Archive for August, 2025

ஸ்ரீ அருளிச் செயல்களும்-நவவித சம்பந்தமும்

August 28, 2025

மாறன் பராங்கதி தந்தடியேனை மருட்பிறவி
மாறன் பரான குழத்துள் வைப்பான் தொல்லை வல் வினைக்கோர்
மாறன் பராமுகம் செய்யாமல் என் கண் மலர்க்கண் வைத்த
மாறன் பராங்குசன் வாழ்க என் நெஞ்சினும் வாக்கினுமே-
–திருவரங்கத்தந்தாதி காப்பு (நம்மாழ்வார்- துதி) பிள்ளைப் பெருமாள் அய்யங்கார்-

நான் உன்னை அன்றி இலேன் கண்டாய்; நாரணனே? நீ என்னை அன்றி இலை — நான்முகன் திருவந்தாதி

அகாரந்தான் எழுத்துமுதல் ஆதல் போல
அச்சுதனே அனைத்துயிர்க்கும் அப்பன் ‘ ஆவான் ;
அகாரந்தான் எழுத்தொலிக்க உதவல் போல
அவன்தானே உயிர் வாழக் ‘காப்போன் ‘ ஆவான் ;
அகாரந்தான் இறுதியிலே மறைந்த நான்கன்
உருபால் கைங் கரியம் அறி வித்தலாலே
அகாரந்தான் பெயரானோன் உயிர்கட் கெல்லாம்
ஆண்டை எனும் ‘சேஷி.என அறிகின்றோமே.

ஓங்காரத்து இடையில் எழுத்து உகாரம் ஆகும் ;
ஒருவாத அநந்யம் எனும் தேற்றேகாரம்
பாங்கான உயிர் அனைத்தும் மகளிர் ஆவார் :
பகவன் அவன் பிரிக்க வொண்ணாக் ‘கணவன்’ என்னும்;
நீங்காத உயிர்ப் பெயராம் மகாரந்தானே
‘நினைந்தறியத் தகும் பிரமம் ‘ அவனே என்னும் ;
ஆங்காரம் அழிக்கின்ற நமஸ்ஸினாலே
அவன்’ உடையான் ‘: நாம் ‘ உடைமை’ என்று தேர்வோம்.

நாராய ணாய எனில் சொற்கள் மூன்றாம்;
நாரந்தான் அசித்துச் சித்துஅனைத்தி னுக்கும்
பேராகும் ; அவற்றினையே உடலாய்க் கொண்டு
பிரியாமல் இயக்குதலால் அவன் சரீரி ‘;
வேராகும் அயனம் எனல் இருக்கும் தானம் ;
விருப்பிடமாம் இருப்பிடத்துக்கு அவள்’ஆதாரம்
ஆராயின் எட்டெழுத்தே அதில் அடங்கும்;
ஆழ்பொருளோ அளவிலவாம் வியப்பு ஈதன்றோ?

ஆய எனல் நான்கள் உரு பாகும் ; இங்கே
அவ்வுருபை ‘ பொருட்டு ‘ என்றும் சொல்லு வார்கள்;
தூயன் அவன் அநுபவிக்கும் பொருட்டே, சித்து
தோன்றியுளது எனப் பொருளை விரித்து நோக்கின்
மாயவனே அனுபவிக்க உரியன் ; அந்த
மாண் உரிமை வாய்த்தவன் பேர் போக்தா ‘ ஆகும்;
நேயமொடு ஒன்பது வகையில் உயிர்கட் கெல்லாம்
நீங்காத உறவாகி நின்றான் ஈசன்.

இவ்வுறவை அவன் அறுக்க முனைந்திட் டாலும்
இயலாது ; நாம் அறுக்க இயல்வ துண்டோ?
எவ்வுறவும் அவன் ஆன தாலே அன்றோ
எம்முடனே ஒருவனாய்த் தோன்று கின்றான்?
தவ்வுறவே சேய்குழியில் வீழ்ந்த தென்றால்.
தாய் உடனே அக்குழியில் தாவி மீட்பாள் :
ஒவ்வுறவே பரன் அந்த வண்ணம் நம்முன்
உறவு நினைந்து அர்ச்சை வடி வாயினானே !

ஐந்நிலைகள் தனக்குரிமை யாகக்கொண்ட
அமலனுக்குப் பணிபுரியக் கடன்பட் டுள்ளோம் ;
மெய்நிலைய மாம்அவன் அக் கடனைக்கொள்ள
விழி எதிரே நிற்கின்றான்; நாம் ஒப்போமேல்
நம்நிலையத்தூடுஅவனே அமர்ந்து கேட்பான் ;
நாம் அதற்கும் இசையோமேல் நமை விடாமல்
பைந்நிலையைப் பாயலிலே படுத்துக் கொண்டு
பார் என்பான் என் கடனைத் தீர் என் பானே!

வணிகள் கடல் கடந்துபொருளைத் தேடி)
ஓர் இருப தாண்டின் பின் திரும்பி வந்தான்;
பொருள்களைத் தன் இடத்தினிலே இறக்க லுற்றான்;
போந்தொருவன் இடை மறித்து என்இடம் இது’ என்றான்;
இருவருமே பூசலிட்டார் ; ஆங்கோர் ஆன்றோர்.
“ஏன் பூசல் ‘? ‘ நீர் தந்தை – மகனே ‘ என்றார்
பொருது பெரும் பூசலிட்ட கை தளர்ந்து
பூசல் மறந்து உடல் நழுவிப் புளகுற்றாரே

இப்படித் தான் பவக் கடலில் மூழ்கி மாழ்கி
இறை உறவை மறந்துகயிங் கரியம் விட்டுத்
தப்படி நாம் இருக்கின்றோம் ; ஒரு நல் லாசான்
தனி யுறவு நுமக்குண்டு என்று உபதே சிக்க
மைப்படியும் மேனியன் நம் தலைவன் என்று
வாஞ்சையினால் அறிந்து கொண்டு சரண் அ டைந்தே.
“எப்படியும் பயன்படுத்து கென்போம்” ஆயின்
இப்படியில் பவக்கடல் தான் வற்றிடாதோ?

நவவித சம்பந்தத்தை நாம் அறிந்தால்
ஞாலத்தார் சகோதரத்வம் சமத்வம், கொண்டே
அவ்விதம் ஒன் றில்லாமல் ஒருமைப் பாட்டை
அடைந்திடுவோம் : உயிர்த் தொண்டே அரி தொண்டாகும்
பவவிதனம் பறந்துவிடும் ; வீடு பேறு இப்
பாரினிலே இக் கணமே பலிக்க லாகும் ;
தவஇதம் மிக்கெளிதாகும் ; சமயம் சாதி
சச்சரவாம் நச்சரவம் சாம்பிச் சாகும்.

ஆழ்வார்கள் தாம் அருளிச் செயல் என் கின்ற
அமுதொழுக விட்டனர், நாம் அமரர் ஆக ;
ஏற்பாரும் புகழ் தரும் நம் பிள்ளை ஆதி
எண்ணிலர் நல் உரைஎழுதி உபக ரித்தார்
தாழ்வாதும் இலாத மணிப் பவளமாய்,அத்
தனை உரையும் இருப்பதனால், அதனைத் தேர்ந்தே
வாழ்வார விரும்புவர் பல கால் கற்றும்
மலைமுட்டும் குருவி என மருண்டார் அம்மா!

ஆசார்ய இருதயமாம் மாறன் நெஞ்சை
அருளானராம் இளவல் அருளிச் செய்யத்
தேசார் ஸ்ரீ வசன பூ டணத்தி னோடு
தெய்விக்கல் இரகசியம் ஈரொன் பானும்
நேசானு கூடிமுடன் உலகா சார்யர்
நிலத்து மர்க்குக் கொடையாக நேர்ந்து தந்தார்
வாசம கோசரமாய் அதனுள் நுட்பம்
மன்னுலகில் முடவனுக்குக் கொம்புத்தேனே!

தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்தமாயன்” (திருவாய். 7.9:2) என்னுள்ளே நின்று இந்நூலை எழுத வழி காட்டினான். என்னுள்ளே நிரந்தரமாக எழுந்தருளி விருந்து கொண்டு எனக்கு எல்லா நலங்களையும் ஈந்துவரும் வேங்கடம் மேவிய விளக்கு’ இந்நூல் வெளிவரவும் ஓரளவு துணை செய்தான். அப்பெருமான் திருவடிகளைப் போற்றிச்
சரண் அடைகின்றேன்.

பிதா ச ரஷக சே பர்த்தா ஜ்ஞேயோ ரமா பதி :
ஸ்வாயாதாரோ மமா மாச போக்தா ச ஆத்யமநூதிநே
:” ஆத்ய மநுவாவது மூலமந்திரம். அதில் ப்ரதிபாதிக்கப்பட்ட ரமாபதி :-ஸ்ரீய : பதியானவன் பிதாவாயும் ரக்ஷகனாயும் சேஷியாயும் பர்த்தாவாயும் ஜ்ஞேயனாயும் ஸ்வாமியாயும் ஆதாரனாயும் ஆத்மாவாயும் போக்தாவாயுமுள்ளான்- அவன் பிதாவானால் நாம் புத்திரனாகிறோம். அவன் இரக்ஷகளானால் நாம் இரக்ஷயனாகிறோம். அவன் போக்தாவானால் நாம் போக்யனாகிறோம். ஆக, இவை ஒன்பது வகையான உறவுகள்

உன் றன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்’ ‘உன்றன்னோடுறவேல் நமக்கிங்கொழிக்க ஒழியாதுபாரார்த்தயம் ஸ்வம் ஸ்ருதி சத ஸிரஸ் ஸித்தம் அத்யாபயந்தீ’

அகாரத்தில்–அகாரோவை ஸர்வா வாக்’” என்றும் “அகரமுதலவெழுத்தெல்லாம்” என்றும் -ஜன்ய-ஜன்க பாவம் அல்லது பிதா – புத்ரபாவம் என்பது பிதா -புத்ர பாவமும்–அவ ரக்ஷணே” என்கிற தாதுவிலிருந்து தேறினதாகையாலே ரக்ஷ்ய -ரக்ஷக பாவமும்,லுப்த சதுர்த்தியாலே அவனுக்கே –தாதர்த்தே சதுர்த்தியாலே சேஷ-சேஷி பாவம் என மூன்று உறவுகளும் தோன்றும்.உகாரமானது அவதாரணப் பொருளதாய் எம்பெருமானுக்கே சேஷப் பட்டது என்று காட்டுதலால் ‘ கொண்டானை யல்லா லறியாக் குலமகள் போல் ” என்கிறபடியே பதி-பத்னீ பாவமாகிய உறவு தேறுகின்றது.மகாரமானது ” மரு ஜ்ஞானே” என்கிற
தாதுவிலிருந்து தேறினதாகையாலே ஜ்ஞாதாவான ஆத்மாவைச் சொல்லுதலால் ஞாத்ரு-ஜ்ஜேய பாவம் என்கிற உறவு தேறிற்று. எம்பெருமான் அறியப்படுபவன்; ஆத்மா
அறிகிறவன் என்றவாறு ” ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்குணர்வு ” என்கிற பொய்கை யாழ்வார் பாசுரம் இங்கு காணத் தக்கது.மகாரத்திற்குப் பிறகு உள்ள நம : பதத்தினால் தன்னை இரக்ஷித்துக் கொள்வதில் தனக்கு எவ்விதமான உரிமையுமில்லை என்று காட்டுவதால் ஆன்மாக்களெல்லாம் எம்பெருமானுடைய ஸொத்து என்று ஏற்படுகிறது. இதனால் ஸ்வ ஸ்வாமி பாவம் என்கிற உறவு தேறுகிறது.எம்பெருமான் ஸ்வாமி; நாம் அவன் சொத்து .நாராணாம் அயனம் என்கிற தத் புருஷ ஸமாஸத்தால் ஆதாராதேய பாவம் என்கிற உறவு தேறுகின்றது-நாராயண சப்தத்தில் நாரங்கள் பகவானிடத்திலே இருக்கின்றன என்பது தத் புருஷனால் ஸித்திக்கிறது. நாரங்களிலே பகவான் உளன் என்பது பஹிர் வ்ரீஹியால் ஏற்படுகிறது. அவற்றிலே இவன் இருப்பதாவது அவற்றை உடலாகக் கொண்டு தான் அவற்றுக்கு உயிராக இருப்பதே யாதலால் சரீர-ஆத்ம பாவம் ஸித்திக்கிறது. ஸகல சேதந அசேதங்களும் சரீரம்; அவன் சரீரி-ஒன்பதாவது உறவு போக்த்ரு – போக்ய பாவம் . இது நாராயண பதத்திலுள்ள நான்காவது வேற்றுமையால் ஏற்படுகிறது. நாராயணனுக்குச் செய்யப்படுகின்ற கைங்கர்யத்தின் போகமும் அவனுக்கே யன்றி இந்த ஜீவனுக்கில்லை. என்று காட்டுதலால் போக்த்ரு – போக்ய பாவம் என்கிற உறவைத் தெரிவிக்கின்றது . எம்பெருமான் போக்தா; ஜீவாத்மா போக்யன். ஜீவாத்மாவை போக்தாவாகவும் எம்பெருமானை போக்யனாகவும் கொள்வதும் ஒருபுடை உண்டெனினும் திருமந்திரத்தில் வடிகட்டின பொருள் முந்துறக் கூறினதேயாரும் என்பர்.
ஆக, திரு மந்திரத்தினால் நவவித (ஒன்பது விதமான) ஸம்பந்தங்கள் தெரிய வந்தன.

வெற்பென்று வேங்கடம் பாடினேன்; வீடு ஆக்கி
நிற்கின்றேன்; நின்றுநினைக் கின்றேன்; கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண்!

நின்ற தெந்தை ஊர கத்து இருந்த தெந்தை பாட கத்து
அன்று வெஃக ணைக்கி டந்த து என்னி லாத முன்னெ லாம்
அன்று நான் பிறந்தி லேன் பிறந்த பின் மறந்தி லேன்
நின்ற தும்இ ருந்த தும் கிடந்த தும் என் நெஞ்சுளே

எம்பெருமான் சம்சாரியான எனக்கு ருசி பிறவாதகாலமெல்லாம் ருசி பிறப்பிப்பதற்காக நின்றான், இருந்தான், கிடந்தான். என்னிடம் ருசி உண்டாக்குகை
அவனுக்குச் சாத்தியம் (பலன்) ; அதற்குச் சாதனம் (வழி முறைகள்) நிற்றல், இருத்தல், கிடத்தல் என்பவை. பலன் கைபுகுந்த மாத்திரத்தில் — என்னிடம் ருசி பிறந்ததும் –
அவன் திவ்விய தேசங்களில் நிற்றல்,இருத்தல், கிடத்தல் களைத் தவிர்த்து,-அரவத்து அமளியி னோடும் அழகிய பாற்கட லோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து-அந்த விருப்புகளையெல்லாம் என் நெஞ்சிலே செய்தருளினான் ” என்கின்
றார்

அடங்கெழில் சம்பத்து அடங்கக்கண்டு ஈசன்-அடங்கெழில் அஃதென்று அடங்குக உள்ளே.-இறைவனுக்கும் நமக்கும் உள்ள சம்பந்தம், எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்-ஆசாரிய ஹிருதயத்தின்,
ஒன்று கூடின தாய்ப் பற்று அறுக்க மீண்டு ஒழிகையாலே பழவடியேன் என்னுமது ஒன்றுமே
ஒழிக்க ஒழியாது ‘
(12)

இந்த உடல் சம்பந்தம் இடையில் வந்தேறியாய் நல்வினை தீவினை காரணமாக வருவது; இது யாதானும் ஒருகாலத்தில் அழியக் கூடியதாக இருக்கும். நாராயண சம்பந்தம் அநாதியாய் ஒருவித காரணமும் இல்லாமல் வந்ததாகையால், என்றும் உளதாயிருக்கும். இடையில் வந்த சரீர சம்பந்தத்தை அநாதி’ என்று சொல்லுவது பொருந்துமோ? என்ற வினா
எழுகின்றது. அதற்கு மணவாள மாமுனிகள் வந்தேறியான காலத்திற்கு அடி தெரியாமையாலும் அநாதி என்று பிரமாணங்சுகள் சொல்லுவதாலும் இவரும் (அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்) அநாதி’ என்றார். “ஒரு காலவரையில் அஃது இறைவனுடைய திருவருளால் அது மறையக் காண்கையாலே வந்தேறி என்பது
ஒருதலை” என்று கூறுவர்.

நாராயண சப்தார்த்தை அனுசந்திக்கிற திருமங்கை ஆழ்வார் –
எம்பிரான் எந்தை என்னுடை சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாணாள் -பெரிய திருமொழி -1-1-6–என்கையாலேஈஸ்வரனே இவ் ஆத்மாக்களுக்கு சர்வ வித பந்துவும் என்று இப் பதத்திலே சொல்லும்(முமுஷுப்படி-சூரணை -102)(பிரான் – உபகாரகன்; சுற்றம் – சகலவித பந்துவும்;அரசு – ஆண்டவன்; வாழ்நாள் – பிரான பூதன்]என்ற பாசுரத்தில் நான்கு விதமான சம்பந்தத்தைக் கூறி திருமந்திரத்தின் பொருளை விளக்கி மகிழ்கின்றார்.

குலசேகரப் பெருமாள் வித்துவக் கோட்டம்மான் திருப் பதிகத்தில் (5-ஆம் திருமொழி) இந்த நவவித சம்பந்தமும் அடங்கிக் கிடப்பதாக நம் முன்னோர் குறித்துப் போயுள்ளனர்.

தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவக் கோட்டு அம்மானே
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே
-5-1-பிரஜை உறங்குகிற தொட்டில் கீழே கிடக்கும் தாயைப் போலே இங்கே வந்து கிட்டினவனே-தம்முடைய பாரதந்த்ர்யத்தாலே தம்முடைய ரஷணத்துக்கு தமக்கு ஆனவையும் சொன்னார் –
சேஷியாகையாலே தம்முடைய ரஷணத்துக்கு ப்ராப்தன் -அவன் என்கிறார் -இப்போது –
ஒருவன் பேற்றுக்கு ஒருவன் சாதனமாம் போது இத்தனை பிராப்தி உண்டானால் அல்லது ஆகாது இறே-பிரஜை உடைய நோய்க்கு தாய் இறே குடி நீர் குடிப்பாள்-மேல் தாயை நிதர்சனமாகச் சொல்லப் புகுகிறவர் ஆகையால் இப்போது அம்மான் என்று பிராப்தி தோன்றச் சொல்லுகிறார் –வளர்த்த தாய் -என்னாதே-ஈன்ற தாய் -என்றத்தாலே பிராப்தம் சொல்லிற்று-

கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல
விண் தோய் மதிள் புடை சூழ் வித்துவக் கோட்டம்மா! நீ
கொண்டு ஆளாய் ஆகிலும் உன் குரை கழலே கூறுவனே
— 5-2-கொண்டானை யல்லால் யறியா -என்கையாலே –பாதி வ்ரத்யம் சொல்லிற்று-குலமகள் -என்கையாலே ஆபி ஜாத்யம் சொல்லிற்று-

மீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவக் கோட்டு அம்மா ! என்
பால் நோக்காய் ஆகிலும் உன் பற்று அல்லால் பற்றி இலேன்
தான் நோக்காது எத் துயரம் செய்திடினும் தார் வேந்தன்
கோல் நோக்கி வாழும் குடி போன்று இருந்தேனே—
5-3-என் ரஷணத்தில் எனக்கு அந்வயம் அல்லாதாப் போலே சம்பந்தம் உடைய நீயே ரஷிக்கும் அத்தனை – நான் செய்யலாவதும் இல்லை -நீ மாட்டாததும் இல்லை –

வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பல்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளா துயர் தரினும் வித்துவக் கோட்டு அம்மா ! நீ
ஆளா வுனதருளே பார்ப்பன் அடியேனே
— 5-4-பெற்ற தாய் பிரஜைக்கு அஹிதம் செய்யில் இறே நீ செய்வது -அப்படி இருக்கிற நீ செய்யிலும் –ஸ்வரூப அனுரூபமான வர்த்தியைப் பெறுகைக்காக-இப்போது தோற்றுகிற வ்யசனங்களை புத்தி பண்ணாதே உன் க்ருபையையே புத்தி பண்ணி இருப்பன் –

வெம் கண் திண் களிறு அடர்த்தாய் ! வித்துவக் கோட்டு அம்மானே !
எங்கு போய் வுய்கேன் ? உன் இணை அடியே அடையல் அல்லால்
எங்கும் போய் கரை காணாது எறி கடல் வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மா பறவை போன்றேனே
— 5-5–சம்சார சாகரத்தைக் கடக்கும் போது உகந்து அருளின தேசமான திரு வித்துவக் கோட்டை பற்றி அல்லது கடக்கலாம் அத்தனை அல்லது வேறு உபாயம் இல்லை இறே கடக்கைக்கு உகந்து அருளின தேசத்தை ஒழிந்தது எல்லாம் அக் கடல் போலே இறே-

செந் தழலே வந்து அழலை செய்திடினும் செங்கமலம்
அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கு அல்லால் அலராவால்
வெந்துயர் வீட்டா விடினும் வித்துக் கோட்டு அம்மா ! உன்
அந்தமில் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே
—5-6-கல்யாண உக்தமான உன் குணங்களுக்கு அல்லது என் நெஞ்சு நெகிழாது –

எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைம் கூழ்கள்
மைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் மற்றவை போல்
மெய் துயர் வீட்டா விடினும் வித்துவக் கோட்டு அம்மா! என்
சித்தம் மிக வுன் பாலே வைப்பன் அடியேனே
—5-7-அவஸ்யம் அநு போக்தவ்யம் -என்கிற பாபத்தைப் போக்கி சம்சார சம்பந்தம் அறுத்துக் கொடுக்க வந்து இருக்கிற நீ அது செய்திலை யாகிலும் என் ரஷணத்திலே நெகிழ்ந்தாய் என்று தோற்ற ஒருகாலுக்கு ஒருக்கால் உன் பக்கலிலே நெஞ்சு பிரவணமாகா நின்றது –

தொக்கி இலங்கி ஆறெல்லாம் பரந்தோடி தொடு கடலே
புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத மற்றவை போல்
மிக்கு இலங்கு முகில் நிறத்தாய் ! வித்துவக் கோட்டு அம்மா ! உன்
புக்கு இலங்கு சீர் அல்லால் புக்கிலன் காண் புண்ணியனே !
—5-8-புண்ணியனே -பிரதம ஸூஹ்ருதம் நீ யாகையாலே –

நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான்
தன்னையே தான்  வேண்டும் செல்வம் போல் மாயத்தால்
மின்னையே சேர் திகிரி வித்துவக் கோட்டு அம்மா !
நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே
–5-9-எப்போதும் கை கழலா நேமியனாய் ஆசிலே வைத்த கையும் நீயுமாய் என்னுடைய ரஷணத்துக்காக இங்கே வந்திருந்து வைத்து
காற்கடைக் கொண்டாயே யாகிலும் தன்னைக் காற்கடைக் கொண்டவனை ஐஸ்வர்யம் விடாதே போலே நீ என்னை உபேஷிக்க உபேஷிக்க-உன்னையே பற்றி நின்றேன் –

வித்துவக் கோட்டு அம்மா ! நீ வேண்டாயேயா யிடினும்
மற்றாரும் பற்றிலேன் என்று அவனை தாள் நயந்த
கொற்ற வேல்  தானை குலசேகரன் சொன்ன
நல் தமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே
– 5-10-இதுக்கு என்று வந்திருக்கிற நீ என்னை உபேஷித்தாயே யாகிலும்-வேறு ஒரு புகலில்லை-நான் அநந்ய கதி என்று -அவன் திருவடிகளை ஆசைப்பட்டு-பிரதிபஷத்தை பக்க வேரோடு வாங்க வற்றான வென்றியை உடைய வேலையையும் சேனையையும் உடைய ஸ்ரீ பெருமாள் சொன்னவை –
பிரதிபஷத்தை வெல்லுகைக்கு ஈடான பரிகரம் உடையரானார் போலே யாய்த்து –
ஸ்ரீ பகவத் ப்ராப்திக்கு பரிகரமாக-இவருடைய அநந்ய கதித்வத்வமும்-கடல் பேர் ஆழமாய் இருக்கச் செய்தே -உள்ளுள்ள பதார்த்தங்கள் தோற்றும்படியாய் இருக்குமா போலே
அர்த்தம் மிக்கு இருக்குமாய்த்து இத் திருமொழி –சம்சார சம்பந்தத்துக்கு அடியான பாபத்தை பண்ணினார்களே யாகிலும் இஸ் சம்சாரத்திலே வந்து பிரவேசியார்கள் –

ஆழ்வார்பெருமக்கள் எம்பெருமானைத் தந்தை நிலையில் வைத்தெண்ணக்கூடிய இடங்கள் எண்ணற்றவை.-திருவேங்கடத்து என் ஆனை என் அப்பன் (3.9:1)
என்றும், திருக்குறுங்குடி எம்பெருமானை,… குறுங்குடி மெய்யம்மையே உளனாய எந்தையை (3.9:2)-எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை தண் தாமரைக் கண்ணனை கொம்ப ராவு நுண் ணேரிடை மார்புனை (1.10:3)-எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் எம்பிரானை”என்று அழகாய்ப் பேச, அதன் இன்பத்தில் திளைத்த எம்பெருமான் ‘இப்படி ஏத்துகின்றவன் ஆர் ?” என்று குளிரக் கடாட்சிக்கின்றான். அக்கடாட்சத்தால் மகிழ்ந்த ஆழ்வார் தண்டாமரைக் கண்ணனை ” என்று மேலும் சிறப்பிக்கின்றார், குற்றமே வடிவான தம்மீது எம்பெருமான் இவ்வளவு சிறப்பாகக் கருணை காட்டக் காரணமில்லையே! என்ன காரணமோ? என்று ஆராய்ந்து பார்த்த ஆழ்வார். கடாட்சிக்கச் செய்யவல்ல பெரிய பிராட்டியார் அருகில் இருப்பதை உணர்ந்து, ‘ கொம்பு அராவு நுண் நேரிடை மார்பனை என்று மேலும் சிறப்பிக்கின்றார். இந்த ஆழ்வாரே திருவிண்ணகர் சேர்ந்த பிரானை – என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என்அப்பனே (6. 3.8)என் அப்பன் எனக்காய் இகுளாய என்னைப் பெற்றவளாய்,பொன் அப்பன் மணி அப்பன்; முத்தப்பன் என்னப்ப னுமாய் தன் ஒப்பார் இல் அப்பன் (6.3:9)(இருளாய்-செவிலியாய் என்று கூறுவதைக் காணலாம்-இந்த ஆழ்வாரே,பொழில்ஏழும் உண்ட எந்தாய் : (2,3:4)எள்கல் தந்த எந்தாய் ! (2.5:4)-எந்தாய் ! தண்திரு வேங்கடத்துள்
நின்றாய்
(2:6:9)எக்காலத்தும் எந்தையாய்ப் என்னுள் மன்னில் மற்று எக்கா லத்திலும் யாதொன்றும் வேண்டேன் (2.9:8) எழில்கொள சோதி எந்தை தந்தை தந்தைக்கே ! எந்தை தந்தைதந்தை (3.3:1) தந்தை தந்தைக்கும் முந்தை (3.3:2) ஆதுமில் காலத் தெந்தை அச்சுதன் (3.4:4)வார்ப்புனல் அந்தண் அருவி வடதிரு வேங்கடத் தெந்தை (3.5:8) தாவி ைையம் கொண்ட எந்தாய்! (4.7:3) ஆணி செம்பொன் மேனி எந்தாய் ! (4.7:4) ஏன மாய்நிலம் கீண்டஎன் அப்பனே ! (5.7:6) அகல்கொள் வையம் அளந்த மாயன்என் அப்பன் (6.4:6) புனத்து மாய்முடி மாலை மார்பன்என் அப்பன் (6.4:6) மாணி யாய்நிலம் கொண்ட மாயன்என் அப்பன் (6.4:6)
தூமுதல் பத்தர்க்குத் தான்தன்னைச் சொன்னஎன் | வாய்முதல் அப்பனை (7.9:3)
என்னால்தன்னை பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு (7.9.10)பதவிய – மதுரமான]
திருக்குறன் அப்பன் (7.10:2)-பாம்பணை அப்பன் (7.10:5)தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் நீயாய்நீ நின்ற வாறு இவைஎன்ன நியாயங்களே (7.8:1) பெரிய அப்பனை, பிரமன் அப்பனை;உருத்திரன் அப்பனை, முனிவர்க்குரிய அப்பனை, அமரர் அப்பனை,உலகுக்கோர் தனியப்பன் தன்னை (8,1:11)என்று எம்பெருமானை அப்பனாகப்-தந்தையாகப்-பாவித்துப் பாசுரங்கள் அருளியுள்ளதைக் காணலாம்.

மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய் விளக்கொளியாய் முளைத்தெழுந்த
திங்கள் தானாய்
பின்னுருவாய், முன்னுருவில் பிணிமூப் பில்லாப் பிறப்பிலியாய், இறப்பதற்கே
எண்ணாது என்றும்
பொன்னுருவாய், மணியுருவில் பூதம் ஐந்தாய்ப் புனலுருவாய், அனலுருவில்
திகழும் சோதி
தன்னுருவாய், என்னுருவில் நின்ற எந்தை

ஒண்மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப ஒரு காலும் காமருசீர் அவுணன் உள்ளத்து
எண்மதியும் கடந்தண்ட மீது போகி இருவிசும்பி லூடுபோய் எழுந்து மேலைத்
தண்மதியும் கதிரவனும் தவிர ஓடித் தாரகையின் புறந்தடவி, அப்பால் மிக்கு
மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை

திருமங்கையாழ்வாரின் திருநாங்கூர்த்திருமணிக் கூடம் திருமொழி ஒன்றின் (4.5) ஒவ்வொரு பாசுரத்திலும் இந்தத் தந்தை- தனயன் உறவு முறை அமைந்திருப்பதைக்
கண்டு அநுபவித்து மகிழலாம்.
காம்புடைக் குன்ற மேந்திக் கடுமழை காத்த எந்தை (1)
வவ்விய இடும்பை கூரக் கடுங்கணை துகந்த எந்தை (2)
வன்தாள் சேத்தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித்தோள் புணர்ந்த எந்தை (3)
பூங்குருக் கொசித்துப் புள்வாய் பிளந்தெரு து) அடர்ந்த எந்தை (4)
வருமவள் செவியும் மூக்கும் வானினால் தடிந்த எந்தை (5)
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய எந்தை (6)
நின்றவெஞ் சுடரும் அல்லா நிலைகளும் ஆய எக்தை (7)
பொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களும் ஆய எந்தை (8)
கோவமும் அருளும் அல்லாக் குணங்களும் ஆய எந்தை (9)
என்ற பாசுரப் பகுதிகளைக் காண்க.

நல் வீடு செய்யும் மாதாவினைப் பிதுவை திருமாலை வணங்குவனே (திருவிருத் – 95)
மேலாத் தாய்தந்தையும் அவரே இனி ஆவாரே (திருவாய்.5.1:8)தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ் திருவரங்கத்துள் ஓங்கும் ஒளியுணர் தாமே யன்றே தந்தையும் தாயும் ஆவா
[ஓங்கும்-விஞ்சியிருக்கும் ஒளிதேசு ] – திருமாலை – 37-அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய்‘ (திருச்சந்.115)தாயும் தந்தையும் ஆய்இவ் வுலகினில் வாயும் ஈசன் மணிவண்ணன், எந்தையே (1-10:6)வாயும் அவதரித்தவன்?எந்தை யே!என்றும், எம்பெரு மான்! என்றும் சிந்தையுள் வைப்பன்; சொல்லுவன் (1-10:7)” என்னைப்பெற்ற
அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா
(2.3 2)தஞ்ச மாகிய தந்தை தாயொடு தானுமாய் (3.6:9)

தாய் நினைந்து கன்றே ஒக்க என்னையும் தன்னையே நினைக்கச் செய்து தான் எனக்கு
ஆய்நினைந்து அருள் செய்யும் அப்பனை
(பெரி. திரு.7.3:2)உயிர்க் கெல்லாம்
தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா
!- பெரி . திரு. 7:19-பெற்ற தாய் நீயே, பிறப்பித்த தந்தை நீ; மற்றையார் ஆவாரும்நீ; (பெரி .திருவந்- )

———–

இரட்சக – இரட்சய சம்பந்தம்

பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றானாய் வளர்ந்து என் உயிராகி நின்றானை
முற்றா மாமதிகோள் விடுத்தானை எம்மானை
எத்தால் யான் மறக்கேன் இதுசொல், என் ஏழை நெஞ்சே
! (6)

திரு மந்திரத்தில் தேறுகின்ற ஒன்பது வகையான உறவுகளையும் உடையவன் எம்பெருமான் என்பது ”உற்றானாய் நின்று வளர்த்து என் உயிராகி நின்றானை” என்ற அடியால் பெறப்படுகின்றது.

உலகைப் பிரளயத்திலிருந்து எம்பெருமான் உய்வித் தமையைக் கூறும், பெரிய திருமொழியிலுள்ள ‘மை நின்ற (11.6) என்ற பதிகத்தில் திருமங்கையாழ்வாரின் திருவாக்கு
கள் (ஒன்பது பாசுரங்கள்) இரட்சக-இரட்சய உறவினை மிகத் தெளிவாக விளக்குகின்றன. மைந்நின்ற கருங்கடல் வாய் யுலகின்றி வானவரும் யாமும் எல்லாம்
மெய்ந்நின்ற சக்கரத்தன் திரு வயிற்றில் நெடுங்காலம்
-11-6-1-

வெம்பெருமான் உண்டு உமிழ்ந்த வெச்சில் தேவர்
அல்லாதார் தாம் உளரே யவன் அருளே யுலகாவது அறியீர் களே
–11-6-2-

நெற்றி மேல்  கண்ணானும் நிறை மொழி வாய் நான்முகனும் நீண்ட நால்வாய்
ஒற்றைக் கை வெண் பகட்டில் ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும்
வெற்றிப் போர் கடல் அரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட
கொற்றப் போராழியான் குணம் பரவாச் சிறு தொண்டர் கொடியவாறே
–11-6-3-

பனிப் பரவித் திரை ததும்பப் பார் எல்லாம் நெடும் கடலே  யானகாலம்
இனிக் களை கண் இவர்க்கு இல்லை என்று உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி
முனித்தலைவன் முழங்கொளி  சேர்  திரு வயிற்றில் வைத்து உம்மை யுய்யக் கொண்ட
கனிக்கவளத் திருவுருவத் தொருவனையே கழல் தொழுமா கல்லீர்களே –
11-6-4-

பாராரும் காணாமே பரவை மா நெடும் கடலே யான காலம்
ஆரானும் அவனுடைய திரு வயிற்றில் நெடும் காலம் கிடந்தது உள்ளத்து
ஓராத உனர்விலீர் உணருதிரேல் உலகளந்த உம்பர் கோமான்
பேராளான் பேரான பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே
 -11-6-5-

பேயிருக்கு நெடு வெள்ளம் பெரு விசும்பின் மீதோடிப் பெருகு காலம்
தாயிருக்கும் வண்ணமே யும்மைத் தன் வயிற்றிருத்தி  உய்யக் கொண்டான்
போயிருக்க மற்று இங்கோர் புதுத் தெய்வம் கொண்டாடும் தொண்டீர் பெற்ற
தாயிருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ மாட்டாத தகவற்றீரே
—11-6-6-

மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றும் எல்லாம்
உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி யுய்யக் கொண்ட
கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல் சூடியவனை உள்ளத்து
எண்ணாத மானிடத்தை எண்ணாத  போதெல்லாம் இனியவாறே
–11-6-7-

மறம் கிளர்ந்து கரும் கடல் நீர்  உரந்துரந்து பரந்தேறி யண்டத்தப்பால்
புறம் கிளர்ந்த காலத்துப் பொன்னுலகம் ஏழினையும் ஊழில் வாங்கி
அறம் கிளர்ந்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை உய்யக் கொண்ட
நிறம் கிளர்ந்த கருஞ்சோதி நெடும் தகையை நினையாதார் நீசர் தாமே
–11-6-8-

அண்டத்தின் முகடு அழுந்த அலை முந்நீர்த் திரை ததும்ப ஆவா வென்று
தொண்டர்க்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் தான் அருளி உலகம் ஏழும்
உண்டு ஒத்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை யுய்யக் கொண்ட
கொண்டற் கைம் மணி வண்ணன் தண் குடந்தை நகர் பாடி யாடீர்களே
–11-6-9-

மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வன் (திருமாலை-1)
‘பாரினை உண்டு, பாரினை உமிழ்ந்து’ (பெரி . திரு. 4.10:5)
‘உண்டாய் உலகு ஏழ் முன்னமே உமிழ்ந்து மாயையால் புக்கு(திருவாய்- 1.5:8)

ஓவாத் துயர்ப் பிறவு உட்படமற் றெவ்வவையும்
மூவாத்தனிமுதலாப் மூவுலகும் காவலோன்
மாவாகி ஆமையாய்மீனாகி மானிடமாம்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே
(2-8-5)

சோம்பாது இப்பல்லுருவையெல்லாம் படர்வித்த வித்தா! ‘ (பெரிய திருவந்.18,

களைவாய் துன்பம்; களையா (து) ஒழிவாய்; களைகண் பற்றிலேன்;
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்த மாமாயா!
தளரா உடலம் என்ன (து) ஆவி சரிந்து போம்போது
இளையா(து) உன்தாள் ஒருங்கப் பிடித்துப் போதஇசை நீயே
-5-8-8-

நலந்தான் ஒன்றுமிலேன் நல்ல தோரறஞ் செய்துமிலேன் -பெரி . திரு .1.9:4-ஆகிஞ்சன்னியம்”, அநக்யகதித்துவம்

தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத் தனியொரு தேர்கடவித் தாயொரு கூட்டிய என்
அப்ப
!(பெரியாழ். திரு.1.6:7)பிறப்பகத்தேமாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும்
இறைப் பொழுநில் கொணர்ந்து கொடுத்து ஒருப்பகுத்து உறைப்பன்
(பெரியாழ். திரு.4.8:2) வேத வாய்மொழி அந்தணன் ஒருவன் எந்தை! நின்சரண் என்னுடை மனைவி
காதல் மக்களைப் பயத்தலும் காணாள் கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப ஏதலார் முன்னே இன்னருன் அவற்குச் செய்து உன்மக்க மற்றுஇவர் என்று
கொடுத்தாய்
(பெரி.திரு. 5.8 8)படர் புகழ் பார்த்தனும் வைதிக னும்உடன் ஏறத்திண் தேர்கடவி சுடரொளி யாய்நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை
உடலொடுங் கொண்டு கொடுத்தவன்
(திருவாய்.3.10:5)மாதவத்தோன் புத்திரன்போய்
மறிகடல்வாய் மாண்டானை ஓதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தான்
.-பெரியாழ். திரு .4.8:1-ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும் உனக்கு முன் தந்த| அந்தணன் ஒருவன்
‘ காதல் என் மகன் புகலிடங் காணேன் ; கண்டு நீ தரு வாயெனக்கு என்று கோதில் வாய்மையினான் உனை வேண்டிய குறைமு டித்தவன் சிறுவனைக் கொடுத்தாய்
-பெரி. திரு. 5.8-7

அல்லற் படாவண்ணம் காக்க வேண்டும் (4-10-3) அற்றைக்கு நீ என்னைக் காக்க வேண்டும் (4-10-4)ஐய! இனிஎன்னைக் காக்க வேண்டும் (5) அண்ணலே! நீ என்னைக் காக்க வேண்டும் (6) அஞ்சலை என்றுஎன்னைக் காக்க வேண்டும் (7)ஆனாய்! நீஎன்னைக் காக்க வேண்டும் (8)

————

4-சேஷீ -சேஷ உறவு-சீவான்மாவுக்கு அவனுடைய கை, கால்கள் முதலான உறுப்புகள் கூடிய உடல் சேஷமாவது போன்று, பரமான் மாவுக்குச் சரீரமாக நிற்கும் இந்தச் சீவான்மா சேஷபூதன் (அடிமை) ஆகின்றான். சர்வேசுவரன் தன்னுடைய திருவுள்ளத்தின் சங்கல்பா குணமாய்த் தனக்கே உரிய விருப்புப் பொருளாய் உரிமையாக்கிக் கொள்ளுகின்றான்.
அதனால் பரமான்மா (ஆண்டான்) ஆகின்றான்.

சென்றால் குடையாம்; இருந்தால்சிங் காசனமாம்
நின்றால் மரவடியாம் ; நீள்கடலுள் என்றும்
புணையாம் ; அணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்,
அணையாம் திருமாற்கு அரவு

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று

திருவேம்கடவா நாயேன் வந்தடைந்தேன் நல்கி யாள் என்னைக் கொண்டருளே—1-9-1-திருவேம்கட மா மலை என் ஆனாய்  வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-2-குளிர் மா மலை வேங்கடவா அன்றே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-நெறியார் திருவேங்கடவா அலந்தேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—-1-திருவேங்கட மா மலை என் அப்பா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—-1-9-5- விரையார் திருவேங்கடவா அண்ணா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே-1-9-கன மா மலை வேங்கடவா அரியே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே–1-9-7-சோலை சூழ் வேங்கடவா ஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-8-மாயனே எங்கள் மாதவனே கல் தேன் பாய்ந்து ஒழுகும்கமலச் சுனை வேங்கடவா அற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே–1-9-9-பிராட்டி சம்பந்தம் கூறப் பெற்றிருப்பதனால் ‘புருஷகாரம்‘ தெளிவாகின்றது.

விண்ணோர் தொழும் வேங்கடமாமலை மேய அண்ணா வடியேன்இடரைக் களையாயே1 10-விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய அலங்கல் துளப முடியாய் அருளாயே–1-10-2-சீரார் திருவேங்கட மா மலை மேய ஆராவமுதே அடியேற்கு அருளாயே–1-10-3-நில மீரடியாலே
விண டோய் சிகரத் திருவேங்கடம் மேய அண்டா வடியேனுக்கு அருள் புரியாயே-1-10-4-சேணார் திருவேங்கட மா மலை மேய கோணா கணை யாய் குறிக்கொள் எனை நீயே-1-10-5-மின்னார் முகில்சேர் திருவேங்கடம் மேய என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உளானே6-தேனே திருவேங்கட மா மலை மேய கோனே என் மனம் குடி கொண்டு இருந்தாயே–1-10-7-வேய் விண்டுதிர் வேங்கட மா மலை மேய ஆயன் அடி அல்லது மற்று அறியேனே–1-10-8-சிந்தா மணியே திருவேங்கடம் மேய எந்தாய் இனி யான் உன்னை என்றும் விடேனே–1-10-9-

காவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே –4-6-1-நாங்கை மேய
கண்ணனே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -4-6-2-நாங்கைக்
கருத்தனே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே-4-6-3-நாங்கைக்
கனை கழல் காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-4-நாங்கை மேய
கடவுளே காவளந்தண்  பாடியாய் களை கண் நீயே -4-6-5-நாங்கை மேய
கல்லரண் காவளந்தண் பாடியே களை கண் நீயே -4-6-6-நாங்கைக்
காத்தேன் காவளந்தண் பாடியாய் களை கண்நீயே –4-6-7-நாங்கைக்
காவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே -4-6-8-மட மயிலாலு நாங்கைக்
கந்தமார் காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -4-6-9-

முட்டில்பல் போகத் தொரு தனி நாயகன் மூவுல குக்குரிய
கட்டியைத் தேனை அமுதை நன் பாலைக் கனியைக் கரும்புதன்னை
மட்டவிழ் தண்ணக் துழாமுடி யானை வணங்கி அவன் திறத்துப்
பட்டபின் னைஇறை யாகிலும் யான்என் மனத்துப் பரிவலனே
(3-10-3)-தனி நாயகன்- ஒப்பற்ற தலைவன்;பட்டபின்னை–ஆட்பட்ட பிறகு

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத் தொடு வீற்றிருந்தும் மணங்கூடியும்
கண்ட வாற்றால் தனதே உலகென் நின்றான்தன்னை
வண்டமிழ் நூற்க நோற்றேன் அடியார்க் கின்பமாரியே
(4-5-10)-தனதே உலகென நின்றான் தன்னை ‘ என்பதால் சேஷித்துவமும் ‘ வண்டமிழ் நூற்க நோற்றேன்’ என்பதால் சேஷத்துவமும் தெளிவாகின்றன.

வாரா வருவாய் வரும்என் மாயா ! மாயா மூர்த்தியாய்!
ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய் ! திருக்குடந்தை
ஊரா ! உனக்காட் பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?
(5-8-10)’ஆண்டாய் ‘ என்பதால்
சேஷித்துவமும், உனக்காட்பட்டும்? என்பதால் சேஷத்துவமும் தெளிவாகின்றன

தெரிதல் நினைதல் எண்ணல் ஆகாத் திருமாலுக்கு உரிய தொண்டர் தொண்டர் தொண்டர் சடகோபன் (6-9-11)-திருமாலுக்கு’ என்பதால் சேஷித்துவமும்,–தொண்டர் தொண்டள்’ என்பதால் சேஷத்துவமும் தெளிவாகின்றன.

புண்ட ரீகக்கொப் பூழ்புனற் பள்ளி அப்பனுக்கே தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் (7-1-11)’புனல் பள்ளி அப்பன் ‘ என்பதால் சேஷித்துவமும் .தொண்டர் தொண்டன்’ என்பதால் சேஷத்துவமும் புலனாகின்றன.

என்அமர் பெருமான் இமையவர் பெருமான் இருநிலம் இடந்தாம் பெருமான்
முன்னைவல் வினைகள் முழுதுடன் மாள என்னை ஆள் கின்ற எம்பெருமான்
(8-4-3)’ என் அமர் பெருமான்… இருநிலம் இடந்த எம்பெருமான் ‘ என்பதால் சேஷித்துவமும், என்னை ஆள்கின்ற ‘ என்பதால் சேஷத்துவமும் அறியப்பெறுகின்றன.

செந்தழலே வந்து அழலைச் செய்திடினும் செங்கமலம்
அந்தரம்சேர் வெங்கதிரோற் கல்லால் அலராவால்
வெந்துயர்வீட் டாவிடினும் விற்றுவக் கோட்டம்மா !உன்
அந்தமில் சீர்க்கல்லால் அகம்குழைய மாட்டேனே
(5-6)ூரியன் நிலையில் எம்பெருமா
னையும் (சேஷி) தாமரையின் நிலையில் தம்மையும் (சேஷன்) வைத்துக் கூறியதனால் ஆண்டான்- அடிமை உறவு காணப்படும். ஆனால் பிரதிவாதி பயங்கரம் அண்ணசாமி, நாயக. நாயகிபாவனை தொனிக்கும் என்று அருளிச் செய்வர். ஒரு வகையில் நோக்கினால் இதுவும் பண்டைய நிலைப்படி ஆண்டான்-அடிமை உறவு தானே!

5-நாயக-நாயகி சம்பந்தம்
ஞானத்தில் தம் பேச்சு பிரேமத்தில் பெண் பேச்சு-சம்பந்த உபாய பலங்களில் உணர்த்தி துணிவு பதற்றம் ஆகிய பிரஜ்ஞாவஸ்தைகளுக்குத் தோழி, தாயார்.
மகள் என்று பேர்
“ஞானாவஸ்தைகள்’ என்னாமல் பிரஜ்ஞாவஸ்தைகள்’-என்றது –அவஸ்தா திரய விருத்தி’-மூன்று விதமான நிலைகளும் அவர்கட்கு எல்லாக் காலங்களிலும் உண்டு என்னுமிடம் தோற்றுகைக்காக.

தீர்ப்பாரை யாமினி -4-5-அநந்யார் சேஷத்துவத்தைத் தோழி வெளிப்படுத்துவது-
சின்மொழி நோயோ கழிபெருந்தெய்வம், இந்நோய் இனது என்று
இன்மொழி கேட்கும் இளந்தெய்வம் அன்று இது வேல! நில்நீ
என்மொழி கேண்மின் என் அம்மனைமீர்! உலகேழும் உண்டான்| சொன்மொழி மாலை அம் தண்ணந் துழாய்கொண்டு சூட்டுமினே (20)
‘துவளில் மணிமாடத்து'(6.5)-தலைவியின் அநந்யார்ஹத்துவம் தோழிக்கு தெரிவித்தவாறு.
‘கருமாணிக்க மலைபோல்’ (8.9)-‘இவளது உடம்பில் அழகிய குளிர்ந்த திருத்துழாயின் மணம் வீசுவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? என் உடம்பிலாவது உங்கள் உடம்பிலாவது திருத்துழாய் மணம் வீசுகின்றதோ? எம்பெருமான் திருமேனியில் அணைந்தாலல்லது இம் மணம் வீசுவதற்குக் காரணம் உண்டோ?” என்கின்றாள் . “இராஜ புத்திரரை அணையாதாற்குக் கோயில் சாந்து நாறுவதற்கு விரகு உண்டோ?” என்பது ஈடு. இதனால் திருப்புலியூரில் நின்ற மாயப் பிரானுடையதிருவருளுக்கே இவள் இலக்காயினாள் என்று கூறும் தோழியின் கருத்தில் தலைவியின் அநந்யார்ஹ சேஷத்துவம்’ பளிச்சிடுகின்றதன்றோ?

மண்ணையிருந்து துழாவி (4.4) என்ற திருப்பதிகத்தில்,-தாய்ப்பாசுரம்–தலைவியின் பாரதந்திரியம் வெளி யாகின்றது.
‘உண்ணும் சோறு’ (6.7) என்றபதிகம் தாய்ப் பாசுரம் -எல்லாம் கண்ணன் ‘ என்ற தாய்ப் பாசுரத் தொடர் தலைவியின் பாரதந்திரியத்தையும். உபாயத்தையும் காட்டுகின்றது.
கங்குலும் பகலும்’ (7.2)-பெரிய பெருமாளைத் தாய் வினவுவதில் ஆழ்வாரின் ஈஸ்வர பாரதந்திரியமும் உபாயத்தில் துணிவும் பளிச்சிடுவதைக் காண்லாம்
உடனே பெற வேண்டும் என்ற பதற்றத்தை யுடையவள் மகள்.-
திருக்குறுங்குடி பற்றிய ‘எங்ஙனேயோ’ (5.3)திருவாய்மொழியில்,-தலைவியின்
வாக்கு அவளது பதற்ற நிலையைப் பாங்குடன் தெரிவிக்கின்றது.
‘வெள்ளைச் சுரி சங்கொடு(7 3) என்று தொடங்கும் திருவாய்மொழியிலும் இன்னுயிர்ச் சேவலிலும் (9.5)அவனுடைய திருக் குணங்களை ஒருவாறு நினைத்துத் தரித்தும் நடைபெறுகின்றது -இப் பாசுரங்கள் ஆழ்ந்து ஓதி அனுபவிக்கும் போது தலைவியின் துடிப்பைப்- பதற்றத்தைத்- தெளிவாக உணர முடிகின்றது.

திருமங்கையாழ்வாரின் ‘தவள இளம்பிழை (9.5)என்று தொடங்கும் திருக்குறுங்குடி பற்றிய திருமொழியிலும் என்னுடைய ஆவி இனி தரிக்க விரகில்லை; நான் வேண்டும் என நீங்கள் நினைத்தால்,திருக்குறுங்குடியில் என்னைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுங்கள் ; அங்கே எழுந்தருளி யிருக்கின்ற கொண்டல் மணி வண்ணரைக் கண்டவுடன் என் வாட்டமெல்லாம் தீரும்;மேகத்தையும் மணியையும் கண்ட பின்னரும் வாட்டம் நிற்குமோ ? ஆகவே, பாதகப் பொருள்களின் வசத்திலே அகப்பட்டு நான் நலிவு படாமல் இவை யெல்லாம் அநுகூலங்களாகப் பெறும் தேசத்தில் என்னைக் கொண்டு போய் விட்டிடுங்கள்” என்கின்றாள்.
நாச்சியார் திருமொழி(12) –
மதுரைப் புறத்து என்னை உய்த்திடுமின் (1)
ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின் (2)
நந்தகோ பாலன் கடைத்தலைக்கே என்னை உய்த்திடுமின் (3)
யமுனைக் கரைக்கு என்னை உய்த்திடுமின் (4)
பொய்கைக் கரைக்கு என்னை உய்த்திடுமின் (5)
பத்தவிலோசனத்து (என்னை) உய்த்திடுமின் (6)
பாண்டி வனத்து என்னை உய்த்திடுமின் (7)
கோவர்த் தனத்து என்னை உய்த்திடுமின் (8)
துவராபதிக்கு என்னை உய்த்திடுமின் (9)-இவற்றிலெல்லாம் “எம்பெருமானைக் கிட்டியல்லது தரியேன்” என்ற பதற்றம் தொனிப்பதைக் காணலாம். ‘சித்தோபாயம்’ நிழலிடுவதைக் கண்டு மகிழலாம்.

6-ஞாதா-ஞேயன் உறவு-அறிவன்- அறியப்படும் பொருள் உறவு-
மகாரம் இருபந்தைந்தாம் அட்சரமாய் ஞானவாசியுமா யிருக்கையாலே, ஆத்மாவைச் சொல்லுகிறது.(முமுட்சுப்படி.-66) -ஆன்மாவிற்கு சேஷத்துவம், ஞானத்துவம், ஞாத்ருத்வம் (அறிவுடையவனாய் இருக்கை) ஆகிய மூன்று தன்மைகள் உண்டு-
பெயரும் கருங்கடலே நோக்கும் ஆறு;ஒண்பூ
உயரும் கதிரவனே நோக்கும் -உயிரும்
தருமனையே நோக்கும்;-ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு-பொய்கை யாழ்வாரின் திரு வாக்கு- 67)–இப் பாசுரத்தில் உணர்வு என்பது ஞான மயனான ஆன்மா திருமாலுக்கு அநந்யார்ஹ சேஷ பூதன் என்பதை உணர்த்தும் –
சிந்தை மற்றொன்றின் திறத்தல்லாத் தன்மை தேவ பிரான் அறியும்
சிந்தையினால் செய்வ தானறியாதன மாயங்கள் ஒன்றுமில்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன்விளையுறை தீர்த்தனுக் கற்ற பின்னே (7-10-10)–எம்பெருமானுக்கு அடிமை என்று அறுதியிட்ட பின்பு என் மனம் வேறு ஒன்றினை உத்தேஸ்யமாக நினைத்திராத தன்மையை எம்பெருமான் அறிவான்; சிந்தையினால் நினைக்கப்படு வனவான வஞ்சனைகள் (மாயங்கள்) அவன் அறியாதன ஒன்றும் இல்லை -“ஆழ்வீர்! இப்போது நீர் திருவாறன்விளையிலே பிராவண்யம் (ஊற்று) முற்றி யிருந்தீராகிலும், பல காலும் பரம பதம், பரம பதம்’ என்று வாய் வெருவிக் கிடந்தீராதலால்,எம்பெருமான் . இதையே கொள்ளும்’ என்று நிர்பந்தித்துக் கொடுத்தானாகில் என் செய்வீர்?” என்று சிலர் உசாவியதாகக் கொண்டு அதற்கு விடை தருகின்றார் இப் பாசுரத்தில்,”அதனை,என் நினைவிற்கு மூலமாக இருக்கின்ற சர்வேஸ்வரனைக் கேட்டுக் கொள்வது” என்று அருளிச் செய்வர் நஞ்சீயர். ”திருவாறன் விளையே பிராப்பியம் என்று இருக்கின்றீர்; ஈஸ்வரன் ஸ்வதந்திரன் அல்லனோ? அவன் பரம பதத்தைத் தரின் என் செய்வீர்!” என்ன, ” அவன் முற்றறிவினன் அல்லனோ? அவன் அறியானோ. என்கின்றார்’என்று பிள்ளான் பணிப்பர். “அவன் புருஷார்த்தப் பிரதன் என்று பிரசித்தி பெற்றவன் அல்லனோ? புருஷன் விரும்பியதை யன்றோ அவன் கொடுத்தருளுவன்! எனது சிந்தை திருவாறன் விளை தவிர மற்றொன்றையும் கணிசியாதிருக்கும் படியை அறிய ஆற்றலற்றவன் அல்லனே; அப்படி அறிந்து கொண்டும் எங்ஙனே மற்றொன்றினைக் கொடுப்பான்?” என்கின்றார். “மற்றொன்று என்கிறது பரம பதத்தின் பெயர் சொல்லுகையும் கூட அஸஹ்யமானபடி” என்பது ஈடு, இதனாலும் ‘ஞாதா -ஞேயன்” உறவு உறுதியாகின்றது.

7-(ஸ்வ-ஸ்வாமி)சொத்து – சொத்துக் குரியவன்
யானே என்னை அறிய கிலாதே
யானே என் தனதே என்று இருந்தேன்
யானே நீ ; என் உடைமையும் நீயே;
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே!(2-9-9)-இதனால் சொத்து-சொத்துக்குரியவன் ‘ என்ற சம்பந்தம் தெளிவாகின்றது.

ஆனந்தமாய் அரங்கற்கே உயிர்கள் |அடிமை என்னும்
ஞானந்தனால் ஐம் பொறி வாசல்! சாத்தி நற்றாளைப் பற்றி
ஈனந் தரும் பற்றும் மற்றென்றும் யான் எனது என்னும் அபி
மானம் தவிர்ந்திருப்பார்க்கு இது | போல் இல்லை மாதவமே.–திருவரங்கக்கலம்பகம்

மாத வங்கள் என்(று) ஓத வங்களின் மருவு சீவன் என்று ஒருவ! நீபெரும்
பூதம் அல்லை; இந் திரியம் அல்லை;ஜம்புலனும் அல்லை;நற் புந்தி அல்லை காண்;
சீத ரன்பரம் தாமன் வாமனன்|திருவ ரங்கனுக் கு) அடிமை; நீயுனக்கு
ஏதும் இல்லை என்றறி; அறிந்தபின் ஈதின் மாதவம் இல்லை எங்குமே-திருவரங்கக் கலம்பகம்

8-சரீர- சரீரி பாவனை-அதாவது சித்தும் அசித்தும் எம்பெருமானுக்கு உடலாக
இருக்கும்-இங்ஙனமாக உடலைப் பற்றி நிற்கும் உயிர் அவ்வுடலுக் கேற்ப இன்ப துன்ப உணர்ச்சிகளும் அறிவின் சுருக்கமும் பெருக்கமும் அடைதல் தெளிவாகும். ஆனால், உடல் உயிர் இரண்டினுள்ளும் கலந்து நிற்கும் இறைவனை இவ்வேறுபாடுகள் சிறிதும் அடைவதில்லை -இதற்குக்காரணம் ‘பிரவேச ஹேது விசேடம்”
திடவிசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசைப்
படர் பொருள் முழுவதும் ஆய்அவை அவை தொறும்
உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்.
நீர்ஆய் நிலன்ஆய் தீ ஆய் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டு ஆய் சிவனாய் அயன் ஆனாய்
அடியேன் உள்ளான் உடல் உள்ளான்–அஹம் ‘ அர்த்தத்துக்கு ஞாநாநந்தங்கள் தடஸ்தம் என்னும்படி தாஸ்யமிறே அந்தரங்க நிரூபசும் என்ற ஸ்ரீவசனபூஷன ஸூத்திரத்திற்கு ‘அடியேன் உள்ளான் என்றாறிறே ஆழ்வார் ! திருக்கோட்டியூர் நம்பி ஸ்ரீபாதத்திலே ஆழ்வான் ஆறு மாதம் சேவித்து நின்று மகா நிதியாகப் பெற்ற அர்த்தமிறே இது” என்று மணவாள மாமுனிகள் அருளிச் செய்துள்ளார்
திடவிசும்பு எரிநீர் திங்களும் சுடரும்
செழு நிலத்து உயிர்களும் மற்றும்
படர் பொருள்களுமாய் நின்றவன்-திருமங்கையாழ்வர்
யாவையும் எவரும் தானாய் அவரவர் சமயம் தோறும்
தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும் சொலப்படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதுமோர் பற்றுஇலாத
பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே

9-ஆதார-ஆதேய சம்பந்தம்–ஆதாரம்- தாங்குவது-ஆதேயம்- தாங்கப் பெறுவது
நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனஞ்செய் ஞானத்து உன்பெருமை மாசுணாதோ? மாயோனே. (1-5-2)
தனிமாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாத தான்தோன்றி
முனிமாப் பிரம முதல்வித்தாய், உலகம் மூன்றும் முளைப்பித்த
தனிமாத் தெய்வம் (8-10-7)–‘தோன்ற’ என்பதனால் சமஷ்டி சிருஷ்டியும், இரண்டாவது அடியிலுள்ள முளைப்பித்த என்பதால் வியஷ்டி சிருஷ்டியும் தெரிவிக்கப் பெறுகின்றன.
எங்குவந்துறுகோ, என்னை யாள் வானே ?ஏழுலகங்களும் நீயே;
அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே ;அவற்றவை கருமமும் நீயே ;
பொங்கிய புறம்பால் பொருளுள வேலும் அவையுமோநீ; இன்னே யானால்,
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே; வான் புலன் இறந்ததும் நீயே (8-1-6)-மங்கிய
அருவாம்நேர்ப்பம்’ என்பதற்குப் பத்த ஆன்மாக்களின் தொகுதி என்றும், ‘வான் புலன் இறந்தது ‘ என்பதற்கு முக்தாத்மாக்களைச் சொல்லுகிறது என்றும் பிள்ளான் பணிப்பர். அப்போது இல்லாததற்குச் சமமாய் ஸூஷ்மமான ஆன்மாக்களின் தொகுதி என்றும், பரம பதத்தில் கண்களுக்குப் புலப்படாத முக்தாத்ம ஸ்வரூபம் என்றும் பொருள் படும்-இந்தப் பாசுரத்தால் ஆதாரம் எம்பெருமான் என்றும்,ஆதேயம் ஆன்மாக்கள் என்றும் தெளிவாகின்றது.
இறந்ததும் நீயே; எதிர்ந்ததும் கீயே; நிகழ்வதோ நீ இன்னே ஆனால்,
சிறந்ததன் தன்மை அதுஇதுஉது என்று அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன் (7)-பாவியாகிய அடியேன் அந்தச் சம்பந்த ஞானம் ஒன்றிலும் ஐயம் கொள்ளா நின்றேன்?” இதிலும் ஆதார- ஆதேய உறவு தெளிவாகின்றது –
நான்உன்னை யன்றி யிலேன் கண்டாய் நாரணனே! நீஎன்னை அன்றி இலை. (7)-நீ எனக்கு ஆதாரம்; நான் உனக்கு ஆதேயம் ‘–இது தானே உண்மை? ” என்கின்றார் ஆழ்வார்.

போக்தா-போக்கிய சம்பந்தம்
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே;
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே (2-9-4)-அத்தியந்த பாரதந்திரியத்தைப் பயனாக அறுதி யிடுகின்றார் ஆழ்வார்.
நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மை செய்(து) என்னுயிராய் என் உயிர் உண்டான்
திருவருள் செய்பவன் போல என் உள் புகுந்து
உருவமும் ஆருயிரும் உடனே உண்டான்–அவன் அங்கீகாரத்திற்கு முன்பு இவர்
சரீரத்தையே விரும்பிப் போந்தார். அவன் இவரை அங்கீகரித்த பின்பு இவர் தம் சரீரத்தை வெறுக்க அவன் இவருடைய சரீரத்தை விரும்பிப் புக்கான்.இவருக்கு
அவனுடைய சேர்க்கை ஸ்வரூப ஞானத்திற்கு உடல் ஆயிற்று; அவனுக்கு இவருடைய சேர்க்கை உடலை உயிராக விரும்புவதற்கு உடல் ஆயிற்று’–அணுப் பரிமாணமான இவ் வஸ்துவை விபுவான தான் விளாக்குலை கொண்டு அநுபவித்தா னென்கின்ற இது தனக்கு ஏற்றமாம்படி கௌரவியா நின்றான்”

    ————————————————————————————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ ஐத்ரேய உபநிஷத் —

    August 28, 2025

    ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத். நாந்யத் கிஞ்சன மிஷத். ஸ ஈக்ஷத லோகாந்நு ஸ்ருஜா இதி৷৷1.1.1৷৷

    பர ப்ரஹ்மம் ஒன்றே இருந்தது -வேறு ஒன்றும் இமை கொட்டக் கூட இல்லை -ஸ்ருஷ்டிக்க சங்கல்பம் கொண்டது –

    ஆத்மா என்ற சொல்லின் விசாரம்:இது நான்கு விதத்தில் விளக்கபடுகிறது. அவைகள்
    1. ஆப்னோதி இதி ஆத்மா – அனைத்தையும் வியாபித்திருப்பது, எங்கும் இருப்பது.
    ஸத்தா ரூபேன – ஸத் ஸ்வரூபமாக வியாபித்திருக்கிறது. இருத்தல் ஸ்வரூபமாக வியாபித்திருக்கிறது.
    2. ஆதந்தே ஆத்மா (ஸர்வாதாரஹ) – எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பது, எல்லாவற்றையும் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையது.
    3. அத்தி(eat) இதி ஆத்மா – அனைத்தையும் அனுபவிப்பதாக இருப்பது; ஞான ஸ்வரூபம்
    4. அததி – நித்யஹ – என்றும் இருப்பது., நிலையாக இருப்பது

    ஆப்தியும்‌ அந்தமும்‌ அதனமும்‌ ஆத்ம சப்‌தத்‌துக்கு அர்த்தம்‌. ஆப்தியாவது ஜ்ஞானமும்‌ எல்லா விடங்களிலும்‌ வ்யாபரித்து நிற்கையும்‌ தன்‌ நிலைமையாலும்‌ ஸ்புரணத்தாலும்‌ எல்லாவற்றையும்‌ வ்யாபரிக்கை யாகையாலே ஸர்வஜ்ஞமும்‌ ஸர்வ சக்‌தியுமான தென்கை – அந்தமானது ஜகத்தை ஸம்ஹரிகை -௮தனமாவது வஸ்து தேச கால பரிச்சேதமென்னும்‌ மூவகை அளவமில்லாதவனென்கை ,. ஆகவே ஸம்ஸார ஸம்பர்ஸ மற்றதும்‌ தோஷ லேசமுமில்லாததுமானது ப்ரஹ்மம் என்றதாயிற்று. பெயர்‌ ரூபம்‌ வியாபாரம்‌ இவைகளினால்‌ இப்போது பலவகையாகச்‌ தென்படும்‌ ஜகத்தானது முன்னே ப்ரஹ்மம் ஓன்றாகவே யிருந்தது . கீழ்ச் சொன்ன நாம ரூப கர்ம பேதமில்லாத போது ஆத்மா
    ஒன்றேயாகவே விருந்தது. ஜலம்‌ ஒன்றே நுரை சுழி அலை என்னும்‌ பல பெயர்களினால்‌ ௮நேகம்‌ பொருளாகச்‌ தென்பட்டாலும்‌ தீர யோசித்தால்‌ ஜலமொன்றேயாக அறியப்‌படுவதுபோல வெளித் தோற்றத்திற்குப்‌ பலவகையாகத்‌ தென்பட்ட போதிலும்‌ நன்றாய் யோசிக்குமிடத்து ப்‌ரஹ்ம்மமொன்றே வென்று தெளிவாய்‌ விளங்கும்‌. சாங்க்ய மதஸ்தர்‌ சொல்லுகிறபடி ப்‌ரக்ருதி யாவது தார்க்கிகர்கள்‌ சொல்லுகிறபடி பரமாணுக்களாவது வேறெந்த வஸ்துக்களாவது இல்லை. **அபாணி பாதோ ஜவனொக்ருஹீதா?” என்கையாலே. கர சரணாதி அவயவங்களும்‌ சரீரமும்‌ இல்லாதிருந்தும்‌ ப்ரஹ்ம்மம்‌ ஸர்வஜ்ஞ ஸ்வபாவமாகையாலே ஜகத் ஸ்ருஷ்டி. செய்ய நினைக்கத் தடையில்லை யென்று கொள்க – ப்ராணிகன்‌ கர்ம பலத்தை அனுபவிக்கும் பொருட்டு ஜலம்‌ முதலியவைகளை ஸ்ருஷ்டிக்க நினைத்தது

    ————

    ஸ இமா ఁல்லோகாநஸரிஜத. அம்போ மரீசீர்மரமாபோதோம்பஃ பரேண திவஂ த்யௌஃ
    ப்ரதிஷ்டாந்தரிக்ஷஂ மரீசயஃ. பரிதிவீ மரோ யா அதஸ்தாத்தா ஆபஃ৷৷1.1.2৷৷

    அம்பஹ – சுவஹ, மஹஹ, ஜனஹ, தபஹ, சத்யஹ என்கின்ற ஏழு மேலுலகங்கள்
    மரீஹீ – மரம், புவஹ – பூலோகம்; ஆபஹ என்கின்ற – கீழுள்ள ஏழு உலகங்கள்,
    இவ்வாறாக ஈஸ்வரன் பதினான்கு உலகங்களையும் முதலில் படைத்தார்.
    இவைகள் கிரமமாக படைக்கப்பட்டது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
    அவைகள் அம்பஹ, மரீஸீ, மரம், ஆபஹ என்ற நான்கு பிரிவாக கூறப்பட்டுள்ளது.
    அதோ அம்பஹ பரேண திவம்: சொர்க்கலோகத்திற்கு மேலேயுள்ள உலகங்கள் அம்பஹ என்று கூறுகிறது.
    த்யௌ ப்ரதிஷ்டா- சுவர்க்க லோகம் அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கிறது
    அந்தரிக்‌ஷம் மரீஸய – அந்தரக்‌ஷம் என்று அழைக்கப்படும் புவலோகம்
    ப்ருத்வீமரோ – இது பூலோகத்தை குறிக்கிறது.
    யாஹா அத4ஸ்தா தாஹா ஆபஹ : கீழேயுள்ள ஏழு உலகங்களை அப என்று குறிக்கிறது.

    ஸ ஸரிஜத. இமான் லோகான் -அந்த பர ப்ரஹ்மம் இந்த லோகங்களை ஸ்ருஷ்டித்தது
    அம்போ மரீசீர்மரமாபோ–அம்பஸ்-மரீசீர் -மரம் -ஆப –
    அம்பஃ பரேண திவஂ த்யௌஃ ப்ரதிஷ்டாந்தரிக்ஷஂ மரீசயஃ. –அம்பஸ் –ஸ்வர்க்கத்துக்கும் மேலே -ஸ்வர்க்கம் இத்தை தாங்கி இருக்கும்
    மரீசீர் -ஸ்வர்க்கத்துக்கும் கீழ் உள்ள ஆகாசம் -இங்கு தான் ஸூர்ய வெளிச்சம் -மரீசீர் -ஸூ ர்ய கிரணங்களால் வந்த பெயர்
    பரிதிவீ மரோ -பிருதிவி அழிந்து மீண்டும் வருவதால் மரம் -மிரியந்தே-என்றவாறு
    யா அதஸ்தாத்தா ஆபஃ- பாதாள லோகங்கள் அப -தண்ணீருக்குள் இருப்பதால் –

    —————-

    ஸ ஈக்ஷதேமே நு லோகாஃ லோகபாலாந்நு ஸரிஜா இதி. ஸோத்ப்ய ஏவ புரூஷஂ ஸமுத்தரித்யாமூர்ச்சயத்৷৷1.1.3৷৷

    ஸஹ ஈக்‌ஷா – மீண்டும் அவர் சிந்தித்தார்.
    இமே லோகஹா – இந்த உலகங்கள் என்னால் படைக்கப்பட்டது.
    லோகபாலன் ஸ்ருஜா இதி – இனி உலகை பாதுகாக்கின்ற தேவதைகளை படைக்க வேண்டும்.
    ஸ அத்ப்யஹ ஏவ புருஷம் – அவர் பஞ்ச பூதங்களை எடுத்து ஒரு மனித உருவமுடைய
    அமூர்சயத் – தேவதையை படைத்தார், அதற்கு பெயர் விராட்.

    லோகங்களை ஸ்ருஷ்டித்த பின்பு லோக பாலர்களையும் ஸ்ருஷ்டிக்க சங்கல்பித்தான் –
    பஞ்ச பூதங்களை உண்டாக்கி பஞ்சீ கரித்து உண்டாக்கினான் –

    பிராணிகள் கர்ம பலன்களை அனுபவிக்க இடமாக நாலுவகை உலகங்களைப் படைத்த பின்பு ப்ரஹ்மமானது இவ்வுலகங்கள் ரக்ஷகன் இல்லாதிருந்தால் நாசமாய் விடுமாகையாலே லோக பாலகர்களை ஸ்ருஷ்டிக்க வேண்டுமென்‌று நினைத்து ஜலம்‌ முதலிய பஞ்ச பூதங்களினின்றும்‌ தலை முதிலிய உறுப்புக்களோடு கூடிய விராட்‌ புருஷனை பூமியிலிருந்து மண்ணை யெடுத்துக்‌ குயவன்‌ பானை முதலியன செய்வது போல ஸ்ருஷ்டித்துத்‌ தன்னவயத்தோடு சேர்த்து வைத்தது-

    ———

    அந்த ப்ரஹ்மமமானது அந்த விராட் புருஷனைக்‌ குறித்து ஸங்கல்பித்தது-ஸங்கல்பிக்கப்பட்ட அந்த விராட் புருஷனுக்கு பஷியின் முட்டை போல முகமானது தோன்றியது -அம்முகத்தினின்று வாக்கு உண்டாயிற்று, -வாக்குக்கு அக்னியானது அதிஷ்டான தேவதை வாக்கின்‌ அதிஷ்டான தேவதையான அக்னி யென்றும்‌ லோக பாலன்‌ வாக்கினின்றும்‌ தோன்றினான்‌ என்‌றும் பொருள்‌- மூக்குகள்‌ தோன்றின-அம் மூக்குகளில்‌ கின்றும்‌ க்ராண இந்திரியமும்‌ அந்த க்ராண இந்திரியத்தினின்றும்‌ அதன்‌ அதிஷ்டான தேவதையும்‌ லோக பாலகனுமான வாயுவும்‌ தோன்‌றின-கண்கள்‌- கண்களினின்‌றும்‌. நேத்ரேகந்திரியமும்‌ நேத்ரேந்திரியத்தினின்‌றும்‌ அதன்‌ அதிஷ்டான தேவதையும்‌ லோக பாலகனுமான ஸூர்யனும்‌ உண்டாயின காதுகள்‌- காதுகளினின்றும்‌ ஸ்‌ரவணேந்திரியமும்‌-ஸ்ரவணேந்திரியத்தினின்றும்‌, அதன்‌ ௮திஷ்டான தேவதையான திக்குகளும்‌ உண்டாயின-தோலானது அந்த த்வக்‌ இந்திரியத்தினின்‌றும்‌ உரோமங்களும்‌ அந்த உரோமங்களின்‌றும்‌ அவைகளின்‌ ௮திஷ்டான தேவதைகளான ஒவ்ஷதிகளும் வனஸ்பதிகளும்‌ தோன்றின-அந்தக்‌ கரணத்தின்‌ ௮திஷ்டானமான இருதயமானது -அவ்விரு தயத்தினின்றும்‌ அந்தக் கரணமும்‌- மனதினின்‌றும்‌ ௮தன்‌ அதிஷ்டான தேவதையான சந்திரனும்‌ தோன்‌றனார்கள்‌-நாபி ரந்திரமானது-நாபியினின்னும்‌ பாயுவென்றும்‌ இந்திரியமும்‌ அவ்வபானதின்றும்‌ அதன்‌ ௮திஷ்டான தேவதையான மிருத்தியுவும்‌ தோன்றின-புருஷ ஸிஹ்நமான குஹ்யமானது- அவ்வாண் குறியினின்றும்‌, ரேதஸ்ஸூடன் கூடிய குஹ்ய இந்திரியமும்‌, -அவ்விந்திரியத்தினின்றும்‌, ௮தன்‌ அதிஷ்டான தேவதையான ஜலமும்‌ தோன்றின –

    ———–

    ப்ரளய காலத்தில்‌ லஷ்மியோடுங்கூட நாராயணன்‌ ஒருவனே யிருந்தார்‌. எக் காலத்திலும்‌ எங்கும்‌ பரந்த குணங்களை யடையவராகையால்‌ அவர்‌ ஆச்மாவே என்று ஸ்ருதிகளில்‌ சொல்லப்பட்டார்‌. காலத்தாலும்‌ குணத்தாலும்‌ இவ்வுலக மனைத்துற்‌கும்‌ முன்பே அவைகளுக்கு முதன்மையாயிருப்பவர்‌. அவரே லக்ஷ்மி. அவருடன்‌ கூடவே இருப்பவளாயினும்‌ குணத்தினால்‌ அவருக்குக்‌ குறைந்தவளாதலாலும்‌ விஷ்ணுவக்கு விதேயை யாகையாலும்‌ முன்னிருந்ததாகவாவது மேன்மையாயிருந்தாகவாது சொல்ல விடமில்லை. ப்ரம்மாவாவது சிவனாவது மற்ற வ்யாபாரமுடைய எந்த வஸ்துவாவது இல்லை. ப்ரம்மா சிவன்‌ முதலிய பத்த ஜீவர்கள்‌ தூங்குவதினாலும்‌ நித்ய முக்தர்களும்‌ லக்ஷ்மியும்‌ தூங்காமலிருந்தாலும்‌ பராதீனர்களாதலினாலும்‌ நாராயணன் ஓருவனே ஸர்ஜ்ஞானான காரண வஸ்து அவனல்லது ஸ்வ தந்திர குண சாலிகள்‌ யாருமில்லை-சந்யாசி பராதீனமான- தனத்தினாலே போஜனாதிகள்‌ செய்து வந்தாலும்‌ ௮வன்‌ தனவானென்று சொல்லப்படுவனா. அது போல லக்ஷ்மியும்‌ நித்ய முக்தர்களும்‌ பராதீனர்களாகையாலே இருந்தும்‌ இல்லாதவர்கள்‌ போலவே அந்தப்‌ பகவான்‌ உலகங்களையும் லோக பாலர்களையும்‌ தேவதைகளையும்‌ ஜட லோகங்களையும்‌ ஸ்ருஷ்டிக்க வேண்டுமென்று இச்‌சித்தார் –

    ————-

    தேவதைகளும் சம்சாரிகள் என்று வர்ணிக்கப்படுகிறது.
    தேவதைகளும், ஜீவர்களும் படைக்கப்பட்டு விட்டது.
    சம்சாரமே மிகப்பெரிய கடலாக வர்ணிக்கப்படுகிறது. இந்த சம்சாரம் துயரமென்னும் நீரால் நிரம்பியிருக்கிறது.
    இந்த பெரிய கடலில் எல்லா தேவதைகளும் வீழ்ந்திருக்கிறார்கள்.
    சம்சாரம் என்ற சொல்லின் பொருள் சம்யக் தரதி – நன்கு அங்குமிங்கும் அலைகின்றார்கள்.

    பசி-தாகத்துடன் (சம்சாரம்)கொடுத்தார்கள்.
    மனதிற்கு ஞானேந்திரியங்கள் வழியாக விஷயங்களை உணவாக கொடுத்து பசியை அடக்குகிறோம்.
    வயிற்றுப்பசியை ஸ்தூல உணவை கொடுத்து அடக்குகிறோம். பசி-தாகம் மனதின் நிறைவின்மை.
    இதை எந்தப்பொருளினாலும் நீக்க முடியாது. பசி-தாகத்தை கொடுத்தவுடன் ஜீவர்கள் அதை போக்குவதற்கு ஸ்தூல உடலை கேட்கின்றார்கள்.
    ஜீவர்கள் ஈஸ்வரனிடம் இவ்விதம் பேசினார்கள்.
    எங்களுக்கு ஒரு இருப்பிடம் (சரீரம்) கொடுங்கள்.
    எந்த உடலில் இருந்து அன்னத்தை சாப்பிட்டு பசி-தாகத்தை போக்கி கொள்ள முடியுமோ அதை எங்களுக்கு கொடுங்கள்.
    ஜீவர்களுக்கு இந்த பசி-தாகம் மூலம் சம்சாரம் வந்து விட்டது.

    இப்படி ஸ்ருஷ்டித்த அக்னி தேவதைகள் தங்கள் வசிக்கவும் உணவு உண்ணவும் இடங்களை பிரார்த்தித்தார்கள்-

    ஸ்ருஷ்டிக்கப்பட்ட அக்னி முதலிய தேவர்கள்‌ இந்த பெரிதான ஸம்ஸார ஸமுத்திரத்தில்‌ விழுந்தார்கள்‌ இவைகளை உண்டாகக்‌ காரணமாயிருந்த முதல்‌ புருஷ பிண்டத்தை பசி தாகங்களோடு கூட்டிக் வைத்தான் எந்த ஸ்‌தானத்தில்‌ இருந்தவர்களாய அன்னத்தை புஜிப்போமோ அப்படிப்பட்ட ஸ்தானத்தை எங்களுக்கு ஏற்படுத்திக்‌ கொடுக்க வேண்டும்‌ என்று இப்படிப்‌ பசி தாகங்களாலே பீடிக்கப்பட்டவர்‌கள்‌ இந்தக்‌ காரண புருஷனைக் கேட்டார்கள்

    ——–

    தாப்யோ காமாநயத்தா அப்ருவந்ந வை நோயமலமிதி. தாப்யோஷ்வமாநயத்தா அப்ருவந்ந வை நோயமலமிதி৷৷1.2.2৷৷

    ஜீவர்களுக்கு இருப்பிடமாக சரீரமாக பசுவை கொண்டு வந்து காட்டப்பட்டது
    இது எங்களுக்கு போதாது.
    இப்பொழுது குதிரையை காட்டப்பட்டது
    இதுவும் எங்களுக்கு போதாது என்று கூறினார்கள்.

    அவர்களுக்கு மாடு ஒன்றை கொடுக்க -இது போதாது என்ன குதிரையையும் கொடுக்க அதுவும் போதாது என்றார்கள் –

    இப்படிப்பட்ட ஈஸ்வரன அவர்களின்‌ பொருட்டு பசுவைக் காட்டினார் -எங்களுக்கு இப் பசு போதாதல்லவா என்று அவர்சள்‌ சொன்னார்கள்‌-அவர்களின்‌ பொருட்டு குதிரையைக் காட்டினார்‌;-எங்களுக்கு இந்தக்‌ குதிரை போதாதல்லவா என்று அவர்கள்‌ சொன்னார்கள்‌

    வ்யஷ்டி தேஹ ஸ்ருஷ்டி சொல்லப்படுகிறது. பசுவின்‌ ஆகாரமும்‌ குதிரையின்‌ ஆகாரமும்‌ அந்த ஜலங்களினின்றும்‌ முன் போல்‌ பிண்டமாகச்‌ சேர்த்து எடுத்துக் கட்டியாகக்‌ காட்டப்பட்டன. கோவிற்கு மேல் பல்லில்லை யாகையால்‌ அருகம்‌ புல் முதலியாவைகளை வேர் பிடுங்கச்‌ சாத்தியமில்லை யென்றும்‌ குதிரைக்கு இரண்டு வரிசைப்‌ பற்கள்‌ இருந்தாலும்‌ விவேகமின்மையால்‌ அயோக்யமென்றும்‌ தள்ளப்பட்டன-

    —————

    தாப்யஃ புரூஷமாநயத்தா அப்ருவந் ஸுகரிதஂ பதேதி புரூஷோ வாவ ஸுகரிதம். தா அப்ரவீத்யதாயதநஂ ப்ரவிஷதேதி৷৷1.2.3৷৷

    அவர்களுக்காக மனுஷன் ஒருவனை கொடுக்க -சுக்ருத் என்றார்கள் –
    அதானால் தான் ஸ்வதந்த்ர எண்ணம் இன்றும் மனிசர்க்கு மிக்கு உள்ளது என்பர் –
    பின் தேவர்களை அவர்கள் அவர்கள் இடம் போக சொன்னான் –
    அதாவது வாக் முதலியவற்றை பாலனம் பண்ண என்றவாறு –

    பிறகு மனித சரீரத்தை காட்டபட்டது..
    நன்றாக உருவாக்கப்பட்ட சரீரம் என்று கூறினார்கள்.
    மனித சரீரம் உயர்ந்தது என்று சொல்வதற்கு காரணம் இதுதான்
    பாவ-புண்ணியங்களை கொடுக்க கூடிய கர்மத்தை செய்வதற்கும், மோட்சத்தை அடைவதற்கும் சரியான கருவியாக இருக்கிறது.
    ஈஸ்வரன் அந்த தேவதைகளிடம் உங்களுக்குரிய இருப்பிடத்தில் சென்று வசியுங்கள் என்று கூறினார்.

    அவர்களின் பொருட்டு புருஷனைக் காட்டினார் -நன்றாகச் செய்யப்பட்டது -சந்தோஷம் என்று அந்தத் தேவதைகள் சொன்னார்கள் ஆகையாலே புருஷனே ஸூஹ்ருதம் என்று சொல்லப்படுகிறான் – உங்கள் காரியத்துக்கு உரிய ஸ்தானங்களில் பிரவேசியுங்கோள் என்று அந்த தேவதையைக் குறித்து ஈஸ்வரன் சொன்னான்

    அக்நிர்வாக்பூத்வா முகஂ ப்ராவிஷத்வாயுஃ ப்ராணோ பூத்வா நாஸிகே ப்ராவிஷதாதித்யஷ்சக்ஷுர்பூத்வாக்ஷிணீ ப்ராவிஷத்திஷஃ
    க்ஷோத்ரஂ பூத்வா கர்ணௌ ப்ராவிஷந்நோஷதிவநஸ்பதயோ லோமாநி பூத்வா த்வசஂ ப்ராவிஷஂஷ்சந்த்ரமா மநோ பூத்வா ஹரிதயஂ
    ப்ராவிஷந்மரித்யுரபாநோ பூத்வா நாபிஂ ப்ராவிஷதாபோ ரேதோ பூத்வா ஷிஷ்நஂ ப்ராவிஷந்৷৷1.2.4৷৷

    அக்னி பகவான் வாய்க்குள்ளும் பேச்சாகவும் -வாயு பகவான் மூக்குக்குள் கந்தமாகவும் -ஸூரியன் கண்ணுக்குள் பார்வையாகவும் –
    திக் தேவதைகள் காதுக்குள் கேள்வியாகவும் -மூலிகைகளும் மரங்களும் தோலில் மயிர்களாகவும் ஸ்பர்ச உணர்வாகவும் –
    சந்திரன் ஹ்ருதயத்துக்குள் மனஸாகவும் -இத்யாதி -என்றவாறு –

    அக்னியானது வாயில் சென்று அமர்ந்து பேசும் சக்தியாக இருக்கிறது.
    வாயு மூக்கில் இருந்து கொண்டு நுகரும் சக்தியாக இருக்கிறது.
    சூரியன் கண்களில் இருந்து கொண்டு பார்க்கும் சக்தியாக இருக்கிறது.
    திசைகள் காதில் இருந்து கொண்டு கேட்கும் சக்தியாக இருக்கிறது.
    மூலிகைகளும் தாவரங்களும் தோலில் இருந்து கொண்டு தொட்டுணரும் சக்தியாக இருக்கிறது.
    இவ்வாறாக எல்லா இந்திரியங்-களும் அவரவர்களுக்குரிய இருப்பிடத்திற்கு சென்று அமர்ந்து கொள்கிறார்கள்.

    இப்படியே ஒவ்வொன்றாய்க் காட்டப்பட்ட திர்யக் தேஹங்கள் எல்லாம் தள்ளப்பட்ட பின்பு விராட்புருஷ தேஹம் போன்ற புருஷ தேஹம்‌ காட்டப்ப ட்டது. அதைப் பார்த்து அவர்கள்‌ ஸூஹ்ருத மென்றதால்‌ புருஷனே ஸுஹ்ருத மென்‌னப்படுகிறான்‌, எல்லாப் புண்ய கர்மங்களுச்கும்‌ ஹேது வென்பது அல்லது தானே தன் மாயையால்‌ ஆத்மாவினால்‌ ஸ்‌ருஷ்டிக்கப்பட்டது தென்பது ஸுஹ்ருத மென்‌பதின்‌ அர்த்தம்‌. ௭ல்லாருக்கும்‌ ஸூவ யோநியில்‌ ப்ரீதியாகையால்‌ இவர்கள்‌ இதை ௮ங்கீகரித்தார்களென்று நினைத்து உங்கள்‌ காரியத்துக்கு உரிய ஸ்‌தானத்தைச்‌ சேருங்கள்‌ என்றான்‌, அக்னிக்கு வார்த்தைச்‌ சொல்வது காரியம்‌ ௮தற்குரிய ஸ்தானம்‌ முகம்‌ இப்படியே எங்கும்‌ கண்டு கொள்வது

    வாக்கின்‌ அபிமானியான ௮க்னியானது; வாக்காகவாகி தன்‌ ஸ்தானமாக முகத்தை, ப்ரவஸித்தது-சஷுராபிமானியான ஸூர்யன்‌ கண்ணாகி நேத்ர ஸ்தானங்களை -ஸ்ரோத்ராபிமானிகளான திக்குகள்‌ காதுகளாகி ஸ்ரோத்ர இந்திரிய ஸ்தானத்தை-ஓஷதியும்‌ வனஸ்பதிகளும்‌ (ஸோமாபிமானியானவை) மயிர்களாகி , அவைகளின்‌ ஸ்‌தானமான த்வக் இந்த்ரியத்தை மனோபிமானியான சந்த்ரன்‌ மனமாகி இதயத்தை
    அபான அபிமானியான ம்ருத்யு அபானமாகி நாபியை –ரேதஸ் அபிமானியான ஜலங்கள் ரேதஸ்ஸாகி குஹ்யத்தை

    சேனாதிகாரிகள்‌ அரசன்‌ ஆஞ்ஜையின்படி நகரத்தில்‌ ப்ரவேஸிப்பது போலே ஸர்வேஸ்வரன்‌ ஆஞ்ஜையின்படி அதன்‌ ௮தன்‌ அபிமானிகளான அந்தந்தத்‌ தேவதைகள்‌, தந்‌ தம்‌ காரண ரூபங்களைக் கொண்டு தங்கள்‌ உத்பத்தி ஸ்தானத்தை அடைந்தார்கள் –

    ————

    தமஷநாயாபிபாஸே அப்ரூதாமாவாப்யாமபிப்ரஜாநீஹீதி. தே அப்ரவீதேதாஸ்வேவ வாஂ தேவதாஸ்வாபஜாம்யேதாஸு பாகிந்யௌ கரோமீதி.
    தஸ்மாத்யஸ்யை கஸ்யை ச தேவதாயை ஹவிர்கரிஹ்யதே பாகிந்யாவேவாஸ்யாமஷநாயாபிபாஸே பவதஃ৷৷1.2.5৷৷

    பசியும் தாகமும் தங்களுக்கும் இடம் கேட்க -உங்களுக்கு தனியாக இல்லாமல் இந்த தேவதைகளை உங்களுக்கும் இடம் விட்டு கொடுக்க பண்ணுகிறேன் இதனாலே ஹவிஸ் கொடுக்கும் பொழுது இவர்களுக்கும் பங்கு உண்டு –

    சம்சாரம் என்பது பசி-தாகம். இது இந்திரியங்களைச் சார்ந்து இருக்கின்றது-எனவே மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்-இந்த பசி-தாகம் ஈஸ்வரினிடம் எங்களுக்கும் தங்குவதற்கு இடம் கொடுப்பதற்கு ஆலோசனை செய்யுங்கள் என்று வேண்டின-உங்களிருவரையும் இந்த தேவதைகளுக்குள்ளேயே இருக்கும்படி செய்கிறேன்-நீங்கள் இப்படி அங்கமாக இருப்பதால் அவர்களுக்கு கொடுக்கப்படும் உணவுகளை அனுபவிப்பதே நீங்கள் தான்.

    இப்படித்‌ தேவதைகள்‌ தம்தம்‌ ஸ்தாநங்களில் நின்ற பிறகு இடமில்லாதிருந்த — பசியும்‌ தாகமும்‌, எங்களுக்கு இடம்‌ ஏற்படுத்தக்‌ கொடுக்க வேண்டும் என்று அந்தப் ஈஸ்வரனை கேட்டதுகள்‌-உங்களை இந்தத் தேவதைளிடத்திலேயே பிரித்து இருக்கச்‌ செய்கிறேன்-இந்தத் தேவதைளிடத்திலே பாகமுடையவர்களாகச் செய்கிறேன் என்று அந்த ஈஸ்வரன்‌ சொன்னார் ஆகையால்‌ யாதாமொரு தேவதையின்‌ பொருட்டு ஹவிஸ்ஸானது கிரஹிக்கப்படுகிறதோ இந்தத் தேவதை இடத்தில்‌ பசியும்‌ தாகமும்‌ பாகமுடையனவாகவே ஆகின்றன –

    நீங்கள் தர்மம் ஆகையால் சேதன னிடம் இப்பந்தமின்றிப் போஜனாதிகள் கிடையாதாகையாலே வ்யஷ்டி சேஹ கதங்களான அத்யாத்மமென்னும்‌ தேவதைகள் இடத்திலும்‌, ஸமஷ்டியான விராட் தேஹத்திலுள்ள அதி தேவதமென்னும்‌ அக்நியாதி தேவதைகளிடத்திலும்‌ பிரித்த இருக்கச் செய்கிறேன்‌-தேவதைகளிடத்தில் பாகம் வைக்கச் சாத்தியமில்லை யாகையால்‌ சேவதைகளின்‌ அம்சத்தால்‌ பாகம் செய்து வைக்கிறேன்-எந்தத் தேவதையின் பாகம் எதுவோ அந்தப் பாகத்தில் உங்களுக்கு அம்சம் கொடுக்கிறேன் என்று ஸ்ருஷ்டியின் முதலிலேயே ஈஸ்வரன் சங்கல்பித்ததினால் இவை சில காலத்தில் இந்திரிய தேவதைகளைக் கார்யான் முகமாக ஏசுவதுவும் சிலகாலத்தில் அது இல்லாமை யாகிய உபசாந்தியுமாய் இருக்கிறது -ஆகவே ஹவிஸ்ஸினால் தேவதா திருப்தி உண்டானால் அசனாயாபி யாசைகளும் திருப்தி யடைந்து உபசாந்தி உண்டாகிறது என்று கருத்து –

    இந்த லோகங்களும் லோகபாலகர்களும்‌, [ஸ்ருஷ்ட்டிக்கப் பட்டார்களல்லவா-இவர்களின் பொருத்தும் அன்னத்தை ஸ்ருஷ்டிக்கிறேன் என்றும் அந்தப் ஈஸ்வரன் நினைத்தது –
    லோகங்களையும்‌ லோக பாலகர்களையும்‌ ஸ்ருஷ்டித்‌துப்‌ பசி தாகங்‌களோடும்‌ சேர்த்து வைத்தோம்‌. அன்னாமில்லாமல்‌ இவர்கள்‌ நிலைபெறுவது அசக்யமாகையால்‌ இவர்க்குரிய உணவை உண்டாக்க வேண்டுமென ஈஸ்வரன்‌ நினைத்தான்‌. லோகத்திலும்‌ அரசன்‌ தானே ஸ்வதந்ரனாய்‌ நிக்ரஹ அநுக்ரஹ்ங்களைச்‌ செய்வதால்‌ ஸர்வேஸ்வரனான ப்ரஹ்மமும்‌ ஸ்வதந்த்ரமாகவே நிக்ரஹ அநுஹ்ரஹங்களைச் செய்கிறது –

    ஸ ஈக்ஷதேமே நு லோகாஷ்ச லோகபாலாஷ்சாந்நமேப்யஃ ஸரிஜா இதி৷৷1.3.1৷৷

    ஈஸ்வரன் ஆலோசித்தார் என்னால் உலகம் படைக்கப்பட்டுவிட்டது.
    உலகத்தை பாதுகாப்பதற்கு தேவதைகளும் படைக்கப்பட்டு விட்டது.
    இப்பொழுது இவர்கள் உண்பதற்கு உணவை தோற்றுவிக்க வேண்டும்.

    அந்த ஈஸ்வரன் ஜலங்களைத் தபித்தான்‌-இவற்றினின்றும்‌ மனுஷ்யர்களுக்‌கு ஆஹாரமாகிய தான்யங்களென்றும்‌ ஸ்‌தாவரமான அன்னமும்‌ பூனை முதலானவைகளுக்‌கு ஆஹாரமாகிய ஐந்துக்களென்னும்‌ சரான்னமும்‌ உண்டாகட்டுமென்று ஸங்கல்பித்தான்‌ தபிக்கப்பட்ட அந்த ஜலங்களில் நின்‌றும்‌ கனமான ரூபத்தோடு ப்ராணாதாரமான சராசர ரூபான்னமானது உண்டாயிற்று,. எந்த அந்த மூர்த்தி உண்டாயிற்றோ அது அன்னமே அல்லவா-
    இங்கு ஜலம் என்றது பஞ்ச பூதங்களையும்-

    அங்கு அந்த அன்னமானது லோக பாலகர்களுக்கு எதிராக அனுப்பப்பட்டதாய்‌ கூச்சலிட்டுக் கொண்டு திருப்பு முகமாய்‌ அவர்களை விட்டு ஓடி விட நினைத்தது இவ்விதமான அன்னத்தின்‌ அபிப்பிராயத்தை அறிந்து கொண்ட லோக தால ஸமூகமானது அந்த அன்னத்தை, வாக்கினாலே கிரகிக்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்து அதை வாக்கினால்‌ கிரஹிக்க ஸமர்த்தமாக வில்லை-அந்த லோக பால சங்காதமானது இந்த அன்னத்தை வாக்கினால் கிரகிக்குமானால் அப்போது எல்லா லோகமும் அன்னத்தை சொல்லியே சொல்வதானாலேயே திருப்தி அடையும்

    கண்ணாலே பார்த்தே –மற்றவை முன் போலவே
    காதினாலே கேட்டே -மற்றவை முன் போலவே
    த்வக் இந்த்ரியத்தினாலே தொட்டே மற்றவர் முன் போலவே
    மனத்தினாலே த்யான செய்து –மற்றவை முன் போலவே –
    சேதனமான்‌ சர அன்னம்‌ ஒடப் பார்த்தது. ௮சேதனமான தான்‌ இனி யன்னம்‌ முகத்தில்‌ ப்ரவேசியாமல்‌ வெளியே நின்று விட்டது. பிண்ட ரூபமாயிருந்த விராட் புருஷ தேஹத்தையே இங்கு லோக பாலகர்கள் என்கிறது – கார்ய காரணா அவஸ்தைகளாலே முகத்திலே க்ரஹிப்பதாவது வார்த்தை சொல்வதாலேயே அன்னத்தைப் புஜிப்பது -அதன் காரியமான சரீரம் சக்தியற்றதாகையாலே காரணமான சரீரத்துக்குச் சக்தியில்லை என்று தெரிந்தது -இவ்வுலகமெல்லாம் அன்னம் என்று சொல்வதினாலேயே திருப்தி அடைகின்றனவில்லையே -ஆதலால் அதன் காரணமான பிரதம சரீரமும் சக்தியற்றதாயிற்று என்று அறிகிறோம்

    ஸோபோப்யதபத்தாப்யோபிதப்தாப்யோ மூர்திரஜாயத. யா வை ஸா மூர்தி-ரஜாயதாந்நஂ வை தத்৷৷1.3.2৷৷

    பஞ்ச பூதங்களை வைத்து சிந்தித்த பிறகு அதிலிருந்து விதவிதமான உணவுகள், விதவிதமான ஜீவர்களையும் படைத்துவிட்டார்.

    ததேநத்ஸரிஷ்டஂ பராங்த்யஜிகாஂஸத்தத்வாசாஜிகரிக்ஷத்தந்நாஷக்நோத்வாசா க்ரஹீதும்.
    ஸ யத்தைநத்வாசாக்ரஹைஷ்யதபிவ்யாஹரித்ய ஹைவாந்நமத்ரப்ஸ்யத்৷৷1.3.3৷৷

    நாம் உண்ணும் உணவை முயற்சி செய்துதான் அடைய வேண்டும்.
    யாருக்கு எந்த வகையான பசி எடுக்கிறதோ அதற்கு தகுந்த இந்திரியத்தை பயன்படுத்தி அடைய வேண்டும்.
    இவ்வாறு உணவு படைக்கப்பட்டது
    அதை சாப்பிட போடும்போது அது ஓட ஆரம்பித்தது
    பேசி அதை பிடிக்க என்று முயற்சி செய்தான். இப்படி பேச்சினால் அவனால் கிரகிக்க முடிந்து இருந்தால்
    இவன் அதை பேசுவதனாலே திருப்தியடைந்து விடுவான். அப்படி முடியாததால் இவனுக்கு திருப்தி வரவில்லை.

    மற்றவைகளும்‌ இப்படியே

    தத்ப்ராணேநாஜிகரிக்ஷத் தந்நாஷக்நோத்ப்ராணேந க்ரஹீதும்.
    ஸ யத்தைநத்ப்ராணேநாக்ரஹைஷ்யதபிப்ராண்ய ஹைவாந்நமத்ரப்ஸ்யத்৷৷1.3.4৷৷

    பிராணன் இது நுகர்வதாலேயே உணவை அடைய முயற்சி செய்து தோல்வி அடைந்தது.

    தச்சக்ஷுஷாஜிகரிக்ஷத் தந்நாஷக்நோச்சக்ஷுஷா க்ரஹீதும்.
    ஸ யத்தைநச்சக்ஷுஷாக்ரஹைஷ்யத்தரிஷ்ட்வா.ஹைவாந்நமத்ரப்ஸ்யத்৷৷1.3.5৷৷

    கண்ணானது பார்வையாலே உணவை அடைய முயற்சி செய்து தோல்வி அடைந்தது.

    தச்ச்ரோத்ரேணாஜிகரிக்ஷத் தந்நாஷக்நோச்ச்ரோத்ரேண க்ரஹீதும்.
    ஸ யத்தைநச்ச்ரோத்ரேணாக்ரஹைஷ்யச்ச்ருத்வா ஹைவாந்நமத்ரப்ஸ்யத்৷৷1.3.6৷৷

    காதானது கேட்பதாலேயே உணவை அடைய முயற்சி செய்து தோல்வி அடைந்தது.

    தத்த்வசாஜிகரிக்ஷத் தந்நாஷக்நோத்த்வசா க்ரஹீதும்.
    ஸ யத்தைநத்த்வசாக்ரஹைஷ்யத்ஸ்பரிஷ்ட்வா ஹைவாந்நமத்ரப்ஸ்யத்৷৷1.3.7৷৷

    தோலானது தொட்டுணர்ந்தே உணவை அடைய முயற்சி செய்து தோல்வி அடைந்தது.

    தந்மநஸாஜிகரிக்ஷத் தந்நாஷக்நோந்மநஸா க்ரஹீதும்.
    ஸ யத்தைநந்மநஸாக்ரஹைஷ்யத்தயாத்வா ஹைவாந்நமத்ரப்ஸ்யத்৷৷1.3.8৷৷

    மனமானது எண்ணங்களாலே உணவை அடைய முயற்சி செய்து தோல்வி அடைந்தது.

    தச்சிஷ்நேநாஜிகரிக்ஷத் தந்நாஷக்நோச்சிஷ்நேந க்ரஹீதும்.
    ஸ யத்தைநச்சிஷ்நேநாக்ரஹைஷ்யத்விஸரிஜ்ய ஹைவாந்நமத்ரப்ஸ்யத்৷৷1.3.9৷৷

    சிறுநீரகமானது கழிவை அகற்றுவதாலேயே உணவை அடைய முயற்சி செய்து தோல்வி அடைந்தது.

    ததபாநேநாஜிகரிக்ஷத். ததாவயத். ஸைஷோந்நஸ்ய க்ரஹோ யத்வாயுரந்நாயுர்வா ஏஷ யத்வாயுஃ৷৷1.3.10৷৷

    கடைசியில் உணவை எடுத்து வாயினுள்ளே போடுகிறார்கள். இப்படி உணவை பிடித்து விட்டார்கள்.
    அபான பிராணன் மூலம் உணவை சாப்பிட்டு புரிந்து கொண்டார்கள்.

    இவ்விதமாய்க்‌ கரண வ்யாபாரங்களினால்‌ அன்னத்தைக் கிரஹிக்க சக்தியற்ற லோக பால ஸமூஹமானது அந்த அன்னத்தை, முக மார்க்கமாக உள்ளே செல்லுகிற வாயுவினாலே கிரஹிக்க நினைத்தது-௮தை கிரஹித்துக் கொண்டது-௮பானமென்னும்‌ வாயு யாதொன்றோ அந்த இந்த வாயுவானது அன்னத்தை கிரஹிக்க சக்தியுடையது-அபான வாயு யாதொன்றோ இந்த வாயு அன்னத்தையே ஜீவன ஆதாரமாக உடையது –

    ஸ ஈக்ஷத கதஂ ந்விதஂ மதரிதே ஸ்யாதிதி ஸ ஈக்ஷத கதரேண ப்ரபத்யா இதி. ஸ ஈக்ஷத யதி வாசாபிவ்யாஹரிதஂ
    யதி ப்ராணேநாபிப்ராணிதஂ யதி சக்ஷுஷா தரிஷ்டஂ யதி ஷ்ரோத்ரேண ஷ்ருதஂ யதி த்வசா ஸ்பரிஷ்டஂ யதி மநஸா த்யாதஂ
    யத்யபாநேநாப்யபாநிதஂ யதி ஷிஷ்நேந விஸரிஷ்டமத கோஹமிதி৷৷1.3.11৷৷

    இதில் மூன்று கர்த்துக்கள் அடங்கியுள்ளது.
    1. பரமாத்மா ஜீவாத்மாவில் பிரவேசம்
    2. எந்த வழியாக உள்ளே நுழையலாம் என்று யோசிக்கிறார்.
    3. ஜீவனுக்கு அத்மஞானம் வேண்டுமென்றால் எப்படி சிந்திக்க வேண்டும்.

    கஹ அஹம் இதி – நான் யார் என்று சிந்திக்க வேண்டும்.
    நாம் எப்பொழுதும் வெளி விஷயங்களைத் தான் சிந்தித்து கொண்டிருக்கிறோம்.
    ஆனால் நான் யார்? இப்படி சிந்திப்பவன் யார்? என்று யோசிக்க வேண்டும்.
    எந்த அறிவை பயன்படுத்தி வெளி விஷயங்களை பார்த்துக் கொண்டிருக்கின்ற நாம் இவ்வாறு பார்ப்பவன் யார் என்று
    விசாரம் செய்ய வேண்டும் என்றால் நம் மனதைக் கொண்டேதான் இவ்வாறு நம்மை விசாரிக்க வேண்டும்..
    இந்த விசாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்று உபநிஷத் இங்கே விளக்கியிருக்கிறது.
    நம் இந்திரியங்களை யாரோ ஒருவனுடைய கட்டுப்பாட்டுக்குள் இயங்குகிறது.
    இந்திரியங்கள் தன்னிச்சையாக செயல்பட்டால் நான் யார் என்ற கேள்வி எழும்.
    இந்தக் கேள்வியிலிருந்து நான்தான் இவைகளை கட்டுப்படுத்துகிறேன் என்ற அறிவு கிடைக்கும்
    இந்திரியங்களுக்கு நான்தான் தலைவன். நான் வேறு, இந்திரியங்கள் வேறு,
    அவைகள் எனக்காக வேலை செய்கிறது என்ற மனப்பான்மையுடன் விவகாரம் செய்தல்
    இந்திரியங்களுக்கு இந்திரியமாக இருக்கிறேன்.

    ஈஸ்வரன் – ஜீவன் இந்த மாதிரி சிந்திக்க வேண்டும் என்று நினைத்தார்.
    ஒருவேளை வாயானது அது இஷ்டத்திற்கு பேசிக்கொண்டிருந்தால், காதானது அது இஷ்டத்திற்கு கேட்டுக் கொண்டிருந்தால்,
    தோலானது அது விருப்பத்திற்கு தொடு உணர்வை அனுபவித்துக் கொண்டிருந்தால், மனமானது அதுபாட்டுக்கு சிந்தித்துகொண்டிருந்தால்,
    பிறகு நான் யார்? என்ற கேள்விக்கு இவ்வாறு சிந்திக்க வேண்டும். இந்திரியங்கள் மனதின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது,
    மனது வேறொருவரின் கட்டுக்குள் இருக்கிறது. அந்த வேறொருவர் நான்தான்,
    நான் சேதன ஸ்வரூபமானவன், நித்யமானவன் என்று புரிந்து கொள்ள வேண்டும்

    இந்தக் காரிய ரூபமான ஜகத்தானது என்னையே விட்டு எப்படியாகும் என்றும் அந்தப் ப்ரஹ்மம் நினைத்தது -எந்த மார்க்கத்தால் இஜ்ஜீவ சரீரத்தில் பிரவேசிக்கலாம் என்றும் அந்த ப்ரஹ்மம் நினைத்தது -வாக்கினால் நிஷ் ப்ரயோஜனமாகச் சொல்லப்படுமேயானால் -க்ராண இந்த்ரியத்தினாலே விருதாவாக முகரப்பட்டால் -கண்ணால் வீணாகப் பார்க்கப்பட்டால் -கத்தினாள் விருதாவாகக் கேட்கப்பட்டால் -த்வக் இந்த்ரியத்தினால் வீணாகத் தொடப்பட்டால் -மனஸ்ஸினால் வீணாகத் த்யானம் செய்யப்பட்டால் -அபானம் என்னும் வாயுவினால் வீணாகவே ஆபானிக்குமே யானால் -குஹ்யேந்த்ரியம் விருதாவாக ஆனந்த கர்மத்தைச் செய்யுமானால் -அதன் பின்னர் யானும் யார் என்றும் நினைத்தது

    ஸ ஏதமேவ ஸீமாநஂ விதார்யைதயா த்வாரா ப்ராபத்யத. ஸைஷா விதரிதிர்நாம த்வாஸ்ததேதந்நாந்தநம்.
    தஸ்ய த்ரய ஆவஸதாஸ்த்ரயஃ ஸ்வப்நா அயமாவஸதோயமாவஸதோயமாவஸத இதி৷৷1.3.12৷৷

    ஈஸ்வரன் தலை உச்சியில் ஓட்டையை போட்டு அந்த துவாரம் வழியாக நுழைந்தார்-இந்த கதவுக்கு விக்ருதி என்ற பெயரும் உண்டு-நாந்தனம் என்றும் அழைப்பதுண்டு, இது மகிழ்ச்சியை தரும் வழியாகும்-ஈஸ்வரனுடைய மூன்று விதமான இருப்பிடங்கள் (வலது கண், மனம், ஹ்ருதயம்) மூன்று விதமான கனவு நிலைகள் (விழிப்பு நிலை, கனவு நிலை, ஆழ்நிலை உறக்கம்) இந்த ஒன்றானது (வலது கண் முதலாவது)இருப்பிடம், மனதானது இரண்டாவது இருப்பிடம், இருதயமானது மூன்றாவது இருப்பிடம்.

    ஈஸ்வரன் ஜீவனுக்குள் எப்படி நுழைய வேண்டும் என்று யோசித்தார்-தலை உச்சி (பிரம்ம அந்திரம்) வழியாக போகலாமா அல்லது அடிப்பாதம் வழியாக போகலாமா என்று யோசித்தப் பின்னர் தலையுச்சி வழியாகவே பிரவேசிக்கலாம் என்று முடிவெடுத்து அதன் வழியாக உள்ளே நுழைந்தார்-ஜீவன் உடலில் சிதாபாஸனாக தோன்றினார். ஈஸ்வரன் உள்ளே நுழைந்த கதவுக்கு (வழிக்கு) வித்ருதி என்று பெயர்-நாந்தனம் என்றும் அழைப்பதுண்டு.

    அந்த ஜீவனுக்கு மூன்று இடங்கள் அளித்து மூன்று விதமான அவஸ்தைகள் மூலமாக உலகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கட்டும்-ஜாக்ரத் அவஸ்தையில் கண்ணை இருப்பிடமாக கொண்டு விவகாரம் செய்கின்றான்-கனவு நிலையில் தொண்டையில் உள்ள கண்ட ஸ்தானம், ஆழ்ந்த உறக்கத்தில் இதயத்தில் இருக்கின்றான்.

    அந்தப் ப்ரஹ்மமானது இந்த எல்லையற்ற சிரஸ்ஸையே பிளந்து கொண்டு இந்த மார்க்கத்தினாலே உள்ளே பிரவேசித்தது -இந்த வழியே விக்ருதி என்றும் பெயர் பெற்றது -இந்த வழியே சந்தோஷத்தைத் தருவது -இது ஸ்தானம் இது ஸ்தானம் இது ஸ்தானம் என்றும் மூன்று ஸ்தானங்கள் -மூன்றுமே ஸ்வப்ன அவஸ்தை களேயாம்

    ஸ ஜாதோ பூதாந்யபிவ்யைக்யத் கிமிஹாந்யஂ வாவதிஷதிதி.
    ஸ ஏதமேவ புரூஷஂ ப்ரஹ்ம ததமமபஷ்யதிதமதர்ஷமிதீ 1.3.13৷৷

    பரமாத்மா இப்போது ஜீவ ரூபமாக சம்சாரத்தில் இருக்கிறார். ஜீவனாக வெளிப்பட்டிருக்கிறார்.
    இந்த அனைத்து ஜீவராசிகளை குறித்து
    குரு, சாஸ்திரங்களின் துணைக் கொண்டு ஆராய்ச்சி செய்தார்.
    இந்த உலகத்தில் எனக்கு (பிரம்மத்திற்கு) வேறாக எதை சொல்ல முடியும் என்ற கேட்டால், நானே அனைத்துமாக இருக்கிறேன்
    என்று அறிந்து கொண்ட பிறகு நான் தெரிந்து கொள்வதற்கு வேறொன்றுமில்லை.
    இந்த ஜீவனையே பிரம்மன்
    என்று அறிந்தான்.
    இந்த பிரம்ம லட்சணமானது.
    எல்லாவிடத்திலும் வியாபித்திருக்கின்ற பிரம்மனாகவே அறிந்து கொண்டான்.
    இவ்விதமாக பிரம்மத்தை (ஞானியானவன்) அறிந்துக் கொண்டான்

    ———-

    தஸ்மாதிதந்த்ரோ நாமேதந்த்ரோ ஹ வை நாம. தமிதந்த்ரஂ ஸந்தமிந்த்ர இத்யாசக்ஷதே பரோக்ஷேண.
    பரோக்ஷப்ரியா இவ ஹி தேவாஃ பரோக்ஷப்ரியா இவ ஹி தேவாஃ৷৷1.3.14৷৷

    ஆகவே, ஜீவன் பிரம்மத்தை அபரோக்‌ஷமாக அறிந்த பிறகு,
    பிரம்மத்திற்கு இன்னொரு பெயர். இதை அபரோக்‌ஷமாக அறிவதனால்தான் பிரம்மத்திற்கு இந்த பெயர்.
    இதை இந்திரன் என்று மறைமுகமாக என்று அழைப்பதுண்டு. ஞானிகளும், தேவர்களும் தங்களை மறைத்துக் கொள்வதில்
    தான் விருப்பம் உடையவர்களாக இருக்கிறார்கள்.
    எல்லோருக்கும் தெரியக்கூடியதாக இருந்தாலும் ஜீவர்களுக்கு தெரியாமல்தான் இருக்கின்றார்கள்.
    ஞானத்தை அடைந்தவனுக்கு அபரோக்‌ஷமாகவும், ஞானத்தை அடையாமல் அறிந்தவனுக்கு பரோக்‌ஷமாகவும் இருக்கிறது இந்த பிரம்மன்.
    இது புலன்களால் அறிய முடியாததாக இருக்கிறது. ஞானிகள் தங்களை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.

    —————————-

    புரூஷே ஹ வா அயமாதிதோ கர்போ பவதி. யதேதத்ரேதஸ்ததேதத்ஸர்வேப்யோங்கேப்யஸ்தேஜஃ
    ஸஂபூதமாத்மந்யேவாத்மாநஂ பிபர்தி தத்யதா ஸ்த்ரியாஂ ஸிஞ்சத்யதைநஜ்ஜநயதி ததஸ்ய ப்ரதமஂ ஜந்ம৷৷1.4.1৷৷

    கர்ம பலன் அனுபவித்த பின்பு மீண்டும் மழை-தானியம் -புருஷன் -சம்யோகத்தால் கர்ப்ப வாசம் பற்றி சொல்கிறது –

    இந்த ஜீவன் முதலில் தந்தையின் உடலை இருப்பிடமாக கொண்டிருக்கிறது.
    தந்தையின் விந்தில் இருக்கிறது. இந்த விந்தானது உடலினுடைய எல்லா அங்கங்களின் ஒட்டு மொத்த சாராம்சமாக இருக்கிறது.
    தந்தை தன் குழந்தையைப் பார்க்கும்போது தன்னையே பார்ப்பது போன்ற உணர்வுடன் பார்க்கின்றான்.
    நான் இறந்தாலும் தன் குழந்தையின் உடலில் இருப்பேன் என்று நம்பி கொண்டு
    தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதைப் போன்று தன் குழந்தையை பாதுகாக்கின்றான்.
    ஆணினுடைய விந்திலிருந்து பெண்ணின் கர்ப்பத்திற்குள் செல்கின்றது, இதுதான் அவனுடைய முதல் ஜென்மம்.

    ————-

    தத்ஸ்த்ரியா ஆத்மபூயஂ கச்சதி யதா ஸ்வமங்கஂ ததா. தஸ்மாதேநாஂ ந ஹிநஸ்தி ஸாஸ்யைதமாத்மாநமத்ர கதஂ பாவயதி৷৷1.4.2৷৷

    தாயின் கருப்பைக்குள் சென்ற ஜீவனானது அவளது அங்கமாகவே மாறிவிடும்.
    அதனால் இந்த தாய்க்கு எந்த தீங்கும் செய்வதில்லை.
    தன்னிடத்தில் வந்த அந்த ஜீவனை தாய் மிகவும் போற்றி பாதுகாக்கின்றாள்.

    கர்ப்பத்தில் உள்ள சிசுவை தாய் மிகவும் கவனமாக போஷித்து -தானே அதற்காகவும் உண்டும் வளர்க்கிறாள் என்கிறது –

    —————-

    ஸா பாவயித்ரீ பாவயிதவ்யா பவதி தஂ ஸ்த்ரீ கர்பஂ பிபர்தி ஸோக்ர ஏவ குமாரஂ ஜந்மநோக்ரேதிபாவயதி. ஸ யத்குமாரஂ
    ஜந்மநோக்ரேதிபாவயத்யாத்மாநமேவ தத்பாவயத்யேஷாஂ லோகாநாஂ ஸந்தத்யா ஏவஂ ஸந்ததா ஹீமே லோகாஸ்ததஸ்ய த்விதீயஂ ஜந்ம৷৷1.4.3৷৷

    அவள் பாதுகாப்பவளாகிறாள்.
    தாய் குழந்தையை பாதுகாக்கும்போது அவளை மற்றவர்கள் பாதுகாக்க வேண்டும்.
    பிறப்பதற்கு முன் அவள்தான் குழந்தையை பாதுகாக்கின்றாள்.
    பிறப்பதற்கு முன் தாயை கவனிக்க வேண்டும். குழந்தை பிறந்ததும் அந்தக் குழந்தையை பாதுகாக்க வேண்டும்.
    அவர் தன்னுடைய குழந்தையை பிறப்பதற்கு முன்னும் பின்னும் அதை நன்கு கவனிப்பதற்குக் காரணம்
    அவர் தன்னையே அந்த குழந்தையினிடத்தில் பார்ப்பதால் தன்னையே கவனிப்பதற்கு சமமானதாக இருக்கிறது.
    இந்த உலகத்தில் தன்னுடைய சந்ததியானது தொடர்ந்திருப்பதற்காக இவ்வாறு தந்தை தன் குழந்தை பாதுகாக்கிறார்.
    ஜீவன் தாயின் கர்ப்பதிலிருந்து உலகத்தில் வருவது இரண்டாவது ஜென்மம்.

    கர்ப்பத்தில் தாய் ரஷித்து பிறந்த பின்பு தாயும் தந்தையும் ரஷித்து -இத்தால் உலகம் தொடர்ந்து -நடக்கிறது என்றபடி

    —————-

    ஸோஸ்யாயமாத்மா புண்யேப்யஃ கர்மப்யஃ ப்ரதிதீயதே. அதாஸ்யாயமிதர ஆத்மா கரிதகரித்யோ வயோகதஃ
    ப்ரைதி ஸ இதஃ ப்ரயந்நேவ புநர்ஜாயதே ததஸ்ய தரிதீயஂ ஜந்ம৷৷1.4.4৷৷

    தன்னுடைய ஸ்வரூபமாக மகனை கருதுகிறார் தந்தை
    தார்மீக முறையில் வளர்க்க வேண்டும். தர்மத்தின் படி வாழும் வகையில் வளர்க்க வேண்டும்
    அதற்கு பிறகு
    இந்த மகனுக்கு தந்தையானவர்
    இந்த உலகத்தில் செய்ய வேண்டிய மூன்று கடமைகளிலிருந்து விடுபடுகின்றார்,
    அவைகள் கடவுளுக்கு, ரிஷிகளுக்கு, தேவதைகளுக்கு செய்ய வேண்டியது மூன்று கடமைகள்-
    பிறகு வயதாகி இறந்து விடுகின்றான்.
    இந்த உலகத்தை விட்ட பிறகு மீண்டும் வேறொரு உடலை எடுக்கின்றான்.
    இது அவனுக்கு மூன்றாவது பிறப்பு.
    தன்னுடைய ஸ்வரூபமாக பாவிக்கும் மகனை புண்ணிய கர்மத்தை அவன் செய்யும் விதத்தில் வளர்க்க வேண்டும்.
    தார்மீக முறையில் வளர்க்க வேண்டும். தர்மத்தின்படி வாழும் வகையில் வளர்க்க வேண்டும்.
    அவனும் அதே மாதிரி வளரத்-தொடங்கினான், தந்தை சொன்னபடி இந்த உலகில் தர்மப்படி வாழ்ந்து வயதான பிறகு இறந்துவிடுகின்றான்.
    இது இவனுக்கு மூன்றாவது ஜென்மம்.

    புத்ரனை ஜீவாத்மாவுடைய இரண்டாவது ஜென்மம் என்பர் -வேதங்களில் விதித்தித்த அனுஷ்டானங்களை தொடர்ந்து செய்ய
    ஜீவன் சரீரம் விட்ட பின்பு கர்மத்தின் அனுகுணமாக மூன்றாவது ஜென்மம் எடுக்கிறான் என்கிறது –

    —————-

    ததுக்தமரிஷிணா. கர்பே நு ஸந்நந்வேஷாமவேதமஹஂ தேவாநாஂ ஜநிமாநி விஷ்வா. ஷதஂ மா புர ஆயஸீரரக்ஷந்நதஃ
    ஷ்யேநோ ஜவஸா நிரதீயமிதி கர்ப ஏவைதச்சயாநோ வாமதேவ ஏவமுவாச৷৷1.4.5৷৷

    ஸ்ரீ வாம தேவர் முந்திய ஜென்ம கர்ம -புண்ணிய கர்ம – பலத்தால் கர்ப்பத்தில் இருந்த பொழுதே -தனது முந்திய ஜென்மங்களை பற்றியும்
    பர ப்ரஹ்மத்தின் பல் வேறு ஸ்வரூப ரூபங்களையும் தேவதைகளின் ஜென்ம பரம்பரைகள் விசேஷங்களையும் அறிந்ததாக சொல்கிறார் –

    ஆத்ம ஞானத்தை அடைந்த ரிஷி ஒருவரால் இவ்வாறு சொல்லப்பட்டது.
    கர்ப்பதிலிருக்கும் போதே நான் என்னை அறிந்து கொண்டேன்.
    அனைத்து தேவர்களின் பிறப்பையும், தேவ ரகசியத்தையும் (ஆத்ம ஞானம்) அறிந்து கொண்டேன்.
    இதை அடைவதற்கு முன் 100 இரும்புக்கதவுக்குள் அடைப்பட்டுக் கொண்டிருந்தேன்.
    பருந்தானது கூண்டிலிருந்து வெளியேறுவது போல நான் மாயை என்ற வலையிலிருந்து வெளியேறிவிட்டேன் என்று
    வாமதேவர் என்ற ஞானி தான் கர்ப்பத்திலிருக்கும்போதே இந்த ஞானத்தை அடைந்துவிட்டதை கூறியிருக்கிறார்.

    ———————

    ஸ ஏவஂ வித்வாநஸ்மாச்சரீரபேதாதூர்த்வ உத்க்ரம்யாமுஷ்மிந் ஸ்வர்கே லோகே ஸர்வாந் காமாநாப்த்வாமரிதஃ ஸமபவத் ஸமபவத்৷৷1.4.6৷৷

    இப்படி கருவிலே திரு உள்ளவர் மீண்டும் பிறக்காமல்–ஸ்வரூப ஆவிர்பாவம் பெற்று -பர ப்ரஹ்மத்தை அடைந்து அனுபவிக்கிறார் –

    யாரொருவன் வாமதேவர் அறிந்தது போல் ஆத்ம ஞானத்தை அடைந்து விட்டால்
    இந்த சரீரத்திலிருந்து கொண்டே மனநிறைவைப் பெற்று மரணமற்ற நிலையை அடைவான்.

    ————————

    கோயமாத்மேதி வயமுபாஸ்மஹே கதரஃ ஸ ஆத்மா . யேந வா பஷ்யதி யேந வா ஷரிணோதி யேந வா
    கஂதாநாஜிக்ரதி யேந வா வாசஂ வ்யாகரோதி யேந வா ஸ்வாது சாஸ்வாது ச விஜாநாதி৷৷1.5.1৷৷

    இப்படி உபாசித்து -கண்ணால் கண்ட -காதால் கேட்ட -மூக்கால் நுகர்ந்த -நாக்கால் சுவைத்த –

    யார் இந்த ஆத்மா?
    நாம் தினந்தோறும் பயன்படுத்தும் சொல் “நான்”
    எப்படிபட்டது இது? நிர்குண சைதன்யமா அல்லது சகுண சைதன்யமா?
    ஸ்தூல, சூட்சும சரீரங்களை விசாரம் செய்து இவைகள் ஆத்மா அல்ல என்ற முடிவுக்கு வருகின்றார்கள்.
    எந்த இந்திரியத்தால் பேசுகிறோமோ, கேட்கிறோமோ, வாசனையை நுகர்கின்றோமோ
    இவைகள் ஆத்மா என்று விசாரம் செய்து இல்லை என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
    இந்த சூட்சும சரீரம் மாற்றத்தை அடைவதால் அது ஆத்மா அல்ல என்று தெளிவடையலாம்.
    காலம் செல்ல செல்ல பார்க்கும் சக்தி, கேட்கும் சக்தி போன்ற இந்திரியங்களின் சக்திகள் குறைந்து கொண்டே போவதால்,
    இவைகள் மாற்றத்திற்கு உள்ளாகின்றது
    இதுவே நமக்கு விஷயமாக உள்ளது. ஏதாவது ஒரு பொருளை காட்டி இது தெரிகிறதா என்று கேட்டால், தெரிகிறது என்று கூறுவோம்.
    எனவே பொருளும் தெரிகிறது அதை கண்ணால் அறிந்து கொண்டேன் என்று இந்திரியத்தின் செயலையும் தெரிந்து கொள்கிறோம்.
    ஆனால் இந்திரியங்களின் விஷயங்களாகி வேறொருவன் அதைப் கவனிக்கின்றான்.
    கரணமாக இருப்பதால், இதை பயன்படுத்தி வேறொருவன் பயனடைகின்றான்.
    மேற்கூறிய காரணங்களால் சூட்சும சரீரங்கள் ஆத்மாவல்ல என்று உறுதி செய்யப்படுகிறது.

    —————-

    யதேதத் ஹரிதயஂ மநஷ்சைதத். ஸஂஜ்ஞாநமாஜ்ஞாநஂ விஜ்ஞாநஂ ப்ரஜ்ஞாநஂ மேதா தரிஷ்டிர்தரிதிர்மதிர்மநீஷா ஜூதிஃ
    ஸ்மரிதிஃ ஸஂகல்பஃ க்ரதுரஸுஃ காமோ வஷ இதி. ஸர்வாண்யேவைதாநி ப்ரஜ்ஞாநஸ்ய நாமதேயாநி பவந்தி৷৷1.5.2৷৷

    இந்த மனமும் (சித்தம், அகங்காரம், மனம்) புத்தியும் ஆத்மா அல்ல.
    ஆத்மா என்பது சேதன ஸ்வரூபம், அறிவு ஸ்வரூபம், உணர்வு ஸ்வரூபம்.
    நம்மிடத்தே எழுகின்ற எண்ணங்களுக்கு பின்னால் இந்த சைதன்யம் இருக்கிறது.
    எண்ணங்கள் பலவாக இருப்பதற்கு காரணம் அதற்கு விஷயமாக இருக்கும் பொருட்களால் ஆனால்
    இதையெல்லாம் அறிந்து கொண்டிருப்பது ஒரே ஒரு சைதன்யம்தான்.
    நமது மனதில் வருகின்ற எண்ணங்களுக்கு சைதன்யத்திற்கு கொடுக்கப்படுகின்ற பெயர்கள்.
    சம்ஞானம் – சாதாரண மனிதர்களிடத்திலே தோன்றும் எண்ணம், நான் இருக்கிறேன் என்ற அறிவு.
    ஆஞானம் – யோகிகளிடத்தில் இருக்கின்ற ஞானம். மனிதர்களிடத்திலே இல்லாத ஞானம்.
    விக்ஞானம் கலைஞானம், பிரக்ஞானம், புரிய வேண்டியதை அந்த நேரத்தில் புரிந்து கொள்ளும் திறமை.
    மேதா4 – வாஸனைகள்; எண்ணப் பதிவுகள்
    த்ருஷ்டி – இந்திரியங்களால் அடையப்படும் ஞானம்
    த்ருத்ஹி – துணிவை கொடுக்கின்ற உறுதியான ஞானம்
    மதிஹி – யோசிக்கும் திறமை (மனனம்)
    மணிஷா – நாம் சுதந்திரமாக இருத்தல்
    ஜூதிஹி – மனதினால் வலி வேதனைகளை அனுபவித்தல்
    ஸ்மிருதி – எண்ணிப் பார்த்தல்
    சங்கல்பஹ – உறுதி செய்தல்
    க்ருதஹ – தீர்மானித்தல்
    அஷூ – எச்சரித்தல்
    காமோ – ஆசை வயப்படுதல்
    இப்படி பலவிதமான எண்ணங்கள் நம்மிடத்தே இருக்கின்றது.
    இவைகளெல்லம் சைதன்யத்திற்கு கொடுக்கப்பட்ட பெயர்களாகும்.

    இது ஹிருதயம் அனைத்துக்கும் திரண்ட ஸ்தானம் -அதுக்கும் விட -மனஸ் -இதுவே அனைத்து இந்த்ரியங்களுக்கும் ஞான துவாரம்
    சம் ஞானம் அஞ்ஞானம் விஞ்ஞானம் பிரஞ்ஞானம் -மேதாவிலாசம் -த்ரிஷ்ட்டி -திட புத்தி மதி -ஜூதி
    ஸ்ம்ருதி -சங்கல்பம் -கருதி -காமம் -பல தசைகள் உண்டே –

    ———————

    ஏஷ ப்ரஹ்மைஷ இந்த்ர ஏஷ ப்ரஜாபதிரேதே ஸர்வே தேவா இமாநி ச பஞ்ச மஹாபூதாநி ப஀ரிதிவீ வாயுராகாஷ ஆபோ
    ஜ்யோதீஂஷீத்யேதாநீமாநி ச க்ஷுத்ரமிஷ்ராணீவ. பீஜாநீதராணி சேதராணி சாண்டஜாநி ச ஜாருஜாநி ச ஸ்வேதஜாநி
    சோத்பிஜ்ஜாநி சாஷ்வா காவஃ புரூஷா ஹஸ்திநோ யத்கிஂசேதஂ ப்ராணி ஜங்கமஂ ச பதத்ரி ச யச்ச ஸ்தாவரஂ ஸர்வஂ
    தத்ப்ரஜ்ஞாநேத்ரஂ ப்ரஜ்ஞாநே ப்ரதிஷ்டிதஂ ப்ரஜ்ஞாநேத்ரோ லோகஃ ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டா ப்ரஜ்ஞாநஂ ப்ரஹ்ம৷৷1.5.3৷৷

    எல்லா ஜீவராசிகளும் சைதன்ய ஸ்வரூபமாகவே இருக்கின்றது.
    பிரக்ஞானே ப்ரதிஷ்டிதம் – ஸ்ருஷ்டி காரணம்
    பிரக்ஞானே நேதமா லோகா – ஸ்திதி காரணம்
    ப்ரக்ஞா ப்ரதிஷ்டிதா – லய காரணம்
    மஹா வாக்கியம் : பிரக்ஞானம் பிரம்ம – ஜீவனுடைய சூட்சும சரீரத்திற்கு ஆதாரமாக இருப்பது பிரக்ஞானம்,
    இதுவே பிரம்மனாக இருக்கின்றது.

    பிரமன் இந்திரன் பிரஜாபதி -பஞ்ச பூதங்கள் -ஸ்தாவரங்கள் ஜங்கமங்கள்-பீப்பிலி வரை அனைத்துக்கும் -அனைத்து ஜீவனுக்குள்ளும் –
    ப்ரஹ்மம் அந்தர்யாத்மா வாக இருந்து நடத்துகிறார் –
    இப்படி ஒன்றை சொன்னால் ஜீவன் பர ப்ரஹ்மம் வரை செல்லும் என்று உணர வேண்டும் –

    ———————-

    ஸ ஏதேந ப்ரஜ்ஞேநாத்மநாஸ்மால்லோகாதுத்க்ரம்யாமுஷ்மிந்ஸ்வர்கே லோகே ஸர்வாந்காமாநாப்த்வாமரிதஃ ஸமபவத் ஸமபவத். இத்யோம்৷৷1.5.4৷৷

    ஸ்ரீ வாம தேவர் போல்வார் ஆத்ம சாஷாத்காரம் பெற்று அதற்கும் மேலே பர ப்ரஹ்மத்தை உணர்ந்து அந்தமில் பேரின்பம் பெற்றனர் –

    இந்த பிரஹ்ம ஞானத்தின் பலன் இந்த மந்திரத்தில் சொல்லப்படுகிறது.
    தான் எந்த அறிவை அடைந்தானோ அதிலேயே நிலைபெற்று இருத்தல், பிராரப்தம் முடிந்தவுடன்
    இந்த உடலை விட்டு விட்டு எல்லா ஆசைகளையும் அடைந்தவனாக தன்னிடத்திலே இருக்கிறான், மரணமற்றவனாக உயர்ந்து விடுகிறான்.

    ——————————————————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

    மாத்ரு ஷோடசி

    August 28, 2025

    ஒரு 16 ஸ்லோகங்கள் கொண்டது மாத்ரு .ஷோடசி.  தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்கள் பற்றியது. அதன் அர்த்தம் புரிந்துகொண்டால் அவசியம் புரியும். தாயின் அருமை தெரியும்.

    ஜீவதோர்  வாக்ய கரணாத்
    ப்ராத்யாப்தம் பூரி போஜணாத்
    கயாயாம் பிண்ட தாணாத்
    த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய’

    ‘ அடே பயலே,  அம்மா அப்பா உயிரோடு இருக்கும்போதே  அவர்கள் சொல்படி நட.  அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள். அவர்கள் ஆசீர்வாதம்  தான் உன்  படிப்பு மூலம் கிடைக்கும்  சர்டிபிகேட்டை விட உன்னை நன்றாக வைக்கும். அவர்கள் காலம் முடிந்த பிறகு  அந்தந்த திதியில்  அவர்கள் பசியை போக்கு. அவர்களுக்கு தேவை அல்வா, ஜாங்கிரி,கீ ரோஸ்ட் அல்ல. வெறும் எள்ளும்  தண்ணீரும் தான். முடிந்தால் ஒரு தடவை கயாவுக்கு குடும்பத்தோடு போ. அங்கு நீ அளிக்கும் பிண்ட ப்ரதானம் அவர்களுக்கு தேவை. ”புத்” என்ற  நரகத்திலிருந்து பெற்றோரை காப்பற்றுகிறவன் தான் ‘புத்ரன்’ என்று சாஸ்திரம் சொல்கிறது. நான் சொல்லவில்லை.

    “அக்ஷய வடம், அக்ஷய வடம்” என்று ஒரு வார்த்தை  காதில் விழுகிறதே. அது என்ன? கயாவில் நாம்  64 ஸ்ரார்த்த பிண்டங்களை அங்கு தான் இடுகிறோம். ஸ்ராத்தம் பண்ணுபவர்கள் கயாவில் பித்ருக்களுக்கு,  நமது முன்னோர்களுக்கு மட்டுமல்ல, தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கும் ‘திருப்தியத’, திருப்தியத’  என்று மனமுவந்து அளித்து அவர்களை வேண்டுகிறோமே. அக்ஷய வடம் என்பது ஒரு மஹா பெரிய வ்ருக்ஷம். ‘வடம்’ (தமிழில் சின்ன ‘ட”) ஆல மரம். சென்னைக்கருகே ல் திரு ஆலம் காடு  (திருவாலங்காடு –  வடாரண்யம் என்று பெயர் கொண்டது.)

    இந்த அக்ஷய வடத்தின் கீழே நிழலில் தான் பிண்ட பிரதானம்  இடுவார்கள்.  இதில் முக்யமாக 64 பிண்டங்களில் பெற்ற தாய்க்கு மட்டுமே 16 பிண்டங்கள். ஆந்த  16 பிண்டங்களை  அம்மாவுக்காக  ஒவ்வொரு வாக்யமாக  சொல்லி  இடுகிறோம்.  அந்த பதினாறு தான் “மாத்ரு ஷோடஸி”.

    1. கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |
    தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

    ‘கொஞ்சமா நஞ்சமா  நான்  உன்னை  படுத்தியது.  ஒரு பத்து மாத காலம்  எப்படியெல்லாம் உன்னை உதைத்திருக்கிறேன். என்னையும் சுமந்தபடி மேடும் பள்ளமுமாக  நீ அலைந்தாயே. நான் கொடுத்த கஷ்டத்தை துளி கூட  நீ  பொருட்படுத்த வில்லை. என்னை திட்டவில்லையே. சந்தோஷமாக  என்னை உள்ளே அடக்கிய  உன் வயிறை எண்ணற்ற முறை ஆசையாக  தடவி கொடுத்தாயே.   இதோ நான் செய்த பாவங்களுக்காக  உனக்கு இந்த முதல் பிண்டம். பரிகாரமாக ஏற்றுக்கொள்வாயா?

    2.   மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |
    தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

    ‘ஏன்  சோர்ந்து போயிருக்கிறாய். உன் பிள்ளை உள்ளே  படுத்துகிறானா? பிரசவ காலம்  கஷ்டமானது தான்.  மாசா மாசம் நான் வளர வளர  உனக்கு  துன்பத்தை தானே  அதிகமாக  கொடுத்துக் கொண்டே வந்தேன்.  இந்தா அதற்கு பரிகாரமாக  நான்  இடும் இந்த இரண்டாவது பிண்டம். ஏற்றுக்கொள் அம்மா.

    3.     பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |
    தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

    அம்மா,  நான்  அளித்த வேதனையில் நீ  பல்லைக் கடித்துக்கொண்டு  பொறுத்துக்கொண்ட தாங்கமுடியாத  துன்பம்  நான் உன்னை வயிற்ருக்குள் இருந்தபோது உதைத்தது தானே.  அதற்காக ப்ராயச்தித்தமாக  இந்த 3வது  ஸ்பெஷல்  பிண்டம் உனக்கு. என் தாயே.

    4.     ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம் |
    தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

    ‘அம்மா,  இந்த 4 வது பிண்டம்  உனது பூரண கர்ப காலத்தில் நீ என்னால் பட்ட  வேதனைக்காக  — ஒரு பரிசு —  என்றே  ஏற்றுக்கொள். என்னைப் பொருத்தவரை  எனது பிராயச்சித்தம் என்று நான்  இடுகிறேன்.

    5.     சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் |
    தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

    ‘ஏண்டி  மூச்சு  விடறது கஷ்டமாக இருக்கா. கொஞ்ச காலம் தான்  பொறுத்துக்கோ” .என்று  உன்  உறவுகள், நட்புகள் கேட்குமே. அவ்வாறே  மனமுவந்து நான்  விளைத்த துன்பத்தை, வேதனையை  நீ தாங்கினாயே. அதற்கு பரிகாரம் தான்  இப்போது என் கையில் நான் தாங்கும் இந்த  ஐந்தாவது பிண்டம். ஏற்றுக்கொள் என் அருமைத் தாயே.”

    6.   ‘ பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி ச|
    தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

    ‘குழந்தை வயித்திலே இருக்கும்போது இதெல்லாம் எனக்கு வேண்டாம்.  அப்புறமா  சாப்பிடறேன்”  என்று  உனக்கு பிடித்ததை எல்லாம் கூட வேண்டாமே என்று உதறினாயே. எனக்காகவே பத்தியம் இருந்தாயல்லவா. நான்  நோயற்று வளர, வாழ  எத்தனை  தியாகம் செய்தாய். நான் உனக்கு செய்த பாவத்திற்கு தான்  இந்த ஆறாவது பிண்டம். அம்மா  இதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும் சொல்?’

    7.    அக்நிநா சோஷயேத்தேஹம்  தரிராத்ரோ போஷணேந |
    தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

    ‘நான்  குவா குவா  என்று பேசி  பிறந்து சில நாட்கள் தான் ஆகிறது. அப்போது  நீ  பசியை அடக்கி  வெறும் வயிற்றோடு  எத்தனை நாள் சரியான  ஆகாரம் இன்றி தூக்கமின்றி வாடினாய். எனக்கு மட்டும்  பால் நேரம் தவறாமல்  கிடைத்ததே.  அந்த  துன்பத்தை நான் உனக்கு கொடுத்ததற்கு பரிகாரம் தான் இந்த  7வது பிண்டம்..

    8.     ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட |
    தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

    இப்போது நினைத்தாலும்  சிரிப்பு வருகிறது. கண்ணில் நீரும் சுரக்கிறது. எத்தனை இரவுகள் அசந்து தூங்கும் உன் புடவையை  ஈரம் பண்ணியிருக்கிறேன். படவா என்று செல்லமாக தானே  சிரித்துக்கொண்டே  வேறு துணி எனக்கும்  மாற்றினாய். இதற்கு நான்  உனக்கு இடும் கைம்மாறு தான் இந்த  8 வது பிண்டம். இதையாவது ஈரமில்லாமல் தருகிறேனே.

    9.  ”தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்ச தி |
    தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

    ‘நான்  சுகவாசி.  எனக்கு  எப்போது தாகம், பசி,  தூக்கம்,  எதுவுமே தெரியாது.நீ  தான் இருந்தாயே, பார்த்து பார்த்து அவ்வப்போது, எனக்காக  நீ  இதெல்லாம் செய்தாயே.  இந்த  பெரிய மனது பண்ணி என்னை  வளர்த்த  உனக்கு நான் எவ்வளவு துன்பம் தந்திருக்கிறேன். அதற்காக பிராயச் சித்தமாக இந்த  9வது பிண்டம்.
    .
    10.   திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் |
    தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

    ‘ஒரு சின்ன செல்ல  தட்டு  என்  மொட்டை மண்டையில்.  ”கடிக்காதேடா..” .  நான்  பால் மட்டுமா  உறிஞ்சினேன்.  என்  சிறு பல்லால் உன்னை கடித்தேனே. வலித்ததல்லவா உனக்கு.  இந்தா  அதற்காக  ப்ளீஸ்  இந்த பிண்டத்தை ஏற்றுக்கொள் அம்மா

    11.  மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்த து கிதா |
    தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

    ‘வெளியே  பனி,  குழந்தைக்கு ஆகாது.  இந்த  விசிறியை  எடு. குழந்தைக்கு உள்ளே வியர்க்கும். வாடைக்காத்து.  ஜன்னலை மூடு. எனக்கு  காத்து வேண்டாம். குழந்தையைப் போர்த்தவேண்டும். கம்பளி கொண்டுவா. குழந்தைக்கு குளிருமே.”  காலத்திற்கேற்றவாறு என்னை  கருத்தில் கொண்டு  காத்த  என் தாயே, நான் பிரதியுபகாரமாக கொடுப்பதெல்லாம் இந்த  சிறு பிண்டம், 11வதாக  எடுத்துக்கொள்.’

    12.   புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி
    தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

    எத்தனை இரவுகள்,  எத்தனை மன வியாகூலம்.  குழந்தை நெற்றி எல்லாம் சுடறதே, சுவாசம் கஷ்டமாயிருக்கே. சளி  உபாதையாக இருக்கிறதே என்று  வருந்தி,   நாமக் கட்டி, மஞ்சள், விபூதி, பத்து எல்லாம் தடவி  மடியில் போட்டு  ஆட்டி, தட்டி,  என்னை வளர்த்தாயே,    கண்விழித்து உன் உடல்  . அதற்காகத்தான் இந்த  12வது பிண்டம் தருகிறேன்.

    13.   யமத்வாரே மஹாகோரே மாதா சோசதி ஸந்ததம் |
    தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

    நான்  இந்த பூலோகத்தில் இப்போது கார், பங்களா வசதிகளோடு  கை நிறைய காசோடு .   ஆனால்  இதெல்லாம் அனுபவிக்காமல்  நீ  யமலோகம்  நடந்து சென்று  கொண்டிருக்கிறாயே.  என் கார்  அங்கு வராதே.  வழியெல்லாம் எத்தனை இடையூறு. அவை எதுவுமே  உனக்கு  துன்பம் தராமல் இருக்க நான்  தர முடிந்தது இந்த 13வது பிண்டம் தான்  அம்மா.

    14.    யாவத்புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசநம் |
    தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

    நான் இப்போது, பெரிய  டாக்டர், எஞ்சினீயர், வக்கீல், ஜட்ஜ், ஹெட்மாஸ்டர், கம்ப்யூடர் ஸ்பெஷலிஸ்ட் — நீ இல்லாவிட்டால்  நானே  எது.? ஏது?  ஆதார காரணமே, என் தாயே,  இந்த 14வது பிண்டம் தான்  அதற்கு பரியுபகாரமாக உனக்கு என்னால்  தர முடிந்தது.

    15.   ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: |
    தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

    திருப்பி திருப்பி சொல்கிறேனே.  நான்  வளரத்தானே  நீ  உன்னை வருத்திக்கொண்டாய்.  நீ வேண்டியதை திரஸ்கரித்தாய். நான் புத்தகத்தில் தான்  ”தன்னலமற்ற”   தியாகம் என்று படிக்கிறேன்.  நீ  அதை  பிரத்யக்ஷமாக புரிந்து அனுபவித்தவள்.  எனக்காக நீ கிடந்த  பட்டினி, பத்தியம்  எல்லாவற்றிற்கும் உனக்கு  நான் தரும் பிரதிஉபகாரம் இந்த  15வது பிண்டம்  ஒன்றே.

    16.    காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய |
    தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

    நான்  சுய கார்யப் புலி. சுயநல விஷமி. உன்னில் நான்  உருவாகி, கருவாகி, சிறுவனாகி, பெரியவனாகி, இப்போது உன் மரண வேதனையை சற்றே உணர்ந்தவனாக கண்ணில் நீரோடு  தரும் இந்த 16வது கடைசி கடைசி பிண்டத்தை ஏற்றுக்கொள் என் தாயே.  தெய்வமே.  என்னை மன்னித்து ஆசிர்வதி.

    மஹா பூதாந்தரங்கஸ்தோ
    மஹா மாயா மயஸ்ததா
    ஸர்வ பூதாத்மகச்சைவ
    தஸ்மை ஸர்வாத்மனே நமஹ

    ( எவர் எல்லா உயிரினங்களில் உள்ளுறைபவராகவும் மஹா மாயையையுடையவராகவும் ஸர்வ பூதாத்மகமாகவும் இருக்கிறாரோ அந்த ஸர்வாத்மனை நமஸ்கரிக்கிறேன் )

    ————————————————————————————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -விஷய ஸூசிகை -நியாய வேதாந்த வித்வான் வாக் அம்ருத வர்ஷி வேளுக்குடி ஸ்ரீ உ வே வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -தொகுத்து அருளியவை -–

    August 22, 2025

    திருநக்ஷத்ரம் : ஐப்பசி சதயம்
    அவதார ஸ்தலம் : திருப்புட்குழி
    ஆசார்யன் : நம்பிள்ளை
    பரமபதம் அடைந்த இடம் : ஸ்ரீரங்கம்
    அருளிய க்ரந்தங்கள் : 6000 படி குரு பரம்பரா ப்ரபாவம். வார்த்தாமாலை-(456 வார்த்தைகள்)

    நாராயணனே பரதத்வம் -விஸிஷ்ட தத்வம் -சித் அசித் -சேதந அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம்
    தத்வ த்ரய ஞானம் வந்து-அவற்றுக்குத் தக்க புருஷார்த்த த்ரயமும் உபாய த்ரயமும் -முமுஷுக்கு அவஸ்யம் வேண்டுமே
    பிரமாணாஞ்ச ப்ரமேயஞ்ச பிரமாதா ஸாத்விக –ஜயந்து
    ஆழ்வார்கள் வாழி-அருளிச் செயல் வாழியே –
    ஸ்வ ஞானம் -ஸ்வரூப ஞானம் -உபாய ஞானம் உபேய ஞானம் -முமுஷுக்கு வேண்டுமே –மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் பின்னோர்ந்து -இத்யாதி -பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் -சிஷ்யராகவுமாம் ஆச்சார்யாகவுமாம் -பகவத் சம்பந்திகள் கௌரவிக்க அர்ஹர்களே –

    நியாய வேதாந்த வித்வான் வாக் அம்ருத வர்ஷி வேளுக்குடி ஸ்ரீ உ வே வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -முன்னுரை- தத்வ ஞானத்தாலே மோக்ஷ லாபம் என்பதை ஸர்வ வைதிக ஸம்பதம் -அந்த ஞானம் அடைவது பிரமாணங்களாலே -அவற்றை ஸ்ரீ பராசர பட்டர் தொகுத்து அருளுகிறார் –ஆதவ் வேதா பிரமாணம் ஸ்ம்ருதி உப குருதேஸ இதிஹாஸை புராணை ந்யாயை ஸார்த்தம் –
    இவற்றுடன் நம் பூர்வர்களின் வார்த்தைகளையும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும் –கலை இலங்கு மொழியாளர் –சொல்லும் விடு ஸ்ருதியாம் -என்கிறபடி பூர்வர்களின் வார்த்தைகளை சாஸ்த்ரார்த்தங்கள் பொலிந்து-பொதிந்து இருக்கும்
    கேசவ -அர்ஜுனன் ஸம்வாதம்
    பராசர மைத்ரேயர் ஸம்வாதம்-சுகர் பரிஷத் ஸம்வாதம் -ஜனமேயர் வைசம்பாயனர் ஸம்வாதம்-
    ஸ்ரீ பராங்குச மதுரகவி ஸம்வாதம்
    ஸ்ரீ பீஷ்ம யுதிஷ்ட்ர ஸம்வாதம்
    நாரத வால்மீகி ஸம்வாதம் -இவற்றின் மூலமும் தத்வார்த்தங்களை நாம் அறிகிறோம் –
    அப்படியே பூர்வர்களுடைய ஸம்வாதங்களும் -ஸ்ரீ வசனம் என்றும் அழைக்கப்பட்டு ஸ்ரீ வசன பூஷணம் கிடைக்கப்பெற்றோம்(யதிராஜர் ரெங்கராஜார் ஸம்வாதம் -கத்யத்ரயம் -)
    ப்ரஸ்ன பூர்வக ஸமாதான உத்தர ரூபமாக வார்த்தைகள் -பொன்னே போல் போற்றப்பட்டு வார்த்தாமாலை -இவற்றால் ஞானம் பெற்று திருமால் திருவருள் பெறுவோம்-

    —————-

    புருஷகார வைபவஞ்ச சாதனச்ய கௌ ரவம்
    தத் அதிகாரி க்ருத்யம் அஸ்ய சத்குரு உபசேவனம்
    ஹரிதயாம் அஹேதுகீம் குரோர் உபாயதாஞ்ச யோ
    வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரையே-ஸ்ரீ வசன பூஷணம்

    சாங்க அகில த்ரவிட சம்ஸ்க்ருத  ரூப வேத
    சாரார்த்த ஸந்க்ரஹ மஹாரசா வாக்ய ஜாதம்
    சர்வஞ  லோககுரு நிர்மிதம் ஆர்ய போக்யம்
    வந்தே சதா வசன பூஷண திவ்ய சாஸ்திரம்
    ஆகுண்ட உத்கண்ட வைகுண்ட கண்ட பூஷணம்
    குருணா ஜகதாம் உக்தம் வ்யாப்தம் வசன பூஷணம்

    பேறு தருவிக்கும் அவள் தன் பெருமை ஆறு பெறுவான் முறை அவன்
    கூறு குருவை பனுவல் கொள்வது இலையாகிய குளிர்ந்த அருள் தான்
    மாறில் புகழ் நல் குருவின் வண்மை யோடு எலாம் வசன பூடணம் அதில்
    தேறிட நமக்கு அருள் முடும்பை இறைவன் கழல்கள் சேர் என் மனனே –
    திரு மா மகள்  தன் சீர் அருள் ஏற்றமும்
    திரு மால் திருவடி சேர் வழி நன்மையையும்
    அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும்
    மெய் வழி ஊன்றிய மிக்கோர் பெருமையும்
    ஆரணம் வல்லவர் அமரும் நல் நெறியும்
    நாரணன் தாள் தரு நல் குரு நீதியும்
    சோதி வானருள் தூய மா குருவின் பாத மா மலர்  பணிபவர்தன்மையும்
    தீதில் வானவர் தேவன் உயிர் களை ஏதும் இன்றி எடுக்கும் படியையும்
    மன்னிய இன்பமும் மா கதியும்
    குரு என்னும் நிலை பெரும் இன் பொருள் தன்னையும்
    அசைவிலா வேதம் அதனுள் அனைத்தையும் வசன பூடண வழியால் அருளிய
    மறையவர் சிகாமணி வண் புகழ் முடும்பை இறையவன்
    எங்கோன் ஏர் உலகாரியன்
    தேன் மலர் சேவடி சிந்தை செய்பவர் மா நிலத்து இன்பம் அது எய்தி வாழ்பவர்

    லோகாச்சார்ய  க்ருதே லோகஹிதே வசன பூஷண
    தத்வார்த்த  தர்சி நோ லோகே தந் நிஷ்டாச்ச சூதுர்லபா
    ஜகதாச்சார்யா ரசிதே ஸ்ரீ மத் வசன பூஷனே
    தத்வ ஞாநஞ்ச  தந் நிஷ்டாஞ்ச  தேஹி நாத யதீந்திர மே
    ————-

    பின்பழகராம் பெருமாள் சீயர் பெரும் திவத்தில்
    அன்பு அதுவும் அற்று மிக்க வாசையினால்-நம்பிள்ளைக்கு
    ஆன அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே
    ஊனமற எப்பொழுதும் ஓர்—66-

    ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
    த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

    முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
    வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
    எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
    இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

    கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
    அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
    திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
    மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
    எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

    ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
    ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
    ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
    யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
    நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
    தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
    தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
    யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
    அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

    துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
    ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
    பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
    துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
    நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
    ஞானாதி பூஷணம் வந்தே
    பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்
    நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

    —————–

    பின்பழகிய பெருமாள் ஜீயர் ஒருகாலம் திருமேனி பாங்கின்றியிலே கண்வளர்ந்தருளுகிற போது தமக்கு அந்தரங்கரான ஶ்ரீவைஷ்ணவர்களை அழைத்து ‘அடியேன் இப்போது திருவடிச்சாராமல் ஆலஸ்யமும் பொறுத்து இன்னமும் இங்கே சிறிதுநாள் இருக்கும்படி “ஏழையேதலன்”, “ஆழியெழச்சங்கும்” பெருமாள் திருவடிகளிலே விண்ணப்பம்செய்து ப்ரபத்தி பண்ணுங்கோள்’ என்ன,அவர்கள் அப்படியே செய்து, ஜீயருக்குப் பண்டுபோலே திருமேனி பாங்காயிற்று-இத்தை ஶ்ரீவைஷ்ணவர்கள் இவருடைய ஆசார்யரான நம்பிள்ளை ஶ்ரீபாதத்திலே சென்று தண்டனிட்டு‘ஜ்ஞாநவ்ருத்தருமாய் வயோவ்ருத்தருமான ஜீயர் இப்படிச் செயதார், இது இவர்ஸ்வரூபத்துக்குச் சேருமோ?’ என்று விண்ணப்பம்செய்ய, பிள்ளையும் ‘அவருடைய அபிப்ராயம் அறிகிறிலோம்; ஸகல வேத ஶாஸ்த்ரங்களும் போவது,-பிள்ளை எங்களாழ்வானைச் சென்று இப்படி இவர் நினைவைக் கேளுங்கோள்’ என்று கேட்க,அவரும் ஶ்ரீரங்கஶ்ரீயில் ஸங்கம் போலே காணும் என்று இருள் தருமா ஞாலமான ஸம்ஸாரத்திலே “நாபுக்தம் க்ஷீயதே கர்ம கல்ப கோடிஶதைரபி” என்றும்,“யத் ப்ரஹ்ம கல்ப நியுதாநுபவேப்ய நாஶ்யம்” என்றும் சொல்லுகிறபடியே என்ன,பிள்ளையும் அத்தைக் கேட்டருளி, ‘திருநாராயணபுரத்தரையரைச் சென்று கேளுங்கோள்’ என்ன,அவரும் ‘தொடங்கின கைங்கர்யங்கள் தலைக்கட்டாமையாலே காணும்’ என்ன, பிள்ளையும் அத்தைக்கேட்டு,‘ஆகிறது, அம்மங்கியம்மாளைக் கேளுங்கோள்’ என்ன,அவரும், ‘பிள்ளை கோஷ்டியிலே இருந்து அவர் அருளிச்செய்கிற பகவத் விஷயத்தைக் கேட்கிறவர்களுக்கு ஒரு தேஶ விஶேஷமும் ருசிக்குமோ?’ என்ன, மீளவும் பிள்ளை அத்தைக்கேட்டு, ‘அம்மங்கி பெரியமுதலியாரைக் கேளுங்கோள்’ என்ன,“பெருமாள் சிவந்த திருமுக மண்டலமும் கஸ்தூரி திருநாமமும் பரமபதத்திலே கண்டேனில்லையாகில் மூலையடியே முடித்துக்கொண்டு மீண்டுவருவன்’ என்றன்றோ பட்டர் அருளிச்செய்தது,அப்படியே இவரும் பெருமாள் சிவந்த திருமுக மண்டலத்தையும் விட்டுப் போகமாட்டராக வேணும்” என்றார்.-பிள்ளை இவை எல்லாத்தையும் கேட்டருளி ஜீயர் திருமுக மண்டலத்தைப் பார்த்து சிரித்து,‘இவை உம்முடைய நினைவுக்கு ஒக்குமோ?’ என்ன, ‘இவை இத்தனையுமன்று’ என்று ஜீயர் விண்ணப்பம் செய்தார்.‘ஆனால் உம்முடைய அபிப்பிராயத்தைச் சொல்லும்’ என்ன, பிள்ளை ‘தேவர் ஸர்வஜ்ஞராகையாலே அறிந்தருளாததில்லை;ஆனாலும் அடியேனைக்கொண்டு வெளியிட்டருளத் திருவுள்ளமாகில் விண்ணப்பம் செய்கிறேன்.தேவரீர் மஞ்சன சாலையிலே எழுந்தருளித் திருமஞ்சனம் செய்தருளித் தூய்தாகத் திருவொற்றெலியல் சாற்றி யருளி உலாவி யருளும் போது குருவேர்ப்பரும்பின திருமுக மண்டலத்தில் சேவையும் சுழற்றிப் பரிமாறுகிற கைங்கர்யத்தையும் விட்டு அடியேனுக்குப் பரமபதத்துக்குப் போக இச்சையாயிருந்ததில்லை’ என்று ஜீயர் விண்ணப்பம் செய்தார்.-இத்தைக் கேட்டருளிப் பிள்ளையும் முதலிகளும் ‘இந்த விபூதியிலும் இவ்வுடம்போடே ஒருவர்க்கு இவ்வைஶ்வர்யம் கூடுவதே!’என்று மிகவும் திருவுள்ளம் உகந்தருளினார்கள் – என்று இந்த ஜீயருடைய ஆசார்ய ப்ரேமம் தமக்குண்டாக வேணுமென்று நம்முடைய ஜீயர் தம்முடைய திருவுள்ளத்தைக் குறித்து உபதேச ரத்தின மாலையிலே“பின்பழகராம் பெருமாள் சீயர் பெருந்திவத்திலன்பதுவுமற்று மிக்கவாசையினால் நம்பிள்ளைக்கான அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே ஊனமற எப்பொழுதுமோர்” என்றருளிச் செய்தருளினார்.)


    விஷய ஸூசிகை -நியாய வேதாந்த வித்வான் வாக் அம்ருத வர்ஷி வேளுக்குடி ஸ்ரீ உ வே வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -தொகுத்து அருளியவை –

    ஸ்வரூப உபாய புருஷார்த்தம் ஞானம் அவஸ்யதை
    ஸ்ரீ வைஷ்ணவ சம்சார சாம்யமும் ஞான தாரதம்யமும்
    அஞ்ஞான அந்யதா விபரீத ஞானம் நிரூபணம்
    ஸ்ரீ வைஷ்ணவ சம்சாரி நிஷ்டை
    அர்த்த பஞ்சக நிரூபணம்
    அஹங்கார த்வயம் உப லக்ஷணம்

    ஸ்வரூப உபாய புருஷார்த்த நிஷ்கர்ஷம் -பிள்ளைக் கிணறு – உள் அர்த்தம் –
    ஸ்வரூப உபாய புருஷார்த்த யாதாத்ம்யம் -ஜீவாத்மாவின் ஆனந்தம் –

    சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரய ஸ்வ பாவ த்ரயம்
    ஆத்மாவினுடைய அநந்யார்ஹ சேக்ஷத்வாதி ரக்ஷணம்
    சேக்ஷத்வாதி ரக்ஷண பலம்

    சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரய ஸ்வரூப ஸ்வபாவ கதநம்
    ஞாத்ரு -ஞான -ஞேய நிரூபணம்
    ஆத்மாவுக்கு ஞாத்ருத்வம் வ்யாவர்த்தகம்

    சித் அசித் ஈஸ்வர லக்ஷணம் –
    தத்வ விபாகம் –
    நிர்குண ஸ குண ஜடம் –
    த்ரிகுண ஏக குண -ஸ குணம்
    அஜட த்வைவித்யம்
    ப்ரத்யக் த்வைவித்யம்
    பராக் த்வைவித்யம்

    ஸத்வாதி குண த்ரய த்வைவித்யம்
    ஸத்வாதி குண கார்ய நிரூபணம்

    தத்வத்ரய ஸ்வரூப -ஸ்வரூப நிரூபக தர்மம் –
    நிரூபித ஸ்வரூப விசேஷண வியாபார நிரூபணம்
    திவ்ய தம்பதிகளுக்கு அத்யந்த ஸாம்யம்
    திவ்ய தம்பதிகளுக்கு அந்யோன்ய அதிசய கரத்வ நிதாநம்
    பிராட்டிக்கு அசாதாரண ஆகாரம்
    பெருமானுக்கு அசாதாரண ஆகாரம்
    ஜீவனுக்கு சேஷத்வம் நிரூபித ஸ்வரூப விசேஷணம்
    அசித் த்ரைவித்யாம் -தத் ஸ்வரூபாதி நிரூபணம்

    ஆத்மாவினுடைய தர்மி தர்ம ஸ்வரூப நிரூபணம்
    ப்ரத்யக்த்வம் நிரூபித ஸ்வரூப விசேஷணம்
    ப்ரத்யக்த்வம் தர்மி பாஸ்யம்
    தர்ம பூத ஞான ஸ்வரூபாதி நிரூபணம்
    தர்ம பூத ஞானம் நிரூபித ஸ்வரூப விசேஷணம்
    தர்ம தர்மி ஞானங்களுக்கு வாசி
    ஞான ஞேயங்களுக்கு வாசி
    தர்ம தர்மி ஞானங்களுக்கு ஸாதாரண ஆகாரம்
    தர்ம தர்மி ஞானங்களுக்கு அஸாதாரண ஆகாரம்
    ஞானத்வ ஸ்வயம் ப்ரகாச த்வயோ பேதம்
    தர்ம பூத ஞானத்துக்கு விஷயித்வ நிரூபணம்
    தர்மி ஞானத்துக்கு ப்ரத்யக்த்வ நிரூபணம்
    தர்ம பூத ஞானம் ஞானாந்தர வேத்யமாம் போது ப்ரஸரண பேதம்
    ஜீவன் ஸம்ஸரிக்க ஸ்வரூப யோக்யதை
    ஜீவன் ஸம்ஸரிக்க ஸஹகாரி காரணம்
    ஜீவன் ஸம்ஸரிக்க ப்ரதாந காரணம்
    கைங்கர்யத்தைப் பெற யோயத்தை
    கைங்கர்யத்தைப் பெற ஸஹகாரி காரணம்
    கைங்கர்யத்தைப் பெற ப்ரதாந காரணம்

    ஈஸ்வரன் திரு உள்ளத்திலே ஆறு பிரகாரங்கள்
    கர்த்ருத்வ காரயித்ருத்வாதி நிரூபணம்
    உதாஸீநத்வாதி நிரூபணம்
    ஈஸ்வரனுடைய உதாஸீநத்வே மத பேதம்
    அநுமந்த்ருத்வ நிரூபணம்

    அஹங்கார மமதா ராக த்வேஷாதி ரூபணம்
    பர்த்ரு நாஸத்தால் ஸர்வ நாஸம்

    அஹங்காரம் ஸர்ப்பம் இத்யாதி ரூபணம்

    அவித்யா நிரூபணம்
    சதுர்வித தேஹ நிரூபணம்
    பஞ்ச விஷய நிரூபணம்
    ஈஸ்வரனுடைய கிருஷி பரம்பரை
    ஸதாசார்ய ஸமாஸ்ரயண ஹேது ஷட்கம்
    ஸ்வ ஸ்வரூப ஞான நிரூபணம்
    அர்த்த பஞ்சக நிரூபணம்
    ப்ராமண தர்மம் ரஹஸ்ய த்ரவ்யம்
    ஆச்சார்ய கைங்கர்ய நிரூபணம்
    அதிகாரி நிஷ்டாக்ரம கதநம்
    ஸ்வ ஸ்வரூபாதி ஸீம நிரூபணம்

    ஈஸ்வர சேஷ விபூதி த்வயம்
    ஜீவ த்ரைவித்யம்
    பத்த த்ரைவித்யம்
    புந ஜீவ த்ரைவித்ய கதநம்
    த்ரிவித ஜீவ விஷய ஈஸ்வர ஸங்கல்பம்

    ஈஸ்வரனுடைய லீலைக்கு விஷயம்
    ஈஸ்வரனுடைய இரக்கத்துக்கு விஷயம்

    ஞான வ்யவசாய அபேஷா அருசி விசேஷங்கள்
    அர்த்த பஞ்சக நிஷ்கர்ஷம்

    அந்யதா விரோதி பஞ்சக நிரூபணம்
    விரோதி த்ரயம்
    ஸ்வரூப உபாய உபேய விரோதி நிரூபணம்

    தாந்தி பீதி வ்யவசாய த்வரா ஹேதுக்கள்
    நாலிரண்டு அர்த்தங்கள்
    ஸ்வரூபாதி யதாத்ம்ய ஞானம்
    ஸ்வரூபாதி யதாத்ம்ய ஞான நிரூபணம்
    சேஷத்வத்திலே புறவிதழ்
    படுக்கைத் தலையிலே விஷய பாருஷ்யம்
    ஆர்த்த ப்ரபன்னனும் மோக்ஷத்தை அநாதரிக்க ஹேது
    ஸம்பந்த ஞான சாதுர்வித்யம்
    தாந்தி பீதி வ்யவசாய த்வரா ஹேதுக்கள்
    நாலிரண்டு அர்த்தங்கள்
    ஸ்வரூபாதி யதாத்ம்ய ஞானம்
    ஸ்வரூபாதி யதாத்ம்ய ஞான நிரூபணம்
    சேஷத்வத்திலே புறவிதழ்
    படுக்கைத் தலையிலே விஷய பாருஷ்யம்
    ஆர்த்த ப்ரபன்னனும் மோக்ஷத்தை அநாதரிக்க ஹேது
    ஸம்பந்த ஞான சாதுர்வித்யம்
    ஈஸ்வரனுடைய சேஷித்வ சரீரித்வ தர்மித்வாதி
    ஜீவனுடைய சேஷத்வ சரீரத்வ தர்மத்வாதி
    சேஷித்வாதி சதுஷ்ட்யத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தி
    ஸதாசார்ய வைககல்ய த்வைவித்யம்
    சேஷத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தி நிரூபணம்
    ஞாத்ருத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தி நிரூபணம்
    ஈஸ்வர கிருஷி நிரூபணம்
    ஸால பஞ்சிகா நர்த்தனம்
    முமுஷு ஞாதவ்யங்கள்

    பர ஸ்வரூப யாதாத்ம்ய நிரூபணம்
    ஸ்வ ஸ்வரூபாதி யாதாத்ம்ய நிரூபணம்
    உபாய யாதாத்ம்யம்

    போக ப்ராப்த சாதன விரோதிகள்
    த்ரிவித விரோதி காரணம்
    கைங்கர்யாதி விரோதி நிரூபணம்

    ப்ரபந்ந பரிஹார்ய ஷட்கம்
    விரோதி ஷட்க நிரூபணம்-கதாந்தர ஸ்ரவண நிஷேதம்

    விஷயாந்தரங்களின் தண்மை
    பகவத் அனுவர்த்தன விரோதி
    ஆச்சார்ய அனுவர்த்தன விரோதி
    ஸ்ரீ வைஷ்ணவ அனுவர்த்தன விரோதி
    உபாய அத்யாவசாய விரோதி
    உபேய ருசி விரோதி
    பகவத் அனுவர்த்தநாதி பஞ்சகம்
    சரீராதி பஞ்சகம்
    ஸ்வரூப விரோதி நிரூபணம்
    ஸ்வ ரக்ஷணாதி ப்ராப்த்ய பாவ ஹேது நிரூபணம்
    உபாய விரோதி நிரூபணம்
    ஸாதநாந்தராதிகளுக்கு சாதனத்வ அபாவ நிரூபணம்
    லஷ்ம்யாய அநுபாயத்வ நிரூபணம்
    ப்ராப்தி விரோதி நிரூபணம்
    தேஹாதிகளுக்கு அபோக்யத்வ நிரூபணம்
    கைவல்யம் விதவா அலங்காரம்
    ஸ்வரூப அனுரூப புருஷார்த்த ஸ்ரைஷ்ட்யம்

    சித் அசித் ஸ்வ பாவ பேத கதநம்
    ஜீவ ஈஸ்வர ஸ்வ பாவ பேத கதநம்

    ஆத்ம வாதம்
    ஆத்ம விஷயக விப்ரதிபத்தி நிரூபணம் -விப்ரதிபத்தி நிரஸனம்
    நையாயிகாதி மத நிராஸம்
    வேதாந்த்ர பரத்வ நிராஸம்
    ஏகாயன மத நிராஸம்
    ஆத்ம ஸ்வரூப நிஷ்கர்ஷம்

    தத்வ த்ரயாதி த்ரய நிரூபணம் -ஸம்ஸார ஸ்வபாவ கதநம்


    ரக்ஷகத்வாதிகளை அழித்தல்
    அர்த்த அநர்த்த ஹேது

    பாரதந்தர்ய வியவசாய வ்ருத்தி நாஸ ஹேதுக்கள்

    ஜீவ ஈஸ்வரர்களின் பரிமாற்றம் -ஞானம் ஞானத்துக்கு விநியுக்தம் -ஞானம் ஞானத்துக்கு சேஷம்-ஜீவ ஸ்வரூப திரேதாந நிரூபணம் -ஸ்தூல ஸூஷ்ம சரீர கதநம்-ஸூஷ்ம சரீர விஸிஷ்ட கமந ஹேது நிரூபணம்-தட்டுப்பாயிட்டுக் கொண்டு போகை -தேவர்கள் கண் படாமை-மதி முக மடந்தையர் முகத்திலே விழிக்கை

    நவவித ஸம்பந்த நிரூபணம்

    ப்ரணவார்த்த நிரூபணம் -பிரணவம் ஸ்வரூப உபாய புருஷார்த்த பரம்
    அர்த்த பஞ்சக பரம் மூல மந்த்ரம்

    சேஷத்வ வைபவம்
    ஞாத்ருத்வாச் சேஷத்வம் பிரபலம்

    கைவல்யத்தின் தாழ்ச்சி -அதாஹ்யமான ஆத்மவஸ்துவுக்கும் தாஹ்யத்வம் -சேஷத்வ பிரதாந்யம் -பிரணவத்தில் பிரதமத்தில் சேஷத்வ கதந தாத்பர்யம் -மங்கள ஸூத்ரம் போல் திருமந்திரம்-

    ஸம்ஸார வர்த்தக மங்கள ஸூத்ரம் -கைங்கர்ய வர்த்தக மங்கள ஸூத்ரம் -திருமந்திரம் மூன்று சரடாக இருக்கக் காரணம்

    திருமந்திரம் பத த்ரயமும் -பெருமாளும் இளைய பெருமாளும் -திருமந்திரம் பத த்ரயமும் -சேஷத்வமும் இளைய பெருமாளும் -ராமானுஜ த்ரயம்

    பரதன் நிலை -கைகேயியும் பெருமாளும் ஸ்ரீ பரதாழ்வானும் -ஸ்ரீ பரதாழ்வானும் பாரதந்தர்யம்

    ஈஸ்வரனைப் பேணுகையும் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானும் -பிராட்டியும் பத த்ரயார்த்தமும்

    நம்மாழ்வாரும் பத த்ரயார்த்தமும்-ஸ்வ ஸ்வரூப அனுசந்தானம் இருக்கும்படி

    பிரமாண ப்ரமேய ப்ரமாத்ரு அனுபவம் -பிரமாணம் ப்ரணவாதி பத த்ரயம் -ப்ரமேயம் -நம்பெருமாள் ப்ரமாதா -ஜீவாத்மா வேரறுகை -வ்யாபாந்தரம் அறுகை -விஷயாந்தரம் அறுகை-

    திருமந்திர நிர்வாஹகங்கள் -மூல மந்த்ரார்த்த ஸாரம்

    பட்டர் பணித்த பரம ரஹஸ்யம் -அநர்த்த பரிஹார க்ரமம்

    திருமந்த்ரார்த்த அனுஸந்தானமும் பய நிவ்ருத்தியும் அகாரார்த்த அனுஸந்தானம் உகாரார்த்த அனுஸந்தானம் மகாரார்த்த அனுஸந்தானம்

    நமஸ் சப்தார்த்த அனுஸந்தானம்-நாராயண சப்தார்த்த விசேஷம் -அர்ச்சாவதார வைபவம்

    நாராயண சப்தார்த்த அனுஸந்தானமும் -பய நிவ்ருத்தி விசேஷமும் ஞானபலம் அனுஷ்டானம்

    மூல மந்த்ரார்த்த நிர்வாஹாந்தரம்

    ஸ்த்ரீ சூத்ராதிகள் அதிகார நியமம்

    ரக்ஷகத்வ ரஷ்யத்வாதி பவ்ர்வாபர்ய நிர்த்தேச தாத்பர்யம்

    த்வய பூர்வ உத்தர கண்ட ப்ரதாந அர்த்தங்கள் -ரக்ஷகத்வ ஸ்வாமித்வ ஸ்ரீ யபதித்தவ வ்யவஸ்தா -புறம்புள்ளார் படி

    பாரதந்தர்யாதி சிந்தந பிரகாரங்கள் -அகாராத் யநர்ஹத்வ நிரூபணம்

    திருமந்த்ரார்த்த ஸம்பந்த பலம் திருமந்த்ரார்த்த அஸம்பந்த பலம்-திருமந்த்ரார்த்த அநுஸந்தான பலம்

    பத த்ரயமும் பர்வத த்ரயமும் ஆகார த்ரயமும் -பிரமாண ப்ரமேய பிரமாதாக்கள்-நம்பெருமாள் நின்ற நிலையும் பிரமாண கதியும் -ஆஸ்ரயணீய உபாய நிரூபணம்

    போக்ய நிரூபணம் -ஆஸ்ரயணய சேஷத்வ கைங்கர்ய பிரதிசம்பந்த மிதுனம் -ஏதத் விஷயக பிரமாண ப்ரதர்சனம் -மூல மந்த்ரார்த்த நிரூபணம் -அகார யுக்த பகவத் ஸ்வ பாபங்கள் -மகார யுக்த ஜீவ ஸ்வ பாபங்கள்

    நார சப்தார்த்தம் -அயந சப்தார்த்தம் -ஸ்ப ரூப உபாய புருஷார்த்தங்களைப் பொறாமை -திருமந்திரத்தில் பிறந்தவன் செருக்கு –

    சிஷை பெற்றவனும் மாறாடும் திறம் -பத த்ரயார்த்த விபரீத ஆசாரம் -பரதந்தர்ய நிரூபணம் –

    ஜீவனுக்கு நாச்சிமாருடன் ஸாம்யம் -பொன்னும் ஜீவனும் -மாணிக்கமும் ஜீவனும் -ஜீவனுக்கு ஸ்வரூப ஆவிர்பாவம் –

    ஆத்மாவுக்கு அழியாத பேர் -ரஹஸ்ய த்ரய ஸாரார்த்தம் -உடையவனும் உடைமையும் -தர்மமும் கண்ணனும் –

    த்வயார்த்தம் -திருமந்திரமும் திரு அபிஷேகமும் -சரம ஸ்லோகமும் திரு மார்பும் -த்வயமும் திருவடிகளும்

    ரஹஸ்ய த்ரயமும் அர்த்த பஞ்சகமும் -ஷஷ்ட்யந்தமான நமஸ் பதத்தில் மகார்ண விரோதி வாசகம் -சரம ஸ்லோகத்தில் ஏக பதம் உபாய பரம் -வ்ரஜ என்று மத்யமனாலே ஜீவ ஸ்வரூப கதநம் –

    த்வயத்தில் ப்ரபத்யே என்று உத்தமனாலே ஜீவ ஸ்வரூப கதநம் -திருமந்திரம் ஸ்வரூப பரம் -சரம ஸ்லோகம் உபாய விதாயகம் -த்வயம் இரண்டினுடைய அனுசந்தானம் -ஸாஸ்த்ர ஸரண்ய ஆச்சார்ய ருசி க்ருஹீத ரஹஸ்ய த்ரயம் –

    ஆத்ம யதாத்ம்ய உபாய யதாத்ம்ய உபேய யதாத்ம்ய பரம் ரஹஸ்ய த்ரயம் -ப்ராப்ய ப்ராபக புருஷகார பிரதானம் ரஹஸ்ய த்ரயம்-மூல மந்த்ர பத பதார்த்த நிரூபணம்

    மூல மந்த்ர தாத்பர்யார்த்தம் -நிருபாதிக யாக நிரூபணம் -நிருபாதிக தேவதா நிரூபணம் -நிருபாதிக ஹவிர் நிரூபணம்-ஸோபாதிக யாக நிரூபணம்

    நிருபாதிக மந்த்ர நிருபாதிக யாக நிரூபணம் -திருமந்த்ரார்த்தமும் திவ்ய ப்ரபந்தமும் -பர ஸ்வரூப நிரூபணம் -ஸர்வ ரக்ஷகத்வமும் திவ்ய ப்ரபந்தமும்

    ஜீவ ஸ்வரூப நிரூபணம் -ஸர்வ சேஷித்வமும் திவ்ய ப்ரபந்தமும் -ஸ்ரீ யப்பதித்வமும் திவ்ய ப்ரபந்தமும்-சேஷத்வமும் திவ்ய ப்ரபந்தமும்-அநந்யார்ஹ சேஷத்வமும் திவ்ய ப்ரபந்தமும்-

    ஈஸ்வரனுடைய அகில ஸேஷித்வமும் திவ்ய ப்ரபந்தமும் -ஜீவ ஸ்வரூபமும் திவ்ய ப்ரபந்தமும்-நமஸ் பதார்த்தமும் திவ்ய ப்ரபந்தமும்

    ஜீவனுடைய சரீரவத் சேஷத்வம் நமஸ் பதார்த்தம் -ஏதத் விஷயக திவ்ய ப்ரபந்த நிரூபணம் -ததீய சேஷத்வமும் திவ்ய ப்ரபந்தமும்-உபாய பூதனான ஈஸ்வரனுடைய ஸர்வஞ்ஞத்வமும் திவ்ய ப்ரபந்தமும்-ஸர்வ சக்தித்வமும் திவ்ய ப்ரபந்தமும்-

    அவாப்த ஸமஸ்த காமத்வமும் திவ்ய ப்ரபந்தமும் -பகவத் உபாயத்வமும் திவ்ய ப்ரபந்தமும் -நார சப்தார்த்தமும் திவ்ய ப்ரபந்தமும் -அயன பதார்த்தமும் திவ்ய ப்ரபந்தமும் -ஸர்வ ஸ்வாமித்வம் திவ்ய ப்ரபந்தமும் -ஸர்வ வித பந்துத்வமும் திவ்ய ப்ரபந்தமும் –

    ஸர்வ ஆதாரத்வமும் திவ்ய ப்ரபந்தமும் -ஸர்வ நியந்த்ருத்வமும் திவ்ய ப்ரபந்தமும் -வ்ருத்த் யபேஷையும் திவ்ய ப்ரபந்தமும் –

    ப்ரணவார்த்தம் கூறும் பாசுரம் -நமஸ் பதார்த்தம் கூறும் பாசுரம்-நாராயண பதார்த்தம் கூறும் பாசுரம் -சதுர்த்யர்த்தம் கூறும் பாசுரம் -ஸ்ரீ ஸப்தம் பிராட்டிக்கு சேதன ஈஸ்வர வ்யாவ்ருத்தி வாசகம் -ஸ்ரீ ஸப்த வ்யாவர்த்ய மதம்

    த்வயார்த்த நிரூபணம் -மது ப்ரத்யய வ்யாவர்த்ய மதம் -நாராயண பத வ்யாவர்த்ய மதம்-சரண ஸப்த வ்யாவர்த்ய மதம்-ப்ரபத்யே ஸப்த வ்யாவர்த்ய மதம் ஸ்ரீ மத் பத வ்யாவர்த்ய மதம்

    நாராயண பத வ்யாவர்த்ய மதம்-சதுர்த்தி வ்யாவர்த்ய மதம் -நமஸ் பத வ்யாவர்த்ய மதம்-பூர்வ உத்தர கண்டார்த்த பேதம் -அநந்ய கதித்வமும் அநந்ய ப்ரயோஜனத்வமும் -கிருபா வர்த்தகமும் ப்ரீதி வர்த்தகமும் -ஜீவ ஈஸ்வரர்களுடைய அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும்

    ஜீவனுடைய அசித் ஈஸ்வர வ்யாவ்ருத்தி -த்வயத்தினுடைய அருமையும் பெருமையும் சீர்மையும் -த்வயத்தின் அர்த்தத்தைப் பொறாமை -த்வயத்தின் சப்தத்தைப் பொறாமை

    பிரபத்தி விஷயக நிர்வாஹகங்கள்

    பக்தியைக் காட்டில் பிரபத்தியின் வாசி -த்வயத்தில் உத்தர கண்டத்தின் ஸ ப்ரயோஜநத்வம்

    சேதனன் கூறும் மாஸூச -சேதனனுடைய ப்ரக்ருதி விக்ருதி விருத்திகள் -சேதனனுடைய ஆத்ம நாஸ ஹேது

    ப்ரபத்தியினுடைய பிரகார நியம விசாரம் -பரத பிரபத்தி ஸா பல்யம்

    ஸ்ரீ ராமன் அப்போதே மீண்டு வராமைக்குக் காரணம் -அத்ருஷ்டார்த்த ப்ரபத்தியும் த்ருஷ்டார்த்த ப்ரபத்தியும்

    ஈஸ்வரன் ஹிதைஷீ

    நடையாடுமவனும் கிடக்குமவனும் -காகத்தின் கண்ணழிவுக்குத் தாத்பர்யம் -காகத்தைத் தண்டித்தான் அல்லன் -பொறுத்தான் -காகத்தைப் பொறுத்தமைக்கு அடையாளம் கண்ணழிவு-

    ஒரு கால் ப்ரபத்தியா பல கால் ப்ரபத்தியா என்ற விசாரம் -பிரபத்தாவும் பிரபத்தவ்யனும் விதி ப்ரயுக்தமும் ராக ப்ரயுக்தமும் பிரபத்தி எதுக்குப் பிராயச்சித்தம் என்னும் விசாரம் –

    புத்தி பூர்வக ப்ராமாதிக பேதம் -பக்தி ப்ரபத்திகளுக்கு வாசி -சரம உபாய நிர்ணயம் -பூர்வ உத்தர கண்டார்த்தம் –

    உபாய உபேய நிரூபணம் -பகவத் விஷயமும் பாகவத விஷயமும் -பிராட்டி புருஷகாரம் பண்ணுவது பற்றி ஆக்ஷேப ஸமாதானங்கள் –

    அதிகாரி விசாரம் -அதிகார நிஷ்கர்ஷம் -த்வய யோக்ய அதிகாரங்கள் -ஸரணாகதி அதிகாரம் –

    புருஷகார அவஸ்ய கதை -மது ப்ரத்யயம் கால நியதி அபாவமும் -ஸரண்ய குணங்கள் -ஸரண்ய ஸூபாஸ்ரயம் -உபாய ஸுகுமார்யம் -உபாய ஸ்வீகார அவஸ்ய கதை –

    மிதுன ப்ராப்யத்வம் -சேஷ தர்மமும் சேஷ விருத்தியும் -ஸ்வ ஸ்வா தந்த்ர நிவ்ருத்தியும் ஸ்வ போக்த்ருத்வ நிவ்ருத்தியும் -பிரபத்தி ஸ்வரூப விசாரம் -பாகவத அபிமான வைபவம் –

    மோக்ஷ விரோதி நிரூபணம்

    த்வய பூர்வ கண்டார்த்தம் -பிராட்டியுடைய புருஷகாரத்வம்

    த்வய உத்தர கண்டார்த்தம் -பிராட்டியுடைய கைங்கர்ய வர்த்தகத்வம் -திவ்ய தம்பதிகளுக்கு ஸாம்யமும் உச்ச நீச பாவமும் இவ்விஷயத்தில் பிரமாண தாத்பர்யம் –

    பகவானுடைய ஸ்வாராதத்வம் -பகவானுக்கு அமுது செய்தருளப் பண்ணும் போது கூறும் வார்த்தை –

    திவ்ய தம்பதிகளின் ப்ரிய ஹித பரத்வம் -திவ்ய தம்பதிகளின் ஐக ரஸ்யம்

    ஸித்த உபாயத்துக்குள்ள வ்யாவ்ருத்தி சதுஷ்ட்யம்

    திவ்ய மிதுனத்துக்குள்ள வ்யாவ்ருத்தி சதுஷ்ட்யம் -காகாசூரனனும் இராவணனும்

    இளைய பெருமாள் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் குஹன் தொடக்கமானர்க்குப் புருஷகார ஸம்பந்தம் -அர்ச்சாவதாரமும் த்வயமும் –

    வஸ்து மத்த்வ வஸ்துத்வ நிரூபணம் -உத்தரார்த்த அனுஸந்தானம் பரமபதத்திலே -ஜீவன் முக்த நிரூபணம் –

    உபாய உபேய நிஷ்கர்ஷம் -உபாய அம்சத்தில் தஞ்சம்

    காமினியும் ஜீவனும்-காமுகனும் பரனும் – ஸ்வரூப யதாத்ம்ய ஞானவந்நிஷ்டை

    ஸ்வரூப ஞானமும் தத் அனுரூப உபாய உபேய ஞானமும் -ப்ரபந்நத்வ பரிஷ்காரம்

    பிரபத்தி நிஷ்டா நிரூபணம் -பிரபத்தி பிரகாரமும் பிரபத்தி ப்ரபாவமும் -ஒரு ப்ரபந்நனை மற்ற ப்ரபந்நன் நோக்கும் முறை

    பட்டர் திருவாராதனைப்படி -பட்டரும் மற்றையோரும் –

    சிசுபாலனும் நாமம் -ப்ரபன்னன் ஐஸ்வர்யார்த்தியாம் போது தோஷ த்ரயம்

    அதிகாரி ஸ்வரூப நிரூபணம் -ஜீவனும் பரனும்

    பழைய திருநாடும் பழைய நரகமும் -பர ஸ்வரூபமும் ஜீவ ஸ்வரூபமும் -பட்டினிப் பெருமாள் நிஷ்டை –

    முமுஷுத்வ நிரூபணம் -சக்ரவர்த்தி திருமகனும் பக்ஷியும்

    ஸ்ரீ வைஷ்ணவ மரண தேசம்

    ப்ரபன்னனுடைய ஆதி மத்ய அவஸாந தசைகள் -ப்ரபந்ந நிஷ்டை -பரமைகாந்தி நிஷ்டை

    ஸாஸ்த்ரமும் பாரதந்தர்யமும் ஸ்வரூபமும்

    தேஹ யாத்திரையில் உபேக்ஷையும் -பகவத் ரூப தர்சனமும் -அதிகாரி ஸ்வரூப நிரூபக தர்மம் –

    ஸ்வரூப நிரூபணம் பண்ணினவன் நிஷ்டை -புஜிப்பிக்கையும் புஜிக்கையும்

    கர்ம காரண த்ரைவித்யம் -அவித்யா நிவர்த்தகமும் -அவித்யா வர்த்தகமும்

    ஸ்வரூப ஞானமும் ஸ்வ தோஷ க்யாபநமும்-அபேக்ஷிதமும் அத்யந்த அபேக்ஷிதமும் –

    பக்தியும் ப்ரபத்தியும் -ஞான பூர்த்தி நிஷ்டை -ஸ்வரூப யதாத்ம்ய ஞானம் -ஸ்வரூபமும் உபாயமும் –

    ஸஜாதீயத்வ பிரதிபத்தியும் வ்யாவ்ருத்தி பிரதிபத்தியும் -விலக்ஷணார்த்த பஞ்சகம் –

    ஸ்வ விஷயக வியாதி சாந்த்யர்த்த ப்ரபத்தியும் பர விஷயக வியாதி சாந்த்யர்த்த ப்ரபத்தியும் -பாரதந்த்ரய ஸர்வஞ்ஞத்வ தூஷணம்

    ஸந்யாஸமும் பரமபதமும் -திருமந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளருகை –

    தேஹ யாத்ரையும் ஆத்ம யாத்ரையும் -பட்டரும் பெரிய பெருமாளும் -பாகவத அபசாரமும் ஆச்சார்ய அபசாரமும்

    காரேய் கருணை ராமாநுசன் -ஏகாயன மத விருத்தியும் த்வயமும் -த்வய வைபவமும் –

    ரஹஸ்ய த்ரய தாரதம்யம் -திருமந்திரம் த்வயமும் -ஆச்சார்ய வாக்யமும் சிஷ்ய வாக்யமும் –

    வாக்ய த்வய சார நிரூபணம் -ஸ்வரூப விரோதியும் ருசி விரோதியும் –

    பிராட்டியும் இளைய பெருமாளும் -ப்ரபந்ந கால ஷேப பிரகாரம்

    த்வயார்த்த நிரூபணம்

    நாராயண சப்தார்த்தம்

    உபாய அதிகாரி த்ருஷ்டாந்தம் -உபேய அதிகாரி த்ருஷ்டாந்தம் -உபாயத்துக்கு ஸீமா பூமி

    உபேயத்துக்கு ஸீமா பூமி -புருஷகார வைபவம் -அதிகாரி கிருத்யமும் -உபாய கிருத்யமும்

    சங்கா த்ரயமும் குண தசகமும்

    சங்கையும் சங்கா நிவ்ருத்தியும்

    மாம் சப்தார்த்த நிரூபணம்-ஸ்வீ காரமும் அதிகாரமும் -உபாயமும் உபேயமும்

    அநு கீதா விஷயக விசாரம் -நாராயணனுக்கு நைரந்தர்ய வேஷம்

    நார வஸ்துவுக்கு நைரந்தர்ய வேஷம்-ஸ்வ ஸ்வரூப வைஸத்ய தஸா நிர்வாஹகங்கள்

    ஸ்வார்த்த ப்ரவ்ருத்தியும் -ஸ்வ ப்ரவ்ருத்தியும் -பரார்த்த ப்ரவ்ருத்தியும் -பர ப்ரவ்ருத்தியும் -சரம ஸ்லோக தாத்பர்யம் –

    விடுவித்துப் பற்றுவிக்கிறவனே உபாயம் -ஸ்வரூபமும் ப்ராப்யமும்

    முமுஷு தசையும் முக்த தசையும்

    பகவானே உபாயம் என்றதின் தாத்பர்யம்

    பெரிய பெருமாள் திருக்கைகள் இருக்கும்படி -உபாயம் சா பேஷமாயும் நிரபேஷமாயும் இருக்கும்

    ஸ்ரீ வைஷ்ணவன் செய்யும் பகவத் ரக்ஷணம்

    ப்ரபந்ந அதிகாரியின் அதிகார த்ரயம் -இவன் அதிகாரமும் அவன் குணங்களும்

    பகவத் ஏக உபாயத்வ நிரூபணம் -யோக்யனும் அயோக்யனும்

    வெறும் புடவையும் பட்டுப்புடவையும்

    நம்படி கார்யகரமன்று -அவன் படியே கார்யகரம் -ப்ரபன்னனுடைய பிராமாதிக கர்மம் –

    பிரபத்தி அதிகாரி தவ்ர்லப்யம்

    ஈஸ்வர அபிமான வைபவம் -முயலும் வேடனும்

    த்வயம் ஒழிய ப்ரத்யுபகாரம் இல்லை -பிரபத்திக்கு வாசி பத்து -இதர உபாய தோஷங்கள் பத்து

    பிரபத்தி வைபவம் பத்து

    ப்ரபன்னனுக்கு கர்ம ஞான பக்தி விநியோக பிரகாரம் -அத்யவசாயமும் ருசியும்

    ரஹஸ்ய த்ரய விவரண விவரணி பாவம்

    விவரண விவரணி பாவ விவரணம்

    சேஷத்வமும் சேஷத்வ பூர்த்தியும்

    த்வயம் ஸர்வாதிகாரம் அதிக்ருதாதிகாரம் வாக்ய த்வயார்த்த விவரணம் -பூர்வ வாக்யார்த்த நிரூபணம்

    உபாயத்தினுடைய ஸா பேஷத்வமும் நிரபேஷத்வமும் -உத்தர வாக்யார்த்த விவரணம் -த்வயத்தில் திருமந்த்ரார்த்த சரம ஸ்லோகார்த்தமும்

    த்வயத்தில் உத்தர வாக்கியமும் திருமந்திரமும்

    த்வயத்தில் பூர்வ வாக்கியமும் சரம ஸ்லோகமும்

    த்வயமும் திருமந்திரம் சரம ஸ்லோகமும்

    பிரமாண ப்ரமேய பிரமாத்ரு நிஷ்கர்ஷம் -த்வயார்த்த நிர்வாஹகங்கள் -ஸம்ஸார விஷ ரஸாயநம் -முடியும் மாலையும் –

    ராஜ்யமும் எலுமிச்சம் பழமும் -அந்தன் கையிலே சிந்தாமணி –

    பாணி கிரஹணமும் உடன் மண நீரும் படுக்கையும் வரம்பும் களை பறித்தலும் ஸ்வாமி போகமும்

    திருமந்திர தாத்பர்ய வாக்ய ப்ரதாந அர்த்தங்கள் -திருமந்த்ரார்த்த அனுசந்தானம் -த்வய தாத்பர்ய வாக்ய ப்ரதாந அர்த்தங்கள் -த்வயார்த்த அநுசந்தானம்

    சரம ஸ்லோக தாத்பர்ய வாக்ய ப்ரதாந அர்த்தங்கள் -சரம ஸ்லோக அர்த்த அனுசந்தானம் -த்வயார்த்த விபுல நிரூபணம்

    லஷ்மீ விஸிஷ்டன் பிரபத்தவ்யன் -தேஹவத்தேஹி நாநாத்வம் -ஸ்வ பாவக ஐக்ய ஸ்தாபநம் -ஸ்வரூப ஐக்ய நிஷேதம் -பஞ்ச அவஸ்தைகளும் ஸந் நிக்ருஷ்ட அவஸ்தையும் -குண குணி பேதம் -ஷட் விம்ச தத்வ நிரூபணம்-

    அஸ்மை அஸ்மாத் அஸ்ய அஸ்மிந்

    மானஸ பிரபத்தி முக்யத்வம் -விசேஷ்ய பிரதிபத்தியும் விசேஷண பிரதிபத்தியும்

    ப்ரபத்தியிலே உபாய புத்தி உபகார சித்தை உபாய அநவத்யம் -ஏகஸ்யைவ உபாய உபேயத்வங்கள் -ஸந்நிஹிதன் உபாயம் தேச விசேஷ நிலையன் உபேயம்

    மஹாநஸ ஸ்தானமும் போக ஸ்தானமும் -உடுத்த புடவையும் அவிழ்த்த புடவையும்

    இத் தலையில் கை முதல் அறுகை அவன் கடாஷத்துக்கடி

    த்வய சப்தார்த்தம் -பூர்வ உத்தர வாக்யார்த்தம்

    பிராட்டி கடாக்ஷமும் பிராட்டிக்குக் கடாக்ஷமும் -வயத்பத்தி ஸித்தமும் பிரமாண ஸித்தமும் பந்தமும் ஸம்பந்தமும் ஸ்ரீ சப்தார்த்த த்வயம்

    பிராட்டி செய்யும் புருஷகாரம் ஸ்ரீ சப்தார்த்த த்வயம்

    ஆத்மாவும் ஈஸ்வரனும் ஆச்சார்யனும் பிராட்டியும் ஸ்ரீ வைஷ்ணவர்களும்

    அதிகாரி கிருத்யமும் உபாய கிருத்யமும் புருஷகாரம் கிருத்யமும் ஆச்சார்ய கிருத்யமும் -ஜகத் ஸ்ருஷ்ட்டி பிரயோஜனம் அவதார பிரயோஜனம் -ஆச்சார்யன் சேதன ஈஸ்வர உபகாரகன்

    ஆச்சார்யனுக்குச் செய்யும் கைம்மாறிலாமை -ஆச்சார்ய லக்ஷணம் -முமுஷுவுக்கு பாவனத்வமும் போக்யத்வமும் –

    அகில ஜகத் ஸ்வாமித்வம் அஸ்மத் ஸ்வாமித்வம்-ஆச்சார்யனும் ஸ்ரீ வைஷ்ணவர்களும் -பகவானும் பலமும் பலத்தின் இனிமையும்-

    ஆச்சார்யனுடைய ஸூ ப்ரஸாதமும் அப்ரஸாதமும் ஆத்ம ஜ்ஞாநவல்லக்ஷணம்-ஆச்சார்ய விஷயத்தில் நடக்க வேண்டிய முறை -அர்த்த ப்ரவணனும் விஷய ப்ரவணனும்

    ஷுத்து நலிந்தவனும் ஞானியும் -திருக்கச்சி நம்பியும் பெருமாளும்

    ஆச்சார்ய விஸ்லேஷம் பொறாமை -பாகவத பிரபாவம் அறியாமை -ஆத்ம விவாஹம் –

    ஆத்மாவுக்கு மலமும் மலமறுக்கையும்

    ஆச்சார்ய லஷண பூர்த்தி -லோக குருவும் லோகத்துக்கடைய குடிமகனும் -நாராயணனும் நாரமும் -எம்பெருமானும் ஏழைகளும் -ஸ்ரீ வைஷ்ணவர்களும் சில் வானவரும் –

    ஆச்சார்யனும் அஞ்ஞரும் -மந்த்ரமும் மமதையும் -நியதனாகைக்கு வழி -சிஷ்யாசார்யர்களின் பிரதிபத்தி கிரமம் –

    அந்தமில் பேரின்பத்துக்குக் காரண பரம்பரை -மஹா விஸ்வாஸ அவஸ்யகதை

    ஆச்சார்யன் உத்தேஸ்யனாக மூன்று காரணங்கள் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் உத்தேஸ்யராக மூன்று காரணங்கள்-பிராட்டி உத்தேஸ்யையாக மூன்று காரணங்கள்-ஈஸ்வரன் உத்தேஸ்யனாக மூன்று காரணங்கள்

    அந்யதா ஞானமும் விபரீத ஞானமும் -சிஷ்யனும் ஆச்சார்யனும்

    ஈஸ்வரன் கர்க்ஷகன் மாலையிறே பரமைகாந்தி -ஈஸ்வர கிருஷி நிரூபணம் ரூபண ப்ரகாரம்

    அரிக்கும் சட்டியும் நீரும் கழுவுதலும்

    அர்ச்சிராதி நிரூபணம்

    கலங்குகிறவனும் கலக்குகிறதும் -கலங்கியவனும் தெளிகிறவனும் -தெளிகிறவனும் தெளிந்து இருக்குமவனும் -நஞ்சீயர் அபேக்ஷை-

    மணக்கோலத்தே முளை தெளிப்பது -ஆத்ம விநியோகமும் ஈஸ்வர விநியோகமும்

    பெறுகிற தேசமும் இழக்கிற தேசமும் பணம் படுத்தும் பாடு

    ஸ்ரீ வைஷ்ணவர்கள் ராக த்வேஷம்

    ஸ்ரீ வைஷ்ணவர்களின் அந்யோன்ய வைரம்

    சிஷ்யாச்சார்யர்களின் பரிமாற்றம் -பார்யையும் சரீரமும் தர்மமும் பர்த்தாவும் சரீரியும் தர்மியும்

    ஆச்சார்ய சிஷ்ய லக்ஷணம் -ஸந்யாஸமும் சரீர ஸம்பந்தமும் -முதலியாண்டானும் த்ரிதண்டமும் -பட்டர் அருளிச் செய்த ஹிதம்

    ஸூஹ்ருத துஷ்க்ருத ஸீமா நிரூபணம் -ததோ அபி ஸூஹ்ருத துஷ்க்ருத நிரூபணம் -திருமாலை ஆண்டானும் எம்பெருமானாரும் –

    பின்பழகிய பெருமாள் ஜீயரும் உடம்பு பேணுதலும்

    ஜீயர் திருமேனியைக் பேணக் காரணங்கள் பல

    ஆச்சார்ய தேஹம் சிஷ்யனுக்குப் பரம உத்தேச்யம்

    ஆச்சார்யனும் தந ஸ்வீ காரமும்

    அஞ்ஞனும் ஞான வானும்

    ஆச்சார்யவத் ஆச்சார்ய புத்ர பவ்த்ரர்களும் அநு வர்த்த நீயர் -சிஷ்யனுக்கு ஆச்சார்யர் குடும்பமே உத்தேச்யம்

    ஆச்சார்யன் வம்ஸ்யரும் உத்தேசியர் -ஆச்சார்ய ஸம்ஸ்லேஷம் பரமபதத்தில் காட்டில் உத்தேச்யம்

    உடையவர் வைபவம் -யாதவப்ரகாச பூர்வ சரித்திரம் -யாதவ ப்ரகாசனும் ப்ரஹ்ம ரக்ஷஸ்ஸும் உடையவரும் –

    நித்யரிலே ஒருவரே ஸ்ரீ ராமானுஜர்

    அனந்தாழ்வான் ஒரு தனிகனைத் திருத்திய விதம்-

    ஆழ்வானும் மோக்ஷ லாபமும்

    ஆள்வான் ஸம்பந்தம் உடையவருக்கு மோக்ஷ ஹேது -எம்பெருமானார் ஸம்பந்தம் உத்தாரகம் –

    பெருமாளும் பிராட்டியும் ஆளவந்தார் உடையவரும்

    ஆச்சார்யன் திரு உள்ளத்தைப் பின் செல்லுகை -ஆளவந்தாருக்குப் பிறகு ஆச்சார்ய பூர்த்தி உடையவருக்கே -உடையவரும் பரமபத ஸோபாநமும்

    நம்மாழ்வார் பகவத் அவதாரம் -ஆழ்வார் ஸம்ஸாரிகளிலே ஒருவர்

    திருவாய் மொழிக்கு எம்பெருமானார் விலக்ஷண நிர்வாஹம்

    எம்பெருமானார் மேற்கே எழுந்தருளிய சரித்திரம் -நல்லான் என்ற காளமேகம்

    பகவத் விஷய கதந வைபவம்

    உடையவர் பாதுகையே பரதெய்வம் என்ற உறுதி

    பாவநமும் போக்யமுமான அன்னம்-

    உடையவனே த்ரிதண்ட காஷாயாதிகளை மறுபடியும் தரித்தல் -வார்த்தா மாத்ரம் -கர க்ரஹணம் -சரண க்ரஹணம்-எம்பெருமானும் ஸ்ரீ வைஷ்ணவர்களும் ஆச்சார்யனும் -அதிகாரி கிருத்யம் ஆச்சார்ய கிருத்யம்

    பிராட்டி கிருத்யம் -ஈஸ்வர கிருத்யம் -ஐந்து வகை ஆச்சார்யர்கள் –

    பிரக்ருதியும் ஜீவனும் பிராட்டியும் பகவானும் சந்திர புஷ் கரணிக்கரையில் பெருமாள் கண் வளரக் காரணம்

    விலங்கில் கிடக்கிறவனுக்கோ விலங்கிட்டவனுக்கோ சொல்லுவது -முதலியாண்டான் ஸ்ரீ பாத ஸம்பந்த வைபவம்

    கீழையூர் திருவானைக்கா சைவ த்ரவ்யமும் ஸ்ரீ வைஷ்ணவர்களும் – அயன ஸம்பந்தமும் அசித் ஸம்பந்தமும் -வர்ண தர்மமும் நடாதூர் அம்மாள் அனுஷ்டானமும்

    திருக்கோட்டியூர் நம்பி ஸம்பந்தம் இங்கும் அங்கும் ஈடேற வழி

    ஸ்ரவணமும் மனனமும் த்ரி பூருஷ ஞானமே அமையும் ப்ராஹ்மண்யத்துக்கு – நம்மாழ்வாருக்கும் நாதமுனிகளுக்கும் இடையில் உள்ளாரை அறியாமை –

    நம்பிள்ளையைக் கொண்டாடிய நஞ்சீயர் -சதாச்சார்யனும் சச் சிஷ்யனும் -நஞ்சீயருடைய அந்தரங்க கைங்கர்யம்

    நம்பியும் உடையவரும் முதலியாண்டானும்

    எல்லாருக்கும் உத்தாரகம் உடையவர் ஸம்பந்தம் -திருப்பாவை ஜீயர் உகந்த பாசுரம் -திருக்கோஷ்ட்டியூர் நம்பி தேவகிப்பிராட்டியார் விஷயமான ஐதிக்யம்-

    பட்டரும் பரமபதமும் -ஆத்ம யதாத்ம்ய ஞானம் பாகவத நிஷ்டை -அன்றில்களும் பாகவதர்களும்

    ஆச்சார்ய விஸ்லேஷ அஸஹத்வம் -பெருமாளும் ஆளவந்தாரும்

    சிஷ்யனுக்கு திருவனந்தபுரம் ஆச்சார்யனே -எம்பாருடைய பாவ ஸூத்தி

    ஆண்டானுடைய ஆசார்ய பாரதந்தர்யம் -அத்துழாயுக்குச் சீதனம்

    பகவந் நிஷ்டையும் ஆச்சார்ய நிஷ்டையும் -ஆச்சார்ய ஸமாஸ்ரயண ருசியே ஹிதாம்ஸம்-

    ஆண்டானும் ஆழ்வானும் -கிருபாமாத்ர ப்ரசன்னாச்சார்யனே உத்தாரகன் –இவ்விஷயத்தில் பிரமாண ப்ரதர்சனம் –

    ஈஸ்வரனும் ஆச்சார்யனும் ஸ்ரீ வைஷ்ணவனும் எத்தனையேனும் தாழ்ந்தவனே யாகிலும் ஈடேறுவன்

    ஆச்சார்ய விஷயத்தில் சிஷ்யனுடைய பரிமாற்றம் -ஆச்சார்ய கைங்கர்யமும் ஆஸ்ரம தர்மமும்

    ஸ்வரூபஞ்ஞனும் ப்ரபாவஞ்ஞனும் அஞ்ஞனும் ஸகல ஸாஸ்த்ர ஸாரார்த்த நிரூபணம்

    ஆச்சார்ய கைங்கர்யமும் பாகவத கைங்கர்யமும் பகவத் கைங்கர்யமும் சச்சிஷ்யனும் வாருகோலும் பகவத் ப்ரஸாத வைபவம்-

    உடையவர் அந்திம தசையில் வார்த்தை -தேஹ யாத்ரா ஆத்மா யாத்ரா வைமுக்யம் கரணத்ரய விநியோக பிரகாரம் -உடையவர் நியமனம் -அனுகூல பிரதிகூல அனுபய நிரூபணம் –

    அனுகூல பிரதிகூல அனுபயர் விஷயத்தில் பரிமாறும் படி -ஈஸ்வர ஹ்ருதயம் புண்பட ஹேது -பகவானுக்கு அவத்ய கரம் -ஈஸ்வரனின் ஓவ்தா ஸீந்யம் -ப்ரபந்ந நிஷ்டா க்ரமம் –

    போது போக்கும் அருளிச்செயலிலே யாவது -ஆச்சார்ய விஸ்லேஷத்தில் இருக்கும் படி

    பகவத் சந்நிதி இல்லாத போது இருக்கும்படி -பகவத் விரஹமும் ஆச்சார்ய விரஹமும்-பாகவத ஸ்ரீ பாத தீர்த்தமும் தாய்ப்பாலும் -பகவத் தீர்த்தமும் பசுவின் பாலும் -அருளிச் செயலும் அமுத பானமும் த்வயார்த்த அனுசந்தான வைபவம் –

    ஈஸ்வர கோபமும் ஆச்சார்ய கோபமும் -காரேய் கருணை ராமாநுசன்

    த்வய வைபவம் -பூர்வ உத்தர கண்டார்த்த ஸாரம்

    ப்ரவ்ருத்தியும் நிவ்ருத்தியும் -இளைய பெருமாளும் பிராட்டியும் -ப்ரபந்ந கால ஷேப ப்ரகாரம் -ஞான ஜென்மமே ஜென்மம்

    பிரபத்தி நிஷ்டா ஹாநி பரிஹாரம்

    பகவத் பாகவத ஆச்சார்ய கைங்கர்யங்கள்-தேவதாந்த்ர பரித்யாகம்

    தேவதாந்த்ர சம்பந்தி ஸம்பந்த த்யாகம் -பெருச்சாளியும் ஸம்ஸாரியும் -பெரியநம்பி கூரத்தாழ்வான் நிஷ்டை -ஸாமான்ய ஸாஸ்த்ரத்தில் கண் வையாமை -ஆதி பரதனும் திருக்கண்ண மங்கை யாண்டானும்-

    ஏறுவான் சாரும் குதிரை -மலையெடுத்த பெண் -திவ்யதேச வாஸம் -ஸ்ரீ வைஷ்ணவ அபிமானம் -ஸம்ஸாரத்தில் ஓட்டற்ற நிலை –

    பிராட்டியும் ஸம்ஸாரியும் -ஸ்ரீ இராமாயண ஸ்வாபதேச அர்த்தம் –

    தர்சன அனுபவ கைங்கர்ய ஸ்தானம் –

    த்யாஜ்ய த்ரயமும் உபாதேய த்ரயமும் -ஸ்வ ஸ்வரூப விரோதி ஷட்கம் –

    ஞான தசையும் ப்ராபக தசையும் -பிராப்தி தசையும் ப்ராப்ய தசையும்-தஸா சதுஷ்டமும் அஞ்ஞாநாதிகளும் –

    தேச விசேஷ ப்ராப்தி நிர்பந்த ஹேது -ஆழ்வார் திருமேனியும் பகவானும் –

    பகவத் பர த்வை வித்யம் -முமுஷு த்வை வித்யம் -பகவத் சரணார்த்தி த்வை வித்யம் -ப்ரபந்ந த்வை வித்யம் -ஆர்த்தி ப்ரபந்ந த்வை வித்யம் -வைஷ்ணவத்வ நிரூபணம் -ஏகாந்தித்வ நிரூபணம் –

    பாரமைகாந்த்ய நிரூபணம் -சோறு தேடுவாருடைய வைவித்யம்

    கலக்கமும் தேற்றமும் -பிரதம அதிகாரியும் -சரம அதிகாரியும்

    உபாயாம்ச நிரூபக த்ரைவித்யம்

    முமுஷு ஞான த்ரைவித்யம்

    ஆச்சார்ய சிஷ்யர்களின் பரிமாற்றம்

    ஸர்வேஸ்வர நிஷ்ட ஷட்கம் -பிரபத்தி நிஷ்ட த்ரைவித்யம்

    ராவண கும்பகர்ண சூர்பணகா விபீஷணர்களைப் போன்றவர்கள் -திருமழிசைப்பிரானும் நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் எம்பெருமானாரும்

    ஸம்ஸாரியும் ஸ்ரீ வைஷ்ணவனும் முக்த நித்யனும் பகவானும் -பத்தனும் விஷய ப்ரவணனும் தன்னை நினைக்கும்படி -கேவலனும் ஸாஸ்திரியும் தன்னை நினைக்கும்படி -கர்மியும் ஞானியும் தன்னை நினைக்கும்படி –

    பக்தனும் பிரபன்னனும் தன்னை நினைக்கும்படி -பத்தாதிகளுக்கு தாரக போஷக போக்யங்கள்

    விரோதி பாப த்ரயம்

    வைஷ்ணவன் ஏகாந்தி பரமைகாந்தி வைஷ்ணவாதிகளுக்கு அக்ருத்யம் இருக்கும்படி

    வைஷ்ணவாதிகளுக்கு கிருத்யம் இருக்கும்படி -வைஷ்ணவாதிகளுக்கு கைங்கர்யம் இருக்கும்படி -ஸத்வோத்ரேக ஹேது நிரூபணம்

    சாந்த லக்ஷணம் சதுர்வித அஹங்கார நிரூபணம்-

    சதுர்வித அஹங்கார நிவ்ருத்தி நிரூபணம்

    தத் தத் அதிகாரி பேதேந தாததீந்ய நிரூபணம்

    ப்ரபந்நத்வ நிரூபணம் முமுஷுத்வ நிரூபணம்

    விபீஷண சரணாகதி ப்ரகரண தாத்பர்யம்

    விபீஷணனும் ஞானியும்

    ஆச்சார்ய ப்ரபத்தியாலே சிஷ்யனுக்கும் பலம்

    பிராட்டியும் ஸம்ஸாரியும்

    சம்சாரமே பரமபதம் பாகவத அபசார க்ரூர்யம்

    அவதார பிரயோஜன நிரூபணம் -பாகவத அபசாரத்துக்குப் பரிஹாரமில்லை -பாகவத அபசாரம் மோக்ஷ பிரதிபந்தகம்

    ஆச்சார்ய அபிமானமே மோக்ஷ ஹேது -பாகவத அபசாரமே மோக்ஷ ஹேது -எம்பெருமானார் அஸக்ருத் பிரபத்தி

    பட்டி திரிதலும் பட்டினி கிடத்தலும்

    த்வயமும் மிதுனமும் மிதுன கைங்கர்யமும்-ஆச்சார்ய அபிமானமும் பாகவத அபசாரமும் -பன்னிரண்டு பாகவத அபசாரங்கள்

    பாகவத ஜென்ம நிரூபணம் அபசாரம்

    பாகவத விக்ரஹ பரம உத்தேச்யம்

    பாகவதர் வசிக்கும் தேசமே திவ்ய தேசம் -அரையரும் அருளிச் செயலும் அர்ச்சையும் -ராஜகோபாலனும் ஹரித்ரா நதியும்

    பாகவதர் அனைவரும் ஏக பிரகாரர்கள்

    பாரதமும் திரௌபதியும் கண்ணனும் -அம்மையும் கநக மிருகமும்

    பகவத் அபசாரமும் பாகவத அபசாரமும் -தன்னாச்சார்யனும் தனக்குப் பரதந்த்ரனும்

    பன்னிரண்டு நியமங்கள் -பரிக்ராஹ்யங்கள்

    அன்ன நியம நிரூபணம் –

    ஸ்நாந நியமம் ஸ்வரூப நியமம் போக நியமம்

    ஸம் சர்க்க நியமம் -பாகவத நாமங்கள் -திவ்ய பிரபந்த பிரமாண உபன்யாஸம் -பாகவத நாமகரணம் ஆழ்வார் செய்தது

    நாரங்களை நெருக்குகை நிஷிதம் -ஸ்ரீ வைஷ்ணவர்களைத் தாழ நினைத்தல் க்ரூர நிஷித்தம் -அப்ரதிக்ரிய பாகவத அபசார த்ருஷ்டாந்தங்கள்

    பாகவத தோஷ நிரூபண பரிகாஸம் -பாகவத தோஷ தர்சனநே பிரமாண உபன்யாஸம்

    பாகவத அபசாரம் அவஸ்ய பரிஹரணீயம்-

    ஹிரண்யனும் ஸ்ரீ ப்ரஹ்லாதாழ்வானும் -ஆழ்வானும் நாலூரானும் -ஸதாசார்ய அபிமானமும் அஸஹ்ய அபசாரமும் –

    நிலை நின்ற தோஷ நிரூபணம் -ஸ்வரூப உபாய புருஷார்த்த விரோதிகள் -வெறுத்தலும் மறத்தலும் பொறுத்தலும் ஒறுத்தலும் –

    பறையன் யார் -அடுஞ்சோறும் அடாச்சோறும்

    பாகவதர்கள் பகவானுக்கு உயிர் நிலை –இவ்விடத்தில் பிரமாண உபன்யாஸம் -திருமேனியில் அபசாரமும் திரு மார்பில் அபசாரமும்

    பகவத் அவதார பிரயோஜனம் -ப்ரபன்னனுடைய நிரபேஷத்வ நிரூபணம்

    ஸ்ரீ வைஷ்ணவனும் பாதி வ்ரத்யமும் -பாதி வ்ரத்ய பஞ்சக நிரூபணம் -தன் வாழ்வுக்காக அவைஷ்ணவனைப் பற்றாமை -பர்த்ரு ஸ்நேஹமும் கைக்கூலியும் -கொட்டும் கிங்கரனும் –

    அடுஞ்சோறு மூன்று நிரூபணம் -திருக்கைச் சிறப்பும் கரு ஊலத்தார் சிறப்பும் -பிடி யரிசி பெறும் சிறப்பு ந்யாய பிராப்தம்

    போஜன விரோதி நிரூபணம் -போஜ்ய விரோதி நிரூபணம் -ஸ்வரூப அனுரூப போஜனம் -நெய்யமர் இன்னடிசிலும் நல்லதோர் சோறும் உண்ணும் சோறும்

    எம்பெருமானாரும் ஒரு நாள் உபவாஸமும் விருந்து படைப்பவர்க்கு ஆவஸ்யக குண ஷட்கம்

    ததீயாராதனச் சிறப்பு

    ஸ்ரீ விதுரனிட்ட சோறு மடிதடவாத சோறு உண்ணும் சோறு உண்ணத்தகாத சோறு ஆறு விதம்

    விஷய ப்ராவண்ய தாரதம்ய நிரூபணம்-விஷய விஷயாந்தரங்களுக்கு வாசி

    தேவ ஸ்தானத்தில் ஜல கார்யமும் -திரு நந்தவனத்தில் ஜல கார்யமும்

    ஸ்ரீ வைஷ்ணவனுக்கு விஷய அனுபவம் கூடாமைக்கு திவ்ய பிரபந்த உதாஹரணம்

    வேஸ்யையும் ஸூந் நிவ்ருத்தியும்-

    விஷய ப்ராவண்ய க்ரூரம் -தேவதாந்த்ர ப்ராவண்யமும் விஷய ப்ராவண்யமும்

    காம அர்ச்சனமும் ருத்ர அர்ச்சனமும்

    பிணமும் பணமும் மணமும் -மணமாவது என் என்று நிரூபணம் -விஷய ப்ராவண்யமும் பாகவத அபசாரமும் -பாகவத அபசாரமும் ஆச்சார்ய அபிமானமும் குலைகையும் -ஆச்சார்ய அபிமானமும் அர்ச்சிராதி மார்க்கமும் –

    மோக்ஷ பிரதிபந்தக நிரூபணம்

    முமுஷுத்வமும் காம வஸ்யத்வமும் -ஸ்த்ரீ ஸங்கமும் பகவத் ஸங்கமும்-உடம்பும் உயிரும்

    தானும் தன் ஸத்தையும் ஸம்பந்தமும் ஸரீரமும் -பகவான் செய்த உபகாரங்கள் –

    உபகார ஸ்ம்ருதி

    பகவந் நிர்ஹேதுக க்ருபா வைபவம் -நைச்ய அனுசந்தானம்

    ஸ்தோத்ரத்தை இசையக் காரணம் -பிறர் செய்யும் அவமானத்தைப் பொறுக்கும் காரணம்

    ஆத்ம ஸ்வரூபமும் தேஹ ஸ்வரூபமும் -ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம்-

    பரிபவம் ஸஹிப்பது -ஸ்வ குண ஸ்ரவணத்தில் இருக்கும்படி

    பட்டரும் யவ்வனமும்

    ஜீவனும் பரனும்

    பரமாத்ம ஞானமும் அசித் விஞ்ஞானமும் -கிலேச ஹேதுவும் சோகமும் -அஞ்ஞனுடைய குணமும் ஞானவானுடைய குண ஹானியும்

    ஈதென்ன உலகியற்கை -பரதந்த்ர்யமும் வியவசாயமும் விருத்தியும்

    தேஹாத்ம அபிமானமும் ஸ்வா தந்தர்ய அபிமானமும் விஷய ப்ராவண்யமும் -உடையவனும் உடைமையும் –

    அக்னி ஜ்வாலையும் அரு நஞ்சும் அஸூசியும் அபலைகளும் -ஆஸ்திக ஸஹ வாஸம்

    கருப்பூரமும் எலுமிச்சம்பழமும்

    கொள்ளத்தகாத சிஷ்யர்கள் -சேரத்தக்கவரும் தகாதாரும்

    வாரீர் வம்மின் -பேசுமின் ஓட்டோம் -நாட்டாரும் நாரணனும் நாரணன் தமரும் -முமுஷுவுக்குத் த்யாஜ்யமான அஞ்சு கோடி -முமுஷுவுக்கு உபாதேயமான மூன்று கோடி

    பதிவ்ரதையும் ப்ரபன்னனும்

    குண தோஷ ஞான பலம் -ஆஸ்திகரும் நாஸ்திகரும் -ஆஸ்திக நாஸ்திகரும் -நாஸ்திக ஆஸ்திகரும் –

    கன்னக் கள்வர் நால்வர் நிரூபணம் -ஸ்வ தந்த்ரரும் ஏகாயநனும் மாயாவாதியும் சைவனும்

    அர்த்தமும் அநர்த்தமும் -அஸத் ஸங்கதியும் ஸத் ஸங்கதியும் பாகவத வைபவம் –

    அபாகவத ஸ்பர்ஸ ப்ராயச்சித்தம் -பாகவத ஸ்ரீ பாத தீர்த்த வைபவம் -பாகவனே தீர்த்தம்

    மகன் ஸ்ரீ பாத தீர்த்தம் தாய் ஸ்வீ கரித்தல் -ஸர்வ ஸாதாரணமும் பரமைகாந்திக்கு அஸாதாரணமும்

    ஸாமான்யமும் விசேஷமும் வைஷ்ணவ லஷண நிரூபணம்

    ஈஸ்வர ப்ரதிஜ்ஜையும் ஆஸ்ரித ப்ரதிஜ்ஜையும் பகவத் சக்தியும் வைஷ்ணவ சக்தியும்

    ஸீதையும் ப்ரபன்னனும்

    அனந்தாழ்வானும் திருவேங்கட வனும்

    ராஜாவும் ராஜாதி ராஜனும் -ஈஸ்வரனுடைய விதேயத்வம் –

    ஸ்ரீ ஸேனை முதலியாரும் ஸர்வேஸ்வரனும் -ஸ்வ ஸ்வ ரூபாதி ஸீமா நிரூபணம் –

    கைகேயியும் சக்கரவர்த்தியும் பகவத் அனுபவமும் பாகவத அனுபவமும் –

    பகவச் சேஷத்வமும் தேஹாத்ம அனுபவமும் -ததீய சேஷத்வ வைபவம்

    பகவச் பாகவத சரணங்களும்

    பகவானும் கலியனும்

    ப்ராப்ய ப்ராபக நிஷ்கர்ஷம்

    பதிவ்ரதையும் ஸ்ரீ வைஷ்ணவனும்

    ஈஸ்வரன் தோல்வி

    ஆழ்வாருக்கு அப்போதே மோக்ஷம் அளிக்காததன் ஹேது -வைஷ்ணவத்வ லக்ஷணம்

    தானே யறியும் ஸ்ரீ வைஷ்ணவத்வம் ஏகாந்திக்கும் பரமைகாந்திக்கும் வாசி

    எழுதி யணிந்த வைஷ்ணத்வம் -எல்லை நிலமான வைஷ்ணத்வம்-கொக்கு கோழி உப்பு –

    தலை சிறந்த ஸ்ரீ வைஷ்ணத்வம்

    ஸ்ரீ வைஷ்ணவனுக்குப் பரிஹார்யங்கள் –

    ஸ்ரீ வைஷ்ணவ பரிஹார்யங்கள் –

    தேவதாந்த்ர பஜந நிவ்ருத்தி –

    தேவதாந்த்ர பஜந ஸம்பவ சங்கா பரிஹாரங்கள்

    தேவதாந்த்ர ப்ரஹ்ம பிரகார தயா அநு பாஸ்யம்

    ஸ்ரீ வைஷ்ணவத்வம் த்ரிபிரகாரம் -ஸத்கார யோக்ய த்ரைவித்யம் -ஸஹ வாஸ யோக்ய த்ரைவித்யம்-ஸதா அனுபவ யோக்ய த்ரைவித்யம்-

    வைஷ்ணத்வ ஹேது பரம்பரை –

    ஈஸ்வர வைஷம்ய நைர்குண்யம் –

    ஈஸ்வர ஸுஹார்த்த நிரூபணம் -பளிங்கும் அதிகாரியும் –

    வைஷ்ணத்வ நிர்ணய ஹேது -த்ருஷ்டமும் அத்ருஷ்டமும் –

    ஸ்ரீ வைஷ்ணத்வமும் தாந்தியும்

    தாந்தி நிரூபணம் -பாவ ப்ராதான்ய நிரூபணம் -நால்வர் அறிந்த ஸ்ரீ வைஷ்ணத்வமும் நாராயணன் அறிந்த ஸ்ரீ வைஷ்ணத்வமும் –

    நாடும் நகரமும் முஷ்டியும் வைஷ்ணத்வமும் -ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் ஏற்றம் அறிகை –

    ஸ்ரீ வைஷ்ணவன் என்ற பேர் விளக்கம் -ஸ்ரீ வைஷ்ணவ தின சர்யை –

    கைங்கர்யம் ஸ்வயம் பிரயோஜனம் –

    பகவத் ப்ராபவ நிரூபணம் –

    த்வாதஸ ஊர்த்வ புண்ட்ர அவஸ்யகத்வம் -மஹா பயமும் மஹா விஸ்வாஸமும்-

    அதிகாரி க்ருத்ய நிரூபணம் -ஸம்பாஷணமும் போஜனமும் -த்ருஷ்டமும் அத்ருஷ்டமும் –

    தாண்டிடும் தண்டனும் தன்னையிடும் தண்டனும் -ஸ்ரீ இராமாயண ஸாரார்த்த த்ரயமும் தந் நிஷ்டையும் –

    கருணா காகுஸ்தன் –

    எம்பார் மடமும் வேஸ்யையும் -எம்பாரும் எம்பெருமானாரும் -ஆச்சார்ய ஸேவா பலம் –

    கடற்கரை வெளியும் பெருமாளும் -கோழியும் கோமகனும் -தர்சன ரஹஸ்யம்

    அநந்ய சிந்தந பலம்

    நாம் விழுகையும் அவன் எடுக்கையும் -ஸூஹ்ருத விசாரம்

    பகவானுடைய ரக்ஷகத்வ ரஷ்யத்வங்கள்

    ஸா பேஷனும் ஸா பேஷ நிரபேஷர்களும் -ஸந்த்யா வந்தந வைகல்யமும் -பகவத் அனுபவ வைகல்யமும்

    எம்பெருமானாரின் திருவாய்மொழி ஈடுபாடு -ஆஸ்ரய தோஷமும் விஷய தோஷமும்

    தசரத தோஷம் -ஞானிகளின் மோஹம் -வைஷ்ணவனும் அருளிச் செயலும் –

    வேத வேத்ய ந்யாயம் -பிரமாண அனுபவமும் ப்ரமேய அனுபவமும் –

    அந்தர்யாமித்வமும் அர்ச்சையும் -பத்னியும் பிரபன்னனும் -திருப்பள்ளியறையும் திருவீதியும் -விருத்த த்ரயம் –

    ஸ்ரீ வைஷ்ணவன் வாழ வேண்டிய முறை திவ்ய தேச ப்ராவண்ய அவஸ்கதை

    அஞ்சலியும் கருட முத்திரையும் -திவ்ய ஸூரிகளும் திவ்ய தேசமும்

    பகவத் கிருத்யம் ஸர்வம் ஹிதம் -கைங்கர்ய ருசி

    அனந்தாழ்வான் கைங்கர்யத்தில் ஊற்றம்-அனந்தாழ்வானும் திருவேங்கடவனும் -ஸ்வயம் பிரயோஜன கைங்கர்யம்

    பீஷ்மர் பகவல் லீலா ரஸ விஷய பூதர் -ஸ்ரீ விபீஷண பிரபத்தி பல விசாரம்

    பகவத் ஸங்கல்ப விஷய த்ரயம்

    ஞாநீ துர்லப்ய நிரூபணம்-

    பகவத் விஷய ஸ்ரவண ருசி துர்லப்யம் -அவதார ரஹஸ்ய நிரூபணம்

    ப்ரயோஜனாந்தர பர ஸஹவாஸ நிஷேதம்

    விவேக தஸகம்

    ஞாதவ்யார்த்த சதுஷ்டயமும் தத் தத் வ்யவசாயமும்

    ஆச்சார்ய விஷயத்தில் பரிமாற்றம் இருக்கும்படி

    ஸ்ரீ வைஷ்ணவர்கள் பிணக்கம்

    புபுஷு முமுஷுக்களுக்கு வாசி -லோக யாத்ரை பற்றி ஸ்ரீ வைஷ்ணவ துக்கம்

    ஆண்டாள் கருணை-பாகவத அபசார க்ரவ்ர்யம்

    அபேக்ஷையும் அநபேஷையும்

    பகவத் ஸுலப்ய அஞ்ஞான துர்லப்யம் -அப்பனும் ஆளவந்தாரும் -யோகமும் சேஷத்வ ஞானமும்-

    முமுஷுவுக்கு அனுசந்தேய விசேஷம் -துறை அறிகை -முகம் அறிகை -விலை அறிகை-நினைவு அறிகை-

    ஞான அஞ்ஞான விஷய நிரூபணம் -ஸக்தி அஸக்தி விஷய நிரூபணம்-

    ஸம்ஸார ஸூகம் மூன்று படி -நரகமும் ஸ்வர்க்கமும் பரமபதமும் -ஸ்வா பாவிகமும் ஒவ் பாதிகமும்-

    த்யாஜ்யமான சாங்கர்ய பஞ்சகம் -உத்தம அதிகாரி இருக்கும்படி -தோஷ தர்சன ஹேது நிரூபணம்

    ஆசையும் ஆர்த்தியும் -பரிஹார்ய ஸ்பர்ச பஞ்சகம்

    பரிஹார்ய பரிஹார பிரகாரம் -அனுசந்தான ஸப்தகம்

    பகவத் வைபவம் -ஸ்ரீ தேவி வைபவம்

    சரீரமும் சரீர சம்பந்திகளும் இருக்கும்படி

    ஆச்சார்ய விஷயத்தில் க்ருதஞ்ஞனாய்ப் போருகை -ஈஸ்வர கிருபையும் பிராட்டி விசேஷ கடாக்ஷமும்

    நிஸ் ப்ருஹத்வ நிரூபணம்

    அத்யவசாய வைபவம் -பரம உபாய நிஷ் கர்ஷம் -ஆசார்ய விஷயீ கார பலம்

    ஸ்ரீ வைஷ்ணவ அங்கீ கார பலம் -காலக்ஷேப பிரகார நிரூபணம் -ஆளிட்டிச் செய்கை நிஷித்தம் -ப்ரபந்ந லஷண நிரூபணம் –

    கடித்த பாம்பும் கடியுண்ட பாம்பும் -ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம்

    பட்டரும் பெரிய பெருமாளும் வைஷ்ணத்வமும் வைஷம்யமும் -வைஷம்ய தஸகம்

    உபாஸக ப்ரபந்ந வைஷம்யம்-

    பரத்வமும் அர்ச்சையும் -ஜீவ பரர்கள்

    அவஸ்ய ஞாதவ்ய தஸகம் -அரஷகரும் ரக்ஷகனும்

    ஏதத் விஷயக காதா ப்ரதர்சனம் -அசேஷமும் சேஷமும் -ஏதத் விஷயக காதா ப்ரதர்சனம் -அஸேவையும் ஸேவையும் ஏதத் விஷயக காதா ப்ரதர்சனம்

    அஸஹ வாசமும் ஸஹ வாசமும் ஏதத் விஷயக காதா ப்ரதர்சனம் கால க்ஷேபமும் அகால க்ஷேபமும் ஏதத் விஷயக காதா ப்ரதர்சனம்

    அதேஸமும் தேஸமும் ஏதத் விஷயக காதா ப்ரதர்சனம் அபரிக்ரஹமும் பரிக்ரஹமும் ஏதத் விஷயக காதா ப்ரதர்சனம்

    அபோஜனமும் போஜனமும் ஏதத் விஷயக காதா ப்ரதர்சனம்- அநத்யாவசாயமும் அத்யாவசாயமும் அநபேக்ஷையும் அபேக்ஷையும் ஏதத் விஷயக காதா ப்ரதர்சனம் ஏதத் விஷயக காதா ப்ரதர்சனம்-

    அவஸ்ய அனுசந்தேய சதுஷ்டயம் -தெண்மையும் திறமையும் சதிரும் இளிம்பும் -ஸம்ஸாரிகளிடம் பரிமாற வேண்டிய முறை –

    பகவத் சந்நிதியிலே அனுஸந்தான க்ரமம்-ஆச்சார்ய சந்நிதியிலே அனுஸந்தான க்ரமம்-

    ஸ்ரீ வைஷ்ணவ சந்நிதியிலே அனுஸந்தான க்ரமம்-ஸம்ஸாரி மத்யத்தில் அனுஸந்தான க்ரமம்-ஏதத் விஷயக பிரமாண ப்ரதர்சனம்

    பிரதிபத்தி தஸகம்

    ஈஸ்வர விஷயக பிரதிபத்தியும் பிரமாணமும் -ஆச்சார்ய விஷயக பிரதிபத்தியும் பிரமாணமும் -ஸ்ரீ வைஷ்ணவ விஷயக பிரதிபத்தியும் பிரமாணமும் -உபாய விஷயக பிரதிபத்தியும் பிரமாணமும்

    உபேய விஷயக பிரதிபத்தியும் பிரமாணமும் -சரீர விஷயக பிரதிபத்தியும் பிரமாணமும் -சரீர சம்பந்தி விஷயக பிரதிபத்தியும் பிரமாணமும் -இதர ஸம்ஸாரி விஷயக பிரதிபத்தியும் பிரமாணமும் -ஐஸ்வர்ய விஷயக பிரதிபத்தியும் பிரமாணமும்-விஷய விஷயக பிரதிபத்தியும் பிரமாணமும் –

    ஏதத் விஷயக பிரதமாசார்ய ஸ்ரீ பராங்குச பிரமாண ப்ரதர்சனம்

    த்யாஜ்ய உபாதேய விவேக நிரூபணம்

    ஏதத் விஷயக காதா ப்ரதர்சனம் -குல ஸ்த்ரீக்கு ஹானி த்ரயம் பரிஹார்யம் -பதி வ்ரதையும் ப்ரபன்னனும் -ப்ரபந்ந பாதி வ்ரத்ய ஹானி

    ப்ரபந்ந ஸ்த்ரீத்வ ஹானி -ப்ரபந்ந பந்து ஹானி -ப்ரபந்ந அதிகாரி ஆவஸ்யக பஞ்சகம் புத்தி பிராதான்யம்

    புத்தி பிராதான்யே ஆழ்வார்கள் பாசுரங்கள் -ஈஸ்வர விஸ்லேஷ ராஹித்ய ஹேது

    தானறுகை -சைதன்யம் அறுகை -ஸாராந்தரம் அறுகை

    வேர் அறுகை -கலக்கமும் தெளிவும்

    ஈஸ்வரனுடைய ஆகார த்ரயம் -ஏதத் விஷய காதா ப்ரதர்சனம் -சேதனனுடைய பர்வ த்ரயம் -ஏதத் விஷய காதா ப்ரதர்சனம் –

    ஸம்ஸாரி ஜீவனும் பகவத் அனுக்ரஹமும் பஹுவித த்ரய நிரூபணம் ஏதத் விவரணம்

    பஹுவித த்ரய நிரூபணம்

    த்ரிவித காரண நிரூபணம் -விரோதி த்ரய நிரூபணம் -ஸூஹ்ருத த்ரய நிரூபணம்

    மந்த்ர த்ரய நிரூபணம் -ஞான த்ரய நிரூபணம்

    சங்கா த்ரய நிரூபணம் -பர்வ த்ரய நிரூபணம்-

    ஜீவனுக்குக் கழிக்கப்பட வேண்டியவை -அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் -சேஷத்வ பிரயோஜனம் -அவன் உகப்பும் இவன் உகப்பும் –

    ஆத்ம விவாஹ நிரூபணம்

    பரமபத பிராப்தியும் பகவத் அலிங்கனமும்

    மங்களா ஸாஸன ஸப்தங்கள் -அந்தர்யாமி யாராதனம்

    அர்ச்சையும் அந்தர்யாமித்வமும் -அந்தர்யாமித்வ வைபவம் -ஏதத் விஷயக காதா பிரதர்சனம்

    திருவாராதன பிரகார நிரூபணம்

    திருவாபரணமும் திருமாலையும்

    போக்யத்வமும் போக்த்ருத்வமும் -கிராமணிகள் ஐவர் -ஐவரோடு கூடாதார் ஐஸ்வர்யம் -ஐவரோடு கூடினார் இழவு –

    நம்மாழ்வாரும் திருமாலும் -கலியனும் அர்ச்சையும்

    நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வாரும்-

    திருவடிகளுக்குள்ள பிரகார பஞ்சகம் -ஏதத் விஷயக காதா ப்ரதர்சனம் -திருமேனிக்குள்ள பிரகார பஞ்சகம் -ஏதத் விஷயக காதா ப்ரதர்சனம்

    திரு வதரத்தினுடைய பிரகார பஞ்சகம் -ஏதத் விஷயக காதா ப்ரதர்சனம்-திருக் கண்களின் பிரகார பஞ்சகம் -ஏதத் விஷயக காதா ப்ரதர்சனம்-

    திரு நாமத்துக்குள்ள பிரகாரங்கள் -ஏதத் விஷயக காதா ப்ரதர்சனம்-திருமுடிக்குள்ள பிரகாரங்கள் -ஏதத் விஷயக காதா ப்ரதர்சனம்-

    மலையும் திருமேனியும் -சாம்ய நிரூபணம் -பொன்னும் திருமேனியும் -சாம்ய நிரூபணம்-

    அந்தி மூன்றும் அனலோம்பும் -சந்தைக்கு ஸ்வாப தேசம் -விண்ணுளாரிலும் சீரியர் பாட்டுக்கு விசேஷ அர்த்தம்

    குலம் தரும் பாசுர விசேஷார்த்தம் -என் முடிவு காணாதே பாசுர விசேஷார்த்தம்

    நானே நாநாவித நரகம் பாசுர விசேஷார்த்தம்

    குளப்படியும் வீராணத்து ஏரியும்

    எம்பெருமானார் வைபவம்

    வைத்த கையும் வாங்கின கையும் -ஸர்வம் பலவத பத்யம்

    ஸ்ரீ ராமானுஜ வைபவம்

    நஞ்சீயருக்கு விசேஷ கடாக்ஷம் மூன்று -எம்பெருமானும் எம்பெருமானாரும் –

    உடலும் உயிரும் -எம்பார் பத்து வார்த்தை -எம்பெருமான் கடல் -எம்பெருமானார் ஏரி

    ப்ரபன்னனும் சோக நிவ்ருத்தியும் -ப்ரபன்னனும் சாதகமும் -அவனாலே பேறு-தேவதாந்த்ர பஜந நிவ்ருத்தி

    பாதி வ்ரத்ய நிரூபணம் -தேவதாந்த்ர சம்பந்தி -சம்பந்தமும் த்யாஜ்யம் -ஏதத் விஷயக பிரமாண நிரூபணம்

    திவ்ய தேச வாச வைபவம் -ஆனுகூல்ய ஸங்கல்ப நிரூபணம் -ப்ராதிகூல்ய நிவ்ருத்தி நிரூபணம்

    அருளிச் செயலில் ஈடுபாடு -அருளிச் செயலில் அறிந்தவனோடு ஸம்பந்தம்

    ஆழ்வாருக்கும் பகவானுக்கும் ஏற்பட்ட ஸல்லாபம் -பாகவத வைபவ த்ரயம் -ஆசார்ய கைங்கர்ய ஸ்ரைஷ்ட்யம்-

    ஆனுகூல்யம் அரை வயிறு
    -அஞ்ஞா நாதி சமயங்களின் மாதா பித்ராதி பேதம்

    ப்ரஸித்த மாதா பிதா அனுவர்த்தனம் -தேஹாத்ம அபிமானம் -ஞான ஜென்ம வைபவம் -ஜீவாத்ம வை லக்ஷண்யம்

    ஆசார்ய வைபவம் -ஸ்வா தந்தர்ய அபிமானம் -ஜீவாத்மாக்களுடைய பாரதந்தர்யம் -ஞான பரிபாக காலம் -ஜீவன் பகவத் பரதந்த்ரன் என்பதற்கு ப்ரமாணம்

    ஞான பக்தி வைராக்ய விஷய ப்ரதர்சனம் ஆசார்ய கிருபை –

    ஆசார்யன் சொல்லும் பெரிய திருமந்திரம் -உணர்த்தியும் அசக்தியும் -வித்யை தாய் -ஆசார்யன் பிதா -தத் அனுகுண ரூப நாம போஜநாதிகள்

    ஸ்ரீ வைஷ்ணவன் ஆச்சார்யன் நிழலிலே ஒதுங்குகை பகவத் ப்ராப்தி சமய நிரூபணம் -பிறந்தகமும் புக்ககமும்

    முமுஷு பிரதிதினம் ஆராய வேண்டிய விஷயம்

    முமுஷு கிருத்யம் -ப்ரபந்ந அனுஷ்டான சதுஷ்டயம் -ப்ரபன்னனுக்குச் சிறை

    ப்ரபன்னனுக்குக் கடல் -ப்ரபன்னன் தன்னைக் குருடனாக நினைப்பது –

    ப்ரபன்னன் தன்னை விஷ தஷ்டனாக நினைப்பது -ப்ரபந்ந ஸ்வரூப நிரூபகம் கடலோசையும் மந்த்ராந்தரங்களும்

    ப்ரபன்னனுக்கு பூர்வ உத்தர தசைகள்

    கர்மாதி த்ரய தியாக ஸ்வீகார பிரகாரம்

    ஏதந் நிரூபணம் -பிரபத்தி நிரூபணம்

    திருமந்திரமும் த்வயமும் -பரத்வமும் விபவமும் -இறங்கும் துறை நிரூபணம்

    பரதத்வ நிரூபணம் -ப்ராப்ய நிஷ் கர்ஷம் -திருமந்திரமும் அருளிச் செயலும் -பிராட்டியுடைய புருஷகாரத்வம்

    கருட முத்திரையும் பிராட்டியும் -இருக்கும் நாள் பிரபன்னனுக்கு அனுசந்தேயங்கள்

    த்வயத்தில் பூர்வ உத்தர கண்டங்கள் -ஞான ப்ரத ஞான வர்த்தகங்கள்

    பூணூல் சாத்தினவருக்கும் சாத்தாதவருக்கும் வாசி

    இரு கரையும் ஒரு கரையும் -கலக்கமும் தேற்றமும்

    கோத்ர ஸூத்ர ஸத்பாவ தத் அபாவங்கள்-

    கரும்பும் கற்கண்டும் -மண்ணும் விண்ணும் -இரவும் பகலும்

    ரத்னமும் பாஷாணமும் -பதிவிரதையும் பரநாரியும்

    பெருமாளும் நம்பெருமாளும் -அப்பனும் பெரிய நம்பியும் -முமுஷு காலக்ஷேப பிரகாரம்-

    த்வய வைபவம் -பெரிய பெருமாள் திருவடியும் திருக்கையும் திரு முக மண்டலமும் -ரஹஸ்ய த்ரயமும் பெரிய பெருமாள் திருமேனியும்

    த்வயார்த்த நிரூபணம்

    நார சப்தார்த்தம்

    மமகாரமும் மமதா நிவ்ருத்தியும் -பரார்த்த கைங்கர்ய நிரூபணம் -ப்ரபந்ந ஞாதவ்ய சதுஷ்டயம்

    அத்யாவசாய சதுஷ்டயம் -ப்ராப்யமும் ப்ராப்ய அத்யவசாயமும் -ப்ராபகமும் ப்ராபக அத்யவசாயமும்

    ஆசாரமும் ஆசார அத்யவசாயமும் -போஜனமும் போஜன அத்யவசாயமும்

    உணர்த்தியும் அசக்தியும் த்வரையும் -அத்யவசாயமும் பயமும் -கௌரவமும் க்ருதஞ்ஞதையும் -ஏதத் விஷயக காதா ப்ரதர்சனம்-

    ரஹஸ்ய த்ரய பவ்ர்வாபர்ய நிதான கதநம்

    ப்ரவ்ருத்தியும் நிவ்ருத்தியும் -பிராட்டியும் இளைய பெருமாளும்

    த்வய கண்ட த்வய சார்த்தக்யம் -நிர் பரத்வ அனுசந்தானம்

    முக்தப்ராய நிரூபணம் -த்வயார்த்த தஸகம்

    திருவாய் மொழியும் த்வயமும்

    சரண சப்தார்த்தம் ஸரண சப்தார்த்தம்

    ப்ரபத்யே சப்தார்த்தம் உத்தர வாக்யார்த்த கதநம்

    நமஸ் சப்தார்த்த நிரூபணம்

    த்வயமும் திருவாய் மொழியும் நித்ய அனுசந்தேயாங்கள்

    ஆளவந்தார் சரம உபதேசம்

    ப்ரபந்நஸ்ய உத்தர கிருத்யம் -நாராயணனுடைய நைரந்தர்ய வேஷம் -நாரங்களுடைய நைரந்தர்ய வேஷம்-

    உபாய உபேய நிஷ்கர்ஷம் -போக புஷ்ப தியாக மண்டபங்கள்

    ஆளவந்தார் சரம நியமனம்

    சரமார்த்த நிரூபணம்

    உத்தாரக பிரதிபத்தி நிரூபணம்

    ஆளவந்தார் திருநாடு அலங்கரித்தல்

    ஆளவந்தாரைத் திருப் பள்ளிப் படுத்தல்

    ஏதந் நிரூபணம்

    ஸ்ரீ சூர்ண பரிபாலநம்

    ஆளவந்தார் திருமேனி திருமஞ்சனம்

    ஆளவந்தார் யதி ஸம்ஸ்காரப்படி

    சரமார்த்த நிரூபணம்-

    ——————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பூர்வாசார்யர்கள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்‌ அருளிச் செய்த ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌-ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ அருளிச்செய்த வ்யாக்‌யாநத்துடன்‌-நான்காம்‌ ப்ரகரணம்‌-

    August 21, 2025

    ஆசார்ய ஹ்ருத,யஸ்யார்த்த, ஸகலா யேந த,ர்ஸிதா | ஸ்ரீ ஸாநு தாஸ மமலம்‌ தேவ ராஜம்‌ தமாஸ்ரயே ॥

    ஆசார்ய ஹ்ருதயத்தின்‌ அர்த்தங்கள்‌ அனைத்தையும்‌ அருளிச் செய்தவராய்‌, ஸ்ரீஸாநுகாஸர்‌, தேவராஜர்‌ என்னும்‌ திருநாமங்களை உடையவரான திருநாராயணபுரத்து ஆயை ஆஸ்ரயிக்கிறேன்

    ஆசார்ய ஸ்வாந்த வக்தாரம்‌ அபி ராமவராபிதம்‌!
    ஸ்ரீக்ருஷ்ண தநயம்‌ வந்தே, ஐகத்‌ குருவராநுஜம்‌ ॥

    பணவாளரவணைப்‌ பள்ளி பயில் பவர்க்கெவ்வுயிரும்‌
    குண போகமென்று குருகைக் கதிபனுரைத்ததுய்ய
    உணர்பாவினுட்பொருள்‌ ஒன்றுமறியா உலகறிய
    மணவாளன் மாறன்‌ மனமூரைத்தான்‌ வண்முடும்பை வந்தே.

    ஸம்ஸ்ரிதாநாம்‌ ஜநிச்சேதஹேது ஜ்ஞாநத முக்திதம்‌ | யது புர்யாம்‌ ஜநந் யாக்‌யம்‌ லோகாநா முத்தமம்‌ குரும்‌ |
    ஸம் ப்ரதா யார்த்தத நிகம்‌ ஸெளம்ய ஜாமாத்ரு ஸூரயே | நிஸ்சிதார்த்த ப்ரதம்‌ ஸ்ரீமஜ் ஜநநீ குருமாஸ்ரயே

    ஆஸூரி சிங்கமாம்‌ ஆதி குரு உலகுக்கே
    மாசிலா இளையாழ்வார்‌ மண்ணுலக மாழ்ந்தன்று
    தூசரிக்கும்‌ திருப்பாவைத்‌ திருவருளைத்‌ தெளிவித்துப்‌
    பேசினார்‌ பெம்மானைப்‌ பின்போரை வாழ்த்திடவே

    மாதவத்தோர்‌ வாழ்த்தும்‌ முடும்பை மணவாளன்‌
    தோதவத்தித்‌ தூய் மறையோரான பெற்றார்‌ தீதற்ற
    ஆசார்ய ஹ்ருதயம்‌ பெற்றார்‌ நம்மாயி யிவர்‌
    தேசாரத் தாள்கள்‌ நெஞ்சே காண்

    மாதவத்தோன் மாறன்‌ மனங்கூறும்‌ மணவாளன்‌
    தோதவத்தித்‌ தூய் மறையோரான பெற்றார்‌ – நீதியினா
    லாங்கவர்‌ தாள்‌ சேர்‌ பெற்றார்‌ ஆயி மணவாளமுனி
    பூங்கமலத் தாள்கள்‌ நெஞ்சே போற்று

    ஆயி அந்தாதி-ஆயி ப்ரபத்தியில்‌ மாமுநிகளாலும்‌ அவரின்‌ பேரன்‌ ஜீயர்‌ நாயனாராலும்‌ அநுக்ரஹிக்கப்‌ பட்டிருக்கிறதைக்‌ காணலாம் அதில்‌ முதல்‌ இரண்டு ஸ்லோகத்தால்‌ ஆஸூரிப்பெருமாள்‌ வைபவததைக் கூறியுள்ளார்‌.

    ஆஸூரியிலவதரித்த இராமாநுசர்க்‌ கிருவர்‌ தாமாய்‌
    கூசாத நிலையொன்னில்‌ தாய்வயிற்றில்‌ பிறந்தவராய்‌
    மாசாத கூரேசர்‌ குருவருடன்‌ சேர்த்து வைக்க
    ஆஸூரிப்‌ பெருமாள் தாம்‌ ஒருவராம்‌ இராமாநுசர்க்கே (1)

    இராமாநுசர்க்கே ஸரணாம்‌ எழுபத்து நால்வர்‌ தன்னுள்‌
    இராப்பகலென்னாதே தன் குருவைச்‌ சிந்தித்தேத்தி
    இராகமனைத்தையும்‌ தொலைத்து விட்டுப்‌ பெருமாளென்னும்‌
    இராகவனோடெம்‌ பெருமாள்‌ எதுகிரியைச்‌ சென்றார்தாமே (3)

    ஆசார்ய ஹ்ருத,யஸ்யார்த்தாஸ் ஸகலா யேந தர்ஸிதா: !
    ஸ்ரீஸாநு தாஸ மமலம்‌ தே,வராஜம்‌ தமாஸ்ரயே ॥

    த்‌,ராவிட ஆம்நாய ஹ்ருத.யம்‌ கு,ருபர்வ க்ரமாக,தம்‌ ।
    ரம்ய ஜாமாத்ரு தே,வேந தர்ஸிதம்‌ க்ருஷ்ண ஸூநுதா

    ——

    219-பரபரனாய் நின்ற வளவேழ் வைப்பாமவையுள்‌ உம்பர்‌ வானவர் அதிபதி மயர்வற மன்னி மனம்‌ வைக்கத்‌ திருத்தி மறக்குமென்று நல்கி விடாதே மன்ன, அயர்ப்பிலனறுத்தேன்‌ என் சொல்லி மறப்பனோ என்னும்படி தத்தவ ஜ்ஞானரானவர்‌ சுடரடி யெம்பிரானை விடாது கண்டாய்‌ நீயும்‌ நானுமென்கிற ஸஹ்ருதயாநுப,வம்‌ ஸம்ஸாரிகளுக்கமாம்படி வீடுமினென்று தயாஜ்யோபாதேய தோஷ குண பரித்யாக, ஸமர்ப்பண க்ரமத்தை ஸாலம்பந மந்த்ரமாக உபதேஸித்து எளிதாக ௮வதரித்துப்‌ பிழைகளை ஸஹித்துப்‌ புரையறக்‌ கலந்து அல்ப ஸந்துஷ்டனாய்‌ அம்ருதமே ஒளஷதமாக்கி நீர் புரையத்‌ தன்னை நியமித்து போகத்தை ஸாத்மிப்பித்து பக்தி கணனைகளுக்கு ஒக்க வருமவனுடைய ஸேவைக்கு எளிமையும்‌ இனிமையுமுண்டு, தொழுதால்‌ அரும்‌ பயனாயதரும்‌, உத்‌யோகத்தே வினைகளும்‌ மாளும்‌, ௮வனுரைத்த மார்க்கத்தே நின்று இரு பசை மலமற உணர்வு கொண்டு நலம்‌ செய்வதென்று தாம்‌ மயர்வற மதிநலமருளி பஜநத்திலே சேர்க்கிறார்‌ முதற்பத்தில்‌.
    இதில்‌ முதல்‌ பத்தாலே ஸர்வ ஸ்மாத் பரனான ஸர்வேஸ்வரன்‌ தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையாலே அஜ்ஞாநத்தை வாஸநையோடே போக்கி பத்தி ரூபாபந்ந ஜ்ஞாநத்தைக்‌ கொடுத்து இன்னமும்‌ இவர்‌ நம்மை விஸ்மரிக்கக்‌ கூடுமென்று இவர் பக்கல்‌ தனக்குண்டான ஸ்நேஹத்தாலே விடாதே இவருடைய ஹ்ருதய கமலத்திலே ஸுப்ரதிஷ்டிதனாய்க்‌ கொண்டு நிரந்தர வாஸம்‌ பண்ண இவரும்‌ அத்தாலே ஸம்ஸய விபர்யய விஸ்ம்ருதி ரஹிதமான தத்த்வ ஜ்ஞாநத்தை உடையராய்‌ அவருடைய குணங்களைத்‌ தம்முடைய திருவுள்ளத்தோடே அநுபவித்து இவ் விஷயம்‌ தனியே அநுபவிக்க வொண்ணாமையாலே ஸம்ஸாரிகளையும்‌ பார்த்து த்யாஜ்யமான ஸம்ஸாரத்தினுடைய அல்பாஸ்திரத்வாதி, தோஷங்களையும்‌ அதினுடைய த்யாக ப்ரகாரத்தையும்‌ உபாதேயமான பகவத்‌ விஷயம்‌ நிரதிஸய போக்‌யமாயிருக்கும்‌ என்னுமத்தையும்‌ அவனுடைய பஐநீயத்வத்தையும்‌ பஐநத்துக்கு ஆலம்பநமான மந்த்ரத்தையும்‌ உபதேஸித்து அந்த பஜநீயனுடைய ஸெளலப்‌யம்‌ அபராத ஸஹத்வம்‌ ஸீலவத்தை ஸ்வாராததை ஆஸ்ரயண ரஸ்யதை ஆர்ஜவம்‌ ஸாத்ம்ய போக ப்ரதத்வம்‌ பரபக்திக்கும்‌ பரிகணநைக்கும்‌ ஒக்க முகம்‌ காட்டுகிற ஸாம்யம்‌ இப்படிப்பட்ட குணங்களையும்‌ பஐநத்தினுடைய ஸூகரத்வ ரஸ்யதைகளையும்‌ பஜிக்கவே ஸர்வ பலங்களும்‌ ஸித்‌திக்கும்‌ என்னுமிடத்தையும்‌ பஜநோபக்ரமத்திலே பஜந விரோதி யடைய நஸிக்கும்‌ என்னுமிடத்தையும்‌ அறிவித்து இப்படியான பின்பு ஸ்ரீகீதையில்‌ அவன்‌ அருளிச்‌ செய்த பக்தி மார்கத்திலே நின்று தேவதாந்தரங்கள்‌ பக்கல்‌ பரத்வ ஸங்கா நிவ்ருத்தி பூர்வகமாக அவன்‌ விஷயமான ஜ்ஞாநத்தைக்‌ கொண்டு அவன்‌ பக்கலிலே அநந்ய ப்ரயோஜந பக்தியைப்‌ பண்ணுங்கோள்‌ என்று தமக்கு ஸர்வேஸ்வரன்‌ மயர்வற மதிநலம்‌ அருளினாப் போலே தாம்‌ ஸம்ஸாரிகளுக்கு அஜ்ஞாந நிவ்ருத்தி பூர்வகமாக ஞாந பக்திகளை உபதேஸித்து அவனுடைய பஜநத்திலே மூட்டுகிறார்‌ என்கிறார்‌. (பரபரனாய்‌ நின்ற வளவேழ்‌ வைப்பாமவையுள்‌ உம்பர் வானவரதிபதி) முழுதுண்ட பரபரன்‌” (திருவாய்மொழி 1-1-8) “ஆய்நின்ற பரபரன்‌” (திருவாய்மொழி 1-1-14 வளவேழுலகின்‌ முதலாயவா னோரிறை” (திருவாய்மொழி 1-5-1 “வைப்பாம்‌ மருந்தாம்‌ (திருவாய்மொழி 1-7-2) “நலத்தால்‌ உயர்ந்துயர்ந்து அப்பாலவன்‌” திருவாய்மொழி 1-7-2) “அவையுள்‌ தனிமுதல்‌” (திருவாய்மொழி 1-9-1 “உம்பர்‌ வானவர்‌ ஆதியஞ்சோதி” (திருவாய்மொழி 1-10-9)”அயர்வறுமமரர்களதிபதி” (திருவாய்மொழி 1-1-1 என்று ஸகல ஜகத்‌ ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார கர்த்ருத்வத்தாலும்‌ உபய விபூ,தி யோகத்தாலும்‌ உபய விபூதி நாயகத்வத்தாலும்‌ ப்ராப்ய ப்ராபகத்வத்தாலும்‌ அபரிச்சேத்‌யாநந்த, யுக்ததையாலும்‌ ஸர்வ ஸரீரித்வத்தாலும்‌ ஸர்வ ஸப்த, வாஸ்யத்வத்தாலும்‌ நித்ய ஸூரி நிர்வாஹகத்வத்தாலும்‌ பரத்வ ப்ரதிபாதகமான “உளன்‌ சுடர்மிகு சுருதி” (திருவாய்மொழி 1-1-7) என்கிறபடியே வேதாந்த வேத்‌யத்வத்தாலும்‌ ”திருவுடையடிகள்‌” (திருவாய்மொழி 6-8-11) என்று ஸ்ரீய:பதித்வத்தாலும்‌ “என்‌ செய்ய தாமரைக்கண் பெருமானார்‌‘ (திருவாய்மொழி 1-4-2 என்று புண்டரீகாக்ஷத்வத்தாலும்‌ “ஓடும் புள்ளேறி” (திருவாய்மொழி 1-8-1) என்று கருட, வாஹநத்வத்தாலும்‌ அத ஏவ ஸர்வ ஸ்மாத் பரனான ஸர்வேஸ்வரன்‌ (மயர்வற மன்னி மனம்‌ வைக்கத்‌ திருத்தி) “மயர்வற மதிநலம்‌ அருளினன்‌” (திருவாய்மொழி 1-1-1 “மயர்வற என்‌ மனத்தே மன்னினான்‌” (திருவாய்மொழி 1-7-4) என்று ஜீஞாநாநுதய அந்யதாஜ்ஞாந விபரீதஜ்ஞாநமான அஜ்ஞாநத்தை இவர்க்கு வாஸநையோடே போக்கி நிர்ஹேதுக க்ருபையாலே பக்தி ரூபாபந்ந ஜ்ஞாநத்தைக்‌ கொடுத்து இவர்‌ திருவுள்ளத்திலே புகுந்து “சார்ந்த இருவல் வினைகளும்‌ சரித்து மாயப் பற்றறுத்துத்‌ தீர்ந்து தன் பால்‌ மனம்‌ வைக்கத்‌ திருத்தி” (திருவாய்மொழி 1-5-10) என்கிறபடியே இவருடைய புண்ய பாப ரூப கர்மத்தை ஸவாஸநமாகப்‌ போக்கி “அருவினையேன்‌” (திருவாய்மொழி 1-5-1) என்று அயோக்‌யதாநுஸந்தாநம்‌ பண்ணி அகன்ற விடத்திலும்‌ தன்‌ ஸீலவத்தையைக்‌ காட்டிச்‌ சேர்த்துக்‌ கொண்டு இவர்‌ தாமே “மாயோன்‌” (திருவாய்மொழி 1-5-8) என்று தன் பக்கலிலே நெஞ்சை வைக்கும்படி தரிசு கிடந்த நிலத்தைச்‌ செய்காலாகத்‌ திருத்துவாரைப்போலே திருத்தி, (மறக்குமென்று நல்கி விடாதே மன்ன) “ மறக்குமென்று செந்தாமரைக்‌ கண்ணொடு” (திருவாய்மொழி 1-10-10) “நல்கி என்னை விடான்‌” (திருவாய்மொழி 1-10-8) “மறப்பற என்னுள்ளே மன்னினான்‌” (திருவாய்மொழி 1-10-10) என்று சொல்லுகிறபடியே இவரின்னம்‌ நம்மை விஸ்மரிக்கக் கூடுமென்று நிரதிஸய வ்யாமோஹத்தைப்‌ பண்ணி இவரை விடாதே இருட்டறையிலே புகுவார்‌ சிலர்‌ விளக்கேற்றிக் கொண்டு புகுருமா போலே அழகிய திருக் கண்களோடே இவர்‌ திருவுள்ளத்தே புக்கு நிரந்தர வாஸம்‌ பண்ண (அயர்ப்பிலன்‌ அறுத்தேன்‌ என்‌ சொல்லி மறப்பனோ என்னும்படி தத்வ ஜ்ஞரானவர்‌) “பெரு நிலங் கடந்த நல்லடிப் போது அயர்ப்பிலன்‌” (திருவாய்மொழி 1-3-10) “மாயப்பிறவி மயர்வறுத்தேன்‌” (திருவாய்மொழி 1-7-3) “எம்பிரானை என் சொல்லி மறப்பனோ” (திருவாய்மொழி 1-10-9) என்று வர்ஷுகவலாஹகம் போலே ஸ்யாமமான திருமேனியை உடையவனுடைய திருவுலகளந்தருளின திருவடிகளை ஒருக்காலும்‌ விஸ்மரியேன்‌, நிரதியய போக்‌யனான அவனை ஸதா, அநுபவித்து ஆஸ்சர்யமான ஜந்மமடியாக வருகிற வஜ்ஞாநத்தைப்‌ போக்கப்‌ பெற்றேன்‌; எனக்கு உபகாரகனான அவனை எத்தைச்‌ சொல்லி விஸ்மரிப்பதென்னும்படி ஸம்ஸய விபர்யய விஸ்ம்ருதிகள்‌ இல்லாதபடி தத்வ ஜ்ஞாநத்தை யுடையரான இவர்‌ (சுடரடி எம்பிரானை விடாது கண்டாயே நீயும்‌ நானும்‌ என்கிற ஸஹ்ருதயாநுபவம்‌ ஸம்ஸாரிகளுக்குமாம்படி) “துயரறு சுடரடி தொழுதெழு என்‌ மனனே” (திருவாய்மொழி 1-1-1) “எம்பிரானைத்‌ தொழாய்‌ மட நெஞ்சமே” (திருவாய்மொழி 1-10-3) “மலராள்‌ மணவாளனைத்‌ துஞ்சும் போதும்‌ விடாது தொடர்‌ கண்டாய்‌” (திருவாய்மொழி 1-10-4) “கண்டாயே நெஞ்சே கருமங்கள்‌ வாய்க்கின்று” (திருவாய்மொழி 1-10-5) “நீயும்‌ நானும்‌ இந்நேர்‌ நிற்கில்‌ மேல்‌ மற்றோர்‌ நோயும்‌ சார்கொடான்‌” (திருவாய்மொழி 1-10-6) என்று நிரவதிக தேஜோ ரூபமான அவன்‌ திருவடிகளிலே நித்ய கைங்கர்யம்‌ பண்ணி உஜ்ஜீவிக்கப் பார்‌; எனக்கு பவ்யமான நெஞ்சே, நமக்கு உபகாரகனான அவனைத்‌ தொழப் பாராய்‌-ஸ்ரீய:பதியான ஸர்வேஸ்வரனை நான்‌ அயோக்‌யதாநுஸந்தாநம்‌ பண்ணி அகலும்போதும்‌ நீ விடாதே கிடாய்‌, அவனுடைய நிர்ஹேதுக விஷயீகாரம்‌ இருந்தபடி கண்டாயே, நீயும்‌ நானும்‌ அயோக்‌யதாநுஸந்தாநம் பண்ணி அகலாதிருக்கப் பெறில்‌ அநாதி காலார்ஜிதமான கர்மம்‌ இதர விஷய ப்ராவண்யம்‌ ப்ரயோஜநாந்தர ஸ்ரத்‌தை. உபாயாந்தர ஸங்கம்‌ அயோக்‌யதாநுஸந்தாநம்‌ தொடக்கமான விரோதிகள்‌ நம்மைக்‌ கிட்டாதபடி பண்ணுமென்று திருவுள்ளத்தைப்‌ பார்த்து உபதேஸித்துத்‌ தம்முடைய திருவுள்ளமும்‌ தாமும்‌ கூட அவனுடைய குணங்களை அநுபவித்து இப்படித்‌ திருவுள்ளத்தோடே கூட அநுபவித்த அநுபவம்‌ தனி யநுபவிக்க வொண்ணாமையாலும்‌ “ஏக ஸ்வாது ந புஞ்ஜீத” என்று இவர்‌ தனி யநுபவிக்க வல்லரல்லாமையாலும்‌ ஸம்பந்தம்‌ ஸர்வ ஸாதாரணமாகையாலும்‌ இவர்‌ பராநர்த்தம்‌ பொறாத படியான பரம க்ருபாவானாகையாலும்‌ இவ்வநுபவம்‌ ஸம்ஸாரிகளுக்குமாக வேணுமென்று ஸம்ஸாரிகளையும்‌ பார்த்து (வீடுமின்‌ என்று த்யாஜ்யோபாதேய தோஷ குண பரித்யாக ஸமர்ப்பண க்ரமத்தை ஸாலம்பந மந்தரமாக உபதேஸித்து) வீடுமின்‌ முற்றத்திலே “வீடுமின்‌ முற்றவும்‌” (திருவாய்மொழி 1-2-1 என்று த்யாஜ்ய ஸ்வரூபத்தையும்‌ “மின்னின்‌ நிலையில மன்னுயிராக்கைகள்‌’ (திருவாய்மொழி 1-2-2) என்று அதினுடைய அல்பாஸ்த்திரத்வாதி தோஷத்தையும்‌ “நீர்‌ நுமதென்றிவை வேர் முதல்‌ மாய்த்து” (திருவாய்மொழி 1-2-3) என்று அவற்றினுடைய பரித்யாக க்ரமத்தையும்‌ “வீடுடையான்‌” (திருவாய்மொழி 1-2-2) என்று உபாதேயமான பகவத்‌ ஸ்வரூபத்தையும்‌ “எல்லையிலந்நலம்‌” (திருவாய்மொழி 1-2-5) என்று அவ்வஸ்துவினுடைய குணத்தையும்‌ ‘ வீடுசெய்ம்மின்‌’ (திருவாய்மொழி 1-2-1 என்றும்‌ “இறை சேர்மின்‌” (திருவாய்மொழி 1-2-3) என்றும்‌ “ இறை பற்று” (திருவாய்மொழி 1-2-5) என்றும்‌ “திண் கழல்‌ சேரே” (திருவாய்மொழி 1-2-10) என்றும்‌ அவ் விஷயத்திலே ஆத்மாவை சமர்ப்பிக்கும் கிரமத்தையும்‌ “வண்புகழ்‌ நாரணன்‌” (திருவாய்மொழி1-1-2-10) என்று அந்த ஸமர்ப்பணத்துக்கு ஆலம்பநமான திருமந்த்ரத்தோடே உபதேசித்து – (எளிதாக வந்தவதரித்து) “பல பிறப்பாய்‌ எளிவருமியல்வினன்‌” (திருவாய்மொழி 1-3-2) என்று அவன்‌ அதீந்த்‌ரியன்‌ என்று இறாயாதபடி ராம க்ருஷ்ணாதி ரூபேண வந்தவதரித்து ஆஸ்ரயிப்பார்க்கு ஸுலபனாய்‌ அப்படி யவதரித்து ஸூலபனானவன்‌ ஆஸ்ரிதருடைய அபராதங்களைக்‌ கண்டு கை விடுமோ என்னில்‌ அங்ஙனன்று (பிழைகளை ஸஹித்து) “என் பிழைத்தாள்‌ திருவடியின்‌ தகவினுக்கு” (திருவாய்மொழி 1-4-7) என்று அபராத ஸஹனாயிருக்கும்‌. (புரையறக்‌ கலந்து) அவன்‌ அபராத ஸஹனானாலும்‌ “அரு வினையேன்‌” (திருவாய்மொழி 1-5-1 என்று இவன் தான்‌ அயோக்‌யதாநுஸந்தாநம்‌ பண்ணி யகலிலும்‌ “திசைகளெல்லாம்‌ திருவடியால்‌ தாயோன்‌ தானோர்‌ உருவனே” (திருவாய்மொழி 1-5-3) என்றும்‌ “நெய்யூண்‌ மருந்தோ மாயோனே” (திருவாய்மொழி 1-5-8) என்றும்‌ தன்‌ செல்லாமையையும்‌ இவரோடே புரையறக்‌ கலக்கிற பலத்தையும்‌ காட்டி இவரைச்‌ சேர்த்துக் கொள்ளுந்தனை ஸீலவானாய்‌ இப்படி சேர்த்துக்‌ கொண்டால்‌ ஆஸ்ரயண மரிதாயிருக்குமோ என்னில்‌ (அல்ப ஸந்துஷ்டனாய்‌) அவன்‌ இவனிட்டது கொண்டு வயிறு வளர்க்க வேண்டாதபடி அவாப்த ஸமஸ்த காமனாய்‌ ஸ்ரீய:பதியாயிருக்கையாலே “புரிவதுவும்‌ புகை பூவே” (திருவாய்மொழி 1-6-1 என்று த்‌ரவ்ய நியதி அதிகாரி நியதி யில்லாதபடி ஆஸ்ரயணம்‌ ஸுகரமாம்படி அல்ப ஸந்துஷ்டனாய்‌ அவ்வாஸ்ரயணந் தான்‌ தேவையாயிருக்குமோ என்னில்‌ (அம்ருதமே ஒளஷத மாக்கி) “தூயவமுதைப்‌ பருகிப்‌ பருகி என்‌ மாயப் பிறவி மயர்வறுத்தேனே” (திருவாய்மொழி 1-7-3) என்று நிரதிஸய போக்‌யனான அவனுடைய ஆஸ்ரயணமாகையாலே ஸம்ஸார வ்யாதி பேஷஜமான அவ்வாஸ்ரயணம்‌ தானே இனிதாம்படி பண்ணி அப்படி ஆஸ்ரயிக்குமிடத்தில்‌ இவர்களைத்‌ தன்‌ நினைவுக்கீடாக நியமித்துப்‌ பரிமாறுவித்துக்‌ கொள்ளுமோ என்னில்‌ (நீர் புரையத்‌ தன்னை நியமித்து) “நீடு நின்றவை ஆடுமம்மானே” (திருவாய்மொழி 1-8-1) என்றும்‌ “அம்மானாய்ப்‌ பின்னும்‌ எம்மாண்புமானான்‌” (திருவாய்மொழி 1-8-2) என்றும்‌ “நீர் புரை வண்ணன்‌‘ (திருவாய்மொழி 1-8-11) என்றும்‌ சொல்லுகிறபடியே மேட்டிலே நீரை விரகாலே ஏத்துவாரைப்‌ போலே இவர்களுடைய செவ்வைக் கேடு செவ்வையாம்படி தன்னைச்‌ செவ்வியனாக நியமித்து இப்படிப்‌ பரிமாறுமிடத்தில்‌ குளப்படியிலே கடலை மடுத்தாப்போலே நலக்கேடு கெடும்படி பரிமாறுமோ வென்னில்‌ (போகத்தை ஸாத்மிப்பித்து) “சூழலுளானே” (திருவாய்மொழி 1-9-1) என்று தொடங்கி “உச்சியுளானே” திருவாய்மொழி 1-9-10) என்று ஸாத்மிக்க ஸாத்மிக்கத்‌ தன்னை அநுபவிப்பித்து (பக்தி கணனைகளுக்கு ஒக்க வருமவனுடைய ஸேவைக்கு) இப்படி அநுபவிக்குமிடத்தில்‌ “கண்ணுள்ளே நிற்கும்‌ காதன்மையால்‌ தொழில்‌ எண்ணிலும்‌ வரும்‌ என்னினி வேண்டுவம்‌” (திருவாய்மொழி 1-10-2) என்று பர பக்திக்கும்‌ பரிகணனைக்கும்‌ ஒக்க முகம்‌ கொடுக்கிற அவனுடைய ஆஸ்ரயணத்துக்கு (எளிமையும்‌ இனிமையுமுண்டு) “ பத்துடை எளியவன்‌” (திருவாய்மொழி 1-3-1”அமுதிலுமாற்ற இனியன்‌” (திருவாய்மொழி 1-6-6) என்று ஆஸ்ரயணந்தான்‌ எளிதுமாய்‌ இனிதுமாய்‌ இருக்கும்‌; இத்தால்‌ அபேஷித்த பலங்கள்‌ ஸித்‌திக்குமோ என்னில்‌ (தொழுதால்‌ அரும்பயனாய தரும்‌) அவனைத்‌ தொழுதால்‌ வழிநின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி யாக்கம்‌ தரும்‌” (திருவாய்மொழி 1-6-8) “தருமவரும்பயனாய” (திருவாய்மொழி 1-6-9) என்று அவனை பஜித்தால்‌ ப்ராப்தி ப்ரதிபந்தகங்களையும்‌ நிஸ் ஸேஷமாகப்‌ போக்கி அழிவில்லாத பெறுதற்கரிய ப்ரயோஜநங்களையும்‌ தரும்‌. பஜித்தாலன்றோ தருவது, பஜந விரோதி, குவாலாகவுண்டே” என்னில்‌ (உத்யோகத்தே வினைகளும்‌ மாளும்‌) “நாளு நின்றடு நமபழமை அங்கொடு வினையுடனே மாளும்‌” (திருவாய்மொழி 1-3-8) என்று நாள் தோறும்‌ நின்று இவ்வாத்மாவை முடிக்கிற அநாதி யான அதி க்ரூரமான கர்மங்கள்‌ பஜநோபக்ரமத்திலே நஸிக்கும்‌; ஆனால்‌ பஜநோபாயமேதென்னில்‌ (அவனுரைத்த மார்க்கத்தே நின்று இருபசை மலமற உணர்வு கொண்டு நலம்‌ செய்வதென்று) பிணக்கற வித்யாதி.. “அம்ப கவன்‌ வணக்குடைத்‌ தவநெறி வழி நின்று” (திருவாய்மொழி 1-3-5) என்று பாஹ்யமான ஷட் ஸமயங்களுக்கும்‌ வைதிக ஸமயத்துக்கும்‌ தன்னில் தானுண்டான பிணக்கறும்படி வேத மார்க்கத்தை யதா, நிரூபணம்‌ பண்ணி யருளிச்‌ செய்தவனுமாய்‌ நிரவதிக வாத்ஸல்யத்தை யுடையனாய்‌ ஜ்ஞாநாதி குண பரிபூர்ணனான க்ருஷ்ணன்‌ திருத் தேர்த் தட்டிலே அர்ஜுந வ்யாஜத்தாலே ஸ்ரீ கீதா முகத்ததாலே “பக்த்யா து அநந்யயா ஸுக்ய:” (கீதை 11-54) என்றும்‌ “ மந்மநா பவ மத்பக்தோ மத்‌யாஜீ மாம்‌ நமஸ்குரு” (கீதை 9-34) என்றும்‌ அருளிச்செய்த பக்தி மார்க்கத்திலே நின்று “நும்மிருபசை யறுத்து” (திருவாய்மொழி 1-3-7) என்றும்‌ “மனனக மலமறக்‌ கழுவி” (திருவாய்மொழி 1-3-8) என்றும்‌ தேவதாந்தரங்களில்‌ பண்ணுகிற பரத்வ ஸங்கை யற்று இவனோ அவர்களோ ஆஸ்ரயணீயரென்று ஸம்ஸயாக்ராந்தராகாதே வாஸநையோடே விட்டு அவனுடை உணர்வு கொண்டு தத் விஷய ஜ்ஞாநத்தைக்‌ கொண்டு “நன்றென நலம்‌ செய்வது” (திருவாய்மொழி 1-3-7) என்று அநந்ய ப்ரயோஜந பக்தியைப்‌ பண்ணுங்கோளென்று. (தாம்‌ மயர்வற மதிநலமருளி பஐநத்திலே சேர்க்கிறார்‌ முதல்பத்தில்‌) ஸர்வேஸ்வரன்‌ தமக்கு மயர்வற மதிநலமருளினாப் போலே தாம்‌ ஸம்ஸாரிகளுக்குத்‌ தம்முடைய க்ருபையாலே தத்வ ஹித புருஷார்த்த, விஷயமாக அஜ்ஞாநத்தைப்‌ போக்கி ஜ்ஞாந பக்திகளை யுபதேஸித்து பகவத்‌ பஜநத்திலே மூட்டுகிறார்‌

    220-சோராத மூவா வேர் முதலாய்‌ உலகம்‌ படைத்தவனென்கிற சிதசித் த்ரய த்ரிவித, காரணமானவன்‌ அறியாதன அறிவிக்க உள்ளம்‌ தேறித்‌ தூ மனம்‌ மருளிலென்னும்‌ ஜ்ஞாந பலமான ஒளிக் கொண்ட மோக்ஷம்‌ தேடிவாட, உலராமலாவி சேர்ந்து சிக்கனப்‌ புகுந்து ஸம்பந்தி களும்‌ சேர்தல்‌ மாறினரென்ன வாழ்வித்து உபகரிக்கிற நீந்தும்‌ கெடலில்‌ எம்மா வீட்டை உப்யாநுகுண மாக்கினவர்‌ ஆஸ்ரயணீயனுக்குப்‌ பூர்வோக்த பரத்வத்தை ஸ்தாபிக்கிற ஸகலபல ப்ரதத்வ காரணத்வ ஸேஷஸாயித்வ ஸ்ரிய:பதித்வ ஸெளலப்‌யாதிகளைத்‌ திண்ணன்‌ அணைவதென்று வெளியிட்டு கள்வா -தீர்த்தனென்று வசந ப்ரத்யக்ஷங்களும்‌ காட்டிப்‌ புலனைந்தென்று ஸம்ஸார மோக்ஷ ஸாதந துக்காநந்த ரஸம்‌ முன்னாக விதிக்கிற அந்தர் கத குணோபாஸகத்தை மதித்துப்‌ பெருக்கி முழ்கி அழுந்திக்‌ கீழ்மை வலம்‌ சூதும்‌ செய்து இளமை கெடாமல்‌ செய்யும்‌ க்ஷேத்ர வாஸ ஸங்கீர்த்தந அஞ்ஜலி ப்ரதக்ஷண கதி சிந்தநாத்‌ யங்க யுக்தம்‌ ஆக்குகிறார்‌ இரண்டாம்‌ பத்தில்‌.

    இரண்டாம்‌ பத்தில்‌ ஸர்வ காரண பூதனான ஸர்வேஸ்வரன்‌ கீழிற் பத்திலே இவ்வாழ்வார்க்கு அஜ்ஞாத ஜ்ஞாபநம்‌ பண்ணி அவனாலே தத்த ஜ்ஞாநரான இவர்‌ அந்த ஜ்ஞாநத்துக்குப்‌ பலமான மோக்ஷத்தை அப்போதே பெற வேணுமென்று ஆசைப்பட்டுப்‌ பெறாமையாலே அவஸந்நராக இவருடைய அவஸாதமெல்லாம்‌ தீரும்படி அவன்‌ வந்து ஸம்ஸ்லேஷித்து அந்த ஸம்ஸ்லேஷத்தாலே வந்த ப்ரீதியை உடையராய்‌ அந்த ப்ரீதியை இவரொருவர்‌ அளவில்‌ பர்யவஸியாதே இவரோடு ஸம்பந்த ஸம்பந்த முடையாரளவும்‌ வெள்ளமிட்டு அந்த ப்ரீதியாலே பரம புருஷார்த்த லக்ஷணமான மோக்ஷத்தை இவர்க்கவன்‌ கொடுக்கத் தேட அந்த மோக்ஷத்தை அவனுடைய சேஷித்வத்துக்கும்‌ தம்முடைய ஸேஷத்வத்துக்கும்‌ அநுகுணமாம்படி நிஷ்கர்ஷித்த இவர்‌ ஆஸ்ரயணீயனான அவனுக்கு கீழ்‌ உக்தமான பரத்வத்தை நிலை பெறுத்துவனவான லக்ஷணங்களையும்‌ வெளியிட்டு ஸம்ஸாரிகள்‌ துக்க நிவ்ருத்தி பூர்வகமான மோக்ஷ ஸுக ப்ராப்திக்கு ஸாதநமாக விதிக்கப்பட்ட ஸ்வரூபாந்தர்கதமான குணோபாஸநத்தை நிஷித்‌தாநுஷ்டானங்களினுடைய த்யாக பூர்வகமாக க்ஷேத்ர வாஸாத்‌ யங்கங்களோடே கூட்டுகிறார்‌ என்கிறார்‌. (சோராத மூவா வேர் முதலாய்‌ உலகம்‌ படைத்தவன்‌” என்கிற சிதசித் த்ரய த்ரிவித காரணமானவன்‌) “சோராத எப்பொருட்கும்‌ ஆதியாஞ்சோதி” (திருவாய்மொழி 2-1-11) “மூவாத்தனிமுதலாய்‌” (திருவாய்மொழி 2-8-5) “எப்பொருட்கும்‌ வேர் முதலாய்‌ வித்தாய்‌” (திருவாய்மொழி 2-8-10) “பொருளென்றிவ்வுலகம்‌ படைத்தவன்‌” (திருவாய்மொழி 2-10-11 என்று பத்‌த முக்த நித்யாத்மகமான சித் த்ரயத்துக்கும்‌ ஸூத்‌த ஸத்வ மிஸ்ர ஸத்வ ஸத்வ ஸூந்யமென்கிற அசித் த்ரயத்துக்கும்‌ நித்ய விபூதியிலே அப்ராக்ருத த்‌ரவ்ய விஸிஷ்டனாய்க்‌ கொண்டு உபாதாநமாயும்‌ இச்சா விஸிஷ்ட வேஷத்தாலே நிமித்தமாயும்‌ விநியோக விஸிஷ்ட வேஷத்தாலே ஸஹகாரியாயும்‌ லீலா விபூதியில்‌ ஸுஷ்ம சிதசித் விஸிஷ்ட வேஷத்தாலே உபாதாநமாயும்‌ ஸங்கல்ப விஸிஷ்டனாய்க்‌ கொண்டு நிமித்தமாயும்‌ ஜ்ஞாந சக்த்யாதி, விஸிஷ்டனாய்க்‌ கொண்டு ஸஹ காரியாயும்‌ போருகையாலே ஸர்வத்துக்கும்‌ நிமித்தோபாதாந ஸஹகாரிகளான த்ரிவித காரணமும்‌ தானேயான ஸர்வேஸ்வரன்‌ (அறியாதன வறிவிக்க உள்ளம்‌ தேறி) “அறியாதன அறிவித்த அத்தா”(திருவாய்மொழி 2-3-2) என்று இவர்க்கஜ்ஞாதமான தத்த்வ ஹித புருஷார்த்தங்களை விஸதமாக அறிவிக்க, “அடியை அடைந்துள்ளம்‌ தேறி” (திருவாய்மொழி 2-6-8)-அத்தாலே இவரும்‌ அவனைக்‌ கிட்டி நெஞ்சிலே தெளிவை உடையராய்‌ (தூமனம்‌ மருளிலென்னும்‌ ஞான பலமான) “தூ மனத்தனனாய்‌’” (திருவாய்மொழி 2-7-8)“மருளில்‌ வண் குருகூர்‌ வண் சடகோபன்‌” (திருவாய்மொழி 2-10-11) என்று

    மோக்ஷ ஏக ஹேதுவாய்‌ பரி ஸூத்‌தமான அந்‌தக் கரணத்தை உடையவராய் அவனுடைய கல்யாண குண விஷயமான அஜ்ஞாந கந்த மில்லாதபடி கீழ்ப் பத்தில்‌ பிறந்த தம்முடைய ஜ்ஞானத்துக்குப்‌ பலமான (ஒளிக் கொண்ட மோக்ஷம் தேடி வாட) “களிப்பும்‌ கவர்வுமித்யாதி, ஒளிக் கொண்ட சோதியமாய்‌ அடியார்கள் குழாங்களை யுடன்‌ கூடுவதென்றுகொலோ” (திருவாய்மொழி 2-35-10) என்று ப்ராக்ருத பதார்த்தங்களினுடைய லாபாலாபங்களினால்‌ வருகிற க்லேஸ ஹர்ஷங்களுமற்று ஷட்‌பாவ விகார ரஹிதமாய்‌ நிரவதிக தேஜோ ரூபமாய அப்ராக்ருதமுமாயிருக்கிற விக்‌ரஹத்தை யுடையோமுமாய்‌ அவனுடைய ரஷகத்வத்திலே தோற்றிருக்கிற நித்ய ஸூரிகளுடைய திரளோடே கூடப் பெறுவதெப்போதோ என்று அந்த மோக்ஷத்தை ஆசைப்பட்டவர்க்கு அப்போதே கிடையாமையாலே “நாடி நாடி வாடும்‌” (திருவாய்மொழி 2-4-1 என்று தேடிப்‌ பெறாமையாலே ஆஸ்ரயத்தை இழந்த தளிர் போலே இவர்‌ வாட, (உலராமல்‌ ஆவி சேர்ந்து) “உள்ளுளாவி உலர்ந்துலர்ந்து” (திருவாய்மொழி 2-4-7) என்கிற இவர்‌ தாபமாறும்படி “அந்தாமத் தன்பு செய்து என்னாவி சேரம்மான்‌” (திருவாய்மொழி 2-5-1 என்கிறபடியே பரமபதத்திலே பண்ணும்‌ வ்யாமோஹத்தை இவர் பக்கலிலே பண்ணி கமர்‌ பிளந்த தறையிலே நீரைப்‌ பாய்ச்சுவாரைப்‌ போலே இவருடைய தாபமாறும்படி இவரோடே நிரதிஸய ஸம்ஸ்லேஷத்தைப்‌ பண்ணி (சிக்கெனப்‌ புகுந்து) சிறிதோரிடமும்‌ புறப்படாத்‌ தன்னுள்ளே உலகுகளொக்கவே விழுங்கி சிக்கெனப்‌ புகுந்தான்‌” (திருவாய்மொழி 2-6-2) என்கிறபடியே அத் யல்பமா யிருப்பதொரு பதார்த்தமும்‌ தன் பக்கலிலே நின்றும்‌ பிரி கதிர்ப் பட்டு நோவு படாதபடி ஸர்வ லோகங்களையும்‌ தன்னுடைய ஸங்கல்ப ஸஹஸ்ரைகதேஸத்திலே வைத்து இனி ஒருக்காலும்‌ பேராதபடி புகுந்து (ஸம்பந்தி களையும்‌ சேர்தல்‌ மாற்றினரென்ன வாழ்வித்து) “எமர்‌ ஏழ்‌ மேல்‌ எழு பிறப்பும்‌ விடியா வெந் நரகத்து என்றும்‌ சேர்தல்‌ மாறினர்‌ ‘ (திருவாய்மொழி 2-7-1) என்று இவருடைய ஸம்பந்த ஸம்பந்‌திகளையும்‌ ஸம்ஸாராந் முக்தராம்படி பண்ணி “எமரேழ்‌ எழு பிறப்பும்‌ மா சதிரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா” (திருவாய்மொழி 2-7-1) என்று என்னுடைய ஸம்பந்தமே ஹேதுவாக என்னோடு ஸம்பந்த ஸம்பந்‌திகளும்‌ கேசவன்‌ தமராம்படி “நாராயணனாலே” (திருவாய்மொழி 2-7-1) என்கிற மா சதிரைப்‌ பெற்று ஸ்ரீவைஷ்ணவ ஸம்பத்தானது ஊற்று மாறாமல்‌ பெருகா நின்றது என்று இவர் தாமே ஆஸ்சர்யப்படும்படி இவரை வாழ்வித்து, (உபகரிக்கிற நீந்தும்‌ கெடலில்‌ எம்மா வீட்டை உபயாநுகுணமாக்கினவர்‌) “நீந்தும்‌ துயரில்லா வீடு” (திருவாய்மொழி 2-8-2) “கெடலில்‌ வீடு” (திருவாய்மொழி 2-9-17 “எம்மா வீடு” (திருவாய்மொழி 2-9-1 என்று துக்க கந்த ரஹிதமாய்‌ அநர்த்த கந்த மில்லாததாய்‌ எவ் வகையாலும்‌ விலஷணமான மோக்ஷத்தை இவர்க்கு உபரிக்கத்‌ தேட எனக்கென்று உபகரிக்கில்‌ மோக்ஷம்‌ அஹங்கார கர்ப்ப மாகையாலே ஐஸ்வர்ய கைவல்யங்களோபாதி ஸ்வரூப விருத்‌த மாகையாலே அது த்யாஜ்யம்‌; எனக்கு மோக்ஷம்‌ தரப் பார்த்ததாகில்‌ “நின்‌ செம்மா பாத பற்புத்‌ தலை சேர்த் தொல்லை அம்மா அடியேன்‌ வேண்டுவதீதே” (திருவாய்மொழி 2-9-1 என்று அகவாய்‌ சிவந்து புறவாய்‌ கறுத்து பரம பூஜ்யமாய்‌ பரம போக்‌யமாய்‌ ஸேஷியானவனுடைய திருவடிகளை ஸேஷ பூதனானவன்‌ தலையிலே கொக்கு வாயும்‌ படு கண்ணியும் போலே சடக்கெனச்‌ சேர்க்க வேணும்‌; ஸேஷியான உன் பக்கல்‌ ஸேஷ பூதனான நான்‌ அபேக்ஷித்துப்‌ பெறுவதுமிது; “தனக்கேயாக எனைக்‌ கொள்ளுமீதே” (திருவாய்மொழி 2-9-4 என்று உபய ஸ்வரூபத்துக் கநுகுணமாக புருஷார்த்தத்தை நிஷ் கர்ஷித்த இவர்

    ஆஸ்ரயணீயனுக்கு பூர்வோக்த பரத்வத்தை ஸ்தாபிக்கிற) ஆஸ்ரயணீயனானவனுக்கு முதற்பத்தில்‌ சொல்லப்பட்ட ஸர்வ ஸ்மாத் பரத்வத்தை நிலை பெறுத்துவனவான (ஸகல பல ப்ரதத்வ காரணத்வ ஸேஷ ஸாயித்வ ஸ்ரீய:பதித்வ ஸெளலப்‌யாதிகளை திண்ணன்‌ அணைவது என்று வெளியிட்டு) ஸகல பல ப்ரதத்வம்‌ முதலான பரத்வ லக்ஷணங்களை “வீடுமுதல்‌ முழுதுமாய்‌” (2-2-1) மோக்ஷ ப்ரப்‌ருத் யஸேஷ புருஷார்த்த ப்ரதனாகையாலே ஸகல பல ப்ரதத்வம்‌ “தேவும்‌ எப்பொருளும்‌” (திருவாய்மொழி 2-2-4) “கருத்தில்‌ வருத்தித்த மாயப் பிரான்‌’‘ (திருவாய்மொழி 2-2-8) “ஆக்கினான்‌ தெய்வ உலகுகளே” (திருவாய்மொழி 2-2-9) என்று ஸர்வ காரணத்வம்‌, “ஆழியம்பள்ளியாரே” திருவாய்மொழி 2-2-6) என்று லக்ஷணையாலே அநந்த ஸாயித்வம்‌ “பூ மகள் தன்னை வேறின்றி விண் தொழத்‌ தன்னுள்‌ வைத்து” (திருவாய்மொழி 2-2-3) என்று ஸ்ரிய:பதித்வம்‌, ‘கண்ணன் கண்‌” (திருவாய்மொழி 2-2-1) “கோபால கோளரி” (திருவாய்மொழி 2-2-2 என்கிற அவதார ஸெளலப்‌ யம்‌ இப்படி இவ்வர்த்தங்களை திண்ணன்‌ வீட்டிலும்‌, அணைவதரவணை மேல்‌” என்று ஸேஷஸாயித்வம்‌, “பூம்பாவை யாகம்‌ புணர்வது” (திருவாய்மொழி 2-8-1) என்று ஸ்ரீய:பதித்வம்‌, “இருவரவர்‌ முதலும்‌ தானே” (திருவாய்மொழி 2-8-1) என்று காரணத்வம்‌, “இணைவனாம்‌ எப்பொருட்கும்‌” (திருவாய்மொழி 2-8-1 என்று அவதார ப்ரயுக்தமான ஸெளலப்‌யம்‌, “வீடு முதலாம்‌” (திருவாய்மொழி 2-8-1 என்று ஸகல பல ப்ரதத்வம்‌ என்கிற இவற்றை அணைவதரவணையிலும்‌ வெளியிட்டு (கள்வா தீர்த்தன்‌ என்று வசந ப்ரத்யக்ஷங்களும்‌ காட்டி) “கள்வா ‘ (திருவாய்மொழி 2-2-10) என்கிற பாட்டாலே, அவதரித்து உன்னுடைய பரத்வம்‌ தெரியாதபடி நின்றாயே யாகிலும்‌ எங்களுக்குக்‌ காரண பூதனான ஸேஷி நீயே என்று தேவதாந்தரங்களில்‌ தலைவனான ப்‌ரஹ்மாதிகளே தங்களுக்குக்‌ காக்ஷி கொடுக்கைக்கு பெரிய திருவடியை மேல் கொண்டு புறப்பட்டால்‌ அவனுடைய திருவடிகளிலே விழுந்து கூப்பிடா நிற்பர்கள்‌ என்று இவ்வர்த்தத்துக்கு வசநத்தையும்‌ “தீர்த்தன்‌ உலகளந்த” (திருவாய்மொழி 2-8-6) என்கிறபாட்டிலே ஒரு அஸ்த்ர லாபத்துக்கு ஒரு தேவதையை உபாஸிக்க வேணுமென்று அர்ஜுநன்‌ சொல்ல அப்பூவை என்‌ காலிலே பொகடென்று க்ருஷ்ணன்‌ அருளிச் செய்ய “பார்த்தோ , விஜேதா மது ஸூதநஸ்ய பாதாரவிந்தார்ப்‌பித சித்ர புஷ்பம்‌ ததேவ கங்கா தர மெளலி மத்‌யே ததர்ம வீர: க்ருத நிஸ்சயார்த்த :” என்கிறபடியே தீர்த்த பூதனான ஸர்வேஸ்வரனுடைய திருவுலகளந்தருளின திருவடிகளிலே அப் பூவைப்‌ பணிமாறி அவற்றோடு ஸஜாதீய மானவை யன்றிக்கே அவை தன்னையே பாடே பக்கலிலே யன்றிக்கே ருத்‌ரன்‌ தலை மேலே ஆப்த வாக்யத்தால்‌ அன்றிக்கே தானே ப்ரத்யக்ஷித்துப்‌ பேரளவுடையனான அர்ஜுநன்‌ நிர்ணயித்த பரத்வம்‌ மந்த மதிகளாலே இன்றாராயும்படி இருந்ததோ என்கிற ப்ரத்யக்ஷத்தையும்‌ காட்டி

    புலனைந்தென்று ஸம்ஸார மோக்ஷ ஸாதந துக்காநந்த ரஸம்‌ முன்னாக விதிக்கிற அந்தர் குணோபாஸநத்தை) “புலனைந்து மேயும்‌ பொறியைந்து நீங்கி நலமந்தமில்லதோர்‌ நாடு புகுவீர்‌” (திருவாய்மொழி 2-8-4) என்று பரிச்சிந்ந வஸ்து க்‌ராஹகமான இந்த்‌ரிய வஸ்யராகை தவிர்ந்து நன்மைக்கு முடிவில்லாதே யிருக்கிற நாட்டிலே புக வேண்டியிருப்பீர்‌ “அலமந்து வீய அசுரரைச்‌ செற்றான்‌ பலமுந்து சீரில்‌ படிமின்‌” (திருவாய்மொழி 2-8-4) என்று தடுமாறி முடியும்படி அஸுர வர்க்கத்தை அழியச் செய்தவனுடைய கல்யாண குணங்களிலே அவகாஹியுங்கோளென்று ஸம்ஸார துக்க நிவ்ருத்தி பூர்வகமான மோக்ஷாநந்த ரஸ ப்ராப்திக்கு ஸாதனமாக விதிக்கப் படுவதாயிருக்கிற “தஸ்மிந்யதந்தஸ்‌த்து, பாஸிதவ்யம்‌” (தைத்திரீய உபநிஷத்‌ என்று ப்‌ரஹ்ம ஸ்வரூபாந்தர்கதமான அபஹத பாப்மத்வாதி குண விஸிஷ்ட வஸ்து உபாஸநத்தை (மதித்துப்‌ பெருக்கி மூழ்கி அழுந்திக்‌ கீழ்மை வலம்‌ சூதுஞ் செய்து இளமை கெடாமல்‌) “சதிரிளமடவார்‌ தாழ்ச்சியை மதியாது” திருவாய்மொழி 2-10-2) “திறமுடை வலத்தால்‌ தீவினை பெருக்கி” (திருவாய்மொழி 210-5) “வல்வினை மூழ்கி” (திருவாய்மொழி 2-10-9) “நரகழுந்தி” (திருவாய்மொழி 2-10-7) “கீழ்மை செய்து” (திருவாய்மொழி 2-10-6) “வலங்கழித்து” (திருவாய்மொழி 2-10-8) “சூதென்று களவும்‌ சூதும்‌ செய்து” (திருவாய்மொழி 2-10-10) “இளரொளி இளமை கெடுவதன்‌ முன்னம்‌” (திருவாய்மொழி 2-10-12) என்று உபாஸந விரோதியான இதர விஷய ப்ராவண்யத்தாலே பாபங்களைக்‌ கூடு பூரித்து அவற்றிலே மறு நனைய மூழ்கி அழுந்தி தாழ்வு பட்டு பலத்தைப்‌ பாழே போக்கி பற்யதோஹரனாய்‌ க்ருத்ரிமனாய்‌ பஸ்யதோ ஹரனாய் -க்ரித்ரமனாய் பால்யத்தைப் பாழே போக்காதே செய்யும் க்ஷேத்ர வாஸ ஸங்கீர்த்தன அஞ்சலி ப்ரதக்ஷிண கதி சிந்தநாதி அங்க யுக்தமாக்குகிறார் இரண்டாம் பத்தில் –பால்ய ஏவ சரேத் தர்மம் –என்றும் தஸ்மாத் பால்யே விவேகாத்மா யததே ஸ்ரேயஸே ஸதா (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-75) என்றும் சொல்லுகிறபடியே பால்யத்திலே கர்த்தவ்யமான -சார்வது சதிரே (2-10-1)போதவிழ் மலையே புகுவது பொருளே (2-10-10)என்றும் க்ஷேத்ர வாஸம் -பதியதி ஏத்தி எழுவது (2-10-2) என்றும் ஸங்கீர்த்தனம் -தொழக் கருதுவதே (2-10-9) என்றும் அஞ்சலி -வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே (2-10-8) என்று ப்ரதக்ஷிணம் -நெறிப்பட யதுவே நினைவது நலமே (2-10-6) என்று கதி சிந்தனம் என்கிற இவை முதலான உபாசந அங்கத்தோடு சேர்க்கிறார் இரண்டாம் பத்தில் என்கிறார்

    221-(1)-முழுதுமாய் எங்கணும் ஒழிவற அருவாகி நின்று தோய்விலனாம் சர்வ வியாபகன் தீர்ந்த அடியார்களை தாளிணைக் கீழ் கொள்ளும் தன் படிக்கும் (2-)நீ தந்த மா மாயப் புணர்வினை பிறப்பு அழுந்தி அலமருகின்றேன் வேரற வரிந்து எந்நாள் எங்கு வந்து தலைப் பெய்வன் என்று கழித்து புகும் தம் காதலுக்கும் சத்ருசமாக கண்டு கொள் என்னும் (3)-ஊனமில் மோஷ பலமான முடிச் சோதியில் அனுபவத்தாலே நித்ய வஸ்து நீடு பெற்று அவச்சேதம் அற்ற அடிமை செய்ய வேண்டும் படி சர்வ ஆத்ம பாவத்தைப் புகழ்ந்து (4)-சொல்லிப் பாடி ஏத்திப் பிதற்றி எழுந்தும் பரந்தும் துள்ளிக் குனித்து தடு குட்டக் கும்பிடு நட்டமிட்டு சிரிக்கக் குழைந்து நையும் ப்ரீதி உகள தம் அடியார் என்ன உடன் கூடும் சாத்யம் வளர (5-)பை கொள் பாம்பு போலே இந்திரிய வ்ருத்தி நியம மற பாடவந்த கவி அன்றிக்கே படைத்தான் ஸ்லோக க்ருத்தாய்-(6 )-குறை முட்டுப் பரி விடர் துயர் துன்பம் அல்லல் துக்கம் தளர்வு கேடுகள் இன்றி அம்ருத ஆனந்த மக்நரானவர் செய்ய தாமரைக் கண்ணன் அமரர் குல முதல் என்று அஞ்சாதபடி எளிவரும் இணைவனாம் என்றவை பரத்வமாம் படி (7-)அவனாகும் சௌலப்ய காஷ்டையை காட்டி வழியைத் தருமவன் நிற்க இழிய கருதுவது என்னாவது வேண்டிற்று எல்லாம் தரும் –தன்னாகவே கொள்ளும் கவி சொல்ல வம்மின் என்று (8 )-முக்த ஐஸ் வர்யத்தை முன்னிட்டு ஸ்வ விருத்தியை மாற்றி ஸ்வ விருத்தியில் மூட்டுகிறார் மூன்றாம் பத்தில் ..

    மூன்றாம்‌ பத்தாலே “தத்‌ ஸ்ருஷ்ட்வா ததே வாநுப்ராவிஸத்‌” (தைத்திரீய உபநிஷத்‌ )என்கிறபடியே கார்யமான சேதநாசேதநங்களை யடைய வியாபித்து தத் கத தோஷை: அஸம்ஸ்ப்ருஷ்டனாய்‌ இருக்கையாலே ஸர்வ வ்யாபகனான ஸர்வேஸ்வரன்‌ கீழ்ப்‌ பத்தாலே இவர்‌ உபயாநுகுணமாக நிஷ்கர்ஷித்த மோக்ஷத்துக்கு பலமான தன்னுடைய விக்‌ரஹாநுபவத்தை இவரைப்‌ பண்ணுவிப்பிக்க இவரும்‌ அநுபவித்து தரித்து அநுபவ ஜநித ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே ஸர்வ வித, கைங்கர்யங்களும்‌ செய்ய வேண்டும்படியான அபி நிவேஸத்தை யுடையராய்த்‌ தம்முடைய அபிநிவேஸ அநு குணமாக அவன்‌ காட்டிக் கொடுத்த அவனுடைய ஸர்வாத்ம பாவத்தைப்‌ பேசி அத்தாலே வந்த ப்ரீதியை யுடையராய்‌ அது அவனளவில்‌ பர்யவஸியாதே பாகவத ஸேஷத்வத்தில்‌ எல்லை யளவும்‌ சென்று அந்த பாகவதர்களுக்கு நிரூபகமான பகவத்‌ வைலக்ஷண்யா நுஸந்தாநத்‌ தாலே தாமும்‌ தம்முடைய கரண க்‌ராமங்களும்‌ சேதந ஸமாதியாலே அநுபவிக்க வேண்டும் படியான பெரு விடாயை உடையராய்‌ இதர ஸ்தோத்ரத்துக்கு அநர்ஹ கரணராய்‌ அவ்வளவே யன்றிக்கே பகவத் ஸ்தோத்ரத்துக்கு அர்ஹ கரணராய்‌ பகவதநுப வத்துக்குத்‌ தமக்கொரு ப்ரதிஹதி தொடக்கமானவையுமற்று நிரதிஸய ஆநந்த யுக்தரானவர்‌ புண்டரீகாக்ஷனாய்‌ ஸுரி ஸேவ்யனானவவனை நம்மாலே ஆஸ்ரயிக்கப் போமோ என்று ஸம்ஸாரிகள்‌ அஞ்சிக்‌ கை வாங்காதே மேல் விழுந்து ஆஸ்ரயிக்கும்படி கீழிரண்டு பத்தாலும்‌ உபதேஸித்த அவதார ஸெளலப்‌யம்‌ பரத்வ ஸ்தாநீயமாம்படி அர்ச்சாவதார ஸெளலப்‌யத்தை யுமுபதேஸித்து அர்ச்சிராதி மார்க்கத்தாலே தேஸ விஸேஷ ப்ராப்தியைப்‌ பண்ணுவிக்குமவனை யொழிய இதர ஸ்தோத்ரத்திலே தாழ விழிகை நிஷ் ப்ரயோஜநம்‌; ஆன பின்பு நீங்கள்‌ ஸகல பல ப்ரதனுமாய்‌ ஸாம்யாபத்தியைக்‌ கொடுப்பானுமா யிருக்கிற அவன்‌ விஷயத்திலே வாசிகமான வடிமை செய்யுங்கோளென்று நிஹீநதமமான இதர ஸேவையை நிவர்த்திப்பித்துத்‌ தம்முடைய வ்ருத்தியான வாசிக கைங்கர்யத்திலே மூட்டுகிறார்‌ என்கிறார் –

    (முழுதுமாயெங்கணு மொழிவற அருவாகி நின்று தோய்விலனாம்‌ ஸர்வ வ்யாபகன்‌) முழுதுமாய்‌ முழுதியன்றாய் ‘(திருவாய்மொழி 3-1-8) ‘ஏழ்ச்சிக் கேடின்றி எங்கணும்‌ நிறைந்த வெந்தாய்‌ திருவாய்மொழி 3-2-4) ” எஞ்ஞான்று மெங்கும்‌ ஒழிவற நிறைந்து நின்ற மெய்ஞ்ஞானச்‌ சோதி” (திருவாய்மொழி 3-2-7) “அளவுடை ஐம்புலன்களறியா வகையால்‌ அருவாள்‌ நிற்கும்‌ யாவையும்‌ யாவரும்‌ தானாய்‌ அவரவர்‌ சமயந்தோறும்‌ தோய்விலன்‌ (திருவாய்மொழி 3-10-10) என்று தேஸ கால வஸ்துக்களாலே பரிச்சேதிக்க வொண்ணாதபடி கார்யமான ஸகல சேதநாசேதநங்களையும்‌ வ்யாபித்து “அநஸ்நந்நந்யோ அபி சாகஸீதி” (கடோபநிஷத்‌ என்கிறபடியே தத்கத தோஷைர ஸம் ஸ்ப்ருஷ்டனாய்‌ இப்படி ஸர்வ வ்யாபகனான ஸர்வேஸ்வரன்‌ (தீர்ந்த வடியார்களைத்‌ தாளிணைக் கீழ்க்‌ கொள்ளும்‌ தன்படிக்கும்‌) “தீர்ந்த வடியவர்‌ தம்மைத்‌ திருத்திப் பணி கொள்ள வல்ல ஆர்ந்த புகழச்சுகனை” (திருவாய்மொழி 3-5-11) என்று தன்னையே உபாயோபேயங்களென்று நிஷ்கர்ஷித்தவர்களை “சன்ம சன்மாந்தரம்‌ காத்தடியார்களைக்‌ கொண்டு போய்த்‌ தன்மை பெறுத்தித்‌ தன்‌ தாளிணைக் கீழ்க்‌ கொள்ளுமப்பனை” (திருவாய்மொழி 3-7-7) என்று இனியொரு ஐந்ம பரம்பரைகளிலே போகாதபடி ரக்ஷித்து ஆரப்‌த ஸரீராவஸாநத்திலே அர்ச்சிராதி மார்க்கத்தாலே தேஸ விஸேஷத்திலே கொடு போய்‌ ஸ்வ ஸ்வரூப ப்ராப்தியைப்‌ பண்ணிக்‌ கொடுத்து தனக்குப்‌ பாதோபதாநமாக விட்டுக்‌ கொள்ளும்படியான ஸேஷியான தன்னுடைய ஒளதார்யத்துக்கும்‌ (நீ தந்த மாமாயப்‌ புணர்வினைப்‌ பிறப்பழுந்தி அலமருகின்றேன்‌ வேரற வரிந்து எந்நாளெங்கு வந்து தலைப் பெய்வன்‌ என்று கழித்துப்‌ புகும்‌ தம்‌ காதலுக்கும்‌) “அந்நாள்‌ நீ தந்த ஆக்கையின்‌ வழி யுழல்வேன்‌” (திருவாய்மொழி 3-2-1 “பன்மா மாயப்‌ பல் பிறவியில்‌ படிகின்ற யான்‌” (திருவாய்மொழி 3-2-2) “பொல்லா ஆக்கையின்‌ புணர்வினை அறுக்கலறா” (திருவாய்மொழி 3-2-3) “வினையியல்‌ பிறப்பழுந்தி கொடுவினைத்‌ தூற்றுள்‌ நின்று பாவியேன்‌ பல காலம்‌ வழிதிகைத் தலமருகின்றேன்‌” (திருவாய்மொழி 3-2-7) என்று ஸ்ருஷ்டி காலத்திலே உன்னை வழிபடுகைக் குடலாக நீ ஸரீரத்தைக்‌ கொடுக்க நான்‌ அதின் வழியே போய்‌ அநர்த்தத்தைச்‌ சூழ்த்துக்‌ கொண்டு ப்ரக்ருதி கார்யமான தேவ மநுஷ்யாதி, ஸரீரங்களிலே அவகாஹித்து ஹேயமான ஸரீரத்துக்கடியாய்‌ ஒன்றோடொன்று பிணைந்திருக்கிற கர்மமடியாக மீண்டும்‌ பாபத்திலே கொடு போய்‌ மூட்டக் கடவதான ஐந்ம பரம்பரைகளிலே யழுந்தி என்னால்‌ அடி யறுக்க வொண்ணாதே அடி காண வொண்ணாதே புகுர வழி தெரியுமத்தனை யொழிய புறப்பட வழி தெரியாதிருப்பதா யிருக்கிற பாபமாகிற மிடைந்த தூற்றிலே கிடந்து உன்னை ப்ராபிக்கைக்கீடான வழி காணாதே கூப்பிட்டு அலமருவா நின்றேன்‌; “வினைகளை வேரறப்‌ பாய்ந்து” (திருவாய்மொழி 3-2-1) “தொன்மா வல்வினைத்‌ தொடர்களை முதலரிந்து” (திருவாய்மொழி 3-2-2) என்று அநாதியாய்‌ மஹத்தாய்‌ என்னாலே போக்கிக்‌ கொள்ள வொண்ணாதபடி வலிதாய்‌ ஸ்ருங்கலாஞ்சலமா(?) யிருக்கிற பாப ஸமூஹங்களை உச்சி வேரோடே யரிந்து பொகட்டு “எந்நாள்‌ யானுன்னை இனி வந்து கூடுவனே–திருவாய்மொழி 3-2-1 “எங்கு வந்து அணுகிற்பனே (திருவாய்மொழி 3-2-5) “ எங்கினித்‌ தலைப் பெய்வனே (திருவாய்மொழி 3-2-9) என்று நான்‌ உன்னைக்‌ கிட்டுவதொரு நாள்‌ அறுதியிட்டுத் தர வேணும்‌ நான்‌ உன்னை எங்கே வந்து கிட்டக்‌ கடவேன்‌ இட்டுகை என்று ஒரு பொருளுண்டோ என்று ஸரீர ஸம்பந்தத்துக்கு நொந்து அதிலுண்டான அருசியோடே “காயம்‌ கழித்து அவன்‌ தாளிணைக் கீழ்ப்‌ புகும்‌ காதலன்‌‘ (திருவாய்மொழி 3-9-8) என்று பகவத் குணாநுபவத்தோடே கால க்ஷேபத்தைப்‌ பண்ணி ஸுரீரத்தை விட்டு அவன்‌ திருவடிகளிலே புக வேணும்‌ என்னும்படியான ஸேஷ பூதரான தம்முடைய ஆசைக்கு (ஸத்‌ருஸமாகக்‌ கண்டு கொள்‌ என்னும்‌) உபய ஸ்வரூபத்துக்கும்‌ அநுகுணமாக “வானவர்‌ நாட்டையும்‌ நீ கண்டு கொள்‌” (திருவாய்மொழி 3-9-9) என்று ஈஸ்வரன்‌ காட்டிக்‌ கொடுக்கிற ( ஊனமில்‌ மோக்ஷ பலமான முடிச் சோதியில்‌ அநுபவத்தாலே நித்ய வஸ்து நீடு பெற்று) “ஊனமில்‌ மோக்கமென்கா” (திருவாய்மொழி 3-4-7) என்று ப்ரகாரமான ஆத்மாநுபவ மாத்ரத்திலன்றிக்கே ப்ரகாரியளவும்‌ செல்ல அநுபவிக்கையாலே ஸ்வரூபாநுரூபமாகக்‌ கீழில்‌ பத்தில்‌ அறுதியிட்ட பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷத்துக்குப்‌ பலமான “முடிச் சோதி’ (திருவாய்மொழி 3-1) என்கிற திருவாய்மொழியில்‌ விக்‌ரஹ வைலக்ஷண்யத்தையும்‌ ஆபரணங்களினுடைய சேர்த்தியையும்‌ அநுபவித்து அவை பரிச்சேதித் தநுபவிக்க வொண்ணா தொழிய இது கரண ஸங்கோசத்தாலேயோ என்றதிஸங்கை பண்ணின இவருடைய அதி ஸங்கையை வஸ்து வைலக்ஷண்ய நிபந்தந மென்னுமிடத்தைக்‌ காட்டி நிவ்ருத்தமாக்க அவ்வநுபவத்தாலே “பெற்றது நீடுயிர்‌ (திருவாய்மொழி 3-2-10) என்கிறபடியே நித்ய வஸ்து ஸத்தை பெற்று ஸத்தா கார்யமும்‌ பலிக்க வேண்டுகையாலே அவச்சேதமற்று அடிமை செய்ய வேண்டும்படி “ஒழிவில்‌ காலமெல்லாம்‌ உடனாய்‌ மன்னி வழுவிலா வடிமை செய்ய” (திருவாய்மொழி 3-3-1 என்கிற பாட்டின் படியே தேஸ காலாவஸ்த்தா, ப்ரகாரங்களை யிட்டு அவச்சேதியாதபடி ஸர்வ தேஸ ஸர்வ கால ஸர்வாவஸ்த்தைகளிலும்‌ ஸர்வவித, கைங்கர்யங்களும்‌ செய்ய வேண்டும்படியான அபிநிவேஸத்தாலே (ஸர்வாத்ம பாவத்தைப்‌ புகழ்ந்து) புகழு நல்லொருவனிலே (திருவாய்மொழி 3-4) பூதங்கள்‌ பெளதிகங்கள்‌ உஜ்ஜ்வலமான மாணிக்யாதி பதார்த்தங்கள்‌ காநாதி ஸப்‌த ராஸிகள்‌ மோக்ஷாதி புருஷார்த்தங்கள்‌ ஜகத்துக்கு ப்ரதாநரான ப்‌ரஹ்ம ருத்‌ராதிகள்‌ இவற்றுக்கடைய காரணமான ப்ரக்ருதி புருஷார்த்தங்கள்‌ ஆக விவற்றை யடைய விபூதியாக வுடையனாய்‌ இவை தனக்குள்ளே அந்தராத்மதயா வ்யாபித்து தத்கத தோஷை: அஸம்ஸ்ப்ருஷ்டனா யிருக்கிற படியைப்‌ பேசி அநுபவித்து அவ்வநுபவத்தாலே ப்ரீதராய்‌ (சொல்லிப் பாடி யேத்திப்‌ பிதற்றி யெழுந்தும்‌ பறந்தும்‌ துள்ளிக்‌ குனித்துத்‌ தடுகுட்டக்‌ கும்பிடு நட்டமிட்டுச்‌ சிரிக்கக்‌ குழைந்து நையும்‌ ப்ரீதி யுகள) “எம்மானைச்‌ சொல்லிப் பாடி” (திருவாய்மொழி 3-5-1 “பண்கள்‌ தலைக் கொள்ளப்‌ பாடி” (திருவாய்மொழி 3-5-2”முனிவின்றி யேத்தி’ (திருவாய்மொழி 3-5-6 “பேர் பல சொல்லிப்‌ பிதற்றி” (திருவாய்மொழி 3-5-8) ‘ எழுந்தும் பரந்தும்‌ துள்ளாதார்‌‘திருவாய்மொழி 3-5-1) “ஏத்திக்‌ குனிப்பார்‌’ (திருவாய்மொழி 3-5-6) தடு குட்டமாய் (திருவாய்மொழி 3-5-3) “கும்பிடு நட்டமிட்டாடி” (திருவாய்மொழி-3-5-4)உலோகர்‌ சிரிக்க நின்றாடி உள்ளங் குழைந்து நைய” (திருவாய்மொழி 3-5-8) என்று வாசிக காயிக மாநஸங்களினாலே களித்து அந்த ப்ரீதி தலை மண்டை யிட்டு (தம்‌மடியாரென்று உடன் கூடும்‌ ஸாத்‌யம்‌ வளர) இப்படி யுண்டான ப்ரீதி அவ் வளவில்‌ பர்யவஸியாதே “தம்மடியாரடியார்‌ தமக்கடியார்‌ அடியார் தம்‌ அடியார்‌ அடியோங்களே (திருவாய்மொழி 3-7-10) என்று ஸேஷத்வத்தினுடைய எல்லையிலே நிற்கும்படி “அடியார் குழாங்களை உடன்‌ கூடுவதென்று கொலோ” (திருவாய்மொழி 2-3-10) என்று கீழில்‌ பத்திலே ப்ரார்த்தித்த பாகவத ஸேஷத்வமாகிற புருஷார்த்தம்‌ அதினுடைய எல்லை யளவாக வளர (பைகொள்‌ பாம்பு போலே இந்த்‌ரிய விருத்தி நியமமற) “பைகொள்‌ பாம்பேறி உறை பரனே‘ (திருவாய்மொழி 3-8-4) என்று திருவனந்தாழ்வான்‌ சஷுஸ்ரவா: என்கிறபடியே ஒரு கரணத்தாலே மற்றைக்‌ கரணத்தில்‌ கார்யமும்‌ கொள்ளுமா போலே “நெடியானே என்று கிடக்கு மென்‌ நெஞ்சமே” (திருவாய்மொழி 3-8-1 “வஞ்சனே என்னு மெப்போதும்‌ என்‌ வாசகமே” (திருவாய்மொழி 3-8-2) “ஆனாயர்‌ தாயவனே என்று தடவுமென்‌ கைகளே” (திருவாய்மொழி 3-8-3) என்றித்யாதிகளாலே கரணம்‌ சேதந ஸமாதியாலே கரணாந்தர ப்ரவருத்தியையும்‌ ஆசைப் படும்படியான பெரு விடாயை உடையராய்‌ (பாடவந்த கவி யன்றிக்கே படைத்தான்‌ ஸ்லோக க்ருத்தாய்‌) “வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேனல்லேன்‌” (திருவாய்மொழி 3-9-9) என்று இதர ஸ்தோத்ரத்துக்கநர்ஹ கரணராய்‌ “ஒன்றி யொன்றி உலகம்‌ படைத்தான்‌ கவியாயினேற்கு” (திருவாய்மொழி 3-9-10) என்று ஐகத் ஸ்ருஷ்ட்யாதி முகத்தாலே தம்முடைய ஜீவநத்துக்கு க்ருஷி பண்ணின ஸர்வேஸ்வரன்‌ விஷயத்திலே “அஹம்‌ ஸ்லோக க்ருத்‌ அஹம்‌ ஸ்லோக க்ருத்‌” (தைத்திரீய உபநிஷத்‌) என்கிற உபநிஷத்தின்படியே கவிபாடுமவருமாய்‌ (குறை முட்டுப்‌ பரிவிடர்‌ துயர்‌ துன்ப மல்லல்‌ துக்கம்‌ தளர்வு கேடுகளின்றி அம்ருதாந்த மக்‌நரானவர்‌) தேஸ விஸேஷத்தில்‌ போயநுபவிக்கப்‌ பெற்றிலேனென்கிற குறைவில்லை; இவ்வநுபவத்துக்கு எனக்கொரு ப்ரதிஹதி யில்லை, ஏகதேஸமும்‌ மநோதுக்க, மில்லை; வகுத்த ஸேஷி என்று பற்றுகையாலே எனக்கொரு துக்கமில்லை. ருசி முன்னாக தேஸ விஷேஷ ப்ராப்த பண்ணுகிற எனக்கு வைதிக புத்ரர்களைப்‌ போலே மீளில்‌ செய்வதென்‌ என்கிற துக்கமில்லை; இங்கே அவனுடைய கல்யாண கு ணங்களை நெருங்க புஜித்த எனக்கொரு தேஸ விஸேஷத்திலே போகப் பெற்றிலேன்‌ என்கிற துக்க மில்லை; இவ் விபூதி அவனுடைய லீலை என்றறிந்த வெனக்கு ஒரு தளர்த்தி யில்லை: எனக்காக ஸர்வ வ்யாபகனா யிருக்கிறவனைப் பற்றின எனக்கொரு கேடில்லை. அவனுடைய லீலா விபூத்யந்வயமாகில்‌ செய்வதென்‌ என்கிற அல்லலில்லை; ஆஸ்சர்ய பூதனான க்ருஷ்ணனைப்‌ பற்றின எனக்கொரு கேடில்லை; என்றிப்படித்‌ தாமே சொல்லும்படி அம்ருதரான முக்தர்‌ பகவதநுப வத்தால்‌ ஆநந்திக்குமாபோலே அவ்வாநந்த ஸாக,ரத்திலே மக்‌நரான இவர்‌ (செய்யதாமரைக்‌ ௧ண்ணன்‌ அமரர்‌ குல முதல்‌ என்று அஞ்சாதபடி) “செய்ய தாமரைக்‌ கண்ணனாய்‌” (திருவாய்மொழி 3-6-1 “எஞ்சலிலமரர்‌ குல முதல்‌ (திருவாய்மொழி 3-6-9) “அஞ்சி நீர்‌ உலகத்துள்ளீர்கள்‌ (திருவாய்மொழி 3-6) என்று புண்டரீகாஷனான ஸர்வேஸ்வரன்‌ ஜ்ஞாந ஸங்கோசமில்லாத நித்ய ஸூரிகளுடைய திரளுக்கு நிர்வாஹகனன்றோ, ஸம்ஸாரிகளான நம்மாலே அவனை ஆஸ்ரயிக்கப்‌ போமோ என்றஞ்ச வேண்டாதபடி (எளிவரு மிணைவனாம்‌ என்றவை பரத்வமாம்படி) “எளிவரும்‌ இயல்வினன்‌’ (திருவாய்மொழி 1-3-2) “இணைவனாம்‌ எப்பொருட்கும்‌” (திருவாய்மொழி 2-8-1 என்று பத்துடை யடியவரிலும்‌ அணைவதரவணையிலும்‌ வெளியிட்ட அவதார ஸெளலப்‌ யம்‌ பரத்வ ஸ்த்தாநீயமாம்படி (அவனாகும்‌ ஸெளலப்‌ய காஷ்டையைக்‌ காட்டி) “நெஞ்சினால்‌ நினைப்பான்‌ யவன்‌ அவனாகும்‌ கடல்‌ வண்ணனே (திருவாய்மொழி 3-6-9) என்று மநஸ்ஸாலே யாதொன்றைத்‌ திருமேனியாகக்‌ கோலினிகோள்‌ அபரிச்சேத்‌ய மஹிமனான ஸர்வேஸ்வரன்‌ அதைத்‌ தனக்கு அஸாதாரண விக்‌ரஹமாக விரும்பும்‌ என்று “யே யதா, மாம்‌ ப்ரபத்‌யந்தே தாம்ஸ்ததைவ பஜாம் யஹம்‌’ (கீதை 4-11 என்றும்‌ “அர்ச்யஸ் ஸர்வ ஸ ஹிஷ்ணு: அர்ச்சக பராதநாகிலாத்ம ஸ்த்திதி.” ஸ்ரீரங்கராஜஸ்தவம்‌ 74) என்கிற அர்ச்சாவதார ஸெளலப்‌யத்தைக்‌ காட்டி (வழியைத்‌ தருமவன்‌ நிற்க இழியக் கருதுவது என்னாவது) ‘ஓழிவொன்றில்லாத இத்யாதி, ஓர்‌ மானிடம்‌ பாடல்‌ என்னாவதே” (திருவாய்மொழி 3-9-3) என்று யாவதாத்ம பாவி பகவதநுபவத்தோடே வர்த்திக்கிற தேஸத்தையும்‌ அவ்வநுபவம்‌ தான்‌ ஒரு சிறாங்கை என்னும்படியான அர்ச்சிராதி, மார்க்கத்தையும்‌ அத்தேஸ விஸேஷத்தையும்‌ ப்ராபிக்கிற உபாயத்தையும்‌ தருகிறவன்‌ நம்மை ஒரு சொல்‌ சொல்லுவாரோ என்று அவஸர ப்ரதீக்ஷனாய்‌ நிற்க அவனை விட்டு ஒரு சொல்லுக்குப்‌ பாத்தம் போராதானாய்‌ அசித் ப்ராயனாய்‌ நீர்க் குமிழி போலே உடைந்து போகிற ஷூத்‌ர மநுஷ்யனைக்‌ கவிபாடி முன்பு நின்ற நிலையிலுங் காட்டில்‌ தாழவிழிய நினைக்கிற இத்தாலே என்ன ப்ரயோஜநமுண்டு? அத்தால்‌ ஸ்வரூபம்‌ பெற்றிலிகோள்‌, அபிமதம்‌ பெற்றிலிகோள்‌; (வேண்டிற்றெல்லாம்‌ தரும்‌) ‘ஸகல பல ப்ரதோ ஹி விஷ்ணு?” (விஷ்ணுதர்மம்‌ என்கிறபடியே ஸர்வாபேக்ஷிதங்களையும்‌ கொடுக்கும்‌ (தன்னாகவே கொள்ளும்‌) “பரமம்‌ ஸாம்யமுபைத” (முண்டகோபநிஷத் ) என்கிறபடியே தன்னோடு ஸாம்யாபத்தியைக்‌ கொடுக்கும்‌, தனக்கநந்யார்ஹ ஸேஷமாக்கிக்‌ கொள்ளும்‌ (கவி சொல்ல வம்மின்‌ என்று) இதுக்கு நீங்கள்‌ செய்ய வேண்டுவதொன்றும்‌ இல்லை. இதரரை ஸ்தோத்ரம்‌ பண்ணி உங்கள்‌ கரணங்களைப்‌ பாழே போக்காதே வாய்‌ படைத்த ப்ரயோஜநம்‌ போரும்படி இவ் விஷயத்திலே ஸ்தோத்ரம்‌ பண்ண வாருங்கோளென்று (முக்தைஸ்வர்யத்தை முன்னிட்டு) “ஹாவு ஹாவு ஹாவு அஹமந்ந மஹமந்ந மஹமந்நம்‌’ (தைத்திர்யோபநிஷத்‌) என்று முக்தருடைய ஐஸ்வர்யமான வாசிக கைங்கர்யத்தை முன்னிட்டு (ஸ்வவ்ருத்தியை மாற்றி ஸ்வ வ்ருத்தியிலே மூட்டுகிறார்‌) “ஸேவா ஸ்வ வருத்திராக்‌யாதா தஸ்மாத்தாம்‌ பரிவர்ஜயேத்‌’ (மநு ஸ்ம்ருதி’ என்று அப்ராப்த விஷயத்திலே ஸேவை நிஹீந தரமாகையாலே அந்த ஸ்வ வ்ருத்தியை மாற்றி சாயாவாஸத்வமநுகச்சேத்‌”(மூல ஸம்ஹிதை )என்றும்‌ “ஸா கமர்த்தம்‌ ந ஸேவ்யதே” (விஹகேஸ்வர ஸம்ஹிதை 24-14) என்றும்‌ விதிக்கப் படுகிற ப்ராப்த விஷயத்திலே புகழு நல்லொருவனில் படியே தம்முடைய வாசிக வருத்தியிலே மூட்டுகிறார்‌ முன்றாம்‌ பத்தில் -என்கிறார் –

    222-(1 )-ஈசனை ஈசனின் ஈசன் பால் என்ன ஏர்கொள் வானத்தும் ஆயே என்கிற வியாப்தி நிறம்பெற தனிக் கோல் செலுத்தும் -சர்வ நியந்தா –ஒழிவில் காலத்துக்கு சேர -பூர்வ போகங்களை ஒதுமால் எய்தின சாபலத்துக்கு சேர -சம காலமாக்கிப்(2-)போதால் வணங்காமை தீர்த்த பிரணயித்வத்தாலே காதல் மையல் ஏறிய பித்தாய் (3)-தேச தூரத்துக்குக் கூவியும் கொள்ளாய் என்றது தீர கண்ட சதிரையும் ஒரு நிலமாகக் காட்ட வீவில் இன்பம் கூட்டினை என்று முக்த போக மானச ப்ராப்தி பலமான தேவதாந்தர ஆத்ம ஆத்மீய லோக யாத்ரை ஐஸ்வர்ய அஷரங்களில் வைராக்கியம் -உன்னித்து உயிர் உடம்பினால் கொடு உலகம் வேட்கை எல்லாம் ஒழிந்தேன் என்ன உடையரானவர் (4)-ஒரு நாயகம் என்று ராஜ்ய ஸ்வர்க்க ஆத்ம அனுபவ அல்ப அஸ்த்ரத்வ சாவாதிகத் வாதிகளையும் (5-)ஆடுகள் இறைச்சி கரும் செஞ்சோறு ஆகிற நிந்த்யங்களாலே இளம் தெய்வத்துக்கு இழைத்தாடும் நிஹீநதையையும் (6)-பேச நின்ற தேவாத ஞான சக்தி சாபேஷத்வாதிகளையும் (7-)இலிங்கத்து விளம்பும் பாஹ்ய குத்ருஷ்டி மத தமோ நிஷ்டததையும் சொல்லி ஓடிக் கண்டீர் (8)-கண்டும் தெளிய கில்லீர் அறிந்து ஓடுமின் ஆட் செய்வதே உறுவது ஆவது என்று விரக்தி பூர்வகமாக ஆச்ரயனத்தை ஆஸ்ரயணத்தை ருசிப்பிக்கிறார் நாலாம் பத்தில் 

    நாலாம்‌ பத்திலே கீழ்ச் சொன்ன வ்யாப்தி ஆகாஸ வ்யாப்தி போல்‌ அன்றிக்கே-“அந்த: ப்ரவிஷ்டஸ் ஸாஸ்தா ஜநாநாம்‌ ஸர்வாத்மா” (ஆரணம்‌ 3-20) என்றும்‌-“ஆத்மாநமந்தரோ யமயதி” (ப்‌ருஹ தாரண்யகம்‌) என்றும்‌ “ஸாஸ்தா விஷ்ணு:அஸேஷஸ்ய ஐகதோ யோஹ்ருதி.ஸ்திதி .” ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌ 1-17-20 என்றும்‌ சொல்லுகிறபடியே அந்த வ்யாப்தி நிறம் பெறும்படி ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களினுடையவும்‌ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி தானிட்ட வழக்காம்படி நியமித்துக்‌ கொண்டு போருகையாலே ஸர்வ நியந்தாவான ஸர்வேஸ்வரன்‌ கீழ்‌ ஒழிவில்‌ காலத்தில்‌ கைங்கர்யாபி நிவேஸம்‌ போலே தேஸ கால விப்ரக்ருஷ்டமான அபதாநங்களை தத்தேஸ கால விஸிஷ்டமாக அநுபவிக்க வேணுமென்று இவர்க்குக்‌ காலோபாதியைக்‌ கழித்து ஸம காலமாக்கி யநுபவிப்பித்து இவருடைய இழவைத்‌ தீர்த்து இவருடைய கரண த்ரய வ்யாபாரத்தையும்‌ யோக்‌யமாக்கிக்‌ கொள்ள அந்த ப்ரணயித்வ குணத்திலே தோற்று ஸத்‌ருஸ பதார்த்தங்களையும்‌ ஸம்பந்‌தி பதார்த்தங்களையும்‌ அவனென்று பிச்சேறி தேஸ விஸேஷத்திலே அநுபவத்தை யாசைப்பட்டுக்‌ கூப்பிட்ட இவர்க்கு அவ் விழவும்‌ தீரும்படி “ஸ்ரியா ஸார்த்தம்‌ ஜகத்பதி: ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர்‌ பாகவதைஸ்‌ ஸஹ” (லைங்கம்‌) என்கிறபடியே தேஸ விஸேஷத்திலே பெரிய பிராட்டியாரும்‌ தானுமே போக்தாக்களா யிருக்கிற இருப்பை ப்ரத்யக்ஷாநுபவம் போலே அநுபவத்துக்கு விஷயமாக்க இவருமநுபவித்து மாநஸாநுபவமாகையாலே தத் பலமான பகவத்‌ வ்யதிரிக்தங்களான தேவதாந்தரம்‌ முதலானவற்றிலே வைராக்‌யத்தை உடையராயிருக்கிற இவரை ஐஸ்வர்ய கைவல்யங்களினுடைய அல்பாஸ்திரத்வாதி தோஷங்களையும்‌ நிந்த்‌ய பதார்த்தங்களைக்‌ கொண்டு ஷுத்‌ர தேவதா பஜனம்‌ பண்ணுகிற இதினுடைய தண்மையையும்‌ ப்ரஸம்ஸா பரமான வாக்யங்களாலே சொல்லப்பட்டு பகவத் விபூதி பூதராய்‌ இருக்கச்‌ செய்தே இவனோடே விகல்பிக்கலாம்படி அவனாலே தத்தமான ஐஸ்வர்யத்தை உடையராயிருக்கிற ப்‌ரஹ்ம ருத்‌ரர்களுடைய அஜ்ஞாந அஸக்தி ஸாபேக்ஷத்வாதிகளையும்‌, பாஹ்ய குத்‌ருஷ்டி மதங்களினுடைய தமோ நிஷ்டதைகளையும்‌ வெளியிட்டு தேவதாந்தரங்களை ஆஸ்ரயித்து தத்பலமும்‌ பெற்றுப்‌ போனிகோள்‌; ஸர்வேஸ்வரனுடைய ஜகந் நிகரணாதி ஸர்வ சேஷ்டிதங்களாலும்‌ ஸர்வேஸ்வரனே ரஷகன்‌ அல்லாதாரடைய ரக்ஷ்ய பூதரென்னும்‌ அர்த்தத்தை வ்யாஸ பராஸராதிகளுடைய வசநங்களாலே கண்டு வைத்தும்‌ தேற மாட்டுகிறிகோள்‌; இப்படி நீங்கள்‌ தேறாதிருக்கைக்கடி அவனிட்ட வழக்கா யிருக்கிற ப்ரக்ருதி ஸம்பந்தம்‌; தத்‌ விமோசநோபாயம்‌ அவன்‌ திருவடிகளே என்றறிந்து ஆஸ்ரயித்துத்‌ தப்பப் பாருங்கோள்‌, அவன்‌ திருவடிகளில்‌ கைங்கர்யமே உங்களுக்குச்‌ சீரிய புருஷார்த்தம்‌ என்று ப்ரயோஜநாந்தரங்களுடையவும்‌ தேவதாந்தரங்களினுடையவும்‌ விரக்தி முன்னாக பர தேவதை ஸர்வேஸ்வரனே என்றும்‌ தத்‌ விஷய கைங்கர்யமே பரம ப்ரயோஜநமென்றும்‌ உபதேஸித்து பகவத்‌ ஸமாஸ்ரயணத்தை ருசிப்பிக்கிறார்‌ என்கிறார்‌.

    (ஈசனை ஈசன்பாலென்ன ஏர்கொள் வானத்தும்‌ ஆயே என்கிற வ்யாப்தி நிறம் பெறத்‌ தனிக்கோல்‌ செலுத்தும்‌ ஸர்வ நியந்தா ) “மறுகலிலீசனை” (திருவாய்மொழி 4-1-10)’ ஈசன்‌ ஞாலமுண்டுமிழ்ந்த” (திருவாய்மொழி 4-3-2) “ஈசன்பாலோர்‌ அவம்‌ பறைதல்‌’ (திருவாய்மொழி 4-10-4) என்று நியந்த்ரு வாசகமான ஸப்தத்தாலே சொல்லும்படி ‘ஏர்கொளேழுலகமும்‌ துன்னி முற்றுமாகி நின்ற சோதி ஞான மூர்த்தியாய்‌” (திருவாய்மொழி 4-3-8) “வானத்தும்‌ வானத்துள்ளும்பரும்‌ மண்ணுள்ளும்‌ மண்ணின் கீழ்த்‌ தானத்தும்‌ எண்டிசையும்‌ தவிராது நின்றான்‌” (திருவாய்மொழி 4-5-9) “ஆயே இவ்வுலகத்து நிற்பனவும்‌ திரிவனவும்‌ நீயே” (திருவாய்மொழி 4-9-7) என்று கீழ்ப்பத்தில்‌ சொன்ன வ்யாப்தி ஆகாஸ வ்யாப்தி போலன்றிக்கே அது நிறம் பெறும்படி “வீற்றிருந்தேழுலகும்‌ தனிக்கோல்‌ செல்ல” (திருவாய்மொழி 4-5-1) என்னும்படி உபய விபூதியும்‌ தன்‌ நியமனத்திலே யாம்படி தன்‌ ஆஜ்ஞையை நடத்துகிற ஸர்வ நியந்தாவான ஸர்வேஸ்வரன்‌ (ஒழிவில் காலத்துக்குச்‌ சேர பூர்வ போகங்களை ஓதுமாலெய்தின சாபலத்துக்குச்‌ சேர ஸமகாலமாக்கி) “ஒழிவில்‌ காலமெல்லாம்‌ உடனாய்‌ மன்னி (திருவாய்மொழி 3-3-1) என்று ஸர்வதேஸ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும்‌ அடிமை செய்ய வேணுமென்று கீழ்க் கழிந்த காலத்தில்‌ அடிமையையும்‌ ஆசைப்பட்டதுக்கு ஒக்க தேஸ கால விப்ரக்ருஷ்டங்களாயிருக்கிற அவனுடைய அபதானங்களை “மாதர் மா மண்‌ மடந்தை பொருட்டு இத்யாதி, ஒதும்‌ மால்‌ எய்தினள்‌” (திருவாய்மொழி 4-2-6) என்று தத் தேஸ கால விஸிஷ்டமாக அநுபவிக்க வேணுமென்று பிச்சேறும்படியான இவருடைய சாபல்யத்துக்குச் சேர காலோபாதியைக்‌ கழித்து வர்த்தமாந காலம்‌ போலே ஸம காலமாக்கி அநுபவிப்பித்து (போதால்‌ வணங்காமை தீர்த்த ப்ரணயித்வத்திலே காதல் மையலேறிய பித்தாய்‌) “பூவை வீயா நீர்‌ தூவிப்‌ போதால்‌ வணங்கேனேலும்‌ நின்‌ பூவை வீயாம்‌ மேனிக்குப்‌ பூசும்‌ சாந்து என்‌ நெஞ்சமே” (திருவாய்மொழி 4-5-1என்று; “பூசுஞ்சாந்தென்‌ நெஞ்சமே இத்யாதி ஏக மூர்த்திக்கே” (திருவாய்மொழி 4-3-2) என்று விரோதி நிரஸநம்‌ பண்ணுகிற அவதார காலங்களிலே உதவி புஷ்பாத்‌ யுபகரணங்‌களைக்‌ கொண்டு ஸிஸிரோபசாரம்‌ பண்ணப்‌ பெற்றிலேனே யாகிலும்‌ ஸர்வ நியந்தாவாய்‌ ப்ரளயாத்யாபத் ஸகனானவன்‌ தன்னுடைய அத்‌விதீயமான விக்‌ரஹத்துக்கு என்னுடைய கரண த்ரய வ்யாபாரத்தையும்‌ தனக்கு போக்யமாகக்‌ கொள்ளுவதே என்று இவர் தாமே ஈடுபடும்படி இவருடைய இழவு தீர்த்த அவனுடைய ப்ரணயித்வ குணத்திலே “காதல்‌ மையலேறினேன்‌” (திருவாய்மொழி 4-3-9 என்கிறபடியே அவன் பக்கல்‌ உண்டான ப்ராவண்யாதிஸயத்தாலே அறிவழிய அது வெள்ளக்‌ கேடாகாதபடி அவன்‌ அல்பம்‌ பேர நிற்க அவனோடு ஸத்‌ருஸ பதார்த்தங்களையும்‌ ஸம்பந்தி பதார்தங்களையும்‌ அவனென்று ப்‌ரமித்து “என்‌ பெண்கொடி ஏறிய பித்தே’‘ (திருவாய்மொழி 4-4-6) என்று பிச்சேறி (தேஸ தூரத்துக்குக்‌ கூவியும்‌ கொள்ளாய்‌ என்றது தீரக்‌ கண்ட சதிரையும்‌ ஒரு நிலமாகக்‌ காட்ட) “கோல மேனி காண வாராய்‌ கூவியும்‌ கொள்ளாயே” (திருவாய்மொழி 4-7-1) என்று உன்னுடைய வடிவழகை வந்தநுபவிப்பித்தருளுதல்‌ அங்கே அருளப்பாடிடுதல்‌ செய்கிறிலை என்று தேஸ விஸேஷத்தில்‌ அநுபவத்தை ஆசைப்பட்டுக்‌ கூப்பிட்ட இவருக்கு “ஒண்டொடியாள்‌ திருமகளும்‌ நீயுமே நிலா நிற்பக்‌ கண்டசதிர்‌ கண்டொழிந்தேன்‌” (திருவாய்மொழி 4-9-10) என்று நித்ய விபூதியிலே பெரிய பிராட்டியாரும்‌ நீயுமே போக்தாக்களாய்‌ அவ் விபூதி யிலுள்ளாரடைய போகோபகரண கோடியிலேயாம்‌ படி கண்டு வைத்த கட்டளையை நான்‌ கண்டேன்‌ என்று கீழ்‌ காலோபாதியைக்‌ கழித்து ஸம காலமாக்கினாப் போலே அவ் விபூதியிலநுபவத்தை இங்கே யிருந்தே அநுபவிக்கலாம்படி ஒரு போகியாக ப்ரகாஸிப்பிக்க (வீவிலின்பம்‌ கூட்டினை என்று முக்த போகம்‌) “வீவிலின்பம்‌ மிக எல்லை நிகழ்ந்தனன்‌ மேவியே” (திருவாய்மொழி 4-5-3) என்று அவனைக்‌ கிட்டி நிரதிஸயாநந்தியாகப்‌ பெற்றேன்‌, “கூட்டரிய திருவடிக்கள்‌ கூட்டினை நான்‌ கண்டேனே” (திருவாய்மொழி 4-9-8) என்று ஸ்வ யத்நத்தாலே கிட்டுவார்க்குக்‌ கிட்ட வரிதாயிருக்கிற திருவடிகளை உன்னருளாலே பெற விருக்கிற நான்‌ பெற்றநுபவிக்கும்படி கூட்டினாய்‌, நானுங்கண்டநுபவிக்கப்‌ பெற்றேன்‌ என்று பேசும்படியான முக்த போகமான இவ்வநுபவம்‌ மாநஸாநுபவமாய்‌ அந்த மாநஸ ப்ராப்திக்குப்‌ பலமான (தேவதாந்தராத்மாத்மீய லோக யாத்ரைஸ்வர்ய அக்ஷரங்களில்‌ வைராக்‌யம்‌ உன்னித்துயிருடம்பினால்‌ கொடுவுலகம்‌ வேட்கை யெல்லா மொழிந்தேனென்ன உடையரானவர்‌) “உன்னித்து மற்றொரு தெய்வம்‌ தொழாள்‌” (திருவாய்மொழி 4-6-10) என்று தன்னெஞ்சாலே துதித்து ஒரு தேவதைக்கு மூச்சுண்டென்று தொழுதறியாள்‌ என்று தேவதாந்தர விஷயமான வைராக்‌யத்தையும்‌ “உயிரினால்‌ குறைவிலமே” (திருவாய்மொழி 4- 8-10) “உடம்பினால்‌ குறைவிலமே’ (திருவாய்மொழி 4-8-9 என்று ஆத்மாத்மீயங்களில்‌ வைராக்‌யத்தையும்‌ “கொடு வுலகம்‌ காட்டேல்‌’ (திருவாய்மொழி 4-9-7) என்று லோக யாத்ரையில்‌ வைராக்‌யத்தையும்‌ “வேட்கை யெல்லாம்‌ விடுத்து” (திருவாய்மொழி 4-9-9) என்று ஐஸ்வர்யத்தில்‌ வைராக்‌யத்தையும்‌ “சிற்றின்பம்‌ ஒழிந்தேன்‌” (திருவாய்மொழி 4-9-10) என்று அக்ஷரமென்று சொல்லப்படுகிற ஆத்மாநுபவத்தில்‌ வைராக்‌யத்தையும்‌ உடையரான விவர்‌ (ஒருநாயகம்‌ என்று ராஜ்ய ஸ்வர்காத்மாநுபவ அல்பாஸ்திரத்வ ஸாவதி கத்வாதிகளையும்‌) ஒரு நாயகத்திலே ‘ஒரு நாயகமாய்‌ ஓட உலகுடனாண்டவர்‌ பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம்‌ கொள்வர்‌” (திருவாய்மொழி 4-1-1 )என்று “ராஜ்யம்‌ நாம மஹா வ்யாதி : அசிகத்ஸ்யோ விநாமந: ப்‌ராதரம்‌ வா ஸுதம்‌ வாபி த்யஜந்தி கலு பூமிபா:” என்கிறபடியே ராஜ்யைஸ்வர்யத்தினுடைய அல்பதையையும்‌ ‘குடிமன்னுமின்சுவர்க்கம்‌ எய்தியும்‌ மீள்வர்கள்‌” (திருவாய்மொழி 4-1-9) என்றும்‌ “ஷீணே புண்யே மர்த்யலோகம்‌ விஸந்தி” (கீதை 9-21 என்று ஸ்வர்க்காநுப வத்தினுடைய ௮ஸ்திரத்வத்தையும்‌ “இறுகலிறப்பு” (திருவாய்மொழி 4-1-10) என்று ஆத்மாநுபவத்தினுடைய ஸாவதிகத்வத்தையும்‌ (ஆடு கள்ளிறைச்சி கருஞ் செஞ்சோறாகிற நிந்த்‌யங்களாலே இளந் தெய்வத்துக்கு இழைத்தாடும்‌ நிஹீநதையையும்‌) ‘அணங்குக்கருமருந்தென்று அங்கோராடும்‌ கள்ளும்பராய்‌” (திருவாய்மொழி 4-6-7) “அங்கோர்கள்ளுமிறைச்சியும்‌ தூவேன்மின்‌” (திருவாய்மொழி 4-6-3) “கருஞ்சோறும்‌ மற்றைச்‌ செஞ்சோறும்‌” (திருவாய்மொழி 4-6-4) என்று “த்‌ரவ்யம்‌ நிந்த்‌ய ஸூராதி தைவத மதி ஷூத்‌ ரஞ்ச பாஹ்யாக மோ த்‌ருஷ்டிர்‌ தேவலகாஸ்ச தேஸிகஜநா திக்‌ திக்‌தி கேஷாம்‌ க்ரமம்‌ வேதா வேதநாஸ்ச தேஸிக ஜநா ஸத்வஞ்ச வேதாந்தகம்‌ ப்‌ரஹ்ம ஸ்ரீதர மத்ர வேத,விஹிதந்‌ நிஜீவஜீவாதவே” என்கிறபடியே நிந்த்‌ய பதார்த்தங்களைக்‌ கொண்டு “நீரணங்காடும்‌ இளம்‌ தெய்வம்‌” (திருவாய்மொழி 4-6-2) என்று ஷூத்‌ர தேவதைகளுக்கு ‘ ‘கள்ளிழைத்தென்‌ பயன்‌” (திருவாய்மொழி 4-6-4) என்று அவ்வோ தேவதைகள்‌ ஸந்நிதி பண்ணுகிற ஸ்தலங்களிலே யிடுகிறவிது “நீரணங்காடுதல்‌ கீழ்மையே” (திருவாய்மொழி 4-6-8) என்று நிந்த்‌ய பதார்த்தங்களைக்‌ கொண்டு ஷூத்ர தேவதா பஜநம்‌ பண்ணுகை நிஹீநமென்னுமத்தையும்‌, (பேச நின்ற தேவதா ஜ்ஞாநா முக்தி ஸாபேக்ஷத்வாதி களையும்‌) “பேச நின்ற சிவனுக்கும்‌ பிரமன்‌ தனக்கும்‌ நாயகனவனே கபால நன் மோக்கத்துக்‌ கண்டு கொண்மின்‌’ (திருவாய்மொழி 4-10-4) என்று ப்ரஸம்ஸா பரமான வாக்யங்களாலும்‌ தாமஸ புராணங்களாலும்‌ பேசப்பட்டு அவற்றுக்கு முட்டுப் பொருத்து நின்ற ப்‌ரஹ்ம ருத்ராதிகளுடைய “வாமாங்குஷ்டநகாக்‌ரேண சிந்நம்‌ தஸ்ய ஸிரோ மயா” என்றும்‌ “யஸ்மாத ந பராதஸ்ய ஸிரஸ் சிந்நம்‌ த்வயா மம, தஸ்மாச்சாப ஸமாயுக்த: கபாலீ த்வம்‌ பவிஷ்யஸி த்த்ர நாராயணஸ் ஸ்ரீமாந்‌ மயா பி அசாம்‌ ப்ரயாசித: விஷ்ணு ப்ரஸாதாத்‌ ஸுஸ்ரோணி கபாலம்‌ தத்‌ ஸஹஸ்ரதா ” (மாத்ஸ்ய புராணம் )என்றும்‌ சொல்லுகிற படியே ப்ரஹ்மா ருத்‌ரனாலே தலை யறுப்புண்டு ஸோச்யனாகையாலும்‌ ருத்‌ரன்‌ குருவினுடை ஸிரஸ் சேதநத்தாலே பாதகியாய்‌ ஸர்வேஸ்வரன்‌ பக்கலிலே ஸாபேஷனாக, அந்த ஸர்வேஸ்வரன்‌ அந்த ப்‌ரஹ்மாவினுடைய ஸோகத்தையும்‌ போக்கி ருத்‌ரனுடைய ஸாபத்தையும்‌ போக்கினான்‌ என்கையாலே இவர்கள்‌ அந்யோந்யம்‌ தங்களுக்கு வருகிற க்லேஸ மறியாமையாலும்‌ வந்த க்லேஸம்‌ தாங்கள்‌ தாங்கள்‌ தவிர்த்துக்‌ கொள்ள மாட்டாத அஸக்தியாலும்‌ (இவை போமிடத்தில்‌ ஸர்வேஸ்வரனே போக்க வேண்டும் படியான ஸாபேக்ஷதையாலும்‌ இப்படி மஹாபாரத வசந ஸித்தமாக அஜ்ஞாநாஸக்தி ஸாபேக்ஷங்களையும்‌. ஆதி-ஸப்த த்தாலே அவர்களுடைய கர்ம வஸ்யதையையையும்‌. (இலிங்கத்து விளம்பும்‌ பாஹ்ய குத்‌ருஷ்டி தமோ நிஷ்டதையையும்‌ சொல்லி) ” இலிங்கத்திட்ட புராணத்தீரும்‌” (திருவாய்மொழி 4-10-5) என்றும்‌, “விளம்புமாறு சமயமும்‌” (திருவாய்மொழி 4-10-9) என்றும்‌ சொல்லுகிறவிவை “யந்மயஞ்ச ஐகத் ஸர்வம்‌” (ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌ 1-1-5) என்று ப்ரஸ்நம்‌ பண்ண” விஷ்ணோஸ் ஸகா ஸாதுத்பூதம்‌’ (ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌ 1-1-41) என்று கோல் விழுக்காட்டிலே உத்தரமாகை யன்றிக்கே எருமையை யானையாகக்‌ கவிபாடவேணு மென்பாரைப்‌ போலே லிங்க மென்றொரு வ்யக்தியை நிர்தேஸித்து, இதுக்குத்கர்ஷம்‌ தேடிச்‌ சொல்ல வேணுமென்று கேட்கிறவனும்‌ தமோபிபூதனாய்க்‌ கேட்கச்‌ சொல்லுகிறவர்களும்‌ தமோபிபூதராய்ச்‌ சொல்ல லிங்க விஷயமாக உத்கர்ஷம்‌ தேடியிட்ட குத்‌ருஷ்டி ஸ்ம்ருதிகளென்ன, ப்ரமாணாநுகூலமான தர்க்க மல்லாமையாலே கேவலம்‌ உக்தி ஸாரமான பாஹ்யருடையவும்‌ மதங்களென்ன, இவை “யா வேத பாஹ்யா ஸ்ம்ருதய: யாச்ச காச்ச குத்‌ருஷ்டய: தாஸ் ஸர்வா நிஷ்ப்பலா: ப்ரேத்ய தமோ நிஷ்டாஹி தா: ஸ்ம்ருதா:” (மநுஸ்ம்ருதி 12-95) என்கிறபடியே தமோ நிஷ்டங்களென்னுமிடத்தையும்‌ சொல்லி, (ஓடிக்‌ கண்டீர்‌) “ஓடியோடி வழியேறிக்‌ கண்டீர்‌;” (திருவாய்மொழி 4-10-10) “கதாகதம்‌ காமகாமா லபந்தே” (6. தை 9-21 என்கிறபடியே ஸ்வர்க்க நரகங்களிலே போவது கர்ப்பத்தேற வருவதாய்க்‌ கொண்டு அநேக ஐந்மங்கள்‌ தேவதாந்தரங்களை ஸப்ரகாரமாக த்ரிவித கரணங்களாலும்‌ ஆஸ்ரயித்து அவ்வாஸ்ரயணமும்‌ முடிய நடத்தி தத்‌ பலமும்‌ கண்டிகோள்‌; (கண்டும்‌ தெளிய கில்லீர்‌) இவனுடைய ஐகந் நிகரணாதி, திவ்ய சேஷ்டிதங்களை ஸமாஸ்த்ர த்‌வாரா ப்ரத்யக்ஷித்தும்‌ இவனே ஸர்வ ஸமாஸ்ரயணீயனென்று தெளிய மாட்டுகிறிலிகோள்‌. (அறிந்தறிந்தோடுமின்‌) உங்களை யிங்ஙனே வைத்தது ஸதஸத்கர்ம காரிகளான ஜந்துக்கள்‌ அவ்வோ கர்மங்களை அநுபவிக்கக்‌ கடவதான ஸாஸ்த்ர மர்யாதை, அழியுமென்று. “மம மாயா துரத்யயா” (கீதை 7-14) என்கிறபடியே இதுவும்‌ அவனுடைய மாயை என்றறிந்தும்‌, மாமேவ யே ப்ரபத்‌யந்தே மாயாமேதாம்‌ தரந்தி தே” (கீதை 7-14) என்கிறபடியே மாயாதரணோபாயம்‌ அவன்‌ திருவடிகளை யாஸ்ரயிக்கையே என்றறிந்து அவனை யாஸ்ரயித்துத்‌ தப்பப்‌ பாருங்கோள்‌. (ஆட் செய்வதே உறுவதாவதென்று) “நீள்குடக் கூத்தனுக்கா ட் செய்வதே உறுவது” (திருவாய்மொழி 4-10-10)என்று ஆஸ்சர்யமான குண சேஷ்டிதங்களை உடையவனுக்கு அடிமை செய்கையே இவ் வாத்மாவுக்குச்‌ சீரியதும்‌ ஸு-ஸூமும்‌ என்று (விரக்தி பூர்வகமாக ஆஸ்ரயணத்தை ருசிப்பிக்கிறார்‌ நாலாம்‌ பத்தில்‌) ப்ரயோஜநாந்தரங்கள்‌ க்ஷத்‌ர தேவதைகள்‌ பாஹ்ய குத்‌ருஷ்டிகள்‌ என்கிற இவற்றிலுண்டான விரக்தி பூர்வகமாக ஐகத் காரணத்வாதிகளான ப்ரமாணோபபத்திகளாலே பகவத் ஸமாஸ்ரயணத்தை ஸம்ஸாரிகளுக்கு உபதேஸித்து ஸூசிப்பிக்கிறார்‌ என்கிறார்‌ நாலாம் பத்தில் –

    223-(1-)ஆவா வென்று தானே தன் அடியார்க்கு செய்யும் தொல் அருள் என்று பரத்வாதிகளை உடையவன் எவ்விடத்தான் என்னும் பாவியர்க்கும் இருகரையும் அழிக்கும் க்ருபா பிரவாஹம் உடையவன் பொய் கூத்து வஞ்சக் களவு தவிர முற்றவும் தானாய் உன்னை விட்டு என்னப் பண்ணின விரக்தி பல பரமாத்ம ராகம் (2)-பேர் அமர் பின்னின்று கழிய மிக்கு யானே என்ன வாய்ந்து ஆற்றகில்லாது நீராய் மெலிய ஊடு புக்கு வளர (3-)விஷ வருஷ பலங்கள் கை கூடினவர் அடிமை புக்காரையும் ஆட் செய்வாரையும் காண லோக த்வீ பாந்தரங்களிலும் நின்றும் போந்த தேவர் குழாம் களைக் கண்டு காப்பிட்டு பிரகலாதர் விபீஷணர் சொல் கேளாத அரக்கர் அசுரர் போல்வாரை தடவி பிடித்து (4-)தேச கால தோஷம் போக எங்கும் இடம் கொண்ட வர்களை மேவித் தொழுது உஜ்ஜீவியும் கோள் நீங்கள் நிறுத்துகிறவர்களை தேவதைகளாக நிறுதினவனை (5)-மேவிப் பரம்பும் அவரோடு ஒக்க தொழில் யுக தோஷம் இல்லையாம் என்று விஷ்ணு பக்தி பரராக்கி கண்ணுக்கு இனியன காட்டலாம் படியானார் கண்ணிலே நோக்கிக் காணும் பக்தி சித்தாஞ்சனத்தை இடுகிறார் ஐஞ்சாம் பத்தில்-

    கீழ்ச் சொன்ன பரத்வாதிகளால்‌ வந்த அவனுடைய உத்கர்ஷத்தையும்‌ தம்முடைய நிகர்ஷத்தையு மநுஸந்தித்து அகல்வாரளவிலும்‌ மேல் விழுந்து விஷயீகரிக்கும்படி பரம க்ருபாவானான ஸர்வேஸ்வரன்‌ கீழிவர்க்குப்‌ பிறப்பித்த விரக்தி பலமான ஸ்வ விஷயமான பக்தியை பரம்பரயா அபிவிருத்‌தமாக்க அந்த பக்தியையும்‌ பாகவத ஸமாகமத்தை யுமுடையரான இவர்‌ திருத்தின தம்மையும்‌ திருந்தின ஸ்ரீவைஷ்ணவர்களையும்‌ காண்கைக்கு வந்த நித்ய ஸூரிகளையும்‌ ஸ்வேத த்‌வீப வாஸிகளான ஸித்‌தரையும்‌ கண்டு மங்களாஸாஸநம்‌ பண்ணி திருந்தாத ஆஸுர ப்ரக்ருதிகளையும்‌ பகவத்‌ பாகவத வைபவத்தையும்‌ உபதேஸித்துத்‌ திருத்தி பாகவத ஸமாஜம்‌ தர்ஸநீயமாம்படியான ஜ்ஞாநம்‌ பிறந்தார்க்கும்‌ ப்ராப்ய த்வரைக் கடியான பக்தியையும்‌ உபதேஸித்துத்‌ தலைக் கட்டுகிறார்‌ என்கிறார்‌-

    (ஆவாவித்யாதி,)“ஆவாவென்றருள்செய்து’‘ (திருவாய்மொழி 5-1-9) என்றும்‌, “தானே இன்னருள்‌ செய்து” (திருவாய்மொழி 5-1-10) என்றும்‌ “கலியுக மொன்றுமின்றிக்கே தன்னடியார்க் கருள்‌ செய்யும்‌”(திருவாய்மொழி 5-2-11 என்றும்‌ “தொல்லருள்‌ நல் வினையால்‌” (திருவாய்மொழி 5-9-10) என்றும்‌ சொல்லுகையாலே “அம்மானாழிப்பிரான்‌ அவனெவ்விடத்தான்‌ யானார்‌ எம்மா பாவியற்கும்‌ விதி வாய்க்கின்று வாய்க்கும்‌ கண்டீர்‌ (திருவாய்மொழி 5-1-7) என்று கையும்‌ திருவாழியுமான வழகை நித்ய ஸூரிகளுக்குக்‌ காட்சி கொடுத்துக்‌ கொண்டு அங்குள்ளார்‌ பரிமாற விருக்கிறவன்‌ எவ்வளவிலே, நித்ய ஸம்ஸாரிகளுக்கும் இவ்வருகான நானெவ்வளவிலேன்‌; கீழ்ச் சொன்ன அவனுடைய பரத்வ காரணத்வ வ்யாபகத்வ நியந்த்ருத்வாதிகளாலே வந்த உத்கர்ஷத்தையும்‌ தங்களுடைய நிகர்ஷத்தையும்‌ அநுஸந்தித்து அகலும்படியான எத்தனையேனும்‌ மஹா பாபிகளளவிலும்‌ ஐயோ ஐயோ வென்று அர்த்தித்வ நிரபேக்ஷமாக தன் பக்கலிலே ந்யஸ்த பரரானார்க்கு கால தோஷம்‌ தட்டாதபடி பண்ணும்‌ ஸ்வாபாவிக க்ருபையை உடையனாகையாலே “விதி வாய்க்கின்று வாய்க்கும்‌” (திருவாய்மொழி 5-1-7) என்கிறபடியே தன்னுடைய நிரங்குஸ ஸ்வாதந்த்ர்யமாகிற கரையையும்‌ இவனுடைய ஒளபாதிக ஸ்வாதந்த்ர்யமாகிற கரையும்‌ அழியப்‌ பெருகும்படியான க்ருபா ப்ரவாஹத்தை யுடைய ஸர்வேஸ்வரன்‌. (பொய்க் கூத்து வஞ்சக் களவு தவிர) “பொய்யே கைம்மை சொல்லி” (திருவாய்மொழி 5-1-1 என்றும்‌ “என்றென்றே சில கூத்துச்‌ சொல்ல” (திருவாய்மொழி 5-1-2) என்றும்‌ “என்றென்றே உன்னையும்‌ வஞ்சிக்கும்‌ கள்ள மனம்‌ தவிர்ந்தே” (திருவாய்மொழி 5-1-3) என்கிறபடியே மெய் கலவாத பெரும்‌ பொய்களைச்‌ சொல்லி ஸர்வஜ்ஞனாய்‌ ஸர்வாந்தர்யாமியான உன்னையும்‌ பகட்டும்‌ க்ருத்ரிம யுக்தமான மநஸ்ஸைத்‌ தவிர்ந்தே என்று இவர்‌ தவிரும்படி. (முற்றவும்‌ தானாய்‌ உன்னை விட்டென்னப்‌ பண்ணின விரக்தி பல பரமாத்ம ராகம்‌) “என்னை முற்றவும்‌ தானானான்‌” (திருவாய்மொழி 5-1-10) என்று எனக்கு ஸர்வ வித போக்‌யமுமான “உன்னை விட்டென்‌ கொள்வன்‌ ” (திருவாய்மொழி 5-1-3) என்று நான்‌ விட்டவன்றும்‌ விட மாட்டாத உன்னை யொழிய துராராதமாய்‌ ஆராதித்தாலும்‌ கிடைப்ப தொன்றில்லாத விஷயத்தைப்‌ பற்றவோ என்று இவர் தாமே பேசும்படி “கண்ட சதிர்‌ கண்டொழிந்தேன்‌” (திருவாய்மொழி 4-9-10) என்கிறபடியே தன்னுடைய போக்‌யதையாலே ஸ்வ வ்யதிரிக்தங்களை யுபேக்ஷிக்கும்படி கீழில்‌ பத்தில்‌ பிறந்த விரக்திக்குப்‌ பலமான ‘ பரமாத்மநி யோரக்த: விரக்த: அபரமாத்மநி” (பார்ஹஸ்பத்ய ஸ்ம்ருதி) என்கிறபடியே அபரமாத்ம விஷயமான விரக்திக்குப்‌ பலமான பரமாத்ம விஷய ராகம்‌. (பேரமர்‌ இத்யாதி, ஊடு புக்கு வளர) “பேரமர்‌ காதல்‌” (திருவாய்மொழி 5-3-4) “பின்னின்ற காதல்‌” (திருவாய்மொழி 5-4-6) என்று அபரிச்சேத்‌யமாய்ப்‌ பொருந்திப்‌ பிடரி பிடித்துக் கொண்டு நின்று நெஞ்சை முடிப்பதாய்க்‌ “கழிய மிக்கதோர்‌ காதலளிவள்‌” (திருவாய்மொழி 5-5-10) என்று பார்ஸ்வஸ்த்தரும்‌ பேசும்படி மிகவும்‌ கை கழிந்து, (யானே யென்ன வாய்ந்து) “கடல்‌ ஞாலம்‌ செய்தேனும்‌ யானே” (திருவாய்மொழி 5-6-1 என்றும்‌ “வாய்ந்த வழுதி வளநாடன்‌” (திருவாய்மொழி 5-6-1) என்றும்‌ “துஷ்ட காளிய” இத்யாதி. இப்படி இவனுடைய ஜகத் காரணத்வாதி, அத்‌புத கர்மங்களை நானே செய்தேன்‌ என்று அநுகார முகத்தாலே அவனை பாவித்துப்‌ பேசும்படி திட்டி (ஆற்றகில்லாது) “உன்னை விட்டொன்றும்‌ ஆற்றகிற்கின்றிலேன்‌” (திருவாய்மொழி 5-7-1) என்று அவனை யொழிய ஒரு ப்ரகாரத்தாலும்‌ ஆற்ற மாட்டாத படியாய்‌, (நீராய்‌) “ஆராவமுதே அடியேனுடலம்‌ நீராய்‌” (திருவாய்மொழி 5-8-1) என்று போக்‌யதாதிஸயத்தாலே வந்த ப்ராவண்யத்தாலே அநுபவோபகரணமான ஸரீரம்‌ ஸிதிலமாம்படியாய்‌, (மெலிய) “வைகலும்‌ வினையேன்‌ மெலிய-(திருவாய்மொழி 5-9-1 அது தான்‌ ஒருநாளன்றிக்கே ஸர்வ காலமும்‌ மெலியும்படியாய்‌, (ஊடு புக்கு வளர) “நிறந்தனூடுபுக்கெனதாவியை உருக்கி (திருவாய்மொழி 5-10-1) என்று மர்மத்திலே புக்கு ஆத்மாவை த்‌ரவ த்‌ரவ்யமாக்கி முடிக்கும்படி அபிவிருத்‌தமாய்‌ (விஷ வ்ருக்ஷ பலங்கள்‌ கை கூடினவர்‌) “ஸம்ஸார விஷ வ்ருக்ஸ்ய த்‌வே பலே ஹ்யம்ருதோபமே கதாசித்‌ கேஸவே பக்திஸ்‌ தத் பக்தைர்வா ஸமாகம:’ என்கிறபடியே ஸம்ஸார விஷ வ்ருக்ஷ பலம்‌ இப்படிப்பட்ட பகவத்‌ பக்தியும்‌ பாகவத ஸமாகமமான இவை இரண்டும்‌ கை புகுந்த விவர்‌. (அடிமை புக்காரையும்‌ ஆட்செய்வாரையுங்‌ காண லோக த்‌வீபாந்தரங்களில்‌ நின்றும்‌ போந்த தேவர்‌ குழாங்களைக்‌ கண்டு காப்பிட்டு) ஒன்றுந் தேவிலே ‘ பாடியாடிப்‌ பரவிச் செல்மின்கள்‌” (திருவாய்மொழி 410-9) “தெய்வம்‌ மற்றில்லை” (திருவாய்மொழி 4-10-3) “நாயகனவனே” (திருவாய்மொழி 4-10-4) “ஒன்றும்‌ பொய்யில்லை போற்றுமினே” (திருவாய்மொழி 4-10-5) ” அறிந்தோடுமினோ” (திருவாய்மொழி 4-10-6) “ஆடு புட்கொடி ஆதிமூர்த்திக் கடிமை புகுவதுவே” (திருவாய்மொழி 4-10-7) “உளங்கொள்‌ ஞானத்து வைம்மின்‌” (திருவாய்மொழி 4-10-9)”ஆட்செய்வதே உறுவதாவது” (திருவாய்மொழி 4-10-10) என்று இப்படி உபதேஸிக்கக்‌ கேட்டுத்‌ திருந்தி அடிமை புக்க ஸ்ரீவைஷ்ணவர்களையும்‌ “ஆட்செய்தாழிப் பிரானைச்‌ சேர்ந்தவன்‌” (திருவாய்மொழி 4-10-11 என்று இப்படித்‌ திருத்துகையாலே அடிமை செய்தாரான தம்மையும்‌ காண்கைக்கு வந்த “வைகுந்தன்‌ பூதங்களேயாய்‌” (திருவாய்மொழி 5-2-5) “தடங்கடல்‌ பள்ளிப்‌ பெருமான் தன்னுடைப்‌ பூதங்களேயாய்‌” (திருவாய்மொழி 5-2-4) “தேவர்கள்‌ தாமும்‌ புகுந்து குழுமித்‌ தேவர்‌ குழாங்கள்‌” (திருவாய்மொழி 5-2-3 என்று லோகாந்தரமான ஸ்ரீவைகுண்ட,த்திலே நின்றும்‌ போந்தவர்களுமாய்‌ த்‌வீபாந்தரமான க்ஷீராப்‌தியில்‌ நின்றும்‌ போந்தவர்களுமான நித்ய ஸூரிகளான திரள்களை “கண்டோம்‌ கண்டோம்‌ கண்டோம்‌” (திருவாய்மொழி 5-2-2) என்று கண்ணுக்கினியதா யிருக்கையாலே கண்டோம்‌ என்று பல காலும்‌ சொல்லும்படி கண்டு பொலிக பொலிக பொலிக” (திருவாய்மொழி 5-2-1 என்று அத் திரள்‌ அபிவிருத்‌த மாயிடுக என்று மங்களாஸாஸநம்‌ பண்ணின விவர்‌-(ப்ரஹ்லாத விபீஷணர்‌ சொல் கேளாத அரக்கரசுரர்‌ போல்வாரைத்‌ தடவிப்‌ பிடித்து) “அரக்கரசுரர்‌ பிறந்தீர்‌ உள்ளீரேல்‌” (திருவாய்மொழி 5-2-5) என்று “த்வய்யஸ்‌தி மய்யஸ்தி” என்று ப்ரஹ்லாதாழ்வான்‌ உபதேஸிக்கக்‌ கேட்டுத்‌ திருந்தாத ஆஸூர ப்ரக்ருதியான ஹிரண்யன்‌ போல்வாரையும்‌, “ப்ரதீயதாம்‌ தாஸரதாய மைதிலீ ” (ராயு. 14-34) என்று ஸ்ரீவிபீஷணப்‌ பெருமாளுடைய உபதேஸம்‌ கேட்டுத்‌ திருந்தாத ராக்ஷஸ ப்ரக்ருதியான ராவணன்‌ போல்வாரையும்‌ தேடிப் பிடித்து. (தேஸ கால தோஷம்‌ போக எங்குமிடங்‌ கொண்டவர்களை மேவித்‌ தொழுது உஜ்ஜீவியுங்கோள்‌) “கொன்றுயிருண்ணும்‌ விசாதி பகை பசி தீயன வெல்லாம்‌ நின்றிவ் வுலகில்‌ கடிவான்‌ நேமிப் பிரான்‌ தமர்‌ போந்தார்‌ (திருவாய்மொழி 5-2-6) என்றும்‌ “திரியும்‌ கலியுகம்‌ நீங்கித்‌ தேவர்கள்‌ தாமும்‌ புகுந்து” (திருவாய்மொழி 5-2-3) என்றும்‌ சொல்லுகிறபடியே ஸரீரத்தை முடித்து ப்ராணாபஹாரம்‌ பண்ணக் கடவதான வ்யாதி பகை பசி முதலான தேஹ தோஷமும்‌ “பவிஷ்யத்யத ரோத்தரம்‌” என்கிறபடியே பதார்த்த ஸ்வபாவங்கள் வேறுபட்டு வரக்‌ கடவதான கலி ப்ரயுக்தமான கால தோஷமும்‌ தங்கள்‌ ஸஞ்சாரத்தாலே போம்படி “திரியப்‌ புகுந்திசை பாடி எங்குமிடங்‌ கொண்டனவே” (திருவாய்மொழி 5-2-3) என்கிறபடியே பகவதநுபவ ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே பெரிய ஆராவாரத்தை யுடைத்தாம்படி விபரீதர்க்கு இடமில்லாதபடி விஸ்ம்ருதராய்க்‌ கொண்டு “மறுத் திருமார்வனவன்தன்‌ பூதங்கள்‌ கீதங்கள்பாடி வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார்‌ மேவித்‌ தொழுதுய்ம்மினீரே’ (திருவாய்மொழி 5-2-8) என்று ஸ்ரீய:பதியாய்‌ ஸ்ரீவத்ஸ வக்ஷஸ்தனான ஸர்வேஸ்வரனுடைய குணங்களைத்‌ தங்களுக்கு ஸத்தா தாரகமாக உடையரான ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ இந்த விபூதி ஸ்வபாவத்தாலே வந்த வெறுப்பற்று எங்கும்‌ விஸ்த்ருதரானார்கள்‌. அவர்களை அநந்ய ப்ரயோஜநராய்க்‌ கொண்டு கட்டி நீங்கள்‌ உஜ்ஜீவியுங்கோள்‌; அவ்வளவு போகமாட்டாதே தேவதாந்தர ப்ராவண்யத்தாலே பகவத்‌ வைபவமறிகைக்‌கீடான அளவிலிகளாகில்‌ (நீங்கள்‌ நிறுத்துகிறவர்களை தேவதைகளாக நிறுத்தினவன்‌) “நிறுத்தி நும்முள்ளத்துக்‌ கொள்ளும்‌ தெய்வங்கள்‌” (திருவாய்மொழி 5-2-7) என்றும்‌ அஸதஸ்ய மாகையாலே பிறரறியாதபடி ராஜஸ தாமஸ யுக்தமான உங்கள்‌ நெஞ்சாலே அவற்றுக்கு ஸ்வத:உத்கர்ஷ மில்லாமையாலே நீங்கள்‌ சேமம்‌ சாத்தி நிறுத்தி த்‌யாநம்‌ பண்ணுகிற தேவதைகளை “நிறுத்தினான்‌ தெய்வங்களாக அத்‌ தெய்வ நாயகன்‌ தானே” (திருவாய்மொழி 5-2-8) என்று ராஜாவானவன்‌ ஊர் தோறும்‌ விடைச்‌ சேவகரை நிறுத்துமா போலே உங்களுக் காஸ்ரயணீயராக நிறுத்தினான்‌ அந்த ஸர்வேஸ்வரன் தானே; அவனை (மேவிப்‌ பரம்புமவரோ டொக்கத்‌ தொழில்‌ யுக தோஷமில்லையா மென்று) “நக்கபிரானோ டயனு மிந்திரனும்‌ முதலாகத்‌ தொக்க வமரர்‌ குழாங்கள்‌ கண்ணன்‌ திரு மூர்த்தியை மேவி மிக்க உலகுகள்‌ தோறும்‌ எங்கும்‌ பரந்தன ஓக்கத்‌ தொழுக ஒற்றிராகில்‌ கலியுகமொன்றுமில்லை” (திருவாய்மொழி 5-2-10) என்று ப்‌ரஹ்மேந்த்‌ர ருத்‌ராதிகளான தேவதா ஸமூஹங்கள்‌ ஸர்வ ஸுலபனான ஸர்வேஸ்வரனுடைய ஸூபாஸ்ரயமான விக்‌ரஹத்தை யாஸ்ரயித்துத்‌ தங்கள்‌ லோகங்களிலே விஸ்த்ருதரானார்கள்‌; அவர்களைப்‌ போலே நீங்களும்‌ அவனை யாஸ்ரயிக்கப்‌ பெறில்‌ விபரீத ப்ரவர்த்தகமான யுக தோஷம்‌ உங்களுக்குத்‌ தட்டாதென்று (விஷ்ணு பக்தி பரராக்கி) என்றிப்படி உபதேஸித்து “விஷ்ணு பத்தி பரோ தேவ: விபரீதஸ் ததா ஸர; என்று பகவத்‌ ப க்தி யுக்தராம்படி திருத்தி, (கண்ணுக்கினியன காட்டலாம்படி யானார்‌ கண்ணிலே நோக்கிக்‌ காணும்‌ பக்தி ஸித்‌தாஞ்ஜனத்தை இடுகிறார்‌ அஞ்சாம்‌ பத்தில்‌) “கண்ணுக்கினியன கண்டோம்‌ தொண்டீர்‌ எல்லீரும்‌ வாரீர்‌” (திருவாய்மொழி 5-2-2) என்று பாகவத ஸமாஜ தர்ஸனம்‌ இனிதாம்படி அவ் விஷயத்தில்‌ சாபலமுடையார்க்கு “என்‌ நெஞ்சினால்‌ நோக்கிக்‌ காணீர்‌ என்னை முனியாதே” (திருவாய்மொழி 5-5-2) என்று உபாய தஸையிலே நின்று ப்ராப்ய தஸையிலே நிற்கிற தம்மைப்‌ பொடியும்படியான அவர்களுடைய உபாயாத்‌யவஸாய ஜ்ஞாநத்தின் மேலே “மநஸி விலஸ தாக்ஷ்ணா பக்தி ஸித்‌தாஞ்ஜநேந” ஸ்ரீகுண ரத்ந கோசம்‌ 12) என்கிறபடியே ப்ராப்ய வைலக்ஷண்யத்தை விஷயீகரித்த பக்தியை உபதேஸிக்கிறார்‌ என்கிறார்‌ அஞ்சாம்‌ பத்தில்

    224-(1)என்னையும் யாவர்க்கும் சுரர்க்காய் அடியீர் வாழ்மின் என்று கருணையாலே சர்வ லோக பூதேப்ய -என்றவை கடலோசையும் கழுத்துக்கு மேலுமாகாமல் உபாயத்வம் கல்வெட்டாக்குகிற சரண்யன் (2)அஜ்ஞ்ஞான சக்தி யாதாத்ம்ய ஜ்ஞானங்கள் அளவால் அன்றிக்கே அங்குற்றேன் என்னான் புணராய் என்னும் படி மெய்யமர் பக்தி பூம பலமாகவும் அநந்ய கதித்வம் உடைய தமக்கு (3) பாதமே சரணாக்க அவையே சேமம் கொண்டு ஏக சிந்தையராய் திர்யக்குகளை இட்டு ஸ்வ அபிப்ராயத்தை நிவேதித்து விளம்ப ரோஷம் உபாயத்தாலே அழிய (4) உருகாமல் வரித்ததும் நண்ணி வணங்க பலித்தவாறே சப்ரகாரமாக சக்ருத் கரணீயம் என்று புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின (5) சித் அசித் பிராப்ய பிராபக ஆபாசங்களைக் கை வலிந்து கை கழலக் கண்டும் எல்லாம் கிடக்க நினையாத கன்றும் ஆளீர் மேவீர் ஊதீர் என்று ததீய சேஷம் ஆக்கியும் -புறத்திட்டு காட்டி என்று பிரசங்கிக்கில் முடியும் படி விட்டு (6) தந்தை தாய் உண்ணும் சோறு மாநிதி பூவை யாவையும் ஒன்றே ஆக்கி (7)தளர்வேனோ திரிவேனோ குறுகாதோ முதல்வாவோ என்னும் ஆர்த்தியோடே (8) திரி விக்ரமனாய்க் குறள் கோலப் பிரானாய் அடியை மூன்றை இரந்த வன் கள்வன் கண் முகப்பே அகல்கொள் திசை வையம் விண்ணும் தட வந்த தடம் தாமரைகளை (9) இணைத் தாமரைகள் காண இமையோரும் வரும் படி சென்று சேர்ந்த உலகத்திலதத்தே கண்டு அகலகில்லேன் என்று பூர்வ வாக்யம் அனுசந்தித்தவர் (10) பிணக்கறத் தொ சசோக சஜாதீயர்க்குத் டங்கி வேத புனித விறுதி சொன்ன சாத்ய உபாய ஸ்ரவண (11)தந்தனன் மற்றோர் களை கண் இலம் புகுந்தேன் என்று ஸ்வ ஸித்த உபாய நிஷ்டையை உக்த்ய அனுஷ்டானங்களாலே காட்டுகிறார் ஆறாம் பத்தில் —

    தன்னுடைய பரம க்ருபையாலே ஸர்வரும்‌ வந்தாஸ்ரயிக்கும்படி யிருக்கிற ஸர்வ ஸரண்யனான ஸர்வேஸ்வரன்‌ பக்தி பாரவஸ்யத்தாலே அநந்ய கதிகளான இவர்க்குத்‌ தன்‌ திருவடிகளே நிரபேக்ஷோ பாயமென்னுமிடத்தைக்‌ காட்டிக்‌ கொடுக்க, அந்த உபாயத்திலே விச்சேதமில்லாதபடி வ்யவஸாயத்தை யுடையராய்த்‌ தம்முடைய வ்யவஸாயத்தை ௧டகர்‌ முகத்தாலே யவனுக்கறிவித்துத்‌ தம்முடைய விளம்ப அக்ஷமத்வத்தால்‌ வந்த இன்னாப்பைப்‌ பரிஹரித்தவனுடைய ஸாமர்த்‌யத்தை அநுஸந்தித்து குணாநுபவத்துக்குப்‌ பண்ணின ப்ரபத்தியும்‌ பலித்தவாறே ப்ராப்திக்குப்‌ ப்ரபத்தி பண்ணுவதாக ஸித்‌தோபாய ஸ்வீகாரம்‌ இதரோபாய த்யாக பூர்வகமாக வேண்டுகையாலே பெளராணிக வசந ப்ரக்ரியாலே உபாய விரோதி களான த்யாஜ்யங்களை வாஸநையோடே அவற்றினுடைய ப்ரஸங்கமும்‌ அஸஹ்யமாம்படி விட்டு விட்டவை யெல்லாம்‌ தமக்கு ப்ராப்த விஷயமே யாக்கி நிரதிஸயமான பர பக்தியோடே திருவுலகளந்த ஸர்வ ஸுலபமான திருவடிகளை நித்ய ஸூரிகளும்‌ வந்தனுபவிக்கும்படி நிற்கிற திருமலையிலே கண்டு பூர்வ வாக்ய ப்ரக்ரியையாலே ஸரணம்‌ புக்கவர்‌ பத்துடையடியவரிலே தொடங்கி அஞ்சாம் பத்தளவாக உபதேஸித்த பக்த் யுபாயத்தினுடைய துஷ்கரத்வாதி தோஷாநுஸந்தானத்தாலே ஸோகம்‌ ஐநிக்கும்படியான அதிகாரம்‌ பிறந்தவர்களுக்குத்‌ தம்முடைய ப்ரபத்தி நிஷ்டையை ப்ரகாஸிப்பிக்கிறார்‌ என்கிறார் –

    (என்னையும்‌ இத்யாதி, சரண்யனென்கிற தளவாக) “ஏறு சேவகனார்க்கு என்னையும்‌ உளளென்மின்௧ளே” (திருவாய்மொழி 6-1-10) “யாவர்க்கும்‌ வன்‌ சரணே” (திருவாய்மொழி 6-3-7) ‘வன் சரண்‌ சுரர்க்காய்‌” (திருவாய்மொழி 6-3-8) என்று ஆர்த்த ரக்ஷ்ணத்திலே தீக்ஷித்திருக்கிறவனுக்கு ரக்ஷ்ய வர்க்கத்திலே நானுமொருத்தி உளள்‌ என்று சொல்லுங்கோள்‌ என்றும்‌, திருவிண்ணகரிலே நின்றருளினவனுடைய திருவடிகளல்லது ஸர்வர்க்கும்‌ வலிய ரக்ஷை இல்லை; தேவர்களுக்கும்‌ வலிய ரக்ஷ என்று இவர் தாமே பேசும்படி “அடிக்கீழ்‌ அமர்ந்து புகுந்து அடியீர்‌ வாழ்மின்‌ என்றென்றருள்‌ கொடுக்கும்‌” (திருவாய்மொழி 6-10-11) என்று நமக்கு ஸேஷபூதராயுள்ளா ரெல்லாரும்‌ நம்மடியின்‌ கீழே அநந்ய ப்ரயோஜநராய்ப்‌ புகுந்து உஜ்ஜீவியுங்கோள்‌ என்று அவன் தானே அருளிச் செய்யும்படியான க்ருபையாலே (ஸர்வ லோக பூதேப்‌ய: என்கிறவை கடலோசையும்‌ கழுத்துக்கு மேலுமாகாமல்‌) “ஸர்வலோக ஸரண்யாய ராகவாய மஹாத்மநே நிவேதயத மாம்‌ க்ஷிப்ரம்‌ விபீஷணமுபஸ்த்திதம்‌” ரா.யு. 17-14 என்றும்‌, “ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதிச யாசதே அபயம்‌ ஸர்வ பூதேப்‌யோ ததாமி ஏதத்‌ வ்ரதம்‌ மம” (ரா.யு. 18-33) என்றும்‌ சொல்லுகிற ஸரணாக தனுடையவும்‌ ஸரண்யனுடையவும்‌ உக்தி ஸமுத்‌ர கோஷம்‌ போலே நிரர்த்தகமாகாத படியாகவும்‌, கண்டாதுபரியாகாத படியாகவும்‌ “வானவர்‌ வானவர்‌ கோனொடும்‌ நமன்றெழும்‌ திருவேங்கடம்‌” (திருவாய்மொழி 3-3-7 என்றும்‌ “வினைச்‌ சுடரை நந்துவிக்கும்‌ வேங்கடம்‌” (முதல்‌ திருவந்தாதி 26) என்றும்‌ “வானரமும்‌ வேடுமுடை வேங்கடம்‌” நான்முகன்‌ திருவந்தாதி 47) என்றும்‌ “கண்டு வணங்கும்‌ களிறு” (மூன்றாம்‌ திருவந்தாதி 70) என்றும்‌ சொல்லுகிறபடியே நித்ய ஸூரிகளோடு நித்ய ஸம்ஸாரிகளோடு திர்யக்குகளோடு வாசியற ஆஸ்ரயிக்கலாம்படி நிற்கையாலே தன்னுடைய ஸமாஸ்ரயணீயத்வம்‌ ஸிலா லிகிதமாம்படி திருமலையிலே யெழுந்தருளி நிற்கிற அநாலோசித விஸேஷ அஸேஷ லோக ஸரண்யனான ஸர்வேஸ்வரன்‌ (அஜ்ஞாந அஸக்தியித்யாதி, அநந்ய கதித்வமுடைய தமக்கு) “அவித்‌யாதோ தேவே பரிப்‌ருட தயா வா விதி தயா ஸ்வ பக்தேர்‌ பூம்நா வா ஐகதி கதி மந்யா விதுஷாம்‌ கதிர்‌ கம்யஸ் சாஸெள ஹரிரிதி ஜிதந்தாஹ்வய மநோ : ரஹஸ்யம்‌ வ்யாஜஹ்ரே ஸ கலு பகவாந்‌ சவ்நகமுநி:” (பட்டர்‌ ஸ்ரீஸூக்தி)என்று உபாயாந்தரங்களை அறிகைக்கும்‌ அநுஷ்டிக்கைக்கு மீடான ஜ்ஞாந ஸக்திகளில்லாத அளவால்‌ வந்த அந்த உபாயாந்தரங்களில்‌ அந்வயமே யன்றிக்கே ஸ்வரூப பாரதந்த்ர்யத்தாலே பகவதேக ரஷ்யமாகை யொழிய வ்யதிரிக்தோபாயங்கள்‌ ஸ்வரூப விருத்‌தங்கள்‌ என்கிற யாதாத்ம்ய ஞானத்தாலே “யாவராலும்‌ ஒன்றும்‌ குறை வேண்டேன்‌-(திருவாய் -5-8-3) என்று அவற்றிலுண்டான அநந்வயத் தளவன்றிக்கே அங்குற்றேனல்லேன்‌ இங்குற்றேன்‌ அல்லேன்‌ உன்னைக்‌ காணும்‌ அவாவில்‌ வீழ்ந்து நான எங்குற்றேனுமல்லேன்‌‘ (திருவாய்மொழி 5-7-2) “என்‌ நான்‌ செய்கேன்‌” (திருவாய்மொழி 5-8-3) “புணரா நின்ற மரமேழ்‌ அன்றெய்த ஒரு வில் வலவாவோ” திருவாய்மொழி 6-10-5) என்று நித்ய ஸூரிகள்‌ ஸம்ஸாரத்திலே உலாவினாப் போலே ஸித்‌த ஸாதநம்‌ பண்ணி வர்த்திக்கிறேனல்லேன்‌ ஸாதநாநுஷ்டாநம்‌ பண்ணுகிறவர்களிலே ஒருவனாய்‌ வர்த்திக்கிறேனல்லேன்‌, அன்றிக்கே உன்னை அநுபவிக்கிற நித்ய ஸூரிகளிலே ஒருவனாய்‌ அங்கே வர்த்திக்கிறேனல்லேன்‌ உன்னை யொழிய ஸப்‌தாதி, விஷயாநுப,வம்‌ பண்ணுகிற ஸம்ஸாரிகளிலேயாய்‌ இங்கே வர்த்திக்கிறேனல்லேன்‌. உன்னுடைய ஸெளந்தர்யாதி களிலே ஈடுபட்டு உன்னைத் தான்‌ வேணுமென்று ஆசையாலே பல ஹீநனாய்த்‌ தளர்ந்து இனி உபாயாநுஷ்டாநம்‌ பண்ண க்ஷமனல்லேன்‌; உன்‌ திருவடிகளைக்‌ கிட்டுகைக்கு என்னால்‌ செய்யலாவதில்லை; எனக்கும்‌ செயலுக்கும்‌ என்ன சேர்த்தி யுண்டு? உன்னுடைய ரக்ஷணத்திலே அதி ஸங்கை பண்ணின மஹா ராஜருடைய ஸங்கா நிராகரணார்த்தமாக இலக்குக்‌ குறிக்க வொண்ணாதபடி திரண்டு நின்ற மராமரங்கள்‌ ஏழையும்‌ எய்த ஏக வீரனே ஓ என்று கூப்பிடும்படி “மெய் யமர்‌ காதல்‌” (திருவாய்மொழி 6-8-2) என்று அவனுடைய திருமேனியோடே யமர வேண்டும்படியாய்த்‌ தம்முடம்போடே அவனமர வேண்டும் படியாய்‌ ஸத்யமாய்ப்‌ பொருந்தி ஸ்வரூபாநுபந்தியாய்‌ கீழில்‌ பத்தில்‌ தமக்குப்‌ பிறந்த பக்தி பாரவஸ்யத்தினுடைய பலமாகவுமாம்‌. உபாயாந்தரத்துக் கன்றிக்கே “களை கண்‌ மற்றிலேன்‌” (திருவாய்மொழி 5-8-8) என்னும்படி அநந்ய கதித்வமுடைய இவர் தமக்கு (பாதமே சரணாக்க அவையே சேமங்கொண்டேக சிந்தையராய்‌ ) “ஆறெனெக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்‌” (திருவாய்மொழி 5-7-10) என்று தன்‌ திருவடிகளே ஸஹாயாந்தர நிரபேஷமான ஸாதநமென்னுமிடத்தைக்‌ காட்டிக் கொடுக்க; “கழல்களவையே சரணாகக்‌ கொண்ட” (திருவாய்மொழி 5-8-11 என்றும்‌, “அடிமேல்‌ சேமங்கொள்‌ தென் குருகூர்ச்‌ சடகோபன்‌” (திருவாய்மொழி 5-9-11) என்றும்‌, “நாகணை மிசை நம்பிரான்‌ சரணே சரண்‌ நமக்கென்று நாடொறு மேக சிந்தையனாய்‌” (திருவாய்மொழி 5-10-11 என்றும்‌ சொல்லுகிறபடியே விரோதி நிரஸந ஸீலனாயிருக்கிறவன்‌ திருவடிகளே நிரபேக்ஷோபாய மென்கிற ஏக ரூபமான வ்யவஸாயத்தை யுடையராய்‌ , (திர்யக்குக்களை யிட்டு ஸ்வாபிப்ராயத்தை நிவேதித்து) “வைகல் பூங்கழிவாய்‌ வந்து மேயுங்‌ குருகினங்காள்‌ வினையாட்டியேன்‌ காதன்மை கைகள்‌ கூப்பிச் சொல்லீர்‌ ” (திருவாய்மொழி 6-1-1) என்றும்‌, “சேவகனார்க் கென்னை யுமுளளென்மின்களே’ (திருவாய்மொழி 6-1-10) என்றும்‌ பெற்றல்லது தரியாத அதி மாத்ர ப்ராவண்ய முடையரா யிருக்கச்‌ செய்தேயும்‌, ஸ்வ ரக்ஷணத்தில்‌ அந்வயமில்லாத அத்யந்த பாரதந்த்ர் யத்தினாலே ததேக ரக்ஷ்யமா யிருக்குமென்கிற தம்முடைய கருத்தை, ஸூத்‌த ஸ்வபா வராய்‌ ஸாகா ஸஞ்சாரிகளாய்‌ மதுகர ப்ரக்ருதிகளாய்‌ பக்ஷபாதிகளாய்‌ ஷட்பத நிஷ்டரான கடகரை யிட்டறிவித்து (விளம்ப ரோஷ முபாயத்தாலே யழிய) இப்படியறிவித்த விடத்திலும்‌ அவன் தாழ்க்க அத்தால்‌ வந்த ப்ரணய ரோஷத்தாலே, அவன்‌ வந்து மேல்‌ விழுந்த வளவிலும்‌, “போகு நம்பீ ” (திருவாய்மொழி 6-2-2) “கழகமேறேல்‌ நம்பீ (திருவாய்மொழி 6-2-6) என்று அவனை உபேஷித்து அவன்‌ முகம்‌ பாராமலிருப்போமென்று சிற்றிலிழைப்பது சிறு சோறடுவதாக, அவனும்‌ தன்னுடைய போக விரோதி யாகையாலே “அழித்தாயுன்‌ திருவடியால்‌” (திருவாய்மொழி 6-2-9) என்கிறபடியே அந்த அநாதராந்ய பரதைகளை தனக்கும்‌ சரமோபாயமான திருவடிகளாலே உப லக்ஷிதமான விக்‌ரஹ வைலக்ஷ்ண்யத்தாலே குலைத்த அவனோடே சேர்ந்து. (உருகாமல்‌ வலித்ததும்‌ நண்ணி வணங்க பலித்தவாறே) “உகவையால்‌ நெஞ்சமுள்ளுருகி உன்‌ தாமரைத்‌ தடங்கண்‌ விழிகளின்‌ அகவலைப்‌ படுப்பான்‌ அழித்தாயுன்‌ திருவடியால்‌” (திருவாய்மொழி 6-2-9) என்றிப்படி அல்லோம்‌ என்ற நம்மைச்‌ சேர்த்துக்‌ கொண்ட தோராஸ்சர்ய மிருந்தபடி யென்‌ என்றுருக, இது தொன்று கண்டோ ஆஸ்சர்யப்படுகிறீர்‌, தன்னில் தான்‌ சேராதபடி விலக்ஷணங்களானவை நம்மோடே சேர்ந்திருக்கிறபடி பாரீர்‌ என்று தன்னுடைய விருத்‌த விபூதிகத்வத்தை நல்குரவுஞ் செல்விலே காட்டி உருகாதபடி வலிக்கப் பண்ண இவரும்‌ “நல்குரவும்‌” என்று தொடங்கி “திருவிண்ணகர்க்‌ கண்டேனே” (திருவாய்மொழி 6-3-1) என்று அத்தைக்‌ கண்டு தேறின விதுவும்‌ குரவையாய்ச்சியரிலே “என்ன குறை நமக்கே” (திருவாய்மொழி 6-4-1) என்று தொடங்கி “நண்ணி நான்‌ வணங்கப்‌ பெற்றேன்‌ எனக்கார்‌ பிறர்‌ நாயகரே” (திருவாய்மொழி 6-4-10) என்னும்படி க்ருஷ்ண குண சேஷ்டிதங்களை தரித்து நின்று அநுபவிக்கலாம்படி பலித்தவாறே. ‘உருகாமல்‌ வரித்தும்‌’ என்று பாடமானபோது பிறந்தவாற்றிலே உன்னைப்‌ பிரிந்த தஸையிலே உன்னுடைய குணாநுஸந்தாநம்‌ பண்ணி தரிக்கலாமோ வென்று பாரா நின்றேன்‌; “ஊடுபுக்கென தாவியை நின்று நின்றுருக்கி யுண்கின்ற” (திருவாய்மொழி 5-10-10) என்று அவை தானே ஸிதிலமாக்கா நின்றன-தரித்து நின்று குணாநுஸந்தாநம்‌ பண்ணும்படி பண்ணி யருள வேணுமென்றும்‌ “மற்றோர்‌ களை கணிலம்‌ காண்மின்களே” (திருவாய்மொழி 6-3-10) “(நாகணை மிசை நம்பிரான்‌ சரணே சரண்‌” (திருவாய்மொழி 5-10-11 )என்று உபாய வரணம்‌ பண்ணி அந்த வரணமும்‌ என்ன குறை யெனக் கென்று தொடங்கி “விண் மிசைத்‌ தன தாமமே புக மேவிய சோதி தன் தாள்‌ நண்ணி நான்‌ வணங்கப்‌ பெற்றேன்‌ (திருவாய்மொழி 6-4-10) என்று க்ருஷ்ண குண சேஷ்டிதங்களை திவா ராத்ர விபாகமற ப்ரீதி ப்ரேரிதனாய்க்‌ கொண்டு பேசப்‌ பெற்ற எனக்கு என்ன குறையுண்டு, பொய்யாஸநமிடுவார்‌ மல்லரை யிட்டு நெருக்கத்‌ தேடுவார்‌ எதிரம்பு கோர்ப்பாராய்க்‌ கொண்டு இருக்கற இந்த விபூதியிலிராதே “கதஸ்‌ ஸ்வம் ஸ்த்தாந முத்தமம்‌” என்கிறபடியே பரிவரேயான நிர்பய ஸ்த்தா நத்திலே எழுந்தருளின வ்ருத்தாந்தத்தை அநுஸந்தித்து முறையிலே கிட்டப்‌ பெற்ற வெனக்கு வேறு நிர்வாஹகருண்டோ என்றும்‌; கர்விக்க வேண்டும்படி பலித்தவாறே என்றுமாம்‌. (ஸப்ரகாரமாக ஸக்ருத்‌ கரணீயமென்று) இதரோபாயத்யாகமாகிற ப்ரகாரத்தோடே ஸித்‌த ஸாதந ஸ்வீகாரம்‌ “ஸக்ருதேவ” (ராயு. 18-33 என்கிற படியே ஒருக்கால் பண்ண வேணுமென்று பார்த்து. (புராண பெளராணிகர்‌ தயாஜ்யா மஸமாக்கின சித சித்‌ ப்ராப்ய ப்ராபகா பாஸங்களை) புராணேதிஹாஸங்‌களும்‌ அவற்றை உள்ளபடி யறிகையாலே பெளராணிகரான உடையவரும்‌ –பிதரம்‌ மாதரம்‌ தாராந்‌ புத்ராந்‌ பந்தூந்‌ ஸகீந்‌ குரூந்‌, ரத்நாநி தந தாந்யாநி க்ஷேத்ராணி ச க்‌ரஹாணிச, ஸர்வ தர்மாம்ஸ்ச ஸந்த்யஜ்ய ஸர்வ காமாம்ஸ்ச ஸாக்ஷராந்‌” (சரணாகதி கத்யம்‌) “பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச தநாநி ச பவத்‌ கதம்‌ மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸுகாநிவை த்யக்த்வா புத்ராம்ஸ்ச தாராம்‌ ச ராகவம்‌ ஸரணம்‌ கத: (ரா.யு19-5) என்று த்யாஜ்யாம்ஸமாக்கினவற்றில்‌ பித்ராதிகளான சேதநருடைய ரக்ஷணம்‌ “மாத்ரு தேவோ பவ” (தைத்திர்யோபநிஷத்‌ இத்யாதி ப்படியே ஸாதநாந்தரத்துக்கு உபகாரகமாகையாலே ப்ராபகங்களாயும்‌ அவர்களுடைய வியோகம்‌ அஸஹ்யமாம்படி ப்ரிய விஷயமாகையாலே ப்ராப்யங்களாயு மிருக்கையாலும்‌; ரத்நாதிகள்‌ உபாயாந்தரத்துக்கு தாநாதி முகத்தாலே ஸஹகாரிகளா யிருக்கையாலே ப்ராபகங்களாயும்‌ தன்னை யழிய மாறியும்‌ இவற்றை ஆர்ஜிக்க வேண்டும்படி ஸ்வயம் ப்ரயோஜநங்க ளாகையாலே ப்ராப்யங்களா யுமிருக்கிற இந்த ப்ராப்ய ப்ராபகாபா ஸங்களை; ஸாக்ஷாத்‌ ப்ராப்ய ப்ராபகங்கள்‌ அல்லாமையாலே ஆபாஸங்களென்கிறது. (கை வலிந்து கை கழலக்‌ கண்டும்‌ எல்லாம்‌ கிடக்க நினையாதகன்றும்‌) “நம்மைக்‌ கை வலிந்து” (திருவாய்மொழி 6-5-7) “இழந்தது சங்கே” (திருவாய்மொழி 6-6-1) “இதெல்லாம்‌ கடக்க இனிப்‌ போய்‌ எம்மை யொன்றும்‌ நினைத்திலளே” (திருவாய்மொழி 6-7-9) “இன்றெனக்கு உதவாதகன்ற” (திருவாய்மொழி 6-7-6) என்று சிதசித்‌ வர்க்கமான இவற்றைக்‌ கை விட்டும்‌, உறங்கினவன்‌ கையிலே எலுமிச்சம்‌ பழம்‌ போலே ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநத்தாலே தன் கையில்‌ நின்றும்‌ நெகிழும்படி கண்டு “ஸர்வாந்‌ போகாந்‌ பரித்யஜ்ய” என்கிறபடியே இவற்றை மதியாமல்‌ அகன்றும்‌ (ஆளீர்‌ மேவீர்‌ ஊதீர்‌ என்று ததீய ஷோஷமாக்கியும்‌) “பொன்னுலகாளீரோ” (திருவாய்மொழி 6-8-1 “நெய்யமரின்னடிசல்‌ நிச்சல்‌ பாலொடு மேவீரோ” (திருவாய்மொழி 6-8-2 )“ஓடிவந்தென்‌ குழல்மேலொளி மாமலரூதீரோ” (திருவாய்மொழி 6-8-3) என்று கீழ்‌ தாம்‌ விட்டவிடத்திலும்‌ தம்மை விடாதபடி பற்றிக்‌ கிடக்கிற ஆத்மாத்மீயங்களை பகவத்‌ விஷயத்தில்‌ உபகாரகரானவர்களுக்கு “ஸத்‌ குருப்யோ நிவேதயேத்‌” என்கிறபடியே ஸமர்ப்பித்து. (புறத்திட்டுக் காட்டி யென்று ப்ரஸங்கிக்கில்‌ முடியும்படி விட்டு) “புறத்திட்டின்னம்‌ கெடுப்பாயோ பல நீ காட்டிப்‌ படுப்பாயோ” (திருவாய்மொழி 6-9-8) என்று ஸம்ஸாரிகளுக்கு போக்‌யமான ஸப்‌தாதி, விஷயங்களினுடைய தர்ஸநத்திலே ஸத்தா ஹாநி பிறக்கும்படி அஸஹ்யமாயிருக்கையாலே அவற்றை விட்டு, (தந்தைதாயுண்ணுஞ்‌ சோறு மாநிதி, பூவை யாவை யுமொன்றே யாக்கி) “பவத்‌ கதம்‌ மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸூகாநி வை” ரா.யு என்றும்‌, “த்வமேவ மாதா ச பிதா த்வமேவ, த்வமேவ பந்துஸ் ச குரஸ்‌ த்வமேவ, த்வமேவ வித்‌யா த்‌ரவிணம்‌ த்வமேவ த்வமேவ ஸர்வம்‌ மம தேவதே வ” என்றும்‌ ‘வாஸுதேவஸ்‌ ஸர்வம்‌” (கீதை 7-) என்றும்‌ “மாதா பிதா ப்‌ராதா நிவாஸஸ் ஸரணம்‌ ஸுஹ்ருத்‌ கதிர்‌ நாராயண:” (ஸுபால உபநிஷத் )என்றும்‌ சொல்லுகிறபடியே “தேவபிரானையே தந்தை தாயென்றடைந்த‘” (திருவாய்மொழி 6-5-11) என்று அயர்வறுமமரர்களதிபதியே மாதா பித்ரு ப்ரப்‌ருதிகளான ஸர்வ வித பந்துவும்‌ என்றும்‌, ‘ உண்ணுஞ் சோறு பருகு நீர்‌ தின்னும்‌ வெற்றிலை யுமெல்லாம்‌ கண்ணன்‌” (திருவாய்மொழி 6-7-1 என்று தாரக போஷக போக்யங்க ளெல்லாம்‌ ஸர்வ ஸுலபனான கிருஷ்ணனே என்றும்‌, “வைத்த மா நிதியாம்‌ மதுசூதனையே அலற்றி” (திருவாய்மொழி 6-7-11) என்று ஆபத் ரக்ஷகமாகச்‌ சேமித்து வைத்த அக்ஷயமான நிதியும்‌ விரோதி நிரஸந ஸீலனான அவனே யென்றும்‌, “பூவை பைங்கிளிகள்‌ பந்து தூதை பூம்புட்டில்கள்‌ யாவையும்‌ திருமால்‌ திரு நாமங்களே கூவியெழும்‌’ (திருவாய்மொழி 6-7-3) என்று லோபகரணங்களால்‌ பிறக்கும்‌ ரஸமெல்லாம்‌ ஸ்ரீயபதியினுடைய திருநாமங்களைச்‌ சொல்லவே யுண்டாகா நின்றதென்றும்‌, இப்படி கீழ்‌ விட்டவை யெல்லாம்‌ பகவத்‌ விஷய மொன்றிலுமே யாக்கி, (தளர்வேனோ திரிவேனோ குறுகாதோ முதல்வாவோ வென்னு மார்த்தியோடே) “கோலத்‌ திருமாமகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள்‌ அடியேனின்னம்‌ தளர்வேனோ” (திருவாய்மொழி 6-9-10) “தீயோடுடன்‌ சேர்‌ மெழுகா யுலகில்‌ திரிவேனோ” (திருவாய்மொழி 6-9-6) “கூவிக்கொள்ளுங்காலமின்னம்‌ குறுகாதோ” (திருவாய்மொழி 6-9-9) “புணரேய்‌ நின்ற மரமிண்டின்‌ நடுவே போன முதல்வாவோ” (திருவாய்மொழி 6-10-5) என்று ஸர்வ ப்ரகார ரக்ஷகனாய்‌ பெரிய பிராட்டியாரோடே யிருக்கிற உன்னைக்‌ கிட்டப் பெறாதே ஸம்ஸாரத்திலே யிருந்து எத்தனை காலம்‌ இப்படியே அவஸந்நனாகக் கடவேன்‌ என்றும்‌, த்ரிவிக்ரமாபதாநம்‌ பண்ணின வுன்னைக்‌ காண வாசைப்பட்டுக்‌ கிடையாமையாலே அக்‌நி ஸகாஸத்தில்‌ மெழுகு போலே ஸம்ஸாரத்திலே இப்படி எத்தனை காலம்‌ திரியக் கடவேன்‌ என்றும்‌, ஸர்வ ஸுலபமாய்‌ நிரதிஸய போக்யமான உன்‌ திருவடிகளிலே என்னை அருளப் பாடிடுங்காலம்‌ இன்னமணித்தாகாதோ என்றும்‌, யமளார்ஜுநங்களின்‌ நடுவே போன ஸர்வ காரண பூதனே என்றும்‌ உன்‌ திருவடிகள்‌ மாநஸாநுபவ மாத்ரமன்றிக்கே ப்ரத்யக்ஷமாகக்‌ கிட்டுவதென்றோ என்கிற ஆர்த்தியோடே (ப்ரபத்தி முக்‌யாதிகாரமான பரமார்த்தியை உடையராய்‌) (த்ரிவிக்ரமனென்று தொடங்கி தடந் தாமரை யென்கிற தளவாக) “லோக விக்ராந்த சரணெள ஸரணம்‌ தே(அ)வ்ரஜம்‌ விபோ” என்று ஸம்ஸாரிகளுடைய தோஷங்களை போக்யமாகக்‌ கொண்டு அவர்களுடைய தண்மை பாராதே “தலை விளாக்‌ கொண்ட எந்தாய்‌” என்கிறபடியே ஒரு நீராகவும்‌ அவர்கள்‌ தாங்களே ப்ரத்யக்ஷிக்கும்படி வடிவைக்‌ காட்டி திருவடிகளை எல்லாருடைய தலைகளிலும்‌ வைக்கையாலே ஆஸ்ரயணோபயோகியான வாத்ஸல்ய ஸெளஸீல்ய ஸெளலப்‌யங்களும்‌, “தே?” என்று தன் பேறாகச்‌ செய்கைக் குறுப்பான ஸ்வாமித்வமும்‌, “விபோ” என்று கார்யோபயோகியான ஜ்ஞாந ஸக்திகளும்‌ த்ரிவிக்ரமாபதாநத்திலே ப்ரகாபபிக்கையாலே “தெய்வ நாயகன்‌ நாரணன்‌ திரிவிக்கிரமன்‌” “மாண் குறள்‌ கோலப் பிரான்‌’ (திருவாய்மொழி 5-9-6) “அடியை மூன்றை இரந்தவாறும்‌” (திருவாய்மொழி 5-10-9) “மின் கொள் சேர்‌ புரி நூல்‌ குறளாய்‌ அகல் ஞாலம் கொண்ட வன்‌ கள்வன்‌” (திருவாய்மொழி 6-1-11) என்றும்‌ ஸுூரிபோக்யனாய்‌ ஸர்வ ஸ்வாமி யானவன்‌ த்ரிவிக்ரமாபதாநம்‌ பண்ணுகைக்காகப்‌ பெரு விலையனான அழகைச்‌ சிறாங்கித் தனுபவிக்கலாம்படி வாமந வேஷ பரிக்‌ரஹம்‌ பண்ணி மஹாபலியுடைய யஜ்ஞ வாடத்திலே சென்று மூன்றடி யென்றிரந்து ப்‌ரஹ்மசாரி வேஷத்தோடே நிற்கிற மஹா வஞ்சகன்‌- “காண்மின்களுலகரென்று கண் முகப்பே நிமிர்ந்த” (திருவாய்மொழி 6-3-1 )நோக்கு வித்‌யை காட்டுவாரைப் போலே லெளகிகர்‌ ப்ரத்யக்ஷிக்கும்படி “அகல் கொள்‌ திசை வையமளந்த மாயன்‌‘ (திருவாய்மொழி 6-4-6) “திசை ஞாலம் தாவி யளந்ததும்‌” (திருவாய்மொழி 6-5-3) “வையமளந்த மணாளன்‌” (திருவாய்மொழி 6-6-1) “மண்ணும்‌ விண்ணும்‌ கொண்ட மாய வம்மான்‌'” (திருவாய்மொழி 6-9-2) “ஓரடியால்‌ எல்லா வுலகும்‌ தட வந்த” (திருவாய்மொழி 6-9-6) “தாவி வையம்‌ கொண்ட தடந் தாமரைகட்கே” (திருவாய்மொழி 6-9-9) என்று விஸ்த்ருதமாய்‌ திக்குகளோடே கூடின பூமியையும்‌ உபரிதந லோகங்களையும்‌ தென்றலுலாவினாப்‌ போலே ஸுக தரமாம்படி எங்குமொக்கப்‌ பரப்பி யளந்து கொண்ட நிரதிஸய போக்‌யமாய்‌ அதிஸுகுமாரமான திருவடிகள்‌. (இணைத் தாமரைகள்‌ காண இமையோரும்‌ வரும்படி சென்று சேர்ந்த உலகத்திலதத்தே கண்டு) “எந்நாளே நாம்‌ மண்ணளந்த” (திருவாய்மொழி 6-10-6) இத்யாதி, திருவுலகளந்தருளின ஸர்வ ஸுலபமாய்‌ நிரதிஸய போக் யமாய்ச்‌ சேர்த்தி யழகை யுடைத்தான திருவடிகளை நாம்‌ காண்பதெப்போதோ என்று நித்ய ஸூரிகளும்‌ வந்தநுபவிக்க ஆசைப்பட்டு வரும்படி “அன்று ஞாலம்‌ அளந்த பிரான்‌ பரன்‌ சென்று சேர்‌ திருவேங்கடமாமலை‘ (திருவாய்மொழி 3-3-8) என்று திருவுலகளந்தருளின ஸ்ரமந் தீர அச் செயலாலே ஸர்வ ஸ்மாத் பரனானவன்‌ விடாயர்‌ மடுவிலே சேருமாப் போலே உகந்து நிற்கிற ‘ உலகுக்குத்‌ திலதமாய்‌ நின்ற திருவேங்கடம்‌” (திருவாய்மொழி 6-10-1 என்று ஸ்ரீபூமிப் பிராட்டிக்கு முக்‌யமான ஆபரணமாயிருக்கிற திருமலையிலே கண்டு (அகலகில்லேன்‌ என்று பூர்வ வாக்ய ப்ரக்ரியையாலே அநுஸந்தித்தவர்‌) ‘ “அகலகில்லேன்‌ இறையும்‌”(திருவாய்மொழி 6-10-10) இத்யாதி புருஷகார பூதையான பெரிய பிராட்டியாரை முன்னிட்டு வாத்ஸல்யாதி, குணங்களை அநுஸந்தித்துக்‌ கொண்டு தம்முடைய அநந்ய கதித்வாநுஸந்தாந பூர்வகமாக பூர்வ வாக்ய ப்ரக்ரியையாலே பூர்ண ப்ரபதநம்‌ பண்ணினவர்‌ (பிணக்கறத்‌ தொடங்கி வேதப் புனித விருக்கை நாவில்‌ கொண்டு) “பூவில்‌ புகையும்‌ விளக்கும்‌ சாந்தமும்‌ நீரும்‌ மலிந்து ஞான விதி பிழையாமே அச்சுதன்‌ தன்னை மேவித்‌ தொழுதுய்ம்மினீர்கள்‌’ (திருவாய்மொழி 5-2-9) என்கிறதளவாகக்‌ கீழுபதேஸித்த ஸாத்‌ய ஸாதந பக்தி ஸ்ரவணத்தாலே அதினுடைய துஷ்கரத்வாதி தோஷாநுஸந்தா நத்தாலும்‌ ஸ்வ பாரதந்த்ர்யா நுஸந்தானத்தாலும்‌ ஸோகம்‌ பிறக்கையாலே தம்முடைய ப்ரபத்தி நிஷ்டை துணையாம் படியான அதிகாரம்‌ பிறந்தவர்களுக்கு (தந்தனன்‌ களை கணிலம்‌ புகுந்தேனென்று ஸ்வ ஸித்‌தோபாய நிஷ்டையை உக்த் யநுஷ்டாங்களாலே காட்டுகிறார்‌ என்கிறார்‌) “தந்தனன்‌ தன தாள்‌ நிழலே”(திருவாய்மொழி 6-3-9) “திருவிண்ணகர்‌ மன்னு பிரான்‌ கழல்களன்றி மற்றோர் களை கணிலம்‌ காண்மின்களே‘ (திருவாய்மொழி 6-3-10) என்கிற தம்முடைய உக்தியாலும்‌ “அடிக்கீழ்‌ அமர்ந்து புகுந்து” (திருவாய்மொழி 6-10-11 என்கிற தம்முடைய அநுஷ்டானத்தாலும்‌ தமக்கிந்த ஸித்‌தோபாயத் திலுண்டான நிஷ்டையை ப்ரகாஸ்ரிப்பிக்கிறார்‌ என்கிறார்‌ ஆறாம் பத்தில்

    225-(1-)எண்ணிலா குணங்கள் பால துன்ப வேறவன் மாயாப் பல் யோகு செய்தி என்னும் ஆச்சர்ய சக்தி யோகத்தாலே(2)-தெளி உற்றவருக்கு ஏற்றரும் வைகுந்தத்தை அருளும்
    பிராபகத்வம் புல் பா வெறும்பு பகைவனுக்கும் ஆக்கவல்ல சர்வ சக்தி பாதமகலகில்லா தம்மை(3)-அகற்றும் அவற்றின் நடுவே இருத்தக் கண்டு நலிவான் சுமடு தந்தாய் ஒ வென்று சாதன பலமான ஆக்ரோசத்தோடே பழி இட்டுக் (4)-கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை கோவில் திரு வாசலிலே முறை கெட்ட கேள்வி யாக்கித் (5)-தேற்ற ஒண்ணாதபடி தோற்று ஒன்றி நிற்கப் பண்ணின பல தானம் மற்றும் கற்பார் இழவிலே சுவறி(6)-பழைய தனிமைக் கூப்பீடு தலை எடுத்து -சூழவும் பகை முகம் செய்ய -எடுப்பும் சாய்ப்புமான க்லேசம் நடக்க உபாய அதிகார தோஷம் ஒழிய மாயங்கள் செய்து வைத்த வைசித்திரியைக் கேட்க (7)-ஐச்சமாக இருத்தி உறக் கொண்ட ஸ்வ பர பிரயோஜனத்தை அருளிச் செய்ய -என் சொல்லி எந்நாள் பார் விண்ணீர் இறப்பு எதிர் எதுவும் என்கிற உபகார ஸ்ம்ருதியோடே (8)-தன் சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்க இருந்த நிலத் தேவர் குழுவிலே பாட்டுக் கேட்பிப்பதாக கான கோஷ்டியையும் – தேவ பிரான் அறிய -மறந்தவர் (9)-சரமோ உபாய பரர் ஆனார்க்கு நீள் நகரமது -துணித்தான் சரண் அன்றி மற்று ஓன்று இலம் உள்ளித் தொழுமின் என்று பிராப்ய சாதன அவதியை ப்ரீதியாலே பிரகாசிப்பிகிறார் ஏழாம் பத்தில் —

    இப்படி ப்ரபந்நரான இவர்களுடைய அநிஷ்ட நிவருத்தி பூர்வகமாக இஷ்ட ப்ராப்தியை பண்ணுகைக்கீடான ஆஸ்சர்யமான ஜ்ஞாந சக்த்யாதி, யுக்தனாகையாலே யதாஜ்ஞாநம்‌ பிறந்தவர்களுக்குக்‌ கொடுக்கக்‌ கடவதான பரமபதத்தைத்‌ தானே உபாயமாய்க்‌ கொண்டு கொடுக்குமிடத்தில்‌ சத்ருவுக்கும்‌ திர்யக் ஸ்த்தாவரங்களுக்கு முட்படக்‌ கொடுக்க வல்ல ஸர்வ ஸக்தியான ஸர்வேஸ்வரன்‌ தன்‌ திருவடிகளிலே ஸாங்க,ப்ரபதநம்‌ பண்ணின தம்மை விஷயாந்தரங்களிலே மூட்டி நஸிப்பிக்கக்‌ கடவதான இந்த்‌ரியங்கள்‌ நடையாடுகிற ஸம்ஸாரத்திலே வைக்கக்‌ கண்டு விஷண்ணராய்க்‌ கூப்பிட்டு தம்‌ தமை தாம்‌ பேச மாட்டாதே அபஹ்ருத சித்தராக அவன்‌ தன்‌ விஜயத்தைக்‌ காட்டித் தரிப்பிக்க அந்த தரிப்பும்‌ ஸம்ஸாரிகளிழவை நினைத்துச்‌ சுவறிப்‌ பழைய வார்த்தியே தலை யெடுத்து அநுபாவ்ய விஷயம்‌ ஸ்ம்ருதி விஷயமாய்‌ ஒருமுகஞ்செய்து நலிய நோவு பட்டு இப்படி க்லேஸப்படுகிற இவர்‌ உபாய பூதனாயிருக்கிற உனக்கு ஜ்ஞாந சக்திகளில்‌ குறைவற்றிருக்க எனக்கு ஆகிஞ்சந்ய அநந்யகதித்வங்களிலும்‌ ஆர்த்தியிலும்‌ குறைவற்றிருக்க என்னை ஸம்ஸாரத்திலே வைக்கைக் கடியென்‌ என்று அவனைக்‌ கேட்க அவனும்‌ நமக்கும்‌ நம்மடியார்க்கும்‌ திருவாய்மொழி பாடுகைக்கு வைத்தோங்காணும்‌ என்று தான்‌ இவரை வைத்ததுக்கு ஹேதுவை அருளிச் செய்ய முதலாழ்வார்கள்‌ வ்யாஸாதிகள்‌ கவி பாடுகைக்கு உண்டாயிருக்க நம்மைக்‌ கொண்டு கவிபாடுவித்துக்‌ கொள்ளுவதே என்று அவன்‌ பண்ணின உபகாரத்தை அநுஸந்தித்து அதுக்குப்‌ ப்ரத்யுபகாரம்‌ தேடிக்‌ தாணாமையாலே திருவாறன்விளையிலே அவன்‌ பெரிய பிராட்டியாரோடே கூட எழுந்தருளி யிருக்கிற விருப்பிலே திருவாய்மொழி பாடி அடிமை செய்யப்‌ பாரித்து அங்கே தம்முடைய திருவுள்ளம்‌ ப்ரவணமாகையாலே பரமபதத்திலிருப்பை உபேக்ஷிக்கும்படியான ப்ரகாரத்தை உடையரான இவர்‌ கீழ்‌ தம்முடைய உபாயத்தில்‌ நிஷ்டையை வெளியிடும்படி புகுர நின்றவர்களுக்கு அந்த திருவாறன்விளையில்‌ நின்றருளினவனுடைய திருவடிகளே உபாயம்‌ அத்தேஸமே ப்ராப்யமென்று தாமறுதியிட்ட ப்ராப்ய ப்ராபகங்களினுடைய முடிவைத்‌ தம்முடைய திருவுள்ளத்தில்‌ உகப்பாலே வெளியிடுகிறார்‌ என்கிறார்‌.

    (எண்ணிலாக்‌ கு,ணங்கள்‌ இத்யாதி,) ஆஸ்சர்ய யோக,த்தாலே “எண்ணிலாப்‌ பெரு மாயனே’ (திருவாய்மொழி 7-1-1 “குணங்கள்‌ கொண்ட மூர்த்தியோர்‌ மூவராய்ப்‌ படைத்தளித்துக்‌ கெடுக்கும்‌” (திருவாய்மொழி 7-1-11 “பால துன்பங்கள்‌ இன்பங்கள்‌ படைத்தாய்‌” (திருவாய்மொழி 7-2-7) “ஊழிதோறாழி உருவும்‌ பேரும்‌ செய்கையும்‌ வேறவன்‌ வையங்காக்கும்‌” (திருவாய்மொழி 7-3-11) “மாயா வாமனனே’ (திருவாய்மொழி 8-8-1 “உள்ளப் பல் யோகு செய்தி” (திருவாய்மொழி 7-8-4) என்று எண்ணிறந்த கல்யாண குணங்களை யுடையனாய்‌ ஸத்வாதி குண ப்ரசுரமான மூர்த்திகளைக்‌ கொண்டு ஸ்ருஷ்ட்யாதிகளைப்‌ பண்ணுமவனாய்‌ இடமறிந்து ஸுக,துக்கங்களை ஸங்கல்பிக்குமவனாய்‌ ஆஸ்ரித ரக்ஷணார்த்தமாகக்‌ கல்பந்தோறும்‌ திருமேனியும்‌ சேஷ்டிதங்களும்‌ வேறு படக்‌ கொள்ளுமவனுமாய்‌ ஆஸ்சர்ய சேஷ்டிதங்களை உடையவனுமாய்‌ ஸர்வருடையவும்‌ ரக்ஷ்ணோப சிந்தை பண்ணுமவனுமாய்‌ இப்படி உபாய க்ருத்யத்துக்கு அபேஷிதமான ஆஸ்சர்ய சக்தி யோகத்தை உடையவனாகையாலே (தெளிவுற்றவர்க்கு ஏற்றரும்‌ வைகுந்தத்தை அருளும் ப்ராபகத்வம்‌ புற்பா வெறும்பு பகைவனுக்குமாக்க வல்ல ஸர்வஸக்தி) “தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக்‌ கதிசெய்யும்‌ தெளிவுற்ற கண்ணன்‌” (திருவாய்மொழி 7-5-1 “ஏற்றரும்‌ வைகுந்தத்தை அருளும்‌” (திருவாய்மொழி 7-6-10) என்று ப்ராப்யமும்‌ ப்ராபகமும்‌ தானேயென்று அத்‌யவஸித்துப்‌ பின்பு நாட்டார்‌ செயல்‌ கண்டாதல்‌ உக்த்யாபாஸங்கள்‌ கண்டாதல்‌ பிற்காலியாதே நின்றவர்களுக்கு நிரதிஸயாநந்தமாய்‌ ஒருவராலும்‌ ஸ்வ யத்நத்தாலே ப்ராபிக்க வொண்ணாதிருக்கிற ஸ்ரீவைகுண்டத்தைத்‌ தன்னருளாலே கொடுக்கைக்குத்‌ தான்‌ உபாயமாமிடத்தில்‌ “புற்பா முதலாப்‌ புல்லெறும்பாதி ஒன்றின்றியே நற்பாலுக்குய்த்தனன்‌ ‘ (திருவாய்மொழி 7-5-1) என்றும்‌ “நாட்டை அளித்துய்யச்‌ செய்து” (திருவாய்மொழி 7-5-2 என்றும்‌ “சேட்பால்‌ பழம்‌ பகைவன்‌ சிசுபாலன்‌ திருவடி தாட்பாலடைந்த‘ (திருவாய்மொழி 7-5-3) என்றும்‌ முதலிலே ஜ்ஞாந லேஸமில்லாத திர்யக்‌ ஸ்தாவரங்களுக்கும்‌ ப்ராதி கூல்யத்திலே முதிர நின்ற ஸத்ருவுக்கும்‌ கொடுக்க வல்லனாம்படி ஸர்வ ஸக்தி யுக்தனான ஸர்வேஸ்வரன்‌ (பாதமகலகில்லாத தம்மை) “அடியேனுன பாதம்‌ அகலகில்லேனிறையும்‌” (திருவாய்மொழி 6-10-9)என்று தன் திருவடிகளை க்ஷ்ண காலம்‌ அகல ஸக்தரன்றியிலே “அடிக்கீழமர்ந்து (திருவாய்மொழி 6-10-10) என்று ஸரணம்‌ புகுந்த தம்மை (அகற்றுமவற்றின்‌ நடுவே இருத்தக்‌ கண்டு) “அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் ஆமவை (திருவாய்மொழி 5-7-8) என்று பகவத்‌ விஷயத்தைக்‌ கிட்டாத படி அகற்றவற்றான இந்த்‌ரியங்களின்‌ நடுவே வைக்கக்‌ கண்டு (நலிவான்‌ சுமடு தந்தாய்‌ ஓவென்று சாதன பலமான ஆக்ரஸத்தோடே பழியிட்டு )நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் -(திருவாய் -7-1-1)அன்புருகி நிற்கும் அது நிற்கச் சுமடு தந்தாய் (திருவாய் -7-1-10) விண்ணுளார் பெருமானேயோ (திருவாய் -7-1-5) முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தியேயோ (திருவாய் -7-1-10) என்று வ்யவதான விளம்பம் இல்லாத உபாயத்தைக் கீழே பரிக்ரஹிக்கையாலே – பிரதிகூலமான ஸம்ஸாரத்திலே பொருந்தாமையோடே தம் தலையிலே உள்ளத்தையும் அவன் தலையிலே ஏறிடும்படியான ப்ராப்தியை யுணர்ந்தவராகையாலே –சாகாம்ருகா ராவண சாயகார்த்தா ஜக்முஸ் சரண்யம் சரணம் ச ராமம் -(யுத்த -59-44)என்கிறபடியே இவரும் அவன் பரமபதத்தில் இருப்பும் குலைந்து வந்து விஷயீ கரிக்கும்படி பெரிய ஆக்ரோஸத்தோடே அவன் மேலே பழியாம்படி கூப்பிட்டு

    (கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியை கோவில் திரு வாசலிலே முறை கெட்ட கேள்வி யாக்கி)கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் (திருவாய்மொழி 7-521)இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் (திருவாய்மொழி 7-2-4)சிந்திக்கும் திசைக்கும் தேறும் கைகூப்பும் (திருவாய்மொழி 7-2-5)என்று திவா ராத்ரி விபாகமற அரதியாயத் துடிக்கும்படி அடைவுக்கெட்ட ஆர்த்தியை திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாயே (திருவாய்மொழி 7-2-1)என் செய்திட்டாய் (திருவாய்மொழி 7-2-3) என் சிந்தித்தாயே (திருவாய்மொழி 7-2-4)என் செய்கேன் என் திருமகட்கே (திருவாய்மொழி 7-2-8)என்றும் திரு வாசலிலே பெண் பிள்ளையைப் பொகட்டுக் கூச்சு முறை தவிர்ந்து அவன் தன்னையே கேட்டுக் கூப்பிடும்படியான ஆர்த்தியாலே வந்த அவஸ்தா பேதத்தை யுடையவராய் (தேற்ற ஒண்ணாத தோற்று)அன்னையர்காள் என்னைத் தேற்ற வேண்டா கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன் (திருவாய் மொழி -7-3-9)என்று பார்ஸ்வத்தாராலும் தேற்றி தரிப்பிக்க ஒண்ணாதபடி அபஹ்ருத சித்தராய்க் கொண்டு பாரதந்தர்யத்தையும் இழந்து (ஓன்று நிற்கப் பண்ணின பலாதாநம் )இப்படி இருக்கிற இவரைத் தரிப்பிக்கைக்காக ஈஸ்வரன் தன்னுடைய விஜய பரம்பரைகளைக் காட்டிக் கொடுக்கக் கண்டு ப்ரீதராய் –குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும் ஓன்று நின்ற சடகோபன் (திருவாய் மொழி -7-4-11)என்று அவர் விஜய பரம்பரைகளிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களோடு ஒரு சேர்த்தியாக நிற்கும்படி பலாதாநம் பண்ணி (மற்றும் கற்பார் இழவிலே சுவறி )கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும்‌ கற்பரோ” (திருவாய்மொழி 7-5-1) என்று “அபவரகே ஹிரண்ய நித ம்‌ நிதா ய உபரி ஸஞ்சரந் தோ நத்‌ ரஷ்யந்தி” என்கிறபடியே அவதார ப்ரயுக்த ஸெளலப்‌யத்தை உடையனாய்‌ ப்ரிய பரனுமாய்‌ தான்‌ அங்கீகரிக்க நினைத்தாரை நிர்ஹேதுகமாக மோக்ஷ பர்யந்தம்‌ நடத்துமவனுமா யிருக்குமிவனை ஸம்ஸாரிகள் இழப்பதே -என்று அவர்களுடைய இழவை அநுஸந்தித்து அதிலே அந்த பலாதாநமும்‌ சுவறி (பழைய தனிமைக்‌ கூப்பீடு தலையெடுத்து) “பாமரு மூவுலகும்‌ படைத்த பற்பநாபாவோ” என்று தொடங்கி “தனியேன்‌ தனியாளாவோ” (திருவாய்மொழி 7-6-1 என்று அவனுடைய ஐகத் காரணத்வாதிகளைச்‌ சொல்லிக்‌ கூப்பிடும்படி முன்புற்றை உண்ணிலாவியில்‌ தனிமைக்‌ கூப்பீடே மீண்டும்‌ தலையெடுத்து (சூழவும்‌ பகை முகஞ்செய்ய) “சூழவும்‌ தாமரை நாண் மலர் போல்‌ வந்து தோன்றும்‌ கண்டீர்‌ இணைக் கூற்றங்கொலோ அறியேன்‌” (திருவாய்மொழி 7-7-1) “கண்ணன்‌ கோளிழை வாண்முகமாய்க்‌ கொடியேனுயிர்‌ கொள்கின்றதே” (திருவாய்மொழி 7-7-8 என்று முன்பு அநுபூதமான அவனுடைய முகத்தில்‌ அவயவ ஸோபை யானது விஸத ஸ்ம்ருதி விஷயமாய்க்‌ கொண்டு பாதிக்க நலிவு பட்டு (எடுப்பும்‌ சாய்ப்புமான க்லேஸம்‌ நடக்க) தம்முடைய ஆர்த்தியாலே வருகிற எடுப்பும்‌ அவனுடைய குணாநுஸந்தாநத்தாலே வந்த சாய்ப்புமாய்க்‌ கொண்டு க்லேஸமானது உருவ நடக்க (உபாயாதிகார தோஷமொழிய மாயங்கள்‌ செய்து வைத்த வைசித்ரியைக்‌ கேட்க) உபாய பூதனாயிருக்கிற வுனக்கு அஜ்ஞாந அஸக்திகளாகிற தோஷமின்றிக்கே யிருக்க ஸரணாகதனான எனக்கு ஆகிஞ்சந்ய அநந்ய கதித்வங்களும்‌ ஆர்த்தியும்‌ உண்டாயிருக்கையாலே அதிகாரத்திலே தோஷமின்றிக்கே இருக்க “பாசங்கள்‌ நீக்கி இத்யாதி, மாயங்கள்‌ செய்து வைத்தி” (திருவாய்மொழி 7-7-5) என்று ஸம்ஸாரத்தில்‌ ஸங்கத்தை வாஸநையோடே அறுத்து உனக்கநந்யார்ஹ ஸேஷமாக்கிக்‌ கொண்டு பின்பு என்னை ஸம்ஸாரத்திலே வைத்த ஆஸ்சர்யத்தை அருளிச் செய்ய வேணுமென்று கேட்க (ஐச்சிகமாக இருத்தி யறக்கொண்ட ஸ்வ பர ப்ரயோஜநத்தை அருளிச்‌ செய்ய) அவன்‌ நமக்கும்‌ நம்முடையார்க்கும்‌ உம்மைக்‌ கொண்டு திருவாய்மொழி பாடுவித்துக்‌ கொள்ளுகைக்காக நம்முடைய இச்சையாலே வைத்தோம்‌ காணும்‌ என்று வைத்ததுக்கு ஹேதுவை அருளிச் செய்ய (என்‌ சொல்லி எந்நாள்‌ பார் விண்ணீரிறப்பெதிர்‌ எதுவும்‌ என்கிற உபகார ஸ்ம்ருதியோடே) வ்யாஸ பராசர வால்மீகி ப்ரப்‌ருதிகள்‌ முதலாழ்வார்களள வுண்டாயிருக்கத்‌ தம்மைக்‌ கொண்டு கவி பாடுவித்துக்‌ கொண்ட உபகாரத்தை அநுஸந்தித்து “என்‌ சொல்லி நிற்பனோ” “எந்நாள்‌ சிந்தித்தார்வனோ” (திருவாய்மொழி 7-9-7) “பார்‌ விண்ணீர்‌ முற்றுங்‌ கலந்து பருகிலுமார்வனோ” (திருவாய்மொழி 7-9-7) “இறப்பெதிர்காலம்‌ பருகிலுமார்வனோ” (திருவாய்மொழி 7-9-9) என்று எங்ஙனே நான்‌ தரையில்‌ கால்‌ பாவுவது அவவுபகாரத்தைக்‌ காலதத்வ முள்ளதனையும்‌ அநுஸந்தித்தாலும்‌ பர்யாப்தனாகிறிலேன்‌. ஸகல ஸ்தலங்களிலு முண்டாயிருக்கிற ஸகல சேதநருடைய வாகாத்‌ யுபகரணங்களை நானொருவனுமே உடையேனுமாய்‌ கால த்ரயத்திலும்‌ பேசி யநுபவித்தாலும்‌ பர்யாப்தனாகிறிலேன்‌. “உதவிக் கைம்மாறு இத்யாதி. எதுவுமொன்று மில்லை செய்வதிங்குமங்கே” (திருவாய்மொழி 7-9-10) இதுக்கு ப்ரத்யுபகாரம்‌ பண்ணுமிடத்தில்‌ ஆத்மாவும்‌ ததீயமா யறிகையாலே உபய விபூதியிலும்‌ செய்யலாவது ஒன்றில்லை என்னும்படியான உபகார ஸ்ம்ருதியை உடையராய்‌ (தன் சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்க விருந்த நிலத் தேவர்‌ குழுவிலே பாட்டுக்‌ கேட்பிப்பதாக காந கோஷ்ட்டியையும் தேவ பிரானறிய மறந்தவர்‌) “செம்பவளத்‌ திரள்வாய்த்‌ தன் சரிதை கேட்டான் (பெருமாள்‌ திருமொழி 10-8) என்று நாச்சியாரை யொழிய பெருமாள் தாமே தனி இருந்த இடத்தே ஸ்ரீராமாயணம்‌ கேட்பித்த குஸ லவர்களைப்‌ போல் அன்றிக்கே -இன்பம் பயக்க வெழில்‌ மலர்‌ மாதரும்‌ தானும்‌ இவ் வேழுலகை இன்பம்‌ பயக்க நிலத் தேவர்‌ குழு வணங்கும்‌ சிந்தை மகிழ்‌ திருவாறன்விளை” (திருவாய்மொழி 7-10-1 என்று ஆநந்த மயனான அவன் தனக்குமாநந்த வர்தகையான பிராட்டியும்‌ ஸர்வேஸ்வரனுமான சேர்த்தியிலே லோகமடங்க வாழும்படி உபய விபூதி நாயகத்வத்தால்‌ வந்த வேறுபாடெல்லாம்‌ தோற்ற எழுந்தருளியிருக்கிற அவனை கரண த்ரயத்தாலும்‌ அநுபவிக்கிற பூ ஸுரரான ஸ்ரீவைஷ்ணவர்களுடைய திரட்சியை யுடைத்தான திருவாறன்விளையிலே ப்ரத்யுபகமாரமாகத்‌ திருவாய்மொழி பாடி அடிமை செய்யப்‌ பாரித்து (காந கோஷ்டியையும்‌ தேவபிரானறிய மறந்தவர்‌) “சிந்தை மற்றொன்றின்‌ திறத்ததல்லாத்‌ தன்மை தேவபிரானறியும்‌ திருவாறன்விளையுறை தீர்த்தனுக்கற்றபின்‌” (திருவாய்மொழி 7-10-10) என்று அந்தத்‌ திருவாறன்‌ விளையிலே தம்முடைய நெஞ்சு ப்ரவணமாகையாலே “ஹாவு ஹாவு ஹாவு” (தைத்திரியோபநிஷத்‌) என்று ஸாமகாநம்‌ பண்ணுகிற பரமபதத்தில்‌ கோஷ்டியையும்‌ அயர்வறுமமரர்கள்‌ அதிபதியாய்‌ ஸர்வருடைய ஹ்ருதயமும்‌ அறியும்படி ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனா யிருக்கிற அவனும் கூட அறியும்படி விஸ்‌மரித்த இவர் (சரம உபாய பரரானார்க்கு )கீழ்‌ தாமருளிச்செய்யக்‌ கேட்ட (ஸித்‌த சாதனத்தாலே தத் பரரானார்க்கு நீள் நகரமது -துணித்தான் சரண் அன்றி மற்று ஓன்று இலம் உள்ளித் தொழுமின் என்று பிராப்ய சாதன அவதியை ப்ரீதியாலே பிரகாசிப்பிகிறார்) நீள் நகரமதுவே மலர்ச்சோலைகள் சூழ் திருவாறன்விளை வாணனை ஆயிரம் தோள் துணித்தான்‌ சரணன்றி மற்று ஒன்றிலம் உள்ளித்தொழுமின் தொண்டீர் (திருவாய் மொழி -7-10-7) என்றும் நிரதிசய போக்யமான திருவாறன்விளை யாகிற மஹா நகரே பரம ப்ராப்யம் -அங்கு எழுந்து அருளி இருக்கிற உஷா நிருத்த கடகனானவனுடைய திருவடிகளே ப்ராபகம் -இவ்வர்த்தத்தில் மாறாட்டமில்லை – ஆகையால்‌ இவ்வர்த்தத்தில்‌ ருசி யுடையராய் புத்தி பண்ணுங்கோள்‌ என்று ப்ராப்யத்தினுடைய அவதி ததீயம் என்றும் பிராபகத்தினுடைய அவதி, அர்ச்சாவதார ஸுலபனானவன்‌ திருவடிகளே என்றும்‌ இவ்வர்த்தத்தைத்‌ தம்முடைய திரு வுள்ளத்தி லுகப்பாலே வெளியிடுகிறார்‌ என்கிறார் –

    226-தேவிமார்‌ பணியா நேர்பட்ட நல்ல கோட்பாடு என்‌னும் படி சக்தியாலே நித்யமாகக்‌ கல்பித்த பத்நீ பரிஜநாதிகளை யுடைய ஸத்ய காமன்‌ கொண்ட வாக்‌ வ்ருத்தியையும்‌ மறப்பிக்கும்‌ கலக்கமும்‌ ஸங்கையும்‌ அச்சமும் தீர, தலைச்‌ சிறப்பத்‌ தந்தவதில்‌ க்ருதஜ்ஞதா பல ப்ரத் யுபகாரமாக வேந்தர்‌ தலைவன்‌ கந்யகாதநம்‌ போலே ஆரத் தழுவி அற விலை செய்த ஆத்ம லாபத்தாலே அதீவ விளங்கிப்‌ பணைத்து ஜந்ம பாஸம் விட்டு ஆத்‌வாரம்‌ ஆளுமாளாரென்று பரிந்து அநுருபனோடே அமர்ந்து பிரிவில் க்ருபண தசையாகத் துவரும் ஸீதா குணங்களாலே ப்ரீதி வர்த்தித்து தித்திக்க உள்ளே உறைந்து கண்டு கொண்டிருந்து அமாநுஷ போகமாக்கினவன்‌ மூன்று தத்துக்குப்‌ பிழைத்த அரு வினை நோய்‌ மறுவலிடாமல்‌ சிறியேனென்றதின்‌ பெருமையைக்‌ காட்ட தேஹாதிகளில்‌ பரமாய்‌ கன்று நினைக்கில்‌ லக்ஷ்மீ துல்யமாய்‌ அவர்க்கே குடிகளாம்‌ பரதந்த்ர ஸ்வரூபத்தை அநுஸந்தித்தவர்‌ ஸ்வ ஸாதந ஸாத்‌யஸ்தர்‌ இரு கரையராகாமல்‌ மண்ணவரும்‌ வானவரும்‌ நண்ணுமத்தையே குறிக் கொண்மின்‌ உள்ளத்தென்று ப்ராப்ய ஏக பரராக்குகிறார்‌ எட்டாம் பத்திலே –

    இப்படிப்பட்ட ஸக்தி தன்னாலே நித்யமாக கல்பிதமான போக்ய போகோபகரண போக ஸ்தாநங்களை உடையனாகையாலே ஸத்ய காமனான ஸர்வேஸ்வரன்‌ கீழ்‌ தம்மைக்‌ கொண்ட வாசிகமான அடிமையையும்‌ விஸ்மரித்து பகவத லாபத்தாலே கலங்கி அவனுடைய குணங்களிலும்‌ ஸ்வரூபத்திலும்‌ அதிஸங்கை பண்ணி ஸம்ஸார தோஷாநுஸந்தாநத்தாலே அஞ்சின இவரை தரிப்பிக்கைக்காக பூர்வோக்த உபகாரத்தை ஸ்மரிப்பிக்க அத்தாலே க்ருதஜ்ஞராய்‌ அதுக்குப்‌ பலமாக அவர்‌ ஆத்ம ஸமர்ப்பணம்‌ பண்ண அத்தாலே பெறாப் பேறு பெற்றானாய்‌ இவர்க்குண்டான ஆத்ம குணங்களாலே ப்ரீதனாய்‌ இவர்‌ திருவுள்ளத்திலே யிருந்து நிரதிஸயமாக அநுபவிப்பித்து இவர்‌ இனி அயோக்‌யரென்று அகலாதபடி ஆத்ம ஸ்வரூப வைலக்ஷண்யத்தை ப்ரகாஸிப்பிக்க அதனுடைய யாதாத்ம்யத்தை அநுஸந்தித்த இவர்‌ கீழ்‌ தம்முடைய ப்ராப்ய ப்ராபகங்களைக்‌ கேட்டு உகந்தவர்களுக்கு ப்ராப்ய மொன்றும்‌ ப்ராபக மொன்றுமாகாதபடி ப்ராப்ய மொன்றிலுமே தத்பரராக்குகிறார்‌.

    (தேவிமார்‌ பணியா நேர்பட்ட நல்ல கோட்பாடென்னும்படி ஸக்தியாலே நித்யமாகக்‌ கல்பித்த பத்நீ பரிஜநாதிகளை யுடைய ஸத்யகாமன்‌) “தேவிமாராவார்‌ திருமகள்‌ பூமி ஏவ மற்றமரர்‌ ஆட்செய்வார்‌” (திருவாய்மொழி 8-1-1 “பணியாவமரர்‌ பணிவும்‌ பண்பும்‌ தாமேயாம்‌ அணியாராழியும்‌ சங்கமுமேந்துமவர்‌ (திருவாய்மொழி 8-3-6) “நேர்பட்ட நிறை மூவுலகுக்கும்‌ நாயகன்‌” (திருவாய்மொழி 8-9-111) “நல்லகோட்பாட்டுலகங்கள்‌ மூன்றினுள்ளும்‌ தான் நிறைந்த அல்லிக்கமலக்‌ கண்ணன்‌” (திருவாய்மொழி 8-10-11) என்று லக்ஷ்மீ ப்‌ரப்‌ருதி திவ்ய மஹிஷிகளுக்கு வல்லபனாய்‌, நித்ய ஸூரிகளை அடிமை கொள்ளுமவனுமாய்‌, அவர்களுடைய ஸ்தோத்ராதிகளுக்கு விஷய பூ,தனுமாய்‌, போக்யாதிகளால்‌ குறைவற்றுக்‌ கட்டளைப்‌ பட்ட லோக த்ரயத்துக்கும்‌ நிர்வாஹகனுமாய்‌ இருக்குமென்கையாலே கீழ்ச் சொன்ன ஸக்தி தன்னாலே நித்யமாகக்‌ கல்பிக்கப்பட்ட பத்நீ பரிஜந ஸ்தாந போக்‌ய போகோபகரணங்களை உடைய ப்ரக்ருதியாலே தனக்கென்று தேட வேண்டாத படி நித்யமான போகத்தை உடையனாகையாலே ஸத்ய காமனான ஸர்வேஸ்வரன்‌. (கொண்ட வாக்‌ வ்ருத்தியை மறப்பிக்கும்‌) கீமும்‌ கைக்‌ கொண்டு கவி பாடுவித்துக்‌ கொள்ள வைத்தோம்‌ என்று அவன்‌ கொண்ட வாசிகமான அடிமையையும்‌ விஸ்மரிப்பிக்க வற்றான (கலக்கமும்‌ ஸங்கையும்‌ அச்சமும்‌ தீர) “காணுமாறருளாய்‌ என்றென்றே கலங்கி” (திருவாய்மொழி 8-1-2 “அறிவொன்றும் சங்கிப்பன்‌‘ (திருவாய்மொழி 8-1-7) நரகம் நானடைதல் அன்றும் அஞ்சுவன் (திருவாய்மொழி 8-1-9) என்று பகவதலாபத்தாலே கலங்கி பகவத் குளங்களிலும் ஸ்வரூபத்திலும்‌ அதிஸங்கை பண்ணி ஸம்ஸார தோஷாநுஸந்தானத்தாலே அஞ்சின இவர்க்கு அவையும்‌ நிவ்ருத்தமாம்படி. (தலைச் சிறப்பத்‌ தந்தவதில்‌ க்ருதஜ்ஞதா பல ப்ரத்யுபகாரமாக) “ஆறெனக்கு நின்‌ பாதமே சரணாகத்‌ தந்து (திருவாய்மொழி 5-7-10) “தந்தனன்‌ தன தாள்‌ நிழலே” (திருவாய்மொழி 6-3-9) என்று உபாயமாக முன்னிவர்க்கு உபகரித்த தன்‌ திருவடிகளை “தாள்களை எனக்கே தலைத் தலைச்‌ சிறப்பத்‌ தந்த” (திருவாய்மொழி 8-1-10) என்று விஸத ஸ்ம்ருதி விஷயமாக்க அத்தை அநுஸந்தித்து அத்தால்‌ வந்த க்ருதஜ்ஞதைக்குப்‌ பலம்‌ ஸத்‌ருஸ ப்ரத்யுபகாரம்‌ பண்ணுகையாலே “உதவிக் கைமாறு என்னுயிர்‌ என்ன வுற்றெண்ணில்‌ அதுவுமற்றாங்கவன்றன்னது’ (திருவாய்மொழி 7-9-10) என்று கீழ்‌ ப்ரத்புபகாரமாக ஆத்மாவை ஸமர்ப்பிக்கத்‌ தேடி பகவதீயத் வாகார அநுஸந்தானத்தாலே நிவ்ருத்தரானவர்‌ இங்கு உபகார ஸ்ம்ருதியாலே வந்த கலக்கத்தாலே (வேந்தர்‌ தலைவன்‌ கந்யகா தாநம்‌ போலே ஆரத் தழுவி யறவிலை செய்த) “வேந்தர்‌ தலைவன்‌ சனகராசன் தன்‌ வேள்வியில்‌ கண்டாருளர்‌ ‘ (பெரியாழ்வார்‌ திருமொழி 4-1-2) என்கிறபடியே க்ஷத்ரியாக்‌ரேஸராய்‌ ஜ்ஞாநாதிகனான ஜநக சக்ரவர்த்தி மாஹேஸ்வரமான தநுர்பங்கம்‌ பண்ணின பெருமாளுடைய ஆண் பிள்ளைத் தனத்தைக்‌ கண்டு கலங்கி “விஷ்ணோஞஸ்ரீரநபாயிநீ”’ ஸ்ரீவிஷ்ணு புராணம்‌ 1-17) “அநந்யா ராகவேணாஹம்‌ பாஸ்கரேண ப்ரபா யதா,” (ரா) என்கிறபடியே ப்ருதக் ஸித்‌தி அநர்ஹையாய்‌ ததர்த்தமாக “ராக வத்வே அபவத்‌ ஸீதா” ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌ 1-9-144) என்றவனுடைய அவதாராநுகூலமாக அவதரித்து நாச்சியாரை “இயம்‌ ஸீதா மம ஸுதா ஸஹ தர்ம சரீதவ ப்ரதீச்ச சைநாம்‌ பத்‌ரம்‌ தே பாணிம்‌ க்‌ரஹ்ணீஷ்வ பாணிநா” (ரா.பா. 73-26) என்று கந்யகா தாநமாக ஸமர்ப்பித்தாப் போலே ‘பேருதவிக்‌ கைம்மாறா தோள்களை ஆரத்‌ தழுவி என்னுயிரை அற விலை செய்தனன்‌” (திருவாய்மொழி 8-1-10) என்று ஸமர்ப்பணோந்முகரான வளவிலே தாளும்‌ தோளுமாகப்‌ பணைத்த வந்த ஆத்ம வஸ்துவை அவனுக்கு ப்ரத்யுபகாரமாக ஸமர்ப்பிக்க ஆ த்ம லாபத்தாலே தன்னதல்லாததொன்றை அதீவ விளங்கிப்‌ பணைத்து அவனும்‌ “அப்ரமேயம்‌ ஹி தத்தேஜோ யஸ்ய ஸா ஐநகாத்மஜா” (ரா.ஆ. 37-18) என்று அவளைப்‌ பெற்று விளங்கினாப் போலே “சோதீ” (திருவாய்மொழி 8-1-10) என்றிவர்‌ பேசும்படி இவருடைய ஆத்ம லாபத்தாலே தன்னதல்லாத தொன்றைப்‌ பெற்றாப்‌ போலே அதீவ உஜ்ஜ்வலனாய்‌ “தோள்களாயிரத்தாய்‌ முடிகளாயிரத்தாய்‌ துணை மலர்க்‌ கண்களாயிரத்தாய்‌ தாள்களாயிரத்தாய்‌ பேர்களாயிரத்தாய்‌” (திருவாய்மொழி 8-1-10) என்னும்படி அந்த ப்ரீதியாலே ஸதஸாகமாகப்‌ பணைத்து

    227-எண்டிசையும்‌ அகல் ஞாலம்‌ எங்கும்‌ அளிக்கின்ற ஆலின்‌ மேலென்னும்படி நித்ய போக பாத லீலோபகரணத்தின்‌ லயாதிகளைப்‌ போக்குமாபத்ஸகன்‌ ஆருயிரென்னப் படுத்தின ஆத்ம தர்ஸந பலாநுபவ பரம்பரையைக்‌ கூவுதல்‌ வருதலென்று முடுகவிட்டு ஏகமெண்ணிக்‌ காணக் கருதி எழ நண்ணி நினை தொறும்‌ உருகி யலற்றிக்‌ கவையில்‌ மனமின்றி, பதினாலாண்டு பத்து மாஸம்‌ ஒருபகல்‌ பொறுத்தவர்கள்‌ ஒரு மாஸ தின ஸந்த்‌யையில்‌ படுமது க்ஷணத்திலேயாக இரங்குகிற த்வரைக்‌ கீடாக இனிப் பத்திலோன்று தஸம தஸையிலே பேறென்று நாட் கடலாகத்‌ தம்பிக்‌ கிட்டதாகாமல்‌ நாளை வதுவை போலே நாளிடப்‌ பெற்றவர்‌ இம் மடவுலகர்‌ கண்டதோடு பட்ட அபாந்தவ-அரக்ஷக-அபோக்ய-அஸு௧,-அநுபாய ப்ரதி ஸம்பந்தியைக்‌ காட்டி மற்றொன்று கண்ணனல்லால்‌ என்கிற வைகல்‌ வாழ்தலான ஸித்‌தோபாயம்‌, அதில்‌ துர்பல புத்‌திகளுக்கு மாலை நண்ணி காலை மாலை விண்டு தேனை வாடாமலரிட்டு அன்பராம்‌ ஸாங்க பக்தி, அதில்‌ அஸக்தர்க்குத்‌ தாளடையும்‌ ப்ரபத்தி அதில்‌ அஸக்தர்க்கு உச்சாரண மாத்ரம்‌, ஸர்வோபாய ஸூந்யர்க்கு இப் பத்தும்‌ பாடியிடும்‌ தண்டனென்று கீதாசார்யனைப்‌ போலே அதிகாராநுகுணம்‌ நெறி யெல்‌லாம்‌ உரைக்கிறார்‌ ஒன்பதாம்‌ பத்தில்‌.

    இப்படி அவாப்த ஸமஸ்த காமத்வத்தால்‌ வந்த நைரபேக்ஷ்யத்தாலே அபேக்ஷா நிரபேக்ஷமாக ப்ரளயாத்யாபத் தஸைகளிலே உதவி ரக்ஷிக்கும்‌ ஆபத் ஸகனான ஸர்வேஸ்வரன்‌ கீழ்‌ ப்ரகாஸிப்பித்த ஆத்ம தர்ஸநத்துக்கு பலம்‌ ஸ்வ ஸ்வரூபாநுரூபமான ப்ராப்யாநுபவமாய்‌ அவ்வநுபவத்திலுண்டான த்வரையாலே க்ஷண கால விளம்பம்‌ பொறுக்க மாட்டாமல்‌ ஆர்த்தரான இவர்க்கு ஆரப்‌த ஸரீராவஸாநத்திலே பேறாகக்‌ கடவதென்று நாளிட்டுக்‌ கொடுக்கப்‌ பெற்ற இவர்‌ கீழ்த்‌ தாமுபதேஸித்த ஹித வசநம்‌ கேட்டுத்‌ திருந்தினவர்களை யொழிய அல்லாதாரையும்‌ விடமாட்டாத தம்முடைய க்ருபையாலே யதாதிகாரம்‌ ஸர்வோபாயங்களையும்‌ அருளிச் செய்கிறார்‌ என்கிறார்‌.

    (எண்டிசையும்‌ அகல் ஞாலம்‌ எங்கும்‌ அளிக்கின்ற இத்யாதி,) “எண்டிசையும்‌ கீழும்‌ மேலும்‌ முற்றவும்‌ உண்ட பிரான்‌” (திருவாய்மொழி 9-1-1 “அவனே அகல் ஞாலம்‌ படைத்திடந்தான்‌ அவனே அஃதுண்டு மிழ்ந்தான்‌ அளந்தான்‌” (திருவாய் மொழி 9-3-2 “அகலிடம்‌ படைத் திடந்துண்டுமிழ்ந் தளந்து எங்கும்‌ அளிக்கின்ற ஆயன்‌” (திருவாய்மொழி 9-9-2) “ஆலின் மேலாலமர்ந்தான்‌’ (திருவாய்மொழி 9-10-1) என்று ஸகல லோகங்களையும்‌ ஸஹகாரி நிரபேக்ஷமாக ப்ரளயாத்யாபத்துக்களிலே உதவி ரக்ஷிக்கும்‌ என்கையாலே கீழ்ச் சொன்ன ஸத்ய காமத்வத்தால்‌ வந்த நைரபேக்ஷ்யத்தாலே “பாதோஸ்ய விஸ்வா பூதாநி திரிபாதஸ்யாம்ருதம்‌ திவி (புருஷ ஸூக்தம்‌) அந்த நித்யவிபூத்யேக தேஸமான லீலா விபூதிக்குண்டான ஆபத்துக்களிலே அபேக்ஷா நிரபேக்ஷமாக உதவித்‌ தன் பேறாக ரக்ஷிக்கும்‌ ஆபத் ஸகத்வனான ஸர்வேஸ்வரன்‌ (ஆருயிரென்னப்படுத்தின இத்யாதி.) “ஆருயிர்‌ பட்டது எனதுயிர்‌ பட்டது” (திருவாய்மொழி 9-6-9) என்று என்னாத்மா பட்டது நித்ய விபூதியிலுள்ளாரா ரேனும்‌ பட்டாருண்டோ என்று இவர் தாமே பேசும்படி அவன் மேல் விழுந்து அநுபவிக்கைக்கு அடியாக கீழில்‌ பத்தில்‌ ஆத்ம ஸ்வரூபத்தை யதாவாகக்‌ கண்டவதுக்குப்‌ பலம்‌ ஸ்வரூபாநுரூபமான ப்ராப்யத்தை யநுபவிக்கையாய்‌, அதிலே த்வரை விளைகையாலே “தாமரைக்‌ கண்களால்‌ நோக்காய்‌” (திருவாய்மொழி 9-2-1 “பாத பங்கயமே தலைக்கணியாய்‌” (திருவாய்மொழி 9-2-2 “உன்‌ தாமரை மங்கையும்‌ நீயும்‌ இடங்கொள்‌ மூவுலகும்‌ தொழ இருந்தருளாய்‌” (திருவாய்மொழி 9-2-3), “கனிவாய்‌ சிவப்ப நீ காண வாராய்‌” (திருவாய்மொழி 9-2-4) “நின்‌ பன்னிலா முத்தம்‌ தவழ் கதிர்‌ முறுவல்‌ செய்து நின்‌ திருக் கண்‌ தாமரை தயங்க நின்றருளாய்‌” (திருவாய்மொழி 9-2-5) என்று என்னார்த்தி தீரத்‌ திருக் கண்களாலே குளிர நோக்கி யருள வேணும்‌, திருவடிகளை என்‌ தலையிலே வைத்தருள வேணும்‌, தேவரீரும்‌ பிராட்டிமாரும்‌ கூட எழுந்தருளி யிருக்கிற இருப்பை எனக்குக்‌ காட்டி யருள வேணும்‌, என்‌ முன்னே நாலடி உலாவி யருள வேணும்‌, அநுகூல தர்ஸனத்திலே பிறக்கும்‌ ஸ்மிதம்‌ நான்‌ காண வேணும்‌, ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும்‌, என்றிப்படி அநுபவ பரம்பரைகளை ஆசைப்பட்டு அது க்ரம ப்ராப்தமாகாமல்‌ கூவுதல்‌ வருதல்‌ செய்யாயே என்று நிரதிஸய போக்‌யமான உன்னுடைய திருவடிகளிலே நானும்‌ வந்தடிமை செய்யும்படி என்னை அங்கே அழைத்தல்‌ இங்கே வருதல்‌ செய்தருள வேணும்‌ என்று இப்படி முடுக விட்டு (ஏகமெண்ணி இத்யாதி) “கவையில்‌ மனமின்றி” (திருவாய்மொழி 9-8-3) “மாக வைகுந்தம்‌ காண்பதற்கு என் மனம்‌ ஏகமெண்ணும்‌ இராப் பகலின்றியே” (திருவாய்மொழி 9-2-7) என்று அவன்‌ நித்ய வாஸம் பண்ணுகிற பரமபதத்தைக் காண்கையிலே ஸர்வ காலமும் ஏக ரூபமாக மநோ ரதித்து -காணாக் கருதும் என் கண்ணே (திருவாய்மொழி 9-4-1) என்று பெரிய பிராட்டியாரோடும்‌ திவ்யாயுதங்களோடும்‌ திவ்ய விக்‌ரஹத்தோடும்‌ கூடி யிருக்கிற அவனைக்‌ காண வேணுமென்று ஆசைப் பட்டு “எழ நண்ணி நாமும்‌ நம்‌ வானநாடனோடொன்றினோம்‌” (திருவாய்மொழி 9-5-10) என்று ஸ்மாரக பதார்த்த, தர்ஸநத்திலே நோவு படுகையாலே முடிந்து போகையிலே ஒருப்பட்டு “நினைதொறும்‌ சொல்லுந்‌ தொறும்‌ நெஞ்சிடிந்துகும்‌” (திருவாய்மொழி 9-6-9) “உருகுமால்‌ நெஞ்சம்‌ உயிரின்‌ பரமன்றி பெருகுமால்‌ வேட்கையும்‌” (திருவாய்மொழி 9-6-1) என்று, அவனுடைய அனுபவத்தை நினைக்கும் தொறும்‌ அநுபவ உபகரணமான நெஞ்சானது ஸிதிலமாய்க்‌ கரைய “தக்கிலமே கேளீர்கள்‌” (திருவாய்மொழி 9-7-2 )என்று ஆள் விட்டு “திளிமொழியாளலற்றிய சொல்‌” (திருவாய்மொழி 9-7-111) என்று ஆற்றாமையாலே அக்ரமமாகக்‌ கூப்பிட்டு “கவையில்‌ மனமின்றிக்‌ கண்ணீர்கள்‌ கலுழ்வன்‌’ திருவாய்மொழி 9-8-3) என்று இருதலைத்த நெஞ்சின்றிக்கே கண்ணீர்‌ காட்டாறு போலே பெருக (பதினாலாண்டு இத்யாதி, இரங்குகிற த்வரைக்கீடாக) பெருமாளைப்‌ பிரிந்து பதினாலாண்டு பொறுத்திருந்த ஸ்ரீபரதாழ்வான்‌ அந்த அவதி கழிந்த ஒருநாள்‌ பட்ட க்லேஸமும்‌, பத்து மாஸம்‌ பிரிந்து பொறுத்திருந்த பிராட்டி “மாஸாதூரர்த்‌வம்‌ ந ஜீவிஷ்யே” (ரா.ஸு. 40-10) என்று ஒரு மாஸத்தில்‌ பட்ட க்லேஸமும்‌, க்ருஷ்ணன்‌ பசு மேய்க்கப்‌ போக ஒரு பகலெல்லாம்‌ அவனைப்‌ பிரிந்து பொறுத்திருந்த ஸ்ரீகோபிமார்‌ ஸந்த்‌யா காலத்திலே பசுக்களின்‌ முற் கொழுந்திலே காணாமல்‌ அவர்கள்‌ பட்ட க்லேஸமுமெல்லாம்‌ அவனை “விட்டகல்வதற்கே யிரங்கி அணி குருகூர்ச்‌ சடகோபன்‌” என்று ஒரு க்ஷணத்திலே யாம்படி யீடுபடுகிற தம்முடைய த்வரைக்கீடாக (இனிப்‌ பத்திலொன்று தஸம தஸையிலே பேறென்று) “நயந ப்ரீதி: ப்ரதமம்‌ சித்தா போகஸ்‌ ததோநு ஸங்கல்ப: நித்‌ராச் சேதஸ்‌ தநுதா விஷய விரக்திஸ்‌ த்ரபாநாமா: உந்மாதோ, மூர்ச்சா மரணம்‌ இத்யேதா ஸ்மரதஸா தஸைவ ஸ்யு:, ப்ரதமஸ் த்வபிலாஷ: ஸ்யாத்‌ த்‌விதீயம்‌ சிந்தநம்‌ பவேத்‌ அநுஸ்ம்ருதிஸ்‌ த்ருதீயந்து சதுர்த்தம்‌ குண கீர்த்தநம்‌ உத்யோக: பஞ்சம: ப்ரோக்த: ப்ரலாப: ஷஷ்ட உச்யதே உந்மாத.ஸ்‌ ஸப்தமோ ஜ்ஞோய: அஷ்டமோ வ்யாதி ருஸ்யதே நவமே ஜடதா சைவ தஸமம்‌ மரணம்‌ ததா,” என்று காமுகராயிருப்பார்க்கு தஸமமாவஸ்தையிலே மரணமாமா போலே நம் பக்கல்‌ பரபக்தி யுக்தரான உமக்கு நம்மைப்‌ பெறா விடில்‌ முடியும்படி பரம பக்தி தஸையான பத்தாம் பத்திலே பெறக் கடவதென்று

    (நாட் கடலாகத்‌ தம்பிக்கிட்ட தாகாமல்‌ நாளை வதுவை போலே நாளிடப் பெற்றவர்‌) “நாட்கடலைக்‌ கழிமினே” (திருவாய்மொழி 1-6-7) என்று ஒரு நாள்‌ ஒரு கடல்‌ போலே விஸ்லேஷ வ்யஸநத்தாலே துஸ்தரமாம்படி ‘பூர்ணே சதுர்தமே வர்ஷே” (ராயு. 127-1 என்று தம்பியான ஸ்ரீ பரதாழ்வானுக்கு நெடுக நாளிட்டுக்‌ கொடுத்தாப் போலே யன்றியே “நாளை வதுவை மணமென்று நாளிட்டு” (நாச்சியார்‌ திருமொழி 6-2) என்று இன்றென்னில்‌ வெள்ளக்கேடாம்‌ சிலநாள்‌ கழித்தென்னில்‌ வறட்கேடாமென்று “நாளை” என்று நாச்சியார்க்கு நாளிட்டாற் போலே “மரணமானால்‌ வைகுந்தம்‌ கொடுக்கும்‌” (திருவாய்மொழி 9-10-5) என்று ஆரப்‌த ஸரீராவதியாக அவனாலே நாளிட்டுக்‌ கொடுக்கப் பெற்று ஹ்ருஷ்டரான இவர்‌ (இம் மடவுலகர்‌ கண்டதோடு பட்ட இத்யாதி, ப்ரதி ஸம்பந்‌தியைக்‌ காட்டி) சரமோபாயோபேய பர்யந்தமாக தாமருளிச் செய்த ஹித வசநம்‌ கேட்டுத்‌ திருந்தனவர்களை யொழிய அல்லாதாரையும்‌ விடமாட்டாத தம்முடைய க்ருபையாலே “இம் மடவுலகர்‌’ (திருவாய்மொழி 9-2-7 என்று ஸம்ஸாரத்தில்‌ அறிவு கேடரானவர்களையும்‌ பார்த்து, “கொண்ட பெண்டிர்‌’ (திருவாய்மொழி 9-1-1 என்று தொடங்கி த்‌ரவ்யாதிகளாலே ஸம்பாதிக்கப்‌ பட்டு ஸந்நிதி யிலே ஸ்நேஹித்திருக்கு மதொழிய காணாத போது ஸ்நேஹமொன்று மின்றிக்கே மிருக்கிற புத்ரதாராதிகள்‌ பந்துக்களன்று ப்ரளயாபத் ஸகனானவனே பரமபந்து வென்று துணையும்‌ சார்வும் (திருவாய்மொழி 9-1-2) இத்யாதி “பொருள்‌ கை” (திருவாய்மொழி 9-1-3) இத்யாதி, “அரணமாவர்‌” (திருவாய்மொழி 9-1-4) இத்யாதி, அவனை யொழிந்தார்‌ தாங்கள்‌ உபகாரகரைப் போலே ப்ரயோஜநமுள்ள போது பந்துக்களாய்க்‌ கொண்டாடி ஆபத்து வந்தவாறே கண்ணற்று உபேஷிப்பர்கள்‌. ஆகையாலே இவர்கள்‌ ரக்ஷகரல்லர்‌. நிர்ஹேதுகமாக ஆபத் ஸகனான க்ருஷ்ணனை யொழிய வேறு ரக்ஷகரில்லை. “சதிரம்‌’” (திருவாய்மொழி 9-1-5) இத்யாதி தங்களுக்கு போக்‌யைகளாக ஸம்பாதித்த ஸ்த்ரீகள்‌ ஆபத்து வந்தவாறே உபேஷிப்பர்கள்‌. ஏக ப்ரகாரமாக ஸ்நிக்‌தனா யிருப்பானவனே. ஆனபின்பவனே நிரதிஸய போக்‌யன்‌. “இல்லை கண்டீர்‌ இன்பம்‌” (திருவாய்மொழி 9-1-5) என்று துக்க மிஸ்ரமான சிலவற்றை ஸுக மென்று ப்‌ரமிக்கிற வத்தனை போக்கி அவனை யொழிய ஸுக ரூபமாயிருப்ப தொன்றில்லை. “யாதுமில்லை” (திருவாய்மொழி 9-1-9) இத்யாதி. இவனை யொழிய வேறே யொருவனை ரஷகமென்று பற்றினவர்கள்‌ பண்டை நிலையுங்‌ கெட்டு அநர்த்த ப்பட்டுப்‌ போவர்கள்‌; ஆன பின்பு அவனை யொழிய உபாயமில்லை என்று அவனை யொழிந்த வற்றினுடைய அபாந்துத்வத்தையும்‌, அரக்ஷகத்வத்தையும்‌, அபோக்யத்வத்தையும்‌, அஸுகத்வத்தையும்‌, அநுபாயத்வத்தையும்‌ அவர்களுக்கு உபதேஸித்து (மற்றொன்று கண்ணனல்லால்‌ என்கிற வைகல்‌ வாழ்தலான ஸித்‌தோபாயம்‌)”மற்றொன்றில்லை சுருங்கச்‌ சொன்னோம்‌”திருவாய்மொழி 9-1-7) என்று இதுக்கு மேலொன்று இன்றியிலே யிருப்பதாய்‌ ஸம் ஷேபேண வுபதேஸிக்கலாம் படியுமாய்‌ ஸர்வாதிகாரமுமாய்‌ ஸ்வரூபாநுரூபமுமாய்‌ ஸுகரமுமாய்‌ நிரதிஸய போக்‌யமுமாய்‌ “கண்ணனல்லா லில்லை கண்டீர்‌ சரண்‌” (திருவாய்மொழி 9-1-9 என்று “மாமேகம்‌ ஸரணம்‌ வ்ரஜ” (கீதை 18-66) என்று திருத் தேர்த்தட்டிலே நின்றருளிச் செய்த க்ருஷ்ணனை யொழிய வேறு நிரபேக்ஷோபாயமில்லை. இவ்வுபாயந்தான்‌ “வைகல்‌ வாழ்தல்‌ கண்டீர்‌ குணம்‌” (திருவாய்மொழி 9-1-7) என்று யாவதாத்ம பாவி யநுபவம்‌ என்று ஸித்‌தோபாயத்தை அவர்களுக்குபதேஸித்தும்‌ (அதில் துர்பல புத்‌தி களுக்கு) “ஸக்ருதேவஹி ஸமாஸ்த்ரார்த்த,: தப்நாம்‌ பயநா முக: நராணாம்‌ புத்தி தெளர்பல்யாத்‌ உபாயாந்தர மிஷ்யதே” என்று அந்த ஸித்‌தோ பாயத்தில்‌ மஹா விஸ்வாஸம்‌ பிறக்கைக் கடியான பாக்‌யமின்றிக்கே ஸாத்‌யங்களான உபாயாந்தரங்களில்‌ ருசி குலையாமையாலே அவன்‌ பல ப்ரதனாமோ என்று புத்‌தி தெளர்ப்பல்ய முடையார்க்கு (மாலை நண்ணிக்‌ காலை மாலை விண்டு தேனை வாடா மலரிட்டு அன்பராம்‌ ஸாங்க பக்தி) “மாலை நண்ணித்‌ தொழுதெழுமினோ காலை மாலை கமல மலரிட்டு நீர்‌” (திருவாய்மொழி 9-10-1) “விண்டு வாடா மலரிட்டு நீரிறைஞ்சுமின்‌” (திருவாய்மொழி 9-10-3) “தேனை வாடா மலரிட்டு நீரிறைஞ்சுமின்‌” (திருவாய்மொழி 9-10-4) “தனதன்பர்க்கு” (திருவாய்மொழி 9-10-5) என்று நிரதிஸய ப்ரீதி யுக்தராய்க்‌ கொண்டு ஸர்வ காலமும்‌ புஷ்பாத்‌ யுபகரணங்களைக்‌ கொண்டு அவனை ஸமாராதநம் பண்ணி அவன்‌ பக்கலிலே பக்தியைப்‌ பண்ணுங்கோள்‌ என்று அங்க ஸஹிதையான பக்தியை உபதேஸித்தும்‌ (அதிலஸத்தர்க்குத்‌ தாளடையும்‌ ப்ரபத்தி) அதில்‌ துஷ்கரத்வத்தாலே அநுஷ்டிக்க ஸக்தி இல்லாதார்க்கு “சரணமாகும்‌ தனதாளடைந்தார்க்கெல்லாம்‌ மரணமானால்‌ வைகுந்தம்‌ கொடுக்கும்‌” (திருவாய்மொழி 9-10-5) என்று ஸர்வாதிகாரமுமாய்‌ ஸரீராவஸாநத்திலே பலமுமான ப்ரபத்தியை வெளியிட்டும்‌ (அதிலஸக்தர்க்கு உச்சாரண மாத்ரம்‌) உபாய பல்குத்வம்‌ பல கெளரவ விரோதி பூயஸ்த்வங்களாகிற ஸங்கா த்ரயத்தாலே அதில்‌ வ்யவஸாயத்துக் கடியான ஸக்தி யில்லாதார்க்கு “திருக்கண்ணபுரம்‌ சொல்ல நாளும்‌ துயர்‌ பாடு சாராவே” (திருவாய்மொழி 9-10-10) என்று உச்சாரண மாத்ரத்தை வெளியிட்டும்‌ (ஸர்வோபாயர்க்கும்‌ இப்பத்தும் பாடியிடும்‌ தண்டனென்று) கீழ்ச் சொன்ன உபாயாங்க ளெல்லாவற்றிலும்‌ அயோக்‌யராயிருப்பார்க்கு“இப்பத்தும்‌ பாடியாடிப்‌ பணிமின்‌ அவன்‌ தாள்களே” (திருவாய்மொழி 9-10-11 )என்று இத் திருவாய்மொழியை ப்ரீதி ப்ரேரிதராய்க்‌ கொண்டு பாடி அவன்‌ திருவடிகளிலே விழுங்கோளென்று கீதோபநிஷதா சார்யன்‌ தன்‌ பரம க்ருபையாலே“நெறி யெல்லாம்‌ எடுத்துரைத்த” (திருவாய்மொழி 4-8-6) என்கிறபடியே ருச்யநுகுணமான உபாயங்கள்‌ எல்லாவற்றையும்‌ வெளியிட்டாற் போலே இவர்‌ தமக்கு ப்ராப்தி அணித்தானவாறே ஸம்ஸாரிகள்‌ இழக்க வொண்ணாதென்று பார்த்து அவ்வவருடைய அதிகாராநுகு ணமாந உபாயங்கள்‌ எல்லாவற்றையும்‌ வெளியிடுகிறார்‌ என்கிறார்‌.

    228-சுரிகுழல்‌ அஞ்சனப்‌ புனல் மைந்நீன்ற பொல்லாப் புனக்‌ காயாவென்னும்‌ ஆபத்திற் கொள்ளும்‌ காம ரூப கந்த, ரூபத்தாலே ப்ரபந்நார்த்தி ஹரனானவன்‌ அருள் பெறும்‌ போதணுக விட்டதுக்குப்‌ பலமான வானேறும்‌ ௧திக்கு அண்ட மூவுலகும்‌ முன்னோடிக்‌ கால்‌ விழுந்திடத்தே நிழல்‌ தடங்களாக்கி அமுதமளித்த தயரதன்‌ பெற்ற கோவலனாகையாலே வேடன்‌, வேடுவிச்சி, பஷி , குரங்கு, சராசரம்‌, இடைச்சி, இடையர்‌, தயிர்த் தாழி, கூனி, மாலாகாரர்‌, பிணவிருந்து, வேண்டடிசில்‌ இட்டவர்‌, அவன் மகன்‌, அவன் தம்பி, ஆனை, அரவம்‌, மறையாளன்‌, பெற்ற மைந்தனாகிற பதினெட்டு நாடன்‌ பெருங்கூட்டம்‌ நடத்தும்‌ ஆத்தனை வழித் துணையாக்கி அறியச் சொன்ன ஸுப்ரபாதத்தே துணை பிரியாமல்‌ போக்கொழித்து மீள்கின்றதில்லை யென்று நிச்சித்திருந்தவர்‌ ஸஞ்சிதம்‌ காட்டும்‌ தஸையானவாறே முந்துற்ற நெஞ்சுக்குப்‌ பணி மறவாது மருளொழி நகு கைவிடேலென்று க்ருத்யாக்ருத்யங்களை விதித்து நெஞ்சு போல்வாரைத்‌ தொண்டீரென்றழைத்து, வலம்‌ செய்து எண்ணுமின்‌ பேசுமின்‌ கேண்மின்‌ காண்மின்‌ நடமின்‌ புகுதுமென்று கர்த்தவ்யம்‌ ஸ்மர்த்தவ்யம்‌ வக்தவ்யம்‌ ஸ்ரோதவ்யம்‌ த்‌ரஷ்டவ்யம்‌ கந்தவ்யம்‌ வஸ்தவ்யமெல்லாம்‌ வெளியிட்டுப்‌ பிணக்கறவைச்‌ சார்வாக நிகமித்து எண்பெருக்கிலெண்ணும்‌ திருநாமத்தின்‌ ஸப்‌தார்த்தங்களைச்‌ சுருக்கி மாதவனென்று த்‌வயமாக்கி, கரண த்ரய ப்ரயோக வ்ருத்தி ஸம்ஸாரிகளுக்குக்‌ கையோலை செய்து கொடுத்துச்‌ செஞ்சொற் கவிகளுக்குக்‌ கள்ள வழி காவலிட்டு மனம்‌ திருத்தி வீடு திருத்தப்‌ போய்‌ நாடு திருந்தின வாறே வந்து விண்ணுலகம்‌ தர விரைந்து அத்தை மறந்து குடிகொண்டு தாம்‌ புறப்பட்ட வாக்கையிலே புக்குத்‌ தான நகர்களை அதிலே வகுத்துக்‌ குரவை துவரைகளில்‌ வடிவு கொண்ட சபலனுக்கு தேஹ தோஷம்‌ அறிவித்து மாயையை மடித்து வானே தரக்‌ கருதிக்‌ கருத்தின் கண்‌ பெரியனானவனை இன்று ௮ஹேதுகமாக ஆதரித்த நீ அநாத்‌ யநாதர ஹேது சொல்லென்று மடியைப்‌ பிடிக்க இந்த்‌ரிய கிங்கரராய்க்‌ குழி தூர்த்துச்‌ சுவைத்தகன்றீர்‌ என்னில்‌, அவை யாவரையும்‌ அகற்ற நீ வைத்தவை யென்பர்‌; அது தேஹ யோகத்தாலே யென்னில்‌ அந் நாள்‌ நீதந்த சுமடென்பர்‌: முன் செய்த முழு வினையாலே என்னில்‌, அது துயரமே உற்ற விருவினை உன்‌ கோவமும்‌ அருளுமென்பர்‌ ; ஈவிலாத மதியிலேன்‌ என்னும்‌ உம்மதன்றோ கர்த்ருத்வ போக்த்ருத்வங்களென்னில்‌, ஆங்காரமாய்ப்‌ புக்குச்‌ செய்கைப்‌ பயனுண்பேனும்‌ கருமமும்‌ கரும பலனுமாகிய நீ கர்த்தா போக்தா என்பர்‌; யானே எஞ்ஞான்றும்‌ என்றத்தாலே யென்னில்‌; அயர்ப்பாய்ச்‌ சமய மதி கொடுத்து உள்ளம்‌ பேதம்‌ செய்கை உன்‌ தொழிலென்பர்‌: ஜீவ ப்ரக்ருதி சைதந்யம்‌ நீங்கும்‌ வ்ரத ஹேது; அகமேனியி லழுக்கறுக்கை அபிமாநி க்ருத்யம்‌; தான்‌ நல்கும்‌ பந்தம்‌ நிருபாதிகம்‌; ஸெளஹார்தம்‌ எஞ்ஞான்றும்‌ நிற்கும்‌; பிணக்கிப்‌ பேதியாத ஜஞாநாதி வைகல்யமில்லை; ஏகமூர்த்தியில்‌ அல்லல் மாய்த்த யத்ந பலித்வங்கள்‌ நம்மது; நாம்‌ தனி நின்ற ஸ்வதந்த்ரரென்று அவன அறிந்தனமே யென்னும்‌ ஸர்வஜ்ஞரிவர்‌; நெறி காட்டி அருகும்‌ சுவடும்‌ போலே இதுவும்‌ நிருத்தரமென்று கவிழ்ந்து நிற்க, அமந்த்ரஜ்ஜோத்ஸவ கோஷம்‌ போலே ஏறப்‌ பெறுகிற எழுச்சியை ஸூசிப்பிக்கிற மேக ஸ்முத்‌ர பேரீ கீத காஹள ஸங்காஸீஸ் ஸ்துதி கோலாஹலம்‌ செவிப்‌ பட்டவாறே ஸாக்ஷாத்கரித்த பர ப்ராப்திக்குத்‌ தலை மிசையாய்‌ வந்த தாள்களைப்‌ பூண்டு போகாமல்‌ தடுத்துத்‌ திருவாணை யிட்டுக்‌ கூசம்‌ செய்யாத செய்திப்‌ பிழை பற்றுக்‌ கொம்பற்ற கதி கேடு போர விட்ட பெரும்பழி; புறம் போனால்‌ வருமிழவு, உண்டிட்ட முற்றீம்பு, அன்பு வளர்ந்த அடியுரம்‌, உயிருறவு முதலளவு துரக்கைகளாலே பெறா வாணை அல்லவாக்கின பேரவா குளப்படியாம்படி கடல்‌ போன்ற ஆதரத்தோடே சூழ்ந்து தாபங்களை ஹரித்தமையை வெளியிடுகிறார்‌ பத்தாம்‌ பத்தில்‌.

    ஆபத் ஸகனாகையாலே ப்ரபந்நரானவர்களுடைய ஆபத்துக்களிலே ஸூபாஸ்ரயமாய்‌ அஸாதாரணமான திருமேனியோடே வந்துதவி அவர்களுடைய தாபங்களைப்‌ போக்கும்‌ ஆர்த்த ஹரனானவன்‌ கீழில்‌ பத்தில்‌ இவர் த்வரைக்கீடாக அணித்தாக நாளிட்டுக்‌ கொடுத்ததற்குப்‌ பலம்‌ அர்ச்சிராதி, கதியாலே துணை பெற்றுப்‌ போகை யாகையாலே அதுக்கு ஆப்தனானவன்‌ தன்னையே துணையாகப்‌ பற்றி ப்ராப்தி நிஸ்சிதமென்ற போக்கிலே ஒருப்பட்ட இவர்‌ தாம்‌ தஞ்சமாக நினைத்திருந்த வர்த்தமும்‌ பேசியிடும்படியான தஸையானவாறே முற்பட்ட உபதேஸ விஷயமான திருவுள்ளத்துக்கு க்ருத்யாக்ருத்யங்களை விதித்து-அப்படி பவ்யரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு கர்த்வ்யாதிகளை வெளியிட்டு முதலிலே உபக்ரமித்த பக்தி ப்ரபத்திகளையும்‌ நிகமித்து ஸம்ஸாரிகளுக்கு ஸுகரமாக ஆஸ்ரயணத்தை உபதேஸித்து அநுபவ கைங்கர்யங்களிலே நிற்கிறவர்களுக்கு பல் குணமாகிற ஆழங்காலையும்‌ காட்டித்‌ தம் பக்கல்‌ வ்யாமுக்‌தனான ஈஸ்வரனுக்குத்‌ தம்முடைய திருமேனியில்‌ தமக்குண்டான உபேக்ஷையை வெளியிட்டு இப்போது தமக்குப்‌ பரதந்த்ரனாய்‌ நிற்கிறவவனை அநாதி காலம்‌ தம்மைக்‌ கைவிட்டதுக்கு ஹேதுவென் னென்று கேட்க அவனும்‌ இந்த்‌ரிய வஸ்யதை தொடக்கமான ஹேது பரம்பரைகளை யெண்ணி அதுவும்‌ ததாயத்தமென்றறியும்‌ ஸர்வஜ்ஞரான இவர்க்குப்‌ போக்கிடம்‌ சொல்லுகை யரிதென்று நிருத்தரனாய்‌ அர்ச்சிராதி மார்க்கத்தையும்‌ அங்குள்ளாருடைய ஸத்காரத்தையும்‌ காட்டிக் கொடுக்க அத்தை ஸாக்ஷாத்கரித்தவிவர்‌ அதுவும்‌ மாநஸாநுபவமாய்‌ பாஹ்யகரண யோக்‌ய மல்லாமையாலே அவனுக்கு மறுக்க வொண்ணாத வாணையிட்டுத்‌ தடுத்து அது பெறாவாணை யல்லாமைக்கு ஹேதுக்களைச்‌ சொல்லும்படியான தம்முடைய பரமபக்தி யெல்லாம்‌ குளப்படியாம்படியான அபி நிவேஸத்தோடே வந்து தம்முடைய தாபத்தைப்‌ போக்கிப்‌ பேற்றோடே தலைக் கட்டிக்‌ கொடுத்தபடியை வெளியிடுகிறார்‌ என்கிறார்‌ பத்தாம் பத்தில்‌.

    (சுரிகுழலஞ்சனப்புனலித்யாதி, ப்ரபந்நார்த்த்ஹரனான ஸர்வேஸ்வரன்‌) “சுரிகுழல்‌ கமலக்‌ கண்கனிவாய்‌” (திருவாய்மொழி 10-1-1) “அணிக்கொள்‌ நால்தடந்தோள்‌” (திருவாய்மொழி 10-1-9) “மணிமிகு மார்பு அணிமிகு தாமரைக்‌ கை” (திருவாய்மொழி 10-3-5) “கைகளும்‌ பீதகவாடையும்‌” (திருவாய்மொழி 10-3-8) “செங்கமலவண்ண மென்மலரடி” (திருவாய்மொழி 10-3-7) “மணிநின்ற சோதி” (திருவாய்மொழி 10-4-7) “அஞ்சன மேனி” (திருவாய்மொழி 10-3-3) “புனல்‌ மைநின்றவரை போலும்‌ திருவுருவம்‌” (திருவாய்மொழி 10-6-8) “பொல்லாத்‌ தாமரைக்கண்‌ கருமாணிக்கம்‌” (திருவாய்மொழி 10-10-1 “புனக்காயா நிறத்த” (திருவாய்மொழி 10-10-6) “நீரார்‌ முகில்‌ வண்ணன்‌” (திருவாய்மொழி 10-5-8) “கார்‌ மேகவண்ணன்‌” (திருவாய்மொழி 10-4-1 “மெய்ந்நின்று கமழ்‌ துளப விரையேறு திருமுடியன்‌” (திருவாய்மொழி 10-6-8) “திகழ்கின்ற திருமார்பில்‌ திருமங்கை” (திருவாய்மொழி 10-6-9) “அணிநின்ற செம்பொன்‌ அடலாழி” (திருவாய்மொழி 10-4-7) “காமனைப்‌ பயந்த காளை” (திருவாய்மொழி 10-2-8) என்று அவயவங்களோடும்‌ ஒளதார்யம்‌ முதலான குணங்களோடும்‌ ஸ்ரக்‌ வஸ்த்ர ஆபரண ஆயுதங்களோடும்‌ கூடி “காம ரூபங்கொண்டு எழுந்தளிப்பான்‌” (திருவாய்மொழி 10-1-10) என்று ஆஸ்ரிதருடைய ஆபத்‌ ரக்ஷணத்துக்கு அநுரூபமாகக்‌ கொள்ளும்‌ விக்‌ரஹங்களுக்கெல்லாம்‌ கந்த மாய்‌ ஸூபாஸ்ரயமான அந்த விக்‌ரஹத்தை யுடையனாய்க்‌ கொண்டு தன் பக்கல்‌ ந்யஸ்த பரரானவர்களுடைய ஆர்த்தியைத்‌ தீர்க்கையாலே ப்ரபந்நார்த்த ஹரனான ஸர்வேஸ்வரன்‌ (அருள்பெறும்போதணுக விட்டதித்யாதி, தயரதன்‌ பெற்ற கோவலனாகையாலே) “அவனுடையருள்பெறும்‌ போதரிதால்‌ அவனருள்‌ பெருமளவாவி நில்லாது” (திருவாய்மொழி 9-9-6) என்று கீழில்‌ பத்திலே க்ஷண கால விஸ்லேஷம்‌ பொறாமை ஆர்த்தரான இவ்வாழ்வார்க்கு “மரணமானால்‌’” (திருவாய்மொழி 9-10-5) என்று ஆரப்‌த ஸரீராவஸாநத்திலே உமக்கு மோக்ஷம்‌ தருகிறோம்‌ என்று அணித்தாக நாளிட்டுக்‌ கொடுத்ததுக்குப்‌ பலம்‌ வானேற வழிதந்த” (திருவாய்மொழி 10-6-5) என்று அவன்‌ காட்டிக்‌ கொடுத்த அர்ச்சிராதி மார்க்கத்துக்குத்‌ துணை பெற்றுப்‌ போகையாலே இவரை இவ் வழியாலே கொடு போவதாக ராஜ குமாரன்‌ போம் போது நிலவரானார்‌ முன்னே போய்‌ நிலம்‌ சோதித்து நிழலாம்படி சோலை செய்து தடாகங்கள்‌ சமைத்து வைத்துப்‌ பின்‌ கொண்டு போவரைப்‌ போலே “அண்டமூவுலகளந்தவன்‌” (திருவாய்மொழி 10-1-5) என்று திருவுலகளக்க என்றொரு வ்யாஜத்தாலே முன்னோடி நிலம்‌ ஸோதித்து “அவனடி நிழல்‌ தடமன்றி யாமே” திருவாய்மொழி 10-1-2) என்று காளமேகமான தன் கால்‌ விழுந்த விடத்தே நிழலும்‌ தடாகமுமாம்படி பண்ணி அமுதமளித்த பெருமானாகையாலே “பாதேயம்‌ புண்டரீகாக்ஷ நாம ஸங்கீர்த்தநாம்ருதம்‌” (காருடம்‌) என்றிவர்க்கு பாதேயமாகத்‌ தன்‌ திவ்ய குணாம்ருதத்தை வர்ஷிக்குமவனாய்‌ “தயரதன்‌ பெற்ற மரதக மணித்தடம்‌” (திருவாய்மொழி 10-1-8) என்றும்‌ “கூத்தன்‌ கோவலன்‌” (திருவாய்மொழி 10-1-6 என்றும்‌ சக்ரவர்த்தி திருமகனாயும்‌ க்ருஷ்ணனாயும்‌ வந்தவதரித்தவனாகையாலே. (வேடன்‌ வேடு வச்சி என்று தொடங்கி – ஆத்தனை வழித்துணையாக்கி) “உகந்த தோழன்‌ நீ” (பெரிய திருமொழி 5-8-1) என்று பெருமாளுடைய ஸ்வீகாரத்துக்கு விஷய பூதனான ஸ்ரீகுஹப்‌ பெருமாள்‌, “சஷுஷா தவ ஸெளம்யேந பூதாஸ்மி ரகு நந்தந” (ரா. ஆ. 74-14) என்று அவன்‌ கடாக்ஷ லஷ்ய பூதையான ஸபரீ, “யா கதிர்‌ யஜ்ஞ ஸீலாநாம்‌ ஆஹிதாக்‌ நேசயா க,தி: அபரா வர்த்திநாம்‌ யாச யாச பூமி ப்ரதாயிநாம்‌ மயா த்வம்‌ ஸமநுஜ்ஞாத: கச்ச லோகாதநநுத்தமாந்‌” (ரா.ஆ. 68-29, 30) என்று விஷயீ கரிக்கும்படியான ஸ்ரீஜடாயு மஹாராஜர்‌, “ராமபாணாஸந ஷிப்தமாவஹத்‌ பரமாங்கதிம்‌” (ரா. ஸு. 17-8) என்னும்படியான வாலி ஸுக்ரீவ மஹாராஜர்‌ தொடக்கமான வாநர ஸேநைகள்‌ அயோத்தியில்‌ வாழும்‌ சராசரம்‌, “சிந்தயந்தீ ஜகத் ஸூதிம்‌ பரப்‌ரஹ்ம ஸ்வரூபிணம்‌ நிருச்வாஸ தயா முக்திம்‌ க.தாந்யா கோப கந்யகா” என்னும்படி இடைச்சியான சிந்தயந்தி ததி பாண்டன்‌, அவனுடைய தயிர்த்தாழி, “ஸுகந்த மேதத்‌ ராஜார்ஹம்‌ ரசம்‌ ருசிராநநே ஆவயோர்காத்ர ஸத்‌ருஸம்‌ தீ,யதா மநுலேபநம்‌” (ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌ 5-20-6) என்று விஷயீகரிக்கும்படியான கூனி, “தர்மே மநஸ் ச தே பத்ர ஸர்வ காலம்‌ பவிஷ்யதி யுஷ்மத்‌ ஸந்ததி ஜாதாநாம்‌ தீர்க்க மாயுர்‌ பவிஷ்யதி” ஸ்ரீவிஷ்ணு புராணம்‌ 5-9-26) என்று விஷயீகரிக்கும்படியான ஸ்ரீமாலாகாரர்‌ “நவம்‌ ஸவமிதம்‌ புண்யம்‌ வேத பாரக மச்யுத யஜ்ஞ ஸீல மஹா ப்ராஜ்ஞ ப்‌ராஹ்மணம்‌ ஸவமுத்தமம்‌” (ஹரிவம்சம்‌) என்று பிணவிருந்திட்ட கண்டாகர்ணன்‌, “வேண்டடிசிலுண்ணும்போது ஈதென்று பார்த்திருந்து நெடுநோக்குக்‌ கொள்ளும்‌” (நாச்சியார்‌ திருமொழி 12-6) பத்த விலோசநத்தில்‌ ருஷி பத்நிகள்‌, “மீளவவன்மகனை” (பெரியாழ்வார்‌ திருமொழி 1-5-2) என்று ஹிரண்ய புத்ரனான ஸ்ரீப்ரஹ்லாதன்‌, “அவன்‌ தம்பிக்கு” (பெருமாள்‌ திருமொழி 10-7) என்று ராவணாநுஜனான ஸ்ரீவிபீஷணப் பெருமாள்‌, ஸ்ரீகஜேந்த்‌ராழ்வான்‌, “நஞ்சு சோர்வதோர்‌ வெஞ்சினவரவம்‌” (பெரிய திரு மொழி 5-8-4) எனகிற ஸுமுகன்‌, “மலரடி கண்ட மாமறையாளனான (பெரிய திருமொழி 58-5] கோவிந்த ஸ்வாமி, “மாமுனி பெற்ற மைந்தன்‌” (பெரிய திருமொழி 5-8-6) என்று ம்ருகண்டு புத்ரனான மார்க்கண்டே,யன்‌ இவர்கள்‌ தொடக்கமான பதினெட்டு நாட்டிலுள்ள அநுகூல வர்க்கமான பெருங்கூட்டத்தை அர்ச்சிராதி மார்க்கத்தாலே தானே துணையாய்க்‌ கொண்டு நடத்துகிறவனாய்‌ “திருமோகூராத்தன்‌ தாமரையடியன்றி மற்றொன்றிலம்‌ அரணே” (திருவாய்மொழி 10-1-6) “காளமேகத்தையன்றி மற்றொன்றிலம்‌ கதியே” (திருவாய்மொழி 10-1-1) என்று பரமாப்தனான காளமேகத்தை வழித் துணையாகப்‌ பெற்று (அறியச்‌ சொன்ன ஸூப்ரபாதத்தே) “நாமுமக்கறியச்‌ சொன்ன நாள்களும்‌ நணியவான” (திருவாய்மொழி 10-2-9) “மரணமானால்‌” (திருவாய்மொழி 9-10-35) என்று அவனறுதி யிட்டுத்‌ தந்தானாய்‌ நான்‌ உங்களுக்குச்‌ சொன்ன நாள்‌ கிட்டிற்றென்று பிறர்க்கும்‌ பேசும்படியாய்‌ “ஸுப்ரபாதா ச மே நிஸா ” (ஸ்ரீவிஷ்ணுபுரானம்‌ 5-17-3) “ஸுப்ரபா தாத்‌ய ரஜநீ மது,ராவாஸ யோஷிதாம்‌” (ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌ 5-18-24) என்று பகவத் ப்ராப்தி அணித்தான நல்விடிவான நாளிலே (துணை பிரியாமல்‌ போக்கொழிந்து மீள்கின்றதில்லை என்று நிச்சித்திருந்தவிவர்‌) “துணை பிரிந்தார்‌ துயரமும்‌ நினைகிலை பசுமேய்க்கப் போகேல்‌” (திருவாய்மொழி 10-3-4) “என்‌ கை கழியேல்‌” (திருவாய்மொழி 10-3-8) “பசுநிரை மேய்ப்பொழிப்பானுரைத்தன (திருவாய்மொழி 10-3-11) என்று தமக்குத்‌ துணையாக அவனை பசு மேய்க்கப்‌ போகையாகிற அபிமதத்தில்‌ நின்றும்‌ தவிர்த்து “மீள்கின்றதில்லை பிறவித்துயர்‌ கடிந்தோம்‌” (திருவாய்மொழி 10-4-3 “நிலைபேர்க்கலாகாமை நிச்சித்திருந்தேன்‌’ (திருவாய்மொழி 10-4-4) என்று ஸம்ஸார துரிதம்‌ மறுவலிடா தென்று “நபி, பேதி குதஸ்சந’ (தைத்திர்யோபநிஷத்‌ என்கிறபடியே ஒன்றுக்கும்‌ அஞ்சாதபடி நிஸ்சித்திருந்த விவர்‌ (ஸஞ்சிதம்‌ காட்டும்‌ தமையானவாறே) மரணாவஸ்தைகளிலே ஸஞ்சிதமாய்ப்‌ புதைத்துக்‌ இடந்த நிதிகளைப்‌ புத்ராதிகளுக்குக்‌ காட்டுவாரைப்‌ போலே தமக்கு ப்ராப்தி யணித்தானவாறே ஒருவரும்‌ இழக்க வொண்ணாது இவ்வளவிலே எல்லார்க்கும்‌ ஹிதாஹிதங்களை அறிவிக்க வேணுமென்று பார்த்து, (முந்துற்ற நெஞ்சுக்குப்‌ பணியித்யாதி க்ருத்யாக்ருத்யங்‌களை விதித்து) “தொழுதெழென்‌ மனனே” (திருவாய்மொழி 1-1-1) என்று ப்ரதமத்திலே உபதேஸிக்கும்படி பகவத்‌ விஷயத்திலே தம்மிலும்‌ முந்துற்று நிற்கிற தம்முடைய திருவுள்ளத்தைப்‌ பார்த்து, “பணிநெஞ்சே நாளும்‌ பரமபரம்பரனை (திருவாய்மொழி 10-4-7) “வாழியென்‌ நெஞ்சே மறவாது வாழ்கண்டாய்‌” (திருவாய்மொழி 10-4-8) “மருளொழி நீ மடநெஞ்சே” (திருவாய்மொழி 10-6-1 “நரகத்தை நகு நெஞ்சே” (திருவாய்மொழி 10-6-5 “வாழி மனமே கைவிடேல்‌” (திருவாய்மொழி 10-7-9 என்று நம்‌ ப்ரதிபந்தகங்களை யெல்லாம்‌ தானே போக்கி அடிமை கொள்ளும்‌ ஸர்வஸ்மாத்‌ பரனை அநுபவிக்கப்பார்‌. உனக்கிந்த ஸம்ருத்‌தி மாறாதே சென்றிடுக கைபுகுந்ததென்னா இதர விஷயங்களிலே செய்யுமத்தை இவ் விஷயத்திலும்‌ செய்யாதே கிடாய்‌. இன்பம்‌ பயக்கவிலே ‘ திருவாறன்விளையதனை மேவி வலஞ்செய்து கை தொழக்கூடுங்கொலோ” (திருவாய்மொழி 7-10-9)என்று ப்ராப்ய வஸ்து கிட்டிற்றாகில்‌ இங்கே யடிமை செய்ய வமையாதோ வென்று ப்‌ரமிப்பதொன்றுண்டு; உனக்கு அத்தைத்‌ தவிரப் பார்‌. உத்தேஸ்ய வஸ்து ஸந்நிஹிதமாய்த்தென்று அத்தையே பார்க்குமத்தனையோ, நம்மைப்‌ பார்க்க வேண்டாவோ நான்‌ பரமபதத்தேறப்‌ போகா நின்றேன்‌. நெடுநாள்‌ நம்மைக்‌ குடிமக்களாக்கி எளிவரவு படுத்தின ஸம்ஸாரத்தைப்‌ புரிந்து பார்த்து சிரித்துப்‌ போரு கிடாய்‌; நமக்கு இந்த ஸம்பத்தெல்லாம்‌ திருமலையாழ்வாராலே வந்ததாய்த்து. அத்திருமலையைக்‌ கைவிடாதேகொள்‌ என்று க்ருத்யாக்ருத்யங்களை அவஸ்ய கரணீயமாம்‌ படி விதித்து (நெஞ்சு போல்வாரைத் தொண்டீரென்றழைத்து) திருவுள்ளம்‌ போலே அந்தரங்கரான ஸ்ரீவைஷ்ணவர்களை “தொண்டீர்‌ வம்மின்‌” (திருவாய்மொழி 10-1-4) என்று அழைத்து (வலஞ்செய்தித்யாதி நடமின்‌ புகுதுமின்‌ என்று) கொண்ட “கோயிலை வலஞ்செய்திங்காடுதும்‌ கூத்தே” (திருவாய்மொழி 101-5) “எண்ணுமின்‌ எந்தை நாமம்‌” (திருவாய்மொழி 10-2-5) “பேசுமின்‌ கூசமின்றி” (திருவாய்மொழி 10-2-4) “நமர்களோ சொல்லக் கேண்மின்‌” (திருவாய்மொழி 10-2-8)பாதம் காண நடமினோ நமர்கள் உள்ளீர் (திருவாய்மொழி 10-2-1)அனந்தநகர் புகுதுமின் (திருவாய்மொழி 10-2-1) என்றும் அவன் எழுந்து அருளி இருக்கிற தேசத்திலே அனுகூல வ்ருத்திகளைப் பண்ணுங்கோள் -ஸ்வாமியுடைய திரு நாமங்களை அநுஸந்தியுங்கோள்‌; உங்கள்‌ அயோக்‌யதை பார்த்துக்‌ கூசாதே திருவனந்தபுரத்திலே ஸ்நேஹத்தைப் பண்ணி வர்த்திக்கதிறவனைப்‌ பேசுங்கோள்‌; என்னோடு ஸம்பந்த முடையரானார்‌ சொன்ன வார்த்தையைக்‌ கேளுங்கோள்‌: திருவனந்தபுரத்திலே திருக்கண் வளர்ந்தருளுகிற ஸர்வேஸ்வரனுடைய திருவடிகளைக்‌ காணப்‌ போருங்கோள்‌; இச்சை பிறந்த இன்றே அங்கே போய்ப் புகப்‌ பாருங்கோள்‌ என்று அவர்களுக்குக்‌ கர்த்தவ்யம்‌ ஸ்மர்த்தவ்யம்‌ வக்தவ்யம்‌ ஸ்ரோதவ்யம்‌ த்‌ரஷ்டவ்யம்‌ கந்தவ்யம்‌ வஸ்தவ்யமெல்லாம்‌ வெளியிட்டு (பிணக்கறவைச்‌ சார்வாக நிகமித்துக்‌ கொண்டு) உக்த நிகமநம்‌ பண்ணுகை ஸாஸ்த்ரமாகையாலே முதலிலே “பிணக்கற” என்கிற பாட்டில்‌ “வணக்குடைத்‌ தவநெறி” (திருவாய்மொழி 1-3-5) என்று உபக்ரமித்த ஸாத்‌ய ஸித்‌த ரூபமான பக்தி ப்ரபத்திகளாகிற உபாயத்தையும்‌ சார்வே தவநெறியிலே “சார்வே தவ நெறிக்குத்‌ தாமோதரன்‌ தாள்கள்‌” (திருவாய்மொழி 10-4-1 என்றும்‌ “பண்டே பரமன்‌ பணித்த பணி வகையே கண்டேன்‌ கமல மலர்ப்பாதம்‌” (திருவாய்மொழி 10-4-9) “இருமை வினைகடிந்து இங்கென்னை யாள்கின்றான்‌” (திருவாய்மொழி 10-4-2) என்று நிகமித்துக்‌ கொண்டு ( எண் பெருக்கில்‌ எண்ணும்‌ திருநாமத்தின்‌ ஸப்‌தார்த்தங்களைச்‌ சுருக்கி) “எண்பெருக்கந்நலத்து ஒண்பொருள்‌ ஈறில வண்புகழ்‌ நாரணன்‌” (திருவாய்மொழி 1-2-10) என்றும்‌ “திண்ணம்‌ நாரணமே” (திருவாய்மொழி 10-5-1) என்றும்‌ பக்திக்காலம்பநமாக உபதேஸித்த திருமந்தரத்திலர்த்தத்தையும்‌ ஸப்‌தத்தையும்‌ பரவாதபடி சுருக்கிக்‌ கொண்டு (மாதவன்‌ என்றென்று த்‌வயமாக்கி) “ மாதவனென்றென்று ஓத வல்லீரேல்‌” (திருவாய்மொழி 10-5-7) என்று அந்தத் திருநாமத்தினுடைய விதாநுஸந்தாநமான த்‌வயத்தையும்‌ வெளியிட்டு (கரண த்ரயமித்யாதி, கையோலை செய்து கொடுத்து )ஈஸ்வரன் தம்மைக்‌ கொண்டு போகையிலே த்வரிக்கிறபடியாலும்‌ கேட்கிறவர்களுக்கு ப்ரதிபத்திக்கு விஷயமாம்படியாகவும் சுருங்கக் கொண்டு அநுஷ்டாநார்த்த ப்ரகாஸகமான ப்ரயோக விருத்தி போலே பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே” நெடியானே” (திருவாய்மொழி 10-5-5) “சுனைநன்‌ மலரிட்டு நினைமின்‌ (திருவாய்மொழி 10-5-10) என்று கரண த்ரயத்தாலுமுண்டான ஆஸ்ரயணத்தை ஸம்ஸாரிகளுக்கு உபதேஸித்து (செஞ்சொற்கவிகளுக்குக்‌ கள்ள வழி காவலிட்டு) “செஞ்சொற்கவிகாள்‌ உயிர்காத்தாட்செய்மின்‌” (திருவாய்மொழி 10-7-1) என்று அவனுக்கு அடிமை செய்வார்‌ ஸீலாதிகளிலே அகப்படாதே கொள்ளுங்கோள்‌, அநுபவ கைங்கர்யங்களிலே நிற்கிறவர்களுக்கு அரணழியாமல்‌ கள்ள வழி காவலிடுவாரைப்‌ போலே ஸீல குணமாகிற ஆழங்காலிலே இழியாதே கொள்ளுங்கோள்‌ என்று உபதேஸித்து (மனந்திருந்தி யென்று தொடங்கி தேஹதோஷமறிவித்து) “தன்பால்‌ மனம்‌ வைக்கத்‌ திருத்தி வீடு தருத்துவான்‌’ (திருவாய்மொழி 1-5-10) என்கிறபடியே பரமபதத்தைக்‌ கொடுப்பதாகப்‌ போய்‌ அலங்கரித்து அவன்‌ வரக் கொள்ள “ஊரும்‌ நாடும்‌ உலகமும்‌ தன்னைப்‌ போல்‌” (திருவாய்மொழி 6-7-2) என்று இவருபதேஸத்தாலே லோகமாகத்‌ திருந்த இவரை வைத்த கார்யம்‌ தலைக் கட்டினவாறே “விண்ணுலகம்‌ தருவானாய்‌ விரைகின்றான்‌’ (திருவாய்மொழி 10-6-3) என்று இவரைக்‌ கொண்டு போகையிலே த்வரித்து இவருடைய ஸரீரம்‌ சரம ஸரீரமாகையாலே அதில்‌ தனக்குண்டான வ்யாமோஹத்தாலே இவரைக்‌ கொண்டு போகையையும்‌ மறந்து “கோவிந்தன்‌ குடி கொண்டான்‌’ (திருவாய்மொழி 10-6-7) என்று ஸபரிகரனாய்க்‌ கொண்டு “என்‌ மாய வாக்கை இதனுள்‌ புக்கு” (திருவாய்மொழி 10-7-3) இன்றிவர் தாம்‌ குந்தியடியிட்டு த்யாஜ்யமென்று சரக்குக்‌ கட்டிப்‌ புறப்பட்டு நிற்கிற இவருடைய தேஹத்திலே தான்‌ புகுந்து “திருமாலிருஞ்சோலை மலையே” (திருவாய்மொழி 10-7-8) என்கிற பாட்டின்படியே ஷீராப்‌தி தொடக்கமாகத்‌ தனக்கு வாஸஸ்தாந திவ்ய நகரங்களில்‌ பண்ணும்‌ விருப்பத்தை யெல்லாம்‌ ஒரோ அவயவங்களிலே பண்ணி “அங்க நாமங்க நாமந்தரே மாத வவோ மாதவம்‌ மாதவஞ்சாந்தரேணாங்க நா இத்தமா கல்பிதே மண்டலே ஸஞ்சரந்‌ ஸஞ்ஜகெள, வேணுநா தேவகீ நந்த ந: (கர்ணாம்ருதம்‌ என்று திருக் குரவையில்‌ பெண்களோடே அநேக விக்‌ரஹ பரிக்ரஹம்‌ பண்ணி அநுபவித்தாப்‌ போலவும்‌ ஸ்ரீமத்‌ த்‌வாரகையிலே தேவிமார்களோடே பதினாறாயிரம்‌ விக்‌ரஹம்‌ கொண்டு அநுபவித்தாப் போலவும்‌ அநேக விக்‌ரஹ பரிக்‌ரஹம்‌ பண்ணி இவருடைய அவயவங்கள் தோறும்‌ அநுபவிக்கும்படி இவருடைய விக்‌ரஹத்திலே சபலனானவனுக்கு “பொங்கைம்புலனும்‌ பொறியைந்தும்‌ கருமேந்திரியம்‌ ஐம்பூதம்‌ இங்கிவ்வுயிரேய்‌ பிரகிருதி மானாங்கார மனங்களே உன்‌ மாமாயை மங்கவொட்டு” (திருவாய்மொழி 10-8-10) என்று தம்முடைய தேஹத்தில்‌ தோஷத்தை அவனுக்கறிவித்து அத்தை விடுவிக்க வேணுமென்று (மாயையை மடித்து வானே தரக் கருதி கருத்தின் கண்‌ பெரியனானவனை) ‘”மடித்தேன்‌ மனை வாழ்க்கையுள்‌ நிற்பதோர்‌ மாயையை” (திருவாய்மொழி 10-8-3) ஸம்ஸாரத்தில்‌ நிற்கைக்கடியான மாயை ப்ரக்ருதி அத்தைத்‌ திரிய விடுத்தேன்‌ என்று இவர் தாமே பேசும்படி அசித் ஸம்பந்தத்தை யறுத்து “வானே தருவான்‌” (திருவாய்மொழி 10-8-5) என்று பரமபதத்தை இவர்க்குக்‌ கொடுப்பதாக “கருத்தின் கண்‌ பெரியன்‌” (திருவாய்மொழி 10-8-8 என்று இவருடைய மநோரதத்தினளவல்லா படி இவரைக்‌ கொண்டு போகையிலே த்வரிக்கிற பற்று கண்டு (அநாத்‌யநாதர ஹேது சொல்லென்று மடியைப்‌ பிடிக்க) “இன்றென்னை’ (திருவாய்மொழி 10-8-9) இத்யாதி, இன்றிப்படி நிர்ஹேதுகமாக விஷயிகரித்த நீ அநாதி காலம்‌ உபேக்ஷித்து வைத்ததுக்கு ஹேதுவை அருளிச்‌ செய்யவேணுமென்று அவன்‌ மடியைப்‌ பிடிக்க, (இந்த்‌ரிய கிங்கரராய்‌ குழி தூர்த்துச்‌ சுவைத்தகன்றீர்‌ என்னில்‌ அவை யாவரையுமகற்ற நீ வைத்தவை என்பர்‌) “வயந்து கிங்கரா விஷ்ணோ: யூயமிந்த்‌ரிய இங்கரா:” (வில்லிபுத்தூர்‌ பகவர்‌ வார்த்தை) என்கிறபடியே அநாதி காலம்‌ இந்த்‌ரிய வஸ்யராய்‌ “தூராக்குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன்‌” (திருவாய்மொழி 5-8-6) “அற்ப சாரங்களவை சுவைத்தகன்றொழிந்தேன்‌” (திருவாய்மொழி 3-2-6) என்று துஷ்பூரமான இந்த்‌ரியங்களுக்கு இரையிட்டு எத்தனை காலம்‌ உன்னை அகன்றிருக்கக்‌ கடவேன்‌ அற்ப சாரமானது அது நமக்குமெட்டாதபடி ஸம்ஸாரத்திலே கைகழிப்‌ போந்தேன்‌ என்று நீர் தாமே பேசும்படியான ஸப்‌தாதி விஷய ப்ராவண்ய மன்றோ நீர்‌ அநாதி காலம்‌ இழக்கைக்கு ஹேது என்னில்‌, “ஓரைவர்‌ யாவரையும்‌ மயக்க நீ வைத்த” (திருவாய்மொழி 7-1-8) என்றும்‌ “அகற்ற நீ வைத்த மாயவல்லைம்புலன்கள்‌” (திருவாய்மொழி 5-7-8) என்றும்‌ நீ வேண்டாதாரை அகற்றுகைக்கு வைத்தவை என்று நன்றாக அறிந்தேன்‌ என்பர்‌. (அது தேஹ யோகத்தாலே என்னில்‌ அந்நாள்‌ நீ தந்த சுமடென்பர்‌) அந்த இந்த்‌ரிய வஸ்யதைக்கடி ஸரீர ஸம்பந்த மன்றோ என்னில்‌ “அந்நாள்‌ நீ தந்த ஆக்கை” (திருவாய்மொழி 3-2-1) “அது நிற்கச்‌ சுமடு தந்தாய்‌” (திருவாய்மொழி 7-1-10) என்று அதுவும்‌ உன்னாலே உண்டான (தென்பர்‌). (முன்‌ செய்த முழு வினையாலே என்னில்‌ அது துயரமே யுற்ற இருவினை உன்‌ கோவமும்‌ அருளுமென்பர்‌) “முன்செய்த முழு வினையால்‌ திருவடிக்கீழ்‌ குற்றேவல்‌ முன் செய்ய முயலாதே அகல்வதுவோ (திருவாய்மொழி 1-4-2) என்று அந்த தேஹ ஸம்பந்தத்துக்கடி நீர்‌ அநாதியாகச்‌ செய்து போந்த கர்மமன்றோ என்னில்‌ “துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய்‌” (திருவாய்மொழி 3-6-8) “உற்ற விரு வினையாய்‌” (திருவாய்மொழி 10-10-8) என்று புண்ய பாப ரூபமான கர்மங்களை அசேதநமுமாய்‌ நஸ்வரமுமாய்‌ இருபசை மலமுமாய்க்‌ கொண்டு உன்‌ கோபமும்‌ அருளுமென்று உன்னுடைய நிக்‌ரஹாநுக்‌ரஹ ரூபேண பலிக்குமவை யாகையாலே அந்த கர்மம்‌ நீயிட்ட வழக்கென்பர்‌. (ஈவிலாத மதியிலே னென்னும்‌ உம்மதன்றோ கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள்‌ என்னில்‌ ஆங்காரமாய்ப்‌ புக்கு செய்கைப்‌ பயனுண்பேனும்‌ கர்த்ருத்வமும்‌ தத்‌ பலமான போக்த்ருவத்வமும்‌ கருமமும்‌ கரும பலனுமாகிய நீ கர்த்தா போக்தா என்பர்‌) “ஈவிலாத வினைகள்‌ எத்தனை செய்தனன்‌ கொல்‌” (திருவாய்மொழி 4-7-3) என்றும்‌ “மதியிலேன்‌ வல்வினையே மாளாதோ” (திருவாய்மொழி 1-4-3) என்றும்‌ அநுபவித்தாலும்‌ மாளாத பாபத்தை எத்தனை பண்ணினேன்‌, நான்‌ பண்ணின பாபமேயோ அநுபவித்தாலும்‌ மாளாதே யிருப்பது என்று நீர்‌ சொல்லுகையாலே அந்த கர்த்ருத்வமும்‌ போக்த்ருத்வமும்‌ உம்மதன்றோ என்று நாம்‌ சொல்லில்‌ தானாங்காரமாய்ப்‌ புக்கு தானே தானே யானான்‌’ (திருவாய்மொழி 10-7-11 என்று தானபிமாநியாய்ப்‌ புக்கு ஆத்மாத்மீயங்களில்‌ எனக்குண்டான அபிமானத்தைத்‌ தவிர்த்துத்‌ தானே அபிமாநியானானென்று, அந்த கர்த்ருத்வமும்‌ “செய்கைப்‌ பயன்‌ உண்பேனும்‌ யானே” (திருவாய்மொழி 5-6-4) என்றும்‌ கருமமும்‌ கரும பலனுமாகிய காரணன்‌ தன்னை (திருவாய்மொழி 3-5-10) என்று பல போக்தாவும்‌ நாமிட்டவழக்காகையாலே கர்த்தாவும்‌ போக்தாவும்‌ நீயே என்பர்‌. (யானே எஞ்ஞான்றுமென்றத்தாலே என்னில்‌ அயர்ப்பாய்ச்‌ சமய மதி கொடுத்து உள்ளம்‌ பேதம்‌ செய்கை உன்‌ தொழில்‌ என்பர்‌) “யானே என்னை அறியகிலாதே யானே என்றனதே என்றிருந்தேன்‌” (திருவாய்மொழி 2-9-9 “எஞ்ஞான்றும்‌ மெய்ஞ்ஞான மின்றி வினையியல்‌ பிறப்பழுந்தி’ (திருவாய்மொழி 3-2-7) என்று நீர்‌ சொல்லுகையாலே அந்த கர்ம கர்த்ருத்வ பல போக்த்ருத்வங்களுக்கடி உம்முடைய அஜ்ஞானமன்றோ என்னில்‌, ‘அயர்ப்பாய்த்‌ தேற்றமுமாய்‌” (திருவாய்மொழி 7-8-6) “மாட்டாத பல சமய மதி கொடுத்தாய்‌” (திருவாய்மொழி 3-1-4) “உள்ளம்‌ பேதம்‌ செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்‌” (திருவாய்மொழி 5-10-4) என்று ஜ்ஞாநாஜ்ஞானங்களிரண்டும்‌ நீயிட்ட வழக்காகையாலே அத்தால்‌ வந்த புத்தி பேதங்களும்‌ உனக்குக்‌ காரியமென்று சொல்லுவர்‌.

    (ஜீவ ப்ரக்ருதி சைதந்யம்‌ நீங்கும்‌ வ்ரத ஹேது அக மேனியில்‌ அழுக்கறுக்கை அபி மாநி க்ருத்யம்‌) “மூதாவியில்‌ தடுமாறு முயிர்‌ முன்னமே யாதானும்‌ பற்றி நீங்கும்‌ வ்ரதம்‌” (திருவிருத்தம்‌ 95) என்று ஸுஷ்ம ப்ரக்ருதி விஸிஷ்டனான ஆத்மாவில்‌ இடக்கிற சைதந்யம்‌ ப்ரக்ருதி ப்ராக்ருதங்களைப்‌ பற்றி நம்மை விட்டகலுகை நங்கார்யம்‌. “அகமேனி ஒழியாமே’ (திருவாய்மொழி 9-7-10) என்று நமக்கந்தரங்க ஸரீரமான இவ் வாத்மாவைப்‌ பற்றிக்‌ கிடக்கிற ப்ரக்ருதி ரூபமான மாலிந்யத்தை அறுக்கை அவ்வாத்மாவுக்கு அபிமாநியான நம்முடைய க்ருத்யமாயிருந்ததீ. (தான்‌ நல்கும்‌ பந்தம்‌ நிருபாதிகம்‌) “நல்கித்தான்‌ காத்தளிக்கும்‌ பொழிலேழும்‌ வினையேற்கே நல்கத் தானாகாதோ நாரணனைக்‌ கண்டக்கால்‌” (திருவாய்மொழி 1-4-5) என்று நாம்‌ ஸ்நேஹ பூர்வமாக ரக்ஷிக்கைக் கடியான நாராயணத்வ ப்ரயுக்தமான ஸம்பந்தம்‌ நிருபாதிகமாகையால்‌ (ஸெளஹார்த்த,ம்‌ எஞ்ஞான்றும்‌ நிற்கும்‌) “தனிமாப்‌ புகழே எஞ்ஞான்றும்‌ நிற்கும்படியாய்த்‌ தான்தோன்றி” (திருவாய்மொழி 8-10-7) என்று அந்த பந்த மடியாக எல்லாருடைய நன்மையை ஆஸாஸிக்கைக்கடியான ஸெளஹார்த்த குணம்‌ ஸர்வாத்மாக்கள்‌ பக்கலிலும்‌ ஸர்வ காலமும்‌ நடக்கையாலே இந்த ஸம்பந்த மடியான ஸ்நேஹமும்‌ இவனுக்குக்‌ கண்ணழிவு சொல்ல வொண்ணாதா யிருந்தது. (பிணக்கிப்‌ பேதியாத ஜ்ஞாந வைகல்யம்‌ இல்லை) “பிணக்கி யாவையும்‌ யாவரும்‌ பிழையாமல்‌ பேதித்தும்‌ பேதியாததோர் கணக்கில்‌ கீர்த்தி வெள்ளக்‌ கதிர் ஞான மூர்த்தியினாய்‌” (திருவாய்மொழி 6-2-8) என்று ஸம்ஹார காலத்தில்‌ மண்ணும்‌ நீரும்‌ கலசுமாப் போலே நன்றாகக்‌ கலசி ஸ்ருஷ்டி காலத்திலே ஒருவருடைய கர்மம்‌ ஒருவருக்குத்‌ தட்டாதபடி பிரித்து ஸ்ருஷ்டிக்கும்படியான நமக்கு ஞான சக்த்யாதிகளிலே குறை சொல்லி கண்ணழிக்க வொண்ணாதாயிருந்தது. [எகமுர்த்தியில் அல்லல் மாய்த்த யத்ன பலித்வங்கள்‌ நம்மது) “ஏகமூர்த்தி யிருமூர்த்தி’ (திருவாய்மொழி-4-3-3) என்கிற பாட்டின்படியே காரணங்களோடு கார்யங்களோடு வாசியற எல்லாவற்றையும் உண்டாக்கி அவற்றினுடைய வஸ்துத்வ நாம பாக்த்வங்களுக்காக அநு ப்ரஸித்து ஸுஷ்மரான சேதநர்க்கு ருசி பிறந்த போது ஆஸ்ரயிக்கைக்காக ஷீராப்தியிலே கண் வளர்ந்தருளுகிற ஸர்வ ஸரீரியான நீ உன்னுடைய திருமேனிக்கு வேண்டும்‌ போகோபகரணங்களை பூசும்‌ சாந்தில்‌ படியே என் பக்கலாக்கி நிர்துக்கனானாயே என்று இவர்‌ பேசும்படி இவரைப்‌ பெறுகைக்கு யத்நம்‌ பண்ணுகையும்‌ பெற்றால்‌ உகக்கைக்கீடாந அறிவுள்ளதொன்றாயிருந்து அத்தாலும்‌ கண்ணழிவு சொல்ல வொண்ணாதா யொழிந்தது. (நாம்‌ தனி நின்ற ஸ்வதந்த்ரரென்று அவனே அறிந்தனமே என்னும்‌ ஸர்வஜ்ஞரிவர்‌) “தனி நின்ற சார்விலா மூர்த்தி” (பெரிய திருவந்தாதி 71 என்று தான்‌ வேண்டிற்றுச்‌ செய்யும்படி நிரங்குஸ ஸ்வதந்த்ரனும்‌ நீயே. “அவனே அகல் ஞாலம்‌ படைத்திடந்தான்‌ (திருவாய்மொழி 9-3-2) இத்யாதி. “அவனே மற்றெல்லாமுமறிந்தனமே” (திருவாய்மொழி 9-3-2) என்று ஸ்ருஷ்டி முதலான ஸகல ப்ரவ்ருத்திகளையும்‌ ஸஹஜமாகத்‌ தானே செய்ய வல்லனென்று இப்படி நம்மை உள்ளபடி அறியும்‌ ஸர்வஜ்ஞரான இவர்க்கு உத்தரம்‌ சொல்லுகை யறிந்து (நெறி காட்டி அருகும்‌ சுவடும் போலே இதுவும்‌ நிருத்தரம்‌ என்ற கவிழ்ந்து நிற்க) “நெறிகாட்டி நீக்குதியோ” (பெரிய திருவந்தாதி 6) என்கிற பாட்டிலும்‌ “அருகும்‌ சுவடும்‌ தெரிவுணரோம்‌” (பெரிய திருவந்தாதி 8) என்கிற பாட்டிலும்‌ உபாயாந்தரங்களைக்‌ காட்டி அகற்றப்‌ பார்த்தாயோ -விலக்ஷணமான திருமேனியைக்‌ காட்டி சேர்த்துக்‌ கொள்ளப்‌ பார்த்தாயோ அஜ்ஞரான எங்களை என் செய்வதாக நினைத்தாய்‌ இத்தை அருளிச்செய்ய வேணும் என்றும் கேட்ட விடங்களில்‌ ஒரு ஹேது இல்லாமையாலே இதுக்கும்‌ சொல்லலாவ தொரு ஹேது இல்லாமையாலே நிருத்தரமென்‌று தரையைக் கீறிக்கவிழ்ந்து நிற்க
    (அமந்த்ரோத்ஸவ கோஷம் போலே )உத்சவங்களில் சடங்கு காட்டும் உபாத்யாயன் மந்த்ரம் தோன்றாவிட்டால் கொட்டச் சொல்லுமா போலே இவனும் ( ஏறப்போகிற எழுச்சியை ஸூ சிப்பிக்கிற வென்று )அது கிடக்க உம்மைக் கொண்டு போகிற வழியைப் பாரீர் என்று –நான் ஏறப் பெறுகின்றேன் (திருவாய் மொழி -10-6-5)என்றும் இவர் கீழ்ச் சொன்னபடியே -பரமபதத்திற்குப் போகிற மார்க்கத்தையும் -மார்க்கஸ்தரான புருஷர்களுடைய ஸத்காரத்தையும் காட்டிக் கொடுக்க (மேக ஸ்முத்‌ர பேரீ கீத காஹள ஸங்காஸீஸ் ஸ்துதி கோலாஹலம்‌ செவிப்‌ பட்டவாறே )சூழ் விசும்பணிமுகில்‌ தூரியம்‌ முழக்கின ஆழ்கடல்‌ அலை திரை கையெடுத்தாடின (திருவாய்மொழி 10-9-1)கீதங்கள்‌ பாடினர்‌ கின்னரர்‌ கெருடர்கள்(திருவாய்மொழி 10-9-5) “காளங்கள்‌ வலம்புரி கலந்தெங்கு மிசைத்தனர் வாளொண்‌ கண்‌ மடந்தையர்‌ வாழ்த்தினர்‌” (திருவாய்மொழி 10-9-6) “தொடர்ந்தெங்கும்‌ தோத்திரம்‌ சொல்லினர்‌” (திருவாய்மொழி 10-9-7) என்று ராஜாக்கள்‌ போகிற போது தூர்யாதி, மங்கல கோஷம்‌ பண்ணுவாரைப்‌ போலே போகிறவர்களைக்‌ கண்ட ப்ரீதியாலே உண்டான மேக ஸமுத்‌ரங்களினுடைய கோஷங்களாகிற தூர்யாதி பேரிகளையும்‌ அங்குள்ளாருடைய கீத காஹள ஸங்கா ஸீஸ்துதி கோலாஹலங்களையும்‌ இவர்‌ செவிப்படுத்த அத்தைக்‌ கேட்டவாறே (ஸாக்ஷாத்கரித்த பர ப்ராப்திக்கு) அந்த அர்ச்சிராதி மார்க்கத்தையும்‌ மார்க்கஸ்தரான ஆதி வாஹிக ஸத்காரத்தையும்‌ திவ்ய தேஸ ப்ராப்தியையும்‌ அங்குள்ளாருடைய பஹுமாநத்தையும்‌ பெற்று ஆநந்த மயமான ஆஸ்தாநத்தில்‌ இருப்பையும்‌ ஸாக்ஷாத்கரித்து, இப்படி ஸாக்ஷாத்கரித்த பர ப்ராப்தி மாநஸாநுபவ மாத்ரமாய்‌ யதா, மநோரத மநுபவமல்லாமையாலே (தலை மிசையாய்‌ வந்த தாள்களைப்‌ பூண்டு) “தலைமிசையாய்‌ வந்திட்டினி நான்‌ போகலொட்டேன்‌” (திருவாய்மொழி 10-10-1 என்றும்‌ “தலைமேல்‌ புனைந்தேன்‌” (திருவாய்மொழி 10-4-4) “தலைமேல தாளிணைகள்‌‘ (திருவாய்மொழி 10-6-6 என்றும்‌ இப்படி பூர்ணமாக வந்து தோன்றின திருவடிகளைக்‌ கட்டிக்‌ கொண்டு போகாமல்‌ தடுத்து (திருவாணையிட்டு) “திருவாணை நின்னாணை கண்டாய்‌” (திருவாய்மொழி 10-10-2) என்று அவனுக்கு மறுக்க வொண்ணாத ஆணை யிட்டுத்‌ தடுக்க நீர்‌ ஸேஷ பூதரான பின்பு ஸேஷியான நான்‌ செய்தது கண்டிருக்குமத்தனையொழிய நீர்‌ ஆணை யிட்டுத்‌ தடுக்கை உமக்கு ஸ்வரூபமன்று; ஆன பின்பு அது பெறாவாணை காணும்‌” என்ன, (கூசஞ்செய்யாத செய்திப்பிழை) ‘கூசம்‌ செய்யாது கொண்டாய்‌” (திருவாய்மொழி 10-10-2) என்று ஸர்வஜ்ஞனான நீ என்‌ பூர்வ வ்ருத்தத்தால்‌ வந்த அயோக்‌யதையைப்‌ பார்த்துக்‌ கூசி வாசி வையாதே உன்னோடு ஆத்ம பேதமில்லாதபடி என்னைப்‌ பரிக்‌ரஹித்த உன்னதன்றோ செய்திப் பிழை என்றும்‌. (பற்றுக்‌ கொம்பற்ற கதி கேடு) “ஆவிக்கோர்‌ பற்றுக்‌ கொம்பு நின்னலாலறிகின்றிலேன்‌ நான்‌” (திருவாய்மொழி 10-10-3 என்று கொடி கொழு கொம்பை ஒழிய நிற்க மாட்டாதாப்‌ போலே என்‌ உஜ்ஜீவந ஹேதுவாயிருப்ப தொன்று உன்னை யொழிய வேறு காண்கிறிலேன்‌ என்னும்படியான அநந்யகதித்வம்‌ என்றும்‌ (போரவிட்ட பெரும்பழி) “எம்பரஞ்சாதிக்கலுற்று என்னைப்‌ போரவிட்டிட்டாயே” (திருவாய்மொழி 10-10-4) என்று என்‌ கார்யம்‌ நீ செய்யக் கடவதாக ஏறிட்டுக்‌ கொண்டு உன் பக்கல்‌ நின்றும்‌ பிரித்து உன்‌ குணங்கள்‌ கால் நடையாடாத ஸம்ஸாரத்திலே தள்ளி உபேக்ஷித்தாய்‌; இது உனக்கும்‌ பரிஹரிக்க வொண்ணாத பெரும்பழியன்றோ வென்றும்‌ (புறம்போனால்‌ வருமிழவு) “போரவிட்டிட்டென்னை நீ புறம்போக்கலுற்றால்‌ பின்னை யான்‌ ஆரைக்‌ கொண்டெத்தை யந்தோ எனதென்பதென்‌ யானென்பதென்‌” (திருவாய்மொழி 10-10-5)என்று உன் பக்கல்‌ நின்றும் பிரித்து அநந்ய கதியாய்‌ அஜ்ஞனாய்‌ அஸக்தனான என்னை ஸ்ருஷ்டியே தொடங்கி இவ்வளவு புகுர நிறுத்தி ஸர்வ ரக்ஷகனான நீ என்‌ கார்யம்‌ நான்‌ செய்வேனாகப்‌ பார்த்து என்னை உபேஷித்தால்‌ நான்‌ எந்த உபாயத்தைக்‌ கொண்டு எந்த புருஷார்த்தத்தை ஸாதிப்பது? எனக்கொரு புருஷார்த்தமென்றும்‌ நானென்றும்‌ உண்டா? முடிந்தேன்‌ என்கிற இழவாலும்‌. (உண்டிட்ட முற்றீம்பு] மனக்காராமை மன்ன உண்டிட்டாய்‌ இனி உண்டொழியாய்‌” (திருவாய்மொழி 10-10-6 )என்று மநஸ்ஸூக்கு பர்யாப்தி பிறவாமல்‌ நிரந்தரமாக புஜித்த நீ தொடங்கின கார்யத்தை குறை கிடவாதே விஷயீகரித்து விடாய்‌- புக்த ஸேஷமாக்கின உன்னதன்றோ முதல்‌ தீம்பு என்றும்‌ (அன்பு வளர்ந்த அடியுரம்‌) கோல மலர்ப்‌ பாவைக்கன்பாகிய என்‌ அன்பேயோ” (திருவாய்மொழி 10-10-7) நான்‌ அந்த:புர பரிகரமன்றோ! என்பக்கலுண்டான அன்புக்கடி மில்லையோ! அந்த புருஷகார பலத்தால்‌ வந்த அடியுரமென்றும்‌, (உயிருறவு) “பெற்றினிப் போக்குவனோ உன்னை என்‌ தனிப்பேருயிரை” (திருவாய்மொழி 10-10-8) என்று அத்யந்த விஸஜாதீயனாயிருந்து வைத்து எனக்கு தாரகனான உன்னை விட்டுத் தரிக்கப்‌ போமோ? ப்ராணனை விட்டு ப்ரக்ருதி தரிக்கவற்றோ என்னும்படியான ஸரீர ஸரிர ஸம்பந்தம்‌ என்றிப்படி. (முதலளவு துரக் கைகளாலே) முதலிலே பிடித்து முடியுமளவாக புகலறத் துரந்து பெறாவாணை யல்லாமையை பலிப்பித்துக்‌ கொள்ளும்படியான பேரவா குளப்படியாம்படி யென்னும்படி “அதனில்‌ பெரியவென் னவா வறச்‌ சூழ்ந்தாயே” (திருவாய்மொழி 10-10-10) என்று தத்வ த்ரயங்களையும்‌ விளாக்குலை கொண்டு அவை குளப்படியாம்படியான பரம பக்தியையும்‌ குளப்படியாக்க வற்றான ஸமுத்‌ரம்‌ போன்றிருக்கிற தன்னபிநிவேஸத்தைக்‌ காட்டி வந்து ஸம்ஸ்லேஷித்து இவருடைய ஸகல தாபத்தையும்‌ வாஸநையோடே போக்கி இவருடைய கூப்பீட்டையும்‌ ஓயப்‌ பண்ணி “அங்கே பரதமாரோப்ய முதித: பரிஷஸ்வஜே” (ராயு. 134-39) என்கிறபடியே மீண்டெழுந்தருளிப்‌ பெருமாள்‌ ஸ்ரீபரதாழ்வானை மடியிலே வைத்தணைத்துக்‌ கொண்டாப் போலே இவர்‌ விடாய்‌ கெடும்படி கலந்து ‘அவா வற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன்‌” என்று தாமே பேசும்படி இவருடைய ஸகல தாபங்களையும்‌ போக்குகையாலே நிர்துக்கராய்‌ நிரஸ்த ஸமஸ்த ப்ரதிபந்தகராய்‌ பேற்றோடே தலைக் கட்டின படியை வெளியிடுகிறார்‌ பத்தாம்‌ பத்தில்‌

    229-உறாமையோடே உற்றேன்‌ ஆக்காது ஒழிந்தது, நாடு திருந்த நச்சுப்‌ பொய்கை ஆகாமைக்கு, ப்ரபந்தம்‌ தலைக் கட்ட, வேர்சூடுவார்‌ மண் பற்றுப் போலே என்னுமவற்றிலும்‌ இனி இனியென்று இருபதின் கால்‌ கூப்பிடும்‌ ஆர்த்தி அதிகார பூர்த்திக் கென்னுமது முக்‌யம்‌.

    இனிமேலிவர்‌ ப்ரதமத்திலே ஆர்த்தராய்க்‌ கொண்டு ஸரணம்‌ புக்க போதே விரோதியை விடுவித்து பேற்றோடே தலைக் கட்டிக்‌ கொடாதே இவரை இவ்வளவாக வைக்கைக் கடியேதென்னில்‌ அதுக்கு நாலஞ்சு ஹேதுக்களை அருளிச் செய்து அவை எல்லாவற்றிலும்‌ இவர்க்குப்‌ பிறந்த பரமபக்தியை வெளியிடுகைக்காக வைத்தான்‌ என்கிறார்‌.
    (உறாமையோடே உற்றேனாக்கா தொழிந்தது) “பொய்ந் நின்ற ஞானமும்‌ பொல்லாவொழுக்கும்‌ அழுக்குடம்பபும்‌ (இன்னின்ற நீர்மை இனியாமுறாமை” (திருவிருத்தம்‌-1) என்று முதலிலே அவித்‌யா கர்ம வாஸநா ருசி ப்ரக்ருதி ஸம்பந்தங்‌களை விடுவிக்க வேணுமென்று ஆர்த்தராய்‌ ஸரணம் புக்க விவர்க்கு “உற்றேன்‌ உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன் ஈதே இன்னம்‌ வேண்டுவதெந்தாய்‌” (திருவாய்மொழி 10-8-10)என்று திருவடிகளைக்‌ கட்டி ப்ரீதி பூர்வகமாக அடிமை செய்யப்‌ பெற்றேன்‌ என்று பேசும் படியாகத்‌ தலைக் கட்டிக்‌ கொடாதே இவரை இவ்வளவவும்‌ ஈஸ்வரன்‌ வைக்கைக்கு ஹேதுவென்னென்னில்‌, (நாடு இருந்த) அவன்‌ ஸ்ருஷ்ட் யவதாரங்களாலும்‌ திருத்த வொண்ணாத ஜகத்தை ஊரும் நாடு முலகமும்‌ தன்னைப் போல்‌” (திருவாய்மொழி 6-7-2) என்னும்படி திருத்துகைக்காகவும்‌, (நச்சுப் பொய்கை யாகாமைக்கு) இவரபேஷித்த போதே) கார்யம்‌ செய்யில்‌ நச்சுப்‌ பொய்கை போலே பகவத்‌ விஷயத்தில்‌ இழிவாரில்லை என்றும்‌ (ப்ரபந்தம்‌ தலைக்‌ கட்ட) தன்னோடு பிறரோடு வாசியற எல்லார்க்கும்‌ போக்‌யமுமாய்‌ பாவநமுமாய்‌ இருக்கிற இப்ப்ரபந்தங்களை இவரைக்‌ கொண்டு தலைக் கட்டுவித்துக்‌ கொள்ளுகைக்கும்‌, (வேர் சூடுவார்‌ மண் பற்றுப்‌ போலே) வேர்‌ சூடுவார்‌ அதில்‌ மண்பற்றுக்‌ கழற்றதாப் போலே, சரம ஸரீரமான இவருடைய விக்‌ரஹத்திலுண்டான வ்யாமோஹத்தாலே விட மாட்டாமை யாலும்‌ வைத்தான்‌ என்கிற இந்த ஹேதுக்களெல்லாவற்றிலும்‌ (இனியினி யென்றிருபது கால்‌ கூப்பிடும்‌ ஆர்த்தி) அவித்‌யாதி துக்கம்‌ “இந்நின்ற நீர்மை இனியாமுறாமை” (திருவிருத்தம்‌ -1) என்று தொடங்கி “இனிநெஞ்சமிங்குக்‌ கவர்வது யாமிலம்‌” (திருவிருத்தம்‌ 4), “இனி வளை காப்பவரார்‌’ (திருவிருத்தம்‌ 13),“இனியுன் திருவருளாலன்றிக்‌ காப்பரிதால்‌” (திருவிருத்தம்‌ 62), “இனியவர் கண்‌தங்காது” (திருவாய்மொழி 1-4-4),“இனி யுனது வாயலகிலின்னடிசில்‌ வைப்பாரை நாடாயே” (திருவாய்மொழி 1-4-8), “இனி யெம்மைச்‌ சோரேலே” (திருவாய்மொழி-2-1-10), “எந்நாள்‌ யானுன்னை யினி வந்து கூடுவனே” (திருவாய்மொழி 3-2-1),“ஆவி காப்பாரினியார்‌” (திருவாய்மொழி 5-4-2), “நெஞ்சிடர்‌ தீர்ப்பாரினியார்‌‘(திருவாய்மொழி 5-4-9), “இனி யுன்னை விட்டொன்று மாற்ற கிற்கின்றிலேன்‌”(திருவாய்மொழி 5-7-1), “தரியேனி” (திருவாய்மொழி 5-8-7), “உழந்தினியாரைக்‌ கொண்டென்னுசாகோ” (திருவாய்மொழி 7-3-4), “அத்தனையா மினி யென்னுயிரவன்‌ கையதே” (திருவாய்மொழி 9-5-2), “நாரைக் குழாங்கள்காள்‌ பயின்றென்னினி(திருவாய்மொழி 9-5-10),“இனியிருந்தென்னுயிர்‌ காக்குமாறென்‌” (திருவாய்மொழி-9-9-2), “இனிப் பிறவி யான் வேண்டேன்‌” (திருவாய்மொழி 10-6-1) “இனி நான்‌போகலொட்டேன்‌’ (திருவாய்மொழி 10-10-1), “முடிவிலீயோ” (திருவாய்மொழி
    -10-10-9), “சுடர்ஞான இன்பமேயோ” (திருவாய்மொழி 10-10-10) என்னுமளவாக
    இருபதின்கால்‌ கூப்பிடும்படியான ஆர்த்தி பரம்பரையை விளைத்து இவருடைய பரம பக்தி பர்யந்தமான அதிகார பூர்த்தியை ப்ரகாஸிப்பிக்கைக்காக வைத்தான்‌ என்கிற விதுவே தாத்பர்யமென்கிறார்

    230-கமலக்கண்ணனென்று தொடங்கிக்‌ கண்ணுள்‌ நின்றிறுதி கண்டேனென்ற பத்தும்‌ உட்கண்ணாலேயாய்‌, காண்பான வாவுதல்‌ அதிலிரட்டி யாகையாலே கண்டு களிப்ப வளவும்‌ பரஜ்ஞாந கர்ப்ப பரபக்தி.
    ஆர்த்திக்கடியான பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகளினுடைய தஸைகள்‌ எந்தெந்த திருவாய்மொழிகள்‌ என்ன- அத்தை அருளிச்செய்கிறார்‌ “கமலக் கண்ணன் என்று தொடங்கி பரஜ்ஞாந கர்ப்ப பரபக்தி. “கமலக்கண்ணன்‌ என்‌ கண்ணினுள்ளான்‌ காண்பன்‌” (திருவாய்மொழி 1-9-9) என்று புண்டரீகாக்ஷ்னானவன்‌ என்‌ கண்ணுக்கு விஷயமானான்‌; நானுமவனை ஸாக்ஷாத்கரியா நின்றேன்‌ என்று உபக்ரமித்து “கண்ணுள்‌ நின்றகலான்‌’ (திருவாய்மொழி 10-8-8) என்‌ கண் வட்டத்தை விட்டுப்‌ போகிறிலன்‌ என்றெதளவாக “என்‌ கண்ணனை நான்‌ கண்டேனே”, (திருவாய்மொழி 2-8-10) “கலைப்பல்‌ ஞானத்தென்‌ கண்ணனைக் கண்டு கொண்டு” (திருவாய்மொழி 3-2-10), “நறுந்துழாயின்கண்ணியம்மா நானுன்னைக்கண்டு கொண்டே” (திருவாய்மொழி 4-7-7), “கூட்டரிய திருவடிக்கள்‌ கூட்டினை நான்‌ கண்டேனே”, (திருவாய்மொழி 4-9-9) “கைதொழவிருந்தாயது நானுங்‌ கண்டேனே (திருவாய்மொழி 5-7-5), “ஏரார்‌ கோலந்திகழக்கிடந்தாய்‌ கண்டேனெம்மானே’ (திருவாய்மொழி 5-8-1), “திருவிண்ணகர்க்‌ கண்டேனே’ (திருவாய்மொழி 6-3-1), “தேவர்கட்கெல்லாம்‌ கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே” (திருவாய்மொழி 9-4-8) என்று இப் பத்து சந்தையாலும்‌ ஸாக்ஷாத்காரமாகச்‌ சொல்லுகிறவிது “நெஞ்சென்னும்‌ உட்கண்‌” (பெரிய திருவந்தாதி 28) என்கிற ஆந்தர சக்ஷுஸ்ஸான மாநஸ ஸாக்ஷாத்காரமாய்‌ “கைய பொன்னாழி வெண்சங்கொடுங்‌ காண்பான்‌ அவாவுவன்‌ நான்‌ (திருவிருத்தம்‌ 84), “அடியேன்‌ காண்பானலற்றுவன்‌ ‘, (திருவாய்மொழி 1-5-7) “உம்மைக் காணு மாசையுள்‌ நைகின்றாள்‌” (திருவாய்மொழி 2 -4-2, “கூவுகின்றேன்‌ காண்பான்‌” (திருவாய்மொழி 3-2-8), “மெய் கொள்ளக் காண விரும்பும்‌ என் கண்களே’ (திருவாய்மொழி 3-8-4), “கூவியுங்காணப்‌ பெறேன்‌ உன கோலமே”, (திருவாய்மொழி 3-8-7) “உன்னை யெந்நாள்‌ கண்டு கொள்வனே’ (திருவாய்மொழி 3-8-8), “கோல மேனி காண வாராய்‌” (திருவாய்மொழி 4-7-1), “கூவுகின்றேன்‌ காண்பான்‌” (திருவாய்மொழி 3-2-8) “பாவியேன்‌ காண்கின்றிலேன்‌” (திருவாய்மொழி 4-7-10), “உன்னைக் காண்பான்‌ நானலப்பாய்‌” (திருவாய்மொழி 5-8-4), “ஒரு நாள்‌ காணவாராயே” (திருவாய்மொழி 8-5-1) “என்று கொல்‌ கண்கள்‌ காண்பதுவே” (திருவாய்மொழி 5-9-5), “விளங்க ஒருநாள்‌ காண வாராய்‌” (திருவாய்‌ மொழி 6-9-4), “உன்னைக் காண்பான்‌ வருந்தியெனை நாளும்‌” (திருவாய்‌ மொழி 6-9-6) “அலைகடல்‌ கடைந்தவப்பனே காணுமாறருளாய்‌” (திருவாய்மொழி 8-1-1), “தொண்டனேனுன்கழல்காணவொருநாள்வந்து தோன்றாயே” (திருவாய்மொழி 8-5-6), “உன்னையெங்கே காண்கேனோ’ (திருவாய்மொழி 8-5-10), “கனிவாய்‌ சிவப்ப நீ காணவாராயே” (திருவாய்மொழி 9-2-4), “உன்னைக்காணக்‌ கருதுமென்கண்ணே’ (திருவாய்மொழி 9-4-1) என்று அவனைக் காண வாசசைப்பட்டுக்‌ கூப்பிட்ட சந்தைகள்‌ அதிலிரட்டி யாகையாலே “கண்டு களிப்பக்‌ கண்ணுள்‌ நின்றகலான்‌’ (திருவாய்மொழி 10-8-7) என்று திருமாலிருஞ்சோலையளவும்‌ அநுபவம்‌ செல்லா நிற்கச்‌ செய்தே பெற்றல்லது தரியாதபடியான பாஹ்ய ஸம்ஸ்லேஷாபேஷை நடக்கையாலே பரஜ்ஞாநத்தை கர்ப்பித்துக் கொண்டு பரமபக்தி யாயிருக்கிறது –

    231-இருந்தமை யென்றது பூர்ண பரஜ்ஞாநம்‌.
    (இருந்தமையென்றது பூர்ண பரஜ்ஞானம்‌) ‘ சூழ்விசும்பணிமுகில்‌ தூரியம்‌ முழக்கி
    ” (திருவாய்மொழி 10-9-1 என்று தொடங்கி “அந்தமில் பேரின்பத்தடியரோ டிருந்தமை” (திருவாய்மொழி 10-9-11) என்று அர்ச்சிராதி மார்கத்தையும்‌ மார்கஸ்த்தரான புருஷர்களுடைய ஸத்காரத்தையும் தேஸ விஸேஷ ப்ராப்தியையும்‌ பகவதநுபவத்தையும்‌ பகவத் ஸ்வரூப ரூப குண விபூ,திகளை ஸாக்ஷாத்கரித் தநுபவிக்கிற நித்ய ஸூரிகளோடு ஏக ரஸராய்க்‌ கொண்டிருந்த நுபவிக்கிற ப்ரகாரத்தையும்‌ யதாவாக ஸாக்ஷாத்கரிக்கையாலே சூழ்விசும்பணிமுகில்‌ பூர்ண பரஜ்ஞாநமாய்‌ இருக்கிறது –

    232-முடிந்த அவாவென்றது பரமபக்தி.
    (முடிந்த அவா என்றது பரமபக்தி
    ) இப்படி ஸாக்ஷாத்கரித்த விது மாநஸாநுபவமாகையாலே யதா மநோரதாநுபவ ஸித்‌தியாகத்‌ திருவாணை யிட்டுத்‌ தடுத்துப்‌ பெருங் கூப்பீடாகக்‌ கூப்பிட்டுப்‌ பெற்றாலல்லது தரிக்க வொண்ணாத படியாய்‌ “முடிந்த அவாவில்‌ அந்தாதி இப்பத்து” (திருவாய்மொழி 10-10-11) என்கிற “முனியே நான்முகன்‌” (திருவாய்மொழி 10-10) பரமபக்தி தஸையாயிருக்கிறது –

    233-இவை ஜ்ஞாந -தர்ஸந – ப்ராப்தி அவஸ்த்தைகள்‌.
    “ஜ்ஞாதும்‌ த்‌,ரஷ்டுஞ்ச தத்வேந ப்ரவேஷ்டுஞ்ச பரந்தப”
    (கீதை 11-54) என்றிந்த பரபக்தி பரஜ்ஞாந பரம பக்திகளை ஜ்ஞாந தர்ஸந ப்ராப்தி அவஸ்தைகள்‌ என்கிறார்‌. எங்ஙனே என்னில்‌ பகவத்‌ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷைக ஸுகதுக்கராம்படியான ப்ரேம பூர்வகமான பரபக்தி ஜ்ஞாந தஸையாயும்‌, பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை ஸாக்ஷாத்கரிக்கிற பரஜ்ஞாநம்‌ தர்ஸந தஸையாயும்‌ ஸாக்ஷாத்கார ஸமநந்தரம்‌ அப்போதே அநுபவியா விடில்‌ முடியும்படியான பரமபக்தி ப்ராப்தி தஸையாயுமிருக்கிற அவஸ்தா விஸேஷம்‌ என்கிறார்

    234-அவித்‌யா நிவர்த்தக ஜஞாந பூர்த்தி ப்ரத பகவத் ப்ரஸாதாத்‌ மோக்ஷ லாபம்‌ என்கை மயர்வற வீடுபெற்றவென்ற ப்ரபந்த ஏக அர்த்‌யம்‌.
    ” மயர்வற மதிநலமருளினன்‌
    ” திருவாய்மொழி 1-1-1 என்றும்‌ “அவா வற்று வீடு பெற்ற திருவாய்மொழி 10-10-11-என்றும் சொல்லுகையாலே ஸம்ஸார காரணமான அஜ்ஞாநத்தை நிவர்த்திப்பித்து ஜ்ஞாந பூர்த்தியை நிர்ஹேதுகமாக உபகரித்த ஜ்ஞாநாதி குண பூர்ணனான பகவானுடைய ப்ரஸாதம்‌ பரமபக்தி தஸையான பாகத்தையும்‌ விளைத்து ஸ்வரூபாநுரூபமான மோக்ஷத்தையும்‌ தரும்‌ என்கை- ஒன்றான ப்ரபந்த த்துக்குத்‌ தாத்பர்யமென்கிறார்‌. (மயர்வற வீடுபெற்ற என்ற பிரபந்த ஏக அர்த்‌யம்‌) அநிஷ்டமான அஜ்ஞாந நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்டமான மோக்ஷத்தை ப்ராபிக்கை என்று ஓரர்த்தம்‌

    ஆக, 1-ஸர்வேஸ்வரன்‌ அஜ்ஞரான சேதநர்க்‌குத் தன் கிருபையாலே புருஷாரத்த ஜஞாநம்‌ உண்டாகைக்கு ஸாஸ்த்ர பிரதானம் பண்ணினமையும்
    2-அந்த ஸாஸ்த்ரம்‌ கொண்டு புருஷார்த்த ஞானம் பிறக்கை அரிதென்று தாத்பர்யமான திருமந்த்ரத்தை வெளியிட்டமையும்
    3-அந்த ஸாஸ்த்ர தாத்பர்யங்களுக்கு விஷயபேதம்‌ தொடக்கமான ஷைம்யங்களையும்‌,
    4-உபயத்திலும்‌ நிஷ்டரான அதிகாரிகளுடைய பரகாரங்களையும்‌,
    5-அந்த வ்யாஜத்தாலே ப்ரஸக்தமான திருவாய்மொழியினுடைய வைபவத்தையும்‌,
    6-அதுக்கு வக்தாக்களான ஆழ்வார்களுடைய ப்ரபாவத்தையும்
    7-அந்த ப்ரபாவத்துக் கடியான பகவந் நிர்ஹேதுக கடாக்ஷத்தையும்‌,
    8-அந்த கடாக்ஷமடியாக இவர்க்குண்டான ஜ்ஞாந பக்திகளையும்‌,
    9-அந்த ஜ்ஞாந பக்தி தஸைகளில்‌ இவர பேசும்‌ பேச்சுக்களையும்‌,
    10-அந்த பக்தி தஸையில்‌ பகவத் ப்ரேம யுக்தர் எல்லாரோடும்‌ இவர்க்குண்டான ஸாம்யத்தையும்‌,
    11-அந்த பக்தி தஸையில்‌ பேசும் அந்யாபதேஸங்களுக்கு ஸ்வாபதேஸங்களையும்‌,
    12-அந்த பக்திக்கு விஷயமான திவ்ய தேஸங்களில்‌ நிற்கிற எம்பெருமான்களுடைய குணங்களையும்‌,
    13-அந்த குண விஸிஷ்ட வஸ்துவிலுண்டான அநுபவ ஜநித ப்ரீதி ப்ரேரிதமாய்க்‌ கொண்டு ப்ரபந்தங்கள்‌ அவதரித்தமையையும்‌,
    14-தத்வார்த்த,ப்ரதி பாதந பரமான திருவாய்மொழி ப்ரபந்தத்துக்கு ஸ்ரீகீதா ஸாம்ய முண்டான படியையும்‌,
    15-அந்த கீதையில்‌ காட்டில்‌ இதுக்குண்டான வ்யாவ்ருத்தியையும்‌,
    16-இதில்‌ இவர்‌ உபதேஸிக்கிற விஷய பேதத்தையும்‌,
    17-அவ்வோ விஷயங்கள்‌ தோறும்‌ உபதேஸிக்கிற அர்த்த விஸேஷங்களையும்‌,
    18-அந்த வ்யாஜத்தாலே உபதேஸ விஷயமான ஸிஷ்ய லக்ஷணத்தையும்‌,
    19-இந்த லக்ஷணமில்லாதார்க்கு உபதேஸிக்கைக் கடியான இவருடைய க்ருபையையும்‌,
    20-இப்படி இவர்‌ க்ருபையாலே உபதேஸிக்கையாலே அவவுபதேஸம்‌ பலித்தபடியையும்‌,
    21-உபதேஸிக்கிற இப் ப்ரபந்தங்கள் தான்‌ தத்வ ஹித புருஷார்த்த ப்ரதிபாதகமான ரஹஸ்ய த்ரயார்த்த மென்னு மிடத்தையும்‌,
    22-அந்த ரஹஸ்ய த்ரயத்திலும்‌ ப்ரதிபாதிக்கப்படுகிற அர்த்த பஞ்சகங்களும்‌ இந்த ப்ரபந்தங்களிலே ஸங்க்‌ரஹ விஸ்தர ரூபேண சொல்லப்படுகிற ப்ரகாரத்தையும்‌,
    23-ப்ரபந்த ஆரம்பங்களில்‌ உண்டான லக்ஷணங்களில்‌ ப்ரபந்தாதியிலுண்டாயிருக்கிற ப்ரகாரத்தையும்‌,
    24-ஸாது பரித்ராணாதிகளாலே ஜகத் ரக்ஷணார்த்தமான பகவதவதாரம்‌ போலே ஜகத் ரஷணார்த்தமாக இப்ப்ரபந்தம்‌ அவதரித்த தென்னுமிடத்தையும்‌, 25-திருவாய்மொழியில்‌ பத்துப் பத்தாலும்‌ ப்ரதிபாதிக்கப்பட்ட எம்பெருமானுடைய பரத்வாதி குணங்களையும்‌,
    25-அக் குண விஸிஷ்டனான ஸர்வேஸ்வரன்‌ அந்தப் பத்துப் பத்தாலுமிவ் வாழ்வார்க்கு தத்வ ஜ்ஞாநம்‌ முதலாக ப்ராப்தி பர்யந்தமாகப்‌ பிறப்பித்த தஸா விஸேஷங்களையும்‌,
    26-இவர் தாம்‌ பிறரைக்‌ குறித்து உபதேஸித்த ப்ரகாரங்களையும்‌,
    27-இவர்‌ ப்ரதமத்திலே ஆர்த்தி பிறந்திருக்கச் செய்தே ஈஸ்வரனிவரை வைக்கைக்கு ப்ரதாந அப்ரதாந ஹேதுக்களையும்‌,
    28-இவர்க்குப்‌ பிறந்த பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகளாகிற தஸா விஸேஷங்களையும்‌,
    29-அஜ்ஞாந்‌ நிவ்ருத்தி பூர்வகமாக ஜ்ஞாந ப்ரதனான பகவானுடைய ப்ரஸாதமே மோக்ஷ ஹேது என்னுடத்தையும்‌,
    30-அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட மோக் ஷப்ராபணமே பரபந்த தாத்பர்யமென்னுமத்தையும்‌
    அருளிச் செய்து தலைக் கட்டி யருளினார்

    ————————————-

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்‌ அருளிச் செய்த ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌-ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ அருளிச்செய்த வ்யாக்‌யாநத்துடன்‌-மூன்றாம்‌ ப்ரகரணம்‌-

    August 15, 2025

    ஆசார்ய ஹ்ருத,யஸ்யார்த்த, ஸகலா யேந த,ர்ஸிதா | ஸ்ரீ ஸாநு தாஸ மமலம்‌ தேவ ராஜம்‌ தமாஸ்ரயே ॥

    ஆசார்ய ஹ்ருதயத்தின்‌ அர்த்தங்கள்‌ அனைத்தையும்‌ அருளிச் செய்தவராய்‌, ஸ்ரீஸாநுகாஸர்‌, தேவராஜர்‌ என்னும்‌ திருநாமங்களை உடையவரான திருநாராயணபுரத்து ஆயை ஆஸ்ரயிக்கிறேன்

    ஆசார்ய ஸ்வாந்த வக்தாரம்‌ அபி ராமவராபிதம்‌!
    ஸ்ரீக்ருஷ்ண தநயம்‌ வந்தே, ஐகத்‌ குருவராநுஜம்‌ ॥

    பணவாளரவணைப்‌ பள்ளி பயில் பவர்க்கெவ்வுயிரும்‌
    குண போகமென்று குருகைக் கதிபனுரைத்ததுய்ய
    உணர்பாவினுட்பொருள்‌ ஒன்றுமறியா உலகறிய
    மணவாளன் மாறன்‌ மனமூரைத்தான்‌ வண்முடும்பை வந்தே.

    ஸம்ஸ்ரிதாநாம்‌ ஜநிச்சேதஹேது ஜ்ஞாநத முக்திதம்‌ | யது புர்யாம்‌ ஜநந் யாக்‌யம்‌ லோகாநா முத்தமம்‌ குரும்‌ |
    ஸம் ப்ரதா யார்த்தத நிகம்‌ ஸெளம்ய ஜாமாத்ரு ஸூரயே | நிஸ்சிதார்த்த ப்ரதம்‌ ஸ்ரீமஜ் ஜநநீ குருமாஸ்ரயே

    ஆஸூரி சிங்கமாம்‌ ஆதி குரு உலகுக்கே
    மாசிலா இளையாழ்வார்‌ மண்ணுலக மாழ்ந்தன்று
    தூசரிக்கும்‌ திருப்பாவைத்‌ திருவருளைத்‌ தெளிவித்துப்‌
    பேசினார்‌ பெம்மானைப்‌ பின்போரை வாழ்த்திடவே

    மாதவத்தோர்‌ வாழ்த்தும்‌ முடும்பை மணவாளன்‌
    தோதவத்தித்‌ தூய் மறையோரான பெற்றார்‌ தீதற்ற
    ஆசார்ய ஹ்ருதயம்‌ பெற்றார்‌ நம்மாயி யிவர்‌
    தேசாரத் தாள்கள்‌ நெஞ்சே காண்

    மாதவத்தோன் மாறன்‌ மனங்கூறும்‌ மணவாளன்‌
    தோதவத்தித்‌ தூய் மறையோரான பெற்றார்‌ – நீதியினா
    லாங்கவர்‌ தாள்‌ சேர்‌ பெற்றார்‌ ஆயி மணவாளமுனி
    பூங்கமலத் தாள்கள்‌ நெஞ்சே போற்று

    ஆயி அந்தாதி-ஆயி ப்ரபத்தியில்‌ மாமுநிகளாலும்‌ அவரின்‌ பேரன்‌ ஜீயர்‌ நாயனாராலும்‌ அநுக்ரஹிக்கப்‌ பட்டிருக்கிறதைக்‌ காணலாம் அதில்‌ முதல்‌ இரண்டு ஸ்லோகத்தால்‌ ஆஸூரிப்பெருமாள்‌ வைபவததைக் கூறியுள்ளார்‌.

    ஆஸூரியிலவதரித்த இராமாநுசர்க்‌ கிருவர்‌ தாமாய்‌
    கூசாத நிலையொன்னில்‌ தாய்வயிற்றில்‌ பிறந்தவராய்‌
    மாசாத கூரேசர்‌ குருவருடன்‌ சேர்த்து வைக்க
    ஆஸூரிப்‌ பெருமாள் தாம்‌ ஒருவராம்‌ இராமாநுசர்க்கே (1)

    இராமாநுசர்க்கே ஸரணாம்‌ எழுபத்து நால்வர்‌ தன்னுள்‌
    இராப்பகலென்னாதே தன் குருவைச்‌ சிந்தித்தேத்தி
    இராகமனைத்தையும்‌ தொலைத்து விட்டுப்‌ பெருமாளென்னும்‌
    இராகவனோடெம்‌ பெருமாள்‌ எதுகிரியைச்‌ சென்றார்தாமே (3)

    ஆசார்ய ஹ்ருத,யஸ்யார்த்தாஸ் ஸகலா யேந தர்ஸிதா: !
    ஸ்ரீஸாநு தாஸ மமலம்‌ தே,வராஜம்‌ தமாஸ்ரயே ॥

    த்‌,ராவிட ஆம்நாய ஹ்ருத.யம்‌ கு,ருபர்வ க்ரமாக,தம்‌ ।
    ரம்ய ஜாமாத்ரு தே,வேந தர்ஸிதம்‌ க்ருஷ்ண ஸூநுதா

    ——————-

    150-சேர்ப்பாரைப்‌ பஷிகளாக்கி ஜ்ஞாந கர்மங்களைச்‌ சிறகென்று குரு ஸப்‌ரஹ்மசாரி புத்ர ஸிஷ்ய ஸ்தாநே பேசும்‌.
    இனிமேல்‌ இவர்‌ தூதுவிடுகிற பக்ஷி முதலானவை எவை என்னில்‌, (சேர்ப்பாரைப்‌ பக்ஷிகளாக்கி) பகவத்‌ விஷயத்தில்‌ கடகரைப்‌ பக்ஷிகளாக்கி, (ஜ்ஞாந கர்மங்களைச்‌ சிறகென்று) “உபாப்‌ யாமேவ பக்ஷாப்‌யாமாகாமே பக்ஷிணாங்கதி: ததைவ ஜ்ஞாந கர்மப்‌யாம்‌ ப்ராப்யதே புருஷோத்தம:” என்கிறபடியே ஜ்ஞாந கர்மங்களைச்‌ சிறகாக உடையரான குரு ஸப்‌ரஹ்மசாரி ஸிஷ்ய புத்ர ஸ்தாநீயரா யுள்ளாரைப்‌ பக்ஷி முதலானவையாகப் பேசக்கடவது –

    151-விவேக முகராய்‌ நூலுரைத்து அள்ளலில்‌ ரதியின்றி அணங்கின்‌ நடையைப்‌ பின் சென்று குடை நீழலிலே கவரி யசையச்‌ சங்கமவை முரல்‌ வரிவண்டிசை பாட மாநஸ பத்‌மாஸநத்திலே யிருந்து விதியினால்‌ இடரில்‌ அந்தரமின்றி இன்பம்‌ படக்‌ குடிச் சீர்மையிலே யாதல்‌ பற்றற்ற பரம ஹம்ஸராதலான நயாசலன்‌ மெய்ந்நாவன்‌ நாத யாமுநர்‌ போல்வாரை அன்னமென்னும்‌.
    குண ஸாம்யத்தாலே ஆசார்ய ஸ்தாநீயரா யுள்ளாரை அன்னமென்கிற தென்கிறார்‌, விவேக முகராய்‌ என்று தொடங்கி. (விவேக முகராய்‌) அன்னமாவது நீர ஷீர விபாகம்‌ பண்ணுமதொன்றாகையாலே ஸாராஸார விவேகோந்முகராய்‌. (நூலுரைத்து) “அன்னமதாயன்றங்கற நூலுரைத்த” (பெரியதிருமொழி 11-4-8) என்று ஹம்ஸ ரூபியாய்க்‌ கொண்டு ஸமாஸ்த்ர ப்ரதாநம்‌ பண்ணினாப் போலே இவர்களும்‌ ஸ்ரோதாக்களைக்‌ குறித்து ஸாஸ்த்ரங்களை யுபதேஸித்து. (அள்ளலில்‌ ரதியின்றி) “ராகாதி தூஷிதே சித்தே நாஸ்பத, மது ஸூதந: நபத்‌ நாதி ரதிம்‌ ஹம்ஸ: கதா சித்‌ கர்த்த மாம்பஸி’ (விஷ்ணுதர்மம்‌ 9-11) என்று அந்த அன்னமானது கர்தம ஜலத்திற்‌ பொருந்தாதாப்‌ போலே “அழுந்தார்‌ வன் சேற்றள்ளல்‌ பொய்ந் நிலத்தே” (திருவிருத்தம்‌ 100) என்று ஸம்ஸார கர்தமத்திலே பொருத்த முடையரன்றிக்கே. (அணங்கின்‌ நடையைப்‌ பின் சென்று) “அன்னநடைய வணங்கே” (பெரிய திருமடல்‌ 7 என்றும்‌, “அன்னம்‌ பெய் வளையார் தம்‌ பின்‌ சென்று” (பெரியதிருமொழி 6-5-5) என்றும்‌ சொல்லுகையாலே அநந்யார்ஹ ஸேஷத்வாதிகளாலும்‌, புருஷகார பாவத்தாலும்‌ ஹம்ஸ கதியான பெரிய பிராட்டியாரைப்‌ பின் சென்று –குடை நீழலிலே கவரி யசைய) ‘அன்னமென்‌ கமலத் தணி மலர்ப்பீடத்து அலை புனலிலைக்குடை நீழல்‌ செந்நெலொண் கவரி அசைய வீற்றிருக்கும்‌” (பெரிய திருமொழி 9-1-5) என்றும்‌, “சங்கமவை முரலச்‌ செங்கமல மலரை யேறி” (பெரிய திருமொழி 7-8-2) என்றும்‌, “வரிவண்டிசைபாட அன்னம்‌ பெடையோடுடனாடும்‌” (பெரிய திருமொழி 7-5-9) என்றும்‌ மாநஸ பத்‌மாஸநத்திலே யிருந்து அன்னமானது மேலே எழுந்த தாமரையிலை குடையாகவும்‌, பக்வ பலமான செந்நெல்லினுடைய அசைவுகள்‌ கவரியாகவும்‌ சங்குகளினுடைய த்‌வநி தூர்ய கோஷமாகவும்‌ வண்டுகளுடைய மிடற்றோசை பாட்டாகவும்‌ மாநஸ ஸரஸ்ஸில்‌ பத்‌மம்‌ ஆஸநமாகவும்‌ அன்னம்‌ இருக்குமாபோலே “அக்கமலத்திலை போலும்‌ திருமேனி’ (திருவாய்மொழி 9-7-3 என்று பத்‌ம பத்ர நிப ஸ்யாமமான திருமேனியைத் தங்களுக்கு ஒதுங்க நிழலாக உடையராய்‌ பரிபூர்ண ஜ்ஞாநர்‌ அநுகூல விருத்திகளைப்‌ பண்ண ஸூத்‌த ஸ்வபாவர்‌ ஸ்தோத்ரம்‌ பண்ண ஸாரக்‌ராஹிகள்‌ ஸாமகாநம்‌ பண்ண, “போதிற்‌ கமல வன்னெஞ்சு’ (பெரியாழ்‌-திரு- 5-2-8) என்கிறபடியே ஸிஷ்யர்களுடைய மாநஸ பத்‌மத்தை வாஸஸ்தாநமாக உடையராய்‌ (விதியினால்‌ இடரில்‌ இத்யாதி குடிச் சீர்மையிலே யாதல்‌) “விதியினால்‌ பெடை மணக்கும்‌” (திருவாய்மொழி 1-4-3) என்றும்‌, “இடரில்‌ போகம்‌ மூழ்கி இணைந்தாடும்‌ மடவன்னங்காள்‌” (திருவாய்மொழி 6-1-4) என்றும்‌, “அந்தரமொன்றுமின்றி அலர்மேலசையும்‌” (திருவாய்மொழி 6-8-10) என்றும்‌ “மிகவின்பம்‌ படமேவும்‌ மென்னடைய அன்னங்காள்‌” (திருவாய்மொழி 9-7-10) என்றும்‌ சொல்லுகிறபடியே வித்‌யுக்த ப்ரகாரத்திலே ஸாம்ஸாரிக ஸகல து.:க்கங்களும்‌ தட்டாதபடியாகவும்‌ ஒரு விச்சேதமும்‌ வாராதபடியாகவும்‌ மேல்மேலென ஆநந்தமபி விருத்தமாம்படி யாகவும்‌, “குடிச்சிர்மையிலன்னங்கள்‌’ (திருவிருத்தம்‌ 29) என்கிறபடியே புத்ர தாராதிகளோடே யிருந்து பகவதநுபவம்‌ பண்ணுகிற “நளிர்ந்த சீலன்‌ நயாசலன்‌” (பெரியாழ்‌.திரு. 4-4-8) என்று சொல்லுகிற செல்வ நம்பி, “மெய்ந்நாவன்‌ மெய்யடியான்‌ விட்டுசித்தன்‌” (பெரியாழ்‌.திரு. 4-9-11) என்கிற பெரியாழ்வார்‌ போல்வாரையும்‌, (பற்றற்ற பரமஹம்ஸரான ) “பற்றற்றார்‌ பயிலரங்கம்‌” (பெருமாள்‌ திருமொழி 1-4) என்று ஸாம்ஸாரிக ஸகல ஸங்கத்தையும்‌ விட்டு உத்தமாஸ்ரமிகளாய்‌ பரம ஹம்ஸராயிருக்கிற நாதமுனிகள்‌ யாமுந முனிகள்‌ போல்வாரை அன்னம்‌ என்கிறது என்கிறார்-

    152-என் பெறுதி யென்ன ப்‌ரமியாது உள்ளத்துளுறிய மது வ்ரதமாய்‌ தூமது வாய்கள்‌ கொண்டு குழல் வாய்‌ வகுளத்தின்‌ ஸாரம்‌ க்‌ரஹித்துத்‌ தேதெனவென்று ஆளம் வைத்துச்‌ சிறுகாலெல்லியம்போது குறிஞ்சி மருள்‌ காமரம்‌ கந்தாரம்‌ தலைக்‌ கொள்ளப்‌ பாடித்‌ துன்னிட்டு நெருக்க நீக்கென்று கடந்து புதம்‌ தகைவறப்‌ புக்கு வண்டொத்திருண்ட குழலிலே றங்கையற மருவி அருளாத யாமென்றோடி வந்து வாசமே யூதி வண்டே கரியான தெய்வ வண்டோடே சேர்விக்கும்‌ சேமமுடை நாரதன்‌ முனி வாஹனர்‌ தம்பிரான்மார்‌ போல்வாரை வண்டு தும்பியென்னும்

    (என்பெறுதியென்ன ப்‌,ரமியாது) ஏரார்‌ மலரெல்லாமூதி நீ என்பெறுதி (பெரிய
    திருமொழி 8-4-5) என்று நிவர்த்திப்பிக்க வேண்டாதபடி அப்ராப்த போக்யங்களிலே
    ப்ரவணரன்றிக்கே, (உள்ளத்துளூறிய மது வ்ரதமாய்‌) “உளங்கனிந்தருக்கும்‌ பெரிய திருமொழி 4-3-9) என்று அடியவர்‌ தங்கள்‌ உள்ளத்துள்‌ ஊறிய தேனை ( பகவத்‌ விஷயத்திலே பக்வமான ஸ்நேஹத்தை உடையராயிருக்கிற ஸ்ரீவைஷ்ணவர்களுடைய திருவுள்ளத்திலே ஊறியிருப்பதாய்‌ “ஸாஹிஸ்ரீரம்ருதாரகிற மதுவை ஸதாம்‌” என்று நிரதிஸய போக்‌யமான பகவத்‌, குணமாகிற மதுவை “தவாம்ருதஸ்யந்திநி” என்று தொடங்கி “மதுவ்ரதோ நேஷுரகம்‌ ஹி வீக்ஷதே (ஸ்தோத்ர ரத்நம்‌ 27) என்கிறபடியே புஜிக்கையே வ்ரதமாக உடைத்தாய்‌. (தூ மது வாய்கள்‌ கொண்டு) “தண்டுளவமுண்ட தூமது வாய்கள்‌ கொண்டு” (திருவாய்மொழி 6-8-3) என்று பகவத்‌ போக்யதையை அநுபவிக்கையாலே பரி ஸூத்‌தமாய்‌ இனிதான வாயைக்‌ கொண்டு. (குழல்‌ வாய்‌ வகுளத்தின்‌ ஸாரம்‌ க்‌ரஹித்து) “ஓடிவந்தென்‌ குழல்‌ மேல்‌ ஒளிமாமலர்‌ ஊதீரோ” (திருவாய்மொழி 6-8-3) என்றும்‌, “வைகுந்த மன்னாள்‌ குழல்வாய்‌ விரைபோல்‌ விண்டு கள்வாரும்‌ மலருளவோ நும்‌ வியலிடத்தே” (திருவிருத்தம்‌ 55) என்றும்‌, மணிவண்டு வகுளத்தின்‌ மலர்மேல்‌ வைகு” (பெரிய திருமொழி 6-6-1 என்றும்‌, ‘நாட்கமழ்‌ மகிழ்மாலை மார்பினன்‌” (திருவாய்மொழி 4-10-11) என்றும்‌ பரத்வாதி களிலே போக்‌யதையையும்‌ பரிச்சிந்ந மென்னும்படியாய்‌ பகவதநுபவ ஜநித ப்ரீதியாலே விஸ்த்ருதமாயிருக்கிற ஆழ்வாருடைய போக்‌யதையை புஜித்து. (தேதெனவென்று ஆளம்‌ வைத்து) வரி வண்டு தேதெனவென்று இசைபாடும்‌” (பெரிய திருமொழி 4-1-1) என்றும்‌, “யாழினிசை வண்டினங்கள்‌ ஆளம்‌ வைக்கும்‌ அரங்கம்‌” (பெரியாழ்‌.திரு. 4-8-6 என்றும்‌ இப்படி பகவத்‌ பாகவத குணங்களை அனுபவித்து உண்டான செருக்குக்குப்‌ போக்குவீடாக ஆளத்தி வைத்து, (சிறுகாலெல்லியம் போது குறிஞ்சி மருள்‌ காமரம்‌ கந்தாரம்‌ தலைக் கொள்ளப்‌ பாடி) “அறுகால்‌ வரிவண்டுகள்‌ ஆயிரநாமஞ்சொல்லி சிறுகாலைப்‌ பாடும்‌”, (பெரியாழ்‌.திரு. 4-2-8) “எல்லியம்போது இருஞ்சிறைவண்டு எம்பெருமான்‌ குணம்‌ பாடும்‌” (பெரியாழ்‌- திரு- 4-8-8 “வண்டு குறிஞ்சி மருளிசைபாடும்‌” (பெரிய திருமொழி 2-1-2), “வண்டினங்கள்‌ காமரங்களிசைபாடும்‌” (பெருமாள்‌ திருமொழி 8-4), “கந்தாரமந்தேனிசைபாட” (பெரிய திருமொழி 3-8-1), “பண்கொள் தலைக்‌ கொள்ளப்‌ பாடி” (திருவாய்மொழி 3-5-2 என்று காலோசிதமான பண்களிலே பண்கள்‌ தலைமேற்‌ பொரும்படி பாடி, (துன்னிட்டு நெருக்கி நீக்கென்று ) “துன்னிட்டுப்‌ புகலரிய வைகுந்த நீள்வாசல்‌” (பெருமாள்‌ திருமொழி 4-3), “சுந்தரர்‌ நெருக்க விச்சாதரர்‌ நூக்க” (திருப்பள்ளியெழுச்சி 7) என்றபடி திருவாசல்களிலே “நேச நிலைக் கதவம்‌ நீக்கு” திருப்பாவை 16) என்றும் “பொன்னியலுமாடக்‌ கவாடம்‌ கடந்து புக்கு” (பெரியதிருமடல்‌ 73) என்கிறபடியே தகைவறப்‌ புக்கு (வண்டொத்திருண்ட குழலிலே மங்கையற மருவி) “நீ மருவி அஞ்சாதே நின்று” (திருநெடுந்தாண்டகம்‌ 26) என்று பாடுமவர்களாகையாலே ஸங்கையற பகவத்‌ ஸமீப வர்த்தியாய்‌ மருவி (அருளாதயாமென்று ஓடிவந்து வாசமேயூதி) “அருளாத நீரருளி” (திருவாய் 1-4-6) என்றும்‌, யாமிதுவோ தக்கவாறு (திருவாய்மொழி 6-8-4) என்றும்‌, “ஓடிவந்தென்‌ குழல்மேல்‌’ (திருவாய்மொழி 6-8-3) என்றும்‌, துளவின் வாசமே வண்டு கொண்டு வந்தூதுமாகில்‌” (பெரிய திருமொழி 11-1-9) என்றும்‌ இத்தலையிலார்த்தியை அவனுக்கறிவித்து அவனுடைய விஷயிகாரத்தை இத்தலைக்குண்டாக்க இத்தலையில்‌ ஸெளமநஸ்யத்தைத்‌ தாங்களநுபவித்து அத்தலையில்‌ போக்‌யதையாலே இத்தலையை ஆஸ்வஸிப்பித்து (வண்டே கரியான தெய்வ வண்டோடே சேர்விக்கும்‌) “கொங்குண் வண்டே கரியாக (பெரிய திருமொழி 9-3-4) என்று ஸாகாக்ர ஸாராஸார க்‌ராஹியாய்‌ ஷட்பத நிஷ்டராய்‌ பக்ஷத்‌ வயத்தை உடைத்தாகையாலே அப்ரதிஹதக தியான மது கரத்தை முன்னிட்டு ௮ங்‌கீ கரிப்பானுமாய்‌ ‘தூவியம்‌ புள்ளுடைத்‌ தெய்வவண்டு’ (திருவாய்மொழி 9-9-4) என்று வேதாந்தவேத்‌யனாய்‌ “தமீஸ்வராணாம்‌ பரமம்‌ மஹேஸ்வர: என்கிற ஸார க்‌ராஹியாயிருக்கிற ஈஸ்வரனோடே சேர்க்கிற “சேமமுடை நாரதனார்‌’ (பெரியாழ்‌.திரு. 4-9-5) என்று பகவத்‌ குணாநுபவ ஜநித ஹர்ஷத்தாலே ந்ருத்த கீத பரனாயிருக்கிற ஸ்ரீநாரத ப்‌ரஹ்மருஷி, முநிவாஹநரென்கிற திருப்பாணாழ்வார்‌, திருவாய்மொழி பாடுகையே தங்களுக்கு போக்‌யமாயிருக்கிற தம்பிரான்மார்‌ போல்வாரை வண்டு தும்பி என்னும்‌ என்கிறார்‌. இவர்களை ஸ ப்‌ரஹ்மசாரிகளென்கிறது அநுபாவ்ய விஷயத்தில்‌ ஐக்யத்தினாலே

    153-கண்வலைப்படாதே அகவலைப்பட்டு வளர்த்தெடுப்பார்‌ கையிருந்து தயிர்‌ நெய்யமர்‌ பாலமுதுண்டு ஒருமிடறாய்ப்‌ போற்றி ஒரு வண்ணம்‌ திருந்த நுவலாததுக்கு என்பிழைக்கும்‌ நீயலையே நல்வளம்‌ துரப்பனென்னு மவற்றுக்கும்‌ உகந்து சொல்லெடுத்துச்‌ சோர்ந்தவாறே கற்பியா வைத்த மாற்றம்‌ கைகூப்பி வணங்கப்பாடி ஆலியா அழையா பராபிமாநத்திலே ஒதுங்கின நம்பிக்கன்பர்‌ தலைமீதடிப்பொடி உடையவருடையார்‌ போல்வாரைக்‌ கிளி பூவை குயில்‌ மயிலென்னும்‌.

    (கண்வலைப்படாதே அகவலைப்பட்டு) “மாதரார்‌ கயற்கணென்னும்‌ வலையுள்‌ பட்டு” (திருமாலை 16 என்று இதர விஷயங்களினுடைய த்‌ருஷ்டியாகிற வலையிலே அகப்பட்டு அநர்த்தப்படாதே “தாமரைத்‌ தடங்கண்‌ விழிகளின்‌ அகவலைப்‌ படுப்பான்‌” (திருவாய்மொழி 6-2-9) என்றும்‌ “யம்‌ பஸ்யேத்‌’ என்றும்‌ ப்ரேக்ஷ்யே கஞ்சித்‌ கதாசந என்றும்‌ “அமலங்களாக விழிக்கும்‌ திருவாய்மொழி 1-9-8) என்றும்‌ சொல்லுகிறபடியே ஸகல பாப க்ஷபண நிபுணங்களாய்‌ ஸம்ஸார தாபமெல்லாம்‌ ஆறும்படி செவ்வி குளிர்த்தி நாற்றங்களாலே தாமரைப்‌ பூப்போலே யிருக்கிற பகவத் கடாஷமென்கிற வலையிலே அகப்பட்டு (வளர்த்தெடுப்பார்‌ கையிருந்து) “வளர்த்ததனால்‌ பயன்‌ பெற்றேன்‌ ‘திருநெடுந்தாண்டகம்‌ 14) என்றும்‌ ‘ எடுத்தவென்‌ கோலக்‌ கிளி” நாச்சியார்‌ தி மொழி 5-5) என்றும்‌, மங்கைமார்முன்பென்கையிருந்து” (திருவாய்மொழி 6-8-2 )என்றும் உபலாலித்து ரக்ஷிக்கிறவர்களுடைய கை வஸமாய (தயிர்‌ நெய்யமர்‌ பாலமுதுண்டு) “தயிர்ப்பழம்‌ சோற்றொடு பாலடிசிலும்‌ தந்து” (திருவாய்மொழி 9-5-8) என்றும்‌ “நெய்யமரின்னடிசில்‌ நிச்சல்‌ பாலொடும்‌” (திருவாய்மொழி 6-8-2) என்றும்‌, “இன்னடிசிலொடு பாலமுதூட்டி” (நாச்சியார்‌ திருமொழி 5-5) என்றும்‌ சொல்லுகிறபடியே அவர்கள்‌ காலோசிதமாகவும்‌, பாகாநுகுணமாகவும்‌ “உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம்‌” (கீதை 4-34) என்கிறபடியே பகவத்‌ குணங்களை ஆசார்யர்கள்‌ அநுபவிப்பிக்க அநுபவித்து (ஒருமிடறாய்‌) ‘ஆசார்யர்களோடு ஏக கண்டராய்‌, (போற்றி ஒருவண்ணமித்யாதி) போற்றியானிரந்தேன்‌ புன்னைமேலுறை பூங்குயில்காள்‌’ திருவாய்மொழி 6-1-6) என்றும்‌, “ஒருவண்ணம்‌ சென்று புக்கு எனக்கொன்றுரை ஒண்கிளியே” திருவாய்மொழி 6-1-7) என்றும்‌, “திருந்தக்‌ கண்டெனக்கொன்றுரையாய்‌ ஒண்சிறு பூவாய்‌ ்‌ (திருவாய்மொழி 6-1-8) என்றும்‌ ஆதரித்துக் கொண்டு போந்த தஸையோடு, “நோயெனது நுவல்‌ என்ன நுவலாதே இருந்தொழிந்தாய்‌” திருவாய்மொழி 1-4-8) என்றும்‌, என்‌ பிழைக்கும்‌ இளங்கிளியே யான்‌ வளர்த்த நீயலையே” (திருவாய்மொழி 1-4-7) என்றும்‌ இன்னாதான தஸையோடு, “சொல்‌ பயிற்றிய நல்வளமூட்டினீர்‌ பண்புடையீர்‌” திருவாய்மொழி 9- -5-8) என்றும்‌, “நாராயணனை வரக் கூவாயேல்‌ இங்குற்று நின்றும்‌ துரப்பன்‌” (நாச்சியார்‌ திருமொழி 5-10) என்றும்‌ அநாதரித்து தஸையோடு வாசியற வகுத்த விஷயத்தில்‌ நிக்‌ரஹாநுக்‌ரஹங்களிரண்டும்‌ அங்குத்தை விநியோக,ப்ரகாரமாகையாலே இவற்றுக்கும்‌ உகந்து, (சொல்லெடுத்துச்‌ சோர்ந்தவாறே) “சொல்லெடுத்துத்‌ தன்‌ கிளியைச்‌ சொல்லே யென்று துணைமுலைமேல்‌ துளிசோரச்‌ சோர்கின்றாளே’ (திருநெடுந்தாண்டம்‌ 13) என்று திருநாமத்தைச்‌ சொல்ல உபதேஸித்து பல ஹாநியாலே ஒரு சொல்‌ சொல்லும் போது மலை யெடுக்குமா போலேயாய்‌ அதுவும்‌ மாட்டாதே பரவஸகாத்ரை யானவாறே (கற்பியா வைத்த மாற்றங்‌ கைகூப்பி வணங்கப்பாடி) “கன்மின்கள்‌ என்று உம்மை யான்‌ கற்பியா வைத்த மாற்றம்‌” (திருவாய்மொழி 6-8-8) என்று ஆசார்யருசி பரிக்‌ருஹீதமான திருநாமங்களை, “திருமாலைப்‌ பாடக்‌ கேட்டு வளர்த்ததனால்‌ பயன்‌ பெற்றேன்‌ வருக வென்று மடக்கிளியைக்‌ கைகூப்பி வணங்கினாளே” (திருநெடுந்தாண்டகம்‌ 14 என்று அவ்வாசார்யர்‌ தாமே அநுஸந்திக்கும்படி ப்ரீதி ப்ரேரிதராய்ப்‌ பாடி. (ஆலியாவழையா) “குயில்‌ நின்றால்‌” (கண்ணிநுண்சிறுத்தாம்பு 10) என்றும்‌ “ஆலியாவழையாவரங்கா” (பெருமாள்‌ திருமொழி 3-2 என்றும்‌ சொல்லுகிறபடியே அவ்வநுபவத்தாலே வந்த ஹர்ஷத்தை உடையராய்‌, (பராபிமானத்திலே ஒதுங்கி) “தேவு மற்றறியேன்‌” (கண்ணிநுண்‌- 2) என்று ஆசார்யாபிமானத்திலே ஒதுங்கின (நம்பிக்கன்பர்‌) “தென்குருகூர்‌ நம்பிக்கன்பரான (கண்ணிநுண்‌- 11 ஸ்ரீமதுரகவிகள்‌. (தலைமீதடிப்பொடி) “நாவலிட்டுழிதருகின்றோம்‌ நமன்றமர்‌ தலைகள்‌ மீதே” (திருமாலை 1 என்று திருநாமத்தை அண்டை கொண்ட பலத்தாலே யமாதிகள்‌ தலையிலே அடியிடும்படியான செருக்கை உடையராய்‌, “அடியார்க்கென்னை ஆட்படுத்தாய்‌’” (அமலனாதிபிரான்‌ 1 என்கிற ஸ்ரீதொண்டரடிப்பொடிகள்‌. (உடையவருடையார்‌ போல்வாரை) இராமானுசனுடையார்‌ என்று சொல்லப்படுகிற ஆழ்வான்‌ ஆண்டான்‌ எம்பார்‌ அருளாளப்‌ பெருமாள் எம்பெருமானார்‌ போல்வாரான ஆச்சார்ய பரதந்த்ரராய் இருப்பாரை குயில்‌ மயில்‌ என்னும்‌)

    154-ஆசறு தூவி என்னும் பாஹ்யாப் யந்தர ஸூத்தியோடே திரையுகளும் வ்யஸந வ்யதை யற்றுத்‌ தாய் வாயிலுண்ணும்‌ பிள்ளைக்‌கிரை தேடி வைகலுடன்‌ மேய்ந்து நுங்கால்‌ பைங்கானமென்று ப்‌ரஹ்மரதம் பண்ணிக் கொடுத்தவைகொண்டு நல்லபதத்தையும்‌ வேண்டேனென்னும்‌ தனிப்பெரும்‌பித்தர்‌ நம்முதலிகள்‌ போல்வாரை நாரை கொக்கு குருகு என்னும்

    (ஆசறுதூவி என்னும் பாஹ்யாப்யந்தர ஸூத்தியோடே) “ஆசறுதூவி வெள்ளைக்‌ குருகே” (திருவாய்மொழி 6-8-8) என்று ஆசறுகை அந்த:கரண ஸூத்‌தியாய்‌, “வெள்ளைக்‌ குருகே” (திருவாய்மொழி 6-8-8) என்று பாஹ்ய ஸூத்‌தியாய்‌, “(அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம்‌ கதோபி வா ய ஸ்மரேத்‌ புண்டரீகாக்ஷம்‌ ஸ பாஹ்யாப்‌யந்தரஸ் ஸூசி: என்கிற பாஹ்யாந்தர ஸூத்‌தியை உடையராய்‌, (திரையுகளும்‌ வ்யஸந வ்யதையற்று) வாயும்‌ திரையுகளும்‌” (திருவாய்மொழி 2-1-1 )என்று “கிரயோ வர்ஷ தாராபி,: ஹந்யமாநா ந விவ்யது: அபி பூயமாநா வ்யஸநைர்‌ யதா தோ கஜ சேதஸ:” (ஸ்ரீபாகவதம்‌ 10-2015) என்று பகவத்‌ விஷயத்திலே நெஞ்சு ஊன்றுகையாலே ஸம்ஸார துஃக்கோர்மிகளானவை அஹமஹமிகயா மேலிடா நின்றாலும்‌, சலியாதே. (தாய்‌ வாயிலுண்ணும்‌ பிள்ளைக்கிரைதேடி) “தாய்வாயில்‌ கொக்கின்‌ பிள்ளை வெள்ளிறவுண்ணும்‌” (பெரியதிருமொழி 9-6-1 என்றும்‌, “புள்ளுப்பிள்ளைக்கிரை தேடும்‌” (பெரியதிருமொழி 5-1-2) என்றும்‌, கொக்கானது தன்‌ பிள்ளைக்கநுகுணமாக இரைதேடி யிடுமாபோலே முறைகெடாமல்‌ அநுபவிக்க விருக்கிற ஸிஷ்யர்களுடைய ப்ரக்ருதிக்கநுகுணமான பகவத்‌ விஷயத்தை ஸகல ஸாஸ்த்ரங்களிலும்‌ ஆராய்ந்து அருளிச்செய்து. (வைகலுடன்‌ மேய்ந்து) _வைகல்பூங்கழிவாய்‌ வந்து மேயும்‌ குருகினங்காள்‌’ (திருவாய்மொழி 6-1-1 என்றும்‌ காதல்‌ மென்பெடையோடு உடன்மேயும்‌ கருநாராய்‌” (திருவாய்மொழி 6-1-2 என்றும்‌ சொல்லுகிறபடியே ஸர்வகாலமும்‌ அநுகூலரான ஸிஷ்ய புத்ர்களோடே பகவத்‌ குணங்களை அநுபவித்து (நுங்கால்கள்‌ பைங்கானம்‌ என்று ப்‌ரஹ்ம ரதம் பண்ணிக்‌ கொடுத்தவை கொண்டு) “நுங்கால்கள்‌ என்‌ தலைமேல்‌ ‘கெழுமீரோ நுமரோடே” திருவாய்மொழி 9-7-1) என்றும்‌, “பைங்கானம்‌ ஈதெல்லாம்‌ உனதே யாகப்‌ பழன மீன் கவர்ந்துண்ணத்‌ தருவன்‌ (‘திருநெடுந்தாண்டகம்‌ 27 )என்றும்‌ இவர்கள்‌ பக்கல்‌ உப ஜீவித்த ஸிஷ்யர்கள்
    உபகார ஸ்ம்ருதியால் ப்ரஹ்ம ரதம் பண்ணி –ஸாரீரமர்த்தம்‌ ப்ராணஞ்ச ஸத் குருப்யோ நிவேதயத் (விஹகேச்வரஸம்ஹிதை) என்று ஆத்மாத்மீயங்களை முகமலர்த்தியோடே கொடுக்கக்‌ கைக்கொண்டு நல்ல பதத்தையும்‌ வேண்டேன்‌ என்னும்‌ தனிப்பெரும்‌ பித்தர்‌ (நல்ல பதத்தால் மனை வாழ்வர்‌” (திருவாய்மொழி 8-10-11) என்று பாகவத கைங்கர்யத்துக்‌கு உறுப்பான -கார்ஹஸ்த்யத்தையும்‌ ஸம்ஸார வெக்காயத்தாலுண்டான அச்சத்தாலே இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன் (பெருமாள் -4-5) என்று உபேக்ஷிக்குமவருமாய்‌, “அங்கை யாழி அரங்கன்‌ அடியிணைத்‌ தனிப் பெரும்‌ பித்தன்‌” (பெருமாள்மொழி 4-5) என்று சொல்லப்படுகிற ஸ்ரீகுலஸேகரப் பெருமாள்‌(நம்‌ முதலிகள்‌ போல்வாரை) நம்‌ முதலிகள்‌ என்கிறது பட்டர்‌, நஞ்சீயர்‌, நம்பிள்ளை, திருத்தமப்பனார்‌ பிள்ளை, பெரியவாச்சான்பிள்ளை, திருத்தமையனார் பிள்ளை இவர்கள் போல்வாரை நாரை கொக்கு குருகென்னும்‌-என்கிறார் –

    155- பூண்ட நாள் சீர்க்கடலை யுட் கொண்டு திருமேனி நன்நிறம் ஒத்து உயிரளிப்பான்‌ தீர்த்தகரராய்‌ எங்கும்‌ திரிந்து, ஜ்ஞாந ஹ்ரதத்தைப்‌ பூரித்துத்‌ தீங்கின்றி வாழ நிதி சொரிந்து, கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து, வெளுத்தொளித்துக்‌ கண்டுகந்து , பரஸம்ருத்‌தியே பேறான அன்புகூரும்‌ அடியவர்‌, உறையிலிடாதவர்‌, புயற்கை அருள்மாரி, குணந்திகழ்‌ கொண்டல்‌ போல்வாரை மேகமென்னும்‌.

    (பூண்டநாள்‌ சீர்க்கடலை உட்கொண்டு) “மற்பொன்ற நீண்டதோள்‌ மால்‌ கிடந்த நீள்கடல்‌ நீராடுவான்‌ பூண்டநாளெல்லாம்‌ புகும்‌” (முதல்‌ திருவந்தாதி 69) என்றும்‌, “சீர்க்கடலை யுள்பொதிந்த சிந்தனையேன்‌” (பெரியதிருவந்தாதி 69) என்றும்‌ பகவத்‌ விஷயத்திலே அவகாஹித்தவன்று தொடங்கி, கல்யாண குண ஸாகரத்தைப்‌ பருகி (திருமேனி நன்னிறமொத்து) “மேகங்களோ உரையீர்திருமால்‌ திருமேனியொக்கும்‌ யோகங்கள்‌” (திருவிருத்தம்‌ 32 )என்றும்‌, “என்னுடைய கண்ணன் பால்‌ நன்னிறங்கொள்‌ கார்‌” (பெரிய திருவந்தாதி 85) என்றும்‌ சொல்லுகிற படியே ஸ்வரூப குணத்தாலும்‌ ரூப குணத்தாலும்‌ அவனோடு ஸாம்யாபத்தியை உடையராய்‌, (உயிரளிப்பான்‌ தீர்த்தகரராய்‌) “உயிரளிப்பான்‌ மாகங்கள்‌ எல்லாம்‌ திரிந்து” (திருவிருத்தம்‌ 32) என்றும்‌ “தீர்த்தகரராமின்‌ திரிந்து” (இரண்டாம்‌ திருவந்தாதி 14) என்றும்‌ “தீதில்‌ நன்னெறிகாட்டி எங்கும்‌ திரிந்து” (பெருமாள்‌ திருமொழி 2-6 என்றும்‌ சொல்லுகிறபடியே லோக ரக்ஷணார்த்தமாக எங்கும்‌ ஸஞ்சரித்து, பகவத்‌ குணங்களை வர்ஷித்து, எல்லாரையும்‌ பரிஸூத்‌தராக்கி, (ஜ்ஞாந ஹ்ரதத்தைப்‌ பூரித்து) “ஜ்ஞாந ஹ்ரதே, த்‌யாந ஜலே ராக த்‌வேஷமலாபஹே, ய: ஸ்நாதி மாநஸே தீர்த்தே, ஸ யாதி பரமாம்‌ கதிம்‌” என்கிறபடியே ஜ்ஞாநமாகிற தடாகத்தை பகவத்‌ கு,ணங்களாலே பூரித்து (தீங்கின்றி வாழ நிதி சொரிந்து) தீங்கின்றி நாடெல்லாம்‌ திங்கள்‌ மும்மாரி பெய்து” (திருப்பாவை 3) என்றும்‌, வாழ உலகினில்‌ பெய்திடாய்‌” (திருப்பாவை 4) என்றும்‌, “மாமுத்த நிதி சொரியும்‌” (நாச்சியார்‌ திருமொழி 8-2) என்றும்‌ அநர்த்த கந்த மின்றியே எல்லாரும்‌ உஜ்ஜீவிக்கும்படி பகவத்‌ கு,ணங்களை வர்ஷித்து, (கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து வெளுத்தொளித்துக்‌ கண்டுகந்து பர ஸம்ருத்‌தியே பேறான) ஒளதார்யாதிஸயத்தாலே பிறருக்குபகரித்து அத்தை நினையாதே ‘மேலும்‌ உபகரிக்கப்‌ பெற்றிலோம்‌ என்று இழவாளராய்‌ எதிர்த்தலையில்‌ ஸம்ருத்‌தி யைக்‌ கண்டுகந்த அதுலே தங்களுக்குப்‌ பேறாக நிலைத்திருக்க (அன்புகூரும்‌ அடியவர்‌)ஆங்கரும்பிக்‌ கண்ணீர் சோர்ந்து அன்பு கூரும்‌” (பெரிய திருமொழி 2-10-4) அடியவர்களான முதலாழ்வார்கள்‌ (உறையிலிடாதவர்‌) உருவின வாள்‌ உறையிலிடாதே ஆதி,மத்‌யாவஸாநம்‌ தேவதாந்தரங்களினுடைய அவரத்வ ப்ரதிபாதந பூர்வமாக பகவத் பரத்வத்தை உபபாதிக்கிற திருமழிசைப்பிரான்‌ (புயற்கை அருள்மாரி) “காரார்‌ புயற்கைக்‌ கலிகன்றி” (பெரிய திருமொழி 3-2-10) என்றும்‌, “அருள்மாரி” (பெரிய திருமொழி 3-4-10) என்றும்‌ ஒளதார்யத்திலே மேக ஸத்‌ருஸராய்க்‌ கொண்டு க்ருபையை வர்ஷிக்கிற திருமங்கையாழ்வார்‌ “குணந்திகழ்‌ கொண்டல்‌” (இராமானுச நூற்றந்தாதி 60 )ஆன உடையவர்‌ போல்வாரை மேகம்‌ என்னும்‌ என்கிறார்‌. (இவர்தாம்‌ தூது விடுகையாவது ப்ராப்யருசியால்‌ வந்த விளம்பாக்ஷமத்வத்தாலே ஆசார்ய த்‌வாரா உபாயோபேய ப்ரார்த்தநை பண்ணுகை. “கைகள்‌ கூப்பிச்‌ சொல்லீர்‌” (திருவாய்மொழி 6-1-1, “பாதம்‌ கைதொழுது பணியீர்‌ (திருவாய்மொழி 6-1-2), “இரங்கி நீர்‌ தொழுது பணியீர்‌ (திருவாய்மொழி 6-1-3) என்றும்‌, “திருவடிக்கீழ்‌ குற்றேவல்‌” (திருவாய்மொழி 1-4-2 “வாடாத மலரடிக்கீழ்‌ வைக்கவே வகுக்கின்று” (திருவாய்மொழி 1-4-9) என்றும்‌ சொல்லக் கடவது இறே –

    156-தம்பிழையும்‌ சிறந்த செல்வமும்‌ படைத்த பரப்பும்‌ தமரோட்டை வாஸமும்‌ மறப்பித்த க்ஷமா தீக்ஷா ஸாரஸ்ய ஸெளந்தர்யங்களை உணர்த்தும்‌ வ்யூஹ விபவ பரத்வ த்‌வய அர்ச்சைகள்‌ தூது நாலுக்கும்‌ விஷயம்‌.

    இனிமேல்‌ இவர்‌ இப்படித்‌ தூது விடும்படி முகம்‌ காட்டாதிருக்கைக்கு ஹேதுக்களையும்‌ தூது விடுகைக்குப்‌ பற்றாசையும்‌ அது தனக்கு விஷயத்தையும்‌ அருளிச்செய்கிறார்‌ தம்பிழை என்று தொடங்கி. தம்பிழை யானது மறப்பித்த க்ஷ்மையை உணர்த்தும்‌ ப்ரதம தூதுக்கு விஷயம்‌ வ்யூஹம்‌ என்கிறது ப்ரதம தூதான அஞ்சிறைய மடநாரையிலே (திருவாய்மொழி 1-4). “என்பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு” (திருவாய்மொழி 1-4-7) என்று வ்யாமோஹாதிஸயத்தாலே மேல் விழுந்து விஷயீகரித்தான்‌; ஸர்வஜ்ஞனாகையாலே தோஷ தர்ஸனம்‌ பண்ணினான்‌; பிரிந்தவாறே இதுவோ இதினளவென்று பிரிந்திருந்தானத்தனை. எங்களபராதத்தைக்‌ கண்டு கைவிடுமளவன்று. “என்‌ பிழைத்தாள்‌ திருவடியின்‌ தகவினுக்கு என்று ஒரு வாய்‌ சொல்‌” (திருவாய்மொழி 1-4-7) என்று அவர்க்கு அபராத, ஸஹத்வ மென்பதொரு குணமுண்டு அத்தை யறிவிக்கவே வரும்‌ என்று அபராத, ஸஹத்வம்‌ பற்றாசாக, “கடலாழி நீர்தோற்றி அதனுள்ளே கண்வளரும்‌ அடலாழி யம்மானைக்‌ கண்டக்கால்‌ இதுசொல்லி விடல்‌” (திருவாய்மொழி 1-4-10) என்று இல்லாத வஸ்துவை உண்டாக்குகைக்காக ஏகார்ணவத்திலே கண் வளர்ந்தருளுகிறவனுக்கு உண்டாக்கின வஸ்துவுக்கு ஒரு குண தாநம் பண்ணலாகாதோ -என்று சொல்லென்று வ்யூஹத்திலே தூது விடுகிறார் –
    சிறந்த செல்வமானது மறப்பித்த தீஷையை யுணர்த்தும் இரண்டாவது தூதுக்கு விபவம் விஷயம் விடுகிற விஷயம்‌ என்கிறது வைகல்‌ பூங்கழிவாயில்‌ (திருவாய்மொழி 6-1. “சிறந்‌த செல்வம்மல்கு திருவண்வண்டுருறையும்‌” (திருவாய்மொழி-6-1-3- என்றும் ஆர்த்த ரக்ஷணம்‌ பண்ணி வாரா நிற்கச்‌ செய்தே திருவண்வண்டூரிலே போக்‌யதையிலே கால் தாழ்ந்து நம்மை மறந்திருத்தான் இத்தனை
    மாறில் போரரக்கன்‌ மதிள்நீறெழச்‌ செற்றுகந்த ஏறு சேவகனார்க்கு என்னையும்‌ உளள்‌’ (திருவாய்மொழி 6-1-10), “ஏதத்‌ வ்ரதம்‌ மம” (ரா.யு. 18-33 என்று ஆர்த்த ரக்ஷணத்திலே தீக்ஷித்திருப்பானாய்‌ ஆர்த்த ரஷணமொரு தரையானால்‌ அஸ்தமிதாந்யபாவம்‌ என்றிருப்பானொருவன்‌ ஆகையாலே நம்முடைய ஆர்த்தியை அறிவிக்கவே வரும் என்று ஆர்த்த ரக்ஷணம் பற்றாசாக -அரக்கன் மதிள் நீறெழச் செற்றுகந்த ஏறு சேவகனார் (திருவாய்மொழி 6-1-10) என்று பிராட்டி நிமித்தமாக ராவணனுக்கு வாஸ பூமியான லங்கையை பஸ்மஸாத்தாக்கின ஏகவீரனான சக்ரவர்த்தி திருமகனுக்குச்‌ சொல்லுங்கோளென்று விபவத்திலே தூது விடுகிறார் –
    படைத்த பரப்பானது மறப்பித்த ஸாரஸ்யத்தை உணர்த்தும்‌ மூன்றாம்‌ தூதுக்கு பரத்வ த்‌வயம்‌ விஷயம்‌ என்கிறது பொன்னுலகாளீரில்‌ (திருவாய்மொழி 6-8). “முன்னுலகங்க ளெல்லாம்‌ படைத்த முகில் வண்ணன்‌ கண்ணன்‌ என்‌ நலங் கொண்ட பிரான்‌ (திருவாய்மொழி 6-8-1 )என்று விபூதி ரக்ஷணத்திலே பராக்கை உடையவனாகையாலே நம்மை மறந்திருந்தான்‌ அத்தனை; “தன்‌ மன்னு நீள்கழல்மேல்‌ தண்டுழாய்‌ நமக்கன்றி நல்கான்‌” திருவாய்மொழி 6-8-6) என்று ஆஸ்ரிதரோடு ஏக ரஸனாயிருக்கிற ஆகாரத்தை அறிவிக்கவே வரும்‌ என்று ஐகரஸ்யம்‌ பற்றாசாக, ‘ வானவர் கோனைக்‌ கண்டு யாமிதுவோ தக்கவாறு” (திருவாய்மொழி 6-8-4) என்று பரத்வத்திலும்‌, “எங்குச்‌ சென்றாலும்‌ கண்டு” (திருவாய்மொழி 6-8-5) என்றும்‌ “யாவையுமாய்‌ யாவருமாய்‌ நின்ற மாயன்‌” (திருவாய்மொழி 6-8-7) என்றும் சொல்லுகிறபடியே அத்‌விதீயமுமாய்‌ நித்யமுமாயிருக்கையாலே பரத்வ ஸத்‌ ருஸமான அந்தர்யாமித்வத்திலும்‌ தூது விடுகிறார்‌. தமரோட்டை வாஸம்‌ மறப்பித்த ஸெளந்தர்யத்தையுணர்த்தும்‌ நாலாம்‌ தூதுக்கு அர்ச்சாவதாரம்‌ விஷயமென்கிறது எங்கானலில்‌ (திருவாய்மொழி 9-7). “தமரோடங்குறைவார்க்கு” (திருவாய்மொழி 9-7-2) என்று தம்மையுகந்த பாகவதரோட்டைச்‌ சேர்த்தியில்‌ இனிமையாலே நம்மை மறந்திருந்தானத்தனை. “பூந்துழாய்‌ முடியார்க்கு” என்று தொடங்கி “தாம்‌ தம்மைக்‌ கொண்டகல்தல்‌ தகவன்று” (திருவாய்மொழி 9-7-9) என்று தம்முடைய ஸெளந்தர்யத்தை அநுபவித்துப்‌ பிரிந்தார்‌ தரிக்க வல்லார்களோ என்று ஸெளந்தர்யத்தை உணர்த்தவே வரும்‌ என்று ஸெளந்த,ர்யம்‌ பற்றாசாக, திருமூழிக்களத்தாருக்கு என்று அர்ச்சாவதாரத்திலே தூது விடுகிறார் –

    157-பகலோலக்கமிருந்து , கறுப்புடுத்துச்‌ சோதித்து, காரியம்‌ மந்த்ரித்து, வேட்டையாடி, ஆராமங்களிலே விளையாடும்‌ ராஜநீதி ஆதும்‌ சோராமல்‌ செங்கோல்‌ நடாவுகிற பாரளந்த வென்னும்‌ மூன்று முடிக்குரிய இளவரசுக்கு விண்மீதென்கிற ஐந்திலும்‌ காணலாம்‌.

    இப்படிப்‌ பரத்வாதிகளிலே தூது விட்டால்‌ இவற்றுக்கு விஷய பேதமுண்டோ என்னில்‌, பகலிருக்கை தொடக்கமான ராஜ நீதி போலே ஸ்தல பேதமொழிய வஸ்த்வைக்யத்தினாலே விஷய பேதமில்லை என்கிறார்‌ பகலோலக்கம்‌ என்று தொடங்கி. (பகலோலக்கமிருந்து) ஒரு ராஜாவானால்‌ மந்த்ரிகள்‌ முதலான ஸர்வரும்‌ ஸேவிக்க ஓலக்கமிருந்து, (கருப்புடுத்துச்‌ சோதித்து) நாட்டிலுள்ள குற்றங்குறைகளாராய்கைக்குப்‌ பிறரறியாதபடி கருப்புடுத்து நகரி ஸோதநை வந்து அந்த நாட்டில்‌ ஸிஷை ரக்ஷைகளுக்காக வ்ருத்‌த, மந்த்ரிகளும்‌ தானுமாய்‌ கார்ய விசாரங்களைப்‌ பண்ணியும்‌, துஷ்ட ஸத்வ நிரஸநார்த்தமாக வேட்டையாடியும்‌, அந்த ஸ்ரமம்‌ தீரப்‌ பூந் தோப்புக்களிலே விளையாடக்‌ கடவதான ராஜநீதி (ஆதும்‌ சோராமல்‌ செங்கோல்‌ நடாவுகிற பாரளந்த வென்னும்‌ மூன்று முடிக்குரிய இளவரசுக்கு) “பொங்கோதம்‌ சூழ்ந்த புவனியும்‌ விண்ணுலகும்‌ அங்காதும்‌ சோராமே ஆள்கின்ற எம்பெருமான்‌ செங்கோலுடைய திருவரங்கச்‌ செல்வனார்‌ (நாச்சியார்‌ திருமொழி 11-3 என்றும்‌, “இருளார்‌ வினைகெடச்‌ செங்கோல்‌ நடாவுதிர்‌” (திருவிருத்தம்‌ 33) என்றும்‌ உபய விபூதியிலும்‌ ஏகதேஸமும்‌ ஸேஷியாதபடி தன்னுடைய திவ்யாஜ்ஞையை நடத்துமவனாய்‌, “பாரளந்த பேரரசே எம்விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே (திருவிருத்தம்‌ 80) என்று ஸெளலப்‌யம்‌ பரத்வம்‌ ப்ரணயித்வம்‌ என்றும்‌ சொல்லப்படுகிற மூன்று முடிக்குரிய வானிளவரசுக்கு (விண்மீதென்ற ஐந்திலும்‌ காணலாம்‌) “விண்‌ மீதிருப்பாய்‌” (திருவாய்மொழி 6-9-5) “பகல் கண்டேன்‌ நாரணனைக்‌ கண்டேன்‌” (இரண்டாம்‌ திருவந்தாதி- 81 )என்றும்‌ “வைகுண்டே து பரே லோகே ஸ்ரியாஸார்த்தம்‌ ஜகத்பதி: ஆஸ்தே விஷ்ணுர் அசிந்த்யாத்மா பக்தைர்‌ பாகவதைஸ்‌ ஸஹ” என்றும்‌ ஒரு பகலான பரம பதத்திலே பிராட்டிமாரும்‌ தானும்‌ நித்ய முக்தர்‌ ஸேவிக்க ஓலக்கமிருந்தும்‌, “இவற்றுளெங்கும்‌ மறைந்துறைவாய்‌‘ (திருவாய்மொழி 6-9-5) என்றும்‌ “யமாத்மா ந வேத என்றும்‌ சொல்லுகிறபடியே வ்யாப்ய பதார்த்தங்களுக்குத்‌ தெரியாதபடி அந்தர்யாமியாய்‌ நின்று ஆராய்ந்தும்‌, “கடல்‌ சேர்ப்பாய்‌” (திருவாய்மொழி 6-9-5) என்றும்‌, “பாற்கடல்‌ யோக நித்திரை சிந்தை செய்த வெந்தாய்‌” (திருவாய்மொழி 2-6-5) என்றும்‌ சேதநருடைய ரக்ஷணோபாயங்களை மந்த்ரித்தும்‌ அநந்தரம்‌ சேதந ரக்ஷணார்த்தமாக மண்மீதுழல்வாய்‌” (திருவாய்மொழி 6-9-5) என்றும்‌ “களிறும்‌ புள்ளும்‌ உடன் மடிய வேட்டையாடி வருவான்‌” நாச்சியார்‌ திருமொழி 14-9) என்றும்‌ ராம க்ருஷ்ணாதி ரூபேண அவதரித்து ஆஸ்ரித விரோதிகளான ராவண கும்ப கர்ணாதி துஷ்ட ஸத்வ நிரஸநமாகிற வேட்டையாடியும்‌, “மலை மேல்‌ நிற்பாய்‌” (திருவாய்மொழி 6-9-5) என்றும்‌ “ஆராமம்‌ சூழ்ந்த” (சிறியதிருமடல்‌ 71 என்றும்‌ அந்த விரோதி நிரஸநத்தாலுண்டான ஸ்ரமம்‌ ஆறும்படி கோயில்‌ திருமலை முதலான தேஸங்களிலே நிற்கையாலும்‌ காணலாம்‌. ஆக இத்தால்‌ பரத்வாதிகளுக்கு ஸ்தல பேதமொழிய விஷய பேதமில்லை என்கிறார் –

    158-தமருகந்த அடியோமுக்கே யென்னும்‌ பின்னானார்‌ வணங்குமிடத்திலே எல்லாம்‌ பூர்ணம்‌.
    இந்த பரத்வாதி களிலுண்டான குணங்களெல்லாம்‌ அர்ச்சாவதாரத்திலே ப்ரகாஸிக்குமென்கிறார்‌ இனிமேல்‌. (தமருகந்த அடியோமுக்கே என்னும்‌ பின்னானார்‌ வணங்குமிடத்திலே எல்லாம்‌ பூர்ணம்‌) “தமருகந்தது எவ்வுருவம்‌ அவ்வுருவம்‌ தானே தமருகந்தது எப்பேர்‌ மற்றப்பேர்‌’ (முதல்‌ திருவந்தாதி 44) என்று ஆஸ்ரிதருகந்த திரவயங்களே திருமேனியாகவும்‌ அவர்கள்‌ உகந்த திருநாமங்களைத்‌ தனக்குத்‌ திருநாமமாகவும்‌ கொண்டு, “அடியோமுக்கே எம்பெருமான்‌ அல்லீரோ நீர்‌ இந்தளூரீரே’ (பெரிய திருமொழி 4-9-5) என்றும்‌, “பின்னானார்‌ வணங்கும்‌ சோதி திருமூழிக்களத்தானாய்‌” (திருநெடுந்தாண்டகம்‌ 10) என்றும்‌ ஆஸ்ரிதாதீந ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகளை உடையனாய்‌, அவதாரங்களுக்குப்‌ பிற்பாடராகையாலே அநுபவிக்கப்‌ பெறாத வாஸ்ரிதர்‌ இழவாதபடி தன்னை அநுபவிப்பித்துக்‌ கொடு நிற்கிற அர்ச்சாவதாரத்திலே பரத்வாதிகளில்‌ அநுபாவ்யமான குணங்களெல்லாம்‌ ‘ஸர்வம்‌ பூர்ணம்‌ ஸஹோம்‌’ என்கையாலே பரிபூர்ணமென்கிறார் –

    159-வன்பெரு வானக முதலுய்ய இனிதாகத்‌ திருக் கண்கள்‌ வளர்கின்ற திருவாளன்‌ திருப்பதி, வடிவுடை, கடலிடம்‌, கட்கிலீ என்னுமவற்றில்‌ இவள்‌ திறத்தென் கொலோ வென்பிக்கிற வ்யூஹ ஸெளஹார்த்த ப்ரதாநம்‌.
    அதில்‌ எல்லா ஸ்தலங்களிலும்‌ எல்லா குணங்களும்‌ பரிபூர்ணமே யாகிலும்‌
    கோயில்‌ முதலான திவ்ய தேசங்களிலே பரத்வாதிகளுக்கு அஸாதாரணமான ஓரோ குணங்கள்‌ ப்ராதாந்யேந ப்ரகாஸிக்குமென்கிறார்‌ ‘வன்பெரு வானகமுதலுய்ய’ என்று தொடங்கி, “வன்பெரு வானகமுய்ய அமரருய்ய மண்ணுய்ய மண்ணுலகில்‌ மனிசருய்ய” (பெருமாள்‌ திருமொழி 1-10) என்று உபய விபூதியும்‌ உஜ்ஜீவிக்கும்படி “திருவாளன்‌ இனிதாகத்‌ திருக்கண்கள்‌ வளர்கின்ற திருவரங்கம்‌” (பெரியாழ்வார்‌ திருமொழி 4-9-10) என்றும்‌ “தென்னாடும்‌ வடநாடும்‌ தொழ நின்ற திருவரங்கம்‌ திருப்பதி” (பெரியாழ்வார்‌ திருமொழி 4-9-11) என்றும்‌ சொல்லுகிற ஸ்ரீய:பதியான ஸர்வேஸ்வரன்‌ திருவுள்ளமுகந்து கண் வளர்ந்தருகிற பெரிய திருப்பதியான கோயிலிலே, (வடிவுடைக்‌ கடலிடங்‌ கட்கிலீயென்னுமவற்றில்‌) “வடிவுடை வானோர்‌ தலைவனே” (திருவாய்மொழி 7-2-10) என்றும்‌, “கடலிடங்கொண்ட கடல் வண்ணா” (திருவாய்மொழி 7-2-7 என்றும்‌, “கட்கலி உன்னைக்‌ காணுமாறருளாய்‌” (திருவாய்மொழி 7-2-3) என்றும்‌ “காகுத்தா கண்ணனே” (திருவாய்மொழி 7-2-3) என்றும்‌ “திருவரங்கத்தாய்‌” (திருவாய்மொழி 7-2-4) என்றும்‌ பரத்வாதிகள்‌ ஐந்தும்‌ ப்ரகாஸித்ததேயாகிலும்‌ (இவள்‌ திறத்தென்‌ கொலோ என்பிக்கிற) “இவள் திறத்தென்செய்கின்றாய்‌” (திருவாய்மொழி 7-2-1 “இவள் திறத்து என்‌ சிந்தித்தாய்‌’ (திருவாய்மொழி 7-2-4) “என்கொலோ முடிகின்றதிவட்கு” (திருவாய்மொழி 7-2-2) என்று ‘இவள்‌ திறத்து தேவர்‌ செய்தருள நினைத்ததேது? இவள்‌ கார்யமென்னாய்‌ முடியக் கடவது என்று கேட்கையாலே “பாற் கடல்‌ யோக நித்திரை சிந்தை செய்த” (திருவாய்மொழி 2-6-5) என்று ஸர்வருடையவும்‌ ரக்ஷணோபாய சிந்தை பண்ணுகிற வ்யூஹத்தில்‌ ப்ரகாஸிக்கிற ஸெளஹார்த, குணம்‌ ப்ராதாந்யேந ப்ரகாஸிக்குமென்கிறார் –

    160-மண்ணோர் விண்ணோர் வைப்பில்‌ போகின்ற ஏழுலகுக்குயிர் பாசம்‌ வைத்த நிகரில்‌ வாத்ஸல்யம்‌ உஜ்ஜ்வலம்‌.
    (மண்ணோர்‌ விண்ணோர்‌ வைப்பில்‌) “கண்ணாவான்‌ என்றும்‌ மண்ணோர்‌
    விண்ணோர்க்கு”
    (திருவாய்மொழி 1-8-3) என்றும்‌, “தண்ணருவி வேங்கடமே வானோர்க்கும்‌ மண்ணோர்க்கும்‌ வைப்பு” (நான்முகன்‌ திருவந்தாதி 45) என்றும்‌ உபய விபூதி யிலுள்ளார்க்கும்‌ ஆபத்‌ தநமாய்‌ நிற்கிற திருமலையில்‌ நிலையிலே (போகின்றவேழுலகுக்குயிர்‌) “போகின்ற காலங்கள்‌ போய காலங்கள்‌ போகு காலங்கள்‌ தாய்தந்தை உயிராகின்றாய்‌” (திருவாய்மொழி 2-6-10 என்றும்‌, “கண்ணாயேழுலகுக்கு உயிராய எங்கார் வண்ணனை‘ (பெரிய திருமொழி 1-9-10) என்றும்‌ சொல்லுகிறபடியே ஸகல காலமும்‌ ஸர்வாத்மாக்களுக்கும்‌ ஸர்வவித பந்துவுமாய்க்‌ கொண்டு ஸர்வர்க்கும்‌ ஆத்ம பூதனாயிருக்கிற அந்தர்யாமித்வத்தில்‌ ப்ரகாஸிப்பதாய்‌ (பாசம்‌ வைத்த நிகரில்‌ வாத்ஸல்யம்‌ உஜ்ஜ்வலம்‌) ‘ என் கண்‌ பாசம்‌ வைத்த” (திருவாய்மொழி 3-3-4) “நிகரில்‌ புகழாய்‌” (திருவாய்மொழி 6-10-10) என்று அத்யந்தம்‌ தண்ணியனாயிருக்கிற என் பக்கலிலே ஸங்கத்தைப்‌ பண்ணினான்‌ என்னும்‌ ஒப்பிலாத புகழை உடையவனே என்று சொல்லுகிற வாத்ஸல்யம்‌ “வேங்கடத்தெழில்‌ கொள்‌ சோதி” (திருவாய்மொழி 3-3-2 என்றும்‌ “நிலவும்‌ சுடர்‌ சூழொளிமூர்த்தி” (திருவாய்மொழி 6-10-7) என்றும்‌ “”பரஞ்சுடர்ச்சோதி” (திருவாய்மொழி 3-3-4) என்றும்‌ சொல்லுகிறபடியே உஜ்ஜ்வலமாய்க்‌ கொண்டு பிரகாஸிக்கும் என்கிறார் –

    161-உபய ப்ரதாந ப்ரணவமான உறை கோயிலில்‌ எத்தேவு மென்னும்‌ பரே ஸத்வம்‌ பொலியும்‌.
    (உபய ப்ரதாந ப்ரணவமான உறை கோயிலில்‌) “ப்‌ரஹ்மணேத்வா மஹஸ ஓமித்யாத்மாநம்‌ யுஞ்ஜீத” என்றும்‌ “ஒங்காரோ பகவாந்‌ விஷ்ணு: என்றும்‌ சொல்லுகிறபடியே ப்ரணவம்‌ ஜீவேஸ்வரர்களிருவர்க்கும்‌ வாசகமாய்க்‌ கொண்டு உபயருடையவும்‌ ப்ராதாநீயம்‌ தோற்ற விருக்கிறாப் போலே பொலிந்து நின்ற பிரானுடையவும்‌ ஆழ்வாருடையவும்‌ திவ்யாஜ்ஞை இருபுரிந்து நடக்கையாலே உபயருடையவும்‌ ப்ராதாந்யம்‌ தோற்றுவதாய்‌ “அவன்‌ மேவி உறைகோயில்‌” (திருவாய்மொழி 4-10-2 என்று ஆழ்வாரை விஷயீ கரிக்கலான தேஸமாகையாலே பரமபதத்தில்‌ உள் வெதுப்புத்‌ தீர்ந்து அவன்‌ வர்த்திக்கிற திருநகரியில்‌ நிற்கிற நிலையிலே (எத்தேவு மென்னும்‌ பரே ஸத்வம்‌ பொலியும்‌) ‘உறுவதாவதெத்தேவும்‌ எவ்வுலகங்களும்‌ மற்றும்‌ தன்பால்‌ மறுவில்‌ மூர்த்தயோடு (இத்தனையும்‌ நின்ற வண்ணம்‌ நிற்கவே” (திருவாய்மொழி 4-10-10) என்றும்‌, திருக் குருகூரதனுள்‌ பரன்‌” (திருவாய்மொழி 4-10-3) என்றும்‌ “திருக்குருகூரதனுள்‌ ஈசன்‌” (திருவாய்மொழி 4-10-4) என்றும்‌ “பொலிந்து நின்ற பிரான்‌” (திருவாய்மொழி 4-10-5) என்றும்‌ சொல்லுகிறபடியே ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்தமும்‌ தனக்கு ஸரீரமாமிடத்தில்‌ அப்ராக்ருத விக்‌ரஹத்தோடொக்கும்படி தான்‌ ஸரீரியா யிருக்கிற பரத்வத்தில்‌ ப்ரகாஸிக்கிற நியந்த்ருத்வ குணம்‌ அபி வ்ருத்‌தமாம் என்கிறார் –

    162-வைஷ்ணவ வாமநத்தில்‌ நிறைந்த நீலமேனியின்‌ ருசிஜநக விபவ லாவண்யம்‌ பூர்ணம்‌. (வைஷ்ணவ வாமநத்தில்‌) வைஷ்ணவ வாமனமான திருக்குறுங்குடியில்‌ நிற்கிற நிலையிலே (நிறைந்த நீலமேனியின்‌) “நீலமேனியும்‌ நான்கு தோளும் என்நெஞ்சம் நிறைந்தனவே” (திருவாய்மொழி 5-5-6) என்று, இவர்‌ திருவுள்ளத்திலே ப்ரகாஸிக்கும்படியான காளமேக நிபாஸ்யமமான விக்‌,ரஹத்தினுடைய (ருசி ஜநக விபவ லாவண்யம்‌ பூர்ணம்‌ ) “செல்கின்ற தென்‌ நெஞ்சமே” (திருவாய்மொழி 5-5-1 என்று ருசியைப்‌ பிறப்பிப்பதாய்‌ “பும்ஸாம் த்‌ருஷ்டி சித்தாபஹாரிணம்‌‘ (ரா.௮.3-29 , “ரூபவாந்‌ ஸுபக ஸ்ரீமாந்‌ கந்தர்ப இவ மூர்த்திமாந்‌” (ரா. ஸு.34-30) “ஸாக்ஷாந்‌ மந்மத மந்மத,:” (ஸ்ரீபாகவதம்‌ 10-32-2 என்றும்‌ சொல்லுகிறபடியே ஸஜாதீயரையும்‌ மடலெடுக்கும்படி பண்ண வற்றான விபவத்தில்‌ ப்ரகாஸிக்கிற “நிறைந்த சோதி வெள்ளம்‌ சூழ்ந்த நீண்ட பொன் மேனி (திருவாய்மொழி 5-5-7) என்கிற லாவண்யம்‌-நம்பி என்கையாலே பூர்ணம்‌” என்கிறார் –

    163-ருசி விவஸர்க்குப்‌ பாதமே சரணாக்கும்‌ ஒளதார்யம்‌ வானமாமலையிலே கொழுந்து விடும்‌.
    (ருசி விவஸர்க்கு)
    இப்படி லாவண்யத்தாலே பிறராலும்‌ நிவர்த்திப்பிக்க வொண்ணாதபடி அந்த ருசியாலே பரவஸரானவர்களுக்கு, (பாதமே சரணாக்கும்‌ ஒளதார்யம்‌) “ஆறெனக்கு நின்‌ பாதமே சரணாகத்‌ தந்தொழிந்தாய்‌’ என்று திருவடிகளை உபாயமாகப்‌ பண்ணித் தந்த ஒளதார்யம்‌ (வானமாமலையிலே கொழுந்து விடும்‌) சிரீவரமங்கலநகரிலே நிற்கிற வானமாமலை பக்கலிலே “வானவர்‌ கொழுந்து” (திருவாய்மொழி 5-7-7) என்கிறபடியே கொழுந்து விட்டு அபிவ்ருத்‌தமாம்‌” என்கிறார்-

    164-களை கணற்றாரை யுருக்கும்‌ மாதுர்யம்‌ குடமூக்கிலே ப்ரவஹிக்கும்‌.
    (களை கணற்றாரை) “நோற்ற நோன்பிலேன்‌ நுண்ணறிவிலேன்‌” (திருவாய்மொழி 5-7-1) என்கிறபடியே தம்முடைய பக்கலிலும்‌ கைம்முதலற்று, “களைவாய்‌ துன்பம்‌ களையாதொழிவாய்‌ களை கண்‌ மற்றிலேன்‌” (திருவாய்மொழி 5-8-8) என்று ரக்ஷகாந்தர ப்ரதிபத்தி நிவ்ருத்தி பிறந்தாரை (உருக்கும்‌ மாதுர்யம்‌) நீராயலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே ஆராவமுதே” (திருவாய்மொழி 5-8-1 என்று சிதிலராக்கும்படியான மாதுர்யம்‌. (குடமூக்கிலே ப்ரவஹிக்கும்‌) குடமூக்கில்‌ கோயிலாக்‌ கொண்டு” (இரண்டாம்‌ திருவந்தாதி 97) என்கிற கும்பகோணத்திலே ப்ரவஹிக்கும்‌ என்கிறார் –

    165-மெலிவிலும்‌ சேமம்‌ கொள்விக்கும்‌ க்ருபை தென்னகரிலே நித்யம்‌.
    (மெலிவிலும்‌ சேமங் கொள்விக்கும்‌ க்ருபை தென்னகரிலே நித்யம்‌)
    கீழ்ச் சொன்ன மாதுர்யாதிகளைக்‌ கிட்டி அநுபவிக்கப் பெறாமையாலே துக்க ஸீலராய்‌ வைகலும்‌ வினையேன்‌ மெலிய” (திருவாய்மொழி 5-9-1) என்று மெலிவாரையும்‌ “அடிமேல்‌ சேமங்கொள்‌ தென் குருகூர்ச்‌ சடகோபன்‌” (திருவாய்மொழி 5-9-11 என்றும்‌ “தொல்லருள்‌ நல்வினை” (திருவாய்மொழி 5-9-10) என்றும்‌ “சேமங்கொள் தென்னகர்‌’ (திருவாய்மொழி 5-9-11) என்றும்‌ சொல்லுகிறபடியே அவனே ரக்ஷகனென்று அத்‌யவஸிக்கலாம்படி யிருக்கிற க்ருபை தென்னகரான திருவல்லவாழிலே நிற்கிற நிலையிலே தொன்மை பழமையாய்‌ அத்தாலே நித்யமென்கிறார்

    166-வ்யவஸாயஜ்ஞர்‌ ரக்ஷண ஸ்தைர்யம்‌ பம்போத்தர தேஸஸ்த்தம்‌.
    (வ்யவஸாயஜ்ஞர்‌ ரக்ஷணஸ்தைர்யம்‌) “சரணே சரண்‌”
    (திருவாய்மொழி 5-10-11 என்கிற அத்‌யவஸாயத்தை “ஜ்ஞாந ஸம்பந்ந:’ என்றறிகைக்கீடான ஸர்வஜ்ஞதையை உடையவனுடைய, “ஏறு சேவகனார்‌’ (திருவாய்மொழி 6-1-10) என்று அவர்களுடைய ரக்ஷணத்தில்‌ “மித்ரபாவேந ஸம் ப்ராப்தம்‌ நத்யஜேயம்‌ கதஞ்சந” (ரா.யு18-3, “ஸக்ருதேவ”(ரா.யு18-33) இத்யாதிகளிலே ப்ரகாஸிப்பதாய்‌ அநுகூலராலும்‌ குலைக்க வொண்ணாத படியான ஸ்தைர்யம்‌ (பம்போத்தர தேஸஸ்தம்‌) “தேறு நீர்ப் பம்பை வடபாலைத்‌ திருவண்வண்டுர்‌’ (திருவாய்மொழி 61-10) என்று விரஜைக் கரை யென்னுமா போலே திருப் பம்பை யாற்றுக்கு வடகரையிலே திருவண்வண்டூரிலே ஸுஸ்திரம்‌ என்கிறார் –

    167-விளம்ப விரோத மழிக்கும்‌ விருத்‌த கடநா ஸாமர்த்‌யம்‌ நன்னகரிலே விஸ்தீர்ணம்‌.
    (விளம்ப விரோத மழிக்கும்‌ விருத்‌த கடநா ஸாமர்த்‌யம்‌)
    இப்படி வ்யவஸிதராயிருக்கச்‌ செய்தேயும்‌ ஈஸ்வரன்‌ முகம்‌ காட்டாமல்‌ விளம்பிக்கையாலே “போகு நம்பீ” (திருவாய்மொழி 6-2-1 என்றும்‌ “கழகமேறேல்‌ நம்பீ” (திருவாய்மொழி 6-2-6) என்றும்‌ இவர்களுக்கு ப்ரணய ரோஷத்தாலே வந்த விரோதத்தை, “அழித்தா யுன்‌ திருவடியால்‌” (திருவாய்மொழி 6-2-9) என்கிறபடியே அழிக்கும் படியான ‘நல் குரவும்‌ செல்வும்‌ நரகும்‌ சுவர்க்கமுமாய்‌” (திருவாய்மொழி 6-3-1 என்று தொடங்கி -தன்னில் தான்‌ சேராத தாரித்‌ர்யம்‌ ஐஸ்வர்யம்‌ என்கிற விருத்‌தங்களைத்‌ தனக்கு விபூதியாமிடத்து இவற்றினுடைய விரோதங்களைத்‌ தன் பக்கலிலே சேர்த்துக்‌ கொள்ளும்படியான அ கடித க டநா ஸாமர்த்‌யம்‌ நன்னகரான திரு விண்ணகரிலே நிற்கிற நிலையிலே “பல்வகையும்‌ பரந்த பெருமான்‌” (திருவாய்மொழி 6-3-1 என்று பரக்கக்‌ காணலாம்‌ –

    168-௧டித கடக விகடநா பாந்தவம்‌ அவ்வூரிலே த்‌விகுணம்‌.
    (கடிதகடநா பாந்தவம்‌) “தொலை வில்லி மங்கலம்‌ கொண்டு புக்கு இழை கொள்‌ சோதிச்‌ செந்தாமரைக்‌ கண் பிரான்‌ இருந்தமை காட்டினீர்‌’
    (திருவாய்மொழி 6-5-5) என்று பகவத்‌ விஷயத்திலே கடிப்பித்த கடகரான மாதா பிதாக்களோடும்‌ உமக்காசை யில்லை விடுமினோ” (திருவாய்மொழி 6-5-1, நம்மைக்‌ கை வலிந்து என்ன வார்த்தையும்‌ கேட்குறாள்‌” திருவாய்மொழி 6-5-7 என்று பொருந்தாமையைப்‌ பிறப்பித்த அவனுடைய பாந்தவம்‌ “தேவபிரானையே தந்தை தாய் (திருவாய்மொழி-6-5-11) என்று அவனுடைய பரம பாந்தவம்‌ (அவ்வூரிலே த்‌விகுணம்‌.) அவ்வூர் திரு நாமம் (திருவாய்-6-5-10) என்று திருவில்லித்தொலை மங்கலமான அவ்வூரிலே-தேவபிரான் அரவிந்த லோசனன் என்றும் நின்றிருந்துறையும்‌” (திருவாய்மொழி 6-5-10) என்றும் இரட்டைத் திருப்பதி யாகையாலே இரட்டித்திருக்‌க்கும் என்கிறார் –

    169-கைம்முதலிழந்தாருண்ணும்‌ நிதியின்‌ ஆபத் ஸகத்வம்‌ புகுமூரிலே ஸம்ருத்‌தம்‌.

    (கைம்முதலிழந்தார்‌ உண்ணும்‌ நிதியின்‌ ஆபத்ஸகத்வம்‌) ” ஏலக்குழலி இழந்தது சங்கே (திருவாய்மொழி 6-6-1 என்று இப்பாலுண்டான ப்ராப்யாபாஸ் ப்ராபகாபாஸங்களைக்‌ கைவிட்டவர்களுக்கு, “உண்ணுஞ் சோறு பருகும்‌ நீர்‌ தின்னும்‌ வெற்றிலையும்‌ எல்லாம்‌ கண்ணன்‌” (திருவாய்மொழி 6-7-1 என்று தாரக போஷக போக்யங்கள்‌ தானேயாம்படியான “வைத்தமாநிதி” (திருவாய்மொழி 6-7-1 என்று ஒருகாலும்‌ தொலையாதபடியான நிதியாயிருக்கிறவனுடைய ஆபத் ஸகத்வம்‌ (புகுமூரிலே ஸம்ருத்‌தம்‌) “புகுமூர்‌ திருக்கோளூர்‌ (திருவாய்மொழி 6-7-1 என்று இவர்களுக்கு ப்ரவேஷ்டவ்யமான திருக்கோளூரிலே நிற்கிற நிலையிலே “செல்வம்‌ மல்க” (திருவாய்மொழி 6-7-4, 7) என்று ஸம்ருத்‌த மாயிருக்கும்‌ என்கிறார்‌-

    170-சென்று சேர்வார்க்கு உசாத் துணை யறுக்கும்‌ ஸெளந்தர்யம்‌ மாநகரிலே கோஷிக்கும்‌.
    (சென்று சேர்வார்க்கு உசாத் துணை யறுக்கும்‌ ஸெளந்தர்யம்‌) “தென்திருப்பேரையில்‌ சேர்வன்‌ சென்றே
    ” (திருவாய்மொழி 7-3-8) என்று இப்பாலுள்ளவர்களைக்‌ கைவிட்டுச்‌ சென்று ப்ரவேஸிக்குமவர்களுக்கு “என்‌ நெஞ்சினாரும்‌ அங்கே யொழிந்தார்‌ உழந்தினியாரைக்‌ கொண்டென்னுசாகோ” (திருவாய்மொழி 7-3-4) என்றும்‌, “முழங்கு சங்கக்கையன்‌ மாயத்தாழ்ந்தேன்‌” (திருவாய்மொழி 7-3-4 என்றும்‌ உசாத் துணையான நெஞ்சையும்‌ அபஹரிக்கும்படியான “செங்கனிவாயின்‌” (திருவாய்மொழி 7-3-3) இத்யாதியில்‌ சொல்லுகிற ஸெளந்தர்யத்தை “தென்திருப்பேரெயில்‌ மாநகர்‌” (திருவாய்மொழி 7-3-9) என்று மஹாநகரமான திருப்பேரையில்‌ நிற்கிற நிலையிலே “எழுந்த நல்வேதத்தொலி நின்றோங்கு” (திருவாய்மொழி 7-3-4) என்கிறபடியே அவ்வூரில்‌ ஸாமவேத, கோஷந்தானே சொல்லா நின்ற தென்கிறார் –

    171-ப்ரவண சித்தம்‌ பரத்வ விமுகமாக்கும்‌ ஆரந்த வ்ருத்‌தி நீணகரிலே.
    (ப்ரவண சித்தம்‌ பரத்வ விமுகமாக்கும்‌ ஆநந்த வருத்தி) “தீவினை உள்ளத்தின்‌ சார்வல்ல இத்யாதி, “என்றுமென்‌ சிந்தனை
    ” (திருவாய்மொழி 7-10-9) என்று அவித்‌யாதிகள்போய்‌ பரமபத ப்ராப்தியிலே ஒருப்பட்டாலும்‌ த்ரிவித கரணங்களாலும்‌ ஸர்வரும்‌ வந்தாஸ்ரயிக்கும்படியான திருவாறன்‌ விளையிலே புக்கு அடிமை செய்ய வேணும்‌ என்னா நின்றதென்‌ நெஞ்சானது என்று தன் பக்கல்‌ ப்ரவணமான சித்தத்தை “சிந்தை மற்றொன்றின்‌ திறத்ததல்லாத்‌ தன்மை” (திருவாய்மொழி 7-10-10 என்று பேருங்கூட அஸஹ்யமாம்படி பரத்வத்தையும்‌ உபேக்ஷிக்கும்படி பண்ணவற்றான, “இன்பம்‌ பயக்க எழில்மலர்‌ மாதரும்‌ தானும்‌ இவ்வேழுலகை இன்பம்‌ பயக்கவினிதுடன்‌ வீற்றிருந்து” (திருவாய்மொழி 7-10-1 என்கிற ஆநந்த வ்ருத்‌தி நீணகரான திருவாறன்விளையிலே காணலாமென்கிறார் –

    172-ஸாதரரைப்‌ பரிசழிக்கும்‌ சேஷ்டித ஆஸ்சர்யம்‌ குளத்தே கொடிவிடும்‌. (ஸாதரரைப்‌ பரிசழிக்கும்‌ சேஷ்டிதாஸ்சர்யம்‌] “கூடச் சென்றேன்‌‘ இத்யாதி- ஆதரித்து” கூடச்சென்றேன்‌’ என்று இப்படி ஆதரமுடையாரை ‘பல்வளையார் முன்‌ பரிசழிந்தேன்‌‘ (திருவாய்மொழி 8-2-4) என்று பரிசழிக்கும்படியான மாயக் கூத்தென்கிற சேஷ்டிதாஸ்சர்யம்‌ (குளத்தே கொடிவிடும்‌) தென் குளந்தையிலே “மாடக்‌ கொடி” (திருவாய்மொழி 8-2-4) என்று கொடி யெடுத்து ப்ரகாஸிக்கும்‌ என்கிறார்‌.

    173-ஸ்ரமமனம்‌ சூழும்‌ ஸெளகுமார்ய ப்ரகாமம்‌ ஆய்ச்சேரியிலே.
    (ஸ்ரமமனம்‌ சூழும்‌ ஸெளகுமார்ய ப்ரகாமம்‌) பணியாவமரர்‌ இத்யாதி. “திருநீலமணியார்‌ மேனியோடு என்‌ மனம் சூழ வருவாரே
    (திருவாய்மொழி 8-3-6) என்று அந்த சேஷ்டிதத்தாலுள்ள ஸ்ரமம்‌ இவர்‌ நெஞ்சிலே சூழ வரும்படியான ஸெளகுமார்யம்‌ “ஆழியும்‌ சங்கும்‌ சுமப்பார் தாம்‌” (திருவாய்மொழி 8-3-3) என்று அப்ராக்ருத விக்‌ரஹத்தினுடைய ஸெளகுமார்ய ப்ரகாஸம்‌-

    174-மஹாமதிகள்‌ அச்சம்‌ கெட்டு அமரும்‌ சவ்ர்யாதிகள்‌ சிற்றாற்றிலே கொழிக்கும்‌.
    (மஹாமதிகள்‌ அச்சம்‌ கெட்டமரும்‌ சவ்ர்யாதிகள்‌ சிற்றாற்றிலே கொழிக்கும்‌) “ஸம்ஸ்ப்ருயந்நாஸநம்‌ சவ்ரே: விதுர: ஸ: மஹாமதி
    :” (பார. உத்‌). இப்படி ஸர்வஸக்திக்கும்‌ பரியும்படியான மஹாமதிகள்‌ ஸெளகுமார்ய அநுஸந்தாநத்தாலே இவனுக்கு எங்ஙனே என்ன தீங்கு வருகிறதென்று அஞ்சுகிறவிவர்‌ “எங்கள்‌ செல் சார்வே” (திருவாய்மொழி 8-4-1) என்று எங்களைப்‌ போல்வார்க்கு நிர்பயஸ்த்தா மென்று அச்சம்‌ கெட்டு “நான்முகனை அமர்ந்தேனே (திருவாய்மொழி 8-4-10) என்று இவர்‌ அமர்ந்து ஸுஸ்திரராம்படியான “வார்கடாவருவி” (திருவாய்மொழி 8-4-1) என்று தொடங்கி, குவலயாபீட நிரஸநாதி களாலுண்டான (சவ்ர்யாதிகள்‌) சவ்ர்யாதிகள்‌ திருச்செங்குன்றூரிலே திருச்சிற்றாற்றிலே ஆறு என்கிற ஸமாதி யாலே கொழிக்கும்‌-என்கிறார்‌.

    175-ஸாத்‌ய ஹ்ருதிஸ்த்தனாயும்‌ ஸாதநம்‌ ஒருக்கடுக்கும்‌ க்ருதஜ்ஞதாகந்தம்‌-தாயப் பதியிலே-(ஸாத்‌ய ஹ்ருதிஸ்தனாயும்‌ ஸாதநமொருக்கடுக்கும்‌ க்ருதஜ்ஞதா கந்தம் தாயப்பதியிலே )திருக் கடித்தானமும்‌ என்னுடைச்‌ சிந்தையும்‌ ஒருக்கடுத்‌துள்ளே உறையும்‌ பிரான்‌ கண்டீர்‌ (திருவாய்மொழி 8-6-2) என்று ஸாத்‌யமான ஆழ்வாருடைய திருவுள்ளம்‌ தனக்கு இருப்பிடமாக உடையனாயிருக்கச்‌ செய்தேயும்‌ இவ்வா ழ்வார்‌ திருவுள்ளத்தைப்‌ பெறுகைக்கு ஸாதநமான திருக்கடித்தானத்தையும் -அடுத்துப் பிடித்து வர்த்திக்கும்படியான (க்ருதஜ்ஞதா கந்தம்‌ தாயப்பதியிலே) திருக்கடித்தான நகரம்‌ “தனதாயப்பதி” (திருவாய்மொழி 8-6-8) என்று அவனுக்கு தாயப்ராப்தமான திருக்கடித்தானத்திலே என்கிறார்‌. கடித்தானம்‌ வாசப் பொழில்‌ என்றும்‌ சொல்லுகையாலே கந்தமென்கிறது.

    176-அவகாஹித்தாரை அநந்யார்ஹமாக்கும்‌ நாயக லக்ஷணம்‌ வளம்‌ புகழுமூரிலே குட்டமிடும்‌.
    (அவகாஹித்தாரை அநந்யார்ஹமாக்கும்‌ நாயக லக்ஷணம்‌ வளம்புகும்‌ ஊரிலே குட்டமிடும்‌) “அப்பன்‌ திருவருள்‌ மூழ்கினளே”
    (திருவாய்மொழி 8-9-5) என்று இப்படித்‌ தன்னுடைய க்ருபையிலே மறு நனைய மூழ்கினாரை “அருமாயன்‌ பேரன்றிப்‌ பேச்சிலள்‌” (திருவாய்மொழி 8-9-1) என்றும்‌, “திருப்புலியூர்‌ புகழன்றி மற்று பரவாளிவள்‌’ (திருவாய்மொழி 8-9-9) என்றும்‌ “மாயப்பிரான்‌ திருவருளாம்‌ இவள்‌ நேர்பட்டதே” (திருவாய்மொழி 8-9-10) என்றும்‌ சொல்லுகிறபடியே அநந்யார்ஹராக்கும்‌ அவயவ ஸோபை, ஆபரண ஸோபை, தொடக்கமான நாயக லக்ஷணம்‌; “திருப்புலியூர்‌ வளம்‌ புகழும்‌” (திருவாய்மொழி 8-9-3) என்று இவர்‌ கொண்டாடும்படியான ஐஸ்வர்யத்தை யுடைத்தான திருப்புலியூரிலே; குட்ட நாடு என்கையாலே குட்டமிடும்‌ என்கிறார் –

    177-போக்ய பாக த்வரை தெளிந்த சந்தைக்கு முன்னில்‌ மூன்றிலும்‌ ப்ரகடம்‌.
    ( போக்‌ய பாக த்வரை தெளிந்த சந்தைக்கு முன்னில்‌ மூன்றிலும்‌ ப்ரகடம்‌)
    பசித்த புருஷன்‌ அந்நம்‌ பக்வமாமளவும்‌, நிற்பது, இருப்பது, கிடப்பதாமாபோலே இப்படி அநந்யார்ஹராகையாலே போக்‌யமான ஆழ்வார்க்கு பரமபக்தியாகிற பாகம்‌ பிறக்குமளவும்‌ போக்தாவான ஸர்வவேஸ்வரனுக்குண்டான த்வரை “தெளிந்த என்‌ சந்தை” என்கிற சந்தைக்கு முன்னில்‌ “புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள்‌ நின்று” (திருவாய்மொழி 9-2-4) என்கிற திருப்பதி மூன்றிலும்‌ கிடப்பது இருப்பது நிற்பதாகையாலே ப்ரகடமாய்த்‌ தோற்றுமென்கிறார் –

    178-போகத்தில்‌ தட்டுமாறும்‌ ஸீலம்‌ காட்கரையிலே கரையழிக்கும்‌.
    (போகத்தில்‌ தட்டுமாறும்‌ சீலம்‌ காட்கரையிலே கரையழிக்கும்‌)
    இப்படி போக்‌யமான ஆழ்வாரோடே கலந்து பரிமாறுமிடத்து, “ஆட்கொள்வானொத்து என்‌ உயிருண்ட மாயன்‌” (திருவாய்மொழி 9-6-7) என்றும்‌, “ஆருயிர்‌ பட்டது எனதுயிர்‌ பட்டது” (திருவாய்மொழி 9-6-9) என்றும்‌, “தான்‌ என்னை முற்றப்‌ பருகினான்‌” (திருவாய்மொழி 9-6-10) என்றும்‌, அத்தலை யித்தலையாய்‌ ஸேஷ ஸேஷி பாவம்‌ மாறாடும்படியான ஸீலம்‌ திருக்காட்கரையிலே நிற்கிற நிலையிலே, கரை என்ற ஸமாதியாலே இருகரையுமழியப்‌ பெருகும்‌ என்கிறார் –

    179-மஹாத்மாக்கள் விரஹம்‌ ஸஹியாத மார்தவம்‌ வளத்தின்‌ களத்தே கூடு பூரிக்கும் –
    “தமரோடங்குறைவார்‌’
    (திருவாய்மொழி 9-7-2) “என்றும்‌ “ஸக்ருத்வதாகாரேத்யாதி, க்ஷணேபி தே யத்‌ விரஹோ அதி துஸ்ஸஹ (ஸ்தோத்ர ரத்நம்‌ 55 -என்றும்‌ சொல்லுகிறபடியே தன்னுடைய விக்‌ரஹத்தை ஒருகால்‌ காண வேணுமென்கிற ஆசையாலே போக மோக்ஷங்களையும்‌ த்ருணீகரித்திருக்கிற மஹாத்மாக்களோட்டை விரஹம்‌ தனக்கு அதிதுஸ்ஸஹமாம்படியான அவனுடைய மார்தவம்‌, அதாகிறது நெஞ்சில்‌ மென்மை. மூழிக்களத்து விளக்கினை” (பெரியதிருமடல்‌ 129) என்கிற திருமூழிக்களத்திலே நிற்கிற நிலையிலே, களம்‌ என்கிற ஸமாதியாலே கூடு பூரிக்கும்‌ என்கிறார் –

    180-பிரிந்த துன்பக்‌ கடல்‌ கடத்தும்‌ விஷ்ணுபோதாந்ருஸம்ஸ்யம்‌ நாவாயிலே நிழலெழும்‌.
    (பிரிந்த துன்பவித்யாதி ) “அன்புடையாரைப்‌ பிரிவுறுநோய்‌ துன்பக்‌ கடல்‌ புக்கு”
    நாச்சியார்‌ திருமொழி 5-4) என்றும்‌, ” யஸ்த்வயா ஸஹ ஸஸ்வர்க்கோ, நிரயோ யஸ்த்வயா விநா” (ரா.௮.30-18) என்கிறபடியே தன்னைப்‌ பிரிகையாகிற துக்க ஸாகரத்திலே அழுந்துமவர்களை “ஸம்ஸாரார்ணவ மக்‌நாநாம்‌ விஷயாக்ராந்த சேதஸாம்‌ விஷ்ணு போதம்‌ விநா நாந்யத்‌ கிஞ்சிதஸ்தி பராயணம்‌” (விஷ்ணு தர்மம்‌ என்கிறபடியே அக்கரைப் படுத்துவதான விஷ்ணு போதத்தினுடைய, “ஆவாவடியான்‌ இவனென்றருளாய்‌” (திருவாய்மொழி 9-8-7) என்கிற ஆந்ருஸம்ஸ்யம்‌ திருநாவாயிலே நிற்கிற நிலையிலே நிழலெழும்‌, “கொந்தார்‌ மலர்ச்‌ சோலைகள்‌ சூழ்‌” (திருவாய்மொழி 9-8-10) என்று சோலையைச்‌ சொல்லுகையாலே நிழலெழும்‌ என்கிறார் –

    181-ஸரண்ய முகுந்தத்வம்‌ உத்பலாவதகத்திலே ப்ரஸித்‌தம்‌.
    “சரணமாகும்‌ தனதாளடைந்தார்க் கெல்லாம்‌ மரணமானால்‌ வைகுந்தம்‌ கொடுக்கும் பிரான்‌”
    (திருவாய்மொழி 9-10-5) என்று இப்படி ஸரண்யனான அவனுடைய மோக்ஷ ப்ரதத்வம்‌ உத்பலாவதகே திவ்யே விமாநே புஷ்கரேக்ஷணம்‌ சவ்ரிராஜமஹம்‌ வந்தே, ஸதா ஸர்வாங்க ஸுந்தரம்‌” (திருக்கண்ணபுரம்‌ ஸ்தலபுராணம்‌?) என்று திருக்கண்ணபுரத்திலே உத்பலாவதக மென்னும்‌ பேரையுடைத்தான திவ்ய விமாநத்தில்‌ நிற்கிற நிலையிலே ப்ரஸித்தம் என்கிறார் –

    182-மார்க்க பூந்து ஸைத்யம்‌ மோஹநத்தே மடுவிடும்‌.
    இப்படி மோக்ஷ ப்ரதனாமிடத்தில்‌ முக்தி மார்க்கமான அர்ச்‌சிராதி மார்க்கத்துக்குத் துணையான “ ஆத்தன் தாமரையடியன்றி மற்றிலம்‌ அரணே” (திருவாய்மொழி 10-1-6) என்றும் -ஆப்த பந்துவானவனுடைய சுரிகுழல்‌ கமலக்‌ கண்கனிவாய்‌ காளமேகத்தை யன்றி மற்றிலம்‌ கதியே” (திருவாய் -10-1-1-) என்றும்‌,அவனடி நிழல் தடமன்றி யாமே (திருவாய்மொழி 10-1-2) என்றும்‌ ஸாம்ஸாரிகமான தாபத்தை ஆற்றவற்றான ஸைத்யம்‌ மோஹந க்ஷேத்ரமான திருமோகூரிலே, மரகத மணித்தடம்‌” (திருவாய்மொழி 10-1-8) என்கிற ஸமாதியாலே மடுவிடும்‌ என்கிறார் –

    183-ஸஸைன்ய புத்ர ஸிஷ்ய ஸாத்‌ய ஸித்‌த பூ ஸுரார்ச்சநத்துக்கு முக நாபி பாதங்களை த்‌வார த்ரயத்தாலே காட்டும்‌ ஸாம்யம்‌ அநந்தஸயநத்திலே வ்யக்தம்‌.
    (ஸஸைந்யேத்யாதி,) (ஸஸைந்ய) “அமரர்கோனர்ச்சிக்கின்று அங்ககப்‌ பணி செய்வர்‌ விண்ணோர்‌
    ” (திருவாய்மொழி 10-2-6) என்கிற ஸேநா ஸஹிதரான ஸேநை முதலியாராகிற ஸாத்‌யர்‌, (புத்ர) உலகுயிர்‌ தேவும்‌ மற்றும்‌ படைத்த” (திருவாய்மொழி 10-2-7) என்று சொல்லுகையாலே புத்ரர்களான ப்‌ரஹ்மாதி தேவதைகளாகிற ஸித்‌தர்‌, (ஸிஷ்யர்‌) “நடமினோ நமர்களுள்ளீர்‌ அனந்தபுரநகர்‌ புகுதுமின்றே” (திருவாய்மொழி 10-2-8) என்று இவர்‌ உபதேஸிக்கக்‌ கேட்ட ஸிஷ்யர்களாகிற பூஸுரர்‌ என்கிற இவர்கள்‌ மூவரும்‌ அர்ச்சிக்கைக்கு முக நாபி பாதங்களை திருவாசல்‌ மூன்றாலும்‌ காட்டுகையாலே நித்ய ஸூரிகளோடு நித்ய ஸம்ஸாரிகளோடு வாசியற முகம்‌ கொடுக்கும்‌ ஸாம்யம்‌ திருவனந்தபுரத்தில்‌ கண் வளருகிற கிடை யழகிலே ஸுவ்யக்தமாகக்‌ காணலாமென்கிறார்

    184-மோக்ஷதாநத்தில்‌ ப்ரணத பாரதந்த்ர்யம்‌ வளம்மிக்க நதியிலே கரைபுரளும்‌.
    “அருள்தருவா னமைகின்றான்‌ அது நமது விதி வகையே’
    ” (திருவாய்மொழி 10-6-1 என்றும்‌, “விண்ணுலகம்‌ தருவானாய்‌ விரைகின்றான்‌ விதிவகையே” திருவாய்மொழி 10-6-3) என்றும்‌, இப்படி ஸர்வ ஸமனானவன்‌ ஆஸ்ரிதர்க்கு மோக்ஷத்தைக்‌ கொடுக்குமிடத்தில்‌ அவர்கள்‌ விதித்தபடியே செய்யக் கடவோமென்கிற ஆஸ்ரித பாரதந்த்ர்யம்‌ “வளம்மிக்க வாட்டாற்றான்‌’ (திருவாய்மொழி 10-6-3) என்று திருவாட்டாற்றிலே நிற்கிற நிலையிலே, ஆறென்கிற ஸமாதியாலே கரை புரளும்‌ என்கிறார் –

    185-த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம்‌ மருள்கள்‌ கடியும்‌ மயல்மிகு பொழிலிலே தழைக்கும்‌.
    (த்யாஜ்யதே ஹவ்யாமோஹம்‌) ‘ மாய வாக்கை இதனுள்‌ புக்கு”
    (திருவாய்மொழி 10-7-3) என்று ஆழ்வாருக்கு த்யாஜ்யமான தேஹத்திலே புகுந்து திருமாலிருஞ்‌ சோலை இத்யாதிப்படியே தேஸ விஸேஷத்திலே பண்ணுமாதரத்தையும்‌ இதிலே பண்ணி இவர்‌ “மங்கவொட்டு” (திருவாய்மொழி 10-7-10) என்று கால் கட்டும்படி அவனுக்குண்டான வ்யாமோஹம்‌ (மருள்கள்‌ கடியும்‌ மயல்மிகு பொழிலிலே தழைக்கும்‌) “மருள்கள்‌ கடியும்‌ மணி மலை” (திருவாய்மொழி 10-7-7) என்று ஸர்வருடையவும்‌ அஜ்ஞாநத்தை ஸவாஸநமாகப்‌ போக்குமதாய்‌ ‘ மயல்மிகு பொழில்சூழ்‌ மாலிருஞ்சோலை” (திருவாய்மொழி 2-10-3) என்று போக்த்தாக்கள்‌ அடைவு கெடும்படி பிச்சேற்ற வற்றாயிருக்கிற தெற்குத்‌ திருமலையில்‌ நிற்கிற நிலையிலே; சோலை என்கிற ஸமாதியாலே தழைக்கும்‌ என்கிறார்-

    186-அங்கீ,கரிக்க ௮வகாஸம்‌ பார்க்கும்‌ ஸ்வாமித்வம்‌ பெருககரிலே பேர் பெற்றது, “திருமாலிருஞ்சோலை மலை என்றேனென்னத்‌ திருமால்‌ வந்து என்‌ நெஞ்சு நிறையப் புகுந்தான்‌” (திருவாய்மொழி 10-8-1 என்று இவரை விஷயீகரிக்க அவகாஸம்‌ பார்த்து மடிமாங்காயிட்டும்‌ விஷயீகரிக்க வேணு மென்கிற ஸ்வாமித்வம்‌ “பெருநகரரவணை மேல்‌” (பெரியதிருமொழி 5-9-3) என்கிற திருப்பேர்‌ நகரில்‌ கண் வளர்ந்தருளுகிற விடத்தே ப்ரஸித்‌தம்‌ என்கிறார் –

    187-இவற்றில்‌ ப்ராவண்யம்‌ இவள்‌ பரமே யென்ன வுண்டாய்‌ ஷோடஸ கலா பூர்ணமான சந்த்‌ர மண்டலம்‌ போலே பதினாறு திருநஷத்ரம்‌ நிரம்பினவாறே தேவ போக்யமானவதில்‌ அம்ருதம்‌ போலன்றிக்கே என்னாத்‌ தமிழர்‌ இசைகாரர்‌ முதற்பத்தர்‌ வானவர்‌ என்னம்மான்‌ பார்பரவென்னும்படி ஸேஸ்வர விபூ,தி போக்‌யமான பாலோடமுதன்ன மென்மொழி முகம்‌ செய்தது.

    (இவற்றில்‌ ப்ராவண்யம்‌ இவள்பரமே என்ன வுண்டாய்‌) இத் திருப்பதிகளில்‌ நிற்கிற நிலையில்‌ இவர்க்கு உண்டான ப்ராவண்யம்‌ “பெருமான்‌ மலையோ திஸ்ருவேங்கடமென்று கற்கின்ற வாசகம்‌ இவள்‌ பரமே” (திருவிருத்தம்‌ 60) என்று நிஷேதகரும்‌ ஆஸ்சர்யப்படும்படி உண்டாய்-பதினாறு கலையும்‌ நிறைந்தால்‌ சந்த்‌ரன்‌ பூர்ணனாமாப் போலே இவரும்‌ திருவவதரித்தவன்று தொடங்கி …… த்தோடே யிருந்து பகவதநுபவத்தைப்‌ பண்ணி அந்த பகவதநுபவத்தாலே பூர்ணராய்க்‌ கொண்டு பதினாறு திருநக்ஷத்ரம்‌ நிரம்பினவாறே அந்த சந்த்‌ரன்‌ பக்கலுண்டான அம்ருதம்‌ தேவர்களுக்கே போக்யமாகையாலே அதிக்ருதாதிகாரமுமாய்‌ அந்த சந்த்‌ரனுக்கு வ்ருத்‌தி ஷயமுண்டாகையாலே பூர்ணனான காலத்திலல்லது கிடையாமையாலே ஸக்ருத் ஸேவ்யமுமாய்‌ தேஹத்தைப்‌ பூண் கட்டுமதாகையாலே ஸம்ஸார வர்த்தகமாயிருக்கும்‌ அது போலன்றிக்கே -(என்னாத்‌ தமிழர்‌ இத்யாதி மென்மொழி முகம் செய்து ) என்நாவிலின் கவி (திருவாய் -3-9-1) என்னுமா போலே தமிழர் இசைகாரர்‌ பத்தர் பரவும் ஆயிரம் (திரு -1-5-11) என்றும் தூ முதல் பத்தருக்குத் தான் தன்னைத் சொன்ன (திருவாய் -7-9-3) என்றும் கேட்டாரார் வானவர்கள் (திரு 10-6-11) என்றும்‌-தென்னா வென்னுமென்னம்மான்‌” (திருவாய்மொழி-10-7-5) என்றும் பார்பரவின்கவி’ (திருவாய்மொழி 7-9-5) என்றும்‌ சொல்லுகிறபடியே தம்மோடு பிறரோடு ஈஸ்வரனோடு வாசியற ஸர்வஜந போக்‌யமாகையாலே ஸர்வாதிகாரமுமுமாய்‌ அந்த சந்த்‌ரனைப்‌ போலே விருத்‌தி க்ஷயங்களின்றிக்கே காதல்‌ கடல்புரைய” (திருவாய்மொழி 5-3-4) ‘ காதல்‌ (கடலின்‌) மிகப்‌ பெரிது”(திருவாய்மொழி 7-3-6) “அதனில்‌ பெரிய என்னவா” (திருவாய்மொழி 10-10-10) என்கையாலே விருத்‌தியேயாய்‌, ஸதா போக்‌யமுமாய்‌, “உயிரின்‌ மேலாக்கை
    ஊனிடையொழிவிக்குமே” (
    திருவாய்மொழி 3-2-11 என்று மாம்ஸாஸ்ருகாதி மயமான ஸரீர ஸம்பந்தத்தை யறுத்து ஸம்ஸார நிவர்த்தகமாமளவே யன்றிக்கே மேலை வைகுந்தத்து இருத்தும்‌” (திருவாய்மொழி 8-6-11) என்று அப்ராக்ருத திவ்யதேஸ ப்ராப்தியையும்‌ பண்ணித் தரவற்றான “பாலோடமுதன்னவாயிரம்‌(திருவாய்மொழி 8-6-11) என்றும்‌ “அமுதமென்மொழி‘ (திருவாய்மொழி 6-5-2) என்றும்‌ சொல்லுகிற படியே அம்ருத ரூபமாய்‌ அதிலும்‌ அதிமார்த்தவத்தை யுடைத்தான சொற்களாலானவை முகோத்கமாயிற்றின’ என்கிறார் –

    188-நீர்‌ பால்‌ நெய்யமுதாய்‌ நிரம்பின வேரி நெளிக்குமா போலே பரபக்த்யாதி மய ஜ்ஞாநாம்ருதாப்‌தி நிமிகிற வாய்கரை மிடைந்து மொழி பட்டு அவாவிலந்தாதி என்று பேர் பெற்றது.
    இப்படி போக்‌யமான ஸப்த ப்ரவ்ருத்தி மாத்ரமே யன்றிக்கே பரபக்தி ப்ரேரிதமாய்க்‌ கொண்டு அந்த ஸப்‌த ஸந்தர்ப்ப ரூபமான ப்ரபந்தமாய்க்‌ கொண்டு அவதரித்ததென்கிறார்‌. (நீர்பால்‌ நெய்யமுதாய்‌) நீர்‌ பாலாய்‌, பால்‌ நெய்யாய்‌, நெய்‌ அம்ருதமாய்‌, அவ் வம்ருதத்தாலே நிரம்பினதோர்‌ ஏரி நெளிக்குமா போலே, ஜ்ஞாநம்‌ பக்தியாய்‌, பக்தி பரபக்தியாய்‌, பரபக்தி பரஜ்ஞாநமாய்‌, பரஜ்ஞாநம்‌ பரமபக்தியாய்‌ “அச்யுத பக்திதத்த்வ ஜ்ஞாநாம்ருதாப்‌தி, பரிவாஹ ஸூபை ர்‌ வசோபி:,” (ஸ்தோத்ர ரத்நம்‌ 3) என்கிறபடியே அந்த பரபக்த்யாதிகளாலே நிறைந்திருப்பதொரு ஜ்ஞாநாம்ருதாப்‌தியானது (நிமிகிற வாய்க்கரை மிடைந்து) பரீவாஹாபேககை பிறந்து “நிமியும்‌ வாய்‌” (திருவாய்மொழி
    6-5-2) என்கிற வாய்க்கரையை “மிடைந்த சொல்‌ தொடை” (திருவாய்மொழி 1-7-11)
    என்கிறபடியே நெருக்கி அதிக்ரமித்து “மொழிபட்டோடும்‌ கவியமுதம்‌”(திருவாய்மொழி 8-10-5 என்று சொற்களாய்க்‌ கொண்டு ப்ரவஹித்து (அவாவிலந்தாதிஎன்று பேர்‌ பெற்றது) ‘அவாவிலந்தாதிகளால்‌ இவையாயிரமும்‌” (திருவாய்மொழி-10-10-19 என்று பரபக்த்யாதிகளாலே “சொல்லப்பட்ட ஆயிரம்‌” (திருவாய்மொழி-8-10-11) என்று லோகத்திலே ப்ரஸித்‌த மாய்த்தென்கிறார் –

    189-மனம்செய்‌ எல்லையில்‌ ஞான வின்பத்தை நின்மலமாக வைத்தவர்‌ ஞானப் பிரானை ஞானத்து வைம்மினென்றவிது தத்வ விவேக, நித்யத்வாநித்யத்வ, நியந்த்ருத்வ, ஸெளலப்‌ய, ஸாம்ய, அஹங்கார, இந்த்‌ரியதோ,ஷபல, மந ப்ராதா,ந்ய, கரண நியமந ஸுக்ருதி பேத, தேவாஸுரவிபாக, விபூதி யோக, , விஸ்வருபதர்ஸந, ஸாங்கபத்தி, ப்ரபத்தி த்‌வை வித்‌யாதிகளாலே அன்றோதிய கீதா ஸமம்‌ என்னும்‌.
    தத்வதர்ஸிகளான இவர் பக்கலிலே இப்படி பகவத் குணாநுபவ ஜநித ப்ரீதி ப்ரகர்ஷ பலாத்காரத்தாலே அவதீர்ணமான இப்ரபந்தத்தில்‌ பரதிபாதி தமான அர்த்தங்கள்‌, தர்மஸம்ஸ்தாபநார்த்தமாக அவதரித்து கிருஷ்ணன்‌ உபய ஸேநைக்கும்‌ நடுவே அர்ஜுந வ்யாஜத்தாலே அருளிச் செய்த ஸ்ரீகீதையிலே ப்ரதிபாதிக்கப்பட்ட தத்த்வ விவேகாதிகளான அர்த்தங்களாகை யாலே இந்த ப்ரபந்தம்‌ ஸ்ரீகீதையோடொக்கும்‌ என்கிறார்‌. (மனஞ் செய்‌ எல்லையில்‌ ஞான வின்பத்தை நின்மலமாக வைத்தவர்‌) “எல்லாப்பொருள்கட்கும்‌ வித்தாய்‌ முதலில்‌ சிதையாமே மனம்‌ செய்‌ ஞானத்துன்பெருமை” (திருவாய்மொழி 1-5-2) என்று ஸர்வத்துக்கும்‌ காரணமாகா நிற்கச்‌ செய்தே தான்‌ நிர்விகாரமாய்‌ “எல்லையில்‌ ஞானத்தன்‌ ‘ (திருவாய்மொழி 3-10-8 என்று அபரிச்சேத்‌யமாயிருக்கிற அவனுடைய ஸங்கல்ப ரூப ஜ்ஞாநத்தையும்‌ “சூழ்ந்ததனில்‌ பெரிய சுடர் ஞான வின்பமேயோ’ (திருவாய்மொழி 10-10-10) என்று ப்ரக்ருதி புருஷர்களிரண்டும்‌ தனக்குள்ளேயாம்படி வியாப்தமாய்‌, தான்‌ அபரிச்சேத்‌யமாய்‌ விஸத தமமாய்‌ அநந்த ரூப ஜ்ஞாநமாய்‌ இருக்கிறவனுடைய ஸ்வரூபத்தையும்‌ “நிறைந்த ஞானமூர்த்தியாயை நின் மலமாக வைத்து” (திருவாய்மொழி 4-7-7) என்கிறபடியே அந்த ஸ்வரூப ஸ்வபாவங்களிரண்டும்‌ ஜ்ஞாநமாகையாலே பரிபூர்ண ஜ்ஞாந ஸ்வருபனாயிருக்கிறவனை விஸத தமமாக ஸாக்ஷாத்கரிக்கையாலே தத்த்வ தர்ஸிகளா யிருக்கிற இவர்‌, (ஞானப் பிரானை ஞானத்து வைம்மின்‌ என்ற இது) “இருங் கற்பகம்‌ சேர்‌ வானத்தவர்க்கும்‌ அல்லாதவர்க்கும்‌ மற்றெல்லாயவர்க்கும்‌ ஞானப் பிரானை அல்லாலில்லை நான் கண்ட நல்லதுவே” (திருவிருத்தம்‌ 99) என்று உபக்ரமித்து “உளங்கொள்‌ ஞானத்து வைம்மின்‌ உம்மை உய்யக் கொண்டு போகுறிலே” (திருவாய்மொழி 4-10-9) என்று ப்ரளயார்ணவ மக்‌நையான ஸ்ரீபூமிப் பிராட்டியை மஹா வராஹமாய்க்‌ கொண்டு எடுத்தவனுமாய்‌, ஸ்லோக த்‌வய முகத்தாலே சரமோபாயத்தை வெளியிடுகையாலே ஜ்ஞாநோபகாரகனு மாயிருக்கிறவனை யொழிய ஸர்வர்க்கும்‌ உஜ்ஜீவந ஹேதுவாயிருப்பதொன்று இல்லையான பின்பு அவன்‌ நித்ய வாஸம்‌ பண்ணுகிற தேஸத்தை உங்கள்‌ மாநஸ ஜ்ஞாநநத்துக்கு விஷய மாக்குங்கோளென்று இப்படி உபபாதிக்கிற இப்ரபந்த,ம்‌ (தத்த்வ விவேகம்‌) திருத் தேர்த்தட்டிலே “விஸ்ருஜ்ய ஸமரஞ்சாபம்‌ ஸோகஸம்விக்‌ந மாநஸம்‌” (கீதை 1-47) என்று பந்து ஹத்யாபீதனாய்க்‌ கொண்டு ஸோகிக்கிற அர்ஜுநனைக்‌ குறித்து அவனை “ஸ்திதோஸ்மி’ (கீதை 18-73) என்னப்‌ பண்ணுகைக்காக “நத்வேவாஹம்‌ ஜாது நாஸம்‌ நத்வம்‌ நேமே ஐநாதி பா: ந சைவ ந ப.விஷ்யாம: ஸர்வேவயமத:பரம்‌” (கீதை 2-12) என்று நீயும்‌ நானும்‌ இந்த ராஜாக்களும்‌ முன்பாக இல்லாமலுமில்லை, மேலும்‌ இல்லாமலுமில்லை என்று ஜீவ பரபேதம்‌, ஜீவர்களுக்கு பரஸ்பர பேதம்‌, “தேஹிநோஸ்மிந்‌ யதா, தேஹே கெளமாரம்‌ யெளவநம்‌ ஜரா ததா, தேஹாந்தர ப்ராப்தி: தீரஸ் தத்ர ந முஹ்யதி” (கீதை 2-13) என்றித்யாதிகளாலே ப்ரக்ருதி புருஷர்களுக்குண்டான பேதமாகிற தத்வ விவேகம்‌; (நித்யத்வாநித்யத்வ நியந்த்ருத்வ) “அச்சேத்‌யோயமதாஹ்‌ யோயம்‌ அக்லேத்‌யோ ஸோஷ்ய ஏவ ச நித்ய: ஸர்வகதஸ்தாணுரசலோயம்‌ ஸநாதந:” (கீதை 2-24) என்றும்‌, “வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய நவாநி க்‌ருஹ்ணாதி நரோபராணி ததா, ஸரீராணி விஹாய ஜீர்ணாந்யந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ’ (கீதை 2-22, “நாஸதோ வித்‌யதே பாவோ நாபாவோ வித்‌யதே ஸத:’ (கீதை 2-16) இத்யாதிகளாலே சேதநாசேதநங்களினுடைய நித்யத்வா நித்யத்வம் “பூமிராபோநலோவாயு: கம்‌ மநோ புத்‌திரேவ அஹங்கார இதீயம்‌ மே பிந்நா ப்ரக்ருதி ரஷ்டதா வைன்‌ வலவன்‌ ப்ரக்ருதிம்‌ வித்‌தி மே பராம்‌ தீவபூதாம்‌ மஹாபாஹோ யயேதம்‌ தார்யதே ஜெகத்‌ (கீதை7-4,5) என்று சேதநா சேதநங்களை ஸாரீரமாக வுடையனாய்க் கொண்டு, “ஸர்வஸ்யசாஹம்‌ ஹ்ருதி, ஸந்நிவிஷ்டோ மத்தஸ்ம்ருதி: ஜ்ஞாநமபோஹநஞ்‌ (கீ தை 15-1) என்றும்‌, “ஈஸ்வரஸ்‌ ஸர்வ பூதாநாம்‌ ஹ்ருத்‌தே ஸோரஜ “ந திஷ்டதி ப்‌ராமயந்‌ ஸர்வபூதாநி யந்த்ராரூடாநி மாயயா (கீதை 18-61 )என்றும்‌ ஸ்வ ஸரீரபூதமான ஸர்வ ஜந்துக்களினுடைய ஹ்ருதய ப்ரதேஸத்திலே நின்று ஸகல ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளையும்‌ தானே பண்ணுவிக்கையாகிற அவனுடைய நியந்த்ருத்வம்‌; (ஸெளலப்‌ய) “தஸ்யாஹம்‌ ஸுலப: பார்த்த நித்ய யுக்தஸ்ய யோகி ந:” (கீதை 8-14) என்றும்‌, “பரித்ராணாய ஸாதூநாம்‌ விநாஸாய ச துஷ்க்ருதாம்‌ தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே (கீதை 19-8) என்றித்யாதியாலும்‌ பக்திமான்கள்‌ நிமித்தமாகவும்‌ அவதார ப்ரயுக்தமாகவும்‌ உண்டான அவனுடைய ஸெளலப்‌யம்‌; (ஸாம்ய) ‘ஸமோஹம்‌ ஸர்வபூதேஷ- ந மேத்‌வேஷ்யோஸ்தி ந ப்ரிய:” (கீதை 9-29 என்று அவனுடைய ஸர்வபூத ஸமத்வம்‌; (அஹங்காரதோஷ) “ப்ரக்ருதே: க்ரியமாணா நிர்குணை: கர்மாணி ஸர்வ: அஹங்கார விமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே” (கீதை 3-27) என்று அஹங்கார தோஷம்‌; (இந்த்‌ரிய பல) “இந்த்‌ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம்‌ மந:” (கீதை 2-60) என்று இந்த்‌ரிய ப்ராபல்யம்‌ (மந:ப்ராதாநய) “அஸம்ஸயம்‌ மஹாபாஹோ மநோ துர் நிக்‌ரஹம்‌ சலம்‌ அப்‌யாஸேந து கெளந்தேய வைராக்‌யேண ச க்‌ ருஹ்யதே” (கீதை 6-35) இத்யாதிகளிலே சொல்லப்பட்ட மந:ப்ராதா நீயம்‌; (கரணநியமந) “தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர: ஸர்வேந்த்‌ரியாணி ஸம்யம்ய மநோ ஹ்ருதி நிருத்ய ச (கீதை 2-61 இத்யாதிகளாலே சொல்லப்பட்ட கரண நியமநம்‌; (ஸூக்ருதி பேத) “சதுர்விதா பஜந்தே மாம்‌ ஜநா: ஸுக்ருதிநோர்ஜுந ஆர்த்தோ ஜிஜ்ஞாஸ ரர்த்தார்த்த ஜ்ஞாநீ ச பரதர்ஷப,” (கீதை 7-16) என்று சொல்லப்பட்ட ஸுக்ருதி பேதம்‌; (தேவாஸுரவிபா ௧) “த்‌வெள பூதஸர்கெள, லோகேஸ்மிந்‌ தைவ ஆஸ ஏவ ச தை வீ ஸம்பத்‌ விமோக்ஷாய நிபந்தா யாஸுரீமதா” (கீதை 16-6) இத்யாதிகளாலே சொல்லப்பட்ட தேவாஸுர விபாகம்‌; (விபூதி யோக,) “ப்ராதாந்யத: குரு ஸ்ரேஷ்ட, நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே” (கீதை 10-10), “ஆதித்யாநாம்‌ அஹம்‌ விஷ்ணு: ஜ்யோதிஷாம்‌ ரவிரம்ஸூமாந்‌’ (கீதை 10-2) இத்யாதிகளாலே சொல்லப்பட்ட விபூதி யோகம்‌; (விஸ்வரூபதர்ஸந) “பஸ்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூத விஸேஷ ஸங்காந்‌ ப்‌ரஹ்மாண மீஸம்‌ கமலாஸநஸ்த்தம்‌ ருஷீம்ஸ்ச ஸர்வாநுரகாம்ஸ்ச தீப்தாந்‌ (கீதை 11-15) இத்யாதியாலே சொல்லப்பட்ட விஸ்வரூப தர்ஸநம்‌; (ஸாங்க பக்தி) மந்மநாபவ மத்பக்தோ மத்‌ யாஜீ மாம்‌ நமஸ்குரு மாமேவைஷ்யஸி ஸத்யம்‌ தே ப்ரதிஜாநே ப்ரியோஸி மே” (கீதை 18-65) என்று சொல்லப்பட்ட அங்க, ஸஹிதையான பக்தி; (ப்ரபத்தி த்‌வைவித்‌யம்‌) தைவீஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா மாமேவயே ப்ரபத்‌யந்தே மாயாமேதாம்‌ தரந்தி தே” (கீதை 7-10), “தமேவ ஸரணம்‌ ௧ச்ச ஸர்வபாவேந பாரத (கீதை 18-62) இத்யாதியாலே சொல்லப்பட்ட அங்க ப்ரபத்தி, “ஸர்வ தர்மாந்‌ பரித்யஜ்ய” (கீதை 18-66) இத்யாதி யாலே சொல்லப்பட்ட ஸ்வதந்த்ர ப்ரபத்தியாகிற இவ்வர்த்த, விஸேஷங்களை ஸ்ரீ கீதா முகத்தாலே உபபாதித்தாப்போலே,
    “அடியேனுள்ளான்‌ உடலுள்ளான்‌” (திருவாய்மொழி 8-8-2 என்று ஜீவ பர பேதமும்‌, ஜீவர்களுக்கு பரஸ்பர பேதமும்‌, “சென்று சென்று பரம்பரமாய்‌ யாதுமின்றித்‌ தேய்ந்தற்று நன்று தீதென்றறிவரிதாய்‌ நன்றாய்‌ ஞானங்கடந்ததே” (திருவாய்மொழி 8-8-5) என்று தேஹத்துக்கும்‌ ஜீவனுக்கும்‌ உண்டான பேதமுமாகிற தத்த்வ விவேகத்தையும்‌, “மின்னின்‌ நிலையில மன்னுயிர்‌ ஆக்கைகள்‌” (திருவாய்மொழி 1-1-2), “உள்ளதும்‌ இல்லதும்‌”(திருவாய்மொழி 1-2-8) என்று ஆத்மாவினுடையவும்‌ அசித்தினுடையவும்‌ நித்யத்வாநித்யத்வங்களையும்‌, “உடல் மிசை உயிரெனக்‌ கரந்து எங்கும்‌ பரந்துளன்‌’ (திருவாய்மொழி 1-1-7) என்றும்‌, “கரந்தசிலிடந்தொறும்‌ இடந்திகழ்‌ பொருடொறும்‌” (திருவாய்மொழி 1-1-10) என்றும்‌ அந்த சேதநாசேதநங்கள்‌ ஸரீரமாகத்‌ தான்‌ ஸரீரியாய்க்‌ கொண்டு “நின்றனர்‌” (திருவாய்மொழி 1-1-6) இத்யாதி யாலே ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள்‌ ஸ்வாதீநமாம்படி இருக்கிற அவனுடைய நியந்த்ருத்வத்தையும்‌, பத்துடை யடியவர்க்கு எளியவன்‌ (திருவாய்மொழி 1-3-1) என்றும்‌, “பல பிறப்பாய்‌ எளிவருமியல்வினன்‌ ‘ (திருவாய்மொழி 1-3-2) என்றும்‌ ஆஸா லேஸமுடையவர்க்கு ஸுலபன்‌ என்றும்‌, அவதரித்து ஸுலபனாயென்றும்‌ சொல்லுகிற அவனுடைய ஸெளலப்‌ யத்தையும்‌, “முற்றவும்‌ நின்று” (திருவாய்மொழி 1-2-6) என்று ஆஸ்ரயணீயத்வே ஸர்வஸமனாய்‌ நின்றானென்று சொல்லப்பட்ட அவனுடைய ஸாம்யத்தையும்‌, ‘ நீர் நுமதென்றிவை வேர்முதல்‌ மாய்த்து” (திருவாய்மொழி 1-2-3) என்று அஹங்கார தோஷத்தையும்‌, “விண்ணுளார்‌ பெருமாற்கு அடிமை செய்வாரையும்‌ செறும்‌ ஐம்புலன்‌” (திருவாய்மொழி 7-1-6) என்று இந்த்‌ரிய பலத்தையும்‌, “என்றும்‌ ஏத்துதல்‌ மனம்‌ வைம்மினோ” (திருவாய்மொழி 3-6-3) என்று மந: ப்ராதாந்யத்தையும்‌, “உள்ள முரை செயல்‌ உள்ள விம்‌ மூன்றையும்‌ உள்ளிக் கெடுத்து” (திருவாய்மொழி 1-2-8) என்று கரண நியமநத்தையும்‌, ‘பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம்‌ கொள்வர்‌” (திருவாய்மொழி 4-1-1) என்கையாலே ஆர்த்தனாகிற ப்‌,ரஷ்டைஸ்வர்ய காமன்‌, இறுகலிறப்பென்கையாலே ஜிஜ்ஞாஸுவான கேவலன்‌, ‘குணங்கொள்‌ நிறைபுகழ்மன்னர்‌’ (திருவாய்மொழி 4-1-8) இத்யாதியாலே அர்த்தார்த்தியான அபூர்வைஸ்வர்ய காமன்‌ “திரு நாரணன்‌ தாள்‌ காலம் பெறச்‌ சிந்தித்துய்ம்மினோ” (திருவாய்மொழி 4-1-1) இத்யாதியாலே சொல்லப்பட்ட ஜ்ஞாநியாகிற பகவச் சரணார்த்தி என்கிற ஸுக்ருதி பேதத்தையும்‌, “தேவர்கள்‌ தாமும்‌ புகுந்து அரக்கரசுரர்‌ பிறந்தீருள்ளீரேல்‌” (திருவாய்மொழி 5-2-5) என்று தேவாஸூர விபாகத்தையும்‌, புகழு நல்லொருவனென்கோ திருவாய்மொழி 3-4-1) என்று தொடங்கி ‘நல்குரவும்‌ செல்வும்‌” (திருவாய்மொழி 6-3-1 “மாயா வாமனனே” (திருவாய்மொழி 7-8-1 என்கிற திருவாய்மொழிகளிலே சொல்லப்பட்ட விபூதி யோகத்தையும்‌, “நீராய்‌ நிலனாய்த்‌ தீயாய்க்‌ காலாய்‌ நெடுவானாய்‌ சீரார்‌ சுடர்களிரண்டாய்ச்‌ சிவனாய்‌ அயனானாய்‌” (திருவாய்மொழி 6-9-1) என்று விங்வரூப தர்ஸனத்தையும்‌, ‘வணக்குடைத்‌ தவநெறி வழிநின்று புறநெறிகளைகட்டு உணக்குமின்‌ பசையற அவனுடை உணர்வுகொண்டுணர்ந்தே” (திருவாய்மொழி 1-3-5) என்றும்‌, “நன்றெனநலம்‌ செய்வது அவனிடை” (திருவாய்மொழி 1-3-7) என்றும்‌ “மேவித் தொழுதுய்ம்மினீர்கள்‌ வேதப்
    புனிதவிருக்கை நாவில்‌ கொண்டச்சுதன் தன்னை ஞானவிதி பிழையாமே” (திருவாய்மொழி 5-2-9) என்று அங்க ஸஹிதமான பக்தி யோகத்தையும்‌, “சரணமாகும்‌ தனதாளடைந்தார்க்‌ கெல்லாம்‌” (திருவாய்மொழி 8-10-5) என்றும்‌ “மற்றொன்றில்லை” (திருவாய்மொழி 9-1-7) என்கிற பாட்டிலும்‌ சொல்லப்பட்ட ப்ரபத்தி த்‌வைவித்‌யத்தையும்‌
    ஆக இவ்வர்த்த விஸேஷங்களை ப்ரபந்தத்திலே ப்ரதிபாதிக்கக்‌ காண்கையாலே “மாயன்‌ அன்றோதிய வாக்கை” (நான்முகன்‌ திருவந்தாதி 71) என்கிற ஸ்ரீ கீதையோடொக்கும்‌ என்கிறார்‌.

    190-அது தத்த்வோபதேஸம்‌; இது தத்த்வதர்ஸி வசநம்‌.

    ஆக இதுக்குக்‌ கீழ்‌ ஸ்ரீ கீதையோ டொக்கத்‌ திருவாய்மொழிக்கு ஸாம்யம்‌ சொல்லிற்று. இனி மேல்‌ இதற்குண்டான வக்த்ரு வைலக்ஷண்யமும்‌ ப்ரபந்தோதய ஹேது வைஷம்யமும்‌ உபதேஸத்தனுடைய பல வைஷம்யமும்‌, ப்ரபந்த ப்ரதிபாத்‌ய அர்த்த வைஷம்யமும்‌ சொல்லுகிறது. (அது தத்வோபதேஸம்‌) அந்த ஸ்ரீகீதை பரதத்த்வ பூதனான க்ருஷ்ணன்‌ தானே உபதேஸித்தது. இந்தப்ரபந்தம்‌ (தத்த்வதர்ஸி வசநம்‌) “தத்‌ வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஸ்நேந ஸேவயா உபதேஷயந்தி தே ஜ்ஞாநம்‌ ஜ்ஞாநிந: தத்த்வ தர்ஸிந:” (கீதை 4-34) என்று இது அவனும்‌ ஆப்த தமனாக அருளிச் செய்த தத்வதர்ஸிகளான இவருடைய வார்த்தை. “அஹம்‌ க்ருத்ஸ்நஸ்ய ஐகத: ப்ரபவ: ப்ரலயஸ் ததா மத்த: பர தரம்‌ நாந்யத்‌ கிஞ்சிதஸ்தி தநஞ்ஜய” (கீதை 7-6 என்று ஸ்வ வைபவத்தைத்‌ தானே அருளிச்
    செய்கையாலே ஸ்வப்ரமம்ஸை போலிருக்கையாலே மந்த மதிகளுக்கு விஸ்வஸநீயமல்ல. “பொலிந்து நின்ற பிரான்‌ கண்டீர்‌ ஒன்றும்‌ பொய்யில்லை போற்றுமினே” (திருவாய்மொழி 4-10-5) என்று மத்‌யஸ்த்தரான இவர்‌ அருளிச்‌ செய்த இது ஆப்த வாக்யமாகையாலே விஸ்வஸநீயம்‌. ஆகை யிறே அவன் தான்‌ தத்த்வதர்ஸிகளை ப்ரஸம்ஸித்து அவர்களுபதேஸிக்குமதுவே ஜ்ஞாநம் என்கிறது –

    191-அது ஐவரை வெல்வித்துப்‌ பதிற்றைந்திரட்டி படச் சொன்னது; இது நாடாகத்‌ தோற்றோமென்று ஐயைந்து முடிப்பான்‌ சொன்னது.
    (அது ஐவரை வெல்வித்துப்‌ பதித்தைந்திரட்டி படச்‌ சொன்னது) அந்த ஸ்ரீ கீதை “த்‌ரெளபத்யாஸ்‌ ஸஹிதாஸ் ஸர்வே நமஸ் சக்ருர்‌ ஜநார்த்த நம்‌
    ” (பார.ஆர. 192-56) என்று ராஜ்யகாங்க்ஷிகளாய்‌ வந்து ஸரணம்‌ புகுந்த பாண்டவர்களைவரையும்‌ “அன்றைவரை வெல்வித்த” (திருவாய்மொழி 4-6-1) என்கிறபடியே “ந காங்க்ஷே விஜயம்‌ க்ருஷ்ண” (8. தை 1-32) என்ற இவனை” ஸ்திதோஸ்மி‘ ‘ (கீதை 18-73) என்னப்‌ பண்ணி யுத்தத்திலே விஜயிகளாக்கி, “பதிற்றைந் திரட்டிப்‌ படை வேந்தர் பட (பெரியதிருமொழி 2-4-4) என்று அவர்களுக்கு விரோதிகளான துர்யோதநாதிகளை முடிக்கைக்காகச்‌ சொன்னது. (இது நாடாகத்‌ தோற்றோம்‌ என்று ஐயைந்து முடிப்பான்‌ சொன்னது) இந்த ப்ரபந்த,ம்‌ “தோற்றோம்‌ மடநெஞ்சம்‌ எம்பெருமான்‌ நாரணற்கு” (திருவாய்மொழி 2-1-7) என்று வகுத்த ஸேஷியானவன்‌ பக்கலிலே ஸர்வரும்‌ தோற்றோம்‌ என்று அநந்யார்ஹ ஸேஷ பூதராம்படி ஐயைந்தையும்‌ முடிப்பான்‌ சொன்னது. அந்த ஸேஷத்வ விரோதியான ப்ரக்ருதி ப்ராக்ருத ஸங்கத்தையும்‌ ஆத்மாவினுடைய ஸ்வாதந்த்ர்யத்தையும்‌ அறுத்து ஸம்ஸார பந்தத்தையும்‌ முடிப்பான்‌ சொன்னது ஆகையாலே அது பந்த மோக்ஷங்கள்‌ இரண்டுக்கும்‌ ஹேது. இது மோக்ஷ ஏக ஹேதுவாயிருக்கும்‌ என்கிறார் –

    192-அங்கு நம்பி சரணென்று தொடங்கி முடிவில்‌ அப்ரிய மென்றது; இங்கு பரமே யென்றிழிந்து பொலிக வென்று உகந்தது.
    (அங்கு நம்பிசரண்‌ என்று தொடங்கி முடிவில்‌ அப்ரியமென்றது) அதினுடைய உபக்ரமத்திலே “நாந்தகமேந்திய நம்பி சரண்‌ என்று தாழ்ந்த தனஞ்சயற்காகி’
    (பெரியாழ்வார்‌ திருமொழி 1-9-4) என்று ‘ ஸிஷ்யஸ்தேஹம்‌ ஸமாதி, மாம்‌ த்வாம்‌ ப்ரபந்நம்‌” (கீதை 2-7) என்று ஸிஷ்யனான அர்ஜுநனுடைய அநுவர்த்தந பூர்வகமாகையாலே ப்ரீதியோடே உபக்ரமித்து, “நூநமஸ்ரத்‌ததா நோஸி துர்மேதஸ்சாஸி பாண்டவ அபுதத்‌யா யந்ந ஜாநீஷே தந்மே ஸுமஹத ப்ரியம்‌” (அனுகீதை) என்று அவன்‌ பக்கலிலே அவிஸ்வாஸத்தைக்‌ காண்கையினாலே அப்ரீதியோடே தலைக் கட்டிற்று. (இங்கு பரமே என்றிழிந்து பொலிக என்றுகந்தது) இவருபதேஸிக்கிற விடத்தில்‌ தாந்தராய்‌ ஸமித் பாணிகளாய்க்‌ கொண்டு அநுவர்த்திப்பாரின்றிக்கே விமுகரா யிருக்க க்ருபையாலே உபதேஸிக்கையாலே உபதேஸோபக்ரமத்திலே “ஏபாவம்‌ பரமே” (திருவாய்மொழி 2-2-1) என்று அப்ரீதியோடே உபக்ரமித்து, அவ்வுபதேஸம்‌ கேட்டு ஜகத்தாகத்‌ திருந்துகையாலே அப்படித்‌ திருந்தினவர்களைக்‌ கண்டு “பொலிக பொலிக” (திருவாய்மொழி 5-2-1) என்று மங்களாஸாஸநம்‌ பண்ணி உகப்போடே தலைக்‌ கட்டிற்று. ஆகையாலே உபதேஸம்‌ ஸப்ரயோஜநமாய்த்தது இதிலே என்கிறார் –

    193-அதில்‌ ஸித்‌த தர்மவிதியே; இதில்‌ வித்‌யநுஷ்டாநங்கள்‌.

    (அதில்‌ ஸித்‌த தர்ம விதியே) அந்த ஸ்ரீகீதைக்கு தாத்பர்யார்த்தம்‌ “மாமேகம்‌ ஸரணம்‌ வ்ரஜ” (கீதை 18-66 என்று ஸித்‌த தர்மவிதாந மொன்றுமே யாய்த்து; (இதில்‌ வித்‌யநுஷ்டாநங்கள்‌) (இந்த ப்ரபந்தத்திலே “திருநாரணன் தாள்‌ காலம் பெறச்‌ சிந்தித்துய்ம்மினோ” (திருவாய்மொழி 4-1-1 என்று விதியும்‌ அடிக்கீழ்‌ அமர்ந்து புகுந்தேனே (திருவாய்மொழி 6-10-10) என்று அநுஷ்டாநமும்‌ இரண்டும்‌ காணலாம்‌. இத்தாலே இப் ப்ரபந்தம்‌ விதி ப்ரகாஸகமான மாத்ரம்‌ அன்றிக்கே அநுஷ்டாந ப்ரகாஸகமும்‌ என்கிறார் –

    194-பகவன்‌ ஞானவிதி பணிவகையென்று இவரங்கீ காரத்தாலே அதுக்கு உத்கர்ஷம்
    அந்த கீதை தனக்கும் உத்கர்ஷம் இவருடைய பரிக்ரஹத்தாலே என்கிறார் (பகவன்‌ ஞானவிதி பணிவகையென்று) “அம் பகவன்‌ வணக்குடைத்‌ தவநெறி” (திருவாய்மொழி 1-3-5) என்றும்‌ “அச்சுதன்‌ தன்னை ஞான விதி பிழையாமே (திருவாய்மொழி 5-2-9) என்றும்‌ “பண்டே பரமன்‌ பணித்த பணி வகையே கண்டேன்‌ கமல மலர்ப்பாதம்‌” (திருவாய்மொழி 10-4-9) என்றும்‌ ப்ராமாணிகரான இவர்‌ இத்தை இப்படி ப்ரமாணமாக அங்கீ கரிக்கையாலே யாய்த்து அந்த ஸ்ரீகீதைக்கு உத்கர்ஷம் உண்டாய்த்து என்கிறார் -அல்லது புத்த முநியாயும்‌ கபிலமுநியாயும்‌ சொன்ன பெளத்த ஸாஸ்த்ரமும்‌ ஸாங்க்‌ய ஸாஸ்த்ரமும்‌ அவன்‌ சொன்னது யாகிலும் அந்த ஸாஸ்த்ரங்களுக்கு ப்ராமாணிக பரிக்‌ரஹமில்லாமையாலே இறே அவை அப்ரமாணமாய்த்து-

    195-வேத வேத்‌ய வைதிகோபதேஸம்‌ ஆவித்‌யரளவிலே; அஜ்ஞர்‌ ஜ்ஞாநீகள்‌ ஜ்ஞாந விஸேஷ யுக்தர்‌ ஸர்வஜ்ஞனென்னாமல்‌ இவர்‌ திருத்துவர்‌. இனி மேல்‌ அவனுடைய ௨பதேஸம்‌ ஸங்குசித விஷயம்‌; இவருடைய உபதேஸம்‌ அஸங்குசித விஷயமென்கிறார்‌ வேத வேத்‌யனென்று தொடங்கி. (வேத வேத்‌ய வைதிகோபதேஸம்‌ ஆவித்‌யரளவிலே) வேதமும்‌ வேத வேத்‌யனும்‌ வைதிகரான ருஷிகளுமுபதேஸிப்பது ‘ஆவித்‌ய: ப்ராக்ருத: ப்ரோக்த:” என்று அவித்‌யா ஸம்பந்திகளாய்‌ அத ஏவ தத்த்வ ஹித புருஷார்த்த, ஜ்ஞானமின்றிக்கே இருக்கிற ஸம்ஸாரிகளுக்கே. அவ்வளவன்றிக்கே இவர்‌ அஜ்ஞர்‌ ஜ்ஞாநிகள்‌ ஜ்ஞாந விஸேஷ யுக்தர்‌ ஸர்வஜ்ஞனென்னாமல்‌ திருத்துவர்‌. அஜ்ஞரான ஸம்ஸாரிகளோடு தத்வ ஹித புருஷார்த்தங்களில்‌ விஸத ஸிக்ஷை பிறந்த முமுஷுக்களோடு பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை விஸத தமமாக ஸாக்ஷாத்கரித்து அநுபவிக்கும்படி ஸாத்‌யதஸையிலே நிற்கிற ஜ்ஞாந விஸேஷ யுக்கரோடு “நைவ கிஞ்சித்‌ பரோக்ஷம்‌ தே” (ஜிதந்தே ஸ்தோத்ரம்‌) என்றும்‌, யோ வேத்தி யுகபத்‌ ஸர்வம்‌ ப்ரத்யக்ஷேணே ஸதா ஸ்வத:” என்றும்‌ சொல்லுகிறபடியே ஸர்வத்தையும்‌ ஸர்வகாலமும்‌ ப்ரத்யக்ஷமாக யுகபதேவ ஸ்வத: ஸாக்ஷாத்கரிக்கும்‌ ஸர்வஜ்ஞனோடு வாசியற ஸர்வர்க்கும்‌ இவர்‌ ஹிதாஹிதங்கள்‌ சொல்லித்‌ திருத்துவர்‌ என்கிறார் –

    196-அறியாதார்க்கு உய்யப் புகுமாறும்‌, இக்கரை யேறினார்க்கு இன்ப வெள்ளமும்‌, நிலை அறியாதாருக்கு ஆழங்காலும்‌ , கரையேற்றுமவனுக்கு நாலாறும்‌ அறிவிக்க வேணும்‌.
    திருத்துகையாவது அஜ்ஞாதஜ்ஞாபநம்‌ பண்ணுகையிறே. அதில்‌ இவ்வதிகாரிகளுக்கு உபதேஸிக்கும்‌ அர்த்த விஸேஷங்கள்‌ எவை யென்னில்‌, (அறியாதார்க்கு உய்யப் புகுமாறும்‌) “அறியாதார்‌ என்றுமறியாதார்‌ கண்டாமே” (பெரிய திருமொழி 1-7-8) என்று முதலிலே பகவஜ் ஜ்ஞாநமில்லாத ஸம்ஸாரிகளுக்கு அஃதே வுய்யப் புகுமாறு’ (திருவாய்மொழி 4-1-11) என்று “திருநாரணன்‌ தாள்‌” (திருவாய்மொழி 4-1-1 என்கிறவிதுவே உஜ்ஜீவநோபாயம்‌ என்று ஸம்ஸாரோத்தீர்ண உபாயத்தையும்‌, (இக்கரை ஏறினார்க்கு இன்ப வெள்ளமும்‌) “அக்கரை யென்னும் அனர்த்தக்கடலுளழுந்தி உன்‌ பேரருளால்‌ இக்கரை யேறி இளைத்திருந்தேன்‌” (பெரியாழ்வார்‌ திருமொழி 5-3-7 என்று ஸம்ஸார ஸமுத்‌ரத்திலே அழுந்துகிறவர்களுக்கு பகவதேகோபாய ஜ்ஞாநம்‌ பிறக்கையாவது இங்கே யிருக்கச்‌ செய்தே அக்கரை இக்கரை என்னலாம்படி இருக்குமிறே. ஆகையாலந்த பகவதேகோபாய ஸங்கத்திலே வ்யவஸிதராகையாலே ஸ்வ ப்ரவிருத்தி நிவ்ருத்தரா யிருக்கிறவர்களுக்கு “முகில்வண்ண வானத் திமையவர்‌ சூழ விருப்பர்‌ பேரின்ப வெள்ளத்தே (திருவாய்மொழி 7-2-11 என்று அவர்கள்‌ அந்த வ்யவஸாயம்‌ குலைந்து த்வரிக்கும்படியான ப்ராப்ய வைலக்ஷண்யத்தையும்‌, (நிலையறியாதார்க்கு ஆழங்காலும்‌) ஸீல குணத்தில்‌ இழியாமையாலே அதில்‌ நிலையறியாதவர்களுமாய்‌ ப்ராப்ய தஸையிலே நிற்கிறவர்களுக்கு “செஞ்சொற் கவிகாள்‌ உயிர்‌ காத்து ஆட் செய்ம்மின்‌” (திருவாய்மொழி 10-7-1 என்று பகவத் குணாநுபவம்‌ பண்ணுகிற நீங்கள்‌ ஸீலகுணமாகிற ஆழங்காலில்‌ இழியாதே கொள்ளுங்கோள்‌ என்கிற ஆழங்காலையும்‌, (கரையேற்றுமவனுக்கு நாலாறும்‌ அறிவிக்க வேணும்‌) “ஸம்ஸார ஸாகரம்‌ கோரமநந்த க்லேஸ பாஐநம்‌ த்வாமேவ ஸரணம்‌ ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண:” (ஜிதந்தே ஸ்தோத்ரம்‌ என்று ஸம்ஸார ஸாகரத்தைக்‌ கடத்தி அக்கரைப்‌ படுத்துமவனுக்கு “பொங்கைம்புலன்‌‘ (திருவாய்மொழி 10-7-10) இத்யாதியாலே சதுர்விம்ஸதி தத்த்வங்களையும்‌ இப்படி அறிவிக்க வேணும்‌-என்கிறார்‌-

    197-அவன்‌ முனிந்தார்க்குத்‌ தாம்‌ கண்டது; தம்மை முனிவார்க்குத்‌ தம்‌ கண்‌; காணாதது காண்பார்க்குக்‌ கண்மாறும்‌ இடம்‌; ராகாந்த னுக்கு மாயாதோஷம்‌ இவர்‌ காட்டுமவை.
    இனி அவர்களுக்கு இவ்வர்த்தங்கள்‌ ஜ்ஞாதமாகைக்கு ஹேதுவையும்‌, இவர்களுக்கு இவ்வர்த்த விஸேஷங்களை உபதேஸிக்கைக்கு ஹேதுவையும்‌ அவ்வர்த்த விஸேஷங்கள்‌ தன்னையும்‌ அருளிச் செய்கிறார்‌. (அவன்‌ முனிந்தார்க்குத்‌ தாம்‌ கண்டது) “ந க்ஷமாமி கதாசந” என்றும்‌ ‘க்ஷிபாம்யஜஸ்ரம ஸூபாந்‌ ஆஸுரீஷ்வேவ யோநிஷ**‘ என்று அவன்‌ நிக்ரஹத்துக்கு விஷயமாகையாலே அஜ்ஞராயிருக்கிற ஸம்ஸாரிகளுக்கு ஞானப் பிரானை யல்லாலில்லை நான்‌ கண்ட நல்லது” என்றும்‌ “பெருங்கேழலார் தம்‌ பெருங்கண்‌ மலர்ப்‌ புண்டரீகம்‌ நம்மேல்‌ ஒருங்கே பிறழவைத்தார்‌‘ (திருவிருத்தம்‌ 45) என்கிற பாட்டாலே மஹா வராஹமான ஸர்வேஸ்வரன்‌ கடாக்ஷிக்கையாலே எனக்கு ஸத்‌ருஸ மில்லை; ஸம்ஸார ஸம்பந்த மும்‌ என்னுடைய ஸம்பந்திகளுக்கும்‌ கிட்டா தென்னும்படி தமக்கு பலித்தபடியாலே ஸர்வர்க்கும்‌ உஜ்ஜீவநோபாயம்‌ அந்த ஜ்ஞாந வராஹமல்லது இல்லை; இது நானறுதியிட்ட விலக்ஷணமான அர்த்தமென்றும்‌; (தம்மை முனிவார்க்குத்‌ தம்‌ கண்‌) “எங்ஙனேயோ அன்னைமீர்காள் என்னை முனிவது” (திருவாய்மொழி 5-5-1) என்று உபாய அத்யாவசாய தசையில் நின்று துறும்பு நறுக்கில் ஸ்வரூப ஹாநியாம் என்னும் செங்கிடு குட்டைகளாய் இருக்கையாலே -ப்ராப்ய வைலக்ஷண்யம் அறியாதே ப்ராப்ய விஷயத்திலே இத்தனை அதி ப்ராவண்யமாகாதென்று தம்மைப்‌ பொடியுமவர்களுக்கு “என்னெஞ்சினால்‌ நோக்கிக்‌ காணீர்‌ என்னை முனியாதே’ (திருவாய்மொழி 5-5-2) என்று ப்ராப்ய வைலக்ஷ்ண்யத்தை அவகாஹித்த என்‌ நெஞ்சாலே பார்க்க மாட்டிகோளோ என்று தம்முடைய உட் கண்ணான ப்ராப்ய வைலஷண்ய ஜ்ஞாநத்தையும்‌, (காணாதது காண்பார்க்குக்‌ கண்மாறுமிடம்‌) “ஸர்வம்‌ ஹ பஸ்ய: பஸ்யதி” என்று ஸர்வத்தையும்‌ ஸாக்ஷாத்கரிக்குமவர்களாகையாலே ஸீலகுணம்‌ பாதகம்‌ என்றறியாதே இதிலே இழியில்‌ செய்வதென்னென்றஞ்சி தாம்‌ அதிலே ஈடுபட்டவராகையாலே அந்த ஸீல குணத்திலே கண் வையாதே கொள்ளுங்கோள்‌ என்று கண்‌ மாறுமிடத்தையும்‌ (ராகாந்தனுக்கு மாயா தோஷம்‌) இவர் பக்கல்‌ உண்டான வ்யாமோஹத்தாலே முன்னடி தோற்றாதே இவர்க்கு த்யாஜ்யமான தேஹ தோஷத்தில்‌ கண் வைக்க அறியாதவனுக்கு “மங்கவொட்டுன்‌ மா மாயை (திருவாய்மொழி 10-7-10) என்று ப்ரக்ருதிதோஷத்தையும்‌ (இவர்‌ காட்டுமவை) இவர்களுக்கு இவர்‌ தர்ஸிப்பிக்குமவை இவ் வர்த்த விஸேஷங்கள் என்கிறார் –

    198-ஸாதந ஸாத்‌யஸ்த, மத்‌யஸ்தரை விட்டு அவற்றில்‌ கலங்கும்‌ ஜீவேஸ்வரர்க்கு வீடுமின்‌ நினைமின்‌ பிடித்தேன்‌ விடுவேனோ வைத்தெழ வூது வாடிநிற்கக்‌ கன்மமன்று ஆன்பின்‌ கைகழியேல்‌ உழிதராய்‌ என்‌ சொற்‌ கொள்‌ என்று இவர்‌ பலகாலும்‌ ஹிதாஹிதங்கள்‌ சொல்லுவர்‌.
    ஆனால்‌ அஜ்ஞர்களுக்கு உபதேஸிக்குமா போலே இவர்களெல்லார்க்கும்‌ எப்போதுமொக்கவும்‌ உபதேஸிப்பரோ என்னில்‌, (ஸாதந ஸாத்‌ய மத்‌யஸ்த்தரைவிட்டு] ஸாதந தஸையிலும்‌ ஸாத்‌ய தஸையிலும்‌ நிற்கிறவர்களாய்‌ அஜ்ஞருக்கும்‌ ஸர்வஜ்ஞனுக்கும்‌ நடுவே சொல்லப்பட்ட முமுஷுக்களுக்கும்‌ நித்ய முக்தர்க்கும்‌ காதாசித்கமாக உபதேஸித்துவிட்டு, (அவற்றில்‌ கலங்கும்‌ ஜீவேஸ்வரர்களுக்கு) அந்த ஸாதந ஸாத்‌யங்கள்‌ இன்னதென்று அறியாதே கலங்குகிற ஸம்ஸாரி சேதநர்க்கு (வீடுமின்‌ நினைமின்‌) “வீடுமின்‌ முற்றவும்‌“(திருவாய்மொழி 1-2-1 என்று பகவத் வ்யதிரிக்த ஸமஸ்தங்களையும்‌ விடுங்கோள்‌ என்று உபக்ரமித்து ‘சுனை நன்மலரிட்டு நினைமின்‌ நெடியானே (திருவாய்மொழி 10-5-10) என்று புஷ்பாத்‌ யுபகரணங்களைக்‌ கொண்டு அபரிச்சேத்‌ய ஸ்வரூபனான ஸர்வேஸ்வரனை த்ரிவித கரணங்களாலும்‌ ஆஸ்ரயியுங்கோள்‌ என்கிறது முடிவாகவும்‌ ஸம்ஸாரிகளுக்குப்‌ பலகாலும்‌ ஹிதாஹிதங்களைச்‌ சொல்லுவர்‌.
    (பிடித்தேன்‌ விடுவேனோ இத்யாதி ) (ஈஸ்வரனுக்கும்‌) பல காலும்‌ ஹிதாஹிதங்‌களைச்‌ சொல்லுவர்‌. இவர்‌ இவ்வளவிலே அயோக்‌யதாநுஸந்தாநம்‌ பண்ணி யகலப்புகில்‌ செய்வதென்‌ என்று அதிஸங்கை பண்ணுகிற ஈஸ்வரனை “உன்னை நான்‌ பிடித்தேன்‌ கொள்‌ சிக்கனவே” (திருவாய்மொழி 2-6-1), “உன்னை நான்‌ அடைந்தேன்‌ விடுவேனோ” (திருவாய்மொழி 2-6-10 என்று அவனை மாஸூச:” (கீதை 18-66) என்றும்‌, ‘தோகை மா மயிலார்கள்‌ செவியோசை வைத்தெழ ஆகள்‌ போக விட்டுக்‌ குழலூது’ (திருவாய்மொழி 6-2-2) என்று ஸாதந ஸாத்‌ யங்கள்‌இன்னதென்றும்‌ “ மழறுதேன்‌ மொழியார்கள்‌ நின்னருள்‌ சூடுவார்‌ மனம்வாடி நிற்க என்‌ குழறு பூவையொடும்‌ கிளியோடும்‌ குழகேலே (திருவாய்மொழி -6-2-5) என்றும்‌ “கன்மமன்றெங்கள்‌ கையில்‌ பாவை பறிப்பது” (திருவாய்மொழி 6-2-8) என்றும்‌ ஆன் பின்‌ போகேல்‌” (திருவாய்மொழி 10-3-8) என்றும்‌ “என்‌ கை கழியேல்‌ (திருவாய்மொழி 10-3-8) என்றும்‌ (இப்படி அக்ருத்யங்களைச்‌ செய்யாதே கொள்ளென்றும்‌, நீயுகக்கு நல்லவரொடும்‌ உழி தராயே” (திருவாய்மொழி 10-3-8) என்றும்‌ அவத்தங்கள் விளையும்‌ என்‌ சொற் கொளந்தோ” (திருவாய்மொழி 10-3-10) என்றும்‌ ஈஸ்வரனுக்குப்‌ பல காலும்‌ ஹிதா ஹிதங்களைச்‌ சொல்லுவர் –

    199-கதிர் ஞான மூர்த்திக்கு உணர்த்துவது ப்ரேமத்தாலே; தமமூடுவார்க்கு வேட்கை யெழுவிப்பது ஜ்ஞானத்தாலே.
    ஆனால்‌ இருவர்க்கும்‌ பலகாலும்‌ ஹிதாஹிதங்கள்‌ சொல்லுகைக்கு ஹேது என்னென்னில்‌, இவர்க்குண்டான ஜ்ஞாந ப்ரேமங்கள்‌ என்கிறார்‌. (கதிர் ஞான மூர்த்திக்கு உணர்த்துவது ப்ரேமத்தாலே) ‘பிணக்கி யாவரும்‌ யாவையும்‌ பிழையாமல்‌ பேதித்தும்‌ பேதியாததோர்‌ கணக்கில்‌ கீர்த்தி வெள்ளக்‌ கதிர்ஞான மூர்த்தியினாய்‌’ (திருவாய்மொழி 6-2-8) என்று ஸம்ஹார காலத்திலே ஸர்வத்தையு மொக்கக்‌ கலசி ஸ்ருஷ்டி காலத்திலே ஒருவருடைய கர்மம்‌ ஒருவர்க்குத்‌ தட்டாதபடி பிரித்து யுகபதேவ ஸாக்ஷாத்கார ஸமமாய்‌ விஸத தமமான ஜ்ஞானத்தை உடையவனாகையாலே ஸர்வஜ்ஞனாயிருக்கிறவனுக்கு “உனக்கொன்று உணர்த்துவன்‌” (திருவாய்மொழி 6-2-5) என்று ஹிதாஹிதங்களைச்‌ சொல்லுகைக்கடி அவன்‌ பக்கலிலே ப்ரேமத்தாலே. (தமமூடுவார்க்கு வேட்கை யெழுவிப்பது ஜ்ஞானத்தாலே) “கொள்ளென்று தமமூடும்‌” (திருவாய்மொழி 4-9-4) என்று தமோபி பூதராயிருக்கிற ஸம்ஸாரிகளுக்கு “நின் கண்‌ வேட்கை எழுவிப்பனே ‘ (திருவிருத்தம்‌ 96) என்று பகவத் பக்தியை உபதேஸிக்கிறது பகவத் விமுகரான இவர்களும்‌ நம்மைப் போலே பகவதநுபவம்‌ பண்ண வேணுமென்கிற ஜ்ஞானத்தாலே என்கிறார் –

    200-உயிர்‌ மாய்தல்‌ ஆழுமென்னாருயிர்‌ என்னும்‌ பர துக்கம்‌ ஸஹியாமை இரண்டிலுமுண்டு.
    இவர்களளவில்‌ இவர்க்குண்டான ஜ்ஞாந ப்ரேமங்கள்‌ இரண்டாலும்‌ பர துக்கம்‌ ஸஹியார்‌ என்னுமிடம்‌ சொல்லுகிறது மேல்‌. (உயிர்மாய்தல்‌ ஆழுமென்னாருயிர்‌ என்னும்‌ பரதுக்கம்‌ ஸஹியாமை இரண்டிலுமுண்டு) உயிர்மாய்தல்‌ கண்டாற்றேன்‌” (திருவாய்மொழி 4-9-3) என்று ஸம்ஸாரிகள்‌ துக்கம்‌ ஸஹியாமையும்‌, “அசுரர்கள்‌ தலைப்பெய்யில்‌ எவன் கொலாங்கு என்றாமுமென்னாருயிர்‌’ (திருவாய்மொழி 10-3-8) என்று அசுரர்கள்‌ ஒன்றாக வந்து கிட்டினார்களாகில்‌ அங்கென்னாய்‌ விளைகிறதோ என்று என்‌ ஜீவனானது தரைப்படா நின்றதென்கையாலே பரனான ஈஸ்வரனுடைய துக்கம்‌ ஸஹியாமையும்‌ அந்த ஜ்ஞாந ப்ரேமங்கள்‌ இரண்டிலுமுண்டு. ஆகையாலே இவையடியாக இருவர்க்கும்‌ உபதேஸிப்பர்‌ என்கிறார் –

    201-என்னதுன்னதாவியிலே அறிவாராத்மா என்று அவன்‌ மதம்‌ தோன்றும்‌.
    இன்னும்‌ இவ்வளவன்றிக்கே ஸ்வ ஸரீரத்திலே ஸர்வர்க்கும்‌ பரிவு நடக்கையாலே அவனுக்கு ஆத்ம பூதரான இவர்‌ அவனுக்குப்‌ பரியக் கடவர்‌ என்னுமிடமும்‌ தோன்றும்‌ என்கிறார்‌ மேல்‌. (உன்னதென்னதாவியிலே (என்னதுன்னதாவியிலே?) அறிவாராத்மாவென்று அவன்‌ மதம்‌ தோன்றும்‌) “உன்னதென்னதாவி” (திருவாய்மொழி 4-3-8) என்கிற இடத்திலே “அறிவாருயிரானாய்‌” (திருவாய்மொழி 6-9-8) என்றும்‌ “ஜ்ஞாநீ து ஆத்மைவ மே மதம்‌” (கீதை 7-18) என்று ஜ்ஞாநியானவன்‌ தனக்கு தாரகன்‌; மே மதம்‌, இது க்ருஷ்ண ஸித்‌தாந்தம்‌ என்று அவனுடைய அபிப்ராயத்தாலே இவர் தம்மைத்‌ தனக்கு தாரகராக நினைக்கிற வாகாரம்‌ தோற்றுகையாலும்‌ அவனுக் கிவர்‌ பரியக்‌ குறையில்லை யென்கிறார் –

    202-இருத்துமெண்டானாய்ப்‌ பொய் கலவாது அன்பு செய்து பற்றிலனாய்‌ ஷூத்‌த்‌ருட்‌ பீடித நிர்த்தநரைப்‌ போலே கண்டு கொண்டுண்டு பருகிப்‌ பரிஜனாதிகளோடே தன்னைத் தந்து என் செய்வன்‌ என்றே யிருந்து அகில பரத்தையும்‌ ஸமர்ப்பிக்க அது சுமந்து அல்லு நன்பகலும்‌ போகு என்றாலும்‌ அகல்வானுமல்லனாய்‌, போகேலென்றால்‌ உகப்பையும்‌ தவிர்ந்து விதி வகையே நடத்துமவனே உபதேஸ ஸத் பாத்ரம்‌.
    ஆனால்‌ இவர்‌ ஈஸ்வரனுக்கு உபதேஸித்தா ரென்னும்போது அவனுக்கு ஸிஷ்ய லக்ஷணம்‌ உண்டோ என்னில்‌, ஸிஷ்யனானவன்‌ ஆசார்யனை ஓரிடத்திலே வைத்துத்‌ தான்‌ அவனுடைய மநோ ரதமாய்‌ அவன் பக்கலிலே புரை யற்ற ஸ்நேஹத்தைப்‌ பண்ணி,
    புறம்புண்டான ஸங்கங்களை விட்டு தரித்‌ரன்‌ நிதி கண்டாப் போலவும்‌ பசித்தவன்‌ சோறு கண்டாற் போலவும்‌ தாஹித்தவன்‌ தண்ணீர்‌ கண்டாப் போலவும்‌ ஆசார்யன்‌ பக்கலிலே அத்யபிநிவேஸத்தைப்‌ பண்ணி
    ஸரீரமர்த்தம்‌ ப்ராணஞ்ச ஸத்‌குருப்யோ நிவேதயேத்‌” (விஹகேஸ்வர ஸம்ஹிதை)
    என்கிறபடியே தன்னுடைய ஆத்மாத்மீயங்களை ஆசார்ய விஷயத்திலே ஸமர்ப்பித்து, “க்ருத்ஸ்நாம்‌ வா ப்ருதிவீம்‌ தத்‌யாத்‌ ந தத் துல்யம்‌ கதஞ்சந” என்று இவன்‌ எல்லாம்‌ செய்தாலும்‌ ஆசார்யன்‌ பண்ணின உபகாரத்துக்கு ஸத்‌ருஸமில்லாமையாலே குறைவாளனாய்‌ ஆசார்யனுடைய தேஹ யாத்ரைகளெல்லாம்‌ தானே சுமந்து செய்யுமவனாய்‌ ஆசார்யன்‌ நிக்‌ரஹித்தாலும்‌ திவா ராத்ர விபாகமற அவனைப்‌ பிரியாதே அவனுக்கிஷ்டமானால்‌ தனக்குகப்பான வற்றையும்‌ விட்டு ஆசார்யன்‌ நியமித்தபடியே நடக்குமவனே ஸச்சிஷ்யனாகையாலே இந்த லக்ஷணம்‌ ஈஸ்வரன்‌ பக்கலிலே உண்டாகையாலே இவனுக்கே ஸச் சிஷ்ய லக்ஷணமுள்ளதென்கிறார்‌. (இருத்துமெண்டானாய்‌)இருத்தும்‌ வியந்தென்னைத்‌ தன்பொன்னடிக் கீழ்‌” (திருவாய்மொழி 8-7-1) என்று இவரை ஓரிடத்திலே இருத்தி “என்னெண்டானானான்‌” (திருவாய்மொழி 1-8-7) என்று இவருடைய நினைவு தானாய்‌ (பொய்கலவா தன்பு செய்து) “பொய்கலவாதென்‌ மெய்‌ கலந்தானே” (திருவாய்மொழி 1-8-5) என்று இவர்‌ திருமேனியில்‌ பண்ணின ஸங்கத்திலே ஒரு பொய்யின்றிக்கே “அந்தாமத் தன்பு செய்து” (திருவாய்மொழி 2-5-1) என்று பரம பதத்தில்‌ பண்ணும்‌ வ்யாமோஹத்தை இவர்‌ பக்கலிலே பண்ணி (பற்றிலனாய்‌) “‘ பற்றிலனீசனும்‌” (திருவாய்மொழி 1-2-6) என்று இவர் பக்கல்‌ ஸங்கத்தாலே பரமபதத்தில்‌ ஸங்கத்தையும்‌ விட்டு, (ஷூத்‌த்‌ருட் பீடித நிர்த்தநரைப் போலே கண்டு கொண்டுண்டு பருகி) “இருந்தான்‌ கண்டு கொண்டு (திருவாய்மொழி 8-7-2) என்று நிர்தநனானவன்‌ நிதி கண்டாப் போலே கண்டு கொண்டு “என்னை முற்றவும்‌ தானுண்டான்‌” (திருவாய்மொழி 9-6-8) என்றும்‌ “தானென்னை முற்றப்‌ பருகினான்‌ (திருவாய்மொழி 9-6-10) என்றும்‌ சொல்லுகிறபடியே பசி கனத்தவன்‌ சோறு கண்டாப்‌ போலவும்‌ தாஹித்தவன்‌ தண்ணீர்‌ கண்டாப் போலவும்‌ இவரை அபி நிவேஸத்தோடே அநுபவித்து (பரிஜநாதிகளோடே தன்னைத்‌ தந்து) ‘ பரிஜந பரிபர்ஹா பூஷணநாந்யாயுதாநி ப்ரவர குணகணாஸ்ச ஜ்ஞாந ஸக்த்யாத யஸ்‌தே பரமபத மதாண்டாந்யாத்ம தேஹஸ்‌ ததாத்மா வரத ஸகலமேதத்‌ ஸம் ஸ்ரிதார்த்த,ம்‌ சகர்த்த” (வரத ராஜஸ்தவம்‌ 63) என்றும்‌ “எனக்கே தன்னைத்‌ தந்த கற்பகம்‌” (திருவாய்மொழி 2-7-11 என்றும்‌ சொல்லுகிறபடியே தன்னையும்‌ தன்‌ விபூதியையும்‌ இவர்க்குக்‌ கொடுத்து, “உன்னடியார்க்கென்‌ செய்வன்‌ என்றே இருத்தி” (பெரியதிருவந்தாதி 53) என்கிறபடியே இவர்க்கு எல்லாம்‌ செய்தாலும்‌ தான்‌ இழவாளனாய்‌ (அகில பரத்தையும்‌ ஸமர்ப்பிக்க அது சுமந்து) இவராத்மாத்மீய ஸகலபரத்தையும்‌ இவன் பக்கலிலே ஸமர்ப்பிக்க “வேங்கடத்துறைவார்க்கு நமவென்னலாங்கடமை அது சுமந்தார்கட்கே” (திருவாய்மொழி 3-3-6) என்று “பூயிஷ்டாம்‌ தே நம உக்திம்‌” (யஜுர்வேதம்‌! )என்கிறபடியே இவருடைய நம: என்கிற உக்தி அவனுக்கு கனத்துத்‌ தோற்றுகையாலே இவருடைய அகில பரத்தையும்‌ சுமந்து (அல்லு நன்‌ பகலும்‌ போகு என்றாலும்‌ அகல்வானுமல்லனாய்‌) “அல்லு நன்பகலும்‌ இடைவீடின்றி நல்கி யென்னை விடான்‌” (திருவாய்மொழி 1-10-8) என்று இவர் பக்கல்‌ பண்ணின ஸ்நேஹத்தாலே திவா ராத்ர விபா௧ மற இவரை விடமாட்டாதே “போகு நம்பீ” (திருவாய்மொழி 6-2-2) என்று இவர் தாம்‌ உபேக்ஷித்தாலும்‌ “அகல்வானுமல்லனினி” (திருவாய்மொழி 2-6-7) என்று அகலமாட்டாதே (போகேல்‌ என்றால்‌ உகப்பையும்‌ தவிர்ந்து) “ஆன்பின்போகேல்‌” (திருவாய்மொழி 10-3-8) என்று இவனுக்கு இஷ்டமானத்தையும்‌ நிவர்த்தி என்று இவர்‌ நியமித்தால்‌ “திவத்திலும்‌ பசு நிரை மேய்ப்பு உவத்தி (திருவாய்மொழி 10-3-10) என்ற அவ் வுகப்பையும்‌ தவிர்ந்து(விதி வகையே நடத்துமவனே) “அருள் தருவான்‌ அமைகின்றான்‌ அது நமது விதி வகையே ” (திருவாய்மொழி 10-6-1 என்று இவர்‌ விதித்தபடியே நடக்கையாலே ஸதாசார்ய விஷயத்திலே ஸச் சிஷ்யன்‌ வர்த்திக்கும்‌ க்ரமம்‌ இவன்‌ பக்கலிலே உண்டென்கையாலே இவனே உபதேஸ ஸத் பாத்ரம்‌ என்கிறார் –

    203-நண்ணாதார்‌ மெய்யிலூன்‌ ஆசை நிர்வேதத்தோடே ஆஸ்திக்ய அமாநீத்வாதிகள்‌ விஞ்சின ப்ரணிபாத அபிவாதந பரிப்ரஸ்ந ஸேவா பரர்க்கு உளங்கொள்‌ பேசுமளவன்றென்னும்‌ அர்த்தத்தை வம்மின்‌ விரோதம்‌ ஈனச் சொல்‌ எவ்வுயிர்க்கு மறிய வென்று ௮டைவுகெட அதபஸ்கர்க்கு உபதேஸிக்கிறது ஞாலத்தார்‌ பந்த புத்தியும்‌ அநர்த்தம்‌ கண்டு ஆற்றாமையும்‌ மிக்க க்ருபையுமிறே .
    ஆனால் ஸம்ஸாரிகளில் விரக்தராய்‌ இப்படி அநுவர்த்தநமுடையார்க்கு உபதேஸிக்கும் அர்த்தத்தை பகவத் விமுகராய்‌ ப்ரயோஜநாந்தர பரராய் தன் பக்கல் அநு வர்த்தனமும் இன்றிக்கே இருக்கிற ஸம்ஸாரிகளையும்‌ பார்த்து இவர்‌ மேல் விழுந்து உபதேசிப்பான் என் என்னில் அவனோடிவர்களுக்குண்டான ஸம்பந்தத்தை அறிகையாலும் இவர்கள்‌ துக்கம் கண்டு பொறுக்க மாட்டாதே க்ருபையாலும்‌ உபதேஸிப்பர்‌ என்கிறார்‌ (நண்ணாதார்‌ மெய்யிலூனாசை நிர்வேதத்தோடே) “நண்ணாதார்‌ முறுவலிப்ப விலும்‌ (திருவாய்மொழி 4-9) “மெய்யில்‌ வாழ்க்கை”யிலும்‌ (பெருமாள்‌ திருமொழி 5-2-5) ப்ரிய ஜநமபஸ்யந்தீம்‌ பஸ்யந்தீம்‌ ராக்ஷஸீ கணம்‌ ஸ்வ கணேந ம்ருகீம்‌ ஹீநாம்‌ ஸ்வகணேநா வ்ருதா மிவ ரா.ஸு. 15-24) என்றும்‌ “ந சவ்ரி சிந்தாவிமுக ஜந ஸம்வாத வைஸ ஸம்‌வர்‌ ஹுதவஹ ஜ்வாலா பஞ்ஜராந்தர் வ்யவஸ்திதி:” என்றும்‌ (சொல்லுகிறபடி யே?) சவ்ரி சிந்தா விமுகரான ஸம்ஸாரிகளோட்டை ஸஹவாஸம்‌ ஆழ்வார் தமக்கு அஸஹ்யமானாப் போலே ஸம்ஸாரிகளோடு பொருத்த முடையார்களன்றிக்கே “ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான்‌ வேண்டேன்‌” (பெருமாள்‌ திருமொழி 4-1) என்றும்‌ “ஆசைவாய்ச்‌ சென்ற சிந்தையர்‌ (பெரியாழ்வார்‌ திருமொழி 4-5-1) இத்யாதியாலும்‌ ஆழ்வார்களுக்கு அநேக தோஷ துஷ்டமான ஸரீரமும்‌ ஸரீர ஸம்பந்திகளும்‌ அஸஹ்மயமானாப் போலே ஸரீரத்தினுடைய அஸ்திரத்ரத்வாதி, தோஷங்களை அநுஸந்தித்து அவற்றுடன்‌ பொருந்தாமையை உடையார்களாய்‌ “பரீஷ்ய லோகாந்‌ கர்ம சிதாந்‌ ப்‌ராஹ்மணோ நிர்வேத மாயாத்‌ நாஸ்த்யக்ருத: க்ருதேந” (முண்டகோபநிஷத்‌ 2-11 என்கிறபடியே கர்ம ஸாத்‌யங்களான லோகங்கள்‌ அஸ்த்திரங்களாயிருந்தது, ஸ்த்திரமான லோகங்கள்‌ கர்ம ஸாத்‌யமன்றிக்கே இருந்தது என்று இவற்றினுடைய நிரூபணத்தாலே வெறுப்பை உடையவர்களாய்‌ (ஆஸ்திக்ய அமாநித்வாதிகள்‌ விஞ்சின) “ஆஸ்திகோ தர்ம ஸ்ரீலஸ்ச ஸீலவாந்‌ வைஷ்ணவஸ் ஸூசி: கம்பீரஸ் சதுரோ தீர: ஸிஷ்ய இத்யபி தீ யதே” என்றும்‌ “அமாநித்வம தம்பித்வ மஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம்‌ ஆசார்யோபாஸநம்‌ மெளசம்‌ ஸ்தைர்யமாத்ம விநிக்‌ரஹ நித்யந்து ஸமசித்தத்வம்‌ இஷ்டாநிஷ்டோபபத்திஷ மயிசாநந்யயோகே,ந பக்திரவ்யபிசாரிணீ’ (கீதை 13-7) என்றும்‌ சொல்லப்படுகிற ஸிஷ்ய லக்ஷணங்களாலே மிக்கிருப்பாராய்‌ (ப்ரணிபாதாபி வாதந பரிப்ரஸ்ந ஸேவா பரர்க்கு) “தத் வித்‌தி ப்ரணிபாதேந பரிப்ரஸ்நேந ஸேவயா (கீதை 4-34) என்று பக்‌நாபிமாநராய்க்‌ கொண்டு அநுவர்த்தந பூர்வகமாக சிரகால ஸேவை பண்ணினவர்களுக்கு (உளங்கொள் பேசுமளவன்றென்னும்‌ அர்த்தத்தை) “உளங் கொள்‌ ஞானத்து வைம்மின்‌” திருவாய்மொழி 4-10-9) என்றும்‌ “பேசுமளவன்றிது வம்மின்‌ நமர்‌ பிறர்‌ கேட்பதன்‌ முன்‌ (பெரிய திருமொழி 2-4-9) என்றும்‌ இப்படி அஷட் கர்ணமாக உபதேஸிக்க வேண்டும்படியான அர்த்த விஸேஷத்தை (வம்மின்‌ விரோத மீனச்சொல்‌ எவவுயிர்க்கு மறியவென்று) “வம்மின்‌ புலவீர்‌ நும்‌ மெய்வருத்திக்‌ கைசெய்தும்மினோ” (திருவாய்மொழி 3-9-6) என்றும்‌ ” சொன்னால்‌ விரோதமிது ஆகிலும்‌ சொல்லுவன்‌ கேண்மினோ (திருவாய்மொழி 3-9-1 என்றும்‌ “ஈனச் சொல்லாயினுமாக நான்‌ கண்ட நல்லது ஞானப்பிரானை யல்லாலில்லை” (திருவிருத்தம்‌ 99) என்றும்‌ “மன்றொன்றில்லை சுருங்கச்‌ சொன்னோம்‌ மாநிலத்தெவ்வுயிர்க்கும்‌ (திருவாய்மொழி 9-1-7) என்றும்‌ “நாமுமக்கறியச்‌ சொன்னோம்‌” (திருவாய்மொழி 10-2-9) என்றும்‌ (அடைவு கெட அதபஸ்கர்க்கு உபேதஸிக்கிறது) முற்படச்‌ சொன்ன அடைவன்றிக்கே “இதம்‌ தே நாதபஸ்காய நாபத்தாய கதாசந ந சா ஸூஸ்ரூஷவே வாச்யம்‌ நசமாம்‌ யோப்‌ய ஸூயதி (கீதை 18-67) என்று உபதேஸத்துக்கு அதி காரமில்லாத தேஹ யாத்ராபரவஸராய்ப்‌ பிறரைக்‌ கவிபாடுவார்க்கும்‌ அதுதானுமின்றிக்கே பஸூ ஸமராய்த்‌ திரிவார்க்கும்‌ ஆசார்ய ப்ரேமமில்லதார்க்கும்‌ ஆசார்ய ஸுஸ்ரூஷை யில்லாதார்க்கும்‌ ஸ்ரோதுமிச்சை இல்லாதார்க்கும்‌ பகவத்‌. விஷயத்தில்‌ அஸூயா பரராயிருப்பார்க்கும்‌ இவர்‌ உபதேஸிப்பான்‌ என்‌ என்னில்‌, (ஞாலத்தார்‌ பந்த புத்‌தியும்‌) ‘ஞாலத்தார்‌ தமக்கும்‌ வானத்தவர்க்கும்‌ பெருமானை” (திருவாய்மொழி 4-5-8) என்று நித்யாநுபவம்‌ பண்ணுகிற நித்ய ஸூரிகளோபாதி லீலா விபூ தியில்‌ உள்ளார்க்கும்‌ அவனோடு ஸம்ப ந்த முண்டாயிருக்க இவர்கள்‌ இழக்க வொண்ணாது என்கிற ஸம்பந்த ஜ்ஞாநாநுஸந்தாநத்தாலும்‌ (அநர்த்தம்‌ கண்டு ஆற்றாமையும்‌) “கண்டாற்றேன்‌ உலகியற்கை” (திருவாய்மொழி 4-9-3) என்று இவர்கள்‌ ஸம்ஸாரத்திலே படுகிற அநர்த்தம்‌ கண்டு பொறுக்க மாட்டாமலும்‌ (மிக்க க்ருபையுமிறே) “அருள்‌ கண்டீர்‌ இவ்வுலகினில்‌ மிக்கதே” (கண்ணிநுண்‌ சிறுத்தாம்பு- 8) என்று இவருடைய மிக்க க்ருபையாலும்‌ உபதேஸித்தார்‌ –

    205-க்யாதி லாப, பூஜாபேக்ஷையற மலர்‌ நாடி ஆட்செய்ய உய்யக்‌ கொண்டு ஆரைக்‌ கொண்டு வாளும் வில்லும்‌ கொண்டு என்கிற இழவுகள்‌ தீரப்பெற்றது.
    ஆனால்‌ இப்படி விமுகராயிருக்கிற ஸம்ஸாரிகளுக்குத்‌ தம்முடைய க்ருபையாலே இவருபதேஸிக்கிறாராகில்‌, இவ்வுபதேஸம்‌ பலித்தமை உண்டோ என்னில்‌, இவர்‌ க்யாதி லாப, பூஜா நிரபேக்ஷராய்க்‌ கொண்டு பகவத்‌ கைங்கர்யமாக உபதேஸிக்க ஜகத்தாகத்‌ திருந்துகையாலே தம்முடைய தனிமைக்கும்‌ ஸம்ஸாரிகளுடைய தனிமைக்கும்‌ எம்பெருமானுடைய தனிமைக்கும்‌ க்லேஸப்பட்ட இவருடைய இழவுகளும்‌ தீரப் பெற்றதென்கிறார்‌.
    (க்யாதி லாப பூஜாபேக்ஷயற மலர்நாடி ஆட் செய்ய) “நீசனேன்‌ நிறைவொன்றுமிலேன்‌’ (திருவாய்மொழி 3-3-4) என்று தம்மைத்‌ தண்மைக்கு எல்லையாக நினைத்திருக்கையாலும்‌ “கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம்‌ நெருப்பாக” (திருவாய்மொழி 4-9-4) என்று ஐஸ்வர்யத்தை அக்‌நி ஸமமாகக்‌ காண்கையாலும்‌ “தொண்டர்‌ தொண்டர்‌ தொண்டர்‌ தொண்டன்‌ சடகோபன்‌ (திருவாய்மொழி 8-9-1 என்று பா௧வத ஸேஷத்வத்தில்‌ எல்லையிலே நிற்கிறவர்களுக்குத்‌ தம்மை ஸேஷமாக நினைத்திருக்கையாலும்‌ “ஓதவல்ல பிராக்கள்‌ எம்மை ஆளுடையார்கள்‌ பண்டே” (திருவாய்மொழி 9-1-11) என்று இப்ரபந்தத்திலே அந்வயித்தவர்களைத்‌ தமக்கு ஸேஷிகளாக நினைத்திருக்கையாலும்‌ க்யாதி லாப, பூஜா நிரபேஷராய்க்‌ கொண்டு “நறிய நன்மலர்‌ நாடி” (திருவாய்மொழி 5-5-11 என்கிறபடியே ஸேஷத்வமாகிற பரிமளத்தை உடைத்தான ஆத்ம புஷ்பங்களைத்‌ தேடி “ஆட்செய்தாழிப்பிரானைச்‌ சேர்ந்தவன்‌ (திருவாய்மொழி 4-10-11 என்று கைங்கர்ய ரூபமாக உபதேஸிக்கையாலே ஐகத்தாகத்‌ திருந்தினபடி. (உய்யக்‌ கொண்டு ஆரைக்‌ கொண்டு வாளும்‌ வில்லும்‌ கொண்டு என்கிற இழவும்‌ தீரப்பெற்றது) “உம்மை உய்யக்‌ கொண்டு போகுறிலே” (திருவாய்மொழி 4-10-9) என்று ஸம்ஸாரிகளுடைய அநர்த்தங்கண்டு பொறுக்க மாட்டாமல்‌ உபதேஸிக்க அவர்கள்‌ திருந்துகையாலே அவர்கள்‌ தனிமை என்கிற அவ்விழவு தீரப்பெற்றது. “ஆரைக்‌ கொண்டென்னுசாகோ” (திருவாய்மொழி 7-3-4) என்று தமக்கு உசாத்துணை யில்லை என்று சொல்லப்பட்டதுவும்‌ ஸம்ஸாரிகளடையத்‌ திருந்தித்‌ தமக்கு உசாத் துணை உண்டாகையாலே அவ்விழவும் தீரப்பெற்றது. “வாளும்‌ வில்லும்‌ கொண்டு பின் செல்வார்‌ மற்றில்லை’ (திருவாய்மொழி 8-3-3) என்று ஸர்வேஸ்வரனுடைய ஸெளகுமார்ய மறிந்து பரியக்‌ கடவார்‌ ஒருவருமில்லை என்று இழவு பட்ட விவர்க்கு பகவத்‌ விஷயத்துக்குப்‌ பரிவராய்‌ மங்களா ஸாஸநம்‌ பண்ணப்‌ பலருண்டாகையாலே அவ் விழவும்‌ தீரப்பெற்றது. ஆகையாலே இவருடைய உபதேஸம்‌ பல பர்யந்தமாய்த்து என்கிறார்‌-

    206-ப்‌ரஹ்மநிஷ்டரும்‌ ஸம்வத்ஸர வாஸிகளுமாகில்‌ ஏ பாவம்‌ பயனன்றாகிலும்‌ சேராது.
    (ப்‌ரஹ்ம நிஷ்டரும்‌ ஸம்வத்ஸர வாஸிகளுமாகில்‌) இப்படி உபதேஸம்‌ பலிக்கும்போது “பரீஷ்யலோகாந்‌ கர்மசிதாந்‌ ப்‌,ராஹ்மணோ நிர்வேத மாயாத்‌ நாஸ்த்யக்ருத: க்ருதேந தத்விஜ்ஞா நார்த்தம்‌ ஸகுருமேவாபி கச்சேத்‌ ஸமித்பாணி: ஸ்ரோத்ரியம்‌ ப்‌ரஹ்ம நிஷ்டம்‌ தஸ்மை ஸவித்‌வாநுபஸந்நாய ஸம்யக்‌, ப்ரஸமாந்தசித்தாய மமாந்விதாய யேநாக்ஷரம்‌ புருஷம்‌ வேத, ஸத்யம்‌ ப்ரோவாச தாம்‌ தத்வதோ ப்‌ரஹ்மவித்‌ யாம்‌” (முண்டகோபநிஷத்‌ 2-11) என்று ஸம்ஸாரத்தினுடைய அல்பாஸ்திரத்வாதி, தோஷாநுஸந்தாநத்தாலும்‌ பரம ப்ராப்யமான தேஸத்தைக்‌ கிட்டப் பெறாமையால்‌ உண்டான வெறுப்போடே ஸம தமாத் யாத்‌ம குணோபேதனாய்‌ ஸோபஹார ஹஸ்தனாய்க்‌ கொண்டு ஸ்ரோத்ரியனாய்‌ ப்‌ரஹ்ம நிஷ்டனான ஆசார்யனை பக்‌நாபிமாநனாய்‌ உபஸத்தி பண்ண அவ்வாசார்யனும்‌ “நாஸம்வத்ஸரவாஸிநே பரப்‌ரூயாத் என்று ஒரு ஸம்வத்ஸரம்‌ பரீக்ஷித்து பின்னையும்‌ உபதேஸிப்பான்‌ என்று சொல்லுகிற ஸாஸ்த்ரக்ரமத்திலே இவரும்‌ ஸம்ஸாரிகள்‌ அநுவர்த்திக்க உபதேஸித்தார் ஆனாலோ என்னில்‌, (ஏபாவம்‌ பயனன்றாகிலும்‌ சேராது) ஸிஷ்யனுடைய அநுவர்த்தனமுண்டாகில்‌ “ஏபாவம்‌ பரமே” (திருவாய்மொழி 2-2-2) என்று ஓ பாபமே எனக்கிது பரமாவதே என்று உபதேஸோபக்ரமத்திலே வெறுத்துச்‌ சொல்லுகிற ஆசார்யோக்தியும்‌ சேராது. ஸிஷ்யன்‌ தன்‌ அநுவர்த்தனத்தாலே இவ்வர்த்தத்தைப்‌ பெற்றானாகில்‌ “பயனன்றாகிலும்‌ பாங்கல்லராகிலும்‌ செயல்‌ நன்றாகத்‌ திருத்திப்‌ பணிகொள்வான்‌’ (கண்ணிநுண்‌. 10) என்கிற ஸிஷ்யோக்தியும்‌ சேராது. ஆகையாலே முன்பு சொன்ன க்ரமத்திலே ஸம்ஸாரிகளுடைய அநர்த்தம்‌ கண்டு பொறுக்க மாட்டாதே தம்முடைய க்ருபையாலே உபதேஸித்தார்‌ என்கிறார் –

    207-மெய்க்நின்று மங்கவொட்டுக்கு நடுவு அநுபவ கர்ப்‌போபதேஸம்‌.
    ஆனால்‌ அபரிச்சே,த்‌,யமாய்‌ நிரதிஸயபோக்யமான பகவத்‌ விஷயத்தை அநுப விக்கிற இவர்‌ பரோபதேஸம்‌ பண்ணுகிறார்‌ என்னும்போது, இவர்க்கு அவ்வநுபவம்‌ கூடினபடி எங்கனே என்னில்‌, இவருடைய அநுபவ பரீவாஹ ரூபமான சொற்கள் தானே பரோபதேஸமாயிருக்கையாலே உள்ளே அநுபவமானது செல்லா நிற்கச்‌ செய்தே பரோபதேஸமாயிருக்கும்‌ என்கிறார்‌. (மெய்ந்நின்று மங்கவொட்டுக்கு நடுவு) “மெய்ந்நின்று கேட்டருளாய்‌ அடியேன்‌ செய்யும்‌ விண்ணப்பமே’ (திருவிருத்தம்‌ 1 என்று உபக்ரமித்து“மங்கவொட்டுன்‌ மாமாயை” (திருவாய்மொழி 10-7-10) என்கிறதளவாக நடுவுள்ள நாலு ப்ரபந்தமும்‌ அநுபவம்‌ உள்ளே செல்லா நிற்கச்‌ செய்தே பரோபதேஸமாயிருக்கிறது; இது தான்‌ ஸ்வாநுபவகர்ப்ப, பரோபதேஸமாய்‌ பரோபதேஸ முகத்தாலே ஸ்வாநுபவமாயிருக்கையாலே எல்லா அவஸ்தையிலும்‌ இவர்க்கு அநுபவத்தில்‌ குறை யில்லை

    208-இவற்றுக்கு மந்த்ரவித்‌யநுஸந்தாந ரஹஸ்யங்களோடே சேர்த்தி.
    ஆனால்‌ இந்நாலு ப்ரபந்தத்தாலும்‌ இவருபதேஸிக்கும் வர்த்தம்‌ ஏதென்னில்‌
    (இவற்றுக்கு மந்த்ரவித்‌யநுஸந்தாந ரஹஸ்யங்களோடே சேர்த்தி) ஸகல ஸாஸ்த்ர ஸங்க்ரஹமாய்‌ இவ்வாத்மாவுக்கு தத்வ ஹித புருஷார்த்த ப்ரகாஸகமுமாய்‌ ஸரண்யாபிமதமுமாய்‌ ஸிஷ்ட பரிக்ருஹீதமுமாய்‌ மந்த்ர விதி அநுஸந்தாந ரூபமான ரஹஸ்ய த்ரயத்தாலும்‌ ப்ரதிபாதிக்கப்படுகிற அர்த்த, பஞ்சகத்தையும்‌ இவற்றிலே ப்ரதிபாதிக்கையாலே இப்ரபந்தங்கள்‌ நாலுக்கும்‌ ரஹஸ்ய த்ரயத்தோடு சேர்த்தி என்கிறார் –

    209-அளிப்பானடியேனடைக்கலம்‌ சூடிய பொய்‌ யாதானும்‌ அழுந்தாரென்று ஸ்வரூப விரோதி நிவ்ருத்திகளையும்‌ தாமரை யுந்திப்‌ பெருமா மாயனாளாகவே வாழியவென்று ப்ராப்ய பலங்களையும்‌, நெறி காட்டி மனத்துக் கொண்டு கண்ணனாலடித்துக்‌ கண்டிலமால்‌ யாதாகிலென்று உபாயத்தையும்‌ சொன்னவை மந்த்ர ஸ்லோகங்களோடே சேரும்‌.

    அவற்றில்‌ ப்ரதிபாதிக்கிற அர்த்த பஞ்சகம்‌ இவற்றிலே ப்ரதிபாதிதமாகிறபடி எங்ஙனே என்னில்‌ (அளிப்பான்‌ அடியேன்‌ அடைக்கலம்‌ சூடிய பொய்‌ யாதானும் அழுந்தார்‌ என்று ஸ்வரூப விரோதி, நிவ்ருத்திகளையும்‌) இதில்‌ ப்ரதம ப்ரபந்தமான திருவிருத்தத்திலே உயிரளிப்பான்‌ (திருவிருத்தம்‌ -1)என்று திருமந்த்ரத்திலே ப்ரதமாக்ஷரத்தில்‌ அவ ரக்ஷணே யென்கிற தாத்வர்த்தத்தாலே சொல்லப்பட்ட ரக்ஷகத்வத்தையும்‌ “அடியேன்‌” (திருவிருத்தம்‌ 1) என்று அவ்வகாரத்தில்‌ லுப்த சதுர்த்தியாலும்‌ உகாரத்தாலும்‌ அந்த ஸர்வ ரக்ஷகனானவனுக்கு இவ்வாத்மா அநந்யார்ஹ ஸேஷமாயிருக்கும்‌ என்னுமிடத்தையும்‌ அந்த ஸேஷத்வாஸ்ரயமான ஸ்வரூபம்‌ ஜ்ஞாநாநந்த மயமாயும்‌ ஜ்ஞாந குணகமாயுமிருக்கிற மகாரார்த்தத்தையும்‌, “அடியேனடியாவி அடைக்கலமே” (திருவிருத்தம்‌ 85) என்று அந்த சதுர்த்தி, ‘ஸம் ப்ரதாநே சதுர்த்தி என்னுமிடத்தில்‌ ஆத்ம ஸமர்ப்பணத்தையும்‌ “திருமால்‌ திருப்பேர்‌ வல்லார்‌ அடிக் கண்ணி சூடிய மாறன்‌” (திருவிருத்தம்‌ 100) என்று அந்த ப்ரணவத்தில்‌ சொன்ன அநந்யார்ஹ ஸேஷத்வம்‌ ததீய ஸேஷத்வ பர்யந்தமா யிருக்கும்‌ என்று நமஸ்ஸில்‌ ஆர்த்தமாகச்‌ சொல்லப்படுகிற ததீய ஸேஷத்வத்தையும்‌, ” பொய்ந்நின்ற ஞானமும்‌ பொல்லா வொழுக்கும்‌ அழுக்குடம்பும்‌” (திருவிருத்தம்‌ 1) என்றும்‌ “யாதானுமோராக்கையில்‌ புக்கு அங்காப்புண்டும்‌ ஆப்பவிழ்ந்தும்‌” (திருவிருத்தம்‌ 95) என்றும்‌ அந்த நமஸ்ஸில்‌ ‘ம:’ என்கிற ஷஷ்டியாலே சொல்லப்பட்ட அவித்‌யை அவித்‌யாகாரிதமான அஹங்கார மமகாரங்கள்‌ அவற்றாலே உண்டான அக்ருத்யகரணாதிகள்‌ தத் கார்யமாய்‌ தேவ மநுஷ்யாதி ரூபமான ப்ரக்ருதி ஸம்பந்தத்தையும்‌ சொல்லி “வன்சேற்றள்ளல்‌ பொய்ந்நிலத்தில்‌ அழுந்தார்‌‘ (திருவிருத்தம்‌ 100) என்று அந்த நமஸ்ஸில்‌ நிஷேத வாசியான நஞ்ஞாலே கீழ்ச் சொன்ன அவித்‌யாதிகளாய்‌ ஸம்ஸார கர்தமம்‌ எல்லையான விரோதிகளினுடைய நிவ்ருத்தியையும்‌ சொல்லி ஆக இப்படி ஸர்வ ரக்ஷகனான ஸர்வேஸ்வரனுக்கு அநந்யார்ஹ ஸேஷமாய்‌ ஜ்ஞாநாநந்த லக்ஷணமாய்‌ ததீய ஸேஷத்வ பர்யந்தமான ஸ்வரூபத்தையும்‌, தத் விரோதியான அஹங்கார மமகாரமாகிற விரோதி ஸ்வரூபத்தையும்‌ தந் நிவ்ருத்தியையும்‌ சொல்லுகையாலே திருவிருத்தம்‌ ப்ரணவ நமஸ்ஸுக்கள்‌ இரண்டினுடைய அர்த்தமாயிருக்கிறது. (தாமரை யுந்திப்‌ பெரு மா மாயன்‌ ஆளாகவே வாழிய வென்று ப்ராப்ய பலங்களையும்‌) “தெய்வக் குழாங்கள்‌ கை தொழக்‌ கிடந்த தாமரை யுந்தித்‌ தனிப் பெரு நாயக” (திருவாசிரியம்‌ 1 என்றும்‌, “ஓராலிலைச்‌ சேர்ந்த எம்பெரு மா மாயனை யல்லது ஒருமா தெய்வம்‌ மற்றுடையமோ யாமே” (திருவாசிரியம்‌ 7) என்றும்‌ காரணத்வ ரக்ஷகத்வங்களைச்‌ சொல்லுகையாலே காரணமுமாய்‌ ரக்ஷகனுமாயிருக்கிறவனே பரம ப்ராப்யன்‌’ என்கிற நாராயண ஸப்தார்த்தமான ப்ராப்தி ஸ்வரூபத்தையும் “தனிமாத் தெய்வத்தடி யவர்க்கு ஆளாகவே இசையுங்கொல் (திருவாசிரியம் -3)என்றும்‌ “ஊழி தோறூழி ஓவாது வாழிய வென்று யாம தொழ இசையுங்கொல் (திருவாசிரியம்‌ 4) என்றும்‌ அந்த நாராயண பதத்தில் பிரார்த்தநா ரூபமான சதுர்த் யர்த்தமான பல ஸ்வரூபத்தையும்‌ சதுர்த் யந்தமான ப்ராப்தி ஸ்வரூபத்தையும்‌ சொல்லுகையாலே அந்தத்‌ திருவாசிரியம்‌ சதுர்த் யந்தமான நாராயண பத்தின் அர்த்தமாய் யிருக்கிறது. (நெறி காட்டி மனத்துக் கொண்டு கண்ணனால்‌ அடித்துக்‌ கண்டிலமால்‌ யாதாகில்‌ என்று உபாயத்தையும்‌ சொன்னவிது) பெரிய திருவந்தாதியிலே “நெறி காட்டி நீக்குதியோ” (பெரிய திருவந்தாதி 6 )என்று உபாயாந்தரங்களைக்‌ காட்டி என்னை அகற்றப்‌ பார்த்தாயோ என்கையாலே “ஸர்வ தர்மாந்‌ பரித்யஜ்ய’ (கீதை 18-66) என்கிற உபாயாந்தரங்களினுடைய த்யாஜ்யதையையும்‌ ‘வெங்கோட்டேறுழுடனே கொன்றானையே மனத்துக்‌ கொண்டு” (பெரிய திருவந்தாதி 48) என்று “மாமேகம்‌ ஸரணம்‌ வ்ரஜ (கீதை 18-66) என்கிற மாநஸாத்‌யவஸாய ரூபமான உபாய ஸ்வீகாரத்தையும்‌ “சீரார்‌ மனத்தலை வன்‌ துன்பத்தை மாற்றினேன்‌ வானோரினத் தலைவன்‌ கண்ணனால்‌ யான்‌” (பெரிய திருவந்தாதி 25) என்றும்‌ “எம்மிறையார்‌ தந்த அருளென்னும்‌ தண்டாலடித்து” (பெரிய திருவந்தாதி 26) என்றும்‌ சொல்லுகையாலே “அஹம்‌ த்வா ஸர்வபாபேப்‌யோ மோக்ஷயிஷ்யாமி” கீதை 18-66) என்று உபாய பூதன்‌ பண்ணும்‌ ஸர்வபாப விமோசனத்தையும்‌ “வானோ மறிகடலோ இத்யாதி மருங்கு வன்துயரை கண்டிலமால்‌” (பெரிய திருவந்தாதி 54) என்று அந்த விரோதிகள்‌ போனவிடம்‌ தெரியாதபடி தன்னடையே விட்டுப்‌ போய்த்ததென்கையாலே “இஷ்யாமி’ என்கிற ணிச்சாலே சொல்லுகிற அர்த்தத்தையும்‌ “அடர்பொன்‌ முடியான்‌” இத்யாதி, யாதாகில்‌ யாதே இனி’ (பெரிய திருவந்தாதி 70) என்று “மாஸூச:” (கீதை 18-66 என்கிற பதத்தாலே பலிதமான நிர்ப ரத்வாநுஸந்தானத்தையும்‌ சொல்லுகையாலே திருவந்தாதியாலே ஸ்லோகார்த்தமான உபாய ஸ்வரூபத்தைச்‌ சொல்லிற்று. ஆகையாலே இவை மந்த்ர ஸ்லோகங்களோடு சேரும்‌. ஆகத்‌ திருவிருத்தம்‌ திருவாசிரியம்‌ திருவந்தாதி என்கிற மூன்றும்‌ அர்த்த பஞ்சகத்தையும்‌ ப்ரதிபாதிக்கையாலே அவை மூன்றும்‌ அர்த்த பஞ்சகத்தை ப்ரதிபாதி,க்கிற திருமந்த்ரத்தினுடையவும்‌ சரம ஸ்லோகத்தினுடையவும்‌ அர்த்த மாயிருக்கிறது –

    210-த்வயார்த்தம்‌ தீர்க்க ஸரணாகதி யென்றது ஸாரஸங்க்‌ரஹத்திலே. திருவாய்மொழி த்‌வயத்தில்‌ அர்த்தத்தை ப்ரதிபாதிக்கையாலே தீர்க்க ஸரணாகதி என்கிறார்‌. த்‌வயத்திலே ப்ரதிபாதி க்கப்பட்ட ஸ்ரிய:பதித்வம்‌, நாராயணத்வம்‌, விலக்ஷண விக்‌ரஹ யோக,ம்‌, அவனுடைய உபாயத்வம்‌, உபாய பரிக்‌ரஹம்‌, கைங்கர்ய ப்ரதாநார்த்தமான லக்ஷ்மீ தத் வல்லபனுடைய நித்ய ஸம்பந்த ம்‌, ஸர்வ ஸ்வாமித்வம்‌, நிரதிஸய போக்‌யத்வம்‌, கைங்கர்ய ப்ரார்த்தனை, கைங்கர்ய விரோத நிவ்ருத்தி ஆக இப்பத்து அர்த்தத்தையும்‌ திருவாய்மொழி பத்து பத்தாலும்‌ ப்ரதிபாதிக்கையாலே இத் திருவாய்மொழி தீர்க்க ஸரணாகதி என்று ஸார ஸங்க்‌ரஹத்திலே பிள்ளை அருளிச்‌ செய்தார்‌

    211-மூன்றில்‌ சுருக்கிய ஐந்தையும்‌ உயர்‌ திண்‌ அணை ஒன்று பயில்‌ ஏறு கண்‌ ௧ரு வீடு சொன்னால்‌ ஒருக்‌ கொண்ட நோற்ற நாலும்‌ எம்மா ஒழிவில்‌ நெடு வேய்‌ என்கிற இருபதிலே விஸதமாக்கி எண்பதிலே பரப்புகையாலே ஐந்தையும்‌ அருளினன்‌ வீடு பெற்ற வென்கையாலே ஐந்திலுமிரண்டையும்‌, தொழுது களித்தேன்‌ சொல்லுப்‌ பெற்றேன்‌ பணிசெய்யென்கிற முக்த லக்ஷண வ்ருத்தியாலே இரண்‌ டிலொன்றையும்‌ இதுக்கு ப்ரமேயமென்னும்‌. இனி மேல்‌ திருமந்த்ரத்திலும்‌ சரம ஸ்லோகத்திலும்‌ ஸங்க்‌ரஹேண ப்ரதிபாதிக்கப்பட்ட அர்த்த பஞ்சகத்தை த்‌வயத்திலே விவரித்தாப் போலே திருவிருத்தம்‌ திருவாசிரியம்‌ திருவந்தாதி என்கிற மூன்று ப்ரபந்தத்திலும்‌ ஸங்க்‌ரஹேண சொல்லப்பட்ட அர்த்த பஞ்சகத்தை த்‌வயத்தினுடைய ஸ்தாநேயாயிருக்கிற இத்‌ திருவாய்மொழியிலே விஸ்த்ருதமாகச்‌ சொல்லுகையாலே அர்த்த பஞ்சகமும்‌ இதுக்கு ப்ரமேயமென்றும்‌ அந்த அர்த்த பஞ்சகத்திலும்‌ வைத்துக்‌ கொண்டு உபாயோபேயங்களிரண்டுமே இதுக்கு ப்ரமேயமென்றும்‌ அவை தன்னிலும்‌ உபாயமொன்றுமே இதுக்கு ப்ரமேயமென்றும்‌ சொல்லக்‌ கடவதென்கிறார்‌. (மூன்றில்‌ சுருக்கின ஐந்தையும்‌ என்று தொடங்கி) திருவிருத்தம்‌ திருவாசிரியம்‌ திருவந்தாதி என்கிற மூன்று ப்ரபந்தத்தில்‌ சுருங்கச்‌ சொல்லப்பட்ட அர்த்த பஞ்சகத்தையும்‌ திருவாய்மொழியில்‌ (உயர்‌ திண்‌ அணை ஒன்று) முதல்‌ திருவாய்மொழியான உயர்வற உயர் நலத்தில்‌ ஸ்ருதிச் சாயையாலே அந்வய ரூபேண ஸ்வாநுபவ ரூபத்தாலே பரத்வத்திலே பரத்வத்தையும்‌, திண்ணன்‌ வீட்டில்‌ (திருவாய்மொழி 2-2 இதிஹாஸ புராண ப்ரக்ரியையாலே அந்வய வ்யதிரேகங்கள்‌ இரண்டாலும்‌ பரோபதேஸ முகத்தாலே அவதாரத்திலே பரத்வத்தையும்‌, அணைவதரவணையில்‌ (திருவாய்மொழி 2-8 மோக்ஷ ப்ரதத்வத்தாலே வந்த பரத்வத்தையும்‌, ஒன்றும்‌ தேவிலே (திருவாய்மொழி 4-10) அர்ச்சாவதாரத்திலே பரத்வத்தையும்‌ சொல்லுகையாலே, ஆக உயர்வற உயர்நலம்‌ திண்ணன் வீடு அணைவதரவணை ஒன்றுந் தேவு என்கிற நாலு திருவாய்மொழியாலும்‌ பர ஸ்வரூபத்தையும்‌; (பயிலேறு கண்‌ ௧ரு ) பயிலும்‌ சுடரொளியில்‌ (திருவாய்மொழி 3-7] இவ் வாத்மாவுக்கு ஸேஷத்வமே ஸ்வரூபமாகையாலே அதினுடைய எல்லையான பாகவத ஸேஷத்வத்தையும்‌, ஏறாளுமிறையோனில்‌ (திருவாய்மொழி 4-8) அவன்‌ வேண்டாத ஆத்மாத்மீயங்களை வேண்டேன்‌ என்று இவ் வாத்மா ஸேஷமான போது உபாதேயமாய்‌ அல்லாத போது த்யாஜ்யமென்கிற வ்யதிரேகத்தாலே ஸேஷத்வமே ஸ்வரூபமென்னுமிடத்தையும்‌ கண்கள்‌ சிவந்திலே “சென்று சென்று பரம் பரமாய்‌” (திருவாய்மொழி 8-8-5) இத்யாதி யாலே ஸேஷத்வாஸ்ரயமான ஆத்ம வஸ்துவினுடைய ப்ரக்ருதே:பரத்வ ஜ்ஞாநாநந்த அமலத்வங்களையும்‌ கரு மாணிக்க மலையிலே அந்த ஸேஷத்வத்தினுடைய அநந்யார்ஹத்வத்தையும்‌ சொல்லுகையாலே, ஆக பயிலுஞ்சுடரொளி ஏறாளுமிறையோன்‌ கண்கள் சிவந்து கரு மாணிக்கமலை என்கிற நாலு திருவாய்மொழியாலும்‌ ஸ்வ ஸ்ரூபத்தையும்‌, (வீடு சொன்னால்‌ ஒரு கொண்ட) வீடுமின் முற்றத்தில்‌ (திருவாய்மொழி 1-2) ஸ்வரூப விரோதி யான அஹங்கார மமகாரங்களை த்யாஜ்யம்‌ என்றும்‌, சொன்னால்‌ விரோதத்தில்‌ (திருவாய்மொழி 3.9) உபாய விரோதியான அஸேவ்ய ஸேவை முதலானவை த்யாஜ்யம்‌ என்னுமிடத்தையும் – ஒரு நாயகத்தில -1- ப்ராப்ய விரோதியான ஐஸ்வர்ய கைவல்யங்கள் த்யாஜ்யம் என்னுமிடத்தையும் கொண்ட பெண்டிரில் -திருவாய் -9-1-ப்ராப்தி விரோதி யான ஸரீர ஸம்பந்திகள்‌ தொடக்கமானவை த்யாஜ்யமென்னுமிடத்தையும்‌ சொல்லுகையாலே ஆக வீடுமின் முற்றவும்‌ சொன்னால்‌ விரோதம்‌ ஒருநாயகம்‌ கொண்ட பெண்டிர்‌ என்கிற நாலு திருவாய்மொழியாலும்‌ விரோதி ஸ்வரூபத்தையும்‌ (நோற்ற நாலும்‌) “நோற்ற நோன்பிலேன்‌ நுண்ணறிவிலேன்‌’ (திருவாய்மொழி 5-7-1 என்று தம்முடைய ஆகிஞ்சந்ய பூர்வகமாகவும்‌ ஆராவமுதில்‌ “களைவாய்‌ துன்பம் களையா தொழிவாய்‌ களை கண்‌ மற்றிலேன்‌” (திருவாய்மொழி 5-8-8) என்று தம்முடைய அநந்யகதித்வ பூர்வகமாகவும்‌, மானேய் நோக்கில்‌ “வைகலும்‌ வினையேன்‌ மெலிய (திருவாய்மொழி 9-9-1) என்று தம்முடைய பக்தி பாரவஸ்யதையாலும்‌ அடி மேல்‌ சேமங்கொள்ளென்று ஸரணம்‌ புகுந்து, பிறந்தவாற்றில்‌ “நாகணை மிசை நம்பிரான்‌ சரணே சரண்‌ நமக்கு என்று நாடொறும்‌ ஏக சிந்தையனாய்‌’ (திருவாய்மொழி 5-10-11 என்று தமக்கு அவ்வுபாயத்திலுண்டான அத்‌யவஸாயத்தையும்‌ சொல்லுகையாலே, ஆக நோற்ற நோன்பு, ஆராவமுது, மானேய் நோக்கு, பிறந்தவாறு என்கிற நாலு திருவாய்மொழியாலும்‌ உபாய ஸ்வரூபத்தையும்‌ (எம்மா ஒழிவில்‌ நெடு வேய்‌ என்கிற) எம்மா வீட்டிலே (திருவாய்மொழி 2-9) கைங்கர்யத்தினுடைய ஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்தியை ப்ரார்த்தித்து, ஒழிவில்‌ காலத்தில்‌ (திருவாய்மொழி 3-3)அந்த கைங்கர்யந் தன்னை ஸர்வதேஸ ஸர்வகால ஸர்வாவஸ்தோசிதமாகச்‌ செய்ய வேணுமென்று ப்ரார்த்தித்து, நெடுமாற்கடிமையில்‌ (திருவாய்மொழி 8-10) அந்த கைங்கர்யம்‌ பாகவத பர்யந்தமாக வேணுமென்றும்‌, வேய்மருதோளிணையில்‌ (திருவாய்மொழி 10-3) அது தான்‌ பர ஸம்ருத்‌தயைக ப்ரயோஜநமாகவும்‌ ப்ரார்த்திக்கையாலே, ஆக எம்மா வீடு ஒழிவில் காலம்‌ நெடுமாற் கடிமை வேய்மரு தோளிணை என்கிற நாலு திருவாய்மொழியாலும்‌ பல ஸ்வரூபத்தையும்‌ (இருபதிலே விஸதமாக்கி எண்பதிலே பரப்புகையாலே ஐந்தையும்‌) ஆக இவ் வர்த்த பஞ்சகத்தையும்‌ இவ் விருபது திருவாய்மொழியாலும்‌ விஸதமாக அருளிச் செய்து மற்ற எண்பது திருவாய்மொழியாலும்‌ விஸ்த்ருதமாக்குகையாலே இத் திருவாய்மொழிக்கு இவ்வர்த்த பஞ்சகமும்‌ ப்ரமேயமென்றும்‌ (அருளினன்‌ வீடு பெற்ற என்கையாலே ஐந்திலுமிரண்டையும்‌) “மயர்வறமதிநல மருளினன்‌” (திருவாய்மொழி 1-1-1 “அவாவற்று வீடு பெற்ற” (திருவாய்மொழி 10-10-11) என்று அர்த்த பஞ்சகத்துக்கும்‌ ப்ரதாநமான உபாயோபேயங்கள்‌ இரண்டையும்‌ இதுக்கு ப்ரமேயம்‌ என்றும்‌ (தொழுது களித்தேன்‌ சொல்லுப்‌ பெற்றேன்‌ பணி செய்‌ என்கிற முக்த லக்ஷண வ்ருத்தியாலே இரண்டிலொன்றையும்‌ இதுக்கு ப்ரமேயம்‌ என்னும்‌) ‘தொழுதெழு” என்‌ மனனே” (திருவாய்மொழி 1-1-1 என்றும்‌, “விருப்பே பெற்று அமுதமுண்டு களித்தேனே’ (திருவாய்மொழி 10-8-6)என்றும்‌, “மேலைத்‌ தொண்டுகளித்து அந்தி தொழும்‌ சொல்லுப்‌ பெற்றேன்‌” (திருவாய்மொழி 10-8-7) என்றும்‌ “சொல்‌ பணி செய்‌ ஆயிரம்‌” (திருவாய்மொழி 1-10-11 என்றும்‌ சொல்லுகிறபடியே முக்தர்க்கு அஸாதாரண லக்ஷணமான வாசிக வ்ருத்தி இத் திருவாய்மொழி என்கையாலே அவ்வுபாயோபேயங்களிரண்டிலும்‌ உபேயமொன்றுமே இதுக்குத்‌ தாத்பர்யார்த்த மென்று சொல்லக் கடவதென்கிறார்‌.

    212-ரஹஸ்யத்துக்கோரெழுத்தும்‌ அதுக்கோருருவும்‌ போலே யானவற்றிலே இமையோரதிபதி அடியேன்‌ மனனே பொய்‌ மயர்வு பிறந்தருளினன்‌ விண்ணப்பம்‌ தொழுதெழென்ற பஞ்சகத்தோடே அவித்‌யாதி ஸ்வரூப ஸ்வபாவாத்மேஸ்வர பந்த ரக்ஷண க்ரம குண விக்ரஹ விபூதி யோக ததீயாபி மாநோபதேஸ விஷய அந்யாபதேஸ ஹேத்வாதிகளும்‌ ஸங்க்‌ருஹீதம்‌
    திருமந்த்ரமும்‌ த்‌வயமும்‌ முதல்‌ பதங்களிலே ஸங்க்‌ரஹமாய்‌ ஒழிந்தவிடம்‌ அவற்றினுடைய விவரணமா யிருக்குமா போலே திருவிருத்தமும்‌ திருவாய்மொழியும்‌ முதல்‌ பாட்டுக்களிலே ஸங்க்‌ரஹமாயிருக்கும்‌ என்கிறார்‌ மேல்‌. (ரஹஸ்யத்துக்கோரெழுத்தும்‌ அதுக்கு ஒருருவும்‌ போலேயான வற்றிலே) ஒரெழுத்து ஒருருவென்னும்படி திருமந்த்ரத்துக்கு ஸங்க்‌ரஹமான அகாரத்தையும்‌ அதன்‌ விக்ருதியான ப்ரணவத்தையும்‌ போலே என்னுதல்‌-அன்றிக்கே த்‌வயத்துக்கு ஸங்க்‌ரஹமான அதில்‌ ப்ரதம பதத்தையும்‌ போலே யிருக்கிற திருவிருத்தத்தில்‌ முதல்‌ பாட்டிலும்‌ திருவாய்மொழியில்‌ முதல்‌ பாட்டிலும்‌ (இமையோரதிபதி அடியேன்‌ மனனே பொய்‌ மயர்வு பிறந்து அருளினன்‌ விண்ணப்பம்‌ தொழுதெழு என்ற பஞ்சகத்தோடே) “இமையோர்‌ தலைவா” (திருவிருத்தம்‌ 1) என்றும்‌ “அயர்வறும்‌ அமரர்கள்‌ அதிபதி” (திருவாய்மொழி 1-1-1 என்றும்‌ சொல்லுகையாலே ஸுரி ஸேவ்யமாய்‌ ஸர்வாதிகமா யிருக்குமென்று பர ஸ்வரூபத்தையும்‌ அடியேன்‌” என்றும்‌ “என்‌ மனனே” என்றும்‌ சொல்லுகையாலே ஸேஷமாய்‌ அபரிச்சேத்‌யாந்த:கரணமா யிருக்கும்‌ என்று ஸ்வ ஸ்வரூபத்தையும்‌ “பொய்ந் நின்ற ஞானமும்‌ பொல்லா ஒழுக்கும்‌ அழுக்குடம்பும்‌” என்றும்‌ “மயர்வு” என்றும்‌ சொல்லுகையாலே அவித்‌யாதிகளான விரோதி ஸ்வரூபத்தையும்‌ “உயிரளிப்பான்‌ எந் நின்ற யோனியுமாய்ப்‌ பிறந்தாய்‌” என்றும்‌ “மதிநலமருளினன்‌” என்றும்‌ சொல்லுகையாலே லோக ரக்ஷணார்த்தமாக அநேகாவதாரங்களைப்‌ பண்ணின ஸர்வேஸ்வரனுடைய க்ருபையே உபாயமென்று உபாய ஸ்வரூபத்தையும்‌ “அடியேன்‌ செய்யும்‌ விண்ணப்பமே” என்றும்‌ “தொழுதெழு” என்றும்‌ சொல்லுகையாலே ஸேஷி விஷயத்தில்‌ கரண த்ரயத்தாலும்‌ உண்டான கைங்கர்யமே புருஷார்த்தம்‌ என்று பல ஸ்வரூபத்தையும்‌ ஆக இவ் வர்த்த பஞ்சகத்தையும்‌ ஸங்க்‌ரஹேண சொல்லி அவ்வர்த்த பஞ்சகத்தோடே கூட இந்த இரண்டு பாட்டிலும்‌ அவித்‌யாதி ஸ்வரூப ஸ்வபாவங்கள்‌ முதலான வர்த்த விஸேஷங்களும்‌ ஸங்க்‌ருஹீதமென்கிறார்‌ மேல்‌. (அவித்‌யாதி ஸ்வரூப ஸ்வபாவ) “பொய்ந் நின்ற ஞானமும்‌ பொல்லா ஒழுக்கும்‌ அழுக்குடம்பும்‌” என்று அவித்யா கர்ம வாஸநா ருசி ப்ரக்ருதி ஸம்பந்தங்களினுடைய ஸ்வரூப ஸ்வபாவத்தையும்‌-அன்றிக்கே அவித்‌யாதி, ஸ்வரூப ஸ்வபாவமென்ற இவற்றை தத்வ த்ரய விஷயமாக்கி அவற்றினுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களைப்‌ “பொய்ந் நின்ற ஞானம்‌” என்றும்‌ -மயர்வு” என்றும்‌ அவித்‌யையாகிற அசித் ஸ்வரூபத்தையும்‌ ஜ்ஞாநாநுதய அத்யதாஜ்ஞாந விபரீத ஜ்ஞானங்களாகிற அவித்‌யா ஸ்வபாவத்தையும்‌ அடியேன்‌ என்று ஆத்ம ஸ்வரூபத்தையும்‌ “என் மனனே” என்று ஆத்மாவினுடைய ஸ்வபா வத்தையும்‌ “தலைவா” என்றும்‌ “யவன்‌” என்றும்‌ ஈஸ்வர ஸ்வரூபத்தையும்‌“நலமுடையவன்‌” என்று அவனுடைய ஸ்வபாவத்தையும்‌ சொல்லுகிறார்‌ என்றுமாம்‌. (ஆத்மேஸ்வரபந்த ) “இமையோர்‌ தலைவா” “அடியேன்‌” “அதிபதி”“தொழுதெழு” என்று ஜீவேஸ்வரர்களுக்குண்டான ஸேஷ ஸேஷி பாவ ஸம்பந்தத்தையும்‌ ரக்ஷண க்ரமம்‌ ” உயிரளிப்பான்‌ எந் நின்ற யோனியுமாய்ப்‌ பிறந்தாய்‌ என்றும்‌ “மயர்வற மதிநல மருளினன்‌’ என்றும்‌ ஈஸ்வரன்‌ அநேகா வதாரங்களைப்‌ பண்ணி ரக்ஷிக்குமென்றும்‌ அஜ்ஞானத்தைப்‌ போக்கி ஜ்ஞாந பக்திகளைத்‌ தன்‌ க்ருபையாலே தந்தானென்றும்‌ அவனுடைய ரக்ஷண க்ரமத்தையும்‌ (குண விக்‌ரஹ விபூதி யோக,) “நலமுடையவன்‌ என்று குணத்தையும்‌, “சுடரடி” என்று விக்‌ரஹத்தையும்‌, “இமையோர்‌” என்றும்‌“அயர்வறும்‌ அமரர்கள்‌” என்றும்‌ விபூதியையும்‌ அந்த ஸுூரிகளை முன்னிடுகையாலே ததீயாபிமானத்தையும்‌ “மெய்‌ நின்று கேட்டருளாய்‌”“தொழுதெழு என்‌ மனனே” என்று நெஞ்சு போலே பவ்யமான ஈஸ்வரனும்‌ அப்படி பவ்யரானார்‌ உபதேஸத்துக்கு விஷயமென்றும்‌ (அந்யாபதேஸ ஹேது)“நலமருளினன்‌’ என்று பக்தியைத்‌ தந்தான்‌ என்கையாலே அந்யாபதேஸ த்துக்குஹேது அந்த பக்தி என்றும்‌- ஆதி ஸப்தத்தாலே வேதாந்தங்களில்‌ யாவை சில அர்த்தங்கள்‌ சொல்லப்பட்டது அவை யெல்லாம்‌ ஸங்க்‌ரஹ ரூபேண இவற்றிலே சொல்லப் பட்டதென்கிறார் –

    213-அடி தொழுதெழென்ற இதிலே வஸ்து நிர்த்தேஸ நமஸ்கார ஆஸீஸுக்களும்‌ உண்டு.
    ப்ரபந்த ஆரம்பத்திலே அந்த ப்ரபந்தத்தினுடைய அவிக்‌ந பரி ஸமாப்த்யர்த்தமாகவும்‌ சொல்லக் கடவதான ஆஸீர் நமஸ்க்ரியா வஸ்து நிர்தேஸம்‌ என்கிற இவை இப் ப்ரபந்த ஆரம்பத்திலுமுண்டோ என்னில்‌,(அடிதொழுதெழு என்கிற இதிலே வஸ்து நிர்தேஸ நமஸ்கார ஆஸீஸ்ஸூக்களும்‌ உண்டு) என்கிறார்‌. “துயரறு சுடரடி” (திருவாய்மொழி 1-1-1) என்று வஸ்து நிர்தேஸத்தையும்‌ “தொழுது” என்று நமஸ்காரத்தையும்‌ “எழு” என்று ஆஸீஸ்ஸையும்‌ சொல்லிற்றென்கிறார் –

    214-சாது சனம்‌ நண்ணா மயர்வற மாசறுக்கும்‌ தெருள்‌ கொள்ளப்‌ பத்தராவர்‌ அடிமையற வுரிய நோய்களறுக்கும்‌ உடைந்து ஏற்றரும்‌ வானின்‌ தாளின் கீழ்‌ அடிக்கீழின்பக்கதி பயக்கும்‌ ஊடுபுக்கு மூவுலகும்‌ உருகா நிற்பர்‌ என்னும்‌ ஸாம்யத்தாலே வாச்யம்‌ பத்தினாய தோற்றம்‌ போலே தோற்றங்கள்‌ ஆயிரத்தின்‌ பத்துப்‌ பத்தான இதினாவிர்ப்பாவம்‌.
    இனி மேல்‌ “பரித்ராணாய ஸாதூநாம்‌ விநாஸாய ச துஷ்க்ருதாம்‌ தர்ம ஸம் ஸ்த்தாபநார்த்தரய ஸம்பவாமி யுகே யுகே,” (கீதை 4-8) என்று ஸாது பரித்ராண துஷ்க்ருத் விநாஸநார்த்தமான பகவதவதாரம்‌ போலே இத் திருவாய்மொழியினுடைய அவதாரமுமென்கிறார்‌ சாது சனம்‌ என்று தொடங்கி. (சாது சனம்‌) “சாது சனத்தை நலியும்‌ கஞ்சனைச்‌ சாதிப்பதற்கு ஸாது, பரித்ராண துஷ்க்ருத் விநாஸநார்த்தமாக அவதரித்து மயர்வற மதிநலம்‌ அருளினன்‌ (திருவாய்மொழி 1-1-1 என்கிறபடியே அஜ்ஞாநத்தை வாஸனையோடே போக்கி ஜ்ஞாந பக்திகளை உண்டாக்கி (அடிமை யற) அடிமை யறக்கொண்ட (திருவாய்மொழி 4-9-6) என்கிறபடியே அநந்யார்ஹ ஸேஷமாக அங்கீகரித்து (நோய்களறுக்கும்‌) “நோய்களறுக்கும்‌ மருந்தே (திருவாய்மொழி-9-3-3) என்கிறபடியே ஸம்ஸார வ்யாதி பேஷஜமாய்‌ (ஏற்றரும்‌) “ஏற்றரும்‌ வைகுந்தத்தை அருளும்‌ நமக்கு” (திருவாய்மொழி 7-6-10) என்று ஸ்வ யத்நத்தானாலே பெற வரிதாயிருக்கிற பரம பதத்தைக்‌ கொடுத்து (தாளின்‌ கீழ்‌) “தன்‌ தாளின் கீழ்ச்‌ சேர்த்து” (திருவாய்மொழி 7-5-10) என்கிறபடியே தனக்கு பாதோபதாநமாக இட்டுக் கொண்டு ( இன்பக் கதி) “இன்பக் கதி செய்யும்‌‘ (திருவாய்மொழி 7-5-11 என்று நிரதஸயாநந்தி யாக்கி (ஊடு புக்கு) “எடுபுக்கெனதாவியை உருக்கி உண்டிடுகின்ற (திருவாய்மொழி 5-10-10) என்று தன்னுடைய போக்‌யதாதிஸயத்தாலே சேதநனை த்‌ரவ த்‌ரவ்யமாம்படி உருக்குமாபோலே திருவாய்மொழியும்‌ (நண்ணா) “நண்ணா வசுரர்‌ நவி வெய்த நல்லவமரர்‌ பொலி வெய்த எண்ணாதனகள்‌ எண்ணும்‌ நன்முனிவரின்பம்‌ தலைச் சிறப்ப பண்ணார்‌ பாடல்‌” (திருவாய்மொழி 10-7-5) என்கிறபடியே ஸாது பரித்ராண துஷ்க்ருத் விநாஸநார்த்தமாக அவதரித்து (மாசறுக்கும்‌ தெருள் கொள்ளப்‌ பத்தராவர்‌) “ஒலிபுகழாயிரத்திப்பத்து உள்ளத்தை மாசறுக்கும்‌” (திருவாய்மொழி 5-3-11 என்று நெஞ்சுக்கு மாசான அஜ்ஞானத்தை வாஸநையோடே போக்கி “தெருள் கொள்ளச்‌ சொன்ன ஓராயிரம்‌” (திருவாய்மொழி 2-10-11 என்றும்‌ ‘தூயவாயிரத்திப் பத்தால்‌ பத்தராவர்‌ துவளின்றிமே” (திருவாய்மொழி 6-4-11) என்றும்‌ சொல்லுகிறபடியே ஜ்ஞாந பக்திகளைக்‌ கொடுத்து “உரிய தொண்டராக்கும்‌” (திருவாய்மொழி 6-9-11) என்கிறபடியே அங்குத்தைக்கு அநந்யார்ஹ ஸேஷமாமாக்கி (உடைந்து) “உடைந்து நோய்களை ஓடுவிக்குமே” (திருவாய்மொழி 1-7-11) என்று ஸாம்ஸாரிகமான ஸகல துரிதங்களையும்‌ ஸவாஸநமாகப்‌ போக்கி “வானின் மீதேற்றி அருள் செய்து” (திருவாய்மொழி 8-4-11 என்று தேஸ விஸேஷ ப்ராப்தியைப்‌ பண்ணுவித்து, (அடிக்கீழ்‌) ‘அடிக்கீழிருத்தும்‌” (திருவாய்மொழி 8-8-1॥ என்கிறபடியே அவனுக்கு பாதோபதாநமாக்கி (பயக்கும்‌) “எங்ஙனே சொல்லிலும்‌ இன்பம்‌ பயக்குமே” (திருவாய்மொழி 7-9-1॥ என்கிறபடியே இவனுக்கு ஆநந்தத்தை உண்டாக்கி (மூவுலகும்‌ உருகா நிற்பர்‌) ஒன்பதோடொன்றுக்கும்‌ மூவுலகும்‌ உருகுமே” (திருவாய்மொழி 9-5-11 என்றும்‌ ஊற்றின் கண்‌ நுண் மணல்‌ போல்‌ உருகா நிற்பர்‌” (திருவாய்மொழி 6-8-11 என்றும்‌ சொல்லுகிறபடியே தன்னுடைய போக்யதையாலே சேதநரைத் த்‌ரவத்‌ரவ்யமாக்கி இப்படி ஸர்வேஸ்வரனோடு ஸாம்யத்தை உடைத்தாகையாலே (வாஸ்யன்‌ பத்தினாய தோற்றம் போலே ) தனக்கு வாஸ்யனான ஸர்வேஸ்வரனுடைய பத்தினாய தோற்றம் திருச்சந்த -79)என்கிற பத்து அவதாரமே போலே ‘தோற்றங்களாயிரம்‌ (திருவாய்மொழி 6-8-11) என்று இத்திருவாய்மொழியின்‌ பத்துப்‌ பத்தான ஆவிர்ப்பாவமுமென்கிறார் –

    215-ஐந்தினாடொன்பதோட ஒருபத்து என்னுமவை போலே நூறே சொன்ன பத்து நூறு ஒராயிரமென்றதும்‌ ஸாபிப்ராயம்‌.
    இனிமேல்‌ (ஐந்தினோடு ஒன்பதோடு ஒருபத்தும்‌ என்னுமவை போலே) “ஐந்தினோடைந்தும்‌ வல்லார்‌ ்‌ (திருவாய்மொழி 10-2-11) என்று ஐந்து பாட்டுக்கொரு அபிப்ராயம்‌ ஐந்து பாட்டுக்கொரு அபி ப்ராயமுமானாப்போலவும்‌ “ஒன்பதோடொன்றுக்கும்‌” (திருவாய்மொழி 9-5-11) என்று ஒன்பது பாட்டுக்கொரு கருத்தும்‌ ஒருபாட்டுக்கொரு கருத்துமானாப்‌ போலவும்‌ “பாடலோராயிரத்துள்‌ இவையும்‌ ஒருபத்தும்‌ வல்லார்‌ (திருவாய்மொழி 3-4-11 என்று பத்து பாட்டுக்கு ஒரு கருத்தானாப் போலவும்‌ (நூறே சொன்ன பத்து நூறு ஓராயிரம்‌ என்றதும்‌ ஸாபிப்ராயம்‌) “நூறே சொன்ன ஆயிரம்‌” (திருவாய்மொழி 9-4-11) என்றும்‌ “பத்து நூற்றுள்‌ இப்பத்து” (திருவாய்மொழி 6-7-11 என்றும்‌ சொல்லுகையாலே பத்துக்கள்‌ தோறும்‌ வேறு வேறு கருத்தாயும்‌ “அவாவிலந்தாதிகளால்‌ இவை ஆயிரமும்‌” (திருவாய்மொழி 10-10-11) என்று ஆயிரத்துக்கும்‌ ஓரபிப்ராயமாயும்‌ இப்படித்‌ தலைக்கட்டுமென்கிறார்

    216-பாட்டுக்கு க்ரியையும்‌ பத்துக்குக்‌ கருத்தும்‌ போலே நூற்றுக்கு உபதேஸப்பத்து. (பாட்டுக்குக்‌ க்ரியையும்‌ பத்துக்குக்‌ கருத்தும்‌ போலே நூற்றுக்கு உபதேஸப்பத்து) அதாவது ஒரு பாட்டு “தொழு தெழு” (திருவாய்மொழி 1-1-1 என்று ஒரு க்ரியையோடே தலைக் கட்டுமாப்‌ போலவும்‌ பத்து பாட்டு பரத்வம்‌, பஜநீயத்வம்‌, ஸெளலப்‌யம்‌, அபராத ஸஹத்வம்‌ என்றாப் போலே ஒரு கருத்தோடே தலைக் கட்டுமா போலவும்‌, நூறு பாட்டு பரோபதேஸமா யிருப்பதொரு திருவாய்மொழியோடே தலைக்கட்டுமென்கிறார்

    217-பகவத்‌ பத்த பரங்கள்‌ ஆஸ்ரயண விதி, ஸேஷங்கள்‌. இவற்றில்‌ பகவத் பக்த பரங்களாய்‌ வருமவற்றுக்குத்‌ தாத்பர்யம்‌ ஏதென்ன, அவற்றுக்குத்‌ தாத்பர்யத்தை அருளிச் செய்கிறார்‌. (பகவத்‌ பக்தபரங்கள்‌ ஆஸ்ரயண விதி ஸேஷங்கள்‌) “பயிலும்‌ சுடரொளி” (திருவாய்மொழி 3-7) “நெடுமாற்கடிமை” (திருவாய்மொழி 8-10) என்ற பாகவத பரங்களான திருவாய்மொழிகளுக்குக்‌ கருத்து என்னென்னில்‌, ‘ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்க்க காமோ யஜேத” (யஜுஸ்‌ ஸம்ஹிதை 2-5-5) என்று ஸ்வர்க்க காமனானவன்‌ ஜ்யோதிஷ்டோமத்தைப்‌ பண்ணுவான்‌ என்கிற விதிக்கு “ப்ரயாஜைர்‌ யஜேத” இத்யாதி விதிகள்‌ ஸேஷமாய்‌ அவற்றினுடைய அநுஷ்டானத்தோடே பல பர்யந்தமாய்த்‌ தலைக் கட்டுமா போலே ‘திருநாரணன்‌ தாள்‌ காலம்‌ பெறச்‌ சிந்தித்துய்ம்மினோ” (திருவாய்மொழி 41-1) “நலமந்தமில்லதோர்‌ நாடு புகுவீர்‌ பலமுந்து சீரில்‌ படிமின்‌ ஓவாதே” (திருவாய்மொழி 2-8-4) என்கிற ஆஸ்ரயணம்‌ பாகவத ஸமாஸ்ரயணத்தோடொழிய தலைக் கட்டாமையாலே அவ்வாஸ்ரயண விதிக்கு ஸேஷமென்கிறார்‌. அன்றிக்கே பகவத் பக்த பரங்கள்‌ என்கிற இதுக்கு பகவத்‌ பரமாயும்‌ தத் பக்த பரமாயும்‌ வருமவை என்று பொருளான போது (பாட்டு க்ரியையிலே முடியுமாபோலேயும் )பத்துப்‌ பாட்டு நிதாநம்‌ சொல்லும்‌ பாட்டிலே முடியுமா போலேயும்‌ பத்துத் தோறும்‌ உபதேஸம்‌ உண்டாகையாலே) பகவத் குணங்களையும்‌ தத் பக்தனான ஜீவனுடைய குணங்களையும்‌ சொல்லுகிற விடங்களை ஆஸ்ரயண விதிக்கு ஸேஷமென்கிறார்‌. அன்றிக்கே பகவத் பக்த பரமாம்படி ஒருங்க விட்டு பரோபதேஸம்‌ பண்ணுகிற திருவாய்மொழியில்‌ என்று இதற்குத்‌ தாத்பர்யமாகக்‌ கடவதென்று ஏக வாக்யமாகச்‌ சொல்லவுமாம் –

    218-பரத்வ, காரணத்வ, வ்யாபகத்வ, நியந்த்ருத்வ, காருணிகத்வ, ஸரண்யத்வ, ஸக்தத்வ, ஸத்யகாமத்வ, ஆபத்ஸகத்வ, ஆர்த்தி ஹரத்வ விஸிஷ்டன்‌ மயர்வை யறுக்க, தத்த்வவேதந மறப்பற்று ஜ்ஞப்தி பல முக்தி தலை சேர நிஷ்கர்ஷித்து, மோக்ஷ பல வ்ருத்தி செய்ய அர்த்தித்து, புருஷார்த்த, பலாந்யருசி யொழிந்து, விரக்தி பல ராகம்‌ கழியமிக்கு, ப்ரேமபலோபாயத்தே புகுந்து, ஸாதந பலோபகாரக்‌ கைம்மாறின்றி, க்ருதஜ்ஞதாபல ப்ரதி க்ருதமானத்தை யுணர்ந்து, ஆத்மதர்ஸந பல ப்ராப்தி மரணாவதியாகப்‌ பெற்று, காலாஸத்தி பல திக்குத்‌ துணை கூட்டின தம்‌ பேற்றைப்‌ பிறரறியப்‌ பத்துத் தோறும்‌ வெளியிடுகிறார்‌.
    இனி மேல்‌ திருவாய்மொழியில்‌ பத்துப்‌ பத்தாலும்‌ பரத்வாதி, குண விஸிஷ்டனான ஸர்வேஸ்வரன்‌ தமக்குப்‌ பிறப்பித்த தஸா விஸேஷங்களை வெளியிடுகிறார்‌ என்கிறார்‌. பரத்வ காரணத்வாதி, ஸர்வ ஸ்மாத் பரனாயிருந்த பரத்வ லக்ஷணம்‌ காரணத்வத்தாலே யாகையாலே ஸர்வ காரண பூதனாயிருந்த காரணத்வம்‌ நாட்டிலுள்ள காரண கார்யங்களைப்‌ போலே ப்ருதக் ஸித்‌தனா யிருக்கை யன்றிக்கே கார்ய வஸ்துக்களிலே வ்யாபித்திருக்கையாலே ஸர்வ வ்யாபகனாய்‌ அந்த வ்யாப்தி தான்‌ ஆகாஸ வயாப்தி போலன்றிக்கே நியந்த்ருத்வேந வாகையாலே ஸர்வ நியந்தாவாய்‌ இப்படி இருக்கிற பரத்வாதிகளைக்‌ கண்டஞ்ச வேண்டாதபடி பரம காருணிகனாய்‌ இப்படிப்‌ பரம காருணிகனாகையாலே ஸர்வ ஸரண்யனாய்‌ இப்படி ஸர்வ ஸண்யனாம் போது அநிஷ்ட நிவ்ருத்தி பூர்கமான இஷ்ட ப்ராப்தியைப்‌ பண்ணிக்‌ கொடுக்க வேண்டுகையாலே அதுக்கு ஈடான ஸர்வ சக்தித்வத்தை யுடையனாய் அந்தப் ஸக்தி தன்னாலே கற்ப்பிக்கப்பட்ட நித்ய போகத்தை யுடையவனாகையாலே ஸத்யகாமனாய்‌ இப்படி நித்யபோகத்தை யுடையவனாய்க் கொண்டிருக்கையாலே லீலா விபூதியை நோவு பட விட்டு இருக்குமோ என்னில் அதனுடைய பிரளய ஆபத்தில் உதவி ரக்ஷிக்குமவனாகையாலே ஆபத் சகனாய் -இப்படி ஆபத் சகனாகையாலே ஸம்ஸார தாப ஆர்த்தரான ஆஸ்ரிதர்களுடைய ஆர்த்தியைப் போக்குமவனாகையாலே ஆர்த்தி ஹரனாய் -ஆர்த்திஹரனாய்‌ ஆக இப்படி பரத்வ காரணத்வ வியாபகத்வ நியந்த்ருத்வ காருணிகத்வ சரண்யத்வ சக்தத்வ ஸத்ய காமத்வ ஆபத் சஹத்வ ஆர்த்தி ஹரத்வ விஸிஷ்டன் -இப்படி பத்துப் பத்தாலும் பிரதி பாதிக்கப்பட்ட பரத்வாதிகளான பத்துக் குணங்களுடன் கூடியிருக்கிற சர்வேஸ்வரன் (மயர்வை அறுக்க தத்வ வேதந மறப்பற்று )மயர்வற மதிநலம் அருளினன் -மயர்வற என் மனத்தே மன்னினான் -1-7-4-என்றும் சொல்லுகிறபடியே அஜ்ஞாநத்தை ஸ வாஸநமாகப்‌ போக்கி ஜ்ஞாநத்தைக்‌ கொடுக்க “மறப்பனோ இனி யான்‌ என்‌ மணியையே” (திருவாய்மொழி 1-10-10) என்று விபூதியிலில்லாதபடியான தத்வ ஜ்ஞாநத்தை யுடையராய்‌ (ஜ்ஞப்தி பல முக்தி தலை சேர நிஷ்கர்ஷித்து) அந்த தத்வ ஜ்ஞாந பலமான மோக்ஷத்தை “நின்‌ செம்மா பாத பற்புத்‌ தலை சேர்த்து”” (திருவாய்மொழி 2-9-1) என்று ஸ்வரூபாநுரூபமாக “தனக்கேயாக” (திருவாய்மொழி 2-9-4) என்று நிஷ்கர்ஷித்து (மோக்ஷ பல விருத்தி செய்ய அர்த்தித்து) அந்த ஸ்வரூபாநுரூபமான மோக்ஷத்துக்கு பலமான வ்ருத்தியை “வழுவிலா அடிமை செய்ய வேண்டும்‌ நாம்‌” (திருவாய்மொழி -3-3-1) என்று அர்த்தித்து (புருஷார்த்த, பலாந்ய ருசியொழிந்து) அந்த புருஷார்த்தத்துக்குப்‌ பலம்‌ தத்‌ வ்யதிரிக்தங்களில்‌ ருசியை “‘ஐங்கருவிகண்ட இன்பம்‌ சிற்றின்பமொழிந்தேன்‌‘ (திருவாய்மொழி 4-9-10) என்று தவிர்ந்து ( விரக்தி பல ராகம்‌ கழிய மிக்கு) அந்த விரக்தி விஷய வைராக்‌யத்துக்குப்‌ பலமான பகவத்‌ விஷயத்தில்‌ ராகம்‌ “கழிய மிக்கதோர்‌ காதலளிவள்‌” (திருவாய்மொழி 5-5-10) என்று அதிஸயித்து (ப்ரேம பலோபாயத்தே புகுந்து) இப்படி நிரதியய ப்ரேம பலமான விளம்ப அக்ஷமத்வத்தால்‌ வந்த த்வரையாலே “அலர் மேல்‌ மங்கை உறை மார்பா அடிக்கீழமர்ந்து புகுந்தேனே” (திருவாய்மொழி 6-10-10) என்று உபாய வரணம்‌ பண்ணி (ஸாதந பலோபகாரக் கைம்மாறின்றி) இப்படி ஸித்‌த ஸாதந பரிக்ரஹம்‌ பண்ணின இவர்‌ அந்த ஸாதந பலமான க்ருதஜ்ஞதையாலே ப்ரத்யுபகாரமாக ஆத்மாவை ஸமர்ப்பிக்கத்‌ தேடி “அதுவுமற்றாங்கவன்‌ தன்னது எதுவுமொன்றுமில்லை செய்வதிங்குமங்கே” (திருவாய்மொழி 7-9-10) என்று அவ்வாத்மா அவனுக்கு அநந்யார்ஹ ஸேஷம்‌ என்றிருக்கையாலே ப்ரத்யுபகாரம்‌ காணாதே தடுமாறி (க்ருதஜ்ஞதா பல ப்ரதி க்ருதமா னத்தை உணர்ந்து) அந்த க்ருதஜ்ஞதா பலமான ப்ரத்யுபகாரம்‌ பண்ணத்‌ தேடி ஆத்ம ஸ்வரூபத்தை “நின்றவொன்றை உணர்ந்தேன்‌” (திருவாய்மொழி 8-8-4) என்று தேஹேந்த்‌ரியாதி களில்‌ விலக்ஷணமாய்‌ பகவத நந்யார்ஹ ஸேஷமாயிருக்கிற ஆகாரத்தை அறிந்து (ஆத்மதர்ஸந பலப்ராப்தி மரணாவதி யாகப்‌ பெற்று) அந்த ஆத்ம தர்ஸநத்துக்குப்‌ பலமான பகவத்‌ ப்ராப்தியை “மரணமானால்‌ வைகுந்தம்‌ கொடுக்கும்‌ பிரான்‌” (திருவாய்மொழி 9-10-5) என்கிறபடியே ஸரீராவஸாநத்திலே பண்ணித்‌ தருகிறோம்‌ என்று அவன்‌ நாளிட்டுத் தர பெற்றுடையராய்‌ (காலாஸத்தி பல கதிக்குத்‌ துணை கூட்டின) அணித்தாக நாளிட்டுக்‌ கொடுக்கையாலே அதுக்கு பலம்‌ அர்ச்சிராதி, மார்க்கத்தாலே போகையிறே, ஆகையாலே அவ் வர்ச்சிராதி கதிக்கு “காளமேகத்தையன்றி மற்றொன்றிலம்‌ கதியே” (திருவாய்மொழி 10-1-1 என்றும்‌ “ஆத்தன்‌ தாமரையடியன்றி மற்றிலம்‌ அரணே” திருவாய்மொழி 10-1-6) என்றும்‌ சொல்லுகிறபடியே ஆபத்‌ தநமான அவன்‌ தன்னை இவருக்குத்‌ துணையாக்க அவனைத்‌ துணையாக உடையராய்‌ (தம்‌ பேற்றைப்‌ பிறரறியப்‌ பத்துத்தோறும்‌ வெளியிடுகிறார்‌) இப்படி ஈஸ்வரன்‌ தமக்குப்‌ பண்ணிக்‌ கொடுத்த தஸைகளைப்‌ பத்துப்‌ பத்தாலும்‌ வெளியிடுகிறார்‌.

    ————————————-

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்‌ அருளிச் செய்த ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌-ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ அருளிச்செய்த வ்யாக்‌யாநத்துடன்‌-த்‌விதீய ப்ரகரணம்‌-

    August 11, 2025

    ஆசார்ய ஹ்ருத,யஸ்யார்த்த, ஸகலா யேந த,ர்ஸிதா | ஸ்ரீ ஸாநு தாஸ மமலம்‌ தேவ ராஜம்‌ தமாஸ்ரயே ॥

    ஆசார்ய ஹ்ருதயத்தின்‌ அர்த்தங்கள்‌ அனைத்தையும்‌ அருளிச் செய்தவராய்‌, ஸ்ரீஸாநுகாஸர்‌, தேவராஜர்‌ என்னும்‌ திருநாமங்களை உடையவரான திருநாராயணபுரத்து ஆயை ஆஸ்ரயிக்கிறேன்

    ஆசார்ய ஸ்வாந்த வக்தாரம்‌ அபி ராமவராபிதம்‌!
    ஸ்ரீக்ருஷ்ண தநயம்‌ வந்தே, ஐகத்‌ குருவராநுஜம்‌ ॥

    பணவாளரவணைப்‌ பள்ளி பயில் பவர்க்கெவ்வுயிரும்‌
    குண போகமென்று குருகைக் கதிபனுரைத்ததுய்ய
    உணர்பாவினுட்பொருள்‌ ஒன்றுமறியா உலகறிய
    மணவாளன் மாறன்‌ மனமூரைத்தான்‌ வண்முடும்பை வந்தே.

    ஸம்ஸ்ரிதாநாம்‌ ஜநிச்சேதஹேது ஜ்ஞாநத முக்திதம்‌ | யது புர்யாம்‌ ஜநந் யாக்‌யம்‌ லோகாநா முத்தமம்‌ குரும்‌ |
    ஸம் ப்ரதா யார்த்தத நிகம்‌ ஸெளம்ய ஜாமாத்ரு ஸூரயே | நிஸ்சிதார்த்த ப்ரதம்‌ ஸ்ரீமஜ் ஜநநீ குருமாஸ்ரயே

    ஆஸூரி சிங்கமாம்‌ ஆதி குரு உலகுக்கே
    மாசிலா இளையாழ்வார்‌ மண்ணுலக மாழ்ந்தன்று
    தூசரிக்கும்‌ திருப்பாவைத்‌ திருவருளைத்‌ தெளிவித்துப்‌
    பேசினார்‌ பெம்மானைப்‌ பின்போரை வாழ்த்திடவே

    மாதவத்தோர்‌ வாழ்த்தும்‌ முடும்பை மணவாளன்‌
    தோதவத்தித்‌ தூய் மறையோரான பெற்றார்‌ தீதற்ற
    ஆசார்ய ஹ்ருதயம்‌ பெற்றார்‌ நம்மாயி யிவர்‌
    தேசாரத் தாள்கள்‌ நெஞ்சே காண்

    மாதவத்தோன் மாறன்‌ மனங்கூறும்‌ மணவாளன்‌
    தோதவத்தித்‌ தூய் மறையோரான பெற்றார்‌ – நீதியினா
    லாங்கவர்‌ தாள்‌ சேர்‌ பெற்றார்‌ ஆயி மணவாளமுனி
    பூங்கமலத் தாள்கள்‌ நெஞ்சே போற்று

    ஆயி அந்தாதி-ஆயி ப்ரபத்தியில்‌ மாமுநிகளாலும்‌ அவரின்‌ பேரன்‌ ஜீயர்‌ நாயனாராலும்‌ அநுக்ரஹிக்கப்‌ பட்டிருக்கிறதைக்‌ காணலாம் அதில்‌ முதல்‌ இரண்டு ஸ்லோகத்தால்‌ ஆஸூரிப்பெருமாள்‌ வைபவததைக் கூறியுள்ளார்‌.

    ஆஸூரியிலவதரித்த இராமாநுசர்க்‌ கிருவர்‌ தாமாய்‌
    கூசாத நிலையொன்னில்‌ தாய்வயிற்றில்‌ பிறந்தவராய்‌
    மாசாத கூரேசர்‌ குருவருடன்‌ சேர்த்து வைக்க
    ஆஸூரிப்‌ பெருமாள் தாம்‌ ஒருவராம்‌ இராமாநுசர்க்கே (1)

    இராமாநுசர்க்கே ஸரணாம்‌ எழுபத்து நால்வர்‌ தன்னுள்‌
    இராப்பகலென்னாதே தன் குருவைச்‌ சிந்தித்தேத்தி
    இராகமனைத்தையும்‌ தொலைத்து விட்டுப்‌ பெருமாளென்னும்‌
    இராகவனோடெம்‌ பெருமாள்‌ எதுகிரியைச்‌ சென்றார்தாமே (3)

    ஆசார்ய ஹ்ருத,யஸ்யார்த்தாஸ் ஸகலா யேந தர்ஸிதா: !
    ஸ்ரீஸாநு தாஸ மமலம்‌ தே,வராஜம்‌ தமாஸ்ரயே ॥

    த்‌,ராவிட ஆம்நாய ஹ்ருத.யம்‌ கு,ருபர்வ க்ரமாக,தம்‌ ।
    ரம்ய ஜாமாத்ரு தே,வேந தர்ஸிதம்‌ க்ருஷ்ண ஸூநுதா

    ——————-

    87-அணைய ஊர புனைய அடியும்‌ பொடியும் பட பர்வத பவநங்களிலே ஏதேனுமாக ஜதநிக்கப் பெறுகிற திர்யக் ஸ்தாவர ஜந்மங்களைப்‌ பெரு மக்களும்‌ பெரியோரும்‌ பரிக்‌ரஹித்து ப்ரார்த்திப்பர்கள்‌.
    இனி மேல்‌ பகவத்‌ விநியோகார்ஹமாயும்‌, பகவத் ஸம்பந்தத்தை உடைத்தாயு மிருக்கிற திர்யக் ஸ்தாவரங்களே யாகிலும்‌ மிகவும்‌ உத்க்ருஷ்டங்களென்னுமிடத்தை ““வாசிகை பக்ஷி மிருகதாம்‌ மாநஸைரந்த்ய ஜாதிதாம்‌ | ஸாரீரஜை: கர்ம தோஷைர்யாதி ஸ்தாவரதாம்‌ நர” (மநு) என்று வாசிக காயிக பலமாய்க் கொண்டு அல்லாதார்க்கு வரக்‌ கடவதான திர்யக் ஸ்தாவர ஜந்மங்கள்‌ போலன்றிக்கே, பகவத்‌ விநியோகார்ஹமாய்‌, பகவத் ஸம்பந்தத்தை உடைத்தாயுமிருக்கிற திர்யக் ஸ்தாவரங்களே உபாதேயமென்று மஹாத்மாக்களாலே பரிக்‌ரஹிக்கவும்‌ ஆதரிக்கவும்‌ படுகையாலே தந் முகேந ப்ரகாஸிப்பிக்கிறார்‌ (அணைய இத்யாதி,).

    *அணைவதரவணைமேல்‌” (திருவா.2 – 8 – 1) விடாயர்‌ மடுவிலே சேர்ந்தாப் போலே ஸ்ரம ஹரமாய்‌, அதாவது – “பூம்பாவை யாகம்‌ புணர்வது” என்று நாச்சிமாரோட்டைச்‌ சேர்த்தியோடே விகல்பிக்கலாம் படியான ஸூக ஸ்பர்ஸத்தை உடையனாகையாலே ஸர்வேஸ்வரன்‌ கண் வளர்ந்தருளுகைக்குப்‌ பாங்காயிருப்பதான திருவனந்தாழ்வானாயும்‌, “ஊரும்‌ புட்கொடியுமக்தே”” (திருவா. 10 – 2 – 3) என்கிறபடியே வேதாந்த வேத்‌யத்வத யோதகமான கருட வாஹநன்‌ கருட த்‌வஜன்‌ என்று சொல்லப்படும்படி அவனுக்கு வாஹநமாயும்‌ த்‌வஜமாயுமிருக்கும்‌ பெரிய திருவடியாயும்‌, “தாளிணை மேலும்‌ புனைந்த” (திருவா, 1 – 9 – 7), ““புனையுங் கண்ணி”” (திருவா. 4 – 3 – 2) என்கிறபடியே ஸர்வேஸ்வரத்வ ஸூூசகமான தனி மாலையாய்‌, ”மலர்த் துழாய் மாட்டே நீ மனம்‌ வைத்தாய்‌” (திருவா. 3- 1 & 4) என்கிறபடியே அவன் திருவுள்ளத்தைக்‌ கொள்ளை கொள்ளவற்றான திருத் துழாயாழ்வாராயுமிருக்கிற திர்யக் ஸ்தாவர ஜந்மங்களைப்‌ “பெரு மக்களுள்ளவர்‌’” (திருவா. 3 – 7 – 5) என்னும்படி மஹாத்மாக்களாயும்‌, ஸத்தையே பிடித்து மோஷத்வ ஜ்ஞாந திரோதாந மில்லாமையாலே “’அஸந்நேவ’”, ‘“ஸந்தமேநம்‌”’ (தை.ஆ.) என்ன வேண்டாதபடி இருக்கையாலே நித்யரான ஸூரிகள்‌ பகவத்‌ விநியோகார்ஹமாக ஸ்வேச்சையாலே பரிக்‌ரஹித்தார்கள்‌.

    (அடியும்‌ பொடியும் பட) ““பத்யு? ப்ரஜாநாமைஸ்வர்யம்‌ பஸூநாம்‌ வா ந காமயே அஹம்‌ கதம்போ பூயாஸம்‌ குந்தேரா வா யமுநா தடே”’ என்று ப்ரஜாபதி பஸூ பதிகளுடைய ஐஸ்வர்யத்தையும்‌ வேண்டேன்‌; ”பூத்த நீள்‌ கடம்பேறி”’ (நா. தி. 4 – 4] என்றும்‌, ‘“பூங்குருந்தேறி யிருத்தி” (நா. தி. 3 – 3) என்றும்‌ சொல்லுகிற க்ருஷ்ணனுடைய திருவடிகளோட்டை ஸ்பர்ஸத்துக்கு விஷயமான குருந்தாதல்‌, கடம்பாதல்‌ ஆவேனாக வேணும்‌ என்றும்‌, ““ஆஸாமஹோ சரண ரேணு ஜுஷாமஹம்‌ ஸ்யாம்‌ ப்‌,ருந்ததாவநே கிமபி குல்மல தெளஷதீநாம்‌ । யா து ஸ்த்யஷம்‌ ஸ்வஜ ந மார்ய பதஞ்ச ஹித்வா பேஜுர் முகுந்த பதவீம்‌ ஸ்ருதிபிர் விம்ருக்‌யாம்‌”‘ (பாக,.10) என்று வேதங்களாலும்‌ தேடவரிய க்ருஷ்ணன்‌ போன வழியை ஸ்வ ஜநத்தையும்‌ குலாசாரத்தையும்‌ அதிக்ரமித்து யாவர் சில பெண்கள்‌ பின் தொடர்ந்தார்கள்‌, அந்த க்ருஷ்ணனுடையவும்‌, பெண்களுடையவும்‌ பாத ரேணுவை தரித்திருக்கும்‌ ப்‌ருந்தா வநத்தில்‌ சிறு செடிகள்‌ கொடிகள்‌ ஓஷதிகள்‌ இவையாவேனாக வேணும்‌ என்றும்‌,

    (பர்வத) “கோனேரி வாழும்‌ குருகாய்ப் பிறப்பேனே’‘ (பெருமா. தி. 4 – 1) என்றும்‌, “திருவேங்கடச் சுனையில்‌ மீனாய்ப் பிறக்கும்‌ விதி யுடையே னாவேனே”‘ (பெருமா.தி, 4 2) என்றும்‌ “‘தம்பகமாய்‌ நிற்கும்‌ (பெருமா. தி. 4 – 5) , “*செண்பகமாய்‌ நிற்கும்‌‘” (பெருமா. தி. 4 – ச்‌) , “கானாறாய்ப் பாயும்‌”(பெருமா. தி. 4 – 7), எம்பெருமான்‌ பொன் மலை மேல்‌ ஏதேனுமாவேனே”'(பெருமா. தி. 4 – 10) என்றும்‌ திருமலை யாழ்வாரோட்டை ஸம்பந்தமுடைய திர்யக் ஸ்தாரவரங்களில்‌ ஏதேனுமொன்றாகப்‌ பெறுவேனாக . வேணும்‌ என்றும்‌,
    (ப,வநங்களில்‌]) “தவத,ஸ்ய ஸுகைக ஸங்கிநாம்‌ பவநேஷ் வஸ்த்வபி கீடஜந்ம மே”? (ஸ்தோ.ர. 55) என்று – தேவரீருடைய தாஸ்ய ஸுக மொன்றிலுமே ஸங்கத்தை உடையரான ஸ்ரீவைஷ்ணவர்கள் திருமாளிகைகளிலே உத்பத்தி விநாஸங்களிரண்டும்‌ அங்கேயாம் படியான கீட ஜத்மமே எனக்கு உண்டாக வேணும்‌ என்றும்‌; இப்படி பகவத்‌ பாாகவத ஸம்பந்தங்களை யுடைய திர்யக் ஸ்தாவர ஜந்மங்களை *பேராளன்‌ பேரோதும்‌ பெரியோரான ஸ்ரீஸூக ப்‌ரஹ்மர்ஷி, ஸ்ரீகுலசேகரப் பெருமாள்‌, பெரிய முதலியார்‌ தொடக்கமான முமுஷுக்கள்‌ ப்ரார்த்தித்தார்கள்‌.
    ஆக இத்தால்‌ பகவஜ் ஜ்ஞாந ரஹிதமான உத்க்ருஷ்ட வர்ணாதிகள்‌ ஸத்துக்களுக்கு அநாதரணீயமென்றும்‌, பகவத்‌ விநியோகார்ஹமான திர்யக் ஸ்தாவர ஜந்மங்கள்‌ ஆதரணிய மென்னுமிடத்தையும்‌ சேர அருளிச் செய்தார் –

    88-ஸேஷத்வ பஹிர்பூத ஜஞாநாநந்த மயனையும்‌ ஸஹியாதார்‌ த்யாஜ்யோபாதியை ஆதரியார்களே.
    இனி மேல்‌ ஸேஷேத்வத்துக்குப்‌ புறம்பான ஆத்மாவையும்‌ அநாதரிக்கிறவர்களுககு ஓளபாதிகமான வர்ணாதிகளை அநாதரிக்கச்‌ சொல்ல வேணுமோ? என்கிறார்‌ (ஸேஷத்‌வேத்யாதி ,), “ந தேஹம்‌ ந ப்ராணாந்‌ ந ச ஸுக,மஸேஷாபி லஷிதம்‌ ந சாத்மாநம்‌ நாந்யத்‌ கிமபி தவ ஸேஷத்வ விப்வாத்‌ ! பஹிர்பூ,தம்‌ நாத க்ஷணமபி ஸஹே யாது ஸததா விநாஸம்‌ தத்‌ ஸத்யம்‌ மது மதந விஜ்ஞாபநமித,ம்‌”” (ஸ்தோ, ர. 57) என்று – தேவரீருடைய ஸேஷத்வத்துக்குப்‌ புறம்பான தேஹாதிகள்‌ ஒன்றையும்‌ ஸஹியேன்‌; அவ்‌வளவே யன்றியிலே ஜ்ஞாநாநந்த,மயமான ஆத்ம வஸ்துவையும்‌ ஸஹியேன்‌; அது ஸததாவாக விநாஸத்தை அடைவதாக. இது – அஹ்ருதயமன்று ஸத்யம்‌- இது அஸத்யமாகில்‌ தேவரீர் ஸந்நிதி யில்‌ அஸத்யம்‌ சொன்ன மது பட்டது படக் கடவேன்‌-என்று ஸேஷத்வத்துக்குப்‌ புறம்பான போது ““ஜஞாநாநந்த மயஸ்த்வாத்மா” (பாஞ்ச) என்று ஜ்ஞாநாநந்த மயனையும்‌ ஸஹியாதவர்கள்‌, ஸேஷத்வ ஜஞாந விரோதியான அஹங்காரத்துக்கு ஹேதுவாகையாலே த்யாஜ்யமாய்‌, காமமடியாக வருவதொன்றாகையாலே ஓளபாதிகமான வர்ணத்தை ஆதரியார்க ளென்னுமிடம்‌ சொல்ல வேணுமோ ? என்கிறார் –

    89-இதின்‌ ஓளபாதிகத்வம்‌ ஒரு ராஜா தன்னை மறை முனிவனாக்கினவன்‌ நீசனாக்குவித்த ராஜாவை வாரே உறுப்பாக யதிப்பித்து ஸ்வர்க்க மேற்றின போதே தெரியும்‌.
    இந்த வர்ணத்தினுடைய ஓளபாதிகத்வத்தை உதாஹரண முகத்தாலே வெளியிடுகிறார்‌ (ஒரு ராஜா என்று தெடங்கி). ருஷிக வம்ஸ உத்பவனாய்‌ ராஜாவான விஸ்வாமித்ரன்‌ ப்‌ரஹ்ம ரிஷித் வத்தை ஆசைப்பட்டு நெடுங்காலம்‌ தபஸ்ஸு பண்ணின தன்னை ‘‘மந்திரங்‌ கொள்‌ மறை முனிவன்‌” (பெருமா.தி.10 – 2) என்னும் படி ப்ரஹ்ம ரிஷியாக்கின வஸிஷ்டன்‌ தன்னுடைய வார்தாதிலங்கநம்‌ பண்ணின த்ரி ஸங்குவைத்‌ தன்‌ புத்ரர்களுடைய ஸாபத்தாலே மார்விலிட்ட யஜ்ஞோபவீதந் தானே வாராம்படி சண்டாளனாக்கு விக்க, அந்த த்ரிஸங்குவையும்‌ அந்த வாரே யஜ்ஞாங்கமான உறுப்புத் தோலாம் படித்‌ தன்னுடைய தபோ பலத்தாலே யஜிப்பித்து ஸ்வர்க்காரோஹணம்‌ பண்ணுவித்த போதே வர்ணம்‌ கர்மோபாதிகம்‌ என்னுமிடம்‌ ஸுவ்யக்த மென்கிறார்‌,-ஆக இத்தால்‌ ஒரு க்ஷத்ரியன்‌ ப்‌ரஹ்ம ரிஷியானானென்றும்‌, ஒரு க்ஷத்ரியன்‌ சண்டாளனானானென்றும்‌, அந்த சண்டாளனானவனை அந்த ப்‌ரஹ்ம ரிஷியானவன்‌ தபோ பலத்தாலே ஸ்வர்க்க மேற்றினான்‌ என்றும்‌ சொல்லுகையாலே வர்ணம்‌ ஓளபாதிகம்‌ என்னுமிடம்‌ ஸுஸ்திரமாய்த்து –

    90- மாவுருவில்‌ கள்ள வேடம்‌, திருந்து வேதமலமான மானிடம்‌ பாடல்‌, ஸர்வ வர்ண ஸூத்‌ரத்வம்‌, காடு வாழ் சாதியில்‌ கடல் வண்ணன்‌ வேடம்‌, தென்னுரையில்‌ ஹரி கீர்த்தி, ஸ்வபசரில்‌ பத்தி பாசனமும்‌ அறிவார்‌ ஆரார்‌ அமரரென்ன ஏற, அறியாதார்‌ சாதி யந்தணர்களேலும்‌ தகர விழுவர்‌.
    ஆக கீழ்‌ பகவத் ஸம்பந்த, ஜஞாந ரஹிதமான உத்க்ருஷ்ட ஜந்மம்‌ அபக்ருஷ்ட மாகையாலே அதினளவிலே நிற்கிற ப்ரமாதாக்கள்‌ அநுபாதேயரென்றும்‌, பகவத் ஸம்பந்த ஜ்ஞாந முகத்தாலே அபக்ருஷ்ட ஜந்மம்‌ உத்க்ருஷ்ட ஜந்மமாகையாலே அதிலே நிற்கிற ப்ரமாதாக்கள்‌ உபாதேயரென்றும்‌ சொல்லா நின்றது. இனி மேல்‌ ப்ரமாதாக்களளவே யன்றிக்கே ப்ரமாண-ப்ரமேய-ப்ரமாதாக்கள்‌ மூன்றிலும்‌ த்யாஜ்யமுமுண்டு, உபாதேயமுமுண்டு; அப்படி உபாதேயமான ப்ரமாண-ப்ரமேயங்களோடு விகல்பிக்கலாம்‌ படியான அந்த ப்ரமாதாக்களுடைய வைபவத்தை ப்ரமாணங்களும்‌ ப்ராமாணிகரும் சொல்லா நிற்க, அத்தை அறியாதே மந்த மதிகளாய்க் கொண்டு ஜந்ம நிரூபணம்‌ பண்ணுமவர்கள்‌ அத பதிப்பர்களென்று கீழே ““வீட்டின்ப வின்பப்பாக்களில்‌ த்‌ரவ்ய பாஷா நிரூபண ஸமம்‌ இன்பமாரியிலாராய்ச்சி” என்று உபக்ரமித்த அர்த்தத்தை நிகமிக்கிறார்‌ (மா வுருவில்‌ கள்ள வேடம்‌ என்று தொடங்கி].
    எம்மா வுருவும்‌ வேண்டு மாற்றாலாவா யெழிலேறே”’ (திருவா. 5 – 8 – 2) “எவ் வுருவும்‌ மாவுரு’ என்று அவன்‌ பரிக்‌ரஹித்த விக்‌ரஹமெல்லாம்‌ அப்ராக்ருதமா யிருக்குமென்றும்‌, “இச்சா க்‌ருஹீதாபி மதோருதேஹா “” (வி.பு. 6 – 7 – 84) என்று இச்சையாலே பரிக்‌ருஹீதமா யிருக்குமென்றும்‌ சொல்லுகிற விக்‌ரஹங்களில் வைத்துக்கொண்டு “கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்கவாறும்‌”” (திருவா. 3 – 10 – 4) என்று, “யாதா ஹி சோரஸ்ஸ ததா ஹி புத்தா (ரா. ஆ. 109 – 73) என்று வேதத்துக்கு அப்ராமாண்யம்‌ சொல்லுகிற புத்‌த முனியான விக்‌ரஹமும்‌,
    (திருந்து வேதம்‌) ஸகல ஸப்‌தங்களும்‌ ஸத்‌வாரகமாகவும்‌, அத்‌வாரகமாகவும்‌ ஸர்வேஸ்வரனை ப்ரதி பாதிக்கையாலே கட்டளைப் பட்ட வேதத்தில்‌ (மலமான மானிடம்‌ பாடல்‌) *’ஓர்‌ மானிடம்‌ பாடலென்னாவதே” (திருவா. 3 – 9 – 4) என்றும்‌, “ந ஸ்மர்த்தவ்யோ விஸேஷேண வேத மந்த்ரோப்ய வைஷ்ணவ:? ! காவ்யாலாபோபி ஜப்யோஸெள யத்ர ஸங்கீர்த்ய தேச்யுதா ” என்றும்‌ சொல்லுகிறபடியே ஹேயரான க்ஷேத்ரஜ்ஞரை ப்ரஸம்ஸிக்கிற வாக்யங்களும்‌,
    (ஸர்வ வர்ண ஸூத்‌ரத்வம்‌) “ந ஸூத்‌ரா பகவத்‌ பக்தா விப்ரா பாகவதாஸ் ஸ்ம்ருதா? | ஸர்வ வர்ணேஷு தே ஸூத்‌ரா யே ஹ்ய பக்தா ஜநார்த்தநே” என்று பகவத்‌ பக்தனல்லாதவன்‌ எல்லா வர்ணங்களிலும்‌ ஸூத்‌ரனென்றும்‌, ப்ரமாண-ப்ரமேய -ப்ரமாதாக்கள்‌ மூவரிலும்‌ த்யாஜ்யரையும்‌ சொல்லி இனி மேல்‌ உபாதேயரையும்‌ சொல்லுகிறது-
    (காடு வாழ் சாதியில்‌ கடல் வண்ணன் வேடம்‌] ““கற்றினம்‌ மேய்க்கிலும்‌ மேய்க்கப்‌ பெற்றான்‌ காடு வாழ்‌ சாதியுமாகப் பெற்றான்‌”” (நா.திரு. 12 – 8) என்று கோபாலனாய்க்‌ கொண்டு காட்டிலே பசுக்களின் பின்னே ”கறையினார்‌” (திருவா. ச – 8 – 4) என்னும் படி பேணாதே திரியச் செய்தேயும்‌ ‘‘கடல் வண்ணன்‌ வேடத்தை வந்து காணீர்‌”” (பெரியா… 3 – 3 – 1) என்னும்படி பிறர்க்கும்‌ அழைத்துக் காட்ட வேண்டும்படி த்ரஷ்டவ்யமான க்ருஷ்ண லிக்ரஹமும்‌, (தென்னுரையில்‌ ஹரி கீர்த்தி) த்‌ராவிட பாஷா பரிகல்பிதமான ப்ரபந்தங்களில்‌ வைத்துக் கொண்டு *ஹரி கீர்த்திம்‌ விநைவாந்யத் ‘ ” (மாத்ஸ்யே) இத்யாதிப்படியே பகவத் ப்ரதிபாதக மானவையும்‌ (ஸ்வபசரில்‌) ஸ்வபரோபி மஹீபால் விஷ்ணு பக்தோ த்விஜாதி க” (பாஞ்ச. என்று ஸ்வபாகரே யாகிலும்‌, (பத்தி பாசனமுமறிவார்‌) “பெறற்கரிய நின்ன பாத பத்தியான பாசனம்‌” (திருச்ச, விரு. 100) என்று சொல்லுகிறபடியே ஸ்வ யத்நத்தாலே பெறுதற்கரிதான பகவச் சரணார விந்தங்களில்‌ பக்தியைத்‌ தங்களுக்கு தநம்‌ என்று அறியுமவர்களுமாகிற ப்ரமாண -ப்ரமேய-ப்ரமாதாக்கள்‌ மூன்றும்‌ -உத்க்ருஷ்ட தமம்‌ என்றும்‌ சொல்லி இந்த உத்க்ருஷ்ட -தமமான ப்ரமாண-ப்ரமேயங்களோடு விகல்பிக்கும்படியான இந்த ப்ரமாதாக்கள் வைபவத்தை (ஆராரமாரென்ன) “நீரார்‌ முகில் வண்ணன்‌ பேராரோதுவார்‌ ஆராரமரரே”” (திருவா. 10 – 5 – 8) என்று விலக்ஷண விக்‌ரஹ யுக்தனான ஸர்வேஸ்வரனுடைய திரு நாமங்களை அநுஸந்திக்க வல்லவர்கள்‌ ஏதேனுமொரு ஐந்ம வ்ருத்தங்களை உடையரே யாகிலும்‌ அவர்கள்‌ நித்ய ஸூரிகள்‌ என்றும்‌, (ஏற) ”இலங்குவான்‌ யாவரூமேறுவர்‌ சொன்னாலே”” (திருவா. 3 – 8 – 11) என்று பகவத விஷயத்தில்‌ அந்வயித்தவர்கள்‌ ஆரேனுமாகிலும்‌ தேஸ விஸேஷ ப்ராப்தி பண்ணுவர்கள்‌ என்றும்‌, இப்படி ஸர்வோத்க்ருஷ்டராகச்‌ சொல்லா நிற்க (அறியதார்‌) ஜந்மாதிகளால்‌ வந்த அஹங்காரத்தாலே மந்த மதிகளாய்க் கொண்டு அவர்கள் வைபவத்தை அறியாதே ஜந்ம நிரூபணம்‌ பண்ணுமவர்கள்‌ (சாதி யந்தணர்களேலும்‌ தகர விழுவர்‌) ‘அமரவோரங்கமாறும்‌”’ (திருமாலை 43) என்கிற பாட்டின் படியே ““அநாசாராந்‌ துராசாராந் அஜ்ஞாத்ரூதந் ஹீந ஜந்மந? । மத்‌ பக்தாந்‌ ஸ்ரோத்ரியோ நிந்தந்‌ ஸத்‌யஸ் சண்டாளதாம்‌ வ்ரஜேத்‌”” என்றும்‌ சொல்லுகிறபடியே உத்க்ருஷ்ட ஜந்மத்திலே பிறந்து அங்க ஸஹிதமான நாலு வேதங்களையும்‌ அதிகரித்து பகவத்‌ பக்தரா யிருந்தார்களே யாகிலும்‌ ஜந்மாதிகளால்‌ குறைய நின்று பகவதீயரா யிருப்பாருடைய ஜந்மத்தை காதா சித்கமாக வாகிலும்‌ நிரூபித்‌தார்களாகில்‌ அந் நிலையிலே அவர்கள்‌ சண்டாளராவர்‌ என்கையாலே பின்னை ஒரு காலும்‌ உஜ்ஜிவந மில்லாதபடி அத, பதிப்பர்க ளென்கிறார்‌. “ஸூத்‌ரம்‌ வா பகவத்‌ பக்தம்‌ நிஷாதம்‌ ஸ்வபசம்‌ ததா | ஈக்ஷதே ஜாதி ஸாமாந்யாத்‌ ஸ யாதி நரகம்‌ நர- என்றும்‌, “ப்ரத்யக்ஷிதாத்மநாதாநாம்‌ நைஷாம்‌ சிந்த்யம்‌ குலாதிகம்‌” என்றும்‌ சொல்லா நின்றதிறே –

    91-தமிழ் மா முனி திக்கு ஸரண்ய மென்றவர்களாலே க்வசித்‌ க்வசித்‌ என்று இவராவிர்பாவம்‌ கலியும்‌ கெடும் போலே ஸூசிதம்‌.
    இப்படி பாகவத ஸாமாந்யத்தாலே ஆழ்வாருடைய உத்பத்தி நிரூபிக்கலாகாது என்கிற மாத்ர மன்றிக்கே, ஆழ்வாருடைய அவதாரம்‌ வ்யாஸ ஸூகாதி களாலும்‌ ப்ரகாஸிப்பிக்கப்‌ பட்ட தென்கிறார்‌ மேல்‌. (தமிழ் மா முனி திக்கு ஸரண்ய மென்றவர்களாலே) “வண்டமிழ்‌ மாமுனி”’ (பெருமா.தி. 10 – 5) தக்ஷிணாதிக்‌ க்ருதா யேந ஸரண்யா புண்ய கர்மணா”’ (குருகா மாஹாத்ம்யம்‌) என்று த்ராவிட ஸாஸ்த்ர ப்ரவர்த்தகனான அகஸ்த்யன்‌ நின்ற திக்கு ஸர்வர்க்கும்‌ புகலிடம்‌ என்ற வ்யாஸ ஸூகாதிகளாலே (க்வசித்‌ க்வசித்‌ என்று இவர்‌ ஆவிர்பாவம்‌) *’கலெள கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா: | க்வசித் கவசிந் மஹா பாகா த்‌ராவிடேஷு ச பூயாஸ ? தாம்ர பர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்விநீ । காவேரி ச மஹா பாகா ப்ரதீசீ ச மஹாநதீ, । யே பிபந்தி ஜலம்‌ தாஸாம்‌ மநுஜா மநுஜேஸ்வர ! தேஷாம்‌ நாராயணே பக்திர் பூயஸீ நிருபத்‌ரவா”’ (வி.பு.) என்றும்‌,
    “க்ரூரே கலியுகே, ப்ராப்தே நாஸ்திகைச கலுஷீக்ருதே ॥ விஷ்ணோரம்ஸாம் ஸ ஸம்பூதோ வேத வேதார்த்த ஸாரவித்‌ | ஸ்தோத்ரம்‌ வேத மயம்‌ கர்த்தும்‌ த்‌ராவிட்‌யா ஸ ச பாஷயா ஜநிஷ்யதி ஸதாம்‌ ஸ்ரேஷ்டோ லோகாநாம்‌ ஹித காம்யயா ! கஸ்சிந் மநுஷ்ய ரூபேண க்ருபயா தத்ர வை முநி? । ப்ரயாஸ்யதி புநஸ்ஸோபி ஸாயுஜ்யம்‌ பரமாத்மநா அத்‌ யேதவ்யம்‌ த்‌விஜஸ் ஸ்ரேஷ்டைர் வேத ரூபமிதம்‌ க்ருதம்‌ ! ஸ்த்ரீபிஸ் , ஸூத்‌ரா திபிஸ் சைவ தேஷாம்‌ முக்தி? கரே ஸ்திதா’” (குருகாமா.) என்றும்‌, ““கலெள புந பாபரதாபி பூதே ஸ உத்‌ பபூ வாஸ்ரித வத்ஸலத்வாத்‌ ! பக்தாத்மநா ஸர்வ ஜநாந்‌ ஸு கோப்தும்‌ விஸ்வாதி கோ விஸ்வ மயோ ஹி விஷ்ணு?” என்றும்‌ இவ் வாழ்வாருடைய ஆவிர்பாவம்‌ கர்ம மூலமன்றிக்கே பகவதவதாரம் போலே ஜகத்‌ ரக்ஷணார்த்தமாக பகவதிச்சையாலே உண்டான தாகையாலே ஆவிர்பாவம்‌ என்கிறது –அந்த ஆவிர்பாவம் ““கலியும்‌ கெடும்‌”” (திருவா. 5 – 2 – 1) என்று இவர் தாம்‌ திருமங்கையாழ்வார்‌, உடையவர் போல்வார்‌ வந்துதித்து கலியுக, ஸ்வபாவம்‌ கெடும்‌ என்று அருளிச் செய்தாப் போலே அவர்களாலே ஸசிப்பிக்கப்பட்ட தென்கிறார் –

    92–அத்ரி-ஜமதக்‌நி-பங்க்திரத,-வஸு-நந்த, ஸூநுவானவனுடைய யுக,-வர்ண-க்ரமாவதாரமோ? வ்யாஸாதி வத் ஆவேஸமோ? மூதுவர்‌ கரை கண்டோர்‌ சீரியரிலே ஒருவரோ? முன்னம்‌ நோற்ற அனந்தன் மேல்‌ புண்ணியங்கள்‌ ப,லித்தவரோ? என்று ஸங்கிப்பர்கள்‌,
    இப்படி அருளிச் செய்கிற இவருடைய அவதார வைபவத்தைப் பார்த்து பகவதவதாரங்களில்‌ ஸ்வருபேண அவதாரமோ? ஆவேஸாவதாரமோ? நித்யரோ? முக்தரோ? ஸித்‌தரோ? தம்முடைய ஜந்மாந்தர ஸஹஸ்ர புண்ய ஸஞ்சயங்களாலே வந்தவரோ? ஈஸ்வரனுடைய பாக்‌ய பலத்தாலே வந்தவரோ? என்று அதி ஸங்கிப்பர்கள்‌ என்கிறார்‌ (அத்ரி ஐமதக்‌நி என்று தொடங்கி ) க்ருத யுகத்திலே அத்ரி ஜமதக்‌நிகள் பக்கலிலே தத்தாத்ரேயராயும்‌, பரஸூராமனாயும்‌-த்ரேதா யுகத்திலே ஷத்ரியனான தஸரத சக்ரவர்த்தி பக்கலிலே வந்தவதரித்தும்‌-த்‌வாபர- யுகத்திலே க்ஷத்ரியரில்‌ தண்ணியராகையாலே வைஸ்ய ப்ராயரான வஸுதேவ ஸூநுவாயும்‌, ‘“க்ருஷி கோரக்ஷ வாணிஜ்யம்‌ வைஸ்யம்‌ கர்ம ஸ்வபாவஜம்‌” (கீ. 18 – 44) என்று கோ ரக்ஷண தர்மத்தை உடையராகையாலே வைஸ்யரான ஸ்ரீநந்தகோபர்க்குப்‌ புத்ரராயும்‌, யுக க்ரமத்திலும்‌ அடைவே வர்ண த்ரயத்திலே வந்து அவதரித்துப் போந்த ஸர்வேஸ்வரன்‌ கலியுகத்திலே நாலாம்‌ வர்ணத்திலே ஆழ்வாராய்த்‌ திருவவதரித்தானோ என்றும்‌,
    ““க்ருஷ்ண த்‌வைபாயநம்‌ வ்யாஸம்‌ வித்தி, நாராயணம்‌ ப்ரபும்‌” (விபு. 3 – 4-5) என்கிறபடியே வேதங்களை வ்யஸிக்கைக்காக வ்யாஸாதிகள் போல்‌ வந்தவதரித்தானோ ? என்றும்‌, ”கரை கண்டோர்‌”” (திருவா. 8 – 3 – 10)என்று ஸம்ஸாரத்தைக்‌ கரை கண்ட முக்தரிலே ஒருவர்‌ அப்படியே அவதரித்தாரோ? ““பாம்பணை மேல்‌ பன்ளி கொண்டருளும்‌ சீதனையே தொழுவார்‌ விண்ணுளாரிலும்‌ சீரியரே” (திருவிரு. 79) என்றும்‌, .““முக்தாநாம்‌ லக்ஷணம்‌ ஹ்யேதச்ச்‌ வேத த்‌வீப நிவாஸிநாம்‌?” (பர. ரா. 337 – 40) என்றும்‌ நித்ய முக்தரோடொக்கச்‌ சொல்லலாம்படி இருக்கிற பவேதத்‌,வீபவாஸிகளான ஸித்‌தரிலே ஒருவரோ? “முன்னம்‌ நோற்ற விதி கொலோ” (திருவா. 6 – 5 – 7) என்கிற படியே ஜந்மாந்தர ஸஞ்சிதமான தம்முடைய பாக்‌யத்தாலே பிறந்தவரோ? “அனந்தன்‌ மேல்‌ கிடந்த வெம் புண்ணியா?” (திருச்ச. 45) என்று அநந்தஸாயியான ஸர்வேஸ்வரனுடைய பாக்‌யத்தாலே பிறந்தவரோ? என்று சங்கிப்பர்கள்‌ என்கிறார் –

    93-இதுக்கு மூலம்‌ – யான்‌ நீ என்று மறுதலைத்து வானத்து மண் மிசை மாறும்‌ நிகருமின்றி நிலயிடம்‌ தெரியாதே தெய்வத்தினம்‌ ஒரு வகைக் கொப்பாக இனத் தலைவன்‌ அந்தாமத்தன்பு செய்ய, சேர்ந்தமைக் கடையாளம்‌ உளவாக உகந்துகந்து திமிர் கொண்டாலொத்து நாட்டியல் வொழித்து ஸடரை யோட்டி மதாவலிப்தர்க்கு அங்கு மிட்டு நடாவிய கூற்றமாய்‌, தீயன மருங்கு வாராமல்‌ கலி யுகம்‌ நீங்கிக்‌ கித யுகம்‌ பற்றிப்‌ பட்டெழுபோதறி யாதிருந்த ப்ரபாவம்‌.
    இப்படி இவர்கள்‌ சங்கிக்கைக்கு ஹேது என்னென்னில்‌, இவருடைய ப்ரபாவம்‌ கண்டு என்கிறார்‌ மேல்‌. (இதுக்கு மூலம்‌) இப்படி இவர்கள்‌ சங்கிக்கைக்கு ஹேது. (யான்‌ நீ என்று மறுதலைத்து) “’புவியும்‌ இரு விசும்பும்‌ நின்னகத்த, நீ என்‌ செவியின்‌ வழி புகுந்தென்னுள்ளாய்‌, அவிவின்றி யான்‌ பெரியன்‌ நீ பெரியை என்பதனை யாரறிவார்‌, ஊன் பருகு நேமியாய்‌ உள்ளு”” (பெரிய திரு. 75) என்று – உபய விபூ,தியையும்‌ உன்‌ ஸங்கல்பைக தேஸத்திலே வைத்து என்‌ ஸ்ரவண த்‌வாரா நெஞ்சிலே புகுந்து விச்சேதமின்றியிலே நித்ய வாஸம்‌ பண்ணா நின்ற பின்பு, நானோ, நீயோ பெரியாய்‌? ஆரென்று ஸர்வாதிகனான நீயே விசாரி – என்று ஸர்வேஸ்வரனோடே விகல்பிக்கலாம் படியாய்‌,(வானத்து மண்மிசை மாறும்‌ நிகருமின்றி) ““இனி யாவர்‌ நிகரகல் வானத்தே’” (திருவா. 4 5 – 8) என்றும்‌, ““மாறுளதோ இம் மண்ணின் மிசையே”’ (திருவா. 6 – 4 – 9) என்றும்‌ ‘ உபய விபூதி யிலும்‌ எனக்கு ஸத்‌ருஸருண்டோ என்னும்படி த தாஸ்ய ஹ்ருஷ்டோக்தியை உடையராய்‌ (நிலையிடம்‌ தெரியாதே) ““வைகுந்தமோ வையமோ நும்‌ நிலையிடம்‌”” (திருவிரு -75) என்று – இந்த விபூதிஸ்தரோ? நித்யவிபூதிஸ்தரோ? என்று அறுதியிட ஒண்ணாதபடி இருக்கையாலே உபய விபூ,தியிலும்‌ வ்யாவ்ருத்தராய்‌,
    (தெய்வத்தினம்‌ ஒருவகைக் கொப்டாக) “*தெய்வத்தினமோரனையீர்களாய்‌” (திருவிரு. 23) என்று நித்யஸூரிகளெல்லாரும்‌ கூடினாலும்‌ தம்முடைய ஒருவகைக் கொப்பாக உடையராய்‌, (இனத் தலைவன்‌ இத்யாதி,) ”வானோரினத் தலைவன்‌”’ (பெரியதிரு. 25) என்று அப்படிப்பட்ட ஸூரி ஸமூஹத்துக்கு நிர்வாஹகனான ஸர்வேஸ்வரன்‌, ““அந்தாமத்தன்பு செய்து”‘ (திருவா. 2 – 5 – 1) என்று விலக்ஷணமான பரம பதத்தில்‌ பண்ணும்‌ வ்யாமோஹத்தை இவர் பக்கலிலே பண்ண-(சேர்ந்தமைக் கடையாளமுளவாக) “திருவருள்களும்‌ சேர்ந்தமைக் கடையாளம்‌ திருந்தவுள”’ (திருவா. 8 – 9 – 6) என்று ஸர்வேஸ்வரனுடைய க்ருபையாலே விஷயீ க்ருதரானமைக்கு ஸுவ்யக்தமாக லாஞ்சநமான ராகத்தை வாய்க் கரையிலே உடையராய்‌ கேவலம்‌ வாய்க் கரையில்‌ ராக மாத்ர மன்றிக்கே “‘உகந்துகந்துள் மகிழ்ந்து குழையுமே”’ (திருவா. 6 – 5 – 4) என்று பாஹ்யாப் யந்தர ஹர்ஷத்தாலே ஸிதிலராய்‌, “’திமிர கொண்டாலொத்து நிற்கும்‌ ”” (திருவா. 6 – 52) என்று அநுஸந்தா நத்தாலுண்டான ஆதராதிஸயத்தாலே ““ஸ்தப்‌தோஸ்யுத தமாதேஸம ப்ராக்ஷ்ய?”” (சா. 6 – 1 – 3) என்று ஸர்வ நியாமகமான ப்‌ரஹ்ம ஸ்வரூப ஸாக்ஷாத்காரம்‌ பிறந்தாரைப் போலே ஸ்திமிதராய்‌,(நாட்டியல்வொழிந்து) ““நாட்டாரோடியல் வொழிந்து”‘ (திருவா. 10 – 6 – 2) என்று ஸம்ஸாரிகளோட்டை ஸங்கத்தை விட்டு (ஸடரையோட்டி) ஸட கோபராகையாலே ப்ரமாணாநு குணமாக தர்க்கம்‌ சொல்லுகை யன்றிக்கே ஸ்வ மநீஷையாகக்‌ கற்பித்துக்‌ கொண்டு, ஷூஷ்க தர்க்கங்களாலே அர்த்த ஸ்தாபநம்‌ பண்ண விருக்கிற ஸடரைத்‌ தம்முடைய உக்தி ஸ்ரவண மாத்ரத்தாலே தம்முடைய ஸந்நிதாநத்தில்‌ நில்லாதபடி பண்ணி,

    (மதா வலிப்தர்க்கு அங்குஸ மிட்டு) பராங்குஸ ராகையாலே ‘வித்‌யா மதோ தந மத,ஸ்‌த்ருதியோபி ஜநோ மத, | ஏதே மதா வலிப்தாநாம்‌ ஏத ஏவ ஸதாம்‌ தம?”’ என்று அபிஜந வித்‌யா வ்ருத்தங்களாகிற மத,த்ரயங்களினாலே தூஷிதரா யிருக்கிறவர்களை ஸ்வோக்தி ரூபமான அங்குஸங்களாலே நிர்மதராம்படி பண்ணி, (நடாவிய கூற்றமாய்‌) “பறவையின்‌ பாகன்‌ மதன செங்கோல்‌ நடாவிய கூற்றங் கண்டீர்‌”” (திருவிரு. 6) என்று வேத, வேத்‌யத்வ ஸூசகமான கரூட வாஹநனான ஸர்வேஸ்வரன் விஷயத்திலே, “நின்‌ கண்‌ வேட்கை எழுவிப்பனே”” (திருவிரு. 96) என்கிறபடியே எல்லார்க்கும்‌ பக்தியை உண்டாக்கி நடத்துமவராய்‌ கூற்றம்‌ என்கையாலே தம்முடைய தர்ஸநஸ்தருடைய ஸாம்ஸாரிகமான ருசிக்கு விநாஸகரராய்‌. (தீயன மருங்கு வாராமல்‌) **கொன்றுயிருண்‌ணும்‌ விசாதி பகை பசி தீயன வெல்லாம்‌”’ (திருவா. 5 – 2 – 6) என்று சேதநரை முடித்து ப்ராணாபஹாரம்‌ பண்ணக் கடவதான ஆதி வ்யாதி ரூபமான தோஷங்களும்‌ “வானே மறி கடலோ”’ (பெரியதிரு. 54) இத்யாதி,ப்படி ஸாம்ஸாரிக து,:க ஹேதுவான பாபங்‌களும்‌ பார்ஸ்வத்திலும்‌ வாராதபடியாய்‌,
    (கலியுகம்‌ நீங்கிக்‌ கிதயுகம்‌ பற்றி) “திரியும்‌ கலியுகம்‌ நீங்கி!” (திருவா. 5 – 2 – 9) என்று ‘“பவிஷ்யத்யத ரோத்தரம்‌”‘ (பார.சா .மோ) என்கிறபடியே பதார்த்த ஸ்வபாவங்கள்‌ வேறுபட்டு வருகிற கவியுக தோஷமும்‌ நீங்கி, ““பெரிய கிதயுகம்‌ பற்றிப்‌ பேரின்ப வெள்ளம்‌ பெருக) (திருவா. 5 – 2 – 3) என்று ஆதி க்ருத யுகத்தை யொக்க மஹத்தான ஆநந்த ஸாகரம்‌ அபி வ்ருத்‌தமாக, “பட்ட போதெழு போதறியாள்‌ விரை மட்டலர்‌ தண்டுழா யென்னும்‌”‘ (திருவா. 2 – 4 – 9) என்று பகவத்‌ விஷயத்தில்‌ போக்‌யதாநுஸந்தாநத்தாலே “‘தந்தந்த் யுதித ஆதித்யே நந்தந்த் யஸ்தமிதே ரவெள”’ என்றும்‌, ‘ப்ராதர் மூத்ர புரீஷாப்‌,யாம்‌ மத்‌யாஹ்நே ஷூத் பிபாஸயா । ஸாயம்‌ காமேந படத்‌யந்தே ஜந்தவோ நிமி நித்‌ரயா” என்கிறபடியே ஸம்ஸாரிகளுக்குப்‌ புறம்பே கால க்ஷேப ஹேதுவான திவா ராத்ர விபாக மறியாதே அகால கால்யமான தேஸ விஸேஷத்திற்‌ போலே பகவதநுபவைக பரராய்ப்‌ போந்த இவருடைய ப்ரபாவம்‌ கீழ்‌ அப்படி சங்கிக்கைக்கு ஹேது என்கிறார்-

    94-இதுக்கு ஹேது – ஊழி தோறும்‌ சோம்பாது ஒன்றிப்‌ பொருளென்றளி மகிழ்ந்து முற்றுமாய் நின்று நூலுரைத்து யோகு புணர்ந்து கண் காண வந்து ஆள் பார்க்கிறவன்‌ உலகினதியல்வை நல்வீடு செய்ய இணக்குப் பார்வை தேடிக்‌ கழறலர் ஞானமுருவின மூழுதுமோட்டின பெருங் கண்‌ எங்குமிலக்கற்று அன்பொடு தோக்கான திசையிலே ஆக்கையில்‌ புக்குழன்று மாறிப் படிந்து துளங்குகிறவர்‌ மேலே படப்‌ பக்க நோக்கறப் பண்ணின விஸேஷ கடாக்ஷம்‌.

    இவர்க்கு இந்த ப்ரபாவமுண்டாகைக் கடி என்‌ என்னில்‌, ஸ்ருஷ்ட்யாதி முகத்தாலே ஸம்ஸாரிகளுடைய உஜஜீவநத்துக்கு கிருஷி பண்ணுகிற ஈஸ்வரன்‌ ஸஜாதீயரைக்‌ கொண்டு இவர்களைத்‌ திருத்த வேணு மென்று பார்த்து அதுக்காளாவாரை ஸம்ஸாரத்தில்‌ கிடையாத தஸையிலே தேவ மநுஷ்யாதி சரீரங்களிலே பரவேஸித்து, ததநுஸாரிகளாய்க் கொண்டு ஜந்ம பரம்பரைகளிலே இழிந்த ஸம்ஸார ஸாகர மத்‌யஸ்தரான இவர்‌ பக்கலிலே நிர்ஹேதுகமாகப் பண்ணின விஸேஷ கடாக்ஷமென்கிறார்‌ (இதுக்கு ஹேது ஊழி தோறும்‌ என்று தொடங்கி). இதுக்கு ஹேது – கீழ்‌ ப்ரஸ்துதமான ப்ரபாவத்துக்கு ஹேது.
    ஊழி தோறும்‌. தன்னுள்ளே படைத்துக்‌ காத்துக்‌ கெடுத்துழலும்‌”’ (திருவா. 10 – 7-9) என்றும்‌, ”சோம்பாதிப் பல்லுருவை யெல்லாம்‌ படர்வித்த வித்தா”” (பெரியதிரு. 18) என்றும்‌, ”ஒன்றி யொன்றி உலகம்‌ படைத்தான்‌”” (திருவா. 3 – 9 – 10) என்றும்‌, ‘“பொருளென்றிவ் வுலகம்‌ படைத்தவன்‌”’ (திருவா. 2 – 10 – 11) என்றும்‌, அளிமகிழ்ந்துலக மெல்லாம்‌ படைத்தவை” (திருவா. 3 – 4 – 8) என்றும்‌ சொல்லுகிறபடியே கர்ஷகனானவன்‌ ஒரு போகம்‌ பதறி(ரி)ற்றென்னா, கை வாங்காதே மேலே மேலே க்ருஷி பண்ணுமாப் போலே கல்பந் தோறும்‌ ஸ்ருஷ்டிக்கச் செய்தேயும்‌, அது ஸபலமாகாதிருக்‌கச் செய்தேயும்‌, பின்னையும்‌ முசியாதே ப்ரயோஜநமாம்‌, ப்ரயோஜநமாம்‌ என்று திருவுள்ளத்தில்‌ க்ருபையாலே வந்த உகப்போடே அடுத்தடுத்து ஸ்ருஷடித்து,
    (முற்றுமாய் நின்று) ““தத் ஸ்ருஷ்ட்வா ததேவாநு ப்ராவிஸத்‌”’ (தை. 2 – 6 – 1) என்கிறபடியே ஸ்ருஷ்டமான ஜகத்திலே அவற்றினுடைய வஸ்துத்வ-நாம பாக்த்வங்களுக்காக அவற்றைச்‌ சொல்லுகிற ஸப்‌தங்கள்‌ தன்னளவிலே பர்யவஸிக்கும்படி வ்யாப்தனாய்க்‌ கொண்டு ப்ரகாரியாய்‌ நின்று, “‘அன்னமதா யிருந்தங்கற நூலுரைத்த ‘” (திருமொழி 11 – 4 – 8) என்கிறபடியே ஸாராஸார விவேகோந்முகமான ஹம்ஸ ரூபியாய்க் கொண்டு ஸாஸ்த்ர ப்ரதராநத்தைப் பண்ண (யோகு புணர்ந்து) ““தன் கோலச் செந்தாமரைக் கண்‌ உறைபவன்‌ போலவோர்‌ யோகுபுணர்ந்த ஓளிமணிவண்ணன்‌”’(திருவா. 3 – 10 – 2) என்று க்ஷீராப்தியில்‌ யோக நித்‌ரா வ்யாஜத்தாலே சேதநருடைய ரக்ஷண உபாயசிந்தை பண்ணி,
    சிந்தா ஸமநந்தரம்‌ தோற்றின உபாயாநுகு, ணமாக (கண் காண வந்து) “துயரில்‌ மலியும்‌ மனிசர் பிறவியில்‌ தோன்றிக் கண் காண வந்து”’ (திருவா. 3 – 10 – 6) என்கிறபடியே ”ந மாம்ஸ சஷுரபி வீக்ஷதே தம்‌”, “ந சக்ஷுஷா பஸ்யதி கஸ்ச நைநம்‌””, “என்றேனும்‌ கட்கண்ணால்‌ காணாத அவ்வுரு” (பெரியதிரு. 28) என்றும்‌ சொல்லுகிற தான்‌ துக்க பஹுளரான மநுஷ்யரோடே ஸஜாதீயராய்க் கொண்டு வந்து பிறந்து அவர்களுடைய மாம்ஸ சக்ஷுஸ்ஸுக்கு விஷய பூ,தனாய்‌, “‘ஆள்பார்த்துழிதருவாய்‌”? (பெரியதிரு. 60) என்று அப்ராக்ருத விக்‌ரஹ விஸிஷ்டனாய்‌, நிரங்குசா ஸ்வதந்த்ரனாய்‌, நிரபேக்ஷனான தான்‌ உற்றாரா யிருப்பார்‌ உருமாறி நின்று ஆராயுமாப் போலே *தமருகந்த இத்யாதிப்படியே அர்ச்சகர்‌ உகந்த திரவ்யத்தைத்‌ திருமேனியாகக்‌ கொண்டு அவர்களுக்கு அத்யந்த பரதந்த்ரனாய்‌, அவர்களிடுகிற பத்ர புஷ்பாதிகளிலே ஸா பேக்ஷனாய்க் கொண்டு கோயில்‌களிலேயும்‌, க்‌ருஹங்களிலேயும்‌ நின்றருளி நம்முடைய விஷயீகாரத்துக் காளாவார்‌ ஆர்‌ என்று ஆள் பார்க்கிறவன்‌.
    (உலகினதியல்வை நல்வீடுசெய்ய) “ஓ ஓ உலகினதியல்வே”’ (திருவாசிரி. 6) என்கிற படியே ஸர்வ ப்ரகார ரக்ஷகனான தன்னை விட்டு ஷூத்‌ர தே,வதைகளை பர ஹிம்ஸாதி ஸாதந முகத்தாலே வலித்து, ஷூத்‌ர ப்ரயோஜநங்களைப்‌ பெற்று அவற்றை அநுபவிக்‌கைக்காக தேவாதி சரீர ப்ரவேஸம்‌ பண்ணி, ஆஸ்சர்ய பூதையான ப்ரக்ருதி வஸ்யரான ஸம்ஸாரி சேதநர் ஸ்வபாவத்தை “யாதானும்‌ பற்றி நீங்கும்‌ விரதத்தை நல் வீடு செய்யும்‌”” (திருவிரு. 95) என்று ப்ரக்ருதி ப்ராக்ருதங்களில்‌ ஏதேனுமொன்றைப்‌ பற்றத் தன்னை விட்டு நீங்குகையே ஸ்வபாவமான விரதத்தை ஸவாஸநமாகப்‌ போக்குகைக்காக,
    (இணக்குப் பார்வை தேடி) ஸஜாதீய புத்‌தியாலே தன்னோடு இணக்க வற்றான பார்வை மானை வைத்து ம்ருகம் பிடிப்பாரைப் போலே ஸஜாதீயரைக் கொண்டு திருத்த வேணும்‌ என்று பார்த்து, அதுக்காளாவார்‌ ஆரோ என்று தேடி, (கழறலர்‌ ஞானமுருவின மூழுதுமோட்டின பெருங்கண்‌) ““கழறலம்‌” (திருவிரு. 58) என்கிற பாட்டில்‌ சொல்லுகிற படியே ஜகத்திலே வ்யாப்தமான ஜ்ஞாநத்தையும்‌ அதிக்ரமித்து, ”மண்முழுது மகப்படுத்து நின்ற””, ”மேலைத் தண்மதியும்‌ கதிரவனும்‌ தவிரவோடி”’ (திருநெடு. 5) என்று ஸகல லோகங்களையும்‌ ஆக்ரமிக்கும்படி வ்யாபிக்கப் பெற்ற திருவடிகளிலும்‌ முற்பட்ட ்‌அழறலர் தாமரைக் கண்ணன்‌ ” (திருவிரு. 58) என்றும்‌, ““பெருங் கேழலார்‌ தம் பெருங்‌கண் மலர்ப் புண்டரீகம்‌”” (திருவிரு. 45) என்கிற திருக் கண்களானவை, (எங்குமிலக்கற்று) விஷயீகாரத்துக்கு அநுகுணமான நன்மை சேதநர் பக்கல்‌ காணாமையாலே எங்கும்‌ இலக்கற்று,
    (அன்பொடு நோக்கான திசையிலே) *’அன்பொடு தென்திசை நோக்கிப்‌ பள்ளி கொள்ளும்‌”’ (பெகுமா.தி. 1 – 10) என்கிறபடியே இவர்கள் பக்கல்‌ நன்மை பெறாத வளவிலும்‌ இவர்கள் பக்கல்‌ தனக்குண்டான சாபலத்தாலே ஸ ஸ்நேஹமாக கடாஷித்த திசையிலே, (ஆக்கையில்‌ புக்கு) ”யாதானு மோராக்கையில்‌ புக்கு”’ (திருவிரு. 95) என்றும்‌, ““ஆக்கையின்‌ வழி யுழல்வேன்‌”’ (திருவா. 3 – 2 – 1) என்றும்‌, “மாறி மாறிப்‌ பல பிறப்பும்‌ பிறந்து (திருவா. 2 – 6 – 8) என்றும்‌, “’பன் மா மாயப் பல் பிறவியில்‌ படிகின்ற யான்‌” (திருவா. 3 – 2 – 2) என்றும்‌, ““பிறவிக் கடலுள்‌ நின்று நான்‌ துளங்க”” (திருவா. 5 – 1 – 9) என்றும்‌ சொல்லுகிறபடியே தேவாதி சரீரங்களிலே புக்கு“தேவோஹம்‌ மநுஷ்யோஹம்‌’ என்கிறபடியே அவற்றிலே பக்‌தராய்‌, அவற்றின்‌ வழியே போய்‌ தத் பலமான ஜந்ம பரம்பரைகளிலே தோள் மாறி அவற்றிலே அவகாஹித்துத்‌ தரை காண ஓண்ணாத ஸம்ஸார ஸமுத்‌ர மத்‌யஸ்தராய்க் கொண்டு நடுங்குகிற இவர் மேலே படும்படி,
    “எங்கும்‌ பக்க நோக்கறியான்‌”’ (திருவா, 2 – 6 – 2) என்கிறபடியே நாச்சிமார் வந்து திருமுலைத் தடத்தாலே நெருக்கி அணைத்தாலும்‌ புரிந்து பாராதே ““நாஸெள புருஷ காரேண ந சாப்யந்யேந ஹேதுநா | கேவலம்‌ ஸ்வேச்ச யைவாஹம்‌ ப்ரேஷே கஞ்சித்‌ கதாசந”” (பாஞ்ச.), ““நிர்ஹேதுக கடாக்ஷேண மதீயேந மஹாமதே ! ஆசார்ய விஷயீகாராத்‌ ப்ராப்நுவந்தி பராங்கதிம்‌”” (பாஞ்ச.) என்றும்‌ சொல்லுகிறபடியே ஸ்வேச்சையாலே நிர்ஹேதுகமாகப்‌ பண்ணப்பட்ட விஸேஷ கடாஷம்‌ என்கிறார்‌
    ஆக இத்தால்‌ கீழ்ச் சொன்ன அவருடைய ப்ரபாவத்துக்கு ஹேது பகவத் கடாக்ஷம்‌ என்றதாய்த்து.

    95-ஸ்ரமணீ-விது,ர-ருஷிபத்நிகளைப்‌ பூதராக்கின புண்ட,ரீகாக்ஷ்ன நெடுநோக்கு சாபமிழிந்தென்னப்பண்ணுமிறே.

    நித்ய ஸம்ஸாரியாய்ப்‌ போந்தாரொருவர்க்கு ப,க,வத் கடாக்ஷத்தாலே ஸாம்ஸாரிக ஸகல பாபங்களும்‌ போய்‌ இந்த ப்ரபாவமெல்லாம்‌ உண்டாகக் கூடுமோ என்னில்‌; ஸபரி முதலானாரை பரி ஸூத்‌,த,மாக்கின ஸர்வேஸ்வரனுடைய தி,வ்ய கடாக்ஷம்‌ அவஸ்ய மநுபோக்தவ்யமான ஸகல பாபங்களையும்‌ நஸிப்பிக்குமிறே என்கிறார்‌ (ஸ்ரமணிவிது,ர என்று தொடங்கி). (ஸ்ரமணிவிது,ர) ““ஸ்ரமணிம்‌ த.ர்ம நிபுணாம்‌”’ (ரா. ஆ. 1 – 56) என்கிறபடியே வேடுவிச்சியாயிருக்கிற ஸபரியை *சக்ஷுஷா தவ ஸெளம்யேந பூதாஸ்மி ரகு,தந்த,ந । பாத,மூலம்‌ க,மிஷ்யாமி யாநஹம்‌ பர்யசாரிஷம்‌”‘ (ரா. ஆ. 74 – 12) என்று அவள்தானே “தேவரீருடைய அழகிய கடாக்ஷத்தினாலே என்னுடைய ப்ராப்தி ப்ரதிப,ந்த,கங்களெல்லாம்‌ நிங்பேஷமாகப்‌ போகையாலே பரிஸுத்‌,தை,யானேன்‌’ என்று சொல்லும்படி பண்ணியும்‌,

    ஸ்ரீவிது,ரரை ‘“பீ,ஷ்மத்‌,ரோணாவதிக்ரம்ய மாஞ்சைவ மது,ஸூ௫த.ந । கிமர்த்த_ம்‌ புண்ட,ரீகாக்ஷ பு,க்தம்‌ வ்ருஷலபே,ஜநம்‌”” (பார. உத்‌.) என்று எதிரியானவன்‌ சீறிச்‌ சொல்லா நிற்கச் செய்தேயும்‌ ”புண்ட,ரீகாக்ஷ”” என்னும்படியான திருக்கண்களாலே அவரை பரிஸூத்‌,த, ராம்படி பண்ணியும்‌,

    (ருஷி பத்நிகளை) “*வேர்த்துப் பசித்து வயிறசைந்து வேண்டடிசி லுண்ணும் போது ஈதென்று பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும்‌” (நா. திரு. 12 – 6) என்கிறபடியே தன்னுடைய நெடு நோக்காலே ப,க்த விலோசநத்தில்‌ ருஷி பத்நிகளிலே ஒருத்தியை “கத்ரைகா வித்‌,ருதா ப,ர்த்ரா ப,க,வந்தம்‌ ய தாஸ்ருதம்‌ । ஹ்ருதேரபகூ,ஹ்ய விஜஹெள தேஹம்‌ கர்மநிப,ந்த,நம்‌”” (ப,ாக,. 10 – 28 – 34) என்று தன் பக்கல்‌ ப்ராவண்யத்தாலே-அப்போதே முக்தையாம்படிபண்ணியும்‌, அதிலே சிலர்‌ தன்னை அதுப,விக்கும்படியாகவும்‌ பண்ணின விஷோேஷ கடாக்ஷமானது, (சாபமிழிந்தென்னப் பண்ணுமிறே) “திங்களு மாதித்தியனுமெழுந்தாற் போல்‌ அங்கணிரண்டுங்கொண்டெங்கள்மேல்‌ நோக்குதியேல்‌ எங்கள்மேல்‌ சாபமிழிந்து ”” (திருப்பாவை 22) என்கிறபடியே ஆஹ்லாத,கரத்வத்தையும்‌, அதிப்ரகாஸகத்வத்தையும்‌ உடைத்தாகையாலே சற்த்‌.ராதி.த்யர்களிருவரும்‌ உதித்தாற்போலேஇருக்கிற அழகிய திருக்கண்களாலே எங்களைப்‌ பார்த்தருளினாயாகில்‌ ஸசாபோபஹதரைப்போலே, அநுப,வித்தல்லது நமமியாத ஸாம்ஸாரிக ஸகல துரிதங்களும்‌ நிவ்ருத்தமாம்‌ என்று சொல்லும்படி ஸகல பாபக்ஷபணத்தில்‌ நிபுணங்களாயிறே இருப்பது என்கிறார்-

    96-கோவ்ருத்‌திக்கு நெரிஞ்சியைப்‌ புல்லாக்கினவன்‌ ஐகத்‌திதார்ததமாக “எனக்கே நல்லவருள்கள்‌” என்னும்படி ஸர்வ ஸெளஹார்த்த,ப்ரஸாதத்தை ஒரு மடை செய்து இவரைத் தன்னாக்க, லோகமாகத்‌ தம்மைப் போலாக்கும்படி யானார்‌.

    ஸர்வேஸ்வரன்‌ இவரை இப்படி நிர்ஹேதுகமாக கடாக்ஷித்ததுக்கு ப்ரயோஜநம்‌ என்‌ என்னில்‌, லோக ஹிதார்த்தமாக என்கிறார்‌ (கோவ்ருத்‌திக்கு நெரிஞ்சியைப்‌ புல்லாக்‌கினவன்‌ என்று தொடங்கி). “*திவத்திலும்‌ பசுநிரை மேய்ப்புவத்தி” (திருவா, 10 – 3 10) என்று ஸ்வ ரக்ஷணத்தில்‌ அந்வயமில்லாத கோ ரக்ஷணத்திலே திருவுள்ளம்‌ உகந்திருக்கையாலே அவற்றினுடைய அபிவ்ருத்‌திக்காக “ப்‌ருந்தாவநம்‌ பகவதா க்ருஷ்ணேநாக்லிஷ்ட கர்மணா ! றாபே,ந மநஸாத்‌,யாதம்‌ கவாம்‌ வருத்‌தி மபிப்ஸதா”’ (வி.பு. 5 – 6 – 28) என்று நெரிஞ்சிக் காட்டை பர ஸம்ருத்‌த்‌யேக ப்ரயோஜநமாகத்‌ திருவுள்ளத்தாலே **உத்பந்நநவபாஷ்பாட்‌யம்‌”’ (வி.பு. 5 – 6 – 37) என்கிறபடியே அவற்றுக்கு போக்‌யமாக ஸங்கல்பித்தவன்‌. “நமோ ப்‌ரஹ்மண்யதே வாய கேரா ப்‌ராஹ்மண ஹிதாய ச ।ஜகத்‌தி தாய க்ருஷ்ணாய கோவிந்தாய நமோ நம?” (பாரதம்‌) என்று பசுக்களினுடைய ரக்ஷணத்தோபாதி ஜகத்தினுடைய ரக்ஷ்ணத்துக்குக்‌ கடவன்‌ அவனாகையாலே அந்த ஜகத்தினுடைய ஹிதார்த்தமாக.

    (எனக்கே நல்ல வருள்கள்‌ என்னும்படி) ‘எதிர்சூழல் புக்கெனைத்தோர்‌ பிறப்பும்‌ எனக்கே அருள்கள்‌ செய்ய – எம்மான்‌ திருவிக்கிரமனை – விதி சூழ்ந்தது”‘ (திருவா. 2 – 7-6) என்று – அநேக ஜந்மங்கள்‌ நான்‌ பிறந்த ஐந்மங்களுக்கு எதிரே பிறந்து வந்து என்னை விஷயீகரிக்ரும்படி ஸர்வேஸ்வரனை க்ருபை கால் கட்டிற்று என்றும்‌, ‘நல்ல வருள்கள்‌ நமக்கே உகந்தருள் செய்வான்‌’” (திருவா. §-6- 1) என்றும்‌ தன் பேறாக க்ருபை பண்ண!], “பிராட்டி திருவநந்தாழ்வான்‌ தொடக்கமானார்க்குக்‌ கூறுகொடாதே எனக்கும்‌ என்னோடு ஸம்பந்தமுடையார்க்கும்‌ தருகிறவன்‌” என்று இவர்‌ பெறும்படி.

    (ஸர்வ ஸெளஹார்த்த, ப்ரஸாதத்தை ஒரு மடை செய்து) “ஸுஹ்ருதம்‌ ஸர்வ பூதாநாம்‌ ஜ்ஞாத்வா மாம்‌ .ஸாந்திம்ருச்சதி‘” (கீதை 5 – 29) என்கிறபடியே ஸர்வ பூதங்கள்‌ பக்கலிலும்‌ நடக்கிற தன்னுடைய ஸெளஹார்த்தத் தாலுண்டான ப்ரஸாதத்தை-இவரொருவர் பக்கலிலே ஒரு மடைப் படச்‌ செய்து விஷயீகரித்து. (இவரைத் தன்னாக்க) ““என்னைத் தன்னாக்கி”” (திருவா. 7 – 9 – 1) என்கிறபடியே இவரைத்‌ தன்னோடொத்த ஜ்ஞாந பக்திகளை உடையராகவும்‌, அநந்யார்ஹ ஸேஷபூதராகவும்‌ பண்ண- அவனாலே விஷயீ க்ருதரான இவரும்‌ லோகமாகத்‌ தம்மைப் போலே ஆக்கும்படி ஆனார்‌. “ஊரும்‌ நாடுமுலகமும்‌ தன்னைப் போல்‌” (திருவா. 6 – 6 – 2) என்கிறபடியே தாம்‌ அவதரித்த திருநகரி, அத்தோடே சேர்ந்த திருவழுதிவளநாடு, அத்தோடே சேர்ந்த பூ, லோகம்‌, அவற்றிலுள்ளாரடையத்‌ தம்மைப் போலே பகவதநுபவைக பரராகப்‌ பண்ணும்படி ஆனார்‌ என்கிறார்‌.

    97-அதாவது மயர்வற மதிநலமருளுகை.

    (அதாவது மயர்வறமதிநலமருளுகை) அதாவது – தன்னாக்குகையாவது என்றபடி. தன்னாக்குகையாவது – தான்‌ “*மயர்வறமதிநலமருளினன்‌” என்று தாமே அருளிச்‌ செய்யலாம்படி அஜ்ஞாநத்தை ஸவாஸநமாகப் போக்கி பக்திரூபாபந்ந ஜ்ஞாதத்தைத்‌ தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையாலே கொடுக்கை

    98-இருள்‌ துயக்கு மயக்கு மறப்பு என்கிற அநுதய-ஸம்மய-விபர்யய-விஸ்ம்ருதிகளற்று, மலர்மிசை எழுகிற ஜ்ஞாநத்தைக்‌ காதல்‌ அன்பு வேட்கை அவா என்னும்‌ ஸங்க-காம-அநுராக,ஸ்நேஹாத்‌,யவஸ்தா நாமங்களோடே பரமபக்தி தஸை யாக்குகை.

    அஜ்ஞாநத்தைப் போக்கி பக்தி ரூபாபந்ந ஜ்ஞாநத்தைக்‌ கொடுக்கையாவது – பகவஜ்‌ ஜ்ஞாந விரோதியான நாலு வகைப்பட்டிருக்கிற அஜ்ஞாநம்‌ போய்‌ ஜ்ஞாந ப்ரஸரண த்‌வாரமான மநஸ்ஸு அவித்‌யாதி களாலே திரோஹித மாகையாலே குண்டிதமாய்‌, தந் நிவ்ருத்தியிலே விகஸிதமாய்க் கொண்டு மேல் நோக்கிக்‌ கிளருகிற ஜ்ஞாநத்தை பரம பக்தி பர்யந்தமாக வளர்க்கை என்கிறார்‌.

    (இருள்‌ துயக்கு மயக்கு மறப்பென்கிற) ”இருளார்‌ வினை கெட”‘ (திருவிரு. 33), துயக்கின்றித் தொழுதுரைத்த’” (திருவா. 3 – 1 – 11), “மயக்குடை மாயைகள்‌” (திருவா. 1 – 3 – 10), “மறப்பற என்னுள்ளே மன்னினான்‌”” (திருவா. 1 – 10 – 10) என்கிற ஜ்ஞாநாநுதயமென்ன, ‘ஸ்தாணுர்வா புருஷோ வா’ என்று வஸ்துவை யதாவாக க்‌ரஹிக்க வொட்டாதிருக்கிற ஸம்மயமென்ன, ரஜ்ஜுவில்‌ ஸர்ப்ப புத்‌தியும்‌, ஸ்தாணுவில்‌ புருஷ புத்‌தியும் போலே வஸ்துவை விபரீதமாக க்‌ரஹிக்கை யாகிற விபர்யயமென்ன, அநுபூத விஷய ஜ்ஞாந திரோதாந ரூபமான விஸ்ம்ருதி யென்ன, இப்படிச் சொல்லுகிற அஜ்ஞாநத்தை வாஸனையோடே போக்கி.

    (மலர்மிசை எழுகிற ஜ்ஞாநத்தை) “’மனனகமலமற மலர்மிசை எழுதரும்‌” (திருவா, 1 1 – 2) என்று ஜ்ஞாந ப்ரஸரண த்‌வாரமான மநஸ்ஸைப்‌ பற்றிக்‌ கிடக்கிற “’காம ச க்ரோதஸ் ச லோப,ய்ச ஹர்ஷோ மாநோ மதோ க்‌ரூணா । விஷாதஸ்சாஷ்டம? ப்ரோக்த இத்யேதே மநஸோ மலா?” என்று சொல்லப்படுகிற காம க்ரோதாதி ரூபமாய்‌ அஷ்டவிதமான மல நிவ்ருத்தியாலே விகஸிதமாய்க்கொண்டு மேல் நோக்கிக்‌ கிளருகிற ஜ்ஞாநத்தை. (காதல்‌ அன்பு வேட்கை அவா என்னும்‌) ““நொந்தாராக் காதல்‌’” (திருவா. 2 – 1 – 9) என்றும்‌, ‘“ஆரா வன்பு”’ (திருவா. 6 – 10- 2) என்றும்‌, “பெருகு மால் வேட்கை” (திருவா. 9 – 6 – 1) என்றும்‌, “அதனில்‌ பெரிய என்னவா?” (திருவா. 10 – 10 – 10) என்றும்‌ சொல்லப்படுகிற – வஸ்து தர்ஸநத்திலே ப்ரதம பாவியாய்‌, ஸ்நேஹாங்குரரூபமான ஸங்கமென்ன, ‘“ஸங்காத் ஸஞ்ஜாயதே காம?” (கீதை 2 – 62) என்கிற அதினுடைய பரிபாகமான காமமென்ன; அதினுடைய அவிச்சேத,ரூபமான அநுராகமென்ன, அநந்தரம்‌ அவ் வஸ்துவை அநுபவித்தல்லது நிற்க வொண்ணாத அபி நிவேஸ ரூபமான ஸ்நேஹமென்ன, இவை தொடக்கமான இப்படி அவஸ்தராநுரூுபமான நாமங்களை உடைத்தாய்க் கொண்டு பரம பக்தி பர்யந்தமாக அபி,வ்ருத்‌தமாம்படி பண்ணுகை என்கிறார்‌. ஆக- இதுக்குக்‌ கீழ்‌, பகவத் கடாக்ஷமடியாக இவருக்கு அஜ்ஞாந நிவ்ருத்தி பூர்வகமாய்க்‌ கொண்டு உண்டான பக்தி ரூபாபந்ந ஜ்ஞாநம்‌ பரமபக்தி பர்யந்தமாக அபி வ்ருத்‌தமான படி சொல்லிற்று

    99-ஜந்மாந்தர ஸஹஸ்ர நற்றவங்களாலே க்‌யாத குலங்களிலே பிறந்து, எழுதி வாசித்து தத்த்வஜ்ஞராய்‌, குளித்து ஓதி உருவெண்ணும்‌ அந்தி, ஐ வேள்வி அறு தொழில்களால்‌ மிக்கு, ஊன்‌ வாடப்‌ பொருப்பிடைத்‌ தாம்‌ வருந்தி, துன்ப வினைகளை விடுத்து, விவேகமாமாதிகள்‌ வளர, எட்டு நீக்கி, எட்டுமிட்டு, எட்டினாய பேதப் பூவில்‌ சாந்தொடு தேவ- காரியம்‌ செய்து உள்ளம்‌ தூயராய்‌, வாரிப் புன்புலவகத்தினுள்‌ இளைப்பினை அடைவே விளக்கினைக்‌ கண்டு, யோக நீதி நண்ணி, அறந்திகழுமறையோர்‌ மனந்தன்னுள்‌ அமர்ந்துறையும்‌ அரும்பெரும்‌ சுடரை *கண்கள் சிவந்திற்படியே மனவுட்கொண்டு நிரந்தரம்‌ மறவாமை துடக்கறா ஸ்ம்ருதியாய்‌, கனவில் மிக்க தர்ஸந ஸமமாய்‌, ஆகத்துப் புல்கும்‌ அத்யர்த்த,ப்ரியமாய்‌, வைகும்‌ சிறப்பு விட்டுக்‌ குற்றேவல்‌ என்னாதே அநந்ய ப்ரயோஜநமாய்‌, வேதந-உபாஸந- ஸேவா-த்‌யாநாதிகள்‌ என்று சொல்லுமது ஸாத்‌ய ஸாதந பக்தியாக ஸாஸ்த்ர ஸித்‌,த,ம்‌.

    இனிமேல்‌ இவருடைய இந்த பக்தி கர்ம ஜ்ஞாந ஸாத்‌யையாய்‌, உபாஸந ரூபையான ஸாதந பக்தியோ? அன்றிக்கே ஸித்‌த,ஸாதந பரிக்‌ரஹம் பண்ணினவர்கள்‌ கைங்கர்‌யோப கரணமாக அபேஷித்துப் பெற்ற பக்தியோ? என்னில்‌; உபயமுமன்று, ஸஹஜையாய்‌, ஸத்தா ப்ரயுக்தையான வ்ருத்த்யுபகரண பக்தி என்கிறார்-(அதில்-ஜந்மாந்தர ஸஹ்ஸ்ர நற்றவங்களாலே) என்கிற சூர்ணையாலே உபாஸந ரூபையான பக்தி வுடைய வேஷத்தை அருளிச் செய்கிறார்‌.

    (ஜந்மாந்தர ஸஹஸ்ர நற்றவங்களாலே) “’ஜந்மாந்தர ஸஹஸ்‌ரேஷு தபோ ஜ்ஞாந ஸமாதிபி,ச | நராணாம்‌ க்ஷீண பாபாதாம்‌ க்ருஷ்ணே பக்தி? ப்ரஜாயதே“‘ (லக்‌வத்ரி ஸ்ம்ருதெள) என்றும்‌, ‘“ஒன்றி நின்று நற்றவம்‌ செய்தாழியூழிதோறெலாம்‌” (திருச்ச. 75) என்றும்‌, “அநேக ஜந்ம ஸம்ஸித்‌த,?”’ (கீதை 6 – 45) என்றும்‌ சொல்லுகிறபடியே ஜந்மாந்தர ஸஹஸ்ரங்களிலே பலாபிஸந்தி ரஹிதமாய்‌, பகவத் ஸமாராதந ரூபமான ஸத் கர்மங்களாலே, (க்‌யாத குலங்களிலே பிறந்து) “*ஸூசீநாம்‌ ஸ்ரீமதாம்‌ கேஹே யோக,ப்‌ரஷ்டோ அபி,ஜாயதே” (கி,தை 6 – 41) என்றும்‌, “ஜநித்வாஹம்‌ வம்ஸே மஹதி ஜகதிக்யாத யமஸாம்‌ ஸூசீநாம்‌ யுக்தாநாம்‌ குண புருஷ தத்த்வஸ்தி,திவிதாம்‌”‘ ( ஸ்தோ, 7.61) என்றும்‌ சொல்லுகிறபடியே தத்த்வஜ்ஞாநிகளாய்‌, பரமயோகிகள்‌ என்றும்‌ ப்ரஸித்‌தரானவர் ஸ்தலங்களிலே வந்து பிறந்து.

    (எழுதி வாசித்து தத்த்வஜ்ஞராய்‌) “தெரித்தெழுதி வாசித்தும்‌ கேட்டும்‌”” (நான்‌.திரு. 63) என்று ஸாஸ்த்ராப்‌யாஸத்துக்கு யோக்‌யமான அக்ஷர ஸிக்ஷையென்ன, அந்த அக்ஷர ராஸி க்‌ரஹண ரூபமான வேத அப்‌யாஸமென்ன, அந்த வேதத்தினுடைய அர்த்த,விஜ்ஞாநத்துக்குறுப்பான ஸாஸ்த்ராப்‌யாஸமென்ன, உபயத்தினுடையவும்‌ அர்த்த ஸ்ரவணமென்ன; அவற்றாலே பிறந்த தத்த்வ ஜ்ஞாநத்தை யுடையராய்‌. (குளித்து) உபாஸந அங்கமான நித்யகர்மாநுஷ்டாநத்துக்கு உபயுக்தமாக காய ஸூத்‌த்‌, யர்த்த,மான ஸ்நாநத்தைப்பண்ணி. (ஓதி உருவெண்ணுமந்தி ஐவேள்வி) ஸந்த்‌யாவந்தந காயத்ரீ ஜப-பஞ்ச மஹா யஜ்ஞங்களைப்பண்ணி. (அறுதொழில்களால்மிக்கு) “அறுதொழிலந்தணர்‌” (திருவெழுகூ.)என்று யஜந-யாஜத-அத்‌யயந–அத்‌யாபந-தாந-ப்ரதிக்‌ரஹங்களென்கிற ஷட்கர்மங்களாலே பூர்ணராய்‌

    -“ஊன்வாட உண்ணாதுயிர்காவலிட்டு”” (திருமொழி 3 – 2 – 1) என்று அவிகலமான நித்யகர்மாநுஷ்ட,ாநத்தாலே தபம்சர்யைக்கு யோக்‌,யமானவாறே தத,ர்த்த, மான காயபோஷணார்த்த_மாக நிராஹாரராய்‌, அவ்வளவிலும்‌ ப்ராணத,ரணார்த்த, மாக அப்‌, க்ஷ்ணவாயுப,க்ஷணங்களைப்பண்ணி. (பொருப்பிடைத்தாம்‌ வருந்தி) ”பொருப்பிடையே நின்றும்‌ புனல்குளித்தும்‌ ஐந்து நெருப்பிடையே நிற்க” (மூ.திருவ. 76) என்றும்‌, ‘‘வீழ்‌ கனியுமுழிலையுமென்னுமிவையே நுகர்ந்துடலம்‌ தாம்‌ வருந்தி” (பெ.திருமடல்‌) என்றும்‌ சொல்லுகிறபடியே க்‌,ரீஷ்மகாலங்களில்‌ பர்வதாக்‌,ரத்திலே நின்றும்‌, பஞ்சாக,நிமத்‌,யே நின்றும்‌, பபீதகாலங்களிலே அறாக்கயமான தடாகங்களிலே மூழுகிக்கிடந்தும்‌, ஜீர்ணபர்ணப,லாரநராயும்‌ இப்படி தபஸ்சர்யையாலே மாரீரத்தை ஸோஷிப்பித்து. (துன்ப வினைகளை விடுத்து) ““மேவுதுன்பவினைகளை விடுத்தும்‌”” (திருவா. 3 – 2 – 8) என்று கீழ்ச்சொன்ன கர்மாநுஷ்டாநத்தாலே ”திலதைலவத்‌,தாருவஹ்நிவத்‌’” (ஸர.க.த்‌,யம்‌) என்கிறபடியே ஆத்மாவோடு பிரிக்கவொண்ணாதபடி பொருந்திக் கிடக்கிற து,2க,ஹேதுவான பாபங்களை “த,ர்மேண பாபமபநுத,தி” (தை. உப.) என்கிறபடியே க்ஷயிப்பித்து.

    (விவேகமாமாதிகள்‌ வளர) இப்படி பாப விமோசநம்‌ பிறந்தவாறே மநோ நைர்மல்ய ஹேதுவான விவேக-விமோகாப்‌,யாஸ க்ரியா கல்யாணாநவஸா தநுத்‌த,ர்ஷங்களும்‌, ““ஸமதம நியதாத்மா ஸர்வ பூதாநுகம்பீ விஷய ஸுக விரக்தோ ஜ்ஞாந த்‌ருஷ்டி ப்ரபந்ந ச । அநியதநியதாந்தோ நைவ ருஷ்டோ ந ஹ்ரூஷ்டச ப்ரவஸித இவ கேஹே வர்த்ததே யஸ்ஸ முக்தச”” என்கிற ஸமாதி,களும்‌ அபி,வ்ருத்‌தமாக.
    இதில்‌ விவேகமாவது – “’ஜாத்யாஸ்ரய நிமித்தாது,ஷ்டாத,ந்நாத் காயமாத்‌திர் விவேக” (போதாயந) என்கிற காய ஸூத்‌திக்கடியான அந்ந ஸூத்‌தி,.-விமோகமாவது – காமாநபி,ஷ்வங்க,ம்‌. அப்‌,யாஸமாவது -““ஆரம்பண ஸம்ஸபீலநம்‌ புந புநரப்‌யாஸ?”’ என்று த்‌,பாநாலம்பநவஸ்துவிலே பலகாலும்‌ பரிஸீலநம்‌ பண்ணுகை. க்ரியையாவது “பஞ்சமஹாயஜ்ஞாத்‌,யநுஷ்டாநம்‌ ஸக்திதா க்ரியா?” என்று நித்ய கர்மங்களை வல்லவளவும்‌ அநுஷ்டிக்கை, கல்யாணமாவது – ““ஸத்யார்ஜவத யாதாநா ஹிம்ஸாநபி,த்‌,பா கல்யாணாநி” என்கிற ஸத்யார்ஜவத, யாத,நா ஹிம்ஸாதி,கள்‌. அநவஸாத,மாவது **ஸோக ஹேதுஷு மநஸ? கேத,ராஹித்யம்‌ அநதவஸாத,” என்கிறபடியே ஸோகஹேதுக்கள்‌ உண்டானாலும்‌ நெஞ்சு தளராதிருக்கை. அநுத்‌தர்ஷமாவது – ““தத்‌ விபர்யயஜா துஷ்டி: – உத்‌தர்ஷச தத்‌,விபர்யய? – அநுத்‌த.ர்ஷ?’” என்று ஹர்ஷ ஹேதுக்கள்‌ உண்டானாலும்‌ அதி ப்ரீதனாகாதொழிகை –

    (எட்டு நீக்கி) ‘ஈனமாய எட்டு நீக்கி” (திருச்ச. 114) என்கிறபடியே ஆத்மாவுக்குப்‌ பொல்லாங்கைப்‌ பண்ணக் கடவதான ‘காம-க்ரோத,- லோப, -மோஹ-மத, -மாத்ஸர்ய-அஜ்ஞாத-அஸூயைகள்‌ என்கிறவற்றை விட்டு. (எட்டுமிட்டு) “கந்தமாமலரெட்டுமிட்டு” (திருமொழி 3 – 5.- 6), “இனமலரெட்டுமிட்டு’” (திருமொழி 1 – 2 – 7) என்கிறபடியே “அஹிம்ஸா ப்ரதமம்‌ புஷ்பம்‌ புஷ்பமிந்த்‌ரிய நிக்‌ரஹ?। ஸர்வபூததயா புஷ்பம்‌ க்ஷமா புஷ்பம்‌ விஸேஷத: । ஜஞாநம்‌ புஷ்பம்‌ தப? புஷ்பம்‌ தயாநம்‌ புஷ்பம்‌ ததைவ ச ! ஸத்யமஷ்டவிதம்‌ புஷ்பம்‌ விஷ்ணோ: ப்ரீதிகரம்‌ பவேத்‌” என்கிறபடியே அஹிம்ஸாதிகளான அஷ்டவித, புஷ்பங்களை இட்டு. இந்த அஹிம்ஸாதிகள்‌ திருவுள்‌ளத்துக்கு உகப்பாகையாலே புஷ்பமென்கிறது -(எட்டினாய பேதம்‌) ““எட்டினாய பேதமோடிறைஞ்சி’* (திருச்ச. 77) என்கையாலே “மநோ புத்தி அபிமாநேந ஸஹ ந்யஸ்ய தராதலே ! கூர்மவச் சதுர ச பாதந்‌ ஸிரஸ்‌ தத்ரைவ பஞ்சமம்‌” என்றும்‌, “*உரஸா ஸிரஸா த்ருஷ்ட்யா வசஸா மநஸா ததா ॥ பத்‌ப்‌யாம்‌ கராப்‌யாம்‌ ஜாநுப்‌யாம்‌ ப்ரணா மோஷ்டாங்க, ஈரித?‘ என்றும்‌, பக்நாபிமாநனாய்‌ விழுகையும்‌, மநோ புத்‌திகளுக்கு ஈஸ்வரனையே விஷயமாக்குகையும்‌, பாணித்‌வயமும்‌, பாத த்‌வயமும்‌, ஸிரஸ்ஸும்‌ பூமியிலே பொருந்துகையாகிற அஷ்டாங்க ப்ரணாமத்தைப் பண்ணி. (பூவில்‌ சாந்தொடு தேவ காரியம்‌ செய்து) “பூவில்‌ புகையும்‌ விளக்கும்‌ சாந்தமும்‌ நீரும்‌ மலிந்து ” (திருவா. 5 – 2 – 9), “சாந்தொடு விளக்கம்‌ தூபம்‌ தாமரை மலர்கள்‌ நல்ல ஆய்ந்து தொண்டு” (திருவா. 10 – 2 – 10) என்று ஸமாராதநோபகரணங்கள்‌ மிகுத்துக் கொண்டு அநந்ய ப்ரயோஜநராய்‌, ““தேவ காரியம்‌ செய்து” (பெரியா. திரு. 4 – 4 – 1) என்கிறபடியே பகவத் ஸமாராதநத்தைப் பண்ணி -(உள்ளம்‌ தூயராய்‌) ““ஒன்றி நின்று நற்றவம்‌ செய்தூழியூழி தோறெலாம்‌ நின்று நின்றவன்‌ குணங்களூள்ளி உள்ளம்‌ தூயராய்‌” (திருச்ச. 75) என்கிறபடியே நித்யகர்மாநுஷ்டாநம்‌ முதலாக பகவத் ஸமாராதந மெல்லையாக பல சங்க கர்த்ருத்வ த்யாக பூர்வகமாக உண்டான கர்மாநுஷ்டாநத்தாலும்‌ பகவத்‌ குணாநுஸந்தாநத்தாலும்‌ ““கஷாயே கர்மபிர் பக்வே ததோ ஜ்ஞாநம்‌ ப்ரகாஸதே”” என்கிறபடியே கர்மாநுஷ்டாநத்தாலே ம்ருதிதகஷாயனானவாறே ஜ்ஞாந விகாஸத்துக்கடியான மநோ நைர்மல்யத்தை உடையராய்-

    (வாரிப்புன்புலவகத்தினுள்‌) “வாரிசுருக்கி மதக்களிறைந்தினையும்‌ சேரி திரியாமல்‌ செந்நிரீ, ‘ (மூ.திருவ. 47) என்றும்‌, ““புன்புலவழியடைத்தரக்கிலச்சினை செய்து நன்புல வழி திறந்து ஞானநற்கூடர் கொளீஇ”” (திருச்ச. 76) என்றும்‌, ”ஐம்புலனகத்தினுள்‌ செறுத்து” (திருவெழு.) என்றும்‌, ”ப்ரசீர்ணே விஷயாரண்யே ப்ரத வந்தம்‌ ப்ரமாதிநம்‌ ! ஜ்ஞாநாங்குஸேந க்ருஹ்ணியாத்‌ வஸ்யமிந்த்‌ரிய தந்திநம்‌”” என்கிறபடியே இந்த்‌ரியங்களாகிற மமூதிதமான ஆனைகளை த்யாஜ்யோபாதேய விவேக ஜ்ஞாநமாகீற அங்குஸத்‌தாலே வணக்கி, விஷயங்களாகிற சேரியில்‌ திரியாதபடி பகவத்‌ விஷயமாகிற யதா ஸ்தாநமாகிற தறியிலே சேர்த்தென்றும்‌, இந்த்‌ரியங்களை ஷூத்‌ர விஷயங்களிலே போகாதபடி வாஸனையோடே விடுவித்து ப்ராப்த விஷயத்திலே மூட்டி ஜ்ஞாநமாகிற ப்ரகாஸமான தீபத்தைக்‌ கொளுத்தி. இப்படி நிக்‌ருஹீதேந்த்‌ரிய க்‌ராமராய்‌, (இளைப்பிணை யடைவே விளக்கினைக் கண்டு) “இளைப்பினை இயக்கம்‌ நீக்கி இருந்து முன்னிமையைக் கூட்டி அளப்பிலைம்புலனடக்கி அன்பவர்‌ கண்ணே வைத்துத்‌ துளக்கமில்‌ சிந்தை செய்து தோன்றலும்‌ சுடர் விட்டாங்கே விளக்கினை விதியிற்காண்பார்‌‘” (திருக்குறு. 18) . என்றும்‌ சொல்லுகிறபடியே யோகாப்‌யாஸ விரோதியாயிருந்துள்ள யாதாயாதங்களை மாற்றி ஓர் ஆஸந விஸேஷங்களிலே இருந்து நாஸாக்‌ரந்பஸ்த லோசநனாய்‌, இந்த்ரியங்களை நியமித்து த்‌யேய வஸ்துவின்‌ பக்கலிலே நிரதிஸயமான ஸ்நேஹத்தைப் பண்ணி ததநந்தரம்‌ ஸ்வயம் ப்ரகாஸமாய்க்‌ கொண்டு தோற்றுகிற ஆத்ம ஸ்வரூபத்தை ஸாஸ்த்ரோக்த ப்ரகாரத்திலே ஸாக்ஷாத்கரித்து.
    (யோக நீதி நண்ணி) என்று யோகம்‌ தலை நின்று. (அறந்திகமும்‌ மறையோர்‌ மனந்தன்னுள்‌ அமர்ந்துறையும்‌ அரும்பெருஞ்சுடரை) ‘*மறந்திகழு மனமொழித்து வஞ்சமாற்றி ஐம்புலன்களடக்கி இடர்ப்பாரத்துன்பம்‌ துறந்து இருமுப்பொழுதேத்தி எல்லை யில்லாத தொன்னெறிக் கண்‌ நிலை நின்ற தொண்டரான அறந்திகழு மனத்தவர்தம்‌ கதியை” (பெருமாள்‌ திரு. 1 – 7) என்றும்‌, “மறையோர் மனந்தன்னுள்‌” (திருமொழி 7 – 8 – 7) என்றும்‌, ““மாதவமானவர் தங்கள்‌ சிந்தை”’ (திருமொழி 2 – 1 – 1) என்றும்‌, ”ஆரமார்வனரங்கனென்னுமரும்பெருஞ்சுடரொன்றினைச்‌ சேரும்‌ நெஞ்சினராகி’” (பெருமாள்திரு. 2 – 7) என்றும்‌ சொல்லுகிறபடியே பரமயோகி,களுடைய ஹ்ருதயங்களிலே அதி ப்ரகாபமமான விக்‌ரஹத்தோடே எழுந்தருளியிருக்கிற ஸர்வேஸ்வரனை.
    (கண்கள் சிவந்திற் படியே மனவுட் கொண்டு) ““கண்கள் சிவந்து’ (8-8 -1)-என்கிற பாட்டின் படியே அவயவ ஸோபையோடும்‌ ஆபரண ஸோபையோடும்‌ கூடி காளமேக நிபஸ்யாமமாயிருக்கிற விலக்ஷண விக்‌ரஹத்தை ““கற்றவர் தந்தம்‌ மனவுட்‌ கொண்டு” (திருமொழி 7 – 3 – 1) என்கிறபடியே ஹ்ருதய கமலத்திலே த்‌யாநம் பண்ணி. (நிரந்தரம்‌ மறவாமை) “நிரந்தரம்‌ நினைப்பதாக”’ (திருச்ச. 101) என்றும்‌, “மன்னு சேவடிக்கே மறவாமை” (திருமொழி 3 – 5 – 7) என்றும்‌ சொல்லுகிறபடியே அந்த த்‌யாநத்துக்கு விஸ்ம்ருதியும்‌ விச்சேதமுமின்றிக்கே. (துடக்கு ஸ்ம்ருதியாய்‌) “சோர்‌விலாத காதலால்‌ துடக்கறா மனத்தராய்‌”’ (திருச்ச. 78) என்கிறபடியே ஸர்வ காலமும்‌ விஷயாந்தரங்களால்‌ அபஹ்ருதமாகாத ப்ரேமத்தை உடையராகையாலே தத்‌ ஸம்ஸ்லேஷ வியோகைக ஸூக துக்கராய்‌, பகவத் ஸ்ம்ருதி ஸந்ததி ரூபேண செல்லா நின்றால்‌ விச்சேதமில்லாத த்‌ருவாநு ஸ்ம்ருதி ரூபமாய்‌, “ஸத்த்வாத்‌ தெள த்‌ருவா ஸ்ம்ருதி: ஸ்ம்ருதிலம்பே, ஸர்வக்‌ரந்தீ நாம்‌ விப்ரமோக்ஷி’‘ (சாந் 7 – 26 – 2) என்னக் கடவதிறே. (கனவில் மிக்க தர்ஸந ஸமமாய்‌) “கனவில்‌ மிகக்கண்டேன்‌’” (இ. திருவ. 81) என்கிறபடியே அந்த ஸ்ம்ருதி ப்ரத்யக்ஷ ஸமாநாகாரையாய்‌. (ஆகத்துப்‌ புல்கும்‌ அத்யர்த்த ப்ரியமாய்‌) ஆகத்தணைப் பாரணைவரே” (மு.திருவ. 32) என்றும்‌, “ஆர்வம்‌ புரிய பரிசினால்‌ புல்கில்‌” (மூ.திருவ. 50) என்றும்‌ சொல்லுகிறபடியே அந்த தர்சந ஸமாநாகாரையான ஸ்ம்ருதிதான்‌ அந்த த்‌யேய வஸ்துவை ஹ்ருதயகமலத்திலே அணைக்கும்படி ஸ்மர்த்தவ்ய விஷய ஸாரஸ்யத்தாலே தானும்‌ அத்யர்த்த, ப்ரிய ரூபையாய்
    (வைகும்‌ சிறப்பு விட்டுக்‌ குற்றேவ லென்னாத அநத்ய ப்ரயோஜநமாய்‌) “’நின் புகழில்‌ வைகும்‌ தம்‌ சிந்தையிலும்‌ மற்றினிதோ நீ அவர்க்கு வைகுந்தமென்றருளும்‌ வான்‌?” (பெரியதிருவ. 53) என்றும்‌, “’உலகு படைத்துண்ட வெந்தை”” (திருவாசி.2) என்று தொடங்கி, ”அமுத வெள்ளத்தானாம்‌ சிறப்புவிட்டு ஒருபொருட்கசைவோரசைக நல்வீடு பெறினும்‌ கொள்வதெண்ணுமோ தெள்ளியோர்‌ குறிப்பே” என்றும்‌, “மேலால்‌ பிறப்பின்மை பெற்றடிக்கீழ்க்‌ குற்றேவலன்று மறப்பின்மை யான்‌ வேண்டும்‌ மாடு’* (பெரியதிரூவ. 58) என்றும்‌ சொல்லுகிறபடியே இவ்வநுஸந்தாந ரஸத்தாலே தேஸா விஸேஷத்திலநுபவத்தை உபேஷிக்கும்படி தானே பர மப்ரயோஜநமாம்படி இருக்கையாலே அநந்ய ப்ரயோஜநமாய்‌..
    (வேத,ந-௨ பாஸந-ஸேவா-த்‌யாநாதி களென்னுமவை) வேதநம்‌, உபாஸநம்‌, ஸேவை, த்யாநம்‌, த்‌ருவாநுஸ்ம்ருதி, தர்சந ஸமாநாகாரம்‌, பக்தி என்றும்‌ சொல்லப்படுகிறவை யாகையாலே இந்த ப,க்தி ஸாத்‌ய ஸாதந பக்தியாக ஸாஸ்த்ர ஸித்‌தம்‌. ‘உபய பரிகர்மித ஸ்வாந்தஸ்ய ஐகாந்திகாத்யந்திக பக்தியோகைகலப்‌ய”(ஆத்மஸித்‌தி,) என்று கர்ம ஜ்ஞாந ஸம்ஸ்க்ருதாந்தா கரணனுக்குப்‌ பிறக்கும தொன்றாகையாலே ஸாத்‌,யமாய்‌, பகவத் ப்ரஸாதநோபாயமாகையாலே ஸாதநமான பக்தி என்று ஸாஸ்த்ரங்களாலே சொல்லப்பட்டதென்கிறார்‌. ஆக இத்தால்‌ சேதநனாலே ஸாத்‌யமாய்‌, உபாய ரூபமான பக்தி விஸேஷம்‌ சொல்லிற்று –

    100-ஸ்வீக்ருத ஸித்‌த ஸாதநர்‌ இத்தை ஸாத்‌யமாக இரக்க ப்ராப்திக்கு முன்னே ஸித்‌திக்கும்‌.
    இனி உபேயமான கைங்கர்யோப கரணமாய்‌, ப்ரார்த்‌யமான பக்தி விஸேஷம்‌ சொல்லுகிறது மேல்‌ (ஸ்வீக்ருத ஸித்‌த ஸாதநர்‌ என்று தொடங்கி). (ஸ்வீக்ருத ஸித்த ஸாதநர்‌) *’த்வத் பாத மூலம்‌ ஸரணம்‌ ப்ரபத்‌யே”” (ஸ்தோ,ர.22) என்றும்‌, ‘“ஸ்ரீமந்‌ நாராயண சரணாரவிந்த,ம்‌ ஸரணமஹம்‌ ப்ரபத்‌யே”” (ஸ -கத்யம்‌) என்றும்‌, “லோக விக்ராந்த சரணென ஸரணம்‌ தே அவ்ரஜம் விபோ ”” (ப,வி.பு.) என்றும்‌ சொல்லுகிறபடியே இப்படி ஸித்‌த ஸாதந ஸ்வீகாரம்‌ பண்ணினவர்கள்‌ இத்தை ஸாத்‌யமாக இரக்க, இந்த பக்தி கைங்கர்யோபகரணமாய்க் கொண்டு ப்ராப்யாந்தர் கதமாகையாலே “‘பகவத்‌ பக்திமபி ப்ரயச்ச, மே!” (ஸ்தோ.ர.) என்றும்‌, ‘பரபக்தி பரஜ்ஞாந பரமபக்த்யேக ஸ்வபாவம்‌ மாம்‌ குருஷ்வ”’ (ர.கத்‌யம்‌) என்றும்‌ சொல்லுகிறபடியே இந்த பக்தியை ஸாத்‌யமாக அவன் பக்கலிலே அபேஷிகிக்க, ப்ராப்திக்கு முன்னே ஸித்திக்கும்‌, இது கைங்கர்யத்துக்கு பூர்வபாவியாகையாலே பகவத் பிராப்திக்கு முன்னே ஸித்‌திக்கும்‌ என்கிறார்‌.

    101-இது உபயமுமின்றிக்கே அறியாக் காலத்துள்ளே ஓக்கப்‌ பிறந்து தழுவி நின்று கட்டமே நோயா யுலர்த்தி வீழ்ந்தலப்பாய்‌ த்யாக ஸ்வீகார நிஷ்டா ஹாநிகளாக்கி ஸத்தா போக வ்ருத்த் யுபகரணமான ஒன்று.
    (இது உபயமுமின்றிக்கே
    ) இவருடைய பக்தி உபாஸகர்‌ கர்ம ஜ்நாநங்களாலே ஸாதித்து பகவத் ப்ரஸாதத்துக்கு ஸாதநமாகக்‌ கொள்ளுகிற பக்தியுமன்றிக்கே, ஸித்‌த ஸாதந பரிக்‌ரஹம்‌ பண்ணினவர்கள்‌ கைங்கர்யோபகரணமாக அபேஷித்துப்‌ போருகிற பக்தியுமன்றிக்கே; (அறியாக் காலத்தே ஒக்கப் பிறந்து] ‘அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண்‌ அன்பு செய்வித்து’” (திருவா. 2 – 8 – 3) என்றும்‌, ““பால்யாத் ப்ரப்‌ரதி ஸுஸ்நிக்‌த.”” (ரா.] என்றும்‌ சொல்லுகிறபடியே அறிவு நடையாடுகைக்கு யோக்‌யதை யில்லாத அதிபால்யத்திலே கைங்கர்யத்தைப்‌ பெற்றல்லது நிற்க வொண்ணாத அதிமாத்ர ப்ராவண்யத்தை விளைத்தான்‌ என்று சொல்லும்படி ”ஸஹஜ பக்திரஸ்மாகம்‌”‘ என்று ஸஹஜையாய்‌, *‘தழுவி நின்ற காதல்‌ ”” (திருவா. 4 – 7 -11) என்று உடன் வந்தியாய்‌, கட்டமே காதல்‌” (திருவா. 7 – 2 – 4) என்றும்‌, ““வேட்கை தோய் கூர” (திருவா. 9 – 6 7) என்றும்‌ அபி, நிவேஸாநுகுணமாக அநுபவம்‌ ஸித்‌தியாமையாலே இது கஷ்டம்‌ என்று சொல்லும்படி வ்யாதி ரூபமாகையாலே பாத,கமாய்‌, ““வேவாரா வேட்கை தோய்‌ மெல்லாவி உள்ளுலர்த்த”” (திருவா. 2 – 1 – 10) என்றும்‌, “உன்னைக் காணுமவாவில்‌ வீழ்ந்து” (திருவா. 5 – 7 – 2) என்றும்‌, ““உன்னைக் காண்பான்‌ நானலப்பாய்‌”” (திருவா. 5 – 8 – 4) என்றும்‌ அஸோஷ்யமான ஆத்ம வஸ்துவை ஸோஷிப்பித்து, அபி நிவேஸத்திலே ஆழ்ந்து, காண வேணுமென்று அலமாக்கப் பண்ணி. (த்யாக ஸ்வீகார நிஷ்டா ஹாநிகளாக்கி) த்யஜித்த உபாயத்திலே மூட்டி, த்யாக நிஷ்டையைக் குலைத்து, ஸக்ருத்‌ ஸ்வீகாரம்‌ அமைந்திருக்க *நோற்ற தோன்பு தொடங்கி, அடுத்தடுத்து ப்ரபத்தி பண்ணுகையாலே ஸ்வீகாரத்தில்‌ நிஷ்டையைக் குலைத்து. (ஸத்தா போக வ்ருத்த் யுபகரமானதொன்று) ““நாகிஞ்சித்குர்வதஸ் ஸேஷத்வம்‌”’ (வேதாஸம்‌) என்று ஸேஷத்வைக நிரூபணீயமான இவருடைய ஸத்தை கிஞ்சித்காரத்தாலே யாகையாலே இவருடைய ஸத்தா ஹேதுவாய்‌, “’தனக்கேயாக”’ (திருவா. 2 – 9 – 4) என்றும்‌, “உன்தன்‌ திருவுள்ள மிடர்கெடுந்தோறும்‌”” (திருவா. 10 – 3 – 9) என்றும்‌ “*கதாத்‌, ரக்ஷ்யதி மாம்‌ பதி” (ரா.ஸு.) என்றும்‌, ”கதா ப்ரஹர்ஷயிஷ்யாமி” (ஸ்தோ.ர. ) என்றும்‌, “உன்னாகமுற்றுமகத்தடக்கி ஆவி யல்லல்‌ மாய்த்ததே”” (திருவா. 4 – 3 – 3) என்றும்‌ ஸர்வேஸ்வரனை பலியாகச்‌ சொல்லுகையாலே அவனுக்கு போகமாயிருக்கிற கைங்காயத்துக்கு உபகரணமாயிருப்பதொரு பக்தி என்கிறார்‌. ஆக, இதுக்குக் கீழ்‌ இவருடைய பரபக்தி ஸாதித்துப்‌ பெற்ற பக்தியுமன்று, அபேக்ஷித்துப்‌ பெற்ற பக்தியுமன்று, ஸஹஜையாய்‌, ஸத்தா ப்ரயுக்தையான பக்தி என்றார் –

    102-இடகிலேன்‌ நோன்பறிவிலேன்‌ கிற்பன்‌ கீழ் நாள்கள்‌ என்கையாலே ஸாதந த்ரய பூர்வாப்‌யாஸ ஜமல்ல.
    இவருடைய பரபக்தி ஜந்மாந்தரங்களிலே கர்ம ஜ்ஞாநாதிகளை அநுஷ்டித்து தத் பலமாய்க் கொண்டு வந்ததானாலோ என்னில்‌, ஜந்மாந்தரங்களில்‌ அவை தமக்கு இல்லை என்னுமிடம்‌ தாமே அருளிச் செய்தார்‌ என்கிறார்‌ (இடகிலேன்‌ இத்யாதி, ). ““இடகிலேன்‌ ஒன்றட்டகில்லேன்‌ ஐம்புலன்‌ வெல்லகில்லேன்‌ கடவனாகிக் காலந் தோறும்‌ பூப்பறித்‌தேத்த கில்லேன்‌’” (திருவா. 4 – 7 – 9) என்று பகவத்‌ விபூதி பூதர்‌ என்று அந்ந பாநாதிகளை பூதங்களுக்கு இட்டுக்கொடுபோரில்‌ கர்ம யோகத்திலே நிவேஸிப்பிக்கலாம்‌, இந்த்‌ரிய ஜயம்‌ பண்ணினேனகில்‌ ஜ்ஞாந யோகத்திலே நிவேஸிப்பிக்கலாம்‌. ஸாஸ்த்ரோக்தமான ப்ரகாரங்களிலே புஷ்பாத்‌ யுபகரணங்களைக்‌ கொண்டு பகவத் ஸமாராதநம்‌ பண்ணினேனாகில்‌ பக்தி யோகத்திலே நிவேஸிப்பிக்‌கலாம்‌. இவை இத்தனையும்‌ செய்யப்‌ பெற்றிலேன்‌ என்றும்‌, ”நோற்ற தோன்பிலேன நுண்ணறிவிலேன்‌”’ (திருவா. 5 – 7 – 1) என்று பலத்தோடே வ்யாப்தமாய்‌ இருப்பதொரு கர்மத்தை அநுஷ்டிக்கப் பெற்றிலேன்‌; ஆத்ம யாதாத்ம்ய ஜ்ஞாந பூர்வகமான பகவஜ் ஜ்ஞாநத்தை உடையேனல்லேன்‌- ஆக இவை இல்லாமையாலே உபய ஸாத்‌யமான பக்தியை உடையேனல்லேன்‌ என்றும்‌. (கிற்பன்‌ கீழ்நாள்கள்‌ என்கையாலே) “கிற்பன்‌ கில்லேன்‌ என்றிலன்‌ முனநானால்‌”’ (திருவா. 8 – 2 – 6] விஹிதததைச்‌ செய்து அவிஹிதத்தைத் தவிர்‌’ என்கிற விடத்தில்‌ அப்படிச்‌ செய்கிறேன்‌ என்னாதே விஹிதத்தைத் தவிரந்து அவிஹிதத்தைச் செய்து போந்தேன் நெடுங் காலம்‌ என்றும்‌-‘”ஆழியங்கை அம்மானை ஏத்தாதயர்த்து – தீவினையேன்‌ வாளா விருந்தொழிந்தேன்‌ கீழ் நாள்களெல்லாம்‌’” (பெரியதிருவ. 82) என்றும்‌, ஸர்வாதிகனான ஸர்வேஸ்வரனை மங்களாஸாஸநம்‌ பண்ணாதே விஸ்மரித்து அநாதி காலம்‌ வ்யர்த்தமே இருந்தேன்‌ என்கையாலும்‌, இப்படி ஜந்மாந்தரங்களில்‌ தமக்கு கர்ம ஜ்ஞாநாதிகளில்‌ அந்வயமில்லை என்று அருளிச் செய்கையாலே. (ஸாதந த்ரய பூர்வாப்‌யாஸ ஜமல்ல) ஐத்மாந்தரங்களில்‌ கர்ம ஜ்ஞாந பக்த்திகளை அநுஷ்டி,த்து தத்பலமாய்‌ வந்த பக்தியன்று என்கிறார் –

    103-இப் பிறப்பே சில நாளில்‌ என்ற போதே இரண்டும்‌ கழியும்‌.
    ஜந்மாந்தரங்களிலே ஸாதித்துப் பெற்றதன்றாகிலும்‌ இந்த ஜந்மத்திலே சில தாள்‌ ஸாதித்துப் பெற்றதானாலோ என்னில்‌, அதுவுமல்ல என்கிறார்‌ (இப் பிறப்பே சில நாளில்‌ என்று). ““குறிக் கொள் ஞானங்களால்‌ எனை யூழி செய்தவமும்‌ கிறிக் கொண்டிப் பிறப்பே சிலநாளிலெய்தினன்‌ யான்‌” (திருவா. 2 – 8 – 8) என்று யம நியமாத்‌யவஹிதராய்க்‌ கொண்டு ஸம்பாதிக்க வேண்டும்‌ வேதந-த்‌யாந-உபாஸநாத்‌, யவஸ்தா விஸேஷங்களான ஜஞாநங்களாலே அநேக கல்பம்‌ கூடி ஸ்ரவணாமாய்‌, மநநமாய்‌-த்ருவாநுஸ்ம்ருதியாய்‌, வரக்கடவதான தப பலத்தை ஒரு யத்நமின்றியிலே இருக்க நல் விரகனான அவனாலே இஜ் ஜந்மத்திலே, அது தன்னிலும்‌ அல்ப காலத்திலே பெற்றேனென்கைஃ யாலே ஐந்மாந்தர ஸாத்‌யமுமல்ல; இஜ் ஜந்மத்திலும்‌ ஸாதித்து வந்ததுமல்ல என்கிறார் –

    104-பெரும்பாழில்‌ ஷேத்ரஜ்ஞன்‌ பெருஞ்செய்‌ கலியாரேவ ஆளும்‌ வன் குறும்பர்‌ குடியேறிப் பெருங்குடியும்‌ தங்கள்‌ கருத்துள்ளே யாக்கிப்‌ படிந்துண்ணும்‌ போகத்தே தூராதே யொறுக்கெணுப்‌ போகத்துக்குக்‌ காவல் செய்து குமைத்துத்‌ திரித்து வீழ்த்து வலித்‌தெற்றி அருவியறுத்துக்‌ கடனாயின இறுப்பிக்கப்‌ பாழ்த்த விதி யானவாறே தன்பால்‌ மனம்‌ வைப்பிப்பதாகத்‌ தேய்ந்தற மன்னி ஒள் வாளுருவி வினைத் தூற்றை வேரறுவித்துத்‌ தீக் கொளீஇக்‌ கவ்வை எருவிட்டு அமுதவாறு தலைப் பற்றி ஈரியாய்க் கசிந்ததிலே ஈரநெல்‌ வித்தி எழுநாற்றுக்களையையும்‌ வேர் முதல் மாய்த்துப்‌ பட்டிச் சேவதக்கி மீதுகொள்ளாமல்‌ குறிக்கொள்வித்துக்‌ கடல்புரைய விளைந்து தலை வணக்கினவாறே நாளுநாள்‌ கோட்குறையாக நின்றாரறியாமல்‌ குணங்கொண்டு ஆராமை யுண்டு காலக்கழிவாலே திலத்துகாமல்‌ பற்றறுத்துத்‌ தண்டாலடித்துப்‌ பதரறுத்துப்‌ போர்த்த தோல் விடுத்து ஸுக்ஷ்மவொட்டும்‌ நீரிலே கழுவி வேறோர்‌ கலத்திட்டு பைந்தொடி மடந்தையரைக் கொண்டு ஷட்‌ குண்ரஸாந்நமாக்கி வானோர்க்காரா வமுதானவாறே முற்றுமுண்ண முன்னம்‌ பாரித்து உழுவதோர்‌ நாஞ்சில் கொண்டு பெருக முயலும்‌ பத்தி யுழவன்‌ க்ருஷி பலமிறே-

    ஆனால்‌ இவர்க்கு இந்த ப,க்தி உண்டாகைக்கு ஹேது ஏதென்னில்‌ பல போக்தாவான ஸர்வேஸ்வரனுடைய க்ருஷிபலம்‌ என்னுமிடத்தை க்ஷேத்ரமும்‌, கர்ஷகனும்‌, க்ருஷியும்‌, தத்பலமுமான வேஷத்தாலே அருளிச் செய்கிறார்‌ (பெரும்பாழில்‌ க்ஷேத்ரஜ்ஞன்‌ என்று தொடங்கி]. (பெரும்பாழில்‌ க்ஷேத்ரஜ்ஞன்‌) “முடிவில்‌ பெரும்பாழேயோ”” (திருவா. 10 – 10 – 10) என்று அபரிச்சேத்‌,யமாய்‌, சேதநர்க்கு போக மோக்ஷங்களை விளைத்துக்‌ கொள்ளுகைக்கு நிலமான மூல ப்ரக்ருதியிலே பத்‌தனான சேதநன்‌, “நெஞ்சப்‌ பெருஞ் செய்யுள்‌” (திருவா. 5 – 3 – 4) என்று பகவத்‌ பக்திக்கு விளை நிலமான சேதநருடைய நெஞ்சாகிற பெரும்‌ செய்யிலே-(கலியாரேவ) ““ஏவினார்‌ கலியார்‌ நலிக’” (திருமொழி 1 – 6 – 8) என்று கலியுகமாகிற வறியன்‌ தன்‌ படரான இந்த்‌ரியங்களை ப்ரேரிக்க. (ஆளும்‌ வன் குறும்பர்‌) “’மனமாளுமோரைவர்‌ வன்குறும்பர்‌”’ (பெ.திருவ.51) என்று ப்ரதாந கரணமான மநஸ்ஸையும்‌ தங்கள் வஸமாக்கிக் கொண்டு ஆளுமவர்களுமாய்‌ முன்கை மிடக்கருமாய்‌ அநியாம்‌யருமான அத்‌விதீயரை வரும்‌ ““பொய்யாலைவரென்‌ மெய் குடி யேறி”” (திருமொழி 7 7 – 9) என்கிறபடியே குடியேறி
    (பெருங்குடியும்‌ தங்கள்‌ கருத்துள்ளே யாக்கி) ““ஐம்புலன்கருதும்‌ கருத்துளே திருத்தினேன்‌ மனத்தை?” (திருமொழி 1 – 1 – 8) என்கிறபடியே ப்ரதாந கரணமான மநஸ்ஸாகிற பெருங்குடியும்‌ தங்கள்‌ கருத்துள்ளேயாம்படிபண்ணி. (படிந்துண்ணும்‌ போகத்தே தூராதே) *’புலம்படிந்துண்ணும்‌ போகமே பெருக்கிப் போக்கினேன்‌’ (திருமொழி 1 – 6 – 2) என்று ஸப்‌தாதி விஷயங்களிலே அவகாஹித்து பஜிக்கிற போகத்தை அபி வ்ருத்‌தமாக்கி. “’தூராக்குழி”’ (திருவா. 5 – 8 – 6) என்கிறபடியே அத்தால்‌ ஒருகாலும்‌ பர்யாப்தி பிறவாதே. (பொறுக்கொணுப்‌ போகத்துக்குக்‌ காவல்‌ செய்து) ”பொறுத்துக் கொண்டிருந்தால்‌ பொறுக் கொணாப் போகமே நுகர்வான்‌ புகுந்து” (திருமொழி 7 – 7 – 7) என்று சேதநனாலே பொறுக்கப் போகாத ஸப்‌தாநுபவத்துக்கு, “கடியார்‌ காளையர்‌ ஐவர்‌ புகுந்து காவல் செய்த”” (திருமொழி 7 – 7 – 8) என்று நெஞ்சில்‌ க்ரெளர்யத்தை உடையராய்‌, பதிக்க பாதிக்க மேலே இளகிப் பதித்து வருகிற அந்த விஷயங்கள்‌ {இந்த்‌ரியங்கள்‌] கீழே சொன்ன போகத்துக்கு விருத்‌,த,மான பகவத்‌ ஸம்ரம்பமாகிற்‌ ராஜபரிகரம்‌ புகுராதபடி காவல்செய்து.

    (பைந்தொடி மடந்தையரைக் கொண்டு ஷட்‌குண ரஸாந்நமாக்கி] ‘அணைவர் போயமருலகில்‌ பைந்தொடி மடந்தையர் தம்‌ வேய் மரு தோளிணை”’ (திருவா. 10 – 2 -11) என்று “ஸதம்‌ மாலா ஹஸ்தா?” (கெளஷீதகீ) இத்யாதியாலே சொல்லப்படுகிற திவ்யாப்‌ஸரஸ்ஸுக்களைக் கொண்டு பகவத்‌ போக யோக்‌யமாம்படி அலங்கரித்து, “ஸ்வேந ரூபேணாபி நிஷ்பத்‌யதே”‘ என்று ஸ்வ ஸ்வரூபாவிர்பாவத்தைப்‌ பெறுவிக்கையாலே ஸ்வருப கதமாயிருக்கச் செய்தே முன்பு திரோஹித மாயிருக்கிற ஜஞாந ஸக்தயாதிகளும்‌, அபஹத பாப்மத்வாதிகளும்‌ ப்ரகாஸித்து இவை ஸேஷவஸ்துகதமாகையாலே ஸேஷி விநியோகத்துக் குறுப்பாகையாலே அந்த குண விஸிஷ்டமான ஆத்ம வஸ்துவைத்‌ தனக்கு போக்‌,யமாக்கி(வானோர்க் காராவமுதான வாறே) நித்ய ஸூரிகளுக்கும்‌ போக்யமானவாறே. (முற்றுமுண்ண முன்னம்‌ பாரித்து) “என்னை முற்றுமுயிருண்டு” (திருவா, 10 – 9 -10) என்றும்‌, “என்னில்‌ முன்னம்‌ பாரித்து”’ (திருவா. 9 – 6 -10) என்றும்‌ சொல்லுகிறபடியே இவனை புஜிப்பதாக இவனிலும்‌ முன்னே பாரித்து(உழுவதோர்‌ நாஞ்சில்கொண்டு பெருக முயலும்‌ பத்தி யுழவன் க்ருஷிபலமிறே) “உழுவதோர்‌ படையும்‌” (பெரியா. தி. 4 – 7 – 5), “ஒற்றைக் குழையும்‌ நாஞ்சிலும்‌”” (திருமொழி 8 – 8 – 9) என்று க்ருஷி ஸாதநத்தைக் கொண்டு, ‘“அரியதெளிதாகுமாற்றலால்‌ மாற்றிப்‌ பெருக முயல்வாரைப்பெற்றுல்‌” (இ.திருவ. 22) என்று அரிதான பகவத்‌ ப்ராப்தியும்‌ எளிதாம்படி இவனுடைய உஜ்ஜீவநத்துக்கு மிகவும்‌ க்ருஷி பண்ணுகிற *பத்தி யுழவன்‌”‘ (நா. திருவ. 23) என்கிற பக்திக்கு க்ருஷி பண்ணுகிற ஸர்வேஸ்வரனுடைய க்ருஷி பலமாய்க்‌ கொண்டு உண்டாய்த்து இவருடைய பக்தி என்கிறார்‌. ஆக இத்தால்‌ இவருடைய பக்தி போக்தாவான ஸர்வேஸ்வரனுடைய க்ருஷி பலம்‌ என்றதாய்த்து-

    105-கோஸல கேகுல சராசரம்‌ செய்யும்‌ குணமொன்றின்றியே அற்புதமென்னக்‌ கண்டோம்‌.
    இப்படி இத்தலையில்‌ ஒரு நன்மை யின்றிக்கே யிருக்க ஈஸ்வரனுடைய கிருஷி பலித்தவிடமுண்டோ வென்னில்‌, கோஸல தேஸத்திலுண்டான ஸ்தாவர ஜங்கமங்‌களையும்‌ கோகுலத்திலுண்டான சராசரங்களையும்‌ ஸ்வ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷைக ஸுக துக்கராம்படி பண்ணக் கண்டோமிறே என்கிறார்‌ (கோஸலமென்று தொடங்கி). “த்வாமாமநந்தி கவய? கருணாம்ருதாப்‌ தே, ஜ்ஞாந க்ரியா பஐந- லப்‌யமலப்‌யமந்யை
    ஏதேஷு கேந வரதோரத்தர கோஸல ஸ்தா பூர்வம்‌ ஸதூர்வ- மப ஜந்த ஹி ஜந்தவஸ்த்வாம்‌’”
    (வரத,.ஸ்த. 69) என்றும்‌, “அயோத்தியில்‌ வாழும்‌ சராசரம்‌ முற்றவும்‌ – ஒன்றின்றியே நற் பாலுக்குய்த்தனன்‌” (திருவா. 7 – 5 – 1) என்றும்‌ கோஸல தே,ஸத்திலுண்டான சராசரங்களடைய “அபி வ்ருக்ஷாச பரிம்லாநாஸ் ஸ புஷ்பாங்குர கோரகா? உபதப்தோதகா நத்‌ய பல்வலாநி ஸராம்ஸி ச ப பரிஸூஷ்க பலாஸாநி வநாந் யுபவநாநி ச (ரா. ௮. 59 – 8), ““விஷயே தே மஹாராஜ ராம வ்யஸந கர்ஸிதா?”, என்றும்‌, “அகால பலிநோ வ்ருக்ஷா ச” (ரா. யு. 127 – 18) என்றும்‌, “ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாமபவந்‌ கதர? ! ராமபூ,தம்‌ ஜகத பூத்‌ ராமே ராஜ்யம்‌ ப்ரஸாஸதி”? (ரா. உ.) என்றும்‌ ஒரு ஹேது வின்றியிலே ஸ்வ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷைகஸுக துக்க ராகவும்‌.
    கோகுலங்களிலுண்டான சராசரங்களிலே சைதந்ய ப்ரஸரண மில்லாத வ்ருக்ஷங்களும்‌, “அவனொருவன்‌ குழலூதின போது மரங்கள் நின்று மது தாரைகள் பாயும்‌ மலர்கள்‌ வீழும்‌ வளர் கொம்புகள்‌ தாழும்‌ இரங்கும்‌ கூம்பும்‌ திருமால்‌ நின்ற நின்ற பக்கம்‌ நோக்கி அவை செய்யும்‌ குணமே” (பெரியா.தி. 3 – 6 – 10) என்றும்‌, சைதந்ய லேஸமுடைய திஸ்ர்யக்குக்களும்‌ “மருண்டு மான் கணங்கள்‌ – கால் பரப்பிட்டுக் கவிழ்ந்திரங்கிச்‌ செவி யாட்டகில்லாவே”” (பெரியா. தி, 3 – 6 – 6) என்று திர்யக் ஸ்தாவரங்கள்‌ அந்யோந்யம்‌ ஸ்வபாவங்கள்‌ மாறாடும்படி பண்ணி, “நங்கைமீர்களிதோரற்புதம்‌ கேளீர்‌” (பெரியா-3 – 6 – 1) என்று இதோராஸ்சர்யமென்று விஸேஷஜ்ஞர்‌ சொல்லும்படியாகக்‌ கண்டோமிறே என்கிறார்‌. ஆக இத்தால்‌, சைதந்யாசைதந்யங்களிரண்டும்‌ தன்னில்‌ பதார்த்த வைஷம்யத்துக்கு ஹேதுவாமித்தனை யொழிய பகவத்‌ விஷயீகாரத்துக்கு ஹேதுவாகக்‌ காணாமையாலே இவர்க்குப்‌ பிறந்த பக்தி பகவந் நிர்ஹேதுக விஷயீகாரத்‌தாலே என்றதாயிற்று.

    106-பட்டத்துக்குரிய ஆனையும்‌ அரசும்‌ செய்யுமவை ஆராயாது.
    ஆனால்‌ ”ஸமோஹம்‌ ஸர்வபூதேஷு ந மே த்‌வேஷ்யோஸ்தி ந ப்ரிய?” (கீதை 9 – 26) என்கிறபடியே ஸர்வ ஸமனுமாய்‌, பரதுக்கம்‌ ஸஹியாதபடியான பரம க்ருபையை உடையனான ஸர்வேஸ்வரன்‌ ஸர்வரோடும்‌ தனக்கு ஸம்பந்தம்‌ ஒத்திருக்க, அவர்களிலே ஒருவனை நிர்ஹேதுகமாக விஷயீகரித்தான்‌ என்றால்‌ அவனுக்கு வைஷம்ய நைர்க்‌ருண்யங்‌கள்‌ வாராதோ என்னில்‌ நிருபாதிக ஸர்வ ஸேஷியுமாய்‌, ஸ்வதந்த்ர ஸ்வாமியுமாய்‌, அத ஏவ உபய விபூதியையும்‌ ஸ்வாதீநமாகவும்‌, ஸ்வார்த்தமாகவும்‌ உடைய ஸர்வேஸ்வரன்‌ ஸ்வகீயமான வற்றிலே ஒன்றை ஸ்வ விநியோகார்த்தமாக இப்படி நிர்ஹேதுகமாக விஷயீகரிக்கும் போது வைஷம்ய நைர்க்‌ருண்யங்களை யிட்டு நிவாரகர்‌ இல்லை என்னும்‌ அர்த்தத்தை லோக த்‌ருஷ்டாந்த த்‌வாரா அருளிச் செய்கிறார்‌.
    (பட்டத்துக்குரிய ஆனையும்‌ அரசும்‌ செய்யுமவை ஆராயாது) தான்‌ செய்தது தான்‌ இட்ட வழக்காம்படி நிரங்குஸ ஸ்வதந்த்ரமான ஆனை, யாரேனுமொருவனை எடுக்க, அவனே ராஜாவாகவும்‌ அந்த ராஜா பரிக்‌ரஹித்தவளே ராஜ மஹிஷியுமா மிடத்தில்‌ இப்படி ஆவானென்‌? என்று ஆராய்வாரில்லை யிறே. அப்படியே-“’ரூபப்ரகார பரிணாம க்ருத வ்யவஸ்த,ம்‌ விஸ்வம்‌ விபர்யஸிதுமந்யத ஸச்ச கர்த்தும்‌ | ஷாம்யந்‌ ஸ்வபாவ நியமம் கிமுதீ க்ஷஸே த்வம்‌ ஸ்வாதந்த்ர்ய மைஸ்வர மபர்யநு யோஜ்யமாஹு ” (வை.ஸ்த. 55), ““படுநைக வராடிகேவ க்லுப்தா ஸ்தலயோ? காகணிகா ஸுவர்ண கோட்யோ | பவமோக்ஷ்ண்யோஸ் த்வயைவ ஐந்து கரியதே ரங்க நிதே, த்வமேவ பாஹி”’ (ர. ஸ்த. உ. 88) என்று உபயமும்‌ தானிட்ட வழக்காம்படி நிரங்குச ஸ்வதந்தரனானவன்‌ செய்யுமவை ஆராயப் படாதிறே என்கிறார் –

    107-முந்நீர்‌ வாழ்ந்தார்‌ சூட்டும்‌ கோவை ஆழி என்கிற ஸாக்ஷாத்க்ருத ஸ்வ பர வ்ருத்தாந்தர்க்கு யாத்‌ருச்சிகாதிகள்‌ உண்டாகில்‌ தோன்றும்‌.
    அப்படிச் சொல்லுவானென்‌? இவர் தமக்கு ஜ்ஞாத ஸுக்ருதமன்றோ இல்லை என்றது? யாத்‌ருச்சிகாதிகளான அஜ்ஞாந ஸுக்ருதமடியாக அவன்‌ விஷயீகரித்தானாகத்தட்டென்‌ ? என்னில்‌, ஸ்வ பர விபாகமற ஸர்வத்தையும்‌ ஸாக்ஷாத்கரித் தருளிச் செய்தவர்க்கு யாத்‌ருச்சிகாதிகள்‌ உண்டாகில்‌ ப்ரகாஸிக்குமிறே. இவர்க்கு அஜ்ஞாதமாவது பூர்வாவஸ்தையிலிறே. உத்தராவஸ்தையிலும்‌ அஜ்ஞாதமாகில்‌ மயர்வற மதிநலம்‌ அருளப்‌ பெற்றாரில்லையாவரிறே. (முந்நீர்‌ வாழ்ந்தார்‌ தொடங்கி) “முந்நீர் ஞாலம்‌ படைத்த எம்‌ முகில் வண்ணனே” (திருவா. 3 – 2 – 1) என்று தொடங்கி அவன்‌ சேதநருடைய உஜ்ஜீவநார்த்தமாக ஜகத் ஸ்ருஷ்ட்யாதி வ்யாபாரங்களைப்‌ பண்ணின படியையும்‌, தாம்‌ அவன்‌ கொடுத்த தேஹத்தைக் கொண்டு அதன் வழியே ஒழுகி ஸம்ஸரித்துப் போந்த படியையும்‌, “வாழ்ந்தார்கள்‌ வாழ்ந்தது”” (திருவா. & – 1 – 6) என்கிற பாட்டிற்படியே முன்பு ஜீவித்தவர்களாகச்‌ சொல்லுமவர்கள்‌ ஜலபுத்‌புதம் போலே நஸித்து அதே கதியிலே போனார்கள்‌ என்னுமதொழிய ஒருபடிப்பட ஜீவித்துப்‌ போந்தார்கள்‌ என்னுமர்த்தம்‌ இல்லை என்னுமதுவும்‌, “‘சூட்டு நன் மாலைகள்‌’” (திருவிரு. 20) என்று தொடங்கி – ஒரு விபூ,தியாக ஸமாராதநோந்முகராய்‌ உப கரணங்களைக் கொண்டு நில்லா நிற்கச் செய்தே அத்தை உபேஷித்துத்‌ திருவாய்ப்பாடியில்‌ திரண்ட வெண்ணெயை அசிந்திதமாக புஜிக்கையிலுண்டான இச்சையாலே கருஷ்ணனாய்‌ வந்தவதரித்து நப்பின்னைப்‌ பிராட்டிக்காக ருஷபங்கள்‌ ஏழையும்‌ அடர்த்தான்‌ என்றும்‌-““கோவை வாயாள் பொருட்டு”’ (திருவா. 4 – 3 – 1) என்று தொடங்கி -ராமக்ருஷ்ணாத்‌ யவதாரங்களைப் பண்ணி விரோதி நிரஸநம்‌ பண்ணுகிற தஸைகளிலே உதவி ஸிஸிரோபசாரம்‌ பண்ணப்‌ பெற்றிலேனாகிலும்‌ என்னுடைய ஸத்தாதிகளெல்லாம்‌ தனக்கு போக உபகரணமாகக்‌ கொள்ளும்படி என் பக்கலிலே வ்யாமுக்‌தனானானென்றும்‌. ““ஆழியெழச்சங்கு’” (திருவா. 7 – 4- 1) என்று தொடங்கி – அவனுடைய த்ரைவிக்ரமாபதாநம்‌-அம்ருதமதநம்‌, பூம்யுத்‌தரணம்‌, மஹா ப்ரளயவ்ருத்தாந்தம்‌, ஹிரண்ய நிரஸநம்‌, ராவண வத,ம்‌, பாணனுடைய பாஹாுவநச்சேதந ப்ரகாரம்‌, ததநந்தரம்‌ ஜகத் ஸ்ருஷ்டி ப்ரகாரம்‌, கோவர்த்‌தநோத்‌தரணம்‌ இப்படிப்‌ பத்தும் பத்தான விஜய பரம்பரைகளையும்‌, இப்படி ஸ்வ பர விபாகமற ஸர்வத்தையும்‌ ஸாக்ஷாத்கரித்துப்‌ பேசின இவர்க்குத்‌ தம்மை விஷயீகரித்தது யாத்‌ருச்சிகாதி, ஸுக்ருதமடியாக என்னுமது உண்டாகில்‌ ப்ரகாஸிக்குமிறே என்கிறார்

    108-செய்தநன்றி தேடிக் காணாதே கெடுத்தாய்‌ தந்தாய்‌ என்ற அத்‌வேஷாபிமுக்‌,யங்களும்‌ ஸத் கர்மத்தாலல்ல.
    இப்படி அங்கீ காரத்துக்கு ஹேதுவாயிருப்பதொரு ஸுக்ருதமில்லையே யாகிலும்‌, அத்‌வேஷாபிமுக்‌,யங்கள்‌ ஸுக்ருதமடியாக ஆனாலோ என்னில்‌, அந்த அத்‌வேஷாபிமுக்‌யங்களும்‌ அவனாலே உண்டாய்த்தென்று இவர் தாமே அருளிச் செய்தாரிறே. (செய்த நன்றி தேடிக் காணாதே என்று தொடங்கி) ”வாட்டாற்றார்க்கெந்நன்றி செய்தேனா என்னெஞ்சில்‌ திகழ்வதுவே” (திருவா. 10 – 8 – 8) என்று ஸர்வேஸ்வரன்‌ தம்மை விஷயீகரித்ததுக்கு ஹேது தேடிக் காணாதே. (கெடுத்தாய்‌ தந்தாய்‌ என்று) “என்னைத்‌ தீ மனங்கெடுத்தாய்‌”” (திருவா. 2 – 7 – 8), “மருவித் தொழும்‌ மனமே தந்தாய்‌” (திருவா. 2 – 7 – 7) என்று சொல்லுகிற அத்‌வேஷாபிமுக்‌யங் களிரண்டும்‌ அவனாலே உண்டாய்த் தென்று தாமே அருளிச் செய்கையாலே அவையும்‌ ஸத் கர்ம மடியாக வந்ததன்று என்கிறார்

    109-எண்ணிலும்‌ வரும்‌ கணனைக்கு எண்டானுமிலீலை.
    ஆனால்‌ பரமபக்திக்கு முகம்‌ காட்டுமாப் போலே பரிகணனைக்கும்‌ முகம் காட்டும்‌ என்றாரிறே இவர் தாமே-ஆகையாலே அந்த பரிகணனை இவர்க்கு உண்டாய்த்தானாலோ என்னில்‌, அதுவுமில்லை என்று தாமே அருளிச்செய்தாரிறே என்கிறார்‌ மேல்‌. (எண்ணிலும்‌ வரும்‌ கணனைக்கு எண்டானுமில்லை) “எண்ணிலும்‌ வரும்‌ என்னினி வேண்டுவம்‌”” (திருவா, 1 – 10 – 2) என்று பரமபத்தி யுக்தர்க்கு முகம் காட்டுமாப் போலே பரிகணனைக்கு முகம்‌ காட்டும்‌ என்னுமிடம்‌ ஈஸ்வரனுடைய குணாதிக்யம்‌ சொல்லிற்றத்தனைபோக்கி, அந்த பரிகணனையும்‌ தமக்கில்லை என்னுமிடத்தை “கருமங்கள்‌ வாய்க்கின்று ஒரெண்டானுமின்றியே வந்தியலுமாறு – கண்டாயே” (திருவா. 1 – 10- 5) என்று – கார்யங்கள்‌ ஸித்‌திக்குமிடத்தில்‌ ”எண்ணிலும்‌ வரும்‌” என்றது தானும்‌ மிகையாம்படி ‘“ஓரெண்டானுமின்றியே”” என்று அந்த எண் தானுமின்றியே பலித்துக் கொடு நின்றபடி கண்டாயே என்று அதுவுமில்லை என்று தாமே பேசினாரிறே

    110-மதியால்‌ இசைந்தோம்‌ என்னும்‌ அநுமதி-இச்சைகள்‌ இருத்துவம்‌ என்னாத என்னை இசைவித்த என்னிசைவினது.
    ஆனால்‌ தமக்கு அநுமதீச்சைகள்‌ உண்டாக அருளிச் செய்தாரே- அவைதான்‌ ஹேதுவானாலோ என்னில்‌, அவையும்‌ அவனாலே உண்டானவையாகையாலே ஹேது அன்று என்கிறார்‌ (மதியால்‌ இசைந்தோம்‌ என்று தொடங்கி) வைத்தேன்‌ மதியால்‌ எனதுள்ளத்‌தகத்தே”” (திருவா. 8 – 7 – 10) என்றும்‌, “யானுமென்னெஞ்சு மிசைந்தொழிந்தோம்‌ (பெ.திருவ. 26) என்றும்‌, அனுமதி மாத்ரத்தாலே அவனை என்‌ தெஞ்சுக்குள்ளே வைத்தேன்‌ என்றும்‌, விரோதியைப்‌ போக்குவானாக யானும்‌ என்‌ நெஞ்சும்‌ இசைந்‌தொழிந்தோம்‌ என்றும்‌ தமக்கு அநுமதீச்சைகள்‌ உண்டாகச்‌ சொன்னாரே என்னில்‌; அந்த அநுமதீச்சைகளும்‌ ”யானொட்டி என்னுள்‌ இருத்துவமென்றிலன்‌‘ (திருவா. 1 – 7- 7) என்று, நான்‌ அவனை என்னுள்ளே இருக்க வொட்டேன்‌ என்று ப்ரதிஜ்ஞை பண்ண, தான்‌ “அத்ய மே மரணம்‌ வாபிதரணம்‌ ஸாகரஸ்ய வா”’ (ரா. யு. 21 – 87) என்று ப்ரதிஜ்ஞை பண்ணினாப் போலே ப்ரதிஜ்ஞை பண்ணி, ஸ்வதந்த்ரமான நெஞ்சை அபஹரித்து ஸரீரத்‌தோடே கலந்து, பின்பு ஆத்மாவோடே கலந்து, இப்படி யத்நம்‌ பண்ணி, ““இசைவித்‌சென்னை” (திருவா. 8 – 8 – 9) என்று என்னை இசையும்படி பண்ணினான்‌ என்றும்‌, இசைவித்த மாத்ரமே யன்றியிலே, ‘“என்னிசைவினை”” (திருவா. 1 – 7 – 4) என்று இசைவு தானும்‌ தானேயாய்‌ நின்றவனுடைய க்ருஷி பலம்‌ என்கிறார் –

    111-மாதவன்‌ மலை நீர்‌ நிழல்‌ என்றேறிடுமது, வ்யாவ்ருத்த் யுக்தி, அந்யார்த்தம்‌, அபுத்‌தி பூர்வகம்‌, அவிஹிதம்‌, பலவிஸத்‌ருஸம்‌, பலாந்தரஹேது.
    ஆனாலும்‌ இவர்‌ தம்முடைய ப்ரபந்தத்திலே ஹேது ஸூசகமாகச் சில உக்திகள்‌ உண்டாயிரா நின்றதே என்னில்‌, அவையும்‌ ஹேது அன்றென்னுமிடத்தைப்பல படியாலும்‌ உப பாதிக்கிறார்‌ ( மாதவன்‌ என்று தொடங்கி). “மாதவனென்றதே கொண்டு என்னை யினி இப்பாற் பட்டது’” (திருவா. 2 – 7 – 3) என்றும்‌, “திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்னத் திருமால்‌ வந்தென்‌ தெஞ்சு நிறையப் புகுந்தான்‌ (திருவா. 10- 8- 1) என்றும்‌ இப்படி அந்தப்புரத்திலுள்ளார்‌ சொல்லும்‌ பாசுரத்தை அஹ்ருதயமாகச் சொன்ன வளவிலே இத்திருநாமத்துக்கும்‌ அல்லாத திருநாமத்துக்கும்‌ வாசி யறியாத என்னை விஷயீகரித்து என்‌ விரோதிகளைப்‌ போக்கினான்‌ என்றும்‌, திருமலையின்‌ பேரைச்‌ சொன்னேனாக ஸ்ரீய பதியான ஸர்வேஸ்வரன்‌ என்னுடைய அஹ்ருதயமான உக்தியையே பற்றாசாகக்‌ கொண்டு விஷயீகரித்தான்‌ என்றும்‌.
    (நீர்‌ நிழல்‌ என்று) “என்னடியார்‌ விடாயைத்‌ தீர்த்தாய்‌ அவர்களுக்கு ஒதுங்க நிழல்‌ கொடுத்தாய்‌” என்றாப் போலே இவை விஷயீகார ஹேது வானாலோ என்னில்‌; மாதவன்‌, மலை என்றது இரண்டும்‌ வ்யாவ்ருத்த் யுக்தி- அதாவது – இந்தத் திருநாமத்துக்கும்‌ அல்லாத திருநாமங்களுக்கும்‌ வாசி அறிந்து ஸ்ரீயப்பதியுடைய திருநாமம்‌ என்று சொன்னதன்று-இப் பேருககும்‌ அப்பேருக்கும்‌ வேறுபாடு சொன்ன மாத்ரம்‌. ”திருமாலிருஞ்சோலைமலை”’ என்றது – ஸர்வேஸ்வரனுக்கு இது வஸ்தவ்ய பூ,மி என்று சொன்னதன்று; ஒரோ தேஸங்களில்‌ மலைகளைச்‌ சொல்லுவார்‌, “கொல்லி மலை”, *குலை மலை’ என்று சொல்லுவாரைப் போலே இம் மலைக்கும்‌ அம் மலைக்கும்‌ வேறுபாடு தோற்றச்‌ சொன்னவித்தனை.
    (நீர்‌ நிழல்‌ என்னுமவை அந்யார்த்த,ம்‌) அதாவது – தன்‌ பயிருக்காக ஏற்றமிரைத்தும்‌ சூதுச துரங்கத்துக்காக விரிவுண்டாக அகம்‌ கட்டியும்‌ செய்கிறானத்தனைபோக்கி, பாகவதர்கள்‌ விடாய்‌ தீருகைக்கும்‌, ஒதுங்குவார்‌ ஓதுங்குகைக்குமன்றிறே; ஒரு வைஷ்ணவன்‌ அந்நீரிலே துளி நீர்‌ அள்ளக் காணுதல்‌, அந்நிழலிலே ஒருவன்‌ ஒதுங்கக்‌ காணுதல்‌ செய்யில்‌ தடியிட்டு விலக்குவர்களிறே. இவை யெல்லாம்‌ சேர அபுத்தி பூர்வம்‌ இந்த உக்தி வ்ருத்திகளிரண்டும்‌ இவர்க்கு புத்‌தி பூர்வமல்ல. (அவிஹிதம்‌) இவை தான்‌ மோக்ஷ ஹேதுக்களென்று ஸாஸ்த்ர விதியுமில்லை. (பல விஸத்‌ருஸம்‌) பகவத்‌ விஷயீகார மஹா பலத்துக்கு இவை ஸத்‌ருஸமுமன்று. (பலாந்தரஹேது] இவை உண்டாயிற்‌றாகில்‌ இப் பாலுண்டான அல்ப ப்ரயோஜநத்துக்கே ஹேதுவாமித்தனை போக்கி, அந்த மஹாபலத்துக்கு ஹேதுவாகவும்‌ மாட்டாது. ஆகையால்‌ இவை ஹேதுவாகமாட்டாது –

    இவன்‌ நடுவே அடியான்‌ என்று ஓலைப்படா ப்ரமாணம்‌ பக்ஷபாதி ஸாஷி வன் களவில்‌ அநுபவமாகிற இந்திர ஞாலங்கள்‌ காட்டிக்‌ கொள்ள காப்பாரற்று விதி சூழ்ந்தது.
    இவற்றை ஹேதுவாக நினைத்திருந்தாராகில்‌ ““மதிநல மருளினன்‌?” (திருவா. 1 – 1 – 1) என்றும்‌, “ஓஒ? எண்டானுமின்றியே வந்தியலுமாறு’” (திருவா, 1 – 10 – 5) என்றும்‌, ““எனதாவி யுள் கலந்த”” (திருவா. 2 – 3 – 4) என்றும்‌, ”நீசனேன்‌ நிறை வொன்றுமிலேன்‌ என் கண்‌ பாசம்‌ வைத்த பரஞ்சுடர்ச்சோதி” (திருவா. 3 – 3 – 4) என்றும்‌, ‘“அதுவுமவனதின்னருனே” (திருவா. 8 – 8 – 3) என்றும்‌, “வெறிதே அருள் செய்வர்‌”” (திருவா. 9 – 7 – 8) என்றும்‌, “ இன்றென்னைப் பொருளாக்கித் தன்னை என்னுள்‌ வைத்தான்‌”? (திருவார்‌. 10 – 8 – 8) என்றும்‌, “‘பொருளல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்‌” (திருவா. 5 – 7 – 3) என்றும்‌, “நடுவே வந்துய்யக் கொள்கின்ற நாதன்‌” (திருவா. 1 – – 3) என்றும்‌, ‘“என்னைத்‌ தீ மனங் கெடுத்தாய்‌”’ (திருவா. 2 – 7 – 8) என்றும்‌, மருவித் தொழும்‌ மனமே தந்தாய்‌?” (திருவா. 2 – 7 – 7) என்றும்‌, ““வரவாறொன்‌றில்லையால்‌ வாழ்வினிதால்‌”” (பெ.திருவ. 56) என்றும்‌ இப்படி நிர்ஹேதுகமாக விஷயீகரித்தான்‌ என்றருளிச்செய்த ஸ்வ வாக்யங்கள்‌ பலவற்றோடும்‌ வ்யாஹதமாமே.-இப்படி இவரை அஹேதுகமாக விஷயிகரிக்கnவேண்டுவானென்‌ என்னில்‌ “த்வம்‌ (ம அஹம்‌ மே” என்று ஸம்பந்தத்தை ஏறிட்டு இவரை வலியப் பிடிக்க, இவர்‌ இறாய்த்த விடத்திலும்‌ வழக்குப் பேசி, அவ்வளவிலும்‌ அகப்படாதொழிய, மஹாபலிக்குத் தன்‌ வடிவழகைக் காட்டி வஸீ கரித்து லோகத்தை அதிக்ரமித்துக் கொண்டாப் போலே தன்‌ வடிவழகைக் காட்டி இவரை வாய் மாளப் பண்ணி விஷயீகரிக்கும்படி அவனை க்ருபை கால் கட்டிற்று என்கிறார் (இவன்‌ நடுவே அடியான்‌ என்று தொடங்கி). “நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன்‌” (திருவா. 1 – 7 – 5) என்றும்‌, ”அடியானிவனென்‌றெனக்காரருள்‌ செய்யும்‌” (திருவா. 9 – 4 – 10) என்றும்‌ நாதனாகையாலே நிர்ஹேதுகமாக வந்து இவர்க்கிசைவின்றிக்கே இருக்கச் செய்தே “இவன்‌ என்‌ அடியான்‌” என்று பிடிக்க, அதுக்கு, இவர்‌ இசையாதொழிய, இவர்‌ இசைகைக்காக ‘“பதிம்‌ விஸ்வஸ்ய” இத்யாதிகளைக்‌ காட்ட, அது எழுதா மறையாகையாலே அது ஓலைப் படா ப்ரமாணம்‌ என்று அத்தையும்‌ இவர்‌ அந்யதாகரிக்க, இவர்‌ அடியானானமைக்கு தத்த்வ தர்மிகளான ஜ்ஞாநிகள்‌ ஸாக்ஷியாக உண்டீ என்ன; அவர்களும்‌ உனக்கு பக்ஷபாதிகள்‌ என்று ப்ரதி வசநம் பண்ண, ஆனால்‌ “இவ் வஸ்து உம்மதானபடி எங்ஙனே?” என்று பகவதபிப்ராயமாக, “அநுபவவிபவாத்‌”” என்கிறபடியே “அஹம்‌ மம” என்று அநாதி, காலம்‌ அநுபவித்துப் போந்தேன்‌ என்று ப்ரபல ப்ரமாணமான அநுபவத்தைக் காட்ட, ப்ரமாண ஸாக்ஷிகளும்‌ ஆக்ரோஸ முண்டாயிருக்கச் செய்தே அநுபவித்துப் போந்த இது ““வன்கள்வனேன்‌” (திருவா. 5 – 1 – 4) என்று ஸர்வஜ்ஞனானவனையும்‌ க்ருத்ரிமித்துப்‌ போந்தேன்‌ என்று விஷயீகாராநந்தரம்‌ தாமே பேசும்படி இவர்‌ க்ருத்ரிமத்திலே அநுபவித்தாராம்படி ‘*இந்திர ஞாலங்கள் காட்டி இவ்வேழுலகுங்கொண்ட. நந்திரு மார்வன்‌”! (திருவா. 9 – 5 – 5) என்று ஐந்த்‌ரஜாலிகம்‌ காட்டுவாரைப் போலே சிறுப்பது பெருப்பதான வடிவழகைக் காட்டி, மன்னை மனங்கொள்ள வஞ்சித்து தெஞ்‌சுருக்கி’ ” (பெ. மடல் ) என்கிறபடியே ஆஸூர ப்ரக்ருதியான மஹாபலியை வாய் மாளப் பண்ணி ஸகல ஜகத்தையும்‌ ஆக்ரமித்துக் கொண்டாப் போலே, வடிவழகைக் காட்டி வாய்மாளப்‌ பண்ணி விஷயீகரிக்கும்படி, (காப்பாரற்று) ”விதிவாய்க்கின்று காப்பாரார்‌ – ஐயோ கண்ண பிரான்‌ அறையோ இனிப் போனாலே”’ (திருவா. 5 – 1 – 1) எனறு – கிருபை பெருகுமிடத்தில்‌ க்ருபா பரதந்த்ரனான நீ காக்கவோ? க்ருபா ப்ரேரிகையான அவள்‌ காக்கவோ? க்ருபா விஷயமான நான்‌ காக்கவோ? இந்த கருபையைத் தப்பி நீ போனாயாகில்‌ “அறையோ அறை” என்று நிவாரகரில்லாதபடி விதி சூழ்ந்தது. ”எதிர் சூழல்‌ புக்கெனைத்தோர்‌ பிறப்பும்‌ எனக்கே அருள்கள்‌ செய்ய – அம்மான்‌ திருவிக்கிரமனை விதி சூழ்ந்தது”” (திருவா. 2 – 7 – 6) என்று அநேக ஜந்மங்கள்‌ இவர் பிறவிகளுக்கு எதிரே பிறந்து கொடு வந்து இவரை விஷியீகரிக்கும்படி விரோதி நிரஸந ஸீலனான ஸர்வேஸ்‌வரனை, இவரை விஷயீகரித்தல்லது நிற்க வொண்ணாத படியான க்ருபை கால் கட்டிற்று என்கிறார்‌

    113-வரவாறில்லை, வெறிதே என்று அறுதி யிட்டபின்‌ வாழ் முதல்‌ என்கிற ஸுஹ்ருதமொழியக்‌ கற்பிக்கலாவதில்லை.
    ஆகையாலே இவர் தாமே “நிர்ஹேதுகமாக விஷயீகரித்தான்‌’ என்று அர்த்தத்தை அறுதியிட்ட பின்பு விஷயீகார ஹேதுவான ப்ரதம ஸுஹருதமும்‌ அவனை யல்லதில்லை என்கிறார்‌ மேல்‌ (வரவாறில்லை என்று தொடங்கி). “வரவாறொன்றில்லையால்‌ வாழ்‌வினிதால்‌”” (பெ. திருவ. 56) என்று பேற்றுக்கு ஒரு ஹேதுவின்றியிலே இருக்கச்‌ செய்தே அப்பேறு மிகவும்‌ இனிதாயிருந்ததென்றும்‌, ““வெறிதே அருள் செய்வர்‌ செய்வார்கட்குகந்து”” (திருவா. 8 – 7 – 8) என்று ”செய்வார்களுக்கு உகந்து வெறிதே அருள் செய்வர்‌’‘ என்கையாலே தான்‌ அங்கீகரிக்க வேண்டினார்க்குத்‌ திருவுள்ளத் தோடே உகந்து நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணுமென்று இப்படி இவ் விஷயீகாரம்‌ திர்ஹேதுக மென்று தாமே அறுதி யிட்டபின்‌ (வாழ்முதல்‌ என்ற ஸுஹ்ருதமொழியக்‌ கற்பிக்கலாவதில்லை) இவ் விஷயீகாரத்துக்கு ஹேதுவான மூல ஸூஹ்ருதம்‌ *‘பொழிலேமழுமேனமொன்றாய்‌ நுனியார்‌ கோட்டில்‌ வைத்தாய்‌ – தனியேன்‌ வாழ் முதலே”’ (திருவா. 2 – 3 – 5) என்று ப்ரளயார்ணவ மக்‌னையான ஸ்ரீபூமிப்பிராட்டியை நீருக்கும்‌ சேற்றுக்கும்‌ இறாயாத வடிவைக் கொண்டு உத்‌தரிப்பித்து, தனியே ஸம்ஸாரார்ணவ மக்‌நனாய்‌ ஒரு கைம்முதலில்லாத என்னுடைய உஜ்ஜீவநத்துக்கு ப்ரதம ஸுஹ்ருதமானவனே என்று அருளிச்செய்த ஞானப்பிரானை யொழிய வேறு கல்பிக்கலாவதில்லை என்கிறார்‌.

    ஆக, இதுக்குக்கீழ்‌ இவருடைய ப்ரபாவத்தையும்‌, ப்ரபாவத்துக்கடி பகவந் நிர்ஹேதுக கடாக்ஷம்‌ என்னுமிடத்தையும்‌, அந்த கடாக்ஷமடியாக இவர்க்குண்டான பக்தியினுடைய வ்யாவ்ருத்தியையும்‌, அந்த பக்தி தான்‌ கர்ம ஜ்ஞாந ஸாத்‌யையுமல்ல, அதுக்கடியான யாத்‌ருச்சிகாதிகளுமில்லை, கேவல நிர்ஹேதுக க்ருபையாலே உண்டாயிற்றென்னுமிடத்தையும்‌ அருளிச் செய்து தலைக்கட்டினாராய்த்து –

    114-நலமருளினன்‌ என்கொல்‌ என்று ஆமூலசூட.ம்‌ அருளால்‌ மன்னுமிவர்க்கு அன்புக்கடியானதுவே அடி சேருகைக்கு ஸாதநம்‌.
    ஆனால்‌, உபாஸகனுக்கு கர்ம ஜ்ஞாநங்களாலே ஸாத்‌யையான பக்தி பகவத் ப்ராப்திக்கு ஸாதநமாகக்‌ கண்டோம்‌, இவர்க்கு நிர்ஹேதுக க்ருபையாலே பக்தி உண்டாயிற்றாகில்‌ பகவத் ப்ராப்திக்கு இது ஸாதநமானாலோ என்னில்‌, அந்த பக்த் யுத்பத்தி ஹேதுவான க்ருபை தானே ப்ராப்திக்கும்‌ ஸாதநம்‌ என்கிறார்‌ மேல்‌ (நலமருளினன்‌ என்று தொடங்கி). “மயர்வற மதிநலமருளினன்‌ ”‘ (திருவா. 1 – 1 – 1), “ஆவா வென்றருள்‌ செய்து” (திருவா. 5 – 1 – 9), “’தானே இன்னருள்‌ செய்து” (திருவா. 5 – 1 – 10), ‘“அதுவுமவனதின்னருளே”‘ (திருவா. 0 – ப – 3), ”என்கொலம்மான் திருவருள்கள்‌”‘ (திருவா, 10 – 7 -4) என்று ஜஞாந தஸையோடு, உபாயதஸையோடு, ப்ராப்தி தஸையோடு வாசியற ஆமூலசூடம்‌ அருளால்‌ ”மன்னு குருகூர்ச் சடகோபன்‌”’ (திருவா, 1 – 5 -11) என்று தொடங்கி – ஸுகுமாரராயிருப்பார்‌ பிடி தோறும்‌ ‘நெய்‌’ என்னுமாப் போலே அவனுடைய அருளை யொழியச்‌ செல்லாத இவர்க்கு. (அன்புக் கடியானதுவே அடி சேருகைக்கும்‌ ஸாதநம்‌) ““அறியாக் காலத்துள்ளே அடிமைக் கணன்பு செய்வித்து’” (திருவா. 2- 3 – 3) என்று அறிவு நடையாடுகைக்கு யோக்யதை யில்லாத அதி பால்யததிலே அன்பை விளைத்தானென்றும்‌, ““ஆராவன்பிலடியேனுன்னடி சேர்‌ வண்ணமருளாயே” (திருவா. 6 – 10 – 2) என்கையாலே அந்த பக்திக்கடியான கிருபையே பகவத் ப்ராப்திக்கு சாதநம் என்கிறார் –

    115-புணர்தொறுமென்னக் கலந்து பிரிந்து ஜ்ஞாந பக்திகளை வளர்த்தது கனங்குழையிடக்‌ காது பெருக்குதலும்‌, மாஸோபவாஸி போஜநப் புறப்பூச்சும் போலே ஆற்ற நல்ல் மாபோகச் சிரமமாக.
    இப்படி பரம க்ருபாவானானவன்‌ இவர்க்கு ஸம்ஸ்லேஷ விஸ்‌லேஷங்களினாலே ஸோக ஹர்ஷங்களை விளைவித்ததுக்கு ப்ரேயாஜநம்‌ என்‌ என்னில்‌, இவர்க்கு தேஸ விஸேஷத்தில்‌ அநு பவம்‌ ஸாத்மிக்கைக்காக ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களினாலே ஐஞாந பக்திகளை வளர்த்து ஸ்ரமம்‌ செய்வித்தபடி என்கிறார்‌ (புணர்தொறும்‌ என்று தொடங்கி), “புணர்‌ தொறும்‌” (திருவா. 10 – 3 – 2) என்கிற பாட்டில்‌ ஸம்ஸ்லேஷிக்குந் தோறும்‌ அந்த ஸ்ம்ஸ்லேஷ்த்தின்‌ அளவல்லாத ஸுக ஸாகரம்‌, அபரிச்சிந்நமான ஆகாயத்தையும்‌ கடந்து அது தானும்‌ இதுக்குள்ளேயாம்படியான இவருடைய ஜஞாநமும்‌ தனக்குள்ளேயாம்படி வ்யாப்தமான அந்த ஸுகம்‌, அவனுடைய விஸ்லேஷத்திலே பெருக்காறு அடிச்சுடுமாப் போலே ஸ்வப்ந ஸமமாய்ப் போய்‌ அந்த ஸுகம்‌ போனவிடமெல்லாம்‌ வ்யாப்தமாய்க் கொண்டு அணு பரிமாணமான ஆத்மாவின்‌ அளவல்லாத அபிநிவேஸம்‌ பெருகிற்றென்று சொல்லும்படி ஸம்ஸ்லேஷித்து ஜ்ஞாநத்தை வளர்த்து, விஸ்லேஷித்து பக்திகளை வளர்த்தது. (கனங்குழையிடக்‌ காது பெருக்குதலும்‌ மாஸோபவாஸி போஜநப் புறப் பூச்சும் போலே) கனத்த பணிகளிடுகைக்குக்‌ காது பெருக்குவாரைப்‌ போலேயும்‌, மாஸோபவாஸிகளுக்கு அப்போதே அஸநத்தை இடில்‌ ஸாத்மியா தென்று ஸரீரத்திலே அந்நத்தை அறைத்துப்‌ பூசியும்‌ கஞ்சியைக்‌ கொடுத்தும்‌, குழம்பு கொடுத்தும்‌ ஸாத்மிப்பிப்பாரைப் போலேயும்‌-
    (ஆற்றநல்ல மா போகச் சிரமமாக) “*ஆற்ற நல்ல வகை காட்டுமம்மான்‌ ” (திரு-4-5-5) என்றும்‌, அர்ஜுநனுக்கு ஸாத்மிக்க ஸாத்மிக்க அர்த்தம்‌ அருளிச் செய்தாப் போலே எனக்கும்‌ ஸாத்மிக்க ஸாத்மிக்கத்‌ தன்னுடைய பரத்வாதிகளை அநுபவிப்பித்தான்‌ என்று இவர்‌ அருளிச் செய்தபடியே பகவதநுபவம்‌ என்று கனாக் கண்டறியாத இவர்க்கு “எம்மா வீடு”’ (திருவா. 2 – 9 – 1) என்றும்‌, “மா போகம்‌”’ என்றும்‌ சொல்லுகிறபடியே எல்லாப்படியாலும்‌ விலக்ஷணமாய்‌, ““கொள்ள மாளா இன்ப வெள்ளம்‌”” (திருவா. 4 – 7 – 2) என்கிறபடியே அதிஸயித ஜ்ஞாந ஸக்திகரான நித்ய ஸூரிகளாலும்‌ துலைத்தநுபவிக்க வொண்ணாதபடி அபரிச்சேத்‌யமாயிருக்கிற தன்னோட்டை அநுபவத்தை முதலிலே ப்ரகாஸிப்பிக்கில்‌ இவரைக் கிடையாதென்றும்‌, அவ்வநுபவம்‌ ஸாத்மிக்கைக்காகச்‌ சிரமம்‌ செய்வித்தபடி என்கிறார்-

    116-இவற்றால்‌ வரும்‌ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களாகிறன எளியனாய்‌ நிற்கும்‌ அரியனாய்‌ எய்தான்‌ என்கிற தர்ஸந ஸமமான மாநஸாநுஸந்தாநமும்‌ திண் கொள்ளப் பெறாத மநஸ் ஸைதில்யமும்‌.
    இவர்க்கு இங்கு ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களாகச்‌ சொல்லுகிறவை எவை என்னில்‌, ப்ரத்யக்ஷ ஸமாநாகாரமான மாநஸாநுபவமும்‌, அவ்வநுபவத்தை பாஹ்ய ஸம்ஸ்லேஷாபேக்ஷை பண்ண, அது கிடையாமையாலே மாநஸாநுபவத்துக்கு வந்த கலக்கமும்‌ என்கிறார்‌ மேல்‌ (இவற்றால்‌ வரும்‌ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களாகிறன- அந்த ஜஞாந பக்திகளை வளர்த்தத்தால்‌ வரும்‌ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களாகிறனவை எவை என்னில்‌, (எளியனாய்‌ நிற்கும்‌ அரியனாய்‌ எய்தான்‌ என்கிற தர்ஸந ஸமமான மாதஸாநுஸந்தாநமும்‌) “கருத்துக்கு நன்றுமெளியனாய்‌”‘ (திருவா. 8 – 6 – 11), “நிற்கும்‌ முன்னே வந்து”‘ (திருவா-7 – 2 – 6), “கண்கள்‌ காண்டற்கரியனாய்‌”’ (திருவா. 3 – 6 – 11), ““கைக்குமெய்தான்‌” (திருவா. 3 – 6 – 11) என்றும்‌ சொல்லுகையாலே என்னுடைய ஹ்ருதயத்திலே மிகவும்‌ எளியனாய்க் கொண்டு என் முன்னே நிற்கும்‌ என்றும்‌, என்‌ கண்ணுக்கு அவிஷயமாய்க் கொண்டு கையாலே அணைக்கைக்கு எட்டுகிறிலன்‌ என்றும்‌ சொல்லுகிற ப்ரத்யக்ஷ ஸமாநாகார மாநஸாநுஸந்தாநமும்‌, (திண் கொள்ளப் பெறாத மநஸ் ஸைதில்யமும்‌) அந்த மாநஸாநுபவ வைஸத்‌யத்தாலே “என்‌ கண்கட்குத்திண்கொள்ள ஒருநாள்‌ அருளாயுன்‌ திருவுருவே”’ (திருவா. 5 – 10 – 7) என்று பாஹ்ய ஸம்ஸ்லேஷாபேக்ஷை பண்ணி அது கிடையாமையாலே அம் மாநஸாநுபவத்துக்கு வரும்‌ குலைதலும்‌ ்‌ என்கிறார்‌.-

    117-புண்ணியம்‌ பாவம்‌ புணர்ச்சி பிரிவை அவை சரித்தவர்க்கு ப்ரிய ஹித பரன் தான்‌ துளக்கற எங்கும்‌ தழைக்க நடத்தும்‌.
    அபிமத விஷயத்தில்‌ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களிரண்டும்‌ நாட்டார்க்கு புண்ய பாப பலமாயன்றோ உண்டாகிறதென்னில்‌; அந்த பாபங்கள்‌ வாஸனையோடே போகப்‌ பெற்ற இவர்க்கு ப்ரிய ஹித பரனான ஈஸ்வரன் தானே நடத்தும்‌ என்கிறார்‌. (புண்ணியம்‌ பாவம்‌ புணர்ச்சி பிரிவை) “புண்ணியம்‌ பாவம்‌ புணர்ச்சி பிரிவென்றிவையாய்‌”’ (திருவா. 6 – 3 – 4) என்று நாட்டார்க்கு புண்ய பாப பலமாய்க் கொண்டு வருகிற ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களை, (அவை சரித்தவர்க்கு ) சார்ந்த இரு வல்வினைகளும்‌ சரித்து மாயப்‌ பற்றறுத்து”‘ (திருவா. 1 – 5 – 10) என்று ஆத்மாவோடே பிரிக்க வொண்ணாதபடி சேர்ந்திருக்கிற புண்ய பாப ரூபமான ப்ரபல கர்மங்களை விரகர்‌ நெடுஞ்சுவர்‌ தள்ளுமாப்‌ போலே ஒருகாலே வாஸனையோடே போம்படி ஈஸ்வரன்‌ போக்குகையாலே அவை இல்லாத இவர்க்கு, (ப்ரிய ஹித பரன் தான்‌ துளக்கற எங்கும்‌ தழைக்க நடத்தும்‌) ப்ரிய பரனாய்க் கொண்டு ஜ்ஞாநத்தை வர்த்திப்பித்தும்‌ ஹித பரனாய்க் கொண்டு பக்தியை வர்த்திப்பித்தும்‌ போருகிற ஈஸ்வரன் தானே.[சிக்கென இத்யாதி,]துளக்கற்றமுதமாய்க் கொண்டு “எங்கும்‌ பக்க நோக்கறியான்‌”” (திருவா, 2 – 6 – 2) என்று விபூதி வ்யாபாரத்தை ஒருங்க விட்டுக் கொண்டு வந்து என்‌னுள்ளே சிக்கெனப்‌ புகுந்து அத்தாலே விகஸித ஸஹஜ ஸார்வஜ்ஞ்யனுமாய்‌, “விஜ்வர?? (ரா. பா. 1 -85) என்கிறபடியே உள் நடுக்கம்‌ தீர்ந்து நிரதிஸய போக்‌யனுமாய்‌ நாச்சிமாரையும்‌ புரிந்து பராமல்‌ என்னளவிலே நிரந்தரமாக கடாக்ஷிக்கையாலே திருக் கண்களும்‌ செவ்வி பெற்று இப்படி என்னுள்ளே இருந்தான்‌ என்றும்‌, *‘தழை நல்ல இன்பம்‌ தலைப்பெய்தெங்கும்‌ தழைக்கவே” (திருவா. 9 – 5 – 10) என்று ‘விஸ்லேஷ வ்யஸநத்தாலே நான்‌ முடியா நின்றேன்‌, என்னுடைய க்லேஸம்‌ கண்டு ஜகத்து கலேஸிக்க வேண்டாவே” என்றும்‌, தீப்பாய்வார்‌ “நாடு வாழ, நகரி வாழ ‘ என்று வாழ்த்துமாப் போலே “ஜகத்தெங்கும்‌ ஆநந்தமானது அபிவ்ருத்‌தமாயிருக்க‘ என்று தாம்‌ முடிகையிலே வ்யவஸிதராயும்‌ இப்படித்‌ தாமே பேசும்படி நடத்திக் கொண்டு போரும்‌ என்கிறார்‌.

    118-ஜ்ஞாநத்தில்‌ தம் பேச்சு, ப்ரேமத்தில்‌ பெண் பேச்சு.
    ஆனால்‌ இவர்க்கு இந்த ஜ்ஞாந தஸையில்‌ பேச்சேது? ப்ரேம தஸையில்‌ பேச்சேது? என்னில்‌, ஜ்ஞாநத்தில்‌ தம்‌ பேச்சு, ப்ரேமத்தில்‌ பெண் பேச்சு என்கிறார் –

    119-தேறும்‌ கலங்கி என்றும்‌ தேறியும்‌ தேறாதும்‌ ஸ்வரூபம்‌ குலையாது.
    பேச்சில்‌ வைஷம்யமொழிய ஸ்வரூபத்தில்‌ மாறாட்டமில்லை என்கிறார்‌ (தேறும்‌ கலங்கி என்று). “சிந்திக்கும்‌ திசைக்கும்‌ தேறும்‌ கை கூப்பும்‌’” (திருவா. 7 – 2 – 5), “கலங்கிக்‌ கை தொழும்‌ நின்றிவள்‌” (திருவா. 2 – 4 – 4) என்றும்‌, ‘‘தேறியும்‌ தேறாது மாயோன்‌ திறத்தனளே இத் திருவே” (திருவா. 4 – 4- 7) என்றும்‌ பிண்டத்வ-கடத்வ-கபாலத்வ காபாலிகத்வாத்‌,-யவஸ்தைகளில்‌ ம்ருத்தான ஆகாரம்‌ அநுவர்த்திக்குமாப் போலே தெளிந்த (தேறின – பா. போதோடு கலங்கின போதோடு வாசியற இரண்டவஸ்தையிலும்‌ அஞ்ஜலி ஹஸ்தையாய்க் கொண்டு “அவனை யல்லதறியாள்‌” என்கையாலே ஜ்ஞாந தஸையில்‌ தாமான தன்மையோடு ப்ரேம தஸையில்‌ பிராட்டிமார் பேச்சான அவஸ்தையோடு வாசியற சேஷத்வத்தில்‌ கலக்கமற்று ஏக ரூபமாயிருக்கு மென்கிறார்

    120-அடியோம்‌ தொடர்ந்து குற்றேவல்‌ அடிச்சியோம்‌ அடிக் கீழ்க்‌ குற்றேவலாகை அவஸ்தாந்தரம்‌.
    ஆனால்‌ பின்னை அவஸ்தாந்தரம்‌ கூடின படி என்‌ என்னில்‌ (அடியோம்‌ தொடர்ந்து குற்றேவல்‌ அடிச்சியோம்‌ அடிக்கீழ்க் குற்றேவலாகை அவஸ்தாந்தரம்‌) ஸ்வரூபத்திலும்‌ ஸ்வரூபாநுரூபமான வ்ருத்தி ப்ரார்த்தனையிலும்‌ வாசியில்லை. தம்‌ பேச்சும்‌ பிராட்டிமார்‌ பேச்சுமான இவ்வளவே அவஸ்தாந்தரம்-

    121-வித்யை தாயாகப் பெற்று பாலுமமுதுமான திருநாமத்தாலே திருமகள் போல வளர்த்த தஞ்சமாகிய தந்தை மற்றொருவர்க்குப்‌ பேச்சுப் படாமல்‌, விஸ்வபதி லோக பர்த்தா என்னும்‌ மணவாளரை நாலிரண்டிழை கொண்டு முப்புரியான ப்‌ரஹ்ம ஸூத்ர பந்தத்தோடே வரிப்பிக்கப்‌ பரம் புருடன்‌ கைக்கொண்ட பின்‌ சதுர்த்தியுள் புக்கு இடையீடு நடுக் கிடக்கும்‌ நாள் கழித்து ஜந்ம பூமியை விட்டகன்று சூழ்விசும்பிற் படியே உடன்சென்று குடைந்து நீராடி வியன் துழாய்‌ அஞ்சனத்தின்‌ நீறு நானப் பொடி பீதக வாடை பல்கலன் கொண்டு நோக்கி அலங்கரித்துப்‌ பல்லாண்டிசைத்துக்‌ கவரி செய்ய நிறை குட விளக்கமேந்தி இளமங்கையர்‌ எதிர் கொள்ள வைகுந்தம்‌ புக்கிருந்து வாய் மடுத்துப்‌ பெரும்‌ களிச்சியாக வானவர்‌ போகமுண்டு கோப்‌புடைய கோட்டுக்கால்‌ கட்டில்‌ மிதித்து ஆரோஹித்து பரத-அக்ரூர-மாருதிகளை பரிஷ்வங்கித்த மணி மிகு மார்விலே குரு மா மணி யாயணையும்‌ வஸ்துவுக்கு மணிவல்லிப் பேச்சு வந்தேறியன்று.

    வியன்துழாய்‌ அஞ்சனத்தின்‌ நீறு என்று தொடங்கி) ““வியன்துழாய்க்கற்பென்று சூடும்‌” (மூ.திரூவ. 69), “’ஆராரயில் வேற்கணஞ்சனத்தின்‌ நீறணிந்து’‘ (சி.மடல்‌),, “மெய்திமிரு நானப்பொடி “” (பெரியா.தி. 1-49), ‘“பெருமானரையில்‌ பீதக வண்ணவாடை” (நா.தி. 13 – 1), “பல்கலனும்‌ யாமணிவோம்‌”’ (திருப்பாவை 27) என்றும்‌,
    “தம்‌ பஞ்சஸ தாந்ய ப்ஸரஸாம்‌ ப்ரதிதா வந்தி மதம்‌ மாலா ஹஸ்தா? ஸதம்‌ சூர்ண ஹஸ்தா? தம்‌ வாஸோ ஹஸ்தா?”’ (கெளஷீ- உப.) என்று குளக்கரையிலே பர்த்தாவினுடைய பந்துக்கள்‌ வந்து அலங்கரிக்குமாப்‌ பாலே திவ்யாலங்காரோப கரணங்களை ஏந்திக்‌ கொண்டு மானேய்‌ நோக்கிகளான ஐந்நூறு திவ்யாப்ஸரஸ்ஸூக்கள்‌ எதிரே வந்து “தம்‌ ப்‌,ரஹ்மாலங்காரேணா லங்குர்வந்தி” (கெளஷீ- உப.) என்கிறபடியே பர விநியோகார்ஹமாம்படி அலங்கரித்து.(பல்லாண்டிசைத்துக் கவரி செய்ய) இவர்கள் விஷயத்தில்‌ சாபலத்தாலே மங்களாஸாஸநம்‌ பண்ணிச்‌ சாமரமிட. (நிறைகுட விளக்கமேந்தி இளமங்கையரெதிர் கொள்ள] “நிதியும்‌ நற்சுண்ணமும்‌ நிறைகுடவிளக்கமும்‌ மதிமுக மடந்தையர்‌”‘ (திருவா. 10 – 9-10) என்று மங்களாவஹமான மங்கள தீப பூர்ண கும்பங்களையும்‌ தரித்துக் கொண்டு. “சதிரிளமங்கையர்‌ தாம்‌ வந்தெதிர் கொள்ள”” (நா.தி. 6 – 5) என்று நித்ய நவயெளவந ஸ்வபாவைகளான வேறே சில திவ்யாப்ஸரஸ்ஸுக்கள்‌ எதிர் கொள்ள.
    (வைகுந்தம்‌ புக்கிருந்து) ‘“மன்னிய மாதவனோடு வைகுந்தம்‌ புக்கிருப்பார்‌” (நா.தி. 3 10) என்று ஸ்ரீயபதியான ஸர்வேஸ்வரனோடே தேஸ விஸேஷ ப்ராப்திபண்ணி. (வாய்‌ மடுத்துப் பெருங் களிச்சியாக வானவர் போகமுண்டு) பின்பு பர்த்ரு க்‌ருஹத்திலே தம்பதிகளும்‌ மற்றுமுள்ள பந்துக்களும்‌ பெருங்களிச்சி யுண்ணக் கடவரிறே; அப்படியே ““அடியேன்‌ வாய் மடுத்துப் பருகிக்‌ களித்தேன்‌” (திருவா. 2 – 3 – 9) என்றும்‌, ““கட்டெழில்‌ வானவர்‌ போகமுண்பாரே”” (திருவா, 6 – 6 – 11) என்றும்‌ நித்ய ஸூரிகளுடைய போகத்தை அவர்களோடொக்க முழு மிடறு செய்து ““ஸோஸ்நுதே ஸர்வாந்‌ காமாந்‌ ஸஹ ப்‌ரஹ்மணா விபஸ்சிதா’‘ (தை. உப.) என்கிறபடியே புஜித்து.
    (கோப்புடைய கோட்டுக்கால்‌ கட்டில்‌ மிதித்து ஆரோஹித்து) பின்பு பர்த்ரு ஸம்ஸ்லேஷத்துக்குப்‌ படுக்கையிலே ஏறக் கடவதிறே; அப்படியே ““கோப்புடைய சிங்காசனம்‌” ( திருப்பாவை 23) என்றும்‌, ““குத்துவிளக்கெரியக்‌ கோட்டுக்கால்‌ – மெத்தென்ற பஞ்ச சயனத்தின்மேலேறி”” (திருப்பாவை 19) என்றும்‌ சொல்லுகிறபடியே உபய விபூ,தியும்‌ தொழிலாக வகுப்புண்ட ஸர்வாஸ்சர்ய மயமான சீரிய சிங்காசனத்திலே “’தமேவம் வித்‌பாதே,நாத்‌, யாரோஹதி” (கெளஷீ. 1 – 5) என்கிறபடியே பாத பீடத்திலே அடியிட்டேறி,(பரதாக்ரூரமாருதிகளைப்‌ பரிஷ்வங்கித்த மணிமிகுமார்விலே) “அங்கே பரதமாரோப்ய முதித பரிஷஸ்வஜே”’ (ரா. யு. 130 – 41) என்றும்‌, “ஸோப்யேநம்‌ த்‌வஜ வஜ்ராப்ஜ க்ருத சிஹ்நேந பாணிநா । ஸம்ஸ்ப்ருஸ்யாக்ருஷ்ய ச ப்ரீத்யா ஸுகாட,ம்‌ பரிஷஸ்வஜே”” (வி.பு. 5 – 18 – 2) என்றும்‌, ““ஏஷ ஸர்வஸ்வபூ,தஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத?”’ (ரா. யு. 1 – 13) என்றும்‌, ஸ்ரீபரதாழ்வானையும்‌, அக்ரூரனையும்‌, திருவடியையும்‌ அணைத்த மணி மிகு மார்விலே – ஸ்ரீகௌஸ்துப,மும்‌ நிறம்பெறும்படி அழகுமிக்க திருமார்பிலே, (குருமாமணியாயணையும்‌ வஸ்துவுக்கு) ஸ்லாக்‌யமாய்‌, ஸர்வேஸ்வரத்வ சிஹ்நமான அந்த ஸ்ரீகெளஸ்துபத்தோபாதி அவனுக்கு போக்‌யமுமாய்‌, தேஜஸ்கரமுமாய்க்‌ கொண்டு அணைகிற ஆத்ம வஸ்துவுக்கு. (மணிவல்லிப் பேச்சு வந்தேறியன்று) ““வண்பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம்‌”’ (திருவிரு. 9) என்று உதாரமாய்‌, அழகு மிக்கதாய்‌, ஸ்லாக்‌யமான கொடி போன்றவள்‌ என்கிற ஸ்த்ரீத்வ ப்ரயுக்தமாய்‌ வருகிற பேச்சு வந்தேறி யன்று, ஸ்வாபாவிகம்‌ என்கிறார்‌.

    122-இன்பும்‌ அன்பும்‌ முற்படுவது கொழுந்து விடுவதாகிறது கடிமா மலர்ப் பாவையோடுள்ள ஸாம்ய ஷட்கத்தாலே.
    கேவலம்‌ ஸ்த்ரீத்வ ஸாம்யமே யன்றிக்கே பரிஸூத்‌தமான ஸ்வரூபத்தினுடைய யாதாத்ம்யத்துக்குப்‌ பெரிய பிராட்டியாரோடு அநந்யார்ஹத்வாதிகளாலே ஸ்வரூப ஸாம்யம்‌ உண்டென்கிறார்‌ (இன்பும்‌ அன்பும்‌ என்று தொடங்கி). (இன்பும்‌ அன்பும்‌ முற்படுவது கொழுந்து விடுவதாகிறது) “நமக்கும்‌ பூவின் மிசை நங்கைக்குமின்பனை”’ (திருவா. ச – 5 – 8) என்று – இன்று ஆஸ்ரயித்த நமக்கும்‌ நித்ய ஸூரிகளுக்கும்‌ அவ்வருகாய்‌, ரூப குணத்தாலும்‌ ஆத்ம குணத்தாலும்‌ பரிபூர்ணை யாயிருக்கிற பெரிய பிராட்டி யார்க்கும்‌ இன்பனாமிடத்தில்‌ “இங்கே இன்பனாயாய்த்துப்‌ பின்னே அவளுக்கு ஸ்நேஹிப்பது’ என்று பிராட்டிக்கு முன்னே தன்பக்கல்‌ இன்பனாவது, ‘*கோல மலர்ப்‌ பாவைக்கன்பாகிய என்‌ அன்பேயோ?‘” (திருவா. 10 -10 -7) என்று – நிரதிஸய போக்‌ யதைக வேஷையான பெரிய பிராட்டியாருக்கு அன்பனாகையாலே அவள் பரிக்‌ரஹமான என் பக்கலிலும்‌ அன்பனானவன்‌ என்று பெரிய பிராட்டியார் பக்கல்‌ அவனுக்‌குண்டான அன்பு தம்மளவாக வர்த்திப்பதாய்‌, இப்படி இன்பு முற்படுவது, அன்பு கொழுந்து விடுவதாகிறது. (கடி மா மலர்ப் பாவையோடுள்ள ஸாம்ய ஷட்கததாலே) “காவியங் கண்ணி யெண்ணில்‌ கடி மாமலர்ப்பாவை யொப்பாள்‌” (திருமொழி 3 – 7 – 9) என்றும்‌, “காவி?” என்று செங்கழுநீராய்‌, செவ்வரியாலும்‌, கடைக் கண்ணில்‌ சிவப்பாலும்‌ செங்கழுநீர் போன்ற கண்ணழகை உடையள்‌ என்கையாலே ராகோத்தரமான ஜ்ஞாநத்தை உடையள்‌ என்றபடி.-இத்தால்‌ மேற் சொல்லப்படுகிற அநந்யார்ஹ ஸேஷத்வ ஜ்ஞாநாதி ஷட்கத்துக்கும்‌ உப லக்ஷணம்‌. அது என்‌ என்னில்‌, ”கடிமாமலர்ப்பாவை யொப்பாள்‌”’ என்று – இவளை ஆராயில்‌ பரிமள ப்ரசுரமான தாமரையை இருப்பிடமாக உடையளாய்‌, நிருபாதிகமான ஸ்த்ரீத்வத்தை உடையளாகையாலே ரூப குணத்தாலும்‌, ஆத்ம குணத்தாலும்‌ பூர்ணையாய்க் கொண்டு நிரதிஸய போக்‌யையாயிருக்கிற பெரியபிராட்டியாரோடொக்கச்‌ சொல்லலாம்படியான அநந்யார்ஹ
    ஸேஷத்வமும்‌, அநந்ய ஸரணத்வமும்‌, அநந்ய போக்யத்வமும்‌, ஸ்ம்ஸ்லேஷத்தில்‌ தரிக்கை, விஸ்லேஷத்தில்‌ தரியாமை, ததேக நிர்வாஹ்யத்வம்‌
    என்கிற ஆறு ப்ரகாரத்தாலே என்கிறார்‌; இனி அபிமதத்வம்‌, அநுகூலத்வம்‌, நிருபகத்வம்‌, ஸேஷத்வ ஸம்பந்த த்‌வாராபாவம்‌, புருஷகாரத்வம்‌, ப்ராப்ய பூரகத்வம்‌ என்கிற இவை முதலான ஸ்வபாவ விஸேஷங்கள்‌ பெரியபிராட்டியாருக்கே அஸாதாரணமா யிருக்குமிறே

    123-உண்ணாது கிடந்தோர் மாயையினால்‌ என்னும்‌ வீறுடைய முடிக்குரியாரோடு இத்திருமண்ணேரன்ன ஒண்ணுதல்‌ பின்னை கொல்‌ என்கிற ஒப்பு தென் பால்‌ நெடு மாடம்‌ கடுஞ்சிலை அம்பெரியூட்டி நீறைழவெரித்த பெருந்தோற்றத் தாருயிர்க் காகுத்தன்‌ ஆதியங்கால மண்புரை பொன்மாதின்‌ துகளாடி எருதேழ்தழீஇச்‌ சறையினார்‌ என்னுமவற்றிலே தோன்றும்‌.
    இப்படிப்‌ பெரியபிராட்டியாரோடு ஸாம்யம்‌ சொன்னவளவன்றிக்கே நிரதிஸய போக்‌யதையை உடைய பிராட்டிமார்‌ மூவரோடும்‌ இவர்க்கு ஸாம்யம்‌ உண்டு என்னுமாகாரம்‌ இவருடைய பாசுரங்களிலே ப்ரகாஸிக்குமென்கிறார்‌ (உண்ணாது என்று தொடங்கி). ‘“உண்ணாதுறங்கா தொலி கடலை ஊடறுத்துப்‌ பெண்ணாக்கை ஆப்புண்டு தாமூற்ற பேது” என்றும்‌, “’ந மாம்ஸம்‌ ராகவோ பு,ங்க்தே ந சாபி மது ஸேவதே”’ (ரா. ஸு, 36 – 41), ”அநித்‌ரஸ்ஸதம்‌ ராமஸ் ஸுப்தோபி ச நரோத்தம: (ரா.ஸு. 36 – 44), “நைவ தம்ஸாந் ந மஸகாதந் ந கீடாந்த ஸரீஸ்ருபாந்‌ ! ராகவோபநயேத்‌, கத்ராத்‌ தவத்‌ கதேநாந்தராத்மநா” (ரா.ஸு., 36 -42) என்கிறபடியே தீரோதாத்த நாயகனான சக்ரவர்த்தித் திருமகனையும்‌ தன்னுடைய விஸ்லேஷத்தில்‌ ஊணுமுறக்கமுமற்று, கடித்ததும்‌, ஊர்ந்ததும்‌ அறியாதபடி பண்ணவல்ல வைலக்ஷ்ண்யத்தால்‌ வந்த வீறுடையளாய்‌, ஸர்வேஸ்வர ஸாம்ராஜ்யத்தில்‌ அவனோடொக்க அபிஷிக்தை யாகையாலே முடிக்குரியளா யிருக்கிற ஜநக குல ஸுந்தரியான பெரிய பிராட்டியாரோடும்‌, “கிடந்திருந்து நின்றளந்து ” (திருவா. 2 – 8 – 7) என்கிற பாட்டின் படியே ஸர்வஜ்ஞனான ஸர்வேஸ்வரனையும்‌, பஹு ப்ரகாரமாகத்‌ தன்னை அநுபவித்தாலும்‌ பர்யாப்தனாகாதபடி பிச்சேற்ற வல்ல வைலக்ஷண்யத்தை உடையளாய்ப்‌ பெரிய பிராட்டியாரோபாதி முடிக்கு உரியளான ஸ்ரீபூமிப் பிராட்டியாரோடும்‌.(ஓர்‌ மாயையினால்‌ இத்யாதி,) நித்ய ஸூரிகள்‌ ஸமாராதந பரராய் நிற்க, அவர்களையும்‌ உபேக்ஷித்துத்‌ தாழ்வுக் கெல்லையான இடைக் குலத்திலே க்ருஷ்ணனாய் வந்து பிறந்து, அவள் தன்னைப்‌ பெறுகைக்கு ஸூல்கமாக இட்டு ம்ருத்யு ஸமங்களான ருஷபங்களின்‌ கொம்பிலே கருமாறிப் பாய்ந்தாப் போலே தன்னைப் பேணாமல்‌ சென்று விழும்படி அவனைப் பிச்சேற்ற வல்ல வைலக்ஷண்யத்தை உடையளாய்‌ அவர்களோபாதி முடிக்குரியளான நப்பின்னைப் பிராட்டியோடும்‌.
    (இத்திரு மண்ணேரன்ன பின்னைகொல்‌ என்கிற் ஒப்பு) “’தேறியும்‌ தேறாதும்‌ மாயோன் திறத்தனளே இத்திருவே”’ (திருவா. 4 – 4 – 7), “மண்ணேரன்ன ஒண்ணுதலே ”’ (திருவிரு. 50), பின்னை கொல்‌ நில மா மகள் கொல்‌’‘ (திருவா. 6 – 5 – 10) என்று தேறின தஸையோடு தேறாத தஸையோடு வாசியற ““அநத்யா ராக, வேணாஹம்‌”” (ரா. ஸு. 21 – 16) என்கிறபடியே அவனை யல்லது அறியாள்‌ இத்திரு என்றும்‌, ஸ்ரீபூ,மிப்பிராட்டி யாரோடொத்த வைலக்ஷ்ண்யத்தை உடையாள்‌ என்றும்‌, ‘நப்பின்னைப் பிராட்டியாரோ? ஸ்ரீபூமிப்பிராட்டியாரோ? பெரிய பிராட்டியாரோ?’ என்று விகல்பிக்கலாம்படி இவர்க்குண்டான ஸாம்யம்‌-(தென்பால்‌ இத்யாதி, ) “தென்பால்‌”’ (திருவிரு. 77), “இலங்கைக்குழா நெடுமாடம்‌ இடித்தபிரானார்‌ கொடுமைகளே”‘ (திருவிரு. 36), ““காயுங்கடுஞ்சிலை என்‌ காகுத்தன்‌ வாரானால்‌”‘ (திருவா. 5 – 4- 3), “இலங்கைநகர்‌ அம்பெரி உய்த்தவர்‌” இத்யாதி, (திருவா. 4-2- 8), ‘தீழுற்றத் தென்னிலங்கை ஊட்டினான்‌ தாள்‌ நயந்த யாமுற்றதுற்றுயோ? (திருவா. 2 – 1 – 3), “மாறில்‌ போரரக்கன்‌’” இத்யாதி, (திருவா. 6 – 1 – 10) ”கினிமொழியாள் காரணமா?’ இத்யாதி, (திருவா. 4 – 8 – 5), ““என்னாருயிர்க் காகுத்தன்‌” இத்யாதி, (திருவா. 9 – 5 – 6) என்று சக்ரவர்த்தித் திருமகனான அவ் வவதாரத்தையும்‌, அவ் வவதாரத்‌திலுண்டான அபதாநங்களையும்‌ அநுபவிக்கவேணும்‌ என்று ஆசைப்பட்டுப்‌ பேசின இப்பாசுரங்களிலும்‌ -(ஆதியங்காலம்‌ இத்யாதி,) ““ஆதியங் காலத்தகவிடங் கீண்டவர்‌”” (திருவா. 4 – 2 – 6), “மண்புரை” இத்யாதி, (திருவா. 6 – 6 – 5), “மண்ணளந்த – செவ்வாய்‌ ”” இத்யாதி, (5 4 – 4), ““ஞாலப் பொன் மாதின்‌ மணாளன்‌” இத்யாதி, (திருவிரு. 50), “ஏனமொன்றாய்‌ மண்துகளாடி”’ இத்யாதி, (திருவிரு. 55) என்று ஸ்ரீவராஹ ப்ராதுர் பாவத்தையும்‌ அதில்‌ அபதாநங்களையும்‌ அநுபவிக்க ஆசைப்பட்டுப் பேசின இவர் பாசுரங்களிலேயும்‌.-(எருதேழ்தழீஇச்சறையினார்‌ இத்யாதி,) ““எருதேழ்தழீஇ” (திருவா. 4 – 2 – 5) என்று தொடங்கி *‘நாளு நாள்‌ நைகின்றதால்‌”” என்றும்‌, ‘“நிறைவினால்‌ குறைவில்லா” (திருவா, 4 – 8 – 4) என்று தொடங்கி *’சறையினார்‌ கவராத தளிர் நிறத்தால்‌ குறைவிலமே”” என்று நப்பின்னைப் பிராட்டியார்‌ ஆசைப்பட்ட க்ருஷ்ணாவதாரத்தையும்‌, அதில்‌ அபதாநங்களையும்‌ அநுபவிக்க ஆசைப்பட்டுப்‌ பேசின இப் பாசுரங்களிலேயும்‌ ப்ரகாஸிக்குமென்கிறார்-

    124-இவர்கள்‌ தேடி நிற்கப்‌ பொய்கை முதுமணல்‌ முற்றம்‌ முல்லைப்‌ பந்தல்‌ வாரிச் சிதைத்துப்‌ பறித்துக்‌ கிழித்து மச்சொடு மாளிகை அவ்வவ்விடம்‌ புக்கு கோயின்மை குறும்பு செய்து அல்லல்‌ விளைத்துக்‌ கவரும்‌ உகக்கு நல்லவர்‌ மூழுசி ஆவரென்னும்‌ தேன்‌ மொழியாலே கோகுலத்தை மறப்பிக்கும்‌ நகர ஸ்த்ரீகள்‌ நரகனைத்‌ தொலைத்துக்‌ கவர்ந்த பதினாறு பல்லாயிரம்‌ எண்ணிரந்தார் பாவம்‌ கடல் ஞாலம்‌ மின்னிடை மல்லிகை வேய்மரு பேய்முலை முனிந்து மற்பொரு விறற்கஞ்சனை மங்கநூற்ற வாயும்‌ தீர்ப்பாரென்னுமவற்‌நிலே தோன்றும்‌.
    அவ்வளவே யன்றிக்கே, ப்ரதாந மஹிஷிகளான இவர்களையும்‌ உபேக்ஷித்து வந்து மேல் விழும்படியான வைலக்ஷண்யத்தை உடையரான திருவாய்ப்பாடியில்‌ பெண்களுடைய பாவமும்‌, அவர்களையும்‌ தங்கள்‌ பேச்சழகாலே மறப்பிக்கும் படியான ஸ்ரீமதுரையில் பெண்களுடைய பாவமும்‌, நரகவத,அநந்தரம்‌ பரிக்‌ரஹித்த “கோப ஸ்த்ரீ ஸஹஸ்ராணி” (வி. பு. 5 – 31 – 18) என்கிற ஸ்ரீமத்‌ த்‌வாரகையில்‌ பதினாறாயிரம்‌ தேவிமார்களுடைய பாவமும்‌ இவர்க்குண்டான ஆகாரம்‌ இவர் பேச்சிலே தோன்றும்‌ என்கிறார்‌ (இவர்கள்‌ தேடிநிற்க என்றுதொடங்கி)–“தேடித் திருமாமகள்‌ மண்மகள்‌ நிற்ப”? (திருமொழி 10 – 8 – 9) என்று இப்படி ப்ரதாந மஹிஷிகளான இவர்களும்‌ தேடி நிற்கும்படி இவர்களை உபேஷித்து வந்து, (பொய்கை முது மணல்‌ முல்லைப் பந்தல்‌ முற்றம்‌ மச்சொடு மாளிகை அவ்வவ்விடம்‌ புக்கு வாரிச்‌ சிதைத்துப்‌ பறித்துக்‌ கிழித்துக்‌ கோயின்மை குறும்புசெய்து அல்லல்‌ விளைத்துக்‌ கவரூமூகக்கும்‌ நல்லவர்‌) (பொய்கை) !”இப்பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்‌”: (நா. தி. 3 2), “மூத்தவை காண முதுமணற்குன்றேறி”” (பெரியா. தி. 1 – 10 – 8) , “முல்லையின்‌ பந்தர் நீழல்‌ மன்னி அவளைப்‌ புணரப் புக்கு”” (பெருமா.தி. 6 – 8), “முற்றத்தூடு புகுந்து நின்முகங்காட்டிப்‌ புன்முறுவல்‌ செய்து”? (நா. தி. 2 – 9), “மச்சொடு மாளிகையேறி’” (பெரியா. தி. 2 – 7 – 3), “அவ்வவ்விடம் புக்கவ்வாயர்‌ பெண்டிர்க் கணுக்கனாய்‌”’ (பெரியா. தி. 3 – 2 – 5) என்று அவர்கள்‌ ஜலக்ரீடை பண்ணுமிடம்‌, அவர்கள்‌ விளையாடுமிடம்‌, அவ்வோவிடங்களிலே புக்கு-“துகில் வாரியும்‌ சிற்றில்‌ சிதைத்தும்‌”” (திருமொழி 3 – 8 – 8), ““பந்து பறித்துத்‌ துகில்‌ பற்றிக்‌ கீறி” (திருமொழி 10 – 7 – 5) என்றும்‌ அவர்களுடைய துகிலை வாரியும்‌, அவர்களுடைய லீலா ஸ்தாநங்களை அழித்தும்‌, அவர்களுடைய வீலோபகரணங்களைப்‌ பற்றிக்‌ கொண்டும்‌, ‘“கோயின்மை செய்து கன்மமொன்றில்லை” (திருவா. 6 – 2 – 6), “குறும்பு செய்வானோர்‌ மகனைப்பெற்ற”? (நா. தி. 12 – 3), ‘“கொள்ளை கொள்ளிக் குறும்பனை”’ (நா. தி, 13 – 8) என்றும்‌, அராஜகமாய்‌, ஸ்வதந்த்ரமான செயலைச் செய்து, “அல்லல்‌ விளைத்த பெருமான்‌?” (தா. தி. 13 – 10) என்கிறபடியே ஆரவாரத்தை விளைத்து-“முன்கைவளை கவர்ந்தாய்‌”” (திருமொழி 10 – 9 – 2), “நீ உகக்கு நல்லவரொடுமுழிதந்து “‘ (திருவா. 6 – 2 – 6) என்றும்‌ அவன்‌ இப்படி மேல் விழ வேண்டும்படியான வைலக்ஷ்ண்‌யத்தை யுடைய திருவாய்ப்பாடியில்‌ பெண்களுடைய பாவம்‌. (கடல் ஞாலம்‌ மின்னிடை மல்லிகை வேய் மரு பேய் முலை முன்னின்று) என்று – “துஷ்ட காளிய திஷ்டராத்ர க்ருஷ்ணோஹமிதி சாபரா”’ (வி. பு. 5 – 13 – 27), “க்ருஷ்ணோஹமேஷ லலிதம்‌ வ்ரஜாம்யாலோக்ய தாம்‌ கதிர” என்று அவர்கள்‌ அநுகரித்தாப் போலே ““கடல் ஞாலம்‌ செய்தேனும்‌ யானே யென்னும்‌”” (திருவா. 5 – 6 – 1) என்று இவரும்‌ அநுகரிக்கையாலும்‌, *மின்னிடை மடவாரிலே அவனோடே ஊடுகையாலும்‌, *மல்லிகை கமழ்‌ தென்றலிலே பகல் போதெல்லாம்‌ பசுமேய்க்கப் போன க்ருஷ்ணனைப்‌ பசுக்களின்‌ முற்கொருந்தில்‌ காணாதே பிற்கழையிலே வருமளவில்‌ பற்றாமல்‌ ஒரு ஸந்த்‌யையில்‌ திருவாய்ப்பாடியில்‌ பஞ்ச லக்ஷம் குடியில்‌ பெண்களுடைய ஆற்றாமையை இவரொருவரு முடையராய்க் கொண்டு பேசுகையாலும்‌, *வேய்மருதோளிணையில்‌ ராத்ரியெல்லாம்‌ க்ருஷ்ண ஸம்ஸ்லேஷம்‌ ப்ரவ்ருத்தமாய்‌ அவன்‌ பசு மேய்க்கப் போகிற ப்ராதசகாலம்‌ வந்தவாறே அவன்‌ அணைத்துக் கொண்டிருக்கச் செய்தேயும்‌, அவன்‌ விஸ்லேஷித்தானாக அதிசங்கைபண்ணி அவனுடைய முகத்தைப்‌ பார்த்துத்‌ தம்முடைய ஆற்றாமையைப்‌ பேசுகையாலும்‌, *“பேய்முலை யுண்டு சகடம் பாய்ந்து” (திருவா. 5 – 3 – 8), “முனிந்து சகடமுதைத்து”” (திருவா. 7 – 3 – 5) என்கிற பாட்டுக்களிலே பூதநா சகட யமளார்ஜுநாதிகளை நிரஸித்த க்ருஷ்ணனை கிட்டுவதென்றோ என்றும்‌, அப்படிப்பட்ட க்ருஷ்ணனுக்கு என்னுடைய ஸ்த்ரீத்வத்தைத்‌ தோற்றேன்‌ என்றும் சொல்லுகிற பேச்சுக்களிலே இவர்க்கு உண்டென்னுமாகாரம்‌ தோன்றும்‌.
    (முழுசியாவரென்னும்‌ தேன்மொழியாலே கோகுலத்தை மறப்பிக்கும்‌ நகர ஸ்த்ரீகள்‌ என்று) க்ருஷ்ணன்‌ ஸ்ரீமாலாகார க்ருஹ்த்திலே திருமாலை சாத்தி, கூனி பக்கலிலே சாந்து சாத்தி, ராஜ மார்க்கத்தாலே எழுந்தருளி, குவலயாபீட நிரஸநம்‌ பண்ணி நின்றருளின போது, ““முழுசி வண்டாடிய தண்டுழாய்‌”’ (திருமொழி 2 – 8 – 7), ““ஆவரிவை செய்தறிவார்‌ (திருமொழி 3 – 3 – 7) என்கிற பாட்டுக்களில்‌ சொல்லுகிறபடியே “ஸக்‌ய பஸ்யத க்ருஷ்ணஸ்ய முகமத்யருணே க்ஷணம்‌ ! கஜயுத்‌த க்ருதாயாஸஸ் வேதாம்பு கணிகாசிதம்‌’” (வி. பு. 5 – 20 – 54) என்று ஒப்பனை யழகிலும்‌, வடிவழகிலும்‌, குவலயாபீட நிரஸநமாகிற சேஷ்டிதத்திலும்‌ தோற்று, “மழறு தேன் மொழியார்கள்‌’” (திருவா. 6 – 2 – 8) என்று அந்யோந்யம்‌ தங்களிலே பேசுகிற மழலைத் தேன் போலே இனிதான பேச்சுக்களினாலே ““மதுராம்‌ ப்ராப்ய கோவிந்த கதம்‌ கோகுலமேஷ்யதி ! நகர ஸ்த்ரீகலாலாபமது ஸ்ரோத்ரேண பாஸ்யதி” (வி. பு. 5 – 18 – 14) என்று கோகுலத்தில்‌ பெண்கள் தானே பேசும்படி அவனை அந்த கோகுலத்தை மறக்கும்படி பண்ணும்‌ ஸ்ரீமதுரையில்‌ பெண்களுடைய பாவம்‌.
    (மற்பொரு விறல் கஞ்சனை)”மற்பொரு தோளுடை – மாயப் பிரானுக்கு” (திருவா. 6 – ப – 10) இத்யாதி – சாணூர முஷ்டிக நிரஸநம்‌ பண்ணின ஆஸ்சர்ய பூதனான க்ருஷ்ணனுககு அறிவை யுடையளான என்னுடைய பெண் பிள்ளை எல்லாத்தையும்‌ இழந்தாள் என்றும்‌, ““விறற் கஞ்சனை வஞ்சனை செய்தீரும் மைத்தஞ்சமென்றிவள்‌ பட்டனவே”’ (திருவா. 2 4 – 8) என்று பெரு மிடுக்கனான கம்ஸனை நிரஸித்த உம்மைத் தஞ்சமென்று விஸ்வஸித்த இவளை நீர்‌ இப்படிப்‌ படுத்துவதே என்றும்‌, சாணூர முஷ்டிகரையும்‌ கம்ஸனையும்‌ நிரஸித்து நின்ற க்ருஷ்ணனை ஆசைப்படுகையாலே இவர்க்கு உண்டென்னுமாகாரம்‌ தோன்றும்‌.
    (நரகனைத்‌ தொலைத்துக்‌ கவர்ந்த பதினாறு பல்லாயிரம்‌ எண்ணிறந்தார் பாவம்‌) ‘நரகனைத் தொலைத்த கரதலத்த மதியின்‌ கருத்தோ?” (திருமொழி 10 – 9 – 4), மன்னு நரகன் தன்னைச் சூழ் போகி வளைத்தெறிந்து கன்னி மகளிர் தம்மைக் கவர்ந்த கடல்‌ வண்ணன்‌”? (பெரியா. தி. 4 – 3 – 4) என்றும்‌, ‘“பதினாறாமாயிரவர்‌ தேவிமார்‌ பணிசெய்ய” (நா. தி. 7 – 9), “பல்லாயிரம்‌ பெருந்தேவிமார்‌” (பெரியா. தி. 4- 1 – 6) என்று நரகாஸூரவத அநந்தரம்‌ பரிக்‌ரஹித்த பதினாறாயிரம்‌ தேவிமார் பாவமும்‌. (மங்க நூற்ற வாயும்‌ தீர்ப்பாரென்னுமவற்றிலே தோன்றும்‌) ““நூற்றுவரை அன்று மங்க நூற்ற” (திருவா. 7 – 3 – 10) இத்யாதி, – துர்யோதநாதிகள்‌ மண்ணுண்ணும்படி மந்த்ரித்த க்ருஷ்ணன்‌ என்‌ நெஞ்சை அபஹரித்தான்‌ என்றும்‌, ‘“குரரி விலபஸி த்வம்‌ வீத நித்‌ரா ந ஸேஷே ஸ்வபதி ஜகதி ராத்ர்யா மீஸ்வரக்‌ ரஸ்த போதே, ! வயமிவ ஸகி, கச்சித்‌ காட நிர்விண்ண சேதா நளிந நயந ஹாஸோதார லீலே க்ஷணேந ” (பாக,.10) இத்யாதிகளால்‌ ஸ்ரீமத்‌ த்‌வாரகையில்‌ பெண்கள்‌ க்ருஷ்ண விஷயத்திலே பேசினாப் போலே *வாயுந்திரையுகளிலே நாரை அன்றில்‌ தொடக்கமானவற்றுக்கு தாவள்யாதி ஸ்வபாவங்கள்‌ நியதம்‌ என்றறியாதே அவையும்‌ தம்மைப் போல்‌ நோவு படுகிறனவாகக் கொண்டு தாம்‌ நோவு படுகையாலும்‌, *தீர்ப்பாரை யாமினியிலே ‘*தேர்ப்பாகனார்க்கிவள்‌ சிந்தை துழாய்த் திசைக்கின்றதே ” (திருவா. 4 – 6 – 1) என்று அவனுடைய ஸாரத்‌ய வேஷத்தில்‌ அகப்பட்டு இவள்‌ நெஞ்சு கலங்கினாள்‌ என்று தொடங்கி, ““’வண்டுவராபதி மன்னனை ஏத்துமின்‌” (திருவா. 4 – 6 10) என்று ஸ்ரீமத்‌ த்‌வாரகைக்கு நிர்வாஹகனானவனை மங்களா ஸாஸதம்‌ பண்ணவே இவர் வ்யாதி பரிஹ்ருதமாம்‌ என்று தலைக் கட்டுகையாலே இவர்க்கு உண்டானமை தோன்றும்‌.

    125–இரானெனில்‌ ந ச வாகக் குழைத்தவன்‌ பின் தொடர விருந்த வன் சிறையிலும்‌ விதி,தன்‌ புணை என்று ஜீவிதாதிகளால்‌ குறைவின்றி மாயும் வகை விஷ ஸஸ்த்ரங்கள் தேடி வில் வலவா ஹா என்று இரக்கமெழாக் கொடுமைகள்‌ ஸங்கித்து என்னையும்‌ ஜீவந்தீம்‌ என்று ஆள் விட்டுச்‌ சுடரை யடைந்து அகலகில்லா முற்றுவமை பெருமகளோடே.
    ஆகக் கீழ்‌, ப்ரதாந மஹிஷிகளான மூவரோடும்‌ மற்றும்‌ பகவத் பரிக்‌ரஹ முடையாரோடும்‌ ஆழ்வாருக்கு ஸாம்யமுண்டென்று சொல்லிற்றாய்த்து. இவர்களெல்லாரும்‌ இவர்க்கு ஒரு புடைக்கு ஒப்பாய்‌ ஸர்வதா ஸாம்யமுள்ளது ஜநக குல ஸுந்தரியான பெரிய பிராட்டியாரோடே என்கிறார்‌ (இரானெனில்‌ ந ச ஆக என்று தொடங்கி). ‘“மராமர மெய்த மாயவன்‌ என்னுளிரானெனில்‌ பின்னை யானொட்டுவேனோ ”‘ (திருவா. 1- 7- 6) என்றும்‌, ““ந ச ஸீதா த்வயா ஹீநா ந சாஹமபி ராகவ ! மூஹூரர்த்தமபி ஜீவாவோ ஜலாந் மத்ஸ்யா விவோத்‌ த்‌ருதெள’* (ரா. ௮.) என்று சக்ரவர்த்தித் திருமகனைப் பிரியில்‌ ஜலாதுத த்‌ருதமான மத்ஸ்யம் போலே முடியும்படியான பிராட்டியைப் போலே, இவரும்‌ அவனைப் பிரியில்‌ தாம்‌ உளராகாதபடி “*இலங்கை செற்றாய்‌ உன்னை என்னுள்ளே குழைத்த வெம் மைந்தா”” (திருவா. 2 – 6 – 9) என்று இவரோடு ஏக தத்த்வ மென்னலாம்படி ஸம்ஸ்லேஷித்த சக்ரவர்த்தித் திருமகன்‌ லங்கா த்‌வாரத்தளவும்‌ அவளைத் தேடிப் பின்‌ தொடர்ந்தாப் போலே *““எதிர் சூழல் புக்கு’ (திருவா. 2 – 7 – 6) என்று இவர் பிறந்த ஜந்மங்கள் தோறும்‌ தானும்‌ பின் தொடரும்படி அவள்‌ ராவண பவநத்திலே சிறை யிருந்‌தாப் போலே இவரும்‌ “வன்சிறையில்‌ அவன் வைக்கில்‌’” (திருவா. 1 – 4 – 1) என்று ஸம்ஸாரத்திலே சிறையிருந்த விடத்தில்‌ ப்ரதிகூலனான ராவணனுக்கு “‘விதிதஸ்ஸ ஹி தர்மஜ்ஞஸ் சரணாகத வத்ஸல:। தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதுமிச்சஸி”’ (ரா. ஸு. 21 – 20) என்று ஹிதம்‌ சொன்னாப் போலே இவரும்‌ ப்ரதிகூலரான ஸம்ஸாரிகளுக்கு புணைவன்‌ பிறவிக் கடல்‌ நீந்துவார்க்கே’‘ (திருவா. 2 – 8 – 1) என்று ஹிதமருளிச்‌ செய்கையாலும்‌.(ஜீவிதாதிகளால்‌ குறைவின்றி)“ந ஹி மே ஜீவிதே நார்த்தோ நை வார்த்தைர்‌ ந ச பூஷணை??’ (ரா. ஸு.)என்று மஹா ரதரான சக்ரவர்த்தித் திருமகனை யொழிய ராக்ஷஸிகள் நடுவே இருக்கிற எனக்கு என்‌ ஆத்மாத்மீயங்களால்‌ என்ன ப்ரயோஜநம்‌ உண்டென்று பிராட்டி அவற்றை உபேக்ஷித்தாப் போலே ”மாறாளன்‌ கவராத மணிமாமை குறைவிலமே”” (திருவா. 4 – 8 – 1) என்று தொடங்கி, ”உயிரினால்‌ குறைவிலமே””, (திருவா. 4 – 8- 10), “உடம்பினால்‌ குறைவிலமே”‘ (திருவா, 4 – 8 – 9 9) என்று இவரும்‌, அவனுக்குறுப்பல்லாத நானும்‌ என்னுடைமையும்‌ வேண்டா என்று ஆத்மாத்மீயங்களை உபேக்ஷிக்கையாலும்‌. (மாயும்‌ வகை விஷ ஸஸ்த்ரங்கள் தேடி) “மாயும்‌ வகை யறியேன்‌ வல் வினையேன்‌”? (திருவா-4 – 8 – 1) என்றும்‌, ‘“விஷஸ்ய ததா ந ஹி மேஸ்தி கஸ்சித்‌ ஈஸ்த்ரஸ்ய வா வேஸ்மநி ராக்ஷஸஸ்ய ”” (ரா.ஸு.) என்று உயிர்க் கொலையாக்கி வைத்த ராவண க்‌ருஹத்திலே நற் கொலையாக்குவ தித்தனை விஷம்‌ தருவாரில்லையோ? விஷம் போலே நின்று கொல்லுகை யன்றிக்கே அப்போதே முடிப்பதொரு ஸஸ்த்ரம்‌ தருவாரில்லையோ? என்று பிராட்டி முடியும்‌ வகை தேடினாப் போலே இவரும்‌ மாயும்‌ வகை தேடுகையாலும்‌ (வில் வலவா ஹா என்று) ”புணரா நின்ற மரமேழன்றெய்த ஒரு வில் வலவாவவோ”? (திருவா. 6 – 10 – 5) என்று – “ஹா ராம ஹா லக்ஷ்மண ஹா ஸுமித்ரே ஹா ராம மாதஸ் ஸஹ மே ஜநந்யா । ஹா ராம ஸத்ய வ்ரத தீர்க்க, பாஹோ ஹா பூர்ண சந்த்‌ர ப்ரதிமாந வக்தர”’ (ரா.ஸு.), “ஹா ஜிவ லோகஸ்ய ஹித ப்ரியஸ்ய வத்‌யம்‌ ந மாம்‌ வேத்ஸி ஹி ராக்ஷஸாநாம்‌”” (ரா. ஸு.) என்று பிராட்டி பெருமாளுடைய சவ்ர்யாதிகளைச்‌ சொல்லிக்‌ கூப்பிட்டாப் போலே இவரும்‌ கூப்பிடுகையாலும்‌.(இரக்கமெழாக் கொடுமைகள்‌ ஸங்கித்து) ”க்‌,யாத: ப்ராஜ்ஞ க்ருதஜ்ஞஸ்ச ஸாநுக்ரோஸஸ் ச ராகவ? | ஸத்‌ வ்ருத்தோ நிரதுக்‌ரோ ஸஸ்ஸங்கே மத்‌ பாக்‌ய ஸங்ஷயாத்‌” (ரா.ஸு.]என்று பெருமாளை நிர்க்‌ருணாராக ஸங்கியா நின்றேன்‌, என்னுடைய பாக்‌ய ஹாநியாலே என்று பிராட்டி அப்படி ஸங்கித்தாப்போலே, இவரும்‌ ”இரக்கமெழீரிதற்கென்செய்கே ன்‌” (திருவா. 2 ௨4 – 3) என்றும்‌, ‘“இலங்கைக் குழா நெடு மாடம்‌ இடித்த பிரானார்‌ கொடுமைகளே?”? (திருவிரு. 36) என்றும்‌, ”அறிவொன்றும்‌ சங்கிப்பன் வினையேன்‌ ‘‘ (திருவா. 9 – 1 – 4) என்றும்‌ சொல்லுகிறபடியே அவரை நிர்க்ருணராக ஸங்கிக்கையாலும்‌, (என்னையும்‌ ஜீவந்திமென்று ஆள்விட்டு) ”ஜீவந்திம்‌ மாம்‌ யதா ராமஸ் ஸம்பா வயதி கீரத்திமாந்‌ | தத்த்வயா ஹநுமந்‌ வாச்யோ வாசா தர்மமவாப்றுஹி’” (ரா.ஸு.) என்று தம்முடைய ரக்ஷ்ய வர்க்க,த்திலே நானுமொருத்தி உளேனாகப் பெருமாளுக்கு விண்ணப்பம்‌ செய்‌ என்று பிராட்டி ஆள்விட்டாப் போலே, இவரும்‌ ‘“மாறில் போரரக்கன்‌ மதிள்‌ நீறெழச் செற்றுகந்த ஏறு சேவகனார்க் கென்னை யுமுளளென்மின்கள்‌’” (திருவா. 6 1 – 10) என்று ஆர்த்த ரக்ஷணத்திலே தீஷித்தவர்க்கு ஆர்த்தரிலே நானும்‌ ஒரு ஆர்த்தை யுளேனாகச்‌ சொல்லுங்கோள்‌ என்று பிராட்டியைப் போலே சதுஷ்பாத்தா யிருப்ப தொன்றைத் தூதுவிடுகை யன்றிக்கே ஷட் பத,ங்களாய்‌, பக்ஷ பாதத்தை உடையனவாய்‌, ஸாகா ஸஞ்சாரிகளாய்‌, மதுகர வ்ருத்திகளுமாய்‌, அத ஏவ ஸாரக்‌ராஹிகளாயிருப்பார்‌ பலரையும்‌ தூது விடுகையாலும்‌. (சுடரை யடைந்து) “ அநந்யா ராகவேணாம்‌ பாஸ்கரேணே ப்ரபாயதா” (ரா.ஸ. 21 – 15) என்று பிராட்டி தன்னை அநந்யையாகப்‌ பேசினாப் போலே, இவரும்‌ “அரக்கியை மூக்கீர்ந்தாயை சுடரை – அடியே னடைந்தேன்‌ முதல் முன்னமே”’ (திருவா. 2 – 3 -6) என்று தம்மை அநந்யார்ஹமாகப்‌ பேசுகையாலும்‌.-(அகலகில்லா)’அகலகில்லலே னிறையுமென்றலர்மேல் மங்கை யுறை மார்பா”‘ (திருவா. 6 – 10 – 10) என்று பெரிய பிராட்டியார்‌ அவனுடைய திருமார்வைப் பறறி அகல ஸக்தை யல்லே னென்னுமாப் போலே, “அடியேனுனபாத மகலகில்லேன்‌” (திருவா. 6 – 10 -9) என்று இவரும்‌ அவன் திருவடிகளைப் பற்றி அகல ஸக்தனல்லேனென்கையாலும்‌ முற்றுவமை *பெரு மகள் பேதை மங்கை தன்னோடே என்கிறார்‌. அவள்‌ மார்வைப் பற்றி அகலகில்லேனென்னும்‌; இவர்‌ தாளைப் பற்றி அகலகில்லேனென்பர்‌. இதுவே இருவர்க்கும்‌ வாசி. ஆனாலும்‌ அவளைப் பற்ற இவர்க்குக்‌ கால் கூறு ஏற்றமுண்டிறே –

    126-பிரியிவிலேனுக்கு இளங்கோவும்‌ அக் குளத்தில்‌ மீனிறே.
    இனிமேல்‌, மற்றும்‌ பகவத் ப்ரத்யாஸத்தியை யுடையரான லக்ஷ்மண-பரத-ஸத்ருக்‌ந-தஸரத,-யஸோதா – ப்ரஹ்லாத-விபிஷண-மாருதி-அர்ஜுநன்‌ என்கிற இவர்களோடு ஸாம்யமுண்டென்கிறார்‌.-(பிரியிலிலேனுக்கு) அவனைப் பிரியுமளவில்‌ ‘‘நின்னலாலிலேன்‌ காண்‌”” (திருவா. 2 – 3 – 7) என்று இவரைப் போலே ஸத்தை அழிகைக்கு (இளங்கோவும்‌) “*நேரிழையுமிளங்கோவும்‌’‘ (பெருமா.தி. 9 – 2) என்றும்‌, “ந சாஹமபி ராகவ”’ (ரா.அ.53-31) என்று – பிராட்டியோ டொக்கத்‌ தம்மை ஏக ப்ரக்ருதியாகச்‌ சொன்ன இளைய பெருமாளும்‌. (அக் குளத்தில்‌ மீனிறே) கீழ்‌ ப்ரஸ்துதமான ஜலாந்‌ மத்ஸ்யமிறே.-இத்தால்‌ அவனைப் பிரியில்‌ தரியாமைக்குப்‌ பிராட்டியும்‌ இளைய பெருமாளும்‌ இவருமொக்குமென்றபடி. இத்தால்‌ இளைய பெருமாள் ஸாம்யம்-

    127-அழுந்தொழும்‌ ஸ்நேஹ பாஷ்பாஞ்ஜலியோடே ருசிர-ஸாநுக்‌களில்‌ கூவிக் கொள்ளும்‌ பிரியா வடிமைக்குச்‌ சரணே சரண்‌ என்று வாளும்‌ வில்லுங் கொண்டு பந்துவும்‌ பிதாவுமவரே என்கையும்‌, அன்னை யென் செய்யிலென்‌ ராஜ்யமும்‌ யானே என்று பெருஞ்‌ செல்வமும்‌ இச்சியாமல்‌ வேண்டிச் சென்று திருவடியே சுமந்து விரைந்து வருமளவும்‌ கண்ண நீர்‌ பங்கமாக நிலந் துழாவிக்‌ குடிக் கிடந்த கையறவும்‌ கோதிலடிமை உறுமோ என்பித்த புலங்கொள்‌ நித்ய ஸத்ரு விசிந்தநமுமான ப்‌ராதாக்கள்‌, அப்பொழுதைக்கப் பொழுது போனாய்‌ என்னும்‌ மாதா பிதாக்கள்‌, செந்தீ தண் காற்று இள நாகம்‌ முதலான பகையறச் சிந்தை செய்து எங்குமுளனென்னும்‌ பள்ளிப்‌ பிள்ளை, முற்றவிட்டு மற்றிலேனென்னும்‌ தர்மாத்மா வாளி பொழிந்த நிர்குண விஸ்வாத்மா உள்ளே உறைய ஊக வீர சரிதம்‌ கற்பார்‌ பாவம்‌ மற்றிலேன்‌ என்னும்‌ ராம தாஸன்‌ பல்வகையும்‌ கண்டு வெண் சங்கேந்தின ரூபபரனான ஸ்வேதன்‌ முதலானார் படிகளும்‌ காணலாம்‌.

    அழுந் தொழும்‌ ஸ்நேஹ பாஷ்பாஞ்ஜலியோடே) ”பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்‌த(ரா. பா, 18 – 27) என்றும்‌, ”பாஷ்பபர்யாகுலமுக,?”‘ (ரா. ௮. 33 – 1) என்றும்‌, ‘*ப்ரஹ்‌வாஞ்ஜலிபுடம்‌ ஸ்திதம்‌” (ரா. ௮. 16 – 26) என்றும்‌ இளைய பெருமாள்‌ பெருமாளைப்‌ பிரியில்‌ தரியாத ஸ்நேஹத்தாலே கண்ணும்‌ கண்ண நீருமாய்‌, அஞ்ஜலி ஹஸ்தராய்க்‌ கொண்டு ‘‘குருஷ்வ மாமநுசரம்‌ வைதர்ம்யம்‌ நேஹ வித்யதே’‘ (ரா. ௮. 31 – 24) என்றும்‌, ““ஸ்வயந்து ருசிரே தேஸே கரியதாமிதி மாம்‌ வத,” (ரா. ஆ, 785 – 7) என்றும்‌, “பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே ! அஹம்‌ ஸர்வம்‌ கரிஷ்யாமி ஜாக்‌ரதஸ் ஸ்வபதஸ்ச தே” (ரா. அ. 31 – 27) என்றும்‌ சொல்கிறபடியே என்னை அநு சரனாகப்‌ பண்ண வேணுமென்று ப்ரார்த்தித்துச் செய்கிற அடிமைக்கு உபாயமாக “’ஸ ப்‌ராதும் சரணெள காடம்‌ நிபீட்‌ய ரகுநந்தநச । ஸீதாமுவாசாதியஸா ராகவஞ்ச மஹா வ்ரதம்‌’ ்‌ (ரா. அ. 31 – 2) என்று நாச்சியார்‌ புருஷகாரமாகத்‌ திருவடிகளைக்‌ கட்டிக் கொண்டு ”அக்‌ரத? ப்ரயயெள ராமஸ் ஸீதா மத்‌யே ஸுமத்‌யமா। ப்ருஷ்டதஸ்ச தநுஷ்பாணி: லக்ஷ்மணோநுஜகாம ஹூ”? (ரா. ஆ. 11 – 1) என்று ஸாயுதராய்க் கொண்டு அவரைப் பின் சென்று “‘ப்‌ராதா பர்த்தா ச பந்து,ர்ீச பிதா ச மம ராகவ?”‘ (ரா.௮.58-34) என்று பெருமாளை எல்லா உறவுமாகப்‌ பற்றினாப் போலே,
    இவருமப்படியே (அழுந் தொழுமித்யாதி, – பிரியா வடிமைக்கு) ”அழுந்தொழும்‌”்‌ (திருவா. 7 – 2- 8) என்று அழுவது தொழுவதாய்‌, “திருவேங்கடத்தெழில்கொள்சோதி எந்தை தந்தை தந்தைக்கு – ஒழிவில் காலமெல்லாம்‌ உடனாய்‌ மன்னி வழுவிலா வடிமை செய்ய வேண்டும்‌ நாம்‌”’ (திருவா, 3 – 3 – 1) என்று திருமலையிலே நின்றருளின பரம ஸ்வாமிக்கு ஸர்வதேஸ ஸர்வ கால-ஸர்வாவஸ்தோசிதமான ஸர்வஸேஷ வ்ருத்திகளையும்‌, “முகப்பே கூவிப் பணி கொள்ளாய்‌‘” (திருவா, 8 – 8 – 7) என்கிறபடியே ஏவி அடிமை கொள்ள வேணுமென்று ப்ரார்த்தித்து, ““பிரியா வடிமை என்னைக் கொண்டாய்‌?! (திருவா. 5 – 10 – 11) என்று விச்சேதியாதபடியான கைங்கர்யத்துக்கு (சரணே சரணென்று) ““நாகணை மிசை நம்பிரான்‌ சரணே சரண் தமக்கு ‘” (திருவா. )என்று அவன்‌ திருவடிகளை உபாயமென்று அத்‌யவஸித்து“வாளும்‌ வில்லும்‌ கொண்டு பின் செல்வார்‌ மற்றில்லை’‘ (திருவா. 8 – 3 ஃ- 3) என்று அவற்றைக் கொண்டு தாம்‌ பின்னே திரிய ஆசைப்பட்டு. (பந்துவும்‌ பிதாவும்‌ அவரே என்கையும்‌) ““சேலேய்‌ கண்ணியரும்‌ பெருஞ் செல்வமும்‌ நன் மக்களும்‌ மேலாத் தாய்‌ தந்தையுமவரே இனியாவார்‌” (திருவா. 5 – 1 – 8) என்று ஸர்வேஸ்வரனே எல்லா உறவு முறையாகப்‌ பற்றுகையாலும்‌

    (அன்னை என்‌ செய்யிலென்‌ இத்யாதி.) ஸ்ரீபரதாழ்வான்‌ பெருமாளுடைய திருவபிஷேகத்தைக்‌ கைகேயி விலக்கின சீற்றத்தாலே “*ஹந்யாமஹமிமாம்‌ பாபாம்‌ கைகேயீம்‌ துஷ்டசாரிணீம்‌” (ரா. அ. 78 – 22) என்கிறபடியே கைகேயியைச் சீறி உபேக்ஷித்து “’ராஜ்யஞ்சாஹஞ்ச ராமஸ்ய’” (ரா. அ. 82 – 12) என்று – ராஜ்யமும்‌ நானும்‌ பெருமாளுக்கு ஸேஷமென்றும்‌, “ம்ருதே து தஸ்மிந்‌ பரதோ வஸிஷ்ட ப்ரமுகைர்‌ த்‌விஜைச ! நியுஜ்யமாநோ ராஜ்யாய நைச்சத்‌,ராஜ்யம்‌ மஹாபலா ”? (ரா. படா. 1 – 33) என்றும்‌ வஸிஷ்டாதி,புரோஹிதர்‌ ராஜாவாக வேணுமென்று அபேக்ஷிக்க, ““இக்ஷ்வாகூணாமியம்‌ பூமிஸ் ஸ ஸைல வந காநநா ।”” (ரா. கி. 18 – 6) என்கிற மஹதைஸ்வர்யத்தை இச்சியாதே, ‘அயாசத்‌,ப்‌ராதரம்‌ ராமமார்ய பாவ புரஸ்க்ருதச” (ரா. பதா, 1 – 35) என்று பெளர ஜநங்களோடே பெருமாள் திருவடிகளிலே சென்று மீண்டெழுந்தருளவேணும்‌ என்றபேக்ஷிக்க, ““பாதுகே சாஸ்ய ராஜ்யாய ந்யாஸம்‌ தத்த்வா புந புந” (ரா. பா 1 -37) என்று அவரும்‌ அப்படிச் செய்யாதே திருவடி நிலையைக்‌ கொடுத்துவிட.-““பாதுகே தே புரஸ்க்ருத்ய’‘ (ரா. யு. 124 – 4) என்று அத் திருவடி நிலையை முன்னிட்டுக்‌ கொண்டிருந்து, ““பமிரஸா யாசதோ யஸ்ய வசநம்‌ ந க்ருதம்‌ மயா”‘ (ரா. யு. 121 – 19) என்கிற இழவு திருவுள்ளத்திலே கிடக்கையாலே ““ந மே ஸ்நாநம்‌ பஹுமதம்‌ வஸ்த்ராண்யாபரணாநி ச (தம்‌ விநா கைகயீ புத்ரம்‌ பரதம்‌ தர்ம சாரிணம்‌”’ (ரா. யு. 121 6) என்று – நாம்‌ பிள்ளை பரதனை யொழியக்‌ குளித்தல்‌ ஒப்பித்தல்‌ செய்யக் கடவோமல்‌லோமென்று பெருமாள்‌ த்வரையோடே மீண்டு வருமளவும்‌ ”பங்கதிக்‌தஸ்து ஜடில?”’ (ரா. யு. 124 -4 ) என்று கண்ணீராலுண்டான சேற்றிலே தரைக் கிடை கிடந்து இக்ஷ்வாகு குல மர்யாதை தப்பாமலிருந்து, “க்ருதம்‌ தஸ குணம்‌ மயா” (ரா. யு. 127 – 56) என்று பெருமாளுடைய திவ்யைஸ்வர்யத்தை ஒன்று பத்தாகப்‌ பெருக்கி, ”ஸ காம மநவாப்‌யைவ”’ (ரா.ப.. 1 – 38) என்று தாம்‌ ஆசைப்பட்ட பொருள்‌ கைப்படாத இழவோடே இருந்தாப்‌ போலே-இவரும்‌ அப்படியே “அன்னை என்‌ செய்யிலென்‌”’ (திருவா. 5 – 3 – 6) என்று – தாயார்‌ முடியிலென்‌? பிழைக்கிலென்‌? என்று உபேக்ஷித்து (ராஜ்யமும்‌ யானே என்று) யானே நீ என்னுடைமையும்‌ நீயே”” (திருவா. 2 – 9 – 9) என்று ஆத்மாத்மீயங்கள்‌ அவனுக்கு சேஷமென்று. (பெருஞ்செல்வமும்‌ இச்சியாமல்‌) ““கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம்‌ நெருப்பு?” (திருவா, 4 – 9 – 4) என்று ஐஸ்வர்யத்தை அக்‌நி ஸமமாகக் கண்டு, “’ஜங்கருவிகண்ட இன்பம்‌ – ஓழிந்தேன்‌ ”” (திருவா. 4- 9 – 10) என்கிறபடியே உபேஷித்து. (வேங்கடவாணனை வேண்டிச் சென்று) அவனை அநுபவிக்க வேணுமென்று வேண்டிச் சென்று இவர்‌ அபேக்ஷித்தபடி கிடையாமையாலே. (திருவடியே சுமந்து) “திருவடியே சுமந்துழலக்‌ கூட்டரிய திருவடிக்கள்‌ கூட்டினை’” (திருவா. 4 – 9 – 9) என்று அவன்‌ திருவடிகளை ஸிரஸா வஹிப்பிக்க ஸிரஸா வஹித்து. (விரைந்து வருமளவும்‌) வீடு திருத்துவான்‌போய்‌ விண்ணுலகம்‌ தருவானாய்‌ விரைந்து வருமளவும்‌. (கண்ணநீர்‌ பங்கமாக்கி) *“கண்ணநீர்‌ கைகளாலிறைக்கும்‌”’ (திருவா. 7 – 2 – 1) என்று கண்ணநீர்‌ வெள்ளமிட இருந்து. (நிலந்துழாவி) ”இருநிலம்‌ கைதுழாவிருக்கும்‌”” (திருவா. 7 – 2 – 1) என்று ஆற்றாமையாலே நிலம்‌ துழாவி (குடிக்கிடந்த) ““குடிக்கிடந்தாக்கம்‌ செய்து” (திருவா. 9 – 2 – 2) என்கிறபடியே ப்ரபந்ந குலத்தில்‌ செய்து போருகிற மர்யாதையைத்‌ தப்பாமலிருந்து. (கையறவும்‌) “காமுற்ற கையறவோடு”” (திருவா. 2 – 1 – 3) என்று ஆசைப்பட்ட பொருள்‌ கைபுகுராத இழவோடே இருக்கையாலும்‌. (கோதிலடிமை உறுமோ என்பித்த) ஸ்ரீஸத்ருக்‌நாழ்வான்‌ “கச்சதா மாதுல குலம்‌ பரதேந ததா அநக,சத்ருக்‌, நோ நித்ய சத்ருக்‌நோ நீத: ப்ரீதி புரஸ்க்ருத”” (ரா. அ. 1 – 1) என்று – ““அநக’, “*நித்ய சத்ருக்‌ந'” என்று ஸ்ரீபரதாழ்வானுடைய பாவநத்வ போக்‌யத்வங்களிலே கால் தாழ்கையாலே “பும்ஸாம்‌ த்‌ருஷ்டி சித்தாபஹாரிணம்‌”‘ (ரா. அ. 3 – 29) என்று ஸஜாதீயரையும்‌ ஈடுபடுத்தவற்றான பெருமாளுடைய விக்‌ரஹத்திலே துவக்குண்ணாதே, அந்த வடிவழகுதான்‌ பரதாநுவ்ருத்தியில்‌ போகாதபடி துவக்க வற்றாகையாலே நித்ய ஸத்ருவாக நினைக்கிறாப் போலே.
    இவரும்‌ ““கோதிலடிமை”’ (திருவா. 8 – 10 – 9) என்று சொல்லப்படுகிற பாகவத ஸேஷ்த்வ ரஸம்‌ (உறுமோ என்பித்த) ““அவனடியார்‌ சிறு மா மனிசராய்‌ என்னை யாண்டார்‌ இங்கே திரிய – அதுவன்றி உலக மூன்றுமுடன்‌ நிறைய சிறுமாமேனி நிமிர்த்த என்‌ செந்தாமரைக்‌ கண்‌ திருக்குறளன்‌ – நறுமா விரை நாண் மலரடிக்கீழ்ப் புகுதல்‌ – பாவி யேனுக்குறுமோ’” (திருவா. 8 – 10 – 3) என்னும்படி பண்ண அந்த பாகவத ஸேஷத்வ ரஸத்தாலே. (புலங்‌கொள்‌ நித்ய சத்ரு விசிந்தநமும்‌) ““புலங்கொள் வடிவு’” (திருவா. 8 – 10 – 4) என்று ஸர்வேந்த்‌ரி யாபஹார க்ஷமமான வடிவழகையும்‌ உபேக்ஷிக்கையாலும்‌. (ஆன ப்‌ராதாக்கள்‌) இப்படியிருந்துள்ள இளையபெருமான்‌, ஸ்ரீபரதாழ்வான்‌, ஸ்ரீஸத்ருக்‌நாழ்‌வான்‌ என்கிற ப்‌ராதாக்கள்‌.

    (அப்பொழுதைக்கப்பொழுது போனாய்‌ என்னும்‌ மாதா பிதாக்கள்‌) “ந ததர்ப்ப ஸமாயாந்தம்‌”” (ரா. ௮. 3 – 30) என்று பெருமாளை ஸர்வ காலமும்‌ அநுபவியா நிற்கச்‌ செய்தேயும்‌ பர்யாப்தனாகாத சக்ரவர்த்தியைப் போலே இவரும்‌ ”அப்பொமுதைக்கப்‌பொழுதென்‌ ஆராவமுதம்‌” (திருவா. 2 – 5 – 4) என்று ஸர்வ காலமும்‌ அநுபவியா நிற்கச் செய்தேயும்‌ பர்யாப்தி பிறவாத அபிநிவேஸத்தை உடையராகையாலும்‌, “போனாய்‌ மா மருதின்‌ நடுவே”’ (திருவா. 5 – 1 – 2) என்று யமளார்ஜநங்களின்‌ நடுவே போன போது யஸோதைப் பிராட்டி வயிறெரிந்தாப் போலே இவரும்‌ அதீத காலமாயிருக்கச் செய்தேயும்‌ ஸம காலத்திற் போலே வயிறு பிடிக்கையாலும்‌.
    (செந்தீ தண்காற்று இத்யாதி, ) ““நாக்‌நிர்தஹதி தைவாயம்‌ மஸ்தரைஸ்சிந்நோ மஹோரகை.। க்ஷயம்‌ நீதோ ந வாதேந ந விஷேண நக்ருதயயா”‘ (வி. பு. 1 – 19-59), “ஸத்வாஸக்தமதி: கருஷ்ணே தஸ்ய மாநோ மஹோரகை, ! ந விவேதாத்மநோ காத்ரம்‌ தத்ஸ்ம்ருத் யாஹ்லாத,ஸம்ஸ்தித?’” (வி. பு. 1 – 17 – 39) என்று அக்‌நி முதலான பாதக பதார்த்தங்களும்‌ தன்னை பாதியாதபடி **ஸர்வ பூதாத்மகே தாத ஜகந்நாதே, ஜகந்மயே । பரமாத்மநி கோவிந்தே, மித்ராமித்ரகதா குத?” (வி. பு. 1 – 19 – 37) என்று ஸர்வத்தினுடையவும்‌ பகவதாத்மகத்வாநு ஸந்தாநத்தாலே ஸத்ரு மித்ர விபாகமற ஸர்வமும்‌ தனக்கு அநுகூலமாக அநுஸந்தித்து, “எங்குமுளன்‌ கண்ணன்‌” (திருவா. 2 8 – 9) என்கிறபடியே ‘“உர்வ்யாமஸ்தி”” என்று தொடங்கி ““ஸர்வத்ராஸ்தி’‘ என்று பிறர்க்கு உபதேஸிக்கவும்‌ வல்லனாய்‌, “’பள்ளியிலோதி வந்ததன்‌ சிறுவன்‌”, “பிள்ளையைச் சீறி” (திருமொழி 2 – 8 -8) என்று சொல்லப்படுகிற பள்ளிப் பிள்ளையான ஸ்ரீப்ரஹ்லாத ஆழ்வானைப் போலே.
    இவரும்‌ (செந்தீ தண்காற்று இத்யாதி, பகையறச்சிந்தைசெய்து) ”அறியும்‌ செந்தீயைத் தமுவி அச்சுதனென்னும்‌ மெய்வேவாள்‌ எறியும்‌ தண் காற்றைத்‌ தழுவி என்னுடைக்‌ கோவிந்தனென்னும்‌”” (திருவா. 4 – சீ – 3), ““போமிள நாகத்தின்‌ பின் போய்‌ அவன்‌ கிடக்கை ஈதென்னும்‌’” (திருவா. 4 – 4- 5) என்றும்‌ அப்படியே அக்‌நி முதலான பாதக பதார்த்தங்களும்‌ பகவதாத்மகத்வாநுஸந்தாநத்தாலே அநுகூலமானபடி, “என்‌ முன்னைக்‌ கோளரியே – உன்னைச் சிந்தை செய்துசெய்து – என்‌ முன்னைத் தீவினைகள்‌ முழுவேரரிந்தனன்‌ – முடியாததென்‌ எனக்கேலினி”’ (திருவா. 2 – 6 – 6) என்று அதுஸந்தித்து, “’கரந்தசிலிடந்தொறுமிடந்திகழ்பொருள் தொறும்‌ கரந்தெங்கும்‌ பரந்துளன்‌”’ (திருவா. 1 – 1 – 10) என்று அவனுடைய ஸர்வகதத்வத்தை அருளிச் செய்கையாலும்‌ (முற்றவிட்டும்‌ மற்றிலேன்‌ என்னும்‌ தூர்மாத்மா) ‘பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச தநாநி ச | பவத்‌ கதம்‌ மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸுகாநி வை”’ (ரா. யு. 19 – 5), “த்யக்த்வா புத்ராம்ஸ்ச தாராம்ம்ச ராகவம்‌ ஸரணம்‌ ௧த ச'” (ரா. யு. 17 – 16) என்றும்‌ லங்கையோடே கூட புத்ர தாராதிகளான ஸர்வத்தையும்‌ விட்டு எல்லாம்‌ சக்ரவர்த்தித்‌ திருமகனாகப் பற்றின ‘“விபீஷணஸ்து தர்மாத்மாந து ராக்ஷஸ சேஷ்டித?’”” (ரா. ஆ. 17 24) என்ற, “ராமோ விக்‌,ரஹவாந்‌ தர்ம?” (ரா. ஆ. 37 -13) என்று தர்ம ஸ்வரூபமான சக்ரவர்த்தித் திருமகனைத்‌ தனக்கு தரரகமாக உடையனாகையாலே தர்மாத்மா என்று சொல்லப்படுகிற ஸ்ரீவிபீஷணப் பெருமாளைப் போலே இவரும்‌. (முற்றவிட்டு) “பாதமடைவதன்பாசத்தாலே மற்ற வன் பாசங்கள்‌ முற்ற விட்டு” (திருவா. 8 – 2 – 11) என்று ஸாம்ஸாரிகமான ஸகல ஸங்கத்தையும்‌ ஸவாஸநமாக விட்டு. (மற்றிலேன்‌ என்று) தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன்‌ தஞ்சமாகவே”’ (திருவா. 3 – 6 – 8) என்று சக்ரவர்த்தித் திருமகனையே தஞ்சமாகப்‌ பற்றுகையாலும்‌.

    (வாளிபொழிந்த இத்யாதி, ) “நிர்குண பரமாத்மாஸெள தேஹம்‌ தே வ்யாப்ய திஷ்ட,தி”’ (பா. ஆ. 147 – 8) என்று – ஏறிட்ட நாணை இறங்கிட்ட சக்ரவர்த்தித் திருமகனைத்‌ தனக்குள்ளே உடையனாய்‌, “*ஸோத்ரைவ ஹந்த ஹநுமாந்‌ பரமாம்‌ விமுக்திம்‌ புத்‌த்‌யா விதூய சரிதம்‌ தவ ஸேவதேஸெள”’ (அதிமாநு. 32) என்று அந்த சக்ரவர்த்தித்‌ திருமகனுடைய வீரசரிதத்தை போக்‌யமாக உடையனாய்‌, “ஸ்நேஹோ மே பரமோ ராஜம் ஸ்த்வயி நித்யம்‌ ப்ரதிஷ்டித | பக்திஸ் ச நியதா வீர பாவோ நாந்யத்ர கச்சதி” (ரா.௨.40-16) என்று சக்ரவர்த்தித் திருமகனுடைய வீர சரிதத்தை போக்‌,யமாக உடையனான திருவடியைப் போலே.
    இவரும்‌ (கற்பார் பாவம்‌ மற்றிலேன்‌) ““கற்பாரிராமபிரானையல்லால்‌ மற்றும்‌ கற்பரோ”’ (திருவா. 7 – 5 – 1) என்று ப்ரிய ஹிதங்களிலொன்றைக்‌ கற்குமவர்களைப் பற்ற உன்னைக்‌ கற்குமவர்கள்‌ சக்ரவர்த்தித் திருமகனை யொழியப்‌ பரத்வாதிகளையும்‌, அவதாராந்தரங்களையும்‌ கற்பரோ என்று தமக்கு இவ்விஷயத்திலுண்டான ப்ராவண்யத்தாலே “சிந்தை மற்றொன்றின்‌ திறத்ததல்லா’” (திருவா. 7 – 11 – 10) என்று பரத்வத்தின்‌ பேருங்கூட அஸஹ்யமாம்படி “தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன்‌ தஞ்சமாகவே”’ (திருவா.3 – 6 – 8) என்று அந்த சக்ரவர்த்தித் திருமகனையே தஞ்சமாகப்‌ பற்றுகையாலும்‌.
    (பல்வகையுங்கண்டு வெண் சங்கேந்தின ரூபபரனான ஸ்வேதன்‌) *“பண்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூதவிபேஷஸங்காந்‌ ! ப்‌ரஹ்மாணமீஸம்‌ கமலாஸநஸ்த ம்ருஷீம்ஸ்ச ஸர்வாநுரகாம்ஸ்ச தீப்தாந்‌”” (கீதை 11 – 15) என்று விஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரித்த அநந்தரம்‌ தன்னால்‌ அமைத்தநுபவிக்க வொண்ணாமையாலே *’க்ருதாஞ்ஜலிர்வேபமாநச கிரீடீ”” (கீதை 11 – 35) என்று பீ.தியாலே நடுங்கி அஞ்ஜலி ஹஸ்தனாய்க்கொண்டு ““கிரீடிநம்‌ கதிநம்‌ சக்ர ஹஸ்தமிச்சாமி த்வாம்‌ த்‌ரஷ்டு மஹம்‌ ததைவ । தேநைவ ரூபேண சதுர்புஜேந ஸஹஸ்ர பாஹோ பவ விஸ்வமூர்த்தே”’ (கீதை 11 – 46) என்று ஸங்க சக்ர கதா தரமாய்‌ அஸாதாரணமான உன்னுடைய விக்ரஹத்தைக்‌ காட்ட வேணுமென்று அவ்வடிவிலே தத் பரனாய்‌ அபேக்ஷித்த அர்ஜுநனைப்போலே.
    இவரும்‌ “நல்குரவும்‌” (திருவா. 6 – 3 – 1) என்று தொடங்கி “’பல்வகையும்‌ பரந்த பெருமானை – திருவிண்ணகர்க் கண்டேன்‌’” என்று விருத்‌த விபூதி யுக்தானானவனைக்‌ கண்டு. (வெண் சங்கேந்தின) “நீராய்‌ நிலனாய்‌”’ (திருவா. 6 – 9 – 1) என்று தொடங்கி, *“சிவனாயயனானாய்‌” என்று கார்ய காரணங்களிரண்டையும்‌ ஸரீரமாகக் கொண்டு நீ ஜகச் சரீரனா யிருந்தாயே யாகிலும்‌, அத்தால்‌ நான்‌ பெற்றது “விபூதி என்னதுமல்ல, பிறரதுமல்ல; உன்னதே” என்கிற ப்ரதிபத்தி யொழிய எனக்கு-அநுபாவ்யமாகிறதில்லை. ஆனபின்பு எனக்கு அநுபாவ்யமாம்படி “கூராராழிவெண்சங்‌கேந்தி – வாராய்‌”’ (திருவா. ‘ 6 – 9 – 1) என்று சங்க,சக்ர கதா தரனான உன்னுடைய அஸாதரண விக்ரஹத்தோடே வரவேணுமென்று அபேக்ஷிக்கையாலும்‌,-இப்படி இளையபெருமாள்‌ முதலானவர்களெல்லாரோடும்‌ ஸாம்யம்‌ சொல்லிற்று.

    128-குழவில்‌ நெஞ்சும்‌ அருகவில்‌ சுவையுமான இவர்‌ அவர்களளவல்லர்‌.
    இனிமேல்‌ இவர்களெல்லார்க்கும்‌ இவரோடு ஏகதா ஸாம்யமல்லது ஸர்வதா ஸாம்யமில்லை என்று அவர்களில்‌ இவருக்குண்டான வ்யாவ்ருத்தியை அருளிச்‌செய்கிறார்‌ (குழலில்‌ நெஞ்சும்‌ அருகலில்‌ சுவையுமான இவர்‌ அவர்களளவல்லரேன்று ). குழற்கோவலர்‌ மடப்பாவையும்‌”’ (திருவிரு. 3) என்கிற பாட்டிற்படி மஹிஷீ த்ரயத்துக்கும்‌ வல்லபனாய்‌ பூஷணாயுத, விஸிஷ்டனாய்க் கொண்டு ஸர்வ ஸ்வாமியாய்‌, கருடவாஹநனான ஸர்வேஸ்வர விஷயத்தில்‌ அவகாஹித்த என்னுடைய நெஞ்சானது அவனுடைய பரத்வத்தைக் கண்டு மீளுமோ? போக்‌யதையையும்‌, ஸெளலப்‌யத்தையும்‌ கண்டு நிற்குமோ? என்னும்படியான நெஞ்சை யுடையராய்‌, அத்தால்‌ *அப்புள்‌ளின்‌ பின் போன தனிநெஞ்சமே”’ (திருவிரு. 4) என்கையாலே இவருடைய திருவுள்ளம்‌ ப்ரமாணாநுஸாரியாய்க்‌் கொண்டு ப்ரமாண ஸார ப்ரதிபாத்‌,யமான ஸ்வாராதத்வ ரக்ஷகத்வ- போக்‌யத்வங்களிலே கால் தாழ்ந்து மேன்மை முதலாக நீர்மை ஈறாக அவகாஹித்ததென்றபடி. ‘அருகவிலாய”’ (திருவா. 1 – 9- 3) என்கிற பாட்டிற்படி ஹேய ப்ரத்ய நீகனாய்‌, கல்யாண குணங்களை யுடையனாய்‌, நித்ய ஸூரிகளுடைய ஸத்தாதிகளுக்கெல்லாம்‌ காரண பூதனாய்‌, விலக்ஷண விக்‌ரஹ யுக்தனாய்‌, புண்டரீகாக்ஷனாய்‌, கருடவாஹநனாய்‌, ஸ்ரீய:பதியான ஸர்வேஸ்வரன்‌, பிராட்டி நித்ய ஸூரிகளெல்லாரோடும்‌ ஓரோ வகைகளாலே பரிமாறும்‌ பரிமாற்றமெல்லாம்‌ என்னொருவனோடே பரிமாறி அத்தால்‌ வந்த ரஸத்தை எனக்குத்தந்து பின்னையும்‌ விட க்ஷமனாகிறிலன்‌ என்னும்படியான ரஸத்தை யுடையராய்‌, இப்படிப்பட்ட சுவையையும்‌ நெஞ்சையுமுடைய இவர்‌, பகவத்‌ விஷயத்தில்‌ ப்ராவண்யம்‌ காதசித்கமாய்‌, புறம்பே பரந்த நெஞ்சை யுடையராய்‌, விஷயாந்தரங்களிலும்‌ ரஸஜ்ஞராய்ப்‌ போருகிற இவர்களளவல்லர்‌ என்கிறார்‌. ஆக இதுக்குக் கீழ்‌ பகவத் ப்ரத்யாஸந்நரான லக்ஷ்மணாதிகளோடு இவ்வாழ்வாருக்கு ஸாதர்ம்ய வைதர்ம்யங்களிரண்டும்‌ சொல்லிற்றாய்த்து –

    129-எற்றைக்கும்‌ என்றது தோன்றப்‌ பிறந்து ஒப்பித்து வீசிக்‌ காப்பிட்டுக்‌ காட்டுக்கு முற்பட்டு தூமம்‌ சொல்லிக்‌ கேட்டு ஸிஷ்யா -தாஸீ-பக்தைகளாய்ப்‌ பாடி வருடி இன்று வந்தென்பாரையும்‌ சென்றாலூரும்‌ நிவாஸ-தாஸ-பேதம்‌ கொள்வாரையும்‌ தாம்‌ அவனாக பாவிப்பர்‌.

    இப்படி ஸாம்யம்‌ சொல்லுகிற மாத்ரமே யன்றிக்கே தம்முடைய பாவத்தாலும்‌ வ்ருத்திகளாலும்‌ பிராட்டிமாரையும்‌, திருவடி திருவநந்தாழ்வான்‌ தொடக்கமானவர்களையும்‌ தாம்‌ அவர்களாக பாவிப்பர்‌ என்கிறார்‌ (எற்றைக்கும்‌ என்று தொடங்கி). ‘“எற்றைக்குமேழேழ்‌ பிறவிக்குமுன்றன்னோடுற்றோமேயாவோம்‌”‘ (திருப்பாவை 29) என்று அபேக்ஷித்தமை தோன்ற “‘ராகவத்வேபவத்ஸீதா ருக்மிணீ க்ருஷ்ணஜந்மநி । அந்யேஷு சாவதாரேஷு விஷ்ணோரேஷாநபாயிநீ”’ (வி.பு. 1 – 9 – 144) என்கிறபடியே அவன்‌ வந்தவதரித்த அவதாரங்கள் தோறும்‌ தாமுமவதரித்து. (ஒப்பித்தென்று) ‘திருவபிஷேக மஹோத்ஸவத்துக் கீடாம்படி பெருமாளை அலங்கரித்து. (வீசி) ‘“ஸ்திதயா பார்றவதஸ்சாபி வாலவ்யஜதஹஸ்தயா ! உபேதம்‌ ஸுதயா பூயஸ்சித்ரயா ஸஸிநம்‌ யதா” என்று திருவெண்சாமரம்‌ பரிமாறி. (காப்பிட்டு) ““பதிஸம்மாநிதா ஸீதா பர்த்தாரமஸிதேக்ஷ்ணா । ஆத்‌வாரமநுவவ்ராஜ மங்களாந்யபிதத்‌யுஷீ”, ““பூர்வாம்‌ திஸம்‌ வஜ்ரதரோ தக்ஷிணாம்‌ பாது தே யம? । வருண? பஸ்சி மாமாஸம்‌ தநேசஸ்தூத்தராம்‌ திஸம்‌”” என்று பெருமாள் வைலக்ஷண்யத்தைக் கண்டு இவ்வழகு தமக்குத்‌ தொங்கப்‌ புகுகிறதோ என்னும்‌ வயிறுபிடியாலே மங்களாஸாஸநம்‌ பண்ணி.
    (காட்டுக்கு முற்பட்டு) “அக்‌ரதஸ்தே கமிஷ்யாமி ம்ருத்‌,நந்தீ குஸ கண்டகாந்‌” என்று பெருமாள்‌ வநத்துக்கு எழுந்தருளுகிறபோது தான்‌ முற்பட்டு. (தர்மம்‌ சொல்லி) பெருமாள்‌ தண்டகாரண்யத்திலே கையும்‌ வில்லுமாய்க் கொண்டு நின்ற நிலையைக் கண்டு இவர்‌ ஸாயுத,ராய்‌ நிற்கில்‌ ஆரேனையும்‌ மேல்விழுந்து ப்ரமாத,ம்‌ விளையக்கூடுமென்று பயப்பட்டு, பெருமாளைப் பார்த்து “நாயன்தே, தர்மமூலமாயிருக்கும்‌ ஸர்வமும்‌, ஆன பின்பு தேவரீர்‌ ஆயுதத்தை வைத்து தாபஸ வேஷத்தோடே தர்மத்தை அநுஷ்டிக்க அமையும்‌” என்று தர்‌மோபதேஸ த்தையும்‌ பண்ணினாள்‌ பிராட்டி.
    (தர்மம்‌ கேட்டு) ஸ்ரீபூ,மிப்பிராட்டியார்‌ ஸகலதர்மங்களையும்‌ ஸ்ரீவராஹ நாயனார்‌ பக்கவிலே கேட்டு. (ஸிஷ்யா தாஸீ பக்தைகளாய்‌) “அஹம்‌ ஸிஷ்யா ச தாஸீ ச பக்தா ச த்வயி மாதவ | மத் க்ருதே ஸர்வபூதாதாம்‌ லகூபாயம்‌ வத ப்ரபோ ‘ என்று ஸிஷ்யா தாஸீ பக்தையாய் விஸேஷ தர்மத்தையும்‌ கேட்டு.
    (பாடி) “பாடிப் பறைகொண்டு”’ (திருப்பாவை 27) என்கிறபடியே க்ருஷ்ணனைப் பாடுவதும்‌ செய்தாள்‌. (வருடி) இவர்களிருவரும்‌ ”ஒருமதிமுகத்து மங்கையரிருவரும்‌ மலரன அங்கையின் முப்பொழுதும்‌ வருட” (திருவெழு.), ”செங்கமலத்திருமகளும்‌ புவியும்‌ செம்பொன்திருவடியினிணை வருட ” (திருமொழி 7 – 8 – 1) என்று இருவரும்‌ திருவடியை வருடினார்கள்‌. ‘“இன்றுவந்தித்தனையும்‌ அமுதுசெய்திடப்பெறில்‌ நான்‌ ஒன்று நூறாயிரமாகக்‌ கொடுத்துப்‌ பின்னுமாளும்‌ செய்வன்‌”’ (நா. தி. 8 – 7) என்று தம்மைக்கொண்டு கைங்கர்யம்‌ கொண்டால்‌ அதுக்கு ப்ரத்யுபகாரமும்‌ பண்ணுவர்‌ என்கிறார்‌.

    (சென்றால்‌ ஊரும்‌ நிவாஸ)திருவநந்தாழ்வான்‌ ‘“சென்றால்‌ குடையாம்‌’” (மூ.திருவ. 59) என்கிறபடியே ““நிவாஸ ஸய்யாஸந பாதுகாம் ஸூகோபதாந வர்ஷாத பவாரணாதி.பிர் ஸாரீரபேதை ஸ்தவ ஸேஷதாம்‌ க,தைர்ய தோசிதம்‌ ஸேஷ இதீரிதே ஜநை?”’ (ஸ்தோ. ர.40) என்று ஸர்வேஸ்வரனுடைய விநியோகத்துக்கு அநுகுணமாக ஸாரீர பேதங்களைக்‌ கொண்டு அஸேஷ ஸேஷவ்ருத்திகளையும்‌ பண்ணினார்‌. “ஊரும்‌ புட்கொடியுமக்தே” (திருவா. 10 – 2 -3) என்றும்‌, ”தாஸஸ்ஸகா வாஹநமாஸநம்‌ த்வஜோ யஸ்தே விதாநம்‌ வ்யஜநம்‌ த்ரயீமய? । உபஸ்திதம்‌ தேந புரோ கருத்மதா த்வதங்க்‌ரி ஸம்மர்த்த, கிணாங்கஸோபிநா’? (ஸ்தோ. ர.41) என்று பெரியதிருவடி நாயனார்‌ வாஹந த்‌வஜாதி முகத்தாலே ஸகலவித, கைங்கர்யங்களையும்‌ பண்ணினார்‌. அப்படியே இவரும்‌ ““பிறந்திட்டாள்‌”(திருவா. 6 – 5- 10) என்கிறபடியே பிறந்து அந்த நாச்சிமார்‌ மூவரையும்‌ திருவநந்தாழ்‌வானையும்‌, பெரியதிருவடியையும்‌ தாமவர்களாகப் பாவிப்பர்‌ என்கிறார்

    130-எழுவதோருரு அழிக்க, செய்கிற வழுவிலா அடிமைக்குப்‌ பாஞ்சாலி படுத்துமதும்‌ கெளஸல்யாதநுவ்ருத்தியும்‌ ஓப்பாக்குகை பரிசு.
    இவர்க்கு இந்த நாச்சிமாருடைய பாவமும்‌ இந்த விருத்தி பேதத்தில்‌ அபி, நிவேஸமு முண்டானபடி எங்ஙனே என்னில்‌, அப்ராக்ருதமான விக்‌ரஹம்‌ பும்ஸ்த்வத்தை அழித்து ஸ்த்ரீத்வத்தை உண்டாக்கினதுக்கும்‌, அநுரூப ப்ராப்தமான அவ் விஷயத்திலுண்டான வ்ருத்த்யபி நிவேஸத்துக்கும்‌, ப்ராக்ருதமாய்‌ ஓளபாகிகமா யிருக்கிற விஷயங்களிலுண்டானவற்றை த்‌ருஷ்டாந்தமாக்குகை ஸ்தூலம்‌ என்கிறார்‌ (எழுவதோருரு என்று தொடங்கி). (எழுவதோருரு அழிக்க) *’சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோருரு (திருவா. 5 – 5 – 40) என்று தேஜஸ்தரங்கங்களுக்கு நடுவே உந்நேயமான ‘‘பும்ஸாம்‌ த்‌ருஷி சித்தாபஹாரிணம்‌”” (ரா.௮. 3 – 29) என்று ஸஜாதீயரையும்‌ விஜாதீயராக்க வற்றான அப்ராக்ருத விக்‌ரஹம்‌ இவருடைய பும்ஸ்த்வத்தை அழிக்க, இவர்க்குண்டான ஸ்த்ரீத்வத்‌துக்கும்‌. (வழுவிலா அடிமைக்கு) ஸ்வரூப ப்ராப்தமான அவ்விஷயத்தில்‌ இவர்க்கு உண்டான வ்ருத்தி பேதங்களுக்கும்‌ (பாஞ்சாலி படுத்துமதும்‌) ”பாஞ்சால்யா: பத்‌ம பத்ராக்ஷ்யா: ஸ்நாயந்த்யா ஜகநம்‌ ௧நம்‌ । யா ஸ்தரியோ த்ருஷ்டவத்யஸ்தா: பும்பாவம்‌ மநஸா யயு: ” என்று ப்ராக்ருதமாய்‌, பூதிகந்தியாய்‌, மாம்ஸாஸ்ருகாதி மல மயமான த்‌ரெளபதி,யினுடைய ஸரீரம்‌ ஸஜாதீயருடைய ஸ்த்ரீத்வத்தை அழித்து பும்பாவத்தை அடைவித்தத்தையும்‌. (கெளஸல்யாநுவ்ருத்தியும்‌) ““யதா யதா ஹி கெளஸல்யா தாஸீவச்ச ஸ்கீவச பார்யாவத்‌ பகி நீவச்ச மாத்ருவச்சோபதிஷ்டதி” (ரா.அ. 12 – 68) என்று கெளஸலையார்‌ ஓளபாதிகமான பர்த்ரு விஷயத்தில்‌ தத்ததாவஸ்த அநுகு,ணமாகப்‌ பண்ணின அநுவ்ருத்தியையும்‌ த்‌ருஷ்டாந்தமாக்குகை அதில்‌ ஸ்தூலம்‌ என்கிறார் –

    131-பெருக்காறு பலதலைத்துக்‌ கடலை நோக்குமாப் போலே நெக்‌கொசிந்து கரைந்து அலைந்து இடிந்து உடையப்‌ பெருகு காதல்‌ கடலிடங்கொண்ட கடலை பஹுமுகமாக அவகாஹிக்கும்‌.
    ஆனால்‌ தாமான தன்மையும்‌ பிராட்டிமார் தஸையுமுண்டான இதில்‌ தாமான தன்மையில்‌ அபிநிவேஸம்‌ அளவு பட்டிருக்குமோ? என்னில்‌; ஆறு பெருகா நின்றால்‌ பல வாய்த்தலை களிலும்‌ போரா நிற்கச்செய்தே, தானும்‌ கடலில்‌ போரும்‌ அம்ஸம்‌ குறையாதிருக்குமாப்‌ போலே பிராட்டிமார் தஸையோடும்‌, தாமான தன்மையோடும்‌ வாசியற அபி நிவேவம்‌ கரை புரண்டு பகவத்‌ விஷயத்தை அவகாஹிக்கும்‌ என்கிறார்‌ (பெருக்காறு என்று தொடங்கி), (பெருக்காறு பல தலைத்துக்‌ கடலை நோக்குமாப்போலே நெக்கொசிந்து கரைந்து அலைந்து இடிந்து உடையப்‌ பெருகு காதல்‌) ““நினைந்தென்னுள்ளே நின்று நெக்கு”! (பெரியா. தி. 5 – 4 – 8), ”நிமியும்‌ வாயொடு கண்கள்‌ நீர் மல்க நெக்கொசிந்து கரையும்‌”? (திருவா. 6 – 5- 2), ”என்‌ மனம்‌ உடைவதும்‌ அவர்க்காகவே”‘ (திருவா. 9-3 – 6) என்று அபிநிவேஸத்துக்குக்‌ கரைப் பற்றான நெஞ்சானது விட்டுச் சரிந்து கரைந்து அலைந்து இடிந்து உடைந்து ஸிதிலமாய்ப் போம்படி “*பெருகு காதலடியேன்‌”’ (திரு மொழி 5 – 2 – 9) என்று இவருடைய அபரிச்சேத்‌யமான பக்தியான ஆறானது. (கடலிடங்கொண்ட கடலை) க்ஷீராப்‌திஸாயியாய்‌, ஸர்வேஸ்வரனாய்‌, ஸ்ரமஹரமான வடிவை யுடைய பெரியபெருமாளாகிற கடலைப்‌ பலமுகமாக அவகாஹிக்கும்‌ என்கிறார் –

    132-அச்சேத்‌யமென்னுமது ஈரும்‌ வேம்‌ ஈரியாய்‌ உலர்த்த என்னப்பட சித்தம்‌ சித்தாய்‌ அல்லேனென்று நீங்க கரணங்கள்‌ முடியானேயிலவையாக உடலம்‌ ஆத்மதர்மம்‌ கொள்ள காற்றும்‌ கழியும்‌ கட்டி யழக்‌ கொண்ட பெருங் காதலுக்குப்‌ பத்திமை நூல்‌ வரம்பில்லையே.
    இப்படி இரா நிற்கிற இவருடைய பக்தி தான்‌ ஸக்ரமமாயிருக்கமோ? என்னில்‌, இவருடைய பக்திக்கு “ந ஸாஸ்த்ரம்‌ நைவ ச க்ரம:‘” என்கிறபடியே தேஸ விஸேஷத்தில்‌ பக்தி போலே இதுவும்‌ வைதமல்லாமையாலே க்ரமாபேக்ஷை இல்லை என்கிறார்‌ (அச்சேத்‌யமென்று தொடங்கி). **௮ச்சேத்‌யோ யமதாஹ்யோயமக்லேத்‌யோ ஸோஷ்ய ஏவ ச?” (கீ,. 2 – 24) என்று சேதந-தஹந-ப்லாவந-ஸோஷணாதிகளுக்கு அயோக்‌யமா யிருக்கிற ஆத்ம வஸ்து. (ஈரும்‌ வேம்‌ ஈரியாய்‌ உலர்த்த என்னப்பட) “சிவனொடு பிரமன்‌ வண்திருமடந்தை சேர்‌ திருவாக மெம்மாவி ஈரும்‌” (திருவா. 9 – 9- 6), ‘‘வேம்‌ எமதுயிரழல்‌ மெழுகிலுக்கு”” (திருவா. 10 – 3 – 6) ”கண்ணனுக்கென்‌றீரியாயிருப்பாள்‌”‘ (திருவா. 6 – 3 – 6), “’வேவாரா வேட்கை நோய்‌ மெல்லாவி உள்ளுலர்த்த”‘ (திருவா. 2 -.1 – 1) என்று அவனுடைய ஸீல கு,ணம்‌ என்‌ ஆத்மாவை ஈரா நின்றது என்றும்‌, அக்‌நி ஸகாஸத்துக்குள்ளே புகுந்த மெழுகு போலே என்‌ ஆத்மாவானது தக்‌தமாகா நின்றது என்றும்‌, விலக்ஷண பதார்த்தங்களைக்‌ காணில்‌ கண்ணனுக்கு என்று த்‌ரவீ பூதையாகா நின்றாள்‌ என்றும்‌, ப்ரேம வ்யாதியானது என்‌ ஆத்மாவைக்‌ குருத்து பற்றாக உலர்த்தா நின்றது என்றும்‌, இப்படி சேதநாதிகளுக்கு யோக்‌யமாய்த் தென்று இவர் தாமே சொல்லும்படியாக ஆத்ம வஸ்து பாஹ்ய பதார்த்தங்களாலே சேதநாதிகளுக்கு அயோக்‌யமென்றது இத்தனை போக்கி, தன்னிலும்‌ அச்சமான பகவத்‌ குணங்கள்‌ புக்கழிக்க, அழியாதாகில்‌ இதுதான்‌ ஜ்ஞாந-. த்‌ரவ்யமன்றியிலே ஒழியுமிறே-
    (சித்தம்‌ சித்தாய்‌ அல்லேனென்று நீங்க) என்னெஞ்சென்னை நின்னிடையே னல்லேனென்று நீங்கி” (திருவா, 8 – 2 – 10) என்று அசேதநமான சித்தமானது சேதந ஸமாதியாலே இவரை ““ஸந்ந்யஸ்தம்‌ மயா”’ என்று விட்டு நீங்க, (கரணங்கள்‌ முடியானேயிலவையாக) “முடியானேயிற்படியே சேதந ஸமாதியாலே விடாய்த்த கரணங்களை உடையராய்‌. (உடலம்‌ ஆத்மதர்மம்‌ கொள்ள) ‘“அடியேனுடலம்‌ நின்பாலன்பாயே நீராயலைந்து கரைய”’ (திருவா. 5 – 8 – 1) என்று த்‌ரவ்யமிருந்த குஹை உருகுமாப் போலே ஆத்மா பகவத் ப்ரேம வஸ்யதையாலே ஸிதிலமாகாதபடி கட்டின கரையான ஸரீரமானது அந்தராத்மாவைப் போலே பகவத் ப்ராவண்யத்தை உடைத்தாய் கொண்டு ஸிதிலமாக.
    (காற்றும்‌ கழியும்‌ கட்டியழ) “கடலும்‌ மலையும்‌” இத்யாதி, (திருவா. 2-1. 4), “எம்‌ ஆற்றாமை சொல்லி அழுவோமை’: (திருவா, 2 – 1 – 7) என்று வாயுவுக்கு ஸதத கதித்வம்‌ ஸ்வாபாவிகமென்றும்‌, கழிக்கு ஏறுதல்‌ வடிதல்‌ செய்கை ஸ்வாபாவிகமென்றும்‌, மற்றும்‌ நாரை தொடக்கமானவற்றுக்கு அவ்வோ ஸ்வபாவம்‌ நியதமென்றும்‌ அறியாதே தம்மைப் போலே பகவத்‌ விஸ்லேஷத்தாலே இவையும்‌ நோவு படுகிறனவாக இவற்றோடே க்லேஸிக்கும் படியாகக்‌ கொண்ட பெருங்காதலுக்கு, ”அலர்‌ தூற்றிற்றது முதலாக்‌ கொண்ட என் காதல்‌” (திருவா. 7 – 3 – 8) என்று இப்படியிருக்கிற இவருடைய அபரிச்சேத்‌யமான பக்திக்கு.
    (பத்திமை நூல் வரம்பில்லையே) ”ந ஸாஸ்த்ரம்‌ நைவ ச க்ரம:’‘ என்று தேஸ விஸேஷத்தில்‌ அநுபவோபகரணமான பக்தி போலே இவருடைய பக்திக்கு, ஸாதந பக்திபோலே வைதமாகையும்‌ க்ரமாபேஷையும்‌ இல்லையிறே.
    ஆக இதுக்குக் கீழ்‌ –ஜ்ஞாந தஸையில்‌ தாமான தன்மையிலே பேசுவர்‌; ப்ரேம தஸையில்‌ ஸ்த்ரீ ஸ்வபாவத்தாலே பேசுவர்‌ என்றும்‌, அந்த ஸ்த்ரீத்வம்‌ இவர்க்கு ஸ்வாபாவிகம்‌ என்றும்‌, ஸ்த்ரீத்வந்தான்‌ ஸாமான்யமன்றிக்கே அநந்யார்ஹ ஸேஷத்வாதிகளாலே பிராட்டியோடொப்பர்‌ என்றும்‌, மற்றுமுண்டான பிராட்டிமார்‌ பகவத் பரிக்‌ரஹமுடை யாரெல்லாரோடும்‌ ஒப்பர்‌ என்றும்‌ ஸர்வதா ஸாம்யமுன்ளது பெரிய பிராட்டியாரோடே என்றும்‌, மற்றும்‌ பகவத் ப்ரத்யாஸந்நரான லக்ஷ்மணாதிகள் படியும் இவர்க்கு உண்டென்றும்‌, அவர்களிலும்‌ வ்யாவ்ருத்தர்‌ என்றும்‌, அவர்களோடு ஸாம்யமன்றிக்கே அவர்களைத்‌ தாமாக பாவிப்பர்‌ என்றும்‌, இந்த பாவ வ்ருத்திகள்‌ இவர்க்கு உண்டாகைக்கு நிதாநம்‌ இன்னதென்னுமிடத்தையும்‌, இந்த பாவ வ்ருத்திகளுக்கு அடியான பக்தி ப்ரகாரங்களையும்‌ சொல்லி நின்றது கீழ்‌. ஆக இத்தால்‌ பக்தி தஸையில்‌ இவர்‌ பேச்சிருக்கும் படி சொல்லிற்று-

    133-ஸம்பந்த உபாய பலங்களில்‌ உணர்த்தி துணிவு பதற்றமாகிற ப்ரஜ்ஞா வஸ்தைகளுக்குத்‌ தோழி தாயார்‌ மகள்‌ என்று பேர்‌.
    ஆனால்‌ பக்தி தஸையில்‌ பெண் பேச்சாகில்‌ பிராட்டி ஒருத்தியாகப்‌ பேசுகை ப்ராப்தம்‌, தோழி தாய்‌ மகள்‌ என்கிற த்ரைவித்‌யமான பேச்சுக்கு தாத்பர்யம்‌ என்‌ என்னில்‌, இந்த அதி ப்ராவண்யத்துக்கு ஸஹகாரியாயும்‌, நிரோதகமாயுமிருக்கிற ஸம்பந்த உபாயங்‌களில்‌ ஜ்ஞாந வ்யவஸாயங்களென்ன, அந்த ப்ராவண்யத்துக்கு விஷயமான உபேயத்‌தில்‌ த்வரை யென்ன இவற்றைத்‌ தோழி தாயார்‌ மகள்‌ என்கிறார்‌ (ஸம்பந்தமென்று தொடங்கி). (ஸம்பந்த உபாய பலங்களில்‌ உணர்த்தி துணிவு பதற்றமாகிற ப்ரஜ்ஞாவஸ்தைகளுக்குத்‌ தோழி தாயார்‌ மகள்‌ என்று பேர்‌) தோழியாவாள்‌ நாயகநாயகிகளை இணக்கிச்‌ சேர்க்குமவளாகையாலே திருமந்தரத்தில்‌ ப்ரதம பதமான ப்ரணவத்தில்‌ அகாரத்தாலே சொல்லப்பட்ட, காரணமாய்‌ ரக்ஷகமாய்‌ ஸேஷியாய்‌ ஸ்ரீய: பதியாயிருக்கிற பகவத் ஸ்வரூபத்துக்கும்‌, தத் ப்ரதி ஸம்பந்தியாய்‌, கார்யத்வ- ரஷ்யத்வ ஸேஷத்வங்களை ஸ்வரூபமாக உடைத்தாய்‌, ப்ரக்ருதே: பரமாய்‌, ஜ்ஞாநாநந்த மயமாய்‌, ஞாந குணகமாயிருக்குமென்று மகாரத்தாலே சொல்லப்பட்ட ஆத்ம ஸ்வரூபத்துக்கும்‌ சதுர்த்தியாலும்‌ உகாரத்தாலும்‌ சொல்லப்பட்ட நிருபாதிக ஸேஷத்வ-அநந்யராஹ ஸேஷத்வாதி,ஸம்பந்தத்தை விஷயீகரித்த ஜ்ஞாநத்தைத்‌ தோழி என்றும்‌,
    தாயாராவாள்‌ நாயகன் பக்கலிலே அதி மாத்ர ப்ராவண்யம்‌ பெண் பிள்ளைக்கு உண்டானாலும்‌ நாயகன் தானே வந்து பரிக்‌ரஹித்துக் கொண்டு போமதொழியப் படி கடந்து புறப்படுகை குல மர்யாதைக்குப்‌ போராதென்று அவளை நிஷேதித்து அவன் வரவு பார்த்திருக்குமவளாகையாலே, ஸம்பந்த ஜ்ஞாந ஸமநந்தரம்‌ ஸம்பந்தாநுரூபமான பரிமாற்றத்திலே த்வரை உண்டானாலும்‌, ஸ்வ ப்ரவ்ருத்தியில்‌ இழிகை நமஸ்ஸில்‌ சொன்ன பாரதந்த்ர்யத்துக்கு விருத்‌தமாகையாலே அத்தை நிவர்த்திக்க, அதில்‌ ஸாப்‌தமாகவும்‌, ஆர்த்தமாகவும்‌ சொல்லுகிற பகவதேகோபாயத்வத்தாலே ப்ராப்ய ஸித்‌தி, என்கிற அத்‌யவஸாய ஜ்ஞாநத்தைத்‌ தாயார்‌ என்றும்‌, தலைமகளாவாள்‌, இயற்கையிலே புணர்ந்து நாயகன் வைலக்ஷண்யத்திலே ஈடுபட்டு, குல மர்யாதைகளையும்‌ பாராதே கிட்டியல்லது தரியேன்‌ என்னும்‌ பதற்றத்தை உடையாளொருத்தி யாகையாலே, நாராயண பதத்தாலே சொல்லப்பட்ட ஸேஷியாய்‌, ஸரண்யனானவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளால்‌ வந்த வைலக்ஷண்யத்தை அநுபவித்து அத்தால்‌ வந்த விளம்ப அக்ஷமத்வத்தாலே ததேகோபாயத்வாத்‌ யவஸாயத்தையும்‌ அதிக்ரமித்துக் கிட்டி, அநுபவித்து அநுபவ ஜநித ப்ரீதிகாரிதமான கைங்கர்யத்தை இப்போதே பெற வேணுமென்கிற த்வராஜ்ஞாநத்தைத்‌ தலைமகள்‌ என்றும்‌ சொல்லும்‌,
    ““ஸ்ம்ருதிர் வ்யதீத விஷயா மதிராகாமி கோசரா ! புத்திஸ் தாத்காவிகீ ப்ரோக்தா ப்ரஜ்ஞா துரைகாலிகீ மதா” என்று அதீத-அநாகத-வர்த்தமாந-விஷய ஜ்ஞாநத்தை ஸ்ம்ருதிமதி-புத்‌தி, என்று சொல்லுகையாலே பூர்வமேவ உண்டாயிருக்கிற ஸம்பந்தத்தை விஷயமாக உடைத்தா யிருக்கிற ஜ்ஞாநத்தை ஸ்ம்ருதி என்றும்‌, மேல் வரக் கடவதான கைங்கர்யத்தில்‌ த்வராஜ்ஞாநத்தை மதி என்றும்‌, ஸம்பந்த, ஜ்ஞாந ஸமநந்தரம்‌ யாவத்‌ பல ப்ராப்தி நடக்கக் கடவதான உபாயத்வாத்‌ யவஸாயத்தை புத்தி என்றும்‌ சொல்ல வேண்டி யிருக்க, ப்ரஜ்ஞாவஸ்தைகள்‌ என்பானென்‌? என்னில்‌, மூன்றும்‌ ஏக காலிகமாக நடக்கையாலே ஓரொன்றினுடைய ப்ராதாந்யம்‌ தோற்றப்‌ பேசுகையாலே ப்ரஜ்ஞாவஸ்தைகள்‌ என்றது.
    ஆக இப்படி ஸ்வ ஸ்வரூப-பரஸ்வரூப -ஸம்பந்த ஜ்ஞாநம்‌, ஈஸ்வரைகோபாயத்வத்தில்‌ வ்யவஸாயம்‌, பலமான கைங்கர்யத்தில்‌ த்வரை இவையாகிற ப்ரஜ்ஞாவஸ்தைகளுக்குத்‌ தோழி தாயார்‌ மகள்‌ என்று சொல்லுகிறது என்கிறார்‌-

    134- ஸகி, வெறி விலக்கி ஆசை யறுத்து அறத்தொடு நின்ற மூன்றில்‌ அநந்யார்ஹத்வமும்‌, வாடி மெலிந்து பித்தேறி ஏறப் பேசிக்‌ கட்டிழந்தகன்று சார்வதே வலித்தமை ஸாதநமாமோ என்று மாதா அஞ்சி முறைப்பட்டு முறை யிடுகிற ஏழில்‌ அத்‌யவஸாயமும்‌, புத்ரி பலகால்‌ ஆள் விட்டு ஆற்றாமை சொல்லிக்‌ கவராதவை விட்டு, இரைக்க மடலெடுத்துக்‌ கண் புதையப்‌ போக்கற்று, உருதெஞ்சுள்ளெழக்‌ கூடுதாள்தேடித்‌ தாழ்த்ததுக்கு ஊடி, உசாத் துணேயற்றுச்‌ சூழவும்‌ பகைமுகம்‌ செய்யத் தடை நில்லாதே புயக்கற்று மாலையும்‌ காலையும்‌ பூசலிடுகிற பதினேழில்‌ த்வரையும்‌ தெரியும்‌.

    இனிமேல்‌ மூன்று தஸையின்‌ பேச்சினுடைய ப்ரகாரங்களையும்‌ அவ்வோ தஸைகளில்‌ திருவாய்மொழி இன்னதென்னுமத்தையும்‌ அருளிச் செய்கிறார்‌ (ஸகி, வெறி விலக்கி என்று தொடங்கி). வெறி விலக்காவது – இயற்கையிலே புணர்ந்து பிரிந்த தலைமகள்‌ மோஹங்‌கதையாய்க்‌ கிடக்க, அவளுடைய பந்துக்கள்‌ இது க்ஷுத்‌ர தேவதைகளால் வந்ததோ என்று ஸங்கித்து இத்தை பரிஹரிப்பதாக வெறியாடலுற அவ்வளவில்‌ இவள்‌-ப்ரக்ருதியறிந்த உயிர்த்தோழியானவள்‌ “இது க்ஷுத்‌ர தேவதைகளால்‌ வந்ததன்று; இது ஒரு விஷயத்தில்‌ ஸங்கத்தாலே வந்தது” என்று அத்தை விலக்கி, அதுக்கு யோக்‌யமான பரிஹாரத்தைச்‌ சொல்லுகை,-இத்தால்‌ ஸம்ஸாரகாந்தாரத்திலே ஸப்‌தாதிகளாகிற போக்‌யோபஜீவதத்துக்காக ஸ்வர்க்க -நரக-கர்ப்பங்களாகிற போக ஸ்தலங்களிலே ஸஞ்சரிக்கிறவனுமாய்‌, பாரதந்ர்த்ர்ய- போக்யதா-அநந்யார்ஹத்வங்களாலே ஸ்த்ரீத்வத்தை உடையனான ஆத்மாவை அவ் விடத்திலே ஆத்ம ம்ருக யாத்ரா வ்யாஜத்தாலே ஸஞ்சரிக்கிற ஈஸ்வரன்‌ “ஏவம்‌ ஸம்ஸ்ருதி சக்ரஸ்தே, ப்‌ராம்யமாணே ஸ்வ கர்மபி,: | ஜீவே துக்கா குலே விஷ்ணோ: க்ருபா காப்யுபஜாயதே?” என்றும்‌, ““நாஸெள புருஷ காரேண”’ இத்யாதியிற்படியே கடகரும்‌, ஜ்ஞாபகருமன்றியிலே உபயருடையவும்‌ தர்ம ப்ரயுக்தமாக கடாக்ஷிக்க, அத்தாலே இத்தலைக்கு முண்டான க்ரம ப்ராப்தி பற்றாத அதி ப்ராவண்யத்‌தாலே வந்த கலக்கத்தாலே ததேகோபாயத்வாத்‌யவஸாயம்‌ குலைந்து ‘இந்த ப்ராவண்ய ஹேது எது? ப்ராவண்ய கார்யமான கலக்கத்தை பரிஹரிக்கலாவது எத்தாலே?’ என்று தேவதாந்தர்யாமி பரமான கர்ம கலாபங்களாலே பரிஹரிக்கலாமோ என்று ஸங்கிக்க, ஸம்பந்த ஜ்ஞாநம்‌, ‘அநத்யார்ஹமான இவ்வஸ்துவிலுண்டான இந்த ப்ராவண்யம்‌ நிர்ஹேதுக க்ருபா கார்யமாகையாலே ததேகோபாயத்வத்தாலே பரிஹரிக்கலா மத்தனை யல்லது தத்‌ வ்யதிரிக்தங்கள்‌ பரிஹாரமாகாத வளவேயன்றிக்கே அநத்யார்ஹ ஸேஷத்வாதி ஸம்பந்தங்களுக்கு விருத்‌தமாகையாலே ஸ்வரூபத்துக்கு நாஸகமாகையாலே இவை நிவர்த்யங்கள்‌” என்று அந்ய ஸ்பர்ஸத்தை நிவர்த்திப்பிக்கிற வெறி விலக்காகிற *தீர்ப்பாரை யாமினியிலும்‌.

    (ஆசை யறுத்து)திருத் தொலை வில்லி மங்கலத்திலே அதி ப்ரவணையாயிருக்கிற இவளை மீட்கப் பார்க்கிற தாய்மாரைக் குறித்துத்‌ தோழியானவள்‌ ‘நீங்களே யன்றோ திருத் தொலை வில்லி மங்கலத்திலே கொடு புக்கு அதி ப்ராவண்யத்தை விளைத்திகோள்‌; இனி உங்களால்‌ ப்ராப்த விஷய ப்ரவணையான இவளை மீட்கப் போகாது; ஆன பின்பு இவள் பக்கல்‌ நீங்கள்‌ ஆசை யறுங்கோள்‌’ என்று ஆசை யறுக்கிறது.
    இத்தால்‌ உபாயாத்‌யவஸாயமானது உபேய வைலக்ஷண்யத்தை முன்னிட்டுக் கொண்டல்லது இராமையாலே அந்த உபேய வைலக்ஷண்யத்தை விஷயீகரித்த ப்ராவண்ய கார்யமான த்வரை உபாயத்திலே அந்வயிக்கிறதோ என்னும்‌ அதி ஸங்கையாலே அந்த ப்ராவண்யத்தை வ்யவஸாயம்‌ நிவர்த்திப்பிக்கத் தேட இந்த ப்ராவண்யம்‌ ஸேஷ வஸ்துகதமாகையாலே ஸேஷியினுடைய ப்ரியோபயோகியாமத்தனை யல்லது உபாயத்தில்‌ அந்வயியாதென்கிற ஸங்கையை நிவர்த்திப்பிக்கிறது-ஸம்பந்த ஜ்ஞாநம்‌.–இத்தால்‌ ப்ராப்த விஷய வைலக்ஷண்யாதீநமாக உண்டான அந்த ப்ராவண்யத்தை, “இது ஸ்வரூபாதிரேகியாய்க் கொண்டு ஸாதநத்திலே அந்வயிக்குமாகில்‌ “தத் தஸ்ய ஸத்‌ருஸம்‌ பவேத்‌”” (ரா.ஸு.. 39 -30) என்றிருக்கிற ஸ்வரூபத்துக்கு விருத்‌தமாம்‌; ஆகையாலே இது நிவர்த்யம்‌” என்று இந்த ப்ராவண்யம்‌ ஸ்வ நிவர்த்யம்‌ என்று தடுக்க, இவ்வுபாயாத்‌யவஸாயத்தில்‌ ஸ்வாதீநதாப்ரதிபத்தியை பரேச்சாநுகுண விநியோகார்‌ஹதா ரூபமான ஸேஷத்வ ஜ்ஞாந மானது, ஸேஷ வஸ்துகதமாய்‌, ஸேஷியினுடைய வைலக்ஷண்யாதீநமான இது ஸேஷிக்கு அதிஸயகரமாகையாலே ஸ்வரூபாதிரேகியன்று; தாரகமாகையாலே ஸ்வ நிவர்த்யமுமன்று. இத்தை ஸ்வ நிவர்த்யமாக நினைத்திருக்கையாகிற ஸ்வாதந்த்ர்யம்‌ கீழ்ச் சொன்ன ஸ்வரூபத்தோடு விருத்‌தமாகையாலே த்யாஜ்யம்‌ என்று ஸ்வ ஸ்பர்ஸத்தை நிவர்த்திப்பிக்கிற *துவளில்‌ மா மணியிலும்‌. (அறத்தொடு நின்ற) அறத்தொடு நிற்கையாவது – தலைமகளுடைய பருவத்தையும்‌, வடிவில்‌ வேறுபாட்டையும்‌ கண்ட பந்துக்கள்‌ ஸ்வயம்வரத்துக்கு ராஜ லோகத்தைத்‌ திரட்டுகைக்கு மணமும்‌ செறிவிக்க, இவளுடைய உயிர்த் தோழியானவள்‌ கேட்டு, “இது இவள் செவிப்படில்‌ இவளைக் கிடையாது இத்தை ஏற்கவே பரிஹரிக்க வேணும்‌” என்று இவளுடைய பந்து ஜநங்களைப் பார்த்து “இவளுக்குத்‌ திருப்புலியூர் நாயனாரோடே ஸங்கம்‌ உண்டு போலே இரா நின்றது; ஆன பின்பு நீங்கள்‌ செய்கிறது தர்மமல்ல” என்ன, “ஆனால்‌ இவளுக்குத் தக்க அவயவ ஸோபை தொடக்கமான நாயக லக்ஷணங்கள்‌ அவனுக்குண்டோ” என்ன, ‘அவை எல்லாத்தாலும்‌ ஒரு குறையில்லை. அவையொன்று மில்லையே யாகிலும்‌ இவள்‌ அவனுக்கு அநந்யார்ஹையானாள்‌ என்னுமிடத்துக்கு அடையாளம்‌ ஸுவ்யக்தமாகக்‌ காணலாம்‌. ஆன பின்பு நீங்கள்‌ செய்கிற விது அதர்மம்‌” என்று மத்‌யஸ்தையாய்க் கொண்டு தர்மம்‌ சொல்லுகிறாளாய்‌ அந்த மணத்தை விலக்குகை.
    ஆக இத்தால்‌ ப்ராப்ய த்வரையினுடைய பரிபாகத்தை அநுஸந்தித்த உபாயாத்‌யவஸாயம்‌, “இந்த த்வரை அப்ராப்த விஷயாவலம்பியோ?” என்று அதி ஸங்கை பண்ண, ஸம்பந்த,ஜ்ஞாநம்‌, “இது ப்ராப்தனான ஸேஷி விஷயீகாரத்தாலே உண்டானது, இதுக்கு அப்ராப்த விஷய ஸங்கையும்‌ ஸ்வரூப நாஸகரம்‌; இனி அந்த ஸேஷியினுடைய போக்‌யதையாலும்‌, அந்த போக்‌யதை ஒழியவே நிருபாதிக ஸேஷித்வத்தாலும்‌ இவ் வஸ்து அவனுக்கு அநந்யார்ஹம்‌” என்று அந்த அதி ஸங்கையை நிவர்த்திப்பிக்கிற *கரு மாணிக்க மலையிலும்‌, ஆகத்‌ தோழிப் பேச்சான மூன்று திருவாய்மொழியிலும்‌ இவ்‌ வாத்மா தர்மி தர்ம விபாகமற அந்ய ஸேஷமுமன்று; ஸ்வஸேஷமுமன்று;பகவத் அநந்யார்ஹ ஸேஷமாயிருக்குமென்று ஸம்பந்த ஜ்ஞாந தஸையில்‌ பேச்சாயிருக்கிறது.
    (வாடி மெலிந்து என்று தொடங்கி) – (எழில்‌ அத்‌யவஸாயமும்‌) *ஆடியாடியில்‌ “வாடி வாடுமிவ்வாணுதல்‌”’ (திருவா. 2 – 4 – 1) என்று ஆஸ்ரயத்தை ஓழிந்த தளிர் போலே வாடா நின்றாளென்றும்‌, *பாலனாயேழுலகில்‌ ”பொன் செய்பூண் மென்முலைக்கென்று மெலியும்‌” (திருவா. 4 – 2 – 10) என்று பகவத்‌ போக்யதையை அநுபவிக்க வேணுமென்று மெலியா நின்றாளென்றும்‌, *மண்ணை யிருந்து துழாவியில்‌ ““என் பெண்‌ கொடி யேறிய பித்தே”’ (திருவா. 4 – 3 – 7) என்று என் பெண் பிள்ளை அவனோடு ஸத்‌ருஸ பதார்த்தங்களையும்‌ ஸம்பந்தி பதார்த்தங்களையும்‌ அவனாகச்‌ சொல்லும்படி பிச்சேறினாள்‌ என்றும்‌, *கடல் ஞாலத்திலே ““ஈசன் வந்தேறக்கொலோ”’ (திருவா. 5-0 1) என்று ஆற்றாமையாலே அநுகரிக்கிறாள்‌ என்று அறிய மாட்டாதே ஸர்வேஸ்வரன்‌ இவள் பக்கலிலே ஆவேஸித்தாப் போலே பேசா நின்றாள்‌ என்றும்‌, *மாலுக்கு வையத்தில்‌ “கற்புடை யாட்டி இழந்தது கட்டே”’ (திருவா. 6 – 6 – 10) என்று அறிவுடையாளான இவள்‌ ஸர்வேஸ்வரனை ஆசைப்பட்டு ஸர்வத்தையும்‌ இழந்தாள்‌ என்றும்‌, உண்ணும் சோற்றிலே ““எனக்குதவாதகன்ற இளமான்‌” (திருவா. 6 – 7 – 6) என்று தன்னைப் பிரிந்து க்லேஸப்படுகிற இவ்வாபத்‌ தஸையில்‌ எனக்குதவாதே அகன்றாள்‌ என்றும்‌, *கங்குலும்‌ பகலில்‌ ‘“சந்தித்துன்சரணம்‌ சார்வதே வலித்த தையல்‌” (திருவா. 7 – 2 – 5) என்று உன்‌ திருவடிகளைக் கிட்டி உன் முன்னே முடிய வேணுமென்று வ்யவஸிதையானாள என்றும்‌ சொல்லுகிற இவளுடைய விரஹ கார்யத்தையும்‌, அந்த விரஹக்‌லேஸத்தாலே அடைவு கெடப் பேசுகையும்‌, பெற்றல்லது தரியாத அதிமாத்ர ப்ராவண்யமும்‌, உபாஸகனுக்கும்‌ உபாயாநுஷ்டாந துஷ்கரதையாலும்‌, பக்தி பாரவஸ்யத்தாலும்‌ ப்ராப்த வைலக்ஷண்யாநுஸந்தாநத்தாலும்‌ அவை உண்டாகுமாகையாலே இவளுக்கும்‌ இவை ஸாதநத்திலே அந்வயிக்கில்‌ ததேகோபாயத்வத்துக்கு விருத்‌தமா மென்று மாதா அஞ்சி, “முறையோ அரவணை மேல்‌ பள்ளி கொண்ட முகில்வண்ணனே”’ (திருவிரு. 60) என்று தேவர் க்ருபை யொழிய இவள்பக்கல்‌ உள்ளவை யோன்றும்‌ ஹேது வல்ல; ஆனபின்பு இவளை இப்படித்‌ துடிக்கவிட்டிருக்கை தேவரீருடைய க்ருபைக்கும்‌, ரக்ஷகத்வத்துக்கும்‌ போருமோ என்று சொல்லிக்‌ கூப்பிடுகிற தாய்ப் பேச்சான. ஏழு திருவாய்மொழிகளிலும்‌ உடாயாத்‌யவஸாயமான தஸையில்‌ பேச்சுத் தோன்றும்‌.

    (புத்ரி) தலைமகளானவள்‌, (பலகால்‌ ஆள்விட்டு) *அஞ்சிறைய மடநாரை (திருவா. 1 4), *வைகல் பூங் கழிவாய்‌ (திருவா. 6 – 1), *பொன்னுலகாளீரோ (திருவா. 6 – 8), *எங் கானல்‌ (திருவா. 9 – 7) என்கிற நாலு திருவாய்மொழிகளிலும்‌ க்ரம ப்ராப்தி பற்றாமல்‌ தூது விட்டு, (ஆற்றாமை சொல்லி) *’ஆற்றாமை சொல்லி அழுவோமை”’ (திருவா. 2 – 1 7) என்று *வாயும் திரையுகளிலே ஸகல பதார்த்த,ங்களும்‌ பகவதலாபத்தாலே நோவு படுகிறனவாக க்லேஸித்து, (கவராதவை விட்டு) *ஏறாளுமிறையோனிலே “மாறாளன்‌ கவராத மணி மாமை குறைவிலமே”‘ (திருவா. 4 – 8 – 1) என்று அவன் விரும்பாத ஆத்மாத்மீயங்கள்‌ வேண்டா என்று உபேக்ஷித்து, (இரைக்க மடலெடுத்து) *மாசறு சோதியிலே ““யாமடலூர்ந்தும்‌ … நாடுமிரைக்கவே”” (திருவா, 5 – 3 – 10) என்று ஜகத் க்ஷோபம்‌ பிறக்கும்படி மடலூரக்கடவேனென்று, (கண் புதையப் போக்கற்று) *ஊரெல்லாம்‌ துஞ்சியிலே ‘“பின்னின்ற காதல் நோய்‌ நெஞ்சம்‌ பெரிதடுமால்‌ முன்னின்‌றிராவூழி கண்புதைய மூடிற்றால்‌”” (திருவா, 5 – 4- 6) என்று ப்ரேம வ்யாதியும்‌, ராத்ரியாகிற கல்பமும்‌ க்ருத ஸங்கேதிகளாய்க்கொண்டு சூழப் பொருகையாலே போக்கடியற்று.
    (உருநெஞ்சுள்ளெழ) *எங்ஙனேயோவிலே “*சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோருரு என்னெஞ்சுள்ளெழும்‌”
    (திருவா. 5 – 5- 10) என்று தேஜஸ்தரங்க மத்‌யே உந்நேயமான அப்ராக்ருத விக்‌ரஹம்‌ நெஞ்சிலே ப்ரகாஸிக்கும்படியான உருவு வெளிப்பாட்டாலே ப்ரீத்ய ப்ரீதி ஸமமாய்‌, (கூடுநாள் தேடி) *மானேய் நோக்கியிலே ““திருவல்லவாழுறையும்‌ கோனாரை அடியேனடி கூடு வதென்று கொலோ”” (திருவா. 5 – 9 – 1) என்று அவன்‌ திருவடிகளைக் கிட்டும்‌ நாளை ப்ரார்த்தித்து (தாழ்த்ததுக்கு ஊடி) இப்படி ப்ரார்த்திக்கச்‌ செய்தேயும்‌ தாம்‌ தாழ்த்தவாறே *மின்னிடை மடவாரிலே ”போகு நம்பி’‘ (திருவா. 6 2 – 2) என்று ப்ரணய ரோஷத்தாலே ஊடி-(உசாத் துணையற்று) *வெள்ளைச் சுரி சங்கிலே ““என்னெஞ்சினாருமங்கே ஒழிந்தார்‌ ஆரைக்‌ கொண்டென் னுசாகோ”’ (திருவா. 7 – 3 – 4) என்று அபஹ்ருத சித்தையாகையாலே உசாத் துணையுமின்றிக்கே, (பகைமுகம்செய்ய) *ஏழையராவியிலே “கண்ணன்‌ கோளிழை வாண்முகமாய்க்‌ கொடியேனுயிர்‌ கொள்கின்றதே’‘ (திருவா. 7 – 7 – 8) என்று உரு வெளிப்பாட்டாலே பாதக வர்க்கங்களெல்லாம்‌ ஒருமுகமாய்‌ நலியத் தேட நில்லாதே, *நங்கள் வரிவளையிலே ”காலம் பல சென்றும்‌ காண்பதாணை உங்களோடெங்களிடையில்லை”’ (திருவா. 8 – 2 – 7) என்று அதிமாத்ர ப்ராவண்ய மாகாதென்‌று நிஷேதிக்கிற தோழிமாரையும் தாமரையும் அதிக்ரமித்து -புயக்கற்று –இன்னுயிர் சேவலிலே -இழை நல்ல வாக்கையும் பையவே புயக்கற்றது (திருவாய் -9-5-10) என்றும் முடிகையிலே வ்யவசிதையாய் (மாலையும் காலையும் பூசலிடுகிற ) மல்லிகை கமழ் தென்றலிலும் -வேய் மரு தோளிணையிலும் -சந்த்யா காலத்தில் கிருஷ்ணனைப் பசுக்களின் முற் கொழுந்தில் வரக் காணாமையாலும்-அக்காலத்தில் பாதக பதார்த்தங்களாலும் பார்த்து, “நீ பசுமேய்க்கப்போனால்‌ நலியக்கடவதான டாத, க பதார்த்தங்களும்‌ நோவு பட்டுக் கூப்பிட்டும் ப்ராத காலத்திலே கிருஷ்ணன் பசு மேய்க்க்கப் போனானாக அதி சங்கை பண்ணி கிருஷ்ணன் முகத்தைப் பார்த்து நீ பசு மேய்க்கப் போனால் நலியக் கடவதான பாதக பதார்த்தங்களும் நலியாநின்றது” என்று கூப்பிட்டும்‌, இப்படித் தலைமகள் பேச்சான பதினேழு திருவாய்மொழியிலும்‌ க்ரம ப்ராப்தி பற்றாதபடியான அதிமாத்ர ப்ராவண்ய கார்யமான ப்ராப்ய த்வரை தோன்றும்

    135-தோழிமார்‌ அன்னையர்‌ என்கிற பன்மை ரக்ஷகத்வாதி, பந்த வாத்ஸல்யாதி வ்யவஸாய புத்‌தி பேதத்தாலே.
    ஆனால்‌ தோழி என்றும்‌, தாய்‌ என்றும்‌ சொல்லுகிறது ஸம்பந்த ஜ்ஞாநத்தையும்‌ உபாயாத்‌யவஸாய ஜ்ஞாநத்தையுமாகில்‌ இவற்றினுடைய பன்மைக்கு தாத்பர்யம்‌ என்‌ என்னில்‌; அந்த ஸம்பந்த உபாயங்களினுடைய வித பேதங்களை விஷயீகரித்த ஜ்ஞாந வ்யவஸாயங்களினுடைய பேதத்தாலே சொல்லுகிறதென்கிறார்‌ (தோழிமார்‌ அன்னையர்‌ என்று தொடங்கி), ‘ஊரென் சொல்லிலென்‌ தோழிமீர்‌”’ (திருவா, 5 – 3 – 9), எங்னேயோ அன்னைமீர்காள்‌”’ (திருவா. 5 – 5 4 1), ”அன்னையரும்‌ தோழியரும்‌” (திருவா, 8 – 4-5), “ஏலமலர்க் குழலன்னைமீர்காள்‌”’ (திருவா. 8 – 2 – 3); ““என்னுடைத்‌ தோழியர்காள்‌”” (திருவா. 8 – 2 – 7) என்று தோழிமாரையும்‌, தாய்மாரையும்‌ பலவாகச் சொல்லுகிறது – ரக்ஷகத்வாதி,பந்த வாத்ஸல்யாதி வ்யவஸாய புத்‌தி பேதத்தாலே; ‘ரஷக ரக்ஷ்ய ஸம்பந்தம்‌, சேஷ சேஷி ஸம்பந்த,ம்‌, பித்ரு புத்ர ஸம்பந்தம்‌, பர்த்ரு பார்யா ஸம்பந்தம்‌, ஜ்ஞாத்ரு ஜ்ஜேய ஸம்பந்தம் ஸ்வ ஸ்வாமி ஸம்பந்தம்‌, ஸாரீர ஸரீரி ஸம்பந்தம்‌, ஆதார ஆதேய ஸ்ம்பந்தம்‌, நியந்த்ரு நியாம்ய ஸம்பந்தம் , போக்த்ரு போக்‌ய ஸம்பந்தம்‌’ என்று இவை முதலான ஸம்பந்தங்களை விஷயீகரித்த ஜ்ஞாநங்கள்‌ பலவாகையாலே அவற்றையும்‌, வாத்ஸல்யம்‌, ஸ்வாமித்வம்‌, ஸெளஸீல்யம்‌, ஸெளலப்யம்‌, ஜ்ஞாநம்‌, பக்தி, க்ருபை, ப்ராப்தி, பூர்த்தி என்கிற குண அநுஸந்தாநத்தாலே அந்த வ்யவஸாய புத்‌திகளும்‌ பலவாகையாலே பன்மையாகச்‌ சொல்லுகிறதென்கிறார்

    136-அபிலாஷா-சிந்தந-அநு ஸ்ம்ருதி-இச்சா -ருசி-பர- பரம பக்திகளிலே பேதை முதலான பருவம்‌ கொள்ளும்‌.
    தலைமகளுக்கும்‌ இந்த பக்தியினுடைய அவஸ்தா பேதங்களினாலே பேதை முதலான பருவங்கள்‌ உண்டென்கிறார்‌ (அபிலாஷை என்று தொடங்கி). அபிலாஷையாவது ப்ரதம தர்ஸநத்தில்‌ பிறக்கும்‌ ஆசை. சிந்தனையாவது – த்‌ருஷ்டமான விஷயத்தில்‌ உண்டான ஸ்மரணம்‌. அநு ஸ்ம்ருதியாவது – அந்த ஸ்மரணம்‌ இடை விடாமல்‌ நடக்கை. இச்சையாவது – அவ் விஷயத்தை அவஸ்யம்‌ அநுபவிக்க வேணுமென்கிற ஆசை. ருசியாவது – ரஸாந்தரத்தால்‌ மாற்ற வொண்ணாதபடி அந்த ஆசை முதிருகை. பரபக்தி யாவது – அந்த வஸ்துவினுடைய ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களே ஸூக துக்கங்களாகை. பரமபக்தி யாவது – அவ்வஸ்துவினுடைய விஸ்லேஷத்தில்‌ ஸத்தை கிடையாதொழிகை. ஆகையாலே இந்த அவஸ்தா பேதங்களினாலே பேதை முதலான்‌ பருவம்‌ கொள்ளக் கடவது என்கிறார்‌.

    137-மயில்‌ பிறை வில்‌ அம்பு முத்து பவளம்‌ செப்பு மின்‌ தேர்‌ அன்னம்‌ தெய்வவுரு விகாஸ ஸூத்‌தி, தாந்தி ஜ்ஞாநாநந்தாநுராக,.பக்த் யணுத்வ போக்‌யதா கதிகளை யுடைய அகமேனியின்‌ வகுப்பு.
    மேல்‌ அந்தத்‌ தலைமகளுக்குச்‌ சொல்லுகிற அவயவ வைலக்ஷண்யம்‌ இவ் வாத்மாவினுடைய ஜ்ஞாந விகாஸாதிகளாகக்‌ கடவதென்கிறார்‌ (மயில்‌ பிறை என்று தொடங்கி]. ““தோகைமாமயிலார்கள்‌”்‌ (திருவா. 6 – 2 – 2) என்று ஸ்த்ரீகளை மயில்‌ என்பது – அளகடாரத்தினுடைய விஸ்த்ருதியைப் பற்றவாகையாலே, ஆத்மாவினுடைய ஜ்ஞாந விகாஸத்தைச்‌ சொல்லுகிறது. ““பிறை யுடை வாணுதல்‌” (திருமோழி 2 – 9 – 9) என்று ஸ்தரீகளுடைய நெற்றியைப்‌ பிறையாகச்‌ சொல்லுகையாலே, அதினுடைய தாவள்யத்தையிட்டு அந்த ஜ்ஞாநத்தினுடைய ஸூத்‌தி யோகத்தைச்‌ சொல்லுகிறது. ““விற் புருவக் கொடி”‘ (திருவா. 6 – 6 – 6) என்று புருவத்தின்‌ வளைவாலே வில்லாகச்‌ சொல்லுகையாலே, அது கொண்டு ஜ்ஞாநத்தினுடைய தாந்தி ரூபதையைச்‌ சொல்லுகிறது. ”அம்பன்ன கண்ணாள்‌” (திருமொழி 6 – 8 – 6) என்று கண்ணை அம்பாகச்‌ சொல்லுகிறது – லக்ஷ்யபாதியாகையாலே, அத்தாலே விஷய க்‌ராஹியான ஜ்ஞாநத்தைச்‌ சொல்லுகிறது,
    முத்தன்ன வெண் முறுவலை முத்தாகச்‌ சொல்லுகிறது – அதினுடைய ஒளியையும்‌, நீர்மையையும்‌ இட்டாகையாலே, ““முத்ப்ரீதி ப்ரமதோ ஹர்ஷ
    ?” என்று அந்த ஜ்ஞாநத்தினுடைய ஆநந்த ரூபதையைச்‌ சொல்லுகிறது. “பவள வாயாள்‌”‘ (திருமொழி 4 – 8 – 1) என்று அதரத்தை ப்ரவாளமாகச்‌ சொல்லுகிறது – சிவப்பை யிட்டாகையாலே, பகவத்‌,விஷயத்தில்‌ அந்த ஜ்ஞாநத்தினுடைய அநுராகதையைச்‌ சொல்லுகிறது. “செப்பன்ன மென்முலை”” (திருப்பாவை 20) என்று முலைகளைச்‌ செப்பாகச்‌ சொல்லுகையாலே, ஸேஷிக்கு போக்‌யமாம்படி அந்த ஜ்ஞாநம்‌ பக்தி ரூபாபந்நமானமையைச்‌ சொல்லுகிறது. “மின்னனைய நுண் மருங்குல்‌”’ (திருமொழி 3 – 9 – 5) என்று இடையின்‌ நுண்மையையிட்டு மின்னாகச் சொல்லுகையாலே ஆத்மாவினுடைய அணுத்வம்‌ சொல்லுகிறது. ““தேரணங்கல்குள்‌” என்று நிதம்பத்தினுடைய விஸ்த்ருதியைச்‌ சொல்லுகையாலே ஆத்மாவினுடைய போக்‌யதையைச்‌ சொல்லுகிறது. “பெடையன்ன மென நடந்து” (திருமொழி 3 – 7 – 5), “தூவிசேரன்னமன்ன நடையாள்‌”’ (திருமொழி 3 – 7 – 9) என்று நடையை யிட்டு அன்னமாகச்‌ சொல்லுகையாலே, ஆத்மாவினுடைய ஸேஷத்வாநுரூபாநுஷ்டாநத்தைச்‌ சொல்லுகிறது.
    ஆக இத்தால்‌, “என்‌ தெய்வ வுருவில்‌ சிறுமான்‌”’ (திருவா. 4 – 4 – 2) என்று அப்ராக்ருத ஸ்வபாவமாய்‌, *“’அகமேனியொழியாமே” (திருவா. 9 – 7 – 10) என்று ஸர்வேஸ்வரனுக்கு அந்தரங்க, ஸரீரமான ஆத்மாவுக்கு அவயவ பூதமான ஜ்ஞாநத்தினுடைய பிதைகள்‌ என்கிறார் –

    138-சூழ்ச்சி அகற்றினீர்‌ என்னும் பழி, இணக்கி எங்ஙனே என்னும்‌ மேலெழுத்து, முன்னின்றாய்‌ இவளை நீரென்னும்‌ இருபடை மெய்க்‌ காட்டு, நீரென்னேயென்னு முடன்பாடு, இடையில்லை யென்னுமுதறுதல்‌, இருந்திருந்து நடந்தாளென்னும்‌ கொண்டாட்டம்‌ அவஸ்தா த்ரய வ்ருத்தி.
    இனி மேல் கீழ்ச் சொன்ன அவஸ்தா த்ரயத்தினுடைய வ்ருத்தியைச்‌ சொல்லுகிறது (சூழ்ச்சி அகற்றினீர்‌ என்று தொடங்கி). ‘“தோழிமார் பலர்‌ கொண்டு போய்ச் செய்த சூழ்ச்சியை யார்க்குரைக்கேன்‌”” (பெரியா. திரு. 3 – 7 – 4) என்று தாயார்‌ தோழிமார் மேலே பழியிட, * அமுத மென் மொழியாளை நீருமக்காசை யின்றியகற்றினீர்‌”” (திருவா. 6 – 5- 2) என்று தோழி தாய்மார் மேல்‌ பழியிட, ““இணக்கி எம்மை யெம்‌ தோழிமார்‌ விளையாடப்‌ போதுமின்‌ என்னப்போந்தோமை”‘ (திருவா. 6 – 2 – 8) என்றும்‌, ‘‘எங்ஙனேயோ அன்னைமீர்காளென்னை மூனிவது நீர்‌?” (திருவா. 5 – 5 – 1) என்றும்‌ தலைமகள்‌, “உங்களாலே யன்றோ எனக்கு இந்த ப்ராவண்யம்‌ உண்டாய்த்து‘ என்று பழி இரண்டுக்கும்‌ மேலெழுத்திட. (முன்னின்றாய்‌ இத்யாதி, – மெய்க்காட்டு) ”முன்னின்றாயென்று தோழிமார்களும்‌ அன்னையரும்‌ முனிதிர்‌”” (திருவா. 5 – 5 – 9) என்று தோழி தாய்மாரொடே கூடி நின்று தலைமகளைப் பொடிந்தும்‌, **தொலை வில்லி மங்கலம்‌ தொழுமிவளை நீரினி அன்னைமீர்‌ உமக்காசையில்லை விடுமினோ”? (திருவா. 6 – 5 – 1) என்று தோழி, தாய்மார்க்கு கார்யோபதேஸம்‌ பண்ணுவாரைப் போலே தலைமகளுக்கும்‌ ஸஹகரித்தும்‌ இப்படி(இருபடை மெய்க்காட்டு.)
    (நீரென்னேயென்னு முடன்பாடு) ““அன்னையரும்‌ தோழியரும்‌ நீரென்னே யென்னாதே நீளிரவும்‌ துஞ்சுவரால்‌”‘ (திருவா. 5 – 4 – 8) என்று தலைமகள்‌ தாய்மாரொடும்‌ தோழிமாரோகும்‌ உடன்பாடாக வார்த்தை சொல்ல; (இடை யில்லை யென்னு முதறுதல்‌) அவர்கள்‌, “நீ எங்கள் வார்த்தை கேட்கில்‌ மீளவமையும்‌’ என்ன, ”உங்களோடு எங்களிடையில்லையே”’ (திருவா. 8 – 2 – 7) என்று ‘நீங்கள்‌ இவ் விஷயத்தினின்றும்‌ மீட்கத் தேடில்‌ உங்களுக்கும்‌ எனக்கும்‌ ஒரு ஸம்ப,ந்தமில்லை” என்று அவர்களை அதிக்ரமிக்க, (இருந்திருந்து நடந்தாள்‌ என்னும்‌ கொண்டாட்டம்‌) ‘“இருந்திருந் தரவிந்தலோசன என்றென்றே தைந்திரங்குமே” (திருவா. 6 – 5 – 8) என்று தோழி கொண்டாட்டமும்‌, “நேரிழை நடந்தாள்‌ எம்மை ஒன்றும்‌ நினைத்திலளே”” (திருவா. 6 – 7 – 9) என்று தாயார்‌ கொண்டாட்டமுமான இவை அவஸ்தா த்ரய வ்ருத்தி.

    இத்தால்‌ இந்த வ்ருத்திகளினுடைய அவஸ்தா த்ரயத்துக்கும்‌ ஸ்வாபதேஸம்‌ – “சூழ்ச்சி அகற்றினீர்‌’ என்று அந்யோந்யம்‌ பழியிடுகிற வித்தால்‌ சேஷத்வ ஜ்ஞாநம்‌ ஸேஷ வ்ருத்தி பர்பந்தமா யல்லதிராமையாலே அந்த ஸம்பந்த ஜ்ஞாநம்‌ ப்ராப்ய ருசிக்கு ஹேது என்றும்‌, உபாயாத்‌யவஸாயம்‌ உபேய வைலக்ஷண்யத்தை முன்னிட்டுக் கொண்டல்லதிராமையாலே அந்த அத்‌யவஸாயம்‌ உபேய ருசிக்கு ஹேது வென்றும்‌, மேலெழுத்து என்று ப்ராப்ய த்வரை தன்னை நிரூபித்தாலும்‌ இது ஸம்பந்த உபாயங்களிரண்டாலும்‌ வந்ததென்று சொல்லுகிற வித்தாலும்‌, ஸம்பந்த ஜ்ஞாநமும்‌ உபாயாத்‌யவஸாயமும்‌ ப்ராப்ய த்வரைக்கு ஹேது வென்று அந்த ஸம்பந்த உபாயங்களிரண்டினுடையவும்‌ ப்ராதாந்யம்‌ தோற்றி நிற்கிறது.
    ப்ரதம தஸையில்‌ – வ்ருத்தி இருபடை மெய்க்காட்டென்கிற வித்தால்‌ ஸம்பந்த ஜ்ஞாநமானது ஸேஷத்வம்‌ ஸ்வரூபமான பின்பு அந்த ஸேஷி தானே வந்து விஷயிகரிக்கக்‌ கண்டிருக்கு மத்தனை யல்லது தான்‌ த்வரிக்கை ஸ்வரூப விருத்‌தம்‌ என்று உபாயாத்‌யவஸாயத்துக்கு ஸஹ்கரித்தும்‌, ஸேஷத்வம்‌ வ்ருத்தி பர்யந்தமாகையல்லது ஸித்‌தியாதென்று அந்த வ்ருத்தியில்‌ ருசியை விளைக்கையாலே ப்ராப்ய த்வரைக்கு ஸஹகரித்தும்‌, உடன்பாடென்கிற வித்தால்‌ ப்ராப்யம்‌ ஸம்பந்தாநுகுணமாகவும்‌ வேண்டுகையாலே ப்ராப்ய த்வரை இவை யிரண்டும்‌ கூடி நின்ற படி சொல்லிற்று.
    ஆக இருபடை மெய்க்காட்டு உடன்பாடென்கிற இரண்டாலும்‌ ஸம்பந்த ஜ்ஞாநம்‌ உபாய வ்யவஸாயம்‌ உபேய ருசி என்கிற இவற்றில்‌ சேர்ந்து நின்றது மத்‌யம தஸையில்‌ வ்ருத்தி-உதறுதல்‌ கொண்டாட்டம்‌ என்கிற இரண்டாலும்‌ ப்ராப்ய த்வரையானது ஸம்பந்த உபாயங்களை அதிக்ரமிக்க, பலதஸையில்‌ ஸ்வரூபம்‌ ப்ராப்யாநுகு,ணம்‌ என்னுமிடத்தையும்‌, ‘“எம்மை யொன்றும்‌ நினைத்திலளே”” (திருவா. 6 – 7 – 9) என்று உபாயாத்‌யவஸாய ஸத்‌பாவம்‌ இல்லை யென்னுமிடத்தையும்‌ சொல்லுகிறது, சரம தஸையில்‌ வ்ருத்தி; ஆக அவஸ்த_த்ரய வ்ருத்தி –

    139-தாயார்‌, ஏதலர்‌ உற்றார்கள்‌ என்னும்‌ ஸாத்‌ய ஸித்‌த ஸாதந நிஷ்டரை; மகள்‌, நம்முடை ஏதலர்‌ யாமுடைத் துணை என்னும்‌ ஸித்‌த ஸாதந ஸாத்‌ய பரரை.
    (தாயார்‌ ஏதலர்‌ இத்யாதி,) தாயாரான உபாயாத்‌யவஸாய தஸையில்‌ ஸ்வரூபம்‌ ப்ராப்யாநுகு,ணம்‌ என்னுமிடத்தையும்‌, ”எம்மை யொன்றும்‌ நினைத்திலளே ” (திருவா. 6-9- 7) என்று உடாயாத்‌யவஸாய ஸத்‌ பாவமில்லை என்னுமிடத்தையும்‌ சொல்லுகிறது ஆரை என்னில்‌, ஸித்‌த ஸாதநத்துக்கு எதிர்த் தட்டான உபாயாந்தர நிஷ்டரையும்‌, அநுகூலரான ஸித்‌த ஸாதந நிஷ்டரையும்‌ சொல்லுகிறது. (மகள்‌ நம்முடை ஏதலர்‌ யாமுடைத் துணை என்னும்‌) மகள்‌ என்று சொல்லுகிற ப்ராப்ய த்வரா தஸையில்‌ “நம்முடை ஏதலர்‌ முன்பு நாணி?” (திருவா. 8 – 2 – 1) என்று அந்த விரோதிகளாகவும்‌,யாமுடைத் துணையென்னும்‌ தோழிமாரும்‌”’ (திருவா. 9 – 9 – 5) என்று தன்னோடு ஸம ஸுக துக்கிகளான பந்துக்களாகவும்‌ சொல்லுகிறது ஆரை என்னில்‌, தன்னைப் போலே பகவத்‌ விஷயமொன்றிலும்‌ இழிந்திருக்கச் செய்தேயும்‌ அத்தை ப்ராப்யம்‌ என்று கொள்ளாதே ப்ராபகம்‌ என்று கொள்ளுகிற ஸித்‌த ஸாதந நிஷ்டரையும்‌, தன்னைப்‌ போலே ப்ராப்யமென்றிருக்கிற ஸாத்‌ய பரரையும்‌ சொல்லுகிறது –

    140-நாலயலார்‌ அயற்சேரியார்‌ உபாய சதுஷ்டயாந்தர்யாமித்வ பரர்‌.
    (நாலயலார்‌ இத்யாதி, அந்தர்யாமித்வபரர்‌) ”நாலயலாருமறிந்தொழிந்தார்‌] (
    நா.தி.12 – 2) என்றும்‌, “*அயற்சேரியுள்ளாருமெல்லே” (திருவா. 6 – 7 – 4) என்றும்‌ நாலசலாகவும்‌, அயல் தெருவாகவும்‌ சொல்லுகிறது ஆரை என்னில்‌, கர்ம ஜ்ஞாந பக்தி ப்ரபத்தி என்கிற நான்கு உபாய நிஷ்டரையும்‌, பரத்வம்‌ முதலான மற்றை நாலிடத்திலும்‌ உறவற்று கேவலம்‌ ஸ்வரூபாந்தர்யாமியளவிலே உறைத்திருக்குமவர்களையும்‌ சொல்லுகிறது –

    141-கீழை மேலை வடக்கிலவை புறம்பாகத்‌ தன்பற்றுள்ளசல்‌.
    ஆனால்‌ ப்ரபத்தி நிஷ்டரையும்‌ அசலாகச்‌ சொல்லுமோ என்னில்‌, (கீழை மேலை வடக்கிலவை புறம்பாகத்‌ தன் பற்றுள்ளசல்‌) என்கிறார்‌. ““கீழையகத்துத் தயிர் கடைய”* (பெரு.தி. 6 – 2) இத்யாதி யாலே சொல்லுகிற கர்ம நிஷ்டரையும்‌, ‘“மேலையகத்து நங்காய்‌ வந்து காண்மின்கள்‌” (திருமொழி 10 – 8 – 2) என்று சொல்லுகிற ஜ்ஞாந யோக நிஷ்டரையும்‌, ““வடக்கிலகம்‌ புக்கிருந்து மின் போல்‌ நுண்ணிடையாளொரு கன்னியை வேற்றுருவம்‌ செய்து வைத்த அன்பா” (பெரியா. தி. 3 – 1 – 2) என்றும்‌ சொல்லுகிற பக்தி யோக நிஷ்டரர்க்கும்‌ ஸித்‌த ஸாதந நிஷ்டரர்க்குப்‌ புறவாசலாகையாலும்‌ இவ் விஷயத்திலே இழிந்திருக்கச் செய்தேயும்‌ தன் பற்றை உபாயமென்றிருக்குமவர்கள்‌ உள்ளசலாயிருக்கையாலும்‌ சொல்லுகிறது

    142-ஊரார்‌ நாட்டார்‌ உலகர்‌ கேவல ஐஸ்வர்ய காம ஸ்வதந்தரர்‌.
    (ஊரார்‌ நாட்டார்‌ உலகர்‌) ”ஊரும்‌ நாடுமுலகமும்‌”
    ‘ (திருவா, 6 – 7 – 2) என்றும்‌, “ஊரவர்‌ கவ்வை” (திருவா, 8 – 3 – 4) என்றும்‌, ”நாட்டாரோடியல் வொழிந்து ”* (திருவா, 10 – 6 2) என்றும்‌, ““எங்கள் கண் முகப்பே உலகர்கள்‌”‘ (திருவா. 9 – 2 8) என்றும்‌ சொல்லுகிற இது – ஊரார்‌ என்று கேவலரையும்‌, நாட்டார்‌ என்று புத்ர பங்வந்நாதிகளான ஐஹலெளகிக ஐஸ்வர்ய காமரையும்‌, உலகத்தவர்‌ என்று ஸ்வர்க்காதி பர லோக ஐஸ்வர்ய காமரான ஸ்வதந்த்ரரையும்‌ சொல்லுகிறது.

    143-இறுகலிறப்புக்கும்‌ இறந்தால்‌ தங்குமூரொக்குமே.
    கேவலனையும்‌ ஓரூராகச்‌ சொல்லுவானென்‌ என்னில்‌, (இறுகலிறப்புக்கும்‌ இறந்தால்‌ தங்குமூரொக்குமே) ““எல்லாம் விட்ட இறுகலிறப்பு’” (திருவா. 4 – 1 – 10) என்று ஐஸ்வர்யத்தையும்‌ -பகவதநுபவத்தையும்‌ விட்டு ஆத்மாநுபவ மாத்ரமான ஸங்கோசத்தை மோக்ஷமென்று சொல்லுகிற கேவலனுக்கு அவ் வநுபவம்‌ நித்யமாம் போது “ஜரா மரண மோக்ஷாய”‘ (கீதை) என்று அதுக்கு விரோதி யான ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களுக்கு கர்மீ பவிக்கைக் கடியான ப்ரக்ருதி ப்ராக்ருத ஸம்பந்தம்‌ அற வேண்டுகையாலே ““யோகிநாமம்ருதம்‌ ஸ்தாநம்‌ ஸ்வாத்ம ஸந்தோஷ காரிணாம்‌”” என்கிறபடியே “இறந்தால்‌ தங்குமூரண்டமே கண்டு கொண்மின்‌”” (திருமொழி 10 – 2 – 10) என்று அவனுக்கு வஸ்தவ்யம்‌ தேஸ விஸேஷமாக வேண்டுகையாலே ஊர்‌ என்கிறார் –

    144-சிறு சீரார்‌ சுளகுகள்‌ உபய விவேக பரிகரம்‌
    (சிறு சீரார்‌ சுளகுகள்‌ உபய விவேகபரிகரம்‌) ”சிறு சுளகும்‌ மணலுங் கொண்டு”’
    (நா.தி. 2 – 8) என்று சிறு சுளகாவது – பெரு மணலையும்‌ நுண் மணலையும்‌ பிரிப்பதொன்றாகையாலே தேஹாத்ம விவேகத்துக்கு பரிகரமான ப்ரமாணம்‌, ”சீரார் சுளகில்‌ சில நெல்‌ பிடித்தெறியா” (சிறியதிரு மடல்‌) என்று தொடங்கி ““பேராயிரமுடையானென்றாள்‌”’ என்று இவளுக்கு இவ் வ்யாமோஹத்தை விளைத்தான்‌ ஸர்வேஸ்வரனாகையாலே, சீரார்‌ சுளகென்பது ஆத்ம பரமாத்ம விவேகத்துக்கு பரிகரமாய்ப்‌ போருகிற ப்ரமாணம் –

    145-மாலை கங்குல்‌ காலை பகல்‌ ரஜஸ்‌ தமஸ்‌ ஸத்த்வ ஸூத்‌த-ஸத்தவ ஜ்ஞாநங்கள்‌.
    (மாலை கங்குல்‌ இத்யாதி, – ரஜஸ்‌ தமஸ்‌ ஸத்த்வ ஸாத்‌த ஸத்தவ ஜ்ஞாநங்கள்‌) “மாலையும்‌ வந்தது ”
    (திருவா. 9 – 9 – 10) என்றும்‌, ”செங்களம்பற்றி நின்றெள்கு புன் மாலை ”? (திருவிரு. 77) என்றும்‌ சொல்லுகையாலே, மாலையாவது – ஸந்த்‌யை; அது ராகோத்தரமா யிருப்ப தொன்றாகையாலே ராஜஸ ஜ்ஞாநம்‌, “கங்குல்‌ நாழிகை ஊழியில்‌” (திருமொழி 9- 5 – 3) என்றும்‌, ”செல்கின்ற கங்குல்வாய்‌”” (திருவா. 5 – 4 – 10) என்றும்‌ கங்குல்‌ என்பது – மத்‌ய ராத்ரி; அது தமோ பூதமாயிருக்கையாலே தாமஸ ஜ்ஞாதம்‌. ““காலையெழுந்திருந்து” (நா.தி. 9 – 8) என்று காலையாவது – ப்ராத காலம்‌; அது ப்‌ராஹ்ம முஹுர்த்தமாய்‌ ஸத்த்வோத்தர காலமாகையாலே ஸாத்த்விக ஜ்ஞாநம்‌. ““பகல் கண்டேன்‌ நாரணனைக் கண்டேன்‌”‘ (இ.திரு. 71) என்று, பகலாவது – ஸகல பதாார்த்தங்களையும்‌ யதா தர்ஸநம்‌ பண்ணுவிப்பதொரு காலமாகையாலே குண விக்‌ரஹ விபூதி விஸிஷ்டனான ஸர்வேஸ்வரனை யதாவாக ஸாக்ஷாத் கரிக்கிற ஸூத்‌த ஸத்த்வ ஜ்ஞாநம்‌. இத்தால்‌ அந்யதா ஜ்ஞாநம்‌, விபரீத ஜ்ஞாதம்‌, யதாஜ்ஞாதம்‌, தத் பலமான ஸாக்ஷாத்கார ஜ்ஞாநம்‌ என்கிற இவற்றைச்‌ சொல்லுகிறது –

    146-நிலா முற்றம்‌ ப்ரஜ்ஞா ப்ராஸாத மென்னு மெல்லை நிலம்‌.
    (நிலா முற்றமித்யாதி, – எல்லை நிலம்‌) *“நீணிலா முற்றத்து நின்றிவள்‌ நோக்கினாள்‌”
    (திருமொழி 8 – 2 – 2) என்று நிலா முற்றமாகச்‌ சொல்லுகிறது – “’ப்ரஜ்ஞா ப்ராஸாத, மாருஹ்யா ஸோச்யஸ் ஸோசகாந்‌ ஜநாந்‌ ! பூமிஸ்தாநிவ ஸைலஸ்தோ ஹ்யஜ்ஞாந்‌ ப்ராஜ்ஞ ப்ரபஸ்யதி’‘ என்று சொல்லுகிறபடியே “காணுமோ கண்ண புரமென்று ‘காட்டினாள்‌”’ (திருமொழி 8 – 2 – 2) என்று சொல்லுகையாலே ததீயரை ப்ராப்யர்‌ என்கிற எல்லை நிலமான புருஷார்த்த ஜ்ஞாநத்தை என்கிறார் –

    147-கலை வளை அஹம்‌ மம க்ருதிகள்‌.
    (கலை வளை என்று தொடங்கி – மம க்ருதிகள்‌) ‘“கை வளையும்‌ மேகலையும்‌ காணேன்‌ கண்டேன்‌ கனமகரக் குழை யிரண்டும்‌ நான்கு தோளும்‌”’
    (திருநெடு. 22) என்றும்‌, ““கலையாளாவகலல்குல்‌ கன வளையும்‌ கையாளா என்செய்கேன் நான்‌” (திருமொழி 5 – 5 – 2) என்றும்‌ கலை வளையாகச்‌ சொல்லுகிறது – பகவதநுபவ விரோதியான அஹங்கார மமகாரங்களை-

    148-பட்டம்‌ சூடகமாவன பராவர குருக்கள்‌ பூட்டும்‌ ஆத்ம பூஷணங்கள்‌.
    (பட்டம்‌ சூடகமாவன – பூஷணங்கள்‌) ”பட்டங்கட்டிப் பொற்றோடு பெய்திவள்‌ பாடகமும்‌ சிலம்பும்‌ இட்டமாக வளர்த்து”
    (பெரியா. திரு. 3- 7 – 6) என்றும்‌, “சூடகமே தோள் வளையே” (திருப்பாவை 27) என்று தொடங்கி இவற்றாலே சொல்லுகிற ஆபரணங்களாவன – ‘“க்ருஷ்ணாங்கரி துளஸீ மெளளி: பட்டம்‌ க்ருஷ்ணாபிவந்தநம்‌ ! குண்டலே க்ருஷ்ண சரித ஸ்ரவணம்‌ கங்கணோஞ்ஜலி:” என்கிறபடியே ப்ரதமத்திலே இவளை அங்கீகரித்த ஆசார்யன்‌ உண்டாக்குமவை. இவ் வாத்மாவுக்கு அலங்காரமா யிருக்கிற நாம ரூபங்களும்‌, பகவத்‌ வந்தநாதிகளும்‌, பின்பு அவ்வாசார்ய வைபவத்தை உணர்த்தினவன்‌ உண்டாக்கின ஸேஷத்வ ஜ்ஞாநாதிகளும்‌ என்கிற இவை –

    149-பந்து கழல்‌ பாவை குழமணன்‌ யாழ்‌ தென்றல்‌ மதியம்‌ அடிசில்‌ சாந்தம்‌ பூண்‌ அகில்‌ சிற்றில்‌ தூதை முதலாவன குண த்ரய விசித்ர கர்ம ஸுூத்ரத்தாலே கட்டி லீலையாக ப்ரேரிக்க விழுந்தெழுந்தும்‌ சுழன்‌றுழன்றும்‌ பறிபட்டும்‌ அற்பசாரமாமவையுமாய்‌, மதீயமென்னில்‌ விட்டகலவும்‌ ததீயமென்னில்‌ இகழ்வறவும்‌ முனிவதும்‌ இக் காலம்‌ ஈதோ என்னப்படும்‌ பொங்கைம்புலனில்‌ போக்‌யாதி ஸமூஹம்‌.
    (பந்து கழல்‌ இத்யாதி, – போக்‌ யாதி, முதலானவை] போக உபகரணமாகவும்‌ சொல்லப்படுகிறவற்றுக்கு ஸ்வாபதேஸம்‌ அருளிச் செய்கிறார்‌. ”பந்தும்‌ கழலும்‌ தந்து போகு நம்பீ”: (திருவா. 6 – 2 – 1) என்று பந்து கழல்‌ என்பது – போக ஸ்தாநமாகிற ஸ்தூல ஸூக்ஷ்ம ஸரீரங்களை- ““கன்மமன்றெங்கள்‌ கையில்‌ பாவை பறிப்பது?” (திருவா. 6 – 2- 7) என்றும்‌, ”குழகி யெங்கள்‌ குழமணன் கொண்டு”” (திருவா. 6 – 2 – 6) என்றும்‌ சொல்லுகையாலே பாவை குழமணன்‌ என்பது – போக்த்ரு வர்க்கமான ஸ்த்ரீ புருஷ விபாகத்தை. ““சீருற்ற அகில் புகை யாழ்‌ நரம்பு” (திருவா. 9 – 9- 7) என்றும்‌, “தைவந்த தண் தென்றல்‌’” (திருவா. 5 – 4 – 8) என்றும்‌, ‘“மேவு தண் மதியம்‌” (திருவா. 9 – 9 – 4)-என்றும்‌, “இன்னடிசிலொடு பாலமுதூட்டி ”’ (நா.தி. 5 – 5) என்றும்‌, “சாந்தமும்‌” பூணும்‌ சந்தனக் குழம்பும்‌”” (திருமொழி 2 – 7 – 3) என்றும்‌ சொல்லுகிற யாழ்‌ தென்றல்‌ மதியம்‌ அடிசில்‌ சாந்தம்‌ பூண்‌ அகில்‌ என்கிறவை ஸப்‌தாதிகளான போக்‌யங்கள்‌. சிற்றில்‌ ‘ என்பது – போக ஸ்தாநம்‌, தூதை என்பது – பதார்த்தங்களை இட்டு வைப்பதொன்‌றாகையாலே போக உபகரணங்களுக்கு உப லக்ஷணம்‌,
    (குண த்ரய விசித்ர கர்ம ஸூத்ரத்தாலே கட்டி)
    பந்தானது – வெண்ணூல்‌ செந்நூல்‌ கருநூலாலே கட்டியிருப்ப தொன்றாகையாலே, ப்ரக்ருதியும்‌, ‘‘லோஹித ஸுக்ல க்ருஷ்ணாம்‌”’ (தை.௨..) என்று ஸத்த்வ ரஜஸ் தமஸ்ஸூக்களாலே விசித்ரமாய்‌. “த்வம்‌ ந்யஞ்சத்‌ பீருதஞ்சத்‌, பிர் கர்ம ஸூத்ரோபபாதி,தைச | ஹரே விஹரஸி க்ரீடா கந்து, கைரிவ வஸ்துபி?”’ என்கிறபடியே கர்ம ஸூத்ரத்தாலே கட்டி. (வீலையாக ப்ரேரிக்க விழுந்‌தெழுந்தும்‌ சுழன்றுழன்றும்‌) ““அஜ்ஞோ ஜந்துர நீஸோய மாத்மநஸ்ஸுக துக்கயோ ச | ஈஸ்வர ப்ரேரிதோ கச்சேத்‌ ஸ்வர்க்கம்‌ வா ஸ்வ ப்‌ரமேவ வா’” என்கிறபடியே அஜ்ஞனாய்‌ அஸக்தனா யிருக்கிற இவன்‌ கர்மாநுகுணமாக ஈஸ்வரன்‌ ப்ரேரிக்க, ்‌ யமாலய மஹாஸூலே மாதுர் ஜடர தோல்பதா ! யாதா யாத ஸஹஸ்ராணாம்‌ முநே ஜீவஸ்ய ஸாதநம்‌ 1! க்வசித் கதஈசித் ஸ்வர்க்கஸ்ய புநாபதந துர்கதோ ‘‘ என்கிறபடியே ஸ்வாக்க, -நரக-கர்ப்பங்களிலே தட்டித் திரிந்து பறிபட்டு, ““பந்து பறித்து”” என்கிறபடியே ஈஸ்வரன்‌ தன்னுடைய போக விரோதி, என்று விடுவிக்க விட்டும்‌.
    (அற்ப சாரமாமவையுமாய்‌) ““அற்ப சாரங்களவை சுவைத் தகன்று ஓழிந்தேன்‌”’ (திருவா. 3 – 2- 6) என்கிறபடியே ஸப்‌தாதிகள்‌ பகவத்‌ விஷயத்தினின்றும்‌ அகற்றுமதொழியத்‌ தன் பக்கல்‌ புஜிக்கலாவ தொன்றில்லாதபடி அல்ப ஸாரங்களாய்‌. (மதீயமென்னில்‌ விட்டகலவும்‌) இவற்றை பகவதீயத்வாகார மொழிய மதீயமென்று பார்த்த போது “சிற்றில்‌ மென் பூவையும்‌ விட்டகன்ற செழுங்கோதை”” (திருமொழி 3 – 7 – 8) என்கிற படியே த்யாஜ்யங்களாய்‌. (ததீயமென்னில்‌ இகழ்வறவும்‌) ததீயத்வாகாரத்தாலே கண்ட போது ““இகழ்விலிவ்வனைத்துமென்கொ?” (திருவா. 3 – 4 – 1) என்கிறபடியே கட்டடங்க உபாதேயங்களாயும்‌.
    (முனிவதுமிக்காலமீதோ என்னப்படும்‌) “அன்னை முனிவதும்‌ அன்றிலின்‌ குரலீர்வதும்‌ இத்யாதி, (திருமொழி 11 – 2 – 5), இக்காலமிவ்வூர்ப் பனிப்பியல்வெல்லாம்‌ தவிர்ந்தெரி வீசும்‌” (திருவிரு. 5) என்கிறபடியே அவனை யொழியக் கண்டபோது ப்ரதிகூலங்களாயும்‌, ““அவ்வாடை ஈதோ வந்து தண்ணென்றதே”” (திருவிரு. 27) என்று அவனோடே சேர்த்துக் கண்ட போது அநுகூலங்களாயுமிருக்கிற. (பொங்கைம் புலனில்‌ போக்‌யாதி ஸமூஹம்‌) பொங்கைம்புலன்‌ என்கிற பாட்டிற் சொல்லுகிற போக்‌ய-போக்த்ரு வர்க்க, -போக உபகரண-போக ஸ்தாநங்களைச்‌ சொல்லுகிறதென்கிறார்‌.

    | இரண்டாம்‌ ப்ரகரணம்‌ முற்றிற்று

    ————————————-

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்‌ அருளிச் செய்த ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌-ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ அருளிச்செய்த வ்யாக்‌யாநத்துடன்‌-முதல்‌ ப்ரகரணம்‌-

    August 3, 2025

    எம்பெருமானின் விசேஷம் அவதாரங்களில் கர்த்தம பிரஜாபதியின் திருமடந்தையான தேவர் ஹூதிக்கு குமாரராய்‌ அவதரித்தார்‌ கபில மஹரிஷி. ஸாங்க்யம்‌ என்கிற ஞான தர்ஸனத்தை தம்‌ தாய்க்கு உபதேஸித்து, அவளுக்கு தேஹாத்ம விவேகத்தை உண்டாக்கினார்‌ இவர்‌. இவரின்‌ கர்தம ஆஸ்ரமம்‌ ஹிமய மலையின்‌ அருகிலே உள்ளது. இவர்க்குப்‌ பல ஸிஷ்யர்கள்‌ உண்டு. அவர்களுள்‌ ப்ரதான ஸிஷ்யர்‌ ஆஸூரி மஹரிஷி. ஆஸூரி மஹரிஷியின்‌ ஸிஷ்யர்‌ பஞ்சயிகாசாரியார்‌ என்று இவரின்‌ இந்த வரலாற்றை கூறுகிறது மஹாபாரதம்‌; ஆஸூரி என்று வடமொழியில்‌ கடுகுக்குப்‌ பெயராகும்‌. சாணக்யன்‌ தகப்பனார்‌ சணகர்‌ (என்றால்‌ கடலை), பூர்வ காலத்தில்‌ இப்படி மலை, கொடி, தான்யம்‌ இத்யாதிகளை பேர்‌ இடும்படி வழக்கம்‌ ஸ்ம்ருதி இதிஹாஸங்களில்‌ காணலாம்‌. ஆஸூரி முனி பாஞ்சராத்ர அநுஷ்டானம்‌ அவலம்பித்து வந்தவர்‌ என்றும்‌ காணலாம்‌. பாஞ்சராத்ரிகள்‌ ஸிகை, யக்ஞோபவீதம்‌, வைஷ்ணவாசரணம்‌ உள்ளவர்கள்‌. ஆகையால்‌ ஆஸூரி வைஷ்ணவர்‌.
    ஆஸுரி வம்மாத்திற்கு கோத்ரம்‌ ஹாரீதம்‌ (ஒரு பக்ஷி) இல்லை ஹரிதம்‌ (என்றால்‌ பச்சை). இரண்டையும்‌ சேர்த்து பச்சைக் குருவி என்று சொல்லலாம்‌. ஹாரீத கோத்ரத்துக்கு ப்ரவரர்கள்‌ ஆங்கிரஸர்‌, அம்பரீ ஷர்‌, யெளவநாஸ்வர்‌. ஆஸரி ஹாரீத கோத்ரம்‌ ஆபஸ்தம்ப ஸூத்ரம்‌, க்ருஷ்ண யஜுர்‌ வேதம்‌. ஆங்கிரஸ்‌ என்கிற ப்ரஜாபதி சதுர்முகனின்‌ மாநஸ புத்ரர்களில்‌ ஒருவர்‌. ப்ருகு, அங்கிரஸ்‌, மரீசி, அத்ரி இவர்கள்‌ ஒரு கூட்டம்‌; சித்ரஸிகண்டி என்று பேர்‌. இவர்கள்‌ ப்ராச்யர்கள்‌.
    அம்பரீஷன்‌ க்ஷத்ரியன்‌. யெளவநாஸ்வன்‌ அவரின்‌ குமாரர்‌ மாந்தாதா. இவர்‌ இக்ஷவாகு ஸூர்ய வம்மத்தில்‌ பெரிய ராஜாவாய்‌ பூமியை ஆண்டவர்‌. ஹாரீத கோத்ரம்‌ க்ஷத்ரியம்‌ கலந்த ப்ராம்ஹண வம்ஸம்‌. ஹாரீதர்‌ பூத புரியில்‌ அநந்த தீர்த்தத்தில்‌ காயத்ரீ யோகத்தால்‌ ப்ராஹ்மண்யம்‌ பெற்றார்‌. இந்த விசாரத்தை பூத புரி மாஹாத்மியத்தில்‌ காணலாம்‌. இந்த வம்மத்தில்‌ ஆஸூரி கேஸவாசாரியர்‌ இந்த பூத புரிக்கு ராஜா, யதிராஜர் என்று கொண்டாடும்படியாய்‌ ஸ்வாமி ராமாநுஜாசாரியர்‌ இந்தக்‌ குலத்தில்‌ இவரது திருக் குமாரராய்‌ அவதரித்தார்‌. கருடவாஹந பண்‌டிதரின் திவ்ய ஸுரி சரித்திரத்தில்‌ காணலாம்‌. வடுகநம்பிகள்‌ கூறியபடி எம்பெருமானாருக்கு இஷ்ட தெய்வம்‌ காஞ்சி தேவப்பெருமாள் -இவர் தான் இவரின்‌ நித்ய ஆராதனப்‌ பெருமாள்‌. எம்மான்‌ பெம்மான்‌ என்றால்‌ பெருமாள்‌ என்றும்‌ காஞ்சி தேவராஜனைக்‌ குறிக்கும்‌. எம்பெருமானாருக்கு அநுஜரின்‌ பேர்‌ ஆஸுூரிப் பெருமாள்‌ என்று ஸ்ரீராமாநுஜ திவ்ய சரிதத்தில்‌ பிள்ளைலோகம்‌ ஜீயர்‌ விளக்கியுள்ளார்‌. எம்பெருமானாருக்கு அவதரித்த யமளரின்‌ பேர்‌ எம்பெருமான்‌ மற்றும்‌ பெருமாள என்று நிஸ்சயித்தார்‌. இருவர்‌ குமாரரில்‌ ஆஸூரிப் பெருமாள்‌ என்று இரண்டாவது குமாரர்‌ பின்பு ராமாநுஜரை ஆஸ்ரயித்து மேலே எம்பெருமானாரால்‌ -74 ஸிம்ஹாஸநாதிபதிகளில்‌ ஒருவராய்‌ நியமிக்கப்பட்டு. கூரத்தாழ்வனிடம்‌ அடிபணிந்து ஸகல ஸாஸ்த்ர ஸம்ப்ரதாயங்களையும்‌ கற்றார்‌ என்பது: இதே வம்ஸத்தில்‌ மேலே அவதரித்த ஆஸுூரி தேவராஜர்‌ என்கிற ஆயி ஜநந்யாசார்யரின்‌ ஆயி அந்தாதி-ஆயி ப்ரபத்தியில்‌ மாமுநிகளாலும்‌ அவரின்‌ பேரன்‌ ஜீயர்‌ நாயனாராலும்‌ அநுக்ரஹிக்கப்‌ பட்டிருக்கிறதைக்‌ காணலாம் அதில்‌ முதல்‌ இரண்டு ஸ்லோகத்தால்‌ ஆஸூரிப்பெருமாள்‌ வைபவததைக் கூறியுள்ளார்‌.

    ஆஸூரியிலவதரித்த இராமாநுசர்க்‌ கிருவர்‌ தாமாய்‌
    கூசாத நிலையொன்னில்‌ தாய்வயிற்றில்‌ பிறந்தவராய்‌
    மாசாத கூரேசர்‌ குருவருடன்‌ சேர்த்து வைக்க
    ஆஸூரிப்‌ பெருமாள் தாம்‌ ஒருவராம்‌ இராமாநுசர்க்கே (1)

    இராமாநுசர்க்கே ஸரணாம்‌ எழுபத்து நால்வர்‌ தன்னுள்‌
    இராப்பகலென்னாதே தன் குருவைச்‌ சிந்தித்தேத்தி
    இராகமனைத்தையும்‌ தொலைத்து விட்டுப்‌ பெருமாளென்னும்‌
    இராகவனோடெம்‌ பெருமாள்‌ எதுகிரியைச்‌ சென்றார்தாமே (3)

    இவருக்கு ஆஸூரிப்பெருமாள்‌. ஆஸுூரிதேவர்‌, புண்டரீகாக்ஷர்‌ என்றும்‌ திருநாமம்‌ உண்டு. இவர்‌ எம்பெருமானாரிடம்‌ ஆக்ஞை பெற்று திருநாராயணபுரத்துக்கு எழுந்தருளினார்‌. இவரின்‌ பெளத்ரர்‌ ஆஸூரி ஸ்ரீநிவாஸாசாரியர்‌, இவரின்‌ பெளத்ரர்‌ ஆஸூரி லக்ஷமணாசாரியர்‌. இவரின்‌ குமாரர் தான்‌ ஆஸூரி தேவராஜர்‌ என்னும்‌ மேலே திருநாரணன்‌ இவரை ஆயி ஜனனி என்று அபிமாநித்து, இவருக்கு ஆயி ஜநந்யாசாரியர்‌ என்று பேர்‌ ஆயிற்று. இவர்‌ அருளிச் செய்த பல ப்ரபந்தங்கள்‌ மற்றும்‌ வ்யாக்யானங்களில்‌ ஒன்று த்ராவிட ப்ரஹ்ம ஸூத்ரம்‌ என்கிற ஆசார்ய ஹ்ருதயத்துக்கு முதல்‌ வ்யாக்யானம்‌. மேற்கொண்டு, இவர்‌ ஆசார்ய ஹ்ருதயத்தின்‌ ஸகல அர்த்தத்தையும்‌ ஸ்வாமி மணவாளமாமுனிகளுக்கு ஸாதித்தார்‌ என்று பிள்ளைலோகம்‌ ஜீயரின்‌ யதீந்த்ரப்ரவண ப்ராபவத்தில்‌ காணலாம்‌. எம்பெருமானாரின்‌ புநராவதாரமான ஸ்வாமி மணவாள மாமுனிகளுக்கு ஆசார்யர்‌ என்கிற விருதை அங்கீகரிக்காமல்‌ அவரை குருவாக அடைய அவரிடம்‌ ஸந்யாஸ தீக்ஷை பெற்று அவரை ஸந்யாஸதீக்ஷா குருவாய்‌ அடைந்தார்‌.

    ஐநநயாசார்யரது திருவம்மாத்தின்‌ மூலபுருஷர்‌ பகவத்‌ ராமாநுஜருடைய விடப்பட்ட பத்நியின்‌ கர்பத்தில்‌ பிறந்த எம்மான்‌, பெம்மான்‌ என்ற இரட்டைக்‌ குழந்தைகளில்‌ இரண்டாம்‌ பிள்ளையான பெம்மான்‌ ஆஸுரிப்பெருமாள்‌. ஆயிஸ்வாமிக்கு ஈடு வ்யாக்‌,யாந, ரஹஸ்யங்களுக்கு ஆசார்யர்‌ மேல் நாடாச்சான்‌ பிள்ளை என்று பெயர்‌ பெற்ற தே,வராஜ நாலூராச்சான் பிள்ளை. ஆசார்யஹ்ருத,யம்‌ என்ற திராவிட ப்‌, ரஹ்ம ஸுத்ரத்திற்கு ஆசார்யர்‌ கிடாம்பி நாயனார்‌ வரத, வேங்கட ஸூரி என்ற திருமலை அய்யங்கார்‌; இவருக்குப்‌ பெத்தார்‌ என்று திருநாமம்‌. இவர்‌ ஆசார்ய ஹ்ருத,ய பரம்பரையில்‌ இரண்டாம்‌ பெத்தார்‌. ஆயி ஸ்வாமிக்கு ஸந்யாஸ தீக்ஷா கு,ரு மணவாளமாமுனிகள்‌. இவர்‌ ‘கல்யாணி நாச்சியார்‌’ என்ற திருநாராயணபுரத்‌ தாயாரின்‌ திருத்தேரின்‌ அம்ஸம்‌, இவர்‌ மணவாள மாமுனிகளிடம்‌ ஸந்யாஸ ஆஸ்ரமத்தைப்‌ பெற்று, விராகி யாகத்‌ திருநாராயண புரத்தில்‌ கல்யாணி புஷ்கரிணிக்கு வடக்கே திருக் குலத்துச்‌ சேரியின்‌ அருகே திருநந்தவநம்‌ செய்து திருநாரணனுக்குக்‌ கைங்கர்யம்‌ செய்து வந்தார்‌. இவ்வுலகில்‌ 103 வருஷம்‌ எழுந்தருளி யிருந்து திருநாராயண புரத்திலேயே திருநாடலங்கரித்தார்‌. இவருடைய திருவரசு கல்யாணி புஷ்கரிணிக்கு அருகே உள்ளது; இன்றும்‌ ஸேவிக்லாம்

    ஆசார்ய ஹ்ருத,யஸ்யார்த்த, ஸகலா யேந த,ர்ஸிதா | ஸ்ரீ ஸாநு தாஸ மமலம்‌ தேவ ராஜம்‌ தமாஸ்ரயே ॥

    ஆசார்ய ஹ்ருதயத்தின்‌ அர்த்தங்கள்‌ அனைத்தையும்‌ அருளிச் செய்தவராய்‌, ஸ்ரீஸாநுகாஸர்‌, தேவராஜர்‌ என்னும்‌ திருநாமங்களை உடையவரான திருநாராயணபுரத்து ஆயை ஆஸ்ரயிக்கிறேன்

    ஸ்ரீயாதவாத்ரி, திருநாராயணபுரம்‌, அஷ்டோத்தர ஸத ஸ்தாந ஸாரம்‌, தக்ஷிண பத்ரிகாஸ்ரமம்‌, வைகுண்ட வர்த்தந ஷேத்ரம்‌, இந்திராக்ஷேத்ரம்‌, ஸம்யமி ஸார்வபெளம விஜயஸ்தாநம்‌ என்னும்‌ பலபல திருநாமங்களால்‌ விளங்குகிற (மேலக்கோட்டை) திவ்ய க்ஷேத்ரத்தில்‌, ஸேனை முதலியார்‌ அவதரித்த ஓங்கு துலாப் பூராட நன்னாவில்‌ உதித்து, எம்பெருமானார்‌ தம்‌ திருக் கைகளாலே திருவாராதநம்‌ ஸமர்ப்பித்த திரு நாராயணப்‌ பெருமாளுக்கும்‌, ராம ப்ரியனும்‌, யதிராஜ ஸம்பத்குமாரனுமான செல்வப் பிள்ளைக்கும்‌ யஸோதா தேவியைப்‌ போலப்‌ பாலமுதும்‌, ஸ்ரீமாலாகாரர்‌, ஸ்ரீவிஷ்ணு சித்தர்‌, ஆண்டாள்‌ முதலானவர்களைப்‌ போலப்‌ புஷ்பமும்‌ ஸமர்ப்பித்துக் கொண்டு புஷ்ப-க்ஷீர கைங்கர்ய நிரதராய்‌, நம்‌ தர்ஸநத்தை நிர்வஹித்துக் கொண்டு ஸத் ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகராய்‌ விளங்கினவராய்‌, ‘திருநாராயணபுரத்து ஆய்‌”, ‘திருத்தாழ்வரை தாஸர்‌: (ஸ்ரீஸாநு தாஸர்‌), “ஐநந்யாசார்யர்‌’, ‘மாத்ரு குரு’, ஆயி”, ‘தேவ ராஜர்‌: என்று ப்ரஸித்தி பெற்றவரே இம் மஹாசார்யர்

    எம்பெருமானார்‌ திருவவதரித்த வம்ஸம்‌ ஹாரீத வம்ஸம்‌. ‘ஆஸூரிப் பெருமாள்‌’, ‘ஆஸூரி தேவர்‌: என்று ப்ரஸித்தரான ஆஸூரி புண்டரீகாக்ஷர்‌ இந்த ஹாரீத வம்ஸத்தில்‌ அவதரித்து, எம்பெருமானாரை அடி பணிந்து போந்த மஹாநுபாவர்‌. இவர்‌ எழுபத்து நாலு ஸிம்ஹாஸநாதிபதிகளுள்‌ ஒருவர்‌. ”குடீங்க்ருத்வா தஸ்மிந்‌ யதுகிரி தடே நித்ய வஸதி’” என்று எம்பெருமானார்‌ பரமபதத்துக்கு எழுந்தருளுவதற்கு முன்பு நியமித்த ஆறு உபதேசங்களில்‌ நான்காவதான ஸ்ரீயாதவ கிரியில்‌ நித்ய வாஸத்தை ஆதரித்து இந்த ஆஸுூரிப் பெருமாள்‌ திருநாராயண புரத்துக்கு எழுந்தருளி எம்பெருமானார்‌ திருவுள்ளத்துக்கு உகப்பாக அங்கே நிலையாக நின்று பெருமாளுக்கு மங்களா ஸாஸந பரராய்‌, தர்ஸந நிர்வாஹகராய்‌ எழுந்தருளி இருந்தார்‌. இவர்‌ வம்ஸத்தில்‌ அவதரித்தவர்‌ ஐநநீயாசார்யர்‌. இவர் திருத் தகப்பனார் திருநாமம்‌ ஆஸூரி லக்ஷ்மணாசார்யர்‌. இவர்‌ திருக் குமாரர்‌ ஆயி கேஸவாசார்யர்‌. இந்த ஆயி ஸ்வாமி ஸர்வ ஸங்க பரித்யாகம்‌ பண்ணி உத்துங்கமான ஸந்யாஸாஸ்ரமத்தை ஸ்வீகரித்தார்

    நம்பிள்ளை ஸிஷ்யர்களில்‌ ஒருவராய்‌, அவரிடமிருந்து திருவாய்மொழி ஈட்டைப்‌ பெற்றவர்‌ ஈயுண்ணி மாதவர்‌. இவருடைய ஸிஷ்ய பரம்பரையிலே ஈடு ஓராண் வழியாய்‌ உபதேசிக்கப்‌ பெற்று வந்தது. இவருடைய குமாரரும் -சிஷ்யருமான – ஈயுண்ணி பத்மநாபர்‌. இவருடைய ஸிஷ்யர்‌ நாலூர் பிள்ளை என்னும்‌ ஸூ மந கோலேஸர்‌. இவருடைய குமாரரும் -சிஷ்யருமான தேவராஜர்‌ என்னும்‌ நாலூராச்சான் பிள்ளை. இவருடைய ஸிஷ்யர்களில்‌ முக்யமானவர் திருநாராயணபுரத்து ஆய்‌ என்னும்‌ ஐநந்யாசார்யர்

    தேவராஜருக்கு ‘ஆய்‌’ என்று திருநாமம்‌ வந்த வகையாவது – இவர்‌ தினந்தோறும்‌ பரிவுடன்‌ செல்வப் பிள்ளைக்கு ரஸ விஸேஷம்‌ குறையாமல்‌ ஸுகோஷ்ணமாயும்‌, ஏலா லவங்க கந ஸார குங்கும பரிமள யுக்தமாயும்‌ பாலமுது காய்ச்சி அமுது செய்யப்‌ பண்ணி வந்தார்‌. ஒரு நாள்‌ பாலமுது கொண்டு வரச்‌ சிறிது தாழ்க்கவே செல்வப் பிள்ளை அது பொறாமல்‌ ‘நம்‌ ஆய்‌ (தாய்‌) எங்கே? இன்னம்‌ காணோமே?” என்று அர்ச்சக முகேந வினவின படியாலே இவருக்கு ‘ஆய்‌” என்றும்‌, ‘ஐநந்யாசார்யர்‌’ என்றும்‌ நிருநாமமுண்டாயிற்று என்பர்

    பகவத பாகவதர்களுக்குத்‌ தாய் போலே பரிவு காட்டி வந்தமையாலே ‘ஆய்‌’ என்றும்‌, ‘ஜநநீ’ என்றும்‌ சிறப்புப்‌ பெயர்‌ பெற்றவர்‌ என்றும்‌ கொள்ளலாம்‌, தேவராஜர்‌ என்பது இவருடைய இயற்பெயர்‌.திருநாராயண புரத்தில்‌ அவதரித்தவராகையாலே ‘திருநாராயணபுரத்து ஆய்‌’ என்று அழைக்கப்படுவர்‌. இவர்‌ அருளிய ஸ்ரீவசந பூஷண வ்யாக்யாநமும்‌, திருப்பாவை வ்யாக்யாநங்களான ஈராயிரப்படியும்‌, நாலாயிரப்படியும்‌ இப்போது உள்ளன. திருமாலைக்கு இவர்‌ வ்யாக்யாந மிட்டருளினதாகப்‌ பெரிய திருமுடி யடைவு கூறும்‌. அது இப்போது கிடைப்பதில்லை

    ஆயி ஸிஷ்யர்‌ நல்லப்ப நாயன்‌ என்பவரை பிள்ளை லோகம்‌ ஜீயர்‌ ”சச்சம்பிரதாயம்‌” (உப.ர. 58) என்ற பாட்டு வ்யாக்யாநத்தில்‌ கூறியிருக்கிறார்‌. ஆயி பெருமைகூறும்‌ பின்வரும்‌ பாடலையும்‌ எடுத்துள்ளார்‌.
    மாறில் முடும்பை உலகாரியன்‌ வசனக் கலனும்‌
    மாறன்‌ கருத்தின்‌ மணவாளன்‌ வார்த்தையும்‌ வல் விருளைச்‌
    சீறும்படி திருத் தாழ்வரை தாதன்‌ தெரிந்தெனக்குத்‌
    தேறும்படி உரைத்தான்‌ திருத்தாள்களென்‌ சென்னியதே,

    [வசனக் கலன்‌ – வசந பூஷணம்‌. மாறன் கருத்தின்‌ மணவாளன்‌ வார்த்தை – ஆசார்ய ஹ்ருதயம்‌] என்று பிள்ளை லோகம் ஜீயர்‌ எடுத்துள்ள பாடல்‌ இவரை ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீ வசந பூஷண ப்ரவசநத்தில்‌ ஈடுபட்டவராகக்‌ காட்டுகிறது

    மா முனிகளுக்கும்‌ இவருக்கும்‌ உள்ள ஸம்பந்தம்‌ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவத்தில்‌ பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது
    (மாமுனிகள்‌) ஆசார்ய ஹ்ருதயத்திற்குப்‌ பொருள்‌ அருளிச் செய்யும் போது ”ஜ்ஞாந சதுர்த்திகளின்‌ மேலே யிறே ஆநந்த ஷஷ்டிகளுக்குதயம்‌:: என்கிற வாக்யத்திற்கு அர்த்தம்‌ ஸ்வ ரஸமாக ஆகாமையாலே இதற்கு அர்த்த மருளிச் செய்வார்‌ ஆர்‌? என்று விசாரமுண்டாய்‌, திருநாராயண புரத்தாயி பக்கலிலே இவ் வர்த்தம்‌ கேட்க வேணுமென்னும்‌ பேராசையோடே ஆழ்வாருக்கு விண்ணப்பம்‌ செய்து அவரநுமதி கொண்டு திருநாராயண புரத்துக்குப்‌ போவோம்‌ என்று பறப்பட்டெழுந்தருளா நிற்க, ஆயியும்‌ ஜீயருடைய ப்ரபாவம்‌ கேட்டு இவரை ஸேவிப்பதாகத்‌ திருநகரிக்கு ஆஸந்நமாக மார்க்க மத்யே வந்து ஸங்கதராக அவரைக் கண்டு, “எண்ணின பலம்‌ எதிரிலே வரப் பெறுவதே!’ என்று பெரிய ப்ரீதியோடே தீர்க்க ப்ரணாமம்‌ பண்ணி நிற்க, ஆயியும் தாளும்‌ தடக்கையும்‌ கூப்பி ஸேவிக்க, இருவரும்‌ அந்யோந்யம்‌ வந்தந பரராய்‌ குசல ப்ரஸ்நம்‌ பண்ணி நிற்க, இதைக் கண்டு ஜீயர் ஸ்ரீபாதத்து முதலிகளெல்லாரும்‌ ‘பெரிய நம்பியும்‌ எம்பெருமானாரும்‌ எதிர்ப்பட்டாற் போலாயிற்று’ என்று மிகவும்‌ உகந்‌தருளினார்கள்‌. அநந்தரம்‌ குன்ற மாடத் திருக்குருகூரேற எழுந்தருளி ஆயி பக்கலிலே ”ஆசார்ய ஹ்ருதயஸ் யார்த்தாஸ் ஸகலா யேந தர்ஸரிதா? ! ஸ்ரீஸாநு தாஸ மமலம்‌ தேவராஜம்‌ தமாஸ்ரயே” என்று அந்த உபகார ஸ்ம்ருதிக்கு அவர் விஷயமாக ஒரு தனியன்‌ அருளிச் செய்தருள; ஆயி தமக்கு அதில்‌ அந்வயமற்றபடி தோற்ற,

    பூதாரில்‌ வந்துதித்த புண்ணியனோ? பூங்கமழும்‌
    தாதாரு மகிழ் மார்பன்‌ தானிவனோ? – தூதார
    வந்த நெடுமாலோ? மணவாளமாமுனிவன்‌ எந்தை யிவர் மூவரிலும்‌ யார்
    -என்று அருளிச்செய்து, ஜீயரை அவதார விசேஷமென்று ஆதரித்துக் கொண்டு ஆழ்வாரையும்‌ அநு திநம்‌ ஸேவித்துக் கொண்டு ஆங்கே சில காலம்‌ எழுந்தருளி யிருக்க; அதுவே ஹேதுவாக ‘ஆயி திருநாட்டுக்கு எழுந்தருளினார்‌’ என்று திருநாராயண புரத்திலுள்ள அஸூயாளுக்கள்‌ திரு மாளிகையிலுள்ள ஸர்வஸ்வத்தையும்‌ செல்வப் பிள்ளை அங்கிகரித்தருளும்படி ஸ்ரீபண்டாரத்‌தில்‌ சேர்க்க, அக் காலத்திலே ஆயியும்‌ மீண்டு திருநாராயண புரத்துக்கு எழுந்தருளி இச்‌செய்தியைக்கேட்டு ஹ்ருஷ்டராய்‌, ”யஸ்யாநுக்ரஹமிச்சாமி தஸ்ய வித்தம்‌ ஹராம் யஹம்‌”‘ [எவனுக்கு நான்‌ அருள் புரிய விரும்புகிறேனோ அவனுடைய செல்வத்தை எடுத்துக் கொள்‌கிறேன்‌] என்னும்‌ திருமுகப்படியே ப்ரத்யக்ஷமாகச்‌ செல்வப்பிள்ளை இத்தைக்‌ கைக் கொண்டருளின பின்பு நாம்‌ இனி இரக்கத்துக்கு விஷயம்‌ என்கிறது கிம் புநர் ந்யாய ஸித்தமிறே. ‘யஸ்யைதே தஸ்ய தத் தநம்‌: [மனைவி, புத்ரன்‌, அடிமை ஆகியவர்களுடைய செல்வம்‌ அவர்களுடைய யஜமாநனுக்கே உரியது] அன்றோ? என்று ஈடுபட்டு ஆநந்தாஸ்ருக்கள் பனிப்ப எழுந்தருளி, ஆசார்ய க்ருபால ப்தரான ஞானப் பிரானொருவரையுமே அர்த்தித்துப் பெற்று மற்றவைகளை யெல்லாம்‌ அங்குத்தைக்கு ஸமர்ப்பித்து, யாதவ கிரி நிலயனுக்கு மால்ய ஸமர்ப்பணைக நிஷ்டராய்‌, அங்கே ப்ரீதராய்‌ எழுந்தருளியிருந்தார்

    மாதவத்தோர்‌ வாழ்த்தும்‌ முடும்யை மணவாளன்‌
    தோதவத்தித்‌ தூய் மறையோரான பெற்றார்‌ – தீதற்ற
    ஆசாரிய விதயம்‌ பெற்றார்‌ நம்மாயி யிவர்‌
    தேசாரத் தாள்கள்‌ நெஞ்சே! காண்‌-
    என்று ஆசார்ய ஹ்ருதய ஸம்ப்ரதாயத்தைத்‌ தாம்‌ (மாமுனிகள்‌) அநுஸந்தித்தருள, அப்படியே முதலிகளும்‌
    மாதவத்தோன் மாறன்‌ மனங்கூறும்‌ மணவாளன்‌
    தோதவத்தித் தூய் மறையோரான பெற்றார்‌ – நீதியினால்‌
    ஆங்கவர் தாள்‌ சேர் பெற்றார்‌ ஆயி மணவாமுனி
    பூங்கமலத் தாள்கள்‌ நெஞ்சே! போற்று
    -என்று அநுஸந்தித்தார்கள்‌.
    பூர்வாஷாட,அவதீர்ணாய துலாயாம்‌ யது. பூ,த,ரே!
    ஸ்ரீஸாநு தாஸ கு,ரவே தே,வராஜாய மங்களம்‌

    (திருநாராயண புரத்தில்‌ ஐப்பசிப் பூராடத்தில்‌ அவதரித்தவராய்‌,-திருத்தாழ்வரை தாஸர்‌ எனப்படும்‌ தேவராஜருக்கு மங்களம்‌

    ஸம்ஸ்ரிதாநாம்‌ ஜநிச்சேதஹேது ஜ்ஞாநத முக்திதம்‌ | யது புர்யாம்‌ ஜநந் யாக்‌யம்‌ லோகாநா முத்தமம்‌ குரும்‌ |
    ஸம் ப்ரதா யார்த்தத நிகம்‌ ஸெளம்ய ஜாமாத்ரு ஸூரயே | நிஸ்சிதார்த்த ப்ரதம்‌ ஸ்ரீமஜ் ஜநநீ குருமாஸ்ரயே

    ஆஸூரி சிங்கமாம்‌ ஆதி குரு உலகுக்கே
    மாசிலா இளையாழ்வார்‌ மண்ணுலக மாழ்ந்தன்று
    தூசரிக்கும்‌ திருப்பாவைத்‌ திருவருளைத்‌ தெளிவித்துப்‌
    பேசினார்‌ பெம்மானைப்‌ பின்போரை வாழ்த்திடவே

    ஓங்கு துலாப் பூராடத்துதித்த செல்வன்‌ வாழியே
    ஒண் மதியோன்‌ எதிராசன்‌ ஒண் சரணோன்‌ வாழியே
    பாங்குடனே ஞானப் பிரான்‌ பணியுமவன்‌ வாழியே
    பஞ்சமத்தின்‌ பொருள் தன்னைப்‌ பரிந்துரைத்தோன்‌ வாழியே
    தேங்கு புகழ்‌ தேவராசர்‌ திருவருளோன்‌ வாழியே
    தென்மறையின்‌ மனப் பொருளைத்‌ தெளிவித்தான்‌ வாழியே
    தாங்கு திருக்கை திரிதண்டம்‌ தரித்த வள்ளல்‌ வாழியே
    திருத்தாழ்வரை தாதர்‌ திருவடிகள்‌ வாழியே

    பஞ்சமம்‌ -பஞ்சமோபாயமான ஆசார்யாபிமாதம்‌; தேவ ராசர்‌ – நாலுராச்சான் பிள்ளை]

    ————————–

    ஸ்ரீஸூரி ஸூக்தி-ப்‌ரஹ்ம ஸாஸ்திரம்‌ – த,ராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ -ஆசார்ய ஹ்ருத,யம்‌
    [| திருநாராயணபுரம்‌ அரையர் ஸ்ரீஉ வே ஸ்ரீராம சர்மா ஸ்வாமிகள் ]

    இந்த கரந்தம்‌
    த்‌,விக த்‌,வயமாகவும்‌,
    அத்‌,யா ய சதுஷ்டயமாகவும்‌,
    ஷோட,ச பாத, மாகவும்‌,
    ஸப்த விம்சத் யதி,கரணமாகவும்‌

    பிரிவுகளை உடையது.

    (1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
    (2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 284 முடிய (48)

    (1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
    (2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
    (3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
    (4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-284 (27)

    பாத-அதிகரண க்ரம-சூர்ணைகள் -முதல் -முடிய -மொத்தம் –
    1 -ஸாஸ்த்ராரம்ப, பாத. ப்ரத,ம 1-1 —–1-15
    1 -ஸாஸ்த்ர ப்‌ரதாநாதி,கரணம்‌
    (ஸாஸ்த்ராரப்‌, யாதி, கரணம்‌) 1 – 15 —-15

    2 தாத்பர்ய மூலபாத, – த்‌,விதீய 1 – 2 —16 –1
    2 ஸாஸ்த்ர தாத்பர்ய ப்ரதாநாதி, கரணம்‌- 16—1

    3 –விஷய பாத, – த்ருதீய 1-3— 17 – 18 —2
    3 –ஸாஸ்த்ர தாத்பர்ய விஷய விஸேஷாதி, கரணம்‌ —17 – 18 —2

    4 –ஆசார பாத.; – சதூர்த்த- 1-4– 19 – 38— 20
    4 ஸாஸ்த்ர தாத்பர்ய நிஷ்டாசாராதி கரணம்‌ —19 – 38 –20-

    5 –ஸூரி வைபவ பாத, – பஞ்சம– 3அதிகரணங்கள் இதில் – 1 —39 – 96— 58–
    5– க்‌ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம்‌ —39 – 74 –36-
    6—ஸூரி ப்ராமாண்ய விஸேஷாதி கரணம்‌(ப்ரமாத்ரு வைபவம் ) 75 – 93 –19-
    7-ப,க,வத் கடாக்ஷ விஸேஷாதி கரணம்‌ 94–96—-3-

    6 — ப,க்திபாதம் -ஷஷ்ட? 2-2 —97–121—-25-
    8–ஜ்ஞாந ப,க்த்யதி கரணம்‌ 97 –117—-21 —
    9-ஜ்ஞாந ப,க்த் யவஸ்தா ஸூக்தி அதிகரணம் –118-121—–3 —

    7-ஒளபம்ய பாத,3 – ஸப்தம; 2 – 3 -இரண்டு அதிகரணங்கள் —122–155—34
    10-ப,க,வந்நாயி கெளபம்யாத்‌,யதி, கரணம்‌–122–132– 11
    11-அந்யாபதேஸ -ஸ்வாபதேஸ அதி கரணம்‌ —-133–155– —23-

    8–கு,ண பாத, – அஷ்டம: 2-4 —156–186—-31-
    12 சதுர்தவ்த்யாதி, கரணம்‌ 156 –158—-3–
    13 திவ்ய தேஸ பா-அர்ச்சாவதார விஸேஷ கு,ணாதி கரணம்‌– 159 —186—–28–

    9 –ஸ்ரீ ஸூக்தி வைப ,வ பாத, – நவம–3 – 1 –ஒரே அதிகரணம் 187–188—–2-
    14 –பகவத் அநுபவ ப்ரீதி காரித ஸ்ரீ முக, ஸூக்தயதி கரணம்‌– 187 -188—2-

    10 –ஸாம்ய பாத தஸம 3-2—189—-1–
    13–பகவத்‌ கீதாஸ்ரீ முக ஸூக்தி ஸாம்யாதி கரணம்‌–189—1–

    11-விஸேஷ பாத : – ஏகாதஸ –3-3 –190–194—–5–
    16–பகவத்‌ கீதா ஸ்ரீமூக, ஸுத்தி விஸேஷாதி கரணம்‌ 190–195—–5–

    12 –ப்ரயோஜந பாத –த்‌வாதஸ –3 – 4 –195–207–13–
    17–ஸ்ரீமுக, ஸூக்த் யுபதேஸ -பாத்‌ர-ரீதி-நீத்யர்த்த, விஸேஷா -லக்ஷண –காரண -ஸ பலத்வாதிகரணம் –195–207–13–

    13 –உபதேஸ பாத :-த்ரயோதஸ — 4 – 1 –மூன்றுடன் அதிகரணங்கள் கொண்ட பாதம் — 208 –213—–6–
    18– ரஹஸ்ய த்ரயார்த்த உபதேஸாதி, கரணம்‌ —208–210—–3-
    19 –அர்த்த, பஞ்சக ஸங்க்‌,ரஹ-விவரணாதி,கரணம்‌ -211 -212—2
    20-மங்க லாசரண-ஸத்வத் தத்த்வாதி கரணம்‌-213–1–

    14 –விபாக, பாத. – சதுர்தஸ — 4 – 2 –இரண்டு அதிகரணங்கள்– 214 – 217—– 4–
    21 ஸ்ரீ மூக,ஸுூக்தி தஸாவதார விபாகாதி, கரணம்‌ –214 —-1–
    22 ஸ்ரீமுக, ஸூக்தி ஸத தஸக பத்‌ய ப்ராதாந்ய-அபிப்ராய விசேஷ அதிகரணம்–215–217——3–

    15 –குணாநுபவ பாத 3-பஞ்சதஸ — 4 – 3 –இரண்டு அதிகரணங்கள்– 218 – 228 ——11–
    23 –தஸ ஸதக கத பகவத் குண தஸக அநு குண அநுபவ உபதேச அதிகரணம் —-218—–1-
    24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –219–228—–10–

    16 –முக்திபாத–ஷோட்ஸ — 4-4 –மூன்று அதிகரணங்கள் -229 – 234 ———–6 –
    25–ஆர்த்த ப்ரபந்ந ஸூரி ஸரீர வியோகா பாவ காரணாதி கரணம்‌ –229—— 1
    26– பர ப,க்த்யாதி, நிரூபண ஸ்தாநாதிகரணம்‌ 230 – –233—–4–
    27 –திவ்ய ப்ரபந்த, தாத்பர்ய ப,க,வத்‌-ப்ரஸாதாதி கரணம்‌ –234 ———1

    இதி ஸ்ரீராம நாம்நேஹ யாதவாத்‌ரி நிவாஸிநா
    த்ராவிட ப்‌ரஹ்ம ஸூத்ராணாம்‌ விபாகஸ் ஸம் ப்ரதர்ஸித
    ஸ்வபாநுப பாத்‌ர ஸூத்‌தாஷ்ட மீஜ்யேஷ்டாபு,த, வாஸரே
    யதாத்‌ யயநமக்‌,ரே ப்ரகரணைஸ் ஸ்யாத்‌ ப்ரபஞ்சநம்

    ————-

    ஆசார்ய ஸ்வாந்த வக்தாரம்‌ அபி ராமவராபிதம்‌!
    ஸ்ரீக்ருஷ்ண தநயம்‌ வந்தே, ஐகத்‌ குருவராநுஜம்‌ ॥

    பணவாளரவணைப்‌ பள்ளி பயில் பவர்க்கெவ்வுயிரும்‌
    குண போகமென்று குருகைக் கதிபனுரைத்ததுய்ய
    உணர்பாவினுட்பொருள்‌ ஒன்றுமறியா உலகறிய
    மணவாளன் மாறன்‌ மனமூரைத்தான்‌ வண்முடும்பை வந்தே.

    மாதவத்தோன் மாறன்‌ மனங்கூறும்‌ மணவாளன்‌
    தோதவத்தித்‌ தூய் மறையோரான பெற்றார்‌ – நீதியினா
    லாங்கவர்‌ தாள்‌ சேர்‌ பெற்றார்‌ ஆயி மணவாளமுனி
    பூங்கமலத் தாள்கள்‌ நெஞ்சே போற்று

    ஆசார்ய ஹ்ருத,யஸ்யார்த்தாஸ் ஸகலா யேந தர்ஸிதா: !
    ஸ்ரீஸாநு தாஸ மமலம்‌ தே,வராஜம்‌ தமாஸ்ரயே ॥

    ஸ்ரீய: பதியான ஸர்வேஸ்வரன்‌ ““அசித,விஸேஷிதாந்‌ ப்ரளய ஸீமநி” (ஸ்ரீர. ஸ்தவ- 2 -41) என்று சொல்லுகிறபடியே கரண களேப ரங்களை இழந்து அசித் அவிஸேஷிதமாய்‌, அத ஏவ போக, மோக்ஷ ஸூந்யமாய்க்‌ கிடக்கிற சேதந வர்க்கத்தை, இவற்றின் பக்கல்‌ தனக்குண்டான ஸ்வாபாவிக ஸம்பந்தமே ஹேதுவாக “ததைக்ஷத’” (தை. ஆ. 6) என்கிறபடியே பார்த்தருளி, ‘ஸூரிகளுடைய அநுபவத்துக்கு இட்டுப் பிறந்த இச் சேதநர்‌ இவ் வநுபவத்தை இழந்து இங்ஙனே க்லேஸிக்க வொண்ணாது” என்று ‘“கரண களேபரைர் கடயிதும்‌ தயமாந மநா: ‘ (ஸ்ரீர. ஸ்தவ- 2 – 41) என்கிறபடியே தயமாந மநவாய்க் கொண்டு கரண களேபர ப்ரதாநம்‌ பண்ணுவதாக “‘பஹு ஸ்யாம்‌”’ (தை, ஆ. 6) என்று ஸங்கல்பித்து “*தத் ஸ்ருஷ்ட்வா’” (தை. ஆ. 6) என்சிறபடியே யதா ஸங்கல்பம்‌ இவர்களுக்குக்‌ கரண களேபரங்களைக்‌ கொடுத்து, அநந்தரம்‌, “‘ததநுப்ரவிய்ய ” என்கிறபடியே அநு ப்ரவேயித்து வஸ்துத்வ நாம பாக்த்வங்களை உண்டாக்கி, “அந்த: ப்ரவிஷ்டஸ் ஸாஸ்தா ஜநாநாம்‌ ஸர்வாத்மா” என்கிறபடியே ஜ்ஞாந விகாஸத்தையும்‌, ப்ரவருத்தி நிவ்ருத்தி யோக்‌,யதையையும்‌ பண்ணிக் கொடுத்து இந்த ஜ்ஞாந கார்யமான தயாஜ்யோபாதே,ய விவேகத்துக்குப்‌ பரிகரமாக ““மாநம்‌ ப்ரதீபமிவ காருணிகோ ததாதி” (ஸ்ரீர, ஸ்தவே 2 – 1) என்கிறபடியே வேத ப்ரதாநத்தைப் பண்ணி, அநந்தரம்‌ மந்வாதிகளுக்கு அந்தர்யாமியாய்‌ தின்று சேதநருடைய விஸிஷ்ட வேஷ விஷயமான ஸாஸ்த்ரத்தை வெளியிட்டருளியும்‌, அந்த ஸாஸ்த்ர ஜந்ய ஜ்ஞாநம்‌ சிரகால ஸாத்‌,யமுமாய்‌, அதிக்ருதாதி,காரமுமாய்‌, அநேக யோக்‌யதா ஸாபேக்ஷமுமா யிருக்கையாலே துஷ்கரமுமாயிருக்கும்‌ என்று, ஏவமாதி,தோஷ ரஹிதமுமாய்‌, நிஷ்க்ருஷ்ட வேஷ விஷயமான திருவஷ்டாக்ஷர ப்‌,ரஹ்மவித்‌யைத் தானே உபதேஸித்த விடத்திலும்‌ இதில்‌ இழிவாரற்ற படியாலே ஓலைப் புறத்திலே செல்லாத ராஜ்யத்தை எடுத்து விட்டுச்‌ செலுத்திக் கொள்ளும்‌ ராஜாக்களைப் போலே ““அஜாயமாந:”’ (யஜு. ஆர. பீ – 17) என்று சொல்லப்படுகிற தானே ஸாது, பரித்ராணார்த்தமாக வந்து அவதரித்துப் போருகிற அளவிலும்‌, இவை ஒன்றிலும்‌ அர்த்த,க்ரியாகார்யமாகா திருக்கிற படியாலே, ‘விஸஜாதீயரான நம்மால்‌ ஒன்றாலும்‌ இவர்களைத்‌ திருத்த வொண்ணாது. இனிப்‌ பார்வை காட்டி ம்ரூகம்‌ பிடிப்பாரைப்‌ போலே ஸஜாதீயரைக் கொண்டே கார்யம்‌ கொள்ளக் கடவோம்‌” என்று அறுதியிட்டு ““ஸுஹ்ருத.ம்‌ ஸர்வ பூ,தாநாம்‌’” (கீதை 5 – 29) என்கிறபடியே ஸர்வ பூ,த ஸூஹ்ருத்‌தாகையாலே தன்னுடைய நிர்ஹேதுகமான ப்ரஸாதத்தாலே எங்கும்‌ பார்த்து இலக்குக்‌ காணாதிருக்கிற அளவிலே, அந்தப் பார்வை தானே தாஷிண்யமானவளவிலே, ““மாறி மாறிப் பல பிறப்பும்‌ பிறந்து”‘ (திருவாய்‌. 2 – 6 – 8) என்கிறபடியே ஸம்ஸரிக்கிற ஆழ்வார்‌ மேலே நிர்ஹேதுகமாகப்பட அது தானே “மா நிஷாத, ப்ரதிஷ்டாம்‌ த்வமக,மஸ்‌ ஸாஸ்வதீஸ் ஸமா : । யத் க்ரெளஞ்ச மிதுநாதே கமவதீ,! காம மோஹிதம்‌”’ (ரா. பா – 2 – 15) என்கிறபடியே ஸோகம்‌ ஸ்லோகமாய்‌ அவதரித்தாப் போலே ஸர்வ லக்ஷணோபேதமான ப்ரப,ந்த,மாய்த்‌ தலைக் கட்டிற்று

    அது தானும்‌ த்ராவிட வேதமான படியாலே பலவான அர்த்தங்களை உடைத்தாய்‌, பரந்திருக்கையாலே இதில்‌ தாத்பர்யம்‌ எல்லார்க்கும்‌ ப்ரதிபத்தி பண்ணப் போகாதென்று பார்த்து, இதில்‌ அர்த்த, விஸேஷங்களையும்‌, இவற்றில்‌ இவ்வாழ்வார்க்குத் திருவுள்ளக்‌ கருத்து இன்னபடிப் பட்டிருக்குமென்று, இவ்வாசார்ய ருசி பரிக்‌ருஹீதமான அர்த்தமே எல்லார்க்கும்‌ தஞ்சம்‌ என்னுமிடத்தையும்‌, இவர்‌ தம்முடைய பரம க்ருபையாலே-ஆசார்ய பரம்பரா ப்ராப்தமான அர்த்த விஸேஷங்களை எல்லார்க்கும்‌ ப்ரதிபத்தி யோக்‌யமாம்படி ஸங்க்‌ரஹேண இவ்வாசார்ய ஹ்ருதய ப்ரபந்த முகத்தாலே அருளிச் செய்‌கிறார்

    இதில்‌ முதல்‌ சூர்ணையாலே பரம காருணிகனான ஸர்வேஸ்வரன்‌ “*தத் ஸ்ருஷ்ட்வா” என்கிறபடியே ஜகத் ஸ்ருஷ்டியைப்‌ பண்ணி ஸ்ருஷ்ட்யநந்தரம்‌ அஜ்ஞாந அந்தகாரா வ்ருதரான சேதநர்‌ ஜ்ஞாந ப்ரகாஸத்தை உடையராய்‌ அஜ்ஞாநம்‌ நீங்கி, வேதாந்த வேத்‌யனாய்‌, நித்யனாய்‌, ஸ்வயம் ப்ரகாஸனாய்‌ இருந்துள்ள தன்னைக்‌ கண்டு ஸாராஸார விவேகம்‌ பண்ணுகைக்கு ஸகல ஸாஸ்த்ர ஸங்க்‌,ரஹமாய்‌, ஸகல ஸப்‌தங்களும்‌ தன்னுடைய கார்யமாகையாலே தான்‌ காரணமாய்‌, ஸகலார்த்த,ப்ரகாஸகமான அகாரத்தில் நின்றும்‌ விஸ்த்ருதமான ஸாஸ்த்ரங்களைத் தன்‌ க்ருபையாலே வெளியிட்டருளினான்‌ என்கிறார்

    ———–

    த்‌,ராவிட ஆம்நாய ஹ்ருத.யம்‌ கு,ருபர்வ க்ரமாக,தம்‌ ।
    ரம்ய ஜாமாத்ரு தே,வேந தர்ஸிதம்‌ க்ருஷ்ண ஸூநுதா

    ——

    சூர்ணிகை 1..

    காருணிகனான சர்வேஸ்வரன் –அறிவிலா மனிசர் உணர்வு என்னும் சுடர் விளக்கு ஏற்றி-
    பிறங்கு இருள் நீங்கிமேல் இருந்த நந்தா வேத விளக்கை கண்டு-நல்லதும் தீயதும்-விவேகிக்கைக்கு மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான-கலைகளை நீர்மையினால் அருள் செய்தான்–

    காருணிகனான சர்வேஸ்வரன் –க்ருபா விஸிஷ்ட ஸ்வதந்த்ரன்‌ என்றபடி
    சர்வேஸ்வரன்–என்று ஈஸ ஈஸி தவ்ய ஸம்ப,ந்த,ம்‌ சொல்லுகிறது.
    இத்தால்‌ ஸம்பந்தமே ப்ரதாநம்‌ என்றபடி. ஸம்பந்த முள்ள விஷயத்திலே கிருபையுமாகப்‌ பெற்றது என்கிறார்‌. ஸ்வாதந்தர்ய விஸிஷ்டமான கிருபை என்று கிருபைக்கு ஸ்வாதந்தர்யம்‌ உபயுக்தம்‌ என்பாருமுண்டு. அத்தை வ்யாவர்த்திக்கிறது
    அறிவிலா மனிசர் -அறிவிலா மனிசர்’ (திருமாலை – 13) என்கிறபடியே அஜ்ஞாந அந்த காரத்தாலே ஆவ்ருதரான சேதநர் –
    உணர்வு என்னும் சுடர் விளக்கு ஏற்றி) ”உய்த்துணர் வென்னும்‌ ஒளி கொள்‌ விளக்கேற்றி”’ (மூ. திரு. 94) என்றும்‌, ““ஞானச் சுடர் விளக்கேற்றினேன்‌” (இர, திரு, 1) என்றும்‌ சொல்லுகிறபடியே உஜ்ஜிவந கரமுமாய்‌, ஸ விபூ,திகனான ஸர்வேஸ்வரனை விஷயமாக உடைத்தாய்‌, (பரஸ்மை) ஸ்வயம் ப்ரகாஸமுமாய்‌, ஸ்கலார்த்த,ப்ரகாஸாகமுமான ஜ்ஞாந தீ,பத்தை உடையராய்
    பிறங்கு இருள் நீங்கி-) ‘“பிறங்கிருள்‌ நிறங்கெட”” (திரு மொழி 5-7 – 3) என்றும்‌, ““பின்னிவ்வுலகினில்‌ பேரிருள்‌ நீங்க”” (பெரியாழ் . திரு. 1 – 9 -10) என்றும்‌ சொல்லுகிறபடியே மிகுந்த அஜ்ஞாநம்‌ போய்‌
    மேல் இருந்த நந்தா வேத விளக்கை கண்டு) ““வேதாந்த விழுப்பொருளின்‌ மேலிருந்த விளக்கு!” (பெரியா. திரு-4-3 – 11) என்றும்‌, “நந்தா விளக்கு” (திருமொழி 3 – 8-1) ”மிக்க ஞான மூர்த்தியாய வேத வீளக்கினை” (திருவாய்‌. 4 – 7 – 10) என்றும்‌ வேதாந்தங்களியே ஸர்வ ஸ்‌மாத் பரனாக ப்ரகாஸியா நிற்பானுமாய்‌, நித்யனுமாய்‌, வேதத்தாலே ப்ரகாஸ ஸ்வரூபனாக ப்ரதிபாத்யனுமா யிருந்துள்ள தன்னை, “என் தக்க ஞானக் கண்களாலே கண்டு”” (திருவாய்‌-4 -7. 10) என்கிறபடியே ஜஞாந த்‌,வாரா ஸாக்ஷாத்கரித்து,

    நல்லதும் தீயதும்-விவேகிக்கைக்கு–) ‘“இவை யன்றே நல்ல இவை யன்றே தீய இவையன்றிவை அறிவனேலும்‌”’ (பெரிய திருவ. 3) என்கிறபடியே ஸாராஸார விவேகம்‌ பண்ணுகைக்கு. அதாவது – ப,க,வத்‌ விஷயம்‌ நன்று, ஸம்ஸாரம்‌ தீது – என்று அறிகைக்காக; ப,க.வத்‌, விஷயத்தைக் கண்ட பின்பு ஸாராஸார விவேகம்‌ பண்ணுகையாவது என்‌ என்னில்‌ – ப,க,வத்‌, விஷயத்தில்‌ வைலக்ஷண்யம்‌ கண்ட பின்பிறே ஸம்ஸாரம்‌ அவிலக்ஷணம்‌ என்று அறியலாவது
    மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான-கலைகளை–மிக்கானை மறையாய்‌ விரிந்த விளக்கை ” (திருமொழி -8-9-4-), துளக்கமில்‌ விளக்கு (திருச்சந்த-4) என்று ஸகல வேத ஸங்க்‌ரஹ்மாய்‌, நித்யமாய்‌, ஸகலார்த்த, ப்ரகாஸ கமான அகாரத்தில் நின்றும்‌ விஸ்த்ருதமான, ‘“மாநம்‌ பரதீபமிவ காருணிகோ ததாதி” (ஸ்ரீ, ர ஸ்தவ 2 – 1) என்றும்‌, ‘“பன்னு கலை நால் வேதப் பொருளை’ (திருமொழி 7 – 8 – 2) என்றும்‌, ”கலைகளும்‌ வேதமும்‌ நீதி நூலும்‌”’ (திருமொழி 2 – 8 – 5) என்றும் சொல்லப்படுவதாய்‌, த்யாஜ்யோபாதே,யார்த்த,ப்ரகாஸகமான ஸாஸ்த்ரங்களை
    நீர்மையினால் அருள் செய்தான் -ஸர்வேஸ்வரன்‌ தன்‌ க்ருபையாலே ஸாஸ்த்ர ப்ரதாநம்‌ பண்ணி யருளினான்‌ என்கிறார்

    *மறையாய்‌ விரிந்த துளக்கமில்‌ விளக்கு ” என்று வேதத்தையும்‌, அகாரத்தையும்‌ ஸர்வேஸ்வரனோடே ஸமாநாதி,கரிக்கைக்கடி ““வேதைஸ் ச ஸர்வை ரஹமேவ வேத்‌ய!”’ (கீ. 15 – 15) என்றும்‌, “’ஸமஸ்த ஸப்‌த, முலத்வாத, காரஸ்ய ஸ்வ பாவத: । ஸ்மஸ்த வாச்ய முலத்வாத்‌, ப்‌,ரஹ்மணோபி ஸ்வபாவத: ॥ வாச்ய வாசக ஸம்ப,ந்தஸ் தயோரர்த்தாத்‌ ப்ரதீயதே”” (வாமந பு.) என்று ப்ரதிபாத்‌,ய ப்ரதிபாத,க பாவத்தாலும்‌, காரணத்வ வ்யாபகத்வாதி,களான அர்த்த, ஸாம்யத்தாலே தோற்றின வாச்ய வாசக ஸம்பந்தத்தாலும்‌. ““அக்ஷராணாமகாரோஸ்மி” (கீ. 4) என்றானிறே.

    ஆக இத்தால்‌ “ஹர்த்தும்‌ தமஸ் ஸத.,ஸதீ ச விவேக்துமீஸோ மாநம்‌ ப்ரதீ,பமிவ காருணிகோ ததாதி” (ர.ஸ்தவே -2-1) என்கிறபடியே ஸம்ஸாரிகள்‌ அஜ்ஞாந நிவருத்தி பூர்வகமாக ஜ்ஞாந ப்ரகாநத்தை உடையராய்‌ ஸாராஸார விவேகம்பண்ணி உஜ்ஜீவிக்கைக்காக ஸாஸ்த்ர ப்ரதாநம்‌ பண்ணினதுக்கடி நிர்ஹேதுக க்ருபை என்றதாய்த்து-

    1. விவேக பலம்‌ வீடு பற்று.

    (விவேக பலம்‌) இப்படி இவன் கொடுத்த ஸாஸ்த்ர ஜந்ய ஜ்ஞாதத்தாலே ஸாராஸார விவேகம்‌ பண்ணினதுக்கு பலம்‌ என்னென்னில்‌ ;
    (வீடு பேறு) விடுகையும்‌ பற்றுகையும்‌; இவை இரண்டையும்‌. “*வீடுமின்‌ முற்றவும்‌”” (திருவாய்‌. 1 – 2 – 1) என்றும்‌, “அற்றிறை பற்றே”’ (திருவாய்‌. 1 – 2-5) என்றும்‌ சொல்லக் கடவதிறே.

    3-த்யாஜ்ய உபாதேயங்கள்‌ ஸுக, துக்க,ங்கள்‌.
    இனி த்யாஜ்யோபாதே.யங்கள்‌ எவை என்னில்‌ ; (த்யாஜ்யோபாதே,யங்கள்‌ ஸுக, துக்க,ங்கள்‌) என்கிறார்‌. “ஸுகீ, பவேயம்‌, துக்கீ, மா பூ,வம்‌” என்று ஸர்வர்க்கும்‌ துக்கம்‌-த்யாஜ்யமாய்‌, ஸுக,ம்‌ உபாதே,யமாயிறே இருப்பது.

    4-இவற்றுக்கெல்லை இன்பு துன்பளி பன் மா மாயத் தழுந்துகையும்‌, களிப்பும்‌ கவர்வு மற்றுப்‌ பேரின்பத் தின்புறுகையும்‌

    இந்த ஸுக துக்கங்களுக்கு எல்லை எவை என்னில்‌ (இன்பு துன்பளி பன் மா மாயத்தழுந்துகையும்‌, களிப்பும்‌ கவர்வு மற்றுப்‌ பேரின்பத் தின்புறுகையும்‌)
    (இன்பு துன்பளி)
    துன்பத்தோடே கூடின இன்பத்தைத் தருமதாய்‌ இருக்கை.
    இதுக்கு ப்ரமாணம்‌ “அத்யந்தஸ்திமி தாங்காநாம்‌ வ்யாயாமேந ஸுகைஷீணாம்‌ ப்‌,ராந்தி ஜ்ஞாநவதாம்‌ பும்ஸாம்‌ ப்ரஹாரோபி ஸுகாயதே’” என்று திமிர்வாதம் பற்றின ஸரீரத்தை யுடையவர்களாய்‌, வ்யாயாமத்தினாலே ஸுகத்திலே ஆசை யுடையவர்களுக்கு ஸரீரத்திலே குத்த, ப்‌ ராந்தி ஜ்ஞாநத்தாலே அது ஸுகமாகிறாப் போலேயிறே.
    இன்புதுன்பளி பன்மா மாயத் தமுந்துகையாவது– ‘“ஓ ஓ உலகினதியல்வே ” (திருவாசிரியம்‌ 6) என்கிற பாட்டில்‌ சொல்லுகிறபடியே பர ஹிம்ஸாதி, ஸாத,ந முக,த்தாலே க்ஷத்‌ர தேவதா ஸமாஸ்ரயணம்‌ பண்ணி, தத் ப,லமாய்‌ துக்க,மிஸ்ரமான க்ஷுத்‌ர ஸுகங்களை அநுபவிக்கைக் கீடான தேவாதி ஸரீரங்களிலே அஹமபி,மாநம்‌ பண்ணி ஸம்ஸரிக்கை.
    களிப்பும்‌ கவர்வுமற்றுப்‌ பேரின்பத் தின்புறுகையாவது-– “களிப்பும்‌ கவர்வுமற்று” (திருவாய்‌. 2 – 3 – 10) என்கிற பாட்டில்‌ சொல்லுகிறபடியே ப்ராக்ருத பதார்த்த,ங்களினுடைய லாபா லாபங்களாலே வருகிற ஸோக ஹர்ஷங்கள்‌ போய்‌, ஷட்‌,பாவ விகாராஸ்பதமான ஸ்தூ,ல ஸூஷ்ம ரூபமான ப்ரக்ருதி ஸம்பந்த முமற்று, ”பேரின்ப வெள்ளத்தே”’ (திருவாய்‌. 7 – 2- 11) என்று சொல்லுகிற நிரதிஸய ஆநந்த, மயமான தேஸ விஸேஷத்திலே போய்‌, அப்ராக்ருத விக்‌, ரஹ பரிக்‌,ரஹம் பண்ணி, தி,வ்யாஸ்தாந மண்டபத்திலே நிரதிஸய ஆநந்த., மக்‌நரான நித்ய ஸூரிகளோடே “ ௬ழி பட்டோடும்‌ சுடர்ச்சோதி வெள்ளத் தின்புற்று (திருவாய்‌. 8 10 – 5) என்கிறபடியே ப.கவதநுபவம் பண்ணி, ஆநந்த நிர்பரராய்‌ இருக்கையும்‌, அந்த ஸாஸ்தர ஜந்ய ஜ்ஞாநத்தாலே பிறந்த விவேகத்துக்கு ப்ரயோஜநம்‌ த்யாக, ஸ்வீகாரங்களென்றும்‌, த்யஜிக்கைக்கும்‌ ஸ்வீகரிக்கைக்கும்‌ ஹேது ஸுக துக்கங்களாகையாலே என்றும்‌, இவை இரண்டுக்கும்‌ எல்லை ஸம்ஸார ஸம்பந்தமும்‌, பரமபதத்திலே போய்‌ ஆநந்த நிர்பரரா யிருக்கையும்‌ என்றதாய்த்து

    5-அநந்த க்லேச நிரதிசய ஆனந்த ஹேது
    மறந்தேன் அறியகிலாத உணர்விலேன் ஏணிலேன் அயர்த்து என்றும்
    உய்யும் வகை நின்ற ஒன்றை நன்கு அறிந்தனன் உணர்வினுள்ளே ஆம் பரிசு என்றும்
    சொல்லுகிற ஞாதவ்ய பஞ்சக ஞான -அஞ்ஞானங்கள் –

    அநந்த க்லேச நிரதிசய ஆனந்த ஹேது--,) ”ஸம்ஸார ஸாக,ரம்‌ கோரம்‌ அநத்த கலேஸ பாஜநம்‌” (ஜித. 1) என்கிறபடியே அநந்த துக்காவஹமான ஸம்ஸாரத்துக்கும்‌, நிரஸ்தாதிஸயாஹ்லாத, ஸூக, பாவைக லக்ஷணா பேஷஜம்‌ பகவத ப்ராப்தி ரேகோந்‌ தாத்யந்திகீ மதா” (வி.பு. 6 – 5 -59) என்கிறபடியே நிரதிஸய ஆநந்தா வஹமான மோஷத்துக்கும்‌ ஹேது என்‌ என்னில்‌ மறந்தேன் -என்று தொடங்கி ”ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம்‌ ப்ராப்துஸ் ச ப்ரத்யகாத்மந:। ப்ராப்த் யுபாயம்‌ ப,லம்‌ ப்ராப்தே! ததா ப்ராப்தி விரோதி, ச ” (வ்ருத்‌த,ஹாரீத, 8) என்று இத்யாதிகளில்‌ சொல்லுகிற அர்த்த, பஞ்சக ஜ்ஞாநமும்‌, தத்‌ விஷயமான அஜ்ஞாநமும்‌ என்கிறார்‌ மேல்‌. “மறந்தேனுன்னை முன்னம்‌” (திருமொழி -6- 2 – 2) என்கையாலே பர விஷயமான அஜ்ஞாநமும்
    அறியகிலாத — “யானே என்னை அறியகிலாதே
    ”’ (திருவாய்‌ 2 – 9 – 9) என்கையாலே ஆத்ம விஷயமான அஞ்ஞாநமும்
    உணர்விலேன் -”ஓடியும் உழன்றும்‌ உயிர்களே கொன்றேன்‌ உணர்விலேன்‌
    ” (திருமொழி 1 – 6 – 6) என்கையாலே விரோதி விஷயமான அஜ்ஞாநமும்‌
    ஏணிலேன் -) ”பிறவி நோயறுப்பான்‌ ஏணிலேனிருந்தேன்‌”
    (திருமொழி 1 – 6- 1) என்கையாலே உபாய விஷயமான அஜ்ஞாநமும்
    அயர்த்து என்றும்-”ஆழியங்கை யம்மானை ஏத்தாதயர்த்து
    ” (பெரியதிரு – 82) என்கையாலே புருஷார்த்த விஷயமான அஜ்ஞாநமும்‌-
    ஏத்துகையிறே புருஷார்த்தம்‌. அத்தை மறக்கையாலே புருஷார்த்த, விஷயமான அஜ்ஞாநமும்‌ என்கிறார்‌. “*சூழ்ந்திருந்தேத்துவர்‌’” (திருப்பல்‌. 12) என்றும்‌, ““ஏதத் ஸாம் காயந் நாஸ்தே” (தை. ப்ருகு,.) என்றும்‌ சொல்லக் கடவதிறே-

    உய்யும் வகை – “உணர்ந்தேன்‌ உண்மையாலினி யாதும்‌ மற்றோர்‌ தெய்வம்‌ பிறிதறியேன்‌”’ (திருமொழி 6 – 3 – 6) என்கையாலே பர விஷயமான்‌ ஜ்ஞாநமும்
    நின்ற ஒன்றை -நின்ற வொன்றை உணர்ந்தேன்‌” (திருவாய்‌, 8 – 8 – 5) என்கையாலே ஸ்வருப விஷயமான ஜ்ஞாநமும்
    நன்கு அறிந்தனன்- ‘ அகற்ற நீ வைத்த மாய வல்லைம் புலன்களாமவை நன்கறிந்தனன்‌’” (திருவாய்‌. 5 – 7 – 8) என்கையாலே விரோதி, விஷயமான ஜ்ஞாநமும்
    உணர்வினுள்ளே -) *’உணர்வினுள்ளே இருத்தினேன்‌ அதுவுமவனதின்னருளே”” (திருவாய்‌. 8 – 8 – 3) என்கையாலே உ.பாய விஷயமான ஜ்ஞாநமும்
    ஆம் பரிசு என்றும்– ”ஆம்பரிசறிந்து கொண்டு” (திருமாலை 38) என்கையாலே புருஷார்த்த, விஷய ஜ்ஞாநமும்‌ சொல்லிற்று.
    ஆக, கீழ்ச் சொன்ன ஸம்ஸார ஸம்பந்தத்துக்கும்‌ மோக்ஷ ப்ராப்திக்கும்‌ ஹேது ‘ஜ்ஞாநாந்‌ மோக்ஷம்‌, அஜ்ஞாநாத் ஸம்ஸாரம்‌’ என்று அறியப்படுமதான அர்த்த, பஞ்சக ஜ்ஞாநமும்‌, தத் அஜ்ஞாநமும்‌ என்றதாய்த்து.

    6-இவற்றுக்குக்‌ காரணம்‌ இரண்டில்‌ ஒன்றினில்‌ ஒன்றுகைகள்‌.
    இந்த அர்த்த,பஞ்சக ஜ்ஞாநமும்‌, அஜ்ஞாநமுமாகிற இவற்றுக்குக்‌ காரணம்‌ – இரண்டில்‌ ஒன்றினில்‌ ஒன்றுகைகள்‌. அதாவது இரண்டில்‌ ஒன்றுகையும்‌, ஒன்றினில்‌ ஒன்றுகையும்‌.
    இரண்டில்‌ ஒன்றுகையாவது – ““முத்திறத்து வாணியத் திரண்டிலொன்றும்‌ நீசர்கள்‌” (திரு. ச வி. -68) என்கிறபடியே ரஜஸ் தமஸ் : ப்ரசுரனாகை.
    ஒன்றினில்‌ ஒன்றுகையாவது “முக் குணத்திரண்டவை யகற்றி ஒன்றினில்‌ ஒன்றி நின்று ” (திருவெழு.) என்கிறபடியே ஸத்த்வ ப்ரசுரனாகை.
    இத்தால்‌ அர்த்த, பஞ்சக ஜ்ஞாநாஜ்ஞாந காரணம்‌ ஸத்த்வாஸத்த்வ ப்ராசர்யங்கள்‌ என்றபடி,

    7-ஸத்த்வாஸத்த்வ நிதாநம்‌ – இருள் தரும்‌ அமலங்களாக என்னும்‌ ஜந்ம ஜாயமாந கால கடாக்ஷங்கள்‌.
    இப்படிப்பட்ட ஸத்த்வத்துக்கும்‌ அஸத்த்வத்துக்கும்‌ நிதாநம்‌ என்‌ என்னில்‌ – (இருள்தரும்‌ அமலங்களாக என்னும்‌ ஜந்ம ஜாயமாந கால கடாக்ஷங்கள்‌). அவையாவன – “’இருள் தரு மா ஞாலத்துள்‌ இனிப் பிறவி யான்‌ வேண்டேன்‌”’ (திருவாய்‌. 10 – 6 – 1) என்கிறபடியே அஜ்ஞாநாவஹமான ஸம்ஸாரத்திலே பிறப்பு. ““ஜாயமாநம்‌ ஹி புருஷம்‌ யம்‌ பஸ்யேந்‌ மது ஸூதந: । ஸாத்த்விகஸ் ஸ து விஜ்ஜேய: ஸ வை மோக்ஷார்த்த சிந்தக:”” (பாரதே சபா . ப. 348 -73) என்கிற ஜாயமாந காலத்தில்‌ “அவன்‌ கண்களாலே அமலங்களாக விழிக்கும்‌” (திருவாய்‌. 1 – 9 – 9) என்கிற பகவத் கடாக்ஷமும் –

    8-இவற்றுக்கு மூலம்‌ –இரு வல்லருள் நல் வினைகள்‌.
    (இவற்றுக்கு மூலம்‌) இந்த ஜந்ம கடாக்ஷங்களாகிற இவற்றுக்குக்‌ காரணம்‌ என்‌ என்னில்‌ –
    (இரு வல்லருள் நல்‌ வினைகள்‌). ““சார்ந்த இரு வல் வினை ”யும்‌, ”தொல்லருள் நல்வினை”’ யும்‌.-அவையாவன – ஆத்மாவுக்கு ஸஹஜம்‌ என்னலாம்படி பொருந்தி இருந்துள்ள புண்ய பாபங்களும்‌, ஈஸ்வரனுடைய ஸ்வாபாவிக க்ருபையும் –

    9-கர்ம க்ருபா பீஜம்‌, பொய்ந் நின்ற அருள் புரிந்த என்கிற அவித்‌,யா ஸெளஹார்த்த.ங்கள்‌.
    கர்ம க்ருபா பீஜம் ) ஏவம் விதமான கர்மத்துக்கும்‌ க்ருபைக்கும்‌ பீஜம் – (பொய்ந் நின்ற அருள் புரிந்த என்கிற அவித்‌,யா ஸெளஹார்த்த.ங்கள்‌.- அவையாவன – ‘*’பொய்ந் நின்ற ஞானம்‌”! (திருவிரு. 1) என்கிற அவித்‌யையும்‌, “அருள்புரிந்த சிந்தை” (இர. திருவ. 59) என்றும்‌, ““ஈஸ்வரஸ்ய ச ஸெளஹார்த்தம்‌”’ ( ) என்றும்‌ சொல்லுகிற ஈஸ்வரனுடைய ஸெளஹார்த்தமும்-

    10-ஏதந் நிமித்தம்‌ முன்னமே முதல் முன்னமேயான அசித் , அயநா நாதி, ஸ்ம்பந்தங்கள்‌–
    (ஏதந் நிமித்தம்‌)
    இந்த அவித்‌,யைக்கும்‌ ஸெளஹார்த்த,த்துக்கும்‌ ஹேது ஏதென்னில்‌
    [முன்னமே முதல்‌ முன்னமேயான அசித,யநாநாதி,ஸம்பந்தங்கள்‌). அவை யாவன “மூதாவியில்‌ தடுமாறும்‌ உயிர் முன்னமே”” (திரு விரு. –95) என்கிற அநாதியான அசித்‌ ஸம்பந்த,மும்‌, *’அடியேனடைந்தேன்‌ முதல் முன்னமே’ (திருவாய்‌, 2 – 3 – 6) என்கிற அநாதி யான அயந ஸம்பந்தமும்‌.

    11-இவை கிட்டமும்‌ வேட்டு வேளானும் போலே ஒண் பொருள்‌ பொருளல்லாத(வை) என்னாதே நானிலாத யானுமுளனாவன்‌ என்கிற ஸாம்யம்‌ பெறத் தின்றூதி அந்தமும்‌ வாழ்வுமாகிற ஹாநி ஸத்தைகளை உண்டாக்கும்‌.
    உபய ஸம்பந்தததினுடையவும்‌ கார்யம் சொல்லுகிறது மேல்‌ ; (இவை கிட்டமும்‌ வேட்டு வேளானும் போலே ) என்று தொடங்கி.
    அதில்‌ அசித் ஸம்பந்தம்‌ கிட்டம்‌ போலே. ”எண் பெருக்கந் நலத்தொண் பொருள்‌”’ (திருவாய்‌. 1 – 2 -10) என்கிற விலக்ஷணமான ஆத்ம வஸ்து வென்று பாராதே ”நானிலாத முன்னெலாம்‌”’ (திரு ச வி.- 57 என்னும்படி ஸாம்யம் பெற. *அறுத்துத் தின்று”” (திருமொழி 7 – 7. 7) என்கிறபடியே தின்று. ‘அந்தமும்‌ வாழ்வும்‌” (திருமொழி 5 – 7 – 2) என்கிறதில்‌ அந்தமாகிற ஹாநியை உண்டாக்கும்‌. ““அஸந்நேவ ஸ பவதி”” (தை. ஆந.) என்னக் கடவதிறே. இனி அயந ஸம்பந்தம்‌ வேட்டு வேளான் போலே *“‘பொருளல்லாத என்னைப்‌ பொருளாக்கி (திருவாய்‌, 5 – 7 – 3) என்கிறபடியே அவஸ்து ஸப்‌த,வாச்யமான இத்தை வஸ்து சப்‌த வாச்யமாக்கி, “உள்ள உலகளவும்‌ யானுமுளனவனென் கொலோ ” (பெரியதிருவ. 76) என்கிறபடியே இவனும்‌ தர்ம பூத ஜ்ஞாந த்‌வாரா விபு வாகையாலே ஈஸ்வரன்‌ உள்ளவளவும்‌ இவ்வாத்மா உண்டாம்படி ““பரமம்‌ ஸாம்யமுபைதி” (மு. 3-1- 3) என்கிற ஸாம்யம்‌ பெற ஊதி, வாழ்வாகிற ஸத்தையை உண்டாக்கும்‌. ““ஸந்தமேதம்‌ ததோ விது,” (தை. ஆந.) என்றும்‌, ”கீட: பேஸாக்ருதா ருத்‌த,: குட்‌,யாத்ந்ரநுசிந்தயந் । ஸம்ரம்ப பய யோகே,ந விந்ததே தத் ஸரூபதாம்‌ | ஏவம்‌ க்ருஷ்ணே பகவதி மாயாமநுஜ ஈஸ்வரே ! கோவிந்தே, மதிமாவேஸ்ய நரஸ்ஸத்‌யோ விமுச்யதே'” ( ) என்றும்‌ ‘அந்தமும்‌ வாழ்வுமாய எம்பெருமான்‌”’ (திருமொழி 5 – 7 – 2) என்றும்‌ சொல்லக்‌ கடவதிறே

    12-ஒன்று கூடினதாய்ப்‌ பற்றறுக்க மீண்டொழிகையாலே பழவடியேன்‌ என்னுமதொன்றுமே ஒழிக்க ஓழியாதது.
    இந்த உபய ஸம்பந்தமும்‌ அநாதியாய்‌ நித்யமா யிருக்குமோ வென்னில்‌ ; அசித்‌ ஸம்பந்தம்‌ வந்தேறியுமாய்‌, கர்மோபாதி கமாகையாலே அநித்யமுமா யிருக்கும்‌. அயந ஸம்பந்தம்‌ அநாதியுமாய்‌, நிருபாதிக மாகையாலே நித்யமுமாயிருக்கும்‌ என்கிறார்‌ மேல்‌ (ஒன்று கூடினதாய்‌) என்று தொடங்கி
    (ஒன்று கூடினதாய்‌) “பெருந்‌ துயரிடும்பையில்‌ பிறந்து கூடினேன்‌”” (திருமொழி 1 – 1 – 1) என்கையாலே அசித்‌ ஸம்பந்தம்‌ ஆகந்துகம்‌. ஆனால்‌ அசித் ஸம்பந்தம்‌ அநாதி, என்று சொல்லுவான்‌ என்‌ என்னில்‌ ; வந்தேறின காலம்‌ பழையதாகையாலும்‌, ப்ரமாணங்கள்‌ தான்‌ அநாதி, என்கையாலும்‌. இனி ““வினை பற்றறுக்கும்‌ விதியே” (திருமொழி 11 – 5 – 9), “அடைந்த அருவினையோ டல்லல் நோய் பாவம்‌ மிடைந்தவை மீண்டொழிய வேண்டில்‌”: (மூன்றாம் திரு -59) என்றும்‌ சொல்லுகிறபடியே ஒருநாள்‌ வரையிலே பகவத் ப்ரஸாதத்தாலே கழியக்‌ காண்கையாலே ஆகந்துகம்‌ என்கிறது. ஆகையாலே ”நானுமுனக்குப்‌ பழவடியேன்‌”’ (திருப்பல்‌. 11) என்கிறபடியே ஜீவ பரர்களுக்குண்டான ஸேஷ ஸேஷி பாவ ஸம்பந்த மொன்றுமே ““உறவேல்‌ நமக்கிங்கொழிக்க ஒழியாது ” (திருப்பாவை 28) என்கிறபடியே கழியாதது

    13-இந்த உதரத் தரிப்பு த்ரை கு,ண்ய விஷயமானவற்றுக்கு ப்ரகாஸகம்‌.
    இவ்வயந ஸம்பந்தமே கீழ்ச் சொன்ன ஸாஸ்த்ர ப்ரதாநத்துக்கு ஹேது என்கிறார்‌ மேல்‌, (இந்த உதரத் தரிப்பு த்ரை கு,ண்யவிஷயமானவற்றுக்கு ப்ரகாஸகம்‌). (இந்த உத,ரத்‌ தரிப்பு) இந்த நாராயணத்வ ப்ரயுக்தமான குடல்‌ துடக்கு, “’த்ரை குண்ய விஷயா வேத?” (கீதை 2 – 45) என்கிறபடியே த்ரிகுணவஸ்யரான சேதநரை விஷயமாக உடைய வேதங்களை ப்ரகாஸிப்பிக்கைக்கு ஹேது என்றபடி. தமஸ் ப்ரசுரராயும்‌, ரஜஸ் ப்ரசுரராயும்‌, ஸத்த்வ ப்ரசுரராயுமிறே சேதநர்‌ இருப்பது. ஆக, இந்த உதரத் தரிப்பு த்ரைகுண்ய விஷய மானவற்றுக்கு ப்ரகாஸகம்‌ என்கிற இத்தால்‌ ருச்யநுரூப புருஷார்த்தங்களையும்‌ தத்‌ ஸாதநங்களையும்‌ விதிக்கிற ஸாஸ்த்ர ப்ரதாநத்துக்கு அடி இந்த ஸம்பந்தம்‌ என்றதாய்த்து.

    கீழ் ‘ நீர்மையினாலருள்செய்தான்‌”’ (திருமொழி 1 -8 – 5) என்று சொன்ன ஸாஸ்த்ர ப்ரதாநத்துக்கு ஹேது சொல்லிற்று ஆய்த்து

    14-வத்ஸலையான மாதா பிள்ளை பேகணியாமல்‌ மண் தின்ன விட்டு ப்ரத்யெளஷதம்‌ இடுமாப் போலே எவ் வுயிர்க்கும்‌ தாயிருக்கும்‌ வண்ணமான இவனும்‌ ருசிக் கீடாகப்‌ பந்தமும்‌ பந்த மறுப்பதோர்‌ மருந்தும்‌ காட்டுமிறே.
    இப்படி ஸாஸ்தர ப்ரதாநம்‌ பண்ணுகிறது ஸம்பந்த, மடியாக வாகில்‌ விமோசக. ஸாஸ்த்ரத்தையே வெளியிடாதே பந்தக ஸாஸ்த்ரங்களையும்‌ வெளியிடுவான்‌ என்‌ என்னில்‌; வத்ஸலனாகையாலே சேதநருடைய ருச்யநு குணமாக வெளியிட்டான்‌ என்கிறது மேல்‌ (வத்ஸலையான மாதா) என்று தொடங்கி- ப்ரிய ப்ரவர்த்தகத்வத்தைப் பற்றவும்‌ அதுக்கடியான வாத்ஸல்யத்தைப் பற்றவும்‌ இப்போது மாதாவை த்‌ருஷ்டாந்தமாக்குகிறது. ““எல்லா வெவ்வுயிர்க்கும்‌ தாயோன்‌” (திருவாய்‌. 1 – 5 – 3) என்றும்‌, “’தாயிருக்கும்‌ வண்ணமே” (திருமொழி 11 – 6 – 6) என்றும்‌ சொல்லுகிறபடியே இவனும்‌ அப்படியே ஸர்வாத்மாக்கள் பக்கலிலும்‌ மாத்ருத்வ ப்ரயுக்கமான வாத்ஸல்யத்தை உடையனாகையாலே சேதநருடைய ருசிக்கீடான “பந்தமும்‌” என்கிற பந்தக ஸாஸ்த்ரங்களையும்‌, ““பந்த மறுப்பதோர்‌ மருந்தும்‌” என்கிற விமோசக ஸாஸ்த்ரத்தையும்‌ விதிக்கும்‌ என்கிறார் –

    15-அதுதானும்‌ ஆஸ்திக்ய விவேகம்‌ அந்ய ஸேஷத்வ ஸ்வ ஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்தி பாரதந்த்ர்யங்களை உண்டாக்கின வழி.
    இப்படி பந்தகமாக ஸாஸ்த்ரத்தையும்‌ கலசி விதித்தால்‌ அது கொண்டு சேதநர்‌ ஸம்ஸரித்தே போமித்தனையோ என்னில்‌ ; அது தானும்‌ விமோசக ஸாஸ்த்ரத்திலே வருகைக்கிட்ட வழி என்கிறார்‌ மேல்‌ (அதுதானும்‌ ஆஸ்திக்யம்‌) என்று தொடங்கி, அதுதானும்‌ -பந்தக ஸாஸ்த்ரத்தைக்‌ கலசி விதித்தது தானும்‌. பர ஹிம்ஸா ஸீலனாய்‌ ஸாஸ்த்ர ஸாமர்த்‌யம்‌ {ஸாஸ்த்ரத்தில்‌ ஆஸ்திக்யம்‌) முதலிலே இல்லாதவனைக் குறித்து மோக்ஷத்தை விதித்தால்‌ அது அவனுக்கு ருசியாதாகையாலே அநபரஹிம்ஸா ரூபமான அபிசார ஸாஸ்த்ரத்தை விதித்து அது அவனுக்கு பலித்தவாறே அவ் வழியாலே ஸாஸ்தரம்‌ உண்டென்கிற்‌ ஆஸ்திக்யத்தை ௨ண்டாக்கியும்‌, ஆஸ்திகனானவாறே ்‌ ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்க்க காமோ யஜேத” ( ) என்று இத்யாதி,களில்‌ சொல்லுகிறபடியே ஸ்வர்க்காதி, புருஷார்த்தங்களையும்‌, தத் ஸாதநங்களையும்‌ சொல்லுகிற ஸாஸ்த்ரங்களையும்‌ விதித்து, அவ் வழியாலே ப்ரகருத் யாத்ம விவேகத்தைப்‌ பிறப்பித்தும்‌, இப்படி ப்ரக்ருத் யாத்ம விவேகம்‌ பிறந்தவாறே ஆத்ம லாப, ரூப புருஷார்தத்தைக்‌ காட்டி அந்ய ஸேஷத்வத்தை நிவர்த்திப்பித்தும்‌, அநந்தரம்‌ பகவத் கைங்கர்ய ருப புருஷார்த்‌தத்தைக் காட்டி ஸ்வ ஸ்வாதந்தர்யத்தை நிவர்த்திப்பித்தும்‌, ஆத்மா வினுடைய அத்யந்த பாரதந்தர்யத்தை உண்டாக்குகைக் கிட்ட வழி என்கிறார் –

    16-சதுர் விதமான தே,ஹ-வர்ண- ஆஸ்ரம-அதிகார- ப,ல- மோக்ஷ -ஸாதந ,-கதி- யுக.- தர்ம-வ்யூஹ-ரூப-க்ரியாதிகளை அறிவிக்கிற பாட்‌டுப் பரப்புக்கு – பெரிய தீவினில்‌ ஒன்பதாம்‌ கூறும்‌, மானிடப்‌ பிறவியும்‌, ஆக்கை நிலையும்‌, ஈரிரண்டிலொன்றும்‌, இளமையும்‌, இசைவுமுண்டாய்‌, புகுவரேலும்‌ என்கிறதுக்குள்ளே விக்‌நமற, நின்றவா நில்லா ப்ரமாதியைக் கொண்டு அறக்கற்கை அரிதென்றிறே வேத ஸார-உபநிஷத் ஸார தர அநுவாக-ஸார தம காயத்ரியில்‌ முதலோதுகிற பொருள் முடிவான சுருக்கைத்‌ தெய்வ வண்டாய்‌, அன்னமாய்‌, அமுதம்‌ கொண்டவன் -ஸாகை களிலும்‌, ஓதம் போல் கிளர்‌ நால் வேதக்‌ கடலிலும்‌, தேனும்‌ பாலும்‌ அமுதுமாக எடுத்துப்‌ பெரு விசும்பருளும்‌ பேரருளாலே சிங்காமை விரித்தது –

    இனி மேல்‌ ஸாஸ்த்ர ப்ரதிபாத்‌யமான அர்த்த விமேோஷங்களை ஸங்க,ரஹேண ப்ரதிபாதியா நின்று கொண்டு ஏவம் வித,மான ஸாஸ்த்ரத்தினுடைய ௮ப்‌யாஸத்துக்கு ஐம்பூ, த்‌வீபாதி, தேஸ தேஹாதி,ஸாபேக்ஷதயா ஜ்ஞாதும்‌ அஸக்யமாயிருக்குமென்று இப்படி ஸாபேக்ஷமன்றிக்கே, நித்ய நிரபேக்ஷமாய்‌, அத ஏவ ஸூகரமுமாய்‌, ஸாஸ்த்ர தாத்பர்யமுமான திருமந்தரத்தை ஸ்ரீபதரிகாஸ்ரமத்திலே வெளியிட்டருளினான்‌ என்கிறார்‌ (சதுர்விதமான தே,ஹ) என்று தொடங்கி. (சதுர்விதமான தேஹம்‌) தே,வ-திர்யங்‌ மநுஷ்ய-ஸ்தாவர ரூபமான ஸரீர விஸேஷங்கள்‌. (வர்ணம்‌) ப்‌,ராஹ்மண-க்ஷத்ரிய வைஸ்ய-ஷூத்‌ர ரூபமான வர்ண சதுஷ்டயம்‌. (ஆஸ்ரமம்‌) ப்‌,ரஹ்ம சர்ய- கார்ஹஸ்த்ய -வாநப்ரஸ்த,-ஸந்த்யாஸங்களாகிறவை. (அதிகாரம்‌) “ஆர்த்தோ ஜிஜ்ஞாஸு அர்த்தார்த்தி, ஜ்ஞாநீ” (கீதை 7 – 16) என்று சொல்லுகிறவை-

    இதில்‌ ஆர்த்தனாவான்‌ – நஷ்ட ஐஸ்வர்ய காமன்‌. ஜிஜ்ஞாஸுவாவான்‌ – கேவலன்‌. அர்த்தார்த்தீ,யாவான்‌ -அபூர்வ ஐஸ்வர்ய காமன்‌. ஜ்ஞாநி என்கிறது பகவதநுபவ ஏக பரனை. ஆர்த்தனுக்கும்‌ அர்த்தார்த்திக்கும்‌ நடுவே கேவலனைச் சொல்லிற்று – அவனும்‌ ப்ரயோஜநாந்தர பரன்‌ என்னுமிடம்‌ தோற்றுகைக்காக. (பலம்‌)“‘தர்ம- அர்த்த,- காம மோக்ஷாக்‌,யா:” ( ) என்று சொல்லுகிறவை. (மோக்ஷமாவது) – ஸாலோக்ய-ஸாமீப்ய ஸாரூப்ய-ஸாயுஜ்யங்கள்‌, (ஸாதநம்‌) – கர்ம-ஜ்ஞாத-ப,க்தி-ப்ரபத்திகள்‌. (கதியாவது )த்‌,யு:பர்ஜந்ய ப்ருதிவீ புருஷ யோஷித்துக்களான பஞ்சாக்‌நி வித்‌யையில்‌ சொல்லுகிற படியே வருகிற கர்ப்ப,கதியும்‌, யாம்ய கதியும்‌, தூம்ய கதியும்‌, அர்ச்சிராதி,கதியும்‌. (யுக,மாவது) – க்ருத-த்ரேதா-த்‌,வாபர-கலியுக,ங்கள்‌. (த,ர்மமாவது) – “த்யாயத்‌ க்ருதே யஜந்‌ யஜ்ஞை: த்ரேதாயாம்‌ த்‌,வாபரேர்ச்சயத்‌ | யதாப்நோதி ததாப்நோதி கலெள ஸங்கீர்த்ய கேஸவம்‌”’ (வி. பு. 6 – 2 – 17) என்று சொல்லுகிற த்‌யாந -யாக,-அர்ச்சந -சங்கீர்த்தநங்கள்-வ்யூஹமாவது – வாஸு தே,வ-ஸங்கர்ஷண-ப்ரத்‌யும்ந- அநிருத்‌தர்கள்‌. ரூபமாவது “ரக்தம்‌ ஸிதே தரே பீதம்‌ சதுர்த்தா யத் க்ருதே யுகே, ! ரக்தாத்‌யம்‌ ஸித நிஷ்டஞ்ச த்ரேதோயாம்‌ ஹி மஹாமதே பீதம்‌ க்ருஷ்ணம்‌ ஸிதம்‌ ரக்தம்‌ ஸம்ப்ராப்தே த்வாபரே யுகே, ! கலெள க்ருஷ்ண ஸிதம்‌ ரக்தம்‌ பீதஞ்சாநுக்ரமேண து””( ) (யதாமதி ஸோத நீயம்‌] என்கிற படியே க்ருதாதி,களில்‌ ஸித-ரக்த- பீத-க்ருஷ்ணாதி,களான ஸங்கர்‌ஷணாதிகளுடைய வர்ண சதுஷ்டயங்கள்‌. “பாலினீர்மை”! (திரு.ச . வி. 44) இத்யாதி, க்ரிசை யாவது -ஸ்ருஷ்டி -ஸ்திதி-ஸம்ஹார-மோக்ஷ ப்ரதத்வாதி,கள்‌. ஆதி சப்‌தத்தாலே மற்றும்‌ அர்ச்சநீயரான தேவதா விஸேஷங்களைச்‌ சொல்லுகிறது

    இப்படி சதுர் வித,மான தேஹாத் யர்த்த,விஸேஷங்களுக்கு ப்ரகாஸகமான பாட்டுப்‌ பரப்புக்கு “பாட்டும்‌ முறையும்‌?” (நா. திருவ. 76) என்கிற பாட்டில்‌ சொல்லுகிற ஸாஸ்த்ர விஸ்தரத்துக்கு. (பெரியதீவினில்‌ இத்யாதி,) ““நாவலம் பெரிய தீவு”’ (பெரியா. தி. 3 – 6: – 1) என்கிற ஜம்பூ த்‌வீபத்தில்‌ நவ கண்டையான ப்ருதிவியில்‌ பரத கண்ட,மும்‌. “துர்லபோ மாநுஷோ தேஹு:”” (ப,ாக,வ. 11 – 2 – 21) என்றும்‌, “மானிடப் பிறவி அந்தோ?” (திருக் குரும் -. 6) என்றும்‌ சொல்லுகிற மநுஷ்ய தேஹமும்‌, ‘“தே,ஹிநாம்‌ க்ஷண பங்கு, ர:”” என்றும்‌, “மின்னின்னிலையில மன்னுயிராக்கைகள்‌”’ (திருவாய்‌. 1 – 2. 2) என்றும்‌ சொல்லுகிற தாத்‌ருஸ தேஹங்களினுடைய ஸ்தைர்யமும்‌. ஸாஸ்த்ர ஜ்ஞாநத்துக்கு யோக்‌யமான வர்ணங்களில்‌ ப்ரதம க,ண்யமாய்‌, ““குலங்களாய ஈரிரண்‌டிலொன்றிலும்‌”’ (திருச்ச. 90) என்கிற ப்‌ராஹ்‌மண ஜந்மமும்‌, “கிளரொளி இளமை”” (திருவாய்‌. 2 – 10 – 1) என்று இதினுடைய பால்யமும்‌–தஸ்மாத் பால்யே விவேகாத்மா’ (வி.பு. 1 – 17 – 75) என்றும்‌ சொல்லக் கடவது இறே

    அதிலும்‌, ““யானுமென்னெஞ்சும்‌ இசைந்தொழிந்தோம்‌”’ (பெரியதிருவ, 36) என்கிறபடியே இச்சையுமுண்டாய்‌, “*வேத நூல்‌ பிராயம்‌ நூறு மனிசர் தாம்‌ புகுவரேலும்‌”’ (திரு மாலை 3) என்றும்‌, ““ஸதாயுர்வை புருஷ:”” (யஜு. கா. 1 – 8 – 2) என்றும்‌ சொல்லுகிற படியே மநுஷ்யர்‌ வேதோக்தமான ஆயுஸ்ஸை உடையவரே யாகிலும்‌ அவ்வாயுஸ்‌ஸுக்குள்ளே “அநந்த ஸாரம்‌ ப,ஹு வேதி தவ்யம்‌ அல்பஸ் ச காலோ பஹவமஸ்ச விக்‌,நாநி :’” ( ) என்றும்‌, ““ஸ்ரேயாம்ஸி ப,ஹுவிக்‌,நாநி ப,வந்தி மஹதாம்பி”” ( ) என்றும்‌ சொல்லுகிறபடியே ஸாஸ்த்ர ஜ்ஞாந விரோதி,யான ப்ரபல ப்ரதிபந்தகங்களும்‌ அற்று, “நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன்‌ ” (திருமொழி 1 – 1 & 4) என்றும்‌, “சஞ்சலம்‌ ஹி மநஸ் : க்ருஷ்ண ப்ரமாதி, பலவத்‌,த்‌ரூடம்‌ ! தஸ்யாஹம்‌ நிக்‌ரஹம்‌ மந்யே வாயோரிவ ஸதுஷ்கரம்‌”’ (கீதை 6 – 34) என்றும்‌ சொல்லப்படுகிற மநஸ்ஸைக் கொண்டு ‘கலையறக் கற்றமாந்தர்‌”” (திருமாலை 7) என்கிறபடியே ஸாஸ்த்ரங்களைக்‌ கரை கண்டு ”ஆமாறறிவுடையார்‌ ஆவதரிதன்றே”’ (பெரியதிருவ. 37) என்கிறபடியே தாத்பர்ய ஜ்ஞனாகை அரிது என்றிறே

    வேதஸாரோபநிக்ஷத்‌ – (”அஸாரமல்பஸாரஞ்ச ஸாரம்‌ ஸாரதரம்‌ த்யஜேத்‌ | பஜேத்‌ ஸாரதமம்‌ ஸாஸ்த்ரம்‌ ரத்நாகர இவாம்ருதம்‌” ( )) அயதர்த்த,ப்ரதிபாத,கங்களான பாஹ்ய ஸாஸ்த்ரங்கள்‌ அஸாரமாய்‌, புத்ர பஸ் வந்நாத்‌,ய ஐஸ்வர்யஸாத,நத்தையும்‌, ஸ்வர்க்க,ஸாத,ந ஜ்யோதிஷ்டோமாதி, களையும்‌ விதிக்கிற முகத்தாலே ஸாஸ்தராஸ்திக்யம்‌ ப்ரக்ருத் யாத்ம விவேகம்‌ இவற்றைப்‌ பிறப்பிக்கையாலே வேதத்தில்‌ பூர்வபாகம்‌ அல்ப ஸாரமாயிருக்கும்‌. இங்ஙனன்றிக்கே அநந்த ஸ்திர பல ப்‌ரஹ்மோபபாதநமான உபதிஷத பாகம்‌ ஸாரமாயிருக்கும்‌

    அந்த உபநிஷத்துக்களிலும்‌ சொல்லுகிற “பரம்‌ ப்‌,ரஹ்ம பரம்‌ ஜ்யோதி: ‘” இத்யாதி, ஸாமாந்ய வாசக ஸப்‌,த,ங்களாலும்‌, விஸேஷ வாசியான சம்பு,சிவாதி ஸப்‌,த,ங்களாலும்‌,ப்ரதிபாதி,க்கப்படுகிறன்‌ நாராயணனே என்று சொல்லுகிற நாராயணாநுவாகம்‌ ஸார தரமாய்‌, அதில்‌ வ்யாபக த்ரயத்தையும்‌ ப்ராதாந்யேந ப்ரதிபாதிக்கிற விஷ்ணு காயத்ரியில்‌ ப்ரதமோபாத்தமான நாராயண ஸப்‌,த,ம்‌ ஸார தமமாகையாலே ““ஓத்தின்‌ பொருள்‌ முடிவுமித்தனையே – மாதவன்‌ பேர்‌ சொல்லுவதே ஒத்தின்‌ சுருக்கு! (இர, திருவ. 39) என்கிறபடியே வேதாந்த தாத்பர்யமாய்‌, “ருசோ யஜூம்ஷி ஸாமாநி ததைவா தர்வணாநி ச ” (வரு. ஹா.) என்று இத்யாதி,களில்‌ சொல்லுகிறபடியே ஸகல வேத ஸங்க்ரஹமுமாய்‌, ஸகலார்த்த,ப்ரகாஸகமுமாய்‌ ஸர்வேஸ்வரன் தனக்குத்‌ திருநாமமான திருமந்தரத்தை ஷட்பத,மானது ஸாகா ஸஞ்சாரம் பண்ணி மதுவை எடுக்குமாப் போலே தூவியம்புள்‌ளுடைத்‌ தெய்வ வண்டானவன்‌ ஸாகைகளில்‌ ஸாரரூபமான திருமத்த்ரத்தை எடுத்தும்‌, அன்னமாய்‌ அன்றங்கருமறை பயந்தான்‌” (திருமொழி 5 – 7 – 3) என்கிறபடியே அன்னமானது நீரிலே பாலை எடுக்குமாப் போலே கிளர்வேதநீரிலே ஸாரமான திருமந்த்ரத்தை எடுத்தும்

    அநந்தரம்‌, ““பேணான்‌ வாங்கி அமுதங்கொண்ட ” (திருமொழி 6 – 10 – 3) என்கிறபடியே ஸ்வேந ரூபேண, அஸூர பய பீதரான தேவர்களுடைய ரக்ஷணார்த்தமாக க்ஷீராப்‌தியை மதித்து அம்ருதத்தை எடுத்தாப் போலே ஸம்ஸார பய பீ,தரான சேதநருடைய ரக்ஷ்ணார்த்த,ம்‌ ”நால்வேதக்கடலமுது?’ (பெரியா. தி. 4 – 3 – 11) என்கிறபடியே நாலு வகைப்பட்ட வேதத்திலும்‌ ஸார பூ,தமான திருமந்த்ரத்தை எடுத்தும்‌.
    ஆக, ஸர்வரஸமுமாய்‌ ஸர்வாதிக ஸத்யத்தையும் தருமதான “தேனும்‌ பாலும்‌
    அமுதுமாய திருமால் திருநாமம்
    -(திருமொழி -6-10-6) என்கிற திருமந்திரத்தை அமரர் பெரும் விசும்பருளும் பேரருளாளன்‌ ”’ திருமொழி 1 – 4.4) என்கிற பெரும் விசும்பான பரமபதத்தைக் கொடுப்பதான நிர்ஹேதுக க்ருபையாலே ““‘நரநரரணனாய்‌ உலகத்தறநூல்‌ சிங்காமை விரித்தவன்‌’‘ (திருமொழி 10 – 6 – 1) என்கிறபடியே ஸ்ரீபதரி காஸ்ரமத்திலே நர நாராயண ரூபேண வந்து அவதரித்து ஸ்வரூபஸாஸ்த்ரம்‌ மடங்காதபடி விஸ்தரித்தருளினது அறக்கற்கை அரிதென்றிறே – இத்தைக் கொண்டு அந்வயிப்பது-

    17-முனிவரை இடுக்கியும்‌ முந்நீர் வண்ணனாயும்‌ வெளியிட்ட ஸாாஸ்த்ர தாத்பர்யங்களுக்கு விஸிஷ்ட நிஷ்க்ருஷ்ட வேஷங்கள்‌ விஷயம்‌.
    ஸாஸ்த்ரத்தையும்‌ ஸாஸ்த்ர தாத்பர்யமான திருமந்த்ரத்தையும்‌ வெளியிட்டருளினான்‌ என்று நின்றது கீழ்‌ ; அவற்றை வெளியிட்ட ப்ரகாரமென்‌ ; அவற்றுக்கு விஷயமேது” என்கிற சங்கையில்‌ சொல்லுகிறது (முனிவரை இடுக்கியும்‌) என்று தொடங்கி. ““இருள்‌கள்‌ கடியும்‌ முனிவரும்‌” (திருவாய்‌. 10 – 7 – 7) என்கிற ஸ்மர்த்தாக்களான வ்யாஸாதி,களுக்கு ““க்ருஷ்ண த்‌வைபாயநம்‌ வ்யாஸம்‌ வித்‌தி, நாராயணம்‌ ப்ரபு,ம்‌ | கோஹ் யந்ய: புண்ட,ரீகாஷாந் மஹா பாரத க்ருத்‌,பவேத்‌”’ (வி.பு. 3 – 4 – 5) என்கிறபடியே அந்தர்யாமியாய் நின்று தந் முகேந ப்ரவர்த்திப்பித்த ஸாஸ்த்ரங்களுக்கு விஷயம்‌ இவர்களுடைய தேஹ விஸிஷ்ட ஸ்வரூபம்‌ என்றும்‌, *“கருங்கடல்‌ முந்நீர்வண்ணன்‌”’ (திருமொழி 1 – 4 10) என்கிறபடியே ஸ்ரீபதரிகாஸ்ரமத்திலே ஸ்வேந ரூபேண நின்று வெளியிட்ட தாத்பர்யமான திருமந்த்ரத்துக்கு விஷயம்‌ சேதநருடைய நிஷ்க்ருஷ்ட ஸ்வரூபம்‌ என்றும் சொல்லப்பட்டது ; ஸாஸ்த்ரத்துக்கு தேஹத்திலே நோக்கு; தாத்பர்யத்துக்கு ஸ்வரூபத்திலே நோக்கு என்றதாய்த்து –

    18-தோல்புரையேபோமதுக்குப்‌ பழுதிலா யோக்‌யதை வேணும்‌ ; மனமுடையீர்‌ என்கிற ஸ்ரத்‌தையே அமைந்த மர்ம ஸ்பர்ஸிக்கு நானும்‌ நமரும்‌ என்னும்படி ஸர்வரும்‌ அதிகாரிகள்‌.
    ஆனால்‌ இவை யிரண்டும்‌ ஸர்வாதிகாரமா யிருக்குமோ? அதி க்ருதாதிகாரமா யிருக்குமோ? என்கிற சங்கையிலே சொல்லுகிறது (தோல் புரையே போமதுக்கு) என்று தொடங்கி, தேஹ விஸிஷ்ட ஸ்வரூபத்தை விஷயமாக உடைத்தாகையாலே தேஹாவஸாநமே தனக்கு அவஸாநமான ஸாஸ்த்ரத்துக்கு ”பழுதிலா ஒழுகலாற்றுப் பல சதுப் பேதிமார்‌கள்‌” ்‌ (திருமாலை 42) என்கிறபடியே அதிகாரி ஸம்பத்தி ஸாபேக்ஷமாயிருக்கும்‌. “மன முடையீர்‌” என்கையாலே * “கண்ணன்‌ கழலிணை நண்ணும்‌ மனமுடையீர்‌”” (திருவாய்‌. 10 – 8 – 1) என்றும்‌, “ந தீர்த்தம்‌ ந ச நக்ஷத்ரம்‌ ந க்‌ரஹா ந ச சந்த்‌ரமா: ஸ்ரத்‌தைவ காரணம்‌ ந்ரூணாம்‌ அஷ்டாக்ஷர பரிக்‌ரஹே”” (பாஞ்சராத்ரே) என்றும் சொல்லுகிறபடியே ஸ்ரத்‌தா மாத்ரமே அமைந்த ஸ்வரூப ஸ்பர்ஸியான தாத்பர்யத்துக்கு “நானும்‌ சொன்னேன்‌ நமருமுரைமின்‌ நமோ நாராயணமே ‘ (திருமொழி 6 – 10 – 6) என்கையாலே அதிகாரி நியமமில்லை. இத்தால்‌ ஸாஸ்த்ரம்‌ அதி க்ருதாதிகாரமா யிருக்கும்‌ ; ஸாஸ்த்ர தாத்பர்யமான திருமந்த்ரம்‌ ஸர்வாதிகாரமென்றதாய்த்து –

    19-ஸாஸ்த்ரிகள்‌ தெப்பக் கையரைப் போலே இரண்டையு மிடுக்கிப்‌ பிறவிக் கடலை நீந்த, ஸாரஜ்ஞர்‌ விட்டத்தி லிருப்பாரைப் போலே இருகையும்‌ விட்டுக்‌ கரை குறுகும்‌ காலமெண்ணுவர்கள்‌.
    இனி மேல்‌ ஸாஸ்த்ரோப லக்ஷிதமான பக்தி நிஷ்டனுடையவும்‌, தாத்பர்யோப லக்ஷிதமான பிரபத்தி நிஷ்டனுடையவும்‌ ப்ரதிபத்திகளைச்‌ சொல்லுகிறது (ஸாஸ்த்ரிகள்‌ தெப்பக் கையரைப் போலே) என்று தொடங்கி, ஆறு நீஞ்ச வந்தவன்‌ தெப்பத்தை ஒரு கையிலே இடுக்கியும்‌, தானும்‌ ஓரு கையாலே நீஞ்சுமாப் போலே, பக்தி நிஷ்டனும்‌, ஸ்வ யத்நமும்‌ ஸ்வ யத்ந ஸாத்‌யமான பகவத் க்ருபையையுங் கொண்டு ”புணைவன்‌ பிறவிக் கடல்‌ நீந்துவார்க்கே”‘ (திருவாய்‌, 2 – 8 – 1) என்கிறபடியே ஸம்ஸார ஸாக,ரத்தைக்‌ கடக்கத்‌ தேடும்‌. (ஸாரஜ்ஞர்‌) தாத்பர்ய நிஷ்டரான ப்ரபந்நரானவர்கள்‌. (விட்டத்திலிருப்பாரைப்‌ போலே) ஆற்றின்‌ கரையேறிப்‌ போகிறவன்‌ அதில்‌ யத்நத்தில்‌ அந்வயமற்று விட்டத்திலிருக்குமாப் போலே ; ”விஷ்ணு போதம்‌ விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம்‌?’ ( ) என்கிறபடியே அக்கரையோடு உருவ நின்று நடத்துகிற ‘*வைகுந்தனென்பதோர்‌ தோணி?” (நா. திரு. 5 – 4) என்கிற விஷ்ணு போதத்திலே இருந்து அவனுடைய ஜ்ஞாந ஸக்த்யாதி, கு,ணாநுபவத்தாலும்‌ ஸ்வ பாரதந்தர் யாநுஸந்தாநத்தாலும்‌ நிர்பரராய்‌ மேல்‌ உபாயதயா கர்த்தவ்ய மில்லாமையாலே, இரு கையும்‌ விட்டு – அசேதந க்ரியா கலாபத்தையும்‌ தத் ஸாத்‌யமான பகவத் க்ருபையையும்‌ விட்டு – கேவல பகவத் க்ருபையே தங்களுக்கு உத்தாரகம்‌ என்று அத்‌யவஸித்துக்‌ கரை குறுகும்‌ காலமெண்ணுவர்கள்‌.கூவிக் கொள்ளுங்கால மின்னம்‌ குறுகாதோ” (திருவாய்‌. 6 – 9-9) என்றும்‌, “ஆக்கை விடும் பொழுதெண்ணே’” (திருவாய்‌, 1 – 2 – 9) என்றும்‌ சொல்லுகிறபடியே ப்ராப்தியைச்‌ சிந்தித்திருப்பார்கள்‌,

    20-இவை ஸ்வரூபத்தை உணர்ந்துணர்ந்துணரவும்‌ உணர்வைப்‌ பெறவூர மிக உணர்வுமுண்டாம்‌.
    இவர்களுக்கு அவ்வதி,காரமுண்டாகைக்கு ஹேதுவான ஸ்வரூப ஜ்ஞாந தாரதம்யத்தைச்‌ சொல்லுகிறது (உணர்ந் துணர்ந்துணரவும்‌ உணர்வைப் பெற வூர மிக வுணர்வுமுண்டாம்‌) என்று. (உணர்ந்துணர்ந்துணரவும்‌) ‘உணர்ந்துணர்ந்திழிந்தகன்று உயர்ந்து உருவியந்த இந் நிலைமை உணர்ந்துணர்ந்துணரிலும்‌’” (திருவாய்‌. 1 – 3 – 6) என்கிறபடியே ஆத்ம ஸ்வரூபத்தை ஜ்ஞப்தி மாத்ர மன்றிக்கே நித்ய ஜ்ஞாந குணகமாய்‌ தேஹேந்தரியாதி, விலக்ஷணனாகவும்‌, ஜ்ஞாதாவாகவும்‌, கர்த்தாவாகவும்‌ பகவச் சேஷமாகவும்‌ ஸ்ரவண மநநாதிகளாலே ஸாக்ஷாத்கரித்த ஸாஸ்த்ரிகளுக்கு அந்த வ்ருத்தி உண்டாம்‌. (உணர்வைப்‌ பெறவூர மிகவுணர்வுமுண்டாம்‌)‘உணர்வுமுயிருமுடம்பும்‌ மற்றுலப்பிலனவும்‌ பழுதேயாம்‌ உணர்வைப் பெறவூர்ந்து ” (திருவாய்‌. 8. 8.3) என்கிறபடியே தேஹேந்த்‌ரியாதிகளில்‌ வ்யாவ்ருத்தமான ஆத்ம ஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிக்கும்படி நிர்ஹேதுகமாக ஈஸ்வரன்‌ நடத்த “மெய்ம்மையை மிக வுணர்ந்து’‘ (திருமாலை 38) என்கிறபடியே ததீய ஸேஷத்வ பர்யந்தமாக உணர ப்ரபந்நனுக்கு இந்த ப்ரதிபத்தி உண்டாம் –

    21-ஸேஷத்வ போக்த்ருத்வங்கள் போலன்றே பாரதந்த்ர்ய போக்யதைகள்‌.
    இந்த ஸ்வரூப ஜ்ஞாநமும்‌ ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநமுமாகிற இவை யிரண்டும்‌ தன்னிலொக்குமோ என்னில்‌ ; ஒவ்வாது என்கிறார்‌ (-ஸேஷத்வ போக்த்ருத்வங்கள் போலன்றே பாரதந்த்ர்ய போக்யதைகள்‌.) என்று தொடங்கி. ஸேஷத்வமாவது – இஷ்ட விநியோக அர்ஹதா மாத்ரம்‌. பாரதந்தர்யமாவது – அந்த ஸேஷ வஸ்துவை ஸேஷிக்கு இஷ்ட மானபடி விநியோகப் படுத்திக்‌ கொடுக்குமது. போக்த்ருத்வமாவது – ரஸாரஸங்‌களுக்குத்‌ தானே போக்தாவாகை. போக்‌யதையாவது – பதார்த்த, கதமான ரஸ வர்ணாதிகள்‌ போக்தாவுக்கே போக்‌யமா யிருக்குமாப் போலே ஆத்ம கதமான ஜ்ஞாநாதிகளும்‌ ஈஸ்வரனுக்கே போக்‌யமாயிருக்கை, ஆகையால்‌ இஷ்ட விநியோக அர்ஹதா மாத்ரமான சேஷத்வம் போலே யன்றே, அத்தை இஷ்டமானபடி விநியோகப் படுத்திக்‌ கொடுக்கிற பாரதந்த்ர்யம்‌. ஸ்வ போகத்துக்கும்‌ ஹேதுவாயிருக்கிற போக்த்ருத்வம்‌ போலே யன்றே அந்த போக்த்ருத்வத்தை ஸேஷியினுடைய ப்ரியோப யோகி,யாக்கிக்‌ கொடுக்கிற போக்‌யதை.

    22-ஜ்ஞாந சதுர்த்தி,களின் மேலே யிறே ஆநந்த ஷஷ்டிகளுக்கு உதயம்‌.
    ஆகையிறே போக்த்ருத்வ ப்ரகாஸகமாய்‌ “மந – ஜ்ஞாநே‘ என்கிற தாதுவிலே உதிதமான ஜ்ஞாநத்துக்கு மேலே அந்த மகார விவரண ரூபமாய்‌ போக்‌யதா ப்ரகாஸகமான சரம சதுர்த்தி யிலே ஆநந்தம்‌ உதித்ததும்‌, ஸேஷத்வ ப்ரகாஸகமான சதுர்த்தியின் மேலே பாரதந்த்ர்ய ப்ரகாஸகமான ஷஷ்டி, உதித்ததும்-

    23-முளைத்தெழுந்த ஸூர்ய துல்ய யாதாத்ம்ய சரமம்‌ விதியில்‌ காணும்‌ . ப்ரதம மத்‌யம தஸைகளைப்‌ பகல் விளக்கும்‌ மின்மினி யுமாக்கும்‌.
    இனிமேல்‌ இந்த ஸ்வரூப ஜ்ஞாநத்தினுடையவும்‌ ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநத்தினுடையவும்‌ அத்யந்த வைஷம்யம்‌ சொல்லுகிறது (முளைத்தெழுந்த) என்று தொடங்கி, “முளைத்தெழுந்த திங்கள் தானாய்‌’” (திருநெடு. 1) என்றும்‌, *‘யதா ஸுூர்யஸ் ததா ஜ்ஞாநம்‌”‘ (வி. பு. 6 – 5 – 62) என்றும்‌, ஆஹ்லாத கரனாயும்‌, அதி ப்ரகாஸ கனாயுமிருக்கிற சந்த்‌ராதித்யர்களை யாதாத்ம்ய சரமமான பாரதந்த்ர்ய போக்‌யதா ஜ்ஞாதங்களுக்கு த்ருஷ்டாந்தமாக்குகையாலே பகவத் ப்ரஸாத லப்‌தமாகையாலே அயத்ந ஸித்‌த,மாய்‌, அதி ப்ரகாஸகமுமான அத்யந்த பாரதந்த்ர்ய போக்‌யதா ஜ்ஞாநங்களில்‌ பாரதந்தர்யம்‌ ஸேஷத்வ லக்ஷணமான இஷ்ட விநியோக அர்ஹதையை ஸ்வயமேவ நிரவஹித்துத்‌ தலைக் கட்டுகையாலும்‌, போக்‌யதையானது அசித்‌ வ்யாவ்ருத்தி லக்ஷ்ண மாத்ரமான போக்தருத்வத்தை சேஷியினுடைய ப்ரியோபயோகி,யாக்கிக்‌ கொடுக்கையாலும்‌ விதியில்‌ காணும்‌ ப்ரதம மத்‌யம தஸைகளை ”விளக்கினை விதியில்‌ காண்பார்‌” (திருக்குறு. 18) என்கிறபடியே ஸாஸ்த்ர முக,த்தாலே வந்த ஸ்ரவண மநதநாதிகளால்‌ காணப்படுகிற ப்ரதம தஸையான ஸேஷத்வத்தையும்‌, மத்யம தஸையான போக்த்ருத்வத்தையும்‌, அந்த பாரதந்தார்ய போக்யதைகள்‌ பகல் விளக்கையும்‌ மின்மினியையும் போலே்‌ அப்ரயோஜகமாகவும்‌ அல்ப ப்ரகாஸகமாகவும்‌ பண்ணும்‌ என்கிறார் –

    24-நாலிலொன்று பரவர்த்தகம்‌ ; ஒன்று நிவர்த்தகம்‌.
    இந்நாலிலும்‌ வைத்துக் கொண்டு உபாஸகனுக்கு போக்த்ருத்வம்‌ உபாய ருப ப்ரவ்ருத்தி ஹேதுவாயிருக்கும்‌ ; ப்ரபந்தனுக்கு போக்‌யதை நிவருத்தி ஹேதுவாயிருக்கும்‌ என்கிறார்‌ மேல்‌ (நாவிலொன்று ப்ரவர்த்தகம்‌) என்று தொடங்கி. உபாஸகன்‌ தன்னை போக்தாவாக நினைத்திருக்கையாலே அந்த போக்த்ருத்வ நிபந்த,நமான கர்த்ருத்வமும்‌ அவனுக்கே ஆகையாலே அவனை உபாய ரூப ப்ரவ்ருத்தியிலே மூட்டும்‌ போக்த்ருத்வம்‌– ப்ரபந்நனுக்கு போக்யதை ஸ்வரூபமாகையாலே அத்த போக்யதை தானே தந் நிவ்ருத்தி ஹேதுவாயிருக்கும் –

    25-முற்பாடர்க்கு க்ரியாங்கமானவை இரண்டும்‌, செயல் தீர்ந்தார்‌ வ்ருத்தியில்‌ ஸ்வ நிர்பந்த மறுக்கும்‌.
    ஆனால்‌ இந்த ஸேஷத்வ போக்த்ருத்வங்க ளிரண்டும்‌ இவனுக்குச்‌ செய்யும்படி என்‌ என்னில்‌ ; இவனுடைய வ்ருத்திக்கு அநு ரூபமாயிருக்கும்‌ . என்னுமிடத்தைச்‌ சொல்லுகிறது மேல்‌ (முற்பாடர்க்கு) என்று தொடங்கி. ‘முற்பாடர்‌’ என்று சொல்லப்‌பட்ட உபாஸகர்க்கு (க்ரியாங்க, மானவை, இரண்டும்‌) கர்மத்துக்கு, அங்கமான ஸேஷத்வ போக்த்ருத்வங்க ளிரண்டும்‌ ; கர்மத்துக்கு யோக்‌யதாபாதகங்களான ஸேஷத்வ போக்த்ருத்வங்கள்‌ ; இப்படி இருக்கிற இவற்றைச்‌ சொல்லுவான்‌ என்‌ என்னில்‌ ; போக்த்ருத்வமாவது – போக்‌ய ஸித்‌திக்கு அடியான யத்நத்திலே மூட்டுகையாலும்‌, ஸேஷத்வம்‌ அதில்‌ ஆத்ம ஜ்ஞாநம்‌ முன்னாக ப்ரவர்த்திக்க வேண்டுகையாலும்‌, அந்த சேஷத்வ போக்த்ருத்வங்கள்‌ ஸாதந ப்ரதம பாவியான கர்மத்தினுடைய உத்பத்தியிலே ஸஹ கரிக்கையாலும்‌ அவற்றை க்ரியாங்கம்‌ என்கிறது –
    இப்படிப்பட்ட ஸேஷத்வ போக்த்ருத்வங்கள்‌ (செயல் தீரந்தார்‌ வ்ருத்தியில்‌) “செயல்‌ தீரச் சிந்தித்து வாழ்வாரே வாழ்வார்‌”? (நா. திருவ. 88) என்கிறபடியே உபாய ரூப ப்ரவ்ருத்தியில்‌ ஸ்வரூப பாரதந்த்ர்யத்தாலே நிவ்ருத்தரான ப்ரபந்தருடைய, வ்ருத்தியில்‌ – கைங்கர்ய வ்ருத்தியிலே என்றபடி. (ஸ்வ நிர்பந்த, மறுக்கும்‌)-ஸ்வ போக்த்ருத்வ ப்ரதிபத்தியையும்‌, மதீயத்வ ப்ரதிபத்தியையும்‌ தவிர்க்கும்‌. எங்ஙனே என்னில்‌ ; இவனுடைய போக்த்ருத்வம்‌ அவனுடைய போகத்துக்கு வர்த்தகமாயிருக்கும்‌, * அஹமந்நம்‌ என்ற பின்பு ‘‘அஹமந்தாத.:” என்றது – போக்த்ருத்வமிறே, இப்படிச் சொல்லாத போது ஒரு சேதநனோடே அநுபவித்ததா யிராதிறே ; இவனுடைய ஸேஷத்வமும்‌ அத் தலைக்கு அதிஸய கரமாயிருக்கும்‌, “*பரகத-அதிஸய-ஆதநேச்சயா உபாதேயத்வமேவ யஸ்ய ஸ்வரூபம்‌ ஸ ஸேஷ:”, ‘“யதேஷ்ட விநியோகர்ஹம்‌ ஸேஷ ஸப்தேந கத்‌யதே”, “ஈஸ்வரேண ஜகத் ஸர்வம்‌ யதேஷ்டம்‌ விநியுஜ்யதே” என்னக் கடவதிறே

    26-கர்ம கைங்கர்யங்கள்‌ ஸத்யாஸத்ய-நித்யாநித்ய-வர்ண தாஸ்யாநுகுணங்கள்‌.
    இந்த க்ரியா வாசியான கர்மமும்‌ வ்ருத்தி வாசியான கைங்கர்யமும்‌ எதுக்கு அநுரு,ணமா யிருக்குமென்னில்‌ ; (கர்ம கைங்கர்யங்கள்‌ ஸத்யாஸத்ய-நித்யாநித்ய-வர்ண தாஸ்யாநுகுணங்கள்‌) என்கிறார்‌. இவை இரண்டிலும்‌ வைத்துக் கொண்டு எத்தை எதுக்கு அநுகுணம்‌ என்கிறதென்னில்‌ ; கர்மம்‌ அஸத்யமுமாய்‌, அநித்யமுமான வர்ணத்துக்கு அநு கு,ணமாயிருக்குமென்றும்‌, கைங்கர்யம்‌ ஸத்யமுமாய்‌ நித்யமுமான ஸ்வரூபத்திலே ஆகையாலே ஸத்யமுமாய்‌ நித்யமுமாயிருக்கும்

    27-இவற்றுக்கு விதி, ராக,ங்கள்‌ ப்ரேரகங்கள்‌.
    இவை இரண்டுக்கும்‌ ப்ரேரகர்‌ ஆர்‌ என்னில்‌ (இவற்றுக்கு விதி, ராக,ங்கள்‌ ப்ரேரகங்கள்‌]). “இத,ம் குரு ‘, “அநேந யஜேத” என்றும்‌ சேதநனைக்‌ குறித்துச் சொல்லுகிற ஸாஸ்த்ர விதிகள்‌ கர்மத்துக்கு ப்ரேரகம்‌. பகவதநுபவ ஜநித ப்ரீதி கைங்கர்யத்துக்கு ப்ரேரகம்‌. ““உற்றேனுகந்து பணி செய்து” (திருவாய்‌. 10- 8 – 10)என்னக் கடவதிறே.

    28-மண்டினாரும்‌ மற்றையாரும்‌ ஆஸ்ரயம்‌.
    இவற்றுக்கு ஆஸ்ரயம்‌ ஆர்‌ என்னில்‌, (மண்டினாரும்‌ மற்றையாரும்‌ ஆஸ்ரயம்‌)-“கண்டியூர்‌” (திருக்குறு. 19) இத்யாதி,. மண்டினார்‌ என்கிறது – உகந்தருளின நிலங்களிலே அத்யபிநிவிஷ்டராயிருக்கிற ப்ரபந்நரை ; மற்றையார்‌ என்கிறது – “விளக்கினை விதியில்‌ காண்பார்‌” (திருக்குறு. 18) என்கிற உபாஸகர்‌ என்று ப்ரஸித்‌தமிறே. இத்தால்‌ கர்மத்துக்கு ஆஸ்ரயம்‌ உபாஸகர்‌, கைங்கர்யத்துக்கு ஆஸ்ரயம்‌ ப்ரபந்நர்‌ என்றபடி-

    29-அருள் முடிய நிறுத்தி அடைய நின்றதும்‌ நல்லதோரருள்‌ தன்னாலே நன்றுமெளியனாகிறதும்‌ விஷயம்‌,
    இவற்றுக்கு விஷயம்‌ ஏதென்னில்‌ ; ”எத் தவம்‌ செய்தார்க்கும்‌ அருள் முடிவதாழியான்‌ பால்‌”: (நான்‌. திருவ. 2) என்றும்‌, “’நிறுத்தி நும்‌ உள்ளத்துக் கொள்ளும்‌ தெய்வங்களும்மை உய்யக் கொள்‌ மறுத்துமவனோடே கண்டீர்‌” (திருவாய்‌. 5 – 2- 7) என்றும்‌, ”அவரவர்‌ விதி வழி அடைய நின்றனரே” (திருவாய்‌. 1 – 1 – 5] என்றும்‌ சொல்லுகிறபடியே தேவதைகளுக்கு அந்தர்யாமியாய்க் கொண்டு நின்ற விடமும்‌, ”நல்லதோரருள் தன்னாலே காட்டினான்‌ திருவரங்கம்‌”? (திருமாலை 10) என்றும்‌, “கருத்துக்கு நன்றுமெளியன்‌”’ (திரு வாய்‌. 3 – 6 – 11) என்றும்‌ சொல்லுகிறபடியே அர்ச்சாவதாரமாய்க் கொண்டு நின்ற இடமும்‌.

    30-இவற்றாலே ஸாதாரணம்‌ அஸாதாரணம்‌ என்னும்‌.
    ஆக (இவற்றாலே) இந்த ப்ரமாண ப்ரகாரங்களாலே (ஸாதாரணம்‌ அஸாதாரணம்‌ என்னும்‌) ஸாதாரணமான்‌ விக்‌ரஹ விஸிஷ்டன்‌ கர்மத்துக்கு விஷயம்‌, அஸாதாரணமான விக்‌ரஹ விஸிஷ்டன்‌ கைங்கர்யத்துக்கு விஷயம்‌ என்று விஷய பேதத்தை அருளிச் செய்து, அதில்‌ அஸாதாரண விக்‌ரஹ விஷய கைங்கர்ய நிஷ்டன்‌ ஸாதாரண விக்ரஹ விஷயத்திலே ஸர்வ ஸாமாந்ய தயா கர்த்தவ்யமானவற்றில்‌ அந்வயியான்‌ என்கிறார் –

    31-ஜாத் யாஸ்ரம தீஷைகளில்‌ பேதிக்கும்‌ த,ர்மங்கள் போலே அத்தாணிச் சேவகத்தில்‌ பொதுவானது நழுவும்‌.
    ஆனால்‌ பழையதாக அநுவர்த்தித்துப்‌ போந்ததுமாய்‌ வர்ணாத்‌,ய ஸாதாரணமுமான ஸத்‌வாரக விஷய ப்ரவ்ருத்தியை இப்போது இவனாலே விடப் போமோ என்னில்‌ – அது தானே நழுவும்‌ என்கிறார்‌–எங்ஙனே என்னில்‌ ; ஜாதி த,ர்மமானது ஜாத்யந்தரத்திலே பேதிக்கக் கண்டோம்‌, கண்ட படி என்‌ என்னில்‌, யஜந-யாஜந-அத் யயந-அத்யாபந தாந ப்ரதி க்‌ரஹங்களாகிற ஷட் கர்மங்கள்‌ க்ஷத்ரியாதி,களில்‌ பேதியா நின்றன விறே –ஆஸ்ரம தர்மம்‌ ஆஸ்ரமாந்தரத்தில்‌ பேதியா நின்றது. இவை இத்தனையும்‌ பேதித்தாலும்‌ பேதியாத நித்ய தர்ம-நைமித்திக த,ர்மங்கள்‌ ஜ்யோதிஷ்டோமாதி, தீக்ஷைகளில்‌ பேதிக்குமாப் போலே ‘அத்தாணிச் சேவகமும்‌”’ (திருப்பல்‌. 8) என்கிற அந்தரங்க கைங்கர்யத்தில்‌ வர்ணாஸ்ரம ஸாதரண தர்மம்‌ தானே நழுவுமிறே-உறங்குகிறவன கையில்‌ எலுமிச்சம் பழம் போலே இது தனக்கு அவகாஸ மில்லை. இந்த த்‌ருஷ்டாந்த பலத்தாலே இவ் வதிகாரிக்கு அகரணே ப்ரத்யவாயமில்லை என்கிறது. கீழ்ச் சொன்னவை தன்னைப் போலே ; இப்படி இருக்கச் செய்தேயும்‌ ஸிஷ்டர்கள்‌ அநுஷ்டித்துப்‌ போருகிது ஆந்ரு ஸம்ஸ்யத்தாலே யிறே

    32-ஸாதந ஸாத்‌யங்களில்‌ முதலும்‌ முடிவும்‌ வர்ண தர்மிகள்‌ தாஸ வ்ருத்திகள்‌ என்று துறை வேறிடுவித்தது.
    இனி கர்ம நிஷ்டனிற் காட்டில்‌ கைஙகர்ய நிஷ்ட,னுக்குள்ள வைஷம்யம்‌ சொல்லுகிறது (ஸாதந ஸாத்‌யங்களில்‌) என்று தொடங்கி, ஸாதநங்களில்‌ முதற் சொல்லுகிறது கர்மம்‌, கர்ம ஜ்ஞாந பக்திகளிறே ஸாதநங்கள்‌. ஸாத்‌யங்களில்‌ முடிவு கைங்கர்யம்‌. பகவதநுபவம்‌, அநுபவ ஜநித ப்ரீதி, அநந்தரமிறே பீரீதி காரித கைங்கர்யம்‌, திருவயிந்திரபுரத்தில்‌ வில்லி புத்தூர்ப் பகவர்‌ என்பாரொருவர்‌ எல்லாரும்‌ ஒரு துறையிலே அநுஷ்டாநம்‌ பண்ண, தாம்‌ ஒரு துறையிலே அநுஷ்டாநம்‌ பண்ணுவாராய்‌, ஒருநாள்‌ அநுஷ்டாநம்‌ பண்ணி மீண்டெழுந்தருளா நிற்கச் செய்தே, இருந்த ப்‌ராஹ்மணர்‌ ‘ஏன்‌ ஜீயரே! எங்கள்‌ துறையில்‌ அநுஷ்டாநம்‌ பண்ண வாராதொழிவானென்‌’ என்ன, *’விஷணு தாஸா வயம்‌ யூயம்‌ ப்‌ராஹ்மணா வர்ண தர்மிண? ! அஸ்மாகம்‌ தாஸ விருத்தீநாம்‌ யுஷ்மாகம்‌ நாஸ்தி ஸங்கதி:’‘ என்று – ‘நீங்கள்‌ ப்‌ராஹ்மணார்‌, வர்ண தர்மிகள்‌; நாங்கள்‌ தாஸ வ்ருத்திகள்‌, கைங்கர்ய பரர்‌. ஆகையாலே உங்களோடே எங்களுக்கு அந்வயமில்லை” என்று துறை வேறிட்டுப் போனாரிறே

    33- வேத வித்துக்களும்‌ மிக்க வேதியரும்‌ சந்தஸாம்‌ மாதாவாலும்‌, அதுக்கும்‌ தாயாய்த்‌ தாயினுமாயின செய்யுமத்தாலும்‌ பிறப்பிக்குமது இருவர்க்கும்‌ ஸ்ரேஷ்ட ஜந்மம்‌.
    இனி மேல்‌ இவர்களிருவர்க்கும்‌ ஜந்ம நிருபக கூடஸ்தரிருக்கும்படி என்‌ என்ன; இவை இப்படிப் பட்டிருக்கும்‌ என்கிறார்‌ (வேதவித்துக்களும்‌) என்று தொடங்கி. ‘ யே ச வேத விதோ விப்ரா” (பார. ஆர.) என்கிற. வேத வித்துக்கள்‌, ““காயத்ரீம்‌ சந்தஸாம்‌ மாதா’‘ என்கிற க,௱யத்ர் யுபதேஸத்தாலே பிறப்பிக்குமது கர்ம நிஷ்ட,னுக்கு ஸ்ரேஷ்ட ஜந்மம்‌; ‘“யே சாத்‌,யாத்ம விதோ ஜநா?” என்கிறபடியே மிக்க வேதியரான வேத தாத்பர்யம்‌ கைப்பட்டவர்கள்‌ ““ஸர்வ மஷ்டாக்ஷராந் தஸ்தம்‌”” (வ்ரு.ஹா. )என்கிறபடியே, அந்த காயத்ரி தனக்கும்‌ மாத்ரு ஸ்தாநமாய்‌, “பெற்ற தாயினுமாயின செய்யும்‌”‘ (திருமொழி–1– 1 – 9) என்கிறபடியே ஸரீரோத்பத்தி மாத்ர மன்றியிலே ஜ்ஞாந விகாஸத்‌தைப்‌ பண்ணிக் கொடுப்பதான திருமந்த்ரத்தாலே பிறப்பிக்குமது கைங்கர்ய நிஷ்டர்க்கு ஸ்ரேஷ்ட ஜந்மம்‌. “ஜந்மநா ஜாயதே ஸூத்‌ர? கர்மணா ஜாயதே த்‌விஜ? । வேதாப்‌,யாஸேந விப்ரத்வம்‌ ப்‌,ரஹ்ம வித்‌ ப்‌ராஹ்மணோ விது,” என்றும்‌, “ஸ ஹி வித்‌யாதஸ்‌“ தம்‌ ஜநயதி தச் ச்‌ரேஷ்ட,ம்‌ ஜந்ம” (ஆப.த.1 – 1 – 16) என்னக் கடவதிறே

    34-அந்தணர்‌ மறையோர்‌ என்றும்‌, அடியார்‌ தொண்டர் என்றும் இவர்களுக்கு நிரூபகம்‌
    இப்படி ஸ்ரேஷ்ட ஜந்மரான இருவர்க்கும்‌ நிரூபகம்‌ ஏதென்னில்‌ (அந்தணர்‌ இத்யாதி, ). “’துணை நூல்‌ மார்விலத்தணர்‌”” (திருமொழி 1 – 5 – 9) என்றும்‌, ”தீயோம்புகைமறையோர்‌’” (திருமொழி 7 – 9 – 7) என்றும்‌ சொல்லுகிற இவை கர்ம நிஷ்டரர்க்கு நிரூபகம்‌. “வேதார்த்த அநுஷ்டாந யோக்‌யர்‌ அந்தணர்‌” என்றும்‌, ‘வேதார்த்த அநுஷ்டாந பரர்‌ மறையோர்‌’ என்றும்‌ சொல்லக் கடவது. இனி, “அணியரங்கன்‌ திருமுற்றத்தடியார்‌”” (பெரு. திரு 1 – 10) என்றும்‌, “’அக மகிமும்‌ தொண்டர்‌”” (பெரு.திரு 1 – 10) என்றும்‌ சொல்லுகிறபடியே கைங்கர்ய நிஷ்டனுக்கு நிரூபகம்‌ – அடியார்‌-கிஞ்சித்கார அர்ஹர்‌. தொண்டர்‌-கிஞ்சித்கார ஸ்வபாவர்

      35-ஒரு தலையில்‌ க்‌ராம குலாதி வ்யபதேஸம்‌ குலந்தரும்‌ மாசில்‌ குடிப்பழி என்று பதியாகக கோயிவில்‌ வாழுமென்பர்கள்‌.
      கர்மகைங்கர்யங்களில்‌ நிஷ்டராயிருக்கும்‌ இருவர்க்கும்‌ வ்யபதேஸம்‌ ஏதென்னில்‌ (ஒரு தலையில்‌ க்ராம குலாதி வ்யபதேஸம்‌ என்று தொடங்கி). கரம நிஷ்டரை க்ராம குலாதிகளாலே வ்யபதேஸிக்கக் கடவது; கைங்கர்ய நிஷ்டனுக்கு அந்த க்‌ராம குலாதிகளால்‌ வருகிற வ்யபதேஸம்‌ ”குலந் தரும்‌’” (திருமொழி 1 – 1 – 9) என்றும்‌, “மாசில்‌ குடிப்‌ பிறப்பு” (மூ.திருவ. 10)என்றும்‌ பகவத் ஸம்பந்த ஜ்ஞாநத்தாலே இதர வ்யாவ்ருத்தமான வைஷ்ணவ ஜாதீயனான இவனுக்கு அவத்‌யமாகையாலே நிரவத்‌யமான பகவத்‌ ஸம்பந்த ப்ராதாந்யமே தோற்றும்படியாக, ““வேங்கடத்தைப்‌ பதியாக வாழ்வீர்காள்‌” (நா.திரு.8 – 9) என்றும்‌, “கோயிலில்‌ வாழும்‌ வைட்டணவர்‌” (பெரியா.திரு. 5 – 1 .. 3) என்றும்‌ சொல்லுகிறபடியே பகவத் ஸம்பந்தமுள்ள தேஸத்தையிட்டும்‌, பகவத்‌ ஸம்பந்த தந் தன்னை யிட்டும்‌ வ்யபதேஸிக்கக் கடவது; “ஏகாந்த வ்யபதேஷ்டவ்யோ நைவ க்‌ராம குலாதி,பி। விஷ்ணுநா வ்யபதேஷ்டவ்யஸ் தஸ்ய ஸர்வம் ஸ ஏவ ஹி நத்யாஸ் தஸ்யைவ நாமாதி, ப்ரவிஷ்டாயா யதார்ணவம்‌ ! ஸர்வாத்மநா ப்ரபந்தஸ்ய விஷ்ணு மேகாந்திநஸ் ததா”” என்னா நின்றதிறே –

      36-விப்ரர்க்கு கேரத்ர சரண ஸூத்ர கூடஸ்தர்‌ பராஸர பாராஸர்ய போதாயநாதி,கள்‌; ப்ரபந்ந ஜந கூடஸ்தர்‌ பராங்குசா பரகால யதிவராதிகள்‌.
      இனிமேல்‌ இருவருடையவும்‌ கூடஸ்தரைச்‌ சொல்லுகிறது (விப்ரர்க்கு என்று தொடங்கி). முற்பட்ட ப்‌ராஹ்மணர்க்கு பராஸர(வ்யாஸ)வஸிஷ்டாதிகள்‌ கோத்ர குருக்களுமாய்‌- போதாயநாதிகள்‌ ஸூத்ர குருக்களுமாய்‌, (தத் தச் சரண- உபயங்‌களில்‌) பூர்வ பூர்வ புருஷர்கள்‌ கூடஸ்தருமாய்‌ இருப்பர்கள்‌. ப்ரபந்ந ஜந கூடஸ்த ர்‌ ““பத்யுஸ் ஸ்ரிய? ப்ரஸாதேந ப்ராப்த ஸார்வஜ்ஞ்ய ஸம்பதம்‌ ! ப்ரபந்ந ஜந கூடஸ்தம்‌ ப்ரபத்‌யே ஸ்ரீபராங்குஸம்‌?” (பரா.௮..] என்றும்‌, ‘‘ராமாநுஜாங்க்‌ரி ஸரணோஸ்மி குல ப்ரதீபஸ் த்வாஸீத்‌ ஸ யாமுந முநேஸ் ஸ ச நாத வம்ஸ்யச । வம்ஸ்ய? பராங்குஸ முநேஸ்ஸ ச ஸோபி தேவ்யா ததாஸஸ் தவேதி வரதாஸ்மி தவேக்ஷணீய?” (வரத.ஸ்தவே 102) என்றும்‌ சொல்லுகிறபடியே நம்மாழ்வார்‌, திருமங்கையாழ்வார்‌ தொடக்கமான ஆழ்வார்‌களும்‌, உடையவர்க்கு முன்பும்‌ பின்புமுள்ள ஆசார்யர்களும்‌ என்கிறார்

      37-அத்‌யயந ஜ்ஞாநாநுஷ்டாநங்களாலே ப்‌ராஹ்மண்யமாகிறாப்‌ போலே சந்தங்களாயிரமும்‌ அறியக் கற்று வல்லரானால்‌ வைஷ்ணவத்வ ஸித்‌தி,.
      இனிமேல்‌ விப்ரரூம்‌ ப்ரபந்நருமான இவர்களிருவர்க்கும்‌ ப்‌ராஹ்மண்ய ஸித்‌தி, ஹேது எது? வைஷ்ணவத்வ ஸித்‌தி, ஹேது ஏது? என்னச்‌ சொல்லுகிறார்‌ (அத்‌யயந ஜ்ஞாதாநுஷ்டாநங்களாலே என்று தொடங்கி). அத்‌யயநமாவது – ஓதுகை. ஜ்ஞாநமாவது அதில்‌ அர்த்த பரிஜ்ஞாநம்‌. அநுஷ்டாநமாவது – அறிந்தபடியே அநுஷ்டிக்கை என்று இவற்றாலே ப்‌,ராஹ்மண்ய மாகிறாப் போலே, (சந்தங்களாயிரமும்‌) ““சந்தங்களாயிரத்திவை வல்லார்‌” (திருவா. 10 – 9 – 11) என்று சந்தோ ரூபமான ஆயிரத்தையும்‌, “அறியக்‌ கற்று வல்லார்‌ வைட்டணவர்‌”’ (திருவா. 5 – 5 – 11) என்கிறபடியே திருவாய்மொழி ஆயிரமும்‌ அத்‌யயநம் பண்ணி, ஆசார்ய முகத்தாலே அர்த்த ஸ்ரவணம் பண்ணி, அறிந்த படியே அநுஷ்டிக்கவும்‌ வல்லாரானாலாய்த்து வைஷ்ணவத்வம்‌ ஸித்‌தித்ததாவது. ‘ஸ்வாத்‌யாயோத்‌ யேதவ்ய?”‘ (தை. ஆ.2) என்கிற விதி போலே “அத்‌யேதவ்யம்‌ த்விஜ ஸ்ரேஷ்டை வேத ரூபமித,ம்‌ க்ருதம்‌?” என்று அந்த வேதாந்த தாத்பர்யமாய்‌, இந்த திராவிட வேதத்துக்கு உள்ளீடான பாகவத ஸேஷத்வ பர்யந்தமான பகவச்‌ சேஷத்வ பரிஜ்ஞாநா பாவத்தால்‌ ப்‌ராஹ்மண்ய ஸித்‌தியுமில்லை –

      38–இந்த உட்பொருள்‌ கற்றுணர்ந்து மேலைத் தலைமறையோ ராகாதாரை அயல் சதுப்பேதிமார்‌ என்று உத்பத்தி நிரூபிக்கும்‌.
      அவர்களுடைய உத்பத்தியும்‌ நிரூபிக்க வேணுமென்கிறார்‌ (இந்த உட்பொருள்‌ கறறுணர்ந்து என்று தொடங்கி). ““மிக்க வேதியர்‌ வேதத்தினுட்பொருள்‌‘” (க.நு.சி. 9) என்று உபநிஷத்‌ குஹ்யமுமான இந்த த்‌ராவிட வேதத்தினுடைய ரஹஸ்யார்த்தத்தை, (கற்றுணர்ந்து மேலைத் தலைமறை யோராகாதாரை) ““வேட்பனவும்‌” (மு.திருவ.66) என்கிறபடியே கற்றுணர்ந்தும்‌ அநுஷ்டாந பரருமாகாதாரை ““அயல் சதுப்பேதிமார்கள்‌”” (திருமாலை 39) என்று அசலிட்டு உத்பத்தி நிரூபிக்கக் கடவதிறே. ‘‘ஓளபாஸநி ஸஹஸ்‌ரேப்‌யோ ஹ்யாஹிதாக்‌நிர் விஸிஷ்யதே | ஆஹிதாக்‌நி ஸஹஸ்ரேப்‌,யஸ் ஸோமயாஜி விஸிஷ்யதே | ஸோமயாஜி ஸஹஸ்ரேப்‌,யஸ் ஸத்ரயாஜி விஸிஷ்யதே ! ஸத்ரயாஜிஸ் ஸஹஸ்ரேப்‌,யஸ் ஸர்வவேதாந்த பாரக,ீ ! ஸர்வ வேதாந்த வித்கோட்யா விஷ்ணு ப,க்தோ விஸிஷ்யதே । விஷ்ணு ப,க்தி விஹீநோ யஸ் ஸர்வ ஸாஸ்த்ரார்த்த, வேத்‌,யபி ! ப்‌,ராஹ்மண்யம்‌ தஸ்ய ந பவேத்‌ தஸ்யோத் பத்திர் நிரூப்யதாம்‌ ‘ –(பாத்ம புராணம் –)என்னக் கடவதிறே –

      39-“எவ்வுலகத் தெவ்வெவையும்‌’” என்கையாலே வேதம்‌ பஹு வித ம்‌. வேத அத்‌,யயந விதி, போலே இப் ப்ரப,ந்த,அத்‌,யயநமும்‌ விதி, என்பது, இதினுடைய அர்த்த, பரிஜ்ஞாநா பாவத்தில்‌ உத்பத்தி நிரூபிக்க வேணு மென்பதாய்க் கொண்டு வேதத்தோ டொக்கச்‌ சொல்லா நின்றீர்‌. இதுவும்‌ பிற்றை வேதமோ என்னில்‌ ; இதுவும் வேதம்‌; இது என்ன வேதம்‌ என்ன; “‘வேதா வா ஏதே । அநந்தா வை வேதா ச’” (யஜு. கா.) என்றும்‌, ‘“ஓதுவாரோத்தெல்லாம்‌ எவ்வுலகத் தெவ்வெவையும்‌”* (திருவா. 3 – 1- 6) என்றும்‌ சொல்லுகிறபடியே அத்‌யேதாக்களுடைய பேதத்தாலும்‌, லோக பேதத்‌தாலும்‌ வேதம்‌ ப,ஹு வித,ம்‌ என்கிறார் –

      40-இதில்‌ ஸம்ஸ்க்ருதம்‌, த்‌ராவிடம்‌ என்கிற பிரிவு ருகாதி பேதம்‌ போலே.
      ஆனால்‌ அது ஸம்ஸ்க்ருதமாய்‌, இது த்‌ராவிடமாய்ப்‌ பிரிந்திராறின்றதீ என்ன, சொல்லுகிறது மேல்‌. (இதில்‌) இந்த வேதத்தில்‌. (ஸம்ஸ்க்ருதம்‌ த்‌ராவிட,ம்‌ என்கிற பிரிவு ருகாதி பேதம் போலே என்று) வேதங்கள் தான்‌ ஒன்று போலேயோ மற்றது? ஸம்ஸ்க்ருத வேதந்தான்‌ ரூக்‌,யஜுஸ் ஸாம அத,ர்வணங்களாய்ப்‌ பிரிந்தாப் போலே வேதந்தான்‌ ஸம்ஸ்க்ருத ரூபமாயும்‌, த்‌ராவிட ரூபமாயும்‌ பிரிந்ததென்கிறார் –

      41-செந்திறத்த தமிழென்கையாலே ஆகஸ்த்யமும்‌ அநாதி..

      ஆனாலும்‌ அந்த ஸம்ஸ்க்ருத பாஷைதான்‌ அநாதியாயிரா நின்றதே என்ன ; (செந்திறத்த தமிழென்கையாலே ஆகஸ்த்யமும்‌ அநாதி,) ““செந்திறத்த தமிழோசை வடசொல்லாகி’ (திருநெடு. 4) என்று ஸம்ஸ்க்ருதத்தோடே ஸஹபடிக்குமிடத்தில்‌ ‘“செந்திறத்த தமிழோசை” என்றதுக்குப்‌ பின்பிறே “வட சொல்லாகி’” என்றது. ஆகையாலே இரண்டும்‌ அநாதி யிறே-

      42-வடமொழி மறை என்றது தென்மொழி மறையை நினைத்திறே.
      ஆனால்‌ அந்த பாஷை அநாதி யாகிறது; திருவாய்மொழிக்கு வேதத்வமுண்டாக வேணுமென்கிற நிர்பந்த, முண்டோ என்னில்‌; (வடமொழிமறை என்றது – தென்மொழி மறையை நினைத்திறே) வேதம்‌ என்னாதே ஸம்ஸ்க்ருத வேதம்‌ என்கையாலே த்ராவிட, வேதமுமுண்டாக வேணுமென்கிறார்-

      43-வேத,சதுஷ்டய-அங்கோபாங்க,ங்கள்‌ பதினாலும்போலே, இந்‌ நூலுக்கும்‌ இருந் தமிழ் நூற் புலவர் பனுவலாறும்‌, மற்றை எண்மர்‌ நன் மாலைகளும்‌.
      அங்கோபாங்க ஸஹிதத்வம்‌ இதுக்குமுண்டோ என்ன, உண்டென்கிறார்‌ மேல்‌ (வேத,சதுஷ்டயாங்கோபாங்க,ங்கள்‌ என்று தொடங்கி), ““அங்காநி வேதாஸ் சத்வாரோ மீமாம்ஸா ந்யாய விஸ்தர? ! புராணம்‌ த,ர்ம ஸாஸ்த்ரஞ்ச வித்‌,யா ஹ்யேதாஸ் சதுர்தஸ -என்கிறபடியே சதுர்தஸ வித்‌யாஸ்தாந வேதம் போல்‌ இங்கும்‌ இவருடைய ப்ரபந்தங்கள்‌ நாலும்‌ நாலு வேதத்தினுடைய ஸ்தாநேயாய்‌, “இருந் தமிழ் நூற் புலவன் மங்கை யாளன்‌?” (திருமொழி 1 – 7 – 10) என்றும்‌, ““கலியன் வாயொலி செய்த பனுவல்‌ ” (திருமொழி 1 – 4 – 10) என்றும்‌ சொல்லுகிற திருமங்கை யாழ்வாருடைய ப்ரபந்தங்களாறும்‌, அங்கங்களினுடைய ஸ்தாநத்திலேயாய்‌, மற்றை எட்டு ஆழ்வார்களுடைய ப்ரபந்தங்களும்‌ உபாங்கங்களா யிருக்கும் –

      44-ஸகல வித்‌யாதிக வேதம் போலே இதுவும்‌ திவ்ய ப்ரபந்த, ப்ரதாநம்‌.
      ஸகல வித்‌யைகளிலும்‌ வைத்துக் கொண்டு அங்கியான வேதம்‌ அதிகமாயன்றோ இருப்பது என்னில்‌, (ஸகல வித்‌யாதிக வேதம் போலே) அந்த ஸகல வித்‌யைகளிலும்‌ அதிகமான வேதம்‌ ப்ரதாநமானாப் போலே இதுவும்‌ திவ்ய ப்ரபந்தங்களில்‌ ப்ரதாநமாயிருக்கும்‌.

      45-வேத நூல்‌, இருந் தமிழ் நூல்‌, ஆஜ்ஞை, ஆணை, வசையில்‌, ஏதமில்‌, ௬ருதி, செவிக்கினிய, ஓதுகின்றதுண்மை, பொய்யில் பாடல்‌, பண்டை, நிற்கும்‌, முந்தை, அழிவில்லா என்னும்‌ லக்ஷணங்கள் ஓக்கும்‌.
      ஆனால்‌ வேதத்துக்குச்‌ சொல்லுகிற ”வேத ஸாஸ்த்ராத் பரம்‌ நாஸ்தி” (ஹரிவம்ஸே ) என்கிற ஸாஸ்த்ரத்வமும்‌, ““ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா” என்கிற பகவதாஜ்ஞா ரூபத்வமும்‌, ப்‌ரம விப்ரலம்பாதி, தோஷ ரஹிதத்வமும்‌, பூர்வ பூர்வோச்சாரண க்ரமத்தாலே உத்த ரோத்தரோச்சார்யமாணத்வம்‌, நித்யத்வம்‌, ஸத்யத்வம்‌ தொடக்கமான லக்ஷணங்கள்‌ இத்திருவாய்மொழிக்குமுண்டோ என்னில்‌, உண்டென்கிறார்‌ (வேதநூல்‌ என்று ்‌ தொடங்கி). வேதநூல்‌?” (திருச்ச.72) என்றாப் போலே ““இருந்தமிழ்நூல்‌ ‘” (திருமொழி 1 – 7 – 10) என்று ஸாஸ்த்ரத்வமும்‌, ”ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா’” என்றாப்போலே ஆணை யாயிரத்து”” (திருவா. 6 – 3 – 11) என்று பகவதநுஸாஸந ரூபமாய்‌, “வசையில்‌ வேதம்‌”” (திருமொழி 5 – 3 – 2) என்றாப் போலே ““ஏதமிலாயிரம்‌” (திருவா. 1 – 0 – 11) என்று ப்‌ரம விப்ரலம்பாதி, தோஷ ரஹிதமாய்‌, “*சுடர் மிகு சுருதி”’ (திருவா. 1 – 1 – 7) என்றும்‌, *’செவிக்கினிய செஞ்சொல்‌?” (திருவா. 10 – 6 – 11) என்றும்‌ ஸ்ராவ்யமாய்‌, ““வேத நூலோதுகின்றதுண்மை?” (திருச்ச.72) என்றாப் போலே ‘“பொய்யில் பாடலாயிரம்‌”? (திருவா. 4 – 3 – 11) என்று இதில்‌ சொல்லுகிற அர்த்தங்களில்‌ ஒரு பொய்‌ இன்றியிலே இருப்பதாய்‌, ‘“பண்டைநான்மறை” (திருமொழி 5 – 7 – 3), “நிற்கும்‌ நான்மறை”! (திருவா. 6 – 5 – 4) என்றாப் போலே ‘‘முந்தை யாயிரம்‌’‘ (திருவா. 6 – 5 – 11) என்றும்‌, “அழிவில்லா ஆயிரம்‌”’ (திருவா. 9 – 7 – 11) என்றும்‌ ஆத்‌யந்த ரஹிதமாய்‌, அதிற் சொல்‌லுகிற லக்ஷணங்கள்‌ இதுக்குமுண்டென்கிறார் –

      46-‘“சொல்லப்பட்ட”” என்றதில்‌ கர்த்ருத்வம்‌ “ஸ்ம்ருதி – அத்தை ஸ்வயம்பு படைத்தான்‌’ என்றது போலே
      ஆனால்‌ “சொல்லப்பட்ட ஆயிரத்துள்‌” (திருவா. 8 – 10 – 11) என்று இவர் தம்மாலே சொல்லப்பட்டது என்கிற இதில்‌ கர்த்ருத்வத்தால்‌ நித்யத்வ-அபெளருஷேயத்வ-ஹாநி வாராதோ என்னில்‌, வாராதென்கிறார்‌. அது என் போல வென்னில்‌, “முன்னம்‌ திசை முகனைத் தான்‌ படைக்க, மற்றவனும்‌ முன்னம்‌ படைத்தனன்‌ நான்மறைகள்‌”! (பெ.திருமடல்‌) என்றும்‌, ““அநாதி நிதாநா ஹ்யேஷா வாகுத்ஸ்ருஷ்டா ஸ்வயம்பு வா?‘ (பார-சபா ) என்றும்‌ சொல்லுகிறபடியே, ஸ்ம்ருதி, “ப்ரஹ்மா வேதங்களைப்‌ படைத்தான்‌ ‘ என்ற இடத்தில்‌, அந்த ப்‌,ரஹ்மாவால்‌ வந்த கர்த்ருத்வத்தால்‌ அவறறினுடைய நித்யத்வ-அபெளருஷேயத்வங்களுக்கு ஹாநி வாராதாப் போலே இதுக்கும்‌ நித்யத்வ அபெளருஷேயத்வ ஹாநி வாராது –

      47-நால் வேதங்கண்ட புராண ருஷி-மந்த்ர தர்மிகளைப்‌ போலே இவரையும்‌ ருஷி, முனி, கவி என்னும்‌.
      (நால் வேதங் கண்ட இத்யாதி, ) ”நால் வேதங் கண்டானே”’
      (திருமொழி 9 – 10 – 1) என்கிறபடியே நாலு வேதங்களைக்‌ கரை கண்ட வர்களையும்‌ அஷ்டாதஸ புராண கர்த்தாக்‌களையும்‌ “*சதுர் வேத தர்ஸநாத்‌ ருஷி:‘” என்கிறபடியே ருஷிகளென்றும்‌, ”ஜிதந்தே”” இத்யாதி, ஜிதந்தா- மந்த்ர தர்ஸிகளான சவ்நகாதிகளை முனிகளென்றும்‌, இதிஹாஸ கர்த்தாக்களான ஸ்ரீ வால்மீகி பகவான் போல்வாரை கவிகளென்றும்‌ சொல்லுமாப் போலே இவரையும்‌ ““ருஷிம்‌ ஜுஷாமஹே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்த்வமிவோதிதம்‌ | ஸஹஸ்ர ஸாகாம்‌ யோ த்‌ராஷீத்‌, த்‌ராவிடீம்‌ ப்‌ரஹ்ம ஸம்ஹிதாம்‌” (பரா.௮.) என்றும்‌, ““ஸட,கோபமுநிம்‌ வந்தே, ஸடாநாம்‌ புத்‌தி தூஷகம்‌ | அஜ்ஞாநாம்‌ ஜ்ஞாந ஜநகம்‌ திந்த்ரிணீ மூல ஸம்ஸ்ரயம்‌””’ (பரா. அ) என்றும்‌, “உலகம்‌ படைத்தான்‌ கவி” (திருவா. 3 – 9 – 10) என்றும்‌ சொல்லுகையாலே இவரையும்‌ ருஷி முனி கவி என்னும்‌ என்கிறார் –

      48-“படைத்தான்‌ கவி” என்ற போதே இதுவும்‌ யதா பூர்வ கல்பதமாமே.
      ‘ஒன்றி யொன்றி உலகம்‌ படைத்தான்‌ கவியாயினேற்கு’”
      (திருவா. 4 – 10 – 10) என்று அடுத்தடுத்து ஜகத் ஸ்ருஷ்டியைப்‌ பண்ணினவனுக்குக்‌ கவி யானேன்‌ என்கையாலே “ஸுூர்யா சந்தரமஸெள ததா யத பூர்வ மகல்பயத்‌?” (தை. உ.) என்று ஸ்ருஷ்டி தோறும்‌ ஸூர்யா சந்த்‌ரமாக்கள்‌ உண்டானாப் போலே ஸ்ருஷ்டி தோறும்‌ இந்த ப்ரபந்தமும்‌ உண்டென்னுமிடம்‌ தோற்றுகிறது. இத்தாலும்‌ இதினுடைய அநாதித்வம்‌ சொல்லுகிறது.

      49-உறக்கம்‌ தலைக் கொண்ட பின்னை மறை நான்குமுணர்ந்த தங்களப்பனோடே ஓதின சந்தச் சதுமுகன்‌ சலங்கலந்த வெண் புரி நூல்‌ மானுரி திரிதந்துண்ணும்‌ காமனுடல்‌ இருக் கிலங்கு ஜயேஷ்ட புத்ராதிகளுக்‌கு மறை பயந்தாப் போலே ஆதுமில்‌ காலத் தெந்தையான வாய்‌ முதலப்பன்‌ பிரம குருவாய்‌ இராப் பகல்‌ முன் சொல்லக் கற்றனமே என்ற இவரும்‌ நாவினால்‌ நன்மையால்‌ என்று ஓத வல்ல பிராக்களை **கண்மின்கள்‌’” என்று சொல் பயிற்ற, வேதம்‌ ஓதுவாரோத்தாகையாலே அதர்வணாதிகள் போலே இதுவும்‌ பேர் பெற்றது.
      ஆனால்‌ அதிகாரிகள்‌ ஸம்ஹ்ருதராக வேதம்‌ நித்யமானபடி என்‌ என்னில்‌, ஸர்வஜ்ஞனான ஸர்வேஸ்வரன்‌ நித்யனாகையாலே அவன் திருவுள்ளத்திலே வாஸனை கிடந்து ஸூப்த ப்ரபுத்‌த, ந்யாயத்தாலே ஸம்ஹாராநந்தரம்‌ “யோ ப்‌,ரஹ்மாணம்‌ விததாதி பூர்வம்‌ யோ வை வேதாம்ஸ் ச பரஹிணோதி தஸ்மை” (ஸ்வே.6 – 18) என்கிறபடியே ப்‌,ரஹ்மாவை உண்டாக்கி, அநந்தரம்‌ அவனுக்கு வேத ப்ரதாநத்தைப் பண்ண, ஸர்வேஸ்வரனோடே அத்‌யயநம்‌ பண்ணின அந்த ப்‌ரஹ்மாவானவன்‌ ஜ்யேஷ்ட புத்ரனான ருத்‌ரன்‌ தொடக்கமானாரை ஒதுவித்தாப் போலே ஸர்வேஸ்வரன்‌ இந்த த்‌ராவிட வேத ஸம்ஸ்காரத்தைத்‌ திருவுள்ளத்திலே வைத்து இவரை ஓதுவிக்க, இவரும்‌ தம் பக்கலில்‌ க்ருதஜ்ஞரான ஸ்ரீ மதுர கவிகள் போல்வாரை அத்‌யயநம்‌ பண்ணுவிக்க, இதுவும்‌ இவரை யிட்டு நிரூபிக்கும்படி யாய்த்து என்கிறார்‌ (உறக்கம்‌ தலைக் கொண்ட பின்னை என்று தொடங்கி). “உன்னிய யோகத் துறக்கம்‌ தலைக் கொண்ட பின்னை”’ (பெ. திருமடல்‌) என்கிறபடியே “ந ப்ரஹ்மா நேஸாநோ நேமே த்‌யாவாப்ரூதிவீ ந நக்ஷத்ராணி”’ (மஹோபநிஷத்‌) என்றும்‌, ““ப்ருதி வ்யப்ஸு ப்ரலீயதே” என்று தொடங்கி, “மஹாநவ்யக்தே லீயதே அவ்யக்தம் அஷரே லியதே அக்ஷரம்‌ தமஸி லீயதே தம? பரே தேவ ஏகீ பவதி” ‘(ஸு.உ.), “ஏகோ ஹ வை நாராயண ஆஸீத்‌” (ம.உ.) என்றும்‌, ““ஒன்றுந் தேவுமுலகுமுயிரும்‌ மற்றும்‌ யாதுமில்லாவன்று”” (திருவா. 4 – 10 – 1) என்றும்‌ சொல்லுகிறபடியே ஸகல தத்த்வங்களும்‌ அவர் பக்கலிலே ஏகீபவித்து ‘அப்ரஜ்ஞாதமலக்ஷணம்‌”‘ (மநு. 1 – 5) என்கிறபடியே நாம ரூப விபாகா நர்ஹமாய்‌ அவனை யிட்டு நிரூபிக்க வேண்டும்படி அவனெருவனுமேயாய்‌ மேல்‌ ஸ்ருஷ்ட்யாதி முகத்தாலே சேதநருடைய ரக்ஷண ப்ரகாரங்களைத்‌ திரு வுள்ளத்தோடே கூட்டுகிற தஸை யிறே ஸம்ஹாரமாவது.

      பின்னை ஸம்ஹாராநந்தரம்‌ யோக, நித்‌ராஸமா ரூடனாய் ஸ்ருஷ்ட் யுந்முகனான காலத்தில்‌ ““உணர்ந்தாய்‌ மறை நான்கும்‌’” (இ.திருவ.48) என்கிறபடியே நாலு வேதங்களையும்‌ ஸ்மரித்த “திசை முகனார்‌ தங்களப்பன்‌” (திருமொழி 2 – 2- 7) என்கிறபடியே தனக்குப்‌ பிதாவான ஸர்வேஸ்வரனோடே அத்‌யயநம்‌ பண்ணின.–முன்புள்ளவையை யிறே அத்‌யயநம்‌ பண்ணலாவதும்‌-ஸ்மரிக்கலாவதும்‌- ”சந்தச் சதுமுகன்‌” (பெரியா. 2 – 5 8) என்கிறபடியே ப்‌,ரஹ்மாவானவன்‌ ”சலங் கலந்த செஞ்சடை”, (திருச்ச. 113) “வெண் புரிநூல் மார்வன்‌”’(மு.திரூவ. 46) , ““மானுரியதளுமுடையவர்‌‘ (திருமொழி 10 9 – 5) , ““பிறர் மனை திரி தந்துண்ணும்‌”’ (திருக்குறு. 19) , ““காமனுடல் கொண்ட தவத்தான்‌”’ (நா.திருவ.. 79) , ““இருக்கிலங்கு திருமொழி வாய்‌ எண்டோளீசர்‌”’ (திருமொழி 6 – 6 – 9) என்றும்‌, நித்ய ஸ்நாந யஜ்ஞோபவித க்ருஷ்ணாஜிந தாரணமும்‌, பிக்ஷாசரணமும்‌, ஜிதேந்த்‌ரியத்வமும்‌, ஸதா அத்‌யயந பரத்வமுமாகிற ப்‌ரஹ்மசர்ய லக்ஷணத்தை உடையனாய்‌, “ப்‌ரஹ்மண? புத்ராய ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய”’ என்கிறபடியே ஜ்யேஷ்ட புத்ரனான ருத்ரன் முதலானார்க்கு சரணா மறை பயந்த தாமரையான்‌’‘ (மூ.திருவ. 60) என்று புருஷார்த்த, தத் ஸாதந ஜ்ஞாந ஸாதநமான வேதத்தை ஓதுவித்தாப் போலே ““ஆதுமில்‌ காலத்தெந்தை”’ (திருவா. 3 – 4 – 4) என்கிறபடியே-சேதநாசேதநாத்மகமான ஸகல பதார்த்தங்களும்‌ வஸ்துத்வ-நாம பாக்த்வங்களை இழந்த காலத்தில்‌ இவற்றைத்‌ தன் பக்கலிலே ஏறிட்டுக் கொண்டு நோக்கி, “என்கை” என்கிற படியே ஸ்வாமியா யிருக்கிறவன்‌. “என்‌ வாய் முதலப்பன்‌’‘ (திருவா. 7 – 9 – 3) எனக்கு வாய்த்த ப்ரதமோபகாரகன்‌ என்கிற. ““பீதகவாடைப் பிரானார்‌ பிரம குருவாகி’” (பெரியா. 5 – 2 – 8) என்கிறபடியே ஸர்வேஸ்வரன் தானே இவர் தமக்கு ஆசார்யனாய் வந்து ““எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப் பகலோதுவித்து”’ (பெரியா. 5 – 2 – 3) என்கிறபடியே திவா ராத்ரமோதுவித்து. இப்படி ஓதுவிக்குமிடத்தில்‌ “என்‌ முன்‌ சொல்லும்‌ மூவுருவாம்‌ முதல்வனே”’(திருவா. 7 – 9 – 2) என்கிறபடியே ஈஸ்வரன்‌ முன்னுருச் சொல்ல, “’திருநாமச் சொல்‌ கற்றனமே” (திருவிரு. 64) என்று அநூச்சாரணம்‌ பண்ணினேன்‌ என்று அவனோடே ஓதின இவரும்‌.‘நாவினால்‌ நவிற்றின்பமெய்‌தினேன்‌”’ (க.நு.சி. 2) என்று தொடங்கி ““குருகூர் நம்பிப் பாவினின்னிசை பாடித் திரிவன்‌”” என்றும்‌, “நன்மையால்‌ மிக்க நான்மறையாளர்கள்‌ புன்மையாகக்‌ கருதுவரா” ம்படியான “என்னை ஆண்டிடும்‌ தன்மையான்‌ சடகோபன்‌’‘ (க.நு.சி,4) என்கிற ப்ரதிபத்தியை யுடைய *ஓத வல்ல பிராக்களான ஸ்ரீமதுரகவிகள் போல்வாரை ““கன்மின்களென்றும்மை யான்‌ கற்பியா வைத்த மாற்றம்‌” (திருவா, 6 – 8 – 6) என்கிறபடியே இப் ப்ரபந்தத்தை அப்‌யஸியுங்கோள்‌ என்று ““சொல் பயிற்றிய நல் வளமூட்டினீர்‌”” (திருவா. 9 – 5 – 8) என்கிறபடியே சொல்லிச்‌ சொல்லுவிக்க, வேதமானது “’ஓதுவாரோத்தெல்லாம்‌ ‘? (திருவா, 3 – 1 – 6) என்கிறபடியே அத்‌யேதாக்களை யிட்டு, அதர்வணமென்றும்‌, தைத்திரீயம்‌ என்றும்‌ பேர் பெற்றாப் போலே இதுவும்‌ “சட கோபன் சொல்‌”” என்கையாலே ‘திருவாய்மொழி’ என்று பேர் பெற்றது

      50-இயற்பா மூன்றும்‌ வேத த்ரயம் போலே; பண்ணார் பாடல்‌ பண்புரை இசை கொள்‌ வேதம் போலே. :
      கீழே இவருடைய ப்ரபந்தங்கள்‌ நாலும்‌ வேத சதுஷ்டயம் போலே என்றது, எந்த ப்ரபந்தம்‌ எந்த வேத ஸ்தாநத்திலே என்னில்‌, (இயற்பா மூன்றும்‌ என்று தொடங்கி). இயற்பாவா யிருக்கிற திருவிருத்தம்‌, திருவாசிரியம்‌, திருவந்தாதி என்கிற ப்ரபந்தங்கள்‌ மூன்றும்‌ ருக்‌, யஜூர் அதர்வணம்‌ என்கிற மூன்று வேத ஸ்தாநத்திலே; ”பண்ணார் பாடல்‌”’ (திருவா, 10 – 7 – 5) என்கிற திருவாய்மொழி “பண்புடை வேதம்‌”, (திருவா. 6 – 6 – 5) ‘இசை கொள் வேதநூல்‌ (திருமொழி 5 – 3 – 2) என்றும்‌ சொல்லுகிற காந ப்ரதாநமான ஸாம வேதம் போலே என்கிறார் –

      51-ருக்கு ஸாமத்தாலே ஸ ரஸமாய்‌, ஸ்தோப,த்தாலே பரம்புமாப்‌ போலே சொல்லார்‌ தொடையல்‌ இசை கூட்ட அமர் சுவை ஆயிரமாயிற்று.
      இதில்‌ ருக்கு ஸாமமாகப்‌ பாடப்படுகிறாப் போலே ருக்‌ வேத ஸ்தாநே யாயிருக்கிற திருவிருத்தம்‌ திருவாய்மொழியாகப்‌ பாடப்படும்‌ என்கிறார்‌ (ருக்கு ஸாமத்தாலே என்று தொடங்கி). ஸாம ஸங்க்‌,ரஹம்‌ ருக்கு; ருக்‌ விவரணம்‌ ஸாமம்‌. அப்படியே திருவிருத்தமும் திருவாய்மொழியும்‌. (ருக்கு ஸாமத்தாலே ஸரஸமாய்‌) ருக்கு ஸாமத்தோடேகூடி ரஸ ஸஹிதமாய்‌. (ஸ்தோப,த்தாலே பரம்புமாப்போலே) ஸ்தோப,ம்‌ என்கிறது ருக்‌ வேதங்களை யொழிந்த “*ஹாவு ஹாவு ஹாவு”” இத்யாதிகளாலே பாட, ஒன்று பத்தாக விஸ்த்ருதமாமாப் போலே *சொல்லார் தொடையலான இந் நூறு பாட்டும்‌ ““இசை கூட்டி வண் சடகோபன்‌”‘ (திருவா. 2 – 4 – 11) என்கிறபடியே இசையிலே கூட்டினவாறே “அமர்‌ சுவையாயிரம்‌”’ (திருவா. 1 – பி – 11)என்கிறபடியே ஸரஸமான ஆயிரமாயிற்று-

      52-சந்தோகனென்று ஸாமாத்யமாகாமல்‌ முதலிலே பிரித்து யாழ்‌ பயில்‌ காந ஸ்வரூபியை *பாலையாகி”” என்று விஸேஷிக்கையாலே வேத கீதச்சாமி நானென்ன ஸாமந் தோன்ற உத்‌ கீத ப்ரணவத்தை ப்ரத மத்திலே மாறாடி சரமகதி முடிவாகத்‌ தொண்டர்க்கமுதென்ன தேவாந்நமாக்கி மஹா கோஷ நல் வேத வொலி போலே மஹாத்‌,யயந மென்னப்‌ பாடுகையாலே இத்தை சாந்தோக்‌ய ஸமமென்பர்கள்‌. ஸாமந்தான்‌ ஆயிரமாய்‌ அநேக விதமாயிருக்குமே. எந்த ஸாமத்தோடே ஓப்பாகிறது என்னில்‌, சாந்தோக்‌ய ஸமமாயிருக்கும்‌ என்கிறார்‌ மேல்‌ (சந்தோகன்‌) என்று தொடங்கி. ““சந்தோகன்‌ பெளழியன்‌ ஐந்தழலோம்பு தைத்திரியன்‌ சாமவேதி”” (திருமொழி 5 – 5 9) என்கிற விடத்தில்‌ ““’ஸாமவேதி” என்று ஸாம ஸாமாந்யமாகாமல்‌ ““சந்தோகன்‌”” என்று முதலிலே பிரித்து “’முன்னல் யாழ் பயில்‌ நூல் நரம்பின்‌ முதிர்சுவை”’ (திருவா 2-5 – 7) என்கிற காந ரூபியை காந ரஸமானவனை; ““யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி”’ (திருமொழி 7 – 3 – 7) என்று கொண்டு காந ஸ்வரூபி என்று ஸமுதாயமாக்காமல்‌, “பாலை?””, “யாழ்‌” என்கிற பண்ணை யிட்டு விஸேஷிக்கையாலே “சாம வேத கீதனாய”” (திருச்ச. 14) என்றும்‌, “’வேதா நாம்‌ ஸாமவேதோஸ்மி?” (கீதை 10 – 22) என்றும்‌ அவன் தன்னோடொக்க ஸமாநாதி, கரிக்கும் படியான சந்தோக ஸாமம்‌ இத்திருவாய்‌ மொழி என்னுமிடம்‌ தோற்ற ‘“உத்‌ கீத மேதத் பரமநுப்‌ரஹ்ம””, ““ஓங்காரோத்‌ கீத மேவ”, “ஓமித் யேததக்ஷர முத்‌ கீத முபாஸீத”‘(சா. 1 – 1 – 1) என்று சொல்லுகிற உத்‌ கீத ப்ரணவத்தை ப்ரதமத்திலே மாறாடி. இப் ப்ரபந்தத்துக்கு உத்‌கீதம்‌ என்கிற இது ப்ரதாநம்‌ என்னுமாகாரம்‌ தோன்ற ப்ரணவத்தை ப்ரபந்த ஆதியிலே “உயர்வற-மயர்வற, அயர்வறும்‌”” என்று மாறாடி “உயர்ந்தே” என்று சரம கதி முடிவாக அகார மகாரங்களிரண்டினுடைய சரமமான நடு தகாரம்‌ அத்தைத் திருவாய்மொழிக்கு முடிவாக்கி {அகார-உகாரங்களின்‌ சரமமான தகாரத்தைத்‌ திருவாய்மொழிக்கு முடிவாக்கி!.

      அன்றிக்கே அர்ச்சிராதி,யை முடிவாக்கி என்னவுமாம்‌. அதுக்கடி – முடிவிலே சூழ்‌ விசும்பணிமுகிலாகையாலே. “’தொண்டர்க்கமுதுண்ணச்‌ சொன் மாலைகள்‌ சொன்னேன்‌”’ (திருவா. 9 – 4 – 9) என்று இப் ப்ரப,ந்த,த்தை ““ஹாவு ஹாவு ஹாவு” என்று தொடங்கி, “அஹமந்நாதோரஹமந்நாதோரஹமந்நாத,?‘” என்று தேவ போக்‌யமானாப் போலே,
      ப,க,வத்‌,விஷயத்தில்‌ சபலரானார்க்கு போக்‌யமாக்கி.““ஸர்வேப்‌யோபி ஹி வேதேப்‌ய: ஸாம கோஷோ மஹாநபூத்‌ | அந்வ கோஷய தத்யர்த்த,ம்‌ தேந ப்ரஹ்மாண்ட,மண்டபா ” என்று (மஹாகோஷம்‌) பெரிய ஆரவாரத்தை உடைத்தாயிருப்பது ஸாம கோஷமிறே. “எழுந்த நல்வேதத்தொலி”* என்றும்‌, *“ஸாமத்‌வநி” என்றும்‌ சொல்லுமாப் போலே இப்ப்ரபந்தத்தையும்‌ மஹாத்‌யயநமென்னப்‌ பாடுகையாலே பெரிய திருவத்யயந மென்னக் கடவதிறே. ஆகையாலே இத்தை சாந்தோக்‌ய ஸமமென்பர்கள்‌ என்கிறார்

      53-புரவியேழொரு காலுடைய தேரிலே திருச் சக்கர மொத்து கால சக்கரச் செங்கோல்‌ நடாவி ஜ்யோதிஸ் சக்ரவொளி சுருக்கி அக்‌நீஷோமீய தோஜோம்ருதத்துக் கூற்றும்‌- மந்தேஹர்க்குச்‌ செந்தீயும்‌, முக்தி மார்க்கத் தலை வாசலும்‌, கண்ணாவான்‌ கண்ணில்‌ பிறந்த கண்மணியும்‌, த்ரயீ மயமுமான மண்டலத்திலே தண்டாமரை சுமக்க தோள்‌ வளையும்‌ குழையும்‌, திருச் செய்ய முடியும்‌ ஆரமும்‌ படையும்‌, திகழும்‌ பொன் மேனியும்‌, செஞ்சுடர்த் தாமரைக் கண்ணுமாய்‌, அணி நிற மூர்த்தி ஈதென்னும்படி இரண்டையும்‌ தன்னிறமாக்குகிற செய்யாளான வித்‌யையோடே அருக்கன்‌ மேவின ஸதாத்‌யேய தேஜஸ்ஸின்‌ ஸாம ரஸோத்‌ காந நாமமுள்ளுறையான ஆத்‌யந்தங்‌களாலே ஓராயிரமாமவற்றிலே ஒன்றை ஆயிர முகத்தினா லருளின தீர்த்தம் போலே தீர்த்தங்களாயிரமுமாக விஸ்தரிக்கிறாரென்று வேத குரூபதேஸம்‌

      அதிலே சொல்லுகிற அந்தராதித்யவித்‌யை தொடக்கமான வற்றையும்‌ இதிலே சொல்லுமென்று கொண்டு முற்பட்ட யோஜனையை அருளிச் செய்கிறார்‌ மேல்‌ (புரவி ஏழொரு காலுடைய தேரிலே என்று தொடங்கி]. “காரார்‌ புரவியேழ்‌”’ (சி. திருமடல்‌) என்றும்‌, ““ஓருகாலுடைய தேரொருவன்‌”” (திருமொழி 5 – 7 – 8) என்றும்‌, “ஸப்த யுஞ்ஜந்தி ரத மேக சக்ரம்‌”” (அருணம்‌ 3) என்றும்‌, “ஏகோ அஸ்வோ வஹதி ஸப்தநாமா‘ (அருணம்‌ 3) என்று ஸப்தநாமா வாயிருப்பதொரு அஸ்வத்தாலே வஹிக்கப்படுவதாய்‌, ஏக சக்ரியுமாயிருக்கிற தேரிலே-திருமால்‌ திருக்கைத்‌ திருச் சக்கரமொக்கும்‌”’ (திருவிரு. 86) என்கிறபடியே திருவாழி யாழ்வானோடே ஒப்புச் சொல்லலாய்‌, (கால சக்கரச் செங்கோல்‌ நடாவி) ““கால சக்கரத்தாய்‌” (திருவா. 7 – 2 – 7), ‘தனி வளர்‌ செங்கோல்‌ நடாவுதிர்‌’” (திருவிரு, 13) என்கிறபடியே கால சக்ர நிர்வாஹகமுமாய்‌, (ஜயோதிஸ் சக்ரவொளி சுருக்கி) “துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி” (திருப்பள்ளி. 3) என்கிறபடியே நக்ஷத்ர தேஷஸ்ஸுக்கு ஸங்கோசத்தைப் பண்ணுமதாய்‌.

      (அக்‌நீஷோமீய தேஜோம்ருதத்துக்கு ஊற்றும்‌) அக்‌நியினுடைய தேஜஸ்ஸூக்கும் சந்தரனுடைய அம்ருத கலைக்கும்‌ உத்பத்தி ஸ்தலமுமாய்‌. பூர்வாபரங்களாகிற பக்ஷ த்வயத்திலும்‌ சந்த்ர கலையானது போவது வருவதாவது ஆதித்யன் பக்கல் நின்றுமிறே.
      (மந்தேஹர்க்குச்‌ செந்தீயும்‌)மந்தேஹரென்று – ஆதித்யனோடே உத,யாஸ்தமய ஸமயங்களிலே யுத்தம்‌ பண்ணுவார்‌ சில அசுரர்கள்‌. அவர்களை ‘“எரிகொள்‌ செந்தீ வீழ்‌” (திருவிரூ. 82) என்கிறபடியே தப்தமாக்குகைக்கு ஒரு அக்‌நி ஜ்வாலையுமாய்‌,
      (முக்தி மார்க்கத் தலை வாசலும்‌)“’நக்ஷத்ராதாதித்யம்‌” என்று முக்தி மார்க்க த்‌வாரமுமாய்‌,-“ஸம்வத்ஸராதாதித்யம்‌‘”’ என்று ஆதித்யனைக் கூட்டி “’தத்‌ பித்வா ஸூர்ய மண்ட,லம்‌”” என்றும்‌, “தேரார்‌ நிறை கதிரோன்‌ மண்டலத்தைக்‌ கீண்டு புக்கு” (சி.திருமடல்‌) என்றும்‌ சொல்லுகிறபடியே ஆதித்ய மண்டலத்தை பேதித்தே முக்தனுக்குப்‌ போக வேண்‌டுகையாலும்‌, மற்றவை யெல்லாம்‌ கிட்டுமளவேயாய்‌ ௮ண்ட பேதம்‌ பின்பே (அண்ட பேதத்துக்கு முன்‌பே )யாகையாலே முக்தி மார்க்கத் தலை வாசலும்‌ என்கிறார்‌.
      (கண்ணாவான்‌ கண்ணில்‌ பிறந்த கண் மணியும்‌) *“’கண்ணாவானென்றும்‌ மண்ணோர்‌ விண்ணோர்க்கு’‘ (திருவாய்‌. 1.- 8 – 3) என்றும்‌, ““சஷுர் தேவாநாமூத மர்த்யாநாம்‌” (யஜு. ஸம்‌. ச்‌ – 6) என்றும்‌ சொல்லுகிறபடியே தேவர்களுக்கு நேத்ர பூதனான ஸர்வேஸ்வரனுடைய “’சக்ஷோஸ் ஸூர்யோ அஜாயத’” (பு.ஸூ .) என்கிறபடியே திவ்ய சக்ஷுஸ்ஸைப்‌ பிறப்பகமாக உடைத்தாய்‌-
      ”ஜக தேக சக்ஷுஷே”’ என்கிறபடியே ஜகத்துக்கு த்‌ருஷ்டி பூதமாய்‌, (த்ரயீ
      மயமுமான மண்டலத்திலே) ““தரயீ மயாய”
      என்கிறபடியே வேத மயமுமான ஆதித்ய மண்டலத்‌திலே (தண்டாமரை சுமக்க) ”தண்டாமரை சுமக்கும்‌ பாதப் பெருமான்‌”” (திருவாய்‌. 4 5 – 8) என்றும்‌, “த்யேயஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்‌ய வர்த்தீ நாரயாணஸ்‌ ஸரஸி ஜாஸந ஸந்நிவிஷ்டா கேயூரவாந்‌ மகர குண்டலவாந்‌ கிரீடீ ஹாரீ ஹிரண்மயவபுஸ் த்‌ருத சங்க சக்ர” என்றும்‌, ““மங்கல வைம்படையும்‌ தோள் வளையும்‌ குழையும்‌ மகரமும்‌” (பெரியா.திரு, 1 – 8 -9) என்றும்‌, ”திருச் செய்ய முடியுமாரமும்‌ படையுந் திகழ” (திருவாய்‌. 8 – 4 – 7) என்றும்‌, ‘‘நீண்ட பொன் மேனியோடும்‌’” (திருவாய்‌. 5- 5- 7), *“செஞ்சுடர்த் தாமரைக் கண்‌ செல்வனும்‌”’ (திருவாய்‌. 5 – 4 – 9) என்றும்‌ சொல்லுகிற படியே பாஹு-வலய-மகர குண்டல-அபிஷேக-ஹார-கேயூர- சங்க, -சக்ராதி, திவ்ய பூூஷணங்களாலும்‌ விளங்கா நிற்பதுமாய்‌, ““ருக்மாபம்‌ ஸ்வப்ந தீ கம்யம்‌ வித்‌யாத்து புருஷம்‌ பரம்‌” (மநு. 12 – 122) என்றும்‌, “’ஆப்ரணகாத்‌ ஸர்வ ஏவ ஸுவர்ண?”‘ (சா. 1 – 6 – 6) என்றும்‌ சொல்லுகிற ஸ்ப்ருஹணீயமான திவ்ய விக்‌ரஹத்தையும்‌, “யதா கப்யாஸம்‌ புண்டரீக மேவ மக்ஷிணீ”” (ச,ா.) என்கிறபடியேஆதித்ய கிரணத்தாலே அலர்த்தப்பட்டு சிவந்த தேஜஸ்ஸை யுடைய திருக் கண் மலரையுமுடைத்தாய்‌,

      ““அருக்கனணிநிறமும்‌ கண்டேன்‌” (மூ.திரு. 1) என்றும்‌, ““செய்யதோர்‌ நாயிற்றைக்‌ காட்டிச் சிரீதரன்மூர்த்தி”” (திருவாய்‌. 4 – சீ – 2) என்றும்‌ சொல்லுகிறபடியே ஆதித்ய தேஜஸ்ஸு போலே யிருக்கிற பகவத்‌ விக்‌ரஹத்தையும்‌, ப்ரபா -ப்ரபாவான்‌௧ளுடைய சேர்த்தியாலே ஸ்ரியப் பதித்வத்துக்கு ஸ்மாரகமு மாயிருக்கிற ஆதித்ய மண்டலத்தையும்‌,இவை யிரண்டையும்‌ தன்னிறமாக்கும்படியான ““கமலமலர் மேல்‌ செய்யாள்‌” (திருவாய்‌. 9 – 3 – 1) என்கிறபடியே ஹிரண்ய வர்ணையாய்‌, *“வித்‌யா ஸஹாயம்‌”ஆதித்ய ஸம்ஸ்தம்‌ வித்‌யாப்ரபாவகம்‌ (ப்ரஸாதகம்‌)’” என்கிறபடியே வித்யை என்கிற திருநாமத்தை உடையளாயிருக்கிற பெரிய பிராட்டியாரோடே.-“வானிடை அருக்கன்‌ மேவி நிற்பார்க்கு’” (பெ.திருமொழி 2 – 1 – 7) என்கிறபடியே ஆதி,த்யாந்தர் வர்த்தியாய்‌, ஸதாத்‌, த்யேய தேஜோ ருபமாயிருக்கிற இவரை ப்ரதிபாதி,க்கிற . “ஸாம்ந உத்‌கீதோரஸ?” (சாந்) என்று ஸாமத்துக்கு ரஸமாய்‌, ““தஸ்யோதிதி நாம”‘ (சாந்த ] என்கிறபடியே அவர்க்குக்‌ திருநாமமாயிருக்கிற உத்‌காந நாமத்தை உள்ளுறையாக உடைத்தாகையாலே * ‘உத்‌’” என்கிற விதில்‌ உகார தகாரங்களை ஆதி யந்தங்களில்‌ உடைத்தாயிருக்கிற இப் பரபந்தத்தை.
      ஓராயிரமா யுலகேழளிக்கும்‌ பேராயிரம்‌”” (திருவாய்‌;9 – 3 – 1) என்கிறபடியே ஒரோ திருநாமமே அநேக பிரகாரமாக ரக்ஷிக்கும் படியான திருநாமங்களில்‌ வைத்துக் கொண்டு ஆதித்யாந்தர வஸ்திதனான வனுக்குத்‌ திருநாமமான ”உத்‌” என்கிற உத்துக்கு பர்யாயமான நாராயண ஸப்‌தத்தை “’ஆயிர முகத்தினாலருளி மந்தரத் திழிந்த கங்கை” (பெரிய. திரு. 1 – 4 – 7) என்கிறபடியே கங்கை லோக பாவநார்த்தமாக ஸஹஸ்ர முகமாக ப்ரவஹித்தாப் போலே “’தீர்த்தங்களாயிரத்து”’ (திருவாய்‌. 7 – 10 – 11) என்கிறபடியே லோக பாவநார்த்தமாக ஆயிரம்‌ பாட்டாக விஸ்தரிக்கிறார்‌ என்று வேதாசார்ய ப,ட்டர்‌ அருளிச் செய்யும்படி

      ஆக, ‘“வ்வுலகத்தெவ்வெவையும்‌”’ என்று தொடங்கி, இவ் வாழ்வார்‌ அருளிச் செய்த ப்ரபந்தங்கள்‌ நாலுக்கும்‌ வேத ரூபத்வமும்‌, அங்கோபாங்க ஸஹிதத்வமும்‌, ஸாஸ்த்ரதவம்‌ முதலான வேத லக்ஷணங்களும்‌ இவற்றினுடைய நித்யத்வ-அபெளருஷேயத்வமும்‌, இந்நாலு ப்ரபந்தங்களுக்கும்‌ நாலு வேத ஸ்தாநேயான ப்ரகாரத்தையும்‌, அதில்‌ திருவாய்மொழி ஸாம ஸாமாந்ய மன்றிக்கே, சந்தோக,ஸாமோபநிஷத் தாயிருக்கிற ப்ரகாரத்தையும்‌, அதில்‌ விசேஷ லக்ஷணங்களையும்‌ சொல்லுகையாலே இப்ப்ரபந்தத்‌துக்கு வேத,ஸாம்யம்‌ சொல்லா நின்றது –

      54-அன்றிக்கே, ஸ்வரூப கு,ண விபூ,தி சேஷ்டிதங்களை விஸமமாக்‌குகிற பஞ்சராத்ர புராணேதிஹாஸங்கள்‌ போலே நீலபாரூபோக்தி தெரியச் சொன்ன வேத உப ப்ருூம்ஹணமென்பர்கள்‌.
      இனி மேல்‌ ஸ்வரூபாதிகளை விஸத, மாகச்‌ சொல்லுகிற ஸ்ரீபாஞ்சராத்ராதிகளைப் போலே விக்‌ரஹத்தை விஸதமாகச்‌ சொல்லுகிற வேதத்துக்கு இப் ப்ரபந்தம்‌ விவரண ரூபமாயிருக்கும்‌ என்பாரு முண்டென்கிறார்‌ (அதவா வேத ஸாம்ய முண்டான மாத்ரமே யன்றிக்கே ஸ்வரூப ரூப கு,ண விபூதி சேஷ்டிதங்கள்‌ என்று தொடங்கி) ஸ்வரூப ரூப கு,ண விபூதி சேஷ்டிதங்களித்தனையும்‌ வேதத்திலே சொல்லும்‌-ஸ்வருபத்தையும்‌, குணத்தையும்‌ விஸதமாகச்‌ சொல்லும்‌ ஸ்ரீபாஞ்சராத்ரம்‌-விபூதியை விஸதமாகச்‌ சொல்லும்‌ புராணங்கள்‌-அவனுடைய திவ்ய சேஷ்டிதங்களுக்கு பிரகாஸகமாயிருக்கும்‌ இதிஹாஸங்கள்‌, அவை போலே “’நீல தோயத மத்‌யஸ்த வித்யுல்‌லேகேவ பாஸ்வரா”‘ (தை.நா.) என்றும்‌, பாரூபஸ் ஸத்ய ஸங்கல்ப ” (முண்டக 2- 27) என்றும்‌ விக்‌ரஹ பரமான வே வாக்யங்களை “*“தெரியச் சொன்ன ஓராயிரம்‌” (திருவாய்‌. 6 – 9 -11)என்கிறபடியே விஸதமாக்குகிற வேத உப ப்‌ரும்ஹணம்‌ என்பாருமுண்டென்கிறார்‌.

      55-கல்பாதி,யில்‌ தோற்றிற்று வர்ணிக்கும்‌ சதுர்முகன்‌ சந்தஸ்ஸும்‌ மோஹ ஸாஸ்த்ர ப்ரவர்த்தகன்‌ பிணச்சுடலை வெந்தார்‌ அக்கும்‌ ஆறும்‌ அணிந்து ஏறேறிச் சுழன்றாடும்‌ ஆலமமர்‌ பிச்சுத் தெளிந்து தான்‌ வணங்குமாறுரைக்கக் கேட்ட ஸஜாதீயர் ப்ரஸாதமும்‌ ஆர்ஷ மூலம்‌.
      கீழ்ச் சொன்ன புராணேதிஹாஸ கர்த்தாக்களான ருஷிகளாலே சொல்லப்பட்ட ஆர்ஷங்களுக்கு மூலமெது; இவர்‌ திருவாய்மொழி பாடுகைக்கு மூலமெது என்ன; கல்பாதியிலே உத்‌ரிக்த குணாநுகுணமாகச்‌ சொல்லும்‌ ப்‌ரஹ்மாவின்‌ ப்ரஸாதமும்‌, ரஜஸ் தமஸ் ப்ரசுரனான ருத்ரன்‌, அவை தலை சாய்ந்து ஸத்த்வம்‌ தலை யெடுத்த போது அத்‌யாத்மம்‌ சொல்லக் கேட்ட ஸப்‌ரஹ்மசாரிகளான ப்‌ரூகு-புலஸ்த்ய-மார்க்கண்டேய வாமதேவாதி,கள்‌ என்று சொல்லப்படுகிறவர்கள்‌ ப்ரஸாதமும்‌ ஆர்ஷத்துக்கு மூலம்‌-ப்‌,ரஹ்ம ருத்‌ராதிகளுக்கு அந்தர்யாமியாய்க் கொண்டு அவர்களுக்கு ஜ்ஞாந ப்ரதாநம்‌ பண்ணினவன் தானே ஸ்ரீ யப்பதியாய்‌, பரம ஸத்த்வ ஸமாஸ்ரயமான திவ்ய விக்‌ரஹ யுக்தனுமாய்‌ நின்று செய்த ப்ரஸாதம்‌ இவர்க்கு மூலம்‌ என்கிறார்‌ (கல்பாதியில்‌ தோற்றிற்று வர்ணிக்கும்‌ என்று தொடங்கி) (கல்பாதி,யில்‌) ‘“யஸ்மிந்‌ கல்பே து யத் ப்ரோக்தம்‌ புராணம்‌ ப்‌ரஹ்மணா புரா ! தஸ்ய தஸ்ய து மாஹாத்ம்யம்‌ தத் ஸ்வரூபேண வர்ண்யதே ॥ அக்‌நேஸ் ஸிவஸ்ய மாஹாத்ம்யம்‌ தாமஸேஷு ப்ரகீர்த்யதே । ரஜஸேஷு ச மாஹாத்ம்யம்‌ அதிகம்‌ ப்‌ரஹ்மணோ விது | ஸாத்த்விகேஷ்வத கல்பேஷு மாஹாத்ம்யம்‌ அதிகம்‌ ஹரே -தேஷ்வேவ யோக ஸம் ஸித்‌தாக,மிஷ்யந்தி பராம்‌ க,திம்‌”” (மாத்ஸ்யே) என்று குண த்ரய வஸ்யனாகையாலே கல்பாதியிலே தனக்குத்‌ தோற்றின குணாநுகுணமாக தமஸ்ஸு தலையெடுத்த போது ருத்‌ராக்‌நி மாஹாத்ம்யமும்‌, ரஜஸ்ஸு தலையெடுத்த போது ஸ்வ வர்ணநமும்‌, ஸத்த்வம்‌ தலையெடுத்த போது பகவத்‌,வர்ணநமும்‌ சொல்லக் கடவனான ப்‌,ரஹ்மாவினுடைய ““மச்சந்தா தேவ தே ப்‌ரஹ்மந்‌ ப்ரவ்ருத்தேயம்‌ ஸரஸ்வதீ?” (ரா. பா. 2 – 31) என்கிற நினைவும்‌. ““சந்தஸ்ஸு” என்றது நினைவென்றபடி-

      (மோஹ ஸாஸ்த்ர ப்ரவர்த்தகன்‌”) “தவம்‌ ஹி ருத்‌ர மஹா பாஹோ மோஹ ஸாஸ்த்ராணி காரய ! மாஞ்ச கோபய யேந ஸ்யாத்‌ ஸ்ருஷ்டிரேஷோத்தரோத்தரா | த்ரய்யாமபி ச ஸாமாந்ய வாதஸ்சித்த விபே,த,த₹ ॥ கிம்புநர் லோக மோஹார்த்த,ம்‌ ப்ரவ்ரூத்தம்‌ ருத்‌ர ஸாஸநம்‌ | மயாநுமிஷ்டோ ருத்‌ரஸ்து மோஹ ஸாஸ்த்ரம்‌ வ்யதாத்‌ ஸ்வயம்‌”’-என்கிறபடியே பகவந் நியோகத்தாலே மோஹ ஸாஸ்த்ர ப்ரவர்த்தகனான ருத்‌ரன்‌- (பிணச்சுடலை இத்யாதி, ) ”பிணங்களிடுகாடதனுள்‌”’ (திருமொழி 2 – 6 – 9) என்றும்‌, “சுடலையில்‌ சுடு நீறன்‌’” (திருமொழி 10 – 1 – 5) என்றும்‌, ““வெந்தாரென்பும்‌ சுடு நீறும்‌” (திருமொழி 1 – 5 – 8) என்றும்‌, ““அக்கும்‌ புவியினதளுமுடையர்‌” (திருமொழி 9 – 6 – 1) என்றும்‌, “ஆறும்‌ பிறையுமரவமும்‌ அடம்பும்‌ சடைமேலணிந்து”” (திருமொழி 6 – 7 – 9) என்றும்‌, “வேறேறிப்‌ பட்டவிடுசாபம்‌”” (இர.திருவ. 63) என்றும்‌, “’தன்னினுடனே சுழலச்‌ சுழன்றாடும்‌”’ (பெ.திருமடல்‌) என்றும்‌, “’ஆலமமர்‌ கண்டத்தரன்‌”’ (மு.திருவ. 4] என்றும்‌, ““ஆல் மேல்‌ வளர்ந்தானைத் தான்‌ வணங்குமாறு – மேலை யுகத்துரைத்தான்‌’” (நா. திருவ, 17) என்றும்‌ சொல்லுகிற இவற்றாலே ருத்‌ரன்‌ தமஸ்ஸு தலை மண்டை யிட்டு பகவத்‌ விமுகனய்‌ ப்‌ரமித்து, பிணங்களிடுகாடுகள்தோறும்‌ ஸஞ்சரியாநின்றுகொண்டு, “தீ பாக்‌நிம்‌ தீ பதைலஞ்ச பஸ்ம சாஸ்திம்‌ ரஜஸ் வலாம்‌ ॥ ப்ரமாதாத்‌ ஸ்பர்ஸநாத்‌, விப்ரஸ்ஸவாஸா ஜலமாவிஸேத்‌’” என்று தர்ஸந-ஸ்பர்ஸந-அநர்ஹங்களான பஸ்மாஸ்திகளைத் தரித்து வ்யாக்‌ர சர்மவஸநனாய்‌, நதீ சந்த்‌ரர்களை ஜடையிலே தரித்து, ஸாபோபஹதனாய்‌, க்ருத்யாக்ருத்ய விவேக ஸூந்யனாய்‌ விஷத்தை தரித்து, சக்ர ப்‌ரமம்‌ போலே ப்‌ரமிக்கிறவன்‌,
      அதுக்கு மேலே ஸத்த்வம்‌ தலை யெடுத்து, ஸத்த்வம்‌ விஷ்ணு ப்ரகாஸகமாகையாலே, அகடிதகடநா ஸாமர்த்‌யத்தை யுடைய ஸர்வேஸ்வரனே உபாஸ்யனென்று தான்‌ அவனை உபாஸிக்கும்‌ ப்ரகாரத்தை உபதேஸிக்கக் கேட்டு ஸத்த்வஸ்தராய்‌, ருஷித்வத்தால்‌ ஸாஜாத்யத்தை யுடையரான புஸஸ்த்ய ப்‌ருகு. மார்க்கண்டேய-வாம தேவாதிகளுடைய ப்ரஸாத,ம்‌ ஆர்ஷங்களான புராணேதிஹாஸங்களுக்கு காரணமென்றதாய்த்து. புலஸ்த்யாதிகளுக்கு பராஸரனோடே ருஷி ஸாஜாத்யமுண்டாகையாலே ஸஜாதீயர்‌ என்றது.

      56-பரம ஸத்த்வத்தோடே உள்ளி உரைக்கும்‌ நிறை ஞானத்தயனாம்‌ சிவனாம்‌ திருமாலருள் கொண்டு இவர்‌ பாடினார்‌.
      இனி (பரம ஸத்த்வம்‌) என்று தொடங்கி – “பரம ஸத்த்வஸமாஸ்ரய: கஸ் (ஸ்தோ.ர. 12) என்கிறபடியே ரஜஸ் தமஸ்ஸூக்கு ஆஸ்ரயமன்றிக்கே பரம ஸத்வ ஸ்மாஸ்ரயனாய்‌, அவர்களைப் போலே தோற்றிற்றுச்‌ சொல்லுகை யன்றிக்கே “நெறி யுள்ளி யுரைத்த ” (திருவா. 1 – 3 – 8) என்கிறபடியே இவன்‌ சொல்லிற்றொன்று வேதர்த்தமாயிருக்கச்‌ செய்தேயும்‌, இச் சேதநர் பக்கல்‌ க்ருபாதிஸயத்தாலே விசாரித்துச்‌ சொல்லலாம்படி ஆப்தனுமாய்‌, ““நிறை ஞானத்தொரு மூர்த்தி”” (திருவா. 4 – 9 – 6) என்கிறபடியே அதுக்கடியான ஸார்வஜ்ஞ்யத்தை யுமுடையனாய்‌, *’அயனாய்‌ சிவனானாய்‌ திருமாலாலருளப்பட்ட சடகோபன்‌”’ (திருவா. 8 – 8- 11) என்கிறபடியே ப்‌ரஹ்ம ருத்‌ராதி களுக்கும்‌ அந்தர்யாமியாய் நின்று அவர்களை ப்ரவர்த்திப்பித்தாப் போலே ஸ்ரீயப் பதியாய்‌ அஸாதாரண விக்‌ரஹ யுக்தனான ஈஸ்வரனுடைய க்ருபை இவர்‌ திருவாய்மொழி பாடுகைக்கு மூலமென்கிறார் –

      57–கருவுள்‌ வேறலாமை அரன்‌ அயன்‌ எனச் செய்யுமவை போலே மூவுருவாம்‌ முதல்வன்‌ துப்பரவாலே பரம கவிகளால்‌ பாடுவியாது நேர் படச் சொல்லும்‌ நீர்மையிலா என்னைத் தன்னாக்கி என்‌ நா முதல்‌ வந்து புகுந்து தப்புதலறத்‌ தன்னை வைகுந்தனாகத்‌ தன்‌ சொல்லால்‌ தானே துதித்து மலக்கு நாவியல்‌ மொய்ய சொல்லால்‌ சொல்ல வல்லேனென்று நானும்‌ சொல்லி நாடும்‌ கையெடுக்கும்படி என்‌ சொல்லால்‌ யான் சொன்ன இன் கவி யென்பித்தா னென்றாரிறே.
      அவர்களுடைய ப்ரஸாதம்‌ ஆர்ஷத்துக்கு மூலமென்னுமிடம்‌ பரமாண ப்ரஸித்‌தமா யிருந்தது. இவருடைய பரபந்தத்துக்கு பகவத் ப்ரஸாதம்‌ மூலமென்னுமிடம்‌ அறிந்தபடி என்‌ என்னில்‌, அவர் தம்முடைய வசநங்கள்‌ ப்ரமாணமென்கிறார்‌ (கருவுள்‌ வேறலாமை என்றுதொடங்கி).“ஸ்ருஷ்டி ஸ்தித் யந்தகரணீம்‌ ப்‌ரஹ்ம விஷ்ணு ஸிவாத்மிகாம்‌ | ஸ ஸம்ஜ்ஞாம்‌ யாதி பகவாந்‌ ஏக ஏவ ஜநார்த்தநா ”” (வி.பு.1 – 2) என்றும்‌, “ஸ்ருஷ்டிம்‌ தத? கரிஷ்யாமி த்வாமாவிஸ்ய ப்ரஜாபதே”’, “கல்பாந்தே ருத்‌ரரூபீ யோ க்ரஸதே ஸகலம்‌ ஜகத்‌ ! தமாத்‌யம்‌ புருஷம்‌ விஷ்ணும்‌ ப்ரணதோஸ்மி ஜநார்த்தநம்‌”’, “’விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்யாமித தேஜஸ । தஸ்மாத்‌ தநுர்ஜ்யா ஸம்ஸ்பர்ஸம்‌ ஸவிஷேஹோ மஹேஸ்வர?” (பார. கர்ண. 29) என்றும்‌, ”திசைமுகன்‌ கருவுள்‌ வீற்றிருந்து படைத்திட்ட கருமங்‌களும்‌’” (திருவா. 5 – 10 – 8) என்றும்‌, ‘“வெள்ள நீர்ச் சடையானும்‌ நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்‌”” (திருவா. 5 – 10 – 4) என்றும்‌ சொல்லுகிறபடியே ப்‌ரஹ்மாதிகளுக்கு அந்தர் யாமியாய்‌ ஸ்ருஷ்ட்யாதிகளைப்‌ பண்ணா நிற்கச் செய்தேயும்‌ ‘அரனயனென உலகழித்தமைத்துளன்‌”’ (திருவா. 1 – 1 – 8) என்கிறபடியே ப்‌ரஹ்மா ஜகத்தை ஸ்ருஷ்டித்தான்‌; வேதங்களை உபதேஸித்தான்‌; ருத்ரன்‌ ஜகத்தை ஸம்ஹரித்தான்‌; த்ரிபுரங்களை தஹித்தான்‌” என்று லோகத்தார்‌ சொல்லும்படி செய்தாப் போலே ““மூவுருவாம்‌ மூதல்வன்‌” (திருவா. 7 – 9- 2) என்கிறபடியே ப்‌ரஹ்மாதிகளுக்குத்‌ தானே காரணமானாப் போலே தனக்குத் தானே அடியாயிருக்கிறவன்‌,-*திறத்துக்கே துப்பரவாம்‌”‘ (திருவா. 7 – 9 – 9) என்கிறபடியே யாதொன்றைக் கொண்டு யாதொரு கார்யம்‌ கொள்ள நினைத்தான்‌, அத்தைக் கொண்டே அக் கார்யம்‌ கொள்ள வல்ல ஸாமர்த்‌யத்தை உடையனாகையாலே, தன்னைக் கவி சொல்லுவித்துக் கொள்ள நினைத்தால்‌ ‘“இன் கவிபாடும்‌ பரம கவிகளால்‌ தன் கவி தான்‌ தன்னைப்‌ பாடுவியாது” ‘ (திருவா. 7 – 9 – 6) என்கிறபடியே வ்யாஸ-பராஸர-வால்மீகிகளைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளுதல்‌, முதலாழ்வார்களைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளுதல்‌ செய்யாதே. (நேர் படச் சொல்லும்‌ நீர்மையிலா என்னைத்‌ தன்னாக்கி) “நேர் பட யான் சொல்லும்‌ நீர்மையிலாமையில்‌”” (திருவா. 7 – 9 – 5) என்கிறபடியே தன்னைக் கவி பாடுகைக்குத்‌ தகுதியான ஜ்ஞாந சக்த்யாதிகளின்றிக்கே இருக்க, “என்னைத்‌ தன்னாக்கி”” (திருவா, 7 – 9 – 1) என்கிறபடியே என்னைத்‌ தனக்கு அநந்யார்ஹமாக்கி என்னுதல்‌; என்னைத்‌ தன்னோடொத்த ஜஞாந சக்த்யாதிகளை உடையனாம்படி பண்ணி, “என்‌ நா முதல்‌ வந்து புகுத்து’” (திருவா. 7 – 9 – 3) என்கிறபடியே ஜ்ஞாநாதிகளை உண்டாக்கித்‌ தான்‌ தூரஸ்தனாயிராதே என்னுடைய ஜிஹ்வாக்‌ரத்திலே வந்து புகுந்திருந்து–தப்புதலின்றித் தனைக் கவி தான்‌ சொல்லி?” (திருவா. 7 – 9 – 4) என்கிறபடியே என்னை உபகரணமாகக் கொண்டு கவி பாடா நிற்கச் செய்தே என்னுடைய ஸ்பர்ஸத்தால்‌ வந்த தோஷம்‌ தட்டாத படி பண்ணி, *’தன்னை வைகுந்தனாகப் புகழ வண் தீங்கவி’‘ (திருவா, 7 – 9- 7) என்கிறபடியே நான்‌ கவி பாடின பின்பு தன்னை ஸ்ரீவைகுண்ட நாதனாகவும்‌ அவ்‌ விபூதியில்‌ ஐஸ்வர்யம்‌ தான்‌ பெற்றானாகவும்‌ நினைத்து, *‘தன் சொல்லால்‌ தான்‌ தன்னைக்‌ கீர்த்தித்த மாயன்‌” (திருவா. 7 – 9 – 2) என்கிறபடியே சொல்லும்‌ தன்னதாய்‌, சொன்னானும்‌ தானாய்‌, சொல்லிற்றும்‌ தன்னையாய்‌, தன்னைத் தானே துதித்து” (திருவா. 10 – 7- 2) என்கிறபடியே எனக்கு அந்தர்யாமியாய்‌ நின்று தன்னைத் தானே ஸ்துதியா நிற்கச்‌ செய்தேயும்‌–‘மலக்கு நா வுடையேற்கு”’ (திருவா. 6 – 4- 9) என்றும்‌,“நாவியலாலிசை மாலைகளேத்தி”’ (திருவா. 4 – 5 – 4) என்றும்‌, ‘மொய்ய சொல்லாலிசை மாலைகளேத்தி”” (திருவா. 4 – 5 2) எனறும்‌, ‘‘வானக் கோனைக் கவி சொல்ல வல்லேற்கு”” (திருவா. 4 – 5 – 9) என்றும்‌ இப்படி நானும்‌ சொல்லி, *’சடகோபன் சொல்‌”” என்றவாறே நாடும்‌ அஞ்ஜலி பண்ணும்‌ படி பண்ணி, *“என்சொல்லால்‌ யான்‌ சொன்ன இன் கவி என்பித்து”’ (திருவா. 7- 9- 2) என்று – சொல்‌ என்னதாகவும்‌, சொன்னேன்‌ நானாகவும்‌, அது தான்‌ எனக்கு இனிதாகவும்‌ சொல்லுவித்தான்‌ என்கிறாரிறே. ஆகையால்‌ இவருடைய உக்திகளால்‌ ஸர்வேஸ்வரனருளாலே திருவாய்மொழி பாடினார்‌ என்னுமிடம்‌ ஸித்‌தம்

      58-தர்ம வீர்ய ஜ்ஞாநத்தாலே தெளிந்து ஹ்ருஷ்டராய்‌ மேலே மேலே தொடுப்பாரைப் போலன்றே அருளின பக்தியாலே உள் கலங்கிச்‌ சோகித்து, மூவாறு மாஸம்‌ மோஹித்து, வருந்தி, ஏங்கித்‌ தாழ்ந்த சொற்களாலே நூற்கிற விவர்‌.
      இதுக்குக் கீழ்‌ ப்ரபந்த, மூல வைலக்ஷண்யம்‌ சொல்லிற்று. இனி மேல்‌ வக்த்ரு வைலக்ஷண்‌யம்‌ சொல்லுகிறது (தர்ம வீர்ய ஜ்ஞாநத்தாலே என்று தொடங்கி). “ஹஸிதம்‌ பாஷிதஞ்‌சைவ கதிர்யா யச்ச சேஷ்டிதம்‌ | தத் ஸர்வம்‌ தர்ம வீர்யேண யதாவத் ஸம் ப்ரபஸ்யதி?” (ரா. பாடி – 4) என்கிறபடியே தந்தாமுடைய தபோ பலத்தாலே லப்‌தமான ஜ்ஞாநத்தாலே “கண்டும்‌ தெளிந்தும்‌’” (திருவா. 7- 5- 7) என்கிறபடியே கண்டு தெளிந்து ஹ்ருஷ்டராய்‌, மேலே மேலே ஸப்‌தங்களைத்‌ தொடுக்கும்‌ ருஷிகளைப் போலன்றே அருளின ப,க்தி ரூபமான ஜ்ஞாநமெல்லாம்‌ அடி மண்டியோடே கலங்கி யதா மநோரதம்‌ பகவதநுபவம்‌ பண்ணப் பெறாமையாலே ஸோகித்து, “’தாம்நா சைவோதரே பத்‌த்‌வா ப்ரத்யபத்‌ நாதுலூகலே யதி ஸக்நோஷி கச்ச த்வம்‌ அதி சஞ்சல சேஷ்டித” என்றும்‌, “‘உரலினோடிணைந் திருந்தேங்கிய எளிவு எத்திறம்‌’” (திருவா, 1 – 3 1) என்றும்‌, “போனாய்‌ மா மருதின்‌ நடுவே ” (திருவா. 5 – 1 – 2) என்றும்‌, ““பிறந்தவாறும்‌ வளர்ந்தவாறும்‌”’ (திருவா. 8 – 10 – 1) என்றும்‌, “ஸர்வஜ்ஞனாய்‌ ஸர்வ ஸக்தியா யிருக்கச்‌ செய்தே இப்படி ஓரபலை கையாலே கட்டுண்பதே! இதென்ன ஆஸ்ரித வ்யாமோஹந்‌தான்‌!’ என்கிற ஆஸ்ரித வ்யாமோஹாநுஸந்தாநமும்‌,
      இவர்‌ பக்தி பாரவஸ்யத்தாலே கலங்கி ஸர்வஜ்ஞத்வாதிகளை மறந்து விரோதம்‌ பண்ணுவதாக நின்ற இரண்டு மருதுக்கும்‌ நடுவே தவழ்ந்து சென்றதை அநுஸந்தித்து, உலகங்கட்கெல்லாம்‌ ஒருயிரான வஸ்துவுக்கு ஒரு தீங்குவரில்‌ செய்வதென்‌?” என்கிற ப்ரேமாதிஸயமும்‌, ‘ஜநந ஹேதுவான கர்ம ஸ்பர்ஸ மில்லாத வஸ்து “’ததஸ் ச த்‌வாதஸே மாஸே”? (ரா.படா. 10 – 8) என்கிறபடியே பன்னிரண்டு மாஸம்‌ கர்ப்பவாஸம் பண்ணி ஸத்ரு க்‌ருஹத்திலே இருளிலே வந்து அவதரிப்பதே!” என்றும்‌, ஓரொன்றில்‌ மூவாறு மாஸம்‌ மோஹித்து, ““வருந்தி நன்‌ வாசக மாலை கொண்டு” (திருவா. 3 – 8 – 10) என்கிற படியே ஒரு சொல்‌ எடுக்கும் போது ஒரு மலை எடுத்தாப் போலே வருந்தி, (ஏங்கி) “என்றென்றேங்கி அழுதக்கால்‌”” (திருவா. 8 – 5 – 3) என்கிறபடியே அவன் திருநாமங்‌களைச்‌ சொல்லப் புக்கு பல ஹாநியாலே நடுவு நடுவே ஏங்குவது இளைப்பதாய்‌. (தாழ்ந்த) “அங்கே தாழ்ந்த சொற்களால்‌”” (திருவா. 8 – 5 – 11) என்கிறபடியே சொல்லப் புக்குச்‌ சொல்ல மாட்டாதே தரைப்பட்டு கத்‌கத ஸ்வரத்தோடே ““வண்டமிழ் நோற்க நோற்றேன்‌”” (திருவா. 4 – 5 – 10) என்று நூற்கிற விவர்‌ என்கிறார் –

      59-ஸ்வாத்‌,யாய யோக,ங்களைக்‌ கற்றும்‌ தெளிந்தும்‌ கண்டமை மைப்பாலே ஓதி உணர்ந்தவர்‌ இன்றும்‌ ஆஸா பாஸ பத்‌தர்‌.
      இனி மேல்‌ இந்த ருஷிகளிற் காட்டில்‌ இவர்க்கு ஸம்ஸாரத்தில்‌ நசை யறுகையாலுண்டான வைலக்ஷண்யம்‌ சொல்லுகிறது (ஸ்வாத்‌யாய யோகங்களைக்‌ கற்றும்‌ தெளிந்தும்‌ என்று தொடங்கி). வேதங்களைக்‌ கற்றும்‌ அதில்‌ அர்த்தத்தைத்‌ தெளிந்தும்‌ யம நியமாத்‌,யஷ்‌டாங்க, யோகத்தாலேயும்‌ அவனைக் கண்ட மைமைப்பாலே – ஸ்வ ப,ஹு பலாரா்ஜிதமான ஸாஸ்த்ர ஜந்ய ஜ்ஞாதத்தாலே தாங்கள்‌ காண்கிறதாகையாலே மெய்ம்மை யற்றிருக்கும்‌; அவிஸத மாயுமிருக்கும்‌. அத்தாலே ““ஓதி யுணர்ந்தவர்‌ முன்னா” (திருவா. 3 – 5- 5) என்கிறபடியே வேத ஸாஸ்த்ரங்களை ஓதி, த்யாஜ்யோபாதேயங்களை உணரந்திருக்கிற ருஷிகள்‌ இன்றும்‌ “ஆஸா பாஸ ஸதைர் பத்‌தா காம க்ரோத,பராயணா ”” என்கிறபடியே ஸாம்ஸாரிக ஸங்க பாஸ பத்‌தர்‌. இவர்க்கோ வென்னில்‌ 2- (அவன்‌ வழங்கும்‌ திவ்ய சக்ஷுஸ்ஸாலே) “அவன்‌ கண்களாலே அமலங்களாக விழிக்கும்‌” (திருவா. 1 – 9 – 9) என்றும்‌, ““திவ்யம்‌ ததாமி தே சஷு பஸ்ய மே யோக,மைஸ்வரம்‌”‘ (கீதை 11 – 8) என்றும்‌ சொல்லுகிற படியே இவரை அமலராம்படி கடாக்ஷித்து, அவனாலே தத்தமான திவ்ய சஷுஸ்ஸாலே நேரே கடிக்கமலத் துள்ளிருந்தும்‌ காண்கிலான்‌ கண்ணனடிக்‌ கமலந் தன்னை அயன்‌”” (மூ.திருவ. 56) என்றும்‌, ““கார் செறிந்த கண்டத்தான்‌ எண் கண்ணான்‌ காணான்‌’” (தா.திருவ. 73) என்றும்‌, “*நீறாடி தான்‌ காண மாட்டாத-தாரகல சேவடி ” (நா. திருவ. 27) என்றும்‌, *“கட்கரிய பிரமன்‌ சிவனிந்திரனென் றிவர்க்கும்‌ கட்கரிய கண்ணன்‌’‘ (திருவா. 7 – 7 – 11) என்றும்‌, ”விதி ஸிவ ஸநகாத்‌, யைர்த்‌ யாதுமத்யந்த தூ,ரம்‌”’ (ஸ்தோ.ர. 47) என்றும்‌ சொல்லுகிறபடியே தங்களைப் போரப் பொலிய நினைத்திருக்கும்‌ ப்‌ரஹ்ம ருத்‌ராதிகளுக்கும்‌ காண வரிதாயிருக்கிற ““அரும் பொருளாய்‌ நின்ற அரங்கனே?” (நா. திருவ. 60) என்கிற படியே பெறுதற்கரிய ப்ரயோஜநமாய்‌ பரத்வ- ஸெளலப்‌ய விஸிஷ்டனான ஸர்வேஸ்வரனை “கண்டேன்‌ கமல மலர்ப் பாதம்‌” (திருவா. 10 – 4- 9) என்கிறபடியே கண்ட போதே ““பொய்ந் நின்ற ஞானமும்‌ ” (திருவிரு. 1) என்று தொடங்கி, “’இனி யாமுறாமை”” (திருவிரு. 1) என்று – ‘அவித்‌யாதிகளை விடுவித்தருளவேணும்‌” என்று இவர் தாமே அவனைக் கால்கட்டி அபேக்ஷிக்கும்படி இவர்க்கு வேறொருவரால்‌ விடுவிக்க அரிதான ‘“மற்ற வன் பாசங்கள்‌”’ (திருவா. 6 – 2 11) என்கிறபடியே ஸாம்ஸாரிக ஸகல பாபயங்களும்‌ “பாசங்கள்‌ நீக்கி” (திருவா. 7 – 8 5) என்கிறபடியே அவன்தானே போக்குகையாலே நீங்கிற்று; நேராக நிவ்ருத்த மாய்த்தென்கிறார்-

      60-அவர்களுக்குக்‌ காயோடென்னுமவையே தாரகாதிகள்‌; இவர்க்கு எல்லாம்‌ கண்ணனிறே.
      இனி மேல்‌ அவர்களுக்கும்‌ இவர்க்கும்‌ தாரகாதிகளும்‌ வேறுபட்டபடி சொல்லுகிறது. “காயோடு நீடு கனியுண்டு”” (திருமொழி 3 – 2 – 2) என்றும்‌, ““வீழ் கனியுமூழிலையு மென்னு மிவையே நுகர்ந்து ”” (பெ.திருமடல்‌) என்றும்‌ சொல்லுகிறபடியே பல-மூலபத்ர-வாயு- தோயங்களே அவர்களுக்கு தாரக போஷக போக்‌யங்கள்‌. இவரையும்‌ “ருஷி” என்று கீழே சொல்லிற்றிறே. அது இவர்க்கும்‌ ஒவ்வாதோ என்னில்‌, ஒவ்வாது. “உண்ணும்‌ சோறு பருகுநீர்‌ தின்னும்‌ வெற்றிலையு மெல்லாம்‌ கண்ணன்‌” (திருவா. 6 – 7 – 1) என்கிறபடியே தாரகாதிகளுமெல்லாம்‌ ஸர்வ ஸுலபனான ஸர்வேஸ்வரனிறே இவர்க்கு.

      61-அழுநீர் துளும்பக்‌ கடலும்‌ மலையும்‌ விசும்பும்‌ துழாய்‌ திருமால்‌ என்று “எங்கே காண்கேன்‌!* என்னுமிவரலமாப்பு அவர்களுக்கு புத்ர வியோகத்திலே.
      ஆகில்‌ இவர்க்கு ஸம்ஸாரத்தில்‌ நசையற்ற தென்றும்‌, அவர்களுக்கு நசையற்ற தில்லை என்றும்‌ சொல்லிற்றே, அதறிந்தபடி என்‌ என்னில்‌, அத்தைச் சொல்லுகிறது,-“அழுநீர் துளும்ப அலமருகின்றன (திருவிரு. 2) என்றும்‌, ‘‘கடலும்‌ மலையும்‌ விசும்பும்‌ துழாய்‌” ்‌ (திருவா. 2 -1- 4) என்றுதொடங்கி, * ‘சிந்தை கலங்கித் திருமால்‌ என்றழைப்பன்‌ (திருவா. 9 – 8 – 10) என்றும்‌, ”எங்கே காண்கேன்‌ ஈன் துழாயம்மான்‌ தனனை ” (திருவா, 8-5-11) என்றும்‌, “‘உன்னைக் காண்பான்‌ நானலைப்பாய்‌”” (திருவா, 5 – 8 – 4) என்றும்‌ சொல்லுகிறபடியே பகவத் விஸ்லேஷ வ்யஸநத்தாலே கண்ணும்‌ கண்ணீருமாய்‌ அபரிச்சேத்யமான கடலோடு, நிர்விவரமான மலையோடு, அச்சமான ஆகாஸத்தோடு வாசியற, எங்கும்‌ தேடி ‘ஸ்ரீயப் பதியே!’ என்று கூப்பிட்டுப் படுகிற இவருடைய அலமாப்பு – (அவர்களுக்கு புத்ர வியோகத்திலே) வஸிஷ்ட வ்யாஸாதிகளான அவர்களுக்கு ஸக்தி ஸூகாதிகளாகிற புத்ர வியோகத்திலே காணலாம் –

      62-பல ஸாதந தேவதாந்தரங்களில்‌ இவர்கள் நினைவு பேச்சிலே தோன்றும்‌.
      பல ஸாதந தேவதாந்தரங்களில்‌ இவர்களிருவர்க்கும்‌ நினைவு ஒக்குமோ என்னில்‌, அவற்றிலுண்டான வாசி பேச்சிலே தெரியுமென்கிறார்‌. எங்ஙனே என்னில்‌, ““பேஷஜம்‌ பகவத் ப்ராப்தி?”‘(வி. பு. 6 – 5 – 59) என்று பகவத் ப்ராப்தி பலமாகவும்‌, அதுக்கு ஸாதநம்‌ கர்ம ஜ்ஞாந பத்திகள்‌ என்றும்‌, இந்த்‌ராதி, தேவதாந்தர்யாமியாய்க் கொண்டு ஈஸ்வரன்‌ உபாஸ்யனா யிருக்கு மென்றுமிறே அவர்கள்‌ சொல்லுவது. இவரோ வென்றால்‌ ““தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே”’ (திருவா. 2- 9-4) என்றும்‌, *“வழு விலா வடிமை செய்ய வேண்டும் நாம்‌”’ (திருவா. 3 – 3- 1) என்கிற கைங்கர்யம்‌ புருஷார்த்தமாகவும்‌, அதுக்கு ஸாதநம்‌ ““நாகணை மிசை நம்பிரான்‌ சரணே சரண்‌ நமக்கு”’ (திருவா. 5 – 19 – 11) என்றும்‌, *’அடிக் கீழமர்ந்து புகுந்தேன்‌” (திரூவா. 6 – 10 – 10) என்றும்‌ சொல்லுகிற ப்ரபத்தி என்றும்‌, தேவதாந்தரங்களை ‘‘உன்னித்து மற்றொரு தெய்வம்‌ தொழாள்‌‘ (திருவா. 4 – 6 – 10) என்றுமிறே இவரருளிச் செய்வது –

      63-ராமாயணம்‌ நாராயண கதை என்று தொடங்கி கங்கா காங்கேய ஸம்பவாத்‌ய ஸத் கீர்த்தநம்‌ பண்ணின எச்சில் வாய்‌ ஸூத்‌தி பண்ணாமல்‌ ““திருமாலவன் கவி’” என்ற வாயோலைப் படியே மாற்றங்களாய்ந்து கொண்டு உரிய சொல்‌ வாய்த்தவிது – வேதாதிகளில்‌ பெளருஷ-மாநவ-கீ,தா- வைஷ்ணவங்கள்-போலே அருளிச் செயலில்‌ ஸாரம்‌.
      ஆக, இதுக்கு கீழ்‌ வக்த்ரு வைலக்ஷண்யம்‌ சொல்லிற்று – இனி மேல்‌ ப்ரபந்த,வைலக்ஷண்யம்‌ சொல்லுகிறது. அவர்கள் ப்ரபந்தங்களுக்கு கதாந்தர ப்ரஸ்தாவமுண்டு; இதுக்கில்லை என்னா நின்றுகொண்டு இதினுடைய ஸார தமத்வம்‌ சொல்லுகிறார்‌ (ராமாயணம்‌ நாராயண கதை என்று தொடங்கி). “காவ்யம்‌ ராமாயணம்‌ கருத்ஸ்நமீத்‌ருஸை கரவாண்யஹம்‌”‘ (ராபா. 2 – 42), “நமோ பகவதேதஸ்மை வயாஸாயாமித தேஜஸே | யஸ்ய ப்ரஸாதாத்‌,வஹ்யாமி நாராயண கத மிமாம்‌” (ப.ர.ஆதி;) என்றும்‌ சொல்லுகிறபடியே இதிஹாஸ ஸ்ரேஷ்டமான ஸ்ரீராமாயணம்‌ நாராயண கதை என்று தொடங்கி, கங்கையினுடைய வர்ணநமும்‌, ஸுப்‌ரஹ்மண்ய கதையும்‌, புஷ்பக வர்ணநமூமாய்‌, ஸ்ரீமஹாபாரதத்தில்‌ நாராயண கதை என்று தொடங்கி, கங்கையினுடையவும்‌ ஸ்ரீபீஷ்மருடையவும்‌ உத்பத்தி முதலான பூசல் பட்டோலையாய்‌, *அஸத் கீர்த்தந காந்தார பரிவர்த்தந பாம்ஸுலாம்‌” (ஹரிவம்பே) என்கிறபடியே அஸத் கீர்த்தநம் பண்ணின எச்சில் வாயானது “வாசம்‌ சவ்ரிகதா லாபகங்கயைவ புநீமஹே”’ என்று ஸூத்‌,தி, பண்ண வேண்டிற்றிறே அவர்களுக்கு. “ஸா ஜிஹ்வா யா ஹரிம்‌ ஸ்தெளதி”’ (வி.த,ர்மே 1) என்றும்‌, “வாயவனை யல்லது வாழ்த்தாது”” (மு.திரு11) என்றும்‌ சொல்லுகிற இவர் நாக்குக்கு பகவத்‌ வ்யதிரிக்தமான வர்ணநம்‌ உச்சிஷ்டமிறே.
      இவருடைய ப்ரபந்தத்தில்‌ அப்படி எச்சில் வாய்‌ ஸூத்‌தி பண்ண வேண்டாதே திருமாலவன் கவி யாது கற்றேன்‌’‘( திருவிரு. 48) என்று வாயோலை யிட்டாப் போலே மாற்றங்களாய்ந்து கொண்டு”’ (திருவா. 6 – 8- 11) என்கிறபடியே எல்லாச்‌ சொற்களும்‌ புறம்பு அந்ய பரங்களாயிராதே ஸர்வமும்‌ *“உரிய சொல்லாலிசை மாலைகளேத்தி’* (திருவா. 4 – 5 – 6) என்கிறபடியே அவனுக்கு ப்ராப்தமான சொல்லாய்‌ “*வாய்த்த வாயிரத்துள்‌”’ (திருவா. 2 – 2 – 11) என்கிறபடியே வாச்யனுக்கு வாய்த்த ப்ரபந்தம்‌; (வேதாதிகளில்‌) வேத ஸாஸ்த்ரேதிஹாஸ புராணங்களில் வைத்துக் கொண்டு “வேதேஷு பெளருஷம்‌ ஸூக்தம்‌ தர்மமமாஸ்த்ரேஷு மாநவம்‌ ! பாரதே பகவத்‌ கீதா புராணேஷு ச வைஷ்ணவம்‌”’ என்கிறபடியே வேதத்தில்‌ ஸாரமான ஸ்ரீபுருஷ ஸூக்தம் போலேயும்‌, தர்ம ஸாஸ்த்ரத்தில்‌ மநு ப்ரணீதமானது ஸாரமானாப் போலேயும்‌, ஸ்ரீமஹா பாரதத்தில்‌ கீதை ஸாரமானாப் போலவும்‌, புராணங்களில் வைத்துக் கொண்டு ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌ ஸாரமானாப் போலவும்‌, அருளிச்செயலில் வைத்துக் கொண்டு இத் திருவாய்மொழி ப்ரபந்தத்தினுடைய ஸார தமத்வம்‌ சொல்லிற்று –

      64-குரு சிஷ்ய க்‌ரந்த,விரோதங்களை பரமதாதிகளாலே பரிஹரியாமல்‌ செஞ் சொல்‌, செந்தமிழ்‌, இன் கவி, பரவி, அழைக்கும்‌ என்று அந்யோத்யம்‌ கொண்டாடிப் பேசிற்றே பேசும்‌ ஏக கண்டரில்‌ “என்னில்‌ மிகு” என்னுமிவருரை கொளின்மொழி கொண்டு ஸாஸ்த்ரார்த்தங்கள்‌ நிர்ணயிக்க வேண்டுகையாலே வலங் கொண்ட இதுக்குச்‌ சேராதவை மநு விபரீதங்கள் போலே.
      ஆனால்‌ இவ்வாழ்வார்களுடைய ப்ரபந்தங்களும்‌ பரஸ்பர விருத்‌தங்களாயிருக்குமோ என்ன, இவர்களெல்லாரும்‌ ஏக கண்டராகையாலே எல்லாம்‌ ஏகரர்த்த ப்ரதிபாதகங்களுமாய்‌, எல்லா ப்ரபந்தங்களும்‌ இவருடைய ப்ரபந்தத்தைப்‌ பின் செல்லும்படியான வைபவத்தை உடைத்தாய்‌, இத்தோடு சேராத ஸாஸ்த்ரங்களெல்லாம்‌ த்யாஜ்யங்களா யிருக்குமென்று இதினுடைய ப்ராமாண்யம்‌ சொல்லுகிறது ( குரு சிஷ்ய க்‌ரந்த விரோதம்‌ எனறு தொடங்கி). ருஷிகளில்‌ குரு ஸிஷ்யர்களான வ்யாஸ ஜைமிநிகளில்‌ குருவான வியாஸனுடைய க்ரந்தமான ப்‌ரஹ்ம ஸூத்ரத்துக்கு ஸிஷ்பனான ஜைமிநி க்‌ரந்தமான கர்ம ஸூத்ரத்தில்‌ நிரீஸ்வர வாதத்தால்‌ வந்த விரோத,த்தை வ்யாஸன் தானே “’ஜைமீிநி ராசார்யோ மந்யதே”’ என்று ஆப்தமாக எடுக்கையாலே இருவரும்‌ ஏக கண்டர்‌; இனி நிரீஸ்வர வாதம்‌ சொன்னது – வைதிக க்ரியைகளை நாஸ்திவாதம்‌ பண்ணுகிற பாஹ்யரை நிராகரிக்கைக்காக பர மதத்தை அதிஷ்டித்துச் சொன்னானென்று பரிஹரிக்க வேண்டிற்று அங்கு. இதுக்கு அப்படிப்‌ பரிஹரிக்க வேண்டாதபடி ”சென்சொற் கவிகாள்‌’” (திருவா. 10 – 7 – 1) என்றும்‌, ‘‘செந்தமிழ் பாடுவார்தாம்‌”” (திருமொழி 2 – 8 – 2) என்றும்‌, “இன்கவி பாடும்‌ பரம கவிகள்‌” (திருவா. 7 – 9 – 6] என்றும்‌, “பாலேய்‌ தமிழரிசைகாரர்‌ பத்தர்‌ பரவுமாயிரம்‌”’ (திருவா. 1 – 5- 11) என்றும்‌, ““பரவித்தொழும்‌ தொண்டர் தமக்குக்கதி?’ [திருமொழி 7 – 1 – 7) என்றும்‌, *’அழைப்பன்‌ திருமாலை ஆங்கவர்கள்‌ சொன்ன பிழைப்பில்‌ பெரும் பெயரே பேசி” (இ. திருவ. 50) என்றும்‌, * அரங்கவோ என்றழைக்‌கும்‌?” (பெரு. தி, 2 – 2) என்றும்‌ சொல்லுகிறபடியே அந்யோந்யம்‌ கொண்டாடி “பேசிற்றே பேசலல்லால்‌“‘ (திருமாலை 22) என்று ஏக கண்டராகையாலே ஏகார்த்த ப்ரதிபாதகரான இவர்களில் வைத்துக் கொண்டு, ‘ “என்னில்‌ மிகு புகழார்‌ யாவரே?” (பெ. திருவ. 4) என்கிறபடியே தாஸ்ய ஹ்ருஷ்டோக்தியை உடையரான இவருடைய “உரை கொளின்மொழி’” (திருவா. 6 – 5 – 9) என்கிறபடியே “அது அது’ என்று வாய்‌ புலற்றும் படியாகப்‌ பேச்சுக்கு அவிஷயமாய்‌-மாற்று முறையு மற்றிருப்பதாய்‌, ஸ்ரீராமாயணத்திலுங் காட்டில்‌ இனிமையை உடைத்தாயிருக்கிற இவருடைய உக்திகளைக் கொணடு தத்வ ஹித புருஷார்த்தங்களை ப்ரதிபாதி,க்கிற வேதாந்த ஸாஸ்தரங்களில்‌ ஸம்ஸயித்தவற்றை நிர்ணயிக்க வேண்டும்படி இருக்கையாலே “சொல்‌ வலங்கொண்ட” (திருவா. 53. 9. 11) என்கிறபடியே அர்த்த ப்ரதிபாதந ஸாமர்த்‌யத்தை உடைத்தான இப்‌ ப்ரபந்தத்தோடு சேராதவை யாவை சில ஸமாஸ்த்ரங்கள்‌, அவை, **மந்வர்த்த விபரீதா து யா ஸ்ம்ருதிஸ்ஸா ந ஸஸ்யதே” என்று மநு விபரீதமான ஸ்ம்ருதிகளைப் போலே கழிக்கப்படுகிறது-

      65- பாஷ்யகாரர்‌ இது கொண்டு ஸூத்ர வாக்யங்கள்‌ ஒருங்கவிடுவர்‌.-ஆகையாலே பாஷ்யகாரர்‌ இப் ப்ரபந்தங் கொண்டு ஸூத்ர வாக்யங்கள்‌ ஒருங்கவிடுவர்‌” என்கிறார்

      66-அதுக்கு மூலம்‌ ““விதயஸ்ச’” என்கிற பரமாசார்ய வசநம்‌.
      வேதாந்த ஸூத்ரங்களைக் கொண்டு இதிலர்த்தங்களைக் கடிப்பியாதே இப் ப்ரபந்தத்தைக்‌ கொண்டு வேதாந்த ஸூத்ரங்களை கடிப்பிப்பானென்‌ என்னில்‌, அதுக்கடி “விதயஸ்ச?” (ஸ்தோ. ர. 20) என்கிற பரமாசார்ய வசநமென்கிறார்‌. *“வைதிகா: வித யஸ்ச த்வதீய கம்பீர மநோநு ஸாரிண?”” என்று கொண்டு ‘இத,ம்‌ குர்யாத்‌ இதம்‌ ந குர்யாத்‌”, “விஜ்ஞாய ப்ரஜ்ஞாம்‌ குர்வீத”” (ப்‌,ரூ. 6 – 4 – 21), “த்‌யாயத,”‘ (மூ. 2- 2- 6), “‘உபாஸீத” (கா. 1 – 1 – 1) என்கிற வைதிக ஸாஸ்த்ரங்களானவை ஐஸ்வர்ய கைவல்யங்களால்‌ கடக்க ஓண்ணாதபடி கம்பீரமான த்வதீயருடைய மஸ்ஸைப் பின் செல்லுமென்று கொண்டு பரமாசார்யரான ஆளவந்தார்‌ அருளிச் செய்கையாலே –

      67-ஆப்திக்கு இவர்‌ “சுருதி, மார்க்கண்டேயன்‌, பார்த்தன்‌” என்கிற இவை வ்யாஸ மநு ப்‌,ரஹ்மவாதிகளை வேதம்‌ சொல்லுமாப் போலே.
      ஆனால்‌ பாஷ்யகாரருட்பட ப்‌ரஹ்ம ஸூத்ரங்களில்‌ ஸந்தேஹார்த்தங்களையும்‌ இது கொண்டு நிர்ணயிக்கும்படியான ஆப்தியை யுடைய இப் ப்ரபந்தத்துக்கு இவர்‌ வேறே சிலரை ஆப்தராக எடுப்பானென்‌ என்னில்‌; வேதந் தான்‌ ஆப்ததமமா யிருக்கச்‌ செய்தேயும்‌ ஆப்திக்கு ”ஸஹோவாச வ்யாஸ? பாராமர்ய?” (யஜு. அரு.), ‘“யத்‌ வை கிஞ்ச மநுரவதத்‌ தத்‌ பேஷஜம்‌”” (யஜு. 2 – 2 – 10) என்றும்‌, ““ப்‌ரஹ்மவாதி நோ வதந்தி!” (யஜு. 1 – 7 – 1) என்றுமெடுத்தாப் போலே இவரும்‌, “உளன்‌ சுடர் மிகு சுருதியுள்‌’* (திருவா. 1 – 1 – 7) என்றும்‌, ““மார்க்கண்டேயனும்‌ கரியே”’ (திருவா. 5 – 2 7) என்றும்‌, ““பார்த்தன்‌ தெளிந்தொழிந்த”’ (திருவா. 2 – 8 – 6) என்றும்‌ ஆப்த யதிஸயத்‌துக்காக எடுத்தார்‌ என்கிறார்-

      68-பாரத கீதைகளின்‌ வேதோபநிஷத்த்வம் போலே இதுவும்‌ வ்யாக்‌யை யானாலும்‌ வேத ரஹஸ்யமாம்‌.
      கீழே இதுக்கு வேத ரஹஸ்யத்வம்‌ சொல்லிற்று; இப்படி யிருக்க இத்தை கரந்தஸ்தமாக்கி வ்யாக்‌யாநம்‌ பண்ணப்படா நின்றது (இது உப ப்ரும்ஹண ஸமமானால்‌ வேத வ்யாக்‌யாநமாம்‌ – பா] அப்போது வேதத்வத்துக்கும்‌ ரஹஸ்யத்வத்துக்கும்‌ கொத்தை வாராதோ என்னில்‌, ப்ரஸித்‌த,-லிகித-படித- பாடங்களான மஹா பாரதத்துக்கும்‌ ஸ்ரீகீதைக்கும்‌ ‘“வேதாநத்‌யாபயாமாஸ மஹாபாரத பஞ்சமாந்‌”’ (வி.பு) என்றும்‌, “பகவத்‌ கீதாஸு உபநிஷத்ஸு’”'(கீ. 1) என்றும்‌ சொல்லுகிறபடியே இவை யிரண்‌டுக்கும்‌ வேதத்வ-உபநிஷத்த்வங்கள்‌ உண்டானாப் போலே இதுவும்‌ விகித-படிதங்‌களாய்ப்‌ போந்ததே யாகிலும்‌ வேத,த்வமும்‌ ரஹஸ்யத்வமும்‌ உண்டாம் -என்கிறார் –

      69-உதாத்தாதி -பத-க்ரம-ஜடா-வாக்ய-பஞ்சாதி-பாத-வ்ருத்த ப்ரஸ்ந -காண்ட,-அஷ்டக-அத்‌யாய- அம்ஸ -பர்வாத்‌ யலங்காரங்கள்‌ போலே, எழுத்து, அசை, சீர்‌, பந்தம்‌, அடி, தொடை, நிரைநிரை, ஒசை, தளை, இனம்‌, யாப்பு, பா, துறை, பண்‌, இசை, தாளம்‌, பத்து, நூறு, ஆயிரம்‌ முதலான செய் கோலம்‌ இதுக்குமுண்டு.
      ஆக, இப்ப்ரபந்த,ம்‌ வேதத்தோடும்‌, உப ப்‌ரும்ஹணத்தோடும்‌ துல்யமென்றீர்‌, அவை யிரண்டுக்குமுன்ள உதாத்தாதிகளான வேத லக்ஷணங்களும்‌, அத்யாய அம்ச பர்வாதிகளான உப ப்‌ரும்ஹண லக்ஷணங்களும்‌ இதுக்குமுண்டோ என்னில்‌, த்‌ரமிடோபநிஷத்‌ விஹிதங்களாய்‌, “’செய்கோலத் தாயிரம்‌” (திருவா. 4 – 1 – 11) என்கிறபடியே ‘எழுத்து, அசை, சீர்‌’ என்று இத்யாதிகளான அலங்காரங்கள்‌ இதுக்குமுண்டென்கிறார்‌ (உதாத்தாதி, என்று தொடங்கி] பாஷாநுகுணமாயும்‌, வேதா அநு குணமாயுமிறே லக்ஷணங்களிருப்பது, ஆகையாலே அந்த பாஷாநுகுணமான லஷணங்களை அருளிச் செய்தது.

      70-அதவா வேத வேத்‌ய ந்யாயத்தாலே பரத்வபரமுது வேதம்‌ வ்யூஹ வ்யாப்த் யவதரணங்களில்‌ ஓதின நீதி கேட்ட மநு படுகதைகளாய்‌ ஆக மூர்த்தியில்‌ பண்ணிய தமிழானவாறே வேதத்தை த்‌ராவிடமாகச்‌ செய்தாரென்னும்‌.
      ஆக இதுக்குக் கீழ்‌ வேதத்தினுடையவும்‌, தது,பப்‌ரும்ஹணத்தினுடையவும் ஸ்தாநத்திலே யாக்கி அவற்றினுடைய ஸப்‌த லக்ஷணங்களும்‌ அர்த்த லக்ஷணங்களும்‌ அருளிச் செய்தார்‌. இனி மேல்‌ ப்ரமேய பூதனான ஸர்வ ஸ்மாத் பரனுடைய அவதார டரம்‌பரையில்‌ எல்லையான அர்ச்சாவதாரம் போலே ப்ரமாண வேதாவதாரத்தினுடைய எல்லை இத் திருவாய்மொழி என்கிறார்‌ (அதவா வேத வேத்‌ய ந்யாயத்தாலே என்று தொடங்கி). (அதவா) என்றது – கீழ்ச் சொன்ன யோஜனை யொழிய யோஜநாந்தர மென்கை. “வேத வேத்‌யே பரே பும்ஸி ஜாதே தஸரதாத்மஜே ! வேதா ப்ராசேத ஸாதாஸீத்‌ ஸாக்ஷாத்‌ ராமாயணாத்மநா”” (ரா. பா.) என்கிறபடியே வேத வேத்‌யனான பரம புருஷன்‌ தஸரத புத்ரனாய்‌ வந்தவதரித்த விடத்தில்‌ அபெள்ருஷேயமான வேதமும்‌ ஸ்ரீவால்மீகி பகவான் பக்கலிலே ஸ்ரீராமாயணமாய்‌ வந்தவதரித்த தென்கிற ந்யாயத்தாலே. (பரத்வபரமுதுவேதம்‌) “’முதுவேத முதல்வனுக்கு?” (திருவா. 1 – 6 – 2) என்கிற ப்ரத்வ ப்ரதிபாதகமான பழைய வேதம்‌. இத்தால்‌ நித்ய நிர்தோஷமாய்‌, அபெளருஷேயமாய்‌ ப்‌ரம விப்ரலம்பாதி, தோஷ ரஹிதமான வேதம்‌ என்றபடி.

      அந்த பரத்வம் தானே வ்யூஹீபவித்த அவஸ்தையில்‌ அந்த வேதந்தானே “பஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயணஸ் ஸ்வயம்‌”” (பர. மோ.) என்றும்‌, ““ஓதினாய்‌ நீதி”‘ (இ, திருவ.48) என்றும்‌ சொல்லுகிறபடியே அவனருளிச் செய்த ஸ்ரீபாஞ்சராத்ர ஸாஸ்த்ரமாய்‌ வந்தவதரித்தும்‌,
      அந்தர்யாமியான அவஸ்தையில்‌ “கேட்ட மனுவும்‌” (நா.திருவ. 76) என்கிறபடியே ஆசார வ்யவஹார ப்ராயஸ் சித்தங்களுக்கு ப்ரகாஸ கமான மந்வாதி ஸ்ம்ருதிகளாயும்‌,
      ராம க்ருஷ்ணாத்‌ யவதாரங்களில்‌ வந்தவாறே ”பாட்டும்‌ முறையும்‌ படு கதையும்‌‘” (நா. திருவ. 76) என்கிறபடியே வேதங்கள் தான்‌ இதிஹாஸாதிகளானாப்‌ போலேயும்‌,
      ”ஆகமூர்த்தியாய வண்ணம்‌”” (திருச்ச, 17) என்கிறபடியே ஸர்வேஸ்வரன்‌ ஆஸ்ரித ஹ்ருதயாநுகுணமாக “’தமருகந்ததெவ்வுருவம்‌”'(மூ.திரூவ. 45) என்கிறபடியே த்ரவ்ய-நாம-ரூப-ஆஸந-ஸயந-தேஸ – கால-அதிகாயு-போஜநாதீ ஸகல வ்யாபாரங்‌களையும்‌ ஆஸ்ரித ஹ்ருதயாநுகுணமாக்கிக் கொண்டு ஸர்வ ஸுலபமான அர்ச்சாவதாரமான விடத்தில்‌ ப்ரமாணமும்‌ அப்படியே ப்ரமேயம் போலே ஸர்வ ஸுலபமாய்‌ ஸர்வாகதிகாரமாம்படி த்‌ரவிட ஸம்ஹிதையாக ப்ராப்த மாகையாலே **பண்ணிய தமிழ் மாலை”” (திருவா. 2 – 7 – 13) என்கிறபடியே வேதத்தைத்‌ திருவாய்மொழியாகச்‌ செய்தருளினார்‌ என்னவுமாம்‌ என்கிறார்‌. அந்த வேதம்‌ முதலானவை எல்லாத்திலும்‌ எல்லாம்‌ சொல்லிற்றே யாகிலும்‌ ஒன்றுக் கொன்றிலே நோக்காகக் கடவது –

      71-மண்ணாடின ஸஹ்ய ஜலம்‌ தோதவத்திச் சங்கணித் துறையிலே துகில் வண்ணத் தெண்ணீராய்‌ அந்தஸ்தத்தைக் காட்டுமாப் போலே அல்ப ஸ்ருதர்‌ கலக்கின ஸ்ருதி நன்ஞானத்துறை சேர்ந்து தெளிவுற்று ஆழ் பொருளை அறிவித்தது.

      ஆனால்‌ இப்படி பரத்வ ப்ரதிபாதகமான வேதம்‌ அவஸ்தாந்தர பாக்காயுள்ள வளவில்‌ ப்ரமேய ப்ரகாஸகமாக வற்றோ என்ன, இவ் வவஸ்தையிலே யதாவாக ப்ரகஸிக்கும்‌ என்னுமிடத்தை த்ருஷ்டாந்த முகத்தாலே பேசுகிறார்‌ (மண்ணாடின ஸஹ்ய ஜலம்‌ என்று தொடங்கி), மண்ணாடின ஸஹ்ய ஜலமாவது – ‘*தோதவத்தித் தூய் மறையோர்‌ துறை படிய”’ (பெரியா. 4 – 8 – 1) என்றும்‌, “பொருநல்‌ சங்கணி துறை ”” (திருவா. 10 – 3 – 11) என்றும்‌ சொல்லுகிற துறைகளிலே ‘ ‘துகில் வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன்‌’‘ (திருவா. 7 – 211) என்றும்‌, “தெண்ணீர்ப் பொன்னி” (பெருமா. தி. 1 – 1 ) என்றும்‌ சொல்லுகிறபடியே தெளிந்த நீராய்த்‌ தனக்குள்ளே கிடக்கிற பதார்த்தங்களை ப்ரகாஸிப்பிக்குமாப்‌ போலே, அல்ப ஸ்ருதர்‌ கலக்கின ஸ்ருதி – ”இதிஹாஸ புராணாப்‌யாம்‌ வேதம்‌ ஸமுபப்‌ரும்ஹயேத்‌ பிபேத் யல்ப ஸ்ருதாத்‌ வேத-மாமயம்‌ ப்ரதரிஷ்யதி” (பர. ஆதி.) என்கிறபடியே அல்ப ஸ்ருதராயிருக்கு மவர்கள்‌ ஒரு ஸ்ருதி வாக்யத்தைப் பிடித்து இதுக்குப் பொருள்‌ த்வைதமென்றும்‌, அத்‌வைதமென்றும்‌, த்‌வைதாத்‌வைதமென்றும்‌ இப்படி பஹு ப்ரகாரமாகக் கலக்க, கலங்கின ஸ்ருதியானது – (நன் ஞானத்துறை சேர்ந்து) ‘“ரமணீயம்‌ ப்ரஸந் நாம்பு, ஸந் மநுஷ்யமதோ யத (ரா. பரா. 2 – 5) என்றும்‌, ““காலை நன்‌ ஞானத்‌துறை”: (திருவிரு. 93) என்றும்‌ சொல்லுகிறபடியே ஞானத் துறையான இவ்வாழ்வார்‌ பக்கலிலே சேர்ந்து, (தெளிவுற்று ஆழ் பொருளை அறிவித்தது) *’தெளிவுற்ற வரயிரம்‌ ” (திருவா, 7 – 5 – 11) என்கிறபடியே ப்ரஸந்ந கம்பீரமான ஆயிரம் பாட்டாய்‌, ““அறிவித்தேன் ஆழ்பொருளை ” (நா. திருவ. 1) என்கிறபடியே அகதமாய்‌ பரம ரஹஸ்யமான அர்த்த விஸேஷங்களை யெல்லாம்‌ யதா தர்ஸநம்‌ பண்ணுவிக்கும் என்கிறார் –

      72-மேகம்‌ பருகின ஸமுத்‌ராம்பு போலே நூற் கடல் சொல்‌ இவர்‌ வாயனவாய்த் திருந்தினவாறே ஸர்வதா ஸர்வோபஜீவ்யமாமே.
      இனிமேல்‌ அந்த ப்ரதாநமான வேதத்திற் காட்டிலும்‌ இதினுடைய அவதார ரூபமான திருவாய்மொழிக்கு இவருடைய ஸ்பர்ஸத்தாலே வந்த ஏற்றம்‌ சொல்லுகிறது (மேகம்‌ பருகின என்று தொடங்கி) ஸமுத்‌ர ஜலம்‌ விரஸதையை யுடைத்தாய்‌ ததந்தர்கதமான பதார்த்தங்களுக்கே உபஜீவ்யமாய்‌, புறம்புள்ளார்க்கு உப ஜீவ்யமன்றியிலே இருப்பதாய்‌, அபர்வணி ஸ்பர்ஸிக்கைக்குக்‌ கால நியதியையு முடைத்தாயிருக்கும்‌. அந்த ஸமுத்‌ர ஜலத்தை மேகமானது பாநம்‌ பண்ணி ஐகத்திலே வர்ஷிக்க அந்த மேக, ஸ்பர்ஸத்‌தாலே அதினுடைய விரஸ்தையும்‌, ஸ்பர்ஸ கால நியதமும்‌ போய்‌, ஸர்வ ஜந போக்‌யமுமாமாப் போலே, பகவத் ஸ்வரூபாநுரூப குண விபூ,திகளை ப்ரதிபாதிக்கிற வேதம்‌ பகவத்‌ விபூதி பூ.தரான தேவதாந்தரங்களை ப்ரதிபாதிக்கை யாகிற விரஸதையை உடைத்தாய்‌, வேதாதிகாரிகளான த்ரை வர்ணிகர்க்கே அத்‌யேதவ்யமாகையாலே அதி க்ருதாதி காரமுமாய்‌ அத்‌யயந-அநத்‌யயந-கால நியதியையு முடைத்தா யிருக்கும்‌. ‘“நூற் கடல்‌’” (மூ. திருவ, 92) என்கிறபடியே அபரிச்சேத்யமான அந்த வேதமாகிற ஸாஸ்த்ரத்திலுண்டான அர்த்த விஸேஷங்கள்‌ ‘‘இவள் வாயனகள்‌ திருந்தவே” (திருவா. 6 – 5- 7) என்கிறபடியே இவருடைய வாக் கதமாய்க் கொண்டு கட்டளைப் பட்டவாறே பகவத்‌ வ்யதிரிக்த ப்ரஸம்ஸா பரதையாகிற விரஸதையும் போய்‌ “அத்‌யேதவ்யம்‌ த்‌விஜ ஸ்ரேஷ்டைர் வேத ரூபமிதம்‌ க்ருதம்‌ । ஸ்த்ரீபிஸ் ஸூத்‌ராதி பிஸ்சைவ தேஷாம்‌ முக்தி: கரே ஸ்திதா” (பாஞ்ச.) என்கிறபடியே ஸர்வாதி காரமுமாய்‌ ஸர்வ காலாத்‌ யேதவ்யமுமா யிருக்கும்‌-

      73-ம்ருத்‌ கடம்‌ போலன்றே பொற்குடம்‌.
      ஸமுத்‌ர ஜலத்தையும் தத்கார்யமான மேகம்‌ பருகின ஜலத்தையும்‌ அதி க்ருதாதிகாரமான வேதத்துக்கும்‌ தத் கார்யமான திருவாய்மொழிக்கும்‌ த்‌ருஷ்டாத்தமாக்கினால்‌ காரணம்‌ போலே கார்யமும்‌ அதிக்ருதாதிகாரமா யிருக்குமோ என்னில்‌, அப்படியிராது–ஸர்வாதிகாரமாய்‌, ஸ்லாக்‌யமாய்‌,ஸ்ப்ருஹணீயமா யிருக்குமென்கிறார்‌ (ம்ருத்‌ கடம்‌ போலன்றே பொற்குடம்‌ என்று). ம்ருத்‌ கடமானது தொடுமவர்களே தொடுமித்தனை போக்கி எல்லார்க்கும்‌ தொட வொண்ணாதிறே. அங்ஙனன்றிக்கே பொற் குடம்‌ பார்த்திவமா யிருக்கச் செய்தேயும்‌ எல்லார்க்கும்‌ ஸ்பர்ஸிக்கவுமாய, ஸ்லாக்‌யமுமாய்‌, ஸ்ப்ருஹணீய முமாயிருக்கும்‌. ஆகையாலே அதி க்ருதாதிகாரமான வேதந் தான்‌ திருவாய்மொழியான அவஸ்தையை பஜித்தாலும்‌ ஸர்வாதிகாரமுமாய்‌, ஸ்ப்ருஹணீயமுமா யிருக்குமென்கிறார்‌-

      74-பெரும் புறக் கடலும்‌, ஸ்ருதி ஸாக,ரமும்‌ அலைத்தாழ்ந்து ஓடுமிடங்களில்‌ அயோக்‌யர்க்குச்‌ சமைத்த மடுவும்‌, சாய் கரகமும்‌ மாந மேய சரமம்‌.
      ஸர்வ ஸுலபமாய்‌ ஸர்வாதிகாரமான அர்ச்சாவதாரத்தையும்‌ திருவாய் மொழியையும்‌ கீழ்‌ ‘“பரத்வபரமுது வேதம்‌” என்று ப்ரஸ்துதமான ப்ரமாண ப்ரமேயங்களை “‘பெரும்புறக்‌ கடலும்‌” ““ஸ்ருதி ஸாகரமும்‌ என்று பராமர்ஸித்து, அவற்றினுடைய எல்லையான அர்ச்சாவதாரமும்‌ திருவாய்மொழியும்‌ கீழ்ச் சொன்ன பரத்வாதிகளுக்கும்‌ வேதம்‌ முதலான ஸாஸ்த்ரங்களுக்கும்‌ அயோக்‌யரானார்க்கும்‌ அநுபாவ்யமாம்படி சரமமாயிருக்கும்‌ என்கிறார்‌.
      ( பெரும் புறக்கடலும்‌ ஸ்ருதி ஸாகரமும்‌) அபரிச்சேத்‌யமான ப்ரமாண ப்ரமேயங்கள்‌; அவை யாவன – பரத்வமும்‌ பரத்வ ப்ரதி பாதகமான வேதமும்‌-அவற்றுக்குடலானால்‌ அலையக் கடவதிறே -அலைகையாவது – பர வாஸுதேவர் பக்கல் நின்றும்‌ பிறந்த ஸங்கர்ஷண ப்ரத்யும்நாதிகளான வ்யூஹமூம்‌ தத் ப்ரதிபாதகமான ஸ்ரீபாஞ்சராத்ர ஸாஸ்த்ரமும்‌-(ஆழ்ந்து) “யமாத்மா ந வேத,” (ப்‌,௬. 5 – 7 – 22) என்று சொல்லுகிற அந்தர்யாமித்வமும்‌, தத் பரமான மந்வாதி ஸ்ம்ருதிகளும்‌. (ஓடுமிடம்‌) ராம க்ருஷ்ணாத்‌ யவதாரங்களும்‌ தத் ப்ரகாஸகங்களான இதிஹாஸங்களும்‌;-இவை தேஸ -கால -இந்திரிய -விப்ரக்ருஷ்டங்களாகையாலே பரத்வாதிகளை அநுபவிக்க யோக்‌யரல்லாதவர்களுக்கு அப்படி தேஸ கால விப்ரகர்ஷமு மின்றிக்கே பெருகின ஆற்றில்‌ மடுப் போலே ஸர்வ ஸுலப,முமாய்‌, ருசி ஜநகமூமாய்‌, ஸ்ரமஹரமுமாய்‌, ஸர்வ ஜந போக்‌யமுமாய்‌, ஸர்வாபாஸ்ரயமுமான அர்ச்சாவதாரமும்‌, வேதாதி களுக்கு யோக்‌யரா யிருக்கிறவர்களுக்கு சாய் கரகம் போலே ஸுகரமுமாய்‌, ஸர்வாதிகாரமுமான திருவாய் மொழியும்‌ ப்ரமாண ப்ரமேயங்களினுடைய சரம மென்கிறார்‌. ஆக, இத்தால்‌ **பரத்வபரமுதுவேதம்‌’” என்று தொடங்கின அர்த்தங்களை உபபாதி,த்து அவ் வர்த்தத்துக்கெல்லை அர்ச்சாவதாரமும்‌ திருவாய்மொழியுமென்று நிகமித்தாராய் ஆய்த்து –

      75-வீட்டின்ப-இன்பப் பாக்களில்‌ த்‌ரவ்ய பாஷா நிரூுபண ஸமம்‌ இன்பமாரி யிலாராய்ச்சி,
      ஆக, ப்ரமாண ப்ரமேயங்களை ஸஹ படித்து இந்த ப்ரஸங்கத்திலே இவற்றோடே சேர்த்து ப்ரமாத்ரு வைபவத்தை அருளிச் செய்கிறார்‌ (வீட்டின்பமென்று தொடங்கி). மேலெல்லாம்‌ இதில்‌ ப்ரமாண ப்ரமேயங்களினுடைய எல்லையான அர்ச்சாவதாரத்தினுடையவும்‌, திருவாய்மொழியினுடையவும்‌ த்‌ரவ்ய பாஷா நிரூபணத்தோடொக்கு மென்று இவற்றை ஸித்‌தவத் கரித்து இவற்றோடொக்கும்‌ ப்ரமாதாக்களின்‌ ஜந்ம நிரூபணம்‌ என்கிறார்‌ (வீட்டின்பமித்யாதி,). ““கனிவார்‌ வீட்டின்பமே”’ (திருவா. 2 – 3 – 5) என்கிறபடியே அவன்‌ என்றால்‌ உள் கனிந்திருக்கிற வர்களுடைய க்‌ருஹங்களிலே வந்து இன்பத்தை அளிக்கும்‌ அர்ச்சாவதாரத்தினுடையவும்‌, ““அந்தமிழினின்பப் பாவினை”” (பெருமா.திரு, 1 – 4) என்றும்‌ சொல்லுகிற ரஸாவஹமான திருவாய்மொழியினுடையவும்‌ த்‌ரவ்ய நிருபணத்தோடும்‌ பாஷா நிரூபணத்தோடும்‌ ஓக்கும்‌ என்றும்‌, ““அடியார்க்கின்பமாரி?? (திருவா. 4 – 5 – 10) என்கிறபடியே ஸ்ரீவைஷ்ணவர்களுக்குத்‌ திருவாய்மொழி முகத்தாலே ஆநந்தாவஹமான பகவத்‌ குணங்களை வர்ஷிக்கும்‌ மேகமான ஆழ்வாருடைய திருவவதாரத்தில்‌ ஆராய்ச்சியு மென்கிறார்‌. அர்ச்சாவதாரத்தில்‌ த்‌ரவ்ய நிரூபண நிஷேதம்‌ பஹு ப்ரமாண ஸித்‌தம்‌. அத்தோடே சேர்த்துச் சொல்லுகையாலே திருவாய் மொழியினுடைய பாஷா நிரூபணம்‌ பண்ணலாகாதென்னுமிடம்‌ ஸித்‌தமாய்த்து. ““ஹரிகீர்த்திம்‌ விநைவாந் யத்‌ ப்‌ராஹ்மணேந நரோத்தம । பாஷா காநம்‌ ந காதவ்யம்‌ தஸ்மாத்‌ பாபம்‌ த்வயா க்ருதம்‌” (லைங்கே, ௨, 3 – 44) என்றிறே மநுவும்‌ சொன்னது. அப்படியாகிறது – அர்ச்சாவதாரத்தில்‌ த்‌ரவ்ய நிரூபண நிஷேதத்துக்கு ப்ரமாணமென்‌ என்னில்‌; ““அர்ச்சாவதாரோபாதாநம்‌ வைஷ்ணவே ஜாதி சிந்ததம்‌ | மாத்ரு யோநி பரீக்ஷா யாஸ் துல்ய மாஹுர் மநீஷிண?” (பாஞ்ச.) என்றும்‌, “யோ விஷ்ணோ? ப்ரதிமாகாரே லோஹ பாவம்‌ கரோதி வை । யோ குரெள மாநுஷம்‌ பாவம்‌ உபவ் நரக பாதிநெள”” (பகவச் சாஸ்த்ரே) என்றும்‌ சொல்லக் கடவதிறே–

      76-பேச்சுப் பார்க்கில்‌ கள்ளப் பொய்ந் தூல்களும்‌ க்‌ராஹ்யங்கள்‌; பிறவி பார்க்கில்‌ அஞ்சாமோத்தும்‌ அறு மூன்றும்‌ கழிப்பனாம்‌.
      ஆகிலும்‌ திராவிட பாஷையாயிரா றின்றதே, அது க்ராஹ்யமாம்படி எங்ஙனே என்னில்‌; (பேச்சுப் பார்க்கில்‌) பாஷா மாத்ரமே அங்கீகார-அநங்கீகார ஹேதுவாகில்‌, (கள்ளப்‌ பொய்ந் நூல்களும்‌ க்ராஹ்யங்கள்‌) ‘*வெள்ளியார் பிண்டியார்‌ போதியாரென்றிவர்‌ ஓதுகின்ற கள்ளநூல் தன்னையும்‌’” (திருமொழி 9 – 7- 9) என்றும்‌, “’பொய்ந்‌நூலை மெய்ந் நூல்‌’ (திருமொழி 3 – 5 – 2) என்றும்‌ சொல்லுகிற பாஹ்ய ஸாஸ்த்ரங்களும்‌ குத்‌ருஷ்டி ஸாஸ்த்ரங்களும்‌ அங்கீ கரிக்கப்படும்‌. அவற்றுக்கு அப்படி ஸிஷ்டாசார மில்லாமையாலும்‌, இத்தை ஸிஷ்டரானவர்கள்‌ பரிக்‌ரஹிக்கையாலும்‌ பாஷாவதி மாத்ரமே பரிக்‌,ராஹ்ய-அபரிக்‌ராஹ் யதா ஹேதுவாக ஒண்ணாது –
      ஆனாலும்‌ ப்ரபந்த கர்த்தா சதுர்த்த வர்ணாதிகாரி யாயிரா நின்றாரே? ப்ரபந்தமும்‌ ப்ரதிபாத்‌ய வஸ்துவும்‌ விலஷணமே யாகிலும்‌ கர்த்ரு மாந்த்‌யத்தாலே ப்ரபந்த மாந்த்யமும் பிறக்குமே என்ன (பிறவி பார்க்கில்‌ அஞ்சாமோத்தும்‌ அறு மூன்றும்‌ கழிப்பனாம்‌) என்கிறார்‌. (பிறவி பார்க்கில்‌) இதுக்கு வக்தாவான ஆழ்வாருடைய ஜந்மத்தை யிட்டுக்‌ கழிக்கப் பார்க்கில்‌, வலைச்சி வயிற்றிலே பிறந்த வ்யாஸன்‌ சொன்ன பஞ்சம வேதமான மஹா பாரதமும்‌, இடைச்சேரியிலே பிறந்த கருஷ்ணனருளிச் செய்த ஷ்ட்க த்ரயாத்மகமான ஸ்ரீகீதையும்‌ கழியுண்ணும் –

      77–கிருஷ்ண க்ருஷ்ண த்வைபாய நோத்பத்திகள்‌ போலன்றே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்த்வ ஜந்மம்‌.
      ஆக, இதுக்குக்‌ கீழ்‌ கருஷ்ண த்‌வைபாயநனான வ்யாஸனோடும்‌, க்ருஷ்ணனேடும்‌ உண்டான ஜந்ம ஸாதர்ம்யம்‌ சொல்லி, “‘க்ருஷ்ண க்ருஷ்ண த்‌வைபாய நோத்பத்திகள்‌ போலன்றே’‘ என்று – இனி மேல்‌ வைதர்ம்யம்‌ சொல்லுகிறது, எங்ஙனே என்னில்‌; இடைச்சி வயிற்றிலே பிறந்த க்ருஷ்ணனுடையவும்‌ வலைச்சி வயிற்றில்‌ பிறந்த கருஷ்ணாத்‌வைபாயநனுடையவும்‌ (உத்பத்தி போலன்றே, இவர்‌ திருவவதாரம்‌ இவ்வளவேயோ, இவ்வாழ்வாருடைய திருவவதாரத்தையும்‌ அவர்களுடைய ஜந்மத்தையும்‌ நிருபித்தால்‌ இத்தோடு அவை நேர் நில்லாது. ஆகையால்‌ இவர்க்கு அவர்கள்‌ ஸத்‌ருஸரல்லர்‌-

      78-பெற்றும்‌ பேறிழந்தும்‌ கன்னிகை யானவளும்‌ எல்லாம்‌ பெற்றாளாயும்‌, தத்துக் கொண்டாள்‌ என்பர் நின்றார்‌ என்னுமளவும்‌ நெடுங்‌ காலமும்‌ நங்கைமீர்‌ என்னுமிவர்க்கு நேரன்றே.
      இவர்களுடைய உத்பத்தி ப்ரகாரங்களையும்‌ ஸ்தலங்களையும்‌ விசாரித்தால்‌ அவையும்‌ வாசா மகோசரம்‌ என்கிறார்‌ மேல்‌ (பெற்றும்‌ பேறிழந்தும்‌ என்று தொடங்கி), “தேவகி பெற்ற” (பெரியா. 1 – 8 – 17) என்கிறபடியே ஸ்ரீதேவகிப் பிராட்டி க்ருஷ்ணனைப்‌ பெற்று வைத்து, ”திருவிலேனொன்றும்‌ பெற்றிலேன்‌”’ (பெருமா.தி.7 – 5) என்கிறபடியே அவனுடைய பால்ய ரஸம்‌ அநுபவிக்கப்‌ பெற்றிலளிறே. வ்யாஸனைப் பெற்ற அநந்தரம்‌ “புந கந்யா பவிஷ்யதி?” (பார ) என்று ஸ்ரீபராஸர பகவான்‌ சொல்ல மீண்டும்‌ கந்யகையான மத்ஸ்யகந்தியும்‌ அவனுடைய பால்ய ரஸம்‌ அநுபவிக்கப்‌ பெற்றிலள்‌. (எல்லாம்‌ பெற்றாளாயும்‌) “எல்லாம்‌ தெய்வ நங்கை யசோதை பெற்றாளே’‘ (பெருமா.தி. 7 – 5) என்கிற யசோதையும்‌ க்ருஷ்ணனுடைய பால்ய சேஷ்டிதங்களெல்லாம்‌ அநுபவிக்கப்‌ பெற்றாளே யாகிலும்‌, “’தத்துக் கொண்டாள் கொலோ”’ (பெரியா.2 – 1 7) என்றும்‌, “உன்னை என் மகனே என்பர்‌ நின்றார்‌” (பெரியா. 3 – 1 – 3) என்றும்‌ – தானும்‌ பிறரும்‌ ஸங்கிக்கும் படியாயிருக்கும்‌. இவருடைய உத்பத்தி – அங்ஙனன்றிக்கே “நெடுங் காலம்‌ கண்ணன்‌ நீண் மலர்ப் பாதம்‌ பரவிப் பெற்ற”’ (திருவிரு. 37) என்றும்‌, “நங்கைமீர்‌ நீருமோர்‌ பெண் பெற்று நல்கினீர்‌” (திருவா. 4 – 2 – 9) என்றும்‌ சொல்லுகிற படியே பரிபூர்ணைகளான நீங்களும்‌ சில பெண்களைப் பெற்று வளர்த்தி கோளல்லிகோளோ, பகவல் லாஞ்சநாதிகளை திவா ராத்ர விபாகமற வாய் புலற்றும்படியான என்‌ பெண் பிள்ளைக்கு ஸத்‌ருஸமுண்டோ என்கையாலே இவர்க்கும்‌ அவர்களுக்கும்‌ அத்யந்த வைஷம்யம்‌ சொல்லிற்று –

      79-மீந நவநீதங்கள்‌ கந்திக்குமிடமும்‌ வெறி கொள் துழாய்‌ கமழுமிடமூம்‌ தன்னிலொக்குமோ. *
      மத்ஸ்ய கந்தத்தையுடைய வ்யாஸன்‌ பிறந்த விடமும்‌ நவநீத கந்தியான க்ருஷ்ணன்‌ பிறந்தவிடமும்‌ – ‘“வெறி கொள் துழாய்‌ மலர் நாறும்‌ வினையுடை யாட்டியேன்‌ பெற்ற”’ (திருவா. 4 – 4 – 9) என்கிற பகவத் ஸம்பந்த கந்தியான் ஆழ்வார்‌ திருவவதரித்த இடத்துக்கு ஸத்‌ஸருமன்றே-

      80-ஆற்றில்‌ துறையில்‌ ஊரிலுள்ள வைஷம்யம்‌ வாசா மகேசரம்‌.
      வ்யாஸனுக்கு உத்பத்தி ஸ்தலமான அஸிஷ்ட பரிக்‌ரஹமுடைய கங்கா நதிக்கும்‌, அதில்‌ ஓடத் துறைக்கும்‌, அவ் விடத்தில்‌ வலைச் சேரிக்கும்‌, க்ருஷ்ணோத்பத்தி ஸ்தலமான க்ருஷ்ண ஜல ப்ரவாஹமான யமுநா நதிக்கும்‌, காளிய விஷ தூஷிதமான அதில்‌ துறைக்கும்‌, “கறவைகள்‌ பின் சென்று ” என்கிறபடியே ‘பசுக்கள் தான்‌ ஸர்வஜ்ஞம்‌’ என்னும்படி அறிவு கேடரான இடையர்‌ வர்த்திக்கிற இடைச் சேரிக்கும்‌ ஆகிய இவற்றுக்கும்‌, முக்தா பல ப்ரஸவோந்முக ஸங்க ஸமூஹங்களுக்கு வாஸஸ்தாநமான தாம்ரபர்ணி நதிக்கும்‌ ஸூத்‌த ஸ்வபாவமாயிருக்கிற அந்த ஸங்கங்கள் சேருகிற திருச் சங்கணித்‌ துறைக்கும்‌, “நல்லார்‌ நவில்‌ குருகூர்‌” (திருவிரு, 100) என்கிறபடியே ஸத்துக்களாலே கொண்டாடப்‌ படுமதாய்‌ ““சயப் புகழார்‌ பலர்‌ வாழும்‌ தடங் குருகூர்‌” (திருவா, 3 – 1 11) என்கிறபடியே ஸம்ஸாரத்தை ஜயித்த புகழை உடையராய்‌, பகவதநுப,வம்‌ பண்ணி வாழ்கிற ஜ்ஞாநாதிகர்‌ பலரும்‌ வர்த்திக்கிற திருக்குருகூர்க்கு முண்டான வைஷம்யம்‌ பேச்சுக்கு அவிஷயமா யிருக்கும்‌. ஆக, க்ருஷ்ணக்ருஷ்ணத்‌வைபாயநோத்பத்தி என்று தொடங்கி, இவ்வளவாக, அவர்களவதாரத்தோடு இவருடைய அவதாரத்துக் குண்டான ஸாதர்ம்ய வைதர்ம்ய, தர்ம்யங்கள்‌ சொல்லிற்று

      81-தேவத்வமும்‌ நிந்தை யானவனுக்கு ஒளி வரும்‌ ஜநிகள் போலே ப்‌ரஹ்ம ஜந்மமும்‌ இழுக்கென்பார்க்குப்‌ பண்டை நாளில்‌ பிறவி உண்ணாட்டுத் தேசிறே.
      இனி மேல்‌, இப்படி ஆழ்வார்‌ தாழ்ந்த வர்ணத்திலே அவதரித்தாரே யாகிலும்‌, மிகவும்‌ தேஜஸ்ஸு உண்டாமென்கிறார்‌. எங்ஙனே என்னில்‌, ஸர்வேஸ்வரன்‌ லோக ஸம்ரஷணார்த்தமாக அவதரித்த விடத்தில்‌ பரத்வ ஸங்கையும்‌ அஸஹ்யமாம்படி தாழ்ந்தவதரிக்க, தேஜஸ்ஸு அதிஸயித் திருக்குமாப் போலே பாகவதத்வ ரஹிதமான உத் க்ருஷ்ட ஜந்மமும்‌ அவத்‌யம்‌ என்றிருக்கிறவர்களுக்கு ஜந்மாதிகளால்‌ வருகிற அஹங்கார மின்றிக்கே கைங்கர்யமே நிரூபகமான குலங்களில்‌ ஜந்மம்‌ நித்ய விபூதியிலும்‌ தேஜஸ் கரம்‌ என்கிறார்‌ (தேவத்வம்‌ என்று தொடங்கி).-(தே,வத்வமும்‌ நிந்தை யானவனுக்கு) ராவண வதாநந்தரம்‌ ப்‌ரஹ்மாதிகள்‌ “பவாந் நாராயணோ தேவ?” (ரா.யு. 120 – 13) என்றவது – திருவுள்ளத்துக்கு அஸஹ்யமாய்‌, “ ஆத்மாநம்‌ மாநுஷம்‌ மந்யே ராமம்‌ தஸரதராத்மஜம்‌”’ (ரா. யு. 120 – 11) என்றும்‌, கோவர்த்ந தோத்தரணாநந்தரம்‌. அந்த அதிமாதுஷ சேஷ்டிதங் கண்டு ஆச்சா்யப்பட்ட இடையர்‌ *““பாலத்வஞ்சாதி வீர்யஞ்ச ஐந்ம சாஸ்மாஸ்வ ஸோபநம் ॥ தேவோ வா தாநவோ வா த்வம்‌ யக்ஷோ கந்தர்வ ஏவ வா! (வி. பு. 5 – 13 – 7) என்று ஸங்கிக்க, “ஷணம்‌ பூத்வா த்வஸெள தூஷ்ணீம்‌ கிஞ்சித் ப்ரணய ரோஷவாத்‌” என்று அது அஸஹ்யமாய்‌, ”நாஹம்‌ தேவோ ந கந்தர் வோ ந யஷோ ந ச தாநவ ! அஹம்‌ வோ பாந், வோ ஜாத? நைதச்சிந்த்ய மதோந் யதா ‘” (வி. பு. 5 – 13 – 12) என்று இப்படி பரத்வ ஸங்கையும்‌, அஸஹ்யமாம்படி ஸீலாதிகனா யிருக்கிறவனுக்கு.
      (ஒளிவரும்‌ ஜநிகள்‌் போலே) ““ஸ உ ஸ்ரேயான் பவதி ஜாயமாந” என்றும்‌, “பல் பிறப்பாய்‌ ஒளி வரு முழு நலம்‌”’ (திருவா. 1 – பீ – 2) என்றும்‌ சொல்லுகிறபடியே ஆநந்தாதி கல்யாண குணங்கள்‌ ஒனி பெற்று வரும்‌ அவதாரங்கள்‌ போலே.-(ப்‌ரஹ்ம ஜத்மமும்‌ இழுக்கென்பார்க்கு) ‘இதராவஸதேஷு மா ஸ்ம பூதபி மே ஜந்ம சதுர்முகாத்மநா’” (ஸ்தோ. ர. 55) என்கிறபடியே அபாாகவத க்‌ருஹ்ங்களில்‌ ப்‌ரஹ்மாவாய்ப்‌ பிறக்கையும்‌ அவத்‌யமாம்படி பகவத்‌ தாஸ்யமே ரஸித்த ஜ்ஞாநாதிகர்க்கு (பண்டை நாளில்‌ பிறவி) “பண்டை நாள்‌” (திருவா. 9 – 2 – 1) என்கிற பாட்டின் படியே லக்ஷ்மீ-தத்‌ வல்லபருடைய கடாக்ஷமடியாகக்‌ கைங்கர்யமே நிரூபகமாக உடைத்தாய்‌, தாஸ்ய விரோதி ஜந்மாதிகளால்‌ வரும்‌ அஹங்கார ரஹிதமான குலங்களில்‌ ஜந்மமும்‌.(உண்ணாட்டுத் தேசிறே) புற நாடான வீலாவிபூதி போலன்றிக்கே பகவதாநுகூல்யைக போகராலே நெருங்கி பகவானுக்கு போக விபூ,தியாகையாலே அந்தரங்கமா யிருக்கிற பரமபதத்தில்‌ தேஜஸ்ஸன்றோ என்கிறார்

      82-ஜநக-தஸரத,-வஸுதேவ-குலங்களுக்கு மூத்த பெண்ணும்‌, நடுவில்‌ பிள்ளையும்‌, கடைக் குட்டியும்‌ போலே இவரும்‌ பிறந்து புகழும்‌ ஆக்கமும்‌ ஆக்கி அஞ்சிறை யுமறுத்தார்
      இப்படிப்பட்ட இவருடைய அவதாரம்‌ ஜநக குல ஸுந்தரியான நாச்சிமார்‌ முதலானாரூடைய அவதாரம் போலே ஸர்வோபகாரகம்‌ என்கிறார்‌ (ஜநகேத்யாதி,) ஜநக குலத்துக்கு மூத்த பெண்ணான நாச்சியார்‌ திருவவதரித்து. “ “ஸீதா பர்த்தாரமாஸாத்‌ய. ராமம்‌ தஸரதாத்மஜம்‌ | ஜநகாநாம்‌ குலே கீர்த்திம்‌ ஆஹரிஷ்யதி மே ஸுதா”'(ரா. பரா. 67 – 21) என்று தான்‌ பிறந்து ஜநக குலத்துக்குக்‌ கீர்த்தியை உண்டாக்கினாப் போலவும்‌,
      தஸரத குலத்துக்கு நடுவில்‌ பிள்ளையான ஸ்ரீபரதாழ்வான்‌ பிறந்து ‘விலலாப ஸப மத்‌யே ஜகர்ஹே ச புரோஹிதம்‌ ! ராஜ்யஞ் சாஹஞ்ச ராமஸ்ய தர்மம்‌ வக்து மிஹார்ஹஸி”’ (ரா. ௮. 82 – 10) என்றும்‌, “‘ஜடிலம்‌ சீர வஸநம்‌ ப்ராஞ்ஜலிம்‌ பதிதம்‌ புவி?” (ரா. ஆ. 102 – 1) என்றும்‌, ““குடிக் கிடந்தாக்கம்‌ செய்து” (திருவா. 9 – 2 – 2) என்றும்‌ சொல்லுகிற படியே மூத்தாரிருக்க இளையார்‌ முடிசூடக் கடவதன்று என்கிற குல மர்யாதையை நடத்தின வளவன்றிக்கே, ஜயேஷ்டரான பெருமாளுடைய விஸ்லேஷத்தில்‌ ஜடை புனைந்து, வல்கலை சாத்தி, கண்ணநீராலுண்டான சேற்றிலே தரைக் கிடை கிடந்து அக்குலத்துக்கு முன்பில்லாத ஏற்றங்களை உண்டாக்கினாப் போலேயும்‌,
      வஸாுதேவ குலத்துக்கு “‘மக்களறுவரைக்‌ கல்லிடை மோத இழந்தவள் தன்‌ வயிற்றில்‌ சிக்கென வந்து பிறந்து நின்றாய்‌” (பெரியா. தி. 5 – 3 – 1) என்று சொல்லுகிறபடியே கடைக் குட்டியான க்ருஷ்ணன்‌ பிறந்து ““தந்தை காலில்‌ பெரு விலங்கு தாளவிழ”‘ (திருமொழி 7 – 5 – 1) என்கிறபடியே தங்களாலே விடுவித்துக் கொள்ள வொண்ணாத மாதா பிதாக்களுடைய கட்டை அறுத்தாப் போலேயும்‌,
      இவரும்‌ திருவவதரித்து ““மலி புகழ் வண் குருகூர்‌’‘ (திருவா. 4 – 2 – 11) என்றும்‌, “ஏற்கும்‌ பெரும்புகழ்‌ வண் குருகூர்‌‘” (திருவா. 3 – 9 – 11) என்றும்‌ சொல்லுகிறபடியே தாம்‌ திருவவதரித்து அந்நகரிக்குக்‌ கீர்த்தியை உண்டாக்கி, “*குடிக்கிடந் தாக்கம்‌ செய்து” (திருவா. 9 – 2 – 2) என்கிறபடியே அங்குள்ளார்க்கு ஜ்ஞாந வர்த்தகரான மாத்ரமே யன்றியிலே ப்ரேம வர்த்தகராயும்‌, ”அறுவர் தம்‌ பிறவி அஞ்சிறையே”’ (திருவா. 1 – 311) என்கிறபடியே தம்முடைய ப்ரபந்தாப்‌யாஸ முகத்தாலே ஸம்ஸாரிகளுடைய அறவைச் சிறையையு மறுத்தார் –

      83–ஆதித்ய-ராம திவாகர-அச்யுத பாநுக்களுக்குப்‌ போகாத உள்‌ளிருள்‌ நீங்கி, சோஷியாத பிறவிக் கடல்‌ வற்றி, விகஸியாத போதில்‌ கமல மலர்ந்தது வகுள பூஷண பாஸ்கரோதயத்திலே.
      அவ்வளவே யன்றிக்கே அஜ்ஞாந அந்தகார நிரஸநாதிகளாலே ஆதித்ய ராம க்ருஷ்ணர்‌ களில்‌ வ்யாவ்ருத்தர்‌ என்கிறார்‌ (ஆதித்யேத்யாதி,). பாஹ்யமான அந்த காரத்தைப்‌ போக்கிக்‌ கொண்டு உதிக்கிற ஆதித்யனுக்குப் போகாத உள்ளிருளான அஜ்ஞாந அந்தகாரமும்‌,
      தமோ பாஹ்யம்‌ விநஸ்யேத்து பாவக ஆதித்ய ஸந்நிதெள ந பாஹ்யாப்‌, யந்தரஞ்சைவ விஷ்ணு பக்தார்க்க ஸந்நிதெள”’ என்கிறபடியே நீங்கி, ‘ஸரஜாலாம் ஸூமாந்‌ ஸூர கபே ராம திவாகர:। ஸத்ருரஷோமயம்‌ தோயம்‌ உபஸோஷம்‌ நயிஷ்யதி”‘ (ரா.ஸு. 37 – 16) என்று ஸரஜாலங்களாகிற கிரணங்களை உடையனாய்க் கொண்டு ஸத்ரு ராக்ஷஸராகிற ஸமுத்ரத்தை வற்றப் பண்ணுகிற ராம திவாகரர்க்கு வற்றாத ஸம்ஸாரஸமுத்‌ரம்‌ “பிறவி என்னும்‌ கடலும்‌ வற்றி” (பெரியா, தி, 5 – 4 – 2) என்கிறபடியே வற்றி,
      *“ததோகில ஜகத் பத்‌மபோதாய அச்யுத பாநுநா ! தேவகீ பூர்வ ஸந்த்‌யாயாம்‌ ஆவிர்பூதம்‌ மஹாத்மநா”’” (வி.பு. 5- 3 – 2) என்று ஜகத் பத்‌மம்‌ விகஸிதமாம்படி தேவகி யாகிற பூர்வ ஸந்த்‌யையிலே ஆவிர்பூதனான அச்யுத பாநுவான் க்ருஷ்ணனுக்கு விகஸியாத ”போதில்‌ கமல வன்னெஞ்சம்‌”‘ (பெரியா. தி. 5 – 2- 8) என்கிற ஹ்ருத் பத்‌மம் விகஸிதமாயிற்று,
      “யத்‌, கோ ஸஹஸ்ர மபஹந்தி தமாம்ஸி பும்ஸாம்‌ நாராயணோ வஸதி யத்ர ஸ சங்க, சக்ரா | யந் மண்டலம்‌ ஸ்ருதிகதம்‌ ப்ரணமந்தி விப்ரா? தஸ்மை நமோ வகுள பூ,ஷண பாஸ்கராய”” (பரா. ௮.) என்றும்‌ திருவாய்மொழி ஆயிரமாகிற கிரணங்களை உடையராய்‌, மஹிஷீ பூக்ஷணாயுத விஸிஷ்டனான நாராயணனை *கண்கள்‌ சிவந்திற்படியே உள்ளே உடையராய்‌, வேத வித்துக்களான ஸர்வ ஸிஷ்டர்களும்‌ ப்ரணாமம்‌ பண்ணும்படியான வைபவத்தை உடையராய்‌, வகுள பூஷணரான ஆழ்வாராகிற பாஸ்கரோதயத்திலே என்கிறார்‌. கீழ்ச் சொன்ன ஆதித்ய திவாகர பாநு சப்‌தம்‌ போலன்றிக்கே இவர் பக்கவிலே பாஸ்கர சப்‌த ப்ரயோகம்‌ பண்ணுகையாலே **ஊரும்‌ நாடும்‌ உலகமும்‌ தன்னைப்‌ போல்‌ (திருவா. 6 – 7- 2) என்கிறபடியே தம்மோடு ஸம்பந்த, முடையா ரெல்லார்க்கும்‌ தம்மோடொத்த ப்ரபாவத்தை உண்டாக்குமவர்‌ என்னுமிடமும்‌ தோற்றுகிறது –

      84-வம்ஸ பூ,மிகளை உத்‌தரிக்கக்‌ கீழ்க் குலம்‌ புக்க வராஹ கோபாலரைப்‌ போலே இவரும்‌ நிமக்‌நரை உயர்த்தத் தாழ இழிந்தார்‌.
      இப்படி மஹாப்ரபாவத்தை உடையரான இவர்‌ அத்ரைவர்ணிகத்திலே தாழ இழிவானென்‌ என்னில்‌, க்ஷத்ரியரில்‌ வைத்துக் கொண்டு ஹீநமான யது குலத்தை உத்‌தரிக்கைக்‌காக ”அங்கோராய்க் குலம்‌ புக்கு?” (திருவா. 6 – 4 – 5) என்றும்‌, அயம்‌ ஸ கத்‌யதே ப்ராஜ்ஞை? புராணார்த்த,விஸாரதை, ! கோபாலோ யாதவம்‌ வம்ஸம்‌ மக்‌ந மப்‌யுத்‌தரிஷ்யதி’‘ (வி. பு. 5 – 20 – 49) என்றும்‌ சொல்லுகிறபடியே அறிவு கேடர்க்கு எல்லையான இடையரோடு ஸஜாதீயனாய்க் கொண்டு கோபாலனானாப் போலவும்‌, ப்ரளயார்ணவ மக்‌னையான ஸ்ரீ பூமிப் பிராட்டியை எடுக்கைக்காக ““உத்‌த்‌ருதாஸி வராஹேண க்ருஷ்ணேந ஸத பாஹுநா”’ (தை. உ.) என்றும்‌, “‘நமஸ் தஸ்மை வராஹாய லீலயோத்‌தரதே மஹீம்‌ | குரமத்‌யக,தோ யஸ்ய மேரு கணகணாயதே”’ (வராஹபு.) என்கிறபடியே வராஹ ஸஜாதீயனாய்க் கொண்டு ““கேழலாய்க்‌ கீழ்ப் புக்கு (திருவா. 2 8 – 7) என்கிறபடியே பாதாளத்திலே தாழ இழிந்த வராஹ ரூபியைப் போலவும்‌, ஸம்ஸாரார்ணவ மக்நரான ஸகல ஜந்துக்களையும்‌ அதில் நின்றும்‌ எடுக்கைக்காக அத்ரைவர்ண்யத்திலே தாழ இழிந்தார்‌ என்கிறார்‌.-அல்லது த்ரைவர்ண்யத்திலே நின்று ப்ரபந்தீ, கரித்தாராகில்‌ வேதமும்‌ ததுப ப்‌ரும்ஹணங்களும் போலே அதி க்ருதாதி காரமாமிறே,
      ஆக, வீட்டின்பமென்று தொடங்கி, இவ்வளவும்‌ வர மந்த மதிகளுடைய ஸங்கா நிராகரணார்த்த மாக ‘ப்ரமாண ப்ரமேயங்களினுடைய சரமாவதியான அர்ச்சாவதாரத்தினுடையவும்‌ திருவாய்மொழியினுடையவும்‌ த்‌ரவ்ய பாஷா நிரூபணத்தோடொக்கும்‌ ஆழ்வாருடைய உத்பத்தி நிரூபணமும்‌’ என்று இவருடைய உத்பத்தி நிரூபணத்தால்‌ வரும்‌ ப்ரத்யவாயத்தையும்‌, வ்யாஸாதிகளைப் பற்ற இவருடைய அவதார வைலக்ஷண்‌யத்தையும்‌, அவதாரம்‌ பரார்த்த,ம்‌ என்னுமிடத்தையும்‌, இப்படி மஹா ப்ரபாவரான இவர்‌ தாழ அவதரிக்கைக்கு ஹேதுவையும்‌ அருளிச்செய்தார்

      85–ம்லேச்சனும்‌ பக்தனானால்‌ சதுர்வேதிகள்‌ அநுவர்த்திக்க அறிவு கொடுத்து, குல தைவத்தோ டொக்கப்‌ பூஜை கொண்டு பாவந தீர்த்த, ப்ரஸாதனாம்‌ என்கிற திருமுகப் படியும்‌, விஸ்வாமித்ர -விஷ்ணுசித்த -துளஸீ ப்‌ருத்யரோடே உள் கலந்து தொழு குலமானவன்‌ நிலையார்‌ பாடலாலே ப்‌ராஹ்மண வேள்விக் குறை முடித்தமையும்‌, கீழ் மகன்‌ தலை மகனுக்கு ஸம ஸஹாவாய்த்‌ தம்பிக்கு முன் பிறந்து வேலும்‌ வில்லுங் கொண்டு பின் பிறந்தாரைச் சோதித்துத்‌ தமையனுக்கு இளையோன்‌ ஸத்‌ பாவம்‌ சொல்லும்படி ஏக குலமானமையும்‌, தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய ஸம்யக் -ஸகுண-ஸஹ போஜநமும்‌, ஒரு பிறவியிலே இரு பிறவியானா ரிருவர்க்கு தர்ம ஸூநு ஸ்வாமிகள்‌ அக்‌ர பூஜை கொடுத்தமையும்‌, ஐவரில்‌ நால்வரில்‌ மூவரில்‌ முற்பட்டவர்கள்‌ ஸந்தேஹியாமல்‌ ஸஹஜரோடே புரோடாஸமமாகச்‌ செய்த புத்ர க்ருத்யமும்‌, புஷ்ப த்யாக போக மண்டபங்‌களில்‌ பணிப் பூவும்‌ ஆல வட்டமும்‌ வீணையுங் கையுமான அந்தரங்கரை முடி மன்னவனும்‌ வைதிகோத்தமரும்‌ மஹா முனியும்‌ அநுவர்த்தித்த க்ரமமும்‌, யாக,அநுயாக உத்தர விதிகளில்‌ காய அந்ந ஸ்தல ஸூத்‌தி பண்ணின வ்ருத்‌தாசாரமும்‌ அறிவார்க்கிறே ஜந்ம உத்கர்ஷ அபகர்‌ஷங்கள்‌ தெரிவது.

      இனிமேல்‌ ஆழ்வாருடைய வைபவத்துக்கு உறுப்பாக ஸாமாந்யேந பாகவத வைபவத்தைப்‌ பல உதாஹரணங்களாலும்‌ அருளிச் செய்கிறார்‌. அதில்‌, அவர்கள்‌ ஐத்ம வ்ருத்த ஜ்ஞாநங்களால்‌ குறைய நின்றார்களே யாகிலும்‌ பகவத்‌ பக்தரானார்களாகில்‌ அவர்கள்‌ ஸர்வ உத்க்ருஷடரென்றும்‌, அவர்கள்‌ உத்க்ருஷ்ட ஜந்மாக்களாலே அநுவர்த்த நீயரென்றும்‌, அவர்களுடைய ஸம்பந்தமே உத்தாரக மென்றும்‌, அவர்கள் விஷயத்தில்‌ பகவானுடையவும்‌, பகவதீயருடையவும்‌ ஆதர ப்ரகாரத்தையும்‌, அநு வர்த்த நீயரான ப்ரகாரத்தையும்‌,- அவர்களுடைய ஸ்பர்ஸாதிகளே பாவநம்‌ என்னுமிடத்தையும்‌, ப்ரமேய பூதனுடையவும்‌, ப்ரமாதாக்களினுடையவும்‌, உக்த் யநுஷ்டாநங்களாலே வெளியிடுகிறார்‌.

      (ம்லேச்சனும்‌ பக்தனானால்‌) “மத்‌ பக்த ஜந வாத்ஸல்யம்‌ பூஜாயாஞ்ச அநுமோதநம்‌ ! ஸ்வயமப்‌யர்ச்சதஞ்சைவ மதர்த்தே டம்ப வர்ஜநம்‌ |) மத் கதா ஸ்ரவணே ப்ரீதி ஸ்வர நேத்ராங்க விக்ரியா । மமாநுஸ்மரணம்‌ நித்யம்‌ யச்ச மாம்‌ நோபஜீவதி । பக்திரஷ்டவிதா ஹ்யேஷா யஸ்மிந்‌ ம்லேச்சேபி வர்த்ததே’* (பகவச் ஸாஸ்த்ரே) என்று பாகவத விஷயத்தில்‌ வாத்ஸல்யம்‌ முதலான அஷ்டவிதையான பக்தி ம்லேச்சன் பக்கலிலே உண்டாயிற்றாகிலும்‌. (சதுர்வேதிகள்‌ அநுவர்த்திக்க அறிவு கொடுத்துக்‌ குல தைவத்‌தோ டொக்கப்‌ பூஜை கொண்டு பாவந தீர்த்த ப்ரஸாதனா மென்கிற திருமுகப்படியும்‌) ““ஸ விப்ரேந்தரோ முநிஸ் ஸ்ரீமாறந் ஸ யதிஸ்ஸ ச பண்டித:। தஸ்மை தேயம்‌ ததோ க்‌ராஹ்யம்‌-ஸ ச பூஜ்யோ யதா ஹ்யஹம்‌ । தத் பாதாம் ப்வதுலம்‌ தீர்த்தம்‌ ததுச்சிஷ்டம்‌ ஸுஃபாவநம்‌ | ததுக்தி மாத்ரம்‌ மந்த்ராக்‌ர்யம்‌ தத் ஸ்ப்ருஷ்ட மகிலம்‌ ஸூசி?” (பகவஸ் ஸாஸ்த்ரே) என்று – அவர்கள்‌ ஜந்ம வ்ருத்த ஜ்ஞாநங்களால்‌ உத்க்ருஷ்டர்‌. அவர்கள்‌ உத்க்ருஷ்ட ஜந்மாக்‌களாலே அநுவர்த்தநீயர்‌. அவர்கள்‌ வித்‌யோபஜீவநத்துக்கு விஷய பூதர்‌. அவர்கள்‌ என்னைப் போலே யாகிலும்‌ பூஜ்யர்‌, அவர்கள்‌ தீர்த்த ப்ரஸாதாதிகள்‌ பரம பாவநம்‌” என்கிற திருமுகமான பகவதுக்தியும்‌, ”பழுதிலா ஒழுகலாற்று”” (திருமாலை 42) இத்யாதியான திருமுகப்படியும்‌.

      (விஸ்வாமித்ர-விஷ்ணுசித்த-துளஸீ ப்‌ருத்யரோடே உள் கலந்து) ““கெளஸல்யா ஸுப்ரஜா ராம பூர்வா ஸந்த்‌,யா ப்ரவர்த்ததே । உத்திஷ்ட, நரஸார்தூ,ல கர்த்தவ்யம்‌ தைவமாஹ்நிகம்‌”” (ரா. படா, 23 – 2) என்று பெரிய பெருமாளைத்‌ திருப்பள்ளி உணர்த்தின விஸ்வாமித்ரனோடும்‌, “ அரவணையாய்‌ ஆயரேறே அம்மமுண்ணத் துபிலெழாயே”” (பெரியா. தி.2-2-1) என்று க்ருஷ்ணனைத்‌ திருப்பள்ளி உணர்த்தின பெரியாழ்வாரோடும்‌, ”அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே”’ (திருப்பள்ளி.) என்று பெரியபெருமாளைத்‌ திருப்பள்ளி உணர்த்தின துளவத் தொண்டாய ஸ்ரீதொண்டரடிப்பொடி ஆழ்வாரோடும்‌ ஸகேத்ரிகளாய்க்‌ கொண்டு திருப்பள்ளி உணர்த்தி, **வலந்தாங்கு சக்கரத் தண்ணல்‌ மணி வண்ணர்க்‌காளென்று உள் கலந்தாரடியார்‌’‘ (திருவா. 3 – 7 – 9) என்கிறபடியே வலவருகே தரிக்கப்‌ பட்ட திருவாழியையும்‌ அதுக்குப் பரபாகமான நீலமணி போலே இருக்கிற திருமேனியை யுமுடைய ஸர்வ ஸ்வாமிக்கு அநந்யார்ஹ ஸேஷ பூதரென்று கொண்டு ஸேஷத்வ ஜ்ஞாந பூர்வகமான வ்ருத்தியிலே அந்வயித்து, “எம்‌ தொழு குலம்‌ தாங்களே” (திருவா. 3- 7 – 8) என்று ஜ்ஞாதாக்களாலே அநுவர்த்த நீயருமாய்‌, ஸேஷத்வ ஜ்ஞாநாநுகுணமான குலத்திலே பிறந்தவர்‌-

      (நிலையார்‌ பாடலாலே ப்‌ராஹ்மண வேள்விக் குறை முடித்தமையும்‌) சரக வம்ஸத்திலே பிறந்த ஸோம ஸர்மாவான ப்‌ராஹ்மணன்‌ வைதிகமான யாகத்தை உபக்ரமித்து அதில்‌ மந்த்ர-க்ரியா-த்‌ரவ்ய-தஷிணா-லோபத்தாலே யாக மத்‌யே ம்ருதனாய்‌ ப்‌ரஹ்ம ரக்ஷஸ்‌த்வத்தை அடைந்து வந்தவன்‌, கைஸிக வ்ருத்தாந்தத்தில்‌ வந்த ஸ்ரீ வைஷ்ணவரைக் கண்டு -த்வம்‌ வை கீத ப்ரபாவேந நிஸ்தாரயிதுமர்ஹஸி ஏவமுக்த்வாத, சண்டாளம்‌ ராக்ஷஸ ஸ்ரவணம்‌ ௧,த2 | ப்‌ரஹ்ம ரக்ஷோ வசஸ் ஸ்ருத்வா ஸ்வபாகஸ் ஸம்ஸிதவ்ரத ! பாட, மித்யேவ தத்‌ வாக்யம்‌ ப்‌ரஹ்ம ராக்ஷஸ சோதிதம்‌ । யந் மயா பஸ்சிமம்‌ கீதம்‌ ஸ்வரம்‌ கைஸிக முத்தமம்‌ । ப,லேந தஸ்ய பத்‌ரம்‌ தே மோக்ஷயிஷ்யாமி கில்பிஷாத்‌ । ஏவம்‌ தத்ர வரம்‌ க்ருஹ்ய ராக்ஷஸோ ப்‌ரஹ்ம ஸம்ஜ்ஞீத: | யஜ்ஞ ஸாபாத்‌, விநிர்முக்தஸ் ஸோமஸர்மா மஹா யஸா” (கை. பு.) என்று அவன்‌ ஸரணம்‌ புக, (நிலையார்‌ பாடலாலே) கைஸிகம்‌ என்கிற பண்ணில்‌ தாம்‌ பண்ணின கீத ப்ரபாவத்தாலே அவனுடைய ப்‌ரஹ்ம ரக்ஷஸ்‌த்வத்தை விடுவித்து உஜ்ஜீவிப்பிக்கையாலே அந்த யாகக் குறையும்‌ தலைக் கட்‌டினாரானமையும்‌.

      (கீழ்மகன்‌) “ஏழை ஏதலன்‌ கீழ்மகன்‌” (திருமொழி 5 – 8 – 1) என்று ஜந்ம வ்ருத்த ஜ்ஞாநங்களால்‌ குறைய நின்ற ஸ்ரீகுஹப் பெருமாள்‌ ”வானோர் தலைமகன்‌”” (திரு விருத்த-53 )என்கிறபடியே தலைமகனான சக்ரவர்த்தித் திருமகனோடே “உகந்து தோழன்‌ நீ?” (திருமொழி 5 – 8 – 1) என்னும்படி ஸமஸஹாவாய்‌, (தம்பிக்கு முன் பிறந்து) “என் தம்பி உன் தம்பி‘ என்கையாலே அவருடைய தம்பியாரான இளைய பெருமாளுக்கும்‌ முற்பாடராய்‌, (வேலும்‌ வில்லுங் கொண்டு பின் பிறந்தாரைச் சோதித்து) இளையபெருமாள்‌ பெருமாள் பக்கல்‌ ஸெளகுமார்யா நுஸந்தாநத்தா லுண்டான பரிவாலே அநிமிஷ த்‌ருஷ்டியாய்க்‌ கொண்டு இவரையும்‌ அதி ஸங்கை பண்ணி ஸாயுதராய்க் கொண்டு நோக்கும்படி பெருமாள் பக்கல்‌ பரிவை யுடையராய்‌

      (தமையனுக்கு இளையோன்‌ ஸத்‌ பாவம்‌ சொல்லும்படி ஏக குலமானமையும்‌) ‘*ஆசசக்ஷேத ஸத்‌ பாவம்‌ லக்ஷ்மணஸ்ய மஹாத்மந: | பரதாயா ப்ரமேயாய குஹோ கஹந கோசர?” (ரா. ஆ. 86 – 1) என்று அளவிறந்த வைபவத்தை உடையரா யிருக்கிற ஸ்ரீபரதாழ்வானுக்கு இளைய பெருமாள்‌ கைங்கர்ய ஸ்ரீயாலே உளராயிருக்கிற படியை இவர்‌ உபதேஸிக்கும்படி இஷ்வாகு வம்ஸ்யரோடு ஏக குலமானமையும்‌.

      (தூதுமொழிந்து) ““முன்னோர்‌ தூது வானரத்தின்‌ வாயில்‌ மொழிந்து” ‘ (திருமொழி 2 – 2 3) என்று பிராட்டி பக்கல்‌ திருவடியோடே தூத வாக்யத்தை அருளிச் செய்துவிட்ட பெருமாள்‌ “ ஸ பர்யா பூஜிதஸ் ஸம்யக்‌, ராமோ தஸரதாத்மஜ?’‘ (ரா. பா. 1 – 58) என்று ஸபரி கையாலே ஸம்யக்காக பூஜிதரான பின்பு அழகு நிலைபெற்ற படியையும்‌, (நடந்து) குடைமன்னரிடை நடந்த தூதா’” (திருமொழி 6 – 2 – 9) என்று பாண்டவ தூதனான க்ருஷ்ணனுடைய ““புக்தவத்ஸு த்‌விஜாக்‌ர்யேஷு நிஷண்ண? பரமாஸநே ! விதுராந்நாநி புபுஜே ஸூசீநி குணவந்தி ச ” (படர. உத்‌,.) என்று பாவநத்வ போக்‌யத்வங்களை உடைத்தா யிருக்கிற விதுராந்த போஜநத்தையும்‌, (வந்த) ”தூது வந்த குரங்கு?” (திருமொழி 10 – 2 – 6) என்கிறபடியே ”த்‌ருஷ்டா ஸீதா” (ரா.பா. 1 – 78) என்ற திருவடியோடே ““உபகாராய ஸுக்‌ ரீவோ ராஜ்யகாங்க்ஷி விபிஷண? ! நிஷ் காரணாய ஹநுமாந்‌ தத் துல்யம்‌ ஸஹ போஜநம்‌” (பாத்‌மோத்தரே) என்றும்‌; “உடனே உண்பன்‌ நானென்ற ஒண் பொருள்‌?” (திருமொழி 5 – 8 – 2) என்கிறபடியே பெருமாள்‌ ஸஹ போஜநம்‌ பண்ணின படியும்‌.

      (ஒரு பிறவியிலே இரு பிறவியானா ரிருவர்க்கு] யது குலத்திலே பிறந்து கோப குலத்திலே வளர்ந்த கிருஷ்ணனுக்கும்‌, ருஷி கர்ப்பமாய்க் கொண்டு போந்த விடத்திலே வளர்ந்த திருமழிசைப் பிரானுக்கும்‌, (தர்ம ஸுநு ஸ்வாமிகள்‌ அக்‌ர பூஜை கொடுத்தமையும்- தர்ம புத்ரரும்‌, பெரும்புலியூரடிகளும்‌ தங்கள்‌ யாகங்களிலே அக்ர பூஜை கொடுத்தமையும்‌.
      (ஐவரில்‌ இத்யாதி,) ஐவரில்‌ முற்பட்ட தர்ம புத்ரர்‌ ஸ்ரீவிதுரர்க்கு ஜ்ஞாநாதிக் யத்தையும்‌ அசரீரி வாக்யத்தையம்‌ கொண்டு ஸந்தேஹியாமல்‌ புத்ர க்ருத்யம்‌ பண்ணினமையும்‌, நால்வரில்‌ முற்பட்ட சக்ரவர்த்தித் திருமகன்‌ ஸஹஜரான இளைய பெருமாளோடே கூட “ததஸ்தேநைவ ஸோகேந க்ருத்‌ரம்‌ தக்‌த்‌வா ஜடாயுஷம்‌”’ (ரா.பா.1 – 54) என்கிற படியே பெரிய உடையார்க்குப்‌ புத்ர க்ருத்யம்‌ அநுஷ்டித்தபடியும்‌, மூவரில்‌ முற்பட்ட . பெரிய நம்பி மாறனேரி நம்பிக்குப்‌ புரோடாஸமமாகப்‌ புத்ர க்ருத்யம்‌ அநுஷ்டித்தபடியும்

      (புஷ்ப த்யாகேத்யாதி,) “சிந்து பூ மகிமும்‌ திருவேங்கடத்து”” (திருவா. 3 – 3 – 2) என்கிற படியே புஷ்ப மண்டபமான திருமலையிலே பணிப் பூவுங் கையுமாய்த்‌ திருவுள்ள மறியப்‌ பறிமாறுகையாலே திருவேங்கடமுடையானுக்கு அந்தரங்கரான குறும்பறுத்த நம்பியை ““துளங்கு நீண் முடி அரசர் தம்‌ குரிசில்‌ தொண்டை மன்னவன்‌”’ (திருமொழி 5 – 8 – 9) என்கிற அபிஷிக்த க்ஷத்ரிய புத்ரரான தொண்டை மான்‌ சக்ரவர்த்தி அநுவர்த்தித்த க்ரமமும்‌, ““வேகவத் யுத்தரே தீரே புண்ய கோட்யாம்‌ ஹ்ரிஸ் ஸ்வயம்‌ । வரதஸ் ஸர்வ பூதாநாம் அத்‌யாபி பரித்‌ரு்ஸ்யதே”” (ஹஸ்திகிரி மாஹா.) என்கிறபடியே த்யாக மண்டபமான பெருமாள் கோயிவிலே திருவாலவட்டமும்‌ கையுமாய்ப்‌ பெருமாளுக்கு அந்தரங்கராய்‌ நின்ற திருக்கச்சி நம்பியை வைதிகோத்தமரான உடையவர்‌ அநுவர்த்தித்த க்ரமமும்‌, ““தெண்ணீப்பொன்னி திரைக் கையாலடி வருடப் பள்ளி கொள்ளும்‌”’ (பெருமாள் தி, 1 1) என்கிறபடியே போக மண்டபமான கோயிலில்‌ வீணையுங் கையுமாய்ப்‌ பெரிய பெருமாளுக்கு அந்தரங்கரான திருப்பாணாழ்வாரை லோக ஸாரங்க மஹாமுனிகள்‌ அநுவர்த்தித்த க்ரமமும்‌.
      (யாகா நுயாகேத்யாதி,) யாகம் என்று – திருவாராதநமாய்‌, அதுக்குப்‌ பிள்ளை யுறங்கா வில்லி தாஸர் ஸ்பர்ஸத்தாலே காய ஸூத்‌தி, பண்ணின உடையவருடையவும்‌, அநு யாகம்‌ என்று – பகவத் ஸமாராதநாநந்தரம்‌ பண்ணப் படுகிற ப்ரஸாத ஸ்விகாரம்‌. அதுக்குப்‌ பிள்ளை ஏறு திருவுடையார்‌ தாஸருடைய கர ஸ்பர்ஸத்தாலே அந்ந ஸூத்‌தி, பண்ணின நம்பிள்ளை யுடையவும்‌, உத்தர வீதி குடி புகுருகைக்கு “ஆலோக்ய ராஜநகரீ மதி, ராஜஸூநு ராஜாநமேவ பிதரம்‌ பரிசிந்த்ய பூ,ப ! ஸூக்‌ரீவ மாருதி விபீஷண புண்ய பாத ஸஞ்சார பூத பவநம்‌ ப்ரவிவேஸ ராம?” என்று பெருமாள்‌ ஸ்தல ஸூத்‌தி பண்ணினாப் போலே, உத்தர வீதி குடி புகுருகிற காலத்திலே பிள்ளை வானமாமலை தாஸருடைய ஸஞ்சாரத்தாலே ஸ்தல ஸூத்‌தி பண்ணின நடுவில்‌ திருவீதிப் பிள்ளை பட்டருடையவும்‌ அநுஷ்டாந ப்ரகாரங்களையும்‌ அறிவார்க்கிறே ஐந்மத்தினுடைய உத்க்ருஷ்ட அபக்ருஷ்டத்வம்‌ தெரிவது-

      ஆக கீழ்‌ ஜந்ம வ்ருத்த ஜ்ஞாநங்களால்‌ குறைய நின்றார்களேயாகிலும்‌ பகவதீ யரானார்‌களாகில்‌ அவர்கள்‌ ஸர்வோத்க்ருஷ்டராய்க்கொண்டு உபாதேயரென்னு மிடத்தைச்‌ சொல்லிற்று

      86-அஜ்ஞர்‌ ப்‌ரமிக்கிற வர்ணாஸ்ரம வித்‌யா வ்ருத்தங்களை கர்த்தப ஜந்மம்‌, ஸ்வபசாதமம்‌, ஸில்பநைபுணம்‌, பஸ்மாஹுதி, ஸவவிதவா லங்காரமென்று கழிப்பர்கள்‌.

      இனிமேல்‌ பகவஜ் ஜ்ஞாநமின்றியிலே இருக்கிற அஜ்ஞர்‌ ப்‌ரமிக்கிற கேவல வர்ணாதிகள்‌ வ்யர்த்தமாகையாலே த்யாஜ்ய மென்னுமிடத்தை ஸ ப்ரமாணமாக அருளிச் செய்கிறார்‌ (அஜ்ஞர்‌ ப்‌ரமிக்கிற என்று தொடங்கி), அஜ்ஞர்‌ – பகவச் சேஷத்வ ஜ்ஞாதமில்லாதவர்கள்‌, உத்தம வர்ணமென்றும்‌, உத்தமாஸ்ரமமென்றும்‌, ஸத்‌வித்‌யை என்றும்‌,ஸத்‌ வ்ருத்தமென்றும்‌ கேவலம்‌ உத்க்ருஷ்டமாக ப்‌ரமிக்கிற இவற்றை.
      (கர்த்தப ஜந்ம மித்யாதி,) ”சதுர்வேத தரோ விப்ரோ வாஸு தேவம்‌ ந விந்த,தி । வேத பாரபராக்ராந்தஸ்ஸ வை ப்‌ராஹ்மண கர்த்தப”” என்கிறபடியே ஸகல வேதத்‌தையும்‌ அதிகரித்து வைத்து ““வேதைஸ் ச ஸர்வைரஹமேவ வேத்‌ய” (கீதை 15 – 15) என்கிறபடியே ஸகல வேத,ப்ரதிபாத்‌யன்‌ ஸர்வேஸ்வரன்‌ என்றறியாதவர்‌ குங்குமம்‌ சுமந்த கமுதையோ பாதி என்றும்‌, ‘“விஷ்ணு பக்தி விஹீநஸ் சேத்‌ யதிஸ்ச ஸ்வபசாதம?’‘ என்று யதியே யாகிலும்‌ பகவத்‌ பக்தி இன்றிக்கே இருக்குமாகில்‌ அவன்‌ ஸ்வபாகனிற் காட்டில்‌ தண்ணிய னென்றும்‌, “’தத் கர்ம யந்ந பந்தாய ஸா வித்‌யா யா விமுக்தயே ! ஆயாஸாயாபரம்‌ கர்ம வித்‌யாந்யா ஸில்பநைபுணம்‌” (வி.பு. 1 – 19) என்று மோக்ஷார்த்த,மான ஜ்ஞாநமே ஜ்ஞாநம்‌; அல்லாத ஜ்ஞாநம்‌ செருப்புக்குத்தக்‌ கற்றவோபாதி என்றும்‌, ”ஆம்நாயாப்‌யபஸ நாந்யரண்யருதி,தம்‌ வேத வரதாந் யந்வஹம்‌ மேத,ஸ்சேத,ப,லாநி பூர்த்த விதய? ஸர்வே ஹுதம்‌ பஸ்மநி | தீர்த்தா நாம வகாஹதாநி ச கஜஸ்நாதம்‌ விநா யத்பத த்‌வந்தவாம் போருஹ ஸம்ஸ்ம்ருதீர் விஐயதே தேவஸ் ஸ நாராயண??‘ (முகுந்தமாலை 25) என்றும்‌ பகவஜ் ஜ்ஞாதமில்லாதவர்களுடைய கர்மாதிகளெல்லாம்‌ பஸ்மா ஹுதி போலே நிஷ் ப்ரயோஜநமென்றும்‌,

      தேசவா? புருஷா லோகே யேஷாம்‌ ஹ்ருதி, ந கேஸவ? । கேஸவார்ப்பித ஸர்வாங்கா ந பாவா ந புநர்ப வா?”, “யஸ்யாகி லாமீவஹபிஸ் ஸுமங்கலைர் வாசோ விமிஸ்ரா குண கர்ம ஜந்மபி ! ப்ராணந்தி ஸூம்பந்தி புநந்தி வை ஜகத்யாஸ் தத்‌ வியுக்தா ஸவ ஸோபநா மதா?” என்று பகவஜ் ஜ்ஞாநமில்லாதவர்கள்‌ ஜீவந்ம்ருதராகையாலே அவர்கள்‌ ஸவ ப்ராயரென்றும்‌, ““ப்ராதுர் பாவைஸ் ஸுர நர ஸமோதே வதேவஸ் ததீயா ஜாத்யா வ்ருத்தைரபி ச குண தஸ்தாத்‌ ருஸோ நாத்ர கர்ஹா கிந்து ஸ்ரீமத்‌ புவநப வந த்ராணதோந்யேஷு வித்‌யா வ்ருத்த ப்ராயோ பவதி வித வாகல்பகல்ப? ப்ரகர்ஷூ” என்று பகவஜ் ஜ்ஞாநமில்லாத வர்களுடைய வித்‌யாதி,கள்‌ பகவத் ஸம்பந்த ஜ்ஞாந மென்கிற ஸெளமங்கல்ய மில்லாமையாலே விதவால்ங்காரமென்று இந்த ஜந்மாதிகளை ப்ரமாணிகரான ஜ்ஞாதாக்கள்‌ அநாதரிப்பர்க ளென்கிறார்‌. பகவஜ் ஜ்ஞாநமில்லாத ஜந்மாதிகள்‌ தயாஜ்யமென்னுமிடம்‌ சொல்லிற்று–

      முதல்‌ ப்ரகரணம்‌ முற்றிற்று

      ————————————-

      ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
      ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
      ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
      ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-