Archive for June, 2016

பகவத் விஷயம் காலஷேபம் -136- திருவாய்மொழி – -6-7–1….6-7–11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்

June 19, 2016

மேல் திருவாய்மொழியிலே, மோகித்துக் கிடக்கிற தன் மகளுடைய துன்பத்தைக் கண்ட திருத் தாயாரானவள்,
‘அது போயிற்றது, இது போயிற்றது’ என்று அவன் திரு நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டு இவள் தானும் மோகித்தாள்;
அவன் திரு நாமத்தைச் சொல்லுகையாலே பெண் பிள்ளை உணர்ந்து எழுந்து புறப்பட்டுத் திருக்கோளூர் ஏறப் போனாள்;
திருத் தாயாரும் வாசனையாலே உணர்ந்து படுக்கையைப் பார்த்தாள்;
வெறும் படுக்கையாய்க் கிடந்தது; இனி,
1-இவள் என் வயிற்றிற் பிறப்பாலும்,
2-தன் தன்மையாலும்,
3-இங்கு இருந்த நாட்களில் தேக யாத்திரை இருந்த படியாலும்
இவள் திருக்கோளூர் ஏறப் புறப்பட்டுப் போயினாள் என்று அறுதி யிடுகிறாள்.

வளையம் முதலாயினவற்றை எல்லாம் இழந்தாளே யாகிலும் நாம் இவளை இழக்க வேண்டி இராது
என்றே இருந்தாள் மேல் திருவாய் மொழியில்.
இத் திருவாய்மொழியில், இவள் தன்னையும் இழந்தோம் என்று கூப்பிடுகிறாள்.

ஆளவந்தார் கோஷ்டியில், “உண்ணுஞ்சோறு” என்ற திருவாய்மொழியில் வருகின்ற பிராட்டிக்கோ அஞ்ச வேண்டுவது” என்று கேட்க,
“இருவராகப் போனவர்கட்கு வயிறு எரிய வேணுமோ? தனி வழியே போனவளுக்கன்றோ வயிறு எரிய வேண்டுவது!” என்று
இருந்த முதலிகள் சொல்ல, “அங்ஙன் அன்று காணுங்கோள்! இருவராகப் போனவர்கள் ஆகையாலே, இருவர்க்கும் அஞ்ச வேணும்;
“கள்வன் கொல்” என்றது பெரிய திருமொழி, 3. 7 : 1. தனியே போனவளுக்கு அச்சம் உண்டோ?” என்று அருளிச் செய்தார்.
அதற்கு அடி, இருவரும் இருவர்க்கும் ஊமத்தங்காயாய், கடித்ததும் ஊர்ந்ததும் அறியார்கள்:
அகலகில்லேனிறையும்”, “பித்தர் பனிமலர் மேல் பாவைக்கு” என்பன ஈண்டு நினைக்கத் தகும்.

யதவாத் கிரி -சேர்ந்து புறப்பாடு -ஸ்ரீ பாஷ்யகாரர் கூடவே எழுந்து அருளுவார் -செல்லப் பிள்ளை -யதிராஜ சம்பத் குமாரர் பித்ரு ஸ்தானம்
தானே கூடி சென்று ரஷித்து அருளுகிறார்
இன்றும் பரகாலன் குமுதவல்லி நாச்சியார் உடனே சேவை -நம்மாழ்வார் அன்றும் தனி இன்றும் தனி

இவள் அங்கே புக்கல்லது தரியாள் என்பதாம். “அள்ளல் அம் பூங்கழனி அணி ஆலி புகுவர் கொலோ!”
அன்றியே, இலங்கையின் வாசலிலே புகுவர் கொலோ! என்றே அன்றோ அங்கே வயிறு பிடி.
ஆனாலும், எங்கேும் போகிலும் இருவராயல்லது இராது அங்கு;
‘தனியே சென்ற இவள் என்படுகிறாளோ?’ என்று மிகவும் நொந்து கூப்பிடுகிறாள் இவளுடைய திருத்தாயார்.

அற்ப சாரங்களவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்” என்கிறபடியே,
‘பகவத் கோஷ்டிக்கு இனி ஆளாக மாட்டாரே!’ என்னும்படி ஐம்புல இன்பங்களிலே கை கழிந்த இவர்,
‘சம்சாரிகளுக்கு இனி ஆளாக மாட்டார்’ என்னும்படி நாட்டாரோடு இயல்வு ஒழிந்து,
கொள்ள மாளா இன்ப வெள்ளத்தைப் புஜிக்கக் கை கழிந்த படி சொல்லுகிறது.

நரகத்திற்குக் காரணமான விஷயத்தைப் பற்றிப் பிறர் அறியாமலே போகக் கடவ இவர்,
ஸ்வரூபத்திற்குத் தகுதியான விஷயத்தைப் பற்றிப் பிறர் அறியாமலே போகும்படி விழுந்தது.

க்ஷுத்ர விஷயத்தைப் பற்றிப் பழிக்கு அஞ்சாதே போகக் கடவ இவர், குணாதிக விஷயத்தைப் பற்றிப் பழிக்கு அஞ்சாதபடி ஆனார்.

அல்பம் -நரகாவஹம் -குணம் இல்லாமல் தோஷம் மிக்கு விஷயாந்தரங்கள் -மூன்றையும் காட்டி அருளினார் –

‘என்னுடைமை புக்க இடத்திலே நானும் போய்ப் புக்கு அல்லது நில்லேன்’ என்கிறாள். –திருத்தாயார் –
அவள் உடமை பராங்குச நாயகி

-லக்ஷ்மணேந கதாம் கதிம்“நான் இப்பொழுதே இலக்குமணனால் செல்லப்பட்ட வழியிலேயே செல்லப் போகிறேன்”
“ப்ரவேஸயத ஸம்பாராந் மாபூத் காலாத்யயோ யதா
அத்யைவ அஹம் கமிஷ்யாமி லக்ஷ்மணேந கதாம் கதிம்”-என்பது, உத்தர ராமாயணம்.–என்றாற்போலே.
ஸர்வாந் போகாந் பரித்யஜ்ய – தான் பண்டு விரும்பியிருக்கும் அவற்றோடு பெற்றவர்களோடு வாசி அறப் பொகட்டுப் போனாள்.
‘மாண்டும் இவற்றிலே நசை பண்ணும்’ என்று தோற்றாதபடி விட்டாளாதலின் ‘பரித்யஜ்ய’ என்கிறது.

ஸர்வாந் போகாந் பரித்யஜ்ய பர்த்ரு ஸ்நேஹ பலாத் க்ருதா
அசிந்தயித்வா துக்காநி ப்ரவிஷ்டா நிர்ஜ்ஜனம் வனம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 19.

பர்த்ரு ஸ்நேஹ பலாத்க்ருதா – ஒரு விஷயத்தில் சிநேகமானது எல்லாவற்றையும் விடப் பண்ணும் அன்றோ.
தன் வசத்தால் போனாள் அல்லளாதலின் ‘பலாத் க்ருதா’ என்கிறது
அசிந்த யித்வா துக்காநி – விட்டனவற்றை நினையாவிட்டால், போய்ப் புகுகிற இடத்தில் மிறுக்கைத் தான் நினையா நின்றாளோ?
இவள் பெருமாளை ஒழியத் தன்னைக் காணில் அன்றோ துக்கத்தை நினைக்க வல்லளாவது.
ப்ரவிஷ்டா நிர்ஜ்ஜனம் வனம் – ‘போகத்துக்கு ஏகாந்தமான இடம்’ என்னுமதுவே கண்டீர் இவள் நெஞ்சிலே பட்டது.
“கன்னகு திரள் புயக் கணவன் பின் செல நன்னகர் ஒத்தது நடந்த கானமும்”-என்றார் கம்பநாடரும்.

புத்ர த்வய விஹீநம் தத்-சக்கரவர்த்தி, பிள்ளைகள் இருவரையும் தேடிப் போர நொந்தான்.
ஸ்நுஷயாச விவர்ஜிதம் – ‘மீண்டும் இவ்விடத்தை விரும்புவார்கள்’ என்று நினையாதபடி
புத்ர த்வய விஹீநம் தத் ஸ்நுஷயா ச விவர்ஜிதம்
அபஸ்யத் பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 42 : 31.
ஸ்நுஷயா-மாட்டுப்பொண்-குழை சரக்கு அறுத்துக்கொண்டு போனபடி.
அபஸ்யத்பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம் –
நிலவோடும் நக்ஷத்திர தாரா கணங்களோடும் கூட சந்திரன் குடி வாங்கின ஆகாசம் போலே கிடந்தது.
சந்தரன் பெருமாள் -நிலவு -சந்தரன் ஒளி சீதை –நஷத்ரங்கள் லஷ்மணன் –
(ராம சந்திரன் ஒளி போல் சீதை -நிலவு)
அப்படியே ஆயிற்று இத் திருமாளிகை கிடக்கிறது.
“நல்லது ஓர் தாமரைப் பொய்கை” என்ற திருப்பாசுரத்திற் கூறியுள்ள படியே யாயிற்று இவள் திருமாளிகை கிடக்கிறது.

நல்லதோர் தாமரைப் பொய்கை நாண் மலர் மேல் பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகழிந்தால் ஒத்ததாலோ
இல்லம் வெறி ஓடிற்றாலோ என் மகளை எங்கும் காணேன்
மல்லரை அட்டவன் பின் போய் மதுரைப் புறம் புக்காள் கொலொ.-என்பது, பெரியாழ்வார் திருமொழி, 3. 8 : 1.

திருத் தாயாரும் இம் மாளிகையைக் கண்டு வெறுத்து,
‘போகக் கடவதாகத் துணிந்தால் என்னையும் கூட்டிக் கொண்டு போனால் ஆகாதோ?
தனி வழியே போவதே! நான் கூடப் போகாவிட்டால் அவனுடனே கூடப் போகவும் பெறாது ஒழிவதே!
இவள் தான் எங்ஙனே போகிறாளோ! நாடு அடங்க வாழ்வித்துக் கொண்டு போகிறாளோ!
அங்கே புக்கால் என்படுகிறாளோ! வழியிலுள்ளார் என் சொல்லுகிறார்களோ!
அங்கே புக்கால் அவ்வூரிற் சோலைகளையும் அங்குள்ள நீர் நிலைகளையும் அவன் குணங்களையும்
கண்டு உகக்கிறாளோ! கண்டு சிதிலை ஆகிறாளோ!
இவை எல்லாம் தாம் அங்கே சென்று புக்கால் அன்றோ என்றாற்போலே மனோ ரதித்துக் கொண்டு,
தன்னைப் பார்த்தல் எங்களைப் பார்த்தல் செய்யாதே,
இவற்றை எல்லாம் கடலிலே கவிழ்த்துப் போவதே!’ என்று
(தனது மார்த்வத்தைப் பாராமல்
எங்கள் விஸ்லேஷ அஸஹத்வத்தைப் பாராமல் )திருத்தாயார் இன்னாதாகிறாள்.-

திருப் பொருநல் தென் கரை -வைத்த மா நிதிப் பெருமாள் -சயனத் திருக்கோலம் -திருக் கோளூர் –
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவவதார திவ்ய தேசம் –
கருட அம்சம் -நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் –
கண்ணி நுண் சிறுத்தாம்பு -நாலாயிரம் நாதனுக்கு அருளிச் செய்ய உரு துணை இதுவே அன்றோ
இவர் ஒருவரே ஆழ்வார் உடன் கூட இருந்து நமக்கு பெரும் நிதி கிடைக்க உதவினார் –
நவ நிதிகள் -குபேரன் சிவ பக்தன் –சிவன் பார்வதி -சேர்ந்து இருக்க பார்த்தாதால் பார்வது சபிக்க -இழந்தான் –
ரஷிக்க-வைத்த மா நிதி -பெருமாள் -நிதிகள் ஸூரஷிதம் -குபேரன் -ஒரு கண் போனதே -மேனி விகாரம் –
இவன் திருவடி பற்றி நிதி பெற -பார்வதி தேவி உபதேசிக்க –
குமுத வல்லி கோளூர் வல்லி -மரக்கால் -உடன் சேவை –
தர்ம தலை சாய –தர்மம் நிதியாக காத்து -தர்ம சம்ஸ்தாபனம் அர்த்தமாக -தர்ம தேவதை நீராடி -திருவடி பற்றி –
இதே தர்ம ஸ்தாபனமே மதுரகவி ஆழ்வார் திரு பிறப்பித்து நம்மாழ்வார் திருவடி சேர்க்க அருள் செய்தார்
வியாசர் சந்ததி தர்ம குப்தன் -சாபம் -தர்மம் செல்வம் இழக்க -பரத்வாஜர் குல ரிஷி சொல்ல
இங்கே வந்து -ஸ்ரீ கர விமானம் -இழந்தது பெற்றான் –

நமக்கு சொத்து பெருமாள் திருவடிகளே சொத்து என்று இருக்கும் ஆழ்வார் திருவடிகளே சொத்து என்று
இருக்கும் மதுர கவி ஆழ்வார் திருவடிகளே சொத்து என்று இருக்கும் இவ்வூர் உள்ளோர் திருவடிகளே சொத்து நமக்கு

கீழும் இதுவும் தாய் பாசுரம் -இதில் இவள் ஆற்றாமை விஞ்சி -இவளை இழந்தோம் -தனி வழியே போனாள்
என்று அன்றோ திருத் தாயார் நினைவு –
கைம் முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரில் சம்ருத்தம் -ஆச்சார்ய ஹ்ருதயம் –169-

———————————————————————————————-

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவித்
திண்ணம் என் இளமான் புகுமுர் திருக் கோளூரே.–6-7-1-

தாரகம் போஷகம் போக்கியம் -6-4 முதல் கண்ணன் சம்ச்லேஷம் தானே இவளுக்கு -வாழ் முதல் -வளர் முதல் -மகிழ் முதல் –
அவன் நித்ய வாசம் திருக் கோளூர் தான்
உண்ணுஞ் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம்-த்ருஷ்ணா சாந்திகரம் -ப்ரீதிக்கு ஹேது போக்கியம் -தாரகாதிகள்
கண்ணன் எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர் மல்கி-வாஸூ தேவ சர்வம் -என்று என்றே -இரவும் பகலும் அனுவர்த்தித்து
அவன் அசந்நிதானத்தாலே கண்ண நீர் மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவித்-ஆஸ்ரித அர்த்தமாக -வந்த இந்த மண்ணில் -பிரணயித்வ சம்பத் -சீர்
சௌலப்யாதி-பரி பூர்ணன் -ஊரையும் வினவி -3 மைல் தூரம் -சீரை விசாரித்துக் கொண்டு
அழகன் -சுலபன் -பேரைச் சொல்லாமல் -முழுக்கவே அழகன் சுலபன் சுந்தரன் -தான் அனுசந்திக்கும் அளவு அன்றியே -வினவி –
கேட்டார்களும் ஊரும் பேரும் தாரும் தன்னைப் போலே பிதற்ற -இதுவே முதல் தவழ்ந்து போனது -இவளுக்கு –
பகவத் விஷயம் உசாவாக அதுவே தாரகம் –
திண்ணம் என் இளமான் புகுமுர் திருக்கோளூரே-என் பெண் பிள்ளை முக்தமான மான் போலே பேதை -தூரம் போக வல்லமை அல்லள்-
இள மான் -புகும் ஊர் திருக் கோளூர் இது திண்ணம் –

உண்ணுகின்ற சோறும் குடிக்கின்ற தண்ணீரும் தின்னுகின்ற வெற்றிலையும் எல்லாம் கண்ணனாகிய எம்பெருமான் என்று என்றே
கண்கள் நீராலே நிறைய, பூமியிலே அவனுடைய கல்யாண குணங்களையும் வளத்தால் மிக்கவனான எம்பெருமானுடைய திவ்விய தேசத்தையும்
கேட்டுக் கொண்டு, என்னுடைய இளமான் புகும் ஊர் திருக்கோளூர் என்னும் திவ்விய தேசமேயாகும். இது நிச்சயம்.
“உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை” என்று அவ்வவற்றிற்குரிய சிறப்புத் தொழிலாற் கூறப்பட்டுள்ளமை நோக்கல் தகும்.
என் இளமான் என்று என்றே கண்கள் நீர்மல்க, வளமிக்கவன் சீரையும் ஊரையும் விடவிப் புகும் ஊர் திருக்கோளூரே;
இது திண்ணம் என்க. வளமிக்கவன் : பெயர்.
இத் திருவாய்மொழி, கலி நிலைத்துறை.

தன் வயிற்றிற் பிறப்பாலும், இவளுடைய தன்மையாலும் இவள் இங்கு நின்றும் போய்ப் புகும் ஊர்
திருக்கோளூர் என்று அறுதியிடுகிறாள்.

உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் –
இவள் அவ்வருகே ஒரு வாய் புகுநீர் -உன்மத்தக அனுபவம் -தேடிப் போனாளோ. என்றது,-
தேக யாத்ரை பார்க்க வேண்டுமோ இவள்
இங்கு இருந்த நாள் அந்நம் பானம் முதலியவைகளாலே தரித்து, அங்கே புக்கு அவனாலே தரிக்கப்போனாளோ என்றபடி.
“அஹம் அந்நம், அஹமந்நாதா: – நான் பகவானுக்கு இனியன், நான் பகவானாகிய இனிமையை அநுபவிக்கிறவன்” என்று
இருப்பார்க்கும் -இங்கேயே பெற்று இருப்பார்க்கு -அவ்வருகு போக வேணுமோ?

சோறு, நீர், வெற்றிலை என்ன அமையாதோ?
‘உண்ணுஞ் சோறு’ என்பது போன்ற அடைமொழிகட்குக் கருத்து என்? என்னில்,
வேட்ட பொழுதின் அவை யவை போலுமே, தோட்டார் கதுப்பினாள் தோள்” என்று வள்ளுவனும் சொன்னான் அன்றோ;
(ஆசைப்பட்ட சமயத்தில் அவை அவை பெற்றால் உகக்குமா போல் பூ சாத்தும் தோள் உடன் அணைவது உகக்குமே -)
அப்படியே, இவை தாமே, விருப்பம் இல்லாதவைகளாகவும் இருக்கும் ஒரோ நிலைகளிலே;
அதற்காக, விரும்புகிற சமயத்தில் இவைதாம் யாதொரு படியிருக்கும் அப்படியே யாயிற்று இவர்க்கு
எப்போதும் பகவத் விஷயம் என்கைக்காகக் கூறப்பட்டன என்க.
தாரக போஷக போக்கியங்கள் எல்லாம் “வாஸு தேவஸ் ஸர்வம்”
“பஹூநாம் ஜந்மநாம அந்தே ஞானவாந் மாம் ப்ரபத்யதே
வாஸுதேவஸ் ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸு துர்லப:”-என்பது ஸ்ரீகீதை, 7 : 19
என்று கொண்டு ‘எல்லாம் கிருஷ்ணன்’ என்று இருக்கும் என்பாள் ‘எல்லாம் கண்ணன்’ என்கிறாள்.

‘உண்ணும் சோறு’ என்ற நிகழ் காலத்தாலே, அல்லாதது உண்டு சமையும் சோறு என்கையும்,
இது மாறாதே உண்ணும் சோறு என்னுமதுவும் தோற்றுகிறது.

“கணை நாணில், ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நன்னெஞ்சே,
ஓவாத ஊணாக உண்” -பெரிய திருவந். 78.-என்னக் கடவதன்றோ.
மாறாதே உண்ணலாவதும்,
மாளாததும் இதுவே அன்றோ;
“அப்பொழுதைக்கப் பொழுது என் ஆராவமுதம்”-திருவாய். 2. 5 : 4.- என்றும்,
“கொள்ள மாளா இன்ப வெள்ளம்” -திருவாய். 4. 7 : 2.-என்றும் அன்றோ இருப்பது.
இவற்றில் ஆகாதது ஒன்று இல்லை கண்டீர்,
இவை எல்லாம் வகுத்தவனேயா யிருக்கை என்பாள் ‘எம்பெருமான்’ என்கிறாள்.
இவள் சந்நிதியே அமையும் கண்டீர் எங்களுக்கு.

என்று என்றே –
இது ஒழிய வேறு ஒன்றனைத் ‘தாரகம்’ என்று இருக்கில் அன்றோ மற்று ஒன்றினைச் சொல்லுவது;
இது தன்னையே மாறாதே சொல்லி. என்றது, ஒருகால் இதனைச் சொல்லிப் பின்பு
ஊண் உறக்கத்தாலே போது போக்கலாம் விஷயம் அன்றே என்றபடி.

கண்கள் நீர் மல்கி-
இவர்களுடைய உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் இருக்கிறபடி.
இவர்கள் -தோழி உடன் தாய் -ஊரும் நாடும் உலகமும் திருத்தி -அனைவரும் ஒரே கோஷ்டி –
இவள் முகத்தாலே காணும் இவர்களுக்கு ஜீவனம். -ஆழ்வார் த்வாரா -ஆழ்வார் திரு முக மண்டலம் –
தன் ஜீவனத்துக்குப் போகிறவள் எங்கள் ஜீவனத்தைக் கொண்டு போக வேணுமோ?
ஒருவன் பகவத் குணங்களிலே ஈடுபட்டவனாய்க் கண்ணும் கண்ண நீருமாயிருக்க,
அவனைக் கண்டு கொண்டிருக்க வன்றோ அடுப்பது.
‘அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ’ –திருவிருத்தம், பா. 2.-என்று
சேதனராகில் மங்களாசாசனம் செய்யக் கடவது.

நஞ்சீயர், ‘பிள்ளை திருநறையூர் அரையரோடே மூன்று திருவாய்மொழி கேட்டேன்.
அதில் எனக்கு ஒரு வார்த்தையும் போகாது;
ஒரு திருவாய்மொழியைச் சொன்ன அளவிலே அவர் சிதிலராய்க் கண்ணும் கண்ண நீருமாய் இருக்கும்
இருப்பை நினைத்திருப்பன்’ என்று அருளிச் செய்வர்.

“ஆஹ்லாத ஸீத நேத்ராம்பு: புளகீக்ருத காத்ரவான்
ஸதா பரகுணாவிஷ்டோ த்ரஷ்டவ்ய: ஸர்வதேஹிபி:”-என்பது, ஸ்ரீவிஷ்ணுதத்வம்.

ஆஹ்லாத ஸீதநே்த்ராம்பு:–விரகத்தாலே கொதித்துப் புறப்படும் துக்கக் கண்ணீர் போலன்றிக்கே,
பகவானை அநுபவிப்பதனால் உண்டான மிகுந்த உவகையினாலே குளிர்ந்த கண்ணீரை யுடையனாவது
புளகீக்ருத காத்ரவாந் – உடம்பு முழுதும் மயிர் எறிந்து இருப்பது.
பரகுணாவிஷ்ட:-பகவானுடைய குணங்களாலே ஏறப்பட்டிருப்பவனாவது, தெய்வம் ஏறினவரைப் போலே.
அவன், ஸர்வதேஹிபி:-த்ரஷ்டவ்ய:-அவன் தேகத்தை எடுத்தவர்கள் எல்லாருக்கும் பார்க்கத் தகுந்தவன்.
சரீரத்தை எடுத்ததற்குப் பயன் இவனைக் காண்கை யாயிற்று.
கண்ணன் பெருமாளும் இப்படிப் பட்ட பக்தனுக்கு அன்றோ ஆழ்ந்து போவார்கள் -தேக பரிக்ரகம் பண்ணினதால் –
ஸதா த்ரஷ்டவ்ய:-எப்பொழுதும் காண்கைக்கு ஒரு தேச விசேடம் தேடிப் போகவேணுமோ?

‘அனந்தாழ்வான் சோழ குலாந்தகனிலே பயிர்த் தொழில் செய்து கொண்டிருப்பவனான ஒரு ஸ்ரீவைஷ்ணவனைக் கண்டு,
உம்முடைய ஊர் எது’ என்று கேட்க, ‘என்னுடைய ஊர் திருக்கோளூர்’ என்ன,
‘அங்கு நின்றும் போந்தது என்?’ என்ன, ‘தேக யாத்திரை நடவாமே போந்தேன்’ என்ன,
அவ்வூரில் கழுதையை மேய்த்து ஜீவிக்க மாட்டிற்றிலையோ?
நிலை நின்ற ஜீவனத்தை விட்டுப் போந்தாயே யன்றோ! என்றானாம்.

கண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்கி-
இந்த பாவனையின் மிகுதியினாலே பெற்றாற்போலே இருந்து ஆனந்தக் கண்ணீர் புறப்படுகிற படியாகவுமாம்;
இந்த அநுசந்தானத்தாலே கண்ணீர் மல்கி என்னவுமாம்.

மண்ணினுள். . . . . .புகும் ஊர்த் திருக்கோளூரே-
மண்ணினுள் புகும் ஊர் திருக்கோளூரே.
விண்ணில் ஓர் ஊர் விசேடிக்க வேண்டும்படியாய் இரா தன்றோ.

அவன் சீர் வளம் மிக்கவன் ஊர்-
அவனுடைய கல்யாண குணங்களையும் நிரவாதிக – தனக்கு மேல் ஒன்று இல்லாததான
செல்வத்தை யுடையவனுடைய ஊரையும்.
“அந்த முக்தன் எல்லாக் கல்யாண குணங்களையும் சர்வஜ்ஞனான பரமாத்மாவோடு அநுபவிக்கிறான்”
“ஸோஸ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மணா”-என்பது, சுருதி வாக்கியம்
என்கிறபடியே, அவனோடு அவன் குணங்களோடு வாசி அறப் பிராப்யமாவதைப் போன்று,
அவன் விரும்பின தேசமும் பிராப்யத்திலே சேர்ந்ததாகக் கடவது அன்றோ.

அவன் சீர் –
அவனுடைய கல்யாண குணங்கள்.
அவையாவன: அவன் தன் திறத்தில் தாழ நிற்கும் நிலைகள்.

வளம் மிக்கவன் ஊர் –
பரம பதம் கலவிருக்கையைப் போன்றது; உகந்த விஷயத்தைப் பெறும் இடம் அன்றோ ஊராகிறது.
‘எனக்குச் சீதையால் என்ன காரியம் உள்ளது’ கிம் கார்யம் சீதயா மம”-என்பது, ஸ்ரீராமா. யுத். 41 : 4.
என்பதே யன்றோ அவனுடைய திரு வார்த்தை.

இந் நிலை விரைவின் எய்தாது இத் துணை தாழ்த்தியாயின்
நன்னுதற் சீதையால் என் ஞாலத்தாற் பயன் என் நம்பி
உன்னை யான் தொடர்வன் என்னைத் தொடரு மிவ் வுலகம் என்றால்
பின்னை என் இதனை நோக்கி விளையாடிப் பிழைப்ப செய்தாய்.–என்பது கம்பராமாயணம், மகுடபங்கப்படலம்.

பரம பதத்தைக் காட்டிலும் அடியார்கள் இருந்த இடம் அன்றோ ஊராகிறதும்,
அவன் திரு வுள்ளத்துக்குப் பொருந்தி யிருப்பதும்.

வளம் மிக்கவன் –
பிரணய தாரையில் சாமர்த்தியத்தை யுடையவன் என்றுமாம்.
இப்போது சாமர்த்தியமாவது,
தான் இருந்த இடத்தே இவள் வரும்படி இத்தலையை அழித்தது.

வினவி-
‘திருக்கோளூர் எத்தனை இடம் போரும்’ என்று எதிரே வந்தாரைக் கேட்டு,
அவர்கள் ‘இன்னதனை இடம் போரும்’ என்ன, அது தானே வழிக்குத் தோட்கோப்பாகப் போகை.
“தாமரைக் கண்ணனாகிய எம்பெருமானுடைய திரு நாம சங்கீர்த்தனமானது வழிக்குக் கட்டுச் சோறாகும்”
பாதேயம் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தநாம்ருதம்.-என்றார் பிறரும்.
பூ அலரும் போதைச் செவ்வி போலே ‘திருக்கோளூர் எத்தனை இடம் போரும்’ என்று கேட்கும் போதைத் திருப்பவளத்தில்
செவ்வி காணப் பெற்றிலேன் என்று காணும் திருத் தாயார் தான் நோவு படிகிறது.

என் இளம் மான் புகும் ஊர் திருக் கோளூரே –
என் வயிற்றிற் பிறப்பாலும் இவளுடைய தன்மையாலும் அவ்வூரில் அல்லது புகாள் என்கிறாளாயிற்று.
தாயின் வழியைக் கொண்டே தன்மைகளை அறுதியிடலாமே அன்றோ.
பெருமாளைக் கண்டல்லது தரிக்க மாட்டாதானாய் வருகிற ஸ்ரீபரதாழ்வானைக் கண்டு வைத்தேயும்,
முக் காலமும் உணர்ந்த முனிவரும் கூட,
“வருத்தம் இன்றிக் காரியம் செய்கிற ஸ்ரீராம பிரானிடத்தில் கெட்ட நினைவில்லாதவனாகிச் செல்லுகிறாயோ,
இந்தப் பெரிய சேனையானது எனக்குச் சந்தேகத்தை உண்டு பண்ணும் போலிருக்கிறது”

“கச்சிந் ந துஷ்டோ வ்ரஜஸி ராமஸ்ய அக்லிஷ்ட கர்மண:
இயம் தே மஹதீ ஸேநா ஸங்காம் ஜநயதீவ மே”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 85 : 7. இது,
ஸ்ரீ பரதாழ்வானைப் பார்த்து ஸ்ரீ குகப் பெருமாள் கூறியது.

இது, குகப் பெருமாளுடைய வார்த்தையாக இருப்பினும், இதனை இங்கே எடுத்தது,
பரத்துவாச பகவானுக்கும் கருத்து இதுவாகையாலே.
தாயாரை இட்டு வழக்குப் பேசு வித்துக்கொண்டு இவரைக் காடு ஏறப் போக விட்டாயாகில், இன்னும்
‘பெருமாள் இருக்கில் கீழ் வயிற்றுக் கழலையாகிறது’ என்று
அங்குப் போய் நலியத் தேடுகிறாய் அல்லை அன்றோ என்றான் அன்றோ.

“கச்சிந் ந தஸ்ய அபாபஸ்ய பாபம் கந்தும் இஹேச்சஸி
அகண்டகம் போக்துமநா ராஜ்யம் தஸ்யா நுஜஸ்ய ச”-என்பது (ஸ்ரீராமா. அயோத். 90 : 13,) போன்ற
பரத்துவாச முனிவருடைய வார்த்தைகளைத் திருவுள்ளம் பற்றி.
அவன் படிகள் காணா நிற்கச் செய்தே தாய் சம்பந்தம் கொண்டு ஐயப்பட்டானே அன்றோ.
பொருள்களின் தன்மைகளைக் கொண்டு பத்தும் பத்தாக நிமித்தங்களை அறியக் கடவர்களாய் இருப்பர்கள் வேடர்கள்;
இங்ஙனே இருக்கச் செய்தேயும், தம் எல்லையிலே இவன் வந்து புகுந்ததற்கு மகிழ்ந்தவர்களாய்
‘அடிச்சேரியிலே வந்து புகுவதே!’ என்பது;
‘ஆனாலும், அரசர்களாயிருப்பார் வன்னியர் பற்றிலே புகுரும் போது கேள்வி கொண்டன்றோ புகுருவது’ என்றாற்போலே
இருக்க வெளிறும் காழ்ப்புமாகச் சொல்லி, தாய் வழியை நினைத்து அசிர்த்தார் –சங்கித்தார் அன்றோ ஸ்ரீகுகப் பெருமாளும்.
(வெளிறும் காழ்ப்புமாக- அசாரமும் சாரமும்–வெறுப்பும் விநயமும் என்றபடி )

அப்படியே, இவளும் தன் வயிற்றிற் பிறந்த சுத்தியே காரணமாகத் ‘திருக்கோளூரிலே புகும்’ என்று அறுதியிடுகிறாள்.
இராம பாணம் இலக்குத் தப்புமோ! என் மகள் புகும் ஊர் அதுவே என்கிறாள்.

இள மான் –
இப் பருவத்தில் இவளைத் தலக்கு -வெட்கம் -அறுக்கும் போது அவ்வூரில் அவனேயாக வேண்டாவோ?

என் இள மான் –
கிரமத்திலே அடைவதைப் பொறுக்காதவள். தன் மிருதுத் தன்மை பாராமல் பதறிக் கொண்டு போனாள்.

புகுமூர் –
காட்டுத் தீயிலே அகப்பட்டவன் பொய்கையும் பொழிலும் தேடிப் புகுமாறு போலே,
சம்சாரமாகிற பாலை நிலத்தில் காட்டுத் தீயிலே அகப்பட்டவனுக்கு உகந்தருளின நிலங்களானவை
பொய்கையும் பொழிலும் போலே அன்றோ.

புகும் ஊர் என்கையாலே, புக்கார் போகும் ஊர் அன்று என்கை.
எம்பெருமானார் தெற்கே எழுந்தருளா நிற்க, எதிரே வருகிறாள் ஒரு பெண் பிள்ளையைக் கண்டு ‘எங்கும் நின்றும்?’ என்ன,
‘திருக்கோளூரில் நின்றும்’ என்ன, ‘அவ்வூரில் புக்க பெண்களும் போகக் கடவராய் இருப்பர்களோ?’ என்று அருளிச் செய்தார்.

என் இள மான் மண்ணினுள் புகும் ஊர் திருக்கோளூரே, இது திண்ணம் –
இவள் போய்ப் புகும் ஊர் திருக்கோளூரே, இது நிச்சயம்.
இவ் வூரில் பிள்ளைகளைக் காணா விட்டால், கோவிலுக்குள் தேடுமத்தனை அன்றோ.

———————————————————————————————-

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2-

கிளி -அவாந்தர பேதம் பூவை -சர்வ லோக பிரசித்தமாம் படி அவனுடைய திரு நாமாதிகளை -நிரதிசய போக்யமான திவ்ய தேசம்
புக்கு திரும்புவாளோ என்று அவள் லீலா உபகரணங்களைக் கேட்கிறாள் திருத் தாயார்
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய -தான் இருந்த திருக் குருகூர் -தமிழகம் -பிரபஞ்சம் -அவனுடைய
பேறும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறி -பஹு முகமாக பிதற்றும் படி -வான் போலே கற்பு -அறிவை -இடரும் படி
தாண்ட அளக்க முடியாதபடி –
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே -விலஷணம் சம்ருத்தி -நீர் நில வாய்ப்பு –
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே -தன்னைப் பிரிகைக்கு ஈடான கொடியவள் -பாபிஷ்டை -உபக்ன அபேஷமான-
மால் தேடி ஓடும் மனம் -கோல் தேடி ஓடும் கொழுந்தே போலே -மீண்டு வருவாளா –
கொள் கொம்பும் அவன் கொடி இவள் -தாய் இடம் ரகஸ்யம் சொல்லதவள் -உங்களுக்கு தெரியுமே –

திருக் கோளூருக்கே சென்ற என் பெண் மீள வருமோ என்று ஒரு பஷி விசேஷம் இடம் கேட்கிறாள் –

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே
இங்கு குறை உண்டால் அங்கு தேடித் போனாளோ-
போத யந்த பரஸ்பரம் ஆள் இல்லாமல் -யத்ர பூர்வே –சாத்யா சாந்தி தேவா -பரமபதம் சென்று அடியார்கள் குழாங்கள் தேட –
நிரஞ்சனம் சாம்யா பத்யா -அவன் பண்ணுவது போலே -கிட்டமும் வேட்டு வேளானும் போலே -இவரும் ஆக்கிய பின்பு –
அசேதனமும் இப்படி பண்ணுமே –
அசித் அயன சம்பந்தம் -அநந்த கிலேச பாஜனம் -நிரதிசய போக்யம்

இங்கு உள்ளாரை தன்னோடு -தான் பிறந்த ஊர் மட்டும் இன்றி -தோள் தீண்டியான நாடும் லோகமும் –
ராமாவதாரம் ஊர் ஒன்றே திருந்திற்று -அயோத்தில் வாழும் சராசரம் முற்றவும்
இங்கு சம்சாரமாக திருந்திற்று -இன்று நம்மளவும் பாய்ந்து ஏறிப் பாயும் படி அன்றோ
ஆழ்வார் சம்பந்தம் வெள்ளம் இட்ட படி

லோகே அவதீர்ண –நாத முனியே முதலான நம் தேசிகரை அல்லால் –
பரமார்த்த சமஸ்த பக்தி யோகம்-ஸ்தோத்ர ரத்னம் -மேட்டில் ஏறும் படி அன்றோ –
காலை எழுந்து இருந்து கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லி மருள் பாடுதும் மெய்ம்மை கொலோ
ப்ரஹ்ம முகூர்த்தத்தில் திர்யக்குகளும் -அவன் இவள் பக்கல் பிச்சேரும் படியை சொல்லா நின்றன
தான் இருந்த இடத்தே செல்ல வேண்டுமவன் இவள் இருந்த இடத்தே வரும் படியைச் சொல்லி –

தன்னைப் போலே -அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றக்
அவன் மயர்வற மதி நலம் அருளப் பெற்ற அடி -இவரது -பிதற்றல் -ஒருவன் அழகில் ஒருத்தி ஈடுபட்டு அங்கு –
இவள் ஒருத்தி இடத்தில் சுவரி விட்டது சமாப்தி ஆனதே
இவள் மயர்வற மதி நலம் எல்லாருக்கும் -மிக்க நல்ல நோய் -தேறினோம்–
நினைத்து சொல்லுகை அன்றிக்கே -பகவத் குணங்களில் அவஹாகித்து -உணர்த்தி அற்று -பிதற்ற
சங்கு என்னும் சக்கரம் என்னும் துழாய் என்னும்–பேரும் தாரும் ஒரே பிரமாணம் –
தேவ தேவ பிரான் என்றும்
விரை மட்டலர் தண் துழாய் -என்றும்
ஸ்ருதோய அர்த்த -ஜாமதக்னச்ய ஜல்பதக-ரிஷிகள் கூட்டத்திலும் -மோஷ தர்மம் –

கற்பு வான் இடறி
இந்த பிதற்றல் -வான் அளவுக்கு -கடக்க ஒண்ணாத மரியாதை-மேரு பர்வம் இடறுவது போலே -துச்சமாக மதித்து
பெரு வெள்ளம் -சிறிய கரை பெரிய கரைகள் உடன் வாசி இல்லாமல் அழிக்குமா போலே –
அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு எல்லாம் அழியும் படி
மரியாதை -ஸ்த்ரீத்வம்

கற்பு வான்-
பெரிய ஞானம் -வலிய அறிவு என்றுமாம் –
கற்பு -கல்வி அறிவு
வான் பெரிய -அபி நிவேசம்
தத்வம் உபாசனம் என்றுமாம்
அபி நிவேசம் ஒரு அளவு உண்டால் இறே இதுவும் ஒரு அளவில் தடை பட்டு அடங்கும் –
காதலுக்கு கண் இல்லை

எங்கும் காவலும் கடந்து –குழல் ஊதின -அன்று -கற்பு -காவல்
யயௌஜ-கா சித் பிரேமாந்தா -ஸ்ரீ விஷ்ணு புராணம் –சிந்த யந்தி –
வாசல் கடை பற்றி -துக்கமும் -சந்தோஷமும் -பாப புண்யங்கள் –
இவள் இடம் தான் பிரேமம் குறைவு -கிருஷ்ண அனுபவத்துக்கு புதியவள் -மாமியார் கண்ணில் பத்தாதே
இங்கு ஆழ்வார் உடன் சாம்யம் -தீர்க்க சிந்தயந்தி -நடந்தாள் -கற்பு வான் இடறி –
பிரேமத்தால் வந்த இருட்சி -அதுவே வழி நடத்த போனால்
தத்தானாம் விரஹாக்னி –கிம் கரிஷ்யந்தி -மூத்தோர் சொல் கேட்க்கப் பண்ணாதே -கிருஷ்ண காமம்
குருக்கள் -வெந்து விழ குட நீர் சொரிய வல்லார்களோ -வார்த்தை கோபம் மிக்கு –

சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
இங்கே அசல் காக்க -தோழி -மதுர கவி ஆழ்வார் போல்வார் –
வயிறு வளர்க்க போவதே -உண்ணும் சோறு
இங்கு பிறர் திருந்தும் படி இருக்கும் இவள் திருந்தின இடம் போவதே
தன்னைக் கண்டு பிறர் வாழ -அவனைக் கண்டு வாழ
சம்பத்து சேர்ந்த -சத்ருசமான நல்ல சம்பத்

போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –
போவாளோ -தாயார் வார்த்தை
அன்றிக்கே –
நெஞ்சு முற்பட்டு -காதல் -முந்துற்ற நெஞ்சு -அருணோதயம் -வழியில் உள்ள அனைத்தையும் பார்த்து
இவர் நெஞ்சு இவருக்கு சொன்னபடி -போருங்கொல் –
அன்றியே –
மீண்டு புறப்பட்டு வர வல்லளோ
சேரும் நல் வளம் -போய்ச் சேர்வாளோ –

கொடியேன் –
உங்கள் இடம் என் பெண்ணைப் பற்றி கேட்கும் படி
உபனக்னம் -கோல் தேடி ஓடும் கொழுந்தே -மூன்றாம் திருவந்தாதி -27-
பெற்ற என்னையும் விட்டு வேறு தேடி போகும் படி
பெற்ற தாய் விட்டு அகலுகை இந்த குடிக்கே ஸ்வ பாவம் போலே காணும்
கள்வன் கொல்-அணி யாலி புகுவர் கொலோ
நல்லதோர் தாமரை -பொய்கை -மதுரைப் புறம்-

பெற்ற தாயை விட்டாலும் -குழந்தை போலே பூவை வளர்த்தாளே -தான் பெற்றதை விடுவாளோ -உரையீர்
பிறந்தாரை கை விடப் போகாதே -தன்னை இட்டு பேசுகிறாள் –
உடைய நங்கை தாயாரை விட்டு பராங்குச நாயகியைப் பார்த்தால் போலே -தன்னை
போக்கு வரத்து -எனக்கு அன்றோ சொல்லல் ஆகாது -உங்கள் இடம் ஒதுக்காமல் மறைக்காமல் சொல்லுவாள் –
அவள் சொன்னாலும் இது மறைக்குமே -உரையீர்

போதுங்கோல்
பாவியேன் இருப்பதால் மீள மாட்டாளே -சங்கை
நீங்கள் இருக்கையால் மீளவும் கூடுமே
பாபமே பிரபலமாய் வாராது ஒழியுமோ
அறிவித்து -சென்றால் ராமாவதாரம் போலே -சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவனே -அறிவாளே-
நான் வரக் கூடாதே -லோகமாக பின் தொடரக் கூடாது என்று அன்றோ இவள் போனாள்

————————————————————————————-

பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் என்
பாவை போய் இனித் தண் பழனத் திருக்கோளூர்க்கே
கோவைவாய் துடிப்ப மழைக் கண்ணொடு என் செய்யுங்கொலோ?–6-7-3-

லீலா உபகரணங்கள் ரசம் எல்லாம் பகவத் திரு நாமம் உச்சாரண்த்தாலே பிறக்கும் படி -இவள் திருக் கோளூரில் புக்கு –
அவன் இவள் நினைவுக்கு ஈடாக பரிமாறாமல் கிலேசப் படுகிறாளோ
பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள்–தூதை- -மரத்தால் செய்த சமையல் பாத்திரங்கள் -உப கரணங்கள் –
யாவற்றையும் திருமால் திரு நாமம் பேர் வைத்தே -முன் யோஜனை
இவருக்கு வேறு ஒன்றும் கண்ணில் படாதே -இது பொருந்தாதே -பிரயோஜ நாந்தர சம்பந்தம் வருமே
அவையும் திரு நாமம் சொல்லும் படி -இரண்டாம் பூர்வ பஷம்–பந்து பேசாதே –
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் என்-எழும் உஜ்ஜீவிக்கும் படி
பாவை போய் இனித் தண் பழனத் திருக் கோளூர்க்கே-ஸ்வா கதம் சொல்லி ஆலோக ஆலாப ஆலிங்கனம் செய்து ஆஸ்வாசப் படுத்தாமல்
கோவை வாய் துடிப்ப மழைக் கண்ணொடு என் செய்யுங்கொலோ-அதரம் துடிப்ப -வர்ஷம் போலே கண்ண நீர் அருவி போலே -என் செய்கிறார்களோ

பூவையும் பசிய கிளிகளும் பந்தும் தூதையும் அழகிய பூக்கூடையுமாகிய இவை எல்லாவற்றாலும் உண்டாகும் இன்ப முழுதும் திருமால்
திருநாமங்களைச் சொல்லுவதனாலே உண்டாகும்படி அவன் திருநாமங்களைச் சொல்லி
அதனாலே வாழ்வு பெறுகின்ற என் மகள், குளிர்ந்த வயல்களையுடைய திருக்கோளூர்க்கு இனிச் சென்று,
கோவைக் கனி போன்ற வாய் துடிக்கும்படி தண்ணீர் நிறைந்த கண்களோடு நின்று என்ன செய்கிறாளோ? என்கிறாள்.
பெண்கள் பந்து விளையாடுதல் மரபு. தூதை – விளையாட்டுக்குரிய சிறிய மரப்பானை, புட்டில் –
பூங்கூடை, போய் என் செய்யும்கொலோ? என்க.

திருக்கோளூர் அண்மையிலிருந்ததாகில் எங்ஙனே உடை குலைப் படக் கடவள் என்கிறாள்.

பூவை. . . . . .எழும் என் பாவை –
வேறு ஒன்று கொண்டு பொழுது போக்கும் பருவத்திலும் திருநாமத்தையே கொண்டு ஜீவித்திருக்குமவள் கண்டீர் போனாள்.
இங்கு இருந்த நாள் மற்றொன்று தாரகமாய், அங்கே சென்று அவனாலே தரிக்கப் போனாளோ.
பூவை தொடக்கமான லீலையின் உபகரணங்களால் பிறக்கும் உவகை எல்லாம் துவயத்தின் படியே
ஸ்ரீய:பதி (திருமகள் கொழுநன்) என்கிற திருநாமத்தைச் சொல்ல அதனாலே உண்டாகா நின்றது.

“‘ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போல்’ என்கிறபடியே, இவை தாம் திருநாமத்தைச் சொல்லினவானால் ஆகாதோ’ என்று,
பெற்றி, நம்பிள்ளையைக் கேட்க, “அதற்குக் குற்றம் உண்டு, ‘பந்து தூதை புட்டில்’ என்கிற விடத்தில் தட்டுப் பிறக்கும்” என்ன,
அங்ஙனேயோ என்று இசைந்து போனார்.-முதல் பூர்வ பக்ஷம் இது-

நன்று; அவன் திரு நாமங்களை இவற்றிற்கு இட்டு அழைத்ததாகக் கொண்டாலோ? என்னில்
“உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன்” என்றிருக்கிற
அளவு கடந்த ஈடுபாட்டிற்கு இது சேராது.-இரண்டாம் பூர்வ பக்ஷம்

பெற்றி என்னும் பெரியார் ஒருவருடைய நிர்வாகத்தையும், அவர் கூறும் நிர்வாகம் பொருந்தாமையையும் காட்டுகிறார்
‘ஊரும் நாடும்’ என்று தொடங்கி. பெற்றி நிர்வாகத்தில், “கூவி’ என்பதற்குக் கூவும்படி செய்து என்றும்,
“எழும்” என்பதற்குச் சந்தோஷிக்கும் என்றும் பொருள்.

அன்றிக்கே,
பூவை பைங்கிளிகள். . . . . .எழும் என்பதற்கு, திருநாமச் சுவடு அறிந்த பின்பு
விளையாட்டுக்குரிய கருவிகளைப் பார்த்தல் இவளுக்குப் பொறுக்கக் கூடாத தாயிருக்கும் என்னுதல்.
இனி இரண்டாவது சித்தாந்தம்
திருமால் திருநாமங்களைக் கூவி, “மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு” என்கிறபடியே,
பூவை தொடக்கமான எல்லாவற்றையும் இகழும் என் பாவை என்றபடி.
இங்கே, “எழும்” என்றதற்கு,
அவற்றை விட்டு எழும் என்று பொருள் கொள்க.-
எழும் -த்வேஷிக்கும் -எழ்கல் இராகம் இலாதான் -என்றவாறு –

இதுக்கு த்ருஷ்டாந்தம் –
ஸ்ரீ பரதாழ்வானுடைய ராஜ்ய தரிசனம் அவனுக்குப் பொறுக்க முடியாமற் போனது போலே.
சக்கரவர்த்திக்குச் சாஸ்திரார்த்தங்கள் செய்த அன்று நாயிறு பாடு, -இறுதி சடங்கு – விடியல் காலையில் –
‘கைகேசி செய்த குற்றத்துக்கு நாமும் கீழோலை இட்டோம் என்று நாட்டார் நினைத்திருப்பது ஒன்று உண்டு;
அந்தக் குற்றம் நமக்கு இல்லை என்று அறிவிக்க வேணும்’ என்று சபையை அடைந்தான்.
அரசர் கூட்டம் அடங்கலும் திரண்டு கர்த்தாவானவனை இழந்தோம்; பின்பு அதற்குரியவர் காடு ஏறப்போய்க் கொடு நின்றார்;
இனி, சக்கரவர்த்தி புத்திரர்களில் நின்றாரைக் கொண்டு நிர்வஹிக்கும் அத்தனை அன்றோ’

ஸபாஷ்ப கலயா வாசா கல ஹம்ஸ ஸ்வரோ யுவா
விலலாப ஸபா மத்யே ஜகர்ஹே ச புரோஹிதம்.”
“கதம் தசரதாஜ் ஜாதோ பவேத் ராஜ்யாபஹாரக:
ராஜ்யம்ச அஹம் ச ராமஸ்ய தர்மம் வக்தும் இஹார்ஹசி”-என்பன, ஸ்ரீராமா. அயோத். 82 : 10, 12.
என்று பார்த்து, மங்களத்தைக் கொடுக்கிற பல்லியங்களை முழக்கிக் கொண்டிருந்தார்கள்.

இந்த முரச ஒலி செவிப்பட்ட போது “கருமாணிக்கமலை” என்னும் திருவாய்மொழியில் பிராட்டியின் சுயம்வரத்துக்கு
மண முரசு அறைந்த போது தோழி பட்டவெல்லாம் பட்டான்.
விலலாப சபா மத்யே – தனி இடத்தில் அன்றோ பறி கொடுப்பது. தனக்குச் சேஷத்துவம் அன்றோ ஸ்வரூபம்;
ஸ்வரூபத்தை யன்றோ கொள்ள நினைக்கிறது.
ஜகர்ஹேச-சந்தியா வந்தனத்துக்குப் பிற்பட்டாரைப் பெரியோர்கள் பழிக்குமாறு போலே.
புரோஹிதம் – இந்தக் குடிக்கு நாங்கள் கை வாங்கி யிருக்க, நீ முன்னோடிக் காரியங்கள் நடத்தக் கடவதாகச்
சமைந்தபடி சால அழகியதாய் இருந்தது.

சபா மத்யே ஜகர்ஹே-
“நியமாதி க்ரமம் ரஹஸிபோதயேத்-ப்ரமாதாத் ஆசார்யஸ்ய புத்தி பூர்வம்வா
நியமாதி க்ரமம் ரஹஸி போதயேத்”-என்பது, ஆபஸ்தம்ப தர்மம்.
தவறான செயலைத் தனிமையில் தெரிவிக்க வேண்டும்” என்கிற நிலையைக் குலைத்தான்.
புரோஹிதத்வமாகிற காரணம் கழிகையினாலே.

ராஜ்யஞ்ச அஹஞ்சராமஸ்ய-சேஷ வஸ்துக்களில் ஒன்றனை ஒன்று ஆளுமோ?
அங்ஙனேயாமன்று, இராச்சியந்தான் என்னை ஆண்டாலோ?
தர்மம் வக்தும் இஹார்ஹஸி-உலகத்தில் தமப்பன்மாரையும் தமையன்மாரையும் அழியச் செய்து
தாம் தாம் இராச்சியத்தைக் கைக் கொண்டு போருவது ஒன்று உண்டு;
‘அதனை இவனும் செய்வான்’ என்று இராதே கொள்;
என் தன்மை அறிந்து அதற்குத் தகுதியாக வார்த்தை சொல்லப் பாராய்.

கதம் தசர தாஜ் ஜாதோ பவேத் ராஜ்ய அபஹாரக:-
அவர் பிரிந்த உடனே முடிய வல்லவன் வயிற்றிலே பிறந்தேனாம்படி எங்ஙனே?
அவர் பொகட்டுப் போன இராச்சியத்தை நான் அபஹரித்தால்.
நமஸ்யாமி க்ருதாஞ்ஜலி:-
தகுதி இல்லாத வார்த்தைகளை அவன்-வசிஷ்டர் – சொல்லச் செவி தாழ்த்ததனால்
அபவாதத்துக்குப் பிராயச்சித்தம் செய்கிறான்.

பரதன் ஸ்ரேஷ்ட ராம பக்தன் -பரதனாக இருந்தபடியால் தவிர தம்பியான படியாலே அன்று –

“யத்ஹிமாத்ரா க்ருதம் பாவம் நஅஹம் ததபி ரோசயே
இஹஸ்தோ வன துர்க்கஸ்தம் நமஸ்யாமி க்ருதாஞ்ஜலி:”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 82 : 15.

என் பாவை இனிப் போய்-
என் புத்திக்கு வசமான செயல்களை யுடையவள் கண்டீர் என்னை ஒழியப் புறப்பட்டுப் போனாள்.
அன்றிக்கே,
நிருபாதிகமான பெண்மையை யுடையவள் என்னலுமாம். –
மணி வல்லிப் பேச்சு வந்தேறி அல்ல –
விளையாட்டுப் பொருள்களால் கொள்ளும் காரியமும் அவனே யாம்படியான இந்த ஈடுபாட்டிற்கு மேலே
அங்குப் போய்ப் பெறுவது என்னாகப் போனாளோ? என்பாள் ‘இனிப் போய்’ என்கிறாள்.

தண் பழனம் திருக்கோளூர்க்கே –
சிரமத்தைப் போக்கக் கூடிய நீர் நிலங்களை யுடைய திருக்கோளூர்க்கே.

கோவை வாய் துடிப்ப –
கோவைப் பழம் போன்ற சிவப்பை யுடைத்தான அதரமானது துடிக்க.
‘பிரியேன்’ என்று பிரிந்தாய்; ‘வருகிறேன்’ என்று வந்திலை; என்னைத் தனியே இட்டு வைத்தாய்;,
நான் வருமளவும் இருந்தாய்” என்பன போலே இருக்கச் சில சொல்ல நினைக்குமே;
அது தோற்றும்படி உதடு நெளிக்கிறபடி. கோவை வாய் துடிப்ப மழைக் கண்ணோடு-
நினைத்தது சொல்லித் தலைக்கட்ட வொட்டா நின்றதோ கண்ண நீர்!
உடைகுலைப் பட்டுக் கண்ண நீராலே தலைக்கட்டா நின்றாள்.

“தசரத புத்திரனான ஸ்ரீபரதாழ்வான் தீன சுரத்தோடு ஒரு தடவை ‘ஆர்யா’ என்று சொல்லிப் பின்பு
வேறு ஒரு வார்த்தையும் சொல்லவில்லை”
“துக்காபி தப்தோ பரதோ ராஜ புத்ரோ மஹா பல:
உக்த்வா ஆர்யேதி ஸக்ருத்தீனம் புந: நோவாச கிஞ்சந”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 99 : 38.-என்பது போன்று.

என் செய்யும் கொலோ –
சொல்ல மாட்டாள், தவிர மாட்டாள்; அழாதொழிய மாட்டாள்; எங்ஙனே படுகிறாளோ?
நம்மையும் பிறரையும் விட்டு அவன் திரு நாமங்களை அநுபவிக்கிற போதை அழகு காணப் பெற்றோம்;
அவனையே கண்டு அநுபவிக்கிற போதை அழகு காணப் பெற்றிலோமே.
நினைக்கும் வேளையில் போலே அன்று, கண்டால் பிறக்கும் விகாரங்கள்;

“காமன் உடல் கொண்ட தவத்தாற்கு உமை உணர்த்த வண்டு அலம்பும் தார் அலங்கல் நீண் முடியான் தன்
பெயரே கேட்டிருந்து அங்கு ஆரலங்கல் ஆனமையால் கண்டு வணங்கினார்க்கு என்னாங்கொல்”- நான்முகன் திருவந். 78.
என்றே யன்றோ இருப்பது.
காமாஸ்ரமம்-இன்றும் உண்டே -அனங்கன் ஆனான் -தமஸ் ரஜஸ் கொண்ட ருத்ரனுக்கே இப்படி என்றால் –
அலாபத்தோடே இருக்கும் இருப்புக் கண்டேன்; இலாபத்தோடே இருக்கும் இருப்புக் காணப் பெற்றிலேன் என்கிறாள்-

——————————————————————————————-

கொல்லை என்பர் கொலோ? குணம் மிக்கனள் என்பர் கொலோ?
சில்லை வாய்ப் பெண்கள் அயற்சேரி உள்ளாரும் எல்லே!
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
மெல்லிடை நுடங்க இள மான் செல்ல மேவினளே.–6-7-4-

நிரதிசய ஐஸ்வர்யம் விசிஷ்டன் -யார் என்ன சொல்வார்களோ
கொல்லை என்பர்கொலோ? குணம் மிக்கனள் என்பர்கொலோ?-வரம்பை மீறி -வரம்பில் நின்றவள் -இரண்டும் சொல்லும் படி -கிரஹித்தும்-குணம் மிக்கவள்
அதிசயிதம் அநுரூப விஷயம் அறிந்து -பிராப்ய த்வரை உபாய அத்யாவச்யத்துக்கு மேலே என்று அறிந்து -கொண்டாடுவார்களோ -விஷாத ஸூசகம்
சில்லை வாய்ப் பெண்கள் அயற்சேரி உள்ளாரும் எல்லே!-தம்மூர் பெண்கள் -வரம்பு மீறி -வெளியூரில் உள்ளார் குணம் மிக்கவள்
சிலுகையே -சில் என்று அழைத்து குற்றம் சொல்லி குத்துவதே ஸ்வ பாவம் -இருவரும் இரண்டு விதம்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே-அதிசய ஐஸ்வர்யம் –
மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே.-பாதி வழியே போனாள் -என்றவாறு –
அடுத்த தூது -வெளியிலே இருந்து தூது –5-9-திரு வல்ல வாழ் -போக முடியாமல் இங்கும்
முக்தமான -பல ஹானி பருவம் பாராமல் -போவதில் நெஞ்சம் வைத்து -நெஞ்சு பொருந்தி விட்டது

தோழியே! செல்வம் மிகும்படி அவன் சயனித்திருக்கின்ற திருக்கோளூர் என்ற திவ்ய தேசத்திற்கு, என் இளமான் மெல்லிய இடையானது
அசையும்படியாகச் செல்லுதற்கு ஒருபட்டடாள்; பலவாறு பேசுகின்ற வாய்களையுடைய பெண்டுகளும் அயல் ஊரிலுள்ள பெண்டுகளும்
வரம்பு அழிந்த செயலையுடையள் என்பர்கொலோ? குணத்தாலே மேம்பட்டவள் என்பர்கொலோ?
கொல்லை – வரம்பு அழிந்த செயலை யுடையவள்; உடையவன்: உயர்திணை இருபாற்கும் பொதுப்பெயர். சில்லை – பழிச்சொல்.
மல்கிக் கிடந்த திருக்கோளூர் என்க. மல்கி – மல்க. துடங்க மேவினள் என்க.

இவளைக் கண்ட நாட்டார் குணம் இல்லாதவள் என்பர்கொலோ?
குணங்களால் மேம்பட்டவள் என்று கொண்டாடுவர்களோ? என்கிறாள்.

கொல்லை என்பர்கொலோ –
இவள் வாசல் கடந்து புறப்படக்கடவதல்லாத மரியாதையைக் குலைத்தாள்:
இவள் விலக்கிய செயலை மேற்கொண்டாள்; இவள் வரம்பு அழிந்த செயல்களைச் செய்தாள் என்பர்களோ?
கொல்லை என்பது, வரம்பு இல்லாததற்குப் பெயர்.

குணம் மிக்கனள் என்பர்கொலோ –
குணாதிக விஷயத்துக்குப் போரும்படி செய்தாள் என்பர்களோ?

கொல்லை என்பர் கொலோ குணம் மிக்கனள் என்பர் கொலோ –
இவள் விதியை மீறினாள் என்பர்களோ; அல்லது சித்தாந்தம் தன்னையே சொல்லுவர்களோ?

சித்தாந்தம் தன்னையே சொல்லுவர்களோ?’ என்றது,
‘ருசி ஸ்வபாவத்தாலும்,
விஷய ஸ்வபாவத்தாலும்,
ஆத்ம ஸ்வரூபத்தைப் பார்த்தாலும்’ என்று
சொல்லப்படுகின்ற இவளுடைய
பிராவண்யத்தின் மிகுதி,
விஷய வைலக்ஷண்யம்,
சேஷத்வ ஸ்வரூபம் ஆகிற காரணம் மூன்றாலும் இது
தக்கது என்கிற சித்தாந்தந் தன்னையே என்றபடி.

ஓர் அளவிலே நின்று விலக்கியவற்றைக் கொண்டு, இது தகுதி இல்லாதது என்பர்களோ;
ருசி சுபாவத்தாலும் விஷய சுபாவத்தாலும் இது தக்கது என்பர்களோ?
சாதன விதியளவிலே நின்று தடுமாறுவர்களோ:
ஆதம் ஸ்வரூபத்தைப் பார்த்துத் தெளிவர்களோ?
உபாய அம்சத்தைப் பற்றி நின்று, இது கடவது அன்று என்பர்களோ;
ஆத்மாவின் ஸ்வரூபத்தையும் பேற்றின் ஸ்வரூபத்தையும் பார்த்து, இது கடவது என்பர்களோ?
பிற சாதனங்களை விலக்குதலை முன்னாகக் கொண்ட ஸ்வரூப ஞானம் பிறந்தால் பறப்படத் தகுதி இல்லை;
ஸ்வரூபத்திற்குத் தகுதியான கைங்கரியத்தினை நினைத்தால், போய்ப் புக்கு அல்லது நிற்க ஒண்ணாது.
விதியைப் பார்த்து நிந்திப்பர்களோ: காம வசனத்தைப் பார்த்து நன்று என்பர்களோ?

“விரக்தரான நீர் காமத்துக்குப் பரவசப் பட்டிருக்கின்ற எங்களை என் படுத்துகிறீர்” என்றாள் அன்றோ
தாரை இளைய பெருமாளைப் பார்த்து.

“ந காம தந்த்ரே தவ புத்திரஸ்தி த்வம் வை யதா மந்யுவசம் பரபந்ந:
ந தேச காலௌ ஹி நசார்த்த தர்மௌ அபேக்ஷதே காமரதிர் மநுஷ்ய:”–என்பது, ஸ்ரீராமா. கிஷ். 33 : 55.
இளைய பெருமாளைப் பார்த்துத் தாரை கூறியது. என்றது,
நீர் காம சாஸ்திரத்தை அறிந்திருந்தால் அன்றோ நான் செய்தது நன்று என்று நினைப்பீர் என்றபடி.

தானே போகையாலே அநந்ய உபாயத்வ வ்ருத்த -ஸூ யத்ன சாத்ய உபாயாந்தர தியாக விதாயகமான –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -விதியை அதிக்ரமித்தாளோ
பிராவண்ய அதிசயம் -ருசி ஸ்வ பாவத்தாலும் -விஷய ஸ்வ பாவத்தாலும் -ஸ்வ ஸ்வரூபத்தை பார்த்தாலும் -இதுவே பிராப்தம்
இத்தைப் பார்த்து கொண்டாடுவார்களோ
ததேக உபாயத்வ -ததேக ரஷகத்வம் -கொல்லை என்பர் -மார்பிலே கை வைத்து உறங்க பார்க்கும் ஓர் அளவிலே நிற்பார்
ஸூ பிரவ்ருத்தி கூடாதே -என்பார் -ஓர் அளவில் கட்டுக்கு உட்பட்டு காதல் இருந்தால்
சித்தாந்தம் -ருசி ஸ்வ பாவம் -விஷய ஆதார அதிசயம் -குணாதிக விஷயம் ஆகையால் -அவனுக்கும் இவளுக்கும் –
சாதன விதி அளவில் நின்று தடுமாறுவார்களோ-ஸூவ ஸ்வரூபம் -சேஷிக்கு அதிசய கரம் உணர்ந்து கொண்டாடுவார்களோ –
சேஷி விஷய பிராவண்யமே வடிவு -கொண்ட இவள் –
விதி வாக்கியம் மடல் எடுக்கக் கூடாது
காம சாஸ்திரம் பார்த்து ஓடலாமே -விஷய விஷயத்தால்
அதுக்கு தாரை வார்த்தை -பிரமாணம்
பாரதந்த்ர்ய ஸ்வரூபம் கை வைத்து உறங்க வேண்டும் –சேஷிக்கு அதிசயம் ஓட வேண்டும்

சில்லை வாய்ப் பெண்டுகள்-
சிலுகு சிலுகு என்னும் பெண்டுகள். விஷயத்திற்கு உட்பட்டு வருமதனையும் வசன சித்தம் என்றிருக்குமவர்கள்.
உபாய புத்தியினாலே வருமவற்றில் அன்றோ விதிக்கு விஷயமுள்ளது;
குணங்களால் தூண்டப்பட்டுப் போமிடத்தில் விதி விஷயமாகாதே.

அயல் சேரி யுள்ளாரும் –
இவள் இருந்த ஓர் ஊர் வாசியும் கூட இல்லாதவர்கள்.

எல்லே –
கீழில் அவர்களை விளிக்கிறாளாதல்;
இஃது ஓர் ஆச்சரியம் இருந்தபடி என்! என்கிறாளாதல்.

செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே –
அவன் வரவை வாராமைக்குச் சமம் ஆக்கினாள்.
முற்பாடனாய் வந்தவனை, தான் நாலடி இட்டுப் பிற்பாடனாம்படி செய்தாள்.
அவன் ஸ்வரூபத்தை அழித்தாள். பரத்துவம் வியூகம் முதலியவைகளை விட்டு இங்கு வந்து கிடக்கிறது
இவளுக்கு முற்பாடனாய் உதவுகைக்கு அன்றோ.
தனக்கு மேல் ஒன்று இல்லாததான செல்வமானது கரை புரளும் படியாக அவன் வந்து திருக் கண் வளர்ந்தருளுகிற திருக்கோளூர்க்கே.
பாதுகாக்க வேண்டிய பொருள்களினுடைய பாதுகாத்தலைத் தொடங்கினாலன்றோ நியமிக்கின்றவனுடைய செல்வம் பிரகாசிப்பது!
அவன் வரவு பார்த்து இவள் இருக்கை அன்றிக்கே,
இவள் வரவு பார்த்து அவன் காலம் பார்த்துக் கொண்டு கிடக்கிறான் ஆதலின் ‘அவன் கிடந்த’ என்கிறாள்.
ரஷகத்வம் – -அன்வயித்தால் தானே நியந்தா உடைய செல்வம் மல்கும் –ஸ்ரீ வைகுந்தம் செல்வம் மல்காதே –

மெல் இடை நுடங்க –
அவன் ஸ்வரூப ஞானம் இல்லாவிட்டால், தன்னுடைய ஸ்வரூப ஞானமோ தான் இவளுக்கு உண்டாயிருக்கிறது.
இவளுக்கு விழுக்காடு அறியாமை எங்கும் ஒத்தது கண்டீர்! தன் இடையை அறிந்தாளாகில் தான் புறப்பட்டுப் போமோ?
நடுவே அறியாமல் புகுந்த பிழை அன்றோ. மிருதுவான இடையானது துவுளம் படியாக.
இந்த இடையைக் கொண்டு இவள் நடக்கப் புக்கால் எதிரே புறப்பட்டு வர வேண்டாவோ? -நமஸ் சப்தார்த்தம் அறியாமல் –
எதிரே புறப்பட்டு வராமல் செல்வக் கிடப்பாலே கிடந்தான் -குற்றம்
ரஷணம் முற்பாடனாய் இருக்க -நகராமல் கிடந்தது இருக்க வேண்டுமே -அவன் வரவு அசத்சமம் ஆக்கி -வந்தாளே-என்றுமாம்

இளமான் –
போகிற வழியில் மிறுக்கும், தன் தன்மையும் அறிந்து மீளவல்ல பருவம் அன்று கண்டீர்.

செல்ல மேவினளே-
போக ஒருப்பட்டாள்.
இவள் கையிலும் இவர்கள் கைகளிலும் அன்றே பேறு கிடப்பது;
அது அவன் கையதன்றோ; இத் தலையில் துணிவே யன்றோ உள்ளது.
மேலே “போனாள்” என்றாள்; இங்கே, “போக்கிலே ஒருப்பட்டாள்” என்னா நின்றாள்;
இது, சேரும்படி என்? என்னில், இவள் போகையில் ஒருப்பட்ட போதே போய்ப் புக்காள் அன்றோ என்கிறாள்.

‘மேலே போனாள்’ என்று தொடங்கும் வாக்கியத்துக்குக் கருத்து,
பாதி வழி போனாள் என்பது. அது எங்ஙனே? என்னில், இத்திருவாய்மொழியின் முன்னுரையிலே
‘படுக்கையைப் பார்த்த விடத்தில் வெறும் படுக்கையாய்க் கிடந்தது’ என்கையாலும்,
“பொன்னுலகாளீரோ’ என்ற திருவாய்மொழியின் முன்னுரையிலே.
‘புறச்சோலையிலே கிடந்து தூது விடுகிறாள்’ என்கையாலும்,
‘ஒருப்பட்டாள்’ என்பதற்கு, பாதி வழி போனாள் என்பது பொருளாகக் கொள்க.

இளமான் செல்ல மேவினள், கொல்லை என்பர் கொலோ? குணம் மிக்கனள் என்பர் கொலோ? –
அவள் கை கழிந்து கொடு நின்றாள்: இனி இருந்த நாம் என் கேட்கிறோமோ?
இங்கு இருந்த நாள் நம்முடைய நல் வார்த்தையைக் கேட்கில் அன்றோ வழியிலுள்ளார் பழி கேட்பது அவள்.
இவள் வழிப்பட்டால் நல் வழியிலுள்ளார் வார்த்தை கேட்குமது ஒழியப் பெருவழியானார் வார்த்தை கேளாள்.

கொல்லை என்கிறவர்கள் சில்லை வாய் பெண்டுகள்
குணம் மிக்கார் அயல் சேரி என்றால் -இவள் இருந்த ஊர் வாசியும் இல்லாதவர்கள்
அந்ய- மட்டம் தட்டுவது போலே -பொருந்தாதே –
இரண்டு திறத்தாரும் கொல்லை குணம் மிக்கவள் என்பார் என்றே கொள்ள வேண்டும் –
அத்யவசாய நிஷ்டர் -சில்லை வாய் பெண்டிர்
அயல் சேரி -அத்யவசாய நிஷ்டர்க்கு அசலான த்வரை மிக்கவர்கள் -ஊரில் இருந்த வாசியும் இல்லாதவர்கள் -பொருந்தாதே இங்கும் –
இவள் வழிப் பட்டால் நல் வழி உள்ளார் வார்த்தை கேட்பாள்
பெரு வழி போனார் –அயல் சேரி -பிராப்ய த்வரை வார்த்தை கேளாள்-பொருந்தாது
இதுக்கு பரிகாரம் யோஜித்துக் கொள்வது
இதுக்கு பரிகாரம்-24000 படி –
நம் சேரியில் -அந்ய ஸ்திரீகள் -ஸ்வா பதேசம் -வசன பரர் -பரித்யஜ்ய -உபாய அத்யவசாய நிஷ்டர் என்றபடி –
சில்லை வாய் -இருந்த ஊரில் இருக்கும் மானிடர் எத் தவம் செய்வார்கள் பிரேம பரர் –
பெரு வழி -வார்த்தை கேட்காமல் நல் வழி -சிலுகு -அலவலை போலே கொண்டாடும் -நம் சேரி
விஷயாதீனம் -அயல் சேரி -பரிதாபம் பட்டு சொல்லாமல் —பெண்ணின் குணம் ஈடுபடாமல் என்றபடி

———————————————————————-

மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என் சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு
ஆவி உள் குளிர எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?–6-7-5-

ஸ்ரீ யபதி -விலஷணம் போக ஸ்தானம் கண்டு
மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என்சிறுத்-சௌந்தர்ய சீலாதிகளை நெஞ்சாலே கிட்டி
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்-பருவம் நிரம்பாதே -தேவி -வாசி அறியும் படி திவ்ய -ஸ்வ பாவம் உடையவள்
தன் திருமால் -தனக்காக சேர்த்தி அசாதாரானமான மிதுனம்
பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு-பூவே மலர்ந்து நிறைந்து சோலை தடாகம் -போக ஸ்தானம் -நினைத்து முன்பு சிதிலை ஆனவள்
ஆவி உள் குளிர எங்ஙனே உகக்குங்கொல் இன்றே-காணப் பெற்று -பிராண ஆஸ்ரமான நெஞ்சு -உகப்பாளோ-இல்லையோ –

என்னுடைய இளமை பொருந்திய பெண்ணானவள், அவனை மனத்தாலே அடைந்து அதனாலே மனமும் சரீரமும் உருகக் குலைந்து
விளையாடுதலைச் செய்யாள்; இனிச் சென்று, தனது திருமால் எழுந்தருளியிருக்கின்ற திருக்கோளூர் என்னும் திவ்விய தேசத்தில் இருக்கின்ற
பூக்கள் நிறைந்த சோலைகளையும் குளங்களையும் அவனுடைய கோயிலையும் உயிர் குளிரும்படியாகக் கண்டு இன்று எப்படி மகிழ்கின்றாளோ?
என் சிறுத்தேவி மேவி நைந்து விளையாடல் உறாள்; இன்றுபோய் ஆவி உள் குளிரக் கண்டு எங்ஙனே உகக்குங் கொல்? என்க.

திருக்கோளூரில் சோலைகளையும் அங்குள்ள பொய்கைகளையும் அவன் திருக் கோயிலையும் கண்டால்
எங்ஙனே உகக்குமோ? என்கிறாள்.

மேவி-
பகவானுடைய குணங்களிலே நெஞ்சினை வைத்து.

நைந்துநைந்து –
தான் பற்றி யிருக்கும் பொருள்களை அழிக்கும் நெருப்புப் போலே குணங்கள் தாம் அழிக்குமே:
“நினைதொறும் சொல்லும்தோறும் நெஞ்சு இடிந்துகும்”- திருவாய். 9. 6 : 2.– என்பதே யன்றோ மறைமொழி.
இவள் மேவியது நிர்க் குணமாய் இருப்பது ஒரு விஷயத்தோடு அன்றே; உயர்வற உயர்நலமுடையவனோடே அன்றோ.

மேவி –
இங்கு இருந்த நாளும் எங்களோடே பொருத்தம் இல்லை கண்டீர்.

நைந்து நைந்து –
நைந்து மீள மாட்டாள்; தரித்திருக்க மாட்டாள்.

விளையாடல் உறாள் –
பருவத்துக்குத் தக்கதான விளையாடலை விட்டாள்.
விளையாடுகையைத் தவிர்ந்து மேவி நைந்தாள் அன்று கண்டீர்,
இந்த விஷயத்திலே மூழ்கி, புறம்புள்ளவற்றை விட்டாளத்தனை.

“மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு” – பகவானுடைய குணங்கள் கொண்டு மூழுக,
புறம்புள்ளது கைவிட்டாள்.
நல்லதும் தீயதுமானால், தீயது போல் அன்றே நல்லது பண்ணிக் கொள்ளும்படி.
“எவன் ஒருவன் பரம்பொருளிடத்தில் மிகுந்த பக்தியுடையவனாய், பரம்பொருளுக்கு வேறான விஷயங்களில்
அன்பில்லாதவனா யிருக்கிறானோ அவன் எல்லாஆசைகளிலிருந்து விடுபட்டவனாய்ப் பிச்சை எடுத்து
உண்பதற்குத் தகுந்தவனாகிறான்”,
“மனைப்பால், பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்பம் எல்லாம், துறந்தார் தொழுதார் அத்தோள்” என்னுமாறு போலே.

பரமாத்மநி யோரக்த: விரக்த: அபரமாத்மநி
ஸர்வேஷணா விநிர்முக்த: ஸ: பைக்ஷம் போக்தும் அர்ஹதி”-என்பது, பார்ஹஸ்பத்ய ஸ்மிருதி.
“மனைப்பால்” என்பது, இரண்டாந்திரு. 42.

மேவி நைந்து நைந்து விளையாடல் உறாள் –
இளமை மாறி முதியோளானாள் அல்லள்.
‘ஜம்புல இன்பங்கள் தாழ்ந்தவை’ என்று சாஸ்திரத்தாலே அறிந்து அவற்றை விட்டு,
‘பகவத் விஷயம் நன்று’ என்று கை வைத்தாள் அல்லள்.
இதர முமுஷுக்களில் வியாவ்ருத்தி -ஞானத்தால் பேச வில்லையே -பிரேமத்தால் பேசுகிறாள் இப்பொழுது –

என் சிறுத் தேவி –
தன் ‘திருமால்’ என்று மேலே பெரிய தேவியைச் சொல்லுகையாலே, ‘சிறுத் தேவி’ என்று விசேடிக்கிறாள்.
அன்றிக்கே,
பருவம் நிரம்பாதிருக்கச் செய்தேயும் பட்டம் கட்டின பெருந்தேவிகளோடு
ஒக்கச் சொல்லலாயிருக்கையாலே ‘சிறுத் தேவி’ என்கிறாள் என்னுதல்,
‘என் பெண் பிள்ளை’ என்கிற நினைவு இல்லை காணும் இவளுக்கு.
“பிள்ளையைப் பிள்ளை என்று எண்ணப் பெறுவரே” –, பெரிய திருமொழி.8. 2 : 9.—
இவளுக்கு நல் வார்த்தை சொன்ன நாக்கினைக் கழுவ வேணும் என்கிறாள்.

இனிப் போய் –
வேறே சில பொருள்கள் கொண்டு போது போக்க வேண்டும் பருவத்திலே, அவற்றை விடும் படியான பாகம் பிறந்த
இதற்கு மேலே ஓர் ஏற்றஃகம்-அதிசயம் உண்டாகப் போனாளோ? என்றது,
இங்கே இருக்கச் செய்தே “ஜனங்களின் சமீபத்தில் இருக்கிற இந்தச் சரீரத்தை நினைக்கிறான் இல்லை”
“நோபஜநம் ஸ்மரந் இதம் சரீரம்” என்பது, சாந்தோக்யம்.-8. 12 : 3. என்றது,
சம்சாரத்தை விட்டுப் பரமபதத்துக்குச் சென்ற முக்தனுக்குப் பிறந்த ஞானம்,
இவளுக்கு இங்கே இருக்கச் செய்தே பிறந்ததானால், இனி அங்கே சென்று அநுபவிப்பது ஒன்று உண்டோ? என்றபடி.
என்ற நிலை பிறந்ததாகில், இனி, அங்குப் போய் அநுபவிப்பது உண்டோ?

தன் திருமால் திருக் கோளூரில் –
அவள் பக்கல் இருக்குமாறு போலே அன்றோ இவள் பக்கலிலும் அவன் இருக்கும்படி. –

தன் மால் -திருமால்–தன் திரு -தன் திருமால்
உலகத்தில் சேஷ சேஷி பாவம் போல் அன்றே காதலி பக்கல் பரிமாற்றம்.
ஆதலாலே, “உலகத்திற்குத் தலைவன்” என்கிறபடியே,
பிரமாணத்தைப் பார்த்துப் பரிமாற ஒண்ணாது அன்றோ காதலர் விஷயத்தில்.
தனக்கு எல்லாச் செல்வமான திருமால் திருக்கண் வளர்ந்தருளுகிற ஊரிலே.

பூ இயல் பொழிலும் –
தழையும் தண்டும் கொம்பும் கொடியுமாய்த் துரலாய் இராமல், வெறும் பூவேயாயிருக்கை.
நித்திய வசந்தமான சோலை. தடமும் – அந்தப்பொழிலை வளர்ப்பதாய்ப் பரப்பு மாறப் பூத்த தடாகமும்.

அவன் கோயிலும் கண்டு –
“மா மணிக் கோயிலே வணங்கி” – பெரிய திரு. 1. 1 : 6.-என்கிறபடியே,
அவனிலும் அவன் விரும்பி வாழ்கிற கோயிலையும் கண்களாரக் கண்டு.
திவ்யாத்ம ஸ்வரூபத்துக்குப் பிரகாசகமான திவ்விய மங்கள விக்கிரஹம் போலே,
அவை இரண்டுக்கும் பிரகாசகமான கோயில்,
கோயிலைக் கண்ட போதே உள் உண்டான பொருளையும் அறுதி இடலாயிருக்கை.
உள்ளில் பொன்னுக்குத் தக்க செப்பாயிருக்கும் அன்றோ. கண்டு இங்கே இருந்து
மானச அநுபவ மாத்திரமேயாய்க் கிலேசப் பட்டவள் கண்ணாரக் கண்டு.

‘பிள்ளை திருநறையூர் அரையரும், பட்டருமாக உள்ளே பிரதக்ஷணம் செய்யா நிற்க, இட்ட அடி மாறி இட மாட்டாதே
கண்களாலே பருகுவாரைப் போலே பார்த்து வாழ்ந்து கொண்டு போகிறபடியைப் பின்னே
நின்று கண்டு அநுபவித்தேன்’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர்.

ஆச்சானும் ஆண்டானுமாகக் கிழக்கே திருக்குடந்தைக்கு நடக்கிற போது,
திருப்பேர் நகருக்குக் கிழக்குப் போகவும் மாட்டாதே,
ஏறித் திருவடி தொழவும் மாட்டாதே,
திருப்பேர் நகரான் கோயிலைப் பார்த்துக் கொண்டு இருந்தார்களாம்.

ஆவி உள் குளிர –
இவ் விடத்தைப் பட்டர் அருளிச் செய்யா நிற்கச் செய்தே மேல் எழ அருளிச் செய்தாராய்,
அங்கே இருந்தவரான சீராமப்பிள்ளை,
‘சீயா! எம்பார் அருளிச் செய்யும்படி கேட்டறிகை இல்லையோ?’ என்று அருளிச் செய்தார்.
கமர் பிளந்த பரப்பு அடங்கலும் மறு நனையும்படி யாயிருக்கை.
(சீயா-உயர்ச்சியாக நவில்கிறார் )

எங்ஙனே உகக்கும் கொல் –
இவள் பருவம் நிரம்பாதிருக்கச் செய்தே புறம் புள்ளவற்றை விட்டு அவனை நினைத்து
உருக் குலைகிற போது அவ்வழகு கண்டு அநுபவிக்கப் பெற்றேன்;
அவனைக் கண்டு அநுபவிக்கிற போதை அழகு நான் கண்டு வாழப் பெற்றிலேன் என்கிறாள்.

இன்றே –
எனக்குச் சோகத்தாலே சூந்யமாய்க் கிடக்கிற இன்று
அவளுக்கு அநுபவத்தால் அடிக் கழஞ்சு பெற்றுச் செல்லுகிறதே!
ஒரு நாளிலே இப்படி ஆவதே!
நாள் வாசி அற்று இருந்ததே அன்றோ விஷயாதீனமாய் வருகையாலே.

நாள் வாசி – நாளின் குணம்.
‘விஷயாதீனமாய் வருகையாலே’ என்றது,
தனக்குப் பிரியமான பெண்ணைப் பிரிகையாலும்,
அவளுக்கு விருப்பமான நாயகனை அவள் பெறுகையாலும் என்றபடி.

————————————————————————————–

இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப் போய்த்
தென் திசைத் தலத மனைய திருக்கோ ளூர்க்கே
சென்று தன் திருமால் திருக் கண்ணும் செவ் வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனி மல்கவே.–6-7-6-

திரு அவயவ சோபை அனுபவித்து சிதிலையாம் இறே -முன்பு ஆவி உள்- அங்கு கோயில் தடாகம் -இங்கு திருக் கண் செவ்வாய் –
இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப் போய்த்-கை கழிய -சிறு தேவி
தென் திசைத் தலத மனைய திருக்கோ ளூர்க்கே-திலகம் போலே -அலங்காரமாக
சென்று தன் திருமால் திருக் கண்ணும் செவ் வாயும் கண்டு-புக்க பின்பு -உற்றார் உடன் உறவு அறுத்த -தன் திருமால் –
தன் திருமால் –ஸுவ அபிமத சம்ஸ்லேஷத்தை பிரகாசிப்பித்தது -தன் உற்றார் உடன் உறவு அறுத்த-
சாதார அபி வீஷணம் பண்ணும்-ரச அநு நயமான –ரசம் இட்டு சொன்ன வார்த்தை -ஸ்வாகதம் – வசனம் உஜ்வல ரூபம்
நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனி மல்கவே-ஆனந்த அஸ்ரு பூரணமாம் படி ஹர்ஷ அதிசயம் சிதிலை யாகா நின்றாள்

இன்றைய தினத்தில் எனக்கு உதவாமல் நீங்கிய என் மகளானவள், இதற்கு மேல் சென்று தென் திசைக்குத் திலதத்தைப் போன்று விளங்குகின்ற
திருக்கோளூர் என்னும் திவ்விய தேசத்தை அடைந்து, தன் திருமாலினுடைய திருக் கண்களையும் சிவந்த திருவாயினையும் கண்டு,
நீண்ட தனது கண்களில் தண்ணீர் நிறையும்படியாக நின்று நின்று வருந்தா நிற்பாள்.
இள மான் இனிப் போய்த் திருக் கோளூர்க்கே சென்று கண்டு பனிமல்க நின்று நின்று நையும் என்க.

அவனுடைய சிநேகத்தின் மிகுதியைக் காட்டுகிற திருக்கண்கள் முதலாயினவற்றைக் கண்டு
உவகையின் மிகுதியாலே உருக் குலைந்தவள் ஆவாள் அன்றோ என்கிறாள்.
இவள் தான் உகப்பது அங்கே புக்குத் தரித்து நிற்க வல்லவள் ஆனால் அன்றோ.
அன்றிக்கே,
“எங்ஙனே உகக்கும்கொல்” என்றாள் மேல் திருப் பாசுரத்தில்;
இங்ஙனே உகக்கும் என்கிறாள் இத் திருப் பாசுரத்தில் என்னுதல்.
மகள் காணப் புகுகிற விஷயத்தை நினைப்பது, தன்மகள் தன்மையை நினைப்பதாய்த்
திருத்தாயார் படுகிறபாடு என்தான்!

இன்று எனக்கு உதவாது அகன்ற –
பிள்ளை பெற்று வளர்க்கிறது ஆபத்துக்கு உதவுகைக்கு அன்றோ? தன்னைப் பிரிந்த இத் தன்மைக்கும்,
இந் நிலைக்கும் மேற்பட எனக்கு ஓர் ஆபத்து உண்டோ? இன்று எனக்கு உதவாது ஒழிவதே!
“இந்த நிலையை அடைந்த நான் இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த ஸ்ரீராமபிரானை இங்குக் காண்கிறேன் இல்லை;
இதைக் காட்டிலும் துக்கத்தைக் கொடுக்கக்கூடிய விஷயம் வேறு யாது?”
“அதோ நு கிம் துக்கதரம் ஸ: அஹம் இக்ஷ்வாகுநந்தனம் இமாம் அவஸ்தாம் ஆபந்ந.
நேஹ பஸ்யாமி ராகவம்”-என்பது,-ஸ்ரீராமா. அயோத். 59 : 26. இது, தசரதன் புலம்பல்.
என்றது, நான் நெடுங்காலம் கூடிவருந்தித் தம்மைப் பெற்றது, தம்மைப் பிரிந்து நான்
இந்த நிலையை அடைந்த இற்றைக்கு அன்றோ?
இன்று தம்மை நான் காணாது ஒழிவதே என்றான் அன்றோ என்றபடி.

எனக்கு உதவாது –
சக்கரவத்த்தியில் தனக்கு உன்டான வாசி : “நின்று தூங்குகின்றேன்”-நாய்ச்சியார் திரு. 9 : 9 என்னுமாறு
சக்கரவர்த்தியைக் காட்டிலும் இவளுக்கு வேறுபாடு, பிரிந்தவுடனே அவன் முடிந்தான்;
இவள் முடியவும் பெறாதே தரிக்கவும் பெறாதே இருத்தல்.
இதற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘நின்று தூங்குகின்றேன்’ என்று தொடங்கி. என்றது,
கொன்றைமாலை யாகையாலே அழகர்க்கும் ஆகாது;
அதுதான் திருமலையிலுள்ளதாகையாலே சைவரையும் பறிக்க ஒட்டார்கள்;
ஆக, இரண்டு இடத்துக்கும் ஆகாமல் நாலுமாறுபோலே, நானும்,
தம்முடைய சம்பந்தமே காரணமாகப் பந்துக்களும் ஆகாமல், தாமும் அங்கீகரிக்கப் பெறாமல்
நடுவே நின்று தடுமாறா நின்றேன் என்ற சூடிக்கொடுத்த சுடர்க்கொடியைப் போன்று,
இவளும் தன்னோடேகூட இருக்கவும் பெறாமல் முடியவும் பெறாமல் நோவு படுகிறேன் என்கிறாள்
என்றபடி. மேலே காட்டிய திருப்பாசுரம், நாய்ச்சியார் திரு. 9 : 9. போலே;
அல்லாத தாய்மாரைப் போலேயோ நான் தனக்கு இருப்பது?

தன் உகப்பே எனக்கு உகப்பாக இருக்குமவளன்றோ நான். இவளுடைய காதலனுக்குக் கடகையும் தானே அன்றோ.
“பிரான் இருந்தமை காட்டீனீர்” என்கிறபடியே
“அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள்” – பெரிய திருமொழி. 3. 7 : 7.—
பெயர் இட்டு -இரங்கி -பெருமாள் சக்கரவர்த்திக்கும் ஸ்ரீ கௌசல்யைக்கு இறங்கினால் போலே
பிள்ளைகாள்! பொகட நினைப்பார் பழி இட்டுப் போக வேணுமோ?
அடியாரை நியமிக்கிறவர்கள் என்ன வேணுமோ?
வழிக்குத் துணையாவாரை விலக்குகின்றவர்கள் என்று பொகடுவதே!

அகன்ற –
இப்படிக் கை கழியப் போவதே! ஒரு தேசத்தே நின்று தான் உதவாது ஒழியப் பெற்றேனோ?

இள மான் –
‘பொகட்டது தாயை அன்றோ’ என்று அறிந்து மீள மாட்டாத பருவம் கண்டீர்! இவளை நான் வெறுக்கிறது ஏன்?
பருவம் அதுவானால் செய்யலாவது உண்டோ?

இனிப் போய் –
உறவு முறையாரில் தாய்க்கு மேற்பட்டார் இலர் அன்றே!
இப்படித் தாயுங்கூடப் புறம்பாம்படி அவன் பக்கலிலே பிறந்த பாவ பந்தத்துக்கு மேலே
‘அவ் வருகே ஒன்று உண்டு’ என்னப் போனாளோ?
வந்தேறியைக் கை விட்டால் எப்பொழுதும் சித்தமாயிருப்பதற்குச் செய்ய வேண்டுவது ஒன்று உண்டோ?
ஸ்வதஸ் சித்தம் பகவத் கைங்கர்யம் -தேடித் போக வேண்டாம் என்றபடி –

தென் திசைத் திலதம அனைய திருக்கோளூர்க்கே –
‘தெற்குத் திக்கு’ என்று கொண்டு, ஆரியர்கள் இகழ்ந்த மிலேச்ச பூமி அன்றோ:
இங்ஙனே இருக்கச் செய்தே, ஓர் ஆபரணம் தானே எல்லா ஆபரணங்களுக்கும் நிறம் கொடுக்குமாறு போலே,
திருக்கோளூர் உண்டாகையாலே திக்கு முழுதும் சிலாக்கியமானபடி;
“புண்ணியமான சரித்திரங்களை யுடைய அகத்திய முனிவராலே தெற்குத் திசையானது அனைவருக்கும் புகலிடமாகச் செய்யப்பட்டது”
“தக்ஷிணா திக் க்ருதா யேந சரண்யா புண்ய கர்மணா தஸ்ய இதம் ஆஸ்ரம பதம் ப்ரபாவாத் அஸ்ய ராக்ஷஸை:
திக் இயம் தக்ஷிணா த்ராஸாத் த்ருஸ்யதே நோபபுஜ்யதே”–என்பது, ஸ்ரீராமா. ஆரண். 11 : 82. என்னுமாறு போலே.

திருக்கோளூர்க்கே சென்று –
திருத் தாயார்க்கு அரிதாய்த் தோற்றுகிறபடி.
அவளுக்கு வழிப் போக்கோடு, ஊரில் புகுதியோடு, அவன் தன்னைக் காணுமதனோடு,
அங்குப் புக்கால் எப்பொழுதும் தரிசனம் செய்யத் தக்கவனோடு வாசி அற எல்லாம் உத்தேசியமாய் இருக்குமன்றோ.
அர்ச்சிராதி கதியோடு, பரமபதத்தோடு, அங்குப் புக்கால் எப்பொழுதும் தரிசனம் செய்யத் தக்கவனோடு
வாசியற பேற்றிலே சேர்ந்தனவாகக் கடவன வன்றோ.
பிராப்ய புத்தியாக பார்த்தால் எதுவும் ஸ்ரமம் இல்லையே –
உபாய புத்தியாக பார்த்தால் சிறியதும் அரியதாய் இருக்குமே –

தன் திருமால் –
“உலகங்களில் இருக்கிற எல்லாப் பிராணிகளுக்கும் திருமாலானவர் தந்தையும் தாயுமாக இருக்கிறார்”
ஸர்வேஷாமேவ லோகநாம் பிதா மாதா ச மாதவ: கச்சத்வமேநம் ஸரணம் ஸரண்யம் புருஷர்ஷபா:–என்பது, பாரதம்.
என்கிறபடியே, இங்கு விட்ட உறவெல்லாம் அங்கே உண்டாயிருக்கிறபடி.-

தன் மால் என்னாமல் தன் திருமால் –
அவனுடைய பிராப்பிய வேஷந்தான் இலக்ஷ்மீபதியா யன்றோ இருப்பது. –
நீயும் திரு மாலால் கோட்பட்டாயே -வஞ்சிக்கும் பொழுதும் மிதுனமே –
விசிஷ்ட வேஷத்தில் அல்லது தன் எண்ணத்தைச் செலுத்த அறியாள்-

திருக் கண்ணும் செவ் வாயும் கண்டு –
‘இவள் முற்படும்படி நாம் பிற்பாடர் ஆவதே!’ என்று பொறை கொள்ளுகைக்குக் குளிர நோக்குகிற நோக்கும்,
சில சொல்லப் புக்குத் தடுமாறுகிற திருப் பவளமும் இருக்கிறபடி.
அவனுடைய கோவை வாய் துடிப்ப மழைக் கண்கள் இருக்கிறபடி.

நின்று நின்று நையும் –
நாட் செல்ல நாட் செல்ல இற்று இற்று விழும்.
கண்டால் முன்புத்தைப் பிரிவினை நினைக்க அறியாள் : எதிர்த் தலை படுகிறது கண்டு ஈடுபடுகிறபடி.
“காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால், காணேன் தவறல்லவை”-திருக்குறள் – என்றே அன்றோ இருப்பது.
கண்டால் தப்பைக் காண மாட்டாள் காணாத பொழுது தப்பைத் தவிர வேறே காணாள்

நெடும் கண்கள் பனி மல்கவே –
இக் கண்களில் பரப்பு அடங்கலும் பரப்பு மாறும்படி தண்ணீர் உண்டாவதே!

நின்று நின்று நையும் –
மாறாமல் உருக் குலையா நின்றாள். கிண்ணகத்தில் இளகின கரை போலே உடை குலைப் படுகிறபடி.

நெடும் கண்கள் பனி மல்கவே –
நெஞ்சுக்கு உருகுதல் போலே காணும் கண்களுக்குக் கண்ண நீர். –
நெஞ்சுக்கு சைதில்யம் போலே கண்ணுக்கு கண்ணநீர்
ஆனந்தக் கண்ணீரோடு சோகக் கண்ணீரோடு வாசி இல்லை அன்றோ.
விலக்குமவை எல்லாம் பாதகமாகக் கடவது;
த்ரஷ்டவ்ய -ஆஹ்லாத -கண்ணா நீர் மல்க -தேகம் பெற்ற பாக்யம்-
“காணத் தக்கவன்” என்னும் விஷயத்தை நான் அனுபவிக்கப் பெற்றிலேன்.

திவ்ய தேசம் கண்டாலே இப்படி நைந்து இருக்க-அவனை நேரில் கண்டால் என்ன ஆகுமோ என்கிறாள்-

——————————————————————————————

மல்கு நீர்க் கண்ணொடு மையலுற்ற மனத்தினளாய்
அல்லும் நன் பகலும் நெடுமால் என்றழைத் தினிப் போய்ச்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே?–6-7-7-

இவள் காண்கைக்கு உகக்கைகும் அடியான அதிசய வியாமோஹம்-
மல்குநீர்க் கண்ணொடு மையலுற்ற மனத்தினளாய்-விரஹத்தால் மிக்கு -கண்ண நீர் நெஞ்சில் காதல் –
வெளிக்கண் உள் கண் இரண்டும் இல்லாமல் -நிதானப் பாசுரம் -பிராவண்யா வாசன அதிசயம்
அல்லும்நன் பகலும் நெடுமால் என்றழைத் தினிப்போய்ச்-நல்ல பகலும் நல்ல இரவும் -அதிசய வியாமோஹம் -நெடு மால் என்றே அழைத்து
செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே-வளரும் ஐஸ்வர்யம்
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே-ஒடுங்கி தளர்ந்து அசைந்து நடந்து

என்னுடைய இளமான், பெருகுகின்ற தண்ணீரையுடைய கண்களோடு மயக்கம் பொருந்திய மனத்தினை யுடையவளாகி நல்ல இரவும் நல்ல பகலும்
நெடுமால் என்று அழைத்துக் கொண்டு, அதற்குமேல், செல்வம் மிகும்படி அவன் சயனித்திருக்கின்ற திருக்கோளூர் என்ற திவ்விய தேசத்திற்கு
வருந்தித் தளர்ந்து நடந்து சென்று எங்ஙனே புகுவாள் என்க.
அழைத்து, மனத்தினளாய்த் திருக்கோளூர்க்கு ஓல்கி ஒல்கி ஒசிந்து நடந்து போய் எங்ஙனே புகுங்கொல்? என்க,
செல்வம் மல்கிக் கிடந்த திருக்கோளூர் என்ற இடத்தில் “மல்கி” என்பது, செய என் எச்சத்திரிபு.

இவளுடைய உடலின் மிருதுத் தன்மையினையும்
பிரிவினால் வந்த மெலிவினையும் நினைத்து,
இவை எல்லாம் அவ்வளவும் செல்லப் போக வல்லள் ஆனால் அன்றோ என்கிறாள். என்றது,
நாம் இலை யகலப் படுகிறோ மத்தனை -எதிர்பார்ப்பு -ஒழிய,- இவள் போய் முடியப் புகா நின்றாளோ? என்றபடி.

மல்கு நீர்க் கண்ணொடு மையல் உற்ற மனத்தினளாய் –
“என்றேனும் கட்கண்ணாற் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும் உட் கண்ணேல் காணும்”பெரிய திருவந்தாதி -28-
என்னும் இரண்டும் ஒழிய,
இவள் எங்ஙனே போனபடி?
கண், மல்குநீர்க் கண்ணாயிற்று;
மனம், மையல் உற்ற மனமாயிற்று.
அகவாயும் இருண்டு, புறவாயும் இருண்டு இருக்க, இவள் எங்ஙனே போனபடி?
கண்ண நீராலே கண் தோற்றாது,
அன்பினாலே மூடப்பட்ட தாகையாலே நெஞ்சு இருண்டு தோற்றாது.
இரண்டற்கும் இரண்டும் நிரூபக மாயிருத்தலின் ‘மல்கு நீர்க் கண் மையல் உற்ற மனம்’ என்கிறாள்.
மையல் உற்ற மனத்தினளாய் நெடுமால் என்று அழைத்து–நெஞ்சு ஒழியவே தான் கூப்பிட்டது.

நல் அல்லும் நல் பகலும் –
பகவத் விஷயத்திலே மூழ்கிக் கூப்பிடுகிற கால மாகையாலே, ‘நல் அல்லும் நல் பகலும்’ என்கிறாள்.
நாட்டார் க்ஷுத்ர விஷயங்களை ஆசைப் பட்டுக் கூப்பிடா நிற்க, ‘எல்லாம் கண்ணன்’ என்று கூப்பிடுகிற நாள் அன்றோ.

நெடுமால் என்று அழைத்து –
அவன் தன் பக்கல் பிச்சு ஏறியிருக்கும் படியைச் சொல்லிக் கூப்பிட்டு,

இனிப் போய் –
அவன் தன் பக்கல் செய்யும் வியாமோகத்தைச் சொல்லிக் கூப்பிடும் இதற்கு மேலே
தன் வியாமோகம் காட்டப் போனாளே.
அன்றிக்கே,
கண்ணும் தோற்றாமல் நெஞ்சும் பறியுண்டிருக்கும் இதற்கு மேலே,
இனிப் போய், வேறே ஒன்று உண்டோ அநுபவிப்பது? என்னுதல்.

செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே –
எதிரே பாதி வழி வந்து முகத்திலே விழித்து உடம்பிலே அணைத்துக் கொண்டு போகாதே ஒழிந்தது
செல்வச் செருக்கே அன்றோ;
செல்வத்தால் வந்த செருக்கு அன்றாகில் இவ் வரவு அவன் அன்றோ வருவான்?
வழியே பிடித்து வாழ்ந்து கொண்டு போகலாயிருக்க, செருக்காலே இழந்தான் என்கிறாள். –
இவளை அணைப்பதை -இழந்தான் –
அன்றிக்கே,
“சுகமாகத் தூங்கின ஸ்ரீமானாகிய அந்தப் பெருமாள் என்னால் உணர்த்தப்பட்டார்”-அழகுச் செல்வம் மல்க கிடந்தான்
“ஸமயா போதித: ஸ்ரீமாந் ஸுக ஸுப்த: பரந்தப:”–என்பது, ஸ்ரீராமா. சுந்- திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.
என்கிறபடியே, அழகு மிக்குக் கிடந்த என்னுதல்.
“சுகமாகத் தூங்கினவன்” என்ற கிடை அழகு காணவாயிற்று இவள் ஆசைப்பட்டுப் போயிற்று;
“கிடந்ததோர் கிடக்கை” –திருமாலை–.23.-என்னக் கடவதன்றோ.

அவன் கிடந்த –
அவன் வரவு பார்த்து இவள் இருக்கை அன்றிக்கே, இவள் வரவு பார்த்து அவன் கிடக்கும்படி ஆவதே!

ஒல்கி ஒல்கி நடந்து –
ஓர் அடியிலே பத்து அடி இட வேண்டும் படியாயிருக்கை.
ஒசிந்து – துவண்டு.

ஒல்கி ஒல்கி நடந்து ஒசிந்து எங்ஙனே புகுங்கொல் –
ஒடுங்கி ஒடுங்கி நடந்து, அது பொறாமல் துவண்டு, எங்ஙனே புகக் கடவளோ?

நடந்து எங்ஙனே புகுங்கொல் –
நடந்திலளாகில் போய்ப் புகலாம் என்றிருக்கிறாள் காணும்.
அன்ன மென்னடைப் பூங்குழலி யாகையாலே–பெரிய திருமொழி -11-2-5-
இவ் வன்ன நடை கொண்டு புக மாட்டாள் என்றிருக்கிறாள்.

————————————————————————————

ஒசிந்த நுண்ணிடை மேல் கையை வைத்து நொந்து நொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ண நீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே.–6-7-8-

ஓரடி வைக்கும் இடத்தில் பலவடி வைக்கும் படி சென்று -நிரதிசய போக்ய பூதனான லஷ்மிக்கு நித்ய அபிமதன்
திவ்ய தேசத்தில் ஆசையால் -என்னை துரக்க- தத் சங்கமே தாரகமாக அங்கே சென்று புக வல்லளோ –
அதிக பக்தி சேர்த்தாலும் சேர்க்கும் -நடுவிலே தளர்ந்து நிற்கவும் வைக்குமே
ஒசிந்த நுண்ணிடை மேல் கையை வைத்து நொந்து நொந்து-பிரமரம் வண்டு -பங்கா வளி-புஷ்பா ஆவளி பூச்சரம்
தேனை விட்டுக் கொடுக்க புதுமை கழிந்து துவளும் –
இவளும் அனைத்தையும் அவன் இடம் கொடுத்து -தெய்வ வண்டு -பருக -இவளும் துவள –
வை லஷண்யம் உடைய மலராள்-பத்மாசினிக்கு கொழுநன் -போகம் கொடுத்து பிராட்டி துவண்டு –
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ண நீர் துளும்பச் செல்லுங்கொல்?-நெஞ்சு -ஆர்த்தர நனைந்த சித்தரே -அபி ரூபை என் பெண் பிள்ளை –
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே-கை தாங்க இடுப்பு வேண்டும் -இடுப்பு தானே சரீரம் தாங்க முடியாமல் -நொந்து நொந்து –
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே-நெஞ்சில் ஈரப்பாடே துணை -இதுவே அவளை சேர்க்குமோ அவன் இடம் –

இன்பத்தால் துவண்ட பெரிய பிராட்டியாருக்குக் கணவனாகிய எம்பெருமான் சயனித்திருக்கின்ற திருக்கோளூர் என்ற திவ்விய தேசத்திற்கு,
அன்பு நிறைந்த நெஞ்சினை யுடையவளாகி என்னை நீக்கிய என் பெண்ணானவள், தளர்ந்த நுண்ணிய இடையின் மேல் தன் கையை
வைத்துக் கொண்டு வருந்தி வருந்தி அன்பினால் நிறைந்த மனத்தினை யுடையவளாகிக் கண்களிலே நீர் அலையும்படி சென்று சேர வல்லளோ? என்க.
காரிகை கையை வைத்து நொந்து செல்லுங்கொல் என்க. காரிகை – பெண். எம்மை : தனித் தன்மைப் பன்மை.
செவிலி முதலியோரையும் உளப்படுத்துமிடத்து உளப்பாட்டுத் தன்மைப் பள்மையாம்.

திருக்கோளூரில் அன்பினாலே, என்னைப் பொகட்டுப் போன என் பெண் பிள்ளை,
அந்த அன்பே துணையாகப் போய்ப் புக வல்லளேயோ? என்கிறாள்.

ஒசிந்த நுண் இடை –
இவள் நடவாதே இருந்தாலும், நினைத்தால் வயிறு எரிய வேண்டும்படி காண் இடை இருப்பது!

நுண்ணிடை மேல் கையை வைத்து –
நடு ஒன்று இல்லை என்று அறிகின்றிலள். தன் கையை வைக்கவும் பொறாதே அன்றோ தன் இடை தான்;
“மின்னையும் வஞ்சியையும் வென்று இலங்கும் இடையாள்” – பெரிய திருமொழி, 3. 7 : 7.-என்று,
அவன் கூடப் போகச் செய்தேயும் அஞ்ச வேண்டும் படியான இடை அன்றோ.
ஒசிதல் – துவளுதல். நுண்ணியதாய் தேரிதான இடை.
பல சொல்லி என்? இடை ஒன்று இல்லை என்கை. அதாவது,
இற்றது முறிந்தது இப்போது, பின்னை’ என்று பயப்பட வேண்டும்படியாய் இருக்கை.

ஒசிந்த நுண் இடை மேல் கையை வைத்து –
இப்படி விழுக்காடு அறியாதார் உளரோ!
நாயகன் கை வைக்கப் பொறுக்குமத்தனை போக்கித் தன் கை வைக்கப் பொறுக்குமோ?
தொடுங்கால் ஒசியும் இடை அன்றோ –இது,திருவிருத்தம். பா. 37.– 2
அடியே பிடித்துக் கரோபத்ரவம் கனத்தே அன்றோ இருப்பது.–கர உபத்ரவம் -அடியே -பொய் நின்ற ஞானம் தொடங்கி-
அஷ்ட புஜ பெருமாள் ஓன்று பணித்தது உண்டு -நமஸ் சப்தம் ஆழ்ந்து அனுபவிக்க அவன் மேல் விழுந்து ரஷிப்பான்
கையுள் தன் முகம் வைக்கும் நையும் —
பர பிரயத்தனமும் கூடாது ஸுவ பிரயத்தனமும் கூடாது
‘கையை வைத்து’ என்கிறாள், மலையை வைத்து என்னுமாறு போலே.

நொந்து நொந்து –
கை வாங்க மாட்டாள்; நோவாதிருக்க மாட்டாள்;
சஹஜமான பகைவர்களோடே கூடி ஜீவித்துக் கிடக்கலாம்;
வந்தேறிகள் கீழே பிழைக்க ஒண்ணாதே அன்றோ.

நொந்து நொந்து –
மிகவும் நொந்து.
முதலிலே இல்லாமையிலே நிலையான இடையிலே தன பாரம் கொண்டு ஆற்ற ஒண்ணாதிருக்க,
வந்தேறியான கை கொண்டு பொறுக்க ஒண்ணுமோ?
பக்தி இயற்க்கை -சஹஜ சத்ரு -மார்பகம் -பக்தி தாங்க வேண்டும் -வைராக்கியம் இடை தாங்கித் தான் ஆக வேண்டும்
கைகள் வியாபாரம் தன் முயற்சி தாங்க வேண்டாமே

கசிந்த நெஞ்சினளாய் –
இடையினுடைய நொய்மை சொல்ல, நெஞ்சோ தான் சாலப் பருத்திருக்கிறது?
நெஞ்சில் ஈரம் இருக்கிறபடி.

கண்ண நீர் துளும்ப –
இது தனக்கும் ஊற்றே அன்றே அது.
செல்லும் கொல் –
இனி எப்படியும் மீளாளே அன்றோ. வழியில் மிறுக்குக்கள் கழித்துப் புகவல்லளோ?

ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே –
பிரிந்தார் துவட்சி சொல்லுகைக்குக் கலந்தாரோ தான் துவளாதே இருக்கிறார்?
வண்டாலே எடுக்கப்பட்ட சாரத்தையுடைய பூப் போலே காணும் நித்ய சம்ஸ்லேஷத்தாலே துவண்டிருக்கும்படி.
ஒண் மலராள் கொழுநன் உண்டு, அவளுடைய வல்லபன்; அவனுடைய திருக்கோளூர்க்கே.

கசிந்த நெஞ்சினளாய் –
அன்போடு கூடின மனத்தை யுடையளாய். பற்றுகைக்கு அவ்வூரே ஆக அமையும்,
விடுகைக்குத் தாயாக அமையும்.
ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே கசிந்த நெஞ்சினளாய் என்பதற்கு,
அவனுடைய காதல் குணத்திலே அகப்பட்டவள் இனி மீளப் புகுகிறாளோ? என்னுதல்.
ஒண் மலராள் கொழுநன் என்று அவனுக்கு ஏற்றம் இருக்கிறபடி என்னுதல்.
திருமகளார் தனிக் கேள்வன்-திருவாய். 1. 6 : 9.- என்னும் பெருமை யுடைய பிரானாரே அன்றோ.

எம்மை நீத்த எம் காரிகை –
அவளுக்கு இங்குள்ள எனது என்னும் செருக்குக் கழியக் கழிய,
அது தானே காரணமாகா நின்றது திருத் தாயார்க்குப் பற்றுகைக்கு.
பகவத் விஷயத்திலே இறங்கி மூழ்குதலும், வேறு பட்ட பொருள்களை விடுகைக்கு எல்லை இவ்வளவாகையும்,
இப்படி விட்டால் பின்பு அவர்கள் தாங்களே உத்தேஸ்யர் என்னும் இடமும் சொல்லுகிறது.
புறம்பே உள்ளவற்றை விடப் பண்ணுவித்துக் கொண்ட விஷயத்தில் ஞான லாபமே யன்றோ இவளுக்கு வேண்டுவது.
இவள் சம்பந்தமே அன்றோ திருத் தாயார்க்கு வேண்டுவது.
விடப் பட்டவர்களுக்கு விட்டவர்கள் உத்தேஸ்யர் –
பகவத் ஞான லாபம் வேண்டாவோ என்னில் -மகளுக்கு பகவத் ஞானம் உத்தேஸ்யம் -தாயாருக்கு மகள் உத்தேஸ்யம்
அடியார்கள் கைங்கர்யம் பண்ணி அபிமானத்தில் ஒதுங்கினால் தன்னடையே உஜ்ஜீவிக்க ஹேது வாகுமே –

கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகை திருக்கோளூர்க்கே கசிந்த நெஞ்சினளாய்க் கண்ண நீர் துளும்பச் செல்லும் கொல் –
இவள் என்னை விடும்படி செய்து கொண்ட விஷயத்தில் ஈடுபாடானது அவ்வூரில் புகுதலையும் செய்து கொடுக்க வற்றோ?
‘எம்மை நீத்த’ என்று நிச்சயித்தாள்; ‘செல்லும் கொல்’ என்று ஐயப்படா நின்றாள்; இதற்குக் காரணம் என்? என்னில்,
பிரேமம் இரண்டனையும் செய்து கொடுக்குமே அன்றோ.
பரவசப்படும் தன்மையை விளைத்து இடையிலே பொகடிலும் பொகடும்;
அன்றிக்கே, கொண்டு போய்ப் பொகடிலும் பொகடும் அன்றோ.

——————————————————————————————

காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப் போய்ச்
சேரி பல் பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–6-7-9-

ஸ்வ தந்த்ரன் நடை -வேற பரதந்த்ரன் நடை உத்தேச்யம் -பக்தி ஞானம் வைராக்கியம் -ஆபரணம் -பூண்டு நடக்க -இத்தையே சேவித்து
பின் போக வேண்டும் -நல்லது கண்டால் தனக்கு சுலபனான கிருஷ்ணனுக்கு என்றே இருப்பாள் -ஊரார் பழி மதியாமல் -எறு
காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று-நல்ல புஷ்பாதிகள் -காணில் -எனக்கு பவ்யனான கிருஷ்ணனுக்கு —
ஈரியாய்-வேம்–காற்றும் கழியும் கட்டி அழ கொண்ட பெரும் காதலுக்கு –பக்திமைக்கு வரம்பு இல்லை
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப் போய்ச்-ஆர்த்த ஸ்வ பாவை -மெல்லிய ஆபரணம் -இது -பாவை –உண்ணும் சோறு
கீழே சங்கல்பித்த விபூதி எல்லாம் இத்யாதி -உண்ணும் சோறு -பூவை -எல்லாம் ததர்த்தம் -அனைத்தையும் துரந்து
சேரி பல் பழி தூஉய் இரைப்பத் திருக் கோளூர்க்கே-சேரியில் உள்ளார் பழி தூற்ற -நடந்து நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.
நினைக்காமல் -ஊரார் வார்த்தை போலவும் நினைக்க வில்லை உடன் பாடர் என்றும் நினைக்க வில்லை

என் நேரிழை, சிறந்த பொருள்களைக் கண்டால் என் கண்ண பிரானுக்கு என்று சொல்லிக் கொண்டு அன்புள்ளவளாய் இருப்பாள்;
இவை எல்லாம் கிடக்க, சேரியிலுள்ளார் எல்லாரும் பலவகைப்பட்ட பழிகளைத் தூற்றி இரைக்கும்படியாக இனிச்சென்று
திருக்கோளூர்க்கே நடந்தாள்; என்னைச் சிறிதும் நினைத்தாள் இல்லை என்கிறாள்.
நல்லனகள் காரியமவை என மாற்றுக. நல்லனகள் என்பதில் ‘கள்’ அசைநிலை. காரியம் – பொருள்கள். ஈரியாய் – அன்புள்ளவளாய்.
இது எல்லாம்: ஒருமை பன்மை மயக்கம். சேரி – தெருவு. தூஉய் – தூவி; தூற்றி. நேரிழை – பெண்; நேரிழை – ஆபரணங்களை அணிந்தவள்.

அவன் பக்கலிலே மிக்க ஈடுபாடுடையவளா யிருக்கிற இவள், சேரியிலுள்ளார் சொல்லும் பழியே
தோட்கோப்பாகத் திருக்கோளூர்க்கே போயினாள் என்கிறாள்.

நல்லனகள் காரியம் அவை காணில் என் கண்ணனுக்கு என்று ஈரியாய் இருப்பாள் –
முதலிலே காண்பது இல்லை; பொருள்களில் நல்லது காணில், தன்னை எனக்காக ஓக்கி வைத்த கிருஷ்ணனுக்கு
என்னப் புக்கு அந்த நிலையிலே நெஞ்சம் நெகிழ்ந்து, -ஈரியாய்-
பின்பு அது தானும் மாட்டாதே இருக்கும்.
“பழத்தையாவது மலரையாவது மிகுதியாக மனத்தினைக் கவரக் கூடியதான வேறு பொருள்களையாவது பார்த்துப்
பல தடவை ஓ பிரியையான சீதையே! என்று இவ்விதமாகப் பெரு மூச்சு விட்டுக்கொண்டு உம்மைப் பற்றியே பேசுகிறார்”
“த்ருஷ்ட்வா பலம் வா புஷ்பம் வா யத்வா அந்யத் ஸுமனோஹரம் பஹு ஸ: ஹாப்ரியேதி
ஏவம் ஸ்வஸந் த்வாம் அபீபாஷதே”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 45.
இது, பிராட்டியைப் பார்த்துத் திருவடி கூறியது. ‘என்கிறபடியே,
அவன் சொல்லுமவை யெல்லாம் இவள் சொல்லுகிறபடி.
நல்லது கண்டால், அவனுக்கு என்று இருக்குமதற்கு மேலே அவ்வருகே ஒன்று தேடிப் போனாளோ!
இவளுக்காகத் திருக்கோளூரிலே வந்து, தன்னை இவளுக்கு ஓக்கி வைத்தபடி.

இது எல்லாம் கிடக்க –
“எல்லாப் போகங்களையும் விட்டு” என்னுமாறு போலே.
அன்றிக்கே, உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் என்றலும்,
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போல் அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றக் கற்புவான் இடறுதலும்,
பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள் யாவையும் திருமால் திருநாமங்களே கூவி எழுதலும்,
காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று ஈரியாயிருத்தலும் இவை எல்லாம் கிடக்க என்னுதல்.

இது எல்லாம் கிடக்க –
இந்த எல்லை இல்லாத செல்வங்கள் கிடக்க.-லீலா உபகரணங்கள் போக உபகரணங்கள் துரந்து –
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாகக் கொள்ளோமே-

இனி மேல் –
‘தனக்கு’ என்கிற எண்ணத்தின் அளவிலே உண்டறுக்க மாட்டாதவனுக்கு –திருப்தி படுத்தல் –
ஒன்று கொடுத்துக் குறை தீரப் போனாளே.
“தே பூயிஷ்டாம்-உனக்கு அதிகமான ‘நம’ என்ற சொல்லைச் சொல்லுகிறோம்” என்றே அன்றோ அவன் இருப்பது.
அவன் படியை நினைத்தால் இவளுக்கு இங்கே இருக்க அமையாதோ?

சேரி பல் பழி தூஉய் இரைப்ப –
பொகடும் வழித் துணை பெற்றவாறே போனாளத்தனை.
ஒருவர் இருவர் அன்றே! இனி ஓருவர் சொல்லிற்று ஒருவர் சொல்லார்கள் அன்றோ.

பல் பழி தூஉய் இரைப்ப –
தன்னை அவனுக்கு ஆக்கி வைத்தாள்: பின்னை அது தானும் மாட்டிற்றிலள்;
புறப்பட்டுப் போனாள்; தாயைப் பார்த்திலள்; ஊரார் பழி பார்த்திலள்;
இத்தனையும் செய்தால் அவன் தான் எதிரே வரப் பெற்றது இல்லை என்று இப் புடைகளிலே
ஒரு கோடி யன்றோ சொல்லுவன.
“அலர் எழில் ஆருயிர் நிற்கும்” -திருக் குறள் -என்கிற படியே வழிக்குத் தாரகமாமன்றோ.

நேர் இழை நடந்தாள் –
கடைப் பணிக் கூட்டம் கண்டு கொண்டு பின்னே போக வன்றோ இவள் ஆசைப் படுகிறது.
(ஆபரணங்களின் கொக்கி பிடரியில் பட்டு இருக்கும் அழகைப் பார்த்துக் கொண்டே என்றபடி )

நடந்தாள் –
தன் பெண் பிள்ளையே யாகிலும், ‘திருக்கோளூரிலே போக’ என்று நாலடி புறப்பட்ட இவளை
இங்ஙனல்லது சொல்ல ஒண்ணாதே அன்றோ.
தன் மகளை எங்ஙனே கனக்க நினைத்திருக்கிறாள் தான்!
வயிற்றிற் பிறக்கவுமாம், சிஷ்யர்களாகவுமாம்: பகவத் விஷயத்தில் தொடர்புடையவர்கள் உத்தேஸ்யராமித்தனை.

ஒரு நாள் நம் பிள்ளையை, சீயர், கோஷ்டியிலே வைத்துப் போரக் கொண்டாடி யருளி,
‘தன் சிஷ்யனைத் தான் கொண்டாட நின்றான்’ என்றிராதே கொண்மின்!
“கண புரம் கை தொழும் பிள்ளையைப் பிள்ளை என்று எண்ணப் பெறுவரே” –பெரிய திருமொழி, 8. 2 : 9.-என்று
பண்டு சொன்னாரும் உளர் காணுங்கோள் என்று அருளிச் செய்தார்.

அம்முணி ஆழ்வான், தன் சிஷ்யனைத் தான் தண்டன் இடா நிற்குமாம்; ‘இது என்?’ என்று கேட்க,
‘அல்லாத வைஷ்ணவர்களை ஒழுக்கத்தாலே அறிய வேணும்;
இவர் நான் அறிய வைஷ்ணவர் என்று ஆதரிப்பன்’ என்றான்.

எம்மை ஒன்றும் நினைத்திலளே –
வழிக்குத் துணையாகத் தான் கொடு போகா விட்டால், நினைக்கத் தான் ஆகாதோ?
எதிர் கொள்வாரிலே சிலராகவாதல், வழித் துணையாவாரிலே சிலராக வாதல்,
ஏதேனும் ஓர் ஆகாரத்தாலே தான் நினைக்கலாகாதோ?என்பாள் ‘ஒன்றும் நினைத்திலன்’ என்கிறாள்.
‘அத் தலையில் நினைவே காரிய கரமாவது’ என்றிருக்கிறாள்.
பகவானிடத்தில் சம்பந்த முடையாருடைய அபிமானமே உத்தேஸ்யம்-
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் திருவிட வெந்தை பிரானே –
ரசவாதி கையில் ரச குளிகை போலே -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் –

———————————————————————————————–

நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங் கண் இள மான் இனிப் போய்
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை
தினைத் தனையும் விடாள் அவன் சேர் திருக் கோளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.-6-7-10-

நிதானமான பாசுரம் -அகில சுவாமி -ஏக தேசமும் விடாமல் குடி பழிக்கு அஞ்சாமல் புகுந்தாள்-நறையூரும் பாடுவாள்
நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங்கண் இளமான் -இவளுடைய அதி ப்ரவ்ருத்தி
இனிப் போய்-இவள் நெடும் கண் இள மான் -கரும் தடம் கண்ணி -ஏக தேசத்தில்
கரிய –நீண்ட அப் பெரிய வாகிப் புடை பெயர்ந்த -பெருமை எல்லாம் அகவாயில் அடக்கி
பருவம் முக்தம் -மான் போலே -இவர் கண் அழகு ஞானம் -இருப்பதால் -தேடித் போக வைக்குமே -ஞானம் வந்ததே போக வேண்டாமே
தாயார் வார்த்தை -அரவிந்த லோசனன் இடம் சேராமல் நீட்சி போகுமே
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை-புண்டரீகாஷத்வம் –
தினைத் தனையும் விடாள் அவன் சேர் திருக் கோளூர்க்கே-அவன் வர்த்திக்கும் திவ்ய தேசத்துக்கு
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.-லோக உக்தியால் கடுக-தூற்ற தூற்ற
வேகம் அதிகம் -மாடு துரத்த ஓடுவது போலே பழி யாலே வேகம் –

தெய்வங்களே! என் மகளுடைய தன்மைகளை என்னால் நினைக்க முடியவில்லை; நீண்ட கண்களையுடைய இளமை பொருந்திய மான் போன்றவளான
என் மகள் இப்பொழுது சென்று, எல்லா உலகங்களையுமுடைய தாமரைக்கண்ணனாகிய எம்பெருமானைத் தினையளவு சிறிய பொழுதும் விடாதவளாகி,
அவன் சேர்ந்திருக்கின்ற திருக்கோளூர் என்ற திவ்விய தேசத்திற்கே, குடிக்கு உண்டாகும் பெரிய பழியையும் நினையாதவளாகிச் சொன்றாள் என்க.
தெய்வங்காள்! நினைக்கிலேன்; இளமான் அரவிந்தலோசனனைத் தினைத்தனையும் விடாள்; மனைக்கு வான்பழியும் நினையாள்; திருக்கோளூர்க்கே இனிப்போய்ச் செல்லவைத்தனள் என்க. விடாள், நினையாள் என்பன : முற்று எச்சங்கள். தினை, பனை என்பனவற்றைச் சிறுமை பெருமைகட்கு எடுத்துக் கூறுதல் மரபு.
“தினைத்துணை நன்றிசெயினும் பனைத்துணையாக், கொள்வர் பயன் தெரி வார்” என்பது திருக்குறள்.

இந்தக் குடிக்கு வரும் பெரும் பழியை நினையாதே, திருக் கோளூரிலே புக்கு
அவனை ஒரு காலமும் விடுகின்றிலள் என்கிறாள்.

நினைக்கிலேன் –
கடலைக் கரை காண ஒண்ணாதே அன்றோ.
தன்னைப் பொகட்டுப் போன படி, வழியில் மிறுக்குகள், அங்குப் புக்கால் இவள் படும் பாடுகள்
எனப் பலவே யாமன்றோ

தெய்வங்காள் –
இதனை, ‘கொல்லை’ என்பார் முகம் பார்த்துச் சொல்ல ஒண்ணாதே;
பழி சொல்லாமையையும், சிறை உறவு போலே தன்னோடு ஒக்க உறங்காமையையும் பார்த்துச் சொல்லுகிறாள்.

தெய்வங்காள் நினைக்கிலேன் –
செயல் அற்றுக் கை வாங்கிச் சொல்லுகிற வார்த்தை அன்றோ.

நெடும் கண் இள மான் இனிப் போய் –
விழுக்காடு அறியாமையாலே புறப்பட்டுப் போனாளத்தனை கண்டீர்!
இந்தக் கண்ணுக்கு இலக்கானவர்கள் சர்ப்ப யாகத்தில் சர்ப்பங்கள் சுருண்டு வந்து விழுமாறு போலே,
தந்தாம் முதன்மையோடே வந்து விழவேணும் கண்டீர்!

இனிப் போய் –
யார் செய்யக் கூடியதை யார் தான் செய்கிறார்?
ஸ்வரூப ஞானம் உடைய -கண் படைப்பாளும் தானாய்ப் -புறப்பட்டுப் போவாளும் தானாவதே!
இத்தலை செல்லாதிருத்தற்குச் ஸ்வரூப ஞானமே அமையுமே யன்றோ.-ததேக உபாயத்வம் –
பாரதந்த்ர்ய ஞானம் கண் உடையவள்-போகலாமோ -தாய் –
நெடும் கண் -ஸ்வ யத்ன நிவர்த்தகம் அத்யந்த பாரதந்த்ர்ய ஞானம் -இவள் கண் அழகில் அன்றோ அவன் ஈடுபடுவது

அனைத்து உலகுமுடைய அரவிந்த லோசனனை –
இவ்வளவே காண் அவன் கண்ணுக்குத் தோற்றிருப்பது.
ஓர் உபய விபூதி மாத்திரம் கண்டீர் அவன் கண்ணுக்கு ஈடுபட்டிருப்பது ;
அவன் தன்னையும் தோற்பிக்கும் கண் அன்றோ இவளது. -அனைத்து லோகம் தானே -ஒரு உபய விபூதி தானே
அவனையும் சேர்த்து அன்றோ இவளது –அவன் அனைத்து உலகுமுடைய அரவிந்த லோசனன்;

இவள் நெடுங்கண் இள மான்.
அவன், தானும் தன் விபூதியும் இவள் கண்ணிலே ஒரு மூலையிலே அடங்கும்படி யாயிருக்கை.
கண்ணில் அல்லாத பரப்பும் இவள் பருவமும் குமர் கிடந்து போமத்தனை.-
காலியாக உள்ள கண் இடம் அனுபவிக்க ஆள் இல்லை -நெடும் கண் –

தினைத்தனையும் விடாள் –
நெகிழ்ந்து அணைக்கவும் பொறாள்.
இங்கு இருந்து பட்ட கிலேசத்தாலே ‘நின்னைப் பிரியேன்’ என்று சொல்லவும் நெஞ்சு கொடாள்.
காரியப் பாட்டாலே பிரியிலும் நெஞ்சு ஒழிந்து கேட்க வேணுமே. மனைக்கு வான் பழியும் நினையாள் –

மனைக்கு வலிய பழியும் நினைக்கின்றிலள்.
விருப்பத்தைப் பெறுதற்குச் சாதனம் அல்லாத அளவே அன்று,
விரோதி என்றிருக்கிறாள்.
‘இத் தலையாலே செல்லுமது பழி’ என்றே இருந்தபடி பாரீர்.
அத பாதக பீதஸ்த்வம் ஸர்வ பாவேந பாரத “அதபாதக பீத: த்வம் ஸர்வ பாவேந பாரத
விமுக்தாந்ய ஸமாரம்ப: நாராயண பரோ பவ”–என்பது, பாரதம். இது,
தரும புத்திரனைப் பார்த்துத் தர்ம தேவதை கூறியது.
அடுத்து அடுத்து இராஜ சூயமே செய்து போந்தவனுக்கு ஒரு தடவற் பொய்க்காக நரக தரிசனம்
பண்ணுமளவாய் நின்றவனை யன்றோ இப்படி உபதேசிக்கிறது.
நல்வினைகளோடு தீவினைகளோடு வாசி அற விரோதியாய், இருள் சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு.–என்றார் தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்.

கிருஷ்ணனே பற்றுக் கோடு என்னுமிடத்தைத் தோற்றுவிக்கிறது.
விமுக்தாந்யஸமாரம்ப: – அசேதனமான கர்மங்களைப் பற்றிக்கொண்டு நாலாதே கொள்.
நாராயண பரோ பவ – உனக்கு வகுத்தவன் தன்னையே பற்றப்பார்.

செல்ல வைத்தனள் –
போதலில் நெஞ்சினை வைத்தாள் என்னுதல்;
நாம் எல்லாம் காண அங்கே ஆனாள் என்னுதல்.
அதாவது,
தான் அங்கே செல்ல ஒருப்பட்டாள் என்னுதல்;
தான் மீளாதபடி புகுகையாலே நாம் அங்கே செல்லும்படி வைத்தாள் என்னுதல்.

————————————————————————————————–

வைத்த மா நிதியாம் மது சூதனையே அலற்றிக்
கொத்தலர் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக் கோளூர்க்கே
சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுல காள்வாரே.–6-7-11-

சஹ்ருதயமாக சொல்ல வல்லவர்களுக்கு பலன் பரம பதம்
வைத்தமா நிதியாம் மது சூதனையே அலற்றிக்-நிரதிசய பிராப்தம் -போக பிரதிபந்த விரோதிகளை நிரசித்து –
நிதி -ரஷகத்வம் -போக்யத்வம் -அலாப நிபந்தனமான ஆர்த்தியாலே அலற்றி
கொத்தலர் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன-சோலைகள் வாய்ப்பு
பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக் கோளூர்க்கே-ஓர் அர்த்த விசேஷங்களுக்கு வாசகம் -பிராப்ய த்வரை பிரகாசம் இப்பத்து
சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுல காள்வாரே.-வைகுந்தம் இவர்கள் இட்ட வழக்கு ஆகும் -பகவத் அனுபவ ஔஜ்வல்யம்
குறையாமல் ஸ்லாக்கியமான பரமபதம் தாங்கள் நினைத்த படி ஆள்வார்

சேமித்து வைத்த சேமநிதி போன்ற மதுசூதனையே பற்றி பூங்கொத்துக்கள் மலர்கின்ற சோலைகள் சூழ்ந்த திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபராலே
அலற்றி அருளிச் செய்யப்பட்ட பத்து நூற்றுள் இந்தப் பத்துப் பாசுரங்களையும் அவன் சேர்ந்திருக்கின்ற திருக்கோளூரிலேயே சித்தத்தை வைத்து
உரைப்பவர்கள் விளங்குகின்ற பரமபதத்தை ஆள்வார்கள் என்றபடி.
அலற்றிச் சொன்ன பத்து என்க. இப் பத்தை உரைப்பார் ஆள்வார் என்க.

இப் பத்தும் கற்றார் இட்ட வழக்கு திருநாடு என்கிறார்.

வைத்த மா நிதியாம் –
இவள் தனி வழி போகைக்கும்,
தாயாரை விடுகைக்கும் காரணம் இருக்கிறபடி.
செல்வம் சேர்த்து வைத்ததாக இருக்க, எடுத்து அழித்துக் கெடுத்து ஜீவியாமல் ஆறி இருப்பார் இலரே.

வைத்த மா நிதி –
எய்ப்பினில் வைப்பினைக் காசினை மணியை”-பெரிய திருமொழி. 7. 10 : 4.- என்கிறபடியே,
தளர்ந்தார் தாவளமாய், (ஆபத்துக்கு ரக்ஷணமாய் )
எய்ப்பினில் வைப்பாய்,
‘உண்டு’ என்ன, உயிர் நிற்கும் படியாய்,
உடையவன் காலிலே எல்லாரும் விழும்படியாய்,
உடையவனுக்கு அறவிட்டு ஜீவிக்கலாய்,
‘அற விட்டு ஜீவித்தான்’ என்று ஏசாதபடியாய்,
அவன் தனக்கு பெரு மதிப்பைக் கொடுப்பதுமாய்,
உடையவனுக்கு ஒன்றுக்கும் கரைய வேண்டாதபடியாய்,
எல்லாம் தன்னைக் கொண்டே கொள்ளலாய்,
எல்லா ரசங்களும் போகங்களும் தன்னைக் கொண்டே கொள்ளலாய்,
இந்த விதமான குணங்களை யுடைத்தாயிருக்கையைப் பற்ற ‘நிதி’ என்கிறது.

மாநிதி என்றது,
அழியாத நிதி என்றபடியாய், அத்தால், தன்னைக் கொண்டே எல்லாம் கொள்ளா நின்றால்
தனக்கு ஒரு குறை அற்று இருக்கை. அல்லாத நிதி மாண்டு நிற்குமே.

ஆபன்னர்க்கு ரஷணம்-
அஸ்தி ப்ரஹ்ம சேத் -ப்ரஹ்மம் உண்டு என்றதும் – நஷ்ட பிராணன் ஆன ஆத்ம சத்தை லாபம் பெறுமே-
உடையவன் -காலில் -தெய்வங்கள் -பீஷாத் இத்யாதி –
ப்ரஹ்மம் காலில் – -ப்ரஹ்ம ஞானம் உபதேசித்து -சிஷ்யன் உபகரித்து -அறவிற்று ஜீவிக்கை-
ஸாத்விக தானம் இது என்பதுக்கு பிரமாணங்கள் உண்டே –
ப்ரஹ்ம ஞானம் உண்டானால் க்ருதக்ருத்யன் ஆவான்

மதுசூதனையே அவற்றி –
இந்த நிதியைக் காத்து ஊட்டுவதும் தானே என்கிறது.
உத்தேஸ்யமானது தானே விரோதியையும் போக்கி அநுபவிப்பிக்க வற்றாயிருக்கை.

கொத்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன –
“வீட்டில் எல்லாரும் சௌக்கியமாக இருக்கிறார்கள்”
“பங்கதித்த: உ ஜடில: பரத: த்வாம் ப்ரதீக்ஷதே பாதுகே தே புரஸ்க்ருத்ய ஸர்வஞ்ச
குஸலம் க்ருஹே” என்பது, ஸ்ரீராமா. யுத். 127 : 5.என்னுமாறு போலே,
ஸ்ரீபரதாழ்வன் பெருமாள் பக்கலிலே நெஞ்சினை வைக்க வைக்க,
அதனைக் கண்டு, ‘அவர் வரவு அணித்து’ என்று
திருவயோத்தியை தளிரும் முறியுமானாற்போலே,

விரஹத்தை நினைக்க ஆற்றலில்லாதபடி அவன் பக்கலிலே
ஏகாக்ர சித்தராகையாலே பிறந்த தோற்றத்தாலே, திருநகரியும் தளிரும் முறிவுமானபடி.
இத் தலையிலே இத்தனை விரைவு உண்டானால் அத் தலையால் வருகிற பலத்துக்குக் கண்ணழிவு உண்டோ?

“மரங்களும் உலர்ந்தன” என்கை தவிர்ந்து
“காலமல்லாத காலத்தும் மரங்கள் பலத்தைக் கொடுத்தன” என்னும்படியாயிற்று.
“அபிவ்ருக்ஷா:” என்பது, ஸ்ரீராமா. அயோத். 59 : 5.
“அகால பலிநோ வ்ருக்ஷா:” என்பது, ஸ்ரீராமா. யுத். 127, 19.

பத்து நூற்றுள் இப் பத்து –
கடலில் அமுதம் போலே, ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப் பத்து.
அவன் சேர் திருக் கோளூர்க்கே சித்தம் வைத்து –
அவன் பொருந்தி வாழ்கின்ற திருக்கோளூர்க்கே நெஞ்சை வைத்து.

உரைப்பார் –
சொல்லுவார்.

திகழ் பொன்னுலகு ஆள்வாரே –
ஒருத்தி கூப்பிட, ஒருத்தி தனியே போகை அன்றிக்கே,
நித்தியாநுபவம் பண்ணலாம் நிலத்திலே புகப் பெறுவர்.
தனி வழி போகாதே, அர்ச்சிராதி கணம் சேவிக்க, விலக்ஷணமான தேசத்தே போய்ப் புகப் பெறுவர்

———————————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

கிருஷ்னேன தாரயித் போஷக போக்ய யோகி
ப்ராப்தவ் அது த்வரித்த் தீ அகிலான் விகாய ஸ்யாத்
அலப்த பல பார்ஸ்வத் ஸ்திதி இத் அவதீயகமன
முனி அபூத் அதி சப்தமம் சக

கிருஷ்னேன தாரயித் போஷக போக்ய யோகி ப்ராப்தவ் -தசையை அடைந்தார்
அது த்வரித்த் தீ -துடிப்பான புத்தியால்
அகிலான் விகாய -அனைவரையும் விட்டு
ஸ்யாத் அலப்த பல-சேரும் கொலோ -கிட்டுவாளோ இல்லையோ
இத் அவதீய கமன பார்ஸ்வத் ஸ்திதி -பக்கத்தில் உள்ள தாய் சங்கை –

———————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

பாரம்யாத் பவ்ய பாவாத் ஸ்ரக் அபி ஹிதி முகத்
ஸ்ரீ சதைஸ்வர்ய பூம்னா ஸ்நேஹித்வாத்
ஆபி ரூப்யாத் ஆஸ்ரித பர வசதா சர்வ லோகேசதா
த்ருத்யா தேகே ஆதி ஹேதும் வேதான் ஆகஸ்ய பாஷௌ

1-பாரம்யாத் பவ்ய பாவாத் —-உண்ணுஞ் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்றென்றே–உயர்ந்த -அடங்கிய -கண்ணன் எம்பெருமான் -பரத்வமும் ஸுவ்லப்யமும்-

2-ஸ்ரக் அபி ஹிதி முகத்–பேரும் தார்களுமே பிதற்ற–

3–4-5-6–ஸ்ரீ சதைஸ்வர்ய பூம்னா –3/4/5/ 6–அர்த்தம் யூகித்து -ஸங்க்ரஹமாக –
பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள் யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் –என்றும் –
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே–என்றும்
இனித் தன் திருமால் திருக் கோளூரில் பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு-என்றும்
தன் திருமால் திருக் கண்ணும் செவ் வாயும் கண்டு–என்றும் —
ஸ்ரீ யபதி -யானபடியால் -செல்வம் நீர் நிலைகள் –நித்ய வசந்தம் -தடா –தத் சம்ஸ்லேஷத்தால்
புதுக்கணித்த திவ்ய அவயவ சோபைகள்-இப்படி நாலையும் சேர்த்து

7-ஸ்நேஹித்வாத்–அல்லும் நன் பகலும் நெடுமால் என்றழைத் தினிப் போய்-

8-ஆபி ரூப்யாத் –ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே கசிந்த நெஞ்சினளாய்

9—ஆஸ்ரித பர வசதா –என் கண்ணனுக்கு என்று ஈரியா யிருப்பாள்–

10-சர்வ லோகேசதா –அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை—புண்டரீகாஷன் ஆதி சப்தத்தால் –

த்ருத்யா தேகே ஆதி ஹேதும் வேதான் ஆகஸ்ய பாஷௌ-
ஆஸ்ரிதற்கு -விஸ்லேஷத்தில் -அபவாத பீதி இல்லாமல் தைர்யம் அருளுகிறான் –
கவலைப்படாமல் நடக்கப் பண்ணி அருளினான்

கை முதல் இழந்தார்க்கு-உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூர் திருக் கோளூரில் பிரஸித்தம் -நாயனார்
சங்கு -பிராப்ய பிராபக ஆபாசம் -இழந்தது சங்கே -சாதனங்கள் இல்லை
இப்படிப் பட்டவர்களுக்குத் தான் தன்னை ஆபத் சகன் என்று காட்டுவார் -சர்வ தர்மான் பரித்யஜ்ய
உண்ணும் சோறு -இழந்ததுக்கு பதில் இவையே தாரக போஷக போக்யங்கள் –

—————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 57-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில் ஸ்ரீ திருக் கோளூர் ஏறப் போனபடியை அருளிச் செய்ததை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
திருத் தாயார் –
மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு -என்று தொடங்கி
பொற்பமை நீண் முடி பூம் தண் துழாயற்கு -என்று
ஆபாத மௌலி பர்யந்த பர்யவசிதங்களானவன் திரு நாமங்களைச் சொல்லிக் கூப்பிட்டு-
பரவசையாய்க் கிடந்து உறங்க

ம்ருத சஞ்ஜீவிநீ யான திருநாமத்தைக் கேட்டு பெண் பிள்ளை யுணர்ந்து எழுந்திருந்து
அவன் இருக்கிற ஸ்ரீ திருக் கோளூர் ஏறப் போக

அநந்தரம்
திருத் தாயார் உணர்ந்து பெண் பிள்ளையைப் படுக்கையிலே காணப் பெறாமையாலே
தன் வயிற்றில் பிறப்பாலும்-இவள் தன் ஸ்வபாவத்தாலும்-ஸ்ரீ திருக் கோளூர் ஏறப் போனாள்-என்று
சோகிக்கிற அந்த திருத் தாயார் பாசுரத்தாலே ஸ்வ தசையை அருளிச் செய்கிற
உண்ணும் சோற்றில் அர்த்தத்தை
உண்ணும் சோறாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை —

————————————————————

உண்ணும் சோறாதி யொரு மூன்றும் எம்பெருமான்
கண்ணன் என்றே நீர் மல்கிக் கண்ணினைகள் -மண்ணுலகில்
மன்னு திருக் கோளூரில் மாயன் பால் போம் மாறன்
பொன்னடியே நந்தமக்குப் பொன்–57-

————————————————————–

வியாக்யானம்–

உண்ணும் சோறு-பருகும் நீர்-தின்னும் வெற்றிலை-எல்லாம் கண்ணன்-என்கிற
முதல் பாட்டு பிரதானமாய்
அத்தைப் பின் சென்று அருளிச் செய்தபடி –

உண்ணும் சோறாதி யொரு மூன்றும் –
அன்னாதியான தாரகாதி த்ரயமும்

ஒரு மூன்றும் –
அத்விதீயமாய் இருக்கிற மூன்றும் –

எம்பெருமான் கண்ணன் என்றே –
எனக்கு ஸ்வாமியான ஸ்ரீ கிருஷ்ணன் என்றே அனுசந்தித்து –

நீர் மல்கிக் கண்ணினைகள் —
பாவனா பிரகர்ஷத்தாலே கண் இணைகள் நீராலே நிறைந்து ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணை
ஸ்ரீ கிருஷ்ண அனுபவத்தாலே இறே சமிப்பது –

மண்ணுலகில் மன்னு திருக் கோளூரில் மாயன் பால் போம் மாறன் –
இவ் விபூதியிலே ஸ்ரீ திருக் கோளூரிலே நித்ய வாசம் பண்ணுகிற சௌந்தர்ய சீலாதிகளால்
ஆச்சர்ய பூதனான-வைத்த மா நிதி பால் போம் ஸ்ரீ ஆழ்வார் –
இறந்தால் தங்குமூர் விண்ணூர் ஆகையாலே விசேஷிக்க வேண்டா
நாட்டார் பொருந்தி இருக்குமூர் இவருக்கு நெருப்பாய் இருக்கையாலே
மண்ணினுள் புகுமூர் திருக் கோளூர் -என்று இறே விசேஷிக்க வேண்டுவது –
சர்வான் போகான் பரித்யஜ்ய -இத்யாதிவத்
தான் உகந்த ஊர் இறே இவருக்கு மண்ணினுள் புகுமூர்
ஸ்ரீ திருக் கோளூரில் பூவியல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டால் இறே-இவர் ஆவி உள் குளிருவது –
பாலை கடந்த பொன்னே –கண்ணன் வெக்காவுது –எப்பாலைக்கும் சேமத்ததே -திரு விருத்தம்
–என்னக் கடவது இறே

மன்னு திருக் கோளுரிலே மாயன் பால் போகையாவது –
1-ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே-அவனுடைய பேரும் தார்களுமே பிதற்ற போரும் கொல் -என்றும்
2-திருமால் திரு நாமங்களே கூவி எழும் என் பாவை போய் -என்றும்
3-செல்வம் மல்கி அவன் கிடந்த திருக் கோளூர்க்கே மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினாள் -என்றும்
4-ஆவியுள் குளிர எங்கனே உகக்கும் கொல் -என்றும்
5-தென் திசை திலதம் அனையத் திருக் கோளூர்க்கே சென்று -என்றும்
6-செல்வம் மல்கி அவன் கிடந்த திருக் கோளூர்க்கே ஒல்கி ஒல்கி நடந்து -என்றும்
7-கசிந்த நெஞ்சினளாய் கண்ணநீர் துளும்பச் செல்லும் கொல் -என்றும்
8-என் கண்ணனுக்கு என்றே யீரியாய் இருப்பாள் இதுஎல்லாம் கிடக்க இனிப் போய் -என்றும்
9-திருக் கோளூர்க்கே நேரிழை நடந்தாள் -என்றும்
10-மனைக்கு வான் பழியும் நினையாதே செல்ல வைத்தபடி இது வாயிற்று

இத்தால்
வழியில் உள்ளவர்களையும் வாழ்வித்து-
அவனையும் வாழ்வித்து-
தானும் வாழும்படி போனாள்
என்றது ஆயிற்று –

இப்படி எல்லாரையும் வாழ்வித்து ஸ்ரீ வைத்த மா நிதியை நாடி நடந்து போம்
ஸ்ரீ மாறன் பொன்னடியே நந்தமக்குப் பொன்
அவருக்கு ஸ்ரீ வைத்த மா நிதி அடியாய் இருக்கும்–
நமக்கு வைத்த மா நிதி ஸ்ரீ ஆழ்வார் அடியாய் இருக்கும் –

கைம்முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரிலே சம்ருத்தம் —என்று இறே
ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்திலே ஸ்ரீ நாயானார் அருளிச் செய்தது –

—————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -135- திருவாய்மொழி – -6-6–1….6-6–11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்

June 18, 2016

மேல் திருவாய்மொழியிலே இவளுக்குப் பிறந்த தசை முற்றி வியசனம் அதிகரிக்கையாலே மயங்கினவளாய்க் கிடக்க,
அது கண்டு ஆற்றாளாய் இவளுடைய தோழியும் மயங்க,
இந்த நிலையிலும் இவளைப் பிழைப்பதற்குரிய விரகுகளை எண்ணுகையாலே தரித்திருக்கிற திருத்தாயார்
இவளுடைய வளயம் முதலானவைகள் காணக் காண உருக்குலைகிற படியைக் கண்டு, –
அவற்றைத் தனித் தனியே சொல்லிக் கூப்பிடுகிறாள்.

ஒவ்வொரு நகரம் பத்தநம் முதலானவைகள்–ராஜ தானி -பட்டணம் -பேட்டை – வேவப் புக்கால்,
‘ஒரு மாடம் முறிந்தது, மாளிகை முறிந்தது’ என்பாரைப் போலே.

மேல் திருவாய்மொழியிலே பெறாத நிலைமையாய், ‘கிடையாது’ என்றாலும் விடமாட்டாதபடி
தம்முடைய மனம் வாக்குக் காயங்கள் அவ்விஷயத்திலே மிக்க ஈடுபாடு உண்டானபடி சொல்லிற்று;

இதில், அந்த அலாபத்தால் வந்த பரவசப்பட்ட தன்மையைச் சொல்லுகிறது.-
பரனான சர்வேஸ்வரனுக்கு வசப்பட்டு -விஸ்லேஷ பதிகங்கள் இரண்டும் –

“நெடுமால் என்றே கூவுமால்” என்று தன்னுடைய வியாமோகத்தைக் காட்டியாயிற்று
இவளை இப்படி விளைத்தது;
பெரியவன் தாழ நின்றால் பொறுக்கலாய் இராதன்றோ.

“பெருமாளால் அபயம் கொடுக்கப் பட்ட போது, இராவணன் தம்பியும் மஹா புத்திசாலியுமான விபீஷணன்
பூமியைப் பார்த்துக் கொண்டு வணங்கினான்” –
ராகவேண அபயே தத்தே ஸந்நதோ ராவணாநுஜ:
விபீஷணோ மஹா ப்ராஜ்ஞோ பூமிம் ஸமவலோகயந்”- என்பது, ஸ்ரீராமா. யுத். 19 : 1.-என்று
இவன் தறைப்படும்படி யன்றோ அவனுடைய வியாமோகம் இருப்பது.-
உருகினான் இவன் பருகினார் பெருமாள் -(கண்களால் பருகினான் )

கரங்கள் மீச் சுமந்து செல்லும் கதிர் மணி முடியன் கல்லும்
மரங்களு முருக நோக்கும் காதலான் கருணை வள்ளல்
இரங்கினன் நோக்குந் தோறும் இரு நிலத் திறைஞ்சு கின்றான்
வரங்களின் வாரி யன்ன தாளிணை வந்து வீழ்ந்தான்.–என்பது, கம்பராமாயணம், விபீடணனடைக்கலப். 140.

த்வரை அநு குணமான -அனுபவ அலாபத்தால் -ஆற்றாமை முறுகி -கீழ்ச் சொன்ன தசையும் கலங்கி –
(சம்பந்த ஞானமும் – இது பொதுவாக பிராப்ய த்வரையை தூண்டி விடும்-அத்யவசாயமும் உறுதிப் படுத்தும் – –
இங்கு இவளுக்கு -ஆற்றாமை விஞ்சி- இத்தனை சம்பந்தமும் இருக்க
கைக் கொள்ளாமல் இருப்பதா என்று தோழியும் மயங்கி )
சம்பந்த ஞானமும் தரிப்புக்கு உடலாய் இன்றிக்கே –
இத்தனை சம்பந்தம் இருக்க துடிக்க விட்டானே -என்று -இருக்குமே
உபாய அத்யாவசாயம் நிமிர்ந்து -தோழியும் தலை மகளும் மயங்கி இருக்க –
நமஸ் சப்தம் தானே -வாய்த்த திரு மந்த்ரத்தின் மத்யமாம் பதமே தாயார் –
தன்னடையே-ஆத்மாத்மீயங்கள் விலகிப் போவதை கண்டு -தடுக்க முடியாதே -இவள் தாய் வசம் இல்லையே –
பரன் வசம் அன்றோ -புலம்பத் தான் முடியும் –

ப்ராப்ய அலாபத்தாலே தன்னடையே போவதைத் தடுக்க முடியாமல் பரவசப்பட்டுப் புலம்புகிறாள்
ஏறாளும் இறையோனில் -வேண்டாம் என்றாரே —
ஆழ்வார் விரும்பியதை செய்து தலைக் கட்டுபவன் நெடு மால் அன்றோ –

————————————————————————————-

மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கருநிற மேக நியாயற்கு
கோலச் செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே.–6-6-1-

நிரதிசய -போக்யமான வேஷம் இவள் -வ்யாமோஹனுக்கு -அவன் வியாபாரத்தில் இவள் -வளை இழந்தாள்
வளை வீறு பெற்றதே பராங்குச பரகால நாயகியால் -நால்வர் -ஒருவரை -நசிக்க -குழல் -இவளுக்கு -அவனுக்கு பல சொல்லி –
மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு-ஆஸ்ரித வ்யாமோஹ நிரூபித ஸ்வரூபன் -சௌசீல்யம் ராமர் -ஆஸ்ரித வ்யாமோஹம் கிருஷ்ணன்
அனன்யார்ஹம் ஆக்கி -அவதார பிரகாசப் படுத்தி தனக்கு போக்தா -போக வ்யாமோஹம் அடியாக
நீலக் கருநிற மேக நியாயற்கு-அனுபவித்து உலர்ந்த நாப்பசை ஈரப்பசை -கறுத்து-மேகம் சியாமள வர்ணன் -ஔதார்யம் -என்றுமாம் –
கோலச்செந் தாமரைக் கண்ணற்குஎன் கொங்கலர்-தார்ச நீயா ஆகாரம் -சிவந்த -தேனை உடைத்தாய் -மலரை உடைத்தாய்
ஏலக் குழலி இழந்தது சங்கே—ஏலம் போன்ற வாசனை ஸ்ரமஹரமான -குழலை உடையவள் –
அவனுக்கு தனித் தனியே அகப்படும் துறைகளை காட்டி அருளுகிறார் –

திருமாலுக்கு உலகத்தை எல்லாம் அளந்த மணவாளனுக்கு மிகக் கரிய நிறத்தையுடைய மேகம்போன்ற தன்மையனுக்கு
அழகிய செந்தாமரைபோன்ற திருக்கண்களையுடையவனுக்கு என்னுடைய தேனோடு மலர்ந்த பூக்களையுடைய வாசனை பொருந்திய
கூந்தலையுடைய மகள் இழந்தது சங்க வளையலேயாம்.
மேக நியாயன் – மேகம் போன்ற தன்மையன். ஏலம்-வாசனை. சங்கு – சங்கவளையல்.
இத்திருவாய்மொழி, கலிவிருத்தம்.

இவள் வாமன அவதாரத்தில் குணங்களிலும் செயல்களிலும் அகப்பட்டு வளை இழந்தாள் என்கிறாள்.

மாலுக்கு –
“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியிலே, நீ எனக்கு வேண்டா என்ன,
நீ எனக்கு வேண்டும் என்று தடுமாறி நின்ற நிலையைக் காட்டியாயிற்று இவளை இப் பாடுபடுத்திற்று.
சர்வேஸ்வரனான உயர்வு தோற்ற நின்றானாகில் இப் பாடுபடாள் கண்டீர்!

வையம் அளந்த மணாளற்கு –
உகவாதாரையும் கூட விடமாட்டாத வியாமோகம்.
“அழித்தாய் உன் திருவடியால்” என்று இவளையும் தன் காற் கீழே இட்டுக் கொண்டான் அன்றோ.
அச் செயலுக்கு எழுதிக் கொடுத்தாள் இவள் ஒருத்தியுமே அன்றோ;

“மூவடி மண் கொண்டளந்த மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன்” என்கிறாள். பெரிய திருமொழி, 9. 4 : 2.

அவன் இரந்து மண் பெற்றான், இவள் உகந்து பொன் பெற்றாள்.
உகப்பாலே பெறுமது உரைப்பெற்றிருக்குமே.
(உரை -உரைகல் -மாற்று அற்ற செம் பொன் மணவாள மா முனி –ஆற்றில் கரைந்த புளி அல்லவோ )

இத் திருப்பாசுரத்துக்கு ரசோக்தியாக, பாவம் அருளிச் செய்கிறார் ‘அவன் இரந்து’ என்று தொடங்கி.
உரை என்று மாற்றாய், மாற்று ஏறியிருக்கும் என்னுதல்; உரை என்று கொண்டாட்டத்தைக் கூறுவதாய்,
உலகத்தாருடைய கொண்டாட்டத்தை யுடைத்தாயிருக்கும் என்னுதல்.

மணாளன் –
அநுபவிக்கிறவன்.

நீலக் கரு நிற மேக நியாயற்கு-
நெய்த்துக் கறுத்த நிறத்தை யுடைய மேகத்தைப் போன்ற தன்மையற்கு.
அன்றிக்கே,
நியாயம் – சமம், ஒப்பு என்னுதல்.
வேறு பிரயோஜனம் கருதாது கொடுக்கையும்,
கொடுக்கப் பெறாத போது உடம்பு வெளுக்கையும்.
வியாமோகம் இன்றியே ஒழிந்தாலும் விட ஒண்ணாத வடிவும் ஒளதார்யமும் இருக்கிறபடி.

நீலக் கரு நிற மேக நியாயற்கு –
மஹாபலியை வடிவைக் காட்டி அபகரித்தாற் போலே காணும் இவளையும் வடிவைக் காட்டி அபகரித்தபடி.
இவள் பிச்சு ஏறுகைக்கு இட்ட மை இருக்கிறபடி.
மைப் படி மேனி அன்றோ.-திருவிருத்தம், பாட்டு. 94.

கோலம் செந்தாமரைக் கண்ணற்கு –
காட்சிக்கு இனியவாய் வாத்சல்யத்தாலே சிவந்து, மலர்ச்சி முதலானவைகளை யுடையவான
திருக்கண்களை யுடையவனுக்கு.
“தாமரைத்தடங்கண் விழிகளின் அகவலைப் படுப்பான்” என்று திருக் கண்களாலே யாயிற்று அகப்படுத்திக் கொண்டது.
விசேடணம் தோறும் அவனுக்கு என்று தனித்தனியே அகப்பட்ட துறைகளைச் சொல்லுகிறாள்.

‘மாலுக்கு’ என்று தொடங்கி,
தன் மகள் மேல் பட்ட அம்புகளை எண்ணுகிறாள்;
இது ஒரு குத்து, இது ஒரு வெட்டு, இது ஒரு அம்பு என்று. —
1-வ்யாமோஹம் குணம் -2-சேஷ்டிதம்–3-விக்ரகம் -4-கண் அழகிலும் அகப்பட்டபடி –

என் கொங்கு அலர் ஏலம் குழலி –
தேன் பெருக்கு எடுக்கின்ற பூக்களை யுடைத்தாய், நறு நாற்றத்தை யுடைத்தான குழலை யுடைய என் பெண் பிள்ளை.
கொங்கு – தேன், அலர் – பூ, ஏலம் – நறுநாற்றம்.
இவள் மயிர் முடி ஒன்றுக்குத் தோற்றுக் குமிழி நீர் உண்ணும் அவன் கண்டீர் இவளை அழித்தான்!
பங்களப் படை கொண்டு, தனி வீரம் செய்வாரை அழிக்குமாறு போலே-

இழந்தது சங்கே –
இவள் மயிர் முடி கண்டு அவன் இழக்கக் கடவதனை இவள் இழந்தாள்.

——————————————————————————————————-

சங்கு வில் வாள் தண்டு சக்கரக் கையற்கு
செங்கனி வாய்ச் செய்ய தாமரைக் கண்ணற்கு
கொங்கலர் தண்ணந் துழாய் முடி யானுக்கு என்
மங்கை இழந்தது மாமை நிறமே.–6-6-2-

போக்யமான ஆயுதாதி பூர்த்திகள் –
சங்கு வில் வாள்தண்டு சக்கரக் கையற்கு-த்ரி விக்ரமன் -பஞ்சாயுதம் -ஆழி எழ -உச்சிர்தமாய் -கோஷம் -ததீயர் -எழுந்தான்
வையம் அளந்த பொழுது -தத் கால போக்தாகளுக்கு அனுபாவ்யம் –
செங்கனி வாய்ச் செய்ய தாமரைக் கண்ணற்கு-சிவந்த கனி திரு அதரம் –
கொங்கலர் தண்ணந் துழாய் முடி யானுக்கு -பரிமள விகாசியாய் -குளிர்ந்த ஸ்ரமஹரம் தர்ச நீயம்
என் மங்கை இழந்தது மாமை நிறமே-ஸ்வா பாவிக நிறம் -ஈடுபடும் பருவம் -அசாதாராண நிறம் -கொங்கு வாசனை தேன்

சங்கம் வில் வாள் தண்டு சக்கரம் என்னும் ஐந்து ஆயுதங்களையும் தரித்த திருக்கரங்களை யுடையவனுக்கு, சிவந்த கோவைக் கனி போன்ற
திருவதரத்தையும் செந்தாமரை போன்ற திருக் கண்களை யுமுடையவனுக்கு, தேனோடு மலர்கின்ற குளிர்ந்த அழகிய திருத் துழாயைத் தரித்த
திருமுடியை யுடையவனுக்கு, என் பெண்ணானவள் இழந்தது அழகிய நிறமேயாகும்.
கொங்கு – வாசனையுமாம். மாமை – ஒரு நிறவிசேடமுமாம்.
இத் திருப்பாசுரத்தில், பஞ்சாயுதங்களையும் ஒரு சேர அருளிச் செய்திருத்தல் காண்க.

திருவுலகு அளந்தருளின காலத்தில் திவ்விய ஆயுதங்கள் முதலியவைகளின் அழகிலே அகப்பட்டுத்
தன்னுடைய அழகிய நிறத்தை இழந்தாள் என்கிறாள்.

சங்கு வில் வாள் தண்டு சக்கரம் கையற்கு –
ஸ்ரீபஞ்சாயுதங்களின் சேர்த்தி அழகிலே ஆயிற்று இவள் ஈடுபட்டது.
பரம ஸ்வாமி திருமால் இரும் சோலை மூலவர் பஞ்சாயுதம் உடன் சேவை உண்டே –
இவளுடைய ஓர் ஆபரணம் வாங்குகைக்கு எத்தனை ஆபரணம் பூண்டு காட்டினான்?
கைக்கு மேல் ஐந்துங் காட்டிக் காணும் இவளுடைய ஆபரணம் வாங்கிற்று.
புரடு கீறி ஆடுகிற அளவிலே -தாயக் கட்டம் -அஞ்சுக்கு இலக்காக –
ஒரு காய் இருக்க -கை மேல் அஞ்சு போட்டு வெட்டுகிறேன் போலே –
ஆபரண கோடியிலும் ஆயுத கோடியிலும் இரு புடை மெய்க் காட்டின அன்றோ
இவைதாம்.–உபய கோஷ்டி –

செம் கனி வாய்ச் செய்ய தாமரைக் கண்ணற்கு-
கையிலே ஒன்றனைத் தரித்துக் காட்டிக் கவர்ச்சி செய்ய வேண்டி இருந்ததோ?
ஸ்மிதம் -புன் சிரிப்பும் நோக்கும் அமையாதோ நலிகைக்கு?

கொங்கு அலர் தண் அம் துழாய் முடியானுக்கு –
தேன் பெருக்கு எடுக்கின்ற திருத்துழாய் மாலையை, ஆதி ராஜ்ய சூசகமான
திரு முடியிலே யுடையவனுக்கு.
வைத்த வளையத்தைக் காட்டிக் காணும் இவள் நிறத்தை அபகரித்தது.

ஆக, ஆபரண சோபை, அவயவ சோபை, ஒப்பனை அழகு என எத்தனை செய்ய வேணும்
இவள் நிறத்தினைக் கொள்ளுகைக்கு என்றபடி.

என் மங்கை –
தன் பருவத்தாலே இவற்றை யடையத் தோற்பிக்குமவள் கண்டீர் நிறம் இழந்தாள்!

மாமை நிறம் –
அழகிய நிறம்.
மாமை – அழகு.

—————————————————————————————-

நிறங்கரி யானுக்கு நீடுலகு உண்ட
திறங்கிளர் வாய்ச் சிறுக் கள்வ னவர்க்கு
கறங்கிய சக்கரக் கையவ னுக்கு என்
பிறங்கிருங் கூந்தல் இழந்தது பீடே.–6-6-3-

வட தள சாயித்வம் -ரஷணம் பிரகாரத்வம் -இவள் ஈடுபட்டு -மதிப்பு இழந்தாள்
நிறங்கரி யானுக்கு நீடுலகு உண்ட-ஆலிலை -இளம் பச்சை -கடல் வர்ணம் -பரபாக -அமுது செய்த பிரகாரம்
திறங்கிளர் வாய்ச் சிறுக் கள்வ னவர்க்கு-உண்ட வாய்க்கு அடையாளம் -பிரகாரம் தோற்றும் –கள்வர் அவர்க்கு பாட பேதம்
வடிவிலே சிறுத்து -லோகம் பெரியது -கள்வன் தானே அகடி கடநா சாமர்த்தியம்
கறங்கிய சக்கரக் கையவ னுக்கு-உண்டு உமிழ்ந்து -ஆஸ்ரித விரோதி நிரசனம் -சுழன்று வரும் -உத்தியோகம் –
பிறங்கிருங் கூந்தல் இழந்தது பீடே.-மதிப்பு மரியாதை -வளர்ந்து கதிர்த்த -பிரகாசமாய் -பெருமை பொருந்திய கூந்தல் என்றுமாம் –

கரிய நிறத்தை யுடையவனுக்கு, பெரிய உலகத்தை உண்ட கூறுபாடு விளங்குகின்ற திருவாயினை யுடைய சிறிய வடிவிலே பெரிய உலகங்களை
எல்லாம் அடக்கிய கள்வனுக்கு, சுழலுகின்ற சக்கரம் பொருந்திய கையை யுடையவனுக்கு, என்னுடைய, விளங்குகிற கரிய கூந்தலை யுடைய
பெண்ணானவள் பெருமையை இழந்தாள்.
பிறங்கிருங் கூந்தல் : அன்மொழித் தொகை. கறங்குதல் – கழலுதல்.

ஆலிலையில் சயனித்தவனுடைய படிகளிலே அகப்பட்டு இவள் தன் பெருமையை இழந்தாள் என்கிறாள்.

நிறம் கரியானுக்கு –
“இழந்தது மாமை நிறம்” என்றாள்;
அந்த நிறமும் அவன் பக்கலிலே கிடக்கையாலே இரட்டித்துக் காட்டிற்று வடிவு.
தன் நிறத்துக்கு மேலே ஒரு நிறம் உண்டாயிற்று.
“நீலக் கரு நிற மேக நியாயற்கு” என்ன வேண்டாவாயிற்று–நிறத்துக்கு ஒப்பாக மாட்டாமையாலே.
நெய்த்துக் குளிர்ந்து சிரமத்தைப் போக்குகின்ற வடிவினையே சொல்லுகிறாள்.

நீடு உலகு உண்ட திறம் கிளர் வாய் –
பரப்பை யுடைத்தான பூமியைத் திரு வயிற்றிலே வைத்த பிரகாரத்தைக்
கோட் சொல்லா நின்ற திரு வதரத்தை யுடைய.
கிளருகை – சொல்லுகை.
“வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே”- பெரியாழ்வார் திருமொழி, 1. 1 : 6.– என்னக் கடவதன்றோ.
ரக்ஷிக்குந் தன்மையை விளக்கிக் காட்டுகின்ற திரு வதரம்.

சிறுக் கள்வனவர்க்கு –
சிறு வயிற்றிலே பெரிய உலகங்களை வைத்து, அளவிட முடியாத செயலை யுடையவனுக்கு.

நீடு உலகு உண்ட திறம் கிளர் வாய் –
வேறு ஒருவர் வாயாலே கேட்க வேண்டாதே, இவன் வாயாலே சொல்லக் கேட்கலாம்படி.

சிறுக் கள்வனவர்க்கு –
வடிவில் சிறுமையும் ரக்ஷிக்குந் தன்மையில் பாரிப்பும் இருக்கிறபடி.
தன்னுடைய ரக்ஷிக்கும் தன்மையையும் அகடிதகடநா சாமர்த்தியத்தையும்
காட்டியாயிற்று இவளை அகப்படுத்திற்று.

கறங்கிய சக்கரக் கையவனுக்கு-
பகைவர்களை அழிக்க வேண்டும் விரைவாலே எப்பொழுதும் சுழலா நின்றுள்ள திருவாழியைத்
திருக் கையிலே யுடையவனுக்கு:
தான் ரக்ஷகனான அளவன்றியே, பரிகரமும் ரக்ஷணத்திலே முயற்சியோடு கூடி இருக்கிறபடி.
அவன் கைப் பிடித்தார் எல்லாரும் ரக்ஷணத்திலே விரைவுடையரா யன்றோ இருப்பது.
ஸ்ரீ பாஞ்சஜன்ய ஆழ்வானும், “ஒரு வினை உண்டாகவற்றே, நாம் வாய்க் கரையிலே நின்று
ஓசையை விளைத்து வினை தீர்க்க” என்று பிரார்த்தியா நிற்கும்.

என் பிறங்கு இரும் கூந்தல் –
சுற்றுடைத்தாய் ஒழுகு நீண்ட மயிர் முடியை யுடையவள்.
அன்றிக்கே,
மிகவும் பெரிய குழலையுடையவள் என்றுமாம்.
இருமை – பெருமை. இங்குப் பெருமையாவது, நீட்சி.
பிறங்குதல் – மிகுதல். கூந்தல் – மயிர்.
“கூந்தல் ஐம்பால். . .குழல்” என்பது, பர்யாயம் –
பிறங்குதல் -உருண்டு –மிகுதி –

எதிர்த் தலையைத் தோற்பிக்கும் குழலை யுடையவள் கண்டீர் தன் பெருமையை இழந்தாள்.
பீடு – பெருமை.
“ஸ்ரீ ஜனக மகாராஜனுடைய புத்திரியான அந்தச் சீதா பிராட்டி’ யாதொருவருக்கு மனைவியாக இருக்கிறாளோ
அவருடைய பராக்கிரமும் அளவிட முடியாதது”
–அப்ரமேயம் ஹி தத்தேஜோ யஸ்ய ஸா ஜனகாத்மஜா ந த்வம் ஸமர்தஸ்தாம் ஹர்த்தும்
ராம சாபாஸ்ரயாம்வநே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 37 : 18.
என்று அவனுக்கும் பெருமையைக் கொடுக்கும் பெருமையை அன்றோ இவள் இழந்தது.

————————————————————————————–

பீடுடை நான்முகனைப் படைத் தானுக்கு
மாடுடை வையம் அளந்த மணாளற்கு
நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு என்
பாடுடை அல்குல் இழந்தது பண்பே.–6-6-4-

ஸ்ரஷ்ட்ருத்வாதி சர்வ பிரகார -உபகாரத்வம் –ஈடுபட்டு அசாதாராண வைபவம் இழந்தாள்
பீடுடை நான்முகனைப் படைத் தானுக்கு-ஞானாதி குணம் -வைபவம் ஸ்ருஷ்டிக்கைக்கு உரிய –
மாடுடை வையம் அளந்த மணாளற்கு-மாடு தனம் -அந்தணர் மாடு -வஸூ மதி -தனம் உடைய பூமி –அனந்யார்ஹை ஆக்கும்
போக்தா வாய் -அதற்குத் தோற்று -மணாளன் -போக்தா போக்கியம் ப்ரேரிதா
நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு என்-பாண்டவர்களுக்கு தூத க்ருத்யம் அனுஷ்டித்து -அத்தாலே பரி பூரணன் –
பாடுடை அல்குல் இழந்தது பண்பே-அசாதாராண ஸ்வ பாவம் -பாடு -விஸ்தாரம் –
அல்குல் உடைய பெண் -தன் அசாதாராண ஸ்வ பாவம் இழந்தாள்

பெருமை பொருந்திய பிரமனை உண்டாக்கினவனுக்கு, செல்வம் பொருந்திய பூமியை அளந்த மணவாளனுக்கு, உலகத்தை யுடையவர்களான
பாண்டவர்களுக்குத் தூது சென்ற நம்பிக்கு, என்னுடைய, பரப்புப் பொருந்திய அல்குலை யுடைய பெண்ணானவள் பண்பினை இழந்தாள்.
மணாளன் என்பது, மணவாளன் என்பதன் திரிபு. பாடுடை அல்குல்: அன்மொழித் தொகை.

பிரமனைப் படைத்தவன் என்னும் மேன்மையைப் பாராதே தன்னை அடைந்தவர்களுக்காகத் தூது சென்ற
மஹா குணத்தை யுடையவனுக்கு இவள் நீர்மையை இழந்தாள் என்கிறாள்.

பீடு உடை நான்முகனைப் படைத்தானுக்கு –
பதினான்கு உலகங்களையும் படைக்க வல்ல பெருமையையுடைய பிரமனைப் படைத்தவனுக்கு,
பீடு – பெருமை.

மாடு உடை வையம் அளந்த மணாளற்கு –
திரு வுலகு அளந்தருளின வஞ்சனை பொருந்திய செயலாலே தன்னை எனக்கே யுரியவனாகச் செய்தவனுக்கு.
மாடுடை – செல்வம் பொருந்திய என்னுதல்;
‘மாடு’ என்று இடமுடைமையாய், பரப்பையுடைய என்னுதல்.-
அம் கண் மா ஞாலம் –

நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு –
நாடுடைய இராஜாக்களான பாண்டவர்களுக்குத் தூது போய் அதனாலே . –
படைத்து -அளந்து -நடந்து -பூர்ணன் ஆனவனுக்கு

பகவத் அபிப்பிராயத்தாலே, அவர்களை ‘நாடுடை மன்னர்’ என்கிறார் காணும்.
“இருக்கைக்கு ஒரு குறிச்சியும் கொடோம்” என்று இராச்சியம் செய்கிறவர்கள் துரியோதனாதியர்களாக இருக்க.–
குறிச்சி – குப்பம்; சிறிய ஊர்.
“ஈ இருக்குமிடமெனினும் இப் புவியில் யானவர்க்கு அரசினிக்கொடேன்”என்பது, வில்லிபாரதம். (கிருஷ்ணன் தூது.)

“ஸ்ரீராமபிரான், விபீடணனை இராக்கதர்களுக்கு அரசனாக இலங்கையில் முடிசூட்டிச்
செய்யத் தக்க செயலைச் செய்து முடித்தவரானார்”
அபிஷிச்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீஷணம்
க்ருதக்ருதயஸ்ததா ராமோ விஜ்வர: ப்ரமுமோத ஹ”-என்பது, சங்க்ஷேப ராமாயணம். 85.என்றது போன்று.

‘இன்னார் தூதன்’ என நின்ற செயலாலே, இட்ட சட்டை பீறும்படி இருத்தலின் ‘நம்பிக்கு’ என்கிறாள்.
1-அடியிலே உலகத்தை உண்டாக்கி,
2-அபஹரித்தார் உளராகில் எல்லை நடந்து மீட்டுக் கொண்டு,
3-அதனைத் தன்னை அடைந்தவர்க்கு ஆக்குகைக்கு இழி தொழில் செய்த இந் நீர்மையையுங் காட்டி
இவள் நீர்மையைக் கவர்ந்தான்.

என்பாடுடை அல்குல்
இடமுடைத்தான நிதம்பப் பிரதேசத்தை யுடையவள். பாடு – இடம்.
“திரௌபதியினுடைய நிதம்பப் பிரதேசத்தைக் கண்ட பெண்கள் மனத்தினாலே ஆண் தன்மையை அடைந்தார்கள்”
பாஞ்சால்யா: பத்மபத்ராக்ஷ்யா: ஸ்நாயந்த்யா: ஜகநம் கநம்
யா: ஸ்திரியோ த்ருஷ்டவத்ய: தா: பும்பாவாம் மநஸா யயு:”-என்பது, பாரதம். என்பது போன்று,
ஸஜாதீயரை அழிக்கும் வடிவழகைக் குறித்தபடி.
அவன், ஆடவர்களுடைய கண்களையும் மனத்தையும் அபஹரிக்கின்றவன் ஆனாற்போலே.
பண்பு-நீர்மை.

புண்ணவாம் புலவு வாட்கை பொலன்கழல் புனைந்த பைந்தார்க்
கண்ணவாம் வனப்பி னாளைக் காமனே கண்ட போழ்தும்
பண்ணவாம் பவளச் செவ்வாய்ப் படாமுலைப் பரவை அல்குல்
பெண்ணவா நிற்கு மென்றால் பிணையனாட் குய்தல் உண்டோ?–என்பது, சிந்தாமணி. 1528.

“ஆடவர் பெண்மையை அவாவு தோளினாய்
தாடகை என்பது அச் சழக்கி நாமமே”-என்பது, கம்பராமாயணம்,

தாடகை வதைப்பட.அவன், ஆடவர்களுடைய கண்களையும் மனத்தையும் அபஹரிக்கின்றவன் ஆனாற்போலே.
பண்பு-நீர்மை.
“பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 3 : 29.

——————————————————————————————————–

பண்புடை வேதம் பயந்த பரனுக்கு
மண்புரை வையம் இடந்த வராகற்கு
தெண்புனற் பள்ளி எம் தேவ பிரானுக்கு என்
கண் புனை கோதை இழந்தது கற்பே.–6-6-5-

வேத பிரதனாதி ரஷணம் பிரகாரம் –
பண்புடை வேதம் பயந்த பரனுக்கு-நான் முகன் -கீழ் -வேதங்கள் கொடுத்தான் -பிரமனை படைத்து வேதம் கொடுத்தவன் ஸ்ருதி
பகவத் ஸ்வரூபாதிகளை யதாவத் பிரதிபாதிக்கும் வேதம் -ப்ரஹ்மாதிகளுக்கு உண்டாக்கி -தத் பிரதிபாத்ய பரனுக்கு-மேம்பட்டவன்
சொல்லி முடிக்க முடியாதே -வேதம் மட்டும் சொல்லும் -சொல்லி முடிக்க முடியாதே –ஊற்றம் உடையாய் பெரியாய்
மண்புரை வையம் இடந்த வராகற்கு-மண்ணின் மிகுதி பூமி –
தெண்புனற் பள்ளி எம் தேவ பிரானுக்கு என்-தெளிந்த -புனல் ஏகார்ணவம்-ஜகத் ரஷணம் சிந்தை பண்ணி –எனக்கும் தேவர்களுக்கும் உபகாரகன்
கண் புனை கோதை இழந்தது கற்பே-அறிவுடைமை இழந்தாள் -பூப்புனை கோதை -கண் புனை கோதை -அழகை பார்த்தவர்கள் கண்கள்
வைத்ததை மாறாமல் பார்ப்பதால் -அரவிந்த லோசனன் கண் -சம்பந்தம் -இவள் குழலை பார்த்தே -பதிந்ததே –
ஆழ்வார் -கொண்டை -மாலை – கண் -அவ்வளவும் -போக வேண்டும் –

பகவானுடைய தன்மைகளை உள்ளவாறே சொல்லும் பண்பினையுடைய வேதங்களைப் பிரமனுக்கு உபதேசித்த மேலானவனுக்கு, அணுக்கள்
செறிந்த உலகத்தை மேலே கொண்டுவந்த ஸ்ரீ வராகப்பெருமானுக்கு, தெளிந்த தண்ணீரையுடைய பிரளயவெள்ளத்திலே பள்ளிகொண்ட
எம் தேவபிரானுக்கு, என்னுடைய, கண்டார் கண்களைப் பிணிக்க வல்ல மயிர்முடியையுடைய பெண்ணானவள் கல்வியை இழந்தாள்.
மண் – அணுக்கள். “மண்திணிந்த நிலனும்” என்பது, புறம். (செய்-2.) கற்பு – கல்வி.

வேதங்களைக் கொடுத்தல் முதலான உபகாரங்களைச் செய்தவனுக்கு என் மகள் கல்வியினை இழந்தாள் என்கிறாள்.

பண்புடைவேதம் –
ஈசுவரனை உள்ளபடியே காட்டித் தரும்
நீர்மையை யுடைய வேதம்.

பயந்த –
ஸு ப்த ப்ராபுத்பத -நியாயத்தாலே
தூங்கினவன் எழுந்தான் என்ற கணக்கிலே பிரமனுக்குக் கற்பிக்கை.

இவ்விடத்தில்
ஸம்ஸ்காரம் ப்ரதி ஸஞ்சரேஷு நிததத் ஸர்கேஷு தத்ஸ்மாரிதம்
ரூபம்நாமச தத்ததர்ஹ நிவஹே வ்யாக்ருத்ய ரங்காஸ்பத
ஸு ப்தோத்புத்த விரிஞ்சபூர்வஜநதாம் அத்யாப் யதத்தத்திதம்
சாஸந்நஸ்ம்ருத கர்த்ருகாந் வஹஸி யத்வேதா: பிரமாணம் தத:–என்ற ஸ்ரீ ரங்கராஜஸ்தவம் உத்தர சதகம் 17-வது சுலோகம் அநுசந்தேயம்.

பரனுக்கு-
“அந்தப் பகவான் உலகங்களைப் படைப்பதற்கு முன்பு பிரமனைப் படைத்து அவனுக்கு வேதங்களை உபதேசித்தார்”
யோபிரஹ்மாணம் விததாதி பூர்வம் யோவை வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி தஸ்மை” என்பது. இது, ஸ்வேதாஸ்வதரம்.-
என்கிறபடியே,
மேற்பாசுரத்தில், “யோபிரஹ்மாணம் விததாதி பூர்வம்” என்பதனையும்,
இப்பாசுரத்தில் “யோவை வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி தஸ்மை”என்பதனையும் சொல்லுகிறது என்று அருளிச் செய்வர்

பிரமனுக்கு வேதங்களாகிய கண்களைக் கொடுக்கையாலும்,
வேதங்களிலேயே அறியப் படுகின்றவன் ஆகையாலும் எல்லோரைக் காட்டிலும் மேலானவனுக்கு.
அறிவு இழந்தாருக்கு அறிவு கொடுக்குமவன் கண்டீர் இவள் அறிவை அழித்தான்.

மண் புரை வையம் –
மண் மிக்க பூமி.

இடந்த வராகற்கு
ஸ்திதே மனஸி ஸுஸ்வஸ்தே சரீரே ஸதியோ நர:
தாது ஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விச்வரூபஞ்ச மாமகம்.
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்டபாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம்கதிம்.– என்பன வராக சரமம்.
மண்ணோடு விண்ணோடு வாசி அறத் தன் முகத்தால் ரக்ஷித்தபடி. –
மண்ணை –மண்ணோர் களை திரு வயிற்றில் வைத்து ரஷித்து
விண்ணை -விண்ணோர் களை -ஹம்சாதி முகேன ரஷித்து
பிறருடைய ஸ்வரூப சித்திக்காகத் தன்னை அழிய மாறுமவன்.
அழிவுக்கு இட்ட வடிவுக்கு ஆலத்தி வழிக்க வேண்டும்படி யன்றோ இருப்பது.
(மேன்மையை அழித்து நீர்மையைக் காட்டிய வடிவு )

“மானமிலாப் பன்றியாம் தேசு” –நாய்ச்சியார் திருமொழி, 11. 8,-என்னக் கடவதன்றோ.
“மண் மிகுதி சொல்லிற்று, எடுக்கையில் அருமை தோற்றுகைக்காக.
வராகற்கு அல்லாத ரக்ஷணம் போல் அன்றியே, எல்லார்க்கும் ஏற முக்கியமான ரக்ஷணம் இதுவன்றோ.
“எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப் பகல் ஓதுவித்து என்னைப் பயிற்றிப் பணி செய்யக் கொண்டான்” என்கிறபடியே,
பெரியாழ்வார் திருமொழி, 5. 2 : 3. ‘இவளைப் போன்றோர்க்கு’ என்றது, பெரியாழ்வாரை.
இவளைப் போன்றார்க்கு ஞானத்தைக் கொடுக்கிறவன் இவளை அறிவு அழித்தான்.

திரு வயிற்றில் வைத்து ரஷித்து மீண்டும் பிறவி கிட்டுமே –
ஸ்ரீ வராஹ நாயனார் ரஷித்து நயாமி பரமாம் கதிம் –
நான் கண்ட நல்லதுவே -ஞானப்பிரான் மற்று அல்ல –
தேகத்தை பூண் கட்டிக் கொடுக்கை இல்லாமல் -எல்லாருக்கும் ஏற -இவன்

தெண் புனல் பள்ளி –
தெளிந்த புனலையுடைய ஏகார்ணவத்தைப் படுக்கையாக வுடையவன்.
அழிந்த உலகத்தைப் படைத்து, படைக்கப்பட்ட சேதநர்க்கு அறிவு கொடுக்கக் கிடக்கிறவனுக்கு.
சத்தையே பிடித்து உண்டாக்கி அறிவு கொடுக்கக் கடவ அவன் கண்டீர்
உண்டான அறிவினை வாங்கிக் கொள்ளுகிறான்!

எம் தேவ பிரானுக்கு –
பிரமன் சிவன் முதலானவர்கட்கும் உபகாரகனானவனுக்கு.
“ஈஸ்வரோஹம்” என்று இருந்தாளாகில் அறிவு இழக்க வேண்டா கண்டீர்! –
தாசோஹம்-என்றாள் இவள் அறிவை இழந்தாள்

என் கண் புனை கோதை –
கண்டார் கண்கள் பிணிப்பு உண்கையாலே,-கட்டுண்டு – அவற்றை ஆபரணமாக வுடைய
மயிர் முடியை யுடையவள்.-

பண்புற நெடிது நோக்கிப் படைக்குநர் சிறுமை யல்லால்
எண்பிறங் கழகிற் கெல்லை யில்லையாம் என்று நின்றாள்
கண்பிற பொருளிற் செல்லா கருத்தெனின் அஃதே நீண்ட
பெண்பிறந் தேனுக் கென்றால் என்படும் பிறருக் கென்றாள்.-என்பது, கம்பராமாயணம், சூர்ப்பணகைப்படலம்.

அதாவது, வைத்த கண் வாங்க ஒண்ணாதிருக்கை, கண்களுக்கு விஷயம் தலையாய்விட்டது.

இழந்தது கற்பே –
எல்லார்க்கும் ஞானத்தைக் கொடுக்கக் கூடியவனான அவனுக்குங்கூட அறிவினைக் கொடுக்கும்
இவள் கண்டீர் அறிவினை இழந்தது!
“இராஜாக்களின் இலக்ஷணங்களை அறிந்தவளே” அன்றோ.
தேவ கார்யம் ஸ்ம ஸா க்ருத்வா க்ருதஜ்ஞா ஹ்ருஷ்ட சேதநா
அபிஜ்ஞா ராஜ தர்மாணாம் ராஜ புத்ரம் ப்ரதீக்ஷதே”–என்பது, ஸ்ரீராமா. அயோத். 26 : 4.

———————————————————————————————-

கற்பகக் காவன நற்பல தேளாற்கு
பொற் சுடர்க் குன்றன்ன பூத்தண் முடியற்கு
நற் பல தாமரை நாண் மலர்க் கையற்கு என்
விற் புரு வக்கொடி தோற்றது மெய்யே.–6-6-6-

ஆகர்ஷகமான அவயவ சோபை -தோள் -முடி கை -தன்னுடைய ஸ்வாதீன சரீரம் இழந்தாள் -பராதீனம் பட்டு போனாள் –
ஏகார்ணவ-கீழே சொன்ன தெண் புனற் பள்ளி எம் தேவ பிரானுக்கு-
அவயவ சௌந்த்ர்யம் அகப்பட்டு -தன் அவயவங்களைக் காட்டி இவள் அவயவி கொண்டான்
கற்பகக் காவன நற்பல தேளாற்கு- -விலஷணமான பல தோள்கள் -நல் -கற்பக கா விட வியாவ்ருத்தி
பொற்சுடர்க் குன்றன்ன பூத்தண் முடியற்கு-நீண்ட பொன் மலை -ஒளி உடன் கூடி -பொன் மலை மாலையையும் சூடி -மலர் பாண்டியன் கொண்டை
தர்ச நீயம் -திரு முடிக்கு அனுரூபம் திரு அபிஷேகம் -சிரஸ் சக்கரம் -பின் பக்கம் -குடுமி வெளியில் இறக்கி வைக்க -பொருந்தி –
நற்பல தாமரை நாண் மலர்க் கையற்குஎன்-செவ்வித்தாமரைப் போ -அன்று அன்று பூத்த –சத்யுகவிகாதி -நாண் மலர் -தலைச் சங்க நாண் மதியப் பெருமாள் –
விற்புரு வக்கொடி தோற்றது மெய்யே-சரீரம் தோற்றாள்-வில் போன்ற புருவம் -தோளில் வில் -இல்லை -வில் இல்லாத வீரன்
வில் உடைய இவள் தானே தோற்றாள் -ஸ்வரூப ஸ்வ பாவங்கள் சௌந்தர்யத்தால்-திருப் புருவ நெறிப்பாலே சிருஷ்டி -இதுவே பிரமாணம் -பட்டர் –
விஜய ஹேது பரிகரமாக இருக்கவே -வில் புருவம் -பிரமாணம் இதுவே ஸ்ருஷ்டிக்க -ப்ரஹ்மாஸ்திரம் போல் இதுஇருக்க சரீரம் அபஹரிக்கப் பெற்றாளே

கற்பகச் சோலையைப் போன்ற சிறந்த பல தோள்களை யுடையவனுக்கு, பிரகாசம் பொருந்திய பொன்மலையைப் போன்ற அழகிய குளிர்ந்த
திருமுடியையுடையவனுக்கு, அன்று பூத்த அழகிய தாமரை மலர்கள்போன்ற திருக்கைகளையுடையவனுக்கு, வில்லினைப்போன்ற
புருவங்களையுடைய பூங்கொம்புபோன்ற என் பெண்ணானவள் தனது சரீரத்தினை இழந்தாள்.
கா – சோலை. அன்ன – ஒத்த. சுடர் பொற் குன்று என மாற்றுக.

பெரும் புறக்கடலிலே திருப்பள்ளி கொண்டவனுடைய அவயவ சௌந்தர்யத்திலே அகப்பட்டு
இவள் தன்னுடைய மெய்யினை இழந்தாள் என்கிறாள்.

கற்பகம் கா அன்ன நல் பல தோளற்கு –
தன் அவயவங்களைக் காட்டி இவளுடைய அவயவியைக் கொண்டான்.
கற்பகச்சோலை போலேயாய், அவ்வளவன்றியே விலக்ஷணமான பல திருத் தோள்களை யுடையவனுக்கு.

சுடர் பொன் குன்று அன்ன பூந் தண் முடியற்கு –
ஒளியையுடைய பொன்மலை போலேயாய்க் காண்டற்கு இனியதாய்த் திருமுடிக்குத்
தகுதியான திருவபிடேகத்தையுடையவனுக்கு.
பூ என்பதற்கு, மாலைகளாலே அலங்கரிக்கப்பட்ட என்னலுமாம்.
திருமுடியைக் கூறியது, எல்லா ஆபரணங்களுக்கும் உபலக்ஷணம்.

நல் பல நாள் தாமரை மலர்க் கையற்கு –
நன்றாய்ப் பலவாய்ச் செவ்வித்தாமரைப் பூப்போலே இருக்கிற திருக்கைகளையுடையவனுக்கு.

என் வில் புருவம் கொடி –
வில் போலே இருக்கிற என்பெண்.
பிரஹ்மாஸ்திரத்தைக் கொண்டிருந்தும் பட்டுக் கிடப்பாரைப்போலே, வெற்றிக்குக் காரணமான
பரிகரத்தைக் கொண்டிருந்தும் கண்டீர் தோற்றது!

தோற்றது மெய்யே –
“ஒரு மாதத்திற்கு மேல் பிழைத்திருக்க மாட்டேன்”
“ஜீவிதம் தாரயிஷ்யாமி மாஸம் தசரதாத்மஜ
ஊர்தவம் மாஸாத் ந ஜீவிஷ்யே ஸத்யே நாஹம் ப்ரவீமி தே”-என்பது, ஸ்ரீராரா. சுந். 40 : 10.
என்னப் பண்ணும் வடிவைக் காட்டி,
“ஷண நேரமும் பிழைத்திருக்க மாட்டேன்”
“சிரம் ஜீவதீ வைதேஹீ யதிமாஸம் தரிஷ்யதி
ந ஜீவேயம் ஷணமபி விநா தாம் அஸிதேக்ஷணாம்”–என்பது, ஸ்ரீராரா. சுந். 66 : 10.
என்னப் பண்ணும் வடிவினைக் கண்டீர் கொண்டது.
தன் வசப்படாத சரீரத்தை யுடையவளானாள் என்பது கருத்து.

(மாசம் ஜீவிதம் -சொல்ல வைக்கும் பெருமாள் அழகு
க்ஷணம் கூட இருக்க முடியாத சீதாபிராட்டி அழகு
அப்படிப்பட்ட வடிவு அழகைக் காட்டி அன்றோ இவள் அழகை அன்றோ களவாடிப் போனான் )

————————————————————————————

மெய்யமர் பல்கலன் நன்கணிந் தானுக்கு
பையர வின் அணைப் பள்ளியி னானுக்கு
கையொடு கால்செய்ய கண்ணபி ரானுக்குஎன்
தையல் இழந்தது தன்னுடைச் சாயே.–6-6-7-

அநந்த சாயி உடைய -ஆபரண சோபையிலும் -கலன்-அரும் கலமே தேற்றமாய் வந்து திற -அரும் கலனே -சமுதாய சோபை இழந்தாள் –
மெய்யமர் பல்கலன் நன்கணிந் தானுக்கு-திரு மணியுடன் பொருந்திய எண்ணிறந்த ஆபரணங்கள் -கச்சிதமாக -அமர்
சாத்திய இல்லையே -தர்ச நீயம் -நன்கு அணிந்தான் –
அபய ஹஸ்தம் வரத ஹஸ்தம் -வசந்த உத்சவம் மாற்றி சாத்தி
பையர வின் அணைப் பள்ளியி னானுக்கு-படுக்கையாகக் கொண்டவன்
கையொடு கால்செய்ய கண்ணபி ரானுக்குஎன்-சிவந்த -ஆஸ்ரித பவ்யன் -உபகாரகன் -தர்சனம் காட்டி
தையல் இழந்தது தன்னுடைச் சாயே–லாவண்யம் -சமுதாய சோபை –அசாதாராணம் –

திருமேனிக்குப் பொருந்தின பலவகைப்பட்ட ஆபரணங்களைக் காட்சிக்கு இனியதாம்படி அணிந்திருப்பவனுக்கு,
படத்தையுடைய ஆதிசேஷனைப் படுக்கையாகவுடையவனுக்கு, திருக்கரங்களும் திருவடிகளும் செந்நிறத்தோடு கூடின
கண்ணபிரானுக்கு, என் பெண்ணானவள் தன்னுடைய சோபையை இழந்தாள்.

திருப்பாற் கடலிலே திருக்கண் வளர்கின்றவனுடைய ஆபரண சோபை முதலானவைகளிலே அகப்பட்டு
இவள் லாவண்யத்தை இழந்தாள் என்கிறாள்.

மெய் அமர் பல் கலன் –
திருமேனியிலே பூத்தாற்போலே பொருந்தி யிருந்துள்ள திருமுடி முதல் நூபுரம் ஈறாகவுள்ள திரு ஆபரணங்கள்.

நன்கு அணிந்தானுக்கு –
பூண வல்லபடியாலே வந்த அழகு.

பை அரவின் அணைப் பள்ளியினானுக்கு –
தன்னுடைய பரிசத்தாலே விரிந்த படங்களையுடையவனாய்,-அரவை அணையாக என்றபடி –
நாற்றம் மென்மை குளிர்த்தி இவற்றை இயல்பாகவுடையவனைப் படுக்கையாகவுடையவனாய்,
அதிலே திருக்கண் வளர்ந்தருளுகிறவனுக்கு:
இதுவும் ஓர் ஆபரண விசேடம் போலே காணும்; அநந்த முகமான ஆபரணம் அன்றோ.
மேலே கூறிய ஒப்பனை நிறம் பெறும்படியான படுக்கை அன்றோ.

கையொடு கால் செய்ய கண்ண பிரானுக்கு –
திருமேனிக்குப் பரபாகமான சிவப்பை யுடைய திருக் கைகளையும், திருவடிகளை யுமுடையவனாய்
உபகார சீலனான ஸ்ரீகிருஷ்ணனுக்கு.
திருவனந்தாழ்வானுடைய சேர்த்தியாலே யாயிற்று அவயவங்கள் தொடக்கமானவை பூர்ணமாயின.

என் தையல் இழந்தது தன்னுடைச் சாய் –
என் பெண் பிள்ளை இழந்தது, மாணிக்கத்தின் ஒளி போலே தனக்கு நிறங்கொடுக்கும் லாவண்யத்தை.
கழற்றிப் பூணும் ஆபரணத்தைக் காட்டிக் கழற்ற ஒண்ணாத ஆபரணத்தைக் கொண்டான்.
தையல் – பெண். சாய் – லாவண்யம்.

—————————————————————————————–

சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு
பேயைப் பிணம் படப் பாலுண் பிரானுக்கு என்
வாசக் குழலி இழந்தது மாண்பே.–6-6-8-

க்ரமம் மாற்றி -பூதனை -சகடம் -கருமம் -வில் பெரு விழவும் -கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ போலே -வார் கடா -சரியாக பேசி –
காட்டக் கண்டவர்கள் அதனால் -விரோதி நிரசன்னா ஸ்வ பாவன் -தன் ஸ்த்ரீத்வ வை லஷண்யம் இழந்தாள்
சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு-குருந்த மரம் -தனி -தமி -அசாஹாய வீரன் -பலராமன் -கூட வல்லை –
நரகாசுரன் நிரசனம் சத்யா பாமை இருந்தால் போலே தான் இல்லாமல்
இதனால் அனந்யார்ஹை –
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு-போக்தாவானவன் -சகடம் மாய -மாய சகடம் என்றுமாம் -கிருத்ரிம சகடம்
பேயைப் பிணம்படப் பாலுண் பிரானுக்குஎன்-மகா உபாகாரகன் –
வாசக் குழலி இழந்தது மாண்பே-ஸ்த்ரீத்வ வை லஷண்யம் -அழகு என்றுமாம் -கொங்கு அலர் ஏலக் குழலி -சொல்லி -பரிமளம் உயர்ந்த குழல்

குருந்த மரமானது சாயும்படி முறித்த தனிவீரனுக்கு, சகடாசுரன் இறக்கும்படியாக உதைத்த மணவாளனுக்கு, பூதனையானவள் பிணமாகும்படி
முலைப்பாலைக் குடித்த உபகாரகனுக்கு, என்னுடைய, வாசனை பொருந்திய கூந்தலையுடைய பெண்ணானவள் தன் மாண்பினை இழந்தாள்.
மாய – இறக்க. மாயம் என்று பிரித்து வஞ்சனையுடைய என்னுதல், பேயை : வேற்றுமை மயக்கம் குழலி – கூந்தலையுடையவள்.

கிருஷ்ணன், தன் விரோதிகளை அழித்த செயலுக்குத் தோற்று, இவள்,
தன்னுடைய பெண்மையை இழந்தாள் என்கிறாள்.

குருந்தம் சாய ஒசித்த தமியற்கு –
அசுர ஆவேசத்தாலே தழைத்துப் பூத்து நின்ற குருந்தத்தை வேரோடே சாய்ந்து விழும்படி முறித்த தனியற்கு. என்றது,
நம்பி மூத்த பிரானை ஒழியவே தனி வீரம் செய்தவனுக்கு என்றபடி.
தான் அத்தனிமையிலே சென்று உதவக் காணும் இவளுக்கு நினைவு.
சாயை -நிழல் பெரிய தழைத்து பூத்த குருந்தம் என்றுமாம் –

மாயச் சகடம் உதைத்த மணாளற்கு –
வஞ்சனை பொருந்திய சகடம் என்னுதல்;
“தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாய் பிளந்து வீய” என்கிறபடியே,
சகடம் உருமாயும்படி என்னுதல்.

மணாளற்கு-
ஸ்ரீ ஜனகராஜன் திருமகளுக்கு வில்லை முறித்தல் போலே, இந்தச் செயலினைக் காட்டியாயிற்று
இவளைத் தனக்கே உரியவளாக்கியது.-
அங்கு கை வண்ணம் இங்கு கால் வண்ணம் -இவள் தாசர் -அவள் பட்ட மகிஷி –

பேயைப் பிணம் படப் பால் உண் பிரானுக்கு –
சூர்ப்பணகையைப் போலே ஒரு கேட்டினை விளைக்க உயிரோடே விடாதே, பூதனையைப் பிணமாய் விழும்படி
முலை உண்ண வல்ல மஹோபகராகனுக்கு.

என் வாசக் குழலி –
இயற்கையிலேயே வாசனை பொருந்திய குழலையுடைய என் பெண் பிள்ளை. -வாசனையே ஸ்வரூப நிரூபகம் —
அவனை, “சர்வ கந்தா:” என்று சொல்லுகைக்கு அடி இத்தலையை இட்டு.
வாசஞ்செய் பூங்குழலாள் அன்றோ.-இது திருவாய்மொழி,- 10. 10 : 2.-

இழந்தது மாண்பே-
தன் ஆண் தன்மைக்குரிய செயல்களை எல்லாம் காட்டி, இவளுடைய பெண் தன்மையைக் கொண்டான்.
மாண்பு-மாட்சிமை; பெண்தன்மை. மாண்பு என்பதற்கு, அழகு என்றும் சொல்லுவர்.
கிருஷ்ணன் விரோதி நிரசனதுக்கு தோற்று தன்னுடைய ஸ்த்ரீத்வம் இழந்தாள்

———————————————————————————-

மாண்பமை கோலத்து எம் மாயக் குறளற்கு
சேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு
காண்பெருந் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு என்
பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே.–6-6-9-

அபேஷித சித்தியால் வந்த அத்யந்த -உச்ச்ராயம் -வாமனாதி அவதாரம் -அழகை இழந்தாள்
மாண்பமை கோலத்துஎம் மாயக் குறளற்கு-வஞ்சகன் -பேர் அழகு வடிவம் -எனக்கும் மாயம் –மறந்தாவது பிழைக்கா ஒட்டாத –
முடிந்து பிழைக்க ஒட்டாத -மின்னிடையார் -கூட அபேஷிதம் பெற்றார் மகா பலிக்கும் மாயம் –
சேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு-அபேஷித்த சித்தியால் -உயர்ந்த -தேஜோ மாயம் -மலை போன்ற ஒளி -திவ்ய மங்கள விக்ரகம்
காண்பெருந் தோற்றத்துஎம் காகுத்த நம்பிக்குஎன்-தோற்றம் வடிவம் அழகு அவதாரம் –அரிய-காணத்தக்க விபவம்
தர்ச நீயமான -க்ரஹனத்துக்கு அப்பால் பட்ட அபரிச்சின்ன -வைபவம்
ஆவிர்பாவம் -திரிவிக்ரமன் -போன்ற பல -வமனாதி -நம் போல்வார் அனுபவிக்க -சக்கரவர்த்தி திருமகன் –
வஞ்சனை இல்லா நேர்மை உள்ள பூர்ணன்
பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே-அழகு இழந்தாள்- ஆபரண அணிந்து -விரஹ -சஹியாத மென்மை-

அழகுபொருந்திய வடிவத்தையும் வஞ்சனையையுமுடைய வாமனனாக அவதரித்தவனுக்கு, உயர்ந்த பிரகாசம்பொருந்திய மலைபோன்ற
சிவந்த ஒளியையுடைய திருமேனியையுடையவனுக்கு, காணத்தக்க பெரிய தோற்றத்தையுடைய ஸ்ரீராம்பிரானுக்கு என்னுடைய,
ஆபரணங்களைத் தரித்த மெல்லிய முலைகளையுடைய பெண்ணானவள் அழகினைத் தோற்றாள்.
தோற்றம் – தோன்றுதல்; அவதாரத்தைக் குறித்தபடி காகுத்தன் – ககுஸ்தவம்சத்தில் பிறந்தவன். நம்பி – பூர்ணன்.

ஸ்ரீ வாமனம் முதலிய அநேக அவதாரங்களிலே அகப்பட்டு இவள் தன் அழகினை இழந்தாள் என்கிறாள்.

மாண்பு அமை கோலத்து எம் மாயக் குறளற்கு –
அழகு சமைந்த ஒப்பனையை யுடையனாய், ஆச்சரியமான வேடத்தையுடைய ஸ்ரீ வாமனனுக்கு.
திரு யஞ்ஞோபவீதம்-முக்குணம் மூன்று புரி –மூன்று இழை -ஒவ் ஒன்றிலும் –
மூன்று கடன்கள் தேவ பித்ரு ரிஷி -அத்யாயனம் யாகம் தர்ப்பணாதிகள் –
மாண்பு – அழகு. மாயம் வஞ்சனையாகவுமாம்.

சேண் சுடர் குன்று அன்ன செம் சுடர் மூர்த்திக்கு –
அடியிலே நீர் வார்த்துக் கொடுத்தவாறே வளர்ந்தபடி.
ஓங்கிய புகரையுடைய மலை போலே அழகிய ஒளியையுடைய வடிவினை யுடையவனுக்கு. –
ஆறு வார்த்தைக்கு ஆறு பொருள்-

காண் பெரும் தோற்றத்து –
கண்களுக்கு இனியதாய் அளவிடற்கரியதான இனிமையை யுடைய தோற்றத்தை யுடைய என்னுதல்;
தோற்றம் – அழகு.
அன்றிக்கே,
“ஸ்ரீராமபிரானுடைய மஹத்தான அவதாரம்” என்கிற அவதாரத்தின் மஹத்துவமாதல்
“ஜந்ம ராமஸ்ய ஸுமஹத் வீர்யம் ஸர்வாநுகூலதாம்
லோகஸ்ய ப்ரியதாம் க்ஷாந்திம் ஸௌம்யதாம் ஸத்ய ஸீலதாம்”–என்பது, ஸ்ரீராமா. பால, 3 : 10.
(தோற்றம் -அழகு -அவதாரம் -ஆவிர்பாவம் மூன்று அர்த்தங்கள் )

எம் காகுத்த நம்பிக்கு-
குணங்கள் நிறைந்த சக்கரவர்த்தி திருமகனுக்கு.
ஆந்ரு ஸம்ஸ்யம் அநுக்ரோஸ: க்ஷமா சத்யம் தமஸ்ஸம:
ராகவம் ஸோபயந்தி ஏதே ஷட்குணா: புருஷோத்தமம்”- என்றது, அநுசந்தேயம். ஸ்ரீராமா. அயோத். 33 : 12.
“தசரதற்கு மகன் தன்னை யன்றி மற்று இலேன்”-திருவாய். 3. 6 : 8.– என்னுமவராதலின் ‘எம் காகுத்தன்” என்கிறாள்.
“குணங்களுக்கு எல்லாம் நிலைக் களமானவர்”குணாநாம் ஆகரோ மஹாந்” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 21.
ஆதலின் ‘நம்பி’ என்கிறாள்.
அஜோபிசன் -சம்பவாமி யுகே யுகே -பெருமைகளில் குறை இல்லாமல் அவதாரம் –

என் பூண் புனை மென்முலை –
ஆபரணத்தாலே அலங்கரிக்கப்பட்டனவாய் விரகத்தைப் பொறுக்கும் அளவில்லாத மெல்லிய முலைகளையுடையவள்.

தோற்றது பொற்பே –
“பூண் புனை மென் முலை” என்கையாலே, ஒப்பனையால் வந்த அழகினை இழந்தாள் என்கிறாள்.
பொற்பு – அழகு.
“மலராள் தனத்துள்ளான்”-மூன்றாந் திருவந். 3.- என்கிறபடியே,
அவனைத் தன் மார்பு அழகாலே புறம்பு ஒன்று அறியாதபடி பண்ணி அநுபவிக்குமவள் கண்டீர் தோற்றாள் என்கை.

————————————————————————————————

பொற்பமை நீண்முடிப் பூந்தண் துழாயற்கு
மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு
நிற்பன பல்லுருவாய் நிற்கு மாயற்கு என்
கற்புடை யாட்டி இழந்தது கட்டே.–6-6-10-

சேஷித்வ போக்யத்வ -விரோதி நிவர்த்தகன் -சர்வ சரீரன் -மரியாதை எல்லாம் இழந்தாள்
பொற்பமை நீண்முடிப் பூந்தண் துழாயற்கு-அழகு -நீண்டு உயர்ந்த -தர்ச நீயமான ஸ்ரமஹரமான -பரத்வ போக்யத்வங்கள் –
மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு-பிரபல மல்லர் -சாந்து அழியாமல் -மல்லைப் பொருத-வஸ்த்ர சந்தன புஷ்ப அலங்காரம்
காலார நடந்து -அலங்கார பிரயோ விஷ்ணு அபிஷேகப் பிரியன் சிவன் –
மதுரைப் பெண்களுக்கு அழகை உபகரித்தவன் -ஆச்சர்ய பூதன்
நிற்பன பல்லுருவாய் நிற்கு மாயற்கு என்-பிரமாண சித்தம் ஸ்தைர்யம் -பல வகை -சரீரமாக -கொண்டு -ஸ்தாவர ஜங்கமங்கள் சரீரமாக என்றுமாம் –
நிற்கும் மாயன் தத் கத தோஷ ரஹிதனாய் நிற்கும் -தோஷங்கள் தீண்டாமல் நிற்கும் –
கற்புடை யாட்டி இழந்தது கட்டே-லோக மரியாதை ஸ்த்ரீத்வம் மரியாதை -கட்டடங்க -சாகல்யம் முழுதும் இழந்தாள்
கற்பு -அறிவு உடையவள் -இழந்தது ஸ்த்ரீத்வ மரியாதை

அழகுபொருந்திய நீண்ட திருமுடியிலே தரித்த அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையையுடையவனுக்கு, சாணூரன் முஷ்டிகன் என்னும் மல்லர்களோடே
போர்செய்த தோள்களையும் ஆச்சரியமான செயல்களையுமுடைய உபகாரகனுக்கு, நிற்கின்றனவான பலவகைப்பட்ட பொருள்களையும் சரீரமாகவுடையவனாய்
அவற்றின் குற்றங்கள் தன்பக்கல் தட்டாமலே நிற்கின்ற மாயவனுக்கு, அறிவுடைய என் மகளானவள் மரியாதையை இழந்தாள்.
மல் – மல்லர்கள். கற்பு – கல்வி; அறிவு. கட்டு – உலக மரியாதை. பெண்களுக்குள்ள மரியாதையுமாம்.

பரத்துவம் என்ன, அவதாரம் என்ன, உலகமே உருவமாயிருக்கும் தன்மை என்ன இவற்றை யடங்கக் காட்டி
இவள் உடைமை எல்லாவற்றையும் கொண்டான் என்கிறாள்.

பொற்பு அமை நீள்முடி பூந்தண் துழாயற்கு-
அழகு சமைந்திருப்பதாய் ஆதி ராஜ்யப் பிரகாசகமான திருமுடியின் மேலே இறைமைத்தன்மைக்கு அறிகுறியான

திருத்துழாய் மாலையை யுடையவனுக்கு;
தன்னுடைய பரிசத்தாலே பூத்துச் சிரம ஹரமாயிருத்தலின் ‘பூந்தண்துழாய்’ என்கிறாள்.

மல் பொரு தோளுடை மாயம் பிரானுக்கு-
வந்து அவதரித்து மற்பொரு தோளையுடையனாயிருக்கை.
சாத்தின சாந்து அழியாதபடி மல் பொருத ஆச்சரியத்தையுடையவனாதலின் ‘மாயப் பிரான்’ என்கிறாள்.
சாவத் தகர்த்த சாந்து அணி தோளன் – பெரியாழ்வார் திருமொழி, 4. 2 : 6.-அன்றோ.
ஸ்ரீ மதுரையிற் பெண்களுக்கு அழகினை உபகரித்தவனாதலின் ‘பிரான்’ என்கிறாள்.
அன்றிக்கே,
மற்றும் ஆச்சரியமான உபகாரங்களைச் செய்தவனுக்கு என்றுமாம்.

நிற்பன பல் உருவாய் நிற்கும் மாயற்கு –
ஸ்தாவர ஐங்கமங்களான எல்லாப் பொருள்களுக்கும் அந்தர்யாமியாய் நிற்கச்செய்தே,
அவற்றின் தோஷங்கள் தன்பக்கல் தட்டாதபடி நிற்கிற ஆச்சரியத்தையுடையவனுக்கு.

என் கற்புடையாட்டி –
மிக்க அறிவையுடைய என்மகள்.
“என்னை அழைத்துக்கொண்டு போகும் அச்செயல் அவர்க்குத் தக்கதாம்” –
“தத் தஸ்ய ஸத்ருஸம் பவேத்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 39 : 30.
என்று இருக்குமவள் அன்றோ.
கற்புடை -மிக்க அறிவு -உடை மதுப் பிரத்யயார்த்தம் -பூமாவில் -ஸ்ரீ மான் -நிறைய முழுவதுமாய் மிக்க அறிவுடைய என்றவாறு
அவனே உபாயம் -அத்யாவசாயம் -வேறு ஒன்றை நினையாமல் -பிரபன்னனுக்கு இதுவே கற்பு அறிவு –

இழந்தது கட்டே –
தனக்கு உள்ளவற்றை நேராகக் காட்டி இவள் பக்கல் உள்ளவற்றை நேராகக் கொண்டான். கட்டு – முழுதும்.
‘கட்டு’ என்று மரியாதையாய், உலக மரியாதையை இழந்தாள் என்றுமாம்

——————————————————————————————

கட்டெழில் சோலை நல் வேங்கட வாணனைக்
கட்டெழில் தென் குருகூர்ச் சட கோபன் சொல்
கட்டெழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
கட்டெழில் வானவர் போகம் உண்பாரே.–6-6-11-

அப்யசிக்க வல்லவர் -நித்ய ஸூரிகள் உடன் கோவை ஆவர் –
கட்டெழில் சோலை நல் வேங்கட வாணனைக்-சோலை உடைத்தாய் -சௌலப்யன்-காட்டிக் கொடுக்கும் -தர்ம தர்சனம் -நிர்வாகன் ஆனவன்
திவ்ய தேசம் -பாசுரம் இல்லை –
கட்டெழில் தென் குருகூர்ச் சட கோபன் சொல்-அரணை உடைத்தாய் -அழகு தர்ச நீயமான -ஆழ்வார் அருளிச் செய்த
கட்டெழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்-தொடை அழகை உடைத்தாய் -எதுகை மோனை சீர் இத்யாதி
கட்டெழில் வானவர் போகம் உண்பாரே-ஸ்வ சந்த – பெருமாள் திரு உள்ளப்படியே -மடக்கும் நித்ய ஸூரிகள் –கட்டுப்பாடு –
கட்டடங்க எழில் என்றுமாம் -நான்குக்கும் –

செறிவினையுடைய அழகு பொருந்திய சோலைகளாற் சூழப்பட்ட சிறந்த திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனை, அரண்களின் அழகையுடைய
தெற்குத் திக்கிலே யுள்ள திருக் குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபரால் அருளிச் செய்யப்பட்ட அழகிய தொடைகளையுடைய ஆயிரம் திருப்பாசுரங்களுள்
இந்தப் பத்துத் திருப் பாசுரங்களையும் வல்லவர்கள் நித்திய ஸூரிகளுடைய அனுபவத்தை அனுபவிப்பார்கள்.

முடிவில், இத் திருவாய் மொழியினை அப்யஸிக்க வல்லவர்கள் நித்திய ஸூரிகள்
அநுபவிக்கின்ற இன்பத்தினை அநுபவிப்பார்கள் என்கிறார்.

கட்டு எழில் சோலை –
பரிமளத்தை யுடைத்தான நல்ல சோலை.
கடி என்ற சொல், ‘கட்டு’ என்று வந்தது;
வலித்தல் விகாரம். கடி – வாசனை.

நல் வேங்கடம் –
சேஷ சேஷிகள் இருவர்க்கும் உத்தேஸ்யமான திருமலை.
(கைங்கர்யம் செய்ய ஏகாந்தமான தேசம் சேஷ பூதனுக்கு உத்தேச்யம்
இவனுக்கு அடிமை கொள்ள அவனுக்கும் உத்தேச்யம் )

வாணன் –
நிர்வாஹகன்.
திருவேங்கட முடையானை யாயிற்றுக் கவி பாடிற்று.
“திருவேங்கடத்து என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாக
என்னாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்”-திருவாய்.- 3. 9 : 1.- என்று இருக்கும் அவர் அன்றோ.
இவள் வர்ணம் அவன் இடம் சேர்ந்து –நீல கரு நிற மேக நியாற்கு -நிறம் கரியான் மாறிற்றே –
அனைத்தும் -அவனுக்கு கொடுப்பதாக உணர்த்தியில் சொல்லியதாக இருந்தாலும் மயக்க நிலையில் –
இவள் ஆசைப்பட்ட படியே தானே நடக்கும் -இவள் இழந்தது எல்லாம் அவன் இடம் தானே

கட்டு எழில் தென் குருகூர்-
அரணை யுடைய திருநகரி.
கட்டு-அரண்.

கட்டு எழில் ஆயிரம் –
அழகிய தொடைகளை யுடைத்தாயிருக்கை.
கட்டு-தொடை.

கட்டு எழில் வானவர் –
கட்டடங்க நல்லவரான நித்திய ஸூரிகள்.
அன்றிக்கே,
‘கட்டு’ என்பது, போகத்திற்கு விசேடணமாகவுமாம். என்றது,
சம்சாரத்தில் போகங்கள் கர்மங் காரணமாக வருகையாலே அல்பமாய் நிலை யற்றவையாய் இருக்கும் அன்றோ.
இது, ஸ்வரூபத்துக்குத் தக்கது ஆகையாலே நிறைந்ததாய் நித்தியமாய் இருக்கையைத் தெரிவித்தபடி.

அன்றிக்கே,
நான்கு அடிகளிலுமுள்ள ‘கட்டு’ என்ற சொல்லிற்கு, ஸாகல்ய பரமாய் -முழுதும்- என்றே பொருள் கோடலுமாம்.
நீர்மைக்கு எல்லையான திருமலை பற்றுதற்குரிய தலம்;
மேன்மைக்கு எல்லையான பரமபதம் அநுபவத்திற்குரிய தலம்.
ஒன்றி ஆக்கை புகாமை உய்யக் கொள்வான் நின்ற வேங்கடம் அன்றோ.-திருவாய். 9. 3 : 8.

அசித் அவி விசேஷணம் துர் விவேகமாய் இருக்கும் நம்மை –உஜ்ஜீவிப்பைக்காக –
சரீர பிரவேசம் -ஆகாமைக்காக -கருக் குழியில் புகா வண்ணம்
காத்து அருள அவசர ப்ரதீஷனாய் நின்றபடி

—————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தஸ்மாத் முனி பிரவணதா விபவாத் பரஸ்மின்
ஸ்வீயத்வ புத்தி அவசாத் கலீதாபிரவணதா
விபவாத் பரஸ்மின் பும்ஸ் ஏவ ஸ்வஸ்ய
ஸ்வகீய விஷயேஷூ அகிலேஷூ-

ஸ்வீயத்வ புத்தி –தன்னுடையவை என்று நினைக்கும் புத்தி
அவசாத் கலீதா —தன்னடையே விலகிற்று அன்றோ
அஹங்காரம் மமகாரம் எப்போதே போனதே -நீர் நுமது இல்லை இவை
இதில் அவன் விரும்பிய ஆத்மீயங்கள் –
அவன் உகக்க வில்லை என்றால் ஆத்மாத்மீய வைராக்கியம் ஏறாளும் இறையோனில் பார்த்தோம் –
இங்கே தனது முயற்சி இல்லாமல் தன்னடையே விலகிற்று
பிரவணதா விபவாத் பரஸ்மின் பும்ஸ் ஏவ -அவன் இடம் ஈடுபட்ட நெஞ்சு–புருஷார்த்த சாரம் -பகவத் ப்ரீதி காரித கைங்கர்யம்
புருஷோத்தமன் விரும்பிய அனைத்தும் புருஷார்த்தம்
அவனால் விரும்பியவை அனைத்துமே இவருக்கு புருஷார்த்தம்
ஸ்வஸ்ய ஸ்வகீய -விஷயேஷூ அகிலேஷூ -தான் தன்னுடைய அனைத்திலும் –
தன்னடையே தனது என்னும் புத்தி விலகிற்றே-

———————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

பாரம்யம் சர்வ ஸ்மாத் பரன் பஞ்சாயுத விக்ருதி முகையி
ப்ரஹ்மணஸ் ஸ்ரஷ்டு பாவாத் தேவானாம் ஸ்வாமி பாவாத்
அபி ஸூ பக்தம் அலங்க்ருதே குந்த பங்காத் ப்ராதுர் பாவஸ்ய
சர்வ அந்தர நிலயதயா அஹம் மம தைர்யம் சாதுர்யாதி அபஹரித் ஹரிர்

1-பாரம்யம் சர்வ ஸ்மாத் பரன் –மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு-

2-3-பஞ்சாயுத விக்ருதி முகையி—-சங்கு வில் வாள் தண்டு சக்கரக் கையற்கு–என்றும் –
நிறங்கரி யானுக்கு நீடுலகு உண்ட திறங்கிளர் வாய்ச் சிறுக் கள்வ னவர்க்கு-என்றும்
விகாரம் பண்ண-முக சப்தம் -வாயிலே தெரியும் படி உண்டான் -வட தள ஸாயித்வமும்
ரிஷிகளும் பாடும் படி என்றுமாம் –

4–ப்ரஹ்மணஸ் ஸ்ரஷ்டு பாவாத் –பீடுடை நான்முகனைப் படைத் தானுக்கு மாடுடை வையம் அளந்த மணாளற்கு

5–தேவானாம் ஸ்வாமி பாவாத் –எம் தேவ பிரானுக்கு-

6-அபி ஸூ பக்தம் —-கற்பகக் காவன நற்பல தேளாற்கு
பொற் சுடர்க் குன்றன்ன பூத்தண் முடியற்கு–பக்தாநாம் –திவ்ய அவயவம் சௌபாக்யம் –

7-அலங்க்ருதே –மெய்யமர் பல்கலன் நன்கணிந் தானுக்கு-

8-குந்த பங்காத் –சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு மாயச் சகடம் உதைத்த மணாளற்கு–

9–ப்ராதுர் பாவஸ்ய–காண்பெருந் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு-ஆவிர்பாவம்– ப்ராதுர்பாவம்

10-சர்வ அந்தர நிலயதயா –நிற்பன பல்லுருவாய் நிற்கு மாயற்கு

அஹம் மம -தைர்யம் சாதுர்யாதி அபஹரித் ஹரிர் –அஹங்கார மமகார தைர்யம் மாதுர்யம் –
அனைத்தையும் ஹரி அபகரித்தான் என்று சடாரி அருளிச் செய்கிறார் –

—————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 56-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில்-தமக்கு உள்ளது அடையக் கை விட்டு போன படியைப் பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ் பிறந்த சம்ஸ்லேஷம் மானச சம்ஸ்லேஷ மாத்ரமாய்-பாஹ்ய கரண யோக்கியம் அல்லாமையாலே
சென்னியால் வணங்கும் அவ் ஊர்த் திரு நாமம் கேட்பது சிந்தையே -6-5-10-என்கிறபடி மிகவும் அவசன்னராய்
அத்தாலே மோஹித்துக் கிடக்க
ஏறாளும் இறையோனில் -4-8-தாம் விடப் பார்த்த ஆத்மாத்மீய பதார்த்தங்கள் அடங்கலும் தன்னடையே விட்டுக் கழன்று
சிதிலமாய்ச் செல்லுகிறபடியை-திருத் தாயார் தன் மகள் வளையாதிகள் போயிற்று என்று
அவனுரிச் சூறை கொண்ட பிரகாரத்தை பேசின பாசுரத்தாலே சொல்லிக் கூப்பிடுகிற
மாலுக்கு வையத்தில் அர்த்தத்தை-மாலுடனே தான் கலந்து -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————————-

மாலுடனே தான் கலந்து வாழப் பெறாமையால்
சால நைந்து தன்னுடைமை தானடையக் -கோலியே
தான் இகழ வேண்டாமல் தன்னை விடல் சொல் மாறன்
ஊனமறு சீர் நெஞ்சே உண்—56-

தான் கோலி -அங்கே-ஏறாளும் இறையோனும் — -இங்கே -அவை முற்கோலி -தன்னடையே போயின –

———————————————–

வியாக்யானம்–

மாலுடனே தான் கலந்து வாழப் பெறாமையால் –
ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் உடன் சம்ச்லேஷித்து சத்தை பெற்று உஜ்ஜீவியாமல்
கீழ்-அடிமை செய்வார் திருமாலுக்கு -6-5-11-என்றார் இறே-அத்தை அடி ஒற்றின படி

சால நைந்து –
மிகவும் அவசன்னராய் –தம் தசை தாம் பேச மாட்டாதே-திருத் தாயார் பேசும்படியாக தளர்ந்து –

தன்னுடைமை தானடையக் -கோலியே தான் இகழ வேண்டாமல் –
ஏறாளும் இறையோனில்-4-8- அவனுக்கு உறுப்பு அல்லாத ஆத்மாத்மீயங்கள் அடையத் தாம் உத்யோகிக்க
வேண்டினால் போல் அன்றிக்கே

தன்னை விடல் சொல் மாறன் –
தன்னடையே அவை முற்கோலித்து- தம்மை கட்டடங்க விட்டகலும் படியை அருளிச் செய்த ஆழ்வார் –
அதாவது –
உத்தரீயம் தயாத்யக்தம் ஸூபாந் யாபரணான் யபி-கிஷ்கிந்தா -என்னும் படி
1-ஏலக் குழலி இழந்தது சங்கே -என்றும்
2-என் மங்கை இழந்தது மாமை நிறமே -என்றும்
3-என் பிறங்கிரும் கூந்தல் இழந்தது பீடே -என்றும்
4-என் பாடுடை அல்குல் இழந்தது பண்பே -என்றும்
5-என் கண் புனை கோதை இழந்தது கற்பே -என்றும்
6-என் விற் புருவக் கொடி தோற்றது மெய்யே -என்றும்
7-என் தையல் இழந்தது தன்னுடைச் சாயே -என்றும்
8-என் வாசக் குழலி இழந்தது மாண்பே -என்றும்
9-என் பூண் புனை மென் முலை தோற்றது பொற்பே -என்றும்
10-என் கற்புடை யாட்டி இழந்தது கட்டே -என்றும்-அருளிச் செய்தவை என்கை –

தன்னை விடல் சொல் மாறன் –
கட்டெழில் தென் குருகூர் சடகோபன் சொல் -என்று அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் உடைய –

ஊனமறு சீர் நெஞ்சே உண் –
சீருக்கு ஊனம் ஆவது-ஸ்வாரத்தமாய் இருக்கை-
அப்படி அன்றிக்கே-பர அனுபவ யோக்யமாய் இருக்கை -ஊனம் அற்று இருக்கை –
இப்படி நிரவத்யமான கல்யாண குணத்தை நெஞ்சே உண் –

ஓவாத் தொழில் சாரங்கன் தொல் சீரை நன்னெஞ்சே
ஒவாத ஊணாக உண் -பெரிய திருவந்தாதி -என்று ஸ்ரீ ஆழ்வார் அவன் குணங்களை புஜிககுமா போலே
நீயும் ஸ்ரீ ஆழ்வார் உடைய பக்த்யாதி குணங்களையே புக்தமாக புஜி-

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம்- 134- திருவாய்மொழி – -6-5–6….6-5-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

June 17, 2016

நோக்கும் பக்கமெல்லாம் கரும்பொடு செந்நெல் ஓங்கு செந்தாமரை
வாய்க்கும் தண் பொருநல் வடகரை வண் தொலை வில்லி மங்கலம்
நோக்கு மேல் அத் திசையல்லால் மறு நோக்கிலள் வைகல் நாடொறும்
வாய்க் கொள் வாசகமும் மணி வண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!–6-5-6-

சம்ருத்தமான திவ்ய தேசம் -கண்டால் வேறு ஒன்றும் காண மாட்டாதே -ஸூக்ரஹ சௌந்தர்ய -எளிமை -அழகு
நோக்கும் பக்கமெல்லாம் கரும்பொடு செந்நெல் ஓங்கு செந்தாமரை-பல திக்கை நோக்கி தொழுதாள் கீழே –
கரும்பு செந்நெல் தாமரை மலர்ந்து நிழல் கொடுக்க
வாய்க்கும் தண் பொருநல் வடகரை வண் தொலை வில்லி மங்கலம்-வடகரையில் -சம்பத்து நிறைந்த திவ்ய தேசம்
நோக்கு மேல் அத் திசையல்லால் மறு நோக்கிலள் வைகல் நாடொறும்-துடிப்பால் -அரதி-மற்ற ஒன்றில் ஆசை இல்லாமல்
அந்த திசையைத் தவிர வேறு ஒன்றையும் பார்க்காமல் -திருஷ்டி வியாபாரமும் – –
வாய்க் கொள் வாசகமும் மணி வண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!-வாயால் பேசும் சப்தங்களும் முடிந்து ஆளலாம் படி
ஸூக்ரஹமான-பித்தன் -மாலே மணி வண்ணா –சௌலப்ய சௌந்த்ர்யாதி பிரகாசங்கள் திரு நாமம் –

தாய்மார்களே! இவள், பார்க்கும் இடங்கள் தோறும் கரும்புகளும் செந்நெலும் உயர்ந்த செந்தாமரைகளும் நிறைந்திருக்கின்ற குளிர்ந்த தாமிரபரணியின்
வடகரையிலுள்ள திருத்தொலைவில்லி மங்கலம் என்னும் திவ்விய தேசத்தைப் பார்ப்பாளேயானால் அந்தத் திசையையே அன்றி வேறு ஒரு திசையையும்
பார்த்து அறியாள், கழிகின்ற நாள்தோறும் வாயிலே வைத்துப் பேசுகின்ற வார்த்தைகளும் நீலமணிபோன்ற நிறத்தையுடைய எம்பெருமானது திருப்பெயர்களேயாகும்.

வலிமை இல்லாமையாலே முதலிலே பார்க்க மாட்டாள், பார்த்தாளாகில் மற்று ஓரிடமும் பாராள் என்கிறாள்.
கண்ட கண்கள் -மற்று ஒன்றைக் காணா போலே –

நோக்கும் பக்கம் எல்லாம் –
பார்த்த பார்த்த இடமெல்லாம்.
“திருப்பொருநல் நோக்கும் பக்கமெல்லாம்” என்று கூட்டிப் பொருள் கூறுவாரும் உளர்.

கரும்பொடு செந்நெல் ஓங்கு செந்தாமரை –
கரும்பும், அதனோடே இசலி வளர்கிற செந்நெலும், இரண்டற்கும் நிழல் செய்கின்ற செந்தாமரையும்.

வாய்க்கும் –
நிறைந்திருக்கும் என்னுதல்;
இட்டன எல்லாம் நூறு கிளைகளாகப் பணைக்கும் என்னுதல்.
பக்தி விதை கடல் புரைய விளைத்தால் போலே –

தண் பொருநல் வடகரை வண் தொலை வில்லி மங்கலம்–
ஸ்ரமஹரமான திருப்பொருநல் வடகரையிலேயான ஐஸ்வரியத்தை யுடைய தொலைவில்லி மங்கலம்.

நோக்கு மேல் அத்திசை அல்லால் மறுநோக்கு இலள் –
முதலிலே நோக்க வலியுடையள் அல்லள்;
வருந்திப் பார்த்தாளாகில் அத் திக்கை ஒழிய முகம் எடுத்துப் பார்க்கிறிலள்.

வைகல் நாள்தொறும்-
கழிகிற நாள்தோறும்.

வாய்க்கொள் வாசகமும்-
வாயாலே சொல்லுகிற சொலவும்.

மணி வண்ணன் நாமமே –
வடிவழகுக்கு வாசகமான வற்றையே சொல்லா நின்றாள்.
குண விஷயமாதல் விபூதிவிஷயமாதல் அன்றிக்கே, வடிவழகிற்குத் தோற்றமை தோற்றச் சொல்லா நின்றாள்.
இவள் நிலை எது? நம் நிலை எது?
உங்களது ஸ்வரூப ஞானம்;
இவளது உருவ ஞானம்.
நாரசிம்ஹவபு ஸ்ரீ மான் -அழகால் வந்த ஸ்ரீ மத்வம் போலே

—————————————————————————————–

அன்னைமீர்! அணி மா மயில் சிறு மானிவள் நம்மைக் கை வலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன் சின்னமும் திரு நாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–6-5-7-

இவள் வாக் விஷயம் -திரு நாமம் திவ்ய சிஹ்னம்
அன்னைமீர்! அணி மா மயில் சிறு மானிவள் நம்மைக் கை வலிந்து-சொந்தம் கொண்டாடுகிறீர்கள் -பிறந்த ஸூ ஹ்ருதம் அறியீர் –
அழகிய நிறம் -அபி ரூபியையாய் -பரபாக-முக்தம் இளைமை மான் போலே -கை விஞ்சி
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்-இந்த திரு நாமம் ஒன்றையே -வேறு ஒன்றையும் கேட்கவும் மாட்டாள்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?-பூர்வ ஸூ ஹ்ருதம் -நிர்ஹேதுக பிரசாதம் -ஔதார்யம் -முகில் வண்ணன்
அவன் சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே-வாயாரச் சொல்லி -அசாதாரண சின்னங்கள் -இவள் பேச்சே இவை தானே

தாய்மார்களே! அழகிய பெருமை பொருந்திய மயிலையும் இளைய மானையும் போன்றவளான இவள், நம்மை விஞ்சித் திருத்தொலைவில்லமங்கலம்
என்ற பெயரையல்லாமல் வேறு எந்த வார்த்தையையும் கேட்கின்றாள் இல்லை; முற்பிறவிகளில் செய்த புண்ணியம் தானோ? முகில்வண்ணனான
எம்பெருமானுடைய மாயம்தானோ? அறியேன்; அவ் வெம்பெருமானுடைய சின்னங்களும் திருப்பெயர்களும் திருந்த இவள் வாயின ஆயின.
கை வலித்தல் – மீறுதல். வாயனகள்: கள், அசைநிலை, என்ன – என்னுடைய என்றலுமாம். கேட்க உறாள் என்பது, கேட்குறாள் என வந்தது;
விகாரம். கைவலிந்து தொலைவில்லி மங்கலம் என்றல்லால் என்ன வார்த்தையும் கேட்குறாள் என்க.

அவன் சின்னமும் திருநாமமும் இவள் சொல்லப் புக்கவாறே நிறம் பெற்றன என்கிறாள்.

அன்னைமீர்! –
இவள் பருவம் இது; நமக்கு அவ்வருகே போன ஆச்சரியத்தைப் பாரீர்கோள்.
‘மைத்ரேய’ என்னுமாறு போலே, ‘அன்னைமீர்!’ என்கிறாள்.

அணி மா மயில் சிறுமான் –
அழகிய நிறத்தையுடைய பெண் பிள்ளை.-
மாமை இல் —
வர்ணம் உடையவள் -பற்றிலன் -பற்றை இல்லமாக கொண்டவன் போலே –
அன்றிக்கே,
அழகியதாய்ச் சிலாக்கியமான மயில் போலே இருக்கிற பெண் பிள்ளை என்னுதல்.
அன்றிக்கே,
அழகியதாய்ச் சிலாக்கியமான மயில் தோகை போலே கூந்தல் என்றுமாம் –

சிறுமான் இவள் நம்மைக் கைவலிந்து –
நாம் கற்பித்த திருநாமங்களையும் சொப்படச் சொல்ல மாட்டாதவள் நமக்கு எட்டாதபடியானாள்.
கை வலித்தல் – கை கடத்தல்.-சொப்பட நீராட -நன்றாக என்றபடி

என் வார்த்தையுங் கேட்குறாள் –
தன் நினைவினை யான் சொல்லிலும் மீட்பதற்கு நினைத்துச் சொல்லுகிறேன் என்று,
என் வார்த்தையையும் கேட்கை தவிர்ந்தாள்.

தொலை வில்லி மங்கலம் என்றல்லால் –
திருத் தொலைவில்லி மங்கலம் என்னில் நான் சொன்னதையும் கேட்பாள்.
என் வார்த்தை – என்னுடைய வார்த்தை.

முன்னம் நோற்ற விதி கொலோ –
ஒக்கப் பிறந்து வளர்ந்தோம், பின்பு இது சாதிக்கக் கண்டிலோம்.
ஆதலால், முன்னரே செய்துவைத்த புண்ணியத்தின் பலமோ இது!
“புண்ணியமானது, விதி என்றும் விதானம் என்றும் சொல்லப்படுமன்றோ” என்னக் கடவதன்றோ.
இவளாலே செய்யப்பட்ட தர்மத்துக்கு இத்தனை பலம் கனக்க உண்டாகமாட்டாது;
இது சித்த தர்ம பலமாக வேணும்;
ஆகையால், முகில் வண்ணன் மாயம் கொலோ –
பிடாத்தை விழவிட்டு வடிவினைக் காட்டினானோ? —
பிடாம் -பச்சை வடம் -வஸ்த்ரம் -முகில் நகர்ந்து சந்தரன் காண்பது போலே –
இத் தலையாலே சாதித்தது ஓர் அசேதனமான கிரியைக்கு இத்தனை கனத்த பலம் உண்டாக மாட்டாமையாலே
‘முன்னம் நோற்ற விதி கொலோ?’ என்று ஐயப்பட்டாள்.
இப்படி முன்பு ஒருவடிவில் பலிக்கக் காணாமையாலே ‘முகில் வண்ணன் மாயம் கொலோ?’ என்று இங்கே ஐயப்படுகிறாள்.

அவன் சின்னமும் திருநாமமும் –
“தவளொண் சங்கு சக்கரம்” என்பதான அடையாளங்களும்,
“அரவிந்த லோசனன்”, “தேவ பிரான்” என்பனவான திருநாமங்களும்.

இவள் வாயனகள் திருந்தவே –
பண்டே திருந்தி இருக்கிறவை இவள் சொல்லப் புக்கவாறே உயிர் பெற்று இரா நின்றன.
மூத்துவர் வேதம் இவள் வாயனகள் ஆனவாறே சர்வருக்கும் ஆனதே -நாயனார்
பிராவண்யத்தால் சொன்னால் நிறம் பெறுமே

பட்டர் “அழகிய மணவாளப் பெருமாள்” என்றால் திருநாமம் நிறம் பெறுமாறு போலேயும்,
சோமாசி யாண்டான்“எம்பெருமானார்” என்றால், திருநாமம் நிறம் பெறுமாறு போலேயும்,
அனந்தாழ்வான் “திருவேங்கடமுடையான்” என்றால், திருநாமம் நிறம் பெறுமாறு போலேயும்;
திருமங்கை ஆழ்வார் திருக் கண்ண புரம் என்றால், திருநாமம் நிறம் பெறுமாறு போலேயும்;
“எவை உம்மால் சொல்லப்பட்ட குணங்கள்” என்னுமாறு போலே.

இதனை வால்மீகி பகவான் பக்கலிலும் காணலாம் என்கிறார் ‘எவை உம்மால்’என்று தொடங்கி.
“பஹவோ துர்லபா: சஏவயே த்வயா கீர்த்திதா குணா:
முநே வக்ஷ்யாமி அஹம் புத்வா தை: யுக்த: ஸ்ரூயதாம் நர:”-என்பது, சங்க்ஷேப ராலாயணம், 7.
இந்த ஸ்லோகத்தில் ‘கதிதா’ -சொல்லப்பட்ட -என்னாது,
“கீர்த்திதா” என்கையாலே, -புகழப் பெற்ற -என்றதால் -குணங்கள் நிறம் பெற்றன என்று தோற்றுகிறது.

வாங்கரும் பாத நான்கும் வகுத்தவான் மீகி என்பான்
தீங்கவி செவி களாரத் தேவரும் பருகச் செய்தான்
ஆங்கவன் புகழ்ந்த நாட்டை அன்பெனும் நறவ மாந்தி
மூங்கையான் பேச லுற்றான் என்ன யான் மொழிய லுற்றேன்.-என்றார் கம்பநாட்டாழ்வாரும்.

வரையாழி வண்ணர் அரங்கேசர் ஈசன் முன் வாணன் திண் தோள்
வரையாழி யார் புள்ளின் வாகனத்தே வந்த நாடொடிற்றை
வரையாழிய துயராய்த் தூசும் நாணும் மதியும் செங்கை
வரையாழியும் வளையு மிழந்தாள் என் மடமகளே.-என்பது, திவ்விய கவியின் திருவாக்கு.-(திருவரங்கத். 58.)-

அவன் சின்னமும் திரு நாமமும் இவள் வாயால் சொல்வதே சிறப்பு–இவையும் மெருகு பெறுமே

—————————————————————————

திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம் மலிந்து
இருந்து வாழ் பொருநல் வடகரை வண் தொலை வில்லி மங்கலம்
கருந்தடங் கண்ணி கை தொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும்
இருந்திருந்து அரவிந்தலோசந! என்றென்றே நைந்திரங்குமே.–6-5-8-

அரவிந்த லோசனன் -தேவபிரான் -8/11 பாசுரம் -மங்களா சாசனம் -பண்ணும் பொழுது அருளிச் செய்வர் அரையர் –
திருவடி தொழுத அன்று தொடங்கி–திரு நாமம் சொல்லி சிதிலை ஆகா நின்றாள் –
திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம் மலிந்து-உம்மைத் தோகை -வேதம் -வேள்வி -பிராட்டி கடாஷம் –
செல்வம் சம்பத் பெற்றவர்கள் -வாழும் – பகவானை திருத்தமாக சொல்லும் வேத பிரமாணம் -வேத பிரதிபாத்யம் –
பகவத் ஆராதனா ரூபம் -யாகம் யஜ்ஞ்ஞாம் யஜ தேவ பூஜா -போக்தா பிரபுரேவச -போக்தா ஸ்வாமி புஜிப்பவன் அவனே
அதுக்கு அநுரூப சம்பத் அபிவர்த்திகை யான திரு மகளிர் -மலிந்து வாழும் -மூவரும் -சம்ஸ்லேஷத்தால் அபி வ்ருத்தி உடையவராய்
தாம் -ஈஸ்வரன் தன்னை -அரவிந்த லோசனன் -இருந்த திருக் கோலம் –
தேவ பிரான் -நின்ற திருக்கோலம் -இருவரும் கிழக்கே நோக்கி -சேவை –
இருந்து வாழ்பொருநல் வடகரை வண்தொலை வில்லி மங்கலம்-வடகரையில்
கருந்தடங் கண்ணி கைதொழுத அந்நாள் தொடங்கி இந்நாள்தொறும்-நாச்சியார் திரு நாமம் -பராங்குச நாயகி கை தோழா இங்கு
இருந்திருந்து அரவிந்தலோசந! என்றென்றே நைந்திரங்குமே-பெருமாள் சேவித்த அந்நாள் -மயர்வற மதி நலன் அருளின அன்று முதல்
வருந்தி வருந்தி -கூப்பிட்டே நைந்து -சம்பாதித்து -ஆற்றாமை தாங்காமல் பல காலம் –

திருந்திய வேதங்களும் யாகங்களும் அழகிய செல்வமும் ஆகிய இவற்றால் நிறைந்திருக்கின்ற பிராமணர்கள் நிறைந்து இருந்து வாழ்கின்ற,
தாமிரபரணிக்கு வடக்கேயுள்ள வளப்பம்பொருந்திய திருத்தொலைவில்லிமங்கலம் என்னும் திவ்விய தேசத்தை,
கரிய விசாலமான கண்களையுடைய இவள் கைகூப்பி வணங்கிய அந்த நாள் தொடங்கி இந்த நாள்வரையிலும் இருந்து இருந்து
தாமரைக்கண்ண! என்று என்றே உருக் குலைந்து மனமும் கரையாநின்றாள்.

அந்த ஊரைத் தொழுத அன்று தொடங்கி இன்று அளவும் உண்டான இவளுடைய உருக்குலைந்த தன்மையைச் சொல்லுகிறாள்.

திருந்து வேதமும் –
வேதம் கட்டளைப்பட்டது அவ்வூரிலுள்ளார் கைக்கொண்ட பின்பாயிற்று.
சொரூபம் ஞான மாத்திரம் என்கிற சுருதிகள், ஞாத்ருத்வ சுருதிகள், பேதாபேத சுருதிகள், சகுணசுருதிகள், நிர்க்குணசுருதிகள் இவை
அடங்க விஷய வேறுபாட்டாலே ஒருங்கவிட்டிருக்குவமர்கள்.

கட்டளைப்பட்ட பிரகாரத்தைக் காட்டுகிறார்
‘சொரூபம்’ என்று தொடங்கி .“ஸத்யம் ஜ்ஞாநம் அநந்தம் பிரஹ்ம”, “விஜ்ஞாநம் பிரஹ்ம திவ்ய ஞாநாத் ” என்பன போன்ற சுருதிகள்,
சொரூபம் ஞானமாத்திரமே என்பதனைத் தெரிவிப்பன.
“யஸ்ஸர்வஞ்ஞ: ஸர்வவித்” என்பது போன்றவைகள், ஞாத்ருத்வ சுருதிகள்.(ஞாத்ருத்வம் – அறிகின்றவனுடைய தன்மை.)
“த்வாஸுபர்ணா”, “நித்யோ நித்யாநாம்”, “பதிம்விஸ்வஸ்ய” என்பன போன்றவைகள்,பேத சுருதிகள்.
“தத்வமஸி”, “ஸர்வம் கல்விதம் பிரஹ்ம” என்பன போன்றவைகள், அபேத சுருதிகள்.
“ஸோஸ்நுதே ஸர்வாந் காமாந்”, “அபஹத பாப்மா” என்பன போன்றவை, சகுண சுருதிகள்.
“நிஷ்களம் நிஷ்க்ரியம்”, “நிர்குணம்”, “நிரஞ்ஜனம்” என்பன போன்றவைகள், நிர்க்குண சுருதிகள்.

‘இவையடங்க விஷய வேறுபாட்டாலே ஒருங்க விட்டிருத்தலாவது,
‘சொரூபம் ஞான மாத்திரமே’ என்றது, ஞாத்ருத்வத்தை விலக்க வந்தது அன்று;
“தத் குண சாரத்வாத் தத்வியபதேச: – ஞானமாகிற குணத்தைப் பிரதாநமாகவுடையதாய் இருக்கையாலே
ஞானம் என்று சொல்லப்படுகிறது”என்கிறபடியே, ஞானத்தின் மிகுதியைக் குறிப்பதற்காகவும்,
சொரூபம் சுயம் பிரகாசம் என்று தோற்றுகைக்காகவும் கூறப்பட்டது என்றும்,
பேதாபேத சுருதிகளில், பேத சுருதியே தத்துவார்த்தம்;
அபேத சுருதி சரீர ஆத்ம்பாவம் தோற்றுகைக்காகச் சொல்லப்பட்டதித்தினை என்றும்,
சகுண நிர்க்குண சுருதிகளில், சகுண சுருதியே தத்துவார்த்தம்; நிர்க்குண சுருதி சரீரத்தைப்பற்றி
வருகின்ற தாழ்ந்த குணங்கள் இல்லாமையைச் சொல்ல வந்தது;
கல்யாண குணங்களை விலக்க வந்தது அன்று என்றும் இப்படி விஷய வேறுபாட்டாலே நிச்சயித்தல் என்றபடி.

என் அன்பேயோ –
அன்புடையான் -சொல்லாமல் -அன்பே உருவமாக -கிருஷ்ண த்ருஷ்ணா -காதலே இவள் —
ஞானம் மாத்ரமும் உண்மை -ஞாதா என்பதும் உண்மை -பேதமும் உண்மை அபேதமும் உண்மை –
ச குணமும் உண்மை நிர்குணமும் உண்மை இல்லை சொல்வதே பிரமாண வ்ருத்தம் ஆகும் –
ச குண ப்ரஹ்மம் உபாசித்து அனுக்ரகம் பெற்று நிர்குண ப்ரஹ்மம் அடைய வேண்டும் என்பர் அத்வைதி –

வேள்வியும் –
வைதிக சமாராதனமும்.
கற்ற கல்வி அநுஷ்டானத்திற்கு உறுப்பாய் இருக்கிறபடி.

திரு மா மகளிரும் தாம் –
ஆராதிக்கின்றவர்களுடைய நிறைவு இருக்கிறபடி.
திருமாமகள் – செல்வம்.
அன்றிக்கே,
ஆராதிக்கப்படுகின்ற பிராட்டியும் தானுமாகவுமாம்.
தாம் – தான்.
ஆக, பிரமாணம் பிரமேயம் பிரமாதாக்கள் குறைவற்று வாழ்கின்ற தேசம் என்றபடி.—அர்த்தாத் சித்தம் பிரமாதாக்கள் –

மலிந்து இருந்து –
பரமபதத்தில் உள் வெதுப்போடே போலே யன்றோ இருப்பது.

பொருநல் வடகரை –
விரஜைக்கு அக்கரை என்னுமாறு போலே.

கரும் தடம் கண்ணி-
கண்ணழகில், -அஸி தேஷிணை-கறுத்த கண்களையுடைய பிராட்டியோடு ஒக்கும்.

தடம் கண்ணி –
அவளைக் காட்டிலும் வேறுபாடு. அவனை அநுபவிக்கையால் வந்ததன்றோ அவளுக்கு;
அவள் கண்களைக் காட்டிலும் ஏற்றம் உண்டன்றோ, அவர்கள் இருவரையும் அநுபவிக்கையாலே இவள் கண்களுக்கு;
தொழும் போதும் வடிவு அழகியராயிருப்பார் தொழ வேணுமாகாதே.

கைதொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும் –
திருவடி தொழுத அன்று தொடங்கி இன்றளவும் வர என்னுதல்;
தன் சத்தை உண்டான அன்று தொடங்கி இன்று அளவும் வர என்னுதல்.
“அஸந்நேவ – அசத்தைப்போல”, “அன்று நான் பிறந்திலேன்” – திருச்சந்த விருத்தம். 64.-இதுவன்றோ முன்புற்றை நிலை.
அவன் கையிலும் அன்றிக்கே, பிறர் கையிலும் அன்றிக்கே, தன் கையதாயிருந்தபடி என் தான் தன் சத்தை!

சொல் கற்கை -தொழுகை என்று இரண்டு இல்லையே –
பால்யமே தொடங்கி பிராவண்யம் சத்தா பிரயுக்தம் —இவள் தானே தொழுகிறாள் –
நா கிஞ்சித் குர்வதஸ் ஸேஷத்வம் – கைங்கரியம் செய்யாதவனுக்குச் சேஷத்வம் இல்லை” என்கிறபடியே
“தொழுது எழு” அன்றோ.

இருந்து இருந்து அரவிந்த லோசந! என்று என்றே –
ஒருகால் அரவிந்தலோசந! என்னும் போது, நடுவே பதின்கால் பட்டைப் பொதி சோறு அவிழ்க்க வேணும்.
வலி இன்மையாலே சொல்லமாட்டாளோ? என்று இருக்கச் செய்தே, சொல்லித் தலைக்கட்டா நின்றாள்.
அவன் அரவிந்தலோசனன், இவள் கருந்தடங்கண்ணி.
இருவரும் ஒருமுகத்திலே காணும் அகப்பட்டது.–பரஸ்பரம் கண்களில் அன்றோ அகப்பட்டார்கள் –

நைந்து இரங்கும் –
உருக்குலைந்து அழியா நின்றாள்.
சரீரத்தளவும் அன்றிக்கே, நெஞ்சும் அழிகின்றது. இரக்கம் – ஈடுபாடு.

————————————————————————————–

இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணவோ என்று கூவுமால்
துரங்கம் வாய் பிளந்தானுறை தொலை வில்லு மங்கலம் என்று தன்
கரங்கள் கூப்பித்தொழும் அவ்வூர்த் திருநாமம் கற்றதற் பின்னையே.–6-5-9-

சௌந்தர்யாதி -மணி வண்ணா -திரு நாமம் கூப்பிட்டு விரோதி நிவர்த்தகன் -திவ்ய தேசம் சொல்லி –
இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர-பிராமணர் ஒத்து சொல்லுமா போலே -வாசனையால் -அலமந்து சுழன்று
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணவோ என்று கூவுமால்-அசேதனம் மரங்களும் இரங்கும் படி -நீல ரத்னம் போலே
துரங்கம் வாய் பிளந்தானுறை தொலை வில்லு மங்கலம் என்று தன்-குதிரை கேசி வாய் பிளந்த விரோதி நிரசகத்வம்
கரங்கள் கூப்பித்தொழும் அவ்வூர்த் திருநாமம் கற்றதற் பின்னையே-வ்ருத்த கடாநா பாந்தவம் அவ்வூரிலே த்விகுணம்
நந்த கோபாலன் மருமகளே -அவன் பேர் பல காலம் சொல்லி இறுதியில் சொல்லாதவோ பாதி -தன் கைகளைக் கூப்பி தொழும் –

இவள் நாள்தோறும் இரங்கி வாய்வெருவிக் கண்களிலே நீர் தேங்கும்படியாக மரங்களும் இரங்கும்படி மணிவண்ணா! என்று கூவுகிறாள்;
பேசுதற்குக் கற்றுக்கொண்டபிறகு கேசி என்னும் அசுரனது வாயினைப் பிளந்த எம்பெருமான் நித்தியவாசம் செய்கிற
திருத்தொலை வில்லி மங்கலம் என்று சொல்லித் தன்னுடைய கைகளைக் குவித்துத் தொழுவாள்.
வெருவி – வெரீஇ; சொல்லிசையளபெடை. அலமருதல் – சுழலுதல். துரங்கம் – குதிரை. பிளந்தான்: வினையாலணையும் பெயர்.
திருநாமம் கற்றதற் பின்னை, காங்கள் கூப்பித் தொழும் என்க.

இவளுடைய மனம் வாக்குக் காயங்கள் மூன்றும் முதலிலே தொடங்கி அவன் பக்கலிலே ஈடுபட்டன ஆயின என்கிறாள்.

இரங்கி –
நெஞ்சு அழிந்து.

வாய்வெரீஇ –
அடியற்ற பேச்சாய் இராநின்றது.
“இராமா! என்றும் இராமா! என்றும் எப்பொழுதும் புத்தியினால் எண்ணி
அவனையே வாக்கால் சொல்லிக் கொண்டவளாய்” என்னுமாறு போலே, மனத்தின் துணை இன்றிக்கே இருக்கை.

நாள் தொறும் –
“ராமேதி ராமேதி ஸதைவ புத்த்யா விசிந்த்ய வாசா ப்ருவதீ தமேவ தஸ்ய அநுரூபாம்ச கதாம் ததர்தாம்
ததைவ பஸ்யாமி ததா ச்ருணோமி”-என்பது, ஸ்ரீராரா. சுந். 32 : 11. சுலோகத்திலே
“ப்ருவதீ” என்ற பதத்தாலே,வாக்காலே என்னுமது போதரவும்,
“வாசா” என்று விசேடிக்கையாலே மனத்தின் துணை இல்லை என்றபடி.
நாவினால் நவிற்று போலே –
மயர்வற மதிநலம் அருளப்பெற்ற அன்றே அறிவு கேடும் குடிபுகுந்தது காணும்.
பக்தியின் உருவத்தை அடைந்த ஞானம் அன்றோ பெற்றது.–பக்திரூபாபன்ன ஞானம் -முற்றி போனதே –

இவள் கண்ண நீர்கள் அலமர –
கண்கள் வாய் வெருவுகிறபடி. –கண்கள் வாய் புலற்ற நீரைச் சொரியும் அன்றே –
‘நாள் தொறும் வாய்வெரீஇ’ என்றது,
பொய்ந் நின்ற ஞானம் தொடங்கி இவ்வளவும் வரக் கூப்பிட்ட கூப்பீட்டை அன்றோ.

மரங்களும் இரங்கும் வகை –
சேதனம் என்றும், அசேதனம் என்றும் வேறுபாடு அற அழியும்படி காணும்,
இவள் வாய்விட்டுக் கூப்பிடும் படி. –உம்மைத்தொகை -சேதனம் சமுச்சயம் –

எம்பாரை ‘மரங்களும் இரங்கக் கூடுமோ?’ என்று கேட்க,
இது அருளிச்செய்த அன்று தொடங்கி எத்தனை பாவ சுத்தி இல்லாதார் வாயிலே புக்கது என்று தெரியாது;
இங்ஙனே இருக்கச் செய்தே, இயமம் நியமம் முதலிய யோக உறுப்புக்களாலே பதம் செய்யப் பார்த்தாலும்
சுக்கான் பருக்கை போலே நெகிழாதே இருக்கிற நெஞ்சுகளும் இன்று அழிகிறபடி கண்டால்
சமகாலத்தில் மரங்கள் இரங்கச் சொல்லவேணுமோ? என்று அருளிச் செய்தார்.

“மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும்” -பெரியாழ்வார் திருமொழி, 3. 6 : 4.-என்று
அவதாரத்தில் திருக்குழல் ஓசையில் பட்ட எல்லாம் இத் துன்ப ஒலியிலே படுமாயின;
“மரங்களும் வாடி நின்றன”-ஸ்ரீராமா. அயோத். 59 : 10.
“அபிவ்ருக்ஷா: பரிம்லாநா:”என்று, இராமனைப் பிரிந்த பிரிவில் பட்ட எல்லாம் இவள் பேச்சிலே படா நின்றன.
பகவானுடைய குணங்களைக் காட்டிலும் குண நிஷ்டர் பாசுரம் அழிக்கும் போலே காணும்.

மணி வண்ணவோ என்று கூவுமால் –
இவளையோ தான் நீங்கள் மீட்கப் பார்க்கிறது!
வடிவழகைச் சொல்லி யன்றோ கூப்பிடுகிறது.

துரங்கம் வாய் பிளந்தான் உறை தொலைவில்லிமங்கலம் –
பண்டு உபகரித்தவன் இப்போது உபகரிக்கைக்கு வந்து இருக்கிற தேசம்.
கேசிவாயினை வருத்தம் இன்றியே கிழித்தவன் வாழ்கின்ற தேசம்.

தொலைவில்லிமங்கலம் என்று தன் கரங்கள் கூப்பித் தொழும்-
அத்தலை இத்தலை ஆவதே! என்கிறாள்.
தன் ஊரின் பெயரைச் சொல்ல எல்லாரும் கை எடுக்கும்படி பிறந்தவள் கண்டீர்
தான் அவன் ஊரைச் சொல்லித் தொழுகிறாள்.
அன்றிக்கே,
இக் கை கண்டார் தொழுமத்தனை என்று போலே காணும் இவள் இருப்பது என்னுதல்.
தான் தொழுவது பெண்மைக்குப் போராதே யன்றோ. இதுதான் என்று தொடங்கி? என்னில்,

அவ்வூர்த் திருநாமம் கற்றதன் பின்னை –
இவள் சொல் கற்ற பின்பு.
திருநகரியிலுள்ளார் சொல் கற்பது, “திருத்தொலை வில்லிமங்கலம்” என்று போலே காணும்.
இவள் பேச்சுக் கற்கை என்றும், திருநாமம் சொல்லுகை என்றும் இரண்டு இல்லை.
கோயிலிலுள்ளார் “கோயில்” என்றும், “பெருமாள்” என்றும் கற்குமாறு போலே.

தோழி, தன் வாயாலே ‘திருத்தொலைவில்லிமங்கலம்’ என்றால், இவள் சொன்ன இனிமை பிறவாமையாலே,
‘அவ்வூர்’ என்கிறாள் காணும்.
என்தான்! முன்பு சொன்னாளே? என்னில்,
அது அப்படி இராமையால் அன்றோ ‘அவ்வூர்’ என்கிறது.

—————————————————————————–

பின்னை கொல்?நில மா மகள் கொல்? திருமகள் கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயங்கொலோ? இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்றிருந் துறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே.–6-5-10-

அவனுடைய அதிசய வியாமோஹம் நெடுமால் -கூப்பிடா -ஊரைப் பார்த்து வணங்கி திரு நாமம் கேட்பது –
பின்னைகொல்?நிலமாமகள்கொல்? திருமகள்கொல்? பிறந்திட்டாள்-அதி பிராவண்யம் -அந்ய பரை யோ -இவளோ அவளோ
தனித்தும் -மூவரும் இல்லாமலோ -பூமிக்கு நிர்வாகை-மிக உயர்ந்த -நிரதிசய சம்பத் ருபையா -காருண்யம் ரூபையா-கிளப்பி விடும் அவள் –
என்ன மாயங்கொலோ? இவள்நெடு மால்என்றே நின்று கூவுமால்-வியாமோஹ அதிசயம் -பக்தர் இடம் உள்ள காதல் –
முன்னி வந்தவன் நின்றிருந் துறையும் தொலை வில்லி மங்கலம்-முற்பட-தேவ பிரானாக – அரவிந்த லோசனாக நின்று இருந்து –
சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே -மற்றவர் சொல்ல கேட்பதும் இவளுக்கு அபிமதம் –
நின்றிருந் துறையும்-நின்று இருந்து உறையும் இரட்டைத் திருப்பதி என்பதுக்கு பதங்கள் –

இப்படிப் பிறந்திருக்கும் இவள், நப்பின்னைப்பிராட்டி தானோ? பூமிப்பிராட்டிதானோ? பெரிய பிராட்டியார்தானோ? என்ன ஆச்சரியமோ?
இவள் நெடுமால் என்றே நின்று கூவாநிற்பாள்; முற்பட்டு வந்து அவன் நின்று இருந்து உறையும் திருத்தொலைவில்லிமங்கலம் என்னும்
திவ்விய தேசத்தைத் தலையால் வணங்குவாள்; அந்த ஊரின் திருநாமத்தைக் கேட்பதுவே சிந்தையாக இராநின்றாள்.

பின்னைகொல் பிறந்திட்டாள், நிலமாமகள்கொல் பிறந்திட்டாள், திருமகள்கொல் பிறந்திட்டாள் எனத்தனித்தனியே கூட்டுக.
அவன் முன்னி வந்து நின்று இருந்து உறையும் தொலை வில்லிமங்கலம் என்க.

அவனால் அல்லது செல்லாத இவளுடைய ஈடுபாட்டின் மேம்பாட்டினைக் கண்டு,
பிராட்டிமாரிலே ஒருத்தியோ? என்று ஐயப்படுகிறாள்.

பின்னைகொல் –
நப்பின்னைப் பிராட்டி பிறந்திட்டாளோ?

நிலமா மகள் கொல் –
அங்ஙன் அன்றியே, பூமிப்பிராட்டி பிறந்திட்டாளோ?

திருமகள்கொல் –
அங்ஙன் அன்றிக்கே, இந்த ஏற்றங்களைக் கொடுக்கும் பிராட்டி தானே பிறந்திட்டாளோ?

அன்றிக்கே,
சர்வேஸ்வரனுடைய செல்வமாக இருக்குமவள் பிறந்திட்டாளோ?
அச் செல்வம் விளையும் பூமியாயிருக்குமவள் பிறந்திட்டாளோ?
அவ்விளை பூமியினுடைய பல ரூபமாயிருக்குமவள் பிறந்திட்டாளோ என்னுதல்.

அங்ஙன் அன்றிக்கே,
அவர்களுக்கு இவள்படி இல்லாமையாலே அவர்கள் ஒப்பு அல்லர்;
உலகமெல்லாம் வாழுகைக்கு இவள் ஒருத்தி – பிறந்தாளோ? என்றுமாம்.
“வீரியத்தில் விஷ்ணுவை ஒத்தவர்” விஷ்ணு நா ஸத்ருசோ லீர்யே ஸோமவத் ப்ரிய தர்சந:”- என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 18.
என்றாற்போலே, நாய்ச்சிமார் பக்கலிலேயும் ஒவ்வொரு வகைக்கு ஒப்புச் சொல்லலாயிருக்கையாலே கதிர் பொறுக்குகிறாள்.
“எல்லாச் சாதுக்களுக்கும் உபமானமாக யாதொரு பிரஹ்லாதன் இருந்தானோ”-
“உபமாநம் அஸேஷாணாம் ஸாதூநாம் யஸ் ஸதாபவத்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1, 15 : 156.-என்கிறபடியே,
இவரை எல்லார்க்கும் ஒப்புச் சொல்லலாம், இவர்க்கு ஒப்பாவார் இலர் காணும்.

என்ன மாயம் கொலோ –
பகவத் விபூதியில் கூடாதது இல்லை யாகாதே! இது என்ன ஆச்சரியம் தான்!

இவள் நெடுமால் என்றே நின்று கூவும் –
தன் பிச்சினைக் காற்கடைக் கொண்டு அவன் பிச்சினைச் சொல்லிக் கூப்பிடா நின்றாள்.
ஆல் – ஆச்சரியத்தைக் காட்டும் இடைச்சொல்.

அவன் முன்னி வந்து நின்று இருந்து உறையும் –
தன்னுடைய வியாமோகத்துக்கும் அவன் கிருஷி செய்தபடி.
முற்பாடனாய் வந்து அவன் நிற்பது இருப்பதாய்க் கொண்டு –
தேவபிரானாய் நின்றும் அரவிந்த லோசனாய் இருந்தும் -நித்திய வாசம் செய்கிற ஊர்.
பசியன், சோறு தாழ்த்தால் படுமாறுபோலே.

சென்னியால் வணங்கும் –
தன் கரங்கள் கூப்பித் தொழுகையும் வேண்டத் தக்கதானபடி.
இருந்த இடத்தே இருந்து தலை சாய்க்கும்படி ஆனாள். –கை தூக்கும் பலமுமிழந்து

அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே –
அவ்வூர்த் திருநாமம் கேட்கச் செவி தாழ்க்கையிலே இவளுக்கு மநோரதம்.
இவள் ‘அவ்வூர்’ என்றது, பெண் பிள்ளை சொன்னாற்போலே இராமையாலே.
ஆயின், ஒருகால் சொன்னாளே என்னில்,
‘அது வறை முறுகல் ஆயினமையால் அன்றோ பின்பு தவிர்ந்தது’ என்று அருளிச் செய்வர்.

—————————————————————————–

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண் குரு கூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11-

ஸ்ரீ யபதிக்கு நித்ய கைங்கர்ய பரர் ஆவார்கள்
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே-கரண த்ரயத்தாலும் -ஆஸ்ரயித்த
தந்தை தாய் என்றடைந்த வண்குரு கூரவர் சடகோபன்-ஹிதம் பிரியம் -அன்னையாய் அத்தனாய்-என்று தன்னைப் பற்றி இருக்கும்
மதுர கவி பிரக்ருதிகள் வாழும் குருகூர் -குரு கூரார்க்கு அவர் -சகல வித பந்து வானவர்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன-பழைய வேதார்த்தம் பிரகாசகம் -இவர் வாயினவாக -திவ்ய தேசம் பற்றி
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–அர்த்த பிரகாசம் ஆர்ஜவம் உடைய தமிழ் -ஸ்ரீ யபதிக்கு அடிமை செய்யப் பெறுவார்

தேவபிரானையே தந்தை என்றும் தாய் என்றும் மனத்தாலும் வாக்காலும் சரீரத்தாலும் அடைந்த வளப்பம் பொருந்திய திருக்குருகூரிலே யுள்ளவர்கட்குத்
தலைவரான ஸ்ரீசடகோபர் அருளிச் செய்த பழைமை பொருந்திய ஆயிரம் திருப்பாசுரங்களுள், திருத்தொலை வில்லிமங்கலம் என்னும் திவ்விய தேசத்தைப்
பற்றிச் செந்தமிழால் அருளிச்செய்த இவை பத்துப் பாசுரங்களையும் வல்லவர் திருமாலுக்கு அடிமை செய்வார்கள்.
தேவபிரானையே தந்தை தாய் என்று சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும் அடைந்த சடகோபர் என்க-சொன்ன செந்தமிழ் இவைபத்தும் என்க.

முடிவில் இத்திருவாய்மொழியின் கருத்தை விளக்கிக் கூறுவதாய்க் கொண்டு, இதனைக் கற்றவர்கள்
இதற்குத் தகுதியான கைங்கரியத்தைச் செய்யப் பெறுவர்கள் என்கிறார்.

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் –
மனம் வாக்குக் காயங்கள் மூன்றும் ஒருபடிப்பட அவன் பக்கலிலே ஈடுபட்டனவாய் இருக்கிறபடி.
“இரங்கி” என்றும்,
“மணி வண்ணவோ” என்றும்,
“தன் கரங்கள் கூப்பித் தொழும்” என்றும் என்னும்
இம் மூன்றாலும் இவர்க்கு உண்டான ஈடுபாட்டின் மிகுதியன்றோ இத் திருவாய் மொழியிற் சொல்லிற்று.
கரணங்கள் -கரணங்கள் வியாபாரம் கீழே சொல்லி லஷணையால் இவற்றையும் சொன்னபடி –

தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்த –
அயர்வறும் அமரர்களுக்கு அதிபதியாயிருந்து வைத்துத் தொலைவில்லி மங்கலத்திலே சுலபனாயிருந்தவனே
எல்லாவிதமான உறவும் என்று அறுதியிட்டபடியே பற்றுவதும், செய்தவர்.

’வண் குருகூரவர் சடகோபன் –
அவனே இவர்க்கு எல்லாவித உறவும் ஆனாற் போன்று அவ்வூரிலுள்ளார் ஆழ்வாரையே
எல்லா உறவு முறையாகப் பற்றியாயிற்று இருப்பது.
“அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான்” என்றும்,
“தாயும் தமப்பனும் மனைவியும் குழந்தைகளும் செல்வமும் மற்றும் எல்லாம் வகுளாபரணர் திருவடிகளே”
மாதாபிதா யுவதய: தநயா விபூதி: ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்
ஆத்யஸ்ய ந: குலபதே: வகுளாபிராமம் ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா”–என்றும் சொல்லுகிறபடியே இருப்பர்கள்.

முந்தை ஆயிரத்துள் –
பழையதான வேதார்த்தத்தை அருளிச் செய்கையாலே. சர்வேஸ்வரன் இதர சஜாதீயனாய் அவதரித்தாற் போல,
வேதமும் தமிழாய் வந்து இவர் பக்கலிலே அவதரித்தபடி என்னுதல்.
இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலுக்கு அடிமை செய்வார் –
இதனைக் கற்க வல்லவர்கள் திருமகள் கேள்வனுக்கு அடிமை செய்யப் பெறுவர்.

செந்தமிழ் –
செவ்விய தமிழ்; பசுந்தமிழ்; அர்த்தத்தைத் தெளிவாகக் காட்டுவது.
பெருமாளும் பிராட்டியும் சேர இருக்க இளைய பெருமாள் அடிமை செய்தாற்போலே,
சேர்த்தியிலே அடிமை செய்யப் பெறுவர் என்பார் திருமாலுக்கு அடிமை செய்வார்’ என்கிறார்.

அன்யாபதேச பதிகம் மேலும் தொடங்கும் -மாலுக்கு – –
ஆண் பாவனை -மகள் பாவனை தொடரலாம் –
இது அபூர்வம் -தோழி பாசுர பதிகம் -தானான தன்மைக்கு மாறாமல் திருத் தாயார் பதிகம்-

————————————————————————————

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

அச்யுதே அதி ப்ராவண்யம் சஹ
ஆத்மா அனுரத்த ஜனம் ஆத்மனி நிர் ஸ்பர்சிகத்வம்
தஸ்யாபி மானசாதயா அனுபவதஸ்ய
பாக்ய சம்ஸ்லேஷ திபி சித்த மனஸ் சரீர

அச்யுதே அதி ப்ராவண்யம் சஹ ஆத்மா அனுரத்த ஜனம் -தன்னிடம் ஈடுப்பட்ட தாய்மார்கள்
ஆத்மனி நிர் ஸ்பர்சிகத்வம்-தன்னிடம் ஆசை அறுத்து -தோழி பாசுரம்
தஸ்யாபி மானசாதயா அனுபவதஸ்ய -கீழே கிருஷ்ண சேஷ்டிதங்களை பூர்ணமாக அனுபவித்து –
பாக்ய சம்ஸ்லேஷ திபி -பாஹ்ய சம்ஸ்லேஷம் கிடைக்காமல்
சித்த மனஸ் சரீர -முக் கரணங்கள் -மூன்றுமே ஆசைப்பட -சிந்தை சொல் செய்கை

பூர்வர் நிர்வாகம்-மானச சம்ஸ்லேஷம் -பாஹ்ய ஆசைப்பட்டு
ரசாந்திர அனுபவம் விபவம் -6-4- அர்ச்சை 6-5 பட்டர் நிர்வாகம் பார்த்தோம்
இதில் பூர்வர் நிர்வாகப்படி

———————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

சங்காது சக்ராது ததாக த்ரிதச ஸூ ரதயா சிந்து சாயித்வ பூம்நா
தத்வஜ உதார பாவாத் அருண சரசிஜ அஷயத்வா
சின்நேன தேவ தேவிபி சேவ்ய பாவாத்
அதி ஸூ லபதயா ஸ்வேஷூ அதி ஸ்நிக்த பாவாத்

1–சங்காது சக்ராது–தவள ஒண் சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே

2–ததாக த்ரிதச ஸூ ரதயா–தேவ தேவ பிரான் என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக்கொசிந்து கரையுமே-

3-சிந்து சாயித்வ பூம்நா–திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும் திசை ஞாலம் தாவி அளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங்கண் நீர் மல்க நிற்குமே

4-தத்வஜ உதார பாவாத்–கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்துகந்து உண் மகிழ்ந்து குழையுமே

5–அருண சரசிஜ அஷயத்வா–இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண் பிரான் இருந்தமை காட்டினீர்

6–7–சின்நேன தேவ–சின்னமும் திரு நாமமும் –வைகல் நாடொறும்
வாய்க் கொள் வாசகமும் மணி வண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!–என்றும்
அவன் சின்னமும் திரு நாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–என்றும்
-மணி வண்ணன் நாமம்- ஆறாவது ஏழாவது பாசுரம் சுருக்கம்

8-தேவிபி சேவ்ய பாவாத்–கருந்தடங் கண்ணி கை தொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும்
இருந்திருந்து அரவிந்தலோசந! என்றென்றே நைந்திரங்குமே–ஸ்ரீ பூமி நீளா -பிறந்திட்டாள்

9–அதி ஸூ லபதயா–துரங்கம் வாய் பிளந்தானுறை தொலை வில்லு மங்கலம் என்று தன்
கரங்கள் கூப்பித்தொழும் அவ்வூர்த் திருநாமம் கற்றதற் பின்னையே

10-ஸ்வேஷூ அதி ஸ்நிக்த பாவாத்–பின்னை கொல்?நில மா மகள் கொல்? திருமகள் கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயங்கொலோ? இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்–

விகட நா பாந்த்வம் -திருக் குணம் -நெருக்கமான உறவைக் காட்டி ஔபாதிக உறவை அறுத்து அருளினான் –

—————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 54-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில் ஸ்ரீ பகவத் விஷயத்தில் ப்ராவண்யத்தை அருளிச் செய்த படியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
கீழ் தம்முடைய த்ருஷ்ணையாலே ஸ்ரீ கிருஷ்ண குண சேஷ்டிதங்களை மண்டி அனுபவிக்க (6-4)புக்க இடத்தில்
குடிக்கின்ற தண்ணீர் விக்கிப் பாரவஸ்யத்தை விளைவிக்குமா போலே-அவை சைதில்யத்தை விளைக்க
அத்தாலே கலங்கி-அடியே பிடித்து-தமக்கு ஸ்ரீ பகவத் விஷயத்தில் கரண த்ரயத்திலும் யுண்டான
பிராவண்ய அதிசயத்தை-அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற-துவளில் மா மணி மாடத்தில் அர்த்தத்தை
துவளறு சீர் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –

——————————————————

துவளறு சீர் மால் திறத்துத் தொன்னலத்தால் நாளும்
துவளறு தன் சீலம் எல்லாம் சொன்னான் -துவளறவே
முன்னனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன் அதில்
மன்னு முவப்பால் வந்த மால்—55-

———————————————————–

வியாக்யானம்–

துவளறவே முன்னனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன்–மன்னு முவப்பால் வந்த மால்
துவளறு சீர் மால் திறத்துத் தொன்னலத்தால் நாளும்
துவளறு தன் சீலம் எல்லாம் சொன்னான்- என்று அந்வயம்
(தனது சீலத்தை தானே சொல்லிக் கொள்கிறார் -பூர்வர் போர மகிழ்ந்த பதிகம் இதனாலே )

துவளறவே –
மயர்வற மதி நலம் அருளப் பெறுகையாலே –என்னுதல்
அந்ய பரதை யாகிற குற்றம் அறுகையாலே-என்னுதல் –

முன்னனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன் -மன்னு முவப்பால் வந்த மால்
முந்துற முன்னம்
பொய் நின்ற ஞானம் தொடங்கி–இவ்வளவும் அனுபவத்தில் அவஹாகித்த ஸ்ரீ ஆழ்வார் –
அதாவது –
நிகரிலவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே-1-7-10- -என்றும்
பரமன் பவித்திரன் சீர் செடியார் நோய்கள் கெட படிந்து குடைந்தாடி அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே -2-3–என்றும்
சீரீதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப் பகல் வாய் வெரீஇ -2-7–என்றும்
துயரமில் சீர் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் 3-10–என்றும்
வீவில் சீரன் மலர்க்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவில் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன் -4-5–என்றும்
தக்க கீர்த்தி குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-5-5- -என்றும்
புகர் கொள் சோதிப் பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும் நுகர வைகல் வைக்கப் பெற்றேன் -6-4–என்றும்
இப்படி யாயிற்று
அந்நாள் தொடங்கி இந்நாள் தோறும்–
இணை அடிக்கே அன்பு சூட்டி-
அன்பு பாலே போல் சீரில் பழுத்த படி –
இப்படி குண அனுபவத்தாலே தமக்கு–மாறும் நிகரும் இன்றி-நித்ய மத முதிதராய்-மால் ஏறி

துவளறு சீர் மால் திறத்துத் தொன்னலத்தால் –
ஆஸ்ரிதர்க்கு அனுபாவ்யம் ஆகையாலே–குற்றம் அற்று-ஹேய பிரத்ய நீகனான
கல்யாண குண யுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்திலே ஸ்வாபாவிக பக்தியாலே –

நாளும் துவளறு தன் சீலம் எல்லாம் சொன்னான்-
நாள் தோறும் தாம் அவ் விஷயத்தில் பிராவண்யத்தை உற்று இருக்கிற தம்முடைய ஸ்வபாவம் எல்லாம் அருளிச் செய்தார் –
ராமேதி ராமேதி சதைவ புத்யா விசிந்தய வாசா ப்ருவதீ -என்றும்
ஏகஸ்த ஹ்ருதயா நூநம் ராமமேவா நுபஸ்யதி -என்றும் சொல்லுமா போலே

1-தாமரைத் தடம் கண் என்றும் குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமிறுமே -என்றும்
2-தேவ தேவ பிரான் என்றே நிமியும் வாயோடு கண்கள் நீர் மல்க நெக்கொசிந்து கரையுமே -என்றும்
3-நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடும் கண்ணீர் மல்க கிற்குமே -என்றும்
4-கண்ணபிரான் என்றே ஒற்கம் ஒன்றுமிலள் உகந்து உகந்து உண் மகிழ்ந்து குழையுமே -என்றும்
5-அன்று தொட்டு மையாந்திவள் நுழையும் சிந்தையள் அன்னைமீர் தொழும் அத்திசை நோக்கியே -என்றும்
6-வைகல் நாடொறும் வாய்க்கொள் வாசகமும் மணி வண்ணன் நாமமே இவள் அன்னைமீர் –என்றும்
7-அவள் சின்னமும் திரு நாமமும் இவள் வாயனகள் திருந்தவே -என்றும்
8-இருந்து இருந்து அரவிந்தலோசன் என்று என்றே நைந்து இரங்குமே -என்றும்
9-துலை வில்லி மங்கலம் என்று தன் கரங்கள் கூப்பி தொழும் அவ் ஊர் திரு நாமம் கற்றதர் பின்னையே -என்றும்
10-துலை வில்லி மங்கலம் சென்னியால் வணங்கும் அவ் ஊர் திரு நாமம் கேட்பது சிந்தையே -என்றும்
11-சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும் தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூரவர் சடகோபன் -என்றும்
இப்படி இவருக்கு த்ரிவித கரணத்தாலும் யுண்டான-பிராவண்ய ஸ்வபாவத்தை எல்லாம் அருளிச் செய்தார் -என்கை –

இத் திருவாய்மொழி ஆழ்வார் பிரகிருதி சொல்கிறது என்று நம் முதலிகள் எல்லாரும் போர விரும்பி இருப்பார்கள் –என்று
இறே ஸ்ரீ ஈட்டிலே அருளிச் செய்தது –

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -133- திருவாய்மொழி – -6-5–1….6-5–5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்

June 16, 2016

இத் திருவாய்மொழிக்கு முன்னும் பின்னும் எல்லாம் எம்பெருமானைக் கவி பாடினார்;
இத் திருவாய்மொழியில் தம்முடைய படி சொல்லுகிறார்.
சிம்ஹாவலோகந நியாயத்தாலே “பொய்ந்நின்ற” என்னும் பாசுரம் தொடங்கி இவ்வளவும்
வரத் தமக்குப் பகவத் விஷயத்தில்
உண்டான பிராவண்யத்தின் மிகுதியை அந்யாபதேசத்தாலே பேசுகிறார்.
“இத்திருவாய்மொழி, ஆழ்வார் தன்மை சொல்லுகிறது” என்று நம் முதலிகள் எல்லாரும்
போர விரும்பி இருப்பர்கள்.
பகவானுடைய திருவருளாலே அடைந்த ஞானத்தினை யுடையவராய்,
“வேத வாக்குக்கள் அந்த ஆனந்த குணத்தினின்றும் திரும்பின” என்கிற விஷயத்தை
மறுபாடு உருவப் பேசினதாமே வேணுமாகாதே தம்படி பேசும் போதும்.

ஸ்ரீஜனகராஜன் திருமகள் பிறந்த சமயத்திலே சோதிடர்களை அழைத்து, ‘இவள் ஜீவிக்கும்படிகள் என்?’ என்று கேட்க,
‘இவள் ஜீவிக்கும் படிகளில் ஒரு குறை இல்லை, எல்லா வுலகங்களையுமுடைய ஒருவனைக் கைப் பிடிக்கவும் கடவள்;
இங்ஙனே இருக்கச் செய்தேயும் வனவாச ரசம் அநுபவிக்கக் கடவள்’ என்றார்கள்;
வனவாச க்ருத உத்ஸாகம்-கொண்டு இருந்தேன் -சீதை பெருமாள் இடம் -கச்ச ராம மயா ஸகா-
அப்படியே, இப் பெண் பிள்ளை பிறந்த போது இவள் திருத் தாயார் உள்ளிட்டார், காரணம் அறிந்தவர்களை அழைத்து,
‘இவள் ஜீவிக்கும்படிகள் எங்ஙனே?’ என்று கேட்க, ‘எல்லாம் நன்றாகத் தலைக் கட்டக் கடவன;
ஆனாலும், இவளுக்கு ஓர் அகால மரணம் உண்டு; அது தப்பினாளாகில் சுகமே ஜீவிக்கும்.
அதாவது, திருத் தொலை வில்லி மங்கலத்திற் கொடு போகாதே ஒழியப் பெறில் இவளைப் பெறலாம்’ என்றார்கள்.

1-இவள் மரணத்தையே அடையினும் திருத் தொலை வில்லி மங்கலத்தில் கொடு போகாது ஒழிய வல்ல குடி அன்றே;
‘இவள் அங்கே புக்கு இறப்பினும் அமையும்’ என்று இருப்பார் சிலர் அன்றோ.
பிராட்டி வனவாச ரசம் அநுபவியாத அன்றே அன்றோ இவள் திருத் தொலை வில்லி மங்கலத்தில் புகாதொழிய வல்லளாவது.
ஸ்ரீநளர் வார்த்தையை நினைப்பது. பெருமாள் சோகிக்கை-மட்டும் சம்பவிக்கலாமோ –நான் தொட்ட மலையும் மிதக்கும் –
கல்பிதம்-அதிக்ரமம்-நளன் நீலன் சொன்ன வார்த்தை-கர்ம பலனும் கிருபா பலனும் அனுபவித்தே தீரும்
விதி வாய்கின்ற்து காப்பார் யார் -விஸ்வகர்மா மகன் -பிது ஸாமர்த்யம்-நளன்-சேது பந்தம் செய்ய வல்லன்-கல்பிதம்-
தேஹாத்மாபிமாநிகளாய் இருப்பார்க்கு எத்தனையேனும் அறிவு பிறந்தாலும்
‘நான் பருத்தவன், நான் இளைத்தவன்’ என்கிற நிலை மாற்றப் போகாதவாறு போலே,
2-இவரையும் எல்லா வகையாலும் உகந்தருளின நிலங்களிலே நின்றும் திருஷ்டத்தில் குறை சொல்லி மீட்கப் போகாது.
சிற்றின்பத்திலே ஈடுபாடு உடையராயிருப்பார் ‘அதர்மம்’ என்றும், ‘பழி’ என்றும், ‘மேல் நரகம்’ என்றும் சொன்னால்
சிற்றின்பத்தில் நின்றும் மீளார்களே அன்றோ.
3-இங்குக் குணாதிக விஷயமாகையாலே ஒரு குறை சொல்லி மீட்கப் போகாதே. —
கடியன் –ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்
‘குறை சொல்லுவோம்’ என்று நினைக்கிலும் குணங்களின் மிகுதியைச் சொல்லுமத்தனை அன்றோ.
அது பின்னை ஈடுபாட்டுக்குக் காரணமாமத்தனை அன்றோ.
4-பழியும் உண்டாயிடுக, மதிப்புக் கேடும் வருக; ஆனாலும், அது கண்டு மீள மாட்டாத
உறுதி யன்றோ இவளது. -அத்தியாவசாயம் –

அங்ஙனேயாகிலும், இவர்கள் இவ்விஷயத்தில் நின்றும் இவளை மீட்கப் பார்க்கிறது என்? என்னில்,
1-‘பருவம் நிரம்பாதிருக்கச் செய்தேயும் நம்மளவு அல்லாத அளவு கடந்த ஈடுபாடு இவளுக்கு விளையா நின்றது;
அது இவளை இழக்க வரின் செய்வது என்?’ என்னும்அச்சமாயிற்று இவர்களுக்கு ஓடுகிறது.
2-இனித்தான், அளவு கடந்த ஈடுபாடு சாதனத்தை அநுஷ்டிப்பார் கையிலே கிடக்கக் காண்கையாலே
‘இவள் சாதன புத்தியால் இழியின் செய்வது என்?’ என்னும் அச்சத்தாலே மீட்கவும் பார்ப்பரே.
‘இந்த ஈடுபாடு ஸ்வருபத்திற்கு விரோதமானாலன்றோ சாதனத்தில் சேர்வது என்றே அன்றோ இருப்பது இவள்.
‘ஸ்வருப பேதத்துக்கு இசைந்தால் ஸ்வருபத்திற்குத் தகுதியான காரியங்களுக்கு இசைய வேண்டாவோ?’
என்று காணும் இவள் கருத்து.
சேஷிக்கு உபாயமாயிருத்தல் ஸ்வருபத்திற்குச் சேர்ந்தது ஆன பின்பு,
சேஷனாயிருப்பவனுக்கும் பிராவண்யம் ஸ்வருபத்தில் கட்டுப்பட்டதாகக் கடவதன்றோ.

இனித்தான், மேல் திருவாய்மொழியோடு இத் திருவாய்மொழி சேர்ந்திருக்கும்படி என்? என்னில்,
கிருஷ்ணனுடைய குணங்களை அநுபவியா நிற்கச் செய்தே, குடிக்கிற தண்ணீர் விக்கி
அது தானே பரவசமாந் தன்மையை விளைப்பிக்குமாறு போலே,
அந்த அநுபவம் தானே வேறு ரசத்திலே மூட்டத் தமக்குப் பிறந்த துன்பத்தை அந்யாபதேசத்தாலே பேசுகிறார்.-
ராசாந்தாரம் -அர்ச்சாவதாரம் -தாய் பேச்சாககவும்

அதாவது, “பொய்ந்நின்ற ஞானம்” தொடங்கி இவ்வளவும் வர, பகவத் விஷயத்தில் பூர்ண அநுபவம் இன்றிக்கே இருக்கையாலே,
தமக்குப் பிறந்த பிராவண்யத்தின் மிகுதியை அருளிச் செய்கிறார். –பட்டர் நிர்வாகம் இது –
அன்றிக்கே,
மேலே அநுபவித்த அநுபவம் தான் மானச அநுபவ மாத்திரமாய்,
புறத்திலேயும் அநுபவிக்க வேண்டும் என்ற அபேக்ஷை பிறந்து,
அது பெறாமையால் வந்த கலக்கத்தை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் என்னலுமாம். –பூர்வர் நிர்வாகம்

இப் பெண் பிள்ளையின் தன்மையை அறியச் செய்தேயும் தாய்மார் விழுக்காடு அறியாமையாலே
திருத் தொலை வில்லி மங்கலத்திலே கொடுபுக, அவள் “அரவிந்தலோசந” என்பது, “தேவபிரான்” என்பது:
நீர்மையைச் சொல்லுவது, மேன்மையைச் சொல்லுவது,
ஒப்பனை வாசி அறிந்தமை தோற்றச் சொல்லுவதாய் வாய் வெருவ,
இவள் நிலை இருந்தபடியால் ‘இவள் கிடைக்க மாட்டாளே அன்றோ’ என்று தாய்மார் வெறுத்துத் தோழிபாடே வந்து,
‘இவள் படி உனக்குத் தெரியாமை இல்லை; இவளை மீட்கலாம் விரகு சொல்ல வேண்டும்’ என்ன, தோழி,
‘நீங்களே இவளுக்குப் பிராவண்யத்தை உண்டாக்கி இப்போதாக இவளை மீட்க ஆசைப்படுகிற இதனால் பிரயோஜனம் என்?
முன்னரே விலக்கப் பெற்றிலீர்; இனி, இவள் பக்கல் நசை அறுங்கோள்;
இவளைத் தடை செய்யப் பாராமல் நீங்களும் துணையாக இருந்து இவள் உஜ்ஜீவிக்கும்படி பண்ணப் பாருங்கோள்’ என்கிறாள்.

தாய்மார் கேட்கத் தோழி அன்றோ சொல்லுகிறாள்;
பகவத் விஷயத்துக்குப் “பழையார், புதியார்” என்று இலர்; தேசிகர் சொல்ல ஆதரமுடையார் கேட்குமித்தனை.
ஆசசக்ஷேத ஸத்பாவம் லக்ஷ்மணஸ்ய மஹாத்மந:” என்று இளைய பெருமாள் படியை
ஸ்ரீ பரதாழ்வானுக்கு ஸ்ரீ குகப் பெருமாளன்றோ சொல்லுகிறார்.

ஆசசக்ஷே – வாக்கு இந்திரியத்திற்கு நில மல்லாததையும் சொல்லலாமாகாதே
“ஆசசக்ஷேத ஸத்பாவம் லக்ஷ்மணஸ்ய மஹாத்மந:
பரதாய அப்ரமேயாய குஹோ கஹன கோசர:”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 86 : 1.
ஸ்லோகத்திற்குப் பொருள் அருளிச் செய்கிறார் ‘வாக்கு இந்திரியத்திற்கு’ என்று தொடங்கி.
“மஹாத்மந:”என்கையாலே, நிலமல்லாமை தோற்றுகிறது. ‘சொல்லலாமாகாதே’ என்றது,சிறிது சொன்னான் என்றபடி.
அத – ஸ்ரீ பரதாழ்வான் தன்மை அறிந்த பின்பு.
ஸத்பாவம் – “இளமைப் பருவம் தொடங்கியே அதிக அன்புள்ளவராயிருந்தார்”
“பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்தோ லக்ஷ்மணோ லக்ஷ்மிவர்தந:
ராமஸ்ய லோகராமஸ்ய ப்ராதுர் ஜ்யேஷ்ட நித்யஸ:”- என்பது, ஸ்ரீராமா. பால. 18, 27.என்றும்,
“பரதந்திரனாக இருக்கிறேன்” “பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷஸதம் ஸ்திதே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 7.என்றும்
சத்தையோடு கூடியதாயிருக்கின்ற தன்மையைச் சொன்னான்.
லக்ஷ்மணஸ்ய மஹாத்மந: – கடலைக் கையாலே இறைக்கத் தொடங்கினான்.
பரதாய அப்ரமேயாய – ‘இன்னார் இன்னார்க்கு உபதேசிக்க’ என்று இல்லை ஆகாதே.
குஹோ கஹந கோசர: காட்டில் மரங்களின் வாசி அறியுமவர் இவர்கள் நிலை அறியும்படி நிலவரானார்.
அன்றிக்கே,
இராம விரஹத்தாலே ஒரு தூற்றடியிலே கிடந்தவன், தேசிகரைப் பெற்றவாறே தலையெடுத்துப் புறப்பட்டான் என்னலுமாம்.

பிராப்ய த்வரை-முறுகி -அதி மாத்ர பிராவண்யம் -ஆஸ்ரயம் அழியும் படி வருதல் –
உபாயத்திலே முதல் இடுதல் -செய்யுமாகில் அவத்ய கரமாய் முடியுமே
உபாய அத்யவசாய அனுகுணமாக -காட்டாற்று வெள்ளத்தை -வகைப்படுத்தி —
சம்பந்த ஞானத் உடன் சேர்ந்த உபாய அத்யவசாயம்
சம்பந்த ஞானம் தோழி உபாய அத்யவசாயம் தாய் -பிராப்ய த்வரை பதற்றம் -தலைமகள் –
பிரணவம் நமஸ்-சேர்ந்து தோழி தாய் இருவரும்
முதலில் பிராப்ய த்வரை சஹிதமாக -பகவத் பிரசாத லாபத துடிப்பு -குணாதிக வஸ்துவில் ஆழ்ந்து –
குணா அனுபவம் தூண்ட -உபாயத்தில் சேராதே -இவ்வஸ்தாபன்ன நிலை இதனால் –
உபாய அத்யாவச்யத்தில் கீழ் இத்தை அடக்க முடியாதே -தாயார் கீழ் இவள் அடங்க மாட்டாள் –
பிராப்த விஷய பிராவண்யம் ஸ்வரூபம் -சேஷத்வ பாரதந்த்ர்யம் -அவத்யம் இல்லை ஸ்லாக்கியம்
என்று அனுசந்தித்து அருளினாள் –

சம்பந்த உபாய பலங்களில் உணர்த்தி துணிவு பதற்றம் ஆகிற பிரஜ்ஞ்ஞா அவஸ்தைகளுக்கு
தோழி தாயார் மகள் என்று பேர் –133-
பஹூ வசனம் –
தோழிமார் அன்னையர் என்கிற பன்மை ரஷகத்வாதி பந்த வாத்சல்யாதி வ்யவஸாய புத்தி பேதத்தால் –135-
ரஷ்ய ரஷக பாவம் -அவ ரஷனே -ரஷகத்வம் -காரணத்வம்-சேஷத்வம் -சரீராத்மா பாவம் -நான்கு வித தோழிகள் உண்டே –
ஸ்வாமித்வம்- சௌசீல்ய- சௌலப்ய -வாத்சல்யம் -ஆஸ்ரய -ஆஸ்ரையண – சௌகர்ய ஆபாதாக குணங்கள் -அன்னையர் -பலர் –
சகி வெறி விலக்கி –ஆசையறுத்து-அறத்தொடு நின்ற மூன்றில் அனந்யார்ஹத்வமும்–134
தீர்ப்பாரை -சகி வெறி விலக்குதல் பதிகம் பார்த்தோம் –
இதில் ஆசை அறுத்து –
தர்மத்தோடு நின்று -குட்ட நாட்டுத் திருப்புலியூர் -கரு மாணிக்க மலை –8-9-
மூன்றுமே திவ்ய தேச பாசுரங்கள் -அதனாலே மா முனிகள் மன்னார்குடி ராஜகோபாலனுக்கு சமர்ப்பித்ததால் –

வாடி மெலிந்து பித்தேறி ஏறப் பேசிக் கட்டிழந்து கன்று சார்வதே வலித்தமை சாதனம் ஆமாமோ வென்று மாதா அஞ்சி
முறைப்பட்டு முறையிடுகிற ஏழில் அத்யாவசாயமும்

கரும் தடம் கண்ணி நாச்சியார்-தேவ பிரான் -அரவிந்த லோசனான் -இரட்டைத் திருப்பதி
கடித கடக வி கடனா பாந்தவம் அவ் வூரிலே த்வி குணம்-168-
அன்னையாரும் தோழிமாரும்-
சிந்தை யாலும் –இத்யாதி –தேவ பிரானையே தாய் தந்தையாக அடைந்த சடகோபன்
சர்வ வித பந்து அவனே –
நவ திருப்பதி-இரண்டு-திவ்ய தேசம் திவ்ய தேச கணக்கில் ஒரே திவ்ய தேசம் –
துலை வில்லி -தராசு வில் கதைகள் -ஸூ பிரபவர் யஜ்ஞ்ஞம் -கலப்பை நிற்க வில்லும் தராசு தட்டும் –
தேவ தத்தை மனைவியும் -குபேரன் வணங்காமல் – சாபம் வில்லாகவும் தராசும் –
ஹவிர்பாகம் வாங்க -தேவாதி தேவன் வந்தால் தான் கொடுப்பதாக -சேவை சாதித்து -தேவ பிரான் -கொடுத்ததால் உகந்தோம் –
திருக் கண் மலர்ந்து உகப்பைக் காட்ட -அரவிந்த லோசனன் -இரட்டைத் திருப்பதி –
இருவருக்கும் மங்கலம் கொடுத்த திவ்ய தேசம் -திருக் குல திவ்ய தேசம் ஆழ்வாருக்கு

தஸ்ய உதித நாம –உயர்வற -பிறந்தார் உயர்ந்தே -உத் –
பிரதாந்யம்-உபதேசம் பெற்று ஆர்த்தமாக ஜீவனுக்கு -சப்தமாக பரமாத்மா -அனன்யார்ஹ சேஷத்வம் எளிதில் புரியாதே –
சேஷி சேஷன் வாதம் பண்ண வேண்டாம் -அனன்யார்ஹ சேஷத்வம் புரிய வைப்பதே கஷ்டம் –
அதனால் உகாரம் சொல்லி மகாரம் சொல்லி அகாரம் சொல்லி முதல் பாசுரம் –
27 -திருமந்தரம் -மணி வல்லி பேச்சு வந்தேறி இல்லையே –
நாயகி பாவம் -வெற்பு என்று வேங்கடம் பாடினேன் –சங்கை -ஆன் பாவம் தான் -முன்னும் பின்னும் ரீதி பங்கம் கூடாதே
பூர்ண -நாயகி பாவ த்ரயம் -நம் ஆழ்வார் இடம் மட்டுமே -தோழி பாவம் ஆர்த்தமாக திருமங்கை ஆழ்வார்

மூன்றில் ஏழில் பதினேழில் -தோழி / தாயார் /தலை மகள் –
அனன்யார்ஹத்வத்வம் –அத்யவசாயம் -த்வரை –

———————————————————————————————–

துவளில் மா மணி மாடமோங்கு தொலை வில்லி மங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;
தவள ஒண் சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1-

அசாதாரண சிஹ்னங்களில் அகப்பட்டு -தோற்றவளை நீங்கள் ஆசைப்பட வேண்டாம் –பெற்றும் பேற்றை இழந்தால் போலே
உடைய நங்கையார் -அடியார் பேறு பெற்று போனோம்
துவளில் மா மணி மாடமோங்கு தொலை வில்லி மங்கலம் தொழும்-தோஷம் இல்லாத -மஹார்க்கம்– தொழா நிற்கும்
முக்த ஜீவன் நித்ய ஜீவன் போலே — -துவளில் மணி மாடம் –தூ மா மணி மாடம்-
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;-அடியிலே கொண்டு போய்க் காட்டி -அதி மாத்ர பிராவண்யம்
அன்னை என்பதால் மட்டும் கேட்க மாட்டாள் -ஸ்வரூப க்ருதம் ஆகாதே -நியமனத்தில் -ஆசை விட்டு -விதேயை இல்லை –
தவள ஒண் சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்-வெளுத்த நிறத்தை உடைய தார்ச நீயமான -சக்கரம் வாசா மகோசரம்
அடை மொழி சொல்லாமல் -விசாலமான திருக் கண்கள்
இவை பெண் வார்த்தைகள் -சேர்த்தி -அழகில் ஈடுபட்டு உக்தி மாத்ரத்தால்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே-நெய்தல் புஷ்பம் —அவனது தாமரைக் கண் -தளர்த்தியால் நின்று நின்று
பிரதி ஷணம் ஆத்மா தாரணம் பண்ணி நெஞ்சில் ஆர்த்தி சொல்ல முடியாமல் கனைத்து குமுறி -கண்ணீர்
உகும் -இரும் பதம் பிரித்து த்ரவ்ய த்ரவ்யமாய் -தளர்ந்து விழா நின்றாள்
வெளுப்பு அழகு -சங்குக்கும் சக்கரத்துக்கும் அடை மொழி யாகவுமாம்

குற்றம் இல்லாத பெரிய மாணிக்கங்கள் பதித்த மாடங்கள் உயர்ந்து விளங்குகின்ற திருத் தொலை வில்லி மங்கலம் என்னும் திவ்விய தேசத்தைத்
தொழுகின்ற இவளிடத்தில், அன்னைமீர்! உங்களுக்கு இனி ஆசை வேண்டா; நீங்கள் ஆசையை விடுங்கோள்;
வெண்ணிறத்தை யுடைய பிரகாசம் பொருந்திய சங்கு என்றும் சக்கரம் என்றும் தாமரை போன்ற விசாலமான திருக்கண்கள் என்றும்
சொல்லிக் கொண்டு அழகிய குவளை மலர் போன்ற கண்களிலே தண்ணீர் தேங்கும்படி நின்று நின்று குமுறுவாள்.
அன்னைமீர்! தொழும் இவளை உமக்கு ஆசை இல்லை; இனி நீர் விடுமின் என்றும், கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறும் என்றும் கூட்டுக.
இவளை, வேற்றுமை மயக்கம். ‘இவளை விடுமின்’ என்று கூட்டி நேரே பொருள் கோடலுமாம்.
இத்திருவாய்மொழி, எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரியவிருத்தம்

இவள் தன்மை அறியாதே திருத் தொலை வில்லிமங்கலத்தைக் காட்டின பின்பு
உங்கள் நல் வார்த்தைக்கு இவள் மீளுவாளோ? என்கிறாள்.

துவள் இல் மா மணி மாடம் ஓங்கு தொலை வில்லி மங்கலம் தொழும் இவளை உமக்கு ஆசை இல்லை இனி நீர் விடுமின் –
‘உனக்கு இப்போது உதவாதபடி தூரத்திலே யுள்ளவை’ என்னுதல்,
‘சென்ற காலத்தில் அவதாரங்கள்’ என்னுதல்,
உகந்தருளின நிலங்களிலே உள்ளே நிற்கிறவனளவிலே ஈடுபட்டவளாதல் செய்தாளாய் மீட்க நினைக்கிறீர்கோளோ?
அசலிட்டுத் திருத் தொலை வில்லிமங்கலத்தை விரும்புகிற இவளை எங்ஙனே மீட்கும்படி?
சரமாவதியிலே நிற்கிற இவளைப் பிரதமாவதியிலே நிற்பார் மீட்கவோ?
அவ்வூர்ச் சரக்கிலே குற்றமுண்டாகிலன்றோ இவளை மீட்கலாவது?

குற்றமுண்டாகிக் கழிந்தது அன்று.
ஜீவன் பரன் என்னும் இருவர்க்கும் பாபம் இல்லாமை முதலானவைகள் உண்டாயிருக்கச் செய்தே,
ஜீவாத்மாவுக்குக் குற்றம் உண்டாகிப் பகவானுடைய திருவருளாலே அது கழியும்;
பரமாத்மா குற்றங்கள் சேரத் தகுதி இல்லாதவனாகவே இருப்பான்;
அப்படியே யாயிற்று, அவ்வூரில் மாடங்களில் இரத்தினங்களும்.
துவள்-குற்றம்.
இல் – அது இன்றிக்கே இருக்கை.
மா மணி – ஒளியே அன்று; பெரு விலையனுமாயிருக்கும்.

ஓங்கு –
அவ்வூரில் மாடங்களின் நிழலீடு திருநகரியளவும் வந்து காணும் இருப்பது.
‘இடமணித்து’ என்று போலே காணும் நாயகன் பிரிந்தது. மாளிகையின் நிழற் கீழே இட்டு வைத்துக் காணும் பிரிந்தது.
அவன் பிரிந்த போது தொடங்கி அவ்வூரையும் அவ்வூரில் மாடங்களையும் அவற்றில் மாணிக்கங்களையும் பார்த்து,
வைத்த கண் வாங்க மாட்டாதே இருந்தாள் போலே காணும்.
5உத்சவம் கருட சேவை 6 உத்சவம் பிரியா விடை -இரண்டு பல்லக்கு போகும் வரை -வைத்த கண் வாங்காமல்
இன்றும் பார்த்துக் கொண்டே ஆழ்வார் இருப்பார்
துருப்புக்கூடு போலே அவ்வூரை அன்றோ இவள் விரும்பியது என்பாள் ‘தொலை வில்லி மங்கலம் தொழும்’ என்கிறாள்.
துருப்புக்கூடு–தூற்றாப –இன்னார் இனியார் என்னாமல் அனைவரையும் விரும்பி –

‘கறுத்திருக்கும், வெளுத்திருக்கும்’ என்னுமாறு போலே,
தொழுகையே நிரூபகமாக வுடையவள் என்பாள் ‘தொழு மிவளை’ என்கிறாள்.

“கை கூப்பினவனும் வணங்கினவனும் உட்கார்ந்திருக்கிற வனுமானவனைப் பார்த்துச் சொன்னார்”
இதி ஏவம் உக்த: மாத்ரா இதம் ராமோ ப்ராதரம் அப்ரவீத்
ப்ராஞ்ஜலிம் ப்ரஹ்வ மாஸீநம் அபிவீக்ஷ்ய ஸ்மயந்நிவ”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 4 : 42.என்னுமாறு போலே;
சிந்தனை முகத்தில் -தேக்கி -போயினை -என்ன பொழுது புகழினை -ஓர் ஆயிரம் ராமன் நின் கேழ் ஒப்பாரோ
நம்பியும் நாயகனை ஒக்கின்றான் -அயல் நின்றான் தம்பியையும் ஒக்கின்றான் -விம்மி பொருமி நின்றான் –

அழும் தொழும்-இளைய பெருமாளுக்கு சாம்யம் -நாயனார்

“கண புரம் கை தொழும் பிள்ளை” –பெரிய திருமொழி, 8. 2 : 9.-என்னுமாறு போலே.
யாரே இருவர் கண புரம் பேச அந்த சொல்லைக் கேட்டே கை தொழும் -முக்கோட்டை அவருக்கு அது இவருக்கு இது –
இவளை மீட்கப் பார்ப்பதே, இவள் படியைப் புத்தி பண்ணி யன்றோ மீட்பது!

கை தொழும் பிள்ளை-
இவள் படி கை மேலே காணா நிற்கச் செய்தே நீங்கள் மீட்கத் தேடுகிறபடி எங்ஙனே?

இவளை நீர்
பழி சொல்லப் பணைக்கிறவள் இவள், பழியை நீக்குவதற்குப் பார்க்கிறீர்கோள் நீங்கள் என்பாள் ‘இவளை நீர்’ என்கிறாள்.
நறையூரும் பாடுவாள் நவில்கின்றாள் –

இனி
தொழுகை தேக யாத்திரை யாதற்கு முன்னே யன்றோ மீட்கப் பார்க்க வேண்டும் என்பாள்
‘இனி’ என்கிறாள்.

அன்னைமீர்
பகவத் விஷயத்தில் மூழ்குதல் என்று ஒன்று இல்லையோ? நியமித்தல் நியமிக்கப்படுதல் என்ற தன்மையேயோ வேண்டுவது;
பெற்றவர்கள் என்னா, பொருத்தமில்லாத காரியங்களில் இழியக் கடவதோ? என்பாள் ‘அன்னைமீர்!’ என்கிறாள்.

உமக்கு ஆசை இல்லை-
தக்க பருவத்தினை யுடையவர்களானார் பக்கல் பெற்றவர்களுக்குச் சம்பந்தம் உண்டோ?
புக்க இடத்தே ஈடுபட்டவர்களாகா நிற்க, பெற்ற சம்பந்தம் கொண்டு மீட்கவோ என்பாள் ‘உமக்கு ஆசை இல்லை’ என்கிறாள்.

விடுமினோ –
இவ்வளவில் நீங்கள் கை வாங்க அமையும்.பெற்ற தாய்மார் ‘விடுமின்’ என்ற அளவிலே விடார்களே அன்றோ;
பின்னையும் நிர்ப்பந்திக்க வேண்டா, இவளுக்கு ஓடுகிற ரசத்தைக் கண்டு கொடு நிற்கப் பாருங்கோள் என்கிறாள் என்றது,
இவளுடைய அனுபவத்திற்குத் தண்ணீர்த் துரும்பு ஆகாதே இதனைக் கண்டு கொடு நிற்க அமையும் என்கிறாள் என்றபடி.
‘எங்களை ‘ஆசைப்பட வேண்டா, விடுங்கோள்’ என்கிறது என்? என்னில்,
இவள் பேச்சிலும் நினைவிலும் நீங்களாதல் நானாதல் உண்டோ?
“புத்திரர்களையும் மனைவியையும் துறந்து” என்னும் நிலை யன்றோ இவளது!
“த்யக்த்வா புத்ராம்ஸ்ச தாராம்ஸ்ச ராகவம் ஸரணம் கத:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 17 : 14.

தவளம் ஒண் சங்கு –
கரிய நிறமுடைய திருமேனிக்குப் பரபாகமான வெண்மையை யுடைத்தாய்,
“உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்” என்கிற அழகை யுடைத்தான சங்கு.

சக்கரம் –
அங்ஙனம் ஒரு விசேடணம் இட்டுச் சொல்ல வேண்டாத அழகை யுடைய சக்கரம்.

என்றும் –
‘இவற்றைக் காண வேணும்’ என்னுதல்;
‘இவற்றோடே வர வேணும்’ என்னுதல் சொல்ல மாட்டுகின்றிலள் பலக் குறைவாலே.

தாமரைத் தடம் கண் என்றும் –
அந்த ஆழ்வார்கள் அளவும் வந்து அலை எறிகிற திருக் கண்கள்.
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் சொன்னதும்
பங்கயக் கண்ணன் -ஆங்கு அலரும் குவியும் -ஸூர்ய சந்த்ரர்கள் அன்றோ இவர்கள் –
தாமரையை ஒரு வகைக்கு ஒப்பாகச் சொல்லலாய், அநுபவிக்கின்றவர்கள் அளவன்றிக்கே இருக்கின்ற
திருக் கண்கள் ஆதலின் ‘தடம் கண்’ என்கிறாள்.
ஒரு மலை எடுத்தாற் போலே சொல்லுக்குச் சொல்லு தளர்ந்து நடு நடுவே விட்டு விட்டுச் சொல்லுகிறாள்
என்பாள் ‘என்றும் என்றும்’ என்கிறாள்.
திவ்வியாயுதங்களையும் கண்ணழகையும் காட்டியாயிற்று இவளைத் தோற்பித்தது.

குவளை ஒண் மலர் கண்கள் நீர் மல்க –
இந்தக் கண்களைக் கண்டால் தாமரைத் தடங்கண்கள் அன்றோ நீர் மல்க அடுப்பது?
கண்ணும் கண்ணீருமாய் இவள் இருக்கிற இருப்பைக் கண்டு கொண்டு இருக்க அன்றோ உங்களுக்கு அடுப்பது?
“பகவத் அநுபவத்தால் உண்டான சந்தோஷத்தாலே குளிர்ந்த கண்ணீரை யுடையவனாய்,
மயிர் கூச்சு எறிகின்ற சரீரத்தை யுடையவனாய், பரமாத்மாவின் குணங்களால் எப்போதும் ஆவேசமடைந்தவனாய்,
மக்களால் பார்க்கத் தகுந்தவனாய் இருப்பான் ஞானி” என்பது விஷ்ணுதத்வம்.
“ஆஹ்லாத சீத நேத்ராம்பு: புளகீக்ருத காத்ரவான் ஸதா பர குணாவிஷ்டோ
த்ரஷ்டவ்ய: ஸர்வதேஹிபி:”-என்பது, ஸ்ரீ விஷ்ணு தத்வம்

இதனால், எப்பொழுதும் தரிசனம் செய்துகொண்டு இருப்பதற்கு ஒரு தேசம் தேடிப்
போக வேண்டா காணும் என்பதனைத் தெரிவித்தபடி.

குவளைப் பூப் போலே அழகிய கண்கள் நீர் மல்க.
அவள் தன்னுடைய பெண் தன்மையைக் காற் கடைக் கொள்ள, நீங்கள் எங்ஙனே மீட்கப் பார்க்கும்படி?
கண்ண நீர் பாய்கையாவது, பெண் தன்மை அழிதலே அன்றோ.

நின்று நின்று குமுறும் –
பேச்சுப் போய்க் கண்ண நீராய்,
கண்ண நீர் போய்த் தடுமாறுகிற நிலையிலே மீட்கப் போமோ?

இராஜ கோஷ்டியிலே “உகும், இறும்” என்று சிலர் பொருள் சொல்ல,( உருகும் தளர்ந்து விழும் )
விக்கிரம சிங்கன் என்பான் ஒருவன்,
‘அங்ஙன் அன்று,கன்றைக் கடக்கக் கட்டி வைத்தால் முலைக் கண் கடுத்துப் பசு அலமந்து படுமாறு போலே,
உள்ளோடுகிற கிலேசம் வாய் விட மாட்டாதே நோவுபடுகிற இவளுக்கு இது வார்த்தையோ?’ என்றான்.
பெரு வெள்ளத்தில் சுழிக்குமாறு போலே, அகவாயில் உள்ளது வெளியிட மாட்டாள்; உள்ளே நின்று சுழிக்கிறபடி.
கனைத்து இளம் கற்று எருமை கன்றுக்கு இரங்கி –
கஜேந்த்திரன் -பெரிய திருவடி வேகம் போகாமல் அவன் கனைத்தால் போலே –

தொலை வில்லி மங்கலம் தொழும்’ என்கையாலே, சரீரத்தின் செயல் சொல்லிற்று;
‘தவள ஒண் சங்கு சக்கரம் என்றும், தாமரைத் தடங்கண் என்றும்’ என்று சொல்லுகையாலே,
வாக்கின் செயல் சொல்லிற்று;
‘குமுறும்’ என்கையாலே, மனத்தின் செயல் சொல்லிற்று.

பதிகம் நிகமத்திலும் சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும் -முக் கரணங்களின் வியாபாரம் –
தேவபிரானையே தந்தை தாயாக அடைந்தாள்

தம் படிகளைத் தாமே சொன்னால், தற் புகழ்ச்சி ஆகாதோ? என்ன, அதற்கு விடை அருளிச் செய்கிறார் ‘
பகவானுடைய’ என்று தொடங்கி. என்றது,
ஆப்தியின் பொருட்டுச் சொல்லுகிறாராகையாலே குற்றமில்லை என்றபடி.

மன்னுடை மன்றத்து ஓலைத் தூக்கினும்
தன்னுடை யாற்றல் உணரா ரிடையினும்
மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும்
தன்னை மறுதலை பழித்த காலையும்
தன்னைப் புகழ்தலும் தகும்புல வோற்கே.–என்பது நன்னூல்.

திருவடி தன்னைப் புகழ்ந்து பேசுதலையும் ஈண்டு ஒப்பு நோக்கத் தகும்.

5-3- இனி எனக்கு ஆசை இல்லை -என்று தானே தாய் இடம் சொல்கிறாள் –
இதில் தோழி தாயாருக்கு சொல்வதாக அமைத்து இருக்கிறாள் –

——————————————————————————————————————-

குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென் மொழியாளை நீர் உமக் காசை யின்றி அகற்றினீர்
திமிர் கொடாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவ பிரான் என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக்கொசிந்து கரையுமே.–6-5-2-

நித்ய ஸூரிகளுக்கு அனுபாவ்யமான தேவ பிரான் எழுந்து அருளி -மகோத்சவம் அன்று கொண்டு சென்று –
குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு-கம்பீரமான -நாநா வித ஓசை உத்சவ கோலாகலம் –
அமுத மென் மொழியாளை நீர் உமக் காசை யின்றி அகற்றினீர்-அமிர்தம் போலே சரசமாய்
பரம போக்யத்வம் -நித்யத்வம் இரண்டும் மிருதுவான -பாஷணம்-இனிமை அறிந்த நீங்கள் –
இந்த மென் மொழியில் ஆசை இல்லாமையால் -உங்கள் உடன் உறவு இல்லாமல் பண்ணினீர்கள் –
லௌகிகராய் இருந்து அவள் வழி போகாமல் -விபரீதமாக –
திமிர்கொடாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவ பிரான் என்றே-கணிசிக்காமல் -ஸ்தப்தோஸ்தி-நித்ய ஸூரிகள் -விஸ்வக்சேனர்
அனுபவம் கொடுக்கும் பெரிய உபகாரன் -அர்த்த உக்தி மாதரம் -நினைக்க சக்தை இல்லாமல்
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக்கொசிந்து கரையுமே.-நெழியும் வாய் –
விம்மல் பொருமல் -கரைந்து -நீர் பண்டம் -கட்டுக் குலைந்து தளர்ந்து –

மணி வண்ணன் வாஸுதேவன் வலையுளே அகப்பட்டு -நான் உமக்கு இல்லை -மகள் பாசுரம் –5-3- தாய் மார்கள் இடம் –
அத்யயன உத்சவம் நம்மாழ்வார் திருவரங்கம் திரும்பியதும் தானே திருத் தொலை வில்லி மங்கலத்தில் இன்றும் -அதே நாளில் நடக்கும்

ஒலிக்கின்ற ஒசையையுடைய திருவிழாவின் ஒலி பொருந்திய திருத்தொலை வில்லிமங்கலம் என்னும் திவ்விய தேசத்திற்குக் கொண்டு சென்று,
அமுதம் போன்ற இனிய மெல்லிய சொற்களையுடைய இவளை உங்களுக்கு ஆசை யில்லாமல் அகலும்படி நீங்கள் செய்தீர்கோள்;
இவள், திமிர் கொண்டாற் போன்று நிற்கிறாள்; தேவ தேவபிரான் என்றே நெளிகின்ற வாயோடு கண்களில் நீர்பெருகி
நிற்கும் படியாகக் கட்டுக் குலைந்து தளர்ந்து கரையா நிற்கின்றாள்.
ஓசைவேறு, ஒலிவேறு; “ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே” என்பது தேவாரம். கொண்டு புக்கு அகற்றினீர் என்க, நிமிதல் – நெளிதல்.

அவ்வூரில் கொடுபுக வேண்டினால், திருநாளிலே கொடு புகுவார் உளரோ? என்கிறாள்.

குமுறும் ஓசை விழவு ஒலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு –
“பின்பு அந்தப் பிராமணர்களுடைய கம்பீரமாயும் மதுரமாயுமிருக்கிற சப்தத்தை யுடையதும் தூரியம் என்னும் வாத்தியத்தின்
ஒலியோடு கூடியதுமான புண்யாகவாசன சப்தமானது அயோத்தியா நகரம் முழுவதும் பரந்தது”
தேஷாம் புண்யாஹ கோஷோத கம்பீர மதுரஸ்வந:
அயோத்யாம் பூரயாமாஸ துர்யநாதாநுநாதித:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 6 : 8.-என்கிறபடியே,
ஓத்துச் சொல்லுவார், சங்கீர்த்தனம் பண்ணுவார், பாடுவார், இயல் விண்ணப்பம் செய்வாராய்,
எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி விரவிக் கொண்டு எழுகின்ற ஒலியை யுடைய திருநாளில் ஆரவாரம்.
பாவியேன்! இந்த ஒலி செவிப் பட்டால் கொண்டு மீள அன்றோ அடுப்பது!
‘இவ்விடம் பிள்ளை கொல்லி’ என்று கூப்பிடுமாறு போலே காணும் ஒலி இருக்கிறது.
அவ் வூரும் திருநாளும் அங்குள்ளார் படுகிறதும் கண்டு வைத்து இவளைக் கொண்டு புகுவார் உளரோ?

கொண்டு புக்கு –
இவள் அறியாதிருக்க நீங்களே கொண்டு புக்கு.

அமுத மென் மொழி யாளை –
இவள் மொழி, கேட்டார்க்கு அழியாத தன்மையைக் கொடுக்குமே!
இந்த இனிய பேச்சைக் கேளாதபடி புண்ணியம் இல்லாதவர்கள் ஆவதே நீங்கள்.
அதாவது, அவ்வூரில் புக்க பின்பு இவர்களுடன் வார்த்தை சொல்லத் தவிர்ந்தாளாயிற்று என்றபடி.
“அழகானவளும் இனிய வார்த்தை பேசுகின்றவளும்” என்னும்படி காணும் இருப்பது.
“மதுரா மதுராலாபா கிமாஹ மம பாமிநீ மத் விஹீநா வராரோஹா ஹநுமந் கதயஸ்வமே”- என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 15.
இது கேட்க ஆசைப் பட்டிருக்குமவன் பெற்றுப் போனான்.

மென் மொழி-
அமுதத்தினின்றும் வேறுபாடு தோற்ற ‘மென்மொழி’ என்கிறார்கள்.
கேட்பதற்குத் தக்கதாய் இராதே அமுதம்:
வேணுமாகில் இனிமைக்கு ஒரு சொல்லுக்கு நிற்கிறது, மிருதுத் தன்மை இதற்கே உளதாமித்தனை.
கோபத்திலும் அவன் இடம் உள்ள பக்தி பிராவண்யம் –
சீதைக்கு மதுர பாஷணம் மட்டுமே -இவளுக்கு அமுத மென் மொழி —

நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர் –
இவள் பேச்சினைக் கேட்டுப் போகிற நீங்களே உங்களுக்கு இவள் வழிபடாதபடி செய்தீர் கோள்.

திமிர் கொண்டால் ஒத்து நிற்கும் –
“செயல் அற்றவன் ஆகிறாய்” என்னுமாறு போலே, அநுபவிக்கக்கூடிய விஷயத்தை
அநுபவிக்கவும் மாட்டாதே செயல் அற்றவளாய் நில்லா நின்றான்.
அன்றிக்கே,
“செயல் அற்றவன் ஆகிறாய்” என்கிறபடியே, பரிபூரண ஞானிகளைப் போலே இரா நின்றாள் என்னலுமாம்.

மற்று ஒன்றைக் காணா-என்னுமா போலே -ஸ்வேதகேது-உத்தாலகர் தந்தை கேட்க -ஸத்வித்யா பிரகரணம்
ஆதேசம் -ப்ரஹ்மம் அறிந்தாயோ -கேட்டதும் ஸ்ப்தோஸ்மி-
கார்யம் அறிந்து காரணம் அறியலாம் –நன்கு அனுபவித்து கண்ணும் காதும் வேறு எங்கும் போகாமல் –
ஸ்ருதி உபஜீவாந்தரம் –அனுபவத்தால் -ஞான பூர்த்தியால் பரபரத்து -ஸ்தப்தை -வெறித்து –
பதட்டம் இல்லாமல் ஆழ் கடல் போலே -இரண்டும்

மற்று இவள்-
இவள் இதற்கு மேலே வார்த்தை சொல்லில்.

தேவ தேவபிரான் என்றே –
இங்கே கண்டாலும் அயர்வறும் அமரர்கள் அதிபதி இங்கே வந்து சுலபனானான் என்றாயிற்று இவள் புத்தி பண்ணுவது.
நாயகனுடைய மேன்மைக்குத் தோற்று வார்த்தை சொல்லுகிற இவளை மீட்கப் போமோ?

என்றே நிமியும் –
‘அப் பெரியவன் இப்படிச் சுலபனாய்ச் சீலவானாவதே!’ என்று அந்தச் சீல குணத்தைச்
சொல்லப் புக்குத் தலைக்கட்ட மாட்டாதே, உதடு நெளிக்கும்.

நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க-
உதடு நெளிக்கிற வாயோடே கண்கள் நீர் மல்க.

நெக்கு –
கட்டுக் குலைந்தவளுமாய்.

ஒசிந்து –
பரவசப்பட்டவளாய்.

கரையும் – நீராகா நின்றாள்.

நெக்கு ஒசிந்து கரையும்-
பெரு வெள்ளத்தில் கரையானது நெகிழ்ந்து – ஒட்டு விட்டு ஒசிந்து- பொசிந்து -அவயவி ஆகாதபடி கரைந்து போமாறு போலே,
ஓர் அவயவியாக்கிக் காண ஒண்ணாதபடி கரைந்து போகா நின்றாள்.

——————————————————————————————-

கரைகொள் பைம்பொழில் தண் பணைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
உரைகொள் இன்மொழி யாளை நீர் உமக் காசை யின்றி அகற்றினீர்
திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும் திசை ஞாலம் தாவி அளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங்கண் நீர் மல்க நிற்குமே.–6-5-3-

இயற்கை அழகு உள்ள திவ்ய தேசம் -ரஷணம் அர்த்தமாக பிரவ்ருத்தி உள்ள அவன் –
கரைகொள் பைம்பொழில் தண்பணைத் தொலை வில்லி மங்கலம்கொண்டு புக்கு-திருப் பொருநல் கரை விழுங்கும் படி பரந்த பொழில் -குளிர்ந்த நீர் நிலம்
உரைகொள் இன்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்-லோகம் கொண்டாடும் -திருவாய்மொழி -சொல்ல பெரிய திரு மண்டபம்
கீதை ரெங்க விலாஸ் மண்டபம் -வாசி அறிந்தே நீங்கள் -ஆசை இல்லாமல் அகற்ற -தூரஸ்தமாக-அவள் போனதாக சொல்லாமல் தாய் விலக்கினதாக
திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும்திசை ஞாலம் தாவி அளந்ததும்-அர்த்திகள் கூக்குரல் -ஸ்பர்சத்தால்-திரை -ஷீராப்தி நாதன் –
அளந்து கொண்டு அனந்யார்ஹன் ஆக்கி -பசுக்கள் மேய்த்த பவ்யன்-
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங்கண் நீர்மல்க நிற்குமே.- -அவன் சேஷ்டிதங்களையே பரவசமாக பேசி நீர் மல்க ஸ்தப்தையாக இருக்கிறாள்

தாமிரபரணி ஆற்றின்கரையைத் தன்னகப்படுத்திக் கொண்டிருக்கிற பசுமைநிறம்பொருந்திய சோலைகளாற் சூழப்பட்ட குளிர்ந்த மருத நிலங்களையுடைய திருத்தொலைவில்லிமங்கலம் என்னும் திவ்விய தேசத்திலே கொண்டுபுக்கு, உலகத்தாரால் கொண்டாடப்படுகின்ற இனிய சொற்களையுடைய இவளை
நீங்கள் உங்களுக்கு ஆசையில்லாமல் அகற்றிவிட்டீர்கள்; அலைகளையுடைய திருப்பாற்கடலிலே சயனித்திருப்பதையும் திசைகளோடு கூடிய உலகத்தை
எல்லாம் தாவி அளந்ததையும் பசுக்களை மேய்த்ததையும் ஆகிய இவைகளையே பிதற்றிக்கொண்டு பெரிய கண்களிலே நீர்பெருக்கு எடுக்கும்படி நிற்கின்றாள்.
கொண்டுபுக்கு அகற்றினீர் என்க. பௌவம் – கடல், பிதற்றி நிற்கும் – பிதற்றிக்கொண்டு நிற்கின்றாள்.

திருநாளிலேதான் கொண்டு போக வேண்டினால், திருச் சோலை உள்ளிட்டுக் கொடு புகுவார் உளரோ? என்கிறாள்.

கரைகொள் பைம்பொழில் தண்பணைத் தொலைவில்லி மங்கலம் கொண்டு புக்கு –
திருப்பொருநல் கரையைப் பொழில் விழுங்கி இருக்கை.
கரையைப் பொழில் கொண்டாற்போலே, இவளைக் குணம் கொண்டபடி.
அன்றிக்கே,
அந்தத் திருச்சோலையை உங்களுடைய நல் வார்த்தைகளால் பேர்த்துக் கொடுப்போம் அன்றன்றோ
இவள் நிலையை உங்களால் பேர்க்கலாவது! என்னுதல்.
பரந்த பொழிலையும் குளிர்ந்த நீர் நிலங்களையுமுடைய திருத்தொலை வில்லி மங்கலத்திலே கொடு புக்கு.

உரைகொள் இன் மொழியாளை –
ஐந்து அர்த்தங்கள்-
1-“படிப்பதிலும் இசையுடன் பாடுவதிலும் இனிமையோடு கூடியதும்” என்னும் ஸ்ரீராமாயணம்
குத்துண்ணும்படியான பேச்சு என்னுதல்;
“பாட்யே கேயே ச மதுரம் பிரமாணை: த்ரிபி: அந்விதம்”-என்பது, ஸ்ரீராமா. பால. 4 : 8.
அன்றிக்கே,
2-பொருளில் இழிய வேண்டாமல் ‘உரையே அமையும்’ என்னும் படியான பேச்சு என்னுதல்;
பர வ்யூஹ விபவம் அனைத்துமே உண்டே
அன்றிக்கே,
3-‘இது ஓர் உரையே! பேச்சே!’ என்று உலகத்தார் கொண்டாடும் படியான பேச்சு என்னுதல்;
அன்றிக்கே,
4-மாற்றும் உரையும் அற்ற பேச்சு என்னுதல்; (உரை மாற்று -கொள் ஜெயிக்கும் )
அன்றிக்கே,
5-உரை – அடைவு சொல் என்னுதல்.

நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர் –
அந்தப் பேச்சில் வாசி அறிந்து அநுபவிக்க மாட்டாமல், நீங்களே ஆசையின்றி அகற்றினீர்கோள்.
அவ் வூரிலே கொடு புகுகையும், இவள் பக்கல் நசை அறுகை என்பதும் பரியாயம்.
ஆயிட்டு ‘இவள் வேண்டா’ என்று அன்றோ கொடு புக்கது என்கிறாள்.

திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும் –
தன் சந்நிதானத்தாலே கிளரா நின்றுள்ள திரைகளை யுடைத்தான திருப்பாற்கடலிலே பிரமன் முதலாயினாருடைய
கூக்குரல் கேட்கும்படியாகக் கண் வளர்ந்தருளினதுவும்;
இவர்கள் துன்பம் கேட்டபின்பு இந்திரன் முதலானோர்கட்குக் குடியிருப்புப் பண்ணிக் கொடுக்க அடியிட்டபடியும்.

திசை ஞாலம் தாவி அளந்ததும் –
திக்குக்களோடே கூடின பூமியை இரப்பாளனாயிருந்து வருத்தமின்றி வளர்ந்து அளந்தபடியும்.

திசை ஞாலம் தாவி அளந்ததும் –
‘இந்திரன் முதலானோர்களை ரக்ஷிக்க வேணும்’ என்ற ஆசையோடே காணும் பூமியை அளந்தது.
ஆசை – திக்கு.
‘இவன் திருவடிகளாலே நம்மைத் தீண்ட வேணும்’ என்று ஆசைப் பட்டுக் காணும் கிடக்கிறது பூமி.
படுகை – உடைத்தாகை.
பூமியினுடைய ஆசையாவது, திக்குப்பட்டு அன்றோ இருப்பது.

நிரைகள் மேய்த்ததும் –
அவ்வள வன்றிக்கே, அறிவு கேட்டுக்குத் தலையான பசுக்களோடே சேர்ந்து வாழ்ந்தபடியும்.

பிதற்றி –
இவற்றையே அடைவு கெடக் கூப்பிட்டு.

நெடும் கண் நீர் மல்க –
இக் கண்ணில் பரப்பு அடங்கலும் பரப்பு மாறத் தண்ணீர் உண்டாவதே!

நிற்குமே –
பிதற்றவும் சக்தியில்லாமல், கண்ணீர் மல்குகை ‘தன்னுடைய குண நிலை’ என்னும்படி செயலற்று நில்லா நின்றாள்.

————————————————————————————————

நிற்கும் நான் மறை வாணர் வாழ் தொலை வில்லி மங்கலம் கண்டபின்
அற்க மொன்றும் அறவுறாள் மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர்!
கற்கும் கல்வி யெல்லாம் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்துகந்து உண் மகிழ்ந்து குழையுமே.–6-5-4-

ததீய விஷய அனுபவம் வந்தாலே மகிழ்வு தானே -மேவினேன் -இன்பம் எய்தினேன் -இறந்த காலம் –
ஒரு நாள் காண வாராய் -சங்கை அங்கு –
உகந்து உகந்து மகிழ்கிறாள் -விலஷண புருஷர்கள் வாசஸ்தானம் -கண்டு கை விஞ்சி
நிற்கும் நான் மறை வாணர் வாழ் தொலை வில்லி மங்கலம் கண்ட பின்-நிர்வாகர் -பகவத் அனுபவத்தால் வாழும் –
அற்க மொன்றும் அறவுறாள் மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர்!-அடங்குதல் இல்லை -கை கழிய போனாள்-பெற்று வளர்த்த
இப்படியாம் படி நிலைக்கு நீரே காரணம்
கற்கும் கல்வி யெல்லாம் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே-அப்யசிக்கும் வார்த்தை எல்லாம் -மகா உபகாரகன் -என்றே
இத்தையே திரும்பி திரும்பி -கடல் வண்ணன் கண்ணபிரான் -என்றே சொல்லி –
ஆஸ்ரிதற்கு அடங்கி -காட்டித் தந்த -ரூப வைலஷண்யம் ஆத்ம குணம் சொல்லி –
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்துகந்து உண் மகிழ்ந்து குழையுமே.-ஒடுங்குதல் -ஒரு பிரகாரத்தாலும் ஒடுங்காமல் -குண அனுசந்தானத்தாலே
உகந்து ஆஹ்லாதம் மிக்கு சிதிலையாகா நிற்கும் -குளிர்ச்சியால் சிதிலை இங்கு –

நித்தியமான நான்கு வேதங்களிலும் வல்லவர்களான அந்தணர்கள் வாழ்கின்ற திருத்தொலை வில்லிமங்கலம் என்னும்
திவ்விய தேசத்தைப் பார்த்தபின்னர் இவள் அடக்கம் என்னுமது ஒன்றனை அடியோடு விட்டாள்; நம்மை மீறினாள்;
தாய்மார்களே! கற்கப்படுகின்ற கல்வி முழுதும் கரிய கடல்போன்ற நிறத்தை யுடையவனான கண்ணபிரான் என்று
சொல்லிக்கொண்டே தளர்ச்சி சிறிதும் இல்லாதவளாயிருக்கின்றாள்; மகிழ்ந்து மகிழ்ந்து மனம் களித்துக் குழையாநின்றாள்.
அன்னைமீர்! இவள் தொலைவில்லி மங்கலம் கண்டபின் அறவுறாள் மலிந்தாள் என்க. அற்கம் – அடக்கம். ஒற்கம் – தளர்ச்சி.

அந்த ஊரினையும் அங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களையும் யாதொரு நாள் கண்டாள்,
அன்று தொடங்கித் தடை நிற்கை தவிர்ந்தாள் என்கிறாள்.

நிற்கும் நான் மறை-
நித்தியமான நான்கு வேதங்கள்.
நித்தியத்வமாவது, பூர்வ பூர்வ உச்சாரண கிரமத்தைப் பற்ற உத்தர உத்தர உச்சார்யமாணத்வம்.
ஆகையாலே, நித்தியமான வேதம். புருஷனாலே செய்யப்படாதது ஆகையாலே குற்றமற்ற தாயிருக்குமன்றோ.

வாணர் –
வியாச பதம் செலுத்த வல்லராயிருப்பவர்கள்.

வாழ் –
வேதப் பொருளை விளங்குமவனைக் கண்ணாலே கண்டு வாழா நிற்பர்கள்.
(காட்சி இருந்தாலே வாழ்ச்சி தானே )

வாழ் தொலை வில்லி மங்கலம் –
வேத தாத்பரியனானவனைக் கண்டு நித்தியாநுபவம் பண்ணுகிற ஊர்.
“வேதத்தை அத்யயனம் செய்வதனால் அவ் வேதத்தில் சொல்லப்படுகின்ற
பரமாத்மாவின் தியானத்தைச் செய்யக் கடவன்” என்னுமளவன்றியே,-
ஓதுவார் ஒத்து எல்லாம் –நின் புகழே-
ஸ்வாத்யாயாத் யோகமாஸீத யோகாத் ஸ்வாத்யாயம் ஆமநேத்” என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 6 : 2.
ஆரூட யோகர் – சித்தித்த யோகத்தை யுடையவர்.
“அந்த யோகத்தினால் தன்னால் அத்யயனம் செய்யப்படாத வேத பாகங்களின் பொருள்களைக் கண்டு
மனனம் செய்ய வேண்டும்” என்று ஆரூட யோகராயிருக்குமவர்கள்.

கண்ட பின் –
அவ்வூரில் வைஷ்ணவர்களும் அவனுமான சேர்த்தியைக் காட்டிக் கொடுத்துக் கெடுத்தீர்கோள்.
சம்சார விஷ விருக்ஷம் -கதாசித் -கேசவ பக்தி -பக்த பக்தி -இரண்டையும் சேர்த்து காட்டிய பின்பு –

அற்கம் ஒன்றும் அற உறாள் –
நம் சொல் வழி வந்திருக்கும் இருப்புத் தவிர்ந்தாள்.
அற்கம் – அல்குதல். அதாவது, அடக்கம்.
(தாயார் சொன்னாள் என்பதாலே அற விட்டாள் )

மலிந்தாள் –
நம்மால் ஹிதம் சொல்லி மீட்க ஒண்ணாதபடி மிக்காள். என்றது, மீட்கைக்குத் தகுதியுமில்லாதபடி ஆனால் என்றபடி.
அன்றிக்கே,
எனக்கும் தெரியாதபடி இவள் பகவானிடத்தில் ஈடுபட்டிருத்தலில் விஞ்சினாள் கண்டீர் என்னுதல்.
(எனக்கும் தெரியாதபடி தோழி வார்த்தை )

அன்னைமீர் –
மீட்கத் தேடுகிற உங்களோடு இவள் கருத்து அறிந்தேனாகச் சொல்லுகிற என்னோடு வாசி இல்லை தெரியாமைக்கு.
நித்திய ஸூரிகள் யாத்திரை சம்சாரிகளுக்குத் தெரியிலன்றோ நமக்கு இவள் அளவு தெரிவது.

கற்கும் கல்வி எல்லாம் கரும் கடல் வண்ணன் கண்ணபிரான் என்றே –
சொல்லும் சொல்லெல்லாம் திருநாமமேயாய், அவற்றிலும்
வடிவழகிற்கும் அடியார்கட்குப் பரதந்திரப் பட்டிருத்தற்கும்
வாசகங்களான திருநாமங்களையே சொல்லா நின்றாள்.
“கிருஷ்ணனாகில் அடியார்கட்குப் பவ்யன்” என்பது பிரசித்தமன்றோ.
பிரான்-
அவ் வடிவழகைத் தாழ நின்று இவளை அநுபவிப்பித்த உபகாரகனாதலின் ‘பிரான்’ என்கிறது.

திரு நாமங்களை இடைவிடாதே சொல்லா நின்றால் இளைப்பு ஒன்றும் இன்றிக்கே இரா நின்றாள் என்பாள்.
‘என்றே ஒற்கம் ஒன்றும் இலள்’ என்கிறாள்.
‘விரஹத்தால் வலியற்று இருத்தலாலே திருநாமத்தை முட்டச் சொல்ல மாட்டாள்’ என்று இரா நிற்கச் செய்தே,
வருத்தம் அறச் சொல்லா நின்றாள்.
திருநாமந்தான் தரிப்பினைக் கொடுத்துச் சொல்லுவிக்கும் போலே காணும்;
“பாடி இளைப்பிலம்” –திருவாய்மொழி, 1. 7 : 10.-என்றாரே யன்றோ முன்னம்.

ஒற்கம் – மிடி. என்றது, இளைப்பின்றிக்கே என்னுதல்;
அன்றிக்கே,
ஒற்கமாவது, ஒடுக்கமாய், தாய்மார் முன்பே ‘இப்படிச் சொல்லா நின்றோமே’ என்னும் நாணம் இன்றிக்கே என்னுதல்.

உகந்து உகந்து –
திருநாமங்களைச் சொல்லுதல் மூலமாக அவனுடைய அழகு சீலம் முதலிய குணங்களை நினைத்து
மேன்மேல் எனப் பிரீதியுடையவள் ஆகா நின்றாள்.
(கரும் கடல் வண்ணன் கண்ணபிரான்-அழகு சீலம் முதலிய )

உள் மகிழ்ந்து குழையும் –
மனத்திலே உண்டான பிரீதியின் மிகுதியாலே -ஆஸ்ரயம் -உடல் – அழியா நிற்பாள்.

துன்பமொரு முடிவில்லைத் திசை நோக்கித் தொழுகின்றான்
எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பென்றான்”-என்றார் கம்பநாட்டாழ்வார்.

——————————————————————————————

குழையும் வாண் முகத் தேழையைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண் பிரான் இருந்தமை காட்டினீர்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள்
நுழையுஞ் சிந்தையள் அன்னைமீர்தொழும் அத்திசை உற்று நோக்கியே.–6-5-5-

அரவிந்த லோசனனின் ஒப்பனை அழகு வேஷ பூசம் -32 சேவை பூரி -ஜகன்னாதன் –
ஒரே நாளில் 8 சோனா வேஷ் -திருமேனி முழுவதும் எல்லா ஆபரணங்கள்-
அன்று தொடக்கமாக விகாரம்
குழையும் வாண் முகத் தேழையைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு-ஸ்வா பாவிகமான மார்த்வம் –
ஒளி விடும் முகம் -அனுபூவ்ய விஷயத்தில் சாபல்யம் –
இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண் பிரான் இருந்தமை காட்டினீர்- -திவ்ய ஆபரண அங்கீ காரத்தால் -நகை இட்டுக் கொண்டு
ஏற்றுக் கொண்டு -சோதி -ஔஜ்வல்யம் -அழகாய் ஆஸ்ரிதற்கு கொடுக்கும் உபகரகன்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள்-மையாந்து மயங்கி
நுழையுஞ் சிந்தையள் அன்னைமீர் தொழும் அத்திசை உற்று நோக்கியே.-அவன் இருந்த திசையை செறிய –
நோக்கி அஞ்சலி பண்ணா நிற்கும்

தாய்மார்களே! வருந்துகின்ற ஒளி பொருந்திய முகத்தையுடைய ஏழையாகிய இவளைத் திருத் தொலைவில்லி மங்கலம் கொண்டு புக்கு,
வேறு ஆபரணம் வேண்டாமல் தானே ஆபரணமாக விளங்குகின்ற பிரகாசத்தையுடைய செந்தாமரை போன்ற திருக் கண்களையுடைய பிரான்
வீற்றிருத்தலைக் காட்டினீர்கள்; அன்று தொடங்கி மயங்கி மழைபெய்தாற் போலே இருக்கின்ற கண்ணீரோடு பகவானுடைய குணங்களிலே
உட்புகாநின்ற மனத்தை யுடையவளாகி அந்தத் திசையையே உற்று நோக்கித் தொழா நிற்பாள்.
அன்னைமீர்! ஏழையைக் கொண்டு புக்குப் பிரான் இருந்தமை காட்டினீர்; அன்றுதொட்டு மையாந்து நீரினொடு சிந்தையாளாகி
உற்று நோக்கித் தொழும் என்க. ஏழை – ஆசையுடையவள். சிந்தையள் : வினையெச்சமுற்று.

இவள் தன்மையை அறிந்து வைத்து, தேவ பிரானுடைய அழகினைக் காட்டிக் கெடுத்தீர்கோள் என்கிறாள்.
அன்றியே,
அவ்வூரில் வாழ்கின்றவர்கள் படியைக் காட்டினால், அவர்கள் ஜீவனத்தையும்
இவளுக்குக் காட்டிக் கொடுக்க வேணுமோ? என்கிறாள் என்னுதல்.
(செந்தாமரைக் கண் பிரான்-செம்கண்-அரவிந்த லோசனன் -பிரான் -தேவ பிரான்
அரவிந்த லோசன் இருபத்தினாயிரப்படி -இங்கு -செங்கண் பிரான் -தேவ பிரான் )

குழையும் வாள் முகத்து ஏழையை –
ஒரு கலவி வேண்டாமலே இயல்பிலே அமைந்த மிருதுத் தன்மையாலே நையும் தன்மையளாய்,
“உகந்து உகந்து உள் மகிழ்ந்து குழையும்” என்கிற பகவானுடைய அநுபவத்தாலே
ஒளியை யுடைத்தான முகத்தை யுடையளாய்,
‘கிடையாது’ என்றாலும் மீள மாட்டாத சாபலத்தை யுடையவளை.

தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு –
பகவானாலே விரும்பப் படுகின்ற தேசத்திலே கொடு புகத் தவிராத பின்பு,
ஸ்ரீ வைகுண்டத்திலே மேன்மையைக் காட்ட அன்றோ அடுப்பது!
நீர்மைக்கு எல்லை நிலமான இடத்தே கொடு புகுவார் உளரோ?

வாள் –
ஒளி.

இழை கொள் சோதி –
1-ஆபரணங்களினுடைய ஒளியை யுடைத்தாயிருக்கும் என்னுதல்;
2-வேறு ஓர் ஆபரணம் வேண்டாதே தானே ஆபரணமான ஒளி என்னுதல்;
(இழை யாகையைக் கொண்டு இருக்கும் திருமேனி )
அன்றிக்கே,
3-ஆபரண ஒளி தன்னுள்ளே அடங்கும்படியான இயல்பாகவே அமைந்த ஒளி என்னுதல்.
(திரு மேனி ஜோதி ஆபரண ஜோதியை வெல்லும் படி )

செந்தாமரைக் கண் பிரான் –
மலர்த்தி முதலானவைகளுக்குத் தாமரையை ஒப்பாகச் சொல்லலாயிருக்கிற திருக் கண்கள்.
(அதீர்க்கம் அ பிரேம கதம் -இத்யாதி கூரத்தாழ்வான் )
அகவாயில் தண்ணளிக்குப் பிரகாசகமான திருக் கண்கள்.
பிரான் –
“பக்தர்களுக்காகவே” என்கிற வடிவு,

இருந்தமை காட்டினீர் –
நீங்கள் கெடுத்தீர்கோள்.
இவள் அறியாத விஷயங்களையும் நீங்களே காட்டிக் கொடுத்துக் கெடுத்தீர் கோள்.

இருந்தமை –
இருப்பில் வீறு அங்கே முடிந்து நிற்றல் போலே.
நின்றானாகில், நிலையார நின்றான்” பெரிய திருமொழி, 6. 9 : 8.-என்பர்கள்;
இருந்தானாகில், “இருந்தமை காட்டினீர்” என்பர்கள்;
கிடந்தானாகில், “கிடந்ததோர் கிடக்கை” –திருமாலை, செய். 23.-என்பர்கள்.
அன்றிக்கே,
அவன் தன்மையைக் காட்டினீர்கோள் என்றுமாம்.
நோக்கு இருந்தபடி கண்டாயே, முறுவல் இருந்தபடி கண்டாயே என்று
தனித் தனியே காட்டினீர் என்பாள் ‘காட்டினீர்’ என்கிறாள்.

நன்று; இப்போது அதற்கு வந்தது என்? என்னில்,
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு –
கண்டவுடனே வருஷ தாரை போலே கண்ண நீர் வெள்ளம் இடுகிறபடி பாரீர்கோள்.

ஆளவந்தார் மணக்கால் நம்பி பக்கல் எம்பெருமானைக் கேட்டவுடனே,
“உபாயம் இதற்கு மேல் இல்லை; இவ் விஷயத்தை இப்போதே நேரே காண்டற்கு விரகு இல்லையோ?” என்றாராம்.
அப்படிக் கண்டவுடனே கண்ண நீர் வெள்ளமிடப் புகுந்த தத்தனை.
(எம்பெருமானைக் கேட்டவுடனே-சரம ஸ்லோகம் கேட்டதும் -எம்பெருமானை -கேட்டது போலேவே நினைத்து –
ஸ்வீ காரத்திலும் உபாய புத்தி தவிர்த்து -ஏவம் )

‘ஏழை’ என்ற இடத்தை மூதலிக்கிறாள்
அன்று தொட்டும் –
நீங்கள் காட்டின அன்று தொடங்கி.

மையாந்து –
மயங்கி. ‘குழையும்’ என்ற இடத்தை மூதலிக்கிறாள்:

இவள் நுழையும் சிந்தையள் –
அவன் குணங்களிலே உட் புகா நின்ற நெஞ்சினை யுடையள்.
ஸ்வரூபத்தையும் ஆத்ம குணத்தையும் ஒழிய வடிவழகிலே இடம் கொள்ளா நின்றாள்.
அங்கே சுழித்து நின்று, ‘இது ஒரு வடிவழகே! இது ஓர் ஒப்பனையே! இது ஒரு கண்ணழகே!’
என்று இடம் கொள்ளா நின்றாள்

அன்னை மீர் –
இவளை மீட்கப் பார்க்கிற அளவே அன்றோ உங்களது.
தொழும் – “ஒரே இடத்தில் நிறுத்திய மனத்தை யுடையவளாய் ஸ்ரீ ராம பிரானையே நிச்சயமாகப் பார்க்கிறாள்”
ந ஏஷா பஸ்யதி ராக்ஷஸ்ய: ந இமாந் புஷ்பபல த்ருமாந் ஏகஸ்த ஹ்ருதயா நூநம்
ராமம் ஏவ அநுபஸ்யதி”-என்பது, ஸ்ரீராமா. சுந் 16 : 25.
என்கிறபடியே, அந்தத் திக்கை மறுபாடு உருவப் பார்த்துத் தொழா நிற்கும்.
இவள் தொழிலும் ஒரு திக்குப் பட்டல்லது இராது காணும்.

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம்- 132- திருவாய்மொழி – -6-4–6….6-4-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

June 16, 2016

இகல் கொள் புள்ளைப் பிளந்ததும் இமிலேறுகள் செற்றதுவும்
உயர் கொள் சோலைக் குருந்தொசித்ததும் உட்பட மற்றும் பல
அகல் கொள் வைய மளந்த மாயன் என்னப்பன் தன் மாயங்களே
பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப் பரிப்பே.–6-4-6-

பூர்வ அவதாரத்தில் -அந்ய அபிமான நிவர்த்தகமான -உலகைத் தொட்ட அவதாரம் -ஊரைத் தொட்ட அவதாரம் -கிருஷ்ணாவதாரத்துக்கு
அடிக்கால் இட்ட அவதாரம் -மந்தி பாய் வட வேங்கட மா மலை -அங்கு இருந்து வடக்கு வாசல் வழியே வந்த அரங்கன் -போலே –
த்ரைவிக்ரமம் பண்ணிய கிருஷ்ணன் உடைய -மாணிக் குறளனே தாலேலோ வையம் அளந்தானே தாலேலோ போலே
அனுபவிக்கப் பெற்ற எனக்கு என்ன மனத் துக்கம் –
இகல் கொள் புள்ளைப் பிளந்ததும் இமிலேறுகள் செற்றதுவும்-பகாசுர வாயைப் பிளந்ததும் -செருக்கு அடியான -திமிர் திமில் -ஏறு களை
உயர் கொள் சோலைக் குருந்தொசித்ததும் உட்பட மற்றும்பல-விரோதி நிரசன-பல பல
அகல் கொள் வைய மளந்த மாயன் என்னப்பன்தன் மாயங்களே-வையம் அளந்த மாயன் கண்ணன் -ஓன்று -ஐக்கியம் -என்று காட்டிக் கொடுத்த உபகாரகம் –
பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப்பரிப்பே-வாசி அற ஸ்துதிக்கப் பெற்றேன் -பகவத் அனுபவ காலம் பழுதே போனால் அன்றோ துக்கம்

(ராவணன் நம்மாழ்வார் தொடர்பு சொல்லிக் கொடுத்த மாயன்
எவ்வளவு நல்லவனாக ராமன் இருந்தாலும் காலில் விழ மாட்டேன்
எவ்வளவு பொல்லாதவன் என்று கண்ணனை அறிந்தாலும் திருவடிகளை விட மாட்டேன் -நம்மாழ்வார் )

பகைமை கொண்ட பகாசுரன் என்னும் பறவையின் வாயினைப் பிளந்ததும், திமில்களையுடைய இடபங்கள் ஏழனையும் அழித்ததும்,
உயர்ந்து ஓங்கித் தழைத்த குருந்த மரத்தினை முறித்ததும் முதலாக வேறும் இத்தன்மையவான, அகன்ற பூலோகத்தை அளந்த மாயப் பிரானாகிய
என்னப்பனுடைய ஆச்சரியமான செயல்களையே பகலும் இரவும் துதிக்கப் பெற்றேன்; எனக்கு மனத்தின்கண் துக்கம் என்ன இருக்கிறது?
இகல்-வலிமையுமாம். மற்றும் பலவாகிய மாயங்கள் என்க. பரிவு – பரிப்பு – துக்கம்.

கிருஷ்ணனுடைய பிரதிகூலர்களின் நிரசன பரம்பரையை அநுபவிக்கப் பெற்ற எனக்கு
ஒரு மனோதுக்கம் இல்லை என்கிறார்.

இகல் கொள் புள்ளைப் பிளந்ததும் –
கேவலம் புள் மாத்திரமாய் வந்து தோற்றுகை அன்றிக்கே போரினை மேற்கொண்டு எதிரிட்ட புள்ளினை அழித்ததும்.
அசுராவேசத்தோடு வரச் செய்தேயும்
‘பாதிக்க வருகிறது’ –பெரியாழ்வார் திருமொழி, 2. 5 : 4.-என்று பிறர் அஞ்சாத வடிவு கொண்டு வந்தபடி.
பள்ளத்திலே மேயும் பறவை உருக்கொண்டு வந்தது.

இமில் ஏறுகள் செற்றதுவும்,
திமிலையுடைத்தான இடபங்களைச் செற்றதுவும்.

உயர் கொள் சோலைக் குருந்து ஒசித்ததும் –
ஓக்கத்தை யுடைத்தாய்ச் சோலை செய்து நின்ற குருந்த மரத்தை முறித்ததும்.
‘இளைஞராயிருப்பார்க்குக் கவர்ச்சி கரமாயிருக்கும்’ என்று தழைத்து நின்றது;
இனி, இதனை முறித்துக் காரியம் கொள்ளுவோம் என்று பொடி படுத்தினான்.

உட்பட மற்றும் பல –
இப் புடையிலே பகைவர்களை அழித்தல் பலவே அன்றோ.

அகல் கொள் வையம் அளந்த மாயன் என் அப்பன் தன் மாயங்களே –
பரப்பை யுடைத்தான பூமியடங்கலும் வருத்தம் இன்றி வளர்ந்து அளந்த ஆச்சரியத்தை யுடையனான
உபகாரகனுடைய ஆச்சரியமான செயல்களையே.

பகல் இராப் பரவப் பெற்றேன் –
நாட்டார் அபிமத விஷயங்களை அநுபவிப்பதற்குப் ‘பகல் இரா’ என்று கூறிட்ட காலம் இரண்டும்
இந்த விஷயத்திலே அநுபவிக்கப்பெற்ற எனக்கு,
இரவு பகல் புறம்பே விஷயங்களை அனுபவிப்பாருடைய மனோ துக்கம் உண்டோ?
பரிவு – துக்கம்.
அதிலே ஒரு ஒற்றெழுத்து ஏறினாலும் அந்தப் பொருளையே காட்டக் கடவது.

————————————————————————————————–

மனப் பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன சீற்றத்தினை முடிக்கும்
புனத் துழாய் முடி மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.–6-4-7-

அதிசயித போக்யதா ஆகாரனான -அஜன் அபிசன் –குறைவு அற்ற திரு மேனி -ஆஸ்ரித விரோதி நிரசன அவதார வைலஷ்ணயம்
மனப் பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து-வியசநேஷூ மானுஷ்ய -பெருமாள் -நாட்டார் சுகம் துக்கம் தன் படி
பர துக்க அசஹிஷ்ணுத்த்வம் -குண பிரகரணம் -மனத் துக்கம் இதனால் -ஹேய ப்ரத்ய நீகன்-சஜாதீயனாக பிறந்த இடத்திலும்
தனக்கு வேண்டுருக் கொண்டு தான்தன சீற்றத்தினை முடிக்கும்–அபிமத விக்ரகங்களை பரிகரித்து -ஆஸ்ரித விரோதி நிரசனம் –
புனத்துழாய் முடி மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே-தன்னிலம் நின்றால் போலே செவ்வி பெற்ற திருத் துழாய்
திருமுடி -புனத்துழாய் முடி -புனத்துழாய் மாலை மார்பன்-
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே-நினைத்து கொண்டே இருப்பதால் ஒப்பார் யாரும் இல்லையே

மனத்தில் துக்கத்தோடே தாழ்ந்த மனித வர்க்கத்தில் தனக்கு வேண்டிய உருவினைக் கொண்டு தான் அவதரித்து, தான் தனது
சீற்றத்தினை முடிக்கும், புனத்துழாயினை முடியிலே தரித்த மாலை பொருந்திய மார்பினையுடையவனான என் அப்பனுடைய
ஆச்சரியமான செயல்களையே நினைக்கின்ற மனத்தினையுடையேன்; இனி நீண்ட பெரிய உலகத்தில் எனக்கு ஒப்பாவார் யாவர்?
அழுக்கு மானிடச் சாதியில் தனக்கு வேண்டுருக்கொண்டு தான் மனப்பரிப்போடு பிறந்து என்க.
புனம் துழாய் மாலை முடி மார்பன் எனக் கூட்டலுமாம், சீற்றத்தினை முடிக்கும் என்னப்பன் என்க.

தன்னை அடைந்த அடியார்களைப் பிரதிகூலர் நலியுமதனைப் பொறுக்க மாட்டாமல் அவதரித்து அவர்களை
அழியச் செய்யும் செயல்களை நினைக்கும் நெஞ்சுடைய எனக்கு பூமியின் நிகர் இல்லை என்கிறார்.

மனப் பரிப்போடு அழுக்கு மானிடசாதியில் தான் பிறந்து –
நாட்டாரை அழுக்கு உடம்பு கழிக்குமவன் தான் கண்டீர் அழுக்கு மானிடச் சாதியில் வந்து பிறந்தான்;
குழந்தை கிணற்றிலே விழுந்தால் எடுக்க வரும் தாய் நெஞ்சு நொந்து வந்து எடுக்குமாறு போலே

கூவத்தில் வீழும் குழவி யுடன்குதித்தவ்
வாபத்தை நீக்குமந்த அன்னைபோல் – பாபத்தால்
யான்பிறப்ப னேலுமினி எந்தை எதிராசன்
தான்பிறக்கும் என்னையுய்ப்பதா.-என்பது, ஆர்த்திப் பிரபந்தம். 9.

‘இவற்றிற்கு உதவப் பெற்றிலோம்’ என்னும் திருவுள்ளத்தில் தளர்த்தியோடே வந்து பிறந்தவனாதலின்
‘மனப் பரிப்போடு பிறந்து’ என்கிறது.
குற்றங்களுக் கெல்லாம் எதிர்த்தட்டான தான் பிரகிருதி சம்பந்தம் இல்லாத திவ்ய திருமேனியோடே
கர்ப்பத்தில் வாசம் செய்து அவதரித்தானாதலின் ‘தான் பிறந்து’ என்கிறது.
அன்றிக்கே,
பிறப்பதற்குக் கர்மம் செய்து வைத்தவரும் கூட அருவருக்கும் பிறவியிலே கண்டீர்
கர்மத்துக்கு வசப்படாத தான் பிறந்தது என்பார் ‘தான் பிறந்து’ என்கிறார் என்னுதல்.
இதற்கு அடி பரம கிருபை அன்றோ.

தனக்கு வேண்டு உருக் கொண்டு –
பிரகிருதி சம்பந்தமில்லாத திவ்ய திருமேனியை யுடையனாய்க் கொண்டு.
அன்றிக்கே,
அப்படிப் பிறந்தால் ஒருபடிப் பட்டிருக்கப் பெற்றோமோ! என்னுதல்.
இரண்டு தோள்களுடையவனா? நான்கு தோள்களுடையவனா?” என்னும்படியன்றோ பட்ட படி.
த்வி புஜோ வா சதுர் புஜோவா” என்பது.
தான் வேண்டிய உருவம் அப்ராக்ருத சமஸ்தான விக்ரகம் –
அடியார்கள் வேண்டிய உருவம் என்றுமாம் –

ஈஸ்வரத் தன்மையைக் கை கழிய விட்ட பின்பு அன்றோ இவனுக்கு இங்கு இடம் கொடுத்தது.
இவைதாம் அடியார்களுக்காக ஆகையாலே தனக்கே விரும்பத் தக்கனவாயிருக்கும்.
அன்றிக்கே,
இச்சையால் எடுத்தவை என்றுமாம்.
நாற்றோளன் இருதோளன் ஆகைக்குக் காரணம் என்? என்ன,
‘சம்சாரத்தினுடைய கொடுமை’ என்று அதற்கு விடை அருளிச் செய்கிறார்
‘ஈஸ்வரத் தன்மை’ என்று தொடங்கி. ‘கை கழிய விட்ட’ என்பதற்கு,
கைகளை கழிய விட்ட என்றும். கை கழியும்படி விட்ட என்றும் பொருள்.
இதற்கு நோக்கு, “உபஸம்ஹர ஸர்வாத்மந் ரூப மேதத் சதுர் புஜம்-எல்லாருக்கும் அந்தராத்மாவாக இருப்பவனே!
நான்கு தோள்களோடு கூடின இந்த உருவத்தை மறைத்துக் கொள்” என்பது. இது, ஸ்ரீவிஷ்ணுபு. 5. 3 : 13.

தான் தன சீற்றத்தினை முடிக்கும் –
அடியார்களுடைய விரோதியைப் போக்கினானாய் இருக்கை யன்றிக்கே,
தன் சினம் தீர்ந்தானாய் இருக்கை;
தாயானவள், குழந்தையை நலிந்தவர்களைத் தான் நலிந்து தன் சினம் தீருமாறு போலே.
“இராவணனால் உண்டாக்கப்பட்ட புண்களோடு கூடின வானர சிரேஷ்டனான அநுமாரைப் பார்த்து,
பிறகு மஹா பராக்கிரமமுடைய ஸ்ரீ ராமர் கோபத்தின் வசப்பட்டவரானார்” என்பது
“ததோ ராமோ மஹாதேஜே ராவணேன க்ருத வ்ரணம் த்ருஷ்ட்வா
ப்லவக சார்தூலம் கோபஸ்ய வஸமேயிவாந்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 50 : 136.

புனம் துழாய் முடி மாலை மார்பன் என் அப்பன்-
அடியார்களுடைய விரோதிகளைப் போக்கித் திருமஞ்சனம் செய்து ஒப்பித்து,
திருமேனியின் பரிசத்தாலே தன் நிலத்தில் நின்றாற் போலே செவ்வி பெற்று இருக்கின்ற
திருத்துழாய் மாலையினைத் திரு முடியிலும் திருமார்பிலுமுடையவனாய்,
அந்த ஒப்பனையாலே என்னை எழுதிக் கொண்டவன்.

தன் மாயங்களே நினைக்கும் நெஞ்சுடையேன்-
“மனம் பந்தத்திற்கும் மோக்ஷத்திற்கும் காரணமாக நிற்கிறது” என்று
“மநஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ:”- என்பது, ஸ்ரீ விஷ்னு புரா. 6. 7 : 28.
பொதுவாகை யன்றிக்கே, அவனுடைய ஆச்சரியமான செயல்களையே அநுசந்திக்கும் நெஞ்சை யுடையேன்.

எனக்கு நீள் நிலத்தில் யார் நிகர்-
பூமி பரப்பை யுடைத்து என்னா, எனக்கு ஒப்பாவார் உளரோ?
பரமபதத்தை ஒன்றாக நினைக்கின்றிலர்; தம்மைப் போலே கவி பாடி அடிமை செய்வார் இல்லாமையாலே,
சம்சாரத்தே இருந்து கவி பாடி அடிமை செய்யப் பெற்ற எனக்கு, பூமியில் ஓர் எதிர் உண்டோ? என்கிறார்.

————————————————————————

நீணிலத்தொடு வான் வியப்ப நிறை பெரும் போர்கள் செய்து
வாண னாயிரம் தோள் துணித்ததும் உட்பட மற்றும் பல
மாணியாய் நிலம் கொண்ட மாயன் என்னப்பன் தன் மாயங்களே
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?–6-4-8-

வாமனன் கிருஷ்ணன் சமானமாக -பின் நின்று தாய் இரப்ப கேளான் -இரண்டாம் திருவந்தாதி ராம வாமனர் –
அர்த்தியாயும் அபேஷிதம் தலைக் கட்டிக் கொள்ளுமவன் -சேஷ்டிதங்கள்-பாண யுத்த முதலானவை –
நீணிலத்தொடு வான் வியப்ப நிறை பெரும் போர்கள் செய்து-விஸ்மயப்படும் படி -கார்த்திகையானும் -கரிமுகத்தானும் -ஸ்கந்தர்
நிறைந்த படைத் துணை -மகா யுத்தங்கள்
வாண னாயிரம் தோள் துணித்ததும் உட்பட மற்றும் பல-யுத்த கண்டூதி தினவு எடுத்த -பல சேஷ்டிதங்கள்
மாணியாய் நிலம் கொண்ட மாயன் என்னப்பன் தன் மாயங்களே-அர்த்தியாய் -கிருத்ரிமினாய் -எனக்கு பிரகாசிப்பித்த -உபகாரகன்
ஆச்சர்ய சேஷ்டிதங்கள் அபரோஷித்து கண் முன்னே –காட்டவே கண்ட -திவ்யம் ததாமி சஷூஸ் –
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே-இனி கலக்கம் இல்லை -அவிதேய மனஸ் தானே
ஸ்வ ரஷணம் ஸ்வ அந்வயம் -அந்ய ரஷணம் -இங்கு கலக்கம் இல்லை மனஸ் விதயம் இருப்பதால் –

பெரிய உலகத்திலே யுள்ள மக்களோடு தெய்வ லோகத்திலே யுள்ள தேவர்களும் கண்டு ஆச்சரியப்படும்படியாக, குறைவில்லாத பெரிய போரைச் செய்து
வாணாசுரனுடைய ஆயிரம் தோள்களைத் துணித்ததும் முதலான மற்றும் பலவான, பிரம சாரியாய் நிலத்தை வாங்கின மாயனாகிய என்னப்பனுடைய
ஆச்சரியம் பொருந்திய செயல்களையே காண்கின்ற நெஞ்சினை யுடையேன்; ஆதலால், எனக்கு இனி என்ன கலக்கம் இருக்கின்றது?
வியப்பப் போர்கள் செய்து துணித்ததும் என்க. மற்றும் பலவான மாயங்கள் என்க. மாணி – பிரமசாரி.

வாணனை வெற்றி கொண்டது முதலான கிருஷ்ணன் செயல்களையே அநுசந்திக்கும் நெஞ்சினை யுடைய
எனக்கு ஒரு கலக்கம் இல்லை என்கிறார்.

நீள் நிலத்தொடு வான் வியப்ப –
பூமியிலுள்ளாரோடு சுவர்க்கத்திலுள்ளாரோடு வாசி அற ஆச்சரியப்பட.
கண்டவற்றுக்கெல்லாம் ஆச்சரியப்படும் மனிதர்களோடு ஒக்க,
ஒன்றற்கும் வேறுபட்டவராகாதே தந்தாமைப் போரப் பொலிய நினைத்திருக்கும் தேவர்களும் ஆச்சரியப்படும்படி.
கும்பிடுவாரோடு கும்பீடு கொள்வாரோடு வாசி அறும்படியாக என்றபடி.
‘வியப்ப’ என்று மேலே வருகையினாலே, ‘கட்டில்கள் கூப்பிடுகின்றன’ என்பது போன்று,
‘நிலம், வான்’ என்பன ஆகு பெயர்கள்.

நிறை பெரும் போர்கள் செய்து-
குறைவற்ற மஹா யுத்தத்தைச் செய்து. அதாவது,
ஈஸ்வர அபிமானிகளான சிவன் முதலாயினோர்களும் கெட்டு ஓடும்படியான போரைச் செய்து என்றபடி.

வாணன் ஆயிரம் தோள் துணித்ததும் –
சம்பந்தமில்லாத விஷயங்களைப் பற்றின தோள்களைக் கழித்தபடி.
‘இவன் கர பாதை ஆற்ற மாட்டாமல் கண்டார் கால்களில் எல்லாம் குனிந்து திரியா நின்றான்’ என்று
அந்தக் கரத்தைக் கழித்து விட்டான்.
‘கை கழியப் போய்ச் சிவனை அடைந்தான், இவன் கர பாதை ஆற்றாமை’ என்று அதனைப் படைக்கு அடைத்து விட்டான். –
படைக்கு அடைத்து விட்டான்–திரு ஆழிக்கு –
வாணன் வேறு தெய்வத்தை பஜனம் பண்ணுகை யன்றோ, அவனுக்கு இங்ஙனம் கை பிழை பாடு வந்தது என்று
வகாத விஷயம் -அப்ராப்த விஷயம் -யுத்த கண்டூதியால் வந்த செருக்கு -வகுத்த விஷயம் பற்றாதவன் –
கரம்- இறையும்- கையும் -கப்பம் –
கரத்தை கழித்தது திவ்ய ஆயுதங்களால் -கை கழிய பொய் ருத்ர சமாஸ்ரயணம்
கை தினவு எடுத்ததால் போனான் –
இவர் கை சக்கரம் கழிய போய் அவன் கைகளை கழித்தான் என்றவாறு

நாட்டார் கை வந்தபடி செய்கைக்காகச் செய்தான்.
“ஈஸ்வரனை வணங்கும் பொருட்டு” என்றே யன்றோ சரீர சம்பத்தைக் கொடுத்தது.
ஈஸ்வரன், கை வந்தபடி -அஞ்சலி -செய்யாதவர்களைக் கை மேலே தண்டிக்கை தக்கதே அன்றோ.
சர்வேஸ்வரன் தன்னைப் பற்றுகைக்காக இவனோடே கை செய்தன்றோ அடியிலே விட்டது.
‘அதனை மதித்திலன், இவன் அறக் கை விஞ்சினான்’ என்று தண்டித்து விட்டான்.
வேறு தெய்வத்தைப் பற்றிக் கையிலே பலம் பெற்று விட்டான்.
பகவானைப் பற்றுவதற்குக் கைம் முதல் இல்லாமை விட்டான் அன்றே.
(கை முதல் -மூல தனம் இல்லை -ஆயிரம் கை கொடுத்தான்
அஞ்சலி பண்ணாததால் -கை தப்பிற்று -கைகள் போனது )

உட்பட மற்றும் பல –
அவனுக்கும் பெரு நிலை நின்றாரையும் முதுகு காட்டும்படி செய்தபடி.
கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ” என்று
க்ருஷ்ண க்ருஷ்ண மஹாபாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம் பரேசம் பரமாத்மாநம்
அநாதி நிதனம் பரம்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 33 : 41.
பின்பு அன்றோ அவன் இவனை உள்ளபடி அறிந்தது.-சுந்தரத் தோளை நம்பி ஸ்தோத்ரம் –

மாணியாய் நிலம் கொண்ட மாயன் –
பெறில் ஜீவிப்பானாய்ப் பெறா விடில் முடிவானாய், இரப்பிலே தழும்பு ஏறின வடிவைக் கொண்டு.
இவர் அந்த அவதாரத்திலே கால் வாங்குகிறார் அல்லர்;
கண்ணழிவற்ற அழகாலும்,
வரையாதே எல்லாரையும் தீண்டுகையாலும்,
அடியார்கள் விஷயத்தில் ஓரத்தாலும்,
செய்யும் ஆனைத் தொழில்களாலும்
கிருஷ்ணாவதாரத்தோடு ஒத்திருக்கையாலே, ஸ்ரீ வாமனாவதாரத்தை அநுபவிக்கிறார்.

நிலம் கொண்ட மாயன் என் அப்பன் –
‘திரு உலகு அளக்க’ என்று ஒரு வியாஜத்தை இட்டு அளந்து கொண்டது தம்மை என்று இருக்கிறார்.
மநோ வாக் காயங்கள் -சிந்தை சொல் செயல் மூன்றையும் கொண்டானே –

அப்பன் தன் மாயங்களே காணும் நெஞ்சுடையேன் –
‘முடியானே’ என்ற திருவாய்மொழியிற் கூறிய கரணங்களை யுடைய ஆழ்வார் ஆகையாலே,
நெஞ்சு தானே நினைக்கவும் வற்றாய்க் காணவும் வற்றாயிருக்கும் என்று பிள்ளான் பணிப்பர்” என்று அருளிச் செய்வர்.
அன்றிக்கே,
‘கட்கண்’ என்றும், ‘உட்கண்’ என்றும் சொல்லுகிறபடியே,
நெஞ்சு தன்னையும் கண்ணாகச் சொல்லக் கடவதன்றோ; அது ஆகவுமாம்.
கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும் உட்கண்ணேல் காணும்
உணர்ந்து”-(பெரிய திருவந். 28.)– என்பது, ஈண்டு அநுசந்தேயம்–

எனக்கு இனி என்ன கலக்கம் உண்டே –
‘இந்த விஷயத்தைக் காணப் பெற்றிலோம்’ என்கிற கலக்கம் எனக்கு உண்டோ?
அன்றிக்கே,
வேறு தெய்வங்கள் ‘ரக்ஷகர்’ என்று இருக்கிற கலக்கமும்,
ஈஸ்வரனுடைய ரக்ஷணத்திலே ஐயப்படும் கலக்கமும்,
‘தானே தனக்குக் கடவன்’ என்னும் கலக்கமும் இல்லை என்னலுமாம்.

என் நான் செய்கேன் -யாரே களை கண் -என்னை என் செய்கின்றாய் போலே –
உபாய அம்சத்தில் கண் வைக்காமல் பிராப்ய அம்சத்தில் கண் வைத்து
கைங்கர்யமே யாத்ரையாக போக வேண்டும் –

—————————————————————————-

கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்
உலக்கத் தேர் கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவை யுடை மால் வண்ணனை
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம் மண்ணின் மிசையே?–6-4-9-

தேர் கடாவிய -ஒட்டி -ஏழு லோகம் கடல் மலை கடந்து -உடலோடும் கொண்டு கொடுத்தான் –
பரத்வ அசாதாராண சிஹ்னங்கள் -வைதிக புத்திரன் -அதி மானுஷ சேஷ்டிதங்கள்
கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்-ஜல ஸ்தல விபாகம் இல்லாமல் -பொருந்தும் படி அண்ட கபாலம் தாண்டி
நடாத்தி -காரணமான அவயகதம் பர்யந்தமாக –கார்யத்தில் ஏக தேசமான தேர் -கடாவி –
உலக்கத் தேர் கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும் பல-ஆச்சார்யா -சரீர ஆனயன அவிளம்ப -முதலிய பல
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவை யுடை -பரத்வ சிஹ்னங்கள் மால் வண்ணனை
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம் மண்ணின் மிசையே-தன்னிலை இழந்து -ஈஸ்வரனுக்கு மநோ ஹாரி வாக் சாதுர்யம் வேறு யார் உளர் –

ஏழ்கடலும் ஏழ்மலையும் உலகு ஏழும் ஒக்கக் கழியச் செலுத்தி, முடியத் தேரைக் கொண்டு சென்ற ஆச்சரியமும் முதலான மற்றும் பலவான
ஆச்சரியமான செயல்களையுடைய, சக்கரம் சங்கு இவற்றை வலக்கையிலும் இடக்கையிலுமாக வுடைய மால் வண்ணனை வேறுபடும்படி செய்கிற
பாசுரங்களைப் பாடுகின்ற நாக்கினை யுடைய எனக்கு இந்த மண்ணின் மேல் ஒப்பாவார் உளரோ?
மால் வண்ணன் – கரிய நிறத்தை யுடையவன். மலக்குதல் – கலங்கச் செய்தல்.

வைதிக புத்திரர்களைக் கொண்டு வந்து தருதல் முதலான வெற்றிச் செயல்களை யுடைய சர்வேஸ்வரனை
மலக்கும் நாவீறுடைய என்னோடு ஒப்பார் உளரோ? என்கிறார்.

கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகு ஏழும் கழியக் கடாய்-
ஏழ்கடல் ஏழ்மலை உலகுஏழும் கலக்கக் கழியக் கடாய்.
கலக்க-ஒக்க:
அதாவது,
தேரை நடத்துகிற போது நீரோடு மலையோடு தறையோடு வாசி அற ஒக்க நடத்தினபடி.
அன்றிக்கே,
கலக்க என்பதனைக் கடலுக்கு அடை மொழி யாக்கி,
கலங்குதலை யுடைய கடல் என்று பொருள் கூறலுமாம்.
அங்ஙன மன்றிக்கே,
ஏழ்கடல் ஏழ்மலை உலகு ஏழையும் கழிய நடத்துகிற போது அதிர நடத்தி என்றுமாம்.
கலக்க-
அதிர.

உலக்கத் தேர் கொடு சென்ற மாயமும் –
காரியமான தேரினைக் காரணமான மூலப் பகுதியிலே நடத்துகிற இடத்தில் அழியாதபடி நடத்தின ஆச்சரியமும்.
உலக்க
முடிய.

உட்பட மற்றும் பல-
வைதிக புத்திரர்களை இந்தத் தேசத்தினின்று கொண்டு போருகையும்,
போன செவ்வியிலே கொடு வந்து கொடுக்கையும்,
காலையில் செய்ய வேண்டிய யாக காரியங்களைச் செய்து முடித்த பின்பு மத்தியானத்தில் செய்ய வேண்டிய
காரியங்களைச் செய்வதற்கு முன்பு இவை அடங்கலும் செய்கையும்.

வலம் கை ஆழி இடம் கைச் சங்கம் இவை யுடை மால் வண்ணனை மலக்கு நாவுடையேற்கு –
இவ்விடத்தைப் பட்டர் அருளிச் செய்யா நிற்கச் செய்தே கஞ்சனூரில் இருந்தவரான வண்டுவரைப் பெருமாள் என்பவர்,
மால் வண்ணனை ‘மலக்கு நாவுடையேன்’ என்ன அமையாதோ?
‘வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவையுடை’ என்று விசேடித்ததற்குக் கருத்து என்? என்ன,
“சோளேந்திர சிங்கனை உளுக்காக்கப் பண்ணுகிறேன் என்கிறார் காணும்” என்று அருளிச் செய்தார்.
‘சோளேந்திர சிங்கன்’ என்பது, நம் பெருமாளுடைய யானை. உளுக்காக்க – இருக்கும்படி. என்றது
சர்வேஸ்வரனாகிற மத்த யானையானது பணிந்து கொடுக்கும்படி செய்கிறேன் என்கிறார் என்றபடி.
அறப் பெரியவனுக்கு லக்ஷணம் அன்றோ சங்க சக்கரங்கள்.
“ஒன்றிலும் ஆசை இல்லாதவன், மௌனமாக இருப்பவன்”
“அவாக்யநாதர:” என்பது, சாந்தோக்யம். 3 : 14.-என்கிற
சர்வாதிக வஸ்துவைக் கலங்கச் செய்யும் நாவீறுடையேன் என்கிறார்.

மால் வண்ணனை – கறுத்த நிறத்தையுடைய சர்வேஸ்வரனை.
மலக்கும் நாவுடையேன் – இவர் வார்த்தையில் கலங்குமவனன்றோ அவன் தான்.
இவர் கலங்கிச் சொல்லச் சமைந்தாற் போலே யன்றோ அவனும் கலங்கிக் கேட்கச் சமைந்தபடி.

இம் மண்ணின் மிசை மாறு உளதோ –
பரம பதத்தில் அநுபவம் வாய் புகுநீர் ஆகையாலே அதனை ஒன்றாக நினைத்திருக்கின்றிலர்.
இனி, உண்டாகில் பூமியிலே; அதிலும் இல்லை என்கிறார்.
தரித்து நின்று அனுபவம் இங்கே தானே –
அன்றிக்கே,
‘ஒப்பு உண்டு, இல்லை’ என்று ஐயங்கொள்ளுகைக்குத் தான் விஷயமுள்ளது நித்திய விபூதியிலே யன்றோ?
ஆதலால், ‘இம் மண்ணின் மிசை மாறுளதோ?’ என்கிறார் என்னுதல்.

—————————————————————————————–

மண் மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர் பாரத மா பெரும் போர்
பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட நூற் றிட்டுப் போய்
விண் மிசைத் தன தாமமே புக மேவிய சோதி தன் தாள்
நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே-6-4-10-

பிறந்த வாறும் -போன மாயங்களும் -5-10-1–இங்கு விண் மிசை தாமமே புக –தரித்து நின்று அனுபவிக்க பிரார்த்தித்த படி அருளினான்
(ஒரே பிரகாரணம் -நடுவில் இவர் பட்ட ஸ்ரமங்கள் -தூது விட்டதும் -பிரணய ரோஷம் -சேர்த்துக் கொண்டவை )
கற்பார் -நடந்த கால்கள் அறிய -வேறு யார் கற்பார் என்றது போலே
பூமி பாரம் போக்க பாரத போர் -பரஞ்சோதி -ஸ்வேந ரூபேண –அனுபவிக்கப் பெற்றேன்
மண் மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர் பாரத மா பெரும் போர்-விஸ்வம் பரா வுக்குவே பாரம் –பொறுக்க முடியாத –
செய்து -பெரிய யுத்தம் உண்டாக்கி -இவர் தானே -சகா தேவன் சொன்னது –
பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட நூற் றிட்டுப்போய்-சங்கல்பம் குலைந்து ஆயுதம் எடுக்கை -போன்ற பல மாயங்கள்
நூற் றிட்டுப் போய்-சூழ்ந்து கொண்டு முடித்து –
விண் மிசைத் தன தாமமே புக மேவிய சோதி தன் தாள்-வந்த கார்யம் சமைந்த பின்பு தன்னுடைச் சோதி -அடைந்து பிரவேசித்த
நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே-சேஷ வ்ருத்தி பண்ணப் பெற்றேன் –
ஸ்வராட் தனக்கு தானே ராஜா -அஷர பரம ஸ்வராட்- முக்தன் கர்மங்களில் இருந்து ஸ்வதந்த்ரம் –
கைங்கர்ய சாம்ராஜ்யத்துக்கு அரசன் என்றபடி -நான் அனந்யாதிபதி அன்றோ -என்று கருத்து

பூமியின் மேலே பெரிய பாரம் நீங்கும்படி ஒப்பற்ற மிகப் பெரிய பாரதமாகிய போரைச் செய்து ஆச்சரியமான காரியங்களைச் செய்து சேனைகள்
பாழ்படும்படியாக மந்திரித்துப் போய்ப் பரமாகாசமான தன்னுடைய வைகுண்ட லோகத்தைச் சென்று அடைந்த பரஞ்சோதியினுடைய
திருவடிகளைச் சேர்ந்து நான் வணங்கப் பெற்றேன்; எனக்குத் தலைவர் வேறு யாவர் உளர்?
நீங்கப் பண்ணிச் செய்து நூற்றிட்டுப் போய்த் தன தாமமே மேவிய சோதி என்க. நூற்றிட்டு – சாம்பலாக்கி என்னலுமாம். நூறுதல் – கொல்லுதல்.

அபாயங்களே மிகுதியாக வுடைய சம்சாரத்திலே வந்து அவதரித்து யாதொரு அபாயமும் இல்லாமல் பரம பதத்திற் போய்ப் புக்க படியை
அனுபவிக்கப் பெற்ற எனக்கு வேறே சிலர் நிர்வாஹகர் வேண்டும்படி குறை யுடையவனோ நான்? என்கிறார்.

மண் மிசைப் பெரும் பாரம் நீங்க –
‘விஸ்வம்பரை’ என்றும், ‘க்ஷமை, பொறை’ என்றும் பெயர்களை யுடைத்தாய்த் தாங்கக் கூடியதான பூமியாலும்
பொறுக்க ஒண்ணாதபடி அன்றோ துர் வர்க்கம் திரண்டபடி,
பரமபதத்தில்
“எந்தப் பரம பதத்திலே பழையர்களான சாத்தியர் என்கிற தேவர்கள் வசிக்கிறார்களோ” என்கிறபடியே,
கனத்தார் உண்டாயிருக்கச் செய்தேயும், பாரம் இல்லை அன்றோ அகங்கார சம்பந்தமுடையார் இல்லாமையாலே.
“யத்ர பூர்வே ஸாத்யா: ஸந்தி தேவா:” என்பது, புருஷ ஸூக்தம்.
இங்குப் பாரம் என்கிறது, மக்கள் பாரம் அன்று; யான் எனது என்னும் செருக்கே பாரம் என்றபடி.
தங்கள் பாரத்தினை அவன் தலையிலே வைத்திருக்குமவர்களன்றோ அவர்கள்

ஓர் மா பெரும் பாரதப் போர் பண்ணி –
ஒப்பற்றதான மஹாபாரதமாகிற மஹா யுத்தத்தைச் செய்து.

மாயங்கள் செய்து –
பகலை இரவாக்குவது,
‘ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுப்பது,
எதிரிகளுடைய மாமத்தைக் காட்டிக் கொடுப்பது ஆனவை
தொடக்கமானவற்றைச் செய்து.

சேனையைப் பாழ்பட நூற்றிட்டு –
சேனை வெறுந் தறையாம் படி மந்திரித்து.
“எவனுக்கு, மூன்று உலகங்கட்கும் நாதனும் ஜனார்த்தனனுமான கண்ணன் மந்திரியாயும் ரக்ஷகனாயும் சிநேகிதனாயும் இருந்தானோ,
அந்தத் தர்ம புத்திரனுக்கு ஜெயிக்கப்படக் கூடாதது யாதுளது” என்னக் கடவதன்றோ–த்ருத்ராஷ்டன் சொன்னது
.“யஸ்ய மந்த்ரீச கோப்தாச ஸுஹ்ருச்சைவ ஜநார்தந:
ஹரிஸ் த்ரை லோக்ய நாதஸ் ஸ: கிந்து தஸ்ய ந நிர்ஜிதம்”-என்பது, பாரதம் ஆரண்ய பர்வம், 49 : 20.
‘ஆயுதம் எடுக்க ஒட்டோம், என்கையாலே சூழ்ச்சியாலே அழித்தான்.

போய் விண் மிசைத் தன தாமமே புக மேவிய சோதி தன் தாள் –
பகைவர்களை அழித்ததற்கு மேலே அன்றோ
இவர்கள் இருந்த நிலத்தில் இராமல் பரம பதத்திலே போய்ப் புகப் பெற்றபடி என்று உகக்கிறார்.

பொய்யாசனம் இடுவார், பரிபவிப்பவர் இவர்களையுடைய இந்த நிலத்தை விட்டுப்
பரிவரேயான பரம பதத்து ஏறப் போகப் பெறுவதே!
“ப்ருது லோசந: ப்ருதிவ்யா: பாராவதரணம் க்ருத்வா –
நீண்ட கண்களை யுடைய கண்ணன் பூமியினுடைய பாரத்தைக் கழித்து,
மோஹ யித்வா ஜகத் சர்வம் – ப்ரதிகூலரை அடங்கலும் உழவு கோலாலே விழ விட்டு,
அநுகூலரை யடங்கலும் கண்களாலே விழவிட்டுப் போனான்;
கத: ஸ்வம் ஸ்தானம் உத்தமம் – விண் மிசைத் தன தாமமே புக்கான்.
உத்தமம் – கம்சன் முதலானோர் துரியோதனன் முதலானோர் இவர்களால் வரும் அச்சம் இன்றியே
தனக்குப் பரிவரானவர்கள் இருக்கிற நிலத்திலே போய்ப் புகப் பெற்றபடி

பூமியின் பாரத்தைப் போக்கித் தன் தாமத்தை அடைந்ததற்குப் பிரமாணம் காட்டுகிறார்
‘பிருது லோசந:’ என்று தொடங்கி.
“க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா: ப்ருது லோசந:
மோஹயித்வா ஜதத்ஸர்வம் கத: ஸ்வம் ஸ்தாநம் உத்தமம்”- என்பது, பாரதம் மௌசல பர்வம்.

ஒரு தீர்த்தத்தின் அன்று நாயிறு -அஸ்தமன காலம் -போது ஆண்டானும் எம்பாரும் தங்களிலே சந்தித்து,
“யான் எனது என்னும் செருக்கினால் மலினமாக்கப் பட்டவராயிருப்பார் பத்துக் கோடி பேர் நடுவே,
அதி சுகுமாரமான திருமேனியைக் கொண்டு பத்து நாள் எழுந்தருளி,
அபாயம் இல்லாமல் புக்கருளப் பெற்றபடி கண்டதே!” என்று
ஒருவரை ஒருவர் தண்டன் இட்டுத் தழுவிக் கொள்ளா நிற்கக் கண்டேன் என்று சீயர் அருளிச் செய்வர்.

நண்ணி நான் வணங்கப் பெற்றேன் –
காலயவனன், ஜராசந்தன் தொடக்கமானாரைப் போலே, எதிரிட்டுக் கிட்டுகை அன்றிக்கே,
முறையாலே கிட்டப் பெற்றேன்.

எனக்கு நாயகர் பிறர் ஆர் –
அவனுடைய அவதாரம் தொடக்கமாக, நடுவுள்ள அபாயங்களைத் தப்பி அடியார்களை வாழ்வித்துத் தனக்கு
அமர்ந்த நிலத்தே போய்ப் புக்கபடி யளவும் அநுபவிக்கப் பெற்ற எனக்கு ஆர் தான் நியமிக்கின்றவர்கள் என்கிறார்.

“பயிலும் திருவுடையார் யவரேலும்” என்றதனை மறந்தார் போலே இருந்தது.
அன்றிக்கே,
அவர்களைப் பிறராக நினையாரே யன்றோ என்னலுமாம்.

—————————————————————-

நாயகன் முழுவேழுலகுக்குமாய் முழுவேழுலகுந் தன்
வாயகம் புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்
கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தூய ஆயிரத்திப் பத்தால் பத்தராவர் துவளின்றியே.–6-4-11-

துவட்சி இல்லாமல் -பகவத் அநந்ய பக்தி உக்தர் ஆவார்
நாயகன் முழுவேழுலகுக்குமாய் முழுவேழுலகுந் தன்-நிர்வாஹகன் -சப்த லோகங்களுக்கும் –
வாயகம்புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்-சப்த லோகங்களையும் விழுங்கி -வெளி நாடு காண உமிழ்ந்து
அந்தராத்மாவாகக் கொண்டு அவையாய்-நியத பிரகாரமாய் -அப்ருதக் சித்த விசேஷணம்–வ்யாப்த்கத தோஷம் தட்டாமல் –
கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன-கேசி ஹந்தா கிருஷ்ணன் விஷயமாக
தூய ஆயிரத் திப்பத்தால் பத்தராவர் துவளின்றியே-தூய ஆயிரம் -இந்த பத்தால் தூய்மை -இதுவே தூய்மை -அவதார சரித்திர பிரகாசகம்
அநந்ய பிரயோஜன பக்தி உக்தர் ஆவார் -குற்றம் இல்லாமல்

எல்லா உலகங்கட்கும் நாயகனாய், எல்லா உலகங்களையும் பிரளய காலத்தில் தன் வயிற்றினுள் வைத்துப் பிரளயம் நீங்கினவுடனே அவற்றை
உமிழ்ந்தவனாய், சராசரங்கள் அனைத்துமாய், அவற்றின் தோஷங்கள் ஒன்றும் தன் பக்கல் தட்டாதவனுமாய் இருக்கின்ற கண்ணபிரானுடைய
திருவடிகளின் மேலே, திருக்குருகூரிலே அவதரித்த ஸ்ரீ சடகோபராலே அருளிச் செய்யப்பட்ட பரிசுத்தமான ஆயிரம் திருப்பாசுரங்களுள்
இந்தப் பத்துத் திருப் பாசுரங்களால் குற்றமின்றிப் பக்தர் ஆவார்கள்.
வாயகம் – வாயிடம். புகவைத்தல் – செலுத்தல்; உண்டு என்றபடி, தூய – பரிசுத்தமான. துவள் – குற்றம்.

முடிவில், கிருஷ்ணனுடைய செயல்களைப் பேசின இப் பத்தும் கற்றார், தம்மைப் போன்றே கிருஷ்ண பக்தராவர் என்கிறார்.

முழு ஏழ் உலகுக்கும் நாயகன் ஆய் –
சேதந அசேதநங்கள் எல்லாவற்றையும் நியமிக்கின்றவனாய்.
முழு ஏழ் உலகும் தன்வாயகம் புக வைத்து உமிழ்ந்து –
பிரளயாபத்தில் திரு வயிற்றிலே வைத்து ரக்ஷித்து, உள்ளிருந்து நெருக்குப் படாமல் வெளிநாடு காணப் புறப்பட விட்டு.

அவையாய் –
எல்லாப் பொருள்களும் ‘தான்’ என்கிற சொல்லிலே அடங்கும்படி அவற்றைப் பிரகார தயா சரீரமாக வுடையனாய் –
புஷ்பம் மணம்-மாம்பழ ரசம் -பிரகாரம் -சரீரங்கள் எல்லாம் பிரகாரம் -பிரகாரம் எல்லாம் சரீரம் ஆகாதே

அவை அல்லனுமாய் –
இப்படி இருக்கச் செய்தே அவற்றினுடைய தோஷங்கள் தீண்டப்படாத வனாயிருக்கின்ற.

கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன –
கேசி என்னும் அசுரனைக் கொன்ற சர்வேஸ்வரன் திருவடிகளிலே.
“மேல் திருவாய் மொழியிற் சொன்ன சர்வேஸ்வரத்வத்தையும், –
இத் திருவாய்மொழியிலே, கேசியைக் கொன்றவனான கிருஷ்ணனுடைய
அவதாரத்தையும் அநுபாஷித்துத் தலைக்கட்டுகிறது” என்று சொல்லுவர்.–
நாயகன் —6-3 சுருக்கம் –
கேசவன் -6-4- சுருக்கம்-

அன்றிக்கே,
எல்லா உலகங்கட்கும் காரணன் கிருஷ்ணனே” என்கிறபடியே,
கிருஷ்ண விஷயமே சொல்லுகிறது என்னுதல்,

கிருஷ்ணாவதாரத்தைச் சொல்லுகிற இத்திருவாய்மொழியில், சர்வேஸ்வரனாந் தன்மையைச் சொல்லுவான் என்? என்ன,
அதற்கு விடை அருளிச் செய்கிறார்
‘மேல் திருவாய்மொழியில்’ என்று தொடங்கி. என்றது,
‘நாயகன் முழுவேழ் உலகுக்குமாய்” என்றது முதல் “அவையல்லனுமாய்” என்றது முடிய,
“நல் குரவும்” என்ற திருவாய்மொழியிற் கூறிய சர்வேஸ்வரத்தையும்,
“கேசவன்” என்றதனால், இந்தத் திருவாய்மொழியிற் கூறிய கிருஷ்ணனுடைய செயல்களையும்
அநுவதித்துத் தலைக் கட்டுகிறார் என்றபடி.

மேலதற்கே, வேறும் ஒரு வகையில் விடை அருளிச் செய்கிறார்
‘எல்லா வுலகங்கட்கும்’ என்று தொடங்கி. என்றது,
உலகத்தைப் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத் தொழில்களையும் செய்கிறவன்
கண்ணபிரானே என்று சொல்லுகையாலே, இத் திருவாய்மொழியிற் கூறிய கிருஷ்ணன் செயல்களையே,
இப்பாசுரத்திலே அநுபாஷித்துத் தலைக் கட்டுகிறார் என்றபடி.
‘கிருஷ்ண விஷயமே சொல்லுகிறது’ என்றது, இப்பாசுரம் முழுதும்,
கிருஷ்ணனுடைய செயல்களையே கூறுகிறது என்றபடி.

“க்ருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்திரபிசாப்யய: க்ருஷ்ணஸ்ய ஹிக்ருதே பூதமிதம் விஸ்வம் சராசரம்”
என்பது, மஹாபாரதம் சபாபர். 38 : 23.

தூய ஆயிரத்து இப்பத்தால் துவள் இன்றிப் பத்தர் ஆவர் –
இப் பத்தினையும் கற்றவர்கள் ஆழ்வாரைப் போலே ஆவர்.
இப் பத்தினை யுடைத்தாகையாலே தூய்மையை யுடைத்தான ஆயிரம் என்னுதல்;
அன்றிக்கே,
ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு, கிருஷ்ணனுடைய செயல்களைச் சொல்லுகையாலே
தூய்மையை யுடைத்தான இப்பத்து என்னுதல்.
துவள் இன்றியே பத்தர் ஆவர் –
துவள் – குற்றம்.
குற்றம் இல்லாமையாவது, வேறு அவதாரங்களில் போகாமல் கிருஷ்ணனுடைய செயல்களிலே தாழ்தல்.

——————————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஆனந்த ஸீதலித வாக் அநுஸந்ததீ ய ஆதாரேனே
கிருஷ்ணஸ்ய வீரிய சரித்ரான் அஹம் ஆதாரேனே
இத்தம் புரா ஸ்வயம் அபேஷிதாவான்
முனி தல் லப்த்வா சமோஸ்தி ந மம

ஆனந்த ஸீதலித வாக் அநுஸந்ததீ ய -ஆனந்த -குளிர்ந்த -வாக்கு -அனுசந்தானம்
ஆதாரேனே -ஆதாரத்தோடு
கிருஷ்ணஸ்ய வீரிய சரித்ரான் -வீர்ய சரித்திரம் -சேஷ்டிதங்கள்
அஹம் ஆதாரேனே -ஸங்கல்பித்து
இத்தம் -இப்படியாக
புரா ஸ்வயம் அபேஷிதாவான் -கீழே தானே மநோ ரதித்தவற்றை –
உருகாமல் நின்று அனுபவிக்க பிரார்த்தனை ‘-நின் தன்னை நாடும் வண்ணம் சொல்லாய்
முனி தல் லப்த்வா -அந்த பிரார்த்தனை ஈடு ஏறப் பெற்று
சமோஸ்தி ந மம -பாடுவதில் சமமானவன் இல்லை
5-10-எல்லா அவதாரம் சேஷ்டிதம் தரித்து நின்று அனுபவிக்க பிரார்த்தித்தாரே
இங்கு கிருஷ்ண -இங்கு தானே தைரியமாக பாடுகிறார்

———————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ராஸக் கிரீடாதி க்ருத்யை விவித முரளிகா வாதனை மல்ல பங்கை
கோபீ பந்தார்க பாவாத் விரஜ ஜனன முகைகி
கம்ஸ தைத்யாதி பங்ககைகி பிராதிர் பாவை விஹிநேஷூ
ஆஸ்ரித ரக்ஷண அர்த்தம் அசுர புஜ வன சேதம் முக்யையி

1-ராஸக் கிரீடாதி க்ருத்யை–குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம் ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும் பல
ஆதி– கோவர்த்தனம் உதாரணம் காளிய நிரசனம் இத்யாதிகள்

2-விவித முரளிகா வாதனை–கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல–

3-மல்ல பங்கை–நிகரில் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கைச்
சிகர மா களிறு அட்டதும் இவை போல்வனவும் பிறவும்-

4–கோபீ பந்தார்க பாவாத்–நோவ ஆய்ச்சி உரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப் பெண்ணைச்
சாவப் பாலுண்டதும் ஊர் சகட மிறச் சாடியதும்–யசோதை கட்டுண்ண ஈடு பாடு–

5–விரஜ ஜனன முகைகி–வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்ப்
பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கோர் ஆய்க் குலம் புக்கதும்–

6–கம்ஸ தைத்யாதி பங்ககைகி—இகல் கொள் புள்ளைப் பிளந்ததும் இமிலேறுகள் செற்றதுவும்
உயர் கொள் சோலைக் குருந்தொசித்ததும் உட்பட மற்றும் பல—திதி பிள்ளைகள் -புள்ளின் வாய் பிளந்தது-

7–பிராதிர் பாவை விஹிநேஷூ–மனப் பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன சீற்றத்தினை முடிக்கும்

8–ஆஸ்ரித ரக்ஷண அர்த்தம்—-நீணிலத்தொடு வான் வியப்ப நிறை பெரும் போர்கள் செய்து–வியாப்த கத தோஷம் தட்டாமல்

9–அசுர புஜ வன சேதம் முக்யையி–வாண னாயிரம் தோள் துணித்ததும் உட்பட மற்றும் பல–

10- அபி சப்தார்த்தங்கள் —-கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்
உலக்கத் தேர் கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல-என்று வைதிக புத்ர மீட்டு —
மண் மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர் பாரத மா பெரும் போர்
பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட -என்றும் –

மநோ ஹாரி சேஷ்டிதங்கள்-பிரகாஸிப்பித்து -இதுவே இப்பதிக குணம்–

—————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 54-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில் ஸ்ரீ கிருஷ்ணனுடைய நிகில திவ்ய சேஷ்டிதங்களை அனுபவித்து
அருளிச் செய்த படியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
மாசறு சோதி-5-3-
மானேய் நோக்கு -5-9-
பிறந்தவாறு–5-10-என்கிற திருவாய் மொழிகளிலே
சேணுயர் வானத்து இருக்கும் –5-3-9-
நாராயணன் நாமங்களே தொல் அருள் நல் வினையால் சொலக் கூடும் கொல் –5-9-10-
உருக்கி உண்டிடுகின்ற உன் தன்னை நாடும் வண்ணம் சொல்லாய்–-5-10-10-என்று
தூரஸ்தன் என்றும்
நா நீர வரத் திரு நாமம் சொல்லக் கூடவற்றே -என்றும்
தரித்து நின்று குண அனுபவம் பண்ண வல்லேனாம் படி பண்ண வேண்டும் என்றும்
தாம் ஆசைப் பட்ட வகைகள் எல்லாம் சித்திக்கும் படி தான் ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து திரு வவதரித்து
செய்து அருளின நிகில சேஷ்டிதங்களையும்-தத் ஹேதுவான திவ்ய குணங்களையும்
அனுபவ விஷயமாக காட்டிக் கொடுக்க-அவற்றைக் கட்டடங்க தரித்து நின்று மண்டி அனுபவித்து
ப்ரீதராய்ச் செல்லுகிற குரவை ஆய்ச்சியில் அர்த்தத்தை
குரவை முதலாம் இத்யாதியாலே-அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————————-

குரவை முதலாம் கண்ணன் கோலச் செயல்கள்
இரவு பகல் என்னாமல் என்றும் பரவு மனம்
பெற்றேன் என்றே களித்துப் பேசும் பராங்குசன் தன்
சொல் தேனில் நெஞ்சே துவள் —54-

———————————————————

வியாக்யானம்–

குரவை முதலாம் கண்ணன் கோலச் செயல்கள் –
அதாவது –
1-குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் -என்றும்
2-கேயத் தீங்குழல் ஊதிற்றும் -என்றும்
3-நிகரில் மல்லரைச் செற்றதும் -என்றும்
4-நோவ ஆய்ச்சி உரலொடு ஆர்க்க இரங்கிற்றும் -என்றும்
5-வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் -என்றும்
6-இகல் கொள் புள்ளைப் பிளந்ததும் -என்றும்
7-மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து தனக்கு வேண்டுருக் கொண்டதும் -என்றும்
8-நீணிலத் தொடு வான் வியப்ப நிறை பெரும் போர்கல் செய்து வாணனை ஆயிரம் தோள் துணித்ததும் -என்றும்
9-கலக்க ஏழ் கடல் ஏழ் மலை உலகு ஏழும் கழியக் கடாயுலக்கத் தேர் கொடு சென்ற மாயமும் -என்றும்
10-மண் மிசை பெரும் பாரம் நீங்க ஓர் பாரத மாய பெரும் போர் பண்ணி மாயங்கள் செய்தது
முதலாக எல்லா வற்றையும் நினைக்கிறது
குரவை முதலாம் கண்ணன் கோலச் செயல்கள் -என்று

முந்துற குரவை முதலாகக் காட்டினது திருக் குரவையில்
ஆரவாரத்தை அனுபவித்து தரிக்கைக்காக –
வேண்டித் தேவர் இரக்க -வந்து பிறந்த வ்ருத்தாந்தத்தை
முந்துற முன்னம் காட்டாது ஒழிந்தது
பிறந்த வாற்றில் ஆழம் கால் பட்டு ஆறு மாசம் மோஹித்தால் போலே மோஹிப்பர் -என்று –

கண்ணன் கோலச் செயல்கள் –
ஸ்ரீ வால்மீகி -காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்னம்-என்று ஸ்ரீ ரகுவர சரித்ரத்தையே
முழுதும் அனுபவித்தால் போலே
இவரும் ஸ்ரீ கிருஷ்ணனுடைய நிகில -சேஷ்டிதங்களை அனுபவித்த படி –
ஸ்ரீ தேவக் கோலப் பிரான் -செய்கை -இறே-

இரவு பகல் என்னாமல் –
ராத்திரி பகல் என்னாமல்-கால நியதி இன்றிக்கே

என்றும் பரவு மனம் பெற்றேன் என்றே களித்துப் பேசும் –
சர்வ காலத்திலும் ஸ்துதிக்கும் படியான-மனசைப் பெற்றேன் என்று ஹர்ஷ
பாரவச்யத்தாலே கர்வித்துப் பேசும் –
அதாவது
1-மாய வினைகளையே அலற்றி இரவும் நன் பகலும் தவிர்கிலம் என்ன குறை எனக்கே -என்றும்
2-நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே -என்றும்
3-நுகர வைகல் வைக்கப் பெற்றேன் எனக்கு இனி நோவதுவே -என்றும்
4-மேவக் காலங்கள் கூடின எனக்கு என் இனி வேண்டுவதே -என்றும்
5-ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகல் உள்ளதே -என்றும்
6-பகல் இராப் பரவப் பெற்றேன் எனக்கு என்ன மனப்பரிப்பே -என்றும்
7-நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கு இனி யார் நிகர் நீணிலத்தே -என்றும்
8-என் அப்பன் தன் மாயங்களே காணு நெஞ்சுடையேன் இனி என்ன கலக்கம் உண்டே -என்றும்
9-மால் வண்ணனை மலைக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம் மண்ணின் மிசையே -என்றும்
10-நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே -என்றும்–
பேசின இவை -என்கை –

உருகாமல் தரித்ததும்-நண்ணி வணங்கப் பலித்தவாறே என்று இறே
ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது-(224)

களித்துப் பேசும் பராங்குசன் தன் –
வலக்கை ஆழி இடக்கை சங்கம் இவை யுடை மால் வண்ணனை மலைக்கு நா யுடையேன் -என்கையாலே
சர்வ ஸ்மாத் பரனை வசீகரிக்கும் அங்குசமாய் யுள்ளவர் என்கிறதைப் பற்றச் சொல்கிறது –
கவீசம் சக்ர ஹஸ்தேப சக்ரம் -என்றது இறே
ஸ்ரீ திரு நா வீறுடைய பிரான் தாசர் குமாரர் ஆகையாலே அடி அறிந்து ஸ்ரீ பராங்குசன் -என்கிறார் –
(திகழக் கடந்தான் ஸ்ரீ திரு நா வீறுடைய பிரான் தாசர் திருக்குமாரர் அன்றோ மா முனிகள்)

பராங்குசன் தன் சொல் தேனில் நெஞ்சே துவள் –
வால்மீகேர்வாத நாரவிந்த களிதம் ராமாணாக்யம் மது -என்றும்
ஸூக முகா தம்ருதத்ரவசம் யுதம்பிபாத பாகவதம் ரசம் -என்றும் சொல்லுமா போலே-
அமுத மென் மொழி யாகையாலும்-
தேனே இன்னமுதே -5-1-2–என்று பேசப் படுமவன் விஷயம் ஆகையாலும்
தேன் போலே இனிதாய் இறே இத் திருவாய்மொழி தான் இருப்பது

மனசே
அல்ப சாரமானவற்றில் புக்கு அலமாவாதே-சார க்ராஹியாய்-சார தமமான இதில் சக்தமாய்ப் போரு
என் நெஞ்சம் என் பொன் வண்டு -என்னக் கடவது இறே-

———————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -131- திருவாய்மொழி – -6-4–1….6-4–5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்

June 15, 2016

இத் திருவாய்மொழியில் ஆழ்வார் ஸ்ரீ வால்மீகி பகவானோடு ஒப்பர்.
அவனும் இராமாவதார மல்லது போக்கி அறியான்; அவனுடைய பிரபந்தமும் அப்படியே.
இவரும் கிருஷ்ணாவதாரம் அல்லது அறியார்;
இத் திருவாய்மொழி கிருஷ்ணனுடைய சரிதை ஒழிய வேறு ஒன்றைச் சொல்லாது.

அன்றிக்கே,
“சூரனே! என் எண்ணமானது வேறு இடத்தில் செல்வது இல்லை” என்று கொண்டு
‘பர நிலையும் கூட வேண்டேன்’ –
“ஸநேஹோ மே பரமோ ராஜந் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித:
பக்திஸ்ச நியதா வீர பாவோ நாந்யத்ர கச்சதி”- என்பது, ஸ்ரீராமா. உத். 40 : 16.
என்ற திருவடியைப் போலே யாயிற்று இவரும் கிருஷ்ணாவதாரம் ஒழிய வேறு ஒன்று அறியாதபடி என்னுதல்.

“சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான்” -5-3-9-என்கிறபடியே, கிட்டி நின்று அநுபவிக்கப் பெற்றிலோம் என்கிற இழவு தீர,
பூமியிலே ஆகப் பெற்றது;-அவதரித்து என்றபடி –
“தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங் கொல்?” -5-9-10-என்றே யன்றோ இவர் ஆசைப் பட்டது.
அதாவது,
நா நீர் வந்து திருநாமம் சொல்லுகையாகிறது புண்ணியத்தின் பலமே அன்றோ.

“பிறந்தவாறும்”-5-10- என்ற திருவாய்மொழியில் இவர்க்கு உண்டான இழவு எல்லாம் தீரும்படி
ஸ்ரீ பிருந்தாவனத்தில் நடந்த செயல்களைக் காட்டிக் கொடுக்கக் கண்டு,
அவை இறந்த காலத்தில் நடந்த செயல்கள் போலத் தோற்றுகை அன்றிக்கே,
சம காலத்தில் நடக்கும் செயல் போலே தோற்றக் கிட்டி நின்று அனுபவிக்கிறார்.

“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியிலே, ‘அல்லோம்’ என்று அகன்று முடிந்து போகப் புக்க தம்மை
‘ஆவோம்’ என்னச் செய்து சேரவிட்டுக் கொண்டபடியை நினைத்து,
இப்படி வல்லார் இவன் அல்லது இலர் கண்டீர்-6-3- என்று தலைக் கட்டுகிறாரா யிருக்கிறது.
(இப்படி 5-3- தொடங்கி 6-3 -இவ்வாறு தலைக்கட்டி இத்திருவாய் மொழி என்கிறார் ஆயிற்று )

“சன்மம் பல பல”-3-10- என்ற திருவாய்மொழியிலும் இப்படி இருப்பது ஓர் உவகை உண்டே;
அதற்கும் இதற்கும் வாசி என்? என்னில்,
அங்கு, இதர வியாவிருத்தி மாத்திரத்தால் உண்டான ஞான லாபத்தால் உண்டான உவகை;
இங்கு, அவன், தன் குணங்களை நேரே இவரை நெருங்கி அநுபவிப்பிக்க,
தம் வசப்பட்டவர் அல்லாதபடி அநுபவித்து உவகையராய் வாய் விடுகிறார்.

சன்மம் பல பல-3-10-அவதார சேஷ்டிதங்கள்
பிறந்தவாறும் -5-10 -அவதார சேஷ்டிதங்கள்
6-2/6-4- நேரே சங்கதி -6-3- பிராசங்கிகம்-சேர மாட்டேன் என்றவரை சேர்த்த வ்ருத்த கடநா சாமர்த்தியம் இடைச் சேர்க்கை
4-10-/5-2—நேரே சங்கதி –5-1- போலே – உபகார பரம்பரை சொல்லி அருளியது போலே –

சேஷத்வம் பாரதந்த்ர்யம் மறந்து -இருப்பதே ஆழ்வார் தம் வசம் இல்லை –
எனக்கு நிகர் யார் -ஸ்வாதந்த்ர்யம் தோன்ற அருளிச் செய்கிறார்
கிருஷ்ணானுபவம் இப்படி பண்ண வைக்கிறதே –

————————————————————————————————————

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம் ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும் பல
அரவில் பள்ளிப் பிரான் தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–6-4-1-

அவதார கந்தம் -அநந்த சாயித்வம் -உடைய -கிருஷ்ணன் உடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை ப்ரீதி ப்ரேரிதராய் -அவிச்சின்னமாகப் பெற்றோமே
குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம் ஒன்று ஏந்தியதும்-திருக் குரவையில் -வகை மாலை போலே இடை இடையே தன்னைக் கலந்தும் –
முகம் அறிந்து பொன் கோத்தால் போலே -ரசத்துக்கு இடையூறு -மழையை தடுக்க -அநாயாசேன ஏழு நாள்கள்
உரவு நீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும் பல-முதிர்ந்த நீர் -முனிந்து நியமித்த பிரகாரம் -காய்ச்சின வேந்தன் -மற்றும் பல
அரவில் பள்ளிப் பிரான் தன் மாய வினைகளையே அலற்றி-நாக பர்யங்க உத்ஸ்ருஷ்ஜ்ய -க்யாகதோம் மதுராம் புரிம் -அவதாரார்தமாக பள்ளி கொண்ட —
கிருஷ்ணன் உடைய ஆச்சர்யமான சேஷ்டிதங்களை ப்ரீதி பரவசனாகக் கொண்டு
இரவும் நன் பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே-இரவும் பகலும் வாசி இல்லாமல் -மத்யம மணி நியாயம் நல் இரவு நல் பகல்
நன் பகலும் -குண கதனத்துக்கு உறுப்பான நன்மை
அனுபாவ்ய சங்கோசம் இல்லாத குறை இல்லையே –
அனுபவ விச்சேத குறையும் இல்லை –
காலத்தாலும் குறை இல்லை –
தவிர்கிலம் -பன்மை பாட பேதம்

ஆய்ச்சியரோடு குரவைக் கூத்தினைக்கோத்து விளையாடியதும், கோவர்த்தனம் என்னும் மலையை ஏந்திக் குடையாகப் பிடித்ததும்,
வலிய தண்ணீரையுடைய பொய்கையிலே கிடந்த காளிங்கன் என்னும்பாம்பினை ஓட்டினதும், இவை முதலான மற்றும் பலவான,
ஆதிசேட சயனத்தையுடைய பெருமானது ஆச்சரியமான செயல்களையே சொல்லிக் கொண்டு
நல்ல இராப் பொழுதும் நல்ல பகற் பொழுதும் தவிரேன்; எனக்கு வேறு என்ன குறை உளது?
மற்றும் பல மாய வினைகளை என்று கூட்டுக. அலற்றித் தவிர்கிலன் என்க.
இத் திருவாய்மொழி, அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரியவிருத்தம்.

பகலும் இரவும் கிருஷ்ணனுடைய குணங்களைப் பிரீதி முன்னாக அநுபவிக்கப் பெற்ற எனக்கு,
இனி ஒரு குறை இல்லை என்கிறார்.

ஆய்ச்சியரோடு குரவை கோத்ததும்-
“பிறந்தவாறும்” என்றாற் போலே தொடங்கி ஓர் அவதாரம் முன்னாக இழியாமல், இதிலே இழிவான் என்? என்னில்,
“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில் உண்டான தம்முடைய பிரணய ரோஷத்தினைப் போக்கித் தம்மைச் சேர விட்டுக் கொண்டபடி,
திருக் குரவைக் கூத்தில் பெண்களோடே கலந்து அவர்களை அநுபவிப்பித்தாற் போலே இருக்கையாலே,
அது முன்னாகப் பேசுகிறார்.

அன்றிக்கே,
நாம் அநுசந்திக்கில் அன்றோ ஓர் அடைவாக இழிவது!
அவன் அநுபவிப்பித்தபடியே பேசுகிறாராகையாலே திருக் குரவைக் கூத்தினை முதல் முன்னம் பேசுகிறார் என்னுதல்,
திருக் குரவையில் பெண்களோடு உண்டான கலவியையாயிற்று இவர்க்கு முதலிலே காட்டிக் கொடுத்தது.
ஐந்து லக்ஷம் குடிகளிலுள்ள பெண்கள் எல்லாரோடும் கலந்த பிரீதி உண்டாயிற்று, இவர் ஒருவரோடு கலந்து பிரீதி.

தன் செல்லாமையாலே ஆயர் பெண்களுடைய மாலையிலே தன்னை முதன்மை இல்லாதவனாகச் செய்து
கொண்டு கோத்ததும். -“குரவை பிணைந்த குழகும்” என்று ஆசைப்பட்டபடியே அநுபவிக்கிறார்.
பெண்களுடைய மாலையிலே இடையீடாகத் தன்னைக் கோக்கிற போது, ‘விஜாதீயன் ஒருவன் கலந்தான்’ என்று தோற்றாதபடி
அவர்களோடே ஒரு நீராகக் கலந்தபடி. -ஒரு காதில் குண்டலம் தோடு சாத்திக் கொண்டு நீராக கலந்தானே –
பெண்களும் பெண்களும் அல்லவோ கைகளைக் கோத்து விளையாடுவார்.
திருக்குரவையில் இவனை ஒழியப் பெண்களுக்குச் செல்லாதது போலே காணும்
“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில், ஆழ்வாரை ஒழிய இவனுக்குச் செல்லாமை விளைந்தபடி,
கோக்கை – தொடுத்தல். கை கோத்துக் கொண்டு ஆடும் கூத்து அன்றோ, குரவைக் கூத்து ஆகிறது.

குன்றம் ஒன்று ஏந்தியதும் –
சுவர்க்கம் என்று கொண்டு ஒரு போக பூமியாய், அங்கே தேவ மாதர்களோடே கழகம் இருந்து
புண்ணியத்தின் பலத்தை அநுபவம் பண்ணி மிக்க சுகத்தோடு இருப்பான் இந்திரன் ஒருவன் உளன் அன்றோ;
அந்த அநுபவத்தைப் பூமியிலே ஒரு பருவத்திற் பெண்களோடே கூடப் பூர்ணமாக அநுபவித்திருக்கிற இருப்பைக் கண்டு
அது பொறுக்க மாட்டாமையால் பொறாமை மிக்கு, ‘நமக்கு இட்ட சோற்றை உண்டான்’ என்று
ஒரு வியாஜமாகக் கல் மழையைப் பெய்வித்தான்;
அப்போது கைக்கு எட்டிற்று ஒரு மலையை எடுத்துத் தரித்துக் கொண்டு நின்ற படி.

ஒருவன் இங்கே ஒரு நாள் மூக்குப் புதைக்குங் காட்டில் ‘நம்முடைய போகம் பகுந்து போகப் புகா நின்றது’ என்று அஞ்சி
அவரை உவரை வர விட்டுக் கலக்குமவன் அன்றோ.
‘இப்படி அநுபவிக்கிறான் சர்வேஸ்வரன்’ என்று அறியான் அன்றோ;
இவன், தன்னை மனித சஜாதீயன் ஆக்கிக் கொண்டு இருக்கையாலே.
அன்றைய தினத்தில் கல் மழையில் பசுக்களுக்கும் இடையர்க்கும் வந்த ஆபத்தைத் தீர்த்தாற் போலே யாகாதே,
இவர்க்கும் “மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில் வந்த ஆபத்தைத் தீர்த்தபடியும்.

ஏந்தியதும்-
பிறர் பொருட்டு ஆகையாலே கைக்கு ஓர் ஆபரணம் போலே ஆயிற்று.
அது தான் வருத்தமற்று இருந்தபடி. பூ ஏந்தினாற் போலே இருந்தது.
ஏழு வயதிலே ஏழு நாள் ஒருபடிப் பட தரித்துக் கொண்டு அன்றோ நின்றது!
‘இப்படி ஏழு வயதிலே ஏழு நாள் தரித்ததற்கு என் செய்வோம் நாம்’ என்று ஒருவர் நெஞ்சாறல் படாதபடி
ச கோத்திரியாய் நின்றே அன்றோ இவன் இவற்றை ரக்ஷித்தது.
( அஹம் வோ பாந்தவோ ஜாத என்றவன் அன்றோ )

உரவு நீர்-
தறை காண ஒண்ணாமையால் உண்டான ஆழத்தை யுடைத்தான மிடுக்கை யுடைய நீர் என்னுதல்.
அன்றியே,
காளியனுடைய விஷத்தால் ஒருவர்க்கும் கிட்ட ஒண்ணாத வலியை யுடைய நீர் என்னுதல்.
அன்றிக்கே,
முதுநீர் ஆகையாலே வலிய நீர் என்னுதல்.
உரவு -ஆழம் -விஷம் -வலிய-

நாகம் காய்ந்ததும் –
நாகத்தை ஓட்டியதும்.
பாம்பு அடித்து மேலிட்டுக் காணும் பெண்களோடே ஜலக் கிரீடை பண்ணிற்று.

உள் பட மற்றும் பல –
இவை முதலான செயல்களுக்கு ஓர் எண் இல்லை.
“பிறந்தவாறும்” என்ற திருவாய்மொழியில், வலிமைக் குறைவாலே சொல்ல மாட்டிற்றிலர்;
இங்கு, உகப்புத் தலை மண்டை யிட்டுச் சொல்ல மாட்டுகிறிலர்.
மற்றும், இப்படிப் பெண்களுடைய கலவிக்குத் தண்ணீர்த் துரும்பு அறுத்தவை பலவாம்.

அரவில் பள்ளிப் பிரான் –
நாட்டார் உறக்கம், தமோ குணத்தால் மறைக்கப்பட்டதாய்த் தங்கள் பொருட்டேயாய் இருக்கும்;
இவன் உறக்கம் பிறருடைய ரக்ஷணத்தின் பொருட்டு இருக்கும்.
உறங்குவான் போல் யோகு செய்த பெருமான் அல்லனோ.-திருவாய். 5. 4 : 11.–
உறங்கினானாகில் பிறருடைய ரக்ஷணத்துக்கு உடலாயிருக்கும்;
உணர்ந்திருந்தானாகிலும் அப்படியே; இது என்ன உபகாரந்தான்!

அரவில் பள்ளிப் பிரான் –
மேலே, ஒரு பாம்போடு உண்டான சேராமை சொல்லிற்று;
இங்கு, ஒரு பாம்போடு உண்டான சேர்த்தி சொல்லுகிறது.
அங்கு, போகத்தைக் காற் கடைக் கொண்டமை சொல்லிற்று;
இங்கு, போகப் பிராவண்யம் சொல்லுகிறது.
போகம் -பாம்பு -இனிமை

பிரதிகூலனான காளியனைப் பறக்க ஓட்டினான்;
அநுகூலனானவனைப் படுக்கையாகக் கொண்டான்.
இவன் தான் -அநந்த முகமாக -பல பல முகமாக அநுகூலிக்கும்;
அவனும்-அநந்த முகமாக – பல பல முகமாக அடிமை கொள்ளும்.
ஆயிரம் பைந்தலை அனந்தன் அல்லனோ.-பெரியாழ்வார் திருமொழி, 4. 3 : 10.
(பஹு முகமாக கைங்கர்யம் செய்யவே )

அரவில் பள்ளிப் பிரான் –
அவதாரங்களுக்கு அடி திருப்பாற் கடலாகையாலே அதனைச் சொல்லுதல்;
அன்றியே,
“நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்” –திருவாய். 5. 10 : 11.என்றதனை நினைக்கிறாராதல்.

தன் மாய வினைகளையே அலற்றி –
அவனுடைய ஆச்சரியமான செயல்களையே வாய் விட்டுத் துதி செய்து இரவும் நன் பகலும் தவிர்கிலன்-
பகவானுடைய அநுபவத்திற்கு உறுப்பாகாத அன்றே அன்றோ
சுடர் கொள் இராப் பகலாக இருப்பது; – திருவாய். 2. 1 : 4.-(அக்னி கக்கும் இரவாக அன்றோ அங்கு )
அநுபவத்திற்குத் தக்கதான காலமாகையாலே, நல்ல இரவும் நல்ல பகலும் என்கிறார்.
பிரிந்த காலத்திலே அன்றோ நெருப்பை உருக்கி ஏறட்டினாற் போலே இருப்பது,

என்ன குறைவு எனக்கே –
“அங்குக் காலம் பிரபுவாய் இல்லை” என்று கொண்டு பகலும் இரவும் நடையாடாதது ஒரு தேச விசேடம் தேடி
அநுபவிக்கைக்குப் பட்டைப் பொதி சோறு கட்ட வேண்டும்படி குறைவாளனா யிருந்தேனோ?
ஒரே தன்மையதான அநுபவம் அன்றோ அங்கு உள்ளது;
“காலம் ஸபசதே தத்ர ந கால: தத்ரவை ப்ரபு:” என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா.
பட்டைப் பொதி சோறு – பாக்குப் பட்டையில் கட்டுகிற சோறு.
பல இருதுக்களில் விளையாடினார்” –“விஜஹார பஹூந் ருதூந்”- என்பது, ஸ்ரீராமா. பால. 77 : 25. என்கிறபடியே,
அந்த அந்தக் காலங்கள் தோறும் உண்டான அநுபவ விசேடங்களை அநுபவிக்கப் பெற்ற எனக்கு ஒரு குறை உண்டோ?
அன்றிக்கே,
பரத்துவ அநுபவமே அன்றோ அங்கு உள்ளது;
சீல குண அநுபவமுள்ளது இங்கே அன்றோ. ஆதலின் “என்ன குறைவு எனக்கே” என்கிறார் என்னுதல்.
(ஒரே திவ்ய தேசம் அங்கு இங்கு பஹு வாக உள்ளவை அன்றோ )

————————————————————————————————–

கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல
மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ் வுலகம் நிகரே.–6-4-2-

ஆச்சர்யமான ஆகாரம் -நினைத்தார் நெஞ்சம் நெகிழப் பண்ணும் -அன்பு கனிவு ஆசை ஸ்நேஹம் –
கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண் கண்-பெண்கள் நெஞ்சை -கானம் -கேயம் -வசீகரித்து -தாழ்ச்சி தோற்றிய
மூங்கில் -இனிதாம் படி -அக் குழல் வழியே பெண்கள் பசுக்கள் வர –
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல-நப்பின்னை சம்ஸ்லேஷித்த இதுவும் -பக ஹிருத்யமாய்
மாயக் கோலப் பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து-ஆச்சர்ய ரூபம் -கிருஷ்ணன் அனுபாவ்ய சேஷ்டிதங்கள் -குண அனுபவம் பண்ணி
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே-ஒப்பிலா அப்பன் -முன்- பரமபதம் தான் ஒப்போ –

வேய்ங்குழலிலே இனிய பாட்டுக்களை வைத்து ஊதியதும் பசுக்களை மேய்த்ததும், கெண்டைமீன் போன்ற பிரகாசம் பொருந்திய
கண்களையும் வாசனைபொருந்திய பூக்களை யணிந்த கூந்தலையுமுடைய நப்பின்னைப் பிராட்டியினுடைய தோள்களைக் கூடியதும்,
மற்றும் பலவான, அழகிய மாயப்பிரானுடைய செயல்களை நினைந்து மனம் குழைய அன்போடு காலங்கள் கழிகின்றன;
ஆதலால் எனக்கு எந்த உலகம்தான் ஒப்பாகும்.
மற்றும் பல செய்கை என்க. நினைந்து மனம் குழைந்து போது நேயத்தோடு கழிந்த என்க. குழைந்து – குழைய; எச்சத்திரிபு. கேயம் – பாட்டு.
கழிந்த – கழிகின்றன; கால மயக்கம். மாற்றிக் கூட்டாமல், கழிந்த போது – கழிந்த காலத்தில் என நேரே பொருள் கூறலுமாம். உலகம் : ஆகுபெயர்.

“தொல்லருள் நல்வினையால் சொலக் கூடுங்கொல்”-5-9-10- என்று பிரார்த்தித்த படியே பெறுகையாலே,
திருநாட்டிலே தான் என்னோடு ஒப்பார் உளரோ? என்கிறார்.

கேயம் தீம் குழல் ஊதிற்றும் –
தான் நினைத்த பெண்களுடைய பெயரை வைத்துப் புணர்த்துச் சுவைப் பாட்டாக வைத்து ஊதிற்றும்.
கேயம் – பாட்டு. தீம் – இனிமை. இனிமையை யுடைய பாட்டு என்றபடி.

நிரை மேய்த்ததும் –
இதுக்கும் பசு மேய்க்கைக்கும் ஒன்றே பரிகரம்.
குழலை ஊதவே பசுக்கள் வயிறு நிறையும்.
சக்கரவர்த்தித் திருமகனுக்கு வில் கை வந்திருக்குமாறு போலே யாயிற்று, கிருஷ்ணனுக்குக் குழல் கை வந்திருக்கும்படி.
வேற வியாபாரம் இல்லையே கிருஷ்ணனுக்கு -குழல் வைத்தே சம்ஸ்லேஷம் -கோதண்டம் வைத்து பெருமாள் வியாபரிப்பது போலே
இது வைஸ்ய வர்ண தர்மம் -அது ஷத்ரியன் வர்ண தர்மம்-

கெண்டை ஒண் கண் வாசம் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் –
கரனைக் கொன்ற அன்று, பிராட்டி “கணவனை ஆலிங்கனம் செய்தாள்”
–“தம் த்ருஷ்டவா சத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம்
பபூவ ஹ்ருக்ஷ்டா வைதேஹீ பர்தாரம் பரிஷஸ்வஜே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 30 : 39.
என்னும்படி அணைத்தாற் போலே யாயிற்று,
பசு மேய்த்து வந்த சிரமம் எல்லாம் போகும்படி நப்பின்னைப் பிராட்டி இளமை பொருந்திய அழகிய திருக் கண்களாலே
குளிர நோக்கி அழகிய திருக் குழலின் பரிமளத்தாலே திருமேனியை வாசனை யுடைய
தாம்படி ஆக்கித் தன் தோள்களோடே அணைத்ததுவும்.

கெண்டை ஒண் கண் –
கெண்டை போலே மிக இளமையினை யுடையனவாய்,
அமிருதத்தைப் பெய்தாற் போலே குளிர நோக்குகிற திருக் கண்கள்.

வாசம் பூங் குழல் –
வாசம் செய் பூங் குழலிற் காட்டிலும் –திருவாய். 10. 10 : 2.-பொலிவை யுடைத்தான
தன்னே்ற்றமுடைய குழலை யுடையவள்.
வாசப் பூம் குழல் வாசனையே இவளது குழல் -கந்தம் கமழும் குழலி

பின்னை தோள்கள் மணந்ததும் –
அவளுடைய தோள்களுடனே கலந்ததுவும்.
மணத்தல் – கலத்தல்.
“தோளி”சேர் பின்னை –இது, திருவாய். 4. 2 : 5.-என்கிறபடியே, இவளுக்கு அழகு கை விஞ்சி யிருக்குமே.

பெண்களை அழைக்கை மற்றும் பல-
மற்றைப் பிராட்டிமாரோடு கலந்த படி.
(கீழே மற்றும் பல -சேஷ்டிதங்களைச் சொல்லி யாயிற்றே
இங்கு மற்றும் -மற்ற கோபிமார்கள் )
சக்கரவர்த்தித் திருமகனுக்கு அத்யயநம், ஆசாரிய சேவை, அஸ்திர சஸ்திரப் பயிற்சிகள் உண்டாமாறு போலே,
இவனுக்கு, எல்லாம் இவையே அல்லவோ.

மாயம் கோலம் பிரான்-
நப்பின்னைப் பிராட்டியோடே கலந்த ஒற்று மஞ்சளும் தானுமான மிக்க ஆச்சரியமான ஒப்பனை யுடைய உபகாரகன்.
அன்றிக்கே,
நப்பின்னைப் பிராட்டியோடு கலந்தாற் போலே,
அல்லாத பிராட்டிமார் “கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒரு நாள்,
தங்கு மேல் என் ஆவி தங்கும்” –நாய்ச்சியார் திருமொழி, 8 : 7.என்று இருக்குமவர்களுடைய
திரு முலைத் தடத்தில் குங்குமக் குழம்பும் கோயிற் சாந்துமாய் நின்ற அழகினைச் சொல்லவுமாம்.

தன் செய்கை நினைந்து மனம் குழைந்து நேயத்தோடு கழிந்த போது –
அவன் செயல்களை நினைத்தவாறே நெஞ்சு தன் வசம் இன்றி அழியும்படி.
“நினை தொறும், நெஞ்சு இடிந்துகும்” –. 9. 6 : 2.என்றே அன்றோ இருப்பது.

நேயத்தோடு கழிந்த போது –
நினைக்கப் படுகின்ற பொருளினுடைய இனிமையாலே நினைவு தான் இனிதாய்க் கழிந்த போது.
நேயம் – நேசம் ( இனிமை ஸ்நேஹம் )

எனக்கு எவ் வுலகம் நிகர் –
ஒரு தேச விசேடத்தில் தான் எனக்கு ஒப்பாவார் உளரோ?
அநுபவ வேளை போலே நினைக்கின்ற காலத்திலும் இனிமையோடே செல்லக் கடவதானால் எனக்கு எங்கே ஒப்பு?
ஆகாச வாயர் எனக்கு எதிரோ!
( ஆகாசம் கிடைக்குமா பார்த்து இருக்கும் சம்சாரிகளைச் சொல்லிக் கழிக்கக் கூடாதே )
வாய் – இடம். பரமாகாசம் என்கிற பரம பதமாகிற இடத்திலுள்ளார் தாம் எனக்கு ஒப்பாரோ!!
உலகம் என்பது, உயர்ந்தோராகையாலே நித்திய ஸூரிகள் என்றபடி.
பிரார்த்தித படி பெற்றதால் பரம பதத்திலும் சமம் தனக்கு இல்லை என்கிறார்-

————————————————————————————-

நிகரில் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கைச்
சிகர மா களிறு அட்டதும் இவை போல்வனவும் பிறவும்
புகர்கொள் சோதிப் பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும்
நுகர வைகல் வைகப் பெற்றேன் எனக்கென் னினி நோவதுவே?–6-4-3-

நிரதிசய ஔஜ்வல்யன் -நித்ய அனுபாவ்யமான சேஷ்டிதங்களை -அனுபவிக்க காலம் பெருகப் பெற்றேன் -இனி எதுக்கு நோவு பட வேண்டும்
நிகரில் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கை-பிருந்தாவன பண்டிதர் -தாண்டவம் தயிர் கடையும் ஓசையாலே –
10 வயசில் மதுரை வந்து -மல்லர்களை -கோகுலம் -ஆநிரை -மேய்த்து -தப்பாக கணிசிக்க ஆகாரம்
சிகர மா களிறு அட்டதும் இவை போல் வனவும் பிறவும்-நீண்ட தும்பிக்கை -நீள் நெடும் கை -மலை போன்ற பெருத்த குவலையா பீடம்
மா ஆகாரத்து சிறப்பு –அனுபாவ்யமான பல
புகர் கொள் சோதிப் பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும்-தேஜோ மய–நினைந்து அடைவு கெட பேசி
நுகர வைகல் வைகப் பெற்றேன் எனக் கென்னினி நோவதுவே?-நீண்ட -பொழுது -கழிந்த பொழுது -மிகவும் நெடுக -இனி எதற்காக நோவு
அனுபாவ்ய காலம் இல்லாமல் நோவுகிறேனோ
அனுபவ சரசம் இல்லாமல் நோவுகிறேனோ

ஒப்பு இல்லாத மல்லர்களைக் கொன்றதும், பசுக்களை மேய்த்ததும், நீண்ட நெடிய கையை யுடைய மலை போன்ற பெரிய குவலயாபீடம்
என்னும் யானையைக் கொன்றதும், இவற்றைப் போன்றவையும் பிற செயல்களுமான, பேரொளிப் பிழம்பின் மயமான திருமேனியை யுடைய
கண்ண பிரானது செயல்களை நினைந்து, புலம்பி என்றும் அநுபவிக்கும் படியாக நாள்கள் கழியப் பெற்றேன்; யான் இனி எதற்கு வருந்த வேண்டும்?
போல் வனவும் பிறவுமான செய்கை என்க. நினைந்து புலம்பி என்றும் நுகர வைகல் வைகப் பெற்றேன் என்க. வைகப் பெற்றேன் – கழியப் பெற்றேன்.

கிருஷ்ணனுடைய செயல்களையே அநுபவித்துக் கொண்டு காலம் போக்கப் பெற்ற எனக்கு
‘இன்னது பெற்றிலேன்’ என்று நோவ வேண்டுவது இல்லை என்கிறார்.

நிகர் இல் மல்லரைச் செற்றதும் –
மிடுக்குக்கு ஒப்பு இன்றிக்கே இருக்கும் மல்லரைச் செற்றதும்.
பால் வெண்ணெய் இவற்றை உண்கையாலே மிருதுத் தன்மையராய் இருப்பார் இரண்டு பிள்ளைகள் அல்லரோ;
மாமிச பக்ஷணங்களாலும் சஸ்திர அஸ்திர சிக்ஷைகளாலும் மலைகள் போலே திண்ணியவான
தோள்களை யுடைய மல்லரைப் பொடி படுத்தினார்கள்;

புழுக் குறித்தது எழுத்தானாற் போலே இங்ஙனே வாய்த்துக் கொண்டு நிற்கக் கண்ட தித்தனைமானத்து
வண்டல் உழ ஓர் எழுத்தின் வடிவுற்ற சீர்மான” என்பது, திருவரங்கத்தந்தாதி.
இல்லையாகில், இளைஞர் சிலருடைய செயல்களாக மாட்டாதே அன்றோ.

“ஒவ்வாத போர் என்று கூறினர்” – “ந ஸமம் யுத்தம் இத்யாஹு:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 103 : 6.–
என்கிறபடியே எல்லாரும் அஞ்சும்படி அன்றோ அற்றைச் செயல்.

‘ஏவிற்றுச் செய்வான் ஏன்று எதிர்ந்து வந்த மல்லரை’ பெரியாழ்வார் திருமொழி, 4. 2 : 6.-–
தாமாகவே வந்து மேல் விழுந்தால் அன்றோ ‘முடியாது’ என்று வாங்கலாவது?
கம்சனுக்குப் பரதந்திரர்களாய் வருகையாலே இங்குத் தோற்றார்களாகில் அவன் அங்கே தோள்களைக் கழிக்குமாயிற்று;
ஆன பின்பு, ‘கோழைகளாய்க் கொலை யுண்பதில் புகழோடே முடிய அமையும்’ என்று மேலிட்டார்கள்.
‘சாவத் தகர்த்த சாந்து அணி தோள் சதுரன்’ – கூனி சாத்தி விட்ட சாந்து குறியழியாமலே காணும்
அவர்களோடு போர்த் தொழில் செய்தது.
மல்லரோடே கூட எல்லா அவயவங்களும் பொருந்தி போர்த் தொழில் செய்ய நிற்கச் செய்தே,
சாத்தின சாந்து குறி அழிந்தது இல்லை காணும்.
கூனி சாத்தி விட்ட உடனே பெண்கள் கண்களாலே இலச்சினை இட்டு விடுகையினாலே இவனால் அழிக்கவும் போகாதே அன்றோ.
இவர்கள் கண்களாலே இலச்சினை இடுகையாவது, அவன் தோள்களிலே சேலும் கயலும் இடுகை அன்றோ.
இவன் மல்லரோடே சேர்ந்து அழித்தானாகிலும், ‘மற்று எங்கேனும் அழித்தான்’ என்றே அன்றோ அவர்கள் இருப்பார்கள்.
இதனை அழித்துப் போனானாகில், பின்பு பெண்கள் கோஷ்டிக்கு ஆளாகானே.
ஏன்று எதிர்ந்து வருகையாவது, பொரக் கடவோம் என்று நெஞ்சிலே துணிந்து வருகை.

நிரை மேய்த்ததும் –
முதற் பிறவிக்கு ஈடாகச் செய்த செயலும்.
இரண்டாம் பிறவிக்கு ஈடாகச் செய்த செயலும்:
க்ஷத்திரியப் பிறவிக்கு ஈடாம்படி மல்லரோடே போர் செய்தான்;
ஆயர் பிறவிக்கு ஈடாம்படி பசுக்களை மேய்த்தான்.
அன்றிக்கே,
பசுக்களை மேய்த்த போதை ஆயாச மாகாதே, மல்லரோடு பொருத போதும் உள்ளது என்னலுமாம். –
(குளிர் முத்தின் கோடாலும் ஆகிற கோபால வேஷம் )

நீள் நெடும் கைச் சிகரம் மா களிறு அட்டதும் –
மல்லர்க்குத் தப்பிலும் தப்ப ஒண்ணாது கண்டீர் இதற்கு.
தூரப் போய்த் தப்ப ஒண்ணாதபடி கையாலே வளைத்துக் கொள்ளவற்றா யிருத்தலின் ‘நீள் நெடும் கை’ என்கிறது.
‘நெடுங் கை’ என்னா நிற்கச் செய்தே ‘நீள் நெடுங் கை’ என்கிறதன்றோ, அதன் பெருமை இருக்கிறபடி.
ஒரு கை தான் வேண்டுமோ? இது தன்னைக் காணவே அமையுமாதலின் ‘சிகர மா களிறு’ என்கிறது.
“ஆனை மா மலை” –8. 4 : 1.-என்னக் கடவதன்றோ.
மலைச் சிகரம் போலே யாயிற்றுப் பெருத்து இருக்கிற படி.
அட்டதும் – முடித்ததும்.

இவை போல்வனவும் பிறவும் –
இவை தொடக்கமான கேசியைக் கொன்ற செயல் முதலானவைகளும்.

புகர் கொள் சோதி –
குவலயாபீடத்தைக் கொன்ற பின்னர் வடிவிற் பிறந்த ஒளி பெற்ற தேஜஸ்ஸு.
பிரான் – உபகாரகன்.
“வெயர்வைத் துளிகள் நிறைந்த கிருஷ்ணனுடைய திருமுக மண்டலத்தைத் தோழிகாள் பாருங்கள்”
“ஸக்ய: பஸ்யத கிருஷ்ணஸ்ய முகம் அத்யருணே க்ஷணம்
கஜ யுத்த க்ருத ஆயாஸ ஸ்வேதாம்பு கணிகாசிதம்”-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 20 : 54
என்னும்படி இருக்குமன்றோ.
யானையோடே பொருதாலும் இங்ஙனேயோ வேர்ப்பது?
முலையாகிற மலையோடு பொருததோடு யானையாகிற மலையோடு பொருததோடு வாசி இல்லை காணும் இவனுக்கு.

தன் செய்கை நினைந்து புலம்பி –
உபகாரம் செய்தலையே இயல்பாக வுடையவனுடைய செயல்களை நினைத்து,
அது உள்ளடங்காமை புலம்பி.

என்றும் நுகர வைகல் வைகப் பெற்றேன் –
நாடோறும் அநுபவித்துக் கொண்டு, வைகலானது வைகப் பெற்றேன்-
வைகல் வைகப் பெற்றேன்-காலமானது கழியப் பெற்றேன்.
வைகல்-கழிதல்.
அன்றிக்கே,
அநுபவிக்கைக்குப் போரும்படி காலமானது நெடுகப் பெற்றேன் என்றுமாம்.
அப்போது, வைகுதலாவது – நெடுகுகை.

எனக்கு என் இனி நோவதுவே –
‘காலம் நெடுகுவது குறுகுவது ஆகாத இடந் தேடி அநுபவிக்கப் பெற்றிலேன்’ என்கிற
அதிருப்தி யுண்டோ எனக்கு என்கிறார்.
அன்றிக்கே,
அவனுக்கு வரும் நோவன்றோ, இவர்க்கு நோவாவது; அது கழியப் பெற்ற தன்றோ என்னுதல்.
இவர் நோவு போக்கும் அவனுக்கு வரும் நோவன்றோ,-சம்சார ரஷண்ம் -பலிக்காததே அவனது நோவு –
ரஷிக்க இசைவதே அவன் நோய்க்கு பரிகாரம் –
இவர்க்கு நோவாவது: அது போகவே இவர்க்கு நோவு போயிற்றதாமன்றோ.
உயிருக்கு வரும் நோவு உடம்புக்கு வரும் நோவாமன்றோ.

———————————————————————-

நோவ ஆய்ச்சி உரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப் பெண்ணைச்
சாவப் பாலுண்டதும் ஊர் சகட மிறச் சாடியதும்
தேவக் கோலப் பிரான் தன் செய்கை நினைந்து மனங்குழைந்து
மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே?–6-4-4-

அப்ராக்ருத விக்ரகன் -கிருஷ்ணன் உடைய பால சேஷ்டிதங்கள் அனுபவிக்கைக்கு காலம் கூடப் பெற்றேன்
(திவ்ய மங்கள விக்ரஹம் -உடன் கட்டை ஏறும் பொழுது நினைத்தே போனார்கள் -என்றும்
மற்றவர்களது சரம சரீரம் அணைத்துக் கொண்டார்கள் என்று பாகவதத்தில் உண்டே )
நோவ ஆய்ச்சி உரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப் பெண்ணை–வலிக்கும் படி இறுகக் கட்ட –
அதுக்கு ஈடுபட்டு -இரங்கிற்று -வருந்தினான் இல்லை
பூதனையை சாவப் பாலுண்டதும் ஊர் சகடமிறச் சாடியதும்-அமுது செய்து -அசுர வேசத்துடன் வந்த -கொல்ல எண்ணத்துடன் திருட புத்தி உடன் –
தேவக் கோலப் பிரான் தன் செய்கை நினைந்து மனங்குழைந்து-அப்ராக்ருத திவ்ய விக்ரக உக்தன் -மனம் உருகி பொருந்தி
மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே?-குண அனுபவத்தால் நெருங்கி -காலங்கள் வாய்க்கப் பெற்றதே –
எந்நாள் அந்நாள் -அவன் திருவடி பெற்று அனுபவிப்பதே -இனி வேறே ஒரு அபேஷிதம் இல்லை -நித்ய அனுபவமே புருஷார்த்தம்
குண அனுபவம் -முனிவர்கள் யோகிகள் -அமரர் முனிவர் -கைங்கர்ய குண அனுபவ நிஷ்டர்கள் -பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம்

யசோதைப் பிராட்டி நோவும்படி உரலோடு இழுத்துக் கட்ட அச்சத்தால் அழுததும், வஞ்சனை பொருந்திய பூதனையானவள் இறக்கும்படி
பாலினை உண்டதும், ஊர்ந்து வந்த சகடாசுரன் இறக்கும்படி உதைத்ததுமான, அழகிய தேவப்பிரானுடைய செயல்களை நினைந்து
மனம் குழைந்து இச்செயல்களோடே மனம் பொருந்தும்படி காலங்கள் கூடப் பெற்றேன்; இனி, எனக்கு வேண்டுவது என்?
நோவ ஆர்க்க இரங்கிற்று என்க. பெண்ணை : வேற்றுமை மயக்கம். பெண்ணானவள் என்பது பொருள். சாடியதுமான செய்கை என்க.

தன்னை அடைந்தவர்கட்குத் தான் பவ்யனாயிருக்கும் இருப்பிலே பிரதிகூலரை மாய்த்த கிருஷ்ணனை
அநுபவிக்கப் பெற்ற எனக்கு அடையத் தக்கது ஒன்று உண்டோ என்கிறார்.
(இதுவும் ஒரு சேராச் சேர்த்தி அன்றோ )
அவாப்த சமஸ்த காமன் -அடைவதற்கு எனக்கு ஒன்றும் இல்லை –
ஆஸ்ரிதர்களுக்கு என்னையே அடைந்த பின்பு அடைய வேண்டியது இல்லையே
கிருஷ்ணன் -ஸ்ரீ ருக்மிணி பிராட்டி பேசிக் கொண்டது

ஆய்ச்சி உரலோடு நோவ ஆர்க்க இரங்கிற்றும் –
சீயர், இத் திருப் பாசுரத்தை இயல் அருளிச் செய்ய புக்கால் “நோவ”என்று அருளிச் செய்யும் அழகு காணும்.
‘நோவ என்கிறார் காணும் ஆழ்வார், தம் திரு மேனியிலே கயிறு உறுத்தினாற் போலே.’
ஒரு துவேஷம் உண்டாய்க் கட்டுகிறாள் அல்லளே, சிநேக காரியமான கோபமாகையாலே
சிநேகமுள்ள அளவும் இடை நிற்கும் -சத்ருசமாக -அன்றோ கோபமும்.
தாய் எடுத்த சிறு கோலுக்கு -8-3-5-உளைந்து ஓடியன்றோ, விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுதான்;
வாய் விட்டு அழ மாட்டாதது அன்றோ இவரை வருத்துகிறது.
“தறியார்ந்த கருங்களிறே போல நின்று தடங்கண்கள் பனி மல்கும் தன்மையானை” என்கிறபடியே,
ஒரு மத்த யானையைத் தறியோடே சேர்த்தாற் போலே காணும் இவன் கட்டுண்டு நின்ற நிலை.
ஓர் அபலை கட்டின கட்டு அவிழ்த்துக் கொண்டு போக மாட்டாதே, நின்று அழுகையே இயல்பாய் இருந்தபடி.
“வல்லையாகில் போய்க் காணாய்” என்றாள் அன்றோ.
(அகாரம் கட்டி வைத்து ஆகாரம் கட்ட போனாள் அன்றோ பஹு குடும்பிநி )

உரலோடு ஆர்க்க இரங்கிற்றும் –
உரலோடே கட்ட இரங்கிற்றும். துரியோதனாதியர்களுடைய கட்டாகில் அன்றோ அறுக்க விரகு சிந்திப்பது.

இரங்கிற்றும் –
மானச பீடையை அநுசந்தித்தபடி.
இரக்கம் – ஈடுபாடு.

வஞ்சப் பெண்ணைச் சாவப் பால் உண்டதும் –
கெட்டேன்! பேய்த் தாய் பக்கலிலும் அங்ஙன் அருந்தானாகில் என்படக் கடவது தான்?
சூர்ப்பணகியைப் போலே அங்கத்தைக் குறைத்துப் பூசலை விளைப்பியாதே முடித்து விட்டானாதலின் ‘சாவ’ என்கிறார்.
யசோதைப் பிராட்டியின் முலை உண்ணும் போதும் தான் உயிர் பெற உண்ணுமாறு போலே காணும்,
இவள் முலை உண்கிற போதும் தான் உயிர் பெற முலை யுண்டபடி; ஆதலின், ‘உண்டதும்’ என்கிறார்.
(அவள் உயிரை தான் பெரும் படி இங்கு )
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலையூடு உயிரை வற்ற வாங்கி உண்ட வாயான் அன்றோ-பெரிய திரு. 1, 3 : 1.-;
இவன் பிள்ளையாயே முலை உண்டானத்தனை;
“புகர் கொள் வானவர்கள் புகலிடந் தன்னை அசுரர் வன்கையர்
வெங்கூற்றை”–(திருவாய். 8. 4. 8.)–என்பது, ஈண்டு அநுசந்தேயம்.–
வஸ்து ஸ்வபாவத்தாலே -பொருளின் இயல்பாலே பிரதிகூலர் முடிந்ததித்தனையன்றோ.

ஊர் சகடம் இறச் சாடியதும் –
தூண்டுகின்றவர்கள் வேண்டாதபடி தானே வந்து நலிந்தபடி.
ஒரு மனித வடிவு கொண்டு வந்து நலியிலன்றோ தடுக்கலாவது.
இத்தால் -( ஊர்-சப்தத்தால் )சொல்லிற்றாயிற்று
வேறு துணை வேண்டாமலே பாதகமாகும் தன்மையில் உறைப்புச் சொன்னபடி.
சஹாயாந்தர நிரபேஷமாக அவன் ரஷகன் ஆவது போலே இவை சஹாயாந்தர நிரபேஷமாக பாதகத்தில் உறைப்பு –

இறச் சாடியதும் –
“தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாப் பிளந்து” -திருவாய். 6. 9 : 4.-என்று சொல்லக் கடவதன்றோ.
வருத்தமில்லாமல் திருவடிகளை நிமிர்க்கச் செய்தேயும், ஓர் இளைஞனுடைய செயலாகையாலே போரப் பொலியச் சொல்லுகிறார்.
“பேர்ந்தோர் சாடிறச், செய்ய பாதம் ஒன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்”-‘, திருவாய். 5. 10 : 3.– என்னக் கடவதன்றோ.

தேவக் கோலப் பிரான் –
மனிதர்களை ஒத்து நின்று செய்யவும் பெற்றதில்லையே.
அதி பால்யத்திலே செய்த செயலாகையாலே அப்ராகிருதமாய் இருப்பதோர் ஒப்பனை போலே இருக்கிறபடி.
தன் செய்கை நினைந்து மனம் குழைந்து மேவக் காலங்கள் கூடினேன் –
அவனுடைய செயல்களை நினைத்து அகவாய் உடை குலைப்பட்டு
வேறு பிரயோஜனம் இல்லாதவனாய்க் கொண்டு காலம் போக்கப் பெற்றேன்.
நெஞ்சு நெகிழ்ந்து செயல்களோடே பொருந்தும்படி காலங்களைக் கூடப் பெற்றேன்.
எனக்கு என் இனி வேண்டுவது – இனி அடையத் தக்கது ஒன்று இல்லை என்கிறார்.

—————————————————————————–

வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்ப்
பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கோர் ஆய்க் குலம் புக்கதும்
காண்ட லின்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்ச வஞ்சம் செய்ததும்
ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகல் உளதே?–6-4-5-

அந்தர்யாமி பட்டது பட்டானே -அர்த்தித்த அர்த்த கரனான -வேண்டுபவர் வேண்டுதல்களை நிறைவேற்றும் அவதார தொடக்கமான –
பிரமுக கம்ச வத பரிந்த சேஷ்டிதங்களை அனுபவிக்கப் பெற்றானே
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள் வாய்ப்
வேண்டி -இரக்க-இருவர் பிரார்த்தனை -தான் தாய் தந்தை வேண்டி -தன் இச்சையாலே –
ஷீரார்ணவம் இருந்து வந்து -ஏஷ நாராயணன் -திருவவதரித்ததுவும்
பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கொர் ஆய்க் குலம் புக்கதும்-பிறந்த அன்றே -அப்போதே -பிறந்த இரவிலே -கம்ச பயத்தால்
எடுத்து அணைத்து-இருள் அன்ன மா மேனி -பின் நின்று தாய் இரப்ப கேளான் -ராமர் அங்கும் – தோன்றிற்று முதலா புக்கது ஈறாக –
கம்ச விஷயமான தேசம் சென்று -கண்ணனை மறைத்த -பய நிவர்த்தக ஸ்தானம் -திருவடிக்கும் பய நிவர்த்தக ஸ்தானம் -இடைக் குலம்
காண்ட லின்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்ச வஞ்சம் செய்ததும்-வஞ்சனை செய்ததுவும் -அன்றும் நான் இல்லை -அங்கும் இல்லை -இன்று இங்கு
ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகல் உளதே?-வாய் விட்டுச் சொல்லப் பெற்ற பாக்கியம் -எனக்கு விரோதி இல்லையே –
உண்டாகில் கம்சன் பட்டது படும்

தேவர்கள் வேண்டி இரக்க வந்து பிறந்ததும், அற்றைய நாளில் செறிந்த இருட்டிலே தாயாகிய தேவகிப் பிராட்டியானவள் திருவடிகளைப்
பிடித்துக் கொண்டு புலம்ப, அந் நிலையிலே சென்று ஒப்பற்றதான ஆயர்பாடியிலே புக்கதும், கம்சனுடைய ஆட்கள் காணாதபடி வளர்ந்து
கம்சன் இறக்கும்படியாக வஞ்சனை செய்ததுமான செயல்களை இப்போது இருந்து சொல்லப் பெற்றேன்; எனக்கு என்ன விரோதம் உளது?
கஞ்சனை – கம்சனானவன். மயக்கமாகக்கொள்ளாது, நேரே பொருள் கோடலுமாம். துஞ்சுதல் – இறத்தல்.

அவதரித்து, கம்சன் அறியாதபடி வளர்ந்து கம்சனை மாய்த்த படியை இன்று இருந்து அநுபவிக்கப் பெற்ற
எனக்கு ஓர் எதிர் இல்லை என்கிறார்.

தேவர் இரக்க வேண்டி வந்து பிறந்ததும் –
‘எங்கள் அளவு அறியாதே ஒருவனுக்கு வரம் கொடுத்து அவனை உயரப் பார்த்தோம்:
எங்களுக்குக் குடி இருப்பு அரிதாயிற்று’ என்று
தேவ சாதி கப்படம் கட்டிக் கொண்டு -கழுத்தில் ஓலை கட்டிக் கொண்டு -செல்ல
“தந்தையாக அடைய வேண்டும் என்று விரும்பினார்” என்கிறபடியே
தத: பத்மபலாசாக்ஷ: க்ருத்வா ஆத்மாநம் சதுரவிதம்
பிதரம் ரோசயா மாஸ ததா தசரதம் ந்ருபம்”-என்பது, ஸ்ரீராமா. பால. 15 : 30 1/2.
தான் விருப்பமுள்ளவனாய், வந்து பிறந்ததுவும்,
அன்றிக்கே,
“என்னுடைய மாயையாலே” –ப்ரகிருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி ஆத்ம மாயயா”என்பது, ஸ்ரீ கீதை, 4 : 6.
என்னும் படி அன்றோ என்னுதல். என்றது, என்னுடைய இச்சையாலே என்றபடி.
‘மாயா வயுனம் ஞானம்’ என்பது நிகண்டு.
இரக்கிறவர்கள் அளவு பார்த்தல், தன்னளவு பார்த்தல் செய்கை யன்றிக்கே வந்து பிறந்தபடி காணும் இவரை வருத்துகிறது.
தான் இரப்பாளனாய்க் காரியம் செய்யுமவன், பிறர் இரந்தால் பொறுக்க மாட்டானே யன்றோ.

பிறந்ததும் வீங்கு இருள் வாய் –
“எல்லா உலகங்கட்கும் ஆதாரனான ஸ்ரீ கிருஷ்ணன் நடு இரவில் அவதரித்தார்” என்னும் படி அன்றோ.
“மத்யராத்ரே அகிலாதாரே ஜாயமாநே ஜநார்தநே
மந்தம் ஜகர்ஜு: ஜலதா: புஷ்பங்ருஷ்டி முசோ த்விஜ”-என்பது, ஸ்ரீ விக்ஷ்ணு புரா. 5. 3 : 7.
‘இவனும் விழுக்காடு அறியாதே அகப்பட்டுக் கொடு நின்றான், கம்ச பயமும் ஏற்பட்டதாயிரா நின்றது,
இருளாலே அன்றோ நாம் பிழைத்தது.
இனி, இந்த இருளைச் சரணம் புகுமித்தனை அன்றோ’ என்று பிள்ளை யுறங்கா வில்லி தாசர் பணிப்பாராம்.
“ஊர் எல்லாம் துஞ்சி” -5-4-என்ற திருவாய்மொழியில், கூற்றமான இருள்,
இப்போது இவர்க்கு ஆதாரத்துக்கு விஷயமாயிற்று அன்றோ.

வீங்கு இருள் வாய்ப் பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் என்று கூட்டுக.
“மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்தவள்” –பெரியாழ்வார் திருமொழி, 5. 3 : 1. -என்கிறபடியே,
பெற்றுப் பெற்று இழந்தவள் ஆகையாலே, இவனையும் இழக்கிறோமோ! என்று விரக பயத்தாலே,
காலைப் பூண்டு கிடந்து கூப்பிடப் போய். பிள்ளை பக்கல் அன்பினாலே இவள் கூப்பிட,
இவன் முலைச் சுவடு அறியாமையாலே போன படி.

வீங்கு இருள் –
வளர்கிற இருள்

அங்கு ஓர் ஆய்க் குலம் புக்கதும் –
அந்த நிலையிலே இடையிலே வளருகைக்கு ஓர் அஞ்சினான் புகலிடம் உண்டாவதே!
ஆய்க்குலம் – ‘கம்சன் பாதகன்’ என்று பயப்பட அறியாதவர்கள்.
‘குடி வாய் உடன் பட இருந்தானாகில் இருக்கிறான், இல்லை யாகில் உழக் கோலாலே தகர்க்கிறோம்’ என்று இருப்பர்கள்.

காண்டல் இன்றி வளர்ந்து –
கம்சனும் அவன் வரக்காட்டின தீயோர் கூட்டமும் காணாதபடி வளரப் பெறுவதே!

கஞ்சனைத் துஞ்ச வஞ்சம் செய்ததும்-
ஸ்ரீ நாரத பகவான் அறிவித்த பின்பு ஒரு போது தாழாதே வந்து, அவன் தான் நினைத்த
வஞ்சனையை அவன் தன்னோடே போக்கினதும்.
கம்சன் முடியும்படியாக வஞ்சனை செய்தது,
இராமாவதாரம் போலே ‘செவ்வைப் பூசல் அல்லது அறியேன்’ என்று இராமை அன்றோ.

ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் –
“அயர்த்திலன் முடிவு மஃதே யாயினும் அறிஞ ராய்ந்த
நயத்துறை நூலின் நீதி நாம் துறந் தமைதல் நன்றோ.”
“நின்றவன் னிலை நோக்கிய நெடுந்தகை இவனைக்
கொன்றல் உன்னிலன் வெறுங்கை நின் றானெனக் கொள்ளா.”-என்பன, கம்பராமாயணம்.
ஊராண்மை, உபகாரியாந்தன்மை: அஃதாவது, இலங்கையர் வேந்தன் போரிடைத் தன் தானை முழுதும் படத் தமியனாய் அகப்பட்டானது
நிலைமை நோக்கி அயோத்தியர் இறை மேற் செல்லாது
‘இன்று போய் நாளை நின் தானையோடு வா’ என விட்டாற் போல்வது” என்பது,பரிமேலழகருரை. திருக்குறள், 773.

தேவகியாரைப் போலே சமகாலத்தே இருந்து பயப்படாதே, இப்போது பயம் கெட்டு இருந்து அநுபவிக்கப் பெற்றேன்.

ஈண்டு –
இப்போது.

எனக்கு என்ன இகல் உளதே
கம்சன் பட்ட பின்பு எனக்குப் பகைவர்கள் உண்டோ?
இகல் – பகை.
அன்றிக்கே,
கம்சனை முடித்த படியை இன்று இருந்து அநுபவிக்கப் பெற்ற எனக்கு இனி ஒரு மிடி இல்லை என்கிறாராகவுமாம்.
(நாராயணன் ஆகையால் அவனுக்கு சத்ரு இல்லையே
ப்ரஹ்மாத்மகம் இல்லாது ஓன்று இல்லையே
பகவத் விமுகர்களே சத்ருக்கள் -அவர் ஆணைக்கு எதிராக செயல் படுபவர்கள் எனக்கு சத்ரு -)

அயர்த்திலன் முடிவு மஃதே யாயினும் அறிஞராய்ந்த நயத்துறை நூலின் நீதி நாம் துறந் தமைதல் நன்றோ.”

“நின்றவன்னிலை நோக்கிய நெடுந்தகை இவனைக் கொன்றல் உன்னிலன் வெறுங்கை நின்றானெனக் கொள்ளா.”-என்பன, கம்பராமாயணம்.

—————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -130- திருவாய்மொழி – -6-3–1….6-3–11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்

June 15, 2016

இப்படித் தாழ நின்றவன் சர்வேஸ்வரன் என்கிறார் என்று பிள்ளான் பணிக்கும்’ என்று அருளிச் செய்வர்.
அதாகிறது, “யாவையும் யாவரும் பிழையாமல் பிணக்கி” என்று மேலே சொல்லிய
சர்வேஸ்வரத்வத்தை அருளிச் செய்கிறார் என்றபடி.

‘இதிலே ஒரு வேறுபாடு தோன்ற பட்டர் அருளிச் செய்வர்’ என்று சீயர் அருளிச் செய்வர்.–
பரத்வனே வ்ருத்த விபூதிகன் – அதாவது,
“சேரோம்” என்ற எண்ணத்தைக் குலைத்துத் தம்மைச் சேர விட்டுக் கொண்ட ஆச்சரியத்தைக்
கண்டு ஆச்சரியப்படுகிறார் என்பதாம்.

சேர விட்டுக் கொண்ட படி தாம் பலவாக இருக்குமன்றோ:
முதல் தன்னிலே-1-1- தம்மையும் அறியாதே அவனையும் அறியாதே இருக்க,
தன் படிகளை அறிவித்துக் கூட்டுவித்துக் கொண்டான்.

உள்ளே புகுர நின்று தம்முடைய தாழ்வினையும் அவனுடைய உயர்வினையும் அநுசந்தித்து
‘நாம் அங்குத்தைக்குத் தக்கவர் அல்லோம்’ என்று அகல,-1-5- தன் செல்லாமையைக் காட்டிப் பொருந்த விட்டுக் கொண்டான்.

இனி, அவை போன்றது அன்றே இது; ஒன்றால் போக்கக் கூடியது அன்றே.
அகலில் குற்றம், அணுகில் குற்றமாய் இருப்பது ஒன்றே யன்றோ!
ஜாதி சண்டாளனை நோக்கினால் பிராயச் சித்தம் உண்டு;
பிரணயத்தால் உண்டாகிய கோபம் ஆகிற காரணத்தால் சண்டாளர் ஆனவர்க்கு அதுவும் இல்லை.
ஆக, இந்தப் படிகளாலே
தன் செல்லாமையைக் காட்டி அவன் பொருந்த விட்டுக் கொண்ட படியைக் கண்டு ஆச்சரியப்படுகிறார் என்றபடி.

பாவியேன் மனத்தே -கடாஷித்து -ஜாதி சண்டாளன் -என்கிறார் –
ஈஸ்வரன் மேல் விழா நிற்க -சேராமல் விலக்கிய பிராயச்சித்தம் இல்லாத பாபம்
சந்த்யா வந்தனம் பண்ணா விடில் பிராயச்சித்தம் தேடலாம் -பகவத் அனுபவம் இல்லாததுக்கு இல்லையே -கூரத் ஆழ்வான்
நாயக விஷயத்தில் நாயகிக்கு ஏற்பட்ட பிரணய ரோஷத்துக்கு பரிகாரம் இல்லை
பிரணயத்தால் பிறந்த கோபம் ஆகிற அபராதத்தால் -வந்த பாபிஷ்டருக்கு பிராயச்சித்தம் இல்லையே
ஈஸ்வரனை சொல்லாமல் -பிரணய கோபத்தையே சொல்கிறார் –

அங்ஙனம் ஆச்சரியப்படுகிற இவர்க்கு, ‘இவ்வளவு அல்ல காணும் நம்முடைய ஆச்சரியங்கள் இருக்கும்படி.
உலகத்தில் தம்மில் தாம் சேராத மாறுபட்ட பொருள்களும் எல்லாம் நம்மோடே சேர்ந்திருக்கிறபடி பாரீர்!
ஆன பின்னர், நம்மோடு சேராதார் இலர் காணும்!’ என்று தன்னுடைய விருத்த விபூதிகத்வத்தைக் காட்டிக் கொடுக்க இவரும் கண்டார்.
கண்ட இவர் ‘இவை இருந்தபடி என்!’ கொடுத்த அறிவைக் கொண்டு அகலுகைக்குக் காரணமாயிருக்கிற இவற்றை
எல்லாம் கூட விட்டுக்கொடு நிற்கிற படிகளும்,
இனி, நிமித்த காரணமானது உபாதான காரணமாக மாட்டாது; உபாதான காரணமானது நிமித்த காரணமாக மாட்டாது;
இங்ஙனே இருக்க, இவை எல்லாம் தானே யாயிருக்கிற படியையும்,-பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே.–6-3-5-
இவற்றோடே கூடி இருக்கச் செய்தேயும் இவற்றின் குற்றங்கள் தன்னைத் தீண்டாமல் இருக்கிற படியையும்,-பரஞ்சுடர் –
குற்றம் தீண்டாமல் கடக்க இருக்கை மாத்திரமன்றிக்கே நியமிக்கின்றவனாய் இருக்கிற படியையும்,-
இனி, நாட்டில், பிராப்யமானது பிராபகம் ஆக மாட்டாது; பிராபகமானது பிராப்யம் ஆகமாட்டாது; இங்ஙனே இருக்க,
பிராப்பிய பிராபகங்கள் இரண்டும் தானே யாக இருக்கிற படியையும்,–என் சரண் என்னை ஆளுடை –
மற்றும், இவனுடைய அழகு சீலம் முதலானவைகளையும் அநுசந்தித்து, -பொன்னப்பன் -தந்தனன் தன் தாள் நிழல்-
‘இப்படி உபகார சீலனான சர்வேசுவரன் திருவிண்ணகரிலே வந்து அண்மையில் இருப்பவனானான்;
இவன் அல்லது நமக்குப் பரம பந்துக்கள் இலர்’ என்று அறுதி யிட்டு,
என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்-6-3-9-
‘இவன் திருவடிகள் அல்லது பற்று இல்லை’ என்று பேசுகிறாராயிருக்கிறது.
திரு விண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண்இலம்; காண்மின்களே.–6-3-10

முதல் திருவாய்மொழியிலே பரத்துவ அநுபவம் பண்ணி,
மூன்றாந் திருவாய்மொழியிலே சௌலப்யத்தை அநுசந்தித்து “எத்திறம்” என்று கிடந்தார்.

இங்கு, “போகு நம்பி” என்று தள்ளச் செய்தேயும் கால் வாங்க மாட்டாதே நின்ற நீர்மையை அநுசந்தித்து,
அதற்கு எதிர்த்தட்டான பரத்துவத்தை அநுசந்திக்கிறார்.

இப்படிக் கிரமம் இல்லாமல் அருளிச் செய்கிறதற்குக் காரணம் யாது? என்னில்,
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் அலரோ; மேன்மையை அநுசந்திப்பது, நீர்மையை அநுசந்திப்பதாமத்தனை அன்றோ!

இத் திருவாய்மொழியிற் கூறப்படுகின்ற பொருளோடு
“தீயினுள் தெறல் நீ பூவினுள் நாற்றம் நீ கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ
அறத்தினுள் அன்பு நீ மறத்தினுள் மைந்து நீ வேதத்து மறை நீ பூதத்து முதலு நீ
வெஞ்சுடர் ஒளியும் நீ திங்களுள் அளியும் நீ அனைத்தும் நீ அனைத்தினுட் பொருளும் நீ”-என்ற பரிபாடற் பகுதி ஒப்பு நோக்கத் தகும்.

1-வைகுண்ட விண்ணகரம்
2-பரமேஸ்வர விண்ணகரம்
3-காளிச்சீராம விண்ணகரம்
4-நந்திபுர விண்ணகரம்
5-அரி மேய விண்ணகரம்
6-காழிச் சீராம விண்ணகரம்
7-ஸ்ரீ வைகுண்டம் -நவ திருப்பதி நின்ற திருக்கோலம்

8-திரு விண்ணகர் -அடை மொழி இல்லாமல்
உத்சவ மூர்த்தி பொன்னப்பன் –
மிகுநர் இலன் -ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன் –
சமாப்யதிக ராகித்யன் -தரித்திரம் -குறை சொல்லலாம் படி அன்றோ –
பூமா தேவி -துளசி தேவி -ஸ்ரீ மஹா லஷ்மி போல் ஆக ஆசை கொள்ள
மார்க்கண்டேயர் திருக்குமாரி –
லவண வர்ஜித ஸ்வாமி –

விளம்ப விரோதம் அழிக்கும்-வ்ருத்த கடநா – சாமர்த்தியம் -நன்னகரிலே விஸ்தீரணம்
நன்னகரிலே-தெண் திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2-
விஸ்தீரணம் -பல் வகையும் பரந்த பெருமான்-6-3-1-

———————————————————————————————-

நல் குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல் பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல் வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திரு விண்ணகர்க் கண்டேனே.–6-3-1-

வ்ருத்த -விபூதிகள் -குணங்கள் -பொருள்கள் -பாசுரம் தோறும் -மிகப் பெரியவன் -ப்ரீதி அப்ரீதி ஹேதுவான
வ்ருத்த அர்த்தங்களை விபூதியாக கொண்ட சர்வ வியாபகன் –
அனைத்தையும் சரீரமாகக் கொண்டவன் -பிரகாரம் -விசேஷணம்
நல் குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்-பதார்த்த சங்கோச ரூப தாரித்ர்யம் –கீழே பகவத் அனுபவ தாரித்ர்யம்
தத் விகாச ரூபமான சம்பத் துக்க ஸ்தானம் சுக ஸ்தானம்
ஆய்-ஒவ் ஒரு இரட்டையிலும் சேர்த்துக் கொண்டு
வெல் பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்-எதிர்த் தலையைச் சாய்க்கும் -சாத்ரமும் பகைமை -குணம் இங்கு -குணம் ஸ்தானம் பொருள் –
முடிக்கும் விஷம் உஜ்ஜீவிக்கும் அமிர்தம்
பல் வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்-வியாப்தன் -என்னை இந்த ஆகாரத்தை பிரகாசிப்பித்தது -காட்டி –
இது தானே விபூதி அத்யாயம் -அடுத்த அத்யாயம் சங்கதி –
ஸ்ரீ மத் எனபது எல்லாம் தேஜஸ் உடைய திவலை -விபூதி மானை சேவிக்க விஸ்வ ரூபம் காட்டி அருளினான் –
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே-இது தான் 11 அத்யாயம் போலே -கண்டேனே என்கிறார் –
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் அன்றோ -ஸ்ரீ கீதார்த்தமே விரவிக் கிடக்குமே
பகவத் அனுபவ ஐஸ்வர்யம் எதிர் பொங்கி வரும் -சத் ஜனம் வாழும் -திவ்ய தேசம் -அபரோஷிக்கப் பெற்றேன் -பிரத்யஷமாக கண்டேன் –

வறுமையும் செல்வமுமாகி, நரகமும் சுவர்க்கமுமாகி, வெல்லக்கூடிய பகையும் நட்புமாகி, விஷமும் அமுதமுமாகி, பலவகையாகவும் பரந்து
பெருமானாகி என்னை ஆள்கின்றவனைச் செல்வம் நிறைந்திருக்கின்ற மக்களை யுடைய திரு விண்ணகரம் என்னும் திவ்விய தேசத்தில் பார்த்தேன்.
ஆகி ஆகிப் பரந்த பெருமான் என்க. என்னை ஆள்வானைத் திருவிண்ணகர்க் கண்டேன் என்க. இந்தத் திவ்யதேசம்,
உப்பிலியப்பன் சந்நிதி என்றும், ஒப்பிலியப்பன் சந்நிதி என்றும் இப்பொழுது வழங்கப் படுகிறது. செல்வு – செல்வம்.
இத்திருவாய்மொழி, கலிவிருத்தம்.

விருத்த விபூதிகனான சர்வேசுவரனைத் திருவிண்ணகரிலே காணப்பெற்றேன் என்கிறார்.

நல்குரவும் செல்வும் –
வறுமையும், அதற்கு எதிர்த்தட்டான செல்வமும்,

நரகும் சுவர்க்கமும் –
துக்கத்திற்கே இருப்பிடமான நரகமும், சுகத்திற்கே இருப்பிடமான சுவர்க்கமும்.

வெல் பகையும் நட்பும் –
சமாதானத்தாலே மீளுமதன்றிக்கே வென்றே விட வேண்டும் பகையும், அதற்கு எதிர்த்தட்டான உறவும்.

விடமும் அமுதமுமாய் –
முடித்தே விடுவதான விஷமும், போன உயிரை மீட்கவற்றான அமுதமுமாய்.
போன உயிரை மீட்டுத் தான் போக்கியமுமாய் அன்றோ அமிருதம் இருப்பது.

விருப்பம் இல்லாத வறுமை முதலானவற்றோடு விரும்பக்கூடிய செல்வம் முதலானவற்றோடு வாசியறத் ததீயத்வ
ஆகாரத்தாலே இவர்க்கு உத்தேசியமாய் இருக்குமன்றோ.

பல் வகையும் பரந்த பெருமான் –
ஞானதிகனான தானும்கூட விபூதியைப் பேசப் புக்கு “என்னுடைய விபூதியின் பரப்பிற்கு முடிவு இல்லை” –
ஹந்த தே கதயிஷ்யாமி விபூதீராத்மநஸ்ஸுபா:
ப்ராதாந்யத: குருசிரேஷ்ட நாஸ்தி அந்த: விஸ்தரஸ்ய மே”-என்பது, ஸ்ரீ கீதை, 10 : 19.
என்று இளைத்துக் கை வாங்கினத்தை, இவ்வளவு அன்பிலே கனத்த இவரால் சொல்லப் போகாது அன்றோ.
ஆனாலும் சிறிது பேசினாராகவும் வேணும் அன்றோ.

வஸ்துவுக்கு விசேடணத்தை ஒழியத் தோன்றுதல் இல்லை யன்றோ.
“வஸ்து விசேடணம் இல்லாதது” என்று விசேடணம் இல்லாததாக மாயாவாதம் சொல்லுகிறார் அலரே.
அங்ஙனேயாகில் மோக்ஷ சாஸ்திரந்தான் வேண்டாவே.
வஸ்துவின் உண்மையைக் கொள்ளும் போது விசேடணம் வேறுபடுத்துவதாயல்லது இராது.
ஒன்றற்கு ஒன்று விசேடணமாகும் போது அந்ய யோக வியவச்சேதம் பண்ணிக் கொண்டல்லது விசேடணம் ஆகமாட்டாது.
இங்கு, இவனுக்கு, தன்னினின்றும் வேறுபட்ட பொருள்களடங்கலும் விசேடணமாயிருக்கையாலே
அந்ய யோக வியவச்சேதம் பண்ண ஒண்ணாது.
ஆனால், மாறுபட்ட விசேடணங்கள் ஒரு பொருளிலே சேருகிறபடி எங்ஙனே? என்னில்,
அயோக வியவச்சேதம் பண்ணிக் கொண்டு சேருகிறது.

பின்ன ப்ரவ்ருத்தி நிமித்தம் -ஆய் -சப்தம் தானே அனைத்தையும் சேர்த்து -சரீரம் பிரகாரம் -அப்ருதக் சித்த விசேஷணம்
கடிகாரம் இருக்கிறது என்றதும் மற்றதை வேறுபடுத்திக் காட்டுமே -அந்ய யோக வியச்சேதம் ராமனே வில்லாளி –
ராமன் வில்லாளியே -அயோக விவச்சேதம்-யோகம் சேர்த்தி –
இவை எல்லாம் சர்வேஸ்வரன் இடம் உண்டு -அயோக விவச்சேதம்
வேறு யார் இடம் இல்லை -அன்யோக விவச்சேதம் –
அனைவரும் இவருக்கு விசேஷணம் -ஆதலால் அன்யயோக விவச்சேதம் பண்ண வழி இல்லையே
அவனுக்கே விசேஷணம் தானே எல்லா குணங்களும் பொருள்களும் -அன்யோக விவச்சேதம் சொல்லவே முடியாதே
விசேஷணம் -கொண்டே ப்ரஹ்மம் இருக்கும் -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -அடைந்து சோஸ்நுதே சர்வான் காமான்
ஆனந்தமாக அனுபவிக்கிறார் -மோஷ சாஸ்திரம் -விசேஷணம் இல்லை என்றால் இது சொல்ல வேண்டாவே என்றவாறு –

இவர் தாம் அவனை அநுபவிக்கவன்றோ இழிகிறது,
இந்த மாறுபட்ட விசேடணங்களைச் சொல்லுகிற இவற்றால் பிரயோஜனம் என்? என்னில்,
அவனை உள்ளபடி கண்டு அநுபவிக்கவேணுமே. இராஜபுத்திரனுக்கு, இராஜாவினுடைய இன்பத்திற் கிடமான ஓலக்கத்தோடு
சிறைக்கூடத்தோடு வாசி அற ‘என் தமப்பனுடைய செல்வம், என்று தோன்றுமன்றோ.
இவர் தமக்கு இங்கு உண்டான அநுசந்தானம், முக்தனுக்கு லீலா விபூதி அநுசந்தானம் போலே அன்றோ.
“ஜனங்களின் நடுவில் இருந்துள்ள இந்தச் சரீரத்தை நினையாதவனாகிறான்”
“நோபஜநம்ஸ்மரந் இதம் சரீரம்” (சாந்தோக்யம், 8. 12 : 3:) -என்னா நிற்கச் செய்தே,
முக்தனுக்கு லீலாவிபூதி ததீயத்வ ஆகாரத்தாலே உத்தேசியமாகா நின்றதன்றோ.
இவர்க்கும் அப்படி முக்தரோடு ஒக்கத் ததீயத்வ ஆகாரம் ஒழிய, வேறு ஆகாரமாக நினைவு இல்லாதபடி
இங்கே இருக்கச் செய்தே மயர்வு அறுத்துக் கொடுத்தான்.
தம்முடைய சம்பந்தத்தாலே பார்த்த போது கால்வாங்கியல்லது நிற்க ஒண்ணாதபடி தியாஜ்யமாகத் தோற்றும்.
அன்றிக்கே, ஞான அஜ்ஞானங்களுக்குப் பொதுவான இந்த இருப்பைக் கழித்து,
அதற்குக் கலக்கமில்லாத தேசத்திலே போகையிலே விரையக்கடவன் எனப்படுதலால் என்னுதல்.

பல்வகையும் பரந்த பெருமான் –
இப்படி உலக முகத்தாலே பலபடியாக விரிந்திருப்பவனானவன்.

பரந்த பெருமான் என்னை ஆள்வானை –
இங்ஙனம் பரந்து இருத்தல் எல்லாம் தம்மை அகப்படுத்த என்று இருக்கிறார்;
ஒருவனை அகப்படுத்த நினைத்தார் ஊரை வளையுமாறு போலே.

செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேன்-
மரு பூமியிலே -மருபூமி – நீரும் நிழலும் அற்ற பாலை நிலம்.-பொய்கை கண்டாற்போலே இருக்கிறபடி.
மிக்க செல்வத்தை யுடைத்தான குடிகளையுடைய திருவிண்ணகர் என்பார் ‘செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்’ என்கிறார்.

“இலக்குமணன் செல்வத்தால் நிறைந்தவன்”
– ஸர்வ ப்ரியகர: தஸ்ய ராமஸ்ய அபி ஸரீரத:
லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்ந: பஹி: ப்ராண இவாபர:-என்பது, ஸ்ரீராமா. பால. 18 : 28.-என்னுமாறுபோலே,
சம்பந்தம் ஒத்திருக்கச் செய்தே, கடக்கக் கிடந்த ஸ்ரீ பரதாழ்வானைப் போலன்றிக்கே,
கிட்ட நின்று அடிமை செய்யும் இளைய பெருமாளைப் போலே.
‘காண வேண்டும்’ என்னும் ஆசையோடே இருந்து வேறு சரீரத்தை அடைந்து வேறு தேசத்திலே போய்க் காண்கை யன்றிக்கே,
பசித்த இடத்தே சோறு பெறுமாறு போலே, -தேசாந்தரம் தேகாந்த்ரம் காலாந்த்ரம் இல்லாமல்
ஆசைப்பட்ட இடத்தே அநுபவிக்கப் பெறுதலின் ‘திருவிண்ணகர்க் கண்டேன்’ என்கிறார்;
“நான் சென்று நாடி நறையூரிற் கண்டேனே”- பெரிய திருமொழி, 6. 8 : 1.– என்னுமாறு போலே.

——————————————————————————————-

கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண் திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2-

ப்ரீதி அப்ரீதிகங்கள் -அனுபந்தித்து வரும் பதார்த்தங்கள் விபூதி -மானாகவும் இருந்து -சஜாதீயர் இல்லாமல் -விஜாதீயன் –
அனைத்தையும் சரீரம் பிரகாரம் -உள்ளும் இருப்பார்
கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்-விபூதியாக இருந்தும் -லோகத்தில் பார்க்கும் -துக்கம் -வந்தால் மனக்கலக்கம்
சுகம் -மனப் பிரசாதம் -தெளிவு தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்-கலக்கத்தால் வரும் கோபமும் -தெளிவால் வரும் பிரசாதமும் –
அக்னியும் அவனது நிழலும் அவனது -பிரசாத சமமான சைத்யமான நிழல் –
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்-ஸூசஜாதீயமாக காண அரியவன் சர்வேஸ்வரன் -என்னை அடிமை கொண்டவன்
தெண் திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே-நன்னகரிலே விஸ்தீரணம் -அலை நீர் வாய்ப்பு -அஹோ ராத்திரி புஷ்கரணி

அநுபவிக்கின்ற இன்பமும் துன்பமுமாகி, கலக்கமும் தேற்றமுமாகி, சீற்றமும் அருளுமாகி. நெருப்பும் நிழலுமாகிக் கண்டு கொள்வதற்கு
அரியவனாகிய பெருமானாகி, என்னை ஆள்கின்றவனுடைய ஊரானது, தெளிந்த அலைகளையுடைய புனலால் சூழப்பட்ட
திருவிண்ணகரம் என்னும் நல்ல நகரமேயாகும்.
ஆய் ஆய் கண்டுகோடற்கு அரிய பெருமான். ஊர் திருவிண்ணகராகிய நல் நகர் என்க. தண்டம் – கோபம். தழல் – நெருப்பு.

தங்கள் முயற்சியாலே ஒருவர்க்கும் காண ஒண்ணாத பெருமையையுடையனாய் வைத்து என்னை
அடிமை கொண்டவனுடைய ஊரான திருவிண்ணகரம் எல்லா நன்மைகளும் பொருந்திய நகரம் என்கிறார்.

கண்ட இன்பம் –
“ஐங்கருவி கண்ட இன்பம்”-திருவாய். 4. 9 : 10.- என்னுமாறு போலே, அளவிற்கு உட்பட்ட சுகம்.

துன்பம் –
பெயர் வேறுபாடு மாத்திரமேயாய் அதனோடு ஒத்த துக்கம்.

கலக்கங்களும் தோற்றமுமாய் –
இதர விஷயங்களைப் பெறாமையால் வரும் கலக்கமும், அவற்றைப் பெற்றால் வரும் தேற்றமும்.

தண்டமும் தண்மையும் –
கோபமும் அருளும்.

தழலும் நிழலுமாய் –
வெப்பத்தைச் செய்யக் கூடிய நெருப்பும், குளிர்ச்சியைச் செய்யக்கூடியதான நிழலுமாய்,

கண்டு கோடற்கு அரிய பெருமான் –
இவை எல்லாவற்றாலும் அவனுடைய அளவு இடற்கு அரிய தன்மையைச் சொன்னபடி. –அபரிச்சேத்யம்-

இவருடைய ஞானத்தின் தெளிவு இருந்தபடி என் தான்!
இங்கே சில விசேடணங்களை சொல்லா, “கண்டு கோடற்கு அரிய பெருமான்” என்று அவனைச் சொல்லா நின்றார்;
மேலே சிலவற்றைச் சொல்லா, “பல்வகையும் பரந்த பெருமான்” என்னா நின்றார்;
இது என்ன அநுசந்தான முறை தான்!
இவனை ஒழிந்தது ஒரு வஸ்துவுக்கு சத் பாவம் இன்றிக்கே இருக்கிறபடி அன்றோ.
இதுவும் ஒரு வ்ருத்த ஸ்வ பாவம் என்றவாறு -அப்ரஹ்மாத்மக வஸ்துவே இல்லையே –

நல்லாரும், நம்பி ஸ்ரீ சேநாபதி தாசரும் கூடத் திருமலைக்குப் போகா நிற்க,
ஸ்ரீ சேநாபதி தாசர் ஒரு கோலை யிட்டுத் தூற்றை அடிக்க,
நல்லார் ‘அர்த்த காம நிமித்தமான துவேஷம் இதனோடு இன்றிக்கே இருக்க,
ஒரு காரணமும் இல்லாமல் ஈஸ்வரனுடைய விபூதியை நலிவதே!’ என்ற வார்த்தையை நினைப்பது.

என்னை ஆள்வான் ஊர் –
என்னை இழக்க மாட்டாமல் “மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில் மிறுக்கு எல்லாம் பட்டு
என்னை அடிமை கொண்டவனுடைய ஊர்.

தெண் திரைப் புனல்சூழ் திரு விண்ணகர் நல்நகரே –
தெளிந்த திரைகளை யுடைத்தான புனலாலே சூழப்பட்ட திரு விண்ணகராகிற நன்னகர்.
திவ்விய நதியான விரஜைக்குப் போலியான ஆறும் உண்டாகப் பெற்றது என்பார் ‘தெண்திரைப் புனல் சூழ்’ என்கிறார்.
அங்கு இருக்கிறவன் இங்கே வந்து நின்றால் அங்கு உள்ளவை எல்லாம் இங்கு உண்டாகத் தட்டு இல்லையே.
அன்றிக்கே, இவ்வளவில் முகங்காட்டாத ஸ்ரீ வைகுண்டமும் ஒரு தேசமாயிற்றதோ?
அவன் விரும்பின இடம் பிராப்பிய பூமியாமித்தனை யன்றோ.

———————————————————————————-

நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்
நிகரில் சூழ் சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச்
சிகர மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்தபிரான்
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே.-6-3-3-

ஞான அஜ்ஞ்ஞான அனுபந்தி பதார்த்தங்கள் விபூதி சர்வேஸ்வரன் உஜ்ஜ்வலமான குணங்களே உத்தாரகம் –
நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்-விசேஷஜ்ஞ்ஞர் உள்ள இடம் நகர் -அவிசேஷஜ்ஞ்ஞர் உள்ள இடம் நாடு –
தத் தத் ஆகார ஞானம் மூடமும்
நிகரில் சூழ் சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச்-ஒப்பு இல்லாத -பிரகாசம் -இருட்டுமாய் -இருளுக்கு ஸ்தானம் பூமியுமாய்
பிரகாச ஸ்தானம் ஆகாயம் சிகர மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்-பொருந்தி வர்த்திக்கும்
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே.-ஔஜ்ஜ்வல்யம் உடைய குண ப்ரதை
யாவர்க்கும் புண்ணியமே-யாவர்க்கும் உஜ்ஜீவன ஹேதுவான ஸூஹ்ருதம் இல்லை

நகரத்திலுள்ளவர்களும் நாட்டிலுள்ளவர்களுமாகி, அறிவும் அறியாமையுமாகி, ஒப்பு இல்லாமல் பரந்திருக்கின்ற ஒளியாகி இருளாகி,
நிலமாகி ஆகாசமாகி, சிகரங்களையுடைய மாடங்கள் நிறைந்துள்ள திருவிண்ணகர் என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி யிருக்கின்ற
எம்பெருமானுடைய ஒளி பொருந்திய கீர்த்தியே யல்லாமல் எத்தகையார்க்கும் உய்வு பெறுதற்குரிய புண்ணியம் வேறு இல்லை.
ஆய் ஆய் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் என்க. பிரானுடைய கீர்த்தியல்லால் யாவர்க்கும் புண்ணியம் இல்லை என்க. புகர் – ஒளி.

திருவிண்ணகர் அப்பனுடைய கல்யாண குணங்களை ஒழிய
ஒருவர்க்கும் பிழைத்தற்குரிய வேறு வழி இல்லை என்கிறார்.
(நன்னகர் பிராப்யம் புண்யம் பிராப்பகம் )

நகரமும் நாடுகளும் –
போகமே மிக்கிருப்பாராய் இன்பம் நுகர்ந்திருக்கும் நகரத்திலுள்ளார்,
பயிர்த் தொழில் செய்து கொண்டு தேக யாத்திரையை நடத்திக் கொண்டிருக்கும் நாட்டிலே யுள்ளார்.
அன்றிக்கே,
அளவிற்கு உட்பட்டனவா யுள்ளவையும், அளவிற்கு உட்படாதனவா யுள்ளவையும் என்னலுமாம்.

ஞானமும் மூடமுமாய் –
பொருள்களின் தன்மைகளை உள்ளபடியே அறியக் கடவதான ஞானமும்,
அதனை மாறுபாடாக எண்ணக் கூடியதான அறியாமையும்.

நிகர் இல் சூழ் சுடராய் இருளாய் –
உபமானம் இல்லாததாய்க் கொண்டு எங்கும் பரந்து நிற்கிற ஒளியாய்,
அதற்கு எதிர்த்தட்டான இருட்டாய்.

நிலனாய் விசும்பாய் –
உருவத்தோடு கூடிய பூமியாய், உருவம் இல்லாத ஆகாசமுமாய்.
அன்றிக்கே,
கடினத் தன்மையையுடைய பூமியும், இலேசான ஆகாசமும் என்னலுமாம்.

சிகர மாடங்கள் சூழ் திரு விண்ணகர் சேர்ந்த பிரான் –
மலைகளின் சிகரங்களைக் கொண்டு வந்து வைத்தாற் போலே இருக்கிற மாடங்களாலே
சூழப்பட்ட திருவிண்ணகரிலே பொருந்தி நிற்கிற உபகாரகன்.

புகர் கொள் கீர்த்தி யல்லால் –
பரம பதத்தில் புகழ் மழுங்கி யாகாதே கிடப்பது.
அங்கு உள்ளாரில் தன்னில் குறைந்தார் இலரே!

மம ஸாதர்மியம் ஆகதா:” என்பது. ஸ்ரீ கீதை, 14 : 2.-4“
என்னுடைய உருவம் முதலானவற்றிற்குச் சமானமான உருவம் முதலானவற்றை அடைந்தவர்கள்” என்றும்
“பூர்ண சாம்யத்தை அடைகிறான்”-நிரஞ்ஜன: பரமம் ஸாம்யம் உபைதி” இது, முண்டகோபநிடதம்.- என்றும்,
“தம்மையே ஒக்க அருள் செய்வார்” -பெரிய திருமொழி, 11. 3 : 5.-என்றும் சொல்லுகிறபடியே,
தனக்குச் சமானமாயுள்ளவர்களாய் அன்றோ அங்குள்ளார் இருப்பது.
குறைவாளர்க்கு முகங் கொடுத்தால் அன்றோ புகழ் நிறம் பெறுவது.

யாவர்க்கும் புண்ணியம் இல்லை –
எல்லார்க்கும் உய்வு பெறுதற்கு வழி அது வல்லது இல்லை.
தாம் தாம் தேடிக் கொள்ளுமவை எல்லாம் கழுத்துக் கட்டியாமத்தனை.
“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில் அவன் வர, ‘வேண்டா’ என்று முடிந்து போகப் புக்காரன்றோ.
இவன் பார்க்கும் உபாயம் இவனுக்கும் கழுத்துக் கட்டியாம்.
அவன் காட்டும் உபாயம் அவனுக்கும் காற் காட்டாம். –
போகு நம்பி சொன்னாலும் போக முடியாத கால் கட்டு அன்றோ
இது வன்றோ உபாயத்தில் அடிப்பாடு.-பரகத ஸ்வீகார பெருமை

—————————————————————————————–

புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.–6-3-4-

புகர் கொள் கீர்த்தி -புண்ய பாப அனு பந்தி பதார்த்திக விபூதிமான் -அவன் அனுக்ரகத்தால்
புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்-தத் தத் சம்ஸ்லேஷ விஸ்லேஷங்கள்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்-மற்றவை இரட்டை -உள்ளனாய் இல்லை
புண்யம் சம்ச்லேஷம் -நினைவு -சத்பாவம் -இன்மை அசத்பாவம் -உளது இலது –
அல்லனாய் -தத் தத் கர்ம வச்யனாய் இல்லாமல் இருப்பதால் –
திண்ண மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்தபிரான்-ஸ்திரமான மாடங்கள்
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.-கிரித்ரமம் இல்லை பிரிநிலை எவகாரம் -அதிசயித போக்யதமான
அருள் கிருபையையே -கீழ் சொன்ன உத்தார கீர்த்தி -பரமார்த்தம் இதுவே

புண்ணியம் என்ன, பாவம் என்ன; புணர்ச்சி என்ன, பிரிவு என்ன; ஆகிய இவையாகியும், நினைவு ஆகியும், மறப்பு ஆகியும்,
உண்மையாகியும், இன்மையாகியும், கர்மங்கட்குக் கட்டுப்படாதவனாகியும், திண்ணிய மாடங்கள் சூழ்ந்த திரு விண்ணகரம் என்னும்
திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற பிரானாகிய ஸ்ரீ கிருஷ்ணனுடைய இனிய திருவருளையே உய்வு பெறுதற்குரிய
புண்ணியமாகக் கண்டு கொள்ளுங்கள்; யான் கூறும் இது கைதவம் அன்று.
ஆய் ஆய் ஆய் ஆய் ஆய் ஆய் சேர்ந்த பிரான் இன்னருளே கண்டு கொண்மின் என்க.
‘கைதவமே’ என்றதிலுள்ள ஏகாரம், எதிர்மறைக் கண் வந்தது. கைதவம் – வஞ்சனை. ஈண்டு, பொய்யைக் காட்டுகிறது.

புண்ணியம் பாவம் முதலானவைகளாய் எம்பெருமானுக்கு விசேடணமாகத் தோற்றுகிற விபூதிகள்
எல்லாம் அவன் கிருபையாலே உண்டாயின என்கிறார்.

புண்ணியம் பாவம் –
இன்பத்திற்குக் காரணமான புண்ணியம், துன்பத்திற்குக் காரணமான பாவம்.

புணர்ச்சி பிரிவு –
புண்ணியத்தின் பலமான கலவி, பாவத்தின் பலமான பிரிவு.

எண்ணமாய் மறப்பாய் –
விருப்பமுள்ள பொருளில் நினைவு, விருப்பம் இல்லாத பொருளில் மறதி.

உண்மையாய் இன்மையாய் –
உள்ளது என்ற சொல்லின் பொருளுமாய், இல்லது என்ற சொல்லின் பொருளுமாய். என்றது,
சேதன அசேதனங்களுமாய் என்றபடி.
அன்றிக்கே,
உண்மை இன்மை என்னுதல்.

(இல்லத்தும் உள்ளதும் அல்லது அவன் உரு -முன்பு பார்த்தோம் –
இல்லது அல்லது அவன் உரு என்றதே உள்ளது அவன் உரு
வ்யதிரேகம்-அங்கு நேராக இங்கே )

அல்லனாய் –
புண்ணிய பாவங்கட்கு நியாமகனாய்,
அவற்றுக்குக் கட்டுப்பட்டவன் அன்றிக்கே இருப்பவனாய்.

திண்ண பாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் –
“ஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய திரு மாளிகை ஒன்றனை மாத்திரம் கடல் அழிக்க வில்லை” –
“வாசுதேவ க்ருஹம் து ஏகம் நப்லாவயதி ஸாகர.”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 38 : 9.-என்கிறபடியே,
பிரளய காலத்துக்கும் அழியாதபடி திண்ணிதான மாடங்களாலே சூழப்பட்ட திரு விண்ணகரிலே
சேர்ந்து நிற்கிற உபகாரகனான ஸ்ரீ கிருஷ்ணன்.

இன்னருளே –
புண்ணியம் பாவம் முதலாயினவைகளாய்க் கொண்டு அவனுக்கு விபூதிகளாகத் தோற்றுகிறவை யெல்லாம்
அவனுடைய கிருபையாலே உண்டாயின.
பாவமும் அவன் கிருபையாலேயோ? என்னில், அதுவும் அப்படியே.
சேதனனுடைய முற் பிறவியின் கர்மங்களுக்குத் தகுதியாக நடத்துவிக்கின்ற காரணத்தாலே –
சாபேஷ்த்வாத் -கர்மம் எதிர்பார்த்தே செய்பவன்
அதுவும் அவன் கிருபையாலே யாமத்தனை.
நன்று; எல்லாம் செய்தாலும் தீமை அவன் கிருபையாலே வரக் கூடுமோ? என்னில்,
தீயதனைக் காட்டி வெதுப்பி நல் வழி போக்கு கையினாலே கூடும் அன்றோ.-
அதுவும் அவனது இன்னருளே –

இன் அருள் –
நிர்ஹேதுக விஷயீ காரம்
காரணம் இல்லாமலே செய்யப்படுகின்ற அருள்.

கைதவமே –
நான் சொல்லுகிற இதில் அர்த்தவாதம் இல்லை.

கண்டு கொண்மின்கள் –
நீங்களும் எல்லாம் சாஸ்திரங்களிலே கண்டு கொள்ளுங்கோள்.
அன்றிக்கே,
கைதவமே – என்பதற்கு,
க்ருதகம் -செய்யப்பட்டவை என்றபடியாய்,
செய்யப்பட்டவை அடங்கலும் அவனுடைய காரணமில்லாமலே செய்யப்படுகின்ற
இனிய திருவருளாலே உண்டாயின என்னுதல்.
பூ புவ சுவ -மூன்று லோகங்கள் -க்ருதகம் -அவன் இன் அருளால் படைக்கப் பட்டன என்றபடி

——————————————————————————–

கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்
மெய் பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச்
செய்த திண் மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பெய்த காவு கண்டீர் பெருந் தேவுடை மூவுலகே.–6-3-5-

பிரகாரம் -சகல ஜகத்தும் லீலா உத்த்யானம் தோட்டம்
கை தவம் செம்மை கருமை வெளுமையுமாய்-தாழ்ந்த உத்க்ருஷ்ட -அதன் நிறமும் –
மெய் பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச்-சத்ய அசத்திய -யுவான -அபி நவம் -புதியவை ஜீரணம் பழைமை
செய்த திண் மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்-நித்ய வாசம்
பெய்த காவு கண்டீர் பெருந் தேவுடை மூவுலகே.-ப்ரஹ்மாதி உயர்ந்த தெய்வங்கள் உள்ள லோகங்களும் பெரிய தோட்டம் -லீலைக்காக

வஞ்சனையும் நேர்மையுமாகி, கருமையும் வெண்மையுமாகி, மெய்யும் பொய்யுமாகி, இளமையும் முதுமையுமாகி, புதுமையும் பழமையுமாகி,
செய்யப்பட்ட திண்ணிய மதிள்களாற் சூழப்பட்ட திரு விண்ணகரம் என்னும் திவ்விய தேசத்தில் நின்ற திருக் கோலமாய் எழுந்தருளியிருக்கின்ற
எம்பெருமான் வைத்து வளர்க்கின்ற சோலை காண்மின்; பெரிய தெய்வங்களை யுடைய இந்த மூன்று உலகங்களும்.
பெருந் தேவுடை மூவுலகு, ஆய், சேர்ந்த பிரான் பெய்த காவு கண்டீர் என்க. கா – சோலை.

சிறியார் பெரியார் என்னாதே எல்லார்க்கும் ரக்ஷகன் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் என்கிறார்.

கைதவம் செம்மை –
வஞ்சனை நேர்மைகள்.

கருமை வெளுமை –
கருப்பு வெளுப்பு.

மெய் பொய் –
உண்மை இன்மை.

இளமை முதுமை –
இளமை கிழத்தனம்.

புதுமை பழமை –
புதுமையும் பழமையும்.
அத்ய தனமும் புராதனமும்

செய்த திண் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் –
காலம் செல்லச் செய்தேயும் இப்பொழுது செய்தாற் போலே இருக்கிற தொழிலின் புதுமையைச் சொல்லுகிறது.

பெய்த காவு கண்டீர் –
வைத்து ஆக்கின சோலை கண்டீர்.

பெரும் தேவுடை மூஉலகே –
ஈஸ்வர அபிமானிகளான தேவர்களையுடைத்தான மூன்று உலகங்களும்.

இத்தால், என் சொல்லியவாறோ? எனின்,
சோலையானது தனக்கு வேண்டும் பாதுகாவலை அறிவிக்கமாட்டாது அன்றோ;
நின்ற இடத்தே நின்று வாடிக் காட்டுகையும்,
பின்னர், வைத்து ஆக்கினவனே அதற்கு வேண்டும் காவலைச் செய்ய வேண்டுகையும்
முதலாயினவற்றை யுடைத்தாயிருக்கையாய் இருக்குமன்றோ.

அப்படியே, நியமிக்கின்றவர்கள் நியமிக்கப்படுகின்ற பொருள்கள் என்னும் வேற்றுமை அற எல்லாம்
அவன் புத்தியதீனமாக இருப்பதனைத் தெரிவித்தபடி.

அம்ருதம் பிந்து கடாஷம் முன்பு நஷ்டம் வாடிக் காட்டும் -சதுஸ்லோஹி
மின்னிடை மடவாரில் பொருந்தோம்-சேர மாட்டேன்- என்றதும் அவன் அதீனம்-

—————————————————————————————————

மூவுலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய்
பூவில் வாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த்
தேவர் மேவித் தொழும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ் சுடரே.–6-3-6-

விலஷண அவிலஷண பதார்த்தங்கள் -விபூதியாக உடைய சர்வேஸ்வரன் -ஆஸ்ரிதற்கு
மூவுலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய்-ஸ்ருஜ்யத்வ -கர்ம வஸ்யத்வ -குண த்ரயாத்மகத்வ பெருமை இல்லாத
தத் பிரதிபட நித்ய விபூதி ராக த்வேஷங்கள்-குணம் இங்கு கீழே த்ரவ்யம்
பூவில் வாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த்-ஸ்ரீ லஷ்மி -சேஷ்டை சேட்டை தன் மடி அகத்து செல்வம் பார்த்து –
தத் தத் கார்யமான புகழுமாய் பழியுமாய் -பிரகாரம்
தேவர் மேவித் தொழும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்-இந்த விபூதி யோகம் -நீர்மையை அனுபவிக்க
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ் சுடரே.-மின்னிடை மடவாரில் விலகிய பாவி -சேர்ந்ததால் வந்த ஔஜ்வல்யம்

மூன்று உலகங்களை யுடையனாயும் அல்லாத பரமபதத்தை யுடையனாகியும், மகிழ்ச்சியாகியும் சீற்றமாகியும், தாமரைப் பூவில் வசிக்கின்ற
திருமகளாகியும் மூதேவியாகியும், புகழாகியும் பழிப்பாகியும், தேவர்கள் மனம் மகிழ்ந்து தொழுகின்ற திரு விண்ணகர் என்னும் திவ்விய தேசத்தில்
எழுந்தருளி யிருக்கின்ற உபகாரகன், பாவியேனாகிய என்னுடைய மனத்தின் கண்ணே நித்திய வாசம் செய்கின்ற மேலான ஒளி யுருவன் ஆவான்.
ஆய், சேர்ந்த பிரான் உறைகின்ற பரஞ்சுடர் என்க. தவ்வை – தமக்கை; மூதேவி.

‘நான் அல்லேன்’ என்னச் செய்தே தன் குணங்களையும் செயல்களையும் காட்டி மறக்க ஒண்ணாதபடி கலந்து அதனாலே
பேரொளிப் பிழம்பா யிருக்கிறவன் திரு விண்ணகரிலே நின்றருளின சர்வேஸ்வரன் கண்டீர் என்கிறார்.

மூன்று உலகங்களுமாய் –
மூன்று உலகங்கட்கும் நிர்வாஹகனாய்.
அன்றிக்கே,
கிருதகம் அகிருதகம் கிருதாகிருதகம் என்னும் மூன்று வகைப்பட்ட உலகங்களுமாய் என்னுதல்.

க்ருதகம் -அவாந்தர பிரளயம் -அழிந்து -கீழ் ஏழு லோகங்கள் மேல் மூன்று லோகங்கள்

மேல் உள்ள மக -க்ருதக்ருதகம் -ஆள் இல்லை -லோகம் இருக்கும் –
அவாந்தர பிரளயத்தில் மேல் லோகம் போவார்கள் -க்ருஹங்களுக்கு ஸ்வரூப நாசம் இல்லையே

ஜன தப சத்யம் -மூன்று லோகங்கள்-அக்ருதகம் –

அல்லனாய் –
அல்லாத மேலே யுள்ள உலகங்கட்கும் நிர்வாஹகனாய்.
அன்றிக்கே,
இந்த உலகங்களைச் சொல்லி ‘அல்லனாய்’ என்கையாலே,
இவ்வளவு அன்றிக்கே அசாதாரணமான நித்திய விபூதியையுடையவன் என்னுதல்.

உகப்பாய் முனிவாய் –
மகிழ்ச்சியும் முனிவுமாய்.

பூவில் வாழ் மகளாய்த் தவ்வையாய் –
திருமகளும் திருமகள் அல்லாதவளுமாய்.
தவ்வை – திருமகள் அல்லாதவள்.

புகழாய்ப் பழியாய் –
திருமகளினுடைய கடாக்ஷ முடையார்க்கு வரும் புகழ்,
தவ்வையினுடைய கடாக்ஷமுடையார்க்கு வரும் பழி.

தேவர் மேவித் தொழும் திரு விண்ணகர் சேர்ந்த பிரான் –
இந்திரன் முதலான தேவர்கள் இங்குள்ளாரால் கொடுக்கப்படுகின்ற ஹவிஸ்ஸினைக் கொள்ளும் போது
மூன்று யோஜனை தூரம் அவ்வருகே நின்று முகத்தைத் திரிய வைத்து வாங்கி வாந்தி பண்ணியாயிற்றுப் போவது;
அப்படி இருக்கிறவர்களுடைய வாசனையும் பொறுக்க மாட்டாத நித்திய ஸூரிகள்,
திருவிண்ணகர் பூமியிலே ஆகையாலே இங்கே வந்து பொருந்தி வசிப்பர்கள்.
அப்படிப்பட்ட திரு விண்ணகரிலே நித்திய வாசம் செய்கிற உபகாரகன்.

பாவியேன்-
“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியிலே அவன் மேல் விழத் தாம் இறாய்த்த படியை நினைத்துப் ‘பாவியேன்’ என்கிறார்.
நித்திய ஸூரிகள் தன் பக்கலிலே வந்து மேல் விழ, அதனைத் தள்ளித் தான் என் பக்கலிலே வந்து
மேல் விழா நிற்கக் கண்டீர் நான் ‘அல்லேன்’ என்றது.

மனத்தே உறைகின்ற-
இப்போது, நித்திய ஸூரிகளும் அந்த இருப்பும் கிடக்கக் கண்டீர் என் நெஞ்சிலே புகுந்து நித்திய வாசம் செய்யா நின்றான்.

பரஞ் சுடரே –
தனக்குப் புறம்பே உண்டான வசிக்கும் இடங்கள் கிடக்க, என் நெஞ்சிலே புகுந்து நின்றது
எனக்குக் காரியம் செய்தானாய் இருக்கை யன்றிக்கே ‘தன் பேறு’ என்று தோற்றும்படி பேர் ஒளியன் ஆனான். என்றது,
“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியிலே, ‘இவரை இழக்கிறோமோ?’ என்று வந்த உறாவுதல் தீர,
இவரைப் பெற்ற பின்பு அதனாலே
“நின்றிலங்கு முடியினாய்!” –திருவாய். 6. 2 : 8.-என்கிறபடியே வடிவிலே பிறந்த வேறுபாடு இருக்கிறபடியைத் தெரிவித்தபடி.

——————————————————————————–

பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
வரங் கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே.–6-3-7-

ஆஸ்ரித அநாஸ்ரிதர் விஷயமான ஆகார பேதம் -உடைய சர்வேஸ்வரன் திருவடிகளே சர்வருக்கும் பிரபல ஆஸ்ரயம்
பொது நின்ற பொன் அம் கழல் -இது முக்கிய பாசுரம்-6-3-9-பாசுரம் பதிகத்துக்கு நிதான பாசுரம்
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்-அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரகம் -அழுக்கு-பதிந்த ஜகதாகாரம்
மரத்தை கடலை வணங்கி -இயற்கை -என்பர் அநாஸ்ரிதர் -பத்ம நாப அமரப் பிரபு –
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்-மறைந்தும் -அநாஸ்ரிதர் விஷயத்தில் -ஆஸ்ரிதர் விஷயத்தில் தோன்றியும் –
பிரகாசிக்கும் விஷயத்தில் ஸ்திரமாக -இதர விஷயத்தில் அஸ்திரமாகவும் –
சிரங்களால் வணங்கும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்-ப்ரஹ்மாதிகள் தங்கள் அபேஷிதம் பெற வணங்கும்
வரங் கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே-அவனே சரண்யன் –
சமாப்திக தாரித்ர்யம் பெருமை உடைய திருவடிகள் ஒழிய பிரபல ஸ்தலம் இல்லை

பிரகிருதி சம்பந்தம் இல்லாத திருமேனியை யுடையவனாயும், உலகத்தையே உருவமாக வுடையவனாயும், கண்களுக்கு வெளிப்படாது மறைந்தவனாயும்,
இராம கிருஷ்ணாதி அவதாரங்களைச் செய்து கண்களுக்குத் தோன்றுகின்றவனாயும், அந்த அந்த அவதாரங்களில் பல ஆண்டுகள் நிலை பெற்று
நிற்கின்றவனாயும், வஞ்சனையான காரியங்களைச் செய்கின்றவனாயும் இருந்து, தேவர்கள் தலைகளால் வணங்குகின்ற திரு விண்ணகரம்
என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானுடைய சிறப்பை யுடைத்தான
திருவடிகள் அல்லாமல் எத்தகையார்க்கும் வலிய உபாயம் வேறு ஒன்று இல்லை.
உடம்பாய் உடம்பாய்க் கரந்தும் தோன்றியும் நின்றும் செய்தும் சேர்ந்த பிரான் என்க. பிரான் பாதம் அல்லால் வன்சரண் யாவர்க்கும் இல்லை என்க.

எத்தனையேனும் ஞானமுடையார்க்கும் வலிய புகல் அவன் அல்லது இல்லை என்கிறார்.

பரஞ் சுடர் உடம்பாய்-
“திரு மேனி ஒளிகளின் கூட்டம்” -தேஜஸாம் ராஸி மூர்ஜிதம்”-இது, ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 9 : 67.
என்கிறபடியே, சுத்த சத்துவ மயமான அசாதாரண திவ்விய விக்கிரகத்தை யுடையனாய்.

அழுக்குப் பதித்த உடம்பாய் –
முக் குணங்களுக்கு வசப்பட்ட உலகத்தையே உருவமாக வுடையனாய். -நீராய் நிலனே -ஜகதாகாரமாய் –

கரந்தும் –
இவற்றுக்கு அந்தராத்மாவாய்ப் புக்கு நிற்கச் செய்தே
“எந்தப் பரமாத்மாவை ஆத்மா அறிகிறான் இல்லை” -“யம் ஆத்மா ந வேத”-என்பது, பிருஹதாரண்யக உப.-என்கிறபடியே,
இவற்றுக்குத் தோன்றாத படி நின்று, இவற்றின் சத்தையை நோக்கியும்.

தோன்றியும் –
காண வாராய் -திருவாய். 8. 5 : 2.-என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்திருப்பார்க்குக் காணலாம்படி
இராம கிருஷ்ணாதி அவதாரங்களைச் செய்தும்.
(ஹார்த்தமாய் கரந்தும் அவதரித்து தோன்றியும்)

நின்றும் –
நூறு ஆண்டுகள், பதினோராயிரம் ஆண்டுகள் நின்றும். அவ்விடங்களிலே,

கைதவங்கள் செய்தும் –
வஞ்சனைகள் பொருந்திய காரியங்களைச் செய்தும்.
அதாவது, அவதரித்து நிற்கச் செய்தே தன் படிகள் சிசுபாலன் முதலாயினார்கட்குத் தோற்றாதபடி செய்தும்
தன்னை அடைந்தவர்கட்குத் தோன்றும்படி செய்தும் போந்தமையைத் தெரிவித்தபடி.
(ஆஸ்ரிதர்களுக்கு விஸ்வரூபம் -சதுர் புஜங்களைக் காட்டி அருளையும் )

விண்ணோர் சிரங்களால் வணங்கும் திரு விண்ணகர் சேர்ந்த பிரான்-
‘பிரமன் முதலாயினோர்’ தலை படைத்த பிரயோஜனம் பெற்றோம்’ என்று வணங்கும்படி திரு விண்ணகரிலே நிற்கிற உபகாரகன்

வரம் கொள் பாதம் அல்லால் –
எத்தனையேனும் தண்ணியாரும் கிட்டலாம்படியான சிறப்புப் பொருந்திய திருவடிகள் அல்லது.-
வர -சிறந்த –

யாவர்க்கும் வன் சரண் இல்லை –
எத்தனையேனும் கிழார் கிழார்க்கும் வலிய புகல் இல்லை.
அவனை ஒழிந்த சரண்யர் அனைவரும் இவனைக் கொண்டு முழுகும் பேர்.
இவனைக் கொண்டு கரை ஏறுதற்குத் தக்க வலிய புகல் அவன் திருவடிகள் அல்லது இல்லை.
அடியே பிடித்து ஜீவிக்கில் ஜீவிக்குமத்தனை.

——————————————————————————–

வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங் கூற்றமுமாய்த்
தன் சரண் நிழற் கீழ் உலகம் வைத்தும் வையாதும்
தென் சரண் திசைக்குத் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–6-3-8-

அனுகூல பிரதிகூல விஷயங்களான ஸ்வ பாவங்கள் -சர்வேஸ்வரன் -ஆஸ்ரித பவ்யனான கிருஷ்ணன் -எனக்கு அசாதாராண புகல் இடம்
வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்-தேவர்களுக்கு -திண்ணிய சரண் -அசுரர்களுக்கு யமன் போலே
தன் சரண் நிழற் கீழ் உலகம் வைத்தும் வையாதும்-தாத்ருச வேறுபாட்டை உடைய லௌகிகரை-இங்கும் தேவர் அசுரர் உண்டே
பாதச் சாயையில் வைத்தும் வைக்காமலும் –
தென் சரண் திசைக்குத் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்-தெற்குத் திக்குக்கு புகலிடம் –
என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே-என் சுவாமி -சர்வ பிரகாரத்தாலும் சாதாரணமான புகல் இடம் –

தேவர்கட்குச் சிறந்த புகலிடமாகியும், அசுரர்கட்குக் கொடிய யமனாகியும், பெரியோர்களைத் தன் திருவடிகளின் நிழலிலே வைத்துக் காப்பாற்றியும்,
பெரியோர் அல்லாதாரை அங்ஙனம் வைத்துக் காப்பாற்றாமலும், தெற்குத் திசைக்குப் புகலிடமான திரு விண்ணகரம் என்னும் திவ்விய தேசத்திலே
எழுந்தருளி யிருக்கிற பிரான் என் கண்ணன் என்னை ஆளுடைய என்னப்பன் எம்பெருமான் எனக்குப் புகலிடமாவான்.
சுரர்க்கு வன்சரண் ஆய் என்க. ஆய் வைத்தும் வையாதும் சேர்ந்த பிரானாகிய கண்ணன் என்க.
கண்ணனாகிய என்னப்பன் என் சரண் என்க. என்சரண் – எனக்குச் சரண்.

எனக்குப் புகலான மாத்திர மன்றிக்கே, மற்றும் எல்லாமும் திரு விண்ணகர் சேர்ந்த பிரானே என்கிறார்.
எனக்கு விசேஷணமான புகல் என்கிறார் –
(எனக்கு சர்வ வித பந்து என்றும் எனக்கு விசேஷித்து புகல் என்கிறார் )

சுரர்க்கு வன் சரண் ஆய் –
தேவர்களுக்காகத் தன்னை அம்புக்கு இலக்கு ஆக்கி அவர்களை வலிய ரக்ஷகனாய். –
முப்பத்து மூவர் முன் சென்று –

அசுரர்க்கு வெம் கூற்றமுமாய் –
அசுரத் தன்மை வாய்ந்தவர்களுக்கு ‘அந்தகன் தண்ணீர்’ என்னும்படி வெவ்விய கூற்றமுமாய் –
அந்தகன்-யமன் -தண் கூற்றம்
வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்து -அடித்த அடியே போதுமே —

தன் சரண் நிழற் கீழ் உலகம் வைத்தும் வையாதும் –
தன்னுடைய பாதங்களின் நிழலிலே, அநுகூலரான அருச்சுனன் முதலாயினோர்களை இட்டுக் கொண்டும்.
சம்பந்தம் ஒத்திருக்கச் செய்தே, பிரதிகூலரான துரியோதனன் முதலாயினோர்களைப் புறம்பே இட்டும்.
உலகம் -அர்ஜுனன் -கண்ணனுக்கு அந்த அளவு சஹ்யம் -உயர்ந்தோர் மாட்டே உலகம் -திருவடி பற்றினவர்

தென் திசைக்குச் சரண் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் –
“புண்ணிய சரித்திரங்களை யுடைய எந்த அகத்தியராலே தெற்குத் திக்கானது புகலிடமாகச் செய்யப்பட்டதோ”
“தஷிணா திக் கிருதா யேந ஸண்யா புண்ய கர்மணா”- என்பது, ஸ்ரீராமா. ஆரண். 11 : 82.

பத்திக்கு வரம்பாகிய பார்த்தன் பல தீர்த்தம்
அத் திக்கினும் எத் திக்கினும் ஆம் என்றவை ஆடிச்
சித்திக்கொரு விதையாகிய தென்னாட்டினை அணுகித்
தத்திச்சொரி அருவித்தட அரவக்கிரி சார்ந்தான்.-என்பது, வில்லிபாரதம்.என்கிறபடியே,
தெற்குத் திக்கிற்குப் புகலிடமான திருவிண்ணகரிலே கிட்டின உபகாரகன்.
அவர் குரு முனிவர்
இவர் குருகை முனிவர் –
தென் திசை இருவருக்காக வணங்குகிறோம் –

என் சரண் –
எனக்குப் புகலிடம்.

என் கண்ணன் –
எனக்குப் பவ்யனானவன்.

என்னை ஆளுடை என் அப்பன் –
என்னை அடிமை கொள்ளுதற்கு உரியவன், எனக்கு உபகாரகன்.
‘உலகம்’ என்பது, உயர்ந்தோர் மாட்டு.

——————————————————————————————-

என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன் மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள் நிழலே.–6-3-9-

நிதானப் பாசுரம் இது -பரஸ்பர வ்ருத்த ஆகாரம் பந்து வர்க்கம் -ஸ்ப்ருஹணீய வஸ்து -பிரகாரம் -உபகாரத்வத்துக்கு ஒப்பு இல்லாத
சர்வேஸ்வரன் பாதச் சாயை தந்து அருளினான்
என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்-சத்தைக்கு ஹேது இவன் -இகுள் -வளர்த்த தாய் -ஸ்த்ரீத்வம்
செவிலித்தாய் -பெற்றவள் நல் தாய் -பந்து வர்க்கத்தில் வேறுபாடு
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்-பொன் போலே ஸ்ப்ருஹணீயத்வம் பிரகாசிப்பித்தும் –
அதில் காட்டில் ஔஜ்வல்யத்தால் மிக்கு மஹார்கதை-ரத்னம் போலே தேஜஸ் பிரகாசிப்பித்தும்
அதில் காட்டில் நீர்மை குளிர்த்தியாலும் வியார்வர்தமான -முத்தப்பன்-நீர்மையை பிரகாசப்படுத்தி -என்னப்பனுமாய்-பஹு முக உபகாரகன்
மின்னப் பொன் மதிள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த அப்பன்-சர்வ ஸ்வாமி -மதில்களும் பொன் மணி முத்து
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள் நிழலே–உபகாரத்தில் ஒப்பார் இல்லாத -திருவடி நிழல் தந்து அருளினான்

எனக்கு என் அப்பனாகியும், எனக்குச் செவிலித் தாயாகியும், என்னைப் பெற்ற தாயாகியும், பொன்னைப் போன்றவனும் மணியைப் போன்றவனும்
முத்தைப் போன்றவனும் என் அப்பனும் ஆகியும், பிரகாசிக்கின்ற அழகிய மதிள்களாற் சூழப்பட்ட திரு விண்ணகரம் என்னும் திவ்விய தேசத்தில்
எழுந்தருளி யிருக்கின்ற அப்பன், தனக்குச் சமானமானவர்கள் இல்லாத அப்பன் தன்னுடைய திருவடிகளின் நிழலைத் தந்தான்.
எனக்கு என்னப்பன் ஆய் என்று மாற்றுக. இகுளை – தோழி. ஆய் ஆய் சேர்ந்த அப்பன் தன் ஒப்பார் இல் அப்பன் அவன்தன தாள் நிழல் தந்தனன் என்க.

எனக்குச் சரணமான மாத்திரமே யன்று, மற்றும் எல்லாமும் அவனே என்கிறார்.
அன்றிக்கே,
எனக்கு எல்லா வகையாலும் உபகாரகனாம் தன் திருவடி நிழலை,
‘அல்லேன்’ என்ன,
வலிய எனக்குத் தந்தான் என்கிறார் என்னுதல்.

எனக்கு என் அப்பன் ஆய் –
எனக்கு அசாதாரணனாய்ச் சத்தைக்குக் காரணமாயுள்ள பிதாவாய்.
பஞ்சகாலத்திலே குழந்தைகளைவிற்று உண்ணும் தமப்பனைப் போல் அன்றியிலே,
தன்னை அழிய மாறியும் என்னை நோக்கக் கடவ தமப்பனாய்.

இகுளாய் –
எனக்கு நடந்த செயலைப் பற்றிச் சொல்லுவதற்குரிய தோழியுமாய்.
இகுளை என்று தோழிக்குப் பெயர். அது கடைக்குறைந்து ‘இகுள்’ என நிற்கிறது.

என்னைப் பெற்றவளாய் –
வளர்த்துக் கொள்ளியான தாயைப் போல் அன்றியே, பத்து மாசம் வயிற்றிலே வைத்து நோக்கிப் பெற்ற தாயாய்.

பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் என் அப்பன் –
வேறே இனிய பொருள்களாய்க் கொண்டு உபகாரகம் ஆவன சில பொருள்கள் உள;
எனக்கு அப்பொருள்கள் எல்லாம் தானாய் நின்று உபகரித்தவன்.

மின்னப் பொன் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் –
மின்னா நின்றுள்ள பொன் மதிளாலே சூழப்பட்ட திரு விண்ணகரிலே நின்ற உபகாரகன்.

தன் ஒப்பார் இல் அப்பன் –
சிலர்க்கு ஒன்றைக் கொடுக்குமிடத்தில், தன்னோடு ஒக்கக் கொடுக்க வல்லார் இல்லாதபடியான மஹோபகாரகன்.

இதற்கு, ‘மின்னிடை மடவார்’ என்ற திருவாய்மொழியிலே, அவன் மேல் வந்து விழ,
‘நீ எனக்கு வேண்டா’ என்று நான் தள்ளத் தள்ள,
‘நீ உனக்கு ஹிதம் அறிந்தாயோ? நான் உனக்கு வேணுங்காண் என்று தன்னை எனக்குத் தந்தவன்’ என்று சீயர் அருளிச் செய்வர்.

தன தாள் நிழல் தந்தனன் –
‘உன்னை ஒழிந்த வெய்யிலே எனக்கு அமையும்’ என்று நான் அகலப் புக,
“அழித்தாய் உன் திருவடியால்” என்று தன்னுடைய திருவடிகளாலே என் செருக்கை-மமதையைப்- போக்கி,

திருவடி நிழலை எனக்குத் தந்தான்.
அடிபட்டவாறே, ‘எனக்கு’ என்று வைத்தவற்றையும் பொகடுவர்களே.

திருவடிகளாலே என் செருக்கைப் போக்கினான்’ என்றதனை ரசோக்தியாக அருளிச்செய்கிறார்
‘அடிபட்டவாறே’ என்று தொடங்கி.
திருவடிகள் என்றும்- தண்டனை என்றும் பொருள்.

———————————————————————————————–

நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
மழலை வாய் வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம்; காண்மின்களே.–6-3-10-

பரஸ்பர வ்ருத்த ஆகாரமான -சகல சராசரங்கள் -விபூதி -சர்வேஸ்வரன் திருவடிகளைத் தவிர
வேறு ரஷகம் இல்லை-காண்மின்களே.- நீங்களே நிரூபித்திக் கொள்ளலாம்
நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்-அணு மஹத்-எல்லை -நடுவில் குறுமை நெடுமை -அனைத்துமாய்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்-சரம் ஜங்கமம் அசரம் ஸ்தாவரம் -சர்வ சரீரி -ஸ்வ பாவம் இல்லாதவன் –
மழலை வாய் வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான்-முக்தமான வாய் வியாபாரம் -பாடும் -போக்யத லாபத்தாலே வண்டுகள் வாழும் நித்ய வாசம்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம்; காண்மின்களே.-வேறே ரஷகத்வம் இல்லையே -மனசால் காண்மின்கள்-

நிழலும் வெய்யிலுமாகி, சிறுமையும் பெருமையுமாகி, குறுமையும் நெடுமையுமாகி, திரிகின்றவையும் நிற்கின்றவையுமாகி, மற்றுமாகி,
அவை அல்லனுமாகி, இசை பாடுகின்ற இளமை பொருந்திய வண்டுகள் வாழ்கின்ற திரு விண்ணகரில் எழுந்தருளியிருக்கின்ற பிரானுடைய
திருவடிகளே அல்லாமல் மற்றும் ஒரு பற்றுக்கோடு இலோம்; நீங்களே காணுங்கோள்.
அல்லனுமாய் மன்னு பிரான் என்க. களைகண் – பற்றுக்கோடு.

அவன் திருவடிகள் அல்லாமல் வேறு ஒரு ரக்ஷகம் இல்லை என்னுமிடத்தைப் புத்தி பண்ணுங்கோள் என்கிறார்.

நிழல் வெய்யில் –
குளிர்ச்சிக்குக் காரணமான நிழலும். உஷ்ணத்திற்குக் காரணமான வெய்யிலும்.

சிறுமை பெருமை –
சிறுமைக்கு எல்லையான அணுத்வமும், பெருமைக்கு எல்லையான மகத்வமும்

குறுமை நெடுமை
மத்திம அளவிலுண்டான குறுகுதல் நீளுதல்கள்.

சுழல்வன நிற்பன –
ஜங்கமங்களும், தாவரங்களும்.

மற்றுமாய் –
சொல்லப்படாதன எல்லாமாய். ‘மற்றும்’ என்றது சொல்லப்படாதனவற்றைத் தழுவுகின்றது.-
அநுக்த சமுச்சயம்-

அவை அல்லனுமாய் –
அவற்றுக்கு அந்தர்யாமியாய் நிற்கச்செய்தே அவற்றின் தோஷங்கள் தட்டாதபடி நிற்பான் என்று
மூவுலகங்களுமாய் அல்லனாய்-6-3-6- சொல்லப்பட்டதே அன்றோ;
இனி, இங்கு என்? என்னில்,
அவற்றிற்கு வரும் அவஸ்தைகளை யுமுடையனல்லனாய் நிற்பன் என்பதனைத் தெரிவித்தபடி.
அவை: சேதனனிடத்தே உள்ள சுக துக்கங்களும்,
அசேதனத் திடத்தேயுள்ள வளர்தல் முதலானவைகளுமாம்.
அகர்ம வச்யத்வம் அங்கே சொல்லி –
அவற்றுக்கு வரும் அவஸ்தைகள் –
பாப புண்ய ரூப கர்மங்களுக்கு வரும் சுக துக்கங்களும் அல்லன் என்கிறார் இங்கே

மழலை வாய் வண்டு வாழ் திருவிண்ணகர் மன்னு பிரான் –
பருவத்தின் இளமையாலே இனிய பேச்சுக்களை யுடைத்தான வண்டுகள் வாழா நின்றுள்ள திருவிண்ணகரிலே
நித்திய வாசம் செய்கிற உபகாரகன்.

கழல்கள் அன்றி மற்று ஓர் களை கண் இலம் –
அவன் திருவடிகளை ஒழிய வேறு ரக்ஷகத்தையுடையோம் அல்லோம்.
“என்னையே சரணமாகப் பற்று” என்னுமவன் அன்றிக்கே,
திருவடிகள் தாமே தஞ்சம் என்பார் ‘கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம்’ என்கிறார்.
“மா மேகம் சரணம் வ்ரஜ”-என்பது, ஸ்ரீ கீதை, 18 : 66.
“மறு பிறப் பறுக்கும் மாசில் சேவடி”- என்பது, பரிபாடல்.

காண்மின்களே –
இது அர்த்த வாதம் சொல்லுகிறேன் அல்லேன்; நீங்களும் பாருங்கோள் என்கிறார்.
அர்த்தவாதம் – புனைந்துரை.

சமன் கொள் வீடு கொடுக்கும் தடம் குன்றம் போலே திருவடியே சரண் –ஆசன பத்மத்திலே அழுத்தின திருவடிகள் –
அவன் விட்டாலும் அவள் விட மாட்டாள் -இருவரும் விட்டாலும் விடாத திண் கழல் –
ததீய சேஷத்வமே திண்மை என்றபடி –

———————————————————————————-

காண்மின்கள் உலகீர்! என்று கண் முகப்பே நிமிர்ந்த
தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திரு விண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணை இன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–6-3-11-

ஸூரிகளுக்கு நித்ய கௌரவ்யர்கள் ஆவார்கள்
காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த-திருவிக்ரமன் திருவடிகள் -செப்பிடு வித்தை போலே
குனிந்து இருக்க அறியாமல் தீண்டி -சின்ன திருவடியைக் காட்டி -நிமிர்ந்த -பரஸ்பர வ்ருத்தரானவர்கள் உலகீர் –
தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன-அபதானம் போலே -பல வகைகளிலும் பரந்த -சர்வேஸ்வரன் -திரு நகரிக்கு நிர்வாகர்
ஆணை ஆயிரத்துத் திரு விண்ணகர்ப் பத்தும் வல்லார்-நியமன ரூபம் -பகவத் ஆஜ்ஞ்ஞை ரூபம் –
கோணை இன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே-கௌரவர் -மதிக்கத் தக்கவர்கள்
கோணை மிருக்கு குற்றம் -பொருந்தாமை இல்லாமல் -நித்ய ஸூரிகளுக்கு என்றும் கௌரவர் ஆவார்கள்

உலகத்தீர்! இதனைக் காணுங்கோள் என்று கண்களுக்கு எதிரே வளர்ந்த திருவடிகளை யுடைய சர்வேஸ்வரன் விஷயமாக, திருக்குருகூரிலே அவதரித்த
ஸ்ரீ சடகோபரால் அருளிச் செய்யப்பட்ட, பகவானுடைய ஆணை உருவமாக இருக்கிற, ஆயிரம் திருப் பாசுரங்களுள் திருவிண்ணகரம் என்ற
திவ்விய தேசத்தைப் பற்றிய இப்பத்துத் திருப் பாசுரங்களையும் வல்லவர்கள் ஒரு குற்றமும் இன்றி
நித்திய ஸூரிகளுக்கு என்றும் கௌரவிக்கத் தக்கவர்கள் ஆவர்கள்.
சடகோபன் சொன்ன திரு விண்ணகர்ப் பத்தும் வல்லார் விண்ணோர்க்கு என்றும் கோணை இன்றிக் குரவர்கள் ஆவர் என்க.

முடிவில், இத் திருவாய்மொழி வல்லார் நித்திய ஸூரிகளுக்கு நாள் தோறும் கௌரவிக்கத் தக்கவராவர் என்கிறார்.

காண்மின்கள் உலகீர் என்று கண் முகப்பே நிமிர்ந்த தாள் இணையன் தன்னை –
‘உங்கள் தலைகளிலே நான் காலை வைக்கக் கொடு வாருங்கோள்’ என்றால், இசையார் என்று பார்த்து,
நான் காட்டப் புகுவது ஓர் ஆச்சரியத்தைப் பாருங்கோள் என்பாரைப் போலே
இவர்கள் கண் முகப்பே நிமிர்ந்த திருவடித் தாமரைகளை யுடையவனை.

காண்மின்கள் –
இது ஓர் ஆச்சரியம் என்ன வேண்டிற்றுக் காணும் ‘தலைகளிலே அடி படப் புக்கவாறே இறாய்ப்பர்கள்’ என்று.
அவன் காட்டியதும் வியப்பு –
ஆழ்வார் இப்படி பொருந்தாததை பொருந்த விட்டாரே என்று வியந்து அருளிச் செய்ததார் என்றுமாம் –
அவனாக தீண்டியதை இறாய்த்து இருப்பார்களும் உண்டே என்ற ஆச்சர்யமுமாம் –

குருகூர்ச் சடகோபன் சொன்ன –
இந்தச் சௌலப்யத்தை அநுபவித்தவர் சொன்ன வார்த்தை யாகையாலே ஆப்தம் என்கை.

ஆயிரத்து ஆணை திரு விண்ணகர் இப் பத்தும் வல்லார் –
ஈஸ்வரனுடைய உலக நியமனத்தைச் சொன்ன இத் திருவாய்மொழி வல்லார்.
ஆணை -ஐஸ்வர்யம் -நியமனம் –
நியமன சாமர்த்தியம் காண அர்ஜுனன் வேண்ட கீதாச்சார்யன் காட்டி அருளினான் -அதே போலே இங்கும்

விண்ணோர்க்கு என்றும் கோணை இன்றிக் குரவர்கள் ஆவர் –
நித்திய ஸூரிகளுக்குக் காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் கௌரவிக்கத் தக்கவராவர்.

இதில் கோணை இல்லை –
ஒரு மிறுக்கு இல்லை. என்றது, என் சொல்லியவாறோ? எனின்,
சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாத நித்திய ஸூரிகளுக்கு, நித்திய சம்சாரியானவன் இதனைக் கற்ற அளவிலே
கௌரவிக்கத் தக்கவராதல் எங்ஙனே? என்னில்,
அங்கே இருந்து வைத்தே ததீயத்வ ஆகாரத்தாலே லீலா விபூதியை நினைத்து உவகையராம் நிலையுள்ளது முக்தர்க்கு ஆகையாலே,
இங்கே இருந்தே, அவர்கள் அநுசந்தானத்தைச் செய்கிற இவனை,
‘சம்சாரத்தே இருந்து வைத்தே நம் படி ஒருவனுக்கு உண்டாவதே!’ என்று கொண்டாடி இருப்பார்கள் என்பதனைத் தெரிவித்தபடி.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.- என்ற திருக் குறளையும்,
அதன் பரிமேலழகர் உரையையும் இங்கே நோக்குக.

——————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

கோபம் மம ப்ரணயஜம் பிரசமைய ஸ்வாதீனதாம்
அத நுத இதி ச விஸ்மயதயா ஸ்ரீ யாம் வ்ருத்த
ஜகத் ஆக்ருதிதா தேன சந்தர்சிதாம்
அனுபவ பூவ முனி திருதிய –

கோபம் மம ப்ரணயஜம் -ப்ரணய ரோஷத்தால் பிறந்த கோபத்தை
பிரசமைய -அடக்கி
ஸ்வாதீனதாம் அத நுத இதி -அவனுக்கு அதீனம் என்று காட்டி அருளி
ச விஸ்மயதயா ஸ்ரீ யாம் வ்ருத்த ஜகத் ஆக்ருதிதா -தன்னுடைய வ்ருத்த ஆகாரத் தன்மையை
தேன சந்தர்சிதாம் -அவனாலேயே காட்டப்பட்டு
அனுபவ பூவ -ஆனந்தமான அனுபவம்
முனி திருதிய

———————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

சம்பத்து தாரித்ர்ய பாவாத் அஸூக ஸூக க்ருதே பட்டண கிராம பாவாத்
புண்ய அபுண்ய பாவாத் கபட ருஜூ தயா சர்வ லோகாதி பாவாத்
திவ்ய அதிவ்ய அங்கவத்வாத் ஸூரா திதிஜா கண ஸ்நிக்த சத்ரு
சாயா அச்சாயா ஆதி பாவாத் அர்த்தாத் பிரிய ஹிதம்

1–சம்பத்து தாரித்ர்ய பாவாத் –நல் குரவும் செல்வும்–இத்யாதி

2–அஸூக ஸூக க்ருதே–கண்ட இன்பம் துன்பம்–இத்யாதி

3-பட்டண கிராம பாவாத்–நகரமும் நாடுகளும் இத்யாதி

4-புண்ய அபுண்ய பாவாத்–புண்ணியம் பாவம் இத்யாதி

5-கபட ருஜூ தயா–கைதவம் செம்மை இத்யாதி

6–சர்வ லோகாதி பாவாத்–மூவுலகங்களுமாய் அல்லனாய் இத்யாதி

7-திவ்ய அதிவ்ய அங்கவத்வாத்–பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்–இத்யாதி

8-ஸூரா திதிஜா கண ஸ்நிக்த சத்ரு—-வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங் கூற்றமுமாய்–
திதி பிள்ளைகள் அசுரர்கள் -தேவர்களுக்கு நண்பனாயும் அசுரர்களுக்கு சத்ருவாயும்-

9—சாயா அச்சாயா ஆதி பாவாத்–நிழல் வெய்யில் சிறுமை பெருமை
குறுமை நெடுமையுமாய்ச் சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்–

10-அர்த்தாத் பிரிய ஹிதம்—-என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்–என்றும் — -சப்தத்தால் ஸங்க்ரஹம்

வ்ருத்த விபூதிகன் அகடி கடநம் -பாவம் காட்டி அருளுகிறார் –

—————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 53-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில் விருத்த விபூதி உக்தனாய் இருக்கிற படியைப் பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழே
அல்லோம் -என்று இருந்த தம்மை ஆவோம் -என்னப் பண்ணினவனுடைய அகடிகதடநா சாமர்த்தியத்தை அனுசந்தித்து
விஸ்மிதரான இவருக்கு-இது ஓன்று கண்டோ நீர் இப்படி விஸ்மிதர் ஆகிறது
நாட்டில் தன்னில் தான் சேராத பதார்த்தங்கள் எல்லாவற்றையும் நம்முடனே சேர்த்துக் கொண்டு
ஸ்ரீ திரு விண்ணகரிலே நிற்கிற படி பாரீர்-என்று அவன் தன் வ்ருத்த விபூதி யோகத்தைக் காட்ட
அத்தை அனுசந்தித்து ஹ்ருஷ்டராய்ச் செல்லுகிற -நல் குரவும் செல்வமும் – அர்த்தத்தை
நல்ல வலத்தால் இத்யாதியால் அருளிச் செய்கிறார் –

——————————————————

நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் முன் நண்ணாரை
வெல்லும் விருத்த விபூதியன் என்று -எல்லை யறத்
தான் இருந்து வாழ்த்தும் தமிழ் மாறன் சொல் வல்லார்
வானவர்க்கு வாய்த்த குரவர் —53-

——————————————————-

வியாக்யானம்–

நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் –
அதாவது
லீலா உபகரணங்களை எடுத்தும்
பறித்தும்
கழகம் எறியும்
வழி மறித்தும்
சிற்றில் அழித்தும்
முற்றத்தூடு புகுந்து முறுவல் செய்து வார்த்தை சொல்லியும்-சங்கேத ஸ்தானம் இவள் முற்றம்
கிட்டே வந்து முகம் காட்டி -முறுவல் செய்து -சாவிக்கும் அந்தராத்மா -கட்டி முடித்த பின்பு அழித்த-
லோகவத்து லீலா கைவல்யம் –வீட்டைப் பண்ணி விளையாடும் -விமலன் தன்னை குற்றம் இல்லாதவன்
வைஷம்யம் நைர்குண்யம் இல்லாதவன் -அநாயாசேனே மோஷம் அளிப்பான் -இன்புறும் இவ்விளையாட்டு உடையவன்
பிரயோஜ நாந்தரம் போகக் கூடாதே என்றே அழித்தான்
இப்படி யாயிற்று
இவர் ஊடலைத் தீர்த்து கூட விட்டது –
இவர்
இது ஓர் அகடிதகடநா சாமர்த்திய சக்தி இருந்தபடி என்-என்று பார்த்து
முன்- நண்ணாரை வெல்லும் -என்று -அத்தை மூதலிக்கிறார்
அதாவது
பும்ஸாம் சித்த திருஷ்டி அபஹாரியாய் -சாஷான் மன்மத மன்மதனான தன் சந்நிதியிலே
கிட்டோம் -என்றிருந்த தம்மை-ஸ்த்ரீத்வ அபிமானத்தைக் குலைத்து ஊடுகையைத் தவிர்த்து கூடப் பண்ணின படி -என்கை-
முன் நண்ணாதாராய் -கிட்டா தாராய் இருக்கிற நம்மை நல்ல வலத்தால் சேர்த்தோன் -என்று அந்வயம் ஆகவுமாம்

அன்றிக்கே
முன் நண்ணாரை வெல்லும்- -என்று
பூர்வ சத்ருக்களாய்-அவர்களை நின்று இலங்கு முடியனா -இத்யாதிப்படியே வென்றால் போலே
நம்மை நல்ல வலத்தால் சேர்த்தது -என்றாகவுமாம்-

இப்படி சேராததைச் சேர்ப்பதே -என்று இவர் ஈடுபட இது ஓன்று கண்டோ நீர் ஆச்சர்யப் படுகிறீர்
லோகத்தில் பரஸ்பர விருத்தங்களாய் இருக்கிற விபூதியைச் சேர்த்துக் கொண்டு
ஸ்ரீ திரு விண்ணகரிலே நிற்கிற படியைப் பாரீர் -என்று விருத்த விபூதி உக்தனாய் இருக்கிற படியைக் காட்ட –
விருத்த விபூதியன் என்று –
அதாவது –
நல் குரவும் செல்வும் –
கண்ட வின்பம் துன்பம் –
நகரமும் நாடுகளும் –
புண்ணியம் பாவம் –
கைதவம் செம்மை –
மூவுலகங்களும் அல்லனாய்-
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய் –
வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெம் கூற்றமுமாய் –
நிழல் வெய்யில் – இத்யாதி பாட்டுக்களிலே
அக்னி கோப பிரசாதஸ்தே சோம -என்னும் படியான விருத்த விபூதிகத்வத்தைப் பரக்கப் பேசி-

எல்லை யறத் தான் இருந்து வாழ்த்தும் –
அதாவது –
பல் வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானை -என்றும்
கண்டு கொள்வதற்கு அரிய பெருமான் என்னை ஆள்வான் -என்றும்
திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியம் -என்றும்
கண்ண நின்னருளே கண்டு கொண்மின்கள் -என்றும்
திரு விண்ணகர் சேர்ந்த பிரான் வரன் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரண்-என்றும்
திரு விண்ணகர் சேர்ந்த பிரான் என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என் அப்பன் -என்றும்
என் அப்பன் எனக்காய் -என்று தொடங்கி –திரு விண்ணகர் சேர்ந்த என் அப்பன் தன் ஒப்பாரில் அப்பன்
தந்தனன் தான தாள் நிழல் -என்றும்
திரு விண்ணகர் சேர்ந்த பிரான் கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலோம் -என்றும்
இப்படி இதுக்கு என்று சமைந்து இருந்து நிரவதிக ஸ்தோத்ரங்களால் ஸ்துதித்து அருளும் –

தமிழ் மாறன் சொல் வல்லார் –
சர்வ ஸூலபமான திராவிட பாஷைக்கு தேசிகரான ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியான இத் திருவாய்மொழியை
அப்யசிக்க வல்லார் –

வானவர்க்கு வாய்த்த குரவர்
அவனுடைய விபூதியை-ததீயத் ஆகாரண அனுபவிக்கிற நித்ய ஸூரிகளுக்கு அவ் வநுபவ விஷயமான
இத் திருவாய்மொழியை இவர்கள் இங்கேயே இருந்து அனுசந்திக்கையாலே அவர்களுக்கு அனுரூபமான ஆதரணீயர் ஆவார் –

திரு விண்ணகர் பத்தும் வல்லார் கோணை இன்றி
விண்ணோர்க்கு என்றும் ஆவார் குரவர்கள் -என்றத்தை அருளிச் செய்த படி –

——————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம்- 129- திருவாய்மொழி – -6-2–6….6-2-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

June 15, 2016

குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை;
பழகி யாம் இருப்போம் பரமே இத் திருவருள்கள்?
அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;
கழகம் ஏறேல், நம்பி! உனக்கும் இளைதே கன்மமே.–6-2-6-

மேனானித்து-குழமணன்-மரப்பாச்சி -எடுத்துக் கொண்ட அவன் இடன் உன் ஈஸ்வரத்வம் எம்மிடம் காட்டாதே -மின்னிடை மடவார் இடம் காட்டு
குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை;-பசப்பு மொழி -கைப்பட்ட பிரியத்தால் -மேன்மை பாவித்து –
பழகி யாம் இருப்போம் பரமே இத் திருவருள்கள்?-உன் சரசம் மேன்மை பண்டியே அறிவோம் -இத்தை நாங்கள் பொறுக்க மாட்டோம்
அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;-உன் சர்வேஸ்வரத்வம்-விஷயமான ஐஸ்வர்யம் -லோக த்ரயத்துக்கும் தகுதியாய்
அநேகம் பேர் உளர் -பதினாறாயிரம் தேவி மார் உண்டே
கழகம் ஏறேல், நம்பி! உனக்கும் இளைதே கன்மமே.–பரி பூர்ணன் -அவர்கள் திறலே உனக்குத் தகுதி -எங்கள் கழகம் வராதே –
பிறருக்கு தீமை செய்வதே உனக்கு ஸ்வ பாவம் -இளையது பாலனுக்கும் சிறு பிள்ளைத் தனம் என்றவாறு –
ஆஸ்ரித லீலா பரிகரமும் அவனுக்கு உத்தேச்யம் பிரியகரம்

வசீகரித்தற்குரிய செயலைச் செய்து எங்களுடைய குழமணனை எடுத்துக்கொண்டு மேன்மை தோன்றப் பேசுவதனால் ஒரு பயனும் இல்லை;
நாங்கள் முன்னரே இவற்றில் பழகி இருக்கின்றோம்; நீ செய்கின்ற இந்தத் திருவருள்கள் எங்கள் அளவேயோ! இந்த மூன்று உலகங்கட்கும் உம்மோடு
ஒக்க முடிசூடத் தக்கவர்களாகிய அழகினையுடையவர்கள் பலர் உளர்; நம்பீ! எங்கள் கூட்டத்தில் ஏறாதே; உனக்கும் இது இளைமைப் பருவத்திற்கு உரிய செயலேயாம்.
இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் அழகியார் பலர் உளர் என்க. குழகுதல்-வசீகரித்தலுக்குரிய செயலைச் செய்தல்.
குழமணன்-மரப்பாவை. கோயின்மை – பெருமை. அல்லது, செருக்கு. கழகம் – கூட்டம். இளைது – இளமைப் பருவத்திற்குரியது.

தங்கள் மனங்களிலே ஓடுகின்றவற்றைத் தெரியாமல் மறைத்துக் கொண்டு அணுக முடியாதவர்களாயிருக்கிற
இந்தப் பிராட்டியையும் தோழிமாரையும் கண்டு, அவன் தன் முக முத்திரைகளாலும்,
(பாவ கர்ப்பமான உக்திகளாலும் )கருத்துடைய வார்த்தைகளாலும்,
அதனைத் தொடர்ந்து வருகின்ற இன்பச் செயல்களாலுமாக இவர்கள் எண்ணங்களைக் குலைத்து,
இனி இவர்கள், தான் செய்தவை எல்லாம்‘வேண்டா’ என்ன மாட்டாதவர்கள் என்னும்படி வாய் மாளப் பண்ணி
அவ் வளவிலே சென்று இவர்களுடைய விளையாட்டுக் கருவியாகிய குழமணனை எடுத்துக் கொண்டான்.

‘குழகி எங்கள் குழமணன் கொண்டு’ என்கிறார்கள். –
குழகுகையாவது,
யௌவன புருஷர்களா யிருக்குமவர்கள், பெண்கள், தங்களுக்கு வசப்பட்டவர்கள்
அல்லாதவர்களா யிருப்பார்களே யானால் அவர்களைச் சேர விட்டுக் கொள்ளுகைக்காகச் செய்யும் செயல்கள்.
மேன்மையாலே யாகவுமாம், தாழ்மையாலே யாகவுமாம்; ஏதேனுமாக இவ்வளவு கிட்டி நின்று அவர்கள் நினைவைக் குலைத்துக்
குழமணனை எடுத்துக் கொள்ளும்படியாகக் கைப் புகுந்தான் அன்றோ.

‘எங்கள் குழமணன் கொண்டு’ என்றதனால்,
அதுதான் யாருடையது என்று நீ இருக்கிறாய்? அது நீ நினைக்கிறவர்களுடையது அன்று காண்;
அது எங்களுடையது; உனக்கு இதனால் ஒருகாரியம் இல்லை என்பதனைத் தெரிவிக்கின்றார்கள்.
‘எங்களது’ என்றவாறே பொகட்டுப் போம் என்று சொன்னார்கள்; அதுதானே அவனுக்குப் பற்றுகைக்கு உடலாயிற்று.
‘எங்கள் அனுமதி வேண்டாவோ உனக்கு?’ என்ன,
‘என்னைத் தடை செய்வார் உளரோ, நான் செய்வது செய்யலா மித்தனை யன்றோ?’ என்ன,

கோயின்மை செய்து கன்மம் ஒன்று இல்லை –
பெண்கள் கோஷ்டியில் பெருமை சொல்லி கார்யம் ஆகாதே –
பிரணயித்வம் தானே காட்டி கார்யம் கொள்ள வேண்டும் –
நீ செய்கிற முறை கேடான செயலால் உனக்கு ஒரு பலம் இல்லை.

‘கன்மம்’ என்றது, கர்மத்தினது பலனை.
ஆராய்ச்சி இல்லாத இடத்தே செய்யுமவற்றைச் செய்யாதே கொள்ளாய்.
அவை செய்தாலும் ஆமே அன்றோ, உனக்கு ஒரு பிரயோஜனம் உளதாகில்.

கோயின்மை செய்கையாகிறது,
இவர்கள் இசைவு இன்றிக்கே இருக்க இவர்கள் விளையாட்டுக் கருவிகளை எடுத்துக் கொள்வது,
அவர்கள் வேண்ட வேண்டக் கொடாதொழிவதாய் மிறுக்குப் பண்ணுகை.
நீ போகிற இடத்துக்கு இதனைக் கொண்டு போக ஒண்ணாது;
உனக்கு இது தான் வேண்டுவ தன்று; இனி எங்களுக்கோ விருப்பமில்லாத காரியம்;
ஆன பின்பு, இச் செயலால் என்ன பிரயோஜனம் உண்டு என்பார் ‘ஒன்று இல்லை’ என்கிறார்கள். என்றது,
இது கொண்டு போனால் தங்களது அல்லாமையாலே அவர்கள் முகம் பாரார்களே;
நீ ஆதரித்தவர்களுடையது அல்லாமையாலே உனக்கு வேண்டுவதன்று;
எங்கள் இசைவோடே கொடுபோகாமையாலே எங்களுக்கும் பிரியமன்றே;
ஆன பின்னர், இதனால் வருவது ஒரு பேறு இல்லை காண் என்கிறார்கள் என்றபடி.

அது கிடக்க; நான் முன்னம் உங்களோடு ஒத்த கருத்துடையன், எனக்கும் ஒரு பிரயோஜனம் இல்லை,
இதனைக் கருவியாகக் கொண்டு முடித்துக் கொள்ள வேண்டுவது ஒரு பொருளைக் கண்டு வைத்திலேன்;
இதுதானே அன்றோ எனக்குப் பிரயோஜனம்; பிரயோஜனத்துக்கு ஒரு பிரயோஜனம் உண்டோ?’ என்றான்.
அநந்ய பிரயோஜனர்செய்யும் கார்யம் போலே இத்தை எடுத்ததே பிரயோஜனம் என்றான் –
அங்ஙனே ஆன அன்று அநவஸ்தா தோஷம் வரத் தொடங்குமன்றோ.

யாம் பழகி இருப்போம்-
இப் பொய்களுக்குப் பழையோம் அல்லேமோ!
எங்களுக்கு அன்று காண் நீ சொல்லுவது!
நீ சொல்லும் பொய்யெல்லாம் ‘மெய்’ என்று இருப்பார்க்குச் சொல்லாய் என்றார்கள்.
அவனும், ‘இத் தலையை ஒழிய எனக்குச் செல்லாது’ என்னுமிடம்தோற்றச் சில செயல்களைச் செய்ய,

இத் திரு அருள்கள் எம் பரமே-
நீ எங்கள் அளவல்லாத ஆசையை வைத்து, குளப் படியிலே கடலை மடுத்தாற் போலே
நீ செய்கிறவை எல்லாம் எங்களால் பொறுக்கப் போமோ?
நீ செய்கிறவை எல்லாம் பொறுக்க வல்லார் வேறே சிலவர்கள் என்கிறார்கள். ‘அவர்கள் யார்?’ என்றான்.

அழகியார் இவ்வுலகு மூன்றுக்கும்-
“மூன்று உலகங்களையும், அவற்றோடே உலகம் என்ற சொல்லுக்குப் பொருளாகவுள்ள சர்வேஸ்வரனையும் கூட
ஒரு தட்டு ஆக்கினால், பிராட்டியினுடைய ஒரு கலா மாத்திரத்திற்கு எடை நிற்க மாட்டாது”
“ராஜ்யம் வா த்ரிஷு லோகேஷு ஸீதா வா ஜநகாத்மஜா
த்ரைலோக்யராஜ்யம் ஸகலம் ஸீதாயா நாப்நுயாத்கலாம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 14. ‘
என்று கூறும்படி யுள்ளவர்கள்.
‘அவர்கள் எங்ஙனே இருப்பர்கள்?’ என்றான்

தேவிமை தகுவார் –
உனக்குப் பட்டங் கட்டப் போரும்படி யாயிருப்பார் என்ன,
ஆனால், எனக்கு உபேக்ஷிப்பதற்கும் சிலர் வேணுமே? என்றான்.

பலர் உளர் –
உனக்குப் பொகடுகைக்கும் விஷயம் அங்கே உண்டு என்கிறார்கள்.
ஒருத்தனுக்கு ஒன்று ஸ்வபாவம் ஆனால், அது வேறு ஓர் இடத்தில் போன அளவில் குலையாதே அன்றோ;
அப்படியே அங்குள்ளாரையும் பொகடுகை இவனுக்கு இயல்பு என்னுமிடம் தோற்றச் சொல்லுகிறார்கள்.
ஓர் அடிப்பாடர் அல்லீரே நீர்;பரப்பர் அல்லீரோ! அவர்கள் பக்கல் ஏறப்போம் என்ன,

ஆனால்,
அங்குப் போகும் வழியும், போனால் செய்யும் படிகளும் எல்லாம் கேட்டுப் போக வேணுமே.
இனித் தான், -அந்தே வாசிகளுக்கு -சீடர்களுக்கு அன்றோ ஒன்று சொல்லுவதும்.
“சாஷ்டாங்க நமஸ்காரத்தினாலும் செவ்விதின் கேட்பதனாலும் ஆசாரிய சேவையினாலும்
உபதேசிப்பார்கள் என்று அறிந்து கொள்”
“தத் வித்தி ப்ரணிபாதேந ப்ரச்நேந ஸேவயா
உபதேஷ்யந்தி தே ஞானம் ஞாநிந: தத்வதர்ஸித:”-என்பது, ஸ்ரீ கீதை, 4 : 34.
என்பதே அன்றோ கேட்பார்படி.
ஆன பின்பு, நாலடி கிட்ட நின்று கேட்கவேணும் என்று திரளிலே வந்து புகுரப் புக்கான்.

கழகம் ஏறேல் நம்பீ –
அவர்கள் முன்னம் ஆனார் ஆகிடுக;
ஏறிட்டுக் கொள்ளுதல் எங்களுக்குப் பரமோ? நீர் முன்னம் எங்கள் ஓலக்கத்தில் புகுராதே கொள்ளும்.

இவ்விடத்தே, பட்டர் அருளிச் செய்வது ஒரு வார்த்தை உண்டு.
அதாவது, “சமஸ்த கல்யாண குணத்மகனாய் உபய விபூதி யுக்தனாய் சர்வாதிகனாய் சர்வ நியந்தாவா யிருக்கிற சர்வேஸ்வரன்
நான்கு இடைப் பெண்கள் இருந்த இடத்தே புக்கு அல்லது நிற்க மாட்டாத செல்லாமை விளைய,
அவர்கள் ‘நீ இங்குப் புகுராதே கொள்’ என்ன, விலங்கு இட்டாற் போலே பேரவும் திரியவும் மாட்டாதே தடுமாறி நின்றான் என்கிற
சௌசீல்யம் யார் அறிந்து கொண்டாட வியாசர் முதலாயினோர் எழுதியிட்டு வைத்துப் போனார்களோ?” என்பது.
‘எல்லாரையும் நியமிக்கிற சர்வேஸ்வரன் சிலரால் நியமிக்கலாம்படி எளியனானான்’ என்றால்,
‘இது மெய்’ என்று கைக் கொள்ளுவாரைக் காண முடியாதன்றோ.
சாஸ்திரங்கள் எல்லாம் நியமிக்கிறவன், நியமிக்கப்படுகிறவர்கள் என்று பாகுபடுத்தி ஒருங்க விடா நிற்க,
அத்தலை இத்தலையாகச் சொல்லுகிறதன்றோ இது.

‘சாது கோட்டியுள் கொள்ளப்படுவார்’ -பெரியாழ்வார் திருமொழி, 3. 6 : 11.-என்று சொல்லுவது,
வைஷ்ணவர்களுடைய திரளிலே ஒருவன் வந்து புகுந்தால் செருக்காலே மலையிட்டு அமுக்கினாற் போலே இருக்கை அன்றிக்கே,
நீரும் நீரும் கலந்தாற் போலே இவன் புகுந்தமை தெரியாதபடி இருந்து,
அவர்கள் இடம் கொடுத்து அவர்கள் ஏற்றுக் கொள்ள இருத்தல் அன்றோ ஒருவனுக்கு நன்மையாவது.
இது, இவர்களுக்கே அன்றியே, அவனுக்கும் ஒத்திருக்கிறபடி;

“அந்த இராமனும் மற்றவர்களோடு கூட இருந்து அநுபவிக்க வேண்டும் என்னும் விருப்பத்தால் மெதுவாகச் சபையை
அடைந்தவனாய்க் குச லவர்களின் கானத்தைக் கேட்பதில் மனமுடையவனாய் இருந்தான்
“தத:து தௌ ராமவச: ப்ரசோதிதௌ அகாயதாம் மார்க விதாந ஸம்பதா
ஸ சாபி ராம: பரிஷத்கத: ஸநை: புபூஷயா ஸக்த மநா பபூவ”-என்பது, ஸ்ரீராமா. பால. 4 : 31.
என்று, மஹரிஷி ஆச்சரியப்படுகிறார்” என்பது ஸ்ரீராமாயணம். என்றது,
பெரு மதிப்பராய்ப் பாட்டுக்களை அறிந்து கொண்டாடுகைக்குப் போரும்படி பேரறிவாளரான
புலவர்களும் தாமுமாகப் பேரோலக்கம் இருந்து, பிள்ளைகளைப் பாட விட்டுத் தாம் சிம்மாசனத்திலே இருந்தார்;
இவர்கள் தாழ இருக்கத் தாம் உயர இருந்த இடம் தமக்கு விருப்பம் இல்லாமையாலே சிம்மாசனத்தினின்றும் மெள்ள இழிந்து,
தெரியாதபடி இவர்கள் நடுவே புகுந்திருந்தார். அது என்? என்னில்,
இராஜா எழுந்திருந்தால் ஓலக்கம் எழும் அன்றோ, தாம் எழுந்தவாறே ஓலக்கம் எழும் எனக் கருதி,
மெள்ளப் புகுந்திருந்தார் என்றபடி. -இங்ஙன் வேண்டுவான் என்? என்னில்,
“அநுபுபூஷயா – அநுபவிக்கும் இச்சையால்” என்னுதல்,
“பவிது மிச்சயா – தாம் உளராவதற்கு இச்சையாலே” என்னுதல். என்றது,
‘இவர்களோடே கூடி இருந்து அநுபவிக்கைக்காக’ என்னுதல். ‘தாம் உளராகைக்காக’ என்னுதல் என்றபடி.

நம்பீ –
உமக்கும் எங்களுக்கும் உள்ள நெடுவாசி பாரீர்!
உமக்கு ஒன்று கேட்க வேண்டும்படியாய் இருந்ததோ?
அன்றிக்கே,
முதலிகளாய் இருக்கிற உமக்கு நாங்கள் இருக்கிற இடத்தே புகுருகை போருமோ! என்கிறார்கள் என்னுதல்.
அழகிது! நான் முதலியாகிலும் ஆகிறேன், பயலியாகிலும் ஆகிறேன்; என்னைத் தான் அறிகை இல்லையோ!
‘தீமை செய்யும் சிரீதரன்’ என்று அன்றோ என்னைச் சொல்லுவது?
ஆன பின்னர், நாலு பெண்கள் இருந்த இடம் எங்கும் தீங்கு செய்கை எனக்கு இயற்கை யன்றோ? என்றான்.
உனக்கும் இளைதே கன்மமே –
தீமை செய்கையில் சமைந்திருக்கிற உனக்குங்கூட இது பாலிசம்.
தீமை செய்வார்க்கும் ஒரு சம்பந்தம் வேண்டாவோ?

—————————————————————————————-

கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல் ஞாலம் உண்டிட்ட
நின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி; அது கேட்கில் என்னைமார்
தன்மம் பாவம் என்னார்; ஒரு நான்று தடி பிணக்கே.–6-2-7-

பிரயோஜன நிரபேஷமாக சர்வ லோகத்தையும் ரஷிக்கும்-பெருமை -எங்களை ஸ்பர்சித்து -கையில் உள்ள பாவையைப் பறிப்பது
கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல் ஞாலம் உண்டிட்ட-இது கார்யம் இல்லையே உனக்கு -திரு வயிற்றில் வைத்து ரஷித்து
நின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;-தன் பேறாக செய்து அத்தாலே ஔஜ்வல்யம் -அடைந்து -இன்னமும் செய்தது
போராது என்று வெளிநாடு உமிழ்ந்து அருளி –உனக்கும் பிழை பிழையே -அவத்யமே ஆகும்
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி; அது கேட்கில் என்னைமார்-பெரியவனான நீ -பூர்வ சம்ஸ்லேஷ ஸ்மரணம் சொல்லி மர்மம் –
சம்ஸ்லேஷம் போது நடந்தவற்றை சொல்லி -எங்களுக்கு நினைக்கவும் முடியாத -சொல்லவும் வெட்க்கப் படும் வார்த்தைகளை சொல்லி –
இத்தை எங்கள் பந்துக்கள் கேட்கில்
தன்மம் பாவம் என்னார்; ஒரு நான்று தடி பிணக்கே.-தர்மம் -பாபம் -இருவருக்கும் சம்பந்தம் உண்டு என்று உணர்ந்து அடிக்க –
சம்பந்தம் நிரூபிகாமால் உதை பாபம் – தடி அடி பிரயோகம் -தர்ம அடியா பாப அடியா –
சஹஜ துர்மான -என்னைமார் – டம்பம் மதம் உள்ளவர்கள் –
பாவை -ஆஸ்ரித விஷயத்தில் பரதந்த்ரமான அசித் வஸ்துவும் ஈஸ்வரனுக்கு உத்தேச்யம்
ஆய்ச்சியர் கை வெண்ணெய்-கண்டால் அவன் உண்ட வெண்ணெய் ஈது என்னும்

பிரளய வெள்ளத்தில் அழுந்துகிற உலகத்தைப் புசித்துக் காப்பாற்றிய குற்றமற்றவனே! நெடியவனே! எங்கள் கையிலேயுள்ள பாவையைப் பறிப்பது
செய்யத்தக்க காரியம் அன்று; இப்படிப்பட்ட உனக்கும் குற்றம் குற்றமேயாகும்; எம்மைப் பார்த்து மர்மமான வார்த்தைகளைச் சொல்லி நீ விளையாடுகின்றாய்;
அதனைக் கேட்கில், எங்களுடைய தமையன்மார்கள் தர்மம் பாவம் என்று நினையார்கள்; ஒரு நாள் தடியைக் கொண்டு மாறுபடுவர்.
கர்மம் வர்மம் தர்மம் என்பன, கன்மம் வன்மம் தன்மம் எனத் திரிந்து வந்தன. பாவை – விளையாடுதற்குரிய பொம்மை.
என்னை மார் – தமப்பன், தமையன்மார்கள். நான்று – காலம்.

ஸ்ரீபரதாழ்வான் எல்லா உபாயங்களையும் அநுஷ்டித்துத் தன்பக்கல் பட்டன எல்லாம் தான் இவர்கள் பக்கலிலே பட்டான்.
“ஸ்ரீராம பிரான் திரும்புவதற்கு எல்லாவிதமான உபாயங்களையும் மேற்கொள்ளப் போகின்றேன்”
“ஸர்வோபாயம் து வர்திஷ்யே விநிவர்தயிதும் பலாத்
ஸமக்ஷம் ஆர்ய மிச்ராணாம் ஸாதூனாம் குண வர்திநாம்”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 82 : 19.
என்று மீட்கையிலே போர வருந்தினான் அன்றோ.
தாமே இரங்கி மீளும்படி செய்கிறேன், அது தான் கேட்டார் வாய்க் கேட்க வேண்டுமோ?
“எவ்வளவு வரையில் அவர் என்னிடம் இரங்க வில்லையோ அவ் வளவு வரையிலும் பர்ண சாலையில் அவருக்கு முன்பு படுக்கிறேன்”
“அநாஹாரோ நிராலோகோ தநஹீநோ யதா த்விஜ:
சேஷ்யே புரஸ்தாத் சாலாயா யாவந்மே ந ப்ரஸீததி”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 111 : 14.
என்றான் அன்றோ.

இவனும் அப்படியே எல்லா உபாயங்களையும் செய்து பார்த்த விடத்திலும்
அணுக ஒண்ணாதபடி கடுமை தோற்ற இருந்தார்கள். ‘இனிச் செய்யலாவது என்?’ என்று பார்த்தான்;
‘பலத்தாலே காரியங்கொள்ளுவோம்’ என்று நிச்சயித்து, இவர்களுடைய பாவையை எடுப்பதற்குக் கணிசித்தான்;
“கோசல தேசத்தவர்கள் பார்வையைக் கொண்டே பிறர் எண்ணத்தை அறிவார்கள்”
“இங்கிதஜ்ஞாஸ்து மகதா: பிரேக்ஷிதஜ்ஞாஸ்து கோஸலா: அர்த்தோக்தா: குரு பாஞ்சாலா: ஸர்வோக்தா தக்ஷிணாபதா:”
நினைந்த முனி பகர்ந்தவெலாம் நெறி யுன்னி அறிவனும் தன்
புனைந்த சடை முடி துளக்கிப் போரேற்றின் முகம்பார்த்தான்
வனைந்தனைய திருமேனி வள்ளலும் அம் மாதவத்தோன்
நினைந்தவெலாம் நினைந்து அந்த நெடுஞ்சிலையை நோக்கினான்.-என்ற கம்பர்
என்கிறபடியே, நினைவு அறியுமவர்களாகையாலே, எல்லாரும் கூடிச் சென்று, வைத்த பாவையை எடுத்துக் கொண்டார்கள்;
அது தான் “நம் காரியம்” என்றே இருந்தான்.
‘தனித்து முயற்சி செய்ய விருப்பம் இன்றிக்கே ஒழியப் பெற்றோம்’ என்று பார்த்தான். என்றது
திருக் குரவை போலே ஆளுக்கு ஆளாய் நின்று கைப் பிடிக்க வேண்டாவாய் இருந்தது என்றபடி.
‘நல்ல வாய்ப்பு’ என்று இவர்கள் பாவையைச் சென்று பற்றினான்.
(எங்கள் -பஹு வசனம் பாவை ஒருமை என்பதால் இவ் வியாக்யானம் )

கன்மம் அன்று –
வாராய்! உனக்கு இது காரியம் அன்று காண் என்கிறார்கள்.
‘ஏன் தான் இது காரியம் அன்றிக்கே ஒழிவான் என்?’ என்றான்.
எங்கள் கையில் பாவை பறிப்பது –
இதுதான் யாரது என்று இருக்கிறாய்? நீ நினைக்கிறவர்களது அன்று காண்!
இது எங்களது காண்! என்றார்கள். ‘அது தான் மெய்யே’ என்றான்;
“மனைவி முதலான இவர்கள் எவருக்கு உடைமைப்பட்டவர்களோ, இவர்களுடைய செல்வமும் அவருடைமையே”
“த்ரய ஏவாதநா ராஐந் பார்யா தாஸஸ் ததா ஸு த:
யத்தே ஸமதி கச்சந்தி யஸ்யைதே தஸ்ய தத்தநம்”-என்பது பாரதம் உத்யோக பர்.–என்பதே யன்றோ பிரமாணம்.
இவர்கள் ‘எங்களது’ என்கை அன்றோ அவன் விருப்பத்துக்கு அடி.
‘இவர்களது’ என்னுமிடம் அறுதியிட்டுக் கொள்ளுகையிலே யன்றோ அவனுக்குத் தாத்பரியம்.
நீ நினைக்கிறவர்களது அன்று என்கையிலே யன்றோ இவர்களுக்குத் தாத்பரியம்.

எங்கள் கையில் பாவை பறிப்பது –
இவர்கள் கையிலே பாதி கொடுத்துப் போலே காணும் பறிப்பது!
அவர்கள் விட்டுக் கடக்க நிற்குமதில் ஒரு பிரயோஜனம் இல்லையே; -ஒல்லை நானும் கடைவன் என்று -இருந்தவன் அன்றோ –
அதனை அவர்கள் ஒருதலை பற்றத் தானும் ஒரு தலை பற்றும் போதே யன்றோ ஒரு கலத்திலே உண்பாரைப் போலே இன்பமாயிருப்பது.

கையில் பாவை பறிப்பது –
கிடக்குமவை யெல்லாம் கிடக்க, எங்கள் கையிற் பாவை பறிப்பது கர்மம் அன்று.
செய்யக் கடவது அல்லாததனைச் செய்யா நின்றாய்; உனக்கு இதனால் ஒரு பிரயோஜனம் இல்லை காண் என்றார்கள்.
ஆக, இதனால், பலித்தது என்? என்னில்,
ஒரு வைஷ்ணவன் “என்னது” என்று அபிமானித்துக் கைப்பிடித்தால் “அவன் விரும்புவது” என்றபடி.
“‘செய்யக் கடவது அல்லாததைச் செய்யா நின்றாய்’ என்று நீங்கள் சொல்லுவான் என்?
செய்யக் கடவனவற்றிற்கும் செய்யக் கடவவல்லாதனவற்றிற்கும் வரம்பு கட்டினேன் நானே அன்றோ” என்றான்.

கடல் ஞாலம் உண்டிட்ட –
பிரளய ஆபத்திலே இவற்றை எல்லாம் எடுத்து வயிற்றிலே வைத்து நோக்கிற்றிலேனோ?
இவர்கள் அளவும் அப்படியே ஆகாதே தான். இவன் சென்று பறித்திலனாகில் அழியுமளவே அன்றோ இவர்களது.
அது வேறு நிலையை அடைந்தாகிலும் கிடக்குமன்றோ. இவர்களுக்கு இவனை ஒழிந்த அன்று சத்தைக்கு அழிவன்றோ உள்ளது.
இவர்களும் அவன் ஸ்பர்சித்தான் ஆனால் தான் ரஷிக்கப் படுவார்கள் -இவன் தொடாமல் இருந்தால் அழிந்து போகுமே
அதனாலே பாவையைப் பறித்தான் -அசித் அழிந்தால் அவஸ்தான்தரம்–ஸ்வரூப நாசம் அன்றோ இவர்களுக்கு –

அன்றிக்கே –
‘ஆபத்து ரக்ஷகனன்றோ நான், ஆன பின்பு, நான் செய்யுமவையெல்லாம் பிரயோஜனத்தை எதிர்பாராமலே அன்றோ இருப்பன.
ஆகையினால் எனக்கு இது தானே யன்றோ பிரயோஜனம்.
பிரயோஜனத்துக்குப் பிரயோஜனம் வருமன்று முடிவு இல்லாமை ஆகுமன்றோ.
இதனைச் சாதனமாக நினைத்திருக்கிலன்றோ நான் வேறே ஒன்றனைப் பிரயோஜனமாகச் சாதித்துக்கொள்வது’ என்றான்.
நீ இங்ஙன் சொல்லுமது வார்த்தை அன்று காண்;
எங்கள் இசைவு இன்றிக்கே இருக்க, நீ பலத்தாலே பறிக்கிற இதற்கு “ஆபத்து ரக்ஷகன்” என்று
சொல்லுகிற இது எடுத்துக்காட்டு ஆக மாட்டாது காண்.
ஆன பின்பு, உன்னுடைய குணத்திற்குக் கேடு காண் மேற்படுவது என்றார்கள்

நின்மலா நெடியாய் –
குற்றங்கட்கெல்லாம் எதிர்த்தட்டானவனாய் அளவிடமுடியாத மஹா குணங்களையுடையவனே!
‘பலகுணங்களை யுடைய எனக்கு ஒரு குற்றம் கிடந்த அளவிலே அது தெரியா நின்றதோ?’ என்றான்.
நின்மலா! நெடியாய்!-நின்மலனான சந்திரனுக்கும் அன்றோ மறு கிடக்கிறது?
ஆன பின்பு, குணங்கள் பிரகாசிக்கின்ற இடங்கள் எங்கும் குண மின்மையும் பிரகாசிக்குங்காண்.

உனக்கேலும் பிழை பிழையே –
அளவிடமுடியாத குணங்களை யுடையையாயிருந்தாயே யாகிலும், குற்றம் குற்றமேயாய்க் கிடக்குங்காண்.
இவர்கள் இப்படிச் சொன்னவாறே, இதற்கு ஒரு மறுமாற்றம் காணாமையாலே,
பிறர்க்குப் பாசுரமிட்டுச் சொல்ல ஒண்ணாதபடி இவர்கள் செவிகளிலே சிலவற்றைச் சொல்லப் புக்கான்.

‘வன்மமே சொல்லி’
என்கிறார்கள். தங்கள் மனமும் அவன் மனமும் அறியுமித்தனை;-
வார்த்தைகளால் சொல்ல ஒண்ணாது.

எம்மை நீ விளையாடுதி –
நீ மர்மம் சொல்லும்போது, சொல்லுகிற உன்னையும் கேட்கிற எங்களையும் அறிந்தன்றோ சொல்லுவது.
‘இவன் சொன்ன மர்மம் ஏது?’ என்று எம்பாரைச் சிலர் கேட்க, “மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் பாசுரமிட மாட்டாமல்
‘வன்மம்’ என்னா நின்றார்; என்னைப் பாசுரம் இடச் சொல்லுகிறீர்களோ?” என்று அருளிச் செய்தார்.

விளையாடுதி-
அவன் தன்னை அழிய மாறி ஒரு மர்மம் சொன்னானானான்;
இவர்கள் அதனை விளையாட்டாக்குகிறார்கள்.
நெஞ்சில் இல்லாதனவற்றைச் சொல்லுகிறதனால் உனக்கு என்ன பிரயோஜனம் உண்டு? என்கிறார்கள்.
மீளவும் சிலவற்றைச் சொல்லப் புக்கான்.
பஞ்ச லஷம் பெண்கள் -உடன் சம்சலேஷித்த பிரகாரம் –அடியைப் பிடி பாரதம் என்றவாறு பேசப் புக்கான்
அது கேட்கில் என்னைமார் தன்மம் பாவம் என்னார் ஒரு நான்று தடி பிணக்கே –
சொல்லுகிறவை எல்லாம் எங்கள் பந்துக்கள் கேட்பாராகில் சாலத் தப்பாய் விடுங்காண்.

என்னைமார் –
ஆணுடன் பிறந்தார்.
‘தன்மம் பாவம் என்னார்’
என்றதனால், உன் பக்கல் எங்களுக்குப் பாவபந்தம் இல்லை என்னுமிடம் அறியார்கள்.
நீ மேல் விழுகிறவதனைக் கண்டு, ‘இது செய்யலாம், இது செய்ய ஒண்ணாது’ என்ற பாராதே
நலிவர் காண் என்பதனைத் தெரிவித்தபடி.
‘ஆனால் என்? அவர்கள் இதனை அறியா நின்றார்களோ? அவர்கள் இங்கு இல்லையே?’ என்றான்.

ஒரு நான்று –
அதுவோ! முதலிலே தவிரில் அறியாதொழியுமத்தனை போக்கி எல்லாம் செய்தாலும் உண்டானால்
ஒரு நாள் வரையிலே அறிவர்கள் காண். ‘அழகிது; அறிந்தால் தான் வருவது என்?’ என்றான்

தடி பிணக்கே –
பின்னைக் குத்தும் பூசலுமாயன்றோ தலைக் கட்டுவது.
இராமாவதாரத்தில் எல்லாக் காரியங்களையும் வில்லினைக் கொண்டே செய்யுமாறுபோலே,
கிருஷ்ணாவதாரத்திலே தடி கொண்டே காரியம் கொள்ளுமத்தனை.

————————————————————————————-

பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தினாய்!
இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை
உணக்கி, நீ வளைத்தால், என் சொல்லார் உகவாதவரே?–6-2-8-

இவன் சந்நிதியில் இருக்கில் அன்றோ மர்மம் -சிற்றில் இளைக்க போகலாம் என்று போகத் தேட -போகிற வழியை மறித்த அவனை நோக்கி
எல்லாம் அறிவீர் ஈதே அறீயீர்-சர்வஜ்ஞ்ஞன் நீ எங்களை தகித்தால் உகவாதார் என் சொல்வார்
பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்-சகல அசேதனம் சேதனம் -பிணக்கி கூட்டி –
சம்ஹ்ருத் அவஸ்தையில் நாம ரூப ரஹிதமாம் படி பின்பு சிருஷ்டித்து -குற்றம் வாராமல் -கர்மம் விட்டுப் போகாமல் –
தேவ திர்யக்-பிரித்தும் -ஸ்வரூப பேதம் வாராமல் –
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தினாய்!-அபரிச்சின்னமான கீர்த்தி சமுத்ரம் -பிரபா ரூபம் -சங்கல்ப ரூபம் -ஞானமே ஒரு மூர்த்தியாக –
இணக்கி எம்மை எம் தோழிமார் விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை-சஜாதீயர் -தோழிமார் -சொல்ல -இசையும் படி வார்த்தை சொல்லி -விளையாட –
வாராயோ என்றாற்கு சென்றேன் என் வல் வினையால் -குடக் கூத்துக்கு போலே -வினையாவது அறியாமல் –
உணக்கி, நீ வளைத்தால், என்சொல்லார் உகவாதவரே?-உண்ணவும் ஒட்டாதே நீ ஸ்ரமம் கொடுத்து தகைத்தால் –
உகவாதார் நாட்டார் -உன்னுடைய மின்னிடை மடவார்-என் சொல்வார் –
ஆச்சார்யர் கோயில் பிரசாதம் ஆசை காட்டி கூட்டிச் சென்று அவன் இடம் சேர்ப்பார் போலே –
கங்கை தீர்த்தம் -ஜகன்னாத பிரசாதம் -நாம சங்கீர்த்தனம் -ஆசை காட்டி அவன் இடம் கூட்டிச் சேர்ப்பார்கள் –
லீலா ரச விபதேசத்தால் -பகவத் விஷயத்திலே மூட்டி வைப்பார்கள் –

அழிக்குங் காலத்திலே அசேதனங்களையும் சேதனங்களையும் ஒன்றாகச் சேர்த்து, பின், படைக்குங் காலத்தில் ஓர் ஆன்மாவின் கர்ம பலத்தை
மற்றோர் ஆன்மா அநுபவியாதபடி படைத்தும் வேறுபடாததாகிய ஒப்பற்ற எல்லை யில்லாத கீர்த்தி வெள்ளத்தினையுடைய கதிர் ஞானத்தினையே
திருமேனியாக வுடையவனே! எம் தோழிமார் எம்மை இசையச் செய்து விளையாடுவதற்கு வாருங்கோள் என்ன,
வந்த எங்களைத் துவளச் செய்து நீ வளைத்தால் விருப்பமில்லாதவர்கள் என்ன சொல்ல மாட்டார்கள்?
பேதித்தும் பேதியாதது ஓர் ஞானம் என்க. ஞானம் – சங்கல்பரூப ஞானம். கணக்கில் கீர்த்திவெள்ளக் கதிர்ஞானம் என்க.
அத்தகையஞானமே மூர்த்தி என்க. எம் தோழிமார் எம்மை இணக்கி விளையாடப் போதுமின் என்னப் போந்தோம் என்க.

கிட்டு நின்று இவர்களைச் சில மிறுக்குக்களைச் செய்யப் புக்கான்;
‘இங்கே இருக்கில் அன்றோ இவை எல்லாம் செய்வது’ என்று பார்த்து, ஒருவர் ஒருவராகப் போகப் புக்கார்கள்.
‘இதுவோ பார்த்தபடி!’ என்று வழியைப் பற்றி இரு விலங்காகக் கிடந்தான்.–இருகை விலங்கு —
பூஞ் சோலை யாகையாலே வழி ஓர் அடிப்பாடாய் இருக்குமன்றோ.
இப் பாசுரத்தைச் சீயர் அருளிச் செய்யா நிற்கச் செய்தே, அங்கே இருந்தவரான ஆப்பான்
‘இவர்கள் இவனைக் கடந்து போனார்களாகிற் செய்வது என்?’ என்று கேட்க,
‘அது யார் காரியம்? பின்னை இரண்டத்தில் ஒன்று சித்திக்கும் என்று
அன்றோ அவன் தான் கிடந்தது’ என்று அருளிச் செய்தார்.
தாண்டி போனால் இடித்திக் கொண்டு தான் போக வேண்டும் –
நின்றார்கள் ஆகில் இவன் நினைத்தது சித்திக்கும் என்று இருந்தான்

நீ வழியைப் பற்றிக் கிடவா நின்றாய்; நீ செய்கிறவை எல்லாம் உறவு உண்டாய்ச் செய்கிறாய் என்று இருப்பர்கள் காண்;
நீ எல்லா ஆன்மாக்கள் விஷயமகாவும் செய்யும் லீலைக்கு ஓர் அளவு உண்டோ?
உன்னை ஒழிந்த வஸ்துக்கள் எல்லாவற்றுக்கும் கோடி விகாரத்தைச் செய்து,
விகாரம் இல்லாதவனாய் இருப்பான் ஒருவன் அன்றோ;
அப்படியே எங்களை வேறுபாட்டினை யுடையவர்களாகச் செய்து நீ வேறுபாடு இல்லாதவனாய் இரா நின்றாய்.

யாவையும் யாவரும் பிணக்கி-
தன் பக்கல் பொருந்துகைக்கு நினைவு இல்லாதனவற்றையும் — நினைவாலே பொருந்தாதனவற்றையும் கூட்டி,
“மூலப் பிரகிருதியானது பரமாத்மாவினிடத்தில் கலக்கிறது”
-“தம: பரே தேவ ஏகீபவதி” சுபால உப. 2.-என்கிறபடியே, தன்னோடு வேற்றுமையறக் கலசி.

பிணக்கி –
வயிற்றில் வைத்து அவாந்தர பிரளயம் —

பிழையாமல் பேதித்தும் –
தப்பாமல் பிரித்தும் என்றது, வயிற்றில் நின்றும் புறப்பட விடுதல், சம்ஹரித்துப் புறப்பட விடுதல்களைக் குறித்தபடி.
ஒவ்வொரு கலகத்திலே அமர்ந்த நிலங்களிலே குடி வாங்கிப் பின்பு தெளிந்தவாறே தம்தம் இடங்களிலே புகுந்து,
விட்ட காரியங்களிலே அதிகரிப்பாரைப் போலே.
ஒருவன் செய்த கர்மம் வேறு ஒருவன் சென்று அநுபவியாதபடி தன்பக்கல் நின்றும் பிரித்தும்.

பேதியாதது ஓர் கணக்கு இல் கீர்த்தி வெள்ளம் கதிர் ஞான மூர்த்தியினாய்-
காரிய நிலையானதுவே காரண நிலையானாலும்,
காரண நிலையில் அசித்தைப் பற்றி வருகின்ற சூக்ஷ்ம பரிணாமம்,
சேதனத்தைப் பற்றி வருகின்ற அஜ்ஞானம்,
படைப்புக் காலத்தில் அசித்தைப் பற்றியுள்ள ஸ்வரூபத்தின் வேறுபாடு,
சேதனத்தைப் பற்றியுள்ள தன்மையின் வேறுபாடு,
ஆக, இந்த வேற்றுமைகள் ஒன்றும் இன்றிக்கே,
ஒரே உருவமாய், அத்விதீயமாய், எல்லையில்லாத கீர்த்திக் கடலை யுடைத்தாய்,
ஒளி உருவமான சங்கல்ப ரூப ஞானத்துக்கு இருப்பிடமானவனே!

எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் -திருவாய்மொழி, 1. 5 : 2.-முதலில் சிதையாத மனஞ்செய் ஞானமன்றோ.
இதனால், பிரிவு நிலையில் கலக்கமும், கூடிய நிலையில் இன்பத்தாலே வேறுபாடும் இன்றிக்கே
இருக்கின்ற ஏக ரூபன் என்பதனைத் தெரிவித்தபடி.
‘இப்படிபட்ட குணங்களை அளவிடுவோம்’ என்று பார்த்தார் உளராகில் இளைத்துக் கால்வாங்கும்படி இருத்தலின்
‘கணக்கில் கீர்த்தி வெள்ளம்’ என்கிறது.
இப்படிக் கூட்டுவன கூட்டிப் பிரிப்பன பிரித்தாலும், ஞானத்திற்கு ஒரு குறைவு அற்று இருத்தலின்
‘கதிர் ஞான மூர்த்தியினாய்’ என்கிறது. என்றது,
காரியம் கொண்டது என்னா மழுங்காது இருக்கை;
காரியம் கொள்ளப் புகர்த்து வருகையைத் தெரிவித்தபடி.
ஞான மூர்த்தியினாய் –
அன்றிக்கே, ஞானமே ஸ்வரூபனாயுள்ளவனே! என்னுதல்.

எம் தோழிமார் எம்மை இணக்கி விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை –
நீ செய்கிறவற்றால் பிரயோஜனம் உள்ளது நீ இருந்த இடத்தே நினைத்துத் தேடி வந்தார் உளராகில் அன்றோ?
இணக்கி –
இசையும்படி வார்த்தை சொல்லி. என்றது,
‘அவ்விடம் கிருஷ்ணன் வாராத இடம்’ என்று காண் சொல்லிக்கொண்டு போந்தது என்றபடி.
உன்னுடைய கலவியாகிற அயாயம் வரும் என்று அறியாத நாங்கள் என்பார் ‘எம்மை’ என்கிறார்கள்.
உன்னை வெறுக்கிறது என்? உன்பக்கல் குற்றம் உண்டோ? சேர்த்தாராலே வந்தது காண் என்பார் ‘எம்தோழிமார்’ என்கிறார்கள்.
ஒரே சாதியினராயிருந்து சேர்க்க வேண்டுமாதலின் ‘எம்தோழிமார்’ என்கிறார்கள்.

அவர்கள் உனக்குப் பெருநிலை நிற்பது அறியப் பெற்றிலோம்.
சொலவுக்கு மேல் அகவாய் ஆராயப் பெற்றிலோம் என்பார் ‘விளையாடப் போதுமின் என்னப் போந்தோம்’ என்கிறார்கள்.
என்றது, ‘நீ இங்கே உண்டு’ என்று அறிந்தோமாகில் இவ்விடம் என்றும் நினையோம் என்றபடி.
“அவர்கள் உனக்குப் பார்வை” என்னுமிடம் அறியப் பெற்றிலோம். -ஆச்சார்யர்கள் -பெருமாளுக்கு சகாயம் பண்ணுபவர்கள் என்றபடி –
பகவத் விஷயத்தில் வைலக்ஷண்யம் நெஞ்சிலே பட்டால் உபகாரகரைக் கொண்டாடவேண்டும் என்னும் அர்த்தமன்றோ உள் ஓடுகிறது.

“எந்த நாத முனிவருடைய இரண்டு திருவடிகளானவை எப்பொழுதும் எனக்கு ரக்ஷக வஸ்துக்கள்”-
“நாதாய நாதமுநயேத்ர பரத்ரசாபி
நித்யம் யதீய சரணௌ ஸரணம் மதீயம்”-என்பது, ஸ்தோத்திரரத்நம், 2
என்கிறபடியே, இங்கோடு அங்கோடு வாசிஅற அவர்களாலே வருமதன்றோ.

பொகடுங்கோள்; ஆனால் என்? அவர்கள் சொல்லப் போந்தீர் கோளாகில் உங்களுக்கு வந்த தீங்கு என்? என்றான்.
உணக்கி நீ வளைத்தால் என்சொலார் உகவாதவரே –
உணக்குகையாவது, தரிக்க மாட்டாதே துவளும்படி செய்கை.
எங்களுக்கு இதற்கு மேல் வருவது என்? கால் வாங்கிப் போகப் பெறுகின்றிலோம்;
கிட்டி நின்று முகம் பார்த்து அநுபவிக்கப் பெறுகின்றிலோம்.
இதனைக் காண வேண்டாதவர்கள் என் சொல்லுவர்கள்? “எதனைச் சொல்லுவது?
என்னை ‘ஈஸ்வரன்’ என்றீர் கோளாகில், உங்களை ‘ஆயர் சிறுமியரோம்’ என்றீர் கோளாகில்,
இனி எதனைச் சொல்லுவது?” என்றான்.
நீ சர்வேஸ்வரனான இதுவும், நாங்கள் ஆய்ப் பெண்கள் ஆன இதுவுமே யன்றோ சொல்லுகைக்குக் காரணமும்.’
ஈஸ்வரனோடு ஒக்கப் பழி சொல்லுகைக்கு இவர்கள் தாம் ஒரு நப்பின்னைப் பிராட்டி போல்வார் ஆகாதே தான்.
‘அது என்தான்? என்னோடு உங்களுக்கு உறவு முறை இல்லை என்றீர் கோளாகில் இதனால் வருவது என்?’ என்றான்.

என் சொலார் உகவாதவரே –
உன் பக்கல் எங்களுக்கு உறவு முறை இல்லை என்று அறிவார்களோ உகவாதார்? என்றது,
நீ சிறிது கால் தாழ்த்த இதுவே ஏதுவாகக் ‘கலவி உண்டாயிற்று’ என்னார்களோ?
வளைக்கிற உன்னையும், வளைப்புண்கிற எங்களையும் அறிந்தோ அவர்கள் வார்த்தை சொல்லுவது என்றபடி.
அன்றிக்கே,
உன்னுடைய மின்னிடை மடவார் உன்னை நெகிழ வார்த்தை சொல்லுவர்கள் என்னுதல்.
பிரிவாற்றாமல் கண்ணாஞ்சுழலை இடுகிறவர்கள் எதனைச் சொல்லார்.

——————————————————————————————

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம் கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறு சோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9-

இவன் தகைந்தவாறே நகன்று போக -அநு வர்த்தித்து போகாமல் -காலால் சிற்றிலை அழிக்க –
நீ உன் முக சோபையைப் பார்க்காமல் -நல்லது கண்டால் பொறுக்க மாட்டாமல் -லௌகிகர் நல்லது பிரயோஜ நாந்தரம் -தானே –
தன் விபூதியும் தன்னையும் மட்டும் அழிக்காமல் -அது தானே அநந்ய பிரயோஜனம்
உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம் கண் விழிகளின் -அகவாயில் உகவையால் -ஆனந்தமாக
அக வலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;-எங்களை அகப்படுத்திக் கொள்ளாமல்
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்-எங்கள் சிற்றிலையும் சோற்றையும் அழிக்க
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே-பார்த்துக் கொண்டு நிலாதே -நின் முகம் உளவாகில் நோக்கிப் போ என்றாள்-
தகவு நியாயம் இறக்கம் இல்லாமல் ஆஸ்ரிதர் உடைய லீலா விபூதி ஆதாரம் அழிக்கும்

மகிழ்ச்சியாலே மனமானது உருகும்படியாக, உனது தாமரை போன்ற விசாலமான திருக் கண்களின் பார்வையாகிற வலைக்குள்ளே அகப்படுத்துவதற்கு,
எங்களுடைய சிற்றிலையும் யாங்கள் சமைக்கின்ற சிறு சோற்றினையும் பார்த்துக் கொண்டு நினது முகத்தின் ஒளி திகழும்படியாகப் புன்முறுவல்
செய்து கொண்டு நின்றாய் இல்லை; உன் திருவடியால் அழித்தாய்; அதனால் தக்க காரியத்தைச் செய்தாயில்லை.
நெஞ்சம் உள் உருக, கண்டு திகழ முறுவல் செய்து நின்றிலை; சிற்றிலையும் சிறு சோறும் உன் திருவடியால் அழித்தாய்; தகவு செய்திலை என முடிக்க.
உருக என்பது, உருகி எனத் திரிந்து நின்றது. வலை அகப்படுப்பான் முறுவல் செய்து நின்றிலை என்க. அகவலைப் படுப்பான் என்பதனை,
வலை அகப்படுப்பான் எனப் பிரித்துக் கூட்டுக. பிரித்துக் கூட்டாது, நின்றவாறே பொருள் கோடலுமாம்.
முற்றிலைப் பந்தைக் கழங்கைக் கொண்டோடினை முன்னும், பின்னும்
அற்றிலை தீமை, அவை பொறுத்தோம்; தொல்லை ஆலினிளங்
கற்றிலை மேற்றுயில் வேங்கடவா! இன்றுன் கான்மலரால்
சிற்றிலைத் தீர்த்ததற்குப் பெரு வீட்டினைச் செய்தருளே.- என்ற அருமைத் திருப்பாசுரம்
இங்கு நினைவிற்கு வருகின்றது. திருவேங்கடத்தந். 97.

“இவன் ‘போகவொட்டேன்’ என்று வளைத்துக் கிடந்ததற்குப் பிரயோஜனம் உள்ளது
இவன் நினைத்தபடி பரிமாறப் பெற்றால் அன்றோ? ஒரு தேச விசேடத்திலே முக்தர் சம்சாரிகளோடு உறவு அற்று
இருக்குமாறு போன்று இவன் முகம் பாராதே இருக்கிறோம்” என்று அறுதியிட்டுப் பேசாதே இருந்தார்கள்;
பின்னர், நாம் இங்ஙனம் இருப்பின் இவன், ‘தன்னை நினைத்துக் கொண்டிருந்தோம் என்று இருப்பான்’ என்று
‘வேறு ஒன்றிலே நோக்குள்ளமை தோற்றச் சிற்றில் இழைப்போம்’ என்று இழைக்கப் புக
‘என்னைப் பாராதே இருப்பது மன்றிக்கே வேறு ஒன்றிலே சிறிது நோக்குள்ளவர்களாகவும் இருப்பதே’ என்று
சிற்றிலையும் சிறு சோற்றினையும் தன் திருவடிகளாலே அழிக்க, அதனாலே அவர்களுக்குச் சீற்றம் பிறந்து,
தாங்கள் கொண்ட கொள்கையை மறந்து அவன் முகத்தைப் பார்த்துச் சொல்லுகிறார்கள்.
அவனுடைய விருப்பம் நிறைவேறுவதற்கும் சாதனம் திருவடிகள் காணும்.
அடி யுடையார்க்கெல்லாம் சாதித்துக்கொள்ளலாமே.
அவனுக்கு அபிமதம் திருவடியால் பெற்றானே -அடி -ஐஸ்வர்யம் -திருவடி

உகவையால் நெஞ்சம் உள் உருகி –
வாராய்! உன் செயல் பயன் இல்லாத செயல் காண்;
பிரிந்து நெஞ்சினைப் புண்படுத்துகையாலே வந்த உருகுதல் ஒழிய,
எங்களுக்கு உகவையால் நெஞ்சம் உள்உருகப் பண்ணவன்றோ நீ பார்த்தது; அது செய்யப் போகாது.

உன் தாமரைத் தடம் கண் விழிகளின் அக வலைப் படுப்பான் –
பகல் கண்ட குழியிலே விழவிட்டு அகப்படுத்துவான்;
திருஷ்டி பந்தத்தாலே யன்றோ தனக்கே உரிமையாக்குவது.
தாமரையைப் போலே வாசனையையும் குளிர்த்தியையும் சிவப்பையுமுடைத்தாய், அநுபவிக்கின்றவர்களால்
உண்டறுக்க ஒண்ணாத இன்ப மிகுதியை யுடைய திருக்கண்களின் நோக்காகிற வலையுள்ளே அகப்படுத்துகைக்காக.

அகவலை –
வலைக்குள்ளே.
அன்றிக்கே,
அகவிய வலை -என்றுமாம்;
கண்ணென்னும் நெடுங் கயிறே அன்றோ, நாய்ச்சியார் திரு. 14 : 4.-. 6‘
கண்ணிலே அகப்பட்டால், ஜன்னி ஜு ரத்தாலே பீடிக்கப்பட்டவர்களைப் போலே பிதற்றுமித்தனை அன்றோ.
“தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலை மகனை”-திருவாய்.2. 6 : 3.-என்பதன்றோ மறை மொழி.

உன் திருவடியால் அழித்தாய் –
தன் சிற்றிலை அன்றோ சங்கல்பத்தால் அழிக்கலாவது;
இவர்களுடைய சிற்றிலைத் தொட்டு-ஸ்பர்சத்தால் மட்டுமே அழிக்க வேணுமே;
உன் சிற்றில் அழிக்கும் பரிகரம் அமையாதோ இதற்கு? உலகத்தை அழிப்பது சங்கல்பத்தாலே அன்றோ.
அடியவர்களுக்குத் திருவடிகள் உத்தேசியமாமாறு போன்று காதலிமார்கட்கும் உத்தேசியமாய் அன்றோ திருவடிகள் இருப்பன.

அழித்தாய் –
வெறும் சிற்றிலை அன்று காண் நீ அழித்தது;
எங்கள் அக வாயையும் நீ அழித்தாய் காண்;
சிற்றிலோடு எங்கள் சிந்தையையும் சிதைத்தாய் காண்.முற்றத்தூடு புகுந்து” என்ற
நாய்ச்சியார் திருமொழி திருப்பாசுரம் அனுசந்தேயம். 2 : 9.- 6
காலாலே சிற்றிலை அழித்து, கண்ணாலே எங்கள் எண்ணங்களையும் அழித்தாய் காண் என்கிறார்கள்.

தகவு செய்திலை –
கிருபையுடையார் செய்வதைச் செய்திலை.
பிரிந்த போதே அன்புடைமை போயிற்றே யன்றோ; இனிக் கண்ணுடையார் செய்வதும் செய்திலை என்னுதல்.
கண் படைத்ததற்குப் பிரயோஜனம் நல்லது கண்டு கொண்டிருத்தலன்றோ?
உன் முகத்தன கண்கள் அல்லவே? -இது,நாய்ச்சியார் திருமொழி, 2 : 5.-
‘நான் செய்த குறை என்?’ என்ன,

எங்கள் சிற்றிலும் யாம் அடு சிறு சோறும் கண்டு நின் முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலை –
உன் படைப்பினைப் போன்று கொள்ளத் தக்கதாகாததோ எங்கள் படைப்பு? கொள்ளத் தக்கதன்றோ?
‘என்னுடைய படைப்புக் கொள்ளத் தகாததாயினவாறு என்? உங்கள் படைப்புக் கொள்ளத் தக்கதாயினவாறு என்?’ என்னுமே அவன்;
உன்னுடைய படைப்புப் போன்று நெருப்பும் காற்றும் அன்னலும் துன்னலுமாக விட்டுக்
கருமங்கட்குத் தகுதியாகப் படைக்கப்பட்டதோ இது?
வண்டல் நுண்மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப்பட்டுப் படைக்கப்பட்ட தன்றோ இது.
அன்னல் – வெயில். துன்னல் – சிறு திவலை. ‘வண்டல்’ என்று தொடங்கும்
இவ்விடத்தில் “குண்டு நீர் உறை” என்ற நாய்ச்சியார் திருமொழி,திருப்பாசுரம் அநுசந்தேயம். 2 : 3.

நீ அடு சிறு சோறு
நிர்மால்யத்தைப்போன்று புறம்பு ஒருவர்க்கு உண்ணலாகாது; நீயே உண்ணுமத்தனை;
நாங்கள் அடு சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடி இருந்து
உண்ணு மத்தனை யன்றோ என்பார் ‘யாம் அடு சிறு சோறும்’ என்கிறார்கள்.

‘கண்டு நின்முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே’ என்றதனால்
எங்களுடைய லீலா விநோதங்களைக் கண்டு பிரீதனாய், உன்னுடைய
முக ஒளி திகழப் புன்முறுவல் செய்து நிற்க மாட்டிற்றில்லையே;
இங்ஙன் செய்தவிடம் தக்கோர்மை செய்தாயல்லையே என்று தங்களுடைய இன்னாமையைத் தெரிவிக்கிறார்கள்.

தகவு செய்திலை –
நாங்கள் சிற்றில் இழைக்கிறோமாகப் பாவித்துக் கடைக் கண்ணாலே உன் முக ஒளியையும் முறுவலையும்
கண்டு கொண்டிருக்க வொட்டிற்றிலையே? முழுக்கப் பார்க்கில் எல்லாரையும் போன்றவர்களாவோமே?
காதலனைப் பார்ப்பது கடைக் கண்ணாலே யன்றோ?
எங்ஙனே பாராதே இருந்து சிற்றில் இழைத்தார்கள் தாம்!

எய்ய வில் வளைத்ததும் இறுத்ததும் உரைத்தும் மெய் விளை விடத்து முதலையம் விட லுற்றாள்
ஐயனை யகத்து வடிவேயல புறத்தும் கை வளை திருத்துபு கடைக் கணி னுணர்ந்தாள்.- என்றார் கம்பநாட்டாழ்வார்.

——————————————————————————

நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர் கால் அரசு களை கட்ட
வென்றி நீள் மழுவா? வியன் ஞாலம் முன் படைத்தாய்!
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்!
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே.–6-2-10-

முக ஒளி திகழ முறுவல் -முகம் பார்த்து வார்த்தை -அகவாயில் மறம் அதர்ம சிந்தனை தீர்ந்து -த்ருஷ்டே பராவரே -சுருதி போலே
பஹுமுக பிரவ்ருத்தியால் தங்களை ஆபிமுக்யம் பண்ணி வித்தபடியை சர்வ பிரகார ரஷகன் -நீ இருக்க நலிவதா
நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர் கால் அரசு களை கட்ட-நிலை நிற்க -ரஷணம் -விளங்கும் திரு அபிஷேகம் -அதற்கு கவித்த முடியும்
அசங்காமல் நிலை நிற்குமே -21 ஷத்ரிய அரசர்களை உன்மூலம் -வெற்றி பெற்ற மழுவை பரசுராமனே
வென்றி நீள் மழுவா? வியன் ஞாலம் முன்படைத்தாய்!-வியப்பான ஞாலத்தை சிருஷ்டி காலத்தில் உத்பாதித்தாய்
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச்சுடர்!-ஆயர் குலம் சம்ரஷிக்க பிறந்தாய் -வீடு குடி குடுத்தனம் உடன் உய்ய
நீல ரத்ன பிரபா ஔஜ்வலம் வடிவை உடையவனே
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே–இப்படி சர்வ பிரகார ரஷகன் ஆகையாலே -எங்கள் நாயகன் -எங்கள் மறத்தையும் அழித்து –
அழிந்த சத்தையும் உண்டாக்கி -சர்வ வித உறவும் கொண்டாடி –அனுபாவ்யமான வடிவையும் கொண்டு -உன்னாலே -அறிவில்லா இடைகுலம்-
முன்பு பட்ட நலிவை நினைத்து சொல்கிறார்கள் –படும் படி ஆவதே என்று சமாஹிதர்
முன்பு நான் அஞ்சுவன் -ஒருமை -பின்பு ஆத்மனி பகு வசனம் -தோழிகளையும் சேர்த்து சொன்னது ஆதல்

நிலை பெற்று விளங்குகின்ற கிரீடத்தை யுடையவனே! இருபத்தொருபடி கால் அரசர்களைக் குலத்தோடு வேர் அறுத்த வெற்றி பொருந்திய
நீண்ட மழு என்னும் ஆயுதத்தை யுடையவனே! அகன்ற உலகத்தை யெல்லாம் முன்னே உண்டாக்கினவனே! இக் காலத்திலும் இந்த ஆயர் குலமானது
அடியோடு உய்வு பெறும்படியாகத் தோன்றிய கரிய மாணிக்கச் சுடரே! ஆய்ச்சியர்களாகிய நாங்கள் எப்பொழுதும் உன்னால் துன்பமே படுகின்றோம்.
களைகட்டல் – களைபிடுங்குதல். ‘மழுவா’ என்றது, பரசுராமனை. குலத்தை – குலமானது; உருபு மயக்கம். வீடு உய்ய – விடுபட்டு உய்ய என்னலுமாம்;
மோக்ஷத்தைப் பெற்று உய்வுபெற என்னலுமாம். ஆய்ச்சியோம் நலிவே படுவோம் என்க.

“நின் முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே” என்று விழுக்காடு அறியாதே
வாய் தப்பச் சொல்லிக் கொண்டு நின்றார்கள்;
காலால் அழித்தது சிற்றிலை யன்று; இவர்கள் நெஞ்சுகளிலுள்ள மறத்தையே யன்றோ.
அந்த மறம் போனவாறே மேல் நோக்கிப் பாதாதி கேசாந்தமாகப் பார்த்தார்கள்;
தங்களை வென்றதனால் உண்டான உவகை வடிவிலே தோற்றும்படி நின்றான்;
அவ்வடிவிலே பிறந்த வேறுபாட்டினைச் சொல்லுகிறார்கள்.

நின்று இலங்கு முடியினாய் –
இவர்களை வெல்வதற்கு முன்பு தலைச் சுமையாய்க் காணும் கிடந்தது;
இப்போதாயிற்று நற்றரித்து ஒளி விடத் தொடங்கிற்று.
இராசாக்கள் சிலர் தந்தாம் பகைவர்களை அழித்து வீர அபிடேகமும், விஜய அபிடேகமும் பண்ணிநிற்குமாறு போலே.
முன்பே முடி சூடி இருக்கச் செய்தேயும் இவர்களைத் தோற்பிப்பதற்கு முன்பு இல்லாததற்குச் சமமாகக் காணும் இருந்தது.
இராவணன் முதலாயினோர்களை வென்றதற்கு முடி சூடினது போன்று அன்று காணும்,
காதலிமார்களை வென்றதற்குச் சூடின முடி இருப்பது;
இவர்கள் எண்ணங்களைக் குலைத்துப் பொருந்தவிட்டுக் கொண்ட பின்பு காணும்
மேன்மையையுடையவனாய்ப் பிரகாசிக்கின்றவனுமாய் முடியும் நற்றரித்தது.

“ஸ்ரீராமபிரான் விபீடணனை அரக்கர்களுக்குத் தலைவனாக இலங்கையில் அபிடேகம் செய்து,
அப்போது செய்து முடித்த எல்லாக் காரியங்களையுமுடையவராயும் நடுக்கம் அற்றவராயும் மகிழ்ந்தார் அன்றோ.
”அபிஷிச்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீக்ஷணம்
க்ருத க்ருத்ய: ததா ராமோ விஜ்வர: ப்ரமுமோத ஹ”-என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 85.
ஸ்ரீ பரதாழ்வானைப்போலே, ‘நான் முடி சூடேன், நீர் முடிசூடும்’ என்று முடிக்கு இறாய்க்கின் செய்வது என்? என்று
உடம்பு வெளுத்துக் காணும் இவர் இருந்தது;
ஒரு படி அத்தலைச் சுமையைக் கழித்துப் போந்தோம்; இதுவும் ஒரு தலைச் சுமையாகின் செய்வது என்?’ என்று.
இக்ஷ்வாகு குலத்தார்க்குப் பணியன்றோ முடிக்கு இறாய்க்கை.

குகனொடும் ஐவரானேம் முன்பு; பின் குன்று சூழ் வான்ம கனொடும் அறுவரானேம்; எம் முழை அன்பின் வந்த
அகனமர் காதல் ஐய! நின்னோடும் எழுவ ரானேம்; புகலருங் கானந் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை.
நடுவினிப் பகர்வ தென்னே நாயக! நாயி னேனை உடனுதித் தவர்களோடும் ஒருவனென் றுரையா நின்றாய்
அடிமையிற் சிறந்தேன் என்னா அயிர்ப்பொடும் அச்சம் நீங்கித் தொடுகழற் செம்பொன் மௌலி
சென்னியிற் சூட்டிக் கொண்டான்.-என்பன அநுசந்தேயம்.

அடிக்கு இறாயாதிருக்கையும் முடிக்கு இறாய்க்கையுமன்றோ சொரூபம்.
‘அது கிடக்க; உங்களுடைய எண்ணங்களைக் குலைத்து உங்களை வென்றோம் அன்றோ’ என்றான்.
இருபத்தொருகால் அரசு களை கட்ட வென்றி நீள் மழுவா –
மிடுக்கரான அரசர்களை இருபத்தொருபடிகால் வென்ற உனக்கு அபலைகளான எங்களை வெல்லுகை பெரிய பணியோ?
“எனக்கு” என்று இருப்பாரையும் உனக்கு ஆக்கிக் கொள்ளவல்ல உனக்கு உனக்கேயாய் இருப்பாரை வெல்லுகை பெரிய ஏற்றமோ?
இராஜாக்களை வென்ற உனக்கு ஆய்ச்சியர்களை வென்றாய் என்பது ஓர் ஏற்றமோ?
அசுரத்தன்மை வாய்ந்தவர்களாய் நாட்டினைப் பட அடித்துத் திரிந்த க்ஷத்திரிய குலத்தைக் கிழங்கு எடுத்த மிடுக்கனே!
களை கட்டுகையாவது – எடுத்துப் பொகடுகை.
ஜீவ ஸ்வா தந்த்ரமே மறம் கிருஷி பலன் பெற்றோம் என்று மகிழ்வானே

வியன் ஞாலம் முன் படைத்தாய் –
பிரளயத்தில் உருமாய்ந்து கிடந்த பூமியை உண்டாக்கினாற் போலே அன்றோ,
பிரணய ரோஷத்தாலே அழிந்த எங்களை உண்டாக்கினபடி.
வியன் – ஆச்சரியம்.
பிரளயம் கொண்ட பூமியை எடுத்தாற் போலே, விரஹ பிரளயம் கொண்ட எங்களை எடுத்தபடி.
அங்கு விலக்குவார் இல்லாமையாலே செய்யலாம்; ‘கழக மேறேல்’ என்று விலக்கச் செய்தேயன்றோ உண்டாக்கிற்று.

இன்று இவ் வாயர் குலத்தை வீடு உய்யத் தோன்றிய கருமாணிக்கச் சுடர் –
“பல பொருள்களாக ஆகக் கடவேன்” என்று பொதுவான சிருஷ்டியைத் தேடிப் போக வேணுமோ?
இந்த ஆயர் குலத்திலே வந்து பிறந்து, இன்று இவ் வாயர்குலத்தை வடிவைக் காட்டி
மனைவி மக்கள் முதலியவர்களோடு ரக்ஷித்தவனாதலின் ‘கரு மாணிக்கச் சுடர்’ என்கிறார்கள்.
அன்றிக்கே,
தன்னை அடைந்தார் திறத்திற் பண்ணின ஓரம் தன் பேறு என்னுமிடம் வடிவிலே தோன்றும்படி காணும் இருக்கிறது;
ஆதலின், ‘கரு மாணிக்கச் சுடர்’ என்கிறார்கள் என்னுதல்.
அன்றிக்கே,
பிரணயரோஷத்தாலே ‘சேரோம்’ என்று இருக்கிற தங்களைச் சேர்த்தபடியாலே
‘கருமாணிக்கச்சுடர்’ என்கிறார்கள் என்னுதல்.

ஒளி காட்டி குலம் ஜெயித்தான் —
ரஷித்த படியாலே பொலிந்தான் —
தன்பேறு என்று –பிரணய ரோஷம் தோற்பித்தான்-மூன்றும் –

“புத்திர பௌத்திரர்களாகிய அடிமைப் பொருள்களோடு” என்கிறபடியே,
ஒரு சேர உய்வு பெறும்படி செய்தானாதலின் ‘வீடு உய்ய’ என்கிறது. தோன்றிய – ஆவிர்ப்பவித்த.

நின் தன்னால் என்றும் நலிவே படுவோம் ஆய்ச்சியோமே –
பகைவர்களாய் முடிந்து போகப்பெறாதே, சம்சாரிகளாய் வேறு ஒன்றிலே நோக்குள்ளவர்களாய்ப் போகப் பெறாதே,
நீ நலியவும் நாங்கள் நோவுபடவுமாம்படி சமைந்து விட்டதன்றோ!
இரண்டு தலையும் கூடி மேல் விழுந்து அணைத்துக் கொண்டு நின்று சொல்லுகிற வார்த்தை அன்றோ.
இவ்வளவும் தங்கள் வெற்றியே அன்றோ சொல்லிப் போந்தது; இப்போது அன்றோ தங்கள் தோல்விக்கு இசைந்தது.

நலிவே படுவோம் –
இது தான் எங்களுக்கு மெய்யாகப் புகாநின்றதோ, எங்களுடையது அன்றோ எங்களுக்குச் சித்தித்து விடுவது.
இவர்களுடையதாவது, “கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்” – திருவிருத்தம்.-16–என்று மெலிவே யாயிருக்கை.
கூடில் மேல் பிரிவு வருமோ என்கிற பயம் -நீங்கில் விஸ்லேஷ விசனத்தால் மெலிவோம் –
செய்வது இன்னது என்று அறியாத தாங்கள் என்பார் “ஆய்ச்சியோமே” என்கிறார்கள்.

இத் திருப்பாசுரக் கருத்தோடு,
“வாராக் கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண்”- என்னும் திருக்குறள், ஒரு புடை ஒப்புமையுடைத்தாம்.

———————————————————————————————

ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றமுண்டழு
கூத்த அப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஒர்பத்து இசையொடும்
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல் குரவே.–6-2-11-

இல்லை நல் குரவே-பகவத் அ லாபம் ஆகிய தாரித்ர்யம் இல்லை –
ஜீவ ஸ்வா தந்திரத்தால் விலக்கினாலும் சேர்த்துக் கொண்டு அருளுவான் –
ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றமுண்டழு–வார்த்தை கேட்டதும் அழுது
விம்மல் -பொருமல் -தோப்பு கர்ணம் போட்டு
கூத்த அப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன்-கூத்தை போலே நாடகம் தோற்ற நான் -லோக உபகாரகன்
ஏந்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஒர் பத்து இசையொடும்-ஸ்தோத்ர ரூபம் -போகு நம்பி இத்யாதியால் -வசவையும் ஸ்தோத்ரம் ஆக
கொள்ளும் அவன் ஸ்வ பாவம் -நஞ்சை அமுதம் ஆக்கும் முஹூர்த்தம் அவதரித்தவன் அன்றோ -விமுகரை அபிமுகர் ஆக்கின இந்த பத்தும்
நாத் தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல் குரவே.-இசை உடன் கூடி -நாவுக்கு பிரயோஜனமாக நன்கு அனுசந்தானம் பண்ணினால்
அலாபம் -சங்கோசம் கிடையாமை -பகவத் அலாபம் இல்லை -ஜீவ ஸ்வா தந்த்ரத்தால் அவனை விலக்கும் நிலை வராது –

அன்று வெண்ணெய் களவு போயிற்று என்ற வார்த்தை பிறந்த அளவிலே ஆய்ச்சியாகிய தாயால் சீறப்பட்டு அழுத கூத்தனாகிய அப்பனை,
திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் துதித்த தமிழ்மாலை ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் இசையோடும்
நாவினால் விருப்பத்தோடு சொல்லுகின்றவர்கட்கு வறுமை இல்லை.
அன்று வெண்ணெய் வார்த்தையுள் ஆய்ச்சியாகிய அன்னையால் சீற்றம் உண்டு அழு அப்பன் என்க. ‘ஆய்ச்சியாகியஅன்னை’ என்றது,
பிறிதின் இயைபு நீக்கிய விசேடணம். நவில உரைத்தல்-மனத்தொடு படவுரைத்தல்.

இத் திருவாய்மொழியை ஆதரத்தோடு சொல்ல வல்லார்க்குப் பகவானுடைய அநுபவத்தின் வறுமை இல்லை என்கிறார்.

ஆய்ச்சியாகிய அன்னையால்-
அரசர் குலத்தில் ஒரு தாயும் ஆயர் குலத்தில் ஒரு தாயும் ஆகையாலே.
பொது வறுத்து ஆய்ச்சியாகிய தாயாலே என்கிறார்.
தேவகிப் பிராட்டியார் அடிக்கில் இத்தனை நோவாது காணும்.
“தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து ஓடி” -இது, பெரிய திருமொழி, 8. 3 : 5.-என்கிறபடியே,
‘இவள் நம்மை அதட்டுவதே!’ என்று உளைந்தன்றோ கிடப்பது.
தெய்வம் அறியத் தாய் ஆயினமை அன்றோ தேவகியார் பக்கல் உள்ளது;
முலைச் சுவடு அறிந்ததும் முகம் பழகிற்றும் வளர்ந்ததும் எல்லாம் இங்கே அன்றோ.

அன்று வெண்ணெய் வார்த்தையுள் –
ஊரில் ‘வெண்ணெய் களவு போயிற்று’ என்றார்கள்; அவ்வளவிலே ‘நாம் அன்றோ இதற்கு இலக்கு’ என்று அழப் புக்கான்.
‘மடம் மெழுகுவார் யார்?’ என்ன, ‘அஸ்ரோத்திரியன்’ என்றார்கள்;
‘இப் பரப்பு எல்லாம் என்னாலே மெழுகப் போமோ’ என்றான்; அதுபோலே.
யாரேனும் ஏதேனும் செய்யிலும் இவனைச் சொல்லும்படி யன்றோ இவனுடைய தீம்பு தான் இருப்பது!
“பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார் எல்லாம் உன்
மேலன்றிப் போகாது” -பெரியாழ்வார் திருமொழி, 2. 8 : 5.-என்னும்படியன்றோ இருப்பது.

சீற்றம் உண்டு அழு கூத்த அப்பன் தன்னை –
தாயார் பொடியப் பொடியுண்டு அழுகிற நிலையில் “பையவே நிலையும்” -திருவாய். 5. 10 : 3.-என்கிறபடியே
நிற்கிற நிலை,வல்லார் ஆடினாற் போலே இருந்தபடி.
அன்றிக்கே,
அழுகையாகிற கூத்தையுடைய மஹோபகாரகனை என்றுமாம்.
இது ஒன்றற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லுகிறது, “போகு நம்பி” என்றும், “கழகம் ஏறேல் நம்பீ” என்றும்
இவர்கள் சொன்ன போது ஒன்றிலும் விருப்பம் இல்லாத அவன் கால் வாங்கிப் போக மாட்டாதே நின்ற நிலைக்குத் தியோதகம்.
நகராமல் ஆணி அடித்தால் போலே நின்றானே -தாய் இடமும் தாரம் இடமும்
அவள் நில் போனால் அடி என்றாள் -இவள் போ என்றாலும் போகாமல் நின்றானே
நிரபேஷன் ஆனவன் இப்படி செய்தானே -வெண்ணெய்க்காகவே பெண்ணுக்காகவே பிறந்தவன் போலே இருந்தானே –

அப்பன் தன்னை –
அந்த நிலையைக் காட்டிச் சேர்த்துக் கொண்டு தம்மை உண்டாக்கினபடி.

குருகூர்ச் சடகோபன் ஏத்திய தமிழ் மாலை –
பிரணய ரோஷத்தாலே “போகு நம்பி” என்றும், “கழகம் ஏறேல் நம்பீ” என்றும்,
“நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை நம்பீ” என்றும் சொன்னவை யெல்லாம்
அந்தப் பிரணய ரோஷம் போனவாறே ஏத்தாய் விட்டது.

ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து –
தன்னை அடைந்தவர்களோடு உண்டான பாவ பந்தத்தை வெளியிட்ட ஒப்பற்ற பத்து.

இசையொடும் –
சொல் மாத்திரத்தாலே.–அர்த்தம் புரிய வேண்டாம் -புரிவதும் கஷ்டம் தானே

நவில உரைப்பார்க்கு –
ஆதரத்தோடு சொல்லுவார்க்கு.

நல்குரவு இல்லை –
வறுமை இல்லை; பகவானுடைய அநுபவத்தின் வறுமை இல்லை. என்றது,
தூதுவிட்டு, –6-1- ராமன் கண்ணனாக வர -அவன் வரக்கொண்டு
‘புகுர ஓட்டோம்’ என்று பட்ட கிலேசம் படவேண்டா என்றபடி.
சோறும் புடைவையும் கிடைக்கும் என்கிறது அன்று; பகவானுடைய அநுபவத்தின் வறுமை இல்லை என்கிறது.
“உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்”-திருவாய். 6. 7 : 1.- என்று
இருக்கிற இவருடைய வறுமை அன்றோ.
ஆகையாலே, அதிகாரிகட்குத் தகுதியாக அன்றோ உண்ணும் உணவு முதலானவைகளும் இருப்பன.
“உண்டியே உடையே உகந்து ஓடும் இம் மண்டலத்தொடும் கூடுவது இல்லை யான்” –பெருமாள் திருமொழி, 3 : 4.-
என்கிறவர்கள் இவற்றைச் செல்வமாக நினையார்களே.
“சென்று ஒன்றி நின்ற திரு” – நான்முகன் திருவந். 61.-என்கிறபடியே அவன் தானே வந்து
மேல் விழ நித்தியாநுபவம் பண்ணப் பெறுவர்கள்.

‘அழு கூத்த அப்பன்’ என்கிற இடத்தில்
“முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும்”- பெருமாள் திருமொழி, 7 : 8.– என்கிற
பாசுரத்தை யோஜித்துக் கொள்வது.

————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தாவது விளம்பம் அசஹன் பிரணய கிருஷ்ணம்
சமாஹதம் அபி த்வரயா விநிந்த்ய தேன
ஸூ சங்கம மனோ ரத அத்விதீய சாந்த்வ
உக்தி பிஸ் சமாஹிதோ பூத்

தாவது விளம்பம் அசஹன் -தூது விட்டு வருவது வரை பொறுக்காமல்
பிரணய கிருஷ்ணம் சமாஹதம் அபி -வந்தாலும் கூட
த்வரயா விநிந்த்ய -த்வரை விஞ்சி
தேன ஸூ சங்கம மனோ ரத அத்விதீய -எப்படியும் கூடுவேன் என்கிற மனம்
சாந்த்வ உக்தி -வன்மம் பேசியும் கூட
பிஸ் சமாஹிதோ பூத் -சமாதானம் அடைந்தார்

———————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

பூர்ணத்வாத் கோப நாரீ ஜன சுலபதயா லோட நாத் அம்புராசி
நிக்ரோத அக்ரே சயநாத் ஹரி சுபகதையா ஸ்ரீ மஹீ வல்லபத்வாத்
நிர் தோஷ உத்துங்க பாவாத் நிரவதிக யசஸ்
சத்வ வசீகாரீ த்ருத்வாத் மோஷ ஸ்பர்சம் ஸ்வயம் அபிசரதி

1-பூர்ணத்வாத்–என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–அவாப்த ஸமஸ்த காமன் -பந்தும் கழலும் கிடைத்தால் தான் பூர்ணன் ஆவேன் என்கிறான்

2-கோப நாரீ ஜன சுலபதயா–தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ ஆகள் போக விட்டுக் குழலூது போயிருந்தே

3-லோட நாத் அம்புராசி–இத் திருவருள் பெறுவார் எவர் கொல்,-மாயிருங் கடலைக் கடைந்த பெருமானாலே?-

4-நிக்ரோத அக்ரே சயநாத்–வேலினேர் தடங்கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று-காலி மேய்க்க வல்லாய்! எம்மை நீ கழறேலே

4-ஹரி சுபகதையா—-திண் சக்கர நிழறு தொல் படையாய்! உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்–விரோதி நிரசன பரிகரம் ஆழி

5–ஸ்ரீ மஹீ வல்லபத்வாத்—-அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;–பூமா -ஸ்ரீ தேவி -நீளா -இங்கு -தேவிமார்களுக்கு சாம்யம்

6–நிர் தோஷ உத்துங்க பாவாத்–கடல் ஞாலம் உண்டிட்ட நின்மலா! நெடியாய்! –

7–நிரவதிக யசஸ்–கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தினாய்!-

8-சத்வ வசீகாரீ த்ருத்வாத்–உன் தாமரைத் தடம் கண் விழிகளின் அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;– -வசீகரிக்கும்-

9-மோஷ ஸ்பர்சம்–இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்!

10-ஸ்வயம் அபிசரதி—-ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றமுண்டழு கூத்த அப்பன்

மேல் விழுந்து ரஷிக்கும் குணம்

—————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 52-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில்
பிரணய ரோஷத்தாலே யூடின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
தம் ஆற்றாமையாலே-நோற்ற நாலிலும் சரணம் புக்கு-தூது விட்டு
இத்தனையும் செய்த விடத்தும் அவன் வரக் காணாமையாலே
பிரணய ரோஷம் தலை எடுத்து
அவன் வந்தாலும் இனி அவனோடு கலப்போம் அல்லோம் -என்று
பரிவார வர்திகளான ஸூஹ்ருத்துக்களோடு தாம் துணிந்து இருக்க
அவனும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் முதலான ஆஸ்ரிதர் ஆபத்தில் முற்பாடானாய் சென்று
ஆபத்தைப் போக்கி ரஷித்த நாம் -ஸ்ரீ ஆழ்வாருக்கு பிற்பாடர் ஆனோமே
என்று பிற்பாட்டுக்கு தாம் போர நொந்து-தம்முடன் கலப்பதாக பதறி-நடந்து வந்து
வடிவு அழகாலும்
சேஷ்டிதையாலும்
தன் செல்லாமையாலும்-தம்மூடலைத் தீர்த்து-தம்முடன் கலந்த படியை –
ஸ்ரீ கிருஷ்ணன் வரவு தாழ்க்கையாலே அவனோடு ஊடி
இனிக் கூடோம் என்று இருந்த இடைப் பெண்களை
தன்னுடைய சௌந்தர்யாதிகளாலும்
செல்லாமையாலும்-ஊடலைத் தீர்த்து ஸ்ரீ கிருஷ்ணன் தன்னுடன் சேர்த்துக் கொண்ட
வ்ருத்தாந்தத்தின் மேல் வைத்து அருளிச் செய்த-மின்னிடை மடவாரில் அர்த்தத்தை
மின்னிடையார் சேர் கண்ணன் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –

———————————————————

மின்னிடையார் சேர் கண்ணன் மெத்தென வந்தான் என்று
தன்னிலை போய்ப் பெண்ணிலை யாய்த் தான் தள்ளி -உன்னுடனே
கூடேன் என்றூடும் குருகையர் கோன் தாள் தொழவே
நாடோறும் நெஞ்சமே நல்கு—52-

———————————————————–

வியாக்யானம்–

மின்னிடையார் சேர் கண்ணன் மெத்தென வந்தான் என்று
மின்னிடை மடவார் உடன் சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணன் அங்குத்தையில் அந்ய பரதையாலே
ஆற்றாமைக்கு உதவ வராமல் ‘ மந்த கதியாய் வந்தான் என்று – அவன் தங்கள் இடத்தில் பண்ணும் அபி நிவேத்தை
அந்யதாகரித்து தங்கள் ஆற்றாமையாலே அவன் பதற்றத்தையும் அசத் கல்பம் ஆக்குகிற –
மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான் அது அஞ்சுவன் -என்றத்தை
கடாஷித்து அருளிச் செய்தபடி –

தன்னிலை போய்ப் பெண்ணிலையாய்த்-
அதாவது –
ஸ்ரீ குருகூர் சடகோபன் -என்கிற ஆகாரம் குலைந்து ஸ்ரீ கோபிமார் உடைய ஆகாரத்தை யுடையராய் –

தான் தள்ளி –
தங்கள் கழகம் இருக்கிற சங்கேத ஸ்தலத்திலே புகுருவதாக அவன் அருகே வர
போகு நம்பி -என்றும்
குழலூது போய் இருந்தே -என்றும்
போய் இருந்து உன் புள்ளுவம் அறியாதவற்கு உரை நம்பி -என்றும்
எம்மை நீ கழரேலே -என்றும்
எம் குழறு பூவையோடும் கிளியோடும் குழகேலே -என்றும்
கழகம் ஏறேல் நம்பி -என்றும் –
கன்மம் அன்று எங்கையில் பாவை பறிப்பது -என்றும்
உனக்கேலும் பிழை பிழையே -என்றும்-அவனுக்கு அவகாசம் அறும்படி
ப்ரண யாச்சா பீமா நாச்சா பரிசிஷே பராகவம் -என்று ஊடும் படியையும்-

அவனும்
உன் தாமரை புரை கண் இணையும் செவ்வாய் முறுவலும் ஆகுலங்கள் செய்ய -என்றும்
நின் செய்ய வாய் இரும் கனியும் கண்களும் விபரீதம் இந்நாள் -என்றும்
வன்மையே சொல்லி எம்மை நீ விளையாடுதீ -என்றும்
உகவையால் நெஞ்சமுள் உருகி உன் தாமரத் தடம் கண் விழிகளில்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால் -என்றும்-என்னும்படி
ஸ்மித
வீஷணங்களாலும்
பாவ கர்ப்பமான யுக்திகளாலும்
சேஷ்டிதங்களாலும்- ‘ஊடலைத் தீர்த்து சேர விட்டு
கூத்த வப்பன் தன்னைக் குருகூர் சடகோபன் ஏத்திய தமிழ் மாலை -என்னும்படி
கூடின படியையும் அருளிச் செய்கையாலே –

உன்னுடனே கூடேன் என்று ஊடும் குருகையர் கோன் -என்று
அருளிச் செய்த இதிலே கூடின முடியும் இவர்க்கு விவஷிதம்
மேலே-நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் -53–என்று இறே அருளிச் செய்யப் புகுகிறது –
அதுக்குச் சேர இங்கே கூட வேணும் இறே

ஊடும் குருகையர் கோன் தாள் தொழவே நாடோறும் நெஞ்சமே நல்கு
அவன் அல்ப்பம் தாழ்த்துக் கூடும்படியான பிரேமத்தை உடைய ஸ்ரீ ஆழ்வார்
திருவடிகளை நித்ய சேவை பண்ணும் படி மனசே நீயும் நித்யமாக சஹகாரியாய் யுபகரி –

நல்குதல் -கொடுத்தல்
மன ஏவ – இறே –

——————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -128- திருவாய்மொழி – -6-2–1….6-2–5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்

June 14, 2016

பிரகர்ஷமாக -இழுத்துக் கொண்டு போகும் -ப்ரேமத்தால் வந்த கோபம் -பிரணய ரோஷம் –
கலக உத்சவம் -மட்டை உத்சவம் -ஆழ்வார் பெரியவர் சொல் படி சேர்வார்கள் அங்கு
இங்கோ ஆழ்வாரது சங்கல்பம் உடைத்து -கூடுவேன் அவன் –
முதல் பத்து பாசுரங்கள் ஆழ்வார் சங்கல்பம் -பெருமாள் தீர்த்து வைப்பது -11 பாசுரம் –
மாசறு சோதி –5-3- தொடங்கி வியஸனம் -அறிவித்த பின்பும் வராமல் இருக்க ப்ரணய ரோஷம் இதில் –

இவ் வாழ்வாராகிறார்
சம்சார பயத்தாலும்,
பகவானிடத்துள்ள ஈடுபாட்டினாலும்,
கைங்கர்ய ருசியாலும்,
பிரிவில் தரியாமையாலும்
பகவத் விஷயத்தில் கை வைத்தார் எல்லாருடைய படிகளையுமுடையரா யிருப்பர்.

“பொய்ந் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும்” என்கையாலே பத்தர் படி உண்டு என்னவுமாயிருந்தது;
“இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை” என்று கொண்டு, அது பொருந்தாதபடி இருக்கையாலே முமுக்ஷூக்கள் படியுமாயிருந்தது;
(17 இனி திருவாய்மொழியில் 3 இனி திரு விருத்தத்தில் இருபதின் கால் இனி என்றாரே )
“வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்” என்று, கைங்கர்யத்தால் அல்லது தேக யாத்திரை செல்லாமையாலே முத்தர் படி உண்டு
என்னலாயிருந்தது;
“நின்னலால் இலேன் காண்” –திருவாய். 2. 3 : 7.-என்று, அது தான் ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி -சத்யா பிரயுக்தம் –
வந்ததாயிருக்கையாலே நித்தியரோடு ஒக்கச் சொல்லலாயிருந்தது;
பிரணய ரோஷத்தாலே ஊடுகையாலே பிராட்டிமாரோடு ஒக்கச் சொல்லலாயிருந்தது.

“ஆற்றலில் விஷ்ணுவை ஒத்தவர், பிரியமாகப் பார்க்கப்படுவதில் சந்திரனை ஒத்தவர்”
“விஷ்ணுநா ஸத்ரிஸோ வீர்யே ஸோமவத் ப்ரிய தர்ஸந:”-என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 18.-என்று,
பெருமாளுடைய ஒவ்வொரு தன்மைக்கு ஒவ்வொரு பொருளை ஒப்பாகச் சொல்லுமாறு போலே,
அல்லாதார் படி அடங்கலும் இவருடைய ஒவ்வொரு நிலைக்கு ஒப்பாமத்தனை.
( அழும் தொழும்-இத்யாதி இவருக்கும் பலர் உடன் சாம்யம் ஆச்சார்ய ஹ்ருதயம்-127- உண்டே )

இது தான் இவர்க்கு இளமை தொடங்கியே இருப்பது -பால்யாத் ப்ரவ்ருத்தி -ஒன்றே யன்றோ.
“முலையோ முழு முற்றும் போந்தில–பெருமான் மலையோ திருவேங்கடமென்று கற்கின்ற வாசகமே” -திருவிருத்தம், பா. 60-என்றும்,
“அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து”-திருவாய். 2. 3: 3.-என்றும் சொல்லுகிறபடியே யன்றோ
இவர் பருவம் நிரம்புவதற்கு முன்னும் இருக்கிறபடி.

இனி, “ஏறாளும் இறையோனும்” -4-8-என்ற திருவாய்மொழியிலே,
அவன் வேண்டாத நானும் என்னுடைமையும் வேண்டா என்றார்;
“மாசறு சோதி”-5-3- என்ற திருவாய்மொழியிலே,
எனக்கு உறுப்பு அல்லாத அவனும் அவன் விபூதியும் வேண்டா என்று அழிக்கப் பார்த்தார்;
“பிறந்தவாறும்”-5-10- என்ற திருவாய்மொழியிலே,
தரித்து நின்று குணாநுசந்தானம் பண்ண வல்லேனாம்படி செய்தருள வேண்டும் என்று சரணம் புக்கார்;
“வைகல் பூங்கழிவாய்” -6-1-என்ற திருவாய்மொழியிலே,
அப் பெரிய துயரத்தோடே கூடத் தூது விட்டார்;

விட்ட ஆள் சென்று அத் தலைப் பட்டு அவனுக்கு அறிவிக்க, அவனும் இழவாளனாய்,
யானைக்கு அருள் செய்ய வந்து தோற்றினாற் போலே பதறி நடந்து வரா நிற்க,
அவ்வளவு பற்றாமே கிடந்து துடித்து அலமந்து,
‘இனி இவ்வளவில் நாம் செய்ய அடுப்பது என்?’ என்று பார்த்து,
‘முடிந்து போவதற்கு மேற்பட்ட பரிஹாரம் இல்லை’ என்று அறுதியிட்டு முடியப் பார்க்கிறாள்.

அது இவள் நினைத்த போதாக முடியும்படி இராதே யன்றோ.
அங்ஙன் செய்யலாமன்று,
இவள் “ஏறாளுமிறையோனும்” என்ற திருவாய் மொழியில் ‘வேண்டா’ என்ற போதே போமே யன்றோ.
இனி, போகத்துக்கு அவன் வரவு வேண்டினதைப் போன்று, முடிவுக்கும் அவன் வரவு வேண்டியிருந்தது.
பிரிவில் குணாநுசந்தானம் பண்ணித் தரிக்கலாம்;
அவன் சந்நிதியில் அவனை ஒழிய அரைக்கணம் முகம் மாறியிருக்குமதற்கு மேற்பட முடிவு உண்டோ.
அன்றிக்கே,
அவன் பெயர நின்று இத் தலையைப் பண்ணின மிறுக்கு அடங்கலும்,
அவன் சந்நிதியிலே தான் முடிந்து அவனையே நோவு படுத்தப் பார்க்கிறாள் என்னுதல்.

அவன், வரவிலே சிறிது தாழ்க்க, பிரணய ரோஷம் தலையெடுத்து,
‘இனி இருந்து ஜீவிக்கும் ஜீவனம் வேண்டா’ என்று முடியப் பார்க்கிறாள் பிரிவு பொறுக்க மாட்டாமையாலே.
“மிக்க அன்பினாலுண்டாகிய கலவியாலும் என்னுடையவன் என்ற அபிமானத்தாலும்” என்கிறபடியே,
அவரோடு உண்டான பல நாள் பழக்கத்தாலும், கலவியாலும், “என்னுடையவரன்றோ” என்கிற வேண்டப் பாட்டாலும்,
பெருமாளை மேலிட்டு வார்த்தை சொன்னாள் அன்றோ பிராட்டி.

இப்படிப் பிரணய ரோஷத்தாலே ஊடின பேர் உளரோ? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘மிக்க அன்பினால்’ என்று தொடங்கி.

“ப்ரணயாச்ச அபிமாநாச்ச பரி சிக்ஷேப ராகவம்”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 30 : 2.
எடுத்த சுலோகத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார்
‘அவரோடு உண்டான’ என்று தொடங்கி. வேண்டப்பாடு – பெருமை.
பலகாலம் பழகினவன் விட்டுப் போகப் புக்கால் கோபமாமே யன்றோ.
மேலும், ஒரே பொருள் என்னலாம்படி கலந்தவன் விட்டுப் போகப் புக்கால் கோபமாமே யன்றோ.
ஆதலால், பல காலம் பழகுதலும், கலவியும் மேலிட்டு வார்த்தை சொல்லுகைக்குக் காரணங்களாம் என்க.
தனக்குப் பரதந்திரராயிருந்தவர் விட்டுப் போகப் புக்கால் கோபமாம் ஆதலாலும்,
‘என்னுடையவரன்றோ என்கிற வேண்டப்பாடும்’-வேண்டற்பாடு-மேன்மை பெருமை –
அபிமானம் – மேலிட்டு வார்த்தை சொல்லுகைக்குக் காரணமாகும் என்க.
மேலிட்டு வார்த்தை சொல்லுகையாவது,- வீரனானவனை வீரன் அல்லாதவனாக்கி வார்த்தை சொல்லுதல்.

என் சொன்னாள்? என்னில், ‘வாரீர்! ஒருவனுக்கு ஆற்றா ஒருத்தி உண்டோ?
என் ஒருத்தியையும் நோக்க மாட்டாமையே வைத்துப் போகப் புகுகிறது! இது தன்னை எங்கள் ஐயர் கேட்டால் போர வெறுப்பர்;
“ஒரு பெண் பெண்டாட்டி ஆண் உடை உடுத்து என் மகளைக் கைப் பிடித்துக் கொண்டு போன இத்தனை யாகாதே என்று
இராமே கடுகக் கொண்டு போகப் பாரும்.”
‘ஒரு பெண் பெண்டாட்டி’ என்று தொடங்கிச் சுலோகத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார்.
“கிம் த்வாம் அந்யத வைதேஹ: பிதா மே மிதிலாதிப:
ராம ஜாமாதரம் ப்ராப்ய ஸ்திரியம் புருஷ விக்ரஹம்”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 30 : 3.

“ஈர்ஷ்யா ரோஷௌ பஹிஷ் கிருத்ய – பிறர் உயர்த்தி கண்டால் பொறுக்க வேண்டாவோ?
நான் ‘உம்மோடு கூடப் போர’ என்றுறப்பட்டு நாலடி இட்டால், எனக்கு அதனால் வரும் ஏற்றம் கண்டு
பொறுக்க மாட்டாமையால் உண்டான கோபம் பொறாமை இவற்றைப் பொகடும்.-
வைதேகி நடந்திலளே – சிறிய திருமடல்

“ஈர்ஷ்யா ரோஷௌ பஹிஷ் க்ருத்ய புக்த ஸேஷம் இவோதகம்
நய மாம் வீர விஸ்ரப்த: பாபம் மயி நவித்யதே”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 27 : 6.
புக்த ஸேஷம் இவ் உதகம்-
குடித்த பிறகு எஞ்சியுள்ள தண்ணீரைப் போன்று; இவையும் -ஈர்ஷயம் ரோஷம் -அப்படி யாகாதே தான்.
பிரணயிகள் கோஷ்டியில் இங்ஙனே காணும் பரிமாற்றம்.
காதலிக்கு உண்டான தன்னேற்றம் தன்னதாயிருக்க வேண்டாவோ?
பொறாமை -கோபம் -விட்டு விட்டு -காதல் சித்திக்கும் அவள் பெருமையை கண்டு இவன் உகப்பது —
இவள் பெருமையைக் கண்டு உகப்பது வேண்டுமே
நய மாம் வீர –
என்னை அறியாதது போன்று உம்மையும் அறிந்திலீராகில், நான் சொல்லக் கேளும்.
உமக்கு ஒரு குறையும் இல்லை காணும்; என்னைக் கொடு போகப் பாரும்.
விஸ்ரப்த: –
தங்கள் தங்களை அறியாவிட்டால் ஆப்தர் வாயிலே கேட்டு அறியவேண்டும் காணும்.
பாபம் மயி ந வித்யதே –
பொகடும்; இங்ஙன் அன்றாகில், நீர் என்னை இங்கே நிறுத்திப் போனால், நீர் மீண்டு வருந்தனையும்
தரித்திருக்கைக்கு வேண்டும் காரணம் எனக்கு இல்லை காணும்.”
இப்படியே யன்றோ பிரணய ரோஷம் தலை எடுத்தால் இருக்கும்படி.

இவ்வளவேயோ? இன்னம், இவர் தாம் இலக்காகச் சொன்னவை யன்றோ இவை!
இவர் வரவிட்ட ஆளின் முன்பேயும்,
“ககுத்ஸ்த வம்சத்தில் பிறந்த பெருமாள், க்ஷேமத்துடன் இருந்தால் கோபத்தால் பிரளய காலத் தீயினைப் போன்று
புறப்பட்டவராய், கடலை மேகலா பரணமாகவுடைய பூமியை ஏன் கொளுத்தவில்லை” என்னுமவள் அன்றோ
“குஸலீயதி காகுத்ஸ்த: கிம்நு ஸாகரமேகலாம்
மஹீம் தஹதி கோபேந யுகாந்தாக்நிரிவ உத்தித:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 14.

காகுத்ஸ்த:-
பரிபவம் பொறாத குடியிலேயன்றோ தாம் பிறந்தது;
‘பிறர்க்கு வந்தவை போக்குமத்தனை யல்லது, தமக்கு வந்தனவற்றைப் போக்கலாகாது’ என்று இருக்கிறாரோ?
கிம் நு ஸாகர மேகலாம் மஹீம் தஹதி –
‘நீர்ப் பண்டத்திற்கு ஓர் அம்பும் கடினப் பொருளுக்கு ஓர் அம்பும் வேண்டும்’ என்று இருக்கிறாரோ?
கடலில் நீரே நெய்யாக எரிக்க வல்ல அம்பை யுடையவரன்றோ. –
அம்பு இல்லாததால் வரமால் இல்லை அன்பு இல்லையே உன் தலைவருக்கு –
ஒக்கக் கைப்பிடித்தவளாகிலும் பரிவட்டம் பேணியிருக்கும்படி வைத்தாரே யன்றோ; –
பூமியை சமுத்ரம் பேணி இருக்க வைத்தாரே –
இராஜாக்களுக்குப் பூமியும் பெண் போலே யன்றோ;
(ஏக பத்னி விரதம் அல்லவோ என்னில் ஷத்ரியருக்கு ராஜ்ய பரிபாலனம் கர்தவ்யம் அன்றோ )

ஈசுவரர்கள் படைத்தபடி கிடப்பது இவர் கண் சிவக்குமளவுமாகாதே என்றும்
“பித்ரு வசன பரிபாலநம் என்கிற வியாஜத்தாலே ராஜ்யத்தை விட்டவரும், என்னையும் கால் நடையாகக் காட்டில்
அழைத்து வந்தவருமான எந்த ஸ்ரீராமபிரானுக்கு” என்கிறபடியே,
பித்ரு வசன பரிபாலனம் செய்யப் போந்தாரோ? என்னை நலிகைக்காகப் போந்தாரத்தனையன்றோ என்றும்
தர்மாபதேஸாத் த்யஜ்த: ச ராஜ்யம்
மாம் ச அபி அரண்யம் நயத: பதாதிம்”- என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 29.
இப் புடைகளிலே சொன்னவை பலவே யன்றோ.

(சிர பரிச்சயம்
கலவி வந்து பிரிவும்
வேண்டற்பாடு மூன்றுமே இவளுக்கும் உண்டே
இவற்றை விவரிக்கிறார் மேல் )

இவளும் “மாசறு சோதி” என்னும் திருவாய்மொழி தொடங்கிப் போர நோவுபட்டு,
அது தன்னை “வைகல் பூங்கழிவாய்” என்னும் திருவாய்மொழி யளவும் வரப் பாடு ஆற்றி,
அவ்வளவிலும் வரக் காணாமையாலே தூது விட்டு,
தூதுவர்களுடைய வார்த்தை அத்தலைப் பட்டு மீளுவதற்கு முன்னே பற்றாதபடி பதறி,
‘இனி, அவன் தான் வந்தாலும் கலவியாய் அது பிரிவினை முடிவாக வுடைத்தாயல்லது இராது;
ஆன பின்பு, அவன் வந்து கலந்து பிரிந்த கோள் வாய் பொறுக்க அரிதாயிருக்கும்;
பின்பு, பிரிவாகிற புதுக்கோமுற்றவன்-புது அரசன் – வந்து முதன்மை கொண்டாடுமதில்,
முகம் பழகின துன்பமே அமையும்’ என்று
ஆற்றாமை தோற்ற இருந்தாள். எங்ஙனே இருந்தாளோ? என்னில்,
‘ஹிம ஹத நளிநீவ நஷ்ட ஸோபா –

“ஹிம ஹத நளிநீவ நஷ்ட ஸோபா வ்யஸந பரம்பரயா அதி பீட்ய மாநா
ஸஹ சர ரஹி தேவ சக்ர வாகீ ஜநக ஸுதா கிருபணாம் தஸாம் ப்ரபந்நா”-என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 30.
பன்னிரண்டு ஆண்டு தண்ணீர்த் துரும்பு அறக் கலந்து போந்த இவளுக்கு வந்தேறியான பிரிவு அன்றோ;
அதனாலே அழகு அழிந்திருந்தாள்.
வ்யஸந பரம்பரயா –
பிரிவினைப் போன்று கலவியும் வந்து கழியப் பெற்றதில்லை.
அதி பீட்ய மாநா-
இடத்தின் அளவல்லாத படியாயிருக்கை.
ஸஹ சர ரஹிதேவ சக்ர வாகீ-
வருமளவும் உணர்ந்து பொறுக்க மாட்டாதிருக்கை. அவற்றின்படி அங்ஙனே அன்றோ;
ஜனக ஸுதா –
‘இவை வரும்’ என்று வளரப் பெற்றது இல்லை.
க்ருபணாம் தஸாம் ப்ரபந்நா –
மேலே கூறியவை ஒன்றும் ஒப்பாக மாட்டாது; சில சொல்லப்பட்டவாம் இத்தனை.

இவளும் அப்படியே ‘முகம் பழகின ஆற்றாமையோடே இருந்து முடிய அமையும்;
இனி அவன் வரவு நமக்கு வேண்டா’ என்று இருக்கிறாள்.
இவள் தான் இப்படிப் பாரிக்கைக்கு அவன்தான் வாரா நின்றானோ? என்னில்,
இவர் எதிர்பார்ப்பதற்கு மாறாகவே தானே நடக்கும் -அதனால் வருவான் –
இவள் வர வேண்டாம் என்று அன்றோ நினைக்கிறாள் –
அவன் தான் வாரா நின்றானோ? என்கிற ஐயத்துக்கு, ஐந்து வகையாக விடை அருளிச் செய்கிறார்
‘அவன் வரவுக்கு’ என்று தொடங்கி.

1-அவன் வரவுக்குச் சூசகமான நன்னிமித்தங்கள் பல உளவாயிருந்தன:
“பக்ஷீச – பறவையானது சிறகினை விரித்தது.
ஸாகா நிலய: – உலர்ந்த கொம்பிலன்றிக்கே, பசுமையை யுடைத்தான பணையிலே இருந்தது.
மரத்தை வலமாக வந்து, தழைத்த பணையிலே நற்றரிக்க இருந்தது என்றபடி.

“பக்ஷீச ஸாகா நிலய: ப்ரஹ்ருஷ்ட: புன:புனஸ் சோத்தம ஸாந்த்வ வாதீ
ஸு ஸ்வாகதாம் வாசம் உதீரயாந: புன:புன: சோத யதீவ ஹ்ருஷ்ட:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 27 ; 51.

ப்ரஹ்ருஷ்ட: –
அங்குள்ள பழம் முதலானவற்றை உண்பதனால் உண்டான உவகை வடிவிலே தோற்றும்படி இருந்தது.
புந: புந: ச உத்தம ஸாந்த்வ வாதீ –
மேன் மேலென நல்வார்த்தைகள் சொல்லத் தொடங்கிற்று அதற்குமேலே,
ஸுஸ்வாகதாம் வாசம் உதீரயாந: –
இவ்வளவு அல்ல கண்டீர் அத்தலைப் பட்டது என்று சொல்லுமாறு போலே இருந்தது.
புந:புந: சோத யதீவ-
வரவு நிச்சயமான பின்பு, குளித்தல் ஒப்பித்தல் செய்யாதிருக்கிறது என்? என்று சொல்லுமாறு போலே இருந்தது.
உலகு அளந்தான் வரப் போகிறார் போலே கூவிற்றே
ஹ்ருஷ்ட: –
வந்தால் பிறக்கும் வேறுபாடு தோற்ற உடம்பு மயிர் எறிந்திருந்தது.

ததா கதாம் – “ரஹஸ்யஞ்ச பிரகாஸஞ்ச – இரகசியச் செயல்களும் வெளிப்படைச் செயல்களும்”
“ததா கதாம் தாம் வ்யதிதாம் அநிந்திதாம் வ்யபேத ஹர்ஷாம் பரி தீநமாநஸாம்
சுபாம் நிமித்தாநி சுபாநி பேஜிரே நரம் ஸ்ரியா ஜுஷ்டமிவ உபஜீவிந:”- என்பது, ஸ்ரீராமா. சுந். 29 : 1.
“ரஹஸ்யஞ்ச பிரகாஸஞ்ச யத்விருத்தம் தஸ்ய தீமத:
ராமஸ்ய ஸஹ ஸௌமித்ரே ராக்ஷஸாநாம் ச ஸர்வஸ:”-என்பது, ஸ்ரீராமா. பால. 2 : 33.
என்று கொண்டு பிரமனுடைய திருவருளாலே உள்ளபடி எல்லாம் தோற்றக் கடவதாகப் பெற்றுடையனான
வால்மீகி முனிவருக்கும் பாசுரமிட்டுச் சொல்ல ஒண்ணாதபடி இருக்கிறபடி.

தாம்-தர்மிக்கு மேற்பட அவ்வருகு ஒன்று இன்றிக்கே இருக்கை.
வ்யதிதாம் – முற்கூறியவை எல்லாம் இயற்கையாய், வியசனமுள்ளது மேலே என்று தோற்றும்படியாயிருந்தாள்.
‘ஸமா த்வாதஸ தத்ராஹம்-ஸ்ரீராமா. சுந். 33 : 17.-என்று பன்னிரன்டு ஆண்டு கலந்து பிரிந்த இவளுக்கு
அது ஒன்றும் தோற்றாதே துக்கத்தை இட்டு நிரூபிக்க வேண்டும்படியா யிருந்தாள்.’
அநிந்திதாம்-
அத் தலையைப் பிரிந்தால் இருக்கக் கடவபடியே இருந்தாள். இப்படி இராத அன்று பழிக்கத்தக்கவள் ஆவளே,
வ்யபேத ஹர்ஷாம்-
‘உவகை குடிபுகுந்து போயிற்று’ என்று தெரியாதாய் இருக்கை.
பரிதீந மாநஸாம்-
உவகை வந்தாலும் தங்கும் இடமும் இன்றிக்கே இருக்கை.
ஸுபாம் –
மண் தின்று வந்த நகடு போல் அன்றே குணாதிக விஷயத்தைப் பிரிந்தால் இருக்கும்படி;
கடலேறி வடிந்தாற் போலே இருக்கிற அவ் விருப்பு தனக்கே ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருக்கை.
பெருமாளை பிரிந்து வெளுத்து இருப்பது உத்தேச்யம் என்பதால் ஸூபாம் –
ஸுபாநி நிமித்தாநி பேஜிரே-
நிமித்தங்களானவை இத்தலைக்கு நன்மை சொல்லித் தாம் தாம் சொரூபம் பெற்றன. என்றது,
சாக்ஷாத் லக்ஷ்மிக்குக் கிஞ்சித்கரித்து ஸ்வரூபம் பெற்றன என்றபடி.
என்போலே என்னில்,
நரம் ஸ்ரியாஜு ஷ்டம் இவ உபஜீவந:-
அர்த்திகளாயிருப்பார் உதாரர் பக்கலிலே சென்று தங்கள் தங்கள்
பிரயோஜனம் பெற்று உவகையினராமாறு போலே. இப்படியா யிருந்தன நிமித்தங்களின் அளவு.

இனி வருவான் என்பதுக்கு இரண்டாவது காரணம்
இனி, அவன் அளவு பார்த்தால்,
அருள் மா கடல் அமுது அன்றோ கிருபா சமுத்ரம் -ஆகவே வந்தே தீருவார்
“ஆர்த்தோ வா யதிவா திருப்த:-ஆர்த்தனாய்ச் சரணம் புகவுமாம்;
“ஆர்த்தோ வா யதி வா த்ருப்த: பரேஷாம் ஸரணாகத:
அரி: ப்ராணாந் பரித்யஜ்ய ரக்ஷி தவ்ய: க்ருதாத்மநா”-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 28.
(கண்டு மகரிஷி வசனம் -சுக்ரீவனுக்கு பெருமாள் )

ஆர்த்தனாய்ச் சரணம் புகவுமாம்’ என்றது முதல்,
‘இத்தனையும் செய்தல்லது நிற்க ஒண்ணாது என்றபடி’ என்றது முடிய,
“ஆர்த்தோவா” என்ற சுலோகத்திற்குப் பொருள் அருளிச் செய்கிறார்.
சுலோகத்திலுள்ள “த்ருப்த:” என்றதற்குப் பொருள் அருளிச் செய்கிறார் ‘நாம் திருநாமங்களை’ என்று தொடங்கி.

திருப்தனாவான்,
சம்சார தோஷ ஞானமும் பகவத் வைலக்ஷண்ய ஞானமுமுடையவனாய், நல்லாசிரியனை அடைதலை
முன்னாகக் கொண்டு ஈசுவரனே உபாயோபேயம் என்று அறுதியிட்டு, இனி வரும் பிறவியினைப் பொறுக்காதவனாய்,
இப் பிறவி முடியுமளவும் ஆறியிருக்குமவனாய் இருக்க, ‘சேவகர் நம்மைப் பரிகசித்துச் சொல்லுமாறு போலே’ என்று,
அவனை எளிமைப் படுத்துதல் என்? எனின்,
சரண்யனுடைய வைபவத்தைச் சொல்லும் இடமாகையாலே நஹி நிந்தா நியாயத்தாலே
எளிமைப்படுத்துகிறார் என்று அருளிச் செய்வர்.

அன்றிக்கே,
நாம் திரு நாமங்களைச் சொன்னால் சேவகர் நம்மைப் பரிகசித்துச் சொல்லுமாறு போலே செருக்காலே சொல்லவுமாம்.
இங்ஙனம் விகல்பிப்பான் என்? ஆர்த்தனுக்கு அன்றோ பலத்தை அடைதல் உள்ளது?
மற்றையோனுக்கு உண்டாகச் சொல்லுகிற இடம் பிரசித்தம் அன்றே? என்னில்,
இந்தச் சுலோகம் சரணாகதத்தின் லக்ஷணம் சொல்லுகிறதன்று;
சரண்யனுடைய லக்ஷணம் சொல்லுகிறது. இவனுடைய ஆர்த்தி தானும் உபாயத்தில் சேராதே யன்றே;
ஆன பின்பு, அவனோடு இவனோடு வாசி இல்லை.

அன்றிக்கே,
தன் நிலை அறிந்து, ‘நமக்கு ஒரு கைம் முதல் இல்லையாய் இருந்தது’ என்று
தன் குறையை அறிவிக்கவும் மாட்டாதபடி யாயிருந்தான்; ஆன பின்பு, இவனுக்கு நாமே யன்றோ உளோம் என்று
திரு வுள்ளம் இவன் பக்கல் ஊன்றி யிருக்கும்.
பரேஷாம் சரணாகத: அரி:-
பகைவர்களில் வைத்துக் கொண்டு சரணம் அடைந்தவனான பகைவனாயிற்று இவன். அது என்? என்னில்
‘சரணம்’ என்ற வார்த்தையைச் சொல்லுகையாலே, ‘சரணாகதன்’ என்னவுமாய், அகவாயில் இல்லாமையாலே
‘பகைவன்’ என்னவுமாயிருக்கை.
அன்றிக்கே,
முன்பு செய்தனவற்றிற்கு அநுதாபம் இல்லாமையாலும், இப்போது ‘சரணம்’ என்கிற சொல்லைச் சொல்லுகையாலும்,
இரண்டும் சொல்லலாயிருக்கை.
அன்றிக்கே,
கொன்றேன். . .அன்றே வந்தடைந்தேன்’ என்னுமாறுபோலே என்னுதல்.

கொன்றேன் பல்லுயிரைக் குறிக் கோள் ஒன்றிலாமையினால்
என்றேனு மிரந்தார்க் கினிதாக உரைத்தறியேன்
குன்றேய் மேக மதிர் குளிர் மா மலை வேங்கடவா!
அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.-, பெரிய திருமொழி, 1. 9 : 3. என்றது,

“பரேஷாம் அரிஸ்ஸந் ஸரணாகத:” என்று கூட்டி, பிறர்க்கும் பகைவனாய்க் கொண்டு
பிராயச்சித்தம் முதலியன செய்யாது சரணம் அடைந்தவன் என்று வேறும் ஒரு கருத்து அருளிச் செய்தபடி.
உதிரக் கை கழுவாமல் உடனே வந்து அடைந்தேன் என்பது பொருள்.
பிராணாந் பரித்யஜ்ய – பிராணன்களை ஒரு தலையாக விட்டு.
‘பிராணா நபி-பிராணன்களையும்’ என்ன வேண்டாவோ? என்னில், அவன் சொன்ன சொலவுக்கு இது
ஒன்றும் போராமையாலே அது வேண்டாவாயிற்று.
பிராணனையும் விட்டாவது சொல்லாமல் -சரணம் சொல்லே உயர்ந்தது —
பிராணனை விட என்பதால் பிராணான் பரித்யஜ்ய என்கிறார் –
ரக்ஷிதவ்ய: க்ருதாத்மநா-திருந்திய மனத்தை யுடையவனா யிருக்குமவனால் இத்தனையும் செய்யப்படும். என்றது,
அறிவுடையார்க்கு இத்தனையும் செய்தல்லது நிற்க ஒண்ணாது என்றபடி.
இது வன்றோ அவன் படி.

இப்படி, களித்துச் ‘சரணம்’ –த்ருப்தனாய் -என்றாலும் பொறுக்க மாட்டாதவன்,
‘மாசறு சோதி’ என்ற திருவாய்மொழி தொடங்கிப் போர மிறுக்குப்பட்டு
நான்கு முறைகள் அடுத்துச் சரணம் புக்கு, அவ்வளவிலும் முகம் காட்டாதொழியச் செய்தேயும் தூது விட்டு,
‘இப்படி இம் மிறுக்குகள் எல்லாம் பட்டது நம்மை எண்ணி அன்றோ’ என்றிருப்பான்” என்று இருக்கையாலும்;

இவ்வளவும் வர இவள் தான் முடியாதே கிடக்கையாலும், -(இது மூன்றாவது காரணம் -)
அவன் இயல்பினை நம்பி யிருக்கையினாலும்,
அவன் வரவுக்கு அறிகுறி யான நன்னிமித்தங்கள் பல உண்டாகையினாலும்;

இவை யெல்லாம் கிடக்க, (இது நான்காவது காரணம் )
‘நம்முடைய பாக்கிய ஹாநி தான் அவனை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்தும்’ என்று இருக்கையினாலும்;

(இது ஐந்தாவது காரணம் )
‘பிரிவு விரும்பப்படாத நிலையிலே முன்னே வந்து நிற்கவும் வல்லன்’ என்று இருக்கையினாலும்,
‘இன்னமும் ஒரு கால் கலந்து பிரிந்து நம்மை முடிக்க வேண்டும்’ என்று இருப்பவனாதலானும்
‘வரவு தப்பாது’ என்று அவன் வரவை நிச்சயித்தாள்.

அங்ஙனம் நிச்சயித்தவள், தானும் தோழிமாருமாக ‘இனி, அவன் வந்தாலும் அவனுக்கு முகங்கொடுத்தல்,
அவனோடு வார்த்தை சொல்லுதல் செய்யக் கடவோமல்லோம்’ என்று அறுதியிட்டுக் கொண்டு,
(உம்மைத் தொகை -வரும் போது என்னாமல் வந்தாலும் –
கர்ம பலம் பெரியதே அத்தை தாண்டி வந்தாலும் -என்றவாறு -)
‘அவன் அறியாதது ஓர் இடத்தே போய் இருக்க வேண்டும்’ என்று பார்த்து,-
சர்வஜ்ஞ்ஞன் அறியாத இடம் உண்டோ –

காயாம் பொழிலாய் அதிலே விளையாடு சூழலாய் அதன் நடுவே அதி மநோகரமாய் இருப்பதொரு மண்டபமாய்,
அம் மண்டபத்திலே கழகமாக இருந்து, வந்தாலும் அவனுக்கு
இட்டீடு கொள்ளுகைக்குப் -வார்த்தை பேசி கேட்டு -பற்றாசு இல்லாதபடி
பூவை கிளி பந்து தொடக்கமான சேதனமாயும் அசேதனமாயுமுள்ள விளையாட்டுக் கருவிகளை
ஊரழி பூசலில் அரண் உள்ள கோட்டைகளிலே சரக்கு வாங்குவாரைப் போலே ஓரிடத்தே திரள வாங்கி,
‘இனி, இவர்கள் மறந்தவை எவையேனும் உளவாகில் அவை பெற்று அவனுக்குச் சத்தை உண்டாக வேண்டும்படியாய்,
இப்படிச் சமயமிட்டு, வந்தாலும் அவனுக்குப் புகுர ஒண்ணாதபடி ஆதரம் இன்மையாகிற கன் மதிளை உரக்க விட்டு,
அவனுடைய முற்றறிவினைக் கொண்டு காரியங்கொள்ளுகைக்கு ஒருவழி இல்லாதபடியாகவும்
வரம்பில் ஆற்றலைக் கொண்டு காரியம் செய்ய ஒண்ணாதபடி யாகவும் அறுதி யிட்டிருந்து,

“கிருஷ்ணன் சுகமாக இருக்கிறாரா? என்று கிருஷ்ண விருத்தாந்தம் சொல்லுவார்,
“கச்சித் ஸு குஸலீ க்ருஷ்ண: சல ப்ரேம லவாத்மக:”-என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 24 : 12.
அவ் வார்த்தைகளால் பயன் என்” என்று இப் பிதற்றுத் தான் என்? என்பாராய்,
அசுரத் தன்மை வாய்ந்தவர்களாய் உகவாத இரணியன் முதலானோர் கோஷ்டிகளில்
திரு நாமம் சொல்லுகை பொறுக்க முடியாதவாறு இருப்பது போன்று,
இவர்கள் கோஷ்டியிலும் உகவை தலை மண்டையிட்டு,
திரு நாமம் சொல்லில் நெஞ்சு சிவிட்கு என்னும்படியாய்க் கொண்டு இருந்தார்கள் இவர்கள்.
இது இத்தலை இருந்தபடி.

இனி, அத்தலை இருந்தபடி என்? என்றால்,
“வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்” என்கிற துயர ஒலி செவிப்பட்டது.
ஸுசி ஸ்ரவா:-“நல்லது செவிப்படுமவன்” அன்றோ.இங்கே இருந்து கூப்பிட்டால் கேட்குமோ? என்ன,
‘நல்லது செவிப்படுமவன்’என்று அதற்கு விடை அருளிச் செய்கிறார்.
“ருத்ரோ பஹு ஸிரா பப்ரு: விஸ்வயோநி: ஸுசி ஸ்ரவா:”-என்பது, ஸஹஸ்ர நாமம்.

இவ்வளவில் ஆறியிருக்குமவன் அன்றே. “பெரிய ஆபத்தை அடைந்தது” என்று கொண்டு
ஸ்ரீகஜேந்திராழ்வானுடைய துயர ஒலி செவிப்பட்ட போது, திருவடி நிலை கோத்து எழுந்தருளப் பற்றாமை
வெறும் தரையிலே பத்து எட்டு அடி இட்டும், உலகத்தைச் சிருஷ்டித்தல் முதலான செயல்களினும்
நினைவுக்கு மேற்பட ஒன்றும் காணாமையாலே, இப் பதற்றம் இருந்த படியால்
‘இது இவ் வளவுகளில் அன்று; இதற்கு அடி என்?’ என்று திவ்ய அந்தப்புரம் கை நெருக்கும்படியாய்,
கருத்து அறிந்து நடப்பவனான பெரிய திருவடியைப் பண் செய்து ஏறப் பெறாதே வெறும் புறத்தே மேற் கொண்டு
“பகவானுடைய விரைவுக்கு வணக்கம்” என்று அறிவுடையார் ஈடுபடும்படி வந்து தோற்றினாற் போலேயும்;

“பரமாபதம் ஆபந்ந: மநஸா சிந்தயத்தரிம்
ஸது நாகவர: ஸ்ரீமான் நாராயண பராயண:”-என்பது, மஹாபாரதம்.
“அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தம் அஸ்லீக்ருத
ப்ரணீத மணி பாதுகம் கிமிதிச ஆகுலாந்த:புரம்,
அவாஹந பரிஷ் க்ரியம் பதக ராஜம் ஆரோஹத:
கரி ப்ரவர ப்ரும்ஹிதே பகவத: த்வராயை நம:”- என்பது, ஸ்ரீ ரங்கராஜஸ்தவம் உத்தர சதகம், 57.

திரௌபதியைத் துச்சாதனன் நலிகிற போது ரக்ஷகராகப் பிரசித்தரான கணவன்மார்
ஐவர் இருக்க, -வேடிக்கை பார்த்து இருக்க –
“கோவிந்தா! என்று அழைத்தாள் என்பது யாது ஒன்று உண்டோ?” என்கிற படியே,
நம்மை ரக்ஷகராக நினைத்துக் கூப்பிட, “வெகுதூரத்தில் வசிக்கிற என்னை” என்கிறபடியே.
நான் அண்மையில் இருப்பவனாய் உதவப் பெற்றிலேன் அவள் ஆபத்துக்கு என்று நொந்து
‘அவள் தனக்கு அடுக்கும்படி செய்தாள், நான் அவதரித்தே அவதாரப் பிரயோஜனம் ஒன்றும் பெற்றிலேன்’
“கோவிந்தேதி யதா க்ரந்தத் க்ருஷ்ணாமாம் துரவாஹிநம்
ருணம் ப்ரவ்ருத்தமிவ மே ஹ்ருதயாத் ந அபஸர்பதி”-என்பது, பாரதம் உத். 58 : 22.
என்று இழவாளனாய், தர்மபுத்திரன் தலையிலே முடியையும் வைத்து, இவள் குழலையும், முடிப்பித்துப்
பகைவர்கள் கூட்டத்தைக் கிழங்கு எடுத்துப் பொகட்டுத் தன்னுடைச்சோதி ஏற எழுந்தருளும் போதும்
“மிக்க வருத்தத்தை யடைந்த மனத்தினனாய்” என்கிறபடியே, திருவுள்ளம் புண்பட்டாற் போலேயும்;

“ஆடவர்களில் ஏறுபோன்றவரான வீடுமர் அம்புகளாகிய படுக்கையில் படுத்தவராய்க் கொண்டு
அணையும் நெருப்புப் போன்றவராய் என்னைத் தியானித்தார், பின்னர் என் மனம் அவரிடம் சென்றது” என்கிறபடியே,
அம்புப் படுக்கையில் படுத்திருப்பவரான ஸ்ரீவீடுமர்க்கு முற்பட்டவராய் உதவ வேண்டியிருக்கப் பிற்பாடரானோம் என்று
நோவுபட்டாற் போலேயும் பிற்பாட்டுக்கு நோவுபடுமவன் அன்றோ.

“தர்ம ஸ்வரூபியான பெருமாள் எல்லா மக்களுக்கும் கருணையைச் செய்கிறார்;
அதனால், அம் மக்கள் பெருமாளைப் பின் தொடர்ந்தார்கள்”
“ஸர்வேஷாம் ஹி ஸதர்மாத்மா வர்ணாநாம் குருதே தயாம்
சதுர்ணாம் ஸமயஸ்தாநாம் தேநதே தமநுவ்ரதா:- என்பது, ஸ்ரீராமா. அயோத். 17 : 15.
என்று, என் முற்பாடு கண்டு பின் தொடர வேண்டியவர்கள் முற்பாடராம்படி நாம் பிற்படுவதே! என்று இருக்கும் அவன் அன்றோ.
“நானே வந்து அடையத்தக்க இப்படிப்பட்ட பிராமணர்களாகிற உங்களால் கிட்டப் பெற்றேன்,
இது எனக்கு மிக்க நாணத்தைத் தருகின்றது, நீங்கள் என் குற்றத்தைப் பொறுக்க வேண்டும்”
ப்ரஸீதந்து பவந்தோ மே ஹ்ரீரேஷா ஹி மமாதுலா
யத் ஈ ருஸை: அஹம் விப்ரை: உபஸ்தேயை: உபஸ்தித:”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 10 : 9.
என்கிறபடியே, தண்டகாரண்யத்தில் வசிக்கின்ற இருடிகளுடைய துன்பத்திற்கு முற்பாடராய் உதவப் பெற்றிலோம் என்னும்
இழவாலே நாணங்கொண்டு, அவர்கள் கால்களைக் கட்டிப் பொறுப்பித்துக் கொள்ளுமவன் அலனோ.

இனி, “மனிதர்களுக்குத் துக்கம் வருகின்ற காலத்தில் அவர்கள் துக்கத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு
அதிகமான துக்கத்தைத் தான் அடைகின்றான்”
“வ்யஸநேஷு மநுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித:
உத்ஸவேஷு ச ஸர்வேஷு பிதேவ பரிதுஷ்யதி”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 40.
என்று பொதுவிலே இருக்கும் படி கண்டால், காதலி ஒரு தலையானால் சொல்லவேண்டா அன்றோ.

இப்படிகளாலே திருவுள்ளம் போர இரங்கி, ‘நாம் கிட்டி நின்று கையைக் காலைப் பிடிக்க வேண்டும்படியான
விஷயம் பறவைகளின் கால்களிலே விழும்படி நாம் பிற்படுவதே!
நமக்கு இனி ஒரு ஆண் தன்மையாவது என்? அங்கு நாம் இனிப் போய்ச் செய்வது என்?
இங்கிருந்து செய்வது என்?’ என்று கொண்டு தடுமாறி,
இத்தலையோடே கலந்தல்லது தரிக்க மாட்டாதானாய், இவர்கள் இருந்த இடத்துக்கு அண்மையில் வந்து,
பிரணய கோபத்தாலே அணுக ஒண்ணாதபடி இருக்கிற இருப்பைக் கண்டு,
இத் தலையில் எண்ணத்தைக் குலைத்து நாம் கூடினோம் ஆம் படி என்? என்று சிந்தித்தான்:
சிந்தித்து ‘அழகு கொண்டு வெல்வோம்’ என்று பார்க்கில் அழகினைக் கொண்டு தண்ணீர் வார்ப்பார் இலர் இக் கோஷ்டியில்;
“கருமை நிறம் பொருந்திய கண்களை யுடையவள்” என்கிற தன்னேற்றம் உண்டேயன்றோ இத் தலைக்கு.
“ராகவோர்ஹதி வைதேஹீம் தம் ச இயம் அஸிதேக்ஷணா” என்பது,-ஸ்ரீராமா. சுந். 16 : 5.

இனி, ‘மேன்மை கொண்டு வெல்வோம்’ என்று பார்க்கில்,
அந்தப்புரத்தை யானைக்கால் இட்டுத் துகைப்பித்து உண்ண ஒண்ணாதே.
இனி, இவ் விஷயத்தைப் பெறுகைக்குத் தாழ்ச்சியே யன்றோ பரிகரம்;
அது இத் தலையின் கடாக்ஷம் பெறாதிருக்கச் செய்வதற்குத் தொடங்கும் போது பயன் அற்றதாய் விடு மன்றோ.
இனி இத்தனையும் செய்தால், ஆசையற்றுப் போகைக்குத் திருவடிகள் பெயராவே.
இசைவின்றிக்கே இருக்க மேல் விழ மாட்டானே. இனி, விழுக்காடு பாராதே மேல் விழுமன்று,
மிருதுத் தன்மையளாகையாலே இழக்க வரிலும் வருமே.
இனி, சேர்ந்து குளிர்ந்த தண்ணீர் அண்மையிலிருக்க, பெருவிடாயனானவன் அழிஞ்சுக் காடு ஏறப் போக மாட்டானே. என்றது,
‘இவன் சிறிது தாழ்த்தான்’ என்று வெறுத்து, ‘புகுருவான் அல்லன் நம் கோஷ்டியில்’ என்று இருக்கிற
இவர்களை விட்டு நாட்டாரோடு உறவு செய்யப் போவான் அல்லனே என்றபடி.

இனி, ‘ஒருபடி பொருந்தினோமாம் விரகு என்?’ என்று, கடல் கடந்த திருவடி பட்டன எல்லாம் பட்டுத்
“தசரதன் என்ற பெயரையுடைய சக்கரவர்த்தி” என்னும் அளவு அன்றே.
திருவடியைப் போலே திருநாம சங்கீர்த்தனம் செய்தாலோ? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘தசரதன்’ என்று தொடங்கி.
“ராஜா தசரதோ நாம ரத குஞ்சர வாஜிமாந்
புண்ய ஸீலோ மஹாகீர்த்தி: ருஜு: ஆஸீத் மஹாயஸா:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 31 : 2.
“தசரதன் என்ற பெயரையுடைய சக்கரவர்த்தி” என்னுமளவன்றே’
என்றது, பிராட்டியைப் போலே திருநாமம் கேட்டு மீளும் அளவு அன்று என்றபடி.

இனிச் செய்ய அடுப்பது என்? என்று, “இப்படிப் பலவகையாக எண்ணி” என்கிறபடியே எண்ணி,
‘நம் தலையும் அவள் காலும் கிடந்ததாகில் காலைக் கட்டிப் பொருத்திக் கொள்ளுகிறோம்’ என்று அறுதி யிட்டான்
ஏவம் பஹு விதாம் சிந்தாம் சிந்தயித்வா மஹாகபி:
ஸம்ஸ்ரவே மதுரம் வாக்யம் வைதேஹ்யா வ்யர்ஜஹார ஹ”-என்பது, ஸ்ரீராமா. சுந். 31 : 1.
தலையான உபாயம் இதனைக் காட்டிலும் இல்லையே. இதுதான் அடியிலே கண்டது ஒன்றே யன்றோ.

ஆக, இப்படி அறுதி யிட்டு, தன் நிறத்தோடு ஒக்க விகல்பிக்கலாவது ஒரு சோலை உள்ளிட்டு,
அவளுக்கும் தோழிமார்க்கும் தெரியாதபடி கிட்டச் சென்று, அவர்களைக் காணப் பெறாதே விடாய்த்தவன் கண்கள்
ஆரளவும் நின்று விளை நீர் அடைத்துக் கொண்டு கிருதார்த்தனாய் நின்றான்.
ஆலோகத்தின் பின் ஆலாபம் முதலியவைகளிலே சிரத்தை இருக்குமன்றோ, அதுவும் பெற்றிலன்.
அவ்வளவிலும் தன்னுடைய பிராணனுக்குத் தாரகமாக இருக்கின்ற இவர்களுடைய பூவை, கிளி தொடக்கமானவற்றினுடைய
இனிய பேச்சுக்களைக் கேட்கப் பெறாமையாலும் மிகவும் தளர்ந்து,
‘தானும் அவளுமாகச் சேர்ந்திருக்கும் போது அவளிடத்திற் காட்டிலும் தன் பக்கல் அன்பு இரட்டித்தன்றோ
தோழிமார்களுக்கு இருப்பது; -பிரிவிலும் அப்படியே’ என்று இருந்தான்.
அவர்கள் அங்ஙனம் அன்றிக்கே அவளைக் காட்டிலும் கோபம் மிக்கு இருந்தார்கள்.

இளைய பெருமாள் தமையனாருடைய இரண்டு திருவடிகளையும் நெருங்கப் பிடித்து”
-“ஸப்ராது: சரணௌ காடம் நிபீட்ய ரகுநந்தந:
ஸீதாம் உவாச அதியஸா: ராகவஞ்ச மஹாவ்ரதம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 31 : 2
என்று புருஷகாரம் முன்னாகத் தன்பக்கல் புகுந்தார்க்குத் தன் திருவுள்ளம் இரங்கும்படி தான் அறிவான் அன்றோ,
இங்கு அப்படியே அவர்கள் புருஷகாரமாகவும் பெற்றது இல்லை.
இனி, இத் தலையில் இசைவு உண்டானாலும் அவர்கள் இசையாத அன்று அழைக்கவும் போகாதே;
“இவனுக்கு அபயம் கொடுக்கப்பட்டது” என்றாலும், “கொல்லத் தக்கவன்” என்றவர்
தம்மையிட்டே “அழைத்துக் கொண்டு வா” என்ன வேண்டிற்று
“ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம் அஸ்யாபயம் மயா
விபீஷ்ணோவா ஸுக்ரீவ யதிவா ராவண: ஸ்வயம்”- என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 34.
அன்றோ. அவ் வழிகளாலும் ஒரு முகம் பெற்றிலன்.
“கணநேரமும் உயிர்பிழைத்திருக்கக் கூடியவனல்லேன்”
ந ஜீவேயம் க்ஷணமபி விநா தாம் அஸிதேக்ஷணாம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 10-என்றும்,
“உனக்கும் கணநேரமும் பிரிவின் துன்பம் பொறுக்கமுடியாததாக இருக்கிறதோ”-
“க்ஷணேபி தே யத்விரஹ: அதிதுஸ்ஸஹ:”- என்பது, ஸ்தோத்திர ரத்நம். 56.
என்றும் சொல்லுகிறபடியே ஒருகணமும் பிரிவினைப் பொறுக்க மாட்டாதவன்,
அவர்கள் அண்மையில் பெறாமலே நின்று முகம் பிழைக்க மாட்டானே.

இனி, இவன் அங்கு வந்து சேர்ந்த காரணத்தாலே அவ்விடம் அடங்கலும்
“தண்ட காரண்ய முழுதும் நீல நிறமாக ஆக்கிக் கொண்டு”
“ஸோபயன் தண்டகாரண்யம் தீப்தேந ஸ்வேந தேஜஸா”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 38 : 14.-என்கிறபடியே
மயிற் கழுத்துச் சாயலாக, இவனுடைய நிரந்தரமான கடாக்ஷத்தாலே புளகாங்கிதம் கொண்ட சரீரத்தை யுடையவர்களாக,
இவனுடைய கடாக்ஷத்தாலுண்டான குளிர்ச்சி இவர்களுடைய பிரணய ரோஷத்தால் வந்த கோபாக்நியும் விரஹாக்நியும் அன்றாகில்
பொறுப்பதற்கும் அரிதாம் படியாய்க் கோபந்தான் அவன் சந்நிதியில் மிகைத்து வாரா நிற்க,
இவ் வகைப்பட்ட தன்மைகளைக் கொண்டு இவன் வந்தமையை நிச்சயித்துத்
தங்களிலே ஒருமித்து முகம் மாறி யிருந்தார்கள்.

இவனும் அந்த இருப்பைக் கண்டு, எதிரிகள் இட்ட மதிள் ஆகிலன்றோ முறித்துப் புகலாவது.
கிட்டப் பெறாமையாலும் அண்மையிலிருப்பதாலும் ஆற்றாமை கரை புரண்டு கால் தரையில் பாவாதபடியாய்க் கொண்டு
தடுமாறி வருகிற சமயத்திலே, இவனுடைய ஜீவன அதிருஷ்டத்தாலே
இவர்கள் மறந்து போன பந்தும் கழலும் இவன் காலிலே தாக்கின.
தாக்கவே, இருட்டு அறைகளிலே தடவிக் கொண்டு வாரா நின்றால் உறியும் வெண்ணெயும்
கையிலே தாக்கினால் உவகையனாமாறு போலே,
பெரிய உவகையோடு விழுந்து அவற்றை எடுத்துக் கொண்டான்.

எடுத்துக் கொண்டு, அத்தலையில் செய்த வியாமோகம் அடங்கலும் அவற்றிலே தோற்றும்படி
கண்களிலே ஒற்றிக்கொள்வது தலையிலே வைத்துக் கொள்வதாய்,
பிராட்டி திருவாழி மோதிரங் கண்டு பட்டனவெல்லாம் பட்டான்.
“க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா – ‘இராவணன் மாயையாலே வந்ததோ’ என்னும் பயத்தாலே
முற்படக் கண் வைக்க மாட்டாதே இருந்தாள்;
“க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா பர் து: கர விபூஷணம்
பர்தாரமிவ ஸம்ப்ராப்தா ஜாநகீ முதிதாபவத்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 4.
‘அத் தலையாலே வந்தது’ என்று தெளிந்த பின்பு கண் மாற வைக்க அரிதாம்படி இருந்தாள்.
ஸா – ப்ரேக்ஷமாணா – “பஸ்ய தேவி – தேவியே! பார்க்க்”
“வாநரோஹம் மஹாபாகே தூதோ ராமஸ்ய தீமத:
ராம நாமாங்கிதம் சேதம் பஸ்யதேவி அங்குளீயகம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36. 2.
என்று கொண்டு முன்பு பார்வைக்குக் கிருஷி பண்ண வேண்டும்படி இருந்தவள் தானே,
கண் மாற வைக்கைக்குக் கிருஷி பண்ண வேண்டும்படியாய் இருந்தாள்.
பர்த்து: கர விபூஷணம் – முதல் கைப்பிடிக்கிறபோது உறுத்தின படியை நினைத்தாள்.
கர விபூஷணம் – அணி மிகு தாமரைக்கை யன்றோ. ஆபரணத்துக்கு ஆபரணங் காணும்.
பர்த்தாரம் இவ-இவன் இத்தைத் திருக்கையில் கொடுத்தவாறே, இதனோடே சேர்ந்த விரலையும் தோளையும் நினைத்தாள்;
அந் நினைவுதான், தான் இக் கரையில் ஆளாகவும், அவர் அக் கரையில் ஆளாகவும், கடல் இடையிலே கிடக்கிறதாகவும் அறிந்திலள்;
ஒரு படுக்கையிலே கூட இருந்ததாக நினைத்தாள்;
பார்த்தாராம் ஏவ என்னாமல் இவ அவனைப் -போலே இல்லை அவனையே என்றவாறு
ஒரு சூது சதுரங்கங்களிலே தோற்றுத் தன்கையில் இருந்ததாக நினைத்தாள்.
“இவ” என்கிறான் இருடி, உலக மாதா என்ற கருத்தாலே. இவள் உணர்ந்தால் என் படக் கடவள் என்று.
ஜாநகீ-இன்ப துன்பங்களுக்கு இளையாத குடியிலே பிறந்தவள்.
முதிதா பவத்- உவகையளானாள். அப்படியேயாயிற்று இவனும் இவை பெற்ற பின்பு.
சம்சாரி முக்தனானால் அவனுடைய லீலோபகரணமும் போகோபகரணமும் சமமாகத் தோற்றக் கடவது.
வேறு ஆகாரமான நினைவு இல்லையே. ததீயத்வ ஆகாரத்தாலே நித்திய விபூதியோடு ஒக்கத் தோற்றுமித்தனை.
அப்படியே இவளுடைய லீலோபகரணமும் போகோபகரணமுமாகத் தோற்றக் கடவது.

(வீணை தரித்த பர கால நாயகி திருத்தாயார் பாடும் இப்படியே தான் )

அவற்றிலே அவன் செய்யும் வியாமோகத்தைக் கண்டார்கள்.
‘நம்மைப் பிரிந்த பின்பு சத்தையோடே குறியழியா திருக்கக் கடவ இவன், இவை யெல்லாம் நம்மை
உத்தேசித்துச் செய்கிறானாகக் கூடாவாம்;
இங்ஙனேயாக வேணும்: நம்மைப் பிரிந்த பின்பு சென்று சிலரோடே கலந்தான்; அவர்களையும் பிரிந்தான்;
அவ் வாற்றாமையோடே இங்கு வந்தான்; இவற்றை அவர்களுடைய விளையாட்டுப் பொருள்களாக மயங்கினானித்தனை;
இது நம் பக்கல் ஆசையுடையனாய்ச் செய்கிறானல்லன்’ என்று கொண்டு இவர்கள் இருக்க,
அவனும் தன்னழகாலும் குணங்களாலும் தன் செல்லாமையாலும் தாழ்ச்சிகளாலும்
இத் தலையில் ஊடலைத் தீர்த்துக் கலந்தபடி சொல்லுகிறது இத் திருவாய்மொழி.

இனி, இத் திருவாய்மொழி தன்னை, பூர்வாசாரியர்கள்,
‘பகவத் விஷயத்தில் பிரணய ரோஷம் தோற்ற-(சா பத்னி சக்களத்தி ) வார்த்தை சொல்லுகை சேஷத்வ லக்ஷணமன்று;
“வளவேழ் உலகு” என்ற திருவாய்மொழியைப் போன்று தம் தாழ்ச்சியை அருளிச் செய்கிறார்’ என்று நிர்வஹிப்பர்கள்
இதனைப் பட்டர் கேட்டு ‘என் சொன்னாரானார்கள்! இவர்க்குப் பகவத் விஷயத்தில் உண்டான ருசிக்குப் பிரகாசம்
இத் திருவாய் மொழியாயிருக்கும்; இதற்கு வேறே ஒரு வழி இடுவதே!
ஆன பின்பு-(ஊடல் திறத்தில் கோபத்தால் பாடுகிறாள் ) இதுவே பொருளாமித்தனை’ என்று அருளிச் செய்தார்.

“சத்தியத்தினின்றும் பிறழ்ந்த உன்னையோ உறவினர்களுடன் கொன்று விடுவேன்”
“ஏக ஏவ ரணே வாலீ ஸரேண நிஹதோ மயா
த்வாம் து ஸத்யாத் அதிக்ராந்தம் ஹநிஷ்யாமி ஸபாந்தவம்”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 30 : 82.
என்று மஹாராஜரோடே பெருமாளுக்குக் கிலாய்க்கைக்கும் உறவு உண்டாயிற்று அன்றோ.

இத் திருவாய் மொழியில் வருகின்ற “தாமரை புரை கண்ணிணை” என்பது போன்றவைகளைத்
திருவுள்ளம் பற்றித் ‘தன்னழகாலும்’ என்றும்,
“நம்பி” என்றதனைத் திருவுள்ளம் பற்றிக் ‘குணங்களாலும்’ என்றும்,
“எம் குழறு பூவையொடும்”, “கையிற் பாவை பறிப்பது” என்பவைகளைத் திருவுள்ளம் பற்றித் ‘தன் செல்லாமையாலும்’ என்றும்,
“உணக்கி நீ வளைத்தால்” என்றதனைத் திருவுள்ளம் பற்றித் ‘தாழ்ச்சிகளாலும்’ என்றும் அருளிச் செய்கிறார்

“புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு”

“ஊடற்கட் சென்றேன் மன் தோழி யது மறந்து கூடற்கட் சென்றதென் னெஞ்சு”- என்ற குறட்பாக்களும்,

“புலப்பேன் யான் என்பேன்மன் அந் நிலையே அவர்காணின்க லப்பேன் என்னுமிக் கையறு நெஞ்சே”

“ஊடுவேன் என்பேன்மன் அந்நிலையே அவர் காணின் கூடுவேன் என்னுமிக் கொள்கையில் நெஞ்சே”- என்ற கலித் தொகைப் பகுதியும்
இத்திருவாய்மொழியின் முன்னுரையின் கருத்தோடு ஒருபுடை ஒப்பு நோக்கத்தக்கன.

பங்குனி உத்தரம் பிரணய கலகம் உத்சவம் -ஆழ்வார் தீர்த்து வைப்பார் -இங்கு பராங்குச நாயகி பிரணய ரோஷம்
பெருமாளே தீர்த்து சேர்த்திக் கொண்டான்

———————————————————————————————

மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–6-2-1-

லீலா உபகரணங்களையும் மறைய வைத்து -தோழி மாற்களையும் விமுகராம் படி
இவனது பாக்ய விசேஷத்தால் -இவள் விஸ்மரித்து-அசேதனம் ஆகையாலே தானே போக மாட்டாத பந்தையும்
கழலையும் எடுத்துக் கொண்டு அவற்றில் அத்யந்த ஆதாரம் –
முன்பு பெண் பிள்ளைக்கு தாம் செய்த -உண்ணாது உறங்காது ஒலி கடலை -விரோதி நிரசன ஆகாரத்தை ஆவிஷ்கரித்து
அபிமுக்யையாக நினைத்து -சொல்லி இவள் இடம் நீயே அவள் -ஈடுபடுத்த திரு உள்ளம் பற்ற
இவள் அவன் திரு உள்ளக் கருத்தை அறிந்து –
இது எம்மது -நீ நினைக்கும் அவர்களது அல்ல உறவு அற வார்த்தை சொல்கிறாள்

மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நானதஞ்சுவன்-மின்னல் போன்ற இடை -கண்ணனையும் மயக்கும் -அபிநிவேசிக்கும் படி –
உருவ குணம் ஆத்ம குணம் இரண்டும் உண்டாக இருக்கச் செய்தே -நின் அருள் பாத்ரம் ஆகி -தலைக் கொண்டு இருக்கும் அவர்கள்
சந்நிதியிலே அதைப் பற்றி நினைத்து அஞ்சுவன் -உன் வியாபாரம் -அறிந்து முகம் காட்டாமல் வெறுப்பார்கள் என்று
அவர்கள் பந்து என்று நீ நினைத்து இருக்க -அவர்களுக்கும் பொய்யன் தானே நீ -எங்களைப் போலே அவர்களும் -முகம் திருப்புவார்கள்
நீ அவமானம் பட்டு தலை குனிவை என்று அஞ்சுவன் -அதிக்ரமங்கள் -அறிந்து நீ சிதிலன் ஆகும் படி வெறுப்பார்கள்
மன்னுடை இலங்கை அரண் காய்ந்த மாயவனே!-உன்னுடைய சுண்டாயம் நானறிவன் -உள்ளுவார் உள்ளத்து எல்லாம்
உடன் இருந்து அவன் அறிவதைப் போலே இவன் திரு உள்ளம் அறிந்து
ராவணன் அளித்து -இலங்கை அளித்த -மாயவனே -ராமனே மாயவனே -சேர்த்து அருளுகிறாள் –
(மாயவனும் பெருமாளும் சேராதே -இங்கே தானே உண்டு )
ஒரு சீதைக்கு செய்தது என் போன்ற பெண்களை ஏமாற்றி அழிக்க
உன்னை ஒழிய வேறு சிலர் இல்லை -ஏக தார வ்ரதன் -இடையூறு கழித்துக் கொடுத்தமை
கேட்டு அறியாயோ என்ன மாயவனே என்கிறாள்
இளகிய நெஞ்சு கொண்டார் மயங்குவார் -ஸ்வார்த்த பரதை உன் கார்யம் -பரார்த்தம் இல்லை -சுண்டாயம் –
நான் வால்மீகி -இல்லை -கொடுத்து வார்த்தை எழுத வைத்தாய்
அகற்ற நீ வைத்த மாய வல் வினைகள் நான் நன்கு அறிவன்
இனியது கொண்டு செய்வதென்?-என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!பரி பூரணன் –
இத் தசையிலும் -மின்னிடை மடவார்களால் பூரணன் –
பதினாறாயிரம் தேவிமார் பார்த்து இருக்கும் பூரணன் -அவர்கள் வெறாத படி நீ போவது பிராப்தம்
போகும் பொழுது கையில் உள்ள பந்தும் கழலும் -மமதா அந்தர் பூதமான -கொடுத்துப் போ –
விமுகர் உடைய மமதா விஷயம் த்யாஜ்யம் என்று இருந்தால் இவள்
இவள் வைமுக்யம் பிரணய கருத்தியம் என்பதால் இவள் சம்பந்தம் உடையவை உத்தேச்யம் என்று இருந்தான் அவன்
செந்நூல் வெண்ணூல் கறும் நூல் -ஐந்து கழலையும் ஆதரித்தது இவளுடைய குண த்ரயாத்மாக
சரீரம் இந்த்ரியங்கள் தன விஷயம் ஆக்க நினைத்து
உன்னைக் கிடையா விட்டால் பழைய -ஏறாளும் இறையோனும் -சரீரம் அழுது அலற்ற -வேண்டுமே
முடிந்து பிழைக்க முடியாதே -இதற்கும் அவன் வேண்டுமே

உன்னுடைய அருளைப் பெறுதற்குரியவர்களான மின்னல் போன்ற இடையையுடைய பெண்களுக்கு
முன்னே நீ படுகின்ற துன்பத்திற்கு நான் அஞ்சுவேன்;
இராவணனுடைய காவல் அமைந்த இலங்கையை நீறாகச் செய்த மாயவனே! உன்னுடைய சுண்டாயத்தை நான் அறிவேன்;
இனி, அதனால் பெறக்கூடிய பயன் யாது? நம்பீ! என்னுடைய பந்தினையும் கழலையும் கொடுத்துவிட்டுச் செல்வாய் என்கிறாள்.
அம்மானே! நம்பி! மடவார்கள் முன்பு நான் அது அஞ்சுவன், சுண்டாயம் நான் அறிவன், அதுகொண்டு செய்வது என்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு என்க. சுண்டாயம் – தன் காரியத்திலே நோக்குடைமை. விளையாட்டுமாம்.
கழல் – அம்மானை ஆடும் காய். போகு – போவாய்.
இத்திருவாய்மொழி, ஆசிரியத்துறை.

இப்படி வரவு தாழ்த்ததும் இத்தலையை ஒழியச் செல்லுவதாய் அன்று,- ஈடுபாட்டினை விளைக்கைக்காக.
அது -பிராவண்யம் -விளைந்தவாறே, கடுக வந்து கொண்டு நின்றான்.
வந்து பந்தையும் கழலையும் எடுத்துக் கொண்டான்.
அலாப்ய லாபம் -பெறாப்பேறு என்று தோன்றும்படி நின்றான்.
இத் தலையில் செய்யக் கடவ காதல் அடங்கலும் இவற்றின் பக்கலிலே பண்ணினான்.
இவன் படுகிற அலமாப்பைக் கண்டு, ‘இவையெல்லாம் நம்மைக் குறித்துச் செய்கிறான் அல்லன்,
தான் கலந்து பிரிந்தவர்களுடைய உபகரணங்களாகக் கொண்டு செய்கிறானித்தனை.
இவனுடன் வார்த்தை சொல்லாதே இருக்கிறது என்?’ என்று,
‘வாராய்! நீ நினைக்கின்றவர்களுடைய பொருள்கள் அல்ல காண் இவை;
உனக்கு உபேக்ஷா விஷயமான எங்களுடைய பொருள்கள் காண் இவை.
இவற்றைத் தந்து அவர்கள் பக்கலில் ஏறப் போ’ என்ன,
‘ஓம், அது செய்கிறேன்; இங்ஙனே, காரைச் சுமந்தது ஒரு மின் நிற்கின்றதே!’ என்ன,
ஆழ்வார் திருக் குழல் பார்த்து -காரைச் சுமந்த மின்னிடை இருந்ததே என்றானாம் —
அவன் பேசியதை வைத்து வெட்டிச் சொல்கிறாள்
‘மின்னிடை மடவார்கள்’ என்கிறார்கள்.

‘அவர்கள் பாடு ஏறப் போகிறவன்
இடையிலே–நடுவிலே -இடை பற்றி வார்த்தை –
இது ஒன்றைச் சொன்னான், அது தான் நிலை நில்லாது’ என்று
பார்த்து‘வாராய்! நீ உபேக்ஷித்தவர்களிடத்திலே இத் துணை கால் தாழ்ந்தால்,
உன்னை விரும்பியிருப்பார் பலராகையாலே போர நெருக்குண்புதி கண்டாய்.
அவர்கள் தம்படி இருந்தபடி என்தான்? இது ஒரு தேக குணமும் ஆத்ம குணமும் இருக்கும்படியே!
‘மின்னிடை’ என்றது, மற்றைய தேக குணங்கட்கும் உபலக்ஷணம்.
மடம் – என்றது, நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு முதலான ஆத்தும குணங்களுக்கும் உபலக்ஷணம்.
‘மடவார்’ என்ற பன்மையாலே, ஒருவர்க்கும் உற்றானாயிராமை சொல்லுகிறது.

நீ ஒன்றை ஒன்றாக நினைக்கும்படி பண்ணுவிப்பதே அவர்கள் சிலர்.
இவனுடைய அலமாப்பைக் கொண்டே அவர்களுடைய வைலக்ஷண்யத்தை அநுமிக்கிறார்கள் அன்றோ.
அதஸ்மின் தத் புத்தி -ரஜஸ் பார்த்து சர்ப்பம் -சர்வஜ்ஞ்னையும் பிரமிக்கும் படியான இடை அழகு –
பாவியேன், உன்னை இங்ஙனே இடையிலே பிச்சு ஏறித் துடிக்கப் பண்ணினார் யாரோ?

“மின்னிடை மடவார்கள்” என்று
இவனோடு சம்பந்தமுடையாருடைய தேக குணங்களையும் ஆத்ம குணங்களையும்
சுபாஸ்ரயமாக -சிறந்த பற்றுக் கோடாக நினைத்திருந்தபடி தோற்ற வார்த்தை சொன்னபடி என் தான்!
பிரணய ரோஷம் புற வாயிலே செல்லா நிற்கச் செய்தேயும், அக வாயில் நினைவு இது வன்றோ.
அக வாயிலும் துவேஷமே யானாலும் வஸ்து இருந்தபடி சொல்ல வேணுமே.
துவேஷத்தாலே சொல்லுமன்றும் -கிமர்த்தம் புண்டரீகாஷம் -விதுரன் க்ருஹத்தில் அன்னம் –

“யௌவனப் பருவமுள்ளவர்கள், மிக்க வனப்புள்ளவர்கள், மிருதுத் தன்மை வாய்ந்தவர்கள்,
நல்ல பலமுள்ளவர்கள், தாமரை போன்ற அகன்ற திருக் கண்களை யுடையவர்கள்” என்று
“தருணௌ ரூப ஸம்பந்நௌ ஸு குமாரௌ மஹ பலௌ
புண்டரீக விஸாலாகௌ சீர க்ருஷ்ணாஜ நாம்பரௌ”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 19 : 14.
இது, கரனைப் பார்த்துச் சூர்ப்பணகை கூறியது.
இருவர் மானுடர் தாபதர் ஏந்திய வரிவில் வாட்கையர் மன்மதன் மேனியர் தரும நீரர் தயரதன் காதலர்
செருவின் நேரு நிருதரைத் தேடுவார்.-என்பது, கம்ப ராமாயணம் கரன் வதைப்படலம், செய். 4.
அல்லது சொல்ல ஒண்ணாதே.

மின்னிடை மடவார்கள்-
தங்கள் பாடு கிட்டினால், ‘இது ஓர் இடையே! இது ஒரு குணமே!’ என்று அவன்
ஆழங்கால் படும் துறை அறிவார்களே யன்றோ;
‘அப்படியே யன்றோ இவன் போன இடத்திலும்’ என்று இருக்கிறார்கள்.
இங்ஙன் அன்றாகில், எதிர்த் தலையைக் கண்டு சொல்லுகிறார்கள் அன்றே.
இப்படி இருப்பாரும் உண்டோ புறம்பே! என்ன,

நின் அருள் சூடுவார் –
உன்னுடைய திருவருளைப் பெறுவதற்கு உரியவர்களாய் இருப்பவர்கள்.
இவ்வளவிலே ‘உன் தலையிலே கால் வைக்கப் பிறந்தவர்கள்’ என்று சொல்ல அன்றோ அடுப்பது;
உறவு தோற்றாமல் இருக்கிறவள் அங்ஙனம் சொல்லாளே அன்றோ;
அங்ஙன் சொல்லுமன்று, அது அவனுக்கு இடமாமே.-அவனுக்குப் பிடித்தது –
அத்தையே இங்கும் செய்யத் தொடங்குவான் -இடம் கொடுத்தது ஆகுமே –
அதாவது, இவள் காலைத் தன் தலையிலே எடுத்து வைத்துக் கொள்ளும் என்கை.
பாவ பந்தம் அடியாக வந்த கலவி யாகையாலும்,
நினைவும் அத் தலையாலே வந்ததாகையாலும்,
அவன் வார்த்தையாக நடுவில் ஒன்று இல்லையே யாகிலும் இடையீடு பொறுக்கக் கடவது.
ஆனால், என்? அவர்கள் இங்கு இல்லையே? என்றான். முன்பு – எங்களை அவர்களாக நினை. என்றது,
நாங்கள் காண் அவர்கள் என்கிறார்கள் என்றபடி.

‘அவை யெல்லாம் இங்கே யன்றோ’ என்ன வேண்டி யிருக்க, தனக்கு வேறே சிலர் உளராகச் சொல்லுவான் என்? என்னில்,
பல வார்த்தைகளைக் கேட்க நினைத்திருக்கிறவன் ஒரு வார்த்தையோடே தலைக் காட்டானே:
இட்டீடு கொள்ளுகை யன்றோ இவன் தனக்குத் தாரகம்.

முன்பு –
நீ செய்யுமவை யெல்லாம் மறைக்கப் போகாது காண். நீ அங்குச் செய்தவை யெல்லாம் கண்டாயே நாங்கள் அறிந்தபடி.
இப்படியே, நீ இங்குச் செய்யுமவை யெல்லாம் அவர்கள் அறிவர்கள் காண்.
உன்னைப் போலே அவர்களுக்கு வேறு பொருள்களில் நோக்கு இல்லை காண்.
உன்னைப் போலே நினையாதே கொள் அவர்களை.
உன்னைக் கலந்து பிரிந்தார் உன்னை அறிந்தபடியே இருப்பர்கள் காண்; –
பிரயோஜ நாந்தர பரர்கள் இல்லையே -திருமுக பட்டயம் -face book
“பிரிந்து ஒன்று நோக்காது தம்முடைய பின்னே திரிந்துழலும் சிந்தனையார்” என்றே யன்றோ இருப்பது.

பிரிந்தொன்று நோக்காது தம்முடைய பின்னே திரிந்துழலும் சிந்தனையார் தம்மை – புரிந்தொருகால்
ஆ ஆ! என இரங்கார் அந்தோ! வலிதே கொல்? மாவாய் பிளந்தார் மனம்.-என்பது, பெரிய திருவந். 50.

அவர்களுக்கு வேறு விஷயம் இல்லாமையாலே எல்லாக் காலங்களிலும் நினைவிற்கு விஷயம் நீயே காண்.
ஆனால், என்? உங்களுக்கு என்னோடு ஒரு சம்பந்தம் இல்லை;
ஆன பின்னர், அத்தால் வருவது ஒன்று இல்லையே? என்றான்.

நான் அது அஞ்சுவன் –
நீ இங்கே சிறிது போழ்து கால் தாழ்த்துப் போனால், அவர்கள் உன்னை அரைக்கணம் முகம் மாறினால்,
நீ பொறுக்க மாட்டாமல் கிடந்து துடிக்கும் துடிப்பு நாங்கள் காண மாட்டோம்;
உன்னைப் போல் அல்லோம் காண் நாங்கள். கலந்து பிரிய வல்லாயும் துடிப்புக் காண வல்லாயும் நீயே காண்;
பிறர் துன்பம் கண்டால் பொறுக்கமாட்டோம் நாங்கள்.
உன்னோடு உறவு இல்லையே யாகிலும் நீ படும் அலமாப்புக் கண்டால் பொறுக்க மாட்டோம்;
சிலர் கிணற்றில் விழுந்தால் ஒரு குரல் கூப்பிடும் போது உறவு வேணுமோ?
அவர்கள் பக்கல் முகம் பெறாதே நிற்கும் தடுமாற்றத்தை ‘ஆற்றோம்’ என்கிறார்கள்.

மின் போலே நுடங்கும் இடை ஆத்ம குணம் -உடையவராய் -உன் அருளை சிரசா வஹிக்கும் அவர்கள் சந்நிதியில்
நீ பண்ணின வியாபாரம் அறிந்து இருக்கும் நான்
நீ இங்கு பண்ணும் அதி க்ரமங்கள் அவர்கள் அறிந்து நீ சிதிலம் ஆகும் படி முகம் காட்டாமல்
இருப்பார்கள் என்று நான் அஞ்சுவன் என்றபடி

அரைக் கணம் இத் தலையை ஒழிய ஜீவிக்க மாட்டாதே செல்லாமையை யுடைய என்னைப்
பொய்யனாக்கிப் புறம்பாக்கி வார்த்தை சொல்லுவதே! என்றான்.

மன்னுடை இலங்கை அரண் காய்ந்த மாயவனே –
‘என் தான்? நீ பொய்யன் அல்லையோ?’ என்றார்கள்.
‘நான் என்னோடு கலந்து பழகினவர்களில் இதற்கு முன்பு யார்க்குப் பொய் செய்தேன்?’ என்றான்.
‘நீ யார்க்குத் தான் மெய் செய்தாய்’ என்றார்கள். ‘என் தான்? “உண்ணாது உறங்காது ஒலிகடலை யூடு அறுத்து” என்று
ஏக தார விரதனாய்க் கொண்டு நான் பட்டன எல்லாம் பொய்யோ? என்றான்.
‘அது தான் நீ வேண்டிச் செய்தாயோ? ஒரு துறையிலே ஒரு மெய் பரிமாறா விடில் மேல் உள்ளன எல்லாம் நமக்கு
ஒரு தொகையில் அகப்படா என்று செய்தாய் அத்தனை யன்றோ!
அபலைகளை அகப்படுத்திக் கொள்ளுகைக்கு இட்ட வழி யன்றோ?’

மன்னுடை இலங்கை அரண் காய்ந்த –
நிலமிதி தான் எதிரிகள் மண்ணுண்ணும்படியாய்,
அதற்கு மேலே “இராவணனாலே காப்பாற்றப்படுகின்ற இலங்கை”
“லங்காம் ராவண பாலிதாம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 1 : 39.
என்று கொண்டு, சிங்கம் கிடந்த முழஞ்சு போலே பையல் உணர்ந்து நோக்குகிற ஊரை அழியச் செய்த,

மாயவன்-
வஞ்சனை பொருந்திய செயல்களை யுடையவன்.
‘மன்னுடை’ என்றது, மன்னனை யுடைய என்றபடி.
‘அழகிது: ஒரு மெய்யும் உண்டாகச் சொன்னீர்களே?
அதனை இங்கே செய்தேனானாலோ? மேலுள்ளன வெல்லாம் ஆகைக்காக’ என்றான்.

உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் –
அது உனக்குச் செய்யலாவது செவ்வே பரிமாறும் அவர்களோடு காண்;
நீ செய்கிறவை யெல்லாம் பண்டே எங்களால் அறியப்பட்டவை காண்;
நீ செய்கிறவையெல்லாம் ‘மெய்’ என்று இருப்பாள் ஸ்ரீஜனகராஜன் திருமகள் காண்;
உன்னுடைய வஞ்சனையான விளையாட்டுக்களெல்லாம் நாங்கள் அறிவோம்.
சுண்டாயம்-தன் காரியத்தில் நோக்குடைமை.
‘அறிந்து என்? அறியாவிடில் என்? பிரவிருத்தமாயிற்றே’ என்றான். என்றது, ‘சாத்தியமாயிற்று அது வன்றோ’ என்றான் என்றபடி.
(பேசவே மாட்டேன் என்று நினைத்து இருந்த உங்களை பேச வைத்தேனே )
இனி அது கொண்டு செய்வது என் – ‘சாத்தியாம்சத்துக்கு ஒரு பிரயோஜனம் கண்டிலோமே’ என்கிறார்கள்.
அவனும் ஒன்றை –பந்து கழல் -நினைத்து, ‘ஆகில் எனக்குச் ‘சாத்தியாம்சம் தான் இல்லையோ?’ என்று
கைப்பட்ட பந்தையும் கழலையும் போர விரும்பப் புக்கான்-

என்னுடைய பந்தும் கழலும் –
‘பாவியேன், நீ எங்கே செய்ய வேண்டியனவற்றை எங்கே செய்கிறாய்?
அவை நீ நினைக்கின்றவர்களுடைய பொருள்கள் அல்ல காண்; அவை எங்களுடைமை காண்’ என்றார்கள்.
‘அதுதான் மெய்யே’ என்றான். இவன் விருப்பத்துக்கு அதுதானே யன்றோ வேண்டுவது;
“அரசனே! மனைவி வேலைக்காரன் மகன் ஆகிய இவர்கள் ஒருவனுக்கு அடிமைப்பட்டவர்களே;
இவர்கள் எவருக்கு அடிமைப் பட்டவர்களோ அவருக்கு இவர்களுடைய பொருள்களும் அடிமைப்பட்டனவாம்” என்கிறபடியே,
மற்றையது உடனே வரும் அன்றோ.
யஸ்ய ஏதே தஸ்ய தத் தனம் -மற்றையது அநந்தரம் வரும் -ஸ்வரூப ஞானம் -அனன்யார்ஹத்வம் அறிந்து -சொன்னால்
அவர்கள் தனம் அவனுக்கு ஆகுமே -மாம் மதீயஞ்ச அகிலம் சேதன அசேதனம் உன்
கைங்கர்யத்துக்கு கொள்ள வேண்டும் -என்னையும் என் உடைமையையும் -தேசிகன் –

இனி, இத்திருவாய் மொழியினுடைய முன்னுரையிலே, ‘முடியப் பார்க்கிறாள்’ என்று சொல்லிற்று ஒன்று உண்டு.
அது, இப் பதத்திலே –என்னுடைய -தோற்றுகிறது.
அவன் சந்நிதியிலே ‘என்னது’ என்று சொல்லுகைக்கு மேற்பட்டது ஒரு முடிவு இல்லை அன்றோ.
“மம என்ற இரண்டு எழுத்துக்கள் நாசத்துக்குக் காரணமாகின்றன”
“த்வ்யக்ஷரஸ்து பவேத் ம்ருத்யு: த்ர்யக்ஷரம் ப்ரஹ்மண: பதம்
மமேதி த்வ்யக்ஷர: ம்ருத்யு: நமமேதி ச சாஸ்வதம்”- என்பது, பாஞ்சராத்திரம்.

யானென தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும். -என்பது, திருக்குறள்.-என்பது அன்றோ சாஸ்திரம்.
“என்னுடைய புத்திரர்களான துரியோதனன் முதலியோர்களும், பாண்டவர்களும்”
“தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே ஸமவேதா யயுத்ஸவ: மாமகா: பாண்டவாஸ்சைவ கிம் அகுர்வத ஸஞ்ஜய” என்பது, ஸ்ரீ கீதை. 1 : 1.
என்கிற விடத்துச் சிறியாத்தான் சொல்லும்படி: “என்னுடையவர்கள் என்றும், பாண்டவர்கள் என்றும் பிரித்தான்,
அது வன்றோ விநாச பர்யந்தம் ஆகி விட்டது” என்று.
இது தான் உண்மை நிலையை மாத்திரம் பற்றிய வார்த்தை அன்று,
பிரணய கோஷ்டியிலும் கலவியிலே வந்தால் ‘உன்னது, என்னது’ என்கை யன்றோ உறவு அறுகையாவது.
என்னுடைய பந்தும் கழலும்-“தான் என்றே பரமாத்மாவைத் தியாநிக்கக் கடவன்” என்கிறபடியே,
ஒன்றை ஒன்று –ப்ரஹ்மத்தை ஜீவன் -உபாசியா நிற்கச் செய்தே, தன்னை உபாசித்தது என்று சொல்லலாம்படி அன்றோ
இரண்டு வஸ்துக்களுக்கும் தொடர்பு இருக்கிறபடி. –
ஸ்வரூபம் தெளிவானால் ‘நான்’ என்னவுமாய், ‘அடியேன்’ என்னவுமாய்க் காணும் இருப்பது.

அன்யாபதேசத்திலும் விநாஸ்யம் -பிரணய ரோஷத்திலும் -என்னது -உறவு அறுகை
ஆத்மேத்யவது க்ருஹநீயத்வாத் -ஆத்மா என்றே பற்ற வேண்டும் –உபாசனை -சரீராத்மா பாவம் -அறிந்து அபிமானத்தில் அந்தர் பூதன்
பிரத்யாசக்தி நெருக்கம் உண்டே -உறவு அறாமை-அபிமானத்தில் உள் அடங்கி இருப்பது
நான் சரீரம் என்பதே அழிவுக்கும் உஜ்ஜீவனத்துக்கும் -முதலில் தேகாத்மாபிமானம் -அடுத்து -அவனுக்கு சரீரம் என்றபடி –
அடியேன் உடைய பந்தும் கழலும் தந்து போ நம்பி -சொல்ல வில்லையே -என்னுடைய -ஆழ்வார் என்னுடைய என்றால்
அர்த்தம் அடியேன் -நாம் அடியேன் சொன்னாலும் நான் அர்த்தம் உண்டே –

தந்து போகு நம்பி-
நீ இங்கே கால் தாழா நின்றாய்; இதற்கு ஒரு கருத்து அறியாதே உன்னை உபேக்ஷிக்கத் தொடங்குவர்கள்;
அதற்கு முன்னே போ. முகப் பழக்கமும் இன்றிக்கே இருந்தது; முதலியாருமாய் இரா நின்றீர்;
கடுகப் போகப் பாரும் என்பாள் ‘நம்பி’ என்கிறாள்.
“கண்ட காட்சி புல்லெழுந்து போனபடி யன்றோ இவள் இங்ஙன் சொல்லுகிறது” என்று பெரிய முதலியார் -ஆளவந்தார் -பணிப்பர்.
‘என்னுடைய பந்தும் கழலும்’ என்ற இடம், அவன் பொகடுகைக்குச் சொன்ன வார்த்தை.
‘தந்து போகு’ என்றதனால், அவன் விரும்பினவை ஒழியத் தனக்குச் செல்லாது என்னுமிடம் தோற்றுகிறது.

நம்பி –
“பதினாறாயிரம் பெண்களையும் அதற்குமேலே ஒரு நூறு பெண்களையும் ஸ்ரீகிருஷ்ண பகவான் விவாகம் செய்து கொண்டார்”
ஷோட சஸ்திரீ ஸஹஸ்ராணி சதமேகம் ததோதிகம்
தாவந்தி சக்ரே ரூபாணி பகவாந் தேவகீஸுத:”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 31 : 17.
என்கிறபடியே, உமக்குப் போன விடம் எங்கும் கொண்டாட்டத்தால் குறை இல்லை;
எங்களுக்கு உம்மை ஒழிய வேறு கதி இல்லை;
இனி, உம்முடைய திருக் கரங்களின் சம்பந்தமுண்டாய்ப் பொகட்டவை கொண்டாகிலும் எங்களுக்கு ஜீவித்துக் கிடக்க வேணும்;
ஆன பின்னர், அவற்றை எங்களுக்குத் தந்து போம்.
அன்றிக்கே
உம்-“உயிரை வைத்துப் போம்” என்பாரைப் போலே ‘தந்து போகு’ என்கிறாள் என்னுதல். என்றது,
இவன் இவற்றைக் கை விட்டுப் போக மாட்டான் என்று அறிந்து அவன் மனக் கருத்தை அறிந்தவர்கள்
ஆகையாலே ‘தந்து போகு’ என்கிறார்கள் என்றபடி.

———————————————————————-

போகு நம்பீ! உன் தாமரை புரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும்
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்;
தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ
ஆகள் போக விட்டுக் குழலூது போயிருந்தே.–6-2-2-

போகாமல் -மந்த ஸ்மிதம் பண்ணி -அதிலே சிதிலையாகி-
போகு நம்பீ! உன் தாமரை புரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும்-ஸ்மிதம் பண்ணி -ஆழ்வார் ஒருவரையே நோக்கி –
எங்கும் பக்க நோக்கு அறியான் -தர்ச நீயமான
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்;-கண்டு உகக்கும் பாக்கியம் பண்ணாத -நின்ற நிலையை குலைத்து துக்கப் படவே
நோன்பு நோற்று பிறந்தோம் -உங்களை அழிக்கவோ நான் வந்தேன் உங்கள் தலை முடி பார்த்து ஈடு பட்டு வந்தோம் என்றான்
தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ
மயில் போலே அலைந்த குழல் -நாங்கள் இழக்க -அவர்கள் அருள் சூடி -அவர்கள் அசந்நிகதர் அல்லையோ
உன் அருகில் வரும் படி நீ குழல் ஊதுவாயே-நாட்டார் அறியாதபடி
ஆகள் போக விட்டுக் குழலூது போயிருந்தே-ஜாதி தர்மம் தானே -ஆ மேய்ப்பதும் குழலூதுவதும் -பெண்கள் மனத்தை அபஹரிக்கவே
உண்மையான காரணம் -அதுவும் இங்கே ஆகாதோ -குழலாவது இங்கே கூடாதோ -என்ன கூடாது என்கிறாள்

நம்பீ! போ; தாமரையை ஒத்த உன்னுடைய இரண்டு கண்களும் சிவந்த திருவாயிலே தோன்றுகின்ற புன்முறுவலும் துயரத்தைச் செய்ய,
அதனால் அழிவதற்கே யாம் தவம் செய்துள்ளோம்; தோகையை யுடைய சிறந்த மயில் போன்ற பெண்கள் நினது திருவருளைப் பெறுதற்குரியவர்கள்,
ஒலியைக் காதுகளால் கேட்டு, அங்கிருந்து எழுந்து வரும்படியாக, பசுக்களைத் தூரத்தே போக விட்டு, அவற்றை அழைப்பதைப் போன்று,
அங்கே சென்று இருந்து உனது வேய்ங்குழலை ஊதுவாய்.
நம்பி! போகு, கண்ணிணையும் முறுவலும் ஆகுலங்கள் செய்ய யாம் அழிதற்கே நோற்றோம்; நின்னருள் சூடுவாராகிய தோகை மாமயிலார்கள்,
ஓசை செவி வைத்து எழ, ஆக்களைப் போகவிட்டுப் போய் இருந்து குழல் ஊது என்க. ஆகுலம் – துன்பம். எழ ஊது என்க.

நோக்குப் பெறாதவன் முகம் பார்க்கப் பெற்றான்;
வார்த்தை கேட்கப் பெறாதவன் ‘போ’ என்னவும் பெற்றான்;
இனி, இதற்கும் மேற்படக் கிருதார்த்தனாகை இல்லை யன்றோ.
‘போ’ என்றா அவன் அலனோ’.
“இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே” –பெருமாள் திருமொழி, 6 : 8.-என்று,
இதனை உய்ந்த பிள்ளை பாடா நிற்கச் செய்தே, காலாலே உதைப்பது கையாலே தள்ளுவதாய் அபிநயித்துக் காட்டினார்.
இதனை எம்பார் கேட்டருளி, ‘அங்ஙன் அன்று, அது, பின்னைப் பெற்றானாகில் அவன் நெடு நாள் பிரார்த்தித்துக் கிடந்தது அன்றோ;
ஆன பின்னர், அது வன்று பொருள்’ என்று முகத்தைத் திரிய வைத்துக் காட்டினார்.
“நீ அகல நின்று செய்தவை எல்லாம் உன் சந்நிதியிலே உன்னைச் செய்வேன் என்கிறாள்’ என்று அருளிச் செய்தார்.
எம்பார், புறம்பான விஷயங்களிலே ருசி இல்லாமையாலே பதார்த்த ஞானம் இன்றிக்கே இருப்பர்.
இப்படி இருக்கையாலே ‘பெண்களுக்கு அசாதாரணமான சிந்நங்கள் எங்ஙனே இருக்கும்படி?’ என்று,
சிங்கப் பிரானைக் கேட்டருளினார் என்பது பிரசித்தம்.
இப்படி இருக்கிறவர் தாம் “மின்னிடை மடவார்” என்ற இத்திருவாய்மொழி அருளிச் செய்யப் புக்கால்,
‘இந்தச் சந்நியாசி பிரட்டுப் பாடத் தொடங்கினார்’ என்பாராம் பிள்ளை யுறங்கா வில்லி தாசர்.
பக்வத் விஷயத்தில் இவருடைய உட்புகுவு இருக்கும்படி.
ஒரு க்ஷுத்ர விஷயத்திலே நான்கு நாள்கள் வாசனை பண்ணினவர்கள் போர விதக்தராய் இரா நின்றார்கள்;
அவ்வளவு அல்ல அன்றோ சமஸ்த கல்யாண குணாத்மகனோடே நெடு நாள் வாசனை பண்ணினார்க்கு இருக்கும்படி.
எம்பார் ‘ஈசுவரன் முன்னே வந்து நின்றாலும் ‘வா’ என்பாரையும் கிடையாத சம்சாரத்திலே,
அவன் சிறிது தாழ்த்தான் என்னா ‘போ’ என்பாரைப் பெறுவதே! என்பர்.

போகு நம்பி-
“போகு நம்பி” என்று முன்பு சொல்லச் செய்தே, மீண்டும் சொல்லும் போது ஒன்று இரண்டு அடிகள்
வரவிட்டுக் கிட்ட நின்றானாக வேணுமன்றோ.
வாரீர்! எத்தனை பேரைத் தீண்டி வந்தீர் என்று தெரியாது; புடைவை படாமே கடக்க நில்லும் என்றார்கள்.
‘போ’ என்ன, அருகில் வந்து நிற்கிறவன், ‘தீண்டாதே கொள்ளும்’ என்றால், என்படுமோ?

நம்பி –
எளியார் செய்வதனை நீர் செய்யக் கடவீரோ?
நீர் குறைவற்றவர் அல்லீரோ?

நம்பி –
எங்கள் பக்கலிலே இப்படிக் கால் தாழ்க்க நீர் ஏதேனும் குறைவாளரோ?
நாங்கள் வேண்டியிருந்ததோ உமக்கு?
“உயிரினாற் குறையிலம்” என்று, “ஏறாளும் இறையோனும்” என்ற திருவாய்மொழியில், தம்மை அழிக்கப் பார்த்தார்;
அது அவன் உளனாகையாலே அழிந்தது இல்லை.
“மாசறு சோதி” என்ற திருவாய்மொழியில், அதற்கு அடியான அவனையே அழிக்கப் பார்த்தார்.
இங்கு அவன் வரக் கொள்ள, ‘போ’ என்னா நின்றார். இதற்குக் காரணம் என் என்று அறிகிலோம்.
இவர்கள் இப்படி ‘நம்பி’என்று சொல்லி இருக்கையாவது, இவர்கள் கோஷ்டிக்குத் தக்கான் அல்லன் ஆகையாலே அன்றோ.
தாழ்ச்சியே மேன்மையாமிடத்தில் முதன்மை கொண்டாடுவது போராதே.

உன் தாமரை புரை கண் இணையும் செவ்வாய் முறுவலும் –
காணப் பெறாத காரணத்தால் விடாய்த்து உறாவின கண்களும், கண்டு செவ்வி பெற்றுக் குளிர்ந்தன;
அகவாயில் உவகைக்குப் போக்கு வீடாகப் புன்முறுவல் பூக்கவும் பெற்றான்.
இவர்களுடைய ‘போ’ என்று விலக்குகிற வார்த்தையாகிற அமிருத பானத்தாலே அவனுக்குப் பிறந்த வேறுபாடு இருக்கிறபடி.
(வாயால் ஒரு வார்த்தை பணிந்தது உண்டு அஷ்டபுஜ கரத்தான் -போலே ஆழ்வார் வார்த்தை கேட்டு உகப்பானே )
‘வா’ என்பாரைக் கூடக் கிடையாத சம்சாரத்திலே ‘போ’ என்பாரைக் கிடையாதன்றோ. என்றது,
ஒரு பிரயோஜனத்துக்காகவும் தன்னை வேண்டுவார் இன்றிக்கே இருக்கிற இடத்தே,
தன்னையே பிரயோஜனமாகப் பற்றி இப்படிப் படுவாரைக் கிடையாதன்றோ என்றபடி.

ஆகுலங்கள் செய்ய –
காரணம் இரண்டாக இருக்கச் செய்தே, எல்லாக் கரணங்களும் அழியா நின்றன.
அவனுக்கு ஒன்று இரண்டு ஆயிற்று வேறு பட்டன; இவர்களுக்கு எல்லா அவயவங்களும் வேறுபட்டன.
அணு அழிக்குமாறு போல் அன்றே விபு அழிப்பது.

ஆகுலம் –
பூசலும், வருத்தமும், துக்கமும்.
வாரீர்கோள்! உங்களுக்கு என்னோடு ஒன்று இல்லை என்னா நின்றீர்கோள்;
மனப் பற்றுடையாரைப் போன்று வார்த்தை சொல்லா நின்றீர்கோள்; முரண்பட்டன வாயிருக்கின்றனவே!
‘போகு நம்பி’ என்னா நின்றீர்கோள்; ‘ஆகுலங்கள் செய்ய’ என்னா நின்றீர்கோள்; இதற்கு அடி என்?’ என்றான்.
வாராய்! நாங்கள் தாம் மனப்பற்று உண்டாய்ச் செய்கிறோம் என்று இருக்கிறாயோ?
சந்திரனைக் கண்ட அளவிலே சந்திர காந்தம் உருகுகிறது என்ன பாவ பந்தம் உண்டாய்?
“அவசியம் அநுபவித்தே அற வேண்டும்” என்கிற விதியைத் தப்ப ஒண்ணுமோ?
“அவஸ்யம் அநுபோக்தவ்யம் க்ருதம் கர்ம சுபாசுபம்
நாபுக்தம் க்ஷீயதே கர்ம கல்ப கோடி சதைரபி”-என்பது, பிரமாணம்.

அழிதற்கே நோற்றோமே யாம் –
எங்களுக்கு இது இயல்பு காண். இளைய பெருமாள் காடு ஏறப் போகாத அன்று அன்றோ
எங்களால் அழியாதிருக்கலாவது? “காட்டில் வசிப்பதற்கே நீ படைக்கப்பட்டாய்”
“ஸ்ருஷ்டஸ்த்வம் வநவாஸாய ஸ்வநுரக்தஸ்ஸு ஹ்ருஜ்ஜநே
ராமே ப்ரமாதம் ஆகார்ஷீ: புத்ர ப்ராதரி கச்சதி”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 40 : 5.
என்ப தன்றோ சுமத்திரையின் வார்த்தை.
நோன்பாவது முற்பிறவியில் உள்ளது அன்றோ.
இவர்கள் இப்படிச் சொன்னவாறே, ‘அவ்வழிவு கலவியின் பொருட்டு அன்றோ’ என்று பார்த்து, அவன்,
‘நம்மைக் கண்ட அளவிலே இத்தனை-கரண சைதில்யம்- வேறுபாடு உண்டான பின்பு
மேல் உள்ளவை எல்லாம் செய்து கொள்ளீர்களோ!’ என்றான்.
அதுவோ உன் நினைவு! நாங்கள் அவர்கள் அல்லோம் காண்! நாங்கள் இங்ஙனே அழிந்தே போக நோற்றோம் காண்!
உன்னைப் பிரிந்தால் கலத்தற்கு நோற்றார் வேறே சிலர் காண் என்பார் ‘யாம் அழிதற்கே நோற்றோம்’ என்கிறார்கள்.

தோகை மா மயிலார்கள்
நெடும் போது இவர்கள் பேச்சுக்களைக் கேட்கையால் உண்டான உவகை தோற்றப் பார்த்துக் கொடு நின்றான்.
‘நம்மைக் காணுதல் இவனுக்குத் தரித்திருக்கைக்குக் காரணமாக இருந்ததே’ என்னா,-
தர்சனம் ஆஸ்வாச ஹேதுவாக இருந்ததே –
முகத்தை மாறிப் பின்னோக்கி இருந்தார்கள்;
அவ்வளவிலே அவன் நெஞ்சிலே மயிர் பாடு-ரோம ஹர்ஷம் உண்டாயிற்று;
‘தோகை மா மயிலார்கள்’ என்கிறான்.
அன்றிக்கே,
‘நமது வைவர்ணியமும் கண்ண நீரும் இவன் காண்பான் அல்லன்;
தெய்வ யோகத்தால் காணுமவற்றை நம்மால் செய்யலாவது இல்லை யன்றோ என்னாத் திரிய இருந்தார்கள்;
அது தானே இவனுக்குக் காரியமாயிற்று;

‘தோகை மா மயிலார்கள்’ என்கிறான் என்னுதல். என்றது, முறுவலுக்கும் கண்களுக்கும் இலக்காய்
அழிந்து போகாமல் திரிய இருந்தும், நின்று அநுபவிக்கைக்கு உடலாயிற்று என்றபடி.
மைவண்ண நறும் குஞ்சி –குழல் பின் தாள -திரும்பி பார்த்தானே -அதனாலே அங்கே –
‘நம் காரியம் தலையாகப் போயிற்று’ என்று இருக்கிறான் அன்றோ அவன்.
“கற்புக் கரசியாகிய சீதா பிராட்டி, துடைகளால் வயிற்றையும் திருக் கரங்களால் தனங்களையும் மறைத்தவளாய்
அழுது கொண்டு வீற்றிருந்தாள்” என்று கொண்டு
“ஊருப்யாம் உதரம் சாத்ய பாஹும்யாப்ச பயோதரௌ

உபவிஷ்டா விசாலாக்ஷீ ருதந்தீ வர வர்ணிநீ”-என்பது, ஸ்ரீராமா. சுந். 19 : 3.
அவன் உடைமையினை அசுரத் தன்மை வாய்ந்தவர்கள் காண ஒண்ணாது’ என்று மறைக்கக் கடவ அவள்,
‘அவன் தான் காண ஒண்ணாது’ என்று மறைக்கும்படி காணும் பிரணய கோபம் தலை மண்டை இட்டபடி.

தோகை மா மயிலார்கள்-
தோகை விரித்த நல்ல மயில் போலே அலைந்த குழலை யுடையவர்கள்.
“நிதம்ப பாகத்தை யடைந்த கிருஷ்ண சர்ப்பம் போன்ற சடையாலே”-
நீல நாகாபயா வேண்யா ஜகநம் கதயைகயா
நீலயா நீரதாபாயே வநராஜ்யா மஹீமிவ”-என்பது, ஸ்ரீராமா. சுந். 15 : 25.
என்கிறபடியே பேணாத குழல் இருக்கிறபடியைக் கண்டான்;
‘நீங்கள் முன்னம் ஆனார் ஆகிடுக; இது ஒரு மயிர்முடி இருந்தபடி என் தான்!’ என்றான்.
இவள் தான் ஓதி நல்லளாய் இருக்குமே. இவன் கூழை ஆகையாலே கொண்டாடுமே.
“குழல் கூழை ஒதி” என்பது நிகண்டு.
( கூழை சபலர் என்றும் மயிர் வாசி அறிந்தவர் என்றும் )
எங்கள் மயிர்முடியைக் கண்டு தந்தாம் மயிர் முடி என்று மயங்கும்படி செய்வதே அவர்கள் சிலர்!
அபிமத விஷயத்தைப் பிரிந்தால் கண்டவை யெல்லாம் அதுவாகத் தோற்றுமன்றோ என்றார்கள்.

செந்தாமரைக் கண்ணொடும் செங்கனி வாயினோடும்
சந்தார் தடந் தோளொடும் தாழ் தடக் கைகளோடும்
அந்தார் அகலத்தொடும் அஞ்சனக் குன்றமென்ன
வந்தான் இவனாகும் அவ்வல்வில் இராமன் என்றாள்.-என்பது, நினைவு கூர்க. கம்பராமாயணம்.

“காடும் செடியும் அவளாகத் தோன்று மென் கண்களுக்கே” என்றார் பிறரும்.

‘அங்ஙனே சிலர் உளரோ’ என்றான்.
நின் அருள் சூடுவார் –
உன்னோடு கலந்து பிரிவிலே இப்படிப் பிச்சு ஏறும்படி செய்தவர்கள், அவர்களைப் பிரிந்து நோவு படாமல்
அவர்களோடே கலந்து பரிமாறுவாய். ‘ஆனால் அதற்கு என்? அவர்களைப் பெறுகைக்கு ஒரு விரகு பெறுந்தனையும்
நான் இங்ஙனே சிறிது போது இருந்து போகிறேன்’ என்றான்.
உனக்கு இங்ஙன் விரகு பெற்றுப் போக வேண்டுமோ? நீ கை கண்டதைப் பிரயோகம் செய்வாய்.
கைகண்டது – அநுபவமானது என்றும், கையிலே இருந்த குழல் என்றும் சிலேடை.
‘அது யாது?’ என்றான்.

செவி ஓசை வைத்து எழக் குழல் ஊது –
“எங்களுக்கே ஒருநாள் வந்து ஊத உன் குழல் இன்னிசை போதராதே” என்று இருக்குமவர்கள்,
நீ குழல் ஊதினால் சென்று செவிப்படும், உடனே வருவர்கள் காண்.
சர்ப்ப யாகத்தில் சர்ப்பங்கள் வந்து விழுமாறு போலே, நீ குழல் ஊதவே பெண்கள் அடங்கலும்
உன் காற் கீழே வந்து விழுவார்கள் காண்.
‘குழல் ஓசை கேட்பது எப்போது?’ என்று செவி கொடுத்துக் கொடு காண் அவர்கள் இருப்பது.
உன்னைப் பிரிந்தார் எல்லாக் கரணங்களையும் உன் மேலே வைத்திருப்பர் காண்
“தூ வலம்புரி யுடைய திருமால் தூய வாயில் குழலோசை வழியே, கோவலர் சிறுமியர் இளங்கொங்கை குதுகலிப்ப
உடலுள் அவிழ்ந்து எங்கும், காவலும் கடந்து கயிறு மாலையாகி வந்து கவிழ்ந்து
நின்றனர்”-பெரியாழ்வார் திருமொழி, 3. 6 : 1.- என்கிறபடியே,
நீ குழல் ஊதப் புக்கால் நிற்பார் உளரோ? உன் காற்கீழே வந்து விழுவர் காண், அதனைச் செய் என்றார்கள்.

“அது எனக்கு ஒரு விரகு அன்று;
‘கொங்கு நறுங்குழலார்களோடு குழைந்து குழல் இனிது ஊதி வந்தாய்’-பெருமாள் திருமொழி, 6 : 9.– என்று
ஒத்த தரத்தில் பெண்களும் தானும் கலக்கைக்காக அவர்களை அழைப்பதற்குக் குழல் ஊதா நின்றான் என்பர்கள்;
நான் குழல் ஊதுகை பெண்களை அழைக்கை என்று பிரசித்தம்; அது எனக்கு ஈடு அன்று” என்றான்.

ஆகில், உனக்கு ஒரு நல் விரகு சொல்லக் கேள்:
ஆகள் போக விட்டு –
பசுக்களைக் கை கழிய விடுவது, உடனே குழலை ஊதுவது.
‘அறியாதார் பசுக்களை மறிக்க ஊதினான் என்று இருப்பர்கள்;
அதனை அறிந்து போரும் பெண்கள் உன் பக்கலிலே வந்து கிட்டுவர்கள்.
இது தான் உனக்குச் சாதிக்கு ஏற்ற தொழிலும் அன்றோ.
‘தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும்’ -திருவாய்.-6. 4 : 2.-என்பரே யன்றோ.
ஆன பின்னர் அதனைச் செய்வாய்’ என்றார்கள்.
‘அநுஷ்டிக்க வேண்டிய உபாய ஸ்வரூபம் இருக்கும்படி அறிந்தோம்.
அநுஷ்டிக்க வேண்டியதற்குத் தகுதியான உபதேசம் பெற்றோம்.

இனி, உபேய அம்சத்தில் கைப்படாதன இல்லை. இனி, நமக்கு ஒரு குறை இல்லை’ என்று பார்த்து,
அவ்விடத்திலே இருந்து ஊதுவதற்குப் புக்கான்.
இனி, தான் விதிகளை மீறி ஒரு காரியத்தைச் செய்யுமவன் அலனே; -குழல் ஊதுகை –விதி -உடனே செய்தான் —
‘தோகை மா மயிலார்கள், செவி ஓசை வைத்து எழ’ என்று அன்றோ இவர்கள் சொல்லியது;
‘இன்ன இடத்தே’ என்று சொன்னார்கள் இலரே? இங்கே இருந்து ஊதத் தொடங்கினான்.
‘அதுவோ பார்த்தபடி? நீ துடியாமைக்கு ஒரு விரகு சொன்னோமாகில் அதனை இங்கே கொள்ளப் பார்த்தாயோ?’

குழல் ஊது போய் இருந்தே-
உனக்குப் பெண்கள் படும் வாய்ப்புள்ள இடத்தே போய் இருந்து ஊதப் பாராய்.

தோகை மா மயிலார்கள் –
இவன் ஓதி உணர்ந்தவன் ஆகையாலே கொண்டாடத் தொடங்கினான்.
‘இவன் ஓதி உணராமல் அன்றோ நம் குழலை இப்படிக் கொண்டாடுகிறது’ என்று,
‘இது மயங்கினவன் வார்த்தை’ என்று அவர்கள் வேறுபடுத்துகிறார்கள்.
தலையான பேச்சினை அன்றோ இவர்கள் வேறு படுத்துகிறது.

செவி ஓசை வைத்து எழ –
குழல் ஓசையைச் செவியாலே வைத்துக் கொண்டு வர.
ஆகள் போக விட்டுக் குழல் ஊது –
பசுக்களைப் போக விட்டுக் குழல் ஊது.
ஊதவே, உன் நினைவும் முடிந்து பசுக்களின் வயிறும் நிறையும்.
‘செவி ஓசை வைத்து எழுகை பலமாய், குழல் ஊதுகை உபாயமாய் இருந்தது;
அது தான் அபிமத விஷயத்தைப் பற்றி யன்றோ செய்வது; இங்கே இருந்து ஊதுகிறேன்’ என்று
குழலை வாங்கி ஊதினான்.

போய் இருந்தே குழல் ஊது –
ஒன்றைச் சொல்ல, ஒன்றைச் செய்யாதே; உனக்கு விருப்பமுள்ளவர்கள் திரளுகைக்கு
நீர் வாய்ப்புள்ள நிலங்களிலே போயிருந்து ஊதாய்.

——————————————————————————

போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை, நம்பீ! நின் செய்ய
வாயிருங் கனியும் கண்களும் விபரீதம் இந் நாள்;
வேயிருந் தடந் தோளினார் இத் திருவருள் பெறுவார் எவர் கொல்,
மாயிருங் கடலைக் கடைந்த பெருமானாலே?–6-2-3-

புகுர இருந்து -வந்தான் -ஊதச் சொன்னவாறே பேசினான் -ஹஸ்த சேஷ்டிதைகளைக் கொண்டாடினான் –
அஷோப்யமான கடலையும் ஷுபிதமாம் படி பண்ணின -தோள்களால் கலக்கினார் யாரோ
வேறு யார் உள்ளார் உம்மை விட்டு -வாசு தேவ சர்வம் மகாத்மா ஸூ துர்லப –
போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை, நம்பீ! நின் செய்ய-உங்களை விட வேறு யார் -வேறு என்ன போக்கிடம்
ஆசன்னமான இந்த இருப்பைத் தவிர்ந்து
தள்ளிப் போகாததற்கு இந்த வார்த்தை -களவால் பூரணன் -அசூயை பிரசப பூ -போலே கள்ளத் தனத்துக்கு இவன்
களவு அறியாதவர்கள் இடம் சொல்லு -வாயிருங் கனியும் கண்களும் விபரீதம் இந்நாள்;-பாதகமாக -முன்பு ஆகர்ஷகம் –
வேயிருந் தடந்தோளினார் இத் திருவருள் பெறுவார் எவர் கொல்,-நிஷேகிக்கும் எங்கள் தோள்கள் கொண்டாடாதே –
உனது திருவருள் -பெற அவர்கள் தோள்கள் அழகே காரணம் -யார் என்று அறிந்தால் நாங்களும் கொண்டாடுவோம் –
மாயிருங் கடலைக் கடைந்த பெருமானாலே?-அதிசயித சக்தன் –

எல்லாம் நிறைந்தவனே! போயிருந்து, உனது களவுகளை அறியாதவர்களுக்குச் சொல்லுவாய்; பெரிய கோவைக் கனி போன்ற திருவதரமும்
திருக் கண்களும் இப்போது தீமையைப் பயப்பனவாம்; பெரிய விரிந்த கடலைக் கடைந்த பெருமானாகிய இவனால் இந்தத் திருவருளைப்
பெற்றிருப்பவர்களான, மூங்கில் போன்ற பெரிய நீண்ட தோள்களையுடைய பெண்கள் யாவர்?
நம்பீ! போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை; இருங் கனிவாயும் கண்களும் இந்நாள் விபரீதம்;
பெருமானால் திருவருள் பெறுவார் தோளினார் எவர் கொல்? என்க புள்ளுவம் – களவு. அல்லது, வஞ்சனை. பெறுவார்: காலமயக்கம்.

குழல் ஊது போய் இருந்தே’ என்றே யன்றோ என்னைச் சொல்லுகிறது;
கூறியது ஒன்றனைச் செய்ய வேண்டுமத்தனை அன்றோ.
இனித்தான், ‘உனக்குப் பெண்கள் படும் நீர் வாய்ப்புள்ள இடங்களிலே போயிருந்து ஊது’ என்றே யன்றோ நீங்கள் சொன்னீர்கள்;
அழகிது, இத்தனை யன்றோ. நீர் வாய்ப்புள்ள இடந்தான் எது? அதனைச் சொல்லலாகாதோ?” என்று
இரண்டு அடி உட் புகுர விட்டு, நற்றரிக்க இருந்து, குழலில் இனிய பேச்சிலே கை வைத்தான்.
குழல் ஓசை போல் அன்றே பேச்சில் இனிமை இருக்கும்படி.
“நான் செய்த படி செய்கின்றேன், ‘செவி ஓசை வைத்து எழ குழல் ஊது போய் இருந்து’ என்று
நீங்கள் சொன்ன இதற்குக் கருத்து எனக்குத் தெரிந்ததில்லை; இது எனக்குச் சாதிக்கு ஏற்ற தொழில் அன்றோ?” என்றான்.

போய் இருந்து நின் புள்ளுவம் அறியாவர்க்கு உரை நம்பீ –
உன் பொய்களிலே பழகின எங்கள் பக்கல் உன் பொய் விலை செல்லாது;
இங்கு நின்றும் போய் உன் பொய் அறியாதவர்கள் கோஷ்டியிலே இருந்து சொல்லு.
நினைவு ஒன்றும் சொலவு ஒன்றுமான உன்னை அறியாதாரும் கிடைப்பர்கள் அன்றோ;
ஐந்துலக்ஷங் குடிகளில் பெண்கள் உளராகையாலே. உன் பொய்யை ‘மெய்’ என்று இருக்கும் அவர்களுக்கு
அன்றோ இவை எல்லாம் சொல்லுவது? “பொய் கேட்டிருந்தேன்” என்று இருப்பாரும் உளர் அன்றோ.

வில்லால் இலங்கை மலங்கச் சரந்துரந்த வல்லாளன் பின் போன நெஞ்சம் வருமளவும்
எல்லாரும் என் தன்னை ஏசிலும் பேசிடினும் புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டிருந்தேனே.-என்பது, பெரிய திரு. 9. 4 : 5.

நம்பீ –
நிறைந்தவர் அல்லீரோ! நீர் எங்களைப் பெறாமல் குறைவாளராக இருந்தீரோ?
தன்னைக் குறித்து இவர்கள் சொல்லுகிற அமிருதத்திற்குச் சமமான விலக்குகிற வார்த்தைகளைக் கேட்டவாறே
அவன் முகத்திலே ஒரு மகிழ்ச்சி பிறந்தது.

இந் நாள் நின் செய்ய வாய் இரும் கனியும் கண்களும் விபரீதம் –
நாங்கள் இதற்கு முன்னர் இச் செவ்வியும் வேறுபாடும் ஒரு நாளும் கண்டு அறியோம்:
இவை இருந்தபடி என்? என்றார்கள்.
‘கழுத்துக்கு மேலே ஒன்றைச் சொல்லுகிறீர்கோளித்தனை அன்றோ! அதனை விடுங்கோள்;
இது ஒரு தோள் அழகு இருந்தபடி என்? என்றான்.

வேய் இரும் தடம் தோளினார் இத் திரு அருள் பெறுவார் எவர் கொல் –
வேறு ஒருவருடைய தோள் அழகைக் கண்டு, தந்தாம் தோள் அழகு என்று மயங்கும்படிக்குத் தகுதியான
தோள் அழகு உடையார் யாரோ? என்றது, நீ கிடந்து இப்படித் துடிக்கும்படி செய்ய வல்லராவதே
அவர்கள் சிலவர் என்பதனைத் தெரிவித்தபடி.

‘இத் திரு அருள் பெறுவார் எவர்கொல்’ என்பதனால்,
‘செய்ய வாய் இரும் கனியும் கண்களும்’ என்ற இடம், அவன் பக்கல் இவர்களுக்கு உண்டான பாவ பந்தம் சொல்லுகிறது.
‘வேய் இரும் தடம் தோளினார்’ என்ற இடம், இவனுக்கு அவர்கள் பக்கல் உண்டான பாவ பந்தம் சொல்லுகிறது.
இவர்களுக்குத் தன் பக்கல் பாவ பந்தம் தன் முகத்தால் அறிந்தான் அவன்.
தங்கள் பக்கல் இவனுக்கு உண்டான பாவ பந்தம் கை மேலே கண்டு விட்டார்கள் அவர்கள்.
உனக்கு இப்படி விரும்பத் தக்கவர்களாய் இருக்குமவர்கள் யாரோ? என்பார் ‘எவர் கொல்’ என்கிறார்கள்.
இவன் பக்கல் பிரணய ரோஷத்தாலே சொல்லுகிறார்களத்தனை போக்கி,
இவனோடு கலந்தாரைத் தனக்கு உத்தேசியராகவன்றோ இவர்கள் இருப்பது.

மா இரும் கடலைக் கடைந்த பெருமானாலே இத் திருவருள் பெறுவார் எவர் கொல் –
‘மந்தரம் நாட்டி அன்று மதுரக் கொழுஞ் சாறு கொண்ட சுந்தரத் தோளுடையான்’ -நாய்ச்சியார் திருமொழி, 9 : 1.-என்று
சொல்லுகிற தோள் அழகினை யுடையவன் விரும்பும்படியான தோள் அழகு படைப்பதே!
தன் தோள் அழகு கண்டு பெண் பிறந்தார் அடங்கலும் படும் பாட்டை யடங்கலும் இவனைப் படுத்தும்படியான
தோள் அழகுடையார் உண்டாவதே!
பெரியவன் கையிலே பெரியது பட்ட பாடு அடங்கலும் தங்கள் கையிலே இவன் படும்படி செய்ய வல்லர் ஆவதே!
“வைகுந்தனுடைய தோள்களால் சுழலப்பட்ட மந்தரத்தின் ஒலி வீழ்ச்சி” என்று கொண்டு
அது ஊமைக் கூறனாகப் -அநஷரமாக-பட்டவெல்லாம் படுகை அன்றோ.
அன்றிக்கே,
மந்தரத்தை நட்டுக் கடலை நெருக்கிக் கடைந்து பெரிய பிராட்டியாரைப் பெற்ற அன்றும்
இந்த வேறுபாடு கண்டோம் இல்லையே!
பழையாரைப் பெற்றாற் போல் அன்றே புதியாரைப் பெற்றால் இருக்கும்படி.

—————————————————————————————–

ஆலி னீளிலை ஏழுலகு முண்டு அன்று நீ கிடந்தாய்; உன் மாயங்கள்
மேலை வானவரும் அறியார்; இனி எம் பரமே?
வேலினேர் தடங்கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று
காலி மேய்க்க வல்லாய்! எம்மை நீ கழறேலே.–6-2-4-

ஜாதி உசிதமாக -பசுக்களை மேய்ப்பத்தில் சிறிது கால தாமசம் -அந்ய பரனாக போக வில்லை -அகடிகட நா சாமர்த்தியம்
இதுவே உனக்கு வியாபாரம் -பேச்சு மட்டும் கூடுமோ –
ஆலி னீளிலை ஏழுலகு முண்டு அன்று நீ கிடந்தாய்; உன் மாயங்கள்-சமஸ்த லோகங்களையும் –உண்டு -ஆலின் நீள் இலையில் நீ கிடந்தாய்
முகிழ்வு இருந்து விரியும் -மொட்டு விட்டு விரியும் -என்றபடி -நீண்ட இலை இல்லை -பிரளயம் கொண்ட அன்று -மௌக்த்யம் உள்ள நீ
மேலை வானவரும் அறியார்; இனி எம் பரமே?-கிருத்ரீம சேஷ்டிதங்கள்-நித்ய ஸூரிகள் -அஸ்ப்ருஷ்ட சம்சாரகந்த -அறியார்
ஒரு மாயையினால் –ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்த –இத்யாதி -அறியார்கள் -உம்மைத் தொகை -யாராலும் அறிய முடியாது
எங்களுக்கு மட்டும் தெரியும் -நீ நினைத்து இருக்கும் அந்த பெண்களுக்கு தெரியாது
வேலினேர் தடங்கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று-வேல் போலே அழிக்கும் கூர்மை -கண் வட்டம் விட மாட்டாமையாலே
அவர்கள் விளையாடும் மணல் குன்றை சூழும் படி
காலி மேய்க்க வல்லாய்! எம்மை நீ கழறேலே-வெட்டிமை பேச்சு பேச வேண்டாம் -வயிறு நிறைய மேய்க்கும் படி இதுவும் அகடிதகடநா சாமர்த்தியம் –
இந்த கிருத்ரிமம் அறிந்த எங்களை –எதிர்த்து மேலிட்டு வார்த்தை கொள்ளாதே கொள்

பிரளய காலத்தில் ஏழ் உலகங்களையும் உண்டு, முகிழ் விரிந்து நீளுமளவான ஆல் இலையிலே நீ சயனித்திருந்தாய்;
உன்னுடைய ஆச்சரியமான செயல்களை நித்திய ஸூரிகளும் அறிய மாட்டார்கள்; இனி எங்களால் சொல்லக் கூடியதாமோ?
வேலை ஒத்த விசாலமான கண்களையுடைய பெண்கள் விளையாடுகின்ற இடங்களைச் சூழ்ந்து நின்று கொண்டு
பசுக்களை மேய்க்க வல்லவனே! எங்களை நீ மேலிட்டு வார்த்தை சொல்லாதே.
வி-கு :- அன்று ஏழ் உலகும் உண்டு ஆலின் நீள் இலை கிடந்தாய் என்க. ‘வேலின்’ என்பதில் இன் சாரியை இடைச்சொல்.
சூழல் – இடம். காலி – பசுக்கள். கழறுதல் – இடித்துச் சொல்லுதல்.

‘நாம் சொன்னவற்றை எல்லாம் இவர்கள் வேறாக நினைப்பது, நம்மை ஒழியச் செல்லாமை பிறந்து,
நாம் அரைக்கணம் தாழ்த்தது பொறுக்க மாட்டாமை யன்றோ’ என்று பார்த்து,
‘நீங்கள் என்னை இங்ஙனே சொல்லலாமோ? நான் தாய் தந்தையர்கட்குப் பரதந்திரப் பட்டவன் அன்றோ?
அவர்கள் என் கையிலே கோலைத் தந்து, நீ சென்று பசு மேய்த்து வா என்றால், நான் மாட்டேன் என்னப் போமோ?’ என்றான்;
தாய் தந்தையர்கட்குப் பரதந்திரராய்க் கொண்டு பசு மேய்ப்பார் மேய்க்கும்படி இதுவோ?
நீ செய்யும் செயல் சேர்ந்திருக்கில் அன்றோ நீ சொல்லும் சொலவும் சேர்ந்திருப்பது.

நீர் தானே அன்னை சொல் கேட்காமல் -பால் குடிக்காமல் மாறி இருந்தீர் –
பெண்கள் கண் வட்டத்தில் தான் மேய்க்கச் சொன்னார்களோ –
நல்ல லஷணம்–இதற்காகவே நெறிஞ்சி முள்ளாக இருந்ததை ப்ருந்தாவனமாக மாற்றி அருளினாய்

ஆலின் நீள் இலை ஏழ் உலகும் உண்டு அன்று நீ கிடந்தாய்-
ஓர் ஆலிலையாவது, அதுதான் முகிழ் விரியாத அளவாய் இருப்பது;
அதிலே ஏழ் உலகங்களையும் வயிற்றிலே வைத்து, ஒரு யசோதை முதலாயினோர்களுங்கூட
உதவாத நிலையிலே திருக் கண் வளர்ந்தருளினாய்.
உலக முழுதினையும் வயிற்றிலே வைத்து, சிறு வடிவைக் கொண்டு பிரளயத்தில் தனியே கிடக்க வல்லவன் அன்றோ நீ!
பொருத்த மற்றன வற்றையும் பொருத்த முள்ளனவாகச் செய்ய வல்ல ஆற்றலை யுடைய உனக்கு இவை எல்லாம்
பொருந்தச் சொல்லுகை பொருளோ? நீ சொல்லுகிறவை காதலர்கள் கோஷ்டியில் பரிமாறுவன அல்ல காண்;
“தந்தை யென்பான் வடிவு கொண்ட தலை நோய்” –
“பிதா நாம மூர்த்த: ஸ்ரோ ரோக:” என்பது, பிரமாணம்.-என்றும்,
“பெரியோர்கள் நம்மை என்ன செய்வார்கள்” என்றும் காண் இங்குப் பரிமாறுமவை.
“குரூணாம் அக்ரதோ வக்தும் கிம் ப்ரவீஷி ந ந: க்ஷமம்
குரவ: கிம் கரிஷ்யந்தி தக்தாநாம் விரஹாக்நிநா”-என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 18 : 22.

“அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்?” -திருவாய்மொழி, 5. 3 : 6.-என்றே யன்றோ இங்கு இருப்பது.
“விரகாக்நியினாலே தகிக்கப்பட்ட” இதற்கு, நீர் சொரிய வல்லவர்களோ அவர்கள்?
அவர்களை மறைத்து வந்து கிட்டக் கடவ எங்களுக்கு இவை வார்த்தை யல்ல காண்.

உன் மாயங்கள் மேலை வானவரும் அறியார் –
உன்னுடைய வஞ்சனை பொருந்திய காரியங்களை, உண்டாக்கப்பட்ட இந்திரன் முதலானோர் அன்றிக்கே நித்திய ஸூரிகளும் அறியார்கள்.
“பிரமனும் சர்வேஸ்வரனான ஸ்ரீமந் நாராயணனை அறியான்”-
“பிரஹ்மாபி ந வேத நாராயணம் ப்ரபும்” என்பது, பிரமாணம்.- என்கிறபடியே,
அறியாமைக்கு அவர்களும் ஒத்திருக்கச் செய்தே, உகந்தாரைக் காற்கடைக் கொள்ளுதலைச் சொல்லும் இடமாகையாலே
நித்திய ஸூரிகளை எடுத்துக் காட்டாகச் சொல்லுகிறார்கள்
“சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி”-திருவிருத்.செய். 21.-என்று கொண்டு அவர்கள் சமாராதனத்துக்கு வேண்டுவன கொண்டு நிற்க
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்தான் அன்றோ.
அது தன்னையும் விட்டு அன்றோ அடல் ஆயர் தம் கொம்பினுக்குக் கோட்டிடை ஆடினான்.
பழையாரை எல்லாம் காற்கடைக் கொள்ளுகிற இடமாய் இருக்கிறதன்றோ.
நவப் பிரியைகளை விரும்புவாரைப் போலே காணும்.
நித்ய ஸூரிகள் – -பழையார் -நவ பிரியை -இன்று ஈன்ற கன்று – / ஆழ்வார் -மின்னிடை மடவார் என்றுமாம்

இனி எம் பரமே –
நித்திய ஸூரிகளோடு ஒக்கத் தங்களையும் ஒன்று படுத்திப் பேசுகிறார்கள்.
அவர்களுக்கு நிலம் அல்லாதது எங்களால் அளவிடப் போமோ?
அவை யெல்லாவற்றையும் எங்களை ஒழியச் சொல்லாய்.
‘என் தான்’
நான் பசு மேய்த்தமை இல்லை என்கிறீர்கோளோ?
அறிந்திலோம் என்கிறீர்கோளோ?
நான் சொன்னது பொய் தான் என்கிறீர்கோளோ? என்றான்.-
விகல்பம் பண்ணி கேட்கிறான் –
வார்த்தை கேட்பதில் தானே இவனுக்கு அபேஷிதம் –
அவையெல்லாம் அப்படியே யானாலும் நீதான் பசுக்கள் மேய்க்கும்படி இப்படியேயோ?

வேலின் நேர் தடங் கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று காலி மேய்க்க வல்லாய் –
அநுபவிக்கின்றவர்களுடைய அளவு அல்லாதபடி பரப்பை யுடைத்தாய்,
ஓர் ஆளும் ஒரு நோக்கும் நேரான கண்களை யுடையராயிருக்கிற பெண்களினுடைய கண்களிலே துவக்குப்பட்டு
அவ்வருகு போக மாட்டாதே நின்று போலே காணும் பசுக்களை மேய்ப்பது! என்றது,
“கார்த் தண் கமலக் கண் என்னும் நெடுங்கயிறு படுத்தி என்னை, ஈர்த்துக் கொண்டு
விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே”-நாய்ச்சியார் திரு. 14 : 4.- என்று,
தன் கண்ணழகைக் கண்ட பெண்கள் படும்பாடு எல்லாம் இவனை அவர்கள் படுத்த வல்லவர்கள் என்பதனைத் தெரிவித்தபடி.

விளையாடு சூழலைச் சூழவே நின்று காலி மேய்க்க வல்லாய்-
‘உன் வயிற்றையும் நிறைத்துப் பசுக்களின் வயிறுகளையும் நிறைத்து அல்லது வாராதே கொள்’ என்று அன்றோ,
தாய் தந்தையர்கள் உன்னைச் சொல்லி விட்டது?
‘இன்ன இடத்தே நின்று பசுக்களை மேய்க்க’ என்று ஓர் இடத்தை வரையறை செய்து விட்டார்களோ?
அவர்கள் சொல்லாதனவற்றையும் செய்யும் போது அதனை இங்குச் செய்யலாகாதோ?
எங்கள் கண் வட்டத்தில் கூடாதோ -சீக்கிரம் மேய்த்து இங்கே வந்து இருக்கக் கூடாதோ -என்றுமாம்
கண்ணுக்கு இட ஒரு துரும்பும் இல்லாத, அவர்கள் விளையாடுகின்ற மணற்குன்றுகளைச் சூழ நின்று மேய்க்க வேணும் போலே காணும்.
அன்றிக்கே,
“பசுக்களை மேய்க்கைக்கு நினைக்கத் தகுதி இல்லாத இடங்களிலே இவற்றின் வயிறுகளை
நிறைத்துக் கொடு போகையினாலே, மேலே கூறிய அகடிதகடநா சாமர்த்தியம் போலே இதுவும்
ஓர் ஆச்சரியம் சொல்லுகிறதாகவுமாம்.
‘வல்லாய்’என்றதனால், உன்னை யாரேனும் ஒன்றிலே நியமித்தாலும் நீ நினைத்தது
செய்து தலைக்கட்ட வல்லாய் ஒருவன் என்பதனைத் தெரிவித்தபடி.

இவர்கள், நாம் சொன்ன மர்மம் புத்தி பண்ணாதே, ‘நம்முடைய சாமர்த்தியம் தோற்றச் சொல்லா நின்றார்கள்’ என்று,
தன் மேன்மை தோற்றச் சில சொல்லப் புக்கான்.
‘இவன் அழியும்படி-(பதில் பேச முடியாத படி )
நெடும் போது சில வார்த்தை சொன்னோம்; இவனும் சில சொல்லக் கடவன்’ என்று இருந்தார்கள்.

“இதீவ தேவீ வசநம் மஹார்த்தம் தம் வாநரேந்த்ரம் மதுரார்த்தம் உக்த்வா
ஸிரோதும் புநஸ் தஸ்ய வசோபி ராமம் ராமார்த்த யுக்தம் விரராம ராமா”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 31.

“இதீவ-மேலே நெடும் போது சில பாசுரமிட்டுச் சொல்லிக் கொடு போந்தான்;
பிரணய தாரையில் ஓடுமது இருடிகளாயிருப்பார்க்கு நிலம் அன்றே? இப் புடைகளிலே என்கிறான்
தேவீ – வல்லபைகளுடைய பரிமாற்றம் கடக்க நிற்பார்க்குத் தெரியாதே அன்றோ.
வசனம் மஹார்த்தம் – கடக்க நிற்பார்க்கே அன்று; தேசிகரானவர் தங்களுக்கும் தெரியாதிருக்கை.
தம் வாநரேந்திரம் – இவனோடு ஒக்கக் கடவார் ஒருவரும் இலர்.
சேஷத்துவத்திற்கு முடி சூட்டப் பட்டார் மஹாராஜரே யாகிலும், பாரதந்திரியத்தின் எல்லையிலே நின்றான் இவன் என்கை.
இவ் வளவிலே இவள் முகம் பார்த்து வார்த்தை சொல்லப் பெற்றிலர் அன்றோ அவர்.
மதுரார்த்தம் – நிலம் அன்று என்னாக் கை வாங்க ஒண்ணாதபடி இருக்கை.
உக்த்வா – அவனும் அவன் உடையவர்களும் வாழும்படி வார்த்தை சொன்னாள்.
ஸ்ரோதும் புநஸ் தஸ்ய வசோபிராமம் – ‘அழிந்தாரை ஆக்க வல்லன்’ என்னுமிடம் கண்டாள்;
தான் அழித்த தலை உண்டாம்படி வார்த்தை சொல்ல வல்லமை கேட்க வேணும் என்று இருந்தாள்.
நிர்த்தயர் ஸ்வார்த்தர் -வார்த்தை சொல்லி அழித்தது -அவை இல்லாமை வார்த்தை சொல்லுவான் என்று
எதிர்பார்த்து இருந்தது போலே இங்கும் பராங்குச நாயகி -நிர்தோஷராம் படி வார்த்தை சொல்லுகை –
ராமார்த்தயுக்தம் – இராமபிரானாகிற பிரயோஜனத்தோடு கூடியது;- தன் காரியம் செய்து தலைக்கட்ட வல்லான் ஒருத்தன்.
விரராம – நெடும்போது தான் வார்த்தை சொல்லுகையினாலும், ஸ்வாமி வார்த்தை சொல்லும் போது
மேலிட்டு வார்த்தை சொல்ல ஒண்ணாமையினாலும் பேசாதே இருந்து அவனுக்கு இடம் கொடுத்தாள்.
ராமா – இவ்விட்டு நீட்டுகை ஒழிய வார்த்தை சொல்லாதே இருக்கிற போதை அழகை
அவர் தாம் காணப் பெற்றிலோம்,” இவனும் அடர்த்து வார்த்தை சொன்னான்.
இவ் விட்டு நீட்டுகை ஒழிய-இவள் வார்த்தை நேராக பெருமாள் கேட்காமல் திருவடி மூலம் தானே கேட்கப் பெற்றார்

எம்மை நீ கழறேலே –
வாராய்! நோவு படுத்தி நலிந்தார் முடிக்கவும் தேடுவார்களோ?
எம்மை –
உன்னைப் பிரிந்து ஆற்றாமல் நோவு படுகிற எங்களை.
நீ –
ஒரு காலமும் பிரியாத நீ. என்றது, பிரிவால் வரும் நோவு இன்றிக்கே இருக்கிற நீ என்றபடி.
கழறேலே –
விசாய்ந்து வார்த்தை சொல்லாதே கொள். என்றது, நீ இங்ஙன் மேலிட்டு
வார்த்தை சொல்லப் பெறாய் காண் என்கிறார்கள் என்றபடி.
நீயும் நாங்களுமானால் எங்களை நீ அடர்த்து வார்த்தை சொல்ல என்ன சம்பந்தம் உண்டு?
சேதநரைப் போலே வந்து வார்த்தை சொல்லுவதே!
அதிலே வைத்து மிகைத்து வார்த்தை சொல்லுவதே!
ஆற்றாமைக்கு உதவினார்க்கு அன்றோ வாய் உள்ளது!-
சாபராதன் -நீ –
துக்கிகள் நாங்கள் -என்றபடி

——————————————————————————–

கழறேல் நம்பி! உன் கை தவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் ; திண் சக்கர
நிழறு தொல் படையாய்! உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்
மழறு தேன் மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம்
குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே.–6-2-5-

உன் பொய்க்கு பெரு நிலை நிற்கும் -சகாயம் கொண்டு -அஹ்ருதயமாக எங்கள் பேச்சைக் கொண்டாடுவது –
கழறேல் நம்பி! உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் ; திண் சக்கர-பொய்யாலே பூர்ணன் -பொய் செய்கேன் என்பது என்ன
பகலை இரவாக்க சகாயம் செய்த -பெரு நிலை -திண்மை -அசையாமல் பொய் சொல்லும் திறம்
நிழறு தொல் படையாய்! உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்-தேஜஸ் உமிழ்ந்து -கிருத்ரீம சேஷ்டிதங்கள்-மகா பாரதத்தில் கூடியவர்களும் –
வியாசர் எழுதி வைத்து நன்கு அறிவோம்
எங்கள் வார்த்தை இனிமையைக் கொண்டாடாதே -நாங்கள் அவர்கள் அல்லோம் -உனது அருளுக்கு சூட இட்டுப் பிறந்தவர்கள்
மழறு மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம்-புதுத் தேன் உண்டு பேசும் இனிய மொழி -மனம் செவ்வி அழிந்து விஷன்னர் ஆகும் படி
குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே.-பூவை கிளி -உடன் பேச தொடங்கினான் –அவர்களது இல்லை -எங்களுடைய இவற்றுடன்
லீலா ரசம் கொண்டாடாதே கொள்- ஹரி பத்மநாபா சொல்லுகிறதே -ஸ்வா பாவிக வார்த்தைக்கு அர்த்தம் கண்டு பிடிக்காதே
ஆஸ்ரிதற்கு உசாத் துணை -பேச பேச ஆனந்தம் -சிஷ்யர் வர்க்கம் -ஆச்சார்களாலே ரஷிக்கப்படுபார்களே

நம்பீ! மேலிட்டு வார்த்தை சொல்லாதே; உனது வஞ்சனையை மண்ணுலகமும் விண்ணுலகமும் நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறது.
திண்மை பொருந்திய பிரகாசத்தையுடைய இயல்பிலே அமைந்த சக்கரப் படையை யுடையவனே! நான் உனக்கு ஒன்று உணர்த்துகின்றேன்;
இளந்தேன் போன்ற சொற்களைப் பேசுகின்றவர்களாய் நின்னருளைப் பெற்றவர்களான பெண்கள் மனம் வாடி நிற்க,
நீ இங்கே நின்று கொண்டு, எங்களுடைய குழறுகின்ற பூவையோடும் கிளியோடும் சேர்ந்து விளையாடாதே என்கிறாள்.
நின்னருள் சூடுவாராகிய மழறு தேன் மொழியார்கள் என்க. மழறுதல் – மென்மையவாதல்.
குழறுதல் – தெளிவில்லாமல் பேசுதல். நிழறுதல் – ஒளிவிடுதல்.

அன்புள்ளவர்களுக்குக் குற்றத்தைக் குணமாகக் கொள்ளவுமாம்;
அன்பில்லாதவர்களுக்குக் குணந்தன்னையே குற்றமாகக் கொள்ளவுமாம்;
விஷயத்துக்குத் தகுதியாக அன்றோ குண தோஷங்கள் இருப்பன.
ஆகையாலே, நான் சொன்னவை எல்லாம் இப்போது இத் தலைக்குக் குறையாய்த் தோற்றும் அன்றோ.
ஆனாலும், மத்தியஸ்த்தர் சொன்னதன்றோ அர்த்தமாகத் தலைக் கட்டுவது’ என்றான்.

கைதவம் மண்ணும் விண்ணும் -என்றத்தை சொன்னதும் –மத்தியஸ்தர் வேணும் அவன் வார்த்தை என்று கருதி
அந்தரங்கர் நாங்கள் போதாதோ -வேறு மத்தியஸ்தர் வேணுமோ -அந்தரங்கரான நாங்கள் தானே உன்னை அறிவோம் –
ஸ்நேஹம் இருக்கும் பொழுது ஒரு வார்த்தை -உண்ணும் பொழுது உண்ணாத பொழுது ஒரு வார்த்தை பேசுவீர்
மதுரகவி போல்வார் வேண்டும் என்றானே –

கழறேல் நம்பி –
அது முன்னம் செய்தபடி செய்ய: நீர் தாம் முதன்மை கொண்டாடி மேலிட்டு வார்த்தை சொல்லாதே கொள்ளும் எங்களை.
‘நம்பி’ என்றதனால், பிரபாவம் கொண்டு விருப்பத்தைச் சாதிக்க ஒண்ணாது காணும் என்பதனைத் தெரிவித்தபடி.
நெஞ்சில் வெறுப்புடையார் சொல்லுமது வார்த்தை அன்று;
‘நான் வஞ்சகன்’என்பதற்கு உங்களை ஒழியச் சான்று வேறு உண்டோ? என்ன,

உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் –
உன் வஞ்சனை எங்கள் அளவன்று; எல்லா வுலகங்களிலும் பிரசித்தங்காண்.
“வாயும் திரையுகளும்” என்ற திருவாய்மொழியின் வாசனையாலே
“தம்மைப் போலே உலகமெல்லாம் நினைத்திருக்கும்” என்று இருக்கிறார்.
சம்பந்தம் பொதுவானால் அங்ஙன் நினைத்திருக்க ஒரு தட்டு இல்லை அன்றோ.
அன்றிக்கே,
சேஷி ஒருவன் ஆனால் சேஷமான பொருள்கள் எல்லாம் ஒரு மிடறாய் இருக்கும் அன்றோ;
ஒருவனுக்குப் பல அடிமை உண்டானால் தங்களுக்குள் எல்லாரும் கிருத சங்கேதர்களாய் ஒத்திருப்பர்கள் அன்றோ.
மண்ணிலுள்ளாரும் விண்ணிலுள்ளாரும் அழகிதாக அறிவர்கள்.
விசேஷஜ்ஞரோடு விசேஷஜ்ஞர் அல்லாதாரோடு வாசி அற அறிவர்கள்.
‘இவ் விடையாட்டம் இரண்டும் அறியாதாரையோ சான்றாகச் சொல்லுவது?
அறிவினால் குறையில்லாத அகல் ஞாலம் அன்றோ இது!’-திருவாய். 4. 8 : 6.-என்றான்.
‘விண்ணும் நன்கு அறியும்’ என்கிறார்கள்.
ஆனாலும், அவர்களிலே ஒருவரைச் சொல்லச் சொல்லுங்கோள் பொய் என்று’ என்றான்.
ஆனால், உன்னிடத்தில் அன்பு வைத்திருக்கும் அவர்களிலே ஏற்றுகிறோம் கைம் மேலே என்கிறார்கள் மேல்:

திண் சக்கர நிழறு தொல் படையாய் –
குற்றத்தையே குணமாகக் கொள்ளுவாரைக் கேள்.
உன் வஞ்சனைகட்குப் பெரு நிலை நிற்பார்க்கு அன்றோ தெரிவது.
உன் நினைவு அறிந்து கையிலே வந்திருப்பது,
“பகலை இரவு ஆக்க வல்லையோ?” என்று கேட்டால் “ஓம்” என்று கொண்டு சூரியனை மறைப்பது;
இப்படியே அன்றோ அவனுடைய செயல்.
அப் பொய்யில் அவனைப் பேதிக்கிலும் இவனைப் பேதிக்க ஒண்ணா தாயிருத்தலின் ‘திண் சக்கரம்’ என்கிறார்கள்.
சுதந்திரனாகையாலே காரியத்துக்குத் தகுதியாக ஏறிட்டுக் கொள்ளுவான் அவன்;
இவனுக்கு அது இல்லை அன்றோ.
பொய்யனா யிருக்கச் செய்தே மெய்யனானால் பிறக்கும் காரியத்தைப் பிறப்பித்துக் கொடுக்க
வற்றதாதலின் ‘நிழறு படை’ என்கிறார்கள்.
நிழறுகையாவது, –நடத்துகை.
அன்றிக்கே,
நிழறுகையாவது, நிறம் கொடுக்கையாய், பொய்யனா யிருக்கச் செய்தே,
மெய்யனானால் பிறப்பிக்கும் காரியத்தைப் பிறப்பித்துக் கொடுத்தலையுடைய என்னுதல்.
நிழலில் வேலை பார்த்து -சத்ய பிரதிஜ்ஞ்ஞன் நினைக்கும் கார்யம் தலைக் கட்டிக் கொடுக்கை –
இப்படிகட்குப் பழையனாய்ப் போருமவனாதலின் ‘தொல் படை’ என்கிறார்கள்.
இவர்கள் இப்படிச் சொன்னவாறே ‘நம் பக்கலிலே சிலர் இப்படி நமக்கு உண்டாவதே?’ என்று,-self goal –
சொல்லலாவது காணாமல் கவிழ் தலை யிட்டான்.

உனக்கு ஒன்று உணர்த்துவன் நான் –
வாராய்! நீ சொலவு அற்று இருக்க வேண்டா; உனக்கு நாங்கள் நல்லது ஒரு ஹிதம் சொல்லுகிறோம் வா என்றார்கள்.
இது செவி கொடுத்துக் கேட்டானாகில், இதற்குச் சொல்லலாவது ஒரு மறுமாற்றம் இல்லை;
தனக்கு மேல் வார்த்தை சொல்லுகைக்கு ஒரு போக்கடியும் இல்லை.

கிருத்ரிமம் பண்ணாதே அங்கு ஏறப் போ -என்கை யாதல் –கிருத்ரமமே பண்ணாதே போன்ற நல் வார்த்தைகள்
நான் ஸ்வ தந்த்ரன் என்பதே அவன் சொல்லலாவது -அத்தை சொல்லவில்லை –
இவை எல்லாம் கிடக்கச் செய்தே பேசாதே புகா ‘இது ஒரு பேச்சின் இனிமை இருந்தபடி என்ன?’ என்றான்

மழறு தேன் மொழியார்கள் –
பாவியேன், நீ யாருடைய பேச்சுக்களை யாருடைய பேச்சுக்கள் என்று மயங்குகிறாய்!
மழறுதேன் – மழலைத் தேன்.
அன்றிக்கே,
கலங்கின தேன் போலே இனிய பேச்சுக்களை யுடையராயிருப்பவர்கள் என்னுதல்.
இவன் சந்நிதி மாறாமையாலே கலக்கமும் மாறாதே இருக்குமே யன்றோ.
‘அவை எல்லாம் இங்கே யன்றோ’ என்பானே அவன்.
மொழியார்கள்-எத்தனை பேர் உனக்கு?

நின் அருள் சூடுவார்-
வேறு ஒருவருடைய பேச்சுக்களைக் கேட்டாலும் தங்கள் பேச்சுக்கள் என்று மயங்கும்படி செய்ய வல்லவர்கள். என்றது,
ஒரு வார்த்தையாலே “மனம் நிலை பெற்றது, சந்தேகங்களும் நீங்கின” என்னும்படி வார்த்தை சொல்ல வல்ல உன்னை
“நஷ்டோ மோஹ: ஸ்மிருதி: லப்தா த்வத் ப்ரஸாதாத் மயாச்யுத
ஸ்திதோஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யே வசநம் தவ”-என்பது, ஸ்ரீ கீதை, 18 : 73.
ஒரு வார்த்தையாலே கலங்கப் பண்ணுமவர்கள் என்றபடி.
‘அதற்கு என்?’ என்றான். அவர்கள் எங்களைப் போல் அல்லர் காண்.
நீ பிரயோஜனம் இல்லாமல் இங்கே நிற்கச் செய்தேயும், இதனை அறிந்து வைத்தும்
கணநேரமும் பிரிவு பொறுக்க மாட்டாமையாலே அவர்கள் மனங்கள் வாடுங்காண்.
கொம்பை இழந்த தளிர் போலே காண் அவர்கள் நெஞ்சுகள் வாடும்படி.
‘கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒருநாள், தங்கு மேல்
என் ஆவி தங்கும்’-நாய்ச்சியார் திரு. 8 : 7.- என்று
இருக்குமவர்கள் அலரோ அவர்கள். அவ்வளவில் நீ உதவப் பெறாமையாலே போர நோவுபடுவர்கள்;
அது கண்டால், நீ பொறுக்க வல்லையோ என்று சொல்லிப் பேசாதே இருந்தார்கள்.

‘உங்கள் பேச்சைக் காட்டிலும் எனக்குத் தாரகம் இவற்றின் பேச்சுக்கள் அன்றோ!’ என்று,
அவர்களை விட்டுப் பூவையையும் கிளியையும் கொண்டாடப் புக்கான்;
சிலரை ஆதரிக்கையாவது, அவர்கள் உடைமையை ஆதரிக்கை அன்றோ.
அவற்றை ஆதரித்து வார்த்தை கொள்ளப் புக்கவாறே,
வாராய்! அவை தாம் யார் உடைமைகள் என்றிருக்கின்றாய்?
அவை நீ நினைக்கிறவர்களுடைய உடைமைகள் அல்ல காண்!

எம் குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே –
அவை உனக்கு வார்த்தை சொல்லுகிறன அல்ல காண்!
அவற்றிற்கு அது இயல்பு காண்.

குழகேலே-
நாங்கள் வேறாக வார்த்தை சொல்லச் செய்தேயும் கண்டாயே,
நீ வேறு கதி இல்லாமை தோற்ற வார்த்தை சொல்லுகிறபடி.
அப்படியே அவற்றின் பேச்சும் வேறு பொருள் காண்.
குழறுதல் – எழுத்துக்கள் தோன்றாதவாறு பேசுதல். குழகுதல் – லீலாரசம் கொண்டாடுகை.

——————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம்- 127- திருவாய்மொழி – -6-1–6….6-1-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

June 13, 2016

போற்றி யான் இரந்தேன் புன்னை மேலுறை பூங் குயில்காள்!
சேற்றில் வாளை துள்ளும் திரு வண் வண்டூ ருறையும்
ஆற்றல் ஆழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு
மாற்றம் கொண்டருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே.–6-1-6-

போக்யதா பிரகர்ஷத்தாலே ஸூரி சேவ்யன் -ரச கனமான பெருமான் -குயில்களை
போற்றி யான் இரந்தேன் புன்னை மேலுறை பூங் குயில்காள்!-பசுத்த நிறம் -நாநா வர்ணம் பூக்கள் –
மேலுறை–சுபாஸ்ரய விஷயம் பற்றி இருப்பாரைப் போலே நித்ய வாசம் செய்யும் குயில்கள்
நிவாச வ்ருஷ சாதூனாம் ஆபன்னனாம் பராம் கதி-தாரை வாலிக்கு -பெருமாளை அண்டை கொண்ட பலம் கொண்ட சுக்ரீவன் –
உஜ்ஜ்வலம் -அத்தாலே -தர்ச நீயதைக்கும் -நிவாச வ்ருஷ ஆஸ்ரயநீயத்துக்கும்-மங்களா சாசனம் பண்ணி
உங்கள் வாயது வாழ் நாளாக இருக்கும் அடியேன் -சத்தையே உங்கள் வாய் வார்த்தையாலே –
அனந்யகதி உள்ளார் செய்யும் பிரார்த்தனை பண்ணுகிறேன் -ஆச்சார்யர் திருவடிகளே சரணம் அன்றோ
சேற்றில் வாளை துள்ளும் திரு வண் வண்டூ ருறையும்-தன்னிலம் இருப்பதால் ஹர்ஷித்து வர்த்திக்கும் -துள்ளா நிற்கும் -நீர் செழிப்பு
ஆற்றல் ஆழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு-பெரு மிடுக்கல்-அழகிய திருக்கை -இதனாலே
அமரர்களை நிர்வகிக்கும் சர்வாதிகன் -ஆற்றல் மதிப்பு அமைதி சக்தி என்றவாறு –
மாற்றம் கொண்டருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே.-என்னுடைய பிரமம் தீரூம் படி -பதில் கொண்டு அருளுவீர் –
கடகர் உடைய உக்தி மாதுர்யமும் -அர்த்த நியதியும் -பொருள் பட பேசுவது -தோற்றுகிறது

புன்னை மரத்தின் மேல் தங்கி யிருக்கின்ற அழகிய குயில்களே! யான் போற்றி இரந்தேன்; சேற்றிலே வாளை மீன்கள் துள்ளி விளையாடுகின்ற
திருவண்வண்டூர் என்னும் திவ்விய தேசத்தில் நித்திய வாசம் செய்கின்ற பெரு மிடுக்கினை யுடைய சக்கரத்தை அழகிய கையிலே தரித்திருக்கின்ற,
நித்திய ஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானைக் கண்டு, என் மயக்கம் நீங்குவதற்கு உரியது ஒரு தன்மையாக மறு மாற்றத்தைக் கொண்டு வாருங்கோள்.
பூங்குயில்காள்! யான் போற்றி இரந்தேன், உறையும் பெருமானைக் கண்டு மையல் தீர்வதொரு வண்ணம் மாற்றம் கொண்டருளீர் என்க.
‘ஆற்றல்’ என்பதனை, பெருமானுக்கு விசேடணமாக்கலுமாம் மையல் – மயக்கம்.

சில குயில்களைக் குறித்து என் நிலையை அவனுக்கு அறிவித்து அங்கு நின்றும் ஒரு மறு மாற்றம்
கொண்டு வந்து அருளிச் செய்ய வேண்டும் என்கிறாள்.

போற்றி –
சம்சார வெக்காயம் தட்டாதபடி, வைமாநிகர் விமானங்களிலே உயர இருக்குமாறு போலே,
புன்னை மரத்திலே உயர இருந்தன சில குயில்கள்; -கூஜந்தம் ராம ராமேதி மதுர அஷரம் -வால்மீகி கோகுலம்
(இங்கும் ராமன் -தானே-மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த ஏறு சேவகனார்க்கு-6-1-10- )
அவற்றின் செவிகளிலே தன் துயரத்தைக் காட்டுகின்ற ஒலி படும்படி உயர ‘போற்றி’ என்கிறாள்.
முகம் பார்க்கைக்குச் சொல்லுகிற பாசுரம் இது போலே காணும்.
இந்த ஒலி செவிப்பட்டால் காரியம் செய்தல்லது நிற்க ஒண்ணாது என்றிருக்கிறாள் காணும்.

யான் இரந்தேன் –
அவன் தான் இரக்க இருக்கக் கடவ வேண்டப்பாடுடைய நான் இரந்தேன்;
ஆள் விடுவானும் இரப்பானும் எல்லாம் தானே அன்றோ.
அன்றிக்கே,
“இரகு வம்சத்தை மகிழச் செய்கின்ற இளைய பெருமாள், தமையனுடைய இரண்டு திருவடிகளையும் நெருங்கப் பிடித்துக் கொண்டு
பிராட்டியைக் குறித்துச் சொன்னார், சத்திய விரதரான பெருமாளைப் பார்த்தும் சொன்னார்” என்கிறபடியே
ஸ ப்ராது: சரணௌ காடம் நிபீட்ய ரகு நந்தந:
ஸீதாம் உவாச அதியஸா: ராகவஞ்ச மஹாவிரதம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 31 : 12.
புருஷகாரத்திற்கு வழியாக எல்லாராலும் இரக்கப்படும் யான் இரந்தேன் என்னுதல்.
வாலப்யத்தால் அவனைக் கட்டுப் படுத்தி ஈஸ்வரி -நம் அனைவருக்கும் ஈஸ்வரி அன்றோ –

இரந்தேன் –
நியமிக்கிறேன் அல்லேன், இரக்கின்றேன்.
இரப்பார் காரியம் செய்தறவேணும் என்னும் நினைவாலே ‘இரந்தேன்’ என்கிறாள்.
இரந்தேன் என்று அவற்றின் நெஞ்சிலே புண்படுத்துகிறாள்.

புன்னை மேல் உறை பூங்குயில்காள் –
வைமாநிகரைப் போலே மனிதர்களுடைய வாசனை நடையாடாதபடி உயர்ந்த இடத்தில் வாழ்கின்ற,
கலவியினாலே விளங்குகின்ற குயில்காள்!
உங்களைப் போக விடுதல் தரும ஹாநியாய் இருக்கின்றது;
ஆகிலும், என் செல்லாமையாலே செய்கின்றேன் என்பாள் ‘உறை’ என்கிறாள்.

போற்றி –
பெருமாளும் பிராட்டியுமாகக் காட்டிற்கு ஏகாந்த போகத்துக்குப் போகா நிற்கச் செய்தே நடுவே இராவணன் வந்தாற்போலே,
உங்கள் போகத்துக்குப் பிரிவு உண்டாக்க நான் தோற்றினேன் போலே இருந்தது.
இத்தால் ஒரு வியசனம் இன்றிக்கே ஒழிந்திடுக உங்கள் போகத்துக்கு என்கிறாள் என்றபடி.

பிள்ளை யமுதனார், திரு விருத்த வரை மார்வனை,
‘புன்னை மேல் என்னும் இப் பதங்கட்குப் பட்டர் அருளிச் செய்தது என்?’ என்ன,
‘தன் துன்ப ஒலி அவற்றின் செவியிலே படும் படி உயரச் சொல்லுகிறாள் என்று அருளிச் செய்தார்’ என்ன,
“வானார் வண் கமுகு”,
“சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல்” என்றபடியே, அங்குள்ள புன்னைகளும் உயர்ந்து ஓங்கி இருக்கும் என்கிறபடி.
‘நெய்தல் நிலத்திலே புன்னை படர்ந்தன்றோ கிடப்பது, இங்ஙனே சொல்லக் கூடுமோ?’ என்ன,
அவன் பட்டர் பாடே வந்து, ‘இங்ஙனே பணித்தார்’ என்ன,
‘இவ் வர்த்தத்துக்கு நிர்ணாயகம், இசையாயிற்று; -உச்ச ஸ்வரம் –
அது, ‘போற்றி’ என்று, உயரச் சொல்லி யிருக்குமோ? தாழச் சொல்லி இருக்குமோ’ என்று அருளிச் செய்தார்.

சேற்றில் வாளை துள்ளும் –
பிரளயத்திலே கொண்டு போய் விட்டாலும் யானைக் கன்று போலே செறுக்கிச் சேறு ஆக்குமாயிற்று வாளைகள்.
‘அலைகடல் நீர்குழம்ப அகடுஆட ஓடி அகல்வான் உரிஞ்ச முதுகில்,
மலைகளை மீது கொண்டு வரு மீனை’ -பெரிய திருமொழி, 11. 4 : 1.-என்னுமாறு போலே.
துள்ளல் ஓசை அர்த்தம் இந்த பாசுரம் போலே கூரத் தாழ்வான் ஸ்லோகம் மத்ஸ்ய அவதாரம் பற்றி அருளிச் செய்து உள்ளார்
சேதனம் அசேதனம் என்னும் வேறுபாடு இல்லாமல் களித்து வாழ்கின்ற தேசமாயிற்று.
அவ்வூரில் பொருள்கள் செருக்கி வாழா நிற்கச் செய்தே கண்டீர் நான் பிரிந்திருந்து தூது விடுகிறது.

ஆற்றல் ஆழி அம் கை அமரர் பெருமானைக் கண்டு –
அடியார்கள் விஷயத்தில் எல்லாம் செய்தாலும் ‘ஒன்றும் செய்யப் பெற்றிலோம்’ என்று நோவு பட்டு இருப்பான் ஒருவனுமாய்,
அவர்கள் இரக்ஷணத்துக்குக் கருவியான திருவாழியைக் கையிலே யுடையனாய்,
நான் காண ஆசைப்பட்ட கையும் திருவாழியுமான அழகை விருப்பமில்லாதார்க்குக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்குமவனை.
அன்றிக்கே,
‘ஆற்றல்’ என்பதனைத் திருவாழிக்கு அடைமொழியாகக் கொண்டு,
அடியார்களைக் காப்பாற்றுவதில் அவனைக் காட்டிலும் கிருபையை யுடைய திருவாழியைக் கையிலே யுடையவனை என்னுதல்.
அன்றியே,
‘ஆற்றல்’ என்பதனை, அவன் தனக்கே அடையாகக் கொண்டு,
பிரிவுக்குச் சிளையாதே ஆறியிருப்பானாய்க் கையும் திருவாழியுமான சர்வேஸ்வரனை என்று பட்டர் அருளிச் செய்வர்.
(ஆற்றல் -வலிமை கீழே -இதில் -பிரிந்தும் குறி அழியாமை -குத்தல் -பட்டர் நிர்வாகம் )

மாற்றம் கொண்டருளீர்-
ஒரு வார்த்தை கொண்டு வந்தருள வேண்டும். எப்படிப்பட்ட வார்த்தை கொண்டு வர எனின்,
என் நிலை இருந்தபடி கண்டீர்கோளே,
இது தீர்வது ஒரு வழி நீங்களே தேடிக் கொண்டு வந்து சொல்லுங்கோள்.
“காணப் பட்டாள் சீதை” என்றாற்போலே.
“ஸ: அபிகம்ய மஹாத்மாநம் க்ருத்வா ராமம் ப்ரதக்ஷிணம்
ந்யவேதயத் அமேயாத்மா த்ருஷ்டா ஸீதேதி தத்வத:”-என்பது, ஸ்ரீராமா. ஸூந்தர –

கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால்; தெண்டிரை யலை கடல் இலங்கைத் தென்னகர்
அண்டர் நாயக! இனித் துறத்தி; ஐயமும் பண்டுள துயரும் என்று அநுமன் பன்னுவான்.-என்பது, கம்பராமாயணம்.

மையல் தீர்வது ஒருவண்ணம் மாற்றம் கொண்டருளீர் –
என் கிலேசம் தீர்வது ஒரு பிரகாரம் வார்த்தை கொண்டு வந்தருளிச் செய்ய வேண்டும்.
தூது விடுகிற தான் ஜனக ராஜன் திருமகளாகவுமாம், விடப் படுகிறவை திர்யக்குகளை யாகவுமாம்,
பகவத் விஷயத்தில் சேர்க்கின்றவர்களாயிருப்பாரை இங்ஙன் அல்லது சொல்லொண்ணாது காணும்.–
அருளீர் -பூஜ்ய உக்தி –

பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம் விரி கமல உந்தி யுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே!
கண்ணிமைத்துக் காண்பார் தம் கண்ணென்ன கண்ணே!-என்பது, சிலப்பதிகாரம்.

——————————————————————————————–

ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கொன்றுரை; ஒண் கிளியே!
செரு ஒண் பூம் பொழில் சூழ் செக்கர் வேலைத் திருவண் வண்டூர்
கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே.–6-1-7-

அசாதாரண தர்ச நீயன் -அடையாளங்கள் -ஒரு கிளியைப் போக விடுகிறாள்
ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கொன்றுரை; ஒண் கிளியே!-அழகிய -கிளி வெட்கம் அடைந்ததாம் -குரல் இனிமைக்கு சொல்ல வில்லை
பரபாக வர்ணம் -நாயகன் போலவே உள்ளதே -எல்லே இளம் கிளி -மென் கிளி போலே -மடக்கிளியை கை கூப்பி வணங்கி –
செரு ஒண் பூம் பொழில் சூழ் செக்கர் வேலைத் திருவண் வண்டூர்-பரஸ்பர -இசலி -பிசலி மாறு பட்ட பூக்கள் சண்டை -பொழில் -சிவந்த பொழுது
காலை மாலை -வேலை -பொழுது-கடல் என்றுமாம் -தொடு வானத்தால் சிவந்து என்றுமாம் –
பொழில் உடைய போக்யதையில் அகப்படாதே -ஒரு வண்ணம் சென்று புக்கு
கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால் –வண்ணம் மட்டும் கறுத்து -சிவந்த திரு அவயவங்கள்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே.-அடையாளம் -சுக்ரீவன் பிரட்டி திரு ஆபரணங்களை காட்ட பெருமாள் காண வில்லை
இளைய பெருமாள் நூபுரம் -மட்டுமே கண்டார் -திருவடி தானே திருந்தக் கண்டார் –திருந்தக் காண்–பின்பே உரை என்றவாறு
போரில் உத்யுத்தமாக இருக்கும் -ஆஸ்ரித விரோதிகள் -இடம் அபரோஷித்து -கண்ணால் கண்டு -ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் –
கடகர் உடைய பகவத் சமான ஆகாரத்தை தோற்றுகிறது

ஒண் கிளியே! ஒன்றோடு ஒன்று மாறுபட்டுப் பூக்களைச் சொரிகின்ற அழகிய சோலைகளாற் சூழப்பட்ட, செந்நிறம் பொருந்திய கடற்கரையிலுள்ள
திருவண் வண்டூர் என்னும் திவ்விய தேசத்திலே ஒரு வகையாகச் சென்று புக்கு, கரிய நிறத்தையும் சிவந்த திரு வாயினையும் சிவந்த திருக் கண்களையும்
சிவந்த திருக் கைகளையும் சிவந்த திருவடிகளையும் போரைச் செய்கின்ற ஒளி பொருந்திய சக்கரத்தையும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கையும்
அடையாளமாக நன்கு பார்த்து, நான் சொல்லும் ஒரு வார்த்தையைச் சொல்லுவாய் என்கிறாள்.
கிளியே! திருவண் வண்டூர் சென்று புக்குத் திருந்தக் கண்டு எனக்கு ஒன்று உரை என்க. செரு – போர்; இங்கே, மாறுபாடு.
செக்கர் – செந்நிறம். வேலை-கரை. திருவண் வண்டூர், மேலைக் கடற்கரையிலே உள்ளது.

கிளிகள் சிலவற்றைப் பார்த்து, அவன் அடையாளங்களைச் சொல்லி, இவ் வடையாளங்களின் படியே கண்டு
எனக்காக ஒரு வார்த்தை சொல்லுங்கோள் என்கிறாள்.

ஒரு வண்ணம் சென்று புக்கு –
இதற்கு இரண்டு படியாக அருளிச் செய்வர்கள்.
இத் தலையில் தனிமை நினையாதே போய் நிற்கையாலே, போர முதலிகளாய் இருப்பர்;
மேன்மேலெனப் பிரம்புகள் விழும்; அதனைப் பொறுத்துப் போய்ப் புகுங்கோள் என்று அருளிச் செய்வர் பட்டர்.
அன்றிக்கே,
செல்லும் வழி, நெஞ்சினைக் கொள்ளை கொள்ளும்படியான இனிமை நிறைந்திருக்கும்;
அதிலே கால் தாழாதே வருந்தி ஒருபடி சென்று புகுங்கோள் என்பது முன்புள்ள முதலிகள் நிர்வாஹம்.
“பழைய தன்மைகளை அறிந்த சுமந்திரன் ஜனங்கள் நிறைந்திருக்கின்ற அந்தப்புர வழியைக் கடந்து” என்றும்,
“பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு” என்றும் கூறுமாறு போலே.
இனிமையாலே கடந்து போக ஒண்ணாமைக்குப் பிரமாணங்கள் மூன்று காட்டுகிறார்
‘பழைய தன்மைகளை’ என்று தொடங்கி.

“ஸ: ததந்த:புரத்வாரம் ஸம தீத்ய ஜநாகுலம்
ப்ரவி விக்தாம் தத: கக்ஷ்யாம் ஆஜ காம புராணவித்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 19 : 1.
“பொன்னியலும்”மாடம் கவாடம் கடந்து புக்கு — என்பது, பெரிய திருமடல்.
ஸ்லோகத்தில் “அதீத்ய” என்னாமல், “ஸமதீத்ய” என்கையாலும்,பாசுரத்தில் “கடந்து” என்கையாலும்,
இனிமையாலே, கடந்து போகையில் உண்டான அருமை தோற்றுகிறது.
நன்றாக மலர்ந்த மலர்களை யுடைய தடாகங்களையும் தெள்ளிய தண்ணீர் நிறைந்த ஆறுகளையும் பார்த்துக் கொண்டு
காரியத்திலே நோக்குடையவர்களாய் விரைந்து போனார்கள்.” என்றது,
ஸராம்ஸி ச ஸூபுல்லாநி ந்தீஸ்ச விமலோதகா:
நிரீக்ஷமாணா ஜக்மு: தே தூதா: கார்யவஸாத் த்ருதம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 68 : 14.
வழியின் அழகில் கண் வைக்காமல் போனார்கள் என்கை. என்றது,( கேகேய தேசத்துக்கு தூதர் போனது )
“கார்யவஸாத். . .ஜக்மு:-காரியத்திற்கு வசப்பட்டவர்களாய்க் கொண்டு போனார்கள்” என்றபடி.
அப்படியே, இனிமை அளவிறந்திருக்கையாலே, இவற்றிலே கால் தாழாமல் போய்ப் புகுகை சாலப் பணியாயிருக்கும்.

எனக்கு –
பரிபவத்துக்காக உங்களுக்கு இறாய்க்கலாம்படியே நான் இருக்கிறது!
“காட்டில் அரக்கர்களால் துன்புறுத்தப்பட்ட முனிவர்கள் பலரும், ஸ்ரீராமபிரானைப் பார்த்து எங்கள்
சரீரங்களைப் பார்க்க வேண்டும், எழுந்தருள வேண்டும்” என்றது போன்றும்
“ஏஹி பஸ்ய ஸரீராணி முநீநாம் பாவிதாத்மநாம்
ஹதாநாம் ராக்ஷஸை: கோரை: பஹூநாம் பஹூதா வநே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 6 : 16.
விபீஷணன் “என்னைப் பெருமாளுக்கு அறிவியுங்கோள்” என்றது போன்றும்,
“ஸர்வ லோக ஸரண்யாய ராகவாய மஹாத்மநே
நிவேதயத மாம் க்ஷிப்ரம் விபீஷணம் உபஸ்திதம்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 17.
விரஹ நோயால் தின்னப்பட்ட தன் வடிவினைக் காட்டுகிறாள்.

என்னைக் கண்ட உங்களுக்கு இனிமையிலே நெஞ்சு செல்லுதல்,
பரிபவம் கண்டு இறாய்த்தல் செய்யலாம்படியோ இருக்கிறது. –
பிறர் காரியம் செய்வார்க்கு அவை பார்க்க ஒண்ணுமோ?

எனக்கு –
வேஷம் கண்ட போதே ஆர்த்தியும் தெரியுமே

ஒன்று உரை –
ஒரு வார்த்தை சொல்வாய்.
அன்றியே,
என்னாற்றாமையாலே சொல்லுகிறேனித்தனை,
இரு கால் மாட்டுச் சொல்லுகை மிகையாம்படி யன்றோ அவன் இருப்பது என்றுமாம்.
இனிமையாலே கால் கட்டுப்பட்டு நின்றானத்தனை; துன்புறுகின்றவர்கள் ஒரு தலையானால்,
இனிமையிலே நெஞ்சு செல்லுதல், மறுத்துச் சொல்லப் பொறுத்தல் செய்யும் விஷயமன்று கண்டாய்.

எனக்கு ஒன்று உரை –
என் இடையாட்டம் ஒன்று சொல்லுங்கோள்.

ஒண் கிளியே –
இளமையும் பேச்சும் வாயில் பழுப்பும் வடிவில் பசுமையும் அவனோடே போலியாயிருக்கையாலே உன்னைக் கண்டு
கொண்டிருக்க அமைந்திருக்க, கைப் புகுந்த உன்னையும் இழக்கப் புகுகின்றேனித்தனை யன்றோ.

செரு ஒண் பூம் பொழில் சூழ் –
செருவினை விளைவிப்பதாய் அழகிதான பூம் பொழிலாலே சூழப் பட்டிருக்கை.
அங்கு இருவராய் வாழ்கின்றவர்க்கெல்லாம் எப்பொழுதும் மாறுபட்ட எண்ணங்களாய்ச் செல்லா நிற்குமத்தனை. என்றது,
என்னைப் பாராதே பூவை அமைந்திருக்கப் பார்த்தாய், நான் பறிக்க நினைத்த பூவைப் பறித்தாய்,
அணைப்பதற்கு முன்னே உன் உடம்பு பூ நாறிற்று’ என்று இப்படிச் சீறு பாறு என்று செல்லா நிற்குமத்தனை.
அன்றிக்கே,
‘சலங்கொண்டு மலர் சொரியும்’ என்கிறபடியே,-பெரிய திருமொழி, 3. 9 : 1.
இசலி – மாறுபட்டு–என்கிறபடியே, இசலிப் பூக்கும் என்றுமாம்.

செக்கர் வேலைத் திருவண் வண்டூர்-
இள மணல் எக்கர்களிலே விழுந்த மலர்களின் தாதுக்களாலும் சுண்ணங்களாலும் சிவந்த இடங்களை யுடைத்தாயிருக்கை.
அன்றிக்கே,
கடற்கரை யாகையாலே சிவந்த மணலீட்டை யுடைத்தாயிருக்கும் என்னுதல்.
இவை எல்லாவற்றாலும் போகத்திற்குத் தகுதியான தேசம் என்பதனைத் தெரிவித்தபடி.

கரு வண்ணம் –
இத் தலையைத் தனக்கே உரியதாக எழுதிக் கொண்ட வடிவு இருக்கிறபடி.
செய்ய வாய்-
அது தான் மிகையாம்படி ‘நான் உனக்கு’ என்றாற் போலே சொல்லப் புக்கு விக்கின திருப் பவளம்.
செய்ய கண் –
அது சொல்லளவே அன்று, அக வாயிலும் உண்டு’ என்று தோற்றுகிற திருக் கண்கள்.
அக வாயில் உள்ளன வற்றிற்கெல்லாம் ஆனைத் தாள் அன்றோ திருக் கண்கள்.
செய்ய கை –
அக வாயில் உண்டான சிநேகத்தினைச் செயல் அளவாகச் செய்து காட்டுகின்ற திருக் கைகள்.
செய்ய கால் –
அவை யனைத்திற்கும் தோற்று விழும் துறை- திருவடிகள்.

செரு ஒண் சக்கரம் சங்கு –
இவ் வடிவழகை யெல்லாம் காத்து ஊட்டவற்றனவுமாய், அஸ்தாநே பய சங்கை பண்ணி யுத்தோந்முகமாய்,
கை கழியப் போய் நின்று ரக்ஷிப்பதும், கை விடாதே வாய்க் கரையிலே நின்று ரக்ஷிப்பதுமான திவ்விய ஆயுதங்கள்.
கிட்டினாரை ‘இன்னார் என்று அறியேன்’ என்று மதி மயங்கப் பண்ணுவிக்கும் திவ்விய ஆயுதங்கள் ஆதலின் ‘ஒண்’ என்கிறாள்.

இன்னார் என்றறியேன் அன்னே! ஆழியொடும்
பொன்னார் சார்ங்கமுடைய அடிகளை இன்னார் என்றறியேன்.-என்பது, பெரிய திருமொழி, 10. 10 : 9.

அடையாளம்-
திவ்விய அவயவங்களைப் போன்று திவ்விய ஆயுதங்களும் அவனுக்கே யுரிய அடையாளமாயிருக்கை.
“பெருமாளுடையவும் இளைய பெருமாளுடையவுமான அடையாளங்கள் எவையோ அவை என்னால் நன்றாகப் பார்க்கப்பட்டன;
அவற்றைக் கேட்பாயாக” என்றான் திருவடி.
“யாநி ராமஸ்ய சிஹ்நாநி லக்ஷ்மணஸ்ய ச வாநர’-என்பது, ஸ்ரீராமா. சுந். 34 : 3.

திருந்தக் கண்டு –
என்னைப் போன்று மனத்தால் அன்றிக்கே வெளிப் படையாகப் புறக் கண்களால் கண்டு.
இவ் விஷயத்தில் காட்சி யன்றோ பிரயோஜனம், அது உங்களுக்கு முற்படப் பெற்றதே என்பாள் ‘கண்டு’ என்கிறாள்.
ஸ்ரோதவ்யா –இத்யாதி -காண்கை தானே பிரயோஜனம்
பிராட்டியினுடைய காரியம் செய்தால், அவளுக்கு முன்னே பேறு இவனுக்கு முற்பட்டிருக்குமன்றோ.
“திருவடியை ஆலிங்கனம் செய்து கொண்டார்” என்பது ஸ்ரீராமாயணம்.
“பரிஷ்வங்கோ ஹநூமத:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 1 : 13.

அன்றிக்கே, திருந்தக் கண்டே –
இத் தலையில் பசலை நிறத்தைக் கண்ட நெஞ்சாறல் எல்லாம் தீரும்படி,
கலவியிலும் பிரிவிலும் ஒருபடியாயிருக்கும் வடிவைக் காணப் போகிறாய் அன்றோ என்னுதல்.
எப்பொழுதும் ஒருபடிப்பட்டதான திவ்விய மங்கள விக்கிரஹத்தை யுடையவன்” என்று சொல்லளவேயாய்ப் போகை யன்றிக்கே
அதனை அநுஷ்டான பர்யந்தமாக்கிக் கொண்டிருக்கிற வடிவைக் காண்பாய் என்றபடி

—————————————————————————

திருந்தக் கண்டு எனக்கு ஒன்றுரையாய்; ஒண் சிறு பூவாய்!
செருத்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திரு வண் வண்டூர்
பெருந் தண் தாமரைக் கண் பெரு நீண் முடி நாற்றடந்தோள்
கருந் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே.–6-1-8-

ஆதிக்ய ஸூசக லஷணங்கள்–பூவை
திருமேனி அடிகளையே-மகா மேகம் போலே -சர்வ ஸ்வாமி-நினைவை -திருவடி தன் நாமம்
திருந்தக் கண்டு எனக்கு ஒன்றுரையாய்; ஒண் சிறு பூவாய்!-வடிவில் சிறாம்பி அனுபவிக்கும் படி
செருத்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திரு வண் வண்டூர்-நாநா வித புஷ்பங்கள் -ஸ்ரமஹரமான -ஞாழல் பச்சை நிற பூ
பெருந் தண் தாமரைக் கண் பெரு நீண் முடி நாற்றடந்தோள்-விஸ்வ அதி ராஜ்ய ஸூசகம் -பணைத்த திருத் தோள்கள்
கருந் திண் மா முகில் போல்
திருமேனி அடிகளையே-ஸ்வாமியே என்றவாறு திருவடி தம் நாமம் மறந்தும் புறம்தொழா மாந்தர் –
அவர் அபிப்ராயம் ஆசைப் பட்டு உள்ள எனக்கு ஒரு வார்த்தை
கடகர் வடிவில் ஸூஹ்ருதத்வத்தையும் யதா திருஷ்ட அர்த்தவாதித்வமும் உத்தேச்யம்

அழகிய சிறிய பூவையே! செருந்தி ஞாழல் மகிழ் புன்னை இவைகளால் சூழப்பட்டுக் குளிர்ந்திருக்கின்ற திருவண் வண்டூர் என்னும்
திவ்விய தேசத்தில் எழுந்தருளி யிருக்கின்ற பெரிய குளிர்ந்த தாமரை போன்ற திருக் கண்களையும், பெரிய நீண்ட திருமுடியினையும்,
விசாலமான நான்கு திருத் தோள்களையும், திண்ணிய கரிய பெரிய மேகம் போன்ற திருமேனியினையுமுடைய சுவாமிகளை
நன்றாகக் கண்டு மீண்டு வந்து எனக்கு ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்.
பூவாய்! அடிகளைத் திருந்தக் கண்டு எனக்கு ஒன்று உரையாய் என்க. செருந்தி – வாட்கோரை. ஞாழல் – புலிநகக் கொன்றை.
மகிழ் – வகுளம். திண்ணிய கரிய முகில் என்க.

பூவைகள் சிலவற்றைக் குறித்து, மீண்டு வந்து எனக்குச் சொல்லலாம்படி நன்றாகக் கண்டு, ஒரு மறு மாற்றம் கேட்டு வந்து
சொல்ல வேண்டும் என்கிறாள். காண ஒண்ணாமைக்கு வேண்டும் காரணங்களைத் திரியவும் சொல்லி வைத்துத்
திருந்தக் காணுங்கோள் என்கிறாள் அன்றோ.

திருந்தக் கண்டு –
நான் சொன்ன அடையாளத்தில் ஒன்றும் குறையாமல் காணுங்கோள்.
உங்களுக்கு என்று காணாதே, பிறர்க்குச் சொல்லலாம்படி காணுங்கோள்.

எனக்கு –
உங்கள் சொற்கேட்டுத் தரிக்க இருக்கிற எனக்கு.

ஒன்று உரையாய் –
எனக்கு அவன் படிகள் எல்லாம் சொல்ல வேண்டா; ஒன்று சொல்ல அமையும்.
போகத்துக்கு அன்று இவள் தேடுகிறது, சத்தையை நோக்குகைக் கன்றோ பார்க்கிறது.

ஒண் –
“எவை பெருமாளுடைய அடையாளங்கள்” என்றால், உள்ளபடி யெல்லாம் சொல்ல வற்றாயிருக்கை.
“யாநி ராமஸ்ய சிஹ்நாநி லக்ஷ்மணஸ்ய ச வாநர”-என்பது, ஸ்ரீராமா. சுந். 34 : 3. என்றது,
“பெருமாளுடைய அடையாளங்கள் எவை?” என்று கேட்டால்,
“ராம: கமல பத்ராக்ஷ:” என்று தொடங்கி வரிசையாக எட்டு ஸ்லோகங்கள் திருவடி சொன்னாற் போன்று,
இதுவும் சொல்லவற்றா யிருக்கையைத் தெரிவித்தபடி.
அத் தலையைத் திருந்தக் கண்டு எனக்கு ஒன்று சொல் என்னவுமாம்.
எனக்காக ஒன்று சொல் என்னவுமாம்.

ஓன்று உரை –
மறு மாற்றம் ஓன்று சொல் /அடையாளம் ஓன்று சொல் /அவன் இடம் என் விஷயமாக ஓன்று சொல் -மூன்றும் சொன்னவாறு –
அவதாரத்தில் ஒன்றும் இங்கு இரண்டும் சொன்னபடி –
ஆக, இந்த இரண்டாலும் ஆசாரியன் வார்த்தை கேட்டுத் தரித்தல், அவன் அபிமானத்தாலே தரித்தல் ஒழிய,
வேறு ஒன்று இல்லை என்றபடி.

ஒண் சிறு பூவாய் –
உங்கள் ஒருப்பாடு கண்டேனுக்கு நான் அபேக்ஷிப்பது மிகையாயிருந்ததே!
பிறர் காரியம் செய்ய வடிவு கொண்டாற்போலே இரா நின்றதே உங்கள் முயற்சி!
கடல் கடக்கும் போது ஒரு வடிவாய்,(10 யோஜனை நீளம் 30 யோஜனை அகலமான வடிவு கொண்டு )
எதிரிகள் படை வீட்டில் புகும் போது ஒரு வடிவாய், இருக்க வேண்டாதபடி காணும்
இதனுடைய வடிவின் சிறுமை-லாகவம்- இருக்கிறபடி என்பாள் ‘சிறு பூவாய்’ என்கிறாள்.
ஒண்மை –
கண்டு கொண்டிருக்க வேண்டும் அழகு.

செருந்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திருவண் வண்டூர்-
அவன் பாடு செல்ல வேண்டாதே, போக ஸ்த்தானமே அமைந்திருக்கை–
செருந்தி -கோங்கு மரம்/ஞாழல் பசுமையான ஒரு நாள விசேஷம்
நான்கு வகைகள் நான்கு திக்கிலும் உள்ள தேசம் –
அன்றிக்கே,
வாராமை அவன் குற்றம் அன்று, நிலப் பண்பு கண்டீர் கோள் என்னுதல். என்றது,
காற்கட்டு ஒன்று இரண்டாகில் அன்றோ வரலாவது, அவை நாலு பாடும் சூழ்ந்து நிற்க அவனாலே வரப் போமோ என்றபடி.
ஒரு திக்குக்கு ஒன்றே அமைந்திருக்கிறது காணும்.

பெருந் தண் தாமரைக் கண் –
அநுபவிக்கின்றவர்கள் அளவல்லாதபடி பெருத்துச் சிரமஹரமாய், மலர்த்தி, செவ்வி, குளிர்த்தி, வாசனை
தொடக்கமானவற்றை யுடைத்தாயிருக்கை.

பெரு நீண் முடி –
உபய விபூதிகட்கும் கவித்த முடியை யுடையவன் என்னுதல்.
அன்றிக்கே,
உபய விபூதிகட்கு முடையவனாயிருத்தலுக்கு மேலே அன்றோ, அவ் வூர்க்குக் கடவனாயிருத்தல் என்னுதல்.
அன்றிக்கே,
“எந்த இராமனுக்கு அந்த ஜானகி மனைவியாக இருக்கிறாளோ அந்த இராமன் பெருமை அளவிட இயலாது” என்று கொண்டு
“அப்ரமேயம் ஹி தத்தேஜோ யஸ்ய ஸா ஜநகாத்மஜா
நத்வம் ஸமர்தஸ்தாம் ஹர்த்தும் ராம சாபாஸ்ரயாம் வநே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 37 : 108.
இவள் தன்னைத் தோற்பித்துச் சூடின முடி என்னுதல்.
(பட்டர் நிர்வாகப்படி என்னை வஞ்சித்த ஓர் அரசே )

பெரு நீள் –
பெரிய வளர்த்தி.

நால் தடம் தோள் –
அவளை அணைந்து அத்தாலே கல்பக தரு பணைத்தாற் போலே இருக்கிற திருத் தோள்கள்.
அன்றிக்கே,
நாலாய்ச் சுற்றுடைத்தாயிருக்கிற திருத் தோள்கள் என்னலுமாம்.

கரும் திண் மா முகில் போல் திருமேனி –
கறுத்துத் திண்ணியதாயிருப்பதொரு மஹா மேகம் போலே யாயிற்று வடிவு இருப்பது.
அன்றிக்கே,
சிரமத்தைப் போக்கக் கூடிய நிறத்தை யுடைத்தாய், நிலைத்திருப்பதாய் அளவிடற் கரியதான மேகம் போலே இருக்கும் வடிவு என்னுதல்.
அன்றிக்கே,
நிறமித்தனையும் கண்டீர் மேகத்துக்கு ஒப்பு, அகவாயில் திண்மை இவர்க்குத் தன்னேற்றம்.
கறுத்து அகவாய் திண்ணியதா யிருப்பதொரு மேகம் பெறலாயிற்று இவர்க்கு நேரே ஒப்பாவது என்று அருளிச் செய்வர் பட்டர்.

திருமேனி அடிகளையே –
வேறு ஒன்று சொல்ல வேண்டாதபடி வடிவு கண்ட போதே ‘இவனே இவற்றிற்கெல்லாம் கடவன்’ என்று தோற்றும்படி இருக்கை.
அன்றிக்கே,
அவ் வடிவினைப் படைத்துத் தமக்கு என்றிருக்கிற ஸ்வாமிகளை என்று பட்டர் அருளிச் செய்வர்.

—————————————————————————————-

அடிகள் கை தொழுது, அலர் மேல் அசையும் அன்னங்காள்!
விடிவை சங்கொலிக்கும் திருவண் வண்டூ ருறையும்
கடிய மாயன் தனைக் கண்ணனை நெடுமாலைக் கண்டு
கொடிய வல்வினையேன் திறம் கூறுமின்; வேறு கொண்டே.–6-1-9-

கண்ணனை நெடுமாலை-ஆஸ்ரித விஷயத்தில் அத்யந்த வ்யாமோஹம்-விலஷணமான அன்னங்காள்
அடிகள் கை தொழுது, அலர் மேல் அசையும் அன்னங்காள்!-பூக்கள் மேலே போகுமே -நித்யர் பூமியைத் தொடாதது போலே –
தூங்கு மெத்தை போலே காற்று வாக்கில்-வசத்திலே – வழக்கிலே -அசையும்
விடிவை சங்கொலிக்கும் திருவண் வண்டூ ருறையும்-விடுவுக்கு பிரகாசம் -சங்கு ஒழி -இங்கு விடிவே இல்லை -இரவே நீண்டு
கடிய மாயன் தனைக் கண்ணனை நெடுமாலைக் கண்டு-நினைத்த கார்யத்தில் -வேகமாக செய்து -எதிர் தலையிலும் முற்பாடன்-
எதிர் தலையும் அகப்படுத்தும் ஆச்சார்ய சேஷ்டிதங்கள் -பவ்யன் கண்ணன்
கொடிய வல்வினையேன் திறம் கூறுமின்; -அதி பிரபல பிராவண்யம் -கொடிய வினை -என் கார்யம்
வேறு கொண்டே–கூட்டமாக சொல்லாமல் ஏகாந்த ஸ்தலம் பிராட்டி உடன் இருக்கும் பொழுது
கடகர் ஜன்ம உத்கர்ஷம் (அலர் மேல்)-விலஷண ஸூ மனஸ்ஸூ-சம்ஸ்லேஷத்தால் வந்த செருக்கு -தோற்றும்

தாமரைப் பூவின் மேல் தங்கி யிருக்கின்ற அன்னங்களே! விடியலைக் குறிக்கின்ற சங்குகள் ஒலிக்கின்ற திருவண்வண்டூர் என்னும்
திவ்விய தேசத்தில் எழுந்தருளி யிருக்கின்ற கடிய மாயனைக் கண்ணனை நெடிய திருமாலைக் கண்டு, அவன் திருவடிகளைக் கைகூப்பி
வணங்கி, கொடிய வல்வினையேனாகிய என்னுடைய தன்மையைத் தனியே இருந்து கொண்டு கூறுங்கோள்.
அன்னங்காள்! உறையும் மாலைக் கண்டு அடிகள் கைதொழுது வினையேன் திறத்தை வேறு கொண்டு கூறுமின் என்க.
விடிவை சங்கு ஒலிக்கும் – விடியற்காலத்தைக் குறிப்பதற்காகச் சங்குகள் ஒலிக்கின்ற. அடிகள் – திருவடிகளை.

அன்னங்கள் சிலவற்றைக் குறித்து,-ந கச்சின் ந அபராத்யதி “குற்றம் செய்யாதார் யாவர்” என்பார் முன்பாகத் தனி யிடத்திலே
என் இடையாட்டத்தை அறிவியுங்கோள் என்கிறாள்

அடிகள் கை தொழுது –
திருவடிகளைக் கையாலே தொழுது. என்றது, அவனுக்கு மறுக்க ஒண்ணாத செயலைச் செய்து என்றபடி.

அடிகள் கை தொழுது கூறுமின் –
நீங்களும் பரக்கச் சொன்னீர் கோளாய், அவனும் பராக்கடித்து இருந்தானாகை யன்றிக்கே,
செவிப்படும்படி செய்து சொல்லுங்கோள்.
வரவு தாழ்த்தது என்னா, –வஸ்து வஸ்துவந்தரம்-பொருள் வேறு ஒரு பொருள் ஆகாதே யன்றோ.
வந்தேறியான காதல் குணத்திலே யன்றோ சிறிது நழுவ நிற்கலாவது, ஸ்வரூபத்தோடு சேர்ந்திருக்கிற கிருபைக்கு அழிவில்லை யன்றோ,
அது சத்தை யுள்ளதனையும் விலை செல்லுமன்றோ.

அலர் மேல் அசையும் அன்னங்காள் –
கலவியினாலே பூவிலே அசையா நின்றுள்ள அன்னங்களே!
நான் பூவினைக் காண இறாய்க்கும்படி யாயிருக்க, உங்களுக்குப் பூவிலே கால் பொருந்துகை போருமோ!
நான் தரைக் கிடை கிடக்க, உங்களுக்கு இது போகமாய்த் தலைக் கட்டுமோ?
என்னையும் மென் மலர்ப் பள்ளி பொறுப்பித்தாலன்றோ உங்களுக்கு இது போகமாவது என்பாள் ‘அலர் மேல் அசையும்’ என்கிறாள்.
உங்கள் செயலுக்கு அவனால் வாராதொழிய ஒண்ணாது.
உங்களுக்குச் சேர்த்தல்லது ஸ்வரூப சித்தியில்லை.
ஆன பின்பு, நான் இக் கிடை கிடக்கப் பிராப்தி உண்டோ? என்பாள். ‘அன்னங்காள்’ என்கிறாள்

விடிவை சங்கு ஒலிக்கும் திருவண் வண்டூர் –
புறப்பட்டவாறே சங்கின் ஒலி செவிப்படுகிறது அன்றோ. இங்குப் போலே கிடக்கிறது அன்றே அங்கு.
அங்கும் இங்குப் போலேயாகில் வாரானோ.
விடிவை-விடிவுகள் தோறும்.
பகலும் இரவுமாய்க் காணும் அவ்வூர் செல்லுகிறது என்பாள் ‘விடிவை சங்கு ஒலிக்கும் திருவண் வண்டூர்’ என்கிறாள்.
(இங்கோ நீள் இரவாய் அன்றோ நீண்டு உள்ளது சங்கு ஒலிக்க பிரஸ்துதமே இல்லையே இங்கு )
“ருதூந் பஹூந் – பல ருதுக்களை” என்கிறபடியே, காலம் கூறிட்டு அவ்வக் காலத்துக்கு அடைத்த
உபகரணங்களைக் கொண்டு காணும் அவன் அநுபவிக்கிறது;
“ராமஸ்து ஸீதயா ஸார்தம் விஜஹார பஹூந் ருதூந்
மநஸ்வீ தத் கதஸ் தஸ்யா நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித:”-என்பது, ஸ்ரீராமா. பால. 77 : 26.
இல்லையாகில் “ருதுக்களை” என்ன வேண்டாவன்றோ, “வத்ஸராந் – வருடங்களை” என்ன அமையுமன்றோ,

விடிவை சங்கு ஒலிக்கும் –
விடியாத இரவு அன்றோ இவள் இருக்கிற இடம்.

திருவண் வண்டூர் உறையும் –
விடியாத ஊரிலே என்னை வைத்தான், விடியும் ஊரிலே தான் இருந்தான்.
அவன் எந்த விடத்தில் நின்றாலும் அவ் விடம் விடியுமத்தனை அன்றோ.
“பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன்” -இரண்டாந்திருவந். 81.-அன்றோ. கடிய மாயன் தன்னை –

கண்ணனை-நெடுமாலை –
அடியார்கட்கு விரோதிகளை அழியச் செய்யுமிடத்தில் கண் பாராத ஆச்சரியத்தை யுடையவனை.
கண்ணனை-
அடியார்கட்குத் தான் கையாளாக நின்று தன்னைக் கொடுக்குமவனை.
நெடுமாலை –
இத்தனையும் செய்தாலும் ‘ஒன்றும் செய்யப் பெற்றிலோம்’ என்னும் வியாமோகத்தை யுடையவனை.

அன்றிக்கே,
கடிய மாயன் –
தன்னைப் பிரிந்தார் படும் நோவறியாத கொடுமையை யுடையவனை.
கண்ணனை நெடுமாலை –
எளிமை-காதா சித்தம்- ஒரு கால விசேஷத்தில் உள்ளது, முதன்மையே கண்டீர் பெருத்திருப்பது
இனி, எளியனானதுவும் வேண்டிச் செய்தான் அல்லன், இத்தலையை நலிகைக்காகச் செய்த
செயல் கண்டீர் என்று அருளிச் செய்வர் பட்டர்.

கொடிய வல் வினையேன் –
நாட்டார் படி அல்லாத பாபத்தைச் செய்தேன்.
அல்லாதாருடைய பாபங்கள் பகவானை அடைதலாலே போமன்றோ,
அடைதல் தான் பாதகமாம்படியான பாவத்தைச் செய்தேன்.

திறம் –
ஒரு மஹா பாரதம் அன்றோ.

வேறு கொண்டு கூறுமின் –
செவிப்படாதபடி ஓலக்கத்திலே சொல்லாமல் ஏகாந்தத்திலே சொல்லுங்கோள்.
அதாவது, அவனும் அவளுமாயிருந்த இடத்திலே சொல்லுங்கோள் என்றபடி. என்றது,
‘என் திரு மார்வற்கு என்னை’-திருவாய்மொழி, 6. 8 : 10.- என்றும்,
‘திருமாலார்க்கு என் பிழைத்தாள்’ -திருவாய். 1. 4 : 7.-என்றும்,
‘மாதரைத் தம் மார்வகத்தே வைத்தார்க்கு’ என்றும்-திருவாய். 9. 7 : 6.-அன்றோ இவர் தமக்குப் பாசுரம்.
தூது அனுப்பிய மற்ற திருவாய்மொழிகளிலும் பிராட்டி முன்னாகத் தானே என்பதால்
இங்கும் அதே போலே என்றவாறு

வேறு கொண்டே கூறுமின் –
“இளைய பெருமாள், கை கூப்பினவராய்ப் பிராட்டியின் முன்னிலையில் பெருமாளைப் பார்த்து
இந்த வார்த்தையைச் சொன்னார்” என்கிறபடியே
,ஏவம் உக்தஸ்து ராமேண லக்ஷ்மண: ஸம்யதாஞ்ஜலி:
ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸ்தம் அதம் வசநம் அப்ரவீத்”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 6.
அதனைப் பயனுடையதாகச் செய்கின்ற-ஜீவிப்பிக்கும் – அவள் சந்நிதியிலே சொல்லுங்கோள்.
நல் வார்த்தை சொல்லுவாரும் அவனுமான இடத்தே சொல்லுங்கோள்.

——————————————————————————————————–

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண் வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.–6-1-10-

அனைவரையும் ஈடு படுத்தும் ஈடு இணை இல்லா ஈடு அன்றோ
ஆஸ்ரித வ்யாமோஹ கார்யம் -விரோதி நிரசன சாமர்த்தியம் உடையவன் – தனிச் சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள் –
பிராட்டிக்காக செய்தது -கடி மா மலர் பாவை உடன் சாம்ய ஷட்கம் உண்டே நமக்கும் –
வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!-ஆறு கால்கள் -வேகமாக சென்று வியாபாரம் செய்யுமே –
அறுகால சிறு வண்டே தொழுதேன் உன்னை -பறக்குமே -கடகர் -பத்னி -புத்ரர் -திருவடிகள் நம் தலையில் முழுவதும் கொள்ளலாமே –
தூது விடும் பிரகரணத்தில் -தூது விடுவதில் இது தானே கடைசி பாசுரம் –
வெறி -வாசனை -முக்தனுக்கு ப்ரஹ்ம கந்த பிராப்தி போலே -வெறியை உடைய இல்லை வாசனையே வண்டானதே-
ப்ரஹ்ம கந்த ப்ரவசதி -அமரர் சென்னிப் பூ -திருவடித் தாமரைகள் -அப்ராக்ருதமான -சர்வ கந்தம் -அபரிமித கல்யாண குணங்கள்
இவனுக்கும் உண்டே -கந்தமே புது உரு போலே திவ்ய மங்கள விக்ரகம் கொள்வானே –
அப்ருதக் சித்த விசேஷணம் தானே -அதே போலே இங்கும் பரிமளம் சேர்த்து பிடித்த வண்டு

உம்மை வேறு கொண்டு -கொக்கு பூவை போலே இல்லாமல் -இதர பறவைகள் போல் இல்லாமல் -சஜாதீய புத்தி பண்ணாமல்-
விஜாதீயன் என்று அறிந்து -70 வெள்ளம் வானர முதலிகள் திருவடி இடம் கனையாழி போலே
வேறு கொண்டு-10 அர்த்தங்கள் ஈட்டில் உண்டே -உத்தேச்யன் பக்கல் பண்ணும் பிரார்த்தனையை அவனை சேர்த்து தரும் உங்கள் இடம்
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண் வண்டூர்-விரஜை நீர் பரம பதம் போலே -ரஜஸ் தமஸ் -வி ரஜஸ் போலே தேர்ச்சி உள்ள நீர் -வடகரையில்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த-எதிரே இல்லாத -கொண்டாட்டம் ராவணன் -நினைவே தானே அழிவுக்கு காரணம்
ராஷச ஜன்மம் -சதுர மா மதிள் சூழ் -அரணாக -கிரி துர்க்கம்–கிரி ஜல வன கல் துர்க்கங்கள் -அழித்து –
அத்தாலே கிருத கிருத்யனாக உகந்து -செய்த வேள்வியர் போல் உகந்து –
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே-உளன் என்றும் பாட பேதம் –
ஏறு-அனுகூல பிரதி கூல விபாகம் இல்லாத -செழிப்பு -அங்கதன் வாலி சுக்ரீவன் -சம்பிரதிபன்னன் —
சேவகம் வீர தீர பராக்கிரமம் -கீர்த்திமை பாடிப் போய்-செல்வமும் சேவகமும் -பல்லாண்டு பாடும் படியும் –
உளள்-அடையப் படாமல் பராங்குச நாயகியும் -என்னையும் -சீதை உளள் என்று கிருத க்ருத்யராய் இருப்பார்க்கு – இவளும் ஒருத்தி –
இதுக்கு முன்பு சத்தை யுடன் -உளள் பூர்வ பஷம் இளள் -சத்தை உடன் -அவர் இருப்பதால் இவள் இருப்பாள் -மாயா சிரஸ்-
இன்றியாமை காரணம் -ஸ்வா பாவம் -ரஷிக்க வேண்டியவர்களில் ஒருத்தி உண்டே -இரண்டு நிர்வாகங்கள் –
கடகர் பகவத் அனுபவ பிரதையால்-யஜஸ் – சௌரப்யம் வாசனை வெறி தேஜஸ் அறிவிக்கிறார்
யசஸ்ஸூ ஸுவ் ரப்யம் -பகவத் அனுபவத்தால் தேஜஸ்ஸூ உஜ்ஜ்வல்யம் ஆகவுமாம்

வாசனை மிக்க கூட்டமான வண்டுகளே! உங்களைத் தனியாக அழைத்து யான் இரக்கின்றேன்; தெளிந்த தண்ணீரை யுடைய பம்பை நதியின்
வடகரையிலே யுள்ள திருவண் வண்டூர் என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி யிருக்கின்ற, போரைச் செய்கின்ற எதிர் இல்லாத அரக்கனாகிய
இராவணனுடைய மதிள்கள் தூசி பரக்கும்படியாக அழித்து மனமகிழ்ந்த ஏறு சேவகனார்க்கு ‘யானும் இருக்கின்றேன்’ என்றாள் என்று சொல்லுங்கோள்.
வண்டினங்காள்! யான் உம்மை வேறு கொண்டு இரந்தேன், செற்று உகந்த திருவண் வண்டூர் ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்கள் என்க.
வெறி – வாசனை. சேவகன் – வீரன்.

“சில வண்டுகளைக் குறித்து, அவர் இத் தலையில் சத்தையும் இல்லை என்று இருப்பர்,
அவளும் உளள் என்று சொல்லுங்கோள் என்று சொல்லுகிறாள்” என்று ஆள வந்தார் அருளிச் செய்வர்.
“இத் தலை இல்லையாகில் அத் தலை உண்டாகக் கூடாது; ‘பெண் பிறந்தார் காரியம் எல்லாம் செய்தோம்’ என்று
கிருதக் கிருத்யராயிருக்குமவர்க்கு, ரக்ஷ்ய வர்க்கத்திலே நானும் ஒருத்தி உண்டு என்று சொல்லுங்கோள்” என்று
எம்பெருமானார் அருளிச் செய்வர்.

பின்னை கொல் நில மா மகள் கொல் -இத்யாதி அன்றோ இவள் -உண்டாய் இருக்கிறாள் -வெறுமனே சொல்லக் கூடாதே
இல்லை என்று நினைத்து இருப்பான் -என்னையும் -உம்மைத் தொகை –
மணி மாமை குறையிலனே-நிறம் தொடக்கமானவை இல்லாதவோ பாதி
சத்தையும் இல்லை என்று நினைத்து இருப்பான் –உளள் வார்த்தைக்கு சுவாரஸ்யம் பிள்ளான் நிர்வாகம்
ஏறு சேவகனார்க்கு-வார்த்தைகளுக்கும் சுவாரஸ்யம் -வைத்து எம்பெருமானார் நிர்வாகம் –

வேறு கொண்டு –
திக்குகள் தோறும் முதலிகளைப் போக விடா நிற்கச் செய்தே திருவடி கையில் திருவாழி மோதிரம் கொடுத்து விட்டது போலே காணும்.
வேறு கொண்டு –
வேறாகக் கொண்டு. அதாவது, மற்றைய பறவைகளைக் காட்டிலும், வண்டுகள் காரியம் செய்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்தவை
என்று நிச்சயித்து என்றபடி.
அதனைத் திருஷ்டாந்த மூலம் அருளிச்செய்கிறார் ‘திக்குகள் தோறும்’ என்று தொடங்கி.

ஆண்டு கடந்தப் புறத்து மெப்புறத்து மொரு திங்கள் அவதி யாகத்
தேண்டி இவண் வந்தடைதிர் விடைகோடிர் கடிதென்னச் செப்பும் வேலை
நீண்டவனு மாருதியை நிறை யருளால் முகநோக்கி நீதி வல்லோய்!
காண்டி எனிற் குறிகேட்டி என வேறு கொண்டிருந்து கழற லுற்றான்.

இனைய வாறுரை செயா இனிதின் ஏகுதி எனா
வனையுமா மணி நன்மோதிர மளித் தறிஞ!நின்
வினையெலா முடிகெனா விடை கொடுத் துதவலும்
புனையும் வார் கழலினான் அருளொடும் போயினான்.-என்பன, கம். கிட். நாட. 32. 71.

சுக்கிரீவ மஹாராஜர் அநுமாரிடத்தில் விசேஷமாகச் சமாசாரத்தைச் சொன்னார்”
“விசேஷேண து ஸூக்ரீவோ ஹநூமதி அர்த்தம் உக்தவாந்”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 44 : 1. என்றாற்போலே.

உம்மை-
இரந்தார்களுடைய காரியங்களைச் செய்தன்றி நிற்க மாட்டாத உங்களை.

யான் –
அவனுடைய முதல் இரப்புப் போலே காணும் இவளதும்.
அன்றிக்கே,
யான் இரந்தேன் –
அவன் தான் இரக்க இருக்குமவளன்றோ இரக்கிறாள் என்னுதல்.
இவள் பக்கலிலே தாழ நிற்பான் அவனாயிற்று.
லோக நாதன் சுக்ரீவன் நாதன் இச்சதி போலே-

நன்று; இவற்றை
வேறு கொண்டு இரக்க வேண்டுவான் என்? என்னில்,
அவற்றினும் இவை பல கால்களை யுடையன ஆகையாலே. இன்னம் ஒன்று,
சபைக்கு அஞ்ச வேண்டாதே வளையத்தே இருந்து வார்த்தை சொல்லவும் வல்லனவே யன்றோ –
சதஸ் கண்டு பயம் இல்லை -மாலை புஷ்பம் தேனை உண்டே பேசலாமே -அந்தரங்க பூதை போலே –
வண்டே கரியாக வந்தானே திருப் புல்லாணி –
அன்றிக்கே.
“தேன் உண்ணும் வண்டே போல் பங்கிகள்”-பெரியாழ்வார் திருமொழி,-1. 8 : 2- என்றும்
அவனுக்குத் தலையான திருஷ்டாந்தமாகவும் சொல்லுவது இவற்றை அன்றோ.

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன் –
நம் ஆசாரியர்கள் வியாபக மந்திரங்கள் மூன்றிலும் -(சார தமமான திருமந்திர விவரணமான)-துவயத்தையே ஆதரிக்குமாறு போலே.
இவை தாம் ஆறு பதங்களை யுடையன வன்றோ.
வேத சார உபநிஷத் சார தர அநுவாக சார தம காயத்ரியில் முதல் ஓதுகிற பொருள் முடிவான சுருக்கித்
தெய்வ வண்டாய் அன்னமாய் அமுதம் கொண்டவன் -திரு மந்திர விவரணம் தானே த்வயம் –
அதனால் இத்தையே ஆதரிப்பார்கள் என்றபடி –

வெறி வண்டு இனங்காள் –
உங்களுக்கு என் காரியம் செய்தல்லது நிற்க ஒண்ணாதா யிருந்தது.
கலவியால் உண்டான வேறுபாடு அடங்கலும் வடிவிலே தோன்றும்படி யாயிருந்தது.
வெறி –
வாசனை. வாசனையை யுடைத்தா யிருக்கை.
தனித்துப் போனாலும் வழிக்குப் பாதேயம் போந்திருந்ததே! என்றது, உடம்பை மோந்து கொண்டு போக
அமைந்து காணும் இருக்கிறது என்றபடி.
இவை தமக்குப் பிரிவு இல்லை என்பாள் ‘இனங்காள்’ என்கிறாள்.
“ஸர்வ கந்த:” என்ற விஷயத்தோடே அணைந்த இவளுக்கு இவற்றின் பரிமளம் கண்டு ஆச்சரியப் படும்படி காணும்
வாசனையும் கூட மறந்தபடி.

தேறு நீர்ப் பம்பை –
இவ்வூரின் எல்லையைக் கழிந்தவாறே தெளிந்த பொருள்களையும் காண்கின்றீர்கோள் அன்றோ.
இவள் இருந்த இடத்தில் அடையக் கலங்கி யன்றோ கிடக்கிறது.
உபதப்தோதகா: நத்ய: பல்வலாநி ஸராம்ஸி ச
பரிஸு ஷ்க பலாஸாநி வநாநி உபவநாநி ச”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 59 : 5.
“உபதப்தோதகாநத்ய: – மிகுந்த கொதிப்பை யடைந்தன நதிகள்”.
‘தாபார்த்தனுக்கு நீரிலே விழுந்தால் தாபம் ஆறும்’ என்னும்
இவ் வாசனையைக் கொண்டு, ‘இராமனைப் பிரிந்த பிரிவிற்கும் இது பரிஹாரமாமோ’ என்று
தண்ணீரிலே விழுவதாகக் கொண்டு செல்ல, கரையிலுங்கூடக் கிட்ட அரிதாயிருந்தது.
நிலை நீர்கள் தாம் குளிரவற்றோ என்று பார்த்தார்கள், அவையும் அப்படியே இருந்தன.
“பல்வலாநி ஸராம்ஸிச – சிறு குழிகளோடு பெருங்குளங்களும்”.
தப்த குண்டம் போலே சரயுவும் பம்பை ஆறும் கொதித்து அன்றோ உள்ளது -கரையும் கொதிக்க –
வடபாலையும் -திவ்ய தேசமும் -சின்ன குளங்களும் கொதிக்க என்றவாறு -விரஹ தாபம் –
மரங்களோடு வசிஷ்டர் முதலானவர்களோடு வாசியற அழியுமாறு போலே
இப்படியே யன்றோ இவள் இருக்கிற இடம்.

வட பாலைத் திருவண் வண்டூர் –
ஊரும் ஆறும் இன்ன இடத்திலே என்னுமிடம் நெஞ்சிலே பட்டுக் கிடக்கிறது காணும் இவளுக்கு.
வட பால் – வட திசை. கடலுக்குத் தென் பால் இருக்கிற பிராட்டியைப் போலே யாயிற்று இவள் இருக்கிற இருப்பு.

மாறு இல் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்று உகந்த –
அறிவிப்பார் தாழ்வே; பின்பு விரோதி என்று கிடப்பது ஒன்று இல்லை.
வீரப்பாட்டுக்குத் தலையான சக்கரவர்த்தித் திருமகனார் ‘நமக்கு இவன் எதிரியாகப் போரும்’ என்று
மதிக்கும்படியாகப் பிறந்த பையல்
வரத்தின் வலிமை தோள் வலிமை இவைகளாலே எதிர் இல்லாத போரை யுடைய இராவணனையும்,
அவனுக்கு அரணாக இட்ட மதிளையும் துகளாம்படி அழியச் செய்து மகிழ்ச்சி கொண்டவராய் இருக்கிற.

ஏறு சேவகனார்க்கு –
வரவு சிறிது தாழ்த்தது என்னா, எதிரிகள் மதித்து மேலெழுத்திட்ட வீரப்பாட்டுக்குக் குறை சொல்ல ஒண்ணாதே அன்றோ.
“தேரிலிருந்து அதனை ஓட்டுவதிலும் பகைவர்கள் புகழும்படியான வீரத்தை யுடையவர்” என்று

“கஜஸ்கந்தே அஸ்வ ப்ருஷ்டேச ரதசர்யாஸு ஸம்மத:
தநுர் வேதேச நிரத: பித்ரு ஸுச்ரூஷணேரத:”- என்பது, ஸ்ரீராம. பால. 18 : 26. வீரர்கள் கொண்டாடின வீரம் அன்றோ.

என்னையும் உளள் என்மின்கள் –
இன்னமும் நோவு படுகிறார் உண்டு என்று சொல்லுங்கோள்.
இதற்கு, “‘இத் தலையைப் பிரிந்தாரில் இருப்பார் இல்லை’ என்று இருக்கையாலே வாராது ஒழிந்தார் அத்தனை;
இத் தலையில் சத்தை உள்ளமையை அறிவியுங்கோள்” என்று
ஆளவந்தார் அருளிச் செய்தாராகத் திருமாலை யாண்டான் பணிப்பர்.

இதனை, எம்பெருமானார் கேட்டருளி, “அழகிது ஆகிலும், இன்றியமையாமை என்று தமிழரது ஒரு பிரவாதம் உண்டு;
அதாகிறது, ஒரு தலை உண்டானால் ஒரு தலை இன்றிக்கே இராது;
இரண்டு தலையும் உண்டாதல், இரண்டு தலையும் இன்றிக்கே ஒழிதல் இத்தனை யாயிற்று.
அதில், தாம் உளராகையால் இத் தலையும் உண்டு என்கை நிச்சிதம்;
ஆன பின்பு, பிரதி கூலித்தாரைக் கிழங்கு எடுத்துப் பொகட்டு அநுகூலித்தார் தலையிலே முடியை வைத்துக் கிருதக்கிருத்யராய்,
‘இனிச் செய்ய வேண்டிய குறை ஒன்றும் இல்லையே –

வண்டுகள் குறித்து இத்தலையில் சத்தை இன்றி இருப்பார் உளள் ஒருத்தி நானும்
ஒருத்தி என்று சொல்ல -பிள்ளான் நிர்வாஹம்
இத்தலை இல்லை என்றால் அத்தலையும் இல்லையே யாகில் ரஷய வர்க்கத்தில்
நானும் உண்டு எம்பெருமானார் நிர்வாஹம்

——————————————————————————————

மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட
வன் கள்வ னடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திரு வண் வண்டூர்க்கு
இன் கொள் பாடல் வல்லார் மதனர்; மின்னிடை யவர்க்கே.–6-1-11-

ஸ்புரது ஸ்வ பாவர் -ஔஜ்வல்யம் உள்ள -பாகவதர் உகப்புக்கு ஆளாவார் -பலம்
மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட-வாமன அவதாரம் சொல்லி -பூணல் –
மின்னிடை மடவார் வரப் போவதை பொசிந்து காட்டுகிறார் -தேஜஸ் மிக்கு -அனந்யார்ஹம் ஆக்கிக் கொண்ட
வன் கள்வ னடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன-வன்மை -கொடுப்பார் மகாபலி –வாங்கிக் கொண்ட இந்த்ரன் –
நாட்டார் வாசி அற -இசையும் படி -பிரபலமான கள்வன் மேல் ஆதாரம் -பண்ணும் படி –திருவடிகள் விஷயமாக
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திரு வண் வண்டூர்க்கு
பண்கள் இயலை தனக்குள் ஆக்கிக் கொள்ளும் படி -இசை தான் வெளியில் இருக்கும் படி –
இன் கொள் பாடல் வல்லார் மதனர்; மின்னிடை யவர்க்கே-காமினி காமுகர் விரும்புவது போலே
ஸ்ரீ வைஷ்ணவர்களால் ஆதரிக்கப் படுவர் –
இனிமையான பாடலை அப்யசிக்க வல்லார் -மதன ஹேது ஆவார் –
பிரமாண சரீரத்தில் திரு மந்த்ரம் -மத்யம அவஸ்தை நமஸ் -அனன்யார்ஹ சரணத்வம் அறிந்த வைஷ்ணவர்கள் ஔஜ்வல்யம் –

ஒளி பொருந்திய பூணுநூல் சேர்ந்த வாமனனாகி, அகன்ற உலகத்தை யெல்லாம் கொண்ட கொடிய கள்வனாகிய
சர்வேசுவரனுடைய திருவடிகளின் மேலே, திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபராலே அருளிச் செய்யப்பட்ட
பண்களோடு கூடிய ஆயிரம் திருப் பாசுரங்களுள், இனிமையைக் கொண்ட பாசுரங்களாகிய இவை பத்தும் திருவண் வண்டூர்க்கு ஆம்;
இவற்றை வல்லார் மின்னல் போன்ற இடையை யுடைய பெண்களுக்கு மன்மதனைப் போன்றவர் ஆவர்.
சடகோபன் சொன்ன இன் கொள் பாடல் இவை பத்தும் திருவண்வண்டூர்க்கு; (இவை) வல்லார் மின்னிடை மடவார்க்கு மதனர் என்க.
குறளாய் ஞாலம் கொண்ட கள்வன் என்க.
பிராமண சரீரத்தில் மத்யம நமஸ் -அநந்யார்ஹத்வம் அறிந்த தேஜஸ் -மிக்கவர்களை -இடையவர்கள் இது தான் மின்னல் –
அவர்களுக்கு -ஹர்ஷ ஹேதுவாய் -ஆனந்தம் கொடுப்பவர்கள் ஆவோம் -பலம்

இத் திருவாய்மொழி வல்லவர்கள், காமினிகளுக்குக் காமுகர் இனிய பொருளாயிருக்குமாறு போலே,
சர்வேஸ்வரனுக்கு விரும்பத் தக்க பொருளாவர் என்கிறார்.

மின் கொள் சேர் புரி நூல் குறளாய்-
மின்னை வென்று, நீல நிறம் பொருந்திய திருமேனிக்குப் பரபாகமான சேர்த்தியை யுடைய பூணுநூலைத் தரித்த ஸ்ரீவாமனனாய்.
இப்போது இது சொல்லுகிறது, மஹாபலி எல்லாச் செல்வத்தையும் கொடுக்கும்படி பணிவுள்ள
வேஷத்தோடே போய்ப் புக்க படியைத் தெரிவிப்பதற்கு.
“பகற்கண்டேன்” என்கிற தோற்றரவுக்குக் கிழக்கு வெளுக்கிறபடி. -அருணோதயம் -வந்த பின்பு தானே சூர்யோதயம் —
தூது விடுகைக்குக் கூடச் சக்தன் அல்லாமை தோற்ற இரப்பாளனாய்,
இத் தலையைப் பிரிந்து வந்த சிறாம்புதல் எல்லாம் வடிவிலே தோற்ற நின்றபடி. -த்ரௌபதி -ஸ்ரீ கிருஷ்ணன் நிலைகள் போலே
கதவு அடைத்து தள்ளின நிலையிலும் தூது விட சக்தன் இல்லாமல் தானே வருந்தி வடிவில் சிறுத்து என்றபடி –

அகல் ஞாலம் கொண்ட வன் கள்வன் அடி மேல்-
பூமிப் பரப்பு அடங்கலும் அவனுக்கு ஒன்றும் தொங்காதபடி அபஹரித்த மஹாவஞ்சகன் திருவடிகளிலே.

மின்னிடை மடவார்க்குக் கிழக்கு வெளுக்கிறபடி. –அருணோதயம் -வந்த பின்பு தானே சூர்யோதயம் –
அதாவது மஹாபலியினுடைய செருக்கினைப் போக்கி ஒன்று ஒழியாமல் கைக் கொண்டாற்போலே,
பிரணய ரோஷத்தாலே வந்த இவளுடைய அபிமானத்தைப் போக்கிச் சேர விட்டுக் கொண்டபடி.
எதிரியாய் வந்தவனுடைய செருக்கினைப் போக்கினாற் போலே அன்று, காதலியுடைய மானம்.
அது அழிக்கலாம், இது அழிக்க ஒண்ணாதே.
விஷயமில்லாமலே கோபிக்கின்றவர்கள் இலக்குப் பெற்றால் மிகைப்பர்களத்தனை யன்றோ.
அவன் சந்நிதியிலும் அழியாதது ஒன்றே யன்றோ இது.

பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவண் வண்டூர்க்கு –
‘ஈழம் பிரம்பு கொண்டது’ என்னுமாறு போலே பண்ணே மிக்கிருத்தலின் ‘பண் கொள் ஆயிரம்’ என்கிறது.
தீப விசேஷங்கள் முழுவதும் தென்ன மரம் போலே -பண்கள் இயலை தங்களுக்கு உள்ளே கொண்டதே –
‘ஈழம் பிரம்பு கொண்டது–தீப விசேஷம் -நிறைய தென்னை மரம் வளர்ந்து மறைத்தது போலே என்றவாறு –

இன் கொள் பாடல் வல்லார் –
இனிதான பாடல் வல்லார். இதற்குப் பலம் சொல்ல வேண்டா காணும்; இதனையே இனிதாகச் சொல்ல அமையும்.

மின்னிடை மடவார்க்கு மதனர் –
காமினிகளுக்குக் காமுகர் எவ்வளவு, ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அவ்வளவு ஆவர் இதனைக் கற்க வல்லவர்கள்.
இங்ஙன் அன்றாகில், “பல நீ காட்டிப் படுப்பாயோ”-திருவாய். 6. 9 : 9.-,
“புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ” -திருவாய். 6. 9 : 8.-என்று சொல்லுகிற இவர்
பெண்களுக்கு இனியராவர் என்கிறாரன்றே. ஆதலால், காமினிகளுக்குக் காமுகரைப் போலே
அபிமத விஷயத்திற்கு இனியராவர் என்கிறார்.

திருவடியைச் சொல்லப் புக்குத் தாமரையைச் சொல்லா நின்றதன்றோ.
“தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே” (6. 9 : 9.)
ஸர்வதா சத்ருசம்-எல்லா வகையிலும் ஒத்திருப்பனவற்றிற்கு உபமானத்தையே சொல்லக் கடவது.-
தாமரை யன்ன பொன்னார் அடி –
‘அது போல’ என்றும், ‘அது தான்’ என்றும் சொல்லக் கடவதாயிருக்கும்.

———————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தீஷை ஆதிதி ஷட்ஷ்ட சாதக ஸ்ய
அதீத ஆர்த்தி நாரீ சமாதி அதிகம்ய
நிஜாம் அவஸ்தாம் அர்ச்சா ஹரிம் கம
பஷி ஆபன்ன ரஷண அபோதயத் –

தீஷை -விரதம் கொண்ட பெருமாள்
ஆதிதி ஷட்ஷ்ட சாதக ஸ்ய–ஆறாம் பத்து முதலில்
ஆர்த்தி -அதீத ஆர்த்தி -ப்ரஹ்மாஸ்திரமே பலிக்காததால் நான்கு சரணாகதியும் பலிக்காததால் வந்த ஆர்த்தி
நாரீ சமாதி அதிகம்ய -நாயிகா பாவனை பெற்று
நிஜாம் அவஸ்தாம் -மணி வல்லி பேச்சு வந்தேறி அல்ல
அர்ச்சா ஹரிம் -திருவண்வண்டூர் பெருமாள்
கம பஷி ஆபன்ன ரஷண அபோதயத் -ஆபத்து ரஷக தீக்ஷை உணர்த்தத் சொல்லித் தூது

———————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

சடஜித் தேசிகத் த்வார கம்யம் சக்ரித்வாத் ஸ்வாமி பாவாத்
விபூதி சஹிதயா பிம்ப த்ருஸ்யாத்வதாத் அதி ஸ்யாமாத்யா காந்த்யா
த்ருதர் துளசிதயா நிர் ஜரை ஈஸ பாவாத் ரக்த ஆசாபாத் அங்கரி பாத்
த்ருத மகுட தயா ஆச்சர்ய சர்யா விசேஷம் லங்காத் த்வம்சாத்–

சடஜித்-தேசிகத் த்வார கம்யம்–ஆச்சார்யர் மூலமாக பற்ற வேண்டும் என்பதைப் பேச

1-சக்ரித்வாத்–கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு–

2-ஸ்வாமி பாவாத் விபூதி சஹிதயா-நாதன் ஞாலமெல்லாம் உண்ட நம் பெருமானைக் கண்டு பாதம் கை தொழுது பணியீர்

3–பிம்ப த்ருஸ்யாத்வதாத்–கறங்கு சக்கரக் கைக் கனி வாய்ப் பெருமானைக் கண்டு–

4-அதி ஸ்யாமாத்யா காந்த்யா–கடலின் மேனிப் பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு–

5-த்ருதர் துளசிதயா–புணர்த்த பூந்தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு-

6-நிர் ஜரை ஈஸ பாவாத் –ஆற்றல் ஆழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு-மாற்றம் கொண்டருளீர்

7-ரக்த ஆசாபாத் அங்கரி பாத்–கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே

8–த்ருத மகுட தயா–பெரு நீண் முடி நாற்றடந்தோள் கருந் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே-

9–ஆச்சர்ய சர்யா விசேஷம்–கடிய மாயன் தனைக் கண்ணனை நெடுமாலைக் கண்டு கொடிய வல்வினையேன் திறம் கூறுமின்;

10-லங்காத் த்வம்சாத்–மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த–ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே

—————

ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –

அநாதி அந்த ஆனந்த ஸ்வ ரஸ கருணா கண்ட ஜெனித
ப்ரேனோ துர் வியாபார பிரபதன விபாகார்ஹ உதித
தம் ஆச்சார்யோ பஜனம் சிர விரஹித ஸ்வாத மகதன
ஸ்ப்ருஹ அசக்திம் சஷ்டே முனிர சரணோ யாதி சரணம் —13-

ஸ்வ பாவிக கிருபையை ஐந்தாம் பத்தில் அருளிச் செய்து
இசைவித்து தன் தாளிணைக் கீழ் இருத்தும்
அவன் ஸ்வ பாவத்தை ஆறாம் பத்தில் அருளிச் செய்கிறார் –
சரணாகத ரஷக வைபவம் அருளிச் செய்கிறார் –
ஆதி மத்திய அந்த ரஹிதன்
அநாதி
ருசி ஜனகன்
ஸ்வ ரஸ கருணா கந்த ஜனகன்
சிர விரஹித ஸ்வாத மகதன ஸ்ப்ருஹ அசக்திம்-க்ஷண காலம் விரஹமும் ஸஹிக்க ஒட்டாமல் –
கிருபையால் ஆச்சார்யர்கள் இடம் நம்மை சேர்த்து அருளுகிறான்

—————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 51-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில்-ஆற்றாமையாலே தூது விடுகிற ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
அடி விடாமல்-நோற்ற நாலிலும் அமோகமாய் இருக்கிற சரண வரணம் ஆகிற ப்ரஹ்மாஸ்திரம்
பண்ணி இருக்கச் செய்தேயும்
அவன் ஜகத் ரஷண ஹேதுவாக கார்யம் செய்யாது ஒழிய
அத்தாலே-தம் அபேஷிதம் கிடையாமையாலே
மிகவும் தளர்ந்து-ஆர்த்த ரஷணத்தில் தீஷித்து இருக்கிறவன் ஆகையாலே நம் ஆர்த்தியை அறிவிக்கவே
தப்பாமல் நம் கார்யம் செய்யும்
(பம்பை உத்தர தேசம் ரக்ஷண ஸ்தைர்யம்-அறிவித்த குணம் )
ஸ்ரீ திரு வண் வண்டூரில் ஐஸ்வர்யத்தில் கால் தாழ்ந்து நம்மை மறந்தான் இத்தனை -என்று அனுசந்தித்து
கடகரை இட்டு
நத்யஜேயம் -என்ற ஸ்ரீ தசரதாத் மஜனுக்கு தம் தசையை அறிவித்துச் சொல்லுகிறபடியை
ஸ்ரீ நாயகன் வரும் அளவும் கண்டு ஆறி இருக்க மாட்டாமல் ஆற்றாமையாலே ஸ்ரீ நாயகனைக் குறித்து
தூது விடுகிற ஸ்ரீ நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிற
வைகல் பூம் கழி வாயில் அர்த்தத்தை-வைகல் திரு வண் வண்டூர் -என்று தொடங்கி
அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————–

வைகல் திரு வண் வண்டூர் வைகும் ராமனுக்கு என்
செய்கை தனைப் புள்ளினங்காள் செப்புமின் -கை கழிந்த
காதலுடன் தூது விடும் காரி மாறன் கழலே
மேதினியீர் நீர் வணங்குமின் —51-

————————————————-

வியாக்யானம்–

வைகல் திரு வண் வண்டூர் வைகும் ராமனுக்கு –
தேறு நீர் பம்பை வடபாலைத் திரு வண் வண்டூர்
மாறில் போரரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார் -என்றத்தை நினைக்கிறது
இரண்டாம் தூதுக்கு விஷயம் ஸ்ரீ விபவம் இறே
வ்யவசாயஞ்ஞர் ரஷண ஸ்தைர்யம் பம்போத்தர தேசஸ்தம் –என்றார் இறே நாயனார்-
ஸ்ரீ திரு வண் வண்டூரிலே பிற்பட்டாரை ரஷிக்கைக்கு சர்வ காலமும் நித்ய வாசம் பண்ணுகிற
ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனுக்கு
ஜனக குல சுந்தரி ஜீவந்தீம் யதி-என்று ஆள் விட்டதும்
பம்பா பரிசர பர்வதத்திலே வர்த்திக்கிறவரைக் குறித்து ஆயிற்று –
(கிஷ்கிந்தை -மால்யவான் பம்பை வடபாலை தானே)
ஸ்தைர்யம் ஹிமவான் போலே -ஸ்ரீ ராமன் – உத்தர -கிஷ்கந்தை -அங்கு ஸ்ரீ சீதை ஆள் விட்டாள்

என் செய்கை தனைப் புள்ளினங்காள் செப்புமின் –
என் தசையைப் பஷ பாதம் உடையவர்களே தாழாமல் சொல்லும் என
(சிஷ்யர் மேல் பஷ பாதிக்கும் ஆச்சார்யர்கள் )
அதாவது –
குருகினங்காள் -வினையாட்டியேன் காதன்மையைக் கைகள் கூப்பிச் சொல்லீர் -என்றும்
பாதம் கை தொழுது பணியீர் அடியேன் திறமே -என்றும்
திறங்களாகி எங்கும் செய்கலூடுழல் புள்ளினங்காள் -அடியேன் இடரை இறங்கி நீர் தொழுது பணியீர் -என்றும்
மட வன்னங்காள் உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே -என்றும்
உடன் மேயு மட வன்னங்காள் -அடியேனுக்கும் போற்றுமினே -என்றும்
புன்னை மேலுறை பூங்குயில்காள் மாற்றம் கொண்டு அருளி உரையீர் மையல் தீர்வது ஒரு வண்ணமே -என்றும்
அடையாளம் திருந்தக் கண்டு எனக்கு ஓன்று யுரை ஒண் கிளியே -என்றும்
கரும் திண் மா முகில் போல் திருவடிகளை –திருந்தக் கண்டு எனக்கு ஓன்று உரையாய் ஒண் சிறு பூவாய் -என்றும்
அடிகள் கை தொழுது அலர் மேல் அசையும் அன்னங்காள் கொடிய வல் வினையேன் திறம் கூறுமின் வேறு கொண்டே -என்றும்
இப் புடைகளிலே அத்யார்த்தியை அனைவருக்கும் அறிவித்தவை -என்கை –

கை கழிந்த காதலுடன் தூது விடும் –
என்னையும் உளன் என்மின்களே -என்று தாம் வந்து நோக்கா விடில் சத்தை இல்லை –
இப்போது வந்து நோக்குகைக்கு ஈடான சத்தா மாத்ரமும் கிடக்கிறது என்னுங்கோள் என்கையாலே
கை கழிந்த காதல் உடன் தூது விட்ட படி இது வாயிற்று —

காதலுடன் தூது விடும் காரி மாறன் கழலே மேதினியீர் நீர் வணங்குமின் –
ஆற்றாமையோடு தம் பேற்றுக்கு கடகரை அர்த்திக்கிற ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை
உங்கள் பேற்றுக்கு பூமியில் உண்டானவர்களே நீங்கள் வணங்கி வழி படுங்கோள்
அவர் -மாநிலத்து எவ் உயர்க்கும் சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் –என்னுமா போலே
இவரும் இருந்ததே குடியாக உபதேசிக்கிறார் –

———————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-