நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த
அஞ்சன வண்ணனே அச்சோ அச்சோ –பெரியாழ்வார் -1-8-3-
பாலப்பிராயத்தே பார்த்தற்கு அருள்செய்த கோலப்பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா -2-6-5-
கன்னி இருந்தாளைக் கொண்டு நன்றும் கிறி செய்து போனான் நாராயணன் செய்த தீமை -3-8-2-
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு
அருள் செய்த அஞ்சன வண்ணனைப் பாடிப்பற-3-9-5-
உன் அடியேற்கு அருள் என்று அவன் பின் தொடர்ந்த படியில் குணத்துப் பரத நம்பிக்கு
அன்று அடி நிலை ஈந்தானைப் பாடிப்பற -3-9-6-
காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன் நீள் முடி ஐந்திலும் நின்று
நடம் செய்து மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன் -3-9-7-
அல்லி யம் பூ மலர்க்கோதாய் அடி பணிந்தேன் விண்ணப்பம் சொல்லுகேன் கேட்டு அருளாய் -3-10-2-
பெரும் தேவீ கேட்டு அருளாய் -3-10-4-
இருள் அகற்றும் ஏறி கதிரோன் மண்டலத்தோடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி அருள் கொடுத்திட்டு
அடியவரை ஆட் கொள்வான் அமருமூர் அணி யரங்கமே -4-9-3-
ஒப்பிலேன் ஆகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ யருள் செய்தமையால் -4-10-1-
எண்ணுவார் இடரைக் களைவானே ஏத்தரும் பெரும் கீர்த்தியினானே- நண்ணி நான் உன்னை
நாள் தொறும் ஏத்தும் நன்மையே யருள் செய் எம்பிரான் 5-1-8-
அக்கரை என்னும் மனத்து அகத்து கடலுள் அழுந்தி உன் பேர் அருளால் இக்கரை ஏறி இளைத்து இருந்தேனை -5-3-7-
என்னையும் என்னுடைமையையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
நின்னருளே புரிந்து இருந்தேன் இனி என் திருக் குறிப்பே -5-4-1-
——————————
உன் தன்னைப் பிறவி பெரும் தன்னை புண்ணியம் யாமுடையோம் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா–அறியாத
பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச் சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே இறைவா நீ தாராய் பறை –திருப்பாவை -28-
உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாமாட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோரெம்பாவாய் -29-
செங்கண் திரு முகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் -30-
—————————-
கமல வண்ணத்து திருவுடை முகத்தினில் திருக் கண்களால் திருந்தவே நோக்கெனக் கருள் கண்டாய் –நாச்சியார் -1-6-
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப்பேறு எனக்கு அருள் கண்டாய் -1-8-
தோழியும் நானும் தொழுதோம் துக்கிளைப் பணித்து அருளாய் -3-1-
பட்டைப் பணித்து அருளாயே -3-3-
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டைப் பணித்து அருளாயே -3-6-
பழகு நான் மறையின் பொருளாய் மதம் ஒழுகு வாரணம் உய்ய அளித்த எம் அழகனார் -4-10-
பொன் புரை மேனிக் கருளக் கொடியுடைப் புண்ணியனை வரக் கூவாய் -5-4-
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈது என்று பார்த்து இருந்து
நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின் -12-6-
கார்த் தண் கமலக் கண் என்னும் நெடும் கயிறு படுத்தி என்னை ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் -14-4-
வெளிய சங்கு ஓன்று உடையானைப் பீதக வாடை யுடையானை அளி நன்குடைய திருமாலை ஆழியானை -14-8-
பரும் தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னை பாரின் மேல் விருந்தாவனத்தே கண்டமை விட்டுசித்தன் கோதை சொல் -14-10-
—————————————–
வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண்ணுய்ய மண்ணுலகில் மனுசர் உய்ய துன்பமிகு துயர் அகல
அயர்வு ஓன்று இல்லாச் சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ அன்போடு தென்திசை நோக்கிப்
பள்ளி கொள்ளும் அணி யரங்கன் –பெருமாள் -1-10-
தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்த அரங்கன் எம்மானுக்கே காதல் செய் தொண்டர்க்கு
எப்பிறப்பிலும் காதல் செய்யும் என்நெஞ்சமே -2-6-
செடியாய வல் வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே வேங்கடவா -4-9-
அலை கடலைக் கடைந்து அமரர்க்கு அமுது அருளிச் செய்தவனே -8-8-
—————————————-
படைத்த பார் இடந்து அளந்து அது உண்டு உமிழ்ந்து பவ்வநீர் படைத்து அடைத்து அதில் கிடந்தது முன் கடைந்த பெற்றியோய்–திருச்சந்த -28-
அனந்தன் மேல் கிடந்த எம் புண்ணியா -46-
நன்று இருந்து யோக நீதி பண்ணுவார்கள் சிந்தையுள் சென்று இருந்து தீ வினைகள் தீர்த்த தேவ தேவனே
குன்று இருந்த மாட நீடு பாடகத்தும் ஊரகத்தும் நின்று இருந்து வெக்கனைக் கிடந்தது என்ன நீர்மையே -63-
நிற்பதும் ஓர் வேர்பகத்து இருப்பும் விண் கிடப்பதும் நல் பெரும் திரைக்கடலுள் நானில்லாத முன்னெல்லாம்
அத்புதன் அநந்த சயனம் ஆதி பூதன் மாதவன் நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே -65-
புண்டரீக பாத புண்ய கீர்த்தி நும் செவி மடுத்து உண்டு நும் உரு வினைத் துயருள் நீங்கி உய்ம்மினோ -67-
புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறியிலேன் புனித நின் இலங்கு பாதம் அன்றி மற்றோர் பற்றிலேன் எம்மீசனே -90-
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார் எத்தினால் இடர்க் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-
இயக்கறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து உயக்கொள் மேக வண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே
மயக்கினான் தன் மன்னு சோதி ஆதலால் என்னாவி தான் இயக்கு எலாம் அறுத்து அறாத இன்ப வீடு பெற்றதே -120-
——————————————–
சூதனாயக் கள்வனாகித் தூர்த்தரோடு இசைந்த காலம் மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
போதரே என்று சொல்லிப் புந்தியில் புகுந்து தன் பால் ஆதரம் பெருக வைத்த அழகனூர் அரங்கம் அன்றே –திருமாலை -16-
நின் கணும் பக்தனும் அல்லேன் களிப்பது என் கொண்டு நம்பி கடல் வண்ணா கதறுகின்றேன்
அளித்து எனக்கு அருள் செய் கண்டாய் அரங்க மா நகர் உளானே -26-
ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால் பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்யனேனே -33-
தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திருவரங்கத்துள் ஓங்கும் ஒளி யுள்ளார் தாமே யன்றே தந்தையும் தாயுமாவார்
எளியதோர் அருளும் அன்றே என் திறத்து எம்பிரானார் அளியன் நம் பையல் என்னார் அம்மாவோ கொடியவாறே -37-
பழுதிலா ஒழுகல் ஆற்றுப் பல சதுப்பேதி மார்கள் இழி குலத்தவர்களேலும் எம்மடியார்களாகில்
தொழுமினீர் கொடுமின் கொண்மின் என்று நின்னோடும் ஓக்க வழி பட அருளினாப் போல் மதிள் திருவரங்கத்தானே -42-
பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான் எண்ணிலா ஊழி ஊழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த கண்ணறா உன்னை என்னோ களை கணாக் கருதுமாறே -44-
————————————————
ஆனையின் அரும் துயர் கெடுத்த அரங்கத்தம்மா பள்ளி எழுந்து அருளாயே -2-
அவர்க்கு நாள் ஓலக்கம் அருள அரங்கத்தம்மா பள்ளி எழுந்து அருளாயே -9-
தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டர் அடிப் பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே -10-
———————————————————
அமலனாதி பிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதிள் அரங்கத்து அம்மான் திருக்கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே -1-
—————————————————–
இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான் நின்று தன் புகழ் ஏத்த அருளினான் -6-
கண்டு கொண்டு என்னைக் காரி மாறப் பிரான் பண்டை வல்வினை பற்றி அருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ்ச் சடகோபன் அருளையே -7-
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற அருளினான் அவ்வருமறையின் பொருள் அருள் கொண்டு
ஆயிரம் இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -8-
—————————————–
நெடு விசும்பு அணவும் பன்றியாய் அன்று பாரதம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -1-1-4-
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயராயின வெல்லாம் நிலந்தரம் செய்யும்
நீள் விசும்பு அருளும் அருளோடு பெரும் நிலம் அளிக்கும் -1-1-9–
நல் இமயத்து வரை செய் மாக் களிறு இளவெதிர் வளர் முளை அளை மிகு தேன் தோய்த்து பிரசவாரி
தன்னிளம் பிடிக்கு அருள் செய்யும் பிருதி சென்று ஆடை நெஞ்சே -1-1-5-
தொழுது எழு தொண்டர்கள் தமக்கு பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் எம்பெருமான் -1-4-4-
வேலை வாய் அமுதம் விண்ணோடு விண்ணவர்க்கு அரசும் இந்த்ரற்கு அருளி எமக்கும் ஈந்து அருளும் எந்தை எம்மடிகள்
எம்பெருமான் அந்தரத்து அமரர் அடியிணை வணங்க ஆயிரம் முகத்தினால் அருளி
மந்தரத்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரியாச்சிரமத்து உள்ளான் -1-4-7-
தொண்டாம் இனமும் இமையோரும் துணை நூல் மார்பின் அந்தணரும் அண்டா எமக்கே அருளாய் என்று அணையும் கோயில் –1-5-9-
அங்கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆளரியாய் அவுணன் பொங்க ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் -1-7-1-
விண்ணோர் தொழும் வேங்கடமாமலை மேய அண்ணா அடியேன் இடரைக் களையாயே -1-10-1-
திருவேங்கடம் மேய அலங்கல் துளப முடியாய் அருளாயே -1-10-2-
சீரார் திருவேங்கடமாமலை மேய ஆராவமுதே அடியேற்கு அருளாயே -1-10-3-
விண் தோய் சிகரத் திருவேங்கடம் மேய அண்டா அடியேனுக்கு அருள் புரியாயே -1-10-4-
திருவேங்கடமாமலை மேய கோணாகணையாய் குறிக்கோள் எனை நீயே -1-10-5-
மன்னா இம்மானிடப்பிறவியை நீக்கி தன்னாக்கித் தன் இன்னருள் செய்யும் தலைவன் -1-10–6-
வானவர் தங்கள் சிந்தை போலே என் நெஞ்சமே இனிது உவந்து மாதவமானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற எந்தை -2-1-1-
வேங்கடமலை யாண்டு வானவர் ஆவியாய் இருப்பார்க்கு அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-4-
முனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்து உரைத்து புனிதன் -பூவை வண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர் கோன்
தனியன் செயன் தான் ஒருவன் ஆகிலும் தன் அடியார்க்கு இனியன் எந்தை எம்பெருமான் -எவ்வுள் கிடந்தான் –2-2-8-
ஆயர் எந்தம்மோடு இனவா நிரை தளராமல் எம்பெருமான் அருள் என்ன அந்தமில் வரையால்
மழை தடுத்தானைத் திரு வல்லிக்கேணிக் கண்டேனே -2-3-4-
எம்பெருமான் அருள் என்ன சந்தமல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத் திரு வல்லிக்கேணிக் கண்டேனே -2-3-6-
நச்சி நமனார் அடையாமை நமக்கு அருள் செய் என உள் குழைந்து ஆர்வமொடு நிச்சம் நினைவார்க்கு
அருள் செய்யுமவற்கு இடம் மா மலையாவது நீர் மலையே -2-4-8-
அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய எம்மாயனே அருளாய் என்னும் இன் தொண்டர்க்கு
இன்னருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை -2-7-10-
கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொற்பொருள் தானும் மற்றை நிலைகளும்
வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள் செய்து -2-8-5-
தூவடிவின் பார் மகள் பூ மங்கையோடு சுடர் ஆழி சங்கு இரு பால் பொலிந்து தோன்ற காவடியில்
கற்பகமே போலே நின்று கலந்தவர்கட்க்கு அருள் புரியும் கருத்தினானை -2-10-9-
மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல்லவுணன் தன் மார்பகம் இரு பிளவா கூறு கொண்டு
அவன் குலமகற்கு இன்னருள் கொடுத்தவனிடம் -3-1-4-
அலை நீருலகுக்கு அருளே புரியும் காரார் புயல் கைக் கலிகன்றி குன்றா ஒலி மாலை -3-2-10-
ஆயர் ஆ நிரைக்கு அன்று இடர் தீர்ப்பான் கூடிய மா மழை காத்த கூத்தன் என வருகின்றான் -3-3-1-
சங்கு தனக்கு தடம் கடல் கடல் மல்லையுள் கிடந்தாய் அருள் புரிந்து
இங்கு என்னுள் புகுந்தாய் இனிப் போயினால் அறையோ -3-5-8-
தன் தாராய நறும் துளவம் பெரும் தகையேற்கு அருளானே -3-6-3-
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் நர நாரணனே கருமா முகில் போல் எந்தாய் எமக்கே அருளாய்
என நின்று இமையோர் பரவும் இடம் -3-8-1-
விதலைத் தலைச் சென்று அதற்கே உதவி வினை தீர்த்த அம்மான் -3-8-2-
திண்மை மிகு மருதொடு நல் சகடம் இருந்து அருளும் தேவன் அவன் மகிழ்ந்து இனிது மருவி யுரை கோயில் -3-9-6-
வங்க மலி தடம் கடலுள் வானவர்களோடு மா முனிவர் பலர் கூடி மா மலர்கள் தூவி எங்கள் தனி நாயகனே
எமக்கு அருளாய் என்னும் ஈசன் அவன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில் -3-9 -9–
திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழத் தீ வினைகள் போய் அகல அடியவர்கட்க்கு என்றும் அருள் நடந்து
இவ்வேழ் உலகத்தவர் பணிய வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம் -3-10-1-
அன்று குன்று கொடு குரை கடலைக் கடைந்து அமுதம் அளிக்கும் குரு மணி என்னாரமுதம் குளவி யுறை கோயில் -3-10-2-
பெரு வரத்த இரணியனைப் பற்றி வாடாத வள்ளுகிரால் பிளந்து அவன் தன் மகனுக்கு அருள் செய்தான் வாழும் இடம் -3-10-3-
இந்திரனும் இமையவரும் முனிவர்களும் எழில் அமைந்த சந்த மலர்ச் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும்
எந்தை எமக்கு அருள் என நின்று அருளும் இடம் -4-1-4-
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேர் அருளாளன் எம்பிரானை -4-3-1-
தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர் தமக்கு தாய் மனத்து இரங்கி
அருளினைக் கொடுக்கும் தயரதன் முதலையை -4-3-5–
சிலம்பினிடைச் சிறு பரல் போல் பெரிய மேரு திருக் குளம்பில் கண கணப்பத் திருவாகாரம் குலுங்க
நிலமடந்ததனை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய எம் கோமான் கண்டீர் -4-4-8-
தூம்புடைப் பணைக் கை வேழம் துயர் கெடுத்து அருளி -4-5-1-
பாவமும் அறமும் வீடும் இன்பமும் துன்பம் தானும் கோவமும் அருளும் அல்லாக் குணங்களும் ஆய எந்தை -4-5-9-
இளையவற்கே அரசு அளித்து அருளினானே -4-6-4-
தூது எழுந்து அருளி மாத்தமர் பாகன் வீழ மதகரி மருப்பு ஓசித்தாய் -4-6-7-
தேனார் பொழில் சூழ் திரு வெள்ளக்குளத்துமானாய் அடியேனுக்கு அருள் புரியாயே -4-7-4-
திரு வெள்ளக்குளத்து உறைவானே எல்லா இடரும் கெடுமாறு அருளாயே -4-7-6-
திருவெள்ளத்துக்குள் மாலே என் வல்வினை தீர்த்து அருளாயே -4-7-7-
திருவெள்ளத்துக்குள் ஆராவமுதே அடியேற்கு அருளாயே -4-7-8-
திருவெள்ளக்குளத்து உறைவானே ஆவா அடியான் இவன் என்று அருளாயே -4-7-9-
இந்தளூரீரே எம்மைக் கடிதாக் கருமம் அருளி ஆவா என்று இரங்கி -4-9-1-
பொழில் வாய் இருந்து வாழ் குயில்கள் அரி யரி என்று அவை அழைப்ப வெள்ளியார் வணங்க
விரைந்து அருள் செய்வான் திரு வெள்ளி யங்குடி யதுவே -4-10-7-
அன்னமாகி அருமறைகள் அருளிச்செய்த அமலன் இடம் -5-1-9-
திரு வெள்ளறை மங்களா சாசன திருப்பதிகம் –
இத் திருமொழியில் பாசுரங்கள் தோறும் அருள் புரியே -என்றும் –
நின் காதலை அருள் எனக்கு -என்றும் –
நின் அடிமையை அருள் எனக்கு -என்றும்
பரி பூரணமான பக்திப் பெரும் காதல் உண்டாகும்படியும் –
அத்தாணிச் சேவகம் செய்யும் படியும் அருள பிரார்த்திப்பதே இத் திரு மொழியின் பிரமேயம் –
நின் குரை கழல் தொழுவதோர் வகை எனக்கு அருள் புரியே–பெரிய திருமொழி–5-3-1-
முன் பரி முகமாய் இசைகொள் வேதநூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள் புரியே–5-3-2-
கையில் நீள் உகிர் படையது வாய்த்தவனே எனக்கு அருள் புரியே–5-3-3-
திரு வேங்கடப் பொருப்ப நின் காதலை யருள் எனக்கு-5-3-4-
இரு நிலம் இடந்தவனே எனக்கு அருள் புரியே–5-3-5-
ஆதி நின்னடிமையை யருள் எனக்கு–5-3-6-
வில்லது வளைத்தவனே எனக்கு அருள் புரியே–5-3-7-
அருமறை பயந்தவனே எனக்கு அருள் புரியே–5-3-8-
பரம நின் பணிந்து எழுவன் எனக்கு அருள் புரியே–5-3-9-
ஒருகால் போலே ஒன்பதில் கால் அருள் புரிய பிரார்த்திக்கிறார்
துவரித்த உடையவர்க்கு தூய்மையில்லாச் சமணற்கும் அவர்கட்க்கு அங்கு அருளில்லா அருளாணை -5-6-8-
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளிப் பகலவன் ஓளி கெட பகலே ஆழியால் அன்று அங்கு
ஆழியை மறைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தான் -5-7-8-
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து -5-8-1-
அரவம் வெருவி வந்து நின் சரண் எனச் சரணா நெஞ்சில் கொண்டு நின் அஞ்சிறைப் பறவைக்கு
அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து -5-8-4-
மலரடி கண்ட மா மறையாளன் –போகம் நீ எய்தி பின்னும் நம்மிடைக்கே போதுவாய் என்ற பொன்னருள் -5-8-5-
நான்மறை மா முனி பெற்ற மைந்தனை –காலனையுக முனிந்து ஒழியா பின்னை என்றும்
நின் திருவடி பிரியா வண்ணம் எண்ணிய பேர் அருள் எனக்கும் -5-8-6-
இன்னருள் அவற்குச் செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய் -5-8-8-
தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு உளம் கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து அங்கோடு
நாழிகை ஏழுடன் இருப்ப வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச் செய்தவாறு -5-8-9-
வானோர் புக்கு அரண் தந்து அருளாய் என்னப் பொன்னாகத்தானை நக்க அரி யுருவமாகி
நகம் கிளர்ந்து இடந்து உகந்த சக்கரச் செல்வன் -5-9-5-
ஆண்டாய் யுன்னைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே -பெரிய திருமொழி-6-1-
பகவத் விஷய பிராவண்யத்திலும் விஷயாந்தர விரக்தியில் தமக்கு உள்ள உறுதியையும்
ஒரு காலுக்கு ஒன்பதின் காலாக உரைக்கிற படி-
நீ பணித்த அருள் என்னும் ஒள் வாளுருவி எறிந்தேன் –திரு விண்ணகர் மேயவனே -6-2-4-
தாராளன் தண்ணரங்க வாளன் பூ மேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற பேராளன்
ஆயிரம் பேருடைய வாளன் பின்னைக்கு மணவாளன் -6-6-9-
உடலம் நீரும் பூசியேறூரும் இறையோன் சென்று குறை இரப்ப மாறு ஓன்று இல்லா வாச நீர்
வரை மார்பகலத்து அளித்து உகந்தான் -6-7-9-
கதியேலில்லை நின்னருள் அல்லது எனக்கு நிதியே திரு நீர்மலை நித்திலத் தொத்தே பதியே
பரவித் தொழும் தொண்டர் தமக்கு கதியே உன்னைக் கண்டு கொண்டு உந்து ஒழிந்தேனே -7-`1-7-
தூயாய் சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா -7-1-9-
என்னாருயிரே அரசே அருள் எனக்கு நந்தாமல் தந்த எந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-6-
தாய் நினைந்த கன்றே ஓக்க என்னையும் தன்னையே நினைக்கச் செய்து
தான் எனக்காய் நினைந்து அருள் செய்யும் அப்பனை -7-3-2-
ஐவர்க்காய்ச் சென்று இரங்கி யூர்நது அவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை
வம்பார் புனல் காவிரி அரங்கமாளி என்னாளி விண்ணாளி –7-3-4-
இனி எப்பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு இம்மையே அருள் பெற்றமையால் -7-3-8-
ஏடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்து அருளி மாடு வந்து என் மனம்
புகுந்து நின்றார் நின்ற ஊர் போலும் -7-5-6-
என் ஐம்புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்து அருளி பொன்னம் கலைகள்
மெலிவெய்தப் போன புனிதர் ஊர் போலும் –7-5-9-
குல வேழம் அன்று பொன்றாமை அதனுக்கு அருள் செய்த போரேற்றை -7-6-4-
ஐவர் புகுந்து காவல் செய்த அக்காவலை பிழைத்து குடி போந்து உன் அடிக்கீழ் வந்து புகுந்தேன்
கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி அடியேனைப் பணியாண்டு கொள் எந்தாய் -7-7-8-
நெஞ்சு இடர் தீர்த்து அருளிய என் நிமலன் காண்மின் -7-8-3-
இலங்கு புவி மடந்தைதனை இடந்து புல்கி எயிற்றிடை வைத்து அருளிய எம்மீசன் காண்மின் -7-8-4-
சிறு புலியூர்ச் சலசயனத்து ஐவாய் அரவணை மேல் உறை யமலா அருளாயே -7-9-8-
கரு மா முகிலுருவா கனலுருவா புனலுருவா பெருமால் வரையுருவா பிறவுருவா நினதுருவா
திரு மா மகள் மருவும் சிறு புலியூர்ச் சல சயனத்து அரு மா கடல் அமுதே உனது அடியே சரணாமே -7-9-9-
எண்ணில் முனிவர்க்கு அருள் தரும் தவத்தை -7-10-1-
தமியேன் தன் சிந்தை போயிற்றுத் திருவருள் அவனிடைப் பெரும் அளவு இருந்தேனை -8-5-1-
ஆழியான் நமக்கு அருளிய அருளொடும் பகல் எல்லை கழிகின்றதால்-8-5-5-
பெரும் தோள் வாணர்க்கு அருள் புரிந்து பின்னை மணாளனாகி முன் கருந்தாள் களிறு ஓன்று ஓசித்தானூர் கண்ணபுரம் -8-6-6-
வேழம் நடுக்குற்றுக் குலைய அதனுக்கு அருள் புரிந்தான் அலை நீர் இலங்கைத் தசக்கிரீவர்க்கு இளையோருக்கு அரசை அருளி -8-6-7-
கண்ணபுரத்து எம்மடிகளை திருமா மகளால் அருள் மாரி-8-6-10-
உற்றான் என்று உள்ளத்து வைத்து அருள் செய் கண்டாய் கற்றார் சேர் கண்ணபுரத்துறை யம்மானே -8-10-5-
பேர் அருளாளர் கொல் யான் அறியேன் -9-2-7-
அரி யுருவாய்க் கீண்டான் அருள் தந்தவா நமக்கு -9-4-4-
மருப்பு ஒசித்த பாம்பின் அணையான் அருள் தந்தவா நமக்கு -9-4-8-
ஆதியுமானான் அருள் தந்தவா நமக்கு -9-4-9-
வானவர் உச்சி வைத்த பேர் அருளாளன் பெருமை பேசி -9-5-4-
திரு மா மகளைப் பெற்றும் என் நெஞ்சகம் கோயில் கொண்ட பேர் அருளாளன் பெருமை
பேசிக் கற்றவன் காமரு சீர்க் கலியன் -9-5-10-
பிணி வளர் ஆக்கை நீங்க நின்று ஏத்தப் பெரு நிலம் அருளின் முன் அருளி அணி வளர் குறளாய்
அகலிடமுழுதும் அளந்த எம் அடிகள் -9-8-3-
பார்த்தனுக்கு அன்று அருளிப் பாரதத்து ஒரு தேர் முன் நின்று காத்தவன் தன்னை -9-9-8-
அடியவர் தங்கள் தம் மனைத்துப் பிரியாது அருள் புரிவான் -9-10-1-
ஆனை வாட்டி யருளும் அமரர் தம் கோனை யாம் குடந்தைச் சென்று காண்டுமே -10-1-5-
உகிரால் பிளந்திட்டு அமரர்க்கு அருள் செய்து உகந்த பெருமான் திருமால் –10-6-4-
இருந்தான் என்னுள்ளத்து இறைவன் கறை சேர் பரும் தாள் களிற்றுக்கு அருள் செய்த செங்கண் பெரும் தோள் நெடுமால் -11-3-2-
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்கு தம்மையே ஓக்க அருள் செய்வாராதலால் -11-3-5-
ஓர் சரண் இல்லை என்ன அரணாவன் என்னும் அருளால் அலை கடல் நீர் குழம்ப அகடாடவோடு அகல் வானிரிஞ்ச
முதுகில் மலைகளை மீது கொண்டு வரும் மீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே -11-4-1-
கலி கன்றி ஒலி மாலை கற்று வல்லார் பூ வளரும் திரு மகளால் அருள் பெற்றுப் பொன்னுலகில் பொலிவர் தாமே -11-6-10 —
வயலாலி மணவாளா இடையன் எறிந்த மரமே ஒத்திராமே அடைய அருளாய் எனக்கு உன் தன் அருளே -11-8-6-
அரங்க நகரப்பா துணியேன் இனி நின்னருள் அல்லது எனக்கு மணியே மணி மாணிக்கமே மது சூதா
பணியாய் எனக்கு உய்யும் வகை பரஞ்சோதி -11-8-8-
நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும் எந்தாய் தொண்டரானவர்க்கு இன்னருள் செய்வாய்
சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா அந்தோ அடியேற்கு அருளாய் உன்னருளே -11-8-9-
—————————————–
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த விதியினைக் கண்டு கொண்ட
தொண்டனேன் விடுகிலேனே –திருக் குறும் தாண்டகம் -1-
துலக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு அங்கே விளக்கினை விதியின்
காண்பார் மெய்ம்மையைக் காண்கிற்பாரே–18-
மின்னு மா மழை தவழும் மேக வண்ணா விண்ணவர் தம் பெருமானே அருளாய் என்று அன்னமாய் முனிவரோடு
அமரர் ஏத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான் -திரு நெடும் தாண்டகம் -30-
———————————————–
முதலாய நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்து பல்லார் அருளும் பழுது –முதல் திருவந்தாதி -15-
பிடி சேர் களிறு அளித்த பேராளா உன் தன் அடி சேர்ந்து அருள் பெற்றாள் அன்றே பொடி சேர் அனல் கங்கை ஏற்றான்
அவிர் சடை மேல் பாய்ந்த புனல் கங்கை என்னும் பேர்ப் பொன் — -91-
————————————-
மிகவாய்ந்த அன்பாக்கி ஏத்தி அடிமைப்பட்டேன் உனக்கு என் பாக்யத்தால் இனி –இரண்டாம் -34-
பொருளால் அமருலகம் புக்கியலலாகாது அருளால் ஆறாம் அருளும் அன்றே அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த மணி வண்ணன் பாதமே நீ மறவேல் நெஞ்சே நினை -41-
அடலாழி கொண்ட அறிவனே இன்பக் கடலாழி நீ அருளிக் காண் -55-
வேம்பின் பொருள் நீர்மையாயினும் பொன்னாழி பாடென்று அருள் நீர்மை தந்த அருள் -58-
அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து -59-
இறை எம்பெருமான் அருள் என்று இமையோர் முறை நின்று மொய்ம்மலர்கள் தூவ-99-
———————————————
நெடு மாலே தாவிய நின் எஞ்சா இணையடிக்கே ஏழ் பிறப்புமாளாகி அஞ்சாது இருக்க அருள் –மூன்றாம் -18-
அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் –மூன்றாம் -19-
————————————-
திருவரங்கா அருளாய் –திரு விருத்தம் -28-
உயிர் அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர் சுமந்து நுந்தம் ஆகங்கள் நோவ வருந்தும் தவமாம் அருள் பெற்றதே -32-
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளர் வினை கெடச் செங்கோல் நாடாவுதிர் -33-
வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திருவருளால் உயலிடம் பெற்று உய்ந்தம் அஞ்சலம் தோழி -56-
இனி யுன் திருவருளால் அன்றிக் காப்பு அரிதால்-62-
புவனி எல்லாம் நீர் ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே -69-
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும் மாதாவினைப் பிதுவை திருமாலை வணங்குவனே -95-
————————————————
தானோர் இருள் அன்ன மா மேனி எம்மிறையார் தந்த அருள் என்னும் தண்டால் அடித்து –பெரிய திருவந்தாதி -23-
———————————-
மயர்வற மதிநலம் அருளினவன் யவன் அவன் -1-1-1-
இறையோன் அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே-1-3-2-
ஆவா என்று எனக்கு அருளி வெஞ்சிறைப் புள்ளுயர்த்தார்க்கு என் விடு தூதாய்ச் சென்றக்கால் -1-4-1-
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே -1-4-5-
அருளாத நீர் அருளி அவராவி துவரா முன் அருளாழிப் புள் கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று அருளாழி
அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி அருள் ஆழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே-1-4-6-
என் பிழையே நினைந்து அருளி அருளாத திருமாலார்க்கு -1-4-7-
ஏ பாவம் பரமே ஏழுலகும் ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார் -2 -2 -2—
எதிர் சூழ் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால்
எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே -2-7-6-
செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என் கையார் சக்கரக் கண்ணபிரானே-
ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல் எய்யாது ஏத்த அருள் செய் எனக்கே 2-9-3-
தெருள் கொள்ளச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்து அருளுடையவன் தாள் அணிவிக்கும் முடித்தே –2-10-11-
முதலைச் சிறைப்பட்டு நின்ற கைம்மாவுக்கு அருள் செய்த கார் முகில் போல் வண்ணன் கண்ணன் -3-5-1-
நீர்மையில் நூற்றுவர் வீய ஐவருக்கு அருள் செய்து நின்று -3-5-7-
தோற்றக் கேடவை இல்லவனுடையான் அவன் ஒரு மூர்த்தியாய் சீற்றத்தோடு அருள் பெற்றவன்
அடிக்கீழ்ப் புக நின்ற செங்கண் மால் -3-6-6-
கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய் மண் கொள் ஞாலத்து உயிக்கு எல்லாம்
அருள் செய்யும் வானவர் ஈசனை -3-6-11-
அடியோங்கு நூற்றுவர் வீய அன்று ஐவருக்கு அருள் செய்த நெடியோனை -3-7-11-
வாசகமே ஏத்த அருள் செய்யும் வானவர் தம் நாயகனே -3-8-3-
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானைச் சொல் மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினான் என்ன குறை நமக்கே -4-5-7-
ஆணி செம்பொன் மேனி எந்தாய் நின்று அருளாய் என்று என்று நாளமில்லாச் சிறு தகையேன்-4-7-4-
வெறித்துளவ முடியானே வினையேனை உனக்கு அடிமை அறக் கொண்டாய் இனி என்னாரமுதே கூயருளாயே -4-9-6-
புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயனவனை நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே -4-10-8-
என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி யருளாய் கண்ணனே -5-1-4-
தேவார கோலத்தோடும் திருச்சக்கரம் சங்கினொடும் ஆவா என்று அருள் செய்து அடியேனோடும் ஆனானே -5-1-9-
ஆனானாளுடையான் என்று அஃதே கொண்டு உகந்து வந்து தானே இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான் -5-1-10-
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும் மலியும் சுடர் ஒழி மூர்த்தி மாயப்பிரான் கண்ணன் தன்னை -5-1-11-
சிரீவர மங்கலத்தவர் கை தொழ வுறை வான மா மலையே அடியேன் தொலை வந்து அருளே -5-7-6-
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே –5-7-7-
நால் தோள் எந்தாய் உனது அருளே பிரியா அடிமை என்னைக் கொண்டாய் குடந்தைத் திருமாலே -5-8-7-
திருவல்ல வாழ் கழலின் மலி சக்கர பெருமானது தொல்லருளே -5-9-10-
தொல்லருள் நல் வினையால் சொலக் கூடும் கொல் தோழிமீர்காள் தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற
திரு நகரம் நல்லருளாயிரவர் நலன் ஏந்தும் திருவல்ல வாழ் நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே -9-10-10-
மின்னிடை மடவார் நின்னருள் சூடுவார் முன்பு நான் அது அஞ்சுவான் -6-2-1-
வேயிரும் தடம் தோளினார் இத்திருவருள் பெறுவார் யவர் கொல் -6-2-1-
மழறு தேன் மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க -6-2-5-
பழகியாம் இருப்போம் பரமே இத்திருவருள்கள் -6-2-6-
திருவிண்ணகர்ச் சேர்ந்த பிரான் கண்ணன் இன்னருள் கண்டு கொண்மின்கள் கைத்தவமே -6-3-4-
ஆசறு தூவி வெள்ளைக்குருகே அருள் செய்து ஒரு நாள் மாசறு நீலச் சுடர் முடி வானவர்கோனைக் கண்டு -6-8-8-
விண்ணோர் கோனைக் கண்டு வார்த்தைகள் கொண்டு அருளி யுரையீர் வைகல் வந்து இருந்தே -6-8-9-
அறிவிலேனுக்கு அருளாயே -6-9-7-
அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய் -6-9-8-
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியார் வாழ்மின் என்று அருள் கொடுக்கும் படிக்கேழ் இல்லாப் பெருமான் -6-9-11-
ஓன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத ஓர் ஐவர் வன் கயவரை என்று யான் வெல்கிற்பன் உன் திருவருள் இல்லையேல் -7-1-7-
சின்னமுத்து எனது தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த முன்ன மாயம் எல்லாம் முழு வேர் அறிந்து
என்னை யுன் சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்து எத்திக் கை தொழவே யருள் எனக்கு என்னம்மா என் கண்ணா இமையோர் தம் குலா முதலே -7-1-8-
ஐவரை வலமுதல் கெடுக்கும் வரமே தந்து அருள் கண்டாய் -7-1-9-
கட்கிலீ உன்னைக் காணுமாறு அருளாய்-7-2-3-
பை கொள் பாம்பணையாய் இவள் திறத்து அருளாய் -7-2-6-
என் திருமகள் சேர் மார்வன் என்னும் என்னுடைய ஆவியே என்னும் -7-2-9-
முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி யுய்ந்தவன்-7-2-11-
அரக்கன் குலத்தைத் தடிந்து மீண்டும் அவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏறு -7-6-9-
ஏற்றும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்து ஈற்று இளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றி -7-6-10-
மாயா வாமனன் மதுசூதா நீ அருளாய் -7-8-1-
அங்கண் மலர்த்தண் துழாய் முடி அச்சுதன் அருளாய் -7-8-2-
சித்திரத் தேர் வலவா திருச்சக்கரத்தாய் அருளாய் –7-8-3-
கள்ளவிழ் தாமரைக் கண் கண்ணனே எனக்கு ஓன்று அருளாய் -7-8-4-
பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே அருளாய் -7-8-5-
மயக்கா வாமனனே மதியாம் வண்ணம் ஓன்று அருளாய் -7-8-6-
துயரங்கள் செய்யும் கண்ணா சுடர் நீள் முடியாய் அருளாய் -7-8-7-
காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ணநீர் அலமர வினையேன் பேணுமாறு எல்லாம் பேணி
நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணா -8-1-2-
யானும் நீ தானாய்த் தெளிதொறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல் வான் உயர் இன்பம் மன்னி
வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே -8-1 -9–
என்றே என்னை உன் ஏரார் கோலத்து இருந்து அடிக்கீழ் நின்றே யாட் செய்ய நீ கொண்டு அருள நினைப்பது தான் -8-3-8-
உரையா வெந்நோய் தவிர அருள் நீள் முடியானை -8-3-11-
அமர்ந்த நாதனை அவரவராகி அவர்க்கு அருளும் அம்மானை -8-4-10-
எல்லியும் காலையும் தன்னை நினைந்து எழ நல்ல வருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான் -8-6-1-
பெரும் தாள் களிற்றுக்கு அருள் செய்த பெருமான் தரும் தான் அருள் தான் இணையான அறியேனே -8-7-2-
அருள் தான் இணையான அறியேன் அவன் என்னுள் இருள் தான் அற வீற்று இருந்தான் -8-7-3-
தூய சுடர்ச் சோதி தனது என்னுள் வைத்தான் தேசம் திகழும் தண் திருவருள் செய்தே-8-7-4-
திகழும் தண் திருவருள் செய்து உலகத்தார் புகழும் புகழ் தான் காட்டித் தந்து -8-7-5-
செவ்வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த அவ்வாய் அன்றி யான் அறியேன் மற்ற அருளே -8-7-7-
அறியேன் மற்ற அருள் என்னை யாளும் பிரானார் வெறிதே அருள் செய்வர் செய்வார்கட்க்கு உகந்து -8-7-8-
உணர்வில் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறற் பொருட்டு என் உணர்வினுள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே-8-8-3-
தெருளும் மருளும் மாய்த்துத் தன் திருந்து செம் பொன் கழல் அடிக்கீழ் அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப்பட்ட சடகோபனை ஓர் ஆயிரத்துள் இப்பத்தால் அருளி அடிக்கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே -8-8-11-
திருப்புலியூர் முனைவர் மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ்கினாள் -8-9-5-
திருவருள் மூழ்கி வைகலும் செழு நீர் நிறக் கண்ணபிரான் திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த உள
திருவருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப் புலியூர் திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல்லியல் செவ்விதழே -8-9-6-
குட்ட நாட்டுத் திருப்புலியூர் நின்ற மாயப்பிரான் திருவருளால் இவள் நேர்பட்டதே -8-9-10-
பொங்கேழ் புகழ்கள் வாயவாய்ப் புலன் கொள் வடிவு என் மனத்ததாய் அங்கேய் மலர்கள் கையவாய் வழி பட்டோடே அருளிலே -8-10-4-
வழி பட்டோடே அருள் பெற்று மாயன் கோல மலரடிக்கீழ் -8-10-5-
வடமதுரைப் பிறந்தார்க்கு அருள் கொள் ஆளாய் யுய்யல்லால் இல்லை கண்டீர் அரணே-9-1-3-
பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால் குடி குடி
வழி வந்தாட் செய்யும் தொண்டரோர்க்குக்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களில் நோக்காய் -9-2-1-
குடிக்கிடிந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த அடிமைக்கு குற்றேவல் செய்து உன் பொன்னடிக் கடவாதே
வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி -9-2-2-
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி -9-2-3-
புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே
என்னை ஆள்வாய் எனக்கு அருளி -9-2 -4—
பவளம் போல் கனிவாய் சிவப்பா நீ காண வந்து நின் பல் நிலா முத்தம் தாவல் கதிர் முறுவல் செய்து
நின் திருக்கண் தாமரை தயங்க நின்று அருளாய் -9-2-5–
அடியான் இவன் என்று எனக்கு ஆரருள் செய்யும் நெடியானை -9-4-10-
இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைத்த பல்லூழிக்கு தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனை -9-5-11-
வெறி கமல் சோலைத் தேன் காஅத்கரை என்னப்பன் சிறிய வென்னாருயிர் உண்ட திரு வருளே -9-6-4-
திருவருள் செய்பவன் போல் என்னுள் புகுந்து -9-6-5-
திருமேனி யவட்க்கு அருளீர் என்றக்கால் உம்மைத் தன் திருமேனி ஓளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே -9-7-4-
நாவாய் யுறைகின்ற நாரண நம்பீ ஆவா அடியான் இவன் என்று அருளாயே -9-8-7-
அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப் பொருளாக்கி உன் பொன்னடிக்கு கீழ்ப் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை என் நெஞ்சகத்து இருத்தும் தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவே -9-8-8-
யாமுடைய ஆருயிர் காக்குமாறு என் அவனுடைய அருள் பெறும் போது அரிதே-9-9-5-
அவனுடைய அருள் பெறும் போது அரிதால் அவ்வருள் அல்லன வருளும் அல்ல அவன் அருள் பெறும் அளவு ஆவி நில்லாது –9-9-6-
மது மண மல்லிகை மந்தக் கோவை வண் பசுஞ்சாந்தினில் பஞ்சமம் வைத்து அது மணம் தின்னருள்
ஆய்ச்சியர்க்கே ஊதும் இத்தீங்குழற்கே உய்யேன் நான் -9-9-8 —
நெறிமையால் மலர்கள் தூவி பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே -10-2-4-
புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி -10-2-5-
நெடியோன் அருள் சூடும் படியான சடகோபன் நொடியாயிரத்திப் பத்து அடியார்க்கு அருள் பேறே -10-5-11-
அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே -10-6-1-
பாண்டவர்க்காப் படை தொட்டான் நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே -10-6-4-
என் கொல் அம்மான் திருவருள்கள் -10-7-4-
அடி பரவ அருளை ஈந்த அம்மானே -10-7-6-
அருளை ஈய என்னம்மானே என்னும் முக்கண் அம்மானும் தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர் கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை மருள்கள் கடியும் மணி மலை திருமாலிருஞ்சோலை மலையே -10-7-7-
திருப்பேரான் ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேன் -10-8-9-
————————————————-
தாழ்வு ஒன்றில்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே ஆள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையைச் சூடிக்கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே -16-
ஆக்கி யடிமை நிலைப்பித்தனை என்னை இன்று அவமே போக்கிப் புறத்திட்டது என் பொருளா முன்பு புண்ணியர் தம்
வாக்கில் பிரியா இராமமானுச நின்னருளின் வண்ணம் நோக்கில் தெரிவரிதால் உரையாய் இந்த நுண் பொருளே -38-
ஆயிழையார் கொங்கை தங்கும் அக்காதல் அளற்று அழுந்தி மாயும் என்னாவியை வந்து எடுத்தான் இன்று மா மலராள்
நாயகன் எல்லா வுயிர்கட்க்கும் நாதன் அரங்கன் என்னும் தூயவன் தீதில் இராமானுசன் தொல்லருள் சுரந்தே -42-
நிகரின்றி நின்ற என் நீசதைக்கு நின்னருள் கண் அன்றிப் புகல் ஒன்றும் இல்லை அருட்க்கும் அஃதே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச இனி நாம் பொழுதே அகலும் பொருள் என் பயன் இருவோமுக்கும் ஆனபின்னே –48
கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென்னரங்கன் தொண்டர் குலாவும் இராமானுசனை தொகை இறந்த
பண் தரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்து அருளும் கொண்டலை மேவித் தொழும் குடியாம் எங்கள் கோக்குடியே -55-
நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நீரை வேங்கடப் பொற்குன்றமும் வைகுண்ட நாடும் குலவிய பாற்கடலும்
உன்தனக்கு எத்தனை இன்பம் தரும் உன் இணை மலர் தாள் என் தனக்கும் அது இராமானுச இவை ஈந்து அருளே -70-
ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக்குறும்பைப் பாய்ந்தான் அம்மறை பல் பொருளால் இப்படி யனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை வேர் பறியக் காய்ந்தனன் வண்மை இராமானுசர்க்கு என் கருத்தினையே-77-
மருள் சுரந்த வாகம வாத்தியார் கூறும் அவப்பொருளாம் இருள் சுரந்து எத்த உலகு இருள் நீங்க தண்ணீண்டிய சீர்
அருள் சுரந்து எல்லா வுயிர்கட்க்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்தான் எம்மிராமாநுசன் மிக்க புண்ணியனே -91-
கட்டப்பொருளை மறைப்பொருள் என்று கயவர் சொல்லும் பெட்டைக் கெடுக்கும் பிரான் அல்லனே என் பெரு வினையைக்
கிட்டிக் கிழங்கோடு தன்னருள் என்னும் ஒள் வாளுருவி வெட்டிக் களைந்த இராமானுசன் என்னும் மெய்த்தவனே -93-
கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டாலே -104-
———————————————
எந்தை திருவாய் மொழிப்பிள்ளை இன்னருளால் வந்த உபதேச மார்க்கத்தைச் சிந்தை செய்து பின்னரும் கற்க
உபதேசமாய்ப் பேசுகின்றேன் மன்னிய சீர் வெண்பாவில் வைத்து -1-
பொய்கையார் பூதத்தார் பெயர் புகழ் மழிசை ஐயன் அருள் மாறன் சேரலர் கோன் துய்ய பட்ட நாதன்
அன்பார் தாள் தூளி நற் பாணன் நன் கலியன் ஈது இவர் தோற்றத்து அடைவாம் இங்கு -4-
தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவாரார் அருளிச் செயலை அறிவாரார் அருள் பெற்ற நாதமுனி முதலா
நம் தேசிகரை அல்லால் பேதை மனமே யுண்டோ பேசு -36-
ஓராண் வழியா யுபதேசித்தார் முன்னோர் ஏரார் எதிராசர் இன்னருளால் பாருலகில் ஆசையுடையோர்க்கு
எல்லாம் ஆரியர்காள் கூறும் என்று பேசி வரம்பு அறுத்தார் பின் -37-
முந்துறவே பிள்ளான் முதலானோர் செய்து அருளும் அந்த வியாக்கியைகள் அன்றாகில் அந்தோ
திருவாய் மொழிப் பொருளைத் தேர்ந்து யுரைக்க வல்ல குரு ஆர் இக்காலம் நெஞ்சே கூறு -40-
தெள்ளாரும் ஞானத் திருக் குருகைப்பிரான் பிள்ளான் எதிராசர் பேர் அருளால் உள்ளாரும்
அன்புடனே மாறன் மறைப் பொருளை அன்று யுரைத்தது இன்பமிகும் ஆறாயிரம் -41-
தஞ்சீரை ஞானியர் தாம் புகழும் வேதாந்தி நஞ்சீயர் பட்டர் நல்லருளால் எஞ்சாத ஆர்வமுடன்
மாறன் மறைபொருளை ஆய்ந்து யுரைத்தது ஏர் ஒன்பதினாயிரம் -42-
நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவியிட பின் பெரியவாச்சான் பிள்ளை அதனால் இன்பா அருபத்தி
மாறன் மறைப் பொருளை சொன்னது இருபத்து நாலாயிரம் -43–
பெரியவாச்சான் பிள்ளை பின்புள்ளவைக்கும் தெரிய வியாக்கியைகள் செய்வால் அரிய அருளிச் செயல் பொருளை
ஆரியர்கட்க்கு இப்போது அருளிச் செயலாய்த்து அறிந்து -46-
அன்ன புகழ் முடும்பை யண்ணல் உலகாசிரியன் இன்னருளால் செய்த கலை யாவையிலும் உன்னில்
திகழ் வசன பூடணத்தின் சீர்மை ஒன்றுக்கு இல்லை புகழ் அல்ல விவ்வார்த்தை மெய் இப்போது -53-
பூர்வாசாரியர்கள் போதம் அனுட்டானங்கள் கூறுவார் வார்த்தைகளைக் கொண்டு நீர் தேறி
இருள் தரும் மா ஞாலத்தே இன்பமுற்று வாழும் தெருள் தருமா தேசிகனைச் சேர்ந்து -72-
இந்த உபதேச இரத்தின மாலை தன்னை சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார் எந்தை எதிராசர்
இன்னருளுக்கு என்றும் இலக்காகி சதிராக வாழ்ந்திடுவார் தாம் -73-
———————————–
வீடு செய்து மற்று எவையும் மிக்க புகழ் நாரணன் தாள் நாடு நலத்தால் அடைய நன்கு உரைக்கும்
நீடு புகழ் வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழ பண்புடன் பாடி யருள் பத்து -2-
பரிவதில் ஈசன் படியைப் பண்புடன் பேசி அரியனலன் ஆராதனைக்கு என்று உரிமையுடன்
ஓதி அருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில் பேதையர்கள் தங்கள் பிறப்பு -6-
அணைந்தவர்கள் தம்முடனே ஆயன் அருட்க்கு ஆளாம் குணம் தனையே கொண்டு உலகைக் கூட்ட இணங்கி மிக
மாசில் உபதேசம் செய் மாறன் மலரடியே வீசு புகழ் எம்மா வீடு -18-
மொய்ம்பாரும் மாலுக்கு முன்னடிமை செய்து உவப்பால் அன்பால் ஆட் செய்பவரை ஆதரித்தும்
அன்பிலா மூடரை நிந்தித்தும் மொழிந்து அருளும் மாறன் பால் தேடரிய பத்தி நெஞ்சே செய் -25-
சொன்னாவில் வாழ் புலவீர் சோறு கூறைக்காக மன்னாத மானிடரை வாழ்த்துதலால் என்னாகும்
என்னுடனே மாதவனை ஏத்தும் எனும் குருகூர் மன்னருளால் மாறும் ஜன்மம் -29-
நண்ணாது மாலடியை நானிலத்தே வல்வினையால் எண்ணாராத் துன்பமுறும் இவ்வுயிர்கள் தண்ணிமையைக்
கண்டு இருக்க மாட்டாமல் கண் கலங்கும் மாறன் அருள் உண்டு நமக்கு உற்ற துணை ஓன்று -39-
நோற்ற நோன்பாதியிலே உன்தன்னை விட்டு ஆற்றகில்லேன் பேற்றுக்கு உபாயம் உந்தன் பேர் அருளே சாற்றுகின்றேன்
இங்கு என்னிலை என்னும் எழில் மாறன் சொல் வல்லார் அங்கம் அமரர்க்கு ஆராவமுது -47-
நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோம் முன் நண்ணாரை வெல்லும் விருத்த விபூதியன் என்று எல்லை யறத்
தான் இருந்து வாழ்த்தும் தமிழ் மாறன் சொல் வல்லார் வானவர்க்கு வாய்த்த குரவர் -53-
துவளறு சீர் மால் திறத்துத் தொன்னலத்தால் நாளும் துவளறு தன் சீலம் எல்லாம் சொன்னான் துவளறவே
முன்னம் அனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன் அதில் மன்னும் உவப்பால் வந்த மால் -55-
பண்டை யுறவான பரனைப் புளிங்குடிக்கே கண்டு எனக்கு எல்லா உறவின் காரியமும் தண்டற நீ
செய்து அருள் என்றே இரந்த சீர் மாறன் தாளிணையே உய் துணை என்று உள்ளமே ஓர் -82-
ஓரா நீர் வேண்டியவை உள்ளது எல்லாம் செய்கின்றேன் நாராயணன் அன்றோ நான் என்று பேர் உறவைக்
காட்ட அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள் மாட்டி விடும் நம் மனத்து வை -83-
இன்னுயிர் மால் தோற்றினது இங்கு என் நெஞ்சில் என்று கண்ணால் அன்று அவனைக் காண எண்ணி ஆண் பெண்ணாய்
பின்னையவன் தன்னை நினைவிப்பவற்றால் தான் தளர்ந்த மாறன் அருள் உன்னும் அவர்க்கு உள்ளம் உருகும் -85-
மல்லடிமை செய்யும் நாள் மால் தன்னைக் கேட்க அவன் சொல்லும் அளவும் பற்றாத தொன்னலத்தால் செல்கின்ற
ஆற்றாமை பேசி அலமந்த மாறன் அருள் மாற்றாகப் போகும் என் தன் மால் -89-
கண்ணன் அடி இணையில் காதலுருவார் செயலை திண்ணமுறவே சுருங்கச் செப்பியே மண்ணவர்க்குத்
தான் உபதேசிக்கை தலைக்கட்டினான் மாறன் ஆன புகழ் சேர் தன்னருள் -95-
அருளால் அடியில் எடுத்த மால் அன்பால் இருளார்ந்த தம்முடம்பை இச்சித்து இரு விசும்பில்
இத்துடன் கொண்டு ஏக இசைவு பார்த்தே இருந்த சுத்தி சொல்லும் மாறன் செஞ்சொல் -96-
—————
மாலே ! மாயப் பெருமானே! மா மாயவனே ! என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே–1-5-11-
தன்னை முடித்துக் கொள்வதாகக் கழுத்திலே கயிற்றை இட்டுக் கொண்டவனை அறுத்து விழ விடுவாரைப் போன்று, அகன்று முடியப் புக்க இவரைப் பொருந்த விட்டுக் கொள்ள, அவன் அருளாலே பொருந்தின ஸ்ரீ ஆழ்வார் பிடி தோறும் நெய் ஒழியச் செல்லாத ஸூகுமாரரைப் போன்று, நின்ற நின்ற நிலைகள் தோறும் இறைவன் திருவருள் ஒழிய
நடக்க மாட்டாதவர் ஆதலின், ‘மால் அருளால் மன்னு சடகோபன்’ என்கிறார்.
————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-