ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்–ஸ்லோகம் -6-7-8-9-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகளின் ஸ்ரீ ரத்ன பிரபா வியாக்யானம்

யன் மூர்த்நி மே ஸ்ருதி ஸிரஸ்ஸூ ச பாதி
யஸ்மின் அஸ்மன் மநோ ரத பதஸ் சகலஸ் சமேதி
ஸ் தோஷ்யாமி ந குலதனம் குல தைவதம் தத்
பாதார விந்த மரவிந்த விலோச நஸய–6-

 

யன் மூர்த்நி மே -யத் மே மூர்த்நி–யாதொரு எம்பெருமானுடைய திருவடியானது -என் தலையிலும்
அடிச்சியாம் தலை மீசை நி அணியாய் ஆழி யம் கண்ணா நின் கோலப் பாதம் 10-3-6–ஸீரோ பூஷணம் –
நாம் தலை மடுத்து வணங்குவதால் திரு முடியில் விளங்கக் குறையில்லையே
ஸ்ருதி ஸிரஸ்ஸூ ச பாதி–வேதாந்தங்களிலும் விளங்கா நின்றதோ -வேதங்களில் விஸ்தரமாக வருணிக்கப் படுமே
யஸ்மின் –யாதொரு திருவடியில்
அஸ்மன் மநோ ரத பதஸ் சகலஸ் –நமது ஆசைப் பெருக்கம் எல்லாம்
சமேத –போய்ச் சேருகின்றதோ
திருவடிகள் கிடைக்கப் பெற்றாலே சர்வமும் கிடைக்கப் பெற்றதாகும்
தத்-அப்படிப்பட்டவராய்
நம் குலதனம்–வம்ச பரம்பரையாய் நமக்குச் சேர்ந்த செல்வமாய்
நம் குல தைவதம் -நம் குலத்துக்கு எல்லாம் ஆதாரமாய் இருக்கிற
அரவிந்த விலோச நஸ்ய- பாதார விந்த -செங்கண் மாலின் திருவடித் தாமரையை
ஸ்தோஷ்யாமி –ஸ்துதிக்கப் போகிறேன்
இப்படி பிராப்யமுமாய் விலஷணமுமாய் உபகாரகமுமான
திருவடிகளிலே வாசிகமான அடிமை செய்கிறேன் –
நமது குலத்துக்கு அழியாத செல்வமான பகவத் பாராதவிந்தத்தை ஸ்தோத்ரம் பண்ணப் போவதாக ப்ரதிஜ்ஜை செய்கிறார்
குல தனம் –உபாயத்வம்-அயத்ன சித்தமுமாய் ஸ்வத பிராப்தமுமாய் இருக்கை
குல தைவதம் -உபேயத்வம் –
உபாய உபேயங்களை
சங்க்ரஹித்துக் கொண்டு
உபக்ரமித்தபடியே பகவத் ஸ்தோத்ரத்திலே இழிகிறார் –


தத்த்வேன யஸ்ய மஹிம அர்ணவ ஸீகர அணு
சக்யோ ந மாதுமாபி சர்வபிதா மஹாத்யை
கர்த்தும் ததீய மஹிம ஸ்துதிம் உத்யதாய
மஹ்யம் நமோ அஸ்து கவயே நிரபத்ரபாய–7-

யஸ்ய மஹிம–எந்த எம்பெருமானுடைய பெருமையாகிற
அர்ணவ ஸீகர அணு–கடலிலே ஒரு சிறிய திவலை அளவு கூட
சர்வ பிதாமஹ ஆதயை அபி –சிவன் ப்ரஹ்மா முதலானவர்களாலும்
தத்த்வேன –உள்ள படி
சக்யோ ந மாதும் –அளவிட்டு அறிய முடியாததோ
ததீய மஹிம ஸ்துதிம் -அந்த எம்பெருமானுடைய பெருமையைப் பற்றிய ஸ்தோத்ரத்தை
கர்த்தும் உத்யதாய–செய்வதற்கு ஆரம்பம் செய்தவனாயும்
நிரபத்ரபாய–வெட்கம் கெட்டவனாயும்
கவயே-கவி என்று பேர் சுமப்பனாயும் இருக்கிற
மஹ்யம-எனக்கே
நமோ அஸ்து –நமஸ்காரம் செய்து கொள்ள வேண்டும்
என்னை எல்லாரும் நமஸ்கரிக்கட்டும் என்று தம்மைத் தாமே நிந்தித்துக் கொள்ளுகிற படி
உலகில் ஸாஹஸர்களைக் கைகூப்பி வணங்க வேண்டும் என்று சொல்வது உண்டே


யத்வா ஸ்ரமாவதி யதாமதி வாப்ய அசக்த
ஸ்தௌம் யேவமேவ கலு தேஅபி சதா ஸ்துவந்த
வேதாஸ் சதுர்முகாஸ் ச மஹார்ணவாந்த
கோ மஜ்ஜதோரணுகுலா சலயோர் விசேஷ –8-

யத்வா -அல்லது -ஸ்துதிக்க தொடங்குவதால் யத்வா -என்று உபக்ரமிக்கிறார் இதில்
அசக்த-அஹம் -சக்தியற்ற நான்
ஸ்ரமாவதி –ஸ்ரமம் உண்டாகும் அளவாவது -சக்தி உள்ள அளவாவது என்றபடி
யதாமதி வா–புத்திக்கு எட்டும் அளவாவது
ஸ்தௌமி –ஸ்தோத்ரம் பண்ணுகிறேன்
சதா அபி ஸ்துவந்த-எப்பொழுதும் ஸ்தோத்ரம் பண்ணிக்க கொண்டு இருக்கிற
தேஅபி வேதாஸ்-அந்த வேதங்களும்
சதுர்முக முகாச்ச –ப்ரஹ்மாதிகளும்
யேவமேவ கலு -இப்படி அல்லவோ ஸ்துதிப்பது
என்னைவிட அவர்கள் சிறிது அதிகமாக ஸ்துப்பார்கள் ஆகிலும்
மஹார்ணவாந்த-மஜ்ஜதோ–பெரிய கடலினுள்ளே முழுகிப் போகிற
அணு குலா சலயோர் க விசேஷ –சிறியதொரு வஸ்துவுக்கும் பெரிய குலபர்வதத்துக்கும் என்ன வாசி

ஆகவே நம்மால் ஆன அளவு ஸ்துதிப்பது தகுதியே என்று திரு உள்ளத்தை சமாதானம் படுத்திக்க கொள்கிறார்
வேதம் உரைத்து இமையோர் வணங்கும் செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் –பெரிய திருமொழி -2-8-2என்கிறபடியே
தேவர்களும் -வைதிகர்களும் -வேதங்களும் அல்லும் பகலும் ஸ்துதிக்குக் கொண்டே இருந்தாலும் பேசித் தலைக்கட்டி முடியாமல் தங்கள் ஞான சக்திகள் அளவும் ஸ்துக்கிறார்கள்
ஆகவே உள்ளபடி பேச மாட்டாமையில் நானும் அவர்களும் ஒரு வாசி இன்றியே சமமே
அனவதிக அதிசய அஸங்க்யேய பகவத் குண சாகரத்தில் இரண்டுமே முழுகி மறைந்து போகுமே
அவரவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி
தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால் தலைத் தலைச் சிறந்து பூசிப்ப
மா மலரான் வார் சடையான் வல்லரே அல்லரே வாழ்த்து -நான் முகன் திருவந்தாதி -10-
பேசுவார் எவ்வளவு பேசுவார் அவ்வளவே -மூன்றாம் திருவந்தாதி -21
வல்லதோர் வண்ணம் -திருவாய் மொழி -7-8-10-


கிஞ்சசைஷ சக்த்யதிச யேன ந தே அனுகம்ப்ய
ஸ்தோதாபி து ஸ்துதி க்ருதேன பரிஸ் ரமேண
தத்ர ஸ்ரமச்து ஸூலபோ மம மந்த புத்தே
இதயத் யமோ அயமுசிதோ மம சாப்ஜ நேத்ர–9-

ஏஷ ஸ்தோதா-இந்த ஸ்துதிப்பவனான அடியேன்
சக்த்யதிச யேன-எனது சக்தியின் மிகுதியினால்
ந தே அனுகம்ப்ய-உனக்கு இரங்கத் தக்கவன் அல்லேன்
அபி து -பின்னை எக்காரணத்தால் இரங்கத் தக்கவன் என்னில்
கிஞ்சசைஷ
ஸ்துதி க்ருதேன பரிஸ் ரமேண–ஸ்துதிப்பதனால் உண்டாகும் பரி ஸ்ரமத்தைப் பார்த்து இரங்கத் தக்கவன்
ஹே அப்ஜ நேத்ர–செங்கண் மாலே
உன் தாமரைக் கண்களால் நோக்காய் –திருவாய் மொழி -9-2-1-
என்னுடைய முயற்சி ஈடேறும் படி உனது தாமரைக் கண்களால் நோக்காய்
ஸ்தோத்ரத்தில் நிலை நின்ற படியைக் கண்டு
செந்தாமரைக் கண்ணோடு மறப்பற என்னுள்ளே மன்னினான் –திருவாய் மொழி -1-10-10-என்கிறபடியே
ப்ரீதியாலே திருக் கண்கள் குளிர்ந்த படியைச் சொல்லுதல் -என்றுமாம் –
தத்ர மந்த புத்தே–ஸ்துதிக்கும் விஷயத்தில் மந்த புத்தியை யுடையனான
மம து ஸ்ரமம் -எனக்கோ என்றால் பரி ஸ்ரமம்
ஸூலபோ -எளிதில் உண்டாகக் கூடியது
இதி மம ச –என்கிற காரணத்தினால் எனக்கே
அயம் உத்யமஸ் -இந்த முயற்சி ஏற்று இருக்கிறது
எனவே ப்ரஹ்மாதிகளை விட தனக்கு உண்டான ஏற்றம் -என்னைப் போலே தீனர்கள் அல்லவே –
எனவே சீக்கிரமாக உனது தயை என் மேலே பொழியும் -அவர்கள் ஸ்துதிப்பது வீண் -நான் ஸ்துதிப்பதே தகுதி என்று சகாரப் பிரயோகம்
உசிதோ மம ச –
ச சப்தம் அவதாரணமாய் -எனக்கே உசிதம் என்னுதல்
சமுச்சயமாய் எனக்கும் உசிதம் -என்று கீழ் ஸ்லோகத்தோடு கூட்டுதல் –
இருக்கு வாய் முனிக் கணங்கள் ஏத்த நானும் ஏத்தினேன்

—————————-

 

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading