ஸ்ரீ மனு ஸ்ம்ருதி-ஸ்ரீ மனு தர்ம சாஸ்திரம்

மனு ஸ்மிருதி

மனு தர்ம சாத்திரம் (சமசுகிருதம்:मनुस्मृति, மனுஸ்மிருதி) இந்துக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் நூல் ஆகும்

மனு-ஸ்மிருதி , (சமஸ்கிருதம்: “மனுவின் சட்டங்கள்” அல்லது “மனுவின் நினைவுகூரப்பட்ட பாரம்பரியம்”) மானவ-தர்ம-சாஸ்திரம் (“மனுவின் தர்ம உரை”) என்றும் அழைக்கப்படுகிறது, இது பாரம்பரியமாக இந்து குறியீட்டின் புத்தகங்களில் மிகவும் அதிகாரப்பூர்வமானது ( இந்தியாவில் தர்ம சாஸ்திரம் மனு-ஸ்மிருதி என்பது படைப்பின் பிரபலமான பெயர், இது அதிகாரப்பூர்வமாக மனித-தர்ம-சாஸ்திரம் என்று அழைக்கப்படுகிறது . இது பழம்பெரும் முதல் மனிதன் மற்றும் சட்டமியற்றியவருக்குக் காரணம்.மனு . பெறப்பட்ட உரை சுமார் 100 சி .

மனு -ஸ்மிருதி இந்துக்களுக்கு அவர்களின் தர்மத்தை பரிந்துரைக்கிறது – அதாவது, நான்கு சமூக வகுப்புகளில் ( வர்ணங்கள் ) ஒரு உறுப்பினராக மற்றும் வாழ்க்கையின் நான்கு நிலைகளில் ஒன்றில் ( ஆசிரமங்கள் ) ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமைகளின் தொகுப்பு. இதில் 12 அத்தியாயங்கள் உள்ளன, அவை மொத்தம் 2,694. இது பிரபஞ்சத்துடன் தொடர்புடையது; தர்மத்தின் வரையறை; சடங்குகள் ( சம்ஸ்காரங்கள் ); தீட்சை ( உபநயனம் ) மற்றும் வேத ஆய்வு(இந்து மதத்தின் புனித நூல்கள்); திருமணம், விருந்தோம்பல், இறுதி சடங்குகள், உணவு கட்டுப்பாடுகள், மாசுபாடு மற்றும் சுத்திகரிப்பு வழிமுறைகள்; பெண்கள் மற்றும் மனைவிகளின் நடத்தை; மற்றும் அரசர்களின் சட்டம். கடைசியாக, 18 தலைப்புகளின் கீழ் பிரிக்கப்பட்ட நீதித்துறை சார்ந்த விஷயங்களைப் பரிசீலிக்க வழிவகுக்கிறது, அதன் பிறகு, தொண்டு, பரிகாரச் சடங்குகள், கர்மாவின் கோட்பாடு, ஆன்மா மற்றும் நரகம் போன்ற மத தலைப்புகளுக்கு உரை திரும்புகிறது . மதச் சட்டம் மற்றும் நடைமுறைகள் மற்றும் மதச்சார்பற்ற சட்டம் ஆகியவற்றுக்கு இடையே எந்த வகையிலான வேறுபாட்டையும் உரை செய்யவில்லை . இந்து சிந்தனையின் அனைத்து அம்சங்களிலும், குறிப்பாக சாதி அமைப்பின் நியாயப்படுத்தல் , அதன் செல்வாக்கு ஆழமாக உள்ளது.

மனு தர்ம சாத்திரம் (சமசுகிருதம்:मनुस्मृति, மனுஸ்மிருதி) இந்துக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் நூல் ஆகும். இதனை சுவாயம்பு (மனு) எனும் பண்டைய வேத கால முனிவர் தொகுத்தார். இது 2685 செய்யுட்களாகவும், 3 பகுதிகளாகவும், 12 அத்தியாயங்களாகவும் அமைந்துள்ளது. இந்நூலை முதலில் கல்கத்தா உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் வில்லியம் ஜோன்ஸ் என்பார் 1794ல் சமசுகிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இந்நூல் மீண்டும் 1882-இல் ஜார்ஜ் புஃலர் என்பவர் ஆங்கில மொழியில் வெளியிட்டார்.இந்நூலை திருலோக சீதாராம் என்பவர் தமிழ் மொழியில் பெயர்த்துள்ளார்.

இது தனி மனித மற்றும் சமுதாய வாழ்க்கையை நெறிப்படுத்திக் கூறும் ஒரு சட்டக்கோவையாக இந்தியாவில் நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வந்தது. இந்து தத்துவத்தினுள் சாதியம் சார்ந்த கருத்துக்களையும் பெண்களை மிக இழிவாகவும் போகப் பொருளாகவும் வலியுறுத்தும் மேட்டுக்குடியினரின் உத்தியாக இதனை விமர்சிப்பவர்களும் உள்ளனர்.

இந்நூலுக்கு மானவ தர்ம சாஸ்திரம் (சமசுகிருதம்:मानवधर्मशास्त्र) என்ற பெயரும் உள்ளது. அதற்கு மானுட அறம் என்பது பொருளாகும்.

மனு தர்மம் அல்லது மனு ஸ்ம்ருதி என்ற புத்தகத்தை எழுதியவர் மனு எனப்படும் அரசர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மனு என்பவர் ஒரு நபர் கிடையாது. மன்வந்தரம் என்பது பலவிதமான காலகட்டங்கள். ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வொரு மனு தலைவராக இருந்து இந்த உலகை ஆட்சி செய்வார் என்ற வழக்கம் உள்ளது. அதில் 14 விதமான மன்வந்தரங்கள் சொல்லப்படுகிறது.

இப்போது வைவஸ்வத மன்வந்தரம் என்று சொல்லக்கூடிய வைவஸ்வத மனு என்பவருடைய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். ஆறு மனுக்கள் கடந்து இப்போது இந்த ஏழாவது மனுவின் காலத்தில் உள்ளோம். மனு என்பவர் அந்தந்த காலகட்டத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடியவர். அவரால் மக்களுக்கான நெறிமுறைகள் வழிகாட்டுதலுக்காக உருவாக்கப்பட்டதே மனு தர்மம் எனும் நூல்.

இது பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது. இதற்கான ஆதாரம் என்பது, வழிவழியாக அந்த நூல்கள் கிடைக்ககூடிய ஓலைச்சுவடிகளிலும், பலவிதமான கிரந்த சாலைகளிலும் கிடைக்கக் கூடியது தான். இப்போது ராமாயணம், மஹாபாரதம் எல்லாம் எங்கிருந்து கிடைத்ததோ அவ்வாறே தான் எந்த நூலுமே நமக்குக் கிடைக்கிறது. காலங்காலமாக அரிய நூல்கள் பலதும், பல படையெடுப்பின் காரணமாக அழிந்துவிட்டன. படையெடுப்பின் முதல் நோக்கம் பண்பாட்டினை அழிப்பது. அதற்கன முதல்படி நூல்களை அழிப்பது. அதனால் பல நூல்கள் காணாமல் போனது. இந்த காரணத்தால் தான் பல நூல்கள் இன்றைக்குமே முழுமையாக கிடைக்காததற்கு காரணம். இது எல்லாமே ஒலைக்கட்டுகளிலும், சுவடிகளிலும் இருந்ததை இந்த அளவிற்கு காப்பாற்றப்பட்டு, எவ்வாறு திரு உ. வே. சாமிநாதய்யர் தமிழ் சுவடிகளைத் தேடி எடுத்தாரோ அது போல பல தர்ம சாஸ்திரங்களும் புராணங்களும் பாரத பூமி முழுவதிலும் இன்றும் கிடைக்காமல் பல இடங்களில் இருக்கிறது. தேடினால் பல பொக்கிஷங்கள் கிடைக்கத்தான் போகிறது. வரும் காலங்களில் கிடைக்கவும் செய்யும். அப்படி காலம் காலமாக பாதுகாக்கப்பட்டு வந்த பல நூல்களில் ஒன்று மனுஸ்ம்ருதி.

பாகவத புராணம், பதிணென் புராணங்களில் ஒன்று. அந்த வடமொழி புராணத்தில் சொல்லும்போது, ஒரு மனுவைப் பற்றி சொல்லியிருக்கிறது. அந்த மனுவைப் பற்றி சொல்லும் போது, மனுவை ‘த்ராவிடேஸ்வர:’, அதாவது தென்னாட்டை ஆண்டு கொண்டிருந்தவர் என்று சொல்கிறது. தென்னாட்டை ஆண்டு கொண்டிருந்த மன்னன் வைகை நதிக்கரையோரத்தில் இருந்தார் என்ற குறிப்புகளையும் நாம் காண்கிறோம். இப்போது போலியாக சொல்லப்படும் ஆரிய-திராவிடப் பிரிவினைகள் எதுவுமே அந்தகாலத்தில் இல்லை என்பதற்கு இது மற்றொரு ஒரு சாட்சி. இது போன்று மற்றைய நூல்களில் கிடைக்கும் குறிப்புகளும், மனு என்பவரைக் குறித்த புரிதலை நமக்குத் தருகிறது.

மனு தர்மம் மன்னர் ஆட்சி காலம் வரை முறையாகவே பின்பற்றப்பட்டது. தமிழ்நாடே ஒரு காலகட்டத்தில், சேர, சோழ, பாண்டிய, பல்லவ என்று நான்கு தேசங்களாக இருந்தது. இன்று தான் தமிழ்நாடு என்று நாம் ஒன்றாக சொல்கிறோம். பண்டைய தமிழகம் என்பது கேரளத்தையும் சேர்ந்தது. ‘வடவேங்கடம் முதல் தென்குமரி வரை’ என்கிறோம். திருப்பதி மலையும் நம்முடன் தான் இருந்தது. தமிழ்நாடே ஒரு நாடு கிடையாது. பல ஆட்சியாளர்கள் பல தேசங்களாக பிரிந்து தான் ஆட்சி இருந்தது. தமிழகத்தில் மனுநீதிச் சோழன் என்ற வரலாற்றினை படிக்கிறோம். மனுஸ்ம்ருதியின் வழி நின்று நீதி பரிபாலனம் செய்து ஆட்சி நடத்திய காரணத்தால் தான் அவனுக்கு “மனுநீதிச் சோழன்” என்றே பெயர் உண்டானது. இப்படி பாரம்பரியமான மன்னர்கள் ஆட்சி காலம் வரை நடைமுறையில் இருந்த விஷயம். அதற்கு பிறகு மன்னர் ஆட்சி மாறி அடுத்த ஆட்சி வரும்போதும், அது கொஞ்சம் கொஞ்சமாக காலமாற்றம், மக்களுடைய செயல்பாடுகள், நம்பிக்கைகள், நடைமுறைகளில் மாற்றம் ஏற்படும்போது தர்மசாஸ்திரங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்ட போது மாறியது. இதனால் நாம் மனுஸ்ம்ருதியை சரியாக புரிந்து கொள்ளாமல் பலரது திரிக்கப்பட்ட வாதங்களை இன்று கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

நம்முடைய மூல நூல்களை முறையாக நாம் படிக்காத காரணத்தால் தான், இந்த ஆங்கிலேயருடைய மொழிபெயர்ப்பை அண்டி இருக்க வேண்டிய நிலைமை நமக்கு வந்திருக்கிறது. மனு தர்மம் மட்டும் அல்ல. எல்லா நூல்களுமே நமக்கு மூல நூல்களிலிருந்து தமிழுக்கு பல பண்டிதர்கள் மொழி பெயர்த்துள்ளனர். ஆனால் நாம் அதை சரியாகப் படிக்காமல் இருந்து விட்டோம். நம் நெறிமுறைகளைப் படிப்பதும், நம் தர்மத்தின்படி வாழ்வதும் ஏதோ கேலிக்குரிய செயலாக திட்டமிடப்பட்டு நம் மனதுக்குள் புகுத்தப்படுகிறது என்றே கூறலாம்.

நம்முடைய வேதங்களுடைய பெருமையோ, நம்முடைய கலாசாரத்தினுடைய பெருமையோ, நம்முடைய முன்னோர்கள் சொன்னால் நாம் கேட்கமாட்டோம். மாக்ஸ் முல்லர் முதலான அயல்நாட்டு அறிஞர்கள் வந்து சொன்னால் நாம் இதை ஏற்றுக்கொள்வோம் என்ற பாணியில் சொல்வோம்.

அப்படித்தான், மனு தர்மத்தை ஆங்கிலேயர்களும் மேலை நாட்டவர்களும் படித்து, இது மிக அருமையான நூல் என்று சொல்லி மொழி பெயர்த்ததை நாம் பார்க்கிறோம். ஜெர்மானிய தத்துவ மேதை ஆகிய நீட்ஷே என்ன சொல்கிறார் எனில், “பைபிளை மூடுங்கள். மனு தர்மத்தைப் படியுங்கள்”, என்கிறார்.  ஆனால் அதற்கு முன்னமேயே பல மொழிகளில் மொழி பெயர்ப்பு உள்ளது. 1890களில் வந்த மனுநீதியின் மொழி பெயர்ப்பு தமிழிலேயே உள்ளது. அதைப்பற்றி யாருக்கும் தெரியவில்லை.

மூல நூலைப் படித்தால் என்ன அர்த்தம் வருமோ, மொழிபெயர்ப்பில் கட்டாயம் அது மாறுதலை அடையும். நம்முடைய தமிழ் மொழியிலேயே இருக்கும் திருக்குறளை, ஆங்கிலத்தில் படித்துப்பார்த்தால், அந்த மொழிபெயர்ப்பில் என்னவெல்லாம் மாறுதல்கள் இருக்கின்றன என்பது புரியும். அப்படிபார்க்கும் போது ஆங்கிலேயர்கள் தான் கொடுத்தார்கள் என்று இல்லை. அதற்கு முன்னமேயே மனுநீதி இருந்தது. அதனுடைய புரிதல் சரியாக இல்லாததனால், நாம் மூல நூலைப் படிக்காததனால் ஆங்கிலேயர்கள் அவர்கள் புரிந்து கொண்டதைக் கொண்டு எழுதிய  மொழிபெயர்ப்பை வைத்து தப்பும் தவறுமாக படித்து கொண்டிருக்கிறோம்.

பெண்களை படிக்க வைப்பது தவறு. சொத்துரிமை வழங்க கூடாது என்று மனுதர்மம் ஒரு புரட்டு ஓடுகிறது ! 

மனு தர்மத்தை முதலில் அணுகுவதற்கு முன்னர் அந்த காலகட்டம் எப்படி இருந்தது என்பதை புரிந்து கொண்டு அணுக வேண்டும். அன்றைய சமூகம் வேறு. இன்று நாம் பார்க்கக் கூடிய நம்முடைய சமூகம், அதனுடைய பார்வை வேறு. அப்படி இருந்தாலும், நாம் என்னவோ மனு தர்மம் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தது என்றோ, அவர்களுக்கு உரிமை மறுக்கப்பட்டிருந்தது போன்ற தோற்றம் மக்களிடம் கொடுக்கப்படுகிறது. அது தவறு.

ஏனென்றால், மனு தர்மத்தில் 9வது அத்தியாயம், அது தான் பலரும் மேற்கோள் காட்டும் அத்தியாயமாக உள்ளது. ஆண்களுக்கும் பெண்களுக்குமான வாழ்வியல் நெறிமுறைகளை சொல்லக்கூடிய அத்தியாயமாக 9வது அத்தியாயம் இருக்கிறது. அதில் பொருளாதாரத்திற்கு பெண்களுக்கு உரிமை உண்டு என்று சொல்லப்படுகிறது. வீட்டினுடைய பொருளாதாராம், தூய்மை, திருமணங்கள் முதலான எல்லா விஷயங்களிலும் பெண்களுடைய கருத்து முக்கியம் என்று சொல்லி 9வது அத்தியாயம் 11வது ச்லோகத்தில் மனு மிகத் தெளிவாக சொல்கிறார்.

அர்த்தஸ்யஸங்க்ரஹேசைனாம்வ்யயேசைவநியோஜயேத்

சௌசேதர்மேஅன்னபக்த்யாம்பாரிணாஹ்யஸ்யசேக்ஷணே

வீட்டின்பொருளாதாரம்தூய்மைசுகாதாரம்வீட்டில்நடக்கும்வழிபாடுகள்உண்ணும்உணவுஆகியவிஷயங்களில்பெண்கள்முழுசுதந்திரத்துடன்செயல்படவேண்டும்.

அடுத்தது சொத்துக்கு உரிமை. கட்டாயம் பெண்களுக்கும் சொத்தில் உரிமை உண்டு என்று அதே 9வது அத்தியாயம் 130வது ச்லோகத்தில் மனு சொல்கிறார். அதாவது,

யதைவாத்மாததபுத்ரபுத்ரேணதுஹிதாஸமா

தஸ்யாம்ஆத்மனிதிஷ்டந்த்யாம்கதம்அன்யோதனம்ஹரேத்

மகனுக்குநிகராகமகளையும்கருதவேண்டும்தன்னுடையஉதரத்திலிருந்துஉதித்தபெண்இருக்கும்போதுவேறுஒருவனுக்குசொத்தைஎப்படிகொடுப்பது?”, எனும்கேள்வியைமனுநமக்குமுன்னேவைக்கிறார்.

அப்படி இருக்கும்போது, “மனு நமக்கு சொத்தில் பங்கு கொடுக்கவில்லை, பெண்களை அடிமைபடுத்தி வைத்திருந்தார், உரிமைகளை வழங்கவில்லை”, என்பது ஒரு தவறான புரிதல்.

திருமண விவாகரத்து பற்றி சொல்லவில்லை! அதனால் பெண் சுதந்திரத்தை அந்த நூல் மறுக்கிறது என்கிறார்கள் !

விவாகரத்து செய்யக்கூடாது என்பதை எந்த பழைய நூலுமே சொல்லாது !  மனு தர்மம் மட்டும் அல்ல. நம்முடைய தர்ம சாஸ்திர நூல் எதுவுமே கணவன் மனைவி இணைந்து தான் வாழ வேண்டும் என்று சொல்கிறது. இது தர்ம சாஸ்திரம் அடிப்படையாக சொல்லக்கூடிய விஷயம். இந்த சாஸ்திர நூல்கள் அனைத்துமே, நம்முடைய மனித வாழ்வு என்பது எதை நோக்கி பயணப்படுகிறது என்பதைத்தான் இலட்சியமாக வைத்திருக்கிறது.

சாஸ்திர நூல்கள் படி பார்க்கும்போது மனு தர்மம் மட்டும் இல்லாமல், விவாஹ மந்திரங்களைப் (அதாவது கல்யாணத்தில் சொல்லக்கூடிய மந்திரங்கள்) பார்த்தாலே, “நாம் 100 ஆண்டு காலம் இணைந்து வாழ வேண்டும். நம்மால் நம் சந்ததிகள் நல்லவிதமாக உருவாகி, அவர்கள் சமூகத்திற்கு பயனுள்ள ஒரு சந்ததியாக உருவாக வேண்டும்”, என்பதைத் தான் இந்த மந்திரங்களோ, சடங்குகளோ, விஷயங்களோ சொல்கிறது. அதில் விவாகரத்து என்ற விஷயமே இல்லை. இன்று சட்டத்தில், நாம் ஒரு புதிய சட்டம் ஒன்று உருவாக்கி, ஆங்கிலேயர்களுடைய தாக்கத்தினால் உருவாக்கப்பட்ட சட்டத்தை வைத்து பழைய நூல்களை பார்க்கும்போது இவை விநோதமாகத் தெரிகிறது. இது நம் பார்வையின் குற்றம் ! நூலின் குற்றமல்ல ! திருக்குறளில் கூடத்தான் விவாகரத்தைப்பற்றி பேசவில்லை. தமிழ்மறை மற்றும் நீதி நூல்கள், நன்னூல் முதலானவைகளில் கூட விவாகரத்தைப்பற்றி பேசப்படவில்லை. அப்படி இருக்கும்போது, அன்றைய வாழ்வியல் முறையில் விவாகரத்து என்பது அவசியமில்லாத விஷயமாக இருந்தது. அன்றைய நடைமுறையை இன்றைய சட்டத்துடன் பொருத்திப் பார்க்கும்போது கண்டிப்பாக குழப்பம் தான் வரும்.

அன்று இருந்த சமூக சூழ்நிலைகளை அனுசரித்து சில விஷயங்களை நாம் இன்று பார்க்கும் போது, சில விஷயங்கள் இன்றைய காலகட்டத்துக்கு மாறுதலாக இருக்கும். ஒரு நூலை அணுகும் போது அந்த நூல் எந்த காலகட்டத்தில் பழக்கத்தில் இருந்தது, அந்த நூல் எப்போது உருவானது, அன்றைய வாழ்வியல் எப்படி இருந்தது முதலான பார்வைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.

ஊர்த்வம் து காலாத் ஏதஸ்மாத் விந்தேத ஸத்ருசம் பதிம் – (மனு ஸ்ம்ருதி 9-90)

வயது வந்த பெண், தனது கணவனைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்

என்று பெண்ணுக்கு உரிமையைத் தரும் மனு தர்மம் விவாகரத்தைப்பற்றி பேசவில்லையா? என்றால், கட்டாயம் பேசாது. ஏனென்றால், அன்றைய வாழ்வியல் நெறிமுறையில், கணவன் மனைவி இணைந்து தான் வாழ வேண்டும் என்ற ஒரு நெறிமுறை இருந்தது.

சுதந்திரமாக வாழ பெண்களுக்கு உரிமை இல்லை என மனு சொல்கிறார் என்று கூறுகிறார்கள்

இது திரும்பவும், முக்கியமான ச்லோகத்தை வைத்துதான் இவர்கள் பேசுகிறார்கள். அந்த ச்லோகத்தை முதலில் பார்ப்போம்

பிதாரக்ஷதிகௌமாரேபர்த்தாரக்ஷதியௌவனே

ரக்ஷந்திஸ்தவிரேபுத்ராஸ்த்ரீவிவிக்தம்அர்ஹதி– (மனு ஸ்மிருதி 9-3)

இளம்பிராயத்தில்பெண்ணைப்பாதுகாக்கவேண்டியதுதந்தையுடையகடமைவளர்ந்தபிறகுயௌவனபிராயத்தில்அவளைக்காக்கவேண்டியதுகணவனின்கடமைவயதானகாலத்தில்அவளைக்காக்கவேண்டியதுமகனுடையகடமைபெண்கள்எல்லாகாலத்திலும்தனித்துவிடாமல்காக்கப்படவேண்டியவர்கள்

இதைத்தான் திரித்து, “பெண்களுக்கு சுதந்திரம் இல்லை. என்றைக்குமே அவர்கள் ஆணை அண்டிதான் வாழ வேண்டிய வாழ்க்கையை உடையவர்கள்” என்று மனு சொன்னதாக திரித்து சொல்லப்படுகிறது. ஏற்கனவே பலமுறை கூறியது போல, மூல நூல்களைப் படித்தால் மட்டுமே அதில் என்ன சொல்லப்படுகிறது என்பது நமக்கு தெளிவாகப் புரியும். அது மட்டுமல்லாமல், ஒரு ச்லோகத்தை தனியாக எடுத்துப் பார்த்தால் அர்த்தம் விபரீதமாகத் தான் இருக்கும்.

உதாரணமாக பகவத் கீதையில் ஒரு ச்லோகம் இருக்கிறது : “மாம் அனுஸ்மர யுத்ய ச” என்று கண்ணன் சொல்லும் அந்த வரியின் பொருள், “என்னை மனதில் எண்ணிக் கொண்டு, துணிந்து போர் செய்” – இதை மட்டும் எடுத்துக் கொண்டு, கண்ணன் தன்னை எண்ணாதவர் எல்லோரையும் கொல்லச் சொல்கிறான் என்றால் அது எவ்வளவு பெரிய அபத்தம் ? பகவத் கீதை சொல்லப்பட்ட காலம், இடம், சூழ்நிலையில் அர்ஜுனனின் மனச்சோர்வை நீக்கி உனக்கான கடமையில் பின் வாங்காதே என்று அதனை பொருள் கொள்ளுதல் வேண்டும். அது கீதையை முழுதும் படித்தாலே விளங்கும். அதுபோலத் தான் மனுஸ்ம்ருதியையும், அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்துப் பார்த்தால் தப்பும் தவறும் தான் தெரியும்.

மனுஸ்ம்ருதி ஆண்களுக்கும் பெண்களுக்குமான கடமைகளைச் சொல்லும் போது,

“பெண் என்பவள் ஒரு விலை மதிப்பில்லாத ஒரு ரத்தினம் போன்றவள்”, என்று கூறுகிறார் மனு. அந்த ரத்தினதை எப்படி நாம் பாதுகாத்து வைக்க வேண்டுமோ அதுபோல, ஆண் ஒவ்வொரு காலகட்டத்திலேயும் பெண்ணைக் காக்க வேண்டியவன் ஆகிறான் என்று ஆணின் கடமையை அந்த நூல் சொல்கிறது.

விஷ(ம) பிரச்சாரம்

உண்மை இப்படி இருக்க, பெண்களை இழிவுபடுத்தும் விதமாக மனு தர்மத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது என்று திட்டமிட்டு விஷப் பிரச்சாரம் செய்கிறார்கள். அப்படி எதுவுமே மனு தர்ம சாஸ்திரத்தில் கிடையாது என்பது தான் சத்தியம். பெண்களை மிகவும் உயர்வாகப் போற்றி தான் மனு தர்ம சாஸ்திரம் சொல்கிறது. எங்கேயுமே கற்பு பிறழ்ன்றவர்களாக சித்தரிக்கப்படவில்லை. இது தெளிவான ஒரு விஷயம். ஏனென்றால், நடுவிலிருந்து ஒரு ச்லோகத்தை எடுத்துப்பார்த்தால் கட்டாயம் அப்படி தப்பாகத்தான் தெரியும்.

உதாரணத்திற்கு, இவர்கள் எந்த ச்லோகத்தை சொல்கிறார்கள் என்பதையே சொல்கிறேன். அதை வைத்தே விளக்குகிறேன்.

ஏவாரூபம்பரிக்ஷந்தேஅஸாம்வயஸிஸம்ஸ்திதி:

ஸுரூபம் வா விரூபம் வா புமான் இத்யேவ புஞ்சதே (9.14)

ஒருபெண்ணுக்குஓர்ஆண்மேல்விருப்பம்உண்டாகவயதோஅழகோதோற்றப்ப்பொலிவோகாரணமென்றுசொல்லமுடியவில்லைஅழகனானாலும்அழகற்றவனானாலும்ஆண்என்பவன்மேல்பெண்ணுக்குஈர்ப்புஏற்படுகிறது.

இதைப் பொத்தாம் பொதுவாகப் பார்த்தால் தவறாகவே தெரியும். ஒரு பெண்ணைப் பெற்ற தகப்பனின் பார்வையில் பார்த்தால் இதன் அர்த்தம் விளங்கும். இது இன்றளவும் நடைமுறையில் இருப்பதால் தானே, பெண்ணுக்கு திருமணம் செய்யுமுன்னர் பலமுறை விசாரிக்கிறோம் ? பெண் கண்மூடித்தனமாக ஒருவன் மேல் காதல் கொள்வதும் பின்னர் விபரீதங்களைச் சந்திப்பதும் நடக்காத ஒன்றில்லையே?

ஏற்கனவே ஒரு ச்லோகம் சொல்லப்பட்டது. பிதா ரக்ஷதி கௌமாரே  என்று.. பெண்கள் ஆணை சார்ந்திருக்க வேண்டும் என்று. அது ஆண்களுக்காக சொல்லப்பட்டது. ஆண்கள் பெண்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட நீதி.

அதேபோல, திருவள்ளுவர் ஒரு கருத்தை சொல்கிறார்.

தற்காத்துத்தற்கொண்டாற்பேணித்தகைசான்ற

சொற்காத்துச்சோர்விலாள்பெண்

கற்புநெறியில் தன்னையும் காத்துக் கொண்டு, தன் கணவனையும் காப்பாற்றித் தகுதியமைந்த புகழையும் காத்து, உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண் எனக் கூறப்பட்டுள்ளது.

அதையே தான் மனுவும் சொல்கிறார். “ஒரு பெண்ணினுடைய பாதுகாப்பு என்பது முதலில் அவளிடமிருந்து துவங்குகிறது” என்கிறார். இதை வைத்து அவர் பெண்ணை கேவலமாக சித்தரித்திருக்கிறார் என்று அர்த்தம் கிடையாது. ஒரு பெண்ணை பாதுகாக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் அவளுடைய ஒத்துழைப்பு மிகவும் அவசியம். அவள் தன்னை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து விட்டால், அதற்கு கூடுதலான பாதுகாப்புகள் இருக்க முடியுமே தவிர வேறு யாரும் அவளை கட்டுப்படுத்த முடியாது என்றே மனு சொல்கிறார். இது எல்லாவற்றுக்குமே பொருந்தும். பெண் என்பவள் சக்தி ஸ்வரூபம். பஞ்சபூதங்களுமே சக்தி ஸ்வரூபம் தான். நெருப்போ, நீரோ, காற்றோ எதுவானாலும், அது தாண்ட வேண்டும் என்று நினைத்தால் நம் யாராலும் தடுக்க முடியாது. இது தவிர்க்க முடியாத உண்மை. சுனாமி, சூறாவளி, நெருப்பு முதலானவைகள் அது எல்லை மீற வேண்டும் என்று தீர்மானித்து விட்டால் அதை யாருமே தடுக்க முடியாது. அது கட்டுக்குள் இருக்கும் வரை தான் நமக்கும் நல்லது அதற்கும் நல்லது. பெண்ணை அப்படி சக்தி வடிவமாக மனு உருவகப்படுத்துகிறார். அப்போது நாம் என்னதான் பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தாலும், பெண் அவளே தன் பாதுகாப்பிற்கு முதல் படி எடுத்துவைக்க வேண்டும் என்று ஒரு விஷயம் சொல்கிறார். இது தான் திரித்து சொல்லப்படுகிறது. இதற்கு முன்னும் பின்னும் பார்த்தால் புரிந்து விடும்.

அவர் என்ன சொல்கிறார் எனில்,

யத்ரநார்யாஸ்துபூஜ்யந்தேரமந்தேதத்ரதேவதா

அர்த்தம் : பெண்கள்எந்தஇடங்களில்பூஜிக்கப்படுகின்றார்களோஅந்தஇடத்தில்தெய்வம்சந்தோஷமாகிஅவர்களுக்குஅருளைவாரிவழங்கும்.

இது ஒரு முக்கியமான ஒரு வாக்கியம். பெண்களை தெய்வத்திற்குச் சமமாகச் சொல்கிறார். அதே ச்லோகத்தில் அடுத்த வரி,

யத்ரைதாஸ்துபூஜ்யந்தேஸர்வாஸ்தத்ரஅபலாக்ரியா– (மனு ஸ்மிருதி 3-56)

எங்கேபெண்கள்பூஜிக்கப்படவில்லையோஅவர்களுக்குதெய்வசக்திகுன்றிஎல்லாவிதமானஅழிவும்ஏற்படும்என்றுகூறுகிறார்

ஜாமயோயானிகேஹானிசபந்திஅப்ரதிபூஜிதா

தானி க்ருத்யாஹதானீவ வினச்யதி ஸமந்தத– (மனு ஸ்ம்ருதி 3-58)

எந்தெந்தஇடங்களில்பெண்கள்தகாதஅறுவறுக்கத்தக்கவார்த்தைகளால்இகழப்பட்டுஅவமானப்படுத்தப்படுகிறார்களோஅந்தஇடமேவிஷம்உண்டவன்அழிவதுபோல்அழிந்துபோகும்.

எவன் தன் வாழ்க்கையில் சந்தோஷம் வேண்டும் என்று ஆசைப்படுகிறானோ அவன் தன் உடன் பிறந்த சகோதரியை, தன்னுடைய மகளை, தன்னுடைய மனைவியை சந்தோஷமாக வைத்துக்கோள்ள வேண்டும்.

“பெண்களுடைய மனம் சந்தோஷப்பட்டால் உன் வாழ்வில் நலம் ஏற்படும். பெண்களுடைய மனம் வருத்தத்தை அடைந்தால் உனது வாழ்வில் நாசம் உண்டாகும்”, என்று மனு சொல்கிறார். இதில் எங்கே பெண்கள் குறைவாகவோ தாழ்வாகவோ சித்தரிக்கப்படுகிறார்கள் ?

பித்ருபிர்ப்ராத்ருபிச்சைதைபதிபிர்தேவரைஸ்ததா

பூஜ்யாபூஷயிதவ்யாச்சபஹுகல்யாணம்ஈப்ஸுபி– (மனு ஸ்மிருதி 3-55)

உன்னுடையவீட்டில்இருக்கக்கூடியஉன்னுடையமகளையோசகோதரியையோஅண்ணியையோஉன்னுடையமனைவியையோநீபோற்றிகௌரவித்தால்மட்டுமேநீநலமாகவாழமுடியும்

மனு தெளிவாக சொல்கிறார். இதைக் காட்டிலும் எப்படி பெண்களுடைய குண நலன்களை நாம் விளக்க முடியும்?

இதே போல தான் பெண்களும் கணவனை அனுசரித்து நடக்க வேண்டும் என்று சொல்கிறார். இதை மட்டும் சொல்லிவிட்டு, பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்பது தவறு. பெண்கள் கணவனை அனுசரித்து நடக்க வேண்டும் என்று சொல்லிய அதே இடத்தில் தான் கணவனும் பெண்ணைப் போற்றி நடக்க வேண்டும் என்று சொல்கிறார். இரண்டும் சேர்ந்தால் தான் வாழ்க்கை இனிக்கும். கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது தான் வாழ்க்கை என்பது தான் நடைமுறையிலிருக்ககூடிய விஷயம்.

ப்ரஜனார்த்தம்மஹாபாகாபூஜார்ஹாக்ருஹதீப்தய

ஸ்த்ரிய ஸ்ரீயச்ச கேஹேஷு ந விசேஷோஸ்தி கச்சன– (மனு ஸ்ம்ருதி 9-26)

தாய்க்குலமானபெண்கள்போற்றத்தக்கவர்கள்வணங்கத்தக்கவர்கள்இல்லத்தின்விளக்காய்விளங்குபவர்கள்வீட்டின்மகாலட்சுமியாய்த்திகழ்பவர்கள்.

வேறு எந்த மதத்திலாவது, சுமங்கலி பூஜை என்று ஒரு பெண்ணை உட்கார்த்தி வைத்து பெண்ணை வழிபடக்கூடிய வழக்கம் இருக்கிறதா? ஒரு கன்யா பூஜை என்று 5 வயது பெண் குழந்தையை உட்கார்த்தி, 80 வயதிற்க்கு மேற்பட்டவர் அந்தக் குழந்தையின் காலில் விழுந்து வணங்கும் மரபு எந்த மதத்திலிருக்கிறது? எந்த நாட்டிலிருக்கிறது?

நம்முடைய மரபில் தான் பெண்களை தெய்வமாக வணங்கக் கூடிய ஒரு மரபைச் சார்ந்து நாம் இருக்கிறோம். ராமக்ருஷ்ண பரமஹம்சர் தன்னுடைய மனைவியான சாரதா தேவியை அம்பிகையின் வடிவமாகப் பார்த்து வணங்கினார் என்று நாம் கேட்கிறோம். அப்படி, ஒரு சின்னக் குழந்தையாக இருந்தாலும், வயது முதிர்ந்தவர்களாக இருந்தாலும், தன்னுடைய மனைவியாக இருந்தாலுமே, அம்பிகையினுடைய வடிவமாக, சக்தி வடிவமாக பார்க்கக்கூடிய மதத்தைச் சேர்ந்து நாம் இருக்கும் போது, அந்த மதத்தினுடைய தர்ம சாஸ்திர நூல்களில் பெண்களை எவ்வாறு இழிவுபடுத்திச் சொல்லுவோம்?

இந்த மாதிரி பெண்களை இழிவு படுத்தி சொல்வது என்று நம் நூல்களைச் சொல்வது எல்லாமே திரிபு படுத்தப்பட்ட வாதங்கள். நாம் அதனுடைய சாராம்சத்தைப் புரிந்து கொள்ளாமல், இப்போது திருக்குறளில்கூட இடையில் ஒரு வாக்கியத்தை எடுத்துப்பார்த்தால் தப்பாகதான் தெரியும்.

மனைவிழைவார்மாண்பயன்எய்தார்வினைவிழைவார்

வேண்டாப் பொருளும் அது– (குறள் 901)

மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர் சிறந்த பயனை அடைய மாட்டார். கடமையை விரும்பியவர்க்கு வேண்டாத பொருளும் அதுவே.

தையல்சொல்கேளேல் (ஆத்திசூடி 62) என்கிறார் அவ்வையார்

இதெல்லாம் நாம் முன்னும் பின்னும் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். இதெல்லாம் பெண்களை இழிவுபடுத்தக்கூடியதா? நாம் அதனுடைய இடம், பொருள் ஏவலைக் காண வேண்டும். எந்த இடத்தில் எதற்காக சொல்லப்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தலையும் இல்லாமல், வாலும் இல்லாமல் நடுவில் பார்த்தால் அப்படித் தான் புரியும்.

இடையிலிருந்து ஒரே ஒரு வரியை மாத்திரம் நம்முடைய வசதிக்காக எடுத்துக்கொண்டால், “நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்”, என்பது போல, முன்னும் பின்னும் பார்த்தால் தான் அந்த வாக்கியத்திற்கு அர்த்தம் புரியும்.

பல இடங்களில் கீதாசாரம் என்று எழுதி வைத்திருப்பதைக் காண்கிறோம்.

“எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.”

என்பது பல அலுவலகங்களிலும் இருப்பதைப் பார்க்கலாம். இப்படி ஒரு வாக்கியம் பகவத்கீதை மூல நூலில் இல்லவே இல்லை. ஆனால் கீதாசாரம் இது தான் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால், மூல பகவத் கீதையை நாம் படித்ததே இல்லை. படித்தது முழுவதும் மொழிபெயர்ப்பு. மூல நூல்களைப் படித்தவர்களுக்குத் தெரியும் பகவத் கீதையில் இப்படி ஒரு வாக்கியம் கிடையாது என்று.

அதுபோலத்தான், மூல நூல்களைப் படிக்கும்போது, நமக்கு அதனுடைய தெளிவு ஏற்படும். மனு தர்மத்திலேயே என்ன சொல்லப்படுகிறது என்றால். பொருளாதாரத்தில் பெண்களுக்கு அதிகாரம் உண்டு. இதை மிகத் தெளிவாக சொல்கிறது. வயதிற்கு வந்த பெண் தன்னுடைய மனதிற்குப் பிடித்தமான கணவனை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உண்டு. இதெல்லாம் மனு தர்மம் சொல்லக்கூடியது. அப்போது பெண்களை ஆட்சியில் அமர்த்திப் பார்ப்பதும், பெண்கள் அதிகாரத்தோடு இருப்பதும் மற்ற நாடுகளுக்கும் மற்ற மதங்களுக்கும் வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால், நம்முடைய மதத்தில் அது புதிது கிடையாது. பெண்ணை போற்றிப் பாதுகாப்பதே தர்ம சாஸ்த்ர நூலின் நோக்கம். ஆதவற்ற நிலையில் இருக்கும் பெண்களை அரசே காக்க வேண்டும் என்று கருணையுடனே  மனு ஸ்ம்ருதி  பேசுகிறது.

வசாஅபுத்ராஸுசைவம்ஸ்யாத்ரக்ஷணம்நிஷ்குலாஸு

பதிவ்ரதாஸு ச ஸ்த்ரீஷு விதவாஸ்வாதுராஸு ச (8-28)

பிள்ளையில்லாத, கணவனை இழந்த பெண்களோ, அல்லது கணவனைப் பிரிந்து தனியாக வாழும் பெண்களோ நாட்டில் இருந்தால், அவர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

எந்த ஒரு ஆண் மகனாவது தனியாக இருக்க முடியுமா? ஏதோ ஒரு காலகட்டத்தில் ஒரு பெண்ணை சார்ந்து தான் நம்முடைய வாழ்க்கை இருக்கிறது. சிறு குழந்தையாக இருக்கும்போது அம்மாவை சார்ந்து தான் இருக்கிறோம். இளமை பருவத்தில் மனைவியை சார்ந்திருக்கிறோம். நம்முடைய வாழ்வியல் அமைப்பே, அதனால் தானே கல்யாணம் என்ற ஒரு அமைப்பை வைத்திருக்கிறார்கள். அப்படி, நம் வாழ்வியல் நெறிமுறை ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் சார்ந்து இருக்க கூடியதற்குப் பெயர் தான் நெறிமுறைகள்.

அதெல்லாம் எனக்கு வேண்டாம், என் இஷ்டம் போல நான் இருப்பேன் என்று இருப்பவருக்கு தர்ம சாஸ்திரம் எதற்கு? அவர்களுக்கு அவசியமே இல்லை. அதை கடைபிடிக்கப் போவதில்லை, அதில் நம்பிக்கை இல்லை என்பவர் அந்த புத்தகத்தைப் பற்றி பேசவே வேண்டாம். இந்த நெறிமுறைப்படி வாழ்வேன், தர்மத்தின்படி வாழ்வேன், எனக்கு என்று ஒரு கோட்பாடு இருக்கிறது, அந்த நெறிகளின் படி வாழ்க்கையை அமைத்துக்கொள்வேன் என்று நினைப்பவர்களுக்கு இந்த தர்ம சாஸ்திர நூல்களெல்லாம் பயனுள்ளதாக இருக்கும். கண்டதே காட்சி, கொண்டதே கோலம், என் இஷ்டப்படி தான் நான் வாழ்வேன் என்று இருப்பவர்களுக்கு எந்த நூலுமே பயன் தராது. நீதி நூல் மட்டும் அல்ல. அதன்படி பார்க்கும்போது மனுநீதி மட்டும் அல்ல, எந்த தர்ம சாஸ்திர நூலும் வாழ்வியல் நெறிமுறையைத்தான் சொல்கிறது. வாழ்வியல் நெறிமுறைகள், கட்டுப்பாடுகள் இவற்றை கேட்கமாட்டேன் என்று இருந்தால், அது அவரவர்களுடைய பிரச்சனை, நூலினுடைய பிரச்சனை அல்ல.

இன்றையநடைமுறை

மனு தர்ம விதிகள் இப்போது நடைமுறையில் இருக்கிறதா என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறி தான். மனு தர்மம் மட்டும் அல்ல, பல தர்ம நூல்கள் பரவலாக நடைமுறையில் இல்லை என்பதே நிதர்சனம். ஆனால் ஒரு சில விஷயங்கள் ஒரு சில இனக்குழுக்கள், ஒரு சில மக்கள் கட்டாயமாக அதை கடைப்பிடிக்கத்தான் செய்கிறார்கள்.

உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால், வேறு முறையில் அது மாறி வந்துள்ளது. தர்மம் அதே தான் –  அதை நடைமுறைப்படுத்துதல் என்பது பல விஷயங்களில் மாறுதலை அடையத்தான் செய்திருக்கிறது.

உதாரணமாக மனு தர்மம் சொல்லக்கூடிய விஷயம் ஒன்றை பார்ப்போம்.

பரதாராபிமர்சேஷுப்ரவ்ருத்தான்ந்ரூன்மஹீபதி

உத்வேஜன கரைர்தண்டை சின்னயித்வா ப்ரவாஸயேத்– (மனு ஸ்ம்ருதி 8-352)

பெண்களின்கற்புக்குக்கேடுவிளைவிக்கும்ஆண்களுக்குஅதிகபட்சதண்டனைகொடுக்கவேண்டும்பிறர்இத்தகையதவறைச்செய்வதற்கேஅஞ்சும்அளவுக்குஅந்ததண்டனைஇருக்கவேண்டும்.

“ஒரு பெண்ணை பலவந்தப்படுத்துபவன் அல்லது பாலியல் ரீதியாக துன்புறுத்துபவன் இருந்தானானால், அவனுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். அது அரசுடைய கடமை”, என்று மனு தர்மம் சொல்கிறது. கொடுக்கக்கூடிய தண்டனை எப்படி இருக்க வேண்டும் என்றால், அந்த தண்டனையைப் பார்த்து, அந்த தப்பை இன்னொருவன் செய்வதற்கு பயம் உண்டாகும்படி, அந்த தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று மனு தர்மம் சொல்கிறது.

இது அப்படியே நடைமுறையில் உள்ளதா என்றால் வேறு விதமாக மாறுதல் அடைந்து இருக்கத்தான் செய்கிறது. அப்போது, அன்றைய காலகட்ட சூழ்நிலைகளில் இருந்த பலவிஷயங்கள் இன்றைய காலகட்டத்தில் இல்லை. உதாரணத்திற்கு, அன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கான திருமண வயது மிகக் குறைவாக இருந்தது. ஆண்களுக்கும் அவ்வாறே இருந்தது. இன்று திருமண வயது என்பது, அரசு 18லிருந்து 21 ஆக அதிகரித்து, இன்னும் கூடுதலாக்கப்போவதாக நமக்கு செய்திகள் வருகிறது. அப்படி இருக்கும்போது இந்த விஷயங்களை சட்டரீதியாக நடைமுறைப்படுத்த முடியாது. அந்தமாதிரியான மாறுதல்கள் அடையத்தான் செய்திருக்கிறது. மனு தர்மம் மட்டுமல்ல எல்லா தர்மங்களுமே அந்த மாதிரி காலகட்டத்தை, சட்டத்தை அனுசரித்து பல காரணங்களுக்காக மாறுதலை அடைந்து தான் ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.

நம்முடைய அறம், பொருள், இன்பம், வீடு என்ற இந்த நான்கும் தான் ஒரு மனித வாழ்க்கையினுடைய இலட்சியம். அதைத்தான் மனு என்பவர் வழிகாட்டுகிறார். அந்த வாழ்வியலுக்கான சட்ட திட்ட நெறிமுறைகள்.

அறத்தின் வழி நின்று, தர்மத்தின் வழி நடந்து பொருளை ஈட்டி, அதாவது எப்படி வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கலாம் என்று சொல்லப்படவில்லை.

இன்று கூகுளுடைய தத்துவக் கோட்பாட்டைப் படிக்கும்போது, “You can make money without doing evil”, என்கிறார்கள். எந்த விதமான தவறான காரியமும் செய்யாமல் பணம் ஈட்ட வேண்டும் என்பது கூகுளுடைய ஒரு தத்துவக் கோட்பாடு. அதை நாம் ஒரு பெரிய விஷயமாகப் பாராட்டுகிறோம். இதைத்தான் நம்முடைய சாஸ்திரங்கள் சொல்கின்றன. நம்முடைய சாஸ்திரங்கள் சொல்லக்கூடிய சத்தியம் இது தான்.

“தர்மத்தின் வழி நடந்து, அப்படி தர்மத்தின் வழி நடந்ததனால் ஈட்டப்பட்ட பொருளைக்கொண்டு, அப்படி ஈட்டப்பட்ட பொருளைக்கொண்டு உன்னுடைய மனதில் ஏற்படக்கூடிய ஞாயமான ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டு, இப்படி ஒரு வாழ்வியல் வாழ்ந்து வீடுபேறு என்று சொல்லக்கூடிய மோக்ஷத்திற்கு உன்னை நீ தயார் படுத்திக்கொள்ள வேண்டும்”. இது தான் தர்ம சாஸ்திரங்கள் கூறக்கூடிய நெறிமுறை. இதைத்தான் மனு தர்மமும் சொல்கிறது.

மனுவின் காலமும் வாழ்ந்த பகுதியும்

மனு வாழ்ந்த காலம் பொ.ஊ.மு. 1500 என்பதை சதபத பிராமணத்திலும், சௌராஷ்ட்டிர மத வேதநூலான அவெத்தாவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிக் வேத கால ஆறுகளான சரசுவதி ஆறு மற்றும் திருட்டாதுவதி நதிக்கரை பகுதிகளான பிரம்மவர்த்த பகுதிகள் (தற்கால சிந்து மாகாணம், பஞ்சாப், வடக்கு இராஜஸ்தான் மற்றும் தெற்கு அரியானா) பெருமழையால் அழிந்த பின்பு ஆரியர்கள், விந்திய மலைக்கு வடக்குப் பகுதிகளில் (தற்கால நேபாளம், உத்தரப் பிரதேசம், பிகார், மத்தியப் பிரதேசம், வங்காளம், குசராத் மற்றும் கிழக்கு இராஜஸ்தான்) குடியேறினர். அப்பகுதி பின்பு ஆரியவர்த்தம் எனற பெயரால் அழைக்கப் பெற்றது. அப்போது மற்ற முனிவர்கள் சுவாயம்பு மனுவையும் அணுகி இயற்கைச் சீற்றங்களை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் சமூக வாழ்க்கை நெறி முறைகளை எவ்வாறு மக்கள் வகுத்துக் கொண்டு வாழ்வது என்று கேட்டதற்கு, மாமுனி மனு வகுத்துக் கொடுத்ததே மனுஸ்மிருதி ஆகும்.

சிறப்பம்சங்கள்

பிரித்தானிய இந்தியா ஆட்சி வரை “மனு தர்ம சாத்திரம்” என்பது இந்து மதத்திற்கு ஆதாரமாக கையாண்டு வருவதும், நடைமுறையில் பின்பற்றி வருவதுமாக இருந்தது. இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் இந்திய குடியுரிமை சட்டங்கள் இயற்றுவதற்கு முன்பு இந்தியாவை ஆண்ட இசுலாமியர்களும் பிரித்தாணியர்களும் இந்து மக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளிலும், குடி உரிமை வழக்குகளிலும் மனு தரும சாத்திரத்தின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கினர்.மேலும் இந்நூலை பின்பற்றி சந்திரகுப்த மௌரியரின் தலைமை அமைச்சர் கௌடில்யர் என்ற சாணக்கியர், அர்த்தசாஸ்திரம் என்ற அரசு நிர்வாகம் தொடர்பான நூலை எழுதி புகழ் பெற்றார்.

தாக்கங்கள்

மனு தர்ம சாத்திரத்தின் தாக்கம் இந்தியா முழுவதும் காணக் கிடைக்கிறது. சங்க கால அரசர்கள் பின்பற்றி வந்த வாழ்க்கை முறை, இந்த மனு தர்மத்தின் அடிப்படையில் தான் அமைந்தது-

உள்ளடக்கம்

பரம் பொருளாகிய பகவான் தமது விருப்பத்தின் காரணமாக பிரம்மா மூலம் அண்ட சராசரங்களை படைத்தார். மனித குலத்தை பெருக்கவே மரிசி, ஆங்கிரசர், அத்திரி, புலத்தியர், புலகர், கிருது, பிரசேதகர், வசிட்டன், பிருகு மற்றும் நாரதர் எனும் பத்து பிரசாபதிகளை படைத்தார். இந்த பிரசாபதிகள் மூலம் சுவாயம்பு மனு உட்பட எழு மனுக்களும், தேவர்கள், சுவர்க்கலோகம், மாமுனிகள், யட்சர்கள், காந்தர்வர்கள், கிண்ணரர்கள், கிம்புருடர்கள், அசுவனிகுமாரர்கள், அட்டதிக்கு பாலகர்கள், அசுரர்கள், அப்சரசுகள், மருத்துக்கள், இராக்கதர்கள், பைசாசர்கள், நாகர்கள், கருடர்கள், சர்ப்பங்கள், பிதுர்கள், தாவரங்கள், விலங்கினங்கள், நீர் வாழ் பிராணிகள் தோன்றின. பின்னர் மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க சமூகம் கட்டுக்கோப்பாக இயங்க வர்ண மற்றும் ஆசிரம தருமங்களை மனு வகுத்து கொடுத்தார். இது ஆசாரப்பகுதி, விவகாரப்பகுதி, பிராயச்சித்தப் பகுதி என மூன்று பகுதிகளையும் 12 அத்தியாங்களையும் கொண்டது.

1வது அத்தியாயம்

உலகத் தோற்றம்:-அண்ட சராசரங்களின் தோற்றம், தேவர்கள்,மானிடர்கள், அசுரர்கள், தோற்றம் , காலக்கணக்கீடு, நால்வகை வர்ண சமூகம், நால்வகை ஆசிரமம் மற்றும் அதன் கடமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றி விவரிக்கிறது.

2வது அத்தியாயம்

பிரம்மச்சர்யம்:- பூணுல் அணிதல் (உபநயனம்), குருபக்தி, வேதம் படித்தல், வழிபாட்டு முறைகள் மற்றும் குருகுல நிலை பற்றி விவரிக்கிறது.

3-5 அத்தியாயங்கள்

அந்தணர் தருமம்:-இல்லறத்தின் மேன்மைகள், திருமண உறவுகள், யக்ஞம், விருந்தோம்பல், பலியிடுதல், இறந்த முன்னேர்களுக்கு செய்ய வேண்டிய பிதுர் கடன்கள், தகாத உறவுகள், கலப்புத் திருமணங்கள், விலக்க வேண்டியவைகள், வேதம் ஒதுதல், ஒதுவித்தல், ஒழுக்க நெறிகள், உணவு முறைகள், தூய்மை, பெண்டிர் தொடர்பான விதிகள், உண்ணத்தக்கவை, தகாதவைகள், விசேட காலங்களில் புலால் உண்ணல், பிறப்பு-இறப்பு தீட்டு விதிகள், பெண்களுக்கு உகந்தவைகளும், விலக்கத்தக்கவைகளும் தொடர்பான விதிகள்.

6வது அத்தியாயம்

வானப்பிரத்தம் & துறவறம்:-காட்டில் வாழ்தல், உணவு முறைகள் ,ஒழுக்க விதிகள், செபம்,தவம் செய்தல்,வேத வேதாந்த விசாரம் செய்தல் தொடர்பான விதி முறைகள்.

7வது அத்தியாயம்

சத்திரிய தருமம்:-மன்னர்களின் மாண்புகள் & பண்புகள், கடமைகளும் பொறுப்புகளும்,அரசின் நீதிநெறி சட்டங்கள்,அரசியல் சிந்தனைகள்,அரசின் அதிகாரிகள், தலைநகரம், போர் அறம், உள்நாட்டு நிர்வாகம்,வரி விதித்தல், பகை அரசர்களின் பலம் பலவீனம் அறிதல், பகை நாட்டை முற்றுகையிடல், போர் செய்யும் முறைகள், வெற்றி வாகை சூடல், புலவர்களுக்கு பரிசு வழுங்குதல், வேதம் அறிந்த அந்தனர்களுக்கு தானம் வ்ழங்குதல், வேள்விகள் செய்தல், சமூகத்தில் வர்ணாசிரம தரும நெறிகள் காத்தல் பற்றி விவரிக்கிறது.

8வது அத்தியாயம்

நீதிநெறிசட்டங்கள்:-குடிவகுப்பு, நீதிமன்றம், உடைமைகள், புதையல், களவுகள், கடன்கள், வட்டி, கொதுவை, காப்பு பொருள், பொருள் விற்பனை, பொருள் விற்பனை விலை நிர்ணயம்,அடிதடி கலவரம், பலாத்காரம், நிலத்தகராறு, நட்ட ஈடு,மான-நட்ட ஈடு, உடன்படிக்கைகள், நம்பிக்கை துரோகம், செய்கூலி, கலப்படம் தகாத செயல்கள் பற்றி விவரிக்கிறது.

9வதுஅத்தியாயம்

வைசியர், ஆடவர் & பெண்டிர் அறம்:-திருமணம்,மகப்பேறு,பாகப்பிரிவினை,கவறாடல் முதலிய குற்றங்களுக்கு தண்டனைகள் மற்றும் வைசியர்களின் கடமைகள் பற்றி விவரிக்கிறது.

10வது அத்தியாய ம்

சூத்திரர் & வர்ண கலப்பு சாதிகள் மற்றும் ஆபத்து தர்மம்:-சூத்திரர்களின் கடமைகள், கலப்பு சாதிகளின் தோற்றமும் சமூகத்தில் அவர்களுக்குரிய தகுதிகளும், கல்வி ஞானத்தால் கீழ்ப்பிறப்பாளர்கள் உயர்நிலை அடைதல், ஆபத்து காலங்களில் உயர்குடி மக்களுக்கு விதி விலக்குகள் தொடர்பான விதிகள் பற்றி விவரிக்கிறது.

11வது அத்தியாயம்

குற்றங்களும் அதற்கான கழுவாய்களும் :- தெரிந்தும் தெரியாமலும் செய்த குற்றங்களுக்கு செய்ய வேண்டிய கழுவாய்கள், யாகம், பாவங்களின் விளைவுகள், குற்ற வகைகள், உண்ணத்தகாதவைகள், மறுபிறப்பு, முக்குணங்கள் பற்றி விளக்குகிறது.

12வது அத்தியாயம்

வினைப் பயன்கள்:- நல்வினை தீவினைகளும் அதன் விளைவுகளும், முக்குணங்கள், வேதங்கள் மற்றும் வேதாந்தங்களின் வாய்மை, ஆன்ம ஞானம், முக்திக்கு வழிகள் முதலியவைகளை விவரிக்கிறது.

மனுதரும சாத்திரமும் பெண்களும்

மனு தரும சாத்திரத்தில் பெண்களைப் பற்றி கூறப்பட்டுள்ளவற்றில் சில,

ஒரு பெண்ணை விபசாரி என்று குற்றம் சாட்டி அதை நிலைநாட்டாதவனுக்கு நூறு பணம் தண்டம்.

—மனு தரும சாத்திரம், அத்தியாயம் 8 செய்யுள் 225

ஒரு பெண் தான் பருவமெய்தியது முதல் மூன்றாண்டுகள் வரை தந்தை தன்னைத் தக்க ஆடவனுக்கு மணம் செய்விப்பானென்று எதிர்பார்த்திருக்க வேண்டியது. அப்படி நடைபெறாவிடில், தனக்கேற்றவனைத் தானே தேடிக்கொள்ளவும்.

—மனு தரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 90

இளமையில் தந்தையாலும் பருவகாலத்தில் கணவனாலும் முதுமையில் மைந்தராலும் காக்கப்பட வேண்டியவர். ஆதலால் மாதர் எஞ்ஞான்றும் தம்மிச்சையாக இருக்கக் கூடாதவர்

—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 3

எந்தப் பருவத்தினளாயினும் தனது இல்லத்தில் கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச்செயலும் இயற்றலாகாது.

—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 5 செய்யுள் 147

தங்கள் அலங்காரத்தால் மனிதரைக் கவரும் தன்மை பெண்களின் இயல்பாகையால் அறிந்தோர் பெண்களிடம் கவனக் குறைவாக நடந்து கொள்ளமாட்டார்கள்.

—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 2 செய்யுள் 213

புலன்களை அடக்கியவனாயினும் அறிவிலியாயினும் அவர்களைத் தங்களது தொடர்பால் காமக்குரோதமுள்ளவனாகச் செய்வர் மாதர்.

—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 2 செய்யுள் 214

பெரும்பாலும் மாதர் கற்பிலார் என்றே பெரிதும் பல நூல்களிலும் குறப்படுவனவற்றையும் கேட்பீராக.

—மனுதரும சாத்திரம் 9, அத்தியாயம் செய்யுள் 19

ஈன்று, புரந்து, விருந்தோம்பி, இல்லம் புரிதற்கு மாதரே ஏற்றவர் என்பது காணக்கிடைக்கிறது.

—மனு தரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 27

வீட்டிற்கு வேண்டிய பாத்திரம் முதலியவற்றை தேடிப் பெறுவதற்காக பொருளை அவளிடம் கொடுத்தும் அதனைக் காப்பாற்றி வைத்து வேண்டிய போது செலவிடும்படி செய்தும் தட்டு முட்டுச் சாமான்களை சுத்தமாக வைத்துக் கொள்ளச் செய்தும் வீட்டை துப்புரவாக்கி வைத்தல், தேவ பூசைக்கான ஏற்பாடுகளைச் செய்தல், அடுக்களைப் பொறுப்பு, பாத்திரம் படுக்கை முதலியவற்றைச் சரியாக கவனித்துக் கொள்ளல் போன்ற இன்றியமையாத இல்லத்துக் காரியங்களை மனைவிக்குக் கற்பித்து அவற்றை அவளைக் கொண்டு செய்வித்தல் போன்றவற்றாலும் அவளது மனம் வேறிடம் செல்லாமற் காக்க!

—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 11

கணவன் சூதாடுகிறவனாயினும் குடிகாரனாக இருந்தாலும் பிணியாளனாயினும் மனைவி அவனுக்கு செருக்குற்று பணிபுரியாமலிருந்தால் அவளுக்கு அழகு செய்தல், ஆடை, படுக்கை இவற்றை மறுத்து மூன்று மாதம் விலக்கி வைக்கவும்.

—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 78

இழிநடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றையுடையவனாயினும் கற்பினாளான பெண் தன் கணவனை தெய்வமாகப் பேணுக.

—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 5 செய்யுள் 154

மறுமையின் பத்தில் நாட்டமுள்ள பெண்மணி தன் கணவன் இருப்பினும் இறப்பினும் அவன் கருத்துக்கு மாறுபாடாக நடக்கக் கூடாது.

—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 5 செய்யுள் 156

—————–

அத்தியாயம் -1

ஏகாக்ர  சித்தத்தோடு  அமர்ந்திருந்த மனுவை அணுகிய மஹரிஷிகள் அவரை முறைப்படி வணங்கி இவ்வாறாகச் சொன்னார்கள்.-1-

பகவானே, நான்கு வர்ணத்தவரும் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்களைப் பற்றியும் இவர்களுக்குள் கலப்பு சம்பந்தங்களால் ஏற்பட்ட வர்ணத்தாருடைய தர்மங்களைப் பற்றியும் எமக்கு எடுத்துரைப்பீராக.–2-

பிரபுவே, வேதங்களில் கூறப்பட்ட அனைத்தையும், பிரம்ம சொரூபத்தையும், தத்துவங்ளையும் அறிந்தவர் தாங்கள் ஒருவரே.  தாங்களே நாங்கள் கேட்ட விஷயத்தை தெளிவுபடுத்தக் கூடியவர்.–3-

மஹான்களான மஹரிஷிகள் இவ்வாறு வினவ, அளப்பரிய ஞானம் கொண்டவரான மனுபகவான் அந்த மகரிஷிகளைத் தக்கபடி உபசரித்து, அவ்வாறே ஆகட்டும்” கூறுகிறேன், கேளுங்கள் என்றருளினார்.–4-

இவ்வுலகம் இருட்டாகவும், பார்வைக்குப் புலப் படாததாகவும் ஊகிக்க முடியாததாகவும் , உருவமற்றதாகவும், ஒலியற்றதாகவும் தூங்கிக் கொண்டிருப்பது போல் இருந்தது.–5-

ஐஸ்வர்யங்களோடு கூடியவரும், யோகாப்யாசத்தால் அறியக் கூடியவரும், இடையூறு ஏதுமின்றி சிருஷ்டிக்கக் கூடியவருமான பரமாத்மா பஞ்ச பூதங்களைப் பிரகாசிக்கச் செய்த படி தாமாக வெளிப் பட்டார்.–6-

வெளிப் புலன்களால் அறிய முடியாதவரும்,பரிசுத்தமான மனத்தினால் அறியத் தக்கவரும், அருவமானவரும், நித்யமானவரும், ஊகிக்க முடியாதவருமான பரமாத்மா தாமாகவே சிருஷ்டி புரிவதற்காக வெளிப் பட்டார்.–7-

அப்படி வெளிப்பட்ட அவர்,  சிருஷ்டி செய்ய மனங் கொண்டவராக, முதலில் அப்புவை(ஆதிநீர்) சிருஷ்டி செய்தார். அந்த நீரில் தம் சக்தியின் ரூபமான ஒரு விதையை வைத்தார்.-8-

அந்த விதை சூரிய ஒளிக்கு நிகரான ஒளியோடும், தங்கமென தகதகத்த நிறத்தோடும்  ஒரு அண்டமாக அதாவது  ஒரு முட்டை வடிவமாக ஆனது. அந்த அண்டத்தில் பரமாத்மாவானவர் தாமே பிரம்மாவாக ஜன்மமெடுத்தார்–9-

தண்ணீருக்கு நாரம்  என்றும் பெயருண்டு. ஒரு செயலில் ஈடுபட்டு, தண்ணீரில் இயங்கத் தொடங்கியதால் பரமாத்மாவான அவர் நாராயணன் என்ற நாமம் பெற்றார்.–10-

சிருஷ்டிக்கப் பட்டவற்றுக் கெல்லாம் காரணமாய், வெளிப் புலன்களுக்கு எட்டாத படியாக, தோற்றமும் அழிவும் அற்று, நித்தியமான, அநித்தியமான பொருட்களின் உருவமாய் எந்த பரமாத்மா உள்ளாரோ, அந்த பரமாத்மாவினால் சிருஷ்டிக்கப் பட்ட அந்த புருஷன் உலகத்தில் ” பிரம்மா” என்றழைக்கப் பட்டார்–11-

அந்த அண்டத்தில் பிரம்மா ஒரு வருடம் முழுமையும் தவமியற்றிய பிறகு,(தேவர்களுக்கு வேறு காலக் கணக்கு) ” இந்த அண்டம் இரண்டாகப் பிளக்கட்டும்” என்று நினைத்த அளவில்அண்டம் இரண்டானது.-12-

பிரம்மா, பிளவுண்ட அண்டத்தின் மேல் பாதியில் ஆகாயத்தையும், கீழுள்ள பாதியில் பூமியையும்,நடுவில் வெளியையும் ( அண்ட வெளியையும்) எட்டு திசைகளையும், கடலையும் படைத்தார்.–13-

பிரம்மா பரமாத்மாவிடமிருந்து  சத், அசத் ரூபமான மனத்தைப் பெற்றார். அந்த மனத்திலிருந்து தன் செயலை நிறைவேற்றிக் கொள்ளத் தக்கதான அஹங்காரத்தைப் பெற்றார்.-14-

மஹத்” என்னும் தத்வத்தையும், ஆத்மாவுக்கு உதவியாக இருப்பதான சத்வ குணத்தையும், ரஜஸ், தமஸ் என்னும் குணங்களையும், விஷயங்களைக்கிரகிக்கும் சக்தி கொண்ட பஞ்சேந்திரியங்களையும் முறையாகப் படைத்தார்-15

அகங்காரத்தையும்,  அதன் தன் மாத்திரைகளையும், சூட்சும அவயவங்களையும் ஆறு  விகாரங்களையும் சேர்த்து சகல பூதங்களையும் படைத்தார்.-16-

அஹங்கார தன்  மாத்திரை வடிவங்களான சூட்சும அவயவங்கள் ஆறும், பூதேந்திரியங்களும் காரிய ரூபமாக பிரம்மாவிடம் சேருவதால் பிரம்மாவை அவற்றின் சேர்க்கை கொண்டவர் என்று பொருள் படும் விதமாக, சரீரம்” என்று பண்டிதர்கள் கூறுகிறார்கள்.–17-

பஞ்ச மகா  பூதங்களும் தங்கள் காரியங்களுடன் கூடியும், மனம் வெளியில் புலப் படாத சூட்சுமமான அவயவங்களோடு கூடியும் சரீரத்தில் பிரவேசிக்கின்றன–18-

பஞ்ச பூதங்கள், ”மஹத்” தத்துவம்”, ” அஹங்காரம்” என்னும் இரண்டு, ஆக ஏழின் காரணமாக உலகம் தோன்றுகிறது.-19-

ஆகாயம், வாயு, அக்னி, ஜலம், மண் என்னும் பஞ்ச பூதங்களில் முதலில் உள்ளதன் குணம் அடுத்ததன் குணத்தோடு சேர்ந்திருக்கும். இவற்றின் குணங்கள் இவற்றுக்கு அடுத்ததாக உள்ளதோடு சேர்ந்திருக்கும்.–20-

பிரம்மா தன்னால் படைக்கப் பட்ட அனைத்துக்கும் வேதத்திலுள்ளபடி பெயர்களைச் சூட்டினார். அவைகளுக்கான வெவ்வேறு விதமான காரியங்களையும் வேதங்கள் கூறியபடியே ஏற்படுத்தினார்.–21-

பிரம்மா, கர்மாத்மாக்களான தேவர்களையும், பிராணிகளையும், சாத்யர்களையும், யக்ஞங்களையும் படைத்தார்–22-

யக்ஞங்கள் வேதங்களைக் கொண்டே நிறைவேற்றக் கூடியவை  என்பதால், யக்ஞங்களுக்காக வேண்டி, ருக், யஜுர், சாமம் என்னும் வேதங்களை , அக்நி, வாயு, சூரியர்களிடமிருந்து கிரகித்தார்.–23-

பிரம்மா, காலத்தையும், மாதங்கள், ருதுக்கள், வருடங்கள் முதலான கால அளவுகளையும், நட்சத்திரங்களையும், கிரகங்களையும் , நதிகளையும், கடல்களையும், மலைகளையும், படைத்தார்-24-

அவ்வாறே சமவெளியையும், மேடு பள்ளங்களையும், தவம், வாக்கு, சிரத்தை, காமம், கோபம் முதலானவற்றையும் படைத்தார்.–25-

செய்யத்தக்கது இது. தகாதது இது என்னும் அறிவைப் பெறுவதற்காக தர்மங்களையும் அதர்மங்களையும் வேறு படுத்தினார். மேலும் மக்களை சுகம், துக்கம் என்னும்  இரட்டைகளோடும்  விருப்பு, வெறுப்பு என்னும் இரட்டைகளோடும் இணைத்தார்.-26-

பஞ்ச பூதங்களின் சொரூபங்களோடு, இனி சொல்லப்போகின்ற அனைத்தையும் படைத்தார்.–27-

பிரம்மா, முதன் முதலில், ஆதியில் சிருஷ்டித்தபோது எந்தெந்த காரியங்களைச் செய்வதற்காக எந்தெந்த வர்ணங்களைப் படைத்தாரோ, அந்தந்த  வர்ணங்கள் மீண்டும் படைக்கப் படும் போதும் பழைய படியே ஒழுகுகின்றன.–28-

சிருஷ்டியின்போது பிரம்மா ஹிம்சிக்கும் குணம், அஹிம்சை, மிருதுவான குணம் , குரூர குணம், தர்மம், அதர்மம், பொய் உண்மை முதலானவைகளை எவை எவைகளுக்கு எவை என்று நியமித்தாரோ, அதே போன்றே அவையவை மீண்டும் படைக்கப் படும் போதும் அதே குணங்களோடு ஒழுகுகின்றன–29-

எவ்வாறு ருதுக்கள்  தாமே தத்தமது குணங்களை அடைகின்றனவோ அவ்வாறே பிராணிகளும் தத்தமது குணங்களை அடைகின்றன(ஒரு வருடத்தை ஆறு ருதுக்களாகக் கூறுகிறோம்).-30-

உலகைப் படைத்த பிரம்மா அது பல்கிப் பெருகும் பொருட்டு, உலகம் உய்யும் பொருட்டு நான்கு வகையினரை- நான்கு வருணத்தாரைப் படைத்தார்.–31-

பரம் பொருளானவர், தம் தேகத்தை  இரண்டாகப் பிரித்துக் கொண்டு ஒரு பாகம் ஆணாகவும், மற்றொரு பாகம் பெண்ணாகவும் மாறினார். அந்த ஆண், அந்தப் பெண்ணிடம் ” விராட்” புருஷனை சிருஷ்டித்தார்.( அகில உலகங்களையும் தம் சரீரமாகக் கொண்ட விஸ்வரூபிக்கு விராட் புருஷன் என்று பெயர்)–32-

இப்போது  மனுபகவான், பிரம்ம தேவர் தம் கூற்றாக மனுவுக்கு  எப்படி உரைத்தாரோ, அதை அவ்வாறே இப்போது எடுத்துரைக்கிறார்.-நானே விராட் புருஷனின் தவத்தால்  தோன்றிய பிரம்மா. உலக சிருஷ்டியை செய்வதற்காக விராட் புருஷனால் படைக்கப் பட்டவன்.–33-

 நான் பிரஜைகளை சிருஷ்டிப்பதற்கான அளப்பரிய சக்தியை அடைவதற்காக கடும் தவமியற்றினேன்.முதலில் பத்து  பிரஜாபதிகளை சிருஷ்டித்தேன். ( பிரஜாபதி என்பவர்கள், உலகில் சிருஷ்டியை செய்வதற்காக பிரம்மாவால் படைக்கப் பட்டவர்கள்)-34-

மரீசி, அத்ரி, அங்கிரஷ், புலஸ்தியன், புலஹன்,க்ரது, பிரசேதஸ், வசிஷ்டன், பிருகு, நாரதன் என்னும் பத்துப்பேர்களே முதலில் நான் படைத்த பிரஜாபதிகள்” இவ்வாறு பிரம்ம தேவர் கூறினார்.–35-

தேஜஸ் மிகுந்த  அவர்கள், தங்களைப் போல் தேஜஸ் கொண்ட ஏழு மனுக்களையும், தேவர்களையும் , தேவ உலகங்களையும்,   மிகுந்த தேஜஸ் கொண்டமகரிஷிகளையும் சிருஷ்டித்தனர்.–36-

யக்ஷர்கள், ராட்சதர்கள், பிசாசர்கள், கந்தர்வர்கள் , அப்சரஸ்கள், அசுரர்கள், நாகர்கள், சர்ப்பங்கள், கருடன், முதலான பறவைகள் முதலாக பித்ருக்களுடைய பல்வேறு  கணங்களையும் படைத்தனர்.–37-

மின்னல்கள், இடிகள், மேகங்கள், ரோஹிதம் எனப்படும் நீண்ட நட்சத்திரம், வானவிற்கள், வால் நட்சத்திரங்கள், உற்பாதங்கள், எரி நட்சத்திரங்கள் முதலான பலவித நட்சத்திரங்களையும் படைத்தனர்.-38-

கின்னரர்கள், வானரர்கள், மீன்கள்,விதவிதமான பறவைகள்,பசுக்கள், மான்கள், கொடிய மிருங்கள், மனிதர்கள் முதலான வற்றை படைத்தனர்.–39-

கிருமிகள், புழு  பூச்சிகள், வண்டுகள்,விட்டில் பூச்சிகள், பேன்கள், ஈக்கள், கொசுக்கள், முதலானவற்றையும் மரங்களையும், மலைகளையும் கூட படைத்தனர்.–40-

மஹரிஷிகள் தவம் புரிந்து என் ஆணைப்படி இங்கே தென்படுகின்ற தாவரங்கள், மிருகங்கள், மனிதர்கள் ரூபமான உலக முழுதையும், அதனதன் வினைப்படி படைத்தனர்.–41-

இனி எந்தெந்த பூதங்களுக்கு அதாவது எந்தெந்த  உயிரினங்களுக்கு எந்தெந்த கர்மாக்கள் சொல்லப் படுகின்றனவோ அந்தந்த பூதங்களுடைய கர்மாக்களையும் ஜன்மாவினுடைய கிரம யோகத்தையும் உங்களுக்கு  உரைக்கிறேன்.–42-

பசுக்கள், மான்கள், கொடிய மிருகங்கள், ராட்சதர்கள், பிசாசர்கள், மனிதர்கள்,  முதலானோர் கர்ப்பத்தினின்று பிறந்தவர்கள்–43-

பறவைகள், சர்ப்பங்கள். மீன்கள், ஆமைகள் போன்றவை முட்டையினின்று  தோன்றுவன். இவற்றில்  சில  நீரில் வாழ்வன. சில நிலத்தில் வாழ்வன–44-

காட்டு ஈக்கள், கொசுக்கள், பேன்கள், ஈக்கள், மூட்டைப் பூச்சிகள், மேலும் இவற்றைப்போன்று எவையெல்லாம் வெப்பத்தினால் ( புழுக்கத் திலிருந்து) பிறக்கின்றனவோ , அவை யனைத்தும் ஸ்வேதஜங்கள் எனப்படும்.–45-

மரங்களனைத்தும்  விதைகளைப் பிளந்து கொண்டு, பூமியையும் பிளந்து கொண்டு பிறப்பன.

 விதைகளினின்று பிறப்பவை போக, சில கிளைகளை பூமியில் ஊன்றுவதால், மரங்களாகின்றன. நெல் போன்ற தானியங்களும், இன்னும் சில தாவரங்களம், பயிர் வளர்ந்து பலன் தந்தவுடனே அழிகின்றன.–46-

மலர்கள் இல்லாமலே பழங்களைத் தரும் மரங்களுக்கு வனஸ் பதிகள் என்று பெயர். பூத்துப் பலன் தரும்  மரங்களுக்கு விருட்சங்கள் என்று பெயர்.–47-

கொத்துக் கொத்தாக ப் பூப்பவை ”குச்சம்” என்று சொல்லப் படும். புதராக மண்டி வளர்பவை ” குல்மம்” என்று சொல்லப் படும். சில புல்வகைகளும், படரும் தாவரங்களும், கொடிவகைகளும் விதைகளினின்றும் பிறந்தவை மேலும் சில  கிளைகளை பூமியில் ஊன்றுவதால் வளர்பவை.–48-

இந்தத் தாவரங்கள் அனைத்துமே, கர்மஹேதுவான தமோ குணத்துடன் கூடியதாக,, உணர்வுகளுடன் கூடிய மனமும் பெற்றிருப்பதால் சுகதுக்கங்களை அனுபவிப்பவையாக உள்ளன.–49-

பயங்கரமானதாகவும், எப்போதும்  அழிவுக்கு ஆட்படுவதாகவும் உள்ள இந்த பூத சம்சாரத்தில் பிரம்மா முதல் தாவரங்கள் ஈறாக உள்ள சகல ஜீவசிருஷ்டிகளும் கூறப் பட்டன.–50-

இவ்வாறு என்னையும் சர்வத்தையும் படைத்த, அளவற்ற பராக்ரமம் பொருந்திய பிரம்மா, காலத்தை காலத்தோடு சேர்த்து, அதாவது சிருஷ்டி காலத்தை பிரளயகாலத்தோடு சேர்த்து, தன்னுள் தான் கலப்பார்.–51-

எப்போது அவர் விழிப்புறுவரோ, அப்போது இந்த உலகம் இயங்கத் தொடங்கும். எப்போது அவர் சாந்தமாக உறங்கத் தொடங்குகிறாரோ, அப்போது அனைத்தும் ஒடுங்கும்.–52-

எப்போது அவர் உறங்கிக் கொண்டிருக்கிறாரோ, அப்போது கர்மாவின் உருவங்களான ஜீவன்களனைத்தும் காரியங்கள் ஏதுமற்று இருக்கும். அனைத்து இந்திரியங்களோடு மனமும் ஓய்வெடுத்துக் கொள்ளும்.–53-

எப்போது ஜீன்களெல்லாம் ஒரே தருணத்தில் அந்த மஹாத்மாவிடம் கலக்கின்றனவோ, அப்போது அவர் அனைத்து இயக்கங்களையும் விட்டு சுகமாக உறங்குகிறார்.(ஒடுக்கம்)–54-

எப்போது இந்த ஜீவன் இந்திரியங்களுடன், ஞானமற்றுப் போய், மூச்சுவிடும் செயலைச் செய்யாமல் இருக்கிறதோ, அப்போது இந்த ஜீவன் உடலிலிருந்து விலகுகிறது.–55-

எப்போது ஜீவன் இந்திரியங்களுடன் கூடியதாகிறதோ, அப்போது விதையை அடைந்து தாவரமாகவோ அல்லது மனித தேகத்தை அடைந்து மனிதனாகவோ பிறப் பெடுக்கிறது.–56-

இவ்வாறாக பிரம்மா, விழிப்பு, உறக்க நிலைகளை மேற்கொண்டு , இந்த உலகத்தைப் படைக்கவும் செய்கிறார். அழிக்கவும்(ஒடுக்கவும்) செய்கிறார்.–57-

இந்த தர்ம சாஸ்திரத்தை முதலில் உருவாக்கியவர் பிரம்மா. அவரே எனக்கு(மனுவுக்கு)  இந்த சாஸ்திரத்தை விதி முறைப் படி உபதேசித்தார். நான் இதை மரீசி முதலான முனிவர்களுக்கு உரைத்தேன்–58-

இந்த ப்ருகுமுனி  இந்த சாஸ்திரம் முழுவதையும் என்னிடம் பயின்றிருப்பதால், இவர் உங்களுக்கு இதை உரைக்கத் தக்கவர்.–59-

இவ்வாறு மனு கூறவும், எவ்வளவோ முனிவர்கள் இருக்கும் போது,தன் குருவான  மனு இந்த சாஸ்திரத்தை எடுத்தியம்ப, தன்னை நியமித்ததைக் கண்டு மிகுந்த சந்தோஷமுற்று கேட்கக் காத்திருக்கும்  அம்முனிவர்களைப் பார்த்து  ” கேளுங்கள்” என்றார்.–60-

( இதிலிருந்து தொடர்வது ப்ருகு முனிவர் வாயிலாக வெளிப் பட்டவை)

மஹாத்மாக்களும், தேஜஸ்மிக்கவர்களுமான, ஸ்வாயம்புவ மனுவின் வம்சத்தவர்களான ஆறுபேர். சிருஷ்டித் தொழிலில் ஈடுபட்டு தத்தம் பிரஜைகளை உருவாக்கினார்கள்.–61-

ஸ்வரோசிஷன், உத்தமன், தாமசன், ரைவதன், சாட்சுசன், மஹா தேஜஸ் கொண்ட வைவஸ்வதன் இவர்களே அந்த ஆறு பேர்கள்.–62-

மிக்க சக்தி படைத்தவர்களான, ஸ்வாயம்புவ மனு முதலான இந்த ஏழு பேரும் தங்கள் தங்கள் அந்தரங்களில்( காலங்களில்) உயிர்களைப் படைத்து, காத்து ஆட்சி நடத்தினர்.–63-

இமை கொட்டும் நேரம் பதினெட்டு கொண்டது ஒரு காஷ்டை எனப்படும். முப்பது காஷ்டைகள் கொண்டது ஒரு கலை எனப்படும்.-முப்பது கலைகள் கொண்டது ஒரு முகூர்த்தம்.- முப்பது முகூர்த்தங்கள் கொண்டது ஒரு இரவும் பகலும் ஆகும்.–64-

சூரியன் இரவு பகல்களை தேவர்களுக்கென்றும் மானிடர்களுக்கென்றும் ஏற்படுத்தினார். இரவு என்பது உறக்கத்துக்காகவும், பகல் காரியமாற்றுவதற்காகவும் ஏற்படுத்தப் பட்டன.–65

மானிடர்களுடைய ஒரு மாதம் என்பது பித்ருக்களுடைய இரவும் பகலுமான ஒரு நாள் எனப்படும். அதில் தேய்பிறை கர்மானுஷ்டானங்களுக்கும், வளர்பிறை உறக்கத்துக்கும் ஏற்பட்டவை.-( அதாவது தேய்பிறை பித்ருக்களுடைய ஒரு பகல் பொழுது. வளர்பிறை பித்ருக்களுடைய ஒரு இரவுப்பொழுது)–66-

மனிதர்களுடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு இரவும் பகலுமான ஒரு நாள். இதில் உத்தராயனம் என்னும் ஆறு மாதங்கள் தேவர்களின் ஒரு பகல் பொழுது. தட்சிணாயனம் என்னும் ஆறு மாதங்கள் தேவர்களின் ஒரு இரவுப் பொழுது–67-

பிரம்ம தேவருடைய இரவு பகலுக்கான  காலக் கணக்கையும் யுகங்களின் காலக் கணக்கையும்  கூறுகிறேன் , கேளுங்கள்–68-

நாலாயிரம் தேவ வருடங்கள் கொண்டது கிருதயுகம்.-மேலும் காலையில் சந்த்யாகாலம் என்று நானூறு வருடங்களும், மாலையில் சந்த்யா காலம் என்று நானூறு வருடங்களும் சேரும். மொத்தத்தில் நாலாயிரத்து எண்ணூறு தேவ வருடங்கள் கொண்டது கிருதயுகம்–69

மற்ற யுகங்களில் சந்தியைகளுக்கும் யுகத்துக்கும் நூறும் ஆயிரமுமாக குறைத்துக் கொண்டே வர வேண்டும். அப்படி யென்றால், திரேதா யுகத்துக்கு மூவாயிரம் தேவ வருடங்கள், அதில் இரண்டு சந்தியைகளுக்குமாக முந்நூறு, முந்நூறு தேவ வருடங்கள் . ஆக மூவாயிரத்து அறு நூறு தேவ வருடங்கள் கொண்டது திரேதாயுகம்.–இவ்வாறாகப் பார்க்கும் போது, துவாபர யுகம் இரண்டாயிரத்து நானூறு தேவ வருடங்கள் கொண்டது.–கலியுகம் ஆயிரத்து இரு நூறு தேவ வருடங்கள் கொண்டது–70-

மானிட யுகங்கள் நான்கும் சேர்ந்தால் மொத்தம் பன்னிரண்டாயிரம் தேவ வருடங்கள். இது தேவர்களின் ஒரு யுகம்.–71-

இப்படிப்பட்ட தேவ யுகங்கள்ஆயிரம் கொண்டது பிரம்மாவின் ஒ ரு பகல். அவ்வாறே ஆயிரம் தேவ யுகங்கள் கொண்டது ஒரு இரவு. எனவே இரண்டாயிரம் தேவ யுகங்கள் கொண்டது பிரம்மாவின் ஒரு நாள்.–72-

இவ்வாறான தேவ யுகங்கள் ஆயிரம் கொண்ட பிரம்மாவின் பகல் பொழுதை ” புண்ணிய தினம்” என்பார்கள். அவ்வாறே அதே அளவுள்ள பிரம்மாவின் இரவுப் பொழுதை” புண்ணிய இரவு” என்பார்கள். இவ்வாறான பிரம்மாவின் இரவு பகல் கணக்கை அறிந்தவர்களை, ” அஹோராத்ரி யறிந்தவர்கள்” என்பார்கள்.–73-

பிரம்மா தன்னுடைய இரவு நேரத்தில் உறங்குவார். இரவு நேரம் முடியும் தருவாயில் எழுந்திருப்பார். அப்படி எழுந்திருப்பவர் சத் அசத் ரூபமான சிருஷ்டியைச் செய்யத் தொடங்குவார்.–74-

பிரம்மாவால் மனம் மஹத் சிருஷ்டியில் ஏவப்பட்டு மஹத் சிருஷ்டியிலிருந்து ஆகாயம் தோன்றியது. ஆகாயத்துக்கு ” சப்தம்” குணமாய் அமைந்தது–75-

ஆகாயத்திலிருந்து இனிய வாசனைகளையும், துர்வாசனைகளையும் கொண்டு செல்வதும், பவித்ரமானதும் ,  மிகுந்த பலம் கொண்டதுமானவாயு தோன்றியது. வாயு ” ஸ்பரிசம்” என்னும் குணம் கொண்டதாகக் கூறுகிறார்கள்–76-

வாயுவிலிருந்து மிக்க பிரகாசம் கொண்டதும், இருட்டைப்போக்கடிப்பதுமான ஜோதி ( நெருப்பு) தோன்றியது. அந்த ஜோதி ” உருவம்” என்னும் குணம் கொண்டது என்று கூறுகிறார்கள்.–77-

நெருப்பிலிருந்து தண்ணீர் தோன்றியது. தண்ணீர்”ரஸம்” என்னும் குணம் கொண்டது. தண்ணீரிலிருந்து பூமி தோன்றியது. பூமி ”வாசனை” என்னும் குணம் கொண்டது.–இப்படித் தோன்றியதே ஆதி சிருஷ்டி–78-

பன்னிரண்டாயிம் வருடங்கள் எண்ணிக்கையில் மனிதர்களின் நான்கு யுகங்கள் கொண்டது ஒரு ” தேவ யுகம்” என்று முன்னர் கூறப் பட்டது. அப்படிப்பட்ட தேவ யுகங்கள் எழுபத்தொன்று நிறைந்தால், அது ஒரு மன்வந்தரம் எனப்படும்.–79-

சிருஷ்டியும், சம்ஹாரமும் எண்ணற்றவையாதலின், மன் வந்தரங்களும் எண்ணற்றவையே.–சிருஷ்டியை, பிரம்மா விளையாட்டாகவே மீண்டும் மீண்டும் செய்கிறார்–80-

கிருத யுகத்தில் தர்மம் நான்கு பாதங்கள் கொண்டதாக இருக்கும்.  எங்கும் சத்யமே நிறைந்திருக்கும்.–81-

மற்ற யுகங்களில் தர்மம் ஒவ்வொரு பாதமாக குறைந்து கொண்டே வரும். திருட்டு, பொய், வஞ்சனை, இவற்றால் தர்மம் குறைந்து கொண்டே போகும்.–82-

கிருதயுகத்தில் மனிதர்கள் நோயற்றவர்களாகவும், எல்லா வித விருப்பங்களும் நிறைவேறியவர்களாயும், நானூறு வருடங்கள் ஆயுள் கொண்டவர்களாகவும் இருந்தனர். திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகங்களில் மனிதர்களின் ஆயுள் ஒவ்வொரு பாதமாக குறைபடும்.-83-

வேதங்களில் கூறப்பட்ட ஆயுளும், காம்ய  கர்மாக்களுக்கு கிடைக்கக் கூடிய பலன்களும், சாபங்களும், வரங்களும், பிரபாவங்களும், மனிதர்களுக்கு அந்தந்த யுகத்துக்கு தக்கபடி பலன்  கொடுக்கும்.–84-

கிருத யுக தர்மங்கள் வேறு. திரேதா யுக தர்மங்கள் கிருத  யுக தர்மங்களை விடக் குறைவானவை. அவற்றைவிட குறைவானவை துவாபர யுக தர்மங்கள். கலி யுக தர்மங்களோ இவற்றிலிருந்தும் குறைந்து இருக்கும். இவ்வாறாக யுகங்களைப் பொறுத்து தர்மங்கள் வேறு பட்டவையாக இருக்கும்.–85-

கிருதயுகத்தில் தவம் செய்வதே மேலான தர்மம். திரோதா யுகத்தில் தவம் குறைந்து, ஆத்ம ஞானம் மேலான தர்மமாக  இருக்கும். துவாபர யுகத்தில் அதுவும் குறைந்து  யக்ஞம் செய்தல் மேலான தர்மம் என்றாகும். கலி யுகத்தில் தானம் செய்தலே சிறந்த தர்மமாக கூறப் படும்.–86-

மிக்க தேஜஸ் பொருந்தியவரான பிரம்மா அனைத்து உயிர்களையும் காப்பதற்காக தன்னிலிருந்து  நான்கு வருணத்தாரைத் தோற்றுவித்தார். அவரவர்க்குரிய தர்மங்களையும் ஏற்படுத்தினார்.-87

வேதங்களை ஓதுவதும் , வேதத்தை கற்பித்தலும், தனக்காக யக்ஞங்கள் செய்தலும், பிறருக்குகாக யக்ஞங்கள் செய்வித்தலும், பிறருக்கு தானம் கொடுத்தலும், பிறரிடமிருந்து தானம் வாங்குதலும் என்னும்  ஆறையும் பிராம்மணனுக்குரிய தர்மங்களாக ஏற்படுத்தினார்-(யாகம் என்றால் பிரதிபலனை கருதி செய்யப்படும் செயல். யக்ஞம் என்றால் பிரதிபலன் கருதாமல் செய்யப்படும் செயல்)–88-

மக்களைக் காத்தல், தானமளித்தல், யாகம் செய்தல், வேத மோதுதல், விஷயசுகங்களில் மூழ்காமலிருத்தல் முதலானவைகளை க்ஷத்ரியர்களுடைய தர்மங்களாக ஏற்படுத்தினார்.–89-

பசுக்களைக் காத்தல், யாகங்கள் செய்தல், வேத பாராயணம் செய்தல், வாணிபம் செய்தல், வட்டிக்குப் பணம் கொடுத்து  ஜீவித்தல், விவசாயம் செய்தல் இவைகள் வைசியர்களின் தர்மங்கள்.–90-

பிரம்ம தேவர், சூத்ரர்களுக்கு விதித்த தர்மமோ ஒன்றே ஒன்று தான் .அது. அசூயையின்றி(சோம்பலின்றி) முதலில் கூறப்பட்ட மூன்று  வர்ணத்தாருக்கும்  பணிவிடை புரிதல்–91-

நாபிக்கு கீழுள்ள  பாகங்களை விட மேலுள்ள பாகங்கள் பரிசுத்தமானவை என்று கூறப் பட்டுள்ளது. -அதிலும் முகம் மிகவும் பரிசுத்தமானதுஎன்பது பிரம்மாவின் கூற்று.–92-

வேதங்களை உணர்ந்துள்ளதால் படைக்கப் பட்டவர்களுள் பிரம்மணன் மேலானவன்.–93-

ஹவ்ய, கவ்யங்களை அளிப்பதற்காகவும், உலகம்  காக்கப்படுவதற்காகவும் , பிரம்மா பிராம்மணனைப் படைத்தார்.–94-

யாருடைய வாயினின்றும் வெளிப்படும் மந்திரங்களால் தேவர்கள் தங்களுக்கு அளிக்கப் படும் ஹவ்யத்தை உண்பார்களோ, பித்ருக்கள் தங்களுக்கு அளிக்கப் படும் கவ்யத்தை உண்பார்களோ, அதை விட உயர்ந்தது யாதுளது?–95-

பஞ்ச பூதங்களால் உருவாக்கப் பட்ட வற்றுள் பிராணிகள் உயர்ந்தவை. பிராணிகளில்  புத்தியால் ஜீவனம் செய்பவை உயர்ந்தவை. புத்தியுடையவற்றில் மனிதர்கள் உயர்ந்தவர்கள்–96-

பிராம்மணர்களிலேயும் வித்வான்கள்  உயர்ந்தவர்கள். அவர்களிலும் தங்கள்  அனுஷ்டானங்களில் புத்திரியைச் செலுத்துபவர்கள்  உயர்ந்தவர்கள். அவர்களிலும் அத்தகு கர்மானுஷ்டானங்களை நன்கு  இயற்றுபவர்கள் உயர்ந்தவர்கள். அவர்களை விட பிரம்மஞானிகள்  உயர்ந்தவர்கள்.–97-

பிரார்த்தணனுடைய உற்பத்தியே தர்மத்துக்கு சாஸ்வதமான சரீரம் . பிராம்மணன் தர்மத்தை கடைப் பிடிப்பதற்காகவே  படைக்கப் பட்டவன். அத்தகு தர்மத்தை கடைப் பிடிப்பதனால்  பிரம்மபதத்தை அடைவான்.–98-

எல்லா  உயிர்களுக்கும் உரிய தர்மமனைத்தையும் காக்கும் தலைவன் பிராம்மணன்.–99-

பூமியிலுள்ள அனைத்தும் பிராம்மணனுடையது.  எனவே பிராம்மணன் எல்லா செல்வங்களுக்கும் உடைமையாளன்.–100-

பிராம்மண, சத்திரிய, வைசிய, சூத்திரர்களுடைய கர்மங்கள் ஸ்வபாவத்திலிருந்து பிறந்த குணங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டிருக்கிறது.-பிறப்பின் அடிப்படையில் பிரிக்கப்படவில்லை. 

பிராம்மணன் தன்னுடைய  செல்வத்தையே தான் அனுபவிக்கிறான். தன்னுடைய ஆடைகளையே தான் உடுத்துகின்றான். தன்னுடைய செல்வத்தையே பிறர்க்கு அளிக்கின்றான்.-101-

ஞானியான ஸ்வாயம்புவ மநு, பிராம்மணனுடையனவும், மற்றவர்களுடையனவுமான தர்மங்களை தெரிவிப்பதற்காக இந்த தர்ம சாஸ்திரத்தை வழங்கினார்.-102-

இந்த மனு தர்ம சாஸ்திரத்தை படிப்பதனால் அடையும் பலன்களை அறிந்து பிராம்மணன் இந்த  தர்ம சாஸ்திரத்தை நன்கு முயற்சியோடு படிக்க வேண்டும். சிஷ்யர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.-103-

இந்த சாஸ்திரத்தை மிக்க நியமத்தோடு படிக்கும் பிராம்மணனுக்கு மனத்தாலும்  வாக்காலும் உடலாலும் ஏற்படும் எந்த பாபமும் அண்டாது. அதாவது இதைப் படித்து அறிந்த பிறகு பாபமே  செய்ய மாட்டான்.-104-

இந்த சாஸ்திரத்தை படித்து ஓதுபவன் தன்னுடைய முன்னோர்களில் ஏழு தலை முறையினரையும், தனக்குப் பின் ஏழு தலைமுறையினரையும் புனித மாக்குகிறான். இந்தப் பூமண்டலம் முழுவதையும் தானம் பெறுவதற்கும் அருகதையுடையவனாகிறான்.–105-

இந்த தர்ம  சாஸ்திர அத்யயனம், மநோரதங்களை பூர்த்தியாக்கும். இந்த தர்ம சாஸ்திரம் மிகவும் சிரேஷ்டமானது. ஞானத்தை பெருக்குவது, புகழைத் தருவது, தீர்காயுளைத் தருவது. மோட்சமடைய மேலான சாதனமானது.–106-

இந்த தர்ம சாஸ்திரத்தில் அனைத்து  தர்மங்களும் கூறப் பட்டுள்ள, செய்யத் தக்கவைகளும், தகாதவைகளுமான தர்ம  விஷயங்களும், அதர்ம விஷயங்களும் அவற்றின் பலன்களும் கூறப் பட்டுள்ளன. மேலும் நான்கு வர்ணத்தார் நித்தியமாக கடைப்பிடிக்க வேண்டிய ஆசார விஷயங்களும் கூறப் பட்டுள்ளன.-107-

வேதங்களிலும் ஸ்மிருதிகளிலும் கூறப்பட்ட ஆசாரங்களே மேலான தர்மங்கள். எனவே மக்களின் நலன் கோரும் துவிஜன் ஆசார விஷயங்களில் எப்போதும் முயற்சியுடன் ஈடுபட்டவனாக இருக்க வேண்டும்.( பிராம்மணன், க்ஷத்ரியன், வைசியன் என்னும் மூவர்ணத்தாரும் துவிஜர்கள்)–108-

ஆசாரத்திலிருந்து விலகிய பிராம்மணனுக்கு, வேதாத்ய யனத்தால் பலன் கிட்டாது. ஆசாரமானவனே  ஸம்பூர்ணமான பலனை ப் பெறுவான். ஆசாரம் என்பது தூய்மை, தூய்மையான  அனுஷ்டானங்களை, பூஜைகளை தினமும் செய்பவனே ஆசார சீலன்.-109-

இவ்வாறாக ஆசாரத்தை ஆதாரமாகக் கொண்டு தர்மம் இருப்பதை உணர்ந்து, எல்லா தவங்களுக்கும் ஆசாரமே முதல் முக்கியமானது என்று முனிவர்கள் தெரிவித்தார்கள்.-110-

உலக  உற்பத்தியும், ஸ்ம்கார முறைகளும், விரத முறைகளும், பிரம்மசரிய விரத முறைகளும் இந்த தர்ம சாஸ்திரத்தில் கூறப் பட்டுள்ளன.–111-

விவாஹ முறைகளையும், விவாஹத்துக்கான லக்ஷணங்களையும், யக்ஞங்களின் லக்ஷணங்களையும், சிராத்த விஷயங்களையும், இந்த தர்ம சாஸ்திரம் கூறுகிறது.–112-

ஜீவனம் நடத்துவதற்கான தொழில்களின் லக்ஷணங்களையும் இல்லறத்தானின் நியமங்களையும்,சாப்பிடத்தக்கவை எவை, தகாதவை எவை என்ற விஷயங்களைப் பற்றியும், மரண காலங்களில் ஏற்படும் தீட்டுகளைப் பற்றிய விவரங்களையும் பொருட்களுக்கு தண்ணீர்  முதலியவற்றால் கிடைக்கும் சுத்தி முறைகளைப் பற்றியும் இந்த தர்ம சாஸ்திரம் விளக்குகிறது.–113-

பெண்களுக்குரிய தர்ம விஷயங்களும், வான பிரஸ்தர்களுக்குரிய தர்ம  விஷயங்களும், சந்யாஸ தர்ம விஷயங்களும், மன்னனுக்குரிய தர்ம விஷயங்களும், மோக்க்ஷத்துக்குரிய விஷயங்களும் இந்த தர்ம சாஸ்திரத்தில் விளக்கப் பட்டுள்ளன.–114-

சாட்சிகளை விசாரிக்கும் முறைகளும், பெண்களும் ஆண்களும் நடந்து கொள்ள வேண்டிய  முறைகள், பாகப் பிரிவினை ,  சூதாட்டம், குற்றவாளிகளைத் தண்டித்தல் முதலான விஷயங்களும் இந்த தர்ம சாஸ்திரத்தில் கூறப் பட்டுள்ளன.–115-

வைசியர்கள் சூத்திரர்கள் முதலானோரின் தர்ம அனுஷ்டான முறைகள், கலப்பு திருமணங்கள், ஆபத்துக் காலங்களில் கடைப் பிடிக்க வேண்டிய விதி முறைகள், பிராயச்சித்த முறைகள் முதலான விஷயங்களும் இந்த தர்ம சாஸ்திரத்தில் கூறப் பட்டுள்ளன.–116-

தேகத்தை விடுதல், மூன்று வகையான கர்ம வினைகள் ஏற்படுதல், சாஸ்திரத்தில் செய்யச் சொன்ன, செய்யக் கூடாது என்று சொன்ன விஷயங்களின் பலாபலன்கள் முதலானவையும் இந்த  தர்ம சாஸ்திரத்தில் கூறப் பட்டுள்ளன.–117-

தேச தர்மங்கள், ஜாதி தர்மங்கள், குல தர்மங்கள், வேதத்துக்கு விரோதமானவர்களின் தர்மாதர்மங்கள், முதலானவற்றையும் இந்த தர்ம சாஸ்திரத்தில்  எடுத்துரைத்துள்ளார்.–118-

முனிவர்களே, நான் வினாவியபோது, மனுவானவர் எனக்கு இந்த தர்ம சாஸ்திரத்தை எவ்வாறு உபதேசித்தாரோ அவ்வாறே அதை உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். கேளுங்கள்.–119-

அத்தியாயம் ஒன்று நிறைவுற்றது

———–

அத்தியாயம் -2-

வேதம் முழுவதையும் நன்கு அறிந்தவர்களாகவும், விருப்பு வெறுப்பு அற்றவர்களாகவும் சாதுக்களாகவும் உள்ள மஹான்கள்  எப்போதும் அனுஷ்டிக்கின்ற தர்மம் எதுவோ அதை எடுத்தியம்புகிறேன், கேளுங்கள்.-1-

விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக காரியங்களைச் செய்தல் என்பது  போற்றுதலுக்குரிய விஷயமன்று.  எனினும்  இவ்வுலகில் பலனை எதிர் நோக்காமல் காரியம் செய்வது என்பது  அரிதான விஷயம். 

வேதங்களை நன்கு படித்தல், வேதங்களில் கூறப் பட்டுள்ள தர்மங்களில் ஆழ்ந்து ஈடுபாடு  கொண்டிருத்தல் என்பதும் பலனைக் கொடுக்கக் கூடியதேயாகும்.(வேதங்களின் முக்கியமாக இரண்டு பிரிவுகள் உள்ளன.1. பலன்களைத்தரக்கூடிய செயல்களைக்குறித்த யாகங்கள்,பிரார்த்தனைகள் போன்றவை. 2. பலன்களைத் துறந்து முக்தியடைவதுபற்றிய போதனைகள்.)–2-

இவை இவை எனக்குத்தேவை என்று கோருவதற்கு ” சங்கல்பம்” என்று பெயர். சங்கல்பத்துக்கு மூல காரணமாக இருப்பது ஆசை. ஆசையாலேயே சங்கல்பம் தோன்றுகிறது. யக்ஞங்கள் செய்வதில் விருப்பம் சங்கல்பத்தாலேயே ஏற்படுகிறது. விரதங்கள், நியமங்கள், போன்றவை அனைத்துமே சங்கல்பத்தாலேயே ஏற்படுகின்றன.–3-

ஆசையற்றவனுக்கு எந்தச் செயலும் இல்லை. மனிதர்கள், செய்யும்  ஒவ்வொரு செயலும் ஆசையின் காரணமாகவே செய்யப் படுகிறது.–4-

முறையாக நல்லபடி காரியங்களைச் செய்பவன் அமரனாகிறான்(மரணமற்றவன்). இவ்வுலகிலும், அவனுடைய அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.–5-

வேதமே உலகில் தர்மத்துக்கு மூலம், வேதமறிந்தவர்களால் இயற்றப்பட்ட ஸ்ம்ருதிகளும் அவர்களது  ஒழுக்கமுமே பிரமாணங்கள். சாதுக்கள் கடைப்பிடிக்கும் ஆசாரங்களும், அவர்களது ஆத்மானந்தமும் பிரமாணங்கள்–6-

எவருக்கு  எந்தெந்த தர்மங்கள் மனுவினால் சொல்லப்பட்டுள்ளதோ, அவை அனைத்தும் வேதத்தில் சொல்லப் பட்டுள்ளவையே. சர்வ ஞான சொரூபன் மனு பகவான். அவர் கூறிய அனைத்தும் வேதம் கூறியதே.(ஏற்கனவே வேதத்தில் இருப்பதையே மனு கூறினார்)–7-

இந்த தர்ம சாஸ்திரம் முழுவதும் ஞானக் கண்ணால் கண்டது என்பதையும் , வேதம் கூறியது என்பதையும் அறிந்து விவேகமுள்ளவன் ஸ்வதர்மத்தை அனுஷ்டிக்க வேண்டும்.–8-

மனிதன் வேதங்களிலும் , தர்ம சாஸ்திரங்களிலும் கூறப் பட்டுள்ள தர்மத்தை அனுஷ்டித்தால், இவ்வுலகில் கீர்த்தியையும் மேலுலகத்தில் மோட்சத்தையும் அடைவான்.-9-

வேதங்கள் ” ஸ்ருதிகள்” எனப்படும். தர்ம சாஸ்திரங்கள் ” ஸ்மிருதிகள்” எனப்படும். இவைகளைக் குறித்து எதிர் மறையான தர்க்கங்களைச் செய்தல் கூடாது. இவை இரண்டிலுமே தர்மம்  பிரகாசிக்கிறது.–10-

பிரமாணங்களான ஸ்ருதிகளையும், ஸ்ம்ருதிகளையும் எந்த பிராமணனோ, க்ஷத்ரியனோ, வைசியனோ அவமதித்து தூஷிக்கின்றானோ, அப்படிப்பட்ட நாஸ்திகளை நல்லவர்கள் புறக்கணிக்க  வேண்டும்.–11-

வேதம், ஸ்ம்ருதி, நல்ல ஆசாரம், சுய ஆனந்தம் இந்த நான்கும் தர்மத்தின்  சொரூபம் என்று கூறுவார்கள் பெரியோர்.–12-

அர்த்தம், காமம் இவைகளில் விருப்பம் இல்லாதவனுக்கே தர்ம ஞானம் விதிக்கப் பட்டுள்ளது. தர்மத்தை அறிய விரும்புபவனுக்கு முக்கியமான பிரமாணம் வேதமே ஆகும்.–13-

எங்கே தர்ம சாஸ்திரங்களுக்குள் ஒன்றுக் கொன்று வேறுபாடு காணப்படுகின்றதோ, அங்கே இரண்டு விதமாக தர்மங்கள் கூறப்பட்டிருக்கும். வித்வான்கள் இவ்விரண்டு தர்மங்களையும் கடைப்பிடிக்கலாம்.-14-

சூரியோதயம் ஆன பிறகு ஹோமம் செய்ய வேண்டும். இது ஒரு வேத வாக்கியம். உதிப்பதற்கு முன்பே நட்சத்திரங்கள் தெரியும்.அருணோதய காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும்.-இது ஒரு வேத வாக்கியம். ஒன்றுக் கொன்று முரணானவை இவை.  இப்படி ஒன்றுக் கொன்று முரண்பாடு தென்படும் போது இரண்டு விதங்களில் எந்த விதமாகவும் செய்யலாம்.–15-

கர்ப்பாதானம் முதலான அனுஷ்டானங்கள் எவனுக்கு விதிக்கப் பட்டுள்ளதோ அவனுக்கே இந்த மனு தர்மத்தைப் படிக்கும் அதிகாரம் உள்ளது. மற்றவர்களுக்கு இல்லை.

(கர்பாதானம் செய்யும் அதிகாரம் உள்ளவன் திருமணமான ஆண்.அவன் மட்டுமே இந்த ஸ்மிருதியை படித்துபின்பற்ற அதிகாரம் உள்ளவன். கர்பாதானம் செய்ய விரும்பாத துறவிகள் இதை படிக்கவும் பின்பற்றவும் தேவையில்லை)–16-

ஸரஸ்வதீ நதிக்கும் திருஷத்வதீ என்னும் நதிக்கும் இடையிலுள்ள பிரதேசத்தை ”தேவநிர்மிதம்” என்றும்” பிரம்மாவர்த்தம்” என்றும் கூறுவார்கள்–17-

அந்த தேசத்தில் நால்வர்ணத்தாருக்கும் கலப்பு வர்ணத் தாருக்கும் பாரம்பரியமாக வரும் ஆசாரமே ”சதா சாரம்” எனப்படும்.-18-

குரு க்ஷத்திரம், மத்ஸ்ய தேசம், பாஞ்சாலம், சூரசேநகம் என்னும் தேசங்களுக்கு ” பிரம்மரிஷி தேசம்” என்று பெயர். இது பிரம்மாவர்த்த தேசத்துக்கு அடுத்தது.-19-

இந்தத் தேசத்தில் பிறந்த பிராம்மணர்கள் மூலமாக உலக மாந்தர் தத்தமக்குரிய ஆசாரங்கள் எவை எவை என்று அறிய வேண்டும்.-20-

இமயமலைக்கும் விந்திய  மலைக்கும் இடையில் , சரஸ்வதி நதிபாயும் தேசத்துக்கும், பிரயாகைக்கும் இடைப்பட்ட  தேசத்துக்கு  ” மத்திய தேசம்” என்று பெயர்.-21-

கிழக்குக் கடலுக்கும், மேற்குக் கடலுக்கும் இடையிலுள்ள  பிரதேசத்துக்கு ” ஆர்யாவர்த்தம்” என்று பெயர்.(தென்னிந்தியா)-22-

கறுப்புக்கோடுகள் கொண்ட மான் பிறந்து தன்னிச்சையாக சஞ்சரிக்கின்ற பிரதேசமே யக்ஞங்கள் செய்வதற்கு உகந்த இடமாகும். மற்றைய இடங்கள் மிலேச்ச தேசம் எனப்படும். மிலேச்ச தேசம் யக்ஞம் செய்வதற்கு அருகதையற்ற இடமாகும்.-23-

பிராம்மணர், க்ஷத்ரியர், வைசியர் என்னும் இருபிறப்பாளர்களாகிய மூவர்ணத்தாரும் முயற்சி செய்து, யக்ஞபூமிகளான இந்த தேசங்களை அடைய வேண்டும். சூத்திரர்கள் தங்கள் ஜீவனமான தொழில் நிமித்தமாக எந்தத் தேசத்திலும் வசிக்கலாம்.-24-

இதுவரை இந்த தர்ம சாஸ்திரத்தின் தோற்றம் முழுவதுமாகக் கூறப்பட்டது. இவ்வுலகம் தோன்றிய விஷயமும் கூறப் பட்டது. இனி  வர்ணதர்மங்களையும், ஆசிரம தர்மங்களையும் கூறுகிறேன்.கேளுங்கள்–25-

பிராம்மணர்களும், க்ஷத்ரியர்களும், வைசியர்களும் கர்ப்பாதானம் முதலான வைதிகக் கிரியைகளைச் செய்ய வேண்டும். இவையே ஒருவனை  பரிசுத்தமாக்குகின்றன. பரலோக வாழ்வையும்பெற்றுத் தருகின்றன–26-

கர்ப்பாதானம் முதலான ஹோம சடங்குகளாலும், ஜாதகர்மா, சவுலம், மௌஞ்சீபந்தனம், உபநயனம் முதலான சடங்குகளாலும், பெற்றோரால் ஏற்பட்ட பீஜதோஷம், கர்ப்பவாச தோஷம் முதலான வற்றால் ஏற்பட்ட  தோஷங்கள் நீங்கி பிராம்மணர்களும் க்ஷத்ரியர்களும், வைசியர்களும் பரிசுத்தமாகிறார்கள்.–27-

வேத மோதுவதாலும் , விரத நியமங்களாலும், ஹோமங்களாலும் காலை மாலை செய்யும் ஔ பாசனம் முதலான கிரியைகளாலும் மூன்று வேதங்களிலும் நன்கு தேர்ச்சி பெறுவதாலும், புத்ரோத்பத்தியாலும், தர்ப்பணங்களாலும், பஞ்சமஹா யக்ஞங்களாலும் பெரிய யாகங்களாலும் இவ்வுடலானது பிரம்ம பதத்தை அடைவதற்கு ஏற்றதாக ஆகிறது.–28-

தொப்புள் கொடி அறுப்பதற்கு முன்பே ஜாதகர்மா என்னும்  சடங்கு செய்ய வேண்டும். தங்கம், நெய், தேன் இவைகளை மந்திரபூர்வமாக நாவில் தடவ வேண்டும்.-29-

பத்தாவது நாள் கடந்த பிறகு, பதினோராவது நாள் அல்லது பன்னிரண்டாவது நாள் அல்லது வேறு ஏதாவது சிறந்த  நன்னாளில், நல்ல முகூர்த்தத்தில், நல்ல நட்சத்திரத்தில் பிராம்மணனுக்கும்,  க்ஷத்திரியனுக்கும், வைசியனுக்கும் நாமகரணம்(பெயர்சூட்டுதல்) செய்ய வேண்டும்.–30-

பிராம்மண குழந்தைக்கு வைக்கும் பெயர் சுபம் தரும் வண்ணம் இருக்க வேண்டும். க்ஷத்திரியக் குழந்தைக்குப் பலம் தரும் வாசகமாக இருக்க வேண்டும். வைசியக் குழந்தைக்கு செல்வம் தரும் வாசகமாக இருக்க வேண்டும். சூத்திரர்களுக்கு   ஏவலன் என்பதை அறியும் வகையில் பெயர் வைக்க வேண்டும்.-31-

பிராம்மணனுடைய பெயர் சர்மாஎன்ற பதம் கூடியதாக இருக்க வேண்டும். ராஜாவுக்கு  ரக்ஷணம் சேர்ந்ததாக இருக்க வேண்டும். (க்ஷத்திரியனுக்கு  வர்மா என்ற பதம் சேர்க்கப் பட வேண்டும்)வைசியனுக்கு செல்வத்தோடு  கூடியதாக  இருக்க வேண்டும்.(வைசியனுக்கு குப்தா என்றபதம் அல்லது  பாலன் என்ற பதம்  பெயரோடு சேர்க்கப் படவேண்டும்.) சூத்திரனுக்கு தாசன் என்ற பதம் கூடியதாக இருக்க வேண்டும்.-32-

பெண்களுக்கு இடும் பெயர்கள் சுகமாக உச்சரிக்கக் கூடியதாகவும், குரூரமான அர்த்தம் கொடுக்கும் சொல்லாக இல்லாமலும், பொருளற்றதாக இல்லாமலும், மனத்துக்கு ஆனந்தத்தைக்  கொடுக்கக் கூடியதாகவும், மங்களமான   சொல்லாகவும் நெடில் எழுத்து ஈற்றாக இருப்பதாகவும், அதாவது  நீட்டி தீர்க்கமாகச் சொல்லும் அட்சரத்தோடு முடிவதாகவும்( உதாரணமாக ரமா, உமா, என்ற பெயர்களைக் கூறலாம் ) ஆசிகளைக் கொடுக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். ( காயத்ரீ தேவி, லக்ஷ்மீ தேவி முதலான பெயர்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.)–33

நான்காம்  மாதத்தில், குழந்தையை வீட்டிலிருந்து வெளியே கொண்டு சென்று சூரியனை தரிசிக்கச் செய்ய வேண்டும். ஆறாவது  மாதம் அன்னம் ஊட்டும் சடங்கைச் செய்ய வேண்டும். அல்லது அவரவர் குல வழக்கப் படி அந்தந்த சடங்குகளைச் சுபதினங்களில் செய்ய வேண்டும்.( இந்தச் சடங்குக்கு அன்னபிராசனம்  என்று பெயர்)-34

” சூடாகர்மா” என்னும் குடுமி வைக்கும் சடங்கானது பிராம்மண க்ஷத்ரிய வைசியர்களுக்கு முதலாம் ஆண்டு அல்லது மூன்றாம் ஆண்டில் செய்யப் பட வேண்டியது. அல்லது அவரவர் வழக்கப் படி செய்ய வேண்டியது.-35-

பிராம்மணனுக்கு ஏழு வயதிலும், க்ஷத்ரியனுக்கு பத்து வயதிலும், வைசியனுக்கு பதினோராவது வயதிலும் உபநயனம் செய்ய வேண்டும்.-இது பொது விதி. -36-

பிரம்ம தேஜஸை விரும்பும் பிராம்மணனுக்கு ஐந்தாவது வயதிலும், பலத்தை க்கோரும் க்ஷத்ரியனுக்கு ஆறாவது வயதிலும், வாணிபம் கோரும் வைசியனுக்கு எட்டாவது வயதிலும் உபநயனம் செய்து வைக்க வேண்டும்.–37-

பிராம்மணனுக்கு பதினாறாவது வயது வரையும், க்ஷத்ரியனுக்கு இருபத்திரண்டாவது வயது வரையும்,  வைசியனுக்கு இருபத்து நான்காவது வயது வரையும் காயத்ரி அழியாமலிருக்கும். அதாவது அந்த வயதுக்குள்ளாவது காயத்ரி உபதேசம் நடை பெற வேண்டும்-தவிர்க்க முடியாமல் தள்ளிப்போனாலும் இந்த வயதுக்குள் செய்ய வேண்டும், -செய்யலாம் என்பதற்காகக் கூறப்பட்டது..–38-

அது வரையிலும் உபநயனம் செய்யாதவர்கள் காயத்ரீ உபதேசம் பெறும் அருகதையை  இழந்தவர்களாவர். இவர்கள் சான்றோர்களால் நிந்திக்கப் படுவார்கள். வைதீகச் சடங்குகளுக்கு இவர்களைச்சேர்க்க மாட்டார்கள்.–39

இவ்வாறு தூய்மை இழந்து விதிப்படி பிராயச்சித்தம் செய்து கொள்ளாதவனோடு பிராம்மணன், யாகம், கன்யாதானம், முதலான எந்தச் சம்பந்தமும் வைத்துக் கொள்ளக்கூடாது.–40-

பிராம்மண பிரம்மசாரி மான் தோலால் ஆன மேலாடையையும், க்ஷத்ரிய பிரம்மசாரி குரு மிருகத்தின்ஆன தோலால் ஆன மேலாடையையும்,–வைசிய பிரம்மசாரி ஆட்டுத்தோலால் ஆன மேலாடையையும்  அணிய வேண்டும்.-பிராம்மணன்  நார்மடித் துணியை அரையாடையாக அணிய வேண்டும்.-க்ஷத்ரியன் பட்டுத் துணியை அரையாடையாக அணிய வேண்டும்.-வைசியன் சணல் ஆடையை அரையாடையாக அணிய வேண்டும்.–41-

பிராம்மண பிரம்மசாரி, முஞ்சி புல்லால் திரிக்கப் பட்டு, வழுவழுவென்று சமானமான மூன்று இழைகள் கொண்ட அரைஞாணை அணிய வேண்டும்.-அவ்வாறே க்ஷத்ரிய பிரம்மசாரி மூர்வா புல்லினால் திரிக்கப் பட்ட மூன்று இழைகளோடு கூடிய அரை ஞானை அணிய வேண்டும்.-வைசிய பிரம்மசாரி சணலால் திரிக்கப் பட்ட மூன்று இழைகளோடு கூடிய அரை ஞானை அணிய வேண்டும்.-(இந்த அரைஞாணில்தான் கோவணம் கட்டிக்கொள்வார்கள்)–42-

முஞ்சிப் புல் முதலானவை கிடைக்காத போது, தர்ப்பை , நாணல், கோரை முதலானவற்றை முப்புரிகளாகத் திரித்து அதை ஒரு முடிச்சோடு  பிராம்மண பிரம்மசாரியும், மூன்று முடிச்சுகள் போட்டு  க்ஷத்ரிய பிரம்ம சாரியும், ஐந்து முடிச்சுகள் போட்டு வைசியப் பிரம்ம சாரியும் அணிய வேண்டும்.–43-

வலது புறமாக சுற்றிய ஒன்பது  இழைகள் கொண்டதாக பூணூல் இருக்க வேண்டும். பிராம்மண பிரம்மசாரிகளின் பூணூல்  பஞ்சினால் ஆனதாகவும், க்ஷத்ரிய பிரம்ம சாரிகளின் பூணூல் சணலாலான தாகவும், வைசிய பிரம்ம சாரிகளின் பூணூல் வெள்ளாட்டு முடியினாலானதாகவும் இருக்க வேண்டும்–44-

பிராம்மண பிரம்மசாரி வில்வம், புரசு இவையிரண்டில் ஏதேனும் ஒன்றை தண்டமாக ஏந்த வேண்டும்.–க்ஷத்ரிய பிரம்மசாரி ஆல், கருங்காலி இவையிரண்டில் ஏதேனும் ஒன்றை தண்டமாக ஏந்த வேண்டும்.-வைசிய பிரம்மசாரி அத்தி, பைலம் இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றை தண்டமாக ஏந்த வேண்டும்.–45-

பிராம்மணன் ஏந்தும் தண்டம் தலை வரை உயரமுடையதாக இருக்க வேண்டும். க்ஷத்ரியன்  ஏந்தும் தண்டம் நெற்றி வரை இருக்க வேண்டும். வைசியன் ஏந்தும் தண்டம் மூக்கு வரை இருக்க வேண்டும்.–46-

அந்த தண்டங்கள் கோணலாக இருக்கக் கூடாது. வெட்டுப் பட்ட வடுக்கள் அற்றவையாக இருக்க வேண்டும். பார்க்க அழகாக இருக்க  வேண்டும். பார்ப்பவர்களுக்கு அச்சம் ஏற்படும் வண்ணம் இருக்கக் கூடாது. மேல் பட்டையோடு இருக்க வேண்டும். நெருப்புப் பட்டதாக இருக்கக் கூடாது–47-

ஒவ்வொரு நாளும் தண்டத்தைக் கையில் ஏந்தி, சூரிய நமஸ்காரம் செய்து, தீயை வலம் புரிந்து, பிறகு முறைப்படி பிஷை ஏற்கச் செல்ல வேண்டும்.–48-

பிராம்மண பிரம்மச் சாரி ”பவதி பிக்ஷாம் தேஹி” என்று கூறி  பிஷை கேட்க வேண்டும்.-க்ஷத்ரிய பிரம்மச் சாரி ” பிக்ஷாம் பவதி தேஹி” என்று கூறி பிஷை கேட்க வேண்டும்.-வைசிய பிரம்மச்சாரி ” பிக்ஷாம் தேஹி பவதி” என்று கூறி பிஷை கேட்க வேண்டும்.–49-

முதலில் தாயிடம் அல்லது சகோதரியிடம் அல்லது தாயின் சகோதரியிடம்,  அல்லது யார் இவனை அவமானப் படுத்த மாட்டார்களோ, அந்தப் பெண்ணிடம் பிட்ஷை  ஏற்க வேண்டும்.–50-

இவ்வாறாக பிக்ஷான்னத்தைக் கொண்டு, குருவுக்குக் கொடுத்து, அவரது அனுமதியின் பேரில் அவர் கொடுத்த மிகுதி அன்னத்தை, ஆசமனம் செய்து,  (மூன்று முறை மந்திரம் சொல்லி நீர் உண்ட பின், இரு முறை நீரால் வாயைத் துடைக்க வேண்டும். கண், காது, மூக்கு, தோள், மார்பு, தலை இவற்றையும் தொட்டுத் துடைக்கவேண்டும்)கிழக்கு நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும்.–51-

தீர்க்காயுளை வேண்டுபவன் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும்.-கீர்த்தியை  விரும்புபவன் தெற்கு திசை  நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும்.-செல்வத்தை விரும்புபவன் மேற்கு திசை நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும்.-மோட்சத்தை விரும்புபவன் வடக்கு திசை நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும்.–52-

பிரம்மச்சாரி தினமும் ஆசமனம் செய்து, கிழக்கு நோக்கி அமர்ந்து வேறு நினைப்பின்றி உண்ண வேண்டும். உண்ட பிறகு கை கால்களை அலம்பிக் கொள்ள வேண்டும். முறைப்படி ஆசமனம் செய்து, நீரினால் இந்திரியங்களைத் துடைத்துக் கொள்ள வேண்டும்.–53-

எப்போதும் அன்னத்தை பூஜிக்க வேண்டும். அன்னத்தை நிந்திக்காமல்  சாப்பிட வேண்டும். மனத்திலுள்ள  கலக்கங்களை யெல்லாம் விட்டு விட்டு  சாப்பிட அமர வேண்டும். சாப்பிடும்போது நிர்மலமான மனத்தோடு சாப்பிட வேண்டும். இந்த அன்னம் எனக்கு எப்போதும் கிடைக்க வேண்டும்” என்று பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.–54-

இவ்வாறாக  தினமும் துதிக்கப்பட்டு உட்கொண்ட உணவு பலத்தையும் வீர்யத்தையும் அளிக்கும். மாறாக, துதிக்கப் படாமல் உட்கொண்ட உணவு பலத்தையும் வீர்யத்தையும் அழிக்கும்.–55-

எச்சிலான உணவை யாருக்கும் கொடுக்கக் கூடாது. மத்தியானமும் இரவும் உணவு உண்ண வேண்டும். அது தவிர நடுநடுவே சாப்பிட்டுக் கொண்டிருக்கலாகாது. மத்தியானமும் இரவும் சாப்பிடும் போது கூட அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக் கூடாது. எச்சில் கையோடு எங்கும் போகக் கூடாது.–56-

மிகுந்த படியாக, அளவுக்கதிகமாக சாப்பிடுவதால், ஆரோக்கியம் கெடும். ஆயுள் குறையும். சுவர்க்கம் முதலான புண்ணிய உலகங்களை அடைவதற்கு இது எதிரி. அதாவது அதிக அளவில் சாப்பிடுவது புண்ணியலோக பிராப்திக்கு தடையாகி விடும். அவ்வாறே நற்காரியங்களைச் செய்வதற்கும் இது தடையாகும். மேலும் உலகத்தாரின் தூற்றுதலுக்கும் ஆளாக  நேரிடும். எனவே அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது.–57-

பிராம்மணர் முதலானோர் பிரம்ம தீர்த்தத்தால் எப்போதும் ஆசமனம் செய்யவேண்டும். அன்றேல், காய தீர்த்தத் தாலோ  தேவ தீர்த்தத்தாலோ ஆசமனம் செய்யலாம். அதன்றி பித்ரு தீர்த்தத்தால் எப்போதும் ஆசமனம் செய்யலாகாது.–58-

பெருவிரலில்  முதல் பாகத்தில் பிரம்ம தீர்த்தம் உள்ளதாகவும், சுண்டு   விரலில் முதல் பாகத்தில்  காய தீர்த்தம் உள்ளதாகவும், விரல் நுனிகளில் தேவ தீர்த்தம் உள்ளதாகவும், பெருவிரல்சுட்டு விரல்களுக்கிடையே பித்ரு தீர்த்தம் உள்ளதாகவும் கூறப் டுகிறது.–59-

பிரம்ம தீர்த்தம் முதலானவைகளால் மூன்று முறைகள் ஆசமனம் செய்ய வேண்டும். உதடுகளை மூடிக் கொண்டு நீரினால் வாயைத் துடைக்க வேண்டும். பிறகு இடது கரத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு தலையில் இருக்கின்ற இந்திரியங்களான கண்கள், காதுகள், மூக்கு முதலியவைகளையும், மார்பையும் தலையையும் துடைக்க வேண்டும்.–60-

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading