அநாதிர் பூர்ப்புவோ லஷ்மீஸ் ஸூவீரோ ருசிராங்கத
ஜநாநோ ஜனஜன்மாதிர் பீமோ பீமபராக்ரம–101-
ஆதார நிலயோ தாதா புஷ்பஹாச ப்ரஜாகர
ஊர்தவகஸ் சத்பதாசார பிராணத பிரணவ பண –102-
பிரமாணம் பிராண நிலய பிராண த்ருத் பிராண ஜீவன
தத்வம் தத்வ விதேகாத்மா ஜன்ம ம்ருத்யுஜ ராதிகா —103-
பூர்ப்புவஸ் ஸ்வஸ் தருஸ் தாரஸ் சவிதா ப்ரபிதாமஹ
யஜ்ஞோ யஜ்ஞபதிர் யஜ்வா யஜ்ஞாங்கோ யஜ்ஞவாஹன–104-
யஜ்ஞப்ருத் யஜ்ஞக்ருத் யஜ்ஞீ யஜ்ஞபுக் யஜ்ஞசாதன
யஜ்ஞாந்தக்ருத் யஜ்ஞகுஹ்யம் அன்ன மன்னாத ஏவ ச –106-
ஆத்மயோ நிஸ் ஸ்வ யஜ்ஞாதோ வைகாநஸ் சாமகாயன
தேவகீ நந்தஸ் ஸ்ரஷ்டா ஷிதீச பாப நாசன –107
சங்கப்ருத் நந்தகீ சக்ரீ சார்ங்க தன்வா கதாதர
ரதாங்கபாணி ரஷோப்யஸ் சர்வ ப்ரஹரணாயுத –108-
ஸ்ரீ சர்வ ப்ரஹரணாயுத ஓம் நம இதி
———————————————————————————
6-முக்தனுக்கு மோஷானந்தம் தரும் ஸ்ரீ வைகுண்ட நாதன் பரமான திரு நாமங்கள் -892-911-
7-கஜேந்திர மோஷ பரமான திவ்ய நாமங்கள் -912-945-
8-ஸ்ரீ பகவான் செய்து அருளும் செயல்களின் பிரயோஜனம் சொல்லும் திரு நாமங்கள் -946-982-
9-ஸ்ரீ தேவகீ நந்தன் –983-992
10-திவ்ய ஆயுதமே திவ்ய ஆபரணம் -கண்ணுள் நின்று அகலாத திரு உருவம் –993-1000
அஷ்ட சித்திகள் -838-870—33 திரு நாமங்கள்
மோஷ ப்ரதத்வம்-871-911—41 திரு நாமங்கள்
ஸ்ரீ கஜேந்திர வரதன் —-912-945—-34 திரு நாமங்கள்
ஜகத் வியாபாரம் ——–946-992—-47 திரு நாமங்கள்
திவ்யாயூத தாரீ —993-1000——-8- திரு நாமங்கள்
—————————————————————————-
8-பகவான் செய்து அருளும் செயல்களின் பிரயோஜனம் சொல்லும் திரு நாமங்கள் -946-982-
9=ஸ்ரீ தேவகீ நந்தன் –983-992
———-
அநாதிர் பூர்ப்புவோ லஷ்மீஸ் ஸூவீரோ ருசிராங்கத
ஜநாநோ ஜனஜன்மாதிர் பீமோ பீமபராக்ரம–101-
———
946-ஜனன-
பிறப்பிப்பவன்-சிருஷ்டி கர்த்தா –
அத₂ ஸர்வ ப₄க₃வத்₃ வ்யாபாராணாம் ப்ரயோஜநம் । தத் அநுப₄வ க்ஷம கரண யுக்தாந் அந்யாநபி
ஜநயதீதி
ஜநந꞉ ॥
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே -அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் -3-2-1-
தன்னை வணங்க வைத்த கரணங்கள் இவை உனக்கு அன்று -அமுதனார்
பக்தர் அல்லாதவர்களும் தம்மை அனுபவிப்பதற்கு உரிய உடல் இந்திரியங்கள் முதலியவற்றோடு பிறக்கும் படி செய்பவர் —
பிறகு அவனுடைய எல்லா செயல்களுக்கும் பலன் கூறப்படுகிறது ஸ்ரீ பராசர பட்டர் –
பிராணிகளைப் படைப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
ஜனங்களைப் பிறக்கச் செய்பவர் -நடத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————-
947-ஜன ஜந்மாதி –
பிறவிப் பயனாக இருப்பவன் -ஜனங்களுடைய ஜன்மத்துக்கு பயனாக ஆதியாக -நிமித்தம் -பிரயோஜனம்
தேஷாம் ஜநாநாம் ஜந்மந ஆதி₃ர் நிமித்தம் ப்ரயோஜநமிதி
ஜந ஜந்மாதி₃꞉ । யதா₂
அத்யமே சபலம் ஜென்மம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-3-
இப்போது தான் எனது ஜென்மம் பயன் அடைந்தது -கிருஷ்ணனைக் காணச் சென்ற அக்ரூர் வார்த்தை
ஜன்மன் யவிபலா ச ஏகா ய கோவிந்த ஆஸ்ரய க்ரியா
இந்தப் பிறவியில் பயனற்ற செயல் என்று கூறப்படாமல் உள்ளது எது என்றால்
அது கிருஷ்ணனுக்காகவே செய்யப்படும் செயல்களே ஆகும்
ஸூ ஜென்ம தேகம் அத்யந்தம் ததேவ அஸேஷ ஜந்துஷு யதேவ புலகோத்பாசி விஷ்ணு நாமாநி கீர்த்திதே
இந்த உலகில் உள்ள அனைவரிலும் யார் ஒருவனுக்கு விஷ்ணுவின் திரு நாமத்தைக் கேட்ட உடனேயே
மயிர்க் கூச்சல் ஏற்படுகிறதோ அவனுடைய பிறவியே சிறந்ததாகும் –
அத்ய ஜன்ம யதார்த்த மே -இன்று எனது ஜென்மம் பயன் கொண்டதானது
அன்று நான் பிறந்திலேன் -பிறந்த பின் மறந்திலேன் மாதவன் இருப்பதும் என் நெஞ்சுள்ளே -திருச்சந்த 94/95-
அப்படிப்பட்ட ஜனங்களின் பிறப்பிற்குத் தாமே பயனாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
ஜனங்களின் உற்பத்திக்குக் காரணமானவர் -ஸ்ரீ சங்கரர் –
ஜீவர்களின் பிறப்புகளை உண்டாக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————-
948-பீம –
பயங்கரன் -அசுரர்க்கு வெம் கூற்றம் -6-3-8-
ஷிபாமி -ந ஷமாமி -முன்பே 359 -பீம -பார்த்தோம்–837 பயக்ருத் பார்த்தோம்-
ஏவம் வித₄ மஹ அநுக்₃ரஹ விமுகா₂நாம்
பீ₄ம: –
கர்ப நரகாதி₃ஹேது꞉ । ஸ ஹ் அநாத்மநீநான்
ஹித பு₃த்₃த₄யா ஸத்ருவத்₃ பா₄வ யதே தாந் அஹம் த்விஷத–ஸ்ரீ கீதை -16-19-
என்னை வெறுப்பவர்களையும் த்வேஷிப்பவர்களையும் மீண்டும் ஸம்ஸாரத்தில் தள்ளுகிறேன்
தாநஹம் த்விஷத க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந்–
க்ஷிபாம் யஜஸ்ரமஸுபா நாஸுரீஷ்வேவ யோநிஷு–৷৷16.19৷৷
என்னை த்வேஷிப்பவர்களாய் -கொடியவர்களாய் -மனிதரில் கடையானவர்களாய் –
அமங்களமானவர்களான அவர்களை நான் இடைவிடாமல் பிறப்பு இறப்பு மூப்பு முதலானவை மாறி மாறி வரும்
பிறவிகளில் அதிலும் ஆஸூரப் பிறவிகளிலேயே தள்ளுகிறேன்
வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான்
தம்முடைய இந்த அனுக்ரஹத்தை விரும்பாதவர்களுக்கு கர்ப்ப வாஸம் நரகம் முதலிய துன்பங்களைக் கொடுத்து பயமுறுத்துபவர்
தமக்கு அடிமையாகி உய்யாதவர்களை ஹித புத்தியின் காரணமாக விரோதிகளாக நினைக்கின்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பயத்திற்குக் காரணமானவர் -ஸ்ரீ சங்கரர் –
பயங்கரமானவர் -பிராணனுக்கு ஆதாரமானவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————-
949-பீம பராக்கிரம
பயங்கரமான பராக்கிரமம் உடையவன்
அந்யேஷ்வபி ஜக₃த் அஹித நிரதேஷு ஹிரண்யாதி₃ ஷு
பீ₄ம பராக்ரம꞉ ।
ப₄ மப்யநுக்₃ரஹ ஏவ,யதோத் மாதிநோ
நிகி₃லாதி₃ நிக்₃ரஹஸ் தஸ்ய தத்₃வாத்₄யாநாம் ச அநுக்₃ரஹ꞉ ॥
காய்ச்சின வேந்தன் -9-2-6-
அசுரர்கட்கு இடர் செய் கடு வினை நஞ்சு -9-2-10-
உலகிற்குத் தீங்கு விளைக்கும் இரணியன் முதலியவர்களுக்கு அச்சத்தைத் தருபவர் -பயப்படுத்துவதும் அனுக்ரஹமே யாகும் –
பித்துப் பிடித்தவனை விலங்கிட்டு வைப்பது அவனுக்கும் அவனால் பாதிக்கப்படும் மற்றவர்களுக்கும்
நன்மையைச் செய்வது அன்றோ -ஸ்ரீ பராசர பட்டர் –
கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-
அசுரர்களை அச்சமுறுத்தும் பராக்ரமத்தை அவதாரங்களில் கொண்டவர் -ஸ்ரீ சங்கரர் –
த்ரௌபதியின் கணவனான பீமன் அல்லது ருத்ரனுடைய பராக்ரமத்திற்குக் காரணம் ஆனவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
————-
ஆதார நிலயோ தாதா புஷ்பஹாஸ ப்ரஜாகர
ஊர்தவகஸ் ஸத்பதாசார பிராணத பிரணவ பண –102-
————
950-ஆதார நிலய-
சாதுக்களுக்கு இருப்பிடம்-அனைவருக்கும் இருப்பிட மாய் இருந்தாலும் ஸாதுக்களே தானே ஒத்துக்கொண்டு இருக்கிறார்கள்
ஆதாரம் நிலயம் -பர்யாயம் இருப்பிடம் -ஸாதுக்களே உலகத்துக்கு ஆதாரம் -அவர்களுக்கும் நிலயம் இவன்
இவனை உள்ளத்தில் வைத்து இவனுக்கும் அவர்களே ஆதாரம் -அவர்களையே நிலையமாகக் கொண்டவன் என்றுமாம்
தா₄ர்மிக தயா ஜக₃தா₃தா₄ரா꞉ ப்ரஹ்லாத₃ விபீ₄க்ஷண பாண்ட₃வாத₃ய தேஷாம் நிலய ꞉
ஆதா₄ர நிலய ꞉ ।
தேஹ் யாதா₄ரா꞉, தா
வர்ணாஸ்ரம ஆசார பரா சந்தஸ் ஸாஸ்த்ர ஏக தத் பரா த்வாம் ஹரே தாரயிஷ்யந்தி தேஷு
த்வத் பாராமாஹிதம் –ஸ்ரீ விஷ்ணு ஸ்ம்ருதி
பூமியே வர்ணாஸ்ரமங்கள் எப்போதும் கடைப்பிடித்தபடி ஸாஸ்த்ரங்களை மட்டுமே நம்பியபடி
உள்ள ஸாதுக்கள் மட்டுமே உன்னைத் தாங்குகிறார்கள்
உன்னுடைய பாரம் அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது
நிவாஸ வ்ருஷ ஸாதூநாம் ஆபன்னநாம் பராம் கதி -தாரை வார்த்தை
பூமா தேவி–விஸ்வம் பரா -அத்தைத் தாங்கும் இவன் –விஸ்வம் பர பரர் –ஸ்ரீ பாதுகா தேவிஆழ்வாராதிகள்
என் உணர்விலுள்ளே இருத்தினேன் -ஓடி வந்து என் மனக்கடலில் இருந்தாய் -பட்டினம் காப்பே அவனுக்கு ஸூ ரஷிதம்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் -பெரியாழ்வார் -5-4-5-
பேராளன் பேரோதும் பெரியோர் -பெரிய திரு மொழி -7-4-4-
பெரு மக்கள் உள்ளவர் தம் பெருமான் -3-7-5-
தர்மிஷ்டர்கள் ஆதலால் உலகைத் தாங்குகின்ற ப்ரஹ்லாதன் விபீஷணன் பாண்டவர்கள் முதலியோர்க்கு
ஆதாரமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லாவற்றையும் தாங்கும் பஞ்ச பூதங்களுக்கும் ஆதாரமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
அசுரர்களின் கூட்டங்களுக்கு நரகம் போல் உள்ளவர் -இந்த்ரன் பொழிந்த மழையால் வருந்திய கோபாலர்களுக்கு
கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து அடைக்கலம் அளித்தவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————-
951-தாதா-
தர்மத்தை உபதேசிப்பவன் -உபதேசித்தும் அனுஷ்டித்தும் தாங்குபவன்
ஸ்வயம் ச த₄ர்ம ஆசார்யகேண
தா₄தா
ந மே பார்த்த அஸ்தி கர்தவ்யம் –ஸ்ரீ கீதை -3-22-
அர்ஜுனா எனக்குச் செய்ய வேண்டிய கர்மங்கள் ஏதும் இல்லை -என்றாலும் நான் செய்கிறேன்
ந மே பார்த்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சந—
நாநவாப்த மவாப்தவ்யம் வர்த ஏவ ச கர்மணி—৷৷3.22৷৷
பார்த்தனே -மூ வகைப்பட்ட பிறவிகளில் பிறக்கின்ற எனக்குச் செய்யத் தக்க கர்மம் ஏதும் இல்லை – ஏன் என்றால் –
இது வரையில் கிடைக்காது இருப்பதாய் ஒரு கர்மத்தினால் பெறத் தக்கதாய் இருப்பது எதுவும் இல்லை –
அப்படி இருந்த போதிலும் கர்மத்தில் நான் நிலை நிற்கவே செய்கிறேன்
தானே ஆச்சார்ய பதத்தை ஆசைப்பட்டு -தேர் தட்டிலும் -குரு பரம்பரையிலும்- கீதாச்சார்யனாகவும்
உபதேச பலனாக – உலகம் நடத்தவே -அவதார ரஹஸ்ய ஞானம் -பக்தி யுக்தனுக்கு தேஹ அவ்சானே பேறு
28 சதுர்யுகம் முன்பே விவஸ்வானனுக்கு -சூரியனுக்கு -அவர் மனுவுக்கு -அவர் இஷ்வாகுக்குஉபதேசம் -பூவில் நான்முகனைப் படைத்து வேத உபதேசம்
ஆச்சார்ய ப்ரபோ தர்ம தர்மஸ்ய பிரபுர் அச்யுத
உலகத் தற நூல் சிங்காமை விரித்தவன் எம்பெருமான் -பெரிய திரு மொழி -10-6-1-
தாமே தர்மத்தை உபதேசித்தும் அனுஷ்டித்தும் உலகைத் தாங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
அதாதா -தம்மைத் தவிர வேறு ஆதாரம் அற்றவர் –தாதா -சம்ஹார காலத்தில் எல்லா
பிராணிகளையும் விழுங்குபவர்-ஸ்ரீ சங்கரர் –
தாங்குவதும் போஷிப்பதும் செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————-
952-புஷ்ப ஹாஸ-
மலரும் புஷ்பம் போலே இனியவன்-மலரடிகள் அன்றோ
ஏவம் நிஷ்பாதி₃த ஸ்வாநுப₄வ ஸக்தீநாம் ஸாயமிவ புஷ்பஸ்ய ஹாஸோ போ₄க்₃ய த உல்லா
ஸோ (அ)ஸ்யேதி
புஷ்பஹாஸ꞉ ॥
கருவிளை ஒண் மலர்காள் காயா மலர்காள் திருமால் உரு ஒளி காட்டுகின்றீர் -நாச்சியார் -9-3-
தே நீர் கமலக் கண்களும் வந்து என் சிந்தை நிறைந்தவா -8-5-4-
பிராட்டிமார்களும் கூசிப் பிடிக்கும் மெல்லடி –மலர்ந்தும் மலராமல் -நித்ய அனுபவம்
மகாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்த்வம் வளத்தின் களத்தில் கூடு பூரிக்கும்
வஸுதேவ ஸுதம் கம்ஸ சாணூர மர்த்தனம்
தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் ||
அதஸீ புஷ்ப சங்காசம் ஹாரனூபுர சோபிதம்
ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் ||
தருணவ் ரூப சம்பன்னவ் ஸூகுமாரவ் மஹா பலவ் –சூர்ப்பணகை
தம் ஸ்வரூபத்தை அனுபவிக்கும் சக்தி உடையவர்களுக்கு மாலை வேளையில் பூ மலர்வது போலே
தாமே மலர்ந்து மிகவும் இனியவராக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
புஷ்பம் மலர்வது போல் பிரபஞ்ச ரூபமாக மலர்பவர் -ஸ்ரீ சங்கரர் –
மல்லிகை போன்ற புன்முறுவலை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
——————
953-பிரஜாகார –
விழித்து இருப்பவன்
பிரஜாகார பர்வம் -தூக்கம் வராமல் த்ருதாஷ்ட்ரன் முழித்து இருந்து விதுரன் நீதி உபதேசம் -அனுஷ்ட்டிக்க இப்பிறவி இல்லை என்றானே
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் -பக்தர்கள் –
இங்கு பக்தி உழவன் பயிர் விளைவிக்க தூங்காமல் க்ருஷி செய்பவன்
ஸஸ் யேஷ் விப₃ க்ருஷீ வலஸ் தேஷு ராத்ரிந்தி₃வம் ப்ரஜாக₃ர்தீதி
ப்ரஜாக₃ர꞉ ।
ச ஏஷு ஸூப்தேஷு ஜாகர்த்தி காமம் காமம் புருஷோ நிர்மிமான –கட-2-1-8–
அனைவரும் உறங்கும் போது ஸர்வேஸ்வரன் விழித்து இருந்து அவர்களுடைய பல விருப்பங்களை
நிறைவேற்றும் பொருட்டு பலவற்றையும் உண்டாக்கிய படியும் உள்ளான்
உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்த செல்வனார் -நாச்சியார் 11-7-
பயிர் இடுபவன் பயிரைக் காப்பது போலே இரவும் பகலும் தூங்காமல் பக்தர்களைக் காப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எப்போதும் விழித்துக் கொண்டு இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
நன்கு விழித்து இருப்பவர்-படைக்கும் பொழுது பிரஜைகளை வயிற்றில் இருந்து வெளிப்படுத்துபவர்
உலகங்களை உண்டாக்குபவர் -திருவேங்கடம் முதலிய திரு மலைகளில் மகிழ்பவர் -சத்ய சந்தர் –
—————
954-ஊர்த்வக –
மிக உயர்ந்தவன் –
குதஸ் தத₃ர்த₂ம் அநித்₃ர꞉ ? யத
ஊர்த்₄வக ₃꞉—
ஸ்வபா₄வ துங்க ₃꞉ । யதா₂
மஹாத்மநாம் ஸம்ஸராயம் அப்யுபேதோ-நைவ அவஸீததி அதி துர்க்க
மஹாத்மாக்களுடைய ஆதரவு பெற்றவன் மிகவும் எளியவன் என்றால் துன்பம் அடைவது இல்லை
கருத்தின் கண் பெரியன் -10-8-8-
தனது பேறாக ரஷித்து அருளுபவன்-
ஏன் தூங்காதவர் எனில் எல்லாவற்றிலும் உயர்ந்த தன்மையை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லாவற்றிற்கும் மேலே இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
மேல் உலகமாகிய ஸ்ரீ வைகுண்டத்தில் இருப்பவர் -ஸ்ரீ வைகுண்டத்தை அடைவிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————–
955-ஸத் பதாசார
தாஸ்ய ரசத்தில் தூண்டி நல் வழிப் படுத்துபவன்
தந் மஹத்த்வ ப₂லம் ஸத் பதே ₂-ஸ்வாபா₄விக தா₃ஸ்ய மார்கே ₃ ஆசரணம்-தேஷாம் ப்ரவர்தநம் அஸ்யேதி
ஸத் பதா₂சார꞉,
அநித்தியம் அ ஸூகம் லோகமிமம் ப்ராப்ய பஜஸ்வ மாம் –ஸ்ரீ கீதை -9-33-
நித்யம் அல்லாததும் ஸூகம் அழிக்காததுமாகிய இந்த உலகை அடைந்த பின்னர் நீ என்னிடம் பக்தி செய்தே யாக வேண்டும்
கிம் புநர் ப்ராஹ்மணா புண்யா பக்தா ராஜர்ஷயஸ் ததா.–
அநித்யமஸுகம் லோகமிமம் ப்ராப்ய பஜஸ்வ மாம்—–৷৷9.33৷
குந்தீ புத்திரனே -ஸ்த்ரீகளும் வைஸ்யர்களும் அவ்வண்ணமே சூத்ரர்களுமான பாபத்தினால் தாழ்ந்த பிறப்பை எவர்கள் எடுத்து இருக்கிறார்களோ அவர்களும் என்னை சிறப்பாக ஆஸ்ரயித்து மேலான கதியை அடைகிறார்கள் அன்றோ –
புண்யம் செய்து சிறந்த பிறப்பு எடுத்தவர்களான அந்தணர்களும் ராஜ ரிஷிகளும் என்னிடம் பக்தி செய்தார்கள் ஆகில்
மோக்ஷம் அடைவார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ –
ஆகையால் நிலை இல்லாததாய் -துன்பம் நிறைந்ததான இவ்வுலகை அடைந்து இருப்பவன் ஆகையாலே
என்னிடம் பக்தி செய்வாயாக –
ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் -திருவுள்ள வாழ் கோனாரை அடியேன் அடைந்தேன்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -மருவித் தொழும் மனமே தந்தாய்
உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன் -10-8-10-
பக்தர்களைத் தமக்கு அடிமை செய்வதாகிய நல் வழியில் செல்லும்படி செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சாதுக்களின் வழியாகிய நல்லாசாரங்களைத் தாமும் அனுஷ்டிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
நஷத்ரங்களில் சஞ்சரிப்பவர் -யோக்யர்களை நல் வழியில் செலுத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————-
956-பிராணத-
உயிர் அளிப்பவன்-ஆத்ம தாஸ்யம் அறியாமல் இருந்தால் பிராணன் இல்லாததனால் போலவே தான்
ஏவம் விக்ஷய விக்ஷ (விஷயாந்தர விஷம் )மூர்ச்சி₂த நஷ்ட ஆத்மப்₄ய ஆத்ம உஜ்ஜீவநம் த₃தா₃தீதி
ப்ராணத₃꞉ ॥
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் -1-7-5-
ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயே-ஆர் மருந்து ஆகுவார்
உயிர் அளிப்பான் என்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
கீழே -66–323– 409இதே திரு நாமம் பார்த்தோம்
சப்தாதி விஷயங்களாகிய விஷம் தீண்டி மயங்கித் தம்மை மறந்து ஆத்ம நாசம் அடைந்தவர்களுக்கு
ஆத்மா உய்வதாகிய உயிர் அளிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
இறந்து போன பரீஷித் போன்றவர்களைப் பிழைப்பிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –
உயர்ந்த கதியைக் கொடுப்பவர் -சப்த ரூபமான வேதங்களை நான்முகனுக்கு நன்கு கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————–
957-பிரணவ –
வணங்கச் செய்பவன் -பிரணவ அர்த்தம் உணர்த்தி -திருவடிகளைத் தொழுது எழச் செய்பவன்
ப்ரணவேந ஈத்₃ருஸ ஸம்ப₃ந்த₄ முத்₃போ₃த்₄ய
* மாம் நமஸ் குரு இதி ஸ்வ சரண அரவிந்த₃யோஸ்தான் ப்ரணமயதீதி
ப்ரணவ꞉
மாம் நமஸ்குரு –ஸ்ரீ கீதை 18-65-என்னை வணங்குவாயாக
பிராணாந் சர்வாந் பரமாத்மனி பிராணாமயதி ஏதஸ்மாத் பிரணவ –அதர்வ சிரஸ்
அனைத்து ஆத்மாக்களையும் பரமாத்மாவை வணங்கும்படி செய்வதால் ப்ரணவம் எனப்படுகிறது –
த்வம் மே அஹம் மே –வேத மூல பிரமாணாத்
மேலைத் தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன் -10-8-7-
மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால் மூன்று எழுத்தாக்கி மூன்று எழுத்தை
ஏன்று கொண்டு இருப்பார்க்கு இரக்க நன்குடைய வெம் புருடோத்தமன் இருக்கை
மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்றுரு ஆனான்
கான் தடம் பொழில் சூழ் கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடி நகரே – 4-7-10-
தமக்கும் ஜீவன்களுக்கும் உள்ள தொடர்பை பிரணவத்தினால் அறிவித்து அவர்களைத் தமது
திருவடிகளில் வணங்கச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஓங்காரம் ஆகிய பிரணவ ரூபியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
பிரணவம் விஷ்ணுவின் திரு நாமம் -விழித்து இருக்கும் நிலை முதலியவற்றைத் தருபவர் –
முக்தர்களை நடத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—–
958-பண
வியாபாரம் செய்பவன்
ஏவம் தேஷாம் ஸ்வாம்ய தா₃ஸ்ய வ்யதிஹாரேண வ்யவஹரதீதி
பண ꞉ ।
“பண வ்யவஹாரே ‘
சேஷி சேஷ பாவம் மாறாடி
என் மாய வாக்கை அதனுள் புக்கு என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் -10-7-3-
அனுபவ காலத்தில் போகத்திலே தட்டு மாறும் சீலம் காட் கரையிலே கரை அழிக்கும்
என் தன்னை விற்கவும் பெறுவார்கள்
கமலா க பரமாத்மா ம ஜீவாத்மா இருவருக்கும் கொடுத்து வாங்குபவள் லா தானம் ஆதானம்
தம் அடியவர்களுக்காக தாம் அடிமையாக இருந்து அத் தொடர்பை மாற்றுபவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
படைத்தவற்றிற்குப் பெயர்களைக் கொடுப்பவர் –
புண்ய கர்மங்களைப் பெற்றுக் கொண்டு அவற்றின் பலன்களைத் தருபவர் -ஸ்ரீ சங்கரர்-
ஜனங்களால் போற்றப் பெறுபவர் -ஜனங்களுடன் பேசுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்
————–
பிரமாணம் பிராண நிலய பிராண த்ருத் பிராண ஜீவன
தத்வம் தத்வ விதேகாத்மா ஜன்ம ம்ருத்யு ஜராதிகா —103-
———————-
959-பிரமாணம்
பிரமாணமாய் இருப்பவன்
பிரமா -உண்மை அறிவுக்கு
கரணம் பிரமாணம் உண்மை அறிவுக்கு கருவியாக இருப்பவரே பிரமாணம் –
இவரே ப்ரமேயம் –
இவரைக் காட்டுபவர்கள் ஆழ்வார்கள் பிரமாதாக்கள்
ஏவம் நிஸ் ஸம்ஸய விபர்யய வேத₃ரஹஸ்ய பரமார்த₂ ப்ரத்யாய கத்வாத்
ப்ரமாணம் ॥
அன்று கரு மாணியாய் இரந்த கள்வனே உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு -இரண்டாம் திரு -61
வேதம் வேதத்தின் சுவைப் பயன் –என்னை யாளுடை யப்பன் -பெரிய திரு மொழி -2-3-2-
முன்பே 429 பார்த்தோம்-
மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய்
விளக்கொளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணிவுருவில் பூதமைந்தாய்
புனலுருவாய் அனல் வுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தாய்
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே—-1-
வேதங்களின் ரஹஸ்யமாகிய தத்வார்த்தங்களை ஐயம் திரிபின்றி வெளிப்படுத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஞான ரூபியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
மேன்மையான அறிவு உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————–
960-பிராண நிலய
சகல ஆத்மாக்களுக்கும் இருப்பிடம்-பறவைகளுக்குத் தம் கூடு போல் ஆத்மாக்களுக்கு இவன்
ப்ராணந்தீதி ப்ராணா ꞉ அந்யே (அ)பி ஜீவா꞉, தே ஸ்வநீட₃ இவ ஸகுந்தா꞉ அஸ்மின் லீயந்த இதி
ப்ராண நிலய ꞉ । * பும்ஸி ஸஞ்ஜ்ஞாயாம், இத்யாதி₃நா க ₄꞉ ॥
கோலத்திரு மா மகளோடு சாலப் பல நாள் உகந்து ஓர் உயிர்கள் காப்பான் -6-9-3-உடன்படாமல் பறந்து போனாலும் மீண்டும் இவன் இடமே வர வேண்டுமே
வெம் கண் திண் களிறு அடர்த்தாய் ! வித்துவ கோட்டு அம்மானே !
எங்கு போய் வுய்கேன் ? உன் இணை அடியே அடையல் அல்லால்
எங்கும் போய் கரை காணாது எறி கடல் வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மா பறவை போன்றேனே— 5-5-
அடங்கு எழில் சம்பத்து* அடங்கக் கண்டு* ஈசன்
அடங்கு எழில் அஃது என்று* அடங்குக உள்ளே.
பறைவைகள் கூட்டை அடைவது போலே ஆத்மாக்கள் அடையும் இடமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஜீவர்கள் லயிக்கும் இடமாக அல்லது ஜீவர்களை சம்ஹரிப்பவராக இருப்பவர் -இந்த்ரியங்களுக்கும்
பிராணம் அபானம் முதலான வாயுக்களுக்கும் ஆதாரமான ஜீவாத்மாக்களுக்கும் ஆதாரமானவர் -ஸ்ரீ சங்கரர் –
வாயுவிற்கு அடைக்கலமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————-
961-பிராண த்ருத்
பிராணங்களைத் தரிப்பவன் –
தான் மாத்ருவத்₃ தா₄ரயதி சேதி
ப்ராண த்₄ருத் ॥
தாய் தந்தை உயிராகின்றாய்-2-6-10-
எம்மானும் எம் அம்மனையும் என்னைப் பெற்று ஒழிந்ததன் பின்
அம்மானும் அம்மனையும் அடியேனுக்காகி நின்ற
நல் மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ உன்
மைம்மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே –7-2-3-
பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றான் ஆய் வளர்த்து என் உயிர் ஆகி நின்றானை
முற்றா மா மதி கோள் விடுத்தானை எம்மானை-
எத்தால் யான் மறக்கேன்? இது சொல் என் ஏழை நெஞ்சே (9-7)
அவ்வாத்மாக்களைத் தாய் போலே தாங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
உயிர்களை அந்தர்ப்பியாகப் போஷிப்பவர் -ப்ராணப்ருத்-என்ற பாடம் -ஸ்ரீ சங்கரர் –
பிராணன்களை அல்லது இந்த்ரியங்களைத் தாங்குபவர் -பிராண ப்ருத்-எனபது பாடம் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————-
962-பிராண ஜீவன –
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் எம்பெருமான் -6-7-1-வாஸூ தேவம் ஸர்வம்
தந் அந்ந பாநீயாதி₃வஜ் ஜீவயதீதி
ப்ராண ஜீவந꞉ ॥
அன்னம் ப்ரஹ்ம திவ்ய ஜாநாதி
அவ்வாத்மாக்களை உணவு போலே பிழைப்பிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
பிராண வாயு ரூபியாக பிராணிகளை ஜீவிக்கச் செய்பவர் -ஸ்ரீ சங்கரர் –
முக்ய பிராணனால் ஜீவர்களை வாழ்விப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
————–
963-தத்த்வம்
சாரமாய் உள்ளவன் -சத்தா ஹேது
த₃தி₄ து₃க்₃த₄யோரிவ த₃தி₄ஸார ஶ்சித₃ சிதோர் வ்யாப்தி ப்ரயோஜநாப்₄யாம் ஸாராம்ஸ ꞉
தத்த்வம் । யதா
பரமார்த்தம் அசேஷஸ்ய ஜகத் -பிரபாவாப்யயம் சரண்யம் கச்சன் கோவிந்தம் நாவ சீததி
கோவிந்தனே உண்மையான வஸ்து
அவனே இந்த உலகின் ஸ்ருஷ்டிக்கும் அழிவுக்கும் காப்பாற்றுதலுக்கும் காரணமாக உள்ளான்
அவனைச் சரணம் அடையும் ஒருவன் எக் காரணத்தாலும் வருத்தம் அடைய மாட்டான்
ஏகதோ வா ஜகத் க்ருத்ஸ்னம் ஏகதோ வா ஜனார்த்தன சாரதோ ஜகத் க்ருத்ஸ்நாத் அத்திரிக்குதோ ஜனார்த்தன
ஜனார்த்தனனை ஒரு தட்டிலும் இந்தப் பிரபஞ்சத்தை மற்றொரு தட்டிலும் வைத்தால்
தனது மேன்மை காரணமாக ஜனார்த்தனன் உள்ள தட்டே தாழ்ந்து இருக்கும்
கறந்த பால் நெய்யே நெய்யின் சுவையே கடலினுள் அமுதமே அமுதில் பிறந்த இன் சுவையே சுவையது பயனே -8-1-7-
இளம் குயிலே என் தத்துவனை வரக் கூவிற்றியாகில் தலை அல்லால் கைம்மாறு இலேனே -நாச்சியார் -5-6-
உலகுக்கு ஓர் உயிர் ஆனாய் -6-9-7-
தயிர் பால்களில் போல் சேதன அசேதனங்கள் ஆகிய பிரபஞ்சத்தில் வியாபித்து இருக்கும்
சாராம்சமானவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
உண்மையான வஸ்துவாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
குணங்களால் பரவியிருப்பவர் -எல்லோர்க்கும் நன்மை அளிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————–
964-தத்த்வ வித்
தத்துவத்தை அறிந்தவன்-தன்னையே நன்றாக அறிந்தவர் -நீயே உன்னை உன்னால் அறிந்து கொள்கிறாய்
யஸ் ஸர்வஞ்ஞ ஸர்வ வித்
ததா₂ தத்த்வம் ஆத்மநோ வேத்தீதி
தத்த்வ வித் ।
* த்வமேவ த்வாம் வேத்த₂, இதி,
* ஸ்வயமே வாத்மநாத்மாநம் வேத்த₂ த்வம் புருஷோத்தம, இதி ॥
எம்பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசி என் -8-4-9-அவன் ஒருவனே அறிவான்-
தமது இவ் வுண்மையை அறிந்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
த்வமேவ த்வம் வேத்த–புருஷோத்தமா நீ உன்னை உன்னுடைய அறிவினால் அறிகிறாய்
தம் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
தம் தன்மையை அறிந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————-
965-ஏகாத்மா
உலகங்கட்கு எல்லாம் ஓர் உயிராய் இருக்கும் தனிப் பெரும் பரமன்
ஸர்வஸ்ய சித₃சித்₃வர்க ₃ஸ் யாயமேக ஏவ சேஷ போ₄க்தா(அ)பி₄மாநீ சேதி
ஏகாத்மா ||
ஆர் உயிரேயோ அகலிடம் முழுதும் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பேர் உயிரேயோ
தேவர்க்கும் தேவாவோ ஓர் உயிரேயோ-(ஏகாத்மா-) உலகங்கட்கெல்லாம்-8-1-5-
நாராயணனே நமக்கே பறை தருவான் -ஏக சேஷி -ஸமஸ்த சேஷ பூதர்கள்
நித்யோ நித்யாநாம் சேதநஶ்சேதநாநாமேகோ ப³ஹூநாம் யோ வித³தா⁴தி காமாந் ।
தத்காரணம் ஸாங்க்²யயோகா³தி⁴க³ம்யம் ஜ்ஞாத்வா தே³வம் முச்யதே ஸர்வபாஶை: ॥ -ஸ்வேதாஸ் வர உபநிஷத் -13॥
அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I-வேதார்த்த ஸங்க்ரஹ மங்கள ஸ்லோகம்
சேதன அசேதனங்கள் அனைத்திற்கும் ஒரே ஸ்வாமியாகவும்-அனுபவிப்பவராகவும் அபிமானியாகவும் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஒரே ஆத்மாவாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
முக்யமான தலைவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————–
966-ஜன்ம ம்ருத்யு ஜாரதிக
பிறப்பு இறப்பு மூப்பு கட்கு அப்பால் பட்டவன்
ததா₂பி தது₃ப₄ வித₄ர்மாத்மா
ஜந்ம ம்ருத்யு ஜராதிக ₃꞉ ॥
அமலன் ஆதி பிரான்-
அசேதனம் ஸ்வரூப ஸ்வ பாவ மாறுதல் உண்டே
சேதனம் -ஸ்வ பாவ மாறுதல் உண்டு
இவனுக்கு இவற்றோடு அணுக்கமான தொடர்பு இருந்தாலும் ஸமஸ்த இதர விலக்ஷணன்
மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய்
விளக்கொளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணிவுருவில் பூதமைந்தாய்
புனலுருவாய் அனல் வுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தாய்
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே—-1-
சேதன அசேதனங்கள் இரண்டைக் காட்டிலும் வேறு பட்டவராய் பிறப்பு இறப்பு மூப்புக்களைக் கடந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பிறப்பு இறப்பு மூப்பு முதலிய ஆறு விகாரங்களைக் கடந்தவர் -ஸ்ரீ சங்கரர் –
பிறப்பு இறப்பு மூப்பு முதலிய தோஷங்களுக்கு அப்பாற்பட்டவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
———-
பூர்ப்புவஸ் ஸ்வஸ் தருஸ் தாரஸ் சவிதா ப்ரபிதாமஹ
யஜ்ஞோ யஜ்ஞபதிர் யஜ்வா யஜ்ஞாங்கோ யஜ்ஞவாஹன–104-
————–
967-பூர் புவ ஸ்வஸ் தரு-
மூ வுலகத்திய ஜீவ ராசிகளும் தங்கும் மரமாய் உள்ளவன்
பூ புவ ஸூவ பூமி வானம் சுவர்க்கம் -ஜீவர்களும் தங்கும் மரம்
வாஸூ தேவ தருச்சாயா
பூ₄ர் பு₄வ꞉ஸ்வர் உப லக்ஷிதை ꞉ பக்ஷிபதி₂கைரிவ ப்ராணிபிர் உப ஜீவ்யமாநச் சாய பத்ரல பாரிஜாத꞉
பூ₄ர் பு₄வ꞉ ஸ்வஸ்தரு꞉ ।
ஸமாஸ்ரிதா ப்ரஹ்ம தரோ அனந்தாதி நிஸ் சம்சய பக்குவ பல ப்ரபாத –
ஓங்கி வளர்ந்த பர ப்ரஹ்மம் என்னும் பழுத்த மரத்தை அடைந்தால் அதிலிருந்து பழுத்த பழங்கள் உதிர்வது உறுதி
பாதேயம் வாஸூ தேவ நாம சங்கீர்த்தனம் -பாதே -வழிப்போக்கருக்கு இளைப்பாறும் இடம் -இருப்பிடம் வாஸூ தேவ தருச்சாயா
மூவாத் தனி முதலா மூ வுலகும் காவலோன் -2-8-5-
பூ லோகம் புவர்லோகம் ஸூவர்லோகம் ஆகிய மூ வுலகங்களிலும் உள்ள பிராணிகள் பறவைகள்
பழுத்த மரத்தை அடைவது போல் தம்மை அடைந்து வாழும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பூ புவர் ஸூவர் லோகங்களையும் மரம் போலே வியாபித்து இருப்பவர் -பூ புவ ஸவ என்கிற வேத சாரங்கள் ஆகிய
மூன்று வ்யாஹ்ருதி ரூபங்களால் செய்யப்ப்படும் ஹோமம் முதலியவற்றால் மூ வுலகங்களையும் நடத்துபவர் ஸ்ரீ சங்கரர் –
பூ -நிறைந்தவர் -புவ -செல்வத்தால் சிறந்தவர் -ஸ்வ-அளவற்ற சுகமுடையவர் -தரு -தாண்டுபவர் -அல்லது –
ஸ்வஸ்தரு -கற்பக மரம் போன்றவர் -மூன்று திரு நாமங்கள் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————-
968-தார –
திரு நாவாய் -சம்சாரம் கடலைத் தாண்டுவிக்கும் கப்பல்
விஷ்ணு போதம்
முன்பே 340 பார்த்தோம்
நாரணன் சேர் திரு நாவாய் -9-8-3-
தேஷாம் ஸம்ஸார தாரணாத்
தார꞉ ॥
மாயா மேதம் தரந்திதே–
சம்சார சாகரம் கோரம் –நிஸ் தரந்தி மனுஷ்ய
அக்கரை என்னும் அநர்த்தக் கடலில் அழுந்திக் கிடந்தேன் -இக்கரை ஏறி -ஆழ்வாருக்கு நித்ய விபூதியை இக்கரை
எவை கொல் அணுகப் பெரும் நாள் என்று எப்போதும்
கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்
நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே–9-8-3-ஆழ்வாருக்கு திரு நாவாய் புகுவதே ஸ்ரீ வைகுண்டம் போவதற்கு சமம்
அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-
வைகுந்தம் என்னும் தோணி பெறாது உழல்கின்றேன்
அவர்கள் சம்சாரத்தைத் தாண்டும்படி செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பிறவிக் கடலைத் தாண்டுவிப்பவர் -பிரணவ ரூபி -ஸ்ரீ சங்கரர் –
ஓங்காரமாக இருப்பவர் -அறியப்படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
———————
969-ஸவிதா –
உண்டாக்குமவன் –ஸவிதா என்று ஸூரியனையும் சொல்லும்
ஸர்வேஷாம் ஸாக்ஷாஜ் ஜந யிதா
ஸவிதா ॥
முன்பே 887 பார்த்தோம்
வள வேழு உலகின் முதலாய வானோர் இறை -1-5-1-
பஹு ஸ்யாம் ப்ரஜாயேய -வியஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி ஆக்குவதற்காக சமஷடி ஸ்ருஷ்ட்டி பண்ணி நான்முகன் மூலம் செய்து அருளுகிறார்
கடல் ஞாலம் செய் தேனும் நானே என்னும்
வீட்டைப்பண்ணி விளையாடும் விமலன்
ஆகியும் ஆக்கியும் காக்கும்
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1-
எல்லாவற்றையும் தாமே உண்டாக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லாவற்றையும் உண்டாக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –
படைப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
——————
970-ப்ரபிதா மஹ –
தாத்தாவின் தந்தை -பிதாமஹன் நான்முகன் -பிரஜாபதிகளைப் படைத்து அவர்கள் மூலம் பிரஜைகளைப் படைப்பதால்-
பிதாமஹஸ்யாபி ஜநகத்வாத்
ப்ரபிதா மஹ꞉ ॥
பிதாமஹஸ்யாபி பிதாமஹாய ப்ராசேத ஸாதேச பல ப்ரதாய
ஸ்ரீபாஷ்யகாரோத்தம தேசிகாய ஸ்ரீசைல பூர்ணாய நமோ நம: ஸ்தாத்—பெரிய திருமலை நம்பியின் தனியன்
ஆதுமில் பாழ் நெடும் காலத்து நன்மைப் புனல் பண்ணி நான் முகனைப் பண்ணி தன்னுள்ளே தோற்றிய இறைவன் -7-5-4-
தேவும் எப்பொருளும் படைக்க பூவில் நான்முகனைப் படைத்த தேவன்
பிதாமஹரான பிரமனுக்கும் தந்தையானவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
பிதாமஹரான பிரமனுக்கும் தந்தை -ஸ்ரீ சங்கரர் –
நான் முகனுக்குத் தந்தையானவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————–
971-யஞ்ஞ-
தானே யஞ்ஞமாய் உள்ளவன்
ஸ்வ ஆரத₄ந த₄ர்ம ஸம்ருத்₃தி₄ரிக்தாநாம் (ஆராதனைக்கு சக்தி பிராப்தி இல்லாதவர்க்கு)தத் அர்தி₂நாம் (ஆர்த்தி உள்ளவர்களுக்கு -ஆசையே தகுதி)ஸ்வயமேவ
யஜ்ஞ꞉
செய்கின்ற கிறி எல்லாம் நானே என்னும் -5-6-4-
ஜப யஞ்ஞ ரூபமாய் இருப்பவன்
முன்பே 446 பார்த்தோம்
அந்தணர் தம் ஓமமாகிய அம்மான் -பெரிய திரு மொழி -8-6-5-
பண்டை நான் மறையும் வேள்வியும் தானாய் நின்ற எம்பெருமான் -பெரிய திருமொழி -5-7-1-
மறையாய் வேள்வியாய் தக்கணையாய் -பெரியாழ்வார் -4-9-5-
குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தண்மை தன்னை
ஒளித்திட்டேன் என் கண் இல்லை நின் கணும் பக்தனும் அல்லேன்
களிப்பது என் கொண்டு நம்பி கடல் வண்ணா கதறுகின்றேன்
அளித்து எனக்கு அருள் செய் கண்டாய் அரங்க மா நகர் உளானே –25-
பற்றிலார் பற்ற நின்றானே
தம்மை ஆராதிப்பதற்கு உரிய புண்யம் இல்லாமல் தம்மை ஆராதிக்க விரும்புவர்களுக்கு
தாமே யஜ்ஞமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
யஜ்ஞ ஸ்வரூபி யானவர் -யாகம் செய்பவர்களுக்கு அதன் பலன்களைச் சேர்ப்பிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –
யஜ்ஞங்களை அனுபவிப்பவர் -அல்லது யஜ்ஞங்களுக்குத் தக்கவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————
972- யஞ்ஞ பதி-
யஞ்ஞங்களுக்கு ஸ்வாமி -பல ப்ரதன்
ஸ்வ யஜ்ஞ ப₂ல ப்ரத₃꞉
யஜ்ஞ பதி꞉ ॥
அஹம் ஹி சர்வ யஞ்ஞாநாம் போக்தாச ப்ரபுரேவச-ஸ்ரீ கீதை -9-24-
தத்ர தத்ரபல பிரதாதா சாஹமே வேத்யர்த்த-
ஏகைக பல லாபாய ஸர்வ லாபாய கேசவா-சகல பல ப்ரதோ ஹி விஷ்ணு
தருமவரும் பயனாயா-அவரவர் இறையவர் -விதி வழி நின்றவர் –
கர்ம பக்தி அனைத்துக்கும் இவரே பலன் அளிக்க வேண்டும்
யஞ்ஞதுக்கு -எஜமான் -யஜ்வா -ஆராதன தெய்வம் -த்ரவ்யம் -அங்கம் -வாஹனம்–தாங்குபவன் முதலாளி -ரஹஸ்யம் அனைத்தும் இவனே -என்கிறது மேல்
தம் ஆராதனத்திற்குப் பலனை அளிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
யஜ்ஞங்களைக் காப்பவர் -தலைவர் -ஸ்ரீ சங்கரர் –
யஜ்ஞங்களைக் காப்பவர் அல்லது தலைவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————
973-யஞ்வா-
யாகம் செய்பவன் –
அஸக்தாநாம் ஸ்வயமேவ யஜமாந꞉
யஜ்வா ।
* ஸு யஜோர்ஹ்ருநிப் ।
ஆஶ்வமேதி₄கே –வைஷ்ணவே தர்மே பகவான்
தேஷாம் து பாவநாய அஹம் நித்யமேவ யுதிஷ்ட்ர உபே சந்தயே அநு திஷ்டாமி ஹி
அஸ்கந்தம் தத் விரதம் மம –ஆஸ்வமேதிக பர்வம்
யுதிஷ்ட்ரா சக்தி இல்லாத பக்தர்களைத் தூய்மைப் படுத்துவதற்காக நான் அன்றாடம்
இரண்டு சந்திகளிலும் யாகத்தைத் தவறாமல் செய்கிறேன் -இது எனது விரதமாகும் –
அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்காரா அதிகாரம் இல்லாதார்க்கு அன்றோ நீஎதிராஜர் ர் இரங்க வேண்டுவ-ஆர்த்தி பிரபந்தம்
கால த்ரயம் -கரண த்ரய நிர்மிதாத பாபத் த்ரயங்கள் பண்ணிக் கொண்டே இருக்கும் நமக்காக தானே பிரபத்தி செய்து -தாய முறை நமக்கு
கேசவ யாஜி திருக்குமாரர் -தந்தை பூர்வ பாக யாகம் செய்து பெற்ற ராமானுஜர் நமக்காக பிரபத்தி -எஜமானர் உடையவர்
அனுஷ்டிக்க சக்தி இல்லாதார் நித்ய கர்மாக்களையே யாகம் எனபது இதனை தானே அனுஷ்டிப்பவன்
சக்தி அற்றவர்களுக்குத் தாமே யஜமான ரூபியாக யாகம் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
யாகம் செய்யும் யஜமானராக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
யாகம் செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தரர் –
————-
974-யஞ்ஞாங்க-
பிறர் அனுஷ்டிக்கும் யஞ்ஞங்களை தான் அனுஷ்டிப்பதற்கு அங்கமாய் உள்ளவன்
அங்கம் -துணையாக -அஹ்ய சேஷ பூதம்-
ஸமர்த₂ அநுஷ்டி₂தம் அபி யஜ்ஞாந்தரம் அஸ்ய சேஷ பூ₄தமிதி
யஜ்ஞாங்க₃꞉
ஸ்வ தந்த்ர பிரபத்தி -பக்திக்கு அங்கமாக பிரபத்தி -பக்தி ஆரம்ப விரோதி போக்க
பகவானே பிரபத்தி -அவனே அங்கி -மற்றவை எல்லாம் அங்கம் –
பஹுஸ் யாம் ப்ரஜாயேய -இதுவே முக்கிய யஜ்ஜம்-மற்றவை எல்லாம் அங்கங்கள்
வெறிதே அருள் செய்வார் செய்வார்கட்க்கு -இவன் விருப்பப்படி செய்வார்கட்க்கு நிர்ஹேதுகமாக அருள் செய்வார்
இவன் விரும்புவதே உபாயம் –பிரிய தமன் என்று வரிக்கப்பட்டவனுக்கே பேறு
அவன் உகப்பே ஹேது-நிர்ஹேதுக கிருபையே -என் நன்றி செய்தேனோ என் நெஞ்சில் திகழ்வதுவே –
என் உணர்வில் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே
சக்தி யுள்ளவர்கள் செய்த யாகங்கள் மேற்கூறிய தம் யாகத்திற்கு அங்கமாகக் கீழ்ப் பட்டு
இருக்கும் படி செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
யாகங்களே அங்கமாக உடைய வராஹ மூர்த்தியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
யஜ்ஞத்தால் உத்தேசிக்கப் படுபவர் -பயனாக விரும்பப் படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————–
975-யஞ்ஞ வாஹன-
யாகத்தை நடத்தி தருமவன் -சக்தி ஸ்ரத்தை அளித்து
தேஷாம் ஸக்தி ஶ்ரத்₃த₄அதி₄கார தா₃நேந யஜ்ஞம் வாஹயதீதி
யஜ்ஞ வாஹந꞉
செய்வார்களைச் செய்வேனும் யானே -5-6-4-
ஸ்வாமீ ஸ்வ சேஷம் ஸ்வ வசம் ஸ்வ பரத்வேந நிர்ப்பரம் ஸ்வ தத்த ஸ்வதியா ஸ்வார்த்தம் ஸ்வ ஸ்மிந்
ந்யஸ்யதி மாம் ஸ்வயம் –ஒன்பதில் கால் ஸ்வ சப்த பிரயோகம் –
ஸ்ருஷ்ட்டி அவதார முகத்தால் பண்ணி அருளும் கிருஷீ பலம்
யஜ்ஞம் செய்பவர்க்கு சக்தியும் ஸ்ரத்தையும் அதிகாரமும் கொடுத்து யாகத்தை நடத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பலத்தைக் கொடுக்கும் யஜ்ஞங்களை நடத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –
செய்பவர்களை வழி நடத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————
யஜ்ஞ ப்ருத் யஜ்ஞ க்ருத் யஜ்ஞீ யஜ்ஞ புக் யஜ்ஞ சாதன
யஜ்ஞாந்த க்ருத் யஜ்ஞ குஹ்யம் அன்ன மன்னாத ஏவ ச –106-
————–
976-யஞ்ஞ ப்ருத் –
யாகத்தை நிறைவுறச் செய்பவன்
பிராயச் சித்தான்ய சேஷாணி ஸ்ரீ கிருஷ்ண அநு ஸ்மரணம் பரம்-
விகலமபி யஜ்ஞம் ஸ்வ ஸ்மரண பூர்ணா ஹுதிப்₄யாம் புஷ்ணாதீதி
யஜ்ஞ ப்₄ருத் । யதா₂
ப்ரமாதாத் (கவனக் குறைவால் )குர்வதாம் கர்ம பிரஸ்யவத் யத்வரேஷு யத் ஸ்மரணா தேவ தத் விஷ்ணோ சம் பூர்ணம் ஸ்யாதிதி ஸ்ருதி
யஜ்ஞத்தில் எந்தச் செயலைச் செய்யும் போதும் ஏதேனும் ஒரு காரணத்தால் ஏதேனும் ஒரு குறை உண்டானாலும்
மஹா விஷ்ணுவை எண்ணிய யுடனேயே அந்தக் குறை நீங்கி யஜ்ஞம் பூர்ணமாகிறது என்று ஸ்ருதி கூறுகிறது
மாயனைத் தாமோதரனைச் செப்பு -நாம் செய்யும் நோன்பு முடிய உதவுவான்
யஜ்ஞம் குறைவு பட்டாலும் தம்மை தியானிப்பதனாலும் பூர்ணா ஹூதியினாலும்
அதை நிரம்பச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
யஜ்ஞங்களைத் தாங்குபவர் -அல்லது காப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
யஜ்ஞத்தைத் தாங்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————–
977-யஞ்ஞ க்ருத்-
யாகங்களை உண்டாக்கியவன் -பரஸ்பரம் பாவயந்த -தேவர்கள் மனுஷ்யர்கள்
ஜக ₃த்₃தி₄தா ய யஜ்ஞ மாதௌ₃ ஸ்ருஜதீதி
யஜ்ஞ க்ருத் ॥
பண்டை நான்மறையும் வேள்வியும் தானாய் நின்ற வெம்பெருமான் -பெரிய திரு மொழி -5-7-1-
உலகங்களின் நன்மைக்காக ஆதியில் யஜ்ஞத்தை உண்டாக்கியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஆதி காலத்தில் யஜ்ஞத்தைப் படைத்து பிரளய காலத்தில் யஜ்ஞத்தை அழிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –
யஜ்ஞத்தைச் செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————–
978-யஞ்ஞீ-
யஞ்ஞங்களால் ஆராதிக்கப் படுபவன் -சர்வ சேஷி
ஸர்வ யஜ்ஞாநாம் சேஷீ
யஜ்ஞீ ॥
செய்கைப் பயன் உண்பேனும் யானே -5-6-4-
அஹம் ஹி சர்வ யஞ்ஞாநாம் போக்தா ச பிரபுரேவச -ஸ்ரீ கீதை -9-24-
யத் கரோஷி யத³ஸ்²நாஸி யஜ் ஜுஹோஷி த³தா³ஸி யத் |
யத் தபஸ்யஸி கௌந்தேய தத் குருஷ்வ மத³ர்பணம் || 9- 27||
எல்லா யஜ்ஞங்களுக்கும் தலைவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
யஜ்ஞங்கள் தமக்கு ஆராதனங்கள் ஆகையால் யஜ்ஞங்களுக்குத் தலைவர் -ஸ்ரீ சங்கரர் –
யஜ்ஞத்தை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————
979-யஞ்ஞ புக்
யஞ்ஞங்களை அனுபவிப்பவன் -அந்தராத்மா -தடை இன்றி ரஷிப்பவனும் அவனே-
தான் பு₄ங்க்தே பு₄நக்தி வேதி
யஜ்ஞ பு₄க் ॥
மா முனி வேள்வியை காத்து
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்
ப்ராப்திக்கு உகப்பானும் அவனே
அந்த யஜ்ஞங்களை அனுபவிப்பவர் -அல்லது காப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
யஜ்ஞங்களை அனுபவிப்பவர் -காப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
யஜ்ஞத்தை உண்பவர் -தேவர்களை உண்பிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————
980-யஞ்ஞ சாதன
யஞ்ஞங்களை சாதனமாக ஆக்குமவன்
தே (அ)ஸ்ய ஜ்ஞாந த்₃வாரா ஸித்₃த்₄யுபாயா இதி
யஜ்ஞ ஸாத₄ந꞉ ॥
தன்னைப் பற்றிய அறிவின் மூலம் தன்னை அடைய யஞ்ஞங்களை உபாயமாக ஆக்குமவன்
முன்பே 981 பார்த்தோம் –
தன்னையே சாதனமாக ஆக்குகிறான் –ஜ்ஞாந த்₃வாரா ஸித்₃த்₄யுபாயா-அவனே எல்லாம் என்ற ஞானம் வந்தால் தானே பூர்த்தி அடையும்-
தமேவம் வித்வான் அம்ருதம் இஹ பவதி
மறந்தேன் முன்னம் முன்னம் -அறிந்தேன் –
யஜ்ஞங்களே ஞானத்தின் வழியாகத் தம்மை அடைவதற்கு உபாயங்களாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
தம்மை அடைவதற்கு யஜ்ஞங்களை ஞானம் மூலம் சாதனமாக உடையவர் -ஸ்ரீ சங்கரர்-
யஜ்ஞத்தின் ச்ருக் ஸ்ருவம்-கரண்டிகள் -மந்த்ரம் -முதலியவற்றைக் கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————
981-யஞ்ஞாந்த க்ருத்
யாகத்தின் பலனை உண்டாக்குபவன்
ஸ்வ தத்த்வ ஜ்ஞாநம்-கர்ம அனுஷ்டானம் பலன் பரத்வ ஞானம்
ஸர்வ கர்மாகி₂லம் பார்த₂ ஜ்ஞாநே பரி ஸமாப்யதே இதி யஜ்ஞ பர்யவஸாநம் ஸ்வ தத்த்வ ஜ்ஞாநம் கரோதீதி
யஜ்ஞாந்த க்ருத் ॥
ஸர்வம் கர்மம் அகிலம் பார்த்த ஞாநேந பரிஸமாப்யதே–ஸ்ரீ கீதை -4-33-
எந்த எந்த கர்மங்கள் உள்ளனவோ அவை அனைத்தும் ஞானத்தில் சென்று முடிகின்றன
ஸ்ரேயாந் த்ரவ்ய மயாத் யஜ்ஞாத் ஜ்ஞாந யஜ்ஞ பரந்தப.–
ஸர்வம் கர்மாகிலம் பார்த்த ஜ்ஞாநே பரி ஸமாப்யதே—৷৷4.33৷৷
எதிரிகளை அழிப்பவனே -த்ரவ்ய சாத்தியமான கிரியைகளை முக்கியமாகக் கொண்ட கர்ம யோக
அம்சத்தைக் காட்டிலும் -கர்ம யோகத்தில் உள்ள ஞான அம்சமே சிறந்தது -குந்தீ புத்திரனே –
சர்வம் எல்லா பிரகாரங்களோடு கூடியதாய் -எல்லா அங்கங்களோடும் கூடியதான கர்ம ரூபமான அம்சம்
அமலன் ஆதி பிரான் -தானே ஜகத் காரணன் என்று சொல்லிக்கொடுத்த உபகாரம் போல்
இங்கும் தன்னைப் பற்றிய ஞானத்தைத் தானே அளிப்பவன் என்கிறார் இத்தால்
மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதி இல் மனத்தால்
இறந்தேன் எத்தனையும் அதனால் இடும்பைக் குழியில்
பிறந்தே எய்த்து ஒழிந்தேன் பெருமான் திரு மார்பா
சிறந்தேன் நின் அடிக்கே-திருவிண்ணகர் மேயவனே—பிறந்ததின் பயனை அனுபவிக்காததால் இறந்தேன் என்கிறார் -ஞான ஜென்மம் கிடைக்காமல் உழன்று உள்ளோம்
ஸ்வ ஞானமும் –பர ஞானமும் புருஷார்த்த ஞானமும்-ப்ராப்ய ப்ராபக ஞானம்-முமுஷுவுக்கு ஞான த்ரயமும் உபாதேயம்
ஞானக் கை தா காலக் கழிவு செய்யேல்
அறிவில்லா குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய –நெறி எல்லாம் எடுத்து உரைத்த அகல் ஞால மூர்த்தி
யாகத்தின் பலனாகிய தம்மைப் பற்றிய தத்வ ஞானத்தை உண்டாக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
யஜ்ஞத்தின் முடிவாகிய பலத்தைக் கொடுப்பவர் -ஸ்ரீ வைஷ்ணவீ ருக்கைச் சொல்லுவதாலும்
பூர்ணா ஹூதி செய்வதனாலும் யஜ்ஞத்தை நிறைவேற்றுபவர் – -ஸ்ரீ சங்கரர் –
யஜ்ஞத்தை நிச்சயிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————
982-யஞ்ஞ குஹ்யம் –
யாகங்களின் அடிப்படை ரகஸ்யமாக உள்ளவன்–மறை பொருள் -வேத ரஹஸ்யம் –
யந் நிரபேஷோ (அ)பி ஸாபேக்ஷவத்₃ யஜ்ஜேஷு புரோடா₃ஸாதி₃கம் பு₄க்த்வா த்ருப்யம்-
ஸ்தர்பயதி, தத்₃ யஜ்ஞ விதி₄க₃தி ஸாத₄ந வித₃ ஏவ வித₃ந்தி ந ஸ்தூ₂ல த்₃ருஸ இதி
யஜ்ஞ கு₃ஹ்யம் ।
யதா வேத்₃யுதா₃ஹரணே
சர்வே வேதா சர்வ வேத்யா ச சாஸ்த்ரா சர்வே யஜ்ஞா சர்வ இஜ்யஸ்ய கிருஷ்ண
விது கிருஷ்ணம் ப்ராஹ்மணாஸ் தத்துவதோ யே தேஷாம் ராஜன் சர்வ யஜ்ஞா ஸமாப்த-
அனைத்து வேதங்களும் அனைத்து வேதப் பொருள்களும் அனைத்து யஜ்ஞங்களும்
அனைத்து யாகங்களால் ஆராதிக்கப்படும் அனைத்து தேவர்களும் கிருஷ்ணனே ஆவான்
அரசனே இவ்விதம் கிருஷ்ணன் உள்ளதை அறிந்தவன் மட்டுமே அனைத்து யஜ்ஞங்களையும் பூர்த்தி செய்தவன் ஆகிறான்
ஜ்யோதீம்ஷி சுக்ராணி ச யானி லோகே த்ரயோ லோகா லோக பாலஸ் த்ரயீ ச த்ரய அக்நயச்ச
அஹுதயச் ச பஞ்சே சர்வே தேவா தேவகீ புத்ர ஏவ
இந்த உலகில் காணப்படும் அனைத்து தேஜஸ்ஸுக்களும் மூன்று லோகங்களும் மூன்று லோகங்களைக் காப்பவர்களும்
மூன்று அக்னிகளும் அந்த அக்னிகளில் அளிக்கப்படும் ஐந்து ஆஹுதிகளும்
அனைத்து தேவர்களும் தேவகியின் புத்திரனான கிருஷ்ணனே ஆவான் –
செய்த வேள்வியர் -5-7-5-இந்த ஞானம் வந்ததும் இனி செய்வது ஒன்றும் இல்லை இங்கும் அங்கும்
கொடுத்துக் கொள்ளாதே கொண்டத்துக்குக் கைக்கூலி கொடுக்க வேண்டுமே -ஓன்று நூறாயிரமாகக் கொடுப்பேன் -இதுவே ரஹஸ்யம்
அனைத்து செயல்களையும் கிருஷ்ண அர்ப்பணம் என்பது மட்டும் அல்ல -அனைத்துமே கிருஷ்ணன் என்று உணர வேண்டும் என்பதே ரஹஸ்யம்
ஓதுவார் ஓத்தெல்லாம் எவ்வுலகத் தெவ்வெவையும்,
சாதுவாய் நின்புகழின் தகையல்லால் பிறிதில்லை,
போதுவாழ் புனந்துழாய் முடியினாய், பூவின்மேல்
மாதுவாழ் மார்ப்பினாய். என்சொல்லியான் வாழ்த்துவனே?–சர்வே வேதா யத் பதம் ஆமயந்தி –
அனைத்து வேதமும் உபநிஷத்துக்களும் சொல்வது ஒன்றே
ஸர்வ கர்ம ஆராத்யனும் -ஸர்வ வேத அந்தராத்மாவாய் -ஸர்வ காரணமாய் நாராயணன்-என்பதே வேதங்களின் 20 அத்யாய சுருக்கம்
எதையும் எதிர்பாராதவராக இருந்தும் எதிர்பார்ப்பவர் போல் யாகத்தில் அளிக்கும் புரோடாசம் முதலியவற்றை உண்டு
திருப்தி அடைந்து யாகம் செய்தவரைப் பலன்களால் திருப்தி செய்வித்து யாகத்தின் ரஹஸ்யமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
யஜ்ஞங்களுள் ரஹஸ்யமாகிய ஞான யஜ்ஞமாக இருப்பவர் -பலனைக் கருதாது செய்யப்படும் யஜ்ஞமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
யஜ்ஞத்தின் ரஹஸ்யமான விஷ்ணு என்னும் நாமத்தை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————–
983-அந்நம்
உண்ணும் சுவை யமுதாக உள்ளவன் -யாத்மதா பலதா –
ஏவம் நிஷ்பாதி₃த போ₄க்த்ரு ஸக்தி பி₄ர்பு₄ஜ்யதே இதி
அந்நம்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -6-7-1-
வாசு தேவஸ் சர்வம் -ஸ்ரீ கீதை -7-9
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத
தேனும் பாலும் அமுதுமாகித் தித்தித்து என் ஊனில் உணர்வில் நின்றான் -8-8-4-
போக்தாவாக இருக்க வேண்டுமா போக்த்ருத்வமாக இருக்க வேண்டுமா –
அன்னமாகவா அன்னாதாவாகவா
மா முனிகள் ஆய் ஸ்வாமிகள் சம்வாதம்
சேஷத்வ போக்த்ருத்வங்கள் போல் அன்றே பாரதந்திர போக்யதைகள்–ஆச்சார்ய ஹ்ருதயம் சூரணை -21 –
படியாய்க் கிடந்து பவளவாய் காண வேண்டுமே-அமுதம் உண்டு களித்தேனே –அப்பால ரெங்கனை அனுபவித்து
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -அவன் போக்தா நாம் போக்யம்
இங்கு அவன் அன்னம் -நாம் போக்தா-பகவத் குணஅனுபவத்தால் தானே அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் ஸித்திக்க வேண்டுமே
இருவரும் இரண்டாகவே இருக்க வேண்டும் அன்றோ
இப்படித் தம்மால் அளிக்கப் பட்ட சக்தியைப் பெற்றவர்களால் அனுபவிக்கப் படுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லோராலும் அனுபவிக்கப் படுபவர் -பிராணிகளை சம்ஹரிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
எல்லோருக்கும் உய்விடம் -எல்லாவற்றையும் உண்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————-
984-அந்நாத –
தன்னை அனுபவிப்பவனை தான் இனிதாக அனுபவிப்பவன்
அன்னம் அந்நாத ஏவ ச -ஏவ -அவன் ஒருவனே அத்விதீயம்-ச-சொன்னவை எல்லாம் இவன் ஒருவன் இடம் மட்டுமே பொருந்தும்
தாம்ஶ்ச ததா₂ பு₄ங்க்த இதி
அந்நாத₃꞉ ।
ஷோ(அ)ந்ய ஈத்₃ருஸ இத் யேவகார꞉ ।ச ஸப்₃த₃ ஸ் ஸர்வ முக்தம் ஏக த்ராஸ்மின் ஸமுச்சிநோதி ॥
வாரிக் கொண்டு உன்னை விழுங்குமவன் என்று ஆர்வுற்ற என்னை –என்னில் முன்னம் பாரித்துத்
தான் என்னை முற்றப் பருகினான் -9-9-10-
உபநிஷத் அஹம் அன்னம் சொல்லி அப்புறம் அந்நாத -இங்கு அவனை-அன்னம் என்று சொல்லி பின்பு சொல்லி அந்நாத என்கிறார்
தம்மை அனுபவிப்பவர்களைத் தாமும் அனுபவிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லா உலகங்களையும் சம்ஹார காலத்தில் உண்பவர் -உலகம் அனைத்தும் போக்த்ரு ரூபமாகவும் -உண்பவராகவும் –
போக்ய ரூபமாகவும் உண்ணப் படுபவை யாகவும் -இருத்தலை ஏவ என்ற சொல் காட்டுகிறது -உலகனைத்திலும் உள்ள சொற்கள்
அனைத்தும் சேர்ந்து பரமாத்மாவைக் குறிக்கின்றன என்பதை -சகாரம் காட்டுகிறது -ஸ்ரீ சங்கரர் –
அன்னத்தை உண்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
———–
ஆத்ம யோநிஸ் ஸ்வ யஜ்ஞாதோ வைகா நஸ் சாம காயன
தேவகீ நந்தஸ் ஸ்ரஷ்டா ஷிதீச பாப நாசன –107
—————
985-ஆத்ம யோநி –
ஒரு நீராக கலக்கச் செய்பவன் -பாலுடன் சக்கரை சேர்வது போலே
து₃க்₃தே ₄நேவ ஸிதா வலயம் ஆத்மநா போ₄க்தாரம் மிஶ்ரயதீதி
ஆத்ம யோநி꞉ ॥
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே -2-3-1-
என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்
மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம்
மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள
தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே –2-5-3-அஹஸ்த்ய பிராதா போல்-ஆத்ம யோநி- என்னுள் கலந்தவன் என்று பெயர் சூட்டுகிறார்
பாலுடன் சக்கரையைச் சேர்ப்பது போல் தம்மை அனுபவிப்பவர்களைத் தம்மிடம் சேர்ப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
தாமே உலகுக்கு எல்லாம் உபாதான காரணமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
பிரமனுக்கு அல்லது ஜீவர்களுக்கு காரணமாக இருப்பவர் -தம்மைத் தாமே அனுபவிப்பதனால் ஆத்ம யோனி -ஸ்ரீ சத்ய சந்தர் –
————
986-ஸ்வயம் ஜாத-
தான் தோன்றி -பிரார்த்திக்காமல் நிர்ஹேதுகமாக அவதாரம் செய்து அருளி
ப்ரார்த₂நா நிர பேஷதயா ஜாத꞉
ஸ்வயஞ் ஜாத꞉ ॥
உயிர் அளிப்பான் என்நின்ற யோநியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா -திருவிருத்தம் -1
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் -9-1-10-
தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக அனைவரையும் தீண்டி கலந்து மகிழவே அவதாரங்கள்-பிறந்த மாயா பாரதம் பொருத மாயா
ஒருவருடைய பிரார்த்தனையையும் எதிர்பாராமல் தாமே திருவவதரிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
நிமித்த காரணமும் தாமேயாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
தம்மிடமிருந்து தாமே தோன்றுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————-
987-வைகாந-
வேரோடு பெயர்ப்பவன்
கந -தோண்டி எடுப்பது
ஜநித்வா ப₄வ து₃꞉க விக ₂நநாத்₃
வைகாந ꞉ ।
விபூர்வாத் கநேத꞉ * கா தோ க ச, இதி க₄ஞ்,
விகா₂ந꞉ ; * தத்ர ஸாது₄꞉ இத் ண் ॥
தான் அவதரித்து பிறவி துக்கங்களை வேரோடு போக்கி அருளி
அடியார் அல்லல் தவிர்த்தான் -8-3-5-
தண்டு ஏந்தி எம் இடர் கடிவான் -9-2-6-
ஆத்ம யோனி -அதுக்காக ஸ்வயம் ஜாத -பாபம் போக்கினால் தானே ஒன்றாக நன்றாகக் கலக்கலாம் -ஸம்ஸார துக்கம் போக்க வேண்டுமே
அடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் ஆர்க்கும் அரியானைக்
கடிசேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனைச்
செடியார் ஆக்கை அடியாரைச் சேர்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கோர் அயர்வுண்டே!–1-5-7-
திருவவதரித்த பின் அடியவர்களுக்கு சம்சார துக்கத்தைப் போக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஹிரண்யாஷனைக் கொல்வதற்கு பூமியை நன்கு தோண்டியவர் -ஸ்ரீ சங்கரர் –
விசேஷமான இந்த்ரிய பிராணன்களை உடைய -முக்தி அடைந்தவர்களுக்குத் தலைவர் –
ஸ்ரீ வராஹ ரூபத்தில் பூமியை இடந்து எடுத்தவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-
—————–
988-ஸாம காயந-
முக்தர்கள் சாம கானம் பண்ணக் கேட்டு இருப்பவன்
பாட்டுக் கேட்கும் இடம் –
ஸ்வ ப்ராப்தி மது₄பாநேந * ஹாவு ஹாவு ஹாவு இதி ஸாமாநி காய ₃ மாநோ முக்தோ
(அ)ஸ்ய அஸ்தீதி
ஸாம கா₃ யந꞉ ।
* ண்யுட் ச இதி ண்யுட் ।
* ஏதத் ஸாம காய₃ ந் நாஸ்தே ,–இத்யாதி₃ ॥
வேதானாம் சாம வேதோஸ்மி தேவானாம் அஸ்மி வசவ இந்திரியம் மனஸ் அஸ்மி பூதானாம் அஸ்மி சேதன –ஸ்ரீ கீதா -10-22-
ஏதத் ஸாம காயன் நாஸ்தே ஹாவு ஹாவு ஹாவு —தைத்ரியம் ப்ருகு வல்லி -10-5-
முக்தி அடைந்தவர்கள் அங்கு ஸாம கானம் பாடியபடி உள்ளார்கள்
எந்தை எம்பெருமான் என்று வானவர் சொல்லும் பெருமான் -1-10-7-
வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு மடக் கிளியை கை கூப்பி வணங்கினாளே
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே –
நுடங்கு கேள்வி இசை என்கோ -பாவின் இன்னிசைப் பாடித் திரிவேனே
பிறவி நீங்கி முக்தி அடைந்தவர்கள் தம்மை அடைவதாகிய மது பானத்தினால் மயங்கி
ஹாவு ஹாவு என்று சாம கானம் செய்யும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சாமங்களைப் பாடுபவர் -ஸ்ரீ சங்கரர் –
சாமத்தை கானம் செய்பவர் -சாம கானத்திற்கு தஞ்சமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
————–
989-தேவகீ நந்த₃ந –
தேவகிப் பிராட்டியை களிப்பிக்கும் குமாரன்-
திருக்கண் மலர்ந்து தனது பெருமையை பீஷ்மர் சொல்லக் சொல்ல மகிழ்ந்து இருப்பவன்
ஏவம் விதோ ₄ ந பராவஸ்த₂꞉, கிந்து
தேவகீ நந்த₃ந꞉ ।
ச ஏஷ ப்ருது தீர்க்காஷ சம்பந்தீ தே ஜனார்த்தன ஏஷ பூதம் பவிஷ்யச்ச பவச்ச பரதர்ஷப
பரத குலத்தில் உயர்ந்தவரே -அகன்ற நீண்ட திருக் கண்களை யுடைய உனது உறவினனான
இந்த ஜனார்த்தனனே இறந்த காலம் நிகழ் காலம் மற்றும் எதிர்காலமும் ஆவான் –
தேவகி சிங்கமே தாலேலோ -பெரியாழ்வார் -1-3-4-
ஏஷமே சர்வ தர்மாணாம் தர்மோ அதிகதம -பீஷ்மர் அவனைச் சுட்டிக் காட்டி அருளி
யஏஷ ப்ருது தீர்க்காஷா சம்பந்தீதே ஜனார்த்தன
கரியவாகிப் புடை பரந்து நீண்ட வப் பெரிய வாய கண்களை உடைய ஜனார்தனன் கிருஷ்ணன்-
சம்பந்தீ தே ஜனார்த்தன-உறவேல் நமக்கு இங்கே ஒழிக்க ஒழியாது
பூத பவிஷ்ய பவத் பிரபு உபக்ரமம் இங்கு உப ஸம்ஹாரம்-ஜனார்த்தன ஏஷ பூதம் பவிஷ்யச்ச
ஆயர் புத்ரன் அல்லன் யரும் தெய்வம் -பீஷ்மர் பரத்வம் சொல்லி தேவகி நந்தன்
அனைத்திலும் என் உள்ளம் உள் குளிர நந்த காணுமாறு இனி உண்டு எனில் அருளே -காட்டி -உள்ளம் குளிர வைத்தான் தேவகி நந்தன்
ஏஷ நாராயண ஸ்ரீ மான் -முதல் 122-திரு நாமங்கள்
ஷீராப்தி நிகேதனன் -அடுத்த 24-திரு நாமங்கள்
ஆகதோ மதுரா புரீம் -மற்ற திரு நாமங்கள் எல்லாம்
பர ஸ்வரூபத்தில் மட்டும் அன்றி தேவகியின் புத்திரராக திருவவதரித்த ஸ்ரீ கிருஷ்ணாவாதாரத்திலும்
இவ்வளவு பெருமை பொருந்தியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
தேவகியின் மைந்தர் -ஸ்ரீ சங்கரர் –
தேவகியை மகிழ்விப்பவர் -ஸ்ரீ லஷ்மி தேவியை கங்கையை மகிவிப்பவர் என்றுமாம் –
பாகரீதியை மகளாகப் பெற்றவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————–
990-ஸ்ரஷ்டா
படைப்பவன் -பர வாஸூ தேவனும் கிருஷ்ணனே-தானே வேர் முதல் வித்து
பர அவஸ்தோ ₂(அ)பி ஸ ஏவேதி
ஸ்ரஷ்டா ॥
கடல் ஞாலம் செய்வேனும் யானே -5-6-1-
அஹம் க்ருதஸ் நஸ்ய ஜகத பிரபவ -ஸ்ரீ கீதை -7-6-
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணன் -3-2-1-
ஏதத் யோநீநி பூதாநி ஸர்வாணீ த்யுப தாரய.–
அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகத ப்ரபவ ப்ரலயஸ் ததா৷৷—-7.6৷৷
இந்த சேதன அசேதன சமஷ்ட்டியைக் காரணமாகக் கொண்ட பிரமன் முதலாக புல் ஈறாக உள்ள
எல்லாப் பொருள்களும் என்னுடையவையே என்று அறிவாயாக –
அப்படி இருக்கும் போது நான் இந்த எல்லா உலகிற்கும் உத்பத்தி ஸ்தானமாகவும் லய ஸ்தானமாகவும்
சேஷியாகவும் இருக்கிறேன்
ஸ்ரீ பர வாஸூதேவரும் தாமேயாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லா உலகங்களையும் படைப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
படைப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————
991-ஷீதீ ஸ
பூமியை ஆள்பவன் -கண்ண பிரான் -பூதேவியின் துயர்களை களைபவன்
ய அநந்த ரூப அகில விஸ்வ ரூபோ கர்ப்பேபி லோகான் வபுஷா பிபர்த்தி, இதி
ஸர்வ ஈஸத்வே (அ)ப் யார்தி பூ₄யிஷ்ட₂த்வாத்₃பூ₄யிஷ்ட₂ம் பூ₄மேரீஸ ꞉
க்ஷிதீ ஸ ꞉ ॥
ய அநந்த ரூப அகில விஸ்வ ரூபோ கர்ப்பேபி லோகான் வபுஷா பிபர்த்தி
அவன் எண்ணற்ற ரூபங்கள் கொண்டவன்
இந்த விஸ்வத்தையும் தனது ரூபமாகக் கொண்டவன்
அனைத்தையும் தனது ரூபத்தில் கொண்டுள்ளான்
ஸர்வ ஈசனாய் இருந்தாலும் தாபத் த்ரயங்களால் வாடி -ஆர்த்தி மிக்கு இருக்கும் பூமியில் உள்ளர்களுக்கு விசேஷ அபிமானம் கொண்டவன்
நாளும் இங்கு ஆள்கின்றானே–10-4-2-
உலகம் மூன்று உடையாய் என்னை ஆள்வானே–6-10-10-
ஆள்வான் ஆழி நீர் -10-5-4-
கடல் ஞாலத்து அளி மிக்கான்
எல்லாவற்றிற்கும் ஈஸ்வரர் ஆயினும் பூமியின் துயரத்தை நீக்குவதற்காக திருவவதரித்தால்
பூமிக்கு ஈஸ்வரர் -ஸ்ரீ பராசர பட்டர் –
தசரத புத்ரனாய் திருவவதரித்தவர் -ஸ்ரீ சங்கரர் –
பூமிக்கு அரசர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது தேசமோ திருவேங்கடத்தானுக்கு நீசனேன் நிறைவு ஒன்றும் இல்லேன்
என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கே 3-3-4–
—————-
992-பாப நாசன
பாபங்களை அழிப்பவன்
அத்ர த₃தி₄நவநீதஸ் தைந்ய ராஸ க்ரீடா₃தி₃கதா₂ம்ருதேந பரேஷாம்
பாப நாஸந꞉;
அவதாரே (அ)பி வைஷ்ணவாநாம் பா₃ஹ்யாப்₄ யந்தர ஸத்ரு நாஸந꞉ ॥
அமுதம் அன்ன செயல்களை பற்றிக் கேட்பதும் ரசிப்பதும் சகல பாபங்களையும் போக்கும்
அவதாரங்கள் மூலம் அடியவர் வெளிப்பகையும் உள்பகையும் போக்குபவன்
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி –
பாப நாசன் கண்ணன் -3-6-2-
நம்மன் போலே வீழ்த்த முக்கும் நாட்டில் உள்ள பாவம் எல்லாம் சும்மெனாதே கை விட்டோடித்
தூறுகள் பாய்ந்தனவே -பெரியாழ்வார் திரு மொழி -5-4-3-
தயிர் வெண்ணெய் திருடியது -ராச க்ரீடை செய்தது முதலிய கதை அம்ருதத்தைக் கேட்பவர்களுடைய எல்லா பாபங்களையும் போக்கி –
திரு வவதாரங்களிலும் தம் அடியவர்க்கு உள் வெளி பகைவர்களைப் போக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பால லீலைகளை அனுசந்திக்க உள் விரோதிகள் போகுமே –
திவ்ய ஆயுதங்கள் கொண்டு வெளி விரோதிகளைப் போக்கி அருளுவான்
பாபா நாசனை பங்கயம் தடம் கண்ணனை பரவுமினோ -3-6-2-
தம்மைக் கீர்த்தனம் பூஜை தியானம் செய்வதனாலும் நினைப்பதனாலும் பாவங்களைப் போக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –
பாவங்களைப் போக்குபவர் -பாப காரியங்களைச் செய்யும் அசுரர்களை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் —
————
சங்க ப்ருத் நந்தகீ சக்ரீ சார்ங்க தன்வா கதாதர
ரதாங்க பாணி ரஷோப்யஸ் ஸர்வ ப்ரஹரணாயுத –108-
திவ்ய ஆயுதங்கள் திவ்ய ஆபரணங்களுமாகுமே
ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார் யார் தம் வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் –மற்று இல்லை -8-3-3.
சக்ரம் -மனஸ்த்வம் நின்றவா நில்லா நெஞ்சு -வாயு வேகம் மனோ வேகம் –
சங்கம் தாமச அஹங்காரம் –பஞ்ச பூதமாக மாறும் முன் தன்மாத்ரை -சப்தம் தானே முதலில் –
ஆகாசமாக மாறுவதற்கு முன்பே-சங்க நாதமே பிரணவம் அன்றோ
கதா –புத்தி தத்வம் –மனஸ் போலே சஞ்சரிக்காமல் நிச்சயமாக அன்றோ புத்தி
சார்ங்கம் –சாத்விக அஹங்காரம் –கர்ம ஞான பஞ்ச இந்திரியங்கள் -இவற்றைக் கட்டுப்படுத்தவே சார்ங்கம்
நந்தகி -ப்ரஹ்ம வித்யா ஸ்வரூபம் –அருள் என்னும் ஒள் வாள் கொண்டே பிரதிபந்தகங்களைப் போக்கி அருளுவான்
அழகுக்கும் ஆபரணமாகவும் ரக்ஷணத்துக்காகவும் அடையாளத்துக்காகவும் –
பஞ்சாயுதங்களைச் சொல்லி
சங்கம் முதலில் -சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
கருதும் இடம் பொருதும் இடம் -கொஞ்சம் பிரிய வேண்டுமே
சங்கரய்யா உன் செல்வம் சாலச் சிறந்ததுவே
உண்பது சொல்லில் வாய் அமுதம்
————–
993-சங்க ப்ருத்-
ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் -8-9-3-
பரம ஐஶ்வர்ய சிந்ஹ தி₃வ்யாயுத₄த்வாத்
சங்க ₂ப்₄ருத்;
ஸ்வாத₄ர வித்₃ரும ஸுத₄ யா பாஞ்ச ஜந்யம் புஷ்ணா தீதி ॥
பாஞ்ச ஜன்யம் ஹ்ருஷீகேச –சகோஷோதார்த் தராஷ்ட்ரானாம் ஹ்ருதயானி வயாதாரயத்-ஸ்ரீ கீதை
கூராழி வெண் சங்கேந்தி கொடியேன் பால் வாராய் -6-9-1-
தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச் சக்கரம் -பெரியாழ்வார்
உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாய் அமுதம் கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத் தலத்தே -நாச் திரு மொழி -7-8-
சங்கரையா உன் செல்வம் சால அழகியதே -நாச் திரு -7-7-
படை போர் புக்கு முழங்கும் அப்பாஞ்சஜன்யத்துக்கும் பல்லாண்டு -ரக்ஷணம்
ஏந்தும் -அழகு
திரு வண் வண்டூர் உறையும் பெருமானுக்கு -செரு ஒண் சக்கரம் சங்கு ஏந்தும் தடக்கையன் -அடையாளம்
தமஸ பரமோ தாதா ஸங்க ஸக்ர கதா தர-வியக்தம் -ராமனிடம் சங்கு சக்கரம் காட்டக் கண்டாள் –முதலில் சங்கு
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் சங்கு சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு-
கையினார் சுரி சங்கு அனல் ஆழியார் இத்யாதி -திருப்பாணாழ்வாரும் காட்டவே கண்டார்-முதலில் சங்கு
தமக்கே சிறந்த அடையாளமான ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் என்னும் ஸ்ரீ சக்கரத் தாழ்வானை தம் திருப் பவளத்தின்
அமுதத்தினால் போஷிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
அஹங்கார ரூபமாகிய ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் என்னும் ஸ்ரீ சங்கத்தை தரிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் என்னும் ஸ்ரீ சங்கத்தை அல்லது ஸ்ரீ சங்க நிதி எனப்படும் நிதியை தரிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————–
994-நந்தகீ –
அறநெறி நந்தக வாளே பெரியாழ்வார் திருமொழி – 5-2-9-
நந்தன -மகிழ்விப்பவன்-
பகவானால் கூட இத்தைப் பார்த்து ஆனந்தம் தர பிரார்த்திக்கும் படி-உடை வாள் ஸர்வேஸ்வர -சிஹ்நம் –விட்டுப் பிரியாதே–சங்கு போல்
கூரத்தாழ்வான் சம்பந்தத்தால் தனக்கும் பேறு –சோயம் ராமானுஜ -போல் இங்கும்
அபி ப₄க₃வதாபி மாம் அயம் நந்த்₃ யாதி₃தி ப்ரார்த்₂யோ நந்த₃க
* ஆஶிஷி ச, இதி வுன் ।
ஸோ (அ)ஸ்ய நித்ய யோகீ₃தி
நந்த₃கீ ॥
என்னை இது மகிழ்விக்க வேண்டும் என்று தாமும் விரும்பும் ஸ்ரீ நந்தகம் என்னும் திரு வாளுடன்
எப்போதும் சேர்ந்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
கண் த்ருஷ்டிக்காக -சங்கு -சக்ரீ இடையில் நாந்தகம் என்கிறார் ஸ்ரீ பீஷ்மர்
வித்யா ரூபமாகிய ஸ்ரீ நந்தகம் என்னும் திரு வாளை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –
ஸ்ரீ நந்தகம் என்னும் திரு வாளை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————
995-சக்ரீ-
கை கழலா நேமியான் -பெரிய திருவந்தாதி-908 கீழ் பார்த்தோம்
நித்ய ஸுத₃ர்ஸந꞉ ஸ்வ ப்₄ருத்ய ஸுர ப்ரதி ப₄ட ரஷோ (அ)ஸுர ஸோணித கல் மாஷித ஜ்வாலாஶ்சிதம் சக்ரமபி ததை வேதி
சக்ரீ ॥
ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து-தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல் -மூன்றையும் ஆண்டாள்
தடவரைத் தோள் சக்கர பாணி -பெரியாழ்வார் -5-4-4-
ஸூதர்சன–அழகிய தர்சனம் -அழகான மார்க்கம் காட்டுபவர்–ஜ்வாலா நேமி அரம் கும்பம் புருஷன்
ஸூதர்சன சதகம் கூர நாராயண ஜீயர் -இன்றும் லோக ஷேம அர்த்தமாக நித்யம் பாராயணம் ஸ்ரீ ரெங்கத்தில் உண்டே
மத்வர் ஐந்து ஆயுத பொறிகள் வருஷம் தோறும் -வைத்துக் கொள்கிறார்கள் -ஹரி தாஸர்கள்
சங்க சக்கர லாஞ்சனம் -முதலில் சங்கு இங்கும்
தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திருச் சக்கரத்தின் கோயில் பொறியாலே -சங்கம் இதில் இல்லையே
அழகு ஆபரணம் அடையாளம் -விரோதி நிரஸனம் ஆச்வாஸ கரம் அனைத்தும்
தம் அடியவர்களான தேவர்களுக்கு விரோதிகளான அசூர ராஷசர்களைக் கொன்று அவர்கள் ரத்தத்தினால் சிவந்த
ஜ்வாலையோடு கூடிய ஸ்ரீ ஸூதர்சன ஆழ்வாரை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
மனஸ் தத்த்வமாகிய ஸ்ரீ ஸூ தர்சனம் உடையவர் -அல்லது சம்சார சக்கரமானது தம் ஆணையினால் சுழலும்படி செய்பவர் -ஸ்ரீ சங்கரர் –
ஸ்ரீ ராம -ஸ்ரீ கிருஷ்ண திருவவதாரங்களில் சேனைச் சக்கரத்தை -கூட்டத்தை பெற்று இருந்தவர் -ஸ்ரீ ஸூதர்சனம் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————-
996-ஸார்ங்க தந்வா –
சர வர்ஷம் வவர்ஷஹா
சார்ங்கம் உதைத்த சர மழை–கோதண்ட மண்டிதரா
ஸார்ங்க₃ம் ச விஷ்பா₂ரித ஜ்யா கோஷ (நாண் ஒலி )ஸர வர்ஷ நாஶித அசேஷ வித்₃வேஷி வார்தம்
ஸ்வ ஸத்₃ருஸம் த₄நுரஸ்யேதி
ஸார்ங்க ₃த₄ந்வா ॥
சார்ங்க வில் சேவகனே–பெரியாழ்வார் -5-4-4-
உறுக்கெட வாளி பொழிந்த
வில்லாண்டான் -போதும் என்று தடுக்கவே ஆள்வது
வஜ்ரம் போல் பெருமாள் அம்பு -கனல் அக்னி போல் தைக்கும்
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்த -சாகரம் சோக்ஷயிஷ்யாமி-பயமுறுத்தவே சமுத்திர ராஜன் பணிந்து வந்தான்
ஸசைல கந்தர்வ மனுஷ்ய -வில்லின் நுனியால் அனைத்தையும் திரும்புவேன் சீதாபிராட்டி இன்று கிடைக்காவிடில்
தனுஷ்கோடி -பெரிய நீர் படைத்து கடைந்து அது அடைத்து உடைத்து
ஜனக்புரி -ஸீதா கல்யாணத்தில் உடைத்த வில்லின் ஒரு கோடி அங்கும் இங்கும் -ஒரு பகுதி இங்கும் அங்கும் நேபாளில் சொல்வார் தொடர்பு விடாமல் இருக்க-
சொல்லினால் சுடுவேன் அது தூய அவன் வில்லின் ஆற்றலுக்கு மாசு என்பதால் மாட்டேன்
பிரணவம் தநுர் -ஓங்காரம் வில் ப்ரஹ்மம் லஷ்யம் -ஆத்ம ஸமர்ப்பணம்–ஓம் இத் ஆத்மாநாம் யூஞ்சீத
நாண் ஓசையினாலும் சரமாரி பொழிவதனாலும் பகைவர்கள் என்னும் பெயரையே ஒழிக்கும்-
தமக்கு தகுதியான ஸ்ரீ சார்ங்கம் என்னும் திரு வில்லை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
இந்திரியங்களுக்கு காரணமாகிய சாத்விக அஹங்காரத்தின் வடிவாகிய ஸ்ரீ சார்ங்கம் என்னும் திரு வில்லை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –
ஸ்ரீ சார்ங்கம் என்னும் திரு வில்லை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————
997-கதாதர
கௌமோதகி-ஆனந்தம் கொடுக்கும் -அடியார் பிரதிபந்தம் போக்குவதால்
இத்துடன் பஞ்சாயுதங்களையும் சொன்னபடி-சிலை இலங்கு –என்கின்றாளால்
க₃தா₃தி₄பத்நீம் ச ஸர்வதஸ் ஸமுத்₃வாந்த கல்பாந்த அநலஸ் பு₂லிங்கி₃நீம் (பொறிகளைச்)நித்ய ஸம்மோதி₃நீம் கௌமோதகீம் தா₄ரயதீதி
க ₃தா₃த₄ர꞉ ॥
அழகிய சார்ங்கமே தண்டே -பெரியாழ்வார் -5-2-9-
குனி சாரங்கன் ஒண் கதை வாள் ஆழியான் ஒருவன் -8-8-1-
பிரளய கால அக்னி போலே நான்கு புறமும் பொறிகளைச் சிதறிப் பகைவர்களை அழித்து உலகை மகிழ்விப்பதனால்
ஸ்ரீ கௌமோதகீ என்ற பெயருடைய திருக் கதையை ய்டையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
புத்தி தத்வ ரூபமாகிய ஸ்ரீ கௌமோதகீ என்னும் திருக் கதையை யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –
ஸ்ரீ கௌமோதகீ என்னும் திருக் கதையைத் தரித்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்
——————
998-ரதாங்க பாணி –தேர் சக்கரம் கையில் ஏந்தியவர் –உத்யோகம் -பிரயோக சக்கரம் என்பதால் புனர் யுக்தி இல்லை -கீழ் –யநேந ஸ்வ ஸ்வாமி பா₄வ ஸம்ப₃ந்த₄ உக்த
யதோ ₂சிதம் ரதா₂ங்க₃ம் ச பாணா வஸ்யேதி
ரதா₂ங்க ₃பாணி꞉ ।
சக்ரீத் யநேந ஸ்வ ஸ்வாமி பா₄வ ஸம்ப₃ந்த₄ உக்த꞉, அத்₃ய ஸதா உத்₃யதத்வ மித்ய புநருக்தி꞉ ॥
கால சக்கரத்தாய் கடலிடம் கொண்ட கடல் வண்ணனே கண்ணா -7-2-7-
சக்ரீ -ஸ்ரீ சக்கரத் ஆழ்வாரை உடையவன்
இது கை கழலா நேமியான் -பெரிய திருவந்தாதி -87-
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் -பூ போல் -எங்கும் சக்ரீ
தொட்ட படை எட்டும் -கீழ் சங்கு சக்ர =இங்கு முதலை துஞ்ச குறித்து எறிந்த சக்கரத்தான் -ரதாங்க பாணி
ஸ்ரீ சக்ராயுதத்தை கையிலே உடையவர் -சக்ரீ என்பதனால் ஸ்வாமி சொத்து சம்பந்தம் சொல்லி -இங்கு எப்போதும்
திருச் சக்கரம் என்று இருப்பை கூறப்படுவதால் புநர் உக்தி தோஷம் இல்லை -ஸ்ரீ பராசர பட்டர் –
தேரோட்டியே — தேர் பாகு -கொண்டே விஜயசாரதி ஆனான் என்றுமாம்
கால சக்கரம் ஜகத் சக்கரம் கர்ம சக்கரம் என்றும் கொள்ளலாம்
கை கழலா நேமியான் -சாது ரக்ஷணம் -பிரபஷ நிரசனம் -கருதும் இடம் பொருதும் என்பதால் மீண்டும் இந்தத் திரு நாமம்
ரதாங்கம் என்னும் திருச் சக்கரத்தைக் கையில் யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –
ரதாங்கம் எனப்படும் திருச் சக்ராயுதத்தைக் கையிலே யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————
999-அஷோப்ய
அசைக்க முடியாதவன்
ப்ரபந்ந அப₄ய தா₃ந தா₃ர்ட்₃ யா த்வஸ் மஹிம்நா(அ)பி
அஷோப்₄ய ꞉ ॥
ப்ரபன்னாயா அபயம் சர்வ பூதேப்யோ ததாமி ஏதத் விரதம் மம-உறுதியான வ்ரதம் கொண்டவன்
தேசுடைய தேவனார் திருவரங்கச் செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே -நாச் திரு -11-5-
முன்பே 807 பார்த்தோம்
சீதையை விட்டாலும் லஷ்மணனை விட்டாலும் உயிரை விட்டாலும் விட ஒண்ணாத விரதம் மம–திட விரதன் -ஊற்றம் உடையாய்–இவர் மஹிமை தோற்றாலும் கொடுத்த வார்த்தையை மீட்ட முடியாதவன் -பெருக்கவும் பேராதே
சரணம் அடைந்தவர்க்கு அபயம் கொடுப்பது என்ற உறுதியான விரதத்தில் இருந்து எப்போதும் அசைக்க முடியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
இந்தச் சக்ராயுத உடைமையினால் யாராலும் கலக்க முடியாதவர் -ஸ்ரீ சங்கரர் –
கலக்க -துன்புறுத்த -முடியாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
——————
1000-சர்வ ப்ரஹரணாத் யுத–சர்வ ப்ரஹரண சர்வ ஆயுத
எண்ணற்ற திவ்ய ஆயுதங்கள்
அங்குல்யக்ரேண தான் ஹன்யாம் இச்சன் ஹரி கணேஸ்வர
காகாசுரனை புல்லாலே
ஆஸ்ரித சம்ரஷணம் தீர்க்க சத்ரம் நீண்ட யாகம்
திவ்ய ஆயுத ஆழ்வார்கள் ரஷண தீஷை கொண்டவர்கள்
அனைத்து தீமைகளையும் அளிக்க வல்ல அனைத்து ஆயுதங்கள் –
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் -தீர்க்க சத்ர யோகம் போல் -எப்பொழுதும் அனைவருக்கும் எல்லா விதத்தாலும்
உகிர் -தர்ப்பை -சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக்கையன்
ஸ்வ நிஷ்டா₂நாம் ஸர்வ அநிஷ்ட உந்மூலயித்ருண்ய அஸங்க்₂யேய அந்ய அமர்யாத₃ ஸாமர்த்₂யாந்-
யாத்ம உசித அந்ய அநந்தாந் யாப₄ரண விகல்ப் யாநி(ஆயுதமா ஆபரணமா விகற்பம் செய்யும் படி )
ஸதா₃ ஸர்வத்ர ஸர்வதா₂ ஸர்வ ப்ரகார(எப்போதும் எங்கும் எல்லாப் படிகளாலும் எல்லா வழிகளாலும் )
ஸமாஶ்ரித ஸம்ரக்ஷா தீ₃ர்க ₄ஸத்ர தீ₃க்ஷிதாநி ஸர்வ ஐஶ்வர்ய து₄ரந்த₄ராண்ய யந்யாந் யாபி
தி₃வ் யாயுதா₄ந்யஸ்யேதி
ஸர்வ ப்ரஹரணாயுத₄꞉ ।
வடபத்ரசாயி -கர்ப்ப க்ருஹத்துக்கு திருப்பாற் கடல் என்று பெயர் –
அங்கும் பஞ்சாயுத தேவர்கள் துரந்தர்கள் -ரூபத்தில் சேவை உண்டு
ஏவம் அசேஷ தோஷ ₃ ப்ரத்யர் யுபாதி₄ ஸங்க்₂யா அவதி₄ விரோதி₄ துங்க ₃ மங்க₃ல ஸ்வரூப ரூப
கு₃ண விப₄வ சேஷ்டிதம் அநங்குஸ ஐஶ்வர்ய ஸௌஶீல்யம் ஆபத் ஸக ₂ம் அர்தி₂ கல்பகம்
ப்ரபந்ந ஏக ஜீவாதும் ஶ்ரிய ꞉பதிம் ப₄க₃வந்தம் புருஷோத்தமம் ஆஶ்ரிதாநாம் ஆஶ்சர்ய ꞉
ஸர்வ ஸம்பத் ஸமுதா₃ ꞉ய ॥
தம் அடியவர்களுக்கு எல்லா அநிஷ்டங்களையும் வேரோடு களையத் தக்கனவும் -அளவற்ற சக்தி உள்ளனவும் –
தமக்குத் தக்க திவ்ய ஆபரணம் என்று நினைக்கத் தக்கனவும்-அடியவர்களைக் காப்பதாகிய யாகத்தில் தீஷை பெற்றுக் கொண்ட
தமது பாரத்தை வகிக்கும் எண்ணிறந்த திவ்ய ஆயுதங்களை யுடையவர் –
இந்த தோஷங்களுக்கு எல்லாம் எதிர் தட்டாய் உபாதி எண்ணிக்கை எல்லை இவைகளைக் கடந்தவைகளாய்
மிகவும் உயர்ந்த மங்களமாய் விளங்கும் ஸ்வரூபம் ரூபம் குணம் விபவம் சேஷ்டிதம் –அநங்குஸ-தடையற்ற செல்வங்கள் சௌசீல்யம் இவற்றை உடையவராய் –
பிரார்த்திப்பவர்களுக்கு கற்பகம் போன்றவராய்-சரணாகதி அடைந்தவர்களுக்கு ஜீவாதுவாய் திருமகள் கேள்வனாய்
பகவானான புருஷோத்தமனை அடைந்தவர்களுக்கு எல்லாச் செல்வங்களும் கிடைக்கும்(அவனே மிகப்பெரிய செல்வம் -வைத்த மா நிதி )–ஸ்ரீ பராசர பட்டர் –
அவன் சீர் வல்ல வாரியை வாய் மடுத்து இன்று உண்டு கொண்டேன் -விஸ்வம் தொடங்கி இது வரை -ஆச்சர்யம் என்று சொல்லும்படி அன்றோ உள்ளன
கஞ்சன் வயிற்றில் நெருப்பாய் நின்ற நெடுமால்
காகாசுரனுக்கு தர்ப்பையே ப்ரஹ்மாஸ்திரம் -ஹிரண்யனுக்கு திரு உகிரே திவ்யாயுதம் -நித்ய ஸூரிகளே திவ்யாயுதங்கள்
காக்கும் இயல்பினன் கண்ணபிரான் — செய்து தன் உந்தி உள்ளே வாய்த்த திசைமுகன் இந்திரன்
வானவர் ஆக்கினான் தெய்வ வுலகுகளே -2-2-9-
பரித்ராணாயாய சாதூனாம் -முதலிலே -சேர்க்கை செய்து அடுத்து -ஆக்குவது அடுத்து
அசுரர்களை நீராகும் படியாக நிருமித்து படை தொட்ட -4-8-1-நிருமித்த பின்பு படை தொட்டான் -ஸத்ய ஸங்கல்பன் அன்றோ
இவை மட்டும் இன்றி மற்றும் பலவிதமான திவ்ய ஆயுதங்களை யுடையவர் –
திவ்ய ஆயுதங்களாக நினைக்கப் படாத திரு நகம் முதலியவையும் ஸ்ரீ நரசிம்ஹ திரு வவதாரத்தில் திவ்ய ஆயுதங்கள் ஆயின –
முடிவில் சர்வ ப்ரஹரணா யூதர் ஏற்றது சத்யா சங்கல்பர் ஆதலின் இவர் சர்வேஸ்வரர் என்பதைக் காட்டுகிறது -ஸ்ரீ சங்கரர் –
எல்லா விரோதிகளையும் அழிப்பதற்கு திவ்ய ஆயுதங்களை யுடையவர் -எண்ணிக்கையில் ஆயிரம் என்று கூறப்பட்டாலும்
அதிகமான திரு நாமங்கள் உள்ளன –
அனுஜ்ஞா ஸூத்ரத்தில் சததாஹம் சஹாஸ்ரதாஹம் அதிகமான ருக்குகள் இருப்பது போலே –ஸ்ரீ சத்ய சந்தர் –
————–
சர்வ ப்ரஹரணாத் யுத ஓம் நம இதி
தொழுதல் தபஸ் தானம்
அத்யாயம் பூர்த்தி -சாற்று முறை இரண்டு முறை போல் திரும்பவும் சொல்லி பிரபந்தம் பூர்த்தி
ஓம் தத் ஸத் மங்கள கரம்
ஒரு நமஸ்காரம் பத்து அஸ்வமேதங்கள் செய்த பலன் கொடுக்கும்-
———————————————————
இப்படியாக ஹாரீத குலத்துக்குத் திலகம் போன்ற ஸ்ரீ வத்சாங்கர் -என்னும் கூரத்தாழ்வானின் திருக்குமாரரும்
ஸ்ரீ பெரிய பெருமாள் திவ்ய ஆஜ்ஜையாலே ஸ்ரீ பராசர பட்டர் என்ற திரு நாமம் சாற்றப் பெற்றவருமான
ஸ்ரீ ரெங்க நாதன் என்னும் இயல் பெயர் கொண்டவர்
அருளிச் செய்த பகவத் குண தர்ப்பணம் என்னும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாஷ்யத்தில்
பத்தாம் நூறு திரு நாமங்கள் வியாக்யானம் ஸம் பூர்ணம்
பத்தாம் சதகம் முடிந்தது-
——————-
ஸ்ரீ அவதாரத்துக்கும் திரு விளையாடல்களுக்கும் பயன் –
946-ஜனன -அறிவு மழுங்கிய ஜீவர்களுக்கும் தன்னை அடைவதற்கு தகுந்த உடலைக் கொடுத்துப் பிறப்பித்தவர் –
947-ஜன ஜென்மாதி -மக்களின் பிறவிக்கு தானே பயனாக இருப்பவர் -பெருமானை அடைவதே பிறவிப்பயன் –
948-பீம-இப்படிப்பட்ட அருளை விரும்பாதவர்களை நரகம் முதலான துன்பங்களால் பயப்படுத்துபவர் –
949-பீம பராக்கிரம -உலகிற்கு தீங்கு செய்யும் அசூரர்களுக்கு அச்சம் தரும் பேராற்றல் உடையவர் –
950-ஆதார நிலைய -தர்மத்தால் உலகைத் தாங்கும் ப்ரஹ்லாதன் போன்ற சாதுக்களுக்கு ஆதரமானவர் –
951-தாதா-தானே தர்மத்தை உபதேசிக்கும் ஆசார்யனாகவும் அதைக் கடைப்பிடிக்கும் முன்னோடியாகவும் இருப்பவர் –
952-புஷ்ப ஹாச -தன்னை அனுபவிக்கும் திறன் உள்ளவர்களுக்கு மாலைப் பூவைப் போலே மலர்ந்து இருப்பவர்-
953-ப்ரஜாகர -உழவன் பயிரைக் காப்பது போலே உறங்காமல் இரவும் பகலும் அடியார்களைக் காப்பவன் –
954-ஊர்த்வக -தாழ்ந்தோரைக் காக்க இவர் விழித்து இருக்க வேண்டுமோ -இவரே அனைவரையும் விட உயர்ந்தவர் –
ஆகையால் கடமை உணர்வோடு விழித்து இருக்கிறார்
955- சத்பதா சார -தொண்டு புரியும் நல் வழியில் பக்தர்களை ஈடுபடுத்துபவர் -‘
956-பிராணத-உலக இன்பம் எனும் விஷத்தால் தீண்டப் பட்டவர்களுக்கு உயிர் கொடுப்பவர் –
957-பிரணவ -தனக்கும் ஆத்மாக்களுக்கும் உள்ள உறவை பிரணவத்தால் ஓங்காரத்தால் அறிவிப்பவர் –
958-பண -தான் தலைவனாக ஜீவன் தொண்டனாக இருக்கும் நிலையை பேர் அன்பு வயப்பட்டு மாற்றி தானே
பக்தர்களுக்குத் தொண்டனாக இருந்து கொடுக்கல் வாங்கல் செய்பவர் –
959-பிரமாணம் -உண்மையான அறிவைக் கொடுக்கும் கருவியே பிரமாணம் வேத பிரமாணத்தின் மூலம்
ஐயம் இல்லாத அறிவை அளிப்பவர் –
960-பிராண நிலய-பறவைகளுக்கு சரணாலயம் போலே அனைத்து ஆத்மாக்களுக்கும் இருப்பிடம் –
961-பிராண த்ருத்-அந்த ஜீவர்களைத் தாய் போலே தாங்கிப் பேணுபவர்
962-பிராண ஜீவன -ஆத்மாக்களை உணவும் தண்ணீரும் போலே இருந்து வளர்ப்பவர்
963-தத்வம் -தயிரில் வெண்ணெய் போலே சித்துக்கள் அசித்துக்கள் இவற்றின் சாரமாக இருப்பவர்
964-தத்வவித் -தம்மைப் பற்றிய உண்மையை தாமே அறிந்து இருப்பவர் –
965-ஏகாத்மா -உலகில் ஒரே ஆத்மாவே இருப்பவர் -அதாவது இவர் ஒருவரே உலகுக்கு தலைவராயும்
அனுபவிப்பவராகவும் நன்மையே விரும்புபவராகவும் உள்ளார் –
966-ஜன்ம ம்ருத்யு ஜராதிக -ஆயினும் பிறப்பு இறப்பு மூப்புகளின் சூழலைக் கடந்தவர் –
967-பூர்ப்புவஸ்வஸ் தரு -பூ புவ ஸூ வ -ஆகிய மூ உலகங்களில் உள்ளோர் –
968-தார -அவர்களை சம்சாரக் கடலைத் தாண்டுவிப்பவர் -கப்பல் போன்றவர் –
969-சவிதா -அனைவரையும் தந்தையைப் போலே பராமரிப்பவர் –
970-ப்ரபிதாமஹா -அனைவருக்கு பாட்டனராக புகழ் பெற்ற நான்முகனுக்கே தந்தை
———————————————————————–
வேள்வியும் பயனும் –
971-யஜ்ஞ-பொருளைக் கொண்டு யஜ்ஞம் செய்ய ஆற்றல் இல்லாதவர்களுக்கு ஜப யஜ்ஞமாய் இருப்பவர் –
972-யஜ்ஞ பதி -யஜ்ஞத்துக்கு பலனைக் கொடுப்பவர் –
973-யஜ்வா -ஆற்றல் இல்லாதவர்களுக்காக தானே எஜமானனாக இருந்து யாகம் செய்பவர் –
974-யஜ்ஞாங்க -சக்தி உள்ளவர்கள் செய்யும் யாகங்களும் தனக்கு கீழ்ப் பட்டு இருக்கும் படிச் செய்பவர் –
975-யஜ்ஞ வாஹன -யாகம் செய்ய இன்றியமையாதவன திறல் ஈடுபாடு தகுதி யாகியவற்றை கொடுத்து யாகத்தை நடத்துபவர் –
976-யஜ்ஞப்ருத்-யாகத்தில் குறைகள் இருந்தாலும் தம்மை நினைத்துச் செய்யப்படும் பூர்ண ஆஹூதியால் அதை முழுமை அடையச் செய்பவர் –
977-யஜ்ஞக்ருத் -உலக நன்மைக்காக சிருஷ்டி தொடங்கும் போது யாகத்தைப் படைத்தவர் –
978-யஜ்ஞீ -அனைத்து யாகங்களும் இவரைக் குறித்தே செய்யப் படுகிற படியால் யாகங்களுக்கு ஸ்வாமி –
979-யஜ்ஞபுக் -யஜ்ஞத்தில் கொடுக்கப் படும் ஆஹூதியை அனுபவிப்பவர் -அல்லது யஜ்ஞத்தைக் காப்பவர் –
980-யஜ்ஞ சாதன -பெருமானே அடையத் தகுந்தவர் என்னும் அறிவே யஜ்ஞத்தைத் தூண்டும் கோலாக உள்ளவர் –
981-யஜ்ஞாந்தக்ருத் -யாகத்தின் முடிவான பயன் –பெருமானை அடைவதே சிறந்த பயன் -என்றும் அறிவு -இந்த அறிவைப் புகட்டுமவர் –
982-யஜ்ஞகுஹ்யம் -யாகத்தின் ரஹச்யமாகவும் இருப்பவர் -பூரணரான பகவான் யாகத்தில் கொடுக்கப்படும் பொருட்களை
எதிர்பார்த்து ஏற்று திருப்தி அடைவது போல் நடிக்கிறார் என்னும் ரஹச்யத்தை மெய்யன்பர்களே அறிவார்கள் –
————————————————————————————
ஸ்ரீ தேவகீ நந்தன் –
983-அன்னம்-அவன் அருள் பெற்ற மெய்யன்பர்களாலே அன்னத்தைப் போலே -உணவைப் போலே -அனுபவிக்கப் படுபவர் –
984-அந்நாத-தம்மை அனுபவிப்பவர்களை தாம் அனுபவிப்பவர் –
985-ஆத்ம யோநி-சர்க்கரையும் பாலும் கலப்பது போலே தன்னை அனுபவிப்பவர்களை தம்மிடம் சேர்ப்பவர் –
986-ஸ்வயம் ஜாத-யாருடைய வேண்டுதலும் இல்லாமல் தன் இச்சைப்படி பூ உலகில் பிறப்பவர் –
987-வைகான -அவதரித்து தன் அடியார்களின் துன்பத்தை போக்குபவர்
988-சாம காயன-முக்தி அடைந்தவர்களால் வைகுந்தத்தில் சாம வேதம் கொண்டு பாடப்படுபவர் –
989-தேவகீ நந்தன -மேல் சொன்ன பெருமைகள் எல்லாம் வைகுண்ட நாதனுக்கு மட்டும் அல்ல -தேவகியின் மைந்தனதே –
990-ஸ்ரஷ்டா -கண்ணனே பிரபஞ்சத்தைப் படைப்பவர் –
991-ஷிதிச -பூமிக்குத் தலைவர் -இவர் அனைத்துக்கும் தலைவரானாலும் பூமியின் சுமையைக் குறைக்கவே
ஸ்ரீ கண்ணனாகப் பிறந்த படியால் பூமிக்கே தலைவர் –
992-பாப நாசன -தயிர் வெண்ணெய் திருடியது ராசக்ரீடை முதலான கதை யமுதத்தைக் கேட்பர்களின் பாபத்தை ஒழிப்பவர் –
———————————————————-
திவ்ய ஆயுதமே திவ்ய ஆபரணம் -கண்ணுள் நின்று அகலாத திரு உருவம் –
993-சங்கப்ருத்-பர ப்ரஹ்ம லஷணமான சங்கத்தைக் கையிலே ஏந்தியவர் -தன் வாய் அமுதைக் கொடுத்து அத்தை பேணுபவர் –
994-நந்தகீ -தனக்கு மகிழ்ச்சியூட்டும் நந்தகம் என்னும் வாளை ஏந்தியவர் –
995-சக்ரீ -தன் அடியார்களான தேவர்களின் பகைவர்களை அழிக்கும் ஸூ தர்சன சக்கரத்தை தாங்குபவர் –
996-சாரங்க தன்வா -நாண் ஒலியால் உலகை நடுங்கச் செய்யும் சார்ங்கம் என்னும் வில்லைப் பிடித்தவர் –
997-கதா தர -ஊழிக் காலத்தைப் போலே நெருப்பைக் கக்கி பகைவர்களை அழித்து அடியார்களுக்கு
இன்பம் கொடுக்கும் கௌமோதகீ என்னும் கதையை ஏந்துபவர் –
998-ரதாங்க பாணி -தேரின் ஒரு பகுதி போலே இருக்கும் சக்கர ஆயுதத்தை தயார் நிலையில் பிடித்து இருப்பவர் –
999-அஷோப்ய -தன்னிடம் சரணா கதி செய்தவர்களுக்கு அபயம் கொடுப்பதாகிய உறுதியில் இருந்து அசைக்க முடியாதவர் –
1000-சர்வ ப்ரஹரணாயுதி-அடியார்களின் துன்பம் போக்கி இன்பம் கொடுக்கும் எண்ணிறந்த
திவ்ய ஆபரணங்களுக்கு ஒப்பான திவ்ய ஆயுதங்களை தரித்தவர்
————————————
வநமாலீ கதி சார்ங்கி சங்கீ சக்ரீ ச நந்தகீ
ஸ்ரீ மான் நாராயணோ விஷ்ணு வாஸூ தேவோபி ரஷது
“வனமாலீ கதீ சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகீ, ஸ்ரீமான் நாராயணோ விஷ்ணுர் வாசுதேவோ அபிரக்ஷது.”என்ற ஆதிசங்கரரின் ஸ்லோகம்
இங்கு ஆதிசங்கரர் விஷ்ணுவின் வியாபக நாமங்களான நாராயண, விஷ்ணு மற்றும் வாசுதேவ என்ற மூன்றையும் குறிப்பிட்டு உள்ளார்.
‘வனமாலி என்ற மாலையை அணிந்து–வனமாலா விராஜிதனாய் இருந்து அனுபவம் கொடுத்து ரக்ஷிக்கட்டும் –
கௌமோதகி என்னும் கதை,
பாஞ்சசன்னியம் என்னும் சங்கு,
சுதர்சன என்னும் சக்கரம்,
சார்ங்கம் என்னும் வில்,
நந்தகம் என்னும் வாள்
ஆகியவற்றுடன் விளங்கும் நாராயண, விஷ்ணு, வாசுதேவன் என்ற நாமங்களைக் கொண்ட
தேவ -விளையாட்டாகச் செய்து திருமால் –அபி ரஷது-என்னைக் காக்க வேண்டும்’ என்பது இதன் பொருள்.
————–
பல ஸ்ருதி
நான்கு வித அதிகாரிகள்
1-பலம் எதிர்பாராமல் சொல்பவர்கள் ஸ்வயம் பிரயோஜனம் -பக்தியில் முற்றாதவர்
2-குறிப்பிட்ட பலத்துக்காக சொல்பவர்கள்
3-ஜபம் பண்ணுபவர்க்காக
4-பக்தி முற்றி ஸ்வயம் பிரயோஜனமாக ஸ்தோத்ரம் பண்ணுபவர்கள்
யதிதம் கீர்த்த நஸ்ய கேசவஸ்ய மஹாத்மந
நாம் நாம் சஹஸ்ரம் திவ்யானாம் அசேஷண ப்ரகீர்த்திதம்
கீர்த்த நஸ்ய –இன்று முதல் நித்யம் கீர்த்தனம் செய்ய வேண்டும்
கேசவஸ்ய மஹாத்மந –செய்ய வேண்டிய காரணம் சொல்லிற்று
திவ்யானாம் -முக்தர்களாலும் கீர்த்தனம்
அசேஷண -இனி அறிய வேண்டுவது வேறு ஒன்றும் இல்லை
கீர்த்த நஸ்ய –என்பதன் மூலம்
இன்று முதல் நீ பகவானைக் கீர்த்தனம் செய்ய வேண்டும் என்பதும்
கேஸ வஸ்ய மஹாத்மந-என்பதால்
கீர்த்தனம் செய்ய வேண்டியதன் காரணம் என்பதும்
திவ்யா நாம்-என்பதன் மூலம்
முக்தர்களால் பரமபதத்தில் கீர்த்தனம் செய்யப்பட வேண்டும் என்பதையும்
அசேஷேண-என்பதால்
இனி உனக்கு அறிய வேண்டுவது வேறே ஒன்றும் இல்லை என்பதுவும் கூறப்பட்டன
அத₂ அஸ்ய நாம ஸஹஸ்ரஸ்ய கௌரவம் க்₃ராஹயன் ஸாந்தநவ꞉ கௌந்தேய மாஹ
இதீத₃ம்(பேர் ஆயிரத்துக்கு பீடுடைமை சொல்லப்படுகிறது )
இதி । யதே ₃தத் கீர்தநம் ப₄க₃வந் மஹிம்நி, அத்₃ய ப்ரப்₄ருதி ப₄க₃வான் கீர்தநாரம்ப₄ மர்ஹதீத்
யுக்தம்
கீர்தநீயஸ்யேதி ।
அத்ர காரணம்
கேஸவஸ்ய மஹாத்மந இதி ।
நாம்நாம் ப்ராக்ருத பரம பத₃ வ்யவஹார யோக்₃யத்வமாஹ
தி₃வ்யாநாமிதி ।(ஸ்ரீ வைகுண்டத்திலும் கீர்த்தனம் உண்டு)
த்வ கௌரவாத் கிஞ்சித₃பி
ஜ்ஞாதவ்யம் ந ஹாபித மித்யாஹ
அஸேஷேணேதி ॥
—————-
அவதாரிகை
அடுத்து அதிகாரி யார் என்பதும்
பயனும் அங்கமும் கூறப்படுகின்றன
யதிதம் ஶ்ருணுயாந் நித்யம் யச்சாபி பரிகீர்த்தயேத்
ந சுபம் ப்ராப்னுயாத் கிஞ்சித் சோமுத்ரேஹ ச மாநவ –இங்கும் அங்கும் உள்ள அசுபங்கள் நீங்கி விடும்
அத₂ அதி₄காரி ப₂ல அங்க ₃நிர்ணய ꞉ । ய இத₃ம்
ஶ்ருணு யாதி₃த் யாதி₃ ।
யதா₂அதி₄காரம் ஶ்ரவண மநநயோ ꞉ (கேட்டும் மனனம் பண்ணியும் -)ஸாமாந்யேந உப₄ய லோக அஸூப விரோதித்வம் தாவத்ப₂ல முக்தம் ॥
காதுகனுக்கும் அம்மே என்று சொல்ல ப்ராப்தி போல் -இதுக்கு யோக்யதை சம்பாதிக்க வேண்டாம் -இது தானே யோக்யதை அருளும்
பலமும் சொல்லி ஆசையை மூட்டுகிறார்
இந்த ஸஹஸ்ர நாமத்தை எப்போதும் கேட்டபடி உள்ளவனும்
கீர்த்தனம் செய்தபடி உள்ளவனும்
பர லோகம் மற்றும் இந்தப் பூமியில் சிறிதும் கெடுதலை அடைய மாட்டான் –மன்னவராய் உலகு ஆண்டு மீண்டும் வானவராய் மகிழ்வு எய்துவர்
இதம் ஸ்ருணு யாத் இத்யாதி –மூலம்
அவரவர் தகுதிக்கு ஏற்றபடி கீர்த்தனம் செய்தால்
இங்கும் அங்கும் உள்ள அஸூ பங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்று கருத்து
————-
வேதாந்தகோ ப்ராஹ்மண ஸ்யாத் ஷத்ரியோ விஜயீ பவேத்
வைஸ்யோ தன சம்ருத்தஸ் ஸ்யாச் சூத்ர ஸூகம் அவாப்னுயாத்-3-
அத₂ சதுர்ணாம் வர்ண விஸேஷாணாம் அநதி₄ரூட₄ப₄க₃வத்₃ப₄க்தீ நாம்(அதி ருடன் ஆரூடன் பக்தி முற்றியவர்கள் போல் இல்லாமல் பக்தியில் பூர்ணம் இல்லாதவனுக்கும்-ஆகையால் மோக்ஷம் பிரார்த்திக்காதவர்களுக்கும் )அநா காங்க்ஷித ப₂ல விஸேஷாணாம் (குறிப்பிட்ட பலன்களை கேட்க்காதவர்களுக்கும் )யதா யோக்யம் ப₂லமாஹ(வர்ணத்துக்குத் தக்க பலம் பெறுவான் )
வேதா₃ந்தக ₃ இதி ॥
இந்த ஸஹஸ்ர நாமத்தை அந்தணன் ஜபித்தால் வேதாந்த ஞானம் கிட்டும்
ஷத்ரியன் ஜபித்தால் வெற்றி கிட்டும்
வைஸ்யன் ஜபித்தால் செல்வம் கிட்டும்
ஸூத்ரன் ஜபித்தால் இன்பம் கிட்டும்
அந்தணர்கள் முதலான நான்கு வர்ணத்தாருக்கும்
பகவத் பக்தி திடமாக உண்டாகாத போது
அவர்கள் எந்தவித பலனையும் எதிர்பாராமல் இந்த ஸஹஸ்ர நாமத்தை ஜபித்தாலும் கேட்டாலும்
அவர்களுக்கு ஏற்படும் பலன்கள் கூறப்படுகின்றன –
——
த₄ர்மார்தீ₂ ப்ராப்நுயாத்₃த₄ர்மம் அர்தா₂ர்தீ₂ சார்த₂மாப்நுயாத் ।
காமாநவாப்நுயாத் காமீ ப்ரஜார்தீ₂ ப்ராப்நுயாத் ப்ரஜா꞉ ॥ 4 ॥
அத₂ வர்ண விஸேஷேண யதா₂காமம் அப்₄யுத₃ ய ப₂லமாஹ
த₄ர்மார்தீ₂தி ॥
தர்மத்தைக் கோரியவன் தர்மத்தையும்
பொருளை விரும்புபவன் பொருளையும்
போகத்தைக் கோரியவன் போகத்தையும்
குழந்தைகளைக் கோரியவன் குழந்தைகளையும் பெறுவான்
நான்கு வர்ணத்தினரும் ஏதேனும் பலனை எண்ணி ஜபித்தால் அவர்கள் விரும்பும் பலனை அடைவார்கள் என்று கூறப்படுகிறது
——————–
அடுத்து சில விதி முறைகளுடன் ஸஹஸ்ர நாமத்தை ஜபித்தல் என்னும் ஸங்கீர்த்தனம் செய்யும் ஒருவனுக்கு
அனைத்து விதமான ஐஸ்வர்யங்களும் உண்டாகும்
என்பதை அடுத்துள்ள நான்கு ஸ்லோகங்களும் கூறுகின்றன
பக்திமான் யஸ் உத்தாயா சுசி தத் கத மானஸ
சஹஸ்ரம் வாஸூ தேவஸ்ய நாம் நாம் ஏதத் ப்ரகீர்த்தயேத்–5-
யசஸ் ப்ராப்னோதி விபுலம் ஞாதி ப்ராதான்ய மேவச
அசலாம் ஸ்ரியம் ஆப்நோதி ஸ்ரேயஸ் ப்ராப்நோத் யநுத்தமம்–6-
ந பயம் க்வசித் ஆப்நோதி வீர்யம் தேஜஸ் ச விந்ததி
பவத் யரோகோ த்யுதிமான் பல ரூப குணாந்வித-7-
ரோகார்த்தோ முச்யதே ரோகாத் பத்தோ முஸ்யேத பந்தனாத்
பயான் முஸ்யேத பீதஸ்து முஸ்யே தாபந்ந ஆபத–8-
அத₂ நியம விசேஷ வஜ் ஜப ரூப ஸங்கீர்தநே ப₄க்தஸ்ய ஸர்வ ஸம்ருத்₃தி₄மாஹ
ப₄க்திமான்
இத்யாதி₃பி₄ஶ் சதுர்பி₄꞉ । அநுத்தமம் ஶ்ரேயோ முக்தி꞉ । அந்யே (அ)ப்₄யுத₃ யா விசேஷா ꞉ ॥
யார் ஒருவன் அன்றாடம் உறங்கி எழுந்த பின்னர் நீராடுதல் முதலான கர்மங்களைச் செய்து -பரி ஸூத்தனாகி
பக்தியுடன் வாஸூ தேவன் இடம் மனஸை நிலை நிறுத்தி
அவனுடைய இந்த ஆயிரம் திரு நாமங்களையும் நன்றாகக் கீர்த்தனம் செய்வானோ
அவன் மிகுந்த கீர்த்தியையும்
மனிதர்களில் முதன்மையாக உள்ள நிலையையும்
அழியாத செல்வத்தையும்
அனைத்தையும் காட்டிலும் உயர்ந்த மோக்ஷத்தையும் பெறுகிறான்
அவனுக்கு எங்கும் எப்போதும் எதற்கும் பயம் இல்லை
அவன் சக்தி மற்றும் தேஜஸ்ஸை அடைகிறான்
நோய் அற்றவனாகவும் காந்தி உள்ளவனாகவும் பலம் ரூபம் குணம் கொண்டவனாகவும் ஆகிறான்
நோயாளி ஒருவன் அந்த நோய்கள் அனைத்தும் நீங்கப் பெறுகிறான்
பந்தத்தில் அகப்பட்டவன் அந்தப் பந்தத்தில் இருந்து விடுதலை அடைகிறான்
பயத்தில் உள்ளவன் பயம் இல்லாதவன் ஆகிறான்
ஆபத்திலுள்ளவன் ஆபத்தில் இருந்து விடுபெறுகிறான்
குலம் தரும் செல்வம் தந்திடும்* அடியார் படு துயர் ஆயின எல்லாம்*
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்* அருளொடு பெரு நிலம் அளிக்கும்*
வலம் தரும் மற்றும் தந்திடும்* பெற்ற தாயினும் ஆயின செய்யும்*
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம்.
ஸர்வ பல பிரத விஷ்ணு ஏகைக பல லாபாயா சர்வ லாபாயா கேசவா
கெடும் இடராயின வெல்லாம் கேசவா என்ன
உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆரமுதே – – 19-
ரதிர் மதி ஸரஸ்வதீ த்ருதி ஸம்ருத்தி ஸித்தி ச்ரிய:
ஸுதாஸகி யதோ முகம் சிசலிஷேத் தவ ப்ரூலதா
ததோ முகம் மதி இந்திரே பஹுமுகீம் அஹம் பூர்விகாம்
விகாஹ்ய ச வசம்வதா: பரிவஹந்தி கூலங்கஷா:–ஸ்ரீ குண ரத்ன கோஸம்–17-
ஸ்ரீரங்கநாதன் என்னும் அமிர்தத்தின் துணையே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ!
உனது புருவங்கள் கொடி போன்றும், வில் போன்றும் மெலிந்து அழகாக உள்ளது.
அத்தகைய புருவங்கள் யார் ஒருவனை நோக்கி மெதுவாக அசைகின்றதோ, அந்த மனிதனின் நிலை என்ன?
அவனிடம் இன்பம், அறிவு, கல்வி, வலிமை , செல்வச் செழிப்பு, நினைக்கும் செயல்கள் முடியும் தன்மை, செல்வம்
ஆகிய அனைத்தும் தாமாகவே வந்து சேர்கின்றன. அப்படி வரும்போது, அவை சாதாரணமாக வருவதில்லை –
ஒவ்வொன்றும், “நானே அந்த மனிதனிடம் முதலில் செல்வேன், நானே முதலில் செல்வேன்”, என்று
போட்டி போட்டுக்கொண்டு வந்து சேர்கின்றன. இப்படியாக அவை அந்த மனிதனைச் சுற்றி வெள்ளமாக நிற்கின்றன.
—————-
அடுத்து பகவானை மட்டும் விரும்பி நின்று மற்ற எதிலும் சங்கம் இல்லாமல் உள்ளவனுக்கு
அவன் பிரார்த்தனை செய்யாமலேயே தீயவைகளை அவனிடம் இருந்து அகன்று விடுகின்றன என்கிறது
ரத்னம் -செம்படவன் வியாபாரி அரசன் -கை மாற -அரசன் ராணிக்கு போட்டு மகிழ்வது போல் –
அச்சுவை பெறினும் வேண்டேன் என்று இருப்பவர்-
துர்க்காணி அதி தரத் யாசு புருஷஸ் புருஷோத்தமம்
ஸ்துவன் நாம ஸஹஸ்ரேண நித்யம் பக்தி சமன்வித–9-
அத₂ ப₄க₃வத் ஏகார்தி₂நோ (அ)நந்ய ப₄க்தேர அப்ரார்தி₂தாமப் யநர்த₂ நிவ்ருத்திமாஹ
து₃ர்கா₃ணீதி ॥
பக்தியுடன் கூடியவனாக இந்த ஸஹஸ்ர நாமங்களால் புருஷோத்தமனை ஸ்துதிக்கும் ஒருவன்
அனைத்து கஷ்டங்களையும் கடக்கிறான்
தொண்டீர்கள் அவனைத் தொழுதால் -வழி நின்ற வல் வினை மாய்வித்து அழிவின்றி ஆக்கம் தருமே
———–
அப்படிப்பட்டவர்களுக்கு உரிய பலன்கள் கூறப்படுகின்றன
வாஸூ தேவ ஆஸ்ரயோ மர்த்யோ வாஸூ தேவோ பராயணா
சர்வ பாப விசுத்தாத்மா யாதி ப்ரஹ்ம சனாதனம்–10-
வாஸூ தேவனையே அண்டியவனாக -வாஸூ தேவனை மட்டுமே பரம கதியாய் நம்பியுள்ளவனாக இருக்கும் ஒருவன்
அனைத்து பாபங்களில் இருந்தும் விடுபட்டவனாக எப்போதும் உள்ள ப்ரஹ்மத்தை அடைகிறான்
சார்ந்த இரு வல் வினைகளையும் சரித்து–அபுநா வ்ருத்தி ரூபா மோக்ஷம் -சாம்யா பத்தி ஸாயுஜ்யம் பெறுகிறான்
————-
ந வாஸூ தேவ பக்தானாம் அசுபம் வித்யதே க்வசித்
ஜென்ம ம்ருத்யு ஜரா வியாதி பயம் நைவோப ஜாயதே–11-
அத₂ தேஷாம் தத் ப்ராப்திமாஹ வாஸுதே ₃வாஶ்ரய இதி ॥
வாஸூ தேவனிடம் பக்தி கொண்டவர்களுக்கு எப்போதும் தீமை வருவதில்லை
அவர்களுக்கு பிறப்பு இறப்பு மூப்பு பிணிகள் குறித்த பயமும் உண்டாவது இல்லை
மிகுந்த ஸ்ரத்தை பக்தி இவற்றுடன் கூடி இந்த ஸஹஸ்ர நாமத்தை அத்யயனம் செய்யும் ஒருவன்
ஸூகம் பொறுமை செல்வம் தைர்யம் ஞாபகத் திறன் புகழ் ஆகியவற்றை அடைகிறான்
———-
நியமங்களுடன் கூடிய பக்தனுக்கு இடையே வந்து சேரும் பலன்கள் கூறப்படுகின்றன
இதம் ஸ்தவம் அதீ யான ஸ்ரத்தா பக்தி சமன்வித
யுஜ்யேத ஆத்ம ஸூக ஷாந்தி ஸ்ரீ த்ருதி கீர்த்திபி–12-
நியமவதோ ப₄க்தஸ்யாநுஷங்கி₃ணீமப்₄யுத₃ யஸித்₃தி₄மாஹ
இமம் ஸ்தவமிதி ।
ஶ்ரத்₃தா₄ – ஸ கௌரவ த்வரா । ப₄க்திர் வ்யாக்₂ யாதா । ஆத்மா சேதந꞉ । ப₄க₃வதி ப₄க்திர் மஹத꞉
ஸுக்ருதஸ்ய ப₂லம் * கோ₃விந்த₃ப₄க்த் ப்₄ தி₄கம் ஶ்ரேயஶ் சாந்யந்ந வித்₃ யதே , இதி ।
கௌரவத்துடன் உடைய எதிர்பார்ப்பு ஆர்வம் ஸ்ரத்தை -பக்தி ஞான விசேஷம்
ஆனு ஷங்கித பலம் தானே வரும் -ஓங்கி உலகளந்த –உலகோருக்கு பல செல்வங்கள் -நமக்கு கிருஷ்ண காமம் -கைங்கர்ய செல்வம் போல்
மோக்ஷம் போகும் முன் இந்த உலகிலேயே -ஆத்ம ஞானம் பெற்று -சுகம்-பகவத் பக்தி ஸூஹ்ருத பலத்தால்-
கோவிந்த பக்தியே மிகச் சிறந்த புகழ்
பகவத் பக்தியானது மிகுந்த புண்ணியங்களுடைய காரணத்தால் உண்டாலும் பயனாகும்
———-
அது உண்டானால் குரோதம் முதலான தோஷங்கள் தாமாகவே விலகும் என்று கூறப்படுகிறது
ந க்ரோதோ ந ச மாத்சர்யம் ந லோபோ ந அஸுபா மதி
பவந்தி க்ருத புண்யா நாம் பக்தானாம் புருஷோத்தமே–13-
தத்த்வத ஏதே தோஷா ஸ்வபா₄வத ஏவ நிவர்தந்த இத்யாஹ
ந க்ரோத₄ இதி ।
புண்ணியம் செய்வதன் காரணமாக புருஷோத்தமனை அடைந்தவர்களுக்கு கோபம் உண்டாவது இல்லை
ஆசை ஏற்படுவது இல்லை -தீய எண்ணங்கள் ஏற்படுவது இல்லை
ஸம்பாவித -நெல் குத்த தன்னடையே வேர்வை வருமா போல் -சும்மெனாதே ஓடிப் போகும்
——-
மேலே கூறப்பட்ட பலன்கள் அனைத்தும் புனைந்துரை என்னும் அர்த்த வாதமோ என்று பக்தி அற்றவர்கள்
சந்தேகம் அடையக்கூடும் என்று எண்ணி
எம்பெருமானுடைய பெருமை காரணமாக கை கூடாதது எதுவுமே இல்லை
ஆகவே இவை அர்த்த வாதம் என்றோ வேறே விதமாகவோ எண்ணக் கூடாது என்பதற்காக அவனுடைய பெருமையை விவரிக்கிறார்
சரணாகதி செய்பவர்களுக்கும் பப ராசி பாஹுல்யம் -உபாயம் அல்பம் -பேறு பெருத்து இருப்பதால் மஹா விஸ்வாஸம் பெறுவது ஸ்ரமமாகுமா போல் இங்கும்-ஸூத்ரா மணி கணா இவ -கீதை
வியாபித்து தரித்து நியமித்து புருஷோத்தமன் பற்றி அறியாமல் சங்கை கொள்பவர்களுக்கு மேல் ஸ்லோகங்கள் பதில்
த்யவ் ச சந்த்ர அர்க நக்ஷத்ரா கம் திசோ பூர் மஹோததி
வாஸூ தேவஸ்ய வீர்யேண வித்ருதானி மஹாத்மன–14–
ந அயம் ப₂ல அர்த₂வாத₃ஶ்ங்கயோ நிர்பா₄க்₃யை ꞉ குதார்கிகை ꞉, ப₄கவத் ப்ரபா₄வஸ்ய
அஸம்பா₄வ்ய அபா₄வேந அதிவாத₃அபவாத₃ யோர் அஸம்ப₄வா தி₃த் யபி₄ப்ரயன் தஸ்ய தம் ப்ரபா₄வமாஹ
த்₃யவ்ஸ் ஸத சந்த்₃ரேதி ।
வித்₄ருதாநீதி நாநாலிங்கா ₃நாம்
* நபும்ஸகம் அநபும்ஸகம் ஏகவஸ்ய அஸ்ய அந்ய தரஸ்யாம் இதி நபும்ஸக லிங்க ₃சேஷதா ॥
சந்திரன் சூர்யன் நக்ஷத்திரங்கள் ஆகியவற்றுடன் கூடிய மேல் லோகமும்
இடைவெளியான ஆகாசமும் திசைகளும் பூமியும் கடலும் மஹாத்மாவான வாஸூ தேவனுடைய சக்தியாலேயே தாங்கப் பட்டுள்ளன
————
அனைத்தும் அவன் சக்தியாலேயே தரிக்கப் பட்டுள்ளன என்று கூறிய பின்னர்
அனைத்துமே அவனுக்கு வசப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது –
கீழ் தாங்குவது
இங்கு நியாந்தா ஆளுகை ,
குண உப ஸம்ஹார பாதம் போல் கீழ் சொன்னவற்றையும் ஆளுபவனும் இங்கு சொல்வதை தாங்குபவனும் அவனே
ச ஸூரா அஸூரா கந்தர்வம் ச யஷோரக ராக்ஷஸம்
ஜகத் வஸே வர்த்ததேதம் க்ருஷ்ணஸ்ய ச சராசரம்–15-
ஸர்வஸ்ய தச் ச₂க்தி வித்₄ரு தத்வ முக்த்வா தத்₃வஸ வர்த்தித்வமாஹ
ஸஸுராஸுரேதி ।
வர்ததே த ₃மித் யார்ஷீ ஸம்ஹிதா । அவர்ததேத₃மிதி வா ॥
தேவர்கள் அஸூரர்கள் கந்தர்வர்கள் யக்ஷர்கள் நாகர்கள் ராக்ஷஸர்கள் சராசரங்கள்-ஸமஸ்த சேதன அசேதனங்களும்
ஆகிய அனைத்தும் கிருஷ்ணனுடைய கட்டுப்பாட்டில் உள்ளன
————-
இவ்விதம் அவை அனைத்தும் வசப்பட்டுள்ளவை என்பது ஆத்மா -சரீரம் என்ற சம்பந்தம் போன்றதாகும் எனப்படுகிறது
இந்திரியாணி மநோ புத்தி சத்வம் தேஜோ பலம் த்ருதி
வாஸூ தேவாத் மகானி ஆஹு க்ஷேத்ரம் ஷேத்ரஞ்ஞ ஏவ ச–16–
இத₃ம் தத்₃வஸ வர்த்தித்வம் ஸாரீராத்ம பா₄வேந விஶிநஷ்டி
இந்த்₃ரி யாணீதி ।
வாஸுதே ₃வாத்மகாநி – தச்ச₂ரீராணீத் யர்த₂꞉ । ஆஹு꞉ ஸாஸ்த்ராணீதி சேஷ ꞉ ।
இந்திரியங்கள் மனம் புத்தி ஸத்வ குணம் தேஜஸ் சக்தி தைர்யம் ஆத்மா ஆகிய அனைத்தும்
வாஸூ தேவனுடைய சரீரங்கள் ஆகும் என்று ஸாஸ்த்ரங்கள் கூறுகின்றன-ஆஹு꞉ ஸாஸ்த்ராணீதி
ஸ்ரீ பகவாநுவாச
இதம் ஸரீரம் கௌந்தேய க்ஷேத்ரமித் யபி தீயதே–
ஏதத்யோ வேத்தி தம் ப்ராஹு க்ஷேத்ரஜ்ஞ இதி தத் வித—-৷৷13.2৷৷
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
———-
இவ்விதம் தத்வ ஸாஸ்த்ரங்கள்
அனைத்தும் அவன் வசப்பட்டவை என்று கூறிய பின்னர் மந்தமான புத்தி உள்ளவர்களுடைய
பயத்தை நீக்குவதற்காக அனுஷ்டான ஸாஸ்த்ரங்களும் அவன் வசப்பட்டவை என்கிறது
சர்வ ஆகமானாம் ஆசார ப்ரதமம் பரிகல்பித
ஆசார பிரபவோ தர்மோ தர்மஸ்ய பிரபு அச்யுத–17–
சர்வ ஆகமானாம் –ப்ரமாணமான சாஸ்திரங்கள்
ப்ரதமம் பரிகல்பித -மிகவும் முக்கியமாக உபதேசிக்கும் தர்மம்–
ஆசார -நல் நடத்தை -ஒழுக்கம்
ஆசார பிரபவோ தர்மோ தர்மஸ்ய பிரபு அச்யுத–தர்மத்தால் போற்றப்பட வேண்டியவன்
ஏவம் தத்த்வ ஸாஸ்த்ரார்தா₂நாம் தாத₃தீ₄ந்யம் அபி₄தா₄யா நுஷ்டா₂நா ஸாஸ்த்ரார்தா₂நாமபி
தாத₃தீ₄ந்யம் மந்தா₃தி₄காரிணாம் ப₄ யமபநேதுமாஹ –
ஸர்வாக ₃மாநாமிதி ।
ஸர்வாக ₃மாநாம்-ஸர்வ த₄ர்ம ப்ரமாணாநாம் ப்ரத₂மம் பரகல்பித꞉ – ப்ரத₂ம ப்ரதிபாத்₃ய த₄ர்ம꞉ ஆசார꞉
சவ்சாதி₃꞉, தத₃ங்க ₃꞉ ஶ்ரௌதோ த₄ர்ம இதி, தஸ் யாராத்₄ ய꞉ ப₂லத₃꞉ ஸஹாயஶ் சாச்யுத இதி ॥
ஸாஸ்த்ரங்கள் அனைத்திற்கும் சிறந்த ஒழுக்கமே முதன்மையாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது
அந்த ஒழுக்கத்தில் இருந்து உண்டாவது தர்மம் ஆகும்
அந்த தர்மத்துக்கு அச் யுதனே ஸ்வாமி யானான்
ஸர்வ ஆகமா நாம் –என்றால் தர்மத்துக்கான பிரமாண ஸாஸ்த்ரங்கள் ஆகும்
ப்ரதமம் பரி கல்பித –என்றால் மிகவும் முக்கியமான உபதேசிக்கப்படும் தர்மம் ஆகும்
ஆசார -என்றால் ஒழுக்கம் மற்றும் நன்னடத்தை ஆகும்அச் யுதனே யாவான்
யாராத்₄ ய꞉ ப₂லத₃꞉ ஸஹாயஶ் சாச்யுத-அவனே அந்த ஒழுக்கத்தில் நிலை நிற்கவும் அதற்கான பலனை அளிப்பவும் உதவுபவனும் ஆவான்
——-
தர்மத்தைப் பற்றி நிற்பவர்களும் அவனிடம் இருந்தே உண்டானவர்கள் என்கிறது
ரிஷப பிதரோ தேவா மஹா பூதாநி தாதவ
ஜங்கம அ ஜங்கம சேதம் ஜெகன் நாராயண உத்பவம்–18–
ரிஷிகளும் பித்ருக்களும் தேவர்களும் பஞ்ச பூதங்களும் அவற்றின் செயல்களாகிய இன்பங்களும்
ஸ்தாவரங்களுமாகிய அனைத்து உலகங்களும் நாராயணன் இடம் இருந்தே உண்டாயின
ரிஷய –என்றால் ஸ்ம்ருதிகள் போன்றவற்றை யுண்டாக்கின மநு முதலானவர்கள்
மற்றும் அவற்றைத் தியானித்து பின்பற்றுவார்கள் ஆவர்-ஸ்மர்த்தா -ஸ்ம்ருதி எழுதி அனுஷ்டிப்பவர்கள்
பிதரோ தேவ –என்றால் மற்ற தேவதைகள் ஆவர்
மஹா பூதாநி -என்றால் ஆகாசம் மற்றும் உள்ள நான்கு பூதங்களும் ஆகும்
தாதவ –என்றால் தர்மங்களை அனுபவிப்பதற்காக உண்டான தோல் முதலியவை-உபகரணங்கள்
ஜங்கமா ஜங்கம் –என்றால் பலன்களை அனுபவிக்கும் அசையும் மற்றும் அசையாத பொருள்கள் நிறைந்த உலகம் ஆகும்
————–
அடுத்து அனைத்து ஞானத்திற்கும் அவனே காரணம் என்கிறது-ஞான ஹேதுக்களும் அவனே
யோகோ ஞானம் ததா சாங்க்யம் வித்யா சில்பாதி கர்ம ச
வேதா சாஸ்த்ராணி விஞ்ஞான மேதத் சர்வம் ஜனார்த்தநாத்–19–
கர்மயோகம் பக்தி யோகம் ஆகியவற்றின் அறிவும்
சாங்க்யம் எனப்படும் ஞான யோகமும்
தர்க்கம் வியாகரணம் போன்ற வித்யைகளும்
சில்பங்களும்
வர்ணாஸ்ரம தர்மங்களும்
வேதங்களும்
ஸ்ம்ருதிகளும்
இதிஹாஸ புராணங்கள் என்னும் ஸாஸ்த்ரங்களும்
ஆகிய பலவிதமான ஞானமும் ஜனார்த்தனன் இடம் இருந்தே உண்டாயின
ஞானம் என்றால் ஸாஸ்த்ரம்
யோகோ ஞானம் என்றால் ஸாஸ்த்ரங்கள் குறித்த ஞானம்
யோகம் என்பது இரு விதம் -சமாதி யோகம் -கர்ம யோகம்
சாங்க்யம் -என்றால் தத்வங்களைப் பற்றிய அறிவிக்கும் பிரிவு-எண்ணிக்கையால் தத்துவங்களை நிர்ணயிப்பவர் சாங்க்யர்
வித்யா -இலக்கணம் போன்றவை குறித்த அறிவாகும்
மேலும் வில் வித்தை மருத்துவம் இசை ஆடல் போன்றவையும் வித்யையாகும்
சில்பம் -செதுக்குதல் கட்டுமானம் போன்றவை ஆகும்
கர்மம் என்றால் அனைத்து செயல்பாடுகளும் ஆகும்-த்ருஷ்டார்த்தம் இவ்வுலக இன்பங்களுக்கு
வேதங்களே அனைத்திற்கும் முன்னோடி ஆகும்
ஸாஸ்த்ரங்கள் என்றால் ஸ்ம்ருதி இதிஹாஸம் புராணம் ஆகும்
இவை அனைத்தும் ஜனார்த்தனிடம் இருந்தே வருகின்றன
————–
அடுத்து மஹா விஷ்ணுவின் இரண்டு விபூதிகளையும் நிர்வஹிக்கும் தன்மையை அருளிச் செய்கிறார்
ஏகோ விஷ்ணுர் மஹத் பூதம் ப்ருதக் பூதான் யநேகச
த்ரீன் லோகான் வ்யாப்ய பூதாத்மா புங்க்தே விஸ்வ பூ கவ்யய–20–
அவனே ஏகம் -அநேகம் -சேஷீ- நியாமகன்–ஆத்மா -ரக்ஷகன் -வ்யாப்த கத தோஷம் தட்டாதவன் –
புங்க்தே-லீலா ரசமும் போக ரசமும் அனுபவிப்பவன்
வாக்குக்கும் மனசுக்கும் கோசரம் அல்லன்
பெரும் பொருளாகிய மஹா விஷ்ணு பலவாகப் பிரிந்துள்ள பூதங்களையும்
மூன்று உலகங்கள் எனப்படும் பத்தர் முக்தர் நித்யர் என்னும் மூன்று வகை சேதனர்களையும் வியாபித்து
அனைத்து பிராணிகளுக்கும் அந்தர்யாமியாக யுள்ள போதிலும் அவற்றின் தோஷங்கள் ஏதும் அடையாதவனாக
அனைத்தையும் காப்பாற்றி அனுபவிக்கிறான்
ஏக -என்றால் மஹா விஷ்ணு தனித்தன்மை உள்ள ஒருவன்
அநேக என்றால் எண்ணற்ற ரூபம் செயல்பாடுகள் மாறுபாடுகள் ப்ரயோஜனங்கள் கொண்டுள்ள தனித்தனியான வேறுபட்ட பூதங்கள்
இவை அனைத்திலும் மூன்று லோகங்களிலும் -பத்த முக்த நித்ய த்ரிவித ஆத்மாக்களைச் சொன்னவாறு அவன் பரவி நிற்கிறான்
பந்தத்தில் உள்ள ஜீவாத்மா முக்தாத்மா மற்றும் நித்யர் ஆகியவையே மூன்று லோகங்களிலும் உள்ள ஆத்மாக்கள்
அவை அனைத்தையும் கட்டுப்படுத்தி அவற்றின் எஜமானனாக உள்ளதால் அவையுடைய ஆத்மாவாக மஹா விஷ்ணுவே உள்ளான்
அவனே அவற்றைக் காப்பவன் ஆவான்-நித்யோ நித்யாநாம் ஏகோ பஹு நாம்
ஆனால் அவற்றின் தோஷங்களால் தீண்டப்படாதவன் ஆகிறான்
தனது மேன்மை காரணமாக மஹத் பூதம் ஆகிறான்
வாக்கு மற்றும் மனம் ஆகியவற்றுக்கு அப்பால் உள்ளவன்
புங்க்தே என்றால் லீலா ரஸம் மற்றும் போக ரஸம் ஆகியவற்றை அனுபவிக்கிறான் என்றவாறு
ஒருவராக இருந்தே
பல காரணப் பொருள்கள்
பஞ்ச பூதங்கள் ரூபம் பயன் பரிணாமம் ஸ்வரூபம் வேறே வேறே
மூவகை ஆத்மாக்கள் -இவர்களும் வேறே வேறே தானே
அவர்களையும் வியாபித்து
நியம சேஷிதவ -நியமித்து -உள்ளே உறையும் ஆதிமஜாவாக இருந்து
உண்ணுகிறான்
அனைத்தையும் ரக்ஷித்து –
அவ்யய தோஷம் தட்டாமல்
அவாங் கோசார லீலா போகம் இன்புறும் இவ்விலஜியாட்டு உடையவன்
———
அடுத்து அளவற்ற மஹிமை யுள்ள பகவான் இந்த சுலோகத்துக்கு விஷயம் ஆகிறான்
அவனைக் காட்டிலும் உயர்ந்த ஞானம் மற்றும் வாக்கு கொண்டவரான வேத வ்யாஸர் இந்த ஸ்லோகத்தை உரைத்தார்
அவர்கள் இருவர் யுடைய மங்களகரமான மஹிமையை இந்த ஸ்லோகம் கூறுகிறது
இதனைக் கொண்டு தங்கள் வறுமையைப் போக்கிக் கொள்ள நிற்கும் அனைவருமே இதற்கு அதிகாரிகள் ஆவர்
ஆகவே உயர்ந்தும் தாழ்ந்தும் உள்ளதான அனைத்து விதமான பொருள்களையும் அடைய விரும்பும்
ஒருவன் யாராக இருந்தாலும் இந்த ஸ்லோகத்தை ஐயம் இன்றிக் கூறலாம்
இமம் ஸ்தவம் பகவதோ விஷ்ணோ வ்யாஸேன கீர்த்திதம்
படேத்ய இச்சேத் புருஷஸ் ஸ்ரேயஸ் ப்ராப்தும் ஸூகாநி ச
ஸ்ரேயஸ் எனப்படும் முக்தியையும் மற்ற பல ஸூ கங்களையும் அடைய எண்ணும் ஒருவன்
பகவான் குணக்கடலான வேத வ்யாஸரால் அருளிச் செய்யப்பட்டதும் –நிஸ்ஸீம பூமா பகவானாகிய மஹா விஷ்ணுவைக் குறித்தும்
உள்ளதான இந்த ஸ்தோத்ரத்தைப் படிப்பானாக
அவரை விழுங்கும் படி வாக்குடைய மலக்கு நா வுடைய
ஏற்கும் பெரும் புகழ்வானவர் ஈசன்
ஏற்கும் பெரும் புகழ்க்குருகூர் சடகோபன் போல்
உபய மாங்கல்ய மஹிமை இதுக்கு உண்டே-பராபரன் அடைய -ஸ்ரேயாஸ் பெற சங்கை இல்லாமல் இது அளிக்கும்
ஸ்தோத்ரம் ஸ்ரோதா விஷய மூன்று மகிமையும் வேண்டுமே மஹா தரித்ரமுள்ள ஜகத்தில் உள்ளோர் அதிகாரிகள்
———
ஸ்வ பாவத்தாலேயே ஸூகம் துக்கம் நன்மை தீமை என்பது போன்ற இரட்டைகளாக உள்ள அனைத்து
கல்யாண குணங்களுக்கும் இருப்பிடமாக உள்ளவனும்
அடியார்களுக்கு கற்பக மரம் போன்றவனும்
தாமரை போன்ற சிவந்த திருக்கண்கள் கொண்டவனும்
மஹா லஷ்மியின் நாயகனுமான ஸர்வேஸ்வரனை வணங்குபவர்களுக்கு அவனே அனைத்துமாக உள்ளான்
ஆகவே அவனை வணங்குபவர்களுக்கு கிட்டக்கூடியவை சொல்வதற்கே எட்டாதபடியே உள்ளன
இப்படி உள்ள போது அவனை வணங்காமல் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் உலாவது ஏனோ என்று நிறைவு செய்கிறார்
விஸ்வேஸ்வரம் அஜம் தேவம் ஜகத ப்ரபும் அவ்யயம்
பஜந்தி யே புஷ்கராக்ஷம் நதே யாந்தி பராபவம்
நதே யாந்தி பராபவம் ஓம் நம இதி
இப்படி ஆயிரம் திரு நாமங்களால் -ஸ்ரீ மன் நாராயணனே புருஷோத்தமன் -ஸ்ரீ யபதி –
சரணா கதர்களுக்கு உயிர் அளிக்கும் மருந்தாயும்-
எல்லையில்லா மங்களமான இயற்க்கை நிலை -ஸ்வரூபம் -வடிவம் -ரூபம் -பண்புகள் திரு விளையாடல்கள் –
பரத்வம் சௌலப்யம் ஆகியவற்றை உடையவன் –
அநிஷ்டங்களை களைந்து இஷ்டங்களை வழங்கும் வள்ளல் -சர்வ ரஷகன் -இவனுடைய சஹஸ்ர நாமங்களைச் சொல்பவர்
செங்கண் திரு முகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் –
அனைத்து உலகங்களுக்கும் ஈஸ்வரனும்
பிறப்பற்றவனும்
அனைத்து ஆனந்தங்களைக் காட்டிலும் ஆனந்தம் உள்ளவனும்
இந்த உலகங்களின் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ஸம்ஹாரம் ஆகியவற்றுக்கு காரணமானவனும்
செந்தாமரைக் கண்கள் கொண்ட வானுமாகிய ஸ்ரீ மன் நாராயணனை உபாஸிப்பவன்
யாராக இருந்தாலும் அவன் எதிலும் தோல்வியே அடைய மாட்டான் -அவமானம் அடைய மாட்டான்
இரண்டாவது முறையாக இறுதியாக உள்ள வரியைக் கூறியதால்
தோல்வி அடைய மாட்டான் அவமானம் அடைய மாட்டான் என்று உறுதிபடக் கூறியதாயிற்று
அனைத்து விதமான நன்மைகளை அளிக்க வல்லதும்
ஸ்ருதி மற்றும் ஸ்ம்ருதியில் உள்ளவற்றை ஆதாரமாகக் கொண்டதும்
ஆகிய இந்த ஸஹஸ்ர நாமத்தைக் குறித்த வ்யாக்யானம்
ஸர்வேஸ்வரனுடைய திருவடிகளில் ஸமர்ப்பிக்கப் பட்டது
149 அத்தியாயத்தில் இறுதியில் இது உள்ளது
142-144 ஸ்லோகங்கள் இதில் உண்டு
அஸ்மாகம் அத்ர ச பரத்ர ச சர்வ துக்கம்
உன்மூல்ய சம்மதம் அசேஷ விதாம் விதாய
ஸ்ரீ ரெங்கராஜ மஹிஷீ ச ச வைஷ்ணவா நாம்
சங்காத் ஸூகம் ஸஹ ஐயேன சதா க்ரியாஸ்தாம்
ஹாரீத குல திலகம் -ஸ்ரீவத்சாங்கர் -திருக்குமாரர்–ஸ்ரீ பராசர பட்டர் -ஸ்ரீ ரெங்கநாதன் திவ்யாஜ்ஜையால் அருளிச் செய்த
ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம் -ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாஷ்யம் சம்பூர்ணம்
ஒழுக்கத்தில் நிலை நிற்கவும் பலனை அளிக்கவும் காரணம் அச்யுதனே
அஸ்மாக மத்ர ச பரத்ர ச ஸர்வது₃꞉க்க ₂-
முந்மூல்ய ஸம்பத₃ம் அசேஷ விதா₄ம் விதா₄ ய।
ஶ்ரீரங்க ₃ராஜ மஹிஷீ ஸ ச வைஷ்ணவாநாம்
ஸங்கா₃த் ஸுக₂ம் ஸஹ ஜயேந ஸதா₃ க்ரி யாஸ்தாம் ॥
இதி ஶ்ரீஹரித குலதிலக ஶ்ரீவத் ஸாங்க மிஶ்ர ஸூநோ ꞉ ஶ்ரீரங்க ₃ராஜ தி₃வ் யாஜ்ஞா-
லப்₃த₄ ஶ்ரீபராஸர ப₄ட்டாபர நாமதே ₄ யஸ்ய ஶ்ரீரஞ்ஜநாத₂ஸ்ய க்ருதௌ
ஶ்ரீமத்₃விஷ்ணு ஸஹஸ்ர நாம விவரணம் ப₄க₃வத்₃கு₃ண த₃ர்பணாக்₂ யம்
பா₄ஷ்யம் ஸமாப்தம் ।
॥ ஶ்ரீக்ருஷ்ோர்பேமஸ்து ॥
ஸ்ரீ ரெங்கநாதனுடைய பட்ட மஹிஷீ யான ஸ்ரீ ரெங்க நாச்சியாரும்
ஸ்ரீ வைஷ்ணவர் களுடைய சேர்க்கையும்
நமக்கு இம்மையிலும் மறுமையிலும் அனைத்து துன்பங்களையும் நீக்கி
அனாசித்து விதமான ஐஸ்வர்யங்களையும் உண்டாக்கி
எப்போதும் வெற்றியுடன் கூடிய இன்பத்தை அளிப்பதாக
—————
ஸ்ரீபராசர பட்டர் அருளிய பகவத் குண தர்ப்பணம்(விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம்)
அவதாரிகை என்னும் முன்னுரை –
ஸ்வாமி பராசரபட்டர் அனுக்ரஹித்தது பகவத் குண தர்ப்பணம் – ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம் .பாரத பஞ்சமோ வேத: மக்கள் உஜ்ஜீவனத்திற்கு பெற்றது மஹாபாரதம். உபநிஷத்து ஆகிற கடலை கடைந்தெடுத்து இந்த மஹாபாரதம் என்ற அமுதத்தை வியாசர் கடைந்து கொடுத்தார்.
முதல் திருநாமம் முதல் – 122 வரை – பரரூபம், பரவாஸுதேவன், வைகுண்டநாதன் ப்ரபாவம்.
அடுத்த 24 திருநாமங்கள் -144 வரை வ்யூக அவதாரங்களான வாள்தேவன், ஸங்கர்ஷணன், அநிருத்தன் ப்ரத்யும்னன். 147 முதல் கடைசி திருநாமம் வரை – விபவ அவதாரத்தை வர்ணிக்கிறார். அந்தர்யாமி பரத்துவத்திலும் அர்ச்சை விபவத்தின் பிரதிநிதியாகவும் திகழ்கிறது. அர்ச்சை விபவ அவதாரத்தையும் சேர்த்து பஞ்ச ப்ரகாரத்தையும் விஷ்ணு ஸஹஸ்ர நாமம் சொல்கிறது.
விளக்கம் (விஷ்ணு ஸஹஸ்ரநாம கூறுவதின் பயன்கள் பலஸ்ருதி த்வாதசராம பஞ ச ரம் ….)107 ஸ்லோகம் முடிக்கப்பட்ட பின் தான் வனமாலி கதிஸார்ங்கி… வாளி தேவோ அபிரக்ஷது. என்ற இந்த ஸ்லோகம் இடையில் சேர்க்கப்பட்டு மற்ற ஸ்லோகங்களான த்வாதசநாம பஞ்சரம் இந்த வரிசையில் தான் ஆச்சர்யர்கள் காலத்திலிருந்து அனுசந்திக்கிறோம்.
பகவான் அந்தந்த வர்ணத்திற்கு விதித்தது கிட்டும். ப்ராஹமணர்கள் என்றால் ஆத்ம பரமாத்மா ஞானம் போன்ற ஒவ்வொரு வர்ணத்தவரும் அவரவருக்கு விதித்ததை பெறுவார்கள் என அருமையாய் வரிசைபடுத்தினார். விருப்பம் வேண்டுபவர்க்கு அந்தந்த விருப்பம் கிட்டும். செல்வம் கிட்டும். ஞானம் கிட்டும். 4, 5, 6, 7, 8 என இதே மந்திரங்களை ஜபம் வடிவில் சொன்னால் அசைக்க மாட்டாத செல்வம் இந்த லோகத்தில் கிட்டும். ஒரு நாளும் அச்சம் என்பதே கிராது. தேஜஸ் ச – ஒளி உற்சாகம் கிட்டும். வியாதி படுத்தாது. புற அழகும் அக அழகும் காரிய சாமர்த்தியமும் கிட்டும். குலம் தரும் செல்வம் தரும் ….நாராயணா என்னும் நாமம் என்ற பாசுரப்படி அனைத்து விதமான செல்வங்களும் கிட்டும். உறுபெரும் செல்வமும்… நம்மாழ்வார் திருவாய்மொழியே எல்லாம் என ராமானுஜர் இருந்தார். ராமானுஜரே ஸர்வம் என நாம் இருக்கிறோம். ரதி. அழகு, மதி-புத்தி, சரஸ்வதி – வித்யா கடாக்ஷம் திருதி – தைரியம், சித்தி – காரிய சித்தி புத்தி – சாதுரியம் ஸ்ரீ: செல்வம் இந்த 7ம் ஒருவன் பின்னே நான் முன்னே நான் முன்னே என்று முந்திக்கொண்டு வரும் . நாராயண நாமமே – ஸகல பல ப்ரயோகி விஷ்ணு: ஏகைக பல லாபாய ஸர்வ லாபாய கேசவ: கெடும் இரு ராயவெல்லாம் கேசவா …என்ற ஆழ்வார் பாசுரப்படி ஆபத்துகள் விலகி சம்பத்துக்கள் கிட்டும் எல்லா தொல்லை களிலிருந்தும் விடுதலை அடைகிறான். வியாதியால் பீடிக்கபட்டவனுக்கு வியாதி தொலைகிறது.சம்சார பந்தத்தில் கட்டுப்பட்டவன் விடுபடுகிறான்.
முச்யே தா பன்ன ஆபத: ஆப்னோ பலம் என்று இருத்தல். இப்போ எம்பெருமானே பலம் என்று இருந்தால் எல்லாமே கொடுக்கிறார். இதற்கு திருஷ்டாந்தமாய் செம்படவன் கையில் ரத்னம் கிடைத்தால் அதை வியாபாரியிடம் கொடுத்து ஒரு கணிசமான தொகையை பெறுவான். அதே வியாபாரி அதை ராஜாவிடம் கொடுத்தால் அதன் மதிப்பு பன்மடங்கு அதிகரிக்கும். அந்த ராஜா ராணியின் கழுத்தில் போடுவார். இந்த ரத்னத்தை போல் தான் வியாபாரி போல் இருப்போமா. அல்லது ராஜாவை போல் இருப்போமா அல்லது சொல்லும் இன்பத்திற்காக சொல்லுவோமா என்பது அவரவரை பொறுத்தது. பச்சை மாமலை போல் மேனி …. என்று தொண்டரடி பொடி ஆழ்வார் பாசுரத்தில் நாமங்களை சொல்லுவதே பாக்யம் தவிர வேறு பாக்யம் வேண்டாம் -. இந்த புருஷாத்தம நாமம் சொல்பவருக்கு பாப வாசனையே இருக்காது. காமம் குரோதம் முதலியவற்றை தாண்டுகிறான். அநிஷ்டத்தை தொலைப்பது 9 வது ஸ்லோகம். இஷ்ட ப்ராப்தி 10, 11வது ஸ்லோகம். வாஸுதேவனே ப்ராப்யம் என்று இருப்பவர்கள் அவரை அடைகிறார்கள். வாஸீ தேவ பக்தர்களுக்கு அஸூபமே கிடையாது. கல்யாணமாய் சொல்ல ஆரம்பித்தால் ஒரு நாளும் வீணாக போக மாட்டோம். ஜன்ம ம்ருத்யு ஜரா வியாதி எப்போதும் அண்டாது. ஸ்மிர்த்தி கீர்த்தி: … ஆனுஷஸ்ய பலன் கிட்டும். ஒங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி ….. பாசுரம் போல் பால் பசு எல்லா செல்வமும் கிட்டும். நடுவில் கிட்டும் பலன்கள். ஜுவாத்மா பரமாத்மாவிற்கு ப்ரகாரம் என ஸுகப்படுவான். ஸ்மிர்த்தி கீர்த்தி. போன்ற அனைத்தும் கிட்டும். நக்ரோதோ நசமார்ச்சர்யம். …கோபம் இருக்காது. பொறாமை இல்லை. பகவத் நாமத்தை சொன்னால் க்ரோதம் தாபம் முதலியவைகள் ஏற்படாது. இவை நம்பத் தகுந்ததாக இல்லையே என்று ஒருவன் ஆட்சேபித்தால் அவன் பகவானின் பெருமையை அறியவில்லை என அர்த்தம்
சரணாகதி.. உபாயம் உன் திருவடிகளே சரணம் என சொல்வது எங்கனம் நம்புவது கடினமோ ஏனெனில் போகும் இடம் பெரிய இடம் வைகுந்தம் அதை ஒப்பிடும் போது இந்த உபாயம் சிறிது என நினைப்பது போல்.ஈஸ்வரனால் இத்தனையும் பண்ண முடியுமா எனில் அவர் பெருமைக்கு தக்கவாறு பண்ணுவார். இத்தனை பெருமைகளும் நாமங்களை சொல்வதால் கண்டிப்பாக கிட்டும். திட விசும் பெருவெளி … அனைத்து நீராய், நிலமாய் கடலாய், உபநிஷத்து சூரியன் சந்திரன் போன்றவைகள் இவரின் ஸங்கல்பத்தால் தாங்கப்படுகின்றது. ஸித்தே மணிகணா இவ – மணி நூலில் கோத்திருக்கு.அது போல் இப்பரபஞ்சம் ப்ரஹ்மத்தின் இடத்தில் கோர்க்கப்பட்டுள்ளது. ஏகோ விஷ்னு : மஹத்பூதம்.. பஞ்சபூதங்கள் பஞ்ச கர்மேந்திரியங்கள். திரிலோ கான் ப்ராப்ய ….. பக்த முக்த நித்ய-3 வகையினர். உலகத்தையே அவர் சாப்பிடுகிறார். அவர் அன்னதாவாக இருந்து நாம் அன்னமாக நம்மை சாப்பிடுகிறார். அவர் கொடுப்பவர். நாம் அனைவரும் வாங்கிக் கொள்பவர் . ரூபப்ரகார பரிணாம … ப்ரயோக.. தான் ஒருத்தராக இருந்து கொண்டு அஸங்கேய… ஆகாசம் ப்ருத்வி போன்ற பஞ்சபூதங்கள், ஸ்வரூபம் பரிணாமம் அனைத்தும் வேற இவரிடத்தில் தான் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த சேதனர்கள் அனைவரையும் நியமித்து அவர் சேக்ஷி நாம் சேஷர்கள். அனைத்திற்குள்ளும் நிறைந்திருக்கார். ஆனால் தோஷம் தட்டாதவராக இருக்கார். அந்தந்த வியாபித்த பொருளின் தோஷம் இவரை தீண்டாது. மேல் உலகம் அவர் விபூதி. கீழ் உலகம் அவர் விபூதி. லீலா போகரசம்…பூதாத்மா…. அனைவருக்கும் அந்தராத்மாவாய் இருந்து அவர் ஸ்வாமியாய் நியமிக்கிறார். வ்யாசரால் படைக்கப்பட்ட இந்த சாஸ்திரத்தை படித்தவர்களுக்கு ஸ்ரேயஸ்
சுகம் கிட்டும்.
நிஸ்ஸீம பூமா. அவரையே விழுங்கும் அளவு வாக்கு ஞானம் உடையவர். அந்த பெருமை படைத்தவனையே சாப்பிடும் அளவிற்கு பெருமை படைத்தாள். பாடப்பட்டவர் பெருமையும் பாடியவர் பெருமையும் பெரியவர். இரண்டும் ஸஹஸ்ர நாம பெருமையில் சேரும். இப்பேர்பட்ட ஸஹஸ்ரநாமத்தால் போக்கத்தக்கது. தாரித்ரம், எந்த ஒரு ஜீவாத்மா புத்தியிருப்பவன் பராபர ….. ஸ்ரேயார்த்தி சந்தேகத்திற்கு இடமில்லாமல் அனுபவிக்கட்டும். விஸ்வேஸ்வரம் அஜம் தேவம் – ஜகத்திற்கே விஸ்வமாய் பிறப்பவர்.
இது ஆனுசாசன பர்வத்திலே வ்யாசராமல பாடம் பெற்று தான தர்ம ப்ரகடனத்தில் பீஷ்மரால் கூறியது. 149 அத்தியாயத்துடன் ஸஹஸ்ரநாமம் ஸமாப்தம்.
பகவானே ப்ராப்யம். அதை அறிந்து யார் பற்றுகிறார்களா ஏவம் ஸமத்தர்த்தும் ஜெயம் அபஜெயம் : அனைத்து நன்மைகள் குணங்களுக்கு இருப்பிடமாய் பாரிஜாதம் கொண்டவரும் குணசாகரமான பகவானி பக்தி செய்பவருக்கு அனைத்துமாய் அவர் இருக்கிறார். மொழியை கடக்கும் பெரும் புகழாம் …. வணங்குபவர் இந்த சம்சாரத்தில் இருக்கும் வரை அவமானம் என்ற பேச்சிற்கே இடமில்லை. சத்யம் சத்யம் புனஸ்த்யம். ரங்கராஜனும் ஸ்ரீரங்க மஹிஷியும் சேர்ந்து சம்பத்தை கொடுக்கட்டும். வெற்றியோட கூடிய சுகத்தை அளிக்கட்டும்.
ஸ்லோகங்களின் சாரார்த்ததிலிருந்து சில ஜகத்வஸே வர்த்ததேதம்… ஸசராசரம்..பத்ரம் புஷ்பம் பலம் தோயம் இந்த 4ம் சாப்பிடுகிறேன் இந்த 4 ஸ்லோகத்தால் பகவானின் ஆளுமை சொல்லப்படுகிறது. க்ஷேத்ரம் என்று சொல்லப்படும் சரீரம் எல்லாம் அவன் வசம். பகவானை தியானிக்கும் போது மற்ற கல்யாண குணங்களும் குடிகொண்டிருக்கும். இந்திரியங்கள் புத்தி (ஞானம்) ஸத்வம் தேஜஸ் பெருமானுக்கு வசப்பட்டவை. பெருமான் ஸர்வ நியந்தா ஆகாசம் போன்ற பஞ்சபூதங்கள் அவர் வசம். சேதனம், அசேதனம் அனைத்தும் அவர் ஆணைப்படி நடக்கும். ஐததாத்மயம் – சேதனா அேசதனா ப்ரஹ்மத்தை அந்தராத்மாவாய் கொண்டவை. அனுஷ்டமான சாஸ்திரத்தை பற்றி சொல்ல போகிறது.
எல்லா வேதத்திலும் எது முக்கியம் என்றால் ஆசார, அனுஷ்டானம் அகத்தூய்மை புறத்தூய்மை ஆசாரத்துடன் இருப்பது தான். அனைத்தும் அவருக்கு ஆதீனப் பட்டுத் தான் என தத்வ சாஸ்திரம் கூறுகிறது. எல்லா தர்மங்களாலும் ஆராதிக்கப்படுபவரும் சகாயம் பண்ணுபவரும் அவரே. பலத்தை கொடுப்பதும் அவரே. அதற்கு உதவுவதும் அவர் தான். ஆராதிக்கப்படுபவரும் அவர் தான். தேவர்கள் ஆகாசம் போன்ற பூதங்கள் தாதுக்கள் அசைவன – பூச்சியிலிருந்து மனுஷன் வரைக்கும், அசையாதது – தின்னும் பதார்த்தம். இவை அனைத்தும் நாராயணிடத்தில் தான் உருவாகிறது. ஞானத்திற்கு ஊற்றமாய் இருப்பதும் அனைத்தும் அவரிடத்தில் தான். யோக ஞானம் ததா சாங்க்யம் – ஸர்வம் ஜனார்த்தனத்தில் உற்பத்தியாகிறது
ஞானத்திற்கு ஹேதுவாய் இருப்பதும் அவரிடத்தில் தான். யோகம் கர்மயோகம். அந்த யோகத்தை இரண்டாக சொல்லலாம். சமாதி யோகம் – பக்தி யோகம். எண்ணிக்கையாலே தத்துவங்கள் சொல்வது சாங்கிய மதம். வித்யா. சீக்ஷா ஜோதிடம் முதலியவைகளை நிர்ணயம் பண்ணுவது. தனுர்வேதம், ஆயுர்வேதம் காந்தர்வ வேதம் ப்ரக்ருதி அர்ஜு உைலாச முதல் காமயனவாசா வரை.. அனைத்திற்கும் அத்புதமான பதபதா அர்த்தங்கள் ஸ்ரவணம் செய்யும் பாக்கியம்
ஸ்ரோதாக்கள் பெற்றோம்.ஈஸ்வர உவாச … ஸ்ரீராமராம ராமேதி ….. ஸ்லோ கார்த்தம் விசேஷித்தது பஞ்ச ஆயுதம் ஸ்லோகம். த்வாதச நாமம் சொல்லி திருமண் இட்டுக் கொள்ளும் தாத்பர்யம் என இப்படி அர்த்தங்களின் அணிவரிசையை அடுக்கிக் கொண்டே போகலாம். அனைத்தும் அத்யத்புதம் இந்த வரிசையில் ராமஸ்லோகங்கள்,
ஹரித குலத்தில் பிறந்த கூரத்தாழ்வான் அவர் திருக்குமாரர் பராசர பட்டரால் ஏற்படுத்திய பகவத் குண தர்ப்பணம் முற்றுப் பெற்றது.
வ்யாக்யான சக்ரவர்த்தியாய் ஸ்ரோத்தார்கள் உஜ்ஜீவனம் அடைய ஹேதுவாய் சத்விஷயங்கள் மயமாய் ச்ரோத்தாக்களை ஆச்சர்யத்தில் திளைக்க வைத்து அத்யத்புதமாய் அர்த்தங்களை வர்ஷித்த ஞான குரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என பிரார்த்தித்து அடியேனின் தண்டவ ப்ரணாமங்களை தாழ்மையுடன் தெரிவித்துக கொள்கிறேன். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
யுக உபன்யாஸகர் வாழி வாழியே.
ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து
————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்