அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக்கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல் இராமாநுசன்.
அரங்கன்செய்ய தாளிணைகள் பேர்வின்றிப் பெறுத்தும் இரர்மாநுசன்
அரங்கன் மலரடிக்கு ஆள் உற்றவரே தனக்கு உற்றவராய்க் கொள்ளும் உத்தமன் இராமாநுசன்.
அருமுனிவர் தொழுந்தவத்தோன் இராமாநுசன்
அருள்சுரந்தெல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும் பொருள் சுரந்த இராமா நுசன்.
அற்புதன் செம்மை இராமாநுசன்.
அறம்சீறும் உறுகலியைத்துரக்கும் பெருமை இராமாதுசன்
அறுசமயச் செடியைத் தொடரும் மருள்செறிந்தோர் சிதைந்தோடவந்து
இப்படியைத்தொடரும் இராமாநுசன்.
இராமாயணமென்னும் பத்திவெள்ளம் குடிகொண்ட கோயில் இராமாநுசன்.
இருள்கொண்ட வெந்துயர்மாற்றித் தன்னீறில் பெரும்புகழே தெருளும் தெருள்தந்த இராமாநுசன்
இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கனென்று இவ்வுலகத்து அறஞ்செப்பும்
அண்ணல் இராமாநுசன்
இன்புற்ற சீலத்து இராமாநுசன்.
ஈட்டிய சீலத்து இராமா நுசன்.
ஈன்கவிகளன் பால் மயல்கொண்டுவாழ்த்தும் இராமாநுசன்.
உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகந்தொறும்புக்குநிற்கும் குணந்திகழ்கொண்டல்
இராமா நுசன்.
உணீர்வின் மிக்கோர் தெரியும் வண்கீர்த்திஇராமாநுசன்.
உண்மைநன் ஞானமுரைத்த இராமாநுசன்.
உயிர்கள் மெய்விட்டு ஆதிப்பரனோடொன்றாமென்று சொல்லுமவ்வல்லலெல்லாம் வாதில்வென்ற இராமாநுசன்.
உலகோர்களெல்லாம் நண்ணருஞானம் தலைக்கொண்டுநாரணற்காமாறுவந்த
அண்ணல் இராமாநுசன்.
ஊழி முதல்வனையே பன்னப்பணித்த இராமாநுசன்
எண்ணருஞ்சீர் நல்லார் பரவும் இராமாநுசன்.
எனக்குற்ற செல்வம் இராமாநுசன்.
ஒள்ளிய நுல் கற்றார் பரவும் இராமாநுசன்.
காசினியோர் இடரின்கண் வீழ்ந்திடத்தானும் அவ்வொண்பொருள்கொண்டு அவர்பின்படருங்குணன் இராமாநுசன்.
கார்கொண்ட வண்மை இராமாநுசன்.
காரேய்கருணை இராமாநுசன்.
கீதையின் செம்மைப்பொருள் தெரியப் பாரினில் சொன்னஇராமாநுசன்.
கீர்த்திப்பயிரெழுந்து விளைந்திடும் சிந்தை இராமாநுசன்.
குறையல் பிரானடிக்கீழ்விள்ளாத அன்பன் இராமாநுசன்.
கொண்டலனையவண்மை ஏரார்குணத்து இராமாநுசன்.
கொல்லிகாவலன் சொல்பதிக்கும் கலைக்கவிபாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமாநுசன்.
கொள்ளக்குறைவற்றிலங்கிக் கொழுந்துவிட்டோங்கிய வள்ளல் இராமாநுசன்.
சடகோபனைச் சிந்தையுள்ளே பெய்தற்கிசையும் பெரியவர் சீரை உயிர்களெல்லாம்
உய்தற்குஉதவும் இராமாநுசன்
சலியாப்பிறவிப் பவம்தரும் தீவினைபாற்றித்தரும் இராமாநுசன்.
சீரரங்கத்து ஐயன் கழற்கணியும் பரன்தாளன்றி ஆதரியாமெய்யன் இராமாநுசன்.
சீலங்கொள்நாதமுனியை நெஞ்சால் வாரிப்பருகும் இராமாநுசன்
செம்மைநூற் புலவர்க்கு எண்ணருங்கீர்த்தி இராமாநுசன்.
செறுகலியால் வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்தெடுத்தளித்த அருந்தவன் இராமாநுசன்.
ஞானமென்னும் நிறைவிளக்கேற்றிய பூதத்திருவடித்தாள்கள் நெஞ்சத்து உறையவைத்தாளும் இராமாநுசன்,
தண்டமிழ்செய்தநீலன்தனக்கு உலகில் இனியான் இராமாநுசன்.
தமிழ்த்தலைவன் பொன்னடி போற்றும் இராமாநுசன்,
தவம்தரும் செல்வும்தகவும்தரும் தீதிலிராமாநுசன்.
தன்னை எய்தினர்க்குத் தன்தகவென்னும் சரண்கொடுத்து வானம் கொடுக்கும்
திக்குற்ற கீர்த்தி இராமா நுசன்.இராமாநுசன்.
திசையனைத்தும் ஏறும்குணன் இராமாநுசன்.
திருவாய்மொழியின் மணந்தரும் இன்னிசை மன்னும் இடந்தொறும்
புக்குநிற்கும் குணம்திகழ் கொண்டல் இராமாநுசன்.
துயரகற்றி உயக்கொண்டு நல்கும் இராமாநுசன்.
தெரிவுற்ற கீர்த்தி இராமாநுசன்
தென்குருகைப்பிரான் பாட்டென்னும் வேதப்பசுந்தமிழ்தன்னை தன்பத்தியென்னும் வீட்டின்கண்வைத்த இராமாநுசன்.
தென்னத்தியூரர் கழலிணைக்கீழ்பூண்ட அன்பாளன் இராமாநுசன்.
தென்னரங்கன் கழல் சென்னிவைத்துத் தானதில் மன்னும் இராமாநுசன்
தென்னரங்கள் தொண்டர் குலாவும் இராமாநுசன்
நம் தலைமிசையே பொங்கிய கீர்த்திஇராமாநுசன்.
நல்தவர் போற்றும் இராமாநுசன்.
நல்லன்பர் மனத்தகத்தே எப்போதும் வைக்கும் இராமாநுசன்.
நல்வேதியர்கள் தொழுந்திருப்பாதன் இராமாநுசன்.
நினைவார் பிறவியை நீக்கும் பிரான் இராமாநுசன்.
பண்டருமாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாயமதமாய் விண்டிட
மெய்ம்மைகொண்ட நல்வேதக் கொழுந்தண்டமேந்திக் குவலயத்தே மண்டிவந்தேன்ற இராமாநுசன்.
பரந்தாம மென்னும் திவந்தரும் தீதில் இராமாநுன்,
பல்கலையோர் தாம்மன்னவந்தஇராமாநுசன்.
பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன்தாள் பேராதஉள்ளத்து இராமாநுசன்.
பல்லுயிர்க்கும் விண்ணின்தலைநின்று வீடளிப்பான் இராமாநுசன்
பழியைக்கடத்தும் இராமாநுசன்
பாரதப்போர் முடியப் பரிநெடுந்தேர் விடுங்கோனை முழு துணர்ந்த அடியர்க்கு அமுதம் இராமாநுசன்.
பாவு தொல்ர் எதித்தலை நாதன் இராமாநுசன்.
ின்னைதன் காதலன்பாதம் நண்ணாவஞ்சர்க்கரிய இராமாநுசன்
புகழ்ப்பாண்பெருமாள் சரணாம்பதுமத்தாரியல் சென்னி இராமாநுசன்
புண்ணியர்தம் வாக்கில் பிரியா இராமாநுசன்.
புவனமெங்கும் ஆக்கியகீர்த்தி இராமாநுசன்.
புன்மையிலோர் பகரும்பெருமை இராமாநுசன்
பூமன்னுமாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த பாமனது
மாறன் அடிபணிந்துய்ந்த இராமாநுசன்.
பெருவினையைக் கிட்டிக்கிழங்கொடு தன்னருளென்றும் ஒள்வாளுருவி வெட்டிக்களைத்த இராமாநுசன்.
பொய்கைப்பிரான் மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ்தன்னையும் கூட்டி ஒன்றத்திரித்தன்றெரித்த திருவிளக்கைத்
தன் திருவுள்ளத்தே இருந்தும் பரமன் இராமாநுசன்
பொய்தவம்போற்றும் புலைச்சமயங்கள் நிலத்தவியக்
கைத்த மெய்ஞானத்து இராமா நுசன்.
பொய்யைச்சுரக்கும் பொருளைத்துறந்து இந்தப்பூதலத்தே
மெய்யைப் புரக்கும் இராமாநுசன்.
பொருவரும் சீர் ஆரியன் செம்மை இராமாநுசன்.
பொன்னரங்க மென்னில் மயலேபெருகும் இராமாநுசன் .
போற்றரும் சீலத்து இராமாநுசன்
மழிசைக்கிறைவன் இணையடிப்போது அடங்குமிதயத்து இராமாநுசன்
மன்பல்லுயிர்கட்சிறைவன் மாயனெனமொழிந்தஅன்பன் அனகன் இராமாநுசன்.
மாமலரான்புணர்ந்தபொன்மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்குநிற்கும் குணந்திகழ்கொண்டல் இராமாநுசன்
மாயவன் தன்னை வணங்கவைத்தகரணம் உமக்கன்றென்று
உயிர்கட்கு அரணமைத்த இராமாநுசன்.
மிக்கநான்மறையின் சுடரொளியால் கலியிருளைத்துறந்த இராமாநுசன்.
யமுனைத்துறைவன் இணையடியாம் கதிபெற்றுடைய இராமா நுசன்.
வலிமிக்கசீயம் இராமாநுசன் கலிமிக்க செந்நெல் கழளிக்
குறையல் கலைப்பெருமான் ஒலிமிக்கப்பாடலை உண்டு உள்ளந் தடித்து அதனால் வலிமிக்கசீயம் இராமாநுசன்.
வாணன் பிழைபொறுத்த தீர்த்தனையேத்தும் இராமாநுசன்.
வாமனன் சீலன் (வாமன துல்ய சீலன்)
வேதத்தின் உச்சிமிக்கசோதியை நாதனென அறியாது உழல்கின்ற தொண்டர்பேதமை தீர்த்த இராமா நுசன்.
வைகுந்தம், வேங்கடம், மாலிருஞ்சோலை தன்னொம்
மாயன் வந்திருப்பிடம் இராமாநுசன்.
——————————————-
மணவாளமாமுன்களின் திருவடிகளைப் பணிந்து உய்ந்தவரான எறும்பியப்பாவின் பெருமையைச் சொல்லவந்த ஒரு ச்லோகம் உலகில் ப்ரஸித்தமானது; அதாவது -“சடரிபுரேக ஏவ கமலாபதிதிவ்ய கவி: மதுரகவிர் யதா ச சடஜிந்முநிமுக்க்யகவி:, யதிகுலபுங்கவஸ்ய புவி ரங்கஸுதா கவிராட் வரவரயோகிநோ வரதராஜகவிச் ச ததா.’ என்பதாம். இதன் பொருள் யாதெனில், திருமகள் கொழு னான ஸர்வேச்வரனைக் கலிபாடித் துதித்தவர்களுள் நம்மாழ்வார் எப்படி சிறப்புப் பெற்றவரோ, அந்த நம்மாழ்வாரைக் கவிபாடித் துதித்தவர்களுள் ஸ்ரீ மதுரகவிகள் எப்படி சிறப்புப் பெற்றவரோ, எம்பெருமானாரைக் கவிபாடித் துதித்தவர்களுள் திருவரங்கத்தமுதனார் எப்படி சிறப்புப்பெற்றவரோ, அப்படியே மணவாளமாமுனிகளைக் கவிபாடித் துதித்தவர்களுள் எறும்பியப்பா சிறப்புப் பெற்றவர் என்பதாம். உண்மையில், எம்பெருமானாருடைய திருக்குணங்களைப் புகழ்ந்து பேசப்பிறந்த நூல்களுள் திருவரங்கத்தமுதனார் திருவாய்மலர்ந்தருளிய இராமானுச நூற்றந்தாதிக்கு இணையானது எதுவுமில்லையென்று சபதமிட்டுரைப்பர் பெரியோர். சொல்நோக்கும் பொருள்நோக்கும் தொடைநோக்கும் நடைநோக்குமாகிய எந்நோக்கும் மிக அற்புதமாக வன்றோ நூற்றந்தாதியில் அமைந்துள்ளது.
ஆழ்வான் ஆண்டான் எம்பார்முதலான அந்தரங்கசிஷ்யர்கள் யாவரும் அப்பிரபந்தத்தை
உற்று நோக்கி, அதில் ஸ்வாமியின் திருவுள்ளவுகப்பையும் விசேஷித்தறிந்து மிக்க குதூஹலங்கொண்டு. “இப்பிரபந்தம் ஆழ்வார்களின் திவ்யப்ரபந்தங்களோடொக்கப் பரிக்ராஹ்யமாம்படி நியமித்தருளவேணும்” என்று திருவடிகனப் பிடித்துக்கொண்டு பிரார்த்திக்க, ஸ்வாமி அதற்கு ஸஹஸா இசைந்தருளவில்லை. குசலவர்கள் பாடினதை ஸ்ரீராமபிரான் கேட்டருளி மிகவுமுகந்து “மமாபி தத் பூதிகரம்” என்று கொண்டாடின வரலாற்றை எடுத்துரைத்து அனைவரும் நிர்ப்பந்திக்க, இத்தனை பேருடைய குதூஹலத்திற்கு நாம் பங்கம் விளைக்கலாகாதென்று ஸ்வாமி திருவுள்ளம்பற்றி, அழகியமணவாளனுடைய நியமனத்தையும் பெற்று அப்படியே நியமித்தருளினார். ஸ்வாமி எழுந்தருளியிருந்த காலத்திலேயே இப்பிரபந்தம் ஸன்னிதிகளிலும் திருமாளிகைகளிலும் ஸேவிக்க உபக்ரமமாயிற்று. திருக்கார்த்திகைக்குப் பிறகு அநத்யயநக்ரமம் திவ்யப்பிரபந்தங்களுக்குப் போலவே இந்த நூற்றந்தாதிக்கும் அன்றுதொட்டு எங்கும் நிகழ்ந்து வரக் காண்கையாலே இதற்கு திவ்யப்ரபந்தத்தோடு ஸர்வாத்மநா ஸாம்யம் பூர்வாசார்ய ஸம்மதமாயிற்றென்பது அறியத்தக்கது.-மணவாளமாமுனிகள் இராமானுச நுற்றந்தாதியைப்பற்றி ஒன்றுமருளிச் செய்யாததேன்? திருவரங்கத்தமுதனார்க்கு நாள் பாட்டும் பணிக்கவில்லையே, ஏன்? என்று சிலர் கேட்பதுண்டு. –ஸன்னிதிகளில் விக்ரஹப்ரதிஷ்டை பெற்றிருந்தவர்களுக்கே நாள் பாட்டு அருளிச்செய்யலாயிற்றென்பது ஸாரமான ஸமாதானம்.நூற்றந்தாதிக்கும் அமுதனார்க்குமாகவே உபதேச ரத்தினமாலையில் +இன்றுலகீர் சித்திரையிலேய்ந்த திருவாதிரை நாள்* என்று தொடங்கி மூன்று பாசுரங்கள் அருளிச் செய்தது. திருக்குருகைப்பிரான்பிள்ளான்,நஞ்சீயர், பெரியவச்சான்பிள்ளை, வடக்குத்திருவீதிப்பிள்ளை, பிள்ளை லோகாசார்யர் முதலான ஆசார்யர்களைப் பற்றியும் உபதேசரத்தினமாலையில் ப்ரசம்ஸையிருந்தாலும் அவர்கள் அவதரித்தமாதமோ நக்ஷத்ரமோ அதில் பேசப்படவில்லை. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்கள் பணித்தவர்களுக்கு மாத்திரமே*மாதங்கள் நாள்கள்தமை மண்ணுலகோர்தாமறிய ஈதென்று சொல்லியுள்ளார். அந்த வரிசையில் ”சித்திரையில் செய்ய திருவாதிரை” என்று நாள் பாட்டு அமைத்திருப்பதை ஆழ்ந்து நோக்கவேணும். திவ்யப்பிரபந்தமருளிச்செய்யாத எம்பெருமானார்க்கு மதுரகவிகட்கடுத்தபடியாக நாள் பாட்டு அமைத்தது இராமானுச நூற்றந்தாதிக்காகவேயென்பது சொல்லவும் வேண்டுமா? எம்பெருமானார்க்கேயிறே விக்ரஹப்ரதிஷ்டையுள்ளது.நாலாயிரத்திற்கும் வியாக்கியானஞ் செய்தருளின் பெரியவாச்சான் பிள்ளை நூற்றந்தாதிக்கு ஏன் வியாக்யானஞ் செய்தருளவில்லையென்று சிலர் விமர்சிப்பதுண்டு.ஸ்தோத்ரரத்த்திற்கு வியாக்யானஞ் செய்தருளினவர் பஞ்சஸ்தவாதிகளுக்கு வியாக்கியானஞ் செய்தருளவில்லையென்பதனால் ஒரு குறையில்லையே, அதுபோலவே யிங்குமென்று ஸமாஹிதராகலாம். அமுதனாருடைய திருவம்சத்திலோருவர் நுற்றந்தாதிக்கு வியாக்கியான மிட்டிருந்தாரென்றும், அது லோபித்ததனால் மணவாளமாமுனிகள் வியாக்கியானித்தருளினரென்றும் கேட்டிருந்ததுண்டு.-ஸ்வாமி காலத்திலே ஸ்வாமி நியமனங்கொண்டே கருட வாஹன பண்டிதர்பணித்த திவ்ய ரிசரிதத்தில் பதினெட்டாம் ஸர்க்கத்தில் (51)“ஸ்ரீரங்காம்ருதகவிராஹ ரங்கிப்ருத்ய; தச்சிஷ்யோ யதிபதிவைபவாநுபந்தம்,அந்தாதித்ரமிடகிரா மஹாப்ரபந்தம் காதாநாம் அம்ருதமுசாம் யுதம் சதேந.“என்னும் ச்லோக தில் இப்பிரபந்தத்தின் பெருமை பேசப்பட்டுள்ளது. இதன்பொருளாவது, திருவரங்கத்தமுதனார் அழுதப்பெருக்கான தமிழ் மொழிபாலே எம்பெருமானாருடைய வைபவங்களைப் பேசுகிற் நூற்றந்தாதி ப்ரபந்தத்தை யருளிச்செய்தாரென்பதாம்.(19.) உறுபெருஞ் செல்வமும் (29.) *கூட்டும் விதியென்று கூடுங்கொலோ ” (46.) கூறுஞ்சமயங்களாறுங்குலைய (54.) *நாட்டிய நீசச்சமயங்கள் மாண்டன* (64.) பண்டருமாறன் பசுந்தமிழ்* (88) * கலிமிக்க செந்நெல் கழனிக் குறையல்* என்கிற பாசுரங்கள் விசேஷித்து நோக்கத் தக்கன ஸ்ரீமந்நாதமுனிகள்,ஆளவந்தார் முதலான பரமாசார்யர்கள் திறத்தில் ஸ்வாமிக்கிருந்த பத்திப் பெருங்காதல்20, 21 முதலான சில பாசுரங்களில் பேசப்பட்டது. கோயில் திருமலை பெருமாள் கோயில் முதலான திவ்ய தேசங்களிலுண்டான ஆதராதிசயம் 31,35, 42, 47. 49,76, 81, 91, 106 முதலான பாசுரங்களில் பேசப்பட்டடுள்ளது.
—————–
அத்வைத, விசிஷ்டாத்துவைதக் கோட்பாடுகளுக்குள்ளவேறுபாட்டை எடுத்துக் காட்டும் மாக்ஸ்முல்லர்-The Brahman of Sankara is itself impersonal.
Sri Ramanuja’s brahman is essentially a personal God-the all-powerful and all-wise ruler of the real world permeated and animated by his spirit, the brahman is endowed with all auspicious qualities-Saguna Brahman.-என்றெழுதுவார்.
“ஏரணிகீர்த்தி இராமானுசமுனி இன்னுரை சேர்
சீரணி சிந்தையினோம் சிந்தியோம் இனித் தீ வினையே”-என்கிறஅலுஸந்தானத்தால் நம்மை உடையவருடைமை என்று காட்டியருளுகிறார் ஸ்வாமி தேசிகன் அப்படியே யதிவரனார் மடைப்பள்ளி வந்த மணம் எங்கள் வார்த்தையுள்மன்னியதே’ என்று தம் வாசகங்களுக்கெல்லாம் உடையவர் ஸம்பந்தமுண்டென்று மகிழ்ந்து பேசுகிறார். ‘ப்ரணாமம் லக்ஷ்மணமுனி: பாதிக்ருஹ்ணாது மாமகம்’ என்று
காயிகமாக வணங்கி வாழ்த்துகிறார். இப்படியாகக் கரண த்ரய சரூப்யம் தமக்கு எம்பெருமானார் விஷயத்தில் ஏற்பட்டதை அநுஸந்தித்து இனியராகிறார்.
———–
ஸ்ரீமத் பராங்குச பதாம்புஜப்ருங்கராஜம்*-நம்மாழ்வார் திருவிருத்தத்தில் வண்டுகளை விளிக்கும்போது வீசுஞ்சிறகால் பறத்தீர் ” என்னும் பாசுரத்தில் விண்ணோர் பிரானார் மாசில் மலரடிக்கீழ் எம்மைச் சோவிக்கும் வண்டுகளே என்றருளிச்செய்துள்ளார். எம்பெருமான் திருவடிகளிலே அஸ்.மதாதிகளைக்கொண்டு சேர்க்குந்திறமை எம்பெருமானார்க்கேயுள்ளது.-வண்டுகள் சிறகால் பறப்பது போல ஸ்வாமி யெம்பெருமானார் ஞானமனுட்டான மென்னுமிவற்றால் உயர்கதியடை பவர். *உபாப்யாமேவ பக்ஷாப்யாமித்யாதி-வீ சுஞ்சிறகால் பறத்தீர் * என்றவுடனே “விண்ணாடும் நுங்கட்கு எளிது என்றமையால் பரமபதமும் ஸ்வாமி யெம்பெருமானார்க்கு அதீனமான பொருள் என்பது காட்டப்பட்டது. ஸ்வாமியின் திருவடி ஸம்பந்தம் பெழுதவர்கள-்-வண்டுகளோ வம்மின், நீர்ப்பூ நிலப்பூ மரத்திலொண்பூவுண்டுகளித்துழல்வீர் “ என்பது. பூக்களானவை நீரிலும் நிலத்திலும் மரங்களிலும் புஷ்பிக்குமவை. தாமரை செங்கழுநீர் முதலானவை நீர்ப்பூக்களாம். மல்லிகை முல்லை முதலானவை நிலப்பூக்களாம். வகுளம் பாதிரி பாரிஜாதம் முதலானவை மரப்பூக்களாம். இவற்றில் தேனைப்பருகும் வண்டுகள்.
எம்பெருமானார்பக்ஷத்திலோ வென்னில்; நீர்ப்பூ என்பது வீராப்திசாயியான வ்யூஹபகவானைச் சொல்லி அவனிடத்துத் தோன்றிய பாஞ்சராத்ர சாஸ்த்ரங்களைக் கூறும்;
நிலப்பூ என்பது நிலத்திலவதரித்திருந்த ஸ்ரீராமக்ருஷ்ணாதி விபவாவதாரங்களையும், நிலத்தில் நித்யமாக அமர்ந்திருக்கின்ற அர்ச்சாவதாரங்களையுஞ் சொல்லி, வி வாவதாரபரங்களான இதிஹாஸ புராணங்களையும் அர்ச்சாவதாரபரங்களான திவ்ய ப்ரபந்தங்களையும் அநுபவித்துக் களிப்பவர் ஸ்வாமி யெம்பெருமானார் என்றவாறாம் * மரத்திலொண்பூ வென்று எட்டாநிலத்திலுள்ள பரமபதநாதனைச் சொல்லி வேதவேத்யே பரே பும்ஸி என்கிறபடியே பரம புருஷ ப்ரதிபாதகமான வேதங்களைச் சொல்லி அவற்றையநுபவிப் பவரெம்பெருமானார் என்று காட்டும்.-வண்டுக்கு சஞ்சரீக மென்று. பெயர்; எப்போதும் திரிந்து கொண்டே யிருப்பது என்று பொருள், ஸ்வாமி யெம்பெருமானாரும் *ஸ்ரீரங்கம் கரிசைலமஞ்ஜ
கிரிம் தார்ஷ்யா த்ரிஸிம்ஹாசலௌ ஸ்ரீகூர்மம் புருஷோத்தமஞ்ச பதரீநாராயணம்
நைமிசம், ஸ்ரீமத் த்வாரவதீ ப்ரயாக மதுராயோத்யாகயாபுஷ்கரம் ஸாலக்ராமகிரிம்
நிஷேவ்ய ரமாதே ராமா நு ஜோயம் முனி: என்கிறபடியே * உலகமேத்துங்கண்டியூரரங்கம்
மெய்யம் கச்சி பேர்மல்லை யென்றுமண்டி பதியேபரவித் தொழுந்தொண்டராயிருந்தவர்.
வண்டினங்கள் காமரங்களிசைபாடும் * என்றும், யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும்* என்றும், வரிவண்டுதேதென வென்றிசைபாடும் என்றும் பணித்தபடியே வண்டுகள் யாழினிசைபோன்ற இசைகளைப் பாடுவதுபோல் *பண்ணார்பாடல் * யாழினிசைவேதம். என்னப்பட்ட திருவாய்மொழியின் கானத்தையே போது போக்காக வுடையராயிருந்தவர் ஸ்வாமி.”தமிழ்மறைகளாயிரமும் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன்” “பண்டருமாறன் பசுந்தமிழானந்தம் பாய்மதமாய் விண்டிட வெங்களிராமானுசமுனிவேழம்’ என்றவை காண்க-வண்டு எந்த ஸமயத்தில் எங்குச் செல்லவேணுமென்று நினைத்தாலும் தட்டுத் தடங்கலின்றியே புகுந்து ரமிக்கும்: ஸன்னிதியில் கர்ப்பக்ருஹங்களினுள்ளும் எம்பெருமான் திருமுடிமீதும் தாராளமாகப்
புகக் காணுகின்றோம். அதுபோல, பின்னிட்ட சடையானும் பிரமனு மிந்திரனும்
துன்னிட்டுப் புகலரிய என்னும்படி திருவாசல்களிலே ஸேவாபரரானவர்கள் நிறைந்து
தலை நுழைக்கவொண்ணாதபடி நெருக்க, மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடுநாள்” என்னும்படியவதரித்தருளின எம்பெருமானார் கோயில் திருமலை பெருமாள் கோயில் முதலான எந்த திவ்யதேசங்களிலும் தடையும் சங்கையுமின்றிக்கே அதிகாரச் செல்வத்துடனே உள்ளே புகுந்து ஒழிவில் காலமெல்லா முடனாய் மன்னி வழுவிலா வடிமைசெய்து வாழ்ந்தவர். வண்டு சோலைகளிலேயே சுழலமிடும்; எம்பெருமானார் தாமும் *ஆராமஞ் சூழ்ந்தவரங்கம்* சிந்து பூ மகிழுந்திருவேங்கடம் விரையார்பொழில் வேங்கடம் என்னும்படியாகச் சோலைகள் மிக்க தலங்களிலேயே சுழலமிட்டவர்.-இப்படி மற்றும் பல பொருத்தங்களும் காண்க.வண்டுக்கு த்விரேப மென்று பெயர்: இரண்டு ரேபங்களையுடையது என்றபடி. ரேபமாவது ரகரம். வண்டுக்கு வாசகமான (ப்ரமர) சப்தத்தில் இரண்டு ரேபமிருப்பதால் இது பற்றியே (வண்டு) தவிரேபமெனப்பட்டது, ஸ்ரீ ராமாநுஜராகிற வண்டானது தன்னிடத்தில் இரண்டு ரேபமில்லையேயென்கிற குறையைத் தீர்த்துக் கொள்வதற்காகவே வாவர முனிகளாக மற்றோரவதாரம் செய்தருளின்படி ராமா நுஜத்திருநாமத்தில் ஒரு ரேபமேயாய், வரவர முனிதிருநாமத்தில் இரண்டு ரேபமிருக்கும்படி கண்டுகொள்வது.
வரிவண்டு தேதெனவென்றிசைபாடும் என்றும்,தென்னாதெனாவென்று வண்டுமுரல் என்றும் ஆழ்வார்கள் அருளிச்செய்தபடியே தே, தே என்று முரலும்
வண்டுகள். (அஹங்கார) மமகாரமுள்ளவர்கள் மே மே என்பர்கள். அது நீங்கினவர்கள்
தே தே என்பவர்கள். தவ, தவ. என்றபடி வெண்பல் தவத்தவர்” என்ற திருப்பாவைப்
பாசுரத்தில் (தவ, தவ) என்பவர்கள் தவத்தவர்களாக விவக்ஷிதர்களாதலால் அங்ஙனே
மமகாரமற்றவர்களில் தலைவர் ஸ்வாமி யெம்பெருமானார் என்க.
திருமங்கையாழ்வார் திருநறையூர்ப் பதிகத்தில் *வம்பவிழும் சண்பகத்தின்
வாசமுண்டு மணிவண்டு வகுளத்தின் பலர்மேல்வைகு’ என்கிற பாசுரத்தினால் வண்டு
மகிழமலர்மேல் வைகியிருப்பதாகப் பாடினர். ஸ்வாமி யெம்பெருமானாரோவென்னில்;
*யஸ்ய ஸாரஸ்வதம் ஸ்ரோதோ வகுலாமோதவாஸிதம் (யதிராஜஸப்ததி] என்கிற
படியே மகிழமலரின் நறுமணங்கமழும் திருவாய்மொழியில் வைகியிருப்பவர். நூற்றந்தாதியயில் *உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகந்தொறும், திருவாய்மொழியின் மணந்தருமின்னிசை மன்னுமிடந்தொறும் புக்குநிற்குமிராமானுசன்’ என்ற பாசுரம் இங்கு
அநுஸந்திக்கவுரியது.வண்டுகள் சோலைகளிலும் தடாகத்திலும் மொய்த்துக்கொண்டிருக்கும். எம்பெருமானாராகிற வண்டு *வண்டின முரலுஞ்சோலை மயிலினமாலுஞ்சோலை கொண்டல் மீதணவுஞ்சோலை குயிலினங்கூவுஞ்சோலை அண்டர்கோனமருஞ்சோலை யணிதிருவரங்கத்திலும், தாமரைநீள் வாசக்கடமென்றும், தயரதன்பெற்றமரதகமணித் தடமென்றும் ப்ரஸித்தமான ஹரிஸரஸ்ஸிலும் மொய்த்துக்கொண்டிருந்தமை ப்ரஸித்தம்.வண்டு எங்குப் புகவேணுமானாலும் தடையொன்றுமின்றியே புகும்.
எம்பெருமானுடைய கர்ப்பக்ருஹத்தினுள்ளும் திருமேனியின் மேலும் தட்டுத்
தடங்கலின்றியே புகும். எம்பெருமானாராகிற வண்டும் அப்பனுக்குச் சங்காழி
யளித்தருளும் பெருமாள்* என்னும் மூதுரையின்படியே திருவேங்கடமுடையானுக்குத்
திருவாழி திருச்சங்கு அளித்தருள நுட்பமானவழியாலும் நுழைந்தமை ப்ரஸித்தம்.
ஸ்வாமி ராமாநுஜர் விஷயமாக அருளிச்செய்யப்பட்ட கிரந்தங்கள்:
1. ஸ்வாமி மணவாளமாமுனிகள் அருளிச்செய்த யதிராஜ விம்சதி
2. ஸ்வாமி திருவரங்கத்து அமுதனார் அருளிச்செய்த ராமாநுஜ நூற்றந்தாதி
3. ஸ்வாமி வேதந்தாச்சார்யர் அருளிச்செய்த யதிராஜ சப்ததி
4. ஸ்ரீ திருமழிசை அண்ணாவப்பங்கார் அருளிச்செய்த ஸ்ரீ ராமாநுஜ அதிமாநுஷ ஸ்தவம்
5. ஸ்ரீ முதலியாண்டான் அருளிச்செய்த தாடீபஞ்சகம்
6 ஸ்ரீ திருமலை அனந்தாழ்வான் அருளிச்செய்த ஸ்ரீ ராமாநுஜ சது: ஸ்லோகி
7. ஸ்ருதப்ரகாஸிகாசார்யர் அருளிச்செய்த ப்ரார்த்தநா பஞ்சகம்
8 ஸ்ரீ வடுகநம்பி அருளிய ஸ்ரீ ராமாநுஜ அஷ்டோத்தர ஸதநாம ஸ்தோத்ரம் மற்றும் ஸ்ரீ ராமாநுஜ அஷ்டோத்தர ஸத நாமாவளி
9 ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் அருளிய ஸ்ரீ ராமாநுஜ ஸுப்ரபாதம் மற்றும் ஸ்ரீபாஷ்யகார மங்களம்
10. பகவத் ராமாநுஜ அவயவ ப்ரபாவம்
11. ஸ்ரீ எம்பார் அருளிய உடையவர் வடிவழகு பாசுரம்
12 பெரிய ஜீயர் ஸ்ரீ மணவாளமாமுனிகள் அருளிய எம்பெருமானார் வாழி திருநாமங்கள்
13 ஸ்ரீ காஞ்சி மஹாவித்வான் மஹாமஹிமோபாத்யாய ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய ஸ்வாமி, எம்பெருமானாருடைய பலவகைப் பெருமைகளை தெரிவிக்கும் விதமாக எழுதியருளிய
எம்பெருமானார் அறுபத்து இரண்டு-ஆகியவை ஆகும்.
ஸ்ரீ ராமானுஜரது காலம், கலியுகம் பிறந்து 4118 வருஷங்களுக்குப் பின் பிங்கள வருஷம் சித்திரை மாஸம் சுக்ல பக்ஷம் குருவார பஞ்சமி ஆருத்திரா நக்ஷத்திரம் கர்க்கடக லக்னம் ஆயுஷ்மான யோகத்தில் ஆபஸ்தம்ப ஸூத்திரத்தை சேர்ந்தவராய் (பொது ஆண்டுக்கு 1017-1137) ஆதிசங்கரருக்கு (பொ.ஆ.பி. 788 – 820) பின்னால் ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தவர்- இவரது தாயார் ஸ்ரீ ஆளவந்தாருடைய சிஷ்யராகிய ஸ்ரீசைலபூர்ணரின் மூத்த சகோதரி காந்திமதி. இவர் தந்தையார் ஸ்ரீ பெரும்புதூரில் வசித்து வந்த ஆசூரி கேசவ ஸோமயாஜி. லக்ஷ்மணன் என்னும் பெயரினை குறிக்கும் வகையில் இளையாழ்வார் என இயற்பெயர் கொண்டார். 16 வயதில் தங்கம்மாள் என்னும் பெண்ணுடன் விவாஹம்.
பாரதிதாசன் ஸ்ரீ ராமானுஜர் பற்றி …முக்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்–இத்தமிழ் நாடுதன் இருந்தவப் பயனாய்–இராமா நுசனை ஈன்ற தன்றோ?”–எனப்பாடுகிறார்.
கஜினி படையெடுப்பு பொ.ஆ.பி. 1001 பஞ்சாபில் ஜயபாலனை வென்றது. (the oxford history of India by win cat A.Smith Cie 1921) 1019 கானோஜ் பிடிபட்டது 1024 – 25ல் சோம்நாத் சிவன் கோயில் இடிக்கப்படுகிறது, 1030 கஜினி இறந்துவிடுகிறான். அதன் பின் முதல் மசூத் (1030-41) முகமது (1941), மதூத் 1041-1048, இரண்டாம் மசூத் (1048), அலி (1048-1049), அப்துல் ரஜீத் 1049-52), தோகுமூல் 1052-53, பரூக் ஜாத் 1053-59, இப்ராஹீம் 1059-1099, மூன்றாம் மசூத் (1099- 1115) மூன்றாம் மசூத் தலைநகர் லாகூர், மூன்றாம் மசூத்தின் பெண்ணின் பெயர் பீவி.
1097-1100 காலத்தில் டெல்லியை உள்ளடக்கிய கசானாவிட் முஸ்லீம்கள் ஆட்சி கீழ் வந்துவிட்டது. ஸ்ரீ ராமானுஜம் பத்திரிகையில் என். ஜீயபங்கார் தந்த தகவலினை Wikipedia Ghazanavit என பதிவுசெய்தால் உறுதி செய்கிறது.
எனவே, டில்லியில் முஸ்லீம் சுல்தான்களின் ஆட்சி ஸ்ரீ ராமானுஜர் காலத்தில் இல்லை என மறுப்பவர்களின் கருத்து உடைபடுகிறது. ஸ்ரீ வைஷ்ணவ குருபரம்பரையில் உள்ள தகவல் உண்மையே, சரித்திரபூர்வமானதே. ஸ்ரீ ராமானுஜர் காலத்தில் டில்லி சுல்தான்களின் ஆட்சியில்தான் இருந்தது. 1097 க்கு முன், முஸ்லீம்களின் படையெடுப்பு மைசூர் வரை வந்து சென்றதை தொண்டனூர் கல்வெட்டு ஆதாரத்துடன் காட்டுகிறது. (The life of Ramanuja by A. Govindacharya) இஸ்லாமிய படையெடுப்பில் திருநாராயணபுரம் பெருமாள் திருமேனி கொள்ளையடிக்கப்பட்டதும், பின் பெருமாள் விக்ரஹம் மூன்றாம் மசூத் அரண்மனையில் அவனது பெண் பீபியின் அன்புக்கு ஆளானதும் உடையவர் பெருமாள் விக்ரஹத்தினை மீட்டெடுக்க சென்றதும் வரலாறு..
ஸ்ருத்யர்த்த தத்துவ விஜ் ஞாத்ரே பக்தி மார்க்க ப்ரதர்சிநே I
இராமாநுஜாய முநயே மங்களம் புவி ஸாஸ்வதம் II
தேசமெலாம் உகந்திடதே பெரும்பூதூரில் ,
சித்திரையில் ஆதிரை நாள் வந்து தோன்றி *
காசினி மேல் வாதியரை வென்று ,அரங்கர்-
கதியாக வாழ்ந்தருளும் எதிராசா ** முன்
பூசுரர் கோன் திருவரங்கத்தமுதனார் , உன் பொன்னடி மேல் அந்தாதியாகப் போற்றிப்
பேசிய நற் கலித்துறை நூற்றெட்டுப் பாட்டும் ,
பிழையறவே எனக்கருள் செய் பேணி நீயே .-பிரபந்த ஸாரம்
ராமானுஜரின்216 அடி சிலை பிரதமர் மோடி பிப்ரவரி 5ஆம் தேதி திறந்து வைத்துள்ளார் 45 ஏக்கர் வளாகத்துக்கு மத்தியில் அலமக்கப்பட்டுள்ளது. ‘சமத்துவத்துக்கான சிலை’ (Statue of Equality)என வர்ணிக்கப்பட்டுள்ளது . சிறப்பம்சங்கள்: இந்த சிலை முழுக்க முழுக்க பக்தர்களின் நன் கொடைகளைப் பெற்று சுமார் ரூ.1,000 கோடி செலவில்
வடிவமைக்கப்பட்டுள்ளது. ராமானுஜர் இந்த பூமியில் 120 வருடங்கள்
வாழ்ந்ததை நிலனவு கூரும் வகையில் 120 கிலோ தங்கத்தைக் கொண்டு இந்த
சிலையின் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.-கருவறை தங்கத்தால் செய்யப்பட்டுள்ள அதே நேரத்தில் 216 அடி கொண்ட வெளிப்புறச் சிலை, உட்கார்ந்த நிலையில் உள்ள உயரமான சிலைகளில் ஒன்றாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தங்கம், வெள்ளி, தாமிரம் பித்தளை மற்றும் துத்தநாகம் என ஐந்து விதமான உலோகங்களின் கலவையான
‘பஞ்ச லோக ‘ சிலைைாக நிறுவப்பட்டுள்ளது.உட்கார்ந்த நிலையில் உள்ள உயரமான சிலைகளில் தாய்லாந்தில் அமைந்துள்ள 302 அடி கொண்ட புத்தர் சிலையே உலகின் மிகப் பெரிய சிலையாக இருந்து வருகிறது.சிலை அலமக்கப்பட்டுள்ள 45 ஏக்கர் இந்த வளாகத்தில்108 திவ்ய தேசங்கள், இடம் பெற்றுள்ளன.-ராமானுஜரின் 1,000-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் இந்த சிலை அமைக்கும் பணி கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது –
“அனந்த: ப்ரதமம் ரூபம் த்விதீயம் லக்ஷ் மணஸ் ததா
பலபத்ர: த்ருதீயஸ் து கலௌ கஸ்சித் பவிஷ்யதி||”
காரேய் கருணை ராமானுசா என்பர் அமுதனார். மேகத்தை ஒத்த கருணையுள்ள மஹான்
மேகம் கடல்நீரை முகந்து வர்ஷிக்கும் -ஸ்வாமி ஸ்ருதி சாகரம் -திராவிட வேத சாகரம் -உபய வேத ரஹஸ்யங்களை வர்ஷித்து அருளினார் ‘உயிர் அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து சிஷ்யர்கள் உள்ள இடங்களிலே எல்லாம் சென்று உபதேசித்து அருளினார் -மும்மாரி தத்வ த்ரய ரஹஸ்ய த்ரய பேத அபேத கடக ஸ்ருதிகள் பரபக்தி பரஞான பரம பக்தி
ஹம்ஸோ யதா க்ஷீரமிவ அம்புரமிச்ரம் என்கிறபடி -நம் ஸ்வாமி
சாஸ்த்ரங்கள் ஸார அஸாரங்களைப் பிரித்து உபதேசித்து அருளினார்
சங்கமவை முரலச் செங்கமல மலர் ஏறி அன்னமலி பெடையோடு அமரும்
என்றபடி ஹம்ஸமானது சங்குகளில் முழக்கத்தை இனிமையாகக் கேட்குமா போலே ஸ்வாமியும் சிஷ்யர்கள் செய்யும் ஸ்துதிகளைக் கேட்டு எழுந்தருளியிருந்தார்.
என்ன செய்யப் போகிறோம் என்று அறியாமல் தவிக்கும் பொழுது வேடுவ
வேடுவச்சி உருவில் தேவாதிராஜனும், பெருந் தேவி தாயாரும் ஆட்க்கொண்டதை
நினைத்து புலம்பி அழுதார்.பின்பு தம்மைத் தேற்றிக் கொண்டு பெரு மகிழ்ச்சி யுடன் கீழே யுள்ள ஸ்லோகங்களால் தொழுதார்.
‘‘ஸகேதி மத்வா ப்ரஸபம் யதுக்ரம் ஹே க்ருஷ்ண, ஹே யாதவ ஹே ஸகேதி
அஜானதா மஹிமானம் தவேதம் மயா ப்ரமாதாத் ப்ரணயேன வாபி
யச்சாப ஹா ஸாந்த மஸக்ருதோஸி விஹாரம்ய்யாசன போஜனேஷு
ஏகோதவாய் யச்யுத தத்ஸமகவும் தத்ஷா மயே த்வாமஹம ப்ரமேயம்’’
‘‘அச்சுதனே ! உன்னுடைய இந்த மஹிமையை அறியாத நான்,
கவனமின்மையாலும், அன்பினாலும் உன்னை நண்பன் என எண்ணி, ஏ கிருஷ்ணா, ஏ யாதவா, நண்பா! என்று விளையாடும் போதும், படுத்திருக்கும் போதும்,உட்கார்ந்திருக்கும் போதும், உண்ணும் போதும், பலர் முன்னிலையிலும் உன்னை
அவமதித்திருக்கிறேனே , அவை அனைத்தையும் பொறுத்தருளும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்,’’ என்று அர்ஜுனனைப் போல் வேண்டிக் கொண்டார்.
முன்னே பிறந்து இறந்து மூது உலகில் பட்ட வெல்லாம்
என்னே மறந்தனையோ என் நெஞ்சே -சொன்னேன்
இனி எதிரா சன்மங்கள் இன்று முதல் பூதூர்
முனி எதிராசன் பேர் மொழி -பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
ராமானுஜன் என் தன் மா நிதி -என்றும் ராமானுஜன் என் தன் சேம வைப்பு -அரங்கன் தந்தது சந்நிதிக்குள்ளே யதிசம்ஸ்கார விதியின் படியே அந்தப்புரத்திலேயே தம் பெண்டிரை வைப்பாரைப் போலவே வைத்து அருளினான்
————–
தஸ்மை ராமானுஜார்யாய நம பரமயோகிநே
யஸ்ஸ்ருதிஸ்ம்ருதி ஸுத்ராநாம் அந்தர்ஜ்வர அஸீஸமது
இதிகாச புராணாப்யாம் வேதம் செளபப்ரம்மயேது
விபேத்யல்பத் ஸ்ருதாத் வேதஹா மாமயம் ப்ரதரிஷ்யதி
சம்யங் ஞாய கலாபேந மகதா பாரதேநச
உபப்ரம்மித வேதாய நமோ வியாசாய விஷ்ணவே
எதிகாஸ்தீத தன்யத்ர எந்நேகாஸ்தீ நதக்கொஸிது தர்மேச அர்த்தேச காமேச மோக்ஷ்சேச பரத ரிஷப,
மதி மந்தானம் ஆவித்ய, ஏனாசெள ஸ்ருதி சாகராது ஜகத்ஹிதாய ஜனிதஹா மகாபாரத சந்த்ரமாஹா – வியாசர் எப்ப உபநிஷத் கடலை கடைவதற்காக பார்த்தாலும், தன்னுடைய மதி, ஞானத்தையே மத்தாக நாட்டிடுவர். தன்னுடைய ஞானத்தை மத்தாக நாட்டி, உபநிஷத்துக்களாகிய கடலைக் கடைந்து, ‘பாராசார்ய வசஸ்ஸுதாம் உபநிஷது துக்தாத்பி மத்யோத்க்ருதாம், சம்சாராக்னி விதீபனப் வியபகதப் ப்ராணாத்ம சஞ்சீவனி’, இப்பேர்ப்பட்ட அமிர்தத்த கடைஞ்சு குடுத்துட்டார்
“புண்யாம்போஜ விகாஸாய பாபத்தாம் தக்ஸயாயச ஸ்ரீமான் ஆவிர பூத்பூமவ் ராமானுஜ திவாகரஹ”,
அமுனா தபநாதிசாயு பூம்னா எதிராஜேன நிபக்த நாயகஸ்ரீஹி
மஹதி குருபந்திஹாரயட்டிஹி விபுதானாம் ஹ்ருதயங்கமா விபாதி-எதிராஜரை நடுநாயகக் கல்லாக வைத்துத்தான் இந்த அட்டியல்,-தேகழி தீபந் நியாயம்’னு பேரு. தேகழி – இடைகழி, தேகழி தீபம்-னா, இடைகழியிலே வைக்கப்பட்ட தீபம். அப்படின்னா என்னன்னா, இராமானுஜரோடே சம்பந்தத்தினாலேதான் அவருக்கு முற்பட்ட மாணிக்கங்களுக்கும் ஏற்றம். அவரோட சம்பந்தத்தினாலேதான் அவருக்கு பிற்பட்ட மாணிக்கங்களுக்கும் ஏற்றம்
செளத்ரீ சங்க்யா சுபாஷீஹி, இந்த சூத்திர கணக்கு வேணும்ன்னா, செளத்ரீ சங்க்யா – சூத்திர சங்க்கை. சுபாஷீஹின்னா, சு பா ஷா, சு-ங்க்கறது அஞ்சு, य र ल व श, श அஞ்சாவது எழுத்தால்லையோ? प फ ब भ , நாலோல்லையோ, மறுபடியும் ச, அஞ்சாவது எழுத்து. 545. அதனால செளத்ரீ சங்க்யா சுபாஷீஹின்னு சொல்லுவர்கள்.
ஸ்ரீரங்கம், கரிசைலம் அஞ்சனகிரிம் தார்க்ஷாத்திரிசிம்மாசலவ்
ஸ்ரீகூர்மம் புருஷோத்தமஞ்ச பதரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீமத்த்வாரவதி ப்ரயாக் மதுரா அயோத்தியா கயா புஷ்கரம்
சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே இராமானுஜோயம் முநிஹி
ஸத்யம் ஸத்யம் புனஸ்ஸத்யம் உத்ருச்சபுதமுச்சதே எதிராஜோ ஜகத்குருஹு
நாத்ர சம்சயஹா சயேவ சமுத்ரத்தா நாத்ர சம்சயஹா
தேசிகர் தன்னுடைய எதிராஜ சப்ததியிலே சொல்லும்போது, இதம் அகிலதமக் கரிசனம் தரிசனம் நமஹ. த்ராதம் சம்யது யதீந்த்ரைஹி.
இராமானுசருடைய விக்கிரகத்தை ஏற்படுத்தி, மதுரகவி ஆழ்வார் மூலமாக, தாமிரபரணி ஆற்று நீரைக் காய்ச்சி, அதுல இராமானுசர் விக்ரகம் வர, அத நாதமுனிகளுக்கு ப்ரத்யக்ஷமாகக் கொடுத்ததே, நம்மாழ்வார்தான். ‘பவிஷ்யதாச்சார்ய வரசொரூபம் தம்காரீசூணு சரணம் ப்ரபத்யே’-ன்னு, ‘காரீசூணு’ன்னு நம்மாழ்வாருக்குப் பெயர். அவர்தான் இந்த பவிஷ்யதாச்சார்ய விக்கிரகத்தயே கொடுத்தார்
பூ மன்னு மாது – புஷ்பத்திலே எப்போதும் எழுந்தருளியிருக்கக்கூடிய மகாலக்ஷ்மி, மாது பொருந்திய மார்பன் – மகாலக்ஷ்மியை திருமார்பிலே கொண்டிருக்கிற ஸ்ரீமந் நாராயணன். மார்பன் புகழ் மலிந்த பா – ஸ்ரீமந் நாரயணனோட வைபவத்தைச் சொல்ற திருவாய்மொழி, பா மன்னு மாறன் – அந்த திருவாய்மொழியைப் பாடின நம்மாழ்வார், மாறன் அடி – நம்மாழ்வாருடைய திருவடி, அடிபணிந்துய்ந்தவர் – அந்தத் திருவடியைப் பற்றியே வாழ்ந்த இராமானுசர்.
பண் தரு மாறன் பசுந்தமிழ் * ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்
கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் * கலைப் பெருமான்
ஒலிமிக்க பாடலை உண்டு * தன் உள்ளம் தடித்து * அதனால்
வலி மிக்க சீயம் இராமானுசன்
பற்பமெனத் திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும்
பாவனமாகிய பைந்துவராட பதிந்த மருங்கழகும்
முப்புரி நூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்
எப்போதும் கற்பகமே விழி கருணை பொருந்திடு கமலக் கண்ணழகும்
காரிசுதன் கழல் சூடிய முடியும் கணணச் சிகைமுடியும்
எப்பொழுதும் எதிராசர் வடிவழகு என் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே
அவர் எழுதினவை ஒன்பது கிரந்தங்கள், நவரத்தினங்கள்ன்னு சொல்லுவர்கள். வேதார்த்த சங்க்ரகம், வேதாந்த சாரம், வேதாந்த தீபம், ஸ்ரீபாஷ்யம், சரணாகதிகத்யம், ஸ்ரீரங்ககத்யம், ஸ்ரீவைகுண்டகத்யம், கீதாபாஷ்யம், நித்யக்ரந்தம், என்று ஒன்பது கிரந்தங்களைச் சுவாமி சாதித்தார். ஒன்பதுமே ஒன்பது இரத்தினங்கள்தான். இரத்தின இரத்தினமான கிரந்தங்களை, இரத்தினத்திலே நாயக இரத்தினமான இராமானுசர், இரத்தினமான, இராம இரத்தினமாய், கோபால இரத்தினமாய், ரங்க இரத்தினமாக இருக்கக்கூடிய ஸ்ரீரங்கரத்தினத்திலே எப்போதும் சேவை சாதிக்கக்கூடிய எம்பெருமானுடைய திருவடிகளுக்கு, இரத்தின ஹாரமாகவே சமர்ப்பித்தார். அந்த இரத்தினமான இராமானுசரை நாம் பற்றினோமென்னால், நாம் வெறும் கண்ணாடிக்கல்லாக இருந்தாலும், நாமும் ஸ்ரீவைஷ்ணவ இரத்தினமாக ஆக்கப்படுகிறோம், என்பது நம் சம்ப்ரதாயத்திலே தேறிய உண்மை.
அத்திகிரி அருளாளர் அடி பணிந்தோன் வாழியே
அருட்கச்சி நம்பி உரை ஆறு பெற்றோன் வாழியே
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே
பதின்மர் கலை உட்பொருளைப் பரிந்து கற்றான் வாழியே
சுத்த மகிழ் மாறன் அடி தொழுது உய்ந்தோன் வாழியே
தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே
எண்டிசையெண் இளையாழ்வார் எதிராசன் வாழியே
எழுபத்து நால்வர்க்கும் எண்ணாங்கு உரைத்தான் வாழியே
பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே
பரகாலன் அடியிணையைப் பரவும் அவன் வாழியே
தண்டமிழ் நூல் நம்மாழ்வார் சரண் ஆனான் வாழியே
தாரணியும் விண்ணுலகும் தான் உடையோன் வாழியே
தெண்டிரை சூழ் பூதூர் எம்பெருமானார் வாழியே
சித்திரையில் செய்ய திருவாதிரையோன் வாழியே
சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி
திருவரையில் சாத்திய செந்துவராடை வாழி
ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி
இலங்கிய முன்னூல் வாழி இணைத்தோள்கள் வாழி
சோராத துய்ய செய்ய முகச்சோதி வாழி
தூமுறுவல் வாழி துணை மலர்க்கண்கள் வாழி
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி
இனிதிருப்போடு எழில் ஞான முத்திரை வாழியே
அறுசமயச் செடி அதனை அடி அறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிருட்டிகளை அறத்துறந்தான் வாழியே
செறு கலியைச் சிறிதும் அறத் தீர்த்துவிட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மறை அதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே
மாறன் உரை செய்த தமிழ் மறை வளர்த்தோன் வாழியே
அற மிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாரும் எதிராசர் அடியிணைகள் வாழியே
சங்கர யாதவ பாட்டப் பிரபாகரர் தங்கள் மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சதுமறை வாழ்ந்திடு நாள்
வெங்கலி இங்கினி வீறு நமக்கிலை என்று மிகத் தளர் நாள்
மேதினி நம் சுமை ஆறும் எனத் துயர் விட்டு விளங்கிய நாள்
மங்கயராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்
மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடு நாள்
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும்பூதூர்ச்
சீமான் இளையாழ்வார் வந்தருளிய நாள் திருவாதிரை நாளே!
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply