Archive for the ‘ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி’ Category

ஸ்ரீ நம்மாழ்வார் வைபவம்–

June 21, 2024

இவ்வாழ்வார்  ஆழ்வார் திருநகரி  எனப்படும் திருக்குருகூரில் கலி முதல் வருஷமான ப்ரமாதி ௵ வைகாசி ௴ பௌர்ணமி, வெள்ளிக்கிழமை விசாக நக்ஷத்திரம் கூடிய சுப தினத்தில் ஸ்ரீ ஸேநேசருடைய அம்சமாய்க் காரி என்பவருக்குத் திருக்குமார்ராகத் திருவவதரித்து அருளினார். இவர் வேளாளர் குலத்தில் திருவவதரித்தருளியவர்.

திருவாய்மொழியின் முதலடியிலேயே ‘உயர்வற உயர்நலமுடையவன்’ என்றாரம்பித்து ஸமஸ்த கல்யாண குணகண பரிபூர்ணனான பகவான்தான் பர தத்துவம் என்றும், அவனுடைய ‘துயரறு சுடரடி தொழுகை’யே உபாயம் என்றும், அப்படி ‘எழுகையே’ புருஷார்த்தம் என்றும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

இஸ் ஸம்ஸாரத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு பகவானை அடைவதற்கு மார்க்கங்களான பரபக்தி, பரஜ்ஞாநம், பரமபக்தி, ப்ரபத்தி என்கிற நான்கு படிகளும் முறையே நான்கு ப்ரபந்தங்களிலும் ப்ரதிபாதிக்கப் பட்டிருக்கும் என்றும் கூறலாம்.

1.திருவிருத்தம்.

இது க‌ட்ட‌ளைக் க‌லித்துறை என்கிற‌ வ்ருத்தத்தில் 100 பாட்டுக்க‌ள் அட‌ங்கிய‌தாயிருக்கும். “இவ‌ர் த‌ம் வ்ருத்தாத்த‌ங்க‌ளை முன்னிடுகையாலே திருவிருத்த‌ம் என்று பேர்பெற்ற‌ ப்ர‌ப‌ந்தத்தின்” என்று ஸ்ரீ உப‌கார‌ ஸ‌ங்க்ர‌ஹ‌ம் என்னும் ர‌ஹ‌ஸ்ய‌த்தில் ஸ்ரீ தேசிக‌ன் இத‌ன் திருநாம‌த்திற்குக் கார‌ண‌த்தை நிரூபித்திருக்கிறார். அதாவது விருத்தம் – வ்ருத்தம், முன்னால் நடந்தபடிகளை இதில் வெளியிடுகிறபடியினால் இத்திருநாமம் என்றபடி. அதாவது’பொய்நின்ற ஞானமும்’ என்று தொடங்கி, ’இன்னின்ற நீர்மை’ என்னுமளவாகத் தமக்கு நடந்த படிகளை அருளிச் செய்து, ’உயிரளிப்பான் என்னின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா’ என்று எம்பெருமான் தன் திறத்தில் இதற்குமுன் செய்தருளின உபகார பரம்பரைகளையும் ஸங்க்ரஹேண காட்டியருளி, இனிச் செய்ய வேண்டிய உபகாரங்களை ’மெய்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே’ என்று ப்ரார்த்தித்திருப்பதினால் இது வ்ருத்த கீர்த்தனமாய் நின்றது என்றதாய்யிற்று. விருத்தம் என்றது விரோதி என்பதைக் குறிக்குமாகையினால்இந்த ஸம்ஸாரம் விரோதி என்கிற ஆகாரம் இதில் நிரூபிக்கப்படுகிறபடியினால் இத் திருநாமம் என்றபடியாகவுமாம். திரு என்கிற விசேஷணம் பூஜ்யோக்தி. இதில் 100 பாட்டுக்களிலும் நூறு விதங்களான இலக்கியத் துறைகள் நிரூபிக்கப் பட்டிருக்கின்றன என்பர்கள். இதிலுள்ள நூறு பாட்டுக்களும் திருவாய்மொழியின் 100 திருவாய்மொழிகளினுடைய அனுபவத்தைக் குறிக்கும் என்றும் சிலர் கூறுவர்கள். இதுமேலே திருவிருத்த ப்ரபந்தத்தில் குறிப்பிடப் படுகிறது. இதுவும் ஆழ்வாருடைய மற்றைய மூன்று ப்ரபந்தங்களும் அந்தாதித் தொடரில் அருளிச் செய்யப்பட்டவைகளாயிருக்கும்.

இதில், ’ஈனச்சொல்லாயினுமாக ….. மற்றெல்லாயவர்க்கும் ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லவே’ என்கிற பாட்டின் அர்த்தத்தை அருளிச் செய்யும்பொழுது அஸ்மத் ஸ்வாமி – ‘இது பாரீர்! பராங்கசாவதாரத்தில் ஸ்வமதத்தை வெளியிட்டபடி. ஸ்ரீகீதோபநிஷதாசார்யன் தன்னுடைய மதத்தை “ஜ்ஞாநீ த்வாத் மைவ மே மதம்” என்று உத்கோஷித்தான். அவனே பின்பு குரு வரராய் அவதரித்து இதன் உட்கருத்தை ஸ்ரீகீதாபாஷ்ய தாத்பர்ய சந்த்ரிகையில் “ஜ்ஞாநீ து மே ஆத்மைவ இதி மதம் – வேதாந்தத்தில் ஏற்பட்ட ஸித்தாந்தமாயிருந்தாலும் இருக்கட்டும், இல்லாமல் போனாலும் போகட்டும், க்ருஷ்ணனுடைய ஸித்தாந்தமிது” என்றல்லவோ வெளியிட்டது. அதைப்போலே ஆழ்வாரும் ஸ்வ மதத்தை “மற்றெல்லாயவர்க்கும் ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்டதுவே” என ஸ்ரீபராங்குசா சார்யனான காலத்தில் வெளியிட்டருளினார்.

ஸ்ரீகீதாபாஷ்ய தாத்பர்யசந்த்ரிகா வாக்யத்தை இங்கும் அனுஷங்கித்துக்கொள்ளவும். அதாவது ‘திருத்தம் பெரியவர் சேரும் துறையில் செறிவிலர்க்கு, வருத்தம் கழிந்த வழி அருள் என்ற நம் மண் மகளார், கருத்தொன்ற ஆதி வராகம் உரைத்த கதி’யன்றோ இது. இந்த சரணாகதியாகிற உபாயம் வேதாந்தங்களில் நிரூபிக்கப் பட்டிருக்கட்டும், நிரூபிக்கப்படாமல் இருக்கட்டும், இதுவே பராங்குசனுடைய மதம் என்றறியவும் என்றபடி. இந்த இரண்டிடங்களுக்கும் இது வேதாந்தங்களில் ப்ரதிபாதிக்கப்பட்டதே ஆயினும் உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கிற நீ சொல்லுகிறபடி வேதாந்தங்களில் இவ் வர்த்தம் சொல்லப்படவில்லை என்றாலும் பாதகம் இல்லை, ஏனெனில் அந்த வேதாந்தங்களை ப்ரவர்த்தனம் செய்தருளிய பகவானே இதை ப்ரவசனம் செய்தபடியினால் நீ அத்யயனம் செய்யாத வேதாந்தத்தில் இது கூறப்பட்டிருக்கிறது என்றறிக என்று கூறுவதில் கருத்து, இதுவேதான் ஸ்ரீராமாவதாரத்திலும், ஸ்ரீக்ருஷ்ணாவதாரத்திலும் உத்கோஷிக்கப்பட்டது.

இதில்,

நானிலம்வாய்க்கொண் நன்னீரறமென்று கோதுகொண்ட

வேனிலம் செல்வன் சுவைத்துமிழ்பாலை கடந்த பொன்னே!

கானிலதோய்ந்து விண்ணோர்தொழும் கண்ணன் வெஃகாவுது, அம்பூந்

தேனிளம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே.

என்கிற பாட்டில் திருத்தண்காவில் ஸ்ரீதேசிகன் அவதரிக்கப்போகிறார் என்பதை ஸூசிப்பிக்கிறார் என்று அஸ்மத் ஸ்வாமி நிர்வஹித்தருளும். இப்பாட்டில் தலைமகன் உகந்தருளின நிலங்களைக் காட்டித் தேற்றும் துறை கூறப்படுகிறது. பாலைவனத்தைக் கடந்துவிட்டோம், இதோ அருகில் தோன்றுவது என்பதை “வெஃகாவுது” என்றும், “அம்பூந்தேனிளம்சோலை அப்பாலது” என்று கொஞ்சம் தூரத்தில் தோன்றும் திருத்தண் காவைக் காட்டி, அது “எப்பாலைக்கும் சேமத்ததே” என்றுமல்லவா இப்பாட்டில் அனுஸந்தானம்! திவ்ய தேசங்களுக்குள் ஏற்றத்தாழ்வு சொல்ல முடியாதாகையினால் “எப்பாலைக்கும் சேமத்ததே” என்பதற்கு ஒரு விசேஷம் திருத்தண்காவிற்குச் சொல்லவேண்டும். இதுதான் ஆசார்ய ஸார்வபௌமனுடைய திருவவதாரம். வாழித்திருநாமத்தில் திருமலைமால் திருமணியாய் அவதரித்து, செஞ்சொல் தமிழ்மறைகள் தெளிந்துரைத்தாராய் நின்றார். சந்தப்பொழிலாகிய திருத்தண்காவில் அவதரித்தருளி தஞ்சப் பரகதியைத் தந்தருளுவன் என்றார்கள். அதாவது பகவான் அவதரித்து ஹிதோபதேசம் செய்ததையே இவ்வாசார்யன் திவ்ய ப்ரபந்தங்களிலும் உத்கோஷிக்கப்பட்டவை என்று பல க்ரந்தங்களில் அருளிச் செய்தார். அத்துடன் நின்றுவிடாமல் ஆசார்ய ஸமாச்ரயணம் செய்தால்தான் மோக்ஷம் அடையலாம் என்றும் நிரூபித்தபடியினாலே அப்படி ஆச்ரயிப்பவர்கள் எக்காலத்தியவரேயாகிலும் மோக்ஷம் அடைவார்கள் என்று ஸ்தாபித்தபடியினாலே அப்படிப்பட்ட ஆசார்யன் திருவவதரித்தருளிய திருத்தண்கா எப்பாலைக்கும் சேமத்தையுடையதாயிற்று என்றபடி.

ப்ரஜ்ஞாக்யேமந்தஶைலேப்ரதிதகுணருசிம்நேத்ரயந்ஸம்ப்ரதாயம்

தத்தல்லப்திப்ரஸக்தைரநுபதிவிபுதைரர்த்திதோவே‍‍ங்கடேஶ: |

தல்பம்கல்பாந்தயூநஶடஜிதுபநிஷத்துக்ஸிந்தும்விமத்நந்

க்ரத்நாதிஸ்வாதுகாதாலஹரிதஶஶதீநிர்கதிம்ரத்நஜாதம் ||

தத்தல்லப்திப்ரஸக்தைஅனுபதிவிபுதைஅர்த்தித:

அந்தந்தப் பலனை அடைவதில் ஈடுபட்டவர்களாய் அந்தப் பகவானைத் தவிர வேறு பலனை நாடாத பாகவதர்களினால் ப்ரார்த்திக்கப்பட்டவரான

ஆழ்வார் தம்முடைய பரம க்ருபையாலே தொண்டர்க்கமுதுண்ண ப்ரந்யக்ஷீகரித்து வெளியிட்ட திருவாய்மொழிஎன்னும் ப்ரபந்தத்தில் ஓரொரு குணங்களில் விசேஷித்து ஈடுபட்ட பாகவதோத்தமர்களினால் – ஸ்ரீவைகுண்டத்தில் ஸர்வகுணாபேதனான பகவானையே அனுபவிக்கும் ஸூரிகளும் முக்தர்களும் ஒரு திவ்ய குணத்திலோ ஒரு திவ்ய அவய சோபையிலோ ஈடுபட்டு, அந்த அனுபவத்தையே சூழ்ந்திருந்து பல்லாண்டு ஏத்துகிறாப் போலேயும், ;பிணங்கி அமரர் பிதற்றும் குணங்கெழு கொள்கையினான்’ (திருவாய்மொழி 1-6-4) என்கிறபடியே தான் அனுபவித்த குணத்தின் முக்யத்வத்தை நிர்வஹிக்கிறாப் போலேயும் இந்த த்ரமிடோபநிஷத்தில் பகவானுடை எல்லாக் குணங்களுமே ப்ரதிபாதிக்கப்பட்டிருந்தபோதிலும் ஒருவருக்கு அவனுடைய ஸௌலப்யத்தில் ஈடுபாடு அதிகமாயும், மற்றொருவருக்கு அவனுடைய திருமேனியின் அனுபவத்தில் ஈடுபாடு அதிகமாயும் இருக்கும். அப்படித் தாங்கள் அனுபவித்த ப்ரகாரத்தை இன்னும் விசேஷமாக அனுபவிப்பதில் ஆசையையுடைய பாகவதர்களினால் அப்படிப்பட்ட அம்சங்களைத் தங்களுக்கு அருளிச் செய்யும்படி ப்ரார்த்திக்கப் பட்டவரான என்றபடி.

விண்ணவர் வேண்டி விலக்கின்றி மேவும் அடிமையெல்லாம் இம்மண்ணுலகத்திலேயே மகிழ்ந்து அடையும்படியான பாக்கியம் பெற்ற பண்ணமரும் தமிழ்வேதம் அறிந்தவர்களாயும், ப்ரயோஜனாந்தரங்களை அபேக்ஷியாதவர்களாயும் பகவத் பாகவத குணானுபவத்தையே ஸ்வயம் ப்ரயோஜனமாகக் கொண்டவர்களாயும் ஷோடச வர்ணத்தோடு கூடிய ஸ்வர்ணம் போன்ற பாரமை காந்த்யத்தை யுடையவர்களாயும் ‘தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே’ -என்கிறபடியே எம்பெருமான் பேற்றையே தங்கள் பேறாகக் கொண்டவர்களாயுமிருக்கும் பாகவதோத்தமர்களினால் ப்ரார்த்திக்கப்பட்டார் என்றதாயிற்று.

இங்கு உத்தர க்ருத்யாதிகாரத்தில் ‘நித்யம் ப்ரூதேநி சமயதிச ஸ்வாது ஸுவ்யாஹ்ருதாநி’ என்று அருளிச் செய்திருக்கிறபடியே ப்ரபன்னனுக்குக் கால யாபனம் திவ்ய ப்ரபந்தானுஸந்தானத் தினாலேயாகையினால் அதற்காக அதில் ப்ரதிபாதிக்கப்பட்டிருக்கும் குண விசேஷங்களைத் தங்களுக்குத் தெரிவிக்கும்படி ப்ரார்த்தித்தார்கள் என்று அறியவும்.

முன்பு ஒரு காலத்தில் ஸ்வகார்யப் புலிகளான தேவதைகள் தங்களுக்குச் சாகா மருந்து கிடைப்பதற்காகத் திருப்பாற்கடலைக் கடையும்படி பகவானை வேண்டிக் கொள்ள, அதற்கு இணங்கிய அந்தப் பகவான் மந்தர பர்வதத்தை மத்தாகவும், வாஸுகியைக் கடை கயிறாகவும் கொண்டு, தான் கூர்ம ரூபியாய் அந்த மந்தர பர்வதத்தைத் தன் முதுகில் தாங்கி, தேவதைகள் ஒரு பக்கமும் அஸுரர்கள் ஒரு பக்கமுமாக நின்று கடையும் பொழுது உண்டாகிய அம்ருதத்தைத் தேவர்களுக்குக் கொடுத்தானே யாகிலும், அவ்வமுதில் ஆவிர்ப்பவித்த பெண் அமுதாகிய பிராட்டியைத் தன் பேறாகக் கொண்டான் என்பது ப்ரஸித்தம்.

வேங்கடேச:

வேங்கடேசன் என்கிற திருநாமத்தையுடையவர். இத்தால் வேதாந்தாசார்யர், ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர், கவிதார்க்கிக ஸிம்ஹம் என்று தாம் பிறந்து படைத்த திருநாமங்களில் காட்டிலும் தம் திருத்தகப்பனாரால் சூட்டப்பட்ட திருநாமத்தில் ஸ்வாமி தேசிகனுக்குள்ள கௌரவாதிசயம் தெரிவிக்கப் பட்டதாகிறது. அன்றிக்கே அன்று க்ஷீர ஸமுத்திரத்தைக் கடைந்த தண் நீள் புகழ் வேங்கட மா மலை மேவியவனே இன்று திருவேங்கடநாதன் என்னும் குருவாய் அவதரித்து நின்று, அதாவது தன்னை அடைந்த‌வர்களுக்குப் பரகதியைத் தந்தருளுவதற்காகத் திருத்தண்கா என்னும் திவ்ய தேசத்தில் குருவரராய் நின்றருளியவரே திருவாய்மொழியாகிற ஆராவமுதக் கடலைக் கடைந்தருளியவர் என்பதைக் குறிக்கிறதாகவுமாம்.

கல்பாந்தயூந: தல்பம் சடஜிதுபநிஷத் துக்த ஸிந்தும்

ஆழ்வார் ப்ரத்யக்ஷீகரித்து வெளியிட்டருளினபடியால் சடஜிதுபநிஷத் என்னப்படுகிறது திருவாய்மொழி என்றபடி. ‘பனிக்கடலில் ப‌ள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்து என் மனக் கடலில் வாழவல்ல’என்கிறபடியே அடிக்கடி ப்ரஹ்மாதி தேவதைகள் வந்து தங்கள் துயரங்களை வெளியிடும் இடமான க்ஷீராப்தியில் எம்பெருமான் ஸுகமாக நித்திரை செய்யமுடியாமல் போய்விடுகிறது. இங்கு அப்படியன்று என்பதைக் குறிக்கிறது ‘வாழ வல்ல’ என்னும் பதம். இந்தத் திருவாய்மொழி ப்ரளயகாலத்திலும் நாசம் அடையாமல் யுவாவாக நிற்கும் பகவானுக்குத் திருப்பள்ளியாயிருக்கிறபடியினால் ப்ரளய காலத்தில் நாசமடையும் க்ஷீராப்தியினின்று வ்யாவ்ருத்தியைக் காட்டுகிறது ‘கல்பாந்தயூந: தல்பம்’ என்கிற பதம். இத்தால் திருவாய்மொழி நித்யம் என்னப்பட்டதாகிறது. ஒருகாலத்திலும் மாறுதலில்லாத ஸ்ரீவைகுண்டத்திலும் திவ்ய‌ ப்ரபந்தங்கள் அனுஸந்திக்கப் படுகின்றன என்று ஸ்ரீபரமபத ஸோபானத்தில் அருளிச் செய்திருப்பதும் இந்த நித்யத்வத்தையே காட்டா நிற்கும்.

ப்ரஜ்ஞாக்யே மந்தசைலே ப்ரதித குணருசிம் ஸம்ப்ரதாயம் நேத்ரயந்

தம்முடைய ஜ்ஞானத்தை மத்தாகவும் ப்ரஸித்த குண விசேஷங்களை யுடைய ஸம்ப்ரதாயத்தைக் கடை கயிறாகவும் கொண்டு

இதன் கருத்து:–

இதுவரையில் வேறு ஒருவருக்கும் கிட்டாத வேதாந்தாசார்யர், ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரர், கவிதார்க்கிகஸிம்ஹம் என்கிற பிருதுகளைப் பெறுவதற்கு மூல காரணமாயிருந்த ஜ்ஞான விசேஷம் குறிப்பிடப்படுகிறது. இப்படிப்பட்ட ஜ்ஞானத்தை மந்த்ர பர்வதமாக நிரூபித்தபடியினால் ஒருவித யுக்தி முதலியவற்றாலும் சலிப்பிக்க முடியாதது என்பது குறிப்பிடப்படுகிறது.

தம்முடைய உத்தமமான ஜ்ஞானமாகிற மந்தர மலையிலே அதாவது:– ‘இந்த ஸம்ப்ரதாயத்தை விசேஷித்து ப்ரவசனம் செய்யக்கடவாய்’ என்னும் அம்மாளுடைய அனுக்ரஹத்தினால் உண்டானதாய்; கிடாம்பிக் குலபதி அப்புளார் தம் தேமலர் சேவடி சேர்ந்து பணிந்து, அவர் தம்மருளால் நாவலரும் தென்வடமொழி நற்பொருள் பெறுவதற்கு உற்றதாய்; அவரால் உபதேசிக்கப்பட்ட யதிவரனார் மடைப்பள்ளி வந்த மணமான ரஹஸ்யார்த்தங்களைப் பற்றியதாய்; பன்னு கலை நால்வேதப் பொருளையெல்லாம் பரிமுகமாயருளிய பகவானுடைய திவ்ய லாலாம்ருதத்தினால் பெற்ற பதினெட்டு வித்யா ஸ்தானங்களிலே தாம் ப்ரதானமாய் அங்கீகரித்த வேதாந்த வித்யையை விஷயமாகக் கொண்டதாய்; அந்தமில்சீர் அயிந்தை நகர் அமர்ந்த நாதனுடைய முந்தைமறை மொய்யவழி மொழி நீ என்று பெற்ற நியமனத்தினாலும், ஸ்ரீரங்கநாதனால் அநிதர ஸாதாரணமாகக் கொடுக்கப்பட்ட வேதாந்தாசார்யத்வத்தினாலும், ஸ்ரீரங்கநாய்ச்சியாரால் கொடுக்கப்பட்ட ஸர்வதநத்ர ஸ்வதந்த்ரவத்தினாலும், அயிந்தை மாநகரில் முன்னாள் புணராத பரமதப்போர் பூரித்ததின் பலனாக ஸ்ரீதேவநாதனால் சாற்றப்பட்ட கவிதார்க்கிக ஸிம்ஹத்வத்தினாலும் மெய்ப்பிக்கப் பெற்றதாய்; செய்ய தமிழ் மாலைகள் தாம் ஓதித் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளியப் பெற்றதற்கு ஏற்றதுமான ஜ்ஞானமாகிற மந்தர பர்வதத்திலே,.

எம்பெருமான் தொடக்கமாக ஓராண் வழியாய் அவிச்சின்னமாய்த் தமக்குக் கிடைத்த இந்த ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்திற்குக் கூடஸ்தர் என்றும், குலபதி என்றும், கலியுகத்தின் ஆரம்பத்தில் ப்ரவர்த்தனம் செய்தவர் என்றும், த்ரமிடோபநிஷத் த்ரஷ்டா என்றும், போற்றப்பட்ட நம்மாழ்வாரால் ஓரவஸரத்திலே யோக தசையில் இந்த ஸம்ப்ரதாயத்தை உபதேசிக்கப் பெற்றவரும், தாளம் வழங்கித் தமிழ்மறை இன்னிசை தந்த வள்ளலுமான ஸ்ரீமந் நாதமுனிகளால் ப்ரவர்த்தனம் செய்யப்பட்ட சிறப்பை யுடையதாய்; ஆழ்வார்களுடைய ப்ரபந்தங்களை அனுஸந்தானம் செய்ததினால் பெற்ற அனுபவத்தின் பரீவாஹமாக ஸ்தோத்திர ரத்தினம் முதலிய நூல்களை அருளிச் செய்த ஸ்ரீமத் யாமுன முனியினால் பாலூட்டி வளர்க்கப் பட்டதாய், இதத் தாய் எனப்பட்ட பகவத் ராமானுஜ முனியினால் நன்றாக ஸம் ரக்ஷிக்கப்பட்டதாய், அவரால் உபய வேதாந்த ப்ரவர்த்தத்தினாலே முடிசூட்டப்பட்ட திருக் குருகைப்பிரான் பிள்ளான் முதலான ஆசார்யர்களினால் அவரவர்கள் சக்திக்கு அனுகுணமாகப் போஷிக்கப்பட்டு வந்ததாய்த் தமக்குக் கிடைத்த ஸம்ப்ரதாயத்தை அஸுர ப்ரக்ருதிகள் வாயில் அகப்படாமல் காத்து, அதாவது இந்த ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகரான ஆழ்வாருடைய அவதார ப்ரபாவத்தையும், அவருக்கு அர்ச்சா ப்ரதிஷ்டாதிகள் செய்வது சாஸ்த்ரீயம் என்பதையும், அவருடைய ப்ரபந்தம் தமிழ் பாஷையிலிருந்தாலும் கான ப்ரதானமாயிருந்தாலும் பாஷையும் ப்ரசஸ்தமானது, பகவத் விஷயமான கானமும் ப்ரசஸ்தமானது என்கிற காரணத்தால் எம்பெருமானுக்கு மிகவும் உகப்பானது என்பதையும், அவன் முன்னால் கானம் செய்யத்தக்கது என்பதையும், ஆழ்வாருடைய அனுக்ரஹமின்றி எம்பெருமானின் திருத் தாள்களில் தலை வைக்க முடியாது என்பதையும் நிரூபித்து, ‘அகில தம: கர்சனம் தர்சனம் ந:’ என்றும், ‘ஆபாத சூடமநபாயிநி தர்சநேஸ்மிந் ஆசாஸநீயம் பரம் ந விபக்ஷஹேதோ:’ என்றும் தாமே உத்கோஷிக்கும்படியான ஏற்றத்தை உண்டாக்கி, அது இனித் தானே தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும்படியாகச் செய்திருந்த ஸம்ப்ரதாயத்தைக் கடைகயிறாகச் சுற்றி,

இத்தால் இந்த க்ரந்தத்தின் விச்வஸநீய தமத்வம் தெரிவிக்கப் பட்டதாகிறது.

விமத்நந்-கடைந்தருளி என்றபடி.-அந்த க்ஷீராப்தியைக் கடைவதற்கு தேவர்களும் அஸுரர்களும் இருபக்கங்களிலும் நின்று இழுத்தார்கள். இங்கு ஸ்வாமி தேசிகன் ஒருவராகவே கடைந்தமை காட்டப்பட்டதாகிறது.

ஸ்வாது காதால ஹரி தசசதீ நிர்கதம் ரத்ந ஜாதம்

முரமதன குண ஸ்தோம கர்ப்பங்களாய், செவிக்கினிய செஞ்சொற்களாய், தொண்டர்க்கதுதுண்ணச் சொன்ன சொல்மாலைகளாய், நாநா கல்லோல நாதானுபவ ரஸ பரீவாஹங்களாய் இருக்குமவைகளான திருவாய்மொழி ஆயிரம் பாட்டுக்களாகிற அலைகளிலிருந்து பகவத் குணங்களாகிற அநர்க்கங்களான ஆயிரத்தி நூற்றுப் பதினொரு ரத்தினங்கள் வெளிப்பட அவற்றில் முக்கியமான 111 குணங்களை (ரத்தினங்களை)-த்ரமிடோபநிஷத் என்னப்படும் திருவாய்மொழி 1102 பாட்டுக்கள் அடங்கியது. பத்துப் பகவத் குணங்களை ப்ரதிபாதிக்கும் பத்துப் பாட்டுக்களும் பலச்ருதியாக ஒரு பாட்டுமாகப் பதினோரு பாட்டுக்கள் கொண்ட பாகத்தை ஒரு திருவாய்மொழி என்றும், இப்படிப் பத்துத் திருவாய்மொழிகள் கொண்ட 110 பாட்டுக்கள் அடங்கிய பாகத்தை ஒரு பத்து என்றும், இப்படிப் பத்துப் பத்துக்கள் சேர்ந்த 1102 (கேசவன் தமரில் மட்டும் 12 குணங்கள்) பாட்டுக்கள் கொண்டது திருவாய்மொழி என்றும் சொல்லுவர்கள். முதல் திருவாய்மொழியிலுள்ள பத்துப் பாட்டுக்கள் ஒவ்வொன்றிலும் ப்ரதிபாதிதமான நிஸ்ஸீமோத்யத் குணத்வம் முதலிய பத்துக் குணங்களால் பரத்வம் என்கிற ஒரு பெரிய குணம் கூறப்படுகிறது. இப்படியே முதல் பத்து திருவாய்மொழிகளினால் சொல்லப்படுகிற பத்து ப்ரதான குணங்களினால் ஸேவ்யத்வமாகிற ஒரு முக்ய குணம் ப்ரதிபாதிக்கப்படுகிறது. இப்படிப் பத்துப் பத்துக்களினால் ஏற்பட்ட பத்துக் குணங்களும் சேர்ந்து ஸார தமமான ஓர் அர்த்தத்தைக் குறிக்கிறது. இதுதான்

ச்ரிய:பதியானஎம்பெருமான்தன்னை அடைவதற்குத் தானே காரணம் என்பது.

இப்படிக் குணப்ரதானமான ஆயிரம் ரத்தினங்களையும் பகவத் நாம ஸஹஸ்ரமாய் வைத்துக்கொண்டு பகவானை ஆராதிக்க வேண்டும் என்பது ஸ்வாமியின் திருவுள்ளம் என்று தோன்றுகிறது.

க்ஷீராப்தியோ பக்குவம் செய்யப்படாத பாலாகையினால் அதிலிருந்து உண்டான அம்ருதத்திற்கு மொச்சை வாஸனை இருந்திருக்கலாம். ஆழ்வாருடைய ஸ்ரீஸூக்தியோ ‘தேனும் பாலும் அமுதம் ஒத்தே’ என்கிறபடியே ஸ்வாதுதமங்களான வஸ்துக்கள் கலந்தாற் போல் இருக்கிறபடியால் இதிலிருந்து உண்டானவை மிகவும் போக்யமாயிருக்கும் என்பது கைமுதிக ந்யாய ஸித்தம்.

ஆக இப்படித் திருவாய்மொழியிலிருந்து 113 குணங்களாகிற ரத்தினங்களை எடுத்து, அவற்றில் நூறு திருவாய்மொழிகளினால் ப்ரதிபாதிக்கப்பட்டவைகளான நூறு பெரிய ரத்தினங்களையும் ஒவ்வொரு பத்தினால் ஏற்பட்ட முக்ய குணங்களான பத்து ரத்தினங்களையும், ப்ரபந்தம் முழுவதினாலும் ப்ரதிபாதிக்கப்பட்ட ஸாரதமமாய் நடுநாயகம் போன்ற ஒரு ரத்தினத்தையும் கொண்டு,-க்ரத்நாதி-ஒரு மாலையாகத் தொடுத்தருள்கிறார்.

ஆழ்வார் ‘கோமின் துழாய் முடி ஆதியஞ்சோதி குணங்களே’ என்று நியமித்தருளியதை இப்படி ஆழ்வார் திருவாய்மொழியில் பாட்டுக்கள் தோறும் அனுபவித்த குணங்களையே ரத்தினங்களாக்கி அவற்றை மாலையாக்கி அந்வர்த்தமாக்கிய பாக்யம் ஸ்வாமி தேசிகனுக்கே கிட்டிற்று. இந்த ஹாரத்தை எப்பொழுதும் பாகவதோத்தமர்கள் எவ்வித பயமும் உண்டாகாமல் இருப்பதற்காகத் தரித்துக்கொள்ள வேண்டும் என்று மேலே பத்தாம் சுலோகத்தில் அருளிச் செய்திருப்பதை இங்கனுஸந்திக்கவும்.

இப்பிரபந்தத்தில் காமுகர்களின் நூநப்ரேக்ஷண விரஹ க்லேசாதிகள் அனுஸந்திக்கப் பட்டிருப்பது எப்படிப் பொருந்தும்? என்கிற ஸாமாந்ய ஜனங்களுடைய ஆக்ஷேபத்திற்கு ஸமாதானம் அருளிச் செய்து கொண்டு இப்பிரபந்தத்தின் ஏற்றத்தை நிரூபித்தருளுகிறார்.

பாஞ்சாலீகா₃த்ரஶோபா₄ஹ்ரு̆தஹ்ரு̆த₃யவதூ₄வர்க₃பும்மாவநித்யா

பத்யௌ பத்₃மாஸஹாயே ப்ரணயிநி ப₄ஜத: ப்ரயஸீபாரதந்த்ர்யம் |

ப₄க்தி: ஶ்ரு̆ங்கா₃ரவ்ரு̆த்த்யா பரிணமதி முநேர்பா₄வப₃ந்த₄ப்ரதி₂ம்நா

யோகா₃த் ப்ராகு₃த்தராவஸ்தி₂திரிஹ விரஹோ தே₃ஶிகாஸ்தத்ர தூ₃தா: ||

பாஞ்சாலியின் அவ‌ய‌த்தின் அழ‌கைக் க‌ண்டு, அத்தால் அப‌ஹ‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌ன‌த்தை யுடைய‌ ஸ்திரீக‌ள் அந்த‌ அழ‌கைத் தாங்க‌ள் புருஷ‌ர்க‌ளாயிருந்து அனுப‌விக்க‌ வேண்டும் என்கிற‌ ஆசையின் மிகுதியினால் த‌ங்க‌ளைப் புருஷ‌ர்க‌ளாக‌வே பாவித்துக் கொண்டாற் போலே ச்ரிய‌:ப‌தியான‌ ப‌க‌வான் இட‌த்தில் ஸ்திரீக‌ளைப் போல‌வே பார‌த‌ந்த்ர்ய‌த்தை வ‌ஹித்த‌ ஆழ்வாருக்கு உண்டான‌ ப‌க்தியான‌து ச்ருங்கார‌மாக‌ப் ப‌ரிண‌மியா நின்ற‌து. இப்ப‌டி உண்டான‌ ஆசை பாஹ்ய‌ ஸ‌ம்ச்லேஷ‌ம் கிடைக்க‌ வேண்டும் என்று வ்ருத்தி அடைந்து அது கைகூடாமையாலே விர‌ஹ‌த‌சை உண்டாயிற்று. இத்த‌சையில் எம்பெருமானைக் கிட்டுமாறு செய்வ‌த‌ற்கு ஆசார்ய‌ர்க‌ள் தூத‌ர்க‌ளாய் ப்ரார்த்திக்க‌ப் ப‌டுகிறார்க‌ள். இதுதான் திருவாய்மொழியில் ப்ர‌திபாதிக்க‌ப்ப‌ட்டிருக்கும் தூத‌ப்ரேஷ‌ணாதிக‌ளுக்கு உட்பொருள் என்று தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌தாயிற்று.

ஆகிலும் வேத‌ங்க‌ள் போலே ஸ‌ம்ஸ்க்ருதத்தில் இல்லாமையினால் பாஷையினால் தாழ்ச்சி ஏற்ப‌டாதோ? கான‌ ப்ர‌தான‌மாயிருப்ப‌தினால் நிஷேதிக்க‌ப்ப‌ட்ட‌தாயிற்றே? வேத‌ங்க‌ளைப் போல‌த் தத்வார்த்த‌ங்க‌ளைத் தெரிவிக்கும் ஏற்ற‌ம் இத‌ற்கு உண்டோ? என்கிற‌ ச‌ங்கைக‌ளைப் ப‌ரிஹ‌ரித்த‌ருளுகிறார்.

பா₄ஷாகீ₃தி: ப்ரஶஸ்தா ப₄க₃வதி வசநாத் ராஜவச்சோபசாராத்
ஸா ஜக₃ஸ்த்யப்ரஸூதாத்விஹ பரிஜக்₃ரு̆ஹே பூ₄மிகாபே₄த₃யோக்₃யா |
யத்தத்க்ரு̆த்யம் ஶ்ருதீநாம் முநிக₃ணவிஹிதை: ஸேதிஹாஸை: புராணை:
தத்ராஸௌ ஸத்த்வஸீம்ந: ஶட₂மத₂நமுநே: ஸம்ஹிதா ஸார்வபௌ₄மீ ||

பாஷா கீதி: ப்ரசஸ்தா-பாஷையும் ப்ரசஸ்தம், கீதியும் ப்ரசஸ்தம், பாஷா கீதியும் ப்ரசஸ்தம்.

பாஷா ப்ரசஸ்தா-ஸம்ஸ்க்ருதம் எப்படி ருத்திரனுடைய உடுக்கின் சப்தத்திலிருந்து உண்டாகி, பாணிணியினால் வ்யாகரணம் செய்யப்பட்ட ஏற்றம் பெற்றபடியினால் ஸுஷ்டுவான பாஷை என்கிற பிரஸித்தி பெற்றதோ, அதைப்போலவே, தமிழ் பாஷையும் அதே ருத்திரனுடைய உடுக்கிஃ சப்தத்தில் இருந்து உண்டாகி அகஸ்த்ய மஹர்ஷியினால் இலக்கணம் இயக்கம் பட்டிருப்பதினால் ஸுஷ்டு பாஷையாயிருக்கும்.

கீதி: ப்ரசஸ்த:-ஸாமாந்ய கானத்தையும் அதை அப்யஸிக்கிறவர்களையுமிறே சாஸ்திரங்கள் நிஷேதிக்கின்றன. ஸாம வேதம் முழுமையும் கான ப்ரதானமாயிற்றே. பகவத் விஷயமா கானம் ஆசாஸ்த்ரீயமன்று. மாத்ஸ்ய புராணத்தில் பகவத்விஷய கானம் பாடியவரைத் தண்டித்த அரசன் யமலோகம் கொண்டு போகப்பட்ட வ்ருத்தாந்தம் சொல்லப் பட்டிருக்கிறது. அப்படியே வராக புராணத்தில் கைசீகாதசி மாஹாத்ம்யத்தில் நம்பாடுவான் விருத்தாந்தத்தில் பகவத் கானத்தின் பெருமை சொல்லப் பட்டிருக்கின்றது. எப்பொழுதும் வீணாகானம் செய்துகொண்டிருக்கும் நாரத மஹர்ஷி பாகவதோத்தமர் என்று கொண்டாடப் படுகிறாரல்லவோ! ஆகையினால் பகவத்கானம் நிஷித்தமன்று, ப்ரசஸ்தமே என்றபடி.

பாஷாகீதி: ப்ரசஸ்தா-த்ராமிட ப்ரஹ்மோபநிஷத்திலும், ப்ருஹத் ப்ரஹ்ம ஸம்ஹிதையிலும், பராசர ஸம்ஹிதையிலும், பவிஷ்யத் புராணம் முதலியவைகளிலும் திவ்யப்ரபந்த பாராயணம் பகவத் ஸந்நிதியில் செய்யப்படவேண்டும் என்பதோடு அதற்கு இடம் காலம் எல்லாம் விஸ்தாரமாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால் பாஷா கீதியும் ப்ரசஸ்தம்.

பகவதி வசநாத்பகவானிடத்தில் பாஷாகீதி செய்வது ப்ரமாணங்களில் விதிக்கப்பட்டது என்றபடி.

ராஜவச்சோபசாராத்-இது லௌகிக யுக்தி. ராஜாக்களைப் பலர் பல பாஷைகளாலே ஸ்தோத்ரம் செய்கிறாப் போலே ராஜாதிராஜனான பகவானைப் பல பாஷைகளில் ஸ்தோத்ரம் செய்வது உசிதமே என்றபடி.

ஸாச அகஸ்த்ய ப்ரஸூதாது-தமிழ்ப்பாஷையும் அகஸ்த்ய மஹர்ஷியினால் இயற்றப்பட்ட பேரகத்தியம் என்கிற இலக்கணத்தையுடையதாகையாலும்,

ஆனாலும் மஹர்ஷியினால் வ்யாகரணம் செய்யப்படாத மற்ற பாஷைகள் அபப்ரம்சங்க ளாகையினால் அவைகளைக் கொண்டு பகவானை ஸ்தோத்ரிப்பது உசிதமன்று என்பது கருத்து.

இஹ‌ ப‌ரிஜ‌க்ருஹே பூமிகாபேத‌யோக்யா-இந்த‌க் கார‌ண‌ங்க‌ளைக் கொண்டு ந‌ம் பூர்வ‌ர்க‌ள் இந்த‌ ப்ர‌ப‌ன்ன‌ வேஷ‌த்திற்கு இவைக‌ள் மிக‌வும் உசித‌ம் என்று இவ‌ற்றை அங்கீக‌ரித்திருக்கிறார்க‌ள் என்று ஆசார்ய‌ர்க‌ளின் அப்யுப‌க‌மும் காட்ட‌ப்ப‌ட்ட‌து.

ய‌த்தத் க்ருத்ய‌ம் ச்ருதீநாம் இத்யாதி-உத்த‌ரார்த்தத்தில் முனிக‌ண‌ங்க‌ளினால் வ‌குக்க‌ப்ப‌ட்ட‌ இதிஹாஸ‌ புராண‌ங்க‌ளுட‌ன் சேர்ந்த‌ வேத‌ங்க‌ள் எந்தெந்த‌ கார்ய‌ங்க‌ளைச் செய்வ‌த‌ற்காக‌ ஏற்ப‌ட்ட‌வைக‌ளோ, அவ‌ற்றை எல்லாம் ஆழ்வாருடைய‌ ஸார்வ‌பௌமியான‌ ச்ருதியாகிற‌ உப‌நிஷ‌த்துச் செய்யாநிற்கும் என்று ஆழ்வாரின் ப்ர‌ப‌ந்தத்தின் வைல‌க்ஷ‌ண்ய‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாயிற்று. அங்கு ச்ருதிக‌ளின் க‌ருத்தை அறிய‌ உபப்ரும்ஹ‌ண‌ங்க‌ளான‌ இதிஹாஸ‌ புராண‌ங்க‌ள் தேவையாயிருந்த‌ன‌. இங்கு ஆழ்வார் ஸ்ரீஸூக்தியோ அப்ப‌டிப்ப‌ட்ட‌ உபப்ரும்ஹ‌ண‌ங்க‌ளை எதிர்பாராம‌லே அவ்வ‌ர்த்த‌ங்க‌ளை ச‌ந்தேக‌ம‌ற‌ நிரூபிக்கின்ற‌ன‌ என்கிற‌ விசேஷ‌மும் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாகிற‌து.

இங்கு ச்ருதிக‌ளும் சேர்த்துக் கூற‌ப்ப‌ட்டிருப்ப‌தினாலும், “ஸார்வ‌பௌமீ ஸ‌ம்ஹிதா” என்று ஆழ்வாருடைய‌ ப்ர‌ப‌ந்தத்தூ நிர்தேசித்தருளியிருப்ப‌தினாலும் திருவாய்மொழி ஒரு உபப்ரும்ஹ‌ண‌ம‌ன்று, வேத‌ங்க‌ளைப் போல‌வே துல்ய‌மான‌ ப்ர‌மாண‌ம் என்ற‌தாயிற்று.

இந்த‌ ஏற்ற‌த்தையே வேதாந்தாசார்ய‌ரான‌ ஸ்வாமியும், “மாசில் ம‌ன‌ம் தெளி முனிவ‌ர் வ‌குத்ததெல்லாம் ந‌ம் மாலுக‌ந்த‌ ஆசிரிய‌ர் வார்த்தைக்கொவ்வா” என்று உத்கோஷித்துள்ளார்.

ஆகிலும் வேத‌ங்க‌ள் ருக், ய‌ஜுஸ், ஸாம‌, அத‌ர்வ‌ என்று நாலு பாக‌ங்க‌ளாக‌ப் பிரிக்க‌ப் ப‌ட்டிருக்கின்ற‌ன‌வே? அவ‌ற்றின் அர்த்த‌ங்க‌ள் ப்ர‌ஹ்ம‌ ஸூத்திர‌ங்க‌ளில் 4 அத்யாய‌ம் 16 பாத‌ங்க‌ளில் விஸ்தார‌மாக‌ நிரூபிக்க‌ப் ப‌ட்டிருக்கின்ற‌ன‌வே? அந்த‌ ஏற்ற‌ம் இப்பிர‌ப‌ந்தத்திற்கு எங்ங‌னே உண்டாகும் ? என்கிற‌ ஆக்ஷேப‌த்திற்கு ஸ‌மாதான‌ம் அருளிச் செய்துகொண்டு, கீழ் சுலோக‌த்தில் “ய‌த்தத் க்ருத்ய‌ம் ச்ருதீநாம்” இத்யாதியாக‌ அருளிச் செய்ததை, அதாவ‌து இதிஹாஸ‌ புராணாதிக‌ளுட‌ன் கூடிய‌ ச்ருதிக‌ள் எந்த‌க் கார்ய‌த்தைச் செய்கின்ற‌ன‌வோ – எந்தெந்த‌ அர்த்த‌ங்க‌ளை ப்ர‌திபாதிக்கின்ற‌ன‌வோ – அவைக‌ளெல்லாம் திருவாய்மொழியிலும் இருக்கின்ற‌ன‌ என்ப‌தையும் உபபாதித்த‌ருளுகிறார் – “ஆதௌ சாரீர‌கார்த்த‌ க்ர‌மம்” என்றார‌ம்பித்து.

ஆதௌ₃ ஶாரீரகார்த₂க்ரமமிஹ விஶத₃ம் விம்ஶதிர்வக்தி ஸாக்₃ரா
        ஸங்க்ஷேபோsஸௌ விபா₄க₃ம் ப்ரதயதி ச ரு̆சாம் சாருபாடோ₂பபந்நம் |
ஸம்யக்₃கீ₃தாநுப₃த்₃த₄ம் ஸகலமநுக₃தம் ஸாமஶாகா₂ஸஹஸ்ரம்
        ஸம்லக்ஷ்யம் ஸாமிதே₄யை: யஜுரபி த₃ஶகை: பா₄த்யத₂ர்வா ரஸைஶ்ச ||

இத்திருவாய்மொழியில் நுனியுட‌ன்கூடிய‌ முத‌ல் இருப‌து பாசுர‌ங் க‌ளும், அதாவ‌து ப‌த்தாம் ப‌த்தில் “சார்வே த‌வ‌நெறி” என்றார‌ம் பிக்கும் திருவாய்மொழி தொட‌க்க‌மாக‌ ஏழு திருவாய்மொழி க‌ளும் முத‌ல் இருப‌து பாசுர‌ங்க‌ளும் சாரீர‌கார்த்த‌ க்ர‌ம‌த்தைத் தெளிவாகக் கூறுகின்ற‌ன‌. அதாவ‌து நான்கு அத்யாய‌ங்க‌ளாய்ப் ப‌தினாறு பாத‌ங்க‌ளாய்ப் பிரிக்க‌ப்ப‌ட்டிருக்கும் சாரீர‌க‌ சாஸ்திர‌த் தில் தத்துவ‌ ஹித‌ புருஷார்த்த‌ங்க‌ள் எந்த‌ க்ர‌ம‌த்தில் நிரூபிக்க‌ப் ப‌ட்டிருக்கின்ற‌ன‌வோ, அதே க்ர‌ம‌த்தில் இங்கும் இந்த‌ தொண்ணூறு பாசுர‌ங்க‌ளும் ப்ர‌திபாதியா நிற்கும் என்ற‌ப‌டி.

ஆதெள‌. சாரீரகார்த்த க்ரமம் இஹ‌ விசதம் விம்சதி: வக்தி ஸாக்ரா-தத்துவ ஹித புருஷார்த்தம் எனப்படுகிற பரப்ரஹ்ம ஸ்வரூபாதி கள், அதை அடைவதற்கு உபாயம் அந்த ப்ரஹ்மத்தை அனுபவிப்பதாகிற பலன், இவ்வனைத்தையும் வ்யாஸ மஹர்ஷி 545 ஸூத்திரங்களில் நிரூபித்திருக்கிறார். வேதங்களுக்கு அடுத்த படியான ப்ரமாண‌மாக இஸ்ஸூத்திரங்கள் கருதப்படுகின்றன, ஹிந்து மதத்தைப் பரவச் செய்ய முன்வந்தவர்க‌ள் இந்த ஸூத்திரங்களுக்கு விஸ்தரமான வ்யாக்யானம் செய்திருக்கிறார்கள். நம்முடைய மதமாகிய விசிஷ்டாத்வைத ஸித்தாந்த ப்ரவர்த்தகராகிய எம்பெருமானாரும் ஸ்ரீபாஷ்யம் என்னும் க்ரந்தத்தில் இவற்றின் அர்த்தத்தை விவரித்துள்ளார். அதன் அவதாரிகா வாக்யத்திலிருந்து இந்த ஸூத்திரங்களுக்கு போதாயனர் மிகவும் பெரியதான வ்ருத்தி க்ரந்தம் என்னும் ஒரு வ்யாக்யானம் செய்திருப்பதாயும், (டங்க த்ரமிட குஹதேவ ப்ரப்ருதிகளான)  பூர்வாசார்யர்கள் சுருக்கமாக வ்யாக்யானமிட் டிருப்பதாயும், அவற்றைத் தழுவி ஸூத்திரங்களின் அக்ஷரங் களுக்கு அர்த்தம் தாம் எழுதியதாயும் எற்படுகிறது.

இந்த ஸ்ரீபாஷ்யத்தில் ஸூத்திரங்கள் பல அதிகரணங்களாக‌வும், பதினாறு பாதங்களாகவும் நாலு அத்யாயங்களாகவும் பிரிக்கப் பட்டிருக்கின்றன, அதிகரணங்கள் 158. ஒவ்வொரு பாதத்திலும் முறையே உள்ள அதிகரணங்கள் 11, 6, 10, 8-10, 8, 7, 8-6, 8, 28, 15- 11, 11, 5, 6 எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. (அதிகர‌ண‌ ஸாராவளி – 16). இந்தப் பதினாறுபாதங்களுள் ஒவ்வொன்றிலும் ப்ரதிபாதிக்கப் பட்டிருக்கும் அம்சத்தை ஸ்ங்க்ரஹித்து ஒரு சுலோகம் ஆசார்ய ஸார்வ பெளமனால் ஸ்ரீஅதிகரண ஸாராவளி யில் அருளிச்செய்யப்பட்டிருக்கிறது. அது பின்வ‌ருமாறு:-

(1) பகவானே சேதனா சேதனங்களின் ஸ்ருஷ்டி கர்த்தா (2) இவைகளைச் சரீரமாக உடையவன், (3) த‌ன‌க்கு வேறு ஆதாரம் இல்லாதவன், (4) எல்லையில்லாத மஹிமையையுடையவன், (5)இதற்கு ஒருவிதமான விரோதமும் சொல்லும் ப்ரமாண‌ங்கள் இல்லாதவன் (8) தன்னை அடைந்தவர்களுக்குத் தான் ஆப்தன், (7) ஆகாசம் ஜீவாத்மா இவைகளை அததற்குத் தக்கபடி ஸ்ருஷ்டி செய்பவன், (3) அப்படியே இந்திரியங்களை ஸ்ருஷ்டி செய்பவன், (9) ஸம்ஸாரத்தை நடத்துகிறவன், (10) தான் ஒருவித தோஷத்தினாலும் தொட‌ப்ப‌டாதவனாகையினால் போக்யமானவன், (11) அனேக விதமான பக்தியோகங்களுக்கு விஷயமாயிருப்பவன், {12} பக்தர் களினால் அவரவர்களுக்குத் தகுந்ததான வர்ணாச்ரம தர்மங் களினால் ப்ரீதியுடையவனாகச் செய்யப்படக் கூடியவன், (13} ஸர்வ பாபங்களையும் போக்கடிப்பவன், {14) ப்ரஹ்ம நாடி வழியாக நிர்யாண‌த்தைச் செய்துவைப்பவன், (15) ப‌ல‌வித‌ங்க‌ளான‌ ஸத்காரங்கள் செய்யப்படும் அர்ச்சிராதி மார்க்கத்தினால் மோக்ஷ‌த் திற்கு அழைத்துக் கொண்டு போகுமவன், (16) தன்னுடைய ஸாம்ய‌த்தைக் கொடுப்பவன், என்கிற அம்சங்கள் முறையே ப்ரதிபாதிக்கப் பட்டிருக்கின்றன. இதைத்தான் சாரீரகார்த்த க்ரமம் என்கிறது. சரீரத்தையுடையவன் சாரீரன், சேதனாசேதனங்களைத் தன‌க்கு சரீரமாகவுடையவன் ப‌கவனாகையினால் அவன் சாரீரன் என்னப்படுகிறான். அவனைப் பற்றிய சாஸ்திரம் சாரீரகம் என்றும், இந்த அர்த்தத்தை நிரூபிக்கும் க்ரமம் சாரீர‌கார்த்த‌ க்ரமம் என்றும் கூறப்படுகிறது.

கீழ் நிரூபிக்கப்பட்ட சாரீரகார்த்த க்ரமப்படியே இந்தத் திருவாய் மொழியாகிற ப்ரபந்தத்தில் இறுதியிலுள்ள ஏழு திருவாய்மொழிகளுடன் கூடிய முதல் இரண்டு திருவாய்மொழிகளிலும் தத்துவாதி நிரூபணம் விசதமாகச் செய்யப்படுகிறது என்றருளிச் செய்யப்பட்டதாயிற்று. வ்யாஸமஹர்ஷி பரப்ரஹ்ம ஸ்வரூபாதிகளை நிரூபிக்க வேண்டும் என்கிற அபிப்ராயத்துடன் ஸூத்திரங்களை வ‌குத்தார். ஆகையினால் அது ஒரு க்ரமமாக நடுவில் விச்சேதாதிகள் இல்லாமல் செய்யப்பட்டது,

ஆழ்வாரோ அப்படி ஒருவித ஸ‌ங்கல்பத்துடன் இப்ரபந்தத்தைச் செய்ய முன் வரவில்லை. ஸமஸ்த‌ கல்யாண குணாத்மகன் என்கிற ப்ரஸ்ஸித்தியையுடைய ப‌க‌வானால் க‌டாக்ஷிக்க‌ப் ப‌ட்ட‌வ‌ராய்  அவனை உள்ளபடியே அனுபவித்து, அவ்வனுபவ ஜநிதமான நிரவதிக ப்ரீதியாலே அவனை அனுபவித்த‌படியே பேசும் பாசுரங்களன்றோ இத்திருவாய்மொழி ! பகவ‌த்ஸ்வரூபாதி தத்துவ நிரூபணத்தின் பேதமிருக்கமுடியாதாகையினால், ஆழ்வாருடைய அனுபவ க்ர‌மமும் அந்த சாரீரகார்த்த க்ரமமும் ஒன்றாய் நின்றது.  பகவான் “ப‌த்துடை அடியவர்க்கு எளியவன்” என்கிற‌ ஆகாரத்தை அனுஸ‌ந்திக்கப் புக்கு, ஒரு குணத்திலிருந்து மற்றொரு குணத்திற்குத் தாண்டி, பகவானுடைய கல்யாண குணங்களைப் பலபடியாக அனுபவித்துப் பேசி, இறுதியில் அவனைக்கிட்டும் ப்ரகாரம் முதலியவற்றை நிரூபித்தாராகையினால் ‘ பத்துடையடியவர்’  முதல் (1-3) சார்வே த‌வ‌நெறி’க்கு முன் (–1,4) வேய் ம‌ருதோளிணை வ‌ரையில் கீதாசார்ய‌ன் ப்ர‌ஸ‌ங்காத் ஸ்வ‌ ஸ்வ‌பாவ‌த்தை கீதையில் அருளிச் செய்தாற்போலே ஆழ்வாரும் ப்ர‌ஸ‌க்தானுப்ர‌ஸ‌க்த‌மாக‌ப் ப‌க‌வானுடைய‌ ப‌ல‌ குண‌ங்க‌ளை அனுப‌வித்த‌ ப்ர‌கார‌ம் ந‌டுவிலுள்ள‌ 91 திருவாய்மொழிக‌ளாய் இருக்கும்.

இங்கு ’சாரீரகஸூத்ரார்த்த க்ரமம்’ என்று நிரூபிக்காமல் ’சாரீரகார்த்த க்ரமம் ‘ என்று அருளிச் செய்திருப்பதினால் ஆழ்வார் ஸூத்திரங்களைப் பார்த்து அந்த க்ரமத்தைப் பின்பற்றித் தம் ப்ரபந் தத்தில் அவற்றை நிருபித்தருளவில்லை என்பதும், வேதங்கள் பகவானை ஒருவாறு ப்ரத்யக்ஷீகரித்து அவனுடைய ஸ்வரூபாதிகளை ப்ரதிபாதிக்கும் க்ரமம் ப்ரஹ்மஸூத்திரங்களில் எப்படி ஸங்க்ரஹிக்கப் பட்டதோ, ஆழ்வாரும் அப்படியே தாமே எம்பெருமானை ப்ரத்யக்ஷீகரித்த ப்ரகாரத்தை இந்த ப்ரபந்தத்தில் வெளியிட்டபடியினால் அதே க்ரமம் இதிலும் காணப்படுகிறது என்பதும் தெரிவிக்கப் பட்டதாயிற்று. ‘விசதம்’ என்கிற பதத்தால் இப்படி ப்ரதிபாதிக்கும் விஷயத்தில் ஸூத்திரங்களை விட ஆழ்வாருடைய ப்ரபந்தம் மிகவும் தெளிவாக இருக்கும் என்பதும் காட்டப்படுகிறது. ஸூத்திரங்கள் வேதங்களுக்கு உபப்ரும்ஹண ஸ்தானத்தில் நிற்கும். ஆழ்வாருடைய பிரபந்தமோ வேதங்களைப் போல ஸ்வதந்திர ப்ரமாணமாய்  நிற்கும் என்று அறிய வேண்டும்.  எப்படிப் பதினாறு பாதங்களில் கூறப்படும் அர்த்த க்ரமம் நிரூபிக்கப்ப்ட்டிருக்கிறது என்பது மேலே விவரிக்கப் படுகிறது. பகவானுடைய ஸ்ருஷ்டி கர்த்ருத்வத்தை நிரூபிப்பதற்கு முன்பு, முதல் நாலு அதிகரணங்களில் (நாலு ஸூத்திரங்களில்) சாரீரக சாஸ்திரம் ஆரம்பணீயம் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

        முதல் ஸூத்திரத்தில் ஸித்த பரமான உபநிஷத்வாக்யங்களுக்கு அர்த்தபோதகத்வம்  உண்டு என்கிற அர்த்தம் உபபாதிக்கப் பட்டது.  ‘யவன் அவன் ’ என்று அவனுடைய ப்ரஸித்தியைக் கூறிக் கொண்டு உயர்வற உயர் நலம் உடையவன் யவன் அவன் மயர்வற மதி நலம் அருளினன் யவன் மயர்வற மதிநலம் அருளினன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி, யவன் அய‌ர்வறும் அமரர்கள் அதிபதி, அவன் துய‌ர‌று சுட‌ர‌டி தொழுதுஎழு  என்ம‌னனே’ என்று ஸித்தபரங்களான உபநிஷத்து வாக்யங்களுக்கு அர்த்த போதகத்வத்தை வெளியிட்டருளினார்.. ஜன்மாத்யதிகரணத்தில் நிரூபிக்கப்பட்ட ஜகத் ஸ்ருஷ்ட்யாதிகளுக்கு உபயுக்தமான ஸர்வஜ்ஞத் வாதி கல்யாண குணங்களையுடையன் என்பது ’உயர்வற உயர் நலமுடையவன்’ என்னப்பட்டது. ’உயர்வற உயர்நலம் உடையவன் என்பதினால் வெளியாகும் இந்த ஏற்றத்தை சாஸ்திரம் கொண்டே தெளியவேண்டும் என்றேற்படுகிறபடியினால் சாஸ்த்ரயோநித்வாதி கரணார்த்த க்ரமம் கூறப்பட்டது. “மயர்வற மதிநலம் அருளினன்”  என்று அவனைப் பற்றிய ஜ்ஞானம் புருஷார்த்தம் இவற்றை அளித்தவன் என்பதினால் ஸமந்வயாதிகரணார்த்த க்ரமம் நிரூபிக்கப்பட்டது.

ஸ்ரஷ்டா – பகவான் ஜகத்தை ஸ்ருஷ்டிப்பவன் என்றதினால் அப்படிச் செய்வதற்கு யோக்யதை யில்லாத சேதனா சேதனங்களை விட அவன் வேறுபட்டவன் என்பது ஸூசிதம் என்று ஈக்ஷத்யாதி கரணம், ஆகாசாதிகரணம், ப்ராணாதிகரணம் ஜ்யோதிரதிகரணம் என்கிற அதிகரணங்களில் நிரூபிக்கப்பட்ட அசேதனங்களைவிட வேறுபட்டவன்என்பது  இங்கு ’பொறி உணர்வு அவையிலன்’என்னப்பட்டது. ஆநந்த மயாதிகரணம் முதவியவைகளில் உபபாதிக்கப்பட்ட சேதனங்களை விட வேறுபட்டவன் என்பது, ‘மனனுணர் அளவிலன்’ என்னப்பட்டது.

இரண்டாவது பாதத்தில் கூறப்பட்ட பகவான் எல்லா வஸ்துக்களையும் தனக்குச் சரீரமாகவுடையவன் என்பது “தேஹீ” என்னப் பட்டது. இது ’இலனது உடையன் இது என நினைவரியவன் நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன் புலனொடு புலனலன்; என்று மூன்றாம் பாட்டில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

’ஸ்வநிஷ்ட:’ என்று மூன்றாம் பாதத்திலும், ’நிரவதிமஹிமா’  என்று நான்காம் பாதத்திலும் உபபாதிக்கப்பட்ட க்ரமத்தை ’அந்நலனுடை ஒருவனை’ என்கிற பாட்டில் காணலாம்.

இப்படி முதல் மூன்று பாட்டுக்களில் முதல் அத்யாயத்தில் உபபாதிக்கப்பட்ட பகவானுடைய. ஐகத்காரணத்வம் விவரிக்கப்பட்டது. இந்த சரீராத்மபாவத்தை நமது ஸித்தாந்தத்திற்கு ப்ரதான ப்ரதிதந்த்ரமாக பூர்வாசார்யர்கள் நிரூபித்துப் போந்ததற்குக் காரணம் இந்த ஸித்தாந்தத்திற்கு இந்தக் கலியுகாரம்பத்தில் ப்ரவர்த்தகரான ஆழ்வார் நான்கு பாட்டுக்களில் இந்த அம்சத்தை விசதமாக உபபாதித்திருப்பதே. அதாவது ’நாமவன்’, ’அவரவர்’, ‘நின்றனர்’ ’திடவிசும்பு’ என்றாரம்பிக்கும் நாலு ஐந்து ஆறு ஏழா வது பாட்டுக்களில் இவ்வர்த்தம் நன்றாக உபபாதிக்கப்பட்டிருக்கிறது. அதில் ’உடல்மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்துளன்’ என்று இந்த ஸம்பந்தம் ஸ்பஷ்டமாகக் கூறப்பட்டிருக்கிறது.

எம்பெருமானார் தாம் ஸ்ரீஆளவந்தார் சரம திருமேனி முன்பே செய்தருளிய திருவாய் மொழிக்கு வ்யாக்யானம் செய்தருளுவதாகிற மூன்றாவது ப்ரதிஜ்ஞையை நிறைவேற்றத் திருவுள்ளம்பற்றி ஆழ்வாருடைய க்ருபைக்குப் பூர்ணபாத்திரமான ஸ்ரீமந்நாதமுனிகள் வம்சத்தில் பிறந்த திருக்குருகைப் பிரான் பிள்ளானை வ்யாக்யானம் எழுதும்படி நியமித்தார் என்பதும், அவரும் தாம் எம்பெருமானார் திருவடிகளில் க்ரஹித்த அர்த்த விசேஷங்களையே ஸங்க்ரஹித்துத் திருவாறாயிரப்படி எனப்படும் வ்யாக்யானத்தை எழுதி எம்பெருமானார் திருமுன்பே வைக்க, அவரும் அதைக் கடாக்ஷித்து, போரஉகந்து, அதைத் தாமே தம் சிஷ்யர்களுக்குக் காலக்ஷேபம் ஸாதித்தருளினார் என்பதும், தமக்குப் பிறகு திருவாய்மொழியின் அர்த்தத்தை ப்ரவசனம் செய்யும் அதிகாரத்தை அந்தப் பிள்ளானுக்கே கொடுத்தருளினார் என்பதும் ஸுப்ரஸித்தம். அந்த வ்யாக்யானத்தில் ’மனனகம்’ என்கிற பாட்டின் அவதாரிகையில் “இந்தக் குணங்களுக்கு ஆச்ரயமான திவ்யாத்ம ஸ்வரூபத்தினுடைய ஹேயப்ரத்யநீகதயா கல்யாணைகதாநதயாவுள்ள விஸஜாதீயத்வம் சொல்லுகிறது” என்றும் , ’இலனது’ என்கிற பாட்டின் அவதாரிகையில் ‘இப்படி ஸ்வேதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண ஸ்வரூப குண விபூதிகனான எம்பெருமானுடைய ஜகதைச்வர்யம் சொல்லுகிறது’ என்றும், ‘திடவிசும்பு’ என்கிற பாட்டின் அவதாரிகையில் “கீழ் மூன்று பாட்டாலும் ஜகத்தினுடைய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகள் பகவததீநம் என்னும் இடத்தை ஸாமாநாதிகரண்யத்தாலே சொல்லிற்று, இனி இந்த ஸாமானாதிகரண்யமானது ஜகதீச்வரயோ: சரீராத்மத்வ நிபந்தனம் என்று சொல்லுகிறது” என்றும், நடுவில் ‘அகில புவன நிர்மாண த்ராண ஸம்ஹரணாதி லீலா விநோதனாய் ஸர்வ ஜகதாத்மாவாய், ஸர்வ ஜகச்சரீரனாய் ஸ்வத ஏவ அகர்மவச்ய னாகையாலே ஸ்வசரீரபூத சேதனா சேதனாத்மக ஸமஸ்தவஸ்துகத ஸுக துக்க விகாராதி ஸர்வ தோஷை : அஸம்ஸ்ப்ருஷ்டனாயிருந்த பரமபுருஷன்’ என்றும் வ்யாக்யானம் செய்திருப்பதினால் எம்பெருமானார் ஸ்ரீபாஷ்யத்தில் உபபாதித்திருப்பதற்கு மூலம் இத் திருவாய்மொழிப் பாசுரங்களே என்பது ஸூசிப்பிக்கப்பட்டதாகிறது.

‘அபாஸ்தபாத:’ என்கிற இரண்டாம் அத்யாயத்தின் முதல் பாதத்தின் க்ரமம் ’சுடர்மிகு சுருதியுள்’ என்று காட்டப்பட்டது. அதாவது ’சுடர்மிகு’ என்பதினால் ச்ருதி உத்தம ப்ரமாணமாகையாலே அவற்றில் ப்ரதிபாதிக்கப்பட்டிருப்பதற்கு விருத்தமாகச் சொல்லுகிற ஸாங்க்ய ஸ்ம்ருதி, யோக சாஸ்திரம், முதலியவைகளினுலும் யுக்திகளினாலும் பாதிக்கப்படாதாகையினால் அவை நிரஸிக்கப்பட்டனவாயின என்று காட்டியபடி. மேல் ’உளன் எனில்’ என்கிற பாட்டில் சூந்யவாதியை நிரஸித்திருப்பதும் இந்த அபாஸ்த பாதத்வத்தையே விவரிப்பதாகும்.

“ச்ரிதாப்த” என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட இரண்டாம் அத்யாயத்தின் இரண்டாம் பாதத்தின் க்ரமம் ‘சுரரறிவரு நிலை’, ‘ உளன் எனில் உளன்’ என்கிற இரண்டு பாட்டுக்களில் காணப்படும். ‘காத் மாதேரிந்த்ரியாதே ருசிதஜனனக்ருத்* என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட மூன்றாவது நான்காவது பாதங்களின் க்ரமம் ஆகாசாதிகளின் ஸ்ருஷ்டியைக் குறிப்பிட்டு அதற்கு ப்ரஹ்மாதிகள் காரணமாக இருக்க முடியாது என்று கூறும் ‘சுரரறிருவரு’ என்கிற பாட்டிலும் ‘சுடர் மிகு’ என்கிற பாட்டிலும் காணலாம்.

திருவாறாயிரப்படியில் ‘அபௌஷேயமாகையாலே நிர்த்தோஷமாய், அபாதித ப்ராமாண்ய ரூபதேஜ: ப்ரசுரமாயிருந்த சுருதிகளில் உளன் என்கிறார். ஆதலால் லோகாயத, மாயாவாத, பாஸ்கரீய யாதவப்ரகாசாதி வேதவிருத்த ஸமயங்கள் எல்லாம் நிரஸ்தமாய்த்தன’ என்று வ்யாக்யாதம். ஆக இப்படி முதல் திருவாய்மொழி பத்துப் பாட்டுக்களில் நிரூபிக்கப்பட்டிருக்கும் க்ரமமும் சாரீரக சாஸ்திரத்தில் முதல் இரண்டு அத்யாயங்களின் ரீதியும் ஒன்றாயிருக்கும் என்றறியவும்,

‘ஸம்ஸ்ருதெள தந்த்ரவாஹீ ’ என்று நிரூபிக்கப்பட்ட மூன்றாம் அத்யாயத்தின் முதல் பாதத்தின் க்ரமம் ‘வீடுமின் முற்றவும்’ என்கிற இரண்டாம் திருவாய்மொழியில் காணலாம். உபாயத்தை நிரூபிப்பதற்கு முன்பு இதர விஷயங்களினுடைய அஸ்திரத்வாதி தோஷங்களையும், ஆச்ரயணீய பகவானுடைய ஹேய ப்ரத்யநீகத்வ கல்யாணை கதாநத்வத்தையும் அறிய வேண்டும் என்பதற்காக இதர விஷயங்களில் ஸங்கத்தை விட்டு அவனை ஆச்ரயிக்க வேண்டும் என்று முதல் பாட்டிலும், ஜீவாத்மா ஸ்திரன் என்றும், சரீரங்கள் அஸ்திரங்கள் என்றும் இரண்டாம் பாட்டிலும் இதற்கு மூல காரணங்களான அஹங்கார மகாரங்களை விடவேண்டும் என்று மூன்றாம் பாட்டிலும் நிரூபிக்கப்பட்டது.

நிர்தோஷத்வாதிரம்ய:’ என்னப்பட்ட இரண்டாம் பாதத்தின் க்ரமத்தை ‘இல்லதுமுள்ளதும் எல்லையில்,அந்நலம்’ என்கிற நாலாம் பாட்டில் காண்க, பகவானை ஆச்ரயிக்குமவர்களுக்கு நடுவில் இடையூறாக உண்டாகக் கூடிய கைவல்யத்தைப் பரிஹரிக்கும் ப்ரகாரம் ஐந்தாம் பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்படி மூன்றாவது அத்யாயம் இரண்டாம் பாதத்தில் முக்தாதிகரணம் வரையிலான க்ரமம் நிரூபிக்கப்பட்டதாகிறது, அடுத்த உபய லிங்காதி கரணம் முதல் மேலுள்ள அதிகரணங்களின் க்ரமம் மேல் பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பகவான் ஆச்ரயணீயன் என்பதற்காக அவனுடைய ஸர்வஸமத்வத்தையும் அவனுடைய ஸர்வஸுஹ்ருத் வத்தையும் கண்டு அவirக் கரண த்ரயத்தாலும் ஆச்ரயிக்கும் ப்ரகாரம் “பற்றிலன்” என்றாரம்பித்து மூன்று பாட்டுக்களில் உபதேசிக்கப் பட்டது. இப்படி ஸங்க்ரஹமாக ப்ரஸ்தாவிக்கப்பட்ட பக்தியின் பலானுபவத்தை ‘ஒடுங்க அவன் கண்‘ என்கிற பாட்டில் குறிப்பிட்டு ஆச்ரயணீய தேவதை நாராயணன் என்பதை ‘வண் புகழ் நாரணன்’ என்று பத்தாம் பாட்டில் உபபாதித்தார்.

பலத்தை விஸ்தரமாக ப்ரதிபாதிக்கும் இடம் நாலாம் அத்யாயமேயாயினும், பலத்தை விதிக்குச் சேஷமாக வேதங்களில் சொல்லியிருப்பதைப்போல உபாயத்தில் ப்ரவ்ருத்தி உண்டாவதற்கு உபயுக்தம் என்பதினால் மூன்றாவது அத்யாயம் இரண்டாம் பாதத்தின் இறுதியிலும் பலன் ப்ரஸ்தாவிக்கப் பட்டிருக்கிறது.

ஆக இப்படி இரண்டாம் திருவாய்மொழியில் பாட்டுக்களின் அர்த்த க்ரமம் மூன்றாவது அத்யாயத்தின் முதல் இரண்டு பாதங்களின் க்ரமமாகும். மூன்றாம் பாதத்தின் க்ரமம் ப்ரஸ்தாவிக்கப் பட்டு நிறுத்தப்பட்டது.

ஆகிலும் இப்படிப் பக்தி செய்வது ஸம்பாவிதமோ என்கிற சங்கைக்குப் பரிஹாரமாக மூன்றாம் திருவாய்மொழியில் அவனுடைய ஸெளலப்யாதிகளை உபதேசிக்க உபக்ரமம் செய்யப் பட்டது. இதற்கு மேல் ப்ரஸ்க்தானு ப்ரஸக்தமாகப் பலவித அனுபவங்களைத்தாம் பெற்று பத்தாம் பத்தில் நான்காம் திருவாய்மொழியாகிற “சார்வே தவநெறி” யில் கீழ் ப்ரஸ்தாவித்த பலத்தை உபஸம்ஹாரம் செய்து, மேல் பக்தி யோகத்தின் ப்ரகாரங்களே ’கண்ணன் கழலிணை’ என்கிற திருவாய்மொழியில் ப்ரதிபாதித்திருக்கிருக்கிறார்..

இப்படிக்கீழ் முதல்பத்தில் இரண்டாம் திருவாய்மொழியில் கூறப்பட்ட பக்தி யோகத்தின் ப்ரகாரங்களை விவரிக்க நடுவில் ஸந்தர்ப்பம் ஏற்படவில்லை என்பதும் அது ஏற்பட்டதும் “சார்வே தவநெறி” தொடங்கி அது உபபாதிக்கப்படுகிறதென்பதும் இத்திருவாய்மொழியின் திருவாறாயிரப்படியில் “இப்படி ப்ராஸங்கிகத்தை முடித்து பத்துடையடியவரிலே ப்ராரப்தமான பக்தியோக ஸுலபத்வத்தை நிகமிக்கிறார்” என்றும், இதன் வ்யாக்யானமான இருபத்தி நாலாயிரப்படியில் “ப்ராஸங்கிகத்தை முடித்து ……. நிகமிக்கிறார் ” என்கிற இவ்வசன வ்யக்தியாலே பத்துடையவர்க்கு மேல் இதுக்குக் கீழ் ப்ராஸங்கிகம் என்று தோற்றுகையால் “ இப்படி” என்றது ‘அஞ்சிறைய மட நாராய்’ தொடங்கி என்றபடி. ‘ ப்ராஸங்கிகத்தை’ என்றது ‘பத்துடையடியவரிலே’ பிறர்க்குத் தாம் அவனுடைய ஸுலபத்வத்தை உபதேசித்தவாறே இப்படி ஸுலபனானவனோடு பாஹ்ய ஸம்ச்லேஷத்திலே தமக்கு அபேக்ஷை பிறந்து அது கைவராமையாலே மிகவும் அவஸந்நராய் ‘அஞ்சிறைய மடநாரா’வில் தூது விடுகையும், ……… .உத்தரோத்தரம் ப்ரஸக்தரனுப்ரஸக்தமான நாநா கல்லோல நாதானுபவரஸ பரீவாஹத்தை என்றபடி. பத்துடையடியவரிலே ஸாமாந்யேந உபக்ராந்தமாயிருந்த பக்தியோக ஸுலபத்வத்தை விசேஷித்துச் சொல்லுகைக்காக அவஸரம் லப்தமானவாறே அத்தைச் சொல்லுகிறார் என்று கட்டதாத்பர்யம் என்றும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

ஆகையினால் ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னவளி ச்லோகத்தில் ‘ஸாக்ரா’ என்னும் பதம் கீழ்க்கூறியபடியே திருவாய் மொழியின் இறுதியிலுள்ள திருவாய்மொழிகளைக் குறிக்கிறது என்பதே திருக்குருகைப் பிரான் பிள்ளான் திருவுள்ளத்திற்கு ஒத்திருக்கிறது என்பது ஸ்பஷ்டம்.

பஹுபஜநபதம்”“ஸ்வார்ஹகர்ம ப்ரஸாத்ய” என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட மூன்றாம் அத்யாயம் மூன்றாவது நான்காவது பாதங்களின் க்ரமம் பக்தி யோகத்தின் பிரிவுகளாகச் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட திருநாம ஸங்கீர்த்தனம், புஷ்பாதி ஸமர்ப்பணம், நமஸ்காரம், த்யானம் இவைகளை ‘கண்ணன் கழலிணை’யில் காணலாம். ஆக இப்படிப் பத்தாம் பத்து நாலாம் ஐந்தாம் திருவாய்மொழிகளில் மூன்றாம் அத்யாயத்தின் மூன்றாம் நாலாம் பாதங்களின் க்ரமம் காட்டப்பட்டதாகிறது.

மேல் நாலாவது அத்யாயத்தில் ப்ரதிபாதிக்கப்படும் க்ரமமான ப2லானுபவம் மேல் திருவாய்மொழிகளில் விஸ்தாரமாக நிரூபிக்கப் பட்டிருப்பதைப் பார்க்கலாம். ப2லத்திற்குத் துல்யமாயிருப்பதினாலே ப2லாத்யாயத்தில் அங்கியான உபாஸனத்தின் ப்ரகாரம் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. அதே ரீதியில் ப்ரபன்னனுக்கு ப்ரபத்த்யனுஷ்டானத்திற்கு உத்தரக்ஷணம் முதல் வருகிற ஸாக்ஷாத்காராதிகளும் பலத்தில் சேர்ந்தவை என்பதை “அருள் பெறுவார்” என்கிற திருவாய்மொழி காட்டுகிறது. ப்ராரப்தகர்ம நாசத்தளவும் விளம்பத்தை (தாமதத்தை)ப் பொறுக்காமையினாலே ப்ரபன்னனுக்குப் பலன்கொடுப்பதில் எம்பெருமானுடைய தீவ்ரதமமான உத்யோகமும் அப்படிச் செய்யுமிடத்தில் இவனுடைய இஷ்டப்ரகாரம் செய்ய ஸித்தமாயிருப்பதும் விசேஷித்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

“ பாபச்சித்” என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட நாலாவது அத்யாயத்தின் முதல் பாதத்தின் க்ரமம், பத்தாம்பத்து ஐந்தாம் திருவாய்மொழியில் “தீதொன்று மடையா”“அமராவினைகளே” , “வினைவல் இருள் என்னும் முனைகள் வெருவிப்போம்” இத்யாதிகளில் காட்டப்பட்டிருக்கிறது.

’ப்ரஹ்மநாடீ கதிக்ருத்’ என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட இரண்டாவது பாதத்தின் க்ரமம் ஆறாம் திருவாய்மொழியில் ‘வானேற வழி தந்த வாட்டாற்றான் பணிவகையே நானேறப் பெறுகின்றேன்’ என்று கூறப்பட்டிருக்கிறது.

‘செஞ்சொற் கவிகாள்’ திருவாய்மொழியில் பகவானுக்குத் தன் ஆச்ரிதர்களிடத்திலுள்ள ப்ரீத்யாதிக்யம் ப்ரதிபாதிக்கப்பட்டிருப்பதினால் இதன் காரணமாகப் பகவான் ஆச்ரிதர்களின் பூர்வோத்தர கர்மங்களை இவனுடைய அனுகூல ப்ரதிகூலர்கள் பக்கல் ஏறிடுகிறான் என்கிற க்ரமம் சொல்லப்பட்டதாகிறது. ‘ப்ராரப்த கர்மத்திற்குச் செலவு செய்த பிறகு நிர்யாணத்திற்கு விளம்பமில்லை என்பது “உடலுமுயிரும் மங்கவொட்டு” என்னப்பட்டது. ‘திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்’ என்பதினால் ப்ரபன்னன் விஷயத்தில் எம்பெருமான்தானே அந்திம ப்ரத்யயத்தை உண்டாக்குகிறான் என்கிற விசேஷாகாரம் காட்டப்பட்டிருக்கிறது.

“அதிவஹந்” என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட மூன்றாவது பாதத்தில் அபிப்ரேதமான அர்ச்சிராதி கதியின் ப்ரகாரம் ’சூழ்விசும்பு’ என்கிற திருவாய்மொழியில் விசதமாக நிரூபிதம்,

‘ஸாம்யத’ என்று ஸங்கிரஹிக்கப்பட்ட நாலாம் பாத க்ரமம் ‘அந்தமில் பேரின்பத்து அடியா ரோடிருந்தமை’ என்கிற பாட்டில் காணலாம். ‘உன்னைப் பெற்று இனிப்போக்குவனோ’ ’ என்றதும் அபுநராவ்ருத்தியைக் குறிப்பிடுகிறது.

ஸ்ரீ த்ரமிடோபநிஷத் ஸாரத்தில் ‘யதந்த்யா மீமாம்ஸா ச்ருதி சிகர தத்வம் வ்யவ்ருணுத | ததாதௌ காதாபி: முநிரதிகவிம்சாபி: இஹ ந: க்ருதீ ஸாரக்ராஹம் வ்யதரதிஹ ஸங்க்ருஹ்ய க்ருபயா’ என்று அருளிச் செய்து இருப்பதைப் பார்த்து இங்கு செய்யப்பட்டிருக்கும் நிரூபணம் அத்துடன் முரண்படுமே என்று ஆபாத ப்ரதீதீயினால் ஸந்தேஹம் சிலர்க்கு உண்டாகலாம். ஸார ச்லோகத்தில் ‘ஸங்க்ருஹ்ய’ என்பதையும், ‘ச்ருதிசிகர தத்வம்’ என்கிற பதங்களின் ஸ்வாரஸ்யத்தையும், ஸ்ரீரத்னாவளியில் ‘விசதம்’, ‘சாரீரகார்த்தக்ரமம்’ என்கிற பதங்களின் ஸ்வாரஸ்யத்தையும் பராமர்சித்தால் இந்த ஸந்தேஹம் உசிதமன்று என்று ஏற்படும்.

இன்னம் சிலர் இப்படி 91 திருவாய்மொழிகள் ப்ராஸங்கிகமாகில் அவை அனுபாதேயங்க ளல்லவோ என்று ஸந்தேஹிக்கலாம். இதுவும் உசிதமன்று. ப்ராஸங்கிகமெல்லாம் அனுபா தேயங்கள் என்கிற நியமமில்லை. கீதையில் நாலாம் அத்யாயத்தில் ப்ராஸங்கிகமாக உபதேசிக்கப்பட்ட அவதார ரஹஸ்யம் எப்படி உபாதேயமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதோ, அதைப் போலவே இந்தத் திருவாய்மொழிகளும் சங்கிலித் துவக்குப் போல் பகவத் குணங்களை ப்ரதிபாதிக்கிறபடியினால் இவைகள் உபாதேயங்கள் என்று கண்டு கொள்ளவும்,

இந்த ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி ச்லோகத்திற்கு 9000படியிலும், 18000படியிலும், ஸ்ரீ வேங்கடாசார்யர் வ்யாக்யானத்திலும் நிரூபிக்கப்பட்டிருக்கும் அர்த்தத்தின் ஸங்க்ரஹம்:-

இப்ரபந்தம் வேதோபப்ரும்ஹணம் மாத்திரமன்று, வேதங்களுக்கெல்லாம் ஸத்ருசமாயிருக்கும் என்னும் அர்த்தத்தை இப்ரபந்தம் தானே ஸூசிப்பிக்கிறது என்று அருளிச்செய்கிறர் – ‘ஆதெள’ இத்யாதியால். அடியிலே இருபத்தொரு காதை வேதாந்த சாஸ்த்ர க்ரமத்தை விசதமாகச் சொல்லுகிறது. இந்த ஸங்க்ரஹம் தான் ஏக விம்சதி சாகைகளாகப் படிக்கப்படுகிற ரிக்குக்களுடைய பேதத்தை ப்ரகாசிப்பியா நிற்கிறது. இதில் காதாஸஹஸ்ரத்தாலே கீதத்தோடு கூடிய ஸமக்ரமான ஸாம சாகா ஸஹஸ்ரமும் பின் செல்லப்படுகிற‌து.. ப்ரதிபாத்யமான ஓர் அர்த்தத்தோடே கூடியிருக்கிற தசகங்களாலே ஏகசத சாகமான யஜுஸ்ஸும் காணப்படுகிறது. சாந்தி ப்ரதானமான இப்ரபந்தத்திலே அதற்கு உபயுக்தமாக இதர ரஸங்கள் எட்டும் ப்ரதிபாதிக்கப்படுகையாலே அஷ்ட சாகமான அதர்வண வேதமும் தோன்றுகிறது. இப்படியால் இது ஸர்வவேத ஸத்ருசமென்றபடி,

இதில் வேத ஸாம்யம் கேவலம் சில அம்சங்களிலுள்ள எண்ணிக்கையின் ஸாம்யத்தினாலே என்று நிரூபிக்கப்பட்டதாகிறது. மேலும் ‘ஸாக்ரா’ என்னும் பதம் நுனியோடுகூடிய என்பதைக் கூறும் மேல் பாட்டு என்பது க்லிஷ்டம். இருபத்தொருபாட்டுக்களில் உபாயமும் புருஷார்த்தமும் மிகவும் ஸங்க்ரஹமாகவே நிரூபிக்கப்படுகிறது என்று தான் சொல்லமுடியும். இது ‘ விசதம்’ என்பதுடன் சேராது. ‘விசதம்’ என்பதற்கு விரோதமில்லாமல் “ஸங்க்ஷேபா “ என்பதற்கு அர்த்தம் சொல்லப்படவில்லை. கீழில் உபபாதிக்கப்பட்டிருக்கிறபடியே பகவத் விஷயத்தை ப்ரவசனம் செய்யும்படி எம்பெருமானாரால் அநிதர ஸாதாரணமாய் நியமிக்கப் பட்ட ஏற்றம் பெற்ற திருக் குருகைப்பிரான் பிள்ளானுடைய உபபாதனத்துடன் சேரவில்லை. கீழ் ஸ்ரீரத்னாவளி ச்லோகத்தில் ‘யத்தத் க்ருத்யம் ச்ருதீநாம்’ எனப் பன்மையாகக் கூறி, அந்த ச்ருதிகளெல்லாம் சேர்ந்து எந்தக் கார்யத்தைச் செய்ய முன் வந்தனவோ, அது ஆழ்வாரால் ப்ரத்யக்ஷீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டதான த்ரமிடோபநிஷத்தாகிய திருவாய்மொழியில் ப்ரதிபாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை உபபாதிப்பதற்காகவன்றோ இந்த ச்லோகம். எண்ணிக்கையின் ஸாம்யம் ஒரு க்ருத்யம் என்று சொல்ல ஒருநாளும் ஒருவரும் முன் வரமாட்டார்கள். இந்த அஸ்வாரஸ்யங்களெல்லா வற்றையும் ஒருவாறு நீக்கி இந்த ச்லோகத்தின் முதல் பாதத்தின் கருத்தை உபயவேதாந்த ஐககண்ட்யம் என்னும் க்ரந்தத்தில் அடியேனுடைய ஆசார்யனாய், வேதாந்தாசார்ய ஸூக்தி ப்ரவசன சதுரர் என்றும், தேசிகப் பித்தர் என்றும் ப்ரஸித்தி பெற்ற திருவஹீந்திரபுரம் சேட்டலூர் ஸ்ரீ உப வே, நரஸிம்மாசார்யஸ்வாமியால் வெளியிடப்பட்டிருக்கிறது. அது இப்பொழுது கிடைப்பது அரிதாகையால் அதன் ஸங்க்ரஹம் கீழே நிரூபிக்கப்பட்டது.

ஸங்க்ஷேபோஸௌ விபாகம்’ – இப்படி நுனியுடன் கூடிய முதல் இருபது பாட்டுக்களில் சாரீரகார்த்த க்ரமம் விசதமாக ப்ரதிபாதிக்கப் படுகிறது என்று கூறியது சுருக்கமான நிரூபணம். விஸ்தரமோ என்னில்: –

கீழ் ஸ்ரீரத்னாவளி சுலோகத்தில் ச்ருதிகள் எல்லாம் சேர்ந்து எந்தக் கார்யத்தைச் செய்கின்றனவோ, அவற்றையெல்லாம் இத் திருவாய்மொழி செய்கிறது என்கிற அம்சம் ‘ப்ரதயதி’ என்றாரம்பித்து நிரூபிக்கப்படுகிறது – என்பது.

வேதங்கள் நான்கு பாகங்களாகப் பிரிக்கப் பட்டிருந்தபோதிலும் அவை எல்லாவற்றிற்கும் பகவானுடைய ஸ்வரூபாதிகளை நிரூபிப்பதில் நோக்கு, அப்படிச் செய்யும் விஷயத்தில் ஒவ்வொரு வேதமும் ஒவ்வொரு முறையைப் பின்பற்றியிருக்கும். அந்த நான்கு முறைகளையும் திருவாய்மொழியில் காணலாம்.

ப்ரதயதி ச ருசாம் சாரு பாடோபபந்நம் —

அழகிய பாடக்ரமத்துடன் கூடிய ரிக் வேதத்தின் பிரிவைக் காட்டுகிறது. ரிக்வேதத்தின் விசேஷாம்சம் சந்தோபத்தமா யிருக்கையும் ஸ்தோத்ர ரூபமா யிருப்பதும். அதாவது யாப்புடன் கூடியிருப்பது மற்ற வேதங்களில் காணப்பட வில்லை. இந்த வேதத்தில் ரிக்குக்களெல்லாம் ஸ்தோத்திர ரூபமாயிருக்கும். ஒரு பலனோ, இதைச் செய் என்று விதிப்பதோ இதில் கிடையாது. திருவாய் மொழியும் யாப்புடன் கூடியதாயும் ஸ்தோத்திர ரூபமாயும் இருக்கும். ’ப்ரூதே காதா ஸஹஸ்ரம் முரமதன குணஸ்தோம கர்ப்பம்’ என்றன்றோ மேலே கூறப் பட்டிருக்கிறது. அதில் ரிக் வேதம் அக்நி வருணன் முதலிய தேவதைகளை ஸ்தோத்ரம் செய்கிறது. திருவாய் மொழி பகவானைப் பற்றியதாயிருக்கும் என்பது விசேஷம். “ஸா க்ஷாதப்ய விரோதம் ஜைமினி “ என்கிறபடியே அக்தி முதலிய பதங்கள் பகவானையே நேரில் சொல்லும் என்று ஸூத்ரகாரர் கூறியிருக்கிருர். அக்ரம் நயதீதி அக்நி: — உத்தமமான பதத்திற்கு அழைத்துப் போவதினால் அக்நி என்னும் பதம் நேரிலேயே பகவானைக் கூறுகிறது என்றபடி. மேலே ’ தசகை:’ என்பதை இங்கு அந்வயித்துக் கொண்டால் ரிக்வேதம் பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறாப் போலே திருவாய்மொழியும் பத்துப் பத்துக்களாகப் பிரிக்கப் பட்டிருக்கும் என்கிற ஸாம்யமும் குறிக்கப்பட்டதாகும். ‘ ரிச:-ஸ்துதெள’ என்கிற தாதுவில் நிஷ்பந்நமான பதம் ரிக். திருவாய்மொழியில் பகவத் குணங்களே ப்ரதானமாகக் கூறப்பட்டிருந்த போதிலும், சிற்சில இடங்களில் ப்ரஹ்மா ருத்திரன் இவர்களைப் பற்றிக் கூறியிருப்பதற்குக் காரணம் பகவான் அவர்களுக்கு அந்தர்யாமியாகையால் என்பதை ஆழ்வார் தாமே “புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்” என்கிற பாசுரத்தில் அனுஸந்தித் திருக்கிறார்,

ஸம்யக் கீதானுபத்தம் ஸகலமனுகதம் ஸாமசாகா ஸஹஸ்ரம் —ஸாமம் எனப்படும் கீதத்துடன் சேர்க்கப்பட்டிருக்கும் ஆயிரம் சாகைகளுடன் கூடிய ஸாமவேதம் பின்பற்றப் பட்டதாயிருக்கும், அதாவது கானத்துடன் கூடிய ஆயிரம் பாட்டுக்களை யுடையதாகையினால் அதற்கு ஸமம் என்றபடி. ஸாமவேதம் யாகாதி காலங்களில் இசையுடன் பாடப் படுமாப் போலே, திருவாய்மொழியும் பகவதாரா தனத்திற்கு அங்கமாக ப்ரஹ்மோத்ஸவ காலாதிகளில் பகவான் திருமுன்பே அனுஸந்திக்கப்படுகிறது. ஸ்ரீமத் நாதமுனிகள் சந்தமிகு தமிழ் மறைகளுக்குத் தாளம் வழங்கி இன்னிசை தந்த வள்ளல் என்பதும் ப்ரஸித்தம். மேலும் ப்ரஹ்மத்தை அடைவதற்கு உபாயமாக விதிக்கப்பட்ட ப்ரஹ்ம வித்யைகள் முப்பத்திரண்டில் பல ஸாமவேதங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறாப் போலே இத்திருவாய்மொழியில் அவற்றில் ப்ரதானமென்றும் ஸர்வாதிகாரமென்றும் ப்ரஸித்தமான ஸ்ரீ ந்யாஸ வித்யையை விசேஷமாக உபபாதித்தருளி, கண்கள் சிவந்து இத்யாதிகளில் மற்றும் சில வித்யைகளை அனுஸந்தித்திருக்கிறார்.

சாந்தோக்யத்தில் பகவானுக்கு உத் என்கிற திருநாமம் கூறப்பட்டிருக்கிறது. இது உகாரத்தினால் ஆரம்பித்து தகாரத்தினால் முடிக்கிற திருவாய்மொழியிலும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.–ஸம்லக்ஷ்யம் ஸாபிதேயை: யஜுரபி தசகை: பாதி —-ஸம்ஹிதைகள் ஏழு அஷ்டகங்களும், ப்ராஹ்மணம் மூன்று அஷ்டகங்களுமாகப் பத்து அஷ்டகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் யஜுர் வேதமும் கருத்துடன் கூடியதாய் ப்ரகாசிக்கிறது. யஜ-தேவ பூஜா யாம் என்கிற தாதுவிலிருந்து நிஷ்பந்நமாய் தேவதாராதனமாகிற யஜ்ஞ யாகாதி கர்மங்களைக் கூறுவதில் யஜுர்வேதத்திற்கு நோக்கு. அதைப் போலவே பரம பலமாகிற மோக்ஷத்தைக் கொடுக்கும் பகவானுடைய ஆராதனத்தைப் பல இடங்களில் விதியா நிற்கும் திருவாய் மொழியும். ‘அவன் துயரறு சுடரடி தொழுதுஎழு’ என்று முதலில் ‘மனமே! நீ உஜ்ஜீவிக்க ஆசைப்பட்டாயேயாகில், பகவானுடைய திருவடிகளைத் தொழு’ என்று விதிக்கப்பட்டிருக்கிறது. திருவாய்மொழி ஆழ்வாருடைய ஸ்வானுபவமேயாகிலும் பத்துக்கள் தோறும் பரோபதேசமான திருவாய்மொழிகள் இருக்கின்றன. ‘வீடுமின் முற்றவும்’ திருவாய்மொழி அவதாரிகையில் திருவாறாயிரப்படியில் ‘இவ்வாத்மாக்களைக் குறித்து பகவதேக போகத்வோபாயமான பக்தி யோகத்தை பகவத் வ்யதிரிக்த விஷய வைராக்ய பூர்வகமாக உபதேசிக்கிறார்’ என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்படியே மேலும் கிளரொளியிளமை-2-10, சொன்னால் விரோதம்-3-9, ஒன்றும் தேவும்-4-10, பொலிக பொலிக-5-2, நல் குரவும் செல்வும்—6-3, இன்பம் பயக்க-7-10, எல்லியும் காலையும் – 8- 6, மாலை நண்ணி -9-10, கண்ணன் கழலிணை-10-5 முதலிய திருவாய்மொழிகளில் பரோபதேசம் விசேஷித்துச் செய்யப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு திருவாய்மொழியின் கடைசியில் பலன் ப்ரதி பாதிக்கப் பட்டிருக்கிறது. மேலும் ‘ஸம்லக்ஷ்யம் ஸாபிதேயை’ என்னும் பதங்கள் யஜுர் வேதம் சப்த ப்ரதானமாய் இருக்கும் என்பதைக் காட்டும். திருவாய்மொழி அபிதேயமான பொருளைக் கூறும். யஜுர்வேதோபநிஷத்தாகிய தைத்திரீயத்தில் உத்கோஷிக்கப் பட்டிருக்கும் ஸ்ரீந்யாஸவித்யை திருவாய்மொழியில் பரக்க ப்ரதிபாதிக்கப் பட்டிருக்கிறது. அப்படியே பகவானுடைய அநந்த கல்யாண குணங்களை நிரூபிக்க ஆரம்பித்து, ஒரு குணத்தை வர்ணித்து பூர்ணமாக நிரூபிக்காமல் திரும்பிற்று ஆநந்தவல்லி. திருவாய்மொழியோ முதலடியிலேயே அவனுடைய குணங்கள் மற்றொருவருக்கும் இல்லாதவைகளாயும், ஸ்வபாவத்திலேயே ஏற்பட்டவை களாயும், இன்னமும் உயர்ந்து கொண்டிருப்பவைகளாயும் இருக்கு மென்றும், அவற்றில் ப்ரதானங்களான ஸெளலப்யம் ஸௌசீல்யம், அவதார ப்ரபாவம், அர்ச்சாவதாரச் சிறப்பு இவற்றை விசேஷித்தும் நிரூபிக்கிறது.

அதர்வா ரஸைச்ச பாதி-ப்ரதிபாதிக்கப்படும் ரஸங்களினால் அதர்வ வேதம் போல் இருக்கும் என்றபடி.

ரு கதௌ என்கிற தாதுவில் நிஷ்பந்நமான பதம் அதர்வ என்பது. அதர்வ வேதத்தில் ப்ராப்ய ப்ராபகங்கள் விசேஷித்துக் கூறப் பட்டிருக்கின்றன, ‘லோகோ பிந்ந ருசி:’ என்னும் ந்யாயத்தை அனுஸரித்துப் பல வித பலன்களுக்கு ( ரஸங்களுக்கு ) உபாயங்களைக் கூறும் அதர்வவேதம். திருவாய்மொழியில் நூறுவித பலன்கள் பகவானை ஆச்ரயிப்பவர்கள் பெறலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. ஒன்பது ரஸங்கள் மட்டும் அதர்வ வேதத்தில் கூறப் பட்டிருக்கிறது என்றும், அவற்றில் ப்ரதானமான சாந்தி ரஸத்தைத் திருவாய் மொழி ப்ரதிபாதிக்கிறது என்றும் நியமிப்பதற்கு ப்ரமாணம் இல்லை.

மேலும் இத்திருவாய்மொழியில் முதல் பாட்டில் விஷயாதி நிருபணம் முதலிய பத்து அர்த்தங்கள் ப்ரதிபாதிக்கப் படுகின்றன. அவை எவை என்னில்:-விஷய ப்ரயோஜன ஸம்பத்தாதிகாரிகளை நிரூபித்தல், மங்களாசரணம் செய்தல், சாஸ்த்ரார்த்தானுக்ரமம், பரப்ரஹ்ம சப்தார்த்த ஸங்க்ரஹம், ஸேவ்ய ஸம்சோதனம், அர்த்த பஞ்சக நிரூபணம், ப்ரணவார்த்த நிரூபணம், பரபக்ஷ ப்ரதிக்ஷேபம், பராரம்ப நிவாரணம், ஸ்வாரம்ப ஸமர்த்தனம் என்பவை.

1 விஷயாதி நிரூபணம்.-இந்த ப்ரபந்தத்திற்கு விஷயம் ஸ்வபாவத்திலேயே வேறு ஒருவருக்கும் இல்லாதவையாய் எப்பொழுதும் உயர்ந்துகொண்டே யிருப்பவைகளான எண்ணிறந்த கல்யாண குணங்களை யுடைய பகவானே என்பது ‘உயர்வற உயர் நலமுடையவன் ’ என்னப்பட்டது. அப்படிப்பட்ட பகவானுக்கு நிருபாதிக தாஸ பூதர்களான ஜீவாத்மாக்கள் மீட்சியில்லாத வாட்சியைப் பெறுதலே ப்ரயோஜனம் என்பது ‘அவன் துயரறு சுடரடி தொழுது எழு’ என்று கூறப்பட்டது, அவனை அடைவது உண்மையான ஜ்ஞானத்தினாலே யாகையாலே அந்த ஜ்ஞானத்தை அடைவதும் அவனுடைய அனுக்ரஹத்தினாலே என்பது ‘மயர்வற மதி நலம் அருளினன் ‘ என்னப்பட்டது, இப்படி ஸர்வஜ்ஞனான பகவானால் அஜ்ஞான கந்தமில்லாதபடி அருளப் பெற்றவர் ப்ரத்யக்ஷீகரித்து வெளியிட்ட ப்ரபந்தமாகையினாலே இப்ரபந்தம் எல்லோருக்கும் உபாதேயம் என்பதும் விச்வஸநீயம் என்பதும் விவக்ஷிதம். இப்படிப் பகவான் அனுக்ரஹிப்பதற்குக் காரணம் அவனுக்கும் தமக்குமுள்ள ஸ்வாமித்வ தாஸத்வமாகையால் ஸம்பந்தம் அர்த்தாத் நிரூபிக்கப் பட்டதாயிற்று. ஆக மதி, நலம், தொழுது என்கிற பதங்களினால் விவக்ஷிதமான பக்தி ப்ரபத்தி களாகிற உபாயங்களும், துயரறு என்பதினால் ஸர்வாநிஷ்ட நிவ்ருத்தியும், எழு என்பதினால் பகவத் கைங்கர்யமாகிற அவாந்தர பலன்களும் என் மனனே என்று தம்முடைய மனது போலே அந்தரங்கர்களான சிஷ்ய ப்ரசிஷ்ய பரம்பரை குறிப்பிடப்பட்டு அவர்கள் அதிகாரிகள் என்பதும், விஷயமாகிய பகவானுடன் விஷய விஷயிபாவமும், உத்பாத்ய உத்பாதக பாவமும் ப்ரதி பாதிக்கப்பட்டபடியினால் விஷய ப்ரயோஜன அதிகாரி ஸம்பந்தங்கள் என்னப்படும் அனுபத்தி சதுஷ்டயமும் நிரூபிக்கப்பட்டதாயிற்று.

2.மங்களாசரணம்-இந்த ப்ரபந்தத்திற்கு ப்ரதான தாத்பர்யமாய் மற்ற எல்லா வஸ்துக்களைக் காட்டிலும் உயர்ந்ததான பரமாத்மாவை முதலடியிலேயே நிரூபித்திருப்பதினால் வஸ்து நிர்த்தேச மங்களமும், ‘எழு’ என்பதினால் ஆசீர்வாதரூப மங்களமும், ‘நலம் தொழுது’ என்கிற பதங்களினால் நமஸ்காராதிகளை உள்ளடக்கிக் கொண்டிருக்கிற பக்தியாகிற உபாயமும் நமச்சப்தார்த்தமான ப்ரபத்தியாகிற உபாயமும் கூறப்பட்டபடியினால் நமஸ்கார ரூபமான மங்களமும் செய்யப்பட்டதாகிறது. இந்த ப்ரபந்தத்தை லக்ஷ்மீவாசகமென்று ச்ருதி ப்ரஸித்தமான உகாரத்தினால் ஆரம்பித்திருப்பதினால் ‘தேவதா விசேஷம் எதுவென்று தெரிந்து கொள்ளுவதற்கும், அவளுடைய பர்த்தாவாகிய பகவான் நம்மால் அடையப்படுவதற்கும் விசேஷமான மங்களங்களை அடைவதற்கும் இவ்விடத்தில் லக்ஷ்மீ முதலில் சொல்லப் பட்டாள் ” என்று ஸ்ரீ கீதாபாஷ்ய தாத்பர்ய சந்த்ரிகையில் அருளிச் செய்திருக்கும் விசேஷாம்சங்களும் இங்கு விவக்ஷிதங்கள்.

3 சாஸ்த்ரார்த்தானுக்ரமம்-இந்த ப்ரபத்தத்தில் ப்ரதிபாதிக்கப்பட்டிருக்கும் அர்த்த விசேஷங்கள் மேலே 6 – ம் 8 – ம் சுலோகத்தின் விவரணத்தில் கண்டு கொள்வது.

4 ப்ரஹ்ம சப்தார்த்தநிரூபணம்-எண்ணிறந்த கல்யாண குணங்களையுடையவன் என்கிற முதலாவது அடியில் ‘உயர்வற’ என்பதினால் இப்படிப்பட்ட ஏற்றம் ஸ்வபாவத்திலேயே ஏற்பட்டது, ஒரு வித தபஸ்ஸு முதலியது செய்ததனுடைய பலனாகப் பெற்றதன்று என்று தெரிவிக்கிறபடியினாலே பகவானுடைய ஸ்வரூபம் ஹேயப்ரத் யகமாய் கல்யாணைகதாநமாய் இருக்கும் என்றதாயிற்று,

ப்ரஹ்ம என்னும் பதத்திற்கு மேன்மையையுடைய வஸ்து என்றர்த்தம், அயலாரையும் அப்படியே மேன்மையுடையவர்களாகச் செய்வதும் அதன் உட்பிரிவு ஆகையினால் எந்த வஸ்து மற்ற எல்லா வஸ்துக்களையும் விட உயர்ந்ததோ அது ‘ப்ரஹ்ம’ என்னும் பதத்தினால் சொல்லப்படும். இப்படியே யாஸ்கரும் நிருக்தி செய்திருக்கிறார் என்பது ப்ரஸித்தம். ஆகையினால் விசேஷமான தபஸ்ஸு முதலியவைகளைச் செய்து தங்கள் தங்கள் பதங்களைப் பெற்ற ப்ரஹ்மாதிகளைப் போலன்றிக்கே ஒரு விதமான ச்ரமமின்றியும், மற்றவர்களுக்கு இப்படிப்பட்ட உயர்வு இருக்கிற தென்று சொல்ல முடியாதபடியும் நிற்கும் எண்ணிறந்த கல்யாண குணங்களையுடையவன் என்பதை முதல் பாதத்தில் ‘உயர்வற உயர் நலமுடையவன்’ என்று நிரூபித்திருப்பதனாலும், இரண்டாம் மூன்றாம் பாதங்களில் அப்படிப் பட்ட மேன்மையை மற்றவர்களுக்குக் கொடுப்பவன் என்று அருளிச் செய்திருப்பதினாலும் திருமாமகள் கேள்வனாகிய தேவனே ப்ரஹ்ம சப்தத்திற்கு முக்யார்த்தம் என்று உபபாதிக்கப்பட்டதாயிற்று.

5– ஸேவ்ய ஸம்சோதனம்-த்யேயமாகிய பரமாத்ம ஸ்வரூபத்தை விளக்கிக் காட்டும் அதாவது எண்ணிறந்த கல்யாண குணங்களுக்கு இருப்பிடமாயிருக்கும் என்கிற முதல் பாதத்தில் “உயர்வற” என்பதினால் இப்படிப் பட்ட ஏற்றம் ஸ்வபாவத்திலேயே ஏற்பட்டது என்று காட்டப்பட்ட தாயிற்று. அன்றிக்கே கீதாசார்யன் “எந்தக் காரணத்தினால் நான் ப்ரக்ருதியையும்,  அத்துடன் சேர்ந்த பத்த ஜீவர்களைக் காட்டிலும் வேறுபட்டவனோ,  பரிசுத்த ஜீவாத்மாக்களையும் விட வேறுபட்டவனோ,  அதே காரணத்தினால் ச்ருதியிலும் ஸ்ம்ருதியிலும் புருஷோத்தமன் என்று ப்ரஸித்தி பெற்றவனாகிறேன்” என்று உத்கோஷித்த அம்சம் சொல்லப்பட்டதாகவுமாம். ‘மயர்வற’ இத்யாதியால் ஜ்ஞானத்தைக் கொடுத்தருளியவன் என்பதினாலும் ‘அயர்வறும்’ இத்யாதியால் நித்ய முக்தர்களுக்கு அதிபதி என்றதனாலும் இந்த ஏற்றம் காட்டப்பட்டதாகிறது.

6- அர்த்த பஞ்சக நிரூபணம்–இதிஹாஸ புராணங்களுடன் கூடிய வேதங்கள் எல்லாம் பரமாத்ம ஸ்வரூபத்தையும், ஜீவாத்ம ஸ்வரூபத்தையும், பகவானை அடைவதற்கு உபாயத்தையும், தடங்கலாய் நிற்கும் ப்ராப்திவிரோதிகளையும், பலனையும் கூறுகின்றன என்பது ப்ரஸித்தம். ‘உயர்வற உயர்நல முடையவன்’ என்று பரமாத்ம ஸ்வரூபமும், ‘என்’ என்பதினாலே ஜீவாத்ம ஸ்வரூபமும், துயர்’ என்று ப்ராப்தி விரோதியும், ‘நலம், தொழுது’ என்று உபாயத்தின் ஸ்வரூபமும், ‘எழு’ என்று பலனும் ப்ரதிபாதிக்கப் பட்டிருக்கின்றன.

7. ப்ர‌ண‌வார்த்த‌ நிரூப‌ண‌ம்–எப்ப‌டி ப்ர‌ண‌வ‌மான‌து எல்லாவேத‌ங்க‌ளிலும் சொல்ல‌ப்ப‌ட்டிருக்கும் அர்த்த‌ விசேஷ‌ங்க‌ளையும் உபபாதிக்கிற‌தோ, அதைப்போல‌வே அந்த‌ ப்ர‌ண‌வ‌த்தின் ந‌டு அக்ஷ‌ர‌மாகிய‌ உகார‌த்தின் பொருளாகிய‌ ப‌க‌வானுக்கே சேஷ‌பூத‌ம் என்கிற‌ அந்யயோக‌ வ்ய‌வ‌ச்சேத‌ம், அதாவ‌து ம‌ற்வ‌ர்க‌ளுக்குச் சேஷ‌பூத‌ர்க‌ள‌ல்ல‌ என்ப‌து த‌ன்னைவிட‌ வேறுப‌ட்ட‌ ம‌ற்ற‌ எல்லோர்க்கும் ஸ்வாமி என்று கூறுகிற‌ முத‌ல‌டியினாலும், ம‌கார‌த்தின் பொருளான‌ ஜ்ஞான‌த்தைக் குண‌மாக‌ உடைய‌வ‌ன் ஜீவாத்மா என்ப‌து, “ம‌தி, ந‌ல‌ம்” என்ப‌தினாலும், வேற்றுமையுட‌ன் கூடிய‌ அகார‌த்தின் அர்த்த‌மான‌ ஸ‌ர்வ‌ ர‌க்ஷ‌க‌னான‌ ப‌ர‌மாத்மாவிற்கே இந்த‌ ஜீவாத்மா சேஷ‌பூத‌ன் என்ப‌து “அய‌ர்வ‌றும்” இத்யாதியாலும் வெளியிட‌ப்ப‌ட்ட‌து. “அருளினன், துய‌ர‌று” இத்யாதியால் ப‌க‌வான் த‌ன்னுடைய‌ ப‌க்த‌ர்க‌ளுக்கு இஷ்ட‌ ப்ராப்தியையும் அநிஷ்ட‌ நிவ்ருத்தியையும் உண்டாக்குகிறான் என்ப‌து ஏற்ப‌டுகிற‌ப‌டியினால் அகாரார்த்த‌மாகிய‌ ஸ‌ர்வ‌ ர‌க்ஷ‌க‌த்வ‌ம் ப்ர‌திபாதிக்க‌ப் ப‌ட்ட‌தாகிற‌து.

8. ப‌ர‌ப‌க்ஷ‌ ப்ர‌திக்ஷேப‌ம்- “உய‌ர்வு” என்றார‌ம்பிக்கும் முத‌ல‌டியினால் எண்ணிற‌ந்த‌ க‌ல்யாண‌ குண‌ங்க‌ளை உடைய‌வ‌ன் என‌ச் சொல்ல‌ப்ப‌ட்டிருப்ப‌தினாலும், கார‌ண‌ம் ஒன்றும் கூற‌ப்ப‌டாமையினால் இவ‌ற்றை ஸ்வ‌பாவ‌த்திலேயே உடைய‌வ‌ன் என்று ஏற்ப‌டுகிற‌ப‌டியினாலும் ப‌க‌வானைத்த‌விர‌ வேறு ஒருவ‌ன் ப‌ர‌தேவ‌தை, மும்மூர்த்திக‌ளும் ஸ‌மம், மும்மூர்த்திக‌ளையும் விட‌ வேறுப‌ட்ட‌வ‌ன் ப‌ர‌தேவ‌தை என்றிவை முத‌லிய‌வ‌ற்றைக் கூறுப‌வ‌ர்க‌ளும், ப்ர‌ஹ்ம‌த்தின் ஈச்வ‌ர‌த்வ‌ம் ப்ர‌திபிம்ப‌ம் போன்ற‌து என்று கூறும‌வ‌ர்க‌ளும் நிர‌ஸிக்க‌ப்ப‌ட்டார்க‌ள். “எவ‌ன்” என்கிற‌ ப‌த‌ம் ப்ர‌மாண‌ங்க‌ளினால் ஏற்ப‌ட்ட‌ ப்ர‌ஸித்தியைத் தெரிவிப்ப‌தினால் ப‌ர‌மாத்மா இல்லை என்னும‌வ‌ர்க‌ள் நிர‌ஸிக்க‌ப்ப‌ட்டார்க‌ள். இந்த‌க் குண‌ங்க‌ளினால் ஆன‌ந்த‌வ‌ல்லி ஜ்ஞாப‌க‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு, அத்தால் ஸூர்ய‌ ம‌ண்ட‌ல‌த்தின் ந‌டுவே இருக்கும் புருஷ‌ன் சொல்ல‌ப்ப‌டுகிற‌ப‌டியினால் நாராய‌ண‌னே ப‌ர‌தேவ‌தை என‌ ள‌ற்ப‌டுகிற‌து. ஆகையினால் ப‌ர‌தேவ‌தை வேறு என்று நிரூபிக்கும் ப‌க்ஷ‌ங்க‌ளெல்லாம் நிர‌ஸிக்க‌ப்ப‌ட்ட‌ன‌வாயிற்று.

நலம்மதி, தொழுது” என்கிற பதங்களினால்  ஒர் உபாயத்தை அனுஷ்டிக்கவேண்டும் என்று ஏற்படுகிறபடியினாலே கேவலம் வாக்யார்த்த ஜ்ஞானத்தினால் மோக்ஷ‌ம் பெறலாம் என்கிற பக்ஷ‌மும் – “அருளினன்” என்பதினாலே கொடுப்பவன் வேறு வாங்குமவன் வேறு என்பதும், கொடுத்தது மதியும் நலமும் என்பது ஸித்திக்கிறபடியினாலே ஜஞானம் மாத்திரம் ஆத்மா என்கிற பகடிமும் — அயர்வறும் அமரர்கள் எனப்பன்மையாகக் கூறியிருப்பதினாலே ஆத்மா ஒன்று என்கிற பக்ஷம் மோக்ஷ‌த்தில் பரமாத்மாவுடனே  ஐக்யமடைகிறது என்னும் பக்ஷ‌மும், ஆத்மா ஸ்வதந்த்ரன் எனும் பக்ஷமும் — அடி என்பதினால் திவ்ய மங்கள விக்ரஹம் ஸித்திக்கிற படியினாலே பகவானுக்கு ரூபமில்லை எனும் பக்ஷமும் — லக்ஷ்மீ வாசகமான உகாரத்தினால் இந்தப் பாட்டு ஆரம்பிக்கப்பட்டிருப்பதினால் ல‌க்ஷ்மீ விசிஷ்டத்வம் ஸித்திக்கிறபடியினால் அதை அங்கீகரியாத பக்ஷங்களும் நிராகரிக்கப்பட்டனவாயிற்று.

9 பராரம்ப நிவாரணம்-பர ப்ரஹ்மம் நிர்க்குணமென்று சொல்லுமவர்கள் அவன் கல்யாண குணங்கள் நிறைந்தவன் என உபபாதிக்கும் இக்ரந்தத்தை ஆரம்பிக்கமுடியாதல்லவா என்று கருத்து. எவன் என ப்ரஸித்தியைக் காட்டுகிற இந்த க்ரந்தத்தை ப்ரஹ்மம் ஒன்றினாலும் அறியமுடியாத தென்ற‌வர்களும், ப்ரஹ்மமே இல்லையென்ப‌வ‌ர்க‌ளும் ஆரம்பிக்கமுடியாதல்லவா ? …

10 ஸ்வாரம்ப‌ ஸ‌மர்த்தன‌ம்-பகவான் எல்லாக் கல்யாண‌ குணங்களையும் உடையவனாகையினால் அவனைப் பற்றிய ஜ்ஞானம் ஸார்வபெளமனான பிதாவைப் பற்றிய ஜ்ஞானத்தைப் போல மிகவும் விரும்பத்தக்கதாகும். அப்படிப்பட்ட ஜ்ஞானத்தினால் பகவானிடத்தில் ப்ரீதியுண்டாகி, அவனை அடைய வேண்டுமென்கிற ஆசைபை உண்டாக்கி, அதற்கு உபாயமான பக்தியையோ ப்ரபத்தியையோ அனுஷ்டித்து, மோக்ஷ‌த்தை அடையலாம் என்றும், பகவானுக்குத் திவ்ய ரூபாதிகள் உண்டென்றும் நிரூபிக்கும் இக்ரந்தம் ஆரம்பணீய‌ம் என்றதாயிற்று,

ஆக இப்படி எல்லா வேதங்களும் சேர்ந்து செய்யும் பகவானுடைய ஸ்வபாவம் ஸ்வரூபம் முதலியவைகளின் ப்ரகாசத்தை இத் திருவாய்மொழி விசதமாக நிரூபிக்கிறது என்கிற அம்சம் ஒருவாறு உபபாதிக்கப்பட்டது.

         இப்படி ஸ‌கல வேத‌ங்க‌ளினுடைய‌ க்ருத்ய‌ங்க‌ளையும் செய்கிறது என்று நிரூபித்த‌ருளி, மேல்  ப்ர‌திபாதிக்க‌ப் ப‌ட்டிருக்கும் அர்‌்த்த‌ங்க‌ளை ஸ‌ங்க்ர‌ஹ‌மாக‌ அருளிச் செய்கிறார் – “ப்ராச்யே” என்றார‌ம்பித்து

ப்ராச்யே ஸேவாநுகு₃ண்யாத் ப்ரபு₄மிஹ ஶதகேsமம்ஸ்த முக்தேருபார்யம்

முக்தப்ராப்யம் த்₃விதீயே முநிரநுபு₃பு₃தே₄ போ₄க்₃யதா விஸ்தரேண |

ப்ராப்யத்வோபாயபா₄வௌ ஶுப₄ஸுப₄க₃தநோரித்யவாதீ₃த் த்ரு̆தீயே

அநந்யப்ராப்யஶ்சதுர்தே₂ ஸமப₄வதி₃தரைரப்யநந்யாத்₃யுபாய: ||

ஆழ்வார் இத்திருவாய்மொழியில் முத‌ல் ப‌த்தில் ப‌க‌வானை அடியார்க‌ள் வ‌ந்த‌டைய‌த் த‌குதியுள்ள‌மையால் மோக்ஷ‌த்திற்கு உபாய‌மென‌த் திருவுள்ள‌ம் ப‌ற்றினார். இர‌ண்டாம் ப‌த்தில் அவ‌னுடைய‌ போக்ய‌த்வ‌த்தின் மிகுதியாலே முக்த‌ர்க‌ளினாலே அடைய‌ப்ப‌டும‌வ‌னாக‌ நிர்ண‌யித்த‌ருளினார். மூன்றாம் ப‌த்தில் ப‌ல‌னாயும் அத‌ற்கு உபாய‌மாயும் இருக்கும் த‌ன்மைக‌ள் சுபாச்ர‌ய‌மான‌ திருமேனியுடைய‌ எம்பெருமானுக்கே என்று அருளிச் செய்தார். நான்காம் ப‌த்தில் ப‌க‌வானைத்த‌விர‌ வேறு ப‌ல‌னைக் கொள்ளாத‌வ‌ராக‌வும், ம‌ற்ற‌ ஆறு ப‌த்துக்க‌ளினால் ப‌க‌வானைய‌ன்றி வேறொன்றை உபாய‌மாகக் கொள்ளாத‌வ‌ராக‌வும் ஆனார்.

திருவாய்மொழியில் ப்ர‌திபாதிக்க‌ப்ப‌டும் முக்ய‌மான‌ அர்த்தத்தை வெளியிடுகிறார் — “தேவ‌:” என்றார‌ம்பித்து.

தே₃வ: ஶ்ரீமாந் ஸ்வஸித்₃தே₄: கரணமிதி₂ வத₃ந்நேகமர்த்த₂ம் ஸஹஸ்ரே

ஸேவ்யத்வாதீ₃ந் த₃ஶார்த்தா₂ந் ப்ரு̆த₂கி₃ஹ ஶதகை: வக்தி தத்ஸ்தா₂பநார்த்தா₂ந் |

ஐகைகஶ்யாத் பரத்வாதி₃ஷு த₃ஶககு₃ணேஷ்வாயதந்தே ததா₂ தே

தத்தத்₃ராதா₂கு₃ணாநாமவித₃த₄தி தத்பங்க்தய: பங்க்திஸங்க்₂யா: ||

ஆயிர‌ம் பாட்டுக்க‌ளையுடைய‌ இத்திருவாய்மொழியில் பெரிய‌ பிராட்டியை ஒரு க்ஷ‌ண‌ கால‌ம் கூட‌ப் பிரியாத‌ எம்பெருமான் த‌ன்னை அடைவ‌த‌ற்குத் தானே உபாய‌மாவான் என்னும் ஒரே அர்த்தத்தை அருளிச் செய்கிற‌வ‌ராய், அதை ஸாதிக்கக்கூடிய‌ ஸேவ்ய‌ன் (அடைய‌த் த‌குந்த‌வ‌ன்) முத‌லிய‌ ப‌த்து அர்த்த‌ங்க‌ளைப் ப‌த்துப் ப‌த்துக்க‌ளிலும் த‌னித்த‌னியாக‌ அருளிச் செய்கிறார். அந்த‌ப் ப‌த்து அர்த்த‌ங்க‌ளும் எல்லோரிலும் எல்லாவ‌ற்றிலும் மேற்ப‌ட்டிருக்கும் த‌ன்மை முத‌லிய‌ நூறு குண‌ங்க‌ளில் ஒவ்வொன்றாக‌ விரிவ‌டைகின்ற‌ன‌. அவ்வாறே ப‌த்து எண்க‌ளை உடைய‌ ப‌த்தாகிய‌ நூறு ப‌திக‌ங்க‌ளால் வெளியிட‌ப்ப‌டும் நூறு குண‌ங்க‌ளும் ஆயிர‌ம் எண்ணுள்ள‌ அந்த‌ந்த‌ப் பாசுர‌ங்க‌ளின் குண‌ங்க‌ளைப் பின்ப‌ற்றுகின்ற‌ன‌.

தேவ‌:ஸ்ரீமாந் –பெரிய‌பிராட்டியாருட‌ன் கூடின‌வ‌னாகையால் தேவ‌னான‌வ‌ன் என்ற‌ப‌டி. “திருமாம‌க‌ள் கேள்வா தேவா” என்ற‌ப‌டியினால் திருமாம‌க‌ளுக்குக் கேள்வ‌னாகையாலே இவ‌னுக்கு தேவ‌த்வ‌ம் ஸித்தித்தது என்று திருவுள்ள‌ம். இவ‌ள் ஸ‌ம்ப‌ந்த‌ம் பெறாமையால் ம‌ற்ற‌ தேவ‌தைக‌ளைப் ப‌ர‌தேவ‌தை என்று கூற‌ ப்ர‌மாண‌ங்க‌ள் முன்வ‌ர‌வில்லை. இவ‌ளுடைய‌ ச‌ம்ப‌ந்தத்தைப் ப‌ல‌ இட‌ங்க‌ளில் திருவாய்மொழியில் கூறியிருந்த‌போதிலும் ப‌ர‌தத்துவ‌ ப்ர‌திபாத‌க‌மான‌ “ஒண்டொடியாள் திரும‌க‌ளும் நீயுமே நிலா நிற்ப‌, கோல‌த்திருமாம‌க‌ளோடு உன்னை, நின் திருவ‌ருளும் ப‌ங்க‌ய‌த்தாள் திருவ‌ருளும்”, “உன் தாம‌ரைம‌ங்கையும் நீயும்”, “அக‌ல‌கில்லேன் இறையும் என்ற‌ல‌ர்மேல் ம‌ங்கை உறைமார்பா” என்றிவை முத‌லிய‌வை இங்க‌னுஸ‌ந்தேய‌ங்க‌ள். இந்த‌ ஒரு அர்த்தத்தைத்தான் ஸ்வாமி தேசிக‌ன் த‌ம‌க்கும் த‌ம் சிஷ்ய‌ர்க‌ளுக்கும் த‌ஞ்ச‌மாகக் க‌ருதினார் என்ப‌தை அவ‌ருடைய‌ அனேக‌ ப்ர‌ப‌ந்த‌ங்க‌ளில் காண‌லாம். தேவ‌:ஸ்ரீமாந் என்ப‌த‌ன் க‌ருத்து இப்ப‌த‌ங்க‌ளினாலோ இவ‌ற்றுக்கு ஸ‌த்ருச‌மான‌ ப‌த‌ங்க‌ளினாலோ நிரூபிக்க‌ப் ப‌ட்டிருக்கிற‌து. ஸ்ரீஹ‌ம்ஸஸ‌ந்தேச‌த்தில் “தேவ‌:ஸ்ரீமாந்என்ற‌ ப‌த‌ங்க‌ளையே உப‌யோகித்த‌ருளினார். “ச்ரிய‌:ப‌தி புருஷோத்த‌ம‌ன்” என்று ஸாரார்த்த‌மாக‌ அருளிச் செய்ய‌ப் ப‌ட்டிருக்கிற‌து. “தேவ‌:ஸ‌ஹைவ‌ச்ரியா” என்று த‌சாவ‌தார‌ ஸ்தோத்திர‌த்திலும், “ஸ்ரீம‌த்நாராய‌ண‌:” என்று ஸ்ரீந்யாய‌ ஸித்தாஞ்ஜ‌ன‌த்திலும் ,”த‌ம்ப‌தீ ஜ‌க‌தாம்ப‌தீ”, “போத‌ம‌ரும் திருமாதுட‌ன் நின்ற‌ புராண‌னையே”, “ஸ‌ந்த‌:ஸ்ரீச‌ம் ஸ்வ‌த‌ந்த்ர‌ ப்ர‌ப‌த‌ன‌ விதிநாமுக்த‌யே நிர்விச‌ங்கா:” என்று ஸார‌ சாஸ்திர‌த்திலும், ஸ்ரீத‌யாச‌த‌க‌த்திலும், ஸ்ரீஸ‌ங்க‌ல்ப‌ ஸூர்யோத‌ய‌த் திலும் இந்த‌ ஆகார‌ம் ப‌ர‌க்க‌ப் பேச‌ப் ப‌ட்டிருக்கிற‌து.

ஸ்வ‌ ஸித்தே:க‌ர‌ண‌ம் இதி வ‌த‌ந் ஏக‌ம‌ர்த்த‌ம் – த‌ன்னை அடைவ‌த‌ற்குத் தானே உபாய‌ம் என்கிற‌ ஒரே அர்த்தத்தை நிரூபியா நிற்கும்.

ப்ர‌ப‌ந்தத்தின் ந‌டுவில் ப்ர‌ப‌ந்த‌ ஸாரார்த்தத்தை நிரூபிப்ப‌து என்ப‌து ஓர் வ‌ழ‌க்கு. ஸ்ரீகீதையில் ஒன்ப‌தாம் அத்யாய‌த்தின் இறுதி ச்லோக‌த்தில் உபாய‌மான‌ ப‌க்தி யோக‌ம் கூற‌ப்ப‌ட்ட‌து.

திருப்பாவையில் 15ம் பாட்டில் பாகவதர்களின் பெருமை பேசப்பட்டது. ஒரு காரணமுமின்றியே சில பாகவதர்கள் நம் விஷயத்தில் அந்யதாவாகத் திருவுள்ளம் பற்றினாலும் நாம் அதற்காக அபசாரக்ஷாமணம் செய்துகொள்ளவேண்டும் என்று.இப்பாட்டில் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. அதைப்போல் திருவாய்மொழியிலும் ஐந்தாம் பத்தின் இறுதியில் ஆழ்வார் தாம் தஞ்சமாக நினைத்திருப்பதை வெளியிட்டிருக்கிறார்.

‘நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கென்று நாடொறும் ஏகசிந்தையனாய்க் குருகூர்ச்சடகோபன்’ என்பது ஆழ்வாரின் அனுஸந்தானம். இதன் திருவாறாயிரப்படியில் ‘எம்பெருமானுடைய திருவடிகளே நமக்குச் சரணம் என்று நாள் தோறும் இதொரு மனோரதமே உடைய ஆழ்வார் ………. இப்பத்தும் கற்றார் ஸ்ரீவைகுண்டத்திலேபோய் எம்பெருமானை நித்யானுபவம் பண்ணப் பெறுவர்’ என்று வ்யாக்யாநம். ஸ்ரீவைஷ்ணவர்களான நமக்கு எம்பெருமான் திருவடிகளில் சரணாகதி செய்வதே உத்தமமான உபாயம் என்றும், அதை த்வயத்தினால் அனுஷ்டிக்கவேண்டும் என்றும் நம் பூர்வாசார்யர்கள் நிஷ்கர்ஷித்திருக்கிறார்கள். உபாயம் அனுஷ்டிப்பதற்கு முன் பெரியபிராட்டியாரிடம் புருஷகாரமாயிருக்கும்படி ப்ரார்த்திக்கவேண்டும். இது முதல்படி. அவளுடன் கூடிய பகவானுடைய திருவடிகளில் சரணாகதியைச் செய்வது இரண்டாவது படி. ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டு அர்ச்சிராதி கதியினால் ஸ்ரீவைகுண்டத்தை அடைந்து திவ்ய தம்பதிகளான அவர்களுக்கே ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தோசித ஸர்வ வித கைங்கர்யங்களையும் செய்வது மூன்றாவது படி. புருஷகாரமாயிருக்கும் ஆகாரம் பெரிய பிராட்டியாருக்கு மட்டும் அஸாதாரணம். உபய தசையிலும் உபேய தசையிலும் அவர்கள் இருவருடைய சேர்த்தியே நமக்குத் தஞ்சம் என்பதே ஆழ்வாருடைய திருவுள்ளமென அறிந்து ஆசார்யன் தம்முடைய பரம க்ருபையினாலே இங்கு இப்படி ஸங்க்ரஹித்தருளிச்செய்தாராயிற்று.

உபாய ப்ரதிபந்தகங்களான பாபங்களைப் பகவானைப் போலவே பிராட்டியும்போக்குகிறாள் என்பது ‘வேரி மாறாத பூமேலிருப்பாள் வினைதீர்க்குமே’ (4 – 5 – 11) என்று அருளிச் செய்யப்பட்டது. ‘இத்திருவாய்மொழி வல்லாருடைய ஸ்மஸ்த துக்கங்களையும் பகவதாச்ரித வாத்ஸல்யாதி கல்யாணகுணைகபோயான பெரியபிராட்டியார் போக்கும்’ எனத் திருவாறாயிரப்படியிலே வ்யாக்யாநம்.

ஆறாம் பத்து பத்தாம் திருவாய்மொழி பத்தாம்பாட்டில் ஆழ்வார் ஸ்வானுஷ்டான முகமாக சரணாகதி செய்யும் ப்ரகாரத்தை நிரூபித்தி ருக்கிறார். அது த்வய விவரணமென்பது ஸம்ப்ரதாயம்.

உலகமுண்ட பெருவாயா ( 8 – 10 ) திருவாறாயிரத்தின் அவதாரிகையில் ‘இப்படி திருநாட்டிலே கேட்கும்படி கூப்பிட்டழைத்தும் அவனைக் காணப் பெறாமையாலே, இனி அவனைக்காண்கைக்கு உபாயம் இவன் திருவடிகளைச் சரணம் புகுகை போக்கி மற்றென்று மில்லை என்று பார்த்து, இவனுடைய காருண்ய வாத்ஸல்யாதி குணங்களைப் பற்றாசாகச் சொல்லிக் கொண்டு பிராட்டி புருஷகாரமாக ஸர்வலோக சரண்யனான திருவேங்கடமுடையான் திருவடிகளைச் சரணம் புகுகிறார்’ என்றும், அகலகில்லேன் பாட்டு அவதாரிகையில் ” உன் திருவடிகளை அநந்ய சரணனான அடியேன் அநந்யப்ரயோஜநனாய்க் கொண்டு பெரிய பிராட்டியார் புருஷகாரமாகச் சரணம்புகுந்தேன். இப்போதே நிரஸ்த ஸமஸ்த ப்ரதிபந்தகனாய் உன் திருவடிகளிலே ஸர்வ காலமும் ஸர்வ கைங்கர்யமும் அடியேன் பண்ணப் பெறவேணும் ” என்றும், இதனுடைய வ்யாக்யானமான 24000 படியில் ‘இங்கு பிராட்டிக்குப் புருஷகாரத்வம் சொன்னது இவளுடைய ஸித்தோபாய விசேஷண பாவத்திற்கும் உபலக்ஷணம் அல்லது அவ் விசேஷண பாவத்தை வ்யவச்சேதித்தபடியன்று. த்வயத்திலும் த்வய விவரணமான கத்யத்திலும் இப்பாட்டிலும் இவளுக்கு ஸித்தோபாய விசேஷணத்வம் சப்தஸ்வாரஸ்யத: ப்ராப்த மாயிருக்கையாலே அத்தை இங்கே வ்யவச்சேதிக்கக்கூடாதிறே. ஆகையால் இவ்விசேஷண பாவத்தை எடாதே புருஷகாரபாவத்தை எடுத்தது எம்பெருமானிற் காட்டில் இவளுக்குள்ள ஏற்றம் சொல்லுகைக்காகவத்தனை’ என்றும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது,

இப்படிக் கொள்ளாவிட்டால் ‘பூமேலிருப்பாள் வினைதீர்க்குமே’ என்கிற பாட்டின் வ்யாக்யானத்தில் ‘ஸமஸ்த துக்க’ என்றதுடன் விரோதிக்கும். ப்ரஹ்மசர்ய வேஷத்தைப் பூண்டு மஹாபலி யஜ்ஞவாடத்திற்குச் சென்ற காலத்திலும் அவனுடைய திருமார்வத்தை விட்டு அகலாதவள் இப்பொழுது தன்னுடைய தாஸபூதன் சரணாகதி செய்யும் ஸமயத்தில் எங்கு சென்றாள், ஏன்சென்றாள் என்றால் ஸமாதானம் சொல்லமுடியாதன்றோ?

இத்திருவாய்மொழியின் நாலாம் பாட்டிலும் ‘திருமாமகள் கேள்வா! தேவா’ என்று இவளுடைய ஸம்பந்தத்தால் அவன் ஏற்றம் பெற்றமை கூறப்பட்டிருக்கிறது,

இந்தத் திருவாய்மொழியின் நிகமனப்பாட்டிலும் ‘அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்று அருள் கொடுக்கும் படிக்கேழில்லாப் பெருமானை’ என்று அருளிச் செய்யப் பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் திருவுள்ளத்தில் கொண்டு இங்கே ‘தேவ: ஸ்ரீமாந்………ஏகமர்த்தம்’ என்று ஸங்க்ரஹிக்கப் பட்டது.

இந்த ஒரு அர்த்தத்தை ஸ்தாபிப்பதற்காகப் பத்துப் பத்துக்களிலும் அவன் ஸேவ்யன்அதிபோக்யன் என்றிவை முதலாகப் பத்து அர்த்தங்களையும், அப்படியே அவன் ஸேவ்யன் என்பதை நிரூபிப்பதற்காக பரம்நிர்வைஷம்யம் என்னும் பத்துக்குணங்களையும், அந்தப் பரத்வத்தை ஸ்தாபிப்பதற்காக நிஸ்ஸீமோத்யத்குண‌த்வம், அமிதரஸத்வம் முதலிய பத்துக் குணங்களையும் அனுஸந்தித்தருளினார் என்றபடி. அதாவது திருவாய்மொழியில் பல ச்ருதியான நூறு பாட்டுக்களை விட்டு விட்டால் 1002 பாட்டுக்கள் உள. இவை ஒவ்வொன்றிலும் ஒரு குணமாக 1002 குண‌ங்களும், இவைகளில் பத்துப் பத்துக் குணங்களினால் 100 திருவாய்மொழிகளில் 100 குணங்களும், இந்த 100 குணங்களில் பத்துப் பத்துக் குணங்களாகப் பத்துப் பத்துக்களில் 10 குணங்களுமாக 1112 குணங்கள் ப்ரதிபாதிக்கப்பட்டிருக்கின்றன. எப்படி எல்லா வேதங்களும் பகவானுடைய ப்ராப்ய‌த்வ‌த்தையே கூறுகின்றனவோ, அப்படியே ஸர்வீய சாகையான‌ ஸ்ரீத்ரமிடோபநிஷத்தில் அவன் ப்ராப்ய‌ன் மாத்திரமல்லன்,ப்ராபகனும் அவனே என்றும், அப்படி ப்ராப்யனுமாய் ப்ராபகனுமாய் இருக்கும் ஆகாரம் திருமாமகளுடன் சேர்ந்து நிற்பவனுக்கே என்றும் ஆழ்வார் இத்திருவாய் மொழியில் உபபாதித்தருளினார் என்று ஆழ்வார்கள் மகிழ்ந்து பாடிய தமிழ்மறைகள் தெளியவோதித் தெளியாத மறைநிலங்கள் தெளிந்தவரான சந்தமிகு தமிழ் மறையோன் தூப்புல் தோன்றும் வேதாந்த குரு நிஷ்கர்ஷித்தருளினாராயிற்று.

இந்த ச்லோகத்திற்கு இப்படி அர்த்தம் என்று நிர்வஹித்தருளிய அஸ்மத் ஸ்வாமி, ஓருருவில் உபய வேதாந்தங்களைப் போலே ப்ரமாண‌ தம‌மாக அங்கீகரிக்கப்பட்ட ஸ்ரீகீதோபநிஷத்திலும் இவ்வர்த்தமே நிரூபிக்கப் பட்டிருக்கிறது என்பது ஸ்ரீஆளவந்தார் ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹத்தில் பரப்ரஹ்மமே ப்ராப்யமாகையால் அந்தப் பரப்ரஹ்ம‌ம் நாராயணனே என “நாராயண: பரம்ப்ரஹ்ம கீதா சாஸ்த்ரே ஸமீரித” என்று அருளிச்செய்தார். இதின் மொழிபெயர்ப்பு என்று சொல்லக்கூடிய ஸ்ரீகீதார்த்த ஸ‌ங்க்ரஹப் பாட்டில் இந்த ச்லோகத்தின் கருத்தை “அருமறை உச்சியுள் ஆதரித்தோதும் அரும் பிரம‌ம் திருமகளோடு வரும் திருமால் என்று தானுரைத்தான் தருமமுகந்த தனஞ்சயனுக்கு அவன் சாரதியே ” என்று அருளிச் செய்திருப்ப‌தைப் பராமர்சித்தால் இவ்வர்த்தம், அதாவது ச்ரிய:பதியான பகவானே பரப்ரஹ்மம் என்னுமர்த்தம் தாம் கூறுவதொன்றன்று, இது ஸ்ரீகீதாசார்யனாலே சொல்லப்பட்டது என்றேற் படுகிறது. தத்துவார்த்தம் இப்படியிருக்க இந்த லோகத்தில் இப்பொழுது இதற்கு மாறாகப் பலர் பலபடிகளில் கூறிப் பரம பலத்தைத் தாங்களும் பெறாமல் போவதுடன் தங்களை ந‌ம்பியிருப்பவர் களுக்கும் அது கிட்டாமலிருக்ககும்ப‌டி செய்கிறார்க‌ளே, ஐயோ! க‌லியின் கொடுமை! “ என்று க‌ண்ணீர் விட்டுக் க‌த‌றும்ப‌டியாய் இருந்தது.

இப்ப‌டிக் கீழ் சுலோக‌த்தில் இந்த‌ ப்ர‌ப‌ந்தத்தில் ப்ர‌திபாதிக்க‌ப்ப‌டும் ப்ர‌தான‌த‌மமான‌ அர்த்த‌விசேஷ‌ம் ச்ரிய‌:ப‌தியான‌ எம்பெருமான் த‌ன் திருவ‌டிக‌ளை அடைவ‌த‌ற்குத் தானே உபாய‌ம் என்று அருளிச்செய்து, அது திருவாய்மொழியில் ப‌த்து த‌ச‌க‌ங்க‌ள், நூறு திருவாய்மொழிக‌ள், ஆயிர‌ம் பாட்டுக்க‌ள், இவைக‌ளால் ப்ர‌திபாதிக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து என்ப‌து நிரூபிக்க‌ப்ப‌ட்ட‌து. மேல் சுலோக‌த்தில் இந்த‌ அர்த்தத்தையே அனுவ‌தித்துக்கொண்டு, ப‌த்துப் ப‌த்துக்க‌ளினாலும் இவ்வ‌ர்த்த‌ம் உபபாதிக்க‌ப்ப‌டுகிற‌ப‌டியை அனுஸ‌ந்தித்த‌ருளுகிறார் – “ஸேவ்ய‌த்வாத்” என்றார‌ம்பித்து.

ஸேவ்யந்வாத் போ₄க்₃யபா₄வாத் ஶுப₄தநுவிப₄வாத் ஸர்வபோ₄க்₃யாதி₄கத்வாத்

ஶ்ரேயஸ்தத்₃தே₄நுதா₃நாத் ஶ்ரிதவிவஶதயா கா₂ஶ்ரிதாநிஷ்டஹ்ரு̆த்தவாத் ।

ப₄க்தச்ச₂ந்தா₃நுவ்ரு̆த்தே: நிருபதி₄கஸுஹ்ரு̆த்₃பா₄வத: ஸத்பத₃வ்யாம்

ஸாஹாய்யாச்ச ஸ்வஸித்₃தே₄: ஸ்வயமிஹ கரணம் ஶ்ரீத₄ர: ப்ரத்யபாதி₃ ।|

ஸேவ்யத்வாத் – பகவானே ஸேவிக்கப்படத் தகுந்தவனாயிருப்பதாலும்,போக்யபாவாத் — – அவ‌னே அனுபவிப்பதற்கு ஏற்றவனாகையாலும், சுபதனுவிபவாத் – மங்களமான திருமேனியின் பெருமையினாலும், ஸர்வபோக்யாதிகத்வாத் – போக்யங்களான எல்லாவற்றிற்கும் மேற்பட்ட போக்யனாயிருப்பதினாலும், ச்ரேய: தத்ஹேதுதாநாத் – புருஷார்த்தத்திற்கும், அதன் உபாயத்துக்கும் காரணமாய் நிற்பதாலும், ச்ரிதவிவசதயா – – ஆச்ரிதர்களுக்குப் பரதந்த்ரனாய் இருப்பதினாலும், ஸ்வாச்ரிதாநிஷ்ட ஹ்ருத்த்வாத் – தன் அடியார்களின் அதிஷ்டங்களைப் போக்குமவ னாகையாலும்,பக்தச்சந்தானுவ்ருத்தே: -அடியார்களின் கருத்தைத்தான் தழுவி நடப்பதினாலும், நிருபதிக ஸுஹ்ருத்பாவத: – காரணம் இது என்று நம்மால் அறுதியிட முடியாதபடி தோழனாய் நிற்பதினாலும், ஸத்பதவ்யாம் ஸாஹாய்யாச்ச – சிறந்த (அர்ச்சிராதி) மார்க்கத்தில் துணை நிற்பதினாலும், இஹ — திருவாய்மொழியாகிற இந்தப்ரபந்தத்தில், ஸ்ரீதர: – ச்ரிய:ப‌தியான ஸர்வேசுவரன், ஸ்வஸித்தே: – தன்னைப் பெறுவதாகிற பலனுக்கு, ஸ்வயம் – தானே, கரண‌ம் – ஸாதனம் என்று, ப்ரத்யபாதி – விளக்கப் பட்டுள்ளான்.

இந்தப் பத்துக் காரணங்களையும் (அர்த்தங்களையும்) முதல் பாட்டிலேயே ஸ‌ங்க்ரஹமாக நிரூபித்துள்ளார். எங்ஙனே என்னில் :

ஸேவ்யத்வாத்-அயர்வறும் அமரர்கள் அதிபதி,–அருளினன், அடிதொழுது

போக்யபாவாத்-உயர்வற உயர்நலம் உடையவன்

சுபதநுவிபவாத்-சுடர் அடி – திருவடி திவ்யமங்கள விக்ரஹத்திற்கு உப‌லக்ஷணம்

ஸ்வரபோக்யாதிகத்வாத்–அயர்வறும் அமரர்கள் அதிபதிஎன்பதினால் பகவான் நித்யஸூரிகளும் முக்தர்களும் எப்பொழுதும் அனுப‌வித்துக் கொண்டிருப்பது ஏற்படுகிற‌ப‌டியினால் அவனுடைய அதிபோக்யத்வம் கூறப்பட்டதாகிறது:

ச்ரேய:தத்ஹேதுதாநாத்-மதிநலம் அருளினன்

ச்ரிதவிவசதயா  -அடிதொழுது எழும்படி அவன் அவதார தசைகளில் ஸேவை ஸாதிக்கிருன் என்றபடி

ஸ்வாச்ரிதா நிஷ்டஹ்ருத்த்வாத்-துயர் அறு

பக்தச்சந்தாதுவ்ருத்தே-அயர்வறும் அமரர்கள் அதிபதி – ஸூரிக‌ளுடைய‌ அதிபதியாயிருந்த போதிலும், பக்தன் இஷ்ட ப்ரகாரம் தான் நடந்து கொள்ளுகிறான் என்றபடி

நிருபதிகஸுஹ்ருத்பாவ -ம‌திநலம் அருளினன்

ஸ‌த்ப‌த‌வ்யாம் ஸாஹாய்யாச்ச-அயர்வறும் அமரர்கள் அதிபதி ப‌க‌வ‌ான் நித்யஸூரிகளுக்கு நாத‌னாகையாலே அவனுடைய ஆஜ்ஞையை சிரஸா வஹித்து அர்ச்சிஸ் முதலிய ஸூரிகள் முக்தாத்மாவை அர்ச்சிராதி மார்க்கத்தில் எழுந்தருள‌ப் பண்ணுகிருர்களே யாகிலும் ப‌க‌வ‌ான் அக்காலத்தில் அவர்க‌ளுக்கு அந்தர்யாமியாக இருந்து கூட‌ வழி நடத்துகிறான் என்பதும்: வைகுண்ட லோகத்தை அடைந்ததும் ஸூரிகளுடைய பலவித ஸ‌த்கார‌ங்களான பிறகு, பெரிய பிராட்டியார் மூலமாகவும், அதுவும் போதாது என்றுகொண்டு “வந்து அவர் எதிர் கொள்ள” என்கிறபடியே பகவான்தானே வந்து எதிர்கொள்ளுகிறான் என்பதும் இங்கு விவக்ஷிதம்.

இப்ப‌டி ச்ரிய‌:ப‌தியான‌ ப‌க‌வான் த‌ன்னை அடைவ‌த‌ற்குத் தானே உபாய‌ம் என்னும் அர்த்தத்தைஇர‌ண்டு சுலோக‌ங்க‌ளினால் உபபாதித்த‌ருளி, அந்த‌ ஸேவ்ய‌த்வ‌ம் முத‌லிய‌ ப‌த்துக் குண‌ங்க‌ளையும் ப்ர‌திபாதிக்கும் க்ர‌ம‌த்தை நிரூபிக்கக்கோலி, அதை ஸ‌ங்க்ர‌ஹ‌மாக‌ ஒரு ச்லோக‌த்தில் அருளிச் செய்கிறார் —- “ப்ரூதே” என்றார‌ம்பித்து.

ப்₃ரூதே கா₃தா₂ ஸஹஸ்ரம் முரமத₂நகு₃ணஸ்தோமக₃ர்ப₄ம் முநீந்த்₃ர:

ப்ரத்யேகம் சாத்ர கா₃தா₂: ப்ரதி₂தவிபு₄கு₃ணா: ஸ்பஷ்டமத்₄யக்ஷயாம: |

தத்ராஸங்கீர்ணதத்தத் த‌3ஶககு₃ணஶதஸ்தா₂பநௌசித்யயுக்தாந்

ஐத₃ம்பர்யாவருத்₃தா₄நக₃ணிதகு₃ணிதாந் தத்₃கு₃ணாந் உத்₃க்₃ரு̆ணீம: ||

முநீந்த்ர: – முனிவர்களுள் தலை சிறந்து நிற்கும் ந‌ம்மாழ்வார், காதாஸஹஸ்ரம் – ஆயிரம் பாசுரங்களையும், முரமதனகுண‌ ஸ்தோம கர்ப்பம் – எம்பெருமானுடைய திருக்கல்யாண‌ குண‌ங்களின் கூட்டங்களைத் தம்முள் பொதிந்து கொண்டிருக்குமாறு, ப்ரூதே – அருளிச் செய்கிறர். அத்ரச – இத்திருவாய்மொழியில், காதா-பாசுரங்களை, ப்ரத்யேகம் – ஒவ்வொன்றும், ப்ரதிதவிபுகுணா:- எம்பெருமானுடைய குணங்களை வெளிப்படுத்துவனவாக, ஸ்பஷ்டம் – தெளிவாக, அத்ய க்ஷ‌யாம– கண்கூடாகக் காண்கிறோம், தத்ர – அதில், அஸ‌ங்கீர்ண தத்தத் தசககுணசத ஸ்தாபந ஔசித்ய யுக்தாத் – கூறியது கூறாத அந்தந்தப் பதிகங்களின் நூறு குணங்களை ஸ்தாபிப்பதில் பொருத்தமுடையனவாய், ஐதம்பர்யாவ்ருத்தாத் – அக் கருத்தையே வற்புறுத்துதலில் நோக்கமுடையனவாய், அகணித குணிதாத் – மறுமுறை கூறப்பட்டன வாயினும், (ப்ரயோஜனமுடையதாகையினாலே குற்றமற்றனவான), தத் குணாந் – அந்தந்தப் பாசுரங்களில் விளக்கப்படும் குணங்களை, உ.த்க்ருணீம – எடுத்துக் கொள்ளுகிறோம்..

இந்த ப்ரதிஜ்ஞை மேல் பதினோராம் சுலோக்ம் முதல் ப்ரதிப்ாதிக்கப்பட்டிருக்கும் ப்ரகாரம் மேலே திருவாய்மொழிதோறும் காட்டப்பட்டிருக்கிறது. அதில் சிற்சில குணங்கள் மறுபடியும் கூறப் பட்டிருந்தபோதிலும் அந்தத் திருவாய்மொழி ப்ரகரணத்திற்கு ப்ரயோஜனமாயிருப்பதினால் அவைகள் ஸங்க்ரஹிக்கப்பட்டிருக்கின்றன என்று கருத்து. கீழ் இரண்டாம் சுலோகத்தில் உபபாதிக்கப் புட்டிருக்கிற‌படியே திருவாய்மொழியாகிற திருப்பாற்கடலை ஆசார்ய ஸார்வபெளமன் தம்முடைய அநிதரஸாதாரணமானதும் அத்யுத்க்ருஷ்டமென்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டதுமான ஜ்ஞானத்தை ம‌த்தாக நாட்டி, யதிவரனார் மடைப்பள்ளி வந்த மண‌மாகிற யதிராஜமஹாநஸ ஸம்ப்ரதாயத்தைக் கடைகயிறாக் கொண்டு கடைந் தருளின பொழுது உண்டான குண விசேஷம் ஒவ்வொன்றையும் ஒரு ரத்னமாகக்கொண்டு அவற்றை எடுத்து ஒரு மாலையாகச் சேர்க்கும்பொழுது அந்தந்த ப்ரதான குணங்களை ப்ரதிபாதிப்பதில் உபயோகமிருப்பதினால் புனருக்தமேயாகிலும் மறுபடியும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த சுலோகத்தின் தாத்பர்யத்தை விளக்கும்பொழுது அஸ்மத் ஸ்வாமி “ஸ‌ர்வந்த்தர ஸ்வதந்த்ரராகையாலே தட்டானாயிருந்து ரத்னஹாரம் செய்தருளினபடி இது, எப்படி ஒரு தட்டான், ஒரு உத்தமமான ஹாரத்தைச் செய்யும்பொழுது, பல வகைகளான ரத்னங்களைச் சேகரித்து, அவற்றைப் பிரித்து, தன் முன் பல ரகங்களாக வைத்துக் கொண்டு, ஹாரத்திற்குப் பொருத்தமான பச்சை சிவப்பு வெள்ளை மஞ்சள் முதலிய கற்களைப் பொறுக்கி எடுத்துக் கட்டுவனோ, அதைப்போலவே திருவாய்மொழிப் பாட்டுக்களில் ப்ரதிபாதிக்கப் பட்ட குணங்கள் ஸ்வாமி தேசிகனுக்குத் முன்பே மானஸமாகத் தோன்ற, அவற்றிலிருந்து வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு, ஒருமாலையாகக் கோக்கிருர் என்பது இங்கு விவக்ஷிதமாகும்” என்று நிர்வஹித்தருளும்படி இருந்தது.

இப்படித் திருவாய்மொழியினுடைய தாத்பர்யத்தை வெளியிடுகிற‌ இந்த ஸ்ரீத்ரமிடோப நிஷத் தாத்பர்யர‌த்னாவளியானது ஸந்த்வஸ்தர்கள் எல்லோராலும் தரிக்கப்பட வேண்டியது என்று அருளிச் செய்து உபோத்காதத்தை உபஸம்ஹாரம் செய்தருளுகிறார்.

இச்சா ஸார‌த்ய‌ ஸ‌த்யாபித‌குண‌ க‌ம‌லாகாந்த‌ கீதாந்த‌ ஸித்ய‌த் சுத்தாந்த‌ ஆசார‌ சுத்தை: —தானே விரும்பி ஆசையோடு செய்த‌ தேரோட்டும் தொழிலினால் உண்மையாகக் காட்ட‌ப்ப‌ட்ட‌ ஸௌல‌ப்ய‌ம் முத‌லிய‌ குண‌ங்க‌ளையுடைய‌ ச்ரிய‌:ப‌தியின் ச‌ர‌ம‌ சுலோக‌த்தால் (கீதை 18 – 68-ம் சுலோக‌த்தால்) ஏற்ப‌ட்ட‌ அந்த‌:புர‌த்து ஒழுக்க‌த்தால் (வேறு உபாய‌த்தையும் ப‌ல‌னையும் நாடாத‌ த‌ன்மை முத‌லிய‌வ‌ற்றால்) மிக‌ ப்ர‌ஸித்த‌ர்க‌ளான‌ ப‌ர‌மைகாந்திக‌ளால்,

அந‌க‌ குண‌க்ர‌ந்தி ப‌ந்தானுப‌த்தா – குற்ற‌ம் க‌ல‌வாத‌ சிற‌ந்த‌ குண‌ங்க‌ளின் குழுவின் தொட‌ர்புடைய‌தாயும், அகில‌ ப‌யோத்தாரிணீ : ஸ‌ம்ஸார‌ம் அனைத்தையும் போக்க‌வ‌ல்ல‌துமான‌, இய‌ம் — இந்த‌, தத்தாத்ருக் – அள‌வ‌ற்ற‌ பெருமையை யுடைய‌, தாம்ர‌ப‌ர்ணீ த‌ட‌க‌த‌ —தாம்ர‌ப‌ர்ணீ நதிக்க‌ரையில் திருவவ‌தார‌ம் செய்த‌ருளி, ச‌ட‌ஜித் – ந‌ம்மாழ்வாரால், த்ருஷ்ட‌ —காண‌ப்ப‌ட்ட‌, அதாவ‌து ப்ர‌த்ய‌க்ஷீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌, ஸ‌ர்வீய‌சாகா – எல்லோரும் க‌ற்க‌ உரிய‌ த‌மிழ்ம‌றையின், காதா தாத்ப‌ர்ய‌ ர‌த்னாவ‌ளீ – பாசுர‌ங்க‌ளின் க‌ருத்துக்க‌ளாகிய‌ ர‌த்ன‌ங்க‌ளின் குவிய‌லை வெளியிடுகின்ற‌ இந்த‌ தாத்ப‌ர்ய‌ ர‌த்னாவ‌ளி என்னும் ஸூக்தியான‌து, தார‌ணீயா –ஹ்ருத‌ய‌த்திலே த‌ரிக்க‌த்த‌க்க‌தாகும், அனுஸ‌ந்திக்க‌த்த‌க்க‌தாகும் என்ற‌ப‌டி.

இந்த‌ க்ர‌ந்தத்திற்கு அதிகாரிக‌ளை – “இச்சா” இத்யாதியால் அருளிச் செய்திருக்கிறார். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ப்ரதானமான சரணாகதியை விதிக்கிற ஸ்ரீகீதை 18 – ம் அத்யாயம், 68-ம் சுலோகம் சரம சுலோகம் என்னப்படும். இது கீதையின் இறுதியில் கூறப்பட்டிருப்பதினால் ‘கீதாந்த” என்னப்பட்டது. இதில் நிஷ்ட்டையுடைய பாகவதர்களின் அனுஷ்டானம் அந்த:புர ஒழுக்கம் எனப்படும். இவர்கள்தாம் பரமைகாந்திகள் என்னப்படுமவர்கள். அப்படிப்பட்ட பாகவதர்களினால், கீழ் இரண்டாம் சுலோகத்தில், *அநுபதிவிபுதை:அர்த்தித” என்பதை இங்கு இப்படிக் கூறியபடி. ஹேயப்ரத்யநீக கல்யாணைகதாநனான பகவானுடைய திருக்கல்யாண குணங்களை ப்ரதிபாதிக்கிறபடியினால் ‘அநககுண’ என்னப்பட்டது. ‘க்ரந்தி பத்தானுபத்தா ” என்றது அந்தக் குணங்களை ஒருமாலையாகக் கோத்துக் காட்டியபடி என்றபடி.

தத்தாத்ருக்” என்கிற விசேஷணம் தாம்ரபர்ணிக்கும், சடஜித்தான ஆழ்வாருக்கும் தாத்பர்ய ரத்னாவளி என்பதற்கும், ஸர்வீயசாகா என்பதற்கும் விசேஷணம், தத்தாத்ருக் தாம்ரபர்ணி தடகத என்றது கலியுகத்தில் நாராயண பராயணர்கள் பலர் அவதரிக்கப் போகிறார்கள் என்று ஸ்ரீபாகவதத்தில் கூறும் பொழுது முதல் முதலில் எடுக்கப்பட்ட ஏற்றம் பெற்ற தாம்ரபர்ணி என்றபடி,

தத்தாத்ருக் சடஜித் ’ என்று ஆழ்வாருடைய அவதார வைலக்ஷண்யம் தெரிவிக்கப்படுகிறது. ஸாமாந்ய குழந்தையைப் போலப் பிறந்தபோதிலும் பிறந்தபிறகு ஸ்தத்யபாநாதிகளுள் ஒன்றும் செய்யாமல் பகவதநுபவத் தினாலேயே வளர்ந்த ஏற்றம் தெரிவிக்கப்பட்டதாகிறது. தத்தாத்ருக் தாத்பர்ய ரனாவளி: ‘ என்று வக்த்ரு வைலக்ஷண்யம் ஸூசிப்பிக்கப்படுகிறது.

தத்தாத்ருக்ஸர்வீயசாகா என்பதினால் த்ரைவர்ணிகர்களினால் மட்டும் அத்யயனாதிகள் செய்யப்படக் கூடிய ஸம்ஸ்க்ருத வேதம் போலன்றிக்கே ஸர்வரும் அதிகரிக்கலான உத்கர்ஷம் பெற்றிருப்பது கூறப்பட்டதாகும். இந்த ஏற்றம் வேறொரு முகமாக இறுதியில் ‘ச்ராவ்யவேதாத்” ன்ன்று அருளிச் செய்யப்பட்டிருக்கிறது.

ஸ்ரீகீதாபாஷ்ய தாத்பர்யசந்திரிகையின் இறுதியில் இதே விசேஷணத்தை ‘தத்தாத்ருக் குருத்ருஷ்டிபாத மஹிம க்ரஸ்தேந யச் சேதஸா’ என்று அனுஸந்தித்திருப்பதைப் பார்த்தால் இது ஆழ்வாருக்கு விசேஷணம் என்றேற்படும். நம்மாழ்வாருக்கன்றோ இந்த ஸம்ப்ரதாயத்திற்கு இந்தக் கலியுக ஆரம்பத்தில் ப்ரதம ப்ரவர்த்தகராயும் பின்பு ஒரவஸரத்தில் ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு அதை மீண்டும் ப்ரவர்த்தநம் செய்தவராயும் இருக்கும் ஏற்றம்! அங்கு கீதோபநிஷத்தை வியாக்யானம் செய்வதற்கு ஆசார்யர்களின் அனுக்ரஹத்தின் பெருமையைக் குறிப்பிடுவதற்காக இதே பதம் ப்ரயோகிக்கப்பட்டிருக்கிறது என்றறியவும்.

‘காதா’ என்றது ‘ச்ருணுகாதாம்புராகீதாம்’ என்றதற்கு ஸ்ரீஅபய ப்ரதான ஸாரத்தில் :’கண்டு என்பான் ஒரு மஹர்ஷி கண்டதொருகாதை கேளிர்” என்றருளிச் செய்திருப்பது நினைவூட்டப்பட்டு, ஆழ்வாரால் ப்ரத்யக்ஷீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட ஸ்ரீத்ரமிடோபநிஷத் எனப்படும் திருவாய்மொழியாகிற பாட்டுக்கள் குறிப்பிடப் படுகின்றன

அகில பயோத்தாரீணி என்னும் பதம் இப்ரபந்தத்தை அனுஸந்திப்பதினால் எல்லா பயங்களிலிருந்தும் விடுபடுவான் என்ப்தைக் கூறுகிறது

இப்படி உபோத்காத ரூபமாக ஸ்ரீத்ரமிடோபநிஷத்தின் பெருமையைப் பத்து சுலோகங்களினால் ப்ரதிபாதித்தபிறகு, பத்து பத்துக் குணங்களை நிரூபிக்கும் 100 சுலோகங்களும், இதில் அஞ்சிறைய மடநாராய் திருவாய்மொழியில் ஆசார்யகுணரூபமாக ஒரு சுலோகமும், சீலமில்லாச் சிறியனேலும் என்கிற பாட்டுக்கு அர்த்தாந்தரரூபமாக ஒரு சுலோகமும், நண்ணாதார் முறுவலிப்ப என்பதற்கு அர்த்தாந்தரமாக இரண்டு சுலோகமும், பத்துத் திருவாய்மொழிகள் கொண்ட ஒவ்வொரு பத்தில் உள்ள பத்துத் திருவாய்மொழிகளிலும் ப்ரதிபாதிக்கப்படும் குணங்களைக் கூறும் 10 சுலோகங்களுமாக 114 சுலோகங்கள் அருளிச் செய்யப்பட்டிருக்கின்றன. இவை மேலே அந்தந்தத் திருவாய்மொழிகளுக்கு முன்பு அச்சிடப்பட்டிருக்கின்றன.

நிகமனத்தில் ஆறு சுலோகங்கள் அருளிச் செய்யப்பட்டிருக்கின்றன அதில் 128-ம் சுலோகத்தில் பத்துப் பத்துக்களினாலும் ப்ரதிபாதிக்கப்பட்ட குணவிசேஷங்களைக் காட்டா நின்றுகொண்டு, திருவாய்மொழிக்கு ப்ரதானார்த்தமாய், கீழ் நிரூபித்த ச்ரிய:பதியாகிற பகவான் தன்னை அடைவதற்குத் தானே உபாயம் என்பதை மறுபடியும் வற்புறுத்துகிறார், மேல் 128-ம் சுலோகத்தின் அர்த்தம் கீழே நம்மாழ்வாரின் வைபவத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

127-ம் சுலோகத்தில் இப்ரபந்தத்தை அனுஸந்திப்பவர்களின் மனோபாவம் இருக்கும்படியை வெளியிட்டருளுகிறார்.

ச்ரிய:பதியாய் எல்லையில்லாத கருணை, வாத்ஸல்யம் முதலிய வைகளை யுடையவனாய் ஸர்வஜ்ஞனாய், ஸர்வ சக்தியாய், ஸமஸ்த சேதனாசேதனங்களுக்கும் ஸ்வாமியாய் இருக்கும் பகவான் திருவடிகளில் ஸமர்ப்பிக்கப்பட்ட ரக்ஷண பரத்தையுடைய நமக்கு இனி முக்திபெறுவதற்குச் செய்ய வேண்டிய கார்யம் என்ன? நமக்கு கிட்டாதது என்ன? என்ன துக்கம் ஏற்படப்போகிறது? இனி யாருக்குக் கடவோம்? இவை ஒன்றுமில்லையென்றபடி. இப்படிப்பட்ட அத்யவஸாயத்தைப் பெற்றவர்கள் ஸர்வோந்நதர் என்று திருவாய்மொழியில் ப்ரதிபாதிக்கப்பட்டிருக்கிறது.

வேதாந்தார்த்தங்களை ப்ரதிபாதிக்கும் ப்ரபந்தங்கள் பல இருந்தபோதிலும் அவைகளுக்கு இத்திருவாய்மொழியின் பெருமையில்லை. இந்த ப்ரபந்தமொன்றுமே மற்ற சாஸ்திரங்களில் ஸாரமாக அறிய வேண்டும் என்று கூறப்பட்ட அர்த்தங்கள் ஒவ்வொன்றிலும் ஸாரதமமான அர்த்தத்தைக் கூறுகின்றது என்று இதன் ஸர்வோத்தமத்வத்தை வெளியிடுகிறார் 128-ம் சுலோகத்தில். இதன் தாத்பர்யம் முகவுரையில் 68-ம் பக்கம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

மேல் இரண்டு சுலோகங்களிலும் இந்த க்ரந்தத்தில் ஸங்க்ரஹிக்கப்பட்ட அர்த்தங்களே ப்ரமாண தமங்கள் என்றும், இப்ரபந்தத்தின் அவதார வைலக்ஷண்யத்தாலும் இது மற்ற ப்ரபந்தங்களை! விட உத்க்ருஷ்டமானது என்றும் நிரூபித்தருளுகிறார். அதாவது இத்த ஸங்க்ரஹமே எம்பெருமானும் அவனுடைய அடியார்களான பாகவதர்களும் உகப்பதாயிருக்கும் என்றபடி

இத்தம் – இவ்வாறு ஸத்ஸம்ப்ரதாயக்ரமஸமதிகத –எம்பெருமான் தொடக்கமாக ஸ்வாசார்யரான கிடாம்பி இராமானுசப் பிள்ளான் வரையிலான ஆசார்ய பரம்பரையினால் அடையப்பட்டதாய். அதாவது அவர்களுடைய க்ரந்தங்களினாலும் அவர்களுடைய உபதேசத்தினாலும் அவர்களுடைய அனுக்ரஹத்தினாலும் தாம் பெற்றதாய்

அசேஷ வர்ணார்ஹவேத — எல்லா வர்ணத்தார்களும் அதிகரிக்கக் கூடிய வேதமாய் இருக்கும் திருவாய்மொழியில்

ச்ரத்தாசுத்தாசயாநாம் – ருசியை யுடையவர்களாய் அத்தால் பரிசுத்த மான மனதுடன் கூடியவர்களான பாகவதோத்தமர்களுக்கு

அநகம் கெளதுகம் வேங்கடேச: அகடயத் – வென்றிப் புகழ் திருவேங்கடநாதனாய் அவதரித்தவர் எல்லையில்லாத சந்தோஷத்தை உண்டாக்கினார்.

தஸ்ய ஸம்யக்த்வே — இது உண்மை என்பதைக்கூறும் விஷயத்தில் ஸாக்ஷாச்சடரிபு: அதவாஸர்வஸாக்ஷீஸ ஸாக்ஷீ – ஆழ்வார்தாமேயும் அன்றிக்கே எல்லாவற்றிற்கும் ஸாக்ஷியாய் இருக்கும் ஸர்வேச்வரன் தானும் ஸாக்ஷியாக ஆவர்கள்,

ஸாவத்யத்வேபிபி பஜதாம் அப்ரகம்ப்யானுகம்ப ஸோடும் ப்ரபவதி ஸாவத்யத்வேபி என்று நைச்யானுஸந்தானம் செய்கிறபடி. இதில் யாதொரு தோஷமுமில்லை. அப்படி எங்காவது தோஷமிருந்தாலும் கூட ஆச்ரிதர்களிடத்தில் நிரவதிக ப்ரீதியையுடைய பகவான் அதைப் பொறுத்தருளுவன் என்றபடி. இங்கு தமிழ் மறைகளின் அனுபவ பரீவாஹமான ஸ்ரீஸ்தோத்திரத்திற்கு வ்யாக்யானமிட்டருளி அதன் இறுதியில்,

‘उपनिषदुपधेयस्तोत्रतात्पर्यमेतत् यतिपतिरवधत्ते यामुनार्य स्वय वा’

என்றனுஸந்தித்திருப்பது நினைக்கத்தக்கதாகும்,

இந்த க்ரந்த அவதரணத்தின் சீர்மையை வெளியிடாநின்று கொண்டும் இதன் வக்த்ரு வைலக்ஷண்யத்தை நிரூபித்துக் கொண்டும் க்ரந்தத்தை உபஸம்ஹாரம் செய்து, இது எம்பெருமான் திருவுள்ளமுகந்ததாயிருக்கும் என்று ஸாத்விகத்யாகம் செய்தருளுகிருர்,

சரணாகதி வேதம் என்று கொண்டாடப்படும் பெருமையை உடைய ஸ்ரீராமாயணம் சோகத்தின் பரீவாஹமாய் உண்டானது. ஆணும் பெண்ணுமாய்ச் சேர்ந்திருந்த இரண்டு க்ரெளஞ்ச பக்ஷிகளில் ஒன்றைக் கொன்ற வேடனைப் பார்த்ததினால் உண்டான துக்கத்தின் மிகுதியினாலன்றோ ராமாயணம் உண்டாயிற்று,

அப்படியே அர்ஜுனனுடைய துக்கத்தைப் பொறுக்க முடியாதவனாய்த் தன்னுடைய அபார காருண்யத்தினால் ஸ்ரீக்ருஷ்ணன் கீதோபநிஷத்தை வெளியிட்டான். ஆழ்வார் திருவாய்மொழியோ பகவானுடைய எல்லை யில்லாத திருக்கல்யாண குணங்களை உள்ளபடியே அனுபவித்துத் தாம் அனுபவித்தபடியே பேசும் ப்ரபந்தமாகையினால் அவை இரண்டிலும் இதற்கு வாசி காட்டப்பட்டது.

சோகாச்லோகத்வம் அப்யாகதஇதி நயத – சோகத்தின் பரீவாஹத்தினால் ச்லோகம் உண்டாயிற்று என்கிற ந்யாயத்தினால்,

சுத்தபோதார்ணவோத்யந் நாதா கல்லோல நாதானுபவரஸ பரீவாஹத: – ஆழ்வாருடைய மயர்வற்ற மதியான ஸமுத்திரத்தில் உண்டாகியதாய், அனேகம் விதங்களான பகவதனுபவ பரீவாஹமாகிய-அதாவது பகவானுடைய திருக்கல்யாண குணங்களில் ஒன்றை அனுபவிக்கப்புக்கு, அது மற்றொரு குணானுபவத்தில் மூட்ட, இப்படியே மேன்மேலும் அவனுடைய கல்யாண குணங்க்ளைப் பல விதமாக அனுபவித்ததின் பரீவாஹமாக வெளிப்பட்டதன்றோ இத்திருவாய்ம்மொழி என்றபடி.

‘ச்ராவ்யவேதாத்’ என்பதினால் இது மிகவும் ச்ராவ்யமான வேதம். அதாவது பகவானுடைய திருக் கல்யாண குணங்களையே ப்ரதி பாதிக்கிறபடியினாலே மனதிற்கு ஆஹ்லாதத்தை உண்டாக்குகிறபடியினால் கேட்கத்தக்கது என்பதும், இசையுடன் கானம் செய்யப்பட வேண்டியதாகையால் எல்லோருடைய மனதைக் கவரக்கூடியது என்பதும், எல்லா வர்ணத்தாராலும் கேட்கத்தக்கது என்பதும் தெரிவிக்கப்படுகிறது.

வேதாந்தாசார்யக ஸ்ரீபஹுமதபஹுவித் வேங்கடேசோத்த்ருதா – வேங்கடேச: என்று அவதார ப்ரபாவமும், ‘வேதாந்தாசார்யக’ என்று பிறந்து படைத்த ப்ரபாவமும், பஹுமத பஹுவித் என்று ஆசார்யர்களின் அணுக்ரஹத்தினால் பெற்ற ஏற்றமும், அதடியாகத் தாம் பெற்ற பாகவதர்களின் பஹுமானமும் தெரிவிக்கப்படுகின்றன.

“ரம்யா “ இத்யாதி – ச்ராவ்ய வேதமான திருவாய்மொழியிலிருந்து வேங்கடேசனால் கடைந்தெடுக்கப்பட்டு, மாலையாகக் கோக்கப்பட்ட இந்தத் தாத்பர்ய ரத்னாவளியானது ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு ப்ரீதியைக் கொடுக்கும் என்று ஸாத்விக த்யாகம் செய்தருளியபடி. ஸ்ரீசரணாகதி கத்யத்தில் “அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்ஸ்வ” என்பதற்கு ஸ்வாமிதேசிகன் தாமே ஸ்ரீரங்கம் என்றது மற்ற ஸத்வோத்தர க்ஷேத்திரங்களுக்கு உபலக்ஷணமாகக் கடவது என்று நிர்வஹித்தருளியதைப் பின்பற்றி, இங்கே ஸ்ரீரங்கநாதன் ப்ரீதி அடைவான் என்றதும் இத்திருவாய்மொழியைத் திருச்செவி சாற்றியருளுகிற மற்ற நூற்றேழு திருப்பதிகளிலுமுள்ள எம்பெருமான்களும் ப்ரீதி அடைவார்கள் என்பதும் தெரிவிக்கப்பட்டதாயிற்று.

ஆக இப்படிக் கீழ் ஸ்ரீ தேசிகன் அருளிச்செய்த ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி, ஸ்ரீத்ரமிடோபநிஷத் ஸாரம் இவற்றைக் கொண்டு திருவாய்மொழியின் அர்த்த ஸங்க்ரதாம் உபபாதிக்கப்பட்டது. ப்ரூதே காதா ஸஹஸ்ரம் முரமதந குண ஸ்தோமகர்ப்பம் முநீந்த்ர:” என்கிறபடியே திருவாய்மொழியில் ஒவ்வொரு பாட்டும் பகவானுடைய குணங்களை உட்பொதிந்துக் கொண்டிருக்கும். ஆனாலும் சில பாட்டுக்களின் ஸங்க்ரஹ சுலோகத்தில் குணம் ஸ்பஷ்டமாகக் கூறப்படவில்லை, சில இடங்களில் ஆதி பதத்தினால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவற்றை விவரிக்கவேண்டும் என்று சிலருக்கு அபிப்ராயம். ஆகிலும் ஸ்வாமிதாமே ஸ்ரீதத்துவமுக்தா கலாபத்தின் இறுதியில் அருளிச் செய்திருப்பதை அடியொற்றி அவற்றை விவரிக்க வில்லை. மேலும் ஸ்வாமியின் வாக்கைக் கொண்டே நிரூபிக்கப்படும் குண விசேஷங்களுக்கு ஸத்ருசமாக மற்றெரு பதத்தைக் குறிப்பிடுவதும் அபசாரமாகுமன்றோ என்று அவை விவரிக்கப்படவில்லை,

பிற்பட்ட வ்யாக்யாதாக்களான ஒன்பதினாயிரப்படிக்காரருக்கும் பதினெண்ணாயிரப் படிக்காரருக்கும் ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி சுலோகத்தில் எந்தப் பதம் எந்தப் பாட்டின் அர்த்த ஸங்க்ரஹம் என்கிற விஷயத்தில் சிற்சில இடங்களில் அபிப்ராய பேதம் காணப்படுகிறது. கூடிய வரையில் இவர்களைப் பின்பற்றியே திருவாறாயிரப்படிக்கு அனுகுணமாக ப்ரதிபாதித்த குணங்கள் நிரூபிக்கப் பட்டிருக்கின்றன.

6. விசேஷார்த்த நிரூபணம்.

மற்றைய திவ்ய ப்ரபந்தங்களிலும் பகவானுடைய குணங்கள் அனுஸந்திக்கப் பட்டிருந்தபோதிலும், திருவாய்மொழியிலே போலே ஒருக்ரமமாய்ச் சங்கிலித் துவக்குப்போலே அவை நிரூபிக்கப்படவில்லை. பகவானுக்கும் சேதனாசேதனங்களுக்குமுள்ள சரீராத்ம பாவத்தை விஸ்தரமாக உபபாதித்திருப்பதும் (திருவாய் 1-1-7) அர்ச்சிராதி மார்க்கத்தில் முக்தாத்மாவிற்கு நடக்கும் ஸத்கார விசேஷங்களை விவரமாக அனுஸந்தித்திருப்பதும் (திருவாய் 10-9) பாகவத ப்ரபாவத்தை 2 திருவாய் மொழிகளில் பரக்கப் பேசியிருப்பதும் (திருவாய் 3-7, 8-10) வேதங்களும் பகவானை அறிவது அசக்யம் என்றே அறிந்தன என்று நிரூபித்திருப்பதும் (திருவாய் 9-3-3) பகவதனுபவத்தை இங்கே செய்வதை விட மோக்ஷானுபவம் உயர்ந்ததன்று என்று அனுஸந்தித் திருப்பதும் ஸம்ஸார துக்கத்தைப் போக்கிக்கொள்வதற்கு பகவானுடைய குணானுஸந்தானத்தை விட ஸாதநம் கிடையாது என்று நிஷ்கர்ஷித்திருப்பதும் (பெ.திரு 86) ஆசார்ய ஸார்வ பெளமனுடைய அவதாரத்தை ஸூசிப்பித்திருப்பதும் (திருவிரு 26) மார்க்கண்டேயனுக்கு ருத்திரன் சிரஞ்சீவியாய் இருக்கும்படி வரம் கொடுத்ததும் பகவானுடைய அனுக்ரஹத்தினாலேயே என்று அனுஸந்தித்திருப்பதும் (திருவாய் 4-10-8) பகவானுடைய திருக்கண்களின் சோபைனை தாமரைக் காடுகள் என வர்ணித்திருப்பதும் (திருவாசி 2, திருவாய் 8-9-1) சில விசேஷார்த்த நிரூபணங்களாகும்.

8. இவருடைய திருநாமங்கள்.

மாறன், சடகோபன், வழுதிவளநாடன் என்று தாமே தம்மை வழங்கிக்கொண்டிருக்கிறார். இத்திருநாமங்களுக்கு விசேஷணங்களாக குருகூர் நகரான், குருகூர், வழுதிநாடன் குருகைக் கோன், காரி, திருமாலால் அருளப்பட்ட என்றுஅனுஸந்தித்துக்கொண்டிருக்கிறார். காரி என்றது தகப்பனாரின் திருநாமம். மாறன் என்பது குடிப்பெயர். லோகத்திலுள்ள மற்றவர்களைக் காட்டிலும் மாறான – வேறுபட்ட ஸ்வபாவத்தையுடையவர் என்றுமாம். சடகோபன் என்றது கெட்டவர்களைக் கோபித்துக்கொள்ளுமவர் என்றபடி. நம்மாழ்வார் என்பது இவரை உகந்து பெரியபெருமாள் அனுக்ரஹித்தருளிய திருநாமம். இத்திருநாமத்தாலேயே இவரை வ்யவஹரிப்பது ஸம்ப்ரதாயம்

குலபதி என்று ஸ்ரீஆளவந்தார் அனுஸந்தித்திருக்கிறார். ஸ்ரீதேசிகன் ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி முதலியவற்றில் இவரை “சடரிபு:, சடஜித் சடமதநமுநி:, முநி: முநீந்த்ர யோகீ, சடாரி:, காரிஸூநு:, கேஸர ஸ்ரக் விபூஷ:, சடஜநமதந:, காரேஸ்தநூஜ:, காரேரபத்யம், காரிஜ:, : அகில த்ராமிட ப்ரஹ்ம தரிசி, சடகோப ஸூரி:, வகுளதர மஹர்ஷி, வகுளாபரண:, கூடஸ்த: என்றிவை முதலிய திருநாமங்களால் அனுஸந்திருக்கிறார்.

9. பூர்வர்கள் இவரைக் கொண்டாடியிருக்கும் ப்ரகாரம்

ஸ்ரீ மதுரகவியாழ்வார் இவர் விஷயமான‘திருவழுதிநாடு’ என்றாரம்பிக்கும் தனியனையும், ஸ்ரீமந்நாதமுனிகள் ‘பக்தாம்ருதம்’ ‘மனத்தாலும்’ என்றாரம்பிக்கும் தனியன்களையும், ஸ்ரீஆளவந்தார் ‘மாதா பிதா’ என்கிற தனியனையும் அருளிச் செய்திருக்கிறார்கள்.

எம்பெருமானார், ‘முந்துற்ற நெஞ்சே என்கிற பெரிய திருவந்தாதித் தனியனையும், திருக்குருகைப்பிரான், ‘வான் திகழும் சோலை’ ‘மிக்க இறைநிலையும்’, ‘ஏய்ந்த பெருங்கீர்த்தி’ என்கிற திருவாய்மொழித் தனியன்களையும், கிடாம்பி ஆச்சான், ‘கருவிருத்தக்குழி என்கிற திருவிருத்தத் தனியனையும், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், ‘காசினியோர்’ என்கிற திருவாசிரியத் தனியனையும் அருளிச் செய்திருக்கிறார்கள்.

ஸ்ரீமதுரகவியாழ்வார், இவ்வாழ்வார் தம்முடைய அனுபவ பரீவாகமாக வெளியிட்ட பாசுரங்களைப் பட்டோலை கொண்டு, அவற்றை நான்கு ப்ரபந்தங்களாக லோகத்தில் வெளியிட்டருளினது மாத்திரமன்றிக்கே ஆழ்வாரையே ஆசார்யனாகக் கொண்டு, அவருடைய திவ்யார்ச்சையை திரு ப்ரதிஷ்டை செய்தருளி அதற்கு உத்ஸவாதிகளை நடத்தி, அதற்கு உபரோதம் செய்தவர்களை நிரஸித்து உத்ஸவாதிகளை யதா க்ரமம் நடத்திவைத்தார்.

திருமங்கையாழ்வார் ஸ்ரீரங்கநாதனுடைய நியமனப்படி இவருடைய ப்ரபந்தமான திருவாய்மொழியை ப்ரதி ஸம்வத்ஸரமும் மார்கழி மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி தொடக்கமாக ஒவ்வொரு நாளும் ஒரு பத்தைத் திருச்செவி சாற்றியருளும்படி ஏற்பாடு செய்தருளினார்.

ஸ்ரீஆளவந்தார் தமது ஸ்தோத்ரத்தில் பற்பல பாட்டுக்களின் கருத்தை வெளியிட்டருளியிருக்கிறார், உதாஹரணமாக

மெய் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே ” என்று திருவிருத்தத்தில் ஆழ்வார் அனுஸந்தித்தருளியதை

न मृषा परमार्थमेव मे श्रृंणु विझापनमेकमग्रतः

तत् सत्यं मधुमथन विज्ञापनमिदम्

என்றும், உயர்வற உயர் நலமுடையவன் ’ என்றதை

स्वाभाविकानवधिकातिशयेशितृत्वं

என்றும், “யாருமோர் நிலைமையன் என நினைவரிய எம்பெருமான் யாருமோர் நிலைமையன்என அறிவெளிய எம்பெருமான்” என்றதை

‘विधिशिवसनकाद्ये: ध्यानुमत्यन्तदूरं पश्यन्ति केचिदनिशं त्वदनन्यभावाः’ என்றும், ‘நன்றெழில் நாரணன் ‘ என்றதை * नारायण ! त्वयि न मृष्यति वैदिकः कः ‘ என்றும், நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்” என்றதையே * न धर्मनिष्ठेस्मि न चात्मवेदी ° என்றும் *

நாளு நின்றடு நம் பழமையங்கொடு வினையுடனே

மாளும் ஓர் குறைவில்லை மனனக மலமறக் கழுவி

நாளும் திருவடியடிகள்தம் நலங்கழல் வணங்கி

மாளுமோரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே

என்றனுஸந்தித்தருளியதை * त्वर्देधिमुद्वदिश्य कदापि केनचिन्’ என்ருரம்பிக்கும் கலோகத்திலும் விவரணம் செய்தருளிஞர்

எம்பெருமானார் திருவாய்மொழிக்குத் தம் சிஷ்யர்களில் ப்ரதானமானவரும், தம்மால் ஜ்ஞான புத்திரரென்று அபிமானிக்கப்பட்டவரும், தமக்குப் பிறகு உபய வேதாந்த ஸிம்ஹாஸனத்தில் மூர்த்தாபிஷிக்தருமான திருக்குருகைப்பிரான் பிள்ளானைக் கொண்டு திருவாறாயிரப்படி என்னும் வ்யாக்யானத்தை வெளியிட்டு, அதைத் தாமே தம் சிஷ்யர்களுக்கு முதல் முதலிலே ப்ரவசனம் செய்தருளினார். சந்தமிகு தமிழ் மறைகளின் அனுஸந்தானத்தின் பரீவாஹமாய்ப் பெரிய முதலியார் அருளிச்செய்த ஸ்தோத்திரத்தைப் பல தடவை அனுஸந்தானம் செய்ததினால் ஸுப்ரதிஷ்டிதமான ஜ்ஞானத்தால் எழுதப்பட்ட ஸ்ரீபாஷ்யத்தில் திருவாய்மொழியில் ப்ரதிபாதிக்கப்பட்ட அர்த்த விசேஷங்களையே வெளியிட்டிருக்கிறார்.

ஸ்ரீபாஷ்யம் மங்கள சுலோகத்துக்கு மூலம்

‘துன்பமும் இன்பமுமாகிய செய்வினையாய் உலகங்களுமாய்

இன்பமில் வெந்நரகாகி இனியநல் வான் சுவர்க்கங்களுமாய்

மன்பல்லுயிர்களுமாகிப் பலபல மாய மயக்குகளால்

இன்புறுமிவ் விளையாட்டுடையானைப் பெற்றேதுமல்ல லிலனே

என்னும் திருவாய்மொழிப்பாட்டு ( 3-10-7) இதின் திருவாறாயிரம் — “நிகில ஜகதுதய விபவ லயாதிலீலனாய்” என்று. “இன்புறும் இவ்விளையாட்டுடையான்” என்றதையே எம்பெருமானார்

अखिलभुवनजन्मस्थेमभङ्गादिलीले-என்றருளிச் செய்திருப்பது. அப்படியே ஆழ்வார் முதல் திருவாய்மொழியில் 7ம் பாட்டில் உடல்மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்து, உளன் சுர்மிகு சுருதியுள் என்றதையே श्रुतिशिरअसि विदिप्ते ब्रह्माणि श्रीनिवासे என்றருளிச் செய்திருக்கிறார். உபக்ரமம் இப்படி. மேல் உபஸம்ஹாரம் எப்படி எனப் பராமர்சிப்போம்.

இறுதி ஸூத்திரம் ‘இப்படி அர்ச்சிராதி மார்க்கத்தினால் முக்தி அடைந்தவன் மறுபடியும் இந்த ஸம்ஸாரத்திற்குத் திரும்பி வருவதில்லை — அப்படியே ச்ருதிகளில் கூறப்பட்டிருப்பதினால்’ என்பது. இதன் ஸ்ரீபாஷ்யத்தில் பகவத் ஸங்கல்பத்தினால் ஆத்மா முக்தி அடைகிறபடியினாலே பகவான் ஸ்வதந்த்ரன். அவன் திருப்பி அனுப்பாவிட்டால் என் செய்வது என்கிற ஆக்ஷேபத்திற்கு ஸமாதானம் இந்த ஸூத்திரத்தில் கூறப்படுகிறது என அவதாரிகையை அருளிச் செய்து திருப்பி அனுப்பமாட்டான் என்பதற்கு ப்ரமாணம் வேதங்களே — எப்படி எம்பெருமான் உளன் என்று வேதங்களிலிருந்து அறியப்படுகிறதோ அப்படியே அவன் திருப்பி அனுப்பமாட்டான் என்பதையும் அந்த வேதங்களே கூறுகின்றன என்று அப்படிக் கூறும் வேதவாக்யங்களை உதாஹரித்து வேதங்களுக்குத் துல்ய ப்ரமாணமான ஸ்ரீகீதோபநிஷத் சுலோகத்தை மேற்கோளாகக் காட்டியுள்ளார். ஸூத்திரத்தில் சகாரம்கூட இல்லாமையினால் மேல் உபஸம்ஹாரம் செய்யவேண்டியிருக்க, அப்படிச் செய்யாமல் “ந ச ” என்று ஆரம்பித்து இப்படித் திருப்பி அனுப்பாமைக்குக் காரணத்தை மற்றொரு விதத்தில் உபபாதித்திருக்கிறார். இதற்கு மூலம் ஆழ்வாருடைய

மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை
உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக்கொழுந்தை என்
இசைவினை என் சொல்லி யான் விடுவனோ

என்கிற திருவாய்மொழி 1-7-4ம் பாட்டே. எப்படி வேதங்கள் பகவானுடைய ஸ்வரூப ஸ்வபாவாதிகளை உபபாதிப்பதில் உத்தம ப்ரமாணங்களாக நிற்கின்றனவோ, அதைப்போலவே திருமாலாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார் பகவானை உள்ளபடியே ப்ரத்யக்ஷீகரித்து தாம் அனுபவித்தபடியை வெளியிடுகிற திருவாய்மொழியும் உத்தமமான ப்ரமாணமென்று திருவுள்ளம் பற்றி, எம்பெருமானார் தமது ஸ்ரீபாஷ்யத்தில் கீழ் உதாஹரிக்கப்பட்டதான ஸ்ரீத்ரமிடோபநிஷத்தின் பாட்டை அப்படியே ஸம்ஸ்க்ருதத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். ஸூத்திரகாரரோ ராஜாஜ்ஞை போலே வேதங்கள் கூறா நிற்கும் என்றார். அகில த்ராமிட ப்ரஹ்மதர்சியாகிய ஆழ்வாரோ அந்தக் காரணத்தை மேலே நிரூபிக்கப்போகிறவராய் பகவான் முக்தனைத் திருப்பி அனுப்பமாட்டானேயாகிலும் முக்தனே திரும்பி வந்துவிட்டால் புனராவ்ருத்தியில்லை என்பது ஸ்தாபிக்கப்பட்டதாகாதே என்பதற்காக இந்த அம்சத்தை மட்டும் விசேஷித்து உபபாதித்தருளினார் என்பதும், இதற்குக் கீழ்ப்பாட்டில், “என் மாயப்பிறவி மயர்வறுத்தேனே” என்பதை அனுவதிக்கிறார் என்பதும் இங்கு விவக்ஷிதமாகக் கடவது. ஸ்ரீபாஷ்ய பங்க்தியும், எம்பெருமானாருடைய காலக்ஷேபத்தின் ஸங்க்ரஹமான திருவாறாயிரப்படி பங்க்தியும் உதாஹரிக்கப்படுகின்றன.

नचउच्छिन्नकर्मबन्धस्य असंकुचितज्ञानस्यपरत्रह्मानुभवैकस्वभावस्य तदेकप्रेियस्य अनवधिकातिशयानन्दं व्रह्मानुभवतः अन्यापेक्षातदर्थीीरम्भाद्यसंभवात् पुन रावृत्तिशङ्का । न च परमपुरुषः•••

திருவாய்மொழிப்பாட்டின் திருவாறாயிரப்படி பங்க்தி

இப்படி எம்பெருமானோடு ப்ரவ்ருத்தமான ஸம்ச்லேஷத்திற்கு ஒருபடியாலும் மேல் அழிவில்லை என்கிறார். தன் திறத்தில் எனக்குள்ள அஜ்ஞானமெல்லாம் போம்படி என்னுள்ளே புகுந்தருளி, தன்னுடைய கல்யாணமான குண ஸ்வரூபங்களை அத்யந்த விசதமாம்படி எனக்குக் காட்டியருளித் தனக்கு ஸத்ருசரான அயர்வறும் அமரர்களோடு ஸம்ச்லேஷிக்குமாப்போலே என்னோடு ஸம்ச்லேஷித்தருளியவனை எங்ஙனே விடும்படி என்கிறார்” — என்பது. இங்கு “ஒருபடியாலும் அழிவில்லை” என்பதற்கு இதற்கு வ்யாக்யானமான இருபத்துநாலாயிரப்படி வ்யாக்யானத்தில் “என்னுடைய அஜ்ஞானமடியாகவும் விஷயாந்தர ஸங்கமடியாகவும் பகவத் ஸ்வாதந்த்ர்வமடியாகவும் என்னுடைய பாக்யஹானியடியாகவும் என்றபடி” என்று. கீழ் வேதவாக்யங்களுக்கு மேற்கோளாக ஸ்ரீகீதா ச்லோகத்தை உதாஹரித்தாற்போலே இந்த த்ரமிடோபநிஷத்துக்கும் மேற்கோளாக மற்றொரு கீதாச்லோகத்தை உதாஹரித்து உபஸம்ஹாரம் செய்தருளியிருக்கிறார் இப்படியே ஸ்ரீகீதாபாஷ்ய கத்யாதிகளிலும் பல ப்ரகரணங்களில் ஆழ்வாருடைய ஸ்ரீஸூக்திகளைப் பின்பற்றியே நிரூபித்தருளியிருக்கிறார்.

நம்முடைய விசிஷ்டாத்வைத ஸம்ப்ரதாயத்தை இந்தக் கலியுகத்தின் ஆரம்பத்தில் ப்ரவர்த்தனம் செய்தருளியவர் இவரே என்றும், இவற்றை மீண்டும் ஸ்ரீமந் நாதமுனிகளும் உபதேசித்தருளியவர் என்றும் ஸ்ரீஸம்ப்ரதாய பரிசுத்தியில் ஸ்ரீமதுரகவிகள் முதலாக உண்டான ஸம்ப்ரதாய பரம்பரையாலும் திருவாய்மொழி முகத்தாலும் யோகதசையிலே ஸாக்ஷாத்க்ருதராயும் நம்மாழ்வார் ஆசார்யரானார் — இவரை ப்ரபன்ன ஜன ஸந்தான கூடஸ்தநையாலே ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தார்” இத்யாதியாக அனுஸந்தித்திருக்கிறார்.

நம்மாழ்வாருக்கும் ஸ்ரீமந்நாதமுனிகளுக்கும் நடுவில் பல வருஷங்கள் கழிந்துவிட்டதே என்பதற்கு ஸமாதானத்தை ஸ்ரீஸ்தோத்ரபாஷ்யத்தில்-कालविप्रकर्षेपि परमपुरुषसंकल्पात् कदाचित् प्रादुर्भूय सास्त्रादपि सर्वोपनिषदुपदेष्टारं என்றருளிச் செய்திருக்கிறார். இவருடைய அருளினால் “திருமால் தாளில் தலைவைத்தோம்” என்று அருளிச் செய்திருப்பதினால் இவருடைய க்ருபையில்லாவிடில் பகவானுடைய திருவடிகள் நமக்குக் கிட்டாது என வெளியிட்டிருக்கிறார். இவருடைய ப்ரபாவத்தை द्रमिडोपनिषत् द्रष्टुरस्य याथात्म्यमद्बुदं என்று வாசாமகோசரம் என நிரூபித்தருளினார். எம்பெருமான் நம்மாழ்வார் தம்முடைய திருவாய்மொழி 1000 பாட்டுக்கள் பாடிய பிறகே தன்னை உளனாக எண்ணி, அதற்கு ப்ரதியாகத் தானும் அவர் விஷயமாக 1000 பாட்டுக்களைப் பாடவேண்டும் என்ற அபிலாக்ஷையைத் தான் குருவரராய்த் தோன்றி ஸ்ரீபாதுகாசஹஸ்ரம் என்னும் க்ரந்தத்தை அருளிச்செய்து தீர்த்துக்கொண்டான். இவ்வம்சத்தை ஸ்ரீதேசிகன் தாமே ஸமாக்யா பத்ததியில் நம்மாழ்வாரும் ஸ்ரீபாதுகைகளும் ஒன்று என்று நிரூபித்திருப்பதினாலும், நாதபத்ததியில் பாதுகைகளின் நாதம் திருவாய்மொழிப் பாசுரங்களின் அனுதாதம் என்று அனுஸந்தித்திருப்பதினாலும், க்ரந்தத்தை “ஸந்த:” என்று தொடக்கம் செய்து “ஸந்த:” என்று முடித்திருப்பதினாலும் ஸூசிப்பித்திருக்கிறார். இவருடைய முதல் ப்ரபந்தமான திருவிருத்தத்தின் முதல் பாசுரத்திற்கு ஸ்ரீஉபகார ஸங்க்ரஹம் என்னும் ரஹஸ்யத்தில் வ்யாக்யானம் அருளிச் செய்திருக்கிறார். திருவாய்மொழிப் பாசுரங்களின் அர்த்தத்தை ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளீ, ஸ்ரீத்ரமிடோபநிஷத் ஸாரம், ஸ்ரீநிகம பரிமளம் இவைகளில் வெளியிட்டுள்ளார். இவருடைய சில பாட்டுக்களின் உண்மையான அர்த்தங்களை ப்ரமாணோபபத்திகளுடன் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் முதலிய க்ரந்தத்தில் நிரூபித்தருளினார். இவர் நெடுமாற்கடிமையில் அனுஸந்தித்தருளிய அர்த்த விசேஷங்களையே புருஷார்த்தகாஷ்டாதிகாரத்தில் ஸங்க்ரஹித்திருத் தருளினார். இவருடைய திருவாக்கின் ப்ரபாவத்தை “அணிகுருகை நகர் முனிவர் நாவுக்கு அமைந்தன” என்றும் நிரூபித்திருக்கிறார்.

ஒரு மதியன்பர் உளங்கவர்ந்தன‘, ‘குருகையில் வந்து கொழுப்படக்கிய குலபதி’ என்று இவருடைய ப்ரபாவத்தையும் பேசியுள்ளார். ஸ்ரீகீதாசார்யன் ஸாதுபரித்ராணார்த்தமாக அவதரிக்கிறேன் என்றது இவரையே ப்ரதானமாகக் குறிக்கும் என்று ஸ்ரீகீதாபாஷ்ய தாத்பர்ய சந்த்ரிகையில் ஸூசிப்பித்தார். அதாவது, “न हि अमिषां अन्नपानं ताम्बूलादि धारण पोषणादिकं, किं तु अहं कृष्ण एव” இவர் ‘உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம் கண்ணன்’ என்பதைப் பின்பற்றியதாகும். இப்படியே இவர் ‘கண்ணனல்லால் இல்லை கண்டீர் சரண்’ என்றனுஸந்தித்ததையே-कृष्णःतत्वं परं तत्परमापि च हितं तत्पदैकाश्रयत्वं’என்று கீதையின் பொருளாக ஸங்க்ரஹித்துள்ளார். பகவானுடைய திருக்கண்களின் சோபையை இவர் ‘தாமரைக்காடுகள்’ என்றனுஸந்தித்திருப்பதைப் பின்பற்றி-पुण्डरीकवन्लुण्ठाकलोचन-என்றனுஸந்தித்தருளினார்.

ஸ்ரீப்ரபந்தஸாரத்தில் ‘முன்னுரைத்த’ என்று இவர் ப்ரபந்தங்கள் விஷயமாக ஒரு பாட்டு அருளிச் செய்யப் பட்டிருக்கிறது. இவருடைய த்ராக்ஷா மதுரம் போன்ற ஸ்ரீஸூக்திகளை அனுஸந்தித்ததினால் உத்கர்ஷம் பெற்ற தம் வாக்குகள் ப்ரஹ்மாதிகள் விரும்பியும் பெறாத ஓர் ஏற்றம் பெற்றவைகளாய் நிற்கும் என்றனுஸந்தித்திருக்கிறார். கீழ்ப் பல இடங்களில் இவரைக்கொண்டாடியிருக்கும் ப்ரகாரம் காட்டப்பட்டிருக்கிறது.

கவி சக்கரவர்த்தியென இக்காலத்தில் விசேஷித்துக் கொண்டாடப்படும் கம்பனாலும் இவர் விஷயமாக சடகோபர் அந்தாதி என்னும் க்ரந்தத்தில் இவருடைய பெருமை நன்கு நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

10. விசேஷாம்சங்கள்

இவருக்கு மற்ற ஆழ்வார்களைப்போலே சந்தமிகு தமிழ்மறைகளில் சில பாகங்களை ப்ரத்யக்ஷீகரித்து வெளியிட்டருளிய ஏற்றத்துடனே அவற்றையும் மற்றைய ஆழ்வார்கள் வெளியிட்டருளிய ப்ரபந்தங்களையும் மறுபடியும் ப்ரவர்த்தனம் செய்தருளினார் என்கிற ஏற்றமுண்டு. இத்தால் இவருக்கு ஆசார்ய கோஷ்டியில் அனுஸந்திக்கப்படும் பெருமையுண்டு. மற்ற மூவாயிரம் பாசுரங்களைப்போலே இவருடைய திருவாய்மொழியை வீதிகளில் ஸேவிப்பதில்லை. ஸந்நிதிக்குள்ளோ, திருமாளிகைகளிலோ உட்கார்ந்துகொண்டே ஸேவிக்கும் ஏற்றம் பெற்றதாயிருக்கும்.

இவருடைய அவதாரத்தை ஸ்ரீபாகவதத்தில் 4ம் ஸ்கந்தத்தில் புரஞ்ஜனோபாக்யானம் கூறுகிறது. இவருடைய ப்ரபந்தத்தில் ஒரு விசேஷ மணம் வீசாநிற்கும் என்று ஆசார்யன் பல இடங்களில் நிரூபித்திருக்கிறார்.

திருவாய்மொழி எல்லோராலும் அனுஸந்திக்கப்படும் என்பதை ஆழ்வார் தாமே ‘பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும்‘ என்றனுஸந்தித்திருக்கிறார். இதன் கருத்து :–ஸ்ரீபாகவதத்தில் பகவானுடைய திருக்கல்யாண குணங்கள்-निवृत्ततर्षैः उपगीयमानात् भवौषधात् सोत्रमनोभिरामात्எ-ன்கிறபடியே ஸம்ஸார ஸம்பந்தம் இல்லாத நித்யர்களாலும் முக்தர்களினாலும் கானம் செய்யப்படும் என்றும், ஸம்ஸாரத்தைப் போக்கடித்துக் கொள்ளுவதற்கு மருந்தாயிருப்பதினால் முமுக்ஷுக்களினாலே அனுஸந்திக்கப்படும் என்றும், கேட்பவர்களின் மனதிற்கு ஸந்தோஷத்தை உண்டாக்கும் என்றும் இப்படிகளினால் எல்லோராலும் அனுஸந்திக்கப்படுகின்றன எனக் கூறப்பட்டிருக்கிறது. அதைப்போலவே இத்திருவாய்மொழியும் என்பதை இதன் தனியனில் भक्तामृतं विश्वजनानुमोदनं सर्वार्थदं என்று கூறப்பட்டது. ‘பக்தாம்ருதம்‘ என்றது ஸூரிகளுக்கும் முக்தர்களுக்கும் ஸ்வயம் போக்யமானது என்றபடி. ‘விச்வஜனானுமோதனம்’ என்றது ச்ராவ்யமாயிருப்பதினால் ஸம்சாரி சேதனர்களுக்கு ஸந்தோஷத்தை உண்டாக்கும் என்றபடி. ‘ஸர்வார்த்ததம்’என்றது கற்பவர்களுக்கு வேதாந்த ஜ்ஞானத்தை உண்டாக்குகிறபடியினால் ஸம்ஸாரத்தைப் போக்குகிற அருமருந்தாய் நிற்கும் என்றபடி. இந்த மூன்று விசேஷணங்களும் ஆழ்வாரிடமிருந்து அவருடைய செவிக்கினிய செஞ்சொறகளான பாட்டுக்களை நேரில் கேட்டு, அப்படியே அவற்றை லோகத்தில் பரவச் செய்தருளிய ஸ்ரீமதுரகவிகளைக் கூறுமென்றும் சொல்லலாம்.

இந்த மூன்று விசேஷணங்களினாலும் ஸ்ரீதேசிகனைத் தான் ஆழ்வார் குறிப்பிட்டார் என்று அஸ்மத் ஸ்வாமி நிர்வஹித்தருளும். ‘பாலேய் தமிழர்’ என்றது தமிழ் பாஷை ஸம்ஸ்க்ருத பாஷையைப் போலவே ப்ரசஸ்தமானது, நித்யமானது என்றும், எல்லோரும் அதிகரிக்கலான பாஷை என்றும், சித்தரஞ்ஜனத்தோடு வேதாந்தார்த்தங்களைத் தெளிவிப்பதில் இவை ப்ரதானம் என்றும், அனுஸந்திக்கப் பட்டவுடனே எம்பெருமான் திருவுள்ளம் உகக்கும் என்றும் நிரூபித்தது மாத்திரமன்றிக்கே, தம்மை,’சந்தமிகு தமிழ் மறையோன்‘ என்று த்ரமிட வேதாத்யாயீ என்று அனுஸந்தித்தருளிய ஏற்றம் ஸ்ரீதேசிகனுக்கு மாத்திரமுள்ள பெருமையல்லவா என்றபடி. ‘இசைகாரர்’ என்றது கீதி பகவத் விஷயமாகில் ப்ரசஸ்தம் என்று நிஷ்கர்ஷித்தது மாத்திரமன்றிக்கே பாடுமவர்கள் கோஷ்டியில் தாம் இடம் பெற்றவர் என்று அனுஸந்திக்கும்படியான பெருமை ஸ்ரீதேசிகனையே சேர்ந்ததல்லவா என்றபடி. ‘பத்தர்‘ என்பதைப் பகவத் பக்தர்கள் என்றாலும் ஆழ்வாருடைய பக்தர் என்றாலும் அந்த இரண்டு அம்சங்களும் ஸ்ரீதேசிகனிடத்தில் பூர்ணமாயிருந்தமை ஸர்வஸம்ப்ரதிபன்னமானது. தெளிய ஓதி தெளியாத மறை நிலங்கள் தெளிந்தவராகத் தம்மை நிரூபித்துக்கொண்டவர் வேறொருவரு மில்லையே!

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–10-10-முனியே நான்முகனே முக் கண் அப்பா–சாரங்கள்—

June 2, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தத் தர்ச நஞ்ச மனசையைவ ஸஷு
தைவ இதி பக்த்யாதயா பரமயா அச்யுதபாதம்-
நச புன பார்த்ததே மாந்த்யம்
பத்தமாஞ்ஞாஜாய பகவதா பரிக்ருதயா

ஆச்சாரயோதயா பந்தாதி த்ராவிட நியாயம் சங்கதி
அப்யதா து அபிராம வராமர் வராஹயத்

———-

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

ப்ரஹமே ச அந்தர் பிரவேசத் வாத் ஜல நிதி சுதயா ஸந்நிரோதபவ்ய பாவாத்
திவ்ய ஸ்ரீ விக்ரஹத்வாத் அகில தனு தயா அத்ருப்த்ய பீயூஷா பாவாத்
பத்மா பந்துத்வாத் பூம் உத்தரணாத் புண்ய பாப ஈஸி தத்வாத்
முக்தேகே தாதா அனுபாவாத்யாத் சடஜித் முக்திமான –

1–ப்ரஹமே ச அந்தர் பிரவேசத் வாத்–முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா

2–ஜல நிதி சுதயா -ஸந்நிரோதபவ்ய பாவாத் –மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்

3–திவ்ய ஸ்ரீ விக்ரஹத்வாத்–என் பொல்லாக் கருமாணிக்கமே ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன்

4–அகில தனு தயா–உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ

5–அத்ருப்த்ய பீயூஷா பாவாத்–தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே

6–பத்மா பந்துத்வாத்–உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ

7–பூம் உத்தரணாத்–கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ

8–புண்ய பாப ஈஸி தத்வாத்–உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்

9-முக்தேகே தாதா அனுபாவாத்யாத்–முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்

10-சடஜித் முக்திமான – சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–
அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன்

——-

ஏவம் ஸ்வாநாம் கதிம் வியத்வஜ துரித ஹராஸ்தான சங்கார்ஹ ராகம்
சுப்ராபம் பக்தி பாஜாம் பஹுவித போஜன ப்ரக்ரியாம் ஸ்ரீ சடாரி
தீவ்ரோ த்யோகம் ஸ்வ தானே ஸ்வ ஜன தனு க்ருதார்த்யாதரம் பிராஹ காந்தே
ஸ்வேச்சா துஷ்டாம் சுக அர்ச்சீர் முகாஸ் சரணிமுக்தாம் மோஷாதம் முக்த போக்யம் –ரத்னாவளி –124-

அவனே அர்ச்சிராதி வழித் துணை ஆப்தன்

————

இத்தம் சேவ்யம் ஸூ போக்யம் ஸூபாஸ் உபகதனும் சர்வ போக்ய ப்ரக்ருஷ்தே
ஸ்ரேயஸ் தத ஹேது பூதம் பிரபதன சுலபம் ஸ்வ ஆஸ்ரித அநிஷ்ட ஜிஷ்ணும்
பக்த சந்த அநு க்ருதம் நிருபாதிக ஸூ ஹ்ருதம் சத் பத அவ்யய ஸஹாயம்
ஸ்ரீ சம் பிராஹ ஸ்வ சித்தே ஸ்வயம் இஹ கரணாம் ஸ்வ பிரபந்தே சடாரி –ரத்னாவளி -125-

ஆத்யே ஸ்வ பிரபந்தே சதஜித பிதாதே ஸம்ஸரதேர் துஸ் சஹத்வம்
த்வைதிகே ஸ்வரூபாத்ய அகில மத ஹரேர் அனுவபூத் ஸ்பஷ்ட த்ரஷ்டாம்
தார்த்திகே ஸு க்யம் பகவத் அநுபவே ஸ்போரயாம்ஸ தீவ்ரம்
ஆசாம் துர்யே யதேஷ்டம் பகவத் அனுபவா தாப முக்திக்கு சடாரி –ரத்னாவளி –126-

திரு விருத்தத்தில் சம்சார சுழல்களால் வரும் துரிதங்களையும் -அதில் இருக்க மாட்டாமையையும் -அருளிச் செய்து
திருவாசிரியத்தில் ஜீவ பர ஸ்வரூப குணாதி களை அருளிச் செய்து
பெரிய திருவந்தாதியில் -தனது மானஸ அனுபவத்தையும் -பாஹ்ய சம்ச்லேஷத்தில் ஆர்த்தியையும் வெளியிட்டு அருளி
திருவாய் மொழியிலே அவா அற்று வீடு பெற்றதை அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ மான் சீமாதி லங்கிஸ்திரதர கருணா சர்வவித் சர்வ சக்திர்
ஸ்வாமி ஸர்வஸ்ய ஐந்தோ ஸ்வ சரண யுகள ஸ்வீ க்ருதாஸ்மாக பர
கிம் ந க்ருத்யம் ஸ்வ ஹேதவ் கிமிக ந சுலபம் க விபதிர் பவித்ரி
கஸ்யான் யஸ்யா தர்மனா வயமிதி விதிஷாமாக துங்கத்வ மந்தே–ரத்னாவளி -127-

ஸ்ரீ மான் சீமாதி லங்கிஸ்திரதர கருணா சர்வவித் சர்வ சக்திர்
ஸ்வாமி ஸர்வஸ்ய ஐந்தோ ஸ்வ சரண யுகள ஸ்வீ க்ருதாஸ்மாக பர – கல்யாண குணக்கடல் /கருணா சாகரம் /
உலோகரை எல்லாம் திருவடியால் தீண்டி அணைக்கும் தாய் /
இப்படி உணர்ந்தோர் மார்பில் கை வைத்து-உபாயமாக ஒன்றுமே செய்யாமல் கைங்கர்யமாக
அவன் ஆனந்தத்துக்கு மட்டுமே செய்வது தானே அடுத்து /
கிம் ந க்ருத்யம் ஸ்வ ஹேதவ் – இவ்வாறு உள்ளோரால் செய்ய முடியாதது தான் எது –
துக்க கேசமும் இவர்களை அணுகாவே -வேறே எவருக்கும் பணியா அமரர்கள் ஆவார்கள்

——–

இத்தம் சத் சம்பிரதாய க்ரம சமதிகதா சேஷ வர்ணார்ஹ வேத
ஸ்ரத்தாஸ் சுத்த சயானா மகதயாதநகம் கௌதுகம் வேங்கடேச
சம்யக்த்வே தஸ்ய சாஷாத் சடாரி புரத்வா சர்வ சாக்ஷி ச சாக்ஷி
சாவத்யத்வேபி சோதும் பிரபவதி பஜதாம ப்ரகாம்ப யனுகம்பா –ரத்னாவளி –129-

———

சோகா ஸ்லோகாத்வமப் யாகத இதை வதத சுத்த போதார்ண போத்யன்
நாநாக லோலா நாதானுபவ ரஸ பரிவாஹத ஸ்ராவ்ய வேதாத்
வேதாந்த சார்யக ஸ்ரீ பஹுமத பஹுவித் வேங்கடேசா ஸ்தோத்ரேயம்
ரம்யா தாத்பர்ய ரத்னாவளிர் அநக குண ரஞ்சினி ரங்க பர்த்ரு–130-

——-

ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –

உதந்தை இத்யேவம் நிருபாதிக ஸு ஹார்த்தபி சுனை
உதந்தயாம் உத்வேலாம் உபஜனித்தவந்தம் நிஜபதே
த்ரை வர்க்காதி க்ராந்த ஸ்திர நகரி கந்தா பத கதே
சஹாயி குர்வாணா சரம சதகே விந்தத்தி முநி –21-

———————————–

கதிம் வ்யாத்வக்லே சச்சிதாம் பத ஸங்காஸ் பத ரசம்
பஜத்பி சுப்ராபம் விதித்த பஜன ப்ரக்ரியமிக
பலே தீவ்ரத் யோகம் ஸ்வ விஷய க்ருதாத்யா தரமகாத்
யதர்ச்சா துஷ்டம் சத்சரநிமா புனர் ஜன்ம சாயுஜ்யம் –22-

———-

பரம் ப்ராப்யம் பஸ்யன் பரிசரணா ஹேதும் விஞ்ஞாயன்
பரிஷுக்குருவன் அஞ்ஞானம் அனிதர சரண்ய சரண்யன்
அநிஷ்ட ப்ரத்வம்ச ப்ரப்ரிஷு நிதானம் ச கதயன்
முகுர்த்தேவம் லஷ்ம்யா ஸஹிதமிக பேஜே முனிவரா -23-

பரம் ப்ராப்யம் பஸ்யன் பரம புருஷார்த்தம் இவனே /
பரிசரணா ஹேதும் விஞ்ஞாயன் – கைங்கர்யம் கொண்டு அருள உபாயமும் அவனே /
பரிஷுக்குருவன் அஞ்ஞானம்-சர்ம ஸ்லோகப்படி சர்வ தர்மான் பரித்யஜ்ய– செய்தால் —
சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -செய்பவனும் அவனே
அனிதர சரண்ய சரண்யன் -புகல் ஒன்றும் இல்லாத அனன்யா கதிகளுக்கு அவனே சரண்யன்
அநிஷ்ட ப்ரத்வம்ச ப்ரப்ரிஷு நிதானம் ச கதயன் முகுர்த்தேவம் லஷ்ம்யா ஸஹிதமிக–
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் மிதுனமே ஒரே நிருபாதிக ரக்ஷை –

——-

புரா சோகா ஸ்லோகா பவதிதி நயாதிதி உபநிஷத்
முநே புண்யா ஸ்லோகாத ஜநி பர பக்தே பரிணாதி
வ்யாபோக்ய ஸ்வாம் பாவம் ஹரி சரணா சந்தான லிகாம்
அவிக்ஷத் யோகி யஸ்தனுமதனு காருண்ய விவசா –24-

வால்மீகி சோகத்தால் பிறந்த ஸ்ரீ இராமாயண ஸ்லோகங்கள் /
சடகோப முனி ஆழ்ந்த பக்தியால் பிறந்த தமிழ் உபநிஷத்தான திருவாய் மொழி
கருணைக் கடலுள் ஆழ்ந்து -அவனையே நினைந்து அவன் அருளாலே அவனை அடைந்தார்

சோகா ஸ்லோகாத்வமப் யாகத இதை வதத சுத்த போதார்ண போத்யன்
நாநாக லோலா நாதானுபவ ரஸ பரிவாஹத ஸ்ராவ்ய வேதாத்
வேதாந்த சார்யக ஸ்ரீ பஹுமத பஹுவித் வேங்கடேசா ஸ்தோத்ரேயம்
ரம்யா தாத்பர்ய ரத்னாவளிர் அநக குண ரஞ்சினி ரங்க பர்த்ரு–130-

——-

சதாம் இத்தம் சாரம் த்ராமிட நிகமஸ் யான்வகதயத்
பஹு நாம் வித்யா நாம் பஹு மதி பதம் வேங்கடபதி
திசா சவ்தா ஸ்ரேநீ த்ர்தா கதிதா ஜைத்ர த்வஜ பதி
பராமர் ஸப்ரஸ்யாத் ப்ரதிமத நிராபாத நிகம–25-

இத்தம் சத் சம்பிரதாய க்ரம சமதிகதா சேஷ வர்ணார்ஹ வேத
ஸ்ரத்தாஸ் சுத்த சயானா மகதயாதநகம் கௌதுகம் வேங்கடேச
சம்யக்த்வே தஸ்ய சாஷாத் சடாரி புரத்வா சர்வ சாக்ஷி ச சாக்ஷி
சாவத்யத்வேபி சோதும் பிரபவதி பஜதாம ப்ரகாம்ப யனுகம்பா –ரத்னாவளி –129-

——-

மனு வியாச ப்ராசேதச பரிஷ்தர்ஹா க்வசிதியம்
ஸூதாஷிக்த ஸூக்தீ ஸ்வயம் உதயமனவிச்சதி ஜநே
ந்ருந்த்யுஹ்கே விந்த்யாசல விகத ஸந்த்யா ந தஜ
தாபரிப்ராந்தா பங்கோ உபரி யதி கங்கா நிபததி –26-

இந்த பிரபந்தம் மஹா முனிகளான மனு பகவான் வியாச பகவான் வால்மீகி ரிஷி போன்றார் கூட்டங்களாலே கேட்கத் தக்கது-
அவனது நிருபாதிக ஸூ ஹ்ருதம் அடியாகவே பிறந்தது –
விந்தியமலை சாரல் -கங்கா நதி -திருச்சித்ர கூடம் -உண்டாக்கி அருளினால் போலே
அடியேனையும் ஆக்கி இப்பிரபந்தம் அருளப்பண்ணினான்

———

முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-

———–

மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-

——–

கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-

———

உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4-

———-

போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5-

—–

எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-

———

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-

—-

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8-

———

முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி எங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–10-10-9-

——–

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-

——-

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-

——-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -100-பாசுரம்–

அவதாரிகை –

இதில் – ஸ்ரீ பரம பத்தியாலே-பர ப்ராப்தியான படியை பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
கீழ் சூழ் விசும்பு அணி முகிலிலே ஸ்ரீ பரம பதத்திலே புக்கு நிரதிசய ஆனந்த உக்தராய்
நித்ய சூரிகள் திரளிலே இருக்கிறாராக-தம்மை அனுசந்தித்த இது
ஜ்ஞான அனுசந்தானம் மாத்ரமாய் பாஹ்ய சம்ச்லேஷ யோக்கியம் அல்லாமையாலே
மேரு சிகரத்திலே ஸூ கோத்ரமாக இருந்தவன்
பேர் ஆழமான பள்ளத்திலே தலை கீழாக தள்ளுண்டு-விழுந்து நோவு படுமா போலே
அனந்த கிலேச பாஜனமான சம்சாரத்தில்-தாம் இருக்கிற படியைக் கண்டு
ஸ்ரீ ஈஸ்வரனுக்கு
பண்டு போலே ஒரு குணாவிஷ்காராதிகளால் பரிஹரிக்க ஒண்ணாத படி ஆற்றாமை தலை எடுத்து
ஒரு தூத ப்ரேஷாணாதிகளால் இட்டு நீட்டுகையும் இன்றிக்கே
தாமே அவன் முகத்தைப் பார்த்து
தம்மால் இது பரிஹரித்துக் கொள்ளப் போகாது இருக்கிறபடியும்
சாதநாந்தரங்களை அனுஷ்டித்தாலும் அவன் கை பார்த்து இருக்க வேண்டி இருக்கும் படியையும் சொல்லிக் கொண்டு
ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆணை இட்டு-தடுத்தும்-வளைத்தும் அவனைப் பெற வேண்டும்படியான பரம பக்தி தலை எடுத்து
நிர்க்குணர் உடைய ஹிருதயங்களும் கூட இரங்கும் படியாகவும்
அவனுக்கும் தம் கார்யம் செய்து அல்லது ஸ்ரீ திரு நாட்டிலே குடி இருப்பு அரிதாம்படியாகவும்
பெரும் மிடறு செய்து கூப்பிட்டு பெரிய ஆர்த்தியோடே திருவடிகளிலே சரணம் புக
ஸ்ரீ பெரிய திருவடி திருத் தோளிலே ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடு கூட இவர் அபேஷித்த படியே ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து தோற்றி
கால் கட்டான பிரகிருதி சம்பந்தத்தையும் அறுத்து
ஸ்ரீ பரம பதத்திலே கொடு போய் நித்ய சூரிகளோடே ஒரு கோவை யாக்கி-நித்ய கைங்கர்யம் கொண்டருள-
அத்தாலே-தாம் நிரஸ்த பிரதிபந்தகராய் பிராப்த சமஸ்த மநோ ரதரான படியை-சொல்லித் தலைக் கட்டுகிற
முனிய நான் முகனே யில் அர்த்தத்தை
முனி மாறன் இத்யாதியாலே அருளிச் செய்து தலைக் கட்டுகிறார் -என்கை –

————————————————-

முனி மாறன் முன்புரை செய் முற்றின்பம் நீங்கி
தனியாகி நின்று தளர்ந்து -நனியாம்
பரம பத்தியால் நைந்து பங்கயத்தாள் கோனை
ஒருமை யுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து –100-

————————————————-

வியாக்யானம்–

முனி மாறன்
ஸ்ரீ சர்வேஸ்வரன் -முனியே -என்னும்படி சதவஸ்தமான சம்ஹ்ருதி சமயத்தில் சர்வ சேதன ரஷணத்திலே
த்யாநாந்தஸ்தனாய் இருக்குமா போலே
இவரும்
நித்ய சம்சாரிகளாய் சம்சாரித்து
அசித் ப்ராயரான ஆத்மாக்கள் விஷயத்திலும் ரஷண சிந்தை பண்ணிப் போருகையாலே முனி -என்கிறது –
அன்றிக்கே –
பகவத் விஷயத்தில்-எண்ணா தனகள் எண்ணும் நல் முனிவர்-என்னுதல் –
அன்றிக்கே
பிரக்ருததுக்குச் சேர-ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்தில்-பரம பக்தி பர்யந்தமாக
நிரந்த சிந்தா உக்தராய் இருக்குமவர் -என்னுதல் –
இப்படி மனன சீலராய் இருக்கிற ஸ்ரீ ஆழ்வார் —

முன்புரை செய் முற்றின்பம் நீங்கி –
அதாவது
களிதாகி சிந்தையனாய் களிக்கின்றேன் -என்றும்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே -என்றும்
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை-மேலைத் தொண்டு களித்து அந்தி தொழும் சொல்லும் பெற்றேன் -என்றும்
கண்ணுள் நின்று அகலான் -என்றும்
உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன் -என்றும்
வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து அந்தமில்-பேரின்பத்து அடியரோடு இருந்தமை -என்றும்
இப்படி
முன்பு பேற்றை பெற்றதாக அருளிச் செய்த சமஸ்த ஆனந்தமும் நிரஸ்தமாய்ப் போய்
அது எல்லாம் மானச அனுபவ மாத்ரமாய்-பிரத்யஷ சாஷாத் காரத்திலே அபேஷை யுடையவராய்
அத்தை அப்போதே பெறாமல்
மீளவும் அஜஞாநாவஹமான சம்சாரத்த்லே இருக்கக் கண்டு
பூர்வத்தில் ஆனந்தமும் அபூர்வமாம்படி கழிந்தது -என்கை –

தனியாகி நின்று தளர்ந்து –
அந்தமில் பேர் இன்பத்து அடியாரான-ஸூரி சங்கங்கள் உடனே இருந்தும்
ஸ்வப்ன கல்பமாய் பழைய சம்சாரத்தில் தனிமையே சேஷித்து
ஸ்ரீ பிராட்டி ஸ்ரீ திரு அயோத்யையிலே ராவாணந்தகரான ஸ்ரீ பெருமாளை
பரமனும் தம்பி சத்ருக்னனும் இலக்குமனோடு மைதிலியும் -என்னும்படி சேர்த்தியாய் இருந்து அனுபவித்து
பின்பு பிரிந்து
காந்தார மத்யே விஜகே விஸ்ருஷ்டா பாலேவ கன்யா விலலாப சீதா -என்னும்படி
தனியே நின்று கூப்பிட்டாப் போலே
தனியேன் ஆர் உயிரே -என்று
தனியாகா நின்று தளர்ந்து மிகவும் அவசாதத்தை உடையவராய் தரைப்பட்டு-

அதாவது –
கனிவாய்த் தாமரை கட்கரு மாணிக்கமே –மாயம் செய்யேல் என்னை -என்றும்
மாயம் செய்யேல் என்று தொடக்கி –திரு வாணை நின் ஆணை-கண்டாய் –கூ விக் கொள்ளை வந்து அந்தோ -என்றும்
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின் அல்லால் அறிகின்றிலேன் நான் -என்றும்
உம்பர் பரம் தண் பாழேயோ–என்னைப் போற விட்டிட்டாயே -என்றும்
எனக்கு ஆரா வமுதானாயே -என்றும்
எனக்கு ஆரா அமுதாய் எனது ஆவியை இன்னுயிரை மனக்காராமை மன்னி யுன்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய் -என்றும்
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ-உன்னைப் பெற்று இனி போக்குவேனோ -என்றும்
முதல் தனி உன்னை எனை நாள் வந்து கூடுவன் நான் -என்றும்
இப்படி ஆற்றாமையாலே-அவசன்னராய்க் கூப்பிட்டு -என்கை –

நனியாம் பரம பக்தியால் நைந்து —
அதனில் பெரிய அவா -என்னும்படி
தத்வ த்ரயங்களிலும் பெரியதாய்-முடிந்த அவாவான பரம பக்தியாலே-பரிபக்வராய் –
நனி -பெருமை

அன்றிக்கே
பரம பக்தியால் அலைந்து -என்ற பாடமான போது
அவா வாகிற அமுத வெள்ளமான-ஆனந்த சாகரத்திலே மக்னராய் -அலைந்து -என்றுமாம் –

பங்கயத்தாள் கோனை –
அந்த பரம பக்திக்கு விஷயமான-ஸ்ரீயபதியை –
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ –
உன்னைப் பற்றி இனி போக்குவேனோ -என்று அருளிச் செய்தவனை
உத்தர வாக்யத்தில் கைங்கர்ய பிரதி சம்பந்தியான ஸ்ரீயபதியை –

ஒருமையுற்று
வீடு திருத்தி -என்றும்
விண்ணுலகம் தருவானே விரைகின்றான் -என்றும்
வானே தருவான் எனக்காய் என்னுள்ளே ஒட்டி -என்றும்
த்வரிக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் திரு உள்ளத்தோடு சேரும்படி
இவர் திரு உள்ளமும் த்வரித்து -ஒரு தளைத்து -என்னுதல்-

அன்றிக்கே
பர பக்தி
பர ஞான
பரம பக்தி
உக்தராய்-பேற்றுக்குத் த்வரித்து
அவாவாலே கூப்பிட்டுப் போந்த இவர் திரு உள்ளமும் –

முதித பரிஷச்வஜே -என்னும்படி
என் அவா அறச் சூழ்ந்தாயே -என்று
இவர் அபி நிவேசம் தீரும்படி சம்ஸ்லேஷிக்கையாலே
அவா அற்று வீடு பெற்ற பிரகாரத்தை-ஆகவுமாம்-

பங்கயத்தாள் கோனை –ஒருமை யுற்று –உயர்ந்து -சேர்ந்தான் –
அதாவது
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ -என்கிற-இழவு தீர
ஸ்ரீ யபதியான ஸ்ரீ சர்வேஸ்வரனை-ஒரு தலைத்த பரமபக்தி உக்தராய்
அத்தால்
நித்ய சூரிகள் ஆச்சார்யத்தை-இங்கே யுடையராய்
பிரத்யஷ சாஷாத்காரமாம் படி கிட்டி-இருவருமான சேர்த்தியிலே
அடிமை செய்வார் திரு மாலுக்கே -என்னும்படி –
அடிமை செய்யப் பெற்றார் –
அங்கே
பரதமாரோப்ய முதித பரிஷச்வஜே -என்று-இவரைப் பெற்று ஹ்ருஷ்டனாக
இவரும்
அத்தலையில்-முகோல்லாசத்தைப் பெற்று -அனுபவித்து-ஹ்ருஷ்டரானார் –
அத்தை யாயிற்று-ஒருமை யுற்றுச் சேர்ந்தான் -என்கிறது –

இத்தால்
அவா அற்று
வீடு பெற்ற
குருகூர் சடகபன் –
என்றத்தை நினைக்கிறது-

சாஷாத் கரித்த பரம பிராப்திக்கு தலை மிசையாய் வந்து-தாள்களைப் பூண்டு-போகாமல் தடுத்து
திரு வாணை இட்டு-கூசம் செய்யாதே-செய்திப் பிழை யற்று
கொம்பற்ற கதி கேடு போர விட்ட பெரும் பழி-புறம்பு போனால் வரும் இழவு உண்டிட்ட முற்றீம்பு
அன்பு வளர்ந்த அடி யுரம்-உயிர் உறவு முதல் அளவு துரக் கைகளாலே
பெறா வாணை அல்லவாக்கின-பேரவா-குளப்படியாம்படி-கடல் போன்ற ஆதாரத்தோடு சூழ்ந்து
தாபங்களை ஹரித்தமையை-வெளியிடுகிறார் பத்தாம் பத்தில் -என்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிச் செய்தார் –

கண்டு களிப்பளவும் -பரஞ்ஞான கர்ப்ப பரபக்தி
இருந்தமை -என்றது பூர்ண பரஞ்ஞானம்
முடிந்த அவா என்றது பரமபக்தி

இவை
ஞான
தர்சன
பிராப்தி
அவஸ்தைகள் -என்று
இந்த பரபக்தியாதி பேதத்தையும் அருளிச் செய்தார் —

ஏவம்விதமான
பரமபக்தியாலே-பரிபக்வராய்-பலத்தோடு சேர்ந்தார் -என்கிற
ஸ்ரீ திருவாய்மொழியில் அர்த்தத்தை-இப்பிரபந்தத்தில்-இப்பாட்டாலே சேகரித்து அருளினார் ஆயிற்று —

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–10-9-சூழ் விசும்பு அணி முகில்–சாரங்கள்—

June 2, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

நவமே சடாரி ஆசாதீதோ முனி ரபோத்
தத்ர ஸ்திதிக்கு சுகமயீஞ்ச ஹரி பிரியாணாம் ததீய ஜனீ
ஸத்காரம் சுரைர் அபி அத்வனி
சந்நிஹ்ருஷ்டேபிரதி உத் கதிம் பரம தாம்நி –

——–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

ஸ்வாமி த்வாத் ஸ்ரீ சன் நாராயணன் இதி விக்ரமாது விஷ்டமானாம்
ஸ்ரீ மத்வாத் மதுரா மது சக்ரவத்வாத் ஜல நிதி சயநாச்சாபீ
கோவிந்தன் பாவாத் வைகுண்ட ஸ்வாமி பாவாத் அபிச
நிஜ ஜன அர்ச்சிராதி கம்ய ஸ்ரீ சடாரி பபூவ-கதயாமாச-

1–ஸ்வாமி த்வாத்-ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன் வாழ் புகழ் நாரணன்–

2–ஸ்ரீ சன் நாராயணன் இதி–நாரணன் தமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில் பூரண பொற் குடம் பூரித்தது

3-விக்ரமாது விஷ்டமானாம் –பொழி வனர் பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர்

4-5-ஸ்ரீ மத்வாத்—மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே—என்றும்
மாதவன் தமர் என்று வாசலில் வானவர் போதுமின் எமது இடம் புகுதுக என்றலும் கீதங்கள் பாடினர்–என்றும் –
மதுரா மது -லவணாசுரன் மது அப்பா பிள்ளை

6–சக்ரவத்வாத்–ஆழியான் தமர் என்று வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே

7–ஜல நிதி சயநாச்சாபீ–கடல் கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே

8–கோவிந்தன் பாவாத்–குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள

9–வைகுண்ட ஸ்வாமி பாவாத் அபிச–வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர் வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர் வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே-

10-நிஜ ஜன அர்ச்சிராதி கம்ய–நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும் மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே

ஸ்ரீ சடாரி பபூவ-கதயாமாச–வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல் சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–

———

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே –10-9-1-

——–

நாரணன் தமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–10-9-2-

——–

தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழி வனர் பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3-

———-

எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-10-9-4-

———

மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–10-9-5-

———

வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–10-9-6-

———-

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-

———

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–10-9-8-

———

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-

———-

விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10-

——–

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-

———

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -99-பாசுரம்–

இதில் ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்க சத்காரத்தை அடையக் காட்ட அனுபவித்து அருளிச் செய்த பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார்-அது எங்கனே என்னில் –
இவரை அமர்ந்த நிலமான ஸ்ரீ பரம பதத்திலே கொடு போய் வைத்து இவரும் தானுமாக அனுபவிப்பதாக ஸ்ரீ சர்வேஸ்வரன் விசாரித்து
இவருக்கு ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கத்தையும்-அங்கு உள்ளார் பண்ணும் சத்கார விசேஷங்களையும்
ஸ்ரீ பரமபத பிராப்தியையும் அங்கு உள்ளார் வந்து எதிர் கொண்டு சத்கரிக்கும் கட்டளைகளையும்
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் இவருக்கு கண்டு அனுபவிக்கலாம்படி
பர ஜ்ஞான தசையை பிறப்பித்துக் காட்டிக் கொடுக்க
இவரும் கட்டடங்க கண்டு அனுபவித்து
தாம் பெற்ற பேற்றை அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற சூழ் விசும்பு அணி முகிலில் அர்த்தத்தை
சூழ்ந்து நின்ற மால் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை-

———————————————–

சூழ்ந்து நின்ற மால் விசும்பில் தொல்லை வழி காட்ட
ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து -வாழ்ந்து அங்கு
அடியருடனே இருந்தவாற்றை யுரை செய்தான்
முடி மகிழ் சேர் ஞான முனி –99-

————————————————-

வியாக்யானம்–

சூழ்ந்து நின்ற மால் விசும்பில் தொல்லை வழி காட்ட –
கீழ் இவரைச் சூழ்ந்து கொண்டு நிவ்ருத்தனாய் நின்ற ஸ்ரீ சர்வேஸ்வரன்
ஏஷா சாத்ருச்யதே -இத்யாதி படியே- ஸ்ரீ பரம ஆகாசத்திலே தேஜக்ரச்சாச்வதே மதே -என்று
பூர்வ மார்க்கமான ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கத்தைக் காட்ட
அமந்திர ஜோஸ்த்வ கோஷம் போலே ஏறப் பெறுகிற எழுச்சியை ஸூசிப்பிக்கிற
மேக சமுத்திர பேரீ கீத காஹள சங்கா சீச்துதி-கோலாஹலம்-செவிப்படும் படியையும் –
அலங்கார விகிம்க்ருதச்னாம் காரயமாச வேசமான -என்கிறபடியே-அங்குள்ள ஆதிவாஹிக சத்கார க்ரமத்தையும்
மேல் ஸ்ரீ நித்ய சூரிகள் பிரத்யுக்தராய் சத்கரிக்கும் க்ரமத்தையும்
த்வாராத்ய ஷரர்சத்கரிக்கும் க்ரமத்தையும் திவ்ய அப்சரஸ் சத்கார க்ரமத்தையும்
ஸ்ரீ சர்வேஸ்வரனும் ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் ஆதரிக்கும் படியையும்
திவ்ய சூரி பரிஷத்தில் இருந்து ஆனந்த நிர்பரராய் அனுபவிக்கும் படியையும்
தொல்லை வழி காட்ட -என்ற அதிலே இவ்வளவும் அனுவர்த்தித்த படி –

ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து —
அதிலே ஆழம் கால் பட்டு-அவன் காட்டின எல்லாவற்றையும் கட்டடங்க அனுபவித்து
அதாவது –
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின-ஆழ் கடல் அலை திரை கை எடுத்து ஆடின-என்றும்
நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்-பூரண பொற் குடம் பூரித்த உயர் விண்ணில் -என்றும்
தொழுதனர் உலகர்கள் -என்று தொடங்கி வழி இது வைகுந்ததற்கு என்று வந்து எதிர் எதிர் -என்றும்
எதிர் எதிர் இமையவர் என்று தொடங்கி-மது விரி துழாய் முடி மாதவன் தமர்கே-என்றும்
மாதவன் தமர் என்று வாசலில் வானவர் -என்று தொடங்கி-வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே -என்றும்
வேள்வியுள் மடுத்தலும் -என்று தொடங்கி -வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் -என்றும்
மடந்தையர் வாழ்த்தலும் -என்று தொடங்கி -குடந்தையன் கோவலன் குடி குடி யார்க்கே -என்றும்
குடியடியார் -என்று தொடங்கி-வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே -என்றும்
வைகுந்தம் புகுதலும் -என்று தொடங்கி-வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -என்றும்
விதிவகை -என்று தொடங்கி -மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே -என்றும்
வந்தவர் எதிர் கொள்ள மா மணி –பேரின்பத் தடியரோடு இருந்தமை -என்றும்
இப்படி-முழுவதும் அனுபவித்த படி -என்கை –

அனுபவித்து வாழ்ந்து –
இவ் வனுபவத்தை அடைவே அனுபவித்து க்ருதார்த்தராய் –

அங்கு அடியருடனே இருந்தவாற்றை யுரை செய்தான் –
ஸ்ரீ பரம பதத்திலே ஆனந்த மயமான ஸ்ரீ திரு மா மணி மண்டபத்திலே
ஸ்ரீ அனந்த ஸ்ரீ கருட ஸ்ரீ விஷ்வக் சேனர் பிரமுகராய் உள்ள-அடியரோடு
ஆனந்த நிர்பரராய் இருந்த பிரகாரத்தை அருளிச் செய்தார்

முடி மகிழ் சேர் ஞான முனி –
முடியுடை வானவரோடே கூடுகையாலே-முடியை யுடையராய் பிரபந்தம் தலைக் கட்டுகையாலே
ஸ்ரீ ஆழ்வாரும்-அளக பந்தத்திலே வகுள பந்தத்தை யுடையராய் தலைக் கட்டின படியை அருளிச் செய்கிறார் –
அவன் – மது விரி துழாய் மாதவன் –
இவர் -முடி மகிழ் சேர் ஞான முனி-பர ஜ்ஞானத்தை உடைய பராங்குச முனியானவர் –

அடியருடனே இருந்த வாற்றை யுரை செய்தான் –
சூழ் விசும்பு அணி முகில் தொடங்கி-அடியரோடு இருந்தமை என்னும் அளவும் அருளிச் செய்தார் –
எல்லாரும் விஸ்வசித்து உஜ்ஜீவிக்கைக்காக –

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–10-8–திருமால் இரும் சோலை மலை என்றேன்-சாரங்கள்—

June 2, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

அஷ்டமே அபூத் முனி தத்த உத்தரம் வியாமோஹம்
ஆத்மனி விபோ-அவேலா-அத்யாதரம்
மயி பிராக் -முன்பு -கதம் தும் அநாதார
ஹேதும் வைத்த உசிதமிக்க அனுப்பிருச்ச்ய

முன்பு -கதம் தும் அநாதார ஹேதும் வைத்த உசிதமிக்க
அனுப்பிருச்ச்ய விடாமல் கேட்டு –

———

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

லஷ்மி காந்தஸ்ய யோகாத் விபதி சகிதயா திவ்ய தேச ஸ்திதித்யாத்
மோக்ஷ உத்யோகாத் தத்தர்த்தம் க்ரியா சபதத்வாத் ஸர்வதாகா
சந்நிஹிதாத் த்ருஷ்யந்த சந்நிவாசாத் அதி விதாரணக
ஸூ ஸ்வபாவ பிரகாசாத் ஸ்வாமித்வாத் துஷ்யந்தி இத்தம்

1–லஷ்மி காந்தஸ்ய யோகாத்-திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே

2–விபதி சகிதயா–காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும் ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே

3–திவ்ய தேச ஸ்திதித்யாத்–கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான் அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே

4–மோக்ஷ உத்யோகாத்–திருப் பேரான் தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே

5–தத்தர்த்தம் க்ரியா சபதத்வாத்–ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்

6–ஸர்வதாகா சந்நிஹிதாத்–திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப் பொருப்பே உறைகின்ற பிரான்
இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்

7–த்ருஷ்யந்த சந்நிவாசாத்–திருப் பேரான் கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே

8–அதி விதாரணக–திருப் பேரான் திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே

9–ஸூ ஸ்வபாவ பிரகாசாத் –குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான் ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே

10-ஸ்வாமித்வாத் துஷ்யந்தி இத்தம்–உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம் பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்–

———–

திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே-10-8-1-

——

பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே–10-8-2-

———-

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3-

————

எளிது ஆயினவாறு என்று என் கண்கள் களிப்பக்
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே–10-8-4-

———–

வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–10-8-5-

————

திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6-

————

உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7-

————

கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8-

————

இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-

———-

உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10-

———-

நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே–10-8-11-

——

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -98-பாசுரம்–

அவதாரிகை –

இதில்-இப்போது ஆதரிக்கிற தேவர்-அநாதி அநாதர ஹேது சொல்லும் என்று-மடி பிடித்துக் கேட்க
அவன் அதுக்கு ஒன்றும் சொல்லாமல்
நிருத்தனனான படியை அருளிச் செய்கிற ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியை அனுவதித்து-அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
முதலிலே
அத்வேஷத்தைப் பிறப்பித்து-ஆபிமுக்யத்தை யுண்டாக்கி-ஆஸ்ரயண ருசியை விளைத்து
தானே யுபாயமாய்-தன் திருவடிகளிலே பிரேமத்தையும்-பரம பக்தி பர்யந்தமாக முற்றுவித்து
தன்னால் அல்லாது செல்லாதபடி பண்ணி
நாம் சொன்னபடியே செய்வானாக சமைந்து
நம்மை இவன் இப்படி தலையாலே-சுமவா நின்றதுக்கு அடி ஏது என்று அவனைக் கேட்க –
அவன் நிருத்தரனாய்-கவிழ் தலை இட்டு நிற்க
நிர்ஹேதுகமாகாதே -என்று ப்ரீதராய்
தம்மை அவன் அங்கீ கரித்த படியையும்
அங்கீகார ஹேதுவானவன் கிருபாதி குணங்களையும்-அனுசந்தித்து
இது ஒரு நிர்ஹேதுக விஷயீகாரம் இருந்தபடியே-என்று வித்தராகிற
திரு மால் இரும் சோலை மலை யில் அர்த்தத்தை
திருமால் தம்பால் -இத்யாதியாலே-அருளிச் செய்கிறார் -என்கை-

—————————————————-

திருமால் தன்பால் விருப்பம் செய்கின்ற நேர் கண்டு
அரு மாயத்து அன்று அகல்விப்பான் என் -பெருமால் நீ
இன்று என்பால் செய்வான் என் என்ன இடருற்று நின்றான்
துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து —98-

————————————————–

வியாக்யானம்–

திருமால் தன்பால் விருப்பம் செய்கின்ற நேர் கண்டு –
அதிகம் புரவா சாச்சம் மன்யே தவச தர்சநாத் -என்னும்படி-ஸ்ரீ யபதியானவன்
தம் விஷயத்தில்-அத்யாதாரம் பண்ணுகிற படியைக் கண்டு –
அதாவது
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என்றும்
இன்று வந்து பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என்றும்
திருப் பேரான் அடி சேர்வது எனக்கு எளிதாயினவாறே -என்றும்
தெளிதாகிய தேண் விசும்பு தருவானே -என்றும்
வானே தருவான் எனக்காய் என்னோடு ஒட்டி
யூனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் -என்றும்
இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என்றும்
உண்டு களித்தேற்கு -என்று தொடங்கி-கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலான் -என்றும்
கருத்தின் கண் பெரியன் -என்றும்
திண்ணம் என் மனத்து புகுந்தான் செறிந்து இன்றே -என்றும்
இப்படி-மேல் மேல் என-அத்யாதாரத்தை பண்ணின படி என்கை –

ஏவம் வித நிர்ஹேதுக வ்யாமோஹத்தை தர்சித்து
அரு மாயத்து அன்று அகல்விப்பான் என் -பெருமால் நீ இன்று என்பால் செய்வான் என் என்ன-
அன்று-அநாதி காலம்-துரத்யயமான பிரக்ருதியிலே இட்டு வைத்து அகற்றி விடுவான் என் –
இன்று நிர்ஹேதுகமாக-நிரவதிக வ்யாமோஹத்தை
சர்வஞ்ஞனாய் சர்வசக்தனாய் நிரஸ்த சமஸ்த ஹேயனான நீ
அஞ்ஞனாய் அசக்தனாய் ஹேய சம்சர்க்க அர்ஹனாய் இருக்கிற என் விஷயத்தில்
இப்படிச் செய்வான் என் என்று கேட்க
இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான் அன்று என்னைப் புறம போகப் புணர்த்தது என் செய்வான்
குன்றன்ன திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரா ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேன் –
என்றத்தை கடாஷித்து அருளிச் செய்தபடி —

இப்படி அநாதி அநாதர ஹேது சொல் என்று மடியைப் பிடித்து கேட்க
அவனும் சில ஹேது பரம்பரைகளை இவர் உத்தரத்துக்கு பிரத்யுத்தரமாக சொல்லிக் கொடு போர
இவர் தம் நா வீருடைமையாலே அவனை நிருத்தனாம்படி பண்ண –

இடருற்று நின்றான் –
இப்படி இவர் அருளிச் செய்ய மேல் போக்கடி காணாமல்
தரைக் கீறி கவிழ தலை இட்டு ஸ்தப்தனாய் நின்றான்
இடராவது-அதிகோக்தி சொல்ல முடியாத ஆகுலம் –

துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து –
இது நிர்ஹேதுகமாகாதே -என்று அவன் விஷயீ காரத்திலே விக்ருதராய்
அத்தாலே வந்த சம்ருத்தமான யசஸை யுடைய ஸ்ரீ ஆழ்வாரை –
அந்த யசஸ் ஸோபாதியாகத் தானும் சூழ்ந்து -இடருற்று நின்றான்
ஸ்ரீ சர்வஞ்ஞனும் நிருத்தனாய் நிற்பதே -என்று இவருக்கு ஈடுபாடாய் இருக்கிறது –

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–10-7–செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின்-சாரங்கள்—

June 2, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ததீயே சீலே அதிகம்ய ஹரிம் அஸ்மின் இதம் உபைமி
ஸூ சரீர லோலா தத் தோஷ முக்தமபி
தத் த்யஜனே ஸூ யாஞ்சாம் சார்த்தாம் சிகீரிஷும்
முனி சகுலு சப்தமதோ –

ததீயே சீலே அதிகம்ய ஹரிம் -அனைத்தையும் போக்கும் மானங்கார கெடும் அபகரிக்க
அஸ்மின் இதம் உபைமி -அடைகிறேன் அணைவேன்
தத் த்யஜனே ஸூ யாஞ்சாம் பிரார்த்தனையை

———

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

அத்யாச்சர்ய ஸ்வ பாவாத் ஹ்ருதய கதத்தயா -ஸூவஸ்துதா பிரேரகத்வாத்
ஸ்வாமித்வாத் சர்வ பூதாந்தர அனுகதாதயாத் ஸூ வஸ்துதவ்
கர்த்ரு பாவாத் ஆபத் பந்துத்வ யோகாத் பகுவித ஸவித ஸ்தான
வத்த் வேனா தேவ ஸ்ரீ மான் ஸூ ஜன பரிகரம் திருமேனி

1–அத்யாச்சர்ய ஸ்வ பாவாத்- ஹ்ருதய கதத்தயா -திருமால் இரும் சோலை வஞ்சக் கள்வன் மா மாயன்
மாயக் கவியாய் வந்து என் நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம்

2–ஸூவஸ்துதா பிரேரகத்வாத்-தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய்
தானே யான் என் பான் ஆகி தன்னைத் தானே துதித்து

3–ஸ்வாமித்வாத் —என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான்-அடுத்த பதிகார்த்தம் பொசிந்து காட்டுகிறார்

4–சர்வ பூதாந்தர அனுகதாதயாத்–உலகும் உயிரும் தானேயாய் நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி

5–ஸூ வஸ்துதவ் கர்த்ரு பாவாத்–பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே

6–ஆபத் பந்துத்வ யோகாத்–செழு மூஉலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும் திருமால்

7–8–9-10–பகுவித ஸவித ஸ்தான வத்த் வேனா தேவ –பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும் இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான்-என்றும்
திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே–என்றும்
ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும் ஆழி வண்ணன் என் அம்மான்–என்றும்

ஸ்ரீ மான் ஸூ ஜன பரிகரம் திருமேனி–திரு மால் இரும் சோலை மேய நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே–

———

செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–9-7-1-

————–

தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய்
தானே யான் என் பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலைக்
கோனே யாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே–9-7-2-

——–

என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே–10-7-3-

——–

என் கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானேயாய்
நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே–10-7-4-

——–

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5-

———–

திருமால் இரும் சோலையானே யாகி செழு மூஉலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது
அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே–10-7-6-

———–

அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–10-7-7-

——–

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-

———

ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும்
ஆழி வண்ணன் என் அம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை
வாழி மனமே கை விடேல் உடலும் உயிரும் மங்க ஓட்டே–10-7-9-

——–

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-

——–

மான் ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத்
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11-

—–

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -97-பாசுரம்–

அவதாரிகை –

இதில்-அவன் தேக சபலனாய்-ஆதரிக்க-இவர் -விரோதியான சரீரத்தை விடுவி -என்று
விடுவித்துக் கொண்டமை பேசின பாசுரத்தை அனுவதித்து-அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
தம்மோடு வந்து கலந்து-தமக்கு பரதந்த்ரனாய் தம் திரு மேனியிலே அத்ய அபி நிவிஷ்டனாய்
திரு மேனியோடே தம்மை ஸ்ரீ திரு நாட்டில் கொடு போக வேணும் என்று
அவன் தம் திருமேனியில் மிகவும் பண்ணுகிற சாபலத்தைக் கண்டு
நம் பக்கல் ஆதர அதிசயத்தால் அன்றோ-இவன் நம் உடம்பை ஆதரிக்கிறது என்று பார்த்து
இதன் தோஷம் அறியாமல்-ராகாந்தனாய் இருக்கிற இவனுக்கு
இதன் தோஷத்தை யுணர்த்தவே இத்தை தவிரும் என்று நினைத்து-இதன் தோஷங்களை அவனுக்கு அறிவிக்க
அபிமத விஷயத்தில் அழுக்கு உகப்பாரைப் போலே
அது தானே அவனுக்கு மேல் விழுகைக்கு உடலாக-எனக்கு இது மிகவும் அநபிமதமாய் இருக்கும்
ஆன பின்பு இத்தைக் கழிக்க வேணும் -என்று
இவர் அவன் திருவடிகளிலே தலையை மடுத்து சரணம் புக
இவர் விதி வகை பார்க்குமவன் ஆகையாலே
இவர்க்கு அநபிமதம் ஆகில்-வருந்தியும் நாம் இத்தை கழித்து கொடுக்கக் கடவோம்-என்று தலை துலுக்க
நம் சொலவைப் பரிபாலிப்பதே
இது ஒரு சீலம் இருந்தபடி என் –என்று தலை துலுக்குகிற-
செஞ்சொல் கவிகாள் லில் அர்த்தத்தை
செஞ்சொல் பரன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————————–

செஞ்சொல் பரன் தனது சீராரும் மேனி தனில்
வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சை தனின் -விஞ்சுதலைக்
கண்டவனைக் காற்கட்டிக் கை விடுவித்துக் கொண்ட
திண் திறல் மாறன் நம் திரு—97-

———————————————————–

வியாக்யானம்–

செஞ்சொல் பரன் –
செஞ்சொல் மறைப் பொருளாகி நின்ற தேவர்கள் நாயகன் -என்கிறபடியே
செவ்விய சொல்லால் ஆன இத் திருவாய் மொழியால்-பிரதிபாதிக்கப் படுகிற
சர்வ ஸ்மாத் பரனான ஸ்ரீ சர்வேஸ்வரன் –
இது தான் செவிக்கு இனிய செஞ்சொல் இறே –

தனது சீராரும் மேனி தனில் –
தனிச் சிறையில் விளப்புற்று
அஸ்நாதையாய் இருந்த பிராட்டி வடிவைக் காண-ஆசைப் பட்டால் போலே
பிறவி அஞ்சிறையிலே
ஜ்ஞான பக்த்யாதிகள் விஞ்சி இருக்கிற-விக்ரஹத்திலே –

வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சை தனின் -விஞ்சுதலைக் கண்டு –
அதாவது
வஞ்சக் கள்வன் ஆகையாலே
நெஞ்சும் உயிரும் அவை உண்டு-தானே யாகி நிறைந்தான் -என்றும்
என்னை முற்றும் உயிர் உண்டே -என்றும்
என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய வாக்கை யதனுள் புக்கு -என்றும்
என்கொல் அம்மான் திருவருள்கள் நன்கு என் உடலம் கை விடான் -என்றும்
திருமால் இரும் சோலை மலையே -என்று தொடங்கி-ஒரு மா நொடியும் பிரியான் -என்றும்
இப்படி இவர் திரு மேனியை மேல் விழுந்து-அத்யாதரம் பண்ணுகிற படியைக் கண்டு-
உடலும் உயிரும் மங்க வொட்டு -என்றும்
பொங்கு ஐம்புலனும் என்று தொடங்கி –மானாங்கார மனங்கள் மங்க வொட்டு -என்றும்
இதன் தோஷ தர்சன பூர்வகமாக
அவனைக் கால் கட்டி-தம் கால் கட்டை விடுவித்துக் கொண்டபடி –

கை விடுவித்துக் கொண்ட –
கை விடுவித்துக் கொள்ளுகை யாவது -அவன் காலைக் கட்டி
கை விடுவித்துக் கொண்டார்-என்றபடி –

கை விடுவித்துக் கொண்ட -திண் திறல் மாறன் –
சர்வ சக்தி-சரீரத்துடன் கொடு போக வேணும் என்று-கர க்ரஹணம் பண்ண
இவர்
சரண க்ரஹணம் பண்ணி-விடுவித்துக் கொண்ட த்ருடமான சக்தியை யுடைய-ஆழ்வார் –

நம் திரு –
சம்பச்ச சாத்விக ஜனச்ய -என்னும்படி
ஸ்ரீ ஆழ்வாரான ஸ்ரீ மாறன்-நம்முடைய சம்பத்து –

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–10-6-அருள் பெறுவார் அடியார் –சாரங்கள்—

June 2, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

வைகுண்ட தாம வி நிவேச ஈஷும் ஈசம்
தச்ச ஸூ கீய விதி விதாது காமம் ஈசம்
ததீயா வாஞ்சாதீ த உபக்ருதீ
ஷ்ஷடே பஸ்யன் முனி –

———

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

சக்ரித்வாத் கேசவத்வாத் நாராயணத் வாத் ஸ்நேஹீத்வாதி
பாண்டாவானாம் அபிமத துளஸீ பூஜை நீயாத்வாத அம்போ
ஜாதீஷயத்வாத் கோவிந்தத்வாத் ஸூ யஷ ஸ்ரீ பாதித்தவை பாவாத்
தீவிர உத்தர மோதம் ஸூ பத விதரணே

1–சக்ரித்வாத்–ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே

2-கேசவத்வாத்–கேசவன் எம்பெருமானைப் பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே

3–நாராயணத் வாத்–நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி-

4–ஸ்நேஹீத்வாதி பாண்டாவானாம் அபிமத–மன் அஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான்
நன்னெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே

5–துளஸீ பூஜை நீயாத்வாத-தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே

6–அம்போ ஜாதீஷயத்வாத்–வாட்டாற்றான் மதம் மிக்க கொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே–

7-8-கோவிந்தத்வாத் –குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்–என்றும்
மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன் கைந்நின்ற சக்கரத்தன் –என்றும் –

9-ஸூ யஷ ஸ்ரீ பாதித்தவை பாவாத்–திகழ்கின்ற திரு மார்வில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு

10-தீவிர உத்தர மோதம்–பெரியார்க்கு ஆட்பட்டக் கால் பெறாத பயன் பெறுமாறு
வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் காட்டினனே

ஸூ பத விதரணே–காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்-

———–

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-

———–

வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2-

———

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே –10-6-3-

————

என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இருந்தமிழ் நூல் இவை மொழிந்து
வன்னெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்
மன் அஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான்
நன்னெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே-10-6-4-

——–

வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே-10-6-5-

———–

தலை மேலே தாளிணைகள் தாமரைக் கண் என் அம்மான்
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான்
மலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க
கொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே–10-6-6-

——–

குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென்னாட்டுத் திலதம் அன்ன
வரை குழுவு மணி மாடம் வாட்டாற்றான் மலர் அடி மேல்
விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே–10-6-7-

———

மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–10-6-8-

———-

திகழ்கின்ற திரு மார்வில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே–10-6-9-

———

பிரியாது ஆட்செய்து என்று பிறப்பறுத்து ஆள் அறக் கொண்டான்
அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியார்க்கு ஆட்பட்டக் கால் பெறாத பயன் பெறுமாறு
வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் காட்டினனே-10-6-10-

——

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11-

—–

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -95-பாசுரம்–

அவதாரிகை –

இதில்
பரம பதத்தில் கொடு போகையில்-த்வரிக்கும் இடத்திலும்
விதி பரதந்த்ரனாய் செய்கிறபடியை
பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
இப்படி பரோபதேசம் தலைக் கட்டின பின்பு
தம்மை அவன் திரு நாட்டிலே கொடு போகிக்கு த்வரிக்கும் படியையும்
கொடு போகும் இடத்தில் தாம் நியமித்தபடி
கொடு போக வேணும் என்று
தமக்கு அவன் பரதந்த்ரனாய் நிற்கிறபடியையும்
தாம் பெற்ற பேற்றின் கனத்தையும்
தம்முடைய திரு உள்ளத்துக்குச் சொல்லி-இனியராய் பேசுகிற
அருள் பெறுவாரில் அர்த்தத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார்
அருளால் அடியில் -தொடங்கி -என்கை –

அருளால் அடியில் எடுத்த மால் அன்பால்
இருளார்ந்த தம்முடம்பை இச்சித்து -இரு விசும்பில்
இத்துடன் கொண்டேக இசைவு பார்த்தே யிருந்த
சுத்தி சொல்லும் மாறன் செஞ்சொல் – —————96-

த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் -அடுத்த பதிகார்த்தம் –
பிரணவ பாரதந்தர்யம் -மோக்ஷ தானத்தில் -ஆஸ்ரித பாரதந்தர்யம் -இதில் –

வியாக்யானம்–

அருளால் அடியில் எடுத்த மால் –
கரண களேபரைர்க் கடயிதும் தயமா நாம நா -என்றும்
அந்நாள் நீ தந்த ஆக்கை -என்றும்-அடியிலே எடுத்த படியால் –
அன்றிக்கே
மயர்வற மதிநலம் அருளினான் -என்று-கேவல நிர்ஹேதுக கிருபையாலே
அஜஞாநாவஹமான சம்சாரத்தில் நின்றும்
அடியிலே எடுத்த சர்வேஸ்வரன்-என்றாதல்
அதுவும் அன்றிக்கே
மால் அருளால் மன்னு குருகூர் சடகோபன் -என்னும்படி
அயோக்யா அனுசந்தானத்தாலே-அகன்று-முடியாத படி எடுத்த-என்றாகவுமாம் —

அன்பால் இருளார்ந்த தம்முடம்பை இச்சித்து –
அந்தாமத்து அன்பு செய்யும் அன்பாலே-
இருள் தரும் மா ஞாலத்தில் ‘ஜன்மம் ஆகையாலே-இருளார்ந்த தம் உடம்பை இச்சித்து
ஜ்ஞானப் பிரசுரமான-தம் தேஹத்தை-வாஞ்சித்து
அன்றிக்கே –
இருளார்ந்து தம்முடம்பை இச்சித்து -ராகாந்தனாய்
நெய்யூண் மருந்தோ மாயோனே -என்று
இவன் திருவாய்ப் பாடியிலே வெண்ணெயை-ஆதரித்தால் போலே
ஜ்ஞான பரிமளம் விஞ்சின-சரம சரீரம் ஆகையாலே
இவர் திரு மேனியை அவன் ஆதரிக்கப் புக்கான்-என்றாகவுமாம்-
இரு விசும்பில் –
பெரிய வானிலே

இத்துடன் கொண்டேக –
இவர் அஜஞாநாவஹம்-என்று அநாதரிக்கிற-இச் சரீரத்துடனே கொண்டு போக-

இசைவு பார்த்தே யிருந்த சுத்தி சொல்லும் மாறன் செஞ்சொல் –
விதி பரதந்த்ரனாய்-
சரைஸ்து சங்குலாம் க்ருத்வா –இத்யாதிப் படியே
பிராட்டி திரு உள்ளக் கருத்தைப் பின் சென்று செய்தாப் போலே
இவர் அனுமதி பார்த்து இருந்தவனுடைய-சுத்தியை சொல்லும்
ஆழ்வார் உடைய-ஸ்ராவ்யமான சப்தங்கள்-

அதாவது –
என் நெஞ்சத்து உள்ளிருந்து -என்றும்
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் -என்றும்
என் நன்றி செய்தேனா என் நெஞ்சில் திகழ்வதுவே -என்றும்
இகழ்வின்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே -என்றும்
நங்கள் குன்றம் கை விடான் -திருமால் இரும் சோலை கை விடாதவன் போல் இவர் திருமேனியையும் கை விடான் -என்றும்-
இப்படி
இவர் திரு உள்ளத்தை விரும்பி –
அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே -என்றும்
இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே -என்றும்
இவர் தம் தேஹத்தை ஒழிய கொடு போக வேணும்-என்றபடியே
பரதந்த்ரனாய்
நின்ற குணசுத்தியைப் பேசினபடி-என்கை –

விதி வகையே நடத்துமவனே உபதேச சத்பாத்ரம் என்ற-பாத்ர ஸூத்தி இறே-கரை ஏற்றுமவனுக்கு நாலாறும் உபதேசித்தார் –
இசைவு பார்த்தே இருந்த சுத்தி என்று -அவ்விருத்தாந்தத்தை பேசினபடி-என்றுமாம்-

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–10-5-கண்ணன் கழலிணை—சாரங்கள்—

June 2, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

பக்தேக சரீரம் அபி பஞ்சமோ மித ஸூக்தி ஜாலைகி
பிராப்தவ் த்வாராதிசயம் பக்தி சமுசுகானாம்
கிருஷ்ணஸ்ய பாத உகளம் பிரதி பாவ நீயும்
ஜகதி ஜிஞ்ஞாசித்தம்

பக்தேக சரீரம் அபி -பிரகாரம் கரண த்ரயத்தால் ஆஸ்ரயம் -உபதேசிக்க வந்து பக்தி அங்கங்கள் அருளிச் செய்கிறார்
பிராப்தவ் த்வாராதிசயம் -பெருமாளுக்கு த்வரை
பக்தி சமுசுகானாம் -ஜகதி நண்ணும் மனம் உடையீர்
கிருஷ்ணஸ்ய பாத உகளம் கண்ணன் கழல் இணை

——–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

நாம்நாம் சங்கீர்த்தனேன ஸ்திர பரிபீடன் தயா பாவ நாதோ
அநு வேலாம் ஸம்ஸ்ப்ருத்யா புஷ்ப த்யான அத்யயனம் நிவாஸனை
தர்மகி வர்ணாஸ்ரம பத்து வித பஜனை கிரியா நிருத்யாயா
ஸ்தோத்ர க்ருத்யை தீர்க்க பந்து அகில த்ரவிட தர்சி

1–நாம்நாம் சங்கீர்த்தனேன—கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே

2–ஸ்திர பரிபீடன் -தயா –நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன் வாரணம் தொலைத்த காரணன் தானே

3-பாவ நாதோ –தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–

4-அநு வேலாம் –ஆள்வான் ஆழி நீர்க் கோள்வாய் அரவு அணையான் தாள்வாய் மலர் இட்டு நாள்வாய் நாடீரே

5-ஸம்ஸ்ப்ருத்யா—நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே-நாடீரே த்யானம்

6–புஷ்ப த்யான அத்யயனம்–நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே

7–நிவாஸனை–மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன் பேயார் முலை உண்ட வாயான் மாதவனே

8–தர்மகி வர்ணாஸ்ரம –மாதவன் என்று என்று ஓத வல்லீரேல் தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே

9-பத்து வித பஜனை கிரியா–சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன் பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே

10-நிருத்யாயா ஸ்தோத்ர க்ருத்யை–அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே

தீர்க்க பந்து –வினை வல் இருள் என்னும் முனைகள் வெருவிப் போம் சுனை நல் மலர் இட்டு நினைமின் நெடியானே

அகில த்ரவிட தர்சி–நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்

——–

கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே–10-5-1-

—————–

நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன்
வாரணம் தொலைத்த காரணன் தானே–10-5-2-

————

தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–10-5-3-

———–

ஆள்வான் ஆழி நீர்க் கோள்வாய் அரவு அணையான்
தாள்வாய் மலர் இட்டு நாள்வாய் நாடீரே-10-5-4-

———

நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு
பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே–10-5-5-

———

மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்
பேயார் முலை உண்ட வாயான் மாதவனே–10-5-6-

———

மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே-10-5-7-

——–

சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன்
பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே–10-5-8-

——-

அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே–10-5-9-

———-

வினை வல் இருள் என்னும் முனைகள் வெருவிப் போம்
சுனை நல் மலர் இட்டு நினைமின் நெடியானே–10-5-10-

——-

நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே–10-5-11-

——-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -95-பாசுரம்–

அவதாரிகை –

இதில் பக்திமான்கள் பரிமாற்றத்தை சுருங்க அருளிச் செய்த படியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் அது எங்கனே என்னில்
ஸ்ரீ ஈஸ்வரன் தம்மை ஸ்ரீ பரம பதத்திலே கொடு போகையிலே த்வரிக்கிற படியை கண்டு
இவர்களுக்கு இது ஓன்று குறை பட்டு கிடக்க ஒண்ணாது என்று பார்த்து
தம்முடைய பரம கிருபையாலே
ஸ்ரீ சர்வேஸ்வரனைப் பற்றுகையாலும் இவர்களுக்கு ஸூக்ரஹமாக வேணும் என்று பாசுரப் பரப்பு அறச் சுருக்கத்திலே
பக்திமான்கள் பரிமாற்றம் இருக்கும் படியை சம்சாரிகளுக்கு உபதேசித்து பரோபதேசத்தை நிகமிக்கிற
கண்ணன் கழலிணையில் அர்த்தத்தை-கண்ணன் அடி இணையாலே
அருளிச் செய்கிறார் -என்கை –

————————————————————

கண்ணன் அடி இணையில் காதல் உறுவார் செயலை
திண்ணமுறவே சுருங்கச் செப்பியே -மண்ணவர்க்குத்
தான் உபதேசிக்கை தலைக் கட்டினான் மாறன்
ஆன புகழ் சேர் தன்னருள்–95-

————————————————————-

வியாக்யானம்–

கண்ணன் அடி இணையில்-
ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளிலே

காதல் உறுவார் செயலை –
பக்தி உக்தராய் இருப்பார்-க்ருத்யத்தை –

திண்ணமுறவே –
த்ருடமாகவே-அதிலே-ஊன்றும்படி-

சுருங்கச் செப்பியே –
சங்க்ரஹமாக அருளிச் செய்து
யே -ஈற்றசை –

மண்ணவர்க்குத் –
பிருத்வியில் யுண்டான-சர்வாத்மாக்களுக்கும் –

தான் உபதேசிக்கை தலைக் கட்டினான் மாறன் –
ஸ்ரீ பிராட்டி-விதித-சுந்தர 21-25- -இத்யாதி யாலே பரோபதேசத்தை முடித்தால் போலே
கீழே உபதேசித்துக் கொடு போந்த-பரோபதேசத்தை பரி சமாப்தி பண்ணி அருளினார்-பெரு மதிப்பரான ஸ்ரீ ஆழ்வார் –
ஸ்ரீ பகவத் பிரபாவம் ஸ்ரீ சீதை பிராட்டி சொல்லி நிகமிக்க பிராட்டி பாகவத பிரபாவம் சொல்லி இவர் நிகமிக்கிறார் –

ஆன புகழ் சேர் தன்னருள் –
ஸ்லாக்கியமான யசஸ் உடன் கூடின-தம்முடைய பரம கிருபையாலே-பரோபதேசத்தை தலைக் கட்டி அருளினார் –
நின் கண் வேட்க்கை எழுவிப்பன் -பிராட்டி ஆழ்வார் உடைய ஒரே க்ருத்யம்

ஆன புகழ்
உலகத்தார் புகழும் புகழ்

தன்னருள்
அருள் கொண்டாடும்படியான அருள்-

கண்ணன் அடி இணையில்
காதல் உறுவார் செயலை-சுருங்கச் செப்புகை யாவது –
கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர்-எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே -என்றும்
நாரணன் எம்மான் -என்றும்
கோள் வாய் அரவணையான் தாள் வாய் மலரிட்டு-நாள்வாய் நாடீரே -என்றும்
நாடீர் நாடோறும் வாடா மலர் கொண்டு-பாடீர் அவன் நாமம் -என்றும்
மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்-பேயார் முலை யுண்ட வாயான் மாதவனே -என்றும்
மாதவன் என்று என்றே ஓத வல்லீரேல் -என்றும்
பேரார் ஓதுவார் ஆரார் அமரரே -என்றும்
சுனை நன் மலரிட்டு நினைமின் நெடியானே -என்றும்
இப்படி-எண் பெருக்கில் எண்ணும் திரு நாமத்தை சப்தார்த்தங்களை சுருக்கி- ஸ்ரீ மாதவன் -என்று த்வயமாக்கி-
கரண த்ரய பிரயோஜன வ்ருத்தி சம்சாரிகளுக்கு கையோலை செய்து கொடுத்தபடி -என்கை-

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–10-4–சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்—சாரங்கள்—

June 2, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஹரவ் பூர்வாம் உபதிஷ்ட உஜ்ஜீவனாயா
ஜெகதாம் பலயுதாம் அநு கம்பையா
பக்திம் நிஜகாதா ஸூ பலாமகஸ்ய
சுவார்த்தாத் பரார்த்த ஆஸக்தி –

———

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

ஸ்ரீ மத் தாமோதரத்வாத் அமர பரிஷதாம் அபி அத்ருஸ்ய பூம்னா
சக்ராதீஸ்யாத் வாத வட தள சயநாத் நாக ராஜா சயநாத்
வக்ஷஸ் பரிஷத் முகத்வா பரம புருஷதாய மாதவத்வாத் யோகாதி
துஷ் பிராப்யாப்யோ அஹம் ஸூ கம திடம் மாதவம் –

1–ஸ்ரீ மத் தாமோதரத்வாத்–சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள் கார்மேக வண்ணன் கமல நயனத்தன்-

2–அமர பரிஷதாம் அபி அத்ருஸ்ய பூம்னா–பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற் கருமையனே-

3–சக்ராதீஸ்யாத் வாத–ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம் மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்

4–வட தள சயநாத்–தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின் இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க

5–நாக ராஜா சயநாத்–மெச்சப் படான் பிறர்க்கு மெய் போலும் பொய் வல்லன் நச்சப் படும் நமக்கு நாகத்து அணையானே

6–வக்ஷஸ் பரிஷத் முகத்வா–நாகத்து அணையானை நாள்தோறும் ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை

7–பரம புருஷதாய -பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்-

8/9-மாதவத்வாத் யோகாதி–ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்–என்றும்
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்–என்றும்

10-துஷ் பிராப்யாப்யோ அஹம் ஸூ கம திடம் மாதவம் –மாதவனை நாளும் புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திகை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற

——–

சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே–10-4-1-

———

பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற்
கருமையனே ஆகத் தணை யாதார்க்கு என்றும்
திரு மெய்யுறைகின்ற செங்கண் மால் நாளும்
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே–10-4-2-

———-

ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்
மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே–10-4-3-

———-

தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க
மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே–10-4-4-

————

நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை
கைச் சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிது உடையவன்
மெச்சப் படான் பிறர்க்கு மெய் போலும் பொய் வல்லன்
நச்சப் படும் நமக்கு நாகத்து அணையானே–10-4-5-

———-

நாகத்து அணையானை நாள்தோறும் ஞானத்தால்
ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை
மாகத்து இளம் மதியம் சேரும் சடையானைப்
பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே-10-4-6-

———-

பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி நின்ற சோதி மது சூதன் என் அம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே–10-4-7-

———–

ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்
பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்–10-4-8-

————

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9-

———-

வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும்
புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திகை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற
தகையான் சரணம் தமர்கட்கு ஓர் பற்றே–10-4-10-

———

பற்று என்று பற்றி பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே–10-4-11-

——-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -94-பாசுரம்–

அவதாரிகை –

இதில்
அடியில் உபதேசித்த பக்தி-ஸ்வசாத்தியமான பலத்தோடே தலைக் கட்டினபடியை அருளிச் செய்த
திவ்ய ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்
கீழ்-ஸ்ரீ காளமேகத்தை வழித் துணையாக-
ஸ்ரீ தாள தாமரையிலே பற்றி போக்கிலே ஒருப்பட்டவர் ஆகையாலே-
ஸ்ரீ உயர்வற உயர் நலத்தில்-அயர்வறும் அமரர்கள் அதிபதியாக அறுதி இட்ட ஸ்ரீ பரத்வமே பரம பிராப்யமாகையாகவே
அந்த பிராப்ய வேஷத்தையும்-
பிராப்ய பலமான கைங்கர்யத்தையும்- ஸ்ரீ கெடும் இடரிலே அனுசந்தித்து-
அந்த பிராப்ய வேஷத்தை பெறுகைக்கு உபாயமாக-
ஸ்ரீ வீடுமின் முற்றத்திலும்—ஸ்ரீ பத்துடை அடியவரிலும் தொடங்கின-பக்தியானது ஸ்வ சாத்தியத்தோடே பொருந்தின படியை சொல்லி
தமக்கு உபாயமாக
முதல் ஸ்ரீ திருவாய் மொழியில் சொன்ன பிரபத்தியையும்-சொல்லித் தலைக் கட்டுகிற
ஸ்ரீ சார்வே தவ நெறியில் அர்த்தத்தை–சார்வாகவே அடியில் -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் என்கை –

————————————————-

சார்வாகவே யடியில் தானுரைத்த பத்தி தான்
சீரார் பலத்துடனே சேர்ந்ததனை -சோராமல்
கண்டுரைத்த மாறன் கழல் இணையே நாடோறும்
கண்டு உகக்கும் என்னுடைய கண் –94-

—————————————————–

வியாக்யானம்–

சார்வாகவே யடியில் தானுரைத்த பத்தி தான் –
ஸ்ரீ வீடுமின் முற்றத்திலும் ஸ்ரீ பத்துடை அடியவரிலும் பரோபதேச ரூபேண எல்லாருக்கும் அபாஸ்ரயமாக அருளிச் செய்த
பிரபத்தி யோடு விகல்பிக்கலாம் படியான பக்தி யானது தான்
சரண்ய -என்றத்தை- சர்வ லோக சரண்யாய -என்றும்-
பாதயோஸ் சரணான் வேஷீ நிபபாத -என்றும்
சாஷாத் பலத்தோடே தலைக் கட்டினால் போலே –

இவரும் –
உம்முயிர் வீடுடை யானிடை வீடு செய்மினே -என்றும்
எல்லையில் அந்நலம் புல்கு பற்றற்றே -என்றும்
உள்ளம் உரை செயல் உள்ள இம் மூன்றையும்-உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே -என்றும்
பத்துடை அடியவர்க்கு எளியவன் -என்றும்
அம்பகவன் வணக்குடை தவ நெறி வழி நின்று -என்றும்
நன்றென நலம் செய்வது -என்றும்
இப்படி அருளிச் செய்த பக்தி மார்க்கம் ஆனது-சாத்தியமான பலத்தோடே பொருந்தின படியையும்

சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -என்றும்
அருளினான் துயர் அறு சுடர் அடி தொழுது எழு மனனே -என்றும்
வண் புகழ் நாரணன் திண் கழல் சேர் -என்றும்
நாளும் நம் திருவுடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி -என்றும்
அடியே தொடங்கி அருளிச் செய்து போருகிற-பிரபத்தி-ஸ்வ சாத்தியத்தோடு-பொருந்தினப டியையும் –

பண்டே பரமன் பனித்த பணி வகையே-
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே-விண்டே ஒழிந்த வினை யாய வெல்லாம் -என்றும்-அருளிச் செய்து
மற்றும்
பக்தி-பிரபக்திக்கு-உக்தமான வற்றையும்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன் -என்றும்
திரு மெய் யுறைகின்ற செங்கண் மால் -என்றும்
மடப்பின்னை தன கேள்வன் தாள் கண்டு கொண்டு -என்றும்
தலை மேல் புனைந்தேனே -என்றும்
நச்சப்படும் நமக்கு -என்றும்
வரை எடுத்தான் பாதங்கள் வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய் -என்றும்-அருளிச் செய்தார் இறே-

ஏவம் விதமான வர்த்தங்களை –
சோராமல் கண்டுரைத்த மாறன் –
இவ் வர்த்தமானது வ்யர்த்தமே-நழுவிப் போகாமே-இஸ் ஸூஷ்ம அர்த்தத்தை தர்சிப்பித்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் –

கழல் இணையே நாடோறும் –
இப்படி-சூஷ்ம அர்த்த தர்சியான ஸ்ரீ ஆழ்வார்-சேர்த்தி அழகை யுடைய திருவடிகளையே –

கண்டு உகக்கும் –
சேவித்து-ஹ்ருஷ்டமாம் –

என்னுடைய கண் –
மே திருஷ்டி -என்னும்படியான-என் கண்கள் –

ஸ்ரீ தாமோதரன் தாள் யுடைய-ஸ்தானத்திலே-இவர்க்கு-ஸ்ரீ மாறன் தாள்-ஆயிற்று –

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–10-3–வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ—சாரங்கள்—

June 2, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஸூ உபேஷகம் ஸ தேனை விஸ்ரம்பித
கோபீ வ்யூக்தம் அபி கோ சபலம் அசிரமேவ
வ்யூக்த தாஸ்யம் ஹரிம் அபி நிஜேஷ்டம்
உபேக்ஷகம் தம் விபுல த்ருஷ்ணா தம் அதி ஸங்க்யை-

கோ சபலம் -த்வத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி
அசிரமேவ சடக்கென
வ்யூக்த தாஸ்யம் -விடுபட்ட -நித்ய ஸூரிகளை விட்டு
ஹரிம் அபி நிஜேஷ்டம் -தனக்கு இஷ்டம்
உபேக்ஷகம் -தம் -விரும்பாமல்
விபுல த்ருஷ்ணா தம் அதி ஸங்க்யை-அடங்கா காதலால் –

———–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

அம்போஜ அஷதய கீர்த்யா யது குல ஜதயா ஆத்மன ஸ்யாமளத்தவாத
கோவிந்தத்வாத் பிரிய உத்யத் வசன தயா சக்ர தாராயுதத்வாத்
ஸ்ரீ நீளா அஸ்மத் ப்ரதத்வாத் அதி சுபாக தயா கோப நிர்வாகத்வாத்
அஸ்தான ஸ்நேகா சங்காத பத காரிஜன் உதித ஸ்ரீ பதி

1–அம்போஜ அஷதய கீர்த்யா–தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ தகவிலை தகவிலையே நீ கண்ணா–

2–யது குல ஜதயா–வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–

3–ஆத்மன ஸ்யாமளத்தவாத–யாவரும் துணை இல்லை யான் இருந்து உன் அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்

4–கோவிந்தத்வாத்–கோவிந்தா நின் தொழுத்தனில் பசுக்களையே விரும்பி துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி

5–பிரிய உத்யத் வசன தயா–பணி மொழி நினைதொறும் ஆவி வேமால் பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா

6–சக்ர தாராயுதத்வாத்–அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம்

7–ஸ்ரீ நீளா அஸ்மத் ப்ரதத்வாத்–ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே

8–அதி சுபாக தயா–உன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக வுடையும் காட்டி ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர் நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே–

9–கோப நிர்வாகத்வாத்–எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்

10-அஸ்தான ஸ்நேகா சங்காத பத–அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ

காரிஜன்-உதித ஸ்ரீ பதி–திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே-

——–

வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ
மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ
கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ
தகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1-

——–

தகவிலை தகவிலை யே நீ கண்ணா
தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆராச்
சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச்
சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
அக உயிர் அகம் அகம் தோறும் உள் புக்கு
ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ
மிக மிக இனி உன்னை பிரிவை ஆமால்
வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–10-3-2-

———-

வீவன் நின் பசு நிரை மேக்கப் போக்கு
வெவ் உயிர் கொண்டு எனது ஆவி வேமால்
யாவரும் துணை இல்லை யான் இருந்து உன்
அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால்
பொரு கயல் கண்ணினை நீரும் நில்லா
சாவது இவ் ஆய்க் குலத்துக்கு ஆய்ச்சி யோமாய்
பிறந்த இத் தொழுத்தையோம் தனிமை தானே–10-3-3-

——–

தொழுத்தையோம் தனிமையும் துணை புரிந்தார்
துயரமும் நினைகிலை கோவிந்தா நின்
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி
துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம்
பாவியேன் மனம் அகம் தோறும் உள் புக்கு
அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப்
பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்–10-3-4-

————–

பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்
பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ்மல்லிகை வாடை தூவப்
பெரு மத மாலையும் வந்தன்றாலோ
மணி மிகு மார்வினின் முல்லைப் போது
என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ
அடிச்சியோம் தலை மிசை யணியாய்-10-3-5-

———-

அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய்
ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம்
பிடித்து அது நடுவு உனக்கு அரியையரும்
பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம்
வடித்தடம் கண் இணை நீரும் நில்லா
மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே–10-3-6-

———

வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு
வெள் வளை மேகலை கழன்று வீழ
தூ மலர்க்கண் இணை முத்தம் சோரத்
துணை முலை பயந்து என தோள்கள் வாட
மா மணி வண்ணா உன் செங்கமல வண்ண
மென் மலரடி நோவ நீ போய்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு
அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே–10-3-7-

———–

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று
ஆழும் என்னார் உயிர் ஆன் பின் போகல்
கசிகையும் வேட்கையும் உள் கலந்து
கலவியும் நலியும் என் கை கழியேல்
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும்
கைகளும் பீதக வுடையும் காட்டி
ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர்
நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே-10-3-8-

————

உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன்
திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம்
எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு
நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரோடும் நின்னொடு ஆங்கே
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ–10-3-9-

———-

அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ
அசுரர்கள் வன்கையர் கஞ்சன் ஏவ
தவத்தவர் மறுக நின்று உழி தருவர்
தனிமையும் பெரிது உனக்கிராமனையும்
உவத்திலை உடன் திரிகிலையும் என்று என்று
ஊடுற வென்னுடை யாவி வேமால்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே–10-3-10-

——-

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு
அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர்
வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை
அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன
இவையும் பத்து அவற்றின் சார்வே-10-3-11-

———-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -93-பாசுரம்–

அவதாரிகை –

இதில் – யதா மநோ ரதம் பெறாமல் சம்சாரத்திலேயே ஸ்ரீ சர்வேஸ்வரன் வைக்க எண்ணினான் என்று சங்கிக்க
அவன் தெளிவித்த படியை அருளிச் செய்கிற பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
தம் மநோ ரத அனுகுணமாக அப்போதே அத்தேசத்திலே புக்கு அடிமை செய்யப் பெறாமையாலே-கலங்கி
பழைய படி நமக்கு சம்சாரத்தில் இருப்பே சேஷித்து விடுகிறதோ -என்று
பிரகிருதி சம்பந்த்தத்தின் கொடுமை ஸ்ரீ ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யம்
முதலான ஹேதுக்களால் தமக்கு பிறந்த அதிசங்கையை ஒரு படுக்கையிலே கூட இருக்கச் செய்தே
பண்டு பசு மயக்கப் போகிற ப்ரபாத காலம் வந்து
அக் காலத்துக்கு அடைத்த குயில் மயில் முதலானவற்றின் பாடல் ஆடல் முதலான
அடையாளங்களையும் காண்கையாலே
அவற்றையே கொண்டு ஸ்ரீ கிருஷ்ணன் பசு மேய்க்கப் போனான் -என்று அதி சங்கை பண்ணி
நோவு படுகிற இடைப் பெண்கள் பேச்சாலே அருளிச் செய்கிற-வேய் மரு தோளிணை யில் அர்த்தத்தை
வேய் மரு தோள் இந்த்ரிரை கோன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————-

வேய் மரு தோள் இந்திரை கோன் மேவுகின்ற தேசத்தை
தான் மருவாத் தன்மையினால் தன்னை யின்னம் பூமியிலே
வைக்கும் எனச் சங்கித்து மால் தெளிவிக்கத் தெளிந்த
தக்க புகழ் மாறன் எங்கள் சார்வு –93-

———————————————-

வியாக்யானம்–

வேய் மரு தோள் இந்திரை கோன் மேவுகின்ற தேசத்தை –
வேய் போலும் எழில் தோளி பொருட்டா -பெருமாள் திருமொழி –என்னும்படி
அணைக்கைக்கு பணை போல் இருக்கிற தோளை யுடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் ஆனவன் –
படமுடை அரவில் பள்ளி பயின்றவன் -என்று ஸ்ரீ அனந்த சாயியாய்-
திரு மாற்கு அரவு -என்கிறபடி இருவருமாய்ச் சேர்த்தியாய் இருக்கிற தேசத்தை –
மாதவா என்ன -என்றார் இறே-

தான் மருவாத் தன்மையினால் –
நாமும் போய் நணுக வேணும் -என்னும் அபி நிவேசத்தை யுடைய தாம்
போய் புகப் பெறாத படியாலே –

தன்னை யின்னம் பூமியிலே வைக்கும் எனச் சங்கித்து –
நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல் -என்று
தம்மை ஸ்வா தந்த்ர்யாதிகளாலே சம்சாரத்திலே இட்டு வைக்குமோ என்று சங்கித்துப் போர –

அதாவது –
இவர் உடைய ரஷண சிந்தை பண்ணிக் கொண்டு சௌஹார்த்த யுக்தன் ஆனவனும்
என் கை கழியேல் -என்னும்படி -பொருந்தி
பிரத்யஷ சாமானாகாரம் போலே இவர் கையிலே இருக்க-அத்தசையிலே
ஸ்வ ரஷணத்திலே கை வாங்கி இருக்குமவர்கள்-விஷயத்திலே ரஷணத்திலே அவன் மண்டி
அங்கே விச்லேஷிக்கும் காலத்தையும்
அவன் கை கழிந்தால்-சப்தாதிகள் பாதகமாகிற படியையும்
கால தைர்க்க்யா சஹதையையும்
ஆஸ்ரித ரஷணத்தில் அந்ய பரதையாலே அந்த ராயங்கள் புகும் படியையும்
அவனுக்கு அறிகிற பிரகாரத்தை-
வேய் மரு தோளிணை -என்று தொடங்கி -ஆ மருவின நிரை மேய்க்க நீ போக்கு-ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ -என்றும்
தகவிலை தகவிலை இனி யுன்னை நீ பிரிவை யாமால் வீவ-நின் பசு நிரை மேய்க்கை போக்கு -என்றும்
வீவ நின் பசு நிரை மேய்க்கை போக்கு-சாவது இவ்வாய் குலத்து ஆய்ச்சியோமாய் பிறந்த வித் தொழுத்தையோம் தனிமை தானே -என்றும்
நின் தொழுத்தனில் பசுக்களையே விரும்பித் துறந்து-எம்மை விட்டவை மேய்க்கப் போதி -என்றும்
பிணியவிழ் மல்லிகை வாடை தூவப் பெரு மத மாலையும் வந்தின்றாலோ -என்றும்
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு -என்றும்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள்-தலைப்பெய்யில் யவம் கொல் ஆங்கே -என்றும்
அசுரர்கள் தலைப் பெய்யில்அவம் கொல் ஆங்கு என்று ஆழும்-என் ஆர் உயிர் பிரான் பின் போகல் நீ உகக்கும் நல்லவரோடு உழி தராயே -என்றும்
உகக்கும் நல்லவரோடு -என்று தொடங்கி-அவத்தங்கள் விளையும் என் சொல் கொள்- என்றும்
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள்- திவத்திலும்-பசு நிரை மேய்ப்பு உவத்தி -என்றும்
இப்படி பஹூ முகமாக சங்கிக்க-

மால் தெளிவிக்கத் தெளிந்த –
அதாவது –
அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார் ஆனவனும் –என்றும்
முஹூர்த்தம் அபி ஜீவாவ -என்னும்படி
அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லாதே -என்றும்
அவனோடு பிரிவதற்கு இரங்கும்படியான இவர்கள் பிரேம ஸ்வ பாவத்தைக் கண்டு
செங்கனிவாய் எங்கள் ஆயர் தேவு -என்னும்படி சவிலாத ஸ்மிதம் பண்ணி
அணி மிகு தாமரைக் கையாலே அஞ்சேல் என்று ஆச்வசிபபித்து
உம்முடைய அபேஷித்ததின் படியே செய்கிறோம் என்று அதி சங்கையைத் தீர்த்தான் ஆயிற்று
அதாவது
பசு நிரை மேய்ப்பு ஒழிகை -அத்தைப் பற்ற -தாமோதரன் -என்றார்–

மால் தெளிவிக்க தெளிந்த –
ஸ்ரீ கிருஷ்ணன் தெளிவிக்கத் தெளிந்த-கலங்கினவனை தேற்றுமவன் இறே

தக்க புகழ் மாறன் எங்கள் சார்வு –
சங்கா ஹேது இன்றிக்கே-கூட இருக்கச் செய்தே சங்கிக்க சர்வஞ்ஞனான ஸ்ரீ சர்வேஸ்வரன் சமாதானம் பண்ண
சமாஹிதராய்
அத்தாலே தமக்கு சத்ருசரான யசஸை யுடைய ஸ்ரீ ஆழ்வார் அநந்ய கதிகளான எங்களுக்கு அபாஸ்ரயம்-

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–10-2–கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன—சாரங்கள்—

June 2, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தனு வ்ருத்திகளுக்கு அஸ்ய பிராப்யத்வம் துரித ஓகம்
நிவர்த்தனம் வைகுண்ட மேத்ய கரணீய
அசேஷ தாஸ்யம் அத்ரைவ கேவலம்
அநந்த புரே சடஜித் த்வதீயே –

தனு வ்ருத்திகளுக்கு -சரீரம் உடைய சம்சாரிகளுக்கு
அசேஷ தாஸ்யம் அத்ரைவ -இந்த தேகத்துடன் இந்த தேசத்தில்

———

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

ஸ்ரீ கேஸவாத்வேனே அத்புத சரிதேனே கதாதீச தாஸ்ய சஹா –
த்ரயீ மயன் ஆஸந்நத்வாத் பதித்வாத் அமர பரிஷதாம் ஆதி பூதத்வாத்
வியாபாரை ஸ்ருஷ்ட்டி முக்யை மதன ஜனனதா
புஜ சாய்த்தவம் முக்யைகி சரித்ரை அத்பத் கிலேச அபஹர்த்தா-

1–ஸ்ரீ கேஸவாத்வேனே–கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும் கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்

2–அத்புத சரிதேனே–அனந்த புர நகர் மாயன் நாமம் ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே

3–கதாதீச தாஸ்ய சஹா -த்ரயீ மயன்–தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம் பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே

4–ஆஸந்நத்வாத்–அனந்த புரம் நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே

5–பதித்வாத்–அனந்த புரத்து அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்

6–அமர பரிஷதாம் ஆதி பூதத்வாத்–அனந்த புரத்து அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்

7–வியாபாரை ஸ்ருஷ்ட்டி முக்யை–துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும் படைத்த வெம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான்

8–மதன ஜனனதா–படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்–

9–புஜ சாய்த்தவம்–அனந்த புரம் தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு வாமனன் அடிக்கென்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே

10-முக்யைகி சரித்ரை–அனந்த புர நகர் எந்தைக்கு என்று சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே

அத்பத் கிலேச அபஹர்த்தா–மாய்ந்து அறும் வினைகள் தாமே-

———

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே-10-2-1-

———–

இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா
குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்றலர் பொழில் அனந்த புர நகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே–10-2-2-

——–

ஊரும் புள் கொடியும் அக்தே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தண்ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே-10-2-3-

————

பேசுமின் கூசமின்றிப் பெரிய நீர் வேலை சூழ்ந்து
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்த புரம்
நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே–10-2-4-

——–

புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5-

——–

அமரராய்த் திரிகின்றார் கட்கு ஆதிசேர் அனந்த புரத்து
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே-10-2-6-

———

துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும்
படைத்த வெம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான்
மடைத் தலை வாளை பாயும் வயல் யணி யனந்த புரம்
கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினை களையலாமே–10-2-7-

————

கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை
இடவகை கொண்ட தென்பர் எழில் அணி அனந்த புரம்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்–10-2-8-

———

நாமும் உமக்கு அறியச் சொன்னோம் நாள்களும் நணியவான
சேமம் நன்குடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்த புரம்
தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு
வாமனன் அடிக்கென்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே–10-2-9-

———

மாய்ந்து அறும் வினைகள் தாமே மாவதா வென்ன நாளும்
ஏய்ந்த பொன் மதிள் அனந்த புர நகர் எந்தைக்கு என்று
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே–10-2-10-

———

அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே–10-2-11-

——–

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -92-பாசுரம்–

அவதாரிகை

இதில் – ஸ்ரீ பரமபதத்தில் செய்யும் அடிமையை ஸ்ரீ திருவனந்த புரத்திலே செய்யப் பாரிக்கிற ஸ்ரீ ஆழ்வார்
ஸ்ரீ ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில்
குறைவற ஸ்ரீ பரம பதத்தினில் போனால்- வானிளவரசான வைகுந்த குட்டனுக்குச் செய்யக் கடவ
வழு விலா அடிமைகளை-நித்ய சூரிகளில் தலைவரான ஸ்ரீ சேனாதிபதி ஆழ்வான் எடுத்துக் கை நீட்டும்படி
நிரதிசய போக்யமான ஸ்ரீ திருவனந்த புரத்திலே ஸ்ரீ திருவனந்த ஆழ்வான் மேலே
பள்ளி கொண்டு அருளுகிற பரம பிராப்ய பூதரான ஸ்ரீ பத்ம நாபப் பெருமாள் திருவடிகளிலே
அனுகூல ஜனங்களும் தாமுமாய் போய் அடிமை செய்ய வேண்டும் என்று மநோ ரதிக்கிற
கெடும் இடரில் அர்த்தத்தை-கெடும் இடர் வைகுந்தத்தை -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் -என்கை-

——————————————————–

கெடுமிடர் வைகுந்தத்தைக் கிட்டினால் போல்
தடமுடை அனந்தபுரம் தன்னில் -படவரவில்
கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் மாறன் உயர்
விண் தனில் உள்ளோர் வியப்பவே—-92-

கெடும் இடர் வைகுந்தம் -துக்க ரஹிதமான பரம பதம் -வினைகள் போக்கி தானே -அங்கே போக முடியும் –
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை பற்றி இடர் கெடும் சொல்ல வேண்டாமே –
அதனால் பலன் சொல்லாமல்- பாசுரம் சொல்லவே இடர் கெடுமே –

———————————————————–

வியாக்யானம்–

கெடுமிடர் வைகுந்தத்தைக் –
கைங்கர்ய சித்தியாலே நிவ்ருத்த துக்கராம்படி பண்ண வற்றான ஸ்ரீ வைகுண்டத்தை –
அன்றிக்கே –
துக்க ரஹிதமான ஸ்ரீ வைகுண்டத்தை என்னுதல்-
கிட்டினால் போல் – அத்தை பிராபித்து அடிமை செய்யப் பெற்றால் போலே

தடமுடை அனந்தபுரம் தன்னில் -படவரவில் கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் –
ஏபிஸ் ச சசிவை -இத்யாதியாலே ஸ்ரீ பரத ஆழ்வான் பாரித்தால் போலே
தடமுடை அனந்த புரம் தன்னில்-படமுடை அரவில் பள்ளி பயின்ற ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அடிமை செய்ய அபேஷித்தார்-

அதாவது –
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே -என்றும்
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல ஆய்ந்து கொண்டு-ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே -என்றும்
அமரராய் திரிகின்றார்கட்கு -என்று தொடங்கி-நாமும் போய் நணுக வேணும் -என்றும்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ-நமர்கள் உள்ளீர் -என்றும் –
தாமும்-தம் திரு உள்ளத்தோடு ஒத்த ஸ்ரீ வைஷ்ணவர்களும் கூட அடிமை செய்த மநோ ரதித்த -என்கை –

படவரவில் கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் -மாறன் உயர் விண் தனில் உள்ளோர் வியப்பவே –
சர்வோத்தரமான பரம ஆகாசத்திலுள்ளராய்-ஸ்ரீ கோயில் கொள் தெய்வங்களான
ஸ்ரீ திருவடி-ஸ்ரீ திருவனந்த ஆழ்வான்-ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் தொடக்கமானவர்கள் –
நாம் தெளி விசும்பு திரு நாட்டில் இருந்து செய்யும் அடிமையை
இவர் – இருள் தரும் மா ஞ்லாலத்தில் இருந்து பாரிப்பதே -என்று விஸ்மயப்ப்படும்படி
ஸ்ரீ சேஷசாயியாய்-ஸ்ரீ யபதியான-ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு சர்வ வித கைங்கர்யங்களையும்
செய்ய வாதரித்தார் ஸ்ரீ ஆழ்வார் – இவரும் ஒருவரே -என்று இவருக்கு ஈடுபாடாய் இருக்கிறது-
அங்கே செய்வதை விட இங்கே பாரிப்பது மேல் -ருசி வந்தால் தானே கிட்டும் –

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்