Archive for the ‘Kannan’ Category

ஸ்ரீ நம்மாழ்வார் பாசுரப்படி –ஸ்ரீ கிரீடா வல்லபன்-ஸ்ரீ கிருஷ்ண அவதார லீலை —

August 11, 2021

ஸ்ரீ கிருஷ்ண அவதார கிரீடா –

தந்தை தளை கழலத் தோன்றி
பிறந்தவாறும் –
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள் வாய் பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும் –
மனப்பரிப் போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து தனக்கு வேண்டுருக் கொண்டு
தான் தான சீற்றத்தினை முடிக்கும்-புனத் துழாய் மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே
பிறந்த மாயா –
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான்
எளிவரும் இயல்வினன் நிலை வரம்பு இல பல பிறப்பாய் ஒளிவரும் முழுநலம் முதல் இல கேடு இல
வடமதுரைப் பிறந்த –மணி நிறக் கண்ணபிரான் தன் மலர் அடிப் போதுகளே
இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான் மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே –
மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன்
குற்றம் அன்று எங்கள் பெற்றத்தாயன் வடமதுரைப் பிறந்தவன் —
வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் —
மா துகிலின் கொடிக் கொள் மாட வடமதுரைப் பிறந்த தாது சேர் தோள் கண்ணன் அல்லால் –
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் –

———

ஸ்ரீ கிருஷ்ணன் போய் ஆய்ப்பாடி புக்கதும்

போய் ஆய்ப்பாடி நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காணேடி
வீங்கிருள் வாய் பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும் –
எடுத்த பேராளன் நந்த கோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே அசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்கு களிறே அடியனேன் பெரிய வம்மானே –

————-

அல்லிக் கமலக் கண்ணனை –
தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காணேடி
ஆயர் கொழுந்தாய் அவரால் புடை யுண்ணும் -மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை தூய அமுதை –

அமரர் முழு முதல் ஆகிய வாதியை அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
காக்கும் இயல்வினன் கண்ண பெருமான் –
ஆராவமுதாய் அல்லாவியுள் கலந்த காரார் கருமுகில் போல் என் அம்மான் கண்ணனுக்கு
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை -தாமோதரனைத் தனி முதல்வனை
ஞாலம் உண்டவனை ஆமோ தரம் அறிய ஒருவர்க்கு
வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை கண்ணனை நெடுமாலை
எங்கும் உளன் கண்ணன் –
கண்ணனை மாயன் தன்னைக் கடல் கடைந்து அமுதம் கொண்ட அண்ணலை அச்சுதனை அனந்தனை
செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு ஏழும் உண்டவன் கண்டீர்
மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை
கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன்
வல்வினை தீர்க்கும் கண்ணனை
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானை
கடியன் கொடியன் நெடியமால் உலகம் கொண்ட அடியன் அறிவரு மேனி மாயத்தன்
பிறந்தவாறும் –மாயங்களும் எனதாவியை நின்று நின்று உருக்கி யுண்கின்ற இச் சிறந்த வான் சுடரே –
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள் வாய் பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும் –
மனப்பரிப் போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து தனக்கு வேண்டுருக் கொண்டு
தான் தான சீற்றத்தினை முடிக்கும்-புனத் துழாய் மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே
நிறம் கரியானுக்கு நீடுலகுண்ட திறம் கிளர் வாய்ச் சிறுக் கள்வனவற்கு கறங்கிய சக்கரக் கையவனுக்கு –
விண் மீதிருப்பாய் மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய் மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் –
வந்தாய் போல் வாராதாய் வாராதே போல் வருவானே
என்னுடைய கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே -என் திரு மார்பன் தன்னை –
இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ் வேழ் உலகை இன்பம் பயக்க வினிதுடன் வீற்று இருந்து ஆள்கின்ற எங்கள் பிரான் –
எடுத்த பேராளன் நந்த கோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே அசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்கு களிறே அடியனேன் பெரிய வம்மானே –
மாயக் கூத்தா வாமனா கொண்டல் வண்ணா குடக் கூத்தா வினையேன் கண்ணா
பிறந்த மாயா –
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் திண்ணமாம் நும்முடைமை யுண்டேல்
அவனடி சேர்ந்து உய்ம்மினோ எண்ண வேண்டாம் நும்மததாதும் அவனன்றி மற்றில்லையே
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கண்ணாளன் உலகத்து உயிர்கட்கு எல்லாம் விண்ணாளன்-
காட்டித் தன் கணை கழல்கள் கடு நரகம் புகழ் ஒழித்த கண்ணன்
பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய் செற்றார் படி கடந்த செங்கண் மால்
கதையும் பொருளும் கண்ணா நின் பேரே இதயம் இருந்தவையே எத்தில் கதையின் திரு மொழியாய் நின்ற திருமாலே –
மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு மேலா வியன் துழாய்க் கண்ணியனே
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்
நாராயணன் என்னை யாளி நரகத்துக்குச் சேராமல் காக்கும் திருமால்
சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன்
வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற நாதனை ஞாலம் விளங்கும்
நாதனை ஞாலம் தத்தும் பாதனைப் பாற்கடல் பாம்பனை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனை
தீ வினைக்கு அரு நஞ்சை நல் வினைக்கு இன்னமுதத்தினை பூவினை மேவிய தேவி மணாளனை –
வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன மலரடிப் போதுகளே
சீரால் பிறந்து சிறப்பால் வளராது –
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ
கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான் பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் சீர் கலந்த சொல்

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பு இல பல பிறப்பாய்
ஒளிவரும் முழுநலம் முதல் இல கேடு இல-1-3-2-
கூனே சிதைய வுண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா –திருவாய் —1–5–5-
மனை சேராயர் குல முதலே மா மாயனே மாதவா –1–5–6-
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை –1–5–7-
எப்பால் யாவர்க்கும் நலத்தால் உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –1–7–2-
ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை –1–7–3-
தொடுவே செய்து இவ்வாய்ச்சியார் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான் –1–7–5-
அமரர்க்கு அமுதீந்த்த ஆயர் கொழுந்தை –1–7–9-
ஆனானான் ஆயன் –1–8–8-
இவையும் அவையும் உவையும்–அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம் –1- 9–1-
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஓக்கலையானே –1-9–4-
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார் -1–9–10-
வாழிய வானமே நீயும் மது சூதன் பாழிமையில் பட்டு அவன் கண் பாசத்தால் நைவாயே —2–1–5-
கோபால கோளரி ஏறு —2–2–2-
காக்கும் இயல்வினன் கண்ண பெருமான் –2–2–9-
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா –2–3–7-
கடிவார் தண்ணம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான் —2–3–9-
என் வள்ளலே கண்ணனே என்னும் –2–4–7-
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு –2–5–5-
வைகுந்தா மணி வண்ணனே —2–6–1-
வள்ளலே மது சூதனா –2–6–4-
கோவிந்தன் குடக் கூத்தன் கோவலன் —2–7–4-
முடியம்மான் மது சூதனன் –2–7–5-
காமனைப் பயந்தாய் –2–7–8-
வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகளை கண்ணனை நெடுமாலை–2–7–13-
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம் தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2–8–5-
காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு –2–8–8-
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே —2–8–10-
என் கையார் சக்கரக் கண்ண பிரானே –2–9–3-
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள்ளும் சிறப்பே –2–9–4-
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில் –2–10–8-
மெய் ஞான சோதிக் கண்ணனை மேவுதுமே –3–2–7-
பாவு தொல் சீர்க் கண்ணா என் பரஞ்சுடரே–3–2–8-
கலைபல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு –3–2–10-
வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து ஆயன் –3–3–9-
கண்ணனை மாயனையே –3–4–8-
கண்ணனை மாயன் தன்னை –3–4–8-
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் –கண்ணன் –3–6–5-
கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனதாருயிர் –3–6–10-
ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை –3–7–2-
அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை -3–7–6-
ஒளி மணி வண்ணன் கண்ணன் –3–10–2-
ஆயனை பொற் சக்கரத்து அரியினை அச்சுதனை –3–10–4-
துயரமில் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யானோர் துன்பமிலேனே–3–10–6-
எல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யானோர் துக்கமிலனே–3–10–8-
கிளரொளி மாயனைக் கண்ணனை தாள் பற்றி யான் என்றும் கேடிலனே —3–10–10-
ஆதலில் நொக்கென கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ –4–1–3-
கோவலனார்–குடக் கூத்தனார் –4–2–5-
மின் செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய் –4–2–10-
மெலிவு நோய் தீர்க்கும் நம் கண்ணன் —4–2–11-
ஆய மாயனே –வாமனன் –மாதவா —4–3–4-
கண்ணன் எம்பிரான் எம்மான் –4–3–5-
வாய்த்த குழலோசை கேட்க்கில் மாயவன் என்று மையாக்கும் –4–4–6-
வல் வினை தீர்க்கும் கண்ணனை –4–4–11-
மணியின் அணி நிற மாயன் தமரடி நீறு கொண்டு –4–6–6-
ஊழ்மையில் கண்ண பிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே –4–6–9-
தூ மணி வண்ணனுக்கு ஆட் செய்து நோய் தீர்ந்த –4–6–11-
கறையினார் துவருடுக்கை கடையாவின் கழி கோல கைக் கறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே–4–8–4-
நெறி எல்லாம் எடுத்துரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி –4–8–6-
ஐயோ கண்ணபிரான் அறையோ இனிப் போனாலே –5–1–1-
கண்ணபிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை யமுதை –5–1–5-
கமலத் தடம் கண்ணன் தன்னை –5–1–11-
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை –5–2–7-
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப்பிரான் கண்ணன் தன்னை —5–2–11-
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ கடியனே –5–3–4-
வண் துவாராபதி மன்னன் –வாசுதேவன் வலையுளே—5–3–6-
இரைக்கும் கரும் கடல் வண்ணன் கண்ணபிரான் தன்னை -5–3–11-
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால் –5–4–2-
காரன்ன மேனி நம் கண்ணனும் வாரானால் -5–4–5-
கைவந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால் –5–4–8-
இனவாயர் தலைவனும் யானே என்னும் –5–6–6-
கைதவங்கள் செய்யும் கருமேனி யம்மானே –5–7–5-
நிலம் கீண்ட என் அப்பனே கண்ணனே —5–7–6-
என் கள்ள மாயவனே கருமாணிக்கச் சுடரே –5–7–9-
நின்றவாறும் இருந்தவரும் கிடந்தவாறும் நினைப்பரியன–5–10–6-
ஆகள் போக விட்டுக் குழலூது போயிருந்தே –6–2–2-
இன்று இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர் –6–2–10-
கேயத் தீங்குழல் ஊதிற்றும்–மாயக் கோலப் பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து-6–4–2-
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள் வாய்ப் பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கோர் ஆய்க்குலம் புக்கதும் –6–4–5-
கற்கும் கல்வி எல்லாம் கரும் கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே –6–5–4-
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்க –6–7–1-
வைத்த மா நிதியாம் மது சூதனனையே அலற்றி –6–7–11-
கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு –6–8–9-
காகுத்தா –கண்ணனே –7–2–3-
வானப்பிரான் மணி வண்ணன் கண்ணன் –7–3–2-
முழங்கு சங்கக் கையன் –7-3–4-
ஆழி யங்கையானை ஏத்த வல்லார் அவர் அடிமைத் திறத்து ஆழியாரே–7–3–11-
கொங்கலர் தண்ணம் துழாய் முடி என்னுடைக் கோவலனே–7–6–4-
என்னுடைக் கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே –7–6–5-
ஆயர் குலத்து ஈற்றிலும் பிள்ளை
ஆழி யம் கண்ண பிரான் திருக் கண்கள் கொலோ அறியேன் –7- -7–1-
மதனன் தன் உயிர்த் தாதை பெருமான் புருவம் அவையே –7–7–4-
கண்ணன் கோள் இழை வான் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே –7–7–8-
கட்கரிய பிரமன் சிவன் இந்திரன் என்று இவருக்கும் கட்கரிய கண்ணனை –7–7–11-
சித்திரத் தேர் வலவா திருச் சக்கரத்தாய் அருளாய் — 7–8–3-
கள் அவிழ் தாமரைக் கண் கண்ணனே –7–8–4-
துயரங்கள் செய்யும் கண்ணா –7–8–7-
என்னை யாளும் கண்ணா –7-8–8-
அல்லித் துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே–7–8–10-
கோவிந்தனை –மதுசூதனை —7–10–3-
வடமதுரைப் பிறந்த –மணி நிறக் கண்ணபிரான் தன் மலர் அடிப் போதுகளே —7–10–4-
நெடுமால் கண்ணன் விண்ணவர் கோன்–7–10–7-
காணுமாறு அருளாய் கண்ணா தொண்டனேன் கற்பகக் கனியே –8–1–2-
எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே யசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்களிறே –8–1–3-
நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட –8–2–3-
கோதில் புகழ்க் கண்ணன் –8–2–11-
மாயக் கூத்தா –கண்ணா –8–5–1-
கொண்டல் வண்ணா குடக் கூத்தா வினையேன் கண்ணா கண்ணா –8–5–6-
இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான் மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே —8–5–9-
ஆயர்க்கு அதிபதி அற்புதன் தானே –8–6–9-
ஆயன் அமரர்க்கு அரி ஏறு எனது அம்மான் —8–7–4-
செழு நீர் நிறக் கண்ணபிரான் —8–9–6-
மல்லலஞ்செல்வக் கண்ணன் –8–9–7-
பனி நீர் நிறக் கண்ணபிரான் –8–9–9-
குமரன் கோல ஐங்கணை வேள் தாதை கோதில் அடியார் தம் -8–10–9-
அல்லிக் கமலக் கண்ணன்—8–10–1-
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே –9–1–4-
மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன் –9–1–6-
குற்றம் அன்று எங்கள் பெற்றத்தாயன் வடமதுரைப் பிறந்தவன் —-9–1–7-
வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் —9–1–8-
மா துகிலின் கொடிக் கொள் மாட வடமதுரைப் பிறந்த தாது சேர் தோள் கண்ணன் அல்லால் –9–1–9-
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் –9–1–10-
தாது சேர் தோள் கண்ணனை –9–1–11-
கரும் தேவன் எம்மான் –கண்ணன் —9–2–4-
தேவர்கட்க்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே –9–4–9-
குயில் பேடைகாள் என்னுயிர்க் கண்ண பிரானை நீர் வரக் கூவுகிலீர்–9–5–1-
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவருக்கும் –9–5–2-
கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான் –9–5–4-
நீர் குயில் பைதல்காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்–9- 5–8-
கண் பெரும் கண்ணன் நம்மாவி யுண்டு எழ நண்ணினான் —9–5–9-
கருவளர் மேனி என் கண்ணன் கள்வங்களே —9–6–5-
காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும் வேட்க்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்—9–6–7-
திரு நாவாய் கொண்டே யுறைகின்ற எம் கோவலர் கோவே —9–8–6-
அல்லியம் தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறே அரி ஏறே எம்மாயன் –9- 9–1-
எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன் –9-9–1-
கண்ணன் கள்வன் தனி இளம் சிங்கம் எம்மாயன் –9–9–3-
யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ —-9–9–5-
காரொக்கும் மேனி நம் கண்ணன் –9–9–8-
நம் கண்ணன் கள்வம் கண்ணனின் கொடியது –9–9–7-
மாலையும் வந்தது மாயன் வாரான் —9–9–9-
காமனைப் பயந்த காளை–10-2–8-
தகவிலை தகவிலையே நீ கண்ணா —10–3-1-
துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந்தா –10–3–4-
பகல் நிரை மேய்க்க போய கண்ணா —10–3–5-
ஆழி யம் கண்ணா —10–3–6-
மா மணி வண்ணா —10–3–7-
செங்கனிவாய் எங்கள் ஆயர் தேவு—-10–3–11-
கை சக்கரத்தண்ணல் கள்வம் பெரிதுடையன் –மெய் போலும் பொய் வல்லன் –10–4–5-
கற்றார்க்கோர் பற்றாகும் கண்ணன் கழலிணையே —10–4–11-
கண்ணன் கழலிணை –10–5–1-

—————————-

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்மாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

(ஸ்ரீ கொல்லா மாக்கோல் — ஸ்ரீ கிருஷ்ணனின் பால லீலைகளைப்பற்றி ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி–ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்–

May 6, 2021

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்!
பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கல் அறா;
சொல்லாய், யான் உன்னைச் சார்வது ஓர் சூழ்ச்சியே–திருவாய்மொழி -3-2-3-

கொல்லா–கொல்லுகைக்குக் கருவி யல்லாமல்
மா–குதிரையை நடத்துவதான
கோல்–சாட்டையே கருவியாக
கொலை செய்து–(எதிரிகளை) முடித்து
பாரதம் போர்–பாரத யுத்தத்தில்
எல்லார் சேனையும்–(பூமிக்குச் சுமையாயிருந்த) எல்லாப் படைகளையும்
இரு நிலத்து–இப் பெரிய பூமியில்
அவித்த–தொலைத்த
எந்தாய்–ஸ்வாமியே!
பொல்லா–துன்பங்களுக்குக் காரணமான
ஆக்கையின்–சரீரத்தினுடைய
புணர்வினை–சம்பந்தத்தை
அறுக்கல் அறா–அறுக்க எண்ணினாலும் அது அறு படாது:
யான்–(இதிலே அகப்பட்ட) நான்
உன்னை–(ஸர்வ சக்தனான) உன்னை
சார்வது–கிட்டுவதாகிய
ஓர் சூழ்ச்சி–ஒரு உபாயத்தை
சொல்லாய்–சொல்லி யருள்-

கண்ணபிரானது திருக்கையில் ஒரு கோல் இருந்தது; அதுதான் துரியோதனாதியரைக் கொலை செய்யக் கருவியாயிருந்தது,
அதனை ஆழ்வார் இங்குக் “கொல்லாமாக் கோல்” என்கிறார்.
கொல்லுகைக்குக் கருவியாக அல்லாமல் குதிரையை நடத்தக் கடவதான முட்கோலாலே கொலை செய்ததாக அருளிச் செய்கின்றார்.
கண்ணபிரானது கையிலிருந்த கோல் எதிரிகளின் கொலைக்கு உபகரணமன்றியே
குதிரையை நடத்துகிற கோலாகவே யிருந்ததென்று இங்கு ஆழ்வார் அருளிச் செய்தாராயிற்று.

கொல்லா மாக்கோல் கொலை செய்து –
துரியோதனனும் அருச்சுனனுமாக, கிருஷ்ணன் பள்ளிகொண்டிருந்த காலத்தில் படைத்துணை வேண்டி வந்து,
துரியோதனன் திருமுடிப் பக்கத்தே யிருந்தான்; அருச்சுனன் திருவடிகளின் பக்கத்திலே யிருந்தான்;
பள்ளி யுணர்ந்தருளி, ‘இராசாக்கள் போந்தது என்?’ என்ன, ‘துரியோதனன் நான் முற்பட வந்தேன்,’ என்ன,
‘நீர் முற்பட வந்ததற்குக் குறையில்லை. நம் கண் முற்பட்டது இவன் பக்கலிலே,’ என்று,
அவனுக்காகத் தான் சில வழக்குச் சொல்லி, ‘உங்களுக்கு வேண்டுவது என்?’ என்ன,
‘படைத்துணை வேண்டி வந்தோம்,’ என்ன,
‘ஆகில், நாராயண கோபாலர்களை ஒருவர் கொள்ளுவது; என்னை ஒருவன் கொள்ளுவது’ என்ன, –
அசேதனக்கிரியா கலாபங்களைப் பற்றுவாரைப் போன்று துரியோதனன் அவர்களைக் கொண்டு போக,
வீடுமன் முதலியோர் கேட்டுத் ‘தப்புச் செய்தாய்! இனி, கிருஷ்ணன் ஆயுதமெடாதொழிவானாக வேண்டிக்கொண்டு வாராய்!’ என்ன,
அவனும் வந்து, ‘நீ ஆயுதம் எடாதொழிய வேணும்,’ என்ன,
‘அப்படியே யாகிறது’ என்று சொல்லி விட்டு, கொலைக்குக் கருவியல்லாத குதிரையை நடத்துகிற கோலைக் கொண்டு முடித்துப் போகட்டான்.

———

நம் அழகனின் கையில் விதம்விதமான கோல்கள்- செங்கோல் முதற்கொண்டு பலவிதமான கோல்கள் உள்ளனவே
என ஒரு புலவரின் கற்பனை எழுகிறது; அழகான கவிதை ஒன்று விரிகிறது;
படிப்போர் உள்ளம் பரவசத்தில் புள்ளெனச் சிறகடிக்கின்றது.

கடலாகிய ஆடையை உடுத்த உலகினைக் காவல் பூண்டு அரசிளங்கோமகன் இராமனாகிக் கையிலெடுத்த செங்கோல் ஒன்று!

இலங்கை மாநகரில் சூரியன் இராவணனுக்கு அஞ்சி வாழ்ந்தானாம்; அழகர் இராமாவதாரம் எடுத்தபோழ்தில்,
இராவணனை வதம்செய்து, சூரியனை அச்சமின்றி இயங்கச் செய்தார்.
ஆகவே அவனுடைய ஏழுபரிதிகள் (குரகதம்) பூட்டிய தேரை அஞ்சாது செலுத்தும்வகையில் அவன்,
குதிரைகளைத் தூண்டும் ஒரு முட்கோல் இரண்டாவது கோலாயிற்று.

ஐராவதம் எனும் யானையைச் செலுத்துபவனாகிய தேவேந்திரனை அவன் அடைபட்டிருந்த சிறையினின்று விடுதலை செய்வதற்காக
அச்சிறையின் கபாடங்களை (கதவுகளை) திறக்கும் திறவுகோல் மூன்றாவது கோல்!
இந்திரனைச் சிறைவீடு செய்தவர் அழகர்.

தேனொழுகும் (நறவொழுகு) செந்தாமரையில் வீற்றிருப்பவள் கமலமகளான திருமகள்.
அவள் தனது கண்களுக்குத் தீட்டி அழகு செய்துகொள்ளும் அஞ்சனத்தைத் தீட்டும் அஞ்சனக்கோல் அழகரின் நான்காம்கோல்.

பிலம் எனும் பாதாளத்தில் வீழ்ந்து வழக்கொழிந்துபோன வேதங்களை, நான்மறைகளைத் திரும்ப
நடமாடவிடுத்த ஊன்றுகோல் இன்னொருகோல்.

மறைந்துகிடந்த நான்மறைகள் அழகர் அருளால் விளக்கம் பெற்றன என்பது உட்கருத்து.
இது ஐந்தாம்கோல்.

கள்வனான இராவணன் சீதையைத் திருடிச்சென்றான். அவனுடைய பத்து தலைகளையும் தாக்கி வீழ்த்திய
தண்டிக்கும் கோல் ஒப்பற்ற – நிகரற்ற, வலிமை பொருந்திய -ஆறாவதுகோல்.

இவ்வாறு பலவிதமான கோல்களைக் கைக்கொண்டு பூஞ்சோலைகள் நிரம்பிய இடபகிரியெனும் அழகர்மலையில் இருப்பவனே!
செங்கீரையாடியருளுக! தேவருக்கும், தாமரைமலரில் வீற்றிருக்கும் இலக்குமிக்கும் நாயகனே!
செங்கீரையாடியருளுக! எனப்பாடல் அமைகின்றது.

குரைக்குந் திரைத்தரைப் புரவுபூண் டரசிளங் கோமக னெடுத்த செங்கோல்
கோநக ரிலங்கையிற் பரிதிதேர் பூண்டவேழ் குரகதந் தூண்டுமுட்கோல்
கரைக்குங் கடாக்களிற் றமரேச னேகநாட கடுஞ்சிறை கிடந்தகூடக் கபாடந் திறக்கின்ற திறவுகோ னறவொழுகு
கமலமகள் விழியினுளவாய் உரைக்குங் குழம்புபடு மஞ்சனக் கோல்
பிலத்துள்வீழ் நான்மறைக்கும் ஊன்றுகோ லாக
முடி பத்துடைய கள்வன்மே லொருகோ லெடுத்து
முகிலைத் திரைக்குந் துணர்ச்சோலை யிடபகிரி நின்ற முகில்
செங்கீரை யாடியருளே
தேவர்க்கு மலர்வருந் தேவிக்கு நாயகன் செங்கீரை யாடியருளே.
(அழகர் பிள்ளைத் தமிழ்- செங்கீரைப் பருவம்:- கவி காளருத்திரர் இயற்றியது)

இப்பாடலில் ‘கோல்’ எனும் சொல்லைப் பலபொருட்களில் எடுத்தாண்டு வியக்கத்தக்க முறையில்
பலவித நயங்களையும் தொன்மங்களையும் இணைத்துப் பாடியுள்ளது ரசிக்கத்தக்கது.
பிள்ளைத்தமிழ் நூல்களின் இனிமைக்கு இத்தகைய யாப்புகளும் ஒரு காரணமாகும்.

—————

ஸ்ரீ நாராயண தீர்த்தர் அருளிச் செய்த கீர்த்தனைகள் ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி–என்று போற்றப்படுகின்றது
1650 குண்டூர் அருகில் காஜா கிராமத்தில் தோன்றியவர்

12 தரங்கங்கள் கொண்டு இந்நூலில் 153 பாடல்கள் உள்ளன. இதன் அமைப்பின் படி ஒவ்வொரு தரங்கத்திலும்
பல சுலோகங்களும் அவற்றையடுத்து கீதங்கள், என்ற கீர்த்தனைகளும் தொடர்ச்சிக்காக சில வசனப்பகுதிகளும் வருகின்றன.
இது ஸமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூல், பாகவதத்தின் தசமஸ்கந்தத்தின் 1 முதல் 58 வரையிலுள்ள
அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ள கிருஷ்ணன் பிறப்பிலிருந்து ருக்மிணி கல்யாணம் முடிய கண்ணனது கதையை
தேனென இனிக்கும் இன்னிசைப் பாடல்களாக தந்திருக்கிறார் நாராயண தீர்த்தர்.

தரங்கம் எனும் சொல்லுக்கு அலைகள் என்பது பொருள். கடல் அலைகளைப் போல மேலே மேலே வந்து
மோதும் இசை தாளக் கட்டில் இவரது தரங்கிணி அமைந்திருப்பதால் இந்தப் பெயர் பெற்றது.
மிக எளிமையான அழகான வரிகளைக் கொண்டது இந்த தரங்கிணி.

ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி என்பது இவருடைய சிறப்பான படைப்பாக விளங்குகிறது.
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் லீலைகளை விளக்கும் இந்த நூல் வடமொழியில் இயற்றப் பட்டிருக்கிறது.
யமுனை நதிக்கரையில் கோபியர்களுடன் ஓடி விளையாடித் திரிந்த பால கிருஷ்ண லீலைகளை விளக்கும் வகையில்
அமைந்த இந்த பாடல்கள் ருக்மணி கல்யாணம் வரையில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ கிருஷ்ணனின் பால லீலைகளைப்பற்றிப் பாடிய பில்வமங்களர் எனும் மகான், இடைச் சிறுவனான கிருஷ்ணனைப் பற்றிய
இன்னொரு அழகிய காட்சியைக் கண் முன் நிறுத்துகிறார்:
சூரியன் அஸ்தமிக்கும் பொன் மாலைப் பொழுது. இடையர்கள் எல்லாரும் மேய்ச்சலிலிருந்து திரும்புகின்றனர்.
மாடுகள் எல்லாம் வயிறு நிரம்பிய ஆனந்தத்தில் மடிகனத்து நிற்க, கன்றுகள் தாய்ப் பசுக்களின் மடியை அருந்தும் ஆசையில் துள்ள,
அவர்கள் தம் வீடுகளை அடைகின்றனர். அவரவர்கள் வீட்டுத் தொழுவங்களில் மாடுகன்றுகளைக் கட்டுகின்றனர்.
தன்னைத் தொடர்ந்துவரும் நூற்றுக் கணக்கான இடைச் சிறுவர்களுக்கெல்லாம் (கோபால-பாலக-சதை) தலைவன் நமது கிருஷ்ண சந்திரன்.
அவனும் வீடுவீடாகப்போய் பசுக்களைக்கட்ட உதவுகிறான் (பசுபந்தனார்த்தம்). பின் என்ன?
அவற்றின் பாலையும் அதனைத் தோய்த்த தயிரையும், அதிலிருந்து கடைந்தெடுத்த வெண்ணெயையும் வீடுவீடாகப்புகுந்து தின்றவனாயிற்றே!
தானும் இந்தச் சிறு உதவிகளைச் செய்யலாமே எனச் செய்கிறான் குழந்தை! ஏழெட்டு வயது இளம்பிள்ளை!
பசுக்கூட்டங்களினிடையே கன்றுகளுடன் விளையாடியபடி நடந்துவந்ததனால் அவற்றின் குளம்படிகள் எழுப்பிய
அத்தனை புழுதியும் (கோதூலி)இவன்மேல் அப்பிக்கிடக்கின்றது. ஏற்கெனவே கருமைநிறம் கொண்ட கடல்வண்ணன்.
இப்போது புழுதியும் அப்பிப் பார்க்க எப்படி இருந்தானாம்? அழுக்காகவா? இல்லவே இல்லை!
அதுவும் ஒரு அழகாக, அவனுக்கே அமைந்த சிறப்பாகப் பொலிகிறானம் இந்தக்குட்டன்!-
இது அவன் பூண்டுள்ள மாடுமேய்க்கும் அலங்காரம்- கோபவேஷம்!

கோதூலி- தூஸரித- கோமல- கோபவேஷம்
கோபால-பாலகசதை-ரனுகம்யமானம்
ஸாயந்தனே ப்ரதிக்ருஹம் பசுபந்தனார்த்தம்
கச்சந்த- மச்யுதசிசும் ப்ரணதோஸ்மி நித்யம்–(ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி-2.44)

அட! இந்த இளம்பிள்ளை மாட்டையெல்லாம் தொழுவில்கட்டி, இவ்வளவு பொறுப்பாக இருக்கிறானே எனவெல்லாம்
எண்ணிக் கொண்டுவிட வேண்டாம்! இவன், இந்தக் கள்ளக்கிருஷ்ணன் தனது விளையாட்டுகளை இன்னும்
விட்டொழித்தபாடில்லை எனத்தான் தென்படுகின்றது!

ஒரு இடைப்பெண்ணின் வீட்டில் நுழைந்து தனது வெண்ணெய்த்திருட்டினை நடத்திக் கொண்டிருக்கிறான் கிருஷ்ணன்.
அவளிடம் கையும் களவுமாகப் பிடிபட்டும் விட்டான். அவளிடம் குட்டனின் உரையாடலைக் கேட்போமா?
பெண்: குழந்தாய்! நீ யாரப்பா?
கிருஷ்ணன்: நான் பலராமனுடைய தம்பி.
பெண்: உனக்கு என்ன வேண்டும்? எதற்கு இங்கே வந்தாய்?
கிருஷ்ணன்: என்னுடைய வீடு என்று நினைத்துக்கொண்டு வந்துவிட்டேன்.
பெண்: அப்படியானால் வெண்ணெய் வைத்திருக்கும் பாத்திரத்திற்குள் எதற்காகக் கையை விட்டாயாம்?
கிருஷ்ணன்: தாயே! எனது ஒரு கன்றுக்குட்டியைத் தேடுவதற்காகக் கையை
வைத்தேன். உடனே கோபித்துக் கொள்ளாதீர்கள்!

கஸ்த்வம் பாலா பலானுஜ: கிமிஹ தே
மன்மந்திராசங்கயா
யுக்தம் தந்நவநீத- பாத்ரவிவரே
ஹஸ்தம் கிமர்த்தம் ந்யஸே:
மாத: கஞ்சன வத்ஸகம் ம்ருகயிதும்
மாகா விஷாதம் க்ஷணா-
தித்யேவம் வரவல்லவீ-ப்ரதிவச:
க்ருஷ்ணஸ்ய புஷ்ணாது ந: (ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி-2.81)

———

ராம கிருஷ்ண கோவிந்தேதி நாம ஸம் ப்ரயாகே
காமமிஹ ஸ்நாத்தவ்யம் ஸர்வோத்தம ப்ரயாகே
திக் தேஷ காலானபேக்ஷ – சித்த ஸர்வ ஸுலபே
ஸத் குரு க்ருபா சமுத்திர ஸங்க ஹேது லாபே
ராம நாம கங்கயா மிலித கிருஷ்ண நாம யாமுனே
யோகி மானஸ பரம ஹம்ஸ குல கலிதே
வாகீச விஷ்ணு ருத்ராதி வாக் லஹரி லலிதே
ஸர்வ லோகாலோக காம ஸாங்க பலதானே
நிர் விசேஷ நித்யானந்த லாப ஸுனிதானே
ருக் யஜுஸ் ஸாமாதி வேத ஷாகிம மூல விலஸிதே
ஸர்வ லோகாலோக காம ஸாங்க பலதானே
நிர் விசேஷ நித்யானந்த லாப ஸுனிதானே
ருக் யஜுஸ் ஸாமாதி வேத ஷாகிம மூல விலஸிதே
ராக லோபாதி ஸந்தாப சாந்தி கர சரிதே
ஸ்னான சந்தியா ஜப ஹோம தர்பணானபேக்ஷிதே
ஹானி வ்ருத்தியாதி ரஹித அகண்ட சுக பலதே
ஸ்நானம் மானஸிகம் தஸ்ய ஸ்மரணம்
தபஸ் காயிகம் தஸ்ய கீர்த்தனே ஸுநர்த்தனம்
யாக யோக ராக போக த்யாக சம்பந்தம் வினா
பக்தி விரக்தி விஞ்ஞான த்வாரா முக்தி பலதே
ப்ரஹ்ம வித்யாலக்ஷண நிரீக்ஷண விசக்ஷணே பாதித கோர ஸம்ஸார வாரண
தத் காரனே ஸர்வ பாபௌகதிமிர சண்ட ஸூர்ய மண்டலே
சாது நாராயண தீர்த்த தீர்த ராஜ விமலே–இது ஸ்வாமிகளுக்கு ரொம்ப பிடிச்ச தரங்கம்–

ராம கிருஷ்ண கோவிந்தேதி நாம ஸம்ப்ரயாகே காமமிஹ ஸ்நாத்தவ்யம் ஸர்வோத்தம ப்ரயாகே –
அலஹாபாத் பக்கத்துல ப்ரயாகை இருக்கு. திரிவேணி சங்கமம். இவர் நாராயண தீர்த்தர் சொல்றார்,
ராம கிருஷ்ண கோவிந்த அப்படீன்ன்னு இந்த மூணு நாமங்கள் இருக்கே இதோட சேர்க்கையே சர்வோத்தம ப்ரயாகை.
இதுல ஆனந்தமா எப்ப வேணும்னாலும் ஸ்னானம் பண்ணுவோம் அப்படீங்கறார்.

திக் தேஷ காலானபேக்ஷ – சித்த ஸர்வ ஸுலபே –
இந்த ஸ்னானம் பண்றதுக்கு தேசமா, காலமோ, திக்கோ எதுவும் condition கிடையாது.
எப்ப வேணும்னா, எங்க வேணும்னா, எப்படி வேணும்னா இந்த ராம கிருஷ்ண கோவிந்த அப்படீங்கற நாமங்களை ஜபிக்கலாம்.
ஸர்வ சுலபே – எல்லாருக்கும் சுலபமானது, இதுக்கு பண்டிதனான இருக்கணும், ஆணாக இருக்கணும், பெண்ணாக இருக்கணும்
எந்த condition-ணும் கிடையாது. நாக்கு இருந்தா போதும் இந்த நாமங்களை ஜபிக்கலாம்.
ஒரு நதினா கடல்ல போய் சேருமே, அதுமாதிரி இந்த த்ரிவேணி சங்கமம் எங்க கூட்டிண்டு போகும்னா,

ஸத் குரு க்ருபா சமுத்திர ஸங்க ஹேது லாபே –
ஸத்குருவுடைய க்ருபா ஸமுத்ரம் அப்படீங்கற அந்த சங்கத்துல கொண்டு விட்டுடும் அப்படீங்கறார்.

ராம நாம கங்கயா மிலித கிருஷ்ண நாம யாமுனே –
ராம-ங்கற நாமம் தான் கங்கை,
கிருஷ்ண-ங்கற நாமம்தான் யமுனை
கோவிந்த நாம சரஸ்வதி ப்ரதீதே – கோவிந்த நாமம் தான் சரஸ்வதி, இந்த மூணும் சேர்ந்த ப்ரயாகை இது

யோகி மானஸ பரம ஹம்ஸ குல கலிதே –
ஒரு ஜலம்ன்னா ஹம்ஸங்கள் இருக்கணும் இல்லையா,
இங்க இந்த நாமத்துல பரம ஹம்சர்களுடைய மனம் குதூகலிக்கறது.

வாகீச விஷ்ணு ருத்ராதி வாக் லஹரி லலிதே –
ஒரு நதியின்னா அதுல அலைகள் இருக்கும், வாகீச ர்னா ப்ரம்மா, விஷ்ணு ருத்ரர் இவாள் இந்த நாமங்களை ஜபிக்கறா.
அந்த அழகான அலைகள் தான் இந்த ப்ரயாகைல இருக்கு.

ஸர்வ லோகாலோக காம ஸாங்க பலதானே –
இந்த உலகம், மேல் உலகம் இங்க இருக்கக்கூடிய எல்லா ஆசைகளையும் இந்த நாம ஜபம் பூர்த்தி பண்ணும்.

நிர் விசேஷ நித்யானந்த லாப ஸுனிதானே –
இந்த உலக ஆசைகள் மட்டும் அல்ல, நித்யானந்தமான மோக்ஷ லாபத்தையும் கொடுக்கும்.

ருக் யஜுஸ் ஸாமாதி வேத ஷாகிம மூல விலஸிதே –
ருக் யஜு சாமம் என்கின்ற வேதங்களின் சாகையிலும் இருக்கு, மூலத்திலும் இருக்கு.
வேதங்களுக்கு மூலமே இந்த நாமங்கள் தான் என்கிறார்.

ராக லோபாதி ஸந்தாப சாந்தி கர சரிதே –
ராகம், லோபம், ஸந்தாபம் இதெல்லாம் போக்கக் கூடிய மஹா மந்த்ரம்.

ஸ்னான சந்தியா ஜப ஹோம தர்பணானபேக்ஷிதே –
இந்த நாமங்களை ஜபிக்கறதுக்கு ஒருத்தன் ஸ்னானம் பண்ணியிருக்கணும், சந்தியாவந்தனம் பண்ணியிருக்கணும்,
ஜபங்கள் பண்ணியிருக்கணும், ஹோமங்கள் பண்ணியிருக்கணும், தர்ப்பணம் பண்ணியிருக்கணும்
என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்,

ஹானி வ்ருத்தியாதி ரஹித அகண்ட சுக பலதே –
இது அகண்டமான பேரானந்தத்தை கொடுக்கும். அந்த பேரானந்தம் குறையவோ, அதிகமோ ஆகாத ஒரு சந்தோஷம்.
எந்த ஒரு சந்தோஷம் ஆனாலும் அது குறையும், ஜாஸ்தி ஆகும். அப்படி ஆகாத சுகம்,
இந்த நாம ஜபம் கொடுக்கக்கூடிய இந்த ஆனந்தம், அப்படியே இருக்கும். infinite அகண்டமான ஒரு சுகத்தை கொடுக்க கூடியது.

ஸ்நானம் மானஸிகம் தஸ்ய ஸ்மரணம் –
மனசுல இந்த நாமங்களை ஸ்மரணம் பண்றது தான் மானசீகமான ஸ்னானம்.
வாசனிகம் கீர்த்தனம் – வாயால பண்ணக் கூடிய கீர்த்தனம் தான் இந்த வாய்க்கு ஸ்னானம்,

தபஸ் காயிகம் தஸ்ய கீர்த்தனே ஸுநர்த்தனம் –
இந்த ராம கிருஷ்ண கோவிந்த நாமங்களை பாடிண்டு அதுக்கு நர்த்தனம் ஆடறது தான் உடம்புக்கு பண்ணக் கூடிய ஒரு ஸ்னானம்
இப்படி உடம்பு, மனசு, வாக்கு இப்படி எல்லாத்தையும் தூய்மை படுத்தக்கூடியது.

யாக யோக ராக போக த்யாக சம்பந்தம் வினா –
இந்த நாம ஜபம் பண்றதுக்கு நீங்கள் யாகம், யோகம், மூச்சை அடக்கித்தான் நாம ஜபம் பண்ணணும் அப்படியெல்லாம் கிடையாது.
ராகம், பகவான் கிட்ட பக்தி இருக்கணும், ராகம் இருக்கணும், போகம், த்யாகம் இல்ல நீங்க பகவானுக்காக தியாகம் பண்ணணும்,
எதுவுமே எதிர் பார்க்காமல்.

பக்தி விரக்தி விஞ்ஞான த்வாரா முக்தி பலதே –
இந்த நாம ஜபம் பண்ணிண்டே இருந்தாலே பக்தியும் வரும், விரக்தியும் வரும், ஞானமும் வரும்,
முக்தியையும் கொடுக்கும்

ப்ரஹ்ம வித்யாலக்ஷண நிரீக்ஷண விசக்ஷணே பாதித கோர ஸம்ஸார வாரண தத் காரனே –
ப்ரஹ்ம வித்யை கொடுக்கும், கோரமான சம்சாரத்தை தாண்ட வைக்கும்.

ஸர்வ பாபௌகதிமிர சண்ட ஸூர்ய மண்டலே –
கடுமையான பாபங்கள் என்ற இருட்டிற்கு இது ஸூர்ய மண்டலத்தை போன்ற வெளிச்சத்தை கொண்டு வந்து,
பாபங்கள் எல்லாத்தையும் போக்கிடும்.

சாது நாராயண தீர்த்த தீர்த ராஜ விமலே –
நாராயண தீர்த்தர் சொல்றார் – தூய்மைப் படுத்தக் கூடிய எல்லா தீர்த்தங்களிலும்,
இந்த ராம கிருஷ்ண கோவிந்த என்ற இந்த சர்வோத்தம ப்ரயாகை தான் தீர்த்த ராஜா –
இப்படி நாம பக்திக்கு ஒரு அற்புதமான ஒரு கீர்த்தனை.

————–

பில்வ மங்களரின் ஒரு அழகிய ஸ்லோகம் இது போலவே ஒரு நிகழ்வை யசோதை-கிருஷ்ணனிடையே நிகழும் உரையாடலாக்கி,
படிக்கும் நம்மைப் புன்னகைபுரிந்து சிலிர்க்க வைக்கிறது.
யசோதை சொல்கிறாள்: “கிருஷ்ணா! உன் அண்ணன் பலராமன் யமுனையாற்றின் மணல் குன்றுகளிடையே விளையாடப் போயிருக்கிறான்;
உனக்கு நான் பொற்கிண்ணத்தில் பால் வைத்திருக்கிறேன் பார்!
அவன் திரும்பிவருவதற்குள் நீ அதனை சமர்த்தாகக் குடித்து விடவேண்டும். தெரியுமா?”
கிருஷ்ணன், “ஏனம்மா?” எனக்கேட்க, யசோதை சொல்கிறாள்:
“அப்போதுதான் உனக்கு குடுமி வளரும் (சிகா வர்த்திஷ்யதே).”
குழந்தை கிருஷ்ணன் பாவம், நம்பி விடுகிறான்.
கிண்ணத்துப்பாலை ஒரே மூச்சில் பாதி குடித்துவிட்டு, தனது குட்டிக் குடுமியைத் தொட்டுப் பார்த்துக்கொண்டு ,
“அடடா, இத்தனை வளர்ந்துவிட்டதா?” என மகிழ்ச்சி கொள்ளுகிறானாம்.
நாமும் இந்த ஸ்லோகத்தைப் படித்து மகிழ்கிறோம்.

காளிந்தீ- புலினோதரேஷு முஸலீ
யாவத்கத: கேலிதும்
தாவத்கார்ப்பரிகம் பய: பிப ஹரே
வர்த்திஷ்யதே தே சிகா
இத்தம் பாலதயா ப்ரதாரணபரா:
ச்ருத்வா யசோதா-கிர:
பாயாந்ந: ஸ்வசிகாம் ஸ்ப்ருசன் ப்ரமுதித:
க்ஷீரேர்த்தபீதே ஹரி:
(ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்- 2.60)

நம்பி மூத்த பிரான் யமுனை கரை மணலில் விளையாட பால கிருஷ்ணனை
பால் அருந்தினால் கேசம் வளரும் என்றாள் யசோதை
பாதி குடித்து கேசம் தொட்டு பார்த்து வளர்ந்ததே அம்மா என்று மகிழ்ந்து அருளிச் செய்தான் –
அந்த ஹர்ஷமே நம்மை ரஷிக்கும்-

இளம் குழந்தைகள் அன்னை சொல்வது அத்தனையையும் நம்பி விடுகின்றனர்.
ஆகவே கதைகள் சொல்லி அவர்களை நல்வழிப்படுத்துவது மிகவும் எளிதாகிவிடுகின்றது!

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஶ்ரீ உத்தவ கீதை – அத்தியாயம் – 4

March 23, 2021

இவ்வுலக, மேலுலக இன்ப அனுபவ பயனின்மையை நிரூபித்தல்

ஶ்ரீ பகவான் உவாச

மயோதி3தேஷ்வவஹித: ஸ்வர்மேஷூ மதா4ஸ்ரிய |
வர்ணாசிரம குலாசாரமகாமாத்மா ஸமாசரேத் || 1

ஶ்ரீபகவான் கூறினார்

என்னால் உபதேசிக்கப்பட்டக் கருத்துக்களில் கவனத்தை செலுத்து.
வேதம், ஸ்ம்ருதி, ஆகம, புராணங்களில் என்னால் கூறப்பட்ட தர்மங்களை, உபதேசங்களை கவனத்துடனும் அனுசரிக்க வேண்டும்.
உன்னுடைய கடமைகளை என்னையே சரணடைந்தவனாக அனுசரிக்க வேண்டும்.
இறைவனிடத்தில் சரணாகதி என்பது அவரிடத்தில் வைக்க வேண்டிய முழு நம்பிக்கையை குறிக்கின்றது
ஸமாசரேத் – நன்கு செய்வாயாக
அகாமாத்மா – நிஷ்காமபாவம்
வர்ணாசிரம குல ஒழுக்கங்களை நிஷ்காம பாவத்துடனும், பலனில் பற்றுதலின்றி கவனத்துடனும் செய்ய வேண்டும்.

————

அன்வீக்ஷேத விஶுத்3தா4த்மா தே3ஹினாம் விஷயாத்ம்னாம் |
கு3ணேஷு தத்த்வத்யானேன ஸர்வாரம்ப4விபர்ய்யம் || 2

அன்விக்ஷேத – கவனமாக சிந்தித்துப் பார்
விஶுத்3தா4த்மா – மனத்தூய்மை அடைந்தவனாக
உலக சுகங்களில் ஈடுபாடுள்ள மனிதர்களின் செயல்களே இறுதி லட்சியம் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள்
வெளிப் பார்வைக்கு சுகத்தை அடைந்திருந்தாலும், மனதளவில் விபரீதமான பலன்களையே அடைந்திருப்பார்கள்
என்று கூர்ந்து கவனித்து புரிந்து கொண்டு அனாத்மா விஷய, சுகங்களில் வைராக்கியத்தை அடைய வேண்டும்.

———–

ஸுப்தஸ்ய விஷயாலோகோ த்4யாயதோ வா மனோரத2: |
நானாத்மகத்வாத்3 விப2லஸ்ததா2 பே4தா3த்மதீ4ர்கு3ணை || 3

மனோரத2 – பகற்கனவு
உலக விஷயங்களில் கிடைக்கும் இன்ப, துன்பங்களை தூங்கும்போது காணும் கனவில் அடையும்
இன்ப, துன்பங்ளுக்கு பகவான் ஒப்பிடுகிறார். விழித்துக் கொண்டிருக்கும் போது காண்கின்ற கற்பனைகளில்
கிடைக்கின்ற சுகங்களை வெறும் எண்ணங்கள் தான் கொடுக்கின்றது. எனவே எண்ணங்கள் தான் சுக-துக்கத்தைக் கொடுக்கின்றது,
பொருட்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஸுப்தஸ்ய விஷயாலோகஹ – தூங்கிக் கொண்டிருக்கும்போது கனவில் காணும் பொருட்களும்
த்4யாயதோ வா மனோரதஹ விழித்துக் கொண்டிருப்பவனின் கற்பனை உலகத்தில்
நானாத்மகத்வாத்3 மனதில் பலவிதமான காண்கின்ற பொருட்களும்;
விபலஹ பொய்யானவை
ததா3 அவ்விதம்
கு3ணைஹி‘ இந்திரியங்களால்
பேதாத்மதீஹி பார்த்து அனுபவித்துக் கொண்டிருக்கும் உலகமும் நிலையானதல்ல, உண்மையானதல்ல

————–

நிவிருத்தம் கர்ம ஸேவேத ப்ரவ்ருத்தம் மத்பரஸ் த்யஜேத் |
ஜிக்ஞாஸாயாம் ஸம்ப்ரவ்ருத்தோ நாத்ரியேத் கர்மசோத3னாம் || 4

ஒருவனுக்கு மேலான அறிவை அடைய வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிட்டால் அதற்கேற்ற மனநிலையை அடைய வேண்டும்.
உலகத்தில் போகம் தரும் விஷயங்களிலோ, பொருட்களிலோ வைராக்கியம் வந்திருக்க வேண்டும். ’
ஜிக்ஞாஸாயாம் ஸம்ப்ரவ்ருத்தஹ – பரம்பொருளை புரிந்து கொள்ளும் ஆர்வம் உடையவன் அதையடைய தன்னை ஈடுபடுத்திக் கொண்டால்
ப்ரவ்ருத்தம் கர்ம நம்மை கர்த்தாவாக வைத்திருக்கும் உலக சம்பந்தபட்ட செயல்களையெல்லாம்
த்யஜேத் விட்டுவிடு, துறந்துவிட்டு
நிவிருத்தம் கர்ம ஸேவேத ஆன்மீக மேன்மைக்கான செயல்களையே செய்ய வேண்டும். உபாஸனை, ஜபம், தியானம் போன்ற செயல்களை செய்வாயாக.
சமுதாயத்திலிருந்து விலகியிருக்கும்போது சிறிது பயம் ஏற்படலாம். இந்த நேரத்தில் பகவானை முழுமையாக நம்பி அவரிடத்தில் நிலைபெற்றிட வேண்டும்.
மத்பரஹ அவர் என்னைப் பாதுகாப்பார் என்று நம்பிக்கையுடன் அவரை சரணடைந்திட வேண்டும்.
ந ஆத்3ரியேத் கர்மசோத3னாம் வேதத்தில், கர்ம காண்டத்தில் சொல்லப்பட்டுள்ள கர்மங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதே.

——————

யமானபீக்ஷணம் ஸேவேத நியமான்மாத்பர: க்வசித் |
மத3பி4க்ஞம் கு3ரும் ஶாந்தமுபாஸீத மதா3த்மகம் || 5

யமஹ – விலக்குதல்
நியமஹ – பின்பற்றுதல்
நியமம் – தூய்மை, சந்தோஷம், தவம், ஸ்வாத்யாயம், ஈஸ்வர ப்ரணிதானம்
க்ரியாயோகம் – தவம், ஸ்வாத்யாயம், ஈஸ்வரப்ரணிதானம்
யமம் – அஹிம்ஸா, சத்யம், அஸ்தேயம், பிரம்மச்சர்யம், அபரி3ரஹம்

யமத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், நியமங்களை முடிந்தவரையில் கடைப்பிடிக்க வேண்டும்.

ஶாந்தம் – மனவமைதி அடைந்தவரும்,
மத்3 அபி4க்3ஞம் – என்னைப்பற்றிய அறிவை அடைந்தவரும்
மத்3 ஆத்மகம் – என்னைப்பற்றிய அறிவில் நிலைத்தவரான குருவை நாடி
உபாஸீத் – சேவை செய்து அறிவை பெற்றுக் கொள்ள வேண்டும்.

————

அமான்யமத்ஸரோ த்3வேஷ நிர்மோ த்3ருட4ஸௌஹ்ருத3: |
அஸத்வரோsர்த2ஜிக்3ஞாஸுரநஸூயுரமோக4வாக் || 6 ||

வேதாந்த மாணவர்களிடத்து இருக்க வேண்டிய ஒன்பது பண்புகளைக் பகவான் கூறுகிறார்.

1. அமானி கர்வமற்றவன், பணிவுடன் இருப்பவன் (உடல், மனம், வாக்கு)

2. அமத்ஸரஹ பொறாமையற்றவன். பொறாமையானது மற்றவர்களின் நிலையோடு ஒப்பிட்டூ பார்ப்பதால் வருவது பொறாமை.
தாழ்வு மனப்பான்மையினாலும் பொறாமை வருகின்றது.

3. த3தஹ திற்மையுடன் செயல்படுபவன் – தமோகுணத்திலிருந்து விடுபட்டவனாக இருப்பவன்.
எதையும் சரியாக புரிந்து கொண்டு செயல்படும் திறமையுடையவன்

4. நிர்மமஹ மமகாரம் இல்லாதிருப்பவன்

5. த்3ருட4ஸௌஹ்ருத3: – எல்லோரிடமும் உறுதியான, மென்மையான உறவு வைத்திருப்பவன் (ஸௌஹிருத)

6. அஸத்வரஹ நிதானமாக செயல்படுபவன்; அவசரஅவசரமாக எதையும் செய்யாதவன்

7. அர்த2ஜிக்3ஞாஸு வேதாந்தத்தையும், பிரம்மத்தையும் அறிந்து கொள்ள விரும்புவன்

8. அனஸூயு: எதிலும் குறைகாணாதவன்; சாஸ்திரத்தில் குறை காணாதவன்

9. அமோக4வாக் பயனற்ற சொற்களை பேசாதவன், வீண்பேச்சு பேசாதவன்,

————-

ஜாயாபத்ய க்3ருஹக்ஷேத்ர ஸ்வஜன த்3ரவிணாதி3ஷு |
உதா3ஸீன: ஸம்ம் பஶ்யன் ஸர்வேஷ்வர்த2மிவாத்மன: || 7 ||

மனைவி, மகன், மகள், வீடு, நிலம், சொத்து, உறவினர்கள், நண்பர்கள் போன்றவற்றில் அதிக பற்றுடன் இருக்கக்கூடாது.
இவைகள் இல்லாமலும் வாழமுடிய வேண்டும். எல்லோரையும் சமநோக்குடன் பார்க்க வேண்டும்.
தன் நலனைப் போலவே எல்லோருடைய நலனிலும் சமநோக்குடன் இருக்க வேண்டும்.

————-

விலக்ஷண ஸ்தூலஸூக்ஷ்மாத்3 தே3ஹாதா3த்மேக்ஷிதா ஸ்வத்3ருக் |
யதா2க்3நிர்தா3ருணோ தா3ஹ்யாத்3 தா3ஹகோsன்ய: ப்ரகாஶக: || 8 ||

இதில் ஆத்ம-அனாத்ம விவேகத்தை கூறுகின்றார். நான் என்ற சொல்லினுடைய உண்மையான அர்த்தம் என்ன,
அது எதைக் குறிக்கின்றது என்று விசாரம் செய்ய வேண்டும். பொதுவாக நாம் இந்த சொல்லுக்கு உண்மைப் பொருளையும்,
உண்மையற்ற பொருளையும் சேர்த்துப் புரிந்து கொண்டிருக்கின்றோம். இதை நாம் பிரித்து உண்மையற்ற பொருளை நீக்க வேண்டும்.
அவைகள் ஸ்தூல, சூட்சும, காரண சரீரங்களே. இது எப்பொழுதும் நம் அனுபவத்திற்கு கொண்டு வரவேண்டும்.
ஆனால் நம் அனுபவமும், அபிமானமும் உண்மையற்ற விஷயத்தில்தான் இருக்கின்றது.
இந்த உடலுக்கு வருகின்ற அனுபவங்கள் நம்மை பாதிப்பால்தான் இதில் நாம் அபிமானித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை அறியலாம்.

பகவான் த்3ருக்-த்3ருஷ்யம் (அறிபவன்-அறியப்படும் பொருள்) என்ற முறையை பயன்படுத்தி ஆத்ம-அனாத்மாவை விளக்குகின்றார்.
அறிபவனும், அறியப்படும் பொருளும் வேறாகத்தான் இருக்க வேண்டும். இதை நம் உடலிலிருந்து ஆரம்பித்து விசாரம் செய்ய வேண்டும்.
ஸ்தூல, சூட்சும சரீரங்களிலிருந்து ஆத்மா வேறாக இருக்கின்றது. நாம் இந்த ஸ்தூல உடலையும் அனுபவிக்கின்றோம்.
கனவுலகில் நம்மை நாமே அனுபவிக்கின்றோம். இவையிரண்டையும் நினைத்துப் பார்த்து புரிந்து கொள்ளலாம்.

விலக்ஷணஹ வேறுபடுகின்றது.
ஈக்ஷிதா பார்ப்பவனாக இருக்கும் போது, வெறும் பார்வையாளனாக இருக்கும்போது
ஸ்வத்3ருக் தன்னுடைய இருப்புக்கு தானே சாட்சி. உதாரணமாக சூரியனை பார்ப்பதற்கு வேறு வெளிச்சம் தேவையில்லை,
அது தானாகவே தெரிந்து கொண்டிருப்பது போல ஆத்மாவை புரிந்துகொள்ள வேண்டும்.

இதை சரியாக புரிந்துகொண்டால் உடலுக்கும், மனதுக்கும் வருகின்ற கஷ்ட, நஷ்டங்கள், சுக-துக்கங்கள் நம்மை பாதிக்காது.

நெருப்புக்கு இரண்டு தன்மைகள் உண்டு. ஒன்று வெளிச்சம் மற்றொன்று உஷ்ணமாகும்.
மரக்கட்டையை எரிக்கும் நெருப்பு அதற்கும் வேறானது.
வெளிச்சத்தினால் காட்டிக் கொடுக்கப்படும் பொருட்களிலிருந்து வேறானதாக இருக்கின்றது.
எரிந்து கொண்டிருக்கும் அக்னியிலிருந்து வேறானது. அதேபோல இந்த சரீரத்தை விளக்கும் ஆத்மாவானது
அதற்கும் வேறானது என்பதை அக்னி உதாரணத்தோடு ஒப்பிட்டு புரிந்து கொள்ள வேண்டும்.

—————

நிரோதோ4த்பத்த்யணு ப்3ருஹன் நானாத்வம் தத்க்ருதான் கு3ணான் |
அந்த:பிரவிஷ்ட ஆத4த்த ஏவம் தே3ஹகு3ணான் பர: || 9 ||

உபாதி – எது தன்னுடைய குணத்தை வேறொன்றிற்கு பொய்யாக கொடுக்கிறதோ அதற்கு உபாதி என்று பெயர்.
இதன் அடிப்படையில் பார்த்தால் நம் உடலும், மனமும் அதனுடைய தர்மத்தை பொய்யாக ஆத்மாவில் ஏற்றி வைத்திருப்பதால்
இவைகள் ஆத்மாவின் உபாதிகள் என்று அறிந்து கொள்ளலாம்;.

நிரோத4ம் – அணைந்து விடுதல்
உத்பத்தி – தோன்றுகின்றது, உற்பத்தியாகின்றது.
அணு – சிறியதாக ,இருக்கின்றது
ப்4ருஹ – மிகப்பெரியதாக இருக்கின்றது
நானாத்வம் – விதவிதமான நெருப்புக்கள்
தத்க்ருதான் கு4ணான் – இந்த குணங்களெல்லாம் நெருப்பு எதை எரிக்கின்றதோ அதன் அடிப்படையில் கூறப்படுகின்றது.
ஆத4த்த – எடுத்து கொள்கிறது
அந்த:பிரவிஷ்ட – எதை எரிக்கின்றதோ அதன் வடிவத்தை ஏற்றுக் கொள்கிறது.
தே2ஹ கு3ணான் பரஹ ஆத4த்த – அனைத்து தேகத்தின் குணங்கள் மேலாத ஆத்மாவில் பொய்யாக ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது.
எந்தெந்த சரீரத்திற்கு ஆதாரமாக இருக்கின்றதோ அந்தந்த சரீரத்தின் குணங்களை பொய்யாக ஏற்றுக் கொண்டிருக்கின்றது.

——————-

யோsஸௌ கு3ணைர்விரசிதோ+ தே3ஹோsயம் புருஷஸ்ய ஹி |
ஸம்ஸாரஸ் தன்னிப3ந்தோ4யம் பும்ஸோ வித்3யாச்சி2தா3த்மன: || 10 ||

பும்ஸஹ தே3ஹ – இந்த ஜீவனுடைய உடலானது
புருஷஸ்ய குணைஹி விரசிதஹ – பகவானுடைய மாயையினுடைய முக்குணங்களின் துணைக் கொண்டு உருவாக்கப்பட்டது.
ச ஸம்ஸாரஹ தன்னிபந்தஹ – சம்சாரம் என்பது மூன்று உடலை நான் என்று அத்யாஸம் செய்யும்போது தோன்றுவது
யஹ அஸௌ – யாரொருவன் இதை புரிந்து கொள்கிறானோ அவனது
ஆத்மனஹ சி2த் வித்3யா – ஆத்மஞானமானது இந்த சம்சாரத்தை நீக்க உதவுகின்றது.

—————–

தஸ்மாஜ்ஜிக்3ஞாஸயாத்மானமாத்மஸ்த2ம் கேவலம் பரம் |
ஸங்க3ம்ய நிரஸேதே3தத்3வஸ்துபு3த்3தி4ம் யதா2க்ரமம் || 11 ||

தஸ்மாத் – ஆகவே ஆத்மஞானம் சம்சாரத்தை நீக்குகின்றது
ஜிக்ஞாஸயா – விசாரம்; விசாரத்தின் மூலமாக (சரியான பிரமாணத்தை பயன்படுத்த வேண்டும்)
ஆத்மஸ்தம் – இந்த உடலுக்குள் இருக்கின்ற
கேவலம் – இரண்டற்றதான
ஆத்மானம் – ஆத்மஸ்வரூபத்தை
ஸங்க3ம ய – புரிந்துகொண்டு, உணர்ந்துகொண்டு
பரம் – அழியாத, மேலான
ஏதத்3 வஸ்து பு3த்3தி4ம் – இந்த உடலே நானென்று நினைக்கின்ற எண்ணத்தை
நிரஸேத்3 – நீக்கிவிட வேண்டும்.
யதா2க்ரமம் – இந்த நிலையை படிபடியாக அடைய வேண்டும்

இதை பஞ்சகோச முறையில் செய்யும்போது முதலில் அன்னமயத்திலிருந்து ஆரம்பித்து
ஆனந்தமய கோசத்திற்கு படிப்படியாக செல்ல வேண்டும்.

————–

ஆசார்யோsரணிராத்3ய: ஸ்யாத3ந்தேவாஸ்யுத்தராரணி: |
தத்ஸந்தா4னம் ப்ரவசனம் வித்3யாஸந்தி4: ஸுகா2வஹ: || 12 ||

ஆசார்யஹ – குருவானவர்
அரணி ஆத்3யஹ ஸ்யாத் – அக்னி உண்டாக்க பயன்படும் நிலையாக இருக்கும் அடிமரக்கட்டையாக இருக்கிறார்.
அந்தேவாஸ்யஹ குருவிற்கு அருகே வாழ்பவர், குருவை அடைந்து ஆத்மஞானத்தை அடைய விரும்பும் சிஷ்யன்
உத்தர அரணி – மேலேயுள்ள அரணி கட்டையாக ,இருக்கிறான்
தத்ஸந்தானம் அரணிக்கட்டையை உரசுவதைப் போல இருப்பது
ப்ரவசனம் குரு உபதேசம் செய்தல்
வித்3யாஸந்தி4ஹி – ஞானம் பலனாக கிடைக்கின்றது, அக்னி உண்டாவதைப் போல
ஸுகா2வஹ இந்த ஞானத்தின் பலன் நிலையான மனநிறைவை, மோட்சத்தைக் கொடுக்கின்றது

—————-

வைஶாரதீ3 ஸாதிவிஶுத்3த4பு4த்3தி4ர்து4னோதி மாயாம் கு3ணஸம்ப்ரஸூதாம் |
கு3ணாம்ஶ்ச ஸந்த3ஹ்ய யதா3த்மமேதத் ஸ்வயம் ச ஶாம்யத்யஸமித்3 யதா2க்3னி: || 13 ||

இதில் ஆத்மஞான்த்தின் பலன் கூறப்படுகின்றது

வைஶாரதீ – திறமைமிக்க குரு-சிஷ்யன் இவர்களுடைய சேர்க்கையால் அடையப்படுகின்ற
அதி விஶுத்3த4 பு3த்3தி4ஹி – மிகமிக தூய்மையான இந்த ஆத்மஞானம்
மாயாம் கு3ணஸம்ப்ரஸூதாம் து4னோதி – நம்மிடத்தில் இருக்கும் முக்குணங்களினால் தோன்றும் மோகத்தையும், தவறாத அறிவையும் அழித்துவிட்டு.
அஸமித்3 யதா2க்3னி: – எப்படி அக்னி
யதா3த்மம் – அனைத்தையும் எரித்துவிட்டு
ஸ்வயம் ச ஶாம்யத் – எரிப்பதற்கு விறகில்லாமல் தானும் அடங்கிவிடுகின்றதோ
ஏதத் – அதுபோல ஆத்மஞானமும்
கு3ணாம்ஶ்ச ஸந்த3ஹ்ய – முக்குணங்களையும் எரித்துவிட்டு அதன் பலனை கொடுத்துவிட்டு சென்று விடுகிறது.

—————

அதை2ஷாம் கர்மகர்த்ரூணாம் போ3க்த்ரூணாம் ஸுக2து3:க2யோ: |
நானாத்வமத2 நித்யத்வம் லோககாலாக3மாத்மனாம் || 14 ||

அத2 ஏஷாம் – இப்போது பூர்வமீமாம்ஸ மதத்தின் கருத்துக்களைப் பார்ப்போமாக
கர்மகர்த்ரூணாம் – கர்மத்தை செய்பவர்கள் எல்லோரும்
போ3க்த்ரூணாம் ஸுக2து3:க2யோ: – இன்ப-துன்பங்களை அனுபவிக்கின்ற ஜீவர்களும்
நானாத்வமத2 – பலவிதமாகவும், வேற்றுமையுடையவராகவும்
நித்யத்வம் – தனித்தனியாக நிலையான கர்த்தாவாக இருக்கிறார்கள்
லோக – – இந்த உலகம்
கால – காலம் என்கின்ற தத்துவம்
ஆக3ம – கர்மத்தை போதிக்கின்ற சாஸ்திரம்
ஆத்மனாம் – இவை மூன்றும் நிலையானவைகள் என்பது அவர்களது கருத்து.

——————-

மன்யஸே ஸர்வபா3வானாம் ஸம்ஸ்தா2 ஹ்யௌத்பத்திகீ யதா2 |
தத்ததா2க்ருதிபே4தே3ன ஜாயதே பி4த்3யதே ச தீ4: || 15 ||

மன்யஸே – இவ்வாறு நீ கருதினால்
ஸர்வபா3வானாம் – நாம் அனுபவிக்கக்கூடிய அனைத்து பொருட்களும்
யதா2 ஔத்பத்தி ஸம்ஸ்தா2 – பிரவாக நித்யத்வமாக இருக்கின்றது
(ஓடும் நதி பிரவாக சத்யத்வத்திற்கு உதாரணமாகும். மாறீக்கொண்டே தொடர்ந்து இருப்பது பிரவாக நித்யம்.
இதை கிரகிக்கின்ற நம் மனதில் தோன்றுகின்ற எண்ணங்களும் பிரவாக சத்யம்.

தத் தத்2 ஆக்ருதி பே4த3ம் – நாம் பார்க்கும் பொருட்களின் உருவத்தின் அடிப்படையில்
ஜாயதே தீ4: – எண்ணங்கள் தோன்றுகிறது
பி4த்3யதே – இந்த எண்ணங்களும் வேறுபடுகின்றன

————-

ஏவமப்யங்க3 ஸர்வேஷாம் தே3ஹினாம் தே3ஹயோக3த: |
காலாவயவத: ஸந்தி பா4வா ஜன்மாத3யோsஸக்ருத் || 16 ||

அங்க3 இவ்வாறு கருதுபவர்களே!
ஏவம் அபி இப்படியொரு கருத்தை வைத்திருந்தால் அவையெல்லாம் தவறாகும்
ஸர்வேஷாம் எல்லா ஜீவர்களுக்கும்
தே3ஹினாம் தே3ஹயோக3த: உடலினுடைய சேர்க்கை தவிர்க்க முடியாததாக ,இருப்பதனால்
கால அவயவதஹ காலம் ஒரு உறுப்பாக ,இருப்பதனாலும்
ஜன்மாத3யஹ பா4வா ஸந்தி – பிறப்பு-இறப்பு போன்ற மாற்றங்கள் கண்டிப்பாக இருக்கும்.
அஸக்ருத் – எனவே மீண்டும் மீண்டும் ஏற்படும். சம்சார சுழலில்தான் இருப்பாய்.

————

அத்ராபி கர்மணாம் கர்துரஸ்தாதந்த்ர்யம் ச ல்க்ஷயதே |
போ4க்துஶ்ச து3: க2ஸுக2யோ: கோ ந்வர்தோ2 விவஶம் ப4ஜேத் || 17 ||

மீமாம்ஸகர்களுடைய கருத்துப்படி கர்மங்களை செய்து கொண்டிருக்கும் கர்த்தாவானவர்கள் சுதந்திரமற்றவனாக இருக்கிறார்கள்.
அடிமையாகவே இருக்கிறாற்கள். செயலின் பலனை சுக துக்கங்களை அனுபவிக்கும் போக்தாவும் சுதந்திரமற்றவனாக இருக்கிறார்கள்.
துயரத்தில்தான் அகங்காரத்தின் சக்தியின் எல்லையை அறிகின்றோம்.
எனவே இதிலிருந்து மேலானதாக இருக்கின்ற ஒரு சக்தியை நாடமுயற்சி செய்வோம்.
இவ்வாறு அடிமைப்பட்டிருக்கும் ஒருவனுக்கு எந்தப் பொருள்தான் மகிழ்ச்சியைத் தரும்.

———-

ந தே3ஹினாம் ஸுக2ம் கிஞ்சித் வித்3யதே விது3ஷாமபி |
ததா2 ச து3க2ம் மூடா4னாம் வ்ருதா2ஹங்கரணம் பரம் || 18 ||

இந்த உலகத்தில் அடைய வேண்டிய லட்சியமாக எதுவும் கிடையாது என்ற கருத்தானது இதில் சுட்டிக் காட்டப்படுகிறது.
அறிவுடன் செயல்பட்டு உலகத்தில் உள்ள செல்வங்களை அடைந்தவனாலும் சுகம் என்பது சிறீதளவு கூட காணப்படவில்லை.
அதுபோல அறிவில்லாதவர்கள் எப்பொழுதுமே துக்க;ப்படுகிறார்கள் என்பதும் இல்லை.
அதிக அறிவு, புகழ், செல்வம், சுகம் தரும் சூழ்நிலை இவைகளை அடைவதால் சுகமடையலாம் என்ற
இந்த அகங்காரம் கொள்வதால் பயனெதுவும் இல்லை.

————

யதி3 ப்ராப்திம் விகா4தம் ச ஜானந்தி ஸுக2து3:க2யோ: | S
தேSப்யத்3தா4 ந விது3ர்யோக3ம் ம்ருத்யுர்ன ப்ரப4வேத்3 யதா2 || 19

ஒருவேளை இன்பங்களை மட்டும் அனுபவிக்கும் நிலையை அடைந்தாலும் துக்கத்தை தவிர்க்கின்ற நிலையை
அடைந்தாலும் அவர்களும் கண்டிப்பாக எப்படி மரணத்தை நீக்குகின்ற உபாயத்தை அறியமாட்டார்கள்

————–

கோ ந்வர்த2: ஸுக2யத்யேனம் காமோ வா ம்ருத்யுரந்திதே |
ஆகா4தம் நீயமானஸ்ய வத்4யஸ்யேவ ந துஷ்டித3: || 20 ||

மரண தண்டனை நிறைவேற்ற அழைத்துச் செல்லப்படும் குற்றவாளிக்கு எந்தப் பொருள்தான் சுகத்தைக் கொடுக்கும்.
எந்த ஆசை நிறைவேறினாலும் முழுமனநிறைவைக் கொடுக்கமுடியும். அதேபோல மரணம் தன் பின்னாலேயே
தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில் எந்தப் பொருள்தான் சுகத்தை கொடுக்கமுடியும்.

—————

ஶ்ருதம் ச த்3ருஷ்டவத்3 து3ஷ்டம் ஸ்பர்தா4ஸூயாத்யாவ்யயை: |
ப3ஹ்வந்தராயகாமத்வாத் க்ருஷிவச்சாபி நிஷ்ப2லம் || 21 ||

ஶ்ருதம் ச சாஸ்திரங்கள் மூலம் அறியப்பட்ட சொர்க்கம் போன்ற பரலோகத்திலும்
த்3ருஷ்டவத்3 நாம் பார்த்து அனுபவிக்கின்ற இந்த மனிதலோகத்தைப் போல
ஸ்பர்த்4 போட்டி
அஸூய பொறாமை
அத்ய அழிவுக்குட்பட்டது
அவ்யயை: தேய்ந்துகொண்டே போகுதல்
து3ஷ்டம் போன்ற குறையுடன் கூடியதாகத்தான் இருக்கிறது
ப3ஹ்வந்தராய காமத்வாத் பல தடைகளுக்கு அப்பால்தான் இன்பங்களை அடைய முடியும்.
நம் அறியாமையினால் இழப்புத்தான் அதிகம், கிடைக்கிறது.
சுகம் கொஞ்சம்தான் அடைகிறோம் என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.
க்ருஷிவச்சாபி நிஷ்ப2லம் விவசாயி எவ்வளவு உழைத்தாலும் நல்ல பலன் கிடைக்கும் என்று உறுதியாக கூறமுடியாது.
அப்படி பலன் கிடைக்காமல் போய்விட்டால் உழைப்பு வீணாகி போய்விடுகிறது

———

இனி(22-26) பரலோக பலன்கள் அனைத்தும் நிலையற்றது என்று விளக்கப்படுகிறது.

அந்தராயைரவிஹதோ யதி3 த4ர்ம: ஸ்வனுஷ்டி2த: |
தேனாபி நிர்ஜிதம் ஸ்தா3னம் யதா2 க3ச்ச2தி தச்ச்2ருணு || 22 ||

அந்தராயை – தடைகள்
ஒருவேளை எந்த இடையூறுமில்லாமல் தர்மமானது நன்கு அனுஷ்டானம் செய்யப்பட்டு சுகம் தருகின்ற
மேலுகங்களை அடைந்தாலும், அந்த லோகத்தை அவன் எவ்விதம் அடைகிறான், எவ்வாறு இருக்கிறான் என்பதை சொல்கிறேன் கேள்.

———–

இஷ்டவேஹ தே3வதா யக்2ஞை: ஸ்வர்லோகம் யாதி யாக்3ஞிக: |
பு4ஞ்ஜீத தே3வ்வத்தத்ர போ4கா3ன் தி3வ்யான் நிஜார்ஜிதாத் || 23 ||

விதவிதமான வேள்விளைச் செய்து அதற்குரிய தேவதைகளை பூஜித்து இன்பம் கொடுக்கும் லோகங்களுக்கு செல்கிறான்.
அந்த தேவதை அடைந்ததைப் போல போகங்களை அனுபவிக்கின்றான்.

————–

ஸ்வபுண்யோபசிதே ஶுப்ரே விமான உபகீ3யதே |
க3ந்த4ர்வைர்விஹரன் மத்4யே தே3வீனாம் ஹ்ருத்3யவேஷத்3ருக் || 24 ||

ஹ்ருத்3யவேஷத்3ருக் மனதை கவர்கின்ற ஆடை அணிகலன்களுடன் கூடியவனாக இருக்கும் இவன்
ஸ்வபுண்ய உபசிதே அவனுடைய புண்ணியத்திற்கேற்ப
ஶுப்ரே விமான அழகிய விமானத்தில்
தே3வீனாம் மத்4யே விஹரன் தேவலோக பெண்களுடன் கூடிக் குலாவுகின்றான்
க3ந்த4ர்வ உபகீ3யதே கந்தர்வர்களால் புகழப்படுகிறான், புகழ்ந்துப் பாடப்படுகிறான்

———–

ஸ்த்ரீபி4: காமக3யானேன கிங்கினீஜாலமாலினா |
க்ரீட3ன் ந வேதா3த்மபாதம் ஸுராக்ரீடேஷு நிர்வ்ருத: || 25 ||

தேவலோக பெண்களுடன், விரும்பிய இடத்திற்கு அழைத்துச் செல்லக்கூடியதும், விதவிதமான மணிமாலைகளால்
அலங்கரிக்கப்பட்டிருக்கும் வாகனத்தில் அமர்ந்துகொண்டு இன்பமாக காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் போது
தேவலோக இன்பங்களில் மூழ்கியிருக்கின்ற அவன் தன்னுடைய வீழ்ச்சியை அறியமாட்டான்.
அவனிடம் இருக்கின்ற புண்ணியம் அழிந்து கொண்டிருப்பதை அறியமாட்டான்.

———-

தாவத் ப்ரமோத3தே ஸ்வர்கே3 யாவத் புண்யம் ஸமாப்யதே |
க்ஷீணபுண்ய: பதத்யர்வாக3நிச்ச2ன் காலசாலித: || 26 ||

எதுவரை புண்ணியம் இருக்கின்றதோ அதுவரை சொர்க்கத்தின் இன்பங்களை அனுபவிக்கின்றான்.
புண்ணியம் தீர்ந்தபின்னே அவன் விரும்பாவிட்டாலும்கூட காலம் அவனைக் கீழேத் தள்ளிவிடும்.

————-

யத்3யத4ர்மரத: ஸங்கா3த3ஸதாம் வாஜிதேந்த்3ரிய: |
காமாத்மா க்ருபணோ லுப்3த4: ஸ்த்ரைணோ பூதவிஹிம்ஸக: || 27 ||

பஶூனவிதி3னாSSலப்4ய ப்ரேதபூ4தக3ணான் யஜன் |
நரகாநவஸோ ஜ்ந்துர் க3த்வா யாத்யுல்ப3ணம் தம: || 28 ||

ஒருவேளை அதர்மத்தையே செய்து கொண்டிருப்பவன், அதர்மத்தை செய்துகொண்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்களின்
நட்பினால் தன்னுடைய புலன்களை வசப்படுத்தாதவனாக இருப்பவன், ஆசைவயப்பட்டவன்,

க்ருபணஹ தானம் செய்யாதவன் (லோபி, கஞ்சன்)
லுப்3த4ஹ பேராசைக்காரன், மற்றவர்களுடைய செல்வத்தை அபகரிக்கும் எண்ணமுடையவன்
ஸ்த்ரைணஹ உடலின்பத்திலே ஆசையுள்ளவன்
பூதவிஹிம்ஸக:ஹ எல்லா உயிரினங்களையும் வேண்டுமென்றே இம்சிப்பவன்

உயிரினங்களை பலியிட்டு செய்கின்ற யாகங்களை செய்பவன், துஷ்ட தேவதைகளை வழிபடுபவன்,
இப்படிப்பட்ட குணங்களுடன் அதர்மத்தையே செய்து கொண்டிருப்பவன் தன் வசமின்றி நரகத்தை,
அடர்ந்த இருளால் சூழப்பட்ட லோகங்களை அடைகிறான்.

————

லோகானாம் லோகபாலானாம் மத்3ப4யம் கல்பஜீவினாம் |
ப்3ரஹ்மணோSபி ப4யம் மத்தோ த்3விபரார்த4பராயுஷ: || 29 ||

பிறகு துயரத்தை பலனாக உடைய கர்மங்களை செய்து உடலின் துணைக்கொண்டு அதன் பலனாக
மீண்டும் உடலை அடைகின்றார்கள். அழிந்து போகும் இயல்புடைய உடலினால் என்ன சுகத்தை கொடுக்கமுடியும்!

—————-

கர்மாணி து3:கோ2த2ர்காணி குர்வன் தே3ஹேன தை: புன: |
தே3ஹமாப4ஜதே தத்ர கிம் ஸுக2ம் மர்த்யத4ர்மிண: || 30 ||

பூர்வமீமாம்சகர்களால் குறிக்கப்படும் மோட்சம் சம்சாரம்தான். எல்லா ஜீவராசிகளும், எல்லா தேவதைகளும்
உலகத்தை பரிபாலிக்கின்ற தேவதைகளும் ஒரு கல்பகாலம்தான் வாழ்வார்கள்.
அவர்களும் என்னிடத்தில்(பகவான் கிருஷ்ணனிடத்தில்) பயந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
பிரம்மதேவனும் என்னிடத்தில் பயம் கொண்டுதான் இருக்கிறார். இவரது ஆயுட்காலம் 100 ஆண்டுகள்.

————

கு3ணா ஸ்ருஜந்தி கர்மாணி கு3ணோSனுஸ்ருஜதே கு3ணான் |
ஜீவஸ்து கு3ணஸம்யுக்தோ பு4ங்க்தே கர்மப2லாந்யஸௌ || 31 ||

கு3ணாஹா – உடலும், மனமும் (ஸ்தூல, சூட்சும சரீரங்கள்)
ஸ்ருஜந்தி கர்மாணி – செயல்களை செய்து கொண்டிருக்கிறது.
கு3ணோ அனுஸ்ருஜதே கு3ணான் – சத்துவ, ரஜஸ், தமஸ் என்கின்ற மூன்று குணங்கள்தான் உடலையும், மனதையும் செயலில் ஈடுபட தூண்டுகின்றது.
ஜீவஸ்து கு3ணஸம்யுக்தஹ – இந்த ஜீவன் முக்குணங்களோடு கூடியிருக்கின்றன
அஸௌ கர்மப2லான் பு4ங்க்தே – அதனால் ஜீவன் கர்ம பலன்களை அனுபவிக்கின்றான்.

மோட்சம் என்பது நிலையான சுகத்தைத் தரும் ஒரு வஸ்துவாக நினைத்தால் அது தவறு.
மோட்சம் என்பது விசேஷ அனுபவத்திற்குட்பட்டதல்ல. அனுபவிப்பது எல்லாம் சம்சாரம்.
மோட்சம் என்பது சாமான்ய அனுபவம் எப்பொழுதும் மனநிறைவுடன் இருக்கின்றேன் என்ற உணர்வுடன் இருப்பதுதான் மோட்சம்.
நான் ஆத்மா, சாட்சி என்ற நினைப்புடன் இருப்பது. கர்த்தாவும் அல்ல, போக்தாவும் அல்ல.

————–

யாவத் ஸ்யாத்3 கு3ணவைஷம்யம் தாவன்நானாத்வமாத்மன: |
நானாத்வமாத்மனோ யாவத் பாரத்ந்த்ர்யம் ததை3வ ஹி || 32 ||

எப்பொழுது குணங்களின் வேற்றுமைகள் இருக்கின்றதோ அப்பொழுது விதவிதமான ஜீவர்கள் தோன்றுகிறார்கள்.
பலவிதமான ஸூட்சும சரீரங்கள் தோன்றுகின்றன. எப்பொழுது பலவிதமான ஜீவர்கள் தோன்றுகிறார்களோ
அப்போது பிறர் வசத்திற்கு அடிமையாகவே சென்று விடூகிறார்கள்.

————–

யாவத்3ஸ்யாஸ்வதந்த்ரத்வம் தாவதீ3ஶ்வரதோ ப4யம் |
ய ஏதத் ஸமுபாஸீரம்ஸ் தே முஹ்யந்தி ஶுசார்பிதா: || 33 ||

ஜீவனுக்கு எதுவரை ஒன்றை சார்ந்திருத்தல் என்ற நிலை இருக்கின்றதோ, அதாவது சுதந்திரம் இல்லாமல்
குணங்களுக்கு வசப்பட்ட நிலையில் இருக்கின்றானோ, அதுவரை இறைவனிடத்தில் பயம் இருக்கவே செய்யும்.
பகவானிடம் பயம் நீங்க பிரார்த்திப்போம். ஆனால் இந்த நிலையில் அவரிடத்திலே பயம் ஏற்படும்.
எவனொருவன் பூர்வமீமாம்ஸ மதக்கொள்கையை பின்பற்றுகிறார்களோ, குணங்களின் பிடியில் சிக்கியிருக்கிறார்களோ
அவர்கள் மோகத்தில் வீழ்ந்து விடுவார்கள். சோகத்திலும் மூழ்கடிக்கப்பட்டு விடுவார்கள்.

————-

கால ஆத்மாSSக3மோ லோக: ஸ்வபா4வோ த4ர்ம ஏவ ச |
இதி மாம் ப3ஹுதா4 ப்ராஹுர் கு3ணவ்யதிகரே ஸதி || 34 ||

குண மாற்றத்தினால் இந்த ஸ்ருஷ்டியானது இயங்கிக் கொண்டிருக்கும் போது இறைவனான என்னையே பலவாக பார்க்கின்றார்கள்.
காலமாகவும், அனைத்து ஜீவாத்மாகவும், வேத சாஸ்திரங்களாகவும், அனைத்து உலகமாகவும், ஒவ்வொரு பொருளிலிருக்கும்
பொதுவான தன்மையாகவும், சக்தியாகவும், மேலும் பாவ-புண்ணியங்களாகவும் நானே இருக்கின்றேன் என்றும் ஞானிகள் கூறுகிறார்கள்.

————-

உத்3த4வ உவாச:
கு3ணேஷு வர்தமானோSபி தே3ஹஜேஷ்வனபாவ்ருத: |
கு3ணைர்ன ப3த்3த்4யதே தே3ஹீ ப3த்3த்4யதே வா கத2ம் விபோ4 || 35 ||

உத்தவர் கேட்கிறார்:
விபோ4 பலவாக காட்சியளிக்கும் இறைவா!
கு3ணேஷு வர்தமான அபி உடலிலிருந்து கொண்டிருக்கும்போது அதிலிருந்து செயல் செய்து கொண்டிருந்த போதிலும்
அதனால் கட்டுப்படாமல், தாக்கப்படாமல், உடல்களாலும், செயல்களாலும் ஞானி எப்படி பந்தப்படாமல் இருக்கின்றான்?
மற்றவர்கள் எப்படி பந்தப்படுகிறார்கள்?

————–

கத2ம் வர்தேத விஹரேத் கைர்வா ஞாயேத லக்ஷணை: |
கிம் பு4ஞ்ஜீதோத விஸ்ருஜேச்ச2யீதஸீத யாதி || 36 ||

முக்தியடைந்தவன் நடத்தை எப்படியிருக்கும்?
ஞானி எவ்விதம் இருப்பான்? எப்படி நடந்து கொள்வான்? எந்தெந்த அடையாளங்களால் அவனை அறிந்து கொள்ள முடியும்?
எதை உட்கொள்வான்? போக்தாவாக இருக்கும்போது என்ன மனநிலையில் இருப்பான்?
கர்த்தாவாக இருக்கும்போது எவ்விதம் செயல்படுவான்? எப்படி உறங்குவான்? எப்படி அமர்ந்திருப்பான்? எப்படி, எவ்விதம் செல்வான்?

————-

ஏதத்3ச்யுத மே ப்3ரூஹி ப்ரஶ்னம் ப்ரஶ்தவிதா3ம் வா |
நித்யமுக்தோ நித்யப3த்3த4 ஏக ஏவேதி மே ப்4ரம: || 37 ||

அச்சுதா! இந்த கேள்விக்கு எனக்கு பதில் சொல்லுங்கள்.
கேட்கப்படுகின்ற கேள்விகளை சரியாக புரிந்து கொள்வதில் சிறந்தவரே!
ஒரே ஜீவன் எப்படி முக்தனாகவும், சம்சாரியாகவும் இருக்க முடியும்? இதுவே எனக்கு குழப்பமாக இருக்கிறது.

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உத்தவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கீதாச்சார்யன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீமத் பாகவதம் -ஸ்கந்தம் 4-அத்தியாயம் -19–ஸ்ரீ ப்ருது மஹா ராஜரின் அவச மேத யாகம்-

November 8, 2020

மைத்ரேய உவாச
அதா²தீ³க்ஷத ராஜா து ஹயமேத⁴ஶதேன ஸ꞉ .
ப்³ரஹ்மாவர்தே மனோ꞉ க்ஷேத்ரே யத்ர ப்ராசீ ஸரஸ்வதீ .. 1..

தத³பி⁴ப்ரேத்ய ப⁴க³வான் கர்மாதிஶயமாத்மன꞉ .
ஶதக்ரதுர்ன மம்ருʼஷே ப்ருʼதோ²ர்யஜ்ஞமஹோத்ஸவம் .. 2..

யத்ர யஜ்ஞபதி꞉ ஸாக்ஷாத்³ப⁴க³வான் ஹரிரீஶ்வர꞉ .
அன்வபூ⁴யத ஸர்வாத்மா ஸர்வலோககு³ரு꞉ ப்ரபு⁴꞉ .. 3..

அன்விதோ ப்³ரஹ்மஶர்வாப்⁴யாம்ʼ லோகபாலை꞉ ஸஹானுகை³꞉ .
உபகீ³யமானோ க³ந்த⁴ர்வைர்முனிபி⁴ஶ்சாப்ஸரோக³ணை꞉ .. 4..

ஸித்³தா⁴ வித்³யாத⁴ரா தை³த்யா தா³னவா கு³ஹ்யகாத³ய꞉ .
ஸுநந்த³னந்த³ப்ரமுகா²꞉ பார்ஷத³ப்ரவரா ஹரே꞉ .. 5..

கபிலோ நாரதோ³ த³த்தோ யோகே³ஶா꞉ ஸனகாத³ய꞉ .
தமன்வீயுர்பா⁴க³வதா யே ச தத்ஸேவனோத்ஸுகா꞉ .. 6..

யத்ர த⁴ர்மது³கா⁴ பூ⁴மி꞉ ஸர்வகாமது³கா⁴ ஸதீ .
தோ³க்³தி⁴ ஸ்மாபீ⁴ப்ஸிதானர்தா²ன் யஜமானஸ்ய பா⁴ரத .. 7..

ஊஹு꞉ ஸர்வரஸான் நத்³ய꞉ க்ஷீரத³த்⁴யன்னகோ³ரஸான் .
தரவோ பூ⁴ரி வர்ஷ்மாண꞉ ப்ராஸூயந்த மது⁴ச்யுத꞉ .. 8..

ஸிந்த⁴வோ ரத்னநிகரான் கி³ரயோ(அ)ன்னம்ʼ சதுர்வித⁴ம் .
உபாயனமுபாஜஹ்ரு꞉ ஸர்வே லோகா꞉ ஸபாலகா꞉ .. 9..

இதி சாதோ⁴க்ஷஜேஶஸ்ய ப்ருʼதோ²ஸ்து பரமோத³யம் .
அஸூயன் ப⁴க³வானிந்த்³ர꞉ ப்ரதிகா⁴தமசீகரத் .. 10..

சரமேணாஶ்வமேதே⁴ன யஜமானே யஜுஷ்பதிம் .
வைன்யே யஜ்ஞபஶும்ʼ ஸ்பர்த⁴ன்னபோவாஹ திரோஹித꞉ .. 11..

தமத்ரிர்ப⁴க³வானைக்ஷத்த்வரமாணம்ʼ விஹாயஸா .
ஆமுக்தமிவ பாக²ண்ட³ம்ʼ யோ(அ)த⁴ர்மே த⁴ர்மவிப்⁴ரம꞉ .. 12..

அத்ரிணா சோதி³தோ ஹந்தும்ʼ ப்ருʼது²புத்ரோ மஹாரத²꞉ .
அன்வதா⁴வத ஸங்க்ருத்³த⁴ஸ்திஷ்ட² திஷ்டே²தி சாப்³ரவீத் .. 13..

தம்ʼ தாத்³ருʼஶாக்ருʼதிம்ʼ வீக்ஷ்ய மேனே த⁴ர்மம்ʼ ஶரீரிணம் .
ஜடிலம்ʼ ப⁴ஸ்மனா(ஆ)ச்ச²ன்னம்ʼ தஸ்மை பா³ணம்ʼ ந முஞ்சதி .. 14..

வதா⁴ந்நிவ்ருʼத்தம்ʼ தம்ʼ பூ⁴யோ ஹந்தவே(அ)த்ரிரசோத³யத் .
ஜஹி யஜ்ஞஹனம்ʼ தாத மஹேந்த்³ரம்ʼ விபு³தா⁴த⁴மம் .. 15..

ஏவம்ʼ வைன்யஸுத꞉ ப்ரோக்தஸ்த்வரமாணம்ʼ விஹாயஸா .
அன்வத்³ரவத³பி⁴க்ருத்³தோ⁴ ராவணம்ʼ க்³ருʼத்⁴ரராடி³வ .. 16..

ஸோ(அ)ஶ்வம்ʼ ரூபம்ʼ ச தத்³தி⁴த்வா தஸ்மா அந்தர்ஹித꞉ ஸ்வராட் .
வீர꞉ ஸ்வபஶுமாதா³ய பிதுர்யஜ்ஞமுபேயிவான் .. 17..

தத்தஸ்ய சாத்³பு⁴தம்ʼ கர்ம விசக்ஷ்ய பரமர்ஷய꞉ .
நாமதே⁴யம்ʼ த³து³ஸ்தஸ்மை விஜிதாஶ்வ இதி ப்ரபோ⁴ .. 18..

உபஸ்ருʼஜ்ய தமஸ்தீவ்ரம்ʼ ஜஹாராஶ்வம்ʼ புனர்ஹரி꞉ .
சஷால யூபதஶ்ச²ன்னோ ஹிரண்யரஶனம்ʼ விபு⁴꞉ .. 19..

அத்ரி꞉ ஸந்த³ர்ஶயாமாஸ த்வரமாணம்ʼ விஹாயஸா .
கபாலக²ட்வாங்க³த⁴ரம்ʼ வீரோ நைனமபா³த⁴த .. 20..

அத்ரிணா சோதி³தஸ்தஸ்மை ஸந்த³தே⁴ விஶிக²ம்ʼ ருஷா .
ஸோ(அ)ஶ்வம்ʼ ரூபம்ʼ ச தத்³தி⁴த்வா தஸ்தா²வந்தர்ஹித꞉ ஸ்வராட் .. 21..

வீரஶ்சாஶ்வமுபாதா³ய பித்ருʼயஜ்ஞமதா²வ்ரஜத் .
தத³வத்³யம்ʼ ஹரே ரூபம்ʼ ஜக்³ருʼஹுர்ஜ்ஞானது³ர்ப³லா꞉ .. 22..

யானி ரூபாணி ஜக்³ருʼஹே இந்த்³ரோ ஹயஜிஹீர்ஷயா .
தானி பாபஸ்ய க²ண்டா³னி லிங்க³ம்ʼ க²ண்ட³மிஹோச்யதே .. 23..

ஏவமிந்த்³ரே ஹரத்யஶ்வம்ʼ வைன்யயஜ்ஞஜிகா⁴ம்ʼஸயா .
தத்³க்³ருʼஹீதவிஸ்ருʼஷ்டேஷு பாக²ண்டே³ஷு மதிர்ந்ருʼணாம் .. 24..

த⁴ர்ம இத்யுபத⁴ர்மேஷு நக்³நரக்தபடாதி³ஷு .
ப்ராயேண ஸஜ்ஜதே ப்⁴ராந்த்யா பேஶலேஷு ச வாக்³மிஷு .. 25..

தத³பி⁴ஜ்ஞாய ப⁴க³வான் ப்ருʼது²꞉ ப்ருʼது²பராக்ரம꞉ .
இந்த்³ராய குபிதோ பா³ணமாத³த்தோத்³யதகார்முக꞉ .. 26..

தம்ருʼத்விஜ꞉ ஶக்ரவதா⁴பி⁴ஸந்தி⁴தம்ʼ
விசக்ஷ்ய து³ஷ்ப்ரேக்ஷ்யமஸஹ்யரம்ʼஹஸம் .
நிவாரயாமாஸுரஹோ மஹாமதே
ந யுஜ்யதே(அ)த்ரான்யவத⁴꞉ ப்ரசோதி³தாத் .. 27..

வயம்ʼ மருத்வந்தமிஹார்த²நாஶனம்ʼ
ஹ்வயாமஹே த்வச்ச்²ரவஸா ஹதத்விஷம் .
அயாதயாமோபஹவைரனந்தரம்ʼ
ப்ரஸஹ்ய ராஜன் ஜுஹவாம தே(அ)ஹிதம் .. 28..

இத்யாமந்த்ர்ய க்ரதுபதிம்ʼ விது³ராஸ்யர்த்விஜோ ருஷா .
ஸ்ருக்³க⁴ஸ்தான் ஜுஹ்வதோ(அ)ப்⁴யேத்ய ஸ்வயம்பூ⁴꞉ ப்ரத்யஷேத⁴த .. 29..

ந வத்⁴யோ ப⁴வதாமிந்த்³ரோ யத்³யஜ்ஞோ ப⁴க³வத்தனு꞉ .
யம்ʼ ஜிகா⁴ம்ʼஸத² யஜ்ஞேன யஸ்யேஷ்டாஸ்தனவ꞉ ஸுரா꞉ .. 30..

ததி³த³ம்ʼ பஶ்யத மஹத்³த⁴ர்மவ்யதிகரம்ʼ த்³விஜா꞉ .
இந்த்³ரேணானுஷ்டி²தம்ʼ ராஜ்ஞ꞉ கர்மைதத்³விஜிகா⁴ம்ʼஸதா .. 31..

ப்ருʼது²கீர்தே꞉ ப்ருʼதோ²ர்பூ⁴யாத்தர்ஹ்யேகோனஶதக்ரது꞉ .
அலம்ʼ தே க்ரதுபி⁴꞉ ஸ்விஷ்டைர்யத்³ப⁴வான் மோக்ஷத⁴ர்மவித் .. 32..

நைவாத்மனே மஹேந்த்³ராய ரோஷமாஹர்துமர்ஹஸி .
உபா⁴வபி ஹி ப⁴த்³ரம்ʼ தே உத்தமஶ்லோகவிக்³ரஹௌ .. 33..

மாஸ்மின் மஹாராஜ க்ருʼதா²꞉ ஸ்ம சிந்தாம்ʼ
நிஶாமயாஸ்மத்³வச ஆத்³ருʼதாத்மா .
யத்³த்⁴யாயதோ தை³வஹதம்ʼ நு கர்தும்ʼ
மனோ(அ)திருஷ்டம்ʼ விஶதே தமோ(அ)ந்த⁴ம் .. 34..

க்ரதுர்விரமதாமேஷ தே³வேஷு து³ரவக்³ரஹ꞉ .
த⁴ர்மவ்யதிகரோ யத்ர பாக²ண்டை³ரிந்த்³ரநிர்மிதை꞉ .. 35..

ஏபி⁴ரிந்த்³ரோபஸம்ʼஸ்ருʼஷ்டை꞉ பாக²ண்டை³ர்ஹாரிபி⁴ர்ஜனம் .
ஹ்ரியமாணம்ʼ விசக்ஷ்வைனம்ʼ யஸ்தே யஜ்ஞத்⁴ருக³ஶ்வமுட் .. 36..

ப⁴வான் பரித்ராதுமிஹாவதீர்ணோ
த⁴ர்மம்ʼ ஜனானாம்ʼ ஸமயானுரூபம் .
வேனாபசாராத³வலுப்தமத்³ய தத்³தே³ஹதோ
விஷ்ணுகலாஸி வைன்ய .. 37..

ஸ த்வம்ʼ விம்ருʼஶ்யாஸ்ய ப⁴வம்ʼ ப்ரஜாபதே
ஸங்கல்பனம்ʼ விஶ்வஸ்ருʼஜாம்ʼ பிபீப்ருʼஹி .
ஐந்த்³ரீம்ʼ ச மாயாமுபத⁴ர்மமாதரம்ʼ
ப்ரசண்ட³பாக²ண்ட³பத²ம்ʼ ப்ரபோ⁴ ஜஹி .. 38..

மைத்ரேய உவாச
இத்த²ம்ʼ ஸ லோககு³ருணா ஸமாதி³ஷ்டோ விஶாம்பதி꞉ .
ததா² ச க்ருʼத்வா வாத்ஸல்யம்ʼ மகோ⁴னாபி ச ஸந்த³தே⁴ .. 39..

க்ருʼதாவப்⁴ருʼத²ஸ்னானாய ப்ருʼத²வே பூ⁴ரிகர்மணே .
வரான் த³து³ஸ்தே வரதா³ யே தத்³ப³ர்ஹிஷி தர்பிதா꞉ .. 40..

விப்ரா꞉ ஸத்யாஶிஷஸ்துஷ்டா꞉ ஶ்ரத்³த⁴யா லப்³த⁴த³க்ஷிணா꞉ .
ஆஶிஷோ யுயுஜு꞉ க்ஷத்தராதி³ராஜாய ஸத்க்ருʼதா꞉ .. 41..

த்வயா(ஆ)ஹூதா மஹாபா³ஹோ ஸர்வ ஏவ ஸமாக³தா꞉ .
பூஜிதா தா³னமாநாப்⁴யாம்ʼ பித்ருʼதே³வர்ஷிமானவா꞉ .. 42..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ
சதுர்த²ஸ்கந்தே⁴ ப்ருʼது²விஜயே ஏகோனவிம்ʼஶோ(அ)த்⁴யாய꞉ .. 19..

———————————–

ப்ருது 1௦௦ அஸ்வமேத யாகங்கள் செய்ய விரும்பி சரஸ்வதி நதிக்கரையை தேர்ந்தெடுத்து யாகத்தை ஆரம்பித்தார்.
பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் எல்லா தேவ இனத்தைச் சேர்ந்தவரும் ரிஷிகளும் பாகவதர்களும் அங்கு குழுமினர்.
மலைகள் கடல் இவைகளில் இருந்து ரத்தினங்களும் மற்றப் பொருள்களும் வந்து சேர்ந்தன.
பூமியிலிருந்து யாகத்திற்குத் தேவையான எல்லா திரவியங்களும் கிடைத்தன

இவ்வாறு ப்ருது மகாராஜா 99 யாகங்கள் செய்து முடித்தபின் இந்திரன் , அவர் நூறு யாகங்கள் செய்து முடித்தால்
தன் பதவிக்கு தகுதியாவார் என்ற பொறாமையால் இடையூறு .விளைவிக்க எண்ணி ,
வெவ்வேறு வேடம் கொண்டு யாகக் குதிரையை அபகரித்தான்.

ஒவ்வொரு முறையும் ப்ருதுவின் மகன் இந்திரனை வில்லும் கையுமாகத் துரத்தியதால் இந்திரன் குதிரையையும்
தன் வேடங்களையும் விட்டு மறைந்தான். இந்திரனின் வெவ்வேறு வேடங்களே வேத விரோத மதங்களாயின.

இதனால் கோபம் கொண்ட ப்ருது இந்திரனைக் கொல்ல நிச்சயிக்க ரித்விக்குகள் தடுத்து யாக பூமியில் வதம் செய்வது
கூடாதென்று கூறி மந்திரம் மூலம் அவனை வரவழைத்து யாகாக்னியில் ஆஹுதி செய்ய முயன்றனர்.

அப்போது பிரம்ம தேவர் அவர்களைத் தடுத்து , இந்திரன் தேவர்களின் பிரதிநிதி என்றும் ,
ஆகூதிக்கும் ருசிக்கும் பிறந்த மகாவிஷ்ணுவின் அம்சமான யக்ஞன் என்பவனே அப்போதுள்ள இந்திரன் என்றும் கூறி
அவனை வதம் செய்வது தகாது என்றார்.

மேலும் ப்ருது 99 யாகங்களுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பது தெய்வ ஆக்ஞை என்று கூறினார்.
அதன்படி ப்ருது யாகத்தை நிறுத்திக் கொண்டு புரோகிதர்களுக்கு தக்கபடி சம்பாவனை செய்து அவர்கள் ஆசியைப் பெற்றுக் கொண்டார்

—————–———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மத் பாகவதம் -ஸ்கந்தம்-3-அத்யாயம்-33–

November 7, 2020

இவ்விதம் கபிலருடைய உபதேசத்தைக் கேட்ட தேவஹுதி அஞ்ஞானம் நீங்கியவளாய் கபிலரைத் துதித்தாள்.

“ தங்கள் நாபிக்கமலத்தில் தோன்றிய பிரம்மாவாலும் பார்க்கப்படாத சிருஷ்டியின் முதல் காரணமாகிய தாங்கள் சகல உலகத்தையும் தன் உந்தியுள் வைத்தவர். அப்படிப்பட்டவர் என் வயிற்றில் எவ்விதம் தோன்றினீர் என்பது ஆச்சரியம்.
ஆனாலும் ஒரு சிறு குழந்தை வடிவில் ஆலிலை மீது இந்த பிரபஞ்சங்களை வயிற்றில் அடக்கி கால் கட்டைவிரலை வாயில் வைத்துத் தோன்றின மாயத்தின் முன் இது ஒன்றுமேயில்லை அல்லவா?

துஷ்டநிக்ர்ஹம் சிஷ்ட பரிபாலனம் இவற்றிற்காக வராஹரூபம் போன்ற பல சரீரங்களை எடுத்துக்கொள்கிறீர்களே அது போன்ற இதுவும் ஒன்று என்று அறிகிறேன்.எவருடைய நாமஸ்மரணம், கதாஸ்ரவணம், முதலியவற்றாலும், சாஷ்டாங்கமாக வணங்குவதாலும், ஒருமுறையாவது தியானிப்பதாலும் சண்டாளனும் பூஜிக்கத்தகுந்தவன் ஆகிறானோ அவரை நேரில் காணும் பாக்கியம் ஏற்பட்டால் அதன் மகிமையைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ!

நான் வேதங்களின் சாரமானவரும், பரப்ரம்மமும், பரமபுருஷனும், ஒருமுகப்பட்ட மனதால் தியானிக்கத் தகுந்தவரும், கபிலராக வந்த விஷ்ணுவும் ஆன தங்களை வணங்குகிறேன்.”

கபிலர் கூறினார்.

“தாயே நான் கூறிய இந்த மார்க்கம் அனுஷ்டிப்பதற்கு எளியது. அதில் நிலை பெற்று சீக்கிரமே நீ முக்திநிலை அடையப் போகிறாய். “

மைத்ரேயர் கூறினார்.

இவாறு தேவஹூதிக்கு ஆத்மா மார்க்கத்தைக் காட்டிவிட்டு கபிலர் அவள் அனுமதி பெற்று அவ்விடம் நீங்கினார். தேவஹூதியும் அவரால் உபதேசிக்கப்பட்ட யோகத்தை அனுசரித்து சரஸ்வதி நதிக்கரையில் இருந்த அந்த ஆஸ்ரமத்தில் தியானத்தில் ஆழ்ந்தாள்.

முதலில் கணவனைப் பிரிந்து புத்திரனால் மனம் தேறியிருந்த தேவஹூதி புத்திரனும் சென்றபின் சிலகாலம் வ்யாகுலத்தில் ஆழ்ந்தாலும் நாளடைவில் மனம் தேறி ஜீவபாவம் நீங்கி க்லேசங்களில் இருந்து விடுபட்டு பரமானந்த நிலை எய்தினாள். இவ்வாறு நாளடைவில் நிரந்தர சமாதியில் நிலைத்து பகவானுடைய பாதத்தை அடைந்தாள்.

அவள் எந்த இடத்தில் சித்தி அடைந்தாளோ அது சித்திபதம் என்ற பெயருடன் ஒரு புண்யக்ஷேத்திரமாயிற்று.

கபிலர் தாயிடம் இருந்து அனுமதி பெற்று வடகிழக்கு திசை நோக்கிச்சென்றார். சித்தர் சாரணர் கந்தர்வர் முனிவர்கள் அப்சர கணங்கள் முதலியவர்களால் துதிக்கப்பட்டு சமுத்ரராஜனால் இடமளிக்கப்பெற்று மூவுலகையும் காப்பதற்காக இன்னும் யோகநிஷ்டையில் இருக்கிறார்.

எவன் ஆத்மயோகமாகிய இந்த கபிலோபதேசத்தை ச்ரத்தையுடன் கேட்கின்றானோ அல்லது பிறருக்கு அன்புடன் கூறுகின்றானோ அவன் பகவானிடம் நிலைத்த புத்தியுள்ளவனாக ஆகி பகவானை அடைகிறான் என்று கூறி மைத்ரேயர் கபிலாவதாரத்தை முடிக்கிறார்.

ராமாயணத்தில் ஸகரனுடைய குமாரர்கள் யாகக்குதிரையைத் தேடி பாதாளத்திற்கு வந்த போது அங்கு கபிலர் அருகில் அதைக் கண்டு கபிலரைத் திருடன் என்றெண்ணி அவமதித்து அவர் சாபத்திற்காளாகி சாம்பலானார்கள். பின்னர் ஸகரனின் பேரனான அம்சுமான் அங்கு வந்து அவரை வணங்கி தன் பித்ருக்களுக்கு நற்கதி கிடைக்குமாறு செய்கிறான்.

—————

ஏவம்ʼ நிஶம்ய கபிலஸ்ய வசோ ஜனித்ரீ
ஸா கர்த³மஸ்ய த³யிதா கில தே³வஹூதி꞉ .
விஸ்ரஸ்தமோஹபடலா தமபி⁴ப்ரணம்ய
துஷ்டாவ தத்த்வவிஷயாங்கிதஸித்³தி⁴பூ⁴மிம் .. 1..

தே³வஹூதிருவாச
அதா²ப்யஜோ(அ)ந்த꞉ஸலிலே ஶயானம்ʼ
பூ⁴தேந்த்³ரியார்தா²த்மமயம்ʼ வபுஸ்தே .
கு³ணப்ரவாஹம்ʼ ஸத³ஶேஷபீ³ஜம்ʼ
த³த்⁴யௌ ஸ்வயம்ʼ யஜ்ஜட²ராப்³ஜஜாத꞉ .. 2..

ஸ ஏவ விஶ்வஸ்ய ப⁴வான் வித⁴த்தே
கு³ணப்ரவாஹேண விப⁴க்தவீர்ய꞉ .
ஸர்கா³த்³யனீஹோ(அ)விததா²பி⁴ஸந்தி⁴-
ராத்மேஶ்வரோ(அ)தர்க்யஸஹஸ்ரஶக்தி꞉ .. 3..

ஸ த்வம்ʼ ப்⁴ருʼதோ மே ஜட²ரேண நாத²
கத²ம்ʼ நு யஸ்யோத³ர ஏததா³ஸீத் .
விஶ்வம்ʼ யுகா³ந்தே வடபத்ர ஏக꞉
ஶேதே ஸ்ம மாயாஶிஶுரங்க்⁴ரிபான꞉ .. 4..

த்வம்ʼ தே³ஹதந்த்ர꞉ ப்ரஶமாய பாப்மனாம்ʼ
நிதே³ஶபா⁴ஜாம்ʼ ச விபோ⁴ விபூ⁴தயே .
யதா²வதாராஸ்தவ ஸூகராத³ய-
ஸ்ததா²யமப்யாத்மபதோ²பலப்³த⁴யே .. 5..

யந்நாமதே⁴யஶ்ரவணானுகீர்தனா-
த்³யத்ப்ரஹ்வணாத்³யத்ஸ்மரணாத³பி க்வசித் .
ஶ்வாதோ³(அ)பி ஸத்³ய꞉ ஸவனாய கல்பதே
குத꞉ புனஸ்தே ப⁴க³வன் நு த³ர்ஶனாத் .. 6..

அஹோ ப³த ஶ்வபசோ(அ)தோ க³ரீயான்
யஜ்ஜிஹ்வாக்³ரே வர்ததே நாம துப்⁴யம் .
தேபுஸ்தபஸ்தே ஜுஹுவு꞉ ஸஸ்னுரார்யா
ப்³ரஹ்மானூசுர்நாம க்³ருʼணந்தி யே தே .. 7..

தம்ʼ த்வாமஹம்ʼ ப்³ரஹ்ம பரம்ʼ புமாம்ʼஸம்ʼ
ப்ரத்யக்ஸ்ரோதஸ்யாத்மனி ஸம்ʼவிபா⁴வ்யம் .
ஸ்வதேஜஸா த்⁴வஸ்தகு³ணப்ரவாஹம்ʼ
வந்தே³ விஷ்ணும்ʼ கபிலம்ʼ வேத³க³ர்ப⁴ம் .. 8..

மைத்ரேய உவாச
ஈடி³தோ ப⁴க³வானேவம்ʼ கபிலாக்²ய꞉ பர꞉ புமான் .
வாசா விக்லவயேத்யாஹ மாதரம்ʼ மாத்ருʼவத்ஸல꞉ .. 9..

கபில உவாச
மார்கே³ணானேன மாதஸ்தே ஸுஸேவ்யேனோதி³தேன மே .
ஆஸ்தி²தேன பராம்ʼ காஷ்டா²மசிராத³வரோத்ஸ்யஸி .. 10..

ஶ்ரத்³த⁴த்ஸ்வைதன்மதம்ʼ மஹ்யம்ʼ ஜுஷ்டம்ʼ யத்³ப்³ரஹ்மவாதி³பி⁴꞉ .
யேன மாமப⁴வம்ʼ யாயா ம்ருʼத்யும்ருʼச்ச²ந்த்யதத்³வித³꞉ .. 11..

மைத்ரேய உவாச
இதி ப்ரத³ர்ஶ்ய ப⁴க³வான் ஸதீம்ʼ தாமாத்மனோ க³திம் .
ஸ்வமாத்ரா ப்³ரஹ்மவாதி³ன்யா கபிலோ(அ)னுமதோ யயௌ .. 12..

ஸா சாபி தனயோக்தேன யோகா³தே³ஶேன யோக³யுக் .
தஸ்மிந்நாஶ்ரம ஆபீடே³ ஸரஸ்வத்யா꞉ ஸமாஹிதா .. 13..

அபீ⁴க்ஷ்ணாவகா³ஹகபிஶான் ஜடிலான் குடிலாலகான் .
ஆத்மானம்ʼ சோக்³ரதபஸா பி³ப்⁴ரதீ சீரிணம்ʼ க்ருʼஶம் .. 14..

ப்ரஜாபதே꞉ கர்த³மஸ்ய தபோயோக³விஜ்ருʼம்பி⁴தம் .
ஸ்வகா³ர்ஹஸ்த்²யமனௌபம்யம்ʼ ப்ரார்த்²யம்ʼ வைமானிகைரபி .. 15..

பய꞉பே²னனிபா⁴꞉ ஶய்யா தா³ந்தா ருக்மபரிச்ச²தா³꞉ .
ஆஸனானி ச ஹைமானி ஸுஸ்பர்ஶாஸ்தரணானி ச .. 16..

ஸ்வச்ச²ஸ்ப²டிககுட்³யேஷு மஹாமாரகதேஷு ச .
ரத்னப்ரதீ³பா ஆபா⁴ந்தி லலநாரத்னஸம்ʼயுதா꞉ .. 17..

க்³ருʼஹோத்³யானம்ʼ குஸுமிதை ரம்யம்ʼ ப³ஹ்வமரத்³ருமை꞉ .
கூஜத்³விஹங்க³மிது²னம்ʼ கா³யன் மத்தமது⁴வ்ரதம் .. 18..

யத்ர ப்ரவிஷ்டமாத்மானம்ʼ விபு³தா⁴னுசரா ஜகு³꞉ .
வாப்யாமுத்பலக³ந்தி⁴ன்யாம்ʼ கர்த³மேனோபலாலிதம் .. 19..

ஹித்வா ததீ³ப்ஸிததமமப்யாக²ண்ட³லயோஷிதாம் .
கிஞ்சிச்சகார வத³னம்ʼ புத்ரவிஶ்லேஷணாதுரா .. 20..

வனம்ʼ ப்ரவ்ரஜிதே பத்யாவபத்யவிரஹாதுரா .
ஜ்ஞாததத்த்வாப்யபூ⁴ந்நஷ்டே வத்ஸே கௌ³ரிவ வத்ஸலா .. 21..

தமேவ த்⁴யாயதீ தே³வமபத்யம்ʼ கபிலம்ʼ ஹரிம் .
ப³பூ⁴வாசிரதோ வத்ஸ நி꞉ஸ்ப்ருʼஹா தாத்³ருʼஶே க்³ருʼஹே .. 22..

த்⁴யாயதீ ப⁴க³வத்³ரூபம்ʼ யதா³ஹ த்⁴யானகோ³சரம் .
ஸுத꞉ ப்ரஸன்னவத³னம்ʼ ஸமஸ்தவ்யஸ்தசிந்தயா .. 23..

ப⁴க்திப்ரவாஹயோகே³ன வைராக்³யேண ப³லீயஸா .
யுக்தானுஷ்டா²னஜாதேன ஜ்ஞானேன ப்³ரஹ்மஹேதுனா .. 24..

விஶுத்³தே⁴ன ததா³(ஆ)த்மானமாத்மனா விஶ்வதோமுக²ம் .
ஸ்வானுபூ⁴த்யா திரோபூ⁴தமாயாகு³ணவிஶேஷணம் .. 25..

ப்³ரஹ்மண்யவஸ்தி²தமதிர்ப⁴க³வத்யாத்மஸம்ʼஶ்ரயே .
நிவ்ருʼத்தஜீவாபத்தித்வாத்க்ஷீணக்லேஶாப்தநிர்வ்ருʼதி꞉ .. 26..

நித்யாரூட⁴ஸமாதி⁴த்வாத்பராவ்ருʼத்தகு³ணப்⁴ரமா .
ந ஸஸ்மார ததா³(ஆ)த்மானம்ʼ ஸ்வப்னே த்³ருʼஷ்டமிவோத்தி²த꞉ .. 27..

தத்³தே³ஹ꞉ பரத꞉ போஷோ(அ)ப்யக்ருʼஶஶ்சாத்⁴யஸம்ப⁴வாத் .
ப³பௌ⁴ மலைரவச்ச²ன்ன꞉ ஸதூ⁴ம இவ பாவக꞉ .. 28..

ஸ்வாங்க³ம்ʼ தபோயோக³மயம்ʼ முக்தகேஶம்ʼ க³தாம்ப³ரம் .
தை³வகு³ப்தம்ʼ ந பு³பு³தே⁴ வாஸுதே³வப்ரவிஷ்டதீ⁴꞉ .. 29..

ஏவம்ʼ ஸா கபிலோக்தேன மார்கே³ணாசிரத꞉ பரம் .
ஆத்மானம்ʼ ப்³ரஹ்மநிர்வாணம்ʼ ப⁴க³வந்தமவாப ஹ .. 30..

தத்³வீராஸீத்புண்யதமம்ʼ க்ஷேத்ரம்ʼ த்ரைலோக்யவிஶ்ருதம்ʼ .
நாம்னா ஸித்³த⁴பத³ம்ʼ யத்ர ஸா ஸம்ʼஸித்³தி⁴முபேயுஷீ .. 31..

தஸ்யாஸ்தத்³யோக³விது⁴தமார்த்யம்ʼ மர்த்யமபூ⁴த்ஸரித் .
ஸ்ரோதஸாம்ʼ ப்ரவரா ஸௌம்ய ஸித்³தி⁴தா³ ஸித்³த⁴ஸேவிதா .. 32..

கபிலோ(அ)பி மஹாயோகீ³ ப⁴க³வான் பிதுராஶ்ரமாத் .
மாதரம்ʼ ஸமனுஜ்ஞாப்ய ப்ராகு³தீ³சீம்ʼ தி³ஶம்ʼ யயௌ .. 33..

ஸித்³த⁴சாரணக³ந்த⁴ர்வைர்முனிபி⁴ஶ்சாப்ஸரோக³ணை꞉ .
ஸ்தூயமான꞉ ஸமுத்³ரேண த³த்தார்ஹணநிகேதன꞉ .. 34..

ஆஸ்தே யோக³ம்ʼ ஸமாஸ்தா²ய ஸாங்க்²யாசார்யைரபி⁴ஷ்டுத꞉ .
த்ரயாணாமபி லோகாநாமுபஶாந்த்யை ஸமாஹித꞉ .. 35..

ஏதன்னிக³தி³தம்ʼ தாத யத்ப்ருʼஷ்டோ(அ)ஹம்ʼ தவானக⁴ .
கபிலஸ்ய ச ஸம்ʼவாதோ³ தே³வஹூத்யாஶ்ச பாவன꞉ .. 36..

ய இத³மனுஶ்ருʼணோதி யோ(அ)பி⁴த⁴த்தே
கபிலமுனேர்மதமாத்மயோக³கு³ஹ்யம்ʼ .
ப⁴க³வதி க்ருʼததீ⁴꞉ ஸுபர்ணகேதா-
வுபலப⁴தே ப⁴க³வத்பதா³ரவிந்த³ம் .. 37..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே வையாஸக்யாமஷ்டாத³ஶஸாஹஸ்ர்யாம்ʼ
பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ த்ருʼதீயஸ்கந்தே⁴ காபிலேயோபாக்²யானே
த்ரயஸ்த்ரிம்ʼஶத்தமோ(அ)த்⁴யாய꞉ .. 33..

.. இதி த்ருʼதீயஸ்கந்த⁴꞉ ஸமாப்த꞉ ..

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 10-ஸ்ருஷ்ட்டி வைவித்யம் -படைப்புகளின் விவரணம் –

September 18, 2020

வசந்த திலகம் -14 அச்சு எழுத்துக்கள் ஒவ்வொரு வரியிலும்

வைகுண்ட வர்தித பலோ அத பவத் பிரசாதா
தம்போஐ யோநிர ஸ்ருஜத் கில ஜீவ தேஹாந்
ஸ்தாஸ் நூநி பூருஹ மயாநி ததா திரஸ் சாம்
ஜாதிம் மநுஷ்ய நிவஹா நபி தேவ பேதாந் —-1 –

ஸ்ரீ வைகுண்ட நாதா உனது திரு அருளால் பிரம தேவன் மிகுந்த சக்தியை அடைந்து பல ஜீவ ராசிகளையும்
மரம் செடி கொடி பறவை மிருகம் முதலியவற்றையும் மனிதர்களையும் தேவர்களையும்
தேவ மனுஷ்ய ஸ்தாவர ஜங்காதிகளையும் படைத்தாராமே –

——————

மித்யாக்ரஹ அஸ்மி மதி ராக விகோப பீதி
ரஜ்ஞாந வ்ருத்தி மிதி பஞ்ச விதாம் ச ஸ்ருஷ்ட்வா
உத்தாம தாமச பதார்த விதாந அதூந
ஸ்தேந த்வதீய சரண ஸ்மரணம் விஸூத்த்யை –2-

அறிவு மயக்கம் அஹங்காரம் மமகாரம் ஆசை கோபம் பயம் முதலான பஞ்ச அஞ்ஞான கார்யங்களை உண்டு பண்ணினார்
தமோ குணமான கார்யங்களைப் படைத்ததால் துயரத்தை அடைந்தார்
அத் துயரம் விலக உனது திருவடிகளைத் த்யானம் செய்தாராம்-(விஸூத்த்யை–தூய்மை ஆக்கிக் கொள்ள )

——————

தாவத் ச சர்ஜ மனஸா சனகம் சநந்தம் பூயஸ் ஸநாதன முனிம் ச ஸனத் குமாரம்
தே ஸ்ருஷ்டி கர்மணி து தேந நியுஜ்ய மாநாச த்வத் பாத பக்தி ரசிகா ஜக்ருஹுர் ந வாணீம் –3-

சனகர் சநந்தர் ஸநாதனர் ஸனத் குமாரர் ஆகியோரை மனத்தினால் படைத்தார் –
ஸ்ருஷ்டியில் ஈடுபடும் படி அவர்களுக்கு ஆணை இட்டார்
ஆனால் அவர்கள் தங்கள் சேவையில் நாட்டம் கொண்டு ப்ரம்மாவின் வாக்கை ஏற்க வில்லை –

(சனகர் சநந்தர் ஸநாதனர் ஸனத் குமாரர் -இந்த நால்வர் தான் ஜய விஜயர்களுக்கு சாபம் கொடுத்தவர்கள்)

——————-

தாவத் ப்ரகோப முதிதம் ப்ரதி ருந்ததோ அஸ்ய ப்ரூ மத்யதோ அஐநி ம்ருடோ பவத் ஏக தேச
நாமாநி மே குரு பதாநி ச ஹா விரிஞ்சே த்யாதவ் ருரோத கில தேந ச ருத்ர நாமா –4-

அப்போது பிரம்மாவுக்கு கோபம் உண்டாயிற்று -அதை அடக்கினார் –
அப்போது அவருடைய புருவங்களின் நடுவில் இருந்து ஸ்ரீ ருத்ரன் தோன்றினார்
அவர் பிரம்மனிடம் தனக்கு பெயரையும் இருப்பிடங்களையும் வேண்டினார்-ருததீ ருத்ரர் -அழுததால் ருத்ரர்

——————–

ஏகாதஸாஹ் வய தயா ச விபின்ன ரூபம் ருத்ரம் விதாய தயிதா வனிதாஸ் ச தத்வா
தாவந்த்ய தத்த ச பதாநி பவத் ப்ரணுந்ந ப்ராஹ ப்ரஜா விரச நாய ச சாதரம் தம் –5-

உன்னால் ஏவப்பட்ட படி அந்த பிரம தேவன் ருத்ரனுக்கு பதினோரு பெயர்களையும் பதினோரு மனைவி மார்களையும்
தனித் தனி இருப்பிடங்களையும் அளித்தார்
பின்பு உயிர்களைப் படைக்கும் படி அன்புடன் கட்டளை இட்டார் –

————–

ருத்ராபி ஸ்ருஷ்ட பயதா க்ருதி ருத்ர சம்க சம் பூர்ய மாண புவன த்ரய பீத சேதா
மா மா ப்ரஜா ஸ்ருஜ தபஸ் சர மங்கலாயே த்யா சஷ்ட தம் கமல பூர் பவதீரி தாத்மா –6–

ருத்ரனால் படைக்கப் பட்டவர்கள் பயங்கரமான உருவங்களுடன் மூ வுலகிலும் நிரம்பியதைக் கண்டு பயந்தார்
பிறகு ருத்ரனைப் படைக்க வேண்டாம் -உலக நலத்திற்காக தவம் செய் என்று சொன்னார்-

——————

தஸ்யாத சர்க ரஸி கஸ்ய மரீசி ரத்ரிஸ் தத்ராங்கரா க்ரது முனி புலஹ புலஸ்த்ய
அங்காத ஜாயத ப்ருகுஸ் ச வசிஷ்ட தஷவ் ஸ்ரீ நாரதஸ் ச பகவன் பவ தங்க்ரி தாஸ –7-

பிரமன் தனது ஸ்ருஷ்டியில் ஈடுபட்டார் -அவரது உடலில் இருந்து ஒன்பது பிரஜாபதிகளும்
உனது திருவடியில் பற்று உடைய ஸ்ரீ நாரத முனிவரும் உண்டானார்கள்
மரீசி அத்ரி அங்கிரஸ் க்ரது புலகர் புலஸ்த்யர் பிருகு வசிஷ்டர் தக்ஷன் ஸ்ரீ நாரதர்
ஆகியவர்கள் உண்டானார்கள்

—————

தர்மாதி காநபி ஸ்ருஜந்நத கர்தமம் ச வாணீம் விதாய விதி ரங்கஜ சம்குலோ அபூத்
த்வத் போதிதைஸ் சனக தக்ஷ முகைஸ் தநூஜை ருத் போதிதஸ் ச விர ராமோ தமோ விமுஞ்சன் –8-

அங்கஜசம் -மன்மதன்-

பிறகு பிரமதேவர் தர்மம் முதலியவைகளையும் கர்த்தமரையும் படைத்தார் -சரஸ்வதியைப் படைத்து காமத்தை அடைந்தார்
தாங்கள் ஸநகாதிகளை ஏவி அறிவுரை கூறச் செய்தீர்-அதனால் பிரம்மதேவரின் அஞ்ஞானம் விலகியது
வேதம் புராணங்களையும் வெளியிட்டு தனது புதல்வர்களுக்குக் கற்பித்தார்

————————-

வேதாந் புராண நிவஹா நபி ஸர்வ வித்யா குர்வன் நிஜாநந கணாச் சதுரா நநோ அசவ்
புத்ரேஷு தேஷு வினிதாய ச சர்க வ்ருத்தி மப் ரானுவம் ஸ்தவ பதாம் புஜம் ஆஸ்ரிதோ பூத் –9-

பிறகு அவர் நான்கு வேதங்களையும் அங்கங்களையும் புராணங்களையும் வித்யைகளையும் எல்லாக் கலைகளையும்
வெளியிட்டு அவற்றை தனது புத்ரர்களுக்கு உபதேசம் செய்தார் -ஆனாலும் ஸ்ருஷ்ட்டி வளர்ச்சி அடையவில்லை
தங்களுடைய திருவடித் தாமரைகளில் அடைக்கலம் புகுந்தார்

உலகம் ஒரு நாளில் படைக்கப்பட வில்லை
மீண்டும் மீண்டும் தடைகள் வர
மீண்டும் மீண்டும் சரண் அடைந்து
அவற்றை விலக்க பிரார்த்திக்கிறார்

—————

ஜாநந் நுபாய மத தேஹ மஜோ விபஜ்ய ஸ்ரீ பும்ஸ பாவமப ஜன்மனு தத்வ தூப்யாம்
தாப்யாம் ச மாநுஷ குலாநி விவர்தயம் ஸ்த்வம் கோவிந்த மாருத புரேச நிருந்தி ரோகாந் –10-

அதன் பிறகு ஸ்ருஷ்டிக்க வழியைக் கண்டார் -தனது சரீரத்தைப் பிரித்துக் கொண்டு
ஸ்வயம்புவ மனு மற்றும் சதரூபையைப் படைத்தார்
அந்தத் தம்பதிகள் மூலம் ஸ்ருஷ்டியைப் பெறுகச் செய்த தாங்கள் அடியேனது ரோகங்களைப் போக்கி அருள வேண்டும்
என்று வேண்ட ஸ்ரீ அப்பனும் அங்கீ கரித்து அருளினார்

முதலில் தோன்றிய ஆணும் பெண்ணும் -ஸ்வயம்புவ மனு மற்றும் சதரூபையை-இவர்களே
கீழே முனிவர்கள் உண்டே என்னில்
இவர்கள் தான் மனிதர்கள்
ரிஷிகள் தனி தானே

——————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செயல்களில் ஸ்ரீ கிரீடா வல்லபன்-ஸ்ரீ கிருஷ்ண அவதார லீலை –

September 11, 2020

இச்சா மீன விஹார கச்சப மஹா போத்ரின் யத்ருச்சா ஹரே
ரஷா வாமன ரோஷ ராம கருணா காகுத்ஸ்த ஹேலா ஹலின்
க்ரீடா வல்லவ கல்க வாஹன தசா கல்கிந்நிதி ப்ரத்யஹம்
ஜல்பந்த புருஷா புநந்தி புவனம் புண் யவ்க பண்யா பணா -ஸ்ரீ தசாவதார ஸ்லோகம் –12-

தன் விருப்பத்தால் மீனாகத் தோன்றியவன் –
மந்த்ர மலையை மத்தாக்கி கடலைக் கடைந்து விளையாடல் புரிந்த ஆமையாய்த் தோன்றினவனே –
மிகப்பெரிய பன்றி உருவாயத் தோன்றினவனே -எதிர் பாராது தோன்றிய சடக்கென தோன்றிய நரஸிம்ஹப் பெருமானே
மூ உலகும் ரக்ஷிக்க கங்கையை பெருக்கிக் காத்த வாமனனாய் தோன்றி த்ரிவிக்ரமனாய் வளர்ந்தவனே -கோபம் கொண்ட பரசுராமனே
கருணா மூர்த்தியான ராம பிரானே -கலப்பை யுடன் விளையாடிய பலராமன்
ஆயர் குலத்தில் கோபாலனாய் -அத்புதமான பல சேஷ்டிதங்கள் விளையாடிய கண்ணனே –
வெண்மையான குதிரையில் வந்து தர்மம் நிலை நிறுத்தப் போகும் கல்கி பகவானே
என்று தினம் தோறும் ஸ்துதிக்கும் புண்ய கூட்டத்தையே அளிக்கும் -விலைப் பொருளாக கொண்டுள்ள கடை போன்ற –
மனிதர்கள் உலகத்தை புனிதம் -தூய்மை ஆக்குகின்றனர் –
இப்படி தகுந்த விசேஷங்களுடன் தச அவதாரங்களையும் அருளிச் செய்கிறார்

————————————————————————————————-

ஸ்ரீ கிரீடா வல்லபன் -அன்பர்க்கே அவதரிக்கும் ஆயன் -லீலைகளுக்காகவே அவதாரம்
அவதாரமே லீலை
கோகுல லீலை
பிருந்தாவன லீலை
வடமதுரை லீலை
விவாக லீலை
ஸ்ரீத்வராகா லீலை
மஹா பாரத லீலை
யது குல திலகம்

——————-

வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அவன் -கிறிக் கொண்டு -உள்ளம் புகுந்து –
விசித்ரமான லீலைகள் -அநேக லீலைகள் –
கீதா சாஸ்திரம் யுத்த களத்திலே அருளிச் செய்த லீலை
ஓர் நகையுடன் உண்மை உரைக்க அடி சேர்ந்த விஜயனுக்கு -லோகத்துக்காக கீத உபநிஷத் –
ரதி-சாரதி –
மோக்ஷ பிரதத்வத்திலும் லீலை -ததி பாண்டவனுக்கும் தயிர் தாழிக்கும்
சரணாகதி சரம ஸ்லோகமும் லீலையாக அருளி
பவந்தி லீலா -ஆளவந்தார்
பூதனாவுக்கும் மோக்ஷம் பால்யத்திலே
கண்டா கர்ணனுக்கும்
கைலாசம் புத்ர வரம் -கள்வா
கிருஷ்ணாஸ்ரய -நாதன் -பாண்டவ தூதன் -பார்த்த சாரதி – மாம் -அஹம் –
ஜன்ம கர்ம மே திவ்யம்

—————

வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணை சுண்ணம் எதிர் எதிர் தூவிட –1-1-1-

ஸ்ரீ மதுரையில் சிறைக் கூடம் போலே பிறந்த இடம் தோன்றாமல் போக வேண்டாதே –
எல்லா உபாலாள நத்துக்கும் யோக்யமான ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகை யாகிற
இனிய இல்லிலே பிறந்து –

—————

திரு வோணத்தான் உலகாளும் என்பார்களே -1-1-3-

இவனுடைய லஷணம் இருந்தபடியால் திருவோணத்தான் ஆன சர்வேஸ்வரனுடைய லோகம் எல்லாம்
இவன் ஆளும் என்பாராய்-இப்படி பிரீதி வ்யஹாரம் பண்ணினார்கள்

—————–

வையம் ஏழும் கண்டால் பிள்ளை வாயுளே 1-1-6-

பிள்ளை உடைய வாயுள்ளே சகல லோகங்களையும் கண்டாள் என்கை –
அதுக்கடி -அர்ஜுனனுக்கு திவ்ய சஷூசை கொடுத்து விஸ்வரூபம் காட்டினாப் போலே –
இவளுக்கும் திவ்ய சஷூசை கொடுத்து தன் வைபவத்தை காட்டுகை -இறே

————–

வாயுள் வையகம் கண்ட மட நல்லார் ஆயர் புத்ரன் அல்லன் யரும் தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன் மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே-1-1-7-

இவள் கண்ட அநந்தரம்-அருகு நின்றவர்களுக்கும் காட்ட –
அவனும் தன் வைபவம் எல்லாரும் அறிக்கைக்காக அவர்களுக்கும்
திவ்ய சஷூஸ்சை கொடுத்து காட்ட கூடும் -இறே
ஸ்ரீ நந்தகோபன் மகன் அல்லன் -பெறுதற்கு அரிய சர்வேஸ்வரன் –
பரம்பின கல்யாண குணங்களை -உடையனாய் -நீர்மை உடையனான -சிறு பிள்ளை –
ஆச்சர்ய சக்தன் என்று இப்படி சொல்லி மிகவும் ப்ரீதிகளானார்கள் ஸ்திரீகள்

—————

திருக் கோட்டியூர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை-1-1-10-

அசாதாரண விக்ரஹ விசிஷ்டனாய் கொண்டு நித்ய வாசம் பண்ணுகிற –
நாராயண சப்த வாச்யனாய் -கல்யாண குண பூர்ணனானவன் திருவவதரித்த பிரகாரம்-

திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் -என்று துடங்கி
திருக்கோட்டியூர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை -என்று தலைக் கட்டுகையாலே
திரு வவதரித்து அருளின பிரகாரத்தை தக்க உலோபளாலநங்களோடே அனுபவித்து ஹர்ஷ்டராய் அருளி செய்தார் –

———-

பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே -1-2-1-

திருக் கையாலே பிடித்து திருப்பவளத்தில் வைத்து ஆஸ்வசித்து புஜிக்கும்-
தேனே மலரும் திருப் பாதம் -என்று சொல்லக் கேட்டு இருக்கையாலே
திருவடிகள் தன்னின் போக்யதை தன்னை பரீஷிக்கைக்காக -பருவத்துக்கு
அநு குணமான வியாபாரம் செய்வாரைப் போலே செய்தான் -ஆதல்

————–

மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்ததின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே முகில் நகையீர் வந்து காணீரே -1-2-6-

மங்களா சாசன பரர் ஆகையாலே -விரோதிகள் அறிந்து அபசரிக்கைக்கு அவகாசம்
இல்லாதபடி திருவவதரித்த நாளை மறைத்து அருளி செய்கிறார் –

————-

வந்த முதலை குழாத்தை வலி செய்து
தந்த களிறு போல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய
உந்தி இருந்தவா காணீரே ஒளி இழையீர் வந்து காணீரே -1-2-8-

காந்தி மிக்க ஆபரணங்களை உடைய பெண்காள்
தன்னோடு விளையாட வந்த -தன்னோராயிரம் பிள்ளைகளான-தானும் மதலையாய் இருக்கச் செய்தே –
அத்தனை பேரும் ஒருதலை – தான் ஒரு தலையாக நின்று -பலாத்கரித்து -கொம்பு முகிழ்த்த இள யானை போலே
தானே பிரதானனாய் விளையாடும் -இப்படி திரியா நிற்க செய்தே -ஸ்ரீ நந்தகோபர் சந்நிதியில்
ச விநயமாக வர்த்திக்கும் பிள்ளைத் தனத்தை உடையவன்-

—————-

மைத் தடம் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த் தலை நீல நிறத்துச் சிறுப் பிள்ளை
நெய்த் தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத் தலங்கள் வந்து காணீரே கனம் குழையீர் வந்து காணீரே -1-2-12-

திரு ஆழியும் -கருதும் இடம் பொருது வந்து கையில் நிற்கவும் வேண்டாதே -கை விடாதே இருந்து –
தன்னோசையாலே எதிரிகளை அழிக்க வல்ல ஸ்ரீ பாஞ்ச சந்யமும் -நிரந்தரமாக
வர்த்தியா நின்றுள்ள கையும் -ஆழ்வார்களுமான சேர்த்தியை ஒரோ தசைகளிலே இவன் தான்
இவளுக்கும் காட்டக் கூடும் இறே

————–

வண்டமர் பூம் குழல் ஆய்ச்சி மகனாக
கொண்டு வளர்கின்ற கோவலர் குட்டர்க்கு
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
கண்டம் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே -1-2-13-

ஸ்ரீ நந்தகோபர் மகனுக்கு -இவர் அடி அறிந்தவர் ஆகையாலே -மகனாக கொண்டு -என்கிறார் –
அவள் -தன் மகன் -என்று இறே நினைத்து இருப்பது –
அண்டத்தையும் அண்டாந்த வர்த்திகளான சேதன அசேதனங்களையும் திரு வயிற்றிலே
ஒரு புடையிலே அடங்கும் படி விழுங்கினவன் –

—————

விண் கொள் அமரர்கள் வேதனை தீர
மண் கொள் வசுதேவன் தம் மகனாய் வந்து
திண் கொள் அசுரரை தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே -1-2-16-

ஸ்வர்காதி லோகங்களை இருப்பிடமாக உடைய இந்திராதி தேவர்களுக்கு
ஆசூர பிரக்ருதிகளால் வரும் துக்கம் போம்படியாக முன்னே பூமியை இருப்பிடமாக
உடைய ஸ்ரீ வசுதேவருக்கு புத்ரனாய் வந்து அவதரித்து -தன்னை பற்ற சிறைப் பட்டு இருக்கிற
ஸ்ரீ வசுதேவர் துக்கத்தை தீர்த்து -பின்னம் தேவர்கள் துக்கம் தீர்க்கைக்கு முன்னம் இங்கே அவதரித்தானாய் ஆய்த்து-
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல் -என்னக் கடவது இறே-

————–

பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய
திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய ஒளி மணி வண்ணன்
புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே -1-2-17-

சக்கரவர்த்தி திருமகனைப் போலே -பருவம் நிரம்பின பின்பு -விரோதிகளை நிரசித்து –
லோகத்தை உஜ்ஜீவிப்பிக்கை அன்றிக்கே -பருவம் நிரம்புவதுக்கு முன்னே –
திண் கொள் அசுரரை தேய -வளருகையாலே -லோகம் எல்லாம் உஜ்ஜீவிக்கும் படியாக –
பூதன சகட யமளார்ஜுனாதிகளை தொட்டில் பருவம் பிடித்து இறே நிரசித்து சென்றது –
லஷ்மி துல்ய ஸ்வாபையான தேவகி பிராட்டி இப்படிக்கு ஈடாக நோற்றுப் பெற்ற –
திருவின் வடிவு ஒக்கும் என்கையாலே –
கீழ் சீதக் கடலுள் அமுதன்ன தேவகி -என்றது -இங்கே ஸ்பஷ்டமாய் இறே இருப்பது –

———–

மைத்தடம் கண்ணி யசோதை தன் மகனுக்கு -1–4–10-

கருத்து பெருத்து இருந்துள்ள கண்ணை உடையளான யசோதை –
அஞ்சனத்தாலே அலங்க்ர்தமாய் பரந்துள்ள கண்ணை உடையவள் என்னுதல்-
அஞ்சன வண்ணனான இவனை அநவரதம் பார்த்து கொண்டு இருக்கையாலே
இவனுடைய திருமேனி நிறம் ஊறி -அத்தாலே மைத்து -இவன் பக்கல் ஸ்நேகத்தாலே
விகசிதமான கண்ணை உடையவள் என்னுதல் –

—————–

மக்கள் உலகினில் பெய்து அறியா மணிக் குழவின் உருவின்
தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ -1 7-8 —

லோகத்தில் மனுஷ்யர் -பெற்று அறியாத அழகிய குழவி வடிவை உடைய –தகுதியான –
நீல ரத்னம் போன்ற -நிறத்தை உடையனான ஸ்ரீ வாசுதேவர் திருமகன் தளர் நடை நடவானோ –

——————–

இருட்டில் பிறந்து போய் ஏழை வல்லாயர் மருட்டித் தவிர்ப்பித்து – 2-1 4-

மத்ய ராத்ரே கிலாதாரே ஜாயமானே ஜனார்தனே -என்கிறபடியே கம்சன் முதலான
துஷ்ப்ரக்ருதிகள் கண் படாதபடி -அருகு நின்றாரை தெரியாத இருளிலே வந்து அவதரித்து –
எப்போது பிறப்பது -என்று ஹிம்சிக்கைக்காக உருவின வாளை வைத்து உறையில் இருக்கிறவன் –
கண்ணால் கண்டால் விடான் இறே-
ஜானாதுமாவதானந்தே கம்சோயம் திதி ஜன்மஜ -என்றாள் இறே தேவகி பிராட்டி –
போய் -வீங்கு இருள்வாய் அன்று அன்னை புலம்ப போய் -என்கிறபடியே அந்த செறிந்த இருளிலே பெற்ற
தாயானவள் விரஹா ஆதரதையாலே காலைக் கட்டிக் கொண்டு கிடந்தது கதரா நிற்க திரு ஆய்ப்பாடியிலே போய் –

—————-

உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே –2-3-3-

இருந்ததே குடியாக உஜ்ஜீவிக்கும்படி -இவ்விடைக் குலத்தில் வந்து பிறந்து -அது தானே உனக்கு மிகவும்
தேஜஸ்சாம்படி இருப்பானாய்-வேரிலே வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமா போலே –
இடையருக்கு ஒரு வியசனம் வரில் -முந்துற உன் முகம் வாடும்படி -அவர்களுக்கு தலைவன் ஆனவனே –

————–

கரு உடை மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள் உரு உடையாய்
உலகு ஏழும் உண்டாக வந்து பிறந்தாய் திரு உடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய்–2-7-2-

அழகு ஒரு தட்டும் தான் ஒரு தட்டும் படியான கண்களின் அழகை உடையவன்
சர்வ லோகங்களும் உன்னுடைய அவதாரத்தாலே லப்த சத்தாகமாய் -உஜ்ஜீவிக்கும்படி வந்து பிறந்தவனே
கஸ்ரீய ஸ்ரீ -திருவுக்கும் திருவாகிய செல்வா -என்கிறபடியே உன்னை
தனக்கு சம்பத்தாக உடையாளாய் இருக்கும் ஸ்ரீ பெரிய பிராட்டிக்கு வல்லபன் ஆனவனே
அவள் உகப்புக்காக சம்சார சேதனரை ரஷித்து அருளும்படி ஸ்ரீ கோவிலிலே கண் வளர்ந்து அருளினவனே

—————–

அஞ்சன வண்ணனை ஆயர் கோலக் கொழுந்தினை–3-2-1-

கண்டவர்கள் கண் குளிரும்படி அஞ்சனம் போலே இருண்டு இருக்கிற திரு மேனியை உடையவனே –
அஞ்சனம் -மை மைப்படி மேனி இறே
கன்றுகளின் பின்னே போகிற போதை நடையின் த்வநியையும் -திரு மேனியின் குறு வெயிர்ப்பும்
அலைந்த திருக் குழல்களும் -திருக் கையில் பிடித்த பொற் கோலுமான ஆயர் குலத்தை உடையவனாய் –
அவர்களுக்கு முன்னோடி கார்யம் பார்க்கும் தலைவன் ஆனவனை –
அன்றிக்கே –
வேரிலே வெக்கை தட்டினால் -கொழுந்து முற்பட வாடுமா போலே
அவர்களுக்கு நோவு வந்தால் -முதல் தன் முகம் வாடும்படி இருக்கையாலே
கொழுந்து -என்கிறதாகவுமாம் -ஆயர் கொழுந்தாய்-என்றார் இறே ஆழ்வார்

———–

மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழுந்தவள் தன் வயிற்றில்
சிக்கனே வந்து பிறந்து நின்றாய் திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3 1-

இழந்தவள் இழவு தீர்ந்தால் போலே என்னுடைய இழவு தீர்க்க வேணும் என்கிறார் –
தேவகிப் பிராட்டிக்கு அஷ்ட கர்ப்பம் இறே ஸ்ரீ கிருஷ்ணன் –
கால நேமியோடே சம்பந்தம் உடையராய் -ஹிரண்ய சாபத்தாலே பாதாளத்திலே
வர்திப்பார் ஆறு ராஷசரை யோக நித்ரையால் பிரவேசிப்பிக்க -தேவகியார் வயிற்றிலே பிறந்த ஆறு ராஷசரை
கல்லிடை மோத – கம்சனால் நிரசிக்கப்பட -ஏழாம் கர்ப்பமான நம்பி மூத்த பிரானை ரோகிணியார் வயிற்றினில் அவதரிப்பித்து –
தாம் எட்டாம் கர்ப்பமாய் இறே வந்து அவதரித்தது
இழந்தவள் தன் வயிற்றில் அவள் முன்பு இழந்த இழவு தீர சிக்கன வந்து பிறந்து நின்றாய்
திரு மால் இரும் சோலை எந்தாய் –அங்கு ஆஸ்ரித பாரதந்த்ர்யம் -இங்கு ஸ்வாமித்வம்
தேவகி பிராட்டியார் வயிற்றில் ஸ்ரீ கிருஷ்ண எழுந்து அருளி இருந்த இருப்பு போலே இறே
பூடுறை ஸ்ரீ கோயிலில் ஸ்ரீ அழகர் எழுந்து அருளி இருந்த இருப்பும் இவர்க்கு-

——————————-

வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணை சுண்ணம் எதிர் எதிர் தூவிட –1-1-1-
திரு வோணத்தான் உலகாளும் என்பார்களே -1-1-3-
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே 1-1-6-
வாயுள் வையகம் கண்ட மட நல்லார் ஆயர் புத்ரன் அல்லன் யரும் தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன் மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே-1-1-7-
திருக் கோட்டியூர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை-1-1-10-
பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே -1-2-1-
மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்ததின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே முகில் நகையீர் வந்து காணீரே -1-2-6-
வந்த முதலை குழாத்தை வலி செய்து
தந்த களிறு போல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய
உந்தி இருந்தவா காணீரே ஒளி இழையீர் வந்து காணீரே -1-2-8-
மைத் தடம் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த் தலை நீல நிறத்துச் சிறுப் பிள்ளை
நெய்த் தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத் தலங்கள் வந்து காணீரே கனம் குழையீர் வந்து காணீரே -1-2-12-
வண்டமர் பூம் குழல் ஆய்ச்சி மகனாக
கொண்டு வளர்கின்ற கோவலர் குட்டர்க்கு
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
கண்டம் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே -1-2-13-
விண் கொள் அமரர்கள் வேதனை தீர
மண் கொள் வசுதேவன் தம் மகனாய் வந்து
திண் கொள் அசுரரை தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே -1-2-16-
பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய
திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய ஒளி மணி வண்ணன்
புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே -1-2-17-
மைத்தடம் கண்ணி யசோதை தன் மகனுக்கு -1–4–10-
மக்கள் உலகினில் பெய்து அறியா மணிக் குழவின் உருவின்
தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ -1 7-8 —
இருட்டில் பிறந்து போய் ஏழை வல்லாயர் மருட்டித் தவிர்ப்பித்து – 2-1 4-
உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே –2-3-3-
கரு உடை மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள் உரு உடையாய்
உலகு ஏழும் உண்டாக வந்து பிறந்தாய் திரு உடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய்–2-7-2-
அஞ்சன வண்ணனை ஆயர் கோலக் கொழுந்தினை–3-2-1-
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழுந்தவள் தன் வயிற்றில்
சிக்கனே வந்து பிறந்து நின்றாய் திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3 1-

——————-

ஸ்ரீ பெரியாழ்வார் பாசுரப்படி ஸ்ரீ கிருஷ்ண அவதார கிரீடா –

வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நாரணன் நம்பி திரு வோணத்தான்
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழுந்தவள் சித்தம் பிரியாத திருவின் வடிவு ஒக்கும் தேவகி தன் வயிற்றில்
சிக்கனே இருட்டில் வசுதேவன் தம் மகனாய் வந்து பிறந்த அத்ததின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்
உருவு கரிய ஒளி மணி வண்ணன் கோவலர் குட்டன் நந்தன் மதலை மைத் தடம் கண்ணி யசோதை
வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தாய் போய் ஏழை வல்லாயர் மருட்டித் தவிர்ப்பித்து
திண் கொள் அசுரரை தேய தந்த களிறு போல் தானே விளையாடும் ஆய்ச்சி மகனாக வளரும்
சீருடைப் பண்புடைப் பாலகன் மாயன் பேதை குழவி
செய்த் தலை நீல நிறத்துச் சிறுப் பிள்ளை நெய்த் தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத் தலங்கள்
ஆயர் புத்ரன் அல்லன் யரும் தெய்வம் உய்ய இவ் உலகு ஏழும் உண்டாக வந்து பிறந்தாய்

—————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கண்ணனும் ஸ்ரீ ஆழ்வார்களும் ஸ்ரீ ஆச்சார்யர்களும் —

September 9, 2020

கடவுளே -அருளிச் செயலில் சப்த பிரயோகம் கண்ணனையே –

பட வரவுச்சி தன்னில் பாய்ந்து பன்னடங்கள் செய்து
மடவரல் மங்கை தன்னை மார்வகத்து இருத்தினானே
தடவரை தங்கு மாடத் தகு புகழ் நாங்கை மேய
கடவுளே காவளந் தண் பாடியாய் களை கண் நீயே -ஸ்ரீ பெரிய திருமொழி–4-6-5-

கடவுளே காவளந் தண் பாடியாய் களை கண் நீயே
கடவுள் என்று பர தேவதை என்ற படியாய்
சர்வாதிகனான நீயே
சந்நிஹிதனாய் இருக்க நான்
வேறு ஒருவரைத் தேடித் போகவோ-
கண்ணன் அனுபவத்திலேயே மண்டி இருப்பார்களே

——————

ஸ்ரீ பொய்கை ஆழ்வாரும் ஸ்ரீ கண்ணனும் -ஸ்ரீ கிடாம்பி வெங்கடேசன் ஸ்வாமிகள் –

கிடந்தது பூமி எடுத்தது குன்றம் கை உலகம் தாயவனை அல்லது தாம் தொழா
காணாக் கண் கேளாச் செவி -சேர்ந்தே அனுபவம்
வாய் அவனை அல்லது வாழ்த்தாது –பேய் முலை நஞ்சூணாக உண்டான்
பூதனா நிரசனத்துடன் அனுபவம் தொடங்கும்
புள்ளின் வாய் கீண்டானும் -மருதிடை போய் மண் அளந்த மால்
கடை வெண்ணெய் உண்டாய் –
அறியும் உலகு எல்லாம் -உவணம் ஊர்ந்தாய்-பரத்வ ஸூசகம் –
தாம்பின் தழும்பு ஸுவ்லப்யம் பறை சாற்றும் –
கண்டு பற்றுகைக்கு ஸுவ்லப்யம்-
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு -களவாடிய செயலைக் காட்டி
குரல் ஓவாது ஏங்கி அயலார் காண இருந்த ஓங்காத வண்ணா உரை
அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள் வாய் குரவை குட முலை மல் குன்றம்
விட்டு இறுத்து மேய்த்து ஓசித்து கீண்டு கோத்து ஆடி உண்டு அட்டு எடுத்த
செங்கண் அவன் -நிரை நிரை அணி –10 சேஷ்டிதங்களை ஒரே பாசுரத்தில் அனுபவம்
தோள் கார்யங்கள் -62–
மருதினூடு போய் -பூம் குறுந்தம் சாய்த்து -மண மருவ மால் விடை ஏழு செற்று –
ஏழு உலகம் தாயினவும் எண் திசையும் போயினவும் சூழ் அரவ பொங்கு அணையான் தோள்
87-இனி யார் புகுவார் எழு நரக வாசல்
கலியும் கெடும் கண்டு கொண்மின் போல்
ஓர் அடியும் -சாடு உதைத்த –கேசவனை -ஈர் அடியும் காணலாம் –
கேசவனை மாயவனையே மனத்து வை -100 நிகமனம்

——————

*ஸ்ரீ பூதத்தாழ்வாரும் கண்ணனும்* *ஸ்ரீ உ வே திருக்கோவலூர் ஸுதர்ஸன் ஸ்வாமி* ஸ்ரீ க்ருஷ்ணானுபவத் தொடர்

ஸ்ரீ கிருஷ்ணன் திரு அவதாரம் -ஆவணி ரோஹிணி -கிமு 3102-125 ஆண்டுகள்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திரு அவதாரம்
ஸூகாதிகளும் முதல் ஆழ்வாரும் பரத்வத்தில் ஈடுபட்டு இருப்பார்கள் –
காலத்தால் முன்னால் -பக்தியில் முதிர்ந்த முதல் ஆழ்வார்கள்

அத்புதம் பாலகம் -பரத்வம் தோன்றவே அவதாரம்
அம்புஜ அக்ஷணம்
சதுர்புஜம் சங்க கதாயுதம் –
செய்ய சுடர் ஆழி
அன்பே விஷயமான திருவந்தாதி
வேணு கோபாலன் ஷேத்ராதிபதி
ஆயனர் -திருவிக்ரமன் -பரத்வம் பொலிய இருக்கும் திவ்ய தேசம்
முத்துக்கள் சேரும் கடல் மல்லை
கடல் மல்லைக் கிடக்கும் கரும்பு –
கிருபா சாகரம் கடல் மல்லை பூதத்தாழ்வார்-இதுவே நிரூபகம்
கடல் மல்லை தல சாயனத்து உறைவார் -அவனுக்கும் இதுவே நிரூபகம்
கதையின் பெரும் பொருளும் கண்ணா -நின் பேரே-இதயம்-64-
இதிஹாச புராணங்கள் கண்ணனையே சொல்லும்
திரு நாம சங்கீர்த்தனமே சார தமம் –
வேதைஸ் சேர்வை அஹம் ஏவ போல் –
இருந்தவையே ஏத்தில் – கதையின் திருமொழியாய் நின்ற திரு மாலே
உன்னைப் பரு மொழியால் காணப் பணி -ஸதா பஸ்யந்தி பண்ணப் பண்ணி அருள்

———————

பேயாழ்வார் அனுபவித்த கண்ணன் -ஸ்ரீ உ வே M A மதுஸுதனன் ஸ்வாமி-

ஆயனைக் கண்டமை காட்டும் தமிழ் தலைவன்
பரத்வத்தில் முதல் ஆழ்வார்கள் ஊன்றி இருப்பார்கள்
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய கேள்வன் –
குறும்பு யோசித்த கோபாலகனே பாற் கடலிலும் வேங்கடத்திலும் பனி விசும்பிலும் மனத்துள்ளும்
வெற்பு என்று வேங்கடம் பாடும் -முதல் நாயகி தாயார் பாசுரம் -மல் போன்ற நீண்ட தோள் மால் கிடந்த
கண்ணனே -மேகங்களைக் காணிலும்
அடைந்தது அரவணை மேல் -ஐவர்க்காய் –பேய்ச்சி பால் உண்ட பிரான் யசோதை மத்துக்கு அஞ்சி
அஞ்சாதவன் பீஷ்மாதிகளுக்கு-ப்ரஹ்மாஸ்திரத்துக்கும் அஞ்சாதவன் மத்துக்கு பீதனானான்
அவர்களும் வில்லை போய்ட்டு மத்தைக் கையில் கொண்டு இருந்தால் வென்று இருப்பார்கள்
நர நாராயணனாய் சிங்காமை விரித்தவன் ஆய்ச்சியால் வெண்ணெய் உண்டு ஆப்புண்டவன்
அம்மனே -இது இவருடைய எத்திறம் இருந்தபடி
மண்ணுண்டும் -பேய்ச்சி முலை உண்டும் ஆற்றாதாய் வெண்ணெய் உண்டு -வயிற்றினொடு ஆற்றா மகன்
திருமழிசை மூன்றும் அருளிச் செய்தது போல் இவரும்
வயிற்றை அறுத்து வண்ணானுக்கு இட மாட்டானோ -வண்ணான் சாலில் எவ்வளவு போட்டாலும் ரொம்பாதே
மகன் ஒருவனுக்கு அல்லாத மா மேனி மாயன் -மகனாம் –
லோக பிதா பித்ரனைத் தேர்ந்து எடுத்து பிதாவாகக் கொண்டான் வேதம் காடகம்
மகன் தன் காதல் மகனை -அநிருத்தனுக்காக வாணனை கர வனம் அழித்து
திரு வேங்கடத்திலும் ஊன்றி-
அவனே திருவல்லிக் கேணியான்
கண்ணனாகவே திருவேங்கடத்தானை அனுபவிப்பார் பெரும்பாலும்
அவர் திருவவதாரம் -வேங்கட கிருஷ்ணனே அவர் மனத்தில் இருந்து அனுபவிப்பிக்கிறான்

உம்பர் கோமானே உறங்காது -கண்ணனை எழுப்ப -ஆண்டாளும்
பேயாழ்வார் சந்நிதியில் கண்ணன் எழுந்து அருளி சேர்ந்தே சேவை திருவல்லிக் கேணியில்

————-

திருமழிசைப்பிரானும் கண்ணனும் ஸ்ரீகோயில் தேவராஜன் ஸ்வாமி

கோயில் ப்ராதான்யம் போல் கண்ணன் ப்ராதான்யம்
பன்னிரு ஆழ்வார்களும் மங்களா சாசனம் கண்ணனுக்கும் கோயிலுக்கும்
ஒரு பிறவியில் இரு பிறவி இருவரும்
யது குலம் கோப குலம்
ரிஷி குமாரராக பிறந்து பிரம்பு அறுத்தவனால் வளர்க்கப்பட்டு
அக்ர பூஜை சாம்யம்
கூனி -கூன் போக்கி பால் கொடுத்த தம்பதிக்கு இளமை
மன்னு திரு மழிசை -மன்னு வடமதுரை
கால நேமி
காசி ராஜன்
பவ்ண்ட்ர வாசுதேவன் இவர் மட்டுமே அனுபவம்
ஆதி ஆதி ஆதியான -முக்காரணங்களும் –ஆயனாய மாயம் என்ன மாயமே–35- –
சிசுபாலாதிகளும் அகப்பட உஜ்ஜீவிக்கும் படி –
ஆயர் மாதர் பிள்ளையாய் எம்பிரானுமாய வண்ணம் என் கொலோ –36-
சர்வ நியாமகன் நியமிக்கப் படுவதே
குரூரமான முலைகள் குரூரமான பால் –
விஷப்பாலை குடித்ததுக்கு கோபிகள் வாய் அமுதம் பரிகாரம்
ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் மாயன் -கபிஸ்தலம்

——————

ஸ்ரீ குலசேகராழ்வாரும் கண்ணனும் ஸ்ரீ உ வே பிள்ளைலோகம் ராமானுஜன் ஸ்வாமி

வால்மிகி பகவானும் குலசேகரப் பெருமாளும் ஸ்ரீ ராமாவதாரத்தில் பூர்ண அனுபவம்
முகுந்தா மாலை தனி பிரபந்தம்
ஸ்ரீ ரெங்க யாத்ரா தினே தினே –
தோய்த்த தயிர் -அரங்கன் -அடியார் -பெரிய பெருமாளும் கண்ணனே –
ஊடல்-வாஸூ தேவா உன் வரவு பார்த்தேன்
ஒன்பது பெண்களை வஞ்சித்தது
தேவகி புலம்பிய புலம்பல்
தொல்லை இன்பத்து இறுதி காணும்படி அழுகையும் அஞ்சின நோக்கும் -தொழுத கையும் –
எழில் கொள் தாம்பு -அசேதனமும் எழில் இவன் சம்பந்தத்தால்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே

——————

பெரியாழ்வாரின் க்ருஷ்ணானுபவம் – விதுஷி ஸ்ரீமதி ஹரிப்ரியா அம்மங்கார்

வண்ண மாடங்கள் கண்ணன் கேசவன் நம்பி
கண்ணன் கேசவன் கிலேச நாசகன்
ஏகோ ப்ரஹ்ம ஆனந்தம் -நம்பி -ஸமஸ்த கல்யாண குண சாகரம்
பண்புடைப் பாலகன் -அஹம் வோ பாந்தவ ஜாத –
மாயன் -ஆத்ம மாயயா-பாதக் கமலங்கள் காணீரே -மாம் ஏகம் சாதனம் வ்ரஜ –
திண் கழல் அன்றோ
பரம் பரனே ஆடுக செங்கீரை -அங்கே அவாக்ய அநாதர-
மன்னு குறுங்குடி திரு வெள்ளறை கண்ணபுரம் அவனே இங்கும்
அந்தமில் பேர் இன்பத்தை சிற்றின்பமாக்கி அன்றோ ஆய்ப்பாடியில்
தொல்லை இன்பத்து இறுதி கண்டாள்
அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான்
அரு மருந்து பிறவிக்கும் போகம் குறையாமைக்கும்
பந்தம் அறுப்பதற்கும் போகம் வளர்க்கைக்கும்
பத்து மஞ்சள் -பூசி பாவை மாருடன் பாடியில்
பாதம் நண்ணாத நாள் பட்டினி நாள்
உபவாச திவசம் –
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் –
மாயன் மணி வண்ணன் மேல் இவள் மால் உருகின்றாளே

——————

ஸ்வாமி நம்மாழ்வாரும் கண்ணனும்–ஸ்ரீ உ வே பள்ளிகரணை திருமாலை நடாதூர் சேஷாத்ரி ஸ்வாமி–

கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -பராசராதிகள் போல் கிருஷ்ணாவதாரத்தில் ஊன்றி
திருவரங்கம் த்ரித விபூதி போல் தத்வ த்ரயங்களை விட இது தனி தத்வம்
ஆராமங்களில் ராஜ நீதி –
ஸ்ரவணம் –தாஸ்யம் -நவவித பக்தி
குண க்ருத தாஸ்யம்
ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் இதிலே ஆழ்வார் ஊன்றி
சேமம் குருகையோ –நாரணமோ -அத்விதீயம்
பூ பாரம் -மண்ணில் பாரம் நீக்க -தர்ம ஸம்ஸ்தானம் -ஸ்வரூபத்தை தர்சிப்பித்து ஸ்தாபிக்கவே
சாஷாத் தர்மம் இவனே காட்டவே அவதார நோக்கம்
எத்திறம் மூ ஆறு மாதம் மோகித்து –
பத்துடை அடியவர்க்கு எளியவன் -பிறந்தவாறும் வளர்ந்தவாறும் -கண்கள் சிவந்து –அடியேன் உள்ளான்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்
திருவாய்மொழி என்னும் தேன்
ஒரு நீராக ஆக்கினான்
கரண கலக்கத்தை -ஒருபடிப்படுத்த கண்ணன்
சீலமில்லா சிறியன்–சீலமிகு கண்ணன் திரு நாமத்தால் உணர்ந்து
மடலூர ஒருப்பட -கண்ணன் வந்து கலவாமையால்
பேர் அருள் -கண்ணன்
கோபிமார் ஆகாரம் ஏறிட்டு மின்னிடை மடவார்
குரவை முதலான கோலச் செயல்கள்
கிருஷி பூ வாசகம் -கிருஷ்ணன் பூமிக்கு சுகம் திவ்ய தேசங்கள் -அர்ச்சாவதாரமே தாரகாதிகள்
கண்ணன் அடி இணையில் காதல்-சுருங்க செப்பி -உபதேசம் நிகமனம்
அத்தனை பதிகங்களில் கண்ணன் -கேட்ப்பார் கேசவன் கீர்த்தி அன்றி மற்றும் கேட்ப்பாரோ

———————

ஸ்ரீ மதுரகவியாழ்வாரும் கண்ணனும் ஸ்ரீ உ வே தென்திருப்பேரை பார்த்தசாரதி ஸ்வாமி

தேவு மற்று அறியேன் என்பவரும்
முதலிலே ஆழங்கால் பட்டு
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ட பெரு மாயன் என் அப்பனில்
எடுத்துக் கழிக்கவும்
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் விளக்க கிருஷ்ண அனுபவம்
எத்திறம் என்று ஆழ்வார் ஆழங்கால் பட்ட இதுவே ஆழ்வார் திரு உள்ளத்துக்கு நெருக்கமாக இருக்குமே

———————-

திருப் பாணாழ்வார் அனுபவிக்கும் கண்ணன் -பரவஸ்து வரதராஜன் ஸ்வாமி-

அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் -ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் போல்
லோக சாரங்க முனிவரால் எழுந்து அருளப் பண்ணி -முனி வாகன போகம்
ராமனாகவும் நரசிம்மனாகவும் உலகு அளந்தவனாகவும் பாடி -தப்பைச் செய்தோம்-கண்ணனே இவன்
கோவலன் வெண்ணெய் உண்ட வாயன் அண்டர் கோன் -ஆயர்களுக்கு நாயகன்
கொண்டல் வண்ணன் -முகில் வண்ணன் -தானே இவன் சீதள காள மேகம் பட்டர் –
மின்னல் இந்த்ரியா -பெரிய பிராட்டியார் -பூஷா மணி இந்திர தனுஸ் வானவில் -தயா ரசம் விஞ்சி –
மேகம் கீழே வருமோ இவனோ கோவலனாய் அண்டர் கோனாய் நமக்காக
அவதார பிரயோஜனம் கோவலனாகைக்கும் அண்டர் கோன் ஆகைக்கும் வெண்ணெய் உண்ணவுமே
வெண்ணெய் உண்டது எனது உள்ளத்தைக் கவரவே என்கிறார்
வெண்ணெய் உண்டது அப்யாசம் இதுக்காகவே
அணி அரங்கன் இவனே தான் என்கிறார்
அபேச்சேத நியாயம் -இறுதி சொன்னதே கொள்ளத் தக்கது
தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் -கண்ணனை அரங்கமாலை என்று நிகமிக்கிறார் –

——–

ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வாரும் கண்ணனும் ஸ்ரீ உ வே கோவில் வகுளாபரணன் ஸ்வாமி

மதுர வாறே -மழைக்கு அன்று வரையை ஏந்திய ஆறே திருவரங்கத்தில்
பண்டு அவன் செய்த க்ரீடை தான் கிருஷ்ணாவதாரம் -பெரியாழ்வார்
பிரபந்த தாத்பர்யம் உபக்ரம உப சம்ஹாரம்
திருமாலையில் –அச்யுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே
கண்ணனை அரங்க மாலை உபஸம்ஹாரம்
தனியனிலும் கற்றினம் மேய்த்த கழலிணைக் கீழ் பாடப் பெற்றதாகவே
கற்றினம் மேய்த்த கழலிணை ஆழ்வாரும்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உபத்தி
கன்றுகளை மேய்த்து இனிது உகப்பவன்
பட்டரும் பிருந்தாவனம் பண்டிதன் இவனே பெண்களையும் வெண்ணெயும் ஒளித்து வைத்தாலும்
அறிய வல்ல பண்டிதன்
தாண்டவம் கற்றதும் தயிர் கடையும் ஓசைக்கு ஆடிக் கற்றுக் கொண்டான்
மொசு மொசுப்பு எல்லாம் இன்றும் காணலாம்
கார் ஒளி வண்ணனே கண்ணனே
மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுரவாறே
காக்கும் இயல்பினன் கண்ணபிரான்
கோயில் சாந்து அழியாத திரு மார்பு
ஆமைத்தாலி அச்சுத்தாலி புலி நகம் பஞ்சாயுத மாலை-
கவள மால் யானையைக் கொன்ற கண்ணனை
திருப்பள்ளி எழுச்சியிலும்
ப்ரஹ்மாதிகள்
அயோத்தி அம் அரசே
இலங்கையர் கோன் வழி பாடு செய்யும்
இதுக்கு எல்லாம் அசையாமல்
துகில் உடுத்து ஏறினாய் கண்ணனை அருளிச் செய்தே நிகமிக்கிறார் –
சூழ் புனல் அரங்கா -ரசம் இழக்கப் போகிறாய்
துடி இடையர் சுரி குழல்-துகில் உடுத்து ஏறுகிறார்களே
பள்ளி எழுந்து அருளாய் -கேட்டதும் பதறி எழுந்தானாம்

——————

திரு மங்கை ஆழ்வாரும் கண்ணனும் -ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி

பிடி தோறும் நெய் போல் அடி தோறும் அர்ச்சையிலே இருந்தாலும் –
காதில் கடிப்பிட்டு ஊடல்
பிள்ளைத் தமிழ் பதிகங்கள்
எங்கேனும் இது ஒப்பதோர் மாயம் உண்டோ
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் -பசு நிரை மேய்ப்பு உவத்தி
நீரூட்டி -தடம் பருகு கரு முகிலை
சொல்லுண்டான் காணேடீ –சாழலே
பார்த்த சாரதி அனுபவம் பெரிய திருமொழி பதிகங்கள் தோறும் கலியன்
4-10-5-/ஆழியால் அங்கு மறைத்து /6-5-9-/9-9-8 /10-/11-காணேடீ
ஆஸ்ரித ரக்ஷணம் ஆழங்கால் பட்டு அனுபவம்
ஆஸ்ரித பக்ஷபாதன் தெளிவாகக் காட்டி
பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பண்ணினவை –
விரித்த தலை காண மாட்டாதவன் வெறும் கழுத்தைக் காண மாட்டான் அன்றோ

———-

கீதாச்சார்யரும் ஜெகதாச்சார்யரும் – திருக்கோவலூர் மணிவண்ணன் ஸ்வாமி
அனைத்து உலகும் வாழப் பிறந்த யதிராஜர்
ஈஸ்வரனும் ஆச்சார்ய பதவியை ஆசைப்பட்டு இருக்கும்
அவதார சம்பந்தமும் அருளிச் செயல் சம்பந்தமும் உண்டு
அநந்தன் பிரதம ரூபம் -பார்த்த சாரதியே -என்றும் உண்டே
பலராமாநுஜனே இளையாழ்வார்
எம்பெருமானார் -அவரோ நீர் -திருக் கோஷ்ட்டியூர் நம்பி கேட்ட ஐதிக்யம்-பர ஸம்ருத்தி ஏக பிரயோஜனம்
லோக ரக்ஷணத்தில் பாரிப்பு மிக்கு
சமிதோதிதய சங்கர கர்வம் அடக்கி பாணாசுரன் சங்கர பாஸ்கர இத்யாதி –
யாதவ பிரகாச–உஜ்ஜீவனம் -யது குலம் உத்தரிக்க – –
ஸ்ருதோ அபார்த்தான் -அபார்த்தங்கள் நிரசித்து ஸ்ரீ பாஷ்யாதி முகத்தால் -மூன்று சாம்யங்கள் தேசிகன் –

அருளிச் செயல் -ஸ்ரீ கீதை -ஸ்ரீ கீதா பாஷ்யம் சம்பந்தமும் உண்டே
செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப் பாரினில் அருளிச் செய்து –
அவதார ரஹஸ்ய ஞானம் -சம்பவாமி ஆத்ம மாயயா -அஜஹத் ஸ்வபாவம் -மாயம் சங்கல்பம் இச்சையால் –
எத்திறம் என்று மொஹித்த மாறன் அடி பணிந்தவர் ஸ்ரீ கீதா பாஷ்யம்
சாதுநாம் -ஸ்வாமி வியாக்யானம் மிக ரசமாய் இருக்குமே
கம்பீர -மதுர –
யுக்த லக்ஷண தர்ம சீல -வைதிக அக்ரேஸர் -நம்மாழ்வார் நிலையையே விளக்கி வியாக்யானம்
தொழுது எழு என் மனனே
என் சொல்லிச் சொல்லுகேன் நான்
வெண்ணெய் உண்ணும் ஈனச் சொல்லே
உண்டோ கண்கள் துஞ்சுதல்
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும்
முக்கிய பிரயோஜனம் சாது சம்ரக்ஷணமே மற்றவை ஆனு ஷங்கிகம் -சங்கல்பத்தாலே அவையை செய்ய வல்லவன் அன்றோ
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்தது போல் இங்கு அவதரித்து
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினாயே
மழுங்காத ஞானமே படையாக இருந்து இருந்தால் –சோதி மறைந்து இருக்குமே
கரஸ்த கமலம் பாதயோஸ் அர்ச்சிக்கவே அழைக்கவே அந்தர்யாமியாய் அறிந்து அவதரித்து
அரை குலைய தலை குலைய வந்த த்வரைக்கு நமஸ்காரம்

கண்ணன் ஸ்ரீ ஸூக்திகளை கிருஷ்ண த்ருஷ்ணா தத்துவத்தின் ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டே வியாக்யானம்

————–

ஆழ்வானும் கண்ணனும் -ஆழ்வானும் கண்ணனும் …. ஸ்ரீ உ வே கோமடம் மாதவாச்சாரியார் ஸ்வாமி
மொழியைக் கடக்கும்
சிஷ்ய ஆச்சார்ய பூர்த்தி
உபய காவேரி மத்யத்தில் விண்ணப்பிக்கவோ -மேதா விலாசம் -பாவஜேன கிருதஞ்ஜேனே தர்மஜ்ஜேன–
உமது ரூபத்தில் ஆளவந்தார்-ராமானுஜர்
அதி மானுஷ ஸ்தவம் -துயரறு சுடர் அடி -எத்திறம் மோஹித்து -ஆழ்வான்
கேள்விகள் -பால்ய உசித சேஷ்டிதங்கள் ஆகிற -நெருப்பு பொறியில் விழுவார்கள்
தயரதன் பெற்ற மணி தடாகத்தில் புக்கு அழுத்துவது போல்
கம்ச பீதியால் போனது எதனால்
பஞ்சியன்ன மெல்லடியால் சகட நிரஸனம் –
யோக அப்யாஸத்தால் கூட பிடிக்க முடியாத நீ வெண்ணெய் களவு -பிடிபட்டு அடி பட்டு என்ன நீர்மை
ஒளித்து வைத்த வெண்ணெய் மட்டுமே களவு கண்டு
திருமேனியில் பூசி -மறைக்க சாதனம் -என்ன மதி உடைமை
நிர் பயனாக இருந்து -என்ன நீர்மை
ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம்
வெண்ணெய் போல் ஹிருதயம் வெண்மை உருகும் உயர்ந்த ஸ்தானம்
நீர் பண்டமா -சொல்ல முடியாமல்
மோர் குடத்தை உருட்டி
ஆர்ய ஜன -ஆழ்வார் போல்வாரை மோஹிக்க செய்வதற்கே
தாமத்தால் இல்லாமல் பிரேமத்தால் கட்டி வைத்து
கனைத்து இளம் -அத்தாணிச் சேவகத்தில் பொதுவான தர்மங்கள் நழுவும்
ஜீயர் புரம் -எழுந்து அருள -உறங்குவான் கைப்பண்டம் போல் நழுவும்
உரலில் கட்டி வைப்பதே ஸூ வ ஸ்தானம்
பின்பே ஆக்களைப் பார்க்கப் போகிறாள்

———————–

ஸ்ரீ கண்ணனும் ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யரும் கீதாசார்யனும் லோகாசார்யரும் .. Sri U Ve Aththangi Srinivasacharyar
ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ தேவப்பெருமாள் ஆறாம் நாள் -மூலம் நக்ஷத்ரம்
ஸ்ரீ கண்ணனாகவே ஸ்ரீ தேவப்பெருமாள் சேவை
அவரே ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யராக
ஸ்ரீ கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும்
இவரும் ஸ்ரீ லோகாச்சார்யார்
பிள்ளை என்று புகழப் படுபவர்கள்
ப்ரஹ்மசர்யம் -பரிஷத் விஷயம்
சத் பிராதா
பிராமண ரக்ஷணம் இருவரும் அஷ்டாதச ரஹஸ்யம் அஷ்டாதச அத்யாய ஸ்ரீ கீதை உபநிஷத்
ப்ரமேய ரக்ஷணம் இருவரும்
ராம பிரியன் -அரங்கன் ஜோதிஷ்குடி
தன்னுடைச் சோதி தனியாகவே இருவரும் ப்ரபாஸ க்ஷேத்ரம் ஜோதிஷ்குடி
ஸ்ரீ கீதா பாஷ்யம் யதி புனர் அவதாரம் ஆதி சேஷனே -ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் இவற்றுக்கு

——————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கிருஷ்ண திரு நாமங்கள் –

September 8, 2020

ஓம் அனந்த கிருஷ்ணா போற்றி
ஓம் அரங்கமா நகருளானே போற்றி
ஓம் அற்புத லீலா போற்றி
ஓம் அச்சுதனே போற்றி
ஓம் அமரேறே போற்றி
ஓம் அரவிந்த லோசனா போற்றி
ஓம் அர்ஜுனன் தோழா போற்றி
ஓம் ஆதி மூலமே போற்றி
ஓம் ஆயர் கொழுந்தே போற்றி
ஓம் ஆபத்சகாயனே போற்றி
ஓம் ஆலிலை பாலகா போற்றி
ஓம் ஆழ்வார் நாயகா போற்றி
ஓம் ஆண்டாள் பிரியனே போற்றி
ஓம் ஆனையைக் காத்தாய் போற்றி
ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி
ஓம் ஆனிரை காத்தவனே போற்றி
ஓம் இமையோர் தலைவா போற்றி
ஓம் உம்பர்க்கு அருள்வாய் போற்றி
ஓம் உடுப்பி உறைபவனே போற்றி
ஓம் உள்ளம் கவர் கள்வனே போற்றி
ஓம் உலகம் உண்ட வாயா போற்றி
ஓம் ஊழி முதல்வனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி
ஓம் எட்டெழுத்து இறைவா போற்றி
ஓம் எண் குணத்தானே போற்றி
ஓம் எழில் ஞானச் சுடரே போற்றி
ஓம் எழில் மிகுதேவா போற்றி
ஓம் ஏழைப் பங்காளா போற்றி
ஓம் ஒளிமணிவண்ணா போற்றி
ஓம் ஒருத்தி மகனாய் பிறந்தாய் போற்றி
ஓம் ஒருத்தி மகனாய் வளர்ந்தாய் போற்றி
ஓம் கலியுக தெய்வமே போற்றி
ஓம் கண்கண்ட தேவா போற்றி
ஓம் கம்சனை அழித்தாய் போற்றி
ஓம் கருட வாகனனே போற்றி
ஓம் கல்யாண மூர்த்தி போற்றி
ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
ஓம் கமலக் கண்ணனே போற்றி
ஓம் கஸ்துாரி திலகனே போற்றி
ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
ஓம் காயாம்பூ வண்ணனே போற்றி
ஓம் கிரிதர கோபாலனே போற்றி
ஓம் கீதையின் நாயகனே போற்றி
ஓம் குசேலர் நண்பனே போற்றி
ஓம் குருவாயூர் அப்பனே போற்றி
ஓம் கோபியர் தலைவனே போற்றி
ஓம் கோபி கிருஷ்ணனே போற்றி
ஓம் கோவர்த்தனகிரி தாங்கியவனே போற்றி
ஓம் கோபால கிருஷ்ணனே போற்றி
ஓம் கோகுல பாலகனே போற்றி
ஓம் கோவிந்த ராஜனே போற்றி
ஓம் சகஸ்ர நாம பிரியனே போற்றி
ஓம் சங்கு சக்கரத்தானே போற்றி
ஓம் சந்தான கிருஷ்ணனே போற்றி
ஓம் சகடாசுரனை அழித்தவனே போற்றி
ஓம் சர்வ லோக ரட்சகனே போற்றி
ஓம் சாந்த குணசீலனே போற்றி
ஓம் சிந்தனைக்கினியவனே போற்றி
ஓம் சீனிவாச மூர்த்தியே போற்றி
ஓம் சுந்தரத் தோளுடையானே போற்றி
ஓம் தாமரைக் கண்ணனே போற்றி
ஓம் திருமகள் மணாளனே போற்றி
ஓம் திருத்துழாய் மார்பனே போற்றி
ஓம் துவாரகை மன்னனே போற்றி
ஓம் தேவகி செல்வனே போற்றி
ஓம் நந்த கோபாலனே போற்றி
ஓம் நந்தகோபன் குமரனே போற்றி
ஓம் நப்பின்னை மணாளனே போற்றி
ஓம் நவநீத சோரனே போற்றி
ஓம் நான்மறை பிரியனே போற்றி
ஓம் நாராயண மூர்த்தியே போற்றி
ஓம் பரந்தாமனே போற்றி
ஓம் பக்த வத்சலனே போற்றி
ஓம் பலராமர் சோதரனே போற்றி
ஓம் பவள வாயனே போற்றி
ஓம் பத்ம நாபனே போற்றி
ஓம் பார்த்த சாரதியே போற்றி
ஓம் பாற்கடல் கிடந்தாய் போற்றி
ஓம் பாண்டவர் துாதனே போற்றி
ஓம் பாண்டு ரங்கனே போற்றி
ஓம் பாரதம் நிகழ்த்தினாய் போற்றி
ஓம் பாஞ்சாலி சகோதரனே போற்றி
ஓம் பாஞ்சஜன்ய சங்கினாய் போற்றி
ஓம் பிருந்தாவன பிரியனே போற்றி
ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி
ஓம் புருஷோத்தமனே போற்றி
ஓம் பூபாரம் தீர்த்தவனே போற்றி
ஓம் பூதனையை கொன்றவனே போற்றி
ஓம் மதுசூதனனே போற்றி
ஓம் மண்ணை உண்டவனே போற்றி
ஓம் மயிற்பீலி அழகனே போற்றி
ஓம் மாய கிருஷ்ணனே போற்றி
ஓம் மாயா வினோதனே போற்றி
ஓம் மீராவின் வாழ்வே போற்றி
ஓம் முத்து கிருஷ்ணனே போற்றி
ஓம் முழுமதி வதனா போற்றி
ஓம் யமுனைத் துறைவனே போற்றி
ஓம் யசோதை செய்தவமே போற்றி
ஓம் யதுகுலத் திலகமே போற்றி
ஓம் ராதையின் நாயகனே போற்றி
ஓம் வசுதேவர் புதல்வா போற்றி
ஓம் வெண்ணெய் திருடியவனே போற்றி
ஓம் வெள்ளை மனத்தானே போற்றி
ஓம் வேங்கட கிருஷ்ணனே போற்றி
ஓம் வேதியர் வாழ்வே போற்றி
ஓம் வேணு கோபாலனே போற்றி
ஓம் வைகுண்ட வாசனே போற்றி
ஓம் வையம் காப்பவனே போற்றி போற்றி
ஓம் க்லீம் கிருஷ்ணாய க்லீம்

———–

1. சந்தான கோபால கிருஷ்ணன்:
யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.
2. பாலகிருஷ்ணன்:
தவழும் கோலம். ஆலயங்களில் கிருஷ்ணன் சன்னதிகளிலும் பலரது வீட்டில் பூஜை அறையிலும் இப்படத்தையே காணலாம்.
3. காளிய கிருஷ்ணன்:
காளிங்கன் என்ற நாகத்தின் மீது நர்த்தனம் புரியும் காளிய கிருஷ்ணன்.
4. கோவர்த்தனதாரி:
கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.
5. ராதா-கிருஷ்ணன்
(வேணுகோபாலன்): வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன்.
6. முரளீதரன்:
கிருஷ்ணன் ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது.
7. மதனகோபாலன்:
அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் கிருஷ்ணன்.
8. பார்த்தசாரதி:
அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.

————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அருளிச் செயல்களில் -ஸ்ரீ கோவிந்தனும் -ஸ்ரீ கோவர்த்தன உத்தரணமும்–ஸ்ரீ உலகு அளந்த உத்தமனும் –

September 7, 2020

ஸ்ரீ கோவிந்தன்
கவாம் ரஷித்த
கோ பூமி ஸ்ரீ வராகன்
கோ ஸ்துதி ஏற்றுக் கொண்டு
கோ வேதம் -அவற்றால் அறியப்படுபவன்
கோ அசையும் அசையா சராசரங்கள் தனது வசம்
ஸ்ரீ மத்ஸ்ய -பூமி -வேதம் ரஷித்தவன்
ஸ்ரீ கூர்ம -மலை பூமி கோ
ஸ்ரீ வராஹ -பூமி இடந்து
ஸ்ரீ நரஸிம்ஹ =பிரகலாதன் ஸ்துதி
ஸ்ரீ வாமனன் பூமி அளந்து
ஸ்ரீ பரசுராமன் பூமியில் உள்ள தீயர்களை அழித்து
ஸ்ரீ ராமன் பூமி ஆண்டு
ஸ்ரீ பலராமன் வளைத்து திருத்தி -யமுனை தீரம்
ஸ்ரீ கண்ணன்
ஸ்ரீ கல்கி கோ பூமி தர்மம் காத்து
தச அவதாரங்களும் பொருந்தும்

————–

மலையை எடுத்து மகிழ்ந்து கன் மாரி காத்துப் பசு நிரை மேய்த்தாய்
சிலை ஓன்று இறுத்தாய் திரிவிக்ரமா திரு ஆயர்பாடிப் பிரானே-பெரியாழ்வார் -2-3-7-

மேவி அன்று ஆநிரை காத்தவன், உலகம் எல்லாம்
தாவிய அம்மானை எங்கு இனித் தலைப் பெய்வனே?-திருவாய் -–3-2-9-

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர் திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே–3-3-8–

உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்
மண்ணை முன் படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள்
எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழு கொக்கும் நின்றே–5-10-5-

மின்னை உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான் குன்றம் குடையாக ஆ காத்த கோ ——ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி—41-

நீ யன்றே நீரேற்று உலகம் அடி அளந்தாய் நீ யன்றே நின்று நிரை மேய்த்தாய்-48-

இரண்டே யடியால் தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம்மிறையே –ஸ்ரீ திரு விருத்தம் – -61 –

ஆவினை மேய்க்கும் வல்லாயனை அன்றுலகீரடியால்
தாவின வேற்றை எம்மானை எஞ்ஜான்று தலைப் பெய்வனே – – 89-

சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை வையமுற்றும்
ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை மாவலி மாட்டு
இருங்குறளாகி இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற
பெரும்கிறி யானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே – – -91-

மாண் பாவித்து அந்நான்று மண்ணிரந்தான் மாயவள் நஞ்சு
ஊண் பாவித்துண்டானதோ ருருவம் காண்பான்-பெரிய திருவந்தாதி–52-

மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய்
வான் என்னும் கேடிலா வான்குடைக்கு தானோர்
மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான் நாங்கள்
பிணிக்காம் பெரு மருந்து பின் –62-

என்றும் ஒரு நாள் ஒழியாமை யான் இரந்தால்
ஒன்றும் இரங்கார் உருக்காட்டார் -குன்று
குடையாக ஆ காத்த கோவலனார் நெஞ்சே
புடை தான் பெரிதே புவி –-74-

உள்ள உலகளவும் யானும் உளனாவன் என் கொலோ உலகளந்த மூர்த்தி உரை –76-

மறப்பெல்லாம் ஏதமே என்றல்லால் எண்ணுவனே மண்ணளந்தான்
பாதமே ஏத்தாப் பகல்–80-

மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினன் இரு பிறப் பொரு மாணாகி
ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை–திருவெழு கூற்றிருக்கை-

ஆரால் இவ்வையம் அடியளப்புண்டது காண் –ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது –
மற்று ஆராலே கல்மாரி காத்தது தான்-ஆழி நீர் ஆரால் கடைந்திடப் பட்டது -அவன் காண்மின்
ஊராநிரை மேய்த்து உலகம் எல்லாம் உண்டும் உமிழ்ந்தும் ஆராத தன்மையனாய்-சிறிய திருமடல்-

————————————-

குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை
மன்றில் புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல்
ஒன்றும் வினையாயின சார கில்லவே-பெரிய திருமொழி -11-8-10-

குன்றம் எடுத்த பிரான் அடி யாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–-திருவாய் –7-4-11-

—————–

மத்த மா மலை தாங்கிய மைந்தனை உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே–-பெரியாழ்வார் -1-1-8-

என் மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதி
நின் முகம் கண் உளவாகில் இனி இங்கே நோக்கிப் போ -1-4-1-

ஒரு வேழத்தின் கரும் கன்று போல் தெள் புழுதி யாடி திருவிக்ரமன் -1-7-9-

குட்டன் வந்து என்னைப் புறம் புல்குவான் கோவிந்தன் வந்து என்னைப் புறம் புல்குவான் -1-9-1-

வண்டுலாம் பூம் குழலினார் உன் வாய் அமுதம் உண்ண வேண்டி
கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா முலை உணாயே -2-2 7-

காது தாழப் பெருக்கி குண நன்றுடையர் இக் கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய்-2-3-4-

மலையை எடுத்து மகிழ்ந்து கன் மாரி காத்துப் பசு நிரை மேய்த்தாய்
சிலை ஓன்று இறுத்தாய் திரிவிக்ரமா திரு ஆயர்பாடிப் பிரானே-2-3-7-

கோவிந்தன் தன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-6 –

கோதுகுலமுடை குட்டனேயோ குன்று எடுத்தாய் குடமாடு கூத்தா
வேதப் பொருளே என் வேம்கடவா வித்தகனே இங்கே போதராயே – 2-9 -6- –

பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டு சித்தன் பாடல்
கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார் கோவிந்தன் தன் அடியார்களாகி
எண் திசைக்கும் விளக்காகி நிற்பார் இணை அடி என் தலை மேலனவே 2-9 11-

தான் எறிந்திட்ட தடம் பெரும் தோளினால் வானவர் கோன் விட வந்த மழை தடுத்து
ஆநிரை காத்தானால் இன்று முற்றும்-2-10-4-

மாவலி வேள்வியின் மாண் உருவாய் சென்று மூவடி தா என்று இரந்த இம்மண்ணினை
ஓரடி இட்டு இரண்டாம் அடி தன்னிலே தாவடி இட்டானால் இன்று முற்றும்
தரணி அளந்தானால் இன்று முற்றும் 2-10-7-

கேட்டு அறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு
காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டாய் போலும்–3-3-8-

யசோதை நல் ஆய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை கற்றினம் மேய்த்து வரக் கண்டு உகந்தவள்–3-3-10-

எக்கம் மத்தளி தாழ் பீலிக் குழல்களும் கீதமும் ஆகி எங்கும் கோவிந்தன் வருகிற கூட்டம் கண்டு
மழை கொலோ வருகிறது என்று சொல்லி–3-4-1-

குன்று எடுத்து ஆ நிரை காத்த பிரான் கோவலனாய் குழலூதி ஊதிக்
கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு கலந்து உடன் வருவானை தெருவில் கண்டு–3-4-4-

ஆயர்பாடியிலே வீதி யூடே
கண்ணன் காலிப் பின்னே எழுந்து அருள கண்டு இள ஆய்க் கன்னிமார் காமுற்ற–3-4-10-

அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய் அளரும் அடங்கப்
பொட்ட துற்று மாரிப் பகை புணர்த்த பொரு மா கடல் வண்ணன் பொறுத்த மலை–3-5-1-
மழை வந்து ஏழு நாள் பெய்து மாத்தடைப்ப மது சூதன் எடுத்து மறித்த மலை-3-5-2-
ஆழிக்கை எந்தை எடுத்த மலை–3-5-3-
அமரர் பிரான் கொண்டு நின்ற மலை-3-5-4-
ஏனத்து உருவாகிய ஈசன் எந்தை இடவன் எழ வாங்கி எடுத்த மலை-3-5-5-
செப்பாடு உடைய திருமால் அவன் தன் செம்தாமரைக் கை விரல் ஐந்தினையும்
கப்பாக மடுத்து மணி நெடும் தோள்காம்பாகக் கொடுத்து கவித்த மலை
எப்பாடும் பரந்து இழி தெள்ளருவி இலங்கு மணி முத்து வடம் பிறழ
குப்பாயம் என நின்று காட்சி தரும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே – 3-5 6-
படங்கள் பலவும் உடை பாம்பரையன் படர் பூமியை தாங்கி கிடப்பவன் போல்
தடம் கை விரல் ஐந்து மலர வைத்து தாமோதரன் தாங்கு தடவரை தான்-3-5-7-
நாராயணன் முன் முகம் காத்த மலை–கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே – 3-5-8-
தாமோதரன் தாங்கு தடவரை தான்—கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே – 3-5-9-
கொடி ஏறு செம்தாமரை கை விரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்று இல வடிவேறு திரு உகிர் நொந்தும்
இல மணிவண்ணன் மலையும் —கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே – 3-5-10-

இட அணரை இடத்தோளோடு சாய்த்து இரு கை கூட புருவம் நெரிந்து ஏறக்
குட வயிறு பட வாய் கடை கூட கோவிந்தன் குழல் கொடூதின போது–3-6-2-
வானிளவரசு வைகுந்த குட்டன் வாசுதேவன் மதுரை மன்னன் நந்தர்
கோனிளவரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல் கொடூதின போது-3-6-3-
சிறு விரல்கள் தடவி பரிமாற செம்கண் கோட செய்ய வாய் கொப்பளிக்க
குறு வெயர்ப்புருவம் கூடலிப்ப கோவிந்தன் குழல் கொடூதின போது -3-6-8-
குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சி கோவிந்தனுடைய கோமள வாயில்
குழல் முழஞ்சுகளினூடு குமிழ்த்துக் கொழித்து எழுந்த அமுதப் புனல் தன்னை-3-6-11-

கோவிந்தனோடு இவளை சங்கை ஆகி என் உள்ளம் நாள் தோறும் தட்டுளுப்பா கின்றதே – 3-7 3- –

ஒண் நிறத் தாமரை செம்கண் உலகு அளந்தான் என் மகளைப்
பண்ணறையாப் பணி கொண்டு பரிசற வாண்டிடும் கொலோ -3-8 9-

ஆனாயர் கூடி அமைத்த விழவை அமரர்தம்
கோனார்க்கு ஒழிய கோவர்த்தனத்துச் செய்தான் மலை–4-2-4-

கோவலர் கோவிந்தனை குற மாதர்கள் பண் குறிஞ்சி
பா வொலி பாடி நடம் பயில் மால் இரும் சோலை அதுவே – 4-3-4-

திருக் கோட்டியூர் குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினில்
விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்களே -4-4-8 –
குயில் இனம் கோவிந்தன் குணம் பாடு சீர்
செம்பொனார் மதிள் சூழ் செழும் கழனி வுடைத் திரு கோட்டியூர்-4-4-9-

கௌதத்துவம் உடைக் கோவிந்தனோடு
கூடி யாடிய உள்ளத்தர் ஆனால் குறிப்பிடம் கடந்து உய்யலுமாமே-4-5-8 —

குலமுடைக் கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால்
நலமுடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள் -4 6-5 –

உரம் பெற்ற மலர்க் கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட-4-9-8-

குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா கோநிரை மேய்த்தவனே எம்மானே
அன்று முதல் இன்று அறுதியா ஆதியம் சோதி மறந்து அறியேன்–4-10-9-

வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே மதுசூதா
கண்ணனே கரி கோள் விடுத்தானே காரணா களிறட்ட பிரானே–5-1-8-

வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே
கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -5 4-11 –

—————

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி –3-
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகு அளந்த உம்பர் கோமானே –17-
குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி -24-
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா – 27-
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா –28-
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா –29-

—————

கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு கோவிந்தன் என்பதோர் பேரெழுதி
வித்தகன் வேங்கட வாணன் என்னும் விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே–நாச்சியார் திரு மொழி-1-3-

சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய்–2-9-

கொண்ட கோலக் குறள் உருவாய்ச் சென்று பண்டு மா வலி தன் -பெரு வேள்வியில்
அண்டமும் நிலனும் அடி யொன்றினால் கொண்டவன் வரில் கூடிடு கூடலே–4-9-

அன்று உலகம் அளந்தானை யுகந்து அடிமைக் கண் அவன் வலி செய்ய–5-10-
விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை வேல் கண் மடந்தை விரும்பி–5-11-

குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே—-8-3-

குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்து எம்மை
யுடைமாடு கொண்டான் உங்களுக்கு இனி ஓன்று போதுமே–10-7-

பொல்லாக் குறள் உருவாய் பொற் கையால் நீர் ஏற்று
எல்லா வுலகும் அளந்து கொண்ட வெம்பெருமான்–11-5-

மாணியுருவாய் யுலகளந்த மாயனைக் காணில் தலை மறியும்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை யுய்த்திடுமின்–12-2-

கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா–12-4-

கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்-12-9-

கொள்ளை கொள்ளிக் குறும்பனை கோவர்த்த நனைக் கண்டக்கால்
கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்து என்னழலைத் தீர்வேனே–13-8-

கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே யினிப் போய் செய்யும் தவம் தான் என்-13-9-

அனுங்க வென்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே–14-2-

———————

மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி
ஆவினை அன்று உய்ய கொண்ட ஆயர் ஏற்றை அமரர்கள் தம் தலைவனை–பெருமாள் திருமொழி-1-4-

குழகனே !என் தன் கோமள பிள்ளாய் கோவிந்தா !–7-7-

குன்றினால் குடை கவித்ததும் கோல குரவை கோத்ததும் குடமாட்டும்
கன்றினால் விள வெறிந்ததும் காலால் காளியன் தலை மிதித்ததும் முதலா–7-9-

—————

வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே -ஸ்ரீ திருச்சந்த விருத்தம்–39-

அன்று பாரளந்த பாத போதை யொன்றி வானின் மேல்
சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே –66-

மண்ணை உண்டு உமிழ்ந்து பின்னிரந்து கொண்டு அளந்த மண்
கண்ணுள் அல்லது இல்லை என்று வென்ற காலமாயினாய்–105-

சுருக்குவாரை இன்றியே சுருக்கினாய் சுருங்கியும்
பெருக்குவாரை இன்றியே பெருக்கமெய்து பெற்றியோய்–109-

————

தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட எந்தாய் –திருமாலை -35-

———–

உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டமுற நிவந்த நீண் முடியன்–அமலன் –2-

————–

காளையாகி கன்று மேய்த்து குன்று எடுத்து அன்று நின்றான்
பாளை பாயும் தண் தடம் சூழ் வதரி வணங்குதுமே—-பெரிய திருமொழி-1-3-4-

கடுத்தார்த்து எழுந்த பெரு மழையைக் கல் ஓன்று ஏந்தி இன நிரைக் காத்
தடுத்தான் தடம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-5-

குறளாய்ச் சென்று மா வலியை ஏயான் இரப்ப மூவடி மண்ணின்றேதா வென்று உலகு ஏழும்
தாயான் காயா மலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே —1-5-6-

கன்றி மாரி பொழிந்திடக் கடிதாநிரைக் கிடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே —-1-8-3-

இந்திரனுக்கென்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திடத் தளர்ந்து ஆயர்
எந்தமோடின்வானிரை தளராமல் எம்பெருமான் அருள் என்ன
அந்தமில் வரையால் மழை தடுத்தானைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே —2-3-4-

நீண்டான் குறளாகி நிமிர்ந்தவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-2-

தொண்டாயார் தாம் பரவும் அடியினானைப் படி கடந்த தாளாளற்கு ஆளாய் உய்தல் விண்டானை -2-5-9-

வளம்படு முந்நீர் வையம் முன்னளந்த மால் என்னும் மாலின மொழி யாள்
இளம்படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-2-

இவர் கொல் தெரிக்க மாட்டேன் வந்து குறள் உருவாய் நிமிர்ந்து மா வலி வேள்வியில் மண் அளந்த
அந்தணர் போன்று இவர் யார் கொல் என்ன அட்ட புயகரத்தேன் என்றாரே-2-8-2-

மஞ்சுயர் மா மணிக் குன்றம் ஏந்தி மா மழை காத்து -2-8-4-

இலகிய நீள் முடி மாவலி தன் பெரு வேள்வியில் மாண் உருவாய் முன நாள்
சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி-2-9-7-

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் அளந்து-3-1-5-

அடல் மழைக்கு நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் நிலவிய இடம்–3-1-8-

அருமா நிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த
பெருமான் திரு நாமம் பிதற்றி நுந்தம் பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர்-3-2-4-

மழை மா முதுகுன்று எடுத்து ஆயர் தங்கள்
கோவாய் நிரை மேய்த்து உலகுண்ட மாயன் குரை மா கழல் கூடும் குறிப்புடையீர்-3-2-8-

ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான் கூடிய மா மழை காத்த கூத்தன் என வருகின்றான்
சேடுயர் பூம் பொழில் தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே–3-3-1-

மழை காப்பான் உய்யப் பரு வரை தாங்கி ஆநிரை காத்தான் என்று ஏத்தி
வையத் தெவரும் வணங்க அணங்கு எழு மா மலை போலே
தெய்வப் புள் ஏறி வருவான் சித்திர கூடத்துள்ளானே–3-3-6-

ஒ மண்ணளந்த தாளாளா ! தண் குடந்தை நகராளா ! வரை எடுத்த
தோளாளா ! என் தனக்கு ஓர் துணையா ளானாகாயே !–3-6-5-

கண்டவர் தம் மனம் மகிழ மாவலி தான வேள்விக் களவின் மிகு சிறு குறளாய் மூவடி என்று இரந்திட்டு
அண்டமும் இவ்வலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம்–3-10-5-

காமரு சீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான்
குன்றதனால் மழை தடுத்துக் குடமாடு கூத்தன்–3-10-8-

அண்டரானவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறது எல்லாம்
உண்டு கோனிரை மேய்த்தவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில்-4-2-3-

அங்கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த
கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய கண்ணன் வந்து உறை கோயில்-4-2-6-

வசையறு குறளாய் மாவலி வேள்வியில் மண் அளவிட்டவன் தன்னை
அசைவறும் அமரர் அடி இணை வணங்க வலைகடல் துயின்ற வம்மானை-4-3-4-

பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப் பொல்லாத குறள் உருவாய் பொருந்தா வாணன்
மங்கலம் சேர் மறை வேள்வி யதனுள் புக்கு மண்ணகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்-4-4-7-

மண் இடந்து ஏனமாகி மாவலி வலி தொலைப்பான்
விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறை இரந்தாய்–4-6-2-

குன்றால் குளிர் மாரி தடுத்து உகந்தானே
நன்றாய பெரும் புகழ் வேதியர் நாங்கூர்
சென்றார் வணங்கும் திரு வெள்ளக் குளத்துள்
நின்றாய் நெடியாய் அடியேன் இடர் நீக்கே –4-7-3-

பேசுகின்றது இதுவே வையம் ஈரடியால் அளந்த
மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர் உம்மைக் காணும்
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும்
ஏசுகின்ற்றது இதுவே காணும் இந்தளூரீரே-4-9-3-

பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்துப் பெரு நிலம் அளந்தவன் கோயில்-4-10-1-

ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த மாவலி வேள்வியில் புக்குத்
தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில்-4-10-7-

அனைத்து உலகும் உடையான் என்னை யாளுடையான்
குறிய மாண் உருவாகிய கூத்தன் மன்னி யமரும் இடம்–5-1-1-

கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்துப்
பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்ந்த புனிதன் இடம்-5-1-2-

வெற்பால் மாரி பழுதாக்கி விறல் வாள் அரக்கர் தலைவன் தன்
வற்பார் திரள் தோள் ஐ நான்கும் துணித்த வல்வில் ராமனிடம்–5-1-4-

குடையா விலங்கல் கொண்டு ஏந்தி மாரி பழுதா நிரை காத்து–5-1-7-

கூறு ஏர் உருவில் குறளாய் நில நீர் ஏற்றான் எந்தை பெருமானூர் -5-2-4-

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் முழுதினையும்
பாங்கினில் கொண்ட பரம நின் பணிந்து எழுவன் எனக்கு அருள் புரியே–5-3-9-

பண்டு இவ்வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர்
கொண்ட வாழித் தடக் கை குறளன் இடம் என்பாரால்–5-4-3-

ஏனாகி உலகிடந்து அன்று இரு நிலமும் பெரு விசும்பும் தானாய பெருமானை–5-6-3-

பெருநிலம் இடை நீட்டிப் பண்டு ஒரு நாள்
யளந்தவனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-4-

அன்று உலகம் மூன்றினையும் அளந்து–6-6-5-

மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய் மாவலி மண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத்
தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே -6-8-1-

மன்றாடக் குடமாடி வரை எடுத்து மழை தடுத்த
குன்றாறும் திரள் தோளன் குறை கழலே அடை நெஞ்சே–6-9-4-

தாடாளன் இடந்தான் வையம் கேழல் ஆகி யுலகை ஈரடியால்
நடந்தான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-2-

குடையா வரையால் நிரை முன் காத்த பெருமான் மருவாத
விடை தான் ஏழும் வென்றான் கோவல் நின்றான்–6-10-5-

குன்று குடையா எடுத்த வடிகள் உடைய திரு நாமம்
நன்று காண்மின் தொண்டீர் சொன்மின் நமோ நாராயணமே –6-10-7-

கடுங்கால் மாரி கல்லே பொழிய அல்லே எமக்கு என்று
படுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சா முன்
நெடுங்கால் குன்றம் குடை ஓன்று ஏந்தி நிரையைச் சிரமத்தால்
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ நாராயணமே –6-10-8-

குன்றால் மாரி தடுத்தவனைக் குல வேழம் அன்று
பொன்றாமை அதனுக்கு அருள் செய்த போர் ஏற்றை–7-6-4-

பண்டானுய்ய வோர் மால்வரை ஏந்தும் பண்பாளா பரனே பவித்திரனே-7-7-5-

வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி மாண் உருவாய் மூவடி மாவலியை வேண்டித்
தானமர வேழலகு மளந்த வென்றித் தணி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின்–7-8-6-

குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியேர் இடையாள் பொருட்டாக
வன் தாள் விடை ஏழு அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன்–8-6-9-

மாணாகி வையம் அளந்ததுவும் வாளவுணன்
பூணாகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்து இருந்தேன்-8-10-8-

மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரொடும் கொண்டு
பின்னும் ஏழு உலகம் ஈரடியாகப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன்-9-1-5-

முன்னம் குறளுருவாய் மூவடி மண் கொண்டளந்த
மன்னன் சரிதைக்கே மாலகிப் பொன் பயந்தேன்-9-4-2-

நீணிலா வெண் குடை வாணனார் வேள்வியில் மண்ணிரந்த
மாணியார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே —9-7-3-

பிணி வளராக்கை நீங்க நின்று ஏத்தப் பெரு நிலம் அருளில் முன்னருளி
அணி வளர் குறளாய் அகலிடம் முழுதும் அளந்த வெம்மடிகள் தம் கோயில்-9-8-3-

தேவர்கள் நாயகனைத் திரு மால் இருஞ்சோலை நின்ற
கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ–9-9-1-

தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து
வானகமும் மண்ணகமும் அளந்த திரி விக்கிரமன்–9-9-5-

ஆநிரைக்கு அழிவன்று மா மழை
நின்று காத்து உகந்தான் நில மா மகட்கு இனியான்-9-10-7-

திருமால் விரி நீருலகை வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மா வலியை மண் கொள்ள வஞ்சித் தொரு மாண் குறளாய்
அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே -10-6-4-

நீண்டான் குறளாய் நெடு வானளவும் அடியார் படும் ஆழ் துயராய வெல்லாம்
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான்–10-6-5-

கூவாய் பூங்குயிலே குளிர் மாரி தடுத்துகந்த
மாவாய் கீண்ட மணி வண்ணனை வரக் கூவாய் பூங்குயிலே -10-10-3-

கொட்டாய் பல்லிக் குட்டி குடமாடி உலகளந்த
மட்டார் பூங்குழல் மாதவனை வரக் கொட்டாய் பல்லிக் குட்டி—10-10-4-

குன்றம் ஓன்று எடுத்து ஏந்தி மா மழை அன்று காத்த அம்மான்–11-1-1-

குன்றம் எடுத்து மழை தடுத்து இளையரோடும்
மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால் செய்தான்–11-2-1-

வெந்திறல் வாணன் வேள்வியிடம் எய்தி அங்கோர் குறளாகி மெய்ம்மை உணர
செந்தொழில் வேத நாவின் முனியாகி வையம் அடி மூன்று இரந்து பெறினும்
மந்தர மீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க வளர் சேர்
அந்தரம் ஏழினூடு செல வுய்த்த பாதமது நம்மை யாளும் அரசே –11-4-5-

கண்டார் இரங்கக் கழியக் குறள் உருவாய்
வண்டாரான் வேள்வியில் மண்ணிரந்தான் காணேடீ
வண்டாரான் வேள்வியில் மண்ணிரந்தான் ஆகிலும்
விண்டு ஏழ் உலகுக்கும் மிக்கான் காண் சாழலே —11-5-9-

கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ
வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும் கலி கன்றி
உள்ளத்தின் உள்ளே யுளன் கண்டாய் சாழலே –11-5-10-

நீள் வான் குறளுருவாய் நின்றிரந்து மாவலி மண்
தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை
தோளாத மா மணியைத் தொண்டர்க்கு இனியானை
கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே –11-7-2-

குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை
மன்றில் புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல்
ஒன்றும் வினையாயின சார கில்லவே-11-8-10-

—————

மூவரின் முதல்வனாய யொருவனை உலகம் கொண்ட
கோவினைக் குடந்தை மேய குரு மணித் திரளை–திருக் குறும் தாண்டகம் –6-

தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம் தேவராய் உலகம் கொண்ட
ஒள்ளயீர் உம்மையல்லால் எழுமையும் துணை யிலோமே–9-

மாயமான் மாயச் செற்று மருது இற நடந்து வையம்
தாய மா பரவை பொங்கத் தடவரை திரித்து வானோர்க்கு ஈயுமால் எம்பிரானார்க்கு–16-

———-

ஒண் மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப
ஒரு காலும் காமருசீர் அவுணன் உள்ளத்து
எண் மதியும் கடந்து அண்ட மீது போகி
இரு விசும்பினூடு போய் எழுந்து மேலைத்
தண் மதியும் கதிரவனும் தவிர்ந்து ஓடித்
தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு
மண் முழுதும் அகப்படுத்து நின்ற வெந்தை
மலர் புரையும் திருவடியே வணங்கினேனே–திரு நெடும் தாண்டகம்–5–

கல்லெடுத்து கன்மாரி காத்தாய் என்னும்–15-

பாராளன் பாரிடந்து பாரையுண்டு பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட பேராளன்–20-

சென்றுலகம் மூன்றினையும் திரிந்து–28-

குன்றெடுத்த தோளினானை விரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானைத் தண் குடந்தை கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே –29-

————–

மானேய் நோக்கி மடவாளை மார்பிற் கொண்டாய் மாதவா!
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!-1-5-5-

வெற்பை ஒன்று எடுத்து, ஒற்கம் இன்றியே
நிற்கும் அம்மான் சீர், கற்பன் வைகலே.–1-8-4-

பொரு மா நீள் படை ஆழி சங்கத்தொடு
திரு மா நீள் கழல் ஏழுலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கருமாணிக்கம் என் கண்ணுள தாகுமே–1-10-1-

உலகு ஏழும் ஓர் மூவடி கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே–1-10-5-

மாவாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா! இனி எம்மைச் சோரேலே–2-1-10-

ஏத்த ஏழு உலகும் கொண்ட கோலக் கூத்தனை –2-2-11-

வாட்டம் இல் புகழ் வாமனனை இசை
கூட்டி, வண் சடகோபன் சொல் அமை
பாட்டு ஓர் ஆயிரத்து இப்பத்தால் அடி
சூட்ட லாகும் அம் தாமமே–2-4-11

தீது அவம் கெடுக்கும் அமுதம்; செந்தாமரைக் கண் குன்றம்;
கோது அவம் இல் என் கன்னற் கட்டி எம்மான் என் கோவிந்தனே–2-7-3-

கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்துத்
தேவும் தன்னையும் பாடி ஆடத் திருத்தி –2-7-4-

எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரி விக்கிரமனையே–2-7-6-

திரிவிக்கிரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளிப்
பரவிப் பணிந்து பல் ஊழி ஊழி நின் பாத பங்கயமே
மருவித்தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே!–2-7-7-

வாமனன்,என் மரகத வண்ணன், தாமரைக் கண்ணினன்,
காமனைப் பயந்தாய்! என்று என்று உன் கழல் பாடியே பணிந்து-2-7-8-

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6-

கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்–2-8-7-

வன் மா வையம் அளந்த எம் வாமனா!நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்,-3-2-2-

மேவி அன்று ஆநிரை காத்தவன், உலகம் எல்லாம்
தாவிய அம்மானை எங்கு இனித் தலைப் பெய்வனே?–3-2-9-

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர் திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே–3-3-8–

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்–3-3-11-

மலையை எடுத்துக் கல் மாரி காத்துப் பசு நிரை தன்னைத்
தொலைவு தவிர்த்த பிரானைச் சொல்லிச் சொல்லி நின்று எப்போதும்–3-5-3-

ஞாலம் கொள்வான் குறளாகிய வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகமே–3-8-2-

மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல் பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி –3-8-5-

கொள்வன் நான், மாவலி! மூவடி தா’என்ற கள்வனே! -3-8-9-

குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா!
குரை கழல் கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே!–4-3-7-

மண்ணை இருந்து துழாவி,‘வாமனன் மண் இது’ என்னும்;
விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம்’ என்று கை காட்டும்;-4-4-1-

கோமள வான் கன்றைப் புல்கிக் கோவிந்தன் மேய்த்தன வென்னும் –4-4-5-

கூத்தர் குடம் எடுத்து ஆடில்,‘கோவிந்தனாம்’எனா ஓடும்;-4-4-6-

உருவுடை வண்ணங்கள் காணில்,‘உலகு அளந்தான்’என்று துள்ளும்;-4-4-8-

குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானைச் சொன் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே?–4-5-7-

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் தன்னை
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே–4-5-10-

கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்
வள்ளலேயோ! வையம் கொண்ட வாமனாவோ!’ என்று என்று
நள் இராவும் நன் பகலும் நான் இருந்து, ஓலம் இட்டால்
கள்ள மாயா! உன்னை என் கண் காண வந்து ஈயாயே–4-7-2-

குறிய மாண் உருவாகி, கொடுங்கோளால் நிலங் கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறை யிலமே–4-8-6-

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்–4-10-3-

செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூர தனுள்
குறிய மாண் உரு வாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட் செய்வதே–4-10-10-

சேண் சினை ஓங்கு மரச் செழுங் கானல் திரு வல்ல வாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே–5-9-6-

உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்
மண்ணை முன் படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள்
எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழு கொக்கும் நின்றே–5-10-5-

அடியை மூன்றை இரந்த வாறும் அங்கே நின் றாழ் கடலும் மண்ணும் விண்ணும்
முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்-5-10-9-

வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங் கூற்றமுமாய்த்
தன் சரண் நிழற் கீழ் உலகம் வைத்தும் வையாதும்
தென் சரண் திசைக்குத் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே–6-3-8-

காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த தாளிணையன்–6-3-11-

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம் ஒன்று ஏந்தியதும்–6-4-1-

அகல் கொள் வைய மளந்த மாயன் என்னப்பன் தன் மாயங்களே-6-4-6-

மாணியாய் நிலம் கொண்ட மாயன் என்னப்பன் தன் மாயங்களே
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?–6-4-8-

திசை ஞாலம் தாவி அளந்ததும் நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங் கண் நீர் மல்க நிற்குமே–6-5-3-

மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கரு நிற மேக நியாயற்கு
கோலச் செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே–6-6-1-

மாடுடை வையம் அளந்த மணாளற்கு–6-6-4-

மாண்பமை கோலத்து எம் மாயக் குறளற்கு-6-6-9-

மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே
நண்ணி உனை நான் கண்டு உகந்து கூத்தாட
நண்ணி ஒருநாள் ஞாலத் தூடே நடவாயே–6-9-2-

ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பல நாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!-6-9-3-

பாயோர் அடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த மாயோன்!-6-9-6-

தாவி வையம் கொண்ட தடந்தாமரை கட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ–6-9-9-

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இன மினமாய்
மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே!
மெய்ந் நாள் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?–6-10-6-

ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மது சூதனனே –7-1-3-

ஓர் குன்றம் வைத்த எந்தாய்! கொடியேன் பருகு இன் னமுதோ!–7-1-7-

‘கொழுந்து வானவர்கட்கு!’ என்னும்’குன்றேந்திக் கோ நிரை காத்தவன்!’ என்னும்;-7-2-8-

ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகங் கொண்டவாறே–7-4-1-

மேய் நிரை கீழ் புக மா புரளச் சுனை
வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய இன
ஆ நிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன்
தீ் மழை காத்துக் குன்றம் எடுத்தானே–7-4-10-

குன்றம் எடுத்த பிரான் அடி யாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11-

பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!–7-6-1-

குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ!–7-6-2-

காத்த எங் கூத்தாவோ! மலை ஏந்திக் கன் மாரி தன்னைப் பூத் தண் துழாய் முடி யாய்–7-6-3-

குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர்!எனக்கு உய்விடமே–7-7-5-

மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்–7-8-1-

ஆகுங்கொல் ஐயம் ஒன்று இன்றி அகலிடம் முற்றவும் ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக் குறளப்பன் அமர்ந்து உறையும்
மாகந் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திரு வாறன் விளை
மா கந்த நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கை தொழக் கூடுங்கொலோ?–7-10-2-

கூடுங்கொல்? வைகலும் கோவிந்தனை மது சூதனைக் கோளரியை
ஆடு பறவை மிசைக் கண்டு கை தொழுது அன்றி யவன் உறையும்
பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வியைந்து ஆறங்கம் பன்னினர் வாழ்
நீடு பொழில் திரு வாறன் விளை தொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே?–7-10-3-

ஆருயிரேயோ ! அகலிட முழுதும் படைத் திடந் துண்டுமிழ்ந் தளந்த பேருயிரேயோ !–8-1-5-

மாயம் தன்னால் மாண் குறள் கோல வடிவு காட்டி மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த தேவ பிராற்கு–8-2-9-

அடியார் அல்லல் தவிர்த்த வசவோ அன்றேலிப்
படி தான் நீண்டு தாவிய வசவோ பணியாயே–8-3-5-

என்றே என்னை உன் ஏரார் கோலத் திருந்து அடிக் கீழ்
நின்றே ஆட் செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே—8-3-8-

பெரிய மூ வுலகும் நிறையப் பேரு ருவமாய் நிமிர்ந்த
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த கோல மாணிக்கம் என்னம்மான்-8-4-4-

உன் வையம் தாய மலரடிக் கீழ் முந்தி வந்து யான் நிற்ப முகப்பே கூவிப் பணி கொள்ளாய்-8-5-7-

கொண்மின் இடர் கெட உள்ளத்துக் கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை
மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து
நண்ணு திருக் கடித் தான நகரே–8-6-7-

அற்புதன் நாரணன் அரி வாமனன் நிற்பது மேவி யிருப்பது என் னெஞ்சகம்-8-6-10-

பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன்
கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே–8-7-1-

உறுமோ பாவியேனுக்கு இவ் வுலக மூன்றுமுடன் நிறைய
சிறு மா மேனி நிமிர்ந்த எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறு மா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே–8-10-3-

நீ யொரு நாள் படிக் களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக் கணியாய்-9-2-2-

அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான் அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்-9-3-2-

மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே–9-4-3–

குன்றாமல் உலகம் அளந்த அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே–9-4-10-

வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும்
அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே–9-5-2-

கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய் தேவா சுரம் செற்றவனே திருமாலே–9-8-7-

அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்–9-9-2-

தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்
அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்–10-1-5-

குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே–10-2-6-

துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும்
படைத்த வெம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான்-10-2-7-

தொழுத்தையோம் தனிமையும் துணை புரிந்தார்
துயரமும் நினைகிலை கோவிந்தா நின்
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி
துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி-10-3-4-

குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்-10-6-7-

என் கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானேயாய்
நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே–10-7-4-

தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர்பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3-

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள-10-9-8-

————–

பாரளவும் ஓரடி வைத்து ஓரடியும் பாருடுத்த நீரளவும் செல்ல நிமிர்ந்ததே -ஸ்ரீ முதல் திருவந்தாதி -3-

சேவடியை நீட்டித் திசை நடுங்க விண் துளங்க மாவடிவின் நீ யளந்த மண் —9-

வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை யுலகம் தாயவனை அல்லது தாந்தொழா–11-
தொழாதார் தலையிலும் இருந்து தொழு வித்துக் கொள்ளும் திருவடிகள் –

உலகளந்த மூர்த்தி யுருவே முதல் –14-

அடியும் படிகடப்பத் தோள் திசை மேல் செல்ல முடியும் விசும்பும் அளந்தது என்பர் -17-

மருதிடை போய் மண்ணளந்த மால் –18-

பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச் செற்றார் படி கடந்த செங்கண் மால் நற்றா
மரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி நிரை மலர் கொண்டேத்துவரால் நின்று-20–

நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால் சென்று திசை யளந்த செங்கண் மாற்கு–21-

மலையால் குடை கவித்து-27-

தரணி தனதாகத் தானே— நீ மண்ணிரந்து கொண்ட வகை –36-

எடுத்தது குன்றம்–39-

பெரியனாய் மாற்றாது வீற்றிருந்த மாவலி பால் வண் கை நீர் ஏற்றானைக் காண்பது எளிது ——50-

வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —–69-

பழுதொன்றும் வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த சீரான் திருவேங்கடம் –76-

நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே என்றால் கெடுமா மிடர் –77-

கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார் மண்டா வென விரந்து மாவலியை ஒண்டாரை
நீரங்கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில் ஆரங்கை தோய வடுத்து –79-

வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து–83-

பிரானுன் பெருமை பிறர் ஆர் அறிவார் உரா யுலகளந்த நான்று வராகத்
தெயிற்று அளவு போதாவா றென்கொலோ எந்தை அடிக்களவு போந்த படி –84-

நீயும் திருமகளும் நின்றாயால் குன்றேடுத்துப் பாயும் பனி மறுத்த பண்பாளா –86-

நின்றுலகம் தாய நெடுமாலும்–98-

ஓரடியும் சாடுதைத்த வொண் மலர்ச் சேவடியும்
ஈரடியும் காணலாம் என்நெஞ்சே ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை -100-

————–

அடி மூன்றால் இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும்
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் -படி நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அறிந்து–ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி-5-

அன்றது கண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி
நின்று முலை தந்த இந்நீர்மைக்கு -அன்று
வரன் முறையால் நீ யளந்த மா கடல் ஞாலம்
பெரு முறையால் எய்துமோ பேர்த்து—9-

மண்ணிரந்து காத்தனை பல்லுயிரும் காவலனே -10-

கொண்டது உலகம் குறள் உருவாய் கோளரியாய்
ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது -உண்டதுவும்
தான் கடந்த ஏழ் உலகே தாமரைக் கண் மால் ஒரு நாள்
வான் கடந்தான் செய்த வழக்கு–18-

தாழ்ந்த விளங்கனிக்கு கன்று எறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக்கீழ் கொண்ட வவன்–23-

மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு எண் நெஞ்சே இரு–36-

ஞாலம் அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து ———47-

நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் -அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனை உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு —61-

இடங்கை வலம்புரி நின்றார்ப்ப எரி கான்று
அடங்கார் ஒடுங்குவித்த தாழி-விடம் காலும்
தீவாய் அரவணை மேல் தோன்றல் திசை யளப்பான்
பூவாரடி நிமிர்த்த போது–71-

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை -அன்று
கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருக் கோட்டி எந்தை திறம் -87-

நீரேற்றுப பண்டு ஒரு நாள் மாவலியை மாணியாய் கொண்டிலையே மண்–89-

பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர்
முன்னால் வணங்க முயல்மினோ -பன்னூல்
அளந்தான் இக்கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
அளந்தான் அவன் சேவடி –91-

கொண்டு வளர்க்கக் குழவியாய் தான் வளர்ந்தது உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்க-98-

அறை கழல சேவடியான் செங்கண் நெடியான் குறளுருவாய் மாவலியை மண் கொண்டான் மால் –99-

————

மருந்தும் பொருளும் அமுதமும் தானே
திருந்திய செங்கண் மால் ஆங்கே பொருந்தியும்
நின்று உலகம் உண்டும் உமிழ்ந்தும் நீரேற்று மூவடியால்
அன்று உலகம் தாயோன் அடி ——ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி–4—

அடி வண்ணம் தாமரை அன்றுலகம் தாயோன் படி வண்ணம் பார்க்கடல் நீர் வண்ணன்–5-

அழகன்றே ஆழியாற்கு ஆழி நீர் வண்ணம்
அழகன்றே அண்டம் கடத்தல் அழகன்றே
அங்கை நீர் ஏற்றாற்கு அலர்மேலோன் கால் கழுவ
கங்கை நீர் கான்ற கழல் —–6-

கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும் மண்ணளந்த பாதமும் மற்றவையே–9-

படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று
அடிவட்டத்தால் அளப்ப நீண்ட -முடிவட்டம்
ஆகாயமூடறுத்து அண்டம் போய் நீண்டதே
மாகாயமாய் நின்ற மாற்கு ——–13-

வாய் மொழிந்து வாமனனாய் மாவலி பால்
மூவடி மண் நீ யளந்து கொண்ட நெடுமாலே -தாவிய நின்
எஞ்சா இணை யடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி
அஞ்சாது இருக்க வருள் ———-18-

முன்னுலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு அவ்வுலகம் ஈரடியால் பின்னளந்து கோடல் பெரிதொன்றே–20-

விரும்பி விண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்
சுரும்புதுளையில் சென்றூத -அரும்பும்
புனந்துழாய் மாலையான் பொன்னங்கழற்கே
மனந்துழாய் மாலாய் வரும் ——-23-

அன்றிவ்வுலகம் அளந்த அசைவே கொல்–34-

கையனலாழி கார்க் கடல் வாய் வெண் சங்கம்
வெய்ய கதை சார்ங்கம் வெஞ் சுடர் வாள் -செய்ய
படை பரவை பாழி பனி நீருலகம்
அடியளந்த மாயரவர்க்கு —–36–

மின்னை உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான் குன்றம் குடையாக ஆ காத்த கோ ———41-

நின்ற பெருமானே நீரேற்று உலகெல்லாம் சென்ற பெருமானே செங்கண்ணா–47-

நீ யன்றே நீரேற்று உலகம் அடி அளந்தாய் நீ யன்றே நின்று நிரை மேய்த்தாய்–48-

அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான் அவனே அணி மருதம் சாய்த்தான்-51-

சென்று குறளுருவாய் முன்னிலம் கைக் கொண்டான் முயன்று ——-52-

தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு ——62-

இனியவன் கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங்கழலான்
உள்ளத்தின் உள்ளே உளன் ———83-

சிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணார்
அலம்பிய சேவடி போய் அண்டம் -புலம்பிய தோள்
எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ
வண்டுழாய் மாலளந்த மண் ————90-

————

குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி -கறை கொண்ட
கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான்
அண்டத்தான் சேவடியை ஆங்கு–நான்முகன் திருவந்தாதி -9-

பல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம் மலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த -வலர் ஆகில்-15-

ஞாலம் அளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல் மேல் வளர்ந்தானைத தான் வணங்குமாறு -17-

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்-35-

———

உலகு அளந்த மால் பால் துழாய் க்கு மனம் உடையார்க்கு -ஸ்ரீ திரு விருத்தம்-35-

குடமாடி யிம் மண்ணும் விண்ணும் குலுங்க வுலகளந்த
நடமாடிய பிரான் உரு ஒத்தன நீலங்களே -38-

மென் கால் கமலத் தடம் போல் பொலிந்தன மண்ணும் விண்ணும்
என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒருத்து வான் நிமிர்ந்த-42-

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து–58-

இரண்டே யடியால் தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம்மிறையே – -61 –

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் -64-

அசுரைச் செற்ற மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர்
தூவியம் பேடை யன்னாள் கண்களாய துணை மலரே – – 67-

பொரு கடல் சூழ் நிலந்தாவிய வெம்பெருமான்-68-

புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே-69-

மால் வரையைக் கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான்-74-

ஞாலம் விழுங்கும் நாதனை ஞாலந்தத்தும் பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல்
பள்ளி கொண்டு அருளும் சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – – -79 –

பாரளந்த பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த
ஓரரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே – -80 –

உலகு அளந்த மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப் பொன்னே அடியேன் அடி யாவி யடைக்கலமே – – -85-

ஆவினை மேய்க்கும் வல்லாயனை அன்றுலகீரடியால்
தாவின வேற்றை எம்மானை எஞ்ஜான்று தலைப் பெய்வனே – – 89-

சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை வையமுற்றும்
ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை மாவலி மாட்டு
இருங்குறளாகி இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற
பெரும்கிறி யானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே – – -91-

———–

சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வ குழாங்கள் கை தொழ கிடந்த
தாமரை வுந்தி தனி பெரு நாயக மூ வுலகு அளந்த சேவடியோயே -ஸ்ரீ திருவாசிரியம் ––1–

மா முதல் அடி போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி மண் முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடி போது
ஓன்று விண் செலீ இ நான் முகப் புத்தேள் நாடு வியந்து உவப்ப வானவர் முறை முறை வழி பட -5-

————-

பண்புடையீர் பாரளந்தீர் பாவியேம் கண் காண்பரிய
நுண்புடையீர் நும்மை நுமக்கு -ஸ்ரீ பெரிய திருவந்தாதி –8-

சீரால் பிறந்து சிறப்பால் வளராது பேர் வாமன் ஆக்காக்கால் பேராளா-16-

மாணி யுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான் திருவாகம் தீண்டிற்றுச் சென்று–20-

அடியால் படிகடந்த முத்தோ -அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ -நெடியாய்
நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ யளந்த யன்று —27-

பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான் பாரிடம் முன் படைத்தான் என்பரால்-42-

மாண் பாவித்து அந்நான்று மண்ணிரந்தான் மாயவள் நஞ்சு
ஊண் பாவித்துண்டானதோ ருருவம் காண்பான்–52-

இறை முறையான் சேவடி மேல் மண்ணளந்த வந்நாள்
மறை முறையால் வானாடர் கூடி –முறை முறையின்
தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின்
மீதிலகித் தான் கிடக்கும் மீன்–61-

மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய்
வான் என்னும் கேடிலா வான்குடைக்கு தானோர்
மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான் நாங்கள்
பிணிக்காம் பெரு மருந்து பின் –62-

———–

ஆரால் இவ்வையம் அடியளப்புண்டது காண் –ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது –
மற்று ஆராலே கல்மாரி காத்தது தான்-ஆழி நீர் ஆரால் கடைந்திடப் பட்டது -அவன் காண்மின்
ஊராநிரை மேய்த்து உலகம் எல்லாம் உண்டும் உமிழ்ந்தும் ஆராத தன்மையனாய்-சிறிய திருமடல்-

பேர் வாமனாகிய காலத்து மூவடி மண் தாராய் எனக்கு என்று வேண்டிச் சலத்தினால்
நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
காரார் வரை நட்டு நாகம் கயிறாக பேராமல் தாங்கிக் கடைந்தான்-

————

தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்
மன்னிய சேவடியை வானியங்கு தாரகை மீன்—ஸ்ரீ பெரிய திருமடல்——-5-

மற்றன்றியும்
தன்னுருவ மாரும் அறியாமல் தான் அங்கோர் ——–107
மன்னும் குறளுருவின் மாணியாய் மாவலி தன்
பொன்னியலும் வேள்விக் கண் புக்கிருந்து போர் வேந்தர் —–108
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண் ——–109
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்றவனும்
என்னால் தரப்பட்ட தென்றலுமே அத்துணைக் கண் ——–110
மின்னார் மணி முடி போய் விண் தடவ மேலேடுத்த
பொன்னார் கனை கழற்கால் ஏழ் உலகும் போய்க் கடந்தங்கு —–111
ஒன்னா வசுரர் துளங்கச் செல நீட்டி
மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்துத் ———112
தன்னுலக மாக்குவித்த தாளானை –

—————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்