Archive for February, 2024

ஸ்ரீஅஷ்ட ஸ்லோகீ

February 13, 2024

ஸ்ரீ பராசர பட்டார்ய ஸ்ரீரங்கேச புரோஹித: |
ஸ்ரீவத்ஸாங்க ஸுத ஸ்ரீமான் ஸ்ரேயசே மேச்து பூயஸே ||

ஸ்ரீ ரங்கநாதன் என்னும் அழகிய மணவாளனுக்கு ஆசிரியராகவும், ஸ்ரீவத்ஸாங்கர் என்னும் ஸ்ரீ கூரத்தாழ்வான் திருக்குமாரரும் ஆன செல்வம் நிறைந்த ஸ்ரீ பராசர பட்டர் எனக்கு மிகுந்த ச்ரேயஸ் அளிப்பாராக.

பராசர பட்டர் ரஹஸ்ய த்ரயத்தின் ஆழ்ந்த அர்த்தங்களை வெளிப்படுத்தும் நோக்குடன் அஷ்ட ச்லோகீ என்னும் அழகிய ஸம்ஸ்க்ருத ஸ்தோத்ர ப்ரபந்தத்தை அருளிச்செய்து உள்ளார். இதுவே ரஹஸ்ய த்ரயத்தின் அர்த்தங்களை வெளிப்படுத்த ஏடுபடுத்தப்பட்ட முதல் ப்ரபந்தம்.

இந்தப் ப்ரபந்தத்தில் உள்ள எட்டு ச்லோகங்களுடன், ப்ரபந்த கர்த்தாவான பராசர பட்டரைக் கொண்டாடி அருளப்பட்ட தனியனும் உள்ளது.

ஸ்ரீ யபதி ஸ்வரூபம் முதலான அர்த்த பஞ்சக ஞானம் -விவரணமே -ரகஸ்ய த்ரய ஞானம் –
அதன் முதல் விவரணம் ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த அஷ்டஸ்லோகி
முதல் நான்கும் திருமந்தரம் விவரணம்
மேல் இரண்டு ஸ்லோகங்கள் த்வயம் விவரணம்
அடுத்த இரண்டும் சரம ஸ்லோக விவரணம் –

பெரிய கனக வரையை சிறிய கடுகினில் அடைத்து வைப்பன் -திருவரங்கக் கலம்பகம் –
ஸூர்ய உதயம் –ஸூர்யோதயம் -போலே ஓங்காரம் -அகாரம் உகாரம் மகாரம் -என்று பிரியும்

————

அகாரார்த்தோ விஷ்ணு: ஜகதுதய ரக்ஷாப் ப்ரலய க்ருத்
மகாரார்த்தோ ஜீவ: ததுபகரணம் வைஷ்ணவமிதம் |
உகாரோ அநந்யார்ஹம் நியமயதி சம்பந்த மநயோ:
த்ரயீ ஸாரத்ரயாத்மா ப்ரணவ இமமர்த்தம் சமதிஸத் ||
1-

உலகத்தின் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில் புரியும் விஷ்ணுவே “அ”காரத்துக்குப் பொருள்; “ம”காரப் பொருள் ஜீவன்; வியாபித்திருக்கிற இவ்வுலகம் சேதனனுக்கு உபகரணமாக அமைந்தது. “உ”காரம் இருவர்க்கும் இடையில் மற்றொருவர்க்குப் பொருந்தாத ஒரு ஸம்பந்தத்தை நியமிக்கிறது. வேத ஸாரமான மூவகைப்பட்ட இந்த ப்ரணவம் இந்தப் பொருளை விளக்குகிறது.

அகாரத்தோ விஷ்ணுர் ஜகத் உதய ரக்ஷா பிரளய க்ருத்
பிரணவத்தில் உள்ள அகாரத்தின் பொருள்
சர்வ வ்யாபக சர்வேஸ்வரன்
சகல லோகங்களுக்கும் சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களை செய்து அருளுபவன் –

மகார்த்தோ ஜீவஸ் ததுபகரணம் வைஷ்ணவமிதம்-
மகார்த்தோ தத் இதம் -மகாரத்தின் பொருள்–மேற்சொன்ன இந்த ஜீவாத்மா வஸ்துவானது
தத் இதம் -ந பும்சக லிங்கம் -அசேதன நிர்விசேஷமாக இருந்து சேஷப் படக் கடவது என்று காட்ட  –
வைஷ்ணவம் உபகரணம் -எம்பெருமானுக்கே உரித்தான சேஷ வஸ்து -என்பதே லுப்த சதுர்த்தியின் பொருள் –

உகாரோ நந்யார்ஹம் நியமயதி சம்பந்த மநயோ
உகார -பிரணவத்தில் இடையில் உள்ள யுகாரமானது
பிரணவத்தில் இடையில் யுள்ள உகாரமானது
சம்பந்த மநயோ-இந்த ஜீவாத்மா பரமாத்மாக்களுக்கும் யுண்டான சம்பந்தத்தை
அநந்யார்ஹம் நியமயதி–பதி பத்நீ பாவம் ஆகிற சம்பந்தம் போல்
ஐகாந்திகமாக கட்டுப்படுத்து கின்றது-

த்ரயீ சாரஸ் த்ரயாத்மா பிரணவ இமமர்த்தம் சமாதிசத்-
இமமர்த்தம் -ஆக இங்கனே விவரிக்கப் பட்ட பொருளை
த்ரயீ சாரஸ்-மூன்று வேதங்களின் யுடைய சாரபூதமாயும் –
த்ரயாத்மா-மூன்று அஷரமும் மூன்று பதமுமாய் இரா நின்ற
ஓங்காரம்
சமதிசத்–தெரிவித்தது –

ஒமிதி ஏக அஷரம்-சம்ஹிதாகாரத்தில் நோக்கு -சாந்தி பெற்ற ஆகாரம் -மூலம் ஒரே அஷரம் -ஒரே பதம்
அசம்ஹிதாகாரம் -சந்திபெறாத  -ஆகாரத்தால் மூன்று அஷரம் மூன்று பதம் –

—————

மந்த்ர ப்ரஹ்மணி மத்யமேன நமஸா பும்ஸஸ்வரூபம் கதிர்கம்யம்
சிக்ஷிதமீக்ஷிதேந புரத: பஸ்சாதபி ஸ்தாநத: |
ஸ்வாதந்தர்யம் நிஜ ரக்ஷணம் ஸமுசிதா வ்ருத்திஸ் ச நாந்யோசிதா
தஸ்யைவேதி ஹரேர் விவிச்ய கதிதம் ஸ்வஸ்யாபி நார்ஹம் தத: ||
2-

பெரிய திருமந்த்ரமான திருவஷ்டாக்ஷரத்தில் நடுவில் உள்ள ‘நம:’பதத்தால் மனிதனுடைய கதி கம்யம் என்று சொல்லக்கூடிய உபாய உபேயங்கள், ஸ்வரூபம் இவை சிக்ஷிக்கப் பட்டன. முன் பதமான ப்ரணவத்தை அநுஸரித்தும், பின் பதமான ‘நாராயண’ பதத்தை அநுஸரித்தும் உள்ள இடத்தை அநுஸரித்தும் மூவகையான பொருள் கூறப்படுகிறது. தனக்குரிமை, தன் ரக்ஷணம், பிறர்க்குரியனல்லாமை இவை எம்பெருமானுக்கே என்று கூறி அதனால் அநுபவிக்கும் இடத்தில் ஸுகத்திலும் தனக்கு ஸம்பந்தமின்மையைக் காட்டுகிறது.

மந்திர ப்ரஹ்மணி மத்யமேன –
மிகச் சிறந்த மந்த்ரம் ஆகிய திரு அஷ்டாஷரத்தில் இடையில் யுள்ளதாய்

நமஸா –
நமஸ் ஆனது

பும்ஸ ஸ்வரூபம் –
ஜீவாத்மாவின் ஸ்வரூபமானது

கதிர்கம்யம் சிக்ஷிதமீ க்ஷிதேன புரத பச்சாதபி ஸ்தானத-
சிஷிதம் -நன்றாக சிஷிக்கப் பட்டது –

புரத ஈஷிதேன நமஸா –
முன்னே யுள்ள பிரணவத்தை நோக்கி அத்தோடு சேர்ந்த தான நமஸ்சினால்-

ஸ்தானத   ஈஷிதேன நமஸா-
ஸ்வ ஸ்தானத்திலேயே ஆவ்ருத்தி பெற்ற நமஸ்சினால் –

கதிர் சிஷிதா –
உபாயம் சிஷிக்கப் பட்டது –

பச்சாத் அபி ஈஷிதேன நமஸா –
பின்னே யுள்ள நாராயண பதத்தோடு சேர்ந்த நமஸ்சினால் –

கம்யம் சிஷிதம் –
உபேயம்-பலன் -சிஷிப்பப் படுகிறது –

இத்தால் தேறின பொருள்கள் என் என்னில்

ஸ்வா தந்த்ர்யம்
நிஜரக்ஷணம் -ஸ்வ ரஷணம்
சமுசித வ்ர்த்திச்ச -சேஷத்வத்துக்கு இணங்கின கைங்கர்ய வருத்தி –

நாநியோசித-
அன்யோசித   ந -மற்றையோர்க்கு யுரியவர் அல்ல –

தச்யைவேதி ஹரேர் விவிச்ய கதிதம் ச்வாச்யபி நார்ஹம் தத
தஸ்ய ஹரே ஏவ -அந்த எம்பெருமானுக்கே உரியவை
இதி -இவ்வண்ணமாக
விவிச்ய கதிதம் –
வகுத்துக் கூறப் பட்டதாயிற்று
தத -ஆதலால்
ஸ்வஸ்ய அபி அர்ஹம் ந –
கீழ்ச் சொன்ன மூன்றும் அந்யருள் அந்ய தமனான தனக்கும் சேர்ந்தவை அல்ல -எனபது தேறிற்று –
நமஸ் -பிரித்து -சகண்ட நமஸ் -ந -ம் -எனக்கு நான் உரியேன் அல்லேன்
பிரிக்காமல் அகண்ட நமஸ் -ஸ்வரூப உபாய புருஷார்த்த விரோதி
ஓம் நம -நம நம -நாராயண நம –

————————

அகாரார்த்தாயைவ ஸ்வம் அஹமத மஹ்யம் ந நிவஹா:
நராணாம் நித்யாநாம் அயநமிதி நாராயண பதம் |
யமா ஹாஸ்மை காலம் ஸகலமபி ஸர்வத்ர ஸகலாஸு
அவஸ்தாஸ்வாவி:ஸ்யு: மம ஸஹஜ கைங்கர்ய விதய: |
|-3-

நான் எம்பெருமானுக்கே உரியவன். ஆகையால் எனக்குரியனல்லன். ஆத்மாக்கள் அழிகிற பொருள்களின் திரள் இரண்டுக்கும் கதி எம்பெருமான் என்பதை நாராயண பதம் கூறுகிறது. கைங்கர்யம் உடன் பிறந்தது. கால வரையறை இன்றி எல்லாக் காலத்திலும் எல்லா நிலைகளிலும் கைங்கர்யத்தை வலியுறுத்துகிறது.

அகாரத்தாயைவ ஸ்வ மஹ மத மஹ்யம் ந நிவஹா
அஹம் அகார்த்தாய ஏவ ஸ்வம்-
மகார வாச்யனான நான் அகார வாச்யனான நாராயணனுக்கே சேஷ பூதன் -பிரணவார்த்தத்தை
அத
அதற்க்கு மேலே
அஹம் மஹ்யம் ந –
நான் எனக்கு உரியேன் அல்லேன் -நம பதார்த்தத்தை அனுவதித்தபடி-

அகாரம் லுப்த சதிர்த்தி உகாரம் மகாரம் நான்கினுடைய அர்த்தமும் அடைவே பொருந்தி இருக்கும் படி அருளிச் செய்கிறார்
நராணாம் நித்யா நாமய நமிதி நாராயண பதம்
நாராயண பதம் -நாராயண பதமானது
நராணாம் நித்யா நாம் -நிவஹா -தேஷாம் -அய நம் இதி
-நித்ய வஸ்துக்களின் திரளுக்கு ஆதாரபூதன் -தத் புருஷ சமாசம்
நராணாம் நித்யா நாம் -நிவஹா யஸ்ய அயனம் –
நித்ய வஸ்துக்களின் திரளை ஆதாரமாக யுடையவன் -பஹூ வ்ரீஹி சமாசம்-

யமா ஹாஸ்மை காலம் சகலமபி சர்வத்ர சகலாஸூ-
யாம் ஆஹ-அவஸ்தா ஸ்வாவிஸ் ஸ்யுர் மம சஹஜ கைங்கர்ய விதய-
யாவன் ஒரு எம்பெருமானைச் சொல்லுகிறதோ
அசமி -இந்த எம்பெருமானுக்கு
காலம் சகலம் அபி -எல்லா காலங்களிலும்
சர்வத்ர -எல்லா இடங்களிலும்
சகலா ஸூ அவஸ்தா ஸூ -எல்லா அவச்தைகளிலும்
மம-என்னுடைய
சஹஜ கைங்கர்ய விதய -இயற்கையான அடிமைத் தொழில்
ஆவிஸ் ஸ் யு -விளையக் கடவன
சரமபதத்தின் அர்த்தத்தை அனுவதித்தபடி –

————

தேஹா ஸக்தாத்ம புத்திர் யதிபவதி பதம் ஸாது வித்யாத்ருதீயம்
ஸ்வாதந்த்ர்யாந்தோ யதிஸ்யாத் ப்ரதமம் இதர சேஷத்வதீஸ்சேத் த்விதீயம் |
ஆத்மத்ராணோந்முகச்சேத் நம இதி ச பதம் பாந்தவாபாஸலோல:
சப்தம் நாராயணாக்யம் விஷய சபலதீஸ்சேத் சதுர்த்தீம் ப்ரபன்ன: ||
-4-

பிரபத்தி என்னும் சரணாகதி உபாயத்தை ஏற்றுக்கொண்டவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்படும் சந்தேஹங்களுக்கு இந்தச்லோகத்தில் விளக்கம் கூறப்படுகிறது. உடலைவிட வேறு ஜீவன் இல்லை என்கிற ஸந்தேஹம் எழும்போது மூன்றாம் பதமான மகாரத்தைக் கூர்ந்து கவனித்துத் தெளிவு பெறுக. மகாரப் பொருள் ஞாநம், அறிவில்லாத தூக்கம், மரணம் முதலிய நிலைகளிலும் உடல் இருப்பதால் அறிவுக்கு ஆதாரமாக இவ்வுடலைக் கூறுவதற்கில்லை என்று அறியலாம். அறிவாதாரமாக ஆத்மாவை அறிந்தபின் அவன் சுதந்திரனா என்கிற சந்தேஹத்தை ப்ரதம பதமான அகாரத்தின் பொருளாகவே தெளிய வேண்டும். ஆத்மா நாராயணனுக்கு உரியவன் என்று தெரிந்ததும் இரண்டாவது பதமான உகாரம் நாராயணனுக்கே உரியவன் மற்றவர்களுக்கு உரியவனல்லன் என்பதைத் தெரிவிக்கிறது. ​தன் ரக்ஷணத்தில் முயற்சி உண்டாகும்போது ​’நம:’பதத்தின் பொருள் உணரத்தக்கது. எனக்குரியனல்லன் என்பது அதன் பொருள். ஆபாஸ பந்துக்களான தேஹஸம்பந்தமுள்ளவர்களிடத்தில் நசை உண்டாகும்போது நாராயண என்னும் பதப்பொருள் நோக்கத்தக்கது. அதனால் அவனோடு உண்டான நித்ய ஸம்பந்தம் அறியலாம். சப்தாதி விஷயங்களில் பற்றுண்டாம்போது சதுர்த்தியின் பொருள் உணரத்தக்கது. அவனிடத்தில் கைங்கர்யமே சேதனனுக்கு ஸ்வரூபம் என்பது புலப்படும். இவ்விதம் உலக வாழ்க்கையில் ஏற்படும் அல்ப ஆசைகளைக் கழித்துக்கொள்ள வேண்டியது.

தேக ஆசக்த ஆத்மபுத்திர் யதி பவதி பதம் சாது வித்யாத் த்ருதீயம்
தேக ஆசக்த -ஆத்மபுத்தி -பவதி யதி-
தேஹத்திலே ஊன்றின ஆத்மபுத்தி -தேகாத்ம ப்ரமம் யுடையவனாகில் –
த்ருதீயம் பதம் சாது வித்யாத் –
பிரணவத்தில் மூன்றாவது பதமான மகாரார்த்தை நன்கு நோக்கக் கடவன்-
ஸ்வாதந்த்ர்ய அந்தோ யதி ஸ்யாத் ப்ரதம மிதர சேஷத்வதீச் சேத த்வதீயம்
ஸ்வா தந்த்ர்ய அந்த ச்யாத்யாதி-
ஸ்வ தந்திர ஆத்ம ப்ரமம் யுடையவனாகில்
பிரதம பதம் வித்யாத் –
முதல் பதமான லுப்த சதுர்த்தியோடு கூடின அகாரார்த்தை நோக்கக் கடவன்
இதர சேஷத்வதீ சேத்-
அந்ய சேஷத்வ ஜ்ஞானம் யுடையவன் ஆகில்
த்வதீயம் பதம் வித்யாத்
இரண்டாவது பதமாக உகாரத்தை நோக்கக் கடவன் –
ஆத்மத்ராண உந்முகச் சேத நம இதி ச பதம் பாந்தவா பாசலோலா-சப்தம் நாரயணாக்க்யம்-
ஆத்மத்ராண உந்முக சேத் –
ஸ்வ ரஷணத்தில் ஊக்கம்  யுடையவன் ஆகில்
நம இதி பதம் வித்யாத் –
நம என்ற நடுப்பதத்தை நோக்கக் கடவன் –
பாந்த ஆபாஸ லோல –
ஆபாஸ பந்துக்களின் இடத்தில் ஆசக்தி யுடையவன்
நாராயணாக்யம் சப்தம் வித்யாத்
நாராயண பதத்தை நோக்கக் கடவன் –

விஷய சபலதீச் சேத சதுர்தீம்
சப்தாதி விஷயங்களில் ஊன்றின புத்தியை யுடையவனாகில்
நாராயண பதத்தின் மேல் யுள்ள
வ்யக்த சதுர்த்தியை நோக்கக் கடவன்

ப்ரபன்ன
இப்படி எல்லாம் நோக்கக் கடவனான அதிகாரி யார் என்னில்
பிரபன்ன அதிகாரி –

திருமந்தரம் சப்த சக்தியாலும் அர்த்த சக்தியாலும் ரஷணம் செய்து அருளும் –
உபாசனர் ஜபம் -செய்து சப்த சக்தியால் பெறுவார்
பிரபன்னர் எம்பெருமானே உபாயம் உபேயம் – என்
முமுஷூப்படி -எம்பிரான் எந்தை என்கையாலே –
நான் பிறர்க்கான அன்றும் அவன் நமக்காக இருக்கும் –
இரா மடமூட்டுவாரைப் போலே உள்ளே பதி கிடந்தது சத்தையே பிடித்து நோக்கிக் கொண்டு போரும் –
நாராயண -கரேன வ்யுத்பத்தியும் கர்மணி வ்யுத்பத்தியும் சாஸ்திர சித்தம்
ஈயதே அசௌ இதி அயநம்-என்கிற இது கர்மணி வ்யுத்பத்தி  -உபேயத்வம் பலிக்கும்
தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் -சர்வபிரகார விசிஷ்டமாய்
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் –என்னுடை வாணாள் -திருமங்கை ஆழ்வார் –

————

நேத்ருத்வம் நித்யயோகம் ஸமுசித குண ஜாதம் தநுக்யாபநம் ச உபாயம்
கர்த்தவ்ய பாகம் து அத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரஸித்தம் |
ஸ்வாமித்வம் ப்ரார்த்தநாஞ்ச ப்ரபலதர விரோதிப்ரஹாணம்
தசைதான் மந்தாரம் த்ராயதே சேத்யதிகத நிகம: ஷட்பதோயம் த்விகண்ட: ||
-5-

இந்த ச்லோகம் மந்த்ர ரத்னமான த்வயத்தை விவரிக்கிறது. த்வயம் என்பது இரு கண்டங்களும் ஆறு பதங்களும் கொண்டு அமைந்தது. பத்துப் பொருளை உட்கொண்டிருக்கிறது: (1) சேதனனைத் தன் வயமாக நடத்தும் திறமை (2) பிராட்டியோடு பிரிக்க முடியாத நிலை (3) ஈச்வரத் தன்மைக்கேற்ற இனிய குண ஸமூஹம் (4) அழகிய திருமேனி (5) உபாயம் (6) சேதனன் செய்ய வேண்டிய கடமை (7) இருவருமான சேர்த்தியில் கைங்கர்யம் என்னும் பலன் (8) உரிமை என்னும் ஸம்பந்தம் (9) கைங்கர்ய ப்ரார்த்தனை (10) கைங்கர்யத்துக்கு இடையூறாக உள்ளவைகளிலிருந்து விடுதலை – ஆகிய இந்தப் பத்துப் பொருள்களையும் இடைவிடாது நினைப்பவனை ரக்ஷிக்கிறது என்னும் இதை வேதத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

நேத்ருத்வம் நித்யயோகம் சமுசித குணஜாதம் தநுக்யாப நம் ச
நேத்ருத்வம் –
புருஷகாரத்வத்தையும்
நித்யயோகம்-
ஒரு நொடிப் பொழுதும் விட்டுப் பிரியாத நித்ய சம்ச்லேஷத்தையும்
சமுசித குணஜாதம் –
இன்றியமையாத  திருக் குணங்களின் திரளையும்
தநுக்யாப நம் ச-
திரு மேனியைக் காட்டுதலையும் –
உபாயம் கர்த்தவ்யபாகம் த்வத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரசித்தம்-
உபாயம் –
உபாயத்தையும் –
கர்த்தவ்யபாகம் –
சேதனன் செய்ய வேண்டிய தான அத்யாவசாயத்தையும்
த்வத மிதுநபரம் ப்ராப்யம் –
இருவருமான சேர்த்தியை விஷயீ கரித்ததான கைங்கர்யத்தையும்
மேவம் ப்ரசித்தம்-
இங்கனம் பிரசித்தமாய் இரா நின்றது-

ஸ்வாமித்வம் ப்ரார்த்த நாஞ்ச பிரபலதர விரோதி ப்ரஹாணம் தசைதான்
ஸ்வாமித்வம் –
சர்வ சேஷித்வத்தையும்
ப்ரார்த்த நாஞ்ச –
கைங்கர்ய பிரார்த்தனையையும் –
பிரபலதர விரோதி ப்ரஹாணம் –
மிகவும் பிரபலமான உபேய விரோதியை கழிக்கைக்கும்
தசைதான்

மந்தாரம் த்ராயதே சேத்ய திகைத நிகமஷ் ஷட்பதோயம் த்விகண்ட-
மந்தாரம் –
மனனம் செய்கிற உத்தம அதிகாரியை
த்ராயதே இதி
காப்பாற்றுகின்றது என்று
சேத்ய திகைத நிகமஷ் ஷட்பதோயம் த்விகண்ட
அயம்
அந்த த்வயம் மந்த்ரமானது
ஏதான் தச
இந்த பத்து அர்த்தங்களையும்
அதிகத நிகம
வேத ப்ரதீதமாயும்
த்வீ கண்ட
இரண்டு கண்டங்களை யுடையதாயும்
ஷட்பத
ஆறு பதங்களை யுடையதாயும்-

த்ராயதே இதி
காப்பாற்றுகின்றது என்று
ஏவம் ப்ரசித்தம்-
இங்கனம் பிரசித்தமாய் இரா நின்றது-
1-ஸ்ரீ –நேத்ருத்வம் -ஸ்ரீயதே -ஸ்ரேயதே -ச்ருணோதி -ச்ராவயதி -ஸ்ருணாதி -ச்ரீணாதி
2- மத்-நித்ய யோகத்வம்
3- நாராயண -வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌசீல்யம் ஜ்ஞானம் சக்தி-சமுசித குணஜாதம்
4- சரனௌ-திவ்ய மங்கள விக்ரஹம் -த நுக்யாபனம் –
5-சரணம் -உபாயம் இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும்
6-பிரபத்யே -கர்த்தவ்யபாகம் -வாசிக காயிக மானசீகங்கள் -கர்த்தவ்யம் புத்யர்த்தம்
7-ஸ்ரீ மதே-மிதுன பரம் பிராப்யம் -கைங்கர்ய பிரதி சம்பந்த தத்வேன அன்வயம்
8-நாராயண -ஸ்வாமித்வம்
9-ஆய -ப்ரார்த்த நாஞ்ச -கைங்கர்ய பிரார்த்தனையையும் –
10-நம-பிரபலதர விரோதி ப்ரஹாணம் -மிகவும் பிரபலமான உபேய விரோதியை கழிக்கைக்கும்-
கடகவல்லி நிகமத்தில் வேதபாகத்தில் உள்ளதே -அதிகத நிகம-

——————

ஈசாநாம் ஜகதாம் அதீச தயிதாம் நித்யாநபாயாம் ச்ரியம்
ஸம்ஸ்ரீத்யாச்ரயணோசிதாகில குணஸ்யாங்க்ரீர் ஹரேராச்ரயே |
இஷ்டோபாயதயா ச்ரியாச ஸஹிதாயாத்மேஸ்வராயார்த்தயே
கர்த்தும் தாஸ்யம் அசேஷமப்ரதிஹதம் நித்யம் த்வஹம் நிர்மம: ||–6-

பிராட்டியை முன்னிட்டு எம்பெருமானிடத்தில் கைங்கர்ய ப்ரார்த்தனையைத் தெரிவிக்கிறது. உலகத்தை நியமிப்பவனாம் எம்பெருமானுடைய அன்பைப் பெற்றவளும் என்றைக்கும் அழிவில்லாதவளுமான பிராட்டியை முன்பு ஆச்ரயித்து ஆச்ரயணத்துக்குத் தேவையான எல்லாக் குணங்களையும் பெற்றிருக்கும் எம்பெருமானுடைய திருவடிகளை நான் பற்றுகிறேன். எனக்கு இஷ்டமான மோக்ஷத்துக்கு உபாயமாகப் பற்றுகிறேன். பிராட்டியுடன் கூடியவனும் சேதனங்களுக்கு நியாமகனுமான எம்பெருமானை உத்தேசித்தே நித்தியமான எல்லா விதமான கைங்கர்யத்தைச் செய்யவும் அடியேனுக்குக் கைங்கர்ய பலத்தில் ஸம்பந்தம் இராமலும் தடையின்றிச் செய்ய வேண்டும் எனப் ப்ரார்த்திக்கிறேன்.

ஈசாநாம் ஜகதாம் அதீச தயிதாம் நித்ய அநபாயாம் ச்ரியம்
ஈசாநாம் ஜகதாம் -ஜகதாம் ஈசா நாம்
உலகங்களுக்கு
அதீச தயிதாம் –
சர்வேஸ்வரனுக்கு பிராண வல்லபையுமாய்
நித்ய அநபாயாம் –
ஒரு பொழுதும் விட்டுப் பிரியாத வளாய் இருக்கின்ற –
ச்ரியம்-
பெரிய பிராட்டியாரை-

சம்ச்ரித்ய ஆஸ்ரயணோசித அகில குணச்ய அங்க்ரீ ஹரே ஆஸ்ரயே-இஷ்ட உபாயதயா-
சம்ச்ரித்ய –
புருஷகாரமாகப் பற்றி
ஆஸ்ரயணோசித அகில குணச்ய –
சரண வரணத்துக்கு   பாங்கான சகல குணங்களையும் யுடைய
அங்க்ரீ ஹரே –
எம்பெருமானுடைய திருவடிகளை
ஆஸ்ரயே இஷ்ட உபாயதயா –
இஷ்ட உபாயதயா ஆஸ்ரயே –
இஷ்ட சாதனமாகப் பற்றுகிறேன்
ஆக பூர்வ கண்டார்த்தம் அனுசந்தித்த படி –

ச்ரியா ச சஹிதாய ஆத்மேச்வராய -கர்த்தும் தாஸ்யம் அசேஷம் அப்ரதிஹதம் நித்யம் த்வஹம் நிர்மம-
பெரிய பிராட்டியாரோடு கூடி இருந்துள்ள
சர்வ சேஷியான நாராயணனுக்கு
அஹம் நிர்மம-
கைங்கர்யத்தில் களையான மமகாரம் சிறிதும் இல்லாத அடியேன் –
தாஸ்யம் அசேஷம் –
அசேஷம் தாஸ்யம் –
சகலவித கைங்கர்யத்தையும்
அப்ரதிஹதம் நித்யம் –
இடையூறின்றி நித்யம்
அர்த்தயே கர்த்தும் –
செய்யும் பொருட்டு பிரார்த்திக்கிறேன் –

கீழ் பதார்த்த விவரண ஸ்லோஹம்
இது  வாக்யார்த்த  பிரதிபாதாக ஸ்லோஹம்
சர்வலோக ஈஸ்வரி -பித்தர் பனிமலர் பாவைக்கு -கால நியமம் வேண்டாம் ருசி ஒன்றே வேண்டுவது -மூன்று விசேஷணங்கள்
அபராத பயத்தாலே பிராட்டியை முன்னிட்டே பற்ற வேண்டுமே
ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதக குணங்கள்
ஆஸ்ரய கார்ய ஆபாத குணங்கள்
சத் சம்ப்ரதாய சாராம்சம் –

————

மத் ப்ராப்த்யர்த்த தயா மயோக்தமகிலம் ஸந்த்யஜ்ய தர்மம் புன:
மாமேகம் மதவாப்தயே சரணமித்யார்த்தோவசாயம் குரு |
த்வாமேவம் வ்யவஸாய யுக்தமகிலம் ஞாநாதி பூர்ணோஹ்யஹம்
மத்ப்ராப்தி ப்ரதிபந்தகம் விரஹிதம் குர்யாம்சுசம் மாக்ருதா: ||
-7-

என்னை அடைவதற்குறுப்பாக நான் கூறின எல்லா உபாயங்களையும் விட்டு என்னை அடைய என்னையே ரக்ஷகமாக அடைவாய். மிக துக்கத்துடன் நிச்சயித்திரு. இப்படிப்பட்ட நிச்சயத்தை உடைய உன்னை, எல்லா வகையான ஞானம் முதலிய குணங்கள் நிறைந்த நான், என்னை அடைவதற்குத் தடையாக உள்ளவைகளிலிருந்து உன்னை விடுதலை அடையச் செய்வேனாக. நீ சோகிக்க வேண்டா.

மத் ப்ராப்தி அர்த்ததயா மயா உக்தம் அகிலம் சம்த்யஜ்ய தர்மம் புந மாம் ஏகம்-
மத் ப்ராப்தி அர்த்ததயா –
என்னைப் பெருகைக்கு யுபாயமாக
மயா உக்தம் –
உன் மனத்தை சோதிப்பதாக என்னாலே சொல்லப் பட்ட
அகிலம் சம்த்யஜ்ய தர்மம் –
சகல தர்மங்களையும் விட்டு
புந மாம் ஏகம் –
மாம் ஏகம் புன –
என் ஒருவனையே குறித்து-

மநவாப்தயே சரணம் இத்யார்த்தோ வஸாயம் குரு
மநவாப்தயே சரணம் இத் யார்த்தோ வஸாயம்-
ஆர்த்தி மிகுந்தவனாய்
என்னைப் பெறுகைக்கு நானே உபாயம் என்கிற அத்யவசாயத்தை
குரு-
செய்வாயாக –

த்வாம் ஏவம் வ்யவசாய யுக்தம் அகில ஞானாதி பூர்ணோ ஹ்யஹம்
த்வாம் ஏவம் வ்யவசாய யுக்தம் –
ஏவம் விவசாய யுக்தம் த்வாம் -இத்தகைய அத்யாவசாயத்தோடே கூடிய என்னை
அகில ஞானாதி பூர்ணோ ஹ்யஹம்-
ஞானம் முதலிய குணங்கள் நிறைந்த நான் –

மத் ப்ராப்தி ப்ரதிபந்த கைர் விரஹிதம் குர்யாம் சுசம் மா க்ருதா-
மத் ப்ராப்தி ப்ரதிபந்தகைர் விரஹிதம் குர்யாம் –
என்னைப் பெறுகைக்கு இடையூறாய் யுள்ள
பாபங்கள் அற்றவனாய் செய்யக் கடவேன்
சுசம் மா க்ருதா-
துக்கம் கொள்ளாதே-

—————

நிஸ்சித்ய த்வததீநதாம் மயி ஸதா கர்மாத்யுபாயான் ஹரே:
கர்த்தும் த்யக்துமபி ப்ரபத்துமநலம் ஸீதாமி து:காகுல: |
ஏதத் ஞாநமுபேயுஷோ மம புனஸ் ஸர்வாபராதக்ஷயம்
கர்த்தா ஸீதி த்ருடோஸ்மி தே து சரமம் வாக்யம் ஸ்மரன் ஸாரதே! ||
8-

என்னிடம் உள்ள கர்மம் முதலிய உபாயங்களை எப்போதும் உன் அதீநமாகவே நிச்சயித்து, எம்பெருமானே! கர்மங்களைச் செய்யவும், விடவும் அல்லது சரணாகதி செய்வதற்கும் திறமையற்றவனாக வருந்துகிறேன். மிக வருத்தத்தால் கலங்குகிறேன். இந்த அறிவை அடைந்துள்ள எனக்கு உள்ள எல்லா வகையான குற்றங்களையும் அழித்து ரக்ஷிக்கக் கடவாய் என்பதை உனது கடைசியான வார்த்தையைக் கேட்டுத் தெளிகிறேன்.

நிச்சித்ய த்வத் அதீந தாம் மயி சதா கர்மாதி உபாயான் ஹரே
நிச்சித்ய த்வத் அதீந தாம் மயி சதா
மயி சதா த்வத் அதீந தரம் நிச்சித்ய –
அடியேன் எப்போதும் தேவரீருக்கே அதீனமான
ஸ்வரூபம் ஸ்திதி பிரவ்ருத்திகளை யுடையவன் என்பதை நிச்சயித்து –
கர்மாதி உபாயான் –
கர்மாதி உபாயான் -கர்ம யோகம் முதலான் உபாயங்களை
ஹரே-
எம்பெருமானே-
கர்த்தும் த்யக்தும் அபி பிரபத்தும் அநலம் ஸீதாமி துக்காகுல
கர்த்தும் த்யக்தும் அபி –
செய்வதற்கும் விடுவதற்கும்
பிரபத்தும் –
பிரபத்தி பண்ணுவதற்கும் –
அநலம் ஸீதாமி துக்காகுல-
அசமர்த்தனாய் -மிகவும் துக்கப்படா நின்றேன்-

ஏதத் ஞானம் உபேயுஷே மம புநஸ் சர்வ அபராத ஷயம்-கர்த்தா ஸீதி –
ஏதத் ஞானம் உபேயுஷே மம –
பகவானே உபயம் என்று துணிந்து இருக்கை யாகிற
இந்த அத்யாவசாயத்தை பெற்று இருக்கும் அடியேனுக்கு
புநஸ் சர்வ அபராத ஷயம்-கர்த்தா ஸீதி –
சகல பாப  நிவ்ருத்தியையும்
தேவரீரே பண்ணித் தர வல்லீர் என்று கொண்டு-

த்ருடோச்மி தே து சரமம் வாக்யம் ஸ்மரன் சாரதே-
த்ருடோச்மி-த்ருட அஸ்மி –
துக்கம் அற்று நிர்ப்பரனாய் இருக்கின்றேன்
தே சாராதே –
பார்த்த சாரதியாய் நின்ற தேவரீருடைய
து சரமம் வாக்யம் ஸ்மரன் சாரதே
கடைசியான வாக்யத்தை ஸ்மரித்துக் கொண்டு –

நெறி காட்டி நீக்குதியோ நின்பால்
மார்விலே கை வைத்து உறங்க பிராப்தம்
பிரபத்தும் அபி அநலம்-
ஸ்வரூப அனுரூபத்வம்
சுக ரூபத்வம்
நிரபாயத்வம்
சித்தத்வம்
ச்வத பல சாதனத்வம்
நிரபேஷத்வம்
அவிளம்பித பலபிரதத்வம்
ஏகத்வம்
முதலானவற்றாலே சுகரமாய் இரா நின்ற உபாயமானது
சோக நிவ்ருத்திக்கு சொல்லப் பட்டு இருந்தாலும்
அதற்கு அங்கமாக விதிக்கப்பட்ட சர்வ தர்ம த்யாகம் பண்ணப் போகாமையாலும்
ஆர்த்தி இல்லாமையாலும்
ஆகிஞ்சன்யம் இல்லாமையாலும்
மகா விசுவாசம் இல்லாமையாலும்
சர்வதர்ம த்யாகத்தை அங்கமாக யுடைய பிரபத்தியையும் செய்ய அசக்தனாய்-அசமர்த்தனாய் -இருக்கிற நான் –
துக்காகுல சீதாமி –
சோக விசிஷ்டனாய் தளரா நின்றேன்-

பூர்வார்த்தத்தில் சீதாமி -என்றும்
உத்தரார்த்தத்தில் த்ருடோச்மி-என்றும் சொன்ன இவற்றால்
தன்னை நோக்கும் அளவில் அவசாதமும்
எம்பெருமானை நோக்கும் அளவில் தந் நிவ்ருத்தி பூர்வகமான நிர்பரத்வ அனுசந்தானமும்
இவ்வதிகார்க்கு யாவாஜ் ஜீவனமும் அனுவர்த்திக்கும் -என்றது ஆயிற்று –

———————————————————————————–

ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம்

February 13, 2024

மன்னுயிர்காளிங்கே மணவாள மாமுனிவன்
பொன்னடியாம் செங்கமல போதுகளை – உன்னி
சிரத்தாலே தீண்டில் அமானுவனும் நம்மை
கரத்தாலே தீண்டல் கடன்.

பல பல மஹாசார்யர்களின் அவதாரத்தினால் புனிதமான இவ்வுலகில் பூர்வாசார்யர்கள் என்று இன்றைக்கும் நாம் வழங்கி வரும் மஹாசார்யர்களின் பரம்பரையானது மணவாள மாமுனிகளுடன் நிறைவு பெறுகின்றது. அவருக்கு பின்னும் பல மகான்கள் திரு அவதாரம் செய்திருப்பினும் நம்பெருமாளே அழகிய மணவாளனான திருக்கோலத்தில் ஆசார்ய பூர்த்தியுள்ள  மாமுனிகள் பக்கலிலே சிஷ்யனாக இருந்தமையால், பூர்வாசார்ய குருபரம்பரையானது மாமுனிகளுடன் பூர்த்தி அடைந்ததாகக் கருதுவர் பெரியோர். நல்லார் நவில் குருகூர் என்கிற ஆழ்வார் திருநகரியில் திரு நாவீருடைய பிரான் தாசர் என்கிற மஹாசார்யருக்கு திருக்குமாரராய் சாதாரண வருடத்தில் ஐப்பசி மாதத்தில் திருமூல நக்ஷத்ரத்தில் திரு அவதாரம் செயதார். மணவாள மாமுனிகளுடைய ஆசார்யர் திருவாய்மொழிப் பிள்ளை ஆவார்.

திருவாய்மொழிப் பிள்ளை ஒரு நாள் எம்பெருமானாருடைய குணாநுபவம் பண்ணிக்கொண்டு இருக்கையில் மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுசன் என்றும் உள்ள பல பாசுரங்களை சிந்தை செய்து ஆழ்வார் திருவடிகளிலும் அருளிச்செயல் திறத்திலும் எம்பெருமானாருக்கு இருந்த பெருத்த ஈடுபாட்டை மனத்தில் கொண்டு இத்திருநகரியிலே அவருக்கு ஒரு தனிக்கோயில் அமைக்க வேணுமென்று சிஷ்யர்களை நியமித்து அருளினார்.

நாயனாரும் ( மணவாளமாமுனியும் ) அந்த உடையவர் திருவடிகளிலே மிகவும் பக்தியுடன் உரிய கைங்கர்யங்களை செய்து வந்தார்.  அந்த உடையவரின் திருவடிகளிலே ஒரு ஸ்தோத்ரம் விக்ஞாபிக்க வேணுமேன்னு ஆசார்ய நியமனமாக யதிராஜ விம்சதி என்னும் ஸ்துதியை இயற்றினார். இந்த யதிராஜ விம்சதியின் மாதுர்யம் முதலிய குண விசேஷங்களைப்பற்றி அண்ணா வரவரமுநிசதகத்தில் அருளிசெய்துள்ளார்.

திராஜ விம்சதியின் அவதாரிகை

இங்ஙனம் பூர்வதிநசர்யையில், அபிகமநம், உபாதாநம், இஜ்யை என்னும் மூன்று வகையான நித்யாநுஷ்டாநங்களில் தம்முடைய ஆசார்யராகிய மணவாளமாமுனிகளை அநுபவித்து, நான்காம் அநுஷ்டாநமாகிய ஸ்வாத்யாயத்தில் அவரை அநுபவிக்க விரும்பிய எறும்பியப்பா, பலவகைப்பட்ட ஸ்வாத்யாயத்தில், பூர்வாசார்ய க்ரந்தங்களைச் சிஷ்யர்களுக்குக் காலக்ஷேபமாகச் சொல்லுதலென்னும் ஒருவகையை ‘வாக்யாலங்க்ருதி’ வாக்யாநாம் வ்யாக்யாதாரம் (உத்தர திநசர்யை 1) என்று மேலே சொல்ல நினைத்து, புதிதாக ஒரு க்ரந்தத்தை நிர்மாணித்தல் என்னும் மற்றொறு வகையை இப்போது சொல்ல விரும்பியவராய், மணவாளமாமுனிகள் தமது ஆசார்ய நிஷ்டையாகிய தகுதிக்கேற்ப எம்பெருமானாரைப்பற்றி அருளிச்செய்த யதிராஜ விம்சதி என்ற க்ரந்தத்தை இங்கே அநுவாதம் செய்கிறார்.

பரமபூஜ்யரான மணவாளமாமுனிகள், ப்ரபந்நஜனகூடஸ்தரான (மோக்ஷமாகிய பலனுக்கு பகவானே உபாயமென்று கருதி அதற்காக ப்ரபத்தியை அநுஷ்டிக்கும் பெரியோர்கட்கு மூலபுருஷரான) நம்மாழ்வார் முதலான பூர்வாசார்ய பரம்பரையாகக் கிடைத்ததும், தம்முடைய ஆசார்யராகிய திருவாய்மொழிப்பிள்ளையால் தமக்கு உபதேஸிக்கப்பட்டதும், திருமந்த்ரம் த்வயம் சரமஸ்லோகமாகிய ரஹஸ்யங்கள் மூன்றுக்கும் முக்கிய நோக்கத்திற்கு இலக்காகிய – முடிந்தபொருளானதுமாகிய பகவத் ராமாநுஜராகிய எம்பெருமானாரே அபாயமற்ற மோக்ஷோபாயம், அவரே உபேயம் (மோக்ஷத்தில் அடையத்தக்கவர்) என்ற விஷயத்தை, அவரிடத்தில் தாம் வைத்திருக்கிற அதிகமான பக்தியினாலும், ஸம்ஸாரத்தில் உழன்றுகொண்டிருக்கிற ஜநங்களை உய்விக்க வல்லதான தமது கருணையின் பெருக்கினாலும் யதிராஜ விம்சதி என்னும் பெயர் பெற்ற ஸ்தோத்ரத்தின் மூலமாகத் தெளியவருளிச்செய்ய விரும்பி, தாம் செய்யும் ஸ்தோத்ர க்ரந்தம் இடையூறேதுமின்றி இனிதே முடிவு பெறுவதற்காக, தம்முடைய தகுதிக்குத் தக்கவாறு யதிராஜ நமஸ்கார ரூபமான மங்களத்தை இதன் முதலிரண்டு ச்லோகங்களால் செய்தருளுகிறார்.

ரஹஸ்யங்களின் முடிந்த பொருளை உணர்த்தும் இந்தத் துதி நூலில், ரஹஸ்யங்களின் பதங்களுடைய இருபதென்ற எண்ணே, ச்லோகங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டதென்பர் இதன் உரையாசிரியர் திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமி. திருமந்த்ரத்தில் மூன்று பதங்களும், த்வயத்தில் ஆறு பதங்களும், சரம் ச்லோகத்தில் பதினொரு பதங்களுமாக மூன்று ரஹஸ்யங்களிலும் சேர்ந்து இருபது பதங்கள் உள்ளவாற்றை நினைத்து, இந்த யதிராஜ விம்சதி என்ற ஸ்தோத்ரத்திலும் இருபது ச்லோகங்களே அருளிச் செய்யப்பட்டுள்ளமை காண்க. விம்சதி = இருபது.

தனியன்

ய: ஸ்துதிம் யதிபதி ப்ரஸாதி நீம் வ்யாஜஹார யதிராஜவிம்சதிம் |
தம் ப்ரபந்நஜந சாதகாம்புதம் நௌமி ஸௌம்யவரயோகி புங்கவம் ||

பதவுரை:- : – யாவரொருவர், யதிபதி ப்ரஸாதிநீம் – யதிராஜரான எம்பெருமானாரை அருள் செய்யும்படி பண்ணுமதான, யதிராஜ விம்சதிம் – அந்த யதிராஜர் விஷயமான இருபது ச்லோகங்களைக் கொண்டதாகையால் யதிராஜவிம்ஸதி என்னும் பெயருடையதாகிய, ஸ்துதிம் – ஸ்தோத்ரத்தை, வ்யாஜஹார – அருளிச்செய்தாரோ, ப்ரபந்நஜந சாதக அம்புதம் – ப்ரபந்ந ஜநங்களாகிய சாதக பக்ஷிகளுக்கு நீரையுதவும் மேகம் போன்றவரான, தம் ஸௌம்யவர யோகிபுங்கவம் – அந்த அழகிய மணவாளரென்னும் பெயர் கொண்ட முநிஸ்ரேஷ்டரை (அழகியமணவாளமாமுனிகளை), நௌமி – துதிசெய்கிறேன்.

கருத்துரை:- இத்தனியன் எறும்பியப்பா அருளிச்செய்தது. யதிபதி ப்ரஸாதிநீ – இந்த யதிராஜ விம்சதி என்ற ஸ்தோத்ரமானது தன்னை அநுஸந்திப்பவர்கள் விஷயத்தில் யதிபதியான எம்பெருமானாரை அருள் செய்தல்லது நிற்கவொண்ணாதபடி பண்ணவல்லதென்றபடி. ப்ரபந்நஜநசாதக அம்புத: – சாதகப்பறவைக்கு (வானம்பாடிக்கு) உயிர்காக்கும் நீரைப்பொழியுமதான மேகம் போன்றவர். ப்ரபந்நஜநங்களுக்கு மோக்ஷமளித்து உயிர்காக்கும் எம்பெருமானார் என்பது இதன் கருத்து. யோகி புங்கவ: – முனிவர் பெருமான் – மஹாமுனிகள்.

ஸ்ரீமாதவாங்க்ரி ஜலஜத்வய நித்யஸேவா ப்ரமாவிலாஸய பராங்குஸ பாதபக்தம்|
காமாதிதோஷஹரம் ஆத்மபதாஸ்ரிதாநாம் ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா|| 1

பதவுரை:- ஸ்ரீமாதவ அங்க்ரி ஜலஜத்வய – எல்லாவற்றாலுமுண்டான பெருமையை உடையவளான ஸ்ரீமஹாலக்ஷ்மி போன்றவனாகிய திருவின்மணாளனுடைய தாமரைமலர் போன்ற திருவடியிணையில் செய்யத்தக்க, நித்யஸேவா – ப்ரேம  ஆவில ஆஸய – நித்ய கைங்கர்யத்தில் அதிக ப்ரீதியாலே கலங்கிய அறிவையுடைய, பராங்குஸ பாதபக்தம் – பராங்குஸரென்னும் நம்மாழ்வாருடைய திருவடிகளில் பரமபக்தி பூண்டவரும், ஆத்மபத ஆஸ்ரிதாநாம் – தம்முடைய திருவடிகளை அடைந்தவர்களுடைய, காம ஆதி தோஷஹரம் – காமம் முதலிய குற்றங்களைப் போக்கடிப்பவரும், யதிபதிம் – பொறிகளை யடக்கிய துறவிகளுக்குத் தலைவருமான, ராமாநுஜம் – ராமாநுஜரென்னும் எம்பெருமானாரை, மூர்த்நா – தலையால், ப்ரணமாமி – வணங்குகிறேன்.

கருத்துரை:- ஸ்ரீ என்பது மாதவனுக்கு விசேஷணமாகும். ஸ்ரீ போன்ற மாதவனென்பது இதன் பொருள். ஸ்ரீ: என்றது பெரியபிராட்டியாரை. அழகு நறுமணம் மென்மை முதலிய தேஹகுணங்களென்ன, பேரன்பு, நீர்மை, எளிமை முதலான ஆத்மகுணங்களென்ன, அவற்றிலும் சிறந்த அடியாரைக் காப்பதில் திடமான விரதம் பூணுதலென்ன இவை தொடக்கமான பெருமைகளாலே பெரியபிராட்டியாரை ஒத்தவன் அவளுடைய மணவாளனாகிய எம்பெருமானென்பது இதன் திரண்ட பொருள். இங்ஙனன்றிக்கே, ஸ்ரீயினுடைய – மாதவன் திருவடிகள் என்று அந்வயித்து, பிராட்டி நித்யவாஸம் செய்யும் எம்பெருமான் திருவடிகளென்றலும் உண்டு. அப்போது, பிராட்டி எழுந்தருளியிருக்கிற பெருமான் திருவடிகளென்றதாய்க் கொண்டு, “ஸ்ரீமந்தௌ ஹரிசரணௌ ஸமாஸ்ரிதோSஹம்” (பிராட்டியோடு நித்யஸம்பந்தம் பெற்ற ஹரியின் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றினேன் அடியேன்) (ஸுந்தர.ஸ்த.1) என்று கூரத்தாழ்வான் அருளிச்செய்த படியே மேலக்கோட்டையில் போலே பிராட்டியோடு கூடிய பெருமாள் திருவடிகளைச் சொல்லிற்றாகக் கொள்க. கண்ணபிரானுக்குத் தொண்டு செய்யவேணுமென்று மிகவும் ஆசைப்பட்ட நம்மாழ்வார், அவன் வந்து முகங்காட்டும் வரையில் பொறுத்திருக்க வேண்டிய தம்முடைய பாரதந்தர்யத்துக்கு முரண்பட்டதாகிய மடலூர்தலில் மூளும்படி மதிகலங்கப்பெற்றதைத் திருவுள்ளத்திற்கொண்டு ‘மாதவாங்க்ரி ஜலஜத்வய நித்யஸேவா ப்ரேமாவிலாஸய பராங்குஸ’ என்றருளிச்செய்தார். அத்தகைய நம்மாழ்வாரின் திருவடிகளில் பக்திகொண்டவர் எம்பெருமானார். ‘மாறனடி பணிந்துய்ந்தவன் – இராமாநுசன்’ என்றாரிறே அமுதனாரும். அவரை அடியொற்றியிறே ‘பராங்குஸபாதபக்தம் ராமாநுஜம்’ என்று இவரருளிச்செய்ததும். பரருக்கு – வேதத்தைப் ப்ரமாணமாக அங்கீகரியாத ஜைநபௌத்தாதிகளென்ன, வேதத்துக்கு அவப்பொருள் சொல்லும் அத்வைதவாதிகளென்ன இவர்களாகிய – புறமதத்தவராகிய யானைகளுக்கு. அவர்களை அடக்கவல்ல அங்குஸம் போன்றிருத்தலால் நம்மாழ்வார் பராங்குஸர் எனப்பட்டாரென்க. ‘ஒன்றும் தேவும்’ (திருவாய் 4-10) பதிகத்தில் ஆழ்வார் முற்கூறப்பட்டவர்களை அடக்கியது அதன் வ்யாக்யானங்களை ஸேவித்து அறியத்தக்கது.

(ராமாநுஜர்) ராமபிரானுடைய தம்பியான லக்ஷ்மணனுடைய அவதாரமாகையாலே, எம்பெருமானார் ராமாநுஜரென்ற பெயரைப்பெற்றார். அபிநவ தஸாவதாரங்களாகச் சொல்லப்படுகிற ஆழ்வார் பதின்மரில், இராமாவதாரமாக ப்ரஸித்தராகிய நம்மாழ்வாரிடம் லக்ஷ்மணனுடைய அவதாரமாகிய இராமாநுசருக்குப் பரமபக்தி இருப்பது மிகவும் பொருத்தமென்கிறார் வ்யாக்யாதா திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமி. மேலும் அவர் – எம்பெருமானார் தாம் மனம் முதலிய பொறிகளையடக்கிய ஸந்யாஸிகளுக்குத் தலைவராகையாலே, தம்மையடைந்தவர்களுடைய மனத்தில் உண்டாகும் காமம், கோபம், உலோபம், திரிபுணர்ச்சி, செருக்கு, பொறாமை முதலிய குற்றங்களைப் போக்குமாற்றல் படைத்தவர் என்கிறார். தம்மனத்தை அடக்கிய பெருமை படைத்தவர்க்கன்றோ பிறர் மனத்தின்கண் உண்டாகும் குற்றங்களைக் களையுமாற்றல் உண்டாவது என்பது கருத்தாகும். மாதவன் திருவடிகளுக்குப் புதுமணம் புதுமலர்ச்சி மென்மை முதலிய குணங்களைக் கொண்ட தாமரைமலர்களோடு ஒப்புமைக் கூறப்பட்டதால் அக்குணங்கள் திருவடிகளில் உள்ளமை தோன்றுவதன் வாயிலாக- மாதவன் திருவடிகளில் பராங்குஸருக்கு ஏற்பட்ட பக்தி குணங்களுள்ளமையினாலென்பதும், பராங்குஸரின் திருவடிகளுக்குத் தாமரைகளோடு ஒப்புமை கூறாமையினால் அத்திருவடிகளில் இராமாநுசருக்கு ஏற்பட்ட பக்தி, குணங்களுள்ளமையினாலல்லாமல் ‘ஆசார்யன் திருவடிகளில் ஸிஷ்யனுக்கு ஸிஷ்யஸ்வரூபமடியாகவே பக்தியுண்டாகவேணும்’ என்ற நியதிப்படி இயற்கையாகவே அமைந்ததென்பதும் இங்குக் கருதத்தக்கதாகும். குணத்தினாலுண்டான பகவத்பக்தியைக் காட்டிலும் இயற்கையாகவே உண்டாகிய ஆசார்யபக்தி சிறந்ததென்னும் ஸாஸ்த்ரார்த்தம் இதனால் ஸிக்ஷிக்கப்பட்டதாகிறது.

எம்பெருமானாராகிய ஆசார்யரிடத்தில் பக்தராய் ஸந்யாஸியான தமக்கு அவ்வெம்பெருமானாரிடத்தில் பக்தி உண்டானதற்கு, அவர்தாமும் பராங்குஸராகிய ஆசார்யரிடத்தில் பக்தியுடையவராய் ஸந்யாஸி  ஸ்ரேஷ்டராயிருக்கையே காரணமென்பது தோன்றும்படி ‘பராங்குஸபாதபக்தம் யதிபதிம் ராமாநுஜம்’ என்று மாமுனிகள் எம்பெருமானாரை – பராங்குஸபாதபக்தரென்றும் யதிராஜரென்றும் சிறப்பித்தருளினார். “யதீநாம் பதி: யதிபதி:” என்பதற்கு, இடுகுறிப்பெயராகுந்தன்மையினால் ஸேஷி (அடிமையை ஏற்றுக்கொள்ளும் தலைவர்) என்றும், காரணப் பெயராகுந் தன்மையினால் “பாதி (ரக்ஷிக்கிறார்) இதி பதி:” என்று வ்யுத்பத்தியின் மூலம் ரக்ஷகர் என்றும் பொருள் தேறுகிறது. ஸந்யாஸிகட்கு ஸேஷியும் ரக்ஷகரும் எம்பெருமானாரென்னவே, ப்ராப்யரும் (கைங்கர்யத்தையேற்று மகிழுமவரும்) அவரே என்பது ஸித்தித்ததாகிறது. திருமந்த்ரத்திலுள்ள மூன்று பதங்களுக்கும் – ஆசார்யருடைய ஸேஷித்வமும், ரக்ஷகத்வமும், ப்ராப்யத்வமுமன்றோ முடிந்த பொருளாவது. இத்தகைய பெருமை பெற்ற யதிராஜரை – யதிராஜவிம்ஸதியாகிய துதிநூல் இனிதே முடிவடைவதன் பொருட்டு வணங்கினாராயிற்று மாமுனிகள் இந்த ஸ்லோகத்தினால். (1)

—————

ஸ்ரீ ரங்கராஜ சரணாம் புஜ ராஜ ஹம்ஸம் ஸ்ரீமத் பராங்குஸ பதாம் புஜ ப்ருங்க ராஜம் |
ஸ்ரீ பட்ட நாத பரகால முகாப்ஜ மித்ரம் ஸ்ரீவத்ஸ சிஹ்ந ஸரணம் யதிராஜ மீடே || 2

பதவுரை:-

ஸ்ரீரங்கராஜ சரணாம்புஜ ராஜ ஹம்ஸம் – ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளாகிய தாமரை மலர்களுக்கு (தாமரை மலர்களின் நிழலின் கீழே தங்கியிருக்கிற) ராஜஹம்ஸம் போன்றவரும்,

ஸ்ரீமத்பராங்குஸ பதாம்புஜ ப்ருங்கராஜம் – ஸ்ரீமத்பராங்குஸராகிய நம்மாழ்வாருடைய திருவடிகளென்னும் தாமரை மலர்களில் (தேனைப் பருகுவதற்காகப்) படிந்திருக்கிற உயர்ந்த வண்டு போன்றவரும்,

ஸ்ரீபட்டநாத பரகால முகாப்ஜமித்ரம் – ஸ்ரீபட்டநாதராகிய பெரியாழ்வாரென்ன, பரகாலராகிய திருமங்கையாழ்வாரென்ன ஆகியவர்களுடைய திருமுகங்களாகிய தாமரை மலர்களை மலரச்செய்கிற ஸூர்யன் போன்றவரும்,

ஸ்ரீவத்ஸ சிஹ்ந ஸரணம் – ஸ்ரீவத்ஸசிஹ்நராகிய கூரத்தாழ்வானைத் திருவடிகளாக உடையவருமாகிய,

யதிராஜம் – யதிராஜராகிய எம்பெருமானாரை,

ஈடே – துதிக்கிறேன்.

கருத்துரை:-

துர்லபோ மாநுஷோ தேஹோ தேஹிநாம் க்ஷணபங்குர:| தத்ராபி துர்லபம் மந்யே வைகுண்ட ப்ரிய தர்ஸநம்|| (ஸ்ரீபாகவதம் 11-2-29)

[உயிர்களுக்கு, கணநேரத்தில் அழியக்கூடிய மனிதவுடல் கிடைப்பது அரிது,

அது கிடைத்தபோதிலும் வைகுண்டநாதனுடைய அன்புக்கு இலக்கான பாகவதர்களைக் காண்பது மிகவும் அரிது]

என்கிறபடியே பாகவதர்களுடைய ஸேவையே அரியதானால் அவர்களுக்குக் கைங்கர்யம் செய்வது

அரிதென்பதைத் தனியே சொல்லவும் வேண்டியதில்லையாகையால்,

பாகவத கைங்கர்யமாகிய யதிராஜவிம்ஸதியின் விண்ணப்பத்திற்குத் தடைகள் மிகமிக உண்டாகக் கூடுமென்று நினைத்து,

அத்தடைகள் நீங்குவதற்காக மறுபடியும் தன்னுடைய ஆசார்ய நிஷ்டையாகிய தகுதிக்கேற்றபடி

யதிராஜ-ஸ்தோத்ர ரூபமான மற்றொரு மங்கள ஸ்தோத்ரத்தை இயற்றுகிறார் –

ஸ்ரீரங்கராஜ என்று தொடங்கி. இங்குள்ள ஸ்ரீஸப்தம் ஸ்ரீவைகுண்டமும் இவ்வுலகுமாகிய இருவகைச் செல்வங்களைக் காட்டுமதாய்

அவற்றையுடையவன் ரங்கராஜன் என்பதை அறிவிக்கிறது.

அல்லது செம்மை மென்மை நறுமணமாகிய நற்பண்புகளைக் காட்டுமதாய் அவற்றை இயற்கையாகப்பெற்ற

ஸ்ரீரங்கராஜனுடைய திருவடித்தாமரைகளைத் தெரிவிக்கிறது.

இதன்படி ஸ்ரீயை உடையன ரங்கராஜ சரணாம்புஜங்கள் என்ற கருத்துத்தோன்றும்.

பராங்குஸரிடமுள்ள ஸ்ரீமத்த்வமாவது – எம்பெருமானை அநுபவிப்பதும், அவனுக்குத் தொண்டு செய்வதும்

அவற்றிற்கு உறுப்பான பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகளுமாகிய –

ஜீவாத்ம ஸ்வரூபத்திற்குத் தக்க செல்வங்கள் நிறைந்துள்ளமையே ஆகும்.

காணவேணுமென்று ஆசைப்படுகை பரபக்தி,

கண்டபிறகு கூடவேணுமென்னுமாசை பரஜ்ஞாநம்,

கூடிய பிறகு பிரிய நேருமோ என்று அச்சப்படுகை பரமபக்தி என்பர் பெரியோர்.

இவை மூன்றும் உணவுக்குப் பசி போலே பகவதநுபவகைங்கர்யங்களுக்கு முன்பு இருக்கவேண்டுமாம்.

பசி இல்லையேல் உணவுருசிக்காததுபோலே, இம்மூன்றும் இல்லையாகில் பகவான் திறத்தில் நாம் செய்யும்

அநுபவ-கைங்கர்யங்கள் ருசியாதன ஆகுமாம்.

ஆகவே ஆழ்வாருக்கு இம்மூன்றும் இவற்றின் பின்னே நிகழும் பகவதநுபவ-கைங்கர்யங்களும் நிறைந்துள்ளமை

இந்த ஸ்ரீமத் ஸப்தத்தினால் அறிவிக்கபடுகின்றன என்றபடி.

ஸ்ரீபட்டநாத பரகால – பட்டநாதரிடத்திலும், பரகாலரிடத்திலும் பொருந்துமதாய்,

முறையே பரம்பொருள் திருமாலே என்று அறுதியிட்டு அவனுக்குப் பல்லாண்டு பாடுகையாகிற செல்வத்தையும்,

புறச்சமயிகளை அடக்குதல், திருவரங்கம் பெரியகோயிலில் மதிள்கட்டுதல்,

எம்பெருமானைப் பூர்ணமாக அநுபவிக்கவோ, பிரியவோ பொறாத மென்மைத்தன்மையாகிய செல்வங்களையும் குறிக்கிறது.

இத்தகைய மென்மைத்தன்மையை

‘நும்மடியாரெல்லாரோடும் ஒக்க எண்ணியிருத்தீர் அடியேனை’ (பெரிய திரு. 4-9-6) என்று

தாமே விண்ணப்பம் செய்தாரிறே திருமங்கையாழ்வார் இந்தளூரிலெந்தை பெருமானிடம்.

ஸ்ரீவத்ஸசிஹ்ந’ என்றதில், வத்ஸசிஹ்ந என்பது வத்ஸே – மார்பில்,

சிஹ்நத்தை – மறுவையுடைய எம்பெருமானை முற்படக்காட்டி, அவனுடைய பெயரைக் கொண்ட

கூரத்தாழ்வானைப் பின்பு குறிப்பிட்டு, அவ்வாழ்வானுக்குப் பெரியபிராட்டியோடு உள்ள ஒற்றுமையை

ஸ்ரீஸப்தம் தெரிவிக்கிறது. ஸ்ரீயே ஆகிய வத்ஸசிஹ்நரென்றவாறாம்.

தனக்குப் பகைவராகிய ஏகாக்ஷி முதலிய அரக்கியரைக் காப்பாற்றிய ஸீதாப்பிராட்டியோடு

தமக்குக் கண் போகக் காரணமாகிய நாலூரானுக்கும் முத்திநல்கிய கூரத்தாழ்வான்

எல்லையற்ற கருணையுடைமையில் ஒற்றுமையுடையவரிறே.

முன் ஸ்லோகத்தில் ‘ப்ரணமாமி மூர்த்நா’ என்று தலையால் வணங்குதலாகிய காயிகமான மங்களம் செய்யப்பட்டது.

இஸ்லோகத்தில் ‘ஈடே’ என்று துதி செய்தலாகிய வாசிக மங்களம் செய்யப்படுகிறது.

வாக் – காயங்களின் முயற்சி, மனத்தின் கண் நினைவில்லாமல் நிகழாதாகையால் –

மனத்தில் யதிராஜரை உயர்ந்தவராக நினைத்தலாகிய மாநஸிக மங்களமும் செய்யப்பட்டதாகவே கொள்ளத்தக்கது.

இங்ஙனம் இரண்டு ஸ்லோகங்களால் மங்களம் செய்து மேலே நூலைத் தொடங்குகிறார் மாமுனிகள் என்க. (2)

———–

வாசா யதீந்த்ர மநஸா வபுஷா ச யுஷ்மத்பாதாரவிந்தயுகளம் பஜதாம் குரூணாம் |
கூராதிநாதகுருகேஸமுகாத்யபும்ஸாம் பாதாநுசிந்தநபரஸ்ஸததம் பவேயம்
|| 3

பதவுரை:- ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே, மநஸா – மனத்தினாலும், வாசா – நாவினாலும், வபுஷா  – தேஹத்தினாலும், யுஷ்மத் – தேவரீருடைய, பாதாரவிந்தயுகளம் – தாமரைமலர் போன்ற திருவடிகளின் இரட்டையை, பஜதாம் – ஸேவித்துக் கொண்டிருக்கிற, குரூணாம் – ஆசார்யர்களாகிய, கூராதிநாதகுருகேஸமுக ஆத்யபும்ஸாம் – கூரத்தாழ்வான், திருக்குருகைப்பிரான்பிள்ளான் முதலிய பூர்வாச்சார்யர்களுடைய், ஸததம் பாத அநுசிந்தந பர: – எப்போதும் திருவடிகளைச் சிந்திப்பதில் ஊன்றியவனாக, பவேயம் – (அடியேன்) ஆகக்கடவேன்.

கருத்துரை:- மேல் ஸ்லோகத்தில் யதிராஜருக்கடிமையாயிருத்தலை ப்ரார்த்திக்கிறவராய்க்கொண்டு, அது தன்னைத் திடப்படுத்துகிற – யதிராஜ ஸிஷ்யர்களுக்கு அடிமையாயிருத்தலை இந்த ஸ்லோகத்தினால் ப்ரார்த்திக்கிறார். கூராதிநாதர்-கூரத்தாழ்வான். குருகேசர் எம்பெருமானாரால் ஜ்ஞாந புத்திரராக ஸ்வீகாரம் செய்து கொள்ளப்பெற்ற திருக்குருகைப்பிரான் பிள்ளான். முக(முதலான) என்பதனால் எம்பார், முதலியாண்டான் தொடக்கமான மற்றுமுண்டான ஸிஷ்யர்களைக் கொள்க. குரூணாம்-க்ருணந்தி இதி குரவ: என்ற வ்யுத்பத்தியினால் உபதேஸம் செய்யுமவர்களை இந்த குருஸப்தம் குறிக்கும். மேலும் ‘கு’ என்பது அறியாமையாகிற அகவிருளையும், ‘ரு’ என்பது அதைப்போக்குமவரையும் குறிப்பிட்டு-குருஸப்தம் அறியாமையைத் தமது உபதேஸத்தால் போக்குமவரைக் குறிப்பிடும். இது கூரத்தாழ்வான் முதலியோர்க்கு அடைமொழியாகும். பும்ஸாம் என்பதில் பும்ஸ்ஸப்தம் – புநந்தி இதி புமாம்ஸ: என்ற வ்யுத்பத்தியினால் பரிஸுத்தமானவர்களைத் தெரிவிக்குமதாய், பகவானுக்கும் அவனடியார்களுக்கும் சிறப்பாக எம்பெருமானார்க்கும் அடிமையாக இருப்பதனால் பரிஸுத்தர்களான கூரத்தாழ்வான் முதலியோர்க்கு விஸேஷணமாகும். அநுசிந்தநமானது-கூரத்தாழ்வான் முதலிய ராமாநுஜ ஸிஷ்யர்களைத் தமக்கு ஸேஷிகளாக – தலைவர்களாக த்யாநித்தலாகும். பவேயம் – இது ப்ரார்த்தனை என்னும் பொருளில் வந்த லோட் ப்ரத்யயாந்தமாகையால் கூரத்தாழ்வான் முதலிய பூர்வம் புருஷர்களுடைய திருவடிகளை அடியேன் சிந்திப்பவனாக ஆகவேண்டுமென்று, யதீந்த்ரரான தேவரீரை ப்ரார்த்திக்கிறேன் என்ற கருத்து இதற்குத் தேறும். (3)

————–

நித்யம் யதீந்த்ரதவ திவ்யவபு:ஸ்ம்ருதௌமே ஸக்தம் மநோபவது வாக்குணகீர்த்தநேSஸௌ |
க்ருத்யஞ்ச தாஸ்யகரணம் து கரத்வயஸ்ய வ்ருத்யந்தரேSஸ்து விமுகம் கரணத்ரயஞ்ச ||
-4-

பதவுரை:- ஹே யதீந்த்ர – வாரீர் யதீந்த்ரரே, மே – அடியேனுடைய, மந: – மனமானது, தவ – தேவரீருடைய, திவ்யவபுஸ்ம்ருதௌ – மிகவும் அழகிய திருமேனியை நினைப்பதில், நித்யம் – எப்போதும், ஸக்தம் – பற்றுடையதாக, பவது – இருந்திடுக. அஸௌ மே வாக் – தேவரீரைத் துதியாமல் வெகுதூரத்தில் இருக்கிற அடியேனுடைய வாக்கானது, தவ – தேவரீருடைய, குணகீர்த்தநே – நீர்மை எளிமை கருணை அழகு மென்மை முதலிய கல்யாணகுணங்களை ஆசையோடு துதிப்பதில், ஸக்தா பவது – பற்றுடையதாக இருந்திடுக. மே – அடியேனுடைய, கரத்வயஸ்ய – இரண்டு கைகளுக்கும், தவ – தேவரீருக்கு, தாஸ்ய கரணம் து – அடிமை செய்வதொன்றே, க்ருத்யம் – கடமையாக, அஸ்து – இருந்திடுக. மே – அடியேனுடைய, கரணத்ரயம் – (தேவரீரையே நினைப்பதிலும் துதிப்பதிலும் அடிமைசெய்வதிலும் பற்றுடையதாக இருக்கவேணுமென்று ப்ரார்த்திக்கப்பட்ட) மனம் வாக்கு காயம் என்கிற மூன்று கருவிகளும், வ்ருத்தி அந்தரே – வேறொருவரை நினைப்பதும் துதிப்பதும் அடிமை செய்வதுமாகிய வேறு காரியங்களில், விமுகம் ச அஸ்து – பராமுகங்களாகவும் இருந்திடுக.

கருத்துரை:- கீழ் ஸ்லோகத்தில் யதிராஜ ஸிஷ்யர்களான கூரத்தாழ்வான் முதலியவர்களுக்குத் தாம் அடிமையாயிருத்தலை ப்ரார்த்தித்தவர், அதனால் திடப்படுத்தப்படுகிற யதிராஜருக்குத் தாம் அடிமையாயிருத்தலை இந்த ஸ்லோகத்தினால் ப்ரார்த்திக்கிறார். ‘க்ருத்யம் ச’ என்றவிடத்திலுள்ள உம்மைப் பொருள் படுகின்ற சகரம், மற்றும் நல்ல விஷயங்களில் ஈடுபடவேண்டிய கண் காது முதலியவற்றையும் குறிப்பிட்டு, அவையும் யதிராஜர் திறத்திலே பற்றுடையதாக இருக்க வேண்டுமென்ற ப்ரார்த்தனையைக் காட்டுகிறது. இதில் முதல் மூன்றடிகளால் தம்முடைய மனமொழிமெய்கள் யதிராஜரிடமே ஊன்றியிருக்கவேண்டுமென்பதையும், நான்காம் அடியால் மற்றவரிடம் பற்றற்றிருக்க வேண்டுமென்பதையும் யதிராஜர் தம்மிடமே ப்ரார்த்தித்தாராயிற்று. பவது அஸ்து என்ற க்ரியாபதங்களிரண்டும் ப்ரார்த்தனையைக் காட்டும் லோட்ப்ரத்யயாந்தங்கள். க்ருத்யம் – அவஸ்யமாகச் செய்தே தீரவேண்டிய கடமை என்றபடி. முதலடியில் உள்ள தவ, மே என்பனவற்றை மற்ற மூன்றடிகளோடும் கூட்டுக. (4)

—————

அஷ்டாக்ஷராக்ய மநுராஜ பதத்ரயார்த்த நிஷ்டாம் மமாத்ர விதராத்ய யதீந்த்ரநாத |
ஸிஷ்டாக்ரகண்யஜநஸேவ்யபவத்பதாப்ஜே ஹ்ருஷ்டாSஸ்து நித்யமநுபூய மமாஸ்ய புத்தி: || (5)

பதவுரை:- நாத – அடியோங்களுக்கு ஸ்வாமியாகிய, யதீந்த்ர – யதிராஜரே, அத்ர – இருள்தருமாஞாலமாகிற இந்த ஸம்ஸார மண்டலத்தில், அத்ய – கலிபுருஷன் அரசு செலுத்துகிற இக்காலத்தில், மம – மிகவும் தாழ்ந்த அடியேனுக்கு, அஷ்டாக்ஷர ஆக்ய மநுராஜ – அஷ்டாக்ஷரமென்று ப்ரஸித்திபெற்ற சிறந்த மந்த்ரத்திலுள்ள, பதத்ரய அர்த்த நிஷ்டாம் – ஒம் நம: நாராயணாய என்ற மூன்று பதங்களினுடைய பொருள்களாகிய அநந்யார்ஹஸேஷத்வம், அநந்யஸரணத்வம், அநந்யபோக்யத்வம் (எம்பெருமானொருவனுக்கே அடிமையாகை, எம்பெருமானையே மோக்ஷோபாயமாகக் கொள்ளுகை, எம்பெருமானையே போக்யமாக – அநுபவிக்கத்தக்க பொருளாகக் கொள்ளுகை.) என்கிற இம்மூன்றினுடையவும் முடிவெல்லையை, விதர – தந்தருளவேணும். ஸிஷ்ட அக்ரகண்ய ஜந ஸேவ்ய பவத் பதாப்ஜே – பரதத்வம் மோக்ஷோபாயம் புருஷார்த்தம் (பயன்) ஆகியவிவற்றில் திரிபுணர்ச்சியில்லாத ஸிஷ்டர்களுக்குள்ளே, தேவரீரே பரதத்வம் தேவரீரே மோக்ஷோபாயம் தேவரீரே புருஷார்த்தம் என்று நினைப்பதனாலே முதலில் எண்ணத்தக்க முற்கூறிய கூரத்தாழ்வான் திருக்குருகைப்பிரான்பிள்ளான் முதலான ஸஜ்ஜநங்களாலே அடிமைசெய்யத்தக்க தேவரீருடைய தாமரைமலர் போன்ற திருவடிகளை, நித்யம் அநுபூய – எப்போதும் அநுபவித்து,  அஸ்ய மம புத்தி: – மிகத்தாழ்ந்த அடியேனுடைய புத்தியானது, ஹ்ருஷ்டா – அவ்வநுபவத்தின் பயனாகிய கைங்கர்யம் கிடைத்ததனாலுண்டான ஸந்தோஷத்தை உடையதாக, அஸ்து – ஆயிடுக.

கருத்துரை:- இந்த ஸ்லோகம் முதலாக மேலுள்ள ஸ்லோகங்கள் அனைத்தும், ‘நித்யம் யதீந்த்ர’ என்ற முன் ஸ்லோகத்தின் விவரணமாகவே அமைந்துள்ளன. ‘ஸ்ரீமந்யதீந்த்ர’ என்ற பத்தொன்பதாம் ஸ்லோகம் இந்த ஸ்தோத்ரத்தின்  பொருளாகிய யதீந்த்ர கைங்கர்ய ப்ரார்த்தனைக்கும் யதீந்த்ர தாஸகைங்கர்ய ப்ரார்த்தனைக்கும் உபஸம்ஹாரமாக அமைந்துள்ளது. ‘விஜ்ஞாபநம் யதிதம்’ என்ற இருபதாம் ஸ்லோகமோவென்னில் முதல் முடிவு நடுப்பகுதிகளாலே கூறப்பட்ட பொருளைக் காரணம் கூறித்திடப்படுத்துவதாக அமைந்துள்ளது. அஷ்டாக்ஷர மந்த்ரத்திலுள்ள மூன்று பதங்களின் பொருள்களுக்கு முடிவான எல்லையாவது – ஆசார்யனுக்கே அடிமையாகை, ஆசார்யனையே மோக்ஷோபாயமாகக் கொள்ளுகை ஆசார்யனையே போக்யமாக (அநுபவிக்கத்தக்கபொருளாகக்) கொள்ளுகை  ஆகிய இவை மூன்றுமே ஆகும். நடுவெல்லையோவெனில் – பாகவதர்களுக்கே அடிமையாகை பாகவதர்களையே மோக்ஷோபாயமாகக் கொள்ளுகை, பாகவதர்களையே போக்யமாகக் (அநுபவிக்கத்தக்க பொருளாகக்) கொள்ளுகையாகிய இவையே. முதல் பர்வம் எம்பெருமான், மத்யமபர்வம் – பாகவதர்கள், சரமபர்வம் – ஆசார்யன். ஸ்ரீமதஷ்டாக்ஷர மஹாமந்த்ரத்திலுள்ள ஒம் நம: நாராயணாய என்ற மூன்று பதங்களும் நேரான பதப்பொருள்களுக்கேற்றபடி, முதலில் ஷேஷித்வ ஸரண்யத்வ போக்யத்வங்களை பகவான் விஷயத்தில் தெரிவித்து, பின்பு பகவானுடைய திருவடி ஸ்தாநத்திலே நிற்கும் பாகவதர்கள் விஷயத்திலே தெரிவித்து, அதற்குப்பிறகு அந்த பாகவதர்களால் கொண்டு சேர்க்கப்படுகிற பாகவதோத்தமரான ஆசார்யன் விஷயத்திலே தெரியப்படுத்தி நின்றுவிடுகின்றன. ஆசார்யனாகிற விஷயமே சரமமாகையால் ப்ரதம்பர்வம் பகவான், மத்யமபர்வம் – பாகவதர், சரமபர்வம் – ஆசார்யன். ஆக இந்த ஸ்லோகத்தில் முற்பகுதியினால் மாமுனிகள் எம்பெருமானாரை ஸம்போதித்து, யதிராஜரான எங்கள் குலநாதரே! திருவஷ்டாக்ஷரத்தின் மூன்று பதப்பொருள்களின் முடிவெல்லையை (உத்தாரகாசார்யராகிய தேவரீருக்கே அடிமையாயிருக்கை, தேவரீரையே மோக்ஷத்திற்கு உபாயமாகக் கொள்ளுகை, தேவரீரையே போக்யமாகக் கொள்ளுகை என்கிற இம்மூன்றினையும்) அடியேன் திடமாகப் பற்றியிருக்கும்படி க்ருபை செய்தருளவேணும் என்று ப்ரார்த்தித்தாராயிற்று. மந்த்ரராஜமென்பது முப்பத்திரண்டெழுத்துக்களைக் கொண்ட நரஸிம்ஹாநுஷ்டுப் மந்த்ரத்திற்கும் பெயராகையால் அதை நீக்க வேண்டி ‘அஷ்டாக்ஷராக்ய’ என்று மந்த்ரராஜத்திற்கு அடைமொழி கொடுத்தருளினார். திருமந்த்ரம் எட்டெழுத்து உடையதாகவன்றோ ப்ரஸித்தமாயிருப்பது. இதில் பிற்பகுதியினால், ஆசார்ய நிஷ்டர்களாகிய கூரத்தாழ்வான் முதலியாண்டான் போல்வாரான ஸிஷ்ட ஜநங்கள் அநுபவித்துத் தொண்டு செய்து மகிழ்ச்சியடைவதற்குக் காரணமான தேவரீருடைய திருவடித்தாமரைகளில், ஆசார்ய நிஷ்டனாகிய அடியேனும் இழிந்து அநுபவித்துக் கைங்கர்யம் செய்து மகிழும்படி தேவரீர் அருள்புரியவேண்டுமென்று ப்ரார்த்தித்தாராயிற்று. (5)

——————

அல்பாபி மே ந பவதீய பதாப்ஜபக்தி: ஸப்தாதி போகருசிரந்வஹமேத தேஹா |
மத்பாபமேவ ஹி நிதாநமமுஷ்ய நாந்யத் தத்வாரயார்ய யதிராஜ தயைகஸிந்தோ
|| (6)

பதவுரை:- தயா ஏக ஸிந்தோ – தயை என்னும் நீர் வற்றாத ஒப்பற்ற கடலே, ஆர்ய – ஆசார்யரே, யதிராஜ – எதிகட்கு இறைவரான எம்பெருமானாரே, மே – அடியேனுக்கு, பவதீய பதாப்ஜ பக்தி: – தேவரீருடைய திருவடித்தாமரைகளில் ஆசையானது, அல்பா அபி – சிறிது கூட,  (அஸ்தி) – இல்லை, ஸப்த ஆதி போக ருசி: – ஸப்தம் ஆகியவற்றை (தாழ்ந்த பொருள்களிலுள்ள சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்றிவற்றை) அநுபவிப்பதில் ஆசையானது, அந்வஹம் – ஒவ்வொரு நாள்களிலும், ஏததே – வளர்ந்து வருகிறது, ஹா – கஷ்டம், அமுஷ்ய – தகுந்த விஷயத்தில் ஆசை சிறிதுமில்லாமையும் தகாத விஷயத்தில் ஆசை பெருகி வருவதுமாகிய இதற்கு, நிதாநம் – மூலகாரணம், மத்பாபமேவ (பவதி) அடியேனுடைய அநாதியான பாபமே ஆகும். அந்யத் ந – வேறொன்றுமன்று, தத் – அந்த பாபத்தை, வாரய – போக்கியருளவேணும்.

கருத்துரை:- ‘நித்யம் யதீந்த்ர’ என்ற நான்காவது ஸ்லோகத்தில், அடியேனுடைய மனம் தேவரீர் திருமேனியை நினைப்பதில் ஊற்றமுடையதாக இருக்கட்டும். வேறொன்றை எண்ணுவதில் பராமுகமாக இருக்கட்டும்’ என்று அருளியதனால், இப்பொழுது தமது மனம் அப்படியில்லாமல் நேர்முரணாக இருப்பதனைக் குறிப்பாக உணர்த்தினாரல்லவா ? இத்தகைய முரண்பாட்டை, அதன்காரணமான பாபத்தோடு கூடப்போக்கியருளவேணுமென்கிறார் இந்த ஸ்லோகத்தினால். தயையாவது – தனது பயனொன்றையும் எதிர்பாராமல் பிறர்துன்பம் கண்டால், தானும் ‘ஐயோ இப்படி துன்பப்படுகிறானே’ என்று துன்பப்படுகை. அத்தகைய தயையாகிய நீர் வற்றாத கடல்போன்றவர் எம்பெருமானார். ‘ஒப்பற்ற’ என்பதனால், எம்பெருமானாகிய கடலில் தயையாகிய நீர் வற்றினாலும் வற்றும், எம்பெருமானாராகிய கடலில் தயை வற்றாது என்பது கருதப்பட்டது. ஆர்ய ஸப்தம் (1) ஆசார்யஸப்தத்தோடு ஒரே பொருளையுடையதாய்க் கொண்டு அறியாத தத்வஹிதபுருஷார்த்தங்களை அறிவிப்பதன் வாயிலாக மோக்ஷத்திற்குக் காரணமாகிறார் எம்பெருமானாரென்று அறிவிக்கிறது. (2) ஆராத் யாதி இதி ஆர்ய: என்ற வ்யுத்பத்தியின் மூலமாக, வேதத்தில் கூறிய நல்ல வழியின் அருகிலும், கெட்டவழியின் தொலைவிலேயும் செல்லுமவர் என்று பொருள்பட்டு, எம்பெருமானார் பரமவைதிகர் என்பதைக் காட்டுகிறது. ஆராத் = அண்மையும் சேய்மையும். (3) அர்யதே – ப்ராப்யதே – அடையப்படுகிறார் என்று பொருள்பட்டு, எல்லாராலும் வீடுபேற்றிற்காக அடையப்படுமவர் எம்பெருமானார் என்ற கருத்தை புலப்படுத்துகிறது. வருத்தம் வியப்பு என்னும் இரண்டையும் குறிக்கின்ற ஹா என்ற இடைச்சொல் – முறையே – தக்க பொருளில் ஆசையின்மையும், தகாத பொருளில் ஆசையுடைமையும் தமக்கு வருத்தத்தைத் தருகிறது என்றும், குறைந்த ஸுகத்தைத் தரும் ஸப்தாதி விஷயங்களையே விரும்பி, மிகவும் அதிகமான ஸுகத்தை உண்டுபண்ணும் எம்பெருமானார் திருவடிகளை விரும்பாமலிருப்பது தமக்கு வியப்பைத் தருகிறது என்றும் இரண்டு கருத்துகளைத் தெரிவிக்கும். ‘மத்பாபமேவ – நான் செய்த பாபமே, நிதாநம் – மூலகாரணம்’ என்பதனால் – பக்திமான்களைப் பகைப்பதனால் அப்பக்திமான்கள் பக்தராவதற்கு முன்பு செய்த பாபங்களை எம்பெருமான் அவர்களைப் பகைப்பவர்கள் மேலே ஏறிடுவதுமுண்டு. அப்படி அடியேன் மேலேறிட்ட பாபமன்று, அடியேனே செய்த பாபம் மூலகாரணம் என்று தெரிகின்றது. ‘அந்யத் ந’ – வேறொன்றுமன்று என்பதனால் – ஸர்வேஸ்வரன் தனது ஸ்வதந்த்ரத்தன்மையினாலோ, அடியேனையிட்டு விளையாட எண்ணியதனாலோ அடியேன் தகாத பொருளில் ஆசையும் தக்க பொருளில் ஆசையில்லாமையும் உடையவனாயிருக்கிறேனல்லேன்; பின்னையோவென்னில் அடியேன் செய்த பாபத்தினாலேயே இப்படி இருக்கிறேன் – என்பது குறிப்பிடப்படுகிறது.

————-

வ்ருத்த்யா பஷுர் நரவபுஸ்த்வஹமீத்ருஷோSபி
ஸ்ருத்யாதிஸித்த நிகிலாத்மகுணாஸ்ரயோSயம் |
இத்யாதரேண க்ருதிநோSபி மித:ப்ரவக்தும்
அத்யாபி வஞ்சநபரோSத்ர யதீந்த்ர! வர்த்தே
|| (7)

பதவுரை:- ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே, வஞ்சநபர: – பிறரை ஏமாற்றுவதிலேயே பற்றுடையவனான, அஹம் – அடியேன், நரவபு: – மனிதவுடல் கொண்ட, பஷு:து – விலங்காகவே (விலங்கென்றே) வ்ருத்த்யா – அடியேனுடைய செய்கையினாலே, (ஜ்ஞாயே – அறியப்படுகிறேன்.) (உண்பதும், உறங்குவதும், கலவி செய்வதும், பகைவனைக்கண்டு அஞ்சுவதுமாகிய இவற்றாலே அறிவிக்கப்பட்ட மனித விலங்கின் தன்மையை உடையேன் என்றபடி.) ஈத்ருஸஅபி – இப்படிப்பட்டவனாக இருந்த போதிலும், ஸ்ருதி ஆதி ஸித்த நிகில ஆத்மகுண ஆஸ்ரய: – ‘வேதம் முதலியவற்றால் அறிவிக்கப்பட்ட எல்லா ஆத்மகுணங்களுக்கும் இருப்பிடமானவன், அயம் – இந்த மணவாளமாமுனிவன்’ இதி – என்றிவ்வாறாக, க்ருதிநஅபி – பாமரரன்றிக்கே பண்டிதராய் ஆராய்ச்சி வல்லுநருங்கூட, ஆதரேண – மனமார்ந்த அன்போடு, மித: – தங்களில் ஒருவர்க்கொருவர், ப்ரவக்தும் – (அவசியமாகச் சொல்லவேண்டிய நல்வார்த்தையைப் போலே) சொல்லுவதற்குத் தக்கபடியாக, அத்ர அபி – (வேறொருரிடத்திலல்லாமல்) இந்த ஸ்ரீரங்கத்திலும், அத்ய – இப்போது, வர்த்தே – இருக்கிறேன். தத்வாரய – அந்த (பிறரை வஞ்சிக்கும் எனது) தன்மையைப் போக்கியருளவேணும்.

கருத்துரை:- அஹிம்ஸை மெய்பேசுதல் கொடுமையில்லாமை தூய்மை பொறியடக்கம் கொடைத்தன்மை மனவடக்கம் பொறுமை அறிவு முதலியவையே வேதம் முதலியவற்றால் அறிவிக்கப்படுகின்ற ஆத்மகுணங்கள் (உயிரின் நற்பண்புகள்) ஆகும். ‘இவன் ஆத்மகுணங்களுக்கெல்லாம் இருப்பிடமானவன்’ என்றால் மற்றும் சிலரும் ஆத்மகுணங்களுக்கு இருப்பிடமாக உள்ளார்கள் என்ற கருத்துத்தோன்றக் கூடுமென்று நினைத்து அப்படிச்சொல்லாமல், ‘ஆத்மகுணங்களுக்கெல்லாம் இருப்பிடமானவன் இவன்’ என்று சொன்னதனால், ‘அத்தகையவன் இம்மணவாளமாமுனி ஒருவனே’ என்று ஆராய்ச்சியாளரும் தம்மைப்பற்றி மகிழ்ந்து பேசுமளவிற்குத் தமக்குள்ள ஏமாற்றும் வல்லமையைக் குறிப்பிட்டருளினாரென்க. அத்யாபி என்றவிடத்திலுள்ள அபி ஸப்தத்தை, ஸவாஸம் செய்யாமல், வஞ்சந்மென்பதே அடியோடு தெரியாத நாதயாமுநாதி பூர்வாச்சார்யர்கள் வாஸம் செய்தருளின மிகப்புண்ணியமான ஸ்ரீரங்கத்தில் வஸிப்பதும் செய்கிறேனே, இதைவிட வஞ்சனை வேறுண்டோ என்பது அதன் கருத்தாகும்.

————

து:காவஹோSஹமநிஷம் தவ துஷ்டசேஷ்ட:
ஸப்தாதி போக நிரதஸ்ஸரணாகதாக்ய:|
த்வத்பாதபக்த இவ ஸிஷ்டஜநௌக மத்யே
மித்யா சராமி யதிராஜ ததோSஸ்மி மூர்க்க:|
| (8)

பதவுரை:- ஹே யதிராஜ – வாரீர் யதிராஜரே, ஸரணாகத ஆக்ய: – ஸரணாகதன் (ப்ரபந்நன்) என்னும் பெயரை மாத்திரம் சுமப்பவனாய், ஸப்தாதி போகநிரத: – ஸப்தாதி நீசவிஷயங்களை அநுபவிப்பதில் மிகவூன்றியவனாய், துஷ்டசேஷ்ட: – கூடாதென்று ஸாஸ்த்ரம் விலக்கியகெட்ட காரியங்களைச் செய்யுமவனாய் (அதனால்) தவ – தேவரீருக்கு, து: ஆவஹ: – துக்கத்தை உண்டுபண்ணுமவனாய் இருக்கிற, அஹம் – அடியேன், த்வத் பாத பக்தஇவ – தேவரீர் திருவடிகளில் பக்திபூண்ட ப்ரபந்நன்போல், சிஷ்டஜந ஓக மத்யே – ‘புருஷார்த்தம் தேவரீர் கைங்கர்யமே, அதற்கு உபாயம் தேவரீருடைய இன்னருளே’ என்று தெளிந்திருக்கும் ஸிஷ்ட ஜநங்களாகிய கூரத்தாழ்வான் முதலியோர்களின் கோஷ்டிகளின் நடுவில், மித்யா சராமி – பொய்யனாகவே திரிகின்றேன், தத: – அக்காரணத்தினால், மூர்க்க அஸ்மி – (அடியேன்) மூடனாக அறிவற்றவனாக ஆகிறேன், தத் வாரய – அப்படிப்பட்ட அறியாமையைப் போக்கியருளவேணும்.

கருத்துரை:- அடியேனுக்கு ஏற்பட்டுள்ள தகாத காரியங்களில் ஊற்றமானது தேவரீருக்கு துக்கத்தையுண்டாக்குமாகையால் அவ்வூற்றத்தை நஸிப்பித்தருளவேணுமென்று வேண்டுகிறாரிதனால். யதிராஜர் – மனத்தையடக்கிய எம்பார் முதலிய யதிகளையும் தம்முடைய மனவடக்கத்தாலே மகிழச் செய்யுமரசர் எம்பெருமானார் என்றபடி. ஸரணாகதாக்ய: – ஸரணாகதன் என்ற பெயரை மட்டும் சுமக்கிறேனேயொழிய, ஸரணாகதிக்கு வேண்டிய வேறு உபாயமில்லாமை வேறுகதியில்லாமை ஆகிய தகுதிகளில் ஏதுமுடையேனல்லேன் என்றபடி. ஸரணாகதனுக்குத் தானாக ஏற்படக்கூடிய நன்மையே செய்யவேண்டுமென்று நினைத்தல், தீமையை அடியோடு அகற்றல், எம்பெருமானார் நிஸ்சயம் நம்மைக் காப்பாற்றியே தீருவர் என்று நம்புதல், தம்மைக் காக்கும் பொறுப்பை எம்பெருமானாரிடம் ஒப்படைத்தல், வேறு உபாயமோ வேறு காப்பவரோ தமக்கு இல்லையே என்று வருந்துதல் ஆகிய ஸ்வபாவங்களில் ஏதுமுடையேனல்லேன் என்றபடியும் ஆம். து:காவஹ: – அடியேன் இங்ஙனம் ஸரணாகதனென்று பெயர் சுமந்து, ஸப்தாதிபோக நிரதனாய் துஷ்டசேஷ்டனாயிருப்பது – ‘ஐயோ நம்முடையவன் ஒருவன் இப்படி இருக்கிறானே’ என்று தேவரீருக்கு துக்கத்தை உண்டாக்குமென்றபடி. அல்லது, இவன் ஸரணாகதனென்று பெயர்படைத்திருப்பதினால் இவனைக்காக்கவேணுமோ, துஷ்டசேஷ்டனாக இருப்பதனால் இவனைக் கைவிடவேணுமோ, என்ற ஸந்தேஹமாகிய தர்மசங்கடமாகிய துக்கத்தையுண்டாக்குமென்றும் சொல்லலாம். மூர்க்கனாகிறான் நன்மை தீமைகளின் பகுத்தறிவின்றியே தான்பிடித்தது விடாமலிருக்குமவன். இத்தகைய மூர்க்கத்தனத்தைப் போக்கவேணுமென்று இதனால் ப்ரார்த்தித்தாராயிற்று.

—————-

நித்யம் த்வஹம் பரிபவாமி குரும் ச மந்த்ரம்
தத் தேவதாமபி ந கிஞ்சிதஹோ பிபேமி|
இத்தம் ஸடோSப்யஸடவத் பவதீயஸங்கே
ஹ்ருஷ்டஸ்சராமி யதிராஜ! ததோSஸ்மி மூர்க்க:|
| (9)

பதவுரை:- ஹே யதிராஜ – வாரீர் யதிராஜரே, அஹம் – அடியேன், குரும் – அறியாதவற்றை அறிவித்து அகவிருளைப்போக்கும் ஆசார்யனையும், மந்த்ரம் – (அவ்வாச்சார்யனாலே உபதேஸிக்கப்பட்ட) திருமந்த்ரமாகிய அஷ்டாக்ஷர மந்த்ரத்தையும், தத் தேவதாம் அபி – அம்மந்திரத்துக்கு உள்ளீடான ஸ்ரீமந்நாராயணனையும், நித்யம் து – எப்போதுமே, பரிபவாமி – அவமதிக்கிறேன். கிஞ்சித் அபி – சிறிதும்,  பிபேமி – இம்மூன்றை அவமதிப்பதனால் நமக்கு வருங்காலத்தில் என்ன கேடுவிளையுமோ என்று அஞ்சுகிறேனில்லை. அஹோ – இது என்ன ஆஸ்சர்யம். இத்தம் – இவ்விதமாக, ஸட:அபி – யாரும் அறியாமல் தீமை செய்யுமவனாயிருந்து வைத்தும், அல்லது ஸாஸ்த்ரத்தில் நம்பிக்கையில்லாதவனாயிருந்து வைத்தும், அஸடவத் – உள்ளும் புறமும் ஒக்க நன்மையே செய்யுமவன் போலவும், அல்லது முன்கூறிய மூன்றிலும் மதிப்பு வைக்கவேண்டுமென்று கூறும் ஸாஸ்த்ரத்தில் நம்பிக்கைமிக்க ஆஸ்திகன் போலவும், பவதீயஸங்கே – தேவரீர் திருவடிகளில் பக்தி பூண்ட அடியார்களின்-பரமாஸ்திகர்களின் கோஷ்டியில், ஹ்ருஷ்ட:ஸந் – நாம் செய்யும் தீமைகள் இவர்களுக்குத் தெரியாமலிருக்கிறதே என்று மகிழ்ச்சியடைந்தவனாய்க் கொண்டு, சராமி – ஸஞ்சரிக்கிறேன். தத: – அதனால் அஹம் மூர்க்க:அஸ்மி – அடியேன் மூர்க்கனாகிறேன். தத்வாரய – கீழ்க் கூறிய இத்தகைய மூர்க்கத்தனத்தைப் போக்கியருளவேணும்.

கருத்துரை:- கீழ் நான்காம் ஸ்லோகத்தில் ‘அடியேனுடைய வாக்கு தேவரீருடைய குணங்களைச் சொல்லிப் புகழ்வதில் ஊற்றமுடையதாக இருக்கட்டும்’ என்று அருளிச் செய்தவர் அதற்கு நேர்மாறாக குருமந்த்ரதேவதைகளை வாயார வைது பரிபவித்தலாகிற கெட்டகாரியங்களில் வாக்கு ஊன்றியிருப்பதையறிந்து, இத்தகைய பரிபவிக்கும் தீய செயலையும் அதற்குக் காரணமான மூர்க்கத்தனத்தையும் போக்கியருள வேணுமென்று ப்ரார்த்திக்கிறார்.

குருவை அவமதிப்பதாவது – அவர் உபதேஸித்தபடி விடவேண்டியவற்றை விடாமலிருத்தல், பற்ற வேண்டியவற்றைப் பற்றாமலிருத்தல். தனக்கொரு ப்ரஸித்திக்காகவோ கௌரவத்திற்காகவோ தநலாபத்திற்காகவோ, மந்திரம் கேட்கத் தகுதியற்றவர்கட்கு மந்திரத்தை உபதேஸித்தல் ஆகிய இவையே ஆம். மந்த்ரத்தை அவமதிப்பதாவது – மந்த்ரத்திலுள்ள உண்மைப்பொருளை மறைத்தலும் விபரீதப் பொருளுரைத்தலும் ஆம். மந்த்ரத்தால் கூறப்பட்ட தேவதையை அவமதிப்பதாவது – ஸ்ரீமந்நாராயணனால் ஸ்ருஷ்டிகாலத்தில் தரப்பட்ட மனமொழி மெய்களை அவன் விஷயத்தில் உபயோகப்படுத்தாமல், பிற நீச விஷயத்தில் உபயோகப் படுத்துதல் ஆகும். இவற்றின் விரிவு ஸ்ரீவசநபூஷணாதிகளில்  காண்க. அஹோ – ஆஸ்சர்யம். உலகத்தில் எங்கும் அடியேன் போன்ற பாவியும், பாவத்திற்கு அஞ்சாமலிருப்பவனும் தென்படாமையால் அடியேனுக்கே இது ஆஸ்சர்யத்தைத் தருகின்றதென்கிறார் ‘அஹோ’ என்பதனால்.

————-

ஹா ஹந்த ஹந்த மநஸா க்ரியயா ச வாசா
யோSஹம் சராமி ஸததம் த்ரிவிதாபசாராந் |
ஸோSஹம் தவாப்ரியகர: ப்ரியக்ருத்வதேவ
காலம் நயாமி யதிராஜ! ததோSஸ்மி மூர்க்க: ||
(10)

பதவுரை:- யதிராஜ – வாரீர் யதிராஜரே, ய: அஹம் – எத்தகைய அடியேன், மநஸா வாசா க்ரியயா ச – மனமொழி மெய்களால், த்ரிவித அபசாராந் – பகவதபசார பாகவதாபசார அஸஹ்யாபசாரங்களாகிற மூவகைப்பட்ட பாபங்களையும், ஸததம் சராமி – இடைவிடாமல் எப்போதும் செய்து வருகிறேனோ, ஸ:அஹம் – அத்தகைய அடியேன், தவ – அடியேனிடம் பரமதயாளுவாய்ப்பேரன்பு பூண்ட தேவரீருக்கு, அப்ரியகர: ஸந் – இஷ்டமல்லாதவற்றையே செய்பவனாய்க்கொண்டு, ப்ரியக்ருத்வத் ஏவ – இஷ்டமானவற்றையே செய்பவன் போலே, காலம் நயாமி – காலத்தைக் கழித்து வருகிறேன். ஹா ஹந்த ஹந்த – ஐயோ ஐயோ ஐயோ தத: அஹம் மூர்க்க: அஸ்மி – அதனால் அடியேன் மூர்க்கனாகிறேன், தத்வாரய – அந்த மூர்க்கத்தனத்தைப் போக்கியருளவேணும்.

கருத்துரை:- மனத்தின் தீய செயல்களையும் (தீய சிந்தனையையும்) அதற்குக் காரணமான மூர்க்கத்தனத்தையும் போக்கியருளவேணும் என்கிறார். ‘நித்யம் யதீந்த்ர’ (4) என்னும் ஸ்லோகத்தில் மனமொழி மெய்களைக் குறிப்பிட்டபடியால், வ்ருத்த்யா பஸு: (7), துக்காவஹோSஹம் (8), நித்யந்த்வஹம் (9), ஹா ஹந்த ஹந்த (10) என்கிற இந்த நான்கு ஸ்லோகங்களிலும் மனமொழி மெய்களைக் குறிப்பிட்டிருந்த போதிலும், ஏழு எட்டாம் ஸ்லோகங்களில் வ்ருத்த்யா என்றும் துஷ்டசேஷ்ட: என்றும் முதலில் குறிப்பிட்டதையொட்டி மெய்யின் செயலையும், ஒன்பதாம் ஸ்லோகத்தில் ‘குரும் பரிபவாமி’ என்று முதலில் குறிப்பிட்டதனால் வாக்கின் செயலையும், பத்தாம் ஸ்லோகமான இதில் ‘மநஸா’ – என்று முதலில் கூறியதனால் மனத்தின் செயலையும் ப்ரதாநமாக நினைக்க வேண்டுமென்று தோன்றுகிறது என்கிறார் உரையாசிரியரான அண்ணாவப்பங்கார்ஸ்வாமி. பகவதபசாரமாவது – ஸ்ரீமந்நாராயணனை ப்ரஹ்மருத்ராதிகளோடு ஸமாநமாக நினைக்கையும், ராமாத்யவதாரங்களை வெறும் மநுஷ்யராக நினைக்கையும், அர்ச்சாவதாரங்களைக் கல்லாகவும் செம்பாகவும் நினைக்கையும் பிறவும் ஆம். பாகவதாபசாரமாவது – தனது தநலாபத்திற்காகவும், சந்தனம் புஷ்பம் பெண்கள் ஆகியவற்றிற்காகவும் ஸ்ரீவைஷ்ணவர்க்குப்பண்ணும் விரோதம் ஆகும். அஸஹ்யாபசாரமாவது – ஒரு காரணமுமின்றியேயிருக்க, பகவான் என்றாலும், பாகவதர்களென்றாலும், பொறாமலிருக்கையும், ஆசார்யாபசாரமும் தொடக்கமானவையாகும். இதன் விரிவு ஸ்ரீவசநபூஷணத்தில் காணத்தக்கது. மூன்றபசாரங்களைத் தாம் செய்வது தமக்கு வருத்தம் தருவதென்பதை ஹா, ஹந்த, ஹந்த என்று மூன்றிடைச் சொற்களால் குறித்தருளினர் என்க. ஆறாவது ஸ்லோகத்திலுள்ள ‘தத்வாரய’ என்பதனை இப்பத்தாம் ஸ்லோகம் வரையில் கூட்டிப்பொருள் உரைக்கப்பட்டது. தொண்டரடிப் பொடிகள் திருமாலை முப்பத்திரண்டாம் பாசுரத்தில் ‘மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே’ என்று மூன்று தடவைகள் தம்மைப் பற்றிக் குறிப்பிட்ட மூர்க்க ஸப்தத்தை, இதில் மாமுனிகள் எட்டு ஒன்பது பத்தாம் ஸ்லோகங்களில் தம்மைப்பற்றிக் குறிப்பிட்டருளினார் என்பர் இதன் உரையாசிரியர்.

——-

பாபே க்ருதே யதி பவந்தி பயாநுதாப-
லஜ்ஜா: புந: கரணமஸ்ய கதம் கடேத |
மோஹேந மே ந பவதீய பயாதிலேஸ:
தஸ்மாத் புந: புநரகம் யதிராஜ குர்வே |
| (11)

பதவுரை:- யே யதிராஜ – வாரீர் யதிராஜரே , பாபே க்ருதே ஸதி – பாவம் செய்யப் பட்டப்போது, மம – அடியேனுக்கு, பய அநுதாப லஜ்ஜா: – மேல் என்ன கேடு நேரிடுமோ என்னும் பயமும், ஐயோ தவறு செய்துவிட்டோமே என்னும் பச்சாத்தாபமும் (கழிவிரக்கமும்) பெரியோர்கள் முகத்தில் நாம் எப்படி விழிப்பதென்கிற வெட்கமும், பவந்தி யதி – உண்டாகுமேயானால், அஸ்ய புந: கரணம் – இப்பாபத்தை மறுபடியும் செய்வதென்பது, கதம் கடேத – எப்படிப்பொருந்தும் ? இஹ – இப்பாவம் செய்யும் விஷயத்தில், பயாதி லேஸ: (அபி) – பயம் முதலிய மூன்றில் சிறிதளவு கூட, மோஹேந – அநுபவிக்கத்தகாத நீச விஷயத்தில் இது அநுபவிக்கத்தக்கதென்னும் திரிபுணர்ச்சியினாலே, மே – அடியேனுக்கு, ந பவதி – உண்டாகிறதில்லை. தஸ்மாத் – அதனால், அகம் – பாவத்தை, புந: புந: – மறுபடியும் மறுபடியும், குர்வே – செய்துவருகிறேன்.

கருத்துரை:- ஐயா, ஸரணாகதனென்னும் பெயரை மட்டும் சுமந்தாலும் உமக்கு , பாபம் செய்தபிறகு பயமும் வெட்கமும் உண்டானால் பாபத்தை மேலும் செய்யமாட்டீர். பச்சாதாபமுண்டானால் செய்த பாபமும் தீரும். இதற்கு நாம் என்ன செய்ய வேண்டியிருக்கிறது ? என்று யதிராஜருக்குத் திருவுள்ளமாயிருக்கலாம் என்று ஊஹித்து அருளிச்செய்கிறார். அகம் – பாபம். பயம் முதலியவை பூர்ணமாக உண்டானால் மறுபடியும் பாபம் செய்வதற்கே இடமில்லை. அவை சிறிதே உண்டானால் எப்போதோ ஒரு தடவை செய்வது தவிர மேன்மேலும் செய்யவழியில்லை. அடியேனுக்கோ அவை சிறிதும் உண்டாகாமையினால் மேன்மேலும் இடையறாது அப்பாபத்தைச் செய்து கொண்டிருக்கிறேன். ஆகையால் அவை சிறிதும் உண்டாகாமைக்குக் காரணமாகிற மோஹத்தை – ஸப்தாதி நீச விஷயங்களில் ‘இவை அநுபவிக்கத்தக்கவை’ என்கிற திரிபுணர்ச்சியை நீக்கியருள வேணுமென்று ப்ரார்த்திப்பது இந்த ஸ்லோகத்தின் உட்கருத்தாகும். அதனால் முற்கூறிய ‘தத்வாரய’ (அதை நீக்கியருளவேணும்) என்பதை இங்கும் வருவித்துக்கொள்ள வேணும்.

—————–

அந்தர்பஹிஸ்ஸகலவஸ்துஷு ஸந்தமீஸம்
அந்த:புரஸ்ஸ்திதமிவாஹமவீக்ஷமாந: |
கந்தர்பவஷ்யஹ்ருதயஸ்ஸததம் பவாமி
ஹந்த த்வதக்ரகமநஸ்ய யதீந்த்ர! நார்ஹ:
|| (12)

பதவுரை:- ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே, அஹம் – அடியேன், ஸகல வஸ்துஷு – எல்லாப்பொருள்களிலும், அந்த: பஹி: ச ஸந்தம் – உள்ளும் புறமும் பரந்திருந்து, ஈஸம் – எல்லாவற்றையும் அடக்கியாளுகிற ஸ்ரீமந் நாராயணனை, புர:ஸ்திதம் – முன்னே நிற்கும் மனிதனை, அந்த: இவ – குருடன் போல், அவீக்ஷமாண: ஸந் – பாராதவனாய்க் கொண்டு, (அதனால்) கந்தர்ப்பவஸ்ய ஹ்ருதய: – மந்மதனுக்கு (ஆசைக்கு)வஸப்பட்ட மனத்தையுடையவனாக, ஸததம் பவாமி – எப்போதும் இருக்கிறேன். (ஆகையால்) த்வத் அக்ர கமநஸ்ய – தேவரீர் திருமுன்பே வருவதற்கு (அஹம்) ந அர்ஹ: – அடியேன் தகுந்தவனாக இல்லை, ஹந்த – ஐயோ கஷ்டம்.

கருத்துரை:- ‘ஐயா, அப்படியானால் நீர் நானிருக்குமிடத்திற்கு வாரும். அதற்கு ஆவன செய்கிறேன்’ என்று யதிராஜருக்குத் திருவுள்ளமாயிருக்குமென்று கருதி தாம் அவரைக் கிட்டுவதற்கும் தமக்குத் தகுதியில்லாமையை இதனால் கூறுகிறார். ‘வ்ருத்த்யா பஷு: நர வபு: அஹம்’ தாய்க்கும் மற்றவற்றிற்கும் வாசி தெரியாமல் செய்யும் செயலினால் விலங்காய், உடலால் மட்டும் மனிதனாக இருக்கிறேன் அடியேன் – என்ற கீழ் ஏழாம் ஸ்லோகத்தை விவரிப்பவராய் தாம் காமத்திற்கே வசப்பட்ட மனமுடைமையைக் கூறித் தமது நிலையை யதிராஜரிடம் விண்ணப்பிக்கிறாரென்றபடி. யதிராஜர் என்று பெயர் படைத்துக் காமம் முதலியவற்றையடக்கிய பெரியோர்கட்கெல்லாம் தலைவராகிய எம்பெருமானார் எதிரே வந்து நிற்பதற்கு, காமத்திற்கே பரவஸப்பட்ட தமக்குத் தகுதியில்லாமையை இதனால் விண்ணப்பித்தாரென்பது தேர்ந்த கருத்தாகும். காமத்தையே நினைக்கிற மனமுடைய அடியேன் தேவரீர் முன்பு வந்து நிற்பதை யெண்ணாத மனமுடையவனாகி, அங்ஙனம் முன்பு வந்து நிற்பதற்குத் தகுதியுடையவனல்லேன் என்றும் இங்ஙனம் நீசனான அடியேன் தேவரீர் முன்பு வந்து நின்றால் தேவரீருக்கு மிகவும் அருவருப்பு உண்டாகுமாகையால் அப்படிவந்து நிற்பதற்கு அடியேன் தகுதி பெற்றிலேன் என்றும் கருத்துக் கூறுவர் அண்ணாவப்பங்கார் ஸ்வாமி.

—————

தாபத்ரயீஜநிதது:க நிபாதிநோSபி
தேஹஸ்திதௌ மம ருசிஸ்து ந தந்நிவ்ருத்தௌ |
ஏதஸ்ய காரணமஹோ மம பாபமேவ
நாத! த்வமேவ ஹர தத் யதிராஜ! ஸீக்ரம் |
| (13)

பதவுரை:- ஹே யதிராஜ – வாரீர் எதிகட்கிறைவரே, தாபத்ரயீ ஜநித து:க நிபாதிநோSபி – மூவகைத் தாபங்களினால் உண்டாகப்பட்ட துக்கங்களின் நடுவில் விழுந்து கொண்டேயிருந்த போதிலும், மம து – மிக நீசனான அடியேனுக்கோவென்றால் , தேஹ ஸ்திதௌ (பருப்பதும் இளைப்பதுமாய் ஒருபடிப்பட்டு இராத) உடல் இப்படியே அழியாமல் நிலைத்து இருக்கும் நிலையில், ருசி: – ஆசையானது, பவதி – உண்டாகிறது, தத் நிவ்ருத்தௌ – அந்த உடலின் அழிவில், ந ருசி: – வெறுப்பு, பவதி – உண்டாகிறது. ஏதஸ்ய – உடல் அழியாமையில் விருப்பமும் அஃது அழிவதில் வெறுப்பும் உண்டாகிற இந்நிலைமைக்கு, காரணம் – காரணமானது, மம பாபமேவ – அடியேனுடைய பாபமே ஆகும். நாத – ஸ்வாமீ!, த்வம் ஏவ – அடியேனுக்குத் தலைவரும், பாபம் போக்குமாற்றல் படைத்தவருமாகிற தேவரீரே, தத் – அப்பாவத்தை, ஸீக்ரம் – அடுத்த க்ஷணத்திலேயே, ஹர – போக்கியருளவேணும்.

கருத்துரை:- ‘ஐயா, நீர் இதுவரையில் கூறிய குற்றங்களுக்கெல்லாம் காரணம், நீர் உம்முடைய உடல் நிலைத்திருப்பதில் வைத்திருக்கும் ஆசையேயாகும். அவ்வாசையை அவ்வுடலில் உள்ள நிலையாமை, பற்பல அழுக்குகள் நிறைந்துள்ளமை, நோய் பலவற்றிற்கும் இடமாக அமைந்திருக்கை முதலிய குற்றங்களை ஆராய்ந்தறிந்து அவ்வுடலை நீரே விட்டுவிடும்’ என்று எதிராசர் கருதியிருக்கலாமென்று நினைத்து விண்ணப்பிக்கிறார் இதனால். தாபத்ரயீ – மூன்று வகையான துக்ககாரணங்கள், (1) ஆத்யாத்மிகம் – உடலைப்பற்றிவருகிற கர்பத்தில் வஸித்தல் முதலியன, (2) ஆதிபௌதிகம் – பூதங்களான நீர் நெருப்பு முதலியவற்றாலுண்டாகும் குளிர்ச்சி வெம்மை முதலியன. (3) ஆதிதைவிகம் – தேவதையாகிய யமனால் வரும் நரகயாதனை முதலியன. இவற்றை வேறுவகையாகவும் கூறுவதுண்டு. உடல் குற்றம் நிறைந்திருக்கிறதென்னும் விஷயத்தில் ‘இந்த உடலுக்குள் இருக்கிற ரக்தம் மாம்ஸம் முதலியவை வெளியில் இருக்குமாகில் இவ்வுடல் பெற்றிருக்கும் மனிதன், அவற்றை உண்பதற்கு ஓடி வருகின்ற நாய் காகம் முதலியவற்றை, தடியை ஓங்கிக் கொண்டு சென்று விரட்டியடிப்பான்’ என்று பொருள்படும் ‘யதி நாமாஸ்ய காயஸ்ய யத் அந்த: தத் பஹிர் பவேத்’ என்னுமிந்த ஸ்லோகத்தை ப்ரமாணமாகக் கொள்க. ‘தந்நிவ்ருத்தௌ ந ருசி’ என்றவிடத்தில் – பகைமைப் பொருளில் வரும் என்பதனை ருசி: என்பதனோடு சேர்த்து ருசிக்குப் பகையான த்வேஷம் (ஆசைக்கு விரோதியான வெறுப்பு) என்னும் கருத்து கொள்ளப்பட்டது. ஸப்தாதிகளை அநுபவிப்பதில் உண்டாகும் ஆசையைக் காட்டிலும் உடல் நிலைத்திருப்பதில் உண்டான ஆசை மிகவும் கொடியதாகையால் அதற்குக் காரணமான பாபத்தை அடுத்த க்ஷணத்திலேயே போக்கியருளவேணும்மென்றார் இதனால். இங்ஙனம் இவர் வேண்டிக்கொண்டபோதிலும், யதிராஜர் இவருடைய உடலைப் போக்காமலிருப்பதற்குக் காரணம், இவர் இன்னும் சிலநாள்கள் இவ்வுலகில் உயிர் வாழ்ந்திருந்தால், இவர் வருந்தினாலும் இவரைக் கொண்டு உலகிலுள்ளவரை உய்யும்படி செய்யலாமென்ற ஆசையேயன்றி வேறில்லை என்று கொள்க.

———————————————————————

வாசாமகோசரமஹாகுணதேஸிகாக்ர்ய கூராதிநாதகதிதாகிலநைச்யபாத்ரம் |
ஏஷோஹமேவ ந புநர்ஜகதீத்ருஷஸ்தத் ராமாநுஜார்ய கருணைவ து மத்கதிஸ்தே
|| (14)

பதவுரை:- ஹே ராமாநுஜார்ய – வாரீர் ராமாநுஜாசார்யரே, வாசாம்  அகோசர மஹா குண – இத்தனை தானென்ற அளவில்லாமையால் வாய்கொண்டு வருணிக்கமுடியாதனவும், ஒவ்வொரு குணமே எவ்வளவு அநுபவித்தாலும் அநுபவித்து முடிக்கமுடியாத பெருமையை உடையனவுமாகிய நற்குணங்களையுடைய, தேஸிகாக்ர்ய கூராதிநாத – ஆசார்ய ஸ்ரேஷ்டராகிய கூரத்தாழ்வானால், கதித – தம்முடைய பஞ்சஸ்தவீ முதலிவற்றில் கூறப்பட்ட, அகில நைச்ய பாத்ரம் – எல்லாவித நீசத்தன்மைக்கும் கொள்கலமானவன், ஏஷஅஹமேவ – இந்த அடியேனொருவனே ஆவேன், ஈத்ருஸபுந: – இத்தகைய மற்றொருவனோவென்னில், ஜகதி – உலகில்,  (அஸ்தி) – இல்லவேயில்லை. தத் – அக்காரணத்தினால், தேது – கருணைபுரியும் விஷயத்தில் நிகரற்ற தேவரீருடைய, கருணா ஏவ – கருணையே, மத்கதி: – (எல்லாரையும் விடக்குற்றவாளியான) அடியேனுக்கு உய்வு பெறுவிக்கும் உபாயமாக, பவதி – ஆகிறது.

கருத்துரை:- இவ்வளவு தம்முடைய தோஷங்களை விண்ணப்பித்த போதிலும், உள்ளவற்றில் சிறிதளவும் சொல்லப்பட்டதாகாதென்று நினைத்து, பூர்வாசார்யர்கள் தம்முடைய நூல்களில் தம்மிடமிருப்பதாகக் கூறிக்கொண்ட தோஷங்கள் அனைத்தும் தம்மிடமேயுள்ளதாக விண்ணப்பிக்கிறார். கூரத்தாழ்வானுக்கு ‘வாசாமகோசரமஹாகுண’ என்று விசேஷணமிட்டருளியது – ‘உண்மையில் அவர்தம்மிடம் எந்த தோஷமுமில்லை’ என்பதை நமக்கு அறிவிப்பதற்காகவே என்க. எந்த தோஷமும் அவரிடத்தில் இல்லையேல் அவையத்தனையும் எங்குள்ளனவென்னில் – தம்மிடமே உள்ளதென்பதை ‘அகிலநைச்யபாத்ரம் அஹமேவ’ என்று குறிப்பிட்டருளினார். தேஸிக-அக்ர்ய – வேதாந்த ஸாஸ்த்ரத்தை ப்ரவசனம் செய்வதற்காக பட்டாபிஷேகம் செய்யப்பட்டவர்களில் தலைவர் கூரத்தாழ்வான் என்றபடி. ‘ஆத்யம் யதீந்த்ரஸிஷ்யாணாம் அக்ர்யம் வேதாந்தவேதிநாம்’ (யதிராஜருடைய ஸிஷ்யர்களில் முதல்வரும், வேதாந்தமறிந்தவர்களில் முக்யமானவருமான கூரத்தாழ்வானை த்யானிக்கிறோம்) என்ற ஸ்லோகம் நினைக்கத்தக்கது. கூரத்தாழ்வான் தமது ஸ்ரீவைகுண்டஸ்தவத்தில் (84) ‘ஸ்வாமீ எம்பெருமானே! ஐயோ ஐயோ நான் கெட்டேன், நான் மிகவும் துஷ்டன், மேலும் கெடுவன். நீசவிஷயங்களில் மிகவும் மோஹங்கொண்ட நான் பகவானான உன் விஷயத்தில் பற்றுடையவன் போல் வாயினால் என்னென்ன சொல்லிவிட்டேன். என்னைப் போன்ற பாபத்திரள், குற்றமின்றிக் குணம் நிறைந்த உன்னை நினைக்கவும் கூடத்தகுதிபெற்றதன்றே’ என்று தொடங்கி தம்மிடமுள்ளதாக விண்ணப்பித்த குற்றங்களை இங்கு நினைத்தல் தகும்.

——————-

சுத்தாத்மயாமுநகுரூத்தமகூரநாத பட்டாக்யதேசிகவரோக்தஸமஸ்தநைச்யம் |
அத்யாஸ்த்யஸங்குசிதமேவ மயீஹ லோகே தஸ்மாத்யதீந்த்ர! கருணைவ து மத்கதிஸ்தே |
| (15)

பதவுரை:- ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே, இஹ லோகே – குற்றம் செய்தவர்கள் மலிந்த இந்தப் பூவலகில், அத்ய – கலிபுருஷன் தனியரசு செலுத்தும் இக்காலத்தில், ஷுத்தாத்மயாமுந குரு உத்தம கூரநாத பட்டாக்ய தேஸிகவர – குற்றங்களில் ஒன்றுமில்லாமையால் ஸுத்தமான ஆத்மஸ்வரூபத்தையுடையவர்களான யாமுநாசார்யரென்னும் ஆளவந்தாரென்ன, ஆத்மகுணங்கள் நிறைந்தவர்களில் மிகமிக உயர்ந்தவராகிய கூரத்தாழ்வனென்ன, பூர்வாச்சார்யர்கள் அனைவரைக் காட்டிலும் அதிகமான பெருமையை உடைய ஸ்ரீபராஸரபட்டரென்ன இவர்களால், உக்த ஸமஸ்த நைச்யம் – தங்களுடைய நூல்களில் தம்மிடமுள்ளதாகச் சொல்லப்பட்ட எல்லாவகையான நீசதர்மங்களும் (குற்றங்களும்), மயி ஏவ – அடியேனிடத்திலேயே, அஸங்குசிதம் (அஸ்தி) – குறைவறப் பூர்ணமாக உள்ளன. (மற்றவரிடத்தில் குறைவாகவே உள்ளன) தஸ்மாத் – ஆகையால், தே கருணா து – உலகில் மிகவும் பெரியதாக ப்ரஸித்திபெற்ற தேவரீரது கருணையானது, மத் கதிஏவ (பவதி) – அடியேனையே விஷயமாகக் கொண்டதாக ஆகிறது.(மிகப்பெரிய கருணைக்கு விஷயமாகக்கூடியவன் மிகப்பெருத்த பாபம் செய்த அடியேனொருவனேயன்றி, குறைந்த பாபம் செய்த மற்றவர் விஷயமாக இடமில்லையென்றபடி.)

கருத்துரை:- ஆளவந்தார், கூரத்தாழ்வான், ஸ்ரீபராஸரபட்டர் ஆகிய இம்மூவரும் ஸுத்தாத்மாக்கள். ஆத்மாவுக்கு ஸுத்தியாவது – தாம் தாம் தத்தமது நூல்களில் தம்மிடமுள்ளனவாகக் கூறிக்கொண்ட குற்றங்களில் ஒன்றுகூடத் தம்மிடமில்லாமையே ஆகும். பட்டர் – பராஸரபட்டர், கூரத்தாழ்வானுடைய பெரியதிருக்குமாரருக்கு ஸ்ரீரங்கநாதனென்பது இயற்பெயர். அவரை ஸ்ரீரங்கநாதனாகிய பெரியபெருமாள் ‘பராஸரபட்டர்’ என்று பலதடவைகள் அருள்பாடிட்டதனால் அவருக்கு பராஸரபட்டரென்று ப்ரஸித்தி ஏற்பட்டது. அவர் அப்படி அழைப்பதற்குக் காரணம் – விஷ்ணுபுராணத்தில் பராஸரமுனிவர் போல், ‘பரம்பொருள் திருமாலே’ என்று அறுதியிட்டுப் ப்ரசாரம் செய்ததேயாகும்.

‘ஸமஸ்தநைச்யம் மயி ஏவ அஸங்குசிதம் அஸ்தி’ என்று பதவுரையில் காட்டிய அந்வயமேயல்லாமல், ‘ஸமஸ்தநைச்யம் மயி அஸங்குசிதமேவ அஸ்தி’ என்று உள்ளபடியே அந்வயமும் கொள்ளலாம். எம்பெருமானார் மாமுனிகளிடம் ‘நமது கருணைக்கு வயிறு மிகப்பெரியது. அதற்குக் குறைவான குற்றங்களால் நிறைவு உண்டாகாது. உம்மிடம் குற்றங்கள் பூர்ணமாக இல்லையே. ஆக நம்கருணைக்கு நீர் எப்படி இலக்காவீர்’ என்று கேட்டதாகக்கொண்டு ‘ஸ்வாமீ யதிராஜரே! உமது கருணையின் வயிறு நிறைவதற்கு வேண்டியவளவு குற்றங்கள் அடியேனிடம் அஸங்குசிதமாகவே – பூர்ணமாகவே உள்ளன. ஆகவே தேவரீருடைய கருணைக்கு அடியேன் விஷயமாகலாம்’ என்ற கருத்து இவ்வந்வயத்தின்படி கொள்ளலாம். ‘தே கருணா து மத்கதிரேவ’ என்று பதவுரையில் காட்டியபடியேயன்றி , ‘தேது கருணைவ மத்கதி:’ என்று உள்ளபடியே அந்வயமும் கொள்ளல் தகும். ஸாஸ்த்ரங்களில் கூறிய ஜ்ஞானம், அநுஷ்டாநம், வைராக்யம் முதலிய தகுதிகளைப் பெற்றவர்களுக்கு அவற்றில் கூறப்பட்ட கர்மயோக ஜ்ஞானயோக பக்தியோகங்கள் கதி (உபாயம்) ஆகலாம். நல்லதகுதிகளேதுமின்றியே குற்றங்களும் மலியப்பெற்ற அடியேனுக்கு தேவரீருடைய கருணையே கதி (உபாயம்) என்று கூறுதல் இவ்வந்வயத்தின் படி கருத்தாகக் கொள்க.

ஆளவந்தார் தமது ஸ்தோத்ரரத்நத்தில் (62), ‘அடியேன் ஸாஸ்த்ரவரம்பை மீறினவன், மிகவும் நீசன், ஓரிடத்தில் நில்லாத சஞ்சலபுத்தியுள்ளவன், பொறாமைக்குப் பிறப்பிடம், செய்ந்நன்றிகொன்றவன், துரஹங்காரமுடையவன், பிறரை வஞ்சிப்பவன், கொலையாளி, மிகவும் பாவி’ என்றெல்லாம் தம்மிடமுள்ளனவாகக் கூறிய குற்றங்களும்.

கூரத்தாழ்வான் அதிமாநுஷஸ்தவத்தில் (59, 60), ‘எம்பெருமானே! பகவத் பாகவத ஆச்சார்யாபசாரங்களிலிருந்து இன்றும் அடியேன் ஓய்ந்தபாடில்லை. இப்படிப் பாபியான அடியேன் கடக்கமுடியாத பெரிய அஜ்ஞாநக்கடலில் விழுந்து கிடக்கிறேன். வேறு புகலில்லாத அடியேன் உன் திருவடிகளைப் புகலாகப் பற்றுகிறேன். இப்படிப் பற்றினால் நீ கட்டாயமாக ரக்ஷிப்பாயென்கிற நம்பிக்கையும் அடியேனுக்கு இல்லை. அடியேன் ‘உன் திருவடிகளைப் பற்றுகிறேன்’ என்று முற்கூறிய ஸரணாகதிவார்த்தையின் பொருளிலும் அடியேனுக்கு ஸ்ரத்தை இல்லை’ என்றிங்ஙனம் கூறிக்கொண்ட குற்றங்களாகும்.

ஸ்ரீபராஸரபட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவ உத்தரஸதகத்தில் (89) ‘அடியேனுக்கு, மோக்ஷோபாயமாகச் சொல்லப்பட்ட ஜ்ஞானயோக கர்மயோக பக்தியோகங்களாகிய உபாயமேதுமில்லை. மோக்ஷம் பெறும் ஆசையுமில்லை. வேறுகதியில்லாமை முதலிய தகுதிகளும் இல்லை. பாபங்கள் மட்டும் நிறையப்பெற்றவனாக உள்ளேன். மூர்க்கத்தனத்தினால் ஸப்தாதி விஷயங்களில் சென்று கலங்கிய நெஞ்சோடே ‘நீயே ஸரணமாக வேணும்’ என்று வார்த்தையை மட்டும் சொல்லுகிறேன்’ என்றிங்ஙனம் பலவாறாகக் கூறிய குற்றங்களும் ‘யாமுநகுரூத்தம கூரநாத பட்டாக்ய தேஸிக வரோக்த ஸமஸ்த நைச்யம்’ என்றதனால் கொள்க.

ஸப்தாதி போகவிஷயா ருசிரஸ்மதீயா
நஷ்டா பவத்விஹ பவத்தயயா யதீந்த்ர ! |
த்வத்தாஸதாஸகணநாசரமாவதௌ ய:
தத்தாஸதைகரஸதாSவிரதா மமாஸ்து ||
(16)

பதவுரை:- ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே, இஹ – இந்த ஸரீரம் இருக்கும் நிலையிலேயே, அஸ்மதீயா – அடியேனுடையதான, ஸப்தாதி போக விஷயா – நீசங்களான ஸப்தம் முதலியவற்றாலுண்டான அநுபவத்தைப்பற்றிய ருசி: – ஆசையானது, பவத்தயயா – தேவரீருடையதாய் அதிகமான துக்கத்தையே பற்றுக்கோடாகக்கொண்ட தயையினால், நஷ்டா பவது – உருத்தெரியாதபடி காணாமல்போகுக, (மேலும்) : – எந்த பாக்யஸாலியானவன், த்வத்தாஸ – விற்கவும் வாங்கவும் உரியவனாய் தேவரீர் இட்ட வழக்காயிருக்கும் அடியேனுடைய, தாஸகணநா – அடியவர்களை எண்ணும்போது, சரமாவதௌ – அவ்வெண்ணிக்கையின் கடைசியான எல்லையில், பவதி – இருக்கிறானோ, தத்தாஸதா – அவனைக் குறித்துச்செய்யும் அடிமையில், ஏக ரஸதா – (மற்றவற்றில் ஆசையோடு கலசாமல்) ஒன்றுபட்ட ஆசையானது, அவிரதா – நித்யமாக , பவத்தயயா – தேவரீருடைய தயையினால், மம அஸ்து – அடியேனுக்கு உண்டாயிடுக.

கருத்துரை:- இதற்கு முன்புள்ள இரண்டு ஸ்லோகங்களாலே யதிராஜருடைய தயைக்குத் தாமொருவரே இலக்கென்பது திடப்படுத்தப்பட்டது. இனித் தமக்கு அவ்வெதிராஜர் தந்தருளவேண்டிய பயன்களைக் குறிப்பிடுகிறார் இந்த ஸ்லோகத்தினால். இதரமான நீச ஸப்தாதி விஷயங்களை அநுபவிக்கவேணுமென்னும் ஆசை மாயவேணுமென்பதும், யதிராஜருடைய தொண்டர் தொண்டர் தொண்டரென்று தொண்டர் வரிசையில் யார் கடைசியில் இருக்கிறாரோ அவருக்குத் தொண்டு செய்யவேணுமென்ற ஒரே ஒரு ஆசை எப்போதும் உண்டாக வேணுமென்பதுமாகிய இவ்விரண்டு பலன்களையும் முறையே இச்லோகத்தின் இரண்டு பகுதிகளாலும் வேண்டிக்கொண்டாராயிற்று. எம்பெருமானுடைய க்ருபை – யார் மிக அதிகமாகப் பாபம் செய்து அதனால் அதிகமான துக்கத்தை அநுபவித்துப் பரிதபிக்கிறார்களோ அவர்களிடம் செல்லாது. எம்பெருமானாருடைய க்ருபையோவெனில் அவர்களிடமே சென்று அவர்களைக் கரையேற்றும். அதனாலன்றோ பகவான் எம்பெருமானானதும் ராமானுஜர் எம்பெருமானாரானதும். எம்பெருமானைவிட உயர்ந்தவரென்பதனாலன்றோ மருமமறிந்த மஹாநுபவராகிய திருக்கோட்டியூர்நம்பிகள் தமது ஸிஷ்யராகிய ராமானுஜரை எம்பெருமானார் என்றழைத்தருளியது. இவ்விருவகைப்பட்ட க்ருபைகளுக்கும் உள்ள வாசி ‘பவத்தயயா’ (தேவரீருடைய க்ருபையாலே) என்றதனால் கருதப்பட்டது. பகவானுடைய தயை அடியேனிடம் வேலைசெய்யாது. தேவரீருடைய தயையே அடியேனுக்கு உதவுவது என்பது இங்கு சாரம்.

————

ஸ்ருத்யக்ரவேத்யநிஜதிவ்யகுணஸ்வரூப: ப்ரத்யக்ஷதாமுபகதஸ்த்விஹ ரங்கராஜ: |
வஸ்யஸ்ஸதா பவதி தே யதிராஜ தஸ்மாச்சக்த: ஸ்வகீயஜநபாபவிமோசநே த்வம் || (
17)

பதவுரை:- யே யதிராஜ – வாரீர் யதிராஜரே, ஸ்ருத்யக்ரவேத்ய – வேதாந்தங்களின் வாயிலாக (ஆசார்யர்களிடமிருந்து) கேட்டுத் தெரிந்துக் கொள்வதற்குத் தக்கவைகளாகிய, நிஜதிவ்யகுணஸ்வரூப: – தனக்கேயுரியவைகளாய், அநுபவிக்கத்தக்க ஜ்ஞானம், ஸக்தி முதலிய குணங்களென்ன, எல்லாரையும் உட்புகுந்து நியமிக்கும் தன்மை அல்லது தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்குப் பரதந்த்ரனாயிருக்கும் தன்மையாகிய ஸ்வரூபமென்ன இவற்றையுடையவனாய், இஹ து – இப்பூமண்டலத்திலோ என்னில், ப்ரத்யக்ஷதாம் உபகத: – எல்லாருடைய கண்களுக்கும் இலக்காயிருக்குந் தன்மையை அடைந்த, ரங்கராஜ: – ஸ்ரீரங்கநாதன், தே – தேவரீருக்கு, ஸதா – எப்போதும், வஸ்ய: – சொன்ன காரியத்தைத் தவறாமல் செய்யுமளவுக்கு வஸப்பட்டவனாய், பவதி – தான் ஸத்தைபெற்றவனாகிறான்.(தேவரீர் சொன்ன காரியத்தை நிறைவேற்றுவதனால் தான் தானிருப்பது பயனுடையதாகிறதென்று நினைக்கிறான்.) தஸ்மாத் – அவன் அப்படி வஸப்பட்டவனாக இருப்பதனால், ஸ்வகீய – தேவரீருடைய அடியவர்களின், ஜந – தாஸஜநங்களினுடைய, பாபவிமோசநே – பாவத்தை விடுவிப்பதில், த்வம் – தேவரீர், ஸக்தபவஸி – ஆற்றல் படைத்தவராக ஆகிறீர்.

கருத்துரை:- ஸப்தாதி விஷயாநுபவத்தில் ஆசையைப் போக்கடிப்பதும், இராமாநுசரடியார்களில் எல்லை நிலத்திலேயிருக்கிற அடியவர்க்கு அடிமை செய்வதொன்றிலேயே ஆசையைப் பிறப்பிப்பதுமாகிய முன் ஸ்லோகத்தில் கூறிய தமது காரியத்தைச் செய்வதற்கு உறுப்பாக இராமாநுசரிடமுள்ள தயையை அதற்கு முன்புள்ள இரண்டு ஸ்லோகங்களால் குறிப்பிட்டு, இந்த ஸ்லோகத்தினால் தமது காரியம் செய்வதற்குத் தக்க ஆற்றல் (ஸக்தி) அவரிடம் இருப்பதை மூதலிக்கிறார். அர்ச்சாவதாரமான ஸ்ரீரங்கநாதன் இப்பூமியில் எல்லார் கண்களுக்கும் தென்பட்டுக்கொண்டிருக்கும் தன்மையின் வைலக்ஷண்யத்தை (சிறப்பை) ‘உபகதஸ்து இஹ’ என்றவிடத்திலுள்ள ‘து’ என்பதனால் காட்டுகிறார். பரத்வமும், வ்யூஹமும் (பரமபதநாதனும், க்ஷீராப்தி நாதனும்) மிகவும் தூரதேஸத்திலுள்ளவர்களாகையாலே இங்குள்ள நம் கண்களுக்கு இலக்காகார். இராமபிரான் கண்ணபிரான் முதலிய விபவாவதார மூர்த்திகள் முன்யுகங்களில் (காலாந்தரத்தில்) இருந்தவர்களாகையால் பிற்காலத்தவரான நம்மால் காணமுடியாதவர்களாகிறார். அந்தர்யாமியான எம்பெருமானோ யோகாப்யாஸம் செய்யும் யோகிகளுக்கு மட்டுமே மனத்திற்கு விஷயமாகி நம் ஊனக்கண்களுக்கு இலக்காகமாட்டான். அர்ச்சாவதாரமான ஸ்ரீரங்கநாதன் இந்த தேஸத்தில், இந்தக்காலத்தில், யோகம் செய்து ஸ்ரமப்படாமலேயே எல்லார்க்கும் ஊனக்கண்களுக்கு இலக்காகிறான் என்பதே அர்ச்சாவதாரத்தின் வைலக்ஷண்யமாகும். இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதன் ராமாநுஜமுனிவரிட்டவழக்காக இருப்பதனால் அவனிடம் பரிந்துரைத்து அவனைக்கொண்டு நம்கார்யம் செய்து தலைக்கட்டுவரென்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து. கர்மயோகம், ஜ்ஞானயோகம், பக்தியோகம், ப்ரபத்தியோகம் என்ற மோக்ஷோபாயங்களைக் காட்டிலும் வேறுபட்டு ஐந்தாம் உபாயமான ஆசார்யனாகிய எம்பெருமானாருடைய உபாயத்வமானது – புருஷகாரத்வத்தின் எல்லைநிலமாந்தன்மையே என்பது நிஸ்சயிக்கப்பட்டதாகிறது. இந்த ஸ்லோகத்தினால் – என்று வ்யாக்யாதா அருளிச்செய்கிறார். பாபவிமோசநம் ஏற்படுமாகில் பரமபதத்தில் பகவதநுபவகைங்கர்யங்கள் கிடைப்பது உறுதியாகையால் பாபவிமோசநம் மட்டுமே சொல்லப்பட்டது என்க.

—————

காலத்ரயேSபி கரணத்ரயநிர்மிதாதிபாப்க்ரியஸ்ய ஸரணம் பகவத்க்ஷமைவ |
ஸா ச த்வயைவ கமலாரமணேSர்த்திதாயத் க்ஷேமஸ் ஸ ஏவ ஹி யதீந்த்ர! பவச்ச்ரிதாநாம் ||
(18)

பதவுரை:- யே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே, காலத்ரயே அபி – கழிந்த காலம், நிகழும் காலம், வருங்காலமாகிய முக்காலங்களிலும், கரணத்ரயநிர்மித – மனம்மொழி மெய்களென்கிற மூன்று கருவிகளாலும் செய்யப்பட்ட, அதிபாபக்ரியஸ்ய – (எல்லாவற்றையும் பொறுக்கும் தன்மையையுடைய பகவானாலும் பொறுக்கமுடியாதவளவுக்கு) மிகவும் விஞ்சின பாவச்செயல்களைச் செய்யும் ஜீவாத்மாவுக்கு, ஸரணம் – பாவங்களைப்போக்கும் உபாயமானது, பகவத்க்ஷமைவ – குற்றம் போக்குமவனாய் குணங்களுக்கு இருப்பிடமான பகவானுடைய பொறுமையே ஆகும். அந்தப் பொறுமையோ எனில், த்வயா ஏவ – பகவானையும் ஆணையிடும் ஆற்றல்படைத்த தேவரீராலேயே, கமலா ரமணே – கருணையே வடிவெடுத்தவளாய் பகவானுடைய தயை பொறுமை முதலிய குணங்களை வெளிக்கிளப்புகிற ஸ்ரீரங்கநாச்சியாருடைய அழகியமணவாளனாகிய ஸ்ரீரங்கநாதனிடத்தில் அர்த்திதா இதி யத் – (ஸரணாகதி கத்யத்தில்) ப்ரார்த்திக்கப்பட்டதென்பது யாதொன்று உண்டோ,  ஏவ – அந்த ப்ரார்த்தனையே, பவச்ச்ரிதாநாம் – (தேவரீருடைய அபிமானத்திற்கு இலக்காக) தேவரீரால் கைக்கொள்ளப்பட்ட அடியார்களுக்கு, க்ஷேம:ஹி – உய்யும் உபாயமல்லவா?

கருத்துரை:- கீழ்ஸ்லோகத்தில் ஸ்ரீரங்கநாதன் யதிராஜருக்கு வஸப்பட்டவனென்றார். இந்த ஸ்லோகத்தில் அந்த ஸ்ரீரங்கநாதனை இன்று புதிதாக, அடியேனுடைய பாவத்தைப் போக்கும்படி தேவரீர் ப்ரார்த்திக்கவேண்டாம். முன்பே கத்யம் விண்ணப்பிக்கும்போது ‘மநோவாக்காயை:’ என்று தொடங்கும் சூர்ணையாலே, ‘க்ருதாந் க்ரியமாணாந் கரிஷ்யமாணாந் ச ஸர்வாந் அஷேஷத: க்ஷமஸ்வ’ (முன்பு செய்யப்பட்டவையும், இப்போது செய்யப்படு மவையும், இனிமேல் செய்யப்போமவையுமான எல்லாவிதமான அபசாரங்களையும் (பாவங்களையும்) ஒன்றையும் விடாமல் பொறுத்தருளவேணும்) என்று. அடியோங்களுடைய பாபங்களையும் பொறுத்தருளும்படி ப்ரார்த்தித்தாய்விட்டதே. அந்த ப்ரார்த்தனையே போதாதோ அடியோங்களுக்கு உஜ்ஜீவநோபாயம் என்கிறார்.

(முன்பு எடுத்த கத்யவாக்யத்தில் தம்மைச் சேர்ந்தவர்களுடைய பாவத்தைப் பொறுக்கும்படி ப்ரார்த்தித்தாரென்பது ஸ்பஷ்டமாக இல்லாவிட்டாலும், ‘இமையோர் தலைவா! இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை, அடியேன் செய்யும் விண்ணப்பம் கேட்டருளாய்’ என்று தாமும் தம்மைச் சேர்ந்தவர்களும், அறியாமையும், தீவினையும் பிறப்புமாய் ஓயாமல் நடந்து செல்கிற ஸம்ஸார ஸம்பந்தத்தை இனிமேல் அடையாமலிருப்பதற்காக, எல்லாருக்குமாகத் தாமொருவரே எம்பெருமானிடம் விண்ணப்பம் செய்த மாறனாம் நம்மாழ்வாருடைய திருவடிகளைப் பணிந்து உய்ந்தவராகையாலும், உண்மையில் – பிறர்துன்பங்கண்டு பொறாமயென்னும் தயையை எம்பெருமானைக் காட்டிலும் அதிகமாக பெற்றுள்ளவராகையாலே, திருகோட்டியூர் நம்பிகள் தம்மைப் பதினெட்டுத் தடவைகள் நடக்கவைத்து மிகவும் வருத்தி உபதேஸித்த சரமஸ்லோகார்த்தத்தை எந்த வருத்தத்தையும் கொடாமல் தம்மிடம் ஆசையோடு கேட்டவர்களுக்கு உபதேஸித்த பெருமையை உடையவராகையாலும் யதிராஜர் தம்மைச் சேர்ந்தவர்களுடைய பாபத்தையும் பொறுக்கும்படி நிஸ்சயமாக ப்ரார்த்தித்திருப்பரென்று நம்பியே ‘க்ஷேமஸ்ஸ ஏவஹி யதீந்த்ர! பவச்ச்ரிதாநாம்’ (தேவரீர் ப்ரார்த்தித்த ப்ரார்த்தனையே, தேவரீரை ஆஸ்ரயித்த அடியோங்களுக்கும் உஜ்ஜீவநோபாயமாகும்) என்று மணவாளமாமுனிகள் அருளிச்செய்தார் என்று கொள்ளல்தகும். இக்கத்யவாக்யத்தில் “மம (அபசாராந்)” என்று இல்லாததனாலும், எல்லாருடைய அபசாரங்களையும் பொறுக்கும்படி ப்ரார்த்தித்ததாகக் கொள்ளுதல் பொருந்தும்.)

—————

ஸ்ரீமந்யதீந்த்ர! தவ திவ்யபதாப்ஜஸேவாம் ஸ்ரீஸைலநாதகருணாபரிணாமதத்தாம் |
தாமந்வஹம் மம விவர்த்தயநாத!தஸ்யா: காமம் விருத்தமகிலஞ்ச நிவர்த்தயத்வம்
(19)

பதவுரை:- ஸ்ரீமந்யதீந்த்ர – தம்முடைய ஆசார்யர்களோடு தம்முடைய ஸிஷ்யர்களோடு வாசியற மோக்ஷமளிக்கையாகிற என்றுமழியாத செல்வமுடைய யதிராஜரே, த்வம் – தேவரீர், மே – அடியேனுக்கு, ஸ்ரீஸைலநாத கருணாபரிணாமதத்தாம் – அடியேனுடைய ஆசார்யராகிய திருமலையாழ்வாரென்னும் திருவாய்மொழிப்பிள்ளையின் மிக்க கருணையினாலே தரப்பட்ட, தாம் – மிகச்சிறந்த, தவ திவ்யபதாப்ஜஸேவாம் – தேவரீருடைய திருவடித்தாமரைகளில் பண்ணும் கைங்கர்யத்தை, அந்வஹம் – நாடோறும், விவர்த்தய – விஸேஷமாக வளர்த்தருளவேணும், (அதாவது தேவரீரடியார் பரம்பரையில் கடைசிவரையில் அக்கைங்கர்யம் அடியேன் செய்யும்படி அதை வ்ருத்திசெய்விக்க வேணுமென்றபடி) நாத – ஸ்வாமியான யதிராஜரே, தஸ்யா: – அத்தகைய கைங்கர்யத்துக்கு, விருத்தம் – தடையாகிய, அகிலம் – எல்லாவற்றையும், காமம் நிவர்த்தய – அடியோடு போக்கியருளவேணும்.

கருத்துரை:- கீழ் ‘வாசா யதீந்த்ர’ (3) என்ற ஸ்லோகத்திலும், ‘நித்யம் யதீந்த்ர’ (4) என்ற ஸ்லோகத்திலும் தொடங்கிய – முறையே யதிராஜருடைய அடியார்களுக்குச் செய்யும் கைங்கர்யத்தையும் யதிராஜருக்குச் செய்யும் கைங்கர்யத்தையும் இதில் ப்ரார்த்தித்துமுடிக்கிறார். ‘ஸேவாம் வர்த்தய’ – என்றதனால் யதிராஜ ஸேவையின் வளர்ச்சியையும் , ‘விவர்த்தய’ என்றவிடத்தில் ‘வி’ என்னும் உபஸர்க்கத்தாலே யதிராஜருடைய அடியார் ஸேவையின் வளர்ச்சியையும் ப்ரார்த்தித்தாரென்றபடி. இதனால் தாம் செய்யும் கைங்கர்யத்தை ஏற்றுக்கொள்ளுதலால் யதிராஜரே ப்ராப்யர் என்பதும், அக்கைங்கர்யத்துக்குத் தடையைப் போக்கி அதனைத் தந்து வளர்த்தலால் அவரே ப்ராபகர் என்றும் பெறப்பட்டதாயிற்று. திருவாய்மொழிப்பிள்ளைக்கு யதிராஜரோடு ஸம்பந்தத்தை உண்டாக்கிக் கொடுத்த உபகாரத்வமாத்ரமேயாகும். யதிராஜ கைங்கர்யத்துக்குத் தடையாவன – இஹலோக பரலோக ஸுகாநுபவமும், ஆத்மாநுபவமாகிய கைவல்யமும், யதிராஜருடைய உகப்புக்காக வல்லாமல் தன்னுகப்புக்காகச் செய்யும் பகவத்கைங்கர்யமும் முதலியனவாகும்.

————–

விஜ்ஞாபநம் யதிதமத்ய து மாமகீநம் அங்கீகுருஷ்வ யதிராஜ! தயாம்புராஸே |
அஜ்ஞோSயமாத்மகுணலேஸவிவர்ஜிதஸ்ச தஸ்மாதநந்ய ஸரணோ பவதீதி மத்வா |
| (20)

பதவுரை:- தயா அம்புராஸே – பிறர்துன்பம் கண்டு பொறாமையென்னும் தயைக்குக் கடல்போன்ற, யதிராஜ – யதிராஜரே, அத்ய – இப்போது, மாமகீநம் – அடியேனுடையதான, யத் விஜ்ஞாபநம் – ‘வாசாயதீந்த்ர’ (3) என்று தொடங்கி முன் ஸ்லோகம் வரையில் செய்யப்பட்ட விண்ணப்பம் யாதொன்றுண்டோ, இதம் – இந்த விண்ணப்பத்தை, அஜ்ஞ அயம் – நல்லறிவு இல்லாதவன் இவன், ஆத்மகுணலேஸ விவர்ஜிதஸ்  – மேலும் மனவடக்கம், பொறியடக்கம் முதலிய ஆத்மகுணங்கள் சிறிதுமில்லாதவன், தஸ்மாத் – ஆகையால், அநந்ய ஸரணபவதி – நம்மைத்தவிர வேறோரு உபாயமில்லாதவனாக இருக்கிறான், இதி மத்வா – என்று நினைத்தருளி, அங்கீகுருஷ்வ – ஏற்றுக்கொண்டருளவேணும்.

இதுவரையில் தாம் செய்த விண்ணப்பத்தையேற்றுக் கொள்ளுதற்குக் காரணமாகத் தம்மிடமுள்ள யதிராஜரைத் தவிர வேறொறு உபாயமில்லாமையாகிற அநந்ய ஸரணத்வத்தைச் சொல்லி முடிக்கிறார். இதனால் தயாம்புராஸே – தயையாகிற நீர் வற்றாத கடலே என்றபடி. இதனால் யதிராஜருடைய தயை ஒரு காரணத்தினால் உண்டாகாமல் நிர்ஹேதுகமாய் நித்யமானது என்று கொள்ளத்தக்கது. ‘தயைகஸிந்தோ’ (6), ‘ராமாநுஜார்ய கருணைவ து’ (14), ‘யதீந்த்ர கருணைவ து’ (15), ‘பவத்தயயா’ (16), ‘கருணாபரிணாம’ (19), ‘தயாம்புராஸே’ (20) என்று தயையை அடுத்தடுத்துப் பலதடவைகள் ப்ரஸ்தாவித்த படியினால், ராமாநுஜர் ‘க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யர்’ (பிறகாரணங்களிலனாலன்றி, இயற்கையாகத் தமக்கேற்பட்டுள்ள தயைமாத்ரத்தாலே மனம் தெளிந்து உபதேஸித்து உய்வு பெறுவிக்கும் ஆசார்யர்) என்பது சொல்லப்பட்டதாயிற்று.

இந்த யதிராஜ விம்ஸதியின் முதல் ஸ்லோகத்திலுள்ள ‘ஸ்ரீமாதவாங்க்ரிஜலஜத்வய நித்யஸேவா ப்ரேமாவிலாஸய பராங்குஸபாதபக்தம்’ என்பதனால், இராமாநுச நூற்றந்தாதியில் முதற்பாட்டிலுள்ள ‘பூமன்னுமாதுபொருந்தியமார்பன் புகழ்மலிந்த பாமன்னுமாறனடிபணிந்துய்ந்தவன்… இராமாநுசன்’ என்ற பகுதி நினைவு படுத்தப் பெற்றதும், இங்கு இக்கடைசியான ஸ்லோகத்திற்கு முன்புள்ள ஸ்லோகத்தில் உள்ள ‘ஸ்ரீமந் யதீந்த்ர தவ திவ்ய பதாப்ஜஸேவாம் விவர்த்தய’ (ராமாநுஜமுனிவரே! தேவரீர் திருவடித்தாமரைகளில் அடியேன் செய்யும் கைங்கர்யத்தை தேவரீரடியார்களின் கைங்கர்ய பர்யந்தமாக வளர்த்தருளவேணும்) என்பதனால், இராமாநுசநூற்றந்தாதியில் கடைசியான பாசுரத்திற்கு முன் பாசுரத்திலுள்ள ‘இராமாநுச! உன்தொண்டர்க்கே அன்புற்றிருக்கும்படி என்னையாக்கி அங்காட்படுத்து’ என்ற பகுதி நினைவுபடுத்தப்பட்டதும் கவனிக்கத்தக்கது. ஆக, யதிராஜர் இராமாநுச நூற்றந்தாதியை நேரே கேட்டு ஆனந்தமடைந்தாப்போலே இந்த யதிராஜவிம்ஸதியையும் நாம் சொல்லக்கேட்டு, ஆநந்தப்படுவரென்பதில் ஐயமில்லை என்றதாயிற்று.

————-

இந்த ஸ்ரீ யதிராஜ விம்சதி க்ரந்தமானது ஸ்ரீ மணவாள மா முனிகள் வடதிசை யாத்ரை எழுந்து அருளுவதற்கு முன்னே பாண்டிய தேசத்திலே ஆழ்வார் திரு நகரியிலேயே சதுர்வேத மங்கலத்தில் எழுந்து அருளி இருக்கும் எம்பெருமானார் விஷயமாகச் செய்து அருளப்பட்டது என்பர்

திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமி.-திருநக்ஷத்ரம் -ஆனி அவிட்டம் -அவதார ஸ்தலம் -ஸ்ரீ திரு மழிசை -ஆச்சார்யர் –திருத்தகப்பனார் -ஸ்ரீ நரசிம்ஹாச்சார்யர்

மஹீஸார க்ஷேத்ரம் என ப்ரசித்தி பெற்ற திருமழிசையில் பிறந்த இவர்க்குத் திருத் தகப்பனார் வீர ராகவன் எனப் பெயரிட்டார். முதலியாண்டானின் வாதூல குலத்தில் திருவவதரித்தார். இவரது பக்தி ஸாரோதயம் எனும் தோத்திர நூலில் இவர் பிதாமகர் திருநாமம் ரகுவராசார்யர் என்று காண்கிறது. கி பி 1766ல் பிறந்த இவர் வாதூல வீர ராகவாசார்யர் என்றும் அழைக்கப்பட்டதாகக் காண்கிறது.

இளமையிலேயே மிக்க அறிவாளியாய் திகழ்ந்த இவர், 15 ப்ராயத்துக்குள் தம் யஜுஸ் சாகை முழுதும் கற்றார். அத்தோடே தர்க்கம், வியாகரணம், மீமாம்ஸை, சாங்க்யம், பதஞ்ஜலி யோகம் முதலியனவும், ஜ்யோதிஷம், ஸங்கீதம், பரத நாட்யம், போன்றனவும் கற்றுத் தேர்ச்சி பெற்றார். 20 பிராயம் முடியுமுன்பே ஸகல சாஸ்த்ர நிபுணர் ஆனார். திருத்தகப்பனாரிடம் ரஹஸ்ய கிரந்தங்கள் கற்று மிக்க இளமையிலேயே ஸம்ப்ரதாய ஸ்ரீகோசங்கள் எழுதலானார். வாதூல வரதாசார்யர் மற்றும் பல திவ்ய தேச யாத்ரைகள் செய்து பலரை வாதில் வென்ற ஸ்ரீரங்காசார்யர் இருவரிடமும் பயின்றார்.

51 ஆண்டுகளே எழுந்தருளியிருந்த இந்த ஸ்வாமி அச்சிறிய வயதுக்குள் பலரை வாதங்களில் வென்றார். ஈச்வர வருஷம் ஐப்பசி சுக்லபக்ஷ சதுர்த்தசியில் பரமபதித்தார்.

இவரின் லிகித கைங்கர்யங்களில் தலையானது பிள்ளை லோகாசார்யர் அருளிச்செய்த ஸ்ரீவசன பூஷணத்துக்கு மாமுனிகள் அருளிச் செய்த வ்யாக்யானத்துக்கு விரிவான அரும்பத உரை அருளியது ஆகும். இவரின் மற்றொரு க்ரந்தமான பக்தி ஸாரோதயம் திருமழிசை ஆழ்வாரின் சரித்ரத்தை மிக அழகாகக் காட்டியுள்ளது.

க்ரந்தங்கள்

இவர் தான் வாழ்ந்த குறுகிய காலத்துள் பல க்ரந்தங்கள் அருளியுள்ளார். அவற்றின் தொகுப்பு இங்கே:

  • ஸ்ரீ பக்தி ஸாரோதயம்
  • வேதவல்லி சதகம்
  • ஹேமலதாஷ்டகம்
  • அபீஷ்ட தண்டகம்
  • சுக சந்தேசம்
  • கமலா கல்யாண நாடகம்
  • மலயஜா பரிணய நாடிகா
  • ந்ருஸிம்ஹாஷ்டகம்
  • மாமுனிகள் ஸ்ரீவசன பூஷண வ்யாக்யான அரும்பதம்
  • திருச்சந்த விருத்த ப்ரதிபதம்
  • ஸ்ரீரங்கராஜ ஸ்தவ வ்யாக்யானம்
  • மஹாவீரசரித வ்யாக்யா
  • உத்தர ராம சரித வ்யாக்யா
  • சத ச்லோகீ வ்யாக்யா
  • ராமாநுஜாஷ்டக வ்யாக்யா
  • நக்ஷத்ர மாலிகா வ்யாக்யா
  • தேவராஜ குரு விரசித வரவரமுனி சதக வ்யாக்யா
  • துஷ்க்கர ச்லோக டிப்பணி
  • தினசர்யா
  • ஷண்மத தர்சனி
  • லக்ஷ்ம்யா உபாயத்வ நிராஸ:
  • லக்ஷ்மீ விபுத்வ நிராஸ:
  • ஸூக்தி ஸாதுத்வ மாய்யா
  • தத்வ ஸுதா
  • தத்வ ஸார வ்யாக்யா
  • ஸச்சரித்ர பரித்ராணம்
  • பழனடை விளக்கம்
  • த்ரிம்சத் பிரச்னோத்தரம்
  • லக்ஷ்மீ மங்கள தீபிகா
  • ராமானுஜ அதிமானுஷ வைபவ ஸ்தோத்ரம்
  • அநு பிரவேச ச்ருதி விவரணம்
  • ”சைலோக்னிச்ச” ச்லோக வ்யாக்யா
  • மஹீஸார விஷய சூர்ணிகா
  • “ஸ்வாந்தே மே மதனஸ்திதிம் பரிஹர” இத்யாதி ஸ்லோக வ்யாக்யானம்
  • ஸச்சர்யக்ஷகம்
  • ப்ராப்ய ப்ரபஞ்சந பஞ்ச விம்சதி:
  • ந்யாய மந்தரம்
  • தாத்பர்ய ஸச்ச்ரீகரம்
  • வசஸ் சுதா மீமாம்ஸா
  • வசஸ் சுதா பூர்வ பக்ஷ உத்தரம்
  • ப்ரஹ்மவத்வதங்கம்
  • லக்ஷ்மீ ஸ்தோத்ரம்
  • வரணபஞ்ச விம்சதி:.

ஸ்ரீமத் வாதுல நரஸிம்ஹ குரோஸ்தநூஜம்
ஸ்ரீமத் ததீய பதபங்கஜ ப்ருங்கராஜம் |
ஸ்ரீரங்கராஜ வரதார்ய க்ருபாத்த பாஷ்யம்
ஸேவே ஸதா ரகுவரார்யம் உதாரசர்யம் ||
-இவர் தனியன்:

—————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே திருப்பதி க்ருஷ்ணமாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

திருக்குறளும் ஸநாதந தர்மமும்

February 12, 2024

1; “அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன்‌ முதற்றே யுலகு,

எழுத்தெல்லாம்‌ – எல்லா எழுத்துக்களும்‌, அகர
முதல-அக.ரத்தை முதலெழுத்தாக உடையன : (அது
போல), உலகு-உலகம்‌, ஆதிபகவன்‌ முதற்று- கடவுளை
முதலாக உடையது, ஏ அசை,

எல்லா எழுத்துக்களுக்கும்‌ எப்படி. அகரம்‌ முதலெழுத்தோ, அப்படியே உலகத்திலுள்ள எல்லரவற்‌றுக்கும்‌ கடவுள்‌ முகற்பொருள்‌ என்பது கருத்து.
அதிலிருந்து கடவுள்‌ எனப்படும்‌ பரம்பொருள்‌ ஒன்றுஉண்டு என்பது பெற்‌ப்பட்டது, காரணமின்றிக்‌ காரிய மில்லாமையின்‌,
அகரமுதல–அகாமாகிய முதல்‌. என்பது அகரமுதல்‌எனத்‌ தொகையாகும்‌. தொகை என்பதை வடமொழியில்‌ ஸமாஸம்‌. என்பர்‌. ‘ அகரமுதல்‌ என்பதற்குப்‌ பலவின்‌ யால்விஞூதி ஆகிய ௮ சேர்க்கப்பட, அகரமுதலஎனக்‌ குறிப்புவினைமுற்று ஆயிற்று, எழுத்து என்பது ஈண்டுப்‌ பன்மை, ஆதி பகவன்‌ என்பது ஆதியாய பகவன்‌ என விரியும்‌, ஆதி என்பதும்‌ பகவன்‌ என்பதும்‌வடமொழிச்சொற்களின்‌ தற்பவம்‌, பகம்‌ என்றசொல்‌ ஐச்வர்யம்‌, வீர்யம்‌, ர்த்தி, இரு, ஞானம்‌, வாக்கியம்‌ என்ற ஆறினையுங்‌ குறிக்கும்‌; பகத்தை.யுடையவன்‌ பகவான்‌. பகவான்‌ என்பதன்‌ இடை.க்குறை பகவன்‌ என்பது, பகவர்‌ பலர்‌ ஆ.தலாலும்‌, அவருள்‌
முதல்வர்‌ கடவுள்‌ ஆதலாலும்‌ கடவுளைக்‌ குறிக்க ஆதி பகவன்‌ என ஆரியர்‌ வழங்கினர்‌. “ ஆதி பகவன்‌ ஆகிய முதல்‌? என்பது ஆதிபகவன்முதல்‌ என ஆயிற்று;
அதற்கு து விகுதி சேர்க்க, ஆதிபகவன்முதற்று என்ற குறிப்புவினை வந்தது, உலகு என்பது *உலகம்‌” என்‌பதின்‌ கடைக்குறை; அச்சொல்‌ பல பொருள்களைக்‌
குறிப்பினும்‌, சொல்வகையான்‌ ஒருமையாகலான்‌ ஒருமை வினையைக்‌ கொண்டது.

“ அகரத்திற்குக்‌ தலைமை…சாதமாச்‌ திரையாகிய இயல்பால்‌ பிறத்தலானும்‌” எனப்‌ பரிமேலழகர்‌ கூறுவர்‌.
ருக்வேதகம்‌ ஐதரேயஆரண்யகம்‌ மூன்றாவது அத்தி யாயம்‌ ஆறாவது கண்டம்‌ அகரமே * சர்வவாக்கும்‌,அகரமே ஸ்பர்சங்களாலும்‌ (வாய்க்குள்ளிருக்கும்‌ பல உறுப்புகள்‌ ஒன்றோடொன்று தொட்டு சேர்வதினாலும்‌), ஊஷ்மங்களினாலும்‌ (அவ்வுறுப்புகள்‌’ கேரே
சேராமல்‌ சற்று விலகி இருஈ்து கொண்டு இடையில்‌ கொஞ்சம்‌ காற்று விட்டு ஊதுவதினாலும்‌), வெளியாக்‌ கப்பட்டு ககாரம்‌, மகரம்‌, பாகரம்‌ முதலிய பல்வேறு
எழுத்துருவங்களை அடைகின்‌ ௨22 எனப்பொருள்‌ படும்‌படி. கூறுகிறது.

மேதபாஷ்யம்‌, ஆகாயத்தின்‌ குணமாகிய காதம்‌ ஒன்றே காகஸ்வரம்‌, புல்லான்‌ குழல்‌, வீணை, தம்பட்டை முதலிய கருவிகளுக்கு ஏற்றவாறு ஒலிப்பது போலவும்‌, பஞ்ச லோகங்கள்‌ உருக்குக்குழாய்களின்‌ சன்மைக்‌ கேற்ப ‘நடராஜவிக்ரஹம்‌, விஷ்ணுவிக்ரஹம்‌ முதலிய பல வேறுவடி.வங்களை அடைவகைப்‌ போலவும்‌ இயல்பாசிய
கரதமாத்திசையாம்‌ அகரமும்‌ உதடு, பல்‌, அண்‌ணம்‌. _ இவற்றின்‌ ‘தொழிலிற்கு  வேறு
எழுத்துக்களாய்‌. வருகின்றது.

அதற்கு மற்றொரு காரணம்‌ “ அக்ஷரங்களுள்‌ அகரம்‌ ஆகின்றேன்‌ யான்‌ (அக்ஷராணாம்‌ – அகாரோ –அஸ்மி – பகவத்‌ கீதை – 10 வது அத்தியாயம்‌ 88 வது சுலோகம்‌)” எனப்‌ பகவத்‌ கீதையில்‌ கண்ணன்‌ கூறிய.மாகு மென்பர்‌; அப்பகவத்‌ தகைத்தொகூரின்‌ கருத்த-எழுத்துக்களுள்‌ தன்னை அகாரமாக உ்பாஸிக்கவேண்டும்‌-என ஆதிசங்கரசாரிய ஸ்வாமிகள்‌ கூறி இருத்தலின்‌ அவர்கூற்று ஆராய்தற்பாலது

உலகில்‌ உண்டாக்கப்படும்‌ காரியப்பொருள்களுக்‌ ‘கெல்லாம்‌ பொதுவாக முதற்காரணம்‌ எனப்படும்‌ உபாதான காரணமொன்றும்‌, நிமித்த காரணம்‌ எனப்படும்‌ மற்‌ றொரு காரணமும்‌ இருப்பதைக்‌ காண்கிறோ ம்‌. “ஒரு மூலமில்லாமல்‌ இவ்வுலகமிராது ‘” எனச்‌ சாந்தோக்கிய உப நிஷத்‌திற்‌ சொல்லப்படிருக்கறது (சா- உப- அத்யா 6கண்டம்‌ 8, மந்த்ரம்‌ 8),

உதாரணமாக மட்கலத்‌திற்கு மண்‌ முதல் காரணம்‌ (அதாவது உபாதான காரணம்‌),குயவன்‌ நிமித்த காரணம்‌, ஆனால்‌ பகவான்‌ உலகத்‌தை ஸிருஷ்டிக்கும்போது அவர்‌ இரண்டற்ற பரம்‌ பொருளாகையால்‌ தானே முதற்காரணமுமாகிறார்‌ என்பது திரு நான் மறை முடியான வேதாந்த சாஸ்திரத்தின்‌ கருத்து,

இக் கருத்தையே ஆதிபகவன்‌. முதற்றே வுலகு!” என்னு மிடத்‌தில்‌ முதல் காரணத்‌தைக்‌ குறிக்கும்‌ முதற்றே என்றும்‌ சொல்லால்‌: உணர்த்துகிறார் போலும்‌. இதனால்‌ தேவர்‌ குறளும்‌ திருநான்மறைமுடியும்‌ ஒரு வாசகமென்றுணர்‌
என்னும்‌ ஒளவையாரின்‌ வாக்கின்‌ உண்மை வெளியாகிறது .

எல்லா உலகும்‌ ஆவாய்‌ நீயே என்னும்‌ தத்துவத்தையே இக் குறள்‌ உவமை வாயிலாகப்‌ போதிக்‌கிறது :
கடவுள்‌ எல்லா சராசாரப்‌ பொருளிலும்‌ அவற்றின்‌ தன்மையாய்‌ நிற்குமாறு போல்‌ அகரம்‌ எல்லா எழுத்துக்களிலும்‌ கலந்து தனியாய்‌ நிற்கும்‌” என்று தொல் காப்பியம்‌ எழுத்ததிகாரத்தில்‌ எழுதும்‌ சமயத்தில்‌ சொல்லியிருக்கிறார்‌ நச்‌சினார்க்கினியர்‌. அதற்குப்‌ பலமாக முன்னரே கூறிய படி. அக்ஷரங்களுக்குள்‌ அகாரமாகின்றேன்‌ யான்‌ என்து கண்ணன்‌ சொல்வதை எடுத்துக்‌ காட்டியிருக்கிறார்‌.

அதே 10 வது அத்தியாயத்தில்‌ 20 வது சுலோகத்தில்‌.
“ஸமஸ்த பூதங்களின்‌ ஹிருதயத்தில்‌ இருக்கிற ஆத்மா நானே… பூதங்களுக்கு ஆதியும்‌ ஸ்திதியும்‌ அந்தமும்‌
நானே
(அஹம்‌ – ஆத்மா .மாலாகேச – ஸர்வ வஷதா- சயஸ்யித : | அஹம்‌-ஆதிஸ்௪ -ம;ப* பஞ்ச- வுடு கானாம்‌-
அந்த – ஏவ- ௪)” என்று கண்ணன்‌ கூறி 89 வது சுலோ:கத்தில்‌
“ சகலபூதங்களுக்கும்‌ காரணம்‌ அல்லது விதை
எதுவோ ௮து நான்‌. ஜங்கமம்‌, ஸ்தாவரம்‌, ஆகிய என்னையன்றி வேறில்லை;
யச்சாமி.-ஸர்வ -வ-தானாம்‌- ஜம்‌ – தத்‌- அஹம்‌- அர்ஜுன |. அஸ்தி- வினா -யத்‌ – ஸ்யாத்‌-மயா- ஹஷதம்‌- சாசாம்‌?” என்று சொல்லி முடிக்கிறார்‌. –
ஆகையினால்‌ கண்‌னன்‌ அதிஷ்டானம் பற்றித்‌ தன்னைச்‌ சராசரப் பொருள்‌களுக்கு முதற்காரண்மாகக்‌ கூறினார்‌ என்பது உறுதியாகிறது,
ஆகையால்‌ நச்சினார்க்கு இனியார் அகரம்‌ மற்ற
எமுத்‌துக்களில்‌ கலந்து நிற்றலுக்குக்‌ கடவுள்‌ மற்‌ற ௪ராசரங்களில்‌ கலந்து நிற்பதை உவமையாக எடுத்தது மூதற்காரணம் பற்றியே,

2… கற்றதனாலாய பயனென்கொல்‌ வாலறிவனற்றாள்‌ தொழா ரெனின்‌.

(உலகு) உலகத்தார்‌,
வாலறிவனற்றாள்‌ சுத்தமான அறிவினையுடைய கடவுளின்‌ திருவடிகளை,
‘தொழார்‌ எனின்‌ -வணங்காம லிருந்தால்‌, (அவர்‌)
(எழுத்து – நூல்களை) கற்‌றதனால்‌ – படித்ததால்‌, ஆயஆகிய, பயன்‌ பலன்‌, என்‌ கொல்‌ = என்னமோ? (ஒன்றுமில்லை என்பது கருத்து),

உலகு, எழுத்து என்பன முதற் குறளிலிருக்து எடுத்‌துக் கொள்ளப்பட்டன. வட மொழிநூலாசிரியர்‌அனுவர்த்தித்தன. என்ற சொல்லை வழங்குமிடத்து தமிழில் அதிகரித்தன. என்ற சொல்லை வழங்குகிறார்கள்

ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -தைத்ரியம் -இத்தையே ஆதிபகவன் -வாலறிவன்
ஸாஸ்‌திரங்களைக்‌ சுற்றதின்‌ பயன்‌ கடவுளின்‌ சரணங்களைத்‌ தொழுது மறு ஜன்ம மில்லாமல்‌ செய்து கொள்வது தான்‌ எனப்‌ பொருள்‌ படும்படி. இக் குறளின்‌ கருத்தைப்‌ பரிமேலழகர்‌ வெளியிட்டிருக்‌கிறார்‌. இக் கருத்தையே ஸ்ரீபாகவத்தில்‌ 8 வது ஸ்கந்தத்தில்‌ விதுர மைத்ரேய ஸம்வாத த்தில்‌
“ஸ்ருதஸ்ய-பும்ஸாம்‌-ஸுஈசிரஸ்ரவஸ்ய – நநு -அஞ்‌ஜஐஸா ஸூரிவி:-ஈவிதோ -ர்த்த: |யத்‌- தத்‌ – குணாதுச்ரவணம்‌ – முகுக்‌, – பாஉாரவிக்‌உம்‌ – ஹ்ரு,யேஷு-ஈயேஷாம்‌?’ என்னும்‌ (8-18-4) ஸ்லோகத்தில்‌ சொல்‌லப் பட்டி ருக்கிறது.

3-மலர்மிசை யேகினான்‌ மாணடி சேர்ந்தார்‌
நிலமிசை நீடு வாழ்வார்‌.

மலர் மிசை – (உள்ளமாகிய) தாமரை மலரின்‌
கண்‌,ஏகினான்‌ – (அன்பால்‌ நினைப்பவர்‌ நினைத்த வடிவோடு விரைந்து) சென்றடைந்தவனுடைய,
மாணடி.– மாட்‌சிமைப்பட்ட அடிகளை ,
நீடு _ வெகு காலம்‌, | வாழ்வார்‌ இருப்பார்‌.

காரிய பிரமம்‌. எனப்படும்‌ _ஸகுணபரமாத்மாவை.உபாஸனை செய்வோர்‌ அக் காரியப் பிரம்ம லோகத்தில்‌ மகாப் பிரளய பர்யந்தம்‌ இருப்பர்‌. என்ற வேதாந்தக்‌ கொள்கையை இக் குறள்‌ கூறுகிறது

மலர்மிசை என்னும்‌ சொல்‌ கரரியப் பிரம்மமாகும்‌; திரிமூர்‌த்திகளில்‌ சேர்ந்த திருமாலைத்‌ திக்கும்‌ “மனன: – மலமற – மலர்‌ மிசை யெழுதரு – மனனுணர்‌ – வளவி லன்‌”’ என்னும்‌ நம்மாழ்வார்‌ (திருவாய்மொழி 1-1. 2) பாசுரத்தில்‌ காணப்படுகிறது.” இதை அனுசரித்து மலர்‌!மிசையேகினான்‌ என்னும்‌ பதத்‌திற்குத்‌ திருமாலெனப்‌பொருள்‌ கொள்ளலாம்‌. அவ்விதம்‌ கொள்ளின்‌ இவ்வாசிரியர்‌ மேலே கடவுளைக்‌ குறிக்குமிடத்‌து, –தாமரைக் கண்ணான்‌, உலகளந்தான்‌” என்னும்‌ பதங்களை ப்ரயோகிப்பதும்‌ பொருந்தும்‌.

ஸ்ரீ பாகவதத்திலும்‌ முதல்‌ ஸ்கந்தத்தில்‌ நாரதர்‌ தன் வரலாற்றைக்‌ கூறுமிடத்து,
“ஹட த. இவ-மே-சீஷ்‌ ரம்‌- உர்றானம்‌-யா தி. செதஹி’?(1-6-584) என்று சொல்லப்பட்டிருக்கிறது  இதன்‌ பொருள்‌ :-விளிக்கப்படும்‌ ஒருவன்‌ விரைந்து. செல்வது
போல்‌ பகவான்‌ உள்ளத்தின் கண்‌ (உள்ளத் தாமரையின்‌ கண்‌) தர்பனம்‌ கொடுக்க விசைந்து செல்லுகிறான்‌-என்‌றவாறு. இக்குறளிலுள்ள மலர்‌ மிசை யேகினான்‌ என்‌னும்‌ சொற்றொடருக்கு அன்பால்‌ நினைவாரது உள்ளக்‌ கமலத்தின்‌ கண்‌ அவர்‌ நினைத்த வடிவோடு விரைந்து சென்றவன்‌”? என்று பரிமேலழகர்‌ உரை செய்தது மேற்‌ கூறப்பட்ட பாகவத ஸ்லோகத்தின்‌ கருத்தை அனுசரித்திருக்கிறது
மலர்‌ என்பதற்குத்‌. தாமரை யோன்ற ஹிருதயம்‌! என்றும்‌ பொருள்‌ கூறுவர்‌.
மலர்மிசை என்பதை பூமேல்‌ நடந்தான் என்‌பதோர்‌ பெயர் பற்றிப்‌ பிறிதொரு கடவுட்கு ஏற்றுவாரும்‌ உளர்‌?! என்று பரிமேலழகர்‌ கூறியிருக்கிறார்‌.
பிறிதொரு கடவுள்‌ ! என்பதால்‌ ஜைனக் கடவுளாம்‌ அருகனையே அவர்‌ ‘குறிப்ப்பார் என்பர் ,
ஆனால்‌ திருவள்ளுவர்‌ திருக் குறள் முழுவதுமே வேதக் கொள்கையையே தழுவி வருவதாலும்‌,
அருகன்‌. என்னும்‌ மூன்று இடங்களில்‌ ஈசனைக்‌ குறிக்கப்பட்டிருப்பதாகும் -அச்சொல்‌
வேதக்கடவளாம்‌ சிவனையே குறிப்பகாகக் கொள்ளலாம்‌, மற்றும்‌ அக்காலத்தில்‌ அநாதியாய்‌ உள்ள வேதத்திலுள்ள சிவனையே ஜைனர்கள்‌ அருகக் கடவுளாகத்‌
தொழுது வந்தார்கள்‌ என்பதும் ஜைன மதத்திலும் சொல்வர் ,
ஜைன சமயத்தினராகிய முனைப்பாடியார்‌ என்பவரால்‌ இயற்றப்பட அற நெறிச் சாரம்‌ என்னும்‌ நூலில்‌ அவன்கொல்‌.இவன்‌ கொல்‌-என்று ஐயப்படாதே.வன்‌ கண்ணே செய்ம்மின்கன்‌ –
சரதை இவன்றானும்‌ – நின்று கால் சீக்கும்‌-ரிழறிகமும்‌ -பிண்டிக்‌கும்‌ – வென்றிச்‌ சீர்முக்‌ குடையான்‌ வேந்து”என்னும்‌ 219-வ௮ செய்யுளில்‌::
சிவன்‌ பாலே சிந்தையை நிறுத்தங்கள்‌, அச்சிவனும்‌ அசோக மரத்தின்‌ பக்கம் நின்று குடைகளுடையவனை அருகனே யாவான்‌” என்று சொல்லியிருக்கிறார்‌, .

1800. வருஷங்‌களுக்கு முன்‌ சக்கரவர்த்தியாயிருந்த -ப்ரீஹர்ஷர்‌”?என்ற மகாகவி மூன்றுநாடகங்களியற்றியிருக்கிறார்‌.
அவற்றுள்‌ ரத்னாவளி என்னும்‌ நாடகத்தில ஆரம்பத்தில்‌ நான்கு ஸ்லோகங்களில்‌ சிவனையும்‌, பார்வதியையும்‌, விஷ்ணுவையும்‌, நாகாநந்தம்‌ என்னும்‌ நாடகத்தில்‌ ஜைனக்‌கடவுளையும்‌ துதித்‌திருக்கிறார்‌.
திருவள்ளுவரும்‌ அக்காலத்தவரரதலால்‌ வேதக்‌ கொள்கையை அனுசரித்தே கடவுளை இம் மூன்று முறைகளிலும்‌ அநு சந்தித்து இருக்கக்‌ கூடும்‌,

4, வேண்டுதல்‌ வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்‌கி
யாண்டு மிடும்பை யில.
வேண்டுதல்‌ வேண்டாமையிலான்‌ அடி சேர்ந்தார்க்கு-விருப்பம்‌, வெறுப்பு அற்‌று கடவுளின்‌ அடிகளை இடைவிடாது தியானிப்பவற்கு,
யாண்டும்‌-ஒரு பொழுதும்‌,
இடும்பை –பிறவித்‌ துன்பங்கள்‌,
இல –இல்லை.

இல என்பது பன்மையாதலின்‌ இடும்பை என்பது பன்மைப் பெயராகும்‌.
“சரீரம் அற்றவரை ப்ரியம்‌, அப்ரியம்‌ இவ்விரண்டும்‌ அணுகா” என்னும்‌ சாந்தோக்கிய உபநிஷத்‌ (8-12-1) தொடரும்‌,
“என்னை யடைந்த மகாத்‌மாக்கள்‌ துக்கத்‌திற்கு இருப்பிடமாயும்‌ சாஸ்வத மற்றதாயும்‌ உள்ள மறுபிறப்பை யடையார்கள்‌”
(மாம்‌. உபேத்ய-புனர்‌ – ஜன்ம-உ௱£₹வாலயம்‌ – அஸாஸ்வதம்‌-ந -ஆப்‌நு வந்தி- மஹாத்மான:- ஸம்ஹிதியிம்‌ – பரமாம்‌ _ மதா-என்றும்‌ அர்த்தமுள்ள பகவத்தீதை (8-15) தொடரும்
இங்கு குறிக்கத்‌ தக்கன.

5. பொறி வாயி லைந்தவித்தான்‌ பொய்தீரொழுக்க
நெறி நின்றார்‌ நீடு வாழ்‌வார்‌.

பொறி- வாயில்‌ – ஐந்து – அவித்தான்‌- பொய்‌ தீர்‌ -‘ஒழுக்ககெறி – நின்றார்‌ –இந்திரியங்களின்‌ மூலம்‌ நேரும்‌
ஐவகைப் பொருள்களின்‌ நுகர்ச்சியைப்‌ போக்கிய கட.வுளின்‌ உண்மையான தர்ம மார்ககத்தில்‌ அசைவற்று நிற்‌பவர்‌,
நீடு வாழ்வார்‌ முக்‌தி யடைவர்‌.
மூன்றாம்‌ குறளில்‌ நிலமிசை என ஆரியர்‌ கூறியிருத்‌தலானும்‌, இக் குறளில்‌ அச் சொல்லைக்‌ கூறாமையாலும்‌,
அக் குறள்‌ காரியப் பிரம்ம லோகத்தைக்‌ குறிக்கின்றது
என்றும்‌,
இக் குறள்‌ முக்‌தியையே குறிக்கின்றது என்றும்‌. கொள்ள வேண்டும்‌.
ஸ்ரீ சங்கராசாரியசுவாமிகள் பிருஹதாரண்யகோபனிஷத்‌4 வது அத்தியாய பாஷ்யத்தில்‌ “ப்ரஹ்ம லோக:” என்பதற்கு “ப்ரம்மணோ லோக: (ப்ரம்மாவினுடைய லோகம்‌)”” என்றும்‌ “ப்ரஷஹ்மைவ லோக; (ப்ரம்மமாகிய லோகம்‌)” என்றும்‌ இருவகையாக விரி கூறியிருத்தல்‌ நோக்கத் தக்கது.
“ப்‌. ரஹ்மைவ லோக: என்பதை ஒட்டியே சிறப்பென்னும்‌ செம்‌ பொருள்‌ என இவ்வாசிரியர்‌ பின்னர்‌ (69 ம்‌ ‘ குறள்‌) கூறுகின்றார்‌:
ப்ரஹ்மைவ லோக- என்பது ௮த்வைதக் கொள்கையேயாகும்‌.
Ar Bus ற்‌ கையவா நீப்பின்‌”,ஆரா வியற்கை யவா நீப்பின் என்ற (71 வது) குறளில்‌ கூறப்பட்ட ஜீவன் முக்தியும்‌:
அத்வைதக் கொள்கையே.
“எப் பொருள்‌ எத்தன்மைத் தாயினும்‌’” என (66 வது )குறளில்‌ கூறப்படும்‌ அய” யாஸமும்‌ அத்வைதக் கொள்கையே
ஸப்தம் ஸ்பர்சம் ரூபம்‌, மாறுபாடு, ரஸம்‌, காந்தம் இவை எப்போதும்‌ இல்‌லாதவனும்‌, ஆதி, அந்தம்‌ இவை அற்‌றவனுமான கடவுளைத் தியானிப்பவர்‌ யமனிடமிருந்து விடப்படுகின்‌ றனர்‌ ””என்ற கடோபனிஷத்‌ (1-3-15) தொடரும்‌
“அழந்மம்‌- அரஸஸ்பர்பாம்‌-அருப்தம்‌-அபரி.ல ரஹம்‌.! அரூபம்‌-அர.ஹி ஜ்னோேயம்‌-5 ருஷ்ட்லா – ஆத்மானம்‌ – விமுச்யதே” என்‌னும்‌ மகாபாரதம்‌ அசுவமேதபர்வம்‌ 20 வது அத்யாயம்‌-10 வது ஸ்லோகமும்‌ ஒப்பிடத்தக்கன.

6. பிறவிப்‌ பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேராதார்‌.
இறைவனடி. கடவுளின்‌ திருவடிகளை,
(சேர்ந்தார்‌- இடைவிடாது தியானிப்பவர்‌),
பிறவிப் பெருங்கடல்‌–பிறவி யாகிய பெருங்கடலை,
நீந்துவர்‌ – தாண்டுவர்‌ ;
சேராதார்‌– தியானிக்காதவர்‌,
(அதனை) நீந்தார்‌- தாண்ட மாட்டார்‌.
சேர்ந்தார்‌ என்பது ப்ரகரணத்தால்‌ கிடைக்கின்‌றது
விடுபட்டவர்களாகி ஸம்ஸார ஸாகரத்தைத்‌ தாண்டுகிறார்களோ”! என்கிற பொருளுள்ள,
“யம்‌ – த்ருஷ்ட்வா யதாய தாத -ந ஸோ சந்தி – மத-ஜ்வார: ஜன்ம-
ம்ருத்யு – ஸ்யாத்‌-முக்தா :- தீர்ணா:-ஸம்ஸார- ஸாகரம்‌?”
என்னும்‌ மஹாபாரதம்‌ அனுஸாஸனபர்வம்‌ 167 அத்யாயம் 42 வது சுலோகம்‌ கூறும்‌.
அதனையே ஸம்ஸார . -ஸாகாம்‌ – கோரம்‌- தரிஷ்யக்தி – ஸூ ஸ் தரம் ” என்‌னும்‌ மகாபாரதம்‌ அச்வமேத பர்வம்‌ 19 வது அத்‌யாயம்‌ 88 வது சுலோகமும்‌ கூறும்‌,

7. வானின்‌று உலகம்‌ வழங்கி வருதலான்‌
தான் அமிழ்த மென்றுணரற்‌ பாற்று.
வானின்று-மழை காரணமாக,
உலகம்‌ –உலகத்தில் உள்ள பொருள்கள்‌,
வழங்கி வருதலான்தான்‌ -ஜீவித்துவருதலாலேயே, அமிழ்தம்‌- அம்ருதம்‌, என்று,
உணரற்‌ பாற்று -உணரத் தக்கது

நீரை வடமொழியில்‌ அம்ருதம்‌ என்ற சொல்லால்‌ வழங்குகின்றனர்‌. அச்சொல்லிற்கு மரணமற்றது என்‌பது காரணப் பொருள்‌.
மழை உலகத்துப்பொருளின்‌ மரணமின்மைக்குக்‌ காரணமாய்‌ இருத்தலின்‌, அதனை அச் சொல்லால்‌ குறித்‌தனர்‌ என இவ்வாசிரியர்‌ கருதுகின்றார்
வடமொழி அம்ர்தம்‌ என்ற சொல்‌ -.தமிழில்‌ அமிழ்தம்‌, அமிழ்து, அமிர்தம்‌, அமிர்து, அமுதம்‌ அமுது என வழங்குகிறது.
வானின்று என்றவிடத்து நின்று என்பது ஏதுப்‌ பொருளில்‌ வந்த ஐந்தாம்‌ வேற்றுமைச் சொல்லுருபு எனக்‌ கொள்ளல்‌ தகும்‌.

8. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்‌
வறக்குமேல்‌ வானோர்க்கு மீண்டு,
வானம்‌ – மழை,
வறக்குமேல்‌ – பெய்யாவிடின்‌
ஈண்டு –இப்பூவுலகிலிருந்து
வானோர்க்கு–தேவர்க்கு,
சிறப்பொடு – சிறப்பாக
பூசனை -பூசனம்
செல்லாது -நடவாது
வானோர்க்குப்‌ பூசனையாவது யாகம்‌, ஹோமம்‌ முதலியன, வானோர் எனபதிலுளள, வான்‌” என்பது ஸ்வர்க்கதைக் குறிக்கும்‌.
ஸ்ரீ கீதை 11-12-13 ஸ்லோகங்களில்
வானவர்‌ மானிடரை மழையாலும்‌, மானிடர்‌ வானவரை யஜ்ஞத்தாலும்‌ பரஸ்‌பரம்‌ .’உபசரித்துக்‌ கொள்ளுவதால்‌ இருவரும்‌ நிரந்‌தரமான நன்மையை அடைவார்கள்‌ எனப்‌ பொருள்‌ படக் கூறியிருக்கிறது,

தேவாந் பாவய தாநேந தே தேவா பாவ யந்து வ–
பரஸ்பரம் பாவயந்த ஸ்ரேய பரமவாப்ஸ்யத—৷৷3.11৷৷

இஷ்டாந் போகாந் ஹி வோ தேவா தாஸ்யந்தே யஜ்ஞ பாவிதா–
தைர் தத்தாந் அப்ரதாயை யோ யோ புங்க்தே ஸ்தேந ஏவ ஸ—৷৷3.12৷৷

யஜ்ஞ ஸிஷ்டாஸிந ஸந்தோ முச்யந்தே ஸர்வ கில்பிஷை-
புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்த் யாத்ம காரணாத்—৷৷3.13৷৷

9, தானம்‌ தவமிரண்டுக்‌ தங்கா வியனுலகம்‌
வானம்‌ வழங்கா தெனின்‌.
வானம்‌ -மழை,
வழங்காது எனின்‌ -பெய்யாவிடின்‌,
வியனுலகம்‌ அகன்ற உலகத்தின்‌ கண்‌,
தானம்‌, தவம்‌ -தானமும் தபஸ்‌ஸும் ,- இரண்டும்‌,
தங்கா -உண்டாகாது
இக்குறளினின்று வெளியாகும்‌ நாயனார் கருத்தாவது :–வானின்று பெய்யும்‌ மழையின்‌. உத்தேசம்‌ மக்கள்
உயிர்‌ பிழைத்திருப்பது. முக்கியமல்ல என்பதே;
மக்கள்‌ அவரவர் அதிகரரத்திற்குத்‌ தகுந்தபடி, தானமோ,
தவமோ செய்யார் எனின்‌. அவர்கள்‌ உயிர்‌ பிழைத்திருப்‌பது வீணே.
இக்கருத்தையே த வா-வம்ஷஷி-நிவேஷ்‌ உ௨வ்யெள-சண்டே வதய” வா-திரு ஷாம்‌-ஸ்பிலாம்‌-பூனவரு்‌ தம்‌ அஉரதாரம்‌-உரிக ரம்ச அதபஸ்வினம்‌’? என்னும்‌ மஹா
பாரதம்‌, உச்யோக பர்வம்‌-33 அத்யாயம்‌ 67 . சுலோகம்‌ கூறுகிறது,
அந்த ஸ்லோகத்தில்‌ இப் பொருள்‌ சற்று கடுமையாகவே கூறப்பட்டிருக்கிறது,
தானம்‌ செய்யாத பணக்காரனையும்‌ தவம்‌ செய்யாத தரித்திரனையும்‌ கழுத்தில்‌ கல்லைக் கட்டி. சமுத்‌திரத்‌தில்‌ விட்டு விடலாம்‌ என்று கூறுகிறது.
இதனால ஈகை இல்லாத பணக்காரனும்‌ தவம்‌ செய்யாத ஏழையும்‌ பூதேவிக்கு பாரமே என்னும்‌ தத்துவம்‌ குறிப்பிடப்படுகிறது –
அவ்‌விதம்‌ பாரமாயிருப்பவர்கள்‌ உலகில்‌ அதிகமாகும்‌ பொழுது தான்‌ யுத்தங்கள்‌, கலஹங்கள்‌, கொள்ளை நோய்‌கள்‌ முதலியவைகளின்‌ மூலம்‌ பூ பாரம்‌ குறைக்கப்படுகிறது
ஆகையால்‌ அவைகளுக்கெல்லாம்‌ மருந்து தானமும்‌ தவமுமே.

10: இருமை வகை தெரிர்‌ தீண்டறம்‌ பூண்டார்‌
பெருமை பிறங்குற்‌ றுலகு.
இருமை வகை – இம்மை, மறுமை இவ்விரண்டின்‌ தன்‌மையை,
தெரிந்து -ஆராய்ந்து பார்த்து,
ஈண்டு இவ்‌ வுலகத்தில்‌,
௮றம்‌ பூண்டார்‌ பெருமை –துறவறத்தைக்‌ கொண்டவரின்‌ பெருமை,
உலகு. உலகத்தில்‌,
பிறங்‌கிற்று சிறப்புள்ளது ஆகும்‌,
இவ்வதிகாரம்‌ நீத்தாரைப் பற்றிக்‌ கூறுதலான்‌ ஈண்டு அறம்‌ என்பது துறவறத்தைக்‌ குறிக்கும்
இருமை வகை என்பதற்கு “பிறப்பு வீடு என்னும்‌ இரண்டினது கூறுபாடுகளை” என்று பொருள்‌ கூறுகிறார்‌ பரிமேலழகர்‌.

11-உரனென்னுக்‌ தோட்டியா னோரைந்துங்‌-காப்‌பான்
வரனென்னும்‌ வைப்பிற்கோர்‌ வித்து.
உரன்‌- மனத் திண்மை,
என்னும்‌ -என்ற,
தோட்டியால் -சம்மட்டியால்
ஓர்‌ ஐக்தும்‌ -ஒப்பற்ற ஐந்து இந்திரியங்களையும்‌,
காப்பான்‌ -கெட்ட வழியிற்‌ செல்லாது காப்பவன்‌,
வரன்‌ எல்லாவற்றிற்கும்‌ மிகுந்தது
என்‌னும்‌ -எனச் சொல்லப்படும்‌,
வைப்பிற்கு – நிலைக்கு,
ஓர்‌வித்தாம்‌– ஒரு விதை ஆவான்‌..
இந்திரியங்கள்‌ எவரையும்‌ இழுத்துவிட ஆற்றல்
உள்ளமையால்‌ அவை ஒப்பற்றன எனக்‌ கூறப்பட்டது,
“ஐந்து என்பது ஐந்து ஞானேந்திரியங்களை குறிக்‌கும்‌,
உரனைத்‌ தோட்டிக்கு உவமித்தலான்‌, இந்திரி.ங்களை ஐந்து யானைகளுக்கு உவமிக்கப்பட்டதாகக்‌ கொள்ளவேண்டும்‌””,
“ப்ரஹ்ம வித்்‌ பரத்தை ௮டைகிறான்‌-என்ற தைத்திரீய உபனிஷத்‌ (2, 1) தொடரில்‌ பரம்‌ என்பது மோக்ஷத்தைக்‌ குறித்தலின்‌ வரன்‌?” என்பதற்கு மோக்ஷம்‌ என்ற பொருள்‌ கூறப்பட்டது,

மனமானது இந்திரியங்களின்‌ வழியாய்‌ எப்போதும்‌
“வெளி முகமாவே சென்று கொண்டிருப்பதினால்‌ தான்‌
தன்னுள்ளே ஜ்வலிக்கும்‌ ௮கண்ட. ஆனந்த ப்ரகாஸத்தைக்‌ காணாது வீணாகின்‌றன .
இப் பொ ருள்‌ கடோபனிஷத்தில்‌ (2-1.1) கூறப்பட்டிருக்கிறது
இக்குறளில்‌ இந்திரியங்களை அடக்குவது வித்து என்று கூறப்படுவதால்‌ இதற்கு அடுத்தபடியான ஸகுண
ஈஸ்வர த்யானம்‌ முளை எனவும்‌, அவர்‌ அருளால்‌ ஏற் படும்‌ ஆத்மஜ்ஞானம்‌ புஷ்பம்‌ எனவும்‌, வரன்‌, என்னும்‌-
மோஷமானது’ பிறவி என்னும்‌ விருக்ஷத்தின்‌ ‘பலனாம்‌:
பழமாகவும்‌ பெறப்படுகிறது. :
இந்த்ரியங்களைத் தம் தம் விஷயங்களில் இருந்து மனத்‌
தால்‌ ஒருவன்‌ திருப்பனால்‌ ஆத்மாவில்‌ ஜ்வலிக்கும்
ப்ரம்மத்தைப்‌ பார்க்கிறான்
இந்திரியாணி இந்த்ரியார்த்தே -மனஸர-விநி”வர்தயேத் தத; பஸ்யதி- தத்‌ – ப்ரஹ்ம-ஜ்வலத்‌-ஆத்‌மனி – ஸம்ஸ்ஸிதம்‌’? என்னும்‌ மகாபாரதம்‌ அனுசாசன பர்வம்‌ 167 வது அத்தியாயம்‌ 31, 37-ம்‌ ஸ்லோகங்கள்‌ கூறும்‌.

1. ஐந்து வைத்தான் ஆற்றல் அகல் விசும்புளார் கோமான்
இந்திரனே சாலுங்‌ கரி,
ஐந்தவித்தான்‌ –ஐந்து இந்திரியங்களையும்‌ அடக்கிய துறவியின்‌,
ஆற்றல்‌ -சக்‌திக்கு,
அகல் விசும்‌புளார்‌ கோமான்‌ -௮கன்ற ஸ்வர்க்கத்தில்‌ உள்ளோர்க்கு அரசனாகிய இந்திரனே,
கரி – சாக்ஷி,
சாலும்‌ – பொருந்தும்‌.
ஈண்டு ஐந்தவித்தான்‌ என்று
இந்திரனை ஆயிரங்கண்ணன்‌ ஆக்கிய கெளதமரையும்‌,
இந்திரப்‌ பட்டம்‌ எய்திய நகுஷனைப்‌ பாம்பாக்கிய அகஸ்தியரையும்‌,
ஸோம யாகத்தில்‌ ஸோமத்தில்‌ ஒருபாகத்தை ௮ச்‌வினி தேவதைகளுக்கு இந்திரனைக்‌ கொடுக்கச்‌ செய்த ச்யவனரையும்‌,
மருத்தன்‌ யாகத்தில்‌ இநதிரனை வரச்‌
செய்த சம்வர்த்தரையும்‌,
பன்னிரு ஆண்டுகளில்‌ தான்‌ யாகம்‌ செய்ய அப்போது மழைபெய்யாமல்‌ தடுத்த இநதிரனை மழை பெய்யும்படி. செய்வித்த அகஸ்‌தியரையும்‌ குறிக்கும்‌.
இக் கதைகளை மகாபராதம்‌ அனுஸாஸன பர்வம்‌, அச்வமேத பர்வம்‌ முதவியவனிதில்‌ காண்க.
மூவுலகையும்‌ ஆளும்‌ ஐஸ்வரிய முடையோனுடைய
ஆற்‌றலைவிட பஞ்சேந்திரியங்களையும்‌ அடக்கிய தவசியின்‌ ஆற்றல்‌ பெரிது என்னும்‌ உண்மை இக்குறளினின்றும்‌ பெறப்படுகிறது,
13. சிறப்பீனுஞ்‌ செல்வமு மீனு மறத்தினாங்கு
ஆக்க மெவனோ வயிர்க்கு
உயிர்க்கு -மனிதர்க்‌கு
சிறப்பு-மோ க்ஷத்தை,
ஈனும் -தருவதும்
செல்வமும் -இம்மைச் செல்வமும் மறுமைச் செல்வமுமாம் ஸ்வர்க்காதி இன்பங்களையும்‌,
ஈனும்‌ – தருவதுமான,
அறத்தின்‌ – தருமத்தைக்‌ காட்டி லும்‌,
ஓங்கு-மேலான,
ஆக்கம்‌ -மேன்மையைத்‌ தருவது
எவன்‌ யாது?
சிறப்பு, செல்வம்‌ என்பன கடோபநிஷத்தில்‌ கூறப்‌படும்‌” சிரேயஸ்‌, ப்ரேயஸ்‌ 1-2-2) என்பவற்றைக்‌ குறிக்கும்‌.
ஸ்வர்க்காதி சுகத்தைத்‌ தரும்‌ ப்ரவ்ருத்தி தர்மமும்‌
மோக் ஷசுகத்தைக்‌ கொடுக்கும்‌ “நிவ்ருத்தி தர்மம்‌
ஆக தர்ம மார்க்கம்‌ இரண்டுவிதமென்று சொல்லப்படும்‌
எனப்‌ பொருள் கொண்ட
“ஸு வாவ” யுயிகம்‌ சைவ நைஸ்ரேயஹிகமேவ – ௪. ப்ரவ்ருத்தம்‌ – ௪- நிவ்ருத்‌தம்‌ – ௪ – த்விவிதம்‌ – கர்மவைஷிகம்‌ என்னும்‌. மனு ஸ்ம்ருதி -19வ.து அத்யாயம்‌ 88-வது ஸ்லோகமும்‌ ஈண்டு குறிப்பிடத்‌ தக்கது .
14, அன்றறிவா மென்னாதறஞ்‌ செய்க மற்றது
பொன்றுங்காற்‌ பொன்றாத் துணை.
(உயிர்‌ மனிதர்‌), அன்று கிழத் தனத்தில்‌,
அறம்‌-தர்மத்தை,
அறிவாம்‌ – செய்வோம்‌,
என்னாது – என்று நினையாமல்‌, (தருமத்தை),
செய்க-(இப்போதே) செய்‌தல் வேண்டும்‌.
அது-அத் தருமத்தின்‌ பயன்‌,
பொன்றுங்‌ கால்‌ -சாகும் பொழுது,
(அவர்க்கு) பொன்றாத்‌. துணை –அழிவில்லாத துணை,(ஆகும்‌).
மற்று என்பது அசைநிலை,
பர லோகத்தில்‌ மனிதர்க்குச்‌ சகாயமாமிருப்பதது தர்மமே என
தர்ம – ஏகோ – மனுஷ்யாணாம்‌-ஸஹாய:-பாரலெளகிக:” என்னும்‌ மகாபரரதம்‌ அனுசாஸநிக பர்வம்‌ 178-வது அத்யாயம்‌ 16-வது ஸ்லோகம்‌ கூறும்‌.
ஸ்தூல சரீரத்தை விட்டு ஜீவன்‌ செல்லும்‌ போது அவனுடைய நற் செயல்‌ தீச் செயல்‌ இவற்றின்‌ பயனே அவனுடன்‌ செல்லுமாகையாலும்‌, எப்போது
தனக்கு மரணம்‌ நேரிடும்‌ என்று அறியப்படாமையாலும்‌” அப்போதைக் கப்போதே ஒவ்வொருவரும்‌ தர்மச் செயல்களைச்‌ செய்யவேண்டும்‌ என்பது கருத்து
கல்வியையும்‌ பொருளையும்‌ சம்பாதிக்கும்‌’ விஷயத்‌தில்‌ தான்‌ சரஞ்ஜீவி என்‌ற எண்ணத்தைக்‌ கொண்டே.
அவ்விரண்டையும்‌ சம்பாதித்துக்‌ கொள்ள வேண்டும்‌,
தர்மம்‌ செய்யும்போதோ யமன்‌ தன்னைப்‌ பிடித்‌து விட்‌டான்‌ என்து நினைத்துக் கொண்டு உடனே செய்ய வேண்‌டும்‌ எனக்‌ கூறும்‌
“அஜராமரவத்‌ – ப்ராஜ்ஞ:-.விதியாம்‌- அர்பூம்‌-௪ – ஸாயயேத்‌ – க்ருஹீ.த-இவ- கேஸேஷு ம்ருத்யுநா யர்மம் ஆசரேத் என்னும்‌ ச்லோகம்‌ இதன்‌ பொருளையே கூறுகிறது.
ஸ்வ கார்யம்‌ அதீய-குர்வீத-பூர்வ.௮ஹ்நே-ச-௮பராஹ்நிகம்‌
ந-ஹி-ப்ரதிக்ஷதே – ம்ருத்யு-க்ருதம்‌-வா-௮ஸ்ய.ந .வா-அக்ருதம்‌,
அய.ஏவ.குரு-யத்‌-ஸரேய: மா.ஃத்வாம்‌ -கால:.அத்யகா-மஹான்‌ உ
க:-ஹி.ஜாநாதி-கஸ்ய-அதீய.ம்ருத்யு:-காலே;-ஷவிஷ்யதி,
அக்ருதேஷு-ஏவ-கார்யேஷ-ம்ருத்யு – வை.சம்ப்‌ரகர்ஷதி,
யுவா-ஏ௫-பர்மசீல:-ஸ்யாத்‌-அநி மித்தம்‌. ஹி-ஜீவிதம்‌ !-சாந்தி – 283-14 16.
செளமாரே..ஆசரேத்‌ ப்ராஜ்ஞூ:-யூர்மான்‌. மா மவதான்‌.. இஹ துர்லபம்‌.மானுஷம்‌ – ஜன்ம-தத்‌.அபி-௮,ப* ருவம்‌-அர்உ௦-ஸ்ரீமத்‌ பாகவதம்‌ – 7-வது ஸ்கந்தம்‌.
15. அறத்தா ரிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானெ டூர்ந்தா னிடை.
அறத்தாறு – தர்மத்தின்‌ பிர யோஜனம்‌,
இதுவெனே வேண்டா இது என்று கூற வேண்டாம்‌,
அது, சிவிகை-பல்லக்கை,
பொறுத்தானோடு தூக்குகின்றவனோடு
ஊர்கந் தானிடை- தூக்கப்படுகின்‌றவனிடத்தில்‌ (காணப்‌ படும்‌).
பல்லக்குக்குள்‌ இருக்கின்‌றவன்‌ தர்மத்தைச்‌ செய்‌தவன்‌ என்பதும்‌ அதனைத்‌ தூக்குகின்றவர்கள்‌ தர்மத்‌தைச்‌ செய்யாதவர்‌ என்பதும்‌ வெளிப்படையாக அறியப்படும்‌. “சிலர்‌ சிபிகையைத்‌ தூக்குகின்றனர்‌, இலர்‌
அதனுள்‌ இருக்கின்‌றனர்‌ * என
வஹந்தி சிவிகாம் அன்யே-யாந்தி அன்யே-சிவிகாஹ தா:” என்று மகாபாரதம்‌ சாந்தி பர்வம்‌ 331-வ.து அத்யாயம்‌ 42-வது ஸ்லோகம்‌ கூறும்‌: உலகத்தில்‌ நல்வினை தீவினை இருக்கும் வரை, அதாவது, உலகம்‌ இருக்கும் வரை, மேல் கண்ட. வினைகளின்‌ பயனாக மேல்‌ கீழ்‌ நிலைகள்‌ எம்முறையிலாவது இருந்தே தீரும்‌. ஞானிக்கு இருவினைகளும்‌ அழிந்த ஞான்று பொய்யான இவ்வுலகமும்‌ அழியும்‌, உண்மையான ஆன்மா வெளிப்படும்‌.
16. அறத்தான்‌ வருவதே இன்பமற்‌ றெல்லாம்‌
புறத்த புகழு மில.
அறத்தான்‌ – தர்மத்தால்‌,
வருவதே -பெறப்படுவதே ,
இன்பம்‌. இன்பம்‌ (ஆகும்‌).
மற்றெல்லாம்‌-வேறு எல்லாம்‌,
(அதன்‌)புறத்த- இன்பத்தைத்‌ தருவனவல்ல,
புகழும்‌ – கீர்த்தியையும்‌,
இல – உடையன வல்ல.
இன்பத்தையும்‌ புகழையும்‌ கொடுப்பது தர்மச் செயலே யன்றி வேறில்லை என்பது கருத்து.
பாவத்தான்‌ வரும்‌ பிறனில் விழைவு முதலாயின
அக்கணத்துள்‌ இன்பமாய்த்‌ தோன்றுமாயினும்‌ பின்‌
துன்பமாய்‌ விளைதலின்‌ “புறத்த? என்றார்‌ ” என்கிறார்‌ பரிமேலழகர்‌.
பகவத்கீதையில்‌ ஸ்ரீ கிருஷ்ணபகவானும்‌
நான்‌ மக்களிடை தர்மத்திற்கு விரோதமில்லாத இன்பமாக அமர்ந்திருக்கிறேன்‌

பலம் பலவதாமஸ்மி காம ராக விவர்ஜிதம்.–
தர்மாவிருத்தோ பூதேஷு காமோஸ்மி பரதர்ஷப৷৷7.11৷৷-பலவதாம் ச அஹம் –பாட பேதம்

பரதர்ஷப–பரத குலத்தில் உதித்தவர்களில் சிறந்தவனே
அஹம் -நான்
பலவதாம் -பலமுடையவர்களுடைய
காம ராக விவர்ஜிதம் பலம் அஸ்மி .–காமங்களில் ஆசை அற்ற பலமாகவும் இருக்கிறேன்
பூதேஷு–ஜீவ ராசிகள் இடம்
தர்மாவிருத்தோ -அறத்துக்கு முரண் அல்லாத
காமோஸ்மி –காமமாய் இருக்கிறேன்

பரத குலத்தில் உதித்தவர்களில் சிறந்தவனே -நான் பலமுடையவர்களுடைய காம்யங்களில்
ஆசையற்ற பலமாகவும் இருக்கிறேன்
ஜீவ ராசிகள் இடம் அறத்துக்கு முரண் அல்லாத காமமாய் இருக்கிறேன்
பலவான்களின் பலமும் –காமம் ஆசை அற்றும்-அற்ற பலன் -ராவணாதிகள் பலம் இல்லை என்று விலக்க —
ஸூசுகத்துக்காக ஆசை காமம் -முன்னிலை ராகம் – தர்மத்துக்கு விரோதம் அற்ற ஆசைகள் நானே —
மற்றும் உள்ள நன்மைகள் அனைத்தாகவும் -உள்ளேன் -இவை அனைத்தும் என் சரீரம் பிரகாரம் –

யே சைவ ஸாத்த்விகா பாவா ராஜஸாஸ் தாமஸாஸ்ச யே.–
மத்த ஏவேதி தாந் வித்தி நத்வஹம் தேஷு தே மயி৷৷—7.12৷৷

ஸ ஏவ ஸாத்த்விகா பாவா -ஸத்வ குணம் மிகுதி யுடையதாகவே உலகில் யாவை சில பொருள்கள் உள்ளனவோ
ஸ ஏவ ராஜஸாஸ் தாமஸாஸ் பாவா .–ரஜோ குணம் மிகுதி யுடையதாகவே தமோ குணம் மிகுதி யுடையதாகவே உலகில் யாவை சில பொருள்கள் உள்ளனவோ
தாந் மத்த ஏவ இதி -அவற்றை என்னிடம் இருந்தே உண்டானவை என்றும்
தே மயி இதி -அவை என்னிடமே உள்ளன என்றும்
வித்தி -அறிவாய்
அஹம் து -நானோ என்னில்
ந தேஷு -அவற்றை ஒட்டி இல்லை –

சத்வ குண மிகுதியை யுடையவையாகவே -உலகில் -யாவை சில பொருள்கள் உள்ளனவோ –
ரஜோ குண மிகுதியையோ -தமோ குண மிகுதியையோ உடையவையாகவே யாவை சில பொருள்கள் உள்ளனவோ
அவற்றை என்னிடம் இருந்தே உண்டானவை என்றும் அவை என்னிடமே உள்ளன என்றும் அறிவாய் -(உபாதான காரணம் நானே )
நானோ எனில் அவற்றை ஒட்டி இல்லை –

17. இல் வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்‌கும்‌
நல்லாற்றி னின்ற துணை.
இல்வாழ்வான்‌ -கிருஹஸ்தன்‌ (இல்லறத்திலிருப்பவன்‌),
என்பான்‌ என்று சொல்லப்படுவன்‌,
இயல்பு -ஸாஸ்த்ர முறையை
உடைய – அனுசரிக்க,
மூவர்க்‌கும்‌ -பிரம்மசாரி, வானப்ரஸ்தன்‌ சன்னியாசி என்கிற மூவர்க்கும்‌,
நல்லாற்றின்‌ – தரும ஒழுக்கத்தின்‌ கண்‌,
நின்ற -இருக்கின்‌ற ,
துணை – துணை (அவன்‌), .
கிருஹஸ்தன்‌ மற்ற மூவர்க்கும்‌ உணவு, உடை, வஸிக்கு மிடம்‌ இவற்றைக்‌ கொடுக்க வேண்டுமென்பது கருத்து.
“கிருஹஸ்தாஸ்ரமத்தை அண்டி ஏனைய ஆசிரமங்களெல்லாமிருக்கின்றன” என்ற பொருளுள்ள
ஏவம்‌ – ஹா ர்ஹஸ்ம யம்‌ ஆஸ்ரித்ய – வர்தந்தே -இதராஸ்ரமா:” என்னும்‌ மகாபாரதம் சாந்தி பர்வம்‌ 269-வது
அத்யாயம்‌, 6-வது சுலோகமும்‌,
* தாயை அண்டி எல்லா ஜந்துக்களும்‌ ஜிவிக்கின்றன. –போல கிருஹஸ்தாஸ்ரமத்தை அண்டி ஏனைய ஆஸ்ரமங்கள் ஜீவிக்கின்றன -என்னும் பொருளுள்ள.
யதா மாதரம்‌- ஆஸ்ரித்ய- ஸர்‌வே – ஜீவந்தி- ஜந்தவ;, ததா-ம்‌ கிருஹாஸ்ரமம்‌ -ப்ராப்ய ஸர்வே – ஜீவந்தி – சாஸ்ரமா:”’ என்னும்‌ மகாபாரசம்‌ – அனுஸாநிக பர்வம்‌ 211-வது – அத்யாயம்‌ 49 – வது ஸ்லோகமும கூறும்‌,
இக்கருத்தையே ** தயைவ ஆஸரமிண ;–ஸர்வே-கிருஹஸ்யே -யாந்தி ஸம்ஸ்ஸிதிம்‌.!’ என்‌னும்‌ மநுஸ்ம்ருதி 6-ஆவது அத்யாயம்‌ 90-வது சுலோகமும்‌ கூறுகிறது.
இக் கருத்தைக்‌ கொண்டே சாந்தோக்யோபனிஷத் கிருஹஸ்தனைக்‌ கூறி முடிக்கின்றது
என வியாஸருடைய ப்ரஹ்ம ஸூத்ரம்‌ 3-வது அத்யாயம்‌, 4-வது பாதம்‌ 48-வது ஸூத்ரம் கூறும்‌,
18. தென்புலத்தார்‌ தெய்வம்‌ விருந்தொக்க றானென்றாங்கு
ஜம்புலத்தா றோம்ப றலை… _
தென்புலத்தார்‌- பித்ரு தேவதைகள்
தெய்வம்‌.-தெய்வங்கள்
விருந்து -விருந்தினர்
ஒக்கல்‌ -சுற்றத்‌தார்கள்
தான்
என்ற ஆங்கு ஐம்புலத்து -என்று சொல்லப்பட்ட ஐந்து இடத்திலும்
ஆறு -தர்மத்தை
ஓம்பல் -தவறாமல் செய்தல்
தலை -இல் வாழ்வானுக்கு சிறந்தது ஆகும்
தேவதை அதிதி பிருத்தியூர் பிதிரர் தான் ஆகிய ஐவருக்கும் செலுத்த வேண்டிய கடனுடன் ஜீவன் பிறக்கிறான் என்று
தேவதாதி அதித்யாநாம் பித்ரூணாம் ஆத்ம ந-ய நிர்வபதி பஞ்சாணாம் உச் ஜீவசன் -ந -ஸ -ஜீவதி -வனபர்வம் -314-60-என்றும்
தேவதா ஸ்து அதிதி த்யேய பித்ரு ஹய ச ஆத்மனாஸ் தயா ருணவான் -ஜாயதே மர்த்ய -தஸ்மாத் அந்த ருணதாம் வ்ரஜேத் -சாந்தி பர்வம் -292-9-
பித்ருதேவதைகள் தெற்கு இருப்பதை தைத்ரீய ஸம்ஹிதை 6-1-1 கூறும்
பித்ரு தேவதையும் தேவதைகளுக்கும் அடங்கும் என்றாலும் ப்ராமண வஸிஷ்ட நியாயப்படி சிறப்பு நோக்கித்தானியாக கூறப்பட்டார்கள்
யாது சிறப்பு எனில் -அவர்கள் எப்போதும் ப்ரஹ்மசாரிகளாயும் சுத்தராயும் கோபம் அற்றவர்களாயும் இருக்கின்றனர்
அக்ரே சயர் ஸுசபரா ஸததம் ப்ரஹ்மசாரிணா ந்யஸ்த ஸாஸ்த்ரா மஹா தேவா பிதர பூர்வ தேவதா -மநு –33-192-
தெற்கு வழி பித்ரு லோகத்துக்குச் செல்லும் மார்க்கம்
உத்தர மார்க்கம் –வடக்கு வழி -தேவலோகம் செல்லும் மார்க்கம் எண்டு உபநிஷதும் கீதையும் கூறும்
பித்ரு கர்மங்கள்‌ செய்யும்‌ போது தென் தோளில்‌ (வலதுதோளில்‌) பூணூலையும்‌, தேவ கார்யம்‌ செய்யும் போது வட தோளில்‌ (இடது தோளில்‌) பூணூலையும்‌ தரிக்க வேண்‌டுமென்று வேதமும்‌ தர்ம சாஸ்த்ரங்களும்‌ கூறுகின்‌றன:
ஒருவன்‌ இழக்கு திக்கை நோக்கி நிற்கும்போது வலது
‘தோள்‌ தென் தோளாகவும்‌ இடது தோள்‌ வட தோளாகவும்‌: ஆகிறது.
அண்டத்தில்‌ உள்ளது பிண்டத்தில்‌ என்ற நியாயப்படி, ஒவ்வொரு உடலிலும்‌ வலது பாகம்‌ தென்புறமாகையால்‌ பித்ரு க்ருத்யம்‌ செய்யும் போது பூணூலை வலமாகத்‌ தரிப்பது பித்ருக்களைத்‌ தென் புலத்‌தார்‌ என்று நாயனார்‌ அழைப்பதற்குச்‌ சான்றாகும்‌.
மூவர்‌ணத்தவர்‌ அல்லாமல்‌ நான்காம்‌ வர்ணத்தவராகிய வேளாளரும்‌ கூட பித்ரு கார்யங்களில்‌ வலது தோளில்‌ பூணால்‌ தரிப்பது இன்றும்‌ காணலாம்‌,
பித்ரு கார்யங்‌களினின்றும்‌ தெய்வ கார்யங்களினின்றும்‌ சாஸ்த்ர முறையில்‌ விடுபட்ட துறவிக்கு இருவகைப்‌ பூணூலும்‌ இல்லை.
உலகமானிடரிடமிருந்து மாத்‌திரமல்லாமல்‌
பித்ருக்கள்‌, தேவர்கள்‌, இவர்களிடமிருந்தும் கிடைககும்‌ பயன்களிலும்‌ ஆசையற்றவனே உண்மைத் துறவி
யாவான்‌.
இக் குறளின்படி, ஒருவன்‌ நடந்து, தன்‌ வருவாயில்‌ ஆறில்‌ ஒரு பங்கைப்‌ பகிர்ந்து தன்னை அண்டி வருவோருக்‌காக ஒதுக்கி வைத்து ஒவ்வோரு நாளும்‌ ஒருவருக்காவது:
விருந்தளித்துக்‌ கொண்டு வந்தால்‌ உலகில்‌ உணவில்லாத்திண்‌டாட்டம்‌ அறும்‌.
நாயனார்‌ கூறுகிறபடி ஒவ்வோருவரும்‌ தெய்வ கர்மம்‌ செய்து வந்தால்‌ கெட்ட கார்யங்களும்‌, அவைகளுக்குக்‌ காரணமான கெட்ட எண்ணமும்‌ குறையும்‌.
அரசாங்கத்திற்குக்‌. கண்காணிப்புச் செலவும் சேனைச் செலவும்‌ குறையும்‌. அப்போது அரசாங்கத்திற்கு ஒவ்வொருவருடைய வருவாயிலும்‌’ ஆறில்‌ ஒருபங்கு கொடுப்பதினாலேயே அரசாங்கச் செலவு கட்டிக் கொண்டு போகும்‌.
அரசனுக்கு ஆறில்‌ ஒருபங்கு கொடுப்பது என்பது ஆன்றோர்‌ வழக்கு.


* ஆடிதி க. பலிஞ்ஈ. அபி.ப்ரஜா ஹூ ப 2.குரு கக்‌௨௧,
கைட்‌ ஹாமும்‌ . அரிதப்ரஜ்ஞ:. தாஸாம்‌ ஏவ .- அவிஸூந்தயே! – சாந்திபர்வம்‌ 26-9 ஸ்லோகமும்
தபஷ்ஷட்மா மும்‌-அக்ஷய்யம்‌- உதி . ஆரண்யகா..
ஹி ஈ:” என்னும்‌ சாகுந்தளம்‌ -2- 13 வது ஸ்லோகமூம்‌,
“ஆஃதித. அழு. ஷட்ஹா மும்திருமாச்௪ – way – wiGaprb” a sr
னும்‌ மனுஸ்ம்ருதி 7- 130வது ஸ்லோகமும்‌ இந்த கருத்தைத் தான்‌ கூறுகிறது. ்‌
மற்ற ஐந்து பங்குகளுக்கும்‌ வினியோகத்தை இக்‌
குறளில்‌ நாயனார்‌ தெளிவுபடுத்தியிருக்கிறார்‌.
விருந்தோம்பல்‌ என்பது நம்மை அண்டி.வந்வர்களை
ஓம்பல்‌, சுற்றத்தாரில்‌ உபகாரத்‌திற்குக்‌ தகுதியானவர்‌களை நாமே தேடி உபகரிக்க வேண்டுமென்பது கருத்து ,
“* செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்‌!” என்பது ஒளவையார் வாக்கு. “ர-ஷிதா ஜீவ லோகஸ்ய-ஸ்வ ஜனஸ்ய-ச -ரக்ஷிதா !’ என்பது வால்மிகி யினுடைய வாக்கு. பாலகாண்டம்‌ 1 18-14 வது ஸ்லோகங்கள்‌).
இவ்வாக்கின்படி பொதுவாக உலகத்திலுள்ள
ஜீவர்களை யெல்லாம்‌ ரக்ஷிக்கும்‌ பொறுப்போடு கூட தன்‌
சுற்றத்தாரையும் ரக்ஷிக்கும்‌ பொறுப்பு விசேஷித்து கூறப்டுகிறது

இவ்வெல்லா தர்மங்களையும்‌ செய்‌வதற்கு தான்‌ கேடில்லாமல்‌ வாழ வேண்டியது இன்றியமையாதலால்‌ தன்னையும்‌ ரக்ஷித்துக் கொள்ள வேண்‌டும்‌ என்னும்‌ கருத்தை நாயனார்‌ தான்‌ என்னும்‌ பதத்‌தால்‌ குறிப்பிடுகிறார்‌.
இதையே தைத்தரீய உபனிடதம்‌;குசலமாக. இருக்கும்‌ விஷயத்தில்‌ (அதாவது தன்‌ யோக ஷேமத்தில்‌) அலக்ஷியமாய்‌ இராதே? என்று சிக்ஷவல்லி 11 வது ௮னுவாகம்‌ முதலாவது மந்திரத்தில்‌ கூறுகிறது
இக்குறளின் தொடக்கத்திலுள்ள “தென்‌ புலத்தார்‌-என்னும்‌ சொல்லைக் கொண்டே வைதிக நூல்களில்‌ நாயனாருக்கு எவ்வளவு ஆற்றல்‌ இருக்கின்‌றது என்பது நன்றாகப்‌ புலப்படுகிறது
தேவ கார்யாத் அபி முனே – பித்ரு -கார்யம்‌ – விசிஷ்பதே?? – சாந்தி பர்வம் – 347-59 339-58,
எல்லா கர்மங்களையும்‌ ஸ்ரத்தையுடன்‌ செய்ய“வேண்டியது a விதியாயினும்‌ தென்புலத்தாருக்குச்‌ செய்‌யும் கடைமையே ஸ்ரார்த்தம் – அதாவது ஸ்ரத்தை பூர்வகமான கர்மம் என்று வழங்கப்படுகிறது
அஹீ யர் ஹிதம் பூர்வம்‌” என்பது பாணினி ஸூத்ரம் -விசேஷமாக ஆராதிக்கப்படுவதை முதலில் சொல்ல வேண்டும் என்பதே இச்சூத்திரத்தின்‌ கருத்து,
இதை அனுசரித்தே நாயனார்‌ தென்புலத்தாரை முதலில்‌ கூறினார்‌ போலும்‌.
நாயனாருக்கு ஆழ்ந்த சாஸ்த்ர நுட்பங்‌களிலுள்ள ஆர்வமும்‌ ஆற்றலும்‌ இக் குறளைக்‌ கொண்டே அறிந்து கொள்ளலாம்‌.

19, வையத்துள்‌ வாழ்வாங்கு வாழ்பவன்‌ வானுறையுந்
தெய்வத்துள்‌ வைக்கப்‌ படும்‌.-
வையத்துள்‌ – பூமியில்‌,
வாழ்‌ வாங்கு– வாழவேண்‌டிய முறைப்படி,
வாழ்பவன்‌,
வான்‌ -வானின் கண்‌,
உறையும்‌- தங்கும்‌,
தெய்வத்‌துள்‌ – தேவதைகளுள்
வைக்கப்படும் -வைக்கப் படுவான்‌.
“ தனக்கு விதிக்கப்பட்ட .கர்மாக்களைச்‌ செய்பவன்‌ தேவர்களோடு ஒப்பாவான்‌”” என “ப்ரவ்ருத்தம்‌- கர்‌ம-.ஸம் ஸேவ்ய – தேவானாம்‌ – ஏதி – ஸாம்யதாம்‌’” என்னும்‌ மனு ஸ்ம்ருதி 13- 90 ஸ்லோகம்‌ கூறுகிறது.

20. பெண்ணிற்‌ பெருந்தக்க யாவுள கற்பென்‌னும்
திண்மை யுண்‌டாகப்‌ பெறின்‌
கற்பு- பாதி வ்ரத்யம்‌,
என்னும்‌ -என்ற,
திண்மை-கலங்காத நிலைமை,
உண்டாகப் பெறின்‌ – இருந்தால்‌,
பெண்ணின்‌- மனைவியைக்‌ காட்டிலும்‌;,
பெருந்தக்க -மேம்பட்ட “பொருள்கள்‌,
யா -எவை
உள -இருக்கின்‌றன
பெண்டிர்க்குப் பழமையான தன்மை பாதி வ்ரதாத்வம்‌- நாரீணாம்‌ – ஏதத்‌ -ஏவ -ஸநாதனம்‌” எனும்‌ அனுசாஸனிக பர்‌வம்‌ 249 – 19 வது ஸ்லோகம்‌ கூறுகிறது…
இன்னும்‌ நம்‌ நாட்டில்‌ புருஷர்களை விட ஸ்த்ரீகளிடையே
தர்ம ஸ்ரத்தை அதிகமாய்க்‌ காணப்படுகிறது.
நம் நாட்டில்‌ இதர நாடுகளை விடவும்‌ இதர தர்மங்களை விடவும்‌ ஸாஸ்த்ரங்களில் பாதி வ்ரத்யம் வற்புறுத்தப் பட்டு இருப்பதே இதற்க்குக் கரணம்
புருஷர்கள்‌ உத்தம கதியை யடைய வேண்டுமானால்‌ ஊன் கண்ணுக்குத்‌ தெரியாத கடவுளை மனதால்‌ உருவாக்கி வழி பட வேண்டும்‌.
ஸ்த்ரீகளுக்கோ வென்றால்‌ கண்ணுக்குப்‌ ப்ரத்தியஷமாய்ப்‌ புலப்படும்‌ கணவனையே தெய்வமாக்கி வழிபட்டு உத்தம கதியை அடையுமாறு கடவுளின்‌ ஆணையான சாஸ்த்ரம்‌ விதித்திருப்பதால்‌, அக் கணவனிடம்‌.குணமிருப்பினும்‌ குற்றமிருப்பினும்‌ கடவுளே ௮க் கணவனிடம்‌ உட் புகுந்து பெண்டிர்க்கு உத்தமகதியை அளிக்‌கின்றான்‌.
பசு கோணலான கொம்புடைய தாயிருப்பினும்‌- அதைப்‌ பூஜிப்பவர்களுக்கு அதனுள்‌ நின்று கடவுளே நன்மை பயக்குவது போல.

21- தெய்வந் தொழா அள்‌ கொழுநற்‌ றொழுதெழுவாள்‌
பெய்யெனப்‌ பெய்யு மழை.
தெய்வம்‌ -(வேறு)தெய்வத்தை,
தொழாள்‌ – வணங்‌காமல்‌,
கொழுநன்‌ – கணவனையே,
தொழுது -வணங்கி
எழுவாள்‌ -(படுக்கையை விட்டு) எழுந்திருப்பவள்‌,
பெய்‌ என-பெய்‌ என்று கூ.ற
மழை, பெய்யும்‌.
“கொழுநன்‌”” என்பது பழந்தமிழில்‌ கணவனைக்‌ குறிக்கும்‌. “பெண்டிர்க்குப்‌ பதியே தெய்வம்‌ ; வேறு புகலிடம்‌ இல்லை? என
“பதி: ஹி.- தை வதம்‌ – ஸ்த்ரீணாம்‌-பதி :-வச்யூ- :- பதி: மதி : ந- அன்யாம்‌ – மதம்‌. அஹம்‌ – பஸ்யே – ப்ரமஉாயா ;- யமா – பதி :” என்னும்‌ அனுசாஸனிகபர்வம்‌ 550 -95 வது ஸ்லோகமும்‌ “* ௮திகமாய்‌ காயக்லேசம்‌ முதலியவைகள்‌ செய்து அதனால்‌ புருஷன்‌ அடையும்‌ பலத்தைப்‌ பதியை பூஜை செய்வதினாலேயே ஸ்த்ரீயானவள்‌ வெகு ஸுலபமாய் அடைந்து விடுகிறாள்‌ ‘? என
“காய – கிலேமான – மஹதா – புருஷ. ப்ராப்னுயாத்‌ – ஹலம்‌ – தத் ஸர்வம்‌ – லபதே – நாரீ . ஸுவேந – பதி – பூஜயா
என்னும்‌ மேற்கண்ட அனுசாசனிக பர்வம்‌ 980 -96 வது ஸ்லோகமும்‌ கூறும்‌.
வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர் மழை, .
நீதி தவறா நெறியினோர்க்கு ஓர் மழை,
காதல்கற்புடை மங்கையர்க்கோர்‌ மழை,
மாதம்‌ மும்மழை பெய்யெனப்‌ பெய்யுமே”-என்பது-ஆன்றோர் வாக்கு
பொதுவாய்‌ ஒரு ஜீவன்‌ கடைத்‌தேற வேண்டுமானால்‌ பகவானிடத்‌தில்‌ எல்லை கடந்த அன்பு ஏகாரக்கிர சித்தத்துடன் நிலைத்‌ திருக்க வேண்டும்‌.
ஆனால்‌ இவ் விதம்‌ அன்பு செய்யும்‌ ஜீவன்‌ ப்ரத்யக்ஷமான கண்களால்‌ பகவானைப்‌ பார்த்திரானாகையால்‌ சாஸ்‌திரங்களைக்‌ கொண்டும்‌, அனுபவிகளின்‌ . வார்த்தையைக் கொண்டும்‌ பகவானுடைய ஸ்வரூபத்தைத்‌ தன் மனதால்‌ ஊகித்துக்‌ கொண்டு அந்த ஊூகித்த ஸ்வரூபத்தில்‌ அன்பையும்‌ ஏகாக்‌ரதையையும்‌ செலுத்தியாக வேண்டும்‌.
ஆனால்‌ பதிவ்‌ரதைகளான ஸ்தரீகளுக்கோ இந்த சிரமம்‌ இல்லை.-ஏனெனில்‌ நமது சாஸ்திர முறைப்படி. ஸ்த்ரீகள்‌ இந்த ஊனக் கண்ணிற்கே புலப்படும்‌ தங்கள்‌ பதிகளிடத்தே பேரன்பும்‌ ஏகாக்ரசித்தமும்‌ வைக்கும் போது அந்த. ஸ்த்ரீகள்‌ விஷயத்தில்‌ மாத்திரம்‌ பகவானே அந்த கணவனுடைய சரீரத்தில்‌ ஆவிர்பவித்து அவர்கள்‌ ஜன்மத்‌தைக்‌ கடைத்தேற்றி வைக்கிறான்‌.
ஏனையோருக்குப்‌ ‘பசவானுடைய ஸ்வரூபத்தை மனதால்‌ கற்பனை செய்ய வேண்டிய சிரமமும்‌, அவ்விதம்‌ மனதில்‌ உருவாக்கப்‌ பட்ட பகவானுக்கென்று நினைத்து செய்யப்படவேண்‌டிய யக்ஞம்‌, தானம்‌ முதலிய கர்மானுஷ்டான சிரமமும்‌ இல்லாமல்‌ ப்ரத்தியஷமாகப்‌ புலப்படும்‌ பதியை வழிபட்டு அவனுக்குச்‌ செய்யும்‌ பணிவிடையே யக்ஞ தான முதலிய எல்லா ஸத் கர்மானுஷ்டானமாக நிற்பதால்‌ மற்றவர்களை விட பதிவ்ரதா ஸ்த்ரீகள்‌ சுலபமாய்‌ கடைத்தேறும்‌ பாக்கியம்‌ பெற்றவராகி யிருக்கிறவர்‌கள்‌.
நமது சாஸ்திர மூறைப்படி பெண்கள்‌ கன்னிப்‌ பருவத்தில்‌ பரமேஸ்வரனையே பதியாக பாவித்து அனுஷ்டிக்க வேண்‌டிய சில நோன்புகள்‌ ஏற் பட்டிருக்‌கின்றன,
இந்த நோன்புகள்‌ தெலுங்கு கன்னட நாடுகளில்‌ இன்னமும்‌ அனுஷ்டி.க்கப்பட்டு வருகின்றன. –
கல்‌யாணமான பின்னர்‌ பதியையே கணவனாகப் பாவித்து
தொழுதல் வேண்டும்‌-இதுவே பதி விரதம்‌ அல்லது கொழுனன்‌ நோன்பு. ஒவ்வொரு உள்ளத்திலும்‌ ஈசன்‌
அந்தர்யாமியாமிருக்கிறான்‌ என்பது வேதத்தின்‌ துணிபு. அம் முறையில்‌ நமது உள்ளத்திலேயே எல்லாம்‌ அறியும்‌ படியான சர்வஜ்ஞத்வமும்‌, எல்லாவற்றையும்‌ ஆக்கும்‌ வல்லமையாம்‌ சர்வ சக்தியும்‌ உறைந்திருக்கிறது
இந்த சக்தி நமக்குப்‌ புலப்பட்டு வெளியாகாமலிருப்பதற்குக்‌
காரணம்‌ நம் மனம்‌ ஐம்புலன்களின்‌ வழியாய்‌ வெளிமுகமாயத்‌ திரிந்து கொண்டிருப்பதே. அத்திரிதலை நிறுத்தி அது ஒருமுகப்படும் பொழுது அது உள் நோக்கும்‌ ஆற்‌றலை அடைகிறது.
அவ்விதம்‌ உள்‌ நோக்க ஆரம்பிக்‌கும்பொழுது உள்ளிருக்கும்‌ ஈசத் தன்மை சிறிது சிறிதாக வெளியாகிறது . வெளியிலிருக்கும் உலகம் எல்லாம்‌ ‘நம்முள்ளத்தில்‌ உறைந்திருக்கும்‌ ஈசனிடம்‌ அடங்கி யிருக்கறது.
அவ்வீசச் தன்மை வெளிப்படும்போது உலகத்தில்‌ எக்காரியத்தையும்‌ ஆக்கும்‌. ஆற்றலும்‌ ப்ரகாசிக்கிறது
மழை பெய்யென்னால்‌ பெய்க, வெளி முகமாகத்‌. திரியும்‌ ஐம்புலன்களைத்‌ திரியாமல்‌ தடுக்க உபாயமென்னவென்றால்‌ வெளிப்பொருள்களில்‌. மாறி மாறி வரும்‌ அன்பைவிட ஒரே இடத்தில்‌ அசையாத ப்ரேமை அல்லது பேரன்பு ஏற்படுவதே,
முறுக்கு தின்று கொண்டிருக்கும்‌ ஒரு குழந்தையிடம்‌ மிட்டாயைக்‌ காட்டினால்‌ முறுக்கைக்‌ கீழே போட்டுவிட. அது
போல்‌ அதிக -அன்பிற்குப்‌ பாத்திரமான ஒரு பொருளை மனம்‌ கவரும்போது அல்ப சுகப் பொருளைத் தானாகவே விட்டு விடுகிறது – அவ்வித அன்பை என்றும்‌ அழியாத. கடவுளிடம்‌ வளர்ப்பதே அடியாரின்‌ பக்தியோகம்‌,
கண்ணுக்கெதிரே புலப்படும்‌ கடவுளாம்‌ கணவனிடம்‌ அப்பேரன்பை வளர்ப்பதே பதிவ்ரதம்‌.
அப்பிரேமை வளர்ச்சி முதிரும்போது மனம்‌ ஒருமைப்‌ படுகிறது.-மனம்‌ ஒருமைப்பட்டபோதே உள்‌ நோக்க இடந்தருகிறது.-
உள்நோக்கும்போது ஈசத்தன்மை வெளியாகின்றது. அப்போது பெய்யெனப்‌ பெய்யும்‌ மழை.-பெரிய யோகிக்கு ௮திக சிரமத்தின் பேரில்‌ கிடைக்கும்‌ பக்தி பதிவ்ரதைக்கு மிகவும்‌ சுலபமாய்க்‌ இடைக்கிறது
“கொக்கென்று நினைத்தாயோ-கொங்கணவா?’-என்‌னும்‌ கதையில்‌ சொல்லியிருக்கிறபடி, ஒரு பதிவ்ரதை
தன்னுடைய பாதி விரதத்தாலே தூரத்தில்‌ நடந்ததைத் தெரிந்து கொண்ட கதை ஸ்ரீ மகாபாரதம்‌ வன
பர்வம்‌ 209 அத்யாயத்தில்‌ சொல்லப்பட்‌ டிருக்கிறது.

“என்னுடைய பதி சேவையின்‌ ப்ரபாவத்தினாலேயே
கொக்குக்‌ கதையை நான்‌ அறிந்துகொண்டேன்‌ “எனப்‌ பொருள்படும்‌
” சுற்ரூஷாயா :-ஹலம்‌–பஸ்ய- பத்யு:-ப்ராஹ்மண – யாத்ருஸும்‌ -வலாகா ;:_-ஹி-த்வயா ம உம்‌பாட ரோலாத்‌ – தத்‌ – விஷிதம்‌–மயா ்‌ என்னும்‌ மகாபாரதம்‌ வனபர்வம்‌ 209-வது அத்யாயம்‌ 89, 38 சுலோகங்கள்‌ குறிப்பிடத்‌ தக்கன.
அதையே நாயனார்‌, ‘தெய்வம் தொழா அள்‌’என்றார்‌;காணாத தெய்வத்தைக்‌ கற்பனையால்‌ உருவாக்கித்‌ தொழும்‌ சிரமமின்றி என்பது பொருள்‌.

22. இறைகாக்குங்‌ காப்பெவன்‌ செய்யு மகளிர்‌
நிறைகாக்குங்‌ காப்பே தலை.
மகளிர்‌ -மனைவிகளை,
சிறை –காவல்களால்‌,’ காக்‌கும்‌ காப்பு, எவன்‌ என்ன, செய்யும்‌ ?
நிறை தம் மனத்திண்மையால்‌, காக்கும்‌ காப்பே, தலை சிறந்தது.
நன்மையைச்‌ செய்யும்‌ புருஷர்களால்‌ காக்கப்பட்ட மகளிர்‌ காக்கப்பட்டவர்‌ ஆகார்‌; தம்மைத் தாமே காப்‌பவரே காக்கப் பட்டவர்‌!? என
“அரஷிதா க்ருஹேயா –புருஷை :–ஆப்‌தகரரிஹி :–ஆத்மானம்‌- ஆத்‌மனா-யா;து – ரஷேயு :–தர.ஸ்ுரகூதிதர:? என்‌னும்‌ மனுஸ்ம்ருதி 9-வது அத்யாயம்‌ 19-வதுஸ்லோகம் ‘
“துன்பம்‌ வரும்‌ காலத்திலும்‌ தம்மைகத் தாமே காத்‌துக்கொள்ளும்‌ மகளிர்‌ ஸ்வர்க்கமடைவது திண்ணம்‌”
என
“வைலஷம்யம்‌ அபி-ஸம்ப்ராப்தா…. மோாபாரயக்‌ தி-.குலஸ்த்ரிய :–ஆத்மானம்‌- ஆ த்மனா-ஸ த்ய:–ஜித :–அங்வர்யமோ-ந-ஸம்ஸாய : ॥| என்னும்‌ மகாபாரதம்‌ வனபர்‌வம்‌ 68-வது அத்யாயம்‌ 8-வது ஸ்லோகமும்‌ கூறுகிறது.
ஸ்ரீ ராமாயணத்திலும்‌ ராவண வதத்திற்குப்‌ பிறகு விபிக்ஷணர்‌ சீதா தேவியை ஸ்ரீராமனிடம்‌ மூடுபல்லக்கில்‌ அழைத்துக் கொண்டு வரும்‌ சமயத்தில்‌ வானரங்கள்‌.
‘தேவியைப்‌ பார்க்க வேண்டுமென்று ஆவலுடன் அருகில்
குழுமி வரா , விபீஷணர்‌ அவைகளைத்‌ துரத்தி யடித்தார்‌.
அதைப் பார்த்த ஸ்ரீராமன்‌ விபீஷணரைப்‌ பார்த்து
இந்த வானரங்கள்‌ என்னுடைய ஸ்வ ஜனங்கள்‌, இவர்‌களை விரட்ட வேண்டாம்‌”?” என்று விபீஷணரை
நிறுத்தி விட்டு மேலும்‌ சொல்லுகிறார்‌
வீடுகளோ, படுதாக்களோ, கோட்டை ,மதில்களோ, முகமூடிகளோ,ஸ்த்ரீகளை ரக்ஷிப்பதில்லை, மற்றும்‌ இவைகளைப்‌ போன்ற கட்டுப்பாடான. அரண்மனை ஏற்பாடுகள்‌ ஸ்த்ரீகளை ரக்ஷியா ; நற்சீலம்‌ ஒன்றே பெண்களுக்கு _ உண்மையான வேலி மேனி,
“நிவர்தய – ஏலம்‌. உத்யோ.மம்‌ ஜனோயம்‌ – ஸ்வஜனோ- மம | ந- ம்‌ ருஹாணி-ஈ – வஸ்த்ராணி -ஈ-ப்ரா காசா:- திரஸ்க்ரியா : |- ஈத்ருஸமா – ராஜஸத்கரரா ; வ்ருத்தம்‌ ஆவசணம்‌ – ஸ்த்ரியா :”?யுத்தசாண்டம்‌ 111/-வ௫ சர்க்கம்‌ 25, 26-வதுஸ்லோகங்கள்‌) என்று சொல்லி விட்டு ஸீதா தேவியைப்பல்லக்கை விட்டு இறங்கச்‌ செய்து எல்லோரும்‌ பார்க்கும்படியாக காலாலேயே வரும்படி. கட்டளையிட்டார்‌,
“ விஸ்ருஷ்ய. புஎபி/காம்‌-சஸ்மாத்‌-பத்‌ ஏயாமேவ – அபசார்‌:
பத | ஸமீபே – மம – வைஷேஷஹீம்‌ – பரா்யந்து – இமே-
வனெளகஸ: ॥ [ஸ்ரீமத்‌ ராமாயணம்யுதக்தகாண்டம்‌ 117
ஸர்க்கம்‌ 50) வதா சலோகம்‌.|
சீதாதேவியின்‌ சீலம்‌. ராு்ஷஸர்களும்‌, வானரங்களும்‌, க்ஷத்ரியர்களும்‌ ஒரு. மனப்பட்டு மனமுருகி அன்புக்கடலில்‌ முழுகும்படி.. செய்தது. வகுப்பு வேற்றுமை, நாட்‌டு வேற்றுமை. முதலியவைகளால்‌ ஏற்படும்‌ மனவேற்றுமை ஒழிந்து உண்மையான ஓற்றுமைக்குக்‌ காரணமான அன்பைப்‌ பெருக்க உண்மையான சீலம்‌ அழியாத சக்தி வாய்ந்தது என்பதற்கு இது சாஸ்வதமான அத்தாஷி.

25. பெற்றாற்‌ பெறிற் பெறுவர்‌ பெண்டிற்‌ பெருஞ்‌ சிறப்புப்‌
புத்தேளிர்‌ வாழு முலகு.
பெண்டிர்‌ – மனைவியர்‌,
பெற்றான்‌ -(தம்மை.எய்‌திய)கணவனை,
பெறின்‌ -கற்போடு அடைவார்களாயின்‌,
புத்‌தேளிர்‌ –தேவர்கள்‌ வாழும்‌,
உலகு– உலகின்கண்‌_
பெருஞ்‌ சிறப்பு = மேலான சிறப்பை,
பெறுவர்‌ – அடைவர்‌,
நாஸ்தி யஞ்ஞா -ஸ்த்ரியா;- கஸ்சித்‌-ந-ஸ்.ரர தயூம்‌ நஅபி.உபோஷணம்‌ யா – து – ஷர்‌ தரி – ஸூஸ்ரூஷா -ஸா ஸ்வர்‌காய. அஹி ஜாயதே” என்னும்‌ மகாபாரதம்‌ விராட
பர்வம்‌ 20வது அத்யாயம்‌ 47 வது ஸ்லோகம்‌ -இத்தையே கூறுகிறது,
ஸ்ரீமத்‌ ராமாயணத்தில்‌ ஸ்ரீராமன்‌ வனத்தில்‌ அத்ரி மகரிஷியின்‌ ஆஸ்ரமத்தை யடைந்த பொழுது அங்கு அந்த ரிஷியின்‌ பத்தினியான ௮நஸூயா தேவி ஸீதா தேவியைப்‌ பார்த்து காட்டில்‌ கஷ்டப்படும்‌ ஸ்ரீராமனைப்‌ பதி வ்ரதையான சீதை பின்‌ தொடர்ந்து வந்திருக்கும்‌ விஷயத்தில்‌ தன்னுடைய ஆனந்தத்தைத்‌ தெரிவிக்கும் போது, “கொழுநன் நரகத்தில் இருப்பினும்‌ வனத்‌திலிருப்பினும்‌, பாவியாயிருந்தாலும்‌, அவ லஷணமாயிருப்பினும்‌ எந்த. ஸ்த்ரீகளுக்கவன்‌ ப்ரியமான வஸ்துவோ அவர்களுக்கு உத்தம லோகங்கள்‌ இடைக்கும்‌
[நரகஸ்யோ – வனஸ்மோ.- வா_ஸூ ஹோவா யதி வா அஸூஹ யாஸாம்‌ – ஸ்த்ரீணாம்‌ – ப்ரியோ – மஹரார்தா – தாஸாம்‌ – லோகா:- மஹோதயா;-அயோத்யா-17-22-23] என்று பொருள்‌ படும்படி கூறுகிறாள்‌.
அனசூயாதேவிக்குச்‌ சீதை மறுமொழி கூறும் இடத்தும் அக்னி சாக்ஷியாக நான்‌ ஸ்ரீராமனை மணந்த காலத்தில்‌ என்‌ தாயார்‌ எனக்கு உபதேஸித்த வாக்‌கியங்களையே தாங்களும்‌ எனக்கு இன்று ஞாபகப்படுத்துகிறீர்கள்‌.-கணவனைக் கற்புடன்‌ அடைவதைக் காட்டி,லும்‌ பெண்டிருக்கு வேறு தவமில்லை. சத்தியவானை
அடைந்த சாவித்திரி இன்று ஸ்வர்க்கத்தில்‌ ப்ரகாசிக்‌கிறாள்‌. தாங்கள்‌ பதி ஸிஸ்ரூஷையினாலேயே தேவர்கள்‌ வாழும்‌ உலகை அடையப்‌ போகிறீர்கள்‌. இவ்விதமே எத்தனையோ உத்தம ஸ்‌திரீகள்‌ த்ருடமான பதிவ்ரதா தர்மத்‌தினால்‌ தேவர்கள்‌ வாழும்‌ உலகத்தில்‌ பெரு வாழ்வு வாழ்கின்றனர்‌.
(சாவித்ரீ -பதி- ஸூஸ்ரூஷாம்‌ – க்ருத்‌வா – ஸ்வர் கே – மஹீயதே – தயா திவம்‌– – ஏவம்‌. – வியாஸ்௪’ப்ரவரா :-ஸ்த்ரிய :- பர்த்ரு – த்ருடவ்‌ரதா:- தேவலோகே- மஹியந்தே-புண்யேந -ஸ்வேந – கர்மணா’ (அயோத்யா,
118 வத சர்க்கம்‌-10, 12 சுலோகங்கள்‌) என்று சொல்லுகிறாள்‌. இக்கருத்தையே ஸ்ரீபாகவகம்‌ ப்ருது சரித்ரத்‌தில்‌ 4 வது ஸ்கந்தம்‌ 2& வது அத்யாயம்‌ “* அஹோ-இயம்‌ வதூ : – தன்யா -யா – ச -ஏவம்‌ – ஸூஹு ஜாம் – பதிம்‌ – ஸர்வாத்மனா-பதிம்‌ ஹேஜே – யஜ்ஜேஸம்‌ – ஸ்ரீ :- வயு ரீவ-ஸைஷா . நூநம்‌ – வ்ரஜதி -ஊர்த்வம்‌ – அமும்‌ – வைன்யம்‌ – பதிம்‌ – ஸதீ – பஸ்யத – அஸ்மான்‌-அதீத்ய – அர்சி :- துர்விஹாவ்யேன-கர்மணா””என்னும்‌ 25, 26 வது ஸ்லோகங்கள்‌ கூறுகின்றன.

24–, தம் பொருள் என்ப தம்‌ மக்கள் அவர் பொருள்
தம் தம்‌ வினையான்‌ வரும்‌.
தம் மக்கள்‌ – தம்முடைய மக்களை,
தம்‌ – தம்முடைய
தம் பொருள்‌ என்ப -பொருள் என்று கூறுவர் .
அவர் பொருள் அவர் செய்த பொருளின் பயன்
தம் தம் வினையால் -தம்மால் செய்யப்பட வினைப்பயனோடு வரும்‌.
இறந்த பின்னர்‌ அவரவர்‌ செய்த நல் வினை தீவினைகள்‌ பயன்களும்‌, மக்கள்‌ செய்த ஈமச் சடங்கு ௮தாவது, சிராத்தம்‌, தானம்‌ முதலியவற்றின்‌ பயனும்‌ வரும்‌ என்‌பதை இக் குறள்‌ உணர்த்திற்று,
“இம்மையிலும்‌ மறுமையிலும்‌ பெரிய ஆபத்திலிருந்து மனிதரை மக்கள்‌ காக்கின்றமையான்‌, அவர்‌மக்கட்‌ பேற்றினை விரும்புகின்றனர்‌ ” என
* ய௨ர்மம்‌புருஷ்ல்யாவ” ச – புத்ரம்‌ – இச்ஷஹக்தி – மானவா :- ப்ரேத்ய- இஹ – ௪- சம்ப்ராப்தா:- தீராயந்தே-மஹதோ – ஒயாத்॥”” என்னும்‌ மகாபாரதம்‌ த்ரோணபர்வம்‌ 196 வது அச்யாயம்‌ 17 வது ஸ்லோகம்‌ கூறும்‌.
இவ்வுலகலிருந்து வேற்றுலகத்திற்கு மனிதர்‌ செல்ல மக்கள்‌ துணை புரிதலான்‌ சுயநலத்தைக்‌ கருதியே அவர்‌ மக்கட்‌ பேற்றினை விரும்புகின்றனர்‌ ‘ என
* இச்மக்தி – பிதர :-புத்சான்‌ – ஸ்வார்யஹேதோ :- வடொத்கச – இஹ லோகாத்‌ – பரே – லோகே – தாரமிஷ்யசக்தி – மானவா:”என்னும்‌ மகாபாரதம்‌ துரோணபர்வம்‌ 174 வது அதியாயம்‌ 54 வது ஸ்லோகம்‌ கூறும்‌.

25… மக்கண் மெய்‌ தீண்டல் உடற்கின்ப மற்றவர்‌
சொற் கேட்டல் இன்பஞ்‌ செவிக்கு.
மக்கள்‌ – தம்மக்கள்‌, மெய்‌-(தம்முடைய) உடலை,
தீண்டல்‌ தொடுதல்‌, உடற்கு– உடலுக்கு, இன்பம்‌ –சுகத்திற்குக்‌ காரணம்‌ (ஆகும்‌). அவர்‌ சொல்‌ கேட்‌டல்‌ அவர்களுடைய சொல்லை கேட்குதல்‌, செவிக்கு -காதுக்கு, இன்பம்‌ — இன்பத்திற்குக்காரணமாகும்‌.

இங்கு மக்கள்‌ என்பது தம்மக்களையே குறிக்கும்‌.
‘இன்பம்‌ என்ற சொல்‌ இரண்டிடத்திலும்‌ இன்பத்‌திற்குக்‌ காரணம்‌ என பொருள்‌ படுதலின்‌ ஆகுபெயர்‌. அவர்‌ என்ற சொல்‌ தம் மக்களையே குறிக்கும்‌.
குழந்தையால்‌ ஆலிங்கனஞ்‌ செய்யப்பட்டபோது உண்‌டாம்‌ சுகத்திற்கு ஈடின்மையால்‌, குழந்தையின்‌ ஸ்பர்சத்தைக்‌ காட்டிலும்‌ இனிமையானது வேறொன்றுமில்லை ??: என
“ஸ்ரிறானா-ஆலிங்‌ ம்‌ யமானஸ்ய-ஸ்பர்பா-ஸ௫தே :- யயா – ஸுவ: புத்ரஸ்பர்ஸாத்‌ – ப்ரியதர :- ஸ்பர்போ லோகே. ஈ வித்தே? என்னும்‌ மகாபாரதம்‌ ஆதிபர்வம்‌ 98 வது அத்யாயம்‌ 51வது சுலோகமும்‌,
“புத்ரஸ்‌. பர்றாத்‌ -து – லோகேஷு -ந – அன்யத்‌ – ஸுயவூம்‌ –
. அதி – இவ.- ஹி? என்னும்‌ மேற்சொன்ன ஆதிபர்வம்‌
64 வது அச்யாயம்‌ 67 வது ஸ்லோகமும்‌,
குழந்தையின் மழலைச் சொற் போல்‌ இனிமையாயுள்ளது ” என-ஓுரக்யம்‌ – கார்தம்‌-வவிஷ்யதி – வாலஸ்ய-இவ- ப்£வ்‌ருத்தஸ்ய – கலம்‌ – அவ்யக்தம்‌ – அத்‌ ஷுதம்‌ ” என்னும
மகாபாரதம்‌ அனுசாஸனபர்வம்‌ 181 வது அத்யாயம்‌ 41 வது. ஸ்லோகமும்‌ கூறும்‌,

குழலினிது யாழினிது என்பர்‌ தம்‌ மக்கள்‌
மழலைச்சொல்‌ கேளாதவர்‌ :
அமிழ்தினு மாற்ற வினிதே தம்மக்கட்‌
சிறுகை யளாவிய கூழ்‌ ?” .
என்னும்‌ குறள்கள்‌ இங்கு குறிப்பிடத்தக்கன.
சுட்டிய இனை நிலைக் கிளவி என்பர்‌ ஆசிரியர்‌ தொல்காப்‌பியனார்‌.

26. அன்பிலா ரெல்லாசம் தமக்குரிய ரன்புடையார்
என்பு முரியர்‌ பிறர்க்கு. ்‌
அன்பு-அன்பினை, உடையார்‌, என்பும்‌ -எலும்பினாலும்‌, பிறர்க்கு, உரியர்‌; அன்பு அன்பினை, இலார்‌ -.உடைத்தாயிராதவர்‌, எல்லாம்‌ எல்லாப் பொருளாலும்‌, தமக்கு தமக்கே, உரியர்‌,
இந்திரன்‌ வ்ருத்தாசுரனை வெல்ல வஜ்ராயுதம்‌ செய்‌வதற்குத்‌ தச முனிவரின்‌ முதுகெலும்பு வேண்டும்‌ என
அவரை இந்‌திரன்‌ வேண்ட, அம்முனிவர்‌ யோக சக்தியால்‌ ஸ்தூல சரீரத்தை விட்டு நீங்க, அவன்‌: முதுகு எலும்பால் வஜ்ராயுதம்‌ செய்யப்பட்டதை ஈண்டு இவ்வாசிரியர்‌.குறிக்கின்‌றனர்‌.
இந்த வ்ருத்தாந்தம்‌ ஸ்ரீபாகவதம்‌ 6வது. ஸ்கந்தம்‌ 9, 10 வது அத்யாயங்களில்‌ பார்க்க,
சிபி சக்ரவர்த்தி தன்‌ உடலப்‌ புறாவுக்கு கொடுத்ததையும்‌, கர்ணன்‌ தன்‌ உடலோடு பிறந்த கர்ண குண்டலங்களை இந்தரனுக்‌’குக்‌ கொடுத்ததையும்‌ மகாபாரதம்‌ வனபர்வம்‌ 182,188 வது அத்யரயங்களும்‌ -வனபர்வம்‌ 811 வது அத்யாயமும்‌ கூறுகின்றன.

27. என்பி லதனை வெயில் போலக்‌ காயுமே
அன்பி லதனை யறம்‌.
-என்பிலதனை -எதும்பில்லாத ‘ உடம்பை, வெயில்‌ காயும்‌ போலே -தகிக்குமாறு, அறம்‌ = தர்மக்கடவுள்‌,-அன்பிலதனை- துன்பப்படுத் தும்‌,
அன்பு. இருத்தலும்‌ இல்லாமையும்‌ மக்களிடமே நிகழமாதலால்‌; அன்பில்லாத மக்கள்‌ ௮ஃறிணைப்‌ பொருட்கட்குச்‌ சமம்‌ என்பதைக்‌ குறிக்க “அன்பிலாரை என்ற சொல்லை ஆசிரியர்‌ வழங்காது -அன்பிலதனை -என்ற சொல்லை வழங்கியது நோக்கத்தக்கது
ஆறாம் என்பது ஈண்டு அறத்திற்கு பதிதேவதையாய்‌ இருக்கும்‌ தர்மராஜனைக்‌ “குறிக்கும்‌.

செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்து இருப்பான்
நல் விருந்து வானத்தவருக்கு
இல் -வீட்டில் இருந்து -செல் விருந்து -செல்கின்ற விருந்தினரை -ஓம்பி -உபசரித்த பின்னர் -இல் -வீட்டுக்கு -வரு விருந்து -வருகின்ற விருந்தினரை -பார்த்து இருப்பான் -எதிர்பார்த்துக் கொண்டு இருப்பவன் -வானத்தவருக்கு -தேவர்களுக்கு -நல்ல விருந்து ஆவான்
மனு ஸ்ம்ருதி -3-106 இத்தையே சொல்லும்
இது விஷயத்தில்‌ மகாபாரதம்‌ அசுவமேதபர்வம்‌ 90 வத அத்தியாயம்‌ நகுலோபாக்யானம்‌ இங்கு குறிப்‌
பிடக்தக்கது. அதன்‌ கதை பின்வருமாறு:..தர்மபுத்திரர்‌ அசுவமேத யாகம்‌ செய்தபிறகு அன்னதானம்‌ ஏராள மாய்ச்‌ செய்தார்‌. அந்த அன்னதானத்தைச்‌ சபையி லுள்ளோர்‌ அனைவரும்‌ புகழ்ந்தனர்‌. ௮ந்த சமயம்‌ ஒரு பக்கம்‌ தங்கமாய்ப்‌ பிரகாசித்த சரீரத்துடன்‌ கூடிய ஒரு ,
கீரிப்பிள்ளை ௮ங்குவந்து “குருஷேத்திரத்தில்‌ :மாவைக்
கொடுத்த உஞ்சவருத்தி: பிராம்மணனுடைய தானத்‌;திற்கு இந்த யாகம்‌ ஈடாகாது?” எனச்‌ சொல்லிற்று.
இதைக்‌ கேட்ட சபையோர்கள்‌ ஆச்சரியமடைந்து ௮ந்தக்‌ கீரிப்பிள்ளையைப்பார்தது, “நீயார்‌? நீ என்‌ இப்படிச்‌
சொல்கிறாய்‌?” என்று கேட்டார்கள்‌. கீரிப்பிள்ளை அடி.யில்‌ வருமாறு சொல்லிற்று:
குருஷேத்திரத்தில்‌ உஞ்ச வ்ருத்தி செய்து பிழைக்‌கும்‌. பிராமணன்‌ ஒருவன்‌ இருக்கிறான்‌. அவனுடைய குடும்பத்தில்‌ அவன்‌ மனைவி, புத்ரன்‌, நாட்டுப்பெண்‌ஆகிய மூவர்‌ இருந்தனர்‌. இந்த பிராமணன்‌ கொண்டு வருவ திவிருந்தே அவர்கள்‌ ஜீவித்து வந்தனர்‌. ஒரு சம யம்‌ தேசத்தில்‌ துர்பிக்ஷம் ஏற்படவே அவருக்கு கோதுமை மாவுதான்‌ ” கொஞ்சம்‌ கிடைத்தது. அதை
4 பாகமாய்ச்‌ செய்து சாப்பிட ஆரம்பித்தார்கள்‌. அந்த சமயத்தில்‌ ஒரு அதிதி வந்து சேர்ந்தார்‌. உஞ்ச வ்ருத்தி
பிராமணன்‌ வந்தவரை உபசரித்து தன்னிடம்‌ இருந்த மாவைக்‌ கொடுத்து அதைச்‌ சாப்பிடச் சொன்னார்‌. அதிதிக்கு அதைச் சாப்பிட்டும்‌ பசி தீரவில்லை. அவருடைய ஸ்திதியைப்‌ பார்க்க பிராமணர்‌ வருத்தமடைந்தார்‌-இதைப் பார்த்த அவருடைய பத்னி தன்‌ பாகத்தையும் கொடுத்தாள்‌. அசைச் சாப்பிட்டும்‌ அவருடைய பசி தணியவில்லை
பிறகு பிராமணனுடைய புத்ரனும்‌, நாட்டுப்‌ பெண்ணும்‌ தங்களுடைய பாகத்தைக்‌ கொடுத்தார்கள்‌. உடனே தேவலோகத்தில் இருந்து .புஷ்பவர்ஷம்‌ பெய்தது.
வந்த அதிதி உஞ்சவ்ருத்தி பிராமணனைப்‌ பார்த்து“உங்கள்‌ குடும்பத்தாரைப்‌ போல்‌, நான்‌ கண்ட தில்லை, தங்களுக்கென்று கொஞ்சங்கூட வைத்துக்கொள்ளாமல்‌ எல்லாவற்றையும்‌ எனக்காகக்‌ கொடுத்துவிட்டீர்‌களே. உங்களுடைய தானமே தானம்‌.
“உங்‌களை ஸ்வர்க்க. கதிக்கு அழைத்துச்‌ செல்ல தேவதைகள்‌ விமானத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்‌. உன்னுடைய பச்னி, மகன்‌, நாட்டுப்பெண்‌ இவர்களுடன்‌ ஸ்வர்க்கத்தை – அடைவாயாக. நான்‌ தர்ம தேவதை. என்று சொல்லி மறைந்தார்‌. அவர்கள்‌ நான்கு பேரும்‌. விமானத்தில்‌ ஏறி ஸ்வர்க்கக்தை அடைந்தனர்‌, அந்த மாவைச்‌ சாப்பிட்ட சமயத்தில்‌ ழே உதிர்ந்த மாவும்‌ ஜலமும்‌ பட்டு என்‌ சரீரத்தின்‌ ஒருபாகம்‌ தங்க மயமாய்‌ ஆகி விட்டது . மற்றொரு பாகம்‌ அம்மாதிரியாகும்‌ என நினைத்து அநேக யாகங்களுக்குப்‌ போனேன்‌, இந்த யாகத்திற்கும்‌ ஆசையுடன்‌ வந்தேன்‌ ; ஆனால்‌ என்‌ சரீரத்தின்‌ மற்ற பாகம்‌ தங்கமயமாக ஆகவில்லை, . அதனால்‌ தான்‌ இந்த யாகம்‌ அந்த ப்ராம்மணனுடைய தானத்‌திற்கு ஈடில்லை என்று சொன்னேன்‌ ?? என்று சொல்‌லிற்று, இதிலிருந்து அதிதி ஸத்காரத்தின்‌ விசேஷம்‌ வெளியாகிறது ,
அடியிற்குறிப்பிட்டிருக்கும்‌ ஸ்லோகங்களும்‌ அதிதி
சத் காரத்தின்‌ மஹிமையையே கூறுகின்றன :–
அதிஸி :– பூஜித :–யத்‌ .. ஹி-யூ* யாயதே – மனஸா -பலம்‌ | ௩. தத்‌- கீரது – ( ரதேக- அபி . துல்யம்‌- ஆஹ: இரிஷிண மபண்ையை – மு ருஹஸ்‌ஸ்‌:ப “து. முச்சத |௩ -அன்யதீ.தஸ்மாத்‌ – பரஃ-பூர்ம இதி – ப்ராஹு:.”மரீஷிண : |தஸ்மாத்‌ – ம்‌ ருஹஸ்‌. மாடு ரமஸ்ய : ௩. அன்யத்‌ – ற உவதம்‌..அஸ்திவை_ருதே – அதிஸ்ிம்‌ – ஈரவ்பாவ* ர.மனஸா.ஏதத்‌ .. வீசாய்‌ ”_ மகாபாரதம்‌ – அனுசாசனிகபர்வம்‌ 2 வது அத்தியாயம்‌ 107, 86, 106 வது ஸ்லோகக்கள்‌. ்‌

30. இனைத் துணைத்தென்ப தொன்‌றில்லை விருந்தின்
றுணைத் துணை வேள்விப்‌ பயன்‌
வேள்விப் பபன்‌ -(விருந்தினரை) உபசரித்தலாகிய வேள்வியின்‌ பபன்‌, இனைத் துணைத்து -இவ்வளவுக்குட்
பட்டது என்பது,== ஒன்று ஒன்றும்‌, | இல்லை; விருந்தினை — விருந்தினருடைப, துணைத்‌ துணை -யோக்யதைக்‌குத்‌ தகுந்தது ஆகும்‌.
அதிதி பூஜனத்தை மனுஷ்ய யஜ்ஞம்‌ (ந்ருயத்ஜோதியிபூஜனம்‌) என்று மனு தர்ம சாஸ்த்ரம்‌ கூறும்‌,
“ஐம்பெரும்‌ வேள்விகளுள்‌ ஒன்றாதலின்‌ வேள்விஎன்றும்‌, பொருளளவு தான்‌ சிறியதாயமினும்‌ தக்கார்‌ கைப்பட்டால்‌ வான்‌ சிறிதாப் போர்த்து விடு மாதலின்‌, இனைத்துணைத்தென்ப தொன்றில்லை என்று கூறினார்‌:
– இதனால்‌ இருமையும்‌ பயத்தற்கு காரணம்‌ கூறப்பட்‌டது” என்கிறார்‌ பரிமேலழகர்‌,
தானம்‌ செய்பப்படம்‌ பொருள்‌ சிறிதாயினும்‌ அது தகுதியான சத்பாத்திரத்தின்‌ கையில்‌ சேர்ந்தால்‌ மிகவும்‌ பெரிய ஆகாசத்தைபும்‌ சிறிது என்னும்படி மேலான பயனைத்‌ தந்துவிடும்‌ என்பதுபோல்‌ நாம்‌ செய்‌யும்‌ விருந்தின்‌ பயனும்‌ விருந்தினரின்‌ யோக்யதைக்குத்‌ தக்கபடி பயனளிக்கும்‌ என்பது கருத்து.
“ யதிஹமஸ்தே-ஜலம்‌. த்வா-ை?க்ஷம்‌-உத்‌ மாதபுகர்ஜலல்‌ | தீஉன்னம்‌-மேருணா.துல்யம்‌-தஜ்ஜலம்‌..ஸா.மமோபமம்‌? ॥ ‘என்பது பராசருடைய வசனம்‌ பராசர சம்ஹிதை ஆசார காண்டம்‌ அத்யாயம்‌ 1- ஸ்லோகம்‌ 53).
பாத்ரஸ்யடஹி-விஸேஷண.ஸற* ர திஉயாகதயைவ-௪ | அல்பம்‌-வா- பஹ -உஃவா-ப்ரேத்ப. உரநஸ்ய-ஹலம்‌- அஸ்ர்‌ துதே*? என்று மனு ஸ்ம்ருதி 7-வது அத்யாயம்‌ .86-வது ஸ்லோகம்‌ கூறுகிறது.

31. அல்லவை தேய வறம் பெருகு நல்லவை:
நாடி. யினிய சொலின்‌.
நல்லவை– புண்ணியங்களை, நாடி- கருதி, இனிய -இனிய சொற்களை, சொல்லின்‌ – கூறினால்‌, அல்லவை-பாபங்கள்‌, தேய- குறைய, அறம்‌ – தர்மம்‌, பெருகும்‌,
முதன்‌ முதலில் பாபச்செயல்களின் பயனைப் போக்க முயல வேண்டும்‌. -அது அழிந்தால்‌ புண்ணியச்‌ செயல்‌களின்‌ பயன்‌ தானே பெருகும்‌ என்பது கருத்து.-* ஜிஹ்வாழ்‌ ரே-வர்ததேஃலக்ஷ்மீ : *,-நீதி சாஸ்த்ரம்‌,

32. எழுமை யெழு பிறப்பு முள்ளுவர்‌ தங்கண்‌
விழுமம் துடைத்தவர்‌ நட்பு.
(பயன்‌ தெரிவார்‌ -உபகாரத்தின்‌ பயனை ஆராய்‌வார்‌)-தங்கள்‌ – தம்மிடத்தில்‌, விழுமம்‌– துன்பத்தை,
துடைத்தவர்‌ நட்பு-போக்கியவருடைய சினேகத்தை
எழமை–‘எழு பிறப்பும்‌- புண்ய பாபங்கள்‌ தொடரும்‌ எழு
வகைப்பட்ட -பிறப்புக்களிலும்‌, உள்ளுவர்‌ நினைப்பர்‌,
தனது ஏழு ஜென்மங்களிலும் , தன்‌ சந்நிதியில் எழுதலை முறைகளிலும் மறக்க முடியாதது. -தனக்கு ஒருவர் ஆபத்துக்கு காலத்தில் உதவியது என்றும் கருத்துக் கொள்‌ளலாம்‌.–தனது மறு ஜன்மங்களில் அனேகமாய்‌ எல்லாருக்கும் போர்வை ஜென்ம நினைவு மறந்து போயினும் பேர் உதவி செய்தவரை மறு லான்மத்தில் காண நேர்ந்தால் நம்மை யறியாமலேயே அவரிடம்‌ பூர்வ ஜன்ம வாசனையினால்‌ பேர் அவா ஏற்படலாம்‌ என்பது கருத்து.

33. கொன்றன்ன வின்னா செயினு மவர்செய்த
ஓன்று நன்று உள்ளக்‌ கெடும்‌.
கொன்றன்ன (முன்‌ நன்மை செய்தவர்‌)
கொல்லுதலை ஓத்‌த, இன்னாச்செயலை, -செயினும்‌- செய்‌தாலும்‌, அவர்‌ செய்த ஒன்றா நன்று ஒரு உபகாரத்தை, உள்ள – நினைக்க, (௮து ) கெடும்‌ — போக்கப்படும்‌.
அய்ய வனை
முன்பு உபகாரம்‌ செய்தவன்‌ பின்னர்ப்‌ பெரிய அபகாரத்தைச்‌ செய்யினும்‌, அவன்‌ செய்த உபகாரத்தை. நினைத்து அபகாரத்தை மறப்பது கடனாகும்‌ என,
“பூர்‌:லோபகாரீ -ய:- தே – ஸ்யரத்‌ . அபராயே – மரீயஹி -; உபகாரேண – தத்‌ . தஸ்ய- ௯்ஷக்தல்யம்‌ -அபசரயின :’?: என்று. மகாபாரதம்‌ வன பர்வம்‌ 98 வது அத்யாயம்‌ 27 வது ஸ்லோகம்‌ கூறும்‌.

34, எந் நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்‌வில்லை
செய்ந் நன்றி கொன்ற மகற்கு–
எந்நன்றி -எவ்வகைப்பட்ட அறத்தையும்‌, கொன்‌றார்க்கும்‌-சிதைத்தவர்க்கும்‌, உய்வு-பிராயச்சித்தம்‌;-உண்டாம்‌ இருக்கிறது ; செய்ந் நன்றி- செய்யப்பட்ட உபகாரத்தை,-கொன்ற மகற்கு மறக்காதவனுக்கு, உய்வு-பிராயச்சித்தம்‌, இல்லை. ்‌
“ப்ரம்ம ஹத்தி செய்தவனுக்கும்‌, கள்ளினைக்‌ குடித்‌தோனுக்கும்‌, திருடனுக்கும்‌, விரதம் இழந்தவனுக்கும் பெரியோர்களால்‌ பிராயச்சித்தம் விதிக்கப்பட்டது.
செய் நன்றி கொன்றோனுக்கு விதிக்கப்படவில்லை”’ என
“ப்ரஹ்மவ” நே – ௪ -ஸுராபே -௪- சோரே.. ஷம்‌நவ்ரதே தியா. ட நிஷ்க்ருதி:- விஹிதா – ஸத்‌ ஷி :- க்குதீவே – சாஸ்தி நிஷ்க்ருதி:” | என்று.
ஸ்ரீமத்‌ ராமாயணம்‌ கிஷ்கிந்தா. காண்டம்‌ -34- 12-வது ஸ்லோகமும்‌, மகாபாரதம்‌ சாந்தி பர்வம்‌277-வது அத்யாயம்‌ 11-ம்‌ ஸ்லோகமும்‌ கூறும்‌.
* ஆன்முலை யறுத்த அறனில்‌ லோர்க்கும்‌,
மாணிழை மகளிர்‌ கருச்சிதைத்‌ தோர்க்கும்‌,
பார்ப்பார்‌ தப்பிய கொடுமை யோர்க்கும்‌,
வழுவாய்‌ மருங்கிற்‌ கழுவாயு முளவென,
நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன்‌,
செய்தி கொள்றார்க்‌ குய்தி யில்லென..
அறம் பா டிற்மே ஆயிழை கணவ”-என்னும்‌ புதகானூற்று 34 வது) செய்யுளும்‌ இக்கருத்‌தையே கூறும்
தையே கூறும்‌, ்‌

35. சமன் செய்து சீர் தூக்குங்‌ கோல் போலமைந்தொருபால்‌
கோடாமை சான்றோர்க்‌ சணி.
கோல்‌–தூக்கும்கோல்‌, –சமன்செய்து – (இருபுறமும்‌) சமனாகச்‌ செய்யப்பட்டு, –சீர்‌ – சமமான நிறையை,
தூக்கும் போல்‌- தூக்கக்‌ காட்டுகிறது போல்‌,
௮மைந்து (வாதிகள்‌ இருவரிடமும்‌) சமமான எண்ணத்‌தோடு இருந்து, ஒருபால்‌–ஒரு பக்கத்தில்‌, கோடாமை -நடுநிலை தவறாமை, சான்றோர்க்கு -மேலோருக்கு–அணி -ஆபரணம்‌ (ஆகும்‌). ..
இக்கருத்தையே பின்னர்க்‌ கூறப்பட்ட புற நானூாறு.மதுரைக்‌ சாஞ்சி, கலித் தொகை இவற்றிலுள்ள அடிகள்‌ குறிக்கும்‌…
விரிசீர்த்‌ –
தெரிகோன்‌ மென்ன போல வொருதிறம்‌ .
பற்றலிலியரோ (புறநானாறு, 6, 8—9)
ஜெமன்‌ கோலன்ன செம்மைத்தாகி (மதுரைக்கா 4-1)
ஓர் வுற்றோரு திற மொல்‌ காத நேர்கோல்‌
அறன்‌.புரி நெஞ்சத்தவன்‌, (கலித்‌. 42, 14- 15).
ஸம: – அஹம்‌ – ஸர்வ வஹுதேஷு பச்ய – மே – ஜாகலே -வ்ரதம்‌ | துலா-மே – ஸர்வஷு்தேதேஷ-ஈ – ஸமா -திஷ்டதி ஜாஜலே |என்ற சாந்தி பர்வம்‌ 238-10- சுலோகம்‌ இங்கு குறிப்பிடத்‌தகும்‌.

36. வாணிகம் செய்வார்க்கு வாணிகம்‌ பேணிப்‌
பிறவும் தம் போற்‌ செயின்‌.
பிறவும்‌- பிறருடைய பொருள்களையும்‌, தம் போல்‌-தம்முடைய பொருள்கள் போல, பேணி- போற்றி, செயின்‌ செய்தால்‌, அஃதே, வாணிகஞ்செய்வார்க்கு-வணிகர்க்கு, -வாணிகம்‌- உயர்ந்த வணிகத்‌ தன்மை (தகும்‌),
இக் குறள்‌ வைஸ்யரின்‌ சிறப்புத் தன்மையைக்‌ கூறுகின்றது.

37. அடக்கம் அமரருளுய்க்கும் அடங்காமை
ஆர் இருள் உய்த்து விடும் .
அடக்கம்‌ -இந்‌திரியங்களை. அடக்குதல்‌ , அமரருள்‌.-தேவர்களுள்‌, உய்க்கும்‌ — செலுத்தும்‌; அடங்காமை-அவற்றை அடக்காமை, ஆரிருள்‌ -நெருங்கிய இருளோடு கூடிய நரகத்தில்‌, உய்த்துவிடும்‌- திண்ணமாய்ச்‌ செலுத்தும்‌,
இந்திரியங்களின்‌ இயற்கை தாம்‌ எவ் விஷயத்தைக்‌ கொள்ளக் கூடாதோ அவற்றைக்‌ கொள்ளுதலே ஆகும்‌. அவற்றைத்‌ துஷ்டக் குதிரைகட்கு ஒப்பிடும்‌ கடோபனி
ஷத்து (1-3-5-). அவ்வாறு அவைகளைப்‌ போக விட்டால்‌ அதன்‌ பயன்‌ நரகத்தை அடைவதே யாகும்‌ ; அவ்வாறு“போக விடாது அவற்றை இழுத்துக், கொள்ள வேண்டிய விஷயங்களிற்‌ செலுத்தினால்‌ அதன் பயன்‌ ஸ்வர்க்கத்தை அடைதல் ஆகும்
ஆர் இருள் என்பதும் ஈஸாவாஸ உப நிஷத்தில்‌ உள்ள அந்நியம் – தமஸ் -என்றுமாம்

38. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின்‌
எழுமையு மேமாப்‌ புடைத்து.
ஆமைபோல்‌, (உயிர்‌ – மனிதன்‌), ஒருமையுள்‌ -ஒரு பிறப்பில்‌, ஐந்த ஜந்து ஞானேந்த்ரியங்களையும்‌, அடக்‌கல்‌ ஆற்றின்‌-அடக்கினால்‌, அஃது, எழுமையும்‌-ஏழு பிறப்புக்களிலும்‌, ஏமாப்பு உடைத்து – ஷேமம்‌ தருதலை உடைதது,
ஆமை எவ்வாறு எல்லா அங்கங்களையும்‌ குறுக்கிக்‌ கொள்ளுமோ, அவ்வாறு இந்திரியங்களை அவ்வவற்றின்‌ விஷயத்தில்‌ செல்லாது அடக்குபவன்‌ நிலைபெற்ற பிரகஜ்ஜையை அடைவான்‌–என
4யஉ£.- ஸம்ஹூதே.- ௪.
அயம்‌ – கூர்ம;-அங்கானி.. இவ – ஸர்வ:ற:. “இர்‌ திரியாணி2 இந்திரியார்பேவ்‌ய : – தஸ்ய… ப்ரஜ்ஞா -என்னும்‌ பகவத்கீதை 2வது அத்யாயம்‌ 58 வது ஸ்லோகம் கூறும்‌
**பட ா.மம்ஹரதே … சாமான்‌ . கூர்ம: – அ. மூனி-இவ ஸர்வா |சரா3.”-ஆத்மஜ்யோதி:. ஆத்மா-அயம்‌- ஆத்மன்யேவ .ப்ரபஸ்ர்யதி-என்னும்‌ மகாபாரதம்‌ சாந்தி பர்வம்‌ 173 வது – 51வது ஸ்லோகமும்‌ இந்த கருத்தையே கூறும்‌,
௮9, கதங்காத்துக்‌ கற்றடங்க லாற்றுவான்‌ செவ்வி
அறம்பார்க்கு மாற்றி னுழைக்து,

389-கதம்‌ காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து
கதம் -கோபத்தை,காத்து போக்கி -கற்று – நூல்களை ஆராய்ந்து, அடங்கலாறறுவான்‌ செவ்வி-இந்திரியங்களை அடக்குவானுடைய நன்மைக்குரிய | பக்‌ககுவ காலத்தை,–அறம்‌ -தர்மக்கடவுள்‌, ஆற்‌றின்‌ – “அவன்‌ வழியே சென்று, பார்க்கும்‌ –நோக்கி நிற்கும்‌.
இந்தி ரிய ரநிக்ரஹம்‌ செய்வோனை அனுக்ரகிக்க அறக்கடவுள்‌ காத்துக் கொண்டிருக்கு மென்பது கருத்‌து .
‘இந்திரியங்களை அடக்குவதற்குத தர்ம சாஸ்திரங்களின்‌ அறிவும்‌, தூய்மையான செயலைச்‌ செய்தலும்‌, அக் காரணம்‌ பற்றி வரும்‌ மனத் தூய்மையும்‌ காரணமாகும்‌ என்
கட(1-3-6-8-) விளக்கும்‌.

40-ஒழுக்க முடைமை குடிமை யிழுக்கம்‌
இழிந்த பிறப்பாய்‌ விடும்‌.
ஒழுக்கம்‌ -தர்ம சாஸ்‌திரங்களில்‌ தத் தம்‌ வர்ணங்‌களுக்கேற்ற முறைப்படியும்‌, பெரியோரால்‌ நடக்கப்‌பட்ட முறைப்டியும்‌ நடத்தலை,– உடைமை, “குடிமை நற் பிறப்பிற்குக்‌’ கரணம்‌, (ஆகும்‌) ; இழுக்கம்‌– சதாசாரத்‌திலிருந்து தவறுகை, இழிந்த பிறப்பு –இழிந்த
பிறப்பிற்குக்‌ காரணம்‌, ஆய் விடும்‌ — ஆகும்‌.
குடிமை, பிறப்பு, இவை அவற்றின்‌ கரரணம்‌’ எனப்‌: பொருள்‌ தருதலின்‌ ஆகு பெயராகும்‌.
தர்ம நூல்கள்‌ தன்‌ வர்ணத்திற்கு விதித்த அனுஷ்‌டானங்களைச்‌ செய்தால்‌ அதுவே உயர்வு என்றும்‌.பிறருக்கேற்பட்ட தர்மத்தை அனுஷ்டித்தால்‌ தன்‌ பிறப்பினின்று நழுவி விடுகிறான்‌’? என்ற கருத்துள்ள “வரம்‌ – ஸ்வயர்ம :- விரூண :- ஈ- பாரக்ய; – ஸ்வனுஷிடுத மேண . ஜீவன்‌. ஹி… ஸ£$ய :.. பததி – ஜாதித:” என்னும்‌ மனு ஸ்ம்ருதி 10வது அத்யாயாம்‌ 97 வது ஸ்லோகம்‌ கூறுவது இங்கு நோக்கத் தகுந்தது,
*ஸ்வஹாவ- விஹிதம்‌… கர்ம- குர்வன்‌ – ஈ . அப்னோதி – கல்ஞ9ஷம்‌,? :பரயூர்‌ மோ. ஒயாவஹ:” என்னும்‌ பகவத் கீதை 18வது அத்‌யாயம்‌ 85 வது ஸ்லோகத்திலுள்ள வாக்கியமும்‌ இக் கருத்‌தையே சொல்லும்‌,

41, மறப்பினும் ஒத்துக் கொளலாகும்‌ பார்ப்பான்
பிறப்பொழுக்கங்‌ குன்றக்‌ கெடும்‌.
ஓத்து (கற்ற) வேகத்தினை, –மறப்பினும்‌ -மறந்தானாயினும்‌,-கொளல்‌ ஆகும்‌ -வருணம்‌ கெடாமையின் பின்னும்‌ அஃது ஓதிக் கொள்ளலாம்‌. பார்ப்பான்‌ = அந்தணனது, பிறப்பு–(உயர்ந்த) வருணம்‌,-ஒழுக்கம்‌ குன்‌ற-தன்‌ ஒழுக்கம்‌ குன்ற, கெடும்‌.
“மறந்த வழி இழி குலக்தனாமாகலின்‌’ “மறக்கலாகாது” என்னும்‌ கருத்தான்‌ * மறப்பினும்‌?” என்றார்‌..

சிறப்புடைவருணத்திற்கு மொழிந்தமையின்‌, இஃது .ஏனைய வருணங்களுக்கும்‌ கொள்ளப்படும்‌ என்று கூறுகிறார்‌ பரிமேலழகர்‌.
ஒவ்வொரு பிராம்மணனும்‌ வேதாத்யயனம்‌ செய்து
(வேதங்களை மறவாது இருக்கவேண்டும்‌ என்றும்‌, மறப்‌பின்‌ மறுபடியும்‌ அத்யயனம்‌ செய்யவேண்டும்‌ என்றும்‌,
பிராம்மணனாய்ப்‌ பிறந்தது முதல்‌ பிராம்மண தர்மங்‌களிலிருந்து ஒரு போதும்‌ தவறக் கூடாதென்றும்‌, . தவறினால்‌ அதனாலுண்டாகும்‌ கேட்டை அனுபவித்தே தீர வேண்டும்‌ என்றும்‌ இக்குறள்‌ கூறும்‌, –
பார்ப்பான்‌ தன்‌ பிறப்பிற்குரிய ஒழுக்கங்‌ குன்றின்‌ கேடு அவனுக்கு மாத்திரமன்றி, நாட்டில்‌ உள்ளோர்‌ அனைவர்க்கும்‌ கேடு நிகழும்‌ என்பதை உணர்த்து வதற்கே பரர்ப்பானின்‌ பிறப்பொழுக்கம்‌ ஒருக் காலும்‌ தவறக் கூடாது என்று உரை கூறுவாருமுளர்‌
ஸூர்ய க்ரஹணம் முதலிய புண்ணிய காலங்களில் சொல்லப்படும் மஹா சங்கல்பத்தில் வரும் ஜாதி ஷீரம் ச கராணாம் –என்ற பதத்தினால் குறிக்கப்படும் பாபத்தையே இங்கு ஒழுக்கம் குன்ற என்ற தொடரினால் ஆசிரியர் குறிக்கிறார்

42, பிறன்மனை நோக்காத: பேராண்மை சான்‌’றோர்க்கு
, அறனொன்றோ வான்ற வொழுக்கு
பிறன்மனை -பிறன் மனைவியை, நோக்காத. பாராத,–சான்‌’றோர்க்கு-கிருஹஸ்தர்களுக்கு, ஒன்று — ஒப்பற்ற, அறனோ -தர்மமும் -ஆன்ற மேலான, ஒமுக்கு–ஒழுக்கமும்‌, (ஆகும்‌).
புறப் பகைகளை யடக்கும்‌ ஆண்மை யுடையவர்க்கும்‌ உட்பகையாகிய காமம்‌ அடக்குதற்கு அருமையின்‌ அதனை அடக்கிய ஆண்மையைப்‌ பேரண்மை என்றார்‌?” என்று:
கூறுகிறார்‌ பரிமேலழகர்‌,

48 திறனல்ல தற்பிறர்‌ செய்யினு நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.
தன்‌ -தனக்கு, பிறர்‌,திறனல்ல -செய்யத்தகாத காரியங்களை, செய்யினும்‌ – செய்தாலும்‌, (அதனால்‌ அவர்‌கட்‌குவரும்‌) நோ வருத்தத்‌திற்கு,-நொந்து வருத்தப்‌பட்டு, அறனல்ல- தர்மமல்லாத காரியங்களை, செய்‌யாமை, நன்று -நல்லது , .
தமக்குத்‌ தீங்கு செய்தோர்க்குக்‌ தாமும்‌ தீங்கு இழைக்க வேண்டும்‌ என நினைத்கல்‌ இயற்கையாயினும்‌… அதனைத்‌ தடுடுத்தலே மேலானது என்பது கருத்து.
ஸ்ரீமத்‌ சரமாயணத்தில்‌ அயோத்யாகாண்டம்‌ 1 1வதுசர்க்கம்‌ 11 வது சுலோகத்தில்‌ “ந – ஸ்மரதி – அபகாராணாம்‌ – சதம்‌ –அபி- ஆத்மவத்தயா’-என்று ஸ்ரீராமனுடைய குணங்களை வர்ணிக்குமிட்த்தில்‌ சொல்லப்பட்‌டிருக்கிறதைப்‌ பார்க்கவும்‌. ஒருவன்‌ தனக்கு நூற்றுக்‌ கணக்கான இன்னல்கள்‌ செய்யினும்‌ தனது. பெருந் தன்மையினால்‌ அவைகளை நினைக்கக் கூட மாட்டான்‌ ஸ்ரீராமபிரான்‌ என்பது இதன்‌ பொருள்‌.

44-அழுக்காற்றி னல்லவை செய்யா ரிழுக்காற்‌றின்
ஏதம்‌ படுபாக்‌ கறிந்து.
(நினைப்பவர்‌ – ஆராய்வோர்‌) இழுக்காற்றின்- கெட்ட வழி காரணமாக, ஏதம்‌ – தீமை, படுபாக்கு.- வருதலை அறிந்து அழுக்காற்றின்‌- பொறாமையால்‌, அல்லவை -தீயச் செயல்களை, செய்யார்‌- செய்ய மாட்டார்கள்‌.

45.–சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே
மற்றின்பம்‌ வேண்டு பவர்‌.
மற்றின்பம்‌ – பேரின்பத்தை (மோஷத்தை),-‘வேண்டு பவர்‌,’சிற்றின்பம்‌_ சிற்றின்பத்தை, வெஃகி -விரும்பி, ௮றனல்ல– தியச் செயல்களை, செய்யார்‌ – செய்ய மாட்டார்‌.

இம்மையின்பம்‌, மறுமையின்பம்‌-இரண்டும்‌ சிற்றின்பம்‌ எனப்படும்‌, இரண்டிற்கும்‌ எல்லை இருத்‌தலின்‌.

46, புறங்கூறிப்‌ பொய்த்துயிர்‌ வாழ்தலிற்‌ சாதல்‌
அறங்கூ.று மாக்கந்‌ தரும்‌.
(ஒருவன்‌) புறங்கூறி-ஒருவர்‌ இல்லாத இடத்து அவரைப் பற்றிக்‌ கூற்றம்‌ கூறி, பொய்த்து-௭திரில்‌ பொய்யாக நடித்து, உயிர் வாழ்‌ தலின்‌ -உயிரோடு இருத்‌தலைக் காட்டிலும்‌,-சாதல்‌, அறம்‌- தர்ம நூல்கள்‌,-கூறும்‌ -சொல்லும்‌, ஆக்கம்‌-நன்மையை, தரும்‌-கொண்டு வரும்‌.
புறங்கூறுதலால்‌ வரும்‌ பாவத்தைச்‌ சாதல்‌ தடுக்கும்‌ என்பது கருத்து
47. மறந்தும்‌ பிறன் கேடு சூழற்க சூழின்‌
அறஞ்சூழுஞ்‌ சூழ்ந்தவன்‌ கேடு,
(ஒருவன்‌) மறந்தும்‌, பிறன்கேடு-பிறனுக்குக்‌ கேட்டினை, சூழற்க–செய்ய நினைக்கக்‌ கூடாது ; சூழின்‌-நினைத்தால்‌, சூழ்ந்தவன் – நினைத்தவனுக்கு, கேடு-கேட்டினை, அறம்‌ அறக் கடவுள்‌, சூழும்‌ –நினைக்கும்‌,
*கெடுவான்‌ கேடு -நினைப்பான்‌, விநாச காலே விபரீத புத்தி என்பன ஆன்றோர் வாக்கியங்கள்‌.

.

48. புத்தே ளூலகத்து மீண்டும்‌ பெறலரிதே
ஒப்புரவி னல்ல பிற.
ஒப்புரவின்‌-உபகராரத்தைக்‌ காட்டிலும்‌, பிற -வேறான, நல்ல – நற் செயல்களை, புத்தேளுலகத்தும்‌ -ஸ்வர்க்கத்திலும்‌, ஈண்டும்‌ – இவ்வுலகத்‌திலும்‌, பெறல்‌ -பெறுதல்‌, அரிது இல்லை ஏ அசை
இம்மையிலும்‌ மறுமையிலும்‌ பர உபகாரகமே சிறந்தது கே என்பது கருத்து.
இந்த கருத்தையே பின்‌ குறிக்கப்பட்டிருக்கும்‌ ஸ்ரீமத் பாகவத ஸ்லோகக்களும்‌ வெளியிடுகின்‌றன :….
பஸ்ர்யத-ஏதான்‌-மஹா ஹா .மான்‌-பர-அர்‌ பூ-ஏகாந்த-ஜீவிதான்‌-
வாத-வர்ஷு- ஆதப-ஹிமான்‌-ஸஹந்த:-வாரயநக்தி நஃஅஹோ-ஏஷாம்‌-வரம்‌-ஜன்‌ ம-ஸர்.வ-ப்ராணி-உபஜீவனம்‌-
ஸுஜனஸ்ய-இவ-யேஷாம்‌-வை-விமுபா-யாந்தி-ந-அர்‌ புநின:-
பத்‌ ர-புஷ்ப-௨டல-தநாயா-மூல-வல்கல.-2 ஈர ஹி:-
கந்‌ -கிர்யாஸ- ஷஸ்ம; ௮ஸ்ஸ்ரி-தோக்மை:-காமான்‌ -விதன்‌ வதே-
ஏதாவத்‌.ஜன்‌ ம-ஸாஹல்யம்‌- உ ஹிஞம்‌-இஹ-ே ஹிஷ-ஈ
ப்ராணை : அர்டை..யியா-வாவா-ஸ்்ரேய-ஏவ-ஆசரேத்‌.ஸஉ
ஸ்ரீ பாவதம்‌ 10 வதுஸ்கந்தம்‌ 23 வது அத்யாயம்‌ 32-35.-ஸ்லோகங்கள்

49, அருள் சேர்ந்த நெஞ்சினார்க்‌ இல்லை யிருள்‌ சேர்ந்த
இன்னா வுலகம் புகல் –
அருள்‌ -தயையோடு, சேர்ந்த கூடிய, நெஞ்சினார்க்‌கு — மனமுடையவர்க்கு, இருள்‌ சேர்ந்த இன்னா உலகம்‌-இருளோடு கூடிய அர்த்த புகல்‌ -புகுதல்‌, இல்லை –
“எல்லா பூதங்களிடத்தும்‌ அபயத்தைக்‌ கொடுப்‌போன்‌ சிறந்த விஷ்ணுவின்‌ பரம பதத்தை யடைவான்‌ ”
– என, *அபயம்‌-ஸர்வ-ஷஹ ஒதேவய: -ய;_உஉ௱ இ- மஹிபசே ஸ- மச்ஹூதி- பரம்‌ – ஸ்தானம்‌ – விஷ்ணோ:- பஉம்‌ – அனா மயம்‌ – என்னும்‌- மகாபாரதம்‌ ஸ்‌திரிபர்வம்‌ 7 வது அத்‌ யாயம்‌ 25வது ஸ்லோகம்‌ கூறும்‌.
அருளுடையார்க்கு நரக வேதனை இல்லை என்பது கருத்து.

50. அருளில்லார்க்‌ கவ்வுலக மில்லை பொருளில்லார்க்‌
கிவ்வுலக மில்லாதி யாங்கு.
பொருள்‌ இல்லார்க்கு, இவ்வுலகம்‌ . இவ்வுலகத்‌தின்பம்‌, இல்லாதியாங்கு-இல்லாதது போல, அருளில்‌லார்க்கு, அவ்வுலகம்‌ -காரிய ப்ரம்ம லோகத்தின்‌ இன்‌பம்‌, இல்லை.
துறவறத்தைப்‌ பூண்டமையால்‌ அவர்‌ ப்ரம்‌ம லோகத்தை யடைந்த போதிலும்‌ அருளில்லாத காரணம்‌ ‘ பற்றி அவர்‌ ஆங்கு இன்பத்துடன்‌ இரார்‌ என்பதே. இக் குறளுக்குக்‌ கருத்து என்றும் கூறலாம்‌-

51. தன்னூன்‌ பெருக்கற்குத்‌ தான் பிறி தூனுண்‌பான்‌
எங்கனம் ஆளும் அருள் –
தன்‌ – தன்னுடைய, ஊன் பெருக்கற்கு -உடம்பை வளர்த்ததற்கு, தான்‌, பிறிதூன்‌ -வேறொன்றின்‌ ஊனை உண்பான்‌, அருள்‌ -அருளை, எங்கனம் -எப்படி,ஆளும்‌ – தன் வசப்படுத்‌துவான்-
மற்றொன்றன்‌ மாமிசத்தால்‌ தன்‌ மாமிசத்தை வளர்க்க விரும்புகின்றவனைக்‌ காட்டிலும்‌ கொடியன்‌ இல்லை” எனப்‌ பொருள் பட
“ஸ்வ – மாம்ஸம்‌ – பர மாம்ஸேந – யேர – வர்யயிதும்‌ – இச்ஹதி – நாஸ்தி-ஷுத்திரதா தஸ்மாத்‌ – ந – நிருஸிம்ஸதரோ – நர? என்னும்‌ மகாபாரதம்‌ அனுசாசனபர்வம்‌ 178 அத்தியாயம்‌ 13 வது சுலோகமும்‌; “ ஸ்வ – மாம்ஸம்‌ -ப.ர – மாம்ஸேன- யோ – வர்யூயிதும்‌- இச்ஹதி -உத்விம்ன வாஸம்‌ லஹதே-யத்ர-யத்‌ரஉபஜாயதே” என்னும்‌ அதே பர்வம்‌ 233 அத்யாயம்‌ 6வது ஸ்லோகமும்‌,
“ஸ்வ-“மாம்ஸம்‌ – பரமாம்ஸேன-யோ – வர்யயிதும்‌-இச்‌ ஊதி – அவி. வாஸ்யேச.. அவஹவீடேக்‌ – ஸ – இதி – ஹோவாச நார -என்று மேற்படி பர்வம்‌ 177 வது அத்யாயம்‌.14 வது ஸ்லோகமும்‌,
“*ஸ்வமாம்ஸம்‌- பரமாம்ஸேன -யா – வயமிதும்‌ – இச்ஹஊதி – அனஹியர்ச்ய – பித்ரூன்‌ -தெவான்‌ -ததோ – நாஸ்தி அபுண்யக்ருத்‌’ என்று மனு ஸ்ம்ருதி 5 அத்யாயம்‌ 62 வது ஸ்லோகமும்‌ கூறும்‌.

52. அவி சொரித்தாயிரம்‌ வேட்டலின்‌ ஒன்றன்‌
உயிரசெகுத்‌ துண்ணாமை ஈன்று. ‘
அவி– ஹவிஸ்ஸூக்களை, சொரிந்து மிகுதியாகக்‌ கொடுத்து, (இல்லறத்தான்‌), ஆயிரம்‌ வேட்டலின்‌ –
ஆயிரம்‌ யாகங்கள்‌ செய்வதைக் காட்டிலும்‌, ஒன்றன்‌ -ஒன்றினுடைய, உயிர்‌ – பிராணனை, செகுத்து போக்கி (துறவறத்தான்‌)), ஊன்‌ – மாம்ஸத்தை உண்ணாமை,-நன்று -நல்ல பயனைத்‌ தரும்‌.
இந்த குறளுக்குப்‌ பரிமேலழகர்‌ அடியில்‌ கண்டவாறு உரைசெய்‌திருக்கிறார்‌:- ்‌
அவிசொரிந்து-(தீயின் கண்‌ நெய்‌ முதலிய) அவிகளைச்‌ சொரிந்து, ஆயிரம்‌ வேட்டலின்‌ — ஆயிரம்‌ வேள்வி வேட்டலினும்‌, , ஒன்‌றன்‌ உயிர்செகுத்து உண்ணாமை -ஒரு விலங்கின்‌ உயியைப் போக்கி (௮து நின்று ஊனை) உண்‌ணாமை நன்று,

அவ் வேள்விகளான்‌ வரும்‌ பயனிலும்‌ இவ் விரதத்‌தால்‌ வரும்‌ பயனே பெரிதென்பதாம்‌.
– **மாதம்‌ ஒரு அச்வமேதமாக நூறு வருஷம்‌ செய்பவனும்‌, மாமிசம்‌ தின்னாதவனும்‌ சமம்‌!” என
“*மாஷஹி-|ம்ரஹி- அஸ்வமேயேன-யோ-யஜேத-மதம்‌ -ஸமா:-ந ஸ்‌ வாஉதி- ௪-யோ-மாம்ஸம்‌ – ஸமம்‌ – ஏதத்‌ – மதம்‌- மம.” என்னும்‌ மகாபாரதம்‌ அனுசாசன பர்வம்‌. 177 வத அத்‌யாயம்‌ 16 வது ஸ்லோகமும்‌,
“ தவத்தோர்‌ மாம்சம்‌ உண்ணுவஇல்லை”? என்‌ *:ந- பக்ஷ யந்தி – அதோ – மரம்ஸம்‌ தபோயுக்தா :-மனீஷிண:-‘ என்னும்‌ 176 வது அத்யாயம்‌11 வது ஸ்லோகமும்‌ கூறும்‌.
*வர்ஷே – வர்ஷே – அஸ்‌வமேயேன – யோ – யஜேத – பாதம்‌ – ஸமா ₹- மாம்ஸானி௪-ந- வாதேத்-ம :- தயோ :- புண்யஹலம்‌ – ஸமம்‌?” என்னும்‌ மனுஸ்மிருதி 5 வது அத்யாயம்‌ 53 வது ஸ்லோகமும்‌ இந்தக் கருத்தையே கூறும்‌, ‘ °
இக் குறளால்‌ வேள்விகளுக்குப்‌ பயனுண்டென்பதே ஆசிரியர்‌ கருத்து. வேள்வி ஒரு. பாபச்செயல்‌. என்பது ஆசிரியர் கருத்து அன்று.
“ஆயிரம்‌ ஏகாதசி உபவாசஙகளக்‌ காட்டிலும்‌ ஒரு சிவராத்திரி உபவாசம்‌ உயர்ந்தது என்று சொல்லுமிடத்து ஏகாதச உபவாசமும்‌ ஒரு புண்‌ணிய வ்ரதம் தான்‌ என்றே சொல்லப்பட்டதாகும்‌.
அங்கனமில்லாது எகதசி உபவாசம்‌ ஒரு பாப காரியமாயிருந்தால் ஒவ்வொரு சிவ ராத்திரிவ்ரதமும்‌: அதைவிட ஆயிரம்‌ மடங்கு பாபத்தைக் கொடுக்கக்‌ கூடியதென்ற விபரீதார்த்‌தமே ஏற்படும்‌, ஆதலால்‌ வேள்வி என்பது ஒரு புண்ணிய காரிபமென்ற கருக்தை3ப இங்கு நாயனார்‌ தெரிவிக்கிறார்‌.

இக் குறளைப்பற்றிச்‌ சிலர்‌ கீழ்வருமாறு அபிப்பிராயப் படுகிறார்கள்‌ :–
தமிழ் நாட்டில்‌ பண்டை சங்கநூல்களில்‌ புலால்‌ உண்ணுவது ஆஷேபிக்கப்படாதது மாத்திரமே யன்றி அது போற்றப்பட்டு மிருக்கறது . பழைய தமிழ் மக்‌கள்‌ புலாலருந்துவதைச்‌ சிறப்பாகத்தான்‌ கொண்டிருக்‌ தார்கள்‌. வேதங்களிலும்‌ யாகம்‌ முதலியவைகளில்‌ மாம்சம்‌ உபயோகப்படுத்தப்பட்ட தென்பது தெளிவாகத்‌ செரிகிறது.. ஆதலால்‌ திருவள்ளுவர்‌ வைதிகக்‌ கொள்கையினராயிருந்தாலும்‌ முதன்‌ முதலாக புலால்‌ மறுத்தலைப்‌ பிரசாரம்‌ செய்ததற்குக்‌ காரணம்‌ என்ன எனில்
அவர் காலத்தில்‌ வடநாட்டிலிருந்து . புத்த சமண மதப்‌ரசாரங்கள்‌ தென்னாட்டில்‌ ‘ ஆரம்பிக்கப்‌பட்டன. . அப்போதிருந்த வைதிக மகான்கள்‌ பெளத்‌தர்களுடையஅஹிம்‌ஸக் கொள்கையைத்‌ தங்களுடைய மதத்தில்‌ சேர்‌.த்துக் கொண்டார்கள்‌. அதனால்தான்‌ இக் காலத்து பிராமணர்கள்‌ புலால்‌ தவிர்த்‌திருந்து இருக்கிறார்‌கள்‌ போலும்‌, : ்‌
ஆனால்‌ இவ்விதம்‌ அபிப்பிராயப்படுவது சரியாகத்‌: தோன்றவில்லை. இங்கு அஹிம்ஸா தர்மத்தை உபதே சித்திருப்பது பெளத்த சமயக் கொள்கைகளை அநுசரித்து அன்று, வேதங்களிலும்‌ தர்ம சாஸ்திரங்களிலும்‌. உபதேஸிக்கப்பட்டிருக்கிற அஹிம்ஸா தர்மத்தை யனுசரித்ததே அகும்‌, அதெப்படியென்றால்‌, வேதங்களும்‌ தர்மசாஸ்த்ரங்களும்‌ ஒருவன்‌ கிரகஸ்தாச்ரமத்தை விட்டு. சன்யாஸாச்ரமத்தை யடையும்‌ போது உலகில் உள்ள எல்லாப்பிராணிகளுக்கும் அபயப்பிரதான ப்ரதிஜ்ஜை செய்து அஹிம்ஸா விரதத்தைக்‌ கைக் கொள்ளும்‌படி. உபதேஸிக்கின்றமன, பெளத்த மதமோ அம் மதத்தில்‌
சேர்ந்தோர்‌ எல்லாருக்குமே கொல்லாமையை உபதேதசிக்கிறது. அனால்‌ அந்த உபதேசம்‌ அனுஷ்டானத்தில்‌ விபரீதமாகவே முடிந்திருக்கிறது. : தற்காலம்‌ பெளத்த மதம்‌ பெருவாரியாக வழங்கும்‌ தேசங்கள்‌ பர்மா, சீனா, ஜப்பான்‌, முதலியன. பொதுலாய்‌ மக்கள்‌ எல்லோரும்‌ அஹிம்ஸா தர்மத்தை யனுஷ்டிக்க வேண்டும்‌ என்கிற இயற்கைக்கு மாறான உபதேசத்தைஅந்த மதம்‌ செய்த தின்‌ பயனாக அந்நாடுகளில்‌ மாமிசம்‌ சாப்பிடாதவர்‌களே இல்லை என்கிற விபரீத அனுஷ்டானம்‌ எற்பட்டுப்‌ போய்விட்டது. பெளத்த நாடுகளில்‌ பெளத்த மக்கள்‌ பாம்பு, தவளைகளைக்‌ கூட தின்று விடுவதாகச்‌ சொல்லப்‌ படுகிறது . ஆனால்‌ பர்மா முதலிய நாடுகளிலுள்ள பெளத்தர்கள்‌ “பெளத்தர்கள்‌ நேராகவே கொல்லுவது இல்லை. துலுக்கர்‌ முதலிய இதரமதஸ்தர்கள்‌ கொல்‌வதை நாங்கள்‌ தின்கிறோம்‌.-அதில் என்ன தோஷம்‌”என வாதிக்கிறார்கள்‌ என்றுகேள்வி. ஆதி புத்த பகவான்‌ மரணமடைந்ததே ஒரு சிஷ்யனுடைய வீட்டில்‌ ‘ அவனால்‌ பரிமாரப்பட்ட பன்றி மாம்சத்தை அதிகமாகத்‌ .தின்‌று விட்டதால்‌ ஏற்பட்ட அதிசாரம்‌ காரணமாகத்‌ தான்‌ என்று புத்தருடைய சரித்திரங்கள்‌ கூறுகின்‌றன, . பிறர்‌ கொன்றதைக்‌ தாம்‌ சாப்பிட்டால்‌ தவறில்லை என்ற கொள்கையை நாயனார் இக் குறளில்‌ –
‘பரிஹசித்‌திருக்கிறார்‌ ; —
தினற்பொருட்டாற்‌ கொல்லா துலகெகெனின்‌
யாரும்‌ விலைப்பொருட்டா லூன்றருவாரில்‌.””
இக்குறளுக்குப்‌ பரிமேலழகர்‌ கீழ்வருமாறு உரை ” செய்திருக்கிறார்‌.
தினல்‌ பொருட்டால்‌ = (பேதைமை காரணமாகவல்லது)ஊன் தின்‌கை காரணமாக, உலகு உலகம்‌,-கொல்லாது எனின்‌ – கொல்லாதாயின்‌, விலைபொருட்‌டான்‌ ஊன்தருவார்‌ -பொருள்‌ காரணமாக ஊன்விற்பார்‌, யார்‌ உம்‌ யாவரும்‌, இல்‌ இல்லை.
“பின்‌ நிகழும்‌ தின்கை முன்‌ நிகழும்‌ கொலைக்குக்‌ காரணமாகாமையின்‌, தின்பார்க்குக்‌ காரணத்தானல் வரும்‌ பாவம்‌ இல்லை!” என்ற வாதியை நோக்கி அருத்‌தாபத்தியளவையால்‌ காரணமாதல்‌ சாதித்தலின்‌
இதனான்‌ மேலது வலியுறுத்தப்பட்டது. [இவன்‌ வாங்குவான்‌ என்ற நம்பிக்கையே கொலைஞன்‌ கொல்லுவதற்கு ‘காரணமாசையால்‌], “கொன்று தின்னாது விலைக்குக்‌ கொள்ளுவர்க்குக்‌ குற்மமென்னை யென்பார்க்கு அதனாலும்‌ கொலைப்பாவம்‌ வருமென்பர்‌ மணக்குடவர்‌. இந்தக் கருத்தையே “ய2ி – சேத்‌- வாடிகோ – ஈ – ஸ்யாத்‌ – ௩,த௨ா – வாதகோ “வாடிகார்மாய – த்த்‌ வாதயதி- வை-௩ ;”’ என்னும்‌ மகாபாரதம்‌ ௮னுசாசன பர்வம்‌ 177 வது அத்யாயம்‌ 30-வது ஸ்லோகமும்‌ கூறுகிறது.
நமது வேதசாஸ்திரங்களோ பொதுவாக எல்லா மக்களுக்கும்‌ பூர்ண அஹிம்ஸா தர்மத்தை உபதேசிக்க வில்லை. நாலாவது ஆச்ரமமாகிய ஸன்யாஸாச்ரமத்திற்கு
மாத்திரம்‌ உயிருள்ள ஒரு செடி.யமினுள்ள இலையைக் கூடக்‌ கிள்ளக்கூடாது என பூர்ண அஹிம்ஸாதர்மம்‌ உபதேஸிக்கிறது. வர்ணாச்ரமங்களின்‌ படிகளையனுசரித்‌து அஹிம்ஸா தர்மமும்‌ படிப்படியாக கடுமையாக்கப்‌ பட்டிருக்கிறது.
சாமவேதத்தில்‌ சாந்தோக்ய உபனிட தத்தின்‌ முடிவில்‌
.கிருஹஸ்தாச்சமத்தைச்‌ சொல்லிக்‌ “குடும்பத்திலிருந்து கொண்டே சுத்தமான தேசத்தில்‌ யக்ஞங்களைத்‌ தவிர
மற்றைப் பொழுது எவ்வித ஹிம்ஸையையும்‌ செய்யாமல்‌ இருப்பவன்‌ ப்ரம்மலோகம்‌ எனும்‌ மோக்ஷத்தை யடைகிறான்‌?” என்று கூறப்பட்டிருக்கிறது , இவ்வுலகத்தில்‌
யுத்தம்‌ முதலிய காரியங்களுக்கு. நாம்‌ அனேக மக்கள்‌ தம்முயிரைப்பலியிடுதல்‌ எப்படி. அவச்யமான தர்மமாக ஆகிறதோ அவ்விதம்‌ நம்‌ மனுஷ்ய சக்தியை மீறி வானின்று நமக்குக்‌ கிடைத்து நாம்‌ அனுபவிக்கும்‌, மழை, காற்று, ப்ரகாசம்‌, மின்சார சக்தி, முதலியவைகளுக்குக்‌ கைம்மாறக இல்வுலகத்திலுள்ள செடி, கொடிதான்யம்‌ முதல் மனிதன்‌ ஈறாக உள்ள” உயிர்களை வானுலகின்‌ தளர்ச்சி.யின்மையின்பொருட்டு நம்‌ பகுத்தறிவிற்கெடடாத வேத.விதிப்படி. அர்ப்பணம்‌ செய்வதே யக்ஞம்‌,
மநிதர்‌ ஊன்‌ உண்பதற்காக: யக்ஞம்‌ ஏற்பட்டதல்ல. யக்ஞங்களில்‌ சோமலதையோ, சீந்துக்கொடியோ, பாபரகிதமான ஒருகசப்பு ரசத்தை யுடையதே யன்றி மயக்கம் தரும்‌ மதுப்பிரிவைச் சேர்ந்ததல்ல,. இது வைத்திய நிகண்டுகளைப்‌ பார்த்தாலே தெளிவாகசத் தெரிகிறது. ஆதலாலே தான்‌ நம்‌ திருவள்ளுவ நாயனார்‌ கொல்லாமை என்ற அறத்தை(வேத சாஸ்திரங்களின்‌ கொள்கையை யனு சரித்து துறவிகளுக்காகவே துறவறவியலில்‌ சொல்லியிருக்கிறார்‌. வேதியரை “அறுதொழிலோர்‌? என்று மற்றொரு குறளில்‌ சொல்லுவதினாலேயே வேதியர்க்கு, வேட்டல்‌ (யாகங்‌களைச்‌ செய்தல்‌), வேட்டுவித்தல்‌(யாகங்கள்‌ செய்வித் தல்‌] இரண்டும்‌ ஸ்வதர்ம்மெனக்‌ கருதுகிறார்‌,
இதிலிருந்து தற்காலமுள்ள வேதியர்கள்‌ யக்ஞத்தைத்‌தவிர இதர காலங்களில்‌ கொல்லாவிரதம்‌ பூண்‌டு இருப்பதும்‌, திருவள்ளுவர்‌ கொல்லாமையை உபதேசித்து இருப்பதும்‌, பெளத்தம்‌ முதலிய நாஸ்திகமதங்களின்‌ வாசனையால்‌ அல்ல என்பதும்‌, ஆஸ்திக மதமான :அநாதி’வேத சாஸ்த்ரங்களை யனுசரித்தே யென்பதும்‌ அறியப்‌ படுகின்றன. தமிழ்‌ நாட்டு சங்ககாலத்துநூல்களிலும்‌: மாம்சத்தை உண்டு களிக்கும்‌ பழக்கத்தைக்‌ குறிக்கும்‌. பாடல்கள்‌ அறுதொழிலோராகிய வேதிய இல்லறத்‌தவரையோ அல்லது அந்தணரெனும்‌ சொல்லால் குறிக்கப்பட்ட எவ்வுயிர்க்கும்‌ செந்தண்மை பூண்டு ஒழுகும் ஸன்யாஸாச்‌ரமிகளையோ பற்றி எழுந்ததல்ல என்பது வெளிப்‌படை.

54. வேண்டிய வேண்டியாங்‌ கெய்தலாற்‌ செய்தவம்‌
ஈண்டு முயலப்‌ படும்‌.
(ஒருவன்‌), வேண்டிய விரும்பியவற்றை, வேண்டி.யாங்கு -விரும்பியபடியே, எய்தலான்‌ -அடைதலான்‌,-ஈண்டு -இவ்வுலகத்தில்‌, செய் தவம்‌ செய்ய வேண்டிய தவம் ,(ஒருவனால்‌), முயல முயல்‌, படும்‌ -பொருந்தும்
எவை நினைத்தற்கும்‌ அடைதற்கும்‌ அரிதோ அவை யெல்லாம்‌ தவத்தால்‌ அடையப்படும்‌ என
யத்‌. உ௱ரரபம்‌ – உுராம்னாயம்‌.உ௱சாயர்வஒம்‌ – உ௱ரன்வயம்‌ தத்‌ ஸர்வம்‌ – தபஸா – ஸாய”யம்‌-சபோ.ஹி- உமர்‌ அதிக்.ரமம்‌” என்னும்‌ மகாபாரதம்‌ அசுவமேதபர்வம்‌
அதியாயம்‌ 17 வது ஸ்லோகம்‌ கூறுகிறது
மாண்ட மனம் பெற்றார்‌ மாசிலுறக்கத்து வேண்‌டிய வேண்டி யாங்‌ கெய்துதல்‌ வாய்‌ ” என கலித் தொகை-143- வது செய்யுள்‌ கூறும்‌.

55. துறந்தார்க்குத்‌ துப்புரவு வேண்டி மறந்தார்‌ கொல்‌
மற்றை யவர்க டவம்‌.
துறந்தார்க்கு- துறவறம்‌ பூண்டார்க்கு, துப்புரவு -உபசாரத்தை, வேண்டி– செய்யவேண்டி, மற்றையவர்‌கள்‌– இல்லறத்திலுள்ளார்‌, தவம்‌- தவத்தை, மறந்தார்‌கொல்‌ -மறந்தாரோ
மற்றையவர்கள்‌ என்பது ப்ரம்மசாரி, க்ருஹஸ்தன் –
இருவரையும்‌ குறிக்க. ஆற்றல் உடைத்‌தாயினும்‌, துப்புரவு
செய்தல்‌ ப்ரம்மசாரியால்‌ முடியாதாகையால்‌ அச் சொல்‌ க்ருஹஸ்‌தரையே குறிக்கும்‌ என்க.
*இல்வாழ்வா னென்‌பான்‌ இயல்புடைய மூவர்க்கும்‌
நல்லாற்றினின்‌ற. துணை(17 வது குறள்‌)” என்பது ஈண்டு ஒப்பிடத்தக்கது.

5.5- வஞ்ச மனத்தான்‌ படிற்றொழுக்கம்‌ பூதங்கள்‌
ஜந்து மகத்தே நகும்‌.
வஞ்சமனத்தான்‌ படிற்றொழுக்கம்‌- வஞ்சகத்தோடு கூடிய மனத்தை யுடையானின்‌ குற்றமுள்ள நடத்தையை (கண்டு), அகத்து-உடலில்‌, (உள்ள) பூதங்கள்‌ ஐந்தும்‌-ஐந்து பூதங்களும்‌, நகும்‌ -பரிகசிக்கும்‌.
– “கர்மேந்த்ரியாணி – ஸம்யம்ய – ய – ஆஸ்தே – மனஅறா – ஸ்மான்‌ – இந்தரியார்மான்‌. மியாயா- ஆசார ;.-ஸ-உச்யேே த (கீதை.3-6-.) என்‌னும்‌ ஸ்லோகம்‌ இங்கு குறிப்பிடத்‌ தகுக்தது .மனம்‌ கெட்டு, வெளிப் புறத்தில்‌ நன்னடடத்தையோடு கூட இருப்பதாக நடித்தல்‌. துறவறத்தான்‌ கொள்ளத்‌ தகுந்தது அன்று என்பது கருத்‌து.

56. பகுத்துண்டு பல்லுயி ரோம்புத நூலோர்‌
தொகுத்தவற்று ளெல்லாம் தலை.
நூலோர்‌- சாஸ்திரங்கள்‌ எழுதிய பெரியோர்‌,தொகுத்தவற்றுள்‌ எல்லாம்‌–தொகுத்துக்கூறிய-தர்மங்‌கள்‌ எல்லாவற்றுள்ளும்‌, தலை சிறந்தது, (துறவறத்‌தான்‌) பகுத்து – (உண்பதனை பல சிறு உயிர்கட்கும்‌,பிரித்துக் கொடுத்து , உண்டு–உண்பித்து, பல்லுயிர்‌ -பலப்ராணிகளையும்‌, ஓம்புதல்‌ காத்தல்‌, ஆகும்‌,
வானப்ரஸ்தன்‌ ஒருவருஷத்திற்கு வேண்டிய பொருளைச்‌ சேகரித்து வைத்துக் கொள்ளலாமென்றும்‌- அதிதிகளை உபசரிக்க வேண்டும்‌ என்றும்‌ தர்மசாஸ்த்‌ரங்கள்‌ கூறுவதை ஈண்டு இந்நூலாசிரியர்‌ கூறியிருத்தல் நோக்கத் தக்கது, இக்குறளில்‌ துறவறத்தான்‌ என்பது ‘வானப்ரஸ்தனை மாத்திரம்‌ குறிக்கும்‌.”
“ஸமா – நிசய – ஏவ-வா”’ என்கிறது மனு ஸ்ம்ருதி ,,6 – 18 வது ஸ்லோகம்‌,

57-. நில்லா தவற்றை நிலையின வென்றுணரும்‌
புல்லறி வாண்மை கடை,
நில்லாதவற்றை – நிலையில்லாத பொருள்களை, நிலையின-நிலை யுள்ளவை, என்று, உணரும்‌,-புல்லறிவாண்மை.-சிற்‌றறிவைக்‌ கொள்ளுதல்‌, கடை-இழிந்தது – ஆகும்‌.
இப் பொருள்‌ நித்தியம்‌ இப் பொருள்‌ அநித்‌தியம்‌.
என்ற விவேகம்‌ சன்னியாசிக்கு வேண்டும்‌ என்பது இக்‌ குறளின்‌ கருத்து
.
58. நெருந லுளனொருவ னின்றில்லை யென்னும்‌
பெருமை யுடைத்திவ்‌ வுலகு.
இவ்வுலகு – இந்த உலகம்‌, ஒருவன்‌, நெருநல்‌ -நேற்று, உளன்‌-இருந்தான்‌, இன்று– இப்பொழுது.இல்லை -இறந்து விட்டான்‌, என்னும்‌ – என்று கூறப்‌படும்‌, பெருமை-பெருமையை, உடைத்து.
இங்குப்‌.பெருமை என்பது அதற்கு மாறான இழிவு என்ற. பொருளைக்‌ கொண்டது.
ஸுஷ்ம சராீரத்தோடு கூடிய ஜீவன்‌ ஸ்தூல சரீரமின்றி ஒரு செயலையுஞ்‌ செய்யத் தகாதவனாகையாலும்‌,-ஸ்தூல சரீரம்‌ எப்போது அழியும்‌ எனத் திண்ணமாய்க் கூற இயலாமையாலும்‌, அது நன்னிலையில்‌ இருக்கிறது என எண்ணுங்காலத்தே அழியுமாகையாலும்‌ அதனை நிலையுள்ளது என்று எண்‌ணுதல்‌ சன்னியசிக்குத் தகாது .
“நேற்று இருந்தான்‌, இப்பொழுது இறந்தான்‌?”என ருக்வேதம்‌ 10 வது மண்டலம்‌ 85 வத ஸூக்தமும்‌,
அதர்வண வேதம்‌ 9வதுகாண்டம்‌ 10 ஸூக்‌ தமும்‌, “இப்‌போதே நான் கண்ட அவன்‌ எவ்வாறு இறந்தான்‌!” என
“இதானீம்‌- தாவத்‌ – எவ – ௮ஸெள்‌ -மயா . தீருஷ்ட :- கமம்‌ – என்னும்‌ மகாபாரதம்‌ -சாந்தி பர்வம்‌-227 வது அதயாயம்‌ 99-100 வது ஸ்லோகமும்‌ கூறும்‌,

59. குடம்பை தனித்து ஒழியப் புட் பறந்தற்றே
யுடம்போ டுயிரிடை நட்பு.
உடம்போடு – ஸ்தூல சரீரத்‌துடன்‌, உயிரிடை -உயிர்க்கு,(உள்ள) நட்பு – சம்பந்தம்‌, குடம்பை-மூட்டை, தனித்து , ஒழிய -கிடப்ப, புள்‌ – பறவை,-பறந்தற்று-பறந்தது போன்றது.
பறவை குஞ்சாகப்‌ பொறிக்கப்படும்‌ வரை அதற்கு முட்டை யோட்டுடன்‌ சம்பந்தமும்‌, குஞ்சாகப்‌ பொறிக்‌கப்பட்ட பின்னர்‌ அதற்கு அதனோடு சம்பந்தமின்மையும்‌, அது வெளியில்‌ எறியப்படுவதும்‌ நோக்கத்தக்கன.

61. யாதனின்‌ யாதனின்‌ னீங்கியொன் நோதல்‌
அதனி னதனி னிலன்‌.
யாதனின்‌ யாதனின்‌ – எவ்வெப்பொருள்களினின்‌றும்‌, நீங்கியான்‌ – பற்றை விட்டவன்‌, ௮தனின்‌ அதனின்‌ -அவ்வப்பொருள்களினின்றும்‌, கோதல்‌ இலன்‌ – வருத்‌தத்தை அடையான்‌.
இக் கருத்தையே “யதோ யதோ -நிவர்ததே – தத :- சத : விமுச்யதே – நிவர்தனாத்‌ – ஹி. ஸர்வதோ … ஈ -வேத்தி – ௨௱;வூம்‌ – அணு – அடி என்னும்‌ மகாபாரதம்‌
உத்யோக பர்வம்‌ 36 வது அக்யாயம்‌ 14 வது ஸ்லோகமும்‌
“யதா.யதா-௪-பர்யேதி.லோக தந்த்ரம்‌ அஸாரவத்‌ – ததா .. ததா… விராக:..-அத்ர – ஜாயதே -ந. அத்ர . ஸம்மய:”” என்னும்‌ மகாபாரதம்‌ சாந்தி பர்‌வம்‌ 374 வது அத்யாயம்‌ 4 வதுஸ்லோகமும்‌ கூறும்‌.
பொருளிள் கண்‌ உள்ள பற்றே அப் பொருள் பற்றி அரும்‌ வருத்தத்திற்குக்‌ காரணமே யன்றி, பொருள்‌ தானே யில்லை என்பது இக் குறளின்‌ கருத்து.

61. அடல்வேண்டு மைந்தன்‌ புலத்தை விடல்‌ வேண்டும்‌
வேண்டிய வெல்லா மொருங்கு
ஐந்தன்‌- ஐந்து இந்திரியங்களின்‌, புலத்தை = விஷயங்களின்‌ நுகர்ச்சியை -, அடல்‌ வேண்டும்‌ – .அழியும்படி செய்ய வேண்டும்‌ ; வேண்டிய எல்லாம்‌ –சேர்க்கப்பட்ட பொருள்கள்‌ எல்லாவற்றையும்‌, ஒருங்கு – ஒரே காலத்‌தில்‌, விடல் வேண்டும்‌.
ஒருவன்‌ துறவி ஆகும்போது பெண்ணாசை, மண்‌ணாசை, மக்களாசை விட்டேன்‌, விட்டேன்‌, விட்டேன்‌ எனக்‌ கூறுதல்‌ யாவரும்‌ அறிந்ததே.
உண்மையாய்‌ அவற்றை விடுவதற்கு இன்றியமையாத காரணம்‌ அவன்‌, தனது இந்திரியங்களை முழுவதும்‌ அடக்குதலே யாகும்‌ என்பதை இக்குறள்‌ அறிவிக்கின்றது –

62. யானென தென்னுஞ் செறுக்கறுப்பான்‌ வானோர்க்கு
உயர்ந்த வுலகம்‌ புகும்‌.
(உடல்‌ உடலையும்‌) (ஐந்து ஐந்து இந்திரியங்‌களையும்‌), (வேண்டிய எல்லாம்‌ தேடிய பொருள்கள்‌ எல்லாவற்றையும்‌), யான்‌, எனது, என்னும்‌, செறுக்கு அறுப்பான்‌ -மயக்கத்தைப்‌ போக்குபவன்‌, வானோர்க்கு உயர்ந்த தேவதைகளுக்கும்‌ அடைதற்குச்‌. சிறந்த, உலகம்‌ பிரம்ம லோகத்தை, புகும்‌–அடைகின்றான்‌.
வானோர்க்கு உயர்ந்த உலகம்‌ என்பதற்குத்‌ தேவதைகள்‌ இருக்கும்‌ ஸ்வர்க்கத்திற்கும்‌ மேற்பட்ட உலகம்‌ எனப்‌ பொருள்‌ கூறினும்‌ பொருந்தும்‌, –
உலகம்‌ என்பதற்கு ப்ரம்மாவின்‌’ உலகம்‌ என்றும்‌: பிரம்மம்‌ ஆகிய உலகம்‌ என்றும்‌ பொருள்கொள்ளலாம்‌,-
சுத்தமான தியான யோகத்தால்‌ நிர்மமர்களாயும்‌, நிரஹங்க்ருதர்களாயும்‌ இருக்கும்‌ மகாத்மாக்கள்‌ மேலான்‌ லோகத்தை. யடைகின்றனர்‌ என
தியான -யோக -பாஙத்யேன . நிர்மமா:. நிரஹங்க்ரு தா௨ஆப்‌ – மஹாக்மான :-, மஹாந்தம்‌ – லோகம்‌ – உத்தமம்‌?” என்னும்‌. மகாபாரதம்‌ அஸ்வமேத பர்வம்‌ 51 வது அத்யாயம்‌ 22வது ஸ்லோகமும்‌,
“நிர்மமர்களாயும்‌ நிரகங்‌க்ருதர்களாயும்‌ இருப்பவர்கள்‌ திண்ணமாய்‌ முக்தியை அடைகின்றனர்‌?? “நிர்மமோ -நிரஹங்காரோ .- முச்யதே அத்ர-ஸம்பாய:”” என்னும்‌ மேற்சொன்ன பர்வம்‌ 36வது அத்யாயம்‌ 19 லது ஸ்லோகமும்‌ கூறும்‌.
இக் கருத்தையே, – ம்ருத்யு த்ர்யக்ஷரம்‌ – ப்ரஹ்ம- ஸு றாஸ்வதம்‌ – மமேதி-௪- வேத்‌ ம்ருத்யு :- ௩- மமேதி . ௪ . ஸமாஸாவதம்‌’ என்னும்‌ மேல் சொன்ன 51 வது அத்யாயம்‌ 29 வது சுலோகமும்‌ கூறுகிறது:

63. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப்‌ படும்‌.
பற்று, அற்ற கண்ணே-முற்றிலும்‌ நீங்கிய பொழுதே , பிறப்பு-மறு ஜன்மம்‌, அறுக்கும்‌ நீங்கும்‌; மற்று–அல்லாத இடத்து -நிலையாமை – நிலையில்லாத் தன்மை யாகிய பிறப்பும்‌ இறப்பும்‌, காணப்படும்‌ -தோன்றும்‌.
ஜனன மரணங்களாகிய காரியத்திற்குப்‌ பற்றே சிறந்த காரணம்‌ ஆகையால்‌ காரணமாகிய பற்று அழியாத வரையில்‌ காரியமாகிய ஜனன மரணங்கள்‌ அழியா என்பது கருத்து. பற்று இல்லையேல்‌ பஞ்சபூதங்களை வெல்லுகிறான்‌ என நிவ்ருத்தம்‌ . ஸேவமானஸ்து – பூசான்‌ – அத்யேதி – பஞ்ச – வை” என்னும்‌ மநுஸ்ம்ருதி-19-90-கூறும்‌

பொருள் அல்லாதவற்றைப் பொருளென்‌று உணரும்‌
மருளானா மாணாப்பி றப்பு
பொருளல்லவற்றை- _மெய்ப்பொருளல்லாத வற்றை, பொருள்‌ -மெய்ப்பொருள்‌, என்று, உணரும்‌ -அறியும்‌,-மருளான்‌ — அஞானத்தால்‌, மாணாப்பிறப்பு- சிறக்காத பிறப்பு, ஆம்‌ – உண்டாகும்‌,
பிறப்பு என்பது இறப்பிற்கும்‌ உபலக்ஷணம்‌ ஆகும்‌,
பிறப்பு துன்பமென்பதும்‌ அப்பிறப்பிற்கு முதற்காரணம்‌ (உபாதான காரணம்‌) அவிச்சை (அவித்யை) யென்பதுங்‌ கூறப்பட்டன. என “இக்குறளின்‌ உரையின்‌ இறுதியில்‌ கூறியிருக்கிறார்‌ பரிமேலழகர்‌, —
மருள்‌ என்பது யாது? ஒரு கயிற்றை யிருளில்‌ கண்டு பாம்பு எனத்‌ தவறி எண்ணுகிறோம்‌. ஆங்குள்ள பொருள்கள்‌ இரண்டு ஆகும்‌. ஒன்று கயிறு, மற்றொன்று பாம்பு, அவற்றுள்‌ கயிறு என்பது மெய்ப்பொருள்‌ ;பாம்பு என்பது மெய்யல்பொருள்‌, . அவ்வாறே உலகத்‌தில்‌ தோன்றும்‌ ஒவ்வொரு பொருள்களிலும்‌ கடவுளும்‌ தோற்றப் பொருள்களும்‌ உள; கடவுள்‌ கயிறு போன்‌றது .மரம்‌ முதலிய எல்லாப்பொருள்களையும்‌ கடவுளாக, நினைத்தல்‌ மருளின்மை; மரம்‌ முதலியவாக நினைத்தல்‌ மருள்‌. மருள்‌ என்பதையே அவித்யை என்பர்‌.
“யத்‌ – அவித்யா – விலாஸேன – வூஓத-வெளதிக ஸ்ருஷ்டய :”” என்று கூறுகிறது வேதாந்தபரிபாஷை.
கடோபனிஷத்தில்‌ முதல்‌ அத்யாயம்‌ 8 வத வல்லி 7,8 மந்த்ரங்கள் அக்ஞானத்தால்‌ பிறப்பையும்‌ ஞானத்தினால்‌ மறுபிறப்பற்ற பதவியையும்‌ ௮டையலாமென்று கூறுகின்றன.

68. இருணீங்கி யின்பம்‌ பயக்கு மருணீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.
மருள்‌ -அஞ்ஞானத்தை , நீங்கி-நீக்கி, மாசறு காட்‌சியவர்க்கு குற்றமற்ற அறிவுடையோருக்கு, இருள்‌ -பிறப்பிற்குக்‌ காரணமாகியது, நீங்கி -நீங்க, இன்பம்‌ – பேரின்பமாகிய வீடு, பயக்கும்‌ -ஸித்திக்கும்‌, —
இருள்‌ என்பதும்‌ தமஸ்‌ என்பதும்‌ ஒருபொருட்‌ கிளவியாகும்‌:-தமஸ்‌ என்பதற்கு ஸம்ஸார நியாமகம்‌ எனசங்காாசார்ய ஸ்வாமிகள்‌ பிரஹதாரண்ய உபநிஷத் (4-4:10) பாஷ்யத்தில்‌ பொருள்‌: கூறியிருத்தல்‌ நோக்கத் தககது-
மருள்‌ என்பதும்‌ அவித்தை என்பதும்‌ ஒருபொருட்‌. கிளவி யாகும்‌, -ஆனந்த ஸ்வரூபமான பிரம்மமே மோக்ஷத்‌தின்‌ ஸ்வரூபம்‌ என்னும்‌ உபநிஷத் கொள்கையை யனுசரித்தே இங்கு ஆசிரியர்‌ மோக்ஷத்தை இன்பமெனக் கூறுகிறார் .
“வீடானது நிரதிசய பொருளுணர்வே என்பதும்‌-அதுக்கு நிமித்த காரணம் கேவலப் பொருள் உணர்வே என்பதும் கூறப்பட்டன -என இக்குறளுரையில்‌ பரிமேலழகர்‌ கூறுகிறார் –
“அவித்யா – நிவ்ருத்தி- உபலக்ஷித – ஆனந்த – ஸ்வரூப அவாப்தி :- மோஷ:””. என்று கூறும்‌ வேதாந்த நூல்கள் –
இங்கு கேவலப் பொருள்‌ என்பது குணம்‌ குறி இவற்‌றைக்‌ கடந்த பரம் பொருளையே குறிக்கும்‌, வீடு என்றும்‌ மோக்ஷம் ஒரு காரணத்தால்‌ உண்டாகின்ற என்றும்‌ வேதாந்த சாஸ்தாம்‌ கூறுவதில்லை. ஒரு நாள்‌ உண்டான பொருளாயிருந்தால்‌ அதற்கு என்றாவது ஒருநாள்‌ நாசம்‌: ஏற்பட்டே தீரும்‌. நாசமற்ற நித்யமான வஸ்துவே மோக்ஷம் என்பதும் எல்லாச் சமயங்களின்‌ கொள்கை யாகும்‌.வேதாந்‌தக் கொள்கையின்படி. ஒவ்வொரு ஆத்மாவும்‌, உண்மையில்‌ நித்ய முக்தமாகவே யுள்ளது. அது உண்‌மையில்‌ மோக்ஷ ஸ்வரூபமே. ஆதலால் மோக்ஷம்‌ புதிதாக உண்டாகும்‌ பொருளன்று. ஆதலாலேயே அதற்கு
முடிவுமில்லை, மூடிக் கொண்டிருந்த மேகம்‌ விலகுங்‌கால்‌ பூர்வமே யுள்ள சூர்யன்‌ ப்ரகாசிப்பது போல்‌ மெய்‌யறிவால்‌ மருள்‌ நீங்க, என்றும்‌ வீடாகவே யுள்ள ஆத்மா பிரகாஸிக்கின்றது. ஆதலால்‌ மோக்ஷம்‌ ஞானத்தால்‌ உண்‌டாகிறது என்ற, உலக வழக்கு பெயரளவிலேயே”ஒழிய ‘உண்மை யன்று.
‘ பகவத்‌ கீதையில்‌ ஸ்ரீ கிருஷ்ண பகவான்‌ அர்ச்சுனனைப்‌ பார்த்து கூறுவதாவது -துர்யோதனாதிகளையெல்லாம்‌. நான்‌ முன்னமேயே ..கொன்று விட்‌டேன்‌ (மயா – ஏவ – ஏதே – நிஹதா :- பூர்வம்‌ – ஏவ), நீ ‘பெயரளவில்‌. மாத்திரம்‌ (அதாவது நிமித்த மாத்திரமாக] அவர்களைக்‌ கொல்லுபவன்‌: ஆகுக (நிமித்த – மாத்ரம்‌ -பவ – ஸவ்யஸாசின்‌ ”?) 11 வது அத்யாயம்‌ 33 வது ஸ்லோகம்
கீதையில் நிமித்த மாத்ரம்‌” என்றுள்ள வாக்யத்தை யனுசரித்தே. பரிமேலழகர்‌ உரையிலும்‌ ஞானத்தை
மோக்ஷத்துற்கு நிமித்த காரணமென வழங்கப்பட்டிருக்கிறது-. இதைக் கொண்டு வீடு என்னும்‌ மோஷம்‌ ஞானமென்னும்‌ மெய்யுணர்வால்‌ ஆக்கப்பட்ட ஒரு பொருள்‌ என்று கொள்வதற்கில்லை. அவ்வீடு ஸூரியனைப்போல்‌ நிதய ப்ரகாசமாய்‌ விளங்கும்‌ நித்யானந்த மயமான ஆத்ம ஸ்வரூபமே.

66. – எப்பொரு ளெத்தன்மைத்‌ தாயினு மப்‌ பொருள்
மெய்ப்பொருள்‌ காண்பது அறிவு .
எப்பொருள்‌ – எந்தப்பொருளும்‌, எத்தன்மைத்து ஆயினும்‌ -எத்தன்மையை உடையதாகத்‌ தோற்றினும்‌-அப்பொருள்‌ – அப்பொருளிடத்தில்‌, (அதற்கு ஆதாரமாய்‌ நிற்கும்‌)-மெய்ப்பொருள்‌ – மெய்ப்பொருளாகிற கடவுளை, காண்பது-காண்டல்‌, அறிவு – அறிவு(ஆகும்‌)’
*இவர்‌ மறைத்து எப்பொருளிலும்‌ விளங்குகிறார்‌–இவர்‌ சூஷ்ம தர்சிகளால்‌ சூஷ்ம ச்ருஷ்டியால்‌ பார்க்கப்‌ படு கின்றார் ‘” என கடோபனிஷத்‌ (1-3-12) கூறுகிறது .
ஒரு பொருளில்லாக விடத்து அப்பொருளிருப்பாதாக நினைத்தலை சங்கராசாரிய ஸ்வாமிகள்‌ அத்‌யாஸம்‌ என்பர்‌,

67. கற்றீண்டு மெய்ப்பொருள்‌ கண்டார்‌ தலைப்‌ படுவர்‌
மற்றீண்டு வாரா கெறி.
ஈண்டு -இம்மக்கட்பிறப்பின்கண்‌, கற்று-ஆசிரியர் இடத்தில்‌ ஸ்ரவணம்‌ செய்து , மெய்ப் பொருள்‌ பரம்‌ பொருளாகிய கடவுளை, கண்டார்‌.-அபரோக்ஷமாகக் கண்டவர்‌, மற்று மறுபடியும்‌, ஈண்டு இவ்வுலகத்‌திற்கு, வாராகெறி -வாராத மார்க்கத்தின்‌ கண்‌, தலைப் படுவர்‌ தோன்றுவர்‌,
மெய்ப் பொருளை .அபரோஷமாகக்‌ காணும்‌ வரையில்‌ ஸ்ரவணம்‌ செய்ய வேண்டுமென்பது கருத்து.
இதனையே ப்ருகதாரண்யகஉபநிஷத்தில்‌ உள்‌ள கேள்வி”
என்பதற்கு அர்த்தமாக சங்கராசார்ய ஸ்வாமிகள்‌ கூறுதல்‌ நோக்கத்தக்கது. அக்னி ஹோத்ரத்திற்கு. அரிசி வேண்டுபவன்‌ அரிசி கிடைக்கும் வரை நெல்லுக்‌. குத்துதலை அவர்‌ உதாரணமாகக்‌ காட்டியதும்‌ நோக்கத் தக்கது –
இங்குப்‌ பரிமேலழகர்‌ கூறுவதாவது :- “கற்று? என்றதனால்‌ பலர் பக்கலினும்‌, பலகாலும்‌ பயிறலும்‌ “ஈண்டு?”என்றதனால்‌ வீடு பேற்றிற்கு உரிய மக்கட் பிறப்பினது பெறுதற்கருமையும்‌ பெற்றாம்‌.
ஈண்டு வராத நெறி-வீட்டு நெறி.
வீட்டிற்கு நிமித்த காரணமாய முதற் பொருளை உணர்தற்கு உபாயம்‌ மூன்று ; அவை கேள்வி,விமரிசனம்‌-பாவனை, என்பன. அவற்றுள்‌ கேள்வி இதனால்‌ சொல்‌லப்பட்டது,
கடவுளைத் தவிர வேறு எப்பொருளும்‌ கற்பனையே.-கடம்‌ என்பது சரீரத்தைக்‌ குறிக்கும்‌, ஸ்தூலம்‌,.ஸூஷ்மம்‌, காரணம்‌, என்னும்‌ மூவகைச் சரீரங்களுள்‌ உள் நின்ற பரம் பொருளே கடவுள்‌. இதையே உபனிடதங்கள்‌ * சாரீராணாம்‌ ஆத்மா? என்று கூறுகின்றன–ஆத்ம சாஸ்த்திற்கும்‌ “சரரீரக மீமாம்ஸை!” எனப்‌பெயர்‌ வழங்குகிறது. கடவுள்‌ மெய்ப் பொருள்‌ என்பதாலேயே மற்றைப் பொருள்கள்‌ பொய்ப் பொருள்கள்‌ எனப் பெறப் படுகிறது-.
சாந்தோக்ய உபநிஷத்தில்‌ பின்வரும்‌ முறையில்‌ தத்வ விசாரணைக்கு வழி காட்டப்பட்டிருக்கிற.து :-
ப்ரம்ம சத்யம்‌, ஜகன்மித்யா (மித்யா — கற்பனை) என்‌பது வேதாந்த ஸித்தாந்தம்‌. மட் குடத்திற்குக்‌ காரணம்‌ மண்‌ ;-மண்ணிற்குக்‌ காரியம்‌ மட்குடம, மட்குடத்தை ஆராய்ந்து பார்த்தால்‌ குடமென்பது கற்பனை என்றும்‌ உண்மையில்‌ மிஞ்சுவது மண்ணே. என்னும்‌ தெரிகிறது.
அவ்விதமே மண்ணுக்குச்‌ காரணமாயுள்ள ஒரு பொருளைக்‌ கண்டுபிடித்துவிட்டால்‌ அதுமெய்யாகவும்‌ மண்‌ கற்பனையாகவும ஆகி விடும் , அதற்கொரு காரணம்‌ அதற்கொரு காரணம்‌ என்று தேடிக் கொண்டே போகுமளவில்‌ எல்லாவற்றிற்கும்‌ பரம காரணமாம்‌ ப்ரஹ்மம் என்ற ஒரு பரம்பொருளே மிஞ்சுகிறது.௮துவே உண்மைப் பொருள்‌,-அதற்கு வேறொரு காரணமில்லை. தத்வ விசாரத்தால்‌ ஏற்படும் ஞானமானது தேஜோமயமான நெருப்பைப்‌ போன்றது- பொய்ப்பொருள்களை எல்லாம்‌ எரித்து விடுகிறது.
நெருப்பு அவ்விதம்‌ எரித்துவிட்டு வெண்மையான பஸ்‌மத்தை மிஞ்ச வைக்கிறது . நீற்றுப் போன. திருகீறாம்‌
அர்த பஸ்மக்தை எரிக்க நெருப்புக்கு சக்தியில்லை. அன்‌.
வெண்மைப்பொருளே உண்மைப்பொருள்‌, தத்வஞானம்‌-
என்னும்‌ நெருப்பு கற்பனைப்பொருள்கள்‌ , யாவற்றையும்‌ எரித்‌து விட்டு ப்ரஹ்மம் எனும் பரம் பொருளை மிஞ்ச வைக்‌கிறது -அதுவே வெண்மையாம்‌ உண்மைப் பொருள்‌. அதுவே வீடு, நான்‌ எனும்‌ அகங்காரத் தொகுதியில்‌ உள்ள ஸ்தூல ஸூஷ்ம காரண சரீரங்களை அத் தத்வ விசார
ஞானாக்னி எரிக்கும் போது மிஞ்சும்‌ சுத்த நித்ய அறிவே அம் மெய்ப்பொருள்‌. தன்னைத் தான்‌ காணும்‌. அறிவும்‌ அதுவே , அது பற்றி அதற்கு ஸ்வயம் ஜோதிஸ்‌ என்ற பெயர்‌ விளங்குகிறது.
விஷ்ண ஸஹஸ்ர நாமத்திலும்‌ “தத்‌வத்தை அறிவதும்‌ அத்தத்வமே. அறிவறும்‌ அறியப்‌ படுவதுமாயும் யுள்ள பொருள்‌ ஒரே ஆத்மாவே’? எனப்‌ பொருள்‌ படும்படி “தத்வம்‌, தத்வவித்‌, ஏகாத்ம -என்று மூன்று நாமங்கள்‌ வரிசையாய்‌ அமைந்திருக்கின்‌றன
ஸ்ரவண மனன நிதித்யாஸனங்களென-உபனிடதங்களில்‌ முதற்பொருளை உணர்தற்கு மூவகை. உபாயங்களாக சொல்லப்பட்டவைகளில்‌ முதல்‌ உபாயமாம்‌ ஸ்ரவணத்தை இக்குறள்‌ கூறுகின்றது,

68. ஓர்த்துள்ள முள்ள துணரி னொருதலையாப்‌
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
உள்ளம்‌ – மனம்‌- ஒர்த்து- -மனனஞ்செய்து, உள்ளது-மெய்ப்பொருளை, ஒரு தலையா -நிச்சயமாக, உணரில்‌ -அறிந்தால் -பேர்த்து – மறுபடியும்‌, பிறப்பு- மறுபிறப்பு-உள்ள வேண்டா -நினைக்க வேண்டா.
இக் குறளால்‌ விமர்சனம்‌ என்னும்‌! மனனம்‌ கூறப்‌ பட்டது.

பிறப்பென்னும்‌ பேதைமை நீங்கச்‌ சிறப்பென்‌னும்‌
செம்பொருள்‌ காண்ப தறிவு.
பிறப்பு என்னும்‌ பேதைமை-பிறப்பிற்குக்‌ காரணமாகிய அவித்யை, நீங்க, சிறப்பு வீடு, என்னும்‌ என்று சொல்லப்படும்‌, செம்பொருள்‌ -ஸ்வயம்‌ ஜோதியாகிய கடவுளை, காண்பது – அபரோக்ஷமாகப்‌ பார்த்தல்‌,-அறிவு-ஞானம்‌ ஆகும்‌,
இக்குறள்‌ நிதித்யாஸன மென்னும்‌ ஏகாக்ர தியானத்தைக்‌ கூறுகின்றது. பேதைமையே பிறப்பிற்குக்‌ காரணமென்பது அத்வைத வேதாந்தத்தின்‌ கொள்கை,
ஞானேன – து – தத்‌.- அக்ஞானம்‌ – யேஷாம்‌-நா சிஸிதம்‌ – ஆத்மன :- தேஷாம்‌ – ஆதித்யவத்‌- சஞானம்‌ – பிரகாஸயதி – தத்பரம்‌” (கீதை 5-16) என்பது கீதாச்சார்யனின் உபதேஸம்

70. இன்ப மிடையறா தீண்டு மவாவென்னும்‌
துன்பத்துட்‌ டுன்பங்‌ கெடின்‌.
அவா – பேராசை, என்னும்‌, துன்பத்துட்‌ துன்பம்‌ பெருந்துன்பத்தைக்‌ கொடுக்கும்‌ பொருள்‌, கெடின்‌ – அழிந்து போனால்‌, இடையறாது – இடைவிடாமல்‌, ஈண்‌டும்‌-இவ்வுலகத்‌தின்‌ கண்ணும்‌, இன்பம்‌ பேரின்பம்‌,வரும்‌.
ஆசை யறுபட்டால்‌ இந்த ஜன்மத்திலேயே, அதாவது ,
சாவதற்கு முன்னமேயே மோஷங்கிடைக்கும்‌. “ஸக்‌னோதி – இஹ- ஏவ -ய:-ஸோஷுும்‌- ப்ராக்‌ – சரீர விமோஷணாத்‌- காம-க்‌ரோத- உத்ஒவம்‌ – வேழம்‌ -ஸ-யுக்த –ஸ-ஸ-௦$-நர :*? (கீதை 5-23) என்பது: இவ்விஷயத்தில்‌ கீதையின்‌ உபதேசம்‌,
“ந – அஸ்தி-ரா.ழ- ஸமம்‌ – துக்கம்‌, ந – ௮ஸ்தி – த்யா.ம-ஸமம்‌ – ஸுங்வூம்‌””.சாந்தி – 337-6,

71. ஆரா வியற்கை யவாநீப்பி னந் நிலையே
பேரா வியற்கை தரும்‌.
ஆராவியற்கையவா – நிரம்பாத் தன்மையை யுடைய அவா,-நீப்பின் -நீங்கின்‌ (அத), அந் நிலையே அத்த நிலையின்‌ கண்ணே, பேரா வியற்கை -நித்‌தியமான வீட்‌டினை, தரும்‌–கொண்டுவரும்‌..
“ எப்பொழுது எம் மனிதனுக்கு எல்லா காமங்‌களும்‌ நீங்குகின்றனவோ, அப்போதே அவன்‌ ஈண்டு ப்ரம்மமாகிறான்‌?? 2-3-147 என கடோபனிக்ஷத்தும்‌,
“எவன்‌ காமமற்று பிரம்மத்தில்‌ ஈடுபடுகின்றானோ அவன்‌ பிராணன்‌ வெளிக்கிளம்புவதில்லை. பிரம்மமாக இருந்து
பிரம்மமாகவே ஆகின்றான்‌” (4-4-6) என ப்ருஹதாரண்ய:கோபனிஷத்தும்‌, “எவன்‌ ஒன்றையும்‌ விரும்பாமலும்‌:வெறுக்காமலும்‌ இருக்கின்றானோ அவன்‌ இவ்வுலகிலேயே பிரம்மமாக ஆகின்றான்‌ ”? “என:
யோ – ந – காமயதே-.இஞ்சித்‌ – ந – இஞ்சித்‌ – அவமன்யதே – இஹ – லோகஸ்‌-ய எவ- எஷ;ஃப்ரஹ்ம ஸூயாய – கல்பதே”’ என்‌னும்‌ மகாபாரதம்‌ அசுவமேதபர்வம்‌ 47 வது ௮த்யா
யம்‌ 8 வது ஸ்லோகமும்‌ .கூறும்‌,
ஆராயியற்கையவா-என்பது ந -ஜாது – காம :-காமானாம்‌-உபஸோ ஹேன ஸாம்யதி-ஹவிஷா – க்ருஷ்ணவர்த்மா – இவ-ஸூய – ஏவ -அ ஷிவர்யதே” என்னும்‌ மகாபாரதம்‌ ஆதி பர்வம்‌ 69 வது அத்யாயம்‌ 53 வது ஸ்லோகத்தினால்‌ கூறப்பட்டிருக்‌கிறது -. ஆசையை விட்டு ஒழிக்க வேண்டுமென்பதைப்‌ பற்றிக்‌ 8ீழ்‌ குதிப்பட்டிருக்கும் ஸ்லோகங்களும்‌ கவனிக்கத்தக்கன.
பத்‌. ப்ருதிவ்யாம்‌ வ்ரீஹியவா-ஹிரண்யம்‌ . பசவ உடஷித்றிமா ஏகஸ்மாபி . ந பர்யாப்தம்‌.தஸ்மாத்‌ ..தீருஷ்ணாம்‌ – பரித்யேஜேத்‌ |
யா – உமஸ்தீயஜா – ஐ-பர்மதிஹி யா . ௧. ஜீர்யதி . ஜீர்யத :|ய :–அ௮அளெள – ப்ராணாந்திக.. ேே ராம: தாம்‌ – தருஷ்ணாம்‌
ஆதிபர்வம்‌ 79-—13—14_
யத்‌.௪.-காம. ஸையூம்‌. லோகே யத்‌ .ச: திவ்யம்‌- மகத்ணாவும்‌ |
த்ருஷ்ணா . ஆய -ஸ-ம௦வ/ஸ்ய -ஏதே-௩ அர்ஹத:– 0 ஷா ஐஸ்மீ ம்‌: கலாம்‌-சாந்தி…282-.6.
திருக்குறளாசிரியர்‌ ஜீவன் முக்தியைத் தங்கொள்களை யாகக் கொண்டனர்‌ என்பதை இக்குறள்‌ அறிவிக்கின்‌றது ..

72. ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும்‌ தான் முந் துறும்‌.
மற்றொன்று – ஊழைத்தவிர்ச்து வேறொன்றை, .-சூழினும்‌ — நினைத்தாலும்‌, தான்‌ -ஊழே, முந்து- முன்‌னர்‌, உறும்‌ நிற்கும்‌; (ஆதலான்‌), ஊழின்‌ -ஊழைக்‌காட்டிலும்‌, பெருவலி–அதிகவலியுள்ளது, யர -யாவைஇருக்கின்றன?
தைலமே.. அதிக பலமுடையது என மகாபாரதத்‌தில்‌ *மைவம்‌- ௪-பரமம்‌ – மன்யே – பெளருஒம்‌-௪- அபி – அனர்மகம்‌’” என்றும்‌ ஆதிபர்வம்‌ 21 வது அத்யாயம்‌ 5 வது லோகமூம்‌சபா பர்வம் 74-35-ஸ்லோகமும் கர்ணபர்வம்‌ 6 வது ௮த்‌யாயம்‌ 3 வது ஸ்லோகமும்‌, கூறும்‌,
மகாபாரதம்‌ கர்ணபர்வம்‌ 22 வது அத்யாயம்‌ 31 வது ஸ்லோகத்தில்‌ “டைவம்‌ -து – பலவததரம்‌” என்று கூறப்பட்டிருக்‌கிறது.
ஸ்ரீமத்‌ ராமாயணத்திலும்‌ அயோத்தியா காண்‌டம்‌
ெ ‘சளமித்ரே – யோத்யும்‌- உத்ஸஹதே – 4 மான்‌? என்னும்‌ 91 வத சுலோகத்திலும்‌, ஜைவம்‌ -௪ – தர- ப்ரபாவம்‌ ” என்னும்‌ 30 வது சலோகத்திலும்‌, இந்தக் கருத்தே கூறப்பட்டிருக்கிற து,
கர்மம்‌, தன்முயற்சி, இவ்விரண்டனுள்‌ அறத்தைச்‌ செய்ய தன்‌ மூயற்சிக்கு ஆற்றல்‌ அதிகமென்றும்‌, பொருளை அடைவதற்கும்‌ காமத்தை நுகர்வதற்கும் ஊழிற்கு ஆற்றல்‌ அதிகமெனவும்‌ உணர்க.

73-படை குடி. கூழமைச்சு நட்பர ணாறு
முடையா னரசரு ளேறு.
அரசருள்‌ -அரசர்களுள்‌, படை-சேனை, குடி = நாடு, கூழ் -பொக்கிஷம் -அமைச்சு -மந்திரி -நட்ப்பு -ஸ்நேஹிதர் -அரண் -கோட்டை -ஆறும்‌ – இவ்வாறினையும்‌, உடையான்‌-உடையவனே, ஏறு -சிறந்தவன்‌,(ஆவான்‌)
கூழ்‌ என்பதும்‌ கோசம்‌ என்பதும்‌ ஒரே பொருளைக்‌ கொண்டது. அமைச்சு, நட்பு, என்பது அமைச்சன்‌,நண்பன்‌ என்பன வற்றின்‌ கடைக்குறை . அமைச்சன்‌. என்பது வடமொழி அமாத்யன்‌ என்பதின்‌ தத்பவம்‌.
ஏறு. என்பது – வடமொழியில்‌ வ்ருஷன்‌ என்ற சொல்லைப் போல்‌ சிறப்பினைக்‌ குறிக்க வந்தது.
மகாபாரதம்‌ சாந்திபர்வம்‌ 68 வது அத்யாயம்‌
69, 70, 32,40 வது ஸ்லோகங்களில்‌ * தான்‌, அமாத்யன்‌ கோச ம்‌, பிண்டம்‌, மித்ரர்‌, ஜனபதங்கள்‌, புரம்‌, இவை எழும் அரசனால் போற்றத் தகுக்தவை-என்று
|சாக்ஞா.- ஸப்த – ஏவ – ரஷ்யாணி- தானி- ௪-ஏவ – நிவேபமே – ஆத்மா – அமாத்ய ௮௪ – உண்‌ல மித்ராணி – ௪ எவ – ஹி- ததர – ஜனபடிா : —ட ௪. ஏல – புரம்‌ – ௪- குருநந்தன. “மித்ர அமாத்மய -புரம்‌ – ராஷ்ட்ரம்‌ – உண்லம்‌ – கோபுய—ஸப்த -.அங்கஸ்ய – அஸ்ய – ராஜ்யஸ்ய – ** எனக்‌ கூறப்‌ பட்டதுகாண்க.
அவ்வாறே ஸ்வாமி – அமாத்ய – ஜன » பஉ-உுர் மு – கோு- உண்ம -மித்ராணி? என்றும்‌: _ “ஸ்வாமி -அமாத்ய-ஸுஹ்ருத்‌- கோமா -சரஷ்ட்‌ர-ஐ-பர்‌.ர வபலானி – ௪?” என்றும்‌. அர்த்த சாஸ்த்ரம்‌ கூறும்‌,
அங்கு ஆத்மா புரம்‌, இவற்றிற்கு ப்‌ரதியாக ஸ்வாமி,துர்க்கம்‌ என்று உள்ளன. இவ்வேழில்‌ தான்‌ என்பது சொல்லாமலே விளங்குமாதலால்‌ மற்ற ஆறும்‌ இக் குறளில்‌ கூறப்பட்டிருக்கிறது,
இக் குறளைக் கொண்டு தென்னாட்டு அரசு முறையும்‌. வடநாட்டு அரசு முறையும்‌ ஒருவகைப்பட்ட தென்‌பது தெளிவு –

74. முறைசெய்து காப்பாற்று மன்னவன்‌ மக்கட்கு
இறை யென்று வைக்கப்படும்‌.
முறை -அரச நீதியை -செய்து -அனுசரித்து -(மக்களைக் ) காப்பாற்றும்‌,” மன்னவன்‌, மக்கட்டு, இறை -கடவுள்‌, என்று, வைக்க – கருதப்படுதல்‌, படும்‌ -பொருக்தும்‌.
அரச நீதி மஹா பாரதத்திலும்‌ தர்ம சாஸ்த்ரங்களிலும்‌,-அர்த்த சாஸ்‌திரங்களிலும்‌ விஸ்தாரமாகக்‌ கூறப்‌பட்டிருக்கிறது. நீதிப்படி மக்களைக்‌ காப்பாற்றும்‌ மன்னன்‌ ஆயிரம்‌ அச்வமேத யாகத்தின்‌ பயனை யடைவான்‌ என
அசுவமேய – ஸஹஸ்சேண .ய;-யஜேத்‌-பதி;-பாலயேத்‌ – வா – அமி – யூர்மேண -ப்‌. ரஜா :–துலயம்‌ . ஹலம்‌ – லேத்‌!” என்னும்‌ மகாபாரதம்‌ ஆச்ரம வாஸ பர்வம்‌ 8 வது அத்யரயம்‌ 23வது ஸ்லோகம் கூறும்‌. ்‌
௩ – அவிஷ்ணு;–ப்ர௬ு* வீபத?”ரம்‌. இந்திர – அனில- யம – அர்காணாம்‌ – அம்னேஸ்௪- வருணஸ்ய – ௪- சந்த்ர – வித்தேபாயேோ :–௪- ஏவ – ஜாத்ரா :–நிர்ஹ்ருத்ய – றாஸ்வதீ :- யஸ்மாத்‌-ஏஷாம்‌- மாதரரல”யோ -நிர்மிதோ -ந்ருப :” என்று கூறுகின்றன மனுஸ்ம்ருதி 7 வது அத்யாயம்‌ 4 வது 5வது ஸ்லோகங்கள்‌.

75-கொடையளி செங்கோல்‌ குடி.யோம்ப னான்கும்‌
உடையானாம்‌ வேந்தர்க்கு கொளி.
வேந்தர்க்கு-அரசர்க்‌குள்‌, கொடை வேண்டுவோர்க்கு வேண்டுவன கொடுத்தல்‌, அளி சிறந்தோர்‌க்குப்‌ பரிசு வழங்குதல்‌, செங்‌கோல்‌ -நேர்‌மையான ஆட்‌சி , குடியோம்பல்‌– தளர்ந்த குடிகளைக்‌ காத்தல்‌, நான்கும்‌ – இந்நான்கினையும் , உடையான்‌ – உடையவன்‌,-ஒளி சிறந்தவன்‌, ஆம்‌– ஆவான்‌.
கொடை, அளி இவற்றிற்கு உள்ள மாறுபாடு யாதெனின்‌, பிறர்‌ வேண்டக்‌ கொடுத்தலைக்‌ கொடை என்றும்‌ பிறர்‌ வேண்டாது இருக்க அவரைப்‌ போற்றிக்‌ கொடுத்‌தலை.அளி என்றும்‌ கூறலாம்‌, செங்கோன்மை என்ற பொருளில்‌ செங்கோல்‌ என்பது வழங்கப்பட்டது. குடியோம்பல்‌ என்னுமிடத்து குடி தளர்ந்த குடியையே குறிக்கும்‌. – இவ்வாறே மக்கண்‌ மெய்தீண்டல்‌ என்ற குறளில்‌ மக்கள்‌ தம் மக்களையே குறித்தல்‌ காண்க.

தளர்ந்து குடிகள்‌ யார்‌ எனின்‌, அவர்‌, விதவை அனாதையர்‌, அங்கஹீனர்‌, தரித்திரர்‌, முதலானவர்‌ என அரியுவா – அனா – விகலான்‌. – க்ருபணான்‌ – ச. வலாச -௮:..!? என்னும்‌ மகாபாரதம்‌ ‘ஆதிபர்வம்‌ 48-வது அத்‌பாயம்‌ 11-வது ஸ்லோகமும்‌,
“த்வம்‌ – ஹி- நாடு -.து – அ ஈரமாரா௦உரிஒ” சாணாம்‌ – என்னும் மேற் சொன்ன . ஆதிபர்வம்‌ 227-வது அத்யாயம்‌ 126- வது ஸ்லோகமும்‌ : கூறுகிறது,
‘ பாலன்‌, ‘வ்ருத்தன்‌, ரோகி ,வ்யசனி, அனாதை முதலியோரை அசசன்‌ போற்ற வேண்டும்‌ என்று அர்த்த சாஸ்த்ரம்‌ கூறுகிறது, ~~

76, எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விர[ண்டும்‌
கண்ணென்ப வாழு முயிர்க்கு. .
எண்‌ என்ப- எண்‌ எனக்‌ கூறப்படுவன, எனை —மாற்று -எழுத்து என்ப – எழுத்து எனக்‌ கூறப்படுவன -இவ்விரண்டும்‌ _.இவ்விரன்டினையும்‌, வாழும்‌ “உமிர்க்கு–வாழ்க்கையில்‌ உள்ள மக்கட்கு,கண்‌ கண்கள்‌, என்ப -என்று கூறுவர்‌,-(பெரியோர்‌),
எண்‌ என்பது லக்ஷண நூல்களையும்‌, எழுத்து என்பது லக்ஷ்ய நூல்களையுங்‌ குறிக்கும்‌. லஷ்ய தூல்கள்‌ கலைகள்‌ ஆகும்‌. லக்ஷண நூல்கள் அவற்றை ஆராயும்‌ கருவி நூல்கள்‌ ஆகும்‌,

“எண்‌ என்பது. இருமையின்பமும்‌ தமது உள்‌ளத்தால்‌ தெரிந்து பிரித்து எண்ணிக் கொள்வது,- எழுத்து என்பது தாம்‌ கற்கும்‌ கல்விக்குத்‌ துணையுறுப்‌.பாகிய எழுத்து என்றாயிற்று.” என்பர்‌ காலிங்கர்‌-
எண்‌ என்பது கணிதம்‌ என்பர்‌ பரிமேலழர்‌, “எண்ணித்‌ துணிக?” (குறள்‌. 467) போன்ற எண்ணுதல்‌ என்பதற்கு ஆராய்தல்‌ என்ற பொருள்‌ இருத்தலின்‌-எண்‌ என்பதற்கு ஆராய்ச்சி நூல்களாய சாஸ்த்ரங்கள்‌ எனப்‌, பொருள்‌ கொள்ளலாம்‌. எழுதல்‌ என்பதற்கு மனங்கிளர்தல்‌ என்ற. பொருள்‌ “*ஒள் வாயானை யுருத்‌தெழுந்தன்று (புற, வெ. 3-2) போன்ற விடங்களில்‌ இருப்பதால்‌, மனக் கிளர்ச்சியால்‌ தோன்று வதை எழுத்து எனல்‌ கூடும்‌. அவ்வாறாயின்‌ கலைகள்‌. எல்லாம்‌ எழுத்தின் பாற் படும்‌,
கண்‌ என்பது இயற்கையாய்ப்‌ பன்மைப் பெயர்‌: என்றும்‌ ஒருமையாகக்‌ கொள்ள வேண்டின்‌ அதற்குக்‌ தகுந்த அடைமொழியையோ வினைமுற்றையோ வழங்க: வேண்டும்‌ எனவுந்த்‌ தொல்காப்பியத்தால்‌ அறியப்படுகின்றது
அதனைப்‌ பன்மை சுட்டிய சினை நிலைக்கிளவி என்‌:பர்‌ தொல்காப்பியனார்‌, * எண்ணுமெழுத்துங்‌ கண்ணெனத்‌ தகும்‌–எண்ணெழுத்திகழேல்‌?’ என்பது ஒளவை:யார்‌ வாக்கு,

77–.கண்ணுடைய ரென்பர்‌ கற்றோர்‌ முகத்திரண்டு
புண்ணுடையர்‌ கல்லா தவர்‌. ‘
கற்றோர்‌ – படித்‌தவரே , கண்‌ -கண்களை, உடையார்‌ என்பவர்‌ -என்று கூறப்படுவர்‌ ; கல்லாதவர்‌-படியாதவர்‌, முகத்து முகத்தில்‌, இரண்டு, புண்-புண்‌களை, உடையர்‌,(அவர்‌), ்‌
ஒரே பொருளைப்‌ பலர்‌ பார்க்கும்போது, ஒவ்வொரு.வர்க்கும்‌ உண்டாம்‌ மனநிகழ்ச்சி வெவ்வேறாய் யிருக்கின்‌றது -. நன்கு கற்றவர்க்குச் சிறந்த எண்ணம்‌ உண்டாகிறது -; கல்லாதார்க்குத்‌ தீய எண்ணங்கள்‌ உண்ட.கின்றன. ௮க் காரணம்‌ பற்றியே எண்கள்‌ நல்லோரின்‌ நன்மைக்கும்‌, தீயோரின்‌ துன்பத்திற்கும்‌ காரணமாகின்றன. வித்யைக்குத் தக்க கண்‌ இல்லை என மகாபாரதம்‌ சாந்தி பர்வம்‌ 2 77 வது அத்யாயம்‌ 35 வது ஸ்லோகம்‌ கூறுவதை நோக்கி- ஞானக்கண்ணுடைமையிற்‌ கற்றார்‌.கண்ணுடையர்‌ – எனப்‌ பரிமேலழகர்‌ கூறினர்‌. ஆனால்‌ இக்குறள்‌ ஊனக் கண்களைப்‌ பற்றியே கூறுகின்றன என்பதே பொருந்தும்‌, ,

78.-ஒருமைக் கட்‌ டான்கற்ற கல்வி யொருவற்கு
எழுமையு மேமாப்‌ புடைத்து. ்‌
ஒருவற்கு-ஒருவனுக்கு, ஒருமைக்கண்‌ -ஒருபிறப்‌பின்கண்‌,தான்‌, கற்ற, கல்வி, எமுமையும்‌-எழுபிறப்‌பின் கண்ணும்‌, ஏமாப்பு-நன்‌மையைத்‌ தருதலை, உடைத்து,
ஒருவன்‌ என்பது ஒருத்திக்கும்‌ உபல௯ஷணம்‌.. காளி:தாஸன்‌ குமார ஸம்பவத்தில்‌ “ தாம்‌ – ஹம்ஸமாலாஸ்ர
தீவ- மங்மாம்‌.- மஹளஷயிம்‌ – ஈக்தம்‌- இவ – ஆத்மஹாஸ்‌: | ஸ்ஸிர – உப3உாம்‌. – உபஷேஸறாகாலே -ப்ரபேரே – பிராக்தன – ஜன்மவிதீயா?? | * தாம்ஹூ என்ற ஸ்லோகத்தில்‌ பார்வதியின்‌ வித்யாப்யாஸச்தை வர்ணிக்கும்போது ஆசிரியன்‌ கற்பிக்கத்‌ தொடங்கும்‌
போதே முன்‌ ஜன்மங்களில்‌ கற்‌.ற கல்வியெல்லாம்‌ அவள்‌ முன்‌ நின்றன எனக்‌ கூறுதல்‌ நோக்கத்தக்கது.

70 மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார்‌ கீழ்ப்பிறந்தும் கற்றா ரனைத்திலர்‌ பாடு
கல்லாதார்‌ – படியாதவர்‌, மேற்பிறந்‌தார் ஆயினும்‌-உயர்ந்த ஜாதியிற் பிறந்‌திருந்தாலும்‌, பாடு – சிறப்பின் கண் -கீழ்ப்பிறந்தும் கற்றா ரனைத்து -தாழ்ந்த ஜாதியில் பிறந்து இருப்பினும் படித்தவரை ஒத்து
உடலோடு அழியும் ஜாதி உணர்வும் உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடையது என்கிறார் பரிமேல் அழகர்
மேற் பிறந்தார் கீழ் பிறந்தார் என்பதால் வர்ண விபாகங்களை ஒத்துக் கொள்கிறார் என்பதும்
ஸ்தூல சரீரம் காரணமாகக் கொண்ட ஜாதியைக் காட்டிலும் ஸூஷ்ம சரீரம் காரணமாகக் கொண்ட கல்வி சிறந்தது என்பதால்
ஸ்தூல ஸூஷ்ம சரீரங்களையும் ஒத்துக் கொள்கிறார் என்பதும் அறியலாம்
எக்குடிப்பிறப்பினும் யாவரே யாயினும் அக்குடியில் கற்றோரை வருக என்பர் -நறுந்தொகை
வேற்றுமை தெரிந்த நால் பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேல் பால் ஒருவனும் அவன் கண் படுமே –புறநானூறு
மஹா பாரதம் விதுரர் தர்ம வ்யாதன் சரித்திரங்களை இத்தையே காட்டும் –

“தேர்ச்து- ஆராய்ந்து, இறன்‌ அருமையை, அறிர் தட
கொளல்‌ -கொள்ளவேண்டும்‌.
இவ்வஇகாரத்தில்‌ பின்வரும்‌ இரண்டு. குறள்களில்‌
மன்னவன்‌, மன்னன்‌, என்ற சொற்கள்‌ இருக்கின்றமை.
யரல்‌ இக்குறளும்‌ சிற்ப்பாக அரசனைப்பற்றிக்‌ கூறிய
எனக்‌ கொண்டு அரசன்‌ என்ற சொல்‌ உரையில்‌ வருவிக்‌
கப்பட்டது.
-“குணமுடையார்‌, பெருவகையார்‌, TF we GF,
சரதுக்கள்‌ இவளை அர்சன்‌ போற்றித்‌ சன்‌ வசப்படுத்த
வேண்டும்‌ என “கூணவர்த :–மஹோச்ஸாஹா தர்‌
மஜ்ஞா -ஸாயவ:–௪ – Cw-mbay5 HF – நருப :-தை :-
on – சர்ட்ரம்‌ – தர்மேண – பாலயன்‌ ”’ என்னும்‌ மகஈ
பரதம்‌ சாக்திபர்வம்‌ 08 வது அத்யாயம்‌ 18 வது சுலோ
கம்‌ கூறுவதை கோக்குக, அறனறிந்து என்றதால்‌ இவ்வா.
சிரியர்‌ தர்மசாஸ்திசங்களை ஒத்அக்கொள்கன்‌, Meer ne
என்பதை அறியலாம்‌. —

80- அரன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன் அறிந்து தேர்தல் கொளல்
அரசன் -அறன் -தர்ம ஸாஸ்த்ரத்தை -அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை -வயது கல்வி முதலியவற்றில் சிறந்து இயற்க்கை அறிவு உடையாரது நட்ப்பினை -தேர்ந்து -ஆராய்ந்து திறன் -அருமையை அறிந்து கொளல் -கொள்ள வேண்டும்
குணமுடையார் -பெரு வகையார் -தர்மஞ்ஞர் -சாதுக்கள் இவர்களை அரசன் போற்றித் தன் வசப்படுத்த வேண்டும் -என
“குணவந் த :–மஹோச்ஸாஹா தர்‌மஜ்ஞா -ஸாயவ:–௪ – நருப :-தை :-சர்ட்ரம்‌ – தர்மேண – பாலயன்‌ ”’ என்னும்‌ மகஈ
பரதம்‌ சாந்திபர்வம்‌ 68 வது அத்யாயம்‌ 18 வது ஸ்லோகம்‌ கூறுவதை நோக்குக,
அறனறிந்து என்றதால்‌ இவ்வாசிரியர்‌ தர்ம சாஸ்திசங்களை ஒத்துக்கொள்கின்‌றார்
என்பதை அறியலாம்‌.

81. அளவறிக்து வாழாதான்‌ வாழ்க்கை யுளபோல.
இல்லாகித்‌ தோன்றாக்‌ கெடும்‌.
அளவு பொருள்‌, வலி முதலியவற்றின்‌ எல்லையை,-அறிந்து, வாழாதான் வாழ்க்கை – வாழாதவனுடைய. வாழ்க்கை முறைகள்‌, உள போல -சிறந்து விளங்குவது போல (இருந்து), இல்‌ .ஆகி –மங்கி, தோன்றா. -‘இருந்தவிடம்‌ தெரியாமல்‌, கெடும்‌ அழிந்துலிம்‌,
ஒவ்வொருவனும்‌ அவனது வர்ணம்‌, ஆச்ரமம்‌.இவற்றை யனுசரித்துத்‌ தன்‌ அளவிற்குத்‌ தக்கனவற்‌றைக்‌ கொண்டு அவ் வவற்றின்‌ தர்மங்களைாக்‌ கொண்‌டாலன்றி அவன்‌ கெடுவான்‌ என்பது கருத்து.
இங்கு “ ஆனமுதலி லதிகம்‌ செலவானால்‌, மான மழிந்து மதிகெட்டு, போன திசை – எல்லார்க்குங்‌ கள்னாய்‌ ஏழ்பிறப்புந்‌ தீயனாய்‌-நல்லார்க்கும்‌பொல்லனா நாடு *
என்ற ஒளவையார்பாடல்‌ கருதத்தக்கது
83. பகல்வெல்லுங்‌ கூகையைக்‌ காக்கை . மிகல்‌ வெல்லும்‌,
வேந்தர்க்கு வேண்டும்‌ பொழுது.
காக்கை, பகல்‌ – பகற்பொழுதில்‌, கூகையை =கூகையையும்‌, –ஆந்தையையும் வெல்லும்‌ – கொல்லும்‌, (ஆதலின்‌) ; இகல்‌-மேற்பட்ட வேந்தரை -வெல்லும்‌ வெல்ல நினைக்கும் ,வேந்தர்க்கு அரசர்க்கு, பொழுது தக்க காலம்‌.வேண்டும்‌ – அவசியமானது.
இலர்‌ காலத்தைச்‌ சிறப்பாகக்‌ கொண்டு பகலில்‌காக்கை கோட்டானைக்‌ கொல்லும்‌ உதாஹரணத்தைக்‌ கூறுகின்றார்‌’” என
* கால :- சேரேயான்‌ – இதி – எகே-இவா – காக; – கெளசிகம்‌ – ஹத்தி”? என்னும்‌ அர்த்தசாஸ்திரம்‌ இங்கு நோக்கத்தக்கது, அர்த்தசாஸ்த்‌ரத்தை அரசர்‌ நன்கு. அறியவேண்டும்‌ என ஆசிரியர்‌ கொண்டனர்‌ என்பதைக் காணலாம்

83. நெடும்புனலுள்‌ வெல்லு முதலை யடும்புனலின்‌
நீங்கி னதனைப்‌ பிற.
முதலை, நெடும்புனலுள்‌-ஆழமான நீர்நிலையில்‌,(பிற -பிற வற்றை யெல்லாம்‌), வெல்லும்‌ -கொல்லும்‌ ;புனலின்‌ நீரிலிருந்து, நீங்கின்‌ -வெளியில்‌ வந்தால்‌,அதளை, பிற, அடும்‌ -கொல்லும்‌, . :
தான்‌ வஸிக்குமிடத்தில்‌ முதலை சிறந்த யானையையும்‌ கொல்லும்‌; தன்னிடமிருந்து நீங்கின்‌ நாயும்‌ அதனைக் கொல்லும் என
நக்ர ஸ்‌ வஸ்‌தானம்‌ – ஆஸாதய – கஜேந்த்ரம்‌ – அபி- கர்ஷ்து – ஸ- ஏவ -ப்ரச்யுத :- ஸ்மானாக்‌ -ஸூ னா-அபி-பரிஹூ யதே? என்‌னும்‌ மகாபாரத ஸ்லோகமும்‌,
“தேசம்‌. சிறந்தது என்‌பர் சிலர்‌, தரையில்‌ நாயும்‌ முதலையைக்‌ கொல்லும்‌ தன்‌மையால்‌” என்னும்‌
“தே௪ :- ஸ்ரேயாரன்‌ – இதி எசே -N – முதேோர- ஸ்வா – நகரம்‌ – விகர்ஷூதி – நிம்ஈ .மதோ . ஈக்‌.ர:- ஸ்வானம்‌-இதஇி??என்னும்‌ அர்த்த சாஸ்‌திர வாக்கியமும்‌ இங்கு நோக்கத் தக்கது.

54, கடலோடா கால்வ னெடுந்தேர்‌ கடலோடும்‌.
நாவாயு“மோடா நிலத்து.
கால்வல்நெடுந்தேர்‌-உருளகளை வலுவாகக்‌ கொண்ட பெரியதொரு தேர்‌, கடல்‌ கடலின்கண்‌,ஓடா; கடல்‌-கடலின்கண்‌, ஓடும்‌ செல்லும்‌, நாவாயும்‌-கப்பலும்‌, நிலத்து -நிலத்தின்‌ கண்‌, ஓடா,
எல்லாரது இயற்கைகளும்‌ ஆற்றல்களும்‌ ஒன்றாகவே இராது –வெவ்வேறாகவே யிருக்கின்றன என்பதும்‌, |
ஒவ்வொருவர்க்கும்‌ சிறப்பு சில துறைகளிலேயே இருக்குமன்றி எல்லாத்துறைகளிலும்‌ -இருத்தல்‌ இல்லை என்‌பதும்‌, இக்குறளால்‌ அறியக் கிடக்கின்றன.
இந்தக் குறளின்‌ கருத்தையே *: நாவம்‌ -ஈ -ஸர்க்யம்‌-ஆருஹ்ய-ஸ்யலே – விபரிவர்‌ திதும்‌ – தமா -ஏவ- ரழும்‌-ஆருஹ்ய – ஈ – அப்ஹு – சர்யா – விய்யதே”’ என்னும்‌
மகாபரரதம்‌ அச்வமேதபர்வம்‌ 50 வது அத்யாயம்‌ 30 வது ஸ்லோகம்‌. கூறுகிறது.

85-அறம் பொருள் இன்பம் உயிரெச்சம் நான்கின்
திறம் தெரிந்து தேறப்படும்
நான்கிலும் சோதனையால் அறியவற்றைக் கற்று குற்றமில்லாதாரின் திறம் -மனநிலையை -தெரிந்து -ஆராய்ந்து -தேற -நிச்சயித்தல் -படும் -பொருந்தும் –
இவை நான்கினையும் -தர்ம உபாதை அர்த்த உபாதை காம உபாதை -பய உபாதை -என கௌடில்யர் அர்த்த சாஸ்திரத்தில் கூறி நன்கு விளக்குகிறார்
அரசன் அதார்மிகன் எனவும் –அவனைக் கொன்றால் பெரும் பணம் கிடைக்கும் என்றும் -அரசன் மனைவி அவனை நேசிக்கிறான் என்றும் -அரசனைக்கொல்லுவோம் என்றும் ஒருவன் மற்ற ஒருவனைச் சோதிக்கச் சொல்லுதல் முறையே தர்ம உபாதை அர்த்த உபாதை காம உபாதை பய உபாதை ஆகும்
இவற்றுக்கு இணங்காதவனைத் தூயன் என்று அறிதல் வேண்டும்
இவற்றையே பரிமேல் அழகர்
அறவு உபாதை -தர்ம உபாதையாவது -புரோஹிதரையும் அறவோரையும் விட்டு -அவரால் இவ்வரசன் அறவோன் அன்மையின் இவனைப்போக்கி அறனும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்ததற்கு எண்ணினம் -இது தான் யாவருக்கும் இயைந்து -நின் கருத்து என்னை – என்று சூளுறவோடு சொல்லுவித்தல்
பொருள் உபாதை யாவது –சேனைத்தலைவனையும் அவனோடு இயைந்தாரையும் விட்டு அவரான் -இவ்வரசன் இவறன் மாலையானாகையால் இவனைப்போக்கி கொடையும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்ததற்கு எண்ணினம் -இது தான் யாவருக்கும் இயைந்து -நின் கருத்து என்னை எனச் சூளுறவோடு சொல்லுவித்தல்
இன்பு உபாதை யாவது தொன்றுதொட்டு உரிமையோடு பயின்றாளொரு தவமுதுமகளைவிட்டு, அவளால்‌, * உரிமையுள்‌ இன்னாள்‌ நின்னைக்‌ கண்டு வருத்தமுற்றுக்‌ கூட்டுவிக்க வேண்டுமென்று என்னை விடுத்தான்‌-அவளைக்‌ கூடுவையாமின்‌ நினக்குப்‌ பேரின்பமேயன்றிப்‌ பெபரும்‌ பொருளுங்‌ கைகூடும்‌? எனச்‌ ரூளுறவோடு சொல்லுவித்தல்‌,
௮ச்ச வுபதையாவது–ஒரு நிமித்தத்தின்‌ மேலிட்டு ஓரமைச்‌சனால்‌ ஏனையோரை அவனில்லின்கண்‌ அழைப்பிக்து,“இவர்‌ அறை போவான்‌ எண்ணற்குக்‌’குழீஇனார்‌ என்று தான்‌ காவல்‌ செய்து ஒருவனால்‌ *இவ்வரசன்‌ நம்‌மைக்‌ கொல்வான்‌ சூழ்கின்றமையின்‌ அதனை நாம்‌ முற்படச்‌ செய்து நமக்கு இனிய அரசனொருவள வைத்தல்‌ ஈண்டையாவர்க்கும்‌ இயைந்தது; நின்‌ கருத்து என்ன?”எனச்‌ ரூளுறவோடு சொல்லுவித்தல்‌.
இந் நான்கினும்‌ திரிபிலனாயவழி எதிர் காலத்தும்‌ திரிபிலன்‌ எனக்‌ கருத்‌தனவையால்‌ தெளியப்படும்‌ என்பதாம்‌.

.
86. குடிப்பிறந்து குற்றத்தி னீங்கி வடுப்பரியும்‌
நாணுடையான்‌ கட்டே தெளிவு.
குடி -நற்குடியில்‌, பிறந்து, குற்றத்தின்‌: குற்றங்‌களினின்றும்‌, நீங்கு, வடி -பழிக்கு , பரியும்‌ -அஞ்சும்‌ ,நாணுடையான் கட்டே- “இழி தொழிலினின்‌ கண்‌ மனம்‌ செலுத்தாதவனிடத்தே, (அரசனுக்கு), தெளிவு -தெளிந்த எண்ணம்‌, (படும்‌-பொருந்தும்‌),
படம்‌ என்பது முதற்குறளிலிருக்‌ து வருவிக்கப்பட்‌டது. குற்றத்தினின்றும்‌ நீங்குதல்‌, வடுப்பரிதல்‌, நாணுடைமை இம்மூன்றுக்கும்‌ குடிப்பிறத்தல்‌ சிறந்த காரணமாகையால்‌ அதனை ஆசிரியர்‌ முதலில் கூறினர்‌ என்னலாம்‌.

87-அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்
மன்னவன் கோல் -அரசனுடைய செங்கோண்மை -அந்தணர் நூற்கும் -வேதத்திற்கும் அறத்திற்கும் -அதனால் அறியப்படும் தர்மத்திற்கும் -ஆதியாய் -காரணமாகி
நின்றது
அரசன் செங்கோலனாக இல்லாவிடில் பிராமணர் முதலியோர் வேதங்களை அத்யயனம் செய்யார் -அப்போது வேதங்களை அவர் அறியார் -அப்போது வேதங்களின் பூர்வ காண்டம் கூறும் இல்லறத்தையும் உத்தர காண்டம் கூறும் துறவறத்தையும் அவர் அறிவதற்கு இடம் இல்லாமல் போகும்
இங்கு கூறும் அந்தணர் நூலும் தொல்காப்பியர் கூறும் அந்தணர் மறையும் ஒன்றே
இக்குறளால் இவர் வைதிக மதத்தினர் என்பது தெளிவு
ஆறாம் இல்லறம் துறவறம் இரண்டையுமே குறிக்கும்
வேதம் அரசருக்கும் வணிகருக்கும் உரித்தது என்றாலும் தலைமை பற்றி அந்தணர் நூல் என்கிறார் என்பர் பரிமேல் அழகர்

88. ஆபயன்‌ குன்று மறுதொழிலோர்‌ நூன்‌ மறப்‌பர்‌
காவலன்‌ காவா னெனின்‌,
காவலன்‌- அரசன்‌, காவான்‌ எனின்‌ முறைப்படி ஆட்சி செய்யாவிட்டால்‌, ஆ– பசுக்கள்‌, பயன்‌ – பாலில்‌ குன்றும்‌– குறையும்‌ : அறுதொழிலோர்‌ – ஆறு தொழில்‌.களைக்‌ கொண்ட பிராம்மணர்‌, நூல்‌ வேதங்களை,மறப்பர்‌. பயன்‌என்பது வடமொழியில்‌ பயஸ்‌, என்பதன்‌ முதல்‌ வேற்றுமை யொருமையின்‌ தற்பவம்‌.
பிராம்மணனுக்குரிய அறுதொழிலாவன :-வேதத்‌தை ஓதல்‌, வேதத்தை ஓதுவித்தல்‌, யாகத்தைச்‌ செய்‌தல்‌, யாகத்தைச்‌ செய்வித்தல்‌, தானம்‌ கொடுத்தல்‌,தானம்‌ வாங்குதல்‌,
“மறப்பினும்‌ ஓத்துக்‌ கொளலாகும்‌” என்ற குறளின் கூறியபடி. இக்குறளிலும்‌ அறுதொழிலோர்‌ எனக்‌,கூறாது பார்ப்பார்‌ என ஏன்‌ ஆசிரியர்‌ கூறவில்லை எனின்‌,”
பிராமணர்க்குரிய ஆறுதொழில்களைச்‌ செய்யும்‌ பிராம்‌ணர்களையே ஈண்டுக்‌ குறித்தற்கு ௮வ்வாறு ஆசிரியர்‌ கூறினர்‌ என்னலாம்‌.
இக் காரணம்‌ பற்றியே புறநானூற்‌றுச்செய்யுளில்‌ * ஆனியற்பார்ப்பன மாக்கள்‌ (பூற நானூறு -6)” என்ற விடத்து ஆனியல்‌ என்ற அடைமொழியை அச்செய்யுளாசிரியர்‌ வழங்கினர்‌. பசுக்‌களிடம்‌ பால்‌ குன்றினமையால்‌ உலகிற்கு எல்வளவு கேடு வருமோ அவ்வளவு கேடு பிராமணர்‌ வேதத்தை மறத்தலால்‌ உலகிற்கு வரும்‌ என இவ்வாசிரியர்‌ கூறினமையின்‌ இவர்‌ வைதிக மார்க்கக்தினர்‌, என்பதற்னு.
ஐயமில்லை, :
பசுக்கள்‌ பால் குன்றிய வழி அவி இன்மையாலும் அது கொடுத்தற்குரியார்‌ மந்த்ரம்‌ கற்பம்‌ என்பன ஓதாமையாலும்‌ வேள்வி நடவாதாம்‌. ஆகவே வானம்‌ .பெயல்‌ ஒல்லாது!” (மழை பெய்யாது) என்பதாயிற்று என்றார்‌ பரிமேலழகர்‌,
“யஜ்ஞாத்‌-ஹவதி – பர்ஜன்ய :” என்பது சீதாவாக்கியம்‌, :
அல்ப – உற்கா ட. தயரா – மேவா :…அல்ப =ஸஸ்யா . வஸுந்யூஅல்பக்ஷீரப்ரஉ அல்ப – வித்யா – உ விஜாதய:–என்பது பவிஷ்யபுசாண வசனம்‌…
இக்குறளின்‌ உண்மையையே நோ்முகமாகக்‌ கூறுவது வஸ்‌ இ – ப்ரஜாஹ்ய பரிபாலயந்தாம்‌ – நயாய்‌யே – மார்மமேண மஹீம்‌ – மஹீஸாா மா-வ” சாஹ்மணேஹிய பாரம்‌ – அஸ்து-நிக்யம்‌ – லோகா :…ஸமஹஸ்தா. a § பஹு லவங்க?” என்னும்‌ ராமாயணம்‌ முதலிய நூல்களில்‌ இறுதியில்‌ பாராயணம்‌ செய்யப்படும்‌. மங்கள வாக்யம்‌, இதன்‌ பொருள்‌, அரசு: புரிவோர்‌ நன்முறையில்‌ மக்களைப்‌ பாதுகாக்கட்டும்‌ ;:(அதனால்‌) பசுக்களுக்கும்‌ அந்தணர்களுக்கும்‌ சுபம்‌.உண்டாகட்டும்‌; (அதனால்‌) உலகமாந்தர்‌ எல்லோரும்‌ சுகமாக வாழட்டும்‌, என்பதே.
ப்ரதி அம்ரஹாரம்‌ –
ப்ரதி – வோஷம்‌ – ஏவனிப்ரை -கீரிவேத – – வாவதூஉ-டுகை -மோவி :-௪ . தருண்யா ஃ. கபளாம்‌ ஸலாஷி மஜீயதே – யத்ர
மனு:–ஹவிபர்ச?” என்னும்‌ கவி வாக்யெமும்‌ இங்குக்‌
பொருந்தும்‌, [
வாழ்க -அந்தணர்‌ – வானவர்‌-அன்‌-இனம்‌ – வீழ்கதண்புனல்‌ – வேந்தனும்‌ – ஓங்குக – ஆழ்க – தீயது -எல்லாம்‌ – அரன்‌ – காமமே – சூழ்க – வையகமும்‌ -துயர் தீர்க்கவே ” என்பது சம்பந்த ஸ்வாமிகளின்‌ திருப்‌பதிகம்‌.
இந்த குறளில்‌ சொல்லும்‌ அறு தொழிலோர்‌ நூல் மறப்பர்‌ என்னும்‌ கருத்தையே “ப்‌. ரரஹ்மணா :-—. சதுரசோ-வே௨ான்‌ -௩-அதிட்யீரன்‌ ௨ யலி – ரரஜரஈ – பாலயேத்‌” என்னும்‌ மகாபாரதம்‌ சாந்தி பர்வம்‌ 67 வது அத்யாயம்‌ 26 வத ஸ்லோகமும்‌ கூறுகிறது.
ந – ப்ரஹ்மசாரீ – அம்மீத – ஈ- கால்யம்‌ – உஹதே – ச௪-மெள; « * 4 யலி- ௨ண்ஒு:_௨௩- பாலயேத்‌ சாந்தி பர்வம் – 15 – 87.சொல்லும்

889, ஒற்றொற்‌ றுணராமை யாள்க வுடன்மூவர்‌
சொற்றொக்க தேறப்‌ படும்‌,
ஒற்று – ஓர்‌ ஒற்றன்‌, ஒற்று – மற்றோர்‌ ஒற்றனை,உணராமை – அறியாமல்‌, ஆள்க; மூவர்‌, உடன்‌,சொல்‌, ஓக்க – ஓத்திருக்க,-தேற – தெளிதல்‌, படும்‌ -பொருந்தும்‌.
சொல்லோக்க என்பது சொற்றோக்க என விகாரப்‌பட்டது என்னலாம்‌.
ஒற்று என்பது ஒற்றன்‌ என்பதன்‌ கடைக்குறை,-௮ரசனால்‌ ஏவப்படும்‌ ஒற்றர்கள்‌ ஒருவர்க்கொரு ஒற்றர்‌ என அறியாமல்‌ இருக்குமாறு அரசன்‌ ஜாக்‌ரதையாய்‌ இருக்க வேணடும்‌. என்பதும்‌, மூன்று ஒற்றர்கள் ஒரே விதமாய்‌ஒரு பொருளைக்‌ கூறின்‌ அதனை உண்‌மையென அரசர்‌ அறிந்து கொள்ளலாம்‌ என்பதும்‌,
“ப்ரணிய ௪ – தத.குர்யாத்‌. உ உ * யதா. ந…விது; அன்யோன்யம்‌ – ப்ரணியேயா : ததா – தே? என்னும்‌ மகாபாரதம்‌ சாந்திபர்வம்‌ 108 வது அத்யாயம்‌ 8 முதல்‌ 10-வரையான ஸ்லோகங்களும்‌
ந -ஈ – அன்ய:.-அன்யம்‌ – ஸம்ஸ்மா:-தே.. வா. வித்ய: த்ரபாணாம்‌ – எகவாக்யே -ஸம்ப்‌ரத்யய: என்னும்‌ அர்த்‌தசாஸ்திரம் (12) வாக்கியமும்‌ கூறுவதைக்‌ காண்க;

90, மடியிலா மன்னவ னெய்து மடியளந்தான்‌
தா௮ய தெல்லா .மொருங்கு,.
அடியளந்தான்‌ – அடியால்‌ (உலகங்களை) அளந்த வாமனர்‌,-தாஅயது எல்லாம்‌ – அளந்த. எல்லாவுலகங்‌களையும்‌,-ஒருங்கு – ஒரே காலத்தில்‌, மடியிலா மன்னவன்‌-சோம்பல்‌ இல்லாத அரசன்‌, எய்தும்‌ – அடைகிறான் .
தாஅயது என்பது தாவியது’ என்பதன்‌ இடை.க்குறை, மஹா விஷ்ணு மூன்று உலகங்களையும்‌ மூன்று அடிகளால்‌ அளந்தனர்‌ என்பது ருக்வேதம்‌ முதல்‌ மண்டலம்‌154 வது ஸூத்ரத்திலும்‌ மகாவிஷ்ணு வாமன ரூபத்தைக்‌ கொண்டு பலியினிடத்தில் யாசித்து மூன்று உலகங்களையும்‌ஆக்ரமிக்தனர்‌ என்பது ஸ்ரீமத்‌ வால்மீகி ராமாயணம்‌ பால காண்டம்‌ 29 சர்க்கத்‌திலும்‌, ஸ்ரீமத்பாகவதம்‌ 8 வது ஸ்கந்தம்‌ 18-21 அத்யாயங்களிலும்‌ கூறப்‌பட்டிருக்கிறது , வலு
இவ்வாசிரியர்‌ அத்வைதானுபவி என்பது அறத்‌துப்‌
பாலிலுள்ள பல குறள்களினால்‌ வெளிப்படையாய்‌ அறியப்படுகிறது -அதோடு ஸகுணோபாஸந விஷயத்தில்‌
அடிக்கடி “அடியளந்தான் , உலகளநதான்‌ ‘ என்ற சொற்களால்‌ கடவுளைக்‌ குறிப்பதால்‌” இவர்‌ வாமன மூர்த்தியை உபாஸிப்பலர்‌ என்று ஊூகிக்க வேண்டியிருக்கிறது

91, – முயற்சி திருவினை யாக்கு. முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்‌.
முயற்சி திருவினை – செல்வத்தை, ஆக்கும்‌ – உண்‌டாக்கும்‌ ; முயற்றின்மை – முயற்சி யின்மை, இன்மை -திருவின்‌ இன்மையை, புகுத்திவிடும்‌ – கொண்டு வரும் .
மக்கள்‌ ஒவ்வொருவரும்‌. தம்மால்‌ இயன்றவரை ப்ரயத்தினம்‌ செய்ய வேண்டும்‌ என்பது கருத்து. மக்கிளின்‌ நிலைக்குக்‌ காரணம்‌ தைவம்‌ மாத்‌திரமே யன்றி புருஷப் பிரயத்தினமும்‌ ஆகும்‌ என்பது இதனால்‌ அ.றியப்படுகிறது இக்கருத்தினையே சேனாவரையர்‌ “முயற்சியும்‌ தெய்வமுமாகிய காரணங்களுள்‌ ”எனத்‌ தொல்காப்‌பியம்‌ சொல்லதிகாரம்‌. 242 வது ஸூத்திரத்தின்‌ உரையில் கூறுகின்றனர்‌.

92. அறிகொன்்‌ றறியா னெனின முறுதி
உழையிருக்தான்‌ கூறல்‌ கடன்‌,
(அரசன்‌) அறி – (பிறர்‌) அறிந்து கூறலை -கொன்று-கேட்காமல்‌ அவமதித்து, : அறியான்‌ -(தானும்‌) அறியாமல்‌ இருந்தான்‌, எனினும்‌. உழையிருந்தான் -அமைச்சன்‌,உறுதி -(அவனுக்கு) நன்மை பயக்கும்‌ பொருளை, கூறல்‌, கடன்‌ -கடமை, (ஆகும்‌)
உழையிருக்தான்‌ என்ப தும்‌ வடமொஜியில்‌ அமாத்ய என்பதும்‌ ஒருபொருட்கிளவி, இக்குறளில்‌ அச்‌ சொல் மிகப் பொருத்தம்
ஏன் எனில் அச்சொல்லில் இருந்து யாரது உழை இருந்தான் என்ற கேள்வி பிறக்க கொன்று அறியான் என்பதற்கு எழுவாயாக அரசன் என்று கிடைக்கிறது
அறி என்பது பெயர்ச்சொல்
ராகம் மானம் மதம் இவை நிரம்பித் தவறிய அரசனுக்கு நட்புற்ற மந்திரியின் செயல் கை கொடுத்து உதவும் என்னும் மஹாபாரதச் செய்யுள் நோக்கத் தக்கது

93-ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
அமைச்சன் -ஈன்றாள் பசி -கண்டாலும் பெரியோர் பழிக்கும் செயல்களை செய்தல் தகாது
நூற்றுக்கணக்கான அகாரத்தை செய்தாலாகிலும் தாயைக் காப்பாற்ற வேண்டும் என்று மனு ஸாஸ்த்ரம் -11-11- சொல்லி இருக்க
இங்கு இவ்வாறு சொல்வது எவ்வாறு பொருந்தும் என்னில்
அவ்விதி அனைவருக்கும் பொது -அமைச்சனுக்கு விதி விலக்கு என்பதும்
ஒரு காரணம் பற்றிச் செய்யத்தகாத காரியத்தை அரசர் செய்தலை தர்ம சாஸ்திரங்களும் ஆதரிக்காதே என்றவாறு செய்தலை

(94- சலத்தால் பொருள் செய்தே மார்த்தல் பசு மட்
கலத்துணீர் பெய்திரீ இயற்று
அமைச்சன்‌) சலத்தரல்‌ மோசடியினால்‌–பொருள்‌ -. பொருளை, செய்து – சம்பாதித்து, ஏம்‌ஆர்த்தல்‌ – க்ஷேமத்தை அடைதல்‌, பசுமட்கலத்துள்‌ -சூளையில்‌ வைக்கப்படாத மட்பானையில்‌, நீர்‌ – நீரை,-பெய்து இரீ இயற்று – இருக்குமாறு செய்ததை ஒத்தது
சுடாத பானையில்‌ வைத்த நீர்‌ விரையில்‌ . அதை விட்டு நீங்குமாறு வஞ்சனையால்‌ சம்பாதித்த பணம்‌ விரைவில்‌ கெடும்‌ என்பதம்‌, ௮க் காரணம்‌ பற்றி அமைச்‌சன்‌: “சலத்தை ஏற்றல்‌ தகாது என்பதும்‌, கருத்து.
சலம்‌ என்ப வஞ்சனை என்ற பொருளைக் கொண்ட
வடமொழிச்சொல்லின்‌ தற்பலம்
எம்‌ என்பது ஏமம்‌ என்பதன்‌ இடைக்குறை, ஏமம்‌
என்பன்‌ வடமொழி ஷேமத்தின்‌ தத்பவம்‌.
சலம்‌ என்னும்‌ பதப்‌ரயோகம்‌ செய்திருப்பதிலிருந்து திருவள்ளுவர்‌ தேர்ந்த ஸம்ஸ்க்ருத பாண்டித்யம் உள்ளவரென்பது விளங்குகிற து.

95. அன்புடைமை யான்ற குடிப்பிறத்தல்‌ வேந்தவாம்‌
பண்புடைமை தூதுரைப்பான்‌ பண்பு,
தூது உரைப்பான்‌ பண்பு == தூதுரைப்பான் தன்மை, அன்‌புடைமை- அன்புடன்‌ பேசுந்தன்மை, ஆன்ற குடிப்‌ பிறத்தல் = உயர்ந்‌ த. வம்சத்தில்‌ பிறப்பு, வேந்து . அவாம்‌,பண்புடைமை- அரசன்‌ கொண்டாடும்‌. சீலமுடைமை, ஆகும்‌.
குலீனனாயும் சீல சம்பன்னனாயும்‌, வாக்மியாயும்‌-தக்ஷனாயும் ப்ரியம்வ;தனாயும்‌, யதோக்தவாதியாயும்‌, ஸ்ம்ருதிமானாயும்‌, தூதன்‌ இருக்கவேண்டும்‌”என
சாந்திபர்வம் -85-28 ஸ்லோகமும் –83–6 ஸ்லோகமும் கூறும்
சபா பர்வம் –119-6 ஸ்லோகமும் –
மனு அம்ருதி 7-64 ஸ்லோகமும் தூதர் லக்ஷணங்கள் கூறும் –

96- இளையர் இன முறையர் என்று இகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப்படும்
அரசர் -இளையர்-வயதில் சிறியவர் – இன முறையர்-உறவினர் – என்று-என நினைத்து இகழார்-அவமதிக்காமல் -நின்ற ஒளியோடு -இட்ட ஆணைப்படி -ஒழுகப்படும் -ஒழுகுதல் பொருந்தும்
ஒளி பிரதாபம் பர்யாயம் -பிரதாபத்தால் இட்ட ஆணை –
எல்லையைக் கடந்த மகன் -பேரன் உடன் பிறந்தான் -இவரை மன்னர் போற்றார் என விராட பர்வம் -5-20- சாந்திபர்வம் -41-24- மனு ஸ்ம்ருதி –7-8- ஸ்லோகங்கள் கூறும்

97. தள்ளா விளையுளுச்‌ தக்காரும்‌ தாழ்விலாச்‌
செல்வருஞ்‌ சேர்வது நாடு.
நரடு, தள்ளா விளையுளும்‌ -குறைவற்ற விளைபொருள்‌களோடும்‌, தக்காரும்‌ தகுதியுடையாரோடும்‌.(தார்‌மிகரோடும்‌) தாழ்விலாச்‌ “செல்வரும்‌ – குறைவு படாத
செல்வத்தை உடையாரோடும்‌, சேர்வது- சேர்ந்திருத்தல்‌ வேண்டும்‌,
குறையாத விளைவுசெய்யும்‌ குடிகளும்‌, இல்லறம்‌-துறவறம்‌ இவற்றில்‌ தவறாத யோக்யரும்‌, பல வகையாலும் பொருள்‌. ஈட்டும்‌ வணிகரும்‌. கூடி வாழ்வதே. நாடாகும்‌;
விளை பொருள்‌ நிறைந்த. காடு, செல்வம்‌ ௮ரசனிடம்‌
பக்தி இவை கூடிய மக்கள்‌,-திருப்தி முற்றிய அமைச்சர்‌ இவற்றை யுடைய அரசனை அசைத்தல்‌ இயலாது என
யஸ்ய – ஸ்ஷீத: – .ஜனப£: – ஸம்பன்ன – ப்ரிய – சாஜக :-ஸந்துஷ்ட: – புஷ்ட-ஸ.விவ:- தரு ஷ-மூல:-ஸபசர்‌ஸிவ :-என்னும்‌ மகாபாரதம்‌ சாந்தி பர்வம்‌ 94-வது அத்‌
யாயம்‌ 3-வது சுலோகம்‌ கூறுதல்‌ நோக்கத் தக்கது –
.
96. பிணியின்மை செல்லம்‌ விளைவின்ப மேமம்‌
அணியென்ப நாட்டி.ற்கிவ்‌ வைந்து.
பிணியின்மை- நோய் இன்மை, செல்வம்‌, விளைவ =நல்ல விளைச்சல்‌, இன்பம்‌ -செளக்கியம்‌, ஏமம்‌ காவல்‌-இவ்வைந்தும்‌, நாட்டிற்கு, அணி அலங்காரம்‌, என்ப
என்று கூறுவர்‌ (புலவர்‌),
ஆதலின்‌ இவ்வைந்தும்‌ நாட்டில்‌ நிலைத்திருக்குமாறு-
அரசன்‌ முயல வேண்டும்‌,

99. ஓதி யுணர்ந்தும்‌ பிறர்க்குரைத்தும் தானடங்காப்‌
பேதையிற்‌ பேதையா ரில்‌.
ஓதியும் -மனம் மொழி மெய்கள்‌ அடங்குவதற்கு ஏதுவாய நூல்களை) கற்றும்‌, உணர்ந்தும்‌ மனனம்‌ செய்‌தும் “பிறர்க்கு உரைத்தும்‌ -உபதேஸித்தும்‌, தான்‌, அடங்கா-அதன்படி நடவாத, பேதையின் — அவிவேகியைக்‌ காட்டிலும்‌, பேதையர்‌ – சிறந்த அவிவேகியர்‌, இல்‌-இல்லை.
ஓதியும்‌ என்றவிடத்‌து உம்மை தொக்கது.
பேதைபார்‌ என்னுமிடத்து ஆர்‌ விகுதி இழிவினைக்‌ குறிக்கும்‌, பிறர்க்குரைத்தும்‌ என்றமையால்‌ இக்குறள்‌
சிறப்பாகப்‌ பிராம்மணரைப்‌ பற்றியது, மறப்பினுமோத்துக்கொளலாகும்‌”” என்னும்‌ (41-வது) குறள்‌ ஈண்டு நோக்கத் தக்கது,-

100. வழி நோக்கான்‌ வாய்ப்பன செய்யான்‌ பழி நோக்கான்‌
பண்பிலன்‌ பற்ரறார்க்கு இனிது.
வழி- தர்மசாஸ்திரங்களை, நோக்கான்‌ படியாமலும்‌, “வாய்ப்பன (அவற்றின்‌) கூறப்பட்ட விதிகளை, செய்யான்‌-அனுஷ்டிக்காமலும்‌, பழி – பாவம்‌ (நேரிடமென்று),-நோக்கான்‌ – பயப்‌ படாமலும்‌, பண்‌ Lj =நற் குணங்களை, இலன்‌ – உடைக்தாய் இராமலும்‌ இருப்பவன்‌-பற்றார்க்கு-பகைவரால்‌ (தீங்குசெய்யப்பட), இனிது எளிதாக ஆவான்‌.
தர்ம சாஸ்த்ரங்களைக்‌ கற்று, அறமுறைப்படி நடந்த பழி பாவத்திற்கஞ்சுபவனைப்‌ பகைவர்‌ எளிதில்‌ வெல்லமுடியாது என்பது குறிப்புப்பொருள்‌.

101. பகையென்னும்‌ பண்பி லதனை யொருவன்‌
நகையேயும்‌ வேண்டற்பாற்‌ றன்று.
ஒருவன்‌, பகை -விரோதி,என்னும் என்ற பண்பிலதனை -கெட்ட பொருளை -நகையேயும்‌ — விளையாட்டிற் காகவும்‌, வேண்டற்பாற்று அன்று – விரும்பிக்கொள்ளக்‌கூடாது,

102. ஏந்திய கொள்கையார்‌ சீறினிடை முரிந்து
வேந்தனும்‌ வேந்து கெடும்‌.
ஏந்திய கொள்கையார்‌-சிறந்த தவமுடையார்‌,சீறின்‌ -கோபித்தால்‌, (௮து ) வேந்தனும்‌ -தேவேந்த்ரனையும்‌, இடை-இடம்‌, முரிந்து = கெட்டு, வேந்து -௮ரசத்‌ தன்மையை -, கெடும்‌ -கெடச்‌ செய்யும்‌.
ஈண்டு ஐந்தவித்தானாற்றல்‌ அகல் விசும்‌புளார் கோமான்‌ இந்திரனே சாலுங்கரி என்னும்‌ (12-வது ) குறள்‌
ஒப்பிடத்தக்கது,
ஆகையால்‌ ஏந்திய கொள்கையரும்‌ அரசரும்‌ சேர்‌ந்து நாட்டை ஆளவேண்டுமென்பனு . அறியத்தக்கது,
ஏந்திய கொள்கையரை ஸ ஸூஹ்ருத : என்ற சொல்‌லால்‌ சாஸ்த்ரம்‌ குறிக்கும்‌,

103- இமை யாரின் வாழினும் பாடிலரே இல்லான்
அமையார் தோள் அஞ்சுபவர்
இல்லான் அமையார் தோள் அஞ்சுபவர் –மூங்கில் போல் அழகுற்ற மனைவின் தோள் காரணமாக அவளிடம் பயப்படுவார் – இமை யாரின் -கண் இல்லாத தேவர்களைப்போல் -வாழினும் –வாழ்ந்தாலும் -பாடிலரே-சிறப்பினை உடையார் அல்லர்
தனது மனையாள் இடத்திலும் காமத்தில் மூழ்கிக்கிடத்தல் தவறு என்றவாறு

104-இரு மனப்பெண்டிரும் கள்ளும் கவரும்
திரு நீக்கப் பட்டார் தொடர்பு
ஸ்த்ரீகள் சூதாட்டம் வேட்டை பானம் -இந்நான்கும் காமத்தால் உண்டாகும் நால்வகைத் துன்பங்கள் –அவற்றால் மனிதன் செல்வத்தை இழக்கிறான் –
இதே கருத்தையே வனபர்வம் -13-7-ஸ்லோகமும் சபாபர்வம் -90-20-21 ஸ்லோகங்களும் சாந்தி பர்வம் -146-26 ஸ்லோகமும்
அர்த்த ஸாஸ்த்ரம் -119 வாக்கியமும் மனு தர்ம ஸாஸ்த்ரம் -7–50 ஸ்லோகமும் கூறும்
லஷ்மீ கடாக்ஷம் வேண்டுபவர்கள் இவற்றில் ஈடுபடுதல் தகாது அன்றோ

105–தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்து ஒழுகலான்
கயவர் -இழிந்த ஆசாரமுடையவர் -தாம் மேவன -விரும்பிய பொருளை -செய்து ஒழுகலான்-தேவர் அனையர் – தேவர்களை ஒப்பர்
தேவர்கள் சுய நன்மையையே கருதுமாறு கயவர் சுய நலத்திற்காக நினைத்தபடி எல்லாம் அக்கிரமம் செய்வர் என்பது குறிப்பு

106. அச்சமே கீழ்கள தாசார மெச்சம்‌
அவாவுண்டே லுண்டாஞ்‌ சிறிது.
கீழ்களது- இழிந்தோருடைய, ஆசாரம்‌ செயல்‌கள்‌, அச்சமே-௮ச்சத்தையே காரணமாகக்‌ கொண்‌டன; எச்சம் அவற்றைத்‌ தவிர்த்து ஏனைய “செயல்‌கள்‌, அவா விருப்பம்‌,உண்டேல்‌ இருப்பின்‌,சிறுது உண்டாம்
செய்யாவிடின்‌ தண்டிப்பார்கள்‌ என நினைத்து இழிந்தோர்‌ தாங்கள்‌ செய்ய வேண்டியவற்றைச்‌ செய்‌கிறார்களே யன்றி விருப்பத்‌துடன்‌ அவற்றை அவர்கள்‌ செய்யவில்லை என்பது கருத்து,
தத்தம்‌ வர்ண தர்மங்களையும்‌, ஆஸ்ரம தர்மங்களையும்‌ செய்யாது இழிந்த நிலையில்‌ உள்ளோரையே கீழ்கள்‌ என்ற சொல்லால்‌ ஆசிரியர்‌ குறிக்கின்றனர்‌. அவர்களிடம்‌ தமக்குள்ள வெறுப்பைக்‌ கீழ்கள்‌ என்று விடத்து அஃறிணை விகுதியாகய கள்‌, என்பதால்‌ அறிவிக்கிறார்

மனுஸ்ம்ருதி 7 வது அத்தியாயம்‌ 22 சுலோகமும்‌
மகாபாரதம்‌ சாந்தி பர்வம்‌ 15 வது அத்தியாயம்‌ 34 வது ஸ்லோகமும்‌.குறித்திருக்கும்‌
மகாபாரத ஸ்லோகங்களும்‌ சாந்தி பர்வம் 15- 5-2-13- ஸ்லோகங்களும் இந்தக் கருத்தையே குறிக்கும்

107-தாம்‌ வீழ்வார்‌ மென்றோட்‌ டுயிலினி னிது கொல்
தாமரை க்கண்ணா னுலகு,
தாம்வீழ்வார்‌ மென்றோட்டுயிலின்‌ – தாம்‌ விரும்பும்‌ மகளின்‌ மெல்லிய தோளின் கண்‌ துயில்போல, இனிது கொல்‌-வருந்தாமல்‌ எய்தலாமோ, தாமரைக்கண்ணுனுலகு–செங்கண்மாலுலகம்‌.
தாமரைக் கண்ணான்‌ என்பதற்குத்‌ தாமரையைப்‌ போன்ற கண்களை யுடையவன்‌ எனப்‌ பொருள்‌ கொண்டு-அச் சொல்‌ திருமாலைக்‌: குறிக்கின்றது என்று கெரள்ளப்‌ ,பட்டது, தாமரை என்பதற்குப்‌ பத்மம்‌என்‌.ற (அற்புதம்‌,அப்ஜம்‌ என்‌.ற சங்க்யையுள்‌ கூறப்பட்ட) பேரெண்ணைப்‌பொருளாகக்‌ கொண்டு அச்சொல்‌ இந்திரனைக்‌ குறிக்குமென்பாரும்‌ உளர்‌,
மலர் மிசை ஏகினான்‌ என்‌ற சொல்லை நோக்கின்‌ அச் சொல்‌ ப்ரம்மாவைக்‌ குறிக்கின்றது-என்று சொல்வாரும்‌ உளர்‌,
“நீவி- மோக்ஷ;:- ஹி-மோஷ :” என்கிருர்‌ பர்த்ரு ஹரி ச்ருங்கார சதகத்தில்‌,

108-புலத்தலிழ்‌ புத்தேணே டுண்டோ நிலத்தொடு
நீரியைந்‌ தன்னா ரகத்து,
நிலத்தொடு, நிர்‌, இயைந்தன்னாரகத்து -இயைந்த தன்மையை யுடைய காதலர் இடத்தில் -புலத்தலின் -புலத்தலைக் காட்டிலும் – இனிது – மிக்க இன்பத்தை தருவது , புத்தேணாடு -தேவருலகம்‌, உண்டோ?
ஸ்வர்க்கத்தில்‌ அமையும்‌ இன்பத்தைக் காட்டிலும்‌ ஒத்த அன்பினையும்‌, பிறர்மனை நோக்காச் சிறப்பினையும்
கொண்ட கணவரோடு ப்ரணய கலகஞ்‌ செய்தலால்‌ வரும்‌ இன்பம்‌ சிறந்தது என்பது குறிப்பு,
.
தம்பதிகட்கு ஸெளமன்ஸ்பம்‌ வேண்டும்‌. என ருக்வேதம்‌ அதனையே பலவிடத்துத்‌ தொகுத்தும்‌ விரித்துங்‌ கூறிஉள்ளதே ,

இவ்வாசிரியரின்‌ சமயம்‌ வைதிக சமயமும்‌, “உபாஸ்னா மூர்த்தி வாமன மூர்த்தியும்‌, தத்வநிலை ௮த்வைத அனுபவமும்‌ என்பது தெளிவாகிறது.

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அருணாசல கவி நாடக ராமாயணம் -பகுதி -1

February 11, 2024
இராமநாடக நூலாசிரியர் வரலாறு 

சோழ நாட்டின்கண் ஞானத்தின் திருவுருவாகவும் கானத்தின் ஏழுபிறப்பாகவும் வந்த 
திருஞானசம்பந்தப் பெருமான் தோன்றிய சீர்காழிப்பதியின் பால் உள்ள தில்லையாடி என்னும் 
சிற்றூரில் வாழ்ந்த வேளாளர் குடிப்பெருமகனார் நல்லதம்பிப் பிள்ளைக்கும் அவர்தம் 
அருமை மனைவி வள்ளியம்மைக்கும் தமிழும் இசையும் செய்ததவப் பயனாய் அவர்களுக்கு 
நான்காவது திருமகனாகத் தோன்றியவர் அருணாசலக்கவிராயர் . 

இவர் சாலிவாகனசகம் 1884 விஜய ஆண்டு ( கி பி . 1711 ) பிறந்தார் . இவருடைய 
முன்னோர் சைனசமயத்திலிருந்து சைவசமயத்தைத் தழுவியவர் என்பர்
ஏன்பள்ளி கொண்டீர் அய்யா  ஏன் பள்ளி கொண்டீர் அய்யா ஆம்பல் பூத்தசய பருவத மடுவிலே 
அவதரித்த இரண்டாற்று நடுவிலே
கோசிகன் சொல் குலையில் அம்பு ஈசன் வில்லை ராமன் உரம் குளித்ததற்கோ - அரக்கிக் தெறித்தற்கோ முளித்ததற்கோ 
பரசு பறித்ததற்கோ மாசிலாதமிதி லேசன் பெண்ணுடனே வழிநடந்த களைப்போ 
தூசிலாதகுகன் ஓடத்திலே கங்கை துறை கடந்த இளைப்போ மீசரமாம்சித்ர கூடச்சிகரக்கல் மிசைகடந்த இளைப்போ 
காசினிமேல் மாரீசன்ஓடிய கதிதொடர்ந்த இளைப்போ ஓடிக் களைத்தோ 
தேவியைத் தேடி இளைத்தோ மரங்கள் ஏழும் தொளைத்தோ கடலைக்கட்டி வளைத்தோ இலங்கை என்னும் காவல் மாநகரை இடித்த வருத்தமோ 
ராவணாதிகளை அடித்த வருத்தமோ மதுரையி லேவரும் களையோ 
முதலை வாய்மகளைத் தரும் களையோ எதிர் எருதைப் பொரும் களையோ 
எடுத்தெறிந்த பெரும் களையோ கன்றை புதுவை ஆனமுலை உண்டுபேயினுபிர் போக்கி அலுத்தீரோ 
அதிர ஓடிவரும் குருவிவாயை இரண்டாக்கி அலுத் தீரோ துதி செய் ஆயர்களைக் காக்க வேண்டிமலை தூக்கி அலுத்தீரோ 
சதி செய் காலினால் காளிங்கன் மணிமுடி அலுத்தீரோ மருதம் தாக்கி சாய்த்தோ மேய்த்தோ தேய்த்தோ மாய்த்தோ 
ஆடுமாடுகள் சகடுருளை கஞ்சன்உ பிரை அர்ச்சுனனுக்காச் சாரதியாய்த் தேர்விடுத்த போரிலே சக்கரம் எடுத்த 

( ஏன் )
படிதனிலே மெத்தவும் நானே - உம்மைப் பரமெனவே அடுத்தேனே 
அடிமை கொள்வீர் என்னைத் 
செம்பொன் அணியரங் கப்பெருமானே 
தடம் உறைந்தகரும் பாறை சாபமது தடுத்து 
ரட்சித்தீரே விட ஒணாதகாகா சூரனுக் கொருகண் ரட்சித்தீரே 
கொடுமை கொண்டழுந்துரோ பதைக்குத்துகில் கொடுத்து ரட்சித்தீரே 
மடுவில் ஆனைமுன் ஓடிமுதலையை மடித்து ரட்சித்தீரே 
துபோல விடுத்து 
வாரும் பாரும் தீரும் கிருபைக் கண்ணாலே மனக்கவலை நினைத்தவரம் தாரும் என்சாமி 
தாரும் வட்சழி மேவும்மக லட்சுமியுடன் பெரும் மட்ச மாகவென்னை ரட்சிக்க எழுந்திரும் 

( ஏன் )
இவ்வாறான கவிராயருடைய உருக்கமான வேண்டுகோளுக்குப் பெருமான் இரங்கி அவருடைய கனவில் தோன்றிக் கம்பர் சடகோடாழ்வாரைப் பாடிப் பெருமை செய்து பின் 
இராமாயணத்தை அரங்கேற்றியது போல நீரும் நம் பரிசனங்களைப் போற்றிப் பாடி உமது இராமாயணத்தை அரங்கேற்றுவீராக என்று அருளிச் செய்து அவ்வாறே ஸ்ரீவைஷ்ணவர் 
களின் கனவிலும் தோன்றி இராம நாடகத்தை நம்சந்நிதியில் அரங்கேற்றி உபசரியுங்கள என்று கூறியருளினார் . 

பின்னர் அவர்கள் ஒருவரோடொருவர் தங்கள் கனவில் பெருமானருளிச் செய்தவற்றைக் கலந்துரையாடி மகிழ்ந்தனர் . கவிராயரும் கெருடாழ்வாரையும் 
சேனைமுதலியாகிய விநாயகரையும் சடகோபரையும் பஞ்சாயுதங்களையும் போற்றித் 
தோடயத்தில் அமைத்துப்பாடி அரங்கேற்றினார் . கோவிலாரும் கவிராயரை கவுரவித்துப் பல பரிசுகளைத் தந்து போற்றினார் .
பன்னீராயிரம் பாடல்களால் கவிச்சக்கரவர்த்தி கம்பர் தன்னூலை இயற்றியுள்ளார் . 
காப்பிய நயங்கள் சுவைகள் வருணனைகள் நிரம்பிய தன்னூலில் உவமமுதலாய அணி 
நயங்கள் , சொல்லணித் திறங்கள் சந்த நயங்கள் முதலியவற்றைக் கையாண்டுள்ளார் . 
அவையாவும் விளங்கக் கவிராயர் தருக்களும் திபதைகளுமாப் புனைந்த நூற்றுத் 
தொண்ணூற்றேழு கீர்த்தனைகளுள் அமைத்துள்ள திறன் போற்றத்தக்கதாகும்

சீதையிடம் ராமன் விடைபெற்றுச் சொல்ல வருகிறான்.  “நான் கானகம் போகிறேன்; பதினான்கு வருடத்தில் திரும்பி வந்து விடுவேன், நீ வருத்தப் படாமல் இரு” என்கிறான். அப்போது சீதை கேட்கிறாள்:

எப்படி மனம் துணிந்ததோ சாமி  வனம்போய் வருகிறேன்
என்றால் இதை ஏற்குமோ  பூமி        (எப்படி)

கரும்பு முறித்தாப் போலே சொல்லல் ஆச்சுதோ – ஒரு
காலும் பிரியேன் என்று சொன்ன சொல்லும் போச்சுதோ
வருந்தி வருந்தி தேவரீர்             வெல்ல
வார்த்தையால் கொல்லாமல்         கொல்ல
இரும்பு  மனதுண்டாச்சு              தல்லோ
என்னை விட்டுப் போகிறேன் என்று  சொல்ல (எப்படி)

 
சித்திரகூடத்தின் வளத்தைச் சீதைக்கு இராமன் காட்டிக் கூறும் பாடலிற் சில அடிகள் 


“ பாராய் பெண்ணே பாராய் 
சீராக நமக்குநேர் ஆகிறசித்திர கூடமலை 
ரத்தினபீடம் போலே 
மாதவர் முனிவர்சொல் வேதங்களைக் கிளி 
வாடிக்கையாற் கற்று வனமெங்கும் படிப்பதும் 
கோதும் தினைக் கொல்லையினிற் பம்பைகள் 
எடுத்துக் குரங்குகள் அடிப்பதும் 
ஆதவன் குதிரையைப்போல் பசும்பாறை ஒளிபாய்ந்த 
ஆடுகள் பசுமையாய்க் கோடேறி நடிப்பதும் 
பேதமில்லாமல் மேல்ஓடும் மேகத்தைப் 
பெண்யானை எனக்கையால் யானைகள் பிடிப்பதும் ” 
பாராய் பெண்ணே ! எனக்கூறும் கற்பனை பயிலத்தக்கதாம் . இவ்வாறே ஏனைய சரணங்களும் அமைந்துள்ளன .
இராமனைச் சீதையிடத்து அனுமான் வருணிக்குமிடத்து 

" அந்தராம சௌந்திரியம் என்னால் அறிந்து சொல்லப்போமோ 
எனத் தொடங்கி 

கந்தமேவுமர விந்தமலரும் அவர் 
காலுக்கு நிகராமோ , கைக்குத்தான் சொல்லப்போமோ 
உருண்ட மணிமுழங் காலுக்குவமை அவர் 
உடைய அட்சய தூணி ஏற்குமே 
திரண்ட பெருந்தொடை இரண்டுக்கும் எட்டுத் 
திசையானை துதிக்கையும் தோற்குமே
பூணும் 
விரிந்த மார்புக்கிணை பூமி அகலங் காணும் 
விளங்குங் கழுத்துக்குநேர் இளங்க முகே 
பரந்த புசங்களுக்கு மேரு மலையும் நாணும் 
பார்க்கப் பார்க்கப் பதினாயிரங் கண்சுள் வேணும் ( சுந் - தரு 8
சூர்ப்பணகை இராமனைக்கண்டு அவன் பேரழகில் மயங்கிக்  கூறுகின்ற விடத்து
தேவனோ மனிதன் தானோ யாவனோ யௌனமுள்ள 
சித்தனோ இவன் கர்த்தனோ பிரமன் 
பாவனையாற் கண்ட பெண்கள் 
ஆவியைக் கொள்ளை கொள் என்று 
படைத்தானோ என்னை உடைத்தானோ ? என்கிறாள்-( ஆரணி - திப 3 ) 
இவ்வாறே ஏனைய திபதைகளும் அமைந்துள்ளன .
அவளே சீதையின் பேரழகை 

காணவேண்டும் லட்சம் கண்கள் . 
சீதா தேவிதன் காலுக்கு நிகரோ பெண்கள் 
குவளை விழிகளோ பாணம் அவள் தன் 
வார்த்தை கொண்டால் அதுவே கல்யாணம் 
நவரத்தினத் தங்கத்தோடு 
நடையா லே அன்னப் பேடு 
அவனியிலே இல்லைஈடு . அவளுக்கவளே சோடு 
தங்கக் கொடி போல் இடையும் - சீவிவகிர்ந்து 
சாய்ந்த பின்னலின் சடையும் 
இங்கித மிருது வாக்கியம் 
இவளே தேவதா போக்கியம் 
மங்கையர்க் குள்ளே சிலாக்கியம் 
வாய்ச்சொல் உன்னதே பாக்கியம் ( ஆர . திரு . 8 )
இந்திரசித்து இலக்குமணன் இரண்டாம் முனறப் போர் வருணனையுள் . 

பெருஞ் சண்டை கேளீர்கள் அருஞ்சண்டை யாளிகள் 
தருந் திண்டேர் யானைகள் கருந்துண்ட சேனைகள் 
பெருஞ் சண்ட மாருதம் போல் நெருங் குண்டவாசிகள் 
மருங் கண்டவே தந்திரத் தோடு 
வருங் கண்டக இந்திரசித்தோடு . 

சிரத்தினில் மணிமகுடம் தரித்து மார்பிற் கவசம் 
பரித்துப் பணிகள் அலங் கரித்து வலியபெரும் 
கரத்தில் தனுவைக்கொண்டு சிரித்துமுப் புரங்களை 
எரித்த ருத்திரனைப் போல் பரித்து விக்கிரமத்துடன் என்கிறார்
மேலும் துங்கத்தைக் கோரி ஓராயிரம் 
சிங்கத்தேர் ஏறி அலையெறியும் 
சீர்கொள் எழுகடலின் நீர்கள் கரைபுரளப் 
பார்கள் கிடுகிடெனச் சூர்கள் விடவிடென 
ஊர்கொள் பகுதிநிகர் ஏர்கொள் குடைகள் மலர்த் 
தார்கள் அசையு மணித்தேர்கள் ஆயிரங்கோடி 
புடைசுற்றித்தரவே அறுபது வெள்ளம் 
படைதத்தி வரவே  --என்கிறார் .
எதுகைச் சிறப்புச்சந்தம் : -- 
எனக்குன் இருபதம் நினைக்க வரமருள் 
இனித்த தசரதன் தனக்கு மகனெனும் 
மனத்தின் உடனவ தரித்து முனிவரன் 
மகத்தில் அரக்கியை வதைத்த - அரசே ( பாயிரம் பெருமாள் தோத்திரம் - சரணம் 1 )
தேவி இவள் ராமா கௌதமன் - ஆவி இவள் ராமா 
ஆவலினாற் பண்டுமேவல் மனங்கொண்டு 
அந்தரம் நாடிய இந்திரன் கூடிய தேவி ( பாலகாண்டம் தரு - 11 )
சடாயு ராசன் 
கொத்திக் கொத்தி அடித்தானே 
கொத்திக் கொத்தி அடித் தானே 

பத்துச்சி ரத்திலும் தாளிலும் தோளிலும் 
பற்றிக் கரத்தனில் மாரிலும் தேரிலும் 
தத்தித் தத்திப்பறந் தெத்தி எத்திக் கையால் 
குத்திக் குத்தி எங்கும் சுற்றிச் சுற்றி மூக்கால் , கொத்தி " ( அயோத்தியா காண்டம் தரு -- 12 )
தேடித் திரிந்தானே சீதாதேவி - தன்னை அனுமானே 
ஆடிப் பறக்கின்ற காற்றும் நுழையாத 
அங்கக்கொத் தளந்தங்கும் 
இலங்கைப்பட் டணமெங்கும் - ( தேடி ) 
இடுக்குகளும் இருட் டொடுக்குகளும் இருட்டுறி 
அடுக்குகளும் மூலை முடுக்குகளும் பாய்ந்து " ( தேடி ) ( சுந்தரகாண்டம் தரு - 3 )
இராம ராவணயுத்தம் 
அப்புறம் மலைதாவும் அலைதாவும் கடல்தாவும் 
இப்புறம் செவிதாவும் புவிதாவும் கெவிதாவும் 

அன்று முனிவர் பயந்து கடகட 
என்று பரிந்து நடுங்கி விடவிட 
அண்டுமுகடுபி ளந்து நிலை கெட 
மண்டலமும் மிசை விண்டு தலைகெட 

அதிரமலைகளும் அதிரநிலைகளும் 
அதிர வெகுதிசை அதிரமழையிடி, 
அதிர உத்திகள் அதிர மதிகதிர் 

அதிர உடுவினம் அதிர இப்படி 
ராகவனுக்கும் ராவணனுக்கும் நடந்ததே சண்டை ( யுத்தகாண்டம் சரணத்தில் ஒன்று தரு - 80 )
மாணிக்க தீபங்கள் ஏற்றினார் நல்ல 
வாடைகள் தூரிகள் தீற்றினார் 
ஆணிப் பொன்னாடைகள் சாத்தினார் பன்னீர் 
ஆலைத் தெருவெங்கும் ஊற்றினார் 
சந்தனத்தைக் கோலம் தீட்டினார் 

பஞ்ச 
தருவையும் நன்றாக நாட்டினார் 
சுந்தர பாலிகை கூட்டினார் - நறுந் 
தூபமும் தீபமும் காட்டினார் " ( பாலகாண்டம் திபதை -2 )
ஆழநெடுந்திரை கங்கை ஆறுகடந்தாலு மென்ன 
தோழன் என்றுராமன் என்னைச் சொல்லியருளிய தொரு 
சொல்லேனோ சொன்னபடிக்கு 
நில்லேனோ நான் பிடித்தகை 
வில்லேனோ இவரைக் கொல்லேனோ ( அயோத் - தரு -- 15 )
அந்தராமத் துரோகி இவன்பலம் குறியேனோ 
ஆத்திநார் கிழித்தாற்போல் கிழிக்கநான் அறியேனோ 
புவியடங்கலும் கிட்டவே 

மண்டோதரி 
புலம்பும் ஓசை முட்டவே கண்டவர்கள் 
எவரும் செக்கலி கொட்டவே வாலினாலே 
முழுதும் பிடித்துப் பொட்டவே 

கட்டி 
இறுக்குறேன் 

தோள் ஒடிய 
முறுக்குறேன் தலைபத்தும் 
அறுக்குறேன் தேங்காய் போல 
நொறுக்குறேன் " 
( சுந்தரகாண்டம் தரு 
கண்டேன் கண்டேன் - சீதையைக் - கண்டேன் ராகவா 
அண்டரும் காணாத இலங்கா புரத்திலே 
அரவிந்த வேதாவைத் தரவந்த மா தாவை கண்டேன்
மின்ன 
பன்ன 
காவி விழிகளில் உன்உரு ஒளி 
கனிவாய் தனலே உன் திருநாமமே 
ஆவித் துணையைப் பிரிந்த மட 
வன்ன 
மானாலும் நான் சொல்லுவ 
தென்ன 
பூவைத் திரிசடை நித்தம் நித்தம் 
சொன்ன 
புத்திவழியே தன்புத்தி நிலை 
மன்ன 
பாவியாக்கியர் காவல் சிறை 
துன்ன 
பஞ்சு படிந்த பழஞ்சித்திரம் 
என்ன - 
கண்டேன் ( சுந்தரகாண்டம் தரு - 26 ) 
இந்த சேதுவைக் கண்டால் - சனகன் பெண்ணே 
கபர சித்தியாமே 
நிந்தை யானகள்ளைக் குடிப்பதும் - 
மந்தை உரிஞ்சு கல்லை இடிப்பதும் - நடுச் 
சந்தி விருட்சங்களை ஒடிப்பதும் - பிறர் 
சொந்தப் பெண்களைக்கை பிடிப்பதும் 
( இந்த ) 
பசு 
நொந்த பேர்பொருளைக் கொண்ட தோஷமும் 
நோன்புகளை நடுவில் 
விண்ட தோஷமும் 
வந்தபேர் பசிக்க 
உண்ட 
தோஷமும் 
மடிநழுவும் பெண்களைக் 
கண்ட தோஷமும் - இந்த ( யுத்த காண்டம் - தரு - 87 ) 

வழியெதுகைச் சிறப்பு : 

“ பட்டபாடு கேளாய் - பணைத்தோளாய் - பிடித்த வாளாய் 
குட்டிமனிதன் தன்னை கட்டியிழுக்கப் பின்னை 
பெட்டிப் பாம்பு போலே சுட்டி அண்ணனாலே ( ஆரண்யகாண்டம் - தரு - 6 )
எட்டுநாளையில் பாருமம்மா 
இராவணப் பேரும் இவன் ஊரும் -------
முட்டர்கள் துட்டர்கள் கெட்டபலிட்டர்கள் 
இட்டிடு கட்டுகள் ஒட்டுகள் கெட்டபின் 
நெட்டுள பட்டின மட்டியரக்கியர் 
கட்டிய பொட்டுகள் தொட்டறு பட்டிடும் எட்டு " ( சுந்தரகாண்டம் - தரு - தரு - 12 )
" நாயகன் சொல் மறந்தாய் அண்ணாவென்று 
பேயனைப் போல் பறந்தாய் 
தாயரையும் துறந்தாய் - பழிபோட 
நீயிதற் கோபிறந்தாய் 
சேயின் முகம்பார்க்கும் தாயின் முகம் போலே 
காயும் புழுவுக்குச் சாயும் நிழல்போலே 
தீயும் பயிருக்குப் பேயும் மழைபோலே 
மாயன் கஜேந்திரனுக் காய்வந்தது போலே ( யுத்தகாண்டம் தரு - 92 )
ஆனை முகனே அரனார் திருமகனே 
சேனையர்கோ னாகவலஞ் செய்வோனே 
நாடகத்தைக் கொண்டஉன்றன் நல்லருளா லேராம 
நாடகத்தைச் சொல்லுவேன் நான் --விநாயகர் தோத்திரம்
கம்பரா மாயணப் பாற்கடலை உண்டு 
நம்பவரும் ராம்நா டகமாம்மா மழையை 
அம்புவியில் காழி அருணாசல மேகம் 
கும்பும் உயிர்ப்பயிர்க்குப் பெய்து வினை கொய்ததுவே--ஆக்கியோன் பெருமை
ஏர்கொண்ட நான் மறையின் பொருளை எல்லாம் 
இனியதமி ழாற்செய்து தொண்டர்க் கீந்த 
பார்கொண்ட குருகூர்வாழ் சடகோ பாழ்வார் 
பதமலரைப் பணிந்து திருச் சென்னை மேவும் 
தார்கொண்ட புயாசலன் ஒப் பில்லா வீரன் 
சதுரன் அயன் தொழும்ராமச் சந்திர மாலின் 
சீர்கொண்ட திருவருளின் பெருமை தன்னைத் 
தேறுவேன் மன மகிழ்ந்து கூறு வேனே
பூதகி முலையுண்ணல் போல் ஆவி உண்டொருக் 

போற்றும் யாதவர்க்கின்பம் தேக்கச் செய்தாய்பரி 
புத்தமு தத்தினை நற்கரருக்குமுன் 
உற்றிட மிக்க அளித்திடும் சற்குண 

பூஜிதம் பெறு ராமச்சந்திர 
னேசவுந்தர ரூபரஞ்சித 
புகழலர் மகள் தழு விய அதி புஜபல 

மிகுபரி மளமுறு துளவணி ரவிகுல 
புண்யம் நீடும் அண்ட பகிரண்டங்களை உண்ட 
திண்ய னே அகண்ட புகழ் கொண்ட பிர சண்ட 
உதித்து 
தசரதன் சுதனா 
தரணி மன்னர்மன் னதிபுஜபல 
தசரதன் சுதனா 
தகைமை வாய்ப்ப உயர் மனு நெறி முறைகொடு 
தரும் அயோத்திநகர் அரசுசெய் ரவிகுல 
உதித்து 
உதித்து 
உதித்து 

தசரதன் சுதனா 
சர்ப்ப ராஜசயனத்தின் மீதுதுயில் 
உற்று வீறுபர வஸ்து வானதொரு 
தசரதன் சுதனா 
தசமுக னால் இடர் படும்உயர் அமரர்கள் 
நசையுட னே துதி தரநர உருவொடு 

தசரதன் சுதனா 
தார்புனை ஈசனும்விண் சூரியனும் வேதனும் 
மாமக வானும் அவன் பாலனும் தேயுவும் 
சீர் அனு மான்சுக்கி ரீவனர் சாம்பவன் 
வாலியங் கதன் நீலன் ஆய்வர வானவர் 
உதித்து 
மட்டி 
வானரங்க ளாய்மண்ணில் வந்திடச்செய்து , 
தானவர் குலத்தைவிண்ணில் சார்ந்திடக் கங்கணங்கட்டி 
தசரதன் சுதனா 
உதித்து 
சங்கு சங்கரமும் மங்களத்தினில் மி 
குந்த அற்புத அனந்த நற்றவனும் 
வந்துதித்திடநி னைந்திடத் தரையில் 
சம்ப்ரமத்தில் இல குஞ்சுமித் திரையின் 

தன்னிடம் லட்சுமணன் சத்துருக்கனும் கைகேசி 
மின் வயிற்றிற் பரதனும் தம்பியராய் சனிக்கத் 
தான் எண்ணிக் கோசலை வயிற்றிற் சித்திரைமாதம் 
ஆனநவமி புனர் பூசநக்ஷத்திர நாளில் 
தசரதன் சுதனா 

உதித்து 
சந்திர விம்பமுகம் கிருபைவளர்தரு 
கின்ற கண்களும் நெடுஞ்சிலை எனும் நுத 
லுஞ் சிறந்த பவ ளந்தனை நிகர் அத 
ரம்தகுந்த ஒளிர் குண்டலம் அணி செவி 
களுநில வெறிகமு கினை நிகர் களமொடு 
விரைகமழ் துளவணி புயமலைகளும் நெடு 
உலகமதனையுணும் அழகிய வயிறொடு 
தாரணி மார்பும் வண்டாமரைத் தாள் களும் 
சாமள மேனியும் ராமநன் நாமமும் 
தயங்க அரு மறையுணர் புங்கவர் மிகு 
ஜெயம் விஜயபவ எனமங் களமொடு 
தசரதன் சுதனா 

உதித்து , 
தனுவிற்கதித்து , 
தாடகைப் பாவியை 
வதைத்து 
விசுவா மித்திரனுடன் மிதிலைக்குச் செல்லும் 
வேதச் சிரத்தில் நடமாடும் சீர்பாதப் 
இசைவுறப் பட்டளவில் அகலிகை என்னும் 
எழுந்தாள் கல்உருமாறி ; அதுவல்லாமல் மண் 

போது 
போது 
மாது 
இந்திர போகசன கன்வில்லை ரண்டு 
துண்ட மாஒடித்தான் அதைக் கண்டு 
சுந்தரி சீதையைத் தந்தனனே மகிழ் 
கொண்டிட வேமண மானபின்னே வரு 
கின்ற வழியதனில் பரசுர மன் வில்மு 
றிந்திட வேசெய்து சனகியோ டயோத்தி 
தந்து கூனிகல கந்தனால் அரசி 
ழந்து நீடுபுகழ் தம்பியோடு மலர் 
மங்கை சீதை பதம் நொந்து வாடிவர 
கங்கை மாந்தி கடந்து வாசமலர்க் 
காவிரி தருசித்ரக் கூடபர் வதத்தில் 

மேவிய பரதனுக்குப் பாதுகை யளித்தபின் 
விரிதண்டகவன வழி கொண்டதில் அத் 
திரி என்றிடுதவ முனிவன் கிருபை பெற் 
றிட்டபின்பு விரா தன் இருகையது 
முட்ட விண்டி.டவே செய்து சரபங்க 
முனிவன் ஆசிரமந் தனிலே எழிற் 
சனகியோ டெய்தி இந்திரன் போனபின் 
தண்டகாரண்ய வாசிகள் படு துயர் 
கண்டன் னோரிடர் தீர்தர இணையறு 
கருணைகொண்டே அந்த வனமதிற்பத்து 
வருடம் நின்று வரும் வழியிற்சுதிட்ட 
மாமுனி வரங்கொண்டே அகஸ்தியன் றனைக்கண்டு 
சேமவிற் சரங்கொண்டு துதித்தவன் றனை விண்டு 
சென்று சடாயுஉற வாடப் பஞ்ச வடியில் 
நின்று விடாதமய லோடு கெஞ்சிய பெரு 
நீலி சூர்ப்பணகை காது மூக்கரிந்து 
கால னார்க்குநிக ராகப் போர்க்குவந்த 
கர தூஷணத் திரிசிரசன் ஆதியரை 
அரைநாழி கைதனில் மறலி நாடதனில் 
அனுப்பி மானுரு வாய்வந்த மாரீ 
சன்கையாற் பிடித்திட வேபோன 
தருணங்கண் டிராவணன் தபசி போல் 
விரைவில் வந்து சீதையை நிலத்தினொடு 
மேலெடுத்துச் செல்லும் போது சடாயுவின் 
ஆவியினை வதைத் தசோக வனந்தனில் 
அரிய சிறையிலிட வேசானகி தன்னைப் 
பிரியும் அதிகதுயர் ஆலோசினம் பண்ணிப் 
பின்மதிக் கவந்தனை சொர்க்கம் ஏற்றிச்சவரி 
சொன்ன விதங்கொடு சுக்கிரீ வனைத் தனது 
சொந்தம் ஆக்கி அக்ரமமிகு வாலிதனை 
முந்த வாட்டி விக்ரம அனுமானை , அளி 

மொய்த்த குழற்சிதைதனைத் தேட விடுக்க அவன் 
உத்தமசம் பாதி தன்னால் உளவறிந்து கொண்டு 
ஒப்பில்லாத விஸ்வரூபங் கொண்டு மயேந்திரம் ஏறிச் 
செப்பமாய்க் கடலைத் தாண்டி லங்கையிற் சேர்ந்து 
திடமுறு லங்கணியை முதற்பலி யிட்டுச் சீதையை
கடி பெமறு லங்கை எங்கும் தேடிக் காணாமற் பின்பு 
காவல் மிகும் அசோக வனத்தில் திரிசடை யன்பு 
மேவக்காத் திடவட முகம் பார்த் திருக்கக் கண்டு 
விசையகோ தண்டராம தூதன் நான் என்று சொல்லி 
நசைதரும் கணையாழி கொடுத்துத் திடமுங் கூறி 
நாயகி சீதைதந்த சூடாமணிகைக் கொண்டு 
தீயகிங் கரர்எண்ப தாயிரம் பேர்களொடு 
செழித்த அசோக வனத்தையும் அழித்திடக் கண்டெதிர்த்த 
கொழுத்த ராக்ஷத சேனையொடு சம்புமாலி மிகுத்த 
கொடுமை செய் பஞ்சசேனா திபர்களும் அக்ஷதனும் 
மடியநாற் பது வெள்ளம் அரக்கரோ டிந்திரசித்தன் 
வந்து போர் செய்ய அனு மந்தன் அந்தத்தளத்னதச் 
சிந்துசிந் தாக்கி இந்திர சித்தன்தேரை யழித்துச் 
சிலையை முறித்து முடித் தலையை உடைக்க அவன் 
வலிய பிரம்ம பாசத்தால் கட்டராவணனப்போ 
வாலில் நெருப்பையிட அந்த நெருப்பைலங்கையின் 
மூலைக்கு மூலையிட்டுக் கொளுத்திநீ றாக்கிவிட்டு 
உள மிகிழ் கொண்டு மீண்டு வந்து சாமினயச் சேவித்து 
அளிதிகழ் சூடாமணி தரக்கொண்டு மகிழ்ந்த பின்பு 
அடல் மிகுந்த எழு பதுவெள்ளம் வானரப் 
படையும் ஒப்பிலதின் அதிபரும் நீடிய 

பரிவொடு தென்கடல் அருகில் நிறைந்த பின் 
சரணம் அடைந்து நின் துணையடி தந்தருள் 
சாமி என்றவிபீ ஷணன் தனக்கு லங்கா 
பூமிதந்து விகா தஞ் செய்தவருணன்மேல் 
பொற்கணை விடுத்தவனை வரச்செய்து புஜபல 
சித்திரக் கவியினங்கள் அதைக்கொடு விரைவொடு 
சேது பந்தனஞ் செய்வித்து நீள் கடல் வளைந்திடு 
மாதிரம் பயந்திடச்செய் ராவணன் இலங்கைதன்னை 
வந்து முத்திகை செய்து கொண்டு தும்பி அங்கதன் மீதும் 
முந்து விக்ரம அனுமந்தன் அம்புயந் தன்னிலும் ஏறி 
மூதண்டம் திகில் மேவி யதிர்ந்திட 
கோதண்டந்தனில் நாணொலி கொண்டுற 
குரைகடல் வெருவிட நெடுநிலம் அது தனை 
ஒருசுமை என உறும் உரகன் உடல் நெளிய 
உயர்மதி கதிர்வழி பிசகிட நெடுவரை 
அயர்தர உடுஇனம் அது தரையில் உதிர 
அணி ரதகஜபரி பரிசன வகை மிக 
அணி அணியொடுவர அதிவலிமைகள் சொலி 
அனல் கக்கிடும் அத்திர சத்திர மழு 
கனசக்கரம் நெட்டயில் பட்டய மொடு 
கதிர் வீசும் கதிர்முத்தலை சூலம் 
கதைவார் அஞ்சிலை கைக் கொடு தாளம் 
காளஞ் சின்னந் தாரைகள் மத்தள பேரிகள் பலவித 
மேளம் பின்னும் நாக சுரத்தொடு பூரிகை ஒலிதர 
வீரராவணன் தேரில் ஏறி போர்க்களத்தில் வந்து 
சேரவே அவன் சேனை வீரர் யாரும் போரில் முந்த 

தீய வச்சிரமுஷ்டி துன்முகன் சுபாரிசன் 
மாய பிரகஸ்தன் கெட்டவன் மனங் கொள் நீசரை 
வானர வீரர்கள் கொல்ல ராவணன் இவரை வெல்ல 
சானகி மணாளன் வில்லிற் சோணை மாரி என்று சொல்லத் 
தகுஞ்சரங் களைவிட்டு அவன் தேர்வில்லை முறித்துத் 
திகழ்மணி முடிபத்தும் தரைமேல் உருளச் செய்து 
திடமொடு சண்டை செய்ய நாளைவா இன்றுபோ வென்று 
விடைதர மனம் நொந்து தனியாய்ப் போய் லங்கை சேர்ந்து 
விட யாவரும் எழுந்து போரில் வீறிக்கதிக்க 
வெற்றிசேர் கும்பகர்ணனை நித்திரையில் இருந்தெழுப்பி 
அத்ததியில் சண்டைக்கு விடுத்திட அவன் களத்தை 
அடுக்க ராகவன் அம்பு தொடுக்கவே கும்பகர்ணன் 
நொடிக்குள் காலும் கையும் போய்படிக்குள்ளேமுண்டமாகி 
நொந்து பின் சாமிதனைச் நிந்தனை பேசி 
இறந்ததை ராவணன் அறிந்ததி காயனை 
அனுப்ப அவன் பரிசனத் திரளினொடு 
முனைத் தலைவர்களும் சமர்க்களம் அணு 
முச்சிரத்தன் வயமஸ்தன் கும்பன் தேவாந்தகனும் 
அச்சமற்ற ரண மஸ்தன் வம்பன் நராந்தகனும் 
அனுமான் முதலோர் கையால் மடிந்திட அதிகாயன் 
சின மாகி இளை யோனோ டமர் செய்துமுடிவாகச் 
செய்தி தெரிந்திந்திரசித்தன் தேரில்ஏறி 
வெய்ய சதுரங்கம் மொய்க்கப் போரில் வீறி 
விஞ்சுஞ்சுக் ரீவன் பனசன் சாம்பன் அனுமன் 
வஞ்ச மற்ற நீலன் முதலினோர்கள் தமையும் 
வாட்டக் கண்டு லட்சுமணன் தன் வில்லினிற்சரம் 
பூட்ட இந்திரசித்தன் ரத கஜபரி சனம் 
புரவி யாவற்றும் மாண்டு தானும் மிக மெலிந்து 
இரவில் நாகபாசத்தை ஏந்த அதனால் நொந்து 
லக்குமணன் முதலோர் களத்திற்படுக்க ராமன் 
அக்கணம் அவ்விடம் மேவிதிகைத்து வருந்தும் வேளை 
அடல் சேர் கருடன் வர நாகபாசம் தெறித்து 

மிதமற்ற சேனை சூழ உக்கிரங் கொண்டுவந் தெதிர்ந்த 
மதம் உற்ற சூரியகேது வச்சிர தந்தன் பெரும்பக்கன் 
மாலிசிங்கன் பேயன் பரிதிக்கண்ணனையும் 
ஆலம் அஞ்சும் தீய குருதிக்கண்ணனையும் 
ஆர்க்குங் கவித்தலைவர் மாய்க்கராம லட்சுமணர் 
தாக்க மகரக்கண்ணன் அக்கினி கேதுமடிய 

தசமுகன் அதைத் தெரிந்து இந்திரசித்தனைவிட 
வசை கொள்ளும் அவன்களம் வந்து லட்சுமணனுடன் 
வாது செய்ய இளையோன் அப்போது சரமாரி வெய்யன் 
மீதில் எய்ய அதனால் அப்பாதகன் திரேகம் நைய 
விண்ணில் மறைந்து தன் ஊரைச் சேர்ந்து சூது 
பண்ணி வெல்ல எண்ணி போருக்க கம்பனோடு 
பாவி மகோதரனை ஏவ அவர்கள் களம் 
மேவி பலத்துடனே ராவில் அமர்புரிய 
வீறும் அனுமன் தன்னால் அகம்பன் நிகும்பன் சிரங்களுருண்டபின் 
சீறும் மகோதரன் கைச்சரங்கள் அழுந்திட வருந்தி இளையவன் 
திகைக்கும் வேளையில் இந்திரசித்தன் அங்குவந்து சோபித 
மிகுத்த பிர்மாஸ்திரம் விடுக்கத்தம்பி முதலோர் சாய்ந்திட 
வித்தகஸ்ரீ ராமன்கண்டு மெத்தவும் ஆகுலங் கொண்டு 
சித்தப்பிர மையாக அன்று உத்தம அனுமான் சென்று 
செழித்த சஞ்சீவி பருவதத்தைக் கொண்டு வந்தபின் 
பிழைத்தனைவரும் போருக் கெதிர்க்க இந்திரசித் தென்னும் 
பித்தன் மாயா சீதையை வெட்டி நிகும்பலை யா 
கத்தின் சாலை சேர அதைத் தெரிந் திளையவன் 
கணை மழை பொழிந்தரக்கன் செய்யும் யாக மழித்து 
க்ஷணமதில் அவன் சிரத்தைக் கொய்து தேவர் துதிக்கச் 
சாமிபாத நேரில்வைக்க ராவணனறிந்ததன் மேலமர் செயவிட 
பூமிபாரமான துஷ்ட மூலபலங்கள் ஓர் ஆயிரம் வெள்ளமும் 
போரி லேறுதல் கண்டு வானர வீரரோடவே ஒன்றியாகிய 
தீரராகவன் சண்டமாருதம் ஆகிநீசர்கள் பஞ்சுபோலே கெட 
திவ்விய மோகனாஸ் திரம் ஏவி எங்கும் ராமனாகத்தோன்றிட 
வெய்யர் யாரும் பார்க்குள் தாவி தங்களில் தாங்களே மாண்டபின் 
வேதனை யேசெய்யும் ஜாதக காதக 
பாதக னானம கோதரன் போர் செய்து 
படையும் போய் ராகவன் கைக்கணை தன்னால் ஆவிவிண்டு 
மடிய , ராவணன் துர்ச்சகுனம் மென்மேலுங் கண்டு 

பெருஞ் சண்டை செய்ய சாமி ராவணன் பத்துச் சிரத்தையும் 
விந்தை அம்பு கொண்டு கொய்யக் கொய்ய மீண்டும் மீண்டும் முளைக்க அவ் 
வேளையிலே இதமாக பிராதபகு 
ணாள விபீஷணன் ஓதும் உபாயத்தி 
னால் இணையறு பிரம்மாஸ்திரம் அதனை விட்டு 
ஆலம் அனையவிழி ராவணன் நாபியில் வைத்த 
அமிர்த கலசத்துடன் முடிகள் சிதறச் செய்து 
இமையவர் முனிவர்கள் படுதுயரம் ஒழித்து 
இணையில் எழிற் சனகி தீயினிற் குளித்த பின்பு 
துணைவன் கவிப்படை விபீஷணனும் கற்பிலங்கு 
தூயசீதை தன்னொடு புஷ்பக மீதிலேறி முன்வினை முற்றிலும் 
மாயவே செய்கின்ற மகத்துவமான சேது அண்டையில் ஒப்பறு 
மாதேவற் கன்று நீராட்டி இறைஞ்சி திரும்பிமுன் வந்த வழிகளை 
சீதேவிக் கன்பொடு காட்டி மகிழ்ந்து நடந்து பன்னருந் தல நிலை 
திகழும் பரத்துவாசன் மடத்தினிற் சேர்ந்தபின் திடத்துடன் அனுமானைப் 
புகழும் பர தராசன் இடத்தினிற் கேவிட நொடிக்குள்ளே அவன் போன 

போது சாமி வரவைக் காணே னென்று பரதன் 

ஓதுந் தீயினில் விழப் போகக் கண்டு அனுமன் 
மோதிரந்தந்து பதறாதே ரகுபதி வரமுனி மடம் வந்து சேர்ந்தா னென்று 
ஆதரவும் சுபமும்கூறி பரதனிடம் விரைவில் விடை கொண்டு ஆஞ்சநேயன் 
அக்கணம் திரும்பி லோக ரக்ஷகன் உண்ணும் வேளைக்க 
ரைக் கணம் முந்திவந் தோதப்பஷங் கொண்டவனைக் கூட 
வைத்து வரதன் பொசித்துப் புஷ்பக மதிற்கதித்து 
சத்திய பர தன் துதிக்க உத்தம குகன் மதிக்க 
தகைமை மேவிய அயோத்தி நகரில் வந்து 
திகழும்மூ வுலகம் போற்ற ஒளி சிறந்த 
சித்திர மிகுந்த சிங்காசன மீதினில் 
அற்புதம் உற்றசெந் தேன்மொழியாள் , எம 
தன்னை சீதையோ டமர்ந்து பேரிகையும் 
மன்னு தாளமிரு தங்க நாகசுர 

வாத்தியம் ஒலிக்க வருசுரர் மருமலர்கொடு 
நாற்றிசை இறைக்க வெகு முனிவர்கள் மணிமுடி 

நரபதிகளும்வானரபதிகளும் பூ 
சுரர் துதி சொலவே கவரிகள் அருகே 
தூயலட் சுமணனுடன் சத்துருக்கனும் வீசிட 
நேயம் உற்றபர தன் உட் களித்திதம் பேசியே 
நிலவெறி தருசந்திர வட்டக் குடை கவிக்க 
பலமிகு அனுமந்தன் நற்றுணையடி பிடிக்க 
பகர் வசிட்டனால் மகுடாபி ஷேகம் கொண்டு 
செகதலத்துளோர் துதி பேசச் சேவைதந்த 
தீனதயா நிதியே அடியார்உள 
மேநிலையாய் நிதம் வாழ்வர தாஉயர் 
வேதர் அரியணை மேவு வினோதா 
தாதா சுரர் முதலோர் துதிபாதா 
சதுரனே சராசரங்களைத் தருமூலா 
துதி செய் ராஜசேகரன் த மிழ்க் கனுகூலா 
சுமுக சுகுண சுந்தராங்க சுகிர்தநய 
விமல விபவ விந்தை யோங்கிடு மிகுஜய 

கோதண்ட தீக்ஷா குருவே - பக்தரிரு தய 
கோகனக மலர் மருவே 

(கோதண்ட )
ராவணன் முன் நின்ற ஹனுமனை ராவணன் கேட்கச் சொன்னதால் ப்ரஹஸ்தன் என்ற ராக்ஷச அதிகாரி கேட்கிறான்:
”ஏ, வானரா, நீ யார், யாரால் அனுப்பப்பட்டவன்? பயப்படாமல் உண்மையைச் சொல், உன்னை விடுவிக்கிறேன்.’

இது தான் அந்த பாடல்:
செஞ்சுருட்டி : ஆதி தாளம்
” ஆரடா குரங்கே – இங்கே வந்த நீ – ஆரடா குரங்கே”
வார் சிங்காசனம் போல், – வால் இட்டென்னிலும் மேல் இட்டிருகிறாய் ”
கம்பத்தின் மேலே காலனைப் போலே
செம்புமாலியையும் சேனாதிபரையும் கொன்றொருக்காலெ
சிட்சை செய்வேன் என்று கட்சி உடனே வந்த
அட்சதனைக் கூட பட்சணம் செய்த நீ…. ஆரடா குரங்கே…..

(ராவணன் எதிரில் தனது வாலைச்சுற்றி உயரமான ஆசனம் அமைத்து ராவணனை விட மேலே உயரமாக அனுமன் அமர்ந்திருக்கிறானாம்) ( செஞ்சுருட்டி ராகத்தில் ஆதி தாளத்தில் — ராவணன் கேட்பது )

அதற்கு அனுமார் பதில்: மோகனம்: ஆதி தாளம்

”ராமசாமியின் தூதன் நான் அடா — அடடா ராவணா
நான் அடா என் பேர் அனுமான் அடா ( ராவணன் ஒரு அடா போட்டால் அனுமன் பல அடா போடுகிறான்!!)
கொடுத்த வரமும் தனமும் கனமும் வீணிலேன் போக்குகிறாய்
குடிக்கும் பாலை அய்யோ கமர் வெடிக் குளேன் வார்க்கிறாய்
துடுக்குடன் பரஸ்த்ரி செனங்களை தொடர்ந்தேன் பழி ஏற்கிறாய்
தூக்கி ஏறவிட்டேணியை வாங்கும் துர்த்தர் வார்த்தையைக் கேட்கிறாய் …( . ராம )

ராமாயண ஓரடிக் கீர்த்தனை முற்றிற்று 
-----------
 . 
இராம நாடகம் 
பாயிரம் 
ஏற்புடைக் கடவுள் வணக்கங்கள் . 
அனுமார் தோத்திரம் 
நேரிசை வெண்பா 

கோதண்ட தீக்ஷா குருராம நாடகத்தைத் 
தீதண்டா வாறடியேன் செப்பவே - கோ தண்டா 
மாருதியே அஞ்சனையாள் மைந்தனே நற்கருணை 
வாருதியே நீதுணையா வா ! --கலியாணி ராகம் --ரூபகசாப்புத் தாளம் 


பல்லவி 
அனுமந்தா நீ 
துணைவந் தருள் புரிகுவாய் 
துணை வந் தருள்புரிகுவாய் (துணை ) 

அநுபல்லவி 
துணைவந் தருள்வாய் நல்ல சொற்பொருளது புல்ல 
இணையொன் றிலாத வல்ல ராமநாடகம் சொல்ல ( துணை ) 

விண்டு சரணங்கள் துஷ்டவாலி தோழமையை விண்டோனே 
சுக்கிரீவன் தோழமையைக் கொண்டேனே 
வெகு திட்டமா ராகவனைப் போய்க் கண்டோனே 
அவன் செப்பிய சொல்மிர்தத்தை உண்டோனே 
சுக்கிரீவன் கஷ்டமும் அரசிழந்த நஷ்டமும் அவனிருப்பும் சட்டமாச் சொன்ன இட்ட கருணை மாருதி வாருதி (துணை ) 
தூயனே --- அஷ்ட திக்கில் தென் திசை உகந்தோனே 
சீதைக்கா அரிய பிலத்தினுட் புகுந்தோனே 
அப்போது பொட்டெனப் பூமியினைப் பிளந்தோனே 
உயிரைப் போக்கவே மிகமனம் தளர்ந்தோனே 
சம்பாதி எட்டவே இருந்து மென்ன கட்டவே வர அவற்குப் பட்டதைச் சொல்லும் முட்டிலா ஆஞ்ச நேயனே ( துணை ) 

-----
3 உக்கிரமா விஸ்வ சொரூபம் எடுத்தோனே 

மயேந்திரத் துதைந்து சடலைத்தாண்டி விடுத்தோனே 
பொல்லாத அக்கிரம லங்கணியைக்கீழ்ப் படுத்தோனே  
நற்றிரு ஆழியைத் தேவிகையினில் கொடுத்தோனே ஆறுபோல் 

கக்கவே ராட்சத ரெல்லாம் மக்கவே செய்யும் ருத்திரனே 
முக்கிய மாம்வாயு புத்திரனே 

( துணை ) 
----------
4 தேவி சூடாமணி கையில் தரித்தோனே 
சொன்ன சேதிகள் எல்லாம் அங்கி கரித்தோனே - படுபாவிராவணன் லங்கையை எரித்தோனே 
ராமன் பக்கல்வந்துற்ற சேதிகள் விரித்தோனே 
பூவுலகத் தோரும் தேவர் கோவும் முனிக்கணமும் பராவிய சிரஞ் சீவியே மேவிய (துணை ) 

-- + - 
என தாவியே 
5 அருமையாம் சஞ்சீவி மலையை ஏற்றோனே - பிர்ம்ம அஸ்திர வேதைக ளெல்லாம் தீர்த்தோனே - சீதையை 
உரிமையாம் ராகவன் பக்கல் சேர்த்தோனே - பரதன் உயிரை விடுமுன்னமே போய்க் காத்தோனே தவத்தில் 
பெருமை யார்முனி விருந்தினில் தரும ராமனோ டருந்தின ஒருமையாற் சஞ்சீவி ராயனே 
பிரம பட்டம் பெறும்உ பாயனே ( துணை ) 

பெருமாள் தோத்திரம் --விருத்தம் - 1 
அண்டர்தம் துயரம்தீர அயோத்திமா நகரில் வந்து 
தண்டகா ரணியம் சென்று சமுத்திரமீ தணையைக் கட்டி , 
கொண்டுரா வணனை மாட்டக் கோதண்டம் கையில் ஏந்தும் 
புண்டரீ கக்கண் ணாளி பொன்னடி க்கமலம் போற்றி --சௌராஷ்டிர ராகம் --திரிபுடை தாளம் 

பல்லவி 
எனக்குன் இருபதம் நினைக்க வரம் அருள்லாய் - ஸ்ரீராமச்சந்திரா 
எனக்குன் இருபதம் நினைக்க வரம் அருள்வாய் ( எனக் ) 

சரணங்கள் 

எனக்குன் இருபதம் இனித்த தசரதன் மனத்தினுடன் அவ மகத்தில் அரக்கியை 
நினைக்கவரம் அருள் தனக்கு மகன் எனும் தரித்து முனிவரன் வதைத்த அரசே ! ( எனக் ) 
நடக்கையிலே அகலிகைக் நடத்திச் சனகன்வில் பிடித்துப் பரசுராம 
பிரித்து நகரில் வந் கிருபை செய்து ஒடித்துச்சனகிகை மனுக்குமமதையைப் திருக்கும் அய்யனே ( எனக் ) 


3. தரிக்கும் முடிபர தடத்தில் குகனுடன் வரைக்குள் சனகியோ 
வணக்கம் செயமகிழ் தனுக்கு தவி நதித் அடுத்துச்சித்திரகூட டிருக்கத் துணைவன் நல் குணக்குஞ்சரமே ( எனக் )  

4. துடித்த பரதனும் ஒடுக்கமுடன் வர தொடுத்தமிதியடி கொடுத்தரசுசெய 
வடக்கில் அவனையும் விடுத்து நடுவிலே வனத்தில் வரும் விரா தனைக் கொன்றவனே 
5. வீடுக் கரிய சடா யுவுக்குறவு சொலி 
விடுத்துக்கொண்டுபஞ்ச வடிக்குச் சென்றவுடன் அடுத்த சூர்ப்பநகி 
கொடுத்த கரதூ ஷணத்திரிசிரர்முடி துணித்த ராகவா ( எனக் ) 

6. தனித்து வருமாரீ சனைக் கொன்றொருகவந் தனுக்கருளி அனுமனைக் கண்டொருசுக்ரீ வனுக்குதவி வாலி தனைப்பொருதிவா னரப்படையை ஆ தரித்ததுரையே ( எனக் ) 

7. இருக்கும் அனுமன்வந் ருக்கை அறிந்தபின் 
பெருக்க அணைசெய்து பெலத்த அரக்கரைத் 
துரைக்க நிசிசரர் எரித்த கடலிலே வருக்கம் வருக்கமா 
தொலைத்த தெய்வமே ( எனக் ) 

8. கொடிய இந்திரசித்தன் கொள்ளும் மூலபல 
முடியும் கும்பகர்ணன் முடியும் பொடியாக 
பிரகஸ்தன் முதலாகக் வெள்ள அரக்கர்தம் 
முடியும் ராவணன்  விடுபுங் கவனே ( எனக் ) 


9 நினைத்தபடி விபீ நிறுத்தி ஒருபுஷ்ப தனத்தில் உயர் தரும் 
தனத்தி ருக்கும்ரகு ஷணற் கரசுபெற ரதத்தில் ஏறிவந்து 
அயோத்தியிலே சிமா குலக்குமரனே ( எனக் ) 

அபசாரக்ஷயை -விருத்தம் - 2 
கனமான வால்மீகர் சுலோகம் செய்தார் 

கம்பரும் ராமாயணத்தைக் கவியாச் செய்தார் 
உனதாசை யாலேநா டகமாச் செய்தேன் 
உளறினால் என்ன பலன் உண்டாம் என்றால் 
முனிமார்சொல் லியராம மந்திரத்தை 

மூவரும் ஓதியராம மந்திரத்தை 
வனவேடன் மராமார் என்றே முத்தி 
வழிகண்டான் அது கொண்டே மொழிகின் றேனே . 

அடதாளசாப்பு -தரு- 3 -சாவேரி ராகம் 

பல்லவி 
ஐயனேரகு ராமனே என்சொல் அபசாரம் 
உபசாரம் ஆக்கிக் கொள்வாயே 

அநுபல்லவி 

கையில் ஆகாதநான் ஏதேது சொன்னாலும் 
காக்கக் கடன் என் பிழையை நீக்கக்கடன்உன்பாரம் ( ஐய ) 

சரணங்கள் 

எள்ளத் தனையும் இல்லாத சுப தெள்ளத் தெளியேன் செய்தேன் இதோ 

குத்தம் 
சத்தம் 
மொத்தம் 
சுத்தம் 

வெள்ளைக் கவி பிள்ளைக் 
விள்ளத் 
உள்ளத் 
தள்ளத் 
கொள்ளத் தகுமோ 


கவி 
தகுமோ 
தகுமோ 
தகுமோ 

என்றும் - இது சொன்ன 
என்றும் - சொல்வதல்லால் 
பழுதுகள் 
சாமிநீ 
திருவுளம் 
அறிகிலேன் 

( ஐய ) 

நற்பொருள் நவரச வைப்புள்ள வண்ணவி 
ஒப்புத் தப்புத் 
சொற்பிக் கறியேன் 
கற்பிக் கறியேன் 
மெய்ப்பிக் கறியேன் 
ஒப்பிக் கறியேன் 

நீதமும் 
பேதமும் 
கீதமும் 
நோதமும் 
தெரிவேனோ - அதிலுள்ள 
தெரிவேனோ - இலக்கணச் 
உன் புகழ் சொல்லி சாமி எங்கள் ( இய ) 
முன்னம் சொன்ன  உத்தம முனி உரைக்கக் கம்பர் நற்றமிழ் தன்னைச் 
 
சின்ன வைத்திப்படிக் 
புத்திப்பிழைபித்துச்சொல தென்ன கண்டேன் - பெரியோர்முன் 
கொண்டேன் . என்சாமி வைப்போலே 

சத்திக்க ஒ 
நத்திச்சொலும் 
சித்தத்தில் இருக்காலே 
என்மேலே 
தத்தாலே ( ஐய ) 

நூற்பெருமை -விருத்தம் - 3 

சதிர்பெறும் ராம காதை சதகோடி பிரபந்த மாகும் 
அதிலோர் அட் சரம்சொன் னாலும் அருவினை போகும் என்றே 
விதியினால் முனிவால் மீகி விளம்பிய உறுதி கொண்டு 
மதியினால் அறிந்த மாத்திரம் வகுத்துநா டகஞ்சொல் வேனே --சாவேரி ராகம் --திரிபுடை தாளம் 

பல்லவி 
முனி 
மகத்துவம் உள்ளகதை ராமகதை இதுவேகேட்க வேணும் 
வருக்கும்பலமனி தருக்கும் இது பொதுவே 

( மகத் ) 
அநுபல்லவி 
மிகுத்த மிகுத்த புராணம் சொல்லும் கதை 
விரும்புமோ மறுநாள் சொன்னாள் அதை 
அகத்தினில் ஆனந்தம் தருமே 
இது சொல்ல 
அடிக்கடி சொல்லினும் வெறுக்கு மோ நல்ல 

( மகத் ) 
சரணங்கள் 
1. சேர்க்கும் பொருள்களில் என்ன இணைச்செவி 
ஏற்கும் பொருளிது மாத்திரம் 
செபமும் இது பெருந் தபமும் இதுவென்று தெளிவதே நல்ல 
சூத்திரம் பார்க்குள் இதையறி யார்க்கெ லாம்பிறந் தெடுத்தஉடம்பவ 

பாத்திரம் 
பத்தியாலிது கற்றவர்க்குப் பலிப்பது பரமபத க்ஷேத்திரம் 
தீர்க்க மா இதைக் கேட்கின் றோர்பெரும் 
திருமனையில் வரு வாரே தேவரும் 
ஏற்கும் இதன் குணமும் யார்க்குச் 
இகபரங்களிற் சகல 
சொல்லவரும் முந்தரும் 


(மகத் ) 

தருமராஜன்கை நேரும் போதினில் ஒருமையாயதைத் 
சற்றே படிக்கினும் புத்திரபாக்யமும் சகலபாக்யமும் 
பெருகுநவக்கிரக ஏகாதசப் பலனைப்பிரியமுடன் வந்து 
பேயும்பூதமும் நோயும் சூனியமும் பிணிசெய்யாதபடி 

தடுக்குமே 
அடுக்குமே 
கொடுக்குமே 
விடுக்குமே 

கின்னம் 
இன்ன 
மரணசெனன வியாதி தமக் 
வருந்துவார் வருந்தாதபடி 
அரிய மருந்திது ஆமென்றே 
ஆதியிலயன்சுகர் காதிலே 

முன்னம் 
சொன்ன 

( மகத் 
சீமைதனிற் கங்கையமுனைமுதற் பெருந்திவ்ய தெய்வந்தி ஸ்நானமும் 
சேனைமா நிலம் யானை முதலாகச்செய்யும் பலபல தானமும் 
ஆமிதாமென்று தேறுகின்றவே தாந்தம் முதற்கலைக் கியானமும் 
அதுவுமல்லாமல் எது நினைந்தாலும் உதவும் அந்தநி தானமும் 
சாமிநாரத முனிவன் சொல்லி னவத்த சரித்திரம் வால்மீகர் உரைத்தபடி 

கொற்றி 
ராமன் அவதாரம் ஆம்முன்னே 

மெத்த 
நயங்கொண் டாதிகாவியம் என்றே பெற்ற ( மகதி ) 


அனவயடக்கம் --விருத்தம் -4 


முத்து முதல் விலையில்லா மணிகள் பெற்ற 
முதியகடல் ஆடுகின்றார் அதிலே ஏழு 
சற்றும் உதவாதமணி யாம் பருக்கை 
தான் போடக் களிப்பான சமுத்திரம் போல் 
கர்த்தன் எனும் ராமச்சந்திரன் கதைப்பா கேட்கும் 
காதிலே நாடகமா அதனைச் சொல்லிக் 
குற்றமிகச் செய்தாலும் குணமாக் கொண்டு 
கூட்டுவீர் என்கவிபா ராட்டு விரே . 

விருத்தம் - 5 

அரன்முடிமேல் கங்கைபகீ ரதன்கொ ணர்ந்தே 
அந்நாள் செய் தர்ப்பணம்போல் இந்நாள் இந்த 
நரரும் அந்தக் கங்கையிலே தர்ப்ப ணத்தை 
நடத்திமுத்தி பெறுகின்றார் அதுபோல் ஆதிப் 
பிரமன்முகத் தினில்வந்த ராமகாதை 
பெருமுனிவால் மீகிசொல்லக் கம்பர் சொன்னார் 
விரவுதமிழ்ப் பதத்தாலே நானும் சொன்னேன் 
மேற்கொள்வீர் என் பிழைதீர்த் தாட்கொள் வீரே --மத்தியமாவதி ராகம் --ஆதி தாளம் 


பல்லவி 

பிழை பொறுக்கவேணும் - பெரியோரே பிள்ளை உமக்கு நான்காணும் 

( பிழை ) 

அநுபல்லவி 

மழை நிறத்த ராம சாமிகதை 
வகையென்றறிந்தும் அறியாமலும் நான் 
இன்ன 
சொன்ன ( பிழை ) 


சரணங்கள் 

மதித்தாரே 
விதித்தாரே 
இக்கதையைப் 
துதித்தாரே 

ஆதியில் பிர்ம்மதேவர் நூறு கோடி விஸ்தாரம் 
ஆதிகாவியம் என்றித்தை 
பேதமில் இருபத்து நாலாயிரமாகப் 
பிறகு வால்மீகர் சொல்லி 
போதாயனர்முதல் மாதவர் 
புனைந்துவட மொழியால் 
தியகம்பர் பன்னீராயிரம் கவியாக 
உரைசெய்து தமிழிலே 
காதலால் இவர் செய்ய நான் அதுக் 
கருடன் பறக்க ஒருகொசுவும் பறந் 
ஈதொரு நாடக மாகஓதினேன் 
எட்டும் ரண்டும் தெரியாத ஏழைநான் ஆ பதித்தாரே 
சிப்பாலே தாற்போலே புவிமேலே கையினாலே ( பிழை ) 

வாவிய பெருவெள்ளம் வாவும் கடலிலே 
வாய்க்காலும் பாயுமல்லோ நில்லாமல் 
யாவதும் கற்றோர் சொல்லை கேட்கிற நீங்களும் 
என் சொல்லும் கேளும் தடை 

இல்லாமல் காவியமும் பஞ்ச லட்சணமுந் தெரிய 
கற்ற உங்களைப் போலே 
சொல்லாமல் 
கேவலம் நான் இதைப் பாகவதர்படிக்கும் 
கீர்த்தனையாச் சொன்னேன் 
தல்லாமல்  என்று 
தேவராமன் பேரே உற்றது 
தேடி அந்தப்பேர் இந்த நாடகத்தில் வைத்தது 
பூவோடே கூடிய நாரும் மணம் பெற்றது 
போலே விளங்கும் அதினாலே சொன்னேன் 
கற்றது ( பிழை ) 
3. திருந்தும் நமசிவாய நாராயணா 
செபிக்கும் மந்திரம் இரண்டும் மெய்தானே 
உரைக்கும் மந்திரம் இரண்டில் இரண்டாம் எழுத் திரண்டும் 
ஒருராமன் ஆகிவந்த பெருமானே 
அருள் செய்த சுதையிதை லக்கண சால்ல 
அறிவேனோ சின்னஞ் சிறியனே 
பரப்பிய பாலையும் சோற்றையும் குழந்தைகள் 

பாச்சி சோச்சியெனும் 
பொருத்தம் இல்லாச்சொல்லால் உரைசெய்தாலும் தள்ளப் 
போமே உங்களால் ஆமே திருத்திக் கொள்ள 
அரைச்சொல் கொண்டம்பலம் ஏறினால் மெள்ள மெள்ள 
அரைச்சொல்லும் முழுச்சொல்லாம் ஆகையால் இதில் உள்ள (பிழை ) 

மாகச படி நானே மங்களம் 

விருத்தம் - 6 
வருக்கும் தேவியர்க்கும் தேவ ரோடு 
முனிவர்க்கும் முன்னிந்தக் கதையைச் சொன்ன 
நாவருக்கும் தசரதற்கும் தேவி மார்க்கும் 
நற்றம்பி மார்களுக்கும் சீதை 

சீதை யோடு 
வ நக்கும் கோவருக்கும் அனுமான் மற்றோர் 
ஆழ்வார்கள் ஆரியர் ஐம் பனட அ னந்தன் 
மா வருக்கம் இதைப்படிப்போர் கேட்போர்க் கெல்லாம் 
வளஞ்சொல்வான் ராகவன்மங் களஞ்சொல் வேனே . --ஆதி தாளம் -அசாவேரி தாகம் 

பல்லவி 
ஸ்ரீராமச்சந்திரனுக்கு செயமங்களம் - 
நல்ல திவ்யமுகச் சந்திரனுக்கு சுபமங்களம் 

அநுபல்லவி 
மாராபி ராமனுக்கு மன்னுபரந்தாமனுக்கு 
ஈராறு நாமனுக்கு ரவிகுல சோபனுக்கு 

சாணங்கள் 
கொண்டல்பணி வண்ணனுக்கு கண் மங்களம் 
கோசலை குமாரனுக்கு வீரனுக்கு மங்களம் 
புண்டரீகத் தாளனுக்கு 
பூச்சக்கிர ஆளனுக்கு 
தண்டுளவத் தோளனுக்கு 
சானகிம ணாளனுக்கு 
கோவைமணி வாயனுக்கு மாயனுக்கு மங்களம் 
கோதண்ட கையனுக்கு மெய்யனுக்கு மங்களம் 
தாவுகுண சீலனுக்கு சத்தியவி லாசனுக்கு 
தேவர் அனு கூலனுக்கு 
தெசரதன் பாலனுக்கு 
பகிரண்ட நாதனுக்கு வேதனுக்கு மங்களம் 
பரதனாம் அன்பனுக்கு முன்பனுக்கு மங்களம் 
( ஸ்ரீராம ) 
( ஸ்ரீராம ) 

சகல உல் தருமந்த அகிலவி அயோத்தியா 
லாசனுக்கு 
காசனுக்கு 
லாசனுக்கு 
வாசனு பக்கு 
( ஸ்ரீராம் பாயிரம் முற்றிற்று . 

------------------
 
கம்பராமாயண ஒப்புமைப் பாடல்கள் 


இராம நாடகம் --பாயிரம் --அனுமார் தோத்திரம் 

வெண்பா -1 
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி 
அஞ்சிலே ஒன் றாறாக ஆருயிர் காக்க ஏகி 
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்கண் டயலார் ஊரில் 
அஞ்சிலே ஒன்றுவைத்தான் அவன் நம்மை அளித்துக்காப்பான் 

காப்பு - மிகைப்பாடல் 10 

பெருமாள்  தோத்திரம் -விருத்தம் -2 
உலகம் யாவையும் தாமுள வாக்கலும் 
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா 
அலகிலா விளை யாட்டுடை யார் அவர் 
தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே 

ஆதி யந்தம் அரிஎன யாவையும் 
ஓதினார் அல குள்ளன இல்லன 
வேதம் என்பன மெய்ந்நெறி நோன்மையான் 
பாதம் அல்லது பற்றிலர் பற்றிலார் 

பாயிரம் - கடவுள் வாழ்த்து 

ஒன்றாய் இரண்டு சுடராய் ஒருமூன்றுமாகிப் 
பொன் றாதவேதம் ஒருநான்கொடு ஐம்பூதமாகி 
ன்றாகி அண்டத்தகத்து ஆகி அப்புறத்துமாகி 
நின்றான் ஒருவன் அவன் நீள்கழல் நெஞ்சில் வைப்பாம் 
நீலமாம் கடல் நேமியந்தடக்கை 
மாலைமால்கெட வணங்குதும் மகிழ்ந்தே 

பராவ அரு மறைபயில் பரமன் பங்கயக் 
கராதலம் நிறைபயில் கருணைக் கண்ணினால் 
அரா அணைத் துயில் துறந்து அயோத்திமேவிய 
இராகவன் மலரடி இறைஞ்சி ஏத்துவாம்  

முத்தமிழ்த் துறையின் முறை போகிய 
உத்தமக் கவிஞர் கட்கொன்று ணர்த்துவென் 
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும் 
பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ 

தேவ பாடையின் இக்கதை செய்தவர் 
மூவ ரானவர் தம்முளும் முந்திய 
நாவி னான் உரை யின்படி நான் தமிழ்ப் 
பாவி னாலிது உணர்த்திய பண்பரோ 
 
நாராயணாய நமவென்னும் நன்னெஞ்சர் 
பாராளும் பாதம்பணிந்து ஏத்துமா றறியேன் 
காராரும் மேனி கருணாகரமூர்த்திக்கு 
ஆராதனைஎன் அறியாமை ஒன்றுமே 

இறுவ ரம்பில் இராமஎன் றோர்உம்பர் 
நிறுவர் என்பது நிச்சயம் ஆதலால் 
மறுவில் மாக்கதை கேட்பவர் வைகுந்தம் 
பெறுவர் என்பது பேசவும் வேண்டுமோ 

அன்ன தானம் அகில நல் தானங்கள் 
கன்னி தானம் கபிலையின் தானமே 
சொன்ன தானப் பலன் எனச் சொல்லுவர் 
மன்னி ராமன் கதைமற வார்க்கரோ 

ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு 
பூசை முற்றவும் நக்குபு புக்கென 
ஆசை பற்றி அறையலுற் றேன்மற்றிக் 
காசில் கொற்றத்து இராமன் கதையரோ 

நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற் றேன் எனை 
வைத வைவின் மராமரம் ஏழ்துளை 
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை 
செய்த செய்தவன் சொல்நின்ற நேயத்தே 

ஆதியாய் நடுவாகி முடிவுமாகி 
அண்டப கிரண்டமுமாய் அனைத்துமாகிப் 
போதினை ஆலினை வெள்ளிப் பொருப்பை விட்டுப் 
புகழ்பொறைகள் தருமமெலாம் பொலிந்து நல்ல 
நீதிசேர் அயோத்தியில்வாழ் தசர தேந்திரன் 
நெடியமா தவத்தினில்வந் துதித்தஎங்கள் 
சோதியா கியராமன் நாடகத்தைச் 
சுயஞ்சொல் வான் மகிழ்ந்து தோடயஞ் சொல்வேனே . 

எவரும் வணங்கிய ரகுராமன் எதுவும் நினைத்தது தருராயன் 
ரவிகுலசுந்தா செயராமன் நாடகத்தைச் சொல்லவே ஆஆ ! 
கவளநெடுங்கர தலசாமி கமலதிரியம்பகம் உளசாமி 
பவனிவரும்கெச முகசாமி பா தபற்பந்துணையே யெ செயா ! 

துணிவுள புசபெல ராவணே கரன்முடி பொடிபட மோதுமால் 
அணிபெறு தசரத ராமநா கமதுஉரைசெயவேவ ஆ ஆ ! 
திணிதரு புயமிரு நாலுசேரி திசைமுகன் இசைபெறு நாவில்வாழ் 
மணமிகு சரஸ்வதி பாத்தா மரை எனதுதுணையே செய் செயா ! 

கோனொடு வானவர் தேடவொரு கோசலை யாள்விளையாட வரு 
ஞானகிரு பாகர ராமகதை நாடகமா சொலவே ஆஆ ! 
வானவ னாம் மண வாளமுனி மாருதி நீர் கரு டாதிபதி 
சேனையர் கோனுடனே பதின்மர் சேவடிகள் துணையே செய செயா ! 

வாசவன்மாகாரொடு லோகாந்திர வாசிகள் பூசுரர் இவர் ஏகாந்த 
பூசிதராகவனிட ஆராய்ந்த புகழது உரைசெயவே ஆ ஆ 
காசினி மீதனில் மிகுமூடாந்த காரம் தோடவே வருதோந்த 
தேசிகர் தாமரை மலரே போன்ற திருவடிகள் துணையே செய செயா 

திருமகள் சானகிசேரும் வாமன் செயமொடு கோசலம் வாழும் நேமன் 
கருமணியே நி க : 21 கும் ராமன் கதையது உரை தெ GFS ஆஆ ! 
குருகையில் மேவிய காரிமாறர் குணநிதியாகிய பாஷ்யகாரர் 
மருளறு தேசிசர் மாசிலாத மலரடிகள் துணையே பெயசெயா 

மைக்கடல் வாய்விண்டு பொங்கவே வைத்தொரு பாணம் துரந்தமால் 
விக்ரமராமன் பிரபந்தம் ஆம் விந்தையது சொலவே ஆ ஆ 
பக்குவமாம் அன்பு கொண்டுவாழ் பத்தரை ஆளும் திறங்கள் சேர் 
சக்கர கோதண்டம் தண்டம்வாள் சங்கம் இவை துணையே செய செயா . 

அரசியல் கட்டியம் வசனம் 

அசோடாதிராசன் மகாதேசப் பி , க சன் 
ராச பரமோன் தேசநர மீசுரன் 
ராச மார்த்தாண்டன் ரணரங்கோத் தண்டன் 
ராச கெம்ரன் நேச சபீரன் 
பாஸ்கர குலதிரன் சிலாக்யமுள வீரன் 
புத்தியில் கஸ்பதி வித்தையில் சரஸ்வதி 
நயகுண சீலன் பாலன் 
நல்லார்க்கு மித்துரு பொல்லார்க்குச் சத்துரு 
சுசரிதசண நேசன் தசரத மகராசன் 
மனு நீதி கோணாமல் சனவேதை தோணமல் 
ஆறில் ஒரு கடமைகொண்டு மாறு டு பகையை 
திங்கள்மும் மாரிபெய்ய எங்கும் முப்போகஞ் செய்ய 
செங்கோல் முகம் சாயாமல் வெங்கோல் முகம் பாயாமல் 
பயன அறு தினாயிரம் வருஷம் பகவும் புலியும் ஒருதுறையில் நீர்உண் 
ராச்சிய பரிபாலனம் பண்ணின கீர்த்தியைச் சொல்லுகிற மார்க்கம் 
மகராசன் அசமகா ராசன் ஈன்ற 
மகராசன் மிகு சூரிய வங்கிச ராசன் 
சுகராசன் கௌசலைநா யகிகைகேசி 
சுமித்திரையாம் தேவியர்கை தொட்டராசன் 
மிகராசர் பணிந்திட இந்திரனைக் காத்த 
விசயதசரத ராசன் அயோத்தி வாழும் 
செகராசன் ஒருவன் மனு நீதி யாலே 
தேசமெல்லாம் ஒரு குடைக்கீழ்ச் செய்தாண் டானே -தரு -1 --சாவேரி ராகம் -திரிபுடை தாளம் 


பல்லவி 

ராசரா சர்க்கும் ராசன் - தசரத ராசன் இருந்தானே 
( ராச ) 

அநுபல்லவி 

தேச் திலகன் அ யோத்தி நகர்க் கொரு திலகன் ரவிகுல திலகன் ஆகவே 
( ராச ) 
சரணங்கள் 

செழிக்கவே 
ஒரிக்கவே 
மந்திர தந்திரமும் நித்திய நைமித்தமும் 
மகங்களும் தினம் 
வன்புலி யோடு பசுவும் ஓர் துறை நீர் 
உண்டு கொண்டு பயம் 
இந்திர பதமும் குபேர கனங்களும் 
எவரும் சிறிதென்று 
எங்கெங்கும் மூப் போகம் விளையவே 
திங்கள் தோறும் மும்மாரி 
பழிக்கவே 
கொழிக்கவே 
( ராக ) 
பாயாமலே 
நாலு வர்ணா சிரமங்களும் சொன்ன 
நடை புரண்டு 
நரர்க்கும் வேறுள உயிர்க்கும் வயதுகள் 
நடுவிலே 
கோலமாகிய மிருகமும் பறவையும் 
குறிகடந்து 
தேயாமலே 
மேயாமலே 

குடியில் ஆறிலொரு கடமை கொண்டுசெங் 
கோலின் முகம்  சாயாமலே 

(ராச ) 

மறுமங்கை யருக்கும் மறுமன்ன வருக்கும் 
மார்பும் முதுகும் கொடாமலே 
வளரும் அஷ்ட லட்சுமியும்தன் அர 
மனையைவிட்டடி எடாமலே 
அறுபதாயிரம் வருஷமும் ஏ காதிபத்தியம் விடாமலே 
ஆரும் மனதில் விசாரத்தால் ஆ ராய்ச்சி மணியைத் தொடாமலே 

சக்கிரவர்த்தி மக்கள் வேண்டி வருந்தல் 

இருந்த தசரத ராசன் நெடுநாளாய்ப் புவியா ண்டோன் இடையே இந்தப் 
பெரும் புவியை ஆள்வதற்கும் முத்தியிலே சேர்ப்பதற்கும் பிள்ளை காணேன் 
அருந்தவனே குலகுருவே குலகுருவே வதிஷ்டமுனி யேபிள்ளை அதைநான் காண 
வருந்துவதில் லா வகையை மொழியென் றான் இதற்கென்ன வழியென் றானே- 

பல்லவி 

நான் பிள்ளையில்லாத பாக்கியம் 
பெற்றிருந் தென்னசி லாக்கியம் 

அநுபல்லவி 

வள்ளலே சென்மமலடன் என் 
வசைகொண்டேன் தசரதன் நான் 
சுள்ளியானது நெடுகள் 
காய் உண்டோ கனிஉண்டோ 
றொருகாலே 
புவிமேலே 
ளர்ந்ததாலே 
அதுபோலே 
மறுவில்லாது இந்தசூரிய வங்கிசம் இது 
வளரும் வங்கிசம் 
ஆச்சே - இது 
மழைபேய்ந் தடிமறைந்தாற் போல என் 
மட்டிலே நின்று 
போச்சே 
அறுபதி னாயிரம் வருஷமும் 
வருந்தும் 
அரசுதான் இனி ஆரைக்கொண்டு திருந்தும் 
குறைவில்லாத அந்த சஞ்சீவி 
மருந்தும் 
கொடுக்கும் தெய்வமும் நீதானே கிடைத் திருந்தும் 
( பிள் ) 
ஆனேன் 
பெருக்கக் காண்பதே காண்பதல்லால் 
பெறுவதொன்றும் காணேன் - மிகு 
பிச்சர்போல நெடுநாளும் உண்டஉண்ட 
எச்சிலை உண்ணல் 
விருத்தன் நான் இனித்தவ சில்லே 
வேணும் அல்லாமல் புவி ஆள்வதும் சிறப் பல்ல 
இருத்தும் வாழையடி வாழையாய்ப் 

புல்ல 
இவன் மகன் இவன் ஆம் என்று சொல்ல 

( பிள் ) 
மோந்தால் முத்தியும் வரும் பரத்திலே 
முத்தியும் கூட 
வருமே - மேலே 
காய்ந்தால் உடம்பெங்கும் குளிருமே 
தழுவஇன்பம் தருமே 
வாய்ந்த பொன்னுலகளவும் போய்ச்சனி 
மண்டலமும் திருத்திக் கொண்டேன் 
புவிதனி 
ஏந்தினேன் இல்லையே ஒருபிள்ளைக்கனி 
என்னவீ டென்ன வாசல் 
எனக்கினி 
( பின் ) 
பெருமாள் சந்நிதியில் தேவர்கள் முறையீடு 
விருத்தம் -4 
மன்னவனாம் தசரதபூ பதியிவ் வாறு 
மக்களில்லாத் துன்பத்தை வதிஷ்ட னோடே 
சொன்னவுடன் அந்தமுனி வனும்தியானித்தான் 
சுரர்முதலா னவர்கள் மக மேருமேலே 
சின்ன அரக் கரைநடுங்கி வாழ்த்தும் போது 

சிறைக்கருடன் மீதினில் அச சுதனும் வந்தான் 
பொன்னின் மலர் அவன் பதத்தில் இறைத்தே கண்ணீர் 
பொழிகின்றார் அரக்கர் துன்பம் பொழிகின் றாரே --அசாவேரி ராகம் --ஆதி தாளம் 

பல்லவி 
கடைக்கண்ணால் இரங்கிப் 
காவாவிட்டால் இனிமேல் 
பார் அய்யா - பார்த்துக் 
ஆர் அய்யா 
( கடை ) 

அதுபல்லவி 
அடைக்கலம் என ஓட்ட 
ஆலைக் கரும்பு போல 
வந்தோமே - நாங்கள் 
நைந்தோமே (கடை ) 

சரணங்கள் 
சொர்க்காதி புவனமெல்லாம் 
துரத்தக் கும்பகர்ணன்தனை 
பக்கம் இந்திர சித்தென்னும் பெருங் 
பண்ணிவைத்தானே ராவணன் 
செக்குள்ளே அகப்பட்ட எள்ளுப் 
கைக்குள்ளே அகப்பட்ட எங்கள் 
தாவிக் - கொண்டு 
ஏவி - மற்ற 
கோவி ஆளப் 
பாவி போலே - அரக்கர் 
மேலே உனது ( கடை ) 


மெத்தத் அளகேசன் புஷ்பகம் கையிலே சூரியன்தேரும் 
தளர இந்திரனனக் கூடச் சருவகொள்ளை யடிக்கத் 
தனைவிட்டான் 
இலங் வரவொட்டான் 
சிறையிட்டான் - அரக்கன் தலைப்பட்டான் 
ஆமோ 
எளியோர்களை இப்படிஈனர் 
கிளியை வளர்த்துப் பூனை கிட்டக் 
ஒடுக்கல் கொடுக்கல் ஆமோ ( கடை ) 

பாவி அரக்கன் பேச்சே 
படைத்த பலங்கள் எல்லாம் 
பூவைவண்ணா அரக்கன் 
பொருப்பே அறியும்இனி 
மேலாச்சு - தாங்கள் 
மேல்பூச்சு - நல்ல 
கைவிச்சு . வெள்ளிப் 
ஏன் பேச்சு 

ராவணன் வதைக்கின் றான் எங்கள்மேல் என்ன கண்டோ 
தேவ நீ கேளா விட்டால் தீக்குத்திசை இன்னமுண்டோ ( கடை ) 

தேவர்களுக்குப் பெருமாள் அருளிப்பாடு 

 
இசையும்வா னவர்கள் கூடி இப்படிச் சொல்ல மாயோன் 
அசையும்வா ளரக்கர் தம்மை அகற்றுவோம் அஞ்ச வேண்டாம் 
தசரதன் மதலை பாகித் தரணியில் ளருவோம் கள் 
திசைதொறும் கவிகளாகிச் சேருமென் றுரைசெய்வானே -- 

அவதாரஞ்செய் அரக்கர் பயத்தை 

பல்லவி 

திடுவீரே 
விடுவீரே 
கனக 

அநுபல்லவி 
வாலியும் சுக்கி ரீவணும் ஆகிக் 
கண்ணா யிரவ னும்கதி ரோனும் போகி 
( அள ) 


சரணங்கள் 
சீலன் 
நீலன் 
காலன் 
பாலன் - 

ஆக 
அதிகமான ருத்திரன் அங்க சன் எனும் 
அக்கினி யேசேனைக் கதிபனான 
சதுர்முகப் பிரம்மாவே சாம்பவன் எனும் 
தரும்உ பேந்திரன் வாலிதனக்குப் 
சங்கமும் சக்கிரமும் சேஷனும்பரி 
தம்பியர் ஆய்வரத்தானே நாம்பூ 
துங்கனான தசரத ராசன் குறை 
சுருக்கா வருவோம் எவரும் அதின் முன் 
வானர வடிவாலும் மானிடவடி தானல்லா தரக்கன் சாகானே ஒரு 
ஆன படியினாலே அனைவரும்புலி கானிலும் இரும் காட்சி தருவோம் மென் 


வாகத் 
லோகத் 
போகச் 
பாகப் - போய் 


வாலும் 
காலும் 
போலும் 
மேலும் - எ ந்து 
 
பெருமாள் திரு அவதாரம் 

விருத்தம் - 6 


இவ்வகையா மாயவன் முன் நடந்த தென்றே 
எண்ணிமுனி கலைக்கோட்டு முனிவ னாலே 

அவ்வகையம் புத்திரகாமேஷ்டி தன்னை 
அயோத்தியா சனைக்கொண்டுசெய் வித்த போதின் 
பைவளரும் பாம்பணைமேல் பள்ளி கொள்ளும் 
பரமனே தசரதன்செய் பாக்கியத் தாலே 
மெய் வகை சேர் உலகெல்லாம் மனு விக்கியான 
விதிசெய்வான் அவதாரம் அது செய்வானே 


1) கௗலிபந்து ராகம் தி பல்லவி 
ஸ்ரீராமனாகப் பரப்பிரம்ம சொரூபமே பாரில் வந்தது பாரும் 
அதுால் ரவி வரத்தினால் அரக்கனர வானத்தில் ஏற்றவும் 
வானத்தில் தேவர்கள் மலர்மாரி தூற்றவும் ( பரட் ) சரணங்கள் தேற வேற

1. பத்தி முனிவன் கலைக்கோட்டு மா முனி பண்ணிய யாக பலன் 
சத்திய தசரதற் கறுபதினாயிரம் சம்வச்ர பலன் நிறை 
சித்திரை மாசம் நவமி கடகம் செழும் புனர் பூசம்தேன் 
ஒத்த கிரகங்கள் நால்வரும் பதினொன்றில் உச்சத்தில் ஐவரும் - ஆதி ஊற ( பரப் ) சேர



2. சீராரும் லட்சுமணன் சத்துருக்கன் சுமித் திரை வயிற்றில் நின்று பேர 
பாரார் புகழ் கைகேசி வயிற்றில் நின்று பரதன் வந்து புவி 
ஆராலும் கொள்ளாத ஆனந்தம் மேற்கொண்டு அம்புவியோர் இடர் தீர 
காராரும் குழல் வல்லி இருவர்க்கும் மேலான கௌசலைக் கண்களி கூர - ஆதி ( பரம் ) முடிக்க படிக்க


3. தேவர் முனிவர்பகை தீர்ந்தோம் என்று சென்னியில்பூந் துழாய் 
பூவுல கத்துள் வேதியர் எல் லோரும் புகழம்வே தாகமம் 
பாவி இலங்கையின் மேல் சூரியன் தேரிலுள்ள பச்சைப்பரி ஏழும் 

னாத இருக்கின்ற ராட்சதர் 
யாவர்க்கும் இடக் கண்கள் துடிக்க - ஆதி 
நடிக்க 
ராவண ( பரப் ) 

கௌசிகர் இராமனைக் குறித்துக் கேட்குதல் 

விருத்தம் - 7 
மைந்தர் இவ் வாறு வந்து வதிஷ்டனால் பேரும் பெற்றார் 
அந்த நாள் விசுவா மித்திரன் அணிதச ரதன் முன் வந்தான் 
இந்த நாள் எனது வேள்வி இராமனால் முடியவேணும் 
தந்திட இது நல் வேளை தாவென்றான் காவென்றானே 


தரு - 6 -மோகன ராகம் -அடதாளச்சாப்புத் தாளம் 

பல்லவி 
செகரட்சக 
ராமனைத் தருவாய் 
ராமனைத் தருவாய் ( ராம ) 

அநுபல்லவி 
தசரதேந்திரா 
தாமசம் செப்பாதே 
இப்போதே (ராம ) 


சரணங்கள் 
அரன்பக்கம் செல்வேன் 
அரிமுன்னே சொல்வேன் 
ரண்டும் தப்பினால் உனைவிட் டெவரால் பகை வெல்வேன் ( ராம ) 

பாவி வேள்வி தாடகைப் தவிர்த்தாள் என் 
பீடைவராமற் காத்தாற் பிழைக்குமென் 
ஆவி ( ராம ) 
( ராம ) 

உம்பர் விசாரம் ஒழிக்க அந் நேரம் 
சம்பர னைக் கொன்றாயே தயவாய் இந் நேரம் 
4. கோபத்தில் ருத்திரன் 
(சருவிசுவா மித்திரன் ஆபத்துக் காக்க வேணும் 
அதனால் உன் புத்திரன் (ராம ) 

சக்கிரவர்த்தி அதை மறுத்தல் 

விருத்தம் - 8 
சொல்லிது முனிவன் சொல்லத் துடித்தனன் தசர தேந்திரன் 
சில்லிது வேள்விக் காகச் சிறுபிள்ளை ராமன் ஏன் தான் 
சல்லியம் செய்யும் அந்தத் தாடகை தனைநான் கொல்வேன் 
பல்பல உரையேன் திராணி பார் என்பான் நேர் என் பானே . 
 
பல்லவி 
ராமன் இதுக்கோ அவன் வர 
நான் வருகிறேன் 
வேணும் 
காணும் (ராம ) 

அநுபல்லவி 
பூமி அரச னென்று நான் இருந்தென்ன 
சாமி.அவன்கை ஏந்துகுழந்தைப் கொள்ளை பிள்ளை ( ராம ) 

சரணங்கள் 
1. ஏனிந்த தோத்திரம் - தாடகை 
எனக்கெம் மாத்திரம் 
வானுளோர் வந்து தடுத்தாலும் அடிக்கிறேன் 
நானே வந்துன் வேள் வியை முடிக்கிறேன் (ராம ) 


2. பேயைக் கொல்வ தரிதோ - காரியம் 
பெரிதோ வீரியம் பெரிதோ 
ஆயுதம் பிடிக்கறியான்கேளாய்ஒரு சொல்லை 
வாயில் முலைப்பால் மணம்மாற வில்லை (ராம ) 

3. கவலை ஏன் கொண்டாய் - என் முன் ஒரு 
காலும் வராள் கண்டாய் 
அவளையும் படையையும் அடிக்கிறேன் பாராய்பாராய் 
இவனால் என்ன எழுந்திரு வாராய்வாராய் ( ராம ) 


வதிஷ்டர் தகவுரைத்தல் 

விருத்தம் - 9 
இனமதில் அயோத்தி வேந்தன் இதுசொல்ல விஸ்வா மித்திர 
முனிவனும் கோபம் செய்தான் முன்னின்ற வதிஷ்டன் கண்டான் 
உனதுமைந் தனுக்கு மன்னா யோகநாள் வந்த தென்று 
கன மு ... ன் விரித்துச் சொல்லிக் காட்டுவான் கூட்டு வானே 

முரி ராகம் ஆதி தாளம் 
பல்லவி 
மோசம் வாரா தைய்யா நான் சொன்ன வார்த்தை 
மோசம் வாரா தைய்யா 

அநுபல்லவி 
கோசிகன் பின்னே ராமனைக் 
கூட்டி விடுவாய் சொன்னேன் ( மோச ) 

உப்பு நீர் மேகம் சேர்ந்தால் உலகிற்பிரவாகம் 
அப்படிஉன் மகனுக்கு அடித்ததே யோகம் ( மோச ) 
றுவுண்டோ வதிஷ்டன்சொல் வாத்தைக்கும் ரண்டோ 
பொறு பொறு முளைப்பாரைப் புதைப்பாரும் உண்டோ ( மோச ) 
போதிக்க வேண்டாம் நாள் சொல்வதே லேம் 
ஆதித்தன் குலத்திற்கின் றனு கூல ( மோச ) 

கௌசிகர் இராமனுக்கு நீதி சொல்லுதல் 
விருத்தம் - 10 
முனிவ நிஷ்டன் இவ்வாறு சொல்ல வேந்தன் 
முறையாலே ராமனைலட் சுமண னோடே 
இனிதழைத்துக் கூட்டி விட்டான் வழிக்கிவேண்டி 
இருவரும்மந் திரங் கொண்டார் வெயில் படாமல் 
தனிநடந்தார் வேள் வியில் தா டகையும் வந்தாள் 
சாமியும் பெண் என நினைந்தான் முனிவன் அந்த 
நினைவறிந்தான் பெண் இவளோ அல்ல ராமா 
நில் என்றான் இப்பொழுதே கொல் என்றானே 
 
கலியாணி ரகம் -ஆதி தாளம் 
பால் சவி பெண் இவள் அல்ல 
வண்ணங் கெசண்டநமன் இவள் 
மண்ணில் மெத்த உயிரை வதைத்த நிர்ம் 
கண்ணில் கண்டது கோடி காணாத னந்தம் கோடி ( பெண் )  

சரணங்கள் 
இஷ்டமா முனிவர் என்றொரு திருக்கும் கடலுக் கிவள் பெருத்தமந் 
ஷ்டகாசம் செய்தால் அதுவொரு அண்டகூட மெங்கும் இடியுமே 
எட்டுத் திசையிலும் ஓடி முட்டுமே 
முட்டினால் மலையும் பிளந் திட்டுமே 
எட்டியும் பார்க்கக் கூடுமோ கிட்டி ஒரு 
விட்டு நான் சொல்ல வேணுமோ மட்டில்லாப் 
இவள் ஆதாளி 
தூளி தூளி 
காளிகூளி 
பாவசண்டாளி ( பெண் ) 

ஆயிரம் குணம் ஒரு லோப குணத்தால் தட்டும் 
அதுபோல் இம் மருதத்தை அழித்தாலும் அழிக் கட்டும் 
இவள் பேர் சொன்னால் முனிவர்க்கும் பல்லு கிட்டும் 
வற்றல் என்றெம் மைத்தள்ளி வைத்தாலே இம் மட்டும் 
தூயதிசையானை எட்டும் ஈயெறும் பாய் விழக் காட்டி 
வாயில் ஒருபல் லிடுக்கிலே அடக்குவாளே கூட்டி 
தீயவடவாக் கினிபோல் பாயுவாள் கைகளை நீட்டி 
பேயையும் பிடுங்கித் தின்னும் பேயென வந்த வெள் ளாட்டி ( பெண் ) 
3. ஒரு குமதி யென்னும் பெண்ணைப் பிளந்தான் இந்திரன் அப்போது 
ஒரு பெண் கிய தியை மாயன் ஒழித்தானே 
புவிமீது பெருமானே இவள் அந்தப் பெண் எனவும் கூடாது 
பெண் என்றால் பேயும் இரங்குமே அதிவ ரூக்கேது 
இருடிகள் உடம்பை மெத்த உருகை என்று கண்டுகொண்டே 
பெருமகம் செய் வோரைக் கொல்ல வருகிறாள் இதென்னமுண்டே 
நிருதி இவளைப் பெண் ணென்று கருதுகிறாய் என்ன கண்டோ 
ஒரு நொடியில் கொல்ல வேணும் குருமொழி தனக்கும்ரண்டோ ( பெண் ) 


தாடகை முதலானவர்கள் வதம் 
 
செய்தி களை இவ் வாறுரைக்கச் சிரமேற் கொண்ட ரகுராமன் 
வெய்து வணங்கிக் குருவிசுவா மித்திரன் சொல்லே வேதச்சொல் 
மையம் எனவே மகங்காக்க வரிவில் வளைத்தான் தாடகையும் 
எய்த பாணம் பட்டுருவி எழுந்தாள் மலைபோல் விழுந்தாளே 

 
நாமநாதக்கிரியைராகம் -அடதாளசாப்புத்தாளம் 
பல்லவி 
பொல்லாக் கொடிய தாடகை பா வி விழுந்தாள் 
கொடிய தாடகைபாவி விழுந்தாள் ( கொடி ) 

அநுபல்லவி 

கொடிய தாட கைபாவி விழுந்தாள் - செம்பொன் 
முடியன் ராவணன் வெற்றிக் கொடிவிழுந்தாற்போல் ( கொடி ) 

சரணங்கள் 
 
காலன் உரைத்த தேவர் துன்பம் 
ஒருக்காலும் காணாத ருசிகண்டு 
அரக்கர் ஆதிக்கங்கள் அனுகூல காலங்கள் முனிவர்க்குப் 
பறக்க 
இறக்க 
நல்ல ( கொடி ) 

மூதண்ட கோடிக்கப் 
முழங்கவிசுவாமித்திரன் சாலைக்கிய 
கோதண்ட பாணியம் 
குலைந்து புரண்டலறிக் கொண்டு மட் 
பாலே 
பாலே 
நிலை ( கொடி ) 

நடலை வஞ்சனை மாயம் 
நான் கொண்டு முதற்பலி அரக்கரைக் 
கடின சுவா குபட்டுப் 
கணையாலே மாரீசன் கடலோட்டம் 
படுக்க - ராமன் எடுக்க ( கொடி ) 

அகலினக சாபவிமோசனமும் சரித்த்ரமும் விருத்தம் - 12 
தாடகைதான் விழுந்தபின் தேவர் சொல்லச் 
சகலபடை . கரும் கொடுத்தே முனிவர் எல்லாம் 
கூடவரக் கௌசிகையே முதலாம் தீர்த்தம் 
கொண்டாடிக் கௌதமன் ஆ சிரமம்சேர் போதில் 
காடதிலே ரகுராமன் பதத்தூள் சிந்தக் 
கல்லுருப் போய் நல்லுருளாய் விளங்கிநின்ற 
பாடகக்கால் அகலிகையை இவள் ஆர் என்னப் 
பரந்துவிகவா மித்திரமுனி பகர்கின் றானே , 
 
தேவி இவள் ராமா கௌதமன் 
ஆவி இவள் ராமா ( தேவி ) 
 
சரணங்கள் 
மாபத்தியால் கங்கை ஆடத்தடை 
மாமுனிகண்டு வெகுண் டுபயஞ் 
கோபத்தினால் இடு சாபமொழி 
கூறையிலே கரும் பாறைவடி 
பெற்ற 
சுற்ற 
மெத்த 
வுற்ற ( தேவி ) 

வெம்பிய மாமுனி கண்ணில் எதிர்ப் பட்ட 
வேளையிற் கண்டு பொறாமல் முனி திட்ட 
அம்பொன் முடிதொட் டடியளவும் முட்ட 
ஆயிரங்கண் அந்த வாசவனுக் ( தேவி ) 

கெந்த ஞானத்தினால்உன்னை ஓதினபேர்க் 
நன்மையுண் டாமோ அறி யேன் இப்போ திந்த 
கானத்திலே உந்தன் பாதத் தூள்கள் 
கல்உரு மாறி அகலியை யாய் வந்த 
சிந்த ( தேவி ) 


ஸ்ரீராமர் சீதையைக் கண்டு ஐயுறல் 
விருத்தம் - 13 
இட மாம் விசுவா மித்திரன் இந்தச் சேதி உரைக்க லட்சுமண 
னுடனே நடந்து மிதிலையிற் போய் ஒரு மா மணிமேடையில் சீதை 
மடவாள் காணத் தனையந்த மயிலைத் தானும் ரகுராமன் 
கடல்வாய் வருசெந் திருவெனவே கண்டான் விரகம் கொண்டானே 

பல்லவி 
ஆரோ இவர் யாரோ - என்ன 
பேரோ அறியேன் ( ஆரோ ) 


அநுபல்லவி 
கார் உலாவும் சீர் உலாவும் மிதிலையில் 
கன்னி மாடந்தனில் முன்னே நின்றவர் ( ஆரோ ) 

பண்ணிப் பதித்தாற் போல் இரு பாங்கியர்கள் இன்ன முந்துரைத் 
எண்ணத்தாலும் வண்ணத்தாலும் 
பெண்ணைப் போல் கண்ணிற் காணும் 
ஸ்தனமும் -- 
தனமும் 
பங்கயப் 
மங்கையார் ( ஆரோ )

சனமே- அதிங்கே 
மனமே 
பெண்கள் 
கண்கள் ( ஆரேயா ) 

பாக்கியம் என்ப திவர் தெரி 
பலித்ததென்ன புண்ணியமோ 
மூக்கும் முழியும் தீர்க்கமாய் இன்னமும் 
பார்க்கப் பார்க்க நோக்கம் கொள்ளுமோ 
சந்திர விம்பமுக தானே பார்க்கிறார் 
அந்த நாளில் தொந்தம் போலே 
இந்த நாளில் வந்து சேவை 
மலராலே - என்னைத் 
ஒருகாலே 
உருகிறார் 
தகுகிறார் ( ஆரோ ) 

கௌசிகர் ஸ்ரீராமர் வரலாறு சொல்லுதல் 

விருத்தம் - 14 
மனதில் இந்தப் படி நினைந்து மறுநாள் எழுந்து மகஞ்செய்யும் 
கனக மணியன் டபத்தினிற்போய் காகுத்தனும் தம்பியு மிருந்தார் 
அனைய காலத் திவர்பெருமை அருமை தெரிய உரையு மென்றே 
சனகன் உரைப்பக் கௌசிகன்உத் தரிப்பான் விவரம் விரிப்பானே . 


பல்லவி 
( ஆரெ ) ரென் றெண்ணாமலே - நாளுமிவன் 
அதிசயங்களைச் சொல்லக் கேளும் 

அநுபல்லவி 
சூராதி சூரன் ராமன் எனும் பேரன் 
சுகுண தீரன் ரவிகுலகு மாரன் - இவனை ( ஆரெ )  
சியில் தசரதன் புத்திர காமேஷ்டி யாகம் செய்ய வென் 
பூதந் தந்தபர மானந்தத்தை நாலாகப் 
பொன்னின் கமலத்திலே 

எடுத்தான் அதில் 
சோதி கோசலைக்கொன்று கைகேசிக்கொன்றும் 
சுமித்திரைக் கிரண்டுமாக் கொடுத்தான் மூத்த 
பேதை கோசலை இடந்திந்த ராகவன் 
பிறந்தான் என்கவலையை விடுத்தான் வனை ( ஆரெ ) 
நான் தலையாம் பரதன் லட்சுமணன் சத்துருக்கன் 
தம்பியர் இவனுக்கு 
நேயம் மிகக் கொலையாளன் சுவாகுவையும் சேனையையும் இவனம்பு 
கொண்டுபோனதென்ன மாயம் - 
உலையா தென்வேள்வியை முடித்தானே இவனம்பால் 
உருண்ட தே தாடகை காயம் 
மலைபோலே வந்ததும் பனிபோலே போச்சிந்த 
மகராசன் செய்தச காயம் இவனை ( ஆரெ ) 

துரத்தும் சாபம் அகலிகைக்குக் காலினாலே 
துடைத்தானே அவள் உடல் 
சொல்லும் 
பெருக்கம் என்ன . இவன் பிறக்கவே உலகெங்கும் 
பிறந்ததே மங்கல ஓசை - உங்கள் 
பருத்தவில் இவன் கைக்குப் போதுமோ போதாதோ 
பார்க்கவேணும் இன்னோர் 
ஆசை இங்கே 
வரச் சொன்னாலும் வரக் கிடைக்குமோ வலிவிலே 
வந்தானே நீங்கள் செய்த பூசை எனை ( ஆரெ ) 

ஸ்ரீ ராமர் வில்வளைத்தல் 

புங்கவனாம் முனிவனிந்த வாறு சொல்லப் 
போர்வில்லை அறுபதினா யிரம் . பேராலே 
அங்குவரும் படி செய்தான் இதைநாண் ஏற்ற 
ஆகுமென்றால் மருமகனே ஆகும் என்றன் 
சிங்கமெனும் சனகனுடன் விண்ணும் மண்ணும் 
திடுக்கிடவே எல்லோரும் ராமன் கையால் 
துங்கமுள்ள அந்தவில்லை வளைவு காணத் 
தொடக் கண்டார் இரண்டுதுண்டாய் விடக்கண் டாரே 

பல்லவி 
வில்லானது ரண்டாய் ஒடிந்து விழுந்ததே பாரில் ( வில் ) 

அநுபல்லவி 
கலியான ராமன் அனகன் கையால் 
மிதிலையில் வாழ் சனகன் ( வில் ) 


சரணங்கள் 
சுத்திப்பெறும் முனிலோர்கள் மங்கள சோபனங்கள் கூற 
பத்துத் திசை வானவர் எல்லோரும் பனிமலர்மாரிகள் தூற 
சித்தப் பிரமையாலே நாலிரு திசையானைகள் தலை பீற 
கத்திப் பிடியிடையாள் சானகி காதலெண்ணம் நிறை வேற ( வில் ) 

சிங்கார மகா ரவிகுலமே சிலாக்கியம் என்ன ஒளி வீச 
உங்காரம் செய்தரசர் எல்லோரும் ஒருத்தர் போல முகம் 
இங்கே பெண் சீதை செய்தவப்பலன் லபிச்சுதென்று பலர் பேச 
கெங்கா தரனல்லால் ஒருவருக்கும் கிளப்பொண்ணா தமகாப்பிர யாச ( வில் ) 

தருமாகம சாஸ்திரகோடிகளும் சகல வேதங்களும் 
வருமா முனிவிசுவாமித்திரன் சொல் மறுவில்லாதபடி 
ஒருகாலனும் இந்தஓசைதனை ஓர்க்கொணாமல் செவி 
திரமா இனி இவனே கோ தண்ட தீட்சா குரு என்று கொண்டாட ( வில் ) 


மிதிலைக்குச் சக்கிரவர்த்தியின் எழுச் 
நண்ணரிய வில்லது நாண் ஒடிந்த பின்பு 
நடைத்தூதர் கலியாண ஓலை காட்ட 
அண்ணல்எனும் தசரதனும் பயண பேரி 
அதுமுழங்கத் தேவியரும் படையுங் கூடத் 
தண்ணுலவு சந்திரகிரி பிறவும் சென்றான் 
சனகேசன் சதுரங்க தளத்தி னோடே 
எண்ணரிய களிப்பாக வழிமேற் கொண்டே 
எதிர் வந்தான் உடன்மிதிலைப் பதிவந் தானே . 
 
பல்லவி 
சனகமகா ராசனாம் தசரத ராசன் 
ராசன் பதிக்கு வந்தானே ( ராச ) 
அநுபல்லவி 
வாசவன் பணிராக 
வாசகம் கண்டுவிசு 
வேசன் கல்யாண ஓலை 
வாசநேசம் உண்டாகி ( ராச ) 


சரணங்கள் 
கொட்டமிடுங் கெசமும் 
அட்டமிடுந்துசமும் 
எட்டிய குதிரையும் 
கட்டிய தேர் நிரையும் 
இட்டமுள்ள ராசரும் 
அட்டாள தேசருமாய்ப் 
பட்டவர்த்தனர் 
ணங்க கப்பணம் 
இட்டு மறவர் 
வணங்க 
வட்ட வெண் குடையும் முடிகளும் துலங்க 
மகர தோரணங்கள் முறை முறை லங்க 
சட்டபான திசை எட்டின் மேலும் படை 
மட்டில்லாமல் 
கட்டியம் 
பெண்கள் 
கொண் 

உச்ச மாணிக்கத்தாலே அச்சுதன் தாய்முதலா 
இச்சையால் முன்னேபோ தச்சபல்லக்கின் மேலே 
மெச்சிய தேவிமார்கள் கச்செய்து பின்னாகவே பாங்கியர் 
பச்சைப் பைங்கிளி மொய்ச்சுக் கொண்டு என்னவே துன்னவே 
வச்சிர பாணி என்ன மலர் முகம் மின்னலே 
பண்ணும் விண்ணும் என்ன அதிசயம் என்னவே 
உச்சி மீது கரம் வைச்சு மன்னவர்கள் 
பேச எச்சரிக்கை கவரி  வெகுவி 


மெத்தப் பெருஞ்சேனைகள் 
சத்த மேகம் போல் ஆர்க்க 
சத்திர பதி சனகன் 
முற்றிய கடல் 
மற்றொரு கடல் 
சுற்றத் துந்துமிபேரி 
அத்திசையிலே நின்று 
நெற்றிநேராகவர 
மேலே புகுந்த 
போலே கலந்து 
மலர்ந்து 
பத்தியாக இரு படைகளும் 
பார்த்திரண்டுராசரும் முகம் 
வெற்றி ஏறியபு சத்திலே 
ஒற்றியணைத்து அவனை மிகுந்த 
மாற்றி 
கீர்த்தி 
மூர்த்தி 
யோத்தி 
படைத்த ( ராச ) 


ஸ்ரீராமர் பவனிவருதல் 

வந்ததச ரதராசன் தன்னை முன்னே 
வந்திருந்த ராமனும் தம் பியும் போய்க் கண்டார் 
அந்த இரு வருந்தந்தை அருளைக் கொண்டார் 
அரசர் இரு வரும்பின்னே வரமுன் சென்றார் 
பந்தமுள்ள மிதிலை வீதியிலே தே மேல் 
பவனி வரும் ராமனைக்கண் டாசை கொண்டு 
செந்திருவை நிகரான பெண்கள் பின்னே 
செல்லுவார் மதிமயங்கிச் சொல்லுவாரே 

வெகுமாதர் சோதி நெடுந் தேர்மிதிலை வீதியினில் வரக் கண்டு 
சுவாமி முகம் காணவந்தார் 
பூதலந் தனில் இந்தவூர் மாதவம் என் செய்ததோ புண்ணியன் வந்தான் என்றார் 

வெகுமாதர் 
ஆடகலோகத்தமுதை ஈக்கள் மொய்த்துக் கொண்டதைப் போல் 
ஐயனை மொய்த்துக் கொண்டார் 

வெகுமாதர் 
கோடைதனிலே தண்ணீர் ஓடைகண் ! - மான்கள் போலக் 
கூடிக் கொண்டோடி வந்தார் 

வெகுமாதர் 
ஆழியும் வளையும் செம்பொன் ஓலையும் மாலையும் விட்ட பின் 
ஆடை விடாமல் நின்றாள் 

ஒருமாது 
கேள்வி முறை யில்லையோ சுவாமி உன் முன்னே : அம்பாலே 
கிழிக்கின்றான் மாரன் என்றாள் 

ஒருமாது 
பெருத்த மலைபோல் வில்லை ஒடித்தாயே சீதைக்காக 
பெலத்தவன் நீயே என்றாள் 

ஒருமாது 
வருத்தமோ மாரன் கையில் கருப்பு வில்லை ஒடிக்க 
மாட்டாயோ சுவாமி என்றாள் 

ஒருமாது 
கண்ணுக்கோர் உருவாய்ப் பார்ப்போர் கண்ணிலெல்லாம் தோன்றுமிவன் 
கண்ணனே யாகுமென்றாள் 

ஒருமாது 
மண்ணும் விண்ணும் கடந்தானை கண்ணால் வளைத்துக் கொண்டாளே 
வைதேகியே பெண்ணே என்றாள் 

ஒருமாது 
சாய்த்தொருவரையும் காணாள் சாமிதனையே கண்டாள் 
தனியனோ ராமன் என்றாள் 

ஒருமாது 
வார்த்தையும் உடைமைகளும் பூந்துகிலும் சோர்ந்தாளுயிர் 
மாத்திரம் சோராமல் நின்றாள் 

ஒருமாது 
இங்கேயென் உளம் புகுந்தால் கண் கதவினாலே மூடி 
இறுக்குவேன் இவனை என்றாள் 

ஒருமாது 
மங்கையரே என் மனது வள்ளல் பின்னே போச்சு தங்கே 
வரக் கண்ட துண்டோ என்றாள் 

ஒருமாது 
தன் மருக னாக இந்த மன்னனைப் பெற்ற சனகன் 
தர்மவான் என்று சொன்னாள் 
கன்மனதுக் காரனிவன் தன் மகளுக்காகவில்லை 
ஏன்வளைக்கச் சொன்னான் என்றாள் 

ஒருமாது -சீதை சபாமண்டபத்துக்கு வருதல் 

பாவையர் இப் படியுருகப் பவனி வந்தான் 
படையரசர் தசரதனும் பலரும் வந்தார் 
மாவிசுவா மித்திரனுடன் தம்பி மாரும் 
மருங்கிருக்க ராகவனும் இருந்தான் இப்பால் 
தாவு புகழ் வதிஷ்டமுனி வார்த்தை கொண்ட 
சனகன்உரை கொண்டு மணி மண்ட பத்தில் 
பூவுலகில் தேவர் சிறை மீட்க வந்த 
பொருளினால் சீதையெழுந் தருளி னாளே 

பல்லவி 
அன்னை சானகி வந்தாளே ராசாதிராசர் 
அனைவர்க்கும் காட்சி தந்தாளே ( அன் ) 

அநுபல்லவி 
கன்னிமார் என்னும் தாரா கணத்தில் சந்திரனை நேரா 
பொன்னின் ஒளியும் பூமணமும் கொண்டு தொடர்ந்து 
மன்னன் சனகமணி மண்டபத்தில் நடந்து ( அன் ) 


சரணங்கள் 
சுந்தரப் பாதம் வைக்கவே 
சோதி நிலத்தில் மொய்க்கவே 
தந்தாய் மகளுக் கென்னவே 
தளிர்போல எங்கும் மின்னவே 
அந்த அமிர்தங் கொண்ட ஆகிய ராமர் முன்னே 

ரத்தினச் சிலம்பின் பூமியாகிய விரித்ததேமாந் 
இந்திரன் போலே தாகம் தோகையர் நடுவாக 
கந்தமலர்க் கைவளைச் சோதியினாலே ரண்டு 
கடைக் கண்கள் கொண்டு ராமன் 
வடிப்பங்கள் கண்டு கொண்டு ( அன் ) 
இடும்போதவன் 
அம்மன்கையான 
காட்டும் சூரியன் போல் 

வீரராமன் கை தீண்டியே 
மென்கை பிடிக்க வேண்டியே 
வாரீச மலர் விரித்துக் 
மாணிக்கக் கங்கணம் தரித்து 
சோர நடைகண்டு 

துவளும் அன்னங்கள் போலக் 
ஸ்ரீராமனை விடுத்து 

தெய்வம் இவள் என்றெண்ணிக் 
கைகள் அஞ்சலி செய்ய 
நேராகாமல் மெத்த 
கவரி மங்கையர் சுற்ற 
ஆர் ஆருக்கும் துய்ய ( அன் ) 
பூர்ணச் சந்திரன் போல் மாலிகைசூடி தேவர்கள் செய்த னாலே 

சீவிய கூந்தல் மேலே தெரிந்திட ஒருக் 
காலே தரவில்லாமல் முன் 
தவம் வெளி வந்தாற் போலே 
மூவுலகும் செலுத்தும் 
முத்தி கொடுக்க வந்த 
தேவி இவள் என்றால் 
சிலையோ ஒடி 
மலையும் ஒடிப்பான் என்ன 
ராவணனுக்குப் 
பண்டு 
சித்திரவடிவைக் கொண்டு 
ராகவன் இந்தச் சின்ன உப்பான் ஏழு ( அன் ) 

சொல்ல என்றாலும் இந்திரா ணி முதல்  ராமனும் காண 
நாணுமே 

தெரிசனம் காணப் போகுமோ சேஷனாலேயும் ஆகுமோ 
அரிவையர்க்கும் மெய் அனந்தம் கோடிக்கண் வேணுமே 
பிரமன் முதல் எதுவும் உருவினில் இனிவேறு 
அருமையா உலகிற் கல் திருமங்கிலியத்தில் இடும் 
பெற்றவளுக்கு நல்ல உடைமைகள் என்னசொல்ல 
யாணத்திற் பெண்கள் திருவாகிய எங்கள் ( அன் ) 


ஸ்ரீ ராமர் மணக் கோலம் கொள்ளுதல் 

விருத்தம் -.19 
சீலம் கொண்டிப்படி வந்த சீதை மாதரொடும் சென்றாள் 
மூலங் கொண்ட கௌசிகனும் முகுர்த்தம் நாளை என்று சொன்னான் 
ஓலங்கொண்ட வேதன் முதல் ஓராயிரத் தெட்டண்ட மும்தன் 
கோலங் கொண்ட ராமன் மணக் கோலங் கொண்டான் கொண்டானே 
ராமசாமி கொண்ட கோலம் என்னாலே சொல்லப் போமோ 

அனுபல்லவி 
கோமிதிலை ராசன் முன் அனேக  கோடி மன்மதனே நிகராக 

சணங்கள் 
பாத சடகம் சேர்த்திரு மருங்கினில்  பசும் பொன்னாடை  போர்த்தி மார்பின் 
மீது பொன்னூல்  ஏற்றிதன் நாமமும்  விளங்கவே  சார்த்தி 
சீதை ஆசையிது  எனப்பா ராட்டி தெரிந்த சந்திர சூரியர் 
அதை நாட்டி ஓதிமாறு காதிலே ஒளிக் காட்டி குண்டலங்கள் பூட்டி (ராம ) 

வரித்து நவரத்தின தொங்கள் மாலை 
பரித்து முடிமேல் விமல மகுடம் 
தரித்து பீதாம்பரம் மேனிமேலே கமல மாமலர் நாண 
கங்கணங்கள் செங் கையினிற் பூண 
அமிர்த முகச்சீந்திரன் போல் முகங் காண 
யோககல் யாண் வன்ன வன்னம் ஆனமணிகள் 
பச்சை மேகம் போலே காந்தி விளங்கும் மேனியிற் கலவை ஏந்தி (ராம ) 

வாகுமந்தர கிரிமுறுக் வாசுகீஎன மணிவகை 
நாகரீக கேயூரம் ஒளி வீரகோ 
குண்ட 
கொண்ட 
மண்ட 
தண்ட 
லியாணச் சடங்கு செய்தல் 
 
சக்கிரபதி ஆகிய ராகவன் இவ்வாறு 
சமைத்தநல்ல மணவாளக் கோலங்கொண்டான் 
அக்கணமே தம்பியரும் கோலங்கொண்டார் 
அரசர்களும் தசரதனும் மந்திரிமாரும் 
திக்கில் உள்ள முனிவரும்வே தியருங்கூடித் 
திரைகடல்போல் மிகப்பொங்கி மிதிலைதன்னில் 
முக்கியமுள்ள பலசடங்கின் விதிகள் எல்லாம் 
முறைசெய்தார் கலியாணத் துறை செய்தாரே 


கண்ணிகள் 
கல்யாண பேரிகை அடித்தார் - சனகன் 
சொல்லிய வார்த்தையைப் படித்தார் 
எல்லோரும் ஆனந்தம் கூடினார் - அவர் 
எங்கெங்கும் நின்றுகூத் தாடினார் 


வாழை கமுகுகள் நாட்டினார் - நெடு 
வானமட்டும் பந்தல் ஓட்டினார் 
ஆழிபோலே திரை அமைத்தார் - அலங் 
கார வேதிகை சமைத்தார் 
தூணுக்குத் தூண்உறை பூட்டினார் - சந்திர 
சூரியர் போற் கண்ணாடி மாட்டினார் 
காணுக்குச் சாண்மாலை தொடுத்தார் - தங்கத் 
தாலமும் கும்பமும் எடுத்தார் 

பொன்னரி மாலைகள் பொன்னும் பவளமும் கின்னரி வீணைகள் 
கேளிக்கை மாதர்கள் வீக்கினார் - முத்தும் தூக்கினார் மெத்த 
பாடினார் ஆடினார் பூரண கும்பங்கள் பூசுரர் வேதத்தால் 
தோரணத் தால்வெளி சொர்ண வருஷமா பதித்தார் முக்கிய 
துதித்தார் மறைத்தார் - எங்கும் இறைத்தார்  

மாணிக்கத் தீபங்கள் வாடை கஸ்தூரிகள் ணிப்பொன் னாடைகள் 
ஆலைத் தெருவெங்கும் ஏற்றினார் நல்ல தீற்றினார் சாத்தினார் -பனிநீர் ஊற்றினார் 
தீட்டினார் - பஞ்ச 
நாட்டினார் 
கூட்டினார் - நறுந் 
காட்டினார் 

சந்தனத்தால் கோலம் தருவையும் நன்றாக  சுந்தரப் பாலிகை தூபமும் தீபமும் 
பொன்னால வட்டமும் புஷ்பமும் விந்தமும் தன்னார வண்ணமாக் தங்கப் பொடிகளாக் 
பட்டமும் திவ்விய குந்தமும் கட்டினார் எங்கும் கொட்டினார் 
மத்தளம் மல்லரி வாத்தியம் நரகெச தித்திகளால் சக்கிர செவிடு படுமே அண்ட 
தாளங்கள் பஞ்ச மேளங்கள் வாளமும் திக்கும் கோளமும் 
சனகனும் தசரத சவனுடனே அள கனிவுள சந்தோஷம் 
கலியாண மண்டபம் பாசனும் கேசன்போல் மீறினார் வந்து ஏறினார் 

வெள்ளை விடையினை வேணி யரன்வந்து வள்ளியும் கந்தனும் மைந்தன் வல்லபையும் 
ஊர்ந்தார் - உமை 
நேர்ந்தார் 
சேர்ந்தார் - மூத்த 
கார்ந்தார் 

வேதனும் வாணியும் நாடினார் - தேவேந்திரன் இந்திராணியும் கூடினார் 
மாதவர் தேவர் மென்மேலே -அந்த மண்டபம் சேர்ந்தார் இப் பாலே 
மங்களம் ஆம் ராமச் வங்கிச மணியான கங்கைமுதல் தீர்த்தம் கலவைச் சலவைகள் 
சந்திரன் - சூரிய 
தந்திரன் 
ஆடினான் - மிகக் 
சூடினான் 
 
மாலை மகுடமு வாகு வலயம்ச காலணி கைவளை கங்கள் முதல் அலங் 
கத்தணி - பட்டம் ரப்பணி பாரித்தார் - பதக் காரித்தார் 
தனதாம் பரதன்கை தம்பியர் சாமரை கனக ரதங்கண்டு கலியாண வேதிகை 
நீட்டவே - மற்ற ஆட்டவே தாவினான் - ராமன் மேவினான் 

எப்பொ ருளும்பெற்ற கோதையை - அஷ்ட லட்சுமியும் ஆன சீதையை ஒப்பனை செய்யவும் 
தேடுமோ - என் ஒருத்தனாலே சொல்லக் கூடுமோ 

பூமியுள் ளோர்க்கெல்லாம் ஆவியை - நல்ல பூவைஎனும் சீதா தேவியை சாமி அருகினி லே தந்தார் --வ திஷ்டரும் தருப்பை கொண் டூவந்தார் 


முத்தான தண்டுலம் விரித்தார்- வேத முறையே சடங்கெல்லாம் தரித்தார் 
உத்தம மந்திரம் விளைத்தார் - முனிவர் ஓமாக்கினியை வளர்த்தார்  
தான தருமங்கள் ஓங்கவே - ரா க்ஷதர்போய்ப் பூமிபாரம் வாங்கவே 
வானவ ருக்கின்பம் சுற்றவே - ஓமம் வலங்கொண் டெழுந்தது மெத்தவே 
சல்லாபன் ஆகிய தன்னை அந்தமிதி எல்லாரும் காண முன் ஈந்தானே ராமன்கை 
நேசன் - சீதை லேசன் னாலே - சொல்லி மேலே 
அய்யனும் தையல்கைப் பிடித்தான் - கலி யாணவிதி யெல்லாம் முடித்தான் 
செய்யவ ளுந்திரு மாலே - போலச் சேர்ந்தெழுந் தாரேமென் மேலே 


ஸ்ரீ ராமர் அக்கினி வலம் வருதல் முதலிய துகள் 
 
ராகவன் சீதையைப்பாணி கிராணம் செய்து 
நற்றியை வலம் வந்தான் சீதை பாதம் 
மோகமுடன் பற்றி அம்மி மீதில் வைத்தான் 

முக்காலும் அருந்ததிமுன் காட்டினான் பின் 
ஏகமன துடன்முனிவர் தந்தை தாய்மார் 

எல்லார்க்கும் சேவித்தான் அப்பால் இன்பம் 
கவொரு நன்மணையில் சீதை யோடும் 
அமர்ந்திட்டான் அண்டமெல்லாம் சுமந்திட்டானே . 

சோபனம் பாடுதல் 

விருத்தம் - 22 
மணம்உள்ள மலர்மாரி அந்த வேளை 

வானவர்கள் பாழிந்திட்டார் முனிவர் எல்லாம் 
கணம்உள்ள ஆசீர்வா தங்கள் சொன்னார் 

காவலர்கள் பொன்மலர்கள் சொரிந்தார் தாய்மார் 
பணம்உள்ள நல்வரிசை பலவும் ஈந்தார் 
பத்தியுள்ள பந்துக்கள் எல்லாம் மொய்த்தார் 
குணம்உள்ள சுமங்கலிகள் அங்கே வந்து 
கூடினாார் சோபனங்கள் பாடி னாரே 

பல்லவி 

சோபனம் சோபனம் சோபனம் சோபனம் சாமிக்கும் சீதைக்கும் ( சோ ) 
 
அநுபல்லவி 

பூபன் தசரத மதிக்கும்  புண்ணிய சனகபூபதிக்கும் 
சோபனம் சோபனம் ( சோ ) 

சரணங்கள் 

தாமம் மேவிய ரதிக்கும் ரதிசுந் தரனுக்கும் 
சீர்மகள் இந்திராணிக்கும் இந்திரனுக்கும் 
மாமதி பெருகும் வாணிக்கும் அவள் வரனுக்கும் 
தாமரை மலர்த் திருவுக்கும் தாமோதரனுக்கும் 

தேவிக்கும் அரனுக்கும் சோபனம் சோபனம் சோபனம் 
சோபனம் ( சோ )

நேர்வரும் சுமந்திரன் முதல் மந்திரி நேசர்க்கும் சோபனம் 
நேர் பெறு வதிஷ்டன் கௌசிகன் முதலாம் யோகீசர்க்கும் சோபனம் 
வார்முலை அரம்பை மாதர்க்கும் எண்டிசைவாசர்க்கும் சோபனம் 
சேவை செய்து மனம் மகிழும் ஐம்பத்தாறு தேசர்க்கும் சோபனம் 
ராசாதி ராசர்க்கும் சோபனம்( சோ )


வருகௌசலை கைகை சுமித்திரை எனும் தாய் மாருக்கும் 
பெருகு பரதன் முதலாகிய மூன்று பேருக்கும் 
ஒருமையால் இது சொன்ன வால்மீகிகம்பரிரு வோருக்கும் 
அருணாசலகவி நாடகம் இதுபடிப் பாருக்கும் கேட்கும் எல் லாருக்கும் ( சோ ) 


ஸ்ரீ ராமருக்கும் பரசுராமருக்கும் சம்வாதம் 


திருமகளாம் சானகிகல் யாணம் செய்து செயமுள்ள தம்பியர்க்கும் விவாகம் செய்து 
வரும்வழியிற் சகுனவிரோ தத்தி னாலே மலைபோலே முனிபரசு ராமன் வந்தான் 
பெருகு தச ரதன்கண்டு நடுங்கும் போது பிரசண்ட கோதண்டகுரு ராமன் தானும் 
ஒரு வரும்நேரில்லை என வில்லை ஏந்தி உரஞ்சொல்வான் உடனேஉத் தரஞ்சொல் வானே . 


ஆசீர் மண்ணில் அரசர்போலக் காணுகின்றாயே வாதம் ரகு 
கண்ணில் வேதியர் போல் தோணுகின் றாயே நமஸ் பாரம் பரசு ராமரி 
தாடகை எனும்பெண்மேல் சண்டை கொள்ளராசர்க்கு 
தான் விதி யோ வேடர்கள் தொடுக்கும்வில்லை பிராமணர் தொடத்தலை 
விதியோ பரசு ராமா ராமா 
ஆனாற்பெண் கொலைசெய்யல் ஆமோ உனக்கிது அடைவோ ரகு 
தானாகப் பெற்றெடுத்த தாயைக் கொலை செய்தாயே தகுமோ பரச ராமா 
தருமமா என்னைப்பெற்றதகப்பன் சொற்படி செய்தேன் 
தாய்க்கொலையோ குருவார்த்தை தடுக்காமல் நானும் செய்தேன் பெண் கொலையோ பரசு ராமா 
ராமா ராமா 
சொத்தைவில் ஒடித்தத்தை மெத்த மெத்தவே எண்ணித் துள்ளாதே ரகு 
கற்ற வேதியன் என்று பொறுத்தேன் பொறுத்தேன் குதிக் காதே பரசு ராமா 

அந்தவில் வளைத்தாயே இந்தவில் வளை இந்தா அடடாரது 
இந்தா வளைத்தேன் இதில் வைத்த அம்புக்கு வழி எங்கே பரசு ராமா ராமா 
அம்புக்கு வழியில்லை நான் பிராமணன் இனி அனுக்கிரகம் செய் 
பின் புத்திக் காரன் இரு பிறப்பன் உன் னொ டென்ன ராமா 
பேச்சு பரசு ராமா ராமா 
சந்தி செபதங்கள் எல்லாம் உன் சரத்துக்கே தந்தேன் ரகு 
வந்தவழி பார்த்துக் கொண்டோடிப் போவதே நல்ல மார்க்கம் பரசு 

ஸ்ரீ ராமர் திரு அயோத்தியைச் சேர்தல் 

இன்னவகை சொன்னரா கவனை வாழ்த்தி 
இனியதவம் செயப்பரசு ராமன் போனான் 
அன்னவன்கைக் கொண்ட வில்லை வருண ராசன் 
அடைக்கலமா வைத்துவிட்டு ராமச் சந்திரன் 
மன்னவரும் தேவியரும் தேர்மேற் கொண்டு 
வர அருகே தானும்மணித் தேர் மேல் ஏறி 
மின்னனைய சீதையுடனே சந்தோஷம் 
மிகவந்தான் அயோத்திமா நகர்வந் தானே 

பாலகாண்டம் முற்றிற்று . 
சக்கிரவர்த்தித் திருமகனார் திருவடிகளே சரணம் 

--------------- 


தழை செவி சிறுகண் தாழ்கை தந்தசிந் துரமும் தாரை 
மழைமதத் தறுகண் சித்ர வாரண முகத்து வாழ்வை 
இழையிடைக் கலசக் கொங்கை இமகிரி மடந்தை ஈன்ற 
குழவியைத் தொழுவன் அன்பால் குறைவர நிறைக என்றே (பாயிரம் - மிகை - 13 ) 


பொத்தகம் படிக மாலை குண்டிகை பொருள்சேர் ஞான 
வித்தகம் தரித்த செங்கை விமலயை அமலை தன்னை 
மொய்த்த கொந் தனக பார முகிழ்முலை தவள மேனி 
மைத்தகு கருங்கண் செவ்வாய் அணங்கினை வணங்கல் செவ்வாம் ( பாயிரம் மிகை 12 )  


தருகை நீண்ட தயரதன் தான் தரும் 
இருகை வேழத் திராகவன் தன் கதை 
திருசை வேலைத் தரைமிசைச் செப்பிட 
குருகை நாதன் குறைகழல் காப்பதே (பாயிரம் - மிகை --9 ) 


அரசியல் 
 
ஆதிம் மதியும் அருளும் அறனும் அமைவும் 
ஏதில் மிடல் வீரமும் ஈகையும் எண்ணில் யாவும் 
நீதிந் நிலையும் இவை நேமியி னோர்க்கு நின்ற 
பாதிம் முழுதும் இவற்கே பணிகேட்ப மன்னோ ( அரசியற்படலம் 2 ) 


தாயொக்கும் அன்பின் தவம் ஒக்கும் நலம் பயப்பின் 
சேய்ஒக்கும் முன்னின் றொருசொல் கதியொக்கும் நீரால் 
நோய் ஒக்கும் என்னின் மருந்தொக்கும் நுணங்குகேள்வி 
ஆயம் புகுங்கால் அறிவொக்கும் எவர்க்கும் அன்னான் ( அரசியற்படலம் 57 


வெள்ளமும் பறவையும் விலங்கும் வேசையர் 
உள்ளமும் ஒருவழி ஓட நின்றவன் 
தள்ளரும் பெரும்புகழ்த் துயரதப்பெயர் 
வள்ளல் வள் ளுறைஅயில் மன்னர் மன்னனே ( அரசியற்படலம் 6 ) 


குன்றென உயரிய குவவுத் தோளினான் 
வென்றிவெம் திகிரிவெம் பருதி யாமென 
ஒன்றென உலகிடை உலாவி மீமிசை 
நின்றுநின் றுயிர்தொறும் நெடிது காக்குமே ( அரசியற்படலம் 11 ) 
துனியின்றி உயிர்களிப்பச் சுடராழிப் படைவெய்யோன் 
பனிவென்ற படியென்ன பகைவென்று படி காப்போன் 
தனுவன்றித் துணையில்லான் தருமத்தின் கவசத்தான் 
மனுவென்ற நீதியான் மகவின்றி வருந்துவான் 


சக்ரவர்த்தி மக்கள் வேண்டி வருந்தல் 

அறுபதி னாயிரம் ஆண்டும் மாண்டுற 
உறுபகை ஒடுக்கியிவ் வுலகை ஓம்பினேன் 
பிறிதொரு குறையிலை என்பின் வையகம் 
மறுகுறும் என்பதோர் மறுக்கம் உண்டரோ 

( திருவவதாரப்படலம் 3 ) 
அருந்தவ முனிவரும் அந்த ணாளரும் 
வருந்துதல் இன்றியே வாழ்வின் வைகினார் 
இருந்துயர் வழக்குநர் என்பின் என்பதோர் 
அருந்துயர் வருத்தும் என் அகத்தை என்றனன் 

(திருவவதாரப்படலம் 4 ) 
பெருமாள் சந்நிதியில் தேவர்கள் முறையீடு 

விருத்தம் -4 - தரு - 3 
பொன்வரை , இழிவதோர் புயலின் பொற்புற 
என்னை ஆள் உடையவன் தோள் நின்று எம்பிரான் 
சென்னிவான் தடவும் மண்டபத்தில் சேர்ந்து அரி 
துன்னுபொற் பீடமேல் பொலிந்து தோன்றினான் (திருவவதாரப் படலம் 13 ) 


ஐயிரு தலையினோன் அனுசர் ஆதியாம் 
மெய்வலி அரக்கரால் விண்ணும் மண்ணுமே 
செய்தவம் இழந்தன திருவின் நாபக 
உய்திறம் இல்லை என்று உயிர்ப்பு வீங்கினார் ( திருவவதாரப்படலம் 15 ) 
எங்கள் நீள் வரங்களால் அரக்கர் என்றுளார் 
பொங்குமூ வுலகையும் புடைத்தழித்தனர் 
செங்கண் நாயக இது தீர்த்தி இல்லையேல் 
நுங்குவர் உலகைஓர் நொடியில் என் றனர் ( திருவவதாரப்படலம் 16 ) 

தேவர்களுக்குப் பெருமாள் அருளிப்பாடு 
 
வானுளோர் அனைவரும் வான ரங்களாய் 
கானிணும் வரையினும் கடித் டத்தினும் 
சேனையொ டவதரித் திடுமின் சென்கிறன 
ஆனனம் மலர்ந்தனன் அருளின் ஆழியான் (திருவவதாரப்படலம் 18 ) 
மசரதம் அனையவர் வரமும் வாழ்வுமோர் 
நிசரத கணைகளால் நீறு செய்யயாம் 
கசரதத் துரகமாக் கடல் கொள் காவலன் 
தசரதன் மதலையாய் வருதும் தாரணி (திருவவதாரப்பட லம் 19 ) 
வளையொடு திகிரியும் வடவை தீதர 
விளைதரு கடுவுடை விரிகொள் பாயலும் 
இளையர்கள் என அடி பரவ ஏகிநாம் 
வளைமதில் அயோத்தியில் வருதும் என்றனன் ( திருவவதாரப்படலம் 20 ) 
என்னையா ளுடைய ஐயன் கலுழன் மீ தெழுந்து போய 
பின்னர் வா னவரை நோக்கிப் பிதாமகன் பேசு கின் றான் 
முன்னரே எண்கின் வேந்தன் யான் என முடுகினேன் மற்று 
அன்ன வா றெவரும் நீர்போய் அவதரித் திடுமின் என்றான் 

தருவுடைக் கடவுள் வேந்தன் சாற்றுவான் எனது கூறு 
மருவலர்க் கசனி யன்ன வாலியும் மகனும் என்ன 
இரவிமற் றெனது கூறங் கவர்க்கிளை யவன் என்று ஓத 
அரியும்மற் றெனது கூறு நீலன் என் றறைந்திட் டானால் 


வாயுமற் றெனது கூறு மாருதி எனலும் மற்றோர் 
காயும்மற் கடங்க ளாகிக் காசினி அதனின் மீது 
போயிடத் துணிந்தோ மென்றார் புராரிமற் றியானும் காற்றின் 
சேயெனப் புகன்றான் மற்றைத் திசையுளோர்க்கவதி யுண்டோ (திருவவதாரப்படலம் 23 , 24 , 25 ) 

பெருமாள் திரு அவதாரம் 

தெரிவையர் மூவரும் சிறிதுநாள் செலீ 
மருவிய வயாவொடு வருத்தம் துய்த்தபின் 
பொருவரு திருமுகம் அன்றி பொற்பு நீடு 
உருவமும் மதியமொடு ஒப்பத் தோன்றினார் ( திருவவதாரப்படலம் 19 ) 
ஒருபகல் உலகெலாம் உதரத்துள் பொதிந்து 
அருமறைக் குணர்வரும் அவனை அஞ்சனக் 
கருமுகிற் கொழுந்தெழில் காட்டும் சோதியை 
திருவுறப் பயந்தனள் திறங்கொள் கோசலை 


ஆசையும் விசும்பும் நின்று அமரர் ஆர்த்தெழ 
வாசவன் முதலினோர் வணங்கி வாழ்த்துறப் 
பூசமும் மீனமும் பொலிய நல்கினார் 
மாசறு கேகயன் மாது மைந்தனை 


தளையவிழ் தருவிடைச் சயில் கோபனும் 
கிளையும் அந்தரமிசைக் கெழுமி ஆர்ப்புற 
அளைபுகும் அரவினோடு அலவன் வாழ்வுற 
இளையவற் பயந்தனள் இளைய மென்கொடி 


படங்கிளர் பல்தலைப் பாந்தள் ஏந்துபார் 
நடங்கிளர் தரமறை நனிமகிழ்ந்திட 
மடங்கலும் மகமுமே வாழ்வின் ஓங்கிட 
விடங்கிளர் விழியினாள் மீட்டும் ஈன்றனள் 
ஆடினர் அரம்பையர் அமுத ஏழ் இசை 
பாடினர் கின்னரர் துவைத்த பல் இயம் 
வீடினர் அரக்கர் என்று உவக்கும் விம்மலால் 
ஓடினர் உலாவினர் உம்பர் முற்றுமே (திருவவதாரப்படலம் 101 -- 105 ) 

கௌசிகர் ஸ்ரீ ராமரைக் குறித்துக் கேட்குதல் 
 
நிலம்செய்தவம் என்றுணரின் அன்று நெடி யோய்என் 
நலம் செய்வினை உண்டெனினும் அன்று நகர் நீயான் 
வலம்செய்து வணங்கஎளிவந்த இது முந்து என் 
குலம்செய்தவம் என்றினிது கூறமுனி கூறும் 

என் அனைய முனிவரரும் இமையவரும் இடையூறுஒன்று உடைய ரானால் 
பன்னகமும் நகு வெள்ளிப் பனிவரையும் பாற்கடலும் பதும பீடத்து 
அந்நகரும் கற்பகநாட் டணிகவரும் மணிமாட அயோத்தி என்னும் 
பொன்னகரும் அல்லாது புகல்உண்டோ இகல் கடந்த புலவு வேலோய் , ( கையடைப் படலம் 7 , 8 ) 


தருவனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு இடையூறாத் தவம்செய் வோர்கள் 
வெகுவரச்சென் றடைகாம வெகுளியென 
நிருதர் இடை விலக்கா வண்ணம் 
செருமுகத்துக் காத்தியென நின்சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் 
ஒருவனைத்தந் திடுதியென உயிர் இரக்கும் 
கொடுங்கூற்றின் உளையச் சொன்னான் ( கையடைப்படலம் 11 ) 


சக்கரவர்த்தி அதை மறுத்தல் 
 

எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பியசொல் மருமத்தின் எறிவேல் பாய்ந்த 
புண்ணிலாம் பெரும்புழையில் கனல் நுழைந்தா லெனச்செவியில் புகுத லோடும் 
உண்ணிலா விய துயரம் பிடித்துந்த ஆருயிர் நின்று ஊச லாடக் 
கண்ணிழந்தான் பெற்றிழந்தான் எனவுழந்தான் கடுந்துயரம் காவ வேலான் தொடையூற்றின் தேன்துளிக்கும் நறுந்தாரான் 
ஒருவண்ணம் துயரம் நீங்கி  படையூற்றம் இலன் சிறியன் இவன்பெரியோய் பணி இதுவேல் பனிநீர்க் கங்கை புடையூற்றும் சடையானும் நான்முகனும் புரந்தரனும் புகுந்து செய்யும் 
இடையூற்றுக் கிடையூறாய் யான் காப்பென் 
பெருவேள்விக்கு எழுக என்றான் ( கையடைப்படலம் 13 ) 

வதிஷ்டர் தகவுரைத்தல் 

கறுத்த மாமுனி கருத்தை உன்னி நீ 
பொறுத்தி என்றவற் புகன்று நின் மகற்கு 
உறுத்த லாகலா உறுதி எய்தும்நாள் 
மறுத்தி யோஎனா வசிட்டன் கூறுவான் 


பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம்போய் 
மொய்கொள் வேலைவாய் முடுகும் ஆறுபோல் 
ஐய நின்மகற்கு அளவில் விஞ்சைவந்து 
எய்து காலமின்று எதிர்ந்தது என்னவே ( கையடைப்படலம் 15 , 16 ) 


அன்ன தம்பியும் தானும் ஐயனாம் 
மன்னன் இன்னுயிர் வழிக்கொண் டாலெனச் 
சொன்ன மாதவன் தொடர்ந்து சாயைபோல் 
பொன்னின் மாநகர்ப் புரிசை நீங்கினான் (கையடைப்படலம் 21 ) 


களசிகர் ஸ்ரீ ராமருக்கு நீதி சொல்லுதல் 


சிலம்புகள் சிலம்பிடை செறித்தகழ லோடும் 
நிலம்புக மிதித்தனள் நெளிந்த குழிவேலைச் 
சலம்புக அனல் தறுகண் அந்தகனும் அஞ்சிப் 
பிலம்புக நிலக்கிரிகள் பின் தொடர வந்தாள் 


இறைக்கடை துடித்தபுரு வத்தள் எயி றென்னும் 
பிறைக்கடை பிறக்கிட மடித்தபில வாயாள் 
மறைக்கடை அரக்கிவட வைக்கனல் இரண்டாய் 
நிறைக்கடல் முளைத்தென நெருப்பெழ விழித்தாள் ( தாடகைவதைப்படலம் 29 , 30 ) 

மேகமவை பற்றுபு பிழிந்தனள் விழுங்கா 
மாகவரை இற்றுக உதைத்தனள் மதித்திண் 
பாகமெனும் முற்றெயிறு அதுக்கி அயில்பற்றா 
ஆகமுற உய்த்தெறிவென் என்றெதிர் அழன்றாள் 

அண்ணல்முனி வற்கது கருத்தெனினும் ஆவி 
உண் என வடிக்கணை தொடுக்கிலன் உயிர்க்கே 
துண்ணெனும் வினைத்தொழில் தொடங்கியுள ளேனும் 
பெண்என மனத்திடை பெருந்தகை நினைத்தான் ( தாடகை வதைப்படலம் 34 , 35 ) 


தீது என்று உள்ளவை யாவும் செய்து எமைக் 
கோதென்று உண்டிலன் இத்துணையே குறை 
யாதென்று எண்ணுவது இக்கொடி யாளையும் 
மாது என்று எண்ணுவ தோமணில் ணினாய் ( தாடகைவதைப்படலம் 37 ) 


மன்னும் பல்லுயிர் வாரிதன் வாய்ப் பெய்து 
தின்னும் புன்மையின் தீமையது ஏது ஐய 
பின்னும் தாழ்குழல் பேதமைப் பெண் இவள் 
என்னும் தன்மை எளிமையின் பாலதே 


ஈறில் நல்லறம் பார்த்திசைத் தேன் இவட் 
சீறி நின்றிது செப்புகின் றேன் அலென் 
ஆறி நின்றது அருளன்று அரக்கியைக் 
கோறி என்று எதிர் அந்தணன் கூறினான் ( தாடகைவதைப்படலம் 42 , 43 ) 

தாடகை முதலானவர்கள் வதம்  


மாலும் அக்கணம் வாளியைத் தொட்டதும் 
கோல வில்கால் குனித்ததும் கண்டிலர் 
காலனைப் பறித்து அக்கடி யாள்விட்ட 
சூலம் அற்றுவீழ் துண்டங்கள் கண்டனர் 


அல்லின் ஆயது அனைய நிறத்தவன் 
சொல்லும் மாத்திரை யின் கடல் தூர்ப்பன 
கல்லின் மாரியைக் கைவகுத் தாள் அவை 
வில்லின் மாரியின் வீரன் விலக்கினான் 


சொல்லொக்கும் கடிய வேகச் சுடுசரம் கரிய செம்மல் 
அல்லொக்கும் நிறத்தி னாள்மேல் விடுத்தலும் வயிரக் குன்றக் 
கல்லொக்கும் நெஞ்சில் தாங்காது அப்புறம் கழன்று கல்லாப் 
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற் றன்றே 
பொன்னெடும் குன்றம் அன்னாள் புகர்முகப் பகழி என்னும் 
மன்நெடுங் கால வன்காற்று அடித்தலும் இடித்து வானில் 
கல்நெடு மாரி பெய்யக் கடையுகத் தெழுந்த மேகம் 
மின்னொடும் அசனி யோடும் வீழ்வதே போல வீழ்ந்தாள் 

( தாடகை .. வதைப் படலம் 47-50 ) 
திருமகள் நாயகன் தெய்ல வாளிதான் 
வருவரு தாடகை பயந்த வீரர்கள் 
இருவரில் ஒருவனைக் கடலில் இட்டது அங்கு 
ஒருவனை அந்தக புரத்தின் உய்த்ததே ( வேள்விப்படலம் 41 ) 


அகலிகை சாபவிமோசனமும் , சரித்திரமும் 


கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல் துகள் கதுவ 
உண்ட பேதைமை மயக்கற வேறுபட் டுருவம் 
கொண்டு மெய்உணர் பவன் கழல் கூடியது ஒப்பப் 
பண்டை வண்ணமாய் நின்றனள் மாமுனி பணிப்பான் 


மாயிரு விசும்பின் கங்கை மண்மிசை கொணர்ந்தோன் மைந்த 
மேயின உவகை யோடு மின் என ஒதுங்கி நின்றாள் 
தீவினை நயந்து செய்த தேவர்கோன் தனக்குச் செங்கண் 
ஆயிரம் அளித்தோன் பன்னி அகலிகை ஆகும் எள்றான் ( அகலிகைப்படலம் 14 , 15 ) 


தையலாள் நயன வேலும் மன்மதன் சரமும் பாய 
உய்யலாம் உறுதிநாடி உழல்பவன் ஒருநாள் ற்ற 
மையலால் அறிவு நீங்கி மாமுனிக்கு அற்றம் செய்து 
பொய்யிலா உள்ளத் தான் தன் உருவமே கொண்டு புக்கான் 


புக்கவ ளோடும் காமப் புதுமண மதுவின் தேறல் 
ஒக்கவுண் டிருந்த லோடும் உணர்ந்தனள் உணர்ந்த பின்னும் 
தக்கதன் றென்ன ஓராள் தாழ்ந்தனள் இருப்பத் தாழா 
முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும் முடுகி வந்தான் 


சரந்தரு சாபமல்லால் தடுப்பரும் சாபம் வல்ல 
வரந்தரு முனிவன் எய்த வருதலும் வெருவி மாயா 
நிரந்தரும் உலகில் நிற்கும் நெடும்பழி பூண்டாள் நின்றா 
புரந்தரன் நடுங்கி ஆங்கோர் பூசையாப் போக லுற்றாள் 


தீவிழி சிந்த நோக்கிச் செய்ததை உணர்ந்து செய்யத் 
தூயவன் அவனை நின்கைச் சுடுசரம் அனைய சொல்லால் 
ஆயிரம் மாதர்க்குள்ள அறிகுறி உனக்குண் டாகஎன்று 
ஏயினன் அவையெ லாம் வந்து இயைந்தன இமைப்பின் முன்னம் 


எல்லையில் நாணம் எய்தி யாவர்க்கும் நகைவந் தெய்தப் 
புல்லிய பழியி னோடும் புரந்தரன் போய பின்றை 
மெல்லிய லாளை நோக்கி விலைமகள் அனைய நீயும் 
கல் இயல் ஆதி என்றான் கருங்கல்லாய் மருங்கு வீழ்வாள் 


பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே , அன்பால் 
அழல் தரு கடவுள் அன்னாய் முடிவிதற்கு அருள்க என்ன 
தழைத்துவண் டிமிருந் தண்தார் தசரத ராமன் என்பான் 
கழல்துகள் கதுவ இந்தக் கல் உருத் தவிர்தி என் என்றான் 


இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனியிந்த உலகுக் கெல்லாம் 
உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர்வண்ணம் உறுவ துண்டோ 
மைவண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே உன் 
கைவண்ணம் அங்குக் கண்டேன் கால்வண்ணம் இங்குக் கண்டேன் ( அகலிகைப் படலம் 18 - 23 ) 


ஸ்ரீ ராமர் சீதையைக் கண்டு ஐயுறல் 


கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவையெல்லாம் 
வெல்லும் வெல்லும் என்ன மதர்க்கும் விழிகொண்டாள் 
சொல்லும் தன்மைத் தன்றது குன்றும் சுவரும்திண் 
கல்லும் புல்லும் கண்டுரு கப்பெண் கனிநின்றாள் 


வெங்களி விழிக்கொரு விழவும் ஆயவர் 
கண்களின் காணவே களிப்பு நல்கலால் 
மங்கையர்க்கு இனியதோர் மருந்தும் ஆயவள் 
எங்கள் நா யகற்கு இனி யாவ தாங்கொலோ 


இழைகளும் குழைகளும் இன்ன முன்னமே 
மழைபொரு கண்ணினை மடந்தை மாரொடும் 
பழகிய எனினுமிப் பாவை தோன்றலால் 
அழகெனும் அணியும்ஓர் அழகு பெற்றதே 


எண்ணரு நலத்தினாள் இணைய நின்றுழிக் 
கண்ணொடு கண்ணிணைக் கவ்வி ஒன்றையொன்று 
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட 
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் 


நோக்கிய நோக்கெனும் நுதிகொள் வேல் இணை 
ஆக்கிய மதுகையான் தோளில் ஆழ்ந்தன 
வீக்கிய கனைகழல் வீரன் செங்கணும் 
தாக்கணங் கனையவள் தனத்தில் தைத்தவே 

பருகிய நோக்கெனும் பாசத் தாற்பிணித்து 
ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால் 
வரிசிலை அண்ணலும் வாட்சண் நங்கையும் 
இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார் 


மருங்கிலா நங்கையும் வசையில் ஐயனும் 
ஒருங்கிய இரண்டுடற்கு உயிர் ஒன் றாயினார் 
கருங்கடற் பள்ளியில் கலவி நீங்கிப்போய்ப் 
பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ ( மிதிலைக்காட்சிப் படலம் 32-38 ) 


கௌசிகர் ஸ்ரீ ராமர் வரலாறு சொல்லுதல் 


அயன் புதல்வன் தயரதனை அறியாதார் இல்லை அவன் 
பயந்தகுலக் குமரரிவர் தமக்குள்ள பரிசெல்லாம் 
நயந்துரைத்துக் கரையேறல் நான்முகற்கும் அரிதாம் , பல் 
இயந்து வைத்த கடைத்தலையாய் யானறிந்த படி கேளாய் 


துனியின்றி உயிர்களிப்பச் சுடராழிப் படைவெய்யோன் 
பனிவென்ற படியென்ன பகைவென்று படிகாப்போன் 
தனுவின்றித் துணையில்லான் தருமத்தின் கவசத்தான் 
மனுவென்ற நீதியான் மகவின்றி வருந்துவான் ( வரலாற்றுப்படம் 15-16 ) 


காதலரைத் தரும்வேள்விக்கு உரியவெலாம் கடிதமைப்ப 
மா தவரிற் பெரியோனும் மாமகத்தை முற்றுவித்தான் 
சோதிமணிப் பொற்கலத்துச் சுதையனைய வெண்சோறுஓர் 
பூதகணத் தரசேந்தி அனல் நின்றும் போந்ததால் 

பொன்னின் மணிப்பரிகலத்தில் புறப்பட்ட இன்னமுதைப் 
பன்னுமறைப் பொருளணர்ந்த பெரியோன் றன் பணியினால் 
தன்னனைய நிறைகுணத்துத் தசரதனும் வரன்முறையால் 
நன் னுதலார் மூவருக்கும் நாலுகூறு இட்டு அளித்தான் 


கன் விரிந்திடுதீ வினைசெய்த வெவ்விய தீ வினையாலும் 
அருங்கடையில் மறையறைந்த அறஞ்செய்த தவத்தாலும் 
இருங்கடகக் கரதலத்து இவ் எழுதரிய திருமேனிக் 
கருங்கடலைச் , செங்கனிவாய்க் கவுசலை என் பாள் பயந்தாள் 


தள்ளரிய பெருநீதித் தனியாறு புகமண்டும் 
பள்ளமெனும் தகையானை , பரதன் எனும் பெயரானை 
எள்ளரிய குணத்தாலும் எழிலாலும் இவ்விருந்த 
வள்ளலையே அனையானை கேகயர்கோன் மகள் பயந்தாள் 


அருவலிய திறலினராய் அறங்கெடுக்கும் விறலரக்கர் 
வெருவருதிண் திறலார்கள் வில்லேந்தி வரும் மேருப் 
பருவரையும் நெடுவெள்ளிப் பருப்பதமும் போல்வார்கள் 
இருவரையும் இவ்விருவர்க்கு இளையாளும் ஈன்றெடுத்தாள் ( வரலாற்றுப்படலம் 20-4- ) 


ஈங்கிவரால் என் வேள்விக்கு இடையூறு கடிதியற்றும் 
தீங்குடைய கொடியோரைக் கொல்விக்கும் சிந்தையனாய்ப் 
பூங்கழலார்க் கொண்டுபோய் வனம்புக்கேன் புகாமுன்னம் 
தாங்கரிய பேராற்றல் தாடகையே தலைப்பட்டாள் 

அலைஉருவக் கடல் உருவத்து ஆண்தகைதன் நீண்டுயர்ந்த 
நிலைஉருவப் புயவலியை நீ உருவ நோக்கையா 
உலைஉருவக் கனல் உமிழ்கண் தாடகைதன் உரம் உருவி 
மலைஉருவி மரம்உருவி மண் உருவிற்று ஒருவாளி ( வரலாற்றுப்படலம் 27 , 28 ) 


கோதமன்றன் பன்னிக்கு முன்னையுருக் கொடுத்ததிவன் 
போது வென்ற தெனப்பொலிந்த பொலங்கழற்காற் பொடிகண்டாய் 
காதல் என் றன் உயிர்மேலும் இக்கரியோன் பால்கண்டால் 
ஈதிவன்றன் வரலாறும் புயவலியும் எனவுரைத்தான் ( ஆற்றுப்படலம் 31 ) 

நினைந்தமுனி பகர்ந்தவெலாம் நெறியுன்னி அருந்தவனும் 
புனைந்தசடை முடிதுளக்கிப் போரேற்றின் முகம் பார்த்தான் 
வனைந்தனைய திருமேனி வள்ளலும் அம் மாதவத்தோன் 
நினைந்தவெலாம் நினைந்தந்த நெடுஞ்சிலையை நோக்கினான் (கார் முகப் படலம்  )


ஸ்ரீ ராமர் வில் வளைத்தல் 

விருத்தம் - 15 
உறுவலி யானையை ஒத்த மேனியர் 
செறிமயிர்க் கல்எனத் திரண்ட தோளினர் 
அறுபதி னாயிரர் அளவில் ஆற்றலர் 
தறிமடுத் திடையிடைத் தண்டில் தாங்கினார் 


நெடுநில மகள் முதுகு ஆற்ற நின்றுயர் 
தடநிமிர் வடவரை தானும் நாண்உற 
இடமிலை உலகென வந்தது எங்கணும் 
கடல் புரை திருநகர் இரைத்துக் காணவே ( கார்முகப் படலம் 3,4 ) 


தோகையர் இன்னன சொல்லிட நல்லோர் 
ஓகை விளம்பிட உம்பர் உவப்ப 
மாக மடங்கலும் மால்விடையும் , பொன் 
நாகமும் நாகமும் நாண நடந்தான் 


ஆடக மால்வரை அன்னது தன்னை 
தேடரு மாமணி சீதையெ னும்பொன் 
சூடக வால்வளை சூட்டிட நீட்டும் 
ஏடவிழ் மாலையிது என்ன எடுத்தான் 


தடுத்திமை யாமல் இருந்தவர் , தாளில் 
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார் 
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால் 
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார் ( கார்முகப் படலம் 32-34 ) 


பூமழை சொரிந்தார் விண்ணோர் பொன்மழை பொழிந்த மேகம் 
பாமமா கடல்கள் எல்லாம் பன்மணி தூவி ஆர்த்த 
கோமுனிக் கணங்கள் எல்லாம் கூறின ஆசி கொற்ற 
நாமவேல் சனகற்கு இன்று நல்வினை பயந்த தென்னா ( கார்முகப் படலம் 36 ) 


தயரதன் புதல்வர் என்பார் தா மரைக் கண்ணன் என்பார் 
புயலிவன் மேனி என்பார் பூவையே பொருவும் என்பார் 
மயல் உடைத்து உலகம் என்பார் மானிடன் அல்லன் என்பார் 
கயல்பொரு கடலுள் வைகும் கடவுளே காணும் என்பார் 


நம்பியைக் காண நங்னகக்கு ஆயிரம் நயனம் வேண்டும் 
கொம்பினைக் காணுந் தோறும் குரிசிற்கும் அன்ன தேயாம் 
தம்பியைக் காண்மின் என்பார் தவமுடைத்து உலகம் என்பார் 
இம்பர் இந் நகரில் தந்த முனிவனை இறைஞ்சும் என்பார் ( கார்முகப் படலம் 42 , 43 ) 


மிதிலைக்குச் சக்கரவர்த்தியின் எழுச்சி  


கூறிய தூதரும் கொணர்ந்த ஓலையை 
ஈறில்வண் புகழினாய் இது அது என்றனர் 
வேறொரு புலமகன் விரும்பி வாங்கினான் 
மாறதிர் கழலினான் வாசி என்றனன் ( எழுச்சிப் படலம் 3 ) 


என்றுரைத்து எதிர் எதிர் இடைவி டாதுநேர் 
துன்றிய கனைகழல் தூதர் கொள்கஎனா 
பொன்திணி கலங்களும் தூசும் போக்கினான் 
குன்றென உயரிய குவவுத் தோளினான் ( எழுச்சிப் படலம் 5 )


விடை பொரு நடையினான் சேனை வெள்ளம் ஓர் 
இடையிலை உலகினில் என்ன ஈண்டிய 
கடையுக முடிவினில் எவையும் கால்படப் 
புடைபெயர் கடலென எழுந்து போயதே ( எழுச்சிப் படலம் 9 ) 


உழுந்திட இடமிலை உலகம் எங்கணும் 
அழுந்திய உயிர்க்கெலாம் அருட்கொம் பாயினான் 
எழுந்திலன் எழுந்துஇடைப் படரும் சேனையின் 
கொழுந்து போய்க் கொடி மதில் மிதிலை கூடிற்றே ( எழுச்சிப் படலம் 23 ) 
பொய்கையம் கமலக் கானில் பொலிவதோர் அன்னம் என்ன 
கைகயர் வேந்தன் பாவை கணிகையர் ஈட்டம் பொங்கி 
ஐயிரு நூறு சூழ ஆய்மணிச் சிவிகை தன்மேல் 
தெய்வமங் கையரும் நாணத் தேன் திசை முரலப் போனாள் 

விரிமணித் தார்கள் பூண்ட வேசரி வெரிநில் தோன்றும் 
அரிமலர்த் தடங்கண் நல்லார் ஆயிரத் திரட்டி சூழ 
குருமணிச் சிவிகை தன்மேல் கொண்டலின் மின் இது என்ன 
இருவரைப் பயந்த நங்கை யாழிசை முரலப் போனாள் 


வெள்ளெயிற் றிலவச் செவ்வாய் முகத்தைவெண் மதியம் என்று 
கொள்ளையின் திரள் வான்மீன்கள் குழுமிய அனைய ஊர்தி 
தெள்ளரிப் பாண்டிற் பாணிச் செயிரியர் இசைத்தேன்சிந்த 
வள்ளலைப் பயந்த நங்கை வானவர் வணங்கப் போனாள் ( எழுச்சிப்படலம் 63 - 65 ) 


பொற்றொடி மகளிர் ஊரும் பொலன் கொள் தார்ப் புரவி வெள்ளம் 
சுற்றுறு கமலம் பூத்த தொடுகடல் திரையின் செல்ல 
கொற்றவேல் மன்னர் செங்கைப் பங்கயக் குழாங்கள் கூம்ப 
மற்றொரு கதிரோன் என்ன மணிநெடுந் தேரிற் போனான் ( எழுச்சிப்பட லம் 75 ) 


ஸ்ரீராமர் பவனிவருதல் --விருத்தம் - 17 -- திபதை - 1 

மானினம் வருவ போன்றும் மயிலினம் திரிவ போன்றும் 
மீனினம் மிளிர வானில் மின்னினம் மிடைவ போன்றும் 
தேனினம் சிலம்பி ஆர்ப்பச் சிலம்பினம் புலம்பி ஏங்கப் 
பூநனை கூந்தல் மாதர் பொம்மெனப் புகுந்து மொய்த்தார் 

விரிந்து வீழ் கூந்தல் பாரார் மேகலை அற்றம் நோக்கார் 
சுரிந்தபூந் துகில்கள் தாங்கார் இடைதடுமாறத் தாழார் 
நெருங்கினர் நெருங்கிப் புக்கு நீங்குமின் நீங்குமின் என்று 
அருங்கலம் அனைய மாதர் தேன் நுகர் அளியின் மொய்த்தார் (உலாவியற்படலம் 1 , 2 ) 

வீதிவாய்ச் செலகின் றான் போல் விழித்திமையாது நின்ற 
மாதரார் கண்க ளூடே வாவும்மான் தேரிற் செல்வான் 
தூது பெற்றிலள் இன்னுயிர் சோர்கின்றாள் 
யாதினும் உயர்ந்தோர் தன்னை யாவர்க்குல் கண்ணன் என்றே 
ஓதிய பெயர்க்குத் தானே உறுபொருள் உணர்த்தி விட்டான் (உலாவியற்படலம் 6 ) 

சொன்னலம் கடந்தகாமச் சுவையை ஓர் உருவமாக்கி 
ன்னலம் தெரியவல்லார் எழுதியது என்னநின்றாள் 
பொன்னையும் பொருவும் நீராள் புனைந்தன எல்லாம்போகத் 
தன்னையும் தாங்கலாதாள் துகில் ஒன்றும் தாங்கிநின்றாள் (உலாவியற்படலம் 12 ) 

மைக்கருங் கூந்தற் செவ்வாய் வாள் நுதல் ஒருத்தி உள்ளம் 
நெக்கனள் உருகு கின்றாள் நெஞ்சிடை வஞ்சன்வந்து 
புக்கனன் போகாவண்ணம் கண்ணெனும் புலம்கொள் வாயில் 
சிக்கென அடைத்தேன் தோழி சேருதும் அமளி என்றாள் ( உலாவியற்படலம் 14 ) 

தோள்கண்டார் தோளேகண்டார் தொடுகழற்கமலம் அன்ன 
தாள்கண்டார் தாளேகண்டார் தடக்கை கண்டாரும் அஃதே 
வாள்கொண்ட கண்ணார்யாரே வடிவினை முடியக் கண்டார் 
ஊழ்கொண்ட சமயத் தன்னான் உருவுகண் டாரை ஒத்தார் (உலாவியற் படலம் 19 ) 

மாது ஒருத்தி மனத்தினை யல்லதோர் 
போதரிக் கண்பொலன் குழையப் பூண்முலைச் 
சீதை எத்தவம் செய்தனளோ என்றாள் (உலாவியற்படலம் 23 ) 

கனக நூபுரம் கைவளை யோடு உக 
மனம் நெகும்படி வாடி ஓர் வாணுதல் 
அனகன் இந்நகர் எய்தியது ஆதியில் 
சனகன் செய்த தவப்பயனால் என்றாள் ( உலாவியற் படலம் 26 ) 

சீதை சபா மண்டபத்துக்கு வருதல் -விருத்தம் - 18 -தரு - 16 

சிந்தொடு குறளும் கூனும் சிலதியர் குழாமும் தெற்றி 
வந்தடி வணங்கிச் சுற்ற மணியணி விதான நீழல் 
இந்துவின் கொழுந்து விண்மீன் இனத்தொடும் வருவ தென்ன 
நந்தலில் விளக்கம் அன்ன நங்கையும் நடக்க லுற்றாள் ( கோலங்காண் படலம் 23 ) 

தொழுந்தகைய மென்னடை தொலைந்துகளி அன்னம் 
எழுந்திடை விழுந்து அயர்வது என்ன அயலெங்கும் 
கொழுந்துடைய சாமரை குலாவ ஓர்கலாபம் 
வழங்கு நிழல் மின்னவரும் மஞ்ஞைஎன வந்தாள் ( கோலங்காண் படலம் 25 ) 

பொன்னின் ஒளி பூவின்வெறி சாந்துபொதி சீதம் 
மின்னின் எழில் அன்னவள் தன் மேனியது மான 
அன்னமும் அரம்பையரும் ஆரமிழ்தம் நாண 
மன்னவை இருந்தமணி மண்டபம் அடைந்தாள் (கோலங்காண் படலம் 28 ) 

ஸ்ரீராமர் மணக்கோலங் கொள்ளுதல் விருத்தம் - 19 - தரு - 17 

அழிவருந் தவத்தினோடு அறத்தை ஆக்குவான் 
ஒழிவருங் கருணைஓர் உருவு கொண்டென 
எழுதரு வடிவுகொண்டு இருண்ட மேகத்தைத் 
தழுவிய நிலவெனக் கலவை சாத்தியே 

மங்கல முழுநிலா மலர்ந்த திங்களைப் 
பொங்கிருங் கருங்கடல் பூத்த தாம் எனச் 
செங்கிடைச் சிகழிகை செம்பொன் மாலையும் 
தொங்கலும் துயல்வரச் சுழியம் சூடியே 

ஏதமில் இருகுழை இரவு நன்பகல் 
காதல் கண் டுணர்ந்தன கதிரும் திங்களும் 
சீதைதன் கருத்தினைச்செவியின் உள்ளுறத் 
தூதுவத் துரைப்பன போன்று தோன்றவே ( கடிமணப் படலம் 50-52 ) 

பந்திசெய் வயிரங்கள் பொறியின் பாடுற 
அந்தமில் சுடர்மணி அழலின் தோன்றலாம் 
சுந்தரத் தோளணி வலயம் தொல்லைநாள் 
மந்தரஞ் சுற்றிய அரவை மானுமே ( கடிமணப் படலம் 55 ) 

முகைவிரி சுடரொளி முத்தின் பத்திவான் 
தொகைவிரி பட்டிகைச் சுடரும் சுற்றிடத் 
தகைஉடை வாளெனும் தயங்கு வெய்யவன் 
நகை இன வெயிலென தொங்கல் நாற்றியே ( கடிமணப் படலம் 64 ) 

கலியாணச் சடங்கு செய்தல் விருத்தம் - 20 --- திபதை - 2 

மன்னவர் வருவாரும் மறையவர் நிறைவாரும் 
இன்னிசை மணியாழின் இசைமது நுகர்வாரும் 
சென்னியர் திரிவாரும் விறலியர் செறிவாரும் 
கன்னலின் மணவேலைக் கடிகைகள் தெரிவாரும் 
கணிகையர் தொகுவாரும் 

கலைபல பயில்வாரும் 
பணியணி இனமுத்தம் பல இரு நிலமன்னர் 
அணிநெடு முடியொன்று ஒன்று அறைதலின் உரும் அம்பொன் 
மணிமலை எனமன்ன வாயிலின் மிடை வாரும் ( கடிமணப்படலம் 3!, 32 ) 

தேர்மிசை வருவாரும் சிவிகையில் வருவாரும் 
ஊர்தியில் வருவாரும் ஒளிமணி நிரை ஓடைக் 
கார்மிசை வருவாரும் கரிணியில் 
வருவாரும் 
பார்மிசை வருவாரும் பண்டியில் வருவாரும் ( கடிமணப்படலம் 35 } 

ந்திரன் சசியொடு எய்தி னான் இளஞ் 
சந்திர மௌலியும் தைய லாளொடும் 
வந்தனன் மலரயன் வாக்கி னாளுடன் 
அந்தரம் புகுந்தனன் அழகு காணவே 
நீந்தருங் கடலென நிறைந்த வேதியர் 
தோய்ந்த நூல் மார் பினர் சுற்றத் , தொல்நெறி 
வாய்ந்த நல் வேள்விக்கு வசிட்டன் மையற 
ஏய்ந்தன கலப்பையொடு இனிதின் எய்தினான் 

தண்டிலம் விரித்தனன் தருப்பை சாத்தினன் 
மண்டலம் விதிமுறை வகுத்து மென்மலர் 
கொண்டுநெய் சொரிந்து எரி குமும மூட்டினான் 
பண்டுள மறைநெறி பரவச் செய்தனன் 

மன்றலின் வந்து மணத்தவிசு ஏறி 
வென்றி நெடுந்தகை வீரனும் ஆர்வத்து 
இன் துணை அன்னமும் எய்தி யிருந்தார் 
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார் 

கோமகன் முன் சன கன்குளிர் நல்நீர் 
பூமக ளும் பொரு ளும் என நீ என் 
மாமகள் தன்னொடும் மன்னுதி என்னா 
தாமரை யன்ன தடக்கையின் ஈந்தான் (கடிமணப்படலம் 82-86 ) 

வெய்ய கனற்றலை வீரனும் அந்நாள் 
மையறு மந்திரம் மும்மை வழங்கா 
நெய்யமை யாவுதி யாவையும் நேர்ந்தே 
தையல் தளிர்க்கை தடக்கை பிடித்தான் ( கடிமணப்படலம் 89 ) 

ஸ்ரீராமர் அக்கினி வலம் வருதல் முதலியவைகள் --விருத்தம் - 21 

இடம்படு தோளவ னோடு இயைய வேள்வி 
தொடங்கிய வெங்கனல் சூழ்வரு போதின் 
மடம்படு சிந்தையள் மாறு பிறப்பின் 
உடம்புஉயி ரைத்தொடர் கின்றதை ஒத்தாள் 

வலங்கொடு திடை வணங்கினர் வந்து 
பொலம்பொரி செய்வன செய்பொருள் முற்றி 
இலங்கொளி அம்மி மிதித்து எதிர் நின்ற 
கலங்கலில் கற்பின் அருந்ததி கண்டார் 

மற்றுள செய்வன செய்து மகிழ்ந்தார் 
முற்றிய மாதவர் தாள்முடி சூடி 
கொற்ற வனைக்கழல் கும்பிடலோடும் 
பொற்றொடி யைக் கொடு நன்மனை புக்கான் ( கடிமணப்படலம் 90 - 92 ) 

சோபனம் பாடுதல் -விருத்தம் - 22 
 
அந்தணர் ஆசி அருங்கல மின்னார் 
தந்தபல் லாண்டிசை தார் முடி மன்னர் 
வந்தனை மாதவர் வாழ்த்தொலி யோடு 
முந்திய சங்கம் முழங்கின மாதோ ( கடிமணப்படலம் 87 

ஆர்த்தன பேரிகள் ஆர்த்தன சங்கம் 
ஆர்த்தன நான்மறை ஆர்த்தனர் வானோர் 
ஆர்த்தன பல்கலை ஆர்த்தன பல்லாண்டு 
ஆர்த்தன வண்டினம் ஆர்த்தன வேலை ( கடிமணப்படலம் 93 } 

ஸ்ரீராமருக்கும் பரசுராமருக்கும் சம்வாதம் -விருத்தம் - 23 திபதை - 3 

ற்றோடிய சிலையின் திறம் அறிவென் இனி யானுன் 
பொற்றோள்வலி நிலைசோதனை புரிவான் நசையுடையேன் 
செற்றோடிய திரள்தோள்உறு தினவும் சிறிதுடையேன் 
மற்றோர்பொருள் இலையிங்கு இது என் வரவு என்றனன் உரவோன் ( பரசுராமப் படலம் 18 

மானம்ம ணி முடிமன்னவன் நிலை சோர்வுறல் மதியான் 
தானந்நிலை உறுவான்று வினைஉண்டது தவிரான் 
ஆனம்உடை உமையண்ணலை அந்நாள் உறுசிலைதான் 
ஊனம்உளது அதன் மெய்ந்நெறி கேள் என்றுரை புரிவான் ( பரசுராமப்படலம் 25 

உலகெலாம் முனிவற் கீந்தேன் உறுபகை ஒடுக்கிப் போந்தேன் 
அலகில் மா தவங்கள் செய்து ஓர் அருவரை இருந்தேன் ஆண்டை 
சிலையை நீ இறுத்த ஓசை செவியுறச் சீறிவந்தேன் 
மலைகுவென் வல்லையாகின் வாங்குதி தனுவை என்றான் ( பரசுராமப்படலம் 34 ) 

பூதலத் தரசையெல்லாம் பொன்றுவித் தனை என்றாலும் 
வேதவித் தாயமேலோன் மைந்தன் நீ விரதம் பூண்டாய் 
ஆதலின் கொல்லல் ஆகாது அம்பு இது பிழைப்பதன்றால் 
யாதிதற்கு இலக்கம் ஆவது இயம்புதி விரைவின் என்றான் ( பரசுராமப்படலம் 36 ) 

எய்த அம்பு பழுது எய் திடாமல் என் 
செய்தவம் யாவையும் சிதைக்க வே எனக் 
கையவண் நெகிழ்தலும் கணையும் சென்றவன் 
மையறு தவமெலாம் வாரி மீண்டதே ( பரசுராமப்படலம் 39 ) 

ஸ்ரீராமர் அயோத்தியைச் சேர்தல் விருத்தம் -24 

எண்ணிய பொருளெலாம் இனிது முற்று 
மண்ணிய மணி நிற வண்ண வண் துழாய்க் 
கண்ணிய , யாவர்க்கும் களைக் 
புண்ணிய , விடையெனத் தொழுது போயினான் 
ணாகிய ( பரசுராமப்படலம் 40 ) 

பூமழை பொழிந்தனர் புகுந்த தேவருள் 
வாமவேல் வருணனை மான வெஞ்சிலை 
சேமி என் றுதவி தன் சேனை ஆர்த்தெழ 
நாமநீர் அயோதிமா நகரம் நண்ணினான் ( பரசுராமப்படலம் 45 ) 

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –


									

108 திவ்ய தேசப் பாடல்கள்

February 10, 2024

ஸ்ரீ 108 திவ்ய தேச எம்பெருமான் ஸ்ரீ திருப்பள்ளி எழுச்சி பாடல் —

திருவரங்கன் கோயில் திருவரங்கேசன்
திருமகள் அழகிய மணவாளன் உறையூர்
திருத் தஞ்சை நீல மேக நரஸிம்ஹம்
திரு அன்பில் அமர் வடிவு அழகிய நம்பி

மருத மகிழ் சோலை கதம்பனூர் உத்தமன்
மலர் மகள் வெள்ளறை புண்டரீகாக்ஷன்
திருப் புள்ளம் பூதங்குடி அமர் வேந்தே
திருப் பள்ளி உணர்த்தருள் புரிந்திடுவாயே

வார் புனல் பேரில் -அரவணைக் கிடந்தான்
வரம் திகழ் ஆதனூர் அளந்தருள் ஐயன்
பார் புகழ் தொல் நிறை நாதன் அழுந்தூர்
மணி துயில் உரு மகள் திரு சிறு புலியூர்

கார் மலி தண் சேறை திருச்சேறை நாதன்
கார் கடல் மல்லை தலைச் சங்கம் நாண் மதியே
ஏர் திகழ் குடந்தைக் கிடந்த என் அமுதே
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

கண்டியூர் ராமர் சாப விமோசனர்
கருணை பொழிந்திடும் விண்ணகர் அப்பன்
எண் திசை புகழ் கமழ் ஊர் சவுரி ராஜன்
எழில் மிகு திருவாலி வயலாலி அப்பன்

கண்டம் கமழ் சோலை இந்தளூர் மைந்தா
காசினியில் உயர் திருச்சித்ர கூடம்
அந்தணர் தேவன் அரன் அயன் காழி
யரும் தவ முனி தொழும் தில்லைக் கோவிந்தர்

சிந்தை கவர்ந்திடும் ஸ்ரீ ராமா விண்ணகர்
சீராக அளந்திடும் தாடாளன் அம்மா
நந்தருக்கு அருள் கூடலூர் ஜகன்னாதா
நாராயணா பள்ளி எழுந்தருளாயே

மாதவன் மகிழ்ந்து உறை தேவானார் தோகை
மறை திகழ் வண் புருஷோத்தமத் தானே
ஸ்ரீ நாதன் அருள் நாதன் செம் பொன் செய் கோயில்
திருக்கச்சி அம்பல செங்கண் மாலே

போது அலர் பொழில் சூழும் மணிக் கூடல் நாதன்
புகழ் காவளம்பாடி வேணு கோபாலன்
சீர் மலி சோலை வெள்ளக்குளத்து அண்ணா
ஸ்ரீ தரா சீர் பள்ளி எழுந்தருளாயே

தாமரையாள் கேள்வன் பார்த்தன் பள்ளி
கருணா வளம் தரு சோழ நன் புவியில்
மா மகள் கோன் உறை நாற்பது பதிகள்
மறை ஒலி புகழ் கமழ் மா நகர் என்பர்

காமனைப் படைத்த தோர் மா மேனி அழகர்
மாலிருஞ்சோலையில் மால் அலங்காரர்
சேமமுடை சவும்ய நாராயணான் கோஷ்ட்டி
கேசவனே பள்ளி எழுந்தருளாயே

மெய்யத்து உறைகின்ற சத்ய கிரீஸ்வரன்
தெய்வச் சிலை நாதன் திகழும் புல்லாணி
வையத்து உயர் திருத் தண் காலில் அப்பன்
வழித்துணையாம் காள மேக ஸ்ரீ மோகூர்

வைகை நதி தீரம் தென் கூடல் அழகர்
வள நகர் ஸ்ரீ வில்லி புத்தூர் அரங்கர்
ஐயன் திருக்குருகூரில் பொலிந்தார்
அன்பனே திருப்பள்ளி எழுந்தருளாயே

தென் உயர் திருக்குறுங்குடி வைஷ்ண நம்பி
நிக்ஷேப மா நிதி நிறை திருக்கோளூர்
பொங்கும் பொருநல் சூழ் பாண்டிய நாட்டில்
புகழ் பெரு பதினெட்டு திருப்பதி என்பர்

பங்கஜ நாதன் அனந்த புரம் தன்னில்
வண் பரிசாரத்தில் திரு வாழும் மார்பன்
தங்கும் பெரும் புகழ் காட்கரை அப்பா
தாமோதரா பள்ளி எழுந்தருளாயே

செல்வம் திகழ் திரு மூழிக் களத்தான்
சேர் திகழ் மாயப்பிரான் திருப்புலியூரில்
நல் திருச் செங்கனூரில் மெய்ய வரை யப்பன்
நாரணன் அமர்ந்திடும் தென் திரு நாவாய்

வல்லவள் வாழ்ந்திடும் வல்லி மணாளா
வண்டூர் உறையும் என் பாம்பணை அப்பா
அல்லல் தவிர்ந்திடும் திரு வட்டாத்தில் ஆதி
கேசவனே பள்ளி எழுந்தருளாயே

பக்தர் தொழும் திரு வித்துவக் கோடு
வண் குல சேகரன் பாடிடும் அம்மான்
அற்புதன் நாரணன் அமர் திருக்கடித்தானம்
அணி பொழில் விரலாழி வேய் குறள் அப்பன்

செப்புடை மலை நாடு ஓர் பதின்மூன்றும்
தெய்வ நாதன் திரு ஹரி நாதன் நகரே
முத்துடை பெண்ணை நிறை புவியில் திரு
விக்ரமாப் பள்ளி எழுந்தருளாயே

ஹரி ஹரி உறைந்திடும் அருளாள வரதா
கடு வினை களைந்திடும் அழகிய சிங்கா
நெடு பொழில் கச்சியில் அஷ்ட புஜத்தான்
தீபப் பிரகாசன் விளக்கொளி தண்கா

விரி பொழில் வேளுக்கை ஆளரி நாதன்
ஜெய் தூதன் பாடகம் சேர்வை விளங்கும்

நீள் கருணாகரன் திருக்காராகத்தாள் நிலையிலா
மணி மாட கார்வானக் கள்வன் விமல வராஹன்
திருக்கள்வனூரே மலி புகழ் பரமேஸ்வர நகர் நாதா
பவள வண்ணா திருப்பள்ளி எழுந்தருளாயே

புள்ளுக்கு அருள் செய்த புட் குழி ராமா
புனிதன் உறைகின்ற ஊர் பத்தராவி
உள்ளம் கவர் கின்ற வீர ராகவன் எவ்வுள்
உத்தம நீர் மலி நீர் வண்ணன் எம்மான்

துள்ளும் இடவெந்தை நித்ய கல்யாணர்
திரை கடல் மல்லை தலை சங்கம் நாண் மதியே
தெள்ளிய யோகத்தில் அமர் திருக்கடிகை
சிங்கப்பிரான் பள்ளி எழுந்தருளாயே

சீராரும் வேத வல்லி மணாளா
செல்வம் திகழ் திருவல்லிக்கேணி மன்னாதா
பார் புகழ் ருக்மிணி பார்த்தன் ஸஹாயன்
பக்தருக்கு அருள் புரியும் சக்ரவர்த்தி குமாரன்

வாரணம் துயர் தவிர் தேவப் பெருமான்
வல்வினை தீர்த்திடும் தெள்ளிய சிங்கா
ஏர் தொண்டை நாடும் ஓர் நாலாறும் மூவாறும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

அண்டர் தொழும் திரு வேங்கடத்து அப்பன்
அரியா ஒண்ணாத நர சிங்க வேள் குன்றம்
தொண்டர்கள் வாழும் திரு ராமன் அயோத்யா
தொல் வன ரூபன் வாழ் நைமிசாரண்யம்

கொண்டல் தவழ் திரு சாளக்கிராமம்
குரு நர நாராயணன் பதரி உறை கோயில்
மண்டலம் தாம் தொழும் கண்டம் கடி வாழ்
மாதவனே பள்ளி எழுந்தருளாயே

அண்டர் தொழும் கொண்டல் தவழ் திருப் ப்ரிதி
பார் புகழ் ருக்மிணி துவராகா தீசன்
கோபிகள் கொண்டாடும் ஆய்ப்பாடி நாதன்
குன்று குடையாக எடுத்த கோவர்த்தன நேசா
நாச்சியார் உகந்து அருளும் வட மதுரையார் மைந்தன்
தேவர்கள் குறை தீர்க்கும் பாற் கடல் நாதா
வைகுந்தக் குட்டன் மகிழ்ந்து உறையும் பரம பத நாதா
உடையவர் போற்றிடும் சம்பத் குமாரா
ஸ்ரீ தரனே பள்ளி எழுந்து அருளாயா

மாதவன் பூ மகள் சேனையர் கோன் அருள் பெற்ற
மறைத் தமிழ் கூறும் மகிழ் மாறன்
முனி நாதன் புண்டரிகாஷர் மணக்கால் நம்பி
ஸ்ரீ யமுனா ஸ்ரீ மஹா பூர்ணர் பூதூரில் எதிராஜர்
பொருநல் குருகூரில் வந்தார் மணவாள மா முனி
முதலார் ஆதாரத்தோடும் உன்னைத் தொழ வந்தோம்
அந்த அச்யுதனே பள்ளி எழுந்தருளாயே

வேதம் தமிழ் செய்த மாறன் கொள் ஈசன்
விமலர்களாம் பொய்கை பூதம் பேயாழ்வார்
கோதை விஷ்ணு சித்தன் தொண்டர் அடிப்பொடி
குறையல் கலி கன்றி மா மழிசைப் பிரான்

நாதன் திருப்பாணான் நம்மாழ்வார் தம் கவி
நல் தமிழ் பாசுரம் பல்லாண்டு இசைப்பார்
ஏதங்கள் வாராது உலகினில் வாழ்வார்
எம்பெருமான் உன் தன கிருபையினாலே

ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி

————-

108 எண்ணின் பெருமை

இது மிகமிக முக்கியமான ஆன்மிக எண்ணாகும். ஆபத்துக்கு உதவும் எண் 108. அதனால், ஆம்புலன்சுக்கு 108 எண் கொடுத்திருக்கிறார்கள். சூரியனுடைய குறுக்களவு பூமியின் குறுக்களவு போல 108 மடங்கு அதிகம் உள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி ஒன்பது கிரகங்களும் 12 ராசிகளினூடே சஞ்சரிக்கிறது. பன்னிரெண்டை ஒன்பதால் பெருக்கினால் வருவது 108. ஆகவே, இவற்றால் பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பு 108 என்ற எண்ணால் தெளிவாகத் தெரிகிறது.

ஆகவே, பூரணத்துவத்தைக் குறிக்கும் எண்ணிக்கையாக இந்து மதம் 108ஐக் குறிப்பிடுகிறது. நட்சத்திரங்கள் 27. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் பாதங்கள் 4. ஆக மொத்த நட்சத்திர பாதங்கள் (4×27=108) வைணவத்தில் ஆழ்வார்கள் பாசுரங்கள் பாடப்பட்ட திருத்தலங்களின் எண்ணிக்கை 108. பகவானுக்கு அர்ச்சனை செய்கின்ற பொழுது 108 என்ற எண்ணிக்கையில் நாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்வார்கள். அதற்கு `அஷ்டோத்திரசத நாமாவளி’ என்று பெயர்.

இதை அஷ்டம் + ஸ்தோத்திரம் + சதம் + நாமம் + ஆவளி என்று பிரிக்க வேண்டும். அஷ்டம் என்றால் எட்டு. சதம் என்றால் நூறு. ஆக இரண்டும் சேர்ந்து 108. ஸ்தோத்திரம் என்பது நாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்வது. நாம ஆவளி என்பது நாமங்களின் வரிசை. அநேகமாக எல்லா தேவதைகளுக்கும் இந்த 108 என்ற எண்ணிக்கையில் இருக்கும்.

பெரும்பாலான நூல்கள், நூறு என்கிற எண்ணிக்கையில் முடிவதில்லை. 108 என்ற எண்ணிக்கையில்தான் முடியும். உதாரணமாக; “ராமானுஜ நூற்றந்தாதி’’ என்கிற நூலில் உள்ள பாசுரங்களின் எண்ணிக்கை 108. நாட்டிய சாஸ்திரத்தில் உள்ள நாட்டிய அமைப்புகள் 108. சிவதாண்டவத்தின் சிவனின் தாண்டவபேதங்கள், கரணங்கள் 108தான்! நந்திகேஸ்வரர் அமைத்த ‘பரதார்ணவ’ என்ற தாளசாஸ்திரம் 112 தாளங்களைத் தருகிறது என்றாலும், இதை 108 தாள சாஸ்திரம் என்றே குறிப்பிடுகின்றனர். ‘வஸ்து ரத்ன கோஸத்தின்’ படி மங்கலப் பொருள்கள் 108தான்! சக்தி பீடங்களாக இமயம் முதல் குமரி வரை 108 தலங்கள் உள்ளன.

“சாணிலும் உளன்; ஓர் தன்மை,அணுவினைச்
சத கூறு இட்ட கோணிலும் உளன்……”

இறைவன் சாணிலும் இருக்கிறான். அணுவினை நூறு கூறுகளாகப் பிளந்தால், அதற்குள்ளும் கடவுள் இருக்கிறான். பிரிக்கப்பட்ட அணுவுக்கு `கோண்’ என்று பெயர். அணுவைப் பிளக்க முடியும் என்பதை இருபதாம் நூற்றாண்டில்தான் Earnest Rutherford கண்டுபிடித்தார். ஆனால், அவருக்கு முன்பே கம்பர் அதைச் சொல்லி இருக்கிறார்.

தமிழில் எண்களின் எண்ணிக்கையை இப்படிக் குறிப்பிடுகிறார்கள்.

1. 100 நூறு – Hundred.
2. 1000 – ஆயிரம் – Thousand.
3. 10000 – பத்தாயிரம் – Ten thousand.
4. 100000 – நூறாயிரம் – Hundred thousand.
5. பத்துநூறாயிரம் – Million.
6. கோடி – Ten million.

7. அற்புதம் – Hundred million.
8. நிகற்புதம் – Billion.
9. கும்பம் – Ten billion.
10. கணம் – Hundred billion.
11. கற்பம் – Trillion.
12. நிகற்பம் – Ten trillion.
13. பதுமம் – Hundred trillion.
14. சங்கம் – Quadrillion.
15. வெள்ளம் – Ten quadrillion.
16. ஆம்பல் – Hundred quadrillion.
17. மத்தியம் – Quintillion.
18. பரார்த்தம் – Ten Quintillion.
19. பூரியம் – Hundred Quintillion.

நிறுத்தல் அளவுகள்

4 நெல் எடை – 1 குன்றிமணி.

2 குன்றிமணி – 1 மஞ்சாடி.
2 மஞ்சாடி – 1 பணவெடை.
5 பணவெடை – 1 கழஞ்சு.
8 பணவெடை – 1 வராகனெடை.
10 வராகனெடை – 1 பலம்.
40 பலம் – 1 வீசை.
6 வீசை – 1 தூலாம்.
8 வீசை – 1 மணங்கு.
20 மணங்கு – 1 பாரம்.
நீள அளவுகள்
10 கோன் – 1 நுண்ணணு.
10 நுண்ணணு – 1 அணு.
8 அணு – 1 கதிர்த்துகள்.

8 கதிர்த்துகள் – 1 துசும்பு.
8 துசும்பு – 1 மயிர்நுணி.
8 மயிர்நுணி – 1 நுண்மணல்.
8 நுண்மணல் – 1 சிறுகடுகு.
8 சிறுகடுகு – 1 எள்.
8 எள் – 1 நெல்.
8 நெல் – 1 விரல்.
12 விரல் – 1 சாண்.
2 சாண் – 1 முழம்.
4 முழம் – 1 பாகம்.
6000 பாகம் – 1 காதம்.
4 காதம் – 1 யோசனை

காதமும் யோசனையுமே இலக்கியங் களில் பல இடங்களில் வருகின்றன. ஒரு காத தூரம் என்பது 8 முதல் 16 கிலோ மீட்டர் வரையான ஒரு நீளமாக இருக்கலாம் என கருதப்படுகிறது

———————————-

மூலவர் பெயர் – ஊர் பெயர்

  1. நரநாராயணன் – பத்ரிநாத்
  2. நரசிங்க பெருமாள் -ஜோஷிமட்
  3. அத்புத நாராயணன் -திரிகோடித்தனம்
  4. வைகுண்ட நாதர் – திருநாங்கூர்
  5. லக்ஷ்மி நரசிம்மர்- திருவாலி திருநகரி
  6. த்ரிவிக்ரமன் –  -திருக்கோவிலூர்
  7. லோகநாத பெருமாள் -திருவாரூர்
  8. ஸ்ரீ ஸ்ரீனிவாசன் -திருவெள்ளக்குளம்
  9. திருவண் புருஷோத்தமன் – திருநாங்கூர்
  10. குடமாடு  கூத்தன்  – திருஅரிமேய விண்ணகரம்
  11. உலகளந்த பெருமாள் – காஞ்சிபுரம்
  12. அஷ்ட புஜ பெருமாள்- காஞ்சிபுரம்
  13. சொன்ன வண்ணம் செய்த பெருமாள் -திருவெஃ கா
  14. வரதராஜ பெருமாள் -காஞ்சிபுரம்
  15. யோக நரசிம்மசுவாமி –  வேலூர்
  16. பால சயனக் கோலம்- சிறுபுலியூர்
  17. தேவாதி ராஜ பெருமாள் -தேரழுந்தூர்
  18. நீலமேக பெருமாள் -திருத்தஞ்சை மணிக்கோவில்
  19. பக்தவத்சல பெருமாள்- திருக்கண்ணமங்கை
  20. தல சயன பெருமாள் – மாமல்லபுரம்
  21. திரு சாரநாத பெருமாள் – திருச்சேறை
  22. உப்பிலியப்பன் – கும்பகோணம்
  23. வையம் காத்த பெருமாள்- திருக்கூடலூர்
  24. ஜெகன்னாத பெருமாள் – கும்பகோணம்
  25. கஜேந்திர வரத பெருமாள்- திருக்கண்டியூர்
  26. வல்வில் ராமன் -திருப்புள்ளம்
  27. சாரங்கபாணி -கும்பகோணம்
  28. ஆண்டளக்கும் ஐயன் – திருஆதனூர்
  29. கோலவில்லி ராமர் -திரு வெள்ளியங்குடி
  30. நித்திய கல்யாண பெருமாள்- சென்னை
  31. ஹர சாப விமோசன பெருமாள்- திருக்கண்டியூர்
  32. அப்பக்குடத்தான்- தஞ்சாவூர்
  33. அன்பில் சுந்தரராஜ பெருமாள்- திருச்சி
  34. புண்டரீகாட்சன் – திருச்சி
  35. புருஷோத்தமன் -திருச்சி
  36. ரங்கநாதர்- திருவரங்கம்
  37. பக்த வத்சல பெருமாள்- திருநின்றவூர்
  38. வீர ராகவ பெருமாள்- திருவள்ளூர்
  39. விஜய ராகவ பெருமாள்- காஞ்சிபுரம்
  40. நீர் வண்ண பெருமாள் -திருநீர் மலை
  41. விளக்கொளி பெருமாள்- தூப்புல்
  42. அழகிய சிங்க பெருமாள்- திருவேளுக்கை
  43. ஆதி வராக பெருமாள்- காஞ்சிபுரம்
  44. நிலா துண்ட பெருமாள்- காஞ்சிபுரம்
  45. பாண்டவ தூத பெருமாள் -காஞ்சிபுரம்
  46. பவள வண்ண பெருமாள் -காஞ்சிபுரம்
  47. பரமபத நாதர் – காஞ்சிபுரம்
  48. கருணாகர பெருமாள்- திருகாரகம்
  49. பார்த்தசாரதி – சென்னை
  50. பேரருளாளன் -நாகப்பட்டினம்
  51. வரதராஜ பெருமாள்- நாகப்பட்டினம்
  52. கோபாலகிருஷ்ணன் -காவளம்பாடி
  53. பரிமள ரங்கநாதர்- மாயவரம்
  54. கோவிந்தராஜ பெருமாள்- சிதம்பரம்
  55. அழகிய மணவாளர் -உறையூர்
  56. திருநறையூர் நம்பி -நாச்சியார் கோவில்
  57. நாவாய் முகுந்தன் -திருநாவாய்
  58. உய்யவந்த பெருமாள்- பாலக்காடு
  59. நீலமேக  பெருமாள்- திருக்கண்ணபுரம்
  60. சவுந்தர ராஜ பெருமாள்- நாகப்பட்டினம்
  61. நாண்மதியப் பெருமாள் – தலச்சங்காடு
  62. திரிவிக்ரம நாராயணர் – சீர்காழி
  63. தாமரைக் கண்ணன் -வைகுண்ட விண்ணகரம்
  64. செங்கண் மால் ரங்கநாதர் – திருத்தெற்றியம்பலம்
  65. தாமரையாள் கேள்வன்-பார்த்தன் பள்ளி
  66. தேவநாத பெருமாள்- திருவகிந்திபுரம்
  67. காட்கரையப்பன்- எர்ணாகுளம்
  68. லெட்சுமண பெருமாள்- திருமூழிக்களம்
  69. திருவாழ் மார்பன் – பந்தனம்திட்டா
  70. இமையவரப்பர்-ஆலப்புழா
  71. மாயப்பிரான்- திருப்புலியூர்
  72. திருக்குறளப்பன்- பந்தனம் திட்டா
  73. பாம்பணையப்பன் – ஆலப்புழா
  74. அனந்த பத்மநாபர் -திருவனந்தபுரம்
  75. ஆதிகேசவ பெருமாள்- கன்னியாகுமாரி
  76. திருவாழ்மார்பன்- திருப்பதிசாரம்
  77. அழகிய நம்பியார் – திருக்குறுங்குடி
  78. தோத்தாத்ரி நாதன் – நாங்குனேரி
  79. வைகுண்ட நாதர்- ஸ்ரீ வைகுண்டம்
  80. விஜயாசனர்- நத்தம் தூத்துக்குடி
  81. வைத்தமாநிதி பெருமாள்- திருக்கோளூர்
  82. பூமி பாலகர் – திருப்புளியங்குடி
  83. ஆதி நாதன் – ஆழ்வார் திருநகரி
  84. மகர நெடுங்குழைக்காதர் – தூத்துக்குடி
  85. வேங்கட வாணன் – பெருங்குளம்
  86. ஸ்ரீனிவாஸன் தொலைவில்லி மங்கலம்
  87. தெய்வ நாயகர் – திருத்தேவனார் கோவில்
  88. அரவிந்த லோசனர் – தொலைவில்லி மங்கலம்
  89. நின்ற நாராயணப் பெருமாள்- விருது நகர்
  90. வடபத்ரசாயி -திருவில்லிபுத்தூர்
  91. கூடலழகர் – மதுரை
  92. கள்ளழகர் – திருமாலிருஞ்சோலை
  93. காளமேக பெருமாள்- திருமோகூர்
  94. சவுமிய நாராயணன்- சிவகங்கை
  95. ஆதி ஜெகந்நாதர்- திருப்புல்லாணி
  96. சத்திய மூர்த்தி – திருமயம்
  97. ரகுநாயகன் – அயோத்தி
  98. கோவர்த்தநேசன்- மதுரா
  99. கிருஷ்ணன்- துவாரகா
  100. பிரகாலத்தவரதன் -அஹோபிலம்
  101. வெங்கடாஜலபதி -மேல் திருப்பதி
  102. முக்திநாத் -நேபால்
  103. நைமிசாரண்யம் – உத்திரபிரதேசம்
  104. நவமோகன கிருஷ்ணா – ஆயர்பாடி
  105. ரகுநாத் -ஜம்மு காஷ்மீர்
  106. திருவல்லவாழ் திருவாழ்மார்பன்- எர்ணாகுளம்
  107. நாராயணா – திருப்பாற்கடல்
  108. மகாவிஷ்ணு – பரமபதம் வைகுண்டம்

————–

ஸ்ரீ நர நாராயணன்- ஸ்ரீ பத்ரிநாத்-

இமயத்து திருப்பிரிதி இதுவென்று கண்டு
நமக்களித்த பெரியாழ்வார் நற்பாசுரம் உண்டு
நாலாயிரப் பிரபந்தத்தில் நவின்ற கோவிலே
காலால் அளந்த காவியமான பெருமாளே
நரநாராயண வடிவமே!  நந்தாநதி யோகமே
வரமாய் பெற்றாலே வைகுண்டம் தெரியுமே
சங்குடன் கையில் சக்கரம் ஏந்தியவனே
பொங்கும் அழகில் பூத்திடும் பத்மமே
புராண தெய்வமே புதுப்பொலிவு உருவமே
விராட புருஷனே விளையாட்டுக் கண்ணனே
பத்ரிநாத் நாராயணனே பரவசம் தருவாயே
உத்தம நாயகனே உண்மை தெய்வமே
ஆதியாகி அந்தமாகி அண்டம் நிறைந்தவனே
வேதியர் வணங்கிடும் விஷ்ணுவே! விமலனே!
ஓதியே உன்புகழை ஓயாது பாடுவேன்
சோதியாய் நீயும் சுடரொளி தருவாய்

ஓதியாயிரநாமங்கள் உணர்ந்தவர்க்கு* உறுதுயரடையாமல்*
ஏதமின்றி நின்றருளும் நம்பெருந்தகை* இருந்தநல் இமயத்து*
தாதுமல்கிய பிண்டிவிண்டு அலர்கின்ற* தழல்புரை எழில்நோக்கி*
பேதைவண்டுகள் எரியென வெருவரு* பிரிதிசென்றடை நெஞ்சே.

————–

2-ஸ்ரீ நரசிங்க பெருமாள்- ஸ்ரீ ஜோஷிமட்

பத்ரிக்கு சென்றிட பாதையாய் நிற்கும்
உத்தரவு தந்து உயர்வழி காட்டும்
ஆதிசங்கர் மடமே ஆலய மருந்தே
ஜோதியாய் இமயத்தில் ஜோஷிமட் கோவிலே
வாயிலாய் நமக்கு வழிகாட்டி பெரும்
கோயிலாய் நம்முள் கொலுவிருக்கும் தெய்வத்தை
உள்ளுக்குள் இருக்கும் உண்மை அத்வைதத்தை
தெள்ளத் தெளிவாய் தெரிந்திட வைக்கும்
நரனாய் பிறந்த நமக்குள்ளும் இருந்து
நரசிம்மமாய் மறைந்து  நாடியவர்க் கருளி
குளிரிலும் பத்ரியை கும்பிட வைக்கும்
கலியிலும் நமக்கு கதியைக் காட்டும்
மலைகள் ஜெயவிஜய மகிமையைச் சொல்லும்
அலைகள் ஓயாது அடிமனதில்  புரளும்
விலையில்லா பக்தியே வேராய் உரமிடும்
சிலையான விஷ்ணுவும் சிந்தையில்  தெரியும்
வடநாட்டு திருப்பதியே பூவுலக வைகுண்டமே
தடங்கல் இல்லாது தாரணியின் கல்பவ்ருக்ஷமே
வழிபாட்டுத் தலமே வைராக்கிய ஏற்றமே
அழிவில்லா மார்க்கமே! அருமறை அனுபவமே !

மறங்கொளாளரியுருவெனவெருவர ஒருவனது அகல்மார்வம்
திறந்து வானவர் மணிமுடிபணிதர இருந்த நலிமயத்துள்
இறங்கி ஏனங்கள் வளைமருப்பிடந்திடக் கிடந்தருகெரிவிசும்
பிறங்கு மாமணியருவியொடிழிதரு பிருதிசென்றடை நெஞ்சே!

—————
3-அத்புத நாராயணன்- ஸ்ரீ திருக் கடித்தனம் -கேரளா

திருக்கடித் தனத்து  திருஅவதாரத்  திருமாலே
அரிதாய் கிடைத்த அத்புத நாராயணனே
பக்தன் சகாதேவன் பாங்காய் வேண்டிட
அக்னியில் எழுந்தருளிய அத்புத நாராயணனே
புரியாத புதிராய் புவனத்தில் பூத்தவனே
அறியாத பக்தனையும் அரவணைக்கும் பெருமாளே
ருக்மாங்கதன் தோட்டத்து ரூபங்களாய் பூத்து
தக்க தருணத்தில் தலப்பெருமை காத்தவனே
சாகாவரம் பெற்ற சகலதேவரும் சக்தியிழக்க
ஏகாதசி விரதபலன்  ஏழைப்பெண் அளித்தாளே
ஆகாதுபோன சக்திகள்  அற்புதமாய் கிடைக்க
ஏகாதசி மகிமையை ஏற்றமாய் சொன்னவனே
எங்கும் நிறைந்து எதிலும் கலந்தவனே
பொங்கும் அருளைப் பொலிவாய் தருபவனே
தங்கு தடையின்றி தருமத்தை மறுபடிமறுபடி
இங்கும் அங்கும் எங்கும் காப்பவனே
பூணவேண்டி ஆண்டாள் பூமாலை சூட்டிட
காணவேண்டி மனங்கள் காத்து நிற்குமே
நம்மாழ்வார் பாசுரத்தில் நலமாய் பாடிட
இம்மைக்கும் மறுமைக்கும் ஈஸ்வரன் ஆனவனே

—————-

ஸ்ரீ வைகுண்ட நாதர்- ஸ்ரீ திருநாங்கூர்

திருநாங்கூர் தலத்து  தெய்வத் திருமாலே
திருமுகம் கிழக்கே திருக்கோலத் திருமாலே
ஆதிசேடன் தலைமேல் அணிந்த திருமாலே
சேதிகேட்டு சிவனின் சினம்குறை திருமாலே
விழுந்திடும் கேசம் வீறுகொண்ட சிவனாக
எழுந்தருளி சிவனின்  இதயம்குளிர வைத்தவனே
பதினோரு சிவனுருவம் பார்வதிக்காக ஆடிட
பதினோரு திருப்பதிகளில் பள்ளிகொண்ட பெருமாளே
ஆடும் சிவனின் ஆங்காரம் தணிந்திட
கேடும் விளையாது குலம் காத்தவனே
வைகுண்ட நாதராய் பூலோகம் வந்தவரே
வைகுண்ட விண்ணகரம் வைகறையில் தெரியுமே
திருமங்கை ஆழ்வார் திருப்பாசுரம் பத்தும்
திருமணிமாடத் திருக்கோயிலில்  திருமாலையாய்  சூட்டிட
கருடசேவைக் கோலம் கண்கவர் திருக்கோலம்
செருக்கடுத்து எந்தன் சிந்தையில் பூண்டிடுக !

—————-

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்- ஸ்ரீ திருவாலி திருநகரி

திருவாலி திருநகரி திருலக்ஷ்மி நரசிம்மரே
கருட சேவையில் காத்தருளும் தெய்வமே
தஞ்சாவூர் மண்ணில் தாயாருடன் அமர்ந்தவரே
அஞ்சிய அடியாருக்கு அருளிய ஆலிங்கனமே
உக்கிரம் குறைந்து உஷ்ணம்  தணிய
பக்கத்தில் அமர்ந்த பத்மத்தின் நாயகனே
பதினோரு திருப்பதிகளில் பாங்காய் அமைந்தவரே
மதியினால் அறியமுடியா மாயஒளி விளக்கே
அரசருக்கும் முனிவருக்கும் அறிவை ஊட்டி
பூவரசக் குப்பத்தில் வாகை சூட்டியவரே
குமுதவல்லி நாச்சியாருடன் கும்பிட்ட  ஆழ்வாருக்கு
அமுதவல்லி தாயாருடன் அமுதமான  கருணையே
கொஞ்சும் அன்னையின் குளிர்ந்த பார்வையில்
பஞ்சநரசிம்ம ஷேத்ரத்தில் பளிங்காய் மின்னுபவரே
தஞ்சமென வந்தோரை தாங்கி அரவணைத்து
பஞ்சாய் கவலைகளை பறக்கச் செய்பவரே

——————-

ஸ்ரீ த்ரிவிக்ரமன் – ஸ்ரீ உலகளந்த பெருமாள் -ஸ்ரீ திருக்கோவிலூர்

உலகை அளக்க ஒருகாலைத்  தூக்கியவனே
குலத்தைக் காக்கும் கோபால பெருமாளே
தலத்தின் பெருமை த்ரிவிக்ரம உருவமே
வலக்கை சக்கரம் வையத்தைக் காக்குமே
இடக்கை சங்கு இடர்களை நீக்குமே
இடம் மாறி இக்கோவிலில் இரண்டுமே
தடம்மாறா வாழ்வில் தாலாட்டி நிற்குமே
திடமான நம்பிக்கை திலகமாய் ஜொலிக்குமே
இருக்கஇடம் இல்லாது ஆழ்வார்கள் மூவர்
முறுவலுடன் உன்புகழை முத்தமிழில் பாட
பொய்கை ஆழ்வார் பூதத்தாழ்வார்  பேயாழ்வார்
மெய்யறிந்து உன்னை முழுதாய்க் காண்பாரே
நடப்பதும் நாளில் நடக்காது போவதும்
கிடப்பதும் உடுப்பதும் கீர்த்தியைப் பாடுவதும்
உண்பதும் உறங்குவதும் உடலால் செய்வதும்
கண்கள் பார்ப்பதும் கால்தூக்கிய உன்னாலே
ஐயம் இல்லாது அப்பனை நாம்கண்டுவிட
வையத்துள் வாழ்ந்திட வகைகளை கற்றிட
அள்ளஅள்ள உணரலாம் அத்வைத அறிவைநம்
உள்ளத்தை அளப்பானே  உலகளந்த பெருமாள் !

————

ஸ்ரீ லோகநாத பெருமாள் -ஸ்ரீ திருக் கண்ணங்குடி

உருகாத வெண்ணெய் உருவத்தில் நின்றவனே
பெருகிடும் கருணை பேரானந்த பெருமையே
மகிழத்தில் கட்டிய மதுசூதன  மகிழ்வே
அகிலம் காத்திடும் அற்புத விஷ்ணுவே
வசிஷ்டரின் தவத்தில் வையகம் வந்தவனே
உசிதமாய் உரலில் உறையும் தாமோதரனே
உள்ளத்தில் பக்தி உயர்வாய் கொண்டால்
அள்ளஅள்ள குறையாது ஆனந்தம் தருவாயே
வெள்ளமென அன்பை வேணுவில் பொழிவாயே
கள்ளமில்லாது உலகை காத்து நிற்பாயே
திருக் கண்ணங்குடி தலத்தில் திருக்கோல லோக நாதனே
அருளிய மந்திரம் அந்தமில்லா நிறைவே
குருவாய் முனிவருக்கு கோலாகலன் வந்தாயே
பெருமாளாய்  இங்கே பெரிதான சியாமளனே

————–

ஸ்ரீ ஸ்ரீனிவாசன் –ஸ்ரீ திருவெள்ளக்குளம்

தென் திருப்பதி என்று திருப் பெயர் கொண்டு
வெண் நிறக் குளத்தருகே வீற்றிருக்கும் வேங்கட நாதனே!
கண் கொள்ளா அழகோடு காட்சி அளித்து
மண்ணில் தவமான மங்கை அலர் மேலவளே
பதினோரு திருப்பதி பதினோரு விஷ்ணு
பதினோரு சிவனுக்காய் பதவிசாய் எழுந்திட
அண்ணல் அவனே ஆகிய படியால்
பண்ணாயிரப்  பாடல் பாடி தினம்  தொழுதாரே
மங்கை ஆழ்வார் மலரோடு அன்னத்தில்
இங்கே பவனி இனிதே வந்திட
கருட  சேவையில் காத்தருளி பவனிக்க
வருடத்தில் தவறாது  வந்திடும் தைவிழாவே
மரணத்தை எண்ணி மன்னன் அஞ்சிட
மருத்துவ முனிவரை மன்றாடிக் கேட்டிட
ம்ருத்யுஞ்ச மந்திரம்  மன்னருக்கு ஓதிட
கருத்துடன் சிவனை கண்கள் தியானித்தனவே
ஹரனை வேண்டினால் ஹரியும் வந்திட
இறப்பை தள்ளி இங்கிவனைக் காத்திட
நாராயணன் அருளிய நல்லதொரு திருத்தலத்தில்
மாறாது  மாதவன் மண்ணினைக்  காப்பாரே
முப்பது நாளும் முத்தான தமிழில்
தப்பாது செப்பிய தளிரான மாலை
வலையில் சிக்கிய வலைப்பூ மாலை
அலைபோல் ஓயாது அவனருளால் வளரட்டும் !!!

———–

ஸ்ரீ திரு வண் புருஷோத்தமன் – ஸ்ரீ திருநாங்கூர்

திருப்பாற் கடலின் தீர்த்தம் திகழ்ந்திட
திருமாலை குணமாக்க திரு மூலிகை சஞ்சீவியே
திருமகள் நாயகி திருவோடு இணைந்தவனே
திருப்பதிகள் பதினொன்றில் திருத்தமாய் நின்றவனே
நின்ற கோலத்தில் நிலைத்த புருஷனே
அன்றலர்ந்த தாமரை அழகு மணாளனே
திருமங்கை ஆழ்வாரின் திருப்பாசுர உத்தமனே
கருத்தைக் கவர்ந்திடும் காருண்ய சீலனே
சீலனாம் இராமனை சிறப்பாகப் பாடுவோமே
கோலமாய் அழகை கொண்ட கோதண்டனே
மாலையாய் பாடிய மங்களாசன மூர்த்தியே
சோலையில் பூத்திட்ட சுந்தர விஷ்ணுவே
விஷ்ணுவின் உருவத்தில் வியந்திடும் திருநாங்கூரே
கஷ்டங்கள் போக்கிடும் கருணை வெள்ளமே
சிறப்பினை பெற்ற சீர்காழி தலமே
பிறப்பினை அறுத்து பேறும் தருமே
தருவாய் பாலினை தாயாய் மாறியே
வருவாய் அமுதளிக்க வண்புருஷ உத்தமனாய்
பசியினைப் போக்க பாற்கடலை அளித்தவனே
கசிந்து உருகும் இக்  கவிதையின் திருவே

——————

ஸ்ரீ குடமாடு  கூத்தன் கோவில் – ஸ்ரீ திருஅரிமேய விண்ணகரம்

குடையாய்த்  தாங்கி கோவர்த்தனம் காத்தவனே
விடையாய் கீதையை விவரித்த கண்ணனே
அடைய முடியா அதிசய ஆனந்த உருவமே
தடைகளை அகற்றிடும் தாமோதரக்  கண்ணனே
குடத்தில் வெண்ணெய் குதித்தாடி உண்பவனே
குடத்தில் அமுதை குணமாய் மறைத்தவனே
இடையனாய் உதங்கருக்கு இனியமுது ஈந்தவனே
மடை திறந்த வெள்ளமாய் மாயங்கள் செய்தவனே
அக்னி உஷ்ணத்தை  அமுதால் குறைத்தவனே
உக்கிர சிவனையும்  உருக வைத்தவனே
பக்தரைக் காணப்  பறந்தோடி வருபவனே
அக்கரை சேர்க்க அவதாரம் எடுப்பவனே
திருநாங்கூர் தேசத்தை திவ்யமாய் ஆக்கியவனே
திருப்பதிகள் பதினொன்றிலும் திருஉருவம் கொண்டவனே
திருஅரிமேய விண்ணகரத்  திருமாலாய் நின்றவனே
திருமங்கை ஆழ்வார் திருப்பாசுர திருஉருவமே

———

ஸ்ரீ உலகளந்த பெருமாள் – ஸ்ரீ காஞ்சிபுரம்

வலக்கால் ஊன்றி வானுயர தூக்கி
உலகை அளக்க உயர்ந்து நின்றவனே
சுலபத்தில் ஆணவம் சுருங்கிய மகாபலி
தலப் பெருமை அறிந்து தலை வணங்கி நிற்போமே
கச்சியின் கோவிலில் கண்டிடும் அதிசயமே
உச்சிவரை இடக்கால் உயரே  நின்றிடுமே
பச்சை மாமலை பவழவாய் செங்கண்
இச்சைகள் அகற்றி இச்சகம் காப்பவனே
திருநீரக திருஊரக திருகாரக திருகார்வானமே
திருஉருவே திருமாலே திருமகள் தலைவனே
உருவாய் வருவாய் உலகை அளப்பாய்
அருவாய் மறைவாய் ஆகாயம் நிறைப்பாய்
பாதாள உலகமும் பாதம் காட்டுமே
ஆதாரம் உன்னிடமே அடைக்கலம் ஆகுமே
காதால் கேட்டிட கண்ணால் கண்டிட
கோதாவும் பாடிட கோவிந்த நாதமே

—————-

ஸ்ரீ அஷ்ட புஜ பெருமாள்- ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள்

அட்டபுயக் கரம் கொண்டு அபயம் தருவாயே
எட்டாத  முக்தியை எளிதில் தருவாயே
கட்டிய வீட்டைக்  காத்து அருள்வாயே
தட்டாமல் யானைக்கும்  தயாளம் காட்டுவாயே
அக்கரத்தில் சக்கரம்கத்தி  அம்புடன் புஷ்பமே
இக்கரத்தில் சங்குகதை  ஏந்தியவில்லுடன்  கேடயமே
முக்காலம் உணர்ந்த முனிவருக்கும் மோட்சமே
மக்களைக் காக்க மங்களமான கோலமே
மகாசந்தன் யானையாகி மலரால் வழிபட
மகாவிஷ்ணுவே ஆதிமூலமாகி மனமிரங்கி வந்தாயே
யாகத்தை தடுத்திட யாராலும் முடியாதே
யோகத்தை  அருளிய யாதர்குல மாணிக்கமே
அலமேல் மங்கையுடன் அஷ்டபுஜ ஆதிகேசவனே
தலப்பெருமை அறிந்து தாளடி  பணிவோமே
வலம்வந்து உன்னை  வணங்கி  நிற்போமே
உளமகிழ்ந்து தினமும் உன்னருள் பெறுவோமே

—————

ஸ்ரீ சொன்ன வண்ணம் செய்த பெருமாள் (ஸ்ரீ யதோத்தகாரி பெருமாள்) ஸ்ரீ திருவெஃகா –

சொன்ன வண்ணம் செய்த பெருமாளே -ஆழ்வார்
சொன்ன வண்ணம் செய்த பெருமாளே
திருமழிசை ஆழ்வார் திருஅருட் பாலில்
உருவத்தில் இளமை உடனே பெற்றாளே
பதுமையை  மன்னன் பாராட்டி மணந்து
இதுபோன்ற இளமை எனக்கும்தா என்றானே
மன்னனுக் கிசைய மறுத்த ஆழ்வாரை
தன்நாடு கடந்து தாண்டச்  சொன்னானே
தன்சீடர் தன்மக்கள் தன்பொருள் இதனுடன்
தன்பெருமாள் உன்னையும் தன்னோடு அழைத்தாரே
மன்னனின் ஆணையில்திரு மழிசை ஆழ்வார்கனி
கண்ணன் துணையோடு காலாற நடக்க
என்னோடு நீயும் எழுந்து வாவென்றுசொல்ல
அண்ணலும் அன்று ஆழ்வாருடன் சென்றீரே
சொன்ன வண்ணம் செய்த பெருமாளே- ஆழ்வார்
சொன்ன வண்ணம் செய்த பெருமாளே
தன்தவறு உணர்ந்து தாளடி பணிந்து
மன்னிப்பு கேட்டு மன்னன் வந்திட
தன்னோடு கனிகண்ணன் தானாக திரும்பிட
உன்பக்தன் பின்னாலே உளமாரச் சென்றீரே
சொன்ன வண்ணம் செய்த பெருமாளே-ஆழ்வார்
சொன்ன வண்ணம் செய்த பெருமாளே
கோபத்தில் சரஸ்வதி கொந்தளிக்கும் வேகவதி
ஆபத்தை நீக்கவே ஆதிசேட வேகசேது
திருவெஃக  நகருக்கு திரும்பி வந்தவனே
திருமாலாய் வந்திங்கு திரும்பிப் படுத்தவனே
சொன்ன வண்ணம் செய்த பெருமாளே-ஆழ்வார்
சொன்ன வண்ணம் செய்த பெருமாளே
வலமிருந்து இடமான வைகுண்ட பெருமாளே
தலத்தில் திசைமாறி தலையும் வைத்தவனே
கோமள நாச்சியுடன் கோயில் கொண்டவனே
தாமரை மணாளனே தளிர்மேனி வண்ணனே
சொன்ன வண்ணம் செய்த பெருமாளே -ஆழ்வார்
சொன்ன வண்ணம் செய்த பெருமாளே

கனிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டா – துணிவுடைய
செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப்பாய்சுருட்டிக்கொள்

கணி கண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணி வண்ணா நீ கிடக்கவேண்டும் – துணிவுடைய
செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய் படுத்துக் கொள்.

————–

ஸ்ரீ தேவராஜப் பெருமாள்

நான்முகன் யாகத்தை நலமாக்கிய பெருமாளே
வான்வெளி படுத்த வரதராஜ பெருமாளே
நாற்பது ஆண்டுக்கொரு நற்கதி பெருமாளே
ஆர்ப்பாட்ட விழாவில் அத்திவரத பெருமாளே
பிரம்மனின் அக்னியில் பிறந்த பெருமாளே
பிரம்மாண்ட கோவிலில் படுத்த பெருமாளே
சூழும் உலகிற்கொரு  சுதர்சன பெருமாளே
வீழும் பழிகளை விலக்கிடும் பெருமாளே
படிகளிரு  பன்னிரண்டு பாதை பெருமாளே
அடிகளில் பாடிய ஆழ்வாரின் பெருமாளே
மலையாள நாச்சியார் மனம்கவர் பெருமாளே
மலையேற காயத்ரி மந்திர பெருமாளே
சக்கரத் தாழ்வார் சந்நிதி பெருமாளே
அக்கரை ஆசார்ய ஆச்சர்ய பெருமாளே
ஒருவினாடி மறைந்து ஓங்கிடும் பெருமாளே
கருட சேவையில் காத்திடும் பெருமாளே
தங்க பல்லியாய் தாங்கிடும் பெருமாளே
தங்க மழைபொழியும்  தாயார் பெருமாளே
மங்காத ஆபரணம் மார்பிடை  பெருமாளே
சங்கு சக்கரமுடன்  சயனித்த பெருமாளே
வையம் கண்டிடும் வைகாசி பெருமாளே
ஐராவதம் தாங்கிடும் அத்திகிரி   பெருமாளே
பொய்யை அகற்றிடும் பொலிவான பெருமாளே
மெய்யை உணர்த்த மேவிய பெருமாளே

————

ஸ்ரீ யோக நரசிம்மசுவாமி திருக்கோயில்- ஸ்ரீ சோளிங்கர்

யோகத்தில் ஆழ்ந்த யோகியே போற்றி
யாகங்கள் காத்த யாதவனே போற்றி
மாயங்கள் செய்த மாதவனே போற்றி
காயங்கள் போக்கும் குணசீலா போற்றி
சிறுவன் பிரகலாதன் சொல்காத்தவனே போற்றி
உருவத்தில் நரசிம்ம உக்கிரமே போற்றி
சப்தரிஷிகளுக்கும் காட்சியான  சத்தியமே போற்றி
அப்படியே யோகத்தில் ஆழ்ந்தவனே போற்றி
தொட்டாச் சாரியரின் துணையே போற்றி
தட்டாது தரிசனம் தந்தவனே போற்றி
கடிகாசல மலையின் காவலே போற்றி
கடிகை நாழிகையில் கோலமே போற்றி
முக்தியை அளித்திடும் மூலவனே போற்றி
பக்தியில் காட்டிடும் பாதையே போற்றி
சக்கர சங்கோடு சந்நிதியே போற்றி
அக்கறை பலத்துடன் ஆஞ்சநேயா போற்றி
ஏறிய படிகளில் இரங்கிடுவாய் போற்றி
கோரிய வேண்டுதலுக்கு குழைந்திடுவாய் போற்றி
முனிவருக்கு பிரம்மரிஷி முனைந்தவனே போற்றி
மனிதனுள் சிம்மமாய் மாறியவனே போற்றி

—————

ஸ்ரீ சிறுபுலியூர்-பால சயன கோலம்

ஆதிசேடன் மடியினில் அனந்த சயனனே தாலேலோ
ஓதிய மறைகளில் ஒய்யார சயனமே தாலேலோ
பால சயனக் கோலத்தில் படுத்தவனே தாலேலோ
காலத்தால் அழியாத கருடசேவை பெருமாளே தாலேலோ
அகந்தை அழித்த அரங்க சயனனே தாலேலோ
அகத்தினை திறந்து அமர்ந்த அண்ணலே தாலேலோ
இகபர சுகத்தினை இவ்வுலகில் அளிப்பவனே தாலேலோ
சுகமான பேரின்பம் சுகித்திட தருபவனே தாலேலோ
அவனியைக் காத்த அலுப்பில் படுத்தவனே தாலேலோ
சிவனின் சொல்லால் சேவித்த பாலகனே தாலேலோ
புலிக்கால் முனிவருக்கு புரிந்த அருளோனே தாலேலோ
கலியுலகம் வந்ததென்று களைத்து போனாயோ தாலேலோ
திருவனந்தபுர இடவலமான தீர்க்க பெருமாளே தாலேலோ
திருக்கண்ண மங்கையில் திடமான கீழ்மேலானவனே தாலேலோ
திருஅரங்கத்தில் படுத்த திருக்கோல நாயகனே தாலேலோ
சிறுபுலியூரில் சிந்தைகவர் சின்ன பாலகனே தாலேலோ

—————–

ஸ்ரீ தேவாதி ராஜ பெருமாள்-ஸ்ரீ தேரழுந்தூர்

பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழியே
அல்லும் பகலும் அலுப்பின்றி காப்பாய் வாழியே
தேவாதிதேவ ராஜாதிராஜ தேவனே வாழியே
பாவாய் ஆண்டாள் பாடிய அரங்கனே வாழியே
பத்தடிஉயர கம்பீர பரமனே வாழியே
சித்திர அழகில் சிந்தை கவர்பவனே வாழியே
அருகிலே பிரகலாதன் அண்டையில் மார்கண்டேயன் வாழியே
கருடனின் அருகில்  கதையுடன் நின்றவனே வாழியே
காலிலே காவேரி கடிமலராய் வணங்கிட வாழியே
ஆலிலை கண்ணனே ஆங்கேஉயர் விஸ்வமே வாழியே
அழுந்திய தேரினை அசைத்த ஆண்டவனே வாழியே
கொழுந்தாய் பசுக்களை கோகுலத்தில் காத்தவனே வாழியே
அரிதிலும் அரிதான அரிநாரயண வடிவமே வாழியே
கரிகால் வளவனின் காலத்து தலமே வாழியே
கம்பன்பிறந்த கடிமணல் காவேரி கரை வாழியே
செங்கமல வல்லியுடன் சேர்ந்த திருமாலே வாழி வாழியே!

————

ஸ்ரீ திருத்தஞ்சை மாமணிக்கோவில்-மூன்று தலங்கள் – ஸ்ரீ நீலமேக பெருமாள் / ஸ்ரீ வீர நரசிம்ம பெருமாள் / ஸ்ரீமணிக்குன்றர்

அஞ்சலென்ற பராசரருக் கருளிய அரியே
தஞ்சகனை அழித்த தாமரை அரியே
கெஞ்சிய கஜமுகனை திருத்திய அரியே
தஞ்சம் அளித்த  தஞ்சாவூர் அரியே
தண்டகனை வராகமாய் அழித்த  அரியே
அண்டம் பாதாளம் அதனுள்பாய்ந்த அரியே
தாடகனை அழித்த  தாண்டவ அரியே
பாடலில் ஆடிவிடும் பாலக அரியே
வெண்ணாற்றுக் கரையில் வீற்றிருக்கும் அரியே
மண்ணிலே ஒளிரும் மணிக்குன்ற அரியே
நிலத்தில் கமழும் நீலமேக அரியே
தலத்தில் திகழும்வீர நரசிம்ம அரியே
மூன்று கோவிலிலும் முகுந்த அரியே
சான்றாய் அமைந்த சாத்திர அரியே
அறிய முடியாத அளவில்லா அரியே
அரிதான மாயையின் ஆக்கமான  அரியே
அடிமுதல் முடிவரை அளக்கமுடியா அரியே
மடிமேல் பிளந்த மகாநரசிம்ம  அரியே
கொடியாய் செங்கமல கோதையுடை அரியே
வடிவாய் அம்புஜ வல்லியின் அரியே

——–

ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் – ஸ்ரீ திருக்கண்ண மங்கை

புண்ணியம் ஏழு புவியில் பெற்றதலமே
மண்ணிலே மங்கையை மணந்த தலமே
பாற்கடல் பள்ளிகொண்ட பரந்தாமன் தலமே
கார்முகில் வண்ணன் கண்ணன் மங்களதலமே
சந்திரன் பெற்ற சாபம் தீர்த்ததலமே
மந்திர தீர்த்தம் மகாலக்ஷ்மி அபிஷேகமே
சித்திரா பௌர்ணமியில் சிந்தைகவர் திருவிழாவே
சித்தம் குளிர்ந்து சிங்காரம் பொங்குமே
பத்திரமாய் காக்கும் பக்தரை பத்தராவியே
பத்திரமாய் கூடாகும்  பணிவான தேனிக்களே
பண்ணிலே வந்திடும் பக்தவத்சல பெருமாளே
கண்ணிலே கருத்திலே கலந்திடு பெருமாளே
திருமகளை திருக்கண்ண மங்கையில் திருமணம் செய் திருமாலே
திருக்கண்ண திருத்தலத்தில் திகழும் திருமாலே

————-

ஸ்ரீ தல சயன பெருமாள்-ஸ்ரீ திருக்கடல் மல்லை

பள்ளி கொண்ட நாராயணா பாற்கடல் பரந்தாமா
அள்ளிவிட முடியாத ஆழ்கடல் அனந்த சயனா
புண்டரீக மகரிஷி பூக்களை சுமந்த பத்மநாபா
அண்டம் காத்த அச்சுதா கேசவா மதுசூதனா
பன்னிரண்டு நாமங்கள் பாசுரத்தில் ஆழ்வார் பாடிட
மன்னுபுகழ் நாலாயிரம் மகிழ்வோடு உன்புகழ் சொல்லிட
தென்னிலங்கை காத்து தேவருலகம் காத்து
சொன்ன சொல் காத்திடும் வாமனா கோவிந்தா
மாமல்ல புரத்தில் மாயமாய்  வந்த யோகியே
தாமதம் செய்யாது தலத்தில் சயனித்த பெருமாளே
வற்றாத கடலில்  வைகுண்ட கோலத்தில் படுத்தவனே
எற்றைக்கும் என்தன்னோடு  எழுபிறவிக்கும் அருள்வாயே
சூடிய  மலரோடு   சூத்திரம் பலசெய்வாய்
பாடிய பாட்டில் பாற்கடலில்  படுத்திடுவாய்
ஓடிய வாழ்க்கையில் ஒய்யாரமாய்  ஒளிந்திடுவாய்
தேடிய  விழிகளுக்கு திகட்டாது தெரிந்திடுவாய்

———-

ஸ்ரீ திருச் சார நாத பெருமாள் – ஸ்ரீ திருச்சேறை

மணவாள நாயக்க மன்னனின் மனமாற்றி
குணமான நரசபூபாலன் கோயிலைக்  கட்டிட
மணமான திருச்சேறை மண்ணிலே தங்கி
அணங்கோடு அண்ணல் அழகாய் நின்றதென்ன!
கங்கை பெரியதா காவேரி பெரியதா
மங்கைகள் வாதிட மாலும் தீர்ப்பளிக்க
சங்கும் சக்கரமும் சாரநாத பெருமாளும்
தங்கிய திருச்சேறை தலத்தின் அழகென்ன!
அஞ்சியே பிரம்மன் அங்குமிங்கும் அலைய
மிஞ்சிய வேதத்தை மறைக்க முயன்றிட
தஞ்சமென்று உன்னிரு தாளடி பணிந்திட
பஞ்சலக்ஷ்மி நாயகிகள் பக்கத்தில் நின்றதென்ன
மண்ணிலே அழியாத மகாபிரளய சாரமாய்
விண்ணிலே வைகுண்டம் வேதத்தின் சான்றே
மண்ணிலே கடத்தை மகத்தாய் செய்து
கண்ணிலே படாது காத்த வேதமென்ன

———

ஸ்ரீ உப்பிலியப்பன் – ஸ்ரீ திருவிண்ணகரம்

எட்டடி உயர என்னருமை அப்பனே
எட்டாத உயரத்தில் எழுந்தருளும் அப்பனே
உப்பில்லா பண்டம் உளமார உண்பவனே
அப்பனாய் அரியாய் அண்டம் காப்பவனே
விதியை மாற்றி விலையில்லா பெருவாழ்வை
பதினாறு வயதையவன் பருவமாய் பெற்றானே
பெற்றவன் பெற்ற பிராட்டி பூமாவை
உற்றவன் நீயும் உகந்து பெற்றாயே
முதியவராய் வந்து மூத்தவராய் நின்றாய்
அதிசயமாய் மாறி அழகனாய் நின்றாய்
உணவை சமைக்க உத்தமி அறியாதுநிற்க
குணமே பெரிதென்று கோயிலில் நின்றாய்
அன்பே சுவைக்கும்  அறுசுவையாய் இனிக்கும்
என்பதை  உரைக்க எப்போதும் உப்பின்றி
அன்னம் உண்டு அருளிக் காப்பாய்
எண்ணத்தில் வேரூன்றி எங்களைக் காப்பாய்
பார்வையில் கருணை பரந்தாமன் சொரிய
மார்பிலே மகாலக்ஷ்மி மணத்திலே துளசி
திரு ஒப்பில்லா அப்பனாய் திகழும் பெருமாளே
திருவிண்ணகரதத்தின் திவ்யதேசப் பெருமாளே!

————–

ஸ்ரீ வையம் காத்த பெருமாள் -ஸ்ரீ திருக்கூடலூர்

கூடலூர் தலத்தில் கோலமிட்ட பெருமாளே
பாடலில் பாடிட பரவசம்தரும்  பெருமாளே
வையகம் காத்த வைகுண்ட பெருமாளே
கையிலே சக்கரம் கொண்டிடும் பெருமாளே
ஏந்திய சக்கரத்தை ஏவிடும் பெருமாளே
வேண்டிய அம்பரீஷனுக்கு வீசிய பெருமாளே
சினந்த  துர்வாசர் சீற்றமடக்கிய பெருமாளே
மனத்தால் பின்பு மன்னித்த பெருமாளே
வராக வடிவிலே வந்திடும் பெருமாளே
அராஜகம் அழிக்க ஆணையிடு பெருமாளே
கூடிடும் நதிகள் கும்பிடும் பெருமாளே
ஓடிடும் காவிரி தொழுதிடும் பெருமாளே
கிளிக்கு தரிசனம் கொடுத்த பெருமாளே
விளியில் ஹரியாய் வந்திடும் பெருமாளே
ஒலித்த சங்கில்  ஓங்கிடும் பெருமாளே
கலியிலே எங்களை காத்திடு பெருமாளே

—————————

ஸ்ரீ ஜெகன்னாத பெருமாள் – ஸ்ரீ நந்திபுர விண்ணகரம்-

திருமகள் தவத்திற்கு திருவருள் திருமாலே
திருமகளை கொண்ட  திருமார்பு  திருமாலே
நந்தியின் சாபம் நீக்கிய திருமாலே
நந்திபுர விண்ணகர நற்கோவில் திருமாலே
தன்னையே தியாகம் தந்தவனின் திருமாலே
உன்னையே நினைத்தவர் உள்ளத்து திருமாலே
ஜகத்தை காத்திடும் ஜெகன்னாத திருமாலே
அகத்தில் அமர்ந்த அரங்கத்து திருமாலே
எங்கும் வீற்றிருக்கும் எழிலான திருமாலே
பொங்கும் அழகுடன் பொலிவான திருமாலே
நலம்தரும் நாமமான நாராயண திருமாலே
வளம்தரும் வாசலான  வைகுண்ட திருமாலே
ஆழ்வாரின் பாசுரத்தில் அழகான  திருமாலே
ஊழ்வினை அகற்றிடும் உயரிய திருமாலே

—————

ஸ்ரீ கஜேந்திர வரத பெருமாள் – ஸ்ரீ கபிஸ்தலம்–

அபயம் கொடுக்க ஆதிமூலமே  வந்திடு
உபயமாய் சக்கரம் உதவிட வந்திடு
பிறவியின் பாவம் பறந்தோட வந்திடு
துறவியின் கோபம் தூரஓட வந்திடு
பிடிபட்ட கஜேந்திரன்  பிணியினை நீக்கிடு
அடிபட்ட காலை அன்பிலே  தோய்த்தெடு
காலை பந்தங்கள் கவ்விட காத்திடு
சோலை கானமாய் சுகமாய் வந்திடு
துயரக் கடலில் தோணியாய் வந்திடு
உயரிய மோட்சம் ஊட்டமாய்  தந்திடு
அனுமனைக் காண அழகனாய் வந்திடு
மனுவின் நீதியை மண்ணில் காத்திடு
எங்களைக் காத்திட எழிலாய் வந்திடு
மங்காது மாறாது மானுடம் காத்திடு

———-

ஸ்ரீ வல்வில் ராமன் – ஸ்ரீ திருப்புள்ளம் பூதங்குடி

ராம ராம ராகவா நமோநம
ராம சந்த்ர ரூபா நமோ நம
ராஜ கம்பீர தேவா நமோ நம — ரகு ராமா
ஓடி வந்த தோழா நமோ நம
வாடி விழும்  ஜடாயு நமோ நம
பாடி மகிழும் பாரில் நமோ நம — தேவதேவா
நாம தசரத குமாரா நமோ நம
பூம சுந்தரி தேவா நமோ நம
ஈமக் கடன் செய்தாய் நமோ நம – ஹரிகேசவ
பள்ளி கொண்ட ராமா  நமோ நம
புள்ளிற்கு அருளும் புண்யா நமோ நம
கொள்ளை அழகு கொண்டாய் நமோ நம …. கோதண்டா
நேர்ம நியதி புருஷா நமோ நம
சீர்ய வாழ் சுந்தரா நமோ நம
சோர்வு தீர்  ஸ்வரூபா நமோ நம …. அருள் தாராய்
ராம ராம ராகவா நமோநம
ராம சந்த்ர ரூபா நமோ நம
ராஜ கம்பீர தேவா நமோ நம — ரகு ராமா

—————-

ஸ்ரீ சாரங்கபாணி -ஸ்ரீ திருக்குடந்தை

திருக்குடந்தை கோவிலில் திருசயனம் பூண்டவனே
திருமகளை மணந்து திருவருள் புரிந்தவனே
வில்லேந்தி நின்றபடி வேந்தனாய் வந்தவனே
சொல்லுக் கழகாய்  சுந்தரத்தேரில் வந்தவனே
எழுந்த சயனமாய் எழிலாய்ப்  படுத்தவனே
தொழுது வணங்க தூமலர் மாலனே
பொற்றாமரை குளத்தில் புதிதாய் பூத்தவனே
கற்றறிந்த ஆழ்வார் கருத்தில் நின்றவனே
ஓராயிரத்துள் இப்பத்தும் ஓங்காரமாய் இசைத்தவனே
ஆராவமுத ஆழ்வாராய்  அழியாது நின்றவனே
நாலாயிர பிரபந்தத்தை நாதமுனிக் களித்தவனே
கோலாகல உற்சவமாய் கொண்டாடப் படுபவனே
வடக்கும் தெற்கும் வகையாய் வாசலிருக்க
இடக்கின்றி பரமபதம் எமக்கிங்கு அளிப்பவனே
வீட்டுடன் மாப்பிள்ளை விளையாடி இருந்திட
மேட்டு சீனிவாசனாய் மெத்தனமாய் நிற்பவனே
சேவிக்கும் பக்தருக்கு சேவை செய்பவனே
ஆவிக்கும் ஆன்மாவிற்கும் அமைதி அளிப்பவனே
தேரிலே வந்த தென்னாட்டு மன்னவனே
பாரிலே மணந்த பாற்கடல் பெருமாளே

———-

ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் – ஸ்ரீ திருஆதனூர்

படி அளக்கும் பாற்கடல் பெருமாளே
படி காட்டி பாதைக்காட்டும் பெருமாளே
ஏடும் எழுத்தாணியும் ஏந்திய பெருமாளே
ஈடு இணை இல்லாத பெருமாளே
வணிகனாய் வந்து வையகம்காத்த பெருமாளே
அணிகலனாய் திருமகளை அணிந்த பெருமாளே
காமதேனு அகந்தை கலைத்த பெருமாளே
வாமன அவதாரம்  வடித்த பெருமாளே
மரக்கால் அளக்க  மண்டலம் பெருமாளே
மரக்கால் துளசியின் மகத்துவ பெருமாளே
ஆஅவள் காலடியில் அணைத்த பெருமாளே
ஆதவன்  வாயிலாய் அண்டம்நோக்கும் பெருமாளே
படைத்த களைப்பில் படுத்த பெருமாளே
குடையாய் சேடனைக்  கொண்ட  பெருமாளே
தூணிலும் இருந்து துரும்பான பெருமாளே
தூணிலே முக்திக்குத்  துடுப்பான பெருமாளே
எங்கும் நிறைந்த எழிலான பெருமாளே
பொங்கும் அழகாய் பூத்திடும் பெருமாளே

—————-

ஸ்ரீ கோலவில்லி ராமர்- ஸ்ரீ திருவெள்ளியங்குடி

கருமை  நிறக் கண்ணனின் வடிவமே
காருண்ய சீல காண்டீப வடிவமே
கிருபை கூர்ந்திடும் கிருஷ்ண வடிவமே
கீர்த்தி வாய்ந்திடும் கேசவ வடிவமே
குடையால்  கோவர்த்தனம் காத்த வடிவமே
கூர்ம அவதார கோலாகல வடிவமே
கெஞ்சிய மயனக்கு கோலமான வடிவமே
கேடுகளை அகற்ற கோவிலான  வடிவமே
கையிலே வில்லேந்தி காத்திடும் வடிவமே
கொஞ்சும் அழகுடன் குழந்தை வடிவமே
கோலவில்லி ராமராய் கொலுவிருக்கும் வடிவமே
கௌசல்யா  புத்திரனாய் குலம்காக்கும் வடிவமே
சக்கரம்  கருடனுக்கு சங்குடனளித்த  வடிவமே
சாப விமோசனம் சாத்தியமாக்கும் வடிவமே
சிந்தை கவர்ந்திடும் சிருங்கார வடிவமே
சீரும் சிறப்புடன் செருக்ககற்றும் வடிவமே
சுக்கிரன் விழியை சுடராக்கும் வடிவமே
சூத்திர தாரியாய் சுகமளிக்கும் வடிவமே
செங்கதலி வாழை செழிக்கஅருளும்  வடிவமே
சேங்கானுர் அருகில் சேர்ந்தருளும் வடிவமே
சைன்யம் இல்லாது சாரதிவென்ற வடிவமே
சொக்க வைக்கும் சுந்தர  வடிவமே
சோபிக்கும் முகமுடன்  சுகந்த வடிவமே
சௌபாக்யம் அருளும் சௌந்தர்ய வடிவமே

—————

ஸ்ரீ நித்திய கல்யாண பெருமாள்- ஸ்ரீ திருவிடஎந்தை

நாயகன் ஒருவனாய் நல்லுலகில் நின்றவனே
நாயகி பலரை ஒன்றாக்கிய நாயகனே
பலியின் தவத்திற்கு பறந்து வந்தவனே
கலியிலும்  எங்களை காத்து அருள்பவனே
வராக முகமாய் வந்தருள் புரிபவனே
தகாது செய்யாது தடுத்தாட் கொள்பவனே
குனிக்கு முக்தியை குன்றாது தந்தவனே
முனிவரின் பத்தினிக்கு முன்னின்று அருளியவனே
நித்தியம் கல்யாணம் நிலத்தில் நடத்துபவனே
சத்திய வேத சரித்திர  நாயகனே
உத்தமி லக்ஷ்மி உட்காரத் தாங்கியவனே
மெத்தன சேடன் மேலே  நின்றவனே
அகிலவல்லி தாயாரை அண்டக்  கொடுத்தவனே
சகியாய் கோமளவல்லி சந்நிதி தந்தவனே
திருமகள் இடமாக திருக்கோவிலில்  நின்றவனே
திருவிடந்தைக்  கோவிலில் திருவருள் புரிபவனே

————–

ஸ்ரீ ஹர சாப விமோசன பெருமாள் -ஸ்ரீ திருக்கண்டியூர்

சிவனின் சாபத்தை சிதைத்த பெருமாளே
அவனியைக் காத்திடும் ஆனந்த பெருமாளே
கபாலம் விழுந்த காலடி பெருமாளே
அபார அழகுடன் அமைந்த பெருமாளே
கோமள வல்லியுடன் கொலுவிருக்கும் பெருமாளே
தாமரை மலரினைத்  தாங்கிடும் பெருமாளே
கண்தான தேசமாய் கண்டியூர் பெருமாளே
மண்ணிலே உறைந்த மதுசூதன பெருமாளே
பஞ்சகமல நிலமாய் பாரினில் பெருமாளே
கொஞ்சிடும் வதன கோபால பெருமாளே
கண்டியூர் தலத்தில் கால்வைத்த பெருமாளே
அண்டம் காத்திடும் அதிசய பெருமாளே

———–

ஸ்ரீ அப்பக்குடத்தான் – ஸ்ரீ கோவிலடி -ஸ்ரீ திருப்பேர் நகர்

அப்பத்தை குடத்துடன் ஆர்வமாயுண்ட அப்பனே
ஆபத்தில் கைகொடுக்கும் ஆண்டவ ரங்கனே
இம்மையிலும் மறுமையிலும் எங்களைக் காப்பவனே
ஈரேழு உலகிலும் இணையில்லா அழகனே
உபமன்யு சாபத்தை ஒருநொடியில் நீக்கியவனே
ஊருக்கென்று செய்த உணவை உண்டவனே
எழிலாய் சயனித்த எளிய அந்தணரே
ஏற்றமிகு கோவிலடி ஏறிய பெருமாளே
ஐயமின்றி மார்க்கண்டேயன் அச்சம் போக்கியவனே
ஒயிலாய் திருப்பேர் ஊரிலே படுத்தவனே
ஓங்கார வடிவமாய் நம்மாழ்வார்  தொடர்ந்தவனே
ஔடதமும் இனிக்க அருளைப் பொழிபவனே
ரங்கா ரங்கா !
————-

ஸ்ரீ அன்பில்- ஸ்ரீ சுந்தர்ராஜ பெருமாள்(ஸ்ரீ வடிவழகிய நம்பி)

கொள்ளை அழகை கொள்ளை கொண்டவனே
பள்ளியறையில் அழகாய் பள்ளி கொண்டவனே
நிலையில்லா அழகு நிலைக்காது என்றவனே
விலையில்லா உண்மை விளங்க வைத்தவனே
ஆணவம் அழிக்க ஆணாய் பிறந்தவனே
காணக் கண்கோடி கணத்தில் தந்தவனே
தவமாமுனிவர் சுதபா தவத்திற்கு வந்தவனே
தவமாமுனிவர் துர்வாசவாக்கு தவறாது காத்தவனே
நிலத்திலும் நீரிலும் நிலையாய் நின்றவனே
சுலபத்தில் அன்பை சொற்பமாய் பொழிபவனே
ஆண்டு அவளை ஆண்ட ஆண்டவனே
ஆண்டாள் தன்னை அண்டத்தில் மணந்தவனே
வடிவில் அழகிய வடிவழகிய நம்பியே
மடியில் வல்லியை மடித்த  அழகனே
அன்பில் கோவிலில் அன்பில் அமைந்தவனே
அன்பால் அணைத்து அன்பரில் அமர்ந்தவனே

———————-

ஸ்ரீ புண்டரீகாட்சன்- ஸ்ரீ திருவெள்ளறை

வெண்மை பாறையில் வெள்ளறை வாசனே
கண்ணைக் கவரும் கலியுக வண்ணனே
புண்டரீக துளசிக்குப்  பூத்த தாமரையே
மண்டலம் காத்திடும் மகா விஷ்ணுவே
படிகள் பதினெட்டு  பாங்காய் அமைந்திட
படிக்க பதினெட்டு  அத்தியாய கீதையே
படிகள் நான்கும்  பரிசுத்த வேதமே
படிகள்  ஐந்தும் பஞ்ச பூதங்களே
பலிபீட திருமஞ்சன படையல் பொங்கலே
கலியிலே வேண்டுதலை கணத்தில் நடத்துமே
சிபியின் அன்புக்கு சிரித்துவந்த வராகமே
சுபிட்ஷம் தழைக்க சுந்தர உருவமே
திருப்பணி செய்யவே திரண்ட மக்களில்
திருமாலும் ஒருவராய் திருவருள் செய்தாரே
திருமகள் செண்பகவல்லி திருவிழா காலத்தில்
திருவருள் புரிந்திட திறம்பட எழுவாளே

————

ஸ்ரீ விளக்கொளி பெருமாள்–ஸ்ரீ திருத்தண்கா – ஸ்ரீ தூப்புல்

யாகம் காக்கவந்த யௌவன ஒளியே
சோகம் போக்கிடும் சுவர்க்க பூமியே
பிரம்மன் வேண்டிடவந்த  பிரம்மாண்ட ஒளியே
வரத்தை வழங்கிடும் வரதராஜ பெருமாளே
இருளைப் போக்கிடும் இதமான விளக்கே
அருளைச் சொரியும் ஆதி கேசவனே
வைணவத் தாயின் வேதாந்த மணியே
வைணவ மதத்தின் வேதமான ஒளியே
எங்கும் பரவிய என்னருமை பெருமாளே
சங்கு சக்கரமுடன் சன்னதி பெருமாளே
செல்லும் இடத்திற்கு சொல்லாமல் வந்திடு
அல்லும் பகலும் அலுக்காது காத்திடு
நாடுவிட்டு நாடுவந்திடு நாளும் உன்னைப்
பாடும் பாக்கியம் பாவைக்குத் தந்திடு

———————-

ஸ்ரீ அழகிய சிங்க பெருமாள் – ஸ்ரீ திருவேளுக்கை –

அழகிய சிங்கவடிவ ஆனந்த பெருமாளே
ஆழமாய் சிந்திக்கவைக்கும் அத்வைத பெருமாளே
இன்னல் களைய இனிதேவந்த பெருமாளே
ஈன்ற அருளில் இவ்வுலகம்தழைக்கும் பெருமாளே
உன்னருள் பெறவே உரைத்தநாம பெருமாளே
ஊனுடல் மறந்து உவகைதரும் பெருமாளே
எங்கும் இருக்கும் எதிலுமிருக்கும் பெருமாளே
ஏங்கும் பிரகலாதன் எதிரில்வந்த பெருமாளே
ஐயம் அகற்றிட அகிலம் காத்திட பெருமாளே
ஒய்யார வடிவில் ஒருயாகம்காத்த பெருமாளே
ஓங்கார வடிவ உத்தமநாயக பெருமாளே
ஔடத அமுதாய் வாழ்வளிக்கும் பெருமாளே
சரஸ்வதி இலக்குமி சண்டைபோக்கிய பெருமாளே
பரலோக வாழ்வில் பாதைகாட்டும் பெருமாளே
ஆசையுடன் இவ்விடத்தில் அமர்ந்த பெருமாளே
ஓசையாய் இதயத்தில் ஒலிக்கும் பெருமாளே

—————-

ஸ்ரீ கள்வப் பெருமாள் -ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் –

நூறுநாள் பாடவைத்த நூதனப் பெருமாளே
மாறுதலே இல்லாத மகத்தான பெருமாளே
ஆதியாய் அமைந்து அந்தமில்லா பெருமாளே
ஓதிய வேதங்களில் ஒளிரும் பெருமாளே
கள்வனாய் வந்திங்கு கருத்தினில்நின்ற பெருமாளே
உள்ளுக்குள் அழகாய் ஒளிந்த பெருமாளே
உருவத்தின் அழகு உண்மையில்லை பெருமாளே
அருவத்தில் உணர்த்தி அருளிய பெருமாளே
தங்கையின் கோவிலில் தங்கிய பெருமாளே
மங்கை வணங்கிய மதிமயக்கும் பெருமாளே
உலகை அளக்கும் ஓங்கார பெருமாளே
சுலபத்தில் அணுவாய் சுருங்கும் பெருமாளே
மீனாய் வந்தெங்களை மீட்ட பெருமாளே
தானாக பூத்திடும் தாமரை பெருமாளே
கூர்ம வடிவம் கூறும்உண்மை பெருமாளே
பார்த்தனின் சாரதி பாருக்களித்த பெருமாளே
வராக வடிவத்தில் வந்துகாத்த பெருமாளே
அராஜகம் நீக்கி அகிலம்காத்த பெருமாளே
நரகரி ரூபத்தில் நலம்தரும் பெருமாளே
கரம் கூப்பி கும்பிடுவோம் பெருமாளே
மூன்றடி பெறவே முன்வந்த பெருமாளே
அன்று உலகை அளந்த பெருமாளே
பரசுராமனாய் அவதரித்த பரிசுத்த பெருமாளே
சிரம் தாழ்த்தி சிந்தைவணங்கும் பெருமாளே
ஏகபத்தினி விரதனாய் எழுந்தருளிய பெருமாளே
மோகத்தை கொல்லும் முழுமுதற் பெருமாளே
கருமேனி கண்ணனாய் கண்கவர் பெருமாளே
சிறுபாலக வடிவில் சிந்தைகவர் பெருமாளே
புத்தராய் வந்திங்கு புவிகாத்த பெருமாளே
சித்தரும் அறியா சிறந்த பெருமாளே

கல்கியாய் வருவாயென காத்திருக்கிறோம் பெருமாளே
அல்லும் பகலும் அனுதினமருளும் பெருமாளே
பள்ளிகொண்டு காக்கும் பரமசுக பெருமாளே
அள்ளிய அழகில் அண்டம்நிறை பெருமாளே
நின்ற கோலத்தில் நிறையும் பெருமாளே
என்றும் காக்கும் எழிலான பெருமாளே
இருந்த கோலத்தில் இதமளிக்கும் பெருமாளே
கருத்தனில் கலந்த கள்வப் பெருமாளே
கிடந்த கோலத்தில் கிருபையளிக்கும் பெருமாளே
நடக்கும் செயல்களை நல்லதாக்கும் பெருமாளே 20

வரதராஜனாய் வடிவுகொண்ட வல்வில்ராம பெருமாளே
ஹரசாப விமோசன ஹரிநாராயண பெருமாளே
புண்டரீகாட்சனாய் நின்ற புருஷோத்தம பெருமாளே
விண்ணகர பெருமாளான விஜயராக பெருமாளே
சொன்ன வண்ணம் செய்த பெருமாளே
நின்ற வண்ணம் நித்யகல்யாண பெருமாளே
ஆதிகேசவ அற்புத நாராயண  பெருமாளே
ஓதியவேத ஆதனூர் ஒய்யார பெருமாளே
திருவரங்கக் கோவிலில் திருவருள் பெருமாளே
திருக்கண்ண மங்கை திருபக்தவதசல பெருமாளே
அழகிய சிங்கமாய் அருளிய பெருமாளே
பழகிய பாலகனாய் பாம்பணை பெருமாளே
ஆழ்வார் பாடிய ஆதிநாத பெருமாளே
ஆழ்கடல் நீரவண்ண அழகிய பெருமாளே
திருவள்ளூர் தலத்தில் திருசயன பெருமாளே
திருநின்ற ஊரில் திருநின்ற பெருமாளே
உத்தம கோவிலின் உத்தம பெருமாளே
சத்தமில்லா திருச்சேறை சாரங்கநாத பெருமாளே
அப்பக்குடத்தால் எங்களை அளக்கும் பெருமாளே
ஒப்பிலி அப்பனாய் உப்புநீக்கிய  பெருமாளே30

விளக்கொளி பெருமாளாய் வீற்ற பெருமாளே
அளக்கும் அடியில் அண்டமிகுந்த பெருமாளே
உறையூர் மணவாள ஒய்யார பெருமாளே
உறையும் அன்பில் உள்ளத்து பெருமாளே
வையம் காத்த வைகுண்ட பெருமாளே
ஐயம் நீக்கிடும் அழகியசிங்க பெருமாளே
நாச்சியார் கோவிலில் நம்பிய பெருமாளே
ஆச்சியர் அன்பில் ஆடிய பெருமாளே
திருக்கண்ண புரத்தில் திருசவுரிராஜ பெருமாளே
திருச்சிறு புலியூர் திருக்கோவில் பெருமாளே
தேவாதி ராஜனாய் தேரழுத்திய பெருமாளே
தேவாதி தேவனாய் தெய்வநாயக பெருமாளே
கோலவில்லி ராமனாய் கொலுவிருக்கும் பெருமாளே
காலத்தை அழித்த காவளம்பாடி பெருமாளே
திரிவிக்ரம திருக்கோவில் திவ்யதேச பெருமாளே
பரிமள ரங்கநாத பத்ரிநாராயண பெருமாளே
செம்பொன் பேரருள் செய்கோவில் பெருமாளே
செங்கண்மால் திருக்கோவில் செல்வ பெருமாளே
வெள்ளக்குளக் கோவிலில் வீற்ற பெருமாளே
அள்ளமுடியா அழகுடை அண்ணன் பெருமாளே 40

பார்த்தன் கேட்ட பள்ளித்தாமரையாள் பெருமாளே
சார்ந்த திருச்சேறை சாரநாத பெருமாளே
கோவிந்த ராஜனாய் கோவில்கொண்ட பெருமாளே
ஆவினன் குடியில்பிறந்த ஆண்டவ பெருமாளே
திருநீரக பெருமாளாகி திருவருள்தரும் பெருமாளே
திருப்பாடக தூதனாகி திருப்பாண்டவருள் பெருமாளே
நிலவளந்து நீரளந்த நிலாதுண்ட பெருமாளே
உலகளந்து ஊரளந்த உத்தம பெருமாளே
மகாபலிக் கருளிய மகாவிஷ்ணு பெருமாளே
மகாபலிக் கோவிலில் மடிசாய்ந்த பெருமாளே
யோக நரசிம்மராய் யௌவன பெருமாளே
யாகம் காத்த யாதவ பெருமாளே
பவள வண்ணத்து பாற்கடல் பெருமாளே
கவர்ந்து இழுக்கும் கள்ளப் பெருமாளே
வேங்கட வண்ணனாய் வீற்ற பெருமாளே
ஏங்கிய நெஞ்சுக்குள் எழுந்தருளும் பெருமாளே
வடபத்ர சாயியாய் வரமளித்த பெருமாளே
இடர்களை போக்கிடும் இனியரகுநாத பெருமாளே
நூறடி பூவினை நூலிலே கோத்தேன் பெருமாளே
சாரதி நீயாகி சாட்சியாய் காப்பாய் பெருமாளே 50

————————–

ஸ்ரீ நிலா துண்டப் பெருமாள்

ஆலகால விடத்தை அழித்த நிலவே
மாலனின் நிறத்தை மாற்றிய நிலவே
விஷ்ணுவின் நோயை விலக்கிய நிலவே
உஷ்ணத்தை குறைத்த உல்லாச நிலவே
பார்வதி தவமிருக்க பரசிவன்தலை நிலவே
கார்மேனி நிறமாற காரண நிலவே
நிலவைச் சுமந்த நீலமேக நிலவே
நிலமகள் நாபியில் நின்ற நிலவே
காலத்தால் அழியாது காத்திடும் நிலவே
சாலச்சிறந்த அழகுடை சந்திர நிலவே
அண்ணன் தங்கை அன்புவளர் நிலவே
மண்ணில் வெறுப்புகள் மறைதேய் நிலவே
சைவ வைணவ சேர்க்கை நிலவே
கைவல்யம் தந்து காக்கும் நிலவே
———–

ஸ்ரீ பாண்டவ தூதப்பெருமாள் – ஸ்ரீ திருப்பாடகம் –

பாண்டவனின் தூதாக பறந்துவந்த கண்ணனே
ஆண்டவனாய் லீலைகள் அவதரித்து செய்தவனே
பத்மாசன கோலத்தில் பதிந்த கண்ணனே
மத்தினால் கடைந்து மனத்திலமர்ந்த கண்ணனே
நிலவறை துகளாக நிறைந்த கண்ணனே
உலகளந்த உருவத்தை உட்கார்ந்து காட்டியவனே
திருப்பாடக திருத்தலத்தில் திருவருள் கண்ணனே
திருத்தலத்தில் ஜனமேஜயருக்கு திருஉருவம் தந்தவனே
உயரமாய் உன்னுருவம் உள்ளத்தில் அமர்ந்திட
துயரங்கள் யாவும் தொலைந்து போகுமே
இங்கிருந்த படியே உன்னைநான் கண்டிட
எங்கும்பரவி நிற்கும் ஏகாந்த உருவமே
செல்லும் இடமெல்லாம் சிந்தையில் கண்டேன்
அல்லும் பகலும் அகத்தினில் கண்டேன்
வழித்துணையாய் சாரதி வந்திடுவான் நம்முடன்
அழியாத அருளில் ஆனந்தம் கொள்வோம்

—————-

ஸ்ரீ பவள வண்ண பெருமாள்-

செந்நிற வண்ணனாய் சிந்தைகவர்  கண்ணனே
பொன்னிற மங்கை பூமார்பில் கொண்டவனே
பவள வண்ணனாய் பாவங்கள் போக்குபவனே
குவளை மலர்வாய் கோபால பாலனே
பச்சை மாமலையாய் பாதை காட்டுபவனே
கச்சியில் இச்சுவை  கனிவாய் தருபவனே
கோபத்தில் காலுதைத்த குறையைப் பொறுத்தவனே
ஆபத்பாந்தனாய் கால்தடவிய அன்பு சகாயனே
பார்வதிக்கு பாங்காய் பவள நிறத்தவனே
ஆர்வமூட்டும்  பச்சையில் அழகாய் நின்றவனே
ஒருபுறம் பசுமையாய் ஒருபுறம் பவளமாய்
இருவண்ண அழகாய் இத்தலத்தில் நின்றவனே
பச்சையாய் நீலமாய் பவளமாய் ஆனவனே
உச்சத்தில் தெரியும் உயரிய வெண்மையே
சீதையின் இராமனாய் சிந்தை கவர்ந்தவனே
ராதையின் கண்ணனாய் ரமித்து நின்றவனே
எத்தனை ரூபங்கள் எத்தனை அவதாரங்கள்
அத்தனையும் கண்டேனென் அகத்தினில் கண்டேன்
கண்ணைத் திறந்திட கஸ்தூரி திலகனைக் கண்டேன்
கண்ணை மூடிட கார்மேக வண்ணனைக் கண்டேன்
தேசங்கள் பலவற்றில் திவ்யமாய் கண்டேன்
வாசமிகு வைகுண்டம் வையத்தில் கண்டேன்

—————

ஸ்ரீ பரமேஸ்வர விண்ணகரம்–ஸ்ரீ பரமபதநாதர் –

நூற்றியெட்டு நாளாயென்னுள் நுழைந்த கருவே
நூற்றியெட்டு தேசங்களில் நிறைந்த உருவே
முத்தேவியர் பூவுலகில் முக்கிய தவமிருக்க
இத்தலம் உருவாக ஈசனாய் வந்தாய்
ஆயகலைகள் அனைத்தும்  அழகாய் கற்பித்து
மாயலீலை புரிந்து மண்ணில் பிறந்தாய்
பக்தனைக் காக்க  வடக்கில் படுத்தாய்
சக்தியை அளித்து சாகாவரம் கொடுத்தாய்
பல்லவ வம்சத்தில் பரமேஸ்வர வர்மன்
நல்லவனாய் பிறந்து நாடும் ஆண்டான்
வென்று வாகை சூடிய பறையொலி
நன்றாய் விண்ணதிர நாடும் செழித்திட
கற்பித்த ஆசானுக்கு கல்லிலே கோவில்
நற்செயல் புரிந்து நலமாய் கட்டினான்
மூன்று கோலத்தில் முதன்மையாய் உன்னை
சான்றாய் இத்தலத்தில் சங்குடன் வைத்தான்
நின்றும் அமர்ந்தும் கிடந்தும் இத்தலத்தில்
இன்றும் அன்றும் என்றும்நீ எழுந்தாய்
எண்ணத்தில் எழுந்து எழுத்தாய் மாறி
என்னுள் தினமும் எழிலாய் வருவாய்
நூற்றியெட்டு நாளாயென்னுள் நுழைந்த கருவே
நூற்றியெட்டு தேசங்களில் நிறைந்த உருவே

———————-

ஸ்ரீ கருணாகர பெருமாள் – ஸ்ரீ திருகாரகம் –

உள்ளுக்குள் உள்ளாய் உறையும் கடவுளே
அள்ளிடும் கருணை அருளும் கடவுளே
எல்லாம் கடந்து எங்குமுள்ள கடவுளே
சொல்லி மாளாத சுந்தர கடவுளே
கோவிலின் உள்ளே கோவில்கொண்ட கடவுளே
ஆவியின் உள்ளே ஆன்மாவான கடவுளே
பாவிக்கும் பரகருணை பாரிலருளும் கடவுளே
தாவியே கடந்து தாரணிஅளந்த கடவுளே
சில்லென்று தென்றலாய் சிலிர்ப்பூட்டும் கடவுளே
கல்வியை கற்பிக்கும் கருணாகர கடவுளே
துல்லிய உண்மை தூயமலர் கடவுளே
அல்லும் பகலும் அணைக்கும் கடவுளே
நான்கு தலமாய் நாற்புறம்சூழ் கடவுளே
நான்மறை சொல்லிடும் நாராயண கடவுளே
வான்வரை விரிந்த வாசுதேவ கடவுளே
ஏனென்ற கேள்விக்கு எழிலானவிடை கடவுளே

——————-

ஸ்ரீ திருநீரகத்தான்- ஸ்ரீ ஜெகதீச பெருமாள் – ஸ்ரீ திருநீரகம்

ஜெகத்தை காத்திடவரும் ஜெகதீச பெருமாளே
அகத்தினை தொட்டிடும் ஆலிலை கண்ணனே
திருஊரக தலத்து திருவருள் திருமாலே
திருஊரக தலத்து திருக்கோவில் திருமாலே
திருகாரக தலத்து திருமண் திருமாலே
திருகார்வன தலத்து திருதிவ்ய திருமாலே
நீரிலே காத்திட நீர்மீனான பெருமாளே
பாரிலே காத்திடும் பாற்கடல் பெருமாளே
வலதுகால் தூக்கி வளர்ந்துநின்ற பெருமாளே
உலகத்தை அளந்து ஊரைக்காக்கும் பெருமாளே
குலங்களை காத்திடும் குருவாயூர் பெருமாளே
தலத்தில் நான்கு தலமான பெருமாளே

———————

ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் -ஸ்ரீ திருவல்லிக்கேணி

பக்தனுக் கருளும் பார்த்த சாரதியே
பக்கத்தில் நிற்கும் பரந்தாம சாரதியே
தருமம்  நிலைத்திட தேரோட்டிய சாரதியே
கருமம் கண்ணாக கண்ணனான சாரதியே
கம்பீரம் வழிந்திட கருமீசை சாரதியே
அங்கத்தில் வடுவாங்கி அழகூட்டும் சாரதியே
சர்க்கரை பொங்கலில் சங்கமிக்கும் சாரதியே
தற்கால தருமத்தை தந்துநிற்கும் சாரதியே
சத்தமில்லா மணியுடன் சங்குமுழங்கும் சாரதியே
சக்கரமில்லா நண்பனாய் சரித்திரமான சாரதியே
முனிவரும் யோகியரும் முன்வணங்கிய சாரதியே
இனிவரும் காலத்தில் எல்லையில்லா சாரதியே
பாரதியும் பாரதிர பாடிய சாரதியே
மாறாத கோலத்தில் மனம்கவர் சாரதியே
சென்னை மாநகர் சேவிக்கும் சாரதியே
அன்னை வேதவல்லியுடன் அருள்தரும் சாரதியே
குடும்ப சகிதமாய் கோலம்கொண்ட சாரதியே
விடுவித்து பற்றறுக்கும் வினயமான சாரதியே
கீதையை அருளிய கிருஷ்ண சாரதியே
சீதைக்கருகில் ராமனாய்  சிறந்த சாரதியே

——————————-

ஸ்ரீ பேரருளாளன் – –ஸ்ரீ செம் பொன் செய் கோயில்

அருள்விழி கண்டதில் அன்றுஅரனும் மயங்கிட
உருவம் பதினொன்றாய் உருவான அதிசயமே
திருநாங்கூர் தலங்களில் திருவருள் தருபவனே
திருப்பதி பதினொன்றாய் திக்கெங்கும் வீற்றவனே
செம்பொன் செய்கோவில் செம்மலர் ரங்கனே
தம்பழி தான்அகல தவமிருந்த ராமனே
பொன்னால் செய்த பேரெழில்பசு தயாளனே
அந்தணர் பெற்றிட அருளிய பேரருளாளனே
இராது இருந்தருளும் இனிய அண்ணலே
இராவணன் இல்லாதழித்த இராம பிரானே
இல்லாது வாடுவோருக்கு எடுத்துக் கொடுப்போனே
சொல்லினால் துதித்தால் செல்வம் அளிப்போனே
மூன்று தினங்களில் முப்பத்திரெண்டாயிர நாமமே
சான்றாய் நிற்கும் சங்குசக்கர நாராயணனே

——————

ஸ்ரீ வரதராஜ பெருமாள் -ஸ்ரீ திருமணிக்கூடம்-

மணிக்கூட நாயகனே மணிமண்டப பெருமாளே
அணிகலன் பூண்டவனே அருமறை பெருமாளே
கோவிலின் உள்ளே கொலுவான பலிபீடமே
சோபிக்கும் அழகுடன் சுந்தர மண்டபமே
கிழக்கு நோக்கிய கீர்த்திமிகு பெருமாளே
முழங்கு சங்குடன் முன்னின்று நின்றாயே
அபயம் காட்ட அருளுமுன் கரங்களே
உபய வரதராஜர் உள்ளுக்குள் நின்றாயே
வலப்புறம் ஶ்ரீதேவி இடப்புறம் பூதேவியாய்
மலரும் தாமரை மணாள வடிவனே
சந்திரன் தேய்ந்திட சாபம் கொண்டானே
அந்தியில் தினமும் அவனும் தேய்ந்தானே
சாபத்தை போக்கிட சரணம் அடைந்தானே
ஆபத்தை நீக்கிய ஆண்டவ பெருமாளே
மணிக்கூட நாயகனே மணிமண்டப பெருமாளே
அணிகலன் பூண்டவனே அருமறை பெருமாளே

—————–

ஸ்ரீ காவளம்பாடி –ஸ்ரீ கோபால கிருஷ்ணன் – ஸ்ரீ திருநாங்கூர்

காவளம்பாடியில் கால்வைத்த கருமேனி கிருஷ்ணனே
பாவளம் பொருந்தி பாடவைக்கும் கிருஷ்ணனே
கோவிலில் குடிகொண்ட கோபால கிருஷ்ணனே
தாவி குதித்தாடிடும் தாண்டவ கிருஷ்ணனே
பாரிஜாதப்  பூவினை பாரினில்நட்ட கிருஷ்ணனே
தேரிலே விஜயனுக்கு தெளிவுதந்த கிருஷ்ணனே
பாமாவின் அன்பனாய் பக்தர்காண கிருஷ்ணனே
பூமாவின் நாயகன் பொற்றாமரை திருமாலே
விஷ்வக்சேனர் கண்டிட விண்ணவர் மன்னனே
விஷ்வரூபம் எடுத்த விளையாட்டு கண்ணனே
சினம் கொண்ட சிவனுக்காய் வந்தவனே
இனம் காத்து இதமாய் நின்றவனே
ஆடும் நெற்கதிரில் ஆழ்வாராய் வருபவனே
பாடும் பாடலுக்கு பாலகனாய் வருபவனே
தேடும் விழிகளுக்கு திவ்யமாய் தெரிபவனே
வாடும் மனதிற்கு வசந்தம் தருபவனே

—————-

ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருக்கோவில் –ஸ்ரீ திரு இந்தளூர்

பாற்கடலில் பள்ளி கொண்ட பரிமளமே
போற்றி பாடும் புகழுடை பாரிஜாதமே
விரதம் காத்திடும் வெண்ணிற தும்பையே
துறவியும் நடுங்கி துதித்த தாமரையே
அன்றாடம் பூத்திடும் அல்லி மலரே
துன்பங்கள் போக்கிடும் தூயதொரு துளசியே
அம்பரீஷன் ஏகாதசிக்கு அருளிய குறிஞ்சியே
இம்மைக்கும் மறுமைக்கும் ஏகாந்த குவளையே
வித்தாய் புதைந்து விரிந்த ஞாழலே
சித்தத்தில் அமர்ந்த சிருங்கார சிந்துவே
நித்தம் பூத்திடும் நிர்மல நெய்தலே
புத்தம் புதிதாய் பூரிக்கும் புன்னையே
மூடிய கண்ணுக்குள் முளைத்திடும் கருவிளையே
பாடிய பாடலில் பரவசமான பகன்றையே
என்னவென்று அழைப்பேன் எப்படி பாடுவேன்
கண்ணில் தெரிவதெல்லாம் கடிமலர் காஞ்சியே

——————-

ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் – ஸ்ரீ தில்லை திருச்சித்ர கூடம்

நடனமாடும் சிவபார்வதி நந்த்தனம்கண்ட பெருமாளே
சுடராய் எழுந்தருளிய சித்திரகூடப் பெருமாளே
பாற்கடலில் பள்ளிகொண்ட பால்வண்ண பெருமாளே
தேர்மேல் பவனிவந்த கார்வண்ண பெருமாளே
சித்திரகூடத்தை தெற்கிலமைத்த  நீலவண்ண பெருமாளே
பத்திரமாய் படுத்த பச்சை மாமலைபெருமாளே
நாபியில் பிரம்மன் நிற்பதால் சிவந்தபெருமாளே
சோபிக்கும் வானவில்லாய் சௌந்தர்ய பெருமாளே
மண்டபத்து வாயிலில் முத்தேவர் பெருமாளே
கண்கொள்ளா காட்சியை காண்போம்  பெருமாளே
கால்தூக்கி சிவனாட காணும் பெருமாளே
தாள்பணியும் எமக்கு தாரும் காருண்யபெருமாளே
கோவிலில் கொலுவிருக்கும் கோவிந்தராஜ பெருமாளே
தேவியின் சகோதரன் தெய்வீக பெருமாளே
அழகிய மணவாளர் -உறையூர் தஞ்சாவூர்

————————-

உறையூரில் உறைகின்ற உத்தமா போற்றி
மறைகள் போற்றும் மாதவா போற்றி
நங்க சோழ மன்னனின் நங்கை மணவாளா போற்றி
மங்காத வீரத்துடன் மாகுதிரையில் வந்தவா போற்றி
கமலவல்லித் தாயாரை கடிமணம் செய்தவா போற்றி
விமலனாய் உலகை விரிந்து அளந்தவா போற்றி
திருமணத் தடைகளை தகர்த்திடும் தேவா போற்றி
திருமகளை மண்ணில் திருமணம் செய்தவா போற்றி
பங்குனி மாதத்தில் பார்க்கவரும் ரங்கா போற்றி
அங்கத்தில் திருமகளை அணியாய் அணிந்தவா போற்றி
மாப்பிள்ளை கோலத்து மணவாளா போற்றி
காப்பதை கடனாய் கொண்டவா போற்றி
நினைவாய் என்னுள் நிற்கும் உண்மையே போற்றி
வினையாய் மறதியையும் விதைக்கும் வித்தகா போற்றி
எடுத்த காரியம் எல்லாமாய் ஆனவனே போற்றி
தடுக்காது என்னுள் தமிழாக வருவாய் போற்றி
———-

ஸ்ரீ திருநறையூர் நம்பி – ஸ்ரீ நாச்சியார் கோவில்

நம்பினார்க் கருளி நாடினாரைக் காப்பவனே
அம்பலத்தில் முத்ராதானம் ஆழ்வாருக் களித்தவனே
முன்தள்ளி சக்கரம் முத்ராதான ஆசார்யனே
பின்திரும்பிய சங்குடன் பீதாம்பர அழகனே
திருமங்கை ஆழ்வாரை திருக்கோலத்தில் வந்து
திருவைணவ உருவ திருவருள் தந்தவனே
சாவிக்கொத்துடன் தாயார் சாரமுடன் நின்றாளே
கோவிலில் இடம்கொண்டு குலங்களைக் காப்பவளே
கல்கருட சேவைக்கு காத்திருக்கும் பலரே
எல்லார் தோளிலும் எழிலாய் வருபவரே
அரியும்அரனும் ஒன்றேயென்று ஆங்கே சொன்னவனே
அரியவைகுண்டம் நாயனாருக்கு அருளித் தந்தவனே
வஞ்சுளா தேவியை வையத்தில் மணந்தவனே
அஞ்சல் என்றே அனைவரையும் காப்பவனே
நம்பினார்க் கருளி நாடினாரைக் காப்பவனே
அம்பலத்தில் முத்ராதானம் ஆழ்வாருக் களித்தவனே

—————-

ஸ்ரீ நாவாய் முகுந்தன் நாராயணன்- ஸ்ரீ திருநாவாய்

நாவால் நான்பாடிட நாவாய் நாராயணா
பூவால் அர்ச்சிக்கபட்ட பூலோக நாராயணா
கஜேந்திரனுக் கருள கருணைகொண்ட நாராயணா
மகேந்திரனாய் மண்தின்ற மதுசூதன நாராயணா
பூப்பறிக்க வேண்டாமென பூமகளிடம் சொன்ன நாராயணா
காப்பதே கடனென்று காவல் புரியும்  நாராயணா
பக்தனுக்காய் தாமரையை மகாலக்‌ஷ்மிவிட நாராயாணா
சக்கரத்தால் காத்த சங்குமுழங்கும்  நாராயணா
நவயோகி தவமிருக்க நலம்தரும் நாராயணா
சுபயோக தனமாய் சுகம்தரும் நாராயணா
நலம்தரும் சொல்லாய் நாவில்அமர் நாராயணா
குலம்காத்து குறைநீத்து கோவில்கொள் நாராயணா
நாராயணா நாராயணா நாராயணா நாராயணா

————–

ஸ்ரீ உய்யவந்த பெருமாள்- ஸ்ரீ திருவித்துவக் கோடு –

உய்ய வந்த பெருமாளே ஓங்காரதார பெருமாளே
அய்யனாய் நின்ற பெருமாளே அகிலம் காக்கும் பெருமாளே
பஞ்ச பாண்டவ பெருமாளே பாஞ்ச ஜைன்ய பெருமாளே
பஞ்ச மூர்த்தி பெருமாளே பாஞ்சாலி அன்பு பெருமாளே
அஞ்ஞாதவாச தல பெருமாளே ஆரண்ய வாச பெருமாளே
அஞ்ஞானம் போக்கும் பெருமாளே அசைந்தாடு மயில் பெருமாளே
காசி விஸ்வநாத பெருமாளே கால் நடந்து வந்த பெருமாளே
மாசில்லாத ஏக வடிவ பெருமாளே மாறுபாடில்லாத பெருமாளே
அரியாகி அரனான பெருமாளே அறிந்தவரும் அறியாத பெருமாளே
விரிந்த வானான பெருமாளே விளையாட்டாய் காணாத பெருமாளே
பாலக்காடு பாதைகாத்த பெருமாளே பார்க்கும் இடமெல்லாம் ஆன பெருமாளே
ஆலவிழுதாய் உருவாகும் பெருமாளே ஆதியந்தமான ஆச்சார்ய பெருமாளே
என்னுள் உள்ள பெருமாளே எண்ணத்தில் வரும் பெருமாளே
எண்ணிக்கை இல்லா பெருமாளே எழில்வடிவ ஏகாந்த பெருமாளே

————————–

ஸ்ரீ நீலமேக  பெருமாள் – ஸ்ரீ திருக்கண்ணபுரம்

மன்னருக்கு சூட்டிய மாலையில் தலைமுடியிருக்க
கண்ணபுர நாயகனை காத்திட வேண்டினாரே
பக்தனைக் காக்க பரந்தாமன் தன்தலையில்
சிக்கென்று முடிதாங்கி சிகையுடன் நின்றாரே
அழகான கேசத்துடன் அமாவாசை ஊர்வலமே
பழகிய கோலத்தில் பிரயோக சக்கரமே
கருடனின் கர்வத்தை கணநேரத்தில் அழித்தவரே
தருணத்தில் அருளி தரணியைக் காப்பவரே
வறுமையில் வாடி வரிகட்ட மறந்த பக்தர்
கருணா மூர்த்திக்கு கைங்கர்யம் செய்தாரே
குறுநில அம்மன்னரை கோவிலில் காத்தவரே
பருப்புடன் செய்த பொங்கலை உண்டவரே
அனைவரையும் காக்கும் ஆண்டவ உருவமே
முனையதரன் பொங்கலை முன்னின்று செய்வோமே
நெற்றியில் தழும்புடன் நின்றெழுந்த உருவமே
வெற்றியை அளிக்கும் வீரஅஷ்டாச்சர மந்திரமே
ஓம் நமோ நாராயணாவே
ஓம் நமோ நாராயணாவே
ஓம் நமோ நாராயணாவே
ஓம் நமோ நாராயணாவே

————————

ஸ்ரீ சவுந்தர ராஜப் பெருமாள்- ஸ்ரீ நாகை

அழகுக்கு அழகு சேர்க்கும் அழகே
அழகுக்கு அணியாகி அசையும் அழகே
எழிலாய் எழுந்தருளும் எண்ணிலா எழிலே
மயிலாட மனம்கவரும் மந்தகாச எழிலே
துருவன் கண்டிட துயர்துடைக்கும் தளிரே
உருவத்தைக் கண்டதும் உள்ளமும் உருகுமே
வரங்களை மறந்து வணங்கி நின்றானே
கரங்கள் கூப்பி கண்குளிர கண்டானே
பேரழகை எப்போதும் பார்க்கும் வரமே
தாரணி காத்திட தரிசனம் தருவாயே
சுந்தர உருவமான சவுந்தர ராஜனே
மந்திர குழலூதி மயக்கும் மாயனே
அவதார கதையை அணியாக்கிய அணியே
அவதார புருஷனாய் ஆதியான அந்தமே

—————

ஸ்ரீ நாண்மதியப் பெருமாள் – ஸ்ரீ தலைச்சங்காடு

திருமகளுக்கு முன்னதாக தோன்றிய சந்திரனே
உருவத்தில் அழகாக உதித்த சந்திரனே
குருவின் மனைவியை கூடிய தோஷமே
உருவத்தைக் குலைக்க உருவான குஷ்டமே
ரோகிணி மீதுமட்டும் ரம்மியம் அதிகமாக
ஆகிவந்த சாபத்தில் அனுதினம் தேயுமே
தேகத்தின் சோபை தினமும் குறையவே
மோகத்தின் சாபம் முடியசெய் தவமே
சந்திரன் தவத்திற்கு சக்தியுடை தலமே
மந்திரங்கள் ஓதும் மறைபுகழ் மாலனே
மதியைத் தலையில் மலராய் சூடியவனே
கதியாய் எங்களைக் காத்து நிற்பவனே
சங்கோடு சக்கரம் சாரங்க நாதனே
மங்காத ஒளியே மாறாத ஒலியே
விரிந்த வெண்சுடரே விண்ணின் ஒளிச்சுடரே
புரியாத தத்துவமே புன்னகை பாலனே

—————-

ஸ்ரீ திரிவிக்கிரம நாராயணர் – ஸ்ரீ காழிச் சீராம விண்ணகரம்

வலக்கை தானம்பெற இடக்கை குடைபிடிக்க
உலகை காத்த உத்தம வராகவதாரமே
காலிலே தண்டையுடன் கையில் வேலுடன்
பாவிலே குறளுடன் பாடிய திருமங்கையாழ்வாரே
நிலத்தினைக் காத்திட நிம்மதி பெற்றிட
உலகை அளந்த உத்தம திரிவிக்ரமனே
இடதுகால் தலைமேல் இருக்க, வலக்கை
தடயமாய் பெறும் தானங்கள் சுமக்க
இடதுவிரல் எங்கே இன்னொரு அடியென
திடமாய் கேட்டுநிற்கும் திவ்ய புருஷனே
தவிட்டுப் பானையில் தாடாளன் இருக்க
கவிபாடும் ஆழ்வார் கனவிலே வந்தவரே
திருஞான சம்பந்தர் திருமங்கை ஆழ்வார்
திருவாத விளையாட்டை திருத்தலத்தில் நடத்தியவரே
முனிவர் உரோமசர் முன்னின்று கண்டிட
கனிவாய் பிரம்மனின் கர்வம் போக்கியவரே
இதுவேண்டும் அதுவேண்டும் எல்லாம் வேண்டுமென
மதிகெட்டு திரியும் மானுடம் உணரவே
தாள்ஆண்டு தரணியாண்டு  தலைக்கனம் போக்கியவனே
கால்தூக்கி கரம்உயர்த்தி கர்வம் அடக்குபவரே
தூக்கிய பாதம் தொய்வடையா திருக்க
ஆக்கும் புருஷனை அங்கத்தில் தாங்கியவளே
மகாலக்ஷ்மி அன்னையின் மார்பிலே திருமாலே
சுகானுபவ சங்கமத்தில்  சுந்தர நாயகனே

———————

ஸ்ரீ வைகுண்ட விண்ணகரம் –

விண்ணகர வைகுண்டம் வையத்தில் உண்டு
கண்கவர் தேவியருடன் கடவுளும் உண்டு
அன்பான தம்பதிகள் ஆண்டவனைத் தேடியதுண்டு
தன்பல வலிமையில் தவமும் இருந்ததுண்டு
நாட்டை ஆண்டுவிட்டு நற்காரியம் செய்ததுண்டு
காட்டிலே தீமூட்டி கடுந்தவம் செய்ததுண்டு
பூதவுடல் களைந்து பொன்னகரம் வந்ததுண்டு
மாதவனைக் காணாது மனமுடைந்து போனதுண்டு
அரசன் ஸ்வேதகேது ஐராவதேஸ்வரனை அணுகியதுண்டு
கரம்கூப்பி நாராயணனைக் காணவே நின்றதுண்டு
உதங்க முனிவரும் உடன் வந்ததுண்டு
வதனம் கண்டிட வாய்ப்பும் பெற்றதுண்டு
தேவியர் இருவரும் தெய்வத்துடன் தோன்றியதுண்டு
கோவிலில் விஷ்ணுவின் கோலம் கண்டதுண்டு
தானங்கள் யாகங்கள் தருமங்கள் பெருகியதுண்டு
வானமே மண்ணில் வரைபடமாய் வந்ததுண்டு
விண்ணகர வைகுண்டம் வையத்தில் உண்டு
கண்கவர் தேவியருடன் கடவுளும் உண்டு

—————-

ஸ்ரீ செங்கண்மால் ஸ்ரீ ரங்கநாதர் – ஸ்ரீ திருத்தெற்றியம்பலம்

கண்சிவந்து களைப்பில் கண்ணயரும் ரங்கனே
மண்செழிக்க சயனித்து மனம்கவரும் ரங்கனே
அசுரனை அழிக்க அவதாரமெடுத்த ரங்கனே
பசுவின் உருவான பத்தினிகாத்த ரங்கனே
வராக வடிவில் வையம்காத்த ரங்கனே
அராஜகம் அழிக்க அடிக்கடிவரும் ரங்கனே
தனியே இலக்குமி தவிக்காதிருக்க ரங்கனே
இனிதே தவமிருக்கவைத்து இத்தலம்வந்த ரங்கனே
பக்தர்கள் கண்டிட பள்ளிகொண்ட ரங்கனே
முக்தியைத் தந்திடும் முகுந்த ரங்கனே
அம்பலம் வந்தெம்மை ஆண்டுவிடும் ரங்கனே
இம்மைக்கும் மறுமைக்கும் இனிதான ரங்கனே
திருத்தெற்றி அம்பல திருமால் ரங்கனே
திருமகள் துணையுடன்  திருவருள் ரங்கனே

——————

ஸ்ரீ தாமரையாள் கேள்வன்- ஸ்ரீ பார்த்தன் பள்ளி

தண்ணீர் வேண்டியே தவத்தை கலைத்தானே
கண்களை அகத்தியர் கனிவுடன் திறந்தாரே
கமண்டலம் திறக்க காணாத தண்ணீரே
விமலன் உன்னையே வேண்ட சொன்னாரே
கண்ணனை வேண்டி கண்களை மூடவே
கண்எதிரே தோன்றினான் காட்சியும் தந்தான்
மண்ணை எங்கு மனமார தோண்டினாலும்
தண்ணீர் கிடைக்க தந்தான் கத்தியை
மண்ணை தோண்டிட மகத்தான கங்கை
விண்ணில் இருந்தே  விழுந்து புரள
தாகமும் தீர்ந்து தளிரடி பணிவானே
சோகங்கள் தீர்க்கும் சுந்தர கண்ணனே
மகனாய் பிறப்பது மகானே  என்று
அகத்தில் அறிந்தான் அரசன் தசரதன்
சோதிக்க யாகமும் சுகமாய் நடத்த
ஆதியாய் தோன்றிய  அதிசய ராமனே
தேவியர் இருவருடன் தோன்றிய ராமனே
மேவிய உருவில் மேன்மை பொங்குமே
யுகங்கள் கடந்து யோகங்கள் கடந்து
அகத்தில் தெரிந்திடும் அத்வைத ரூபனே
இராமனாய் கண்ணனாய் இராசங்கள் செய்பவனே
கோமளக்  கேள்வனாய் குலக்கொழுந்தாய் ஆனவனே
பார்த்தன் பள்ளியில் பார்ப்பதற்கு நின்றவனே
கோர்த்த மாலையில் கோலமிடும் தேவனே

———————

ஸ்ரீ தேவநாத பெருமாள் – ஸ்ரீ திருவகிந்திபுரம்

கருடன் கொணர்ந்த கருடநதி பெருமாளே
கருவத்தை அழித்துதேவர் காத்த பெருமாளே
ஆதிசேடன் வாலால் அடித்தஆழ்கிணறு பெருமாளே
ஓதிடும் மறைகள் உன்புகழ்பாடும் பெருமாளே
தேசிகன் வாழ்ந்த திருமாளிகை பெருமாளே
பூசிடும் சிவப்பில் பொங்கியநதி பெருமாளே
உடல்நோய் தீர்க்கும் ஒய்யாரமூலிகை பெருமாளே
கடலூரில் விழுந்த சஞ்சீவமலை பெருமாளே
வேண்டுதல் தாங்கிடும் வாசக்கிணறு பெருமாளே
ஆண்டவ மூர்த்தியாய் ஹயக்ரீவ பெருமாளே
வலதுதொடையில் லக்ஷ்மியை வாகாய்கொண்ட பெருமாளே
உலகத்தை காத்திட ஊரில் வாசம்செய் பெருமாளே
உருவத்தில் மும்மூர்த்திகளை உணர்த்திய பெருமாளே
திருவகிந்தி புரத்து தேவநாத பெருமாளே

—————-

ஸ்ரீ காட்கரையப்பன் –

உருவத்தில் பாலகனாய்  ஓங்கி வளர்ந்தவனே
தருணத்தில் வந்து கர்வத்தை அடக்கியவனே
குழந்தை வடிவில் குலம்காத்த அப்பனே
அழகிய வாமனனாய் அரசனை அளந்தவனே
பகைவரின் கொடுமை படாதுகுடை பிடித்தவனே
வகையாய் தண்டத்தை வாகாய் ஏந்தியவனே
எழிலான மூன்றடியில்  எழுந்த விஸ்வரூபமே
அழியாத பாதங்கள் அண்டம் அளந்ததுவே
அங்கே வளர்ந்த அதிசய உருவமே
எங்கே மூன்றாவதடி என்றே வினவ
இங்கே என்தலை என்றவன்  சொல்லிட
மங்காத பெருமை மன்னனும் கொண்டானே
மகாபலியின் சிவபக்திக்கு மகேசனுக்கு  கருவறையே
மகாபலி திருவோணத்திற்கு மறுபடிவரும் திருநாளே
சிவனும் திருமாலும் சேர்ந்தருள் தலமே
அவனியில் பழம்பெரும் ஆலய தலமே

—————–

ஸ்ரீ லெட்சுமண பெருமாள் – ஸ்ரீ திருமூழிக்களம் –

கரங்கள் நான்குடன் கருணை பொழிபவனே
வரங்கள் பலவுடன் வளங்கள் தருபவனே
சகோதரர் நான்குடன் சரித்திரம் படைத்தவனே
மகோன்னதம் பலவுடன் மாளிகை துறந்தவனே
பரதனைக் கண்டு பரிதவித்த லட்சுமணன்
சிரம்தாழ வணங்கிய சிறந்த பெம்மானே
கண்ணன் வணங்கிய காணாத விக்ரகமே
கனவிலே வந்து கரையோரம் பதித்தனரே
திருச்சூர் இராமர் திருப்பறையார் கோவிலே
இருக்கும் தலத்து இரிஞ்சிலாக்குடா பரதனே
பாயமல் கோவிலில் பார்போற்றும் சத்ருக்னனே
ஓயாத உலகின் ஒய்யார எர்ணாகுளலட்சுமணனே
எல்லோரும் உனையடைய எளிதாய் வழிகூற
சொல்லாய் ஹரிதருக்கு சொன்ன திருமொழியே
திருமொழிக் களத்தான் திருமூழிக் களத்தானாக
ஒருமொழியில் உன்புகழை உரைக்கத்தான் இயலுமோ
எர்ணாகுள இறைவனை என்நாபுகழ் பாடுமே
எர்ணாகுள இறைவனே என்குலம் காப்பானே

—————-

ஸ்ரீ திருவாழ்மார்பன் –

திருவை மார்பில் தாங்கிய திருவே
திருமார்பு தரிசனம்  ஆதிரை திருவே
பிரம்மச்சாரி விரதம்கடை பிடிக்கும் திருவே
வரங்களை அள்ளி வழங்கும் திருவே
சங்கரமங்கல அம்மைக்கு சங்கடம் தீர்த்த திருவே
மங்கல விசுவுக்கு மங்கையர் காணும் திருவே
பெண்களை அனுமதிக்காத பெரியகோவில் திருவே
கண்குளிர திருமார்பு  காணஅனுமதிக்கும் திருவே
திருவாதிரை நாளிலும் திருவிசுநாளிலும் திருவே
திருநடன கதகளி திருஉற்சவ திருவே
உப்பு மாங்காயை உண்ட அழகு திருவே
தப்பாது பக்தர்களை தாங்கும் திருவே
உன்னைக் காணசிவன்  ஓடிவந்த திருவே
சந்தனத்துடன் விபூதி தந்திடும் திருவே
பந்தன திட்டாவில் பாதுகாக்கும் திருவே
சொந்தங்களைக் காத்து சுகம் தருவாய் திருவே

——————

ஸ்ரீ இமையவரப்பர் – ஸ்ரீ திருச்சிற்றாறு –

ஊரிலே தருமர் ஒருபொய் சொல்லிவிட
போரிலே துரோணர் புத்ரசோகம் கொண்டார்
இறந்த யானையின் இனிய பெயரை
உரக்க சொல்ல உண்மை மறைந்ததே
தான் செய்த தவற்றினால்  தருமர்வாட
வான்வெளி தேவர் வாழ்த்திய இத்தலத்தை
கண்டு கொண்டு கண்மூடி தவமிருந்தார்
மண்ணிலே திருமாலை மனம்குளிர வேண்டினார்
திருச்சிற்றாறு  அருகே  திருச்செங்குன்றூர் அமைய
திருமாலே இவ்விடத்தில் திருவருள் புரிய
ஆலப்புழா ஊரிலே அமைந்த அதிசயமே
கோலமாய் வீற்ற குருவாயூர் கோவிந்தா
எத்தனை தேசங்கள் எத்தனை உருவங்கள்
பித்தனாய் மாற்றியே பிறவியை காப்பாயே
உத்தமன் உன்புகழை ஓயாது நான்பாட
நித்தம் எனக்கருளி நிம்மதி தருவாயே

———–

ஸ்ரீ மாயப்பிரான் – ஸ்ரீ திருப்புலியூர் –

மாயமாய் வந்து மாயைகளை நடத்துபவரே
மாயப் பிரானாய்  மாட்சிமையுடன் நின்றவரே
தீராத நோய்களைத்  தீர்க்கும் நாதரே
கோரிய முனிவர்களுக்கு கோலமாய் வந்தவரே
சப்த ரிஷிகளை சாபத்தால் அவமதிக்க
தப்பிதவழியில்  கொன்றிட தேவதை உருவாக்க
தானம் செய்யாது தவமுனிவரை வருத்த
வானத்து இந்திரன் வந்தானே புலிவடிவில்
பீமன் கட்டிய பெரிய கோவிலே
பீமன் தூக்கிய பெரிய கதையே
குட்ட நாடு தலத்தில் கோவில் கொண்டவரே
எட்ட முடியா உருவத்தை எழிலாய் கொண்டவரே
எல்லாமே மாயையாய்  எல்லாமாய் இருப்பவரே
இல்லாத பொருளிலும் இருந்து ஜொலிப்பவரே
உருவமாய் அருவமாய் உள்ளதாய் இல்லாததாய்
கருத்தாய் புத்தியாய் கல்வியாய் ஆனவரே

————————–

ஸ்ரீ திருக்குறளப்பன் –

வேதங்களை தொலைத்த வேளையில் காத்தவரே
வேதங்களை மீட்டு விரைவில் தந்தவரே
நன்றியில் பிரம்மன் நாடியுன்னை தொழுதிட
அன்று அருளிய அப்பன் சாரதியே
சக்கரம் அழுந்தியதால் தரையிறங்கிய  கர்ணனை
அக்கணமே அர்ஜுனன் அம்புதாக்கி கொல்ல
போரின் தருமத்தில் பெரும்பாவம் செய்தேன்என்று
பாரில் வருந்தியவனுக் கருளிய பார்த்தசாரதியே
ஆயுதங்கள் மறைத்த அந்த வன்னிமரமே
பாயும் ஒளியைப்  பாரினில் பரப்புமே
நோய்களை அகற்றும் நெடிய மரமே
காய்களை சுற்றி அடிக்க மருந்தாகுமே
வாழ்வென்னும் வழியில்  வளைவும் சுளிவும்
தாழ்வும் உயர்வும் தடுமாற வைக்குமே
என்றும் ஏறியிறங்கும்  ஏணிப்படிகளே இவ்வுலகில்
உன்நினைவு மட்டுமே ஓயாத உண்மையே

—————————-

ஸ்ரீ பாம்பணையப்பன் – ஸ்ரீ திருவண்வண்டூர்

பாம்பணைமேல் பள்ளிகொண்ட பாற்கடல் வாசனே
பாம்பணை அப்பனாய் பம்பைகரை நேசனே
நகுலனால் புதுபிக்கப்பட்ட நல்லதொரு கோவிலே
மகுடமாய் திருவண் வண்டூரில் நின்ற மதுசூதனே
பிரம்மனும் நாரதரும் பேச்சிலே சண்டையிட
பிரம்மன் நாரதரை சபித்துவிட்ட சாபமே
சாபங்கள் போக்கவே சரித்திரம் படைக்கவே
கோபங்கள் தணியவே கோவிலுக்கு செல்வோமே
ஞானத்தை கேட்டு ஞாலத்தில் தவமிருக்க
வானத்து விண்ணவனை வாழ்த்தி பாடினாரே
நாலாயிரப்  பாடல்களை நாரதரும் நவின்றிட
நாலாயிர பாடல்கள் நாரதீயப் புராணமே
காளிங்க நர்த்தன கண்ணனும் கண்குளிர
ஆலிங்கம் செய்யும் ஆண்டவ ஆலப்புழாவே
சுடராய் ஒளிகாட்டும் கருவறை வட்டமே
இடர்களை போக்கிடும் இனியதொரு தலமே

——–

ஸ்ரீ அனந்த பத்மநாபர் -ஸ்ரீ திருவனந்தபுரம்

அனந்தகோடி மக்களுக்கு ஆனந்தம்தரும் பத்மநாபனே
அனந்த சயனத்தில் ஆதிசேடன் மடியில் அயர்ந்தவனே
இலுப்பையில் செய்யப்பட்ட இயல்பான விக்ரகமே
உலுக்கிடும் நெருப்பில் உதிரியான அதிசயமே
கடுசர்க்கரை யோகத்தில் கல்லாலான சாளக்கிராமமே
சுடும்வெயிலிலும் உருகாத சுவைவெண்ணெய் கலவையே
பதினெட்டடி நீளமுடைய பத்மநாப சுவாமியே
பதித்த தங்கத்தில் பத்திரமான ஸ்வரூபமே
வில்வமங்கலத்து சாமியாரிடம் விளையாடிய சின்னக்கண்ணனே
எல்லாம் அறிந்தும் எளிதில் மறைந்த உண்ணிக் கண்ணனே
துறவுக்கும் பக்திக்கும் தூய்மையான பொறுமை தேவை
உறவாடி உரையாடி உணர்த்திய உயரிய தேவனே
தேடித்தேடி உன்னைக்காண தினம் சுற்றி அலைந்தாரே
சூடிய மலருடன் சுந்தரதேவியுடன் காற்றினில் பள்ளிகொண்டீரே
அனந்தன் காட்டிலே அரவணைத்த அண்ணல் கேசவனே
கனத்த காட்டிலே கருணை வடிவமாய் கோவில் கொண்டவனே

————–

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் -ஸ்ரீ திருவட்டாறு –

கேசனை அழித்து கேசியின்மேல் கிடந்தவனே
வாசமிகு பத்மத்தில் வாகாய் அமைந்தவனே
கேசியின் மனைவிசொல் கேட்டிறங்கி நதிகள்ஓடிவர
ஆசியுடன் இலக்குமி ஆங்கே தரைமேடாக்க
கங்கையும் தாமிரபரணியும் கைகட்டி சுற்றிநிற்க
சங்குடன் படுத்த சக்ராயுத மன்னனே
மாலையாய் இருநதியும் மணாளனைத் தழுவிட
சோலைவன அழகனே சோர்வுகளை நீக்குபவனே
பன்னிரண்டு கரங்களிலும் பன்னிரண்டு ருத்திராட்சம்
எண்ணிவைத்து கேசியை எழவிடாது செய்தவனே
வட்டாறை  சுற்றியே வளைத்த சிவாலயங்களே
பக்தியுடன் சிவராத்திரியில்  பாதசிவனை வணங்குவோமே
தெற்கே  தலைவைத்து வடக்கே திருவடியே
இடக்கை தொங்கிவிட வலக்கையில்  முத்திரையே
ஆதிகேசவனே அனந்தனே ஆயர்பாலனே ஆனந்தரூபனே
சோதிவடிவமே பிறப்பறுக்கும் சுந்தரனே  எம்பெருமானே

——————–

ஸ்ரீ திருவாழ்மார்பன் – ஸ்ரீ திருப்பதிசாரம் –

சங்கு சக்கரத்துடன் சப்தரிஷிகளுடன் இருப்பவரே
பொங்கும் அழகுடன் புவனம் காப்பவரே
ஒன்பது அடியில் ஒய்யாரமாய் அமர்ந்தவரே
எண்ணங்கள் யாவையும் எழிலாய் நடத்துபவரே
குழந்தை வேண்டி குறுநாட்டரசன் கேட்டிட
அழகான குழந்தையாய் அவதரித்த நம்பியே
நம்மாழ்வார் அவதரித்து நாராயணனை தியானிக்க
எம்பெருமான் அருளிட எழுந்தருளிய தலமே
சிவவடிவில் வந்தவரை சிந்தித்து நின்றனரே
தவமுடிவில் திருமால் தனிவடிவில் கண்டனரே
கல்லும் சுண்ணாம்பும் கடுகும் சர்க்கரையோகமே
அல்லும் பகலும் அனுதினம் நம்மைக்காக்குமே
திருவாழ் மார்பன் திருவண்பரிசார திருவருள்தலமே
திருநகரி தலத்து திருஞான முத்திரையே

——————

ஸ்ரீ அழகிய நம்பிராயர் – ஸ்ரீ திருக்குறுங்குடி

அழகிய நம்பிராயர் அருளிடும் திருத்தலமே
பழகிய ஆழ்வார்கள் பாடிய திருத்தலமே
மோட்சம்  வேண்டுமென முன்னின்று கேட்டிட
காட்சிக்கு இத்தலத்தில்  கால்வைக்க சொன்னாரே
ஆழ்ந்த கருத்தினை அழகாய் சொல்லிடவே
தாழ்குல நம்பாடுவானுக்கு தரிசனம் தந்தாரே
கொடிமரம் விலகவே கிடைக்கும் தரிசனமே
அடிமுதல் சிரம்வரை ஆளுயர வராகமே
பெரிய வராகம் சிறிதாய் சுருங்கிட
அரிய இத்தலம் ஆனதே குறுங்குடி
குரங்கம் காத்திடவே கோவிலில் எழுந்தானே
அரங்கத்து பெருமாளே அழகிய நம்பியாரே
இசையினால் தினமும்  இறைவனைக் காணலாமே
அசையும் பொருள்யாவும் அடையும் மோட்சமே
ஏகாதசி மகிமையில் எழிலாய் ஒருகதையே
ஆகாய சிலம்பாறு அளந்த திருவடியே
அதிசய உருவமே ஆனந்த வடிவமே
மதிக்கு புரியுமோ மதிக்கவும்  தெரியுமோ
உன்னைப் பாடவே ஒருநாள் போதுமோ
இன்னமும் பாடிட இருபத்திநாலு மணிபோதுமோ
உண்பதும் உரைப்பதும் உறங்குவதுமாய் ஒருவாழ்வே
எண்ணத்தில் கலையாது என்றும் இருப்பாயே

—————

ஸ்ரீ தோத்தாத்ரி நாதன்  – ஸ்ரீ நாங்குனேரி

ஒன்பது சுயம்பு ஒன்றான தலமே
கண்குளிர கண்டுவிட களிப்பபூற்றும் தலமே
மச்சமுதல் கல்கிவரை மாறிடும்  அவதாரமே
உச்சிமுதல் உள்ளங்கால்வரை உயரிய அவதாரமே
தேவியர் இருவருடன் தோத்தாத்ரி அவதாரமே
கோவிலில் தாயாருடன் கொலுவிருக்கும் தெய்வமே
நான்கு ஏரிகளால் நாங்குனேரி ஆகுமே
ஆன்மீக அறிவை அண்டமெங்கும் பரப்புமே
மரித்துவிட்ட அசுரரால் மாசுபெற்ற நிலத்தை
அரிதான உருவில் அழகாக்கிய தலமே
என்னப்பன் கண்ணனே என்னை ஆள்பவனே
மண்டபத்தில் எழுந்த மதுசூத வண்ணனே
மாசில்லா அழகனே மதிமயக்கும் பாலனே
ஆசிகள் தருவாயே ஆனந்தம் அளிப்பாயே

—————

ஶ்ரீ வைகுண்டம் வைகுண்ட நாதர் – நவதிருப்பதி -1

நின்றும் இருந்தும் கிடந்தும் நிமிர்ந்த பெருமாளே
அன்றும் இன்றும் என்றும் அணைத்த பெருமாளே
கள்ளனாய் வந்து கவர்ந்த பெருமாளே
உள்ளத்தை அள்ளும் உயரிய பெருமாளே
காலதூஷகன் பிடிபடாமல் காத்த பெருமாளே
கோலத்தைக் காட்டி கோவில்கொண்ட பெருமாளே
மன்னன் மனம்திருந்த மண்டபம்வந்த பெருமாளே
கண்ணைக் கவரும் கள்ளபிரான் பெருமாளே
வைகுண்ட தரிசனம் வையத்தில் பெருமாளே
வைகுண்டத்தில் கைலாயமும் வந்திடும் பெருமாளே
மணித்துளி தரிசனம் மனமறியும் பெருமாளே
தனித்து நின்றால் தன்னுள்தெரியும் பெருமாளே
குடையாய் ஆதிசேடன் கூடவே பெருமாளே
விடையாய் தெரியும் வேங்கட பெருமாளே
நம்பினோரைக் கைவிடாத நவதிருப்பதி பெருமாளே
கும்பிட்டோர் குலத்தைக் காத்திடும் பெருமாளே

—————

ஸ்ரீ விஜயாசனர் – நவதிருப்பதி 2 – ஸ்ரீ நத்தம்

நத்தம் என்ற நல்லூரில் குடிகொண்டவனே
நித்தம் என் குறைகளை நீக்கி நிற்பவனே
வரகுணமங்கை வேதவித்துக்கு வகையாய் அருளியவனே
வரங்களை தந்து வையகம் காப்பவனே
வெற்றிகளை தந்திடும் விஜயாசன பெருமாளே
குற்றங்கள் பொறுத்திடும் குறையில்லா குணவானே
சந்திர கிரகமாய் சங்கடம் தீர்ப்பவனே
மந்திர வேத மறைபொருள் நாயகனே
நம்பினோரைக் கைவிடாத நவதிருப்பதி பெருமாளே
கும்பிட்டோர் குலத்தைக் காக்கும் பெருமாளே

——————

ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள்- நவ திருப்பதி 3 -ஸ்ரீ  திருக்கோளூர் –

குபேரன் சாபத்தால் குமித்த நிதிதொலைந்ததே
குபேரன் நவநிதியை குறைவின்றி காத்தவனே
வைத்தமா நிதியால் வையகம் காத்தவனே
சாத்திரங்கள் ஓதிடும் சத்திய நாதனே
திருக்கோளூர் கோவிலில் திருவருள் வேந்தனே
திருசெவ்வாய் கிரகமாய் தினமும் காப்பவனே
பார்வதி சாபம் போக்கவந்த நாராயணனே
பாரமுழுதும் காக்கும் பாற்கடல் நாராயணனே
நம்பினோரைக் கைவிடாத நவதிருப்பதி தலமே
கும்பிட்டோர் குலத்தைக் காக்கும் தலமே

————–

ஸ்ரீ பூமி பாலகர் – ஸ்ரீ திருப்புளியங்குடி – நவ திருப்பதி 3

திருப்புளியங்குடியில் பள்ளிகொண்ட திருமால் அழகனே
திருநாபிக் கொடியும் திருக்கமலம் சேரும்அழகே
நாபிக்கொடி இணையும் நாயக அழகனே
சோபிக்கும் உன்நாபியின் சுந்தர அழகே
பூமியை பாதுகாக்கும் பூமிபாலக அழகனே
பூமியை வலம்வரும் பூலோக அழகே
சாபங்கள் தீர்த்து சாத்திரம் படைக்கும் அழகனே
பாவங்கள் போக்கிடும் பாற்கடல் அழகே
வருணன் வணங்கிய வைகுண்ட அழகனே
கருணை மழைபொழியும் கடிமலர் அழகே
நம்பினோரைக் கைவிடாத நவதிருப்பதி தலமே
கும்பிட்டோர் குலத்தைக் காக்கும் தலமே

——————–

ஸ்ரீ ஆதிநாதன் – ஸ்ரீ ஆழ்வார் திருநகரி–நவ திருப்பதி -4

சொல்லால் பாடிய செம்புலவர் ஆழ்வார்
கல்லைப் போட்டு கண்விழித்த தலமே
இடர்கள் போக்கிட இன்னல்நீக்கும் இத்தலமே
சடகோபர் நம்மாழ்வாராகிய சத்திய புளியமரமே
மதுரகவி ஆழ்வார் மங்காளாசனம் செய்திட
பதுமராக நாதன் பாதங்கள் பதித்த தலமே
தாந்தனுக்கருளி தாழ்குலம் உயர்குலம் ஆக்கியவரே
பாந்தமாய் மகிழமாலை பத்தினிக் களித்தவரே
மணக்கோல பெருமாளை மணமார வேண்டவே
குணக்குன்று கோவிந்தனை கும்பிட்டு நிற்போமே
எத்தை தின்றால் இப்பித்தம் தெளியுமோ
அத்தை தின்று அங்கே கிடக்கும் ஆன்மாவே
உறங்காப்புளி காத்திட உன்னை வேண்டுமே
குரங்குப்பிடி பிடித்து கும்பிட்டு நிற்குமே
நம்பினோரைக் கைவிடாத நவதிருப்பதி தலமே
கும்பிட்டோர் குலத்தைக் காக்கும் தலமே

———————

ஸ்ரீ மகரநெடுங்குழைக்காதர் – ஸ்ரீ தென்திருப்பேரை –நவ திருப்பதி 5

மகரநெடுங் குழைக்காதர் மங்காத மூலவராக
நிகரில் முகில்வண்ணன் நிலையான உற்சவராக
தென்திருப்பேரை ஊரில் திருப்பதியாய் நிற்க
அன்போடு எங்களை அரவணைக்கும் அண்ணலே
துர்வாசர் மந்திரம் துதித்த பூதேவி
கர்வங்கள் அழிந்திட கரங்களில் குண்டலங்கள்
மூழ்கிய தாமிரபரணியில் முத்தாய் பெற்றிட
வாழ்ந்திடும் திருப்பேரை வளமாய் பெற்றாள்
குண்டலங்களை அவள் குணவானுக் களித்திட
மண்டலம் காக்கும் மங்கள நாயகனே
வருணன் பூஜிக்க வளர்பிறை நிலவாகி
தருணத்தில் மழையாய் தரையிறங்கும் பெருமாளே
சொல்லின் நாயகனாய் சுவைக்கும் பெருமாளே
அல்லும் பகலும் அனைவரையும் காப்பவரே
நம்பினோரைக் கைவிடாத நவதிருப்பதி தலமே
கும்பிட்டோர் குலத்தைக் காக்கும் தலமே

——————

ஸ்ரீ வேங்கட வாணன் – நவதிருப்பதி 7 – ஸ்ரீ பெருங்குளம்

வேங்கட வாணனை வேண்டி தினம் பாடுவோமே
ஓங்கியே உலகளந்த உத்தமன் புகழ் பாடுவோமே
பெருங்குளத்து நாயகன் பேர்சொல்லிப் பாடுவோமே
கருமை மேனியனை கருத்தில் கொண்டு பாடுவோமே
வேதாசரன் மகளாகி வேங்கடனை மணப்போமே
கோதாவின் நாயகனை கும்பிட்டு நினைப்போமே
கமலாவதி தவத்திற்கு கருணையுடன் வருவானே
கமலத்து மணாளனுடன் கண்மூடி ஆடுவோமே
பாலிகை வனத்திலே பாற்கடல் வேந்தனே
காளிங்க அஸ்மாசரன்மேல் களிப்புடன் நடனமே
மாயக்கூத்தன் நடனத்தில் மயங்கியே ஆடுவோமே
ஆயர்பாலனை இராசத்தில் ஆலிங்கனம் செய்வோமே
அண்டமே இராசமாட ஆனந்த நிலையே
கண்டு களிக்கும் கண்ணிலே பிருந்தாவனமே

—————–

ஸ்ரீ தொலைவில்லி மங்கலம் -ஸ்ரீ ஸ்ரீனிவாசன் – நவ திருப்பதி 8

தொலைவிலே இருந்தாலும் தொல்லைகள் தீர்ப்பவரே
மலையிலே நின்றருளும் மங்கல ஸ்ரீனிவாசரே
அலையும் மனத்தை அடக்கி ஆள்பவரே
விலையில்லாக்  குந்துமணி விரிமார்பு மணாளனே
கலையும் மேகமாய் கண்ணாமூச்சி ஆடுபவரே
சிலையிலே தெரிந்து சிந்தை குளிர்பவரே
அலமேலு மங்கையுடன் அருள்தரும் சீலரே
உலகத்தைக்  காக்க ஓங்கி வளர்ந்தவரே
சலசலக்கும் மனதில் சங்கடம் தீர்ப்பவரே
குலத்தைக்  காக்கும் கோவிந்த ரூபனே
தலப்பெருமை இரண்டாக தாமரை வடிவனே
பலவித அவதார பாற்கடல்  நாதனே
மங்களம் தந்திடும் மங்கல ஸ்வரூபனே
பொங்கிடும் அழகில் புவனம் சிவக்குமே
சங்கும் சக்கரமும் சத்தியம் பேசிடுமே
மங்காத ஜொலிப்பில் மகிழ்வை தந்திடுமே
அங்கும் இங்குமான அழகான நவதிருப்பதியே
எங்கும் பரவிய எழில்வடிவ மூர்த்தியே

—————-

ஸ்ரீ தெய்வ நாயகர் – ஸ்ரீ திருத்தேவனார் கோவில்

துர்வாசர் மாலையை துச்சமாக நினைத்து
கர்வத்துடன் யானையின் கழுத்தில் இட்டுவிட
தன்வினை சுட்டுவிட தரித்திரம் பெற்றானே
இந்திரன் கர்வம் இழந்து நின்றானே
பிரம்மனும் கைவிட பெருமாளை சரண்புக
இரங்கிய தெய்வமே இத்தலத்தில் இறங்கிய தெய்வமே
பக்தர் வாக்கு பலித்துவிட வந்தவரே
முக்தி அளிக்க முதலாய் நின்றவரே
பாற்கடல் கடைந்திட பாருக்குள் வந்தவரே
மார்பில் அழகிய மகாலக்ஷ்மி தாங்கியவரே
அற்புதம் பலபுரிந்து அருளைப் பொழிபவரே
பொற்பாதம் பணிந்து பூமாலை சாத்துவோமே
இங்கும் அங்கும் எங்குமாய் இருப்பவரே
இன்னபெயர் என்னபெயர் எங்கு தேடுவேனே
சொன்னபெயர் யாதோ சொல்லாதவர் யாரோ
மண்ணிலும் விண்ணிலும் மாறாத நாயகரே

—————

ஸ்ரீ அரவிந்தலோசனர் – ஸ்ரீ தொலைவில்லி மங்கல- நவ திருப்பதி 9

இருந்து இருந்த அரவிந்த லோசனரே
கருத்து கருத்த கண்ணான கண்ணனே
சிவந்து சிவந்த செந்தாமரைக் கண்ணனே
உவந்து உவந்த உற்சவ மூர்த்தியே
மருந்து மருந்தான மாமறை வேதமே
அருந்தும் அருமறை ஆயூளைக் காக்குமே
கவர்ந்து கவர்ந்த கருந்தடங் கண்ணியே
தவழ்ந்து தவழ்ந்த தளிர்மேனி தாமோதரனே
மங்கலத்தில் மலியாத மாமகளின் மங்களமே
செங்கமல செழிப்பில் சேரும் நவதிருப்பதியே
இரட்டையில் இரட்டிப்பான இனிய திருப்பதியே
பரந்து விரிந்த பாரினில் நவதிருப்பதியே

———–

ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் – ஸ்ரீ திருத்தங்கல்

திருத்தங்கலில் தங்கிய திருமகளின் திருமாலே
திருக்கோவிலில் நின்றபடி திருவருளும் திருமாலே
திருத்தேவியர் நால்வரை திருமணந்த திருமாலே
திருத்தங்கல் அப்பனாய் திகழும்  திருமாலே
திருமகள் ஶ்ரீதேவி திருவழகு திருமாலே
திருச்செல்வி பூதேவி திவ்யமான திருமாலே
திருதேவதை நீளாதேவி திருச்செல்வ திருமாலே
திருநங்கை ஜாம்பவதி திருமணத் திருமாலே
திருக்கரங்கள் நான்குடன் திருகருடன் திருமாலே
திருவாசுகி ஏந்திய திருக்கோலம் திருமாலே
திருக்கதிரவன் தோஷத்தை தீர்த்த திருமாலே
திருஆலை மலைமேலே திருப்பள்ளி திருமாலே
திருமணத் தடைநீக்கும் திருவருள் திருமாலே
திருப்பேரனுக்கு திருக்கரத்தால் திருமணம் திருமாலே
திருமாலை சாற்றினேன் திருவருளால் திருமாலே
திருதினம் ஒருபாடலே திருமஞ்சனம் திருமாலே

————–

ஸ்ரீ வடபத்ரசாயி – ஸ்ரீ திருவில்லிபுத்தூர்

ஆண்டாளை ஆண்ட ஆண்டவனே
ஆண்டாண்டு காலமாய் அழியாதவனே
சூடிக் கொடுத்ததை சூடியவனே
சூடிய சூடாமணியால் இணைந்தவனே
வில்லிப்புத்தூரில் வில்லாளனாய் வந்தவனே
வில்லுடன் கோலுடன் வீற்றஇராஜனே
கோவிந்தனாய் கோதையை மணந்தவனே
கோவினை மேய்த்த கோலாகலனே
கள்ளழகர் அருளியதால் கல்யாணமே
கள்ளழகர்  புடவை நிலமையை கணிக்குமே
சொன்னதை சொல்லிடும் சிறுகிளியே
சொன்னசொல் காத்த செங்கோலனே
அரசுக்கு சின்னமான அரசனே
அரசனாய் எங்களை ஆண்டவனே

————

ஸ்ரீ கூடலழகர் – மதுரை

பல்லாண்டு பாடலை பாடவைத்த கூடலழகே
கல்லிலே கலையாய் காட்சிதரும் கூடலழகே
கூடுதல் அழகுடன் குடிகொண்ட கூடலழகே
ஊடுருவி உள்ளத்தை உருக்கிடும் கூடலழகே
மீனாய் வடிவெடுத்து மின்னிடும்கூடலழகே
வானாய் விரிந்த விஸ்வரூப கூடலழகே
அஷ்டாங்க விமான அதிசய கூடலழகே
கஷ்டங்கள் போக்கிடும் கருணைமிகு கூடலழகே
பஞ்சபூத தத்துவமான பாஞ்சஜைன்ய கூடலழகே
தஞ்சமென வந்தவரை தாங்கிடும் கூடலழகே
எட்டெழுத்து மந்திரமாய் எழிலான கூடலழகே
கட்டழகு சீமானாய் கள்ளமிகு கூடலழகே
நான்மாடக் கூடலாய் நறுமண கூடலழகே
வான்மழை காத்த வகைமேக கூடலழகே
முக்கோல முகுந்தனாய் முன்னின்ற கூடலழகே
இக்கோலம் காணவே இனியதவம் கூடலழகே
நின்றும் இருந்தும் கிடந்த கூடலழகே
அன்றும் இன்றும் என்றுமான கூடலழகே

—————-

ஸ்ரீ கள்ளழகர்- ஸ்ரீ திருமாலிருஞ்சோலை –

கண்ணை மயக்கி கருத்தையள்ளும் கள்ளழகு
விண்ணை அளந்த விஸ்வரூப பாதங்களழகு
மண்டூக சாபத்தை மாற்றும் அழகரழகு
தண்ணென குளிரும் தாமரை வல்லியழகு
கையை வைத்ததில் வைகை வந்ததழகு
மாயை விலக்கிடும் மாமயன் தானழகு
சேயைக் காத்திடும் செல்லத் தாயழகு
வாயைத் திறந்து வானையளந்த சேயழகு
குண்டோதரன் பசியை குறைத்த கங்கையழகு
கண்ணிமையில் தெரியும் கல்யாணக் கோலமழகு
தர்மதேவன் வேண்டிய தலத்தில் தங்கியதழகு(எம)
தர்மனும் பூஜிக்கும் தலமானது தரணியிலழகு
அம்மை அப்பனாய் அகிலம் காப்பதழகு
எம்மை காக்கவே எழுந்தருளிய எழிலழகு
ஏறிய வாகனங்கள் ஏழில் வருவதழகு
கோரிய வேண்டுதலை கொடுக்கும் கருணையழகு

————

ஸ்ரீ காளமேகப் பெருமாள் – ஸ்ரீ திரு மோகூர்

பெண்ணாகி இன்னமுதை பெறும்பேற்றை தருபவனே
வண்ணங்கள் பலவாகி வடிவங்கள் கொண்டவனே
கள்ளத் தூக்கத்தில் கண்மூடி கிடப்பவனே
உள்ளத்தை கொள்ளை உறங்கியே கொள்பவனே
வீடுபேறு தந்திட வீடுகள் வருபவனே
காடுமலை யாவிலும் காட்சியாய் ஆனவனே
நண்பனாய் இருந்திட நடுநிசியில் பிறந்தவனே
மண்ணினைத் தின்று மாயங்கள் செய்தவனே
காளமேகமாய் தன்னுள் கருணை கொண்டவனே
ஆளவந்த நாயகனாய் ஆண்டாளை ஆண்டவனே
நித்திரை போக்கிடும்  நிறைந்த விழிப்பானவனே
முத்திரையாய் சக்கரம் முன்னின்று கொண்டவனே
சக்கரத்து ஆழ்வாராய் சதுரங்கம் ஆடுபவனே
அக்கரை செல்லவே ஆடிவரும்தோணி ஆனவனே
இருநூறு பாடல்கள் இனிதாய் பாடியவனே
இருக்கும் இடமெல்லாம் இனிமை தருபவனே

——————-

ஸ்ரீ சவுமிய நாராயணன் திருக்கோவில் -ஸ்ரீ திருக்கோஷ்ட்டியூர்

இருதேவியர் உடன் இருக்கும் நாராயணா
இருக்கும் இடத்தில் எல்லாமிருக்கும் நாராயணா
தொட்டிலில் குழந்தையாய் தவழ்ந்திடும் நாராயணா
கொட்டிய அழகில் கொஞ்சும் நாராயணா
புத்திர பேற்றினை புவனத்தில்தரும் நாராயணா
அத்தியில் பூக்கும் அழகான நாராயணா
விளக்காய் வாழ்வில் வெளிச்சம்தரும் நாராயணா
குளத்தில் வந்த குலவிளக்கு நாராயணா
கிணற்றில் கங்கையாய்  கிளம்பிய நாராயணா
மணத்தில் மனதை மகிழ்விக்கும் நாராயணா
நம்பியிடம் ராமானுஜர் நாடிவந்த நாராயணா
நம்பிக்கை கொடுத்த நாமம் நாராயணா
நரகமே கிடைத்தாலும் நாஉரைத்த நாராயணா
கரமதை கூப்பி காவியம்படை நாராயணா
கதம்ப மகரிஷிக்கு கதம்பகோலம் நாராயணா
விதவித கோலத்தில் விளையாடு நாராயணா

—————

ஸ்ரீ ஆதி ஜெகந்நாதர் – ஸ்ரீ திருப்புல்லாணி

ஆதியும் ஜோதியும் ஆன பொருளே
போதிமர வடிவான புண்ணிய பொருளே
சேதுக்கரை ஓரத்தில் சயன பொருளே
ஓதும் மறைகளின் ஒய்யார பொருளே
நினைத்தது நடக்க நிறைந்த பொருளே
அணைத்த அணையான அருமை பொருளே
தர்ப்பையில் சயனித்த தாமரை பொருளே
அரத்தங்கள் புரியும் ஆண்டவ பொருளே
சீதையை மீட்கவந்த சிறந்த பொருளே
கீதையை உரைத்த கிருஷ்ண பொருளே
புத்திரனை தந்திடும் புத்திர பொருளே
ரத்தனமாய் ஜொலிக்கும் ஶ்ரீராம பொருளே
நாகரின் வடிவில்வரும் நாயகப் பொருளே
போகமும் பொன்னும் பொருளும்தரும் பொருளே
அரசமர வடிவான ஆனந்த பொருளே
கரங்கள் தொழுதிடும் காட்சி பொருளே
இரவா பகலா அறியேன் பொருளே
உறவா பிரிவா உணர்வேன் பொருளே
என்னமணி என்னபொழுது ஏதுமறியேன் பொருளே
உன்னை மட்டும் உள்ளமறிவேன் பொருளே

—————–

ஸ்ரீ சத்திய மூர்த்தி- ஸ்ரீ திரு மெய்யம்

சத்திய வாக்கினை சாத்தியம் ஆக்கின சத்தியனே
நித்தம் காத்து நிறைவை தரும் நித்தியனே
சங்குடன் காத்து சக்கரம் ஏந்திய சங்குசக்கரனே
மங்கல வாழ்வு தரும் மங்கள நாயக மங்கலனே
ஆதிசேடன் அஞ்சிட அனல் கக்கி தள்ளிய ஆதிநாநகனே
ஜோதி வடிவில் சுந்தரம் படைத்த ஜோதிஸ்வரூபனே
மெய்யான உடலுடன் உயிரையும் காத்த உயிரமெய்யே
மெய்யத்தில் அமைந்த மாதவ நாயக மய்யனே
ஐயங்கள் அகற்றி அகத்தை தூய்மை ஆக்கியவனே
கைவல்யம் அளித்து காத்து கரங்கள் அருள்பவனே

————–

ஸ்ரீ ரகுநாயகன் – ஸ்ரீ திரு அயோத்தி

தந்தை சொல் தவறாத ரகுநாயகா
சுந்தர வடிவ சுபிட்ச ரகுநாயகா
ஒருமனைவி ஒருவாக்கு ரகுநாயகா
கருத்தினைக் கவரும் ரகுநாயகா
தசரத புத்திர தரும ரகுநாயகா
அசராத வீர அழகு ரகுநாயகா
வாக்கினை காத்த விஜய ரகுநாயகா
ஏக்கத்தை தீர்த்து சீதைமீட்ட ரகுநாயகா
சுக்ரீவனுக் கருளிய சூரியவம்ச ரகுநாயகா
பக்தருக் கருளும் பாற்கடல்நாதா ரகுநாயகா
அமைதியின் வடிவம் அன்னையின் ரகுநாயகா
சுமைகள் சோகங்கள் போக்கிய ரகுநாயகா
அன்பின் வடிவம் அழகு ரகுநாயகா
துன்பத்தை இன்பமாக்கும் தூய ரகுநாயகா
சீதா ராமஜெயம் சீதா ராமஜெயம் ரகுநாயகா
சீதா ராமஜெயம் சீதா ராமஜெயம் ரகுநாயகா

—————–

ஸ்ரீ கோவர்த்தநேசன் – ஸ்ரீ வட மதுரா

மதுவனத்து மன்னனே மதுராவின் கண்ணனே
மதுரமான பாலனே மதுசூதன அழகனே
மாமனை வதம்செய்ய மாற்றாந்தாய் மகனே
தாமரை கண்ணனே தாயின் மைந்தனே
தேவகியின் மகனே தேவர்கள் நண்பனே
காவல் புரிபவனே கருநீல வண்ணனே
ஆயர் பாலனே ஆய்ச்சியர் நேசனே
மாயங்கள் செய்பவனே மனதை மயக்குபவனே
விளையாடி களிப்பவனே வேடிக்கை இனியோனே
கலைகள் தருபவனே கருத்தினை கொள்பவனே
மண்ணை உண்டவனே மண்டலம் காத்தவனே
வெண்ணை உண்பவனே வெற்றியை தருபவனே

—————–

ஸ்ரீ ருக்மிணி தேவி ஸமேத ஸ்ரீ கிருஷ்ணன் – ஸ்ரீ திருத் துவாரகா

கம்சனை வதம் செய்த கண்ணனே
வம்சத்தை வளரச் செய்த கண்ணனே
அரசனாய் ஆண்டு வந்த கண்ணனே
தரமான சாரதியாய் தேரோட்டிய கண்ணனே
ஆசானாய் உபதேசித்த அருள்மிகு கண்ணனே
வாசமிகு பாரிஜாத வசந்த கண்ணனே
உக்ரசேனனை அரசனாக்கி உயர்த்திய கண்ணனே
ருக்மிணியை மணந்த ரத்தின கண்ணனே
பக்தருக் கருளும் பார்த்தசாரதி கண்ணனே
சக்தியை அளிக்கும் சாகச கண்ணனே
கடலை குடைந்த கடிநிலத்து கண்ணனே
படரும் கொடியென பாசமூட்டும் கண்ணனே
கோபியர் நெஞ்சில் குடிகொண்ட கண்ணனே
சோபிக்கும் அழகுடன் ஜொலிக்கும் கண்ணனே
உலகெங்கும் பரவிய உயர்திரு கண்ணனே
குலத்தைக் காக்கும் கோபால கண்ணனே

———–

ஸ்ரீ பிரகலாதவரதன் – ஸ்ரீ அஹோபிலம்

தூணிலும் இருந்து துரும்பிலிருக்கும் தூயவனே
பேணிக் காக்கும் பெரியநரசிம்ம மாயவனே
நாராயணா என்றே நாவினிக்க பிரகலாதன்பாடிட
வாராய் என்றவுடன் வாகாய் தூணில் வந்தவரே
பாரினை தினம்காக்கும் பார்கவ நரசிம்மரே
ஊரினைப் பேணிடும் யோகானந்த நரசிம்மரே
நாராயணா என்றே நாவினிக்க பிரகலாதன்பாடிட
வாராய் என்றவுடன் வாகாய் தூணில் வந்தவரே
சக்கரம் சங்குடன் சக்ரவட நரசிம்மரே
பக்தருக் கருளும் அஹோபில நரசிம்மரே
நாராயணா என்றே நாவினிக்க பிரகலாதன்பாடிட
வாராய் என்றவுடன் வாகாய் தூணில் வந்தவரே
வாழ வைக்கும் வராக நரசிம்மரே
மகிழ வைக்கும் மாலோலா நரசிம்மரே
நாராயணா என்றே நாவினிக்க பிரகலாதன்பாடிட
வாராய் என்றவுடன் வாகாய் தூணில் வந்தவரே
ஜொலிக்கும் பிழம்பான ஜ்வால நரசிம்மரே
ஒலிக்கும் வேதமான ஒய்யாரபாவன நரசிம்மரே
நாராயணா என்றே நாவினிக்க பிரகலாதன்பாடிட
வாராய் என்றவுடன் வாகாய் தூணில் வந்தவரே
காட்சி தரும் காரஞ்ச நரசிம்மரே
மாட்சிமை பெற்ற மகாநவ நரசிம்மரே
நாராயணா என்றே நாவினிக்க பிரகலாதன்பாடிட
வாராய் என்றவுடன் வாகாய் தூணில் வந்தவரே
இராமனுக்கு சீதையை இரம்மியமாய் தந்தவரே
வாமனனுக்கு முன்னதாய் வையத்தில் வந்தவரே
நாராயணா என்றே நாவினிக்க பிரகலாதன்பாடிட
வாராய் என்றவுடன் வாகாய் தூணில் வந்தவரே

—————–

ஸ்ரீ வெங்கடாஜலபதி – ஸ்ரீ திருமலை

குறை ஒன்றும் இல்லை கோவிந்தா கோவிந்தா
நிறையாய் நாளும் நிறைவாய் கோவிந்தா கோவிந்தா
பறை சாற்றி பாடுவேன் கோவிந்தா கோவிந்தா
மறையோதும் மலைவாசா கோவிந்தா கோவிந்தா
கடன்பட்ட மாலா கோவிந்தா கோவிந்தா
உடன்வருவாய் உலகம் யாவும் கோவிந்தா கோவிந்தா
பத்மாவதி மணந்த பாற்கடல் வாசா கோவிந்தா கோவிந்தா
சத்தியசீலன் சாந்தமூர்த்தி கோவிந்தா கோவிந்தா
மார்பிலே உதைத்தாலும் மாறாதபுன்சிரிப்பு கோவிந்தா
மார்பிலே திருமகளை மலராய்கொண்ட கோவிந்தா
கோடிகோடி பணம் குபேரனுக்களிக்கும் கோவிந்தா
மாடியும் கீழுமாய் மண்மணக்கும் கோவிந்தா
மலையேறி வருவோம் மார்க்கம் காட்டு கோவிந்தா
விலையில்லா விரிமார்பு வேந்தனே கோவிந்தா
தினமுன் புகழ் திகட்டாது பாடுவேன் கோவிந்தா
மனதிலே அகலாது மாறாதிருப்பாய் கோவிந்தா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா கோவிந்தா
நிறையாய் நாளும் நிறைவாய் கோவிந்தா கோவிந்தா

——————-

ஸ்ரீ முக்திநாத் –

முக்தியை தரும் மோகன கண்ணனடி தோழி
பக்தியில் திளைத்தால் பரவசம் தானடி தோழி
சக்தியை தந்திடும் சாளிக்கிராமமடி தோழி
அக்கரை செல்ல ஆடிவரும் தோணியடி தோழி
தவமிருந்த விஷ்ணுவும் தன்னில் சேர்க்குமடி தோழி
அவனியில் மோட்சம் அருளிடும் தலமடி தோழி
உவகை பொங்கும் உற்சாகம் பிறக்குமடி தோழி
பவனிவரும் பாற்கடல் பரந்தாம திருவடி தோழி
திவ்யமாய் தேசங்கள் திகழும் பூமியடி தோழி
பவ்யமாய் நாமும் பாடிவரும் அழகடி தோழி
எவ்விடம் நோக்கினும் எழிலாய் தெரியுமடி தோழி
இவ்விடம் அவனே இருக்குமிடம் இதயமடி தோழி
கண்ணனின் கோபியராய் கருத்தினில் கலப்போமடி தோழி
மண்ணிலே மணம்தரும் மகிழம்பூ சரமடி தோழி
விண்ணகர கோபுரம் விரித்தாடும் அரங்கமடி தோழி
பண்ணிலே பாட்டாய் பாதை காட்டுமடி தோழி
உன்னையும் என்னையும் ஊரையும் சேர்க்குமடி தோழி
தன்னிலே அடக்கமாக்கி தளிராய் காக்குமடி தோழி
மன்னவன் வந்திட மங்கையர் மகிழ்வோமடி தோழி
சின்னமாய் நெஞ்சிலே சேவித்து சேர்வோமடி தோழி

—————-

ஸ்ரீ நைமிசாரண்யம் –

சக்கர வடிவிலே சத்திய தலமே
பக்தரை காக்கும் பரிசுத்த சக்கரமே
தர்பை சக்கரமாகி தரையிலே விழுமே
கர்வத்தை அடக்கிடும் கையடக்க தர்பையே
ஆரண்ய நடுவிலே அழகான ஆலயமே
காரண மூர்த்தியின் கருணை ஆரண்யமே
உத்தம நாயகனின் உகந்த ஆலயமே
உத்திர பிரதேசத்து உயரிய உத்தமனே
முனிவர்களை காத்திட முன்வந்த இறையே
இனிவரும் காலத்தை இனிதுகாக்கும் முனிவரே
பாரத புராணம் பாரம்பரிய காவியமே
சாரமாய் வியாசருக்கு சரளமான பாரதமே
முழுநிலவு வேளையில் மூழ்கிடும் தீர்த்தமே
முழுதான பூரணத்தின் முக்திதரும் முழுநிலவே

————-

ஸ்ரீ நவமோகன ஸ்ரீ ராதா ஸமேத ஸ்ரீ கிருஷ்ணா – ஸ்ரீ ஆயர்பாடி-ஸ்ரீ கோகுலம்

கோகுலத்தில் பாலகனாம் கோபாலன் தாலேலோ
கோகுலத்து மோகன கோலாகலனே  தாலேலோ
சத்யபாமா நாயகன் சாரதியே தாலேலோ
நித்ய மங்களரூப நிர்மலனே தாலேலோ
கண்ணனாய் அக்ரூரர் கணநேரம் தாலேலோ
கண்களை அதனால் கொய்தாயோ தாலேலோ
பத்தினியை  சாந்தபடுத்திய பக்தன்புகழ்  தாலேலோ
மத்தினால் கடைந்த மன்மதனே தாலேலோ
ஸுரதாஸர் கண்மலர சுந்தரனே தாலேலோ
பூரண பொலிவான புதல்வனே தாலேலோ
ஆயர்பாடி மாளிகையின் ஆனந்தனே தாலேலோ
மாயங்கள் செய்த மன்னவனே தாலேலோ
ஆவினை மேய்த்த ஆ நந்தகுமாரனே தாலேலோ
கோவிந்த மூர்த்தி கோவர்தன கிரியே தாலேலோ
எப்போதும் என்னுடன் இருப்பவனே தாலேலோ
தப்பாது காத்திடும் தாமோதரனே தாலேலோ

———-

ஸ்ரீ ரகுநாத் கோவில்

ஜம்முவில் அமர்ந்து ஜகத்தை காப்பவனே
இம்மைக்கும் மறுமைக்கும் இனிய ராகவனே
மகனாக பிறந்து மண்ணிலே வாழ்ந்தவனே
அகத்தினுள் புகுந்து ஆணவம் அழிப்பவனே
தந்தை சொல்லை தட்டாத இராமனே
மந்திரமாய் ஏற்று மண்ணாசை விட்டவனே
பத்தினியை பிரிந்து பரிதவித்து சென்றவனே
நித்திய சீலனாய் நேசித்து இருந்தவனே
அனுமனின் துணையோடு அலைகடல் தாண்டியவனே
அனுமானிக்க முடியாத ஆற்றல் உடையவனே
ஏழுபிறவிக்கும் இறைகாட்டும் ஏழுதிருக் கோவிலே
வாழும் வழிகாட்டும் வைகறை தேசங்களே
நாற்புற தூணில் நற்திசை காட்டுமே
பார்போற்றும் கோவிலாய் பாதை காட்டுமே
எல்லைகள் இல்லாத எழில்திரு தேசமே
தொல்லைகள் இருந்தாலும் துணிவைத் தந்திடுமே
எங்கும் நிறைந்த எழிலான இறையே
பொங்கும் அழகில் புவனம் நிறைபவனே
இரண்டு எழுத்தில் இனிமை தருபவனே
கரங்கள் கூப்பிட கண்ணுக்குள் வருபவனே

——-

ஸ்ரீ திருவல்லவாழ் ஸ்ரீ திருவாழ் மார்பன் –

கோலமாய் கொலுவிருக்கும் கோலப்பிரான் திருவுருவே
காலத்தைத் தாண்டிய கருநிறமேனி திருவுருவே
திருவாழ் மார்பாய் திகழும் திருவுருவே
திருவல்லப நாயகன் திருவருள் திருவுருவே
சங்கர மங்கலத்தம்மை சரணமென்ற திருவுருவே
சங்கடம் தீர்த்திடும் சுதர்சன திருவுருவே
ஏகாதசி விரதத்தின் ஏகாந்த திருவுருவே
ஆகாயம் அளந்த அற்புத திருவுருவே
தோலாகசுரன் அழித்த தொய்வில்லா திருவுருவே
பாலாபிஷேகம் பெற்றிடும் பாலக திருவுருவே
கண்டா கர்ணன் காதிலொலிக்கும் திருவுருவே
கண்ணனாய் பிறந்த காருண்ய திருவுருவே
பொன்மணிகள் கீதம்பாடி போற்றிய திருவுருவே
கிண்கிணி ஆடிட களிப்புட்டும் திருவுருவே
கருணையை சிந்திடும் கண்ணன் திருவுருவே
அருளிட அஷ்டமியில் அவதரித்த திருவுருவே

————-

ஸ்ரீ திருப்பாற்கடல் –

திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட நாராயணா திருக்கோல அவதார நாரயணா
திருப்பாடல் வடிவிலே நாராயணா தினம்வலம் வந்த நாராயணா
கடலிலே மீனாய் நாராயணா  காட்சி அளித்த நாராயணா
உடலை சுருக்கி நாராயணா உள்ளுக்குள் அணுவான நாராயணா
மந்திர மலையுமன்று நாராயணா மத்தாக மாறிய  நாராயணா
தந்திர கூர்மமாய் நாராயணா தாங்கிய அவதார நாராயணா
இரண்யாட்சன் கொடுத்த நாராயணா இன்னலை களைந்த நாராயணா
வரங்கள் தந்த நாராயணா  வராக அவதார நாராயணா
சிம்மத்தின் வடிவில் நாராயணா சினந்து எழுந்த நாராயணா
இம்மைக்கும் மறுமைக்கும் நாராயணா இதங்கள் தருவாய்  நாராயணா
வடிவத்தில் சிறுவனாய் நாராயணா வாமன அவதார நாராயணா
அடியெடுத்து ஆகாயம் நாராயணா அளந்து எழுந்த நாராயணா
தாயை வதம்செய்த நாராயணா தனயனாய் பரசு நாராயணா
மாயைகள் செய்து நாராயணா  மயக்கும் நாயக நாராயணா
தந்தை சொல்காத்த நாராயணா தனயன் ராம நாராயணா
தந்த சோகங்கள் நாராயணா தாங்கிய சீமானே நாராயணா
பலங்கள் பெற்ற நாராயணா பலராம வடிவமே நாராயணா
உலகை காத்த நாராயணா உத்தம புருஷ நாராயணா
கண்ணனாய் வந்திங்கு நாராயணா கவர்ந்த குழந்தையே நாராயணா
மண்ணைத் தின்று நாராயணா மாயங்கள் புரிவாய் நாராயணா
கலியுகத்து அவதிநீக்க நாராயணா கல்கியாய் வருவாய்  நாராயணா
சலிப்பின்றி காக்கும் நாராயணா சங்கு சக்கர நாராயணா
தசைகளை இயக்கும் நாராயணா  தசாவதார நாயகனே நாராயணா
அசையும் அசையா நாராயணா அகிலத்துப்  பொருளான நாராயணா
தேவர்கள் அமுதம் நாராயணா தேடிய நேரத்தில் நாராயணா
தேவனாய் பாற்கடல் நாராயணா திருமாலாய் சயனித்த நாராயணா
இந்திரன் கடைந்திட நாராயணா இயக்கிய படைகளே நாராயணா
மந்திர மலையும் நாராயணா  மத்தாக கடைந்த நாராயணா
வாசுகி கயிறாக நாராயணா வளைந்த அழகென்னே நாராயணா
வீசும் புயலும் நாராயணா வினையும் செயலும் நாராயணா
கசிந்த விடத்தை நாராயணா கடலும் தாங்குமோ நாராயணா
புசித்த சிவனும் நாராயணா புவனம் காத்த நாராயணா
கணத்தில் நீலமான நாராயணா கண்டத்தில் தாங்க நாராயணா
குணமான உன்னருமை நாராயணா குலம் காக்கும் நாராயணா
மோகம்தரும் வடிவிலே நாராயணா மோகினி  உருவமே நாராயணா
யாகங்கள் வணங்கும் நாராயணா யாதவ குலத்து நாராயணா
ஆணாகி பெண்ணான நாராயணா அகிலத்து திருநங்கை நாராயணா
காணாத காட்சியாகி நாராயணா கண்ணுக்குள் மறைந்த நாராயணா
அணுவாகி அண்டமாகி நாராயணா அறிவியல் புதிரான நாராயணா
நுணுக்க அறிவாகி நாராயணா நூதன தொழிலான  நாராயணா
எண்ணமாகி என்னுள் நாராயணா எழுத்தாகி பாடலான நாராயணா
எண்ணிக்கை இல்லாத நாராயணா எண்ணிலடங்கா எழில் நாராயணா
எதிலும் அடங்காது நாராயணா எதிலுமடங்கி மறையும்  நாராயணா
பதிலாகி கேள்வியான நாராயணா பாரில் பரந்துவிரிந்த  நாராயணா
அன்னையாகி தந்தையாகி நாராயாணா அன்பாகி அணைக்கும் நாராயணா
உண்மையாகி நிற்கும் நாராயணா உத்தம சீலனே நாராயணா
ஒன்றாகி இரண்டாகி நாராயணா ஓங்கி உலகளந்த நாராயணா
கன்றாகி பசுவாகி நாராயணா கண்கவர் கண்ணனே நாராயணா
மூன்றடி மண்ணளந்த நாராயணா முன்னின்று காக்கும் நாராயணா
தோன்றிய உருவத்தில் நாராயணா துயர்கள் துடைக்கும்  நாராயணா
நாற்கர ஆயுதம் நாராயணா நலம்தரும் சத்தியம் நாராயணா
பாற்கடல் பெருமாள் நாராயணா பஞ்சபூத பிரபஞ்ச நாராயணா
பெருகிய ஆறுகள் நாராயணா பேணிக் காத்திடும் நாராயணா
கருத்தினில் ஏழுமலையான நாராயணா கார்வண்ண மேனியனே நாராயணா
ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா!

————–

பிறந்த பயனை இன்று பெறுவேனே
சிறந்த தேசத்தை நின்று பாடுவேனே
குறை இல்லா நிறை கோவிந்தனே
பறை சாற்றி உன்புகழ் பாடுவேனே
செருக்கினை அழிக்கும் சிங்காரச் செம்மலே
கருத்தினைக்  கவரும் கார்மேனி கண்ணனே
சறுக்கி ஏறிடும் சம்சார சாகரமே
வருத்தங்கள் யாவும் வருடாது விலகிடுமே
பரமபத விளையாட்டின் இறுதி நிலையே
அறங்கள் மிகுந்த அழிவில்லா நிலையே
கரங்கள் கூப்பியே  கண்கள் மூடுமே
சிரம்தாழ  உன்னை சிந்தை வணங்குமே
வாசுதேவன் வைகும் இடமான வைகுண்டமே
மாசுகள் இல்லாத மாறா பேரின்பமே
சத்திய ஜீவனுக்கு சாத்திய முக்தியே
நித்திய ஸூரியாய் நிம்மதி பெறுமே
நூற்றியெட்டுப் பாடல்களை நூலாய்க்  கோத்திட
போற்றியுன் திருநாமம் புகழ்ந்து பாடிட
சாற்றிய பாமாலை சாராங்கனைச் சேருமே
காற்றினில் இரண்டற கலந்து செல்லுமே
ஓம் நமோ நாராயணா !
ஓம் நமோ நாராயணா !
ஓம் நமோ நாராயணா !

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மனு ஸ்ம்ருதி-ஸ்ரீ மனு தர்ம சாஸ்திரம்

February 10, 2024

மனு ஸ்மிருதி

மனு தர்ம சாத்திரம் (சமசுகிருதம்:मनुस्मृति, மனுஸ்மிருதி) இந்துக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் நூல் ஆகும்

மனு-ஸ்மிருதி , (சமஸ்கிருதம்: “மனுவின் சட்டங்கள்” அல்லது “மனுவின் நினைவுகூரப்பட்ட பாரம்பரியம்”) மானவ-தர்ம-சாஸ்திரம் (“மனுவின் தர்ம உரை”) என்றும் அழைக்கப்படுகிறது, இது பாரம்பரியமாக இந்து குறியீட்டின் புத்தகங்களில் மிகவும் அதிகாரப்பூர்வமானது ( இந்தியாவில் தர்ம சாஸ்திரம் மனு-ஸ்மிருதி என்பது படைப்பின் பிரபலமான பெயர், இது அதிகாரப்பூர்வமாக மனித-தர்ம-சாஸ்திரம் என்று அழைக்கப்படுகிறது . இது பழம்பெரும் முதல் மனிதன் மற்றும் சட்டமியற்றியவருக்குக் காரணம்.மனு . பெறப்பட்ட உரை சுமார் 100 சி .

மனு -ஸ்மிருதி இந்துக்களுக்கு அவர்களின் தர்மத்தை பரிந்துரைக்கிறது – அதாவது, நான்கு சமூக வகுப்புகளில் ( வர்ணங்கள் ) ஒரு உறுப்பினராக மற்றும் வாழ்க்கையின் நான்கு நிலைகளில் ஒன்றில் ( ஆசிரமங்கள் ) ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமைகளின் தொகுப்பு. இதில் 12 அத்தியாயங்கள் உள்ளன, அவை மொத்தம் 2,694. இது பிரபஞ்சத்துடன் தொடர்புடையது; தர்மத்தின் வரையறை; சடங்குகள் ( சம்ஸ்காரங்கள் ); தீட்சை ( உபநயனம் ) மற்றும் வேத ஆய்வு(இந்து மதத்தின் புனித நூல்கள்); திருமணம், விருந்தோம்பல், இறுதி சடங்குகள், உணவு கட்டுப்பாடுகள், மாசுபாடு மற்றும் சுத்திகரிப்பு வழிமுறைகள்; பெண்கள் மற்றும் மனைவிகளின் நடத்தை; மற்றும் அரசர்களின் சட்டம். கடைசியாக, 18 தலைப்புகளின் கீழ் பிரிக்கப்பட்ட நீதித்துறை சார்ந்த விஷயங்களைப் பரிசீலிக்க வழிவகுக்கிறது, அதன் பிறகு, தொண்டு, பரிகாரச் சடங்குகள், கர்மாவின் கோட்பாடு, ஆன்மா மற்றும் நரகம் போன்ற மத தலைப்புகளுக்கு உரை திரும்புகிறது . மதச் சட்டம் மற்றும் நடைமுறைகள் மற்றும் மதச்சார்பற்ற சட்டம் ஆகியவற்றுக்கு இடையே எந்த வகையிலான வேறுபாட்டையும் உரை செய்யவில்லை . இந்து சிந்தனையின் அனைத்து அம்சங்களிலும், குறிப்பாக சாதி அமைப்பின் நியாயப்படுத்தல் , அதன் செல்வாக்கு ஆழமாக உள்ளது.

மனு தர்ம சாத்திரம் (சமசுகிருதம்:मनुस्मृति, மனுஸ்மிருதி) இந்துக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் நூல் ஆகும். இதனை சுவாயம்பு (மனு) எனும் பண்டைய வேத கால முனிவர் தொகுத்தார். இது 2685 செய்யுட்களாகவும், 3 பகுதிகளாகவும், 12 அத்தியாயங்களாகவும் அமைந்துள்ளது. இந்நூலை முதலில் கல்கத்தா உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் வில்லியம் ஜோன்ஸ் என்பார் 1794ல் சமசுகிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இந்நூல் மீண்டும் 1882-இல் ஜார்ஜ் புஃலர் என்பவர் ஆங்கில மொழியில் வெளியிட்டார்.இந்நூலை திருலோக சீதாராம் என்பவர் தமிழ் மொழியில் பெயர்த்துள்ளார்.

இது தனி மனித மற்றும் சமுதாய வாழ்க்கையை நெறிப்படுத்திக் கூறும் ஒரு சட்டக்கோவையாக இந்தியாவில் நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வந்தது. இந்து தத்துவத்தினுள் சாதியம் சார்ந்த கருத்துக்களையும் பெண்களை மிக இழிவாகவும் போகப் பொருளாகவும் வலியுறுத்தும் மேட்டுக்குடியினரின் உத்தியாக இதனை விமர்சிப்பவர்களும் உள்ளனர்.

இந்நூலுக்கு மானவ தர்ம சாஸ்திரம் (சமசுகிருதம்:मानवधर्मशास्त्र) என்ற பெயரும் உள்ளது. அதற்கு மானுட அறம் என்பது பொருளாகும்.

மனு தர்மம் அல்லது மனு ஸ்ம்ருதி என்ற புத்தகத்தை எழுதியவர் மனு எனப்படும் அரசர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மனு என்பவர் ஒரு நபர் கிடையாது. மன்வந்தரம் என்பது பலவிதமான காலகட்டங்கள். ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வொரு மனு தலைவராக இருந்து இந்த உலகை ஆட்சி செய்வார் என்ற வழக்கம் உள்ளது. அதில் 14 விதமான மன்வந்தரங்கள் சொல்லப்படுகிறது.

இப்போது வைவஸ்வத மன்வந்தரம் என்று சொல்லக்கூடிய வைவஸ்வத மனு என்பவருடைய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். ஆறு மனுக்கள் கடந்து இப்போது இந்த ஏழாவது மனுவின் காலத்தில் உள்ளோம். மனு என்பவர் அந்தந்த காலகட்டத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடியவர். அவரால் மக்களுக்கான நெறிமுறைகள் வழிகாட்டுதலுக்காக உருவாக்கப்பட்டதே மனு தர்மம் எனும் நூல்.

இது பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது. இதற்கான ஆதாரம் என்பது, வழிவழியாக அந்த நூல்கள் கிடைக்ககூடிய ஓலைச்சுவடிகளிலும், பலவிதமான கிரந்த சாலைகளிலும் கிடைக்கக் கூடியது தான். இப்போது ராமாயணம், மஹாபாரதம் எல்லாம் எங்கிருந்து கிடைத்ததோ அவ்வாறே தான் எந்த நூலுமே நமக்குக் கிடைக்கிறது. காலங்காலமாக அரிய நூல்கள் பலதும், பல படையெடுப்பின் காரணமாக அழிந்துவிட்டன. படையெடுப்பின் முதல் நோக்கம் பண்பாட்டினை அழிப்பது. அதற்கன முதல்படி நூல்களை அழிப்பது. அதனால் பல நூல்கள் காணாமல் போனது. இந்த காரணத்தால் தான் பல நூல்கள் இன்றைக்குமே முழுமையாக கிடைக்காததற்கு காரணம். இது எல்லாமே ஒலைக்கட்டுகளிலும், சுவடிகளிலும் இருந்ததை இந்த அளவிற்கு காப்பாற்றப்பட்டு, எவ்வாறு திரு உ. வே. சாமிநாதய்யர் தமிழ் சுவடிகளைத் தேடி எடுத்தாரோ அது போல பல தர்ம சாஸ்திரங்களும் புராணங்களும் பாரத பூமி முழுவதிலும் இன்றும் கிடைக்காமல் பல இடங்களில் இருக்கிறது. தேடினால் பல பொக்கிஷங்கள் கிடைக்கத்தான் போகிறது. வரும் காலங்களில் கிடைக்கவும் செய்யும். அப்படி காலம் காலமாக பாதுகாக்கப்பட்டு வந்த பல நூல்களில் ஒன்று மனுஸ்ம்ருதி.

பாகவத புராணம், பதிணென் புராணங்களில் ஒன்று. அந்த வடமொழி புராணத்தில் சொல்லும்போது, ஒரு மனுவைப் பற்றி சொல்லியிருக்கிறது. அந்த மனுவைப் பற்றி சொல்லும் போது, மனுவை ‘த்ராவிடேஸ்வர:’, அதாவது தென்னாட்டை ஆண்டு கொண்டிருந்தவர் என்று சொல்கிறது. தென்னாட்டை ஆண்டு கொண்டிருந்த மன்னன் வைகை நதிக்கரையோரத்தில் இருந்தார் என்ற குறிப்புகளையும் நாம் காண்கிறோம். இப்போது போலியாக சொல்லப்படும் ஆரிய-திராவிடப் பிரிவினைகள் எதுவுமே அந்தகாலத்தில் இல்லை என்பதற்கு இது மற்றொரு ஒரு சாட்சி. இது போன்று மற்றைய நூல்களில் கிடைக்கும் குறிப்புகளும், மனு என்பவரைக் குறித்த புரிதலை நமக்குத் தருகிறது.

மனு தர்மம் மன்னர் ஆட்சி காலம் வரை முறையாகவே பின்பற்றப்பட்டது. தமிழ்நாடே ஒரு காலகட்டத்தில், சேர, சோழ, பாண்டிய, பல்லவ என்று நான்கு தேசங்களாக இருந்தது. இன்று தான் தமிழ்நாடு என்று நாம் ஒன்றாக சொல்கிறோம். பண்டைய தமிழகம் என்பது கேரளத்தையும் சேர்ந்தது. ‘வடவேங்கடம் முதல் தென்குமரி வரை’ என்கிறோம். திருப்பதி மலையும் நம்முடன் தான் இருந்தது. தமிழ்நாடே ஒரு நாடு கிடையாது. பல ஆட்சியாளர்கள் பல தேசங்களாக பிரிந்து தான் ஆட்சி இருந்தது. தமிழகத்தில் மனுநீதிச் சோழன் என்ற வரலாற்றினை படிக்கிறோம். மனுஸ்ம்ருதியின் வழி நின்று நீதி பரிபாலனம் செய்து ஆட்சி நடத்திய காரணத்தால் தான் அவனுக்கு “மனுநீதிச் சோழன்” என்றே பெயர் உண்டானது. இப்படி பாரம்பரியமான மன்னர்கள் ஆட்சி காலம் வரை நடைமுறையில் இருந்த விஷயம். அதற்கு பிறகு மன்னர் ஆட்சி மாறி அடுத்த ஆட்சி வரும்போதும், அது கொஞ்சம் கொஞ்சமாக காலமாற்றம், மக்களுடைய செயல்பாடுகள், நம்பிக்கைகள், நடைமுறைகளில் மாற்றம் ஏற்படும்போது தர்மசாஸ்திரங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்ட போது மாறியது. இதனால் நாம் மனுஸ்ம்ருதியை சரியாக புரிந்து கொள்ளாமல் பலரது திரிக்கப்பட்ட வாதங்களை இன்று கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

நம்முடைய மூல நூல்களை முறையாக நாம் படிக்காத காரணத்தால் தான், இந்த ஆங்கிலேயருடைய மொழிபெயர்ப்பை அண்டி இருக்க வேண்டிய நிலைமை நமக்கு வந்திருக்கிறது. மனு தர்மம் மட்டும் அல்ல. எல்லா நூல்களுமே நமக்கு மூல நூல்களிலிருந்து தமிழுக்கு பல பண்டிதர்கள் மொழி பெயர்த்துள்ளனர். ஆனால் நாம் அதை சரியாகப் படிக்காமல் இருந்து விட்டோம். நம் நெறிமுறைகளைப் படிப்பதும், நம் தர்மத்தின்படி வாழ்வதும் ஏதோ கேலிக்குரிய செயலாக திட்டமிடப்பட்டு நம் மனதுக்குள் புகுத்தப்படுகிறது என்றே கூறலாம்.

நம்முடைய வேதங்களுடைய பெருமையோ, நம்முடைய கலாசாரத்தினுடைய பெருமையோ, நம்முடைய முன்னோர்கள் சொன்னால் நாம் கேட்கமாட்டோம். மாக்ஸ் முல்லர் முதலான அயல்நாட்டு அறிஞர்கள் வந்து சொன்னால் நாம் இதை ஏற்றுக்கொள்வோம் என்ற பாணியில் சொல்வோம்.

அப்படித்தான், மனு தர்மத்தை ஆங்கிலேயர்களும் மேலை நாட்டவர்களும் படித்து, இது மிக அருமையான நூல் என்று சொல்லி மொழி பெயர்த்ததை நாம் பார்க்கிறோம். ஜெர்மானிய தத்துவ மேதை ஆகிய நீட்ஷே என்ன சொல்கிறார் எனில், “பைபிளை மூடுங்கள். மனு தர்மத்தைப் படியுங்கள்”, என்கிறார்.  ஆனால் அதற்கு முன்னமேயே பல மொழிகளில் மொழி பெயர்ப்பு உள்ளது. 1890களில் வந்த மனுநீதியின் மொழி பெயர்ப்பு தமிழிலேயே உள்ளது. அதைப்பற்றி யாருக்கும் தெரியவில்லை.

மூல நூலைப் படித்தால் என்ன அர்த்தம் வருமோ, மொழிபெயர்ப்பில் கட்டாயம் அது மாறுதலை அடையும். நம்முடைய தமிழ் மொழியிலேயே இருக்கும் திருக்குறளை, ஆங்கிலத்தில் படித்துப்பார்த்தால், அந்த மொழிபெயர்ப்பில் என்னவெல்லாம் மாறுதல்கள் இருக்கின்றன என்பது புரியும். அப்படிபார்க்கும் போது ஆங்கிலேயர்கள் தான் கொடுத்தார்கள் என்று இல்லை. அதற்கு முன்னமேயே மனுநீதி இருந்தது. அதனுடைய புரிதல் சரியாக இல்லாததனால், நாம் மூல நூலைப் படிக்காததனால் ஆங்கிலேயர்கள் அவர்கள் புரிந்து கொண்டதைக் கொண்டு எழுதிய  மொழிபெயர்ப்பை வைத்து தப்பும் தவறுமாக படித்து கொண்டிருக்கிறோம்.

பெண்களை படிக்க வைப்பது தவறு. சொத்துரிமை வழங்க கூடாது என்று மனுதர்மம் ஒரு புரட்டு ஓடுகிறது ! 

மனு தர்மத்தை முதலில் அணுகுவதற்கு முன்னர் அந்த காலகட்டம் எப்படி இருந்தது என்பதை புரிந்து கொண்டு அணுக வேண்டும். அன்றைய சமூகம் வேறு. இன்று நாம் பார்க்கக் கூடிய நம்முடைய சமூகம், அதனுடைய பார்வை வேறு. அப்படி இருந்தாலும், நாம் என்னவோ மனு தர்மம் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தது என்றோ, அவர்களுக்கு உரிமை மறுக்கப்பட்டிருந்தது போன்ற தோற்றம் மக்களிடம் கொடுக்கப்படுகிறது. அது தவறு.

ஏனென்றால், மனு தர்மத்தில் 9வது அத்தியாயம், அது தான் பலரும் மேற்கோள் காட்டும் அத்தியாயமாக உள்ளது. ஆண்களுக்கும் பெண்களுக்குமான வாழ்வியல் நெறிமுறைகளை சொல்லக்கூடிய அத்தியாயமாக 9வது அத்தியாயம் இருக்கிறது. அதில் பொருளாதாரத்திற்கு பெண்களுக்கு உரிமை உண்டு என்று சொல்லப்படுகிறது. வீட்டினுடைய பொருளாதாராம், தூய்மை, திருமணங்கள் முதலான எல்லா விஷயங்களிலும் பெண்களுடைய கருத்து முக்கியம் என்று சொல்லி 9வது அத்தியாயம் 11வது ச்லோகத்தில் மனு மிகத் தெளிவாக சொல்கிறார்.

அர்த்தஸ்யஸங்க்ரஹேசைனாம்வ்யயேசைவநியோஜயேத்

சௌசேதர்மேஅன்னபக்த்யாம்பாரிணாஹ்யஸ்யசேக்ஷணே

வீட்டின்பொருளாதாரம்தூய்மைசுகாதாரம்வீட்டில்நடக்கும்வழிபாடுகள்உண்ணும்உணவுஆகியவிஷயங்களில்பெண்கள்முழுசுதந்திரத்துடன்செயல்படவேண்டும்.

அடுத்தது சொத்துக்கு உரிமை. கட்டாயம் பெண்களுக்கும் சொத்தில் உரிமை உண்டு என்று அதே 9வது அத்தியாயம் 130வது ச்லோகத்தில் மனு சொல்கிறார். அதாவது,

யதைவாத்மாததபுத்ரபுத்ரேணதுஹிதாஸமா

தஸ்யாம்ஆத்மனிதிஷ்டந்த்யாம்கதம்அன்யோதனம்ஹரேத்

மகனுக்குநிகராகமகளையும்கருதவேண்டும்தன்னுடையஉதரத்திலிருந்துஉதித்தபெண்இருக்கும்போதுவேறுஒருவனுக்குசொத்தைஎப்படிகொடுப்பது?”, எனும்கேள்வியைமனுநமக்குமுன்னேவைக்கிறார்.

அப்படி இருக்கும்போது, “மனு நமக்கு சொத்தில் பங்கு கொடுக்கவில்லை, பெண்களை அடிமைபடுத்தி வைத்திருந்தார், உரிமைகளை வழங்கவில்லை”, என்பது ஒரு தவறான புரிதல்.

திருமண விவாகரத்து பற்றி சொல்லவில்லை! அதனால் பெண் சுதந்திரத்தை அந்த நூல் மறுக்கிறது என்கிறார்கள் !

விவாகரத்து செய்யக்கூடாது என்பதை எந்த பழைய நூலுமே சொல்லாது !  மனு தர்மம் மட்டும் அல்ல. நம்முடைய தர்ம சாஸ்திர நூல் எதுவுமே கணவன் மனைவி இணைந்து தான் வாழ வேண்டும் என்று சொல்கிறது. இது தர்ம சாஸ்திரம் அடிப்படையாக சொல்லக்கூடிய விஷயம். இந்த சாஸ்திர நூல்கள் அனைத்துமே, நம்முடைய மனித வாழ்வு என்பது எதை நோக்கி பயணப்படுகிறது என்பதைத்தான் இலட்சியமாக வைத்திருக்கிறது.

சாஸ்திர நூல்கள் படி பார்க்கும்போது மனு தர்மம் மட்டும் இல்லாமல், விவாஹ மந்திரங்களைப் (அதாவது கல்யாணத்தில் சொல்லக்கூடிய மந்திரங்கள்) பார்த்தாலே, “நாம் 100 ஆண்டு காலம் இணைந்து வாழ வேண்டும். நம்மால் நம் சந்ததிகள் நல்லவிதமாக உருவாகி, அவர்கள் சமூகத்திற்கு பயனுள்ள ஒரு சந்ததியாக உருவாக வேண்டும்”, என்பதைத் தான் இந்த மந்திரங்களோ, சடங்குகளோ, விஷயங்களோ சொல்கிறது. அதில் விவாகரத்து என்ற விஷயமே இல்லை. இன்று சட்டத்தில், நாம் ஒரு புதிய சட்டம் ஒன்று உருவாக்கி, ஆங்கிலேயர்களுடைய தாக்கத்தினால் உருவாக்கப்பட்ட சட்டத்தை வைத்து பழைய நூல்களை பார்க்கும்போது இவை விநோதமாகத் தெரிகிறது. இது நம் பார்வையின் குற்றம் ! நூலின் குற்றமல்ல ! திருக்குறளில் கூடத்தான் விவாகரத்தைப்பற்றி பேசவில்லை. தமிழ்மறை மற்றும் நீதி நூல்கள், நன்னூல் முதலானவைகளில் கூட விவாகரத்தைப்பற்றி பேசப்படவில்லை. அப்படி இருக்கும்போது, அன்றைய வாழ்வியல் முறையில் விவாகரத்து என்பது அவசியமில்லாத விஷயமாக இருந்தது. அன்றைய நடைமுறையை இன்றைய சட்டத்துடன் பொருத்திப் பார்க்கும்போது கண்டிப்பாக குழப்பம் தான் வரும்.

அன்று இருந்த சமூக சூழ்நிலைகளை அனுசரித்து சில விஷயங்களை நாம் இன்று பார்க்கும் போது, சில விஷயங்கள் இன்றைய காலகட்டத்துக்கு மாறுதலாக இருக்கும். ஒரு நூலை அணுகும் போது அந்த நூல் எந்த காலகட்டத்தில் பழக்கத்தில் இருந்தது, அந்த நூல் எப்போது உருவானது, அன்றைய வாழ்வியல் எப்படி இருந்தது முதலான பார்வைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.

ஊர்த்வம் து காலாத் ஏதஸ்மாத் விந்தேத ஸத்ருசம் பதிம் – (மனு ஸ்ம்ருதி 9-90)

வயது வந்த பெண், தனது கணவனைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்

என்று பெண்ணுக்கு உரிமையைத் தரும் மனு தர்மம் விவாகரத்தைப்பற்றி பேசவில்லையா? என்றால், கட்டாயம் பேசாது. ஏனென்றால், அன்றைய வாழ்வியல் நெறிமுறையில், கணவன் மனைவி இணைந்து தான் வாழ வேண்டும் என்ற ஒரு நெறிமுறை இருந்தது.

சுதந்திரமாக வாழ பெண்களுக்கு உரிமை இல்லை என மனு சொல்கிறார் என்று கூறுகிறார்கள்

இது திரும்பவும், முக்கியமான ச்லோகத்தை வைத்துதான் இவர்கள் பேசுகிறார்கள். அந்த ச்லோகத்தை முதலில் பார்ப்போம்

பிதாரக்ஷதிகௌமாரேபர்த்தாரக்ஷதியௌவனே

ரக்ஷந்திஸ்தவிரேபுத்ராஸ்த்ரீவிவிக்தம்அர்ஹதி– (மனு ஸ்மிருதி 9-3)

இளம்பிராயத்தில்பெண்ணைப்பாதுகாக்கவேண்டியதுதந்தையுடையகடமைவளர்ந்தபிறகுயௌவனபிராயத்தில்அவளைக்காக்கவேண்டியதுகணவனின்கடமைவயதானகாலத்தில்அவளைக்காக்கவேண்டியதுமகனுடையகடமைபெண்கள்எல்லாகாலத்திலும்தனித்துவிடாமல்காக்கப்படவேண்டியவர்கள்

இதைத்தான் திரித்து, “பெண்களுக்கு சுதந்திரம் இல்லை. என்றைக்குமே அவர்கள் ஆணை அண்டிதான் வாழ வேண்டிய வாழ்க்கையை உடையவர்கள்” என்று மனு சொன்னதாக திரித்து சொல்லப்படுகிறது. ஏற்கனவே பலமுறை கூறியது போல, மூல நூல்களைப் படித்தால் மட்டுமே அதில் என்ன சொல்லப்படுகிறது என்பது நமக்கு தெளிவாகப் புரியும். அது மட்டுமல்லாமல், ஒரு ச்லோகத்தை தனியாக எடுத்துப் பார்த்தால் அர்த்தம் விபரீதமாகத் தான் இருக்கும்.

உதாரணமாக பகவத் கீதையில் ஒரு ச்லோகம் இருக்கிறது : “மாம் அனுஸ்மர யுத்ய ச” என்று கண்ணன் சொல்லும் அந்த வரியின் பொருள், “என்னை மனதில் எண்ணிக் கொண்டு, துணிந்து போர் செய்” – இதை மட்டும் எடுத்துக் கொண்டு, கண்ணன் தன்னை எண்ணாதவர் எல்லோரையும் கொல்லச் சொல்கிறான் என்றால் அது எவ்வளவு பெரிய அபத்தம் ? பகவத் கீதை சொல்லப்பட்ட காலம், இடம், சூழ்நிலையில் அர்ஜுனனின் மனச்சோர்வை நீக்கி உனக்கான கடமையில் பின் வாங்காதே என்று அதனை பொருள் கொள்ளுதல் வேண்டும். அது கீதையை முழுதும் படித்தாலே விளங்கும். அதுபோலத் தான் மனுஸ்ம்ருதியையும், அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்துப் பார்த்தால் தப்பும் தவறும் தான் தெரியும்.

மனுஸ்ம்ருதி ஆண்களுக்கும் பெண்களுக்குமான கடமைகளைச் சொல்லும் போது,

“பெண் என்பவள் ஒரு விலை மதிப்பில்லாத ஒரு ரத்தினம் போன்றவள்”, என்று கூறுகிறார் மனு. அந்த ரத்தினதை எப்படி நாம் பாதுகாத்து வைக்க வேண்டுமோ அதுபோல, ஆண் ஒவ்வொரு காலகட்டத்திலேயும் பெண்ணைக் காக்க வேண்டியவன் ஆகிறான் என்று ஆணின் கடமையை அந்த நூல் சொல்கிறது.

விஷ(ம) பிரச்சாரம்

உண்மை இப்படி இருக்க, பெண்களை இழிவுபடுத்தும் விதமாக மனு தர்மத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது என்று திட்டமிட்டு விஷப் பிரச்சாரம் செய்கிறார்கள். அப்படி எதுவுமே மனு தர்ம சாஸ்திரத்தில் கிடையாது என்பது தான் சத்தியம். பெண்களை மிகவும் உயர்வாகப் போற்றி தான் மனு தர்ம சாஸ்திரம் சொல்கிறது. எங்கேயுமே கற்பு பிறழ்ன்றவர்களாக சித்தரிக்கப்படவில்லை. இது தெளிவான ஒரு விஷயம். ஏனென்றால், நடுவிலிருந்து ஒரு ச்லோகத்தை எடுத்துப்பார்த்தால் கட்டாயம் அப்படி தப்பாகத்தான் தெரியும்.

உதாரணத்திற்கு, இவர்கள் எந்த ச்லோகத்தை சொல்கிறார்கள் என்பதையே சொல்கிறேன். அதை வைத்தே விளக்குகிறேன்.

ஏவாரூபம்பரிக்ஷந்தேஅஸாம்வயஸிஸம்ஸ்திதி:

ஸுரூபம் வா விரூபம் வா புமான் இத்யேவ புஞ்சதே (9.14)

ஒருபெண்ணுக்குஓர்ஆண்மேல்விருப்பம்உண்டாகவயதோஅழகோதோற்றப்ப்பொலிவோகாரணமென்றுசொல்லமுடியவில்லைஅழகனானாலும்அழகற்றவனானாலும்ஆண்என்பவன்மேல்பெண்ணுக்குஈர்ப்புஏற்படுகிறது.

இதைப் பொத்தாம் பொதுவாகப் பார்த்தால் தவறாகவே தெரியும். ஒரு பெண்ணைப் பெற்ற தகப்பனின் பார்வையில் பார்த்தால் இதன் அர்த்தம் விளங்கும். இது இன்றளவும் நடைமுறையில் இருப்பதால் தானே, பெண்ணுக்கு திருமணம் செய்யுமுன்னர் பலமுறை விசாரிக்கிறோம் ? பெண் கண்மூடித்தனமாக ஒருவன் மேல் காதல் கொள்வதும் பின்னர் விபரீதங்களைச் சந்திப்பதும் நடக்காத ஒன்றில்லையே?

ஏற்கனவே ஒரு ச்லோகம் சொல்லப்பட்டது. பிதா ரக்ஷதி கௌமாரே  என்று.. பெண்கள் ஆணை சார்ந்திருக்க வேண்டும் என்று. அது ஆண்களுக்காக சொல்லப்பட்டது. ஆண்கள் பெண்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட நீதி.

அதேபோல, திருவள்ளுவர் ஒரு கருத்தை சொல்கிறார்.

தற்காத்துத்தற்கொண்டாற்பேணித்தகைசான்ற

சொற்காத்துச்சோர்விலாள்பெண்

கற்புநெறியில் தன்னையும் காத்துக் கொண்டு, தன் கணவனையும் காப்பாற்றித் தகுதியமைந்த புகழையும் காத்து, உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண் எனக் கூறப்பட்டுள்ளது.

அதையே தான் மனுவும் சொல்கிறார். “ஒரு பெண்ணினுடைய பாதுகாப்பு என்பது முதலில் அவளிடமிருந்து துவங்குகிறது” என்கிறார். இதை வைத்து அவர் பெண்ணை கேவலமாக சித்தரித்திருக்கிறார் என்று அர்த்தம் கிடையாது. ஒரு பெண்ணை பாதுகாக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் அவளுடைய ஒத்துழைப்பு மிகவும் அவசியம். அவள் தன்னை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து விட்டால், அதற்கு கூடுதலான பாதுகாப்புகள் இருக்க முடியுமே தவிர வேறு யாரும் அவளை கட்டுப்படுத்த முடியாது என்றே மனு சொல்கிறார். இது எல்லாவற்றுக்குமே பொருந்தும். பெண் என்பவள் சக்தி ஸ்வரூபம். பஞ்சபூதங்களுமே சக்தி ஸ்வரூபம் தான். நெருப்போ, நீரோ, காற்றோ எதுவானாலும், அது தாண்ட வேண்டும் என்று நினைத்தால் நம் யாராலும் தடுக்க முடியாது. இது தவிர்க்க முடியாத உண்மை. சுனாமி, சூறாவளி, நெருப்பு முதலானவைகள் அது எல்லை மீற வேண்டும் என்று தீர்மானித்து விட்டால் அதை யாருமே தடுக்க முடியாது. அது கட்டுக்குள் இருக்கும் வரை தான் நமக்கும் நல்லது அதற்கும் நல்லது. பெண்ணை அப்படி சக்தி வடிவமாக மனு உருவகப்படுத்துகிறார். அப்போது நாம் என்னதான் பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தாலும், பெண் அவளே தன் பாதுகாப்பிற்கு முதல் படி எடுத்துவைக்க வேண்டும் என்று ஒரு விஷயம் சொல்கிறார். இது தான் திரித்து சொல்லப்படுகிறது. இதற்கு முன்னும் பின்னும் பார்த்தால் புரிந்து விடும்.

அவர் என்ன சொல்கிறார் எனில்,

யத்ரநார்யாஸ்துபூஜ்யந்தேரமந்தேதத்ரதேவதா

அர்த்தம் : பெண்கள்எந்தஇடங்களில்பூஜிக்கப்படுகின்றார்களோஅந்தஇடத்தில்தெய்வம்சந்தோஷமாகிஅவர்களுக்குஅருளைவாரிவழங்கும்.

இது ஒரு முக்கியமான ஒரு வாக்கியம். பெண்களை தெய்வத்திற்குச் சமமாகச் சொல்கிறார். அதே ச்லோகத்தில் அடுத்த வரி,

யத்ரைதாஸ்துபூஜ்யந்தேஸர்வாஸ்தத்ரஅபலாக்ரியா– (மனு ஸ்மிருதி 3-56)

எங்கேபெண்கள்பூஜிக்கப்படவில்லையோஅவர்களுக்குதெய்வசக்திகுன்றிஎல்லாவிதமானஅழிவும்ஏற்படும்என்றுகூறுகிறார்

ஜாமயோயானிகேஹானிசபந்திஅப்ரதிபூஜிதா

தானி க்ருத்யாஹதானீவ வினச்யதி ஸமந்தத– (மனு ஸ்ம்ருதி 3-58)

எந்தெந்தஇடங்களில்பெண்கள்தகாதஅறுவறுக்கத்தக்கவார்த்தைகளால்இகழப்பட்டுஅவமானப்படுத்தப்படுகிறார்களோஅந்தஇடமேவிஷம்உண்டவன்அழிவதுபோல்அழிந்துபோகும்.

எவன் தன் வாழ்க்கையில் சந்தோஷம் வேண்டும் என்று ஆசைப்படுகிறானோ அவன் தன் உடன் பிறந்த சகோதரியை, தன்னுடைய மகளை, தன்னுடைய மனைவியை சந்தோஷமாக வைத்துக்கோள்ள வேண்டும்.

“பெண்களுடைய மனம் சந்தோஷப்பட்டால் உன் வாழ்வில் நலம் ஏற்படும். பெண்களுடைய மனம் வருத்தத்தை அடைந்தால் உனது வாழ்வில் நாசம் உண்டாகும்”, என்று மனு சொல்கிறார். இதில் எங்கே பெண்கள் குறைவாகவோ தாழ்வாகவோ சித்தரிக்கப்படுகிறார்கள் ?

பித்ருபிர்ப்ராத்ருபிச்சைதைபதிபிர்தேவரைஸ்ததா

பூஜ்யாபூஷயிதவ்யாச்சபஹுகல்யாணம்ஈப்ஸுபி– (மனு ஸ்மிருதி 3-55)

உன்னுடையவீட்டில்இருக்கக்கூடியஉன்னுடையமகளையோசகோதரியையோஅண்ணியையோஉன்னுடையமனைவியையோநீபோற்றிகௌரவித்தால்மட்டுமேநீநலமாகவாழமுடியும்

மனு தெளிவாக சொல்கிறார். இதைக் காட்டிலும் எப்படி பெண்களுடைய குண நலன்களை நாம் விளக்க முடியும்?

இதே போல தான் பெண்களும் கணவனை அனுசரித்து நடக்க வேண்டும் என்று சொல்கிறார். இதை மட்டும் சொல்லிவிட்டு, பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்பது தவறு. பெண்கள் கணவனை அனுசரித்து நடக்க வேண்டும் என்று சொல்லிய அதே இடத்தில் தான் கணவனும் பெண்ணைப் போற்றி நடக்க வேண்டும் என்று சொல்கிறார். இரண்டும் சேர்ந்தால் தான் வாழ்க்கை இனிக்கும். கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது தான் வாழ்க்கை என்பது தான் நடைமுறையிலிருக்ககூடிய விஷயம்.

ப்ரஜனார்த்தம்மஹாபாகாபூஜார்ஹாக்ருஹதீப்தய

ஸ்த்ரிய ஸ்ரீயச்ச கேஹேஷு ந விசேஷோஸ்தி கச்சன– (மனு ஸ்ம்ருதி 9-26)

தாய்க்குலமானபெண்கள்போற்றத்தக்கவர்கள்வணங்கத்தக்கவர்கள்இல்லத்தின்விளக்காய்விளங்குபவர்கள்வீட்டின்மகாலட்சுமியாய்த்திகழ்பவர்கள்.

வேறு எந்த மதத்திலாவது, சுமங்கலி பூஜை என்று ஒரு பெண்ணை உட்கார்த்தி வைத்து பெண்ணை வழிபடக்கூடிய வழக்கம் இருக்கிறதா? ஒரு கன்யா பூஜை என்று 5 வயது பெண் குழந்தையை உட்கார்த்தி, 80 வயதிற்க்கு மேற்பட்டவர் அந்தக் குழந்தையின் காலில் விழுந்து வணங்கும் மரபு எந்த மதத்திலிருக்கிறது? எந்த நாட்டிலிருக்கிறது?

நம்முடைய மரபில் தான் பெண்களை தெய்வமாக வணங்கக் கூடிய ஒரு மரபைச் சார்ந்து நாம் இருக்கிறோம். ராமக்ருஷ்ண பரமஹம்சர் தன்னுடைய மனைவியான சாரதா தேவியை அம்பிகையின் வடிவமாகப் பார்த்து வணங்கினார் என்று நாம் கேட்கிறோம். அப்படி, ஒரு சின்னக் குழந்தையாக இருந்தாலும், வயது முதிர்ந்தவர்களாக இருந்தாலும், தன்னுடைய மனைவியாக இருந்தாலுமே, அம்பிகையினுடைய வடிவமாக, சக்தி வடிவமாக பார்க்கக்கூடிய மதத்தைச் சேர்ந்து நாம் இருக்கும் போது, அந்த மதத்தினுடைய தர்ம சாஸ்திர நூல்களில் பெண்களை எவ்வாறு இழிவுபடுத்திச் சொல்லுவோம்?

இந்த மாதிரி பெண்களை இழிவு படுத்தி சொல்வது என்று நம் நூல்களைச் சொல்வது எல்லாமே திரிபு படுத்தப்பட்ட வாதங்கள். நாம் அதனுடைய சாராம்சத்தைப் புரிந்து கொள்ளாமல், இப்போது திருக்குறளில்கூட இடையில் ஒரு வாக்கியத்தை எடுத்துப்பார்த்தால் தப்பாகதான் தெரியும்.

மனைவிழைவார்மாண்பயன்எய்தார்வினைவிழைவார்

வேண்டாப் பொருளும் அது– (குறள் 901)

மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர் சிறந்த பயனை அடைய மாட்டார். கடமையை விரும்பியவர்க்கு வேண்டாத பொருளும் அதுவே.

தையல்சொல்கேளேல் (ஆத்திசூடி 62) என்கிறார் அவ்வையார்

இதெல்லாம் நாம் முன்னும் பின்னும் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். இதெல்லாம் பெண்களை இழிவுபடுத்தக்கூடியதா? நாம் அதனுடைய இடம், பொருள் ஏவலைக் காண வேண்டும். எந்த இடத்தில் எதற்காக சொல்லப்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தலையும் இல்லாமல், வாலும் இல்லாமல் நடுவில் பார்த்தால் அப்படித் தான் புரியும்.

இடையிலிருந்து ஒரே ஒரு வரியை மாத்திரம் நம்முடைய வசதிக்காக எடுத்துக்கொண்டால், “நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்”, என்பது போல, முன்னும் பின்னும் பார்த்தால் தான் அந்த வாக்கியத்திற்கு அர்த்தம் புரியும்.

பல இடங்களில் கீதாசாரம் என்று எழுதி வைத்திருப்பதைக் காண்கிறோம்.

“எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.”

என்பது பல அலுவலகங்களிலும் இருப்பதைப் பார்க்கலாம். இப்படி ஒரு வாக்கியம் பகவத்கீதை மூல நூலில் இல்லவே இல்லை. ஆனால் கீதாசாரம் இது தான் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால், மூல பகவத் கீதையை நாம் படித்ததே இல்லை. படித்தது முழுவதும் மொழிபெயர்ப்பு. மூல நூல்களைப் படித்தவர்களுக்குத் தெரியும் பகவத் கீதையில் இப்படி ஒரு வாக்கியம் கிடையாது என்று.

அதுபோலத்தான், மூல நூல்களைப் படிக்கும்போது, நமக்கு அதனுடைய தெளிவு ஏற்படும். மனு தர்மத்திலேயே என்ன சொல்லப்படுகிறது என்றால். பொருளாதாரத்தில் பெண்களுக்கு அதிகாரம் உண்டு. இதை மிகத் தெளிவாக சொல்கிறது. வயதிற்கு வந்த பெண் தன்னுடைய மனதிற்குப் பிடித்தமான கணவனை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உண்டு. இதெல்லாம் மனு தர்மம் சொல்லக்கூடியது. அப்போது பெண்களை ஆட்சியில் அமர்த்திப் பார்ப்பதும், பெண்கள் அதிகாரத்தோடு இருப்பதும் மற்ற நாடுகளுக்கும் மற்ற மதங்களுக்கும் வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால், நம்முடைய மதத்தில் அது புதிது கிடையாது. பெண்ணை போற்றிப் பாதுகாப்பதே தர்ம சாஸ்த்ர நூலின் நோக்கம். ஆதவற்ற நிலையில் இருக்கும் பெண்களை அரசே காக்க வேண்டும் என்று கருணையுடனே  மனு ஸ்ம்ருதி  பேசுகிறது.

வசாஅபுத்ராஸுசைவம்ஸ்யாத்ரக்ஷணம்நிஷ்குலாஸு

பதிவ்ரதாஸு ச ஸ்த்ரீஷு விதவாஸ்வாதுராஸு ச (8-28)

பிள்ளையில்லாத, கணவனை இழந்த பெண்களோ, அல்லது கணவனைப் பிரிந்து தனியாக வாழும் பெண்களோ நாட்டில் இருந்தால், அவர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

எந்த ஒரு ஆண் மகனாவது தனியாக இருக்க முடியுமா? ஏதோ ஒரு காலகட்டத்தில் ஒரு பெண்ணை சார்ந்து தான் நம்முடைய வாழ்க்கை இருக்கிறது. சிறு குழந்தையாக இருக்கும்போது அம்மாவை சார்ந்து தான் இருக்கிறோம். இளமை பருவத்தில் மனைவியை சார்ந்திருக்கிறோம். நம்முடைய வாழ்வியல் அமைப்பே, அதனால் தானே கல்யாணம் என்ற ஒரு அமைப்பை வைத்திருக்கிறார்கள். அப்படி, நம் வாழ்வியல் நெறிமுறை ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் சார்ந்து இருக்க கூடியதற்குப் பெயர் தான் நெறிமுறைகள்.

அதெல்லாம் எனக்கு வேண்டாம், என் இஷ்டம் போல நான் இருப்பேன் என்று இருப்பவருக்கு தர்ம சாஸ்திரம் எதற்கு? அவர்களுக்கு அவசியமே இல்லை. அதை கடைபிடிக்கப் போவதில்லை, அதில் நம்பிக்கை இல்லை என்பவர் அந்த புத்தகத்தைப் பற்றி பேசவே வேண்டாம். இந்த நெறிமுறைப்படி வாழ்வேன், தர்மத்தின்படி வாழ்வேன், எனக்கு என்று ஒரு கோட்பாடு இருக்கிறது, அந்த நெறிகளின் படி வாழ்க்கையை அமைத்துக்கொள்வேன் என்று நினைப்பவர்களுக்கு இந்த தர்ம சாஸ்திர நூல்களெல்லாம் பயனுள்ளதாக இருக்கும். கண்டதே காட்சி, கொண்டதே கோலம், என் இஷ்டப்படி தான் நான் வாழ்வேன் என்று இருப்பவர்களுக்கு எந்த நூலுமே பயன் தராது. நீதி நூல் மட்டும் அல்ல. அதன்படி பார்க்கும்போது மனுநீதி மட்டும் அல்ல, எந்த தர்ம சாஸ்திர நூலும் வாழ்வியல் நெறிமுறையைத்தான் சொல்கிறது. வாழ்வியல் நெறிமுறைகள், கட்டுப்பாடுகள் இவற்றை கேட்கமாட்டேன் என்று இருந்தால், அது அவரவர்களுடைய பிரச்சனை, நூலினுடைய பிரச்சனை அல்ல.

இன்றையநடைமுறை

மனு தர்ம விதிகள் இப்போது நடைமுறையில் இருக்கிறதா என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறி தான். மனு தர்மம் மட்டும் அல்ல, பல தர்ம நூல்கள் பரவலாக நடைமுறையில் இல்லை என்பதே நிதர்சனம். ஆனால் ஒரு சில விஷயங்கள் ஒரு சில இனக்குழுக்கள், ஒரு சில மக்கள் கட்டாயமாக அதை கடைப்பிடிக்கத்தான் செய்கிறார்கள்.

உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால், வேறு முறையில் அது மாறி வந்துள்ளது. தர்மம் அதே தான் –  அதை நடைமுறைப்படுத்துதல் என்பது பல விஷயங்களில் மாறுதலை அடையத்தான் செய்திருக்கிறது.

உதாரணமாக மனு தர்மம் சொல்லக்கூடிய விஷயம் ஒன்றை பார்ப்போம்.

பரதாராபிமர்சேஷுப்ரவ்ருத்தான்ந்ரூன்மஹீபதி

உத்வேஜன கரைர்தண்டை சின்னயித்வா ப்ரவாஸயேத்– (மனு ஸ்ம்ருதி 8-352)

பெண்களின்கற்புக்குக்கேடுவிளைவிக்கும்ஆண்களுக்குஅதிகபட்சதண்டனைகொடுக்கவேண்டும்பிறர்இத்தகையதவறைச்செய்வதற்கேஅஞ்சும்அளவுக்குஅந்ததண்டனைஇருக்கவேண்டும்.

“ஒரு பெண்ணை பலவந்தப்படுத்துபவன் அல்லது பாலியல் ரீதியாக துன்புறுத்துபவன் இருந்தானானால், அவனுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். அது அரசுடைய கடமை”, என்று மனு தர்மம் சொல்கிறது. கொடுக்கக்கூடிய தண்டனை எப்படி இருக்க வேண்டும் என்றால், அந்த தண்டனையைப் பார்த்து, அந்த தப்பை இன்னொருவன் செய்வதற்கு பயம் உண்டாகும்படி, அந்த தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று மனு தர்மம் சொல்கிறது.

இது அப்படியே நடைமுறையில் உள்ளதா என்றால் வேறு விதமாக மாறுதல் அடைந்து இருக்கத்தான் செய்கிறது. அப்போது, அன்றைய காலகட்ட சூழ்நிலைகளில் இருந்த பலவிஷயங்கள் இன்றைய காலகட்டத்தில் இல்லை. உதாரணத்திற்கு, அன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கான திருமண வயது மிகக் குறைவாக இருந்தது. ஆண்களுக்கும் அவ்வாறே இருந்தது. இன்று திருமண வயது என்பது, அரசு 18லிருந்து 21 ஆக அதிகரித்து, இன்னும் கூடுதலாக்கப்போவதாக நமக்கு செய்திகள் வருகிறது. அப்படி இருக்கும்போது இந்த விஷயங்களை சட்டரீதியாக நடைமுறைப்படுத்த முடியாது. அந்தமாதிரியான மாறுதல்கள் அடையத்தான் செய்திருக்கிறது. மனு தர்மம் மட்டுமல்ல எல்லா தர்மங்களுமே அந்த மாதிரி காலகட்டத்தை, சட்டத்தை அனுசரித்து பல காரணங்களுக்காக மாறுதலை அடைந்து தான் ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.

நம்முடைய அறம், பொருள், இன்பம், வீடு என்ற இந்த நான்கும் தான் ஒரு மனித வாழ்க்கையினுடைய இலட்சியம். அதைத்தான் மனு என்பவர் வழிகாட்டுகிறார். அந்த வாழ்வியலுக்கான சட்ட திட்ட நெறிமுறைகள்.

அறத்தின் வழி நின்று, தர்மத்தின் வழி நடந்து பொருளை ஈட்டி, அதாவது எப்படி வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கலாம் என்று சொல்லப்படவில்லை.

இன்று கூகுளுடைய தத்துவக் கோட்பாட்டைப் படிக்கும்போது, “You can make money without doing evil”, என்கிறார்கள். எந்த விதமான தவறான காரியமும் செய்யாமல் பணம் ஈட்ட வேண்டும் என்பது கூகுளுடைய ஒரு தத்துவக் கோட்பாடு. அதை நாம் ஒரு பெரிய விஷயமாகப் பாராட்டுகிறோம். இதைத்தான் நம்முடைய சாஸ்திரங்கள் சொல்கின்றன. நம்முடைய சாஸ்திரங்கள் சொல்லக்கூடிய சத்தியம் இது தான்.

“தர்மத்தின் வழி நடந்து, அப்படி தர்மத்தின் வழி நடந்ததனால் ஈட்டப்பட்ட பொருளைக்கொண்டு, அப்படி ஈட்டப்பட்ட பொருளைக்கொண்டு உன்னுடைய மனதில் ஏற்படக்கூடிய ஞாயமான ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டு, இப்படி ஒரு வாழ்வியல் வாழ்ந்து வீடுபேறு என்று சொல்லக்கூடிய மோக்ஷத்திற்கு உன்னை நீ தயார் படுத்திக்கொள்ள வேண்டும்”. இது தான் தர்ம சாஸ்திரங்கள் கூறக்கூடிய நெறிமுறை. இதைத்தான் மனு தர்மமும் சொல்கிறது.

மனுவின் காலமும் வாழ்ந்த பகுதியும்

மனு வாழ்ந்த காலம் பொ.ஊ.மு. 1500 என்பதை சதபத பிராமணத்திலும், சௌராஷ்ட்டிர மத வேதநூலான அவெத்தாவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிக் வேத கால ஆறுகளான சரசுவதி ஆறு மற்றும் திருட்டாதுவதி நதிக்கரை பகுதிகளான பிரம்மவர்த்த பகுதிகள் (தற்கால சிந்து மாகாணம், பஞ்சாப், வடக்கு இராஜஸ்தான் மற்றும் தெற்கு அரியானா) பெருமழையால் அழிந்த பின்பு ஆரியர்கள், விந்திய மலைக்கு வடக்குப் பகுதிகளில் (தற்கால நேபாளம், உத்தரப் பிரதேசம், பிகார், மத்தியப் பிரதேசம், வங்காளம், குசராத் மற்றும் கிழக்கு இராஜஸ்தான்) குடியேறினர். அப்பகுதி பின்பு ஆரியவர்த்தம் எனற பெயரால் அழைக்கப் பெற்றது. அப்போது மற்ற முனிவர்கள் சுவாயம்பு மனுவையும் அணுகி இயற்கைச் சீற்றங்களை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் சமூக வாழ்க்கை நெறி முறைகளை எவ்வாறு மக்கள் வகுத்துக் கொண்டு வாழ்வது என்று கேட்டதற்கு, மாமுனி மனு வகுத்துக் கொடுத்ததே மனுஸ்மிருதி ஆகும்.

சிறப்பம்சங்கள்

பிரித்தானிய இந்தியா ஆட்சி வரை “மனு தர்ம சாத்திரம்” என்பது இந்து மதத்திற்கு ஆதாரமாக கையாண்டு வருவதும், நடைமுறையில் பின்பற்றி வருவதுமாக இருந்தது. இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் இந்திய குடியுரிமை சட்டங்கள் இயற்றுவதற்கு முன்பு இந்தியாவை ஆண்ட இசுலாமியர்களும் பிரித்தாணியர்களும் இந்து மக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளிலும், குடி உரிமை வழக்குகளிலும் மனு தரும சாத்திரத்தின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கினர்.மேலும் இந்நூலை பின்பற்றி சந்திரகுப்த மௌரியரின் தலைமை அமைச்சர் கௌடில்யர் என்ற சாணக்கியர், அர்த்தசாஸ்திரம் என்ற அரசு நிர்வாகம் தொடர்பான நூலை எழுதி புகழ் பெற்றார்.

தாக்கங்கள்

மனு தர்ம சாத்திரத்தின் தாக்கம் இந்தியா முழுவதும் காணக் கிடைக்கிறது. சங்க கால அரசர்கள் பின்பற்றி வந்த வாழ்க்கை முறை, இந்த மனு தர்மத்தின் அடிப்படையில் தான் அமைந்தது-

உள்ளடக்கம்

பரம் பொருளாகிய பகவான் தமது விருப்பத்தின் காரணமாக பிரம்மா மூலம் அண்ட சராசரங்களை படைத்தார். மனித குலத்தை பெருக்கவே மரிசி, ஆங்கிரசர், அத்திரி, புலத்தியர், புலகர், கிருது, பிரசேதகர், வசிட்டன், பிருகு மற்றும் நாரதர் எனும் பத்து பிரசாபதிகளை படைத்தார். இந்த பிரசாபதிகள் மூலம் சுவாயம்பு மனு உட்பட எழு மனுக்களும், தேவர்கள், சுவர்க்கலோகம், மாமுனிகள், யட்சர்கள், காந்தர்வர்கள், கிண்ணரர்கள், கிம்புருடர்கள், அசுவனிகுமாரர்கள், அட்டதிக்கு பாலகர்கள், அசுரர்கள், அப்சரசுகள், மருத்துக்கள், இராக்கதர்கள், பைசாசர்கள், நாகர்கள், கருடர்கள், சர்ப்பங்கள், பிதுர்கள், தாவரங்கள், விலங்கினங்கள், நீர் வாழ் பிராணிகள் தோன்றின. பின்னர் மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க சமூகம் கட்டுக்கோப்பாக இயங்க வர்ண மற்றும் ஆசிரம தருமங்களை மனு வகுத்து கொடுத்தார். இது ஆசாரப்பகுதி, விவகாரப்பகுதி, பிராயச்சித்தப் பகுதி என மூன்று பகுதிகளையும் 12 அத்தியாங்களையும் கொண்டது.

1வது அத்தியாயம்

உலகத் தோற்றம்:-அண்ட சராசரங்களின் தோற்றம், தேவர்கள்,மானிடர்கள், அசுரர்கள், தோற்றம் , காலக்கணக்கீடு, நால்வகை வர்ண சமூகம், நால்வகை ஆசிரமம் மற்றும் அதன் கடமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றி விவரிக்கிறது.

2வது அத்தியாயம்

பிரம்மச்சர்யம்:- பூணுல் அணிதல் (உபநயனம்), குருபக்தி, வேதம் படித்தல், வழிபாட்டு முறைகள் மற்றும் குருகுல நிலை பற்றி விவரிக்கிறது.

3-5 அத்தியாயங்கள்

அந்தணர் தருமம்:-இல்லறத்தின் மேன்மைகள், திருமண உறவுகள், யக்ஞம், விருந்தோம்பல், பலியிடுதல், இறந்த முன்னேர்களுக்கு செய்ய வேண்டிய பிதுர் கடன்கள், தகாத உறவுகள், கலப்புத் திருமணங்கள், விலக்க வேண்டியவைகள், வேதம் ஒதுதல், ஒதுவித்தல், ஒழுக்க நெறிகள், உணவு முறைகள், தூய்மை, பெண்டிர் தொடர்பான விதிகள், உண்ணத்தக்கவை, தகாதவைகள், விசேட காலங்களில் புலால் உண்ணல், பிறப்பு-இறப்பு தீட்டு விதிகள், பெண்களுக்கு உகந்தவைகளும், விலக்கத்தக்கவைகளும் தொடர்பான விதிகள்.

6வது அத்தியாயம்

வானப்பிரத்தம் & துறவறம்:-காட்டில் வாழ்தல், உணவு முறைகள் ,ஒழுக்க விதிகள், செபம்,தவம் செய்தல்,வேத வேதாந்த விசாரம் செய்தல் தொடர்பான விதி முறைகள்.

7வது அத்தியாயம்

சத்திரிய தருமம்:-மன்னர்களின் மாண்புகள் & பண்புகள், கடமைகளும் பொறுப்புகளும்,அரசின் நீதிநெறி சட்டங்கள்,அரசியல் சிந்தனைகள்,அரசின் அதிகாரிகள், தலைநகரம், போர் அறம், உள்நாட்டு நிர்வாகம்,வரி விதித்தல், பகை அரசர்களின் பலம் பலவீனம் அறிதல், பகை நாட்டை முற்றுகையிடல், போர் செய்யும் முறைகள், வெற்றி வாகை சூடல், புலவர்களுக்கு பரிசு வழுங்குதல், வேதம் அறிந்த அந்தனர்களுக்கு தானம் வ்ழங்குதல், வேள்விகள் செய்தல், சமூகத்தில் வர்ணாசிரம தரும நெறிகள் காத்தல் பற்றி விவரிக்கிறது.

8வது அத்தியாயம்

நீதிநெறிசட்டங்கள்:-குடிவகுப்பு, நீதிமன்றம், உடைமைகள், புதையல், களவுகள், கடன்கள், வட்டி, கொதுவை, காப்பு பொருள், பொருள் விற்பனை, பொருள் விற்பனை விலை நிர்ணயம்,அடிதடி கலவரம், பலாத்காரம், நிலத்தகராறு, நட்ட ஈடு,மான-நட்ட ஈடு, உடன்படிக்கைகள், நம்பிக்கை துரோகம், செய்கூலி, கலப்படம் தகாத செயல்கள் பற்றி விவரிக்கிறது.

9வதுஅத்தியாயம்

வைசியர், ஆடவர் & பெண்டிர் அறம்:-திருமணம்,மகப்பேறு,பாகப்பிரிவினை,கவறாடல் முதலிய குற்றங்களுக்கு தண்டனைகள் மற்றும் வைசியர்களின் கடமைகள் பற்றி விவரிக்கிறது.

10வது அத்தியாய ம்

சூத்திரர் & வர்ண கலப்பு சாதிகள் மற்றும் ஆபத்து தர்மம்:-சூத்திரர்களின் கடமைகள், கலப்பு சாதிகளின் தோற்றமும் சமூகத்தில் அவர்களுக்குரிய தகுதிகளும், கல்வி ஞானத்தால் கீழ்ப்பிறப்பாளர்கள் உயர்நிலை அடைதல், ஆபத்து காலங்களில் உயர்குடி மக்களுக்கு விதி விலக்குகள் தொடர்பான விதிகள் பற்றி விவரிக்கிறது.

11வது அத்தியாயம்

குற்றங்களும் அதற்கான கழுவாய்களும் :- தெரிந்தும் தெரியாமலும் செய்த குற்றங்களுக்கு செய்ய வேண்டிய கழுவாய்கள், யாகம், பாவங்களின் விளைவுகள், குற்ற வகைகள், உண்ணத்தகாதவைகள், மறுபிறப்பு, முக்குணங்கள் பற்றி விளக்குகிறது.

12வது அத்தியாயம்

வினைப் பயன்கள்:- நல்வினை தீவினைகளும் அதன் விளைவுகளும், முக்குணங்கள், வேதங்கள் மற்றும் வேதாந்தங்களின் வாய்மை, ஆன்ம ஞானம், முக்திக்கு வழிகள் முதலியவைகளை விவரிக்கிறது.

மனுதரும சாத்திரமும் பெண்களும்

மனு தரும சாத்திரத்தில் பெண்களைப் பற்றி கூறப்பட்டுள்ளவற்றில் சில,

ஒரு பெண்ணை விபசாரி என்று குற்றம் சாட்டி அதை நிலைநாட்டாதவனுக்கு நூறு பணம் தண்டம்.

—மனு தரும சாத்திரம், அத்தியாயம் 8 செய்யுள் 225

ஒரு பெண் தான் பருவமெய்தியது முதல் மூன்றாண்டுகள் வரை தந்தை தன்னைத் தக்க ஆடவனுக்கு மணம் செய்விப்பானென்று எதிர்பார்த்திருக்க வேண்டியது. அப்படி நடைபெறாவிடில், தனக்கேற்றவனைத் தானே தேடிக்கொள்ளவும்.

—மனு தரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 90

இளமையில் தந்தையாலும் பருவகாலத்தில் கணவனாலும் முதுமையில் மைந்தராலும் காக்கப்பட வேண்டியவர். ஆதலால் மாதர் எஞ்ஞான்றும் தம்மிச்சையாக இருக்கக் கூடாதவர்

—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 3

எந்தப் பருவத்தினளாயினும் தனது இல்லத்தில் கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச்செயலும் இயற்றலாகாது.

—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 5 செய்யுள் 147

தங்கள் அலங்காரத்தால் மனிதரைக் கவரும் தன்மை பெண்களின் இயல்பாகையால் அறிந்தோர் பெண்களிடம் கவனக் குறைவாக நடந்து கொள்ளமாட்டார்கள்.

—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 2 செய்யுள் 213

புலன்களை அடக்கியவனாயினும் அறிவிலியாயினும் அவர்களைத் தங்களது தொடர்பால் காமக்குரோதமுள்ளவனாகச் செய்வர் மாதர்.

—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 2 செய்யுள் 214

பெரும்பாலும் மாதர் கற்பிலார் என்றே பெரிதும் பல நூல்களிலும் குறப்படுவனவற்றையும் கேட்பீராக.

—மனுதரும சாத்திரம் 9, அத்தியாயம் செய்யுள் 19

ஈன்று, புரந்து, விருந்தோம்பி, இல்லம் புரிதற்கு மாதரே ஏற்றவர் என்பது காணக்கிடைக்கிறது.

—மனு தரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 27

வீட்டிற்கு வேண்டிய பாத்திரம் முதலியவற்றை தேடிப் பெறுவதற்காக பொருளை அவளிடம் கொடுத்தும் அதனைக் காப்பாற்றி வைத்து வேண்டிய போது செலவிடும்படி செய்தும் தட்டு முட்டுச் சாமான்களை சுத்தமாக வைத்துக் கொள்ளச் செய்தும் வீட்டை துப்புரவாக்கி வைத்தல், தேவ பூசைக்கான ஏற்பாடுகளைச் செய்தல், அடுக்களைப் பொறுப்பு, பாத்திரம் படுக்கை முதலியவற்றைச் சரியாக கவனித்துக் கொள்ளல் போன்ற இன்றியமையாத இல்லத்துக் காரியங்களை மனைவிக்குக் கற்பித்து அவற்றை அவளைக் கொண்டு செய்வித்தல் போன்றவற்றாலும் அவளது மனம் வேறிடம் செல்லாமற் காக்க!

—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 11

கணவன் சூதாடுகிறவனாயினும் குடிகாரனாக இருந்தாலும் பிணியாளனாயினும் மனைவி அவனுக்கு செருக்குற்று பணிபுரியாமலிருந்தால் அவளுக்கு அழகு செய்தல், ஆடை, படுக்கை இவற்றை மறுத்து மூன்று மாதம் விலக்கி வைக்கவும்.

—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 78

இழிநடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றையுடையவனாயினும் கற்பினாளான பெண் தன் கணவனை தெய்வமாகப் பேணுக.

—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 5 செய்யுள் 154

மறுமையின் பத்தில் நாட்டமுள்ள பெண்மணி தன் கணவன் இருப்பினும் இறப்பினும் அவன் கருத்துக்கு மாறுபாடாக நடக்கக் கூடாது.

—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 5 செய்யுள் 156

—————–

அத்தியாயம் -1

ஏகாக்ர  சித்தத்தோடு  அமர்ந்திருந்த மனுவை அணுகிய மஹரிஷிகள் அவரை முறைப்படி வணங்கி இவ்வாறாகச் சொன்னார்கள்.-1-

பகவானே, நான்கு வர்ணத்தவரும் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்களைப் பற்றியும் இவர்களுக்குள் கலப்பு சம்பந்தங்களால் ஏற்பட்ட வர்ணத்தாருடைய தர்மங்களைப் பற்றியும் எமக்கு எடுத்துரைப்பீராக.–2-

பிரபுவே, வேதங்களில் கூறப்பட்ட அனைத்தையும், பிரம்ம சொரூபத்தையும், தத்துவங்ளையும் அறிந்தவர் தாங்கள் ஒருவரே.  தாங்களே நாங்கள் கேட்ட விஷயத்தை தெளிவுபடுத்தக் கூடியவர்.–3-

மஹான்களான மஹரிஷிகள் இவ்வாறு வினவ, அளப்பரிய ஞானம் கொண்டவரான மனுபகவான் அந்த மகரிஷிகளைத் தக்கபடி உபசரித்து, அவ்வாறே ஆகட்டும்” கூறுகிறேன், கேளுங்கள் என்றருளினார்.–4-

இவ்வுலகம் இருட்டாகவும், பார்வைக்குப் புலப் படாததாகவும் ஊகிக்க முடியாததாகவும் , உருவமற்றதாகவும், ஒலியற்றதாகவும் தூங்கிக் கொண்டிருப்பது போல் இருந்தது.–5-

ஐஸ்வர்யங்களோடு கூடியவரும், யோகாப்யாசத்தால் அறியக் கூடியவரும், இடையூறு ஏதுமின்றி சிருஷ்டிக்கக் கூடியவருமான பரமாத்மா பஞ்ச பூதங்களைப் பிரகாசிக்கச் செய்த படி தாமாக வெளிப் பட்டார்.–6-

வெளிப் புலன்களால் அறிய முடியாதவரும்,பரிசுத்தமான மனத்தினால் அறியத் தக்கவரும், அருவமானவரும், நித்யமானவரும், ஊகிக்க முடியாதவருமான பரமாத்மா தாமாகவே சிருஷ்டி புரிவதற்காக வெளிப் பட்டார்.–7-

அப்படி வெளிப்பட்ட அவர்,  சிருஷ்டி செய்ய மனங் கொண்டவராக, முதலில் அப்புவை(ஆதிநீர்) சிருஷ்டி செய்தார். அந்த நீரில் தம் சக்தியின் ரூபமான ஒரு விதையை வைத்தார்.-8-

அந்த விதை சூரிய ஒளிக்கு நிகரான ஒளியோடும், தங்கமென தகதகத்த நிறத்தோடும்  ஒரு அண்டமாக அதாவது  ஒரு முட்டை வடிவமாக ஆனது. அந்த அண்டத்தில் பரமாத்மாவானவர் தாமே பிரம்மாவாக ஜன்மமெடுத்தார்–9-

தண்ணீருக்கு நாரம்  என்றும் பெயருண்டு. ஒரு செயலில் ஈடுபட்டு, தண்ணீரில் இயங்கத் தொடங்கியதால் பரமாத்மாவான அவர் நாராயணன் என்ற நாமம் பெற்றார்.–10-

சிருஷ்டிக்கப் பட்டவற்றுக் கெல்லாம் காரணமாய், வெளிப் புலன்களுக்கு எட்டாத படியாக, தோற்றமும் அழிவும் அற்று, நித்தியமான, அநித்தியமான பொருட்களின் உருவமாய் எந்த பரமாத்மா உள்ளாரோ, அந்த பரமாத்மாவினால் சிருஷ்டிக்கப் பட்ட அந்த புருஷன் உலகத்தில் ” பிரம்மா” என்றழைக்கப் பட்டார்–11-

அந்த அண்டத்தில் பிரம்மா ஒரு வருடம் முழுமையும் தவமியற்றிய பிறகு,(தேவர்களுக்கு வேறு காலக் கணக்கு) ” இந்த அண்டம் இரண்டாகப் பிளக்கட்டும்” என்று நினைத்த அளவில்அண்டம் இரண்டானது.-12-

பிரம்மா, பிளவுண்ட அண்டத்தின் மேல் பாதியில் ஆகாயத்தையும், கீழுள்ள பாதியில் பூமியையும்,நடுவில் வெளியையும் ( அண்ட வெளியையும்) எட்டு திசைகளையும், கடலையும் படைத்தார்.–13-

பிரம்மா பரமாத்மாவிடமிருந்து  சத், அசத் ரூபமான மனத்தைப் பெற்றார். அந்த மனத்திலிருந்து தன் செயலை நிறைவேற்றிக் கொள்ளத் தக்கதான அஹங்காரத்தைப் பெற்றார்.-14-

மஹத்” என்னும் தத்வத்தையும், ஆத்மாவுக்கு உதவியாக இருப்பதான சத்வ குணத்தையும், ரஜஸ், தமஸ் என்னும் குணங்களையும், விஷயங்களைக்கிரகிக்கும் சக்தி கொண்ட பஞ்சேந்திரியங்களையும் முறையாகப் படைத்தார்-15

அகங்காரத்தையும்,  அதன் தன் மாத்திரைகளையும், சூட்சும அவயவங்களையும் ஆறு  விகாரங்களையும் சேர்த்து சகல பூதங்களையும் படைத்தார்.-16-

அஹங்கார தன்  மாத்திரை வடிவங்களான சூட்சும அவயவங்கள் ஆறும், பூதேந்திரியங்களும் காரிய ரூபமாக பிரம்மாவிடம் சேருவதால் பிரம்மாவை அவற்றின் சேர்க்கை கொண்டவர் என்று பொருள் படும் விதமாக, சரீரம்” என்று பண்டிதர்கள் கூறுகிறார்கள்.–17-

பஞ்ச மகா  பூதங்களும் தங்கள் காரியங்களுடன் கூடியும், மனம் வெளியில் புலப் படாத சூட்சுமமான அவயவங்களோடு கூடியும் சரீரத்தில் பிரவேசிக்கின்றன–18-

பஞ்ச பூதங்கள், ”மஹத்” தத்துவம்”, ” அஹங்காரம்” என்னும் இரண்டு, ஆக ஏழின் காரணமாக உலகம் தோன்றுகிறது.-19-

ஆகாயம், வாயு, அக்னி, ஜலம், மண் என்னும் பஞ்ச பூதங்களில் முதலில் உள்ளதன் குணம் அடுத்ததன் குணத்தோடு சேர்ந்திருக்கும். இவற்றின் குணங்கள் இவற்றுக்கு அடுத்ததாக உள்ளதோடு சேர்ந்திருக்கும்.–20-

பிரம்மா தன்னால் படைக்கப் பட்ட அனைத்துக்கும் வேதத்திலுள்ளபடி பெயர்களைச் சூட்டினார். அவைகளுக்கான வெவ்வேறு விதமான காரியங்களையும் வேதங்கள் கூறியபடியே ஏற்படுத்தினார்.–21-

பிரம்மா, கர்மாத்மாக்களான தேவர்களையும், பிராணிகளையும், சாத்யர்களையும், யக்ஞங்களையும் படைத்தார்–22-

யக்ஞங்கள் வேதங்களைக் கொண்டே நிறைவேற்றக் கூடியவை  என்பதால், யக்ஞங்களுக்காக வேண்டி, ருக், யஜுர், சாமம் என்னும் வேதங்களை , அக்நி, வாயு, சூரியர்களிடமிருந்து கிரகித்தார்.–23-

பிரம்மா, காலத்தையும், மாதங்கள், ருதுக்கள், வருடங்கள் முதலான கால அளவுகளையும், நட்சத்திரங்களையும், கிரகங்களையும் , நதிகளையும், கடல்களையும், மலைகளையும், படைத்தார்-24-

அவ்வாறே சமவெளியையும், மேடு பள்ளங்களையும், தவம், வாக்கு, சிரத்தை, காமம், கோபம் முதலானவற்றையும் படைத்தார்.–25-

செய்யத்தக்கது இது. தகாதது இது என்னும் அறிவைப் பெறுவதற்காக தர்மங்களையும் அதர்மங்களையும் வேறு படுத்தினார். மேலும் மக்களை சுகம், துக்கம் என்னும்  இரட்டைகளோடும்  விருப்பு, வெறுப்பு என்னும் இரட்டைகளோடும் இணைத்தார்.-26-

பஞ்ச பூதங்களின் சொரூபங்களோடு, இனி சொல்லப்போகின்ற அனைத்தையும் படைத்தார்.–27-

பிரம்மா, முதன் முதலில், ஆதியில் சிருஷ்டித்தபோது எந்தெந்த காரியங்களைச் செய்வதற்காக எந்தெந்த வர்ணங்களைப் படைத்தாரோ, அந்தந்த  வர்ணங்கள் மீண்டும் படைக்கப் படும் போதும் பழைய படியே ஒழுகுகின்றன.–28-

சிருஷ்டியின்போது பிரம்மா ஹிம்சிக்கும் குணம், அஹிம்சை, மிருதுவான குணம் , குரூர குணம், தர்மம், அதர்மம், பொய் உண்மை முதலானவைகளை எவை எவைகளுக்கு எவை என்று நியமித்தாரோ, அதே போன்றே அவையவை மீண்டும் படைக்கப் படும் போதும் அதே குணங்களோடு ஒழுகுகின்றன–29-

எவ்வாறு ருதுக்கள்  தாமே தத்தமது குணங்களை அடைகின்றனவோ அவ்வாறே பிராணிகளும் தத்தமது குணங்களை அடைகின்றன(ஒரு வருடத்தை ஆறு ருதுக்களாகக் கூறுகிறோம்).-30-

உலகைப் படைத்த பிரம்மா அது பல்கிப் பெருகும் பொருட்டு, உலகம் உய்யும் பொருட்டு நான்கு வகையினரை- நான்கு வருணத்தாரைப் படைத்தார்.–31-

பரம் பொருளானவர், தம் தேகத்தை  இரண்டாகப் பிரித்துக் கொண்டு ஒரு பாகம் ஆணாகவும், மற்றொரு பாகம் பெண்ணாகவும் மாறினார். அந்த ஆண், அந்தப் பெண்ணிடம் ” விராட்” புருஷனை சிருஷ்டித்தார்.( அகில உலகங்களையும் தம் சரீரமாகக் கொண்ட விஸ்வரூபிக்கு விராட் புருஷன் என்று பெயர்)–32-

இப்போது  மனுபகவான், பிரம்ம தேவர் தம் கூற்றாக மனுவுக்கு  எப்படி உரைத்தாரோ, அதை அவ்வாறே இப்போது எடுத்துரைக்கிறார்.-நானே விராட் புருஷனின் தவத்தால்  தோன்றிய பிரம்மா. உலக சிருஷ்டியை செய்வதற்காக விராட் புருஷனால் படைக்கப் பட்டவன்.–33-

 நான் பிரஜைகளை சிருஷ்டிப்பதற்கான அளப்பரிய சக்தியை அடைவதற்காக கடும் தவமியற்றினேன்.முதலில் பத்து  பிரஜாபதிகளை சிருஷ்டித்தேன். ( பிரஜாபதி என்பவர்கள், உலகில் சிருஷ்டியை செய்வதற்காக பிரம்மாவால் படைக்கப் பட்டவர்கள்)-34-

மரீசி, அத்ரி, அங்கிரஷ், புலஸ்தியன், புலஹன்,க்ரது, பிரசேதஸ், வசிஷ்டன், பிருகு, நாரதன் என்னும் பத்துப்பேர்களே முதலில் நான் படைத்த பிரஜாபதிகள்” இவ்வாறு பிரம்ம தேவர் கூறினார்.–35-

தேஜஸ் மிகுந்த  அவர்கள், தங்களைப் போல் தேஜஸ் கொண்ட ஏழு மனுக்களையும், தேவர்களையும் , தேவ உலகங்களையும்,   மிகுந்த தேஜஸ் கொண்டமகரிஷிகளையும் சிருஷ்டித்தனர்.–36-

யக்ஷர்கள், ராட்சதர்கள், பிசாசர்கள், கந்தர்வர்கள் , அப்சரஸ்கள், அசுரர்கள், நாகர்கள், சர்ப்பங்கள், கருடன், முதலான பறவைகள் முதலாக பித்ருக்களுடைய பல்வேறு  கணங்களையும் படைத்தனர்.–37-

மின்னல்கள், இடிகள், மேகங்கள், ரோஹிதம் எனப்படும் நீண்ட நட்சத்திரம், வானவிற்கள், வால் நட்சத்திரங்கள், உற்பாதங்கள், எரி நட்சத்திரங்கள் முதலான பலவித நட்சத்திரங்களையும் படைத்தனர்.-38-

கின்னரர்கள், வானரர்கள், மீன்கள்,விதவிதமான பறவைகள்,பசுக்கள், மான்கள், கொடிய மிருங்கள், மனிதர்கள் முதலான வற்றை படைத்தனர்.–39-

கிருமிகள், புழு  பூச்சிகள், வண்டுகள்,விட்டில் பூச்சிகள், பேன்கள், ஈக்கள், கொசுக்கள், முதலானவற்றையும் மரங்களையும், மலைகளையும் கூட படைத்தனர்.–40-

மஹரிஷிகள் தவம் புரிந்து என் ஆணைப்படி இங்கே தென்படுகின்ற தாவரங்கள், மிருகங்கள், மனிதர்கள் ரூபமான உலக முழுதையும், அதனதன் வினைப்படி படைத்தனர்.–41-

இனி எந்தெந்த பூதங்களுக்கு அதாவது எந்தெந்த  உயிரினங்களுக்கு எந்தெந்த கர்மாக்கள் சொல்லப் படுகின்றனவோ அந்தந்த பூதங்களுடைய கர்மாக்களையும் ஜன்மாவினுடைய கிரம யோகத்தையும் உங்களுக்கு  உரைக்கிறேன்.–42-

பசுக்கள், மான்கள், கொடிய மிருகங்கள், ராட்சதர்கள், பிசாசர்கள், மனிதர்கள்,  முதலானோர் கர்ப்பத்தினின்று பிறந்தவர்கள்–43-

பறவைகள், சர்ப்பங்கள். மீன்கள், ஆமைகள் போன்றவை முட்டையினின்று  தோன்றுவன். இவற்றில்  சில  நீரில் வாழ்வன. சில நிலத்தில் வாழ்வன–44-

காட்டு ஈக்கள், கொசுக்கள், பேன்கள், ஈக்கள், மூட்டைப் பூச்சிகள், மேலும் இவற்றைப்போன்று எவையெல்லாம் வெப்பத்தினால் ( புழுக்கத் திலிருந்து) பிறக்கின்றனவோ , அவை யனைத்தும் ஸ்வேதஜங்கள் எனப்படும்.–45-

மரங்களனைத்தும்  விதைகளைப் பிளந்து கொண்டு, பூமியையும் பிளந்து கொண்டு பிறப்பன.

 விதைகளினின்று பிறப்பவை போக, சில கிளைகளை பூமியில் ஊன்றுவதால், மரங்களாகின்றன. நெல் போன்ற தானியங்களும், இன்னும் சில தாவரங்களம், பயிர் வளர்ந்து பலன் தந்தவுடனே அழிகின்றன.–46-

மலர்கள் இல்லாமலே பழங்களைத் தரும் மரங்களுக்கு வனஸ் பதிகள் என்று பெயர். பூத்துப் பலன் தரும்  மரங்களுக்கு விருட்சங்கள் என்று பெயர்.–47-

கொத்துக் கொத்தாக ப் பூப்பவை ”குச்சம்” என்று சொல்லப் படும். புதராக மண்டி வளர்பவை ” குல்மம்” என்று சொல்லப் படும். சில புல்வகைகளும், படரும் தாவரங்களும், கொடிவகைகளும் விதைகளினின்றும் பிறந்தவை மேலும் சில  கிளைகளை பூமியில் ஊன்றுவதால் வளர்பவை.–48-

இந்தத் தாவரங்கள் அனைத்துமே, கர்மஹேதுவான தமோ குணத்துடன் கூடியதாக,, உணர்வுகளுடன் கூடிய மனமும் பெற்றிருப்பதால் சுகதுக்கங்களை அனுபவிப்பவையாக உள்ளன.–49-

பயங்கரமானதாகவும், எப்போதும்  அழிவுக்கு ஆட்படுவதாகவும் உள்ள இந்த பூத சம்சாரத்தில் பிரம்மா முதல் தாவரங்கள் ஈறாக உள்ள சகல ஜீவசிருஷ்டிகளும் கூறப் பட்டன.–50-

இவ்வாறு என்னையும் சர்வத்தையும் படைத்த, அளவற்ற பராக்ரமம் பொருந்திய பிரம்மா, காலத்தை காலத்தோடு சேர்த்து, அதாவது சிருஷ்டி காலத்தை பிரளயகாலத்தோடு சேர்த்து, தன்னுள் தான் கலப்பார்.–51-

எப்போது அவர் விழிப்புறுவரோ, அப்போது இந்த உலகம் இயங்கத் தொடங்கும். எப்போது அவர் சாந்தமாக உறங்கத் தொடங்குகிறாரோ, அப்போது அனைத்தும் ஒடுங்கும்.–52-

எப்போது அவர் உறங்கிக் கொண்டிருக்கிறாரோ, அப்போது கர்மாவின் உருவங்களான ஜீவன்களனைத்தும் காரியங்கள் ஏதுமற்று இருக்கும். அனைத்து இந்திரியங்களோடு மனமும் ஓய்வெடுத்துக் கொள்ளும்.–53-

எப்போது ஜீன்களெல்லாம் ஒரே தருணத்தில் அந்த மஹாத்மாவிடம் கலக்கின்றனவோ, அப்போது அவர் அனைத்து இயக்கங்களையும் விட்டு சுகமாக உறங்குகிறார்.(ஒடுக்கம்)–54-

எப்போது இந்த ஜீவன் இந்திரியங்களுடன், ஞானமற்றுப் போய், மூச்சுவிடும் செயலைச் செய்யாமல் இருக்கிறதோ, அப்போது இந்த ஜீவன் உடலிலிருந்து விலகுகிறது.–55-

எப்போது ஜீவன் இந்திரியங்களுடன் கூடியதாகிறதோ, அப்போது விதையை அடைந்து தாவரமாகவோ அல்லது மனித தேகத்தை அடைந்து மனிதனாகவோ பிறப் பெடுக்கிறது.–56-

இவ்வாறாக பிரம்மா, விழிப்பு, உறக்க நிலைகளை மேற்கொண்டு , இந்த உலகத்தைப் படைக்கவும் செய்கிறார். அழிக்கவும்(ஒடுக்கவும்) செய்கிறார்.–57-

இந்த தர்ம சாஸ்திரத்தை முதலில் உருவாக்கியவர் பிரம்மா. அவரே எனக்கு(மனுவுக்கு)  இந்த சாஸ்திரத்தை விதி முறைப் படி உபதேசித்தார். நான் இதை மரீசி முதலான முனிவர்களுக்கு உரைத்தேன்–58-

இந்த ப்ருகுமுனி  இந்த சாஸ்திரம் முழுவதையும் என்னிடம் பயின்றிருப்பதால், இவர் உங்களுக்கு இதை உரைக்கத் தக்கவர்.–59-

இவ்வாறு மனு கூறவும், எவ்வளவோ முனிவர்கள் இருக்கும் போது,தன் குருவான  மனு இந்த சாஸ்திரத்தை எடுத்தியம்ப, தன்னை நியமித்ததைக் கண்டு மிகுந்த சந்தோஷமுற்று கேட்கக் காத்திருக்கும்  அம்முனிவர்களைப் பார்த்து  ” கேளுங்கள்” என்றார்.–60-

( இதிலிருந்து தொடர்வது ப்ருகு முனிவர் வாயிலாக வெளிப் பட்டவை)

மஹாத்மாக்களும், தேஜஸ்மிக்கவர்களுமான, ஸ்வாயம்புவ மனுவின் வம்சத்தவர்களான ஆறுபேர். சிருஷ்டித் தொழிலில் ஈடுபட்டு தத்தம் பிரஜைகளை உருவாக்கினார்கள்.–61-

ஸ்வரோசிஷன், உத்தமன், தாமசன், ரைவதன், சாட்சுசன், மஹா தேஜஸ் கொண்ட வைவஸ்வதன் இவர்களே அந்த ஆறு பேர்கள்.–62-

மிக்க சக்தி படைத்தவர்களான, ஸ்வாயம்புவ மனு முதலான இந்த ஏழு பேரும் தங்கள் தங்கள் அந்தரங்களில்( காலங்களில்) உயிர்களைப் படைத்து, காத்து ஆட்சி நடத்தினர்.–63-

இமை கொட்டும் நேரம் பதினெட்டு கொண்டது ஒரு காஷ்டை எனப்படும். முப்பது காஷ்டைகள் கொண்டது ஒரு கலை எனப்படும்.-முப்பது கலைகள் கொண்டது ஒரு முகூர்த்தம்.- முப்பது முகூர்த்தங்கள் கொண்டது ஒரு இரவும் பகலும் ஆகும்.–64-

சூரியன் இரவு பகல்களை தேவர்களுக்கென்றும் மானிடர்களுக்கென்றும் ஏற்படுத்தினார். இரவு என்பது உறக்கத்துக்காகவும், பகல் காரியமாற்றுவதற்காகவும் ஏற்படுத்தப் பட்டன.–65

மானிடர்களுடைய ஒரு மாதம் என்பது பித்ருக்களுடைய இரவும் பகலுமான ஒரு நாள் எனப்படும். அதில் தேய்பிறை கர்மானுஷ்டானங்களுக்கும், வளர்பிறை உறக்கத்துக்கும் ஏற்பட்டவை.-( அதாவது தேய்பிறை பித்ருக்களுடைய ஒரு பகல் பொழுது. வளர்பிறை பித்ருக்களுடைய ஒரு இரவுப்பொழுது)–66-

மனிதர்களுடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு இரவும் பகலுமான ஒரு நாள். இதில் உத்தராயனம் என்னும் ஆறு மாதங்கள் தேவர்களின் ஒரு பகல் பொழுது. தட்சிணாயனம் என்னும் ஆறு மாதங்கள் தேவர்களின் ஒரு இரவுப் பொழுது–67-

பிரம்ம தேவருடைய இரவு பகலுக்கான  காலக் கணக்கையும் யுகங்களின் காலக் கணக்கையும்  கூறுகிறேன் , கேளுங்கள்–68-

நாலாயிரம் தேவ வருடங்கள் கொண்டது கிருதயுகம்.-மேலும் காலையில் சந்த்யாகாலம் என்று நானூறு வருடங்களும், மாலையில் சந்த்யா காலம் என்று நானூறு வருடங்களும் சேரும். மொத்தத்தில் நாலாயிரத்து எண்ணூறு தேவ வருடங்கள் கொண்டது கிருதயுகம்–69

மற்ற யுகங்களில் சந்தியைகளுக்கும் யுகத்துக்கும் நூறும் ஆயிரமுமாக குறைத்துக் கொண்டே வர வேண்டும். அப்படி யென்றால், திரேதா யுகத்துக்கு மூவாயிரம் தேவ வருடங்கள், அதில் இரண்டு சந்தியைகளுக்குமாக முந்நூறு, முந்நூறு தேவ வருடங்கள் . ஆக மூவாயிரத்து அறு நூறு தேவ வருடங்கள் கொண்டது திரேதாயுகம்.–இவ்வாறாகப் பார்க்கும் போது, துவாபர யுகம் இரண்டாயிரத்து நானூறு தேவ வருடங்கள் கொண்டது.–கலியுகம் ஆயிரத்து இரு நூறு தேவ வருடங்கள் கொண்டது–70-

மானிட யுகங்கள் நான்கும் சேர்ந்தால் மொத்தம் பன்னிரண்டாயிரம் தேவ வருடங்கள். இது தேவர்களின் ஒரு யுகம்.–71-

இப்படிப்பட்ட தேவ யுகங்கள்ஆயிரம் கொண்டது பிரம்மாவின் ஒ ரு பகல். அவ்வாறே ஆயிரம் தேவ யுகங்கள் கொண்டது ஒரு இரவு. எனவே இரண்டாயிரம் தேவ யுகங்கள் கொண்டது பிரம்மாவின் ஒரு நாள்.–72-

இவ்வாறான தேவ யுகங்கள் ஆயிரம் கொண்ட பிரம்மாவின் பகல் பொழுதை ” புண்ணிய தினம்” என்பார்கள். அவ்வாறே அதே அளவுள்ள பிரம்மாவின் இரவுப் பொழுதை” புண்ணிய இரவு” என்பார்கள். இவ்வாறான பிரம்மாவின் இரவு பகல் கணக்கை அறிந்தவர்களை, ” அஹோராத்ரி யறிந்தவர்கள்” என்பார்கள்.–73-

பிரம்மா தன்னுடைய இரவு நேரத்தில் உறங்குவார். இரவு நேரம் முடியும் தருவாயில் எழுந்திருப்பார். அப்படி எழுந்திருப்பவர் சத் அசத் ரூபமான சிருஷ்டியைச் செய்யத் தொடங்குவார்.–74-

பிரம்மாவால் மனம் மஹத் சிருஷ்டியில் ஏவப்பட்டு மஹத் சிருஷ்டியிலிருந்து ஆகாயம் தோன்றியது. ஆகாயத்துக்கு ” சப்தம்” குணமாய் அமைந்தது–75-

ஆகாயத்திலிருந்து இனிய வாசனைகளையும், துர்வாசனைகளையும் கொண்டு செல்வதும், பவித்ரமானதும் ,  மிகுந்த பலம் கொண்டதுமானவாயு தோன்றியது. வாயு ” ஸ்பரிசம்” என்னும் குணம் கொண்டதாகக் கூறுகிறார்கள்–76-

வாயுவிலிருந்து மிக்க பிரகாசம் கொண்டதும், இருட்டைப்போக்கடிப்பதுமான ஜோதி ( நெருப்பு) தோன்றியது. அந்த ஜோதி ” உருவம்” என்னும் குணம் கொண்டது என்று கூறுகிறார்கள்.–77-

நெருப்பிலிருந்து தண்ணீர் தோன்றியது. தண்ணீர்”ரஸம்” என்னும் குணம் கொண்டது. தண்ணீரிலிருந்து பூமி தோன்றியது. பூமி ”வாசனை” என்னும் குணம் கொண்டது.–இப்படித் தோன்றியதே ஆதி சிருஷ்டி–78-

பன்னிரண்டாயிம் வருடங்கள் எண்ணிக்கையில் மனிதர்களின் நான்கு யுகங்கள் கொண்டது ஒரு ” தேவ யுகம்” என்று முன்னர் கூறப் பட்டது. அப்படிப்பட்ட தேவ யுகங்கள் எழுபத்தொன்று நிறைந்தால், அது ஒரு மன்வந்தரம் எனப்படும்.–79-

சிருஷ்டியும், சம்ஹாரமும் எண்ணற்றவையாதலின், மன் வந்தரங்களும் எண்ணற்றவையே.–சிருஷ்டியை, பிரம்மா விளையாட்டாகவே மீண்டும் மீண்டும் செய்கிறார்–80-

கிருத யுகத்தில் தர்மம் நான்கு பாதங்கள் கொண்டதாக இருக்கும்.  எங்கும் சத்யமே நிறைந்திருக்கும்.–81-

மற்ற யுகங்களில் தர்மம் ஒவ்வொரு பாதமாக குறைந்து கொண்டே வரும். திருட்டு, பொய், வஞ்சனை, இவற்றால் தர்மம் குறைந்து கொண்டே போகும்.–82-

கிருதயுகத்தில் மனிதர்கள் நோயற்றவர்களாகவும், எல்லா வித விருப்பங்களும் நிறைவேறியவர்களாயும், நானூறு வருடங்கள் ஆயுள் கொண்டவர்களாகவும் இருந்தனர். திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகங்களில் மனிதர்களின் ஆயுள் ஒவ்வொரு பாதமாக குறைபடும்.-83-

வேதங்களில் கூறப்பட்ட ஆயுளும், காம்ய  கர்மாக்களுக்கு கிடைக்கக் கூடிய பலன்களும், சாபங்களும், வரங்களும், பிரபாவங்களும், மனிதர்களுக்கு அந்தந்த யுகத்துக்கு தக்கபடி பலன்  கொடுக்கும்.–84-

கிருத யுக தர்மங்கள் வேறு. திரேதா யுக தர்மங்கள் கிருத  யுக தர்மங்களை விடக் குறைவானவை. அவற்றைவிட குறைவானவை துவாபர யுக தர்மங்கள். கலி யுக தர்மங்களோ இவற்றிலிருந்தும் குறைந்து இருக்கும். இவ்வாறாக யுகங்களைப் பொறுத்து தர்மங்கள் வேறு பட்டவையாக இருக்கும்.–85-

கிருதயுகத்தில் தவம் செய்வதே மேலான தர்மம். திரோதா யுகத்தில் தவம் குறைந்து, ஆத்ம ஞானம் மேலான தர்மமாக  இருக்கும். துவாபர யுகத்தில் அதுவும் குறைந்து  யக்ஞம் செய்தல் மேலான தர்மம் என்றாகும். கலி யுகத்தில் தானம் செய்தலே சிறந்த தர்மமாக கூறப் படும்.–86-

மிக்க தேஜஸ் பொருந்தியவரான பிரம்மா அனைத்து உயிர்களையும் காப்பதற்காக தன்னிலிருந்து  நான்கு வருணத்தாரைத் தோற்றுவித்தார். அவரவர்க்குரிய தர்மங்களையும் ஏற்படுத்தினார்.-87

வேதங்களை ஓதுவதும் , வேதத்தை கற்பித்தலும், தனக்காக யக்ஞங்கள் செய்தலும், பிறருக்குகாக யக்ஞங்கள் செய்வித்தலும், பிறருக்கு தானம் கொடுத்தலும், பிறரிடமிருந்து தானம் வாங்குதலும் என்னும்  ஆறையும் பிராம்மணனுக்குரிய தர்மங்களாக ஏற்படுத்தினார்-(யாகம் என்றால் பிரதிபலனை கருதி செய்யப்படும் செயல். யக்ஞம் என்றால் பிரதிபலன் கருதாமல் செய்யப்படும் செயல்)–88-

மக்களைக் காத்தல், தானமளித்தல், யாகம் செய்தல், வேத மோதுதல், விஷயசுகங்களில் மூழ்காமலிருத்தல் முதலானவைகளை க்ஷத்ரியர்களுடைய தர்மங்களாக ஏற்படுத்தினார்.–89-

பசுக்களைக் காத்தல், யாகங்கள் செய்தல், வேத பாராயணம் செய்தல், வாணிபம் செய்தல், வட்டிக்குப் பணம் கொடுத்து  ஜீவித்தல், விவசாயம் செய்தல் இவைகள் வைசியர்களின் தர்மங்கள்.–90-

பிரம்ம தேவர், சூத்ரர்களுக்கு விதித்த தர்மமோ ஒன்றே ஒன்று தான் .அது. அசூயையின்றி(சோம்பலின்றி) முதலில் கூறப்பட்ட மூன்று  வர்ணத்தாருக்கும்  பணிவிடை புரிதல்–91-

நாபிக்கு கீழுள்ள  பாகங்களை விட மேலுள்ள பாகங்கள் பரிசுத்தமானவை என்று கூறப் பட்டுள்ளது. -அதிலும் முகம் மிகவும் பரிசுத்தமானதுஎன்பது பிரம்மாவின் கூற்று.–92-

வேதங்களை உணர்ந்துள்ளதால் படைக்கப் பட்டவர்களுள் பிரம்மணன் மேலானவன்.–93-

ஹவ்ய, கவ்யங்களை அளிப்பதற்காகவும், உலகம்  காக்கப்படுவதற்காகவும் , பிரம்மா பிராம்மணனைப் படைத்தார்.–94-

யாருடைய வாயினின்றும் வெளிப்படும் மந்திரங்களால் தேவர்கள் தங்களுக்கு அளிக்கப் படும் ஹவ்யத்தை உண்பார்களோ, பித்ருக்கள் தங்களுக்கு அளிக்கப் படும் கவ்யத்தை உண்பார்களோ, அதை விட உயர்ந்தது யாதுளது?–95-

பஞ்ச பூதங்களால் உருவாக்கப் பட்ட வற்றுள் பிராணிகள் உயர்ந்தவை. பிராணிகளில்  புத்தியால் ஜீவனம் செய்பவை உயர்ந்தவை. புத்தியுடையவற்றில் மனிதர்கள் உயர்ந்தவர்கள்–96-

பிராம்மணர்களிலேயும் வித்வான்கள்  உயர்ந்தவர்கள். அவர்களிலும் தங்கள்  அனுஷ்டானங்களில் புத்திரியைச் செலுத்துபவர்கள்  உயர்ந்தவர்கள். அவர்களிலும் அத்தகு கர்மானுஷ்டானங்களை நன்கு  இயற்றுபவர்கள் உயர்ந்தவர்கள். அவர்களை விட பிரம்மஞானிகள்  உயர்ந்தவர்கள்.–97-

பிரார்த்தணனுடைய உற்பத்தியே தர்மத்துக்கு சாஸ்வதமான சரீரம் . பிராம்மணன் தர்மத்தை கடைப் பிடிப்பதற்காகவே  படைக்கப் பட்டவன். அத்தகு தர்மத்தை கடைப் பிடிப்பதனால்  பிரம்மபதத்தை அடைவான்.–98-

எல்லா  உயிர்களுக்கும் உரிய தர்மமனைத்தையும் காக்கும் தலைவன் பிராம்மணன்.–99-

பூமியிலுள்ள அனைத்தும் பிராம்மணனுடையது.  எனவே பிராம்மணன் எல்லா செல்வங்களுக்கும் உடைமையாளன்.–100-

பிராம்மண, சத்திரிய, வைசிய, சூத்திரர்களுடைய கர்மங்கள் ஸ்வபாவத்திலிருந்து பிறந்த குணங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டிருக்கிறது.-பிறப்பின் அடிப்படையில் பிரிக்கப்படவில்லை. 

பிராம்மணன் தன்னுடைய  செல்வத்தையே தான் அனுபவிக்கிறான். தன்னுடைய ஆடைகளையே தான் உடுத்துகின்றான். தன்னுடைய செல்வத்தையே பிறர்க்கு அளிக்கின்றான்.-101-

ஞானியான ஸ்வாயம்புவ மநு, பிராம்மணனுடையனவும், மற்றவர்களுடையனவுமான தர்மங்களை தெரிவிப்பதற்காக இந்த தர்ம சாஸ்திரத்தை வழங்கினார்.-102-

இந்த மனு தர்ம சாஸ்திரத்தை படிப்பதனால் அடையும் பலன்களை அறிந்து பிராம்மணன் இந்த  தர்ம சாஸ்திரத்தை நன்கு முயற்சியோடு படிக்க வேண்டும். சிஷ்யர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.-103-

இந்த சாஸ்திரத்தை மிக்க நியமத்தோடு படிக்கும் பிராம்மணனுக்கு மனத்தாலும்  வாக்காலும் உடலாலும் ஏற்படும் எந்த பாபமும் அண்டாது. அதாவது இதைப் படித்து அறிந்த பிறகு பாபமே  செய்ய மாட்டான்.-104-

இந்த சாஸ்திரத்தை படித்து ஓதுபவன் தன்னுடைய முன்னோர்களில் ஏழு தலை முறையினரையும், தனக்குப் பின் ஏழு தலைமுறையினரையும் புனித மாக்குகிறான். இந்தப் பூமண்டலம் முழுவதையும் தானம் பெறுவதற்கும் அருகதையுடையவனாகிறான்.–105-

இந்த தர்ம  சாஸ்திர அத்யயனம், மநோரதங்களை பூர்த்தியாக்கும். இந்த தர்ம சாஸ்திரம் மிகவும் சிரேஷ்டமானது. ஞானத்தை பெருக்குவது, புகழைத் தருவது, தீர்காயுளைத் தருவது. மோட்சமடைய மேலான சாதனமானது.–106-

இந்த தர்ம சாஸ்திரத்தில் அனைத்து  தர்மங்களும் கூறப் பட்டுள்ள, செய்யத் தக்கவைகளும், தகாதவைகளுமான தர்ம  விஷயங்களும், அதர்ம விஷயங்களும் அவற்றின் பலன்களும் கூறப் பட்டுள்ளன. மேலும் நான்கு வர்ணத்தார் நித்தியமாக கடைப்பிடிக்க வேண்டிய ஆசார விஷயங்களும் கூறப் பட்டுள்ளன.-107-

வேதங்களிலும் ஸ்மிருதிகளிலும் கூறப்பட்ட ஆசாரங்களே மேலான தர்மங்கள். எனவே மக்களின் நலன் கோரும் துவிஜன் ஆசார விஷயங்களில் எப்போதும் முயற்சியுடன் ஈடுபட்டவனாக இருக்க வேண்டும்.( பிராம்மணன், க்ஷத்ரியன், வைசியன் என்னும் மூவர்ணத்தாரும் துவிஜர்கள்)–108-

ஆசாரத்திலிருந்து விலகிய பிராம்மணனுக்கு, வேதாத்ய யனத்தால் பலன் கிட்டாது. ஆசாரமானவனே  ஸம்பூர்ணமான பலனை ப் பெறுவான். ஆசாரம் என்பது தூய்மை, தூய்மையான  அனுஷ்டானங்களை, பூஜைகளை தினமும் செய்பவனே ஆசார சீலன்.-109-

இவ்வாறாக ஆசாரத்தை ஆதாரமாகக் கொண்டு தர்மம் இருப்பதை உணர்ந்து, எல்லா தவங்களுக்கும் ஆசாரமே முதல் முக்கியமானது என்று முனிவர்கள் தெரிவித்தார்கள்.-110-

உலக  உற்பத்தியும், ஸ்ம்கார முறைகளும், விரத முறைகளும், பிரம்மசரிய விரத முறைகளும் இந்த தர்ம சாஸ்திரத்தில் கூறப் பட்டுள்ளன.–111-

விவாஹ முறைகளையும், விவாஹத்துக்கான லக்ஷணங்களையும், யக்ஞங்களின் லக்ஷணங்களையும், சிராத்த விஷயங்களையும், இந்த தர்ம சாஸ்திரம் கூறுகிறது.–112-

ஜீவனம் நடத்துவதற்கான தொழில்களின் லக்ஷணங்களையும் இல்லறத்தானின் நியமங்களையும்,சாப்பிடத்தக்கவை எவை, தகாதவை எவை என்ற விஷயங்களைப் பற்றியும், மரண காலங்களில் ஏற்படும் தீட்டுகளைப் பற்றிய விவரங்களையும் பொருட்களுக்கு தண்ணீர்  முதலியவற்றால் கிடைக்கும் சுத்தி முறைகளைப் பற்றியும் இந்த தர்ம சாஸ்திரம் விளக்குகிறது.–113-

பெண்களுக்குரிய தர்ம விஷயங்களும், வான பிரஸ்தர்களுக்குரிய தர்ம  விஷயங்களும், சந்யாஸ தர்ம விஷயங்களும், மன்னனுக்குரிய தர்ம விஷயங்களும், மோக்க்ஷத்துக்குரிய விஷயங்களும் இந்த தர்ம சாஸ்திரத்தில் விளக்கப் பட்டுள்ளன.–114-

சாட்சிகளை விசாரிக்கும் முறைகளும், பெண்களும் ஆண்களும் நடந்து கொள்ள வேண்டிய  முறைகள், பாகப் பிரிவினை ,  சூதாட்டம், குற்றவாளிகளைத் தண்டித்தல் முதலான விஷயங்களும் இந்த தர்ம சாஸ்திரத்தில் கூறப் பட்டுள்ளன.–115-

வைசியர்கள் சூத்திரர்கள் முதலானோரின் தர்ம அனுஷ்டான முறைகள், கலப்பு திருமணங்கள், ஆபத்துக் காலங்களில் கடைப் பிடிக்க வேண்டிய விதி முறைகள், பிராயச்சித்த முறைகள் முதலான விஷயங்களும் இந்த தர்ம சாஸ்திரத்தில் கூறப் பட்டுள்ளன.–116-

தேகத்தை விடுதல், மூன்று வகையான கர்ம வினைகள் ஏற்படுதல், சாஸ்திரத்தில் செய்யச் சொன்ன, செய்யக் கூடாது என்று சொன்ன விஷயங்களின் பலாபலன்கள் முதலானவையும் இந்த  தர்ம சாஸ்திரத்தில் கூறப் பட்டுள்ளன.–117-

தேச தர்மங்கள், ஜாதி தர்மங்கள், குல தர்மங்கள், வேதத்துக்கு விரோதமானவர்களின் தர்மாதர்மங்கள், முதலானவற்றையும் இந்த தர்ம சாஸ்திரத்தில்  எடுத்துரைத்துள்ளார்.–118-

முனிவர்களே, நான் வினாவியபோது, மனுவானவர் எனக்கு இந்த தர்ம சாஸ்திரத்தை எவ்வாறு உபதேசித்தாரோ அவ்வாறே அதை உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். கேளுங்கள்.–119-

அத்தியாயம் ஒன்று நிறைவுற்றது

———–

அத்தியாயம் -2-

வேதம் முழுவதையும் நன்கு அறிந்தவர்களாகவும், விருப்பு வெறுப்பு அற்றவர்களாகவும் சாதுக்களாகவும் உள்ள மஹான்கள்  எப்போதும் அனுஷ்டிக்கின்ற தர்மம் எதுவோ அதை எடுத்தியம்புகிறேன், கேளுங்கள்.-1-

விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக காரியங்களைச் செய்தல் என்பது  போற்றுதலுக்குரிய விஷயமன்று.  எனினும்  இவ்வுலகில் பலனை எதிர் நோக்காமல் காரியம் செய்வது என்பது  அரிதான விஷயம். 

வேதங்களை நன்கு படித்தல், வேதங்களில் கூறப் பட்டுள்ள தர்மங்களில் ஆழ்ந்து ஈடுபாடு  கொண்டிருத்தல் என்பதும் பலனைக் கொடுக்கக் கூடியதேயாகும்.(வேதங்களின் முக்கியமாக இரண்டு பிரிவுகள் உள்ளன.1. பலன்களைத்தரக்கூடிய செயல்களைக்குறித்த யாகங்கள்,பிரார்த்தனைகள் போன்றவை. 2. பலன்களைத் துறந்து முக்தியடைவதுபற்றிய போதனைகள்.)–2-

இவை இவை எனக்குத்தேவை என்று கோருவதற்கு ” சங்கல்பம்” என்று பெயர். சங்கல்பத்துக்கு மூல காரணமாக இருப்பது ஆசை. ஆசையாலேயே சங்கல்பம் தோன்றுகிறது. யக்ஞங்கள் செய்வதில் விருப்பம் சங்கல்பத்தாலேயே ஏற்படுகிறது. விரதங்கள், நியமங்கள், போன்றவை அனைத்துமே சங்கல்பத்தாலேயே ஏற்படுகின்றன.–3-

ஆசையற்றவனுக்கு எந்தச் செயலும் இல்லை. மனிதர்கள், செய்யும்  ஒவ்வொரு செயலும் ஆசையின் காரணமாகவே செய்யப் படுகிறது.–4-

முறையாக நல்லபடி காரியங்களைச் செய்பவன் அமரனாகிறான்(மரணமற்றவன்). இவ்வுலகிலும், அவனுடைய அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.–5-

வேதமே உலகில் தர்மத்துக்கு மூலம், வேதமறிந்தவர்களால் இயற்றப்பட்ட ஸ்ம்ருதிகளும் அவர்களது  ஒழுக்கமுமே பிரமாணங்கள். சாதுக்கள் கடைப்பிடிக்கும் ஆசாரங்களும், அவர்களது ஆத்மானந்தமும் பிரமாணங்கள்–6-

எவருக்கு  எந்தெந்த தர்மங்கள் மனுவினால் சொல்லப்பட்டுள்ளதோ, அவை அனைத்தும் வேதத்தில் சொல்லப் பட்டுள்ளவையே. சர்வ ஞான சொரூபன் மனு பகவான். அவர் கூறிய அனைத்தும் வேதம் கூறியதே.(ஏற்கனவே வேதத்தில் இருப்பதையே மனு கூறினார்)–7-

இந்த தர்ம சாஸ்திரம் முழுவதும் ஞானக் கண்ணால் கண்டது என்பதையும் , வேதம் கூறியது என்பதையும் அறிந்து விவேகமுள்ளவன் ஸ்வதர்மத்தை அனுஷ்டிக்க வேண்டும்.–8-

மனிதன் வேதங்களிலும் , தர்ம சாஸ்திரங்களிலும் கூறப் பட்டுள்ள தர்மத்தை அனுஷ்டித்தால், இவ்வுலகில் கீர்த்தியையும் மேலுலகத்தில் மோட்சத்தையும் அடைவான்.-9-

வேதங்கள் ” ஸ்ருதிகள்” எனப்படும். தர்ம சாஸ்திரங்கள் ” ஸ்மிருதிகள்” எனப்படும். இவைகளைக் குறித்து எதிர் மறையான தர்க்கங்களைச் செய்தல் கூடாது. இவை இரண்டிலுமே தர்மம்  பிரகாசிக்கிறது.–10-

பிரமாணங்களான ஸ்ருதிகளையும், ஸ்ம்ருதிகளையும் எந்த பிராமணனோ, க்ஷத்ரியனோ, வைசியனோ அவமதித்து தூஷிக்கின்றானோ, அப்படிப்பட்ட நாஸ்திகளை நல்லவர்கள் புறக்கணிக்க  வேண்டும்.–11-

வேதம், ஸ்ம்ருதி, நல்ல ஆசாரம், சுய ஆனந்தம் இந்த நான்கும் தர்மத்தின்  சொரூபம் என்று கூறுவார்கள் பெரியோர்.–12-

அர்த்தம், காமம் இவைகளில் விருப்பம் இல்லாதவனுக்கே தர்ம ஞானம் விதிக்கப் பட்டுள்ளது. தர்மத்தை அறிய விரும்புபவனுக்கு முக்கியமான பிரமாணம் வேதமே ஆகும்.–13-

எங்கே தர்ம சாஸ்திரங்களுக்குள் ஒன்றுக் கொன்று வேறுபாடு காணப்படுகின்றதோ, அங்கே இரண்டு விதமாக தர்மங்கள் கூறப்பட்டிருக்கும். வித்வான்கள் இவ்விரண்டு தர்மங்களையும் கடைப்பிடிக்கலாம்.-14-

சூரியோதயம் ஆன பிறகு ஹோமம் செய்ய வேண்டும். இது ஒரு வேத வாக்கியம். உதிப்பதற்கு முன்பே நட்சத்திரங்கள் தெரியும்.அருணோதய காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும்.-இது ஒரு வேத வாக்கியம். ஒன்றுக் கொன்று முரணானவை இவை.  இப்படி ஒன்றுக் கொன்று முரண்பாடு தென்படும் போது இரண்டு விதங்களில் எந்த விதமாகவும் செய்யலாம்.–15-

கர்ப்பாதானம் முதலான அனுஷ்டானங்கள் எவனுக்கு விதிக்கப் பட்டுள்ளதோ அவனுக்கே இந்த மனு தர்மத்தைப் படிக்கும் அதிகாரம் உள்ளது. மற்றவர்களுக்கு இல்லை.

(கர்பாதானம் செய்யும் அதிகாரம் உள்ளவன் திருமணமான ஆண்.அவன் மட்டுமே இந்த ஸ்மிருதியை படித்துபின்பற்ற அதிகாரம் உள்ளவன். கர்பாதானம் செய்ய விரும்பாத துறவிகள் இதை படிக்கவும் பின்பற்றவும் தேவையில்லை)–16-

ஸரஸ்வதீ நதிக்கும் திருஷத்வதீ என்னும் நதிக்கும் இடையிலுள்ள பிரதேசத்தை ”தேவநிர்மிதம்” என்றும்” பிரம்மாவர்த்தம்” என்றும் கூறுவார்கள்–17-

அந்த தேசத்தில் நால்வர்ணத்தாருக்கும் கலப்பு வர்ணத் தாருக்கும் பாரம்பரியமாக வரும் ஆசாரமே ”சதா சாரம்” எனப்படும்.-18-

குரு க்ஷத்திரம், மத்ஸ்ய தேசம், பாஞ்சாலம், சூரசேநகம் என்னும் தேசங்களுக்கு ” பிரம்மரிஷி தேசம்” என்று பெயர். இது பிரம்மாவர்த்த தேசத்துக்கு அடுத்தது.-19-

இந்தத் தேசத்தில் பிறந்த பிராம்மணர்கள் மூலமாக உலக மாந்தர் தத்தமக்குரிய ஆசாரங்கள் எவை எவை என்று அறிய வேண்டும்.-20-

இமயமலைக்கும் விந்திய  மலைக்கும் இடையில் , சரஸ்வதி நதிபாயும் தேசத்துக்கும், பிரயாகைக்கும் இடைப்பட்ட  தேசத்துக்கு  ” மத்திய தேசம்” என்று பெயர்.-21-

கிழக்குக் கடலுக்கும், மேற்குக் கடலுக்கும் இடையிலுள்ள  பிரதேசத்துக்கு ” ஆர்யாவர்த்தம்” என்று பெயர்.(தென்னிந்தியா)-22-

கறுப்புக்கோடுகள் கொண்ட மான் பிறந்து தன்னிச்சையாக சஞ்சரிக்கின்ற பிரதேசமே யக்ஞங்கள் செய்வதற்கு உகந்த இடமாகும். மற்றைய இடங்கள் மிலேச்ச தேசம் எனப்படும். மிலேச்ச தேசம் யக்ஞம் செய்வதற்கு அருகதையற்ற இடமாகும்.-23-

பிராம்மணர், க்ஷத்ரியர், வைசியர் என்னும் இருபிறப்பாளர்களாகிய மூவர்ணத்தாரும் முயற்சி செய்து, யக்ஞபூமிகளான இந்த தேசங்களை அடைய வேண்டும். சூத்திரர்கள் தங்கள் ஜீவனமான தொழில் நிமித்தமாக எந்தத் தேசத்திலும் வசிக்கலாம்.-24-

இதுவரை இந்த தர்ம சாஸ்திரத்தின் தோற்றம் முழுவதுமாகக் கூறப்பட்டது. இவ்வுலகம் தோன்றிய விஷயமும் கூறப் பட்டது. இனி  வர்ணதர்மங்களையும், ஆசிரம தர்மங்களையும் கூறுகிறேன்.கேளுங்கள்–25-

பிராம்மணர்களும், க்ஷத்ரியர்களும், வைசியர்களும் கர்ப்பாதானம் முதலான வைதிகக் கிரியைகளைச் செய்ய வேண்டும். இவையே ஒருவனை  பரிசுத்தமாக்குகின்றன. பரலோக வாழ்வையும்பெற்றுத் தருகின்றன–26-

கர்ப்பாதானம் முதலான ஹோம சடங்குகளாலும், ஜாதகர்மா, சவுலம், மௌஞ்சீபந்தனம், உபநயனம் முதலான சடங்குகளாலும், பெற்றோரால் ஏற்பட்ட பீஜதோஷம், கர்ப்பவாச தோஷம் முதலான வற்றால் ஏற்பட்ட  தோஷங்கள் நீங்கி பிராம்மணர்களும் க்ஷத்ரியர்களும், வைசியர்களும் பரிசுத்தமாகிறார்கள்.–27-

வேத மோதுவதாலும் , விரத நியமங்களாலும், ஹோமங்களாலும் காலை மாலை செய்யும் ஔ பாசனம் முதலான கிரியைகளாலும் மூன்று வேதங்களிலும் நன்கு தேர்ச்சி பெறுவதாலும், புத்ரோத்பத்தியாலும், தர்ப்பணங்களாலும், பஞ்சமஹா யக்ஞங்களாலும் பெரிய யாகங்களாலும் இவ்வுடலானது பிரம்ம பதத்தை அடைவதற்கு ஏற்றதாக ஆகிறது.–28-

தொப்புள் கொடி அறுப்பதற்கு முன்பே ஜாதகர்மா என்னும்  சடங்கு செய்ய வேண்டும். தங்கம், நெய், தேன் இவைகளை மந்திரபூர்வமாக நாவில் தடவ வேண்டும்.-29-

பத்தாவது நாள் கடந்த பிறகு, பதினோராவது நாள் அல்லது பன்னிரண்டாவது நாள் அல்லது வேறு ஏதாவது சிறந்த  நன்னாளில், நல்ல முகூர்த்தத்தில், நல்ல நட்சத்திரத்தில் பிராம்மணனுக்கும்,  க்ஷத்திரியனுக்கும், வைசியனுக்கும் நாமகரணம்(பெயர்சூட்டுதல்) செய்ய வேண்டும்.–30-

பிராம்மண குழந்தைக்கு வைக்கும் பெயர் சுபம் தரும் வண்ணம் இருக்க வேண்டும். க்ஷத்திரியக் குழந்தைக்குப் பலம் தரும் வாசகமாக இருக்க வேண்டும். வைசியக் குழந்தைக்கு செல்வம் தரும் வாசகமாக இருக்க வேண்டும். சூத்திரர்களுக்கு   ஏவலன் என்பதை அறியும் வகையில் பெயர் வைக்க வேண்டும்.-31-

பிராம்மணனுடைய பெயர் சர்மாஎன்ற பதம் கூடியதாக இருக்க வேண்டும். ராஜாவுக்கு  ரக்ஷணம் சேர்ந்ததாக இருக்க வேண்டும். (க்ஷத்திரியனுக்கு  வர்மா என்ற பதம் சேர்க்கப் பட வேண்டும்)வைசியனுக்கு செல்வத்தோடு  கூடியதாக  இருக்க வேண்டும்.(வைசியனுக்கு குப்தா என்றபதம் அல்லது  பாலன் என்ற பதம்  பெயரோடு சேர்க்கப் படவேண்டும்.) சூத்திரனுக்கு தாசன் என்ற பதம் கூடியதாக இருக்க வேண்டும்.-32-

பெண்களுக்கு இடும் பெயர்கள் சுகமாக உச்சரிக்கக் கூடியதாகவும், குரூரமான அர்த்தம் கொடுக்கும் சொல்லாக இல்லாமலும், பொருளற்றதாக இல்லாமலும், மனத்துக்கு ஆனந்தத்தைக்  கொடுக்கக் கூடியதாகவும், மங்களமான   சொல்லாகவும் நெடில் எழுத்து ஈற்றாக இருப்பதாகவும், அதாவது  நீட்டி தீர்க்கமாகச் சொல்லும் அட்சரத்தோடு முடிவதாகவும்( உதாரணமாக ரமா, உமா, என்ற பெயர்களைக் கூறலாம் ) ஆசிகளைக் கொடுக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். ( காயத்ரீ தேவி, லக்ஷ்மீ தேவி முதலான பெயர்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.)–33

நான்காம்  மாதத்தில், குழந்தையை வீட்டிலிருந்து வெளியே கொண்டு சென்று சூரியனை தரிசிக்கச் செய்ய வேண்டும். ஆறாவது  மாதம் அன்னம் ஊட்டும் சடங்கைச் செய்ய வேண்டும். அல்லது அவரவர் குல வழக்கப் படி அந்தந்த சடங்குகளைச் சுபதினங்களில் செய்ய வேண்டும்.( இந்தச் சடங்குக்கு அன்னபிராசனம்  என்று பெயர்)-34

” சூடாகர்மா” என்னும் குடுமி வைக்கும் சடங்கானது பிராம்மண க்ஷத்ரிய வைசியர்களுக்கு முதலாம் ஆண்டு அல்லது மூன்றாம் ஆண்டில் செய்யப் பட வேண்டியது. அல்லது அவரவர் வழக்கப் படி செய்ய வேண்டியது.-35-

பிராம்மணனுக்கு ஏழு வயதிலும், க்ஷத்ரியனுக்கு பத்து வயதிலும், வைசியனுக்கு பதினோராவது வயதிலும் உபநயனம் செய்ய வேண்டும்.-இது பொது விதி. -36-

பிரம்ம தேஜஸை விரும்பும் பிராம்மணனுக்கு ஐந்தாவது வயதிலும், பலத்தை க்கோரும் க்ஷத்ரியனுக்கு ஆறாவது வயதிலும், வாணிபம் கோரும் வைசியனுக்கு எட்டாவது வயதிலும் உபநயனம் செய்து வைக்க வேண்டும்.–37-

பிராம்மணனுக்கு பதினாறாவது வயது வரையும், க்ஷத்ரியனுக்கு இருபத்திரண்டாவது வயது வரையும்,  வைசியனுக்கு இருபத்து நான்காவது வயது வரையும் காயத்ரி அழியாமலிருக்கும். அதாவது அந்த வயதுக்குள்ளாவது காயத்ரி உபதேசம் நடை பெற வேண்டும்-தவிர்க்க முடியாமல் தள்ளிப்போனாலும் இந்த வயதுக்குள் செய்ய வேண்டும், -செய்யலாம் என்பதற்காகக் கூறப்பட்டது..–38-

அது வரையிலும் உபநயனம் செய்யாதவர்கள் காயத்ரீ உபதேசம் பெறும் அருகதையை  இழந்தவர்களாவர். இவர்கள் சான்றோர்களால் நிந்திக்கப் படுவார்கள். வைதீகச் சடங்குகளுக்கு இவர்களைச்சேர்க்க மாட்டார்கள்.–39

இவ்வாறு தூய்மை இழந்து விதிப்படி பிராயச்சித்தம் செய்து கொள்ளாதவனோடு பிராம்மணன், யாகம், கன்யாதானம், முதலான எந்தச் சம்பந்தமும் வைத்துக் கொள்ளக்கூடாது.–40-

பிராம்மண பிரம்மசாரி மான் தோலால் ஆன மேலாடையையும், க்ஷத்ரிய பிரம்மசாரி குரு மிருகத்தின்ஆன தோலால் ஆன மேலாடையையும்,–வைசிய பிரம்மசாரி ஆட்டுத்தோலால் ஆன மேலாடையையும்  அணிய வேண்டும்.-பிராம்மணன்  நார்மடித் துணியை அரையாடையாக அணிய வேண்டும்.-க்ஷத்ரியன் பட்டுத் துணியை அரையாடையாக அணிய வேண்டும்.-வைசியன் சணல் ஆடையை அரையாடையாக அணிய வேண்டும்.–41-

பிராம்மண பிரம்மசாரி, முஞ்சி புல்லால் திரிக்கப் பட்டு, வழுவழுவென்று சமானமான மூன்று இழைகள் கொண்ட அரைஞாணை அணிய வேண்டும்.-அவ்வாறே க்ஷத்ரிய பிரம்மசாரி மூர்வா புல்லினால் திரிக்கப் பட்ட மூன்று இழைகளோடு கூடிய அரை ஞானை அணிய வேண்டும்.-வைசிய பிரம்மசாரி சணலால் திரிக்கப் பட்ட மூன்று இழைகளோடு கூடிய அரை ஞானை அணிய வேண்டும்.-(இந்த அரைஞாணில்தான் கோவணம் கட்டிக்கொள்வார்கள்)–42-

முஞ்சிப் புல் முதலானவை கிடைக்காத போது, தர்ப்பை , நாணல், கோரை முதலானவற்றை முப்புரிகளாகத் திரித்து அதை ஒரு முடிச்சோடு  பிராம்மண பிரம்மசாரியும், மூன்று முடிச்சுகள் போட்டு  க்ஷத்ரிய பிரம்ம சாரியும், ஐந்து முடிச்சுகள் போட்டு வைசியப் பிரம்ம சாரியும் அணிய வேண்டும்.–43-

வலது புறமாக சுற்றிய ஒன்பது  இழைகள் கொண்டதாக பூணூல் இருக்க வேண்டும். பிராம்மண பிரம்மசாரிகளின் பூணூல்  பஞ்சினால் ஆனதாகவும், க்ஷத்ரிய பிரம்ம சாரிகளின் பூணூல் சணலாலான தாகவும், வைசிய பிரம்ம சாரிகளின் பூணூல் வெள்ளாட்டு முடியினாலானதாகவும் இருக்க வேண்டும்–44-

பிராம்மண பிரம்மசாரி வில்வம், புரசு இவையிரண்டில் ஏதேனும் ஒன்றை தண்டமாக ஏந்த வேண்டும்.–க்ஷத்ரிய பிரம்மசாரி ஆல், கருங்காலி இவையிரண்டில் ஏதேனும் ஒன்றை தண்டமாக ஏந்த வேண்டும்.-வைசிய பிரம்மசாரி அத்தி, பைலம் இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றை தண்டமாக ஏந்த வேண்டும்.–45-

பிராம்மணன் ஏந்தும் தண்டம் தலை வரை உயரமுடையதாக இருக்க வேண்டும். க்ஷத்ரியன்  ஏந்தும் தண்டம் நெற்றி வரை இருக்க வேண்டும். வைசியன் ஏந்தும் தண்டம் மூக்கு வரை இருக்க வேண்டும்.–46-

அந்த தண்டங்கள் கோணலாக இருக்கக் கூடாது. வெட்டுப் பட்ட வடுக்கள் அற்றவையாக இருக்க வேண்டும். பார்க்க அழகாக இருக்க  வேண்டும். பார்ப்பவர்களுக்கு அச்சம் ஏற்படும் வண்ணம் இருக்கக் கூடாது. மேல் பட்டையோடு இருக்க வேண்டும். நெருப்புப் பட்டதாக இருக்கக் கூடாது–47-

ஒவ்வொரு நாளும் தண்டத்தைக் கையில் ஏந்தி, சூரிய நமஸ்காரம் செய்து, தீயை வலம் புரிந்து, பிறகு முறைப்படி பிஷை ஏற்கச் செல்ல வேண்டும்.–48-

பிராம்மண பிரம்மச் சாரி ”பவதி பிக்ஷாம் தேஹி” என்று கூறி  பிஷை கேட்க வேண்டும்.-க்ஷத்ரிய பிரம்மச் சாரி ” பிக்ஷாம் பவதி தேஹி” என்று கூறி பிஷை கேட்க வேண்டும்.-வைசிய பிரம்மச்சாரி ” பிக்ஷாம் தேஹி பவதி” என்று கூறி பிஷை கேட்க வேண்டும்.–49-

முதலில் தாயிடம் அல்லது சகோதரியிடம் அல்லது தாயின் சகோதரியிடம்,  அல்லது யார் இவனை அவமானப் படுத்த மாட்டார்களோ, அந்தப் பெண்ணிடம் பிட்ஷை  ஏற்க வேண்டும்.–50-

இவ்வாறாக பிக்ஷான்னத்தைக் கொண்டு, குருவுக்குக் கொடுத்து, அவரது அனுமதியின் பேரில் அவர் கொடுத்த மிகுதி அன்னத்தை, ஆசமனம் செய்து,  (மூன்று முறை மந்திரம் சொல்லி நீர் உண்ட பின், இரு முறை நீரால் வாயைத் துடைக்க வேண்டும். கண், காது, மூக்கு, தோள், மார்பு, தலை இவற்றையும் தொட்டுத் துடைக்கவேண்டும்)கிழக்கு நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும்.–51-

தீர்க்காயுளை வேண்டுபவன் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும்.-கீர்த்தியை  விரும்புபவன் தெற்கு திசை  நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும்.-செல்வத்தை விரும்புபவன் மேற்கு திசை நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும்.-மோட்சத்தை விரும்புபவன் வடக்கு திசை நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும்.–52-

பிரம்மச்சாரி தினமும் ஆசமனம் செய்து, கிழக்கு நோக்கி அமர்ந்து வேறு நினைப்பின்றி உண்ண வேண்டும். உண்ட பிறகு கை கால்களை அலம்பிக் கொள்ள வேண்டும். முறைப்படி ஆசமனம் செய்து, நீரினால் இந்திரியங்களைத் துடைத்துக் கொள்ள வேண்டும்.–53-

எப்போதும் அன்னத்தை பூஜிக்க வேண்டும். அன்னத்தை நிந்திக்காமல்  சாப்பிட வேண்டும். மனத்திலுள்ள  கலக்கங்களை யெல்லாம் விட்டு விட்டு  சாப்பிட அமர வேண்டும். சாப்பிடும்போது நிர்மலமான மனத்தோடு சாப்பிட வேண்டும். இந்த அன்னம் எனக்கு எப்போதும் கிடைக்க வேண்டும்” என்று பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.–54-

இவ்வாறாக  தினமும் துதிக்கப்பட்டு உட்கொண்ட உணவு பலத்தையும் வீர்யத்தையும் அளிக்கும். மாறாக, துதிக்கப் படாமல் உட்கொண்ட உணவு பலத்தையும் வீர்யத்தையும் அழிக்கும்.–55-

எச்சிலான உணவை யாருக்கும் கொடுக்கக் கூடாது. மத்தியானமும் இரவும் உணவு உண்ண வேண்டும். அது தவிர நடுநடுவே சாப்பிட்டுக் கொண்டிருக்கலாகாது. மத்தியானமும் இரவும் சாப்பிடும் போது கூட அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக் கூடாது. எச்சில் கையோடு எங்கும் போகக் கூடாது.–56-

மிகுந்த படியாக, அளவுக்கதிகமாக சாப்பிடுவதால், ஆரோக்கியம் கெடும். ஆயுள் குறையும். சுவர்க்கம் முதலான புண்ணிய உலகங்களை அடைவதற்கு இது எதிரி. அதாவது அதிக அளவில் சாப்பிடுவது புண்ணியலோக பிராப்திக்கு தடையாகி விடும். அவ்வாறே நற்காரியங்களைச் செய்வதற்கும் இது தடையாகும். மேலும் உலகத்தாரின் தூற்றுதலுக்கும் ஆளாக  நேரிடும். எனவே அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது.–57-

பிராம்மணர் முதலானோர் பிரம்ம தீர்த்தத்தால் எப்போதும் ஆசமனம் செய்யவேண்டும். அன்றேல், காய தீர்த்தத் தாலோ  தேவ தீர்த்தத்தாலோ ஆசமனம் செய்யலாம். அதன்றி பித்ரு தீர்த்தத்தால் எப்போதும் ஆசமனம் செய்யலாகாது.–58-

பெருவிரலில்  முதல் பாகத்தில் பிரம்ம தீர்த்தம் உள்ளதாகவும், சுண்டு   விரலில் முதல் பாகத்தில்  காய தீர்த்தம் உள்ளதாகவும், விரல் நுனிகளில் தேவ தீர்த்தம் உள்ளதாகவும், பெருவிரல்சுட்டு விரல்களுக்கிடையே பித்ரு தீர்த்தம் உள்ளதாகவும் கூறப் டுகிறது.–59-

பிரம்ம தீர்த்தம் முதலானவைகளால் மூன்று முறைகள் ஆசமனம் செய்ய வேண்டும். உதடுகளை மூடிக் கொண்டு நீரினால் வாயைத் துடைக்க வேண்டும். பிறகு இடது கரத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு தலையில் இருக்கின்ற இந்திரியங்களான கண்கள், காதுகள், மூக்கு முதலியவைகளையும், மார்பையும் தலையையும் துடைக்க வேண்டும்.–60-

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ:  “சாரீரக பரிபாஷா” என்னும் ஸ்ரீ: யதீந்த்ர மத தீபிகை–

February 6, 2024

ஸ்ரீ:யதீந்த்ரமத தீபிகை என்னும் இந்த க்ரந்தமானது ஸ்ரீ:சோளஸிம்ஹபுரம் மஹாசார்யர் என்று ப்ரஸித்தி பெற்ற ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமியின் ப்ரதான சிஷ்யர்களில் ஒருவரான ஸ்ரீநிவாஸாசார்யரால் அருளப்பட்டது. இதில் விசாரிக்கப்பட்டுள்ள விஷயங்களே பகவத் ஸ்ரீ:இராமானுச ஸித்தாந்தம் என்று சொல்லப்படும் ஸ்ரீ வைஷ்ணவ ஸித்தாந்தத்தின் முக்கிய விஷயங்கள் ஆகும்.

இந்நூலில் மொத்தம் 10 அவதாரங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.

அபிநவ தசாவதாரமோ என்று வியக்கும்படி இக் க்ரந்தம் 10 அவதாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் அவதாரத்தில், பதார்த்தங்களின் பிரிவைக் காட்டி விட்டு பின் ப்ரத்யக்ஷப் ப்ரமாணம் விசாரிக்கப்படுகிறது. இரண்டாவது அவதாரத்தில் அனுமானம் விசாரிக்கப்படுகிறது. மூன்றாவது அவதாரத்தில் சப்தம் விசாரிக்கப்படுகிறது. இப்படி ப்ரமாணங்கள் விளக்கப்பட்ட பின், ப்ரமேயங்கள் விளக்கப்படுகின்றன. நான்காவது அவதாரத்தில் ப்ரக்ருதியும், ஐந்தாவது அவதாரத்தில் காலமும் விளக்கப்படுகின்றன. ஆறாவது, ஏழாவது அவதாரங்களில் முறையே நித்ய விபூதியும் தர்ம பூத ஞானமும் விளக்கப்படுகின்றன. எட்டாவது அவதாரத்தில் ஆத்மாவாகிற ஜீவன் விசாரிக்கப்படுகிறது. ஒன்பதாவது அவதாரத்தில் ஈச்வர தத்வம் விளக்கப்பட்டுள்ளது. 10வது அவதாரம் அத்ரவ்ய தத்வத்தினை விளக்குகிறது.

இந்நூலினை இவ்வாசிரியர் தாமே “சாரீரக பரிபாஷா” என்று அருளியுள்ளார். 

ஸ்ரீ வேங்கடேசம் கரி சைல நாதம் ஸ்ரீ தேவ ராஜம் கடிகாத்ரி ஸிம்ஹம்
கிருஷ்னேன சகம் யதிராஜம் இதே ஸ்வப்னே ச த்ருஷ்டன் மம தேசிகேந்த்ரன் -1-
யதீஸ்வரம் ப்ராணமாம் யஹம் வேதாந்தர்யம் மஹா குரும் கரோமி
பால போதார்த்தம் யதீந்த்ர மத தீபிகம்
–2-

ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமியின் ப்ரதான சிஷ்யர்களில் ஒருவரான ஸ்ரீநிவாஸாசார்யர் தாம் தொடங்கிய க்ரந்தம் நிர்விக்னமாக நிறைவு பெறுவதற்கும், பின்புள்ளார் அனுஸந்திப்பதற்கும் முதலில் இஷ்ட தேவதா நமஸ்காரமாக ச்லோகம் அருளிச்செய்கிறார்.

அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல்மங்கையுறை மார்பனான ஸ்ரீநிவாஸனையும், ஹஸ்திகிரியில் எழுந்தருளியிருக்கும் கச்சி தேவப்பெருமாளையும், கடிகாத்ரி மலையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீநரஸிம்ஹனான அக்காரக்கனியையும், கீதாசாரியனான கண்ணன் எம்பெருமானையும், ஸித்தாந்த ஸ்தாபகரான எம்பெருமானாரையும், ஸ்வப்னத்தில் ஸேவை ஸாதித்தருளிய மஹாசார்யரையும் அடியேன் வணங்குகிறேன்.

  • இந்த ஸ்வாமிக்கு அவர்தம் ஆசார்யரான ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமி ஸ்வப்னத்தில் ஸேவை ஸாத்திதருளி இக்க்ரந்தம் அருள நியமித்தார் என்பது ப்ரஸித்தம்.
  • ஸ்வாமி திருமலையில் நெடுநாட்கள் கைங்கர்யம் செய்ததால் முதலில் ஸ்ரீவேங்கடாசல நாயகனான ஸ்ரீநிவாஸன் என்று தொடங்கினார் என்னவுமாம்
  • ஸ்ரீநிவாஸன் எனத்தொடங்கி எம்பெருமானார் நடுவாக தமது ஆசார்யரான மஹாசர்யர் பர்யந்தமாக அருளியதால் இந்த ச்லோகம் லக்ஷ்மீநாத ஸமாரம்பாம்…. அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் என்று குருபரம்பராநுஸந்தானமும் அருளிச் செய்தாராயிற்று.
    • தண்ணார் வேங்கடம் – குளிர்மிக்கு இருந்துள்ள திருமலை. ரக்ஷகனுக்கு ரக்ஷ்ய வர்க்கம் பெறாமையால் வரும் தாபத்தையும், இங்குள்ளார்க்கு ரக்ஷகனைப் பெறாமையால் வரும் தாபத்தையும் தீர்க்கவற்றாய் இருக்கை. (தி. வா. மொழி 1-8-3)
    • வட வேங்கடம் – உபயவிபூதிக்கும் நடுவான (திரு. நெடு – 16)
    • சீரார் திருவேங்கடமே – நித்யஸூரிகளுக்கும் ஸம்ஸாரிகளுக்கும் ஒக்கமுகங்கொடுத்துக் கொண்டு நிற்கிற நிலையாய் ஏற்றம் உண்டிறே திருமலைக்கு – (சி. திருமடல்)
    • வேங்கடவன் – அர்ச்சாவதாரத்துக்குப் பொற்கால் பொலிய விட்ட இடம். (அமலனாதிபிரான் – 1 நாயனார் வ்யா) – இத்யாதி ஏற்றம் பெற்றதிறே திருமல(க்ருஷ்ணேந ஸஹ யதி ராஜம்) என்பது இன்சுவை மிக்கது.
    • க்ருஷ்ணன் கீதாசாரியன், கீதை அருளியவன். ஸ்வாமி அதற்கு செம்மைப் பொருள் பாரினில் தெரிய வ்யாக்யானம் அருளியவர்.
    • அவன் பலராமானுஜன். இவர் இராமானுசர்.
    • அவன் மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரை பிறந்தான். இவர் மேதினி (பூமி) நம் சுமை ஆறும் எனத் துயர்விட்டு விளங்க (பூமாதேவி நல்லவர்களைத் தாங்குவது எளிது. தீயவர்களை சுமப்பது மிகவும் சுமையாகக் கருதுபவள். எம்பெருமானார் திருவவதரித்ததால் அனைவரும் திருந்தி விட்டதால் தம் சுமை நீங்கியது என ஆறி இருந்தாள். அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே – நாரணற்காயினரே) திருவவதரித்தார்.
    • க்ருஷ்ணனின் மாமாவான கம்ஸன் ஸாரதியாய் தேரோட்டினான்; க்ருஷ்ணனும் பார்த்தஸாரதியாய் தேரோட்டினான் – ஸ்வாமியின் மாதுலரான பெரிய திருமலை நம்பி திருவேங்கடமுடையானுக்கு தீர்த்த கைங்கர்யம் செய்தார் – ஸ்வாமியும் சாலைக்கிணற்றிலிருந்து தீர்த்த கைங்கர்யம் செய்தார்.
    • அவன் – கருந்தெய்வம், இருளன்ன மாமேனி கொண்டவன்; ஸ்வாமி – [உத்யத்திநேசநிபமுல்லஸதூர்த்த்வ புண்ட்ரம் ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே] (உதிக்கும் ஸூரியனை ஒத்ததும் திருமண்காப்பு துலங்குவதுமான தேவரீர் திருமேனி) என்றபடி உதிக்கும் ஸூரியனை ஒத்த திருமேனியை உடையவர்
    • யதீச்வரம் ப்ரண்ம்யாஹம் வேதாந்தார்யம் மஹாகுரும் |
      கரோமி பாலபோதார்த்தம் யதீந்த்ரமத தீபிகாம் || 2
    • யதிகளுக்கெல்லாம் தலைவரான எம்பெருமானாரையும், வேதாந்தாசாரியரையும், தமது ஆசாரியரான மஹாசாரியரையும் வணங்கி, பாலர்களும் அறிந்து கொள்ளும் பொருட்டு  யதீந்த்ர மத தீபிகை என்னும் இந்த க்ரந்தத்தை இயற்றுகிறேன்.
    • இதனால் இந்த க்ரந்தத்தில் அருளும் அர்த்தம் குரு பரம்பராப்ராப்தமானது என்பதைக் காட்டியருளினாராயிற்று.
    • யதீந்த்ரர் என்றால் யதிகளுக்கு அரசர் என்றர்த்தம். இத் திருநாமம் கச்சி தேவப்பெருமாளால் ஸ்வாமிக்கு ஸந்யாஸ ஆச்ரமத்தை ஸ்வீகரிக்கும் பொழுது அனுக்ரஹிக்கப்பட்டது. பெரிய திருமொழித் தனியனிலும் எம்பெருமானாரை “தவராசா” என்றது காண்க.
    • பாலர்கள் என்றால் தத்வத்தை அறிந்து கொள்வதில் ஆசையுள்ளவர்கள் என்றபடி. மீமாம்ஸா பரிபாஷா முதலான க்ரந்தங்களிலும் பாலர்கள் என்பது இவ்வர்த்ததில் ப்ரயோகப்படுத்தியிருப்பது காண்க
    • ஸ்ரீமந் நாராயண ஏவ சிதசித் விசிஷ்டாத்வைதம் தத்வம், பக்தி ப்ரபத்திப்யாம் ப்ரஸன்ன ஸ ஏவ உபாய: இதி வேதாந்த வாக்யை: ப்ரதிபாதயதாம் வ்யாஸ போதாயன குஹதேவ பாருசி ப்ரஹ்மநந்தி ட்ரமிடாசார்ய ஸ்ரீபராங்குச நாத யாமுன முனி யதீச்வர ப்ரப்ருதீநாம் மதாநுஸாரேண பால போதனார்த்தம் வேதாந்த அநுஸாரிணி யதீந்த்ர மத தீபிகாக்யா சாரீரக பரிபாஷா மஹாசார்ய க்ருபாவலம்பினா மயா யதா மதி ஸங்க்ரஹேண ப்ரகாச்யதே || 3 ||
    • க்ரந்தத்தின் ஆதியில், மங்களாசாஸனம், நமஸ்காரக்ரியா ஆகியவை தவிர அக்க்ரந்தத்தில் தெரிவிக்கப்படும் விஷயத்தையும் அறிவிப்பது சாஸ்த்ரக்ரமம். ஆகையாலே முதலில் ஸித்தாந்தத்தை ஸங்க்ரஹிக்கிறார் –
    • அறிவுள்ள சேதனர் எனப்படும் சித், அறிவற்றவையான அசித் இவையிரண்டையும் தனக்கு, பிரிக்க முடியாத விசேஷணங்களாக, ப்ரகாரமாக உடையவனான பெரிய பிராட்டியாருடன் கூடியவனான நாராயணன் ஒருவனே தத்வம். இதனையே பரமாசாரியாரன ஸ்வாமி நம்பிள்ளை ஈட்டில் “நம் தர்சனத்துக்குத் தத்வங்கள் மூன்று. அவையாவன – சித்தும், அசித்தும், ஈச்வரனும். ப்ரகார ப்ரகாரிகள் ஐக்யத்தாலே ஒன்றென்னலாய், ஸ்வரூப பேதத்தாலே பலவென்னலாயிருக்கும்.” என்றருளினார். ப்ரகாரம் என்றால் பிரிக்க முடியாத விசேஷணம் என்றபடி.  “குண்டலங்களை அணிந்த புருஷர் வருகிறார்” – என்ற வாக்கியத்தில் குண்டலங்கள் விசேஷணமாக இருந்தாலும் அதனை விசேஷ்யமான புருஷனிடமிருந்து பிரித்துவிடலாம். ஆனால் *அந்தர் பஹிச்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயணஸ்தித:* என்று உள்ளும் புறமும் ஒக்க வ்யாபித்திருக்கும் நாராயணனுக்கு, சித் அசித் ஆகிய இரண்டும் பிரிக்க முடியாத விசேஷணங்களாகின்றன. எனவே அவை ப்ரகாரங்கள் ஆகின்றன. இதையே அப்ருதக்ஸித்த விசேஷணம் என்று அழைப்பர்.
    • இதனையே திருமழிசைப் பிரான் * உலகு நின்னொடொன்றி நிற்க * என்றார். இங்கு ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையினுடைய வ்யாக்யானம்.” ஜகத்து உனக்கு சரீரமாகையாலே உன்னைப் பிரியாதே நிற்க ” அதாவது ப்ரபஞ்சம் முழுவதும் சரீரியான உன்னோடு சரீரமாய் அணைந்து நிற்க என்றபடி.
    • தானே எரிசுடரும் மால்வரையும் எண்திசையும் அண்டத்திருசுடருமாய இறை (சுடர் விடும் அக்னியும் பெரிய குலபர்வதங்களும் எட்டுத் திக்குக்களும் அண்டத்தினுள்ள சந்த்ர சூர்யர்களும் தனக்கு ப்ரகாரமாயிருக்கப் பெற்ற எம்பெருமான்) என்றார் மஹதாஹ்வயரான பேயாழ்வார். தானே என்ற ஏகாரத்தினால் இப்படி இருப்பவன் ஒருவனே – வேறுயவனுமில்லை என்றருளினாராயிற்று
    • ஜ்யோதீம்ஷி விஷ்ணுர் புவநாநி விஷ்ணு:
    • வநாநி விஷ்ணுர் கிரயோ திசச்ச |
    • நத்ய: ஸமுத்ராச்ச ஸ ஏவ ஸர்வம்
    • யதஸ்தி யந்நாஸ்தி ச விப்ரவர்ய || (ஸ்ரீ வி.பு – 12-12-38)
    • ஸ்ரீ பராசர பகவானும் ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே “அந்தணர் தலைவரே! (மைத்ரேயரே!) சோதிகளும் விஷ்ணுவே; உலகங்களும் விஷ்ணுவே; வானங்களும் விஷ்ணுவே; வனங்களும், மலைகளும், திசைகளும் , நதிகளும், ஸமுத்ரங்களும் விஷ்ணுவே; நிலையானதாகையால் உள்ளதெனப்படும் சேதனமும், நிலையற்றதாகையாலே இல்லதெனப்படும் அசேதனமும் ஆகிய எல்லாம் அவனே” என்று ஸகல பதார்த்தங்களும் தனக்கு ப்ரகாரமாய், தான் ப்ரகாரியாய், தன்க்கு ஒரு ப்ரகார்யந்தரமன்றிக்கே இருக்கக்கடவன் ஸர்வேஸ்வரன் என்பதனை அருளினார்.
    • (த்வயோர்பாவத் த்விதா – த்விதம்; த்விதைவ த்வைதம்; நாஸ்தி த்வைத யஸ்மின், ததத்வைதம்; சிதசிதோர்ப்ருதக்ஸித்தவிசேஷணத்வேந ப்ரஹ்மண்யண்தர்பூதத்வாத் விசிஷ்டம் ஏகமேவ தத்த்வம் இத்யர்த்த🙂 இரண்டாகப் பாவிப்பது த்விதம் – இரண்டு என்பது த்வைதம் – இரண்டாவது இல்லை என்பது அத்வைதம் – சித் அசித் ஆகியவற்றைத் தனக்கு சரீரமாகக் கொண்ட வஸ்துவான ப்ரஹ்மத்தைப் போன்று இரண்டாவது வஸ்து இல்லை என்பது விசிஷ்டாத்வைதம்.
    • இப்படி இருக்கும் பரமபுருஷனான ஸ்ரீமந்நாராயணனே பக்தி, ப்ரபத்தி எனும் இரண்டில் ஒன்றினால் அகமகிழ்ந்து, தானே உபாயமாகிறான். உபாயமாகிறான் என்றது மோக்ஷம் அளிக்கிறான் என்றபடி. இப்படி மோக்ஷம் அளிக்கும் வல்லமை ஸ்ரீமந்நாராயணனுக்கே உண்டு. ஆழ்வார் தாமும் எம்பெருமானுடைய பரத்வத்தை அறிவிக்க நாலு திருவாய்மொழிகளை அருளிச் செய்தார் (உயர், திண், அணை, ஒன்று என்று ஆசார்ய ஹ்ருதயத்தில் அவை காட்டப்பட்டுள்ளது காண்க). அவற்றுள் அணைவது அரவணை மேல் என்னும் திருவாய்மொழியில் மோக்ஷப்ரதத்வம் என்னும் குணத்தையே ஆழ்வார் காட்டியருளினார். ஸ்ரீமத் வரவரமுனிகளும் இத்திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி அருளிச்செய்யுமிடத்து, இது தன்னையே குணந்தனையே என்றருளினார்.
    • ப்ரக்ருதிக்கு அப்பாற்பட்டதான தேசவிஷேஷமான பரமபதத்தில் இருக்கும் அவ்வெம்பெருமானே மோக்ஷத்தில் அடையப் பெரும் பொருளாகிறான். இது அப்ராக்ருதம் என்றதினால், இந்த தேசம், அங்கு கிடைக்கும் பலன் ஆகியவை அழியாதது என்ற அர்த்தம் கிடைத்தாயிற்று. ப்ராக்ருதம் – ப்ரக்ருதி ஸம்பந்தமுடையது; அப்ராக்ருதம் – அது இல்லாதது. இத்தால் ப்ரக்ருதி மண்டலம் போல ஸத்த்வ, ரஜஸ், தமோ குணங்கள் சேர்ந்தது இல்லாமல் சுத்த ஸத்வமாய் உள்ளது என்றதாயிற்று. * சோதி விண் * என்றபடி. ஸ்ரீமத் வரவரமுனிகளின் தத்வத்ரய வ்யாக்யானம் – ஸூ 79 இது விளக்கப்பட்டுள்ளது காண்க.
    • ஆக இவ்வளவினால் தத்வ, ஹித, புருஷார்த்தங்களை அருளினாராயிற்று. தத்வம் -> சிதசித் விசிஷ்ட ப்ரஹ்மம்; ஹிதம் -> எம்பெருமானின் அருள்; புருஷார்த்தம் -> ஸ்ரீவைகுண்டத்தில் அவனைக் கிட்டி அங்கு பெறும் வாழ்வு.
    • இதனால் எம்பெருமானே உபாயம்; அவனே உபேயம் என்பதனை தெரிவித்தருளினாராயிற்று. புல்லைக் காட்டி அழைத்து புல்லை இடுவாரைப் போலே பலஸாதநங்களுக்கு பேதமில்லை என்கிற ஸ்ரீவசன பூஷண ஸ்ரீஸுக்தி இங்கு நினைக்கத் தக்கது.
    • இது தன்னையே வேதாந்த வாக்யங்கள் ப்ரதிபாதிக்கின்றன. மேலும் ஆசாரியர்களும் இது தன்னையே கைக் கொண்டார்கள். அவ்வாசார்ய பரம்பரையை அனுஸந்திக்கிறார்.
    • இவர்கள் அனைவருமே மேலே கூறிய மதத்தையே ஆசரித்திருக்கிறார்கள். அவர்களுடைய மதத்தை அனுஸரித்து “யதீந்த்ர மத தீபிகை” என்னும் சாரீரக பரிபாஷையானது என் ஆசாரியரான ஸ்வாமியின் க்ருபையால் சிறுவர்களுக்கு ஞானம் உண்டாவதற்காக செய்யப்படுகிறது. ஸ்ரீ பாஷ்யத்திற்கு சாரீரக மீமாம்ஸா பாஷ்யம் என்றே பெயர். ஸமஸ்த சேதனாசேதனங்களும் எம்பெருமானுக்கு சரீரம்; எம்பெருமான் சரீரி – சாரீரனைப் பற்றிக் கூறும் சாஸ்த்ரம் ஆகையாலே இது சாரீரகம். (யஸ்ய ப்ருதிவீ சரீரம்) என்றாம்பித்து (யஸ்யாத்மா சரீரம்) என அனைத்தையும் ப்ரஹ்மத்திற்கு சரீரமாக ஸ்ருதி சொன்னது.
    • நம்மாழ்வாரைக் குறிப்பிடும் பொழுது மட்டும் “ஸ்ரீ” சேர்க்கப்பட்டது காண்க. ருஷிகளில் காட்டிலும் இவருக்கு உண்டான ஏற்றம் ஆசார்ய ஹ்ருதயத்தில் காட்டப்பட்டுள்ளது இங்கு ஸ்மரிக்கத் தக்கது.
    • (வேதாந்த வாக்யை:) என்ற பஹுவசனத்தினால் (பன்மையினால்), சிலரைப் போன்று, ஒன்று இரண்டு வாக்யங்களை முக்யமாகக் கொண்டு ஸித்தாந்தம் செய்வதில்லை. வேதத்தில் உள்ள வாக்யங்கள் அனைத்தையும் கொண்டு தான் ஸித்தாந்தம்  செய்யப்பட்டுள்ளது என்பதைக் காட்டியருளினார் ஆயிற்று. ஸ்வாமி எம்பெருமானாரும் தம்முடைய வேதார்த்த ஸங்க்ரஹத்தில், இதே ரீதியில் வேதாந்த வாக்ய ஜாதம் (வேதாந்த வாக்யங்களின் கூட்டங்கள்) என்றார்.
    • வ்யாஸரை இவரது ஆசார்யரான ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமியும் தமது பாராசர்ய விஜயத்தில்
    • வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் | ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||
    • என்னும் ஶ்லோகத்தினால் கொண்டாடியிருப்பது குறிக்கத்தக்கது. அதாவது “வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே, அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான்.” என்றபடி.
    • ———————
    • ஸர்வம் பதார்த்த ஜாதம் ப்ராமாண ப்ரமேய பேதேன த்விதா பிந்நம் ॥ 4
    • இனி க்ரந்தம் ஆரம்பிக்கப்படுகிறது. முதலில் வஸ்துக்களின் பிரிவினைக் காட்டி விட்டு பின் ஒவ்வொன்றாக எடுத்து விளக்க உள்ளார். அனைத்து வஸ்துக்களயும் ப்ரமாணம், ப்ரமேயம் என்று இரண்டாகப் பிரிக்கலாம்.
    • ப்ரமாணாணி த்ரீண்யேவ | ப்ரமேயம் த்விவிதம், த்ரவ்யத்ரவ்யபேதாத் ॥ 5
    • ப்ரமாணம் – உள்ளதை உள்ளபடி அறிய உதவுவது; ப்ரமேயம் – ப்ரமாணத்தால் அறியப்படுவது. ப்ரமாணங்கள் மொத்தம் மூன்று – 1) ப்ரத்யக்ஷம், 2) அனுமானம், 3) ஶப்தம். ப்ரமேயத்தை மொத்தம் இரண்டாகப் பிரிக்கலாம். 1) த்ரவ்யம் – மாறும் நிலைகளையுடைய பொருள்; 2) அத்ரவ்யம் – த்ரவ்யங்களின் நிறம், சுவை முதலிய தன்மைகள்.
    • அழகிய மணவாளச் சீயரும் தம்முடைய தத்வ நிரூபணத்தில் “இவற்றில் ப்ரத்யக்ஷத்தையும், அநுமாநத்தையும், ஆகமத்தையும் இம்மூன்றையும் வைதிகர் ப்ரமாணமாக பர்க்ரஹிக்கிறவளவிலே…” என்றருளிச் செய்தது இங்கு குறிக்கொள்ளத்தக்கது..
    • ப்ரமேயம் – ப்ரமாணத்தால் அறியப்படுவது என்று ஸாதாரணமாகச் சொன்னாலும், முமுக்ஷுக்களுக்கு சிதசித் விலக்ஷணான பரமாத்மாவே ப்ரமேயம் என்பது அறியத் தக்கது.
      • கற்பார் இராமபிரானையல்லால் மற்றும் கற்பரோ – ஈடு ஸ்ரீ ஸூக்தி – இவ்விஷயத்தையொழியப் புறம்பு கற்குமது கல்விக்கு உடலல்ல என்றிருக்கிறார். தத்ஜ்ஞாநமதோந்யதுக்தம் என்றானிறே. பகவல்லாபத்துக்குஉடலான ஜ்ஞாநம் ஜ்ஞாநமாகிறது; அல்லாதது அஜ்ஞாநமென்னக்கடவதிறே
      • ஸர்வம் -வஸ்து –பிரமாணம் ப்ரமேயம் -என்ற இரண்டு
      • பிரமாணம் -ப்ரத்யக்ஷம் -அனுமானம் -சப்தம் -என்ற மூன்றும்
      • ப்ரமேயம்-த்ரவ்யம் அத்ரவ்யம் என்ற இரண்டும்
      • த்ரவ்யம் த்விவிதம் ஜடமஜடம் சேதி ॥ 6
      • த்ரவ்யத்தை ஜடம், அஜடம் என்று இரண்டாகப் பிரிக்கலாம். ஜடமாவது – வேறொரு ஜ்ஞானத்தால் மட்டுமே தோன்றக்கூடியது; அஜடமாவது – தானாகவே ப்ரகாஶிப்பது.
      • ஜடம் ச த்விவிதம், ப்ரக்ருதி காலச்சேதி । ப்ரக்ருதிச் சதுர்விம்ஶதி தத்வாத்மிகா । காலஸ்து உபாதி பேதேந த்ரிவித: ॥7
      • ஜடத்தின் பிரிவுகள் இரண்டு – ப்ரக்ருதி மற்றும் காலம். ப்ரக்ருதி – 24 தத்வங்களாவது; சூரியனுடைய உபாதி பேதத்தால் காலம் மூன்று – 1) பூத (இறந்த காலம்), 2) பவிஷ்ய (வருங்காலம்); 3) வர்த்தமான (நிகழ் காலம்) காலங்கள்.
      • அஜடம் து த்விவிதம், பராக் ப்ரத்யக் சேதி। பராகபி த்விவிதா-நித்ய விபூதி:, தர்ம பூத ஞானம் சேதி। ப்ரத்யகபி த்விவிதா: – ஜீவேஶ்வர பேதாத்॥ 8
      • அஜடம் இருவகைப்படும் – 1) ப்ரத்யக் மற்றும் 2) பராக். ப்ரத்யக் – தன்னைப் பற்றிய ஜ்ஞானம் தனக்கு வருமாறு உள்ள பொருள். பராக் – தன்னப் பற்றின ஜ்ஞானம் மற்றொன்றிற்கே வருமாறு உள்ள பொருள் (ஜீவனையும், ஈஶ்வரனையும் தவிர அஜடப் பொருள்கள் அனைத்தும் இந்தப் பிரிவின் கீழ் வரும்)
      • நித்ய விபூதியும் தர்மபூத ஞானமும் பராக் –
      • ஜீவனும் பரமாத்மாவும் ப்ரத்யக்
      • ஜீவ: த்ரிவித: பத்த முக்த நித்ய பேதாத் ॥  9
      • ஜீவர்கள் மொத்தம் மூன்று வகை – பத்தர், முக்தர், நித்யர்.
      • பத்தர்க்கும் பரமபதத்திலிருக்கும் நித்யர்க்கும், முக்தர்க்கும் உள்ள படியினை ஸ்ரீ லோகதேசிகனான பிள்ளை லோகாசார்யர், அஷ்டாதச க்ரந்தங்களில் ஒன்றான அர்ச்சிராதியில் கீழ்க்கண்டவாறு அருளியுள்ளார்.
      • (அர்ச்சிராதி மூலம்) நித்யர் மற்றும் முக்தர், ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப (திருவாய் 4-9-10) என்கிறபடியே அவனுடைய செங்கோலே ஏகாதபத்ரமாக நடக்கும்படி அவனுடைய அபிமாநத்திலே அந்தர்பவித்துப் போருவர்கள்.  லீலாவிபூதியிலுள்ளார் அவர்களைப்போலே சந்தாநுவர்த்திகளன்றிக்கே ஸங்கல்பாநுவிதாயிகளாய் “நம இத்யேவ வாதிந:” என்கிறதுக்கு எதிராக, “ந நமேயம்”, “ஈஶ்வரோஹம்” என்கிறபடியே, மனையடைவே, “யானேயென்றனதே” என்று,
      • ஒண்டொடியாள் – அழகிய வளைகளை உடையவள்; கழலாத வளைகளை உடையவள் – அகலகில்லேன் இறையும் என இருப்பவளிறே; சங்கு தங்கு முன்கை நங்கையிறே; சீரார் வளை (திருப்பாவை – 6000 படி ஸ்ரீ ஸூக்தி) – வளைக்குச் சீர்மையாவது – கையில் நின்றும் கழலாதொழிகை. விஶ்லேஷவ்யஸநம் அநுபவியாத வளை. சங்குதங்குமுன்கை – ஒண் டொடியாள் திருமகள் திருமகளும் – பெரிய பிராட்டியாரும்; நீயுமே – எம்பெருமானுமே;  செங்கோல் – செம்மையான கோல்/ஆட்சி; ஏகாதபத்ரமாக –வேறு ஒருவனுடைய தலையீடு இல்லாமல்/ ஒரு குடைக்குக் கீழே; அபிமானம் – எம்பெருமானால் தன்னுடையவன் (மதீயர்கள்) என்று நினைக்கப்படுதல்;  சந்தாநுவர்த்திகளன்றிக்கே– எம்பெருமான் திருவுள்ளம் அறிந்து கைங்கர்யம் செய்பவர்களாய் இருக்கை தவிர்ந்து; ஸங்கல்பாநுவிதாயிகளாய் – ஸங்கல்பத்தைப் பின்செல்லுபவர்களாய்; நம இத்யேவ வாதிந: – இரண்டு கைகளையும் குவித்துக் கொண்டு வாயால் எப்போதும் நம: என்று சொல்லிக் கொண்டும் (நித்யர் மற்றும் முக்தர் படி)ந நமேயம் – ஒருவனையும் வணங்க மாட்டேன் (இராவணன் சொன்னது); ஈஶ்வரோஹம் – நானே ஈஶ்வரன் [பகவத் கீதை]; (லீலா விபூதியிலுள்ளார் படி);  மனை யடைவே – ஸம்ஸாரம் முழுவதும்; யானே யென்றனதே – அஹம்/மம, நான்/எனது என்றிருக்கும் இருப்பு
      • (மூலம்) அவர்கள் “பணியா அமரர்” (திருவாய் 8-3-6) யிருக்கும் இருப்புக்கெதிராக “மற்றோர் தெய்வம் பாடி ஆடிப் பணிந்து” (திருவாய் 4-10-7)
      • பணியா அமரர் – ஸ்ரீமந் நாராயணனைத் தவிர வேறு ஒருவனையும் வணங்காதே;
      • (மூலம்) “மிக்கார் வேத விமலர்” (திருவாய் 2-9-8) என்கிறபடியே, அவர்களைப்போலே “பெருமக்களாய்” (திருவாய் 3-7-4) இராதே “சிறியார் சிவப்பட்டார்” (நான். திரு 6) என்கிறபடியே சிறியாராய்
      • மிக்கார் – பகவதனுபவத்திலே எல்லாரைக் காட்டிலும் விசேஷமாண ஸ்வபாவம் உடையவர்களாய்; மலம் – அழுக்கு; விமலர் –தோஷமில்லாதவர்கள் வேத விமலர் –  வேதத்திலே விமலராய் சொல்லப்பட்டவர்கள்; சிறியார் – அல்ப்பர், சிறியார் – ஸ்வத:ப்ரமாணமான வேதத்தை விட்டு ஆகமத்தைக் கொண்டவர்கள் தாழ்சடையோன் சொற்கற்ற சோம்பர் என்னக்கடவதிறே.
      • (மூலம்)  “அயர்வறும் அமரர்கள்” (திருவாய் 1-1-1) என்கிறபடியே அவர்களைப்போலே திவ்ய ஜ்ஞாநோபபந்நராயிராதே அறிவிலா மனிசராய் (திருமாலை 13), ஒளிக் கொண்ட சோதிக்கெதிராக (திருவாய் 2-3-10) அழுக்குடம்பை (திருவிருத்தம் 1) பரிக்ரஹித்து,
      • அயர்வு – மறதி முதலானவைகள்; திவ்யஜ்ஞாநோபபந்நராயிராதே – திவ்யமான ஜ்ஞானம் உடையவராய் இராதே; ஒளிக்கொண்டசோதி – ரஜோகுணம் தமோகுணம் கலசாதே ஸுத்தசத்வ திவ்ய மங்கள விக்ரஹம்;
      • (மூலம்)  விபந்யவ: விண்ணோர் பரவுந்தலைமகன் (திருவாய் 2-6-3) என்றதுக்கெதிராக உலகில் கண்டவா தொண்டரைப் பாடி (பெரிய திருமொ 1-1-7),
      • விபந்யவ: – விசேஷமாக எம்பெருமானைத் துதிப்பவர்கள்; விண்ணோர் பரவுந்தலைமகன்  – நித்ய ஸூரிகளால் துதிக்கப் படுபவன்; உலகில் கண்டவா தொண்டரைப் பாடி – கண்ட ஆ – தன்னை ஸ்தோத்திரம் பண்ண இச்சை உடையவர்களை பாடி, திருவாய்மொழி ஈட்டில் ஒரு அற்புதமான கதை த்ருஷ்டாந்தமாக இவ் வர்த்ததிற்கு எடுக்கப்பட்டுள்ளது இங்கு நோக்கத் தக்கது
      • (மூலம்) உனக்கே நாமாட்செய்வோம் (திருப்பாவை 29) என்கிறபடியே அவனுக்காட் செய்யாதே மாரனார் வரிவெஞ்சிலைக்காட்செய்து (பெரு திரு 3-3)தொண்டுபூண்டமுதமுண்ணாதே (திருமாலை 5) பாவையர் வாயமுதமுண்டு (பெரிய திருமொ 1-3-5),
      • உனக்கே நாமாட்செய்வோம் – உனக்கும் எங்களுக்குமாயிருக்கிற இருப்பைத் தவிர்ந்து “தனக்கேயாக” என்னுமா போலே கொள்ள வேணும் (திருப்பாவை 6000படி ஸ்ரீ ஸுக்தி); மாறன் – மன்மதன்;
      • (மூலம்) ஸ ஏகதா பவதி என்கிறதுக்கெதிராக குலந்தானெத்தனையும் பிறந்து (பெரிய திருமொ 1-9-4), உருவார் சக்கரஞ்சங்கு சுமந்திங்கவனோடு ஒருபாடு உழலாதே (திருவாய் 8-3-7) ஆக்கையின் வழியுழன்று (திருவாய் 3-2-1),
      • ஸ ஏகதா பவதி – பரமபதம் செல்லும் முக்தாத்மா எம்பெருமான் ஸங்கல்பத்தாலே சரீரங்களை கொள்கிறான் – ஏனெனில் எம்பெருமானை ஒரு சரீரத்தால் அனுபவித்து முடிக்க முடியாமையாலே. பரம பதத்தில் இருப்பவர்கள் எம்பெருமானை அனுபவிப்பதற்காக சரீரம் கொள்கிறார்கள்; ஸம்ஸாரத்தில் உள்ளார் கர்மமடியாக பல சரீரங்களை எடுக்கிறார்கள் என்பது தாத்பர்யம்; உருவார் – அழகான; ஒருபாடு – ஒரு பக்கம்; அவனுடைய திருவாயுதங்களைச் சுமந்து கொண்டு அவனோடு போகாதே; ஆக்கை – உடம்பு; ஆக்கையின் வழியுழன்று  – சரீரத்தைக் கொடுத்து எம்பெருமானை அடை என்றால், சரீரம் செல்லும் வழி சென்று
      • (மூலம்) ஏதத் வ்ரதம் மம என்கிறவனுடைய வ்ரதத்துக்கெதிராக யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை (திருவிருத்தம் – 95) ஏறிட்டுக் கொண்டு, அவர்தருங் கலவியே கருதி ஓடினேன் (பெரிய திருமொ 1-1-1) என்கிறபடியே அலம்புரிந்த நெடுந்தடக்கைக்கும் (திரு நெடு – 6) எட்டாதபடி கைகழியவோடி, அற்பசாரங்களவை சுவைத்தகன்று (திருவாய் 3-2-6) போரக் கடவராயிருப்பர்கள்.
      • ஏதத் வ்ரதம் மம – ஒருக்காலே சரணம் அடைந்தார்க்கும் எல்லாராலும் வரக்கூடிய பயங்களைப் போக்குகிறேன் என்னும் பெருமாளின் வ்ரதம்; யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை – ஏதேனும் பற்றிக் கொண்டு நாம் எம்பெருமானை விட்டு நீங்கும் வ்ரதம்; ஏறிட்டுக் கொண்டு – இத்தால் இது (யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை) வந்தேறி என்றபடி – நானும் உனக்குப் பழவடியேன் என்பதே ஜீவாத்மாவின் உண்மையான நிலை; அலம்புரிந்த நெடுந்தடக்கைக்கும் – ஆச்ரிதர்கள் போதும் போதும் என்று சொன்னாலும் நிறுத்தாத நீண்ட நெடுங்கைகள்; எட்டாதபடி கை கழிய வோடி – அதற்கும் தப்பி; அற்பசாரம் – சப்தாதி விஷயங்கள்
      • பத்தோபி த்விவித: – புபுக்ஷுமுமுக்ஷுபேதாத்॥ 10
      • பத்தர் இருவகைப்படுவர் – புபுக்ஷு, முமுக்ஷு
      • புபுக்ஷுபி த்விவித: – அர்த்தகாமபரோ தர்மபரச்சேதி | தர்மபரோ த்விவித:- தேவதாந்தரபரோ பகவத்பரஶ்சேதி|| 11
      • புபுக்ஷுக்கள் இருவகை – அர்த்தபரர் மற்றும் தர்மபரர். தர்மபரர்கள் இருவகைப்படுவர் – தேவதாந்தரபரர் மற்றும் பகவத்பரர்கள்.
    • முமுக்ஷுபி த்விவித: – கைவல்யபரோ மோக்ஷபரச்சேதி | மோக்ஷபரோ த்விவித: – பக்த: ப்ரபந்நச்சேதி | ப்ரபந்நச்ச த்விவித: – ஏகாந்தீ பரமைகாந்தி சேதி | பரமைகாந்தீ த்விவித: – த்ருப்தார்தபேதாத் ॥12
    • முமுக்ஷுக்கள் இரண்டு வகைப்படுவர் – கைவல்யபரர் மற்றும் மோக்ஷபரர்கள்; மோக்ஷபரர்கள் பக்தர்கள் மற்றும் ப்ரபந்நர்கள் என்று இரண்டு வகைப்படுவர்கள். ப்ரபந்நர்கள் மறுபடியும் ஏகாந்தீ, பரமைகாந்தீ என இரண்டு வகைப்படுவர்கள். பரமைகாந்தீ த்ருப்தன் ஆர்த்தன் என இரண்டு வகைப்படுவர்.
    • மோக்ஷத்தில் இச்சையுடையவர்கள் முமுக்ஷுக்கள். மோக்ஷம் என்றால் பரமானந்தம் என்று நிகண்டு. அதாவது ப்ரஹ்மானுபவம்.
    • த்ருப்தன் – சரீரம் விடும்பொழுது மோக்ஷம் கிடைக்கட்டும் என ஆறி இருப்பவன்; ஆர்த்தன் – சரணாகதி செய்தயுடன் மோக்ஷம் வேண்டுபவன்
    • ஈஶ்வர: பஞ்சதா – பரவ்யூஹவிபவாந்தர்யாம்யர்சாவதாரபேதாத் | பர ஏகதா | வ்யூஹச்சதுர்தா – வாஸுதேவஸங்கர்ஷணப்ரத்யும்னாநிருத்தபேதாத் | கேசவாதி வ்யூஹாந்தரமத்ரைவாந்தர்பவதி | மத்ஸ்யாதயோ விபவா: புந: அநந்தா: | அந்தர்யாமி ப்ரதிஶரீரமவஸ்தித: | அர்சாவதாரஸ்து ஸ்ரீரங்கவேங்கடாத்ரிஹஸ்திகிரியாதவாத்ரி கடிகாசலாதிஷு ஸகலமனுஜநயநவிஷயதாம் கதோ மூர்த்திவிசேஷ: || 23
    • ஈஶ்வரன் பரம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்று ஐந்து ப்ரகாரமாக இருக்கிறான். பரமபத நாதனான பகவான் ஸ்ரீமந் நாராயணன் என்கிற ரூபம் ஒன்றுதான். * ஆதியஞ்சோதிவுரு * . இவ்வுருவில் இருந்தே மற்ற ரூபங்கள் தோன்றுவதினால் பரம் என்னப்பட்டது. வ்யூஹ ருபங்கள் – வாஸுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் என்று நான்கு. மத்ஸ்யம், கூர்மம் முதலான ரூபங்கள் விபவங்கள். அவை கணக்கற்றவை. அந்தர்யாமி நிலையாவது ஒவ்வொரு உடம்பிலும் அவர்கள் உபாஸிக்கும்படி அவர்கள் ஹ்ருதயத்தில், கட்டை விரல் அளவுள்ளதாய் இருக்கும் ரூபம். அர்ச்சாவதாரமாவது, ஸ்ரீரங்கம், திருவேங்கடம், முதலான திவ்யதேசங்களில் அனைவர் கண்களுக்கும் விஷயமாம்படி இருக்கும் நிலை.
    • தத்வத்ரயம் – 182, ஸ்ரீமத் வரவரமுனிகள் வ்யாக்யானம் இவ்வர்த்தம் அழகாக விளக்கப்பட்டுள்ளது காண்க.
    • விபவங்கள் அநந்தம் என்னுமிடம் தத்வத்ரயம் – 189வது சூர்ணிகையில் ” பரிகணித்துத் தலைக் கட்டப் போகாதபடி அநந்தமாய் ” என்ற வ்யாக்யான ஸ்ரீஸூக்தி கொண்டு நோக்க வேண்டியது.
    • அடலரவப் பகையேறி அசுரர் தம்மை வெல்லும் அவன் இவன் என்று பரமபதத்தில் இருக்கும் பெருமானே அர்ச்சாவதாரமாக உள்ளான் என்று கொண்டு அர்ச்சாவதாரமே முக்கியமாகக் கொண்டனர் நம் ஆசார்யர்கள். மற்றைய நிலைகளைக் காட்டிலும் இதன் ஏற்றம் * தமருகந்த அடியோமுக்கே என்னும் பின்னானார் வணங்கும் இடத்திலே எல்லாம் பூர்ணம் * என்னும் ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகையின் வ்யாக்யானத்தில் கண்டு கொள்வது.
    • இங்ஙனே த்ரவ்யம் பலவாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும்,
    • சிதசித் வஸ்துக்களை சரீரமாகக் கொண்டவன் என்பதினால் ஒன்று என்றும்,
    • ஆத்மா, அநாத்மா (ஆத்மா அல்லாதது – ஜீவனையும், ஈஶ்வரனையும் தவிர அனைத்தும்) என்ற பேதத்தால் இரண்டு என்றும்,
    • * போக்தா போக்யம் ப்ரேரிதாரம் ச மத்வா * என்ற ச்ருதியை அனுஸரித்து சித், அசித், ஈச்வரன் என மூன்றாகவும்,
      • இங்கு ” போக்தா போக்யம் ப்ரேரிதாரம் ச மத்வா என்று போக்த்ரு சப்தத்தாலும், போக்ய சப்தத்தாலும், ப்ரேரயித்ரு சப்தத்தாலும் சிதசிதீச்வர தத்வங்கள் மூன்றையுமிரே சொல்லுகிறது” என்னும் ஸ்ரீமத் வரவரமுனிகளின் தத்வத்ரய வ்யாக்யான ஸ்ரீஸுக்தி ஸ்மரிக்கத்தக்கது.
    • ப்ரக்ருதி, காலம், நித்யவிபூதி, தர்மபூதஜ்ஞானம், ஜீவன், ஈச்வரன் என ஆறாகவும் கொள்ளலாம்.
    • அத்ரவ்யம் து ஸத்வரஜஸ்தமச்ஶப்தஸ்பர்சரூபரஸகந்தஸம்யோகஶக்திபேதாத்தசதைவ || 24
    • அத்ரவ்யம் ஶப்தம், ஸ்பர்ஶம், ரூபம், ரஸம், கந்தம், ஸத்வம், ரஜஸ், தமஸ், ஸம்யோகம், ஶக்தி என 10 பிரிவுகளைக் கொண்டது.
    • —————–
    • ஏவமுத்தேச க்ரமேந பரீக்ஷா க்ரியதே |
    • இனி நிர்ணயித்த க்ரமத்திலேயே வஸ்துக்களைப் பற்றின லக்ஷணம் உரைக்கப்பட்டு அவை பரீக்ஷிக்கப் படுகின்றன. சாஸ்த்ர க்ரந்த விசாரங்கள் இந்த ரீதியிலே அமையும். முதலில் வஸ்துக்களை வரிசைப்படுத்தி, பின்பு அவற்றின் லக்ஷணமுரைத்து, அந்த லக்ஷணங்களை ஆராய்வது இந்த ரீதியிலேயே இருக்கும்.
    • இது தன்னை பெரிய ஜீயரும் தத்வத்ரய வ்யாக்யானத்தில் “உத்தேசம், லக்ஷணம், பரீக்ஷை என்று மூன்று வகைப்பட்டிறே தத்வ நிர்ணயக்ரமம் இருப்பது” என்றருளிச் செய்தார்
    • தத்ர ப்ரமாகரணம் ப்ரமாணம் | ப்ரமாணம் லக்ஷ்யம் | ப்ரமாகரணம் லக்ஷணம் | யதாவஸ்தித வ்யவஹாரானுகுணம் ஞானம் ப்ரமா || ப்ரமா லக்ஷ்யம் | யதாவஸ்தித வ்யவஹாரானுகுண ஞானத்வம் லக்ஷணம் | ஞானம் ப்ரமேத்யுக்தே ஶுத்திகாயாம் “இதம் ரஜதம்” இதி ஞானேSதிவ்யாப்தி: | அத உக்தம் வ்யவஹாரானுகுணம் ஞானமிதி | ஏவமபி தத்ரைவாதிவ்யாப்தி: ப்ராந்தி தஶாயாமிதம் ரஜதமிதி வ்யவஹ்ரியமாணத்வாத் | அத உக்தம் யதாவஸ்திதேதி |
    • ப்ரமாணம் விசாரிக்கப்படுகிறது. அதற்கு முன்பு லக்ஷணம் – லக்ஷ்யம் என்றால் என்ன என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஓரு வஸ்துவினிடத்திலேயே இருப்பதாய், அவ்வஸ்துவை மற்ற வஸ்துக்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவ் வஸ்துவின் லக்ஷணமாகும். அந்த லக்ஷணத்தால் அறிந்துகொள்வது லக்ஷ்யமாகும். இனி ப்ரமாணம் லக்ஷ்யமாமிடத்தில் – ப்ரமாகரணம் அதன் லக்ஷணம் ஆகும். அதாவது ப்ரமைக்கு கரணமாயிருப்பது. ப்ரமா லக்ஷ்யமாமிடத்தில் – ஒரு வஸ்துவை உள்ளபடி பேசுவதற்குக் (வ்யவஹரிப்பதற்கு) காரணமான அறிவு (அ) ஞானம் என்பது அதன் லக்ஷணம் ஆகும்.  ப்ரமைக்கு ஏன் ஞானம் என்று லக்ஷணம் உரைக்ககூடாது என்னில் – அப்படிக் கொண்டால் சுத்தி என்று சொல்லப்படும் முத்துச் சிப்பியினைப் பார்த்து வெள்ளி என்று தோன்றுவதும் ப்ரமை என்றாகிவிடும். இது அதி வ்யாப்தி எனும் தோஷமாகும். அதைத் தவிர்ப்பதற்காகவே ப்ரமைக்கு ஒரு வஸ்துவை உள்ளபடி பேசுவதற்கு (வ்யவஹரிப்பதற்க்கு) காரணமான அறிவு என்று லக்ஷணம் உரைக்கப்பட்டது.
    • லக்ஷணம், அதி வ்யாப்தி, முத்துச் சிப்பியினைப் பார்த்து வெள்ளி என்று தோன்றுகிற ஞானம் இவை அனைத்தும் மேலே விளக்கப்படவுள்ளன.
    • யதாவஸ்தித பதேன ஸம்சய அந்யதா விபரீத ஞான வ்யாவ்ருத்தி: | தர்மிக்ரஹணே மிதோ விருத்த அநேக விசேஷ ஸ்புரண ஸம்சய: | யதா ஊர்த்வதாவிசிஷ்டே ஸ்தாணூர்வா புருஷோ வேதி ஞானம் | அந்யதாஞானம் நாம தர்மவிபர்யாஸ: | யதா கர்த்ருத்வேன பாஸமானே ஆத்மநி குயுத்பி: கர்த்ருத்வஸ்ய ப்ராந்தத்வோபபாதனம் | விபரீத ஞானம் நாம தர்மவிபர்யாஸ: | யதா வஸ்துனோ வஸ்த்வநந்தர ஞானம் |
    • உள்ளதை உள்ளபடி வழங்குதல் என்றதினால் ஸம்சய ஞானம், அந்யதா ஞானம், விபரீத ஞானம் ஆகியவைகள் தள்ளப்பட்டன.
    • ஸம்சயம் என்றால் என் என்னில் – தர்மியை (தர்மி – பூ; தர்மம் – அதனுடைய  மணம்/நிறம்) க்ரஹிக்கும் பொழுது ஒரே சமயத்தில் விருத்தமான (ஒன்றுக்கொன்று விரோதமான) பல தர்மங்கள் (விசேஷணங்கள்) தோன்றுவது ஸம்சயம் ஆகும். உதாரணத்திற்கு நாம் இருட்டில் தூரத்தில் ஒரு வஸ்துவைப் பார்க்கிறோம். அது கை, கால்கள் கொண்ட மனிதன் போன்று தெரிகிறது. அதே சமயத்தில் அது கிளைகள் கொண்ட மரம் போன்றும் தோன்றுகிறது. இது தன்னையே ஸ்தாணுர் வா புருஷோ வ (மரமா அல்லது மனிதனா) என்று உரைப்பர்கள். ஒரே வஸ்துவினிடத்தில் மரத்தினுடைய விசேஷணங்களும், மனுஷ்யத்வமும் தோன்றுவதால் – இது ஸம்சயம் ஆகும்.
    • அந்யதா ஞானமாவது – தர்மியை க்ரஹிக்கும் விஷயத்தில் மாறாட்டம். ஒரு வஸ்துவினுடைய தர்மத்தை மாறாகக் க்ரஹிப்பது. கர்த்ருத்வம் எனப்படும் செயல்படும் தன்மையாவது ஆத்மாவின் (ஆத்மா – தர்மி; கர்த்ருத்வம் – தர்மம்) தர்மம் அன்று என்று தர்ம விஷயத்தில் மாறுபாடகக் கொள்வது அந்யதாஞானமாகும்.  இப்படி கர்த்ருத்வமாவது ஆத்மாவிற்கு கிடையாது என்று கொள்வது ஸாங்க்யர்கள் பக்ஷமாகும். அவர்கள் அதை ப்ரக்ருதிக்கேயுள்ளது என்கிறார்கள். அவர்களை நிரஸிக்கிறார். அப்படிக் கொண்டால் சேதனனைக் குறித்துக் கட்டளையிடும் வேத வாக்யங்கள் பயனற்றவையாகி விடும்.
    • இதன் விரிவினை தத்வத்ரய சூர்ணிகைகள் 31, 32 மற்றும் ஸ்ரீமத் வரவரமுநிகளின் வ்யாக்யானம் கொண்டு மேலும் அறிந்து கொள்ளலாம்.
    • விபரீத ஞானமாவது – தர்மியையே மாறாடி க்ரஹிக்கை. ஒரு வஸ்துவை க்ரஹிக்கும் பொழுது அந்த வஸ்துவையே தவறாகக் க்ரஹிக்கை. உதாரணமாக சுக்திகையை (சிப்பியை) ரஜதமென்று (வெள்ளியென்று) க்ரஹிக்கை, அல்லது தேஹத்தை ஆத்மா என்று கொள்ளுகை.
    • “அந்யதாஞானமாவது தேவதாந்தர சேஷமென்றிருக்கை. விபரீதஞானமாவது ஸ்வதந்த்ரமாகவும், ஸ்வபோக்யமாகவும் நினைத்திருக்கிற கேவலனைடைய ஞானம் என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்.” என்கிற ஈட்டு ஸ்ரீஸூக்தியும் (1-1-1 மயர்வற),
    • “சேஷத்வஸயைவ ஆத்மந ஸ்வரூபநிரூபகத்வாத் ததவிஹாய ஸ்வதந்த்ரத்வேநாநுஸந்தாநம் தர்மிவிபர்யாஸ இத்யபிப்ராயேணாஹ, விபரீதஞானமாவது யத்வா நிரதிசய போக்யத்தை பராபிக்கவேணுமென்று அபேக்ஷித்து, அந்த போக்யந்தான் ஏதென்று நிரூபித்து போக்யந்தானே என்று நிச்சயிக்கையினாலே கேவலன் போக்யத்திலே ஸ்வபேதாத்யவஸாயம் பண்ணுகிறான் அது தர்மயாரோபரூப விபரீதஜ்ஞாநமென்று திருவுள்ளம்.” என்று அதன் அரும்பத ஸ்ரீஸூக்தியும் நினைக்கத்தக்கது.
      • ஆத்மாவினுடைய தர்மமான பகவானுக்கு மட்டும் அடிமைப்பட்டு இருத்தல் என்பதை மாறாக தேவதாந்தரங்களுக்கு சேஷமாக நினைப்பதால் அது அந்யதாஞானம்.
      • கேவலனான கைவல்யார்த்தி பரம புருஷார்த்தத்தை நிச்சயிக்கும் பொழுது அதைத் தவறாக பகவானை அனுபவிக்காமல் தன்னைத் தானே அனுபவிப்பதாகிற சிற்றின்பமாகக் நிச்சயிப்பதால் அது விபரீத ஞானமாகும்.
    • அந்யதாஞானம் மற்றும் விபரீத ஞானம் இரண்டையும் சேர்த்து விபர்யயம் என்று சொல்வதுண்டு.
    • “*துயக்கு* என்கிற சப்தத்தால் சொல்லப்படும் *ஸ்தாணூர்வா புருஷோவா* என்கிறபடியே க்ராஹ்யவஸ்துவை இன்னதென்று நிச்சயிக்கமாட்டாத ஸம்சயமும், *மயக்கு* என்கிற சப்தத்தால் சொல்லப்படும் ரஜ்ஜூ சுக்த்யாதிவிஷய ஸர்ப்பரூப்யாதி புத்திபோலே அதஸ்மிந் தத்புத்தியகிற விபர்யமும்” – என்கிற ஸ்ரீமத்வரவரமுனிகளின் ஆசார்ய ஹ்ருதய (ஸூ – 98) வ்யாக்யான ஸ்ரீஸூக்தியும் நினைக்கத்தக்கது
    • லக்ஷணஸ்ய த்ரீணி தூஷணாநி ஸந்தி, அவ்யாப்திரதிவ்யாப்திரஸம்பவம் | லக்ஷயைகதேசே லக்ஷணஸ்யாவர்தனமவ்யாப்தி | லக்ஷாயதந்யத்ர வர்த்தமானத்வமதிவ்யாப்தி: | லக்ஷ்யே க்வாப்யவரதமனஸம்பவ | யதா ஜீவோ குணத்ரயவச்ய இத்யுக்தே அவ்யாப்தி:, ஞாநகுணக இத்யுக்தே அதிவ்யாப்தி:, சக்ஷுர்விஷயோ ஜீவ இத்யுக்தேSஸம்பவ ஏவ | அத்ரோக்ததூஷணத்ரயாபாவாத் ப்ரமாண லக்ஷணம் ஸுஸ்தம் |
    • லக்ஷணம் என்றால் ஓரு வஸ்துவினிடத்திலேயே இருப்பதாய், அவ்வஸ்துவை மற்ற வஸ்துக்களில் இருந்து வேறுபடுத்திக்காட்டுவது என்று முன்பு உரைக்கப்பட்டது. ஒரு வஸ்துவிற்கு லக்ஷணம் உரைக்கும் பொழுது, அந்த லக்ஷணத்திற்கு மூன்று விதமான தூஷணங்கள் (குற்றங்கள்) ஸம்பவிக்கலாம். அவை அவ்யாப்தி, அதிவ்யாப்தி மற்றும் அஸம்பவம் ஆகும்.
    • உதாரணத்திற்கு பசு மாட்டிற்கு லக்ஷணம் உரைக்கும் பொழுது வெள்ளை நிறமுடையது பசுமாடு என்று லக்ஷணம் உரைத்தால், மற்ற நிறமுடைய பசுக்கள் விடுபடும். இது அவ்யாப்தியாகும்.
    • கொம்புடையது மாடு என்று கொண்டால், ஆட்டிற்கும் கொம்பு இருப்பதால் அது அதிவ்யாப்தி ஆகும். அந்த லக்ஷணம் ஆட்டையும் சேர்த்துக் கொள்ளும்.
    • இரண்டு கால்கள் உள்ளது பசு மாடு என்றால், அது மாட்டையே குறிக்காததாகையால் அது அஸம்பவம் ஆகும்.
    • மூலத்தில் குறிப்பிட்டுள்ள உதாரணமாவது – ஜீவர்கள் முக்தர்கள், நித்யர்கள் மற்றும் பக்தர்கள் என் மூவகைப்படுவர்கள். ஜீவர்களுக்கு லக்ஷணம் சொல்லும் பொழுது – குணத்ரயவச்யர்கள் ஜீவர்கள் என்று கொண்டால் அது முக்தர்கள் மற்றும் நித்யர்களைக் குறிக்காது – ஆகையினால் அது அவ்யாப்தி ஆகும். ஞானத்தையுடையவன் என்று லக்ஷணம் சொன்னால் அது ஈச்வரனையும் குறிக்கும் ஆதலால், அது அதிவ்யாப்தி ஆகும். கண்ணால் பார்க்கப்படுபவன் ஜீவன் என்று சொன்னால் அது அஸம்பவம். ஒரு ஜீவனையும் கண்ணால் பார்க்க முடியாது.
    • இங்கு “இப்போது இவர்களுக்கு லக்ஷணம் – சேஷத்வத்தோடே கூடின ஜ்ஞாத்ருத்வம்.” என்கிற தத்வத்ரய சூர்ணிகையும் (61),
      • “சேஷத்வமாத்ரத்தை சொல்லில் அசித்வ்யாவ்ருத்தி ஸித்தியாமையாலும், ஜ்ஞாத்ருத்வமாத்ரத்தை சொல்லில் ஈச்வரவ்யாவ்ருத்தி ஸித்தியாமையாலும், சேஷத்வே ஸதி ஜ்ஞாத்ருத்வமே லக்ஷணம் என்கிறார்” என்கிற அதன் வ்யாக்யான ஸ்ரீஸுக்தியும் நினைக்கத்தக்கது.
    • இம்மூன்று தோஷங்களும் இல்லாதது லக்ஷணமாகும். ப்ரமைக்கு சொன்ன லக்ஷணமாவது இந்த மூன்று தோஷங்களும் இல்லாமல் உள்ளது.
    • ஸாதகதமம் கரணம் | அதிசயித ஸாதகம் ஸாதகதமம் | யஸ்மிந் ஸத்யவிலம்பேந ஞானமுத்பத்யதே தததிசயிதமித்யுச்யதே |
    • கரணம் என்பது ஸாதகதமம் ஆகும். அதாவது மிகுந்த உபகாரத்தைச் செய்வது. இவ்விடத்தில் ப்ரமை உண்டாவதற்கு தாமதமில்லாமல் மிகுந்த உபகாரத்தைச் செய்வது என்று கொள்ளல் வேண்டும். அதாவது ப்ரமா எனப்படும் உள்ளதை உள்ளபடி வழங்குதல் எனும் ஞானம் விரைவாக உண்டாவதற்கு உபகாரத்தைச் செய்வது.
    • இத்தால், ப்ரமாணம் என்பதன் லக்ஷணத்தை (ப்ரமா கரணம்) விரிவாக அருளிச் செய்தாராயிற்று.
    • ———-
    • தானி ப்ரமாணானி ப்ரத்யக்ஷானுமானஶப்தாக்யானி த்ரீண்யேவ | தத்ர ஸாக்ஷாத்காரிப்ரமாகரணம் ப்ரத்யக்ஷம் | அனுமானாதிவ்யாவ்ருத்த்யர்த்தம் ஸாக்ஷாத்காரிதி | துஷ்டேந்த்ரியவ்யாவ்ருத்த்யர்த்தம் ப்ரமேதி |
    • இப்படி விளக்கப்பட்ட ப்ரமாணமானது மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது – அவை (1) ப்ரத்யக்ஷம், (2) அநுமானம், (3) ஶப்தம். அவைகளில் நேராய் (ஸாக்ஷத்தாய்) வஸ்துவை அறிவதற்குக் காரணமாயிருப்பது ப்ரத்யக்ஷமாகும். ஸாக்ஷாத்காரி என்னும் சொல்லினால் அநுமானம், ஶப்தம் ஆகிய ப்ரமாணங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. தோஷமுள்ள இந்த்ரியங்களால் வருவதை ப்ரமாணம் என்று கொள்ளாமல் இருக்க லக்ஷணத்தில், ப்ரமை எனும் சொல் சேர்ந்திருக்கிறது.
    • அநுமானம், ஶப்தம் ஆகியவற்றின் விளக்கம், லக்ஷணம் ஆகியவை மேலே அவதாரங்களில் வரப் போகின்றன. இப்போதைக்கு ஸாக்ஷத்தாய் (நேராய்) வஸ்துவை அறிவது ப்ரத்யக்ஷத்தால் என்று கொள்வது.
    • துஷ்ட இந்த்ரியத்திற்கு எடுத்துக்காட்டு காமாலை நோய் வந்தவனின் கண்கள். அதைக் கொண்டு பார்த்தால் வெண்சங்கும் மஞ்சளாகத் தெரியும். அதனை ப்ரமை விலக்குகிறது.
    • ப்ரமையின் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டது.
    • தச்ச ப்ரத்யக்ஷம் த்விவிதம் – ஸவிகல்பகநிர்விகல்பகபேதாத் | நிர்விகல்பகம் நாம குணஸம்ஸ்தானாதிவிஶிஷ்டப்ரதமபிண்டக்ரஹணம் | ஸவிகல்பகம் து ஸப்ரத்யவர்ஷம் குணஸம்ஸ்தானாதிவிஶிஷ்டத்விதீயாதிபிண்டக்ரஹணம் | உபயமப்யேதத் விஶிஷ்டவிஷயமேவ | அவிஶிஷ்டக்ராஹிண: ஞானஸ்யானுபலம்பாத் அனுபபத்தேச்ச |
    • இந்த ப்ரத்யக்ஷ ஞானமானது இரண்டு வகை.
    • நிர்விகல்பகம்
    • ஸவிகல்பகம்.
    • நிர்விகல்பகமாவது ஒரு வஸ்துவை முதன் முதலில் அறிவது. அப்போதும் ஆகாரத்துடனும், குணங்களுடனும் கூடவே அதை அறிகிறோம். ஸவிகல்பகமாவது அதே வகுப்பைச் சேர்ந்த வஸ்துவை பின்னர் அறியும் பொழுது உண்டாகும் ஞானமாகும். இப்போதும் வஸ்துவின் ஆகாரத்துடனும், குணங்களுடனும் கூடவே அதை அறிகிறோம்.  இப்படி இரண்டாவதாக அறிவதினால் (ஸவிகல்பக ஞானத்தால்) முதலில் அறியப்பட்ட வஸ்து நினைவில் வந்து, சில அமைப்புக்கள் இந்த வஸ்துவின் வகுப்பிற்கே பொது என்னும் ஞானம் உண்டாகிறது.
    • உதாரணமாக முதன் முதலில் ஒரு பசுமாட்டைப் பார்க்கிறோம். அப்போது நமக்கு பசுவின் ஸம்ஸ்தானம் – அமைப்புகள், தெரிந்து அவற்றைக் க்ரஹித்துக் கொள்கிறோம். இப்பொழுது எல்லாப் பசுக்களுக்கும் இந்த அமைப்புக்கள் இருக்கும் என்பதை அறியமாட்டோம். இது நிர்விகல்பகம் ஆகும்.
    • பின்பு சிறிது காலம் கழித்து வேறு ஒரு பசுமாட்டைப் பார்க்கும் பொழுது, கோத்வம் முதலிய விசேஷணங்கள் மற்றும் ஸம்ஸ்தானங்கள் பசு வகுப்பிற்கே பொதுவானவைகள் என்று அறிந்து கொள்கிறோம்.
    • இவ்விருவகையிலும் வஸ்துவின் ஆகாரத்துடனும், குணங்களுடனும் கூடவே அதை அறிகிறோம்.  விசேஷணங்கள் இல்லாமல் வஸ்துவின் ஞானம் மட்டும் உண்டாகாது. விசேஷணங்கள் இல்லாமல் க்ரஹிப்பது என்பதே முடியாது.
    • இது தன்னை (விசேஷணங்கள் இல்லாமல் க்ரஹிப்பது என்பதே முடியாது) பாஷ்யகாரர்  [கேனசித்விசேஷேண இதமித்தமிதி ஹி ஸர்வா ப்ரதீதிரூபஜாயதே] (ஸ்ரீ பாஷ்யம் 1-1-1) என்றருளிச்செய்தார். அதாவது எல்லா ஜ்ஞாநமும், ஏதாவது விசேஷத்தையிட்டு ‘இது இப்படியானது’ என்றுதானே உண்டாகிறது.
    • அத்வைதிகள், நிர்விகல்பகம் என்பது வஸ்துவை மாத்திரம் விசேஷணங்கள் இல்லாமல் க்ரஹிப்பது என்கிறார்கள். நிர்விகல்பகம் என்பதை விகல்பம் அற்றது என்று கொண்டு, ப்ரஹ்மம் ஒன்றே இருக்கிறது. வேறு இல்லை அது தன்னைக் க்ரஹிக்கிறோம் என்கிறார்கள்.
    • – பலவாகக் கல்பிக்கப்படுவது
    • இது கிடையாது, நிர்விகல்பகம் என்றால் ஏதாவது விசேஷணங்களை விட்டுவிட்டு க்ரஹிப்பதே அன்றி, விசேஷணங்கள் இல்லாமல் க்ரஹிப்பது அன்று. ஒருவனை நிர்தனன்/தரித்ரன் என்று சொன்னால் மிகவும் குறைவாக பணம் உள்ளவன் என்று ஆகுமே அன்றி, பணமே இல்லாதவன் என்று ஆகாது.
    • வைசேஷிகர்களும் நிர்விகல்பகம் என்பது வஸ்துவை மாத்திரம் விசேஷணங்கள் இல்லாமல் க்ரஹிப்பது, ஸவிகல்பகமாவது – விசேஷணம், விசேஷ்யம், அவைகளின் ஸம்பந்தம் ஆகிய மூன்றும் தோன்றும் ஜ்ஞாநம் என்கிறார்கள்.
    • இதற்கு உதாரணமாகக் குழந்தைகள் இப்படித் தான் க்ரஹிப்பார்கள் என்கிறார்கள்.
    • ஆனல் அதுவும் சரியன்று, பாலர்களும் கூட முதலில் விசேஷணங்களுடனே க்ரஹிக்கிறார்கள். ஒரு குழந்தை விளையாடும் பொம்மையை எடுத்துக் கொண்டு வேறு ஒன்றைக் கொடுத்தால் அது ஏற்பதில்லை. எனவே குழந்தைகளும் கூட முதலில் விசேஷணங்களுடனே க்ரஹிக்கிறார்கள்.
    • க்ரஹணப்ரகாரஸ்து – ஆத்மா மனஸா ஸம்யுஜ்யதே | மன இந்த்ரியேந, இந்த்ரியமர்தேந | இந்த்ரியாணாம் ப்ராப்யகாரித்வநியமாத் | அத: கடாதிரூபார்தஸ்ய சக்ஷுரூபேந்த்ரியஸ்ய ச ஸன்னிகர்ஷே ஸதி அயம் கட: இதி சாக்ஷுஷஞானம் ஜாயதே | ஏவம் ஸ்பார்சந ப்ரத்யக்ஷாதயோபி | த்ரவ்யக்ரஹணே ஸம்யோக: ஸம்பந்த: | த்ரவ்யகதரூபாதிக்ரஹணே ஸமவாயானங்கீகாராதி ஸம்யுக்தாஶ்ரயணம் ஸம்பந்த: ||
    • ப்ரத்யக்ஷ ஜ்ஞாநமாவது கண் முதலான இந்த்ரியங்களால் உண்டாவது என்று விளக்கப்பட்டது. இப்பொழுது அவை க்ரஹிப்படும் ப்ரகாரம் விளக்கப்படுகிறது. முதலில் ஆத்மா மனதோடு சேருகிறது, மனம் இந்த்ரியத்தோடு சேருகிறது, இந்த்ரியம் கடம் முதலான வஸ்துக்களோடு சேருகிறது. இப்படி ஐந்து விதமான ப்ரத்யக்ஷ ஜ்ஞாநங்கள் உண்டாகின்றன, கண், மெய், நாக்கு, செவி, மூக்கு என்ற ஐந்து இந்த்ரியங்கள் வாயிலாக அவை உண்டாகின்றன.
    • இதனால் தான் மனம் ஒன்றாவிட்டால் இந்த்ரியங்கள் அதன் வேலையைச் செய்தாலும் நம்மால் க்ரஹிக்க இயலவில்லை. இதனை அனுபவத்திலேயே உணரலாம். நாம் மனம் செலுத்தாவிட்டால், எதிரில் நடந்து வரும் நமக்குத் தெரிந்த நபரையே அறியாமல் சென்று விடுவோம்.
    • இப்படி ஒரு த்ரவ்யத்தை அறியும் பொழுது அதற்கும் இந்த்ரியத்திற்கும் ஸம்பந்தம் ஸம்யோகம். அந்த த்ரவ்யத்தை ஆச்ரயித்திருக்கும் ரூபம் முதலான குணங்கள் அறியும் பொழுது அந்த ஸம்பந்தம் – ஸம்யுக்தாஶ்ரயணம்.
    • வைசேஷிகர்கள் ரூபம் முதலான குணங்கள் ஸமவாயம் என்பதினால் சேர்ந்திருப்பதாகச் சொல்லுகிறார்கள். எம்பெருமானார் தரிசனத்தில் ஸமவாயம் அங்கீகரிக்கப் படவில்லையாதலால், அது ஸம்யுக்தாஶ்ரயணம் ஆகிறது.
    • ஸமவாயம் என்பது ஒரு ஸம்பந்தம் – அதை ஒரு பொருளானது, அதன் ஆதாரத்தை விட்டுப் பிரியாமல் இருந்தால் அந்த தொடர்பு ஸமவாயம் என்பது வைசேஷிகர்களின் கொள்கை. இதிலுள்ள குறைகள்/தோஷங்கள் ஸ்ரீ பாஷ்யத்தில் மஹத்தீகாதிகரணத்தில் காட்டப்பட்டுள்ளது.
    • ——–
    • நிர்விகல்பகஸவிகல்பகபின்னம் ப்ரத்யக்ஷம் த்விவிதம், அர்வாசீனமநர்வாசீனம் சேதி | அர்வாசீனம் புனர்த்விவிதம், இந்திரியஸாபேக்ஷம் ததநபேக்ஷம் சேதி | ததநபேக்ஷம் த்விவிதம் – ஸ்வயம்ஸித்தம்திவ்யம் சேதி | ஸ்வயம்ஸித்தம்-யோகஜந்யம், திவ்யம் பகவத்ப்ரஸாதஜந்யம் அநர்வாசீனம் து, இந்த்ரியாநபேக்ஷம் நித்யமுக்தேஶ்வரஞானம் | அநர்வாசீனம் ப்ரஸங்காதுக்தம் | ஏவ ஸாக்ஷாத்காரிப்ரமாகரணம் ப்ரத்யக்ஷமிதி ஸித்தம் |
    • நிர்விகல்பகம், ஸ்விகல்பகம் என இரண்டு வகையான ப்ரத்யக்ஷமானது – (1) தாழ்ந்தது, (2) உயர்ந்தது என இரண்டு வகைப்படும்.
    • தாழ்ந்தது என்பது இந்த்ரியத்தைக் கொண்டு உண்டாவது, இந்த்ரியம் இல்லாமல் உண்டாவது என்று இருவகைப்படும். இந்த்ரியமில்லாமல் உண்டாவது என்பதும் தானே உண்டாவது (ஸ்வத ஸித்தம்), திவ்யம் (எம்பெருமானால் உண்டாவது) என்றும் இருவகைப்படும். தானே உண்டாவது – யோகத்தினால் உண்டாவது. திவ்யம் ஆவது எம்பெருமானின் அனுக்ரஹத்தினால் உண்டாவது.
    • யோகிகளின் ப்ரத்யக்ஷமாவது (ஸ்வத ஸித்தமாவது) – யோகாப்யாஸத்தாலோ, அல்லது தபஸினாலோ உண்டாகிறது. ஆகையினாலே இவர்களால் வேறு லோகத்தில் நடப்பவை ப்ரத்யக்ஷமாகப் பார்க்கப்படுகிறது.
    • திவ்யம் என்பது தேவனால் அளிக்கப்படுவது. தேவன் என்பது எம்பெருமானே. திவ் க்ரீடாதௌ என்கிற தாது ஸித்தமான அர்த்தம் எம்பெருமானையே குறிக்கும். இதுவே “மயர்வற மதிநலம் அருளுவது” (திருவாய் 1-1-1). பகவத் கீதையிலே இது தன்னையே [திவ்யம் ததாமி தே சக்ஷு:] (11-8) என்றருளினான்.
    • இங்கு ஸ்வாமி எம்பெருமானார் வ்யாக்யானம் – [தவ திவ்யம் – அப்ராக்ருதம் மத்தர்சனஸாதனம் சக்ஷுர்ததாமி] என்பது நினைக்கத்தக்கது.
    • அநர்வாசீநமாவது இந்த்ரியங்களின் உதவியில்லாமல் வரும் அறிவு. இது பகவானுக்கும், நித்யர்களுக்கும், முக்தர்களுக்கும் உள்ளது. இது ப்ரஸங்காத் சொல்லப்பட்டது.
    • உபநிஷதானது [அபாநிபாதோ ஜவனோ க்ருஹீதா பச்யத்யசக்ஷு: ஸ ச்ருநோத்யகர்ண:] என்றது. அதாவது எம்பெருமானுக்கு ஒரு பொருளை எடுப்பதற்குக் கைகள் தேவையில்லை. கண்கள் பார்ப்பதற்கு அவசியமில்லை. அவனது திருவருளால், முக்தியடைந்தார்க்கும் இது கலங்காப்பெருநகரம் என்னும் பரமபதம் அடைந்தவுடன் இது ஸம்பவிக்கிறது.
    • ஸ்வாமி கூரத்தாழ்வான் தம்முடைய வரதராஜஸ்தவத்தில் 24-வது ஶ்லோகத்தில் இந்த விபூதியிலே பேரருளாளப் பெருமாளை இவ்விதம் அவனது திருவருளால் இந்த்ரியங்களின் அடைவுகெட அனுபவிக்க ஆசைப்பட்டதும் இந்த ரீதியிலே – முக்தி தசையில் அனுபவிக்கப் படுவதை இங்கு அனுபவிக்க ஆசைப்பட்டார்
    • நநு யதாவஸ்திதவ்யவஹாரானுகுணம் ஞானம் ப்ரமேதி உக்தம் | ஏவம் ச ஸ்ம்ருதேரபி யதாவஸ்தித வ்யவஹாராணுகுணஞாநத்வேன ப்ராமாண்யாத் ஸ்ம்ருதேரபி ப்ரமாணத்வேன பரிகணனாத் த்ரீந்யேவ ப்ரமாணானி இதி கதம் ப்ரதிபாத்யதே இதி சேத்; உச்யதே – ஸ்ம்ருதே: ப்ராமாண்யாங்கீகாரேSபி ஸம்ஸ்காரஸாபேக்ஷத்வாத், தஸ்ய ப்ரத்யக்ஷமூலத்வாத் மூலபூதப்ரத்யக்ஷேSந்தர்பாவ: இதி ந ப்ருதக்ப்ரமாணத்வகல்பனம் | அத: த்ரீண்யேவேதி ஸம்பவதி ||
    • இப்பொழுது ஸ்ம்ருதி என்பது தனி ப்ரமாணம் அல்லவா? என்று விசாரிக்கப்படுகிறது. அதற்கு முன்பு ஸ்ம்ருதி என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். ஸ்ம்ருதியாவது ஒரு வஸ்துவை முன் அனுபவித்ததால் எழும் ஜ்ஞானம் ஆகும். அதாவது முன் அறிந்ததை மறுபடியும் நினைத்துக் கொள்வது.
    • இப்பொழுது மூலம் விளக்கப்படுகிறது. – ஒரு வஸ்துவை உள்ளது உள்ளபடி அறிவது ப்ரமா என்று சொல்லப்பட்டது. அப்படிக் கொண்டால் ஸ்ம்ருதியும் ஒரு ப்ரமாணமாகும். அப்படி இருக்கும் பொழுது, ப்ரமாணங்கள் மூன்று தான் என்று சொல்வது எப்படி என்று கேட்டால்?
    • பதில் சொல்கிறோம். ஸ்ம்ருதியை ப்ரமாணம் என்று அங்கீகரிப்பதற்குக் காரணம் ஸம்ஸ்காரம் ஆகும். அந்த ஸம்ஸ்காரம் ப்ரத்யக்ஷத்தாலே உண்டாகிறது. எனவே ஸ்ம்ருதியை தனி ப்ரமாணமாகக் கொள்ள வேண்டியது இல்லை – அது ப்ரத்யக்ஷத்திலேயே அடங்கி விடுகிறது.
    • ஸம்ஸ்காரம் என்பது கீழே விளக்கப்படுகிறது.
    • ஸ்ம்ருதிர்நாம பூர்வானுபவஜன்யஸம்ஸ்காரமாத்ரஜன்ய ஞானம் | தத்ர சோத்புத்த: ஸம்ஸ்காரோ ஹேது: | ததுத்போதச்ச “ஸத்ருஷ-அத்ருஷ்ட – சிந்த்யாத்யா:” இத்யுக்தப்ரகாரேண க்வசித் ஸத்ருஷதர்ஷநாத் பவதி, க்வசித் அத்ருஷ்டாத், க்வசிச்சிந்தயா | ஆதிஶப்தேந ஸாஹசர்யஸ்யாபி க்ரஹநாத்தேனாபி ச பவதி | ஸாத்ருஶ்யஜா யதா – தேவதத்தயஞ்தத்தயோ: ஸத்ருஶயோர்தேவதத்ததர்ஷன யஞ்தத்தஸ்ம்ருதி: | த்விதீயா யதா – யாத்ருச்சிக காலான்தரானுபூத ஸ்ரீரங்காதி திவ்யதேஶஸ்ம்ருதி: | த்ருதீயா யதா சிந்த்யமானே ஸ்ரீவேங்கடேஸஸ்ய கமனீயதிவ்யமங்கலவிக்ரஹஸ்ம்ருதி: | சதுர்தீ து – ஸஹசரிதயோர்தேவதத்தயஞதத்தயோர்மத்யே அந்யதரதர்ஷநேன ததந்யதரஸ்ம்ருதி: | ஸம்யகனுபூதஸ்ய ஸர்வஸ்ய ஸ்ம்ருதிவிஷயத்வநியம: | க்வசித் காலதைர்த்யாத் வ்யாத்யாதினா வா ஸம்ஸ்காரஸ்ய ப்ரமோஷாத் ஸ்ம்ருத்யபாவ: |
    • ஸ்ம்ருதி என்பது முன் அநுபவத்தினால் உண்டான ஸம்ஸ்காரத்தினால் மட்டும் உண்டாகும் ஜ்ஞானம். இதற்கு ஸம்ஸ்காரம் தான் முக்கிய காரணம் ஆகும். அந்த ஸம்ஸ்காரம் வருவதற்கு காரணங்கள்
    • ஒற்றுமை,
    • அத்ருஷ்டம்,
    • சிந்தை
    • சில சமயங்களில் முன்பு பார்க்கப்பட்ட வஸ்துவிற்கும், இப்பொழுது பார்க்கப்படுகிற வஸ்துவிற்கும் இருக்கும் ஒற்றுமையினாலும், சில சமயங்களில் அத்ருஷ்டத்தாலும், சில சமயங்களில் சிந்தையினாலும் உண்டாகிறது. “ஆதி” ஶப்தத்தால் ஸாஹசர்யம் சொல்லப்பட்டது. இவற்றுக்கு உதாரணங்கள்
    • (1) ஒருவருக்கொருவர் ஒப்பாக உள்ள தேவதத்த யஜ்ஞதத்தர்களுள் தேவதத்தனைப் பார்க்கும் பொழுது, வரும் யஜ்ஞதத்தனின் நினைவு.
    • (2) யாத்ருச்சிகமாக வேறு காலத்தில் அநுபவித்த ஸ்ரீரங்கம் முதலான திவ்யதேஶங்களின் நினைவு,
    • (3) சிந்திக்கும் பொழுது தோற்றும் ஸ்ரீவேங்கடேசனுடைய ரம்யமான திருமேனியின் நினைவு.
    • (4) எப்பொழுதும் சேர்ந்தே பார்க்கப்பட்ட தேவதத்தன், யஜ்ஞதத்தன் ஆகியவர்களில், தேவதத்தனைப் பார்க்கும் பொழுது வரும் யஜ்ஞதத்தனின் நினைவு. இதற்கும் (1) வித்யாஸம் உள்ளது. முதலாவது ஆகார ஒற்றுமை (உருவ ஒற்றுமை) யினால் உணர்த்தப்படுவது. இங்கு யானையையும் அதன் பாகனையும் சேர்த்தே பார்த்த ஒருவனுக்கு, யானையைக் கண்டவுடன் வரும் பாகனின் நினைவு.
    • நன்றாய் அநுபவிக்கப்பட்ட விஷயங்கள் அனைத்தும் நினைவுக்கு வராமல் இருக்காது. ஆனால் நீண்ட காலமாவதாலும், வ்யாதி முதலியவைகளாலும் ஸம்ஸ்காரம் மழுங்கிப் போவதால் நினைவுக்கு வருவதில்லை.
    • யதா ஸ்ம்ருதே: ப்ரத்யக்ஷேSந்தர்பாவ: ஏவம் “ஸோSயம் தேவதத்த: ” இதி ப்ரத்யபிஜ்ஞா அபி ப்ரத்யக்ஷேSந்தர்பாவ: ||
    • எப்படி ஸ்ம்ருதியானது ப்ரத்யக்ஷத்தில் அடங்கிவிடுகிறதோ, அப்படியே “இந்தக் காலத்தில் இங்கு பார்க்கப்பட்ட தேவத்தத்தன், முன்னொரு காலத்தில் வேறிடத்தில் பார்க்கப்பட்ட தேவத்தத்தன் தான்” என்னும் ப்ரத்யபிஜ்ஞாவும் ப்ரத்யக்ஷத்தில் அடங்கிவிடுகிறது.
    • இந்த ப்ரத்யபிஜ்ஞா என்பது நிர்விகல்பக/ஸவிகல்பக ஞானம், ஸ்ம்ருதி ஆகியவற்றிலிருந்து மாறுபட்டது. எல்லாவற்றிற்கும் ஆகாரம் பொதுவானது என்றறிவது ஸவிகல்பக ஞானம். ஸ்ம்ருதியின் ஸம்ஸ்கார காரணங்கள் (நான்கு) கீழே விளக்கப்பட்டன. ப்ரத்யபிஜ்ஞா என்பது முன்னொரு காலத்தில் வேறிடத்தில் பார்க்கப்பட்ட தேவத்தத்தனே, இந்தக் காலத்தில் இங்கு பார்க்கப்பட்ட தேவத்தத்தன் என்னும் ஞானம்.
    • அஸ்மந்மதே அபாவஸ்ய பாவந்தர ரூபத்வாத்தஸ்யாபி ப்ரத்யக்ஷேSந்தர்பாவ: | கடப்ராகபாவோ நாம ம்ருதேவ | கடத்வம்ஸச்ச கபாலமேவ | ப்ராய: புருஷேநாநெண பவிதவ்யமித்யேதத் ஊஹ: | ஸம்ஸய உக்த: || தயோரபி ப்ரத்யக்ஷே அந்தர்பாவ: | புண்யபுருஷநிஷ்டா ப்ரதிபாபி ப்ரத்யக்ஷேSந்தர்கதா ||
    • பரம வைதிக மதமான எம்பெருமானார் தரிசனத்தில், அபாவம் என்பது ஒரு தனி பதார்த்தமாகக் கொள்ளப்படவில்லை. அதுவும் ப்ரத்யக்ஷத்தில் அடங்கி விடுகிறது. வைசேஷிகர்களான தார்க்கிகர்கள் அபாவம் என்பது ஒரு தனி பதார்த்தம் என்றும், அது ப்ராகபாவம் (இல்லாமை), ப்ரத்வம்ஸாவாம் (த்வம்ஸமாகை) என்றும் கொள்கிறார்கள். உதாரணத்திற்கு, ஒரு குடம் செய்வதன் முன்பு அது காணப்படாது – அது ப்ராகபாவம்; அது உருவாகி உடைந்த பின்பும் அது காணப்படாது – அது ப்ரத்வம்ஸாவாம் என்கிறார்கள்.
    • இது கல்பிப்பதே – ப்ராகபாவம் – மண்கட்டி (குடம் ஆவதன் முன்); ப்ரத்வம்ஸாவாம் – கபாலங்கள்.
    • அதே போன்று ஊஹமும் (ஒரு வஸ்துவில் கால்/கை அசைவதால் அவன் மனிதனே என்பது) ப்ரத்யக்ஷத்தில் அடங்கி விடுகிறது. ஸம்ஸயம் என்பது கீழே விளக்கப்பட்டது. அதுவும் ப்ரத்யக்ஷத்தில் அடங்கி விடுகிறது.
    • புண்ணியம் புரிந்த ஒரு புருஷனிடத்தில் இருக்கிற ப்ரதிபையும் ப்ரத்யக்ஷத்தில் அடங்கி விடுகிறது. ப்ரதிபையாவது ஒரு மலை, நதி ஆகியவைகளைக் கண்டால் மேன்மேலும் அதைப் பற்றித் தோன்றும் ஞானம்.
    • ————
    • “யதார்தம் ஸர்வவிஜ்ஞானமிதி வேதவிதாம் மதம்” இத்யுக்தத்வாத் ப்ரமாதி ப்ரத்யக்ஷஞானம் யதார்தமேவ, அக்யாதி – ஆத்மக்யாதி – அநிர்வசனீயக்யாதி – அன்யதாக்யாதி வாதினோ நிரஸ்ய ஸத்க்யாதி பக்ஷஸ்வீகாராத் | ஸத்க்யாதிர்நாம ஞானவிஷயஸ்ய ஸத்யத்வம் | தர்ஹி ப்ரமத்வம் கதமிதி சேத், விஷயவ்யவஹாரபாதாத் ப்ரம: | ததுபபாதயாம: – பஞ்சீகரணப்ரக்ரியா ப்ருதிவ்யாதிஷு ஸர்வத்ர ஸர்வபூதானாம் வித்யமானத்வாத், அத ஏவ ஶுக்திகாயாம் ரஜதாம்ஶஸ்ய வித்யமானத்வாத் ஞானவிஷயஸ்ய ஸத்யத்வம் | தத்ர ரஜதாம்ஶஸ்ய ஸ்வல்பத்வாத்து ந வ்யவஹார இதி தஞ்ஞானம் ப்ரம: | ஶுக்தயம்ஸபூயஸ்த்வஞானாத் ப்ரமநிவ்ர்த்தி: |
    • இதுவரையில் ப்ரத்யக்ஷத்தின் லக்ஷணம் மற்றும் அவற்றின் பிரிவுகள் ஆகியவற்றை விசாரித்துவிட்டு, இப்பொழுது ப்ரத்யக்ஷ ப்ரமாணத்தால் அறியப்படுபவற்றின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துகிறார். ஸர்வவிஜ்ஞானம் – அனைத்து ஞானங்களும்; யதார்த்தம் – யதார்த்தமே – வஸ்துக்களை உள்ளபடி காட்டுகின்றன; இதி வேதவிதாம் மதம் – என்று வேதம் அறிந்தவர்களுடைய, ஸ்ரீமந்நாதமுனிகள், ஸ்ரீ ஆளவந்தார் ஆகியோருடைய மதம் – என்று ஸ்வாமி எம்பெருமானார் ஸ்ரீபாஷ்யத்தில் அருளியுள்ளார்.
    • ஸ்ரீமந்நாதமுனிகள் தம்முடைய ந்யாய தத்வத்தில் – [ஷஷ்டீம் சேயம் க்யாதியதார்த்தக்யாதி] என்றருளியுள்ளார்.  அதாவது (1) அஸத்க்யாதி, (2) ஆத்மக்யாதி, (3) அநிர்வசநீயக்யாதி, (4) அந்யதாக்யாதி, (5) அக்யாதி என்று 5 விதமான க்யாதிகள் இல்லாமல் ஆறாவதான யதார்த்தக்யாதி என்பதே நம் ஆசார்யர்களால் கைக்கொள்ளப்பட்டுள்ளது.
    • குறிப்பு – இப்போது சில விஷயங்கள் அறிந்து கொள்வது, மேல் விஷயங்களைப் புரிந்து கொள்வதற்கு அவசியம் ஆகிறது.
    • ஶுக்தி எனப்படும் முத்துச் சிப்பியை சில சமயம் தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது – அது வெள்ளி போன்று தோன்றுகிறது. பின்பு நெருங்கிச் சென்று அதை கையில் எடுத்துப் பார்த்தால் அது வெள்ளியன்று என்று ப்ரமம் நீங்கி விடுகிறது. இதை பலவாறாகப் பல மதங்களிலே கொண்டுள்ளார்கள்.
    • (1) அஸத்க்யாதி,
    • இது மாத்யாமிகனுடைய மதம் சார்ந்தது. ஜ்ஞானமும் ஆகட்டும், வெளியிருக்கிற வஸ்துக்களாகட்டும் ஒன்றும் இல்லை – சூந்யம் தான் உள்ளது. அஸத் தோன்றுவதால் இது அஸத்க்யாதி என்னப்பட்டது.
    • (2) ஆத்மக்யாதி
    • இது பௌத்தர்களுடையதாகும் (யோகாசாரர்களுடையது). ஆத்மாவான ஞானம் ஒன்று தானிருக்கிறது. இது வஸ்துவை க்ரஹிக்கும் பொழுது, வஸ்துக்கள் இல்லை. ஜ்ஞானம் தான் இவைகள். ஜ்ஞானம் இல்லாத பொழுது இவை தோன்றவில்லையே! ஆகவே ஜ்ஞானமே ப்ராந்தியால் விஷயமாகத் தோன்றுகிறது என்பது இவர்கள் கொள்கை.
    • (3) அநிர்வசநீயக்யாதி,
    • இது அத்வைதிகளின் பக்ஷம். முத்துச்சிப்பியினைப் பார்க்கும் பொழுது, வெள்ளியானது ப்ரத்யக்ஷமாய் இல்லை. கடையில் இருக்கும் வெள்ளி ப்ரத்யக்ஷமாகத் தோன்றாது. இது தன்னை ஸ்ம்ருதி என்றும் சொல்ல முடியாது. எனவே சிப்பியில் வெள்ளி தோன்றும் பொழுது, அது எல்லாராலும் கடையில் காணப்படும் வெள்ளியினைக் காட்டிலும் அவித்யையின் மஹிமையால் வேறொரு வெள்ளி உண்டாகிறது. இது இப்படி என்று சொல்ல முடியாதாகையாலே இது அநிர்வசநீயம் என்னப்பட்டது. இது ப்ரஹ்ம வ்யதிரிக்தமான பதார்த்தம் (ப்ரஹ்மத்தைத் தவிர்த்த வேறு பதார்த்தம்) ஆகையாலே இதை ஸத் என்றும் சொல்லமுடியாது (அவர்கள் கொள்கைப்படி ப்ரஹ்மம் ஒன்றே ஸத்யம்), தோன்றுவதால் அதை அஸத் என்றும் சொல்லமுடியாது
    • (4) அந்யதாக்யாதி,
    • இது தார்க்கிகர்களின் மதம் ஆகும். ஆபரணம் செய்வதற்கு உபயோகப்படும் வெள்ளியானது தோஷத்தாலே சிப்பியிலே தோன்றுகிறது. சிப்பியானது அந்யத்தாக (வேறாக) தோன்றுவதால் இது அந்யதாக்யாதி
    • (5) அக்யாதி
    • மீமாம்ஸகர்கள் மதம் அக்யாதி வாதத்தினை கொண்டுள்ளது. சிப்பியினைப் பார்த்து வெள்ளி என்று ப்ரமிக்கும் பொழுது,
    • இதம் (இது) என்றும் ரஜதம் என்றும் இரண்டு ஜ்ஞானங்கள்
    • இது என்பது ப்ரத்யக்ஷம் – கண்ணால் காண்பது.
    • ரஜதம் என்பது ஸ்ம்ருதி அல்லது ஸ்மரணம்.
    • இவை இரண்டின் பேதத்தை அறியாமையே ப்ரமம் (சிப்பியை வெள்ளி என்று எண்ணுவது).
    • இந்த பேத க்ரஹணம் இல்லாமையே அக்யாதி.
    • க்யாதி: பேத க்ரஹ: – க்யாதி (ஜ்ஞானம்) என்பது பேத க்ரஹணம்.
    • ததபாவ: – அக்யாதி – அது இல்லாமை அக்யாதி.
    • இவற்றுள் முதலாவதான அஸத்க்யாதிக்கு நிரதிஷ்டான க்யாதி என்றும் பெயர். அவர்கள் பக்ஷத்தில் தோன்றும் அனைத்தும் அஸத்.
    • ஆத்மக்யாதியும் நிலை நிற்காது. ஜ்ஞானமும் விஷயமும் சேர்ந்தே தோன்றுகிறது. அப்படித் தோன்றினாலும் அவை வெவ்வேறே! ஜ்ஞானமாவது வஸ்துவை க்ரஹிக்கிறது. “अहम् घटम् जानामि” என்பதால் நான் கடத்தை அறிகிறேன் என்னும்பொழுது, அறியக்கூடிய ஜ்ஞானமும் அறியப்பட்ட கடமும் ஒன்றாக ஆகமுடியாது.
    • அநிர்வசநீயமும் ஸத்தா அஸத்தா என்று கேட்டால் அதுவும் நிற்காது. அநிர்வசநீயம் என்பது எப்படி அறியப்படுகிறது? இன்னதென்று சொல்ல முடியுமா என்று கேட்டால் – ஆம் என்று விடையளிப்பார்களாயின், அது அநிர்வசநீயமே அன்று. இல்லை என்றால் – அஸத்தான ஒன்றைக் கொண்டு நிர்வாஹம் செய்ய முடியாதாகையாலே, அதுவும் தள்ளுண்டதாகும்.
    • எனவே மீமாம்ஸகர்களுடைய விளக்கத்தையோ அல்லது தார்க்கிகர்களின் விளக்கத்தையோ கொண்டு தான் மேல் விவரிக்க வேண்டும். இதில் அக்யாதி எனப்படும் மீமாம்ஸகர்களின் கொள்கையானது அனுபவத்திற்க்கும், நமது மதத்திற்க்கும் ஒத்து வருகிறது.
    • யதார்த்தக்யாதி
    • இனி நாம் நம் ஆசார்யர்கள் கொண்ட யதார்த்தக்யாதி எனப்படும் ஸத்க்யாதியினைப் பார்க்கலாம்.
    • தூரத்தில் இருந்து சிப்பியினைப் பார்க்கும் பொழுது, வெள்ளியினுடைய அம்சமான பளபளப்பு தோன்றுகிறது.
    • சிப்பியில் இந்த அம்சம் தோன்றுவதன் காரணம் பஞ்சீகரணம் ஆகும். (பஞ்சீகரணம் மேலே விளக்கப்படுகிறது).
    • இதனால் இது வெள்ளி என்று நினைத்து அதை ஒருவன் எடுத்துக் கொள்ள எத்தனிக்கிறான்.
    • அருகில் பார்த்ததும், அது சிப்பி (வெள்ளியின் அம்சம் குறைவானது) என்பது தெரிந்து கொள்கிறான்.
    • இதில் அனைத்து ஜ்ஞானமும் உண்மையே. பின்பு ஏன் சிப்பியினை வெள்ளி என்று கொள்வதில்லை என்றால் – அதில் வெள்ளியின் அம்சம் குறைவாக இருப்பதினால் வ்யவஹாரம் பாதிக்கப்படுகிறது.
    • பஞ்சீகரணம்
    • பஞ்சீகரணமாவது ப்ருத்வியாதி ஐந்து பூதங்களிலும் மற்ற நான்கு பூதங்களை 50% சேர்ப்பது. உதாரணத்திற்கு ஆகாசம் என்னும் பூதத்தில் ஆகாசம் 50 சதவிகிதமும், மற்றைய பூதங்கள் (அக்னி, வாயு, நீர், ப்ருதிவீ) சேர்ந்து 50% உள்ளன. ஒவ்வொரு பூதத்தில் நின்றும் 1/8 பங்கு பிற பூதங்களில் உள்ளன. இந்த பஞ்சீகரணம் ஸ்ருஷ்டிக்கு அவசியமாகிறது.
    • இங்குக் கீழே ஆகாசம் காட்டப்பட்டுள்ளது. இது போன்றே பிற பூதங்களையும் கொள்ள வேண்டியது.
    • இது தன்னை ஸ்ரீமத் வரவரமுனிகள் தத்வத்ரயம் – 116 சூர்ணிகையில் ” ஆகாசாதி பூதங்களைந்தையும் தனிதனியே இரண்டு கூறுகளாக்கி, அவற்றிலே ஒரு கூறை நாலு கூறுகளாக்கி, அந்தக் கூறுகளை பூதாந்தரங்களிலே கூட்டி, ஸர்வ பூதங்களிலும் ஸர்வமுண்டாம்படி பண்ணுகை.” என்றருளியுள்ளது நோக்கத் தக்கது.
    • இனி மூலத்தில் உள்ளபடி விளக்கப்படுகிறது.
    • ஸத்க்யாதி என்றால் ஜ்ஞானத்தின் ஸத்யத்வம். ஜ்ஞானம் ஸத்யம் என்றால், ப்ரமம் எப்படி உண்டாகிறது என்னில், ப்ரமமானது வ்யவஹாரத்தைப் பாதிப்பது. அதாவது சிப்பியில் சிறிதளவு பார்த்திபாம்சம் இருப்பதனால், அதை வெள்ளி என்று பார்க்கும் ஜ்ஞானம் ஸத்யமாய் இருந்தாலும், அதில் வெள்ளியின் அம்சம் குறைவாக இருப்பதினால் அதை வெள்ளி என்று வ்யவஹரிப்பதை (அதைக் கடையில் கொடுத்து ஆபரணம் ஆக்க முடியாது) பாதிக்கிறது.
    • பஞ்சீகரணப் ப்ரக்ரியையினாலே ஸர்வ பூதங்களிலும் மற்ற பூதங்கள் அம்சம் சிறிதளவு கலந்து இருப்பதினால் சிப்பி, வெள்ளி போன்று தோற்றம் அளிக்கிறது. அந்த ரஜதாம்சம் ஸ்வல்பம் என்று அறியாமல் இருப்பது ப்ரமம். அதை அறிவது ப்ரம நிவ்ருத்தி ஆகும்.
    • ஸ்வப்நாதிஞானம் து ஸத்யமேவ | தத்தத்புருஷானுபாவ்யதயா தத்தத்காலாவஸானாந் ரதாதீந் பரமபுருஷ: ஸ்ரூஜதீதி ஹி ஶ்ருத்யா அவகம்யதே |
    • இனி சிப்பியில் வெள்ளி தோன்றுவது போல இருக்கும் வேறு சிலவற்றை நிர்வஹித்தருளுகிறார். ஸ்வப்நத்தில் பார்க்கப்படும் வஸ்துக்களும் உண்மையே. அந்த அந்த புருஷர்களின் புண்யபாபங்களுக்கு ஏற்ப, எம்பெருமான், அவன் மட்டும் அனுபவிக்குமாறு அவற்றை ஸ்ருஷ்டிப்பதாலே.
    • ஸ்வப்ன காலத்தில் ரதங்களோ, குதிரைகளோ, பாதைகளோ இல்லை, அந்த சமயம் ரதங்களையும், குதிரைகளையும், பாதைகளையும் (ஸவப்னம் அனுபவிப்பவன் மட்டும் பார்க்கும் படி ஈஶ்வரன் ஸ்ருஷ்டிக்கிறான் – அவனல்லவோ ஸர்வ கர்த்தா – என்னும் ப்ருஹதாரண்ய உபநிஷத்தை திருவுள்ளத்தில் கொண்டு ஶ்ருத்யா அவகம்யதே என்றார்.
    • பீதஶ்ஶங்க இத்யாதௌ நயநவர்திபித்தத்ரவ்யஸம்பின்னா நாயனரச்மயஶ்ஶங்காதிபி: ஸம்யுஜ்யன்தே: | தத்ர பித்தகதபீதிமாபிபூதச்ஶங்ககதஶுக்லிமா ந க்ருஹ்யதே | அத: ஸுவர்ணானுலிப்தச்ஶங்கவத் “பீதஶ்ஶங்க:” இதி ப்ரதீயதே | ஸுக்ஷ்மத்வாத் பீதிமா ஸ்வநயநநிஷ்க்ராந்ததயா ஸ்வேநைவ க்ருஹ்யதே, நத்வன்யை: |
    • வெண்மையான ஶங்கம் மஞ்சளாகத் தோற்றுவது இந்த்ரியத்தின் தோஷத்தாலே. கண்ணில் இருக்கும் பித்தத்துடன் கலந்த சக்ஷுரிந்த்ரியத்தின் கிரணங்கள் க்ரஹிப்பதால் அவனுக்கு மாத்திரம் வர்ணம் மஞ்சளாகத் தெரிகிறது.
    • ஜபாகுஸுமஸமீபவர்திஸ்படிகமநிரபி ரக்த இதி க்ருஹ்யதே | தத்ஞானம் ஸத்யமேவ |
    • செவ்வரத்தம்பூவின் பக்கத்திலுள்ள ஸ்படிகம் சிவப்பாக அறியப்படுவதும் ப்ரமை தான். பூவிலுள்ள சிவப்பு வர்ணம் ஸ்படிகத்தின் வெண்மையை மறைத்துவிடுகிறது
    • மரீசிகாயாம் ஜலஞானமபி பஞ்சீகரணப்ரக்ரியயா பூர்வோக்தவதுபபத்யதே | பஞ்சீகரணப்ரக்ரியா து உத்தரத்ர வக்ஷ்யதே |
    • கானல் நீர் தோற்றுவதும் முன்பு சொன்ன பஞ்சீகரணத்தாலே. பஞ்சீகரண ப்ரக்ரியை முன்பு விளக்கப்பட்டது.
    • திக்ப்ரமோபி ததைவ. திஷி திகந்தரஸ்ய வித்யமானத்வாத் அவச்சேதக-மன்தரேன திகிதி த்ரவ்யான்தரானங்கீகாராச்ச |
    • ஒரு திக்கை வேறு திக்காக எண்ணுவதும் அப்படியே. திக்கு என்பது வஸ்துவின் இடத்தைப் பொறுத்து மாறுவதாலும்.
    • அலாதசக்ராதௌ து ஶைக்ஹ்ர்யாதன்தராலாக்ரஹநாத்தத்தத்தேஸஸம்யுக்த தத்தத்வஸ்துந ஏவ சக்ராகாரேந க்ரஹணம் | ததபி ஸத்யமேவ |
    • ஒரு கொள்ளிக்கட்டையை வேகமாகச் சுற்றும் பொழுது இடைவெளி தோன்றாமல் அது சக்ரமாகத் தோன்றுகிறது. அதனாலே ஒரு சக்ரமாகப் பார்க்கப்பட்டதும் உண்மையில் இருப்பது தான்.
    • தர்பணாதிஷு நிஜமுகாதிப்ரதீதிரபி யதார்தா | தர்பணாதிப்ரதிஹதகதயோ நாயநரஷ்மயோ தர்பணாதி க்ரஹநபூர்வகம் நிஜமுகாதி க்ருஹ்ணன்தி | தத்ராப்யதி ஶைக்ஹ்ர்யாதன்தராலாக்ரஹணாத்ததா ப்ரதீதி: |
    • கண்ணாடி முதலியவற்றில் தெரியும் முகமும் ஸத்யமே. கண்ணாடியில் பட்டு கண்ணில் இருந்து வரும் கிரணங்கள் திரும்பி வருகின்றன. முதலில் கண்ணாடியைப் பார்த்துப் பின் முகத்தைப் பார்க்கின்றன. இவை அனைத்தும் வேகமாக நடப்பதால் நம்மால் பிரித்து உணர முடியவில்லை. எனவே கண்ணாடியில் முகம் இருப்பது போன்று தோன்றுகிறது.
    • த்விசந்த்ரஞானதாவபி அங்குல்யவஷ்டம்ப திமிராதிபிர்நயனதேஜோகதிபேதாத் ஸாமக்ரீத்வயமந்யோந்யநிரபேக்ஷம் த்விசந்த்ரக்ரஹநஹேதுர்பவதி | ஸாமக்ரீத்வயம் பாரமார்திகம் | தேன த்விசந்த்ரஞானம் பவதி | அதஸ்ஸர்வம் ஞானம் ஸத்யம் ஸவிசேஷவிஷயம் ச; நிர்விஶேஷவஸ்துநோSக்ரஹணாத் ||
    • கண்ணில் விரலை வைத்துப் பார்த்தால் சந்த்ரன் இரண்டாகத் தெரிவது – கண்ணில் இருந்து புறப்படும் கிரணங்கள் இரண்டாகப் பிரிந்து தனித்தனியே போய் சந்த்ரனுடன் ஸம்பந்தப்படுகின்றன. ஆகையால் சந்த்ரன் இரண்டாகத் தெரிகிறது.
    • ஆகையால் எல்லா ஜ்ஞானங்களும் ஸத்யமாகவும், விசேஷணங்களுடன் கூடியே தான் இருக்கும் என்பது காட்டப்பட்டது. நிர்விசேஷ க்ரஹணம் என்பது ஸம்பவிக்காது.
    • ஏவம் பூதம் ப்ரத்யக்ஷம் ப்ரதமதோ பேதமேவ க்ருஹ்ணாதி | பேத இதி வ்யவஹாரே து ப்ரதியோக்யபேக்ஷா, ந து ஸ்வரூபே | தேநாவஸ்தான்யோந்யாஶ்ரயதோஷோSபி நாஸ்தி | உபர்யுபரி த்வபேக்ஷா அநவஸ்தா | பரஸ்பராபேக்ஷா அந்யோந்யாஶ்ரய: ||
    • வஸ்துக்களை க்ரஹிக்கும் பொழுது விஶேஷணங்களுடன் சேர்ந்தே க்ரஹிக்கப்படுகிறது என்று சொல்லப்பட்டது. இந்த விஶேஷணம் அந்த வஸ்துவின் தர்மமாகவே இருக்கிறது. இதனை நையாயிகர்கள், அந்த வஸ்துவின் ஜாதியைக் காட்டிலும் வேறான பேதமாகக் கொண்டார்கள். உதாரணத்திற்கு ஒரு பசு மாட்டினை பார்க்கும் பொழுது அதன் ஜாதியான கோத்வம் (பசுவாயிருக்கும் தன்மை) என்பது விஶேஷணம். இதனை அவர்கள் வேறு பேதம் என்று கொள்கிறார்கள். அப்படிக் கொண்டால் அந்யோந்யாஶ்ரயணம், அநவஸ்தா என்கிற தோஷங்கள் வரும். எனவே அது கூடாது.
    • அந்யோந்யாஶ்ரயணம் – பசுமாட்டையும், வேறு ஒரு விலங்கு – ஆட்டினையும் எடுத்துக் கொள்வோம். இப்பொழுது அந்த விஶேஷணம் பேதம் என்று கொண்டால், அது ஆட்டில் இருந்து வேறுபட்டது என்று தெரிய ஆட்டின் விஶேஷணம் அறிய வேண்டும். ஆட்டின் விஶேஷணம் அறிய, அது மாட்டின் விஶேஷணத்தில் இருந்து வேறுபட்டது என்று அறிய மாட்டின் விஶேஷணம் அறிய வேண்டும். இப்பொழுது அறிந்து கொள்ள ஆரம்பித்ததே மாட்டின் விஶேஷணத்தைத் தான்!
    • அநவஸ்தா – ஆட்டின் விஶேஷணம் மாட்டைக் காட்டில் வேறாகில், அது மாட்டின் விஶேஷணத்தை காட்டிலும் வேறு என்றறிவதற்கு ஒரு பேதத்தையும், அதை மாட்டில் இருந்து வேறுபடுத்திக் காட ஒரு பேதத்தையும் கொள்ள வேண்டும். இது முடிவே இல்லாமல் போகும்
    • நநு தஶதத்வமஸி இத்யேததபி ப்ரத்யக்ஷம் கிம் நஸ்யாதிதி சேந்ந; த்வமிதேதஸ்ய ப்ரத்யக்ஷத்வேSபி தஶமோSஹமித்யேதஸ்ய வாக்யஜன்யத்வாத் | யதி தஶமோஹமித்யேதஸ்ய ப்ரத்யக்ஷவிஷயத்வம் தர்ஹி தர்மவாம்ஸ்த்வமித்யேத்ஸ்யாபி ப்ரத்யக்ஷத்வம் ஸ்யாத் | அங்கீகாரேSதிப்ரஸங்காத் | அத ஏவ தத்வமஸி இதி வாக்யஸ்ய நாபரோக்ஷஞானஜனகத்வம் ||
    • வாக்ய ஜன்ய ஜ்ஞானம் ப்ரத்யக்ஷம் என்று கூறும் அத்வைதிகள் பக்ஷத்தினைக் கண்டிக்கிறார். தன்னை மறந்த 10 மூடர்கள் கதை எனப்படும் – அதாவது ஒரு ஆற்றினை பத்துப் பேர் கடக்கிறார்கள். ஆற்றினை கடந்த பின்பு அனைவரும் கடந்து விட்டோமா என்று பார்ப்பதற்க்காக அனைவரையும் எண்ணுகிறார்கள். ஒவ்வொருவரும் தன்னை எண்ணாமல் மற்ற 9 பேர்களை எண்ணி, ஒருவனைக் காணவில்லை என்று துக்கிக்கும் பொழுது – ஒரு அறிவாளி அதனைப் பார்த்து – நீ தான் அந்த பத்தாவது நபர் என்று அறிவுரை கூறியவுடன். நாம் பத்துப் பேர்கள் என்கிற ஜ்ஞானம் வந்து மகிழ்ச்சியடைகிறார்கள்.
    • அதுபோன்று தன்னையொழிந்த பதார்த்தங்கள் அனைத்தும் மித்யை என்று தெரியாத ப்ரஹ்மமானது, ஒரு ஆசாரியன் “தத்வமஸி” என்று உபதேசம் பெற்றவுடன் அந்த மித்யை நீங்கி, மோக்ஷம் அடைகிறான் எனவும், தத்வமஸி என்னும் வாக்ய ஜன்ய ஜ்ஞானம் ப்ரத்யக்ஷம் என்றும் கூறுகிறார்கள்.
    • வாக்ய ஜன்ய ஜ்ஞானம் என்றுமே ப்ரத்யக்ஷம் ஆக முடியாது. அப்படிக் கொண்டால் ப்ரமாணத்தின் வரைமுறையே போய்விடும். தனது வருங்காலத்தை தெரிந்து கொள்வதில் ஆசையுடைய ஒருவன் ஒரு ஜோஸ்யனிடம் சென்று பார்க்கிறான். அந்த ஜோஸ்யன் அவனை நோக்கி “நீ தர்மவானாக இருக்கிறாய்” என்றால் – இவர்கள் கொள்கைப்படி – தர்மவான் என்பது ப்ரத்யக்ஷம் ஆகிவிடும்!
    • ஏதேந ப்ரத்யக்ஷப்ரமாகரணம் ப்ரத்யக்ஷப்ரமாணம் | ப்ரமா சாத்மசைதன்யமேவ, சைதன்யம் ச த்ரிவிதம் – அந்த:கரணாவச்சிந்ந சைதன்யம், வ்ருத்த்யவச்சிந்ந சைதன்யம், விஷயாவச்சிந்ந சைதன்யம் சேதி | யதா த்ரயாணாமைக்யம் தா ஸாக்ஷாத்கார: | ஸோSபி நிர்விஶேஷவிஷய ஏவ, அபேதமேவ க்ருஹ்ணாதி-இத்யாதி குத்ருஷ்டிகல்பநா நிரஸ்தா | நிர்விகல்பகம் நாம ஜாத்யாதியோஜனாஹீனம் வஸ்துமாத்ராவகாஹி கிஞ்சிதிதமிதி ஞானமிதி நையாயிகாநாம் மதமபி நிரஸ்தம் |
    • இனி அத்வைதிகள், ப்ரமையாவது ஆத்மசைதந்யமாகும். அதுவும் மூன்று வகைப்படும்.
    • 1) அந்த:கரணத்தோடு சேர்ந்த சைதந்யம்,
    • 2) செயல்படும் சைதந்யம்,
    • 3) விஷயத்தோடு சேர்ந்த சைதந்யம்
    • எப்போது இந்த மூன்றும் ஒன்று சேருகின்றதோ, அப்போது ஸாக்ஷாத்காரம் உண்டாகிறது. அவ்வறிவும் பேதமின்மையே காட்டுகிறது. அதற்கு விஷயம் நிர்விஶேஷ ஜ்ஞானமாத்திரமான ப்ரஹ்மமேயாகும். என்பது அவர்கள் பக்ஷமாகும்.  இவையனைத்தும் ப்ரமாணத்திற்கு விருத்தமாகயாலே பொருந்தாது.
    • இவ்விடத்தில், ப்ரமாண விருத்தம் என்றதற்கு
    • [இந்த்ரியாணாம் ஹி சரதாம் யந்மநோSநுவிதீயதே – ததஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர்நாவமிவாம்பஸி]-2-67) விஷயங்களில் ஈடுபடும் இந்த்ரியங்களை எந்த மனமானது பின்பற்றும்படி செய்யப்படுகிறதோ, அந்த மனம்  (சைதந்ய திரிவிதமோ அந்த:கரணமோ இங்கு அருளவில்லை என்பது )- என்கிற பகவத் கீதா வாக்யமும்,
    • ஸ்ரீ பாஷ்ய ஜிஜ்ஞாஸாதிகரணத்தில் மஹா ஸித்தாந்தத்தில் ஸ்வாமி பாஷ்யகாரர் ஸ்ரீஸுக்திகளையும்
    • திருவுள்ளம் பற்றி ப்ரமாணத்திற்கு விருத்தம் என்று அருளுகிறார்.
    • ஆத்மா வஸ்துக்களை க்ரஹிக்கிற விதம் கீழேயே அருளப்பட்டது.
    • இனி நையாகிகர்கள் (தார்க்கிகர்கள்) பக்ஷம் விலக்கப்படுகிறது. அவர்கள் பக்ஷத்தில் “நிர்விகல்பக ப்ரத்யக்ஷம் என்பது ஜாதி (ஜாதி என்றால் பசு மாடுகள் அனைத்தும் ஒரு ஜாதி, ஆடுகள் அனைத்தும் ஒரு ஜாதி என்பன போன்று) முதலான விசேஷணங்கள் இல்லாமல் வஸ்து மாத்திரத்தைத் தெரிவிக்கிறது” என்பதாகும். அதுவும் தள்ளப்பட்டது. நிர்விகல்பக/ஸவிகல்பக ஞானங்கள் கீழே விளக்கப்பட்டது காண்க.
    • நநு “காணாதம் பானிணீயஞ்ச ஸர்வஸாஸ்த்ரோபகாரத்வகம்” இத்யுக்த்வாத் கதம் கௌதமமதநிராஸ இதி சேத்; உச்யதே – நாஸ்மாபி: கார்த்ஸ்ன்யேனாஸ்ய மதஸ்ய நிராஸ: க்ரியதே, யாவதிஹ யுக்தியுக்தம், தாவத் ஸ்வீக்ரீயதே; பரகல்பிததடாகோபஜீவனவத் | ந கலு தடாகஸ்த: பங்கோSபி ஸ்வீக்ரீயதே | அத: பரமாணுகாரணத்வம், வேதபௌருஷேயத்வம், ஈஶ்வரானுமானிகத்வம், ஜீவவிபுத்வம், ஸாமான்யவிசேஷஸமாவாயானாம் பதார்தத்வேன ஸ்வீகார:, உபமானாதே: ப்ரமாணாத்வகல்பனம், ஸங்க்யாபரிமாநப்ருதக்த்வ பரத்வாபரத்வகுருத்வத்ரவத்வாதீனாம் ப்ருதக்குணத்வ கல்பனம், திஶோSபி த்ரவ்யத்வகல்பனம் இத்யாதிஸூத்ரகாராதிவிருத்தா ப்ரக்ரியா நாஸ்மாBஹி: ஸ்வீக்ரியதே | அவிருத்தானி ஸ்வீக்ரியந்தே இதி விரோத: |
    • காணாதரால் ப்ரவர்த்திப்பிக்கப்பட்ட தர்க்கமும், பாணினியை முதல்வராகக் கொண்ட வையாகரண மதமும் எல்லா ஶாஸ்த்ரங்களுக்கும் உபகாரம் செய்கின்றன என்று சொல்லி இருக்க – அம் மதங்களைத் தள்ளலாமா என்று கேள்வியை அனுவாதம் (அனுமதித்து) செய்து, அதற்கு உத்தரம் அருளுகிறார்.
    • வேதவிருத்தமான விஷயங்கள் அம்மதங்களில் இருப்பதினால் வைதிகர்கள் அம்மதங்களைக் கொள்ளமாட்டார்கள். அவைகளாவன,
    • ஸாமான்யம், விசேஷம், ஸமவாயம் என்று பொருட்களைக் கற்பிப்பது,
    • ஸங்க்யை, பரிமாணம், ப்ருதக்த்வம், பரத்வம், அபரத்வம், குருத்வம், த்ரவத்வம் – என்ற ஏழும் தனிக்குணங்கள்
    • வேதம் பரமபுருஷனால் செய்யப்பட்டது
    • பரமாணுக்கள் ஜகத் காரணம் என்பது
    • ஜீவனை விபு என்பது
    • உபமானம் முதலானவற்றை தனிப் ப்ரமாணம் என்பது
    • திக்கை தனி த்ரவ்யமாகக் கொள்வது
    • முதலான கொள்கைகளால் வேத விருத்தமானவற்றை ஆதரிப்பதால், வைதிகர்கள் அவற்றைக் கைக்கொள்ளார்கள். குளத்தில் இருந்து நீர் எடுத்துக் கொள்ளத் தக்கதாயிருந்தாலும், அதில் உள்ள சேறு உபயோகப்படாதாப் போலே, அவர்கள் மதத்தில் உள்ள வேத விருத்தமில்லாதவற்றைக் கைகொள்ளலாம் என்பதே “ஸர்வஶாஸ்த்ரோபகாரகம்” என்பதின் விஷயமாகும்.
    • —–
    • ஆக இந்த முதல் அவதாரத்தால், ஸித்தாந்த ஸங்க்ரஹத்தை முதலில் சொல்லி, பின்பு, உத்தேச, லக்ஷண, பரீக்ஷா க்ரமத்தில் உத்தேசிக்கப்பட்ட பதார்த்தங்களின் பிரிவினைக் காட்டி, அதன் பின்பு முதலில் ப்ரத்யக்ஷத்தை விசாரிக்க ஆரம்பித்து, ப்ரமாணத்தின் லக்ஷணத்தைச் சொல்லி, ஸம்சய அந்யதா விபரீத ஜ்ஞானங்களை விவரித்து, லக்ஷணத்தின் தோஷங்களைக் காண்பித்து, அத்தோஷங்கள் கீழ்ச் சொன்ன லக்ஷணத்தில் இல்லை என்பது விளக்கியருளி, நிர்விகல்பகம் – ஸவிகல்பகம் ஆகியவற்றை விளக்கி, நிர்விகல்பகம் வஸ்து மாத்ரம் க்ரஹிப்பது அன்று என்று விளக்கியருளி, ப்ரத்யக்ஷ ஜ்ஞானம் உண்டாகும் விதத்தினைக் காட்டி, நிர்விகல்பக ஜ்ஞானத்தின் பிரிவுகள் காட்டியருளி, ஸ்ம்ருதி, ப்ரத்யபிஞை ஆகியவைகள் தனிப் ப்ரமாணம் அன்று – அவைகள் ப்ரத்யக்ஷத்தில் அடங்கிவிடுகிறது என்பதையும் காட்டி அபாவத்தின் அநங்கீகாரத்தையும் காட்டி, ஜ்ஞானங்கள் அனைத்தும் உண்மையே என்கிற ஸத்க்யாதி பக்ஷத்தைக் விளக்கியருளி, அதன் காரணத்தையும் காட்டி, வாக்யஜன்ய ஞானம் ப்ரத்யக்ஷம் அன்று என்பதையும் விளக்கியருளி, காணாதம் எனப்படும் ந்யாய மதம் முதலானவற்றை ஏற்காத காரணங்களையும் அருளிச் செய்து இந்த ப்ரத்யக்ஷ அவதாரத்தைத் தலைக்கட்டியருளுகிறார்.
    • முதல் அவதாரம் முற்றிற்று.
    • ————————-
    • ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    • ஸ்ரீநிவாஸாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    • ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    • ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    • ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    • ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள்திருவடிகளே சரணம்-

ஸ்ரீ சரம குரு நிர்ணயம் -ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள்/ ஸ்ரீ சரம குரு நிர்ணயம் -ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை ஸ்வாமிகள்

February 1, 2024

ஸ்ரீ ஸுவ்ம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரண அம்புஜ ஷட் பதம்
தேவ ராஜ குரு வந்தே திவ்ய ஞான பிரதம் ஸூபம்

யோகிகளுக்குள் தலைவரான ஸ்ரீ மா முனிகளின் திருவடித் தாமரைகளில் படிந்த வண்டு
மது போன்ற திவ்யமான-அசாதாரணமான – ஞானம் அருளிய உபகாரகர் அன்றோ இவர் –

துலா ரேவதி ஸம்பூதம் வரயோகி பதாஸ்ரிதம்
ஸர்வ வேதாந்த ஸம்பூர்ணம் அப்பாச்சார்ய மஹம் பஜே

ஐப்பசி ரேவதியில் அவதரித்தவரும் மணவாள மா முனிகளின் திருவடிகளைப் பற்றியவரும்-எல்லா வேதாந்தங்களாலும் நிறைந்தவருமான ஸ்ரீ எறும்பியப்பாவை வழிபடுகிறேன்.

திருநக்ஷத்ரம்: ஐப்பசி ரேவதி

அவதார ஸ்தலம்: எறும்பி

ஆசார்யன்: அழகிய மணவாள மாமுனிகள்

சிஷ்யர்கள்: (திருமகனார்) பெரிய அப்பா, சேனாபதி ஆழ்வான்

நூல்கள்: பூர்வ தினசர்யா, உத்தர தின சர்யா, வரவரமுநி சதகம், விலக்ஷண  மோக்ஷ அதிகாரி நிர்ணயம்(ப்ரஸ்ன உத்தர ரூபமாக ஸேனாபதி ஆழ்வான் பட்டோலை செய்து அருளியது), சரம குரு நிர்ணயம்-உபதேச ரத்ன மாலையில் கடைசிப் பாசுரம்

அப்புள்ளார் தீர்த்த யாத்ரை அருளி இவரைக் கண்டு வாதம் செய்ய வர இவரது மஹிமையைப் பார்த்து அனுவர்த்தி செய்தார்
பெரிய கந்தாடை அண்ணன் இவரது ஆப்த பந்து -அவர் மூலம் மா முனிகள் காலஷேபம் கேட்க செல்லும் பொழுது மாமுனிகள் வைபவம் கேட்டு அவரைத் தண்டனிட கோயில் (ஸ்ரீரங்கம்) வந்த எறும்பியப்பா, மாமுனிகளின் காலக்ஷேபத்தில் திருவாய்மொழி முதல் பாசுரமான “உயர்வற” பாசுர விளக்கத்தில் எம்பெருமான் பரத்வம் கேட்டு அதில் வேத வேதாந்தங்கள் செறிவுக்கு நெகிழ்ந்தார். மாமுனிகள் அவரைத் ததீயாராதனத்துக்கு எழுந்தருளப் பண்ண, அப்பா சந்யாசி அளிக்கும் ஆஹாரம் நிஷேதம் எனும் சாமான்ய சாஸ்த்ரம் காட்டி அவ்வுணவுண்டால் தோஷம் நீங்கச் சாந்த்ராயண வ்ரதம் செய்யவேணும் என்று நினைத்து திருமாலையில் ஆழ்வார் 41ம் பாசுரத்தில் “தருவரேல் புனிதமன்றே” என்று அருளிய விசேஷ தர்மத்தை உணராது  மறுத்து தன் ஊர் திரும்பினார். காலையில் அநுஷ்டானங்கள் முடித்து அவர் தம் திருவாராதனத்துக்குக் கோயிலாழ்வார் திறக்கமுயல, அது முடியாமல் போக, தம் பெருமாளான சக்ரவர்த்தித் திருமகனைத் தொழாத வருத்தத்தால் ப்ரசாதம் உண்ணாமல் உறங்க, கனவில் அவன் வந்து மாமுனிகள் ஆதிசேஷன் அவதாரம் ஆதலால் அவரைச் சரண் புக்கு உய்வுறும் என நியமிக்க, (சேஷ ஸ்ரீ மான் -போகி பூதா ராகவஸ்ய -பூத்வா வரவர முனி -பத்ர பீடம் ரஷதி -ஸ்லோகம்)அப்பா மீண்டும் விரைந்து கோயிலேறச் சென்று மாமுனிகளிடம் பிழை பொறுத்தருள  வேண்டி, கோயில் கந்தாடையண்ணன் புருஷகாரத்தால் மாமுனிகளிடம் பஞ்ச ஸம்ஸ்காரமும் பெற்று, சிஷ்யராகி அஷ்ட திக் கஜங்களில் ஒருவரும் ஆனார்.

இந்தக் கிரந்தத்தில் உதாஹரிக்கப்பட்ட பூர்வாச்சார்கள் திரு நாமமும் அவர்கள் அருளிய க்ரந்தங்களின் திரு நாமமும்
1-சோமாஸி யாண்டான் –குரு குண விவரணம் -குரு குண வலி
2-வடுக நம்பி
3-வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர்
4- நஞ்சீயர்
5-கணியனூர் சிறியாச்சான்
6-நலம் திகழ் நாராயண தாஸர் –குரு ப்ரபாவ தீபிகை
7- ஜீயர்
8- அபியுக்தர்

———-

அவனும் ஆச்சார்ய பதத்தை விரும்பி -குரு பரம்பரையில் பிரதமம் இடத்தைப் பிடித்துக் கொண்டான்
ஆனால் அவனது ஸ்வ தந்தர்யம் -இல்லாத நம் பூர்வாச்சார்யர்களின் ஏற்றம் சொல்ல வேண்டாமே-
இறுதியான பெருமை -சரமம்- ப்ரதாநம் –
யோநித்ய மச்யுத பதாம்புஜ யுக்மருக்ம–வ்யாமோஹ தஸ்ததி தராணி த்ருணாயமேநே |அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ:ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே.||அனந்த பிரதம ரூபம் லஷ்மணஸ்து தத் பரம் பல பத்ரஸ் த்ருதீயஸ்து கலவ் ( ராமாநுஜஸ் ஸ்ம் ருத )–கச்சித் பவிஷ்யதி -பாட பேதம் ஆர்ஷ வசனம் -அனைத்து உலகும் வாழப் பிறந்த உத்தாரக ஆச்சார்யர் -ஒருவரே –
ஆச்சாரகர்கள் அருளிச் செய்த பட்டோலை கிரந்தம் -சரம உபாயம் பற்றியும் சரம குரு பற்றியும் உண்டு
சரம குரு ராமானுஜரே என்று நிர்ணயம் பண்ணும் கிரந்தம்
சரம உபாய ஸங்க்ரஹம் என்றும் சரம உபாய தாத்பர்யமும் இவர் அருளிச் செய்ததாக ஆச்சார்யர்கள் அருளிச் செய்த பட்டோலை என்ற நூலில் உள்ளது-ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -சரம உபாயம் -பஞ்சம உபாயம் –

————-

சரம குரு நிர்ணயம் ஸமதநுத யஸ் ஸ்வயம்
பரம புருஷஸ்ய ஸத் பத கமல பக்தித
யதி வர பதாம்புஜ ப்ரவண மநஸம் ஸூபம்
வரத குரும் அந் வஹம் வர குண நிதிம் பஜே

பரம புருஷனுடைய திருவடித்தாமரை இணையில் அன்பாலே எவர் ஒருவர் சரம குரு நிர்ணயத்தை அருளினாரோ -யதிராஜருடைய திருவடித்தாமரையில் ஈடுபட்ட நெஞ்சுடையவரும் -மங்களமானவரும் -நற்குணங்களுக்குக் கொள்கலமானவருமான அந்த வரத குருவாகிற எறும்பி யப்பாவை தினம் தோறும் உபாஸிக்கிறேன் -என்றவாறு

கு ஸப்தஸ்த் வந்தகாரஸ் ஸ்யாத் ரு ஸப்தஸ் தந் நிரோதக
அந்தகார நிரோதித்வாத் குருரித்யபி தீயதே
—(ப்ரபந்ந அம்ருதத்திலும் -6-7-எடுத்து அருளப்பட்ட ஸ்லோகம்)

(கு ஸப்தம் இருளைக் குறிக்கும் ரு ஸப்தம் அதன் அழிவைக் குறிக்கும் -இருளை அழிப்பவனாகையாலே ஆசார்யன் குரு எனப்படுகிறான் -என்றவாறு)

என்று கு ஸப்தம் அந்தகார வாஸியாய் -ரு ஸப்தம் அந்தகார நிவர்த்தக வாஸியாய் -ஆக குரு ஸப்தம் அந்தகார நிவர்த்தகனான ஆச்சார்யனைச் சொல்லுகிறது
அந்தகாரமாவது
ஸம்ஸாரியான இச் சேதனனுக்கு க்ருத்யாக்ருத்யங்கள் இன்னது–உத்தேஸ்ய அநுத்தேஸயங்கள் இன்னது -உபாதேய அநுபாதேயங்கள் இன்னது என்று
ப்ராப்த அப்ராப்த விவேகம் பண்ணி அக்ருத்ய அனுத்தேஸ்யங்களைக் கழித்து க்ருத்ய உத்தேஸ்ய உபாதேயங்களை அனுஷ்ட்டித்து -விரும்பிக் கொண்டு(ப்ரீதி பூர்வகமாக)
ஸ்வரூப அனுரூபமாக வர்த்திக்கும் படியான நிஷ்டையை அறிய ஒட்டாமல் மாம்ஸ த்ருஷ்டி விஹீநத்வம் பதார்த்த தர்சந அஷமத்வத்தைப் பண்ணுமா போலே ஒரு போகியான இருட்சியைப் பண்ணக் கடவதான அஞ்ஞான விசேஷம் இறே
இத்தை நிவர்திப்பிக்கை யாவது -ப்ரக்ருதி சம்பந்தித்தினுடைய ஹேயதையும் (கர்மாதீனம் ஜடம் முக்குண வசம் அழுக்கு உடம்பு -பொல்லா ஒழுக்கம் -பொய் நின்ற ஞானம்)ப்ரக்ருதே பரனான ஆத்ம ஸ்வரூபத்தினிடைய (அஜடம் நித்யம் சேஷ ஆனந்த ஞான மயன் ஞான குணகன் அணு ஸ்வரூபம்)உத்தேஸ்யதையையும் -சித் அசித் ஸ்வரூப நிர்வாஹகனான ஈஸ் வரனுடைய உபாதேய தமத்வத்தையும் ப்ரமாண முகத்தாலே உள்ளபடி உணர்த்தி நிவர்த்திப்பிக்கை
இப்படிப்பட்ட இச் சேதனனுடைய அஞ்ஞானத்தை நிவர்த்திப்பிக்கும் அவனுக்கு ஆய்த்து குரு ஸப்த வாஸ்யத்வம் உள்ளது-

தத்வ த்ரய சூர்ணிகைகள்

(அசித்து-ஞான சூன்யமாய்-விகாராஸ்பதமாய் இருக்கும் –இது சுத்த சத்வம்
என்றும் மிஸ்ர சத்வம் என்றும் சத்வாதி சூன்யம் என்றும் த்ரிவிதமாய் இருக்கும் –)

(ஆத்ம ஸ்வரூபம்-சென்று சென்று பரம் பரமாய் -என்கிறபடியே-1-தேக இந்த்ரிய மன
பிராண புத்தி விலஷணமாய்-2-அஜடமாய்-3-ஆனந்த ரூபமாய்-4-நித்யமாய் 5-அணுவாய்
6-அவ்யக்தமாய்-7-அசிந்த்யமாய்8-நிரவயவமாய் 9-நிர்விகாரமாய் 10-ஜ்ஞாநாஸ்ரயமாய்
11-ஈஸ்வரனுக்கு ந்யாம்யமாய் 12-தார்யமாய் 13-சேஷமாய் இருக்கும்-)

(ஈஸ்வரன்-அகில ஹேய ப்ரத்ய நீக-அனந்த ஜ்ஞான ஆநந்தைக ஸ்வரூபனாய்-
ஜ்ஞான சக்த்யாதி கல்யாண குண கண பூஷிதனாய் –-சகல ஜகத் சரக்க ஸ்திதி சம்ஹார கர்த்தாவாய்-ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூ ரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ -என்கிற சதுர்வித புருஷர்களுக்கும் ஆஸ்ரயணீயனாய்- தர்மார்த்த காம மோஷாக்ய சதுர்வித பல ப்ரதனாய்- விலஷண விக்ரஹ யுக்தனாய் – லஷ்மி பூமி நீளா நாயகனாய் – இருக்கும்)

அஞ்ஞான திமிராந் தஸ்ய ஞான அஞ்ஞன ஸலாகயா
சஷுர் உன் மீலிதம் யேந தஸ்மை ஸத் குரவே நம
–2-என்னக் கடவது இறே-ஸலாகயா-சங்கிடுவான்

(அஞ்ஞான அருளாலே குருடனாய் இருப்பவனுக்கு அறிவாகிற மைக்குச்சியைக் கொண்டு எவராலே கண் திறக்கப்படுகிறதோ அத்தகைய பெருமையுடைய நல்லாசிரியருக்கு நம்காரம் -என்றபடி)

(ஆச்சார்ய சிஷ்ய லக்ஷணம் நிறைந்த கூரத்தாழ்வான்-இதில் குருவுக்கு அவஸ்யம் வேண்டிய அஷ்ட லக்ஷணங்களை அருளிச் செய்கிறார் மேல்)

(தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய
||–ஸ்தோத்ர ரத்னம்-ஶ்லோகம் 4 –)

(ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.)

அஞ்ஞான நிவர்த்தகனான ஆச்சார்யனை அன்றி ஸம்ஸார நிவ்ருத்திக்கு வேறு பிஷக் இல்லை
ஓவ்ஷத்யம் பரமம் மன்யே குரோர் அஞ்ஞான வாரகாத் -(அஞ்ஞானமாகிய நோயைப் போக்கடிக்கையாலே ஆச்சார்யனை மேலான மருந்தாக நினைக்கிறேன்)என்று இறே பராசர பகவான் சொல்லி வைத்தது
இப்படிப்பட்ட குருவாகிறான் ஸர்வ லக்ஷண ஸம்பந்தனாய்த்து இருப்பது –

1-சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயத்தையும் உள்ளபடி ப்ரதிபாதிக்கவற்றான வேதாந்த ஞான பூர்த்தியை யுடையவனாய் இருக்க வேணும்
2-வேதாந்த ஞானம் யுடையவனாய் இருந்தானே யாகிலும் தத் ப்ரதிபாத்யனான பகவத் விஷயத்தில் ப்ராவண்யம் இல்லாவிடில் அநர்த்தா வஹமாய்த் தலைக்கட்டும்
அப்படி ஆகாமைக்கு வேதாந்த ப்ரதிபாத்யனான எம்பெருமான் இடத்தில் நிரவதிக பக்தி யுக்தனாக வேணும்-

3- பக்தி உண்டானாலும் பிரயோஜனம் இல்லை இறே ஏதத் ஞான பக்தி யுக்தரான ததியர் இடத்தில் த்வேஷம் நடையாடுமாகில் –
ஆகையால் ஞானாதி குண பூர்ணரான ஸஜ் ஜன விஷயத்தில் த்வேஷ ரஹிதனாய் பர ஸம்ருத்தி ஏக ப்ரயோஜனாக இருக்க வேணும்
(நரஸிம்ஹம் -ராகவ ஸிம்ஹ- யாதவ ஸிம்ஹ- ரெங்கேந்திர ஸிம்ஹ விஷயங்களில் பார்த்தோமே )
துர்லபம் மா முனிகள் முன்பே அருளிச் செய்துள்ளார் அன்றோ -ஆட் கொண்ட வில்லி ஜீயர் நஞ்சீயர் ஸம்வாதம் -பிள்ளாய் -பாகவத நிஷ்டை அறியாதவள்)
4-இந்த குணங்கள் உண்டாய் இருக்கச் செய்தே –மந்த்ராணாம் பரமோ மந்த்ரோ குஹ்யாநாம் குஹ்யம் உத்தமம் பவித்ரஞ்ச பவித்ராணாம் மூல மந்தரஸ் ஸநாதந-(நாரதீய கல்பம்-அஷ்டாக்ஷர ப்ரஹ்ம வித்யை-1-11-)(மந்திரங்களில் மேலான மந்த்ரமும் ரஹஸ்யங்களுக்குள் மேலான ரஹஸ்யமும் -பாவனங்களுக்குள் பரம பாவனமும் -பழையதான அஷ்டாக்ஷரம் என்னும் மூல மந்திரமே யாகும்)என்கிறபடியே -பகவத் மந்திரமான எல்லாவற்றிலும் உத்க்ருஷ்ட மந்திரமாய் ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களை உள்ளபடி ப்ரதிபாதிக்க வற்றான திருமந்திரத்தை உள்ளபடி அறிந்து தந் நிஷ்டனாய் இருக்க வேண்டும்(திருமந்திரத்தில் பிறந்து த்வயத்திலே வளர்ந்து யாவச் சரீர பாவம் தன்னிஷ்டனாய் இருக்க வேண்டுமே)
5-மந்த்ர ஞானம் உண்டாய் இருந்ததே யாகிலும் தத் ப்ராவண்யம் இல்லையே யாகில் ஞாதமான அர்த்தம் நெஞ்சில் தேங்காது இறே -ஆகையால் மந்த்ர விஷயத்தில் பக்தி யுடையவனாக இருக்க வேணும்(ஸ்ரீ மன் நாராயணன்-இங்கு திருமந்திரம் சொல்வது சேஷித்வ உபாயத்வ உபேயத்வங்கள் -வேதாந்தம் சொல்வது காரணத்வ அந்தர்யாமித்வ நியந்த்ருத்வங்கள்)
6–மந்த்ர விஷயத்தில் ஞான பக்திகள் உண்டாகவே அந்த மந்த்ர அனுசந்தானம் இவன் பக்கல் உண்டோ இல்லையோ என்று சம்சயிக்கும் படி இராமல்
தேனும் பாலும் அமுதுமாய திருமால் திருநாமம் நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோநாராயணமே”(6-10-6)-என்கிறபடியே நிரவதிக போக்யமாய் இருக்க வேண்டும்(குலம் தரும் இத்யாதி முதலில் -பின்பு ஆறு நூறு பாசுரங்களுக்குப் பின்பு அன்றோ இனிமை பற்றிய அருளிச் செயல்)

கான  வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே
–6-10-6-

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயராயின வெல்லாம்
நிலம் தரும் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளோடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் யாயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம்
–1-1-9-
7-இவை இத்தனையும் யுண்டாய் இருந்தும் ஸூக்தி இல்லாவிடில் கார்யகரம் ஆகாது இறே -ஸூக்தியாகிறது-ஸ்வயம் பிரயோஜனமாக திருமந்த்ரத்தை பிரயோஜனாந்தரத்தைக் கணிசித்து அஸத் பாத்ரங்களிலே விநியோகிக்கை யாகிற குற்றம் அற்று இருக்கை(மந்த்ரம் யத்நேனே கோபயேத்)
மற்றப்படி ம்ருத் வாரிகளால் யுண்டான ஸூத்தி ஸூத்தி அன்று -அர்த்த ஸூத்தியே ஸூத்தி(மண்ணாலும் நீராலும் கழுவுவது மட்டும் ஸூத்தியாகாதே -பொருள் அர்த்தம் ஒன்றே ஸூத்தி யாகும்)
ஸர்வேஷாம் ஏவ ஸுஸாநாம் அர்த்த ஸுஸம் பரமம் ஸ்ம்ருதம் யோ அர்த்தே ஸூஸ் ஸஹி ஸூசிர் ந ம்ருத்வாரி ஸூசிஸ் ஸூசிர் -(மனு ஸ்ம்ருதி-5-10-6-)(எல்லா ஸூத்திகளுக்குள்ளும் -பொருள் விஷயத்தில் ஸூத்தனாய் இருக்கையே மேலானதாக எண்ணப்படுகிறது -பொருள் விஷயத்தில் எவன் ஸூ த்தனாய் இருக்கிறானோ அவனே ஸூத்தன் -மண்ணாலும் தண்ணீராலும் மட்டும் ஸூத்தி செய்து கொள்ளுபவன் ஸூத்தன் அல்லன்)என்று இறே பிரமாணம்
ஆகையால் இப்படிப்பட்ட ஸூத்தியை யுடையனாய் இருக்க வேண்டும்

8-மந்த்ரே தத் தேவதாயாம் ச ததா மந்த்ர ப்ரதே குரவ்
த்ரிஷு பக்திஸ் ஸதா கார்யா ஸா ஹி ப்ரதம ஸாதனம்
–(ஸ்ரீ விஷ்ணு தத்வம்)என்னக் கடவது இறே(மந்திரத்தின் இடமும் அதன் தேவதையிடமும் அப்படியே மந்த்ரத்த அளித்த ஆச்சார்யனிடமும் ஒன்றும் ஒழியாமல் இம் மூன்றினிடமும் எப்போதும் பக்தி செய்யப்பட வேண்டும் -அந்த பக்தியே பகவத் ப்ராப்திக்கு முதல் உபாயமாகும்)
இப்படிக்கு கீழுள்ள அர்த்தங்களை ஒருவன் உபதேஸிக்க அறிந்து தன்னிஷ்டனாய் இருந்தானே யாகிலும்
பிரமாண ஞான புரஸ்ஸரம் ஆகாவிடில் அதுக்கு ஸ்தைர்ய ஸித்தி பிறவாது ஆகையாலே தத் ஸித்தி யர்த்தமாக வேத உப ப்ரும்ஹணங்க ளாய் தத்வ த்ரய ஸ்வரூப ஸ்வபாவ குரு லக்ஷண யதார்த்த ப்ரதிபாதன பரங்களான ஸ்ரீ விஷ்ணு புராணாதிகளை விசேஷித்து உள்ளபடி அறிந்து இருக்க வேணும்
ஆக இப்படி ஸர்வ பிரகாரத்தாலும் லக்ஷண பூர்த்தியை யுடையனாய் இருக்குமவன் யாய்த்து குரு என்று சொல்லலாவது-இப்படி இறே பிரமாணம் சொல்லுகிறது-இந்த அஷ்ட லக்ஷணங்களையும் சொல்லும் பிரமாணம் –

ஆச்சார்யோ வேத ஸம்பந்நோ விஷ்ணு பக்தோ விமத்ஸர
மந்த்ரஜ்ஜோ மந்த்ர பக்தஸ் ச ஸதா மந்த்ர ஆஸ்ரயஸ் ஸூசி
குரு பக்தி ஸமா யுக்த புராணஜ்ஜோ விசேஷத
ஏவம் லக்ஷண ஸம்பந்த குருரித் யபிதீயதே

(ஆச்சார்யன் ஆவான் 1-வேத அத்யயனம் செய்தவனாகவும் -2-விஷ்ணு பக்தனாகவும் 3–மாத்சர்யம் அற்றவனாகவும் -4-மந்த்ரத்தை அறிந்தவனாகவும் -5-மந்திரத்தில் பக்தி யுள்ளவனாகவும் -6-எப்போதும் மந்த்ரத்தைப் பற்றி இருபவனாகவும் -7-அதைக்கொண்டு ஷூத்ர பலன்களை ஸாதித்துக் கொள்ளாத )பரி ஸூத்தி யுடையவனாகவும் -8-தனது ஆச்சார்யன் இடத்தில் பக்தி யுடையவனாகவும் -9-சிறப்பாகப் புராணங்களை அறிந்தவனாகவும் இருக்க வேண்டும் இத்தகைய லக்ஷணங்களை யுடையவனே குரு என்று சொல்லப்படுகிறான்)

சித்தம் சத் ஸம்ப்ரதாயே ஸ்திர தியம் அநகம் ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்
சத்வஸ்தம் சத்ய வாஸம் சமய நியதயா சாது வ்ருத்த்யா ஸமேதம்
டம்பா ஸூயாதி முக்தம் ஜித விஷயி கணம் தீர்க்க பந்தும் தயாளும்
ஸ்காலித்யே சாஸிதாரம் ஸ்வ பர ஹித பரம் தேசிகம் பூஷ்ணுரீப்சேத்
–1-நியாய விம்சதி முதல் ஸ்லோகம் தேசிகனும் 14 ஆச்சார்ய லக்ஷணங்கள் காட்டி அருளி உள்ளார்

1-ஸத் ஸம்ப்ரதாயே – ஸ்திரமான ஸம்ப்ரதாய வழியில் வந்த ஆசார்யன் ரிஷி துல்ய பக்தி,     வைராக்ய, அனுஷ்டானமுடையவராயிருப்பர்.

2-ஸ்திர தியம் – சந்தேகமற்ற ஸ்திர மான ஞானமுடையவராய் இருக்கவேண்டும்.

3-அநகம் – ஸாஸ்த்ரம் சொல்வதைச்செய்பவராய் தோஷமற்றிருத்தல்

4-ஸ்ரோத்ரியம் – வேத வேதாந்தங்களைக் கற்றவராயிருத்தல்

5-ப்ரும்ஹ நிஷ்டம் – எம்பெருமானிடம்அஸஞ்சல பக்தியுடனிருத்தல்

6-ஸத்வஸ்த்தம் – ஸத்வ குணத்தில் நிலைத்து ஸாத்விகராயிருத்தல்.

7-ஸத்ய வாசம் – ஸாஸ்த்ர ,லௌகீக விஷயங்களில் ஸத்யமாயிருத்தல்.

8-ஸமய நியதயா ஸாது வ்ருத்யா – காலத்திற்கேற்ப பெரியோர் வரையறுத்த அனுஷ்டானங்களை ச் செய்தல்.

9-டம்ப அஸூயாதி முக்தம் – தற்பெருமை,பொறாமை முதலிய தீயகுணங்களில்லாதிருத்தல்.

10-ஜித விஷயி கணம் – இந்த்ரியங்களை ஜெயித்திருத்தல்.

11-தீர்க்க பந்தும் – இம்மைக்கு மட்டுமன்றி மறுமைக்கும் வழிகாட்டும் வகையில் ஆத்ம பந்துவாயிருத்தல்.

12-தயாளும் – மாத்ரு வாத்ஸல்யம் போல கருணையுடனிருத்தல்.

13-ஸாஸிதாரம் – தவறைத் திருத்திப் பணி கொள்ளும் தகைமையனாயிருத்தல் (பயனன்றாகிலும், பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்துவார்)

14-ஸ்வபர ஹிதபரம் – ஹிதத்தைச் சொல்பவராயிருத்தல். பரஸ்பர ஆத்ம, ஶரீர ஹிதம் சொல்பவராயிருத்தல்.
ஆச்சார்ய சம்பந்தம் இருப்பில் ஆத்ம குணங்கள் வந்து சேரும் பகவத் சம்பந்தமும் வரும் –ஆச்சார்யர் பிரியம் சிஷ்யன் செய்ய வேண்டும் –  சிஷ்யன் ஹிதம் ஆச்சார்யர் பார்க்க வேண்டும் – ஈஸ்வரனை கொண்டு ஆசார்யன் நடத்த கடவன்
பெருமாள் நடுவில் இருந்து ஆச்சார்யருக்கு ஹிதமும் சிஷ்யனுக்கு பிரியமும் -நடத்தி அருளுவான்

இன்னம் குரு லக்ஷணங்கள் அநேகம் உண்டு -இப்படி ஸர்வ லக்ஷண ஸம் பன்னமான குருத்வம் ஸார்வத்ரிகமாகக் காணாமையாலே ஒரு வியக்தியிலே விசேஷ நிஷ்டமாக்கி நிர்ணயிக்க வேணும் இறே(ராமன் இடம் 16 குண பூர்த்தி போல்)
அது செய்யும் இடத்தில் அஸ்மத் குரு (வாக்ய குரு பரம்பரை)என்று தொடங்கி –ஸ ச ஆசார்ய வம்ஸோ ஜேயோ பவதி ஆசார்யாணாம் அஸாவஸாவித்யாய பகவத்த (ரஹஸ்ய ஆம்நாய ப்ராஹ்மணம் )(பகவானிடம் இருந்து தொடங்கி -அல்லது பகவான் வரையில் -இவர் இவர் என்று குரு பரம்பரை முழுவதும் அறியப்பட வேண்டும் )-என்கிறபடியே எம்பெருமான் அளவும் செல்ல இவர்களுடைய ஸ்வபாவங்களை உள்ளபடி அறிந்து நிர்ணயிக்க வேணும்

(அஸ்மத் குருப்யோ நம:
எனக்கு பஞ்சஸம்ஸ்காரங்களைச் செய்து வைஷ்ணவனாக்கிய எனது ஆசார்யனை வணங்குகிறேன்
அஸ்மத் பரமகுருப்யோ நம:
எனது ஆச்சார்யனின் ஆசார்யனையும் அவர் சமகாலத்து ஆச்சார்யர்களையும் வணங்குகிறேன்
அஸ்மத் ஸர்வ குருப்யோ நம:
எனது எல்லா ஆச்சார்யர்களையும் வணங்குகிறேன்
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயையும் திருவரங்கச் செல்வத்தையுமுடைய எம்பெருமானாரை வணங்குகிறேன்
ஸ்ரீ பராங்குச தாஸாய நம:
ஆச்சார்ய அபிமானம் ஆகிற செல்வமுடைய பெரியநம்பியை வணங்குகிறேன்
ஸ்ரீமத் யாமுந முநயே நம:
வேதாந்த சித்தாந்தமாகிற செல்வமுடைய ஆளவந்தாரை வணங்குகிறேன்
ஸ்ரீ ராமமிஸ்ராய நம:
ஆச்சார்ய கைங்கர்யம் ஆகிற செல்வரான மணக்கால் நம்பியை வணங்குகிறேன்
ஸ்ரீ புண்டரீகாக்ஷாய நம:
ஆச்சார்ய அனுக்ரஹம் ஆகிற செல்வமுடைய உய்யக்கொண்டாரை வணங்குகிறேன்
ஸ்ரீமந் நாதமுநயே நம:
ஸ்ரீவைஷ்ணவ குலபதியும், ப்ரபந்ந குலத்துக்கு முதல்வரும், பரமாச்சார்யரான நம்மாழ்வாரிடம் அருளிச் செயல் செல்வம் பெற்றவரான ஸ்ரீமந் நாதமுநிகளை வணங்குகிறேன்
ஸ்ரீமதே சடகோபாய நம:
மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயை உடையவரான நம்மாழ்வாரை வணங்குகிறேன்
ஸ்ரீமதே விஷ்வக்ஸேநாய நம:
பெரிய பிராட்டியாரிடம் ரஹஸ்யத்ரய உபதேசம் பெற்ற மிக்க செல்வரான சேனை முதலியாரை(முதல்வர்) வணங்குகிறேன்
ஸ்ரீயை நம:
தேவதேவ திவ்ய மஹிஷியாய் எம்பெருமானுக்கு வல்லபையாய் புருஷகாரம் மிக்க செல்வமுடையவளை வணங்குகிறேன்
ஸ்ரீதராய நம:
திருவுக்கும் திருவாகிய செல்வனான எம்பெருமானை வணங்குகிறேன்.
வாக்ய குருபரம்பரையில் முதல் மூன்று வாக்யங்கள் வேதவாக்யங்கள். மற்றவை ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச்செய்தது ஆகும்)

இப்படி நிர்ணயிக்கப் படுகிற குருத்வம் தான் பிரதம குரு என்றும் சரம குரு என்றும் த்வி விதமாய் இருக்கையாலே அதில் பிரதம குருவான எம்பெருமானை ஒழிய இவ்வருகுள்ள வ்யக்திகளிலே நிர்ணயிக்க வேணும் இறே
குருத்வம் எல்லாருக்கும் அவிசிஷ்டமாய் இருக்கச் செய்தே பவ்ரயாபர்ய விபாகத்தாலே பிரதம சரமம் என்னப்படுகிறது
இவர்கள் பக்கல் ஆபேஷிக ப்ராதம்யம் ஒழிய நைசர்கிக ப்ராதம்யம் இல்லை இறே -அது உள்ளது எம்பெருமானுக்கே யாய்த்து -நித்ய சித்தனாய் யாகையாலே
இப்படி எல்லாருக்கும் சரம குருத்வம் அவிசிஷ்டமாகில் ஏகத்ர விசேஷ நிஷ்டமாக்க வேண்டுவான் என் என்னில்
குருத்வம் அவிசிஷ்டமாய் இருந்ததே யாகிலும் அது இவ்விபூதியிலே நிரர்கலமாக விலைச் செல்ல வேணும் –
அப்படி விலைச் செல்லுகிற குருத்வம் சார்வத்ரிகம் ஆக மாட்டாது
ஆகையால் வ்யக்தி நிஷ்டமாகவே கொள்ள வேணும் இறே -அது கொள்ளும் பிரகாரம் எங்கனே என்னில்

புரா மந்த்ர த்வயம் ப்ரஹ்மன் விஷ்ணு லோகே மஹா புரே
தஸ்மிந் நந்தபுரே லஷ்ம்யை மயா தத்தம் ஸநாதநம்
–என்கிறபடியே(அந்தணரே -ஆதி காலத்தில் விஷ்ணு லோகமாகிற பெரிய உலகில் அந்தப்புரத்திலே ஸநாதனமான த்வய மந்த்ரம் லஷ்மீ தேவிக்கு என்னால் உபதேஸிக்கப் பட்டது )
பெரிய பிராட்டியார் எம்பெருமான் பக்கலிலே மந்த்ர ரத்னமான த்வயத்தைப் பெற்று ஸிஷியஸ்தாநீயரான சேனை முதலியாருக்கு உபதேஸித்து அவ்வளவிலே அவளுடைய குருத்வம் விலைச் சென்றது இத்தனை போக்கி ஸார்வத்ரிகமாகப் பெற்றது இல்லை

லஷ்ம்யா தத்தம் ஸ்வயம் ஸம்யக் ஸேநேஸோ அபி ததாஸ் ஆதராத்
பரங்குசாய ப்ராயச்சத் மந்த்ர ரத்னம் மஹத்தரம்
-என்கிறபடியே
பெரிய பிராட்டியார் பக்கலிலே லப்தமான மந்த்ர ரத்னமான த்வயத்தை ஸேனாபதி யாழ்வானும் ஆதர பூர்வகமாக நம்மாழ்வாருக்கு உபதேஸித்து வ்யக்த்யந்தரத்தில் போகாமையாலே அவருடைய குருத்வமும் ஆழ்வார் அளவிலே நின்றது

பெரிய பிராட்டியாருடையவும் சேனை முதலியாருடையவும் குருத்வமானது உபதேஷ்ட்ருத்வ முகத்தாலே ரூடியாய் வந்தது இத்தனை போக்கி அஞ்ஞான தமோ நிவர்த்தக த்வாரா யோகமாய் வந்ததன்று
அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தராய் அஸங்குசித ஞாநாதி குண யுக்தரான சேனை முதலியாருக்கு அஞ்ஞானஸ் தமஸ் ப்ரவ்ருத்தி யுண்டாய் தன் நிவ்ருத்தி யர்த்தமாக உபதேசித்தாள் இல்லை இறே
லோக ரக்ஷண அர்த்தமாக லீலா விபூதியிலே ப்ரவர்த்திப்பிக்க வேண்டி அர்த்தத்தை சீர்மையாலே உபதேஸ பரம்பரா ப்ராப்தமாக வேணும் என்ற நினைவாலே உபதேசித்தாள் அத்தனை இறே
ஆகையால் உபதேஷ்ட் ருத்வ பர்யாயமான குருத்வமே உள்ளது(பங்கஜம் ரூடி தாமரை -சேற்றில் பிறந்த அனைத்துக்கும் யவ்கிக்க பொருளில் -அதே போல் குருத்வம் ரூடி யாகவும் அஞ்ஞானம் போக்கியவருக்கும் பொருந்தும் அன்றோ)
ஆழ்வாரைக் குறித்து யுண்டான சேனை முதலியாருடைய குருத்வமும் –மயர்வற மதி நலம் அருளினன் -என்கிறபடியே பிரதம குருவான எம்பெருமான் அஞ்ஞான நிவ்ருத்தியைப் பண்ணிக் கொடுத்து -பக்தி ரூபா பன்ன ஞானத்தைப் பிரதமத்திலே கொடுத்தானாகையாலே -ஆழ்வாருக்கு அஞ்ஞானம் நடையாடுகிற தசையிலே தன்நிவ்ருத்தி யர்த்தமாக உபதேஸிக்கை அன்றிக்கே மயர்வற மதிநலம் அருளப் பெற்ற அநந்தரம் உபதேஸித்தான் ஆகையாலே உபதேஷ்ட்ருத்வ ரூபமான குருத்வம் அத்தனை

இனி இவ்வருகுள்ள ஆழ்வார் தொடக்கமாயுள்ள ஆச்சார்யர்களுக்கு அஞ்ஞான தமோ நிவர்த்தன த்வாரா வந்த குருத்வம் தான் ஸார்வத்ரிகமாக விலைச் செல்லப் பெற்றது இல்லை -எங்கனே என்னில்

பகவன் நிர்ஹேதுக விஷயீ காரம் பெற்ற நம்மாழ்வார்
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போல் -என்றும்
நின் கண் வேட்க்கை எழுவிப்பேனே -என்றும்
எம்பெருமானோடே மார் தட்டி அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தலாவதே -என்று நிவ்ருத்தரானார் அத்தனை போக்கி
ஸங்கல்பித்த படியே தம்முடைய குருத்வத்தை ஸார்வாத் ரிகமாக விலைச் செலுத்தக் கண்டதில்லை
ஸங்கல்பித்த அம்சத்தில் சிலர் திருந்தின இத்தனை –

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே

போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2-

(வணங்கும் துறைகள் பல பல வாக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பல பல வாக்கி  அவையவை தோறு
அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின் கண் வேட்கை எழுவிப்பனே – திருவிருத்தம்-96 )

ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே -சீரார்
மனத் தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர்
இனத் தலைவன் கண்ணனால் யான்
—பெரிய திருவந்தாதி-25-
எழுந்து அருளி இருந்த முப்பத்து நான்கு திரு நக்ஷத்ரமும் (சில இடங்களில் 32 திரு நக்ஷத்ரம் என்பர்-மூவாறு மாதம் மோகித்து இருந்தார் அன்றோ -முன்பு 16 வருஷமும் மதுரகவி வந்த பின்பு 16 வருஷமும் -ஆக 34 என்றும் சொல்லலாம்)குண அநுபவத்திற்கும் விஸ்லேஷ வ்யஸன அநுபவத்துக்கும் -ஸ்வ தேஹ தோஷத்தை அறிவிக்கைக்குமே உடலாய்த்து(மங்க ஒட்டு உன் மா மாயை)
ஆகையால் ஆழ்வாருடைய குருத்வ பூர்த்திக்கும் சிலவொருவாய் யூன்றி இருக்கும்

(ஓ ஓ உலகினில் இயல்பே என்றும்– மருள் ஒழி மட நெஞ்சே -திருவாறன்விளையிலேயே இருப்பதாகவே போதும் என்று முன்பு அருளிச் செய்தாலும் பின்னர் நெஞ்சுக்கும் உபதேசித்து அங்கு செல்ல த்வரித்தார் அன்றோ)

ஓ ஒ உலகினதியல்வே, ஈன்றோளிருக்க
மணை நீராட்டிப், படைத்து  இடந்து உண்டு உமிழ்ந்து
அளந்து, தேர்ந்து உலகளிக்கும் முதற்பெரும்   
கடவுள் நிற்பப் புடைப்பல தானறி
தெய்வம் பேணுதல், தனாது   
புல்லறிவாண்மை பொருந்தக்காட்டிக்,  
கொல்வன முதலா அல்லன முயலும்,
இனைய செய்கை இன்பு துன்பு அளித்
தொன்மா மாயப் பிறவியுள் நீங்காப்
பன்மா மாயத்து அழுந்துமா நளிர்ந்தே–திருவாசிரியம்6–

மங்க வொட்டுன் மாமாயை திருமாலிருஞ்சோலைமேய
நங்கள் கோனே. யானேநீ யாகி யென்னை யளித்தானே
பொங்கைம் புலனும் பொறியைந்தும் கருமேந்திரியும் ஐம்பூதம்
இங்கு இவ்வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களே

(அருள்பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான்
அருள்தருவான் அமைகின்றான் அது நமது விதிவகையே
இருள் தரு மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே)

ஆழ்வாருக்கு இவ்வருகுள்ள நாத முனிகள் உய்யக்கொண்டார் மணக்கால் நம்பி ஆளவந்தார் பெரிய நம்பி முதலான நம் பூர்வாச்சார்யர்கள்
ஸ்வ ஸ்வ காலங்களிலே உபதேஸ அனுஷ்டானாதி முகத்தாலே சில ஜீவாத்மாக்களைக் கறுந்தரையிலே திருத்தி உஜ்ஜீவிப்பித்துக் கால யாபனம் பண்ணிப் போந்தார்கள்
ஆகையாலே அவர்களுடைய குருத்வமும் க்வாசித்கமாகி விட்டது
இனி ஸர்வ லக்ஷண உபேதமான குருத்வ பூர்த்தி தீர்க்கஸ் தாயியாய் நின்று கண்டாபதமாய்க் கொண்டு விலைச் சென்றது நம் குல நாதரான எம்பெருமானார் திருவவதரித்த பின்பு இறே

எம்பெருமான் ஸம்ஸாரி சேதன உஜ்ஜீவன அர்த்தமாக வேத இதிஹாஸ புராணாதிகளைப் ப்ரவர்த்திப்பித்தும் -ராம கிருஷ்ணாதி ரூபேண அவதரித்தும் -ஆழ்வார்களை அவதரிப்பித்தும்
ஜகத்தைத் திருத்தப் பார்த்த இடத்தில் ஒருவரும் திருந்தக் காணாமையாலே ஆச்சார்ய ரூபேண சிலரை அவதரிப்பித்து ஜகத்தைத் திருத்தக் கடவோம் என்று திருவாழி ஆழ்வானை ஏவுவது -திருவனந்த ஆழ்வானை ஏவுவதான இடத்திலும் -ஆடவிட்டுத் திருந்தக் காணாமையாலே
இனி நாமே சென்று ஆச்சார்ய ரூபேண அவதரித்து சிறிது காலம் வருந்தி இருந்தாகிலும் ஜகத்தை அடையாத திருத்தக் கடவோம் என்று அமோகமாக ஸங்கல்பித்து
ஆச்சார்யத்வ பூர்த்திகளிலே யாதல் -லக்ஷணங்களிலே யாதல் ஒரு குறைகளும் இன்றிக்கே ஸர்வ லக்ஷண உபேதனாயக் கொண்டு எம்பெருமான் தானாகவே அவதரித்த அவதாரம் இறே எம்பெருமானார் –எம்பெருமானாருக்குப் பின்பும் ஒருவரை அவதரிப்பித்து ஜகத்தைத் திருத்த வேண்டும்படி இன்றிக்கே அப்ரதிஹத மநோ ரதனாய் நின்று ஸங்கல்பித்து இதுவே அவதியாக குரு ரூபேண அவதரித்த அவதாரமாகையாலே எம்பெருமானது சரம குருத்வமும் இவர் பக்கலிலே யாய்த்து உள்ளது-

(மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா, உலகோர்களெல்லாம்
அண்ணல் இராமா னுசன் வந்து தோன்றிய அப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு, நாரணற் காயினரே
.–41-)

இந்த குருத்வம் தான் ரூடி யோக த்வயத்தாலும் பரிபூர்ணமாகக் கண்டது இவர் பக்கலிலே இறே –
ஆச்சார்ய பதம் நிர்வஹிப்போம் என்று இருப்பார் பக்கல் குருத்வம் போலே சங்குசிதமாய்க் கிடக்கை அன்றிக்கே –விஷ்ணு சேஷி ததீய ஸூவ குண நிலயோ விக்ரஹ ஸ்ரீ ஸடாரி
ஸ்ரீ மான் ராமாநுஜார்ய பத கமல யுகம் பாதி ரம்யம் ததீயம்
தஸ்மிந் ராமாநுஜார்யே குரு ரித ச பதம் பாதி நான்யத்ர தஸ்மாத்
ஸிஷ்டம் ஸ்ரீ மத் குரூணாம் குலமிதம் அகிலம் தஸ்ய நாதஸ்ய சேஷ
(பெரியவாச்சான் பிள்ளை அருளியதாக ஸ்ரீ வைஷ்ணவ சமாசார நிஷ்கர்ஷத்தில் எடுக்கப்பட்ட ஸ்லோகம் )(விஷ்ணுவானவர் அனைவருக்கும் சேஷியாய் இருப்பவர் -நற்குணங்களை இருப்பிடமான நம்மாழ்வார் அவருடைய திருமேனி யாவார் -கைங்கர்யச் செல்வம் நிறைந்த எம்பெருமானார் அந்த நம்மாழ்வாருடையாளாகிய திருவடித்தாமரை இணையாய் விளங்குகிறார் -அந்த எம்பெருமானார் இடத்திலேயே ஆசார்ய ஸப்தம் நிறை பொருளுடையதாய் விளங்குகிறது -வேறு ஒருவர் இடமும் அப்படி விளங்க வில்லை -ஆகையால் மற்ற ஸதாசார்ய பரம்பரை முழுவதும் தலைவரான அந்த எம்பெருமானார்க்கே சேஷமாய் இருப்பது ) என்று நாள் தோறும் நாள் தோறும் ஒளி விஞ்சிச் செல்லும்படி இறே எம்பெருமானாருடைய குருத்வம் (இதனால் தான் நம்மாழ்வார் சந்நிதியில் ஆழ்வார்திருநகரியில் ராமானுஜன் சாதிக்கவும் மற்ற இடங்களில் மதுரகவி சாதிக்கவும் நிற்கிறோம் )
ரூடி க்ரமத்தாலே உபதேஷ்ட்ருத்வ ரூபமான குருத்வமும் அநர்த்தம் கண்டு ஆற்றாமையும் மிக்க கிருபையும் நின்று உபதேசிக்கிற இவர் பக்கலிலே முக்ய தமமாய் இருக்கும்

(காரேய் கருணை இராமானுச,இக் கடலிடத்தில்
ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான் வந்து நீ யென்னை உய்த்த பினுன்
சீரே யுயிர்க் குயிராய், அடியேற்கின்று தித்திக்குமே.
–25-)

ஏதத் வ்யதிரிக்த விஷயத்தில் உபதேஷ்ட்ருத்வ ரூபமான குருத்வம் நிஷ்க்ருஷ்ட ஸ்வ அநு வ்ருத்தி பூர்வகமாய் இருக்கும் –நிஷ்க்ருஷ்ட ஸ்வ அநு வ்ருத்தியாவது சிஷ்யனுடைய அநு வர்த்தகம் பாதி ஆச்சார்யனுடைய கிருபை பாதியாய் உபதேஸிக்கை இன்றிக்கே சிஷ்யனுடைய அநு வர்த்தன ப்ரதீஷனாய் தத் அநு வர்த்தகத்துக்கு முகம் மலர்ந்து உபதேஸிக்கை
ஸம் மிஸ்ர அநு வ்ருத்தி யாவது -சிஷ்யன் விஷயத்தில் ஆச்சார்யனுக்கு கிருபை உண்டாய் இருக்கவும் தத் அனுவர்த்தன அபாவத்தில் முகம் மாறி வருத்தப்பட்டு உபதேஸிக்கை
இப்படி யன்றிக்கே மறுவற்ற கிருபா மாத்ர ப்ரசன்னாச்சார்யத்வ முகத்தாலே சிஷ்யனுடைய துர்கதியே பற்றாசாக மேல் விழுந்து உபதேஸிக்கும் ஆகாரம் இவருக்கே யாய்த்து உள்ளது

(தாயுக்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவருக்கும் -நம்மாழ்வாருக்கு -இவர் அடி பணிந்தாருக்கும் இவை உள்ளது -கனைத்து இளம் –நினைத்து -முலை வழியே பால் பொழியுமா போல்)

அற்புதன் செம்மை இராமானுசன், என்னை ஆள வந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய
பற் பல் லுயிர்களும் பல்லுலகி யாவும் பரன தென்னும்
நற் பொருள் தன்னை, இந் நானிலத்தே வந்து நாட்டினனே
.–53-

காரேய் கருணை இராமானுச,இக் கடலிடத்தில்
ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான் வந்து நீ யென்னை உய்த்த பினுன்
சீரே யுயிர்க் குயிராய், அடியேற்கின்று தித்திக்குமே.
–25-

அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்காரோ?
அதிகாரம் இல்லாதார்க்கன்றோ எதிராசா!
நீ இரங்க வேண்டுவது? நீயும் அதிகாரிகளுக்கே
இரங்கில் என் செய்வோம் யாம்!–14-

யோக க்ரமத்தாலே அஞ்ஞான தமோ நிவர்தந த்வாரா வந்த குருத்வமும் இவர் பக்கலிலே முக்கிய வ்ருத்தி-ஏதத் வ்யதிரிக்த விஷயங்களில் குருத்வம் அந்நிய சாபேஷமாய் இருக்கும் -எம்பெருமானாரை முன்னிட்டு வேண்டுகையாலே

1-ஸம்ஸாரி ஜந அநர்த்த தர்சன அஸஹிஷ்ணுத்வம் -2-தத் விஷய காருண்ய மஹா குணாகரத்வம் ச -3-அஸ்மத் குல நாதே -4-அஸ்மத் சேஷிணி -5-அஸ்மத் ஸ்வாமிநி 6-அபரிமிதோதார பாவ கல்யாண குண சாகரே -7-அநவதிக அதிசய ஆஸ்ரித வாத்ஸல்ய ஸுசீல்யைக நிதவ் சம தமாதி ஸமஸ்த ஆத்ம குணவ்க மஹா ஆர்ணவே -பகவதி ஸ்ரீ மத் ராமானுஜாச்சார்யே வ்யவஸ்திதே பவத -என்று
சோமாஸி ஆண்டானும் அநர்த்தம் கண்டு ஆற்றாமையும் மிக்க கிருபையும் எம்பெருமானார் பக்கலிலே வ்யவஸ்திதமாய் இருக்கும் என்று குரு குண விவரணத்திலே அருளிச் செய்தார் இறே

(ஸம்ஸாரத்தில் உழலும் சேதனர்களின் அநர்த்தம் கண்டு ஆற்ற மாட்டாமையும் அவர்கள் விஷயத்தில் கருணையாகிற பெரிய குணத்தை யுடையவராய் இருக்கையும் -நமது குல நாதராய் நமது சேஷியாய் நமது ஸ்வாமியாய் எல்லையற்ற வண்மையுடைய கல்யாண குணக்கடலாய் எல்லையற்ற பெருமையுடைய ஆஸ்ரித வாத்சல்யம் ஸுசீல்யம் ஆகியவற்றுக்குக் கொள் கலமாய் -சமம் தமம் முதலான எல்லா ஆத்ம குண வெள்ளங்களும் சேரும் பெரும் கடலாய் இருக்கும் பகவானான ஸ்ரீ மத் ராமானுஜாச்சார்யார் இடம் நிலை நிற்கின்றன-என்று குரு குண விவரணத்திலே அருளிச் செய்தார் இறே சோமாஸி ஆண்டான்)

(கிடாம்பி ஆச்சானுக்கு -அநாதன் -சொல்லக்கூடாது அழகர் அருளிச் செய்த வ்ருத்தாந்தம்
சேஷி ராமானுஜன் சேஷ ராமானுஜன் உடையவரும்-கண்ணனும் என்பர் பொதுவாக – -இங்கு ராமானுஜரே சேஷி -உடையவர் பட்டம் என்பதால் ஸ்வாமி -உபய விபூதி -ஆள்பவர்
நீ நம்மை விட்டாலும் நாம் உம்மை விட மாட்டாதே -என்று அருளிச் செய்தார் அன்றோ)

திக்குற்ற கீர்த்தி இராமானுசனை, என் செய் வினையாம்
மெய்க் குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர்
எக் குற்ற வாளர் எது பிறப் பேதியல்வாக நின்றோர்
அக் குற்றம் அப் பிறப்பு அவ் வியல்வே நம்மை யாட் கொள்ளுமே.
–26-

நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னரு ளின் கணன்றிப்
புகலொன்று மில்லை அருட்கு மஃ தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச! இனி நாம் பழுதே
அகலும் பொருளென், பயனிருவோமுக்கு மான பின்னே?
–48-

அஞ்ஞாந தமோ நிவர்த்தந த்வாரா யாத குருத்வம் யப் யஸ்மின் ராமானுஜ குரவ் முக்ய வ்ருத்தி ந த்விதரேஷு தைஸ் தஸ்ய புரஸ் க்ருதத்வாத் -என்றும் அருளிச் செய்தார் இறே

(அஞ்ஞான இருளைப் போக்குவதன் மூலம் ஏற்பட்ட குருத்வமும் இந்த ராமாநுஜாசார்யார் இடமே முக்கியமாகப் பொருந்தி இருக்கின்றது -மற்றவர்கள் இடம் அப்படியில்லை -அவர்கள் -எம்பெருமானாரை முன்னிட்டு வேண்டி இருக்கையால் -என்று குரு குண விவரணத்திலே அருளிச் செய்தார் இறே சோமாஸி ஆண்டான்)

இப்படி ஸர்வ பிரகார குரு லக்ஷண பூர்த்தியை யுடையவராய் -சரம குரு ரூபேண பகவத் அவதாரமான எம்பெருமானாருடைய அபிமானம் உஜ்ஜீவனேச்சுக்களான ஸமஸ்த சேதனருக்கும் உத்தாரகம்-ஏதத் வ்யதிரிக்த குரு ஜனங்களுக்கு எல்லாம் உபகாரத்வமே யுள்ளது
1-சரம குரு ரூபேண பகவத் அவதாரமான எம்பெருமாருடைய வைபவத்தை (பார்த்தசாரதியை ஸ்வாமி அவதாரம் அன்றோ)பிரதமத்திலே இவனுக்கு உள்ளபடி யுணர்த்தி -2-அவருடைய அபிமானம் இவனுக்கு ஸம்ஸார நிஸ்தரண உபாயம் என்னும் பரமார்த்தத்தையும் அறிவித்து -3-தந் குண அநுஸந்தானமே கால ஷேப விஷயம் என்றும் உபதேஸித்து அவ் வழியாலே இச் சேதனனுக்கு உபகாரகராய்ப் போருவார்கள்(இதுக்கும் மேல் எம்பார் ஸ்வாமி வடிவு அழகு இதயத்தில் உள்ளதால் இல்லை எனக்கு எதிர் என்று அருளிச் செய்தார் அன்றோ)

(1-நல்ல வென் தோழி –
2-மாறாய தானவனை – என்கிற பாட்டுக்களையும் –
3-ஸ்தோத்ர ரத்னத்தில்-முடிந்த ஸ்லோகத்தையும் –
4-பசுர் மனுஷ்ய -என்கிற ஸ்லோகத்தையும் –(பசுர் மனுஷ்ய பஷீ வா ஏச வைஷ்ணவ  சம்ஸ்ரயா தேனை வதே பிரயாச்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் )
இதுக்கு பிரமாணமாக அனுசந்திப்பது –

மேலே நல்ல என் தோழீ என்கிற பாட்டிலும் –
மாறாய தானவனை -என்கிற பாட்டிலும்
அக்ருத்ரிம த்வத் சரணார விந்தை -என்கிற ஸ்லோகத்திலும்
விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு தருவிப்பரேல் அது காண்டும் -என்றும்
கோளரியை வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் -தவம் என்றும்
பிதா மஹம் நாதமுனிம் விலோக்ய ப்ரஸீத என்றும்
யே ச வைஷ்ணவ ஸம்ஸ்ரயா தேநைவ தே ப்ரயாஸ் யந்தி -என்றும்
இப்படி ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் தொடக்கமானவர் பரகதமான சரம உபாயத்தை அறுதியிட்டு அருளிச் செய்கையாலே
பிரகரண யுக்தமாய் பரகதமான ஆச்சார்ய உபாயத்துக்கு இவற்றை பிரமாணமாக அனுசந்திப்பது என்கிறார் –)

ஏவம் ஸர்வ பிரகார குரு லக்ஷண பூர்ண சரம குரு ரூப பகவத் அவதார ராமானுஜ குரோர் அபிமான ஏவ ஆத்ம உஜ்ஜீவன அபேஷாணம் அகில சேதநாநாம் ஸம்ஸார நிரயகர்த்த நிஸ்தரண உபாய -தத் வ்யதிரிக்த பூர்வாபர குரு ஐநாநாம் உபகாரத்வம் ஏவ -நாத் உத்தாரகத்வம் -தே புநஸ் அஸ்ய ஸம்ஸாரி சேதனஸ்ய ஆத்ம ஹிதைஷிண ப்ரதமதோ அஸ்மச் சேஷிண பரம காருணிகஸ்ய அபரிமித உதார பாவஸ்ய பகவத் ஸ்ரீ ராமானுஜ குரவ் வைபவம் உபதிஸ்ய தஸ்ய அபிமானம் ஏவ ஸம் ஸ்ருதி நிஸ்தரண உபாய -தத் குண அனுசந்தானம் ஏவ காலக்ஷேப விஷய இதி ஞாபயித்வா தத் த்வாரா சேதநஸ்ய பரம உப கர்த்தாரோ பவந்தி –என்று குரு குண விவரணத்திலே அருளிச் செய்தார் இறே சோமாஸி ஆண்டான்

(இவ் வண்ணமாக எல்லா வகையான குரு லக்ஷணங்களும் நிறைந்த சரம குருவாய் -எம்பெருமானுடைய அவதாரமாய் இருக்கும் ராமானுஜாச்சாருடைய அபிமானமே ஆத்ம உஜ்ஜீவனத்தை விரும்பும் எல்லாச் சேதனருக்கும் ஸம்ஸாரம் ஆகிற நரகப்படு குழியில் இருந்து கரை ஏறும் உபாயமாகும் -அவருக்கு முன்னும் பின்னுமுள்ள மற்ற ஆச்சார்யர்களுக்கு உபகாரகத்வம் உண்டே ஒழிய உத்தாரகத்வம் கிடையாது -அவர்கள் இந்த ஸம்ஸாரி சேதனனுடைய ஆத்மாவுக்கு நன்மையை விரும்புபவர்களாய் முதன் முதலில் நமக்கு ஸ்வாமியாய் -பரம காருணிகராய் -எல்லையற்ற வண்மை யுடையரான பகவானான ஸ்ரீ ராமானுஜாச்சார்யருடைய பெருமையை உபதேசித்து அவரது அபிமானமே ஸம்ஸாரக் கடலைத் தாண்டுவதற்கு உபாயம் என்றும் -அவரது குண அநு ஸந்தானமே போது போக்குக்கு விஷயம் என்று அறிவித்து -அவ்வழியாலே இந்தச் சேதனனுக்கு மேலான உபகாரத்தைச் செய்கிறார்கள் -என்றபடி)

(பரமார்த்த த்ரயம் உபதேசம்
1-இராமானுஜர் வைபவம் உபதேசம்
2-ராமானுஜர் அபிமானம் பெற உபதங்களை உபதேசிப்பது
3-இனி இருக்கும் காலம் ராமானுஜர் குணங்களை அனுசந்தித்து போக வேண்டும்)

(இந்த யுபதேச ரத்ன மாலை தன்னைச்
சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார் -எந்தை
எதிராசர் இன்னருளுக்கு என்றும் இலக்காகிச்
சதிராக வாழ்ந்திடுவர் தாம் ———73-)

தத் வ்யதிரிக்த விஷயங்களில் ஆச்சர்யத்வமும் உபதேஷ்ட்ருத்வ முகத்தாலே ரூடி க்ரமாகதமான ஆச்சார்யத்வம் ஒழிந்து யோக க்ரமத்தாலே வந்த ஆச்சார்யத்வம் அன்று
அது முக்ய வ்ருத்தியாகக் கண்டது நம் குல நாதரான எம்பெருமானார் பக்கலிலே யாய்த்து
வடுக நம்பி -ஆச்சார்ய பதம் என்று தனியே ஒரு பதம் உள்ளது எம்பெருமானாருக்கே யாய்த்து -என்று அருளிச் செய்தார் இறே

அவதாரணத்தாலே அந்நிய யோக வ்யவச்சேதம் பண்ணப்படுகிறது(எம்பெருமானாரே குரு ஆச்சார்யர் என்றபடி)

(அழகிய மணவாளன் என்று பட்டர் அருளிச் செய்வதும் -தொலைவில்லி மங்கலம் என்று நம்மாழ்வாரும் -திருக்கண்ணபுரம் என்று திருமங்கை ஆழ்வாரும்- எம்பெருமானார் என்று வடுக நம்பி அருளிச் செய்வதும் ஸ்ரேஷ்ட்டம் அன்றோ)

ஆச்சார்யத்வ பதம் ததைவ குருதா யோக க்ரமாதாகதே
ஞாந அபாவ தமோநிவ்ருத்தி கரண ஸ்ருத் யர்த்த விஷ்டாப நாத்
காருண்ய ஏக நிதவ் பவாப்தி தரண ப்ரபோதக உத்தாரகே
ஸ்ரீ மல் லஷ்மண யோகிநி வ்யவசிதே நாந்யேஷு மாந்யேஷ் வபி
–என்று இறே சோமாஸி ஆண்டான் பணிக்கும் படி

(ஆச்சார்ய பதவியும் ஆச்சார்யத் தன்மையும் யோக க்ரமத்தாலே பொருள் கொள்ளும் போது -அஞ்ஞானமாகிற இருளைப் போக்குவதையும் -வேதார்த்தத்திலே நிலை நிறுத்துகையும் செய்கையாலே கருணைக்கு ஓர் கொள் கலமும் -ஸம்ஸாரக் கடலைத் தூண்டுவிக்கும் உத்தாரகருமான ஸ்ரீ ராமானுஜாச்சார்யார் இடத்திலேயே நிலை நிற்கின்றன -கௌரவிக்கத் தக்கவர்களாயினும் மற்ற ஆச்சார்யர்களிடம் நிலை நிற்பது இல்லை-என்கிறபடி)

(கீழ் யோக கிராம குரு அர்த்தம் அருளிச் செய்து மேல்)யோக க்ரமாகதமான ஆச்சார்யத்வமாவது
ஆசிநோதி ஹி ஸாஸ்த்ர அர்த்தான் ஆசாரான் ஸ்தாபயத் யபி
ஸ்வயம் ஆரதே யஸ்து ஸ ஆசார்ய இதி ஸ்ம்ருத
–(எவன் ஒருவன் 1-ஸாஸ்த்ரங்களைச் சேகரித்துத் 2-தானும் அவற்றின்படி நடந்து காட்டிப் 3-பிறரையும் ஆசாரத்தில் நிலை நிறுத்துகிறானோ -அவனே ஆச்சார்யன் எனப்படுவான் -ப்ரபந்நாம்ருதம் -63-5-6-)என்கிறபடியே
ஏதத் ப்ரதிபாத்யமான ஆசாரங்களை யுடையனாய் இருக்கை -அதாவது
ஆசிநோதி -வேதாந்தங்களிலே பல இடங்களிலும் கூளமும் பலாப்பிசிலும் போலே ப்ராப்த அப்ராப்த விவேகம் பண்ண அரிதாம் படி கலந்து கட்டியாய் ஸ குண பரமாயும் நிர்குண பரமாயும் பின்ன பரமாயும் அபின்ன பரமாயும் போருகிற வாக்ய ப்ரதிபாத்யங்களான அர்த்தங்களை எல்லாம் உருவக் கண்டு -தரித்து- ஸகல ஸாகா ப்ரத்யய முகத்தாலே அக்ராஹ்யமான அர்த்தங்களை ஒதுக்கி -உபா தேயமான அர்த்த அம்சங்களை அவிரோதேன ஒன்றும் சிதறாமல்
ஹம்ஸோ யதா ஷீர மிவாம்பு மிஸ்ரம -என்கிறபடியே (அநந்த பாரம் பஹு வேதி தவ்யம் அல்பஸ் ச காலோ பகவஸ் ச விக்நா யத் சார பூதம் தத் உபாததீத ஹம்ஸோ யதா ஷீரமிவாம்பு மிஸ்ரம் –-உத்தர கீதை -3-1-அறிய வேண்டிய ஸாஸ்த்ரங்கள் பலவாகவும் கரை காண ஒண்ணாதவை யாகவும் உள்ளன -காலமோ சிறிது -இடை யூறுகளோ பற்பல -ஆகையால் நீரோடு கலந்திருக்கும் பாலை ஹம்ஸம் பிரித்து எடுத்துக் கொள்வது போலே அசார அல்ப ஸாரமான அர்த்தங்களோடே கலந்து இருக்கும் ஸாஸ்த்ரங்களில் ஸாரமானதையே அறிவாளி எடுத்துக் கொள்ள வேண்டும் -என்றபடி)மறு வில்லாதபடி திரட்டி எடுக்கும் உபகாரத்தைச் சொல்லுகிறது
ஹி -ஸப்தம் ப்ரஸித்தி பரம் -அதாவது இப்படி உபா தேயமான அம்ஸங்களைத் திரட்டி எடுக்க வல்ல சக்தி ப்ரஸித்தியைச் சொன்னபடி (புள்ளு பிள்ளைக்கு இரை தேடும்)–அன்றியே ஹேது பரமாகவுமாம்
ஸாஸ்த்ர அர்த்தான்-வேதார்த்தம் -என்றபடி(ந தேவம் கேசவா பரம் -ந ஸாஸ்த்ரம் வேதம்)
வேத ஸாஸ்த்ர அவிரோதிநா -என்னக் கடவது இறே(ஆர்ஷம் தர்ம உபதேஸம் ச வேத ஸாஸ்த்ரா விரோதி நா –யஸ் தர்க்கேண அநு சந்தத்தே ஸ தர்மம் வேத நேதரே –மநு ஸ்ம்ருதி -ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலே சொல்லப்பட்ட அர்த்தங்களை அந்த ஸ்ருதி ஸ்ம்ருதிகளோடு முரண்படாத தர்க்கங்களைக் கொண்டு எவன் அர்த்த நிஷ்கர்ஷம் செய்கிறானோ -அவன் தர்மத்தை அறிவான் -அப்படிச் செய்யாதவன் அறிய மாட்டான் -என்றபடி)
வேத நூல் -என்றும் உண்டு இறே

(வேத நூற் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப் போகும் நின்றதிற் பதினையாண்டு
பேதை பாலகன் அது ஆகும் பிணி பசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மா நகருளானே–திருமாலை -3-)
இது உபரிதன பாகத்துக்கும் உபலக்ஷணம் –
அன்றிக்கே –ஸாஸ்த்ரம் -என்று பூர்வ பாகத்தைச் சொல்லி –அர்த்த ஸப்தத்தாலே உபரிதந பாகத்தைச் சொல்லவுமாம்
இத்தை ஸாஸ்த்ரம் என்றது —சாஸநாத் ஸாஸ்த்ரம் -என்கிறபடியே –இதம் குரு இதம் மா கார்ஷீ (இதைச் செய் இதைச் செய்யாதே என்று ஆணை விடுவது ஸாஸ்த்ரம்-ஸாஸ்த்ர ஸப்த வ்யுத்பத்தி)என்று விஹித ப்ரஷித்த விவேக உபாதேந முகத்தாலே கர்த்தாவான இச் சேதனனை மர்யாதையிலே ப்ரவர்த்திப்பித்துக் கொண்டு போருகையாலே(கர்த்தா சாஸ்த்ரார்த்தத்வாத்) இப்படி பூர்வ உத்தர பாக த்வய ரூபேண அவஸ்திதங்களான வேத வேதாந்த ப்ரதிபாத்யங்களாய் இருந்துள்ள அர்த்தங்களை அறிந்து- 1-வர்ண அநு பந்திகளாயும் -2-பகவத் ஆராதன ரூபங்களாயும் -3-தத் பிராப்தி சாதன பூதங்களான உபாஸனாதிகளுமாயுமுள்ள க்ரியா கலாபங்களை என்றபடி
ஆசாராந் -ஆசாரங்களாவன சிஷ்டாசாரங்கள் என்றபடி(சர நடத்தல் ஆ சார முழுவதுமான நல்ல நடத்தைகள்)

தர்மஞ்ஞ சமயத்தை இறே முந்துற முன்னம் ஸ்தாபிக்க வேண்டியது (வேதம் அறிந்த சான்றோர் நடத்தையை முதலில் சொல்லி அப்புறம் வேதத்தைச் சொல்லி)-பிரமாண உபாதானத்தில் ப்ரதமோ பாத்தமாகையாலே ப்ரபலம் இறே -வேத ப்ரமாணத்தைக் காட்டிலும் சிஷ்டாசாரம் ப்ரபலம் என்னும் அர்த்தம் தோற்ற வேண்டி ப்ரதமத்தில் –யத் யதாசரதி ஸ்ரேஷ்ட -(3-21)என்றான் இறே பகவானும்
மேலையார் செய்வனகள் என்றாள் இறே ஆண்டாளும் –

(யத் யதாசரதி ஸ்ரேஷ்டஸ் தத்த தேவேதரோ ஜந–
ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் ததநுவர்ததே
—৷৷3.21৷৷

சிறந்தவன் எந்த கர்மங்களைச் செய்கிறானோ அந்த அந்த கர்மங்களையே உலகோரும் செய்கின்றனர் அந்தச் சிறந்தவன் அக் கர்மத்தை எந்த அளவிதானாகச் செய்கிறானோ உலகமும் அந்த அளவினதாகவே செய்கிறது)

(மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான்*
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்*
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன*
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே*
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே*
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே*
கோல விளக்கே கொடியே விதானமே*
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்
)

சிஷ்டாசாரங்கள் தான் பலவாம் -இதோடு அன்று
ஸ்வயம் ஆசரதே–தர்ம ஸம்ஸ்தாப நார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே என்றவன் தானே
உத் ஸீதே யுரிமே லோகா ந குர்யாம் கர்ம சேதஹம் –வர்த்த ஏவ ச கர்மணி -என்று ஸ்வ அநுஷ்டான முகத்தாலே தர்ம ஸம்ஸ்தாபனம் பண்ணா விடில் லோகோத்ஸாதனம் பிறக்கும் என்றான் இறே

(பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்.–
தர்ம ஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே
—৷৷4.8৷৷

நல்லோர்களை நன்கு காக்கும் பொருட்டும் -தீயவர்களை அழிப்பதன் பொருட்டும் –
தர்மத்தை நன்கு நிலை நாட்டுவதன் பொருட்டும் -அந்த அந்த யுகங்களில் பலபடியாக பிறக்கின்றேன்

உத்ஸீதேயு ரிமே லோகா ந குர்யாம் கர்ம சேதஹம்.–
ஸங்கரஸ்ய ச கர்தா ஸ்யாமுபஹந்யாமிமா ப்ரஜா
—৷৷3.24৷৷

நான் கர்மத்தைச் செய்ய வில்லை யாகில் என்னைப் பின் பற்றும் இவர்களும் கர்மத்தைச் செய்யாமல் அழிந்து விடுவார்கள் –வர்ணாஸ்ரமக் கலப்பைச் செய்பவனாகவும் நான் ஆகி விடுவேன் –அதனால் இந்த மனிதர்கள் உய்வற்றவர்களாயும் ஆக்கி விடுவேன்

ந மே பார்த்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சந—
நாநவாப்த மவாப்தவ்யம் வர்த ஏவ ச கர்மணி
—৷৷3.22৷৷

பார்த்தனே -மூ வகைப்பட்ட பிறவிகளில் பிறக்கின்ற எனக்குச் செய்யத் தக்க கர்மம் ஏதும் இல்லை – ஏன் என்றால் –இது வரையில் கிடைக்காது இருப்பதாய் ஒரு கர்மத்தினால் பெறத் தக்கதாய் இருப்பது எதுவும் இல்லை –அப்படி இருந்த போதிலும் கர்மத்தில் நான் நிலை நிற்கவே செய்கிறேன்)


பத்ரிகாஸ்ரமத்தில் திரு மந்த்ர உபதேஸம் பண்ணும் அளவில் தானே நர நாராயண ரூபேண நின்று நாராயண அம்சம் ஆச்சார்ய ரூபமாகவும் நர அம்சம் ஸிஷ்ய ரூபமாகவும் நின்று உபதேசித்தான் (அனுஷ்ட்டித்தும் உபதேசித்தும்) இறே -ஸிஷ்யனான நரனுக்கு ஸ்வ அநுஷ்டான முகத்தாலே செய்யாவிடில் லோகம் கொள்ளாது என்று-

யஸ் –யச் சப்தம் இவை எல்லாம் அங்குசிதமாக நிர்வஹிக்க வல்ல அநுஷ்டாதாவினுடைய ஸ்வரூப வை லக்ஷண்ய ப்ரஸித்தியைக் சொல்லுகிறது
து -ஸப்தம் -இவனுடைய வ்யபதேஸ்யத்தவ விசேஷத் யோதநார்த்த மாயிருக்கிறது
ஸ ஆசார்ய இதி ஸ்ம்ருத –அவன் தான் ஆசார்யன் என்று நினைக்கப்படுமவன்
ஸ -யச் ஸப்தத்தாலே சொல்லப்பட்ட ஸ்வரூப வை லக்ஷண்யத்தை யுடையவன்
ஆசார்ய இதி -இதுவே யாய்த்து இவனுக்கு நிரூபகம்
ஸ்ம்ருத –இப்படிப்பட்ட ஆசார்யனாய்த்து நிரந்தர ஸம் ஸ்ம்ருதிக்கு விஷய பூதனாகிறான்
இப்படிப்பட்ட ஆச்சார்யத்வம் ஸதா சார்ய க்ருத்யங்களில் ஒன்றும் குறைவற்று ஸர்வ ப்ரகார பரிபூர்ணரான எம்பெருமானாருக்கே வ்யவஸ்திதம் -தத் வ்யதிரிக்த விஷயங்களில் ஸம்மிஸ்ர வ்யவஹாரிகமான ஆச்சார்யத்வமே உள்ளது

ஆசார்யத்வம் உபாயதாத்மாகமஹோ ராமானுஜர்யே குரவ்
ந அந்யேஷ் வார்ய வரேஷு தே யதி வராதீந ஆத்ம சத்தா யத
தஸ்மாத்
ர்ய பரம்பராஸ்ரித பதாம் போஜஸ்ய பாதாஸ்ரய
கர்த் தவ்யஸ் ஸ்வ ஹிதைஷிபிர் கில ஜநைஸ் ஸம்ஸார சஞ்சித்தயே
–என்னக் கடவது இறே

(உத்தாரகத்வ ரூபமான ஆச்சார்யத்வம் ஆச்சார்யரான ராமானுஜர் இடமே உள்ளது -வேறே எந்த ஆச்சார்ய ஸ்ரேஷ்டர் இடமும் இல்லை ஏன் எனில் -அவர்கள் அனைவரும் அந்த எதிராஜாராலேயே சத்தை பெற்றவர்கள் அன்றோ –ஆகையால் தமக்கு நன்மையை விரும்புகிறவர்கள் ஆச்சார்ய பரம்பரையால் உத்தாரகமாகக் கொள்ளப்பட்ட திருவடித் தாமரையை யுடைய அந்த எம்பெருமானாருடைய திருவடிகளையே ஸம்ஸாரம் அடியோடு நீங்குவதற்காக ஆஸ்ரயிக்க வேண்டும் -என்றபடி-நம்மாழ்வாரும் நாதமுனிகளுக்கு பவிஷ்யத் ஆச்சார்யர் திருவிக்ரஹமும் அருளி இவ்வர்த்தத்தைக் கட்டி அருளினார் அன்றோ)

உபாயத்மகம் ஆசார்ய ஸ்வரூபம் ஸூ வ்யவஸ்திதம்
அஸ்மச் சேஷிணி யோகீந்த்ரே லஷ்மணார்யே மஹாத்மநி
அந் யேஷாம் அபி ஸர்வேஷாம் குரூணாம் ந ஸமர்த்திதம்
வ்யாவஹரிக மேவாஸ்மிந் குரு வர்க்கே ந முக்யதா
யததீநாத்ம ஸத் தாத்யா தேஸிகாஸ் ஸத்வ வித்தமா
தத் க்ருதே நாபி மாநேந தேஷாம் முக்திர் ந ஸம்ஸய
ஏதத் வரண கர்த்ருத்வாத் ப்ராக்தநா குரவஸ் ஸ்வயம்
பவந்த்யஸ்யோப கர்த்தார ந முக்தி பலதா ஹி தே
தஸ்மாத் உஜ்ஜீவநேச் ஸூநாம் பவாப்திம் தர்த்து மிச்ச தாம்
அஸ்மத் குல பதே ஸ்ரீ மல் லஷ்மணார் யஸ்ய தீமத
அங்க்ரி யுக் மாத்ருதே தேஷாம் உபாயோ நைவ த்ருஸ்யதே
-என்று
வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் அருளிச் செய்தார் இறே

(உத்தாரகத்வ ரூபமான ஆச்சார்ய ஸ்வரூபம் -நமக்கு சேஷியாய் -மஹாத்மாவாய் -யதிராஜரான ஸ்ரீ ராமானுஜர் சார்யர் இடம் நன்கு நிலை நிற்கிறது -மற்ற எல்லா ஆச்சார்யர்கள் இடமும் இது இல்லை –ஆச்சார்யத்வம் மற்ற ஆச்சார்யர்கள் இடம் ரூடி வழங்கினால் வழங்கப்படுகிறதே ஒழிய முக்யமாவது இல்லை -எம்பெருமானாருடைய திரு உள்ளம் அறிந்தவர்களில் தலை சிறந்தவர்களாக அவ் வாச்சார்யர்கள் அவருக்கு அதீனமான சத்தா ஸ்திதி ப்ரவ்ருத்திகளை உடையவர்களாய் இருக்கையாலே அவரது அபிமானத்தாலே அவர்களுக்கு மோக்ஷம் ஏற்படும் என்பதில் ஐயம் இல்லை -இவரை உத்தாரகராக வரிக்கச் செய்கையால் மற்ற பூர்வாச்சார்யர்கள் சேதனனுக்குத் தாமே உபகாரம் புரிகின்றனர் -ஆயினும் அவர்கள் மோக்ஷம் அளிக்கும் உத்தாரகர்கள் அல்லர் ஆகையால் உய்ய விரும்புபவர்களாய் ஸம்ஸாரக் கடலைத் தாண்ட விரும்புபவர்களுக்கு நமது குலபதியும் பேர் அறிவாளருமான ஸ்ரீ மத் ராமானுஜருடைய திருவடியிணை தவிர வேறு உபாயம் ஒரு போதும் காணப்படுவது இல்லை -என்றபடி)

நஞ்சீயரும்
சித் அசித் ஈஸ்வர தத்வ ஸ்வரூப ஸ்வ பாவ திரோதாயக ஸம்ஸார ஸம்பந்த நிவ்ருத்தி பூர்வக நிரவதிக ஆனந்த ஜனக பகவத் ப்ராப்தி ரூப மோக்ஷ மஹா பல ப்ரதாந நிபுணம் அப்ரதிஹத பாயாத்மகம் ஆசார்யத்வம் -ஹி -பரம காருணிகஸ்ய அபரிமித உதார பாவஸ்ய அநவதிக அதிசய ஆஸ்ரித வாத்ஸல்ய ஸுசீல்ய குணாகரஸ்ய நிஷ்க்ருஷ்ட சம தமாத்யாதி யாத்ம குண கண ஏக மஹா ஆர்ணவஸ்ய -நிகில நிகம ஸிரோ விஞ்ஞாந விசக்ஷணஸ்ய அநவரத விதித பகவத் ஸ்வரூப ரூப குண விபூதி ஜாத யாதாத்ம்யஸ்ய ப்ரபந்ந ஜன கூடஸ்த பகவத் பராங்குச பாதார விந்த யுகல பூதஸ்ய பராபர நிகில குரு ஜன ஸமாஸ்ரித விமல சரண கமலா யுக்மஸ்ய ஸம்ஸாரி ஸகல சேதன உஜ்ஜீவந கரண ஏக தத்த சித்தஸ்ய பகவதஸ் ஸ்ரீ ராமானுஜ குரோரேவ வ்யவஸ்திதம்
ந த்விதரேஷு -தே புநஸ் ஸர்வே ராமாநுஜார் யாயத்த ஆத்ம ஸத்தாஸ்திதி ப்ரவ்ருத்தய ததபிமாந அந்தர் பூதா தச் சரணாரவிந்த யுகல மேவ சரணம் மந்வாநா ஸ்வ ஆஸ்ரிதாநாம் அபி ததேவ சரணம் உபதி சந்த தத் ஸம்பந்த கடநாதேவ ஸ்வ ஆஸ்ரித ஸர்வ ஜன உபகர்த்தாரோ பவந்தி–என்று அருளிச் செய்தார் இறே

(சித் அசித் ஈஸ்வரன் எனும் தத்வ த்ரயங்களின் ஸ்வரூப ஸ்வ பாவங்களை மறைக்கும் ஸம்ஸார ஸம்பந்தத்தை நீக்கி எல்லையற்ற பேரின்பத்தை விளைக்கும் பகவத் ப்ராப்தியாகிற மோக்ஷம் என்னும் பெரும் பயனை அளிக்க வல்லதாய் -தடையற்ற உபாயத்வமாய் இருப்பதான ஆசார்யத்வம் -பரம காருணிகராய் எல்லையற்ற வண்மை யுடையவராய் -எல்லையற்ற பெருமையை யுடைய ஆஸ்ரித வாத்சல்யம் ஸுசீல்யம் எனும் குணங்களுக்கு இருப்பிடமாய் -சிறப்பை அளிக்கும் சமம் தமம் முதலான ஆத்ம குணங்களுக்குப் பெரும் கடலாய் இருப்பவராய் எல்லா வேதாந்தங்களின் பொருளையும் அறிய வல்லவராய் -பகவானுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளின் உண்மையை எப்போதும் காண்பவராய் -ப்ரபந்ந ஜன கூடஸ்தரான பகவத் பராங்குசர் எனும் நம்மாழ்வாரின் திருவைத்தாமாரை இணையாய் இருப்பவராய் முன்னும் பின்னும் உள்ள எல்லா ஆச்சார்யர்களாலும் ஆஸ்ரயிக்கப் பெட்ரா குற்றமற்ற திருவடித்தாமரை இணையை யுடையவராய் -ஸம்ஸார மண்டலத்தில் உள்ள எல்லாச் சேதனரும் உய்வதிலேயே திரு உள்ளம் ஊன்றி இருப்பவரான பகவான் ஸ்ரீ ராமாநுஜாசார்யார் இடமே நன்கு நிலை நிற்கிறது -வேறு எவரிடமும் இல்லை -அவர்கள் அனைவரும் ராமாநுஜாசார்யாராலே சத்தா ஸ்திதி ப்ரவ்ருத்திகளை அடைந்தவர்களாய் அவரது அபிமானத்தில் அடங்கியவர்களாய் அவரது திருவடித் தாமரை யிணையையே உபாயமாகக் கொள்கின்ற வர்களாய் தம் அடியார்களுக்கும் அவ்வண்ணமே உபதேஸிக்கின்றவர்களாய் அவ்வெம்பருமானாருடைய சம்பந்தத்தை உண்டாக்குவதன் மூலமே தம் அடியார்களுக்கு உபகாரம் செய்பவர்களாய் விளங்குகின்றனர் -என்றபடி )_

இப்படி தத்வ வித அக்ரேஸரான பூர்வதந ஸகல குரு ஜனங்களாலும் அறுதியிடப்பட்ட ஸர்வ ப்ரகார குரு லக்ஷண பூர்ணமான ஆசார்யத்தை யுடையவராய் -பகவத் அவதாரமான எம்பெருமானாரே ஸகல சேதனருக்கும் உத்தாரகராகையாலே ஏதத் அபிமான அந்தர் பூதராய் உஜ்ஜீவிக்குமது ஒழிய ஸம்ஸாரி சேதனருக்கு வழியில்லை இறே

ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் யதிராஜோ ஜகத் குரு
ஸ ஏவ ஸர்வ லோகாநாம் உத்தர்த்தா ந அத்ர ஸம்ஸய
-ப்ரபந்ந அம்ருதம் –61-45- என்று (முக்காலும் ஸத்யம் செய்து கூறுகிறேன் -யதிராஜரே உலக குருவாவார் எல்லா வுலகும் உய்விக்க வல்லவர் அவரே -இதில் ஐயம் இல்லை)கணியனூர் சிறிய ஆச்சான் ஸசேலஸ்நாந பூர்வகமாக ஸ்ரீ சடகோபனைத் தலையில் வைத்து எம்பெருமானாருடைய அபிமானமே உத்தாரகம் இத்தை ஒழிய ஸம்ஸாரி சேதனருக்கு வேறு உஜ்ஜீவிக்கைக்கு வழியில்லை என்று பெருமாள் திரு ஓலக்கத்திலே சபதம் பண்ணினார் இறே
(கூரத்தாழ்வானும் கொள்ளிடத்தில் இறங்கி அருளிச் செய்ததாகவும் சொல்வர்)ஏதத் சம்பந்தத்தை விட்டு ப்ரகாராந்தரத்திலே உஜ்ஜீவிக்கிறோம் என்று இருக்கும் துர்மானிக்கு யவாதாத்மபாவி ஸம்ஸாரம் அனுவர்த்திக்கும்

மம ஆசார்ய அவதாரத்வே யேஷாம் பக்திர் பவிஷ்யதி -29-என்று(ஆச்சார்ய ரூபமான என்னுடைய அவதாரத்தில் இவர்களுக்கு பக்தி யுண்டாகிறதோ அவர்களுக்கே உய்வுண்டு மற்றவர்களுக்கு இல்லை) எம்பெருமான் தானே அருளிச் செய்தான் இறே

ஸர்வ உபாய தரித்ராணாம் சேதநா நாம் வராந நே
மம அபி மாநாத் ஸர்வேஷாம் முக்திர் குரு ஸரீரிண
–(அழகிய முகமுடையவனே வேறு எவ்வகையான உபாயமும் அற்ற சேதனர் அனைவருக்கும் ஆசார்யனை சரீரமாகக் கொண்ட எனது அபிமானத்தாலேயே மோஷம் ஏற்படும்)என்றும் சொன்னான் இறே(ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆச்சார்ய அபிமானத்தை ஒழிய வேறே விரகில்லை என்பதுக்கு இதுவே பிரமாணம்)
பகவத் ஸம்பந்தம் குலையாமல் நிலை நிறுத்திக் கொள்ளுமவனுக்கு எம்பெருமானாருடைய ஸம்பந்தம் இல்லாவிடில் நிலை நில்லாது இறே
இவனுக்கு ப்ரதமத்தில் பகவத் ஸம்பந்தம் தான் உண்டாகிறதும் பகவத் ப்ரவண உஜ்ஜீவனம் உண்டானாலாய்த்து -அந்நிய சேஷத்வத்தைத் கழித்துக் கொண்டு பகவத் அநந்யார்ஹ சேஷத்வ முகத்தாலே உஜ்ஜீவனம் யுண்டாம்படி பண்ண வேண்டும் -இப்படி உஜ்ஜீவன உப யுக்தமான தத் அநந்யார்ஹ சேஷத்வம் நிலை நிற்கும் போது ததீய பர்யந்தமாய் நிற்க வேண்டுகையாலே -ததீய அக்ரேஸரராய் பரம காருணிகரான எம்பெருமானாருக்கு அடிமைப்பட்டு (காருணிகரான சர்வேஸ்வரன் -ஸ்வா தந்திரம் இருப்பதால்
-பரம காருணிகர் -எம்பெருமானார்)ஏதத் அநந்யார்ஹ சேஷத்வ ஸித்தியை யுடையவனாய் அநந்தரமாய்த்து -தத் அநந்யார்ஹ சேஷத்வ ஸம்பந்த ஸித்தியை யுடையவனாவது -ஆகையால் ப்ரதம பர்வ நிஷ்டனுக்கும் சரம குருவான எம்பெருமானாருடைய ஸம்பந்தம் அவஸ்யம் வேணும் இறே

நெடுமாற்கு அடிமை செய்வன் போல்
அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்றற்ற தீக் கதிகள்
முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்
கொடுமா வினையேன் அவன் அடியார் அடியே
கூடும் இது வல்லால்
விடுமாறு எனபது என்னந்தோ
வியன் மூ வுலகு பெறினுமே-
8-10-1-

பகவத் அநந்யார்ஹ சேஷத்வ ரூப ஸம்பந்த ஸ்தைர்யாஸ் அகாங்ஷிண –சரம குரு ராமாநுஜாசார்ய ஸம்பந்த அபாவே தத் ஸம்பந்த ஸ்தைர்ய ஸித்திர் ந ஸ்யாத் -அஸ்ய சேதநஸ்ய ப்ரதமதோ பகவத் ஸம்பந்த ஸத் பாவோ அபி பகவத் ப்ரவண உஜ்ஜீவந ஸத் பாவே சதி சேத் –தத் ஸித்திர் அபி அந்நிய சேஷத்வ நிவ்ருத்தி பூர்வக பகவத் அநந்யார்ஹ சேஷத்வ ஸத் பாவே ஹி ஸ்யாத் –ஏவம் உஜ்ஜீவந உப யுக்த தத் அநந்யார்ஹ சேஷத்வ ஸத் பாவஸ்ய ததீய பர்யந்தத்வ ஏவ சித்தத்வாத் ததார்த்தம் ததீய அக்ரேஸர பரம காருணிக ராமானுஜ குரு சமாஸ்ரயணம் லப்த்வா ஏதத் அநந்யார்ஹ சேஷத்வ சம்பந்த யுக்தஸ் சந்தத நந்தரம் கலு ததநந்யார்ஹ சேஷத்வ ஸித்தி யுக்தோ பவதி -அத ஏவ பிரதம பர்வ நிஷ்டஸ்யாபி சரம குரு பரம காருணிக ராமானுஜ குரு சரண சமாஸ்ரயண ம் அவஸ்ய அபேக்ஷிதம் பவதி –-31-என்று ஜீயர் அருளிச் செய்தார் இறே

(எம்பெருமானோடு அநந்யார்ஹ சேஷத்வ ரூபமான ஸம்பந்தம் நிலை நிற்க வேண்டும் என்று ஒருவன் விரும்பினால் -சரம குருவான ராமாநுஜாசார்யாரோடு ஸம்பந்தம் இல்லாவிடில் அந்த பகவத் சம்பந்தம் அவனுக்கு நிலை நில்லாது -இச் சேதனனால் சிலருக்கு பகவானிடத்தில் ஈடுபாடு உண்டாகி உஜ்ஜீவனம் உண்டானால் தான் இவனுக்கு முதன் முதலில் பகவத் ஸம்பந்தம் உள்ளதாகக் கொள்ள முடியும் ஆகையால் இவன் சிலருக்கு அந்நிய சேஷத்வத்தைக் கழித்து -எம்பெருமானோடு அநந்யார்ஹ சேஷத்வம் உண்டாம்படி செய்து -அவர்களை உய்விக்க வேண்டும் =இப்படிப் பிறரை உய்விப்பதற்கு உறுப்பான பகவத் அநந்யார்ஹ சேஷத்வம் நிலை நிற்க வேண்டுமானால் இவனுக்கு எம்பெருமானுடைய அடியார்கள் இடத்திலும் சேஷத்வம் உண்டாக வேண்டும் -ஆகையால் அச்யுதன் அடியார்களில் தலை சிறந்தவராய் பரம காருணிகரான எம்பெருமானாருக்கு அடிமைப்பட்டு அவருக்கு அநந்யார்ஹ சேஷ பூதனான பின்பு தான் இவன் எம்பெருமானுக்கு அநந்யார்ஹ சேஷ பூதனாக முடியும் -ஆகையாலேயே ஓ பிரதம பர்வமான எம்பெருமானிடம் ஊன்றி இருப்பவனுக்கும் சரம குருவாய் பரம காருணிகரான ராமானுஜருடைய திருவடிகளை அடைவது அவஸ்யமாகிறது -என்றபடி )

(ஞானம் அனுஷ்டானம் நன்றாக உடைய -உடையவரே உத்தாரகர் என்ற ஞானமும் அவர் இடம் ப்ராவண்யம் என்னும் அனுஷ்டானமும் -அவர் ரூப குண அனுசந்தானமே கால ஷேபம் -என்று உபதேசிப்பதும் -நன்றாக உள்ள ஆச்சார்யர் என்றபடி
பகவல் லாபம் ஆச்சார்யனாலே -ஆச்சார்ய லாபம் ஈஸ்வரனாலே -ஸ்ரீ வசன பூஷணம் -எனவே ஈஸ்வரனும் உபகாரகன் -ராமானுஜரே உத்தாராக ஆச்சார்யர்)

இப்படி ஸர்வ பிரகாரத்தாலும் உஜ்ஜீவன இச்சுக்களான ஸகல சேதனர்க்கும் எம்பெருமானாருடைய ஸம்பந்தத்தை வருந்தியும் தத் அபிமான நிஷ்டரை த்ரிவித கரணத்தாலும் அனுவர்த்தித்தப் பெற வேணும் இறே -இனி எம்பெருமானாருடைய அபிமான அந்தர் பூதனாய் இருக்கும் சரமாதிகாரிக்கு –குரும் ப்ரகாசயேத் தீமான் மந்த்ரம் யத்நேந கோபயேத் -அப்ரகாஸப் ரகாஸாப்யாம் ஷீயதே ஸம் பதா யுஷீ -சேஷ ஸம்ஹிதை -14-50-(அறிவாளியாய் இருப்பவன் குருவை வெளிப்படுத்தக் கடவன் -மந்திரத்தை மிக முயன்று அநாதிகாரிகள் இடமிருந்து மறைக்கக் கடவன் -ஆசார்யனை வெளிப்படுத்தாததாலும் மந்த்ரத்தை வெளிப்படுத்துவதாலும் முறையே செல்வமும் ஆயுளும் நசிக்கும் என்றபடி ) –என்கிறபடியே -எம்பெருமானாருடைய ஸ்வரூப ஸ்வ பாவ விசேஷங்களை(காஷாய ஷோப-இத்யாதி -பத்மம் என திகழும் பல்லவம் விரலும் இத்யாதி) எண்டிசையும் அறிய இயம்புகேன் -என்னும்படி ஸார்வாத்ரிகமாக எல்லாரும் அறியும்படி-ப்ரஸித்தமாம் படி கொண்டு வர்த்திக்க வேணும் —

(அர்வாஞ்சோ யத்பத ஸரஸிஜ த்வந்த்வமாச்ரித்ய பூர்வே
மூர்த்நா யஸ்யாந்வயமுபகதா தேசிகாமுக்திமாபு:
ஸோயம் ராமனுஜமுனிரபி ஸ்வீயமுக்திம் கரஸ்தாம்
யத் ஸம்பந்தாதமநுத கதம் வர்ண்
யதே கூரநாத:)

(கூரத்தாழ்வானுடைய வைபவத்தை எப்படி நாம் வார்த்தையினால் சொல்லி முடிக்க முடியும் (மொழியைக் கடக்கும் பெரும்புகழான் / வாசா மகோசர)? ஒவ்வொருவருக்கும் எம்பெருமானார் மூலமாகவே மோக்ஷம் கிடைக்கிறது. சிலர் (எம்பெருமானாருக்கு முன்புள்ள ஆசார்யர்கள்) அவருடைய திருமுடி சம்பந்தம் மூலமாகவும், மற்றவர்கள் (எம்பெருமானாருக்கு பின்புள்ள ஆசார்யர்கள்) அவருடைய திருவடி சம்பந்தத்தின் மூலமாகவும் மோக்ஷத்தை அடைகிறார்கள். இத்தகைய எம்பெருமானாரே தனக்கு மோக்ஷம் கிடைத்தது கூரத்தாழ்வானாலே என்று கருதினார்.)

இப்படி ஸர்வ ப்ரகாரத்தாலும் பரம காருணிகராய் சரம குருவான எம்பெருமானாருக்கு ஸர்வோத் தாரகத்வம் கொள்ளும் போது ஸர்வ ஸப்தத்துக்கு ஸங்கோசம் இல்லாமையாலே ஏதத் பூர்வ காலீநரான நாத யாமுன ப்ரப்ருதிகளான நம் பூர்வாசார்யர்களுக்கும் இவர் உத்தார கராக வேண்டி வரும் -அப்படி நாம் கொள்ளும் அளவில் அசங்கதமாய்த் தோற்றும் -இது என் என்னில் -அப்படி சொல்லப்படாது
நாதமுனிகளுக்கு நம்மாழ்வார் ஸ்வப்ந முகேன பவிஷ்யதாசார்யரான எம்பெருமானாருடைய ஸம் ஸ்தானத்தை வகுத்துக் காட்டியருளி -இந்த வியக்தி இருந்தபடி கண்டீரே -இவ் வியக்தியே ப்ரபந்ந குல அந்தர் பூதரான எல்லாருக்கும் உத்தாரகமாகப் போகிறது –என்று அருளிச் செய்ய
நாதமுனிகள்-நித்யமாக இந்த வியக்தியை ஸாஷாத் கரித்துக் கொண்டு இருக்கும் விரகு ஏது என்று கேட்க
பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தை உண்டாக்கி அந்த விக்ரஹத்திலே ஒரு ஸக்தி விசேஷத்தை அதிஷ்டிப்பித்து அவ்விக்ரஹத்தை ப்ரஸாதித்து (ஏற்கனவே மதுரகவி ஆழ்வாருக்கு அருளிய இந்த விக்கிரஹத்தை ப்ரசாதித்து)-ராமஸ்ய தஷிணோ பாஹு –(அயோத்யா -34-13-இலக்குவன் ராமனுடைய வலது கை போன்றவன்)-என்கிறபடியே இவ் வியக்தியை நமக்கு அவயவமாக நினைத்து இரும் இவ் வியக்தியினாலே நாடடஙக ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ கொழுந்து விட்டுச் செல்லப் போகிறது -இவ்வியக்தியையே உத்தாரகமாக உபதேஸியும் என்று ஸூஸ் பஷ்டமாக அருளிச் செய்கையாலே நாத முனிகள் தொடங்கி இவ்வருகுள்ள உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி முதலான நம் ஆச்சார்யர்கள் ஆழ்வார் அனுமதிப்படி நாதமுனிகள் ஸம் ப்ரதாய ஸித்தமான இவ் வர்த்தத்தை உப தேசித்துப் பரமாசார்ய ப்ரஸாத லப்தமான விக்ரஹத்தையும் காட்டிக் கொடுக்கையாலே இவ்விடத்திலே உத்தாரகத்வத்தை அறுதியிட்டு தத் ஏக நிஷ்டராய்ப் போந்தார்கள்
பெரிய நம்பி தொடக்கமான பஞ்ச ஆச்சார்யர்களும் தங்களுக்கு உத்தார கத்வம் இல்லாமையாலே உபதேஷ்ட்ருத்வ வ்யாஜேன இவரோடு சம்பந்தம் யுடையராய்த் தம் தாம் குமாரர்களை எம்பெருமானார் திருவடிகளிலே ஆஸ்ரயிப்பித்து அவ்வழியாலே இவருடைய உத்தார கத்வத்தை வெளியிட்டார்கள்
இந்த சங்கா பரிஹாரங்கள் எல்லாம் சரம உபாய ஸங்க்ரஹத்திலே பரக்கச் சொல்லுகையாலே இங்கு விவரிக்க வில்லை -ஆகையால் ஸர்வ உத்தார கராகக் குறையில்லை -(சரம உபாய தாத்பர்யம் என்னும் கிரந்தம் நாயனார் ஆச்சான் பிள்ளையும் அருளிச் செய்துள்ளார்)

உண்ணின் றுயிர்களுக் குற்றனவே செய்து அவர்க்குயவே
பண்ணும் பரனும் பரிவிலனாம் படி பல்லுயிர்க்கும்
விண்ணின் தலை நின்று வீடளிப் பானெம் இராமானுசன்
மண்ணின் தலத்துதித்து உய் மறை நாலும் வளர்த்தனனே.
–95-என்றும்-புல்லுயிர்க்கும் பாட பேதம்

எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தை யுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறு துணையே
– 18- –என்றும்-(பெரியவர் சீரை என்றது மதுரகவி ஆழ்வார் சீரை -சொல் படியே நிலையாகப் பெற்றோம் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்)

ஸத் வ்ருத்த சிர உபாஸநா லப்த ஸகல அர்த்தங்களையும் அறிந்து ஸர்வஞ்ஞரான அமுதனார் இவருடைய ஸர்வ உத்தாரகத்வத்தை அருளிச் செய்தார் இறே
ஆகையால் எம்பெருமானாருடைய திருவடிகளே உஜ்ஜீவன இச்சுக்களான அதிகாரிகளுக்கு ப்ராப்ய ப்ராபகங்கள்

பேறு ஓன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அப் பேறு அளித்ததற்கு
ஆறு ஒன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி என்று இப்பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லாற்
கூறும் பரம் அன்று இராமானுச மெய்ம்மை கூறிடிலே
– 45- –என்றும்-அமுதனார் தாமே அருளிச் செய்தார்

பேறு ஓன்று மற்று இல்லை–ஆறு ஒன்றும் இல்லைஎன்று அந்நிய யோக வ்யவச்சேதம் பண்ணுகையாலே தத் வ்யதிரிக்த விஷயங்களிலே ப்ராப்யத்வ ப்ராபகத்வ வ்யவஸாயமானது ஏதத் அபிமான அந்தர் பூதனுக்கு ஏதன் முக கமல விலாஸ ஹேதுவாம் இத்தனை போக்கி கார்யகரத்வத்திலே புகாது -நம்முடைய சம்பந்தத்தை உணர்த்தினவர்கள் பக்கல் இவனுக்கு இத்தனை ப்ராவண்யம் உண்டாவதே என்று எம்பெருமானாருக்குத் திருமுகம் மலருமாய்த்து

ஏதத் வ்யதிரிக்த விஷய ப்ராப்யத்வ ப்ராபகத்வ புத்திர் அபி ஏதத் அபிமான அந்தர் பூதாநாம் ஏதத் ராமாநுஜ குரு முக கமல விலாஸ ஹேது கோடவ் அந்தர் பூதா பவதி ந கார்ய கரண கோடவ் -தத் உத்பாத கோப யுக்த வ்யவசாயஸ்ய தஸ்ய தஸ்மிந் நேவ க்ருதத்வாத் –என்று இறே ஜீயர் பணிக்கும் படி

(எம்பெருமானார் ஸம்பந்தமுடைய ஆச்சார்யர்கள் இடத்தில் ஒரு சேதனன் இவர்களே பரம ப்ராப்ய பரம ப்ராபகம் என்று உறுதி கொள்வது -எம்பெருமானாரது அபிமானத்தில் அடங்கிய அச் சேதனன் விஷயத்தில் நம்முடைய ஸம்பந்தத்தை உணர்த்தினவர்கள் இடம் இவனுக்கு இத்தனை ஈடுபாடு உண்டாவதே -என்று எம்பெருமானாருக்குத் திரு முக மலர்த்தி உண்டாக்க காரணமாகிறது -அவ்வுறுதி இவனுக்கு மோக்ஷ பலனை விளைப்பது அன்று -மோக்ஷ பலனுக்கு உறுப்பான ஆறாகவும் பேறாகவும் இருப்பவர் எம்பெருமானாரே -என்று உறுதி கொள்ளும்படி அன்றோ இவன் தன் ஆசார்யனால் ஆக்கப்பட்டு இருக்கிறான் -என்றபடி )

ஸ்ரீ மல் லஷ்மண யோகி நோ அந்நிய குருஷு ப்ராப்யாதி பாவாஸ்ரயா -புத்திர் தன் முக ஹர்ஷ ஸம்பவகாரா விஞ்ஞாயதே நான்யதா
தஸ்மாத் தத் பத பங்கஜே ப்ருச கரம் பூர்வைஸ் க்ருதத்வாதயம்
ஸர்வேஷாம் அபி முக்தித கருணயா ராமாநுஜாக்யோ குரு
–என்று —குரு குணாவளியிலே சோமாஸி யாண்டான் அருளிச் செய்யும் படி

(ஸ்ரீ மத் ராமாநுஜாசார்யாரின் ஸம்பந்தமுடைய மற்ற ஆச்சார்யர்கள் இடம் அவரவர்களுடைய சிஷ்யர்கள் ப்ராப்யம் என்றும் -ப்ராபகம் என்றும் -உறுதி கொள்வது எம்பெருமானாருடைய முக மலர்த்தியை விளைப்பதாகவே அறியப்படுகிறது -அவ்வுறுதியினால் மோக்ஷம் விளைவது இல்லை -ஆகையால் பூர்வாச்சார்கள் அனைவரும் எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளையே ஆறாகவும் பேறாகவும் உறுதி கொள்ளுகையாலே அந்த ராமாநுஜாசாரியரே அனைவருக்கும் கருணையினால் மோக்ஷம் அளிப்பவர் ஆவார் -என்றபடி)

(சித்திர் பவது வா ந வா பக்த இத்யாதி -அடியார்களை பற்றி பேறு நிச்சயம் -அவனோ பணத்துக்கும் மோக்ஷத்துக்கும் -துர்லபமும் ஆகும்
சஷுர் கம்யம் குரு கைக்கு எட்டிய இவரை விட்டு ஸாஸ்த்ரம் மூலமே அறியப்படும் அவனைப் பற்றுவது துர்லபம் அன்றோ)

எம்பெருமானாருடைய அபிமான அந்தர் பூதர்களான சரம அதிகாரிகளுக்கு எம்பெருமானாருடைய திருமுக மலர்த்தியே ப்ரயோஜனமாகையாலே தத் ஸித்தியானது தத் வ்யதிரிக்த குரு விஷயங்களில் ப்ராப்யத்வ ப்ராபகத்வ வ்யவசாயத்தாலே சம்பவிக்குமாகில் எம்பெருமானார் விஷயத்தில் ப்ராப்யத்வ ப்ராபகத்வ வ்யவசாயம் வேண்டுவான் என் என்னில் -அப்படிச் சொல்ல ஒண்ணாது
இந்த சரம அதிகாரிக்கு ப்ராப்ய பூதமான எம்பெருமானாருடைய முகோலாசமானது பரோஷமாயும் அபரோஷமாயும் -(அதாவது ப்ரத்யக்ஷம் இல்லாமலும் ப்ரத்யக்ஷமாயும்-ப்ரோஷம் கண்ணுக்கு விஷயம் இல்லாமல் என்றபடி-)இரண்டு படிப்பட்டு இருக்கும்
இவ் விபூதியிலே பரோஷமும் நித்ய விபூதியிலே அபாரோஷமாயும் இருக்கும் -பரோஷமான முக விலாசம் இரண்டு வழியிலே வர வேணும்
-அதவாது -ஸ்வ அனுவ்ருத்தியாலும் அபிமான நிஷ்டரான ததீய அனுவ்ருத்தியாலும் ஸித்திக்க வேணும் -இந்த அனுவ்ருத்தி த்வயத்தினாலும் எபெருமானார் இடத்தில் பிறக்கும் முகோலாசம் அர்ச்சாவதாரத்திலே யாகையாலே -அர்ச்சாவதார தான் திருப்பவளம் திறந்து வார்த்தை அருளிச் செய்தல் -திருக்கண்களாலே குளிர நோக்குதல் -திருக்கைகளாலே அணைத்தல் செய்யக் காணாமையாலே அர்ச்சாவதாரமான எம்பெருமானார் இடத்தில் பிறக்கும் முகோலாஸம் ஏதத் அர்வா ஸீநரான அஸ்மதாதிகளுக்கு எல்லாம் பரோக்ஷ ஸித்தமாய் இருக்கும் -தத் சம கால வர்த்திகளான ஆண்டான் ஆழ்வான் எம்பார் தொடக்கமான ஸஜ்ஜனர்களும் பிரத்யஷமாகப் பெறலாயிற்று -தத் பூர்வ காலீ நரான நாதமுனி ப்ரப்ருதிகளும் (யோக மகிமையால் பெற்றார்கள்)பரோஷமாகப் பெற்றார்களே -நித்ய விபூதியிலே அபரோக்ஷ ஸித்தமான எம்பெருமானாருடைய முகோலாசம் அஸ்மதாதிகள் பெறுமளவில்லை -ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வகமாக ஒரு தேச விசேஷத்திலே போய் பெற வேண்டுகையாலே -ஸம்ஸார உத்தாரகத்வம் எம்பெருமானாருக்கே உள்ளது ஒன்றாகையாலே ஸம்ஸார நிவ்ருத்தி அர்த்தமாக உத்தாரகரான எம்பெருமானார் இடத்தில் ப்ராப்யத்வ ப்ராபகத்வங்களை அறுதியிட்டு தத் ஏக நிஷ்டனாய் இருக்க வேணும் –இவ்வர்த்தங்களை எல்லாம் குரு ப்ரபாவ தீபிகையிலே பரக்க அருளிச் செய்தார் இறே எம்பெருமானாருடைய ஸிஷ்ய ப்ரசிஷ்யரான நலம் திகழ் நாராயண தாஸரும் –அதாவது –

சரம குரு ராமானுஜாச்சார்ய பிமாந அந்தர் பூதாநாம் சரம அதிகாரிணாம் தந் முக்கோலாஸ ஏவ பரம ப்ரயோஜனத்வாத் –தத் ப்ராப்தேர் அபி தத் அபிமான நிஷ்ட -ததீய ப்ராப்யத்வ ப்ராபகத்வ வ்யவஸ்ஸாய புத்தி சித்தத்வாத் –ராமானுஜ குரு விஷய ப்ராப்யத்வ ப்ராபகத்வ யவசாயபுத்தி யையர்த்தம் ஸ்யாதிதி சேத் –தத் யுக்திர் ந யுக்தா -அஸ்ய ச சரம அதிகாரிண ப்ராப்ய பூத பகவத் ராமானுஜ குரு முக விலாஸோ அபி விபூதி த்வய வாஸ பேதேந பரோக்ஷ அபரோக்ஷ ரூபத் வைசித்ய யுக்தோ பவதி –தத்ர பிரதமோ பாத்த பரோக்ஷ முகோல்லாஸ மார்க்க த்வயேநோபகதஸ் ஸ்யாத் ஸ்வ அநுவர்த்தநேந ஸ்வ அபிமான நிஷ்ட ததீய அநுவர்த்தநேந ச –ஏதத் அநுவர்த்தநத்யேந ராமானுஜ குரு உத்பத்யமாந முககோல்லாஸஸ் யார்ச்சாவதார ஜன்யத்வாத் -அர்ச்சாவதாரஸ்யாபி ஆலோக லாப ஆலிங்கநாதி கரண அஷமத்வாதி -அர்ச்சாவதார பூத ராமானுஜாச்சார்ய முகோல்லாஸ தத் அர்வாசீந அஸ்மதாதி சரம அதிகாரிணாம் பரோக்ஷ ஸித்த ஏவ ஸ்யாத் –தத் சம கால வர்த்திநாம் தாசரதி ஸ்ரீ வத் ஸாங்க மிஸ்ர தத் ஸூநு பட்டாரக கோவிந்த குருகேஸ ப்ரப்ருதிநாம் தேந ஸஹாவஸ்தி தத்வாத் அபரிமித அசிந்த்ய ஸூஹ்ருத விசேஷ பாஜாம் தேஷாம் குரு ஐநாநாம் தஸ்ய பரம காருணிகஸ்ய பரம உதார பாவஸ்ய அபரிமித அநவதிக அதிசய யாஸ்ரித வாத்ஸால்ய ஸுசீல்ய மஹா குண ஸாகரஸ்ய அசிந்த்ய திவ்ய ஞான பக்தி வைராக்ய ராஸே -அபரிச்சின்ன மஹாத்ம்யஸ்ய விமல விசத சம தமாத்யாத்ம குண கணாகரஸ்ய -நிரந்தர நிகில குரு ஐநநி வஹ சமாஸ்ரயணீய நிஜ சரண கமல யுகலஸ்ய நித்ய நிரவத்ய பகவத் அனுபவ அதிசய ஜெனித நிரதிசய அநந்த ஸந்தோஹ அம்ருத சாகர அந்தர் நிமக்ந ஸர்வ அவயவஸ்ய அகில ஜகத் பரம குரோ அஸ்மத் குல நாத பூதஸ்ய -அஸ்மத் ஸ்வாமிந் -அஸ்மந் நிருபாதிக சேஷிண -அசரண்ய ஸரண்யஸ்ய ப்ரபந்ந ஐந ஹ்ருதய பங்கேருஹ ஹம்ஸாய மாநஸ்ய பகவத ஸ்ரீ மத் ராமானுஜ குரோ -அபரிமித நிர்மல கம்பீர ஜலாசய மத்ய உத் பன்ன ஸூம்ருஷ்ட நாலமிஹிரத தருண கிரண நிகர விகசித புண்டரீக தல மலாய தேஷண முகோல்லாஸ ஸ்வ கரதல நிஹித ஸூவ்ருத்த மல ஆமலகவத் ப்ரத்யக்ஷ ஸித்தோ பபூவ –தத் பூர்வ காலீந ராம மிஸ்ர புண்டரீக நயன நாதமுனி ப்ரப்ருதீ நாம் அபி பரோக்ஷ ஸித்த ஏவாபவத் -அத புந நித்ய விபூதவ் அபரோக்ஷ ஸித்த பகவத் ராமானுஜ குரு முகோல்லாஸே அஸ்மதாதிபிர் லப்தவ்யே ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வகம் ப்ராப்ய தேச பூத ஸ்ரீ வைகுண்ட திவ்ய நகரம் உப கம்ய தஸ்ய லப்யத்வாத் ஸம்ஸார உத்தாரகத்வஸ் யாபி அஸ்மின் ராமானுஜ குராவேவ அசாதாரணத்வேந வ்யவஸ்தி தத்வாத் ஸம்ஸார நிவ்ருத்தி யர்த்தம் ஸர்வ உத்தாரக ராமானுஜ குரவ் ப்ராப்ய ப்ராபகத்வ த்வயமபி நிஸ் சித்ய ததேக நிஷ்டாவதா பூத்வா சரம அதிகாரிணா ஸ்தா தவ்யம் பவதி -என்று அருளிச் செய்தார் இறே

(சரம ஆச்சார்யரான ராமானுஜருடைய அபிமானத்திலே அடங்கிய சரம பர்வ நிஷ்டர்களுக்கு அவரது முக மலர்த்தியே பரம ப்ரயோஜனமாகையாலும் -அவருடைய அபிமானத்திலே அடங்கிய ஆசார்யர் ஒருவரிடம்-இவரே நமக்கு ப்ராப்யமும் ப்ராபகமும் ஆவார் -என்னும் உறுதியாலே அந்த முக மலர்த்தி சித்திக்கையாலும் -ராமானுஜர் விஷயத்தில் இவரே ப்ராப்யமும் ப்ராபகமும் ஆவார் -என்று உறுதி கொள்ளுவது தேவை இல்லையே எனில் இப்படிக் கூறுவது பொருந்தாது -இந்தச் சரம அதிகாரிக்கு ப்ராப்யமாய் இருக்கும் எம்பெருமானாரின் முக மலர்த்தியும் –இரண்டு விபூதிகளில் வஸிப்பதை விட்டு அப்ரத்யக்ஷமாகவும் ப்ரத்யக்ஷமாகவும் இரண்டு படிப்பட்டதாய் இருக்கும் -இவற்றில் முதலில் எடுக்கப்பட்ட அப்ரத்யக்ஷ முக மலர்த்தி தன் கைங்கர்யத்தால் ஏற்படுவது என்றும் -தன் அபிமானத்திலே அடங்கியவர்களுடைய கைங்கர்யத்தால் ஏற்படுவது என்றும் இரண்டு வழியாலே வருவதாய் இருக்கும் -இவ்விரண்டு கைங்கர்யத்தாலும் ராமாநுஜாசார்யார் இடம் விளையும் முக மலர்த்தி அர்ச்சாவதாரத்தில் விளைவதாகையாலும் -அர்ச்சாவதாரத்தில் குளிரக் கடாக்ஷித்தல் வாய் திறந்து பேசுதல் -அணைத்தல் -செய்யக் காணாமையாலும் இந்த எம்பெருமானார் முக மலர்த்தி அவருக்குப் பிற் காலத்தில் உண்டான நம்மைப்போன்ற சரம பர்வ நிஷ்டர்களுக்கு அப்ரத்யக்ஷமாகவே இருக்கும் -அவரோடு ஒரே காலத்தில் வாழ்ந்த முதலியாண்டான் கூரத்தாழ்வான் அவர் குமாரரான பட்டர் எம்பார் திருக்குருகைப்பிரான் பிள்ளான் முதலானவர்கள் இப்படி ஒரே காலத்தில் வாழ்ந்ததனால் எல்லை அற்றதும் நினைத்ததற்கு அரியதுமான புண்ணியம் யுடையவர்களான அந்த ஆச்சாயர்களுக்கு -பரம காருணிகராய் பெரு வண்மை யுடையவராய் -எல்லை அற்றதும் ஒப்புயர்வற்றதுமான ஆஸ்ரித வாத்சல்யம் ஸுசீல்யம் முதலான பெரும் குணங்களுக்குக் கடலாய் இருப்பவராய் நினைத்ததற்கு அரிய திவ்ய ஞான பக்தி வைராக்யங்களுக்குக் கொள்கலமாய் இருப்பவராய் -எல்லை யற்ற பெருமை யுடையவராய் குற்றம் அற்றவையாய் -தெளிவானவையான சமம் தமம் முதலிய ஆத்ம குணங்களுக்கு இருப்பிடமாய் இருப்பவராய் -எல்லா ஆச்சார்ய ஸமூஹங்களாலும் எப்போதும் ஆஸ்ரயிக்கப்படும் திருவடித் தாமரையிணையை யுடையவராய் -நித்யமாய் குற்றம் அற்றதான பகவத் அனுபவ வெள்ளத்தால் உண்டான எல்லையற்ற ஆனந்தம் அலை எறியும் அமுதக்கடலில் மூழ்கிய ஸர்வ அவயவங்களையும் உடையவராய் -உலகு அனைத்துக்கும் பரம ஆச்சார்யராய் -நமக்கு குல நாதராய் நமக்கு ஸ்வாமியாய் நமக்கு இயல்வான சேஷியாய் -புகலற்ற அனைவருக்கும் புகலாய் இருப்பவராய் ப்ரபந்ந ஜனங்களுடைய இதயத்தாமரையில் வாழும் ஹம்ஸமாய் இருப்பவராய் -பகவானான ஸ்ரீ மத் ராமாநுஜாசார்யாருடைய மிகுந்ததாய் குற்றம் அற்றதாய் ஆழ்ந்ததான நீர் நிலையின் நடுவில் உண்டானதாய் பருத்த கண்டாய் உடையதாய் இளம் ஸூர்யனுடைய கிரணங்களால் மலர்ந்ததான தாமரையின் இதழ் போன்று குற்றமற்று நீண்டு விளங்கும் திருக்கண்களை யுடைய திரு முக மண்டலத்தின் மலர்த்தி -தம் கையில் இலங்கும் உருண்டையான அழுக்கற்ற நெல்லிக்கனி போல் நேரில் காணலாய் இருந்தது -எம்பெருமானார்க்கு முற்காலத்தில் இருந்த மணக்கால் நம்பி உய்யக்கொண்டார் நாதமுனி முதலானவர்க்கும் அம்முக மலர்த்தி அப்ரத்யக்ஷமாகவே இருந்தது –இனி நித்ய விபூதியில் ப்ரத்யக்ஷமாக எம்பெருமானாரின் முக மலர்த்தியை நாம் அடைய வேண்டி இருக்கும் போது ஸம்ஸாரம் நீங்கி ப்ராப்ய பூமியான ஸ்ரீ வைகுண்ட திவ்ய நகரத்தை யடைந்து அந்த முக மலர்த்தியை அனுபவிக்க வேண்டி இருக்கிற படியாலும் ஸம்ஸாரத்தில் இருந்து கரை ஏற்றுவிக்கும் உத்தாரகத்வமும் இந்த ராமாநுஜாசார்யாருக்கே உரியதாய் இருகையாலும் சரம அதிகாரிகள் சர்வ உத்தார கரான ராமானுஜர் இடமே ப்ராப்ய ப்ராபகத்வங்கள் இரண்டையும் அறுதியிட்டு அதிலேயே ஊன்றி இருப்பவர்களாய் இருக்க வேண்டும் -என்றபடி)

(பாட்டு கேட்க்கும் இடமும் இத்யாதி –அனைத்தும் வகுத்த இடமே -ஆச்சார்யர் இடம் உபகாரத்வ புத்தி இருக்க வேண்டும் -உடையவர் முக மலர்த்தியே பரம பிரயோஜனம் -ப்ரத்யக்ஷமாக அங்கே தானே காணலாம் -அங்கு செல்ல உத்தாரகத்வ புத்தியும் வேணுமே -)

(பர பக்தி பர ஞானம் பரம பக்தி நித்தியமாக வேணுமே -யாவதாத்ம பாவி கைங்கர்யம் செய்ய ருசி வளர அங்கும் வேண்டுமே
இங்கு உத்தாரகத்வம் ப்ராப்யம் -என்று கொண்டு அங்கு போனபின்பு அவர் திருவடிகளே ப்ராபகம் என்று உணர வேண்டுமே -ஆனந்தமாக அனுபவித்து கைங்கர்யம் வேண்டுமே
அங்கும் பகவத் கைங்கர்யங்கள் கிட்ட இவரது ப்ராபகத்வ புத்தியும் வேண்டும் கூரத்தாழ்வான் உடையவருக்கு முன்னே நித்ய விபூதிக்குச் சென்ற வ்ருத்தாந்தம் அறிவோமே -அங்கும் பூர்ண கும்பம் கொடுத்து வரவேற்று அணுவார்த்தனம் பண்ணினார் அன்றோஇத்தை மேலே அருளிச் செய்து நிகமிக்கிறார் மேல்)

நிஷ்க்ருஷ்ட ஸத்வாத்மகமாய் -பஞ்ச உபநிஷத் மயமாய் -அஞ்ஞான தமோ லேஸமும் நடையாடுகைக்கு இடமில்லாத நித்ய விபூதியில் ஸர்வோபாதி விநிர்முக்தராய் நிஷ்க்ருஷ்ட தர்ம பூத ஞான ஆனந்த ஸ்வரூபராய் -பகவத் ஆயத்த ஆத்ம சத்தா ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதங்களை யுடையராய்- அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹ யுக்தராய் -பகவத் அநுபவ ஜெனித நிரவதிக ஆனந்த யுக்தராய் –ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்ஜனம் பரமம் ஸாம்யம் உபைதி –-முண்டகம் -3-1-3-(பரம புருஷனை ஸாஷாத் கரித்தவுடன் ப்ரஹ்ம ஞானியானவன் புண்ய பாபங்களை விட்டு ப்ரக்ருதி சம்பந்தம் அற்றவனாய் -புருஷோத்தமனுடன் -மேலான ஸாம்யத்தை அடைகிறான் -என்றபடி-சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே போல் )-என்கிறபடியே எம்பெருமானோடு பரம ஸாம்யாபத்தியைப் பெற்று எல்லாரும் நித்ய பரிபூர்ணராய் இருக்கிற தசையிலே -ஸிஷ்ய ஆச்சார்ய விபாகம் யுண்டாய் தத் தத் கார்யங்களும் நடக்கும்படி எங்கனே என்னில் -அங்கும் நடக்கும் -எல்லாருக்கும் பகவத் அநந்யார்ஹ சேஷத்வம் அவிசிஷ்டம் என்னும் இடத்தில் ஸங்கோசம் இல்லை இறே -இவ்விபூதியில் போலே ஒருவன் உணர்த்தின போது தெளிய அறிந்தும் -உணர்த்தாத போது ஸ்வரூப ஞானம் இல்லையாயும் போருகிற ஆகாரம் அங்கு இல்லை இறே (அவிபாகேந த்ருஷ்டத்வாத் -விட்டுப் பிரியாமல் நித்ய அனுபவம் அங்கு -ஸ்வரூப விளக்கம் ஆவிர்பாவம் உண்டே அங்கு)-ஆகையால் அவ் விபூதியில் ஆத்ம ஸ்வரூபம் தோற்றும் போது எல்லாம் பகவத் அநந்யார்ஹ சேஷமாய்த் தோற்றி -அது தான்- ததீய பர்யந்தமாகா விடில் ஸ்தைர்ய ஸித்தி பெறாதாகையாலே முதலடியிலே நிற்கை யன்றிக்கே- ததீய பர்யந்தம் சென்று ஸ்வரூபமானது மறுவற்ற ததீய அநந்யார்ஹ சேஷமாய்த் தோற்றும் -இப்படி இருக்கிற ததீய அநந்யார்ஹ சேஷத்வ ஸ்வரூபமானது –நா கிஞ்சித் குர்வத சேஷத்வம் -(மீமாம்ஸகர் வழக்கு-கைங்கர்யம் செய்யாதவனுக்கு சேஷத்வம் இல்லை) என்றும் –அகிஞ்சித் கரஸ்ய சேஷத்வ அநுப பத்தி -(மீமாம்ஸகர் வழக்கு-கைங்கர்யம் செய்யாதவனுக்கு சேஷத்வம் பொருந்தாது)-என்கிறபடியே கிஞ்சித்கார அபாவத்தில் சத்தை பெறாதானாகையால் -தத் ஸித்தி யர்த்தமாக ததீய பர்யந்தம் சேஷ வ்ருத்தி பண்ணிப் போர வேணும்-

நநு பகவத் வ்யதிரிக்த ஸகல ஜீவாத்மாக்களுக்கும் ததீய சேஷத்வம் ஸ்வரூபம் -தத் ஸித்தி ததீய கிஞ்சித் காரத்தாலே யுண்டாக வேணும் என்று கொள்ள வேணுமாகில்- அப்போது கிஞ்சித் கரிப்பார் சிலரும் கிஞ்சித்கார ப்ரதி சம்பந்திகள் சிலரும் ஆகையால் இவர்களுக்கு ஸ்வரூபம் ததீய சேஷத்வமாய் -தத் ஸித்தி யர்த்தம் ததீய கிஞ்சித்காரம் பண்ண வேண்டி வரும் -அப்போது வேறே சில ப்ரதி சம்பந்திகளை அங்கீ கரிக்க வேணும் -அவர்கள் ஸ்வரூபத்தைப் பார்த்தால் அவ்வளவே சில ப்ரதி சம்பந்திகள் வர வேணும் –இனி கிஞ்சித் கர்த்தாக்களே ப்ரதி சம்பந்திகளாய் ப்ரதி சம்பந்திகளே கிஞ்சித் கர்த்தாக்கள் ஆகையால் அந்யோன்ய ஆஸ்ரய தோஷமும் அநவஸ்தையும் ப்ரசங்கிக்குமே என்னில் -அப்படி சொல்ல ஒண்ணாது
நித்யாபி வாஞ்சித பரஸ்பர நீச பாவை -40-என்கிறபடியே -எல்லாருக்கும் ஸ்வரூபம் ததீய சேஷத்வமாய்த்து –

(கைங்கர்ய நித்ய நிரதைர் பவத் ஏக போகை
நித்யைர் அநு க்ஷண நவீந ரஸ ஆர்த்ர பாவை
நித்ய அபி வாஞ்சித பரஸ்பர நீச பாவைர்
மத்தை வதை பரி ஜனைஸ் தவ சங்க ஸீய
–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்-77-

கைங்கர்ய நித்ய நிரதைர்–ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி ஆட் செய்பவர்களாயும் –பவத் ஏக போகை-அநந்ய போக்யத்வ ஸ்வரூபத்தில் தலை நின்றவர்களாயும்-நித்யைர்-நித்ய ஸித்தர்களாயும்-அநு க்ஷண நவீந ரஸ ஆர்த்ர பாவை-க்ஷணம் தோறும் புதிது புதிதாக விளைகின்ற-பகவத் அனுபவ ருசியினால் உருகின நெஞ்சை உடையராயும் பரஸ்பர நீச பாவைர் -பாகவதர்களுக்குள் பரஸ்பரம் சேஷத்வத்தையே சதா விரும்புவர்களாயும் – மத்தை வதை பரி ஜனைஸ் தவ சங்க ஸீய-அடியேனுக்குத் தெய்வமாகக் கொண்டாடாத தக்கவர்களாயும் இருக்கிற தேவரீருடைய அடியார்களுடன் உடனே கூடி வாழக் கடவேன்)

தானும் ததீய சேஷத்வ வ்ருத்தியாலே நிலை நிற்க வேணுமாகையாலே எல்லாரும் ஸ்வரூபத்தைத் தவிர்ந்து இருக்கும் அளவில் ப்ரதி சம்பந்திகள் இல்லாமையாலே சேஷ வ்ருத்தி அபாவ ப்ரயுக்தமான ஸ்வரூப சங்கோசத்துக்கு இடமாகையாலே சில ததீயர் சில ததீயரை சேஷிகளாக வரித்து தத் விஷயத்திலே கிஞ்சித் கரிக்க வேணும் -அவர்களும் தங்கள் ஸ்வரூபத்தைப் பாராமல் இவர்கள் முக மலர்த்தியை ப்ரயோஜனமாகக் கொண்டு இவர்கள் பண்ணுகிற கிஞ்சித் காரத்தை அங்கீ கரிக்க வேணும் -தாங்களும் தங்கள் சேஷத்வ ஸ்வரூபமான நைச்யத்தை முன்னிட்டு அவர்களை சேஷிகளாக வரித்து தத் விஷய கிஞ்சித் கார்த்தாலே ஸ்வரூப ஸித்தி பெற வேணும் -ஆகையால் பரஸ்பர சேஷ வ்ருத்தி ப்ரயுக்தமான நீச பாவத்தைப் பிரார்தித்துப் பெறுகிற இடமாகையாலே (நித்ய அபி வாஞ்சித பரஸ்பர நீச பாவைர்)ஸ்வரூபத்தோ பாதி ஸ்வரூப அநு பந்தியான பரஸ்பர நைச்ய ப்ரார்தனையும் அங்கமாக நடக்கும் என்றிட்டு கிஞ்சித் கர்த்தாக்கள் ப்ரதி சம்பந்திகளாய்-ப்ரதி சம்பந்திகள் கிஞ்சித் கர்த்தாக்களாம் இடத்தில் குற்றம் இல்லை –

இப்படி ஸ்வரூபம் எல்லாருக்கும் ஒத்து இருந்ததே யாகிலும் -அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தரான நித்ய ஸூரிகளில் தலைவரான அநந்த கருட விஷ்வக் சேன ப்ரப்ருதிகளுக்கு ப்ராதான்யம் கொண்டால் போலே நிரஸ்த ஸம்ஸார ஸம்பந்தரான முக்த வர்க்கத்தில் நம் ஆச்சார்யர்களில் சிலருக்கு ப்ராதான்யம் கொள்ள வேணும் -அதாவது –குரு பரம்பரை -அத்தாலே யுண்டோ என்னில் –பராங்குசாத்யைர் பக்தைர் அபி யாசார்யைஸ் ஸம் உபஸ்திதம் –— (பக்தர்களான பராங்குசர் முதலான ஆச்சார்யர்களால் கூடி இருக்கப் பெற்ற பரமபத நாதனை)என்று இறே அபியுக்தர் வசனம் –இப்படிப்பட்ட இருக்கிற நாயகக் கல் போலே இறே நம் குல நாதரான எம்பெருமானார் -இப்படி உபய விபூதி வர்க்கத்துக்கும் ஒவ்ஜ்ஜ்வல்ய கரரான எம்பெருமானார் பக்கல் அங்கு விசேஷ பிரதிபத்தி நடக்க வேணும்

(அமுநா தபந அதிசாயி பூம் நா யதி ராஜேந நிபத்த நாயக ஸ்ரீ
மஹதீ குரு பங்க்தி ஹார யஷ்டி விபுதா நாம் ஹ்ருதயங்கமா விபாதி-யதிராஜ சப்ததி-15

ஸ்வாமி தேஜஸ் ஒளி விஞ்சி -பிரபன்னர் உடைய மாநசீக குரு பரம்பரையில் நடு நாயகமாக உள்ளார் –)

இவருடைய அபிமானம் கொண்டு ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வகமாக ப்ராப்ய பூமியிலே இவனுக்கு தத் விஷயத்திலே அங்கும் விசேஷ ப்ரதிபத்தியுடனே அசேஷ சேஷ வ்ருத்திகளையும் பண்ணி அவ்வழியாலே தன் முகோல்லாஸமான ப்ராப்யத்தைப் பெறுகை ஸ்வரூபம் இறே –இங்கு இருக்கும் நாள் அபரோக்ஷ ஸித்தமான எம்பெருமானாருடைய முகோல்லாஸம் பெறாத அவ்விழவு எல்லாம் அவ்விபூதியில் தத் விஷய அசேஷ சேஷ வ்ருத்தி கரண ஜன்யமான முகோல்லாஸ ரூப ப்ராப்ய லாபத்தாலே தீரப்பெற வேணும்

இப்படி ஸர்வ பிரகாரத்தாலும் நித்ய விபூதியோடு லீலா விபூதியோடு வாசியற உபய விபூதி விசேஷ ப்ரதிபத்திக்கு விஷயமான எம்பெருமானார் இடத்திலே பேற்றுக்கு உடலாக உத்தாரகத்வத்தை அறுதியிட்டு -தத் விஷயத்தில் அகதி நிஷ்டனாய் எம்பெருமானாருடைய திருவடிகளே ப்ராப்ய ப்ராபக முகமாக அத்யவசித்து-தத் அபிமான அந்தர் பூதனாய் இருக்கும் சரம அதிகாரிக்கு -1-யாவச் சரீர பாதம் எம்பெருமானாருடைய குண அநு ஸந்தானமும் -2-ஏதத் குண அநு சந்தான ரஹித துஷ் ப்ரக்ருதிகளுடன் ஸஹ வாஸ நிவ்ருத்தியும் ஸஹ போஜன நிவ்ருத்தியும் -3-ஏதத் அபிமான அந்தர் பூதரான சரம அதிகாரி விஷயத்தில் ப்ராவண்யமும் தத் ஸஹ வாஸமும் தத் ஸம் பாஷணமும் தத் பாத தீர்த்த ஸ்வீ காரமும்(போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே) —நாராயண ஏக நிஷ்டஸ்ய யா யா வ்ருத்திஸ் ததர்சநம் -யோ யோ ஜல்பஸ் ஸ ஸ ஜய தத் த்யானம் யந் நிரிக்ஷணம் –தத் பாதாயப் சதுலம் தீர்த்தம் தத் உச்சிஷ்டம் ஸூ பாவநம் -ததுக்தி மாத்ரம் மந்த்ர அக்ரயம் தத் ஸ்ப்ருஷ்டம் அகிலம் ஸூசி –விஹகேந்த்ர ஸம்ஹிதை (நாராயணனையே ப்ராப்ய ப்ராபகமாகக் கொண்டவன் எந்தச்செயல் செய்தாலும் அது எம்பெருமானுடைய அர்ச்சனமாகும் -அவன் எதைப் பேசினாலும் அது எம்பெருமான் மந்த்ரத்தை ஜபிப்பதாகும் -அவன் எதை உற்று நோக்கினாலும் எம்பெருமானைத் த்யானிப்பதாகும் -அவனுடைய ஸ்ரீ பாத தீர்த்தம் பரி ஸூத்தப்படுத்துவதில் ஒப்பற்றதாகும் -அவன் உண்டு உமிழ்ந்த எச்சில் பரி ஸூத்தப்படுத்துவதில் தலை சிறந்ததாகும் -அவனுடைய சொல் எல்லாம் உயர்ந்த மந்திரமாகும் அவன் தொட்டது எல்லாம் ஸூ த்தமாகிறது -என்றபடி)- என்னும்படியான தளிகை ப்ரஸாத ஸ்வீ காரமும் தத் ஸஹ வாஸத்துடன் கால க்ஷேபமும் அநவ்ரதம் யுண்டாம்படி ஸர்வ உத்தாரகரான எம்பெருமானார் திரு முன்பே நித்யமாகப் பிரார்த்திக்க்க் கொண்டு த்ரிவித கரணத்தாலும் ததீய விஷயத்தில் பர ஸம்ருத்யேக ப்ரயோஜன புத்தியுடன் ஸ்வரூப அநு குணமாக முன்னடி பார்த்து வர்த்திக்கை அவஸ்ய அபேக்ஷிதம் எம்பெருமானார் திருவடிகளில் ப்ராவண்யம் இல்லாத துர்மானிகளுடன் ஸஹ வாஸம் வருந்தியும் பரிஹரணீயம்

ஸ்ரீ சரம குரு நிர்ணயம் முற்றிற்று

———————————————————–

ஸ்ரீ சரம குரு நிர்ணயம் -ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை ஸ்வாமிகள்

ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளை அந்த வ்யாக்யானத்தை எழுதி முடிக்க, திருவாய்மொழிக்கான அவருடைய வ்யாக்யானமே
ஈடு முப்பத்தியாராயிரப்படி என்று பிரபலமாக வழங்கப்படுகிறது.
நம்பிள்ளை வடக்குத் திருவீதிப் பிள்ளையை, ஈயுண்ணி மாதவப் பெருமாளின் வழித் தோன்றல்களுக்கு கற்பிக்கும் பொருட்டு
அந்த வ்யாக்யானத்தை ஈயுண்ணி மாதவப் பெருமாளிடம் தருமாறு பணித்தார்.

“ஈதல்” என்ற தமிழ் சொல்லுக்கு தர்மம் என்று பொருள்.
“உண்ணுதல்” என்றால் சாப்பிடுவது.
ஈயுண்ணி என்பதன் பொருள் பிற ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு உணவளித்த பின்பே தாம் உண்பவர் என்பதாகும்,

ஈயுண்ணி மாதவப் பெருமாள் அவற்றை தம்முடைய மகனான ஈயுண்ணி பத்மநாபப் பெருமாளுக்கு உபதேசித்தார்.
ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள் அவற்றைத் தம்முடைய அன்பிற்கு பாத்திரமான சிஷ்யர் நாலூர் பிள்ளைக்கு உபதேசித்தார்.
இவ்வாறாக ஒவ்வொரு ஆசார்யரிடமிருந்து சிஷ்யர் என்ற முறையில் இவை உபதேசிக்கப்பட்டு வந்தது.
நாலூர் பிள்ளையின் அன்பிற்கு பாத்திரமான சிஷ்யரும் மகனும் நாலூராச்சான் பிள்ளையாவார்.
நாலூராச்சான் பிள்ளை நாலூர் பிள்ளையின் திருவடித் தாமரைகளின் கீழ்மர்ந்து ஈடு முப்பத்தாறாயிரப்படியைக் கற்றார்.
நாலூராச்சன் பிள்ளைக்கு இருந்த பல சிஷ்யர்களில் திருவாய்மொழிப் பிள்ளையும் ஒருவர்.
நாலூர் பிள்ளையும் நாலூராச்சான் பிள்ளையும் தேவப் பெருமாளுக்கு மங்களாசாஸனம் செய்யும் பொருட்டு காஞ்சிபுரம் செல்லும் பொழுது,
எம்பெருமானே நாலூராச்சான் பிள்ளையை திருவாய்மொழிப் பிள்ளைக்கு ஈடு வ்யாக்யானம் போதிக்குமாறு பணித்தார்.
திருவாய்மொழிப் பிள்ளையும் மற்றோரும் ஈடு வ்யாக்யானத்தை நாலூராச்சான் பிள்ளையிடம் பயின்று
அதனை ஈட்டுப் பெருக்கர் (ஈட்டு வியாக்கியானத்தை வளர்ப்பவர்) என்று கொண்டாடப்படும் மணவாள மாமுனிகளுக்கு கற்பித்தார்.
இவ்வாறாக ஈடு வ்யாக்யானம் மணவாள மாமுனிகளை அடையும் என்று அறிந்திருந்ததனாலேயே, ஸ்ரீ நம்பிள்ளை அதனை ஸ்ரீ ஈயுண்ணி மாதவப் பெருமாளுக்குக் கொடுத்தார்.

சச் சம்பிரதாயம் தாமுடையார் கேட்டக்கால் மெச்சும் வியாக்கியை தான்-என்றது
ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை சந்நிதியிலே
ஸ்ரீ திருவாய் மொழி ஈடு தொடங்கி
அதன் தாத்பர்யமான ஸ்ரீ வசன பூஷண அர்த்தத்தையும்
ஸ்ரீ திரு நாராயணபுரத்தில் ஆய்
ஸ்ரீ திருவாய்மொழி யாச்சார்யர் (ஆச்சான் பிள்ளையும் )
ஸ்ரீ ஆயி சிஷ்யரான ஸ்ரீ நல்லப்ப நாயன்–இவர்களை தர்சிப்பிக்கிறது –

அதிஷ்டித சதுர் க்ராமாசார்யா தேவ பதேர் குரோ
சாஹார்த்தைர் லேபிரே யேன சர்வேச த்ராவிடாகமா-
என்னக் கடவது இறே–(தேவ பதேர் -நாலூர் ஆச்சான் பிள்ளையே தேவப் பெருமாள் )

லோகாசார்ய பதாம்போஜ ஸம்ஸரயம் கருணாம்புதிம் |
வேதாந்த த்வய
ஸம்பன்னம் பதவார்யம் அஹம்பஜே ||ஈயுண்ணி மாதவப் பெருமாள் தனியன்

மாதவாசார்ய ஸத்புத்ரம் தத்பாதகமலாச்ரிதம் |
வாத்ஸல்யாதி குணைர் யுக்தம் பத்மநாப குரும் பஜே
||ஈயுண்ணி பத்மனபாப் பெருமாள் தனியன்

சதுர்க்ராம குலோத்பூதம் த்ராவிட பிரஹ்ம வேதிநம் |
யஜ்ஞார்ய வம்சதிலகம் ஸ்ரீவராஹமஹ
ம் பஜே ||நாலூர் பிள்ளை தனியன்

நமோஸ்து தேவராஜாய சதுர்க்கிராம நிவாஸினே |
ராமானுஜார்ய தாஸஸ்ய ஸுதாய குணஸாலினே ||நாலுராச்சான் பிள்ளை தனியன்

—————-

ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ சரமோபாய தாத்பர்யம்

சரமோபாய தாத்பர்யம் யதீந்த்ர விஷயேகரோத் |

யஸ்தமார்ய வரம் வந்தே தேவராஜாஹ்வயம்குரும் ||

பகவத் ப்ராப்தி ப்ரதிபந்தகமான ஸம்ஸாரத்தில் அருசி பிறந்து பகவத் சரணாரவிந்த ப்ராப்தி ரூபமான மோக்ஷத்திலிச்சை பிறந்த வதிகாரி ,
தத் சித் யர்த்தமாக சரம பர்வமான எம்பெருமானார் அபிமானத்திலே ஒதுங்கி , தத் விஷய ப்ரபத்தி நிஷ்டையை யுடையவனாயிருக்க வேணும் .

பகவத் ப்ராப்தி ரூப மோக்ஷத்தை பெறுகைக்குடலாக வேதாந்தங்களிலே கர்மாத் யுபாய சதுஷ்டயத்தைச் சொல்லிப் போரா நிற்க ,
அத்தை விட்டு , அதில் லகுவான சரம பர்வ விஷயத்தில் ப்ரபத்தியை பேற்றுக்குடலாக அவலம்பிக்கும்படி எங்ஙனேயென்னில்;

1 ”யத்ய தாசரதி ஸ்ரேஷ்டஸ் தத்ததே வேதரோ ஜந: | ஸயத் ப்ரமாணம் குருதே லோகஸ்ததநுவர்ததே” (பகவத்கீதாஅத்யா 3 ஶ்லோ 21)என்கிற கணக்கிலே
ஞாநாதிகரான நம் பூர்வாசார்யர்கள் யாதொன்றை யநுஷ்டித்தார்கள், யாதொன்றை யதநுப்ரமாணமாக அங்கீகரித்தார்கள்,
அவையிரண்டு மிறே பின்புள்ள அஸ்மதாதிகளுக்கு க்ராஹ்யங்கள்

எல்லா ஶாஸ்த்ரங்களையும் அறிந்தவனென்றும் அநுஷ்டான ஸம்பந்நனென்றும் ப்ரஸித்தனான மனுஷ்யன்
யத் யதாசரதி — எந்தபடி யநுஷ்டிக்கிறான் ,
தத்த தேவ – அந்த அந்த படிகளையே ,
இதரோஜந: — பூர்ண ஜ்ஞாநமில்லாதவனும் ,
ஆசரதி – அநுஷ்டிக்கிறான் ,
ச: — அந்த ஶ்ரேஷ்ட மநுஷ்யன் ,
யத் ப்ரமாணம் – ( இப்படி யநுஷ்டிக்கப்படுமவைகளை ) எவ்வளவாக வறுதியிட்டு ,
குருதே — அநுஷ்டிக்கிறானோ ,
தத் -– அத்தை அவ்வளவென்றே நினைத்து ,
லோக: — ஊர்ணஜ்ஞாநமில்லாத மனுஷ்யனும் ,
அநுவர்த்ததே -– அந்த ஶ்ரேஷ்டனை பின் சென்று அநுஷ்டிக்கிறான்.

கர்ம ஞானஞ்ச பக்தி: ப்ரபதந மிதிச ப்ராப்ய சித்யர்த்த மேதானாலோச்யாலோச்ய ஹேதூந் புநரிஹ சுதராந் தோஷ த்ருஷ்டிம் விதாய | கர்தும் சக்தான பூர்வே யதிவர சரண த்வந்த்வ மூர்தாபி யுக்தாஸ்தத் காருண்யாபிமாநாத் ததநுச குரவோ–பூர்வாசார்ய ஸூக்தி

கர்மஜ்ஞாநஞ்ச பக்தி: ப்ரபதநமிதிச -– கர்ம ஜ்ஞாந பக்தி ப்ரபத்திகளென்கிற ,
ஹேதூந் –- உபாய சதுஷ்டயத்தையும் ,
ப்ராப்ய -– அடைந்து , அதாவது பகவத் ப்ராப்திக்கு ஸாதநங்கள் என்று அறிந்து ,
புந: — திரும்பவும் ,
ஏதாந் -– இந்த உபாயங்களை ,
ஸித்யர்த்தம் –- பேற்றுக்குடலாமோவென்று ,
ஆலோச்யாலோச்ய –- உணர்ந்து உணர்ந்து பார்த்து ,
இஹ -– இந்த உபாயங்களில் ,
சுதராம் – மிகவும் ,
தோஷ த்ருஷ்டிம் –- தோஷ தர்ஸநத்தை ,
விதாய —- செய்து( அதாவது கர்ம,ஜ்ஞாந,பக்திகளநுஷ்டிக்க வஸ்யங்களென்பதற்கு மேலே ,
இவை பர தந்த்ரமான ஸ்வரூபத்துக்கு விருத்தங்களென்கிற தோஷம் ப்ரதாநமாயிருக்கிற தென்றும் ;
ப்ரபத் யுபாயம் மஹா விஸ்வாஸ ரூபமா யிருக்கைக்கு மேலே நிரங்குசமான ஈஶ்வர ஸ்வாதந்த்ர்ய பயமிதற்கு நியதமாயிருக்கிறதென்றும் ;( நன்றாக அறுதியிட்டு என்கை ) ,
கர்தும் – இவற்றையநுஷ்டிக்கைக்கு ,

முக்திமாப்தா மஹாப்தா: || என்று கர்ம ஜ்ஞாந பக்தி ப்ரபத்திகளாகிற உபாய சதுஷ்டயத்தையும் பேற்றுக் குடலாக பற்றலாமோ
என்று உணர்ந்துணர்ந்து பார்த்த விடத்தில் ஸ்வரூப விருத்தத்வதுஸ்ஸகத்வ விஸ்வாஸபூயஸ்த்வாதி தோஷங்கள் காண்கை யாலே
இவைகளெல்லாம் அரும் தேவைகளாய் இருந்ததென்று பரித்யஜித்து எம்பெருமானார்க்கு முன்புள்ள ஆசார்யர்களும் பின்புள்ள ஆசார்யர்களும் தாங்கள் ஜ்ஞாநாதிகருமாய் ப்ரமாணிக அபக்ரேசருமா யிருக்கையாலே
பரம காருணிகராய் ப்ரபந்ந ஜந கூடஸ்தரான வெம்பெருமானாருடைய திருவடிகள் ஸம்பந்தத்தையும் திருமுடிகள் ஸம்பந்தத்தையும் பெற்றுடையராய்
எம்பெருமானாருடைய காருண்ய ப்ரவாஹ ஜநிதமான வபிமாநத்தாலே பேறு பெற்றார்களிறே

பூர்வர்களுடைய வநுஷ்டாநத்தை பிடித்து நடத்தும்போது அது ப்ரமாண புரஸ்ஸரமாகா விடில் நிரஸ்த கோடியில் அந்தர்பவிதாயோவென்னில் ;-திராதிறே ,  “ விதயஶ்ச வைதிகாஸ் தவதீய கம்பீரா மனோனு சாரிண: (“ ஸ்தோத்ர ரத்நம் – ஶ்லோ 20 )என்றதிறே .

விதயஶ்ச – இதம் குரு இதம் மாகார்ஷீ: என்று ஸ்வதந்த்ரமான வைதிக விதிகளும் ,
த்வதீய கம்பீர மனோனுசாரிண: – அநந்யப்ரயோஜநாராயாஶ்ர யித்தவர்களுடைய கம்பீரமான மநஸ்ஸை பின் செல்லா நின்றன ,
மநஸ்ஸுக்கு காம்பீர்யமாவது , ஷுத்ரமான ஐஶ்வர்யாதிகளில் கால் தாழாதே அநந்ய ப்ரயோஜநமாகை ,
 நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சிடிந்துகும் “ என்னும்படி பகவத் விஷயத்தில் அபவகாஹியாதார்க்கிறே வைதிகமான “ நிதித்யாஸிதவ்ய: “ – என்கிற விதி வேண்டுவது .

இதுக்கு மேலே முக்த கண்டமாக ப்ரமாண முண்டாகில் முக்யமன்றோ ? வென்னில் ; அது தானுமுண்டு ; எங்ஙனேயென்னில் ,

ஸ்ரீஶாஸ்த்ரத்திலே பெரிய பிராட்டியைக் குறித்து , ஈஶ்வரன் தன்னுடைய வவதார வைபவத்தைச் சொல்லுகிற விடத்திலே“ ஸம்யக் உக்தம் த்வயா விஷ்ணோ ஜந்மநாந்தவ வைபவம் | த்வதாசார்யா வவதாரத்வ ப்ரகாரம்பிமேவத ||

ஹே விஷ்ணோ – ஸர்வாந்தர்யாமியாயிருக்கு மவரே ,
த்வயா – தேவரீராலே ,
தவ ஜந்மநாம் – தேவரீரதான அவதாரங்க ளினுடைய ,
வைபவம் – ப்ரபாவமானது ,
ஸம்ய குக்தம் – நன்றாக சொல்லப்பட்டது ,
த்வதாசார்யா வதாரத்வ ப்ரகாரம்பி – இனி தேவரீருடைய வாசார்ய ரூபமான வவதார விசேஷத்தினுடைய ப்ரகாரத்தையும் ,
மே – எனக்கு ,
வத – அருளிச் செய்ய வேணும் , என்று
பிராட்டி பெருமாளை நோக்கி விண்ணப்பம் செய்தாரென்கை .

“ தர்மஜ்ஞ ஸமய: ப்ரமாணம் “ என்றும் “ மேலையார் செய்வனகள் “ என்றும் சிஷ்ட்டாசாரமே ப்ரபல ப்ரமாணமாகச் சொல்லக் காண்கையாலே , ப்ரமாண சித்தமாயிருக்கும் . இவர்கள் அநுஷ்டாந ப்ரமாணானு குணமாயல்ல

ந ஶக்தா — ஸமர்த்தர்களாகாமல் ,
மஹாப்தா: — ஜ்ஞாநாதிகராயும் ப்ரமாணிகாக்ரேசரருமாயுமிருக்கிற ,
பூர்வே குரவ: — நம் பூர்வாசார்யர்கள் ,
யதிவர சரணத்வந்த்வ மூர்தாபியுக்தாஸ்ஸந்த: — எம்பெருமானாருடைய திருவடி ஸம்பந்தத்தாலும் திருமுடி ஸம்பந்தத்தாலும் ஸமஸ்த ஶிஷ்ட ஜநபூஜ்ய ராய்க்கொண்டு ,
தத்காருண்யாபிமானாத் – அந்த வெம்பெருமானாருடைய நிர்ஹேதுக க்ருபையினாலுண்டான வபிமானத்தாலே ,
ததநுச – அந்த வாசார்யர்களை ( அதாவது தங்களை என்ற படி ) பின் சென்றவர்களோடு கூட முக்திமாப்தா: — பேற்று பெற்றார்கள் .

——————–

த்வயாசார்யாவதாரஸ்து கிமர்தம் க்ரியதே ப்ரபோ |

க்ருதஸ்யாப்வயதாரஸ்ய பலம் வா கிமவாப்ஸ்யஸி ||

ஹே ப்ரபோ – ஓ ஸ்வாமீ
ஆசார்யாவதாரஸ் து – ஆசார்ய ரூப அவதாரமானது ,
( இவ்விடத்தில் து – என்கிற அவ்யம் பரத்வ , வ்யூஹ விபவாதிகளைக் காட்டிலும்
ஆசார்யாவதாரத்துக் குண்டான வைலக்ஷண்ய விசேஷத்தைக் காட்டுகிறது )
த்வயா – தேவரீராலே ,
கிமர்தம் க்ரியதே – எந்த ப்ரயோஜநத்துக்காக செய்யப் படுகிறது ,
க்ருத்ஸ்யாப் யவதாரஸ்ய – அப்படி செய்யப்பட்ட வந்த வவதார விசேஷத்துக்கு ,
கிம்வாபலம் – எந்த பலன் தான் ,
அவாப்ஸ்யஸி – அடையப் போகிறீர் .

இதி ப்ருஷ்டோ மஹா லக்ஷ்ம்யா பகவாந் புருஷோத்தம: |

குருரூபாவதாரஸ்ய மஹாத்ம்யம் வக்துமுத்யத: ||

பகவான் புருஷோத்தம: — ஷாட்குண்ய பரி பூர்ணனாயும் ,
நித்யஸூரி நிர்வாஹகனாயும் இருந்துள்ள எம்பெருமான் ,
மஹா லக்ஷ்ம்யா –- பெரிய பிராட்டியாராலே ,
இதி ப்ருஷ்டஸன் –- இந்த ப்ரகாரமாக கேட்கப்பட்டவராய்க் கொண்டு ,
குருரூ பாவ்தாரஸ்ய –- ஆசார்ய ரூப மான அவதாரத்தினுடைய ,
வைபவம் –- வைபவத்தை ,
வக்தும் – சொல்லுகைக்கு ,
உத்யத: — ( ஆபூதிதிஶேஷத: ) யத்நித்தவரானார் .
மஹாத்ம்யம் வக்துமுத்யத

————–

ஸ்ரீபகவாந் ஸாது ப்ருஷ்ட்டஸ் த்வயா தேவீ ஸாராம் ஸார வித்தமே | ஸ்ருணு வக்ஷ்யே மதாசார்ய , ஜந்மநோ வைபவம் தவ ||

சார வித்தமே -– சாரஜ்ஞர்களில் ஶ்ரேஷ்ட்டை யான ,
ஹே தேவி -– ஸர்வ ஸமாஶ்ரயணீயையானவளே ,
ஸாது — ஶ்லாக்யமாய் இருந்துள்ள ,
ஸாராம்ஸ: — ஸார பூதமான விஷயம்,
ப்ருஷ்ட: — கேட்கப் பட்டது ,
மதாசார்ய ஜந்மந: — என்னால் செய்யப்பட்ட தான ஆசார்யாவதாரத்தினுடைய ,
வைபவம் -– மஹாத்ம்ய விஶேஷத்தை,
தவ – உனக்கு ,
வக்ஷ்யே -– சொல்லுகிறேன் ,
ஶ்ருணு – கேளாய் , என்று பெருமாள் அருளிச்செய்தாரென்கை .

ஸம்ஸார ஸாகரே மக்நாந், சேதநாநுஜ்ஜிஹீர்ஷயா | ஶ்ருதி ஸ்ம்ருதி புராணானீ சேதிஹாஸா: ப்ரதர்ஸிதா: | தேந மார்கேண கே நாபி முக்திர் லப்தா ந பூதலே ||

ஸம்ஸார ஸாகரே –- ஸம்ஸாரமாகிற பெருங் கடலிலே ,
மக்நாந் –- முழுகிக் கிடக்கிற ,
சேதநாந் –– பத்த சேதநரை ,
உஜ்ஜி ஹீர்ஷயா -– கரையேத்த வேணுமென்கிற விச்சையினாலே ,
ஶ்ருதி ஸ்ம்ருதி புராணாநி இதிஹாஸஸ்ச –- அபௌருஷேயமாய் நித்ய நிர்தோஷமாய் , ஸ்வத: ப்ரமாணங்களான ருகாதி வேதங்களும் ததுபப்ருஹ்மணங்களான ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களும் ,
ப்ரதர்ஶிதா: — விஸதமாக வெளியிடப்பட்டது
( இத்தனையும் செய்த போதிலும் )
தேந மார்கேண – கீழ்ச் சொன்ன ஶ்ருத்யாதி மார்க்கத்தாலே
பூதலே -– லீலா விபூதியில் ,
கேநாபி – ஒருத்தனாலேயும் ,
முக்தி: — பகவத் ப்ராப்தி ரூப மோக்ஷமானது ,
ந லப்தா – அடையப் படவில்லை .

ததோ விபவ ரூபேண ஜந்மாநி ஸுபஹுநிமே || ஜாதாநி தேவி மோக்ஷ ஆர்த்த கோபி ந பவத் ||

இப்படி மத் ஆஜ்ஞா ரூபங்களான ஶ்ருதி ஸ்ம்ருத்யாதிகளால் நாம் நினைத்தபடி நடவாத பின்பு ,
விபவ ரூபேண – ராம க்ருஷ்ணாதி ரூபத்தாலே ,
ஸுபஹுநி -– அநேகங்களான ,
ஜந்மாநி – அவதாரங்களானவை ,
மே -– சேதநோஜ்ஜீவநார்தியான எனக்கு ,
ஜாதாநி –- என்னுடைய இச்சையினாலே உண்டாய்த்தன , ஹே தேவி -– சேதநோஜ் ஜீவநத்தில் எனக்கு முற்பாடளாய் ஸந்தோஷிக்கும் அவளே ,
தத்ராபி -– அப்படி யவதாரங்கள் செய்தவிடத்திலும் ,
( “ அவஜாநந்தி மாம் மூடாம் மாநுஷீம் தநுமாஸ்ரிதம் “ என்கிறபடியே , ஸஜாதீயத்வேந ஸுலபனாய் அவதரித்த விவ்வளவே ஹேதுவாக சேதநர்கள் நம்மை யவமதி செய்கையாலே ) ,கோபி — ஒருத்தனாவது , மோக்ஷஆர்த்தி — மோக்ஷஆபேக்ஷஐ யுடையவனாக , ந பவது — ஆகவில்லை .

————-

வேதாந்தே விவிதோபாய பக்த்யாத்யா விஹிதா மயா |

தேஷ்வப்யஶக்தாஸ்யாத் மாநஸ்ஸம்ஸரந்தி புந:புந: ||

“ படாதன பட்டு “ என்கிறபடியே நாம் , எவ்வளவு பட்டது மன்னிக்கே ) ,
மயா — என்னாலே ,
வேதாந்தே — ப்ரஹ்ம ப்ரதிபாதந பரமான வேதாந்த ஶாஸ்த்ரங்களிலே ,
பக்த்யாத்யா: — பக்தி யோகம் முதலான ,
விவிதோபாயா: — அநேக விதமான உபாயங்கள் ,
விஹிதா: — விதிக்கப்பட்டவை ,
( இப்படி விதித்த விடத்திலும் ) ,
ஆத்மாந: — பத்த சேதநர்கள் ,
தேஷ்வபி — அந்த பக்த்யாத யுபாயங்களை யனுஷ்டிக்கும் விஷயத்திலும் ,
அஶக்தாஸ் ஸந்த: — ஶக்தி யில்லாதவர்களாய்க் கொண்டு ,
புந:புந: — அடிக்கடி ,
ஸம் ஸரந்தி — ஜன்ம மரணாதி க்லேஶ பாஹிகளாய்க் கொண்டு திரிகிறார்கள் .

ஏவம் பஹுவிதோபாயேஷ் வநிஷ்பந்ந பலேஷ் வஹம் |
ஸதாசார்ய ஸ்வரூபேண ஜநித்வா ஸர்வ சேதநாந் |
வ்யூஹ க்ராஹம் க்ருஹீத்வைவ கமிஷ்யா மீத்வ சிந்தயம் ||

ஏவம் — இந்த ப்ரகாரமாக ,
பஹுவிதோபாயேஷு — சேதநோஜ்ஜீவனார்த்தமாக நாம் செய்த வுபாயங்க ளெல்லாம் ,
அநிஷ்பந்ந பலேஷுஸத்ஸு — நிஷ்பலங்களாய்ச் சென்றவளவில் ,
அஹம் — ஸர்வஜ்ஞனான நான் ,
ஸதாசார்ய ஸ்வரூபேண — ஜ்ஞாநமநுஷ்டாநமிவை நன்றாகவே யுடையனான வாசார்யனாய் ,
ஜநித்வா — அவதரித்து ,
ஸர்வ சேதநாந் — எல்லா சேதநர்க ளையும் ,
வ்யூஹ க்ராஹம் க்ருஹீத்வைவ — வாரிப் பிடியாக பிடித்துக் கொண்டே ,
கமிஷ்யாமீதி — நலமந்தமில்லதோர் நாடு புகுவோமென்று ,
அசிந்தயம் — எண்ணினேன் .

ஏவம் சந்சிந்த்ய பத்மாக்ஷஇ குருரூபேணவைபுரா |

அவதீர்ணோ ஜநாந் காம்ஸ்சித்ஜநாந் பவாதப்யுத்தரம் ரமே ||

ஏ பத்மாஷீ — தாமரைப் பூப் போன்ற திருக் கண்களை யுடையவளாய் ,
ரமே — நமக்கு ஆனந்தவஹையாயும் ஸ்வயமாநம் நிர்பரையுமாயிருக்குமவளே ,
ஏவம் ஸந்சிந்த்ய — இந்த ப்ரகாரமாக வெண்ணி ,
புரா — முற்காலத்திலே ,
குரு ரூபேண — தத்தாத்ரேயாதி ரூபியாய் ,
அவதீர்ண: — அவதரித்தவனாய்க் கொண்டு ,
காம்ஸசித்ஜநாந் — சில பத்த சேதநர்கள் ,
பவாத் — ஜன்ம மரணாதி ரூபமான ஸம்ஸாரத்தில் நின்றும்
அப்யுத்தரம் — கரை யேத்தினேன் .

இத: பரம்சாபி கரிஷ்யதே | மயா யதா புராதேவி ஜநி: க்ருதா ததா| குரு ஸ்வரூபேண நிமக்நசேதநாந் ஸமுத்தரிஷ்யாமி நிஜப்ரபாவத: 

ஹே தேவி — நமக்கு அபிமதமாயும் அநுரூபமாயும் இருந்துள்ள விக்ரஹ குணங்களும் ஆத்ம குணங்களுமுடையவளே ,
புரா — முன்பு ,
மயா — என்னாலே ,
ஜநி: — ஆசார்ய ரூபாவதாரமானது ,
யதா க்ருதா — எவ்விதமாக செய்யப் பட்டதோ ,
ததா — அவ் விதமாகவே ,
இத:பரஞ்சாபி — இனிமேலும் ,
கரிஷ்யதே — செய்யப்படப் போகிறது ,
குரு ஸ்வரூபேண — அப்படி செய்யப்பட்ட வந்த வவதாரத்தில் நாம் ஆசார்ய ரூபியாய்க் கொண்டு ,
நிமக்ந சேதநாந் — ஸம்ஸார ஸாகரத்தில் முழுகிக் கிடக்கிற பத்த சேதநர்களை ,
நிஜ ப்ரபாவத: — ஆசார் யாபிமான ரூபமான நம்முடைய ப்ரபாவத் தாலே ,
ஸமுத்தரிஷ்யாமி — “ ந ச புநராவர்த்ததே “ என்னும்படி கரை யேத்தப் போகிறேன் .

——————-

லக்ஷ்மீ: ||

( லக்ஷ்மீ: ) — ( இப்படி எம்பெருமானார் அருளிச் செய்த வார்த்தைகளைக் கேட்டு ) பிராட்டி மீளவும் சொல்லுகிறார் .

கஸ்மிந் குலே பவாந் விஷ்ணோ கரிஷ்யதி. குரோர் ஜநிம் | கஸ்மிந் யுகே வதீர்ணஸ்த்வம் பவிஷ்யஸி வத ப்ரபோ: ||

ஹே விஷ்ணோ — ஸர்வ வ்யாபியான ஸ்வாமீ ,
பவாந் — தேவரீர் ,
குரோர் ஜநிம் — ஆசார்ய ரூபமான விலக்ஷண அவதாரத்தை
கஸ்மிந் குலே — எந்த திரு வம்ஸத்திலே ,
கரிஷ்யதி — செய்யப் போகிறது ,
ஹே ப்ரபோ — ஸர்வ நியந்தாவான ஓ ஸ்வாமீ ,
த்வம் — தேவரீர் ,
கஸ்மிந் யுகே — எந்த யுகத்திலே தான் ,
அவதீர்ணோ பவிஷ்யஸி -அவதரிக்கப் போகிறீர் ?
வத — ( இவ் வர்த்தத்தை “ தான் யஹம் வேத ஸர்வாணி “ என்கிறபடியே , தேவரீர் தானே யறிந்திருப்பதால் )
தேவரீரே அருளிச் செய்ய வேணுமென்று பிராட்டி விண்ணப்பம் செய்தாரென்கை .

ஶ்ரீபகவான் || அஹமாசார்ய ரூபேண பவிஷ்யாமி யுகே யுகே ||

இப்படி விண்ணப்பம் செய்த பிராட்டியை நோக்கி எம்பெருமான் அருளிச் செய்கிறார் .

தத்ராபி யோகிநாம் பும்ஸாம் குலே மஹதி ஜந்ம மே ||

( அஹமிதி ) ஹே தேவி — நிரவதிக தேஜஸ்ஸை யுடையவளான பிராட்டி
( இந்த பதம் மேலில் ஶ்லோகத்திலிருந்து இவ் விடத்திற்கு ஆகர்ஷிக்கப் படுகிறது ) ,
அஹம் — ஸர்வ ஜ்ஞனான நான் ,
ஆசார்ய ரூபேண — ஆசார்ய ரூபியாய்க் கொண்டு ,
யுகே யுகே — யுகங்கள் தோறும் ,
பவிஷ்யாமி — அவதரிக்கப் போகிறேன் ,
தத்ராபி — அப்படி யவதரிக்கு மிடத்திலும் ,
யோகிநாம் பும்ஸாம் — பரம யோகிகளாயிருக்கிற மஹா புருஷர்க ளுடைய ,
மஹதி — ஸர்வ ஶ்லாக்யமாயிருந்துள்ள ,
குலே — திருவம்ஸத்திலே ,
மே — எனக்கு ,
ஜந்ம — அவதாரமானது ,
பவிஷ்யதி — உண்டாகப் போகிறது

விஶிஷ்யமே தேவி கலௌ யுகே குரோர் ஜநிர் பவித்ரீ கலு ஸத் குலே ரமே | த்ரிதண்ட காஷாய படோர்த்வ புண்ட்ர பாக் பவிஷ் யதி ஸா ஹி புஜிஷ்ய பூயஸீ ||
ஹே ரமே தேவி — நிரதிஶய ஆநந்த யுக்தையாய்க் கொண்டு நமக்கு பட்ட மஹிஷியாயிருக்குமவளே ,
கலௌ யுகேது — கலி யுகத்திலேயோ வென்றால் ,
( இவ் விடத்தில் பூர்வத்தில் காட்டிலும் விசேஷம் சொல்ல வேண்டுகையாலே ,
து — என்கிற அவ்யயம் அத்யாஹரிக்கப்பட்டது )
ஸத் குலே — ஒரு விலக்ஷணமான திரு வம்ஶத்திலே
மே — எனக்கு ,
விஶிஷ்ய — பூர்வ அவதாரங்களைக் காட்டில் விலக்ஷணமாக ,
குரோர்ஜநி: — ஆசார்ய ரூபாவதாரமானது ,
பவித்ரீ கலு — உண்டாகப் போகிறது( இவ்விடத்தில் கலு என்கிற அவ்யயமிருப்பதால் இவ் வர்த்தம் ப்ரமாண ப்ரதிபந்நமென்று சொல்லுகிறது ) , ஸா — அந்த அவதாரமானது

( “ அடையார் கமலத்தலர் மகள் கேள்வன் “ என்கிற பாசுரத்தின் படியே ,
மனோ புத்தி , ஞாநங்களுக்கும் , ஸாத்விக தாமஸ ரூபத் விவிதாஹங்காரங்களுக்கும் அபிமாநிகரான பஞ்சாயுதாழ்வார் ,
தம் நினைவைப் பின் சென்று தாமதிகரித்த கார்யத்துக்கு ஸஹகரிக்கையாலே ) ,
புஜிஷ்ய பூயஸீ ஸதி — அபரிமிதமான சிஷ்ய ஸம்பத்தை யுடைத்தானதாய்க் கொண்டு ,
த்ரிதண்ட காஷாய படோர்த்வ புண்ட்ர பாக் — “ காஷாயசோபி “என்கிற ஶ்லோகத்தின்படியே ,த்ரிதண்டமென்ன , காஷாய வஸ்த்ர மென்ன , த்வாதச ஊர்த்வ புண்ட்ரங்களென்ன இவைகளையுடையது ,
பவிஷ்யதி — ஆகக் கடவது .
இது சத்ரந்த பதமா இவ்வர்த்தம் காட்டுகிறது ,
இவ்விடத்தில் , ஹி என்கிற அந்வயம் இருப்பதால் , இவ் வர்த்தத்தினு டைய ப்ரஸித்தி சொல்லப்படுகிறது .

ஸர்வோபாய தரித்ராணாம் சேதநாநாம் வராநநே | மமாபிமாநாத் ஸர்வேஷாம் முக்தி: குரு ஸரீரிண:

ஹே வராநநே ஸர்வோத்க்ருஷ்டமான திருமுக மண்டலத்தை உடைய பிராட்டி ,
ஸர்வோபாய தரித்ராணாம் — கர்ம ஜ்ஞாந பக்தி ப்ரபத்திகளாகிற உபாயங்களென்கிற கைமுதலற்றவராயிருக்கிற ,
ஸர்வேஷாம் சேதநாநாம் — ஶ்ரீ வசநபூஷணத்திலருளிச் செய்த படியே , அஜ்ஞரும் ஞாநாதிகரும் பக்தி விவசருமான எல்லா சேதநர்களுக் கும் ,
( இவ்விடத்தில் பக்தி விவசரென்பது , ஆசார்ய ப்ரேமாதிஸயத்தாலே ஸிதில கரணராய்
ஆந்ரு ஶம்ஸத்தாலே பரார்த்தமாகவாவது , ஒன்றையும் அடவு பட வநுஷ்டிக்க க்ஷமரல்லாதவரை ) ,
குரு ஸரீரிண: — பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து என்கிறபடியே , ஆசார்ய ரூபியாய் இருக்கிற,
மம — என்னுடைய ,
அபிமாநாத் — அபிமாநத்தாலே ,
முக்தி: — மோக்ஷ மானது ,
( பவிஷ்யதி ந ஶம்ஶய: ) நிஶ் ஶம்ஶயமாக உண்டாகக் கடவது
( இந்த பதங்கள் , மேல் சொல்லப்போகிற மத்க்ருதோ யோபிமாநஸ் ஸ்யாத் , என்கிற ஶ்லோகத்திலிருந்து ஆகர்ஷிக்கப்படுகிறது . )

மத் பக்தா ஜ்ஞாந பூர்ணாயே பவிஷ்யந்தி கலௌ யுகே |
த்ரிதண்டிந அபிமாநாந் மே தே ஸர்வே குருரூபிண: |
முக்தி பாஜோ பவிஷ்யந்தி ஸத்யே நாஹம் ப்ரவீமிதே ||

கலௌ யுகே — கலியும் கெடும் என்னும்படியான பெருமை பெற்று வந்த கலியுகத்திலேயே — யாதொருத்தர் ,
ஜ்ஞாந பூர்ணாஸ்ஸந்த — அர்த்த பஞ்சக ஜ்ஞாந பூர்த்தியுடையவர்களாய்க் கொண்டு,
( ஜ்ஞாநத்துக்கு பூர்த்தியாவது , “ எல்லாம் வகுத்த விடமே என்றிருக்கக் கடவன் “ என்கிற
ஸ்ரீ ஸூக்திபடியே யெல்லாமாசார்ய விஷயமாக வறுதியிடுகை ) ,
மத் பக்தா பவிஷ்யந்தி — ஆசார்ய ரூபியான வென்னிடத்தில் நிரதிஶய பக்தி யுடையவர்களாகிறார்களோ ,
தே ஸர்வே — அப்படிப்பட்டவர்களெல்லாரும்,
த்ரிதண்டிந: — த்ரிதண்டதாரியாயும் ,
குரு ரூபிண: — ஆசார்ய ரூபியாயுமிருக்கிற ,
மே — என்னுடைய ,
அபிமாநாத் — அபிமாநத்தாலே ,
முக்திபாஜோ பவிஷ்யந்தி — பேற்று பெற்றவர்களாகப் போகிறார்கள்
( இவ்வர்த்தத்தை ) ,
அஹம் —நான் ,
தே — உனக்கு ,
ஸத்யேந — ஸபத பூர்வமாக ,
ப்ரவீமி — சொல்லுகிறேன் .

மத் க்ருதோ யோபிமாநஸ்யாதாசார்யத்வே ஸுபாநநே |

ஸ யேவ முக்திதோ தேவி பவிஷ்யதி ந ஶம்ஶய: ||

ஹே ஸுபாநநே — ஸர்வருக்கும் மங்களாவஹமான திருமுக மண்டலத்தை யுடையவர்களாயும் ,
தேவி — நம்முடைய விபூத்யைஶ்வர்யத்துக்கு ஸஹ தர்மசாரிணியாயுமிருக்கும் பிராட்டி ,
ஆசார்யத்வே — ஆசார்ய கார்யமான வுபதேச விஷயத்திலே
மத்க்ருத இதி — ( பின்புள்ளார் உபதேசத்தாலும் , அது க்ருபா மாத்ர ப்ரஸந்ந ரான ) நம்மால்
செய்யப்பட்டதென்று நாம் நினைத்திருக்கையாகிற ,
யோபிமாநஸ் ஸ்யாத் — யாதோரபிமாந விசேஷமுண்டோ ,
ஸயேவ — அதுவே தான் ,
முக்தி த: — ( உபதேசம் செய்யுமவர்களுடைய ஜ்ஞாநாநுஷ் டான பூர்த்தியைப் பாராமல் ) மோஷ ப்ரதமாக ,
பவிஷ்யதி — ஆகப் போகிறது ,
ந ஶம்ஶய: — இது விஷயத்தில் ஸந்தேஹமில்லை .

குரு ரூபஸ்ய மே நாம்நா ஸமயோ விஜயீ பவேத் ||

ஸமய: — ( அப்படிப்பட்ட வாசார்ய ரூபாவதாரத்தில் நம்மால் உத்தரிக்கப்பட்ட ) விஶிஷ்டாத்வைத ஸித்தாந்தமானது ,
குரு ரூபஸ்ய — ஆசார்ய ரூபியாயிருக்கிற ,
மே — என்னுடைய ,
நாம்நா — திரு நாமத்தாலே ,
விஜயீ பவேத் — “ இடங்கொள் ஸமயத்தையெல்லா மெடுத்துக் களைவன போலே நடந்தும் , பரந்தும் , குனித்தும் நாடகம் செய்கின்றனவே “ என்கிறபடியே
ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வாவஸ்தை களிலும் ஸர்வோத்க்ருஷ்டமாக , அபிவ்ருத்தி யடையக் கடவது ;
இவ் விடத்தில் என்னுடைய திரு நாமத்தாலே யென்னது ,
இராமாநுஜ , என்கிற திருநாமத்தாலே யென்றாய் , இத்தால் , இராமாநுஜ ஸித்தாந்தம் -( எம்பெருமானார் தரிசநம் ) என்று ஜய ஶீலமாகக் கடவதென்கை .

————-

மத்காலாதநு பத்மாக்ஷஈ ஸமயோ லோபமேஷ்யதி ||

ஹே பத்மாஷீ — தாமரை போன்ற திருக் கண் அழகை யுடைய பிராட்டி ,
ஸமய: — அப்படி வ்ருத்தி யடைந்து வருகிற பரம வைதிக ஸித்தாந்தமானது ,
மத்காலாதநு — நம்முடையதான வந்த வாசார்யாவதாரத்துக்குப் பின்பு ,
( இவ்விடத்தில் “ பூத்வா பூயோ வர வர முநிர்போகிநாம் ஸார்வபௌம: “ என்கிற வபியுக்தோக்திப்படியே ,-யதிவர புநரவதாரமான பெரிய ஜீயர் காலத்துக்கும் பின்பு , என்று கொள்ள வேணும்)லோபமேஷ்யதி — ஸங்கோசத்தை யடையப் போகிறது .

குரு ரூபஸ்ய மே ஶக்திம் தத்ரதத்ர நிதாயவை |

ஸமயம் ஸங்க்ரஹீஷ்யாமி நாதிலுப்தோ யதா பவேத் ||

( இவ்வர்த்தத்தை நாம் முன்னமே யறிந்து ) குருரூபஸ்ய — ஆசார்ய ரூபியாயிருக்கிற ,
மே — நம்முடையே ,
ஶக்திம் — திவ்ய ஶக்தியை ,
தத்ர தத்ர — ( நமக்கு வுத்தேஶ்யமாயிருக்கிற ) அந்த அந்த ஸ்தலங்களிலே ,
நிதாய — அர்ச்சா ரூபமாக ப்ரதிஷ்டிப்பித்து ,
ஸமயம் — லோபிக்கப் போகிற ஸித்தாந்தத்தை ,
யதா — எந்த ப்ரகாரமாக ,
நாதிலுப்தோ பவேத் — மிகவும் லோபத்தை யடையாமலிருக்குமோ ,
ததா — அந்த ப்ரகாரமாக ,
ஸங்க்ரஹீஷ்யாமி — சேரப் பிடிக்கப் போகிறோம் .

மமாசார்யாவதாரேது ஏஷாம் பக்திர் பவிஷ்யதி | தேஷாமேவ பவேந் முக்திர் நாந்யேஷாம் ஸுலபா பவேத் ||

யேஷாம்து — யவர்களுக்கானால் ,
மம — என்னுடையதான ,
ஆசார்யாவதாரே — ஆசார்ய ரூபமான வவதார விசேஷத்திலே ,
பக்தி: — ஸ்நேஹ பூர்வகமாய் , இடைவிடாத நினைவு ,
பவிஷ்யதி — உண்டாகக் கடவதோ ,
தேஷாமேவ — அவர்களுக்குத் தானே ,
முக்தி: — பகவத் ப்ராப்தியாவது ,
ஸுலபா — சுகமாக லபிக்குமது ,
பவேத் — ஆகக் கடவது ,
அந்யேஷாம் — அந்த வாசார்ய பக்தி யில்லாதவர்களுக்கு ,
ஸுலபா ந பவேத் — சுலபமாக மாட்டாது .

அஸ்மிந்நர்தேஹி விஸ்வாஸஸ்ஸர்வேஷாம் ந ஜநிஷ்யதி |

மத்கடாக்ஷஓ பவேத்யஸ்மிந் மைய்யேவ ப்ரவணோஹிய: | தஸ்ய தஸ்ய ஹ்ருதிஸ்தோயம் பவிஷ்யதி ந ஶம்ஸய: ||

( அஸ்மிந்நர்த இதி ) அஸ்மிந் அர்த்தே — “ ஆசார்யாபிமாநமே வுத்தாரகம் “ என்னுமிவ்வர்த்தத்திலே ,
விஶ்வாஸ: — இது தான் பரமார்த்தம் என்கிற நினைவு ,
ஸர்வேஷாம் — எல்லாருக்கும் ,
ந ஜநிஷ்யதி: — உண்டாகப்போகிறதில்லை என்பது நிச்சயம் ;
( ஆனால் பின்னை யுஜ்ஜீவிக்கும் விறகேதென்னில் )
யஸமிந் — எந்த சேதநந் விஷயத்திலே ,
மத் கடாக்ஷ: — ஆசார்ய ரூபியாயிருக்கிற வென்னுடைய கடாக்ஷமானது ,
பவேத் — உண்டாகக் கடவதோ ,
ய: — எந்த சேதநன் தான் ,
மய்யேவ — என்னிடத்தலேயே,
ப்ரவண: — நெஞ்சிரக்கமுடையனாயிருப்பனோ ,
தஸ்ய தஸ்ய — அந்த வந்த வதிகாரிக்கு ,
ஹ்ருதிஸ்த: — நெஞ்சில் நிலை நின்றதாக ,
அயம் -– இந்த பாவ விசேஷமானது-( அதாவது “ ஆசார்யாபிமாநமே வுத்தாரகம் “ என்கிற நினைவென்கை ) ,
பவிஷ்யதி -– உண்டாகப் போகிறது,
ந ஶம்ஶய: — இவ்வர்த்தத்தில் ஶம்ஶயமில்லை ,
ஹி – இவ்வர்த்தம் ஸுப்ரசித்தம் .

என்றிப்படி ப்ரபல ப்ரமாணங்களை எம்பெருமான் தானே யருளிச்செய்து வைக்கையாலே ,
முக்த கண்டமாக முக்ய ப்ரமாணங்களும் இவ்வர்த் தத்தில் குறைவரக் காண்கின்றன .
இவை யெல்லாவற்றையும் முன் கொண்டு , இந்த ப்ரமாண ப்ரதிபாத்யமான வர்த்தங்களைத் தெளிய வறிந்து ,-நம்மாசார்யக ளனைவரும் தந்நிஷ்டராய் ,
தங்களைப் பற்றினார்க்கும் , இத்தையே யோக்யதாநுகுணமாக உபதேசித்துப் போந்தார்கள் .
இப்படி ஆசார்யாபிமாநமே உத்தாரகமென்றும் ,
த்ரிதண்டதாரியா யாசார்ய ரூபேண தானே அவதரிப்பனென்றும் , ஈஶ்வரனருளிச் செய்கையாலே மற்றுமவனருளிச் செய்த வர்த்தங்க ளெல்லாம் எம்பெருமானாரிடத்திலே யாயிற்று நிலை நின்றிருப்பது ;
ஆகையால் ஆசார்யத்வ பூர்த்தி யுள்ளதும் அபவரிடத்திலேயே யிறே ,
அவர் அபிமானமே நமக்கெல்லா முத்தாரகமென்று. ஶம்ஶய விபர்யமற நம் பூர்வாசார்யர்களும் அறுதி யிட்டார்களிறே ;
ஆகையாலே நம் பூர்வாசார்யார்களநுஷ்டாநமே நமக்கெல்லாம் ப்ரமாணமென்பது
“ தர்மஜ்ஞ ஸமய “ – ஸமயமென்னும் ப்ரபல ப்ரமாண ப்ரதிபந்நமென் றும் , சொல்லிற்றாயிற்று .

—————-

இனி சரம பர்வமான எம் பெருமானார் அபிமாநத்திலே ஓதுங்கி
“ தேவுமற்றறியேன் “ என்னுமதிகாரிக்கு , பக்தி ப்ரபத்திகளிரண்டும் பயாவஹமாயிருக்கும் . எங்ஙனேயென்னில் ;
பக்தி தான் ஸ்வ யத்ந ஸாத்யமாகையாலும் , பகவத் பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு ஸ்வ ப்ர வ்ருத்தி விரோதி யாகையாலும் ,
ஸ்வ ஸ்வாதந்த்ரிய ரூபமான வஹங்காரத்தை விளைவித்து பாரதந்த்ரிய ஸ்வரூபமான வாத்ம சத்தையை யழிக்குமென்று பயம் பிறக்குமிறே ;
பாரதந்த்ரிய ஸ்வரூபத்துக்கு அனு குணமாய் பகவத் விஷய விஸ்வாச ரூபமான ப்ரபத்யுபாயமும்
“ பவமோக்ஷணயோஸ்த்வயைவ ஜந்து: க்ரியதே ரங்கநிதே “ என்கிறபடியே
பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாய் நிரங்குச ஸ்வதந்த்ரனான வெம்பெருமான் தன்னுடைய ஸ்வாதந்த்ரியத்தாலே மீளவும் ஸம்ஸரிப்பிக்கில் செய்வதென்னென்று பயப்படப்பண்ணும் .
இப்படி ஸ்வ ப்ரவ்ருத்தி ஸாத்யமான பக்த் யுபாயமும் , ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஸாத்யமான ப்ரபத்யுபாயமும் , பய ஜநகமாகையாலே சரம பர்வநிஷ்டனுக்கு நெஞ்சில் தங்காது ;

பவமோக்ஷணயோஸ்த்வயைவ ஜந்து: க்ரியதே ரங்கநிதே ) ஹே ரங்க நிதே -– “ நிதயேர்த்திநாம் “ என்னுமாப் போலே
அர்த்திகளுக்கு நிதியாய்க் கொண்டு கோயிலிலே கண்வளர்ந்திருக்குமவரே ,
ஜந்து: — சேதநநாநவன்,
த்வயைவ –- உன்னாலே தான் ,
பவ மோக்ஷணயோ: — பந்த மோக்ஷங்க ளிரண்டுக்கும் விஷயமாக ,
க்ரியதே -– செய்யப்படுகிறான் ;
“ இல்லவல் லருள் நல்வினைகள் ” என்னும் மாசார்ய ஹ்ருதய ஸ்ரீஸூக்திப் படியே புண்ய பாப ரூப கர்மங்களடியாக ஸம்ஸரிப்பித்தும் ;
இப்படிப்பட்ட விந்த சேதநர்களுடைய துக்கதர்ஶந மாத்ரத்தாலே நிர் ஹேதுகமாக கடாஷித்து நிரதிசய ஆனந்த ரூப
ஸ்வ ப்ராப்தி பர்யந்தமாக விவர்களை யுஜ்ஜீவிப்பித்தும் போருகிற வீஶ்வரனுடைய செயல்களைக் கண்டால் ,
இத்தனையுமவனே செய்தமை , இவனுக்கு விசதமாக ப்ரகாசிக்குமென்னதாயிற்று ;
இதற்கு மேல் சொல்ல வேண்டுமவையாய் வருகிற வைஷம்ய நைர்க்ருண்ய தோஷ பரிஹாரங்கள் ஸ்ரீபாஷ்யாதிகளிலே கண்டு கொள்வது .

ஆகையாலிறே , இவ் வதிகாரிக்கு பக்தி ப்ரபத்திக ளுபாயமன்னென்றும் ,
எம்பெருமானாருடைய வபிமாநமே யுத்தாரகமென்றும் ,
நம் பூர்வாசார்யர்க ளறுதியிட்டதும் . (ப்ரயாண காலே ) இத்யாதி , —
அதாவது பக்தி ப்ரபத்திகள் உபாயமல்லாமையாலே , நிர் ஹேதுகமாக கடாஷித்து பவ்யனாக்கி கொண்டு போறும்
பரமகாருணிகராய் ஸதாசார்யரான வெம்பெருமானார் , இவன் நம்முடையவனென்று அபிமாநித்திருக்கும் அந்தவபிமாநமே ,
இவனுக்கு ஸம்சாரோத்தாரக மென்றபடி
ஆசார்யாபிமாநமே உத்தாரகமென்று , ஸ்தோத்ரத்தின் முடிவிலே பரமாசார்யரான ஆளவந்தாரும் அருளிச் செய்தார் இறே .

இனி இந்த வாசார்யாபிமாநந்தான் ஸ்வேதரோபாயங்களுக்கு அங்கமோ ! ஸ்வதந்த்ரோபாயமோ ! வென்னில் ,
உபயமுமாயிருக் கும் ; எங்ஙனேயென்னில் ,
மஹா விஸ்வாச ரூபையான ப்ரபத்தியானது , கர்ம ஜ்ஞாந பக்திகளாகிற உபாயாந்தரங்களுக்கு விச்சேதா பாதக பாபஹரத்வேந தத்வர்த்தகமான வங்கமுமாய் ,
“ ஸாத்ய பக்திஸ்து ஸாஹம்த்ரி ப்ராரப்தஸ்யாபி பூயஸீ “ என்கிறபடியே ,
ப்ரபந்ந பாரிஜாதே –- பலோதய பத்ததௌ — ஶ்லோ 178
( ஸாத்ய பக்திஸ்து ஸாஹம்த்ரீ ப்ராரப்தஸ்யாபி பூயஸீ ) – இதற்கு பூர்வார்தம் ,

“ உபாய பக்தி: ப்ராரப்த வ்யதிரிக்தாக நாஸிநி “ என்று . இவ்விடத்தில்
பக்தியென்கிறது பற்றின விஷயந்தன்னில் அவ்யபிசாரிணியான சேவையை .
இதுதான் , உபாய விஷயத்திலாம் போது தந்நிஷ்டா விஶேஷத்தைச் சொல்லுகிறது ;
உபாய பக்தி: — ஸாங்கமான பக்த்யுபாயத்தில் அவ்யபி சாரிணியான நிஷ்டையானது ,
ப்ராரப்த வ்யதிரிக்தாஹ நாஸினீ – ப்ராரப்த கர்ம வ்யதிரிக்தங்களான பூர்வோத்தராகங்களை நஸிப்பித்து விடும்;
பூயஸீ -– பாமரு மூவுலகத்தில் படியான பரமார்த்தரிடத்தி லதிசயித்திருக்கிற ,
ஸா -– ஸாத்ய பக்திஸ்து –
“ தஸ்மாந்யாஸமேஷாந் “ என்று வேதாந்தங் களிலே ப்ரஸித்தமாயும் உபேயாந்தர பூதமாயுமிருக்கிற ப்ரபத்யுபாயமோ வென்னில் ,
ப்ராரப்தஸ்யாபி – கர்ம ஜ்ஞாந ஸஹ க்ருதையான பக்த்யுபாயத் தாலும் கூட அவிநாஸ்யமாயிருந்துள்ள ப்ராரப்த கர்மத்துக்கும் ,
ஹம்த்ரி – நாசகமாயிருக்கும் ;
து –- என்கிற அவ்யயம் பக்த்யுபாயத்தில் காட்டில் , இப்ரத்யுபாயத்துக்குண்டான வைலக்ஷண்ய விசேஷத்தைக் காட்டுகிறது ;

இவ்விடத்தில் ஆர்த்த ப்ரபந்நர் விவஷிதராகையாலே ,அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான இஷ்ட ப்ராப்திக்கு ஸ்வதந்த்ரோபாயமு மாயிருக்குமாப் போலே ;
இதுவும் ஸ்வேதரோபாயங்களுக்கு உபதேஷ்ட்ருத்வ ப்ரவர்த்தகத் வாதிகளாலே , அங்கமுமாய் ,தேவமிவாசார்ய துபாஸீத “ ,ஸ்ருதி ( தேவமிவேதி ) ஆசார்யம் – ஆசார்யனை , தேவமிவ -– ( எனக்கு மேல் பூஜ்யரில்லாமையாலே
என்மாத்ரமாகிலுமவர்களை யாராதித்து நல் வழி போங்கோளென்று சொல்லுகிற
“ சச பூஜ்யோ யதாஹ்யஹம் “ என்கிற உப ப்ரும்மணத்தின் படியே
மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவனான வெம்பெருமானைப் போலே ,
உபாஸீத – உபாஸநம் ஸ்யாத்ரு வாநுஸ்ம்ருதி: “ என்கிற அத்யர்த்த ப்ரேமத்தோடே யநுவர்த்திக்கக் கடவன் .

“ ஆசார்யான் புருஷோ வேதா “ ,ஸ்ருதி ( ஆசார்யவாநிதி ) –-
ஆசார்யவான் – ஜ்ஞாநாநுஷ்டான பரிபூர்ண னான வாசார்யனை யுடையனாயிருக்கிற ,
புருஷ: — முமுஷு வான புருஷன் ,
வேத -– அர்த்த பஞ்சகங்களை யலகலகாக வறியக் கடவன் .

“ உபாயோபேய பாவேந தமேவ சரணம் வ்ரஜேத் “ ப்ரபந்ந பாரிஜாதே –
குரூபாஸநபத்ததௌ – ஶ்லோ 18 ( உபாயோபேய பாவேநேதி ) –

தமேவ –– அப்படிப்பட்ட ஆசார்யனையே ,
உபாயோபேய பாவேந — உபாயோபேயங்களிரண்டும் அவனே என்கிற நினைவோடே ,
சரணம் –- ரக்ஷகனாக ,
வ்ரஜேத் –- புத்தி பண்ணக் கடவன் .–என்று இத்யாதி களில் சொல்லுகிறபடியே
இஷ்டாநிஷ்ட ப்ராப்தி பரிஹாரத்தில் தனக்கு மேலற்ற ஸ்வதந்த்ரோபாயமுமாயிருக்கும் .
பக்தி ஸ்வதந்த்ரோபாயமுமாயிருக்க ப்ரபத்தி ஸ்வதந்த்ரோபாயமானாப் போலே
இந்த வாசார்யாபி மாநமாகிற சரம ப்ரபத்தியும் , ஸ்வதந்த்ரோபாயமாய் வந்தது ;
பக்திக்கந்தர்யாமி விஷயம் ,
ப்ரபத்திக்கச் சாந்வதாரம் விஷயம் ,
சரம ப்ரபத்திக்கு பகவதவதாரமான வெம்பெரு மானார் விஷயம் .
ப்ராக்ருத விக்ரஹ யுக்தரா யெழுந்தருளியிருக்கை யாலே ,அவர்களுக்குண்டான அவ்வார்த்தி விஶேஷத்தையே
ப்ராரப்த கர்ம:பல மாகக் கொண்டு ஈஶ்வரன் அந்த கர்மங்களை வஸிப்பிக்குமென்னபடி ;

“ ததப்ராப்தி மஹாது:கவிலீநாஶேஷ பாதகா “ என்று
சிந்தயந்திக்கு பகவத் ப்ராப்தி , நினைத்தபோதே கிடைக்க வில்லை யென்னும் ஆற்றாமையாகிற மஹாது:காநுபவத்தாலே ஸமஸ்த பாபங்களும் வுருமாய்ந்து போயிற்றே என்று சொல்லிற்றே

ஸஜாதீய புத்தி பண்ணலாம்படி யிருந்ததே யாகிலும் ,
எம்பெருமானா ரிடத்திலே எம்பெருமான் ஸ்வரூபேண நின்று விஶேஷாதிஷ்டாநம் பண்ணுகையாலும் ,
இவ்வர்த்தத்தை ஸ்வயமேவ அருளிச் செய்கையாலும் ,
பகவதவதாரம் எம்பெருமானார் என்கிற வம்ஸத்தில் ஶம்ஶயமில்லை .

——————–

ததுக்தம் பாஞ்சராத்ரே பகவதா ஸேநேஸம் ப்ரதி ;

தத் -– கீழ்ச்சொன்ன பகவதவதார மெம்பெருமானாரென்கிற விவ்வர்த்தம் ,
பாஞ்சராத்ரே –- ஸ்ரீபாஞ்சராத்ர ஶாஸ்த்ரத்தில் ,
பகவதா -– ஈஶ்வரனாலே ,
ஸேநேஸம் ப்ரதி -– ஸேனை முதலியாரைக் குறித்து ,
உக்தம் – அருளிச்செய்யப்பட்டது .

மம ஸ்வரூபம் ஸர்வஸ்மாத் பரஸ்ய ஜகதீசிது: || ஷட்விதம் பரிபூர்ணந்த த்ஸேநேச பரிபட்யதே ||

எங்ஙனேயென்னில்
ஹே ஸேநேஸ –- வாரீர் ஸேனை முதலியாரே ,
ஸர்வஸ்மாத் பரஸ்ய -– ஸர்வ ஸ்வாமியாகவும் ,
ஜகதீசிது: — ஸர்வ நியந்தாவாகவுமிருக்கிற ,
மம -– என்னுடைய ,-தத் –-ஸகல வேதாந்தங்களிலும் ப்ரஸித்தமான ,
ஸ்வரூபம் -– அஸாதாரண திவ்யமங்கள விக்ரஹ விஶிஷ்ட ஸ்திதியானது ,
பரிபூர்ணம் –- “ இதம் பூர்ணமத:பூர்ணம் “ என்கிறபடியே ஜ்ஞாநபலைஶ்வர்யாதி கல்யாண குண புஷ்கலமாயும் ,
ஷட் விதம் –- ஆறு ப்ரகாரமுடைத்தானதாயும் ,
பரிபட்யதே — ஶாஸ்த்ரங்களிலெங்கும் ப்ரதிபாதிக்கப்படுகிறது .

பரத்வ , வ்யூஹ , விபவமந் தர்யாமித்வ மே வ ச | அர்ச்சா சார்யாவதாரௌ த்வௌ ஷாட்வித் யம் மே ப்ரகீர்த்திதம் ||

அந்த ஷட்விதமான ஸ்வரூபமெப்படிப்பட்டதென்ன ,
பரத்வ வ்யூஹ விபவம் –- பரத்வமென்றும் , வ்யூஹமென்றும் , விபவ மென்றும் ,
அந்தர்யாமித்வமேவச – அந்தர்யாமித்வமென்றும் ;( இவ்விடத் தில் , ஏவ—ச—என்கிற அவ்யவங்களிரண்டும் , வாக்யாலங்காரமாகக் கொள்வது )
அர்ச்சாசார்யாவதாரௌத்வௌ | — “ ஸர்வம் பூர்ணம் ச ஹோம் “ என்கிறபடியே
ஸமஸ்த கல்யாண குண புஷ்கலமாகையாலே ப்ரபத்திக்கு நியத விஷயமான வர்ச்சாவதாரம் ,
இப்படிப்பட்ட ஸித்தோபாயத்துக்கு பஹிர்பூதமன்றியே
தத்சரமாவதியான –- ஆசார்யரூபாவதாரம் , என்கிற விவையிரண்டுமென்றும் ,
மே -– என்னுடையதான ,
ஷாட்வித்யம் –- ஆறு ப்ரகாரமானது ,
ப்ரகீர்த்திதம் — ஶாஸ்த்ரங்களில் ப்ரதிபாதிக்கப்பட்டது .

—————-

பூர்வஸ்மாதபீ பூர்வஸ்மாத்ஸுலபோ ஹ்யுத்தரோத்தர: | தேஷ்வாசார்யாவதரணே காருண்யம் பரிபூரிதம் ||
பூர்வஸ்மாதபீ பூர்வஸ்மாத் -– பரத்வம் முதல் முன்முன்னானவைகள் காட்டில் ,
உத்தரோத்தர: — பின்பின்னான வவதாரம்,
ஸுலப: — ஒன்றைக் காட்டிலுமொன்றாஶ்ரிதற்கு ஸுலபமாயிருக்கும் ,
தேஷு – அவைகளில் வைத்துக் கொண்டு ,
ஆசார்யாவதரணே -– ஸர்வ ஸுலபமான ஆசார்யாவதாரத்திலே ,
காருண்யம் – ஆஶ்ரித ஸம் ரக்ஷணமே, ஸ்வபாவமாயிருக்கைக்கு ஈடான க்ருபையானது ,
பரிபூரிதம் –- வடிவிலே தொடைக் கொள்ளலாம்படி புஷ்கலமாயிருக்கும்

ஜ்ஞாநாதி குணதஸ் தத்ர விஶேஷா திஷ்டிதிர் பவேத் |
ஆசநந்த்வாத் தயாளுத்வாத் ஜ்ஞாநித்வாத் குரு பாவத: |
சரமஸ்ய வதாரஸ்ய குருரூபஸ்ய மே ஸதா ||
குருரூபஸ்ய –- ஆசார்ய ரூபத்தை யுடைத்தா யிருக்கிற ,
சரமஸ்யாவதாரஸ்ய –- கடைசி அவதாரமானது ,
ஆசந்த்வாத் –- “ நடமினோ தமர்களுள்ளீர் “ என்கிறபடியே சென்று ஸேவிக்க வேண்டியதான வர்ச்சாவதாரம் போலன்றிக்கே
“ பீதகவாடைப்பிரானார் பிரம குருவாகி வந்து “ என்று ஆஶ்ரிதரிருக்குமிடம் தேடி வந்து கிட்டியிருப்பதாலும் ,
தயாளுத்வாத் -– கர்மாநுகுணமாக விவனை ஸம்ஸ்கரிக்கவும் விடும் ஸ்வதந்த்ர மான தயை போலன்றிக்கே
ஸர்வ ப்ரகாரத்தாலு மிவனை யுஜ்ஜீவிப்பித்தே விடும் நிரதிஶய தயையை யுடைத்தாயிருக்கையாலும் ,
ஜ்ஞாநித்வாத் – “ ஜ்ஞாநீத்வாத்மயிவ மே மதம் “ என்கிறபடியே நமக்கு தாரகமானதாயிருக் கையாலும் ,
குருபாவத: — அஜ்ஞாந நிவர்த்தகனென்கிறதே ஸ்வரூபமா யிருக்கையாலும் ,
தத்ர – அந்த அவதாரத்தில் ,
ஜ்ஞாநாதிகுணத: — ஜ்ஞாந பலைஶ்வர்யாதி குணங்களையுடைத்தான முந்தின வவதார பஞ்சகத்திற் காட்டில் ,
மே – என்னுடைய ,
விஶேஷாதிஷ்டிதி: — விஶேஷாதிஷ்டான மானது ,
ஸதா –- எப்போதும் ,
பவேத் –- உண்டாயிருக்கக் கடவது .

ப்ராப்யத்வ ப்ராபகத்வே த்வேஸ்வநிஷ்டே ந குணௌ மதௌ | தஸ்மாந்மத்பாதயுகளம் ஶரண்யம் மோக்ஷகாமிநாம் ||
(அந்தவவதாரத்தில்) ப்ராப்யத்வ ப்ராப கத்வே த்வே –- உபாயத்வம் – உபேயத்வம் ஆகிற விவையிரண்டும் ,
ஸ்வ நிஷ்டே -– நமக்கு ஸ்வரூபமாகவேயிருக்கும் ;
குணௌ – நமக்கவை குணங்களாக ,
நமதௌ – எண்ணப் பட்டதன்று ,
தஸ்மாத் -– ஆன படியாலே,-என்று பகவான் தானே யருளிச் செய்தாரிறே -இத்தாலும் , எம்பெரு மானார் திருவடிகளே ஸம்ஸாரோத்தரணோபாயம் .
இனி ஸ்வதந்த்ர னாயிருப்பானொரு மஹா ப்ரபுவைக் கண்டு கார்யம் கொள்ளுமவன்
அவன் கையைப் பிடித்து வேண்டிக்கொள்ளுமளவில் அவன் இனியனாய் இவன் கார்யம் செய்கைக்கும்
ஸ்வதந்த்ரனாய் சீறி யுதறி யுபேஷிக்கைக்கும் உடலாயிருக்கும் ;
அந்த ப்ரபு தன்னையே காலைப் பிடித்துக் கொள்ளுமளவில் ,அவன் தயா பரவசனாய் , உதறமாட்டா மல் , கார்யம் செய்து விடுமோபாதி ,
சரணஸ்தாநீயரான வெம்பெருமானாரை பற்றினால் , அவன் பரம தயாளுவாய் இவன் கார்யம் செய்யுமிடத்தில் ஸம்ஸயமில்லையிறே .

———————

“ லோகே ச பாதபதநம் பாணி ஸங்க்ரஹணாதபி | தயா ஹேதுதயா த்ருஷ்டுமித்யுக்தம் சரணாவிதி “ என்றும் ;

லோகே ச -– இருள் தரு மா ஞாலமாகையாலே சரணாகத ஸம்ரக்ஷணம் பரம தர்மமென்றறுதி யிடமாட்டாத இந்த விபூதி யிலும் கூட ,
பாத பதநம் -– காலைப் பிடித்துக்கொள்ளுமது ,
பாணி ஸங்க்ர ஹணாதபி -– கையைப் பிடித்துக்கொள்ளுமதிலும்காட்டில் ,
தயா ஹேது தயா -– க்ருபை யுண்டாகுகைக்கு காரணமாக ,
த்ருஷ்டமிதி -– காணப்பட்ட தென்று ,
சரணாவிதி –- ( மந்த்ர ரத்நத்தில் ) “ சரணௌ “ என்று ( திருவடி களைப் பற்றும்படி ) ,
உக்தம் –- சொல்லப்பட்டது .

“ அநதிக்ரமணீயம்ஹி சரண க்ரஹணம் “ என்றும் , சொல்லுகிற படியே , சரண க்ரஹண மமோகோபாயமிறே |
சரண க்ரஹணம் – அஜ்ஞன் முதல் ஸர்வஜ்ஞன் வரையிலுள்ள யெல்லார்க்கும் காலைப் பிடித்துக் கொள்கையென்றால் ,
அநதிக்ரமணீயம்ஹி – அதிக்ரமிக்கக்கூடாத தாய் இருக்குமிறே ;

பட்டர் திருவணையாடி மீண்டெழுந்தருளுகிறபோது பாதிரி என்கிற கிராமத்திலே ஒரு வேடவனகத்திலே ஓர் இரவு தங்கின வளவிலே பிறந்த ( முசலின் விஷயமான ) வார்த்தையை இவ்விடத்திலநுஸந்திப்பது ; இத்தால் திருவடிகளைப் பற்றுமது அமோகோபாயமென்னதாயித்து .

நம்பெருமாள் , பெரிய திருவோலக்கமாக வெழுந்தருளியிருக்க , திருவடி தொழ வந்தவர்கள் , எம்பெருமானாரை நோக்கி தண்டனிட, தத்காலவர்த்தியான ராஜா , எம்பெருமானாரை தண்டனிட்டு , எல்லாரும் பெருமாளை விட்டு உம்மையே தண்டனிடா நின்னார்கள்-இதுக்கு இப்பொருளருளிச்செய்ய வேணுமென்ன ,
உம்முடைய பக்கலிலே சிலர் கார்யம் கொள்ள வந்தால் அவர்களில் , ஒருவன் உடுவரைக் கொண்டு வந்தான் ,
ஒருவன் உம்முடைய பாதுகையைப் பிடித்து நின்றான் , இதிலே யாருக்கு நீர் முந்துற கார்யம் செய்வீர் ! என்ன ;
காலைப் பிடித்தவனிடத்திலே ப்ரீதி விளையுமென்ன ,
அப்ப டியே நாம் நம்பெருமாளுக்கு திருவடிகளாயிருப்போம்
, அதனால் நம்மைப் பத்தினார்க்கு கார்யாம்ஶத்திலொரு குறையுமின்றியிலே யமோகமாகப் பலிக்குமென்றருளிச் செய்தார் .
உத்தாரகமான வெம் பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தம் தேவதாந்தர , மந்த்ராந்தர தோஷ ஸ்பர்ஶத்தாலே கலங்கி
குலையாமல் ஸத்தையுடன் கிடைக் கப்பெறில் , ஸ்வரூபாலங்காரமான தத்வஜ்ஞாநமும் , அநந்யபக்தி யும் , அந்யவைராக்யமும் இல்லாவிடிலும் ,
மேலந்த ஸம்பந்தத் தாலே யுண்டாக்கிக் கொள்ளலாம் ;
ம்ருதஸஞ்சீவினியான வெம் பெருமானாரோட்டை ஸம்பந்தம் நிஷித்தாநுஷ்டாநாந்வயலேஸத் தாலே யவன் கைவிடும்படி குலைந்தால் ,
அநர்தமே விளைந்து , அத்தால் ஜ்ஞாநாதிகள் சிலதுண்டானாப்போலே தோற்றிற்றாகிலும் , ப்ரயோஜநமில்லையாம் .
ஸதாசார்யரான எம்பெருமானாரோடு ஸம்பந்தமற்ற ஜ்ஞாநாதிகளுமிவனுக்கு , அவத்யகரமாய் தலைக்கட் டும் ;

அவத்யகரமாகையாவது , பகவந் நிக்ரஹத்தை விளைத்து யாவ தாத்மபாவி நரகத்திலே தள்ளிவிடுமென்றபடி , எம்பெருமானாரோ டுண்டான ஸம்பந்தம் ஸ்வரூபவிகாஸஹேது , ததபாவம் ஸ்வரூப விநாஶஹேது , என்று வங்கீபுரத்து நம்பி வார்த்தை .

 மையாசார்யாவதாரேது யஸ்ய பக்திர் ந வித்யதே , தஸ்யாத்ம நாசஸ்ஸேநேஸ பவிஷ்யதி ந ஶம்ஸய: “ –விஶ்வக்ஸேந ஸம்ஹிதாயாம் என்று எம்பெருமான் தானே யருளிச் செய்தானிறே .-
ஹே ஸேநேஸ -– வாரீர் ஸேனை முதலியாரே ,
ஆசார்யாவதாரே –- ஆசார்ய ரூபியாயவதரித்திருக்கிற ,
மயி -– என்னிடத்தில் ,
யஸ்யது –- எவனுக்கானால் ,
பக்தி: — அத்யந்த ஸ்நேஹத்தோடு ,
மோக்ஷகாமிநாம் முமுஷுக்களுக்கு ,
மத்பாதயுகளம் — அப்படி யாசார்ய ரூபியாயிருக்கிற நம் திருவடிகளிரண்டுமே ,
சரண்யம் — ரக்ஷகமாகக் கடவது .

 ஸ்ரீமந் லக்ஷ்மண தேஶிகேந்த்ர சரணத்வந்த்வாஶ்ரயாஶ்ரீபதிர் மாமாத்ருத்ய மஹாபல ப்ரசவிதா ஜாதோஹி ரங்கேஸ்வர: |
தத் த்ருஷ்ட்வா மயி ரங்கநாதரமணீ ஸ்ரீரங்கநாயக்யஹோ ஸ்ரீராமாநுஜ பாதபாகயமிதி ப்ராசீகச ஸ்வாந்தயாம் “
என்று இறே நம்பிள்ளை யருளிச் செய்யும்படி ; அதாவது
எம்பெருமானாருடைய திருவடிகளில் ஸம்பந்தமுடையவனன்றோ வென்று பெரிய பெருமாள் , என்னை யாதரித்து “ அந்தமில் பேரின்பத்தடியரோடிருந்தமை “ யாகிற மஹா: பலத்தைத் தருவாராக ஒருப்பட்டார் ;
அத்தைப் பெருமாளுக்கு பத்நியா யினிய விஷயமாயிருக்கிற ஸ்ரீரங்கநாச்சியார் கண்டு ,
எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தமுண்டான பின்பு தத் ஶத்ருஶமாகக் கொடுக்கலாவ திதுவன்று , வேறு தகுதியா யிருப்பதொரு பலம் கொடுக்க வேணும் என்று , நினைத்துக் காணாமையாலே ,-தம்முடைய நிர்ஹேதுகமான க்ருபையை , என் பக்கலிலேயொரு மடையாக வெளியிட்டாள் ;-இதென்ன வாச்சர்ய மென்று கண்டருளினாரென்றபடி ,
இத்தால் எம்பெருமானாரோடு ஸம்பந்தமுண்டாகவே , பிராட்டியும் எம் பெருமானு மொருவர்க் கொருவர் பரிந்து மேல் விழுவார்களென்று மர்த்தம் சொல்லப்பட்டது,
நிர்ஹேதுகமாக விஷயீகரிக்கும் பரம காருணிகரான வெம்பெருமானார் இவன் நம்முடையவன் , என்றபிமாநிக் குமபிமாநமே ஸம்ஸாரோத் தாரகமென்று கூடிய தாஸ்ய ருசியானது ,
ந வித்யதே -– இல்லாமல் போகிறதோ ,
தஸ்ய –- அந்த சேதநநுக்கு ,
ஆத்மநாஶ: — ( ஶேஷத்வமில்லாத போது ஸ்வரூப மில்லை “ யாகையாலே ) ஸ்வரூபநாஶமானது ,
பவிஷ்யதி -– உண்டாகக் கடவது ;
ந ஶம்ஶய: — ( இவ்வர்த்தத்தில் ப்ரமாணங்கள் சுருக்கமறக் காண் கையாலே ) ஸந்தேஹமில்லை .
( ஸ்ரீமந் லக்ஷ்மண தேஶிகேந்த்ரேதி ) -– இதுதான் ப்ரமாணிகாக்ரேசரரான நம்பிள்ளை யருளிச்செய்த ஶ்லோகமா யிருக்கும் ;
ஶ்ரீமந் லக்ஷ்மண தேஶிகேந்த்ர சரணத்வந்த்வாஶ்ரயாத் –- ஸ்ரீமத் –- ஸ்ரீவைஷ்ணவஸம்பத்தை யுடையராய் ,
அன்றிக்கே பகவதநுபவகைங்கர்யரூபமாகிற நிலைநின்ற ஸம்பத்தையுடையராய் ,
அஜ்ஞநுமன் றிக்கே நமக்கபேஷிதமான ப்ராப்யத்தை தருகைக்கீடான ஜ்ஞாநாதி ஸம்பத்தையுடையரா யென்றுமருளிச் செய்வர் ;

லக்ஷ்மண தேஶிகேந்த்ர – ஆசார்ய குல ஶிகாமணியான வெம்பெருமானாருடைய
( இவ்விடத்தில் “ லக்ஷ்மண ” என்கிற பதம் அவதாரத்தினுடைய ஊத்தக் காலைக் காட்டுகிறது ) ,
சரணத்வந்த் வாஶ்ரயாத் – இரண்டு திருவடி களை யாஶ்ரயித்த பலத்தாலே
மந்த்ர ரத்ந்த்தில் “ சரணௌ “ என்கிற பதத்துக்குச் சொன்ன வர்த்தங்களெல்லா மிவ்விடத்துக்கு சேரும் ),
ஸ்ரீபதி: — ஸ்ரீய:பதியான ,
ரங்கேஶ்வர: — பெரியபெருமாளானவர் ,
மாம் — ( ஸ்வப்ந முகேன தம்முடைய திருவடிகளிரண்டுமே உபாயோபேயங்களென்று
எம்பெருமானார் தாமே காட்டிக் கொடுக்கும்படியான பாக்யமுடைய ) அடியேனை ,
ஆத்ருத்ய – விஶேஷ கடாக்ஷம் செய்தருளி ,
மஹா:பல ப்ரசவிதா – நித்ய கைங்கர்யமாகிற பரம புருஷார்த்தத்தைத் தருவாராக
( ப்ரதம பருவநிஷ்டருக்கு கொடுப்பது ஃபலம் , இவர்க்கு கொடுப்பது மஹாபலம் , அதாவது , அடியார்க்காள்படுத்துகை ) ,
ஜாதோஹி – ஒருப் பட்டாறிறே ,
தத் – அப்படிப்பட்ட பெரியபெருமாளுடைய திருவுள்ளக் கருத்தை ,
த்ருஷ்ட்வா – கடாஷித்தருளி ,
ரங்கநாத ரமணீ –( ஶம்ஶ்லேஷ தஸையிலீஶ்வரனையும் , விஶ்லேஷதஸையில் சேதநநையும் திருத்தி
சேதநரக்ஷணமே யாத்ரையா யிருக்கையாலே ) பெரியபெருமாளுக்கு ஆனந்தாவஹையாயிருக்கிற ஸ்ரீரங்கநாயகீ –-
பெரியகோயில் ஐஶ்வர்யத்துக்கெல்லாம் கடவுளான ஸ்ரீரங்கநாயகியாரானவர் ,
அயம் –- இந்த நம்பிள்ளை ,
ஸ்ரீராமாநுஜ பாத பாக் இதி –- பெரியபெருமாள் தாமே விரும்பி உபயவிபூத்யைஶ்வர்யத்தையும் கொடுக்கும் படியான
ஜ்ஞாநாதி குணஸம்பத்தையுடைய வெம்பெருமானார் திருவடிகளை யாஶ்ரயித்தவ னென்று ,
மயி –- அடியேனிடத்தில் ,
ஸ்வாம் – தனக்கஸாதாரணமா யிருக்கிற ,
தயாம் – “ பாபாநாம் வா ஸுபாநாம் வா “ என்கிறபடியே , அஜ்ஞ , விஶேஷஜ்ஞ விபாகமறவெல்லாரும் வாழும்படியான நிர்ஹேதுக க்ருபையை ,
ப்ராசீகசத் – பரிபூர்ணமாக வெளியிட்டாள் ;
அஹோ – “ என்னைப் புவியிலொரு பொருளாக்கி “ இத்யாதியில்படியே ,
எம்பெருமானார் செய்தருளின விவ்வுபகாரம் ஆச்சர்ய கரமாயிருக்கிறதென்கிறார் .

சாரார்த சதுஷ்டய விவரணத்தில் அம்மங்கி யம்மாளுக்கு , எங்களாழ் வான் தாமுமருளிச் செய்தாறிறே .

ஸோமாஸியாண்டானும் ,

“ பகவத் ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வ ப்ரவ்ருத்தி ஸாத்யாயா பக்தே: ஸ்வாதந்த்ர்ய ரூபாஹங்கார

ஸோமாஸியாண்டானருளிச் செய்த சரமோபாய விவரணத்திலே. (பகவத் ப்ரவருத்தி விரோதி இத்யாதி ) –
பகவத் ப்ரவ்ருத்தி விரோதி -–ஸ்வாமியாய் ஜநகத்வாத் பகவந்தமுபேத்ய – தத் சரணார விந்தயுகள
சரணாகதேரபி நிரங்குஶைஸ்வர்ய பகவத் ஸ்வாதந்த்ர்ய ஸ்மரணத்வாரா பீதிஹேது
ஸ்வதந்த்ரனானவன் ஸ்வயமாய் பரதந்த்ரனாயிருக்கிறவிவனைப் பெற நினைக்கையாகிற
பகவதி ப்ரவ்ருத்திக்கு ப்ரதிபந்தகமாயிருந்துள்ள , ஸ்வப்ரவ்ருத்தி
ஸாத்யாயா: — ஸ்வ யத்ந ரூப ப்ரவ்ருத்தி விஶேஷத்தாலே ஸாதிக்கப்படுமதான,
பக்தே: — கர்ம ஜ்ஞாந ஸஹக்ருதையான பக்தி யோகத்திற்கு ,
ஸ்வாதந்த்ர்ய ரூபாஹங்கார ஜநகத்வாத் — ஸ்வாதந்த்ர ரூபாஹங் கார ஜநகத்வமுண்டாயிருகையாலும் ,
( அதாவது , ஸ்ரீபாஷ்யத்திலறுதி யிட்டபடியே விவேக விமோதிகளாகிற நியமங்களையுடையனாய் ,
வர்ணா ஶ்ரம விஹிதக ர்மங்களைத் தானநுஷ்டித்த பின்பு “ த்ருவாநுஸ்ம்ருதி “ யென்கிற பக்தியோகத்தை
நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியிருக்கை யாலே , இதில் ஸ்வ ஸ்வாதந்த்ர்ய ரூபமான வஹங்காரம் பிறக்குமென்ன படி )

( இவ்விடத்தில் ப்ராஸங்கிகமாக சில அர்த்தவிஶேஷங்கள் சொல்லப்படுகி றது ; அதாவது ,
ஸ்வஸ்வாதந்த்ர்ய பயத்தாலே பக்தி நழுவித்து “ என்கிற படியே ,
பக்தி யோகமானது நழுவும் போது ,
ஏவம் நியம யுக்தஸ் யாஶ்ரம விஹித கர்மாநுஷ்டாநேநைவ வித்யா நிஷ்பத்திரித் யுக்தம் பவதி “ என்று
அந்த பக்தி யோகத்துக்கு ஸாதகங்களாக வறுதியிடப்பட்ட விவேக விமோ காதிகளும் ,
தத் ஸாத்யையான பக்தி யோகத்தோடு , ஸ்வ ஸ்வாதந்த்ர்ய ரூபாஹங்கார ஜநகமென்று ,
இந்த சரமாதிகாரிக்கு த்யாஜ்யமாய்விடுமோ வென்னில் , ஆகாது ;
“ இவன் தானிவைதன்னை நேராக விட்டிலன் “ என்கிற க்ரமத்திலே ,
இவையெல்லாமிவனுக்கு வகுத்தவிடமான வெம் பெருமானாருடைய முகமலர்த்தியாகிற உபேயத்துக்கு ஶேஷமாய்க் கொண்டு ,
அத்தாலே யவர் விஷயத்தில் “ த்யாயேத்ஜபேந்நமேத் பக்த்யா பஜேதப்யர்ச்சயேந்முதா “ என்று ஶாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட

( நிரவதிக ப்ரேம ரூப த்ருவாநுஸ்ம்ருதியென்கிற ) பக்தி யோகத்துக்கு நாடோறு மதிஶயாவஹங்களாகையாலே ,
மிகவுமுத்தேஶ்யங்களு முபாதேயதமங்களு மாயிருக்கும் –

இவ்வர்த்தங்களை ” ஜ்ஞாநாநுஷ்டாநங்களிரண்டுமல்லாதார்க்கு பாயாங்கமாயிருக்கும் , இவனுக்குபேயாங்கமாயிருக்கும் “ என்று துடங்கி
ஸ்ரீ வசந பூஷண திவ்ய ஶாஸ்த்ரத்திலே பரக்க வருளிச் செய்தாறிறே –
இவ்வளவும் ப்ராஸங்கிகமாக சொல்லவேண்டித்து )

இனி ப்ரக்ருதார்த்தங் கள் சொல்லப்படுகிறது

பகவந்தமுபேத்ய தத் சரணாரவிந்த யுகள சரணா கதேரபி –
த்வா ச , ததுபயவிஷய பகவதவதாரபூத பரமகாருணிக ராமாநுஜ யோகி
சரணாரவிந்த சரணாகதிரேவ ஸர்வோஜ்ஜீவனாய பவதி இதி ஸமர்த்திதம் “ என்று
ஸ்வ ப்ரணீதமான சரமோபாய விவரணத்திலே யருளிச் செய்தார் இறே |

பகவந்தம் -– ஈஶ்வரனை ,
உபேத்ய –- கிட்டி ( இவ்விடத்தில் ப்ரபத்தி விவஷிதமாகையாலே யதுக்கு நியத விஷயமான வர்ச்சாவதாரத்திலே நோக்காய் ,
அதுதான் “பூர்ணம் “ என்கையாலே , ஆஶ்ரயண ஸௌகர்யாபாதகங்களான குணங்களோடு
ஆஶ்ரித கார்யாபாதகங்களான குணங்களோடு வாசியற
ஸகல கல்யாண குண பூர்ணமென்கிற விவ்வர்த் தத்தை இந்த பகவத் ஶப்தம் காட்டுகிறது ) ,
தத் சரணாரவிந்த யுகள சரணாகதேரபி —
தத்சரணாரவிந்தயுகள — அந்த வெம்பெருமானுடைய திருவடித் தாமரைகளிரண்டிலும் செய்யப்படுமதான ;
சரணாகதேரபி — உபாயாந்தர பரித்யாகமாகிற வங்கத்தோடே கூடி ,
ஸ்வதந்த்ரமாயிருந்துள்ள ப்ரபத்திக்கும் ; நிரங்குஶைஸ்வர்ய பகவத் ஸ்வாதந்த்ர்ய ஸ்மரணத்வாரா —
நிரங்கு ஶைஸ்வர்ய -– பந்தமோக்ஷங்களிரண்டுக்கும் தனக்கு மேலற்ற நிர்வாஹக னான ;
பகவத் – எம்பெருமானுடையதான ,
ஸ்வாதந்த்ர்ய -– கர்ம நிபந்தனமாக ஸம்ஸரிப்பிக்கவும் ,
காருண்ய நிபந்தனமாக முக்தனாக்கவும் வல்ல ஸ்வாதந்த்ர்யத்தினுடைய ;
ஸ்மரண த்வாரா -– அநுஸந்திக்கிற வழியாலே ;
பீதி ஹேது த்வாச்ச – பலத்தில் ஸம்ஶயத்தால் வரும் பயத்துக்கு காரண மாகையாலும் ;
ததுபயவிஷய பகவதவதாரபூத பரமகாருணிக ராமாநுஜ யோகி சரணாரவிந்த சரணாகதிரேவ ;
ததுபயவிஷய -– அந்த பக்தி ப்ரபத்தி களிரண்டுக்கும் விஷயபூதனான ;
பகவத் — ஈஶ்வரனுடைய ;
அவதாரபூத -–அவதார விஶேஷமான ,
பரமகாருணிக – ( பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயிருக்கையன்றிக்கே , மோக்ஷ ஏக ஹேதுவாயிருக்கையாலே )
ஈஶ்வரனிற்காட்டிலும் மேலான காருணிகராயிருக்கிற ,
ராமாநுஜயோகி – எம்பெருமானாருடைய ,
இவ்விடத்தில் யோகி என்கிற பதம் ஸுபாஶ்ரய மான வெம்பெருமானிடத்தில் தம் திருவுள்ளத்தை
ஸ்தாவர ப்ரதிஷ்டை யாக வைத்திருக்கும்படியைச் சொல்லுகிறது ) ,
சரணாரவிந்த – திருவடித் தாமரைகளிலே ( செய்யப்படுமதான ) ,
சரணாகதிரேவ – ப்ரபத்தி தானே ,ஸர்வோஜ்ஜீவனாய – அஜ்ஞ , விசேஷஜ்ஞ விபாகமறவெல்லாருடையவும் உஜ்ஜீவனத்தைப் பொருட்டு ,
பவதி இதி – ஆகிறதென்று ,
ஸமர்த்திதம் – நிர்வஹிக்கப்பட்டதென்கை |

வாதிகேசரி அழகிய மணவாளஜீயரும் 1 “ பார தந்த்ர்யம் ஸ்வரூபம் ஹி ஸர்வஜீவாத்மநாமபி | தத்வ்ருத்தா ஹி பக்திஸ்து ஜீவ யத்நாபி லாஷிணீ ||வாதிகேஸரி அழகியமணவாளச் சீயரருளிச் செய்த சரம குரு சரிதையில்,
ஸர்வ ஜீவாத்மநாமபி –- பத்த , முக்த , நித்யரென்கிற த்ரிவிதாத்ம வர்க்கத்துக்கும் ,
பாரதந்த்ர்யம் – ஈஶ்வரனிட்ட வழக்காயிருக்கை ,
ஸ்வரூபம் ஹி – ஜ்ஞாநாநந்தங்களிற் காட்டிலும் அந்தரங்க நிரூபகமாகவே யிருக்கும் ,
ஜீவயத்நாபிலாஷிணி –- ( “ ஒன்றி நின்று நற்றவம் செய்து” என்கிற பாட்டிலும் ,“
புன்புல வழியடைத்து “ என்கிற பாட்டிலும் திருமழிசைப்பிரானருளிச் செய்த ) சேதந ப்ரயத்நங்களை யபேஷித்திருக்கிற
பக்திஸ்து — ( ஸர்வ க்ரமத்தாலே பரபக்த்யாதி ரூபேண ஸாதிக்கப்படுவதான)பக்தி யோகமோ வென்னில் ;
தத் விருத்தாஹி — அந்த பாரதந்த்ர்யமாகிற ஸ்வரூபத்துக்கு விருத்தமாகவே யிருக்கும் |

த்யாகோ நிவ்ருத்தி ஸாத்யோயம் நிர்மலாநந்த ஸாயிந: | ஸ்வாதந்த்ர்ய ஸ்ம்ருதிமாத்ரேண பீதிஹேதுர்பவிஷ்யதி || 1
தஸ்மாத் பக்திம் ப்ரபத்திம் ச விஹாய விமலாஶயா: | அஸ்மத் ஆர்யா மஹாத்மாந: சரணாஶ்ரயா:|தத்க்ருதேந அபிமாநேந நிஸ்தரந்தி பவார்ணவம் ||

நிவ்ருத்தி ஸாத்ய: —
“ சிற்ற வேண்டா “ என்கிறபடியே பகவத் ப்ரவ்ருத்திக்கு விரோதியான ஸ்வ ப்ரவ்ருத்தியினுடைய நிவ்ருத்தியினாலே ஸாதிக்கப்படுமதான ,
அயம் த்யாக: — இந்த ப்ரபத்தியானது ; (
இவ்விடத்தில் புரோவர்த்தியாநத்தைக் காட்டுமதான “ அயம் “ என்கிற பதம் ப்ரயோகித்திருக்கையாலே ,
ப்ரபத்யுபாயமானது , ஸகல வேத வேதாந்தாதிகளிலும் புகழ் பெற்றதென்றும் ,
தர்மஜ்ஞ ருசி பரிக்ருஹீத மென்றும் ,
சரண்ய ஹ்ருதயாநுஸாரியென்றும் ,
பாரதந்த்ர்ய ஸ்வரூபத் துக்குசிதமானதென்றும் , இத்யாதிகளைக் காட்டுகிறது ),
நிர்மலானந்த ஸாயிந: ;
நிர்மல – அகிலஹேய ப்ரத்யநீகனாயும் ,
அநந்த ஸாயிந: — திரு வனந்தாழ்வானாகிற படுக்கையிலே சாய்ந்தருளுகிறவனாயுமிருக்கிற வெம் பெருமானுடைய ;
ஸ்வாதந்த்ர்ய ஸ்ருதி மாத்ரேண –
ஸ்வாதந்த்ர்ய – நிரங்குச ஸ்வாதந்த்ர்யத்தினுடைய ,
ஸ்ம்ருதி மாத்ரேண –ஸ்மரண மாத்திரத்தினாலே ,
பீதி ஹேது: — ஃபலஸித்தியிலே ஶம்ஶயமாகிற பயத்துக்கு காரண மாக ,
பவிஷ்யதி – ஆகக்கடவது |

( இந்த ஶ்லோகத்தில் “ நிர்மல “ என்கிற பதம் “
அநஸ்நந்யோ அபிசாகசீதி“ என்கிற ஸ்ருதியில் சொல்லுகிற
“ தத் கத தோஷைர ஸம்ஸ்புருஷ்டத் வத்தை “
( அதாவது சேதந தோஷங்கள் ஈஶ்வரனுக்கு தட்டாமையை ) சொல்லுகிறது ,
ஸ்ருதியில் “ அபிசாக சீதி “ என்றிருப்பதால் ,
அகில ஹேயப்ரத்யநீகனாய் என்று அர்த்தமெழுத வேண்டிற்று ;
இப்படி விளங்கா நின்றுள்ள வீஶ்வரன் தான் சேதனனோடே ஏக தத்வமென்னலாம்படி பொருந்தி யிருக்கச் செய்தேயும் ,
“ தயோரந்ய:பிப்பலம் ஸ்வாத்வத்தி “ என்று அந்த ஸ்ருதியில் சொல்லுகிறபடியே
சேதநந் கர்மஃபலத்தை யநுபவிக்குமிடத் தில் –- தன் கர்மஃபலத்தை தான் புஜிக்கிறானென்று , உபேஷித்திருக்கை யாலே ,
“ நிர்மல” என்கிற குணம் ஸ்வாதந்த்ர்ய பயத்துக்கு ஹேதுவாகிறது|

இனி “ அனந்தஸாயிந: “ என்கிற பதத்தினர்த்தத்தை ஆராயுமிடத்தில் –-
அது தான் , ஸ்ரீநாரத பகவான் போல்வாரையும் ,
கச்ச நாரதமாசிரம் | ஏகாக்ராச்சிந்தயேயுர்மாம் நைஷாம் விக்நோ பவேதிதி “ என்று
ப்ரேமம் இல்லாதவராக விலக்க வேண்டும்படி நித்ய நிரவத்ய நிரதிசய ப்ரேமமுடையராய் “
அஸ்தாநேபயஸங்கிகளா “ யிருக்கிறவர்களுக்குத் தன்னுடம்பை ஸர்வ ஸ்வதாநமாக கொடுத்துக் கொண்டிருக்கும்படியைச் சொல்லுகையாலே ,
அநாதி கர்ம பரவசராய்க்கொண்டு , பகவதி ப்ரேம கந்தமே கண்டறியாத
நம்மை “ ஷிபாமி “ என்று தள்ளி விடுகைக்கு ஹேதுவாயிருக்கிற ஸ்வா தந்த்ர்யத்தினுடைய பயம் ஸித்தம் ;
இதுக்கு மேலே , பரதந்த்ர ஶேஷியாய்,மோஷ ஏக ஹேதுவான ஆசார்யாவதாரத்துக்கு ஊற்றுவாயான திருவநந் தாழ்வானும் ,
பகவத் ப்ரேம பரவசராய் , அஸ்தாநே பயஶங்கைபண்ணி ,“
தஹ்யமாநா வநந்தஸ்ய விஷ ஜ்வாலா ப்ரவேஸ “ என்று ,
ஷீராப்தி நாதனைக் கிட்டத் தேடுகிற மதுகைடபரென்கிற அசுரரை , தன் விஷ ஜ்வாலைகளாலே
உறுமாய்ந்துபோம்படி பண்ணுகிறவவதாநத்தை காட்டுகையாலே
“ அநந்தஸாயிநா “ என்கிறது மிகவும் பய ஹேதுவாயிருக்கும் |
“ வத்யதா மேஷ தண்டேன தீவ்ரேண ஸஸிவைஸ்ஸஹ | ராவணஸ்ய ந்ருஸம் சஸ்ய ப்ராதா ஹ்யேஷ விபீஷண: “ என்றிறே ,
ப்ரேம பரவசருடைய பரி மாற்றமிருக்கும்படி |
( ஸ்ரீநாரத பகவான் ஸ்வேததீபத்துக்கு எழுந்தருளி அங் குள்ள திவ்ய புருஷர்களை ஸேவித்து தத்ஸமீபத்தில் நின்று ,
ஊர்த்வ பாஹுவாய் ஸமாஹித சித்தனாய் , ஸர்வேஶ்வரனை , ஸ்ரீமஹா புருஷ ஸ்தவமென்கிற
பரம குஹ்யமான ஸ்தோத்ரத்தாலே ஸ்துதிக்க , அப்போது ஸர்வேஶ்வரன் ,
இவருக்கு தன்னுடைய விஶ்வ ரூபத்தை அநேக வர்ண ஸம்ஸ்தாநத்தோடு விசித்ரதரமாகக் காட்டிக்கொடுத்து ,
ஏகதத்விதத்ரிதர்க ளுக்கும் கூடக் காணவரிதான இந்த திவ்ய ரூபத்தை , ஏகாந்தி ஸத்தமராகை யாலே நீர் காணப்பெற்றீர் .
இவ்விடத்திலிருக்கிற திவ்ய புருஷர்களுடைய பக்திபாரவஸ்யத்தைப் பார்த்தால் , உம்முடைய பக்தி
குளப்படியென்ன வேண்டும்படியா யிருக்குமாகையாலே , அவர்களுடைய த்ருவாநுஸ்ம்ரு திக்கு விக்நம் தட்டாதபடி நீர்
இவ் விடத்திலிருந்து கடுகப் புறப்பட்டுப்போ மென்று ஸர்வேஶ்வரனருளிச் செய்ததாக ,
ஸ்ரீமஹாபாரத சாந்தி பர்வாந்தர் கத மோக்ஷ தர்ம பர்வத்தில் 339-340 அத்யாயங்களில்
சொல்லப்பட்ட வர்த்தம், இவ்விடத்தில் அநுஸந்தேயமாகக் கடவது | )

1 ( தஸ்மாதிதி ) , தஸ்மாத் – அந்தக்காரணத்தாலே ;
விமலாஶயா: — பரிசுத்தமான அந்த:கரணத்தை யுடையராய்
மஹாத்மாந: — ஸர்வஜ்ஞரா யிருக்கிற ;
( இவ்விடத்தில் , விமலாஶயா: — மஹாத்மாந: என்கிற பதங் கள் ,
“ மநஸாதுவிஸுத்தேந “ என்கிறபடியே
“ அறியவேண்டு மர்த்தமெல் லாமறிகைக்கு “ அந்த:கரண ஸுத்தி தான் ப்ரதானகாரணமென்று மர்த்தத் தைக் காட்டுகிறது “ )
அஸ்மதார்யா: — நம் பூருவாசாரியர்கள் ;
பக்திம் – ஸ்வரூப விருத்தமான பக்தி யோகத்தையும் ,
ப்ரபத்திம் ச -– “ ப்ரபத்யுபாயத் திக்கிக் குற்றங்கள் ஒன்றுமில்லை “ என்கிறபடியே
நிர்தோஷமாயிருக்கச் செய்தேயும் , ஈஶ்வர ஸ்வாதந்த்ர்ய பயமுள்ளதான ப்ரபத்தியையும் ,
விஹாய –- விட்டு ,
ஸதாசார்ய சரணாஶ்ரயாஸ்ஸந்த: — அந்த ஸித்தோபா யத்துக்கு வேறாவதன்றியே தத் சரமாவதியான
ஸதாசார்யனுடைய திருவ டிகளே யுபாயோபேயமென் றாஶ்ரயித்தவர்களாய்க் கொண்டு ,
தத் க்ருதேந – அந்த ஸதாசார்யனாலே பண்ணப்பட்ட ,
அபிமாநேந -– இவன் நம்முடைய வனென்கிற அபிமாநத்தாலே ,
பவார்ணவம் –- ஸம்ஸார ஸாகரத்தை ,
நிஸ்தரந்தி -– கடக்கப் பாய்கிறார்கள் |

லகூபாயேந லப்தவ்யே:பலே மஹதி தேஹிநாம் |
குரூபாய த்வயாத் கிம்வா கர்த்தவ்யம்ஸ்யாந் முமுஷுபி: || என்று
சரமகுரு சரிதையிலே யருளிச் செய்தாறிறே |

1 ( லகூ பாயேநேதி )
தேஹிநாம் -– விரோதியான ப்ரக்ருதியோடு கூடி அதிட்டவழக்காயிருக்கிற சேதநவர்க்கத்திற்கு ,
மஹதி:பலே “ :பலமத உப பத்தே: “ என்று , எம்பெருமானாலேயே ஸித்திக்க வேண்டும்படியான
பெருமையை யுடையதாய் ஸகல புருஷார்த்த விலக்ஷணமான கைங்கர்ய ரூப :பலமானது ,
லகூபாயேந –- ( க்ருப மாத்ர ப்ரபந்நரான ஸதாசார்யரு டைய வபிமாநமாகிற ) ஸுலபோபாயத்தாலே ;
லப்த வ்யேஸதி –- அடைய த்தக்கதாயிருக்க ,
முமுஷுபி: — ப்ரக்ருதியினுடைய தோஷங்களையறிந்து ப்ராப்ய ருசி தலை யெடுத்திருக்குமதிகாரிகளாலே ;
குரூபாயத்வயாத் -– ஸ்வரூப விரோத பயத்தாலும் , ஈஶ்வர ஸ்வாதந்த்ர்ய பயத்தாலும் ,
துர்ல பங்களான பக்தி ப்ரபத்திகளால் ;
கர்த்தவ்யம் -– செய்யவேண்டுமது ;
கிம்வாஸ்யாத் -– என்னதானிருக்கும் |
ப்ரக்ருதி பரவசராகையாலே முமுஷுத்வமில்லாத சேதநர்களுக்கும் கூட , ஸதாசார்யாபிமாநத்தாலே பேறு லபிக்கத்தக்கதாயிருக்க ,
முமுஷுக்களாய் ஆசார்ய அபிமாநத்திலொதுங்கி யிருக்குமவர்களுக்குச் சொல்ல வேண்டா விறே ;
ஆகையாலே, இவர்களுக்கு பக்தி ப்ரபத்திகளால் கார்யமில்லை யென்றபடி |

ப்ராமாணிகாக்ரேசரரான பட்டரும் , “

பரம காருணிகச்ய பரமகுரோர் பகவத: ஸ்ரீமந் நாராயணஸ்ய புண்டரீக தளா மலாயதேக்ஷணமுக கமல விகாஸ

2 ஸ்ரீபராஶரபட்டார்ய ஸுக்தி |
( பரம காருணிகேத்யாதி )
பரமகாருணிகஸ்ய – ( “ ஈஶ்வரஶ்யச ஸௌஹார்த்தம் “ இத்யாதியில் படியே , ஆசார்ய ப்ராப்திக்கும் ப்ரதம ஹேது தானாகையாலே ) மேலான காருணிகனாய் ;
பரம குரோ: — “ லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் “ என்று குரு பரம்பராதியிலே தன்னை யநுஸந்திக்க வேண்டுகையாலே , மேலானவாசார்யனாய் ;
பகவத: — அகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைகதானனாய் ;
ஸ்ரீமந் நாராயணஸ்ய –
ஸ்ரீமத் – புருஷகார பூதையான பெரிய பிராட்டியாரோடே நித்ய ஸம்யுக்தனாயிருக்கிற ,
நாராயணஸ்ய -– எம்பெருமானுடைய ;
புண்டரீக தளாமலாயதேக்ஷண முககமலவிகாஸ ஹேதுபூதம் ஹி -–
புண்டரீக தள – வெள்ளைத் தாமரை தளங்களைப் போன்றதாயும் ,
அமல — நிர்மலங்களாயும் ,
ஆயத – நீண்டதுகளாயு மிருக்கிற ,
ஈக்ஷண -– திருக்கண்களை யுடைத்தான ,
முக கமல — திருமுக மண்டலமாகிற செந்தாமரையினுடைய,
விகாஸ — மலர்கைக்கு ,
ஹேது பூதம் ஹி – காரணபூதமாகவேயன்றோ ?
பகவத் ராமாநுஜ சரணார விந்த சரணவரணம் —
பகவத் ராமாநுஜ “ ஸர்வ கல்யாண ஸம்பூர்ணம் , ஸர்வஜ்ஞாநோப ப்ரும்ஹிதம் ;
ஆசார்யமாஶ்ர யேத் “ என்கிற ஸர்வ கல்யாண குணங்களையும் ,
பரிபூர்ண ஜ்ஞாநத்தையும் உடையரான எம்பெருமானாருடைய ,
சரணாரவிந்த -– திருவடித் தாமரைகளிலே பண்ணும் ,
சரணவரணம் – சரணாகதி தானிருப்பது ; என்கை |
(இத்தால் எம்பெருமானார் திருவடிகளில் ஸமாஶ்ரயணமே ஸ்ரீமந்நாராயணனுடைய முக்கோல்லாஸ ஹேதுபூதமென்னதாயிற்று )
தஸ்மாத் -– அந்த ஹேதுவினாலே ,
ததேவ – அந்த எம்பெருமானாருடைய திருவடிகளிலே பண்ணும் ப்ரபத்தி தானே ,
அஸ்மாகம் – அஸ்மதாதிக ளுக்கு ,
உஜ்ஜீவனாய – உஜ்ஜீவிக்கைக்கு ,
அலமிதி -– போறுமென்று ,
அஸ்மத் தாதபாதா: — பூஜ்யரான நம் திருத்தகப்பனார் , மேநிறே – திருவுள்ளத்திலறுதியிட்டாரென்கை |

ஹேது பூதம் ஹி பகவத் ராமாநுஜ சரணாரவிந்த சரண வரணம் |
தஸ்மாத் ததேவாஸ்மாக முஜ்ஜீவனாயாலமித்யஸ்மத்தாத பாதாமேனிறே “ என்று
ஆழ்வானுடைய ஸித்தாந்தமாக குருப்ரபாவதீபி கையிலே யருளிச்செய்தார் |

1 லக்ஷ்மணாசார்ய குருபாத ஸேவிநாம் ரக்ஷணாய …..கலு தத் க்ருபா பரம் | யத் க்ஷணேன நிஜ முக்யமாநி தாம் வ்யுத்ஷிணோதி ……..

1 ( லக்ஷ்மணார்யேதி ) –
இந்த ஶ்லோகம் தான் எழுபத்துநாலு ஸிம்ஹா ஸநஸ்தர்களிலே முதலியாண்டான் போல்வாரான ஆசார்யர் அருளிச் செய்ததாயிருக்கும் |
இதில் எம்பெருமானார் ஸ்வாஶ்ரிதர்க்கு “ வித்யா மதோ , தந மத ஸ்ததைவாபிஜநோ மத: “ என்கிற முக்குறும்பை
ஸவாஸ நமாக நிரஸித்தபடியைச் சொல்லி , எவ்வழியாலுமவரே ரக்ஷகரென்று சொல்லுகிறது |
தத் க்ருபா , பரம் என்கிற பதங்களால் அவருடைய க்ரு பையே அவரை ஆஶ்ரயித்தவர்களுக்கு ரக்ஷகமென்றும் ,
கலு , என்று இவ்வர்த்தத்தினுடைய ப்ரஸித்தியும் , சொல்லுகையாலே ,
ஆசார்ய ப்ராப்திக்கு பூர்வ பாவியான அத்வேஷாதிகள் மாத்ரமே பகவத் க்ருபையாலே உண்டாகிற தத்தனைப் போக்கி ,
ஆசார்ய ப்ராப்திக்குப் பின்பு “ செயல் நன்றாக திருத்துகை “ ஆசார்ய க்ருத்தமென்னதாயித்து ;
“ ஆசார்யன் சிச்ச னாருயிரைப் பேணுமவன் “ என்னக் கடவதிறே |
உடையவர் தாம் ப்ரமா ணங்களைக் கொண்டு ஸ்வாஶ்ரிதரைத் தாமே திருத்துகை யன்றிக்கே,
திருக்கோட்டியூர் நம்பியைக்கொண்டும் , முதலியாண்டானுக்கு ஸ்வரூப சிக்ஷஐ ப்ரஸாதிப்பித்தருளினார் ;
இவரைப் பின்சென்றவாழ்வானும் பிள்ளை பிள்ளையாழ்வானுக்கு ஸ்வரூப சிஷை ப்ரஸாதித்தருளினார் |

“ திருத்தித் திருமகள் கேள்வனுக்காக்கு “ மதிலும் காட்டில் ,
ததீயர்க்கும் அவர்கள் மிகவும் விரும்புகிற வாசார்யனுக்கும் இஷ்ட விநியோகார்ஹ னாம்படி செய்கை மிகவும் உத்தேஶ்யம் ;
ஸர்வேஶ்வரன் தானும் அடியார்க்காள்படுத்துமிறே |
இனி இவர்களைத் திருத்தி முக்குறும்பை ஸவாஸநமாக நிரஸித்தாலொழிய ,
அந்த உத்தேஸ்யம் தலைக் கட்டப் போகாது ; அதுவும் ஈஶ்வரனே செய்தா லோவென்னில் ?
அவன்தான் ஸ்வாதந்த்ர்யத்தாலே “ ந க்ஷமாமி “ என்று கொண்டு
“ அவமான க்ரியா தேஷாம் ஸம்ஹரத்யகிலம் ஜகத் “ என்று , சீறுகையாலே
இவர்களைத் திருத்த விசையமாட்டான் ;
இப்படிப்பட்ட வெம்பெருமான் திருவுள்ள மறிந்து இவர்களை யவன் கையில் காட்டிக் கொடுக்கில் என்படுமோ என்று வயிறெரிந்து
க்ருபா மாத்ர ப்ரஸந்நராய் இவர்களை வரிந்து திருத்துகையா லிறே
“ லக்ஷ்மணார்ய குருபாத ஸேவிநாம் ரக்ஷணாயகலு தத்க்ருபா பரம் “ என்றருளிச் செய்ததும் |
யத் – எந்த காரணத்தினாலே
( எம்பெருமானார் நிர்ஹேதுகமான தம்முடைய ஆஶ்ரித வாத்ஸல்யமே காரணமாக என்கை)
நிஜ முக்யமாநிதாம் –
நிஜ – தம்மைப் பற்றின ஆசார்யர்களிடத்தில் உண்டாகக் கடவதான ,
முக்யமாநி தாம் – முக்குறும்பை ,
ஃபலரீதி தத்வத: —
ஃபல — இவை இருப்பதாலும் , இவற்றை நிரஸிப்பதாலும் வரக் கடஃ:பலத் தினுடைய ,
ரீதி தத்வத: — ப்ரகார யாதாத்ம்யத்தாலே ,
( அதாவது ப்ரகா ரங்களை உள்ளபடிக் காட்டுகையாலே என்கை) |
க்ஷணேன – ஒரு நிமிஷத்திலே ஏக தேசமான அல்ப காலத்திலேயே ,
வ்யுத்ஷிணோதி –- ஸவாஸநமாக எடுத்துப் பொகடுகிறாரோ ,
தத் —அந்தக் காரணத்தினாலே ,
( யத்த தோர் நித்ய ஸம்பந்த: என்கிற ந்யாயத்தாலே இங்கு “தத்” சப்தம் வருகிறது )
லக்ஷ்மணார்ய குருபாத ஸேவிநாம் – லக்ஷ்மணார்ய குரு -– “ ஆசார்யோ வேதஸம்பந்ந:” இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
ஸர்வ லக்ஷண ஸம்பந்நராய் ஆஶ்ரிதர்க்கு அஜ்ஞாந நிவர்த்தகராயக் கொண்டு ,
உத்தாரக ஆசார்ய ரான எம்பெருமானாருடைய ,
பாதஸேவிநாம் – ( “ இராமாநுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ “ என்கிறபடியே , பரம ப்ராப்யமான )
திருவடி களை உபாயமாகப் பற்றினவர்களுடைய ,
ரக்ஷணாய – ரக்ஷணத்தின் பொருட்டு ,
தத் க்ருபா பரம் கலு – அந்த வெம்பெருமானாருடைய க்ருபை தானே யன்றோ ? அமைந்திருக்கிறது |
இப்படி ஸ்வரூப சோதநமே பிடித்து :பலரீதி த்த்வத: “ என்று பூர்வர்கள் சொல்லும் முக்தகமிறே |

1 “ ஸ்வ வ்யாபாரேண ஸாத்யா பஜநகதிரியம் ஸ்வாநுரூபத்வஹா நாத்யாஜ்யா பூஜ்யைஹி ப்ரபந்நைச் சரண வரணிதா தேஶிகைர் நாப்யுபாத்தா |
கிம்த்வாசார்யாபிமாநாத் பரமபதமஹோ லப்யதே நாந்யதோ , ந தஸ்மாத் ராமாநுஜாங்க்ரி த்விதீயமநுபமம் ஸாதநம் பாவயாம: “
என்று
பக்தி ப்ரபத்திகளை த்யாஜ்ய கோடியிலேயாக்கி தத் க்ருபையினாலேயாயிருக்க ,
பேற்றுக்கவர் திருவடிகளே ஸாதநமென்பது , கிம் புநர் ந்யாய ஸித்தமிறே யென்கை |

1 நாயனாராச்சாம்பிள்ளை யருளிச்செய்த ஸ்ரீஸூக்தி | ( ஸ்வ வ்யாபாரே ணேதி ) –
ஸ்வ வ்யாபாரேண -– ஸ்வப்ரயத்நத்தாலே
( இங்குச் சொல்ல வேண்டிய வர்த்த விஶேஷங்களெல்லாம் , இதற்கு முன்னமே சொல்லப் பட்டிருக்கிறது ) ;
ஸாத்யா – ஸாதிக்கப்படுவதான ,
இயம் பஜநகதி: — இந்த பக்த்யுபாயமானது
( இவ்விடத்தில் ஸமீப வர்த்தியாநத்தைக் காட்டுகிற இயம் என்கிற பதம் ஸ்ரீபாஷ்யத்திலறுதியிட்ட
இந்த பக்த்யுபாயத்தின் ப்ராதாந்யம் இவர் திருவுள்ளத்திலோடுகின்ற படியைக் காட்டுகிறது )
ஸ்வாநு ரூபத்வ ஹாநாத் —
ஸ்வ – பரதந்த்ரனான தன்னுடைய ஸ்வரூபத்துக்கு ,
அநுரூபத்வ -– அநுகுணமாயிருக்கும்படியை ,
ஹாநாத் -– விட்டிருக்கை யாலே ,
பூஜ்யை: — பூஜ்யராயிருக்கிற ,
ப்ரபந்நை: — ஜ்ஞாநாதிக்யத்தாலே , ப்ரபந்நரான நாத யாமுந யதிவராதிகளாலே ,
த்யாஜ்யா -– த்யஜிக்கத் தக்க தாய்விட்டது ; ( அப்படியே )
தேஶிகை: — நம்முடைய உஜ்ஜீவநத்துக்கு கட வரான அந்த ஆசார்யர்களாலே ,
சரணவரணிதாபி -– பகவச் சரணாரவிந்த சரணாகதனாயிருக்கும்படியும் ,
ஸ்வாநுரூபத்வ ஹாநாத் –
ஸ்வ -– ஆசார்ய பரதந்த்ரனாயிருக்கிற தன்னுடைய ஸ்வரூபத்துக்கு ,
அநுரூபத்வ -– அநு குணமாயிருக்கும் படியை ,
ஹாநாத் -– விட்டிருக்கையாலே ,
நோபாத்தா –- அங்கீகரிக்கப்படவில்லை |
அதவா -–
பயாபயங்களிரண்டும் மாறி மாறி நடக்கும் ப்ரஶக்தியில்லாததாக அங்கீகரிக்கப்படவில்லையென்னுமாம் |
கிந்து -– பின்னையோவென்னில் ,
ஆசார்யாபிமாநாத் -– “ ஆசிநோதிஹி ஶாஸ்த்ரார்த்தான் “ இத்யாதி ப்ரகாரங்களாலே
பரிபூர்ணனான ஸதாசார்ய னுடைய வபிமாநத்தாலே |
பரமபதம் – நலமந்தமில்லதோர் நாடானது ,
லப்யதே –- அடையப் படுகிறது ; ( என்றும் )
அந்யத: — பகவத் பாரதந்த்ர்யத்துக்கு விரோதியான பக்த்யுபாயமென்ன
ஆசார்ய பாரதந்த்ர்யத்துக்கு விரோதியான பகவத் சரணாரவிந்த சரணாகதியென்ன ,
இவைகளாலே , ந லப்யதே – அடையப் படுகிறதில்லை ;
ந சேஜ்யயா “ )
பக்த்யா த்வநந்யயா ஸக்ய: ( இத்யாதி பரஸ்ஸதங்களான ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடியே |
“ உபய பரிகர்மித ஸ்வாந் தஸ்ய “
ஏவம் நியமயுக் தஸ்ய ; இத்யாதி ஜ்ஞாநாநுஷ்டான பரிபூர்ணனான வதிகாரியினாலே அடையப்படுமதான பரமபதமானது ,
ஆசார்யாபிமான ரூப ஸுலபோபாயத்தாலே லபிக்கப்படுகிறதென்கிறது ) ஆஶ்சர்யமென்னபடி |
தஸ்மாத் –- இப்படி ஆசார்யாபிமாநமே உத்தாரக மாகையாலே ,
ந: — அஸ்மதாதிகளுக்கு
இராமாநுஜாங்க்ரித்விதயம் — இராமாநுஜ –- ( உபாயாத்மகமானவாசார்யத்வ முள்ள ) எம்பெருமானா ருடைய ,
அங்க்ரித்விதயம் -– திருவடிகளிரண்டுமே,
அநுபமம் – இதர நிரபேக்ஷமாகையாலே நிகரின்றிக்கே இருக்கிற ,
ஸாதநம் -– உபாயமாக ,
பாவயாம: — அத்யவஸிக்கக்கடவோம் | 1
எம்பெருமானாருடைய வபிமாநத்தாலே பேறு தப்பாதென்று , தத் சரணார விந்தங்களை
யுபாயமாக வறுதியிட்டார் இறே நாயனாராச்சாம் பிள்ளையும் |

இப்படி நம் பூர்வ ஆசார்யார்களனைவரும் ப்ரமாண புரஸ் ஸரமாக வெம்பெருமானாரிடத்திலே யுத்தாரகக்வத்தை யறுதி யிட்டு ,
அவர் அபிமாநத்திலே யொதுங்கி “ தேவுமற்றறியேன் “ என்று ததேகநிஷ்டராய் போந்தார்களிறே |
ஆகையால் எம்பெருமானாரோடுண்டான ஸம்பந்தத்துக் கிசையாதே
“ தொண்டுக்கே கோலம் பூண்டு” என்கிறபடியே குழச்சியிடுவதும் , கும்பிடுவதுமாய் கொண்டு
பரப்ரா மகராய்த் திரியும் துர்மாநிகளான கள்ளக் கழணிமிண்டர்க்கு ,
யாவ தாத்மபாவி யீஶ்வரன் பல:ப்ரதனன்றிக்கே, ஸம்ஸார ஸாகரத்திலே யழுந்தி போரும்படி யிட்டு வைப்பன் |
இவ்வர்த்தத்தை , இராமாநுசன் மன்னு மாமலர்த்தாள் பொருந்தா நிலையுடை புன்மையினோர்க் கென்றும்
நன்மை செய்யா பெருந்தேவரைப் பரவும் பெரியோர் “
என்று ஸ்பஷ்டமாக வருளிச் செய்தார் இறே |

1 “ யஸ் ஸ்ரீலக்ஷ்மண யோகி வர்ய சரண த்வந்த்வாஶ்ரயீ நா பவத் தஸ்யாத்யந்த தயாதி ஸத் குணநிதிர் நாராயண ஸ்ரீபதி: |  நஞ்ஜீயரருளிச் செய்த ஸ்ரீஸூக்தி

( யஸ் ஸ்ரீலக்ஷ்மணேதி ) –
ய: — எந்த சேதநந் ,
ஸ்ரீலக்ஷ்மணயோகிவர்ய , சரண த்வந்த்வாஶ்ரயீ — ஸ்ரீ – ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயை யுடையராய் , லக்ஷ்மண யோகி வர்ய – சேஷாவதாரமென்று ஸூசிக்குமதான
லக்ஷ்மண னென்கிற திருநாமத்தையுடைய யோகிஶ்ரேஷ்டருடைய
( இளைய பெரு மாள் “ ந தேவ லோகாக்ரமணம் “ ) என்னிருந்தாப்போலே இவரும்
“ காகுத்தன் கடியார் பொழிலரங்கத் தம்மானை “ யல்ல தறியாரிரே ) |
சரணத்வந்த்வாஶ்ரயீ -– ஒன்றைக்காட்டிலுமொன்று போக்யமாய் ஸேர்த்தி யழகையுடைய இரண்டு திருவடிகளுமே
யுபாயோபேயத்வேந தாதும் முக்தி மனாதரோபவ ப்ருஹத் வாராஸயே ஸந்ததம் நிஷேப்யைவ ஹ்ருதாபிநோ
கணயதி ப்ராக் சித்த கர்மேரித: “ என்று நஞ்ஜீயர் இவ் வர்த்தத்தை யருளிச் செய்தார் ;

அதாவது
எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்த ரஹிதநாய் நான் வைஷ்ணவனென்று யாதொருத்தன்
ப்ரஸித்தி தோற்றவிருக்கிறான் , அவனுக்கு நிரவதிக வாத்ஸல்ய யுக்தனான ஸர்வேஶ்வரன் ,
புருஷகார பூதையான பெரிய பிராட்டியாரருகிலிருந்தாலும் தயாதி குண பரிபூர்ணனாயிருந் தாலும் ,
மோக்ஷபலம் கொடாமல் அநாதரித்து , யாவதாத்மபாவி ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே தள்ளியிட்டு வைத்து ,
அவன் தான் தன்னுடைய அநாதி சித்தமான கர்மத்துக்கு பரவசனாகி , இப்படி அநர்த்தப்பட்டானென்று கொண்டு ,
என் செய்தான் , என் பட்டான், என்று , திருவுள்ளத்தாலும் எண்ணானென்னபடி —
இப்படி பரம காருணிகராய் , பரமோத்தாரகரான வெம்பெருமானர் அபிமாநத்திலே யொதுங்கி வர்த்திக்கும் வைஷ்ணவாதிகாரி , த
னக்கு ஸஹவாஸ யோக்யரும் ஸதாநுபவ யோக்யரும் , ஸத்கார யோக்யரும் , உண்டாம்படி தேடிக் கொண்டிருக்க வேணும் ;
இல்லை யாகில் ஸ்வ ஸ்வரூப ப்ரத்யுதிவந்து அத:பதித்து விடுவன் ,
இதில் , ஸஹவாஸ யோக்யராகிறார் , மரு வற்ற சரம பர்வ நிஷ்டராய் , எம்பெருமானாருடைய பற்றினவனாக ,
ந பவத் — ஆகவில்லையோ ,
தஸ்ய — அந்த சேதநநுக்கு ,
( இந்த பதத்துக்கு தாதும் முக்திமநாதர: என்கிற பதங்களோடு ஸம்பந்தம் )
நாராயண: — நிரவதிக வாத்ஸல்யாதி கல்யாண குணயுக்தனான ஸர்வேஶ்வரன் ,
ஸ்ரீபதி: — புருஷகாரபூதையான பிராட்டி சொல்வழி வருமவனாயிருந்தாலும்
அத்யந்த தயாதி ஸத்குணநிதி: — நிரவதிக க்ருபாதி குண பரிபூர்ணனாயிருந்தாலும் ,
முக்திம் -– மோக்ஷத்தை ,
தாதும் -– கொடுக்கைக்கு ,
அநாதரஸ் ஸந் – ஆதரமில்லாதவனாய்க் கொண்டு( ராமாநுஜ பதாஶ்ரயனாகாத வந்த சேதனனை ) ,
ப்ருஹத்வாராஸயே -– ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே ,
நிஷேப்யைவ — “ ஷிபாமி “ என்கிற படியே மறுவலிடாதபடி தள்ளி விட்டு ,
( அயம் ) ப்ராக் ஸித்தி கர்மேரித: — ( இதி ) ( இவன் தான் ) தன்னுடைய அநாதி சித்தமான
கர்மத்தாலே ப்ரேரிதனாய் ( இப்படி அதோ கதி யடைந்தானென்று கொண்டு ) ,
ஹ்ருதாபி – ஒருக்காலும் மனஸ்ஸாலும் கூட ,
நோ கணயதி – ( இவன் என்பட்டான் என் செய்தான் என்று ) எண்ணமாட்டானென்கை |

# ( குண:ப்ரதிபாதகமான ) திவ்யஸூக்திகளை ப்ரஸங்கிக்கில் ,
இவையும் சில ஸூக்திகளிருந்தபடியே , பாவியேன் , இவற்றை யநாதி காலமிழந்து கெட்டேன் , என்று நெஞ்சுருகி
யீடுபட்டிருக்கு மவர்கள் ; ஸதாநுபவ யோக்யராகிறார் ,
எம்பெருமானார் திருநாம த்தை யுச்சரியா விடில் நாக்கு வற்றுமென்று ததேகாநுஸந்தான தத் பரராய் ,
ததுக்தி ஶ்ரவணத்தில் ப்ரணவராய் , ஸர்வநேத்ராங்க விக்ரி யையை யுடையவராய் ,
தத் விஷயத்தில் ப்ரவணராயிருக்குமவர்கள்; ஸத்காரயோக்யராகிறார் ,
தேஹயாத்ரையில் உபேஷை பிறந்து , ஆத்ம யாத்ரையில் மிக்க வபிநிவேஶத்தை யுடையராய் ,
ததீயாபிமா நத்திலே யொதுங்கி எம்பெருமானாருடைய திருநாமாநுஸந்தாநத் தாலே மாதுகரங்கொண்டு , தேஹதாரணம் பண்ணி வர்த்திக்குமவர்கள் |
எம்பெருமானாருடைய கல்யாண குணங்களிலே மக்நாஶயரல் லாதாரோடு ஸஹவாஸம் , சரம பர்வாதிகாரிக்கு அவத்யமாயிருக்கும் ;
இராமாநுசன் தன் பிறங்கிய சீர் சாரா மனிசரைச் சேரே னெனக்கென்ன தாழ்வினியே “, என்றும் , அருளிச்செய்து வைத்தார் இறே |
இவ் வதிகாரிக்கு க்ஷணமுமிடைவிடாமல் காலஷேபத்துக்கு விஷயமாகிறது

# ( குணப்ரதிபாதகமாக ) என்கிற குண்டலித க்ரந்தமில்லாவிடிலும் , அழகி யது .
1 ( த்வத் ப்ரபந்த பரிஶீலநைரிதி ) – இதுதான் எம்பெருமானார் விஷயமான ப்ரார்தநா பஞ்சகத்தில் ஶ்லோகமாயிருக்கும் .
இதில் எம்பெருமானாராலே ப்ரதிபாதிக்கப்பட்ட ஸ்ரீபாஷ்யாதி வேதாந்த க்ரந்தங்களுடைய பரிசீலநத்தால் கால யாபநம் பெறவேண்டுமென்று ப்ரார்த்திக்கிறது . “
பராங்குச முனீந்த்ராதி “ என்கிற ஶ்லோகத்திலே அருளிச் செயல்களில் ருசியை ப்ரார்த்திக்கிறவர்
அதற்கு முன் ஸ்ரீபாஷ்யாதி பரிசீலநத்தை ப்ரார்த்திப்பானெ னென்னில் ? —
“ 1 த்வத் ப்ரபந்த பரிஶீலநை: காலஷேபோஸ்து-என்கிறபடியே
தத் ப்ரதிபாதிதமான வேதாந்த க்ரந்தங்களும் , பகவத்  குணாநுபவரூபாதி திவ்ய ஸூக்திகளும் ;
திவ்யஸூக்திகளாவன –- ஆழ்வார்களுடைய வருளிச்செயல்களும் , திருப்பாவையும்
பூர்வா சார்யர்களருளிச் செய்த ரஹஸ்யங்களும் .
இனி யிந்த சரமாகாதிகாரிக்கு நாலு நிலையுண்டு , அதாவது ,
ஸ்வரூப ஜ்ஞாநமென்றும் ,
ஸ்வரூப நிஷ்டையென்றும் ,
ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநமென்றும் ,
ஸ்வரூப யாதாத்ம்ய நிஷ்டையென்றும் நாலுவகையாயிருக்கும் ;

இவற்றில் ஸ்வரூபஜ்ஞாநமாவது-
பகவத் பரதந்த்ரமாயிருக்கிற வசா தாரணாகாரத்தை யெவ்வழியாலும் ஸத்தை குலையாமல் நின்று ணர்ந்து ,
அதுதான் ததீயபர்யந்தமாகாவிடில் குலையுமாகையாலே
யெம்பெருமானாருக்கும் ததீயருக்கும் , அத்யந்த பரதந்த்ரமா யிருக்கு மென்றறுதி யிட்டு ,
ததேக நிஷ்டராயிருக்கு மிருப்பை யுள்ளபடியறிகை

ஸ்வரூபநிஷ்டையாவது , இஷ்ட விநியோகார்ஹ ஸ்வரூபமான-Two lines of handwritten Telugu manuscript–எழுதியது புரியவில்லை

“ மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் “ என்கிறவிடத்தில் ஸ்ரீபாஷ்யத்தை யருளிச் செயல்களுக்குக் காவலாகச் சொல்லுகையாலே .
இனி , இந்த ஶ்லோகத்தில் “ ஆமோக்ஷம் லக்ஷ்மணார்ய “ இத்யாதி பதங்களுமிருக்கையாலே , அவைகளையும் சேர்த்துக் கொண்டு அர்த்தமெழுதப்படுகிறது .
ஹே லக்ஷ்மணார்ய – அபியுக்தாக்ரேசரரான வெம்பெருமானாரே ,
ஸத்பி: — தேவரீரபிமாநத்திலே யொதுங்கியிருக்கும் ஸத்துக்களோடே ,
ஸஹவாஸம் — ஸஹவாஸத்தை ,
உபேயுஷாம் – அடைந்திருக்கிற ,
ந: — அடியோங்க ளுக்கு ,
த்வத் ப்ரபந்தபரிசீலனை –
த்வத் – தேவரீராலே ப்ரதிபாதிக்கப்பட்ட ,
ப்ரபந்த -– ஸ்ரீபாஷ்யாதி வேதாந்த க்ரந்தங்களினுடைய ,
பரிசீலனை –- பரிசீல நத்தாலே
( பரி என்கிற உபஸர்க்கத்தோடு கூடின இந்த பதம் அந்த க்ரந்தங்களி லறுதியிடப்பட்ட அர்த்தங்களில்
ஓன்றும் நழுவாதபடி அடிக்கடி ஸேவிக்கும்படியைச் சொல்லுகிறது ) ,
காலஷேப: — கால க்ஷேபமாக ,
அஸ்து –- ஆகக் கடவது ;
இப்படியெத்தனை நாள் வரையென்னில் ?
ஆமோக்ஷம் -– மோக்ஷமுண்டாகிற வரையிலும் . ( ப்ரக்ருதிஸம்பந்தமிருக் கிறவரையிலும் )
மந்யதா ப்ரதிபத்யாதிகள் துர்ஜயமாகையாலும் ,
அதுகளை ஸ்ரீபாஷ்யாதி ஸூக்திகளாலே பல படியாக நிரஸித்திருக்கையாலும் ,
மோக்ஷமுண்டாகிற வரையில் , இன்னமொரு ஜந்மமுண்டாகிலும் அப்போதும் இவற்றினுடைய பரிஶீலநமே
காலஷேபமாயிருக்க வேணுமென்று ப்ரார்த்திக்கிறார் ) .

ததீயஶேஷத்வம் ;
1 “ அகிஞ்சித் காரஸ்ய ஶேஷத்வாநுபபத்தி: “ என்கிறபடியே

1 ( அகிஞ்சித்கரஸ்யேதி ) —-
அகிஞ்சித் கரஸ்ய – கிஞ்சித்கரியாதவனுக்கு ,
ஶேஷத்வாநுபபத்தி: — ஶேஷத்வத்தினுடைய வுபபத்தியில்லை என்கை

கிஞ்சித்காரமில்லாதபோது அந்த ஶேஷத்வம் நிலை நில்லாமையாலே ,
தத் சித்யர்த்தமாக , தத் ப்ரதிஸம்பந்திகளாய் பரம ஶேஷிகளான எம்பெருமானாரபிமான நிஷ்டர் விஷயத்திலும் ,
த்ரிவித கரணத்தாலும் , கிஞ்சித்கரித்துப்போரும் நிலையிலேயொரு படப் பண்ணுகை .

ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநமானது
எம்பெருமானா ருடைய வபிமாநத்திலொதுங்கி , தத் விஷய கிஞ்சித்காரத்தாலே நிலையையுடைய ஸ்ரீவைஷ்ணவர்கள் பக்கல் ,
அவ்யபிசாரிணியான பக்தியைப் பண்ணி , தத் விஷய விஷயீகாரத்திலே ஸ்வ ஸ்வரூபத்தைச் சொறுகியிட்டு ,
இந்த ஸ்வரூபம் அத்தலைக்கே யுறுப்பாய் விநியோகப்படவேணுமென்று
இவ்வர்த்தத்தினுடைய நித்ய ப்ரார்த் தனையிலே நிலையுடையனா யிருக்குமிருப்பை யுள்ளபடியறிகை ; “
உன் தொண்டர்கட்கே யன்புற்றிருக்கும்படி யென்னையாக்கியங்காட் படுத்தே “ என்று , அமுதனாரும் இவ்வர்த்தத்தை யருளிச்செய்தார் இறே

ஸ்வரூப யாதாத்ம்ய நிஷ்டையாவது ,
சரம பர்வமான எம்பெருமானாருடைய முக விகாஸத்துக் குடலாக ததீய விஷய கிஞ்சித்காரத் தாலும்,
தன் முக விகாஸ ஹேதுவான தத் சேஷ விஷய கிஞ்சித்காரத் தாலும்,
ஸ்வரூபத்தை விநியோகார்ஹமாம்படி , தத்தத் சந்தாநு வர்த்தன பூர்வகமாக
அஶேஷ ஶேஷ வ்ருத்தியிலுமந்வயிப்பித்து , அதுதான் தத் தத் விஷய பூதரான ஸ்ரீவைஷ்ணவர்களுடைய
பரம்பரா பர்யந்தமாக த்ரிவித கரணத்தாலும் பர்யவஸிக்கும்படி பண்ணி ,
தத் விஷய கிஞ்சித்காராபாவத்தில் ஆத்ம ஸத்தையில்லை யென்னும் படியான நிலை பிறந்து ததேகநிஷ்டையிலே தத்பரனாயிருக்கை .
இனி இவ்வர்த்த நிஷ்டைதான் ஓரொருவர்க்கு சரம ஶேஷியான. வெம்பெருமானாருடைய கடாக்ஷ விசேஷத்தாலே
லபிக்குமதொழிய மற்றபடி துர்லபமாயிற்று ;
ஆகையாலேயிறே அந்த சந்தத்தில் சரம சேஷியான வெம்பெருமானார் விஷயத்தில் ப்ராவண்யம்
ஸார்வத்ரி கமன்றிக்கே , தேடிப் பிடிக்க வேண்டும்படி க்வாசித்க மாயிருக்கிறது .

“ அஸ்மிந்நர்தே விஶ்வாஸஸ் ஸர்வேஷாம் ந ஜநிஷ்யதி | மத் கடாஷோ பவேத் யஸ்மிந் மய்யேவ ப்ரவணோஹிய: |
தஸ்ய தஸ்ய ஹ்ருதிஸ் தோயம் பவிஷ்யதி ந ஶம்ஶய
: “ என்று ,
எம்பெருமான் தானே சரம பர்வ விஷயமான ப்ரதிபத்தி , தத் கடாக்ஷமடியாக வுண்டாகவேணுமென்று சொல்லிவைத்தானிறே .
உஜ்ஜீவநேச்சுவான வதிகாரி , தனக்கு , ப்ரதமத்திலே சரம பர்வமான வெம்பெருமானார் விஷயத்தில் ப்ராவண்யம் விளைகைக் குடலாக ,
ததபிமாந நிஷ்டரான ஸ்ரீவைஷ்ணவர்கள் பக்கல் கரண த்ரயத்தாலுமநுவர்த்தநம் பண்ணி , ததவசர ப்ரதீக்ஷனாய் ,
தனக்கவர்கள் ஸ்வரூப ஸோதநம் கொடுத்து, தன்னை விரும்பி மேல் விழுந்து , தத் குண வைபவத்தை யுபதேசிக்க
சுக்கான் பாறை போலே கடின ஹ்ருதயனன்றிக்கே நெஞ்சிரக்கமுடை யனாய்ச் செவிதாழ்த்து ,
கண்ணும் கண்ணீருமா யிருக்கும் படியான பரிபாக தசை பிறந்தால் ,சரமசேஷி கடாக்ஷம் பிறந்து
தடையின்றி யிலே யிவன் பக்கல் ப்ரவஹிக்கும் ;
பின்பு , தத் ஸம்பந்தம் அபிச் சின்ன ஸ்ரோதோ ரூபேண நடந்து செல்லுமிறே .
இப்படிப்பட்ட ஸம் பந்தத்தை இவனுக்கவர்களுணர்த்தும்போது , இவன் அறியாததாய் ,
எம்பெருமானாரும் ததீயருமறிந்ததாயிருப்பன சில கைமுதலிவன் பக்கலுண்டாயிருக்கவேணுமிறே ;
அவையாவன : —
நிரங்குஸ ஸ்வ தந்த்ரனாய் நிருபாதிக ஶேஷியான வெம்பெருமான் ,
இவ்வதிகாரியி னிடத்திலே நன்மையை நினைக்கும் படியான குளிர்ந்த திருவுள்ள த்தை யுடையனாக வேணும் ;
அதுக்கடியாக விவனுக்கு ஜ்ஞாதமாய் , அவனுக்கு ஜ்ஞாதமா யிருப்பதொரு யாத்ருச்சிக ஸூஹ்ருதம் பிறந்திருக்க வேணும் ;
இவன் பக்கலேதேனும் யாத்ருச்சிகமாக ஒரு நன்மை காணும் போது என்றோவென்று ,
எங்குமொக்க வ்யாப்தி பண்ணி யவ காசம் பார்த்திருக்கும் ஸர்வேஶ்வரனுடைய கடாக்ஷ விஶேஷம்
இவன் பக்கல் அபிமுகமாயிருக்க வேணும் ;
இப்படி யெம்பெருமானுடைய விஶேஷ கடாக்ஷ மபிமுகமான தசையிலே , பகவத் ப்ரஸங்கம் வந் தால் ,
சிவிட்கென்று த்வேஷம் கொண்டாடாமல் , அநுமதி ப்ரதனா யிருக்கவேணும் ;
இதடியாக பகவத் குண விக்ரஹ விபூதி தர்சநத்தில் முகம் மாறாடாமல ,அபிமுகனா யிருக்கும் படியான நினைவு பிறக்க வேணும் ;
இதுக்கெல்லாமடியாக இவை இத்தனையும் பெற்று , பகவத் ஸ்வரூப ரூப குண விபூதி விஷய ஜ்ஞாநத்தையுடையராய்
நிஷ் க்ருஷ்ட ஸத்வ குண நிஷ்டரான ஸ்ரீவைஷ்ணவர்களோடு ஸம்பந்தத்துக்கு பூர்வபாவியான ஸம்பாஷணமுண்டாக வேணும் ;
இவையித்த னையுமுண்டாகிலிறே , இவனுக்கு ஸதாசார்யராய் சரம பர்வனான வெம்பெருமானாரோடு ஸம்பந்தம் சித்திப்பது .
“ ஈஶ்வரஸ்ய ச ஸௌஹார்தம்( ஈஶ்வரஸ்ய ச ஸௌஹார்தமிதி ) –
இந்த ஶ்லோகந்தான் இப் ப்ரபந்தத்துக்கு நாயக ரத்னமாயிருக்கிறது .
ஆசார்ய ப்ராப்திக்காக வீஶ்வரன் பண்ணுகிற க்ருஷி பரம்பரைகளைச் சொல்லுகையாலே , சரமோபாயவைபவத்தைப் பற்றி இதுக்குமேல் வக்தவ்யாம்ஶமில்லை .
ஆஶ்ரயண ஸௌகர்ய ஆபாத கங்களான வாத்ஸல்ய , ஸ்வாமித்வ , ஸௌஶீல்ய , ஸௌலப்யங்களும்,
ஆஶ்ரித கார்ய ஆபாதகங்களான ஜ்ஞாந , ஶக்திகளுமாக , பகவத் ப்ராப்திக்கு ஆறு குணங்கள் போலே ,
ஆசார்ய ப்ராப்திக்கும் இந்த ஶ்லோகத்தில் சொல்லுகிற ஆறு ஹேதுக்களும் அக் குணங்களோடு
இவற்றுக்கு உண்டான ஸாதர்ம்யத்தை க்ரந்த விஸ்தரபயத்தாலே இவ்விடத்தில் ப்ரதி பாதிக்கிக்கிறிலோம் .
ஈஸ்வரஸ்ய –- ஸர்வ நியந்தாவான வெம்பெருமா னுடைய ஸௌஹார்தம் –
சேதந விஷயத்தில் நன்மையை நினைப்பிடு கைக்கீடான நல்ல ஹ்ருதயமும் ,
( இவ்விடத்தில் , ஈஸ்வரபதம் “ மத்த ஸ்ம்ருதிர் ஜ்ஞாநமபோஹ நம் ச “ என்று கர்மாநுகுணமாக
பந்தமோக்ஷங்க ளிரண்டுக்கும் கடவனாயிருக்கும்படியைக் காட்டுகிறது .
ச -– என்கிற , அவ்யவம் , இப்படிப்பட்டவனுக்கு ஸௌஹார்தம் ஜநிக்கை யறிதென்னும் படியான வதிஸங்கையைக் காட்டுகிறது ;
நிரங்குச ஸ்வாதந்த்ர்யத்தாலே இவனை ஸம்ஸார ஹேது வான நிக்ரஹ ஸக்திக்கிலக்காக்கி
“ ஷிபாமி “ என்று தள்ளி வைத்தமையை பார்த்தால் , இவனுக்கும் ஸௌஹார்த மென்பதுண்டோ என்று அதிசங்கை பண்ண வேண்டும்படியிறே யிருப்பது .
இனி ஸௌஹார்தம் என்கிற பதம் நிருபாதிக ஸ்நேஹத்தைக் காட்டு கிறது ;
பிதா புத்ர ஸம்பந்தத்தாலே ஸ்நேஹம் நிருபாதிகமாகவே இருக்கும் ;
“ ஷிபாமி “ என்பதும் ஹித பரனாய்ச் செய்தவித்தனை )
இப்படி நிருபாதிக ஸ்நேஹ யுக்தனான வீஶ்வரனிவனிடத்தில் நன்மை–
யத்ருச்சா ஸுஹ்ருதம் ததா | விஷ்ணோ: ப்ரஸாதாதத் வேஷ ஆபி முக்யம் ச ஸாத்விகை: ஸம்பாஷணம்
ஷடேதாநி ஹ்யாசார்ய ப்ராப்தி ஹேதவ: “ என்று இறே
இதுக்கு நினைக்கும்படியைச் சொல்லுகிறது மேல் ,
யத்ருச்சா ஸுஹ்ருதம் –
விடாயைத்தீர்த்தாய் , ஒதுங்க நிழலைக் கொடுத்தாய் ; என்றாப்போலே ஈஶ்வரனே உண்டாக்குகிற யாத்ருச்சிக ஸுஹ்ருதமும் ,
ததா –- ஸௌ ஹார்தத்தாலே யாத்ருச்சா ஸுஹ்ருதம் பிறந்தாப்போலே ,
விஷ்ணோ: ப்ரஸாதாத் -– ஸர்வ வ்யாபகனான , அவனுடைய அநுக்ரஹத்தாலே ,
அத்வேஷ அபிமுக்யம் ச –- பகவத் ப்ரஸங்கத்தில் த்வேஷமில்லாமை யென்ன
பகவத் குண விக்ரஹாதிகளி லாபிமுக்யமென்ன ,
விவை யிரண்டும் ,
ஸாத்விகை: ஸம்பாஷணம் – வேதங்கற்பான் போன்ற பரம ஸாத்வி கரோடு ஸம்பாஷணமும் , ஏதாநிஷட் -– ( ஆகிற ) இவையாறும் ,
ஆசார்ய ப்ராப்தி ஹேதவ: — ஆசார்ய ப்ராப்திக்குக் காரணங்களாகின்றன .
( இவற்றில் விஷ்ணோ: என்கிற பதம் ஸர்வத்ர வ்யாபித்து நிற்கும்படியைச் சொல்லுகையாலே
நிருபாதிக ஸ்நேஹ விஶிஷ்டனான வீஶ்வரன் சேதநனிடத்தில் யத்ருச்சா ஸுஹ்ருதம் கிடைக்கும்போது , என்றோ , என்று ,
அவசர ப்ரதீக்ஷனா யிருக்கும்படியைக் காட்டுகிறது .
ததா – என்கிற அவ்யயமும்,
ப்ரஸாதாத் என்கிற பஞ்சம்யந்த பதமும் நிருபாதிக ஸ்நேஹத்தாலே யத்ருச்சா ஸுஹ்ருதத்தைத் தேடிப் பிடித்தாப்போலே ,
க்ருபையாலே அத்வேஷாதிகள் உண்டாக்கினபடி சொல்லுகிறது .
அத்வேஷத்துக்கும் , ஆபிமுக்யத்துக்கும் ஹேது பகவத் ப்ரஸாதமே தவிர , யத்ருச்சா ஸுஹ்ரு தமன் னென்னுமிடம்
ஸ்ரீ வசந பூஷண திவ்ய ஶாஸ்த்ரத்திலே ஸுஸ்பஷ்டம் .

பகவத் ப்ரஸாதத்துக்கு யத்ருச்சாஸுஹ்ருதம் காரணமானதும் , வைஷம்ய நைர்க்ருண்யங்கள் வாராமைக்காக வாயிற்று ;
இல்லையாகில் ஸௌஹார் தத்தாலே பகவத் ப்ரஸாதமும்
அத்தாலே யத்ருச்சாஸுஹ்ருதமுமாக விப்படி பிறக்கவமையும் .
அத்வேஷ பதம் ஸம தமாதி ஸமஸ்தாத்ம குணங்களுக்கு முபலக்ஷணம் ;
“ ஆசார்ய லாபம் ஆத்மகுணத்தாலே “ என்கையாலே , அத்வேஷமும் ஆபிமுக்யமும் பகவத்க்ருபையாலே என்று சொல்லுகையாலே
“ ஆசார்யலாபம் பகவானாலே “ என்கிற சரம ஸூக்த் யர்த்தம் ஸூசிக்கப்படுகிறது .
ஸாத்விகைஸ் ஸம்பாஷணம் என்னுமிடத்தில் ஜந்ம வ்ருத்தாதிகளை யிட்டுச்சொல்லாதே ,
அவிஶேஷண ஸாத்விகை : என்கையாலும் ,
ஸம்பாஷணமாவது ஸம்யக் பாஷணமாகையாலும் ,
ஜந்ம வ்ருத்தாதி நிரூபணம் பண்ணாதே ஜ்ஞாந விஶேஷத்தையே பார்த்து
தொழுமினீர் கொடுமின் கொள்மின் “ என்கிற படியே ,
பரம ஸாத்விகரோடு கலந்து பலிமாறும்படியைச் சொல்லுகிறது .

இனி எம்பெருமானாருடைய வபிமாநத்திலே யொதுங்கி வர்த்திக்கும் சரமாதிகாரியான வைஷ்ணவனுக்கு வஸ்தவ்ய பூமியா வது ,
இராமாநுசனை தொழும் பெரியோரெழுந்திரைத்தாடுமிடம் அடியேனுக்கிருப்பிட “ மென்கையாலே ,
எம்பெருமானார் திருவடிக ளில் ப்ராவண்யமுடையவராய் , பெரியமதிப்பராய் ,
தத் ஸம்பந்த வைலக்ஷ்ண்யாபிவிருத்தி யுண்டாகப் பெற்றோமென்கிற ஹர்ஷ ப்ர ஹர்ஷத்தாலே ஸ ஸம்ப்ரந்ருத்தம் பண்ணி வர்த்திக்கிற ஸாத்விக ஸ்ரீவைஷ்ணவர்களெழுந்தருளி யிருக்கும் பரமபாவனமான தேசம் .

அஸ்மத் தேஶிக பகவத் ராமாநுஜ யோகி சரணயுகள ———ஷடேதாநி , என்கையாலே ,
ஆசார்ய ப்ராப்திக்கு இவை யித்தனையும் வேண்டுமென்றதாயித்து ;
அவையாவன ; கர்மமடியாக , “ ஷிபாமி “ என்கிற பகவந் நிக்ரஹம் மாறி , நிருபாதிக ஸ்நேஹம் தலையெடுக்க வேணும் ;
அதடியாக யத்ருச்சா ஸுஹ்ருதமென்பதொன்னுண்டாக வேணும் ;
ஸர்வ முக்தி ப்ரஸங்கம் வாராமைக்காக இந்த யத்ருச்சா ஸுஹ்ருதத்தை ஹேதுவாகக் கொண்டு பகவத் க்ருபை பிறக்க வேணும் .
அத்தாலே அத்வேஷமும் , அத்தைப் பின் செல்லுமதான ஆபிமுக்யம் உண்டாக வேணும் .
அதுக்கு மேலே , ஆசார்ய ஸமாஶ்ரயணத்துக்கு ப்ரதாந அபேஷிதமான பாகவதர்களோடு ஸம்பாஷணமாகிற ஸம்பந்த முண்டாக வேணும் .
ஆகவிவையத்தனையும் வேணுமென்றதாயித்து .
ஆசார்யப்ராப்திஹேதவ: என்கிறவிதில் ஆசார்ய பதம் “ ஆசினோதிஹி ஶாஸ்த்ரார்தான் “ இத்யாதியில் சொல்லுகிறபடியே ,
ஞானமனுட்டான மிவை நன்றாகவே வுடையனான னாசார்யனைச் சொல்லுகிறது .
ப்ராப்தி , யென்கையாலே யிப்படிப்பட்ட வாசார்யன் லபிக்குமது பெறாப்பேறாயிருக்கு மென்கிறது .
ஈஶ்வரனைப் பார்த்தால் ஸௌஹார்தம் பிறக்கையே அரிதென்னும்படி இருக்கையாலும் ,
சேதநனைப் பார்த்தால் அத்வேஷமுள்பட பகவத் க்ருபையாலே உண்டாக வேண்டும்படி அஸூயா ப்ரஸவ பூவா யிருக்கையாலும் ,
கர்மங்களைப் பார்த்தால் ஒவ்வொன்றும் ப்ரம்ம கல்ப நியுதாநுபவேப்யநாச்யமா யிருக்கையாலும் ,
அத்வேஷ பதத்தாலே ஸூசிக்கப்பட்ட மற்ற வாத்ம குணங்களைப் பார்த்தால் அவை நம்மாலும் , பிறராலும் பிறப்பித்துக்கொள்ள வொண்ணாததுகளா யிருக்கையாலும் ,
ஆசார்ய லாபம் பெறாப் பேறாகவே யிருக்கும் )

நாயனாராச்சாம்பிள்ளை அருளிச்செய்த ஸ்ரீஸூக்தி , ( அஸ்மத் தேஶிகேத்யாதி )
அஸ்மத் தேஶிக பகவத்ராமாநுஜ யோகிசரணயுகளமாஶ்ரிதாநாம் –
அஸ்மத் தேஶிக – நம்மு டைய உஜ்ஜீவநத்துக்கு கடவரான ,
பகவத்ராமாநுஜயோகி – பகவத் ஸர்வமாஸ்ரிதாநாம் ததபிமாநைகநிஷ்டாநாம்
தத் குண ஸந்தோஹாநுப வாநந்தாம்ருத ஸாகரதரங்க ஷீகர ஸம்பந்த ஶீதலஹ்ருதயாநாம் ததீய திவ்ய கல்யாண குணங்களையும் ,
பரிபூர்ணஜ்ஞாநத்தையுமுடையரான , ராமாநுஜயோகி — “
அவை தம்மொடும் வந்திருப்பிடம மாயனிராமாநுசன் மனத்து “ என்கிறபடியே ,
ஸர்வேஶ் வரன் ஸ விபூதிகனாய்க்கொண்டு தம்முடைய திருவுள்ளத்தில் வீற்றிருக் கும்படியான யோக நிஷ்டையையுடைய வெம்பெருமானாருடைய ,
( யோக ரஹஸ்ய க்ரமம் குருகைக் காவலப்ப னோடே தீர்த்தம் ப்ரஸாதித்ததாயிருந்தாலும்
“ யோகிநாமபி ஸர்வேஷாம் மத்கதேநாந்தராத்மனா |
ஶ்ரத்தாவான் பஜதே யோ மாம்ஸமே யுக்ததமோ மத: “ என்கிறபடியே
உணர்ந்த மெய்ஞ்ஞாநியர் யோகம் தொறும் “ என்கிற பாட்டில் சொன்ன நிரதிசய ப்ரேமத்தை
இவ்விடத்தில் யோக நிஷ்டையாக சொல்லுகிறது ;
இதுதான் “ நித்ய யுக்த ஏக பக்தி: “ என்றும் ,“
ஜ்ஞாநீத்வாத்மைவ “ என்றும்,
அவனே வாய் விட்டு புகழும்படியான பெருமையை யுடைத்தா யிருக்குமிறே ) .
சரண யுகளம் –- இரண்டு திருவடி களை ,
ஆஶ்ரிதானாம் -– உபாயோ பேயமென்று பற்றினவர்களாயும் ,
ததபிமானைகநிஷ்டாநாம் -– அந்த வெம்பெருமானாருடைய வபிமாநத்தி லேயே நிலைபெற்றவர்களாயும்,
தத்குண ஸந்தோஹாநுபவானந்தாம்ருத ஸாகர தரங்க ஷீகர ஸம்பந்த ஸீதல ஹ்ருதயாநாம் –
தத்குணஸந்தோஹ –
( “ செம்மை நூற்புலவர்க் கெண்ணருங் கீர்த்தி “ என்கிறபடியே
பேரளவு டையவர்களுக்கு பரிச்சேதிக்கவரிதான )
அவருடையதான கல்யாண குண ஸமூஹத்தினுடைய ,
அநுபவ – அநுபவத்தினாலுண்டான ,
ஆனந்த – ஆனந்தமாகிற ,
அம்ருத ஸாகர -– அம்ருதமய ஸமுத்திரத்தினுடைய ,
தரங்க -– அலைகளின் ,
ஷீகர – திவலைகளுடைய ,
ஸம்பந்த -– நித்ய ஸம்ஶ்லேஷத்தாலே ,
ஶீதல ஹ்ருதயாநாம் – குளிர்ந்த திரு வுள்ளத்தை யுடையவர்களாயும் ,
ததீய திவ்ய நாமோச்சாரண ஜநித ஹர்ஷ ப்ரகர்ஷ வஸாத ஸம்ப்ரம நர்த்தனம் குர்வதாம் –
ததீய – அந்த வெம்பெருமானா ருடையதான ,
திவ்ய நாம – ( “ சதுரா சதுரக்ஷரீ “ என்று அபியுக்தர் நெஞ்சுருகி கொண்டாடுமதான ) திருநாமத்தினுடைய ,
உச்சாரண – வாக் வ்யாபார மாத்ரத்தாலே ,
ஜநித -– உண்டான ,
ஹர்ஷ ப்ரகர்ஷ வஸாத் – ஆனந்தாதிஸயத்தாலே ,
ஸஸம்ப்ரமநர்த்தனம் குர்வதாம் –- ( ப்ரீதியுள்ள டங்காமையாலே ) பரவஸராய் ,
நர்த்தனம் குர்வதாம் – நர்த்தனம் செய்யு மவர்களாயும் ,
ஸாத்விகாக்ரேசராணாம் -– பரமஸாத்விகளில் உத்க்ருஷ்ட தமராயும் ,
ஸமதமாதிகுணேபேதாநாம் – ஸமதமாத்யாத்மகுண ஸம்பந்ந ராயும்
( இவ்விடத்தில் ஸமம் என்கிறது அந்த:கரண நியமனத்தை;
நாமோச்சாரண ஜநித ஹர்ஷ ப்ரகர்ஷ வஸாத் ஸம்ப்ரம நர்த்தனம் குர்வதாம் ஸ்வாதி காக்ரேசராணாம்
ஸம தமாதி குணே பேதாநாம் தத்வ வித்தமானாம் அஸ்மத் ஸ்வாமிநாம் ஆந்த்ர பூர்ண கோவிந்தார்ய துல்ய
ஸ்வபாவாநாம் உபாதேயதம திவ்ய ஜ்ஞாந பக்தி வைராக்ய நிஷ்டானாம் , ஸ்ரீவைஷ்ணவானாம் ஆவாசஸ்தான மேவ
அஸ்மதாதி சரமாதிகாரிணாம் அபி ஆவாஸபூமி
: “ என்று
நாயனா ராச்சாம் பிள்ளை யருளிச்செய்தார் இறே .

இனி இந்த சரமாதிகாரிக்கு பரிஹரிக்க வேண்டும் அம் ஶங்கள் சிலவுண்டு ;
அவையாவன –1- பரம காருணிகரான வெம்பெருமானாருடைய குணானுஸந்தான
ஸ்ரவணத்தில் ஸிவிட்கென்று நெஞ்சிறக்க மற்றிருக்கும் துர்மாநிகளுடன் ஸம்பாஷணமும் ,
2-அவர்களுடன் ஸஹவாஸமும் ,
3-அவர்களுடன் கூடி புஜிக்குமதுவும் ,
4-தத் பாத தீர்த்தமும் ,
5-பாணி பக்வாந்நபோஜநமும் ,

ஶரீர ஸம்பந்த ப்ரயுக்தமாக வவர்களுடன். (தமமென்கிறது பாஷ்யகரண நியமனத்தை ) ,
தத்வ வித்தமாநாம் -– பராவர தத்வ யதாத்ம்யத்தை யறிந்தவர்களில் ஸ்ரேஷ்டராயும் ,
அஸ்மத் ஸ்வாமி நாம் -– அஸ்மதாதிகளுக்கு வகுத்த ஶேஷிகளாயும் ,
ஆந்த்ரபூர்ணகோவிந் தார்ய துல்ய ஸ்வபாவாநாம் -– வடுகநம்பி , எம்பார் , இவர்களோடொத்த வாசார்யநிஷ்டையை யுடையவர்களாயும் ,
உபாதேயதம திவ்ய ஜ்ஞாந பக்தி வைராக்ய நிஷ்டானாம் –
உபாதேயதம -– “ மூவரிலும் வைத்துக்கொண்டு மிகவும் வேண்டுவது ப்ரபந்நநுக்கு “ என்கிறபடியே மிகவும் வேண்டுமவை யான ,
திவ்யஜ்ஞாந -– ( கேவலனுடைய ஜ்ஞாநம் போலன்றிக்கே ,“ தாமரையாள் கேள்வனொருவனையே நோக்குமுணர்வு “ என்கிற ) ;
ஸ்ரீய: பதி விஷயமான ஜ்ஞாநமென்ன ,
பக்தி -– ( ஸர்வக்ரமத்தாலே பரபக்த்யாதி ரூபேண பரிணமிக்கக் கடவதான ) தத்விஷயத்தில் பக்தி யென்ன ,
வைராக்ய –- “ ப்ரபந்நனுக்கு விஹித விஷய நிவ்ருத்தி தன்னேற் றம் “ என்கிற வைராக்ய விஶேஷமென்ன ,
இவற்றில் , நிஷ்டானாம் -– நிலை நின்றவர்களாயுமிருக்கிற ,
( இவ்விடத்தில் , திவ்ய , என்கிற பதம் , ஜ்ஞாந பக்தி வைராக்யங்கள் மூன்றிலு மந்வயித்து ,
அவற்றினுடைய நிஷ்க்ருஷ்ட வேஷத்தைக் காட்டுகிறது ) .
ஸ்ரீவைஷ்ணவாநாம் – இராமாநு சனைத் தொழும் பெரியோர்களுடைய ,
ஆவாசஸ்தாநமேவ – எழுந்திரைத் தாடுமிடம் என்கிற விருப்பிடமே ,
ஆவாசபூமி( “ தேசோயம் ஸர்வ காம துக் “ என்கிறபடியே
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் , இஷ்டப்ராப்திக்கும் ஹேதுவாய்க்கொண்டு )
வஸ்தவ்யமான விடமாகக் கடவதென்னபடி அஸ்மதாதி சரமாதிகாரிணாமபி –-
அஸ்மதாதி — அடியேன் முதலான சரமாதிகாரிணாமபி ( ஸ்வாபிமாநத்தா லே யீஶ்வராபிமாநத்தைக் குலைத்துக்கொள்ளுகையாலேபோக்கற்ற செயல் மாண்டு “
6-த்வத் பாத பக்த இவ சிஷ்ட ஜநௌகமத்யே மித்யாசராமி “ என்கைக்குத் பரந்தவாஸக்தி யுண்டாகையும் ,
7-தத் க்ருத பகவத் குணாநுஸந்தான ஶ்ரவணமும் ,
8-தத் ததீய ஸத்காரமும் ,
9-தத் தத்த த்ரவ்ய ஸ்வீகார மும்,
10-தத் விஷய ப்ரணாமமும் ,
ஆக இந்த 10 க்ருத்யமும் ,
சரம பர்வமான வெம்பெருமானார் விஷயத்தில் மருவத்த ப்ராவண்யமு டையனாய் ,
ததபிமாநத்திலே யொதுங்கி வர்த்திக்கும் உத்தமாதிகாரி க்கு விஶேஷித்து பரிஹரிக்கவேணும் .

இல்லையாகில் , ஒருதலை த்வந்த்வ பக்தியும் , ஒருதலை # விழுப்புமாய் போருமிவனுக்கு , உபய ஸம்பந்தமும் குலைந்து ,
யாவதாத்மபாவி ஸம்ஸாரமநுவர்த் திக்குமொழிய , கரை காண்கிறதில்லை .

ஸ்ரீய:பதியாய் ,
பரம தயாளு வாய் ,
பரம ஶேஷியாய் ,
ஸர்வ ஶக்தி யுக்தனான வெம்பெருமானுடைய திருவடிகளை யுபாயமாகப்பற்றி ,
தத் குண ப்ரதிபாதிக திவ்ய ப்ரபந்தங்களை , யநுஸந்தாநத்துக்கு விஷயமாக்கி ,
“பொழுதெனக்கு மற்றது வெப்போது “ என்கிறபடியே போது போக்கி வர்த்திக்கிற நமக்கு ,
பேற்றில் கண்ணழிவுண்டோவென்று நினைத்து , சரம பர்வத்திலிறங்காமல் , துரபிமாநிகளாயிருக்கும் கழணிமிண்டரான ஸ்ரீவைஷ்ணவர்கள் ,
அவர்கள் தங்கள் தங்கள் நினைவாலே பேறுண் டென்றிருக்கிலும் ,

“ ஸ்ரீச ஸ்ரீமத் பதாப்ஜே சரணமிதி தியா @ தத்ர பக்தி தக்கவரா யிருக்கிற ) பஞ்சமோபாய நிஷ்டர்க்கும் 
ஈஶ்வரன் ஸர்வஜ்ஞனாகையாலே , சரம பர்வமான வெம்பெருமானார் பக்கல் கண் வையோமென்றிருந்த வதுவே ஹேதுவாக
வவர்களுக்கு , பேற்றைப் பண்ணிக் கொடாத மாத்ரமே யன்றியே ,
இவர்கள் ஸ்வரூபத்தையும் , கால க்ரமத்திலே , ஸங்குசிதமாம் படி பண்ணி விடுவன்

# யிழவு பாடாந்தரம் @ தத் ப்ரபத்தி பாடாந்தரம் .

எம்பார் ஸூக்தி – ( ஸ்ரீச ஸ்ரீமத் பதாப்ஜ இதி )
ஸ்ரீச ஸ்ரீமத் பதாப்ஜே –
ஸ்ரீச -– ஸ்ரீய:பதியினுடைய ,
ஸ்ரீமத் பதாப்ஜே –-
“ பிராட்டியுமவனும் விடிலும் திரு வடிகள் விடாது “ என்கிற பெருமையை யுடைத்தான “ திருவடித்தாமரைக ளிரண்டுமே
“ சரணமிதி -– இதர நிரபேக்ஷமான வுபாயமென்கிற ,
தியா –- புத்தியினாலே ,
தத்ர – அந்த திருவடிகளிலே பக்தி

த்வராணாம் ஸ்ரீமத் ராமாநுஜார்ய ப்ரணதிம் அபஜதாம் கூட சித்தா ஸயாநாம் |
காருண்ய ஷாந்தி ஸிந்து ஸ்வ பத நிவஸதிம் நேஸ்வரோ தாது மிச்சேதித்யேவம் சிந்தகாநாமபி பரமபதம் தாதுகா மஸ் ஸஜாது
“ என்று ,
எம்பாரருளிச்செய்த இந்த திவ்ய ஸூக்தி , உக்தமமான வர்த்தத்துக்கு ப்ரமாணமாக அநு ஸந்தேயமாகக் கடவது .

த்வராணாம். –
“ ஸ்நேஹ பூர்வமநுத்யாநம் பக்தி: “ என்கிற ப்ரீதி பூர்வக ஸ்மரணத்தில் மேன் மேலும் அபிநிவேஸமாகிற த்வரையை யுடையவராய்க் கொண்டு ,
( பாடாந்தரம் தத் ப்ரபத்தி த்வராணாம் –- அந்த திருவடிக ளில் பண்ணக் கடவதான சரண வரண ரூப ப்ரபத்தியில்
த்வரையை யுடைய வர்களாய்க்கொண்டு ,
இந்த பக்ஷத்தில் , த்வரை , ஸாதநாந்தரங்களுடைய தோஷ தர்ஶநத்தாலும் , ஸம்ஸாரத்திலடிக் கொதிப்பாலும் உண்டாகிற தென்று கொள்ளவேணும் ) . ஸ்ரீமத்ராமாநுஜார்ய ப்ரணதிம பஜதாம்
ஸ்ரீமத் –- அந்த ஸ்ரீய:பதியினுடைய திருவடிகள் தாமே யென்னும்படியான நிரவதிக ஸம்பத்தை யுடையராயிருக்கிற ,
ராமாநுஜார்ய -– எம்பெருமானாருடைய ,
ப்ரணதிம் –- ( திருவடிகளில் செய்யக் கடவதான ) சரணாகதியை ,
அபஜதாம் – செய்யாதவர்களாய் ,
கூடஸித்தாஸயாநாம் — இப்படி எம்பெரு மானாரை யுபேஷித்திருக்கிற தங்களுடைய வந்தரங்காபிப்ராயத்தை வெளிப்படுத்தாமல் ,
தம்மை எம்பெருமானார் தர்ஶநத்தில் நிஷ்டை யுடைய வரென்று பிறர் நினைக்கும்படி இருக்குமவர்களுக்கு ,
( எம்பெருமான் பரம பதத்திலிடம் கொடானென்கிற மேலில் வாக்யத்தோடி இதற்கு அந்வயம் ).
காருண்யஷாந்தி ஸிந்து:
காருண்ய –- ( அத்வேஷம் துடங்கி யாசார்ய ப்ராப்தி பர்யந்தமாக செய்து கொடுக்கைக்கீடான ) க்ருபைக்கும் , ஷாந்தி: –

( “ தன்னடியார் “ என்கிற பாட்டின்படியே
என்னடியார் அது செய்யார் “ என்கைக்கீடான பொறுமைக்கும் ,
ஸிந்து: — ஸமுத்திரம் போலே யிருக்கு மவனான ,
ஈஶ்வர: — ஸர்வேஶ்வரன் ,
ஸ்வபதநிவசதிம் -– தனக்குப் படை வீடான பரமபதத்தில் ஸ்தானத்தை ,
தாதும் -– கொடுக்கைக்கு ,
நேச்சத் –- இச்சிக்க மாட்டான் .
( இவ்வளவேயன்றிக்கே )
இத்யேவம் -– இந்த ப்ரகார மாகவே ,
சிந்தகாநாமபி –- ( எம்பெருமானார் திருவடிகளை ஆஶ்ரயியோ மென்று ) மநஸ்ஸில் நினைக்குமவர்களுக்கும் கூட ,
ஜாது –- ஒருகாலும் ,
பரமபதம் -– நலமந்தமில்லதோர் நாட்டை ,
தாதுகாம: — கொடுக்க இச்சை யுடையவனாக ,
ந பவேத் -– ஆக மாட்டான் )
( இவ்விடத்தில் ந பவேத் என்கிற அவ்யயமும் , க்ரியையும் ஔசித்யத்தாலே அத்யாஹரிக்கப்படு கிறது .
இத்தால் கால க்ரமத்திலே இவர்களுடைய ஸாமாந்ய ஜ்ஞாநத்தையும் மலிநமாம்படி பண்ணி
ஸ்வரூபத்தை ஸங்குசிதமாக்கி விடுவதென்ற தாயித்து )

இன்னமும் ராமாநுஜ பதச்சாயையென்று புகழ் பெற்றவிவர்
ஸ்ரீமந் நாராயண சரணாரவிந்த சரணாகதிரேவ உஜ்ஜீவநாய பவதீதி புத்யா ,
பகவந்தம் பரம காருணிகம் பரமோதாரம் அபார கல்யாண குணாகரம்
அபரிமித வாத்ஸல்ய ஸௌஶீல்ய ஸாகரம் அசரண்ய அகில ஜந சரண்யம் அநவரதம்
ஆஶ்ரயணீய சரண கமல யுகளமபி மதாநுரூப நிரவதிக அனந்த சந்தோஹ ஜநக
“ நித்யஸூரி பரிஷ தந்தர் பாவ மஹா:பல ப்ரஸாதக மஸ்மதுத் தாரகம் அதி ரமணீய
விமலதர , லாவண்யகர திவ்ய மங்கள விக்ரஹமதிஶீதல விமல கம்பீர ஜலாஸயப்ரபவ
மிஹிரதருண கிரணநிகிர விகசித விராஜ மான கமலதளாயத திவ்யநயனயுகளம் ஸ்வவசகமிதி

சிதசிதீஶ்வர தத்வ த்ரய ஸூசக தண்ட த்ரய ரூப மண்டன மண்டித மஸ்மந்மாதர
மஸ்மத்பிதரமம்ருத லஹரீவதநுகூல நவ்ய திவ்ய கோமல விமல மதுராயமாண
நிஜஸூக்திகலாபைராஸ்ரி தாநகில ஜநாஹ்லாதயந்தம் ஸ்ரீமந்தமார்ய ஜநாபிவந்த்யம்
அஸ்மத் குலநாத மஸ்மத் அஸாதாரண ஶேஷிண மஸ் மதாதி ரக்ஷ்யவர்க ஸர்வ ப்ரகார ரக்ஷணைக தீஷாகுரும்
ஸ்ரீராமா நுஜாசார்யமநாத்ருத்ய , பரமகாருணிக: பகவாநேவ ஸ்வசரணகமல ஸமாஶ்ரிதாநாமஸ்மாகம்
ஸ்வப்ராப்திரூப பலம் ப்ரயச்சதீதி ஸ்வமதேந விசிந்த்ய வர்த்தமாநாநாம் ,
தத்வஜ்ஞாநலவலேஶ தேஶாதிகாநாம் துரபிமாநஸஹக்ருத ,
பரப்ராமக வ்ருத்தாநாம் ரூபவேஷதாரிணாம் வயமேவ ஸ்ரீவைஷ்ண வா இதி ,
ஸ்வமதேநாத்மாநம் பஹுமந்யமாநாநாம் சேதநாநாம் , அபார காருண்யௌதார்ய
வாத்ஸல்ய ஸௌஶீல்யைக நிதிரபி பகவான் புருஷோத்தம:–எம்பார் ஸ்ரீஸூக்தி


ஸ்ரீமந்நாராயண சரணார விந்த சரணாகதிரேவ — ஸ்ரீய:பதியான ஸர்வேஶ்வரனுடைய சரணாரவிந்த -– திருவடித் தாமரைகளில் பண்ணும் ,
சரணாகதிரேவ -– ப்ரபத்தி தானே ,
உஜ்ஜீவநாய – ஆத்மோஜ்ஜீவநத்தைப் பொருட்டு ,
பவதீதி -– ஆகிறதென்கிற,
புத்யா — “ வ்யவஸாயாத்மிகா புத்தி: “ என்கிற ஜ்ஞாந விஶேஷத்தாலே ;
பகவந்தம் -– பரிபூர்ண ஜ்ஞாநத்தை யுடையராயும் ,
பரம காருணிகம் –- பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவான வீஶ்வரனிற்காட்டிலும் மேலான காருணிகராயும் ,
பரமோதாரம் –- ( ஸ்வாபிமாநாந்தர்பூதர்க்கு கார்யம் செய்யவேணும் “ என்று ஈஶ்வரனோடே மன்னாடுகையாலே )
இதுக்கு மேலில்லை யென்னும்படியான ஔதார்யத்தை யுடையராயும் ,
அபார கல்யாண குணா கரன் -– அபாரமான கல்யாண குணங்களுக்கு நிவாசஸ்தாந பூதராயும் ,
அபரிமித வாத்ஸல்ய ஸௌஶீல்ய ஸாகரம் –- அவற்றில் வாத் ஸல்ய ஸௌஶீல்யங்கள் அபரிமிதமா யிருக்கையாலே ,
அவற்றுக்கு ஸமுத்ரம் போன்றவராயும் ,
( வாத்ஸல்யம் தோஷபோக்யத்வம் ,
ஸௌஶீல்யம் -– தாழ்ந்தவர்களோடு கலந்து பரிமாறுகை )
அசரண்யாகில ஜநசரண்யம் –
அசரண்ய -– ( “ நன்மையென்று பேரிடலாவதொரு தீமையும் காணாத “ , ஸர்வேஶ்வரனும் கைவிடுகையாலே )
கத்யந்தரமில்லாத ,
அகில ஜந -– ஸமஸ்த சேதநர்களுக்கும் ,
சரண்யம் -– ரக்ஷகராயும் ,
அநவரதமாஶ்ரயணீய சரண கமலயுகளம் —
அநவரதம் -– “ அத்ர பரத்ராச் சாபி “ என்கிறபடியே ஸம்ஸாரத்திலும் , ப்ராப்யமான நித்ய விபூதியிலும் ,
ஆஶ்ரயணீய –- ஆஶ்ரயிக்கைக்கு யோக்யமான ,
சரணகமலயுகளம் –-திருவடித் தாமரைகள் இரண்டுமுடையவராயும் ,
அபிமதாநுரூப + மஹாப் பலப்ரஸாதகம் –
அபிமதாநுரூப – ( ஸ்வரூப ஜ்ஞாநமுடையவனுக்கு ) அபிமதமாயும் , அநுரூபமாயும் , இருந்துள்ள ,
நிரவதிகானந்த -– எல்லை யில்லாத ஆனந்தத்தினுடைய ,
ஸந்தோஹ -– ஸமூஹத்துக்கு ,
ஜநக –- மேன்மேலும் அபிவிருத்தியை யுண்டாக்குமதான ,
நித்யஸூரி பரிஷத் –- நித்யஸூரி கோஷ்டியில் ,
அந்தர்பாவ –- உடன் கூடுகையாகிற ,
மஹா:பல –- ஸர்வோத்தம்மான:பலத்தை ,
ப்ரஸாதகம் -– க்ருபை செய்தருளுமவராயும் ,
அஸ்மதுத்தாரகம் -– அடியே னுக்கு உத்தாரகாசார்யராயும்
( முதலிலே பெரியநம்பி தம்மை விஷயீகரித் ததற்கும் , உடையவர் காரணமாகையாலும் ,
அவர்தா முபாயோபேயங்களி ரண்டும் எம்பெருமானார் திருவடிகளேயென்று தமக்கு காட்டிக்கொடுக்கை யாலும் , அடியேனுக்கு உத்தாரகாசார்யனென்கிறார் ) .
அதிரமணீய + மங்க ளவிக்ரஹம் —
அதிரமணீய -– பரம போக்யமாய்
( “ உன்றன்மெய்யில் பிறங் கிய சீரன்றி வேண்டிலன் “ என்னும்படியிறே போக்யதைதானிருப்பது )
விமலதர -– ( ஜ்ஞாந பரிமளமெல்லாம் வடிவிலே தொடைக்கொள்ளலாம் படி ) மிகவும் நிர்மலமாய் ,
லாவண்ய கர – ( பகவத் குணாநுபவத்தாலே களித்திருக்கையாலே , திருமேனியெங்கும் நிறைந்த ) காந்தி வெள்ளத்துக் கிருப்பிடமாய் ,
திவ்யமங்கள -– ( “ திருமாலிருஞ்சோலைமலையே “ என்கி றபடியே , எம்பெருமான் விரும்புகையாலே ) அப்ராக்ருதமாய் விலக்ஷண மாயிருக்கிற ,
விக்ரஹம் –- திருமேனியை யுடையவராயும் ,
அதிஶீதல + நயனயுகளம் —
அதிஶீதல –- மிகவும் குளிர்ந்து ,
விமல –- தெளிந்து ,
கம்பீர –- ஆழங்காணவரிதாயிருக்கிற ,
ஜலாஶய –- ஏரியில் ,
ப்ரபவ –- பிறந்ததாய் ,
மிஹிரதருணகிரண –- பாலஸூர்ய கிரணங்களாலே ,
விகசித – அலர்த்தப்பட்டதாய் ,
விராஜமான – செவ்வி மாறாமல் ப்ரகாஸித்துக் கொண்டிருக்கிற ,
கமலதள -– தாமரை யிதழைப் போலே ,
ஆயத – கர்ணாந்த விஶ்ராந்தமான ,
திவ்ய நயன யுகளம் -– கண்ணுள் நின்றகலாதவனுக்கு கோயில் கட்டணமாயிருக்கிற திருக் கண்களை யுடையவராயும் ;
( இவ்விடத்தில் கண்ணென்று ஜ்ஞாநமாய் அதுதான் ஸ்ரீய:பதி விஷயமா யிருக்கையாலும்
இரண்டாயிருக்கையாலும் உபய வேதாந்த விஷய ஜ்ஞாநத் தைக் காட்டுகிறது ) .
ஸ்வ — வசகமிதி தம் வசமாக்கப்பட்ட ,
சிதசிதீஶ்வர -– சேதந த
த்வம், அசேதந தத்வம் , ஈஶ்வரதத்வமென்கிற , தத்வத்ரய -– மூன்று தத்வத்துக்கும் ,
ஸூசக –- ஸூசிக்குமதாயிருக்கிற ,
தண்ட த்ரய ரூப -– த்ரிதண்டரூபமான ,
மண்டன -– அலங்காரத்தாலே ,
மண்டிதம் –- அலங்க ரிக்கப்பட்டவராயும் ,
அஸ்மந் மாதரம் -– அடியேனுக்கு ப்ரியமே நடத்திக் கொண்டு போருகையாலே , மாத்ருபூதராயும் ,
அஸ்மத் பிதரம் -–இதத்தைச் செய்கையாலே தந்தையாயும் ,
அம்ருதலஹரீவத் + ஆஹ்லாதயந்தம் —-
அம்ருதலஹரீவத் — அம்ருதப்ரவாஹத்தினுடைய அலைகள் போலே , அநுகூல -– செவிக்கினய செஞ்சொற்களாய் ,
நவ்ய –- அபூர்வங்களாய் ,
திவ்ய –- “ கேட்டாரார் வானவர்கள் “ என்கையாலே திவ்யரான நித்ய ஸூரிகளுக்கு கேட்க யோக்யங்களாய் ,
கோமல –- ம்ருது ஶைலியோடுகூடி ,
விமல –- நிர்தோஷங்களாய் ,
மதுராயமாண -– (ஸ்ரீய:பதி , நித்யஹேயப்ரத்யநீகனாயும் , கல்யாணைகதானனாயும் இருப்பனென் றறுதியிடுகையாலே )
தேனும் பாலும் கன்னலும் அமுதும் போலிருப்ப தான ;
நிஜ ஸூக்திகலாபை: — ஸ்ரீபாஷ்யம் முதலான தம்முடைய திவ்ய ஸூக்தித்தொடைகளாலே ;
ஆஶ்ரிதான் -– தம்மை ஆஶ்ரயித்த ,
அகில ஜனான் –- ஸமஸ்த சேதநர்களையும் ;
ஆஹ்லாதயந்தம் –- ஆனந்திப்பித் துக் கொண்டிருக்குமவராயும் ,
ஸ்ரீமந்தம் — “ ஸம்ஸேவிதஸ் ஸம்யமி ஸப்தஸத்யா பீடைஸ்சதுஸ்ஸப்ததிபிஸ்ஸமேத: “ இத்யாதி படியே
அடியார்களுடைய நிரவதிக ஸம்பத்தை உடையவராயும் ,
ஆர்ய ஜநாபி வந்த்யம் -– நாதயாமுந ப்ரப்ருதி பூர்வாசார்யர்களால் புகழப்பட்டவராயும் ,
அஸ்மத் குல நாதம் -– நம்முடைய ப்ரபந்நகுலத்துக்கு நாதராயும் ,
அஸ்மதஸாதாரண ஶேஷிணம் -– அடியேனுக்கு வகுத்த ஶேஷியாயும் ,
அஸ்மதாதிரக்ஷ்யவர்க + தீக்ஷஆகுரும் ––
அஸ்மதாதி –- அடியேன் முத லான ,
ரக்ஷ்யவர்க -– ரக்ஷ்ய பூதருடைய திரளை ,
ஸர்வப்ரகார –- எல்லா ப்ரகாரத்தாலும் ,
ரக்ஷண -–ரஷிக்கை யென்கிற ,
ஏக –- முக்யமான ,
தீஷா – தீஷையுடைய ,
குரும் – ஆசார்யராயுமிருக்கிற ,
ஸ்ரீராமாநுஜா சார்யம் -– தர்ஶந ஸ்தாபநாசார்யரான வெம்பெருமானாரை ,
அநாத்ருத்ய -– அநாதரித்து ,
பரம காருணிக: — ( ஸ்ருஷ்ட்யவதாராதி முகத்தாலே , அடியே தொடங்கி க்ருஷி பண்ணிக்கொண்டு போருகையாலே ) தனக்கு மேலற்ற காருணிகரான ,
பகவாநேவ – ஆஶ்ரயண ஸௌகர்யாபாதகங்க ளோடு , ஆஶ்ரித கார்யாபாதகங்களோடு வாசியற
ஸமஸ்த கல்யாண குணங்களாலும் பரிபூர்ணனான ஸர்வேஶ்வரன்தானே ,
ஸ்வசரண கமலஸமாஶ் ரிதானாம் -– ( “ வணங்க வைத்த கரணமிவை “ என்னுமவர் வேண்டாதபடி
“ விசித்ரா தேஹ ஸம்பத்திரீஶ்வராய நிவேதிதும் “ என்று ஶாஸ்த்ரத்தாலறிந்து தம் திருவடித் தாமரைகளை ஆஶ்ரயித்தவர்களான ,
அஸ்மாகம் –- நமக்கு ,
ஸ்வப்ராப்திரூபபலம் –- தன்னுடைய ப்ராப்தியாகிற பரம்புருஷார்த் தத்தை ,
ப்ரயச்சதீதி — தருகிறானென்று ,
ஸ்வமதேந — ( அஹங்கார தூஷிதமான ) ஸ்வாபீப்ராயத்தாலே ,
விசிந்த்ய –- ஆலோசித்து ,
வர்த்த மாநாநாம் -– அந் நிலையில் நின்றும் பேராதவர்களாயும் ,
தத்வஜ்ஞாந லவலேஸ தேஸாதிகாநாம் —
தத்வஜ்ஞாந –- வேதாந்த ஜ்ஞாநத்தினுடைய,
லவலேஸ -– ஏகதேஶத்தில் அல்ப பாகமாவது நடையாடுகிற ,
தேஶ — ப்ரதேஶத்தை ,
அதிகாநாம் – அதிக்ரமித்து ( அதாவது அந்த ஜ்ஞாந மாத்ரமேயன்றிக்கே
தத்வ ஜ்ஞாநமென்பதொன்றுண் டென்றிருக்குமவர்கள் வஸிக்கும் ப்ரதேஶத்தையும் கூடவறியாமல் ) இருக்கிறவர்களாயும் ,
( “ பரஞ்சோதிரூப ஸம்பத்ய “ இத்யாதி ப்ரகாரமாக ஆவிர்பூதஸ்வரூப னான வாத்மாவுக்கு ஶேஷத்வமே ஸ்வரூபமாய்
அது தான் ததீய பர்யந்த மாயன்றி நில்லாதென்கிறவிதுவே வேதாந்த ஜ்ஞாநத்தினுடைய உள்கருத் தாய்
அந்த ததீயருடைய முகமலர்த்திக்குறுப்பாக வாசார்ய ஶேஷத்வம் ராகப்ராப்தமாய் தன்னடையே வருகிறதாகையாலே ,
ஆசார்யத்வ பூர்த்தி யுள்ள வெம்பெருமானாரை யனாதரித்தவர்களுடைய தத்வ ஜ்ஞாநம்
அஸத்கல்பமாகவேயிருக்குமென்று கருத்து )
துரபிமாந ஸஹக்ருத பரப்ராமக வ்ருத்தாநாம் — ( இப்படி தத்வயாதாத்ம்ய ஜ்ஞாநகந்தமே யில்லாதிருந்தாலும் )
துர்மாநத்தை யுள்கொண்டு , தம்மைப் பிறர் காணில் “ இந்தளத்தில் தாமரைபோலே யிவரும் சிலரேயென்று மோஹிக்கும்படி ,
பரமஸாத்விகருடைய வநுஷ்டாநத்தை யபிநயிக்குமவர்களாயும் ;
ரூபவேஷதாரிணாம் -– ( “ ஆக்ருதிமத்வச்சரணாரவிந்த ப்ரேம “ என்கிற தற்கு நேரே எதிர்தட்டாக )
க்ருத்ரிமமான ஸ்ரீவைஷ்ணவரூப வேஷங்களை யுடையவர்களாயும் ,
வயமேவ + மந்யமாநாநாம் —
வயமேவ – நாங்களே,
ஸ்ரீவைஷ்ணவா இதி -– வைஷ்ணவாக்ரேசரரென்று ,
ஸ்வமதேந -– அஹங் கார க்ரஸ்தமான தம்முடைய வபிப்ராயத்தாலே ,
ஆத்மாநம் -– தங்களை,
பஹுமந்யமாநாநாம் -– ( “ அமர்யாத: க்ஷஊத்ர: “ இத்யாதிக்கு நேரே எதிர் தட்டாக )
போரப் பொலியக் கொண்டாடிக் கொள்ளு மவர்களாயுமிருக்கிற ,
சேதநாநாம் -– சேதநர்களுக்கு , ( இவர்களை அசேதநர் என்னவேண்டியிரு க்க , “ சேதநாநாம் “ என்றது
அமங்கள வாரத்தை , மங்களவாரமென்றாப் போலே )
பகவான் -– அகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைக தானனாய் ,
புருஷோத்தம: — “ யஸ்மாத் க்ஷரமதீதோஹ மக்ஷராதபிசோத்தம: |
அதோ ஸ்ரீமந்நாராயண: அஸ்மத்குல ஸ்வாமிநோ பகவத: ஸ்ரீமத்ராமாநுஜ குரோ:சரணயுகள
ஸம்பந்தராஹித்யம் ஹ்ருதிநிதாய கதாசிதபி ஸ்வப்ராப்திரூப மோக்ஷ:பலமகுர்வாண: ,
யாவதாத்ம பாவி ஸம்ஸார நிரயகர்த்தே
“ ஷிபாம்யஜஸ்ர “ மிதி வதன் நிஷேப்ய , கதாசிதபி தான் ஹ்ருதாநகணயன் ,
ராமாநுஜகுரு க்ருபாபிமாநாந்த் தர்பூத ஸாத்விக ஜநேஷு ஸ்மிலோகே வேதேச ப்ரதித: புருஷோத்தம: “
என்கிறபடியே
க்ஷர ஶப்த வாச்யரான பக்தசேதநரென்ன ,
அக்ஷர ஶப்தவாச்யரான முக்தசேதநரென்ன
இவர்களில் காட்டில் விலக்ஷணனாகையாலே புருஷோத்தமனென்று ப்ரஸித்தனாயிருக்கிற , ஸ்ரீமந்நாராயண: — ஸ்ரீய:பதியானவன் ,
அபார காருண்ய + நிதிரபி ,
அபார –- பாரமில்லாத ,
காருண்ய – ( “ க்ருபா காப்யுபஜாயதே “ என்கிறபடியே , ஸம்ஸாரி சேதநருடைய உஜ்ஜீவநத்துக்கு ஹேதுபூதமான ) காருண்யமென்ன ,
ஔதார்ய “ சேரும் கொடை “ என்கிற உதாரத்வமென்ன ,
வாத்ஸல்ய -– தோஷ போக்யத்வமென்ன ,
ஸௌஶீல்யதன் — பெருமை பாராதே தாழ்ந்தார்களோடு புரையறக்கலக்கும் ஸ்வபாவமென்ன , இவற்றுக்கு ,
ஏக –- அத்விதீயனான ,
நிதிரபி – நிவாச ஸ்தான பூதனாயிருந்தாலும் ,
அஸ்மத் குல ஸ்வாமிந: + ஹ்ருதிநிதாய —
அஸ்மத் குல ஸ்வாமிந: — “ ந: குலபதே: “ என்கிறபடியே அடியேனுடைய குலத்துக்கு ஸ்வாமியாய் ,
பகவத: ( நம்முடைய உஜ்ஜீவநத்துக்கு வேண்டும் கைமுதல்களான ) ஸர்வ கல்யாண குணங்களையும் ,
பரிபூர்ண ஜ்ஞாநத்தையும் உடையராய் ,
ஸ்ரீமத் ராமாநுஜகுரோ: — ( “ ஆசார்ய பதமென்று தனியேயொரு பதமுண்டு , அதுள்ளது எம்பெருமானார்க்கே , என்கிற )
நிலை நின்ற ஆசார்ய பத ஸம்பத்தை யுடையருமான வெம்பெருமானாருடைய ,
சரணயுகள ஸம்பந்த ராஹித்யம் —
சரணயுகள -– இரண்டு திருவடிகளில் ,
ஸம்பந்த ராஹித்யம் -– ஆஶ்ரயண ரூப ஸம்பந்தமில்லாமையை ,
ஹ்ருதி –- தன் திருவுள்ளத்திலே ,
நிதாய -– வைத்து ,
கதாசிதபி –- ஒருக் காலமும் ,
ஸ்வ:ப்ராப்தி ரூப மோக்ஷ:பலம் — தன்னுடைய ப்ராப்தியா கிற மோக்ஷ:பலத்தை ,
அகுர்வாண: — செய்து கொடுக்காமல் ,
யாவதாத்ம பாவி + நிஷேப்ய —
யாவதாத்ம பாவி – ஆத்ம ஸத்தை யுள்ளதனையும் ,
ஸம்ஸார நிரயகர்த்தே –- ஸம்ஸாரமாகிற நரக கூபத்திலே “ ஷிபாம்ய ஜஸ்ர “ மிதிவதன் , நிஷேப்ய -– அஹங்காரம் , பலம் , தர்ப்பம் , காமம் , க்ரோதம் ச ஸம்சிதா: “ என்று தொடங்கி
“ தாநஹம் த்விஷத: க்ரூரான் ஸம்ஸாரேஷு நராதமான் க்ஷஇபாம்யஜஸ்ரம் “ என்று
அஹங்காராதி தோஷ துஷ்டரான புருஷாதமரை ஜந்ம மரணாதி ரூபேண சுழன்று வருகிற ஸம்ஸாரத்தில்
க்ரூர ஸ்வபாவமுள்ளவராய் பிறக்கும் படியாகவே

நித்ய தத்தத்ருஷ்டி: தேப்யஸ்ஸர்வஸ்வதாந கரணேபி கிமபி ந தத்தமே வேத்யத்யாப்ய பரிதுஷ்ட: ,
ராமாநுஜகுரு சரணயுகள ப்ராவண்ய நைரந்தர்ய ப்ரதாநைக நிஷ்ணாதோ வர்த்ததே “
என்று
எம்பெருமானாரோடு ஸம்பந்தமில்லாதவர்களுக்கு , ஸர்வ ப்ரகாரத்தாலும் ஈஶ்வரன் ஸ்வ ப்ராப்தி பண்ணிக் கொடாமல் ,
யாவதாத்மபாவி ஸம்ஸாரமாகிற நரக குழியிலே தள்ளியிட்டுவைத்து ,
திருவுள்ளத் தாலும் அவர்களை நினையா நின்றருளிச் செய்தார் இறே .
ஆகையால் ஸர்வ ப்ரகாரத்தாலும் , உஜ்ஜீவிக்க வேணுமென்றும் நினைவுடைய வன் ,
அசரண்ய சரண்யராய் , பரம காருணிகராய் , பரமோதாரரான வெம்பெருமானாருடைய
வபிமாநமே , உத்தாரகமென்றறுதியிட்டு , ததேகநிஷ்டனாய்
“ தேவு மற்று அறியேன் “ என்று ஶேஷித்வ , சரண் யத்வ ப்ராப்யத்வங்களை
யெம்பெருமானார் பக்கலிலே யறுதியிட்டு ,நிக்ரஹித்துத் தள்ளி விடுவேனென்றாப்போலே சொல்லிக்கொண்டே தள்ளி விட்டு ,
கதாசிதபி — ஒருக் காலமும் ,
தான்— அவர்களை ,
ஹ்ருதா — திருவுள்ளத்தால் ,
ந கணயன் –- நினையாமல் ,
ராமாநுஜகுரு + தத்த த்ருஷ்டி:–
ராமாநுஜகுரு -– அஜ்ஞாநி வர்த்தகரான வெம்பெருமானாருடைய ,
க்ருபாபி மாநாந்தர்பூத நிர்ஹேதுக க்ருபையால் வந்த வபிமாநத்தி லொதுங்கின ,
ஸாத்விக ஜநேஷு –- பரம ஸாத்விகரான ஸ்ரீவைஷ்ணவர்க ளிடத்திலே ,
நித்ய தத்த த்ருஷ்டி: — வைத்த கண் வாங்காமல் பூர்ண கடாக்ஷமுடையனாயக் கொண்டு ,
தேப்யஸ்ஸர்வஸ்வ + பரிதுஷ்ட: —–
தேப்ய: — அவர்களுக்கு ,
ஸர்வஸ்தாந கரணேபி -– உபயவிபூதியோடு தன்னையே கொடுத்திருந்தாலும் ,
கிமபி ந தத்தமேவேதி -– ( “ அஸ்மை ந கிஞ்சிதுசிதம் க்ருதம் “ என்னாப் போலே ) இவர்களுக்குத் தகுதியாக
ஒன்றும் செய்யப் பெற்றிலோமே ? என்று ,
அத்யாப்யபரிதுஷ்ட: — இன்னமும் குறைவாளனாய் ,
ராமாநுஜா + வர்த்ததே —
ராமாநுஜகுரு – அப்படிப்பட்ட வெம்பெருமானாருடைய ,
சரண யுகள –- இரண்டு திருவடிகளிலும் ( உண்டாயிருக்கிற ) ,
ப்ராவண்ய -– நிரதிசய ப்ரீதிக்கு ,
நைரந்தர்ய –- தைலதாரா துல்யமான அவிச்சேதத்தை ,
ப்ரதான கொடுக் கையில் ,
ஏக -– அத்விதீயனான ,
நிஷ்ணாத: — உள் புக்காராயுமவனாய் ( அதாவது ஆண்களையும் பெண்ணுடை யுடுக்கப்பண்ணும்
வைர உறுக்கா கையாலே , இவ்வதிகாரிக்கு நித்ய சத்ருவான தன்னுடைய நிரதிசய
ஸௌந்தர்யத்தில் ஆழங்கால்பட்டு , இரு கரையராகாமல் நோக்கிக் கொண்டு போறுமவனாய் )
வர்த்ததே -– இதுவே பணியாக விருக்கிறான் , என்று எம்பார் அருளிச்செய்தாரென்கை .

சரமோபாய தாத்பர்ய ப்ரமாண வசநாசயா: | பூர்வாசார்ய லஸத்ஸூக்தீரூபஜீவ்ய விசோதிதா: ||.

பேற்றுக்குடலாக ப்ரதம பர்வத்தில் நெஞ்சு தாழ்ந்து , இருகரை யனாய் யாதாயாதம் பண்ணிய லமாவாதே ,
எம்பெருமானார் அபிமாநத்திலே ஓதுங்கி , நமக்குப் பேற்றில் கண்ணழிவில்லை யென்று நெஞ்சில் தேற்றமுடையவனாய் ,
எம்பெருமானார் விஷயத்தில் ப்ராவண்ய சீமா பூமிகளான பரம ஸாத்விக வர்க்கத்துடன் ,
“ போதயந்த: பரஸ் பரம் “ பண்ணிக்கொண்டு , பரஸம்ருத்யைக ப்ரயோஜனனாய் ,
எம் பெருமானார் விஷயத்தில் ப்ராவண்யமுடையாரைக் கண்டால் , இந்தளத்திலே தாமரைப் பூத்தாப்போலே ,
இருள் தரு மாஞா லமான விக்கொடு உலகத்திலே , இங்ஙனேயும் சிலருண்டாகப் பெறுவதே யென்று
ஷர்ஷ புலகித ஶரீரனாய் , யாவச் சரீரபாதம் , த்ரிவித கரணத் தாலும் , ஒருபடிப்பட ஸ்வரூபத்தை நோக்கிக்கொண்டு .,
எம்பெருமா னாருடைய , திருநாமோச்சாரணமில்லாவிடில் நாக்கு வற்றும்படி யான நிலையோடு பொருந்தி ,
மநஸ்ஸை ஸாவதாநமாய்ப் பண்ணிக் கொண்டு , ஸ்வரூபாநுகுணமாக வர்த்திக்க வேணும்

சரமோபாய தாத்பர்யம் ஸமாப்தம்

சரமோபாய தாத்பர்யம் தேவராஜகுரூதிதம் | ஸம்ப்ரதாயாநுரோதேந யதாமதி விசோதிதம் ||

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.