வானவர் தங்கள் சிந்தை போல என்னெஞ்சமே –வேங்கடம் மேவி மாண் குறளான
வந்தணற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-1-பிரவேசம் –
அடைந்தேன்-என்றும்
அடியேனை ஆட் கொண்டு அருளே -என்றும்
இனி நான் உன்னை என்றும் -விடேன் என்றும்
கைங்கர்ய லாபத்துக்காக திருவடிகளிலே வந்து சரணம் புக்கு
இக்கைங்கர்யம் தான் நித்யமாக செல்ல வேண்டும் என்னும்படி-அதிலே ப்ரேமம் பிறந்ததாய் -நின்றது
நமக்கு இப்படி இந்த சமாதி தான் பிறக்கைக்கு அடி என் -என்று ஆராய்ந்து -பார்த்தார்
உபகார ஸ்ம்ருதிக்காக –அத்தை ஆராய்ந்தவாறே –
மந ஏவ -என்கிறபடியே
நாட்டார் பாஹ்யராயும் -குத்ருஷ்டிகளாயும் அனர்த்தப் பட்டு போரா நிற்க
நமக்கு கைங்கர்ய லாபத்துக்காக திருவடிகளிலே விழுந்து சரணம் புகுகையும்
அது தான் அவிச்சின்னமாக செல்ல வேணும் என்னும் படியான ருசி பிறக்கையும்
இஸ் சம்ருதிக்கு அடி இந் நெஞ்சு இறே என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து
உன்னாலே இஸ் சம்ருத்தி எல்லாம் உண்டாயிற்று என்று திரு உள்ளத்தோடே கூடி இனியர் ஆகிறார் –
————————-
காசை யாடை மூடி யோடிக் காதல் செய்தானவனூர்—வெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-1-பிரவேசம்-
ஆஸ்ரித விஷயத்தில் -பிராட்டி திறத்தில் பண்ணும் ஓர் ஆதரத்தைப் பண்ணும் ஸ்வ பாவனாய் –
அவர்கள் காலாலே காட்டுமத்தை -தலையாலே செய்வானாய் –அகடிதங்களை கடிப்பிக்க வல்லனுமாய் –
ப்ரஹ்மாதிகளுக்கு அவிஷயமாம் படி பெரியவனுமாய் –சர்வ பூத ஸூ க்ருத்துமாய் –சர்வ விஸஜாதீயனுமான
ஸ்ரீ சர்வேஸ்வரன்
தனக்கு ஆஸ்ரிதர் பக்கல் உண்டான இனிமையாலே
அவர்கள் சரீரம் சம்பந்தம் அற்று பரம பத்தில் போனால் செய்யும் அடிமையை –
இண்டை யாயின கொண்டு தமக்கு ஏத்தலாம் படி ஸ்ரீ திரு வெவ்வுள்ளிலே வந்து சாய்ந்து அருளின படியை
அனுசந்தித்து இனியர் ஆகிறார்-
—————————-
விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ செற்றவன் தன்னை–
திருவல்லிக்கேணிக் கண்டேனே–2-3-1-பிரவேசம்
ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய் –ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வபவனாய் –ஆஸ்ரித சுலபனாய் –
இதர விஸாஜதீயனாய் – இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன்
இக் குணங்கள் தான் தர்மி அனுவர்த்திறவோபாதி எங்கும் அனுவர்த்திக்குமவை இறே –
இப்படி இருக்கிறவன் மனுஷ்யராய் இருப்பார் புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்கலாம் படி
வந்து கிடந்த மாத்ரம் அன்றிக்கே
ஒரு திர்யக்குக்கு இப் பூவில் செவ்வி அழியாதபடி திருவடிகளில் பரிமாற வேணும் என்று இடர் பட –
அவ் விடர் தீர்க்கைக்காக-அது இடர் பட்ட மடுவின் கரையிலே அரை குலையத் தலை குலைய வந்து விழுந்து
அத்தை ஆற்றி-இன்னமும் இப்படி இடர் படுவார் உண்டோ என்று சாய்ந்து அருளினான் உண்டே -என்கிறார் –
———————-
அன்றாயர் குலக்கொடியோடு அணி மா மலர் மங்கை யொடன்பாளாவி அவுணர்க்கு என்றானுமிரக்க மிலாதவனுக்கு
உறையுமிடமாவது நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற் கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-1-பிரவேசம்
ஸ்ரீ பிராட்டிமாரோடே கூட வந்து-விரோதி நிரசன சீலனாய்-பிரபல விரோதியான பாபங்களை
அநாயேசேந போக்க வல்லவனாய்-சர்வ ஸ்வாமியான-ஸ்ரீ சர்வேஸ்வரன்
உகந்து அருளின நிலங்கள் எங்கும்-பண்ணும் விருப்பத்தை
ஸ்ரீ திரு நீர் மலையிலே பண்ணிக் கொடு வந்து சந்நிஹிதனானான் –
அநவஹிதராய் இருப்பார் வார்த்தையைக் கேட்டு அநர்த்தப் பட்டுப் போகாதே
அவனை ஆஸ்ரயித்து க்ருதார்த்தராய் போங்கோள் என்று பரோபதேச பிரவ்ருத்தர் ஆகிறார்-
——————–
பாராயதுண்டு உமிழ்ந்த பவளத் தூணை —-கற்பகத்தைக் கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே —2-5-1-பிரவேசம்-
ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய் –ஆஸ்ரித வத்சலனாய் –ஆஸ்ரித சுலபனாய் –
ஸ்வ ப்ராப்திக்கு உபாயமும் தானேயாய் –இருக்கிற சர்வேஸ்வரனை
திருக் கடல் மல்லையிலே நான் அகப்படக் காணப் பெற்றேன் –
அவன் அரியன் என்று கை வாங்காதே
அவனை ஒழிந்தது அடங்கலும் படு குழி -அவற்றில் புக்கு
அனர்த்தப் பட்டு போகாதே
அவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவித்துப் போக பாருங்கோள் என்கிறார்-
——————————————————
நண்ணாத வாளவுணர் இடைப்புக்கு வானவரைப்
பெண்ணாகி யமுதூட்டும் பெருமானார் மருவினிய
தண்ணார்ந்த கடல் மல்லைத் தல சயனத்துறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே–2-6-1–பிரவேசம்-
அஹம் அச்ம்ய அபராதா நாம் -என்றும்
சாதே தேச்மின் பிரத்யுஜ்யதாம் – என்று சரணாகதிக்கு லஷணம் சொல்லிற்று
அது தன்னை
வானிலா முறுவலிலும்-தாயே தந்தை யிலும் ஆக அனுசந்தித்தார் –
அது தன்னை
காணாது திரி தருவேன் கண்டு கொண்டேன் என்றும்
தொண்டனேன் கண்டு கொண்டேன் என்றும்-அது தன்னை அனுபாஷித்தார் –
ஆனுகூலச்ய சங்கல்ப-பிரதிகூலச்ய வர்ஜனம் -என்று-அவனுக்கு சம்பாவிதமாய்
அநந்தரம் வரும் ஸ்வபாவங்களை சொல்லுகிறது –
அவை தமக்கு பிறந்தபடி சொல்லிற்று ஆயிற்று இதில் -கடல் மல்லைத் தல சயனத்துறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே-என்று
அவை தான் இரண்டும் லஷணமாக வேண்டிற்று இல்லை
பரஸ்பர விரோதத்தாலே -த்வமே-என்று உபாய நைரபேஷ்யத்தை சொல்லுகையாலும்
இதில் அங்கங்களோடு கூடி இருப்பதாகச் சொல்லுகையாலும் –
ஆகையால் இது லஷணமாய்
இது அவனுக்கு சம்பாவித ஸ்வ பாவமாம் இத்தனை –
பசுர் மனுஷ்ய பஷீ ரே ச வைஷ்ணவ சம்ஸ்ரபா தேனை வதே பிரயாச்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் –
என்று பாகவத சமாஸ்ரயணத்தை
ஞானமும் ஞான அனுரூபமான வ்ருத்தமும் ஒழியவேயும்
பகவத் பிராப்திக்கு சாதனமாக சொல்லா நின்றது இறே-
மிருக பஷி யாதிகளையும் கூட எடுக்கிறது இறே
இவை தான் பின்னை இரண்டோ –
பாகவத சமாஸ்ரயணம் ஆவது -பகவத் சமாஸ்ரயண்த்தின் உடைய காஷ்டை அன்றோ -என்னில்
அவ்யவதாநேந பகவத் சமாஸ்ரயணம் பண்ணுகிறோம் என்று இருப்பது ஓன்று –
பாகவத சமாஸ்ரயணத்தாலே பகவத் சமாஸ்ரயணம் பண்ணுமதும் ஓன்று உண்டு
இந்த முக பேதத்தைப் பற்றிச் சொல்லுகிறது –
பாகவத சமாஸ்ரயணம் ஒழிய பகவத் விஷயத்தில் இழியும் துறை இல்லை-
மாறாய -இத்யாதி –
வேறாக வேத்தி இருப்பார் யாகிறார் யார் –
மற்று அவரை சாத்தி இருப்பார் யாகிறார் யார் –
இத்தை ஒரு உதாஹரன நிஷ்டமாகக் காட்டலாமோ வென்னில் –
வேறாக வேத்தி இருப்பார் யாகிறார் -சர்வேஸ்வரனைக் கண்ட அநந்தரம்-தம்மைப் பேணாதே
பகவத் சம்ருத்திக்கு மங்களா சாசனம் பண்ணும் ஸ்ரீ பெரியாழ்வார் போல்வார் –
மற்று அவரை சாத்தி இருப்பார் யாகிறார் –
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே -என்று இருக்கும் ஸ்ரீ ஆண்டாள் போல்வார் –
இனி இவர் தாம் பாகவதாராக நினைத்து இருப்பது
உகந்து அருளின நிலங்களிலே நீர்மையிலே ஈடுபட்டு இருக்கும் அவர்களை –
அபாகவதாராக நினைத்து இருப்பது அங்குத்தை வாசி அறியாதவர்களை –
ஆனுகூலச்ய சங்கல்ப -என்கிறது
ஓன்று செய்து தலைக் கட்டிற்றாய் ஓர் அளவில் மீளுமது அல்லாமையாலே
ப்ராப்தி தசையிலும் அனுவர்த்திக்குமது இங்கு ஓர் அளவில் மீளாதிறே-
பராதி கூலச்ய வர்ஜனம் -ப்ராப்தி அளவும் இறே நிற்பது –
ப்ராதிகூல்ய நிவ்ருத்தி பிறந்தால் உண்டாமதாகையாலே-ஆனுகூல்யம் பிற்பட்டது இறே –
அந்த ப்ராதி கூல்ய நிவ்ருத்தி தமக்கு உண்டான படியைச் சொல்லுகிறார் முதல் பாட்டில் –
இது தான் உண்டாகவே அமையும் இறே –
சம்பந்தம் இன்றாக உண்டாக்க வேண்டாவா –
தானே ஏறிட்டுக் கொண்டத்தை தவிரும் இத்தனை வேண்டுவது –
————————
திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த
வவளும் நின்னாகத்திருப்பது மறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
குவளை யங்கண்ணி கொல்லியம்பாவை சொல்லு நின் தாள் நயந்திருந்த
விவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-1-பிரவேசம்
ததீய சேஷத்வ பர்யந்தமாக பகவத் அனுபவம் பண்ணுகையாலே
தம்முடைய அனந்யார்ஹ சேஷத்வத்தை அனுசந்தித்தாராய் நின்றார் கீழ் –
அனந்யார்ஹ சேஷத்வத்துக்கு லஷணம் சொல்லுகிற இடத்தில்
நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் உற்றது உன் அடியார்க்கு அடிமை -என்றார் இறே-
தம்முடைய சேஷத்வத்துக்கு எதிர் தலையான அவனுடைய சேஷித்வத்தை அனுசந்தித்த இடத்தில்
அது தமக்கு ரசித்து இருக்கும் படியாலே அவனை அனுசந்திபதாகப் பாரித்தார் –
அப்போதே நினைத்தபடி அனுபவிக்கப் பெற்றிலர் –
அவ் விழவாலே தாமான தன்மை போய்-பிரிவாற்றாமையாலே நோவு படுகிறாள்
ஒரு பிராட்டி தசையைப் ப்ராப்தராய்-அந்நிலை தானும் போய் குலைந்தது
அதாவது தன் ஆற்றாமையை தானே வாய் விட்டு ஆற்றுகை அன்றிக்கே-பிறர் வாயாலே சொல்லுகை இறே –
ஆக நாயகனோடு நினைத்த படிகளை பரிமாறாமையாலே
நம்முடைய ஸ்ரீ கோயில் ஸ்ரீ திருவாய்மொழி படியாலே
ஸ்த்திதி கமன சயநாதிகளிலே ஒரு நிலை இன்றிக்கே
அர்த்தியாய் நோவு படுகிற பெண் பிள்ளை உடைய தசையை அனுசந்தித்த திருத் தாயார்
இவளுக்கு உண்டான செல்லாமையையும் –
அவன் இவ்வளவில் வந்து முகம் காட்டாதே இருக்கிற இருப்பையும் –
இவளுடைய தசைக்கு தன்னால் ஒரு பரிஹாரம் இன்றிக்கே இருக்கிற படியையும்-
அவனை இட்டே பரிஹரித்துக் கொள்ள வேண்டும் படியாய் இருக்கிற இருப்பையும் அனுசந்தித்து
இதுக்கு நேரே நிதான பூதரராய் இருக்கிற அவர் இருக்க வழியே போவாரோ பாதியான நமக்கு இது தெரியுமோ –
ஆனபின்பு அவர் தம்மையே இதுக்கொரு போக்கடி கேட்போம் என்று அத்யவசித்து
ஸ்ரீ திருவிட வெந்தை நாயனார் -திருவடிகளிலே இவளைக் கொடு போய் பொகட்டு
எங்களை காற்கடைக் கொண்டு
உம்முடைய சௌந்தர்ய சீலாதிகளிலே துவக்குண்ட இவள் உம்மை நினைத்தபடி அனுபவிக்கப் பெறாமையாலே –
மிகவும் நோவு படா நின்றாள் –
நீர் இவளுடைய திறத்து செய்ய நினைத்து இருக்கிறது என் என்று கேட்கிற திருத் தாயார் பாசுரத்தாலே
தமக்குப் பிறந்த தசையை பேசுகிறார் ஆயிற்று –
————————-
திரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை மலர் மிசை மேல் அயனும் வியப்ப
முரிதிரை மா கடல் போல் முழங்கி மூ உலகும் முறையால் வணங்க
எரியன கேசரி வாள் எயிற்றோடு இரணியன் ஆகம் இரண்டு கூறா
அரி உருவாம் இவர் யார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே -2-8-1-பிரவேசம் –
ஹ்ரீரேஷா ஹி மம துலா -என்னவும் மாட்டாதே நிற்கிற இடம் இறே இவ்விடம்
அவன் அப்படி இரானாகில் ஆஸ்ரயணீயன் ஆக மாட்டான் –
தான் யுக்த அயுக்தங்கள் அறியாதே –நிற்பது இருப்பது விழுவது எழுவதாய்க் கொண்டு
மோஹித்துக் கொண்டு கிடந்த தசையை அனுசந்தித்த திருத்தாயார்
அவன் படிகளை சொல்லிக் கூப்பிடக் கேட்டும் -தான் வாய் வெருவியும் அவ்வழி யாலே அல்பம் தெளிவு பிறந்தது –
அவன் குணங்களை நெஞ்சிலே ஊற்றிருந்தது அறிவு கலங்கும் ஆபத்திலே வந்து உதவும் ஸ்வபாவன் என்று
அவன் படிகளை அனுசந்தித்து ஆச்வஸ்தையாய் பின்பு
ஸ்ரீ திரு அட்டபுயகரத்து நாயனாரை அனுசந்தித்து அவரையே பாவித்து அந்த பாவன பிரகர்ஷத்தாலே
ப்ரத்யஷ சாமானகாரமாய் உருவு வெளிப்பாடு போலேயாய்
அவனுக்கு சில வார்த்தைகள் தான் சொல்லுகிறாள் ஆகவும் –
அவர் அதுக்கு சில மறு மாற்றங்கள் சொல்லுகிறார் ஆகவும் –
சிலவற்றைச் சொல்ல இதைக் கேட்ட பந்து வர்க்கம் எல்லாம-நீ பிரமித்தாயோ -சொல்லுகிறது என் எனபது -என்ன
ஸ்ரீ திரு அட்டபுயகரத்து நாயனாரை நான் இங்கனே சில வார்த்தைகளைக் கேட்டேன் –
அவர் எனக்கு சில மறு மாற்றங்கள் அருளிச் செய்தார் என்று
அவ் வார்த்தையை தாய்மார் தோழி மார்களுக்கு சொல்லுகிறாளாய் செல்லுகிறது-
———————
சொல்லு வன் சொற்பொருள் தானவையாய்ச் சுவை ஊறு ஒலி நாற்றம் தோற்றமுமாய்
நல்லரன் நான்முகன் நாரணனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி
பல்லவன் வில்லவன் என்று உலகில் பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல்
பல்லவன் மல்லையர் கோன் பணிந்த பரமேஸ்வர விண்ணகரம் அதுவே-2-9-1- –ப்ரேவேசம் –
மன்னவன் தொண்டையர் கோன் வணங்கும் நீண் முடி மாலை என்று தொண்டைமான் சக்கரவர்த்தி
ஸ்ரீ திரு அட்டபுயகரத்திலே அனுகூலித்த படியை அனுசந்தித்தார் –
அந்த பிரசங்கத்தாலே பல்லவன் என்பான் ஒருத்தன் ஸ்ரீ பரமேஸ்வர விண்ணகரத்திலே அதிமாத்ரமான
ஆனு கூல்யங்களைப் பண்ணி ஒரோ ஒன்றை எடுத்தது ஆயிரமாம் படி பண்ணினான் ஆயிற்று
பின்பு சோழன் கண்டு அது தான் பொறுக்க மாட்டாமையாலே அவை தன்னை அமைத்த வித்தனை –
இனித் தான் பகவத் விஷயத்தில் ஓரடி வர நின்றார் தமக்கு உத்தேச்யராக இறே நினைத்து இருப்பது –
அத்தாலே அவன் படிகள் எல்லாம் தமக்கு இனிதாய் இருக்கையாலே அவற்றை அனுபவித்துப் பேசுகிறார் –
———————–
மஞ்சாடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்
எஞ்சாமல் வயிற்றடக்கி ஆலின் மேல் ஓர் இளம் தளிரில் கண் வளர்ந்த ஈசன் தன்னை
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால் தூய நான்மறையாளர் சோமுச் செய்ய
செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே—2-10-1- பிரவேசம் –
யுத்தே சாப்ய பலாய நம் -என்றும்
ஈஸ்வரபாச-என்றும்-சொல்லும்படி யானவனும் கூட ஆஸ்ரயித்த படியை அனுசந்தித்தார்
ஸ்வ வர்ணத்துக்கும் ஸ்வ ஆஸ்ரமத்துக்கும் உசிதமான கர்மங்களை பாலாபி ஸந்தி ரஹீதமாக
பகவத் சமாராதன புத்யா அனுஷ்டித்து
சமதமாத்யு பேதராய் இருக்கிற ப்ரஹ்மா போல்வாருக்கு ஆஸ்ரயணீயனாய்க் கொண்டு
பிராட்டிமாரும் தானுமாக ஸ்ரீ திருக் கோவலூரிலே வந்து நின்றான்-
அவை ஒன்றும் இல்லாத நான் அவனை அங்கே கண்டு அனுபவிக்கப் பெற்றேன் -என்கிறார் –
—————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply