சூரணை-39-
இனிமேல் –சந்தங்கள் ஆயிரம்-திருவாய்-10-9-11- –என்று
திருவாய் மொழிக்கு சொன்ன வேதத்வத்தை சாதிக்கக் கோலி
பிரதமம் ஏவம் விதமாய் இருப்பதொரு வேதம் உண்டோ
என்கிற சங்கைக்கு பரிஹாரம் பண்ணுகிறார் மேல்-
எவ்வுலகத்து
எவ்வெவையும்
என்கையாலே
வேதம் பஹு விதம்-
அதாவது
ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வவையும் -திருவாய்-3-1-6–என்கையாலே வேதம் ஆனது
அத்யேதாக்கள் உடைய பேதத்தாலும் ,லோக பேதத்தாலும்
பஹுவிதமாய் இருக்கும் என்கை ..
ஆகையால் அதிலே இதுவும் ஒரு விதம் என்ற கருத்து-
———————————————————–
சூரணை -40-
ஆனால் ஏக பாஷையாய் இருக்க வேண்டாவோ ?
சம்ஸ்க்ருதமும் த்ராவிடமுமாய் அன்யோன்யம் பேதித்து இரா நின்றதீ என்ன சொல்லுகிறது மேல்-
இதில் சமஸ்க்ருதம்
திராவிடம்
என்கிற பிரிவு
ருகாதி பேதம் போலே-
அதாவது
இப்படி பஹு விதமான இவ் வேதத்திலே சமஸ்க்ருத வேதம் திராவிட வேதம் என்கிற பிரிவு
சமஸ்க்ருதாம் சந்தன்னில் ருக் வேதம் ,யஜுர் வேதம்
சாம வேதம், அதர்வண வேதம் ,என்கிற பிரிவு போலே என்கை ….
இத்தால் வேத ராசி ஒன்றாய் இருக்க செய்தே ,சமஸ்க்ருத பாஷா ரூபம் ஆனவது தன்னிலே
ருகாதி ரூபேண பல படியாய் பிரிந்தால் போலே
பாஷா பேதேநவும் இப்படி பிரிந்து இருக்கும் என்ற படி-
(ஆதித்யருக்குள் அஹம் விஷ்ணு -ஏகாதச ருத்ரனுக்குள் சங்கரன் -அந்த கோஷ்ட்டிக்குள் –
நக்ஷத்திரங்களில் அஹம் – சந்திரன் -இல்லாத போதும் என்பதுக்கு த்ருஷ்டாந்தம் )
———————————————————–
சூரணை -41-
அப்படி சொல்லலாமோ ? சமஸ்க்ருத பாஷை போலே திராவிட பாஷை
அநாதி அன்றே –ஆகஸ்த்யம் அன்றோ இது ?என்ன சொல்லுகிறது மேல்-
செந்திறத்த தமிழ்
என்கையாலே
ஆகஸ்யமும்
அநாதி-
அதாவது
செம் திறத்த தமிழ் ஓசை வட சொல் ஆகி-திரு நெடும் தாண்டகம் -4- – -என்று
(ஓசை -சொல் என்ற அர்த்தத்தில் இங்கு -ஸ்தான பிரமாணத்தாலே)
சமஸ்க்ருததோடே சஹபடிதமும் , ப்ரதமோக்தமும் ஆகையாலே
அகஸ்த்ய பிரகாசிதமான மாத்ரம் கொண்டு ஆகஸ்த்யம் என்று சொல்லப் படுகிற
திராவிடமும் அநாதியாய் உள்ளது என்கை .
இத்தால் அநாதித்வம் சமஸ்க்ருத திராவிட சாதாரணம் என்றது ஆய்த்து-
————————————————————
சூரணை -42-
ஆனால் அந்த பாஷை அநாதி ஆகிறது ..
திருவாய் மொழிக்கு வேதத்வ பிரகாசமான
வசனம் உண்டோ என்ன சொல்லுகிறது மேலே-
வட மொழி மறை என்றது
தென் மொழி மறையை
நினைத்து இறே-
(பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை என்றதால் நல்ல அரக்கன் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் இருப்பதால் தானே
இன சுட்டு அடை மொழி )
அதாவது
மறை-என்று கேவல வேத வாசி சப்தத்தாலே
சொல்ல அமைந்து இருக்க -வட மொழி மறை -திருவாய் -8-9-8–என்று
சமஸ்க்ருத வேதம் என்றது -திராவிட வேதம் உண்டு என்று நினைத்திறே என்கை
பிரதி கோடி இல்லாத போது இப்படி விசேஷிக்க வேண்டியது இல்லை இறே என்று கருத்து
-————————————————————————————
சூரணை-43-
ஆனால் அந்த வேதத்துக்கு அங்க உபாங்கங்கள் உண்டானவோ பாதி
இதுக்கும் அவை உண்டோ என்ன சொல்லுகிறது மேல்-
வேத சதுஷ்ட (த்தயத்துக்கு-இங்கும் லுப்தம் )
அங்க உபாங்கங்கள் போலே
இந் நாலுக்கும்
இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும்
மற்றை எண்மர் நன் மாலைகளும்-
(இருமை -பெருமை -)
அதாவது
ருகாதி வேத சதுஷ்டயத்துக்கும்
சீஷா வியாகரண நிருக்த சந்த கல்ப ஜோதிஷங்கள் ஆகிற ஆறு அங்கங்களும்
மீமாம்ச நியாய புராண தர்ம சாஸ்த்ராத் உப அங்கங்கள் எட்டுமாய் இருந்துள்ள பதினாலும் போலே-
(ஆதி -ஆயுர்வேதம் காந்தர்வ வேதம் அர்த்த வேதம் தனுர் வேதம் )
இந்த திராவிட வேத சதுஷ்டயதுக்கும்
இரும் தமிழ் நூல் புலவன் நங்கை யாளன்–பெரிய திருமொழி -1-7-10- -என்று
ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற திராவிட வேத சாஸ்த்ரத்தை
கரை கண்ட ஞான ஆதிக்கத்தை உடையரான திரு மங்கை ஆழ்வார் உடைய
கலியன் வாயொலி செய்த பனுவல் -பெரிய திருமொழி -1-4-10–என்று சாஸ்திர ரூபங்களான பிரபந்தங்கள் ஆறும்-
மற்றை ஆழ்வார்கள் எண்மர் உடையவும் விலஷணமான பிர பந்தங்களும் என்கை ..
நன் மாலைகள் என்றது -நய நின்ற நன் மாலை -முதல் திருவந்தாதி -57–என்று
முதல் ஆழ்வார் பிரபந்தத்தில் அருளிச் செய்தது எல்லா பிரபந்ததுக்கும் ஒக்கும் என்று நினைத்து ..
1-பொய் நின்ற ஞானமும் -திருவிருத்தம் -1––இத்யாதியாலே ஸ்வரூப விரோதியாய்
வந்தேறி யான தோஷங்களை முதல் அடியிலே பேசினால் போலே
பிரதமத்திலே -வாடினேன் வாடி-பெரிய திருமொழி -1-1-1- -இத்யாதியாலே ஸ்வ ரூபத்துக்கு
வந்தேறியான தோஷங்களை கண்டு நொந்து பேசுகையும்
2-பகவத் ப்ராவண்ய ப்ராசுர்யமும்
பத்துடை அடியவர்க்கு எளியவன் –எத்திறம் –ப்ராவண்ய ப்ராஸூர்யம் – /
உருகுமால் நெஞ்சம் கார் ஒக்கும் காட்கரை அப்பன் /முலையோ முழு முற்றும் போந்தில -பால்யாத் ப்ராவண்யம் /
கணபுரம் கை தொழும் பிள்ளையை -பிறர் சொல்ல கேட்டு கை தொழும் இவள் /
அருவி சோர் வேங்கடம் நீர் மலை உருகினாள் உள் மெலிந்தாள்
3-அதில் அர்ச்சாவதாரத்தில் ஊற்றமும்
செய்ய பரத்துவுமாய் –எய்துபவர்க்கு அர்ச்சாவதார எளிது -அவனாகும் நீள் கடல் வண்ணனே –
அன்று தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொலோ-ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் –
விபவம் பாடப்பிறந்தவர் அர்ச்சையை பாடுவது ஏற்றம் /
காரார் திருவேங்கடம் காணும் அளவும் போய்–ஆராமம் சூழ் / மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே/
ஏரார் முயல் வீட்டுக் காக்கை பின் போவதே
4-கலவியும் பிரிவும் மாறி மாறி வருகையும்
அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மான் -ஆடி ஆடி அகம் கரைந்து –வாடி வாடி இவ்வாணுதலே /
கோவை வாயாள் பொருட்டு–பூசும் சாந்து என் நெஞ்சமே -ஹர்ஷம் மிக்கு -மண்ணை இருந்து துழாவி —
ஏறிய பித்தினோடு -மாயன் திறத்தனள் இத்திரு தேறியும் தேறாமல் /
யானும் ஏத்தி –ஏத்த ஏத்த எங்கு எய்தும் /ஒரு நாள் காண வாராயே–வருத்தம் -8-5-/
எல்லியும் காலையும் திருக்கடித்தானாம் தாயப்பத்தி விட்டு -ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்காமல் சன்னிஹிதன் /
மைந்தனும் வந்திலன் என் செய்கேன் -திருக்கண்ணபுர பாசுரம் -வருத்தம் சொல்லி ஆழ்வார் /8-5-/
வருந்தாது இரு மட நெஞ்சே ஆறாம் பத்தில் நம் மேல் வினைகள் வாரா -சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூ ச –
நேரான மொழி பெயர்ப்பு-சோகப்படாதே முதலில் சொல்லி –
5–அந்ய உபதேச பேச்சும்–ஆறு கிண்ணகம்-தாய் மகள் தோழி
6-அது தன்னில் ராத்ரி வ்யசனமும்-மடல் எடுக்க ஒட்டாமல் -ஊரெல்லாம் துஞ்சி /
பெண் பிறந்தார் பெரும் துயர் காண மாட்டாமல் -கண்ணனும் வாரானால் -காகுத்தனும் வாரானால் -காப்பார் யார் /
நங்கள் அடிகள்-தோழியும் நானும் ஒழிய -வியக்தமாக தோழி பாசுரம் இல்லை ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அருளிச் செயலில் /
கோழியும் கூவுகின்றதில்லையே -கூர் இருள் ஆயிற்றே
7-தூத ப்ரேஷணமும்
நான்கு தூது பதிகம் -அவ்வளவு தெம்பு இல்லையே ஸ்ரீ திருமங்கை ஆழ்வாருக்கு -நான்கு பாசுரங்களுக்கு பின்பே நேராக
ஓ மண் அளந்த தாடாளா -வரை எடுத்த தோளாளா –தண் குடந்தை நகராளா–மலையாள ஊட்டு இல்லையே
8-அநுகாரம்
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் -பதிகம் -ஜெகதாகாரம் /
வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இட வகை கொள்வது யான் என்று பேசினாள்
9–மடல் எடுக்கை-மாசறு சோதி பதிகம் –/ஸ்ரீ சிறிய திருமடல் ஸ்ரீ பெரிய திரு மடல் -ஸ்ரீ திரு நறையூர் நம்பி மேல் –
10/11/12-தோழி தாய் மகள் என்னும் அவஸ்தை த்ர்யாபத்திகளும்-சாழல் பதிகம் அவ்யக்தம் தோழி பதிகம்
இவள் திறத்து இருவரும் –2-7-/-7-2-திருத்தாயார் பதிகங்கள் /
திண்ணம் என் இள மான் புகுமூர் திருக்கோளூரே-உண்ணும் சோறு / கள்வன் கொல்-அவனூர் வினவி சென்றாள்/
கரியான் ஒரு காளை வந்து–அணி யாலி புகுவார் கொலோ -கள்வன் கொல் பிராட்டி திருக்கோலம் இன்றும் சேவை உண்டே /
பொன்னிவர் மேனி -நாள் வேதம் ஓதும் -அவர் நாகரீகர் செல்வர் பெரியர்-என்னையும் நோக்கி
அன்னையும் நோக்கும் என்று அஞ்சுகிறேன் –அச்சோ ஒருவர் அழகியவா -ஸுந்தர்யம் இங்கு /
எங்கனே நீ லாவண்யம் அங்கு/இரண்டும் மகள் பாசுரங்கள்
13-இந்திரிய பய குரோசம் -ஐவர் திசை திசை எற்றி-
14-ஈஸ்வர ஸ்வாதந்த்ர்ய பயம் ,
அரவணை மேல் பள்ளி கொள்ளும் முகில் வண்ணனே அறையோ முறையோ ஸ்ரீ திருவிருத்தம் —
தடுப்பார் இல்லாத நிரங்குச ஸ்வாதந்தர்யம் /
தெள்ளியீர்-கை வளை கொள்வது தக்கதோ -ஸ்ரீ நீல மேக பெருமாள் -நீணிலா முற்றத்து நின்று இவள் நோக்கினாள்
15-அசக்ருத் பிரபத்தி கரணம்-ஐந்து தடவை-நோற்ற நாலும்/ உலகுண்ட பெரு வாயா ஸ்ரீ நம்மாழ்வார் / பத்து தடவை இவர்
ஸ்ரீ நைமிசாரண்யம் -ஸ்ரீ திருவேங்கடமுடையான் -ஸ்ரீ அண்ணன் கோயில் -ஸ்ரீ திருவரங்கம் -ஸ்ரீ திரு விண்ணகர்
திரு நறையூர் இடர் கெடுத்த திருவாளர் –6-9-பாட்டு தோறும் திருப்பாத பிரஸ்தாபம் இங்கும் உலகுண்ட பெரு வாயா போலே
தேரெழுந்தூர் /திருக்குறுங்குடி மகள் பாவனையில் -9-5-/ 5-9 மானே நோக்கு அங்கு நாயகா பாவம் /
16-ஆர்த்தியின் உடைய கரை புரட்சிகளும்
மாலுக்கு ஏரார் விசும்பில் இருப்பு அரிதாம் படி அங்கு -ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சி இவர் –
17-பர துக்க அசஹிஷ்ணுதையாலே பல காலும் ஹிதம் சொல்லுகையும்–தொடக்கமான கட்டளையாலே
மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிர பந்தங்களைக் காட்டிலும் ,இப் பிரபந்த சதுஷ்டியார்த்த ஜ்ஞாபகமாய் இருக்கையாலே
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் பிரபந்தங்களையே இதுக்கு அங்கங்கள் என்கிறது ..
மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிரபந்தங்கங்களும் எதார்த்த அனுசாரிகளாய் , இதில்
அர்த்த நிர்ணயத்துக்கு உறுப்பு ஆகையாலே .இதுக்கு உப அங்கங்கள் என்கிறது ..
ஆக –சீஷாயாம் வர்ண சிஷா பத சமதிகமோ வ்யாக்ரியா நிர்வசோப்யாம் சந்தஸ்
சந்தச் சிதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யோதிஷம் ரெங்கநாத ,கல்ப அனுஷ்டான
முக்தம் ஹ்யுசித கமிதயோர் நியாய மீமாம்ச யோஸ் ஸ்யாத் அர்த்த வ்யக்தி
புராண ஸ்ம்ருதிஷூ ததனுகாஸ் த்வாம் விசின் வந்தி வேதா -ஸ்ரீ ரெங்கராஜ உத்தர ஸ்தவம்-18- –என்கிற படியே
அவை அந்த வேத சதுஷ்டயத்துக்கும் உபகார அங்கங்களாய் இருக்குமா போலே
இவையும் கீழ் சொன்ன படியே இத வேத சதுஷ்டயத்துக்கும் உப அங்கங்களாய் இருக்கும் என்றது ஆய்த்து —
————————————————————————-
சூரணை -44 –
வித்யாந்தரங்களில் வேதத்துக்கு உண்டான
ஆதிக்யம் இதுக்கும் உண்டோ என்ன சொல்லுகிறது மேல் ..
சகல வித்யாதிக
வேதம் போலே
இதுவும்
திவ்ய பிரபந்த
பிரதானம்-
அதாவது
அங்கானி வேதாஸ் சத்வாரோ மீமாம்ச நியாய விஸ்தர புராணம் தர்ம சாஸ்த்ரஞ்ச வித்யா ஹ்யேதாச் சதுர்தச —என்று
சக படிதமாய் இருக்க செய்தே ,ஸ்வ அங்கோ உபாங்களான சகல வித்யைகளிலும் ,ஸ்வ வைபவத்தால் மேலாய் இருக்கும்
வேதம் போலே
ஸ்ரீ திவ்ய பிரபந்தங்களிலும் சகபடிதமாய் இருக்க செய்தே
ஸ்வ அங்க உபாங்களான சகல ஸ்ரீ திவ்ய பிரபந்தகளிலும் ஸ்வ வைபவத்தாலே இதுவும் மேலாய் இருக்கும் என்கை-
—————————————————————-
சூரணை -45-
ஆனால் அந்த வைபவத்துக்கு உடலான
சாஸ்த்ரத்வ பாகவத ஜ்ஞாரூபவத்வ நிர்தோஷத்வ ஸ்ருதித்வ சத்யத்வ அநாதி நித்யத்வங்கள்
இதுக்கும் உண்டோ என்ன சொல்லுகிறது மேல்-
வேத நூல் இரும் தமிழ் நூல்
ஆக்ஜை ஆணை
வசையில் ஏதமில்
சுருதி செவிக்கு இனிய
ஓதுகின்றது உண்மை பொய்யில் பாடல்
பண்டை நிற்கும் முந்தை
அழிவில்லா
என்னும்
லஷணங்கள் ஒக்கும்-
அதாவது
வேத நூல் பிராயம் நூறு – திருமாலை -3- என்ற அத்தை வேத சாஸ்திரம் என்றால் போலே
இத்தையும் -இரும் தமிழ் நூல் புலவன்-பெரிய திருமொழி -1-7-10–என்று பெரிய திராவிட சாஸ்திரம் என்கையாலும்
அத்தை — ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமை ஆக்ஜை -பாஞ்சராத்ரம் –என்று பகவத் ஆக்ஜை ரூபமாக சொன்னால் போலே
இத்தை -ஆணை ஆயிரம் -திருவாய்-6-3-11–என்று தத் ஆக்ஜா ரூபமாக சொல்லுகையாலும் ,
அத்தை -வசையில் நான் மறை –பெரிய திருமொழி-5-3-2- என்று விப்ரலம்பாதி தோஷ ரகிதம் என்றால் போலே ,
இத்தையும் -ஏதமில் ஆயிரம்-திருவாய்-1-6-11- -என்று நிர்தோஷமாக சொல்லுகையாலும் ,
அத்தை-சுடர் மிகு சுருதி-திருவாய்-1-1-7- -என்று ஸ்ரூயதே இதி ஸ்ருதி -என்கிறபடியே
பூர்வ பூர்வோச்சாரண கிரமத்திலே சரவண இந்திரியத்தாலே கிரகிக்க படுமதாய் சொன்னால் போலே ,
இத்தையும் -கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே -திருவாய்-10-6-11 -என்று ஸ்ராவ்யமாய் சொல்லுகையாலும் ,
அத்தை -வேத நூல் ஓதுகின்றது உண்மை-திருச்சந்த -72- -என்று சொல்லும் அதில் ஒரு பொய் இல்லை என்றால் போலே ,
இத்தையும் -பொய்யில் பாடல்-திருவாய்-4-3-11–என்று அசத்திய கந்த ரகிதம் இல்லை என்கையாலும்,
அத்தை பண்டை நான்மறை -பெரிய திருமொழி-5-7-1–என்று அநாதியாகவும்
நிற்கும் நான்மறை-திருவாய்-6-5-4- -என்று -அநதினத்தவம்-அழிவில்லாததாகவும்
சொன்னால் போலே
இத்தையும் முந்தை ஆயிரம் -திருவாய்-6-5-11-
அழிவில்லா ஆயிரம் -திருவாய்-9-7-11-என்று
அநாதியாய் அழிவற்று இருக்குமதாய் சொல்லுகையாலும்
இந்த லஷணங்கள் எல்லாம் இரண்டுக்கும் ஒக்கும் என்கை-
——————————————————————–
சூரணை -46-
அந்த வேதம் போலே இதுவும் அஸ்ம்ருத கர்த்ருகமாய் இருக்க வேண்டாவோ ?
ஸ்ரீ ஆழ்வார் இதுக்கு கர்த்தா என்கையாலே ,நித்யத்வ அபௌருஷேயத்வங்கள்
கூடாதீ என்ன சொல்லுகிறது மேல்-
சொல்லப் பட்ட என்ற இதில்
கர்த்ருத்வம்
ஸ்ம்ருதி
அத்தை ஸ்வயம்பூ
படைத்தான் என்றது போலே-
அதாவது
சடகோபன் சொல்லப் பட்ட ஆயிரம்–திருவாய்-8-10-11–என்று இதில்
ஸ்ரீ ஆழ்வாருக்கு சொன்ன கர்த்ருத்வம்
அநாதி நிதனா ஹ்யேஷா வாகுத் ஸ்ருஷ்டா ஸ்வயம்புவா -என்று-(அநாதி அநிதன -பண்டை நின்ற வேதத்தை )
ஸ்ம்ருதி அந்த வேதத்தை-( ஜகத்தை-) பிரம்மா சிருஷ்டித்தான் என்று சொன்னாவோ பாதி என்கை-
ஸ்வயம்பு சிருஷ்டித்தான் என்னாதே–படைத்தான்-என்றது
முன்னம் திசை முகனை தான் படைக்க மற்றவனும்
முன்னம் படைத்தனன் நான் மறைகள்-பெரிய திருமடல்-10 -என்று ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியையும் தர்சிப்பைக்காக ..
அநாதி நிதானமான சந்தர்ப்பம் பிரம்மாவின் வாக்கில் நின்றும் ஆவிர்பவித்த
மாத்ரம் கொண்டு ,பிரம்மாவுக்கு அதில் சொன்ன கர்த்ருத்வ உபாதி இதிலும்
ஸ்ரீ ஆழ்வாருக்கு சொன்ன கர்த்ருத்வம் ஆகையால் இத்தால் ,இதன்
நித்யத்வ அபௌருஷேயத்வ ஹானி வாராது என்று கருத்து-
———————————————————–
சூரணை -47-
பூர்வ சந்தர்ப்ப பிரக்ரியை இவர் தர்சிப்பித்து பேசினதே
உள்ளது என்னும் இடத்தை அறிவிக்கிறார் மேல்-
நால் வேதம் கண்ட
புராண ரிஷி
மந்த்ர தர்சிகளை போலே
இவரையும்
ரிஷி
முனி
கவி
என்னும்-
அதாவது
நால் வேதம் கண்ட புராண ரிஷி–நால் வேதம் கண்டானே -பெரிய திருமொழி-8-10-1–என்னும் படி
ஈஸ்வரன் தான் அடியிலே செய்தால் போல் நாலு வேதங்களையும் சாஷாத் கரித்து
அஷ்டா தச புராணம் கர்த்தா சத்யவதீ ஸுத-என்கிற படி
அஷ்டாதச புராணங்கள் உடைய ஆநு பூர்வியையும்
தர்சித்துச் சொன்ன வேத வியாச பகவானை சொல்லுகிறது
நால் வேதம் கண்டான் -என்கிற இடத்தில் ஸ்வேன ரூபேண நின்று
தர்சித்தமை அன்றிக்கே வியாச ரூபேண நின்று தர்சித்தமை தன்னை
சொல்லுகின்றது இவருக்கு கருத்தாகவுமாம் ..
சங்கீர்ண புத்தயோ தேவா பிரம ருத்ர புரஸ்ஸர சரண்யம் சரணம்
ஜக்மு நாராயண மநாமயம்..தைர் விக்ஜ்ஞாபித்த கார்யஸ்து பகவான்
புருஷோத்தம அவதீர்னோ மகா யோகி சத்யவத்யாம் பராசராத் என்றும்
கிருஷ்ண த்வைபாயனம் வியாசம் வித்தி நாராயண பிரபும் -என்றும்
பகவத் ஏவச அவதாரயா பகவான் தானாக சொல்லக் கடவதிறே..
இப்படி இருந்துள்ள ஸ்ரீ வேத வியாச பகவானை வேதங்களின் பூர்வ
சித்த அனுபூர்வியை தர்சித்து சொன்ன படியாலே
தர்சநாத் ருஷி மனந சீலோ முனி கவி கிராந்த தர்சீ-என்கிற வர்தங்களை நினைத்துக் கொண்டு
ஸ்ரூயதாம் சிம்ஹனா தோயம் ருஷேச்தச்ய மகாத்மனா
தர்மேச அர்த்தேச கர்மே ச மோஷே ச பரதர்ஷப -என்றும்
ஏவம் விதம் பாரதம் து ப்ரோக்தம் ஏன மகாத்மனா
சோயம் நாராயணஸ் சாஷாத் வியாச ரூபீ மகா முனி –என்றும்
சஷால் லோகான் பாவ்யமான கவி முக்ய பராசர்ய-என்றும்
ருஷி முனி கவி என்றும் சொல்லிற்று இறே
மந்த்ர தர்சிகள் ஆனவர்களை பூர்வ ஸித்த சந்தர்ப்பத்தை
சாஷாத் கரித்து சொன்னவர்கள் என்னும் இடம் தோற்ற
நம ருஷிப்யோ மந்த்ர க்ருத்ப்ய -என்றும்
பகவான் சௌனக முனி -என்றும்
இத்யாதிகளாலே ருஷி முனி என்று சொல்லிற்று இறே .
இவர்கள் விஷயத்திலும்
கவி சப்த பிரயோகம் உண்டாகில் வந்த ஸ்தலங்களிலே கண்டு கொள்வது ..
ஆக இப்படி இவர்களை சொன்னால் போலே த்ராவிடமான இதின் பூர்வ ஸித்த
அனுபூர்வியை சாஷாத் கரித்து பேசின இவ் ஆழ்வாரையும் –
ருஷிம் சுஷாமஹே கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவோதிதம்
சகஸ்ர சாகாம் யோத்ரா ஷீத் த்ராவிடீம் ப்ரஹ்ம சம்ஹிதாம் –என்றும்
சடகோபம் முனிம் வந்தே சடானாம் புத்தி தூஷகம் , அஞ்ஞானம் ஜ்ஞான ஜனகம்
திந்திரிணீ மூல சம்ஸ்ரயம் -என்றும்
உலகம் படைத்தான் கவி யாயினேற்கு -திருவாய்-3-9-10–என்றும்
முன்பு உண்டான சந்தர்ப்பத்தை தர்சிப்பித்து பேசினவர் என்னும் இடம் தோற்ற
ருஷி என்றும் ,முனி என்றும் ,கவி என்றும் சொல்லும் என்கை ..
———————————————————–
சூரணை -48-
இன்னமும் இதன் உடைய அநாதித்வ ஸூசுகமானது ஒன்றை
தர்சிப்பிக்கிறார் மேலே-
படைத்தான் கவி
என்ற போதே
இதுவும்
யதா பூர்வ
கல்பனம் ஆமே-
அதாவது உலகம் படைத்தான் கவி -என்கையாலே
ஒன்றில் ஒன்றி உலகம் படைத்தான் -என்கிற படியே
ஒருப் பட்டு மேன்மேலும் லோக சிருஷ்டியை பண்ணும் இடத்தில்
சூர்யா சந்திர மசவ் ததா எத பூர்வ மகல்பயத்––தைத்ரியம்-என்கிற படியே
ஸ்ருஷ்ட்டி தோறும் சந்திர சூர்யாதி சகல பதார்த்தங்களையும்
யதா பூர்வ கல்பனமாய் வருமா போலே திராவிட வேதமான
இப் பிரபந்தமும் ஸ்ருஷ்ட்டி தோறும் யதா பூர்வ
கல்பனமாய் வரும் என்று தோன்றும் இறே என்கை ..
———————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-