ஸ்ரீ கண்ணனும் ஸ்ரீ கலியனும்-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்

ஸ்ரீ யதிராஜருக்கும் யதுகுல திலகமான ஸ்ரீகண்ணனுக்கும் உள்ள
ஸாம்யத்தை சாடுக்தியான ஸ்ரீ ஸ்வாமி தேசிகன்

சமித உதய சங்கராதி கர்வ ஸ்வ பலாத் உத்த்ருத யாதவ பிரகாச
அவரோபி தவான் ஸ்ருதே அபார்த்தான் நநு ராம அவரஜ ச ஏஷ பூய –ஸ்ரீ யதிராஜ சப்ததி—13-ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–-

ஸ்ரீ கண்ணனே ஸ்ரீ எம்பெருமானார் -சிலேடையில் அமைந்த ஸ்லோகம் –
கார்த்திகையானும் கரி முகத்தானும் -22-படியே முக்கண்ணனான சங்கரன் செருக்கை அடக்கிய கண்ணன் –
யது குலத்தில் உதித்து தன் வல்லமையால்
யாதவர்களை பிரகாசப் படுத்தியவன் -பார்த்தனின் விரோதிகளை பெருமை யுறாமல் அழித்தவன்-
பலராமனின் தம்பியான அந்த ஸ்ரீ ராமானுஜன்-

ஸ்ரீ பார்த்த சாரதியே தானே இந்த நம் ஸ்ரீ ராமானுஜன் என்று அதிசயிக்கும் படி அன்றோ
சங்கராதி வேத குத்ருஷ்டிகளின் செறுக்கை தம் ஸ்ரீ ஸூ க்திகளாலும் தர்க்க வாதங்களாலும் அடக்கி –
தம் புத்தி சாமர்த்யத்தாலும் கிருபா அதிசயத்தாலும் யாதவ பிரகாசரை வாழ்வித்து –
பிறர் -கல்பித்து -கூறும் ஸ்ருதிகளும் அபார்த்தங்களை களைந்து ஒழித்தவர்-

———-

ஸ்ரீ கண்ணனும் ஸ்ரீ கலியனும்

1-ஸூர்யத்வாத் –
2-ஸூசிதத்வாத் –
3-அபஹ்ருதி கரணாத் –
4-கோகுல உத்தாரகத்வாத்
5-பத்தத் வாத்
6-ஸாஸ்த்ர தத்வாத்
7-ஜன ஸஹ யோ கச்ச
8-லஷ்மீ பதித் வாத் –
9-நீலத் வாத்
10-நீதி மார்க்கச்யுதி மதி பஜ நாத்
11-அந்த தச்சா வதாராத்
12-ஸத்ரு த்வம்ஸ உத் படத் வாத்
கலிரிபு முநிராட் கிருஷ்ண துல்யோ விபாதி

ஸூர்யத்வாத் –

தத் அகில ஜகத் பத்ம போதாய அச்யுதா பாநுநா தேவகீ பூர்வ ஸந்த்யாயாம் ஆவிர்ப்பூதம் மஹாத்மநா -ஸ்ரீ விஷ்ணு புராணம்

கலயாமி கலி த்வம்ஸம் கவிம் லோக திவாகரம் –5-2-1-

ஸ்ரீ விஷ்ணுபுராணத்தில் கண்ணபிரானுடைய திருவவதாரத் தைக் கூறுகின்ற பராசரமஹரிஷி கண்ணனவதரித்தானென்று சொல்லவில்லை,
*ததோகிலஜகத்பத்மபோதாய அச்யுதபாநுநர், தேவகீபூர்வஸந்த்யாயாம் ஆ ர்ப்
பூதம் மஹாத்மநா. என்கிறச்லோகம் க்ருஷ்ணாவதாரத்தைக் கூறுமது. இதில்
தேவகியாகிற பூர்வஸந்தியையிலே க்ருஷ்ணஸூரியன் ஆவிர்ப்பவித்தான் என்றது.
இதனால் க்ருஷ்ணன் ஸுர்யனென்னுமிடம் ஸித்தித்தது. கலியனும் ஸூர்யனாகவே பேசப்பட்டிருப்பதை *கலயாமி கலித்வம்ஸம் கவிம் லோகதிவாகரம் * என்கிற அவருடைய
ஸ்து பத்யத்தினால் உணரலாம். ஆக இருவரும் ஸூர்யர்களென்னு மத்தாலே
ஸாம்யம் பெற்றனர்.

——-

ஸூசிதத்வாத் –

அவதாரம் அசரீரி வாக்கு –

கலியும் கெடும் கண்டு கொண்மின்

கண்ணன் கம்ச வதம்
கலியன் கலி புருஷ வதம்

ஸூசிப்பிக்கப்பட்டபடியாலே என்பது இதன் பொருள்.
கண்ணனுடைய அவதாரமும் கலியனுடைய அவதாரமும் இவர்கள் அவதரிப் பதற்கு வெகுநாள் முன்னமே ஸூசிப்பிக்கப்பட்டிருந்தது எங்ஙனே யென்னில்;
கண்ணனுடைய திருத்தாயாரான தேவகிப்பிராட்டி கம்ஸனுக்கு உடன்பிறந்தவள்
அக்கம்ஸன் தேவகிக்கு மிகச் சிறப்பாக விவாஹமஹோத்ஸவத்தை நடத்திவைத் துப் பரமப்ரீதியுடன் தம்பதிகளை ரதத்தில் வீற்றிருக்கச் செய்து அதனைத் தானே ஓட்டிக்கொண்டு போகையில் ஆகாசவாணியொன்று செவிப்பட்டது; ‘இத் தேவகியின் எட்டாவது குழந்தையினால் உனக்கு மருத்யு விளையும்’ என்று அந்த
வாக்கு அப்படியே பலித்தது. இதனால் ஸ்ரீ கிருஷ்ணபகவானுடைய திருவவதாரம்
முன்னமே சிதமாயிற்றென்பது விளங்கிற்று. இது போலவே திருமங்கை
யாழ்வாருடைய திருவவதாரமும் முன்னமே சிதமாகியுள்ளது. திருவாய்மொழி
பயில் (5-2-1)*கலியுங் கெடும் கண்டு கொண்மின்* என்கிற பாசுரத்தை ஆகாச
வாணி யென்றே கொள்க. தவறாமல் பலிப்பது ஆகாசவாணி. இந்தப் பாசுரமும்
தவறாமல் பலித்திருக்கின்றது ஆசார்யஹ்ருதயத்தில் “கலியும் கெடும்போலே
ஸூசிதம்” என்றவிடத்து வியாக்கியானத்தில் மணவாளமாமுனிகள் “இவர் தாம்
மயர்வற மதிநலம் பெற்றவராகையாலே *கலியுங்கெடும் * என்று – திருமங்கையாழ்
வார் உடையவர்போல்வார் அவதரித்துக் கலியுகஸ்வபாவமும் கழியுமென்று மேல்
வரும் அம்சத்தை தர்சித்து அருளிச்செய்தாப்போலே ”என்று திருவாய்மலர்ந்
தருளியுள்ள திவ்யஸுத்தி இங்கே அநுஸந்தேயம், கண்ணன் கம்ஸவதம் செய்த
வன்; இவ்வாழ்வார் கலிபுருஷவதம் செய்தவர்.

———

அபஹ்ருதி கரணாத் -பட்டர் மங்களா ஸாஸனம் கலியன் திருட்டுக்கு
மணி கொடுத்த பெருமாள் ஸூசிக்கும்படி காஞ்சியில் திருமங்கை சேவை மணி கையில்

வெண்ணெய் பெண்களை களவு கண்ணன்
கோயில் பிரகார மண்டபாதி நிர்மாண அர்த்தத்துக்காக கலியன் பல பல களவுகள் ப்ரஸித்தம்

வீரனாக முன்
விநயனாக பின்
இன்றும் வேடுபரி உத்சவத்தில் சேவிக்கிறோமே

அபஹ்ருதிகராத் கண்ணன் கள்வனென்று ப்ரஸித்திபெற்றதுபோலே இவ்வாழ்வாரும் கள்ளரென்று ப்ரஸித்திபெற்றவர். ‘வெண்ணெய் களவுசெய்தான்,பெண்களைக் களவுசெய்தான்’ என்று ஸ்ரீக்ருஷ்ண சரித்திரங்களிலே வாசிக்கிறோம்,
இவருடைய சரித்திரத்திலும் திருவரங்கம் பெரியகோயிலில் கோபுர ராகார மண்டபாதி நிர்மாணத்திற்காகப் பலபல களவுகள் செய்த செய்திகளை வாசிக் கின்றோம். ஆக இத்தகைய கள்வத்தினாலும் ஸாம்யம்.

————

கோகுல உத்தாரகத்வாத்

ஆயர்பாடிக்கு அணி விளக்கு
ஆயர் குலத்தினில் தோன்றும் மணி விளக்கு

இவரும்
ந்ருபசு
வ்ருத்தயா பசுர் நரவபு
ஞாநேந ஹீந பசுபிஸ் ஸமாந
நம்மை உத்தரிக்கவே இவரது அவதாரம்

*ஆயர்பாடிக்க விளக்கே என்றும், *ஆயர்குலத்தினில் தோன்று மணிவிளக்கை என்றும் சொல்லுகிறபடியே கண்ணன் திரு வாய்ப்பாடியில் திருவவதரித்துக் கோகுலத்தை உத்தரிப்பித்தமை பிரஸித்தம்.-இவ்வாழ்வாரும் கோகுலோத்தாரணம் செய்ததுண்டு; எங்ஙனே யென்னில்;*ந்ருபசு:* என்று ஆளவந்தாரும் *வ்ருத்த்யா பசுர் நரவபு:* என்று மணவாள மாமுனிகளும் அருளிச்செய்தபடி நாமெல்லாரும் பசுக்களேயன்றோ. * ஞாநேந்
ஹீந: பசுபிஸ் ஸமாந:* என்றும் ப்ரஸித்தமாகவுள்ளது. ஞானமும் நன்னடத்தையு மொன்றுமின்றிக்கே யிருப்பதனால் கோக்களாயிருக்கின்ற நம்முடைய குலத்திலே ஆழ்வார் வந்து அவதரித்து உத்தாரகராயினர்.

———

பத்தத் வாத்

மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டான்
கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான்
இவரும் அரசனால் சிறையில் வைக்கப்பட்டார்

[பத்தத்வாத்] கண்ணன் * மத்துறு கடைவெண்ணெய் களவினிலுரவிடை
யாப் புண்டு* என்றும் *கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான்* என்றும்
சொல்லுகிறபடியே கட்டுண்டமை ப்ரஸித்தம். இவ்வாழ்வாரும், பகவதாராதனத்திற் காட்டிலும் பரமபாவனமான பாகவதாராதனத்தில் ஊன்றியிருந்தகாலத்தில் தாம் அரசனுக்குச் செலுத்தவேண்டிய பகுதிப்பொருளுமுட்படச் செல்வம் முழுதையும் செலவிட்டுவர, அச்செய்தியைச் சிலர் சொல்லக்கேட்ட கொற்றவன் கோபங்கொண்டு இவரை ஒரு தேவாலயத்தில் சிறைவைக்கச் செய்தனனென்பது இவ்வாழ்வாருடைய சரித்திரத்தில் பிரஸித்தம், ஆக கட்டுண்டமையினால் இருவர்க்கும் ஸாம்யம் உணரத்தக்கது.

———-

ஸாஸ்த்ர தத்வாத்

அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி –
கீதாச்சார்யன்
நெஞ்சுக்கு இருள் கடி தீபம் அடங்கா நெடும் பிறவி நஞ்சுக்கு நல்லமுதம்
தமிழ் நன்னூல் துறைகள் அஞ்சுக்கு இலக்கியம் ஆரண சாரம்
பர சமயப் பஞ்சுக் கனலின் பொறி பரகாலன் பனுவல்களே

பொங்கு புகழ் மங்கையர் கோன் ஈந்த மறை ஆயிரம்

[சாஸ்த்ரதத்வரத்] சேதநர்களுக்கு உஜ்ஜீவநோபாயமான சாஸ்திரத்தைக்கொடுத்ததனாலே என்று பொருள், கண்ணபிரான் அறிவினால் குறைவில்லாஅகல்ஞாலத்தவரறிய, நெறியெல்லாமெடுத்துரைத்த நிறைஞானத்தொருமூர்த்தி* என்கிறபடியே ஸகலார்த்தப்ரகாசமாய் ஸகலசேதநோஜ்ஜீவநஸாதனமான கீதா சாஸ்த்ரத்தை யருளிச்செய்தான். திருமங்கையாழ்வாரும் *நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி நஞ்சுக்கு நல்லவமுதம், தமிழநன்ணூல் துறைகளஞ்சுக்கிலக்கிய மாரணசாரம், பரசமயப்பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே*-என்கிறபடியே கீதா சாஸ்த்ரத்திற் காட்டிலும் பரமோத்க்ருஷ்டமான திவ்யப்ரபந்த மஹாசாஸ்த்ரத்தை யுபகரித்தருளினார். கண்ணன் தந்த சாஸ்திரத்தை கீதோப நிஷத்து‘ என்னுமாபோலே இதையும் பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையா யிரம்” என்பர்கள். ஆக, சாஸ்த்ரப்ரதாநத்தாலே இருவர்க்கும் ஸாம்யம்

————-

ஜன ஸஹ யோ கச்ச

தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு வருவான்
வாரணம் ஆயிரம் சூழ வலம்

நீர் மேல் நடப்பான்
நிழலில் ஒதுங்குவான்
தாளூதுவான்
தோலா வழக்கன்

படு ஜநஸஹயோகாத்] கண்ணபிரான் *தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர்நடையிட்டு வருவான்* என்கிறபடியே கொந்தளமாக்கிப் பரக்கழித்துக் குறும்பு செய்வானோர்மகனான தான் செய்யும் தீமைகளுக்குத் துணைவராகப் பல சதுரர்களை உடன் கொண்டிருந்தான். திருமங்கையாழ்வாரும், நீர்மேல் நடப்பான் நிழலிலொதுங்குவான், தாளூதுவான், தோலாவழக்கன் முதலான சதுரர்களைத் தமது செய்கைகளுக்குத் துணைவராகக் கொண்டிருந்தார்.

———

லஷ்மீ பதித் வாத் –

ஸுமங்களா -குமுதவல்லி நாச்சியார் இயல் பெயர்
மாப்பிள்ளை மிடுக்குடன் அண்ணன் கோயிலுக்கு எழுந்து அருளுவார்
நீசனை–நீலனை சந்தித்து பாகவத ஸ்ரேஷ்டர் ஆக்குவாய் -சாபம்
குமுத வல்லி வஸ்திரம் தலைப்பாகையாக சூட்டிக்கொண்டு மஞ்சக்குழி உத்ஸவம் திருமஞ்சனம் -சென்னிக்கு அணி

ஸ்ரீ வைஷ்ணவ லஷ்மிக்கு பதி என்றும் இவரைக் கொள்ளலாம்
மற்று எல்லாம் பேச்சிலும் உன் அடியார்க்கு அடிமை என்றார் அன்றோ –

[லக்ஷ்மீபதித்வாத் . கண்ணபிரான் ஸாக்ஷ த் நாராயணமூர்த்தியாதலால்
லக்ஷமீபதியாவன்.திருமங்கையாழ்வாரும் லக்ஷ்மீபதியாவர். எங்ஙனே யென்னில்;
இவர் வளர்ந்துவருகையில் அந்நாட்டில் அண்ணன்கோயில் என்று வழங்குகின்ற
திருபெள்ளக்குள மென்னுந் திருப்பதியில் மிகச் சிறந்ததொரு தாமரைப் பொய்
கையில் தேவலோகத்து அப்ஸரஸ் ஸ்த்ரீகள் பலர் வந்து ஜலக்ரீடைசெய்து செல்ல
அவர்களுள் திருமாமகளென்பாள் தன் இச்சையால் தெய்வவடிவத்தைவிட்டு,
மானுடவடிவங்கொண்டு தனியே குமுதமலர் கொய்துநின்றாளாக, அங்கு அநுஷ்டாநத்திற்காக வந்த ஒரு வைஷ்ணவ வைத்யன் அவளைக் கண்டு செய்தி விசாரிக்க
அவள் ‘என்னோடு கூடவந்த மாதர்கள் என்னைவிட்டுப் போய்விட்டார்கள். தனி
யிருந்து அலைகின்ற என்னை நீர் பாதுகாத்தருளவேணும்’ என்று வேண்டிக்கொள்ள,
மலடனான அம்மருத்துவன் மகிழ்ச்சியோடு அதற்கு உடன்பட்டு அம்மகளைத் தன்
மாளிகைக்கு அழைத்துப்போய் மனையாள் வசம் ஒப்பித்து, குமுதமலர் கொண்டு
நின்றது காரணமாகக் குமுதவல்லியென்று அப்பெண்ணுக்கு நாமமிட்டு வளர்த்து
வருகையில் அக்கன்னிகைக்கு விவாஹத்துக்குரிய பிராயம் வந்தவளவிலே
அவளை வளர்க்கிற அந்த வைத்தியனுக்கு ‘மஹாகுணவதியான இப்பெண்
ணுக்கு ஏற்ற கணவன் உலகத்திலுள்னோ என்ற கவலையுண்டாக, அப்பொழுது
அவளுடைய ரூபலாவண்ய ஸௌந்தரியங்களையும் குணாதிசயங்களையும் சாரர்கள்
திருமங்கை மன்னனிடம் கொண்டாடிக்கூற,உடனே அவர் அங்கு வந்து அந்த
வைத்தியனிருக்கும் வீட்டிலே புக்கு அவனோடு ஸம்பாஷணை செய்து அப்பெண்ணின்
வரலாற்றை வினவி அதைத் தந்தையார்வாயில் அறிந்த வளவில் ‘இவளை எனக்
குத் தாரைவார்த்துக்கொடுக்கவேணும்’ என்று அவரை வணங்கிக் கேட்டார்
அப்போது குமுதவல்லி குறுக்கிட்டு ‘‘திருவிலச்சினை திருமண்காப்பு முதலிய
பஞ்ச ஸம்ஸ்காரமுடைய ஒரு ஸ்ரீவைஷ்ணவர்க்கேயன்றிப் பிறர்க்கு வாழ்க்கைப்பட
மாட்டேன்” என்று தன் உறுதியைத் தெரிவித்தாள். அதுகேட்ட திருமங்கை
மன்னன் உடன் திருநறையூர்க்குச் சென்று அங்கு எழுந்தருளியுள்ள நம்பி என்னு
மெம்பெருமானுடைய திருமுன்பே நின்று பிரார்த்தித்து அப்பிரானிடத்தில்
திருவிலச்சினை பெற்றுப்பன்னிரண்டு திருமண் காப்புகளும் சாத்திக்கொண்டு
விவாஹார்த்தமாக விரைவில் வந்துசேரக் கண்டு மீண்டும் குமுதவல்லி “நீர்
ஓராண்டளவும் நித்தியமாக ஆயிரத்தெட்டு ஸ்ரீவைஷ்ணவர்களை அமுதுசெய்வித்து
அவர்களுடைய ஸ்ரீ பாத தீர்த்தத்தையும் போனகஞ் செய்த சேஷத்தையும் உட்
கொண்டாலன்றி உம்மை நான்பாணிக்கிரஹணம் செய்து கொள்ளமாட்டேன்
ன்ன, அவளிடத்தில் கொண்ட ஆசையின் கனத்தால் அவர் இவ்வரிய விரதத்
தையும் செய்துமுடிப்பதற்கு உடன்பட்டு அங்ஙனேமே செய்வதாகச் சபதஞ்செய்து
கொடுக்க, அதன்பின் இருவர்க்கும் திருமணம் நடைபெற்றது லக்ஷ்மீபதித்வ
மானது பகவானுக்கு அஸாதாரணமாயிருந்தாலும் லக்ஷ்மியின் பெயரைத் தரித்
திருந்த குமுதவல்லித்தாயாருக்குப் பதியென்னுங் காரணத்தினால் ஆழ்வாரும்
லக்ஷ்மீபதியாயினர். ஸ்ரீவைஷ்ணவலக்ஷ்மிக்குப் பதியென்றுங் கொள்ளலாம்.

———-

நீலத் வாத்

கண்ணன் என்னும் கரும் தெய்வம்
கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திரு மேனி வாட

தண் தமிழ் செய்த நீலன் தனக்கு

நீலத்வாத்] கண்ணபிரான் * கண்ணனென்னுங் கருந்தெய்வம்* என்றும்
*கானகமெல்லாந் திரிந்து உன் கரிய திருமேனிவாட என்றும் சொல்லுகிறபடியே
நீலநிறத்தழகார்ந்தவன். திருமங்கையாழ்வாரோவென்னில் நீலனென்னுந்திருநாம
முடையவர் . இராமானுச நூற்றந்தாதியில் “தண்டமிழ்செய்த நீலன் தனக்கு”
என்னுமிடத்தில் நீலனென்ற சொல்லால் திருமங்கையாழ்வாரே விவக்ஷிதரென்ப
தறிக. குருபரம்பராப்ரபாவத்திலு முள்ளதேயிது.

——–

நீதி மார்க்கச்யுதி மதி பஜ நாத்

மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம்மிடம் புக்குக் கச்சொடு பட்டைக் கிழித்துக் காம்பு துகிலவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய்

கலியனும் இது போல் பல அநீதி சேஷ்டிதங்கள் ப்ரஸித்தம்

விமோஹநே வல்லவ கேஹி நீநாம் ந ப்ரஹ்ம சர்யம் பிபதே ததீயம் ஸம்பத்ஸ்யதே
பாலக ஜீவநம் தத் ஸத்யேன யேநைவ ஸதாம் சமஷம் –யாதவா ப்யுதம் -4-64-

யதி மே ப்ரஹ்ம சர்யம் ஸ்யாத் ஸத்யஞ்ச மயிதிஷ்டதி அவ்யா ஹதம் மமைஸ்வர்யம் தேந ஜீவது பாகை

ப்ரஹ்ம சர்யம் ஸத்யம் வழுவாதனானால் உயிர் பெற்று எழுக என்றதும் கரிக்கட்டை போல் இருந்த பரிஷீத் எழுந்தான்

ஜித பாஹ்ய ஜிநாதி மணி ப்ரதிமா அபி வைதிகயந்நிவ ரெங்கபுரே மணி மண்டபவ பிரகாரணன் விததே –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்

(நீதிமார்க்கச்யுதிமதிபஐநாத்] கண்ணபிரானுடைய சரித்திரங்களை நோக்கு
மிடத்து”மச்சொடுமாளிகையேறி மாதர்கள் தம்மிடம் புக்குக் சுச்சொடுபட்டைக்
கிழித்துக் காம்பு துகிலவை கீறி நிச்சலுந் தீமைகள் செய்வாய்* என்றும், * பிறர்
மக்களை மைன்மை செய்து தோளா ட்டவரோடு திளைத்து நீ சொல்லப்படாதன செய்தாய்* என்றுமுள்ள பாசுரங்களின்படி கொடிய கடிய சேஷ்டிதங்களைச்செய்த
விவன் நீதிநெறியில் நின்றும் நழுவினவனல்லவா? என்று நினைப்பதற்கு இலக்கா யிருப்பனன்றோ கண்ணபிரான். திருமங்கையாழ்வாரும் அப்படியேயன்றோ. இத்
தன்மையினால் ஒரு ஸாம்யம். நீதி நெறியில் நழுவினதாக நினைக்கலாமத்தனை
யன்றி உண்மையில் இருவரும் நீதிநெறிவழுவாதவர்களே. நமது ச்லோகத்தில் ”நீதிமார்க்கச்யுதிமதிபஜநாத்” என்றது ‘சயுதிமதிவிஷயத்வாத்’ என்றபடி.
கண்ணபிரானுடைய நீதிநெறிவழுவாமையை வேதாந்த வாசிரியர் யாதவாப்யுத
யத்தில் (4-64.) விமோஹநே வல்லவகேஹிநீநாம் நப்ரஹ்மசர்யம் பிபிதே ததீயம், ஸம்பத்ஸ்யதே பாலகஜீவநம் தத்ஸத்யேந யேநைவ ஸதாம் ஸமக்ஷம். * என்னும்
ச்லோகத்தினால் தெளிவித்தார். அதாவது, பாரதப்போரில் அச்வத்தாமா பிரயோ கித்த அபாண்டவாஸ்த்ரத்தினால் உத்தரையின் கருப்பிண்டம் கரிக்கட்டையாக. அப்போது கண்ணபிரான் “ யதி மே ப்ரஹ்மசர்யம் ஸ்யாத் ஸத்யஞ்ச மயி திஷ்டதி, அவ்யாஹதம் மமைச்வர்யம் தேந் ஜீவது பாலக:‘ (நான் ப்ரஹ்மசர்யமும் ஸத்யமும் வழுவாதவனாயிருந்தேனாகில் இது உயிர்பெற்றெழுக.) என்று பலருமறிய ப்ரதிஜ்ஞை செய்து நிறைவேற்றப்பெற்ற கதையினால் கண்ணன் நீதி நெறிவழுவாதவனென்பது விளங்கிற்று திருமங்கையாழ்வார் நீதிநெறி வழு வாதவரென்பதை பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் *ஜிதபாஹ்யஜிநாதி மணிப்ரதிமா அபி வைதிகயந்நிவ ரங்கபுரே, மணிமன்டபவப்ரகணாந் விததே பரகாலகவி ப்ரணமேமஹி தாந் என்னும் ச்லோக ரத்நத்தினால் வெளியிட்டருளினர்.

——–

அந்த தச்சா வதாராத்

கடைக்குட்டி அவதாரங்கள் இரண்டும்
இருவரும் சரம அவதார பூதர் இப்பொழுது –
கல்கி இன்னும் அவதரிக்க வில்லையே

(அந்ததச்ச அவதாராத் ] பகவானது விபவாவதாரங்களில் கிருஷ்ணாவ தாரமே முடிவானது. கல்கியவதாரம் பவிஷ்யத்தென்கிறார்கள். அது வந்தபோது பார்த்துக்கொள்வோம். இதுகாறும்முடிந்துள்ள அவதாரம் க்ருஷ்ணாவதாரமே. திரு மங்கையாழ்வாரும் ஆழ்வார்களுக்குள் கடைப்பட்டவர் *பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசையையனருள்மாறன் சேரல கோன், துய்யப ட நாதன் அன்பர்தாள் தூளி நற்பாணன் நன்கலியன், ஈதிவர்தோற்றத்து அடைவாமிங்கு என்ற உபதேசரத்தினமாலைப் பாசுரமுங்காண்க. ஆக இருவரும் சரமாவதாரபூதர் என்பதனால் ஸாம்யம் பெற்றனர்.

———

ஸத்ரு த்வம்ஸ உத் படத் வாத்

தேனுகன் பிலம்பன் காளியன் என்னும் தீப்பப் பூடுகள் அடங்க உழக்கி
மலை புரை தோள் மன்னவரும் மா ரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டு அழிய

அருள் மாரி அரட்ட முக்கி அடையார் சீயம்
ஒன்றலர் தங்களை வெல்லும் ஆடல் மா வலவன் கலிகன்றி

[சத்ருத்வம்ஸோத்படத்வாத்.] கண்ணபிரான் *தேனுகன் பிலம்பன்காளிய னென்னும் தீப்பப்பூடுகளடங்கவுழக்கி*என்றும் மலைபுரைதோள் மன்னவரும் மார
தரும் மற்றும் பலர் குலைய, நூற்றுவரும் பட்டழிய * என்றும் சொல்லுகிற படியே பகைவர்களையெல்லாம் வேரோடு களைந்தொழிப்பதில் பேர் பெற்றவன் ஆழ்வாரும் * அருள்மாரி அரட்டமுக்கி அடையார் சீயம் என்றும் *ஒன்றலர் தங்களை வெல்லு மாடல்மாவலவன் கலிகன்றி* என்றும் தாமே யருளிச் செய்த படியே புறமதத்தவர்களாகிற பகைவர்களைக் களைத்தொழிந்து இதனாலே பரகாலனென்று பேர்பெற்றவர். ஆக இப்பன்னிரண்டு படிகளாலே கண்ணனுக்கும் கலியனுக்கும் ஒற்றுமை நிர்வஹிக்கப்பட்டதாயிற்று.

———–

கலிரிபு முநிராட் கிருஷ்ண துல்யோ விபாதி

ஆக இப்பன்னிரண்டு படிகளாலே ஸாம்யம் காட்டப் பட்டது

ஸ்ரீ க்ருஷ்ண கலித்வம்ஸி ஸாம்ய நிர்வாஹம் முற்றிற்று.

—————-

மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும், நாங்கைக்
காவளம் பாடி மேய கண்ணணைக் கலியன் சொன்ன,
பாவளம் பத்தும் வல்லார் பார்மிசை யரச ராகி,
கோவிள மன்னர் தாழக் குடைநிழல் பொலிவர் தாமே.

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ குமுத வல்லி ஸமேத கலியன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading