையாதவன்‌ பதையாதவன்‌
ஆனாலு நின்‌ னடியாரெனை யட பையலே யென்றார்கள் காண்‌
ஏனோ நின தாளெற்கிலை யெதிராசனே யெதிராசனே–36-

செய்ந் நன்றிகொன் றுளனாயினேன்‌ திருமாலடி யரை நோக்கிடின்‌
கைந் நின்றுகூம்‌ பிக்கால் விழாக்‌ கடையீனனாய்க்‌ கழுதைப் பிறப்‌
பைந் நின்ற நன்‌ றென்னே யுளே னருளாழியா ரியநாதனே
எந்நின்ற சீர்‌ நிறை வேதனே யெதிராசனே யெதிராசனே–37-

வட வேங்கடத் தவன் றொண்டனா வான் கானிலே யமுதங் கொடுன்‌
னிடம் வந்தனத்‌ துடன் பாத்தளித்‌ தினிதே கிடச்‌ சென்மாதவ
கடனஞ்சினுங்‌ கடையேனெனைக்‌ கை விட்டிடிற்‌ கதி விட்டனன்‌
எடலென் பிழை யருள் செய்குவா யெதிராசனே யெதிராசனே–38-

ஈரொன்பது நாள் வாது செய்‌ யிகலெக்கிய னிகல்பட்டரோ
நீரென்பதே நிசமாகுமந் நிமலற்குமிச்‌ சீவற்குமே
சீரொன்றிரண்‌ டெனுமின்மினிற்‌ றிகழ் வாக்கியஞ்‌ சிதை வாதலில்
ஏரொன்‌றினை யார் தேர்குவ ரெதிராசனே யெதிராசனே–39-

நியோ பரன்‌ பாயாகியே நிலை காலமு நிற்கின்றனை
நாயேங்களவ்‌ வேதச் சிர நல் வாக்கியப்‌ பொருடேர்‌துமோ
ஆயாதுவே தாந்தப் பொரு ளகம் வந்தவா றலறிச் சொனார்‌
ஏயாதவ கிரி வாசனே யெதிராசனே யெதிராசனே–40-

ஒன்றே யுல கென்றாரதி னுட்டோன்றுறு பொருடேர்கிலார்‌
ஒன்றே யுல காதற்குள வேதென்னெனி லதுவுஞ் சொல்வார்‌
அன்றாதியா மரவாகிய வையாவெழுந்‌ தருளாயெனில்‌
இன்றேனு நன்‌ னெறி தேர்கிலே மெதிராசனே யெதிராசனே–41–

பரமே பெருஞ்‌ சதமாயிடின்‌ பதமேதெதிற்‌ பதிவாரெவர்‌
சிரமாகிய சுருதிப் பொரு டெரிவாரெவர்‌ தெரியாரெவர்‌
வரமாகுபத் திகளே துநீ வனை பாடிய மலையாவிடின்‌
இரவேது நற்‌ பகலேது காணெதிராசனே யெதிராசனே–42-

நீயேயவ தரியாவிடி னிகிலத்துளே நிறை சீவர்கள்‌
ஓயா துதந் தமையேபர மென்றெண்ணியோ வாமாலராய்‌
‘ஆயாவிர ணியராகியே ழாகக்கணி நிரயத்திலே
ஈயாவிழுந் தெரியாகுவா ரெதிராசனே யெதிராசனே–43-

ஈசோகமென்‌ பவர்யாருமி ராமாநுசற்‌ கினிதாகியே
தாசோகமென்‌ பவராக்கிமுத்‌ தாபத்தினைத்‌ தணிவித்தனை
ஆசாறிடு மைந்தாம் பொரு ளறிவித்திடுந்‌ திருமந்திரம்‌
ஏசாறிடா தீந்தாய் கொலெ மெதிராசனே யெதிராசனே–44-

அட்டாக்கரப்‌ பொருணீசொலா யானாலெமைப்‌ பரனைத் துணைக்‌
கட்டானதைப்‌ பகையானதைக்‌ கதியானதைத்‌ தெளிவேங்கொலோ
சிட்டாதிபா சித்தாதிபா செறிபன்மத விருளாதவா
இட்டாவெனை விட்டாலிலே னெதிராசனே யெதிராசனே–45-

உன்னன்பர்கள்‌ வைராகமு முறுபத்தி ஞாநக் கோவையும் .
பொன்னன்பர்பால்‌ மனமுள்ளவர்‌ புரி நீதியும்‌ பொல்லாக்கொடு
மன்னானவன்‌ வழி போகலு மகியார் தெளி வுற வெண்கலை
என்னே யசைத்‌ தனை யோதுமி னெதிராசனே யெதிராசனே–46-

உறங்கா விலிப்‌ பரிசத்தினா லுடல் பூக்கு நல்‌ லொளி யோங்கலே
கறங்கா மனப்‌ பொன்னாச்சியார்‌ கனி வெண்ணியே களி கன்னலே
பிறங்காத வெம்‌ பார்க்கின்னிருளே காந்தமின்‌ றெனப் பேணி வாழ்‌
விறங்காது காத்‌ தருணாதனே யெதிராசனே யெதிராசனே–47-

அளவற்ற சங்‌கர வாதிய ரளவற்ற மாயா வாதியர்‌
அளவற்ற காபில வாதிய ரளவற்ற கெளமாராதியர்‌
அளவற்ற வஞ்‌ஞாநங்கெடுத்‌ தரவிந்த நின்‌ னடி மேவினர்‌
இளவர்க்குளே னேதும்மிலே னெதிராசனே யெதிராசனே–48-

முன்னாரியர்‌ பத தாமரை முடி கொண்ட யான்‌ முடி பெற்ற பின்‌
என் பாதசம்‌ பந்தம்முளோ ரவர் பாதமே யினர்பின்னரும்‌
மன்னாகுபே ரின்பீசுக மலிவீடுறற்‌ கென்மாசுள :
என்றோது நங்‌ கருணாகர வெதிராசனே யெதிராசனே–49-

வடுகா வெனு நின்றாசனார்‌ வழி பட்டு வாழ்த்‌ துறுதேவனே
படுகாடெனுங்‌ காளத்தி சேர்‌ பத்தர்க்கு நல்‌ லமுதேயிலைத்‌
தொடுவேன் கொலோ வென்றேங்கினார்‌ தூங்கோங்கு தாமரைத் தாளனே
எடுவேம் பிறப்‌ பினில் விட்டிடே லெதிராசனே யெதிராசனே–50-

தன்னாரியன்‌ வெள்ளாட்டியாச்‌ சமைந்தானுணுந் தற்போதமே
தென்னன் கிழிச்‌ சென்றான் மக டெளிவாகுபா வைக்கானவா
பன்னாளுமத் திரு நாரணப்‌ பதி மேவி யாண்‌ டருடந்தவா
என் னாதனே யென் தேவனே யெதிராசனே யெதிராசனே–51-

அந்தோ பல வாஞ்சீவரு மம்மானடிக்‌ கேயன்‌ றியில்‌
சிந்தாகுலத்‌ தோடே பல தெய்வங்களைத் தொழுதோய்ந்தனர்‌
முந்தாகிய முறைமைப்படி முன்றொண்டரா கிடவைத்தனை
எந்தா யெனை யேனீக்குதி யெதிராசனே யெதிராசனே–52-

ததி தொண்டையூர்‌ கொண்டிக்கு விண்‌ டாரும்மெனத்‌ தன் கையினால்
பதி கொண்டதோர்‌ முறி போக்கினை பரனாகு வேங்‌ கட நாதனும்‌
விதி கொண்டனன்‌ வீடு ஈந்தனன்‌ விழை மங்கையும்‌ வீடுற்றனள்‌
எதி நாதனே கதி நீ யெனக்‌ கெதிராசனே யெதிராசனே–53-

மண் மா மலர்‌ மகிழீசனு மகிழாதுனைத்‌ தருமீசனும்‌
தண் மா முநி போகங்கொளுந்‌ தனியீசனுந் தடை யின்றியே
விண் மா நிலச்‌ செல்வங்கணின்‌ விதி நிற்பவா வெளியிட்டனர்‌
எண் மா பத கன்னென்னையா ளெதிராசனே யெதிராசனே–54-

குரு பூர்த்தியா வரு மூர்த்தி யெங்‌ குடியாவுநின்‌ னடியே யுள
ஒரு பூர்த்தியா வுறு ஞாநமு மோரார்த்தியா யுறு பத்தியும்‌
தரு பூர்த்தியாம்‌ வைராகமுஞ்‌ சாராததோர்‌ சடன் மேதை கூழ்‌
எரு பூர்த்தியா விட்டாள்குவா யெதிராசனே யெதிராசனே–55-

போகத்திலே பொலி தீயன் யான்‌ பொதி வேத வேதாந்தத் துறும்‌
யோகத்திலே கண்டுற்றதோ ரொளி மசுகப்‌ பொருளுற்ற நின்‌
பாகத்திலே படியாத யான்‌ பரமாகுமப்‌ பொருணச்சலெற்‌
கேகத்திலே நாணுக்குதே யெதிராசனே யெதிராசனே–56-

கழி ஞாநமாஞ்‌ சடகோபனார்‌ கலியுங் கெடுங்‌ காண்மின்னெனாப்‌
பழி ஞாநமில்‌ பதிகத் தினாற்‌ பரிவாக நின்‌ படி பாடினார்‌
வழிபாடு செய்‌ துய்வாக நின்‌ வடிவாக்கியாள்‌ விழியாக்கியே
இழி வாக்கிடா தெமை யாட்கொளா யெதிராசனே யெதிராசனே–57-

ஒரு மூலமந் திரவாச்சிய னோவாவவா வதிகாரங்கண்‌ :
யுரு மூல மந்‌ திரமீந்த நீ யெற்கோவருள்‌ செய்வாயெனப்‌
பெரு மாசையா லென் மாசினாற்‌ பெட் புற்று பேதுற்றோய்ந்தனன்‌
இரு மாசை முற்‌றுற நோக்கியா ளெதிராசனே யெதிராசனே -58-

சுரு வஞ்ஞனா லாகாத விச்‌ சகமுற்றுநின்‌ றாளேத்திட
ஒரு வஞ்சமு மில்லாமலே யொளி வேத மந்‌ திர மோதினை
கருமஞ்செயாப்‌ பிரபத்தியே கழியாச்‌ சுக நெறி யென்றனை
இரு மஞ்சிலா வெற்கஞ்சலீ யெதிராசனே யெதிராசனே–59-

முது சாம மா மறை யுச்சியின்‌ மொழியின் படிப்‌ பர சீவர்கள்‌
பொதுவாகுமா நந்தத்திலெப்‌ போதுந்தகா தொருபேதமென்‌
பதுவாகுமவ்‌ வசியின்பதம்‌ பரிந்தன்னதே பண்பென் றனை
இது யாவருந்‌ தெளிவுற்றன ரெதிராசனே யெதிராசனே–60-

தத்தொம்பதப்‌ பொருளாய் கிலார்‌ தானே பர மென்றாய் கிலா
வித்தைக்குளாய்ப்‌ பிறரேளன வேதைக்குளாய் வெள்குற்றனர்‌
தத்தென்னிறற்‌ பரமென்றனை தொம்மென்னிறா சனையென்றனை
இத் தன்மையா ரிசை செய்குவ ரெதிராசனே யெதிராசனே–61-

நீயே குரு பரனென்றவர்‌ நினை தாளினைப்‌ பணியாதவன்‌
நாயேனை நாரணன்றொண்டெனி னானாவனோ வென்றேங்குவன்‌
தாயேயரு டந்தாயொரு தானானவென்‌ற நமானவா
ஏயேயென விகழாதரு ளெதிராசனே யெதிராசனே–62-

மன்னாகுதி நினை நன்றென மதியென்றவா சகமெண்ணியே
தன்னாகுமுண்‌ மையை நாடியச்‌ சாமிக்கு நாஞ்‌ சொத்தாகுதும்‌
என்னா நினைந்‌ தின்பெய்திடா திறையானென விழிவெய்தினர்‌
இன்னாவிலா துன் பாதமீ யெதிராசனே யெதிராசனே–63-

மாயாமத வலைசிக்கியே மாய்ந்தார் பலர்‌ மதி சூடியை
நீயோ துதற்‌ பரமென்றெணி நீராய் நிலத்‌ தவிந்தார் சிலர்‌
ஈயாதிழி பல தேவரை யிறையோனெனா விறந்தார் சிலர்‌
ஏயாதவாத்‌ திரிவாசவா வெதிராசனே யெதிராசனே–64-

எம்மான்றரி சநமோங்கவே யென்னென்னவோ வினல்மேயினை
அம்மானு நின்‌ னாட்சிக்குளே யானா துவைத் தனனாதலால்‌
சும்மா விருந்‌ திடினாயினேன்‌ சுகிக்கற்கொரு சூட்சிக்கிலேன்‌
இம் மானிட னினை யேத்தல் செய்‌ யெதிராசனே யெதிராசனே–65-

அத்தா நினக்‌ கடியோமென வடியோமடிக்‌ குடிலுய்ந்தன
பித்தானவன்‌ பிழை செய்தவன்‌ பெரியோரை நிந்தனை யிட்டவன்‌
மொத்தாடுமைம்‌ புலவாசையே மூவாத பேறாக் கொண்டவன்‌
எத்தாலுமீ டேறற்கிலே னெதிராசனே யெதிராசனே–66-

ஒரு நாளு நின்‌ பேர் வேண்டிலே னொரு நாளு நின்‌ னூர் போற்றிலேன்‌
ஒரு நாளு நின்‌ னருவெண்ணிலே னொரு நாளு நின்‌ குணம் பன்னிலேன்‌
ஒரு நாளு நின்‌ விசயஞ் சொலி யுற்றாருட னுடல் பூத்திலேன்‌
இரு நாளு நின்‌ னொருபத்தியீ யெதிராசனே யெதிராசனே–67-

அருளாளனார்‌ தந்தாளும் பேரருளாளனார்‌ தந் தேசிகா
இருளாகு முத்‌ தடை மேவினே னிதினாலென தியானாயினேன்‌
ஒரு நாளு மீ தொழிவாகிலே னுன் காருணி யத்தாலென
திருணீங்கிட வருள் செய்குவா யெதிராசனே யெதிராசனே–68-

மெய் வந்திலா நாவானினை மெய் போலவே துதி செய்தனன்‌
கைவந்திலாக்‌ கயவன்னெனைக்‌ கடுத்தே விடிற்‌ றடுப்பாரிலை
ஐவந்த நின்‌ னடியார்கள் கண்‌ ணெச்சிற் கழு விட வென்றனை
எய்யாது வைத்‌ தருள் செய்குவா யெதிராசனே யெதிராசனே–69-

நின் பாத மெண்‌ ணி மலர்க்குளே நெடு நீசன் யானிற்கின்றது
புன்பாலதாம்‌ பைங்கூழ்க்குளேர்‌ புல்லாடவன்‌ போலாகுவேன்‌ :
அன்பாலெனை யவரேளன மாடிக்களித்‌ திடவாக்குவாய்‌
என்பாவவாக்‌ காற் போற்றினே னெதிராசனே யெதிராசனே–70-

அருளென்ப தோ ரணுவும் மிலே னடியார் முனந் தடி போலவே
மருளென்பது மாமய்ப்பானெணி மகிழோடு சேவித்தும்மிலேன்‌
தெருளேது மற்‌ றவனாகிடம்‌ பத்துக்குளே தெளிவெய்தினன்‌
இருளேது மற்‌ றவனாக்கியா ளெதிராசனே யெதி ராசனே–71-

நின் னாமமாந்‌ துவயத்தையே நீரன்னமா நிலை கொள்ளுநா
ளெந்நாளெனா வேங்குங்குணத் தெம்மான் களென்‌றனையும் மொருச்‌
சின்னானெனச்‌ சிறு புன்னகை செய்வாரெனி லுய்வேனையா
எந் நாளு நீ யே காப்பு காணெதிராசனே யெதிராசனே–72-

நான் வேண்டியா நீ யாள்குவாய்‌ நாய் வேண்டியா மழை பெய்வது
தான் வேண்டி வந்‌ தவனீ தலத்‌ தவராண வந்‌ தமை நீக்கியே
வான் வேண்டியீந் தவனீயெனை வாங்காணொனா தகல் வாய் கொலோ
ஏன் வேண்டலென்‌ னன்னாய் மிகை யெதிராசனே யெதிராசனே–73-

சித் அசித்தெனுந்‌ திரு மேனியுட்‌ டிகமும் பிரான்‌ றிருநாதனென்‌
றிதமுற்றவே தாந்தம் மெலா மிசைவிப்பதை யறிவிப்பதாய்‌
பதமுற்ற பாந்‌ தட்காதியாம்‌ பர நீ யெழுந்‌ தருளாயெனில்‌
எது முற்றவோர்ந்‌ துலகுய்யுமா லெதிராசனே யெதிராசனே–74-

ஐந்தாகு பேதத்தாவிக ளைந்தாகு மெம்‌மான் மேனிகள்‌
ஐந்தாறதா மவனைப் பெற வவையுட்கடை யாறே நலம்‌
நந்தாதிர்கோள்‌ பவ சாகர நமரங்காளென்‌ றருள் செய்தனை
எந்தாய் பிறந்‌ துய்ந்தோமிலை யெதிராசனே யெதிராசனே–75-

அனை யாற்றகி லாப்பாவமே யடியேன்புரிந்‌ துளனாதலில்‌
உனை யொப்புளா ரெவரென்பவ மொழிக்குந்திற முடையாரையா
புனை மாதவ னிந் நாளெனைப்‌ புரந்தே யருள்‌ புரிவானெணி
எனை யுன்னிடம்‌ விட்டானரு ளெதிராசனே யெதிராசனே–76-

அடியேனடி யேனென்ற சொ லறிவேனதன்‌ படியே யிலேன்‌
செடியே யுள னொரு நாளுமச்‌ செய்கைக் கிணங்‌கிலன்‌ றீயன்யான்‌
படியாக் கிடந்‌ துன்னாணை நான்‌ பார்ப்பேன் கொலோ வென்பேனலால்‌
எடுதீயனென்‌ வடிவாக்கியா ளெதிராசனே யெதிராசனே–77-

சுக சாரணர்‌ போலேவயி ணவவேடனா கினனேயலால்‌
அகமாரகத் தோடேநலோ ரகம்வேம்வினை யுடையேனையா
மகனாகிடி லென்செய்குவார்‌ மாதாபிதா மகன்‌ றீயனேல்‌
இகம் யாவும் வானகம் யாவுமீ யெதிராசனே யெதிராசனே–78-

உயிர் பாரதந்‌ திர சேடமே யுரு வென்ற மந்‌ திரமோ வறிந்
தயர் வெய்திடா தறிந்தே யுள னநுட்டானமோ வறியேனையா
பயமற்றவன்‌ பவமற்றவன்‌ பரிவற்றவன்‌ பரனே யிதென்‌
இயலுற்றிட வருடந்தரு ளெதிராசனே யெதிராசனே–79-

என்னாலடி யார்க்கேற்ற நன்‌ னடை மேவிட வியலாது காண்‌
உன்னால் வரு வித்தாள் கருணைக்கொப்பிலா வொரு மாதவா
பன்னாளுமுன்‌ பதம் விட்டிலார்‌ பார்த்தார் குளிர்‌ நோக்காலெனை
இன்னாதுள முதலூதிய மெதிராசனே யெதிராசனே–80-

தக்கானல னே யாயினுந்‌ தண் வெண் மணி லுன் போலவே
பொக்காக்குள மிட்டுண் மடிப்‌ பொறி மாவுடன்‌ பெருமானை யான்‌
எக்காலுமி.லக்காகவே விடும்பாக்கிய முடையேனையா
இக்காலெனை நீங்காதரு ளெதிராசனே யெதிராசனே–81-

இடும்பாக்கிய முடையேனெனு மிழிஞன் சொலை யெண்ணேலெணி
விடும்பாக்கிய னாக்காதுயிர்‌ விமலக் குணம்‌ மிளிர்வானருள்‌
தொடும்பாக்கிய னாக்கிப் பெரு நீ தொண்டர்க் கடி யானாக்கியே
எடும்பாக்கிய னாதற்கரு ளெதிராசனே யெதிராசனே–82-

நம வென்ற சொற்‌ சொலவுந் தகா நரனாயினு மதனுட்பொதி
தமதென்ற துந்‌ தாமென்றதந் தகுமா வெனதீ தடிந்தாவது
உமதன்பினா லுறுமென்ற வுத்‌ தமராய் மொழி யுலவாதுளேன்‌
எமன் வெள்கிட வெனையாக்கியா ளெதிராசனே யெதிரஈசனே–83-

நானுங்கரை மரஞ்சேறலுன்‌ னளினப்பத நாவாயினைத்‌ .
தானுஞ் சொல லாற்றான்மகிழ்ந் துளன் காண்டமி யேனையனே
வானும் புவி தானும் மறை யோனும் வழுத் திடுமாப்புக
வீனுங் குண கணனே யரு ளெதிராசனே யெதிராசனே–84-

எழு பத்து நான்‌ கெனும் தூம்பினா லியன் மந்திர வமுதானதைத்
தொழு பத்துறுந்‌ தொண்டர்க்கு வீடாக்கிக் களி துகளற்றவா
வழு வத்தனை யேனும் மிலா வாரித் தட வருண்மாரியே
இழி வெத்தனை யுளனாண்டருளே யெதிராசனே யெதிராசனே–85-

ஆழ்வார்கள் செந்‌ தமிழ் வேத நூ லருளும் பொருள் அறிவித்திலர்
ஊழ் வாங்கிட வரங்கத்தமா னுன் சீடனா வுற வெண்ணியாம்‌
வாழ்ந்தோங்குற வர யோகியாய்‌ வந்தே தமிழ்‌ மறையின் பொருள்‌
ஈந்தாண்டருள் தந்தாய் கொல் எம் எதிராசனே யெதிராசனே–86-

இதமாம் வட கலை வேத நூ லிலகும் பொரு ளெல்லாமு நின்‌
பதமாகிட வுன் பாடிய நூலாதியிற்‌ பகர்ந்தாய் பினர்ச்‌
சிதமாகிடா வெம் போலி கட்‌ கினிதாம் வர முநி யோகியாய்‌
இதமாகு தென்‌ கலை யீந்தரு ளெதிராசனே யெதிராசனே–87-

உயர் மாக்குலத் தவர்க் காரண முரை ஸூத்திரப்‌ பொருள் யாவையும்‌
அயல் மாழ்குற மா பாடிய மதனாலருள்‌ செய்தாய் கொடும்‌
மயல் மாய்ந்துள வாழ்வார் மறைப்‌ பிரசாதமே மகிழ்ந்‌ துண்ணுவான்‌
இயலீடுக ளீவானருளெ திராசனே யெதிராசனே–88-

எம்போலிய ரீடேற வென்‌ றியலுங் கரு ணையினான் மணத்
தம்போருகத் தாயாரடிக்‌ கடியார் மறைப்‌ பொருளைச் சொலச்‌
செம் பாகுவே செங் கன்னலே செங் கண்டுதே னே பாலதே
எம் மா முநி யெனையாண்டரு ளெதிராசனே யெதிராசனே.(89)

உலகாரிய னருணூநீபொரு ளோதாரெனின்‌ முன்னூற்றமி
ழிலகாரணங்‌ கடலிற் கரை யின்கன்னல தாகும் மெனா
அலவாவதன்‌ பொருட்டெங்குல வடிகாளென வடியோந் தொழ
எலமாக வந் தருள் செய்தனை யெதிராசனே யெதிராசனே. (90)

சமக்காரமாத் திரமீந்துமுன்‌ றமிழாரணப்‌ பொருள் யாவையும்‌
எமக்கேனரு ளீந் தாயிலை யென்றான்‌ கொலவ்‌ வீசன் மிகத்‌
தமக்காகவோர்‌ தனியன் செய வவற்கோதினை தமிழின் பொருள்‌
எமக்கான வெங்‌ குல தெய்வமே யெதிரஈசனே யெதிராசனே–91-

தென்னாரணங்‌ கொண்டாடிடு சீர் பெற்ற தன்‌றோ திவ்வியம்‌.
என் போத மா தவமற்றவை யின்பாகநன்‌ றாக்கிக்களி
அன்பே யெம தருளே யுணு மமுதே மறைக்‌ கதிராசனாம்‌
இன்பே யெமை யெற்றா தரு ளெதிராசனே யெதிராசனே–92–

திரு மா மலைக்‌ கேகுந் தடங்‌ காட்டேற்றமா ரவனைக்களி
பெரு மா வுப காரன்னெனாப்‌ பேணிப் பெருங்‌ களி தூங்கினை
வரு மா வுறங்‌ காவில்லிகைப்‌ பரிசத்துமா மகிழ்வெய்தினை
இரு மாவுற வருளையனே யெதிராசனே யெதிராசனே–93-

உனையுங் கொல நஞ்சிட்ட விவ்‌ வுலகென்றிடி விதன் கண்ணினே
புனை ஞாநவை ராகத்தினிற்‌ பொலிவாரெவ ரருளையனே
நினை நிற்கப ராதம் புரி நிருபன்புழு நெளியாயினான்‌
எனையோரிக முற மாண்டன ரெதிராசனே யெதிராசனே–94-

இம் மாதரி சநத்திற்குயிர்‌ கண்ணீந்திடு பெரியாரருள்‌
தம் மா மதத் தருமம் மெணிதீ தாசன் செயாச்‌ சடன் யானையா
அம்மா விவ னென்னாதுத னருண் மேவினர்‌ சரணத் துகள்‌
எம் மா வினை யிறுவானரு ளெதிராசனே யெதிராசனே–95-

முதன்‌ மூன்று நல்‌ லாழ்வார்கள் செய்‌ முன்னூல் படித்‌ தறியேனினம்‌
இதன் மீதவ ரருளுங் கலை யென வோவது தெளியேனினம்‌
மதன்விண்டிடு கலவிக்குமா மறவெவ்வினை மாலைக்குமே
இதமாகிடு கடையேனையா ளெதிராசனே யெதிராசனே–96-

நாலாயிர மென்பாரத னாலாகிட லெனவோ சொலேன்‌
மேலார் வழி கேட்டன்னவை விள்வான்வழி மேவேனலேன்‌
ஆலால மன்‌ னார் கேண்மையி லன்பாயினே னாண்டாண்டெலாம்‌
ஏலாதழிந்‌ தொழிந்தேனரு ளெதிராசனே யெதிராசனே –97-

பலதேரினும்‌ பத்தர்க்குகப்‌ பாகும் பணி யொன்றும்மிலேன்‌
நலமாகிடு மென்றேனொரு நாளுஞ்செயே னானாயினேன்‌
அலதேலொரு வகையேனுநல்‌ லவனாகிட வெண்ணற்கிலேன்‌
இலையென்செய வல்லேனையா வெதிராசனே யெதிராசனே—98-

உன்றாண்மல ருறுகேசர னெனையாட்கொளா யெனில் யானையா
நின்றாகிட வலனென்பது நீயுஞ் சொல லாகாயையா
கன்றாகவென் ௧றை யுண்டுநின்‌ காந்றாமறைத் தேன்வாக்கியே
இன்றாகிட வேனும்மரு ளெதிராசனே யெதிராசனே–99-

சீருற்றொளி ரிராமாநுச செயஞாநவா ரியனார் சரண்‌
தாருற்றொளிர்‌ பரன் கையினிற்‌ றருதாதவென்‌று எனை யாண்டருள்
நீருற்றொளிர்‌ திருக் கோவலூர்‌ நில வெம்பெரு மானாரவர்‌
ஏருற்றொளிர்ந்‌ திடவோதினா ரெதிராசனே யெதிராசனே–100–

இனிதாகு நின்‌ பத தாமரை யினையூரிடை யுடை வாழியே
தனிதான்றகு முக்கோல்தடங்‌ கையஞ்சலி கைவாழியே
பனிதான்பர மன் வாழ் விழி யகடாநந முடி வாழியே :
எனையோதி யென்‌ றிடு மாபர னினியாரொடென்‌ றும் வாழியே–101-

பின்முனா முத்தர்‌ நித்தர்கள் வாழியே
பேணு நூற்றெட்டெம்‌ மான்றாயர் வாழியே
தன்முன்றானெனு மாதியிலாத் தமிழாரணங் கடழைப்புடன்‌ வாழியே
என் முன்னின்ற விறை வெண்மண்வாழியே
இலகு மஞ்சட்‌ பொடி மணி வாழியே
பொன் முன்றந்த மநு மூன்றைந்தேதி விபூதிரண்டும்‌ பொலிவுற வாழியே–102-

———-

ஸ்ரீ ராமானுஜ மாலை

இராமாநுஜ னடியை யென்றென்றும்‌ போற்றும்‌
இராமாநுஜன்‌ றன்னை யேத்த–வராதார
நற் சீனி வாசனையே நாடீச்சம்‌ பாடிகுரு
நற் சீனி வாசனையே நத்து. –தனியன்‌

இன்பம்‌ பமுதெனவே யெண்ணிறந்தோ ரிப்புவியி
லன்போடு செப்பு மறநெறியைத்–துன்னு
மிராமா நுஜன்மே லியம்புபா மாலைக்‌
கராமா னளி படைகள்‌ காப்பு. –காப்பு.

பூவிற்‌ றிகழ் மாது புட்கரமாய்ச்‌ சேர் மாலைப்‌
பாவிற்‌ புகழோங்கப்‌ பாடினா–னாவிற்கு
நற்சுவையு நற்கதியு நல்குமிரா மாநுஜன் செம்‌
பொற் பதத்தை நெஞ்சே புகல்‌.–1-

நள்ளிருளி னெஞ்சே நண்ண விடா வென் குருவைக்‌
கொள்ளாரி னின்று குறையறவே–கொள்ளுகின்ற
அன்பனிரா மாநுஜனல்‌ லம் புயமாம்‌ பாதங்க
ளன்றித்‌ துதியா தறி. –2

நெஞ்சே யடி பணிந்தே னின்னை யென்றும்‌ பேய்ப் பிறவி
யஞ்சப்‌ புலர்த்தி யருளவே–விஞ்சு புக
ழாரிய னிராமா நுஜ முனிக்‌ கன்பு செயுஞ்‌
சீரியர் காற்‌ கீழிற்‌ செறி–3-

என்னைப்‌ பொருளா யிருளா னது சுரந்த
முன்னை வினை வேர றுக்கு முன்னவனைப்‌–பன்னப்‌
பணித்த விராமா நுஜன்பரன்‌ பாதங்‌
கணித்துத் துதி மனமே காண்‌–4-

எனக்குற்ற செல்வ மிராமா நுஜனென்‌
மனத்துற்றுப்‌ போற்றுதற்கு மாயா–தெனக்குற்ற
அன்பனவ னாமத்தை யாதரவாய்‌ நன்னெஞ்சே
துன்பணுகா வென்றே துணி–5-

இயலும்‌ பொருளு மிசைவாகச்‌ சேர்த்து
மயல் கொண்டு வாழ்த்தி மதித்துப்‌–பயிலுங்‌
கவி யிரா மாநுஜன் மேற்‌ காதலித்து நெஞ்சே
புவி மாயம்‌ விட்டுப்‌ புகல்‌–6-

மொழியும்‌ புகமுடையான்‌ முக் குறும்பாம்‌ வஞ்சக்
குழியைக்‌ கடக்கு நங்‌ கூரன்‌–வழி கூடுஞ்‌
சீரிரஈ மாநுஜணனொண்‌ செங்கமல மல்லாமற்‌
சேரிரா நெஞ்சே திறம்‌–7-

வருத்துகின்ற மா விருளை மாற்று சீர்‌ வேதக்‌
குருத்தையுஞ்‌ செந்தமிழுங்‌ கூட்டி -யருத்தத்‌ திரித்தன்‌ றெரித்தத்‌ திரு விளக்கை நம்மி
லிருத்துமிரா மாநுஜனை யேத்து–8-

இறையவனைக்‌ காண விதயத்தி னுள்ளே
நிறை தீப மேற்றற்கு நெஞ்சத்‌ துறைய வைத்‌
தாளுமிரா மாநுஜனா மாரியனை வாழ்த்திமெத்த
நாளுந்‌ துதியவனை நன்று–9-

மன்னிய பேரிருளை மாற்றின பின்‌ மா மலரா
டன்னோடு காட்டுந்‌ தமிழ்த்தலைவன்‌–பொன்னடியைப்‌
போற்றுமிரா மாநுஜன்றாட்‌ பூண்டவர்க டம்பெருமை
யேற்றற்கு நெஞ்சே யிசை–10-

சீரிய நான்மறையைச்‌ செந்தமிழா லாதரித்தப்‌
பாரியலும்‌ பாண் பெருமாள்‌ பாதமலர்த் -தாரியலைச்‌
சூடுமிரா மாநுஜனைச்‌ சூழ்ந்தவர் தங்‌ காரியங்க
ணாடுதற்‌ கேலா நமக்கு–11-

சீர்த்தித்‌ திரு மழிசைச்‌ சேர் கோனின்‌ றாளகத்தி
லார்த்தி கெட வாழ்த்துகின்ற வான்றவன்‌ சீர்ப் பாதம்
போற்று மிரா மாநுஜன் செம்‌ பொன்னடியை யெந்நாளு
மேற்றுவாய்‌ நெஞ்சே யினி–12-

பசுந் துளவத்‌ தேன் மாலைப்‌ பைந் தமிழிற்‌ பெய்யும்
பசு மறையின்‌ பாமாலைப்‌ பாதத்‌–திசையுறவே
சாத்துமிரா மாநுஜன்‌ றண்கமலச்‌ சேவடியை
யேத்துபவர்‌ தம் பதமே யெண்ணு.–13–

கதியி னிலைக்கவெங்‌ கானங்கள்‌ யாவுங்‌
கொதிக்கத்‌ தவஞ்செய்வர்‌ கூடிப்‌–பதிக்குத்
தருமிரா மாநுஜனற்‌ றாட் கமல மேத்தும்‌
பெருமிதமாத்‌ தாசர்கடாள்‌ பேணு–14-

காதற்‌ பெருஞ்சுழியிற்‌ காதலித்துப்‌ பேணாத
தாதரடி சேரத்‌ தருசிந்தை-யாதரவா
யோதும் ராமாநுஜன் சீ ரோங்கு நறை கமலப்‌
போது தொழு நெஞ்சே புரிந்து–15-

தலமனைத்து மோங்கு கலி தாவுகின்ற நாளிற்‌
பலங்கொடு காக்கும்‌ பதுமன்‌–மலர் சூடு
மாதி னருளை மதி யிரா மாநுஜனா
மாதவனை நெஞ்சே வழுத்து–16-

முனியார்‌ துயரங்கண்‌ முந்தியு மின்பங்‌
கனியா ரவர்மன மாதே–தனியானைத்
தண்ணிரா மா நுஜனைச்‌ சார்ந்தவர் தஞ்‌ செங்கமல
நண்ணுதற்கு நன்னெஞ்சே நாடு–17-

அரிய திருமறையை யன்புடனே யீந்த
பெரிய குருகூரன்‌ பேணி–யுரிமையொடு
பாதமேற்‌ சாத்திப்‌ பரப்பிரம மாலடியை
யோதுமிரா மாநுஜனை யோர்ந்து–18-

தென் குருகை நாதன்‌ திருவாய்‌ மலர்ந் தருளுந்‌
தென்றமிழை யாதரித்‌துச்‌ சேவை செயப்‌ –பன்னரியத்‌
துன்பமது வந்தணுகாத் துய்ய விரா மாநுஜன்‌ றண்‌
ணின்புதரு பாத மிறைஞ்சு–19-

பெருஞ்செல்வந்‌ தந்தையொடு பேணு நற் றாயு
மரு குருவு மாகி வரு மாறன்‌–றருமறையை
நீணிலத்தோர்‌ தங்கட்கு நேருமிரா மாநுஜன்றான்‌
வாணிலத்து மாயுமே வண்டு–20-

யதிகளுக்கு நாதன்‌ யமுனைத்‌ துறைவன்‌
கதி தன்னைக்‌ கற்பிக்குங்‌ கர்த்த–னதி யுசித .
பாதனிரா மாநுஜனைப்‌ பன்னு மறையவர் தம்‌
பாதங்க ணெஞ்சே பணி–21-

கார்த்திகை வீரனொடு கக்குகனன்‌ முக்கண்ணா ்‌
மூர்த்தியு மோட முதுகிட்டுத் –தார்க்கியன் மேற்‌
பாவும்‌ பரனைப்‌ பணி யிரா மாநுஜனைத்‌
தாவுமே யென் மனதிற்‌ றான்‌–22-

வைப்பாய வான் பொருளை வைத்து மனத்தகத்தே
யெப்போது மேத்துகின்ற வென் குருவை–யொப்பா
ரிரு நிலத்தி லில்லா விராமா நுஜன் றன்‌
பெரு நெறியை நெஞ்சே பெறு–23-

தீவினையாற்‌ பற்பலவாந்‌ தேகங்க ளெய்தினதா
னோவினையிற்‌ பட்டுமிக நொந்திருக்கும்‌- வீவினையை
நீக்குமிரா மாநுஜன்றா னீணிலதீதிற்‌ றோற்றின பின்‌
போக்குவித்தான்‌ பொய்ச் சமயப்‌ பூட்டு–24-

கருணை யிரா மாநுஜ விக்‌ காண்டஞ்சூழ்‌ பூவிற்‌ :
றரு நின்‌ னருளினது தன்மை–யொருவருமே
நோக்கொணொா வல்லமையை நூல் வல்லோர்‌ செப்புதற்கு
நாக்கு கடா மேலுமோ நன்கு–25-

திக்குற்ற கீர்த்தி யிரா மாநுஜனைச்‌ செய் வினையா
மெய்க் குற்ற நீக்க நினை மேவு நல்லோ–ரெக்குற்ற
வாளராய்த் தோன்றி வரு பிறப்பை மாய்ப்பதற்‌ :
காளரா யெண்ணுவரே யாய்ந்து–26-

இரங்கி யிரா மாதுஜன்றா ளென்றனது நெஞ்சந்
திரங் கொண்டு பாவத்‌ திகைக்க–வரங்கொண்டு
சேதிக்க வந்தெழுந்த செம்மலடி யல்லாது
வாதிக்க வாகா மதித்து–27-

நெஞ்சிற்‌ கறை கொண்ட நீசன்‌ றனைக் காய்ந்து
தஞ்சமெனப்‌ போற்றி நிதஞ்‌ சார்ந்தவர்கட்‌–கஞ்சலென
நங்கள்‌ பெருமா ணவிலுமிரா மாநுஜன்றான்‌ :
கங்கில் புக ழாளனெனக்‌ காண்‌–28-

கூட்டும்‌ விதி யென்று கூடுமோ தென் குருகைப்‌
பாட்டென்னும்‌ வேதப்‌ பசுந்தமிந்தா–னாட்டமுடன்‌ ்‌
வீட்டின் கண்‌ வைக்கு மிரா மாநுஜன் சொன்‌ மெய் யுணர்ந்தோ
ரீட்டங்க ளெய்திடுவ ரின்பு. —29-

இன்பந்‌ தருமோக்க மெய்திடுவை யெண்ணிறந்த
துன்பந்‌ தரு நிரயத்‌ தொல்லுலகின்‌–மன் பல்‌
லுயிர்கட்‌ கிறை யிரா மாநுஜனென்‌ றோத
வுயிர்த் துணையா நெஞ்சே யுணர்‌–30-

ஆண்டுகனா டிங்களிலே யாய் நிகழுங்‌ காலமதி
லீண்டூ பல யோனி யுழ லின்‌ நிமனங்‌–காண்டகுதோ
ளண்ணலடி சேருமிரா மாநுஜனை யண்டினவர்க்‌
கெண்ணரிய பேரின்ப மேத்து–31-

பொருந்தும்‌ பொறையும்‌ புகழு நற்‌ றேசுந்
திருந்திய செல்வமுஞ்‌ சேர–வருந்தவன்றன்‌ .
வண்மையினா லீய வருமிரா மாநுஜன்றான்‌
றிண்ண நமக்‌ கென்றே தெளி–32-

அலர் மகளின்‌ கேள்வன்றன்‌ னாழி படர்‌ தண்டு
மில கொளி சேர்‌ சங்குடனே யேன்ற–பல படையும்‌
பூதலக்‌ காப்பினொடு போற்று மிரா மாநுஜனை
யாதரவாய்ப்‌ பன்ன வறி–33-

இராமா நுஜனை யிரவு பக னித்த
மராவுமதி பெற்றவர்க ளன்பிற் –றராதவற்றை
விண்ணினொடு மண்ணினும்‌ வேண்டா திரு நெஞ்சே
நண்ணிடுவை யின்ப நமக்கு–34-

அடலுறு நல்‌ லாழிகர னாருயிர்த்தே, வின்சொற்
கடல் போல நற்பொருளைக்‌ காட்டி–விடலரிய
தீ நெறிக் கண்‌ வீழ்விக்காத்‌ திண்ணி ரா மாநுஜன்றன்‌
பா நெறிக் கண்‌ ணெஞ்சே பரசு–35-

நானிலத்து மானுடத்தை நாடா னொரு தெய்வ
மானித்துப்‌ போற்ற மனமில்லான்‌–றானித்தம்‌
பொன்னரங்க மென்றே புகலி ரா மாநுஜன்‌ சொல்
லென்னரங்கங்‌ கொள்ள விசை–36-

படியிற்‌ புகழ் பெற்ற பண்புடையார்‌ கூறக்‌
குடி கொண்டு வாழுங்‌ குணத்தன்‌–கடி கொண்ட
மா மலர்த்தாள்‌ வைத்தி ராமாநுஜனைப்‌ போற்றுபவர்க்‌
காமலத்தைப்‌ போக்குமே யாய்ந்து–37-

புண்ணியர்க ணித்தம்‌ புரளாது நற்றுளபக்‌
கண்ணி யிடு மால் பதத்தைக்‌ கண்டு தொழும்‌–பண்டையர்கள்‌
போற்று மிராமாநுஜ நின்‌ பூ மலர்த் தாள்‌ சென்னியில் வைத்
தேற்ற மனத்‌ துள்ள விசை–38-

ஆர் தரமோ விந்த வயர் தரு மாவுலகிற்‌
சேரிருளின்‌ வெந்துயரஞ்‌ சேதிக்கத் –தார் மருவு
மீறிலிரா மாநுஜனை யென்றுந்‌ துதித்தவர்க்குக்‌
கோ றிடுவன்‌ பாவக்‌ குணம்‌–39-

அங்கையி னெல்லி யருங்கனி போற்‌ றோற்றுவிக்கு
நங்கை மலர்‌ சூடுகின்ற நாதன்றன்‌–பொங்கு புகழ்ச்
செம்மலி ராமாநுஜனாஞ்‌ சேம வைப்பை. நித்த நித்தந்‌
தம்மிலிடு வார் பவம் போந்‌ தான்‌–40-

பொருளொடு தன்‌ மக்களுடன்‌ பூங்குழலாட்‌ பூவு
மருள் கொண்‌டிளை நெஞ்சே மற்று–மிருள் கொண்ட
வெந் துயர நீங்குமிரா மாநுஜன்றன்‌ மெய்ப்பதமு
வந்து தரி னென்றே மதி–41-

வீடுடனே சொற் பொருளு மேவு நல வின்ப சுகந்
தேடுந்‌ தருமந்‌ திகழ் கண்ணன்‌–றாடமக்கா
மென்றுரைத்த வள்ளலி ராமாநுஜனா மிந்நிலத்தி
லென்று மின்ப மீகுவனென்‌ றேத்து–42-

மண் மிசையே யோனிகளில்‌ வந்து பிறந்‌ தெங்களிறை
கண்ணுற்று நிற்கினுமே காண்கில்லா–மண்ணிலத்தோர்க்‌
கண்ணலிரா மாநுஜன்வந்‌ தாதரித்துப்‌ பின்பவர் தா
ளண்ணடுமை கொண்டார்‌ நலம்‌–43-

ஆயிழையார்‌ கொங்கை யெனு மாரளற்றிற்‌ றங்கு மிக
மாயு நல்‌ லாவிக்கு வாழ்வு தர– நாயகனா
யெல்லா வுயிர்கட்கு மேலுமிரா மாநுஜனாத்
தொல்லோ னருளினது தோய்வு–44-

௬ரக்குந்‌ திருவுடனே சொல்லு முணர்வும்‌
பறக்கு மிரு வினையின்‌ பற்றுந் –தரைக்கு
ளுறு கலியைப்‌ போக்கு மிரா மாநுஜனென்‌ றோதப்‌
பெறு வரிவை மெய்யெனவே பேசு–45-

நல்லார்‌ பரவுமிரா மாநுஜன்‌ றன்‌ னாமநம்பிக்‌
கல்லா ரகலிடத்துக்‌ காமிப்பா–ரல்லாது
சொல்லார்‌ திரு மொழியைச்‌ சோதித் தவற்கு நிதம்‌
பல்லார் பல்‌ லாண்டு பரிந்து–46-

பேறொன்று மற்றில்லைப்‌ பேசுஞ்‌ சரணன்றி
யாறொன்று மின்றி மற்‌றச் சரணந்‌–தேறுமவர்க்‌
கெற்கு முனை தந்த வெழிலிரா மாநுஜனைக்‌
கற்குபவர்க்‌ கில்லை பவங்‌ காண்‌–47-

கூறுஞ்‌ சமயங்‌ குலையக் குவலயத்தே
மாறன்‌ மறை தேர்‌ மதியுள்ளான்‌–றேற
மனத்திற்‌ புக விரா மாநுஜனை யென்றுங்‌
கனத்திற்‌ கருதிடுவாய்‌ காண்‌–48-

நாடா தெனது மன நாடா தெனது கர
நாடா தெனது புய நானிலத்தி–னாடத்‌
தெரிக்கு மிரா மாநுஜன்றான்‌ செய்த கவி யொன்றிற்‌
கரிக்கும்‌ பவங்கள்‌ கனிந்து–49-

இறைஞ்சப்‌ படு பொருள் ஈசனரியென்‌
றறத்தை மொழியு நல்‌ லண்ணற்‌–றிறத்த
விரு வினையைப்‌ போக்கி யிதயத்தி னுள்ளே
வரு மிரா மாநுஜனை வாழ்த்து–50-

மாதவர்க ணித்தம்‌ வணங்கு திரு மாதின்‌ _
காதலனை நற்றோழி காமுறுவேற்‌–கேதமில்லாத்‌
தேன்றுளப மாலை தரத் தென் குருகை நாதன் மகிழ்க்‌
கோன்றிரு ராமாநுஜற்குக்‌ கூறு–51-

நிகரின்றி நின்ற நின தருளை யன்றி
புகலொன்று மில்லை புகற்‌ புன்மை–யகலு நெறிச்
செப்பு மிராமாநுஜற்குச்‌ சேர்ந்தடுமை யானபின்‌ 3
றப்பும்‌ பொருளென்னோ சாற்று–52-

குலத்தின் கட்‌ டோன்றின து தர்ம்ம நெறி புன்மைப்
பலத்த மதங்கள்‌ பறந்து–குலைந்திடவே
வந்துதித்த வெங்களி ராமா நுஜனைக்‌ கண்ட பின்‌ :
னெந்த வித மாயிற்றோ வெண்ணு–53-

தாழா தெனது சென்னித் தாழா தென துகரத்
தாழா தெனது தோட்‌ டாரணியிற்‌ –றாழ
மற்றொன்றும்‌ வேண்டா மதியிரா மாநுஜன்‌ றன்‌
பொற்றாளை வைத்தாளப்‌ போற்று–54-

இராமா நுஜன் றன்‌ னிணையடிகள்‌ பற்றா
தராதி மனங்க ளகன்று–பராகமா
யார் கலியிற்‌ றேங்கி யரு நரகில்‌ வீழ்வர் கொலோ
பார் மகட்குப்‌ பாரமெனப்‌ பார்த்து–55-

அடியைத்‌ தொழுத நல்‌ லைவர்கட்‌ காக
முடியப்‌ பரித்தேரை முன்ன–மடிய விட்‌
டாதரித்தக்‌ கண்ணனடி யண்டுமி ராமாநுஜ வெற்‌
காதரித்தக்‌ கண்டிரா தாக்கு–56-

பார்த்தா னறு சமையம்‌ பாரிற்‌ பதைத்து விடப்‌
போர்த்தான்‌ புகழைப்‌ புகுந்தெமது –தீர்த்தா
னிரு வினைக ளெம் மிராமாநுஜன் றாட்‌ செய்யும்‌
பெருமிதமா மற்புதத்தைப்‌ பேசு–57-

பற் பல்‌ லுயிர்களுடன்‌ பல்லுலகி யாவுமே
சொற் பரன்றா மென் றவிந்தச்‌ சோதனையைத்‌ -தொல்லுலகி
னாட்டு மிரா மாநுஜனை நானிலத்திற்‌ சேர்‌ந்தவர்கட்‌
கோட்டுமே தீ நெறியை யுன்னு–58-

நாட்டுஞ்‌ சமய நசிந்தனவே நாரணனைக்‌
காட்டு மறையுங்‌ களித்தனவே–வாட்டமிலாத்
தென் மறைகள்‌ வாழ்ந்தனவே செப்புமிரா மாநுஜன் செய்க்‌
கன்மடப்‌ போக்கியல்பு கண்டு–59-

தொண்டர்‌ குலாவு மிரா மாநுஜனைத் துய்ய மறை
யண்டங்க மஞ்சிட்‌ டனனாகி–மண்டலத்திற்‌
றோற்றிக்‌ கதிர் விடவே சூழ்பவன்றன்‌ கட்பார்வைக்‌
காற்றுகைம்‌ மாறென்‌ னறி –60-

கோக்குலத்து மன்னர்களைக்‌ கூர் மழுவா லிவ் வுலகிற்‌
போக்கிய தேவனைப்‌ போற்று நல–மாக்கிய வண்‌.
கீர்த்தி யிரா மாநுஜனைக்‌ கேட்க மன மற்றவர் தஞ்‌ :
சீர்த்தி யுரை யாதெனவே செப்பு–61-

மற்றொரு பேறு மதியா தரங்கனடி
யுற்றவரே தனக்‌ குற்றவராய்ப்‌–பெற்றவனை
நற்றவர்கள்‌ போற்று மிரா மாநுஜனை நானிலத்தே
பெற்ற பின்‌ னல்லவோ பேழ்‌–62-

தேடரிய வேதச்‌ சுடரொளியா லஞ்ஞான
மோடத் துரத்தினா னோங்காரங்‌–கூடாரைச்‌
செற்று மிரா மாநுஜன் றன்‌ செவ்வை தரு நற் கமலம்
பற்றுபவர்‌ நெஞ்சே பணி–63-

கொழுந்து விட்‌ டோடு வெங்‌ கோள் வினைக ளெம்மை
யழுந்தி விடா தாட் கொள்ளு மன்பன்‌–தொழு தவத்தோ
னெம் மிரா மாநுஜன் றா னின்போடு வீற்றிருந்‌
தெம் பொருளாய்‌ நின்றவனை யேற்று–64-

பெருந் தேவரைப் பரவப்‌ பேணு நல்‌ லெண்ணத்
திருந்தே னிரு வினைக ளேகப்‌–பொருந்தா
நிலை யுடைய புல்லரிட நின்று பிரி நெஞ்சே
நிலை யிரா மாநுஜற்கு நேர்‌–65–

உணருடைய ஞானிக ளுய்யு திரு தென் சொன்‌
மணந்தரு மின்னிசை கண்‌ மன்னப்‌–புணர்ந்த பொன்‌
மார்பன்‌ பொருந்து பதி வாழ்த்தி யிறைஞ்சி நிற்கு
மார்க்க மிரா மாநுஜன் றன்‌ வாழ்வு–66-

பிடியைக்‌ களிறு போற்‌ பின் பற்றி யானின்‌
னடியைத் தொடர வளிப்பாய்ப்‌–படியி
லறு சமயப்‌ பூண்டதனை யாளுமவர்‌ சிந்தைப்
பெறு மிரா மாநுஜ நற்‌ பேறு–67-

பண்டரு மாறன்‌ பசுந் தமிழ்கள்‌ பாழ் மதங்கள்‌
விண்டிட்டு மெய்ம்மை விளங்கிடவே–யண்டத்து
வேதக்‌ கொழுந்தேந்த மேதினியில்‌ வீற்றிருக்கு
நாதனி ரா மாநுஜனை நற்று–68-

வாழ்வற்‌ றது தொல்லை வாதியர்க்கு மன்னு மறை
தாழ்வற்‌ றது மிக்கத் தாரணியிற்‌-. -கூழற்‌
றது குற்ற மெல்லா மறத்தைத் தருமென்‌
னது விரா மாநுஜன்‌ றண்‌ ணன்பு–69-

சரண மடைந்தவர் தஞ்‌ சத்துருவை முன்ன
மரண மடைவித்த மாயன்‌–முரகரியை
வாழ்த்தக்‌ கரணங்கண்‌ மாநிலத்தி லென்றென்றுந்
தாழ்த்துமிரா மாநுஜனைச்‌ சாற்று–70-

யாரு மெனக்கு நிக ரின்றென்று பாண்டவர் தந்‌
தேரினின்று சொன்ன செழும் பொருளைப்‌–பாருலகிற்‌
செப்பு மிரா மாநுஜனைச்‌ சென்று தொழ வாவி கிந்தைத்
தப்புவிக்கு மார் நரகந்‌ தான்‌–71-

சிந்தை கரணஞ்‌ சிதைந்தனவே யென்று முனா
ளந்தமின்றித்‌ தாழ வவையேற்குத்‌-தந்தருள
வெந்தை யிரா மாநுஜனா யீங்குதித்த பேரடியைச்‌
சந்ததமுஞ்‌ சிந்தை தனிற்‌ சார்‌–72-

என்னியல்பைப்‌ பார்த்து மிக வெண்ணில்லாப்‌ பற் குணத்தா
யென்னை யினி நோக்கி யெனக்கு நலந்‌–தன்னை
யளியாத தென் னென்பா ராருலகி னல்லோர்‌
களி யிரா மாநுஜனைக்‌ கண்டு–73-

சார்ந்த தென்‌ சிந்தை யுன்‌ தாளிணைக் கீழன்பு மிகக்‌
கூர்ந்தது நின்‌ பாதக்‌ குணங்களுக்குத்‌ தீர்ந்ததென்‌
செய்கை யிரா மாநுஜன் றாட்‌ சேவடிக்கு முன் வினையு
முய்கையரி தன்‌ றனவே யுன்னு–74-

சமயக்‌ கலகரைச்‌ சாய்த்து மிக வுய்ய
வமையு மறையு மளித்‌துத்‌–தமரவன்ற
னுள்ளங்க ணெய்த் தேத்த வோங்கு புகழ் தரு மா
வள்ளலிரா மாநுஜனை வாழ்த்து–75-

தேரார்‌ மறையின்‌ நிற மறியாத்‌ தீயவரைக்‌
கூராழி கொண்டு குறை. கோபால–னேரார்‌
குணத்திரா மாநுஜன்றான்‌ கொள்ளு மெழின் மறையின்‌ மணத் திருந்‌ தாரை மதி–76-

ஈந்தனனே யின்னருளா லெண்ணின்‌ மறைப் பொருளை
யேய்ந்தனனே கீர்த்தி தனை யிப்படியிற் –காய்ந்தனனே
யென் வினைகள்‌ வேர் பறிய வீங்கி ரா மாநுஜன் றன்‌
னன்மை தரு பாதமே நச்சு–77-

பொய்ப் பொருளை யென்னிற்‌ பொருந்தாம லுன்றனது
மெய்ப் பொருளைப்‌ போற்றி விசுவமதி–லுய்யு
மருத்துந்‌ தரு மிரா மாநுஜ நின்‌ சேவடியாற்‌
கருத்தினது கள்ளங்‌ கழற்று–78-

நல்லார்‌ பரவு மிரா மாநுஜன் றன்‌ னாம நம்ப
வல்லார்‌ திறத்தை மறந்திடார்க்‌–கெல்லா
விடத்தினு மென்று நித மெத் தொழும்புஞ்‌ செய்யத்‌
திடத்திருக்கு நெஞ்சே தெளி–79-

சோர்வின்றி நின் றனக்குத்‌ தொண்டு பட்‌ டார்களிடஞ்‌
சார்வின்றி நின்ற வெற்குத்‌ தாளிணைகள்‌–பேர்வின்‌றி வாய்ப்பக்‌ கருணை யிரா மாநுஜன்‌ றண்‌ ணேரடிகட்‌
கேய்ப்ப தொன்‌ நின்றே யினி–80-

தெரிவரிய ஞானத்தைச்‌ சேர்ந்தொமுகப்‌ பேணாத்‌
திரு வற்ற வஞ்ஞானஞ்‌ சேரு–மரு வினையைப்‌
போக்கு மிரா மாநுஜனைப்‌ போற்றினா னன்னெஞ்சே
யாக்கிடுவ னற் பதவி யாய்ந்து–81-

சீர் கொண்ட பேரறத்தைச்‌ செய்பவர் தம்‌ புண்ணியத்தாற்
பார் கொள்ளு முன் றன்‌ பதயுகமா–மேர் கொண்ட
வீட்டை யிரா மாநுஜன்றான்‌ மேன்மை பெற வீகுமவன்‌ பாட்டை யறி மனமே பார்த்து–82-

கண் டுகொண்டே னுன் றன்‌ கருணை தனை நித்த நித்தந்‌
தொண்டு கொண்டேன்‌ றொண்டரது துய்யத்தாள்‌
விண்டு கொள வன்பவந்தா னெம்மிரா மா நுஜனை யேத்திட்டா
லென்னுலப்பு நெஞ்சே யினி–83-

ஓதிய வேதத்தி னுச்சியின்‌ மீதிலகு
சோதியை நாதனெனச்‌ சூழாதப்‌–பேதமையைத்
தீர்த்த விரா மாநுஜனைச்‌ சேர்ந்தொழுகு தொண்டர்‌ துகள்‌
போர்த்து நித நன்னெஞ்சே போற்று–84-

பற்றாத மாநுடரைப்‌ பற்றிய தீப்‌ பற்றை விடா
துற்றா ரெனவுழன்‌ றோடாது–கற்றார்‌
பரவு மிரா மா நுஜனைப்‌ பற்றுபவர்‌ பெற்றா
லரணமக்கு நெஞ்சே யறி–85-

பெரியவர்க ணன் மொழியைப்‌ பெட்புடனே சொல்லற்‌
குரிய மனதீதோ டிணங்கத்‌–தெரிவரிய
மானத் தரு மிரா மாநுஜன்‌ றண்‌ ணற் பதத்தைத்
தானமாய்‌ புன்னெஞ்சே சாற்று–86-

தென் மொழியை யுண்டு திறந்‌ தேர்ந்து தடித்ததனா
லன்பு மிகச்‌ சீயமிரா மாநுஜன்‌ றன்‌–னின்மொழிக்கு
வாதியராம்‌ வேங்கை கடம்‌ வாதனை கணிக்க வந்த
பாதநித நெஞ்சே பணி–87-

மாட்சித் தரு மிரா மாநுஜனே நின்னை யன்றிச்‌
சாட்சியொடு சாற்றுதற்குத்‌ தாழ்வில்லா–வாட்சி பெறு
மேற்ற மென்‌றே கொண் டிருக்கு மென்‌ சிந்தை தனக்‌
காற்று திறந்‌ தந்தளிப்ப தார்‌–88-

நினையார்‌ பிறவி தம்மை நீக்குகின்ற நாத
னெனை யாள வந்த விறையைப்‌–புனையா
ரிராமா நுஜன்மே லின்பு தரு பாக்க
ளராவும்‌ பவமதனை யாய்ந்து–89-

ஆகமத்தார்‌ கூறு மவப் பொருள்க ஞண்மை யுள
தாக மிகப் பயவா தண்டத்துக்‌–காகநதிச்‌
சேரு மரங்கனெனச்‌ சீவர்க்குச்‌ செப்பு பொருள்‌
பாரு மிரா மாநுஜன் றன்‌ பண்பு–90-

புண்ணிய நோன்பு பொருந்துமிலேன்‌ போற்றி செய
நுண்ணருங்‌ கேள்வி நுவன்றுமிலே–னெண்ணரிய
கீர்த்தி யிரா மாநுஜ நீ கேள்விகண்‌ ணெஞ்சில் புகுந்
தார்த்தி கெட வந்தருள்வை யாய்ந்து–91-

கட்டப்‌ பொருளாங்‌ கயவர் சொலும்‌ புன் மறையின்‌
பெட்டைக்‌ கெடுத்தவர் தம்‌ பேதமையை– வெட்டிப்‌
பவத்தை யிரிக்கு மிரா மாநுஜன் றன்‌ பாதத்‌
துவமித்தற்‌ கூடொணா வுய்த்து–92-

தவந் தருஞ்‌ செல்வந்‌ தகவுந்‌ தரு மெம்‌
பவந் தருந்‌ தீ வினைகள்‌ பாற்றித்‌–திவந்தருந்
தீதிலிரா மா நுஜனைச்‌ சேர்ந்தவர் க டம்பதத்தை
யோதிடுவாய்‌:நெஞ்சே யுணர்ந்து–93-

உண்ணின்‌ நுயிர்கடமக்‌ குற்றனவே செய்‌ துயர்வு
பண்ணும்‌ பரனும்‌ பரிவுடனே–யெண்ணு நன்‌
மாடளிப்பன்‌ றண்ணி ரா மாநுஜனிம்‌ மேதினி யிற்‌
றேடரிய வேததந் தெரித்து–94-

வளரும்‌ பிணி கொண்ட வல் வினையான்‌ மிக்கக்‌
கிளருந்‌ துணிவுங்‌ கெடுத்துத்‌–தளரு நிலை
யாய்ந்திரா மாநுஜன்று னன்போ டுவந்து பவஞ்‌
சாய்ந்திரா தென் கொலோ சாற்று–95-

போந்த தென்‌ னெஞ் சென்னும்‌ பொன் வண்‌ டுனதடியிற்‌
காந்தெளி தேனுண்‌ டகங்களிக்க–வீந்தருள
வேண்டு மிரா மாநுஜனே வேறொன்று காட்டி மயக்‌
காண்டிடினுஞ்‌ செல்லா தறி–96-

மயக்கு மிரு வினையாம்‌ வல்லி தனைப்‌ பூண்டு
துயக்கும்‌ பிறவித்‌ துயரி–லுயக் கொண்டு
நல்க விரா மாநுஜவித்‌ நானிலத்தி னின்னை யுன்ன
லல்லா திழுக்கெனவே நாட்டு–97-

உன் றன்‌ குணங்களையே யுன்னி யென்‌ னாவிருந்‌
தென்று மிரா மாநுஜவென்‌ றேத்த நித–நன்று தர
கையுந்‌ தொழுங் கண்‌ கருதிடுமே காணுதற்க
வைய மதனின்‌ மதித்து–98-

இருக்குமிடம்‌ வைகுந்தம்‌ வேங்கடமெண்‌ சோலைப்‌
பொருப்பிட மா மாயனுக்குப்‌ போற்‌றி –யிருக்குமிட
மாயனி ரா மாநுஜ நின்‌ மா மனத்‌ தின்றவன்றான்‌
றாயகமா யென்னகத்திற்‌ சார்வு–99-

அங்கயல்‌ சூழு மணி யரங்க நாதனொடு
பங்கயமாம்‌ பாவைப்‌ பழிச்சுதுந்‌– துங்கமதாய்தீ
தங்கிய பத்தித்‌ தலை மிசையே கீர்த்தி மிகப்‌
பொங்கு மிரா மாநுஜன் றண்‌ பூ–100-

பூதலமுந் தான் வாழிப்‌ பூ மகளுந்‌ தான் வாழி
வேதமுதன்‌ மற்றெவையும்‌ வீறுதற்கு–நாதனருட்‌
பெற்ற விரா மாநுஜனும்‌ பெட்பொடு சொன் மாலைக்‌
கற்றவரும்‌ வாழி நிதங்‌ காண்‌–101-

வாழி யிரா மாநுஜனும்‌ வாழி யவன்‌ பாமாலை
வாழியதைக்‌ கற்ற வரு மாநிலத்தில்‌–வாழியவன்‌
நற்றவரும்‌ வாழி யரு ணண்ணினரும்‌ வாழி யவன்‌
சொற்ற மொழி வாழித்‌ தொடர்ந்து–102-


ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார்

November 25, 2024

திருநக்ஷத்ரம் : பங்குனி ஹஸ்தம்
அவதார ஸ்தலம் : ஸ்ரீரங்கம்
ஆசார்யன் : கூரத்தாழ்வான்
பரமபதம் அடைந்த இடம் : ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கே மீநஹஸ்தே ச ஜாதம் ரங்கார்யநந்தநம்
ராமாநுஜபதாஸ்கந்தம் ரங்கநாதகுரும் பஜே
-தனியன்:

பூர்வத்தில் பெரிய கோயில் நம்பி என்ற திருநாமம் பூண்டிருந்த திருவரங்கத்து அமுதனார் கோயில் காப்பாளராகவும் புரோஹிதராயும் இருந்தார். பௌரோஹித்யமாவது கோயிலில் பஞ்சாங்கம், புராணம் வாசிப்பது வேத விண்ணப்பம் செய்வது முதலியன. முதலில் இவர் எம்பெருமானாரின் கோயில் சீர் திருத்த முயற்சிகளை ஆதரிக்கவில்லை. ஆனால் எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபையால் மனம் மாறி, அவர் அருளுக்குப் பாத்ரபூதரானார்.

பெரிய பெருமாள் எம்பெருமானாருக்கு உடையவர் எனும் திருநாமம் சூட்டி, சந்நிதி க்ரமங்களைச் சீர்படுத்தத் திருவுள்ளமானபோது, பெரிய கோயில் நம்பி எம்பெருமானார் பக்கல் சற்று உதாசீனராய் இருக்கவே, ஸ்வாமி திகைப்பூண்டு என் செய்வோம் என்று கவலை கொண்டிருந்தார். அவரை அப்பதவியிலிருந்து விலக்குவதே சரியான உபாயம் என ஸ்வாமி திருவுள்ளம் பற்றியபோது ஒருநாள் புறப்பாட்டின் போது பெருமாள் ஸ்வாமிக்குப் பெரிய கோயில் நம்பி தமது நெடுநாள் அந்தரங்கக் கைங்கர்யபரர் என உணர்த்தினார்.

எம்பெருமானார் கோயில் நம்பி பால் தமக்குள்ள வருத்தம் நீங்கி, ஆழ்வானைக் கொண்டு அவரைத் திருத்திப் பணிகொள்ளத் திருவுள்ளமாகி நம்பியே சீர்திருத்தங்களை ஆதரிக்குமாறு செய்தார், ஆழ்வானின் உபதேசங்களால் மனம் மாறிய நம்பி, எம்பெருமானாரிடம் சிஷ்யராக விரும்பினார். ஆழ்வானால் அவர் திருத்தப்பட்டதால், எம்பெருமானார் அவரை ஆழ்வானுடைய சிஷ்யராகவே ஆக்கினார். அவர் ஆழ்வானின் சிஷ்யரானபின் அவரது அபார கவிதா சாமர்த்யத்தைப் பற்று ஸ்வாமி தாமே அவர்க்கு அமுதனார் என்னும் திருநாமம் சாற்றினார், இதன்பின் அமுதனார் ஆழ்வானிடமும் எம்பெருமானாரிடமும் அளவிறந்த பக்தி பூண்டொழுகலானார்.

அமுதனார் பெரிய கோயில் நிர்வாகத்தை எம்பெருமானாருக்கு ஸமர்ப்பித்தல்

அமுதனாரின் தாயார் பரமபதித்தபோது, அவரது சரம கைங்கர்யங்களில் ஒரு பகுதியாகப் பதினோராம் நாள் செய்யப்படும் ஏகாஹத்தில் பங்குகொள்ள  ஒரு ஸ்ரீ  வைஷ்ணவரைத் தேடினர் , அந்நிகழ்ச்சியில் பங்கு கொள்பவர் இறந்தவரின் பிரேதமாகக் கருதப் படுவார். மேலும் ஓராண்டு  காலம் அவர கோயில் கைங்கர்யம் எதுவும் செய்ய முடியாது, எம்பெருமானார் நியமனப் படி ஆழ்வான் அந்த ஏகாஹத்தில் அமர்ந்தார். அந்த ஸ்தானத்தில் அமர்பவர் த்ருபதோஸ்மி (த்ருப்தி அடைந்தேன்) என்று சொன்னாலே ச்ரார்த்தம் சம்பூர்ணமாகும் என்ற நியமமிருப்பதால், எம்பெருமானாரின் திருவாணைக்குப் பெரியகோயிலை உட்பட்டதாக்க வேணும் என்ற ஆர்ப்பத்தோடு, ஆழ்வான் நம்பியிடம் கோயில் திறவு கோல் கொண்டு சொல்வேன் என்று கூறி, கோயில்  கதவுச் சாவியைப் பெற்று நேரே எம்பெருமானார் மடம் சென்று தொழுது “தேவர் நியமித்த படி ச்ராத்த கார்யம் ஆயிற்று, சாவிகள் இதோ சமர்ப்பித்தேன் இனி கோயில் கார்யங்கள் ஸ்வாமி திருவுளப்படி” என்றார்.  எம்பெருமானாரும், பெருமாள் திருவாக்கை நினைந்து, கோயிலில் பௌரோஹித்யம் புராண படநங்கள் ஆழ்வான் வம்சத்தார்க்கும், திவ்ய ப்ரபந்த சேவைகளை அரையர்க்கும் ஆக்கி, இயற்பாவை அமுதனார் வம்சத்தார்க்காக்கி, அவை இன்றளவும் அவ்வாறே நடக்கிறது,

இராமானுச நூற்றந்தாதி தோற்றமும் பெருமைகளும்

இதன்பின் அமுதனார் எம்பெருமானார் விஷயமாக இராமாநுச நூற்றந்தாதி எனும் 108 பாசுரங்களை இயற்றி நம்பெருமாளுக்கும் எம்பெருமானார்க்கும் சமர்ப்பிக்க, அதை உகந்த நம்பெருமாள் அன்றைய புறப்பாட்டில் எம்பெருமானாரை வாராமல் தடுத்து, அந்தாதியை சேவிக்கச் சொல்லிக் கேட்டுகந்து,அதன்பின் அதை வழக்கமாக்கி சேவிக்க நியமிக்கவும், எம்பெருமான் திருவுளமறிந்த ஸ்வாமியும், நம்மாழ்வார் விஷயமான கண்ணிநுண் சிறுத்தாம்பு பூர்வர்களால் முதலாயிரத்தில் சேர்க்கப்பட்டது போல, அதை இயற்பாவில் சேர்த்து எப்போதும் சேவிக்க நியமித்தார், இதுவே ப்ரபந்ந காயத்ரி என  ப்ரஸித்தி பெற்றது. யஜ்யோபவீதம் பெற்றோர் தினமும் காயத்ரி அநுஸந்தித்தல்போல்  ஸமாச்ரயணமானோர், ஸ்ரீவைஷ்ணவர், ப்ரபன்னர் எனப்படுவோர் இதை ஒரு முறையாகிலும் தினமும் அநுஸந்திக்கவேணும்,

இதில் இராமானுசர் திருநாமம் ஒவ்வொரு பாசுரத்திலும் வருவதால் இப்பெயர் பெற்றது, ஆசார்ய அபிமான  நிஷ்டர் அறிய வேண்டும் அர்த்தங்கள் யாவும் இதிலுள்ளதால், ஆசார்யன் (எம்பெருமானார்) சம்பந்தமடியாக எம்பெருமான் சம்பந்தம் நமக்குண்டு என்றும் எம்பெருமானார் திருவடித் தாமரைகளே நமக்கு உத்தாரகம் என்பதை இப்ரபந்தம் உறுதிப்படுத்துகிறது.

பேறொன்று மற்றில்லை எனும் 45ம் பாசுரத்தையும், நின்றவண் கீர்த்தி எனும் 76ம் பாசுரத்தையும்  வைத்து ஆசார்யர்களில் தலைவரான நடாதூரம்மாள் எம்பெருமானாரே ப்ராப்ய ப்ராபகங்கள் என்று அறுதியிட்டார், பெரியவாச்சான் பிள்ளை குமாரர் நாயனாராச்சான் பிள்ளை தம் சரமோபாய நிர்ணயத்தில் (http://ponnadi.blogspot.in/p/charamopaya-nirnayam.html) ஸ்வாமியின் வைபவங்களை விளக்க இப்ரபந்தத்தைப் பரக்க உதாஹரிக்கிறார்,

மாமுனிகள் இதற்கு ரத்தினச் சுருக்கமான ஒரு திவ்ய வ்யாக்யானம் அருளியுள்ளார். அதன் தொடக்கத்தில் அமுதனார் மற்றும் நூற்றந்தாதியின் பெருமைகளை மிக அழகாக விளக்கியுள்ளார்:

ஆசார்யனையே சார்ந்திருக்கும் சரம பர்வ நிஷ்டையே திருமந்திரம், மற்றும் அனைத்துப் பாசுரங்களின் உட்பொருள். நம்மாழ்வார் விஷயமான தம் பிரபந்தத்திலும்  தம் அனுஷ்டானத்திலும் மதுரகவி ஆழ்வார் இதைக் காட்டினார், அமுதனாரும் மதுரகவி ஆழ்வார் போன்றே எம்பெருமானாரிடத்துத் தம் ப்ரதிபத்தியை வெளியிடுகிறார், ஆசார்ய நிஷ்டர்கள் தம் நிஷ்டையால் எம்பெருமானையே அடிக்கிறார்கள். இவர் எம்பெருமனாரின் நிர்ஹேதுக க்ருபையினாலும் ஆழ்வானின் கருணைமிக்க விடா முயார்சியாலும் திருத்தப்பட்டவர். எப்படி மதுரகவி ஆழ்வார்  11 பாசுரங்கள் மூலமாக தன்னுடைய ஆசார்ய நிஷ்டையை எல்லோருடைய நன்மைக்காகவும் வெளியிட்டாற்போலே, இவரும் 108 பாசுரங்கள் மூலமாக அனைவரும் ஆசார்ய நிஷ்டையைப் பற்றி அறிந்து கொண்டு அனுஷ்டிப்பதற்காக வெளியிட்டார். உபவீததாரிகளுக்கு காயத்ரிபோலே ப்ரபன்னர்களுக்கு இது என்று மாமுனிகள் திருவுள்ளம், ஆகையால் இது ப்ரபன்ன ஸாவித்ரி என்று அழைக்கப் படுகிறது,

அமுதனார் நிபுணத்வம்

அமுதனார் தென்கலையும் (தமிழ்) வடநெறியும் (ஸம்ஸ்க்ருதம்) திகழ்ந்த நாவர், அவரது அளவற்ற பாண்டித்யத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு:

திருவிருத்தம் 72ம் பாசுரத்தில் ஆழ்வார் நிலையை நம்பிள்ளை அப்பாசுரத்துக்கான தம் உரையில் விளக்குகிறார், பராங்குச நாயகி இரவில் எம்பெருமானின் பிரிவை உணர்கிறாள். நிலவில் விரகம் அதிகம், அப்போது குளிர் தென்றல் மேலும் கொடிது. இந்நிலையில் சிறு பிறை நிலா வரினும் இருள் விலகும். சேர்த்தியில் நிலவு இனிது, பிரிவில் பிறை நிலவும் கொடிது. இதை விளக்க அமுதனார் தரும் உதாரணம் சுவையானது. காட்டு வழியில் தனியே இரவில் சென்று கொண்டிருந்த ஒரு மெலிந்த பிராமணனை ஒரு கொடிய விலங்கு துரத்த, அவன் ஓடி ஒரு மரம் ஏறித் தன்னைக் காத்து கொண்டான். அப்பொழுது அவ்விலங்கை ஒரு புலி அடித்து உண்கிறது, பிராமணன் நிம்மதி அடையும் போது புலி மேலே மரத்தை நிமிர்ந்து பார்க்க அவன் அச்சம் பன்மடங்காகிறது போல், பிறை நிலவில் பராங்குச நாயகி பிரிவுத் துயர் இருளில் இருந்ததை விட மிகுந்து விட்டதாம்.

பட்டரும் அமுதனாரும்

பட்டர் தாம் ஞான வைராக்கியங்கள் மிக்க ஆழ்வான் குமாரர் என்பதில் செருக்குள்ளவர், இதை அவரே ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில் வெளியிடுகிறார். அமுதனாரும் நூற்றந்தாதியுயில் “மொழியைக் கடக்கும்” பாசுரத்தில் ஆழ்வான் பெருமையைப் பரக்கத் பேசி ஸத்தை பெற்றார். ஒருக்கால் அமுதனார் வேறொரு ஸ்ரீவைஷ்ணவர் மூலம் பட்டருக்கு, “நீர் ஆழ்வானோடு தேஹ சம்பந்தமுள்ளவர், அடியேனுக்கு அவரோடு ஆத்ம சம்பந்தமுண்டு காணும்” என்று தெரிவிக்க, பட்டர், “அந்தப் பெருமையை நீரே சொல்லலாகாது” என்கிறார். நம் பூர்வாசார்யர்கள் இவ்விஷயங்களை பெரிது படுத்தார், அமுதனார் ஆழ்வான் பக்தியிலேயே ஊன்றி இருந்தார். நம் பூர்வர்கள் மிகவும் அரிய சமயங்களில் சில மனவேற்றுமைகள் கொண்டிருந்தாலும் அதைப் பெரிதுபடுத்தாமல் பெருந்தன்மையுடன் வாழ்ந்து காட்டியது நாம் உணர்ந்து கைக்கொள்ளத்தக்கது.

ஆர்த்தி ப்ரபந்தத்தில் மாமுனிகள் 40ம் பாசுரசத்தில் நாம் ஆசார்ய பக்தியில் இடையறாதிருந்து எம்பெருமானாரிடம் சரணடைந்து, இராமானுசரடியார்களுடன் பொழுது போக்கி, இராமானுச நூற்றந்தாதியை அநுஸந்தித்து சம்சாரக் கடலைத் தாண்டலாம் என்கிறார்.

இப்படி, நாமும் அமுதனாரின் மேன்மைமிகு சரித்திரத்தில் ஒரு சில துளிகளை அநுபவித்தோம். இவர் பாகவத நிஷ்டையில் நிலை நின்று, எம்பெருமானார் மற்றும் ஆழ்வானின் அபிமானத்தைப் பெற்றவர். நாமும் இப்படிப்பட்ட பாகவத நிஷ்டையை அடைய இவர் திருவடிகளில் ப்ரார்த்திப்போம்.

கோயிலின்‌ நடைமுறைகளில்‌ பழகியிருந்த பெரிய கோயில்‌ நம்பி என்பவர் தடையாக இருப்பதாகப் பலர்‌ ராமானுஜரிடம்‌ சொன்னார்கள்‌. அவரைக் கோயில்‌ நிர்வாகத்திலிருந்து வெளியேற்றாவிட்டால்‌, ராமானுஜரின்‌ எண்ணம்‌ நடக்காது என்றனர்‌. எம்பெருமானாரும்‌, கோயிலை நிர்வாகம்‌ செய்து வந்த கோவில்‌ பிள்ளையை வெளியேற்ற நினைத்தார்‌.

ராமானுஜர்‌ ஒரு நாள்‌ பெருமாள்‌ புறப்பாட்டிற்காகக் காத்திருக்கும்‌ போது, சற்று கண்‌ அயர்ந்தார். அரைத்தூக்கத்தில்‌, பெருமாள் தோன்றி “கோயில்‌ நம்பி என்னையே நம்பி என்னுடன்‌ இருக்கிறார்‌. அவரை வெளியேற்றாதே’ என்று சொல்லி மறைந்தார்‌. கூரத்தாழ்வானிடம்‌ இதுபற்றி சொன்னார் ராமானுஜர்‌. கூரத்தாழ்வானும்‌, பெரிய கோயில்‌ நம்பியிடம்‌ உடையவரின்‌ பெருமை பண்புகளைச்‌ சொல்லவும்,‌ கோயில்‌ நம்பிக்கு உடையவராகிய ராமானுஜர்‌ மீது பிடிப்பு வந்து அதுவே பக்தியாக மாறியது.


ஒருநாள்‌, ராமானுஜர்‌ அவரது இலக்கிய அறிவைப்‌ பாராட்டி”அமுதன்‌’ என்ற திருநாமத்தைச்‌ சூட்டினார்‌. அதனால்‌ திருவரங்கத்தமுதனார்‌ என்ற பெயர் நிலைத்தது‌. ராமானுஜர்‌ மீது கொண்ட பற்றால்‌ கூரத்தாழ்வானின்‌ அறிவுரையின்படி “ராமானுஜ நூற்றந்தாதி‘யை அமுதனார்‌ அருளினார்.

எல்லாப் பாசுரத்திலும் இராமானுசர் என்ற திருப்பெயர் வருவதால், இதைப் பாராயணம் செய்தாலே மாபெரும் புண்ணியம் கிட்டும்.

பெருமாள்‌ உலாவில்‌ உடன்‌ செல்லும்‌ பழக்கம்‌ உடையவராகிய ராமானுஜருக்கு உண்டு. சித்திரை மாதம்‌ 11
ஆம்‌ திருநாளில்,‌ ராமானுஜர்‌ கனவில்‌ பெருமாள்‌ தோன்றி, இன்று தாள வாத்தியங்கள்‌ வேண்டாம்‌ என்று சொல்லி மறைந்தார்‌. அன்று பெருமாள்‌ புறப்பாட்டின்‌ போது  தீப்பந்தங்கள்‌ மட்டும்‌ இருந்தன; ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச்‌ சேவித்ததைப் பெருமாள்‌ கேட்டுக்கொண்டு மகிழ்வுடன் சென்றார்‌. ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச்‌ சேவிக்கும்‌ போது கோஷ்டிக்கு வெகு அருகில்‌ பெருமாள்‌‌ தன்னையும்‌ ஒருவராக ஆக்கிக்‌ கொள்கிறார்‌ என்பது நம்பிக்கை. இன்றும்‌ திருவரங்கம்‌ கோயில்‌ ரங்கநாதர்‌ சந்நிதியில்‌ இயற்பா சாற்றி முடித்த பின்‌, அதனுடன்‌ ராமானுஜ நூற்றந்தாதியும்‌ சேவிக்கிறார்கள்.


திருவரங்கத்தமுதனார்‌ ராமானுஜரைக்‌ காட்டிலும்‌ மூத்தவர்‌ என்ற கருத்தும், 108 ஆண்டு காலம்‌ வாழ்ந்தார்‌ என்றும்‌ சொல்லப்படுகிறது. திருவரங்கத்தில் மட்டும்‌ ஸ்ரீ சுதர்சனர்‌ சந்நிதியில்‌ இந்த ராமானுஜதாசராகிய திருவரங்கத்து அமுதனார், சிலை உருவில்‌ இருக்கிறார்‌.

அமுதனாரிடமிருந்து நிர்வாகம் கைமாறிய பின், அவர் கோயில் கைங்கர்யங்களில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டது. இவர் செய்து வந்த புராண வாசித்தல் மற்றும் வேறு பணிகளை கூரத்தாழ்வான் செய்து வந்தார். அதனால் அமுதனார் கோயில் பணிகளில் அதிக ஈடுபாடுகொள்ளாமல் இருந்ததை பார்த்த ராமானுஜர் வருத்தப்பட்டு, இவருக்கு ஏதாவது பொறுப்பு தர வேண்டும் என்று எண்ணினார்.

நாதமுனிகள் காலம் தொடங்கி நாலாயிர திவ்வியப் பிரபந்தம் ஸ்ரீரங்கத்தில் அரையர்கள் இசையோடு சேவித்து வந்தார்கள். சேவித்த பின், அரையர்களுக்கு பெருமாள் பிரசாதங்கள் மற்றும் மரியாதையையும் அவர்களுக்குக் கொடுத்து, பிறகு அவர்களைப் பல்லக்கில் ஏற்றிக்கொண்டு வீதி உலா வந்து. அவர்கள் வீட்டில் விட்டு விட்டு வருவதற்குப் பெயர் பிரம்மரத மரியாதை.

‘பிள்ளை திருவரங்கப்பெருமாள் அரையரிடம்’ ராமானுஜர் இயற்பா சேவிப்பதை மட்டும் பிக்ஷையாகப் பெற்று அமுதனாரை பெரிய பெருமாள் சன்னதியில் இயற்பாவைச் சேவிக்க நியமித்தார். அப்படி சேவிக்கும் நாட்களில் அமுதனாருக்கும் அதே போன்ற பிரம்மரத மரியாதையை ஏற்படுத்தி வைக்கப்பட்டது. அமுதனார் தனக்கு ஸ்ரீகோசத்தை( புத்தகம்) பார்க்காமல் சேவிக்க வராது என்று ராமானுஜரிடம் சொல்ல, அமுதனாருக்கு புத்தகத்தைப் பார்த்துச் சேவிப்பதற்கு விசேஷமாக அனுமதி வழங்கினார். இன்றும் புத்தகத்தை பார்த்து இயற்பா சேவிக்கும் முறை இருப்பதற்கு இதுதான் காரணம்.

அமுதனார் சன்னதி – ஸ்ரீரங்கம் கோயில்

அமுதனார் ராமானுஜர் மீது கொண்ட பற்றின் காரணமாக ராமானுஜரை போற்றும் விதமாக சில பிரபந்தங்களை செய்து அவற்றை எம்பெருமானார் முன் வைக்க, அதை படித்துப் பார்த்த ராமானுஜர் தன்னைப் பற்றி அதிகமாக புகழ்ந்து இருப்பது தனக்கு உவப்பானதாக இல்லை என்று கிழித்துப் போட்டுவிட்டார். பிறகு கூரத்தாழ்வான் அறிவுரைப்படி ஆழ்வார்களிடத்திலும் திவ்யதேசங்களிடத்திலும் ராமானுஜர் கொண்ட பற்றைத் தெளிவுபடுத்தி, ராமானுஜ நூற்றந்தாதியை அமுதனார்பாடி, அதை ராமானுஜர் முன் வைத்தார். இதை ப்ரபந்ந காயத்திரி என்றும் சொல்லுவர்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, சித்திரை மாதம் 11ம் திருநாளில் ராமானுஜர் கனவில் பெருமாள் தோன்றி ”இன்று என்னுடன் கூட வர வேண்டாம்” என்று சொல்லிவிட்டு, அன்று பெருமாள் வீதி புறப்பாட்டின் போது வாத்தியங்களை நிறுத்தச் சொல்லிவிட்டு, வெறும் தீப்பந்தங்கள் மட்டும் இருக்க, இயற்பாவுடன் ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச் சேவிக்க, அதை பெருமாள் கேட்டுக்கொண்டு சென்றார். இந்த காரணத்தினால் இன்றும் இந்த வழக்கம் அங்கு இருக்கிறது. அதே போல் ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச் சேவிக்கும் போது கோஷ்டிக்கு வெகு அருகில் பெருமாள் எழுந்தருள்வார். அதற்குக் காரணம், இயல் கோஷ்டியில் தன்னையும் ஒரு அங்கத்தினராக ஆக்கிக்கொள்கிறார் என்பது. அதே போல் வாத்தியங்கள் இசைக்கப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச் சேவிக்க அதை நம்பெருமாள் செவிசாய்க்கும் வைபவத்திற்காக.

இன்றும் பெரிய சன்னதியில்(ரங்கநாதர் சன்னதியில்) இயற்பா சேவித்த பின், அதனுடன் நூற்றந்தாதியும் சேவிக்கப்படுகிறது. அதே வழக்கம் நாச்சியார் கோயிலிலும், ஆண்டாள், ஆழ்வார் சன்னதிகளில் பின்பற்றப்படுகிறது.

திருவரங்கத்தமுதனார் எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்ற குறிப்பு இல்லை. ஆனால் அவர் ராமானுஜரைக் காட்டிலும் அதிக வயதானவர் என்பதும், அவர் 105(108 என்றும் சொல்லுகிறார்கள்) ஆண்டு காலம் வாழ்ந்தார் என்பதும் தெரிகிறது.. முதலாயிரத்தில் ’கண்ணிநுண் சிறுத்தாம்பை’ப் போல,இயற்பாவோடு ராமானுஜ நூற்றந்தாதியை நாலாயிர திவ்வியப்பிரபந்தத்தில் சேர்த்துள்ளார்கள். ராமானுஜ நூற்றந்தாதியின் 108 பாட்டுக்களைச் சேர்த்தால் தான் நாலாயிர திவ்வியப் பிரபந்ததின் பாட்டுகள் எண்ணிக்கை மொத்தம் 4000 வரும் என்பது இன்னொரு ஆச்சரியம்.

கிபி 1965க்குப் பிறகு அமுதனார் வம்சத்தவர்கள் கோயில் கைங்கர்யங்களில் ஈடுபடுவதில்லை. திருவரங்கத்தமுதனார் வம்சத்தவர்கள் இன்று அமெரிக்காவிற்கும் வேறு இடங்களுக்கும் குடிபெயர்ந்து போய் விட்டதால், இயற்பா சேவிப்பதை அரையர்களே மீண்டும் செய்து வருகிறார்கள். ஆனால் திருவரங்கத்தமுதனாருக்கு ஏற்படுத்தப்பட்ட பிரம்மரத மரியாதையை அரையர்கள் பெற்றுக் கொள்வதில்லை.

திருவரங்கத்து அமுதனார் வாழ்ந்த திருமாளிகை (வீடு ) எங்கே என்று கண்டுபிடிக்க போன மாதம் ஸ்ரீரங்கம் சென்றிருந்தேன். சக்கரத்தாழ்வார் சன்னதியில் ஒருவரை விசாரித்ததில் ஸ்ரீரங்கத்தில் கிடையாது என்று அடித்து சொன்னார். பிறகு கோயிலுக்கு வெளியே வந்து சிலரிடம் விசாரித்ததில் யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் நான் விசாரித்தவர்கள் தினமும் கோயிலிலும் வீட்டிலும் ராமானுஜ நூற்றந்தாதியை சேவிப்பவர்கள். தொடந்து விசாரித்ததில் வடக்கு உத்திரவீதியில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கே சென்றேன். அங்கு ஒரு வீட்டு வாசலில் தென்கலை நாமம் போட்டுக்கொண்டு பூட்டிய வீட்டு திண்ணையில் உட்கார்ந்துக்கொண்டு இருந்த ஒருவரிடம் “திருவரங்கத்தமுதனார் வீடு இங்கே எங்கே இருக்கு?” என்றுகேட்டேன்.

அவர் காதில் என்ன விழுந்ததோ

“திருவரங்கத்துக் கொத்தனாரா ? ” என்றார்.

“இல்ல மாமா, திருவரங்கத்தமுதனார்…ராமானுஜ நூற்றந்தாதி எழுதியவர். அவர் வீடு இங்கே தான் எங்கோ இருக்குன்னு..சொல்றா.” என்றேன் தயங்கியபடி.

“தெரியலை, அவ வீட்டைப் பூட்டிண்டு எங்கோயோ போய்ட்டா, அவ வர்ற்த்துக்கு நான் காத்துண்டு இருக்கேன்…” என்று செல்போனை பார்த்துக்கொண்டு தன் கதையை சொல்ல ஆரம்பித்தார்.

நான் இவரிடம் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த எதிர்த்த வீட்டு பெண்மணி என்னிடம் தயங்கியபடி வந்தார்.
“என்ன சாமி, யாரை தேடறீங்க?” என்றாள்.

“நாமம் போட்டவருக்கே தெரியலை, இந்த அம்மாவிற்கு.. ஹும்..நோ சான்ஸ்” என்று மனதில் நினைத்துக்கொண்டு  “அமுதனார் வீடு” என்று சொல்லிக் கொண்டே, பைக்கை ஸ்டார்ட் செய்த போது “அமுதனார் வீடுங்களா ? அதோ அந்த வீடு தான்” என்றாள்.

“நீங்க எந்த அமுதனாரை சொல்றீங்க .. இவர்.. ” என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்க “சக்கரத்தாழ்வார் சன்னதியில் இருக்கும் அமுதனாரை தானே சொல்றீங்க, அதோ உட்கார்ந்துக்கொண்டு இருக்கிறாரே பெரியவர். அந்த வீடு தான் அமுதனார் வீடு” என்றார் அந்தப் பெண்மணி.

“அப்ப அந்த பெரியவர் யார் ?”

“அவர் அந்த வீட்டில் வாடகைக்கு இருக்கார். அமுதனார் வாழ்ந்த வீடு ரொம்ப வருஷம் முன்பே கைமாறிவிட்டது..”

எனக்கு நிறைய விஷயம் புரிந்தது. மானசீகமாக அந்த பெண்மணியை சேவித்துவிட்டு கிளம்பினேன்.

அமுதனாரை பற்றி எழுதும்படி அப்பா சொன்னதற்கு காரணம் இது தானோ என்று யோசித்தவாறு கிளம்பினேன். கொஞ்சம் தூரம் சென்று, அமுதனார் வீட்டை திரும்பிப் பார்த்தேன். மனைவி வந்து பூட்டைத் திறப்பதற்காக, அமுதனார் வீட்டு திண்ணையில் கையில் செல்போனுடன் காத்துக்கொண்டிருந்தார் அவர்.

சாமாறும் கெடுமாறும் தமர்உற்றார் தலைத்தலைப்பெய்து
ஏமாறிக் கிடந்துஅலற்றும் இவைஎன்ன உலகியற்கை?
ஆமாறுஒன்று அறியேன்நான், அரவணையாய்? அம்மானே!
கூமாறே விரைகண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.
–4-9-2-

தமர் உற்றார் – சரீர சம்பந்தம் காரணமாக வந்தவர்களாய்த் ‘தாயத்தார்’ என்றும், ‘சம்பந்திகள்’ என்றும் சிலரை உறவாக நினைத்துப் பாரம் அற்றவர்களாய் இருப்பார்கள் ஆயிற்று; இஃது ஒழியவே, வேறே ‘தமர்கள் தமர்கள் தமர்கள்’ என்று ஓர் உறவு முறை உண்டாயிற்று இவர்க்கு-இவர் கேசவன் தமர் மாதவன் தமர் என்றே கொள்ளுவார் ஏமாறிக் கிடந்து அலற்றும் – ’ என்று ஏக்கமாய், மாறுகை – தவிருகையாய், ‘ஏங்காதே கூப்பிட்டு’ என்னுதல்.-அன்றிக்கே, ‘ஏமாற்றம்’ என்பதே ஒரு சொல்லாய், அதாவது, துக்கமாய், ‘துக்கித்துக் கிடந்து கூப்பிட்டு’ என்னுதல்.-ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்’ என்னக் கடவதன்றோ? அன்றிக்கே, ‘ஏ’ என்பது தெளிவு; ‘மாறுகைஏமாறிக் கிடந்து அலற்றும் –
ஏ’ என்று ஏக்கமாய், மாறுகை – தவிருகையாய், ‘ஏங்காதே கூப்பிட்டு’ என்னுதல்.
அன்றிக்கே, ‘ஏமாற்றம்’ என்பதே ஒரு சொல்லாய், அதாவது, துக்கமாய், ‘துக்கித்துக் கிடந்து கூப்பிட்டு’ என்னுதல்.
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்’ என்னக் கடவதன்றோ? அன்றிக்கே, ‘ஏ’ என்பது தெளிவு; ‘மாறுகை’ என்பது அழிகை;
அதாவது, ‘தெளிவு அழிகை’ என்று பிள்ளை அமுதனார் பணிப்பர்.பிள்ளை அமுதனார் பணிப்பர்.

அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்
கைம்மா துன்பொழித்தாய்! என்று கை தலை பூசலிட்டே
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே.
–5-1-7-

நித்திய சம்சாரிகளுக்கும் இவ்வருகாய் இருந்தேன் யான்.-பிள்ளையமுதனார், ‘அம்மான் ஆழிப்பிரான்’ என்று மேலே காட்டி, ‘யான் ஆர்’ என்று குறையச் சொல்லிக் காட்டுவர்.

போற்றி யான் இரந்தேன் புன்னை மேலுறை பூங் குயில்காள்!
சேற்றில் வாளை துள்ளும் திரு வண் வண்டூ ருறையும்
ஆற்றல் ஆழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு
மாற்றம் கொண்டருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே
.–6-1-6-

பிள்ளை யமுதனார், திரு விருத்த வரை மார்வனை,-‘புன்னை மேல் என்னும் இப் பதங்கட்குப் பட்டர் அருளிச் செய்தது என்?’ என்ன,-‘தன் துன்ப ஒலி அவற்றின் செவியிலே படும் படி உயரச் சொல்லுகிறாள் என்று அருளிச் செய்தார்’ என்ன,
“வானார் வண் கமுகு”,
“சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல்” என்றபடியே, அங்குள்ள புன்னைகளும் உயர்ந்து ஓங்கி இருக்கும் என்கிறபடி. ‘நெய்தல் நிலத்திலே புன்னை படர்ந்தன்றோ கிடப்பது, இங்ஙனே சொல்லக் கூடுமோ?’ என்ன,
அவன் பட்டர் பாடே வந்து, ‘இங்ஙனே பணித்தார்’ என்ன,
‘இவ் வர்த்தத்துக்கு நிர்ணாயகம், இசையாயிற்று; -உச்ச ஸ்வரம் – அது, ‘போற்றி’ என்று, உயரச் சொல்லி யிருக்குமோ? தாழச் சொல்லி இருக்குமோ’ என்று அருளிச் செய்தார்.

பொன்னுல காளீரோ? புவனி முழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான் இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே
.-6-8-1-

உங்கள் நீர்மை அறியாதே, என் செல்லாமையாலே ‘அதனைக் கொள், இதனைக் கொள், என்று நலிந்தேன் அன்றோ!
உங்கள் தரத்துக்கு அது ஓர் அறுகும் தாளிப் பூவும் அன்றோ’ என்பராம் பிள்ளை யமுதனார்.

உங்களுக்கு நான் சில செய்தேனோ! வெறும் உங்கள் நீர்மையாலே செய்தது அன்றோ.
பாண்டவர்களுக்குத் தூது போன கிருஷ்ணன் படியும்,
ஆளவந்தார்க்குப் பச்சை இட்ட மணக்கால் நம்பி படியும் போலே இருந்ததே உங்கள்படி!


ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதியில் சரமோபாய நிர்ணயம்

December 11, 2022

எம்பெருமானார் திருவடிகளிலே பொருந்தி வாழும் போது அவருடைய திருநாமத்தை அநுஸந்திக்க வேணுமிறே.
எம்பெருமானாருடைய திருநாமோச்சாரணம் தத்பாத கமல ப்ராவண்ய ஜனகமாக அருளிச் செய்தாரிறே.
அமுதனார் – இராமாநுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே”
என்று நாம் மன்னி வாழ அவன் நாமங்களைச் சொல்லுவோமென்கையாலே.
அவன் நாமங்களைச் சொல்லாத போது பொருந்தி வாழக் கூடாது என்றபடி.
பொருந்தி வாழும் போது அவன் நாமங்கள் சொல்ல வேணுமென்கையாலே
தந்நாமாநுஸந்தானம் தத் பாத கமல ப்ராவண்ய (ஜநக?)மென்றபடி,

இப்படி எம்பெருமானாருடைய திருநாமத்தை அநுஸந்தித்து அவர் திருவடிகளிலே பொருந்தி வாழுகிறவர்களுக்கு
ப்ராப்ய ப்ராபகங்களிரண்டும் எம்பெருமானார் திருவடிகளேயிறே.
“பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி அப் பேறளித்தற்கு ஆறொன்றுமில்லை மற்றச் சரணன்றி” என்று
ப்ராப்ய ப்ராபகங்களிரண்டையும் அவர் திருவடிகளிலே அறுதியிட்டாரிறே அமுதனார்.

“பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி ஆறொன்றுமில்லை” என்று அந்ய யோக வ்யவச்சேதம் பண்ணுகையாலே
சரம பர்வத்திலே ப்ராப்யத்வ ப்ராபகத்வங்களை அறுதியிட்டால்,
ப்ரதம பர்வத்திலே முதல் தன்னிலே வ்யுத்பத்திதானுமில்லையோ என்னும்படி
ததேக நிஷ்டனாய் இருக்கவேணும் என்னுமிடம் தோற்றுகிறது.

இத்தால் ஆசார்யபிமான நிஷ்டனாகில் மறுக் கலசாதபடி இருக்கவேணுமென்றபடி.
இல்லையாகில் இரு கரையர் என்னுமிடம் சொல்லப்படும்.

வடுகநம்பி, திருவோலக்கத்திலே சென்றால் எம்பெருமானாரை நோக்கி தண்டன் ஸமர்ப்பித்து
ஒரு பார்ஶ்வத்திலே கடக்க நிற்பாராய், எம்பெருமானார் வடு கநம்பியை நம்முடைய மதுரகவிகள் என்றருளினாராம்.
ஆழ்வார்க்கும் ஒரு மதுரகவிகளுண்டிறே.
இப்படி இருக்கையாலேயிறே இவர்க்கு ஆழ்வானையும் ஆண்டானையும் இரண்டிட்டுச் சொல்லலாயிற்று.

ஒரு நாள் எம்பெருமானார் வடுக நம்பியை அழைத்தருளி,
‘வடுகா! ஆசார்யாபிமான நிஷ்டன் எத்தைப் போலே இருப்பான்’ என்று கேட்டருள
‘வேம்பின் புழுப் போலே இருப்பன்’ என்றருளிச் செய்தார்.
அதாவது – வேம்பின் புழு வேம்பன்றி யுண்ணாது” என்கிறபடியே ஆசார்யனுடைய அபிமானத்திலே ஒதுங்கி
இருக்கிறவன் பேற்றுக்கு உடலாக அறுதி யிட்டிருப்பது தத் அபிமானத்தை யொழிய
வேறொன்றையும் பேற்றுக்கு உடலாக நினைத்திரான் என்றபடி.

‘கரும்பின் புழு’ என்று சொல்லுகை யன்றிக்கே வேம்பின் புழுவை த்ருஷ்டாந்தமாகச் சொல்லுவானே என்னில்
பரம தயாளுவான ஆசார்யன் தானே- தன் அபிமானத்திலே ஒதுங்கி இருக்கும் ஶிஷ்யனுக்குத்
தன் பக்கல் (உள்ள) வைரஸ்யம் பிறக்கும்படி காதுகனான தஶையிலும்,
‘நான் உன்னை யன்றியிலேன்” என்கிறபடியே ததபிமான ராஹித்யத்தில் ஸத்தையில்லை என்னும்படி
“களை கண் மற்றிலேன்” என்கிறபடியே ததபிமான நிஷ்டனாயிருக்க வேணும் என்னுமிடம் தோற்றுகைக்காகச் சொல்லிற்று.

இத்தால்- எம்பெருமானாருடைய அபிமானத்திலே ஒதுங்கிக் கரண த்ரயத்தாலும் ததேக நிஷ்டனாயிருக்கிறவன்
தத் வயதிரிக்த விஷயங்களில் உத்தாரகத்வ ப்ரதிபத்தி பண்ணியிரான் – என்றபடி.

ஸர்வோத்தாரகமான விஷயத்தைப் பற்றினால் தத் வயதிரிக்தரைக் கொண்டு தேவையில்லையிறே.
“பல்லுயிர்க்கும் விண்ணின் தலை நின்று வீடளிப்பான் எம்மிராமாநுசன்” என்று
எம்பெருமானாரை ஸர்வோத்தாரகராக அறுதியிட்டாரிறே ஸகல வேதஶாஸ்த்ர வித்தமரான அமுதனார்.

நம்பிள்ளை ஒரு நாள் எம்பெருமானார் ஸன்னிதியிலே எழுந்தருளி, நூற்றந்தாதி அநுஸந்தித்துச் சாத்தினவுடனே,
எம்பெருமானார் திருமுக மண்டலத்தை ஸேவித்து, இன்றைக்கு அடியேனுக்கு ஒரு ஹிதமருளிச் செய்யவேணும் என்று
திருமுன்பே அருளிச் செய்து திருமாளிகைக்கு எழுந்தருள,
அன்றைக்கு ராத்ரியிலே எம்பெருமானார் ஸ்வப்ன முகேன எழுந்தருளி திருவடிகளிரண்டையும் நம்பிள்ளை திருமுடியிலே வைத்து,
“உமக்கு ஹிதம் வேணுமாகில் இத்தையே தஞ்சமாக நினைத்திரும்.
உம்மை யண்டினார்க்கும் இதுவே தஞ்சமாக உபதேஶித்துக் கொண்டு போரும்; இதுக்கு மேல் ஹிதமில்லை” என்று அருளிச் செய்ய,

நம்பிள்ளை – நம்முடைய பிள்ளையை அழைத்தருளி அருளிச் செய்ய,
பிள்ளையும் அத்தை அத்யாதரத்தோடே கேட்டருளி தந்நிஷ்டராய் எழுந்தருளியிருந்து,
நம்பிள்ளை சரம தஶையிலே அடியேனுக்கு ஹிதமெதென்று கேட்கிறவளவில்,
“எம்பெருமானார் திருவடிகளுண்டாயிருக்க ஹிதமேதென்று கேட்க வேண்டியிருந்ததோ?
அவருடைய அபிமானத்திலே அந்தர்ப்பூதராயிருக்கிற நமக்கெல்லாம் ஹிதத்துக்குக் கரைய வேண்டா.
எம்பெருமானார் திருவடிகளே தஞ்சமென்று விஶ்வஸித்துத் ததேக நிஷ்டராயிரும்;
நான் பெற்ற பேறு நீரும் பெறுகிறீர்” என்று அருளிச் செய்தார்.

இப்படி எல்லாரும் உத்தாரகத்வேந அறுதியிடும்படி அவதார விஶேஷமாய்,
பரம காருணிகராய் எழுந்தருளி யிருக்கிற எம்பெருமானாருடைய அபிமானத்திலே அந்தர்ப்பூதராய்
அவர் திருவடிகளையே ப்ராப்ய ப்ராபகமாக அறுதியிட்டுத் ததேக நிஷ்டராயிருக்கும் சரமாதிகாரிகளுக்கு
வஸ்தவ்யபூமி – “இராமாநுசனைத் தொழும் பெரியோர் எழுந்திரைத்தாடுமிடம் அடியேனுக்கிருப்பிடம்” என்று
அமுதனார் அருளிச் செய்கையாலே, எம்பெருமானார் பக்கல் ப்ராவண்யம் உடையரான ஜ்ஞாநாதிகர்கள்
களித்து வர்த்திக்கும் இடமே வாஸஸ்தானம் என்றபடி.

இங்கிருக்கும் நாள் அநுபவத்துக்கு விஷயமேதென்னில்,
“உவந்திருந்தேன் அவன் சீரன்றி யானொன்றுமுள் மகிழ்ந்தே” என்கையாலே
எம்பெருமானாருடைய கல்யாண குணங்கள் தானே அநுபவத்துக்கு போக்யத்வேந விஷயம்.

“இராமாநுசன் மிக்க சீலமல்லால் உள்ளாதென் நெஞ்சு” என்கையாலே
எம்பெருமானாருடைய அபரிச்சின்னமான ஶீல குணத்தை நெஞ்சுக்கு விஷயமாக்குகை
சரமாதிகாரிக்கு க்ருத்யம் என்றருளிச் செய்தபடியிறே.

“இராமானுசன் தன் பிறங்கிய சீர் சாரா மனிசரைச் சேரேனெனக்கென்ன தாழ்வினியே” என்கையாலே,
எம்பெருமானாருடைய ஔஜ்வல்ய கல்யாண குணங்களில் ப்ராவண்யமில்லாத கள்ளர் மிண்டரோடே
ஸஹவாஸ மின்றிக்கே இருக்கிறது சரமாதிகாரிக்கு ஏற்றமென்றபடி.

“சேரேனெனக்கென்ன தாழ்வினியே” என்று தத் ஸஹவாஸ ராஹித்யம் ஆதிக்யாவஹமென்கையாலே
தத் ஸஹவாஸம் அநர்த்தாவஹமென்றபடி.

எம்பெருமானார் திருவடிகளில் ப்ராவண்யமுடையார் அதில்லாத மூர்க்கரோடு ஸஹவாஸம் பண்ணில்
ஸ்வரூபஹானி பிறக்குமிறே.

”இராமாநுசன் புகழன்றி என்வாய் கொஞ்சிப் பரவகில்லாது” என்கையாலே
எம்பெருமானாருடைய கல்யாண குணங்களே சரமாதிகாரிகளுக்கு வாசா அநுஸந்தேயமென்றபடி.

“இராமாநுசன் மன்னு மா மலர்த்தாள் அயரேன்” என்கையாலே,
எம்பெருமானார் திருவடிகளை மறவாதிருக்கை ததபிமான நிஷ்டனுக்கு கர்தவ்யம் என்றபடி.

“அருவினை என்னை எவ்வாறின்றடர்ப்பதுவே” என்கையாலே தத் ஸ்மரணமே, அநிஷ்ட நிவ்ருத்திகரம் என்றபடி
தத் விஸ்மரணம் அநர்த்தாவஹம் என்னுமிடம் அர்த்தாத் ஸித்தம்.

‘உன்தொண்டர்கட்கே அன்புற்றிருக்கும்படி என்னை யாக்கி அங்காட்படுத்தே” என்கையாலே
எம்பெருமானார் திருவடிகளுக்கு அநந்யார்ஹ ஶேஷபூதரான ஶ்ரீவைஷ்ணவர்கள் பக்கலில் பக்தி யிருக்கும்படி
தச் சேஷத்வத்தை எம்பெருமானார் திருமுன்பே ப்ரார்த்திக்கை ததபிமான நிஷ்டனுக்கு ஸ்வரூபம்.

“உன்தன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்……இவ்வருள் நீ செய்யில் தரிப்பன் இராமாநுச” என்கையாலே
எம்பெருமானாருடைய விக்ரஹ குணங்களை ஸத்தா தாரகமாக நினைத்திருக்கை சரமாதிகாரி க்ருத்யம்.

“இராமானுசன் திருநாமம் நம்ப வல்லார் திறத்தை” என்று தொடங்கி
“செய்வன் சோர்வின்றியே” என்கையாலே
எம்பெருமானாருடைய திருநாமத்திலே விஶ்வாஸ யுக்தரான ஶ்ரீவைஷ்ணவர்களை மறவாத பாகவதர்கள் பக்கல்
கரண த்ரயத்தாலும் ஸகலவித கைங்கர்யங்களும் வழுவில்லாமல் செய்து போருகை சரமாதிகாரிக்கு ஸ்வரூபம்.

எம்பெருமானாருடைய திருநாமத்தை விஶ்வஸித்துப் பரிஶீலனம் பண்ணாதார்க்குப் பேறு துர்லபமாயிருக்கும்.
“இராமாநுசன் திருநாமம் நம்பிக்கல்லார் அகலிடத்தோர் எது பேறென்று காமிப்பரே” என்று
துர்லபமாக அருளிச் செய்தாரிறே அமுதனார்.

இந்த அர்த்தங்களெல்லாம் எம்பெருமானாருடைய திருமுக மண்டலத்தைப் பார்த்து அருளிச் செய்ய,
அவரும் இதுக்கெல்லாம் இசைந்தெழுந்தருளியிருக்கையாலே இவ்வர்த்தம்
அவிசார்யமாய் ஸுத்ருடமான ஸகல ப்ரமாண ப்ரமேய ப்ரஹ்ம தீர்க்க (?) ரஸோக்தி – அநுஷ்ட்டாந ஸித்தம்.

இவ்வர்த்தம் 36. “ஸத்யம் ஸத்யம் புநஸ்ஸத்யம் யதிராஜோ ஜகத்குரு|
ஸ ஏவ ஸர்வ லோகாநாம் உத்தர்த்தா நாத்ர ஸம்ஶய: ||“,
“இராமானுசன் மன்னுமாமலர்த்தாள் பொருந்தா நிலையுடைப் புன்மையினோர்க்கு ஒன்றும்
நன்மை செய்யாப் பெருந்தேவரைப் பரவும் பெரியோர் தம் கழல் பிடித்தே” என்கையாலே
எம்பெருமானார் திருவடிகளிலே ப்ராவண்யமில்லாதார்க்கு யாவதாத்மபாவி ஸம்ஸாரம் அநுவர்த்திக்கும்.
உடையோருக்கு யாவதாத்மபாவி ஸர்வாபீஷ்டங்களும் ஸித்திக்கும்.

சரமோபாய நிர்ணயம் முற்றிற்று

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி-78-108-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்

October 9, 2022

கருத்திற் புகுந்துள்ளிற் கள்ளம் கழற்றிக் கருதரிய
வருத்தத்தி னால் மிக வஞ்சித்து நீ யிந்த மண்ணகத்தே
திருத்தித் திருமகள் கேள்வனுக் காக்கிய பின்னென்னெஞ்சில்
பொருத்தப் படாது, எம் இராமா னுச! மற்றோர் பொய்ப் பொருளே.–78-

பதவுரை

எம் இராமாநுச

எம்பெருமானைரை!
நீ

தேவரீர்
கருத அரிய வருத்தத்தினால் மிக வஞ்சித்து

நெஞ்சால் நினைக்க முடியாத பரிச்ரமங்கள் பட்டு என்னை நன்றாக ஏமாத்தி
கருத்தில் புகுந்து

(எனது) நெஞ்சிலே வந்து புகுந்து
உள்ளில் கள்ளம் கழற்றி

உள்ளே யிருந்த ஆத்மாபஹார தோஷத்தைப் போக்கி
திருத்தி

சிக்ஷித்து
இந்த மண் அகத்தே

இந்த லோகத்திலே
திருமகள் கேள்மனாக்கு

திருமாலுக்கு ஆளாம்படி
ஆக்கிய பின்

பண்ணிண பின்பு
மற்று ஒர் பொய்

(இதற்கு மாறான ) வேறு எந்த தப்பு விஷயமும்
பொருள் என் நெஞ்சில்

என் மனத்தில்
பொருத்தப் படாது

பொருந்த மாட்டாது.

***- எம்பெருனார் தம்மைத் திருத்துகைக்காகப் பட்ட பாடுகளை எடுத்துச் சொல்லி, இப்படி என்னைத் திருத்தி உத்தேச்யமான விஷயத்திலே ஆட்படுத்தின பின்பு இனி வேறு எந்த விஷயமும் என்னெஞ்சுக்கு இசைய மாட்டாதென்கிறார்.

————-

பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து,இந்தப் பூதலத்தே
மெய்மைப் புரக்கும் இராமா னுசன் நிற்க, வேறு நம்மை
உய்யக் கொள வல்ல தெய்வமிங் கியாதென்றுலர்ந் தவமே
ஐயப் படா நிற்பர் வையத்துள்ளோர் நல்லறிவிழந்தே.–79-

பதவுரை

பொய்யை சுரக்கும் பொருளை துரந்து

பொய்யான விஷயத்தையே மேன் மேலும் வெளிப் படுத்துகிற (புற மதத்தவர்களின்) அர்த்தங்களைக் கண்டித்து
இந்த பூதலத்தே

இப் பூமியிலே
மெய்யை புரக்கும்

ஸத்யத்தை ரக்ஷிக்கிற
இராமாநுசன்

எம்பெருமானார்
நிற்க

எழுந்தருளி யிருக்கும் போது

(இவரைக் கணிசியாமல்)

வையத்து உள்ளோர்

இப் பூமியிலுள்ளவர்கள்
நம்மை உய்யக் கொள்ள வல்ல

நம்மை உஜ்ஜீவிக்கச் செய்யக்கூடிய
வேறு தெய்வம் இங்கு யாது என்று

வேறு எதாவது தேவதை இவ்வுலகில் உண்டோ என்று விசாரித்துக் (கொண்டு)
உலர்ந்து

மன வருத்தத்தாலே உடம்பு உலர்ந்து
நல் அறிவு இமந்து

(எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்றிருக்கை யாகிற) நல்ல ஞானம் பெறாமல்
அவமே

வீணாக
ஐயம் படா நிற்பர்

ஸம்சயப் படா நின்றார்கள் ஐயா!

***- பொய்யைச் சுரக்கும் பொழுளென்றது -பொய் தவிர வேறில்லாத அர்த்தம் என்றபடி “ஸர்வம் அஸத்யம்” என்கிறவர்களாகையாலே அஸத்ய மயம். மெய்யைப் புரக்கு மிராமாநுசன் = “யதார்த்தம் ஸர்வ விஜ்ஞாநம்” என்று ஸ்தாபித்தருளினவர். புரத்தல்- காப்பாற்றுதல்.

—————–

நல்லார் பரவும் இராமா னுசன்,திரு நாமம் நம்ப
வல்லார் திறத்தை மறவாதவர்கள் எவர்,அவர்க்கே
எல்லா விடத்திலும் என்று மெப் போதிலும் எத் தொழும்பும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே.–80-

பதவுரை

நல்லார் பரவும் இராமாநுசன்

ஸத்துக்களாலே கொண்டாடப்படுகிற எம் பெருமானாருடைய
திரு நாமம்

திரு நாமத்தை
நம்ப வல்லார் திறத்தை

(தங்களுக்குத் தஞ்சமாக நம்பி யிருக்க வல்லவர்களுடைய படிகளே
மறவாதவர்கள் எவர்

மறவாமல் எப்போதும் சிந்திப்பவர்கள் யாரோ,
அவர்க்கே

அப்படிப்பட்ட ஸ்ரீராமாநுஜ பக்த பக்தர்களுக்கே
எல்லா இடத்திலும்

ஸகல தேசங்களிலும்
என்றும்

ஸகல அவஸ்தைகளிலும்
எத் தொழும்பும்

ஸகலவித கைங்கரியங்களையும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால்

மனமொழி மெய்களென்னும் த்ரிகரணங்களாலும்
சோர்வு இன்றியே செய்வன்

பிரியாதே யிருந்து செய்வேன்.

***- தம்முடைய நிலை நின்ற நிஷ்டையைப் பேசுகிறார் இதில். ஸத்துக்களனைவரும் கொண்டாடும்படியான எமபெருமானுடைய திருநாமங்களையே தங்களுக்குத் தஞ்சமாக நம்பி யிருக்கிற மஹான்களையே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கிற ஸ்ரீராமாநுஜ பக்த பக்தர்களுக்கே அடியேன் – ஒமிவில் காலமெல்லாம் உடனய் மன்னி வழுவிலா வடிமைகள் செய்யக் கடவேனென்றாராயிற்று. தொழும்பு = அடிமை.

—————

சோர்வின்றி உன்றன் துணை யடிக் கீழ்த்,தொண்டு பட்டவர் பால்
சார்வின்றி நின்ற எனக்கு,அரங்கன் செய்ய தாளிணைகள்
பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமானுச! இனி யுன்
சீரொன்றிய கருணைக்கு, இல்லை மாறு தெரிவுறிலே.–81-

பதவுரை

உன் தன் துணை அடிகீழ் சோர்வு இன்றி

தேவரீருடைய உபய பாதங்களின் கீழே
தொண்டு பட்டவர் பால்

சோராமல் அடிமைப் பட்டவர்கள் விஷயத்தில்
சார்வு இன்றி நின்ற எனக்கு

பொருத்த மில்லாமலிருந்த எனக்கு
இன்று

இன்றைத் தினத்தில்
அரங்கன் செய்ய தான் இணைகள்

பெரிய பெருமாளுடைய சிவந்த திருவடி யிணைகளே
பேர்வு இன்றி பெறுத்தும் இராமா நுசா

ஒருகாலும் விட்டு நீங்காத படி சிரோ பூஷணமாகத் தந்தருளின எம்பெருனானாரே!
இனி

இப்படியான பின்பு
தெரிவுறில்

ஆராயுமளவில்
உன்

தேவரீருடைய
சீர் ஒன்றிய கருணைக்கு

சிறந்த திருவருளுக்கு
மாறு இல்லை

ஒப்பு இல்லை

——————-

தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது,வெந் தீ வினையால்
உருவற்ற ஞானத் துழல்கின்ற என்னை, ஒரு பொழுதில்
பொருவற்ற கேள்வியனாக்கி நின் றானென்ன புண்ணீயனோ!
தெரிவுற்ற கீர்த்தி, இராமா னுசனென்னும் சீர் முகிலே.–82-

பதவுரை

தெரிவு உற்ற ஞானம் செறிய பெறாது

தெளிவான ஞானத்தைச் சேரப் பெறாமல்
வெம் தீ வினையால்

மிகவுங் கொடியதான கருமத்தாலே
உரு அற்ற ஞானத்து உழல்கின்ற என்னை

உபயோக மற்ற ஞானத்தை யுடையனாய (ஒன்றிலும் நிலை யில்லாமல்) திரிகிற என்னை
ஒரு பொழுதில்

ஒரு க்ஷண காலத்தில்
பொருவு  அற்ற கேள்வியனாக்கி நின்றான்

ஒப்பற்ற பஹூச்ருதனாக ஆக்கி யருளினவரும்
தெரிவு உற்ற கீர்த்தி

ப்ரஸித்தமான புகழை யடையவரும்
சீர் முகில் என்னும்

(ஔதார்யத்தில்) சிறந்த மேகமென்னத் தக்க வருமான
இராமாநுசன்

எம்பெருமானார்
என்ன புண்ணியனோ

என்ன தார்மிகரோ? (ஒப்பற்ற தர்மிஷ்டரென்றபடி.)

——————

சீர் கொண்டு பேரறம் செய்து,நல் வீடு செறிதும் என்னும்
பார் கொண்ட மேன்மையர் கூட்டனல் லேன்,உன் பத யுகமாம்
ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய
கார் கொண்ட வண்மை இராமா னுச! இது கண்டு கொள்ளே.–83-

பதவுரை

இராமநுசா

எம்பெருமானாரே!,
சீர் கொண்டு

சமம் தமம் முதலிய குணங்களை யுடையராய்
பேர் அறம் செய்து

சிறந்த தருமமாகிய சரணாகதி யோகத்தை யநுஷ்டித்து
நல் வீடு செறிதும் என்னும்

பரம புருஷார்த்தமான மோக்ஷத்தை அடைந்திடுவோம் என்றிருக்கிற
பார் கொண்ட மேன்மையர் கூட்டன் அல்லேன்

ப்ரஸித்தமான ப்ரபாவத்தை யுடைய  ப்ரபந்நர்களுடைய கோஷ்டியில் நான் சேர்ந்தவனல்லேன்;
உன் பத யுகம் ஆம்

தேவரீருடைய உபய பாதங்களாகிற
ஏர் கொண்ட வீட்டை

பரம விலக்ஷணமான மோக்ஷத்தை
எளிதினில் எய்துவன்

ஸுலபமாக அடைந்திடுவேன்;
கார் கொண்ட

(ஔதார்யத்தில்) மேகத்தை வென்றிருக்கிற தேவரீருடைய
வண்மை இது

ஔதார்யம் இப்படிப் பட்டது;
கண்டு கொள்

தேவரீரே இதனைக் கண்டு கொள்ளலாம்.

(அடியேன் சொல்ல வேணுமோ?)

***- சரம ச்லோகத்திலே கண்ண பிரான் நியமித்தபடியே நாம் சரணாகதியை அநுஷ்டித்து விட்டோமாகையால் நமக்கு மோக்ஷம் கை புகுந்து விட்டதேயாமென்று அறுதி யிட்டிருக்கும் மஹான்களில் அடியேன் சோர்ந்தவனல்லேன்; அப்படி அடியேன் ஒன்றும் அநுஷ்டிக்கவில்லை. தேவரீருடைய திருவடிகளாகிற மோக்ஷத்தை அடைந்திடத் தடையில்லை யென்கிற மனவுறுதியே அடியேனுக்குள்ளது என்றாராயிற்று.

—————–

கண்டு கொண் டேனெம் இராமா னுசன் றன்னை காண்டலுமே
தொண்டு கொண் டேன் அவன் தொண்டர் பொற் றாளில் என் தொல்லை வெந் நோய்
விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்தின்று
உண்டு கொண் டேன், இன்னம் உற்றன ஓதில் உவப்பில்லையே.–84-

பதவுரை

எம் இராமாநுசன் தன்னை

ஸ்வாமி எம்பெருமானாரை
இன்று கண்டு கொண்டேன்

இன்று (உள்ளப்படி தெரிந்து கொண்டேன்;
காண்டலுமே

இப்படி தெரிந்து கொண்டவளலிலே
அவன் தொண்டர் பொன் தாளில்

அவரது பக்தர்களுடைய அழகியதிருவடிகளில்
தொண்டு கொண்டேன்

அடிமைப்பட்டேன்; (அதனால்)
என் தொல்லை வெம் நோய்

எனது பழைய கொடு வினைகளை
விண்டு கொண்டேன்

நீக்கிக்கொண்டேன்,
அவன் சீர் வெள்ளம் வாரியை

அவருடைய கல்யாண குண ப்ரவாஹமாகிற கடலை
வாய் மடுத்து உண்டு கொண்டேன்

வாயார அநுபவிக்கப் பெற்றேன்;
இன்னம் உற்றன

இப்படியாக இன்னமும் நான் பெற்ற நன்மை களை
ஒதில்

சொல்லத்தொடங்கினால்
உலப்பு இல்லை

(அதுக்கு) ஒரு முடிவு கிடையாது.

***- இனி மேலும் எம்பெருமானார் திருவருளால் நான் பெறப் போகிற நன்மைகள் அளவற உண்டு; எனினும் இன்றளவும் நான் பெற்ற பேறுகளுக்கு எல்லை யுண்டோ வென்றாராயிற்று.

—————

ஓதிய வேதத்தின் உட் பொருளாய், அதன் உச்சி மிக்க
சோதியை நாதன் என வெறி யாதுழல் கின்ற தொண்டர்
பேதைமை தீர்த்த இராமா னுசனைத் தொழும் பெரியோர்
பாதமல் லாலென்றன் ஆருயிர்க்கு யாதொன்றும் பற்றில்லையை.–85-

பதவுரை

ஓதிய வேகத்தின் உள் பொருள் ஆய்

அத்யயநம் பண்ணப்படுகிற வேதங்களின்

உட்பொருளாயும்

அதன் உச்சி மிக்க சோதியை

அந்த வேதங்களின் முடிவாகிய உபநிஷத்துககளிலே மிகவும் விளங்குபவனாயுமிள்ள ஸ்ரீ மந் நாராயணனை
நாதன் என அறியாது

ஸர்வ சேஷி யென்று தெரிந்து கொள்ளாமல்
உழல்கின்ற தொண்டர்

கண்ட விடங்களிலும் அடிமை செய்து திரிகின்ற பாமரர்களுடைய
பேதைமை

அவிவேகத்தை
தீர்த்த

போக்கடித்த
இராமாநுசனை

எம்பெருமானாரை
தொழும்

ஸேவிக்கின்ற
பெரியோர்

மஹான்களுடைய
பாதம் அல்லால்

திருவடிகள் தவிர
என் தன் ஆர் உயிர்க்கு

எனது அருமையான ஆத்மாவுக்கு
யாது ஒன்றும் பற்று இல்லை

வேறு ஏதேனும் புகலிடமில்லை.

***- கீழ்ப்பாட்டிற் கூறின அத்யவஸாயம் எனக்கு கலியன் கொடுமையினால் ஒரு காலத்தில் மாறி விடக் கூடுமென்று நினைக்கிறீர்களோ, அப்படி நினைக்க வேண்டா; இராமாநுசனடியார் திறத்தில் கலி புருஷன் ஒரு கொடுமையும் செய்ய முடியாதவன்; மற்றவர்களைத் தான் கலி புருஷன் கெடுப்பன். எனது அத்யவஸாயம் நெடுநாளளவும் நிலை நிற்கக் கூடியதே என்றாராயிற்று.

—————

பற்றா மனிசரைப் பற்றி,அப் பற்று விடாதவரே
உற்றா ரென வுழன் றோடி நை யேனினி, ஒள்ளிய நூல்
கற்றார் பரவும் இராமா னுசனைக் கருது முள்ளம்
பெற்றார் எவர், அவ ரெம்மை நின் றாளும் பெரியவரே.–86-

பதவுரை

பற்றா மனிசரை பற்றி

உபயோக மற்ற மநுஷ்யர்களைப் பற்றி
அப் பற்று விடாது

அந்தப் பற்றுதலை விடாமல்
அவரே உற்றார் என

அவர்களையே உறவினராகக் கொண்டு
உழன்று

அவர்கள் பினனே அலைந்து
ஓடி

அவர்களிட்ட காரியங்களைச் செய்ய ஓடி
இனி நையேன்

இனி மேல் துவள மாட்டேன்;
ஒள்ளிய நூல் கற்றார்

சிறந்த சாஸ்த்ரங்களைக் கற்றவர்களாலே
பரவும்

கொண்டாடப் படுகிற
இராமாநுசனை

எம்பெருமானாரை
கருதும் உள்ளம் பெற்றார் யவர்

அநுசந்திக்கும் படியான நெஞ்சை யுடையோர் யாவரோ,
அவர்

அந்த மஹான்களே
எம்மை

நம்மை
நின்று ஆளும் பெரியவர்

சாஸ்வதமாக அடிமை கொள்ளும் மஹாத்மாக்கள்.
ஒள்ளிய நூல்

“சுடர்மிகு சுருதி” என்றார் ஆழ்வாரும்.

——————-

பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன் குணங்கட்
குரிய சொல் என்றும் உடையவன் என்றென்று உணர்வில் மிக்கோர்
தெரியும் வண் கீர்த்தி இராமா னுசன் மறை தேர்ந்துலகில்
புரியு நன் ஞானம் பொருந்தா தவரைப் பொரும் கலியே.–87-

பதவுரை

பெரியவர் பேசிலும்

ஞான சக்திகளால் நிறைந்த மஹான்கள் பேசினாலும்
பேதையர் பேசிலும்

ஒன்றுந் தெரியாதவர்கள் பேசினாலும்
தன் குணங்கட்கு உரிய சொல் என்றும் உடையவன் என்று என்று

தனது திருக் குணங்களுக்கு ஏற்ற சொற்களை எப்போதும் உடையவரென்று பல காலுஞ் சொல்லி
உணர்வில் மிக்கோர் தெரியும்

சிறந்த ஞானிகள் அநுஸந்திக்கிற
வண் கீர்த்தி

திவ்ய கீர்த்தியை யுடையரான
இராமாநுசன்

எம்பெருமானார்
மறை தேர்ந்து

வேதங்களை ஆராய்ந்து
உலகில்

இவ் வுலகத்தில்
புரியும்

உபதேசித்தருளின
நல் ஞானம் பொருந்தாதவரை

நல்ல ஞானத்தில் சேராதவர்களை
கலி பொரும்

கலி புருஷன் பீடிப்பன்.

***- கீழ்ப்பாட்டில் “அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்து. உண்டு கொண்டேன்” என்றும் “அவன் தொண்டர் பொற்றாளில் தொண்டு கொண்டேன்” என்றும் சொன்ன இரண்டு விஷயங்களுள் முதற் சொன்ன விஷயமே (அதாவது-ஸ்ரீராமாநுஜ பக்தர்களுக்கு பக்தனாயிருப்பதே) எனக்குள் சிறந்த உத்தேச்யமென்றாகிறார் இதில்.

(பெரியவர் பேசிலும் இத்யாதி) இதன் கருத்து யாதெனில்-எம்பெருமானாருடைய திருக் குணங்களை மஹா ஞானிகள் தாம் பேசி முடிக்க வல்லவர்கள்; அற்ப ஞானிகள், நம்மால் பேசமுடியாதென்று பின் வாங்கக் கூடியவர்கள்; என்பதில்லை; “ தங்களன்பாரத் தமது சொல் வலத்தால் தலைத் தலைச் சிறந்து பூசிப்ப” என்றும் “பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே வாச மலர்த் துழாய் மாலையான் -வடிவு” என்றும் சொன்னாற்போல, பெரியோர் சொன்னாலும் சிறியோர் சொன்னாலும் அவரவர் களுடைய யோக்யதைக்குத் தக்கபடி சொல்லித் துதிக்கத் தகுந்தவர் எம்பெருமானார் என்று பெரியோர்கள் தெரிந்து கொண்டு, நாம் நமது சக்திக்குத் தக்கபடி ஸ்தோத்ரம் பண்ணுவோமென்று துதிக்கின்றார்களென்கை. அப்படி துதிக்கப்படுகின்ற எம்பெருமானார் உபதேசித்த ஞானத்தை அநாதரித்து அவ்வுபதேசத்தின்படி நடவாதவர்களே கலி தோஷத்தினால் வருந்துவார்களென்றதாயிற்று.

—————-

கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான்
ஒலி மிக்க பாடலை உண்டு தன் னுள்ளம் தடித்து, அதனால்
வலி மிக்க சீயம் இராமா னுசன் மறை வாதியராம்
புலி மிக்க தென்று, இப் புவனத்தில் வந்தமை போற்றுவனே.–88-

பதவுரை

கலி மிக்க

நிலவளம் மிகுந்த
செந்நெல் கழனி

செந்நெல் கழனிகளை யுடைய
குறையல்

திருக் குறையலூரில் அவதரித்தவராய்
கலை பெருமான்

சாஸ்த்ர மென்னும்படியான திவ்ய ப்ரபந்தகளை யருளிச் செய்த் திரு மங்கை யாழ்வாருடைய
மிக்க ஒலி பாடலை

அதிசயித்த இசையை யுடைய பெரிய திருமொழியை
உண்டு

அநுபவித்து
தன் உள்ளம் தடித்து

தமது திருவுள்ளம்
அதனால் வலி மிக்கம்

அத்தால் மிடுக்கு அதிகரித்த
சீயம்

சிங்கம் போன்ற
இராமாநுசன்

எம்பெருமானார்,
மறை வாதியராம் புலி மிக்கது என்று இப் புவனத்தில் வந்தமை

வேதத்தில் துர்வாதங்கள் பண்ணுகிற குத்ருஷ்டிகளாகிற புலிகள் அதிகமாய் விட்டன வென்று (அவற்றைத் தண்டிப்பதற்காக ) இவ்வுலகில் அவதரித்த படியை
போற்றுவன்

புகழ்ந்திடக் கடவேன்.

 

***- கலி மிக்க செந்நெற்கழனி = கலியாவது ஆரவாரம்; உழுவது நடுவது அறுப்பதாய்ச் செல்லுகிற கோலாஹலம்.

————-

போற்றருஞ் சீலத் திராமானுச,நின் புகழ் தெரிந்து
சாற்றுவ னேலது தாழ்வது தீரில்,உன் சீர் தனக்கோர்
ஏற்றமென்றே கொண் டிருக்கிலு மென் மனம் ஏத்தி யன்றி
ஆற்றகில்லாது, இதற் கென்னினை வாயென்றிட் டஞ்சுவனே.–89-

பதவுரை

போற்ற அரு சீலத்து

புகழ்ந்து தலைக் கட்ட முடியாத சீல குணத்தை யுடைய
இராமாநுச

எம்பெருமானாரே;
நின் புகழ்

தேவரீருடைய திருக் குணங்களை
தெரிந்து சாற்றுவனேல்

உணர்ந்து பேசுவேனாகில்
அது

(நீசனாகிய நான் ) பேசுகிறவது
தாழ்வு

(தேவரீருக்கு) அவத்யமாம்;
அது தீரில்

அப்படி நான் பேசுவது தவிர்த்தல்
உன் சீர் தனக்கு ஒர் ஏற்றம்

தேவரீருடைய திருக் குணங்களுக்கு மேன்மையாகும்
என்றே கொண்டு இருக்கிலும்

என்று நான் தெரிந்து கொண்டிருந்தாலும்
என் மனம்

எனது நெஞ்சானது
எத்தி அன்றி

(தேவரீருடைய திருக் குணங்களைப்) புகழ்ந்தல்லது
ஆற்ற கில்லாது

தரித்திருக்க மாட்டாது;
இதற்கு

இவ் விஷயத்திலே
என் நினைவாய் என்றிட்டு அஞ்சுவன்

தேவரீர் என்ன நினைக்குமோ வென்று பயப்படுகிறேன்.

——————

நினையார் பிறவியை நீக்கும் பிரானை,இந் நீணிலத்தே
எனையாள வந்த இராமா னுசனை இருங் கவிகள்
புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந் தொடையல்
வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே.–90-

பதவுரை

பிறவியை நீக்கும் பிரானை

ஸம்ஸாரத்தை யொழிக்கும் உபகாரகராயும்
இ நீள் நிலத்தே

இப்பெரிய பூமியிலே
எனை ஆள

என்னை அடிமை கொள்வதற்கே
வந்த

அவதரித்தவராயுமுள்ள
இராமாநுசனை

எம்பெருமானாரை
நினையார்

சிந்தியா தவர்களாயும்,
இரு கவிகள் புனையார்

(அவர் விஷயமாக) நல்ல பாடல்களையும் பாடாதவர்களாயும்
புனையும் பெரியவர் தாள்களில்

(ஏதோ பாக்கியத்தாலே) பாடல்களைப்படுகிற மஹான்களின் திருவடிகளில்
பூ தொடையல்வனை யார்

புஷ்ப மாலைகளை ஸமர்ப்பியாதவர்சளாயுமுள்ள
மாந்தர்

மனிசர்கள்
மருள் சுரந்து

அஜ்ஞானம் அதிகமாகப் பெற்று
பிறப்பில் வருந்துவர்

ஸம்ஸாரத்ததிற் கிடந்து துன்பப்படுவர்கள்.

***- கீழ்ப்பாட்டில் அஞ்சுவனே என்ற விவருடைய அச்சம் தீரும்படி குளிரக் கடாக்ஷித்தார் எம்பெருமானார்; அந்தக் கடாக்ஷ வைபவத்தாலே அச்சம் தீரப் பெற்றுத் தேறுதலடைந்து, மநோ வாக் காயங்களில் ஏதேனாமொன்றால்  எம்பெருமானார் விஷயத்தில் ஒரு நன்மை செய்து வாழ்ந்து போகலாமாயிருக்க, பாவிகள் அதுசெய்யாதே பாழாய்ப் போகிறார்களே! என அநுதபிக்கிறார் இதில்.

—————-

மருள் சுரந் தாகம வாதியர் கூறும்,அவப் பொருளாம்
இருள் சுரந் தெய்த்த உலகிருள் நீங்கத்,தன் ஈண்டிய சீர்
அருள் சுரந் தெல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும்
பொருள் சுரந் தான், எம் இராமா னுசன் மிக்க புண்ணியனே.–91-

பதவுரை

ஆகமம் வாதியர்

(சிவன் சொன்ன) சைவ ஆகமத்தைப் பிரமாணமாகக் கொண்டு வாதம் பண்ணுகிற பாசுபதர்கள்
மருள் சுரந்து

அஜ்ஞானம் அதிகரிக்கப் பெற்று
கூறும்

(சிவனுடைய பரத்துவ விஷயமாகச் சொல்லுகிற
அவம் பொருள் ஆம் இருள் சுரந்து

நீசமான அர்த்தங்களாகிற இருள் மேலிட்டு (அதனால்)
எய்த்த

கெட்டுப் போன
உலகு

உலகத்தவர்களுடைய
இருள்

அஜ்ஞாநாந்தகாரமானது
நீங்க

போகும்படியாக
தன்

தம்முடைய
ஈண்டிய சீர் அருள் சுரந்து

விலக்ஷணமான க்ருபையைப் பெருக்கி
எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள்

“எல்லாப் பிராணிகளுக்கும் ஸ்வாமி ஸ்ரீரங்க நாதனே’ என்கிற அர்த்தத்தை
சுரந்தான்

வெளியிட்டவரான
எம் இராமாநுசன்

ஸ்வாமி எம்பெருமானார்
மிக்க புண்ணியன்

சிறந்த புண்ணியாத்மா

***- இந்த ஸம்ஸாரிகளுடன் இப்படி விமுகராயிருக்கச் செய்தேயும் இவர்களைத் தம் பேறாக . உஜ்ஜீவிக்கச் செய்வதற்காக எம்பெருமானார் முயன்றதைச் சிந்தித்து அவரைக் கொண்டாடுகிறார்.

மிக்க புண்ணியனான எம்மிராமாநுசன் பொருள் சுரந்தான் என்றும், பொருள் சுரந்தவனான எம்மிராமாநுசன் மிக்க புண்ணியன் என்றும் இரண்டுபடியும் யோஜிக்கலாம்;.

—————–

புண்ணிய நோன்பு புரிந்துமிலேன்,அடி போற்றி செய்யும்
நுண்ணருங் கேள்வி நுவன்றுமிலேன்,செம்மை நூற் புலவர்க்
கெண்ணருங் கீர்த்தி இராமா னுச! இன்று நீ புகுந்தென்
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற விக் காரணம் கட்டுரையே.–92-

பதவுரை

செம்மை நூல் புலவர்க்கு

நல்ல சாஸ்த்ரங்களைக் கற்றுக் கவி சொல்ல வல்லவர்களுக்கும்
எண்ண அரு கீர்த்தி இராமாநுச

அளவிட முடியாத கீர்த்தியை யுடைய
இராமாநுச

எம்பெருமானாரே!,
புண்ணியம் நோன்பு புரிந்தும் இலேன்

புண்ணியமான ஒருவிரதத்தையும் அடியேன் அநுஷ்டிக்க வில்லை;
அடி போற்றி செய்யும்

தேவரீருடைய திருவடிகளை வாழ்த்துகைக்கு உறுப்பான
நுண் அரு கேள்வி

ஸுக்ஷ்மமாய் அருமையான ஸ்ரவணத்தை
நுவன்றும் இலேன் இன்று

(செய்யவேணு மென்று வாயாலே) சொல்லவுமில்லை (அப்படியிருந்தும்
என்

இன்று
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும்

அடியேனது கண்ணினுள்ளேயும் நெஞ்சினுள்ளேயும்
புகுந்து நின்ற இக் காரணம் கட்டுரை

புகந்து எழுந்தருளி யிருப்பதற்குக் காரணமருளிச்செய்ய வேணும்.

——————–

கட்டப் பொருளை மறைப்பொரு ளென்று கயவர் சொல்லும்
பெட்டைக் கெடுக்கும் பிரனல்லனே,என் பெரு வினையைக்
கிட்டிக் கிழங்கொடு தன்னருள் என்னுமொள் வாளுருவி
வெட்டிக் கிளைந்த இராமா னுசனென்னும் மெய்த்தவனே.–93-

பதவுரை

கிட்டி

அடியேன் பக்கல் வந்து நெருங்கி
தன் அருள் என்னும் ஒரு வாள் உருவி

தம்முடைய கிருபை யாகிற அழகிய வாளை உறையில் நின்றும் கழற்றி (அதனால்)
என் பெருவினையை கிழங்கொடு வெட்டி களைந்த

எனது மஹா பாபங்களை வேரோடே அறுத்தொழித்த
இராமாநுசன் என்னும் மெய் தவன்

எம்பெருமானாரென்கிற மா முனிவர் எப்படிப் பட்டவரென்றால்
கயவர்

துஷ்டர்களான குத்ருஷ்டிகள்
கட்டம் பொருளை மறை  பொருள் என்று சொல்லும் பெட்டை

தப்பான அர்த்தங்களை வேதங்களின் அர்த்தமாகக் கொண்டு சொல்லுகிற பிரட்டுப் பேச்சுகளை
கெடுக்கும் பிரான் அல்லனே

கண்டித்தொழித்த மஹா நுபவரமனறோ.

***- கட்டம்-கஷ்டம்; கட்டப்பொருளொன்றது கஷ்டப்பட்டுச் சொல்லும் பொருள் என்றபடி; மதாந்தரஸ்தர்கள் சொல்லும் பொருள்கள் அஸ்வரஸமாகையால் க்லிஷ்டங்களாயிருக்குமென்க. கயவர்-நீசர், துஷ்டர் பெட்டு = பிறரை வஞ்சிக்கச் சொல்லும் பொய்ப் பேச்சு. மெய்த்தவன்-தவமாவது சரணாகதி யோகம்.

—————

தவந்தரும் செல்வம் தகவும் தரும்,சரியாப் பிறவிப்
பவந்தரும் தீவினை பாற்றித் தரும்,பரந் தாமமென்னும்
திவந்தரும் தீதில் இராமானுசன் தன்னைச் சார்ந்தவர்கட்
குவந்தருந்தேன், அவன் சீரன்றி யானென்றும் உள் மகிழ்ந்தே.–94-

பதவுரை

தீது இல் இராமாநுசன்

எவ்வகைக் குற்றமும் அற்றவரான எம்பெருமானார்
தன்னை சார்ந்தவர்கட்கு

தம்மை வந்து அடைந்த வர்களுக்கு
தவம் தரும்

சரணாகதி நிஷ்டையைக் கொடுத்தருள்வர்;
சரியா பிறவி பவம் தரும் தீவினை

நிவர்த்திக்க முடியாத ஜந்ம ஸம்ஸாரங்களை உண்டாக்குகின்ற கொடு வினைகளை
பாற்றி தரும்

போக்கடித் தருள்வர்;
பரம் தாமம் என்னும் திவம் தரும்

பரமபதமென்று சொல்லப்படுகிற வானுலகத்தை அளிப்பர்; (ஆன பின்பு)
யான்

அடியேன்
அவன் சீர் அன்றி

அவ் வெம்பெருமானாருடைய திருக் குணங்களைத் தவிர்த்து
ஒன்றும்

வேறொன்றையும்
உள் மகிழ்ந்து உவந்து அருந்தேன்

மனக் காதலோடே விரும்பி அநுபவிக்க மாட்டேன்.

***- இப் பாட்டில், தரும் என்னும் பதம் ஐந்து இடங்களில் வருகின்றது. இரண்டாமடியின் முதலிலுள்ள தரும் என்பது மாத்திரம் தீவினைக்கு விசேஷணம்; மற்ற நான்கும் எம்பெருமானார் பக்கல் அந்வயிக்கும் வினைமுற்றுக்கள்.

“சலியாப்பிறவி, சரியாப்பிறவி” என்பன பாட பேதங்கள். பவம். வடசொல். பரந்தாம. வடசொல். திவம். வடசொல் விகாரம்.

————–

உண்ணின் றுயிர்களுக் குற்றனவே செய்து அவர்க்குயவே
பண்ணும் பரனும் பரிவிலனாம் படி பல்லுயிர்க்கும்
விண்ணின் தலை நின்று வீடளிப் பானெம் இராமானுசன்
மண்ணின் தலத்துதித்து உய் மறை நாலும் வளர்த்தனனே.–95-

பதவுரை

உயிர்களுக்கு உள் நின்று

எல்லா ஆத்மாக்களுக்கும் அந்தர்யாமி யாயிருந்து கொண்டு
உற்றனவே செய்து

ஹிதமானவற்றையே நடத்திக் கொண்டு
அவர்க்கு

அவ் வாத்மாக்களுக்கு
உயவே பண்ணும் பரனாம்

உஜ்ஜீவநத்தையே பண்ணிக் கொண்டிருக்கிற எம்பெருமானாம்
பரிவு இலன் ஆம படி

(ஆத்மாக்களிடத்தில் எம்பெருமானாரைப் போல்) ப்ரதி யுடையவனல்லன் என்ன வேண்டும் படியாக
பல் உயிர்க்கும்

ஸகல ஆத்மாக்களுக்கும்
வீடு அளிப்பான்

மோக்ஷத்தை அருள்வதற்காக
எம் இராமாநுசன்

ஸ்வாமி எம்பெருமானார்
விண்ணின் தலை நின்று

ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும்
மண்ணின் தலத்து உதித்து

இப் பூதலத்திலே அவதரித்து
உய் மறை நாலும்

எல்லார்க்கும் உஜ்ஜீவந ஹேதுவான நான்கு வேதங்களையும்
வளர்த்தனன்

குறைவின்றி வளரச் செய்ய தருளினார்.

***- இப்பாட்டின் ஈற்றடியை “மண்ணின் தலத்துதித்து மறை நாலும் வளர்த்தனனே” என்றே அத்யாபகர்கள் ஒதுவர்கள். “நேர்பரினாறே” என்ற கட்டளைக் கலித்துறையின் இலக்கணப்படி பதினாறெழுத்து ஒத்திருந்தாலும் தளை தட்டுகிறபடியாலும், மணவாளமாமுனி களுரையில் “ஸர்வோஜ்ஜீவந சாஸத்ரமான” என்கிற ஒரு வாக்கியம் வ்யர்த்தமாக வேண்டி வருகையாலும் இவ்விரண்டு குறைகட்கும் இடமறும்படி “ உய் மறை நாலும்” என்கிற ப்ராசீந பாடம் கொள்ளத் தக்கது: உய் என்பதற்குப் பொருளாகவே மணவாள மாமுனிகள் ஸர்வோஜ்ஜீவந சாஸ்த்ரமான” என்கிற வாக்கியமருளிச் செய்தாரென்க.

——————–

வளரும் பிணி கொண்ட வல் வினையால்,மிக்க நல் வினையில்
கிளரும் துணிவு கிடைத்தறி யாது முடைத் தலையூன்
தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனி திரிவேற்
குளரெம் இறைவர் இராமானுசன் றன்னை உற்றவரே.–96-

பதவுரை

வளரும் பிணி கொண்டவல் வினையால்

அளவற்ற துன்பங்களை யுண்டாக்க வல்ல கொடிய கருமங்களாலே
மிக்க நல் வினையில் கிளரும் துணிவு கிடைத் தறியாது

மஹா விச்வாஸம் கிடைக்காததனால்
முடை தலை ஊன் தளரும் அளவும்

கெட்ட நாற்றங்களுக்கு இருப்பிடமான சரீரம் கட்டுக் குலையும் வரையில்
தரித்தும் விழுந்தும்

ஒருவாறு தரித்திருந்தும் (சப்தாதி விஷயங்களிலே) போய் விழுந்தும்
தனி திரிவேற்கு

துணை யின்றித் திரிகிற எனக்கு
இறைவர்

ஸவாமிகள் (யாரென்றால்,
எம் இராமாநுசன் தன்னை உற்றவர்

நம் எம்பெருமானாரை ஆச்ரயித்த மஹான்கள்
உளர்

இருக்கிறார்கள்.

 

——————–

தன்னை யுற்றாட் செய்யும் தன்மையினோர்,மன்னு தாமரைத் தாள்
தன்னை யுற் றாட் செய்ய என்னை யுற் றானின்று தன் தகவால்
தன்னை யுற் றாரன்றித் தன்மை யுற் றாரில்லை என்றறிந்து
தன்னை யுற் றாரை இராமா னுசன் குணம் சாற்றிடுமே.–97-

பதவுரை

இராமாநுசன்

எம்பெருமானாரானவர்,
தன்னை உற்றார் அன்றி தன்னை உற்றாரை குணம் சாற்றிடும் தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து

தம்மைப் பற்றி யிருப்பாருண்டே யொழிய தம்மைப் பற்றிய யிருப்பவர்களுடைய குண கீர்த்தனம் பண்ணும் ஸ்வ பக்த பக்தர்கள் ஒருவருமில்லை யென்று திருவுள்ளம் பற்றி
என்னை

அடியேனை
இன்று

இன்றைத் தினத்தில்
தன் தகவால்

தமது அருளாலே

(என்ன செய்தாரென்றால்)

தன்னை உற்று ஆள் செய்யும் தன்மையினோர்

தம்மை யடைந்து கைங்கரியம் பண்ணும் ஸ்வபாவ முடையரான ஸ்வ பக்தர்களுடைய
மன்னா தாமரை தாள் தன்னை உற்று ஆள் செய்ய

ஒன்றோடொன்று சேர்ந்த திருவடித் தாமரைகளை நான் அடைந்து ஆட் செய்யும்படி
உய்த்தான்

வைத்தருளினார்.

***- எம்பெருமானார் என்னைத் தம்மிடத்து ஆட்படுத்திக் கொள்ளாமல் தம்மை அடுத்தவர்கள் பக்கல் என்னை ஆட்படுத்தினார். இதற்கு என்ன காரண மென்கிறீர்களோ? எல்லாரும் நம்மையே நேராக வந்து ஆச்ரயிக்கிறார்களே யொழிய நம்மை ஆச்ரயித்தவர்களை ஆச்ரயிப்பார் ஆருமில்லையே, இவ் வமுதனார், நம்மை ஆச்ரயித்தவர்களை ஆச்ரயிக்கிற அதிகாரியாக இருக்கட்டும் – என்று திருவுள்ளம் பற்றிச் செய்தார்.

இப்பாட்டின் அந்வயக்ரமம் சிறிது வருத்தப் படுத்தும்;  ஜாக ரூகராயிருந்து அந்வயித்துக்கொள்க;-தன்னை யுற்றாரன்றித் தன்னை யுற்றாரைக் குணம் சாற்றிடுந் தன்மை யுற்றாரில்லை யென்றறிந்து, இராமாநுசன், தன்னை யுற்றாட்  செய்யுந் தன்மையினோர் மன்னா தாமரைத்தாள் தன்னையுற்று ஆட்செய்யத் தன் தகவால் இன்று என்னை யுய்த்தான்-என்று அந்வயம்.

சாற்றிடும் என்கிற விசேஷண பதம் பாட்டின் முடிவில் வந்து நின்றது அபூர்வப் பிரயோகமென்பர். என்னை யுற்றான் என்று ஓதுவர்கள்.

——————-

இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னம் நரகிலிட்டுச்
சுடுமே யவற்றைத் தொடர் தரு தொல்லைச் சுழல் பிறப்பில்
நடுமே யினி நம் இராமா னுசன்நம்மை நம் வசத்தே
விடுமே சரணமென் றால், மனமே! நையல் மேவுதற்கே?–98-

பதவுரை

நம் இராமாநுசன்

நம் எம்பெருமானார்,
சரணம் என்றால்

உமது திருவடிகளே சரணமென்று நாம் சொல்லி விட்டோ மானால்
இனிய சுவர்க்கத்திலே இடுமே

(சிலர்க்கு) இனிதாகத் தோற்றுகிற ஸ்வர்க்கத்திலே நம்மைக் கொண்டு சேர்த்திடுவரோ?
இன்னம்

அல்லது
நரகில் இட்டு சுடுமே

நரகத்திலே கொண்டு தள்ளி தஹிக்கச் செய்வரோ?
அவற்றை தொடர்தரு

அந்த ஸ்வர்க்க நகரங்களைத் தொடர்ந்து கிடக்கிற
தொல்லை சுழல் பிறப் பில்

அநாதியாயும் சுழன்று வருவதாயுமுள்ள ஜன்மத்திலே
நடுமே

நிறுத்துவரோ?
இனி

மேலுள்ள காலங்களில்
நம்மை

நம்மை
நம் வசத்தே விடுமே

நாம் போகிற வழியே விட்டு வைப்பரோ?

(இவை செய்ய மாட்டாரான பின்பு)

மனமே!

ஒ நெஞ்சே!
மேவுதற்கு

பேறு பெறும் விஷயமாக
நையல்

நீ கரையவேண்டா.

—————-

தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன்
சொற்கற்ற சோம்பரும் சூனிய வாதரும் நான் மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே
பொற் கற்பகம், எம் இராமா னுச முனி போந்த பின்னே.–99-

பதவுரை

தற்கம் சமணரும்

தர்க்கம் பண்ணுகிற சமணர்களும்
பேய்

பேய் போலே பிடித்த பிடி விடாதே நிற்கிற
சாக்கியர்களும்

பௌத்தர்களும்
தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும்

ருத்ரனாடைய சொல்லாகிய சைவாகமத்தைக் கற்ற தாமஸர்களான சைவர்களும்
சூனிய வாதரும்

சூந்நியவாதிகளும்
நால் மறையும் நிற்க

நான்கு வேதங்களும் விளங்கிக் கொண்டி ருக்கச்செய்தே
குறும்பு செய் நீசரும்

(அவற்றுக்குச் சேராத) அபார்த்தங்களைப் பண்ணுகிற குத்ருஷ்டிகளும்
மாண்டனர்

ஒழிந்தார்கள்;

(எப்போது ? என்றால்)

பொன் கற்பகம் எம் இராமாநுச முனி

சிறந்த கல்ப வ்ருக்ஷம் போலே உதாரான ஸ்வாமி எம்பெருமானார்
நீள் நிலத்தே போந்த பின்

விசாலமான இப் பூமியிலே திரு வவதரித்த பின்பு.

 

——————

போந்ததென் னெஞ்சென்னும் பொன்வண்டு உனதடிப் போதில் ஒண்சீர்
ஆம்தெளி தேனுண் டமர்ந்திட வேண்டி,நின் பாலதுவே
ஈந்திட வேண்டும் இராமா னுச! இது அன்றி யொன்றும்
மாந்தகில் லாது, இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே.–100-

பதவுரை

இராமாநுச

எம்பெருமானாரே!
என் நெஞ்சு என்னும் பொன் வண்டு

எனது நெஞ்சாகிற அழகிய வண்டானது
உனது அடி போதில்

தேவரீருடையதிருவடித்தாமரைகளில்
ஒண் சீர் ஆம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி

அழகிய குணங்களாகிற தேனைப் பருகி நித்ய வாஸம் பண்ண விரும்பி
நின் பால்

தேவரீரிடந்தில்
போந்தது

வந்து சேர்ந்தது;
அதுவே

அத் திருக் குணங்களையே
ஈந்திட வேண்டும்

அளித்தருள வேணும்;
இது அன்றி

இத் திருக் குணங்களைத் தவிர
ஒன்றும்

வேறொன்றையும்
மாந்த கில்லாது

(நெஞ்சு) புஜிக்க மாட்டாது;
இனி

இப்படியான பின்பு
மற்று ஒன்று காட்டி

வேறொரு விஷயத்தைக் காட்டி
மயக்கிடேல்

மயக்க வேண்டா

***- ஸ்வாமிந்! அடியேனுடைய நெஞ்சு தேவரீருடைய திருக் குணங்களையே எப்போதும் அநுபவிக்க விருப்பங்கொண்டு மேல் விழுந்து தேவரீரிடம் வந்து சேர்ந்தது. இது இனி வேறொன்றை விரும்பாது; தேவரீரும் இனி இதை ஸம்ஸாரத்தில் போக வொடட்டாமல் தேவரீனிடத்திலேயே நிலை நிறுத்திக் கொள்ளவேணும். என்றாராயிற்று.

தமது நெஞ்சை ஒரு வண்டாக ரூபணம் பண்ணினதற்கு ஏற்ப எம்பெருமானாருடைய திவ்ய குணங்களை மதுவாக ரூபணம் பண்ணினார். இந்த வண்டுக்கு அந்தந் தேன் தவிர வெறொன்றும் ரஸிக்க மாட்டாது.

மயக்கிடேல் = முனினிலை யெதிர் மறை வினைமுற்று. மயக்காதே என்றபடி

——————

மயக்கும் இருவினை வல்லியிற் பூண்டு மதி மயங்கித்
துயக்கும் பிறவியில் தோன்றிய என்னைத் துயரகற்றி
உயக் கொண்டு நல்கும் இராமா னுச! என்ற துன்னை யுன்னி
நயக்கும் அவர்க்கி திழுக் கென்பர், நல்லவர் என்றும் நைந்தே.–101-

பதவுரை

மயக்கும்

“அஜ்ஞானத்தை விளைக்க வல்ல
இரு வினை

புண்ய பாப மென்னும் இரு கருமங்களாகிற
வல்லியல்

விலங்கில்
பூண்டு

அகப்பட்டுக் கொண்டு
மதி மயங்கி

அறிவு கெட்டு
துயக்கும்

ப்ரமிச்கச் செய்கிற
பிறவியியல்

ஸம்ஸாரத்திலே
தோன்றிய என்னை

சிறந்த அடியேனை
துயர் அகற்றி உய கொண்டு

துக்கங்களைப் போக்கி உஜ்ஜீவிக்கச் செய்து
நல்கும்

அருள் செய்கின்ற
இராமாநுச

எம்பெருமானாரே!
என்றது இது

என்று தேவரீருடைய பாவநத்வத்தைப் பேசு கையாகிற ஈது
உன்னை உன்னி நைந்து

தேவரீரை அநுஸந்தித்து உருகி
என்றும் நயக்கு

எப்போதும் ஆசையுடனிருப்பவர்களுக்கு
இழுக்கு என்பர் நல்லவர்

தகாதது என்று ஸத்துக்கள் சொல்லுவர்கள்.

***- எம்பெருமானார்க்கு பாவநத்வம் என்றும் போக்யத்வம் என்றும் இரண்டு படிகள் உண்டு. பாவநத்வமாவது-பக்தர்களுடைய பாவங்களைப் போக்கிப் பரிசுத்தப்படுத்தல். போக்யத்வமாவது எப்போதும் அநுபவிக்கக் கூடியவராயிருக்கை. இவ் விரண்டில் பாவநத்வத்தை விட போக்யத்வமே சிறந்தது; ஏனென்றால், நம்முடைய பாவங்களைப் போக்கினாரென்கிற காரணத்தாலே நாம் அவரைப் பாவநர் என்று அநுஸந்திக்க வேண்டும்; இது ஒரு உபாதியைப் பற்றி வருவது; போக்யத்வத்தை அநுஸந்திப்பதோ இப்படிப்பட்டதல்ல. அது ஸ்வரூப ப்ரயுக்தம். ஆகையாலே, பாவநத்வத்தை அநுஸந்திப்பதை விட யோக்யதையை அநுஸந்திப்பதே சிறந்தது. அப்படியிருக்க இவ்வமுதனார் இப்பிரபந்தத்தில் அடிக்கடி எம்பெருமானாருடைய பாவநத்வத்தை அநுஸந்தித்தார்; ‘என்னுடைய பாவங்களையெல்லாம் போக்கினார், என்னுடைய குற்றங்களையெல்லாம் நீக்கினார்’ என்று அடிக்கடி சொல்லி யிருக்கிறார். அப்படி சொன்னதற்கு அநுதாபப்படுகிறார் இப் பாட்டில், போக்யதையில் ஈடுபட்டுப் பேச வேண்டி யிருக்க, பாவநத்வத்தில் ஈடுபட்டமை தோற்றப் பேசினது பிசகு என்று பெரியோர்கள் சொல்லுவர்கள் என்றாராயிற்று.

——————

நையும் மனமும் குணங்களை உன்னி,என் நாவிருந் தெம்
ஐயன் இராமா னுசனென் றழைக்கும் அரு வினையேன்
கையும் தொழும் கண் கருதிடுங் காணக் கடல் புடை சூழ்
வையம் இதனில், உன் வண்மை யென் பாலென் வளர்ந்ததுவே?–102-

பதவுரை

(எம்பெருமானாரே!)

மனம்

எனது நெஞ்சானது
உன் குணங்களை உன்னி

தேவரீருடைய திருக் குணங்களைச் சிந்தித்து
நையும்

கரைகின்றது;
என் நா

எனது வாக்கானது
இருந்து

நிலை நின்று
எம் ஐயன் இராமாநுசன் என்று அழைக்கும்

எமக்கு ஸ்வாமியான எம் பெருமானாரே! என்று அழைகின்றது.
அரு வினையேன்

மஹா பாபியான என்னுடைய
கையும்

கைகளும்
தொழும்

அஞ்ஜலி பண்ணு கின்றன;
கண்

கண்களானவை
காண கருதிடும்

(தேவரீரை) ஸேவிக்க ஆசைப்படுகின்றன;
கடல்புடைசூழ் வையம் இதனில்

சுற்றிலும் கடல் சூழப் பெற்ற இப்பூ மண்டலத்தினாள்ளே
உன் வண்மை

தேவரீருடைய ஔதார்ய குணம்
என்பால் வளர்ந்தது என்

அடியேன் மீது (இவ்விதமாக) வளர்ந்ததற்குக் காரணம் யாதோ?.

————-

வளர்ந்த வெங் கோப மடங்க லொன் றாய்,அன்று வாளவுணன்
கிளர்ந்த பொன் னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயிரெழுந்து
விளைந்திடும் சிந்தை இராமா னுசனென்றன் மெய் வினை நோய்
களைந்து நன் ஞானம் அளித்தனன் கையிற் கனி யென்னவே.–103-

பதவுரை

அன்று

முன்னொரு காலத்தில்
வளர்ந்த வெம் கோபம் மடங்கல் ஒன்று ஆய்

கடூரமான கோபம் மேலிடப் பெற்ற ஒரு நரசிங்க மூர்த்தியாகி
வாள் அவுணன்

வாளை யுடைய ஹிரண்யா ஸுரனது
கிளர்ந்த

செருக்கினால் நெறித்திருந்த
பொன் ஆகம்

பொன் போன்ற மார்வை
கிழித்தவன்

கிழித்துப் பொகட்டவனான எம்பெருமானுடைய
கீர்த்தி பயிர் எழுந்து

திருப் புகழ்களாகிற பயிர் வளர்ந்து
விளைந்திடும் சிந்தை

விளையப் பெற்ற திருவுள்ளத்தை யுடையரான
இராமாநுசன்

எம்பெருமானார்
என் தன் மெய் வினை நோய் களைந்து

எனது உடலைப் பற்றி யிருக்கிற வினை நோய்களை யெல்லா மொழித்து
கையில் கனி என்ன

கையிலங்கு நெல்லிக் கனி போலே ஸுலபமாக
நல் ஞானம் அளித்தனன்

விலக்ஷணமான ஞானத்தைத் தந்தருளினார்

————–

கையிற் கனி யென்னக் கண்ணனைக் காட்டித் தரிலும், உன்றன்
மெய்யிற் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்,நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ் வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச! என் செழுங் கொண்டலே!–104-

பதவுரை

செழு கொண்டல்

ஔதார்யத்தில்) விலக்ஷணமான மேகம் போன்ற
என் இராமாநுச

எம்பெருமானாரே!

(தேவரீர்)

கண்ணனை

எம்பெருமானை
கையில் கனி என்ன

உள்ளங்கை நெல்லிக் கனி போலே
காட்டி தரினாம்

காட்டிக் கொடுத்தாலும்
உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றியான் வேண்டிலன்

தேவரீருடைய திருமேனியில் விளங்குகிற ஸௌந்தரியமும் முதலிய குணங்களைத் தவிர வேறொன்றிலும் நான் கண் வைக்க மாட்டேன்;
நிரயம் தொய்யில்

ஸம்ஸார நரகக் குழியில்
கிடக்கிலும்

அழுந்திக் கிடந்தேனாகிலும்
சோதி விண் சேரிலும்

சோதி மயமான பரம பதத்தை அடைந்தேனாகிலும்
இவ் அருள்

(தேவரீருடைய திரு மேனி யழகை அநுபவித்திருக்கைக்கு உறுப்பான) கிருபையை
நீ செய்யில்

தேவரீர் செய்தருளினால் தான்
தரிப்பான்

(ஸம்ஸாரத்திலோ மோக்ஷத்திலோ) கால் பாவி நிற்பேன்.

***- நிரயத்தொய்யில் = நிரயமாவது நரகம். இந்த ஸம்ஸார நிலமே நரகமெனப்படும். தொய்யில்-சேறு. ஏழனாருபு தொக்கி யிருக்கிறது. தொய்யல் என்பாருமுளர்.

——————–

செழுந்திரைப் பாற்கடல் கண்டுயில் மாயன் திருவடிக் கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நன் ஞானி,நல் வேதியர்கள்
தொழுந் திருப் பாதன் இராமா னுசனைத் தொழும் பெரியோர்
எழுந்திரைத் தாடும் இடமடி யேனுக் கிருப்பிடமே.–105-

பதவுரை

செழு திரை பால் கடல்

அழகிய அலைகளை யுடைய திருப்பாற் கடலில்
கண் துயில்

பள்ளி கொண்டிராநின்ற
மாயன்

ஸர்வேச்வரனாடைய
திரு அடி கீழ்

திருவடிகளின் கீழே
விழுந்து இருப்பார்

விழுந்து கிடக்கும் மஹான்களுடைய
நெஞ்சில்  மேவும்

ஹருதயத்திலே பொருந்தி யெழுந்தருளி யிருக்கிற
நல் ஞானி

சிறந்த ஞானியாயும்
நல்வேதியர்கள் தொழும் திரு பாதன்

நல்ல வைதிகர்களால் ஸேவிக்கப்பட்ட திருவடிகளை யுடையராயுமிருக்கிற
இராமாநுசனை

எம்பெருமானாரை
தொழும்

ஸேவிக்கின்ற
பெரியோர்

மஹாத்மாக்கள்
எழுந்து இரைத்து ஆடும் இடம்

உடம்பு இருந்த விடத்தில் இராமல் கிளர்ந்து கோஷித்துக் கொண்டு கூத்தாடும் இடம்
அடியேனுக்கு இருப்பு இடம்

அடியேன் வஸிக்குமிடமாகும்.

***- கீழ்ப்பாட்டில் “ நிரயத் தொய்யில் கிடக்கிலும் சோதிவிண் சேரிலும்” என்று ஸம்ஸாரத்தையும் பரம பதத்தையும் வாசி யற்றதாகச் சொன்ன அமுதனாரை நோக்கிச் சிலர், ‘உலகத்தில் எல்லாரும் ஸம்ஸாரத்தை வெறுத்துப் பரம பதத்தை ஆசைப்படா நிற்க நீர் ஸம்ஸாரத்தையும் பரம பதத்தையும் துன்பமாகக் கருதிப் பேசுகின்றீரோ, உமக்கு உத்தேச்யமான ஸ்தானம் எது? சொல்லும், என்ன; ஸ்ரீராமாநுஜ பக்தர்கள் களித்துக் கூத்தாடுகின்ற இடமே எனக்குப் பரமோத்தேச்யமான ஸ்தானம் என்றார்.

——————

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ் சோலை யென்னும்
பொருப்பிடம் மாயனுக் கென்பர் நல் லோர்,அவை தன்னொடு வந்
திருப்பிடம் மாயன் இராமா னுசன் மனத் தின்றவன் வந்
திருப்பிடம் என்றன் இதயத்துள் ளே தனக் கின்புறவே.–106–

பதவுரை

மாயனாக்கு

ஸர்வேச்வரனுக்கு
இருப்பு இடம்

வாஸஸ்தானம் (எவை யென்றால்)
வைகுந்தம்

பரமபதமும்
வேங்கடம்

திருவேங்கடமலையும்
மாலிருஞ் சோலை என்னும் பொருப்பு இடம்

திருமாலிருஞ் சோலை யென்கிற திருமலையும் (ஆகிய இவையாம்)
என்பர் கல்லோர்

என்று ஸத்துக்கள் சொல்லுவர்கள்.
மாயன்

(இவற்றை இருப்பிடமாக வுடைய) ஸர்வேச்வரன்
அவை தன்னொடும்

அந்த ஸ்ரீவைகுண்டம் முதலியவற்றோடே கூட வந்து எழுந்தருளி யிருப்பது
வந்து இருப்பிடம்

எம்பெருமானாருடைய
இராமாநுசன் மனத்து

திரு வுள்ளத்திலேயாம்;
அவன்

அவ் வெம்பெருமானார் தாம்
இன்று வந்து

இப்போது வந்து
தனக்கு இன்பு உற இருப்பிடம்

தமக்கு ஆநந்தமாக எழுந்தருளி யிருப்பது
என் தன் இதயத்து உள்ளே

அடியேனுடைய ஹ்ருத யத்தினுள்ளேயாம்.

***- கீழ்ப்பாட்டிற் கூறியபடியே அமுதனாருடைய எல்லை கடந்த ப்ராவண்யத்தை அறிந்த எம்பெருமானார் ‘நம்மேல் இவ்வளவு காதல் கொண்டிருக்கிற இவருடைய நெஞ்சை நாம் விட்டு நீங்கலாகாது, என்று கொண்டு அமுதனாருடைய திருவுள்ளத்தை மிகவும் விரும்பி யருள, அதனைக் கண்டு மகிழ்ந்து பேசுகிறார்.

—————-

இன்புற்ற சீலத் திராமா னுச, என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோயுடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
துன்புற்று வீயினும் சொல்லுவதொன்றுண்டுன் தொண்டர்கட்கே
அன்புற் றிருக்கும் படி, என்னை யாக்கியங் காட்படுத்தே.–107-

பதவுரை

இன்பு உற்ற

ஆநந்த பூர்ணரா யெழுந்தருளி யிருக்கிற ஸௌசீல்ய குணமுடைய
சீலத்து இராமாநுசா

எம்பெருமானாரே!
சொல்லுவது ஒன்று உண்டு

தேவரீரிடத்தில் அடியேன் விஞ்ஞாபிக்க வேண்டியவிஷயம் ஒன்றுண்டு
என்பு உற்ற நோய் உடல் தோறும்

எலும்பிலே உறைந்து நலியக் கூடிய வியாதிகளுக்கு இருப்பிடமான சரிரங்களிலெல்லாம்
பிறந்து இறந்து

பிறப்பதும் இறப்பதுமாகி
எண்ண அரிய துன்பு

எண்ண முடியாத துன்பங்களை யநுபவித்து
உற்ற வீயினாம்

முடிந்து போனாலும்
என்றும்

எல்லாக் காலங்களிலும்
எவ் இடத்தும்

எல்லா விடங்களிலும்
உன் தொண்டர்கட்கே

தேவரீருடைய பக்தர்கள் விஷயத்திலேயே
அன்பு உற்று இருக்கும்

பக்தனாயிருக்கும் படி
படி என்னை ஆக்கி

அடியேனைச் செய்தருளி
அங்கு

அந்த பக்தர்களிடத்தில்
ஆள் படுத்து

(அடியேனை) ஆட்படுத்தி யருள வேணும்;

(இதுவே அடியேனுடைய வேண்டுகோள்)

 

————-

அங்கயல் பாய் வயல் தென்னரங் கன், அணி ஆகமன்னும்
பங்கய மாமலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே! நந் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமா னுசனடிப் பூ மன்னவே.–108-

பதவுரை

நெஞ்சே

ஓ மனமே!
பக்தி எல்லாம் தங்கியது என்ன தழைத்து

பக்தி யெல்லாம் நம்மிடத்திலே குடி கொண்ட தென்று சொல்லும்படியாக வீறு பெற்று,
பொங்கிய கீர்த்தி இராமாநுசன் அடி பூ

பரந்த புகழை யுடையரான எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகள்
நம் தலைமிசையே மன்ன

நமது தலை மேலே நித்ய வாஸம் பண்ணும்படியாக,

(நாம் செய்ய வேண்டிய காரியம் என்னவென்றால்)

அம் கயல் பாய் வயல் தென் அரங்கன்

அழகிய கயல் மீன்கள் பாய்கிற கழனிகள் சூழ்ந்த தென்னரங்கத்தில் உறையும் பெருமானுடைய
அணி ஆகம் மன்னும்

அழகிய திருமார்பிலே நித்ய வாஸம் பண்ணுகிறவளாய்
பங்கயம் மா மலர் பாவையை

சிறந்த தாமரைப் பூவில் பிறந்த பதுமை போன்றவளான ஸ்ரீ மஹாலக்ஷ்மியை
போற்றதும்

வாழ்த்துவோம்.

***- இப்பிரபந்தத்தின் தொடக்கத்தில் “இராமாநுசன் சரணாவிந்தம் நாம் மன்னிவாழ” என்று எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளைப் பொருந்தி வாழ்வதே தமக்குப் பரம புருஷார்த்தமாக அருளிச் செய்தவராகையாலே அந்தப் புருஷார்த்தம் நமக்கு யாவஜ்ஜீவம் ஸித்திக்கும் படியாக -எல்லாச் செல்வங்களையும் அளிக்க வல்ல பெரிய பிராட்டியாரைப் பிரார்த்திப் போமென்கிறார்-முடிவான இப்பாட்டில். ஸாமாந்ய ஸம்பத்தை அளிக்க வல்ல பிராட்டியே இந்த விசேஷ ஸம்பத்தையும் அளிக்கக் கடவள் என்றதாயிற்று.

 

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி-45-77-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்

October 9, 2022

பேறொன்று மற்றில்லை நின் சரண் அன்றி,அப்பேறளித்தற்
காறொன்று மில்லை மற்றச் சரண் அன்றி,என்றிப்பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லால்
கூறும் பரமன்று இராமானுச! மெய்ம்மை கூறிடிலே–45-

பதவுரை

இராமாநுச

எம்பெருமானாரே!
நின் சரண் அன்றி

தேவரீருடைய திருவடிகளைத் தவிர
மற்று பேறு ஒன்றும் இல்லை

உபேயம் வேறொன்று மில்லை;
அப் பேறு அளித்தற்கு

தேவரீர்  திருவடிகளாகிற அந்த உபேயத்தைத் தருவதற்கு
அச் சரண் அன்றி

அத் திருவடிகள் தவிர
மற்று ஆறு ஒன்றும் இல்லை

வேறு உபாயம் ஒன்று மில்லை;
என்ற இப் பொருளை

என்கிற இவ் வுண்மைப் பொருளை

***-   உபாயமும் உபேயமும் எம்பெருமானார் திருவடிகளே’ என்றிருக்கும் மஹான்களுக்கும் தேவரீர் எவ்வாறு அருள் புரிகின்றதோ அவ்வாறாகவே சிறிதும் வாசி வையாமல் பாவியேனுக்கும் அருள் புரிகின்றதே! இஃது என்ன பெருங்குணம்!! த்ருட விச்வாஸ முடைய ஆழ்வான் ஆண்டான் போல்வாரை அடிமை கொள்வது போலவே அவிச்வாஸியான என்னையும் அடிமை கொள்வதே! இச் செம்மைக் குணத்தின் பெருமையைப் பாசுரமிட்டுச் சொல்ல எனக்கு சக்தி யில்லையே யென்று தடுமாறுகின்றார்.

—————

கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே
மாறன் பணித்த மறை யுணர்ந் தோனை மதியிலியேன்
தேறும் படியென் மனம் புதுந்தானைத் திசை யனைத்தும்
ஏறும் குணனை இராமானுசனை இறைஞ்சினமே.–46-

பதவுரை

கூறும் சமயங்கள் ஆறும் குலைய

மனம் போன படி சொல்லிக் கொண்டிருக்கிற ஆறு பாஹ்ய மதங்களும் தலைமடங்கும்படி
குவலயத்தே

இப் பூ மண்டலத்திலே
மாறன் பணித்த மறை

நம்மாழ்வார் அருளிச் செய்த தமிழ் வேதத்தை
உணர்ந்தோனை

கற்று அறிந்தவராயும்
மதியிலியேன் தேறும்படி

ஜ்ஞாநஹீகனான நானும் தெளியும்படியாக
என் மனம் புகுந்தானை

என் ஹ்ருதயத்தலே வந்து புகுந்தவராயும்
திசை அனைத்தும் ஏறும் குணனை

எல்லாத் திக்குக்களிலும் பரவிய திருக் குணங்களை யுடையவராயுமிருக்கிற
இராமாநுசனை

எம்பெருமானாரை
இறைஞ்சினம்

வணங்கினோம்.

***- எம்பெருமானார் செய்தருளின அரிய பெரிய உபகாரங்கள் நெஞ்சில் ஊற ஊற, பரவசராய்த் திருவடிகளிலே வணங்குகிறார்:- உலகத்தில் பிரமாணமில்லாமலும் யுக்தி யில்லாமலும் மனம் போனபடி சொல்லிக் கொண்டு திரிகிற மதாந்தரஸ்தர்களை யெல்லாம் பங்கப்படுத்துவதற்காக நம்மாழ்வார் அருளிச் செய்த தமிழ் வேதமானது திருவாய் மொழியை ஒதி யுணர்ந்தவரும், அவிவேகியான நான் கூடத் கேறுதலடையும்படி என் நெஞ்சினுள்ளே புகுந்து என் ஸக்தையை நோக்குபவரும், திசைகளெங்கும் பரவிய புகழை யுடையருமான எம்பெருமானாரை வணங்கினோமென்றாராயிற்று.

சமயங்கள் ஆறும் = தேஹாத்மவாதி; தேஹ பரீணுமாத்மவதி, விஜ்ஞாநத்மவாதி, சூந்யவாதி, அத்வைதவாதி, சிவபரத்வவாதி என்றிப்படி ஆறு மதஸ்தர்களுண்டு. வேறு வகைகளும் உண்டு எல்லா மதங்களும் திருவாய் மொழியில நெற்; செய்யப் புல் தேயுங் கணக்கிலே தொலைக்கப் பட்டனவென்க. குவலயம் – வடசொல், தோறும்படி – ‘ஒரு வழியாலும் நாம் உஜ்ஜீவிக்க வகையில்லையே! என்செய்வோம், என்று தடுமாறிக் கிடந்த நானாம் ‘இனி நமக்கொரு குறையுமில்லை’ என்று தேறி மார்விலே கை வைத்துறங்குபடியாக என்கை.

————–

இறைஞ்சப் படும் பரன் ஈசன் அரங்கனென்று இவ்வுலகத்
தறம் செப்பும் அண்ணல் இராமானுசன்,என் அரு வினையேன்
திறம் செற்றிரவும் பகலும் விடாதென்றன் சிந்தை யுள்ளே
நிறைந்தொப்பற விருந்தான், எனக்காரும் நிகரில்லையே!–47-

பதவுரை

இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று

‘எல்லாராலும் வணங்கத்தக்க பரதெய்வம் (எது வென்றால்) ஈசனாகிய ஸ்ரீரங்க நாதனேயாம்’ என்று
இ உலகத்து

இப் பூ மண்டலத்திலே
அறம் செப்பும்

ஸாக்ஷாத் தாமத்தை அருளிச் செய்யுமவராய்
அண்ணல்

ஸர்வ ஸ்வாமியான
இராமாநுசன்

எம்பெருமானார்
என் அரு வினையின் திறம் செற்று

என்னுடைய போக்க முடியாத கர்ம ஸமூஹத்தைப் போக்கி
பகலும் இரவும் விடாது

ஸர்வ காலத்திலும்
என் தன் சிந்தை

என் ஹ்ருதயத்தினாள்ளே
நிறைந்து

பரிபூர்ணராகி
ஒப்பு அற இருந்தான்

(இவ்விருப்புக்கு) ஒப்பில்லாதபடி எழுந்தருளி யிருக்கிறார்;
எனக்கு

இப்படிப்பட்ட அருளைப் பெற்ற  எனக்கு
ஆரும் நிகர் இல்லை

ஒப்பாவார் ஆருமில்லை.

***-   ஸ்ரீரங்கநாதனே எல்லாரும் வணங்கத்தக்க பரதெய்வமென்னும் உண்மையை உலகத்தார்க்கு உபதேசிந்து எல்லாரையும் பகவத் ஸமாச்ரயணத்தில் ருசியடையவர்களாக்கிப் போருகின்ற எம்பெருமானார் என்னுடைய தீவினைகளை வேரோடே களைந்தொழித்து அநவரதமும் எனது ஹருதயத்தினாள்ளே பரிபூர்ணரா யெழுந்தருளிரா நின்றார்; இப்படிப்பட்ட பரம பாக்கியம் பெற்றவன் இவ் வுலகில் நானொருவனேயாகையால் – இல்லை யெனக் கெதிரில்லை யெனக் கெதிரே.

————-

நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னரு ளின் கணன்றிப்
புகலொன்று மில்லை அருட்கு மஃ தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச! இனி நாம் பழுதே
அகலும் பொருளென், பயனிருவோமுக்கு மான பின்னே?–48-

பதவுரை

புன்மையிலோர் பருகம் பெருமை இராமாநுச

மஹான்கள் பேச வேண்டும்படியான பெருமையை யுடைய எம்பெருமானாரே!
நிகர் இன்றி நின்ற என் நீசதைக்கு

என்னுடைய ஒப்பற்ற தாழ்மைக்கு
நின் அருளின் கண் அன்றி

தேவரீருடைய க்ருபை யினிடத்தில் தவிர
புகல் ஒன்றும் இல்லை

வேறு எவ் விடத்திலும் ஒதுங்க இடமில்லை
அருட்கும்

தேவரீருடைய அந்த க்ருபைக்கும்
அஃதே புகல்

(என் போல்வாருடைய) அந்தத் தாழ்மையே சரணம்; (ஆக இவ் வகையாலே)
இருவோமுக்கும் பயன் ஆனபின்

அடியேனால் தேவரீருக்குப் பயன், அடியேனுக்குப் பயன் என்று ஸித்தமான பின்பு
இனி

இனி மேலும்
பழுதே

வியர்த்தமான
அகலும் பொருள் என்ன

பிரிந்திருக்கைக்குக் காரணம் என்ன?

***-  “எனக்காரும் நிகரில்லையே” என்று களித்துக் கூறின அமுதனாரை நோக்கி எம்பெருமானார் “இக் களிப்பு உமக்கு எத்தனை நாளைக்கு நிற்கும்? நான் உம்மை விட்டுவிடவுங் கூடும்; நீர் என்னை விட்டுவிடவுங் கூடும், இரண்டத் தொன்று நேர்ந்தால் இக் களிப்பு மாறக் கூடியது தானே” என்ன -; இனி நாம் வீணுக விட்டுப் பிரிவதற்குக் காரணமேயில்லை யென்கிறார்.

(“ததஹம் த்வத்ருதேந நாதவாந் மத்ருதே  த்வம் தயநீயவாந் நச-விதி நிர்மித மேதத்ந்வயம் பகவந் பாலய மாஸ்மஜீஹப:”) என்ற ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்ந ச்லோகமும் இப் பொருள் கொண்டதே.

அருட்கும் அஃதே புகல் = நீசர்கள் விஷயத்தில் க்ருபை பண்ணினாலன்றோ அருள் விளங்குவதும் பயன் பெறுவதும்.

————

ஆனது செம்மை அற நெறி பொய்ம்மை அறு சமயம்
போனது பொன்றி யிறந்தது வெங் கலி பூங்கமலத்
தேனதி பாய் வயல் தென்னரங்கன் கழல் சென்னி வைத்துத்
தானதில் மன்னும் இராமானுசனித் தலத் துதித்தே.–49-

பதவுரை

பூ கமலம்  தேன்

தாமரைப் பூக்களிலுண்டான மகரந்தமானது
நதி பாய்

ஆறாகப் பெருகப் பெற்ற
வயல்

கழனிகளையுடைய
தென் அரங்கன்

ஸ்ரீரங்கத்திலே எழுந்தருளி யிருக்கிற பெரிய பெருமாளுடைய
கழல்

திருவடிகளை
சென்னி வைத்து

சிரஸா வஹித்துக் கொண்டு
தான் அதில் மன்னும்

தாம் அத் திருவடிகளிலேயே  ப்ரவணா யிருக்கிற
இராமாநுசன்

எம்பெருமானார்
இ தலத்து உதித்து

இப் பூமியிலே திருவவதரித்ததனால்
செம்மை அறம் நெறி

ருஜூவான தர்ம மார்க்கமானது
ஆனது

ஸத்தை பெற்றது;
பொய்ம்மை அறு சமயம்

பொய்யே நிறைந்து கிடக்கிற அறு சமயங்களும்
பொன்றி போனது

நாசமடைந்தன;
வெம் கலி இறந்தது

கொடிய கலியுகமும் மாண்டது

 

***- எம்பெருமானார் திருவவதரித்தனாலே இவ் வுலகத்துக்கு உண்டான நன்மைகளை அருளிச் செய்கிறார்  இதில்.  முன்பு குத்ருஷ்டிகளினால் அழிந்து கிடந்த தர்ம மார்க்கம் மீண்டு நிலை பெற்றது;  சாஸ்த்ர விருத்தமான புற மதங்களெல்லாம் தலை சாய்ந்தன; கலி தோஷமும் கெட்டுப் போயிற்று.

 

————-

உதிப்பன வுத்தமர் சிந்தையுள் ஒன்னலர் நெஞ்ச மஞ்சிக்
கொதித்திட மாறி நடப்பன கொள்ளை வன் குற்றமெல்லாம்
பதித்த வென் புன் கவிப் பா வினம் பூண்டன பாவு தொல் சீர்
எதித் தலை நாதன் இராமானுசன் றன் இணை யடியே.–50-

பதவுரை

பரவு தொல் சீர்

உலகமெங்கும் பரவின நித்ய கலயாண குணங்களை யுடையவரும்
எதி தலை நாதன்

யதிகளுக்குத் தலையான நாயகருமான
இராமாநுசன் தன்

எம்பெருமானாருடைய
இணை அடி

திருவடி யிணைகள்

(எப்படிப் பட்டவை யென்றால்)

உத்தமர் சிந்தையுள் உதிப்பன

உத்தமாதிகாரிகளுடைய திருவுள்ளங்களிலே ப்ரகாசிப்பவை;
ஒன்னலர் நெஞ்சம்

பிரதிபக்ஷிகளுடைய நெஞ்சானது
அஞ்சி கொதித்திட

பயப்பட்டுப் பரிதவிக்கும்படி
மாறி நடப்பன்

மாறி மாறி யிட்டு நடக்குந் தன்மை யுடையன;
கொள்ளை வன்  குற்றம் எல்லாம் பதித்த

அபாரமான வலிய தோஷங்கள் யாவும் அழுந்திக் கிடக்கிற
என் புன் கவி

என்னுடைய க்ஷுத்ரமான  கவனமாகிய
பா இனம் பூண்டன

பாசுரங்களைப் (ஸ்தோத்ரமாகப்) பெற்றுக் கொண்டவை.

***-    தமக்குப் பரம ப்ராப்யமான எம்பெருமானார் திருவடிகளை வருணிக்கிறார் இதில் வடுக நம்பி போல்வாரான உத்தமாதிகாரிகளாலே இடைவிடாது சிந்திக்கப்படுவன; பிரதிபக்ஷிகளுடைய நெஞ்சிலே பரீதாபத்தை உண்டுபண்ணுவன; பல்வகைக் குற்றங்கள் நிறைந்த எனது கவிகளையும் ஏற்றுக் கொள்வன – அத்திருவடிகள், என்றாராயிற்று.

ஒன்னவர் நெஞ்ச மஞ்சிக் கொதித்திட மாறி நடப்பன – பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரஸிப்பதற்காதப் பல விடங்களிலும் ஸஞ்சரித்தருளினமை அறிக. மாறி நடத்தல் – ஒரு அழகான நடை. நம்பெருமாள் நடை போலே.

————-

அடியைத் தொடர்ந்தெழும் ஐவர்கட்காய் அன்று பாரதப் போர்
முடியப் பரி நெடுந் தேர் விடுங் கோனை முழுதுணர்ந்த
அடியர்க் கமுதம் இராமானுச னென்னை ஆள வந்திப்
படியிற் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே.–51-

பதவுரை

அன்று

முற் காலத்தில்
அடியை தொடர்ந்து

திருவடிகளை அவலம்பித்து
எழும்

செருக்கிக் கிளர்ந்த
ஐவீர்கட்கு ஆய்

பஞ்ச பாண்டவர்களுக்காக (பக் ஷபாதம் பூண்டு)
பாரதப் போர்

பாரத யுத்தத்திலே
முடிய

(துரியோதநாதிகள்) மாளும் படியாக
பரி நெடு தேர்

குதிரை பூண்ட பெரிய தேரை
விடும்

நடத்தின
கோனை

ஸர்வேஸ்வரனை
முழுது உணர்ந்த

(ஸ்வரூப ஸ்வபாவங்களில் ஒன்றுங் குறையாதபடி) பூர்த்தியாகத் தெரிந்து கொண்ட
அடியார்க்கு

பாகவதர்களுக்கு
அமுதம்

பரம போக்யமான
இப் படியில்

இப் பூ மண்டலத்தில்
வந்து பிறந்தது என்னை ஆள

வந்து அவதரித்தது  (எதற்காக வெனில்) அடியேனை ஆட் கொள்ளுகைக்காகவேயாம்;

***- பார்த்திடில் மற்று காரணம் இல்லை    –    ஆராய்ந்து பார்க்குமளவில் இது தவிர வேறொரு காரணமில்லை.

—————–

பார்த்தான் அறு சம யங்கள் பதைப்ப,இப் பார் முழுதும்
போர்த்தான் புகழ் கொண்டு புன்மையினே னிடைத் தான் புகுந்து
தீர்த்தான் இரு வினை தீர்த் தரங்கன் செய்ய தாளிணையோ
டார்த்தான் இவை யெம் இராமா னுசன் செய்யும் அற்புதமே.–52-

பதவுரை

(எம்பெருமானாரானவர்)

அறு சமயங்கள்

(வேத பாஹ்யங்களான) ஆறு சமயங்கள் துடிக்கும் படியாக
பதைப்ப பார்த்தான்

திருக் கண் செலுத்தினார்;
இப் பார் முழுவதும்

இப் பூமண்டலம் முழுவதையும்
புகழ் கொண்டு

தமது கீர்த்தியினாலே
போர்த்தான்

மூடி விட்டார்;
புன்மையினேனிடை

நீசனான அடியேன் பக்கலிலே
தான் புகுந்து

தாமாகவே (நிர்ஹேதுக க்ருபையினால்) வந்து புகுந்து
இரு வினை

பெரிய பாவங்களை
தீர்த்தான்

போக்கி யருளினார்;
தீர்த்து

பாவங்களைப் போக்கினது மன்றியில்
அரங்கன்

ஸ்ரீ ரங்கநாதனுடைய
செய்ய தாள் இணையோடு ஆர்த்தான்

அழகிய திருவடிகளோடே (என்னை)அந்வயிப்பித்தார்;
இவை

ஆகிய இக் காரியங்களெல்லாம்
எம் இராமாநுசன் செய்யும் அற்புதம்

எமக்கு ஸ்வாமியான எம்பெருமானார் செய்தருளின ஆச்சரியச் செயல்களாம்

***-  எம்பெருமானாருடைய ஆச்சரியமான சில செயல்களை எடுத்துக் கூறுகின்றார்:-சாகயர் உலூக்யர் பௌத்தர் சார்வாகர் பாசுபதர் காணுதர் என்றிப்படி சொல்லப்படுகிற புற மதத்தவர்களை யெல்லாம் நடுங்கச் செய்தார்; இப் பூ மண்டலமெங்கும் தமது திருப் புகழே பரவும்படி செய்தார்; ஆத்ம குணமொன்றில்லாத என்னுடைய ஹ்ருதயத்திலே புகுந்து என் பாவங்களைப் போக்கி அழகிய மணவாளனாடைய  பாதங்களிலே என்னை ஆச்ரயிக்கச் செய்தார்; இப் பூமண்டலமெங்கும் தமது திருப்புகழே பரவும்படி  செய்தார்; ஆத்ம குணமொன்றில்லாத என்னுடைய ஹ்ருதயத்திலே பகுந்து என் பாவங்களைப் போக்கி அழகிய மணவாளனாடைய  பாதங்களிலே என்னை ஆச்ரயிக்கச் செய்தார்; இப்படியாக எம்பெருமானார் செய்தருளுமவை யெல்லாம் மிக அற்புதமானவை.

—————

அற்புதன் செம்மை இராமானுசன், என்னை ஆள வந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய
பற் பல் லுயிர்களும் பல்லுலகி யாவும் பரன தென்னும்
நற் பொருள் தன்னை, இந் நானிலத்தே வந்து நாட்டினனே.–53-

பதவுரை

என்னை ஆள வந்த

என்னை ஆட் கொள்வதற்காக அவதரித்த
கற்பகம்

உதாரரும்
கற்றவர் காமூது சீலன்

ஞானிகள் ஆசைப்படும் படியான சீல குணத்தை யுடையவரும்
அற்புதன்

ஆச்சரிய சேஷ்டிதங்களை யுடையரும்
செம்மை

ருஜூவாயிருக்குந் தன்மை பொருந்திய வருமான
இராமாநுசன்

எம்பெருமானார்,
கருத அரிய பல் பல் உயிர்களும்

நினைக்கவும் முடியாத படி எண்ணிறந்திருக்கிற ஆத்ம வர்க்கங்களும்
பல் உலகு யாவும்

அவ் வாத்மாக்களுக்கு இருப் பிடமான) அளவிறந்த எல்லா வுலகங்களும்
பரனது என்னும் நல் பொருள் தன்னை

எம்பெருமானுடைய ஸொத்துக்களாம் என்கிற ஸாரர்த்தத்தை
இ நானிலேததே

இவ் வுலகத்திலே
வந்து

வந்தவதரித்து
நாட்டினன்

ஸ்தாபித்தருளினார்.

***- எம்பெருமானார் மதாந்தரங்களைக் கண்டித்து நிலை நாட்டிய ஸித்தாந்தம் இன்னதென்கிறார்.- சிறந்த ஞானிகளனைவரும் கொண்டாடுதற்குரிய திருக் குணங்களையும் அதிமாநுஷ வ்யாபாரங்களுக்கு இருப்பிடமாயுள்ள ஸகல லோகங்களும் ஸ்ரீமந் நாராயணனாக்கே உரிமைப்பட்டவை” என்கிற பரமார்த்தத்தை நிலை நாட்டியளினர் என்கை.

உலகு- யாவும், உலகியாயும்; “யவ்வரீனிய்யாம்” என்பது நன்னூல் விதி.

————–

நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன, நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது,தென் குருகை வள்ளல்
வாட்டமிலா வண் டமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமா னுசன்றன் இயல்வு கண்டே.–54-

பதவுரை

மண் உலகில் ஈட்டிய சீலத்து இராமாநுசன் தன்

இப் பூலோகத்தில் மேன் மேலும் திரட்டிக் கொண்ட சீல குணத்தை யுடையரான எம்பெருமானாருடைய
இயல்வு

ஸ்வபாவத்தை
கண்டு

பார்த்து,
நாட்டிய நீச சமயங்கள் மாண்டன

(துஷ்ட யுக்திகளாவே) நிலை நிறுத்தப் பட்டிருந்த ஷூத்ர மதங்களெல்லாம் ஒழிந்தன;
நாரணனை காட்டிய

ஸ்ரீமந் நாராயணனைப் பிரதிபாதிக்க
வேதம்

வேதங்களானவை
களிப்பு உற்றது

(நமக்கு இனி ஒரு குறையுமில்லை யென்று) செருக்கடைந்தன;
தென் குருகை வள்ளல்

அழகிய திருக்குருகூரில் அவதரித்த உதாரரான ஆழ்வார் (அருளிச்; செய்த)
வாட்டம் இலா

ஒரு குறையுமற்ற
வண் தமிழ் மறை

சிறந்த தமிழ் வேதமான திருவாய்மொழி
வாழ்ந்தது

வாழ்வு பெற்றது.

***- சிங்கத்தைக் கனவில் கண்டாலும் ஸாமன்ய மிருகங்கள் நசித்தொழியும்; அவற்றைக் கொல்லுவதற்காகச் சிங்கம் ஒரு முயற்சி  செய்யவேண்டா அதுபோல, இவ்வுலகில் கிளர்ந்து கிடந்த பாஹ்ய குத்ருஷ்டி மதங்களைத் தொலைப்பதற்காக எம்பெருமானார் ஒரு பிரயத்நமும் எடுத்துக் கொள்ள வில்லை; அவை மாளவே ஸ்ரீ மந் நாராயண பரங்களான வேதங்களின் ஸாரமாகிய அருளிச் செயல்களும் பொலிவு பெற்று ஒங்கின – என்றாராயிற்று.

—————–

கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென்னரங்கன்
தொண்டர் குலாவும் இராமானுசனைத், தொகை யிறந்த
பண்டரு வேதங்கள் பார் மேல் நிலவிடப் பார்த்தருளும்
கொண்டலை மேவித் தொழும், குடியா மெங்கள் கோக்குலமே.–55-

பதவுரை

தொகை இறந்த

கணக்கில்லாத
பண் தரு வேதங்கள்

ஸ்வர ப்ரதாநங்களான வேதங்கள்
பார்  மேல்

இப் பூமியிலே
நிலவிட

ஒங்கி வளரும்படி
பார்த்தருளும்

செய்தருளினவரும்
கொண்டலை

பரம உதாரரும்,
கண்டவர் சிந்தை கவரும்

கணடவர்களின் நெஞ்சைக் கவர்கின்ற
கடி பொழில்

மண மிக்க சோலைகள் சூழ்ந்த
தென் அரங்கன்

தென்னரங்கத்திற்குத் தலைவரான பெரிய பெருமாளுக்கு அடிமைப் பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களால்
குலாவும்

கொண்டாடப் படுபவருமான
இராமாநுசனை

எம்பெருமானாரை
மேலி கொழும் குடி

பொருந்தி ஆச்ரயிக்கிற குலம்
எங்கள் கோக்குலம் ஆம்

எங்களுக்கு ஸ்வாமியாகக் கூடிய குலமாம்.

***- எம்பெருமானாரை அடி பணிந்து உஜ்ஜீவிக்கும் மஹான்கள் தாம் அடியேனை ஆள்வற்கு உரியவர்கள் என்றாராயிற்று ஸ்ரீ ராமாநுஜ பக்தர்களுக்கு அடியேன் தாஸனாயிருப்பேன் என்றாவது

இராமாநுனை மேவித் தொழுங்குடி எங்கள் கோக்குலமாம் ஸ்ரீ எம்பெருமானாரன்று எமக்கு ஸ்வாமி; அவரை ஆச்ரயிப்பவர்களே எமக்கு ஸ்வாமிகள்.

கோ என்பதற்கு மேன்மை யென்றும் பொருள் உண்டாதலால், எங்கள் கோக்குலம் – எங்களுடைய மேன்மையான குலம் (எப்படிப்பட்டதென்றால்), இராமாநுசனை மேவித் தொழுங்குடியாம் -, என்பதாகவும் உரைக்கலாம். “எங்கள் கோக் குடியே” என்றும் பாட முண்டு; பொருள் ஒன்றே.

———-

கோக்குல மன்னரை மூவெழுகால், ஒரு கூர்மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனமெங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமா னுசனை அடைந்த பின், என்
வாக்குரை யாது, என் மனம் நினை யாதினி மற்றொன்றையே.–56–

பதவுரை

கோக்குலம் மன்னரை

க்ஷத்திரிய குலத்து அரசர்களை
மூ எழு கால்

இருபத்தொரு தலைமுறை யளவும்
ஒரு கூர் மழுவால்

கூர்மை பொருந்திய ஒரு மழுவாலே
போக்கிய

(பரசுராமாவதாரத்தில்) தொலைத்தருளின
தேவனை

எம்பெருமானை
போற்றம்

துதிக்கின்ற
புனிதன்

பரம பரிசுத்தரும்,
புவனம் எங்கும் ஆக்கிய கீர்த்தி

உலகமெங்கும் பரவின புகழை யுடையவருமான
இராமாநுசனை

எம்பெருமானாரை
அடைந்த பின்

ஆச்ரயித்த பின்பு
இனி

மேலுள்ள காலமெல்லாம்
மற்று ஒன்றை

வேறு எந்த விஷயத்தையும்
என் வாக்கு

எனது வாக்கானது
உரையாது

சொல்ல மாட்டாது;
என் மனம்

எனது மனமும்
நினையாது

நினைக்க மாட்டாது.

***- அடைந்ததற்பின் வாக்குரையாது என் மனம் நினையாது” என்றும் பாடமுண்டாம்.

—————-

மற்றொரு பேறு மதியாது, அரங்கன் மலரடிக் காள்
உற்றவரே தனக் குற்றவ ராய்க் கொள்ளும் உத்தமனை
நற்றவர் போற்றும் இராமா னுசனை யிந் நானிலத்தே
பெற்றனன் பெற்ற பின் மற்றறி யேனொரு பேதைமையே.–57-

பதவுரை

மற்று ஒரு பேறு

ப்ரயோஜநாந்தரங்களை
மதியாது

கணிசியாமல்
அரங்கன் மலர் அடிக்கு

அழகிய மணவாளனாடைய திருவடித் தாமரைகளுக்கு
ஆள் உற்றவரே

அடிமை பட்டவர்களையே
தனக்கு உற்றவர் ஆ

தமக்கு ஆத்ம பந்துக்களாக
கொள்ளும்

திருவுள்ளம் பற்றுகிற
உத்தமனை

உத்தம புருஷராயும்
நல் தவர் போற்றும்

ப்ரபந்நர்களாலே புகழப் பட்டவராயு மிருக்கிற
இராமாநுசனை

எம்பெருமானாரை
,நானிலத்தே பெற்றனன்

இந்த லோகத்திலே அடியேன் ஆச்ரயிக்கப் பெற்றேன்;
பெற்ற பின்

ஆச்ரயித்த பின்பு
மற்று ஒரு பேதைமை அறியேன்

(வேறு விஷயங்களை விரும்புகை முதலிய) எவ்வித அஜ்ஞான கார்யமும் அறிய மாட்டேன்

***-  “இனி என் வாக்குரையாது, என் மனம் நினையாது மற்றொன்றை” என்று எப்படி நீர் சொல்லக் கூடும்? இருள் தருமா ஞாலத்தில் இருக்கிறீராகையாலே அவிவேகம் வந்து மூடிக் கொள்ள எத்தனை நாழிகை செல்லும்? என்று சிலர் கூற, எம்பெருமானாரை இந்த லோகத்திலே நான் ஆச்ரயித்தேனான பின்பு இனியொரு நாளும் அவிவேகியாக ஆக மாட்டேனென்கிறார்.

நல் தவர் போற்றும் –ப்ரபத்தி யாகிற நல்ல தபஸ்ஸைக் கைப்பற்றின வர்களாலே போற்றப் படுவர்.

————–

பேதையர் வேதப் பொருளிதென் னுன்னிப் பிரமம் நன்றென்
றோதி மற் றெல்லா உயிரும் அஃதென்று உயிர்கள் மெய் விட்
டாதிப் பரனொடொன்றா மென்று சொல்லுமவ் வல்ல லெல்லாம்
வாதில் வென்றான், எம் இராமா னுசன் மெய்ம் மதிக் கடலே.–58-

பதவுரை

பேதையர்

(வேதத்தைப் பிரமாணமாகக் கொள்ளாத) அவிவேகிகள்
இது வேதப் பொருள் என்ற உன்னி

நாங்கள் சொல்லுகிற இது தான் வேதத்தின் அர்த்தம்’ என்று நிரூபித்துக் கொண்டு
பிரமம் நன்று என்று ஒதி

ப்ரப்ரஹமமான எவ்லாவற்றிலும் விலஷணம்’  என்று சொல்லி
மற்று எல்லா உயிரும் அஃது என்று

அந்தப் ப்ரஹ்மந் தவிர மற்ற எல்லா ஜீவ ராசிகளும் அந்த ப்ரஹமமே’ என்று சொல்லி
உயிர்கள் மெய்விட்டு

‘ஜீவாத்மாக்கள் தேஹத்தை விட்ட பின்பு
ஆதி பரனொடு ஒன்று ஆம் என்று சொல்லும் அவ் அல்லல் எல்லாம்

ஸர்வ காரண பூதுனான பரம புரஷனோடே ஐக்கியத்தை யடைகின்றன’  என்று சொல்லுகின்ற அந்த கோலாஹலங்களையெல்லாம்.
மெய்  மதி கடல்

தத்வ ஜ்ஞாநக் கடலாகிய
எம் இராமாநுசன்

ஸ்வாமி எம்பெருமானார்
வாதில் வென்றான்

வாதத்தில் நிரஸித்து வெற்றி பெற்றார்.

***-  எம்பெருமானார் குத்ருஷ்டிகளின் குத்ஹிதமான வாதங்கனைக் கண்டித்த படிகளில் ஒருபடியைச் சொல்லி ஈடுபடுகிறார். சில மூர்க்கர்கள் தாங்கள் சொல்லுவதே வேதங்களின் உண்மையான பொருள் என்று கொக்கரித்துக்  கொண்டு அபார்த்தங்களைப் பிதற்றுவர்கள்.பர ப்ரஹமம் ஸர்வ லிலக்ஷணம்; ஜீவாத்மாக்களெல்லாம் பர ப்ரஹ்மத்தில் ஒர் பகுதி; இப்போது உபாதியினால் வெவ்வேறாகத் தோன்றுகின்றன; அவ் வுபாதி கழிந்த பின் ஜீவாத்மாக்கள் பர ப்ரஹ்மத்தோடு ஒற்றுமை அடைந்து விடுகின்றன என்று மூர்க்கர் பிதற்றும் பிதற்றல்களை யெல்லாம் தத்வ ஜ்ஞான நிதியான எம்பெருமானார் வாதத்தில் கண்டித்து உண்மைப் பொருளை ஸ்தாபித்து வெற்றி பெற்றாரென்கிறது.

பிரமம் – ப்ரஹமம் என்ற வடசொல் விகாரம் உயிர்கள் மெய் விட்டு ஆதிப் பரனொடு ஒன்றாம் = ஜீவரத்மாககள் பர ப்ரஹ்மத்தோடு ஐக்கியப்படுவது தான் மோக்ஷம் என்று குத்ருஷ்டிகள் உபபாதிப்பார்கள்; “தத் த்வமஸி” என்றும் “ப்ரஹ்ம வேத ப்ரஹ்மை பவதி” என்றுமுள்ள வேத வாக்கியங்களுக்கு இப்படி அபார்த்தம் பண்ணுவார்கள். வென்றான்  என்பதை வினை முற்றாகக் கொள்ளாமல் வினையாலணையும் பெயராகக் கொண்டு வாதில் வென்றவராகிய எம்பெருமானார், மெய்ம் மதிக் கடல் ஸத்ய ஜ்ஞாந ஸமுத்ரமா யிருப்பவர் என்று முடிப்பதாக வுரைத்தலுமாம்.

——————

கடலள வாய திசை யெட்டி னுள்ளும் கலி யிருளே
மிடை தரு காலத் திராமா னுசன், மிக்க நான் மறையின்
சுடரொளி யாலவ் விருளைத் துரத்திலனேல் உயிரை
உடையவன், நாரணன் என்று அறிவார் இல்லை உற்றுணர்ந்தே.–59-

கடல் அளவு ஆய திசை எட்டினுள்ளும்

நான்கு ஸமுத்ரங்களை எல்லா விடங்களிலும்
கலி இருளே மிடை தரு காலத்து

கலி புருஷனாகிற அந்த காரமே நெருங்கிக் கிடந்த காலத்தில்
இராமாநுசன்

எம்பெருமானார் (திருவவதரித்து)
நால் மறையின்

நான்கு வேதங்களின்
மிக்க சுடர் ஒளியால்

அளவற்ற தேஜஸ்ஸைக் கொண்டு
அவ்விருளை துரந்திலனேல்

அந்த கலி தோஷத்தைப் போக்கி யிராமற் போனால்
உயிரை உடையவன் நாரணன் என்று

‘எல்லா ஆத்மாக்களுக்கும் சேஷி ஸ்ரீமந் நாராயணனே என்று
உற்று உணர்ந்து

யாரும் தெரிந்து கொண்டிருக்க மாட்டார்கள்.

***- என்னப்பனிராமாநுசன் திருவலதரித்து வேதார்த்தங்களை விளங்கக் காட்டியருளா விடில் இவ்வுலகமனைத்தும் அஜ்ஞாந மயமாகவே கிடக்கும்; தைவாதீநமாக என்னப்பன் திருவவதரித்து எங்கும் வியாபித்துக் கிடந்த கலிபுருஷனுடைய தோஷங்களைத் தொலைத்து வேதச் சுடர் விளக்கேற்றி அஜ்ஞாநாந்தகாரங்களைப் போக்கடிக்கவே எல்லாரும் ஸ்ரீமந் நாராயணனே ஸர்வ சேஷி யென்கிற பர மார்த்தத்தைத் தெரிந்து உய்வு பெறலாயிற்று என்றார்.

மிடைதருதல் – நெருங்கியிருத்தல் இடைவிடாது எங்கும் பரவியிருத்தல்.

————-

உணர்ந்த மெய்ஞ் ஞானியர் யோகந் தொறும்,திரு வாய் மொழியின்-
மணந் தரும் இன்னிசை மன்னும் இடந் தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணந் திகழ் கொண்டல் இராமானுசனெங் குலக்கொழுந்தே.–60–

பதவுரை

குணம் திகழ்

ஆத்ம குணங்களால் விளங்குபவரும்
கொண்டல்

(ஔதார்யத்தில்) காள மேகத்தை ஒத்த வரும்
எம் குலம் கொழுந்து

எங்கள் குலத்துக்குத் தலைவருமான
இராமாநுசன்

எம்பெருமானார்

(எங்கே எழுந்தருளியிருப்பரென்றால்)

உணர்ந்த மெய் ஞானியர் யோகம் தொறும்

கற்றுணர்ந்த தத்வ  ஞானிகளுடைய கோஷ்டிகளெங்கும்
திருவாய் மொழியின் மணம் தரும் இன் இசை மன்னும் இடம் தொறும்

திருவாய் மொழியினுடைய பரிமளம் மிக்க இனிய இசையுள்ள இடங்களெங்கும்
மா மலராள் புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும்

பிராட்டி நித்ய வாஸம் பண்ணுகிற அழகிய மார்பை யுடைய திருமால் எழுந்தருளி யிருக்கிற திவ்ய தேசங்களெங்கும்
புக்கு நிற்கும்

எழுந்தருளி யிருப்பார்.

***- ஞானம் தலை யெடுத்த மஹான்களுடைய திரள் எங்கெங்கும் இருக்கின்றதோ அங்கெல்லாம் எழுந்தருளி யிருப்பவரும். திருவாய்மொழியின் பரம போக்யமான இசை எங்கெங்கு நிகழ்கின்றதோ அங்கெல்லாம் ஸேவை ஸாதிப்பவரும் ஸ்ரீ யபதியான ஸர்வேச்வரன் எங்கெங்கு ஸந்நிதாநம் பண்ணுகிறாறோ அந்தத் திருப்பதிகளெங்கும் புகுந்து நிற்பவருமான எம்பெருமானார் அஸ்மத் குல கூடஸ்தர்கிறாராயிற்று.

———–

கொழுந்து விட் டோடிப் படரும் வெங் கோள் வினை யால்,]நிரயத்
தழுந்தி யிட் டேனை வந் தாட் கொண்ட பின்னும், அரு முனிவர்
தொழுந் தவத்தோனெம் இராமானுசன் தொல் புகழ் சுடர் மிக்
கெழுந்தது,அத்தால் நல்லதிசயங் கண்ட திரு நிலமே.–61–

பதவுரை

அருமுனிவர் தொழும்

அருமையான நிஷ்டையை யுடைய மஹான்களாலே மஹான்களாலே ஸேவிக்கப் பெற்றவராயும்
தவத்தோன்

ப்ரபத்தியாகிற தபஸ்ஸை யுடையவராயு மிருக்கிற
எம் இராமாநுசன்

ஸ்வாமி எம்பெருமானாருடைய
தொல் புகழ்

நித்யமான கல்யாண குணங்கள்
கொழுந்து விட்டு ஒடி படரும் வெம்கோள் வினையால்

மேன் மேலும் அதிகமாகப் பெருகுகின்ற க்ரூரமாய்ப் பரப்லமான துஷ் கர்மத்தாலே
நிரயத்து அழுந்தி யிட்டேனை

ஸம்ஸாரமாகிற நரகத்திலே அழுந்திக் கிடந்த என்னை
வந்து ஆள் கொண்ட பின்னும் சுடர் மிக்கு எழுந்தது

வந்து ஆட்படுத்திக் கொண்ட பின்பும் ஒளி குன்றாதே  முன்னிலும் விசேஷமாக விளங்கா நின்றன:
அத்தால்

அதைக் கண்டு
இரு நிலம்

விசாலமான இப் பூமண்டலம்
நல்ல அதிசயம் கண்டது

மிக்க ஆச்சரியங் கொண்டது.

***- எம்பெருமானாருடைய குணங்கள் மஹா பாபியான என்னை ஆட்படுத்திக் கொண்டவளவோடு த்ருப்தி பெற்று விடமால் இப்படிபட்ட பாபிகள் இன்னும் யாரேனும் கிடைப்பாருண்டோ? கிடைப்பாருண்டோ? என்று இன்னமும் நாக்கு நீட்டிக் கிளர்ந்து செல்லுகின்றன – என்றும் கருத்தாகும்.

————-

இருந்தேன் இரு வினைப் பாசம் கழற்றி இன்றி யான் இறையும்
வருந்தேன் இனி யெம் இராமானுசன்,மன்னு மா மலர்த்தாள்
பொருந்தா நிலை யுடைப் புன்மை யினோர்க் கொன்றும் நன்மை செய்யாப்
பெருந் தேவரைப் பரவும், பெரியோர் தம் கழல் பிடித்தே.–62-

பதவுரை

எம் இராமாநுசன்

ஸ்வாமி எம்பெருமானாருடைய
மன்னா மா தாள் மலர் பொருந்தா நிலை உடை புன்மையினோர்க்கு

சிறந்த திருவடித் தாமரைகளில் சேராத ஸ்வபாவத்தை யுடையவர்களான  நீசர் களுக்கு
ஒன்றும் நன்மை செய்ய

ஒரு விதமான உபகாரமும் செய்யாத
பெரு தேவரை

பெரிய பெருமாளை போற்றுகின்ற
பெரியோர் தம்

ஆழ்வானாகிற மஹானாடைய
சுழல் இன்று பிடித்து

திருவடிகளை இன்று ஆச்ரயித்தேனானபின்பு
இரு வினை பாசம் கழற்றி இருந்தேன்

புண்ணியம் பாவமென்று இரண்டு வகையான கரும பாசங்களினின்று விடுபட்டவனானேன்;
யான்

இப்படி நிர்மலனாகப் பெற்ற அடியேன்
இனி இறையும் வருந்தேன்

இனி மேல் கொஞ்சங்கூட வருத்தப் பட்ட மாட்டேன்.

***- ஸ்ரீ ராமநுஜ பக்தர்களான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே ஸர்வ ஸ்வதாநம் பண்ண வல்ல பெரிய பெருமாளைப் போற்றா நின்ற கூரத்தாழவானை அடைந்து உஜ்ஜீவித்த அடியேனுக்கு இனி ஒரு வருத்தமும் வினையக் காரணமில்லை யென்று தம்முடைய க்ருதக்ருத்யத்வத்தைக் கூறினாராயிற்று.

இருவினைப் பாசங்கழற்றி = பாவம் போலலே புண்ணியமும் பரகதிக்குப் பிரதிபந்தகம் என்பதை உணர்க. பாவம் இரும்பு விலங்கென்றும் புண்ணியம் பொன் விலங்கென்றும் சாஸ்திரங்கள் கூறும்.

—————–

பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கிய சீர்
அடியைத் தொடரும் படி நல்க வேண்டும் அறு சமயச்
செடியைத் தொடரும் மருள் செறிந் தோர் சிதைந் தோட வந்திப்
படியைத் தொடரும் இராமா னுச! மிக்க பண்டிதனே!–63-

பதவுரை

அறுசமயம் செடியை தொடரும் மருள் செறிந்தோர்

பாஹ்யமான ஆறு மதங்களாகிற தூறுகளிலே படிவதற்குக் காரணமான அவிவேகம் நிறைந்த மூடர்கள்
சிதைந்து ஒட

பங்கமடைந்து வெருவி ஒடும்படியாக
வந்து இப்படியை தொடரும்

இப் பூமியிலே வந்து அவதரித்து (நம்போல் வாரை விஷயீகரிப்பதற்குப்) பின் தொடர்கின்ற
மிக்க பண்டிதன்

மஹா பண்டிதரான
இராமாநுச

எம்பெருமானாரே!,
பிடியை தொடரும் களிறு என்னயான்

யானைப் பேடையைப் பின்பற்றித் திரிகின்ற ஆண் யானை போல
யான்

அடியேன்
சீர்  பிறங்கிய உன் அடியை தொடரும்படி நல்க வேண்டும்

ஸௌந்தரியம் முதலிய குணங்கள் விளங்குகின்ற தேவரீரது திருவடிகளைப் பின் பற்றும்படி கிருபை செய்தருள வேணும்.

***- ஸ்வாமி! யானையானது தன் பேடையினிடத்துப் பெருங்காதல் கொண்டு அதனையே பின் பிற்றித் திரிவது போல் அடியேன் தேவரீருடைய அழகிய திருவடிகளையே அளவற்ற அபிநிவேசத்தோடு அநுவர்த்தித்துச் செல்லும் படியாக அருள் புரிய வேணுமென்று வேண்டினாராயிற்று.

—————-

பண்டரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம் மெய்ம்மை
கொண்ட நல் வேதக் கொழுந் தண்ட மேந்திக் குவலயத்தே
மண்டி வந் தேன்றது வாதியர் காள்! உங்கள் வாழ்வற்றதே -64–

பதவுரை

எங்கள் இராமநுச முனி வேழம்

எங்களுக்கு விதேயமான ஸ்ரீராமாநுஜ முனியாகின்ற மத்த கஜமானது.
மாறன்

நம்மாழ்வார்
பண்

இசைகளாலே
தரு

அருளிச் செய்த
பசுந்தமிழ் ஆனந்தம்

செந்தமிழான திருவாய்மொழியில் விளைந்த ஸந்தோஷம்
பாய் மதம் ஆய் விண்டிட

பெருகு மத நீராக ஒழுகப் பெற்று
மெய்ம்மை கொண்ட நல் வேதம் கொழு தண்டம் ஏந்தி

ஸத்திய வாதியான நல்ல வேதமாகிற பெரிய தடியைத் தூக்கிக் கொண்டு
குவலயத்தே

இப் பூமண்டலத்திலே
மணடி வந்து என்றது

உங்களுடைய பிழைப்பு
உங்கள் வாழ்வு அற்றது

உங்களுடைய பிழைப்பு போயிற்று

***- குத்ஹிதவாகங்கள் பண்ணுகிற துர்வாதிகளே! இனி நீங்கள் பிழைக்க வழியில்லை யென்று நிச்சயித்துக் கொள்ளுங்கள்;

ஏன் என்கிறீர்களோ; எம்பெருமானாரென்னும் ஒரு மதயானை யானது உங்களைப் புடைப்பதாகப் பெரிய தடியை யெடுத்துக் கொண்டு எதிரிட்டு வாரா நின்றது; இதற்குத் தப்பிப் பிழைக்க உங்களாலாகாது-என்கிறார்.

யானைக்கு மத நீர் பெருகுமே; இந்த ஸ்ரீராமாநுஜ கஜராஜனாக்கு எது மதநீர் என்ன; முதலடியிற் கூறுகிறார். திருவாய் மொழியின் அறுபவத்தாலுண்டான ஆநந்த ரஸேமே இந்த கஜராஜனாக்கு மதநீர்ப் பெருக்காம். இதனால்,எம்பெருமானார் எப்போதும் திருவாய் மொழியை அநுபவித்துக் களிப்புறுவர் என்றதாகிறது.

————

வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர் தம்
தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது, தத்துவ நூல்
கூழற்றது குற்ற மெல்லாம் பதித்த குணத்தினர்க்கந்
நாழற்றது,நம் இராமா னுசந் தந்த ஞானத்திலே.–65-

பதவுரை

நம் இராமாநுசன்

ஸ்வாமிஎம்பெருமானார்
தந்க ஞானத்தில்

அருளின ஞானத்தினால் துர்வாதிகளுக்கு வாழ்ச்சி அற்றுப் போயிற்று;
மறையவர் தம் தாழ்வு

வைதிகர்களுடைய குறை
என்றும் அற்றது

இனி ஒருநாளும் இல்லாதபடியாயிற்று
தாரணி

பூமண்டவமானது
தவம் பெற்றது

பாக்கியம் பெற்றது;
தத்துவம் நூல்

தத்வபரமான சாஸ்திரங்கள்
கூழ் அற்றது

ஸந்தேஹமற நிச்சயமான பொருளைத் தெரிவிப்பவையாயின;
குற்றம் எல்லாம்பதித்த குணத்கினர்க்கு

பலவகைக் குற்றங்களும் நிறைந்த ஸ்வபாவத்தையடைய ஜனங்களுக்கு
ஆ நாழ் அற்றது

அந்தக் குற்றங்கள் தீர்ந்தன;

***- எம்பெருமானார் இவ்வுலகில் அவதரித்து உபதேசாதி முகத்தாலே உண்டாக்கின தத்துவ ஞானத்தால் பலித்த அம்சங்கள் எவையென்றால்; துர்வாதிகளுடைய வாழ்வு மாண்டது; வைதிகர்களுக்கு இருந்த ஸங்கடங்கள் அற்றுப் போயின; பூ மண்டலம் மஹா பாக்யம் பெற்றது; தத்வ சாஸ்த்ரங்களில் எவ்விதமான ஸந்தேஹமும்  உண்டாகாதபடி நிச்சய ஞானமே உண்டாயிற்று; பாவிகளின் பாவங்களெல்லாம் தொலைந்து போயின; ஆகிய இவை எம்பெருமானார் அருளிச் செய்த தத்துவ ஞானத்தின் பயனாகத் தேறினவை – என்றாராயிற்று.

தொல்லை வாதியர் = வைதிகர் தாம் அநாதியாக வுள்ளவர்; துர்வாதிகளும் அநாதியாக உண்டோவெனில்; பயிருள்ள போதே தொடங்கிக் களையுமுண்டாவதுபோல, பாஹ்யர் குத்ருஷ்டிகள் என்கிற வாதிகளும் பழையராகவே யுண்டென்க.

தரணி என்ற வடசொல் தாரணி யென நீட்டல் விகாரம் பெற்றது. கூழ்-ஸந்தேஹம் நாழ் – குற்றம்.

—————-

ஞானம் கனிந்த நலங்கொண்டு நாடொரும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில்
ஈனம் கடிந்த இராமா னுசன் தன்னை எய்தினர்க்குத்
தானம் கொடுப்பது தன் தக வென்னும் சரண் கொடுத்தே.–66-

பதவுரை

மாதவன்

திருமால்
வானம் கொடுப்பது

மோக்ஷம் அளிப்பது

(எப்படிப் பட்டவர்களுக்கு கென்றால்)

ஞானம்  கனிந்த நலம் கொண்டு நாள் தொறும் நைபவர்க்கு

ஞானம் பக்தி ரூபமாகப் பரீபக்வமாகி அந்த பக்தியினால் நித்யம் உருகுகிறவர்களுக்கேயாம்;
வல் வினையேன் மனத்தில் ஈனம் கடிந்த இராமாநுசன்

மஹா பாபியான எனது ஹ்ருதயத்திலிருந்த கல்மஷங்களைப் போக்கடித்த எம்பெருமானார்
தன்னை எய்தினர்க்கு

தம்மைப் பற்றினவர்களுக்கு
அத்தானம் கொடுப்பது

அந்த மோக்ஷ ஸ்தானத்தை அளிப்பது
(எவ்விதமாக வென்றால்)

தன் தகவு என்னும் சரன் கொடுத்து

தம்முடைய க்ருபையாகிற ஸாதனத்தை (அவர்களுக்குக் கைம் முதலாகக் கொடுத்து (தமது திவ்ய க்ருபையாலே)

***- அடியார்களுக்கு மோக்ஷமளிக்கிற அதிகாரம் எம்பெருமானாக்குமுண்டு, எம்பெருமானார்க்கு முண்டு. எம்பெருமான் அளிப்பது மிகவும் ச்ரமப்படுத்தியே; எம்பெருமானார் அளிப்பது கேவலம் தம்முடைய திருவருளாலே என்கிறார் இதில்.

ஞானமாது நன்றாகக் கனிந்து அது பக்தி பரமபக்தி பரமபக்தி என்னும்படியான அவஸ்தை களை யடைந்து, அதனால் இந்த ஸம்ஸாரத்தில் க்ஷணகால மிருப்பதும் அஸஹ்யமாய் ஆழ்வார்களைப்போல “{ஒரு பகலாயிணரமூழியாலோ’ என்று துடிப்பவர்களுக்குத்தான்; எம்பெருமான் முக்தியளிப்பது;

எம்பெருமானாரோ வென்னில் –க்ருபா மாத்ர ப்ரஸந்நாசார்யராகையாலே அடியார்களிடத்தில் எவ்விதமான க்லேசத்தையும் எதிர்பாராமல் தமது திருவருளைக் கொண்டே அவர்களைக் கரையேற்றுவர் என்றதாயிற்று.

வல் வினையேன் மனத்திலீனங்கடிந்த என்பதற்கு – மாதவனை அடி பணிந்து வருந்துகையாகிற ஈனத்தை எனக்குத் தவிர்த்த எம்பெருமானார் என்று உரைக்கவுமாம்.

—————-

சரணம் அடைந்த தருமனுக்காப்,பண்டு நூற்றுவரை-
மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரணவை யுமக் கன்றென்றி ராமானுச னுயிர்கட்கு
அரணங் கமைத்திலனேல், அரணார் மற்றிவ் வா ருயிர்க்கே?-67-

பதவுரை

சரணம் அடைந்த தருமனாக்கு ஆ

தன்னைச் சரணம் பற்றின தர்ம புத்ரருக்காக
பண்டு

முற்காலத்திலே
நூற்றுவரை

துரியோதனன் முதலிய நூறு பேர்களை
மரணம் அடைவித்த மாயவன்

சாகும்படி செய்த எம்பெருமான்
தன்னை வணங்க வைத்த கரணம் இவை

தன்னை வழிபடுவதற்காகவே எற்படுத்தி வைத்த இந்திரியங்களாம் இவை;
உமக்கு அன்று

உங்களுக்கு உரிமைப் பட்டவையல்ல;
என்று

என்று இவ்வாறாக உபதேசித்து
இராமாநுசன்

எம்பெருமானார்
உயிர்கட்கு

ஆத்மாக்களுக்கு
அரண் அமைத்திலன் எல்

ரக்ஷையைக் கற்பித்தில ராகில்
,ஆர் உயிர்க்கு

இந்த அருமையான ஆத்மாக்களுக்கு
மற்று அரண் ஆர்

வேறு ரஷகராவார் ஆர்? (ஆருமில்லை.)

————-

ஆரெனக் கின்று நிகர்ச் சொல்லில் மாயன் அன்று ஐவரைத் தெய்வத்
தேரினிற் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினிற் சொன்ன இராமானுசனைப் பணியும் நல்லோர்
சீரினிற் சென்று பணிந்தது, என்னாவியும் சிந்தையுமே.–68–

பதவுரை

மாயன்

ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடைய எம்பெருமான்
அன்று

முற் காலத்தில்
ஐயர்

பஞ்ச பாண்டவர்களுடைய
தெய்வம் தேரினில்

தெய்வத் தன்மை பொருந்திய தேரின் மீது (இருந்து கொண்டு)
செப்பிய

அருளிச் செய்த
கீதையின்

பகவத் கீதையினுடைய
செம்மை பொருள்

ஸ்வ ரஸமான அர்த்தத்தை
தெரிய

(அனைவரும் எளிதாகத்)தெரிந்து கொள்ளும் படி
பாரினில்

இப் பூமிலே
சொன்ன

(கீதா பாஷ்ய முகத்தாலே) அருளிச் செய்த
இராமாநுசனை

எம்பெருமானாரை
பணியும்

ஆச்ரயித்திருக்கும்
நல்லோர்

விலக்ஷண புருஷர்களுடைய
சீரினில்

கல்யாண குணங்களிலே
என் ஆவியும் சிந்தையும்

எனது ஆத்மாவும் மநஸ்ஸூம்
சென்று பணிந்தது

சென்று சேர்ந்து விட்டன;
சொல்லில்

சொல்லுமளவில்
இன்று

இக் காலத்தில்
எனக்கு ஆர் நிகர்

எனக்கு ஆர் ஒப்பாவார்?

————

சிந்தையி னோடு கரணங்கள் யாவும் சிதைந்து,முன்னாள்
அந்தமுற் றாழ்ந்தது கண்டு,இவை என்றனக் கன்றருளால்
தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து
எந்தை இராமானுசன் வந் தெடுத்தனன் இன்றென்னையே–69-.

பதவுரை

முன் நாள்

ஸ்ருஷ்டிருக்கு முற் காலத்தில்
சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து

சிந்தையும் இந்திரியங்களு மெல்லாம் அழிந்து
அந்தம் உற்று ஆழ்ந்தது கண்டு

உப ஸமஹாரத்தை யடைந்து அசேதந ப்ராயமா யிருப்பதைப் பார்த்து
என் தனக்கு

(அப்படி அசேதந ப்ராயராய்க் கிடந்தவர்களில் ஒருவனான) எனக்கு
அவை

அந்தக் கரண களேபரங்களை
அன்று

அக் காலத்தில்
அருளால் தந்த அரங்கனாம்

க்ருபையாலே உண்டாக்கின எம்பெருமானாம்
தன்  சரண் தந்திலன்

தனது திருவடிகளைக் காட்டிக் கொடுத்து உஜ்ஜீவிப்பிக்க வில்லை;

(அக்குறை நீங்க)

எந்தை இராமாநுசன்

ஸ்வாமி எம்பெருமானார்
தான் வந்து

தாமாகவே வந்து
அது தந்து

அந்தத் திருவடிகளைத் தந்தருளி
இன்று என்னை எடுத்தனன்

இன்று என்னை ஸம்ஸாரத்தில் நின்றும் உத்தரிப்பித்தார்.

—————

என்னையும் பார்த்தென் இயல்வையும் பார்த்து,எண்ணில் பல் குணத்த
உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் அன்றி யென்பால்
பின்னையும் பார்க்கில் நலமுளதே?உன் பெருங்கருணை
தன்னை யென் பார்ப்பர் இராமானுச! உன்னைச் சார்ந்தவரே?–70-

பதவுரை

இராமா நுச

எம்பெருமானாரே!
என்னையும் பார்த்து

(ஒரு குணமில்லாமல் குற்றமே நிறைந்திருக்கிற) என்னையும் நோக்கி
என் இயல்வையும் பார்த்து

(இனி மேலும் எவ்வித நன்மையும் ஸம்பாதித்துக் கொள்ள முடியாமலிருக்கிற) என்னுடைய தன்மையையும் நோக்கி
எண இல் பல் குணத்த உன்னையும் பார்க்கில்

எண்ணிறந்த பல திருக் குணங்களை யுடைய தேவரீரையும் நோக்கு மனவில்
அருள் செய்வதே நலம்

( எப்போதும்) அருள் செய் திருப்பதே நல்லது;
அன்றி

இதுவொழிய மேலும் ஆராயுமளவில்
என் பால் நலம் உளதே

என்னிடத்தில் ஏதாவது நன்மை யுண்டோ? (சிறிதும் இல்லை)

(நன்மை யொன்று மில்லாவிடில் நாம் அருள் செய்யலாகாதென்று திருவுள்ளம் பற்றினால்)

உன்னை சார்ந்தவர்

தேவரீரை ஆச்ரயித்தவர்கள்
உன் பெரும் கருணை தன்னை என் பார்ப்பர்

தேவரீருடைய கிருபையைப் பற்றி என்ன நினைப்பர்கள்?) இளப்பமாக நினையார்களோ.)

————–

சார்ந்த தென் சிந்தையுன் தாளிணைக் கீழ்,அன்பு தான் மிகவும்
கூர்ந்ததத் தாமரைத் தாள்களுக்கு உன்றன் குணங்களுக்கே
தீர்ந்ததென் செய்கை முன் செய்வினை நீ செய் வினையதனால்
பேர்ந்தது வண்மை இராமானுச! எம் பெருந்தகையே.–71-

பதவுரை

வண்மை

ஔதார்ய முடையரும்
எம்

எமக்கு ஸ்வாமியும்
பெரு தகை

பெருந் தன்மை யுடையருமான
இராமாநுசா

எம்பெருமானாரே! எனது நெஞ்சு
உன் தாள் இணை கீழ் சார்ந்தது அன்புதான்

தேவரீருடைய உபய பாதங்தளின் கீழ் அமர்ந்து விட்ட பக்தியும்
அத் தாமரை தாள்களுக்கு

அந்தத் திருவடித் தாமரைகள் விஷயத்திலேயே
மிகவும் கூர்ந்தது

மிகவும் அதிகரித்தது.
என் செய்கை

எனது செயலும்
உன் தன் குணங்களுக்கே தீர்ந்தது

தேவரீருடைய திருக் குணங்களுக்கே அற்றுத் தீர்ந்தது;
முன் செய் வினை

முன்னே செய்த பாவங்களெல்லாம்
நீசெய் வினை அதனால் பேர்ந்தது

தேவரீர் செய்தருளின் (கடாக்ஷமாகிற) காரியத்தாலே தொலைந்து போயின.

———————

கைத்தனன் தீய சமயக் கலகரைக் காசினிக்கே
உய்த்தனன் தூய மறை நெறி தன்னை,என்றுன்னி யுள்ளம்
நெய்த்தவன் போடிருந் தேத்தும் நிறை புக ழோருடனே
வைத்தனன் என்னை இராமானுசன் மிக்க வண்மை செய்தே.–72-

பதவுரை

இராமாநுசன்

எம்பெருமானார்
மிக்க வண்மை செய்து

தமது ஒளதார்ய குணத்தை அதிகமாகக் காட்டி,
தீய சமயம கலகரை

தீய மதங்களி லிருந்து கொண்டு கலஹஞ் செய்கிறவர்களை
கைத்தனன்

ஒழித்து விட்டார்;
தூய

பரிசுத்தமான
முறை நெறி தன்னை

வேத மார்க்கத்தை
காசினிக்கு உய்த்தனன்

பூமியிலே ஸ்தாபித்தருளினார்;
என்று உன்னி

என்று அநுஸந்தித்து
உள்ளம் நெய்த்து

நெஞ்சு கனிந்து
அவ்வன் போடு இருந்து

அந்த ப்ரிதியோடே கூடி யிருந்து
ஏத்தும்

(அவரை) ஸ்தோத்ரம் பண்ணுகிற
நிறை புகழோரருடனே

புகழ் நிறைந்த மஹான்களோடே
என்னை வைத்தனன்

(என்னையும் ஒருவனாக எண்ணும்படி) என்னை வைத்தருளினார்.
நிறைபுகழோருடனே வைத்தனன்:

அஸத்தக்களோடே பழகிக் கிடந்த என்னை ஸத்துக்களோட கூட்டி வைத்தார் என்னவுமாம்.

—————-

வண்மையினாலுந் தன் மாதக வாலும் மதி புரையும்
தண்மையினாலுமித் தாரணி யோர்கட்குத் தான் சரணாய்
உண்மை நன் ஞானம் உரைத்த இராமா னுசனையுன்னும்
திண்மை யல்லா லெனக் கில்லை, மற்றோர் நிலை தேர்ந்திடிலே.–73-

பதவுரை

தன் வண்மையினாலும்

தம்முடைய ஔதார்ய குணத்தாலும்
மா தகவாலும்

பரம க்ருபையாலும்
மதி புரையும் தண்மையினாலும்

சந்திரனை யொத்த திருவுள்ளக் குளிர்ச்சியாலும்
இத் தரணியோர்கட்கு

இப் பூமியிலுள்ளவர்களுக்கு தாமே ரஷகராய்க் கொண்டு
உண்மை நல் ஞானம் உரைத்த இராமாநுசனை

யதார்த்தமாய் விலக்ஷணமான ஞானத்தை உபதேசிக்கிற எம்பெருமானாரை
உன்னும் திண்மை அல்லால்

சிந்கிப்பதாகிற அத்யவஸாய மொன்று தவிர
தேர்ந்திடில்

ஆராயமளவில்
எனக்கு மற்று ஒர் நிலை இல்லை

அடியேனுக்கு வேறெரு அத்யவஸாய மில்லை.

 

————–

தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக்
கூராழி கொண்டு குறைப்பது கொண்டல் அனைய வண்மை
ஏரார் குணத்தெம் இராமானுச னவ் வெழில் மறையில்
சேரா தவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே.–74-

பதவுரை

மறையின்  திறம் தேரார் என்று

(இப்பாலிகள்) வேதஞ் சொல்லிகிற வழியை நிரூலித்திகிற தில்லையென்று
தீயவரை

பாவிகளை
மாயவன்

எம்பெருமான்
குறைப்பது

தண்டிப்பது
கூர் ஆழி கொண்டு

கூர்மையான தனது திருவாழியாலே;
கொண்டல் அனையவண் மை

மேகம்போன்ற ஔதார்யகுண முடையவரும்
ஏர் ஆர் குணத்து

(மற்றும்) பல நல்லகுணங்களுடையவருமான
எம் இராமாநுசன்

ஸ்வாமி எம்பெருமானார்
அ எழில் மறையில் சேராதவரை சிதைப்பது

அந்த சிறந்த வேதத்தில் அந்வயியாதவர்களே பங்கப் படுத்துவது (எப்படி யென்றால்)

***- எம்பெருமான் தனது ஆஜ்ஞா ரூபமான வேதங்களின் கட்டளைப்படி நடவாத கொடியவர்களைத் தனது திருவாழியைக் கொண்டு த்வம்ஸம் பண்ணி விடுவன்; எம்பெருமானாரோ வென்னில் அவ்வளவு ஆயாஸம் எடுத்துக் கொள்வதில்லை; வேதங்களை அடியோடு ஒப்புக் கொள்ளாத பாஹ்யர்களையும்,வேதங்களைப் பிரமாணமாக ஒப்புக் கொண்டு அவற்றில் அபார்த்தங்களைப் பண்ணுகிற குத்ருஷ்டிகளையும் வாதப் போரில் அப்போதப்போது திருவுள்ளத்தில் ஸ்புரிக்கின்ற நல்ல யுக்கிகளைக் கொண்டு கண்டித்து விடுவர் என்கை.

—————

செய்த் தலைச் சங்கம் செழு முத்தம் ஈனும் திருவரங்கர்
கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி,நங் கண் முகப்பே
மெய்த் தலைத் துன்னை விடேனென் றிருக்கிலும் நின் புகழே
மொய்த் தலைக் கும் வந்து இராமா னுச! என்னை முற்று நின்றே.–76-

பதவுரை

செய் தலை

வயல்களில்
சங்கம்

சங்குகளானவை
செழு திரு முத்தம்

அழகிய முத்துக்களை
ஈனும் திரு அரங்கர்

உண்டாக்கு மிடமான திரு அரங்க

மா நகரில் எழுந்தருளி யிருக்கும் பெருமாள்

கைத் தலத்து

தமது திருக் கையிலே
ஆழியும் சங்கமும் எந்தி

திரு வாழி திருக் கையிலே தரித்துக் கொண்டு
நம் கண் முகப்பே

நமது கண்ணெதிரில்
மொய்த்து

வந்து நெருங்கி
அலைத்து

புத்தியைக் கெடுத்து
உண்னை விடேன் என்று இருக்கிலும்

உன்னை விட மாட்டேன் என்று இருந்தாலும்
இராமாநுசா

எம்பெருமானரே
நின் புகழே

தேவரீருடைய திவ்ய குணங்களே
என்னை வந்து முற்றம் மொய்த்து  நின்று

என் பக்கல் வந்து சூழ்ந்து கொண்டு
அலைக்கும்

ஆகர்ஷிக்கின்றன

***- எம்பெருமான் தனது விலக்ஷணமான அழகைக் காட்டிக் கொண்டு வந்து என் கண்னெதிரே நின்றாலும், என்னை விடாதே வலியப் பற்றினாலும் அவனது அழகில் நான் மோஹிக்கப் பெறுவதில்லை; தேவரீருடைய திருக் குணங்களே என்னை ஈடுபடுத்துகின்றன பகவத் குணங்களை நான் ஈடுபடுவதில்லை; தேவருடைய திருக் குணங்களே என்னை ஈடுபடுத்துகின்றன. பகவத் குணங்களுக்கு நான் ஈடுபடுவதில்லை யென்றாராயிற்று.

“செய்த் தலைச்சங்கம் செழுமுத்த மீனாம்” என்கிற விசேஷணம்-திருவரங்கர் என்பதன் பகுதியாகிய திருவரங்கத்தில் அந்வயிக்கும். திருவரங்கம் எப்படிப்பட்ட தென்றால், முத்துக்களை யுதிர்க்கும் சங்குகள் நிறைந்த வயல் சூழ்ந்தது என்றவாறு. ஈனாதல்-பிரஸவித்தல்.

————–

ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக் குறும்பைப்
பாய்ந்தனன் அம் மறைப் பல் பொருளால்,இப்படி யனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியி னாலென் வினைகளை வேர் பறியக்
காய்ந்தனன் வண்மை இராமா னுசற்கென் கருத்தினியே?–77-

பதவுரை

ஈயாத

(இதற்கு முன்பு ஒருவர்க்கும்) அருளாத
இன் அருள்

விலக்ஷணமான க்ருபையை
ஈந்தனன்

அடியேனுக்குச் செய்தருளின வரும்
எண் இல் மறை குறும்பை

எண்ணிறந்த      வேத விரோதிமதங்களை
அம்மறை பல்பொருளால் பாய்ந்தனன்

அந்த வேதங்களின் அர்த்தங்களையே கொண்டு கண்டித்தவரும்
கீர்த்தியினால்

தமது கீர்த்தியாலே
இப்படி அனைத்தும் எய்ந்தனன்

இப்பூமியெங்கும் வியாபித்தவரும்
என் வினைகளை

எனது கருமங்களை
வேர்பறியகாய்ந்தனன்

வேரோடே அரும் படி போக்கினவரும்
வண்மை

ஔதார்யமே வடிவு கொண்ட வருமான
இராமாநுசற்கு

எம்பெருமானார்க்கு
இனி என் கருத்து

இன்னமும் (செய்யத்தக்கதாகத்) திருவுள்ளத்தில் ஏதேனா முண்டோ?

***- கீழ்ப்பாட்டில் தாம் அபேக்ஷித்தபடியே திருவருளைத் தந்தருளப் பெற்று, க்ருத க்ருத்ய ராய், அவர் செய்தருளின உபகாரங்களை அநுஸந்தித்து, இவை யெல்லாம் செய்த பின்பு இன்னமும் செய்தருள்வதாகத் திருவுள்ளம் பற்றிருப்பது எதுவோ என்கிறார்.

மறைக்குறும்பாவது- வேதத்திற்கு மாறாகச் சொல்லும் தப்புப் பொருள்கள். ஈந்தனன் பாய்த்தனன், எய்ந்தன், காய்ந்தனன், என்பவற்றை வினைமுற்றாகலே கொண்டு உரைத்தலுமாம்.

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –