Archive for the ‘-திரு வாய் மொழி நூற்று அந்தாதி’ Category

ஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதியில்–நூறு திருவாய் மொழிகளின் சாரார்த்தம்

October 3, 2019

ஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதியில்-நூறு திருவாய் மொழிகளின் சாரார்த்தம்–

உயர்வே பரன்படியை உள்ளது எல்லாம் தான் கண்டு –1-
பரத்வத்தில் பரத்வம் ஆயிற்று இத் திருவாய் மொழியில் பிரதி பாதிக்கப் படுகிறது-

வீடு செய்து மற்றெவையும் மிக்க புகழ் நாரணன் தாள் நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் –2-
வீடு செய்மின்-இறை யுன்னுமின் நீரே-என்று நாடாகவே ஆஸ்ரயிக்கும் படி இறே இவர் உபதேசிப்பது
அத்தை நினைத்து இறே நாடு -நலத்தால் அடைய -என்கிறது

பத்துடையோர்க்கு என்றும் பரன் எளியனாம் பிறப்பால் முத்தி தரும் மா நிலத்தீர் -மூண்டவன் பால் -பத்தி செய்யும் என்று உரைத்த-3-
பத்துடையோர் -நிதி யுடையோர் என்னுமா போலே
ஆசா லேசா மாதரத்தையே போரப் பொலிய எண்ணி இருக்கும் ஈஸ்வர அபிப்ராயத்தாலே அருளிச் செய்கிறார்
அவதரித்த இடத்தே-பஷிக்கும்-ரஷஸ் ஸூக்கும் மோஷத்தைக் கொடுக்கும் –
வீடாம் தெளிவரும் நிலைமையது ஒழிவிலன் -என்றத்தைப் பின் சென்ற படி –

அஞ்சிறைய புட்கள் தமை யாழியானுக்கு நீர் என் செயலைச் சொல்லும் என விரந்து-விஞ்ச நலங்கி – நாயகனைத் தேடி மலங்கியது–4-
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும் மடலாழி யம்மானை -என்றத்தை கடாஷித்த படி –
முதல் தூதுக்கு விஷயம் வ்யூஹம் இறே –

வளம் மிக்க மால் பெருமை மன்னுயிரின் தண்மை உளமுற்று அங்கூடுருவ ஓர்ந்து -தளர்வுற்று நீங்க நினை மாறனை–5-
வள வேழ் உலகின் முதலாய வானோர் இறையை கள வேழ் வெண்ணெய் தொடு யுண்ட கள்வா என்பன்
அருவினையேன் -என்று அருளிச் செய்த படியை அடி ஒற்றின படி –
அகன்று அத்தலைக்கு அதிசயத்தை பண்ண எண்ணுகிற ஸ்ரீ ஆழ்வாரை-

பரிவதில் ஈசன் படியைப் பண்புடனே பேசி அரியனலன் ஆராதனைக்கு என்று -உரிமையுடன் ஓதி-6-
பரிபூர்ணன் ஆகையாலே இட்டது கொண்டு த்ருப்தனாம் ஸ்வ பாவத்துடனே அருளிச் செய்து –
பரிவதில் ஈசனை -என்று துடங்கி -புரிவதும் புகை பூவே – என்றத்தை பின் சென்ற படி –
அன்றிக்கே-பண்புடனே பேசி இன்று -அவனுடைய ஸ்வ ஆராததையைச் சொல்லி அல்லது
நிற்க மாட்டாத தன் ஸ்வ பாவத்தாலே சொல்லி -என்றாகவுமாம்-
அந்தரங்கமான சிநேகத்தோடு அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்

பிறவி யற்று நீள் விசும்பில் பேரின்பம் உய்க்கும் திறம் அளிக்கும் சீலத் திருமால் -அறவினியன் பற்றும் அவர்க்கு என்று பகர்–7-
ஜன்ம சம்பந்தம் அற்று-நிரதிசய போக்யமான பரமாகாசத்திலே நிரதிசய ஆனந்தத்தை அனுபவிக்கும் படி
அனுக்ரஹிக்கும் ஸ்வ பாவனான ஸ்ரீ யபதி யானவன் –
தருமவரும் பயனாய திரு மகளார் தனிக் கேள்வன் -என்றத்தை அனுபாஷித்து அருளின படி –
மிகவும் சரசனாய் இருக்கும் ஆஸ்ரயிக்குமவர்களுக்கு என்று-
எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன்-தூய வமுதைப் பருகி பருகி என் மாயப் பிறவி மயர்வறுத்தேனே –
என்னுமத்தை அடி ஒற்றி அருளிச் செய்த படி
இப்படி ஆஸ்ரயிப்பார்க்கு–குணைர் விருருசேராம-என்னும்படி-நிரதிசய போக்கினாய் இருக்கும் என்று பகர்-

ஓடு மனம் செய்கை உரை யொன்றி நில்லாதாருடனே கூடி நெடுமால் அடிமை கொள்ளும் நிலை –நாடறிய ஒர்ந்தவன்–8-
சஞ்சலமாய்-நின்றவா நில்லா நெஞ்சும் – அதன் வழியே பின் செல்லும் வாக் காயங்களும்
ஒருமைப் பட்டு இருக்கை அன்றிக்கே செவ்வை கெட நடக்கும் குடிலரோடு கூடிக் கலந்து –
சர்வ ஸ்மாத் பரனானவன் அடிமை கொள்ளும்-நித்ய சூரிகள் திறத்தில் பரிமாறும் ஆர்ஜவத்தையும்

ஈசன் உவந்து ஆற்ற அவயவங்கள் தோறும் அணையும் -சுவையதனைப் பெற்று ஆர்வத்தால் மாறன் பேசின–9-
ஸ்ரீ சர்வேஸ்வரன் ஹ்ருஷ்டனாய் சாத்மிக்க சாத்மிக்க சர்வ அவயவங்களிலும்
சம்ஸ்லேஷிக்கும் ரசம் தன்னைப் பெற்று-பொறுக்க பொறுக்க உறுப்பு தோறும்
செறிப்பு தீரக் கலக்குமதான பெறாப் பேற்றைப் பெற்று –
அணையும் சுவை யாவது -அருகலில் அறுசுவை- ஸ்ரீ பிராட்டி ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் துடக்கமானாரோட்டை
கலவியில் ரசங்கள் எல்லாம் ‘ ஏக விஷயத்தில் உண்டாம்படி கலந்து -என்றத்தை நினைக்கிறது-

பெருமாழி சங்குடையோன் பூதலத்தே வந்து தருமாறு ஓர் ஏது-ஹேது- அற-திறமாகப் பார்த்துரை செய்-10-
ஸ்ரீ சர்வேஸ்வரன் எதிர் அம்பு கோக்கிற இந்த பூதலத்திலே சஷூர் விஷயமாம் படி வந்து
ஒரு ஹேது இன்றிக்கே நிர்ஹேதுகமாக பல ஸ்வரூபனான தன்னையே தருகிற பிரகாரத்தை –
பொரு மா நீள் படை என்று துடங்கி கரு மாணிக்கம் என் கண் உளதாகும் -என்றத்தை கடாஷித்து
நிர்ஹேதுக கிருபையை அல்ப அஞ்ஞராலே அவி சால்யமாம் படி ஸ்திரமாக தர்சித்து அந்த பிரகாரத்தை அருளிச் செய்தபடி –

ஆற்றாமை போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் -ஆய அறியாத வற்றோடு அணைந்து அழுதார்-11-
ஆராத காதல் -என்னும்படி விஸ்லேஷ வ்யசனம் ஆவது கை கழியப் போய் மிக்கு-அசேதனங்கள் ஆகையாலே தம்முடைய
துக்கத்தை ஆராய அறியாத வற்றைக் கட்டிக் கொண்டு ஆற்றாமை சொல்லி அழுவோமை -என்று சம துக்கிகளாக அழுத ஸ்ரீ ஆழ்வார் –
காற்றும் கழியும் கட்டி அழ -என்றார் இறே ஸ்ரீ ஆழ்வார் –

திருமால் பரத்துவத்தை -நண்ணி யவதாரத்தே நன்குரைத்த -வண்ணம் அறிந்து அற்றார்கள் யாவரவர் அடிக்கே –12-
ஸ்ரீ யபதியான ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய பரத்வத்தை நீயும் திருமாலால் -என்று இறே அருளிச் செய்தது –
முதல் திருவாய் மொழியிலே ஸ்ருதி சாயலிலே பரத்வே பரத்வத்தை அருளிச் செய்தால் போல் அன்றிக்கே
இதிஹாச புராண பிரக்ரியையாலே அதி ஸூலபமான அவதாரத்திலே பரத்வத்தை ஆஸ்ரயணீயமாம்படி நன்றாக அருளிச் செய்த
அன்றிக்கே –
ஸ்ரீ திருமால் பரத்வத்தை தாம் நண்ணி அவதாரத்திலே நன்கு உரைத்த -என்றாகவுமாம்-
இப்படி அவதாரே பரத்வத்தை ஸூஸ்பஷ்டமாம் படி அருளிச் செய்த பிரகாரத்தை அறிகை –
இப்படி பரோபதேச பிரகாரத்தை அறிந்து பரத்வ ஸ்தாபகரான ஸ்ரீ ஆழ்வார் இடத்திலே –
அற்றுத் தீர்ந்து அனந்யார்ஹராய் இருப்பார் யாவர் சிலர் -அவர்கள் திருவடிகளுக்கு அனந்யார்ஹராய்-

வந்துள் கலந்த மாலினிமை யானது அனுபவித்தற்காம் துணையா -வானில் அடியார் குழாம் கூட ஆசை யுற்ற-13-
நித்ய சம்சாரி என்று சங்கோசியாமல் சங்கோசம் அற ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து சர்வ ரசங்களும் உண்டாம்படி
அந்தரங்கமாகக் கலந்த கலவியின் இனிமையானது ச ஹிருதயமாக சம்ஸ்லேஷித்த சாரஸ்யம் ஆனது-ஏவம் வித ரஸ்யதையை
அனுபவிக்கைக்கு அடியார்கள் குழாம்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று அனுகூல சஹவாஸம் அபேஷிதமாய்
வையத்து அடியவர்கள் அன்றிக்கே அனுபவத்துக்கு தேசிகராய் வானில் அடியார்கள் குழாம்களுடன் கூட வேணும் என்று அபி நிவேசத்திலே ஊன்றி

அடியார் குழாங்களுடன் கூடி இன்பம் எய்தாக் குறையதனால் -வாடி மிக அன்புற்றார் தம் நிலைமை ஆய்ந்து உரைக்க மோகித்து-14-
ஸ்ரீ வைகுண்ட வாசிகளான நித்ய சூரிகள் அவர்கள் சங்கத்திலே சங்கதராய் -ஆனந்தத்தை அடையாத
அபூர்த்தியாலே-வாடி வாடும் -என்று மிகவும் வாடி –
முயல்கின்றேன் அவன் தன் மொய் கழற்கு அன்பை -என்று நிரவதிக சிநேக உக்தரான
ஸ்ரீ மதுரகவி ப்ரப்ருதி ப்ரயுக்த ஸூஹ்ருத்துக்கள்-
இவர் வ்யாமோஹத்தை ஸ்ரீ எம்பெருமானுக்கு நிரூபித்து-தன் முகேன இது தேவர் கிருபா சாத்தியம் -என்று
விஞ்ஞாபிக்கிற படியை-தன் திறத்திலே பரிவுடைய திருத் தாயார்-தன் ஸ்வ பாவத்தை அறிந்து பேசும்படியாக –
மோஹித்து துக்கத்தைப் பிராப்தர் ஆனார்-

அந்தாமத்து அன்பால் அடியார்களோடு இறைவன் வந்து ஆரத் தான் கலந்த வண்மையினால் -சந்தாபம் தீர்ந்தார்–15-
அழகிய ஸ்ரீ வைகுண்ட தாமத்தில் பண்ணும் விருப்பத்தாலே –
அத் தேசத்திலும் அத் தேசிகர் இடத்திலும் உண்டான அதி ஸ்நேஹத்தாலே –
அடியார்கள் உண்டு -அஸ்த்ர பூஷன பிரமுகராய் உள்ள நித்ய சூரிகள் -அவர்களோடு கூட ஸ்ரீ சர்வேஸ்வரன்
சபரிகரனாய் உளனாம் படி சம்ஸ்லிஷ்டனாய்-
சர்வ ஸ்மாத் பரனான தான் ஸ்ரீ பரம பதத்தின் நின்றும் பரமாபதமா பன்னரான-இவர் இருந்த இடத்து அளவும் வந்து
பரிபூர்ணமாக சம்ஸ்லேஷித்த ஔதார்யத்தாலே -மலை போலே பெருத்து அவயவ சௌந்தர்யாதிகளையும் யுடையனாய்
இருக்கிற படியை அனுபவித்து சந்தாபம் ஆனது சவாசனமாக நிவ்ருத்தமானது –

வைகுந்தன் வந்து கலந்ததற் பின் வாழ் மாறன் செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து -நைகின்ற
தன்மைதனைக் கண்டு உன்னைத் தான் விடேன் என்று உரைக்க –16-
ஒரு நீராக கலந்த பின்பு சத்தை பெற்று சம்பன்னரான ஸ்ரீ ஆழ்வார் -அல்லாவி -என்று அகல நினைக்கிற நைச்சய அனுசந்தானத்தைக் கண்டு
இது என்னாக விளையக் கடவது -என்று ஸ்ரீ ஈஸ்வரன் விசாரித்து -அவன் சிதிலனாகிற பிரகாரத்தை தர்சித்து
இப்படி என் விஸ்லேஷத்தில் அதி பீருவாய் இருக்கிற உன்னை தான் விடேன் என்று ஸ்ரீ ஈஸ்வரனைக் குறித்து அருளிச் செய்ய –

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும் தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த–எம்பிரான் எம்மான் நாராயணனாலே–17-
ஜகத் காரண பூதனாய்-விரோதி நிரசனம் பண்ணுமவனாய் – பிரசஸ்த கேசவனான அவனாலே
மதீயர் தேசு அடைந்தார் என்று தேஜஸ் சைப் பிராபித்தார்கள் என்று – ஸ்ரீ கேசவன் தமராகை இறே இவர்களுக்கு தேஜஸ்
தாஸ்யம் இறே ஆத்மாவுக்கு தேஜஸ் கரமாவது –
அத்தை தம்மோட்டை சம்பந்தத்தாலே கீழ் மேல் உண்டான சம்பந்தி பரம்பரையில் உள்ளவர்கள் எல்லாரும் லபித்தார்கள் என்று
அந்த யுபகார கௌரவத்தாலே-அவன் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமாய் ஸ்ரீ வைஷ்ணத்வ சிஹ்னமாய்
திரு த்வாதச திரு நாமங்களை பேசி அனுபவித்து ஹ்ருஷ்டராய் அத்தை இப்படி நன்றாக அருளிச் செய்தார்-

அணைந்தவர்கள் தம்முடனே ஆயன் அருட்காளாம் குணம் தனையே கொண்டு உலகைக் கூட்ட–18-
எமர் -என்று தாம் அபிமாநிக்கும் படியாக தம்மோடு அன்வயம் உண்டாம்படி யானவர்கள்
வீடு முதலாம் -என்கிற மோஷ பிரதத்வாதி குணங்களையே உபாயாந்தர நிரபேஷமாக திருத்துகைக்கு பரிகரமாகக் கொண்டு
நித்ய சம்சாரிகளை நித்ய சூரிகளோடு கூட்ட-மிகவும் இணங்கி -மிகவும் பொருந்தி
அவர்கள் துர்க் கதியை சஹிக்க மாட்டாமல் அவர்களோடு இணக்குப் பார்வை போல் சஜாதீயராய் இணங்கி –

எம்மா வீடும் வேண்டா என் தனக்குன் தாளிணையே அம்மா அமையும் என ஆய்ந்து உரைத்த–19-
எவ்வகையாலும் வி லஷணமான மோஷமும் வேண்டா –
சேஷ பூதனான எனக்கு-யாவந்ன சரனௌ சிரஸா தாரயிஷ்யாமி -என்னும்படி
சேஷியான தேவருடைய அங்க்ரி யுகளமே அமையும் என்று
உபய அனுகுணமாக முக்தியை ஆராய்ந்து தலை சேர நிஷ்கர்ஷித்து அருளிச் செய்த –
ஆய்ந்து–இவ்வர்த்தத்திலே பொருந்தி

வளர் ஒளி மால் சோலை மலைக்கே -தளர்வறவே நெஞ்சை வைத்துச் சேரும் எனும் -20-
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை -என்னும்படி கிளர் ஒளி மாயோனாய்
நாள் செல்ல செல்ல வளர்ந்து வாரா நின்றுள்ள ஒளியை யுடைய சர்வேஸ்வரன் வர்த்திக்கிற
ஸ்ரீ திருமால் இரும் சோலை மலைக்கே –
பகவத் ஸ்மரண ராஹித்யம் ஆகிற அநர்த்தம் இன்றிக்கே அவன் வர்த்திக்கிற ஸ்ரீ திருமலையில்
மனஸை வைத்து ஆஸ்ரயிங்கோள் என்று அருளிச் செய்யும் –
தளர்வு – மநோ தௌர்ப்பல்யம்-ஜீவ ஸ்வா தந்த்ர்யம் -நின்றவா நில்லா நெஞ்சு

முடியார் திருமலையில் மூண்டு நின்ற மாறன் -அடிவாரம் தன்னில் அழகர் -வடிவழகைப் பற்றி –
முடியும் அடியும் படி கலனும் முற்றும் அனுபவித்தான் முன்
ஸ்ரீ திருமலை ஆழ்வாரிலே மண்டி அனுபவித்த ஸ்ரீ ஆழ்வார் –
ஸ்ரீ மாலிரும் சோலை என்னும் மலையை உடைய மலையான ஸ்ரீ அழகர் திவ்ய ஆத்ம ஸ்வரூபம்
திவ்ய குணம் முதலாய் உள்ளவை எல்லாம் குமர் இருக்கும் படி அவர் திவ்ய விக்ரஹ சௌந்தர்யத்தை
அனுபாவ்ய விஷயமாகப் பற்றி -க்ரீடாதி நூபுராந்தமாக -அனுபவித்த படி –

முன்னம் அழகர் எழில் மூழ்கும் -குருகையர் கோன் இன்ன வளவென்ன கரணக் குறையின் கலக்கத்தை
ஸ்ரீ கண்ணன் ஒருமைப் படுத்தான் ஒழித்து——22-
முந்துற முன்னம்-ஸ்வரூப குணாதிகளில் அகப்படாதே அழகர் உடைய ஸ்ரீ அழகிலே யாயிற்று அகப்பட்டது –
கரண சங்கோச நிபந்தனமாக வந்த துக்கத்தைப் போக்கிக் கொடுத்து அக் கரணங்களைக் கொண்டு
அனுபவிக்கும்படி திரு உள்ளத்தை ஒரு தலைக்கும் படி பண்ணினான் –
ஸ்ரீ பெரிய திருமலையில் நிலையைக் காட்டி சமாதானம் பண்ணினான் ஆயிற்று-

ஒழிவிலாக் காலம் உடனாகி மன்னி வழு விலா வாட்செய்ய மாலுக்கு -எழு சிகர வேங்கடத்துப் பாரித்தார்–23-
அடிமையில் ஒன்றும் நழுவுதல் இன்றிக்கே-சர்வ வித கைங்கர்யங்களையும் ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு செய்ய வேணும் என்று
சென்னி ஓங்கு தண் ஸ்ரீ திரு வேங்கட முடையான் திருவடிகளிலே எப்பேர்ப்பட்ட அடிமைகளையும் செய்ய வேணும் என்று உத்சாஹித்தார் –

மகிழ் மாறன் எங்கும் அடிமை செய்ய இச்சித்து வாசிகமாய் அங்கு அடிமை செய்தான் மொய்ம்பால் ———24-
சகல வஸ்துக்களும் தான் என்னும் படி பிரகாரமாக வர்த்திக்கிற பிரகாரியை காட்டிக் கொண்டு நிற்க –
வகுள தரரான ஆழ்வார் -சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும் ஸ்ரீ திரு வேங்கட முடையான் திருவடிகளிலே
அடிமை செய்ய இச்சித்து -அப்படி ஆசைப்பட்ட அவ் விஷயத்திலே என்கோ என்கோ -என்று வாசிகமாக அடிமை செய்தார்

மொய்ம்பாரும் மாலுக்கு முன்னடிமை செய்து உவப்பால் அன்பால் ஆட் செய்பவரை ஆதரித்தும் –
அன்பிலா மூடரை நிந்தித்தும் மொழிந்து அருளும்–25-
முன்-புகழும் நல் ஒருவனில் வாசிகமாக அடிமை செய்த அந்த ஹர்ஷத்தாலே –
பக்தியாலே கைங்கர்யம் பண்ணுமவர்களை-ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப் படுவார் -என்று ஆதரித்தும் –
பக்தி இல்லா பாவிகளான அஞ்ஞரை அநாதரித்து நிந்தித்து அநாதரித்த படி-

செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய் துய்ய விபவமாய்த் தோன்றி வவற்றுள் -எய்துமவர்க்கு இந்நிலத்தில்
அர்ச்சாவதாரம் எளிது என்றான்–26-
பர பரானாம் பரம -என்று இதர விலஷணமான அழகிய ஸ்ரீ பரத்வமாய் -ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதந-என்னும்படி
இறே ஸ்ரீ வ்யூஹம் இருப்பது-பிரத்யஷ அனுபவ யோக்யமான தூய்மையை யுடைய ஸ்ரீ விபவமாய் –
இருக்கிற இவற்றில் வைத்துக் கொண்டு -இவ் விபூதியில் கிட்டி ஆஸ்ரயிக்கும் அவர்களுக்கு –
ஸ்ரீ அர்ச்சாவதாரம் சமாஸ்ரயணத்துக்கு சஷூர் விஷயமுமாய் நித்ய சந்நிதியும் யுண்டாகையாலே அதி ஸூலபம் என்கிறார்
ஸ்ரீ விபவத்தாலே அர்ச்சயமான ஏற்றம் உண்டாய் இறே இருப்பது -ஸ்ரீ பெருமாள் அர்ச்சித்த ஸ்ரீ பெரிய பெருமாள்-ஏற்றம் –
அவரையே கடாக்ஷித்ததால் வந்த திருக்கண்களின் ஏற்றத்தால் -விசாலாட்சி

பயிலும் திருமால் பதம் தன்னில் நெஞ்சம் தயலுண்டு நிற்கும் ததியர்க்கு -இயல்வுடனே ஆளானார்க்குக் ஆளாகும் மாறன்–27-
ஆஸ்ரித சங்க ஸ்வபாவனான ஸ்ரீ யபதியினுடைய திருவடிகளிலே-போக்யதையை அனுசந்தித்து ஸ்நேஹார்த்தரதா
யுக்தா சித்தராய் தன் நிஷ்டராய் இருக்கை
ஆயுத ஆபரணாதி ஒப்பனை அழகிலும்-தோற்று அடிமையாய் இருப்பவர்களுக்கு ஆளாகையே ஸ்வரூபமாய் இருக்கும் ஸ்ரீ ஆழ்வார்

கரணங்கள் ஓன்று ஒன்றின் செயல் விரும்ப உள்ளது எல்லாம் தான் விரும்ப துன்னியதே மாறன் தன் சொல்—————–28-
பாகவத ஸ்வரூப நிரூபணத்துக்கு உடலாக பகவத் குணாதிகள் பிரஸ்துதம் ஆக -அத்தாலே
பக்தி அபிவிருத்தியாக -பாஹ்யாப்யந்தர சகல கரணங்களும்-
சர்வ பிரகாரங்களாலும் சேஷிகளாக அனுசந்திக்கப் பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களை விட்டு –
புருஷார்த்த காஷ்டையை கொலைக்கும் படியான அவன் இடத்திலே அவகாஹித்து
கரணங்களும் தாமும் தத் விஷயத்தில் பிரவணராய்-இந்த்ரிய வ்ருத்தி நியமம் இன்றிக்கே அவனை அனுபவிக்க
வேண்டும்படியான பெரிய விடாயை யுடையவையாய் -கரணங்களின் விடாயை கரணியான தாம் ஒருவருமே யுடையவராய்
அவனை அனுபவிக்க ஆசைப் பட-இப்படியே அவருடைய பிராவண்யம் இருக்கும்படி -என்கை

சோறு கூறைக்காக மன்னாத மானிடரை வாழ்த்துதலா -லென்னாகும் என்னுடனே மாதவனை ஏத்தும் எனும்–29-
சூத்திர பிரயோஜனதுக்காக ஷயிஷ்ணுக்களான
சூத்திர மனுஷ்யரைக் கவி பாடி ஸ்தோத்ரம் பண்ணுகையால் என்ன பிரயோஜனம் சித்திக்கும் –
திருஷ்ட அத்ருஷ்ட பலங்களில் ஒன்றுமே சித்தியாது -அனர்த்தமே சித்திக்கும் -என்றபடி –
ஸ்ரீ திருமாலவன் கவியான என்னோடு கூட –
என் ஸ்ரீ திருமாலான ஸ்ரீ யபதியை கவி சொல்ல வம்மின் என்று பரோபதேசம் பண்ணும்-

சன்மம் பல செய்து இவ் வுலகு அளிக்கும் நன்மை யுடைய மால் குணத்தை நாடொறும் -இம்மையிலே ஏத்தும் இன்பம் பெற்றேன் எனும் –30-
ஆஸ்ரித அர்த்தமாக அசங்க்யதமான அவதாரங்களைப் பண்ணி
விரோதிகளைப் போக்கி ஈரக் கையாலே தடவி ரஷிக்கும் நன்மை யுள்ளது ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கே இறே
சீர்ப் பரவப் பெற்ற நான் -என்றத்தை மால் குணத்தை நாடொறும் இம்மையிலே ஏத்தும் இன்பம் பெற்றேன்-என்கிறது –
இவ் விபூதியிலே ஸ்தோத்ரம் பண்ணுகையால் யுண்டான ஆனந்தத்தைப் பெற்றேன்
குறைவு முட்டுப் பரிவு இடர் துயர் துன்பம் அல்லல் துக்கம் தளர்வு கேடுகள் இன்றி
அம்ருத ஆனந்த மக்னரானவர் என்று இறே ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் அருளிச் செய்தது –

ஒரு நாயகமாய் யுலகுக்கு வானோர் இரு நாட்டில் ஏறி யுய்க்கும் இன்பம் -திறமாகா
மன்னுயிர்ப் போகம் தீது மாலடிமையே யினிதாம் பன்னியிவை மாறன் உரைப்பால் ———31-
இவற்றின் அல்ப அஸ்த்ர த்வாதி தோஷங்களை ஆராய்ந்து ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்கையாலே
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் உடைய தாச்யமே சரசமாய் இருக்கும்-

காலத்தால் தேசத்தால் கை கழிந்த -சால அரிதான போகத்தில் ஆசை யுற்று நைந்தான்–32-
இவரும் தேச கால விப்ரக்ருஷ்டமான பர அவஸ்தய தத் அனுபவங்களை அப்போதே பெற வேணும் என்று
இவர் பூத காலத்தில் படிகளை அபேஷிக்கிறார் –
பர விஷய பக்தி ஏகதேசமாய்-விபவ பிராவண்யம் இறே விஞ்சி அருளிச் செய்தது –
அபி நிவேச அதிசயம் மாறுபாடுருவும்படி யாவகாடமாய்-அவகாடம் -ஆழ்ந்து அனுபவம் –
அத்தை அப்போதே பெறாமையாலே சிதிலர் ஆனார் –

கோவான வீசன் குறை எல்லாம் தீரவே ஓவாத காலத் துவாதிதனை -மேவிக் கழித்தடையைக் காட்டிக் கலந்த குணம்–33-
கீழில் திருவாய் மொழியில்-தேச காலாதித போக்ய வஸ்துவை அனுபவிக்கப் பெறாத
துக்கத்தால் வந்த சங்கோசம் எல்லாம் நிவ்ருத்தமாம்படி கால சக்கரத்தான் ஆகையாலே –
இவரோடு சேர்ந்து-அந்த கால உபாதியைக் கழித்து -கீழே அபேஷித்த அவதானங்களைக் காட்டி அருளி
உன்னது என்னதாவியும் என்னது உன்னதாவியும் என்ன வண்ணமே நின்றாய்
என்று உரைக்க வல்லனே -என்று இப்படி ஏக தத்வம் என்னலாம்படி-சம்ஸ்லேஷித பிரணயித்வ குணம்-

காதல் பித்தேறி -எண்ணிடில் முன் போலி முதலான பொருளை யவனாய் நினைந்து
மேல் விழுந்தான் மையல் தனின் வீறு————34-
ஸ்ரீ ஆழ்வார் அபலையினுடைய அவஸ்தையை அடைந்து என் கொடியே பித்தே -என்னும்படி பக்தியாலே காதல் பித்தேறி
பித்தேறின ஆகாரத்தோடே தாம் நிரூபிக்க புகில்-மண்ணை இருந்து தொடங்கி
அயர்க்கும் அளவும் பிரதிபாதிக்கப் படுகிற
முன் கண்ட சத்ருச பதார்த்தங்களையும் சம்பந்த பதார்த்தங்களையும் அவனாகவே பிரதிபத்தி பண்ணி -என்கை –

வீற்று இருக்கும் மால் விண்ணில் மிக்க மயல் தன்னை ஆற்றுதற்காத் தன் பெருமையானது எல்லாம்
தோற்ற வந்து நன்று கலக்கப் போற்றி நன்கு உகந்து வீறு உரைத்தான்–35-
வீற்று இருந்து ஏழ் உலகும் தனிக் கோல் செல்ல எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் –
ஸ்ரீ ஆழ்வார் உடைய அத்யந்த வ்யாமோஹத்தை-
குண விக்ரஹாதி வைலஷண்யம் முதலான வைபவம் எல்லாம் பிரகாசிக்க இங்கே வந்து –
சர்வ ஸ்மாத் பரனான ஸ்ரீ சர்வேஸ்வரனை கண்டு – போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது
மங்களா சாசனம் பண்ணி-மிகவும் ஹ்ருஷ்டராய் -தாம் உபய விபூதியிலும் வ்யாவர்த்தரான படியைப் பேசினார்

அறிவழிந்து உற்றாரும் அறக் கலங்க பேர் கேட்டு அறிவு பெற்றான் மாறன் சீலம்————36-
மண்ணை இருந்து துழாவியில் காட்டிலும்-அறிவு கலங்கி-அங்கு
காணவும்-கேட்கவும்-பேசவும் பின் செல்லவும்-ஷமையாய் இருந்தாள்-
இங்கு-குவளைத் தடம் கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்து மதி எல்லாம் உள் கலங்கி மயங்கி இறே கிடக்கிறது
நோய் தீர்ந்த பிரகாரத்தை -பேர் கேட்டு அறிவு பெற்றேன் -என்கிறது —

சீலமிகு கண்ணன் திரு நாமத்தால் உணர்ந்து மேலவன் தன் மேனி கண்டு மேவுதற்கு சால வருந்தி
இரவும் பகலும் மாறாமல் கூப்பிட்டு இருந்தனனே–37-
பிரணயிநிகளோடு கலந்த சீலாதிக்யத்தை யுடைய ஸ்ரீ கிருஷ்ணன் திரு நாமத்தை
வண்டுவராதிபதி மன்னன் -என்று தோழி சொல்லக் கேட்டு மோஹம் தெளிந்து –
உணர்ந்த அநந்தரம் அவன் விக்ரஹத்தைக் கண்டு கிட்டி அனுபவிக்கைக்கு-பத்தும் பத்தாக அபேஷித்து
பஹூ பிரகாரமாக பிரயாசப் பட்டு-இப்படி திவா ராத்திரி விபாகம் அற
சர்வ காலத்திலும் கூப்பீடோவாமல் இருந்தார் ஸ்ரீ ஆழ்வார் –

என்னுடைமை மிக்க வுயிர் -தேறுங்கால் என் தனக்கும் வேண்டா வெனு மாறன்–38-
ஸ்ரீ யபதியாய் இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய உகப்புக்கு புறத்தியான மாமை முதலான
உடைமையோடு உயிரோடு வாசி அற வேண்டா பர ப்ரீதி விஷயமாகவே இருக்கிற ஆகாரத்தை-
தெளிய ஆராய்ந்தால் அத்தலைக்கு உறுப்பாகவே இருக்க வேணும் -ஸ்வார்த்தைக்கு உருப்பாகில் என் தனக்கும் வேண்டா –

மிவ்வுயிர்கள் -தண்ணிமையைக் கண்டிருக்க மாட்டாமல் கண் கலங்கும் மாறன்–39-
பிரபல கர்மங்களாலே அசங்க்யாதமான துக்கத்தை மிகவும் அடைந்து பொறுக்கிற இவ்வாத்மாக்கள்
இவர்கள் அனர்த்தத்தை கண்டு ஆற்ற மாட்டாமல்-இவற்றின் கொடுமையை பல காலும் அருளிச் செய்து
கூட்டரிய திருவடிகள் எஞ்ஞான்று கூட்டுதியே —என்று கூப்பிட்ட பின்பு-அடைந்தேன் உன் திருவடியை – என்னும்படி
சமாஹிதராய் சம்சாரிகள் நோவுக்கு நொந்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் –

ஒன்றும் இலைத் தேவு இவ்வுலகம் படைத்த மால் அன்றி என யாரும் அறியவே -நன்றாக மூதலித்துப் பேசி–40-
தேவு ஒன்றும் இலை என- சர்வ ஸ்ரஷ்டாவான ஸ்ரீ சர்வேஸ்வரனை ஒழிய
கார்ய பூதரில் காரணத்வத்தால் வந்த புகரை உடையவர்கள் ஒருவரும் இல்லை என்று
எத்தனையேனும் கல்வி அறிவு இல்லாத ஸ்திரீ பாலரும் அறியும் படி
விரகத பூர்வகமாக-ஆஸ்ரயம் ருசிக்கும்படி அருளிச் செய்தவை -என்கை –
பரத்வ சங்கை தீர -இதுவே பரத்வத்தில் நாலாவது திருவாய்மொழி -மேலே பண்ண வேண்டாம் படி திருந்தினார்கள் –

பொய்யாகப் பேசும் புறனுரைக்கு -மெய்யான பேற்றை யுபகரித்த பேர் அருளின் தன்மைதனை போற்றினனே–41-
இவ் வழகைக் கண்டு இருக்கவும் தத் அனுகுணமான அக்ருத்ரும பிரேமம் இன்றிக்கே
க்ருத்ரிம பிரேமத்தாலே இவற்றைப் பேசி அனுபவிக்கிற படியை கண்டு
போட்கனாய் இருக்கிற மித்ர பாவத்தையே பார்த்து அந்த அஹ்ருத்யமான உக்திக்கு –
யதா ஞானம் உடையார் பேறும் சத்யமான பேற்றை உபகரித்த இப் பேற்றை ஸ்ரீ எம்பெருமான் உடைய நிர்ஹஹேதுக
கிருபா பிரவாஹத்தின் ஸ்வபாவத்தை ப்ரீதியாலே அருளிச் செய்தார் -ஸ்ரீ ஆழ்வார்

பொலிக பொலிக வென்று பூ மகள் கோன் தொண்டர் மலிவு தானும் கண்டு உகந்து வாழ்த்தி–42-
நித்ய சித்தர்–ஸ்வேததீப வாசிகள் முதலான ஸ்ரீ திருமால் அடியார்கள் எங்கும் திரண்ட சம்ருத்தி –
நித்ய சித்தருக்கும்-ஸ்வேத தீப வாசிகளுக்கும் சாமானராய்த் திருத்த திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்கள் -என்றுமாம்-
தமர்கள் கூட்டம் நாளும் வாய்க்க நங்கட்கு -என்னும்படியாக-தம் கண்களாலே கண்டு
கண்டோம் கண்டோம் கண்டோம்-கண்ணுக்கு இனியன கண்டோம் -என்று ஹ்ருஷ்டராய் –
அந்த சம்ருத்திக்கு பொலிக பொலிக பொலிக -என்று மங்களா சாசனம் பண்ணினார்-

மாசறு சோதிக் கண்ணன் வந்து கலவாமையால் ஆசை மிகுந்து பழிக்கு அஞ்சாமல் -ஏசறவே மண்ணில் மடலூர மாறன் ஒருமித்தான்–43-
அத்யாகர்ஷகமான வடிவைக் கொண்ட ஸ்ரீ கிருஷ்ணன் தன் ஸ்வரூபத்துக்கு சேர தானே மேல் விழுந்து வந்து
அநுபவிப்பியாமையாலே -அபி நிவேசம் அதிசயிக்கையாலே – பழிக்கு அஞ்சாமல் -ஊரார் தாயார் தொடக்கமானவர்
இவள் மடலூர ஒருப்படுகிற தசையைக் கண்டு இது குடிப் பழியாய்த் தலைக் கட்டும் என்று நிஷேதிக்க
ஏவம் விதமான பழிக்கு பணையுமவள் ஆகையாலே அஞ்சாதே – அப் பழிச் சொல்லே தாரகமாக
ஜகத் ஷோபம் பிறக்கும்படி இஜ் ஜகத்திலே மடலூர ஸ்ரீ ஆழ்வார் ஒருப்பட்டார்

மடலூரவும் ஒண்ணாத படி கூரிருள் சேர் கங்குல் உடன் கூடி நின்று -பேராமல் தீது செய்ய–44-
ஆதித்யனும் அஸ்தமித்து பிரியம் சொல்லுவார் ஹிதம் சொல்லுவார் பழி சொல்லுவார் எல்லாரும் உறங்குகையாலும்
இருள் வந்து மூடுகையாலும் மடலூர்வதும் கூடாத படியாக -அதுக்கு மேலே அத்யந்த அந்தகாரத்தோடே ராத்ரியானது
கூட்டுப் படையோடு கூடி நின்று இட்ட அடி பேராமல்-தீது செய்ய -பொல்லாங்கை உண்டாக்க –

அழகு இங்கனே தோன்றுகின்றது என் முன்னே -அங்கன் உரு வெளிப்பாடா வுரைத்த -45-
ருசி ஜனக லாவண்ய விபவமானது-உருவ வெளிப்பாடாய் -குண விக்ரஹ சௌந்தர்யாதிகளால் பூரணரான ஸ்ரீ நம்பி யுடைய
திவ்ய ஆயுத-திவ்ய ஆபரண-திவ்ய அவயவ சோபைகள் ஆனது அவை கண்டு உகக்கிற என் முன்னே பிரத்யஷமாகத் தோன்றா நின்றது –

கடல் ஞாலத்து ஈசனை முன் காணாமல் நொந்தே உடனா வனுகரிக்கலுற்று திடமாக வாய்ந்து அவனாய்த்தான் பேசும்-46-
சர்வ நிர்வாஹகனான ஸ்ரீ சர்வேஸ்வரனை-பிரத்யஷ சாஷாத் காரம் பண்ணாமல் நொந்து –அவசன்னராய் —
ஸ்ரீ கோபிமார் ஸ்ரீ கிருஷ்ணனை அனுகரித்து தரித்த படியை ஆராய்ந்து தாமும் அனுகரித்து தரிப்பதாக
திரு உள்ளத்திலே உற்று -திருட அத்யாவச்ய யுக்தராய்-வாழ்ந்த வழுதி வள நாடன் -என்னும்படி-பாவ பந்தத்தோடு கிட்டி –
அவனாகவே அனுகரித்த பிரகாரத்தை அருளிச் செய்யும்-

நோற்ற நோன்பாதி யிலேன் உன் தனை விட்டாற்ற கில்லேன் பேற்றுக்கு உபாயம் உன் தன் பேர் அருளே -சாற்றுகின்றேன்-47-
இத்தால்-மோஷ சாதனமாக-சாஸ்திர சித்தமான கர்மாதி உபாயங்களில் எனக்கு அந்வயம் இல்லை —
நோற்ற நோன்பிலேன் -என்கிற பாட்டை கடாஷித்து அருளிச் செய்தபடி –
தாரகனுமாய்-போக்யனுமாய்-இருக்கிற உன்னை விட்டு-தரிக்க மாட்டு கிறிலேன்-
இவ் வாற்றாமை எனக்கு ஸ்வரூபம் இத்தனை —
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருக்கிற தேவர் அடியிலே அருளின நிர்ஹேதுக கிருபையே –
மோஷ சாதனம் -என்னுமது எல்லாரும் அறியும்படி பறை அறைந்து சாற்றுகின்றேன் -என்கிறார் –

ஆராவமுதாழ்வார் ஆதரித்த பேறுகளை தாராமையாலே தளர்ந்து மிக -தீராத ஆசையுடன் ஆற்றாமை பேசி யலமந்தான்–48-
ஏரார் கோலம் திகழக் கிடந்த ஸ்ரீ ஆராவமுதாழ்வார் -சில பரிமாற்றங்களை அபேஷிக்க-அப்போதே அது பெறாமையாலே –
முடியாத வபி நிவேசத்தோடே -தரியேன் இனி -என்றும் -உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ -என்றும்–பேசினவை

திரு வல்ல வாழ் புகழ் போய் தான் இளைத்து வீழ்ந்து அவ் ஊர் தன்னருகில் -மேல் நலங்கித் துன்புற்றுச் சொன்ன சொலவு-49-
அவ் ஊர் தன் அருகில் -தான் இளைத்து -வீழ்ந்து-உள்ளே புக்கு அனுபவிக்க பெறாமால்-ஊரின் புறச் சோலையிலே
பல ஹானியாலும்-அங்குத்தை போக்யதையாலும்-நகர சம்ப்ரமங்களாலும்-கால் நடை தாராமல் தளர்ந்து வீழ்ந்து –
அதுக்கு மேலே-தோழி மார் நிஷேத வசனங்களாலும் கலங்கி –
பகவத் அலாபத்தாலே மாறுபாடு உருவின துக்கத்தை யுடையராய் -அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்திகள்-

சிறந்த குணத்தால் உருகும் சீலத் -திறம் தவிர்ந்து சேர்ந்து அனுபவிக்கும் நிலை செய் என்ற சீர்–50-
உனக்கு அனுரூபமான கல்யாண குண அனுசந்தானத்தாலே த்ரவி பூதானாம் ஸ்வபாவ பிரகாரம் நிவ்ருத்தமாய் –
உன்னைக் கிட்டி-அனுபவிக்கும் படியாக ஸ்தைர்யத்தைச் செய்து அருள வேணும் –
தாம் தரித்து நின்று அனுபவிக்கும் பிரகாரம் பண்ணி அருள வேணும் என்று
அர்த்தித்த-ஞானாதி குணங்களை யுடையரான-ஸ்ரீ ஆழ்வார்-

வைகல் திரு வண் வண்டூர் வைகும் ராமனுக்கு என் செய்கை தனைப் புள்ளினங்காள் செப்புமின் -கை கழிந்த காதலுடன் தூதுவிடும்–51-
தேறு நீர் பம்பை வடபாலைத் திரு வண் வண்டூர் மாறில் போரரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார் -என்றத்தை நினைக்கிறது
இரண்டாம் தூதுக்கு விஷயம் ஸ்ரீ விபவம் இறே
என் தசையைப் பஷ பாதம் உடையவர்களே தாழாமல் சொல்லும் என-அத்யார்த்தியை அனைவருக்கும் அறிவித்தவை
என்னையும் உளன் என்மின்களே -என்று தாம் வந்து நோக்கா விடில் சத்தை இல்லை –
இப்போது வந்து நோக்குகைக்கு ஈடான சத்தா மாதரமும் கிடக்கிறது என்னுங்கோள் என்கையாலே
கை கழிந்த காதல் உடன் தூது விட்ட படி இது வாயிற்று —

மின்னிடையார் சேர் கண்ணன் மெத்தென வந்தான் என்றுதன்னிலை போய்ப் பெண்ணிலையாய்த்-தான் தள்ளி –
அவனும்-உன்னுடனே கூடேன் என்று ஊடும் குருகையர் கோன்–52-
மின்னிடை மடவார் உடன் சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணன் அங்குத்தையில் அந்ய பரதையாலே
ஆற்றாமைக்கு உதவ வராமல் ‘ மந்த கதியாய் வந்தான் என்று – அவன் தங்கள் இடத்தில் பண்ணும் அபி நிவேத்தை
அந்யதாகரித்து தங்கள் ஆற்றாமையாலே அவன் பதற்றத்தையும் அசத் கல்பம் ஆக்குகிற –
மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான் அது அஞ்சுவன் -என்றத்தை-கடாஷித்து அருளிச் செய்தபடி –
ஸ்ரீ குருகூர் சடகோபன் -என்கிற ஆகாரம் குலைந்து ஸ்ரீ கோபிமார் உடைய ஆகாரத்தை யுடையராய் அவனுக்கு
அவகாசம் அறும்படி ஊடும் படியையும்-கூத்த வப்பன் தன்னைக் குருகூர் சடகோபன் ஏத்திய தமிழ் மாலை -என்னும்படி
கூடின படியையும் அருளிச் செய்கையாலே -உன்னுடனே கூடேன் என்று ஊடும் குருகையர் கோன் -என்று
அருளிச் செய்த இதிலே கூடின முடியும் இவர்க்கு விவஷிதம்
மேலே-நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் -என்று இறே அருளிச் செய்யப் புகுகிறது –
அதுக்குச் சேர இங்கே கூட வேணும் இறே

நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் முன் நண்ணாரை வெல்லும் விருத்த விபூதியன் என்று -எல்லை யறத் தான் இருந்து வாழ்த்தும்-53-
பும்ஸாம் சித்த திருஷ்டி அபஹாரியாய் -சாஷான் மன்மத மன்மதனான தன் சந்நிதியிலே
கிட்டோம் -என்றிருந்த தம்மை-ஸ்த்ரீத்வ அபிமானத்தைக் குலைத்து ஊடுகையைத் தவிர்த்து கூடப் பண்ணின படி -என்கை-
முன் நண்ணாதாராய் -கிட்டா தாராய் இருக்கிற நம்மை நல்ல வலத்தால் சேர்த்தோன் -என்று அந்வயம் ஆகவுமாம்
பூர்வ சத்ருக்களாய்-அவர்களை நின்று இலங்கு முடியனா -இத்யாதிப்படியே வென்றால் போலே நம்மை நல்ல வலத்தால் சேர்த்தது -என்றாகவுமாம்-
திரு விண்ணகர் சேர்ந்த பிரான் கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலோம் -என்றும்
இப்படி இதுக்கு என்று சமைந்து இருந்து நிரவதிக ஸ்தோத்ரங்களால் ஸ்துதித்து அருளும் –
இப்படி சேராததைச் சேர்ப்பதே -என்று இவர் ஈடுபட இது ஓன்று கண்டோ நீர் ஆச்சர்யப் படுகிறீர்
லோகத்தில் பரஸ்பர விருத்தங்களாய் இருக்கிற விபூதியைச் சேர்த்துக் கொண்டு
ஸ்ரீ திரு விண்ணகரிலே நிற்கிற படியைப் பாரீர் -என்று விருத்த விபூதி உக்தனாய் இருக்கிற படியைக் காட்ட -விருத்த விபூதியன் என்று –

குரவை முதலாம் கண்ணன் கோலச் செயல்கள் இரவு பகல் என்னாமல் என்றும் பரவு மனம் பெற்றேன் என்றே களித்துப் பேசும் —54-
முந்துற குரவை முதலாகக் காட்டினது திருக் குரவையில் ஆரவாரத்தை அனுபவித்து தரிக்கைக்காக –
வேண்டித் தேவர் இரக்க -வந்து பிறந்த வ்ருத்தாந்தத்தை முந்துற முன்னம் காட்டாது ஒழிந்தது
பிறந்த வாற்றில் ஆழம் கால் பட்டு ஆறு மாசம் மோஹித்தால் போலே மோஹிப்பர் -என்று –
சர்வ காலத்திலும் ஸ்துதிக்கும் படியான-மனசைப் பெற்றேன் என்று ஹர்ஷ பாரவச்யத்தாலே கர்வித்துப் பேசும்

முன்னனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன் -மன்னு முவப்பால் வந்த மால்-துவளறு சீர் மால் திறத்துத் தொன்னலத்தால்-
நாளும் துவளறு தன் சீலம் எல்லாம் சொன்னான்–55-
முந்துற முன்னம்-பொய் நின்ற ஞானம் தொடங்கி–இவ்வளவும் அனுபவத்தில் அவஹாகித்த ஸ்ரீ ஆழ்வார் –
அந்நாள் தொடங்கி இந்நாள் தோறும்–இணை அடிக்கே அன்பு சூட்டி-அன்பு பாலே போல் சீரில் பழுத்த படி –
இப்படி குண அனுபவத்தாலே தமக்கு–மாறும் நிகரும் இன்றி-நித்ய மத முதிதராய்-மால் ஏறி
ஆஸ்ரிதர்க்கு அனுபாவ்யம் ஆகையாலே–குற்றம் அற்று-ஹேய பிரத்ய நீகனான
கல்யாண குண யுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்திலே ஸ்வாபாவிக பக்தியாலே –
நாள் தோறும் தாம் அவ் விஷயத்தில் பிராவண்யத்தை உற்று இருக்கிற தம்முடைய ஸ்வபாவம் எல்லாம் அருளிச் செய்தார்

மாலுடனே தான் கலந்து வாழப் பெறாமையால் சால நைந்து தன்னுடைமை தானடையக் -கோலியே
தான் இகழ வேண்டாமல் தன்னை விடல் சொல்–56-
ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் உடன் சம்ச்லேஷித்து சத்தை பெற்று உஜ்ஜீவியாமல்-மிகவும் அவசன்னராய் —
தம் தசை தாம் பேச மாட்டாதே-திருத் தாயார் பேசும்படியாக தளர்ந்து
ஏறாளும் இறையோனில் அவனுக்கு உறுப்பு அல்லாத ஆத்மாத்மீயங்கள் அடையத் தாம் உத்யோகிக்க வேண்டினால் போல்
அன்றிக்கே-தன்னடையே அவை முற்கோலித்து- தம்மை கட்டடங்க விட்டகலும் படியை அருளிச் செய்தார் –

உண்ணும் சோறாதி யொரு மூன்றும் எம்பெருமான் கண்ணன் என்றே நீர் மல்கிக் கண்ணினைகள் -மண்ணுலகில்
மன்னு திருக் கோளூரில் மாயன் பால் போம் –57-
உண்ணும் சோறு-பருகும் நீர்-தின்னும் வெற்றிலை-எல்லாம் கண்ணன்-என்கிற முதல் பாட்டு பிரதானமாய்
அத்தைப் பின் சென்று அருளிச் செய்தபடி –
இவ் விபூதியிலே ஸ்ரீ திருக் கோளூரிலே நித்ய வாசம் பண்ணுகிற சௌந்தர்ய சீலாதிகளால்
ஆச்சர்ய பூதனான-வைத்திய மா நிதி பால் போம் ஸ்ரீ ஆழ்வார் –
இத்தால் வழியில் உள்ளவர்களையும் வாழ்வித்து-அவனையும் வாழ்வித்து-தானும் வாழும்படி போனாள் என்றது ஆயிற்று –

பொன்னுலகு பூமி எல்லாம் புள்ளினங்கட்கே வழங்கி என்னிடரை மாலுக்கு இயம்பும் என -மன்னு திரு
நாடு முதல் தூது நல்கி விடும்–58-
முதல் பாசுரத்தை முடியக் கடாஷித்து அருளிய படி -பஷ பாதமுடைய பஷி சமூஹங்களுக்கே தம்முடைய ரஷண அர்த்தமாக வுபகரித்து –
வண் சடகோபன் -ஆகையாலே-மோஷாதி புருஷார்த்தங்களை வழங்க வல்லராய் இருக்கை-
உபய விபூதியையும் உபஹார அர்த்தமாக உபகரித்து பிரிவால் உண்டான என்னுடைய பரிவை
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அறிவியுங்கோள் -என்று-ஸ்ரீ திரு நாடு முதலா வது – மூன்றாம் தூதுக்கு விஷயம் பரத்வ த்வயம் -என்கையாலே
ஸ்ரீ திரு நாடும்-ஸ்ரீ நெஞ்சு நாடும்-விஷயம் -ஸ்ரீ பரத்வ-ஸ்ரீ அந்தர்யாமித்வ-விஷய தூது ப்ரேஷணமாய் இருக்கும் -இத் திருவாய் மொழி –

நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சு அழிய மாலுக்கும் ஏரார் விசும்பில் இருப்பு அரிதா -ஆராத காதலுடன் கூப்பிட்ட–59-
அசேதனங்களோடு -சைதன்ய லேசம் யுடையாரோடு
பரம சேதனனோடு-வாசி அற கேட்டார் எல்லாம் நீர்ப்பண்டமாய்-நெஞ்சு அழியும்படியாக –
பாவைகளோடு – பஷிகளோடு – ரஷகனோடு வாசி அற-எல்லாரும் த்ரவ்ய த்ரவ்யமாய் ஹ்ருதய சைதில்யம் பிறக்கும் படி –
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கும் அந்தாமமான ஸ்ரீ பரமபதத்தில் இருப்புப் பொருந்தாத படியாகவும் -விண் மீது இருப்பு அரிதாம் படி –
அத்யபிநிவேசத்தாலே-ஆர்த்தியை தர்சிப்பித்த அபிஜாதரான ஸ்ரீ ஆழ்வார் உடைய திவ்ய ஸூக்தி-

உலகுய்ய மால் நின்ற உயர் வேங்கடத்தே அலர் மகளை முன்னிட்டு அவன் தன் -மலரடியே
வன் சரணாய்ச் சேர்ந்த மகிழ் மாறன்–60-
சென்னி யோங்கு தண் திரு வேங்கடமுடையான் யுலகு தன்னை வாழ நின்ற நம்பி -என்று சொல்லுகிறபடியே
லோகமாக உஜ்ஜீவித்து வாழும்படி ஸ்ரீ சர்வேஸ்வரன் நின்று அருளின ஸ்ரீ திரு மலையிலே
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே –என்றதிலே நோக்கு-
திரு மா மகள் கேள்வா -என்றும்
அலர் மேல் மங்கை உறை மார்பா -என்றும்-ஸ்ரீ பெரிய பிராட்டியாரை புருஷகாரமாக முன்னிட்டு-
ஸ்ரீ திரு வேங்கடத்தானானவன் பூவார் கழல்களான- நாண் மலர் அடித் தாமரையையே -என்று
இப்படி-அடியே தொடங்கி-அடியைத் தொடர்ந்த படி-தம் வெறுமையை முன்னிட்டு-அவன் திருவடிகளிலே நிரபேஷ உபாயமாக
ஸ்வீகரித்த ஸ்ரீ ஆழ்வார்-

உண்ணிலா வைவருடன் யிருத்தி யிவ்வுலகில் -எண்ணிலா மாயன் எனை நலிய -எண்ணுகின்றான் -61-
இவ் வுலகில் -உண்ணிலா வைவருடன் யிருத்தி-இருள் தரும் மா ஞாலமான சம்சாரத்திலே ஆந்த்ர சத்ருக்களாய் வர்த்திக்கிற
ஐந்து இந்த்ரியங்களோடே இருக்கப் பண்ணி -அசங்க்யாதமான ஐஸ்வர்ய சக்தி உக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன்-தமோபிபூதமானஇவ் விபூதியிலே
அஹம் அர்த்தமான ஆத்மாவை-அறிவு அழியப் பண்ணுமதான ஐந்து இந்த்ரியங்களும்
ஆத்மானுபந்தி என்னலாம் படி பொருந்தி இருக்கும்படி ஆக்கி துர்பலனான என்னை
அவற்றைக் கொண்டு விஷயங்களிலே தள்ளி பாதிக்கைக்கு கார்ய விசாரம் பண்ணா நின்றான்-அவன் மேலே பழி இட்ட படி

கங்குல் பகலரதி கை விஞ்சி மோகமுற அங்கதனைக் கண்டோர் அரங்கரைப் பார்த்து -இங்கு இவள் பால்
என் செய்ய நீர் எண்ணுகின்றது என்னு நிலை சேர்–62-
திவா ராத்திரி விபாகம் அற-அரதி விஞ்சி மோஹத்தை பிராப்தையாக-தன் பெண் பிள்ளையின் இடத்தில் அத்தசையைக் கண்டு –
ஆர்த்தி ஹரதையிலே சிந்தித்துப் போருகிற அத்விதீயரான ஸ்ரீ பெரிய பெருமாளைப் பார்த்து –
இத்தசையில்-இவள்-இடையாட்டமாக -ஆஸ்ரித ரஷண சிந்தை பண்ணுகிற ஸ்ரீ தேவர் ரஷக அபேஷை யுடைய இவள் திறத்து
எது திரு உள்ளம் பற்றி இருக்கிறது -த்வர அஜ்ஞ்ஞானத்தாலே தலை மகள் என்ற பேரை யுடைய தாம் மோஹித்துக் கிடக்க –
இந்த மோஹாதிகளும் உபாயம் ஆகாமல்-அத்தலையில் நினைவே சாதனம் என்னும் அத்யாவச்ய ஜ்ஞானத்தாலே
திருத் தாயார் என்ற பேரை யுடையராய் தெளிந்து இருந்து தெரிவிக்கும் தசையை அடைந்த ஸ்ரீ ஆழ்வார் யுடைய-

வெள்ளிய நாமம் கேட்டு விட்டகன்ற பின் மோகம் தெள்ளிய மால் தென் திருப்பேர் சென்று புக -உள்ளம் அங்கே
பற்றி நின்ற தன்மை பகரும்–63-
ஸ்ரீ பெரிய பெருமாள் யுடைய திரு நாமங்களை பாட்டுத் தோறும் திருத் தாயார் சொல்லக் கேட்டு
கீழில் மோஹமானது விட்டுப் போன பின்பு -சென்று புகுவதாக ஒருப்பட- இவ் வதி பிரவ்ருதியை
தாய் மாறும் தோழி மாறும் தடஸ்தராய் உள்ளாறும் கண்டு இப்படி சாஹசத்தில் ஒருப்படுகை உக்தம் அன்று
என்று நிஷேதிக்க -திரு உள்ளம் தம்மை ஒழியவும்-முந்துற்ற நெஞ்சாய்- வீற்று இருந்த இவ்விஷயத்தில்
மாறுபாடு உருவ ஊன்றி நின்ற ஸ்வபாவத்தை நிஷேதிப்பாருக்கு அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் –

ஆழி வண்ணன் தன் விசயமானவை முற்றும் காட்டி வாழிதனால் என்று மகிழ்ந்து நிற்க -ஊழிலவை
தன்னை யின்று போல் கண்டு தானுரைத்த–64-
ஸ்ரீ சர்வேஸ்வரன் தன் விஜய பரம்பரைகளான சர்வ சேஷ்டிதங்களையும் இவருக்கு விஷயமாம்படி காட்டி
ஏவம் விதமான இவற்றாலே ஹ்ருஷ்டராய் வாழும் என்று சொல்லி அவ்வாகாரங்களைக் காட்டிக் கொடு நிற்க –
பழையதாய் கழிந்த அந்த அபதானங்களை-பிரத்யஷமாக இன்று போல் அனுபவித்து –
தாம் அனுபவத்துக்கு-போக்குவீட்டு அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்-

கற்றோர் கருதும் விசயங்களுக்கு எல்லாம் பற்றாம் விபவ குணப் பண்புகளை -உற்று உணர்ந்து
மண்ணில் உள்ளோர் தம் இழவை வாய்ந்து உரைத்த–65-
ஸ்ரீ விபவ குண ஸ்வ பாவங்களை -அவை தான் ஆஸ்ரித ரஷணத்துக்கு உறுப்பாகையாலே-அவற்றின்
ஸ்வபாவத்தை உற்று உணர்ந்து அவற்றின் படியை மேல் எழ அன்றிக்கே அந்தரங்கமாக ஆராய்ந்து –
அவன் குணம் இப்படியாய் இருக்க இத்தை இழப்பதே -என்று-பூமியில் உண்டானவர்கள் உடைய
ஸ்ரீ பகவத் குண அனுபவ அலாபத்தை – ஸூலபராய்க் கிட்டி நின்று அந்தரங்கமாக அருளிச் செய்த
ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தி

பா மருவு வேதம் பகர் மால் குணங்களுடன் ஆ மழகு வேண்டர்பாடாம் அவற்றை -தூ மனத்தால்
நண்ணியவனைக் காண நன்குருகிக் கூப்பிட்ட-66-
சந்தஸ்ஸூக்களுடன் கூடின வேதப் பிரதிபாத்யமான குணங்களோடு கூடி
நன்றான அழகு மேன்மை யானவற்றை -மானஸ சாஷாத் காரத்தாலே கிட்டு அனுபவித்து பிரத்யஷ அனுபவம்
பண்ண வேணும் என்று இச்சித்து அந்த பிரேம அனுகூலமான உருகலோடே கூப்பிட்ட –

ஏழையர்கள் நெஞ்சை இளகுவிக்கும் மாலழகு சூழ வந்து தோன்றித் துயர் விளைக்க -ஆழு மனம்
தன்னுடனே யவ் வழகைத் தான் உரைத்த –67-
சபலைகளான-அபலைகள் யுடைய மனசை த்ரவிப்பிக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய
ஸ்மயமான முகாம்புஜத்தில் நயன சௌந்தர்யம் -எங்கும் சூழ்ந்து-ஸ்ம்ருதி விஷயமாய்
தனித் தனியும் -ஒரு முகமாயும்-பாதகமாக இறே துக்கத்தை விளைப்பது –

மாயாமல் தன்னை வைத்த வை சித்திரியாலே தீய விசித்திரிமாச் சேர் பொருளோடு ஆயாமல்
வாய்ந்து நிற்கும் மாயன் வளமுரைத்த–68-
சரண்யனான யுனக்கு அஞ்ஞான அசக்திகள் ஆகிற தோஷம் இன்றிக்கே சர்வஞ்ஞதவாதி குணங்களும் உண்டாய் இருக்க
சரணாகதனான எனக்கு ஆகிஞ்சன்ய அனந்யகத்வம் ஆர்த்தியும் உண்டாகையாலே அதிகாரி மாந்த்யமும் இன்றிக்கே இருக்க
வைத்த இதில் பொருந்தாத என்னை-வைத்து நடத்திக் கொண்டு போருகிறதுக்கு ஹேது-
தன் விசித்திர ஜகதாகாரயதையைக் காட்ட -விபூதி விச்தாரத்தை அருளிச் செய்த —

என்தனை நீ யிங்கு வைத்தது ஏதுக்கு என மாலும் என் தனக்கும் எந்தமர்க்கும் இன்பமதா -நன்று கவி
பாட வெனக் கைம்மாறிலாமை பகர்–69-
சம்சாரத்தில் பொருந்தாத என்னை -நீ – சம்சாரத்தில் பொருந்தாதாரை ஏற விடுகைக்கு சர்வ சக்தி உக்தனான நீ —
இருள் தரும் மா ஞாலமான-இவ் விபூதியிலே-பிரயோஜன நிரபேஷமாய் இருக்க-என்ன பிரயோஜனத்தைப் பற்ற வைத்தது -என்ன
ஸ்ரீ திருமாலான எனக்கு இனிதாகவும் ஸ்ரீ திருமால் அடியாரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இனிதாகவும்
விலஷணமாய்- கவி யமுதம் -என்னலாம் படியான இனிய கவிகளைப் பாட வைத்தோம் என்ன –
இந்த யுபகாரத்துக்கு பிரத்யுபகாரம் இல்லாமையை -அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்-

இன்பக் கவி பாடுவித்தோனை இந்திரையோடு அன்புற்று வாழ் திரு வாறன் விளையில் -துன்பமறக்
கண்டு அடிமை செய்யக் கருதிய–70-
நிரதிசய போக்யமான ஸ்ரீ திருவாய் மொழியை என்னைக் கொண்டு பாடுவித்த உபகாரகனை-
ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடு கூட ஸ்ரீ திருவாய் மொழி கேட்கைக்கு பங்கான இடம் -என்று
அத்ய ஆதாரத்தைப் பண்ணி வாழ்ந்து கொடு போருகிற ஸ்ரீ திரு வாறன் விளையில்
அன்றிக்கே-இந்திரையோடு அன்புற்று -என்று ஸ்ரீ பெரிய பிராட்டியார் இடத்தில் ஸ்நிக்தனாய் -என்றுமாம் –
இத்தால் -இன்பம் பயக்க -என்கிற முதல் பாட்டை கடாஷித்து அருளிச் செய்த படி –
ஏழையர் ஆவியில் துக்கம் எல்லாம் தீரக் கண்டு – தர்சன அனுபவ கைங்கர்ய அனுபவ மநோ ரதத்தை யுடைய ஸ்ரீ ஆழ்வார்-

தேவனுறை பதியில் சேரப் பெறாமையால் மேவும் அடியார் வசனாம் மெய்ந்நிலையும் -யாவையும் தானாம் நிலையும் சங்கித்தவை தெளிந்த–71-
கீழே-தன்மை தேவ பிரான் அறியும் -என்னும்படியான-தேவர்க்கும் தேவன் ஆனவன் ஸ்ரீ திவ்ய மஹிஷியோடு
நித்ய வாசம் பண்ணுகிற-ஸ்ரீ திரு வாறன் விளையிலே புக்குப் பாடி அடிமை செய்யப் பெறாமையாலே -என்னுதல் –
அன்றிக்கே-தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ -மற்று அமரர் ஆட்செய்வார் -அப்பனே காணுமாறு அருளாய் –
என்று என்றே கலங்கி-என்று அவசன்னராய் -என்னுதல்-
தன்னை ஆஸ்ரயித்து இருக்கிற ததீய பரதந்த்ரனாம் நிலையிலும்
சேத அசேதனங்கள் எல்லாம் தான் என்கிற சொல்லுக்கு உள்ளே அடங்கும்படியான நிலையிலும் அதி சங்கை பண்ண –
பூர்வ யுபகாரத்தை ஸ்மரிக்கும் படி -மலரடிப் போதுகள் எந்நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்க பல அடியார் முன்பு அருளிய -என்று
உபகரித்ததை ஸ்ம்ருதி விஷயமாம் படி பிரகாசிப்பிக்க
அத்தை-தாள்களை எனக்கே தலைச் தலைச் சிறப்பத் தந்த பேருதவி என்று அனுசந்தித்து ப்ரீதராய் தெளிந்து-

நம் கருத்தை நன்றாக நாடி நிற்கும் மால் அறிய இங்கு இவற்றில் ஆசை எமக்கு உளது என் -சங்கையினால்
தன்னுயிரில் மற்றில் நசை தான் ஒழிந்த–72-
நம்முடைய ஹ்ருதயத்தை நன்றாக ஆராய்ந்து விரும்பி வர்த்தித்துப் போரும் ஸ்ரீ சர்வேஸ்வரன் அறிய -என்னுதல்
இந்த விபூதியிலே-சிறிது அபேஷை யுண்டு என்று-நினைத்து இருக்கிறான் என்கிற சங்கையினால்
ஆத்மாவிலும்-அதுக்கு அசலான ஆத்மீயங்களிலும் நசை அற்ற ஸ்ரீ ஆழ்வார் அந்த ஸ்வபாவத்தை ஆராய்ந்து அருளிச் செய்தார் –

அங்கு அமரர் பேண அவர் நடுவே வாழ் திரு மாற்கு இங்கு ஓர் பரிவர் இலை என்று அஞ்ச -எங்கும்
பரிவர் உளர் என்னப் பயம் தீர்ந்த–73-
நித்ய விபூதியிலே பணியா அமரரான நித்ய சூரிகள் நித்ய மங்களா சாசனம் பண்ண
அவர்கள் நடுவே வாழ்கிற ஸ்ரீ யபதியான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு சூழ்ந்து இருந்து ஏத்துவார் பலர் இருக்க
இச் சேர்த்திக்கு மங்களா சாசனம் பண்ணாதே-ஐஸ்வர்ய காமரும்-ஆத்மானுபவ காமருமாய் போருகையாலே
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வர் மற்று ஒருவரும் இல்லை -மங்களா சாசன ரூப கைங்கர்யம் கொண்டருள-
இங்கு ஓர் பரிவர் இலை என்று அஞ்ச -இங்கும்-அங்கும்-எங்கும்-நமக்கு பரிவர் உளர் எனப் பயம் தீர்ந்த-

வாராமல் அச்சம் இனி மால் தன் வலியினையும் சீரார் பரிவருடன் சேர்த்தியையும் -பாரும் எனத் தானுகந்த–74-
வார்கடா வருவி -என்று தொடங்கி –கஞ்சனைத் தகர்த்த சீர் கொள் சிற்றாயன் –என்னும் அளவும் சொன்ன
சௌர்ய வீர்யாதிகள் முதலான தன் சக்தி யோகத்தையும் -அசுரர் வன்கையர் வெம் கூற்றத்தை -என்னும் தன் மிடுக்கையையும் –
இப்படி அரணை யுதைத்தான ஊரில் இருப்பையும் அனுசந்தித்து-நிர்ப்பயராய்-அழகை அனுபவித்து ஹ்ருஷ்டரான ஸ்ரீ ஆழ்வார் –

மாயன் வடிவு அழகைக் காணாத வல் விடாயாயது அற விஞ்சி அழுதலுற்றும் தூய புகழ் உற்ற–75-
சௌந்தர்ய-சீலாதிகளால்-ஆச்சர்யமான அவன்-விக்ரஹ சௌந்தர்யாதிகளை பிரத்யஷமாகக் காணப் பெறாமையாலே-
மிக்க விடாயை யுடையராய்-காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து பசை அற்று –
கீழில் விடாய் -எல்லாம் குளப்படி -என்னும்படி கடல் போலே அது அபி விருத்தமாய் –
பிறந்த விடாய் தீர வந்து கலவாமையாலே பாலரைப் போலே அழுது-அடைவு கெடக் கூப்பிடும் –

எல்லி பகல் நடந்த இந்த விடாய் தீருகைக்கு மெல்ல வந்து தான் கலக்க வேணும் என -நல்லவர்கள்
மன்னு கடித் தானத்தே மாலிருக்க–76-
ஆர்த்தி சமிக்கைக்கு மந்த கதியாய் வந்து அனுபவிக்க வேணும் என்று நினைத்து
அங்குற்றைக்கு அனுகூலர் ஆனவர்கள்-நித்ய வாசம் பண்ணும் ஸ்ரீ திருக் கடித் தானத்திலே
தம்மை விஷயீ கரிக்க ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து இருக்க- அவ்விருப்பைக் கண்ட ஸ்ரீ ஆழ்வார் –

இருந்தவன் தான் வந்து இங்கு இவர் எண்ணம் எல்லாம் திருந்த விவர் தம் திறத்தே செய்து -பொருந்தக்
கலந்து இனியனாய் இருக்கக் கண்ட–77-
ஸ்ரீ திருக் கடித் தானத்திலே இருந்த தான் இவர் இருந்த அளவும் மெல்ல வந்து -என் தன் கருத்தை யுற வீற்று இருந்தான் -என்று-
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -என்ற ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளக் கருத்தைத் தான் கைக் கொண்டான் –
தனக்கு ஆஸ்ரித பாரதந்த்ர்யம் ஸ்வரூபம் ஆகையாலே நன்றாக இவர் விஷயத்திலே செய்து தன்னை முற்றூட்டாக அனுபவிக்கும் படி செய்து
நாம் ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு அவ்வருகாய் இருப்புதோம் -இவர் நித்ய சம்சாரிகளுக்கு இவ்வருகாய் எண்ணி இருப்பார் என்ற
வாசி வையாமல்-ஒரு நீராகக் கலந்து -பெறாப் பேறு பெற்றானாய் இனியனாய் படியைக் கண்டு அனுபவித்த ஸ்ரீ ஆழ்வார் –

கண் நிறைய வந்து கலந்த மால் இக்கல்வி திண்ணிலையா வேணும் எனச் சிந்தித்து –தண்ணிது எனும்
ஆர் உயிரின் ஏற்றம் அது காட்ட ஆய்ந்து உரைத்தான்–78-
கண்ணும் வாயும் துவர்ந்த-இவருடைய கண் நிறையும் வந்து சம்ஸ்லேஷித்த ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் –
இருத்தும் வியந்தில் இருந்த சம்ஸ்லேஷம் -திருட ஸ்வபாவத்தை யுடைத்தாக வேணும் என்று எண்ணி
இவர் -சிறியேனுடைச் சிந்தையே -என்று அனுசந்தித்துப் போருகிற ஆத்மாவின் உடைய பெருமையானதைக் காட்டி அருள –
ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தை ஆராய்ந்து பகவத் பிரகார தயா போக்யம் என்று அருளிச் செய்தார் –

கருமால் திறத்தில் ஒரு கன்னிகையாம் மாறன் ஒரு மா கலவி யுரைப்பால் -திறமாக
அன்னியருக்காகா தவன் தனக்கே யாகும் உயிர்–79-
நீல நிறத்தை யுடையவனாய்-ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்தில் அந்ய சேஷத்வம் இல்லாத
கன்யா அவஸ்தையை பஜித்த ஆழ்வார் -கரு மாணிக்க மலை -என்றத்தை கடாஷித்து அருளிச் செய்த படி –
அத்விதீயமான விலஷணமான சம்ஸ்லேஷ லஷணங்களை தோழி பேச்சாலே கலவிக் குறிகளை அருளிச் செய்யப் புகுகையாலே –
நிச்சயமாக அந்யருக்கு சேஷம் ஆகல் ஆகாது – பிராப்த சேஷி யானவனுக்கே சேஷம் ஆகிற ஆத்ம ஸ்வரூபத்தின் நிஷ்டையை

நெடுமால் அழகு தனில் நீள் குணத்தில் ஈடுபடுமா நிலை யுடைய பத்தர் அடிமை தனில்
எல்லை நிலம் தானாக எண்ணினான்–80-
உத்துங்கத்வமான வடிவு அழகிலும்-தனி மா புகழே -என்கிற தீர்க்க சௌஹார்த்த குணத்திலும் ஈடுபட்டு இருக்கும் –
பக்தர்கள் திறத்தில் அடிமை யாம் அளவு அன்றிக்கே அவ்வடிமையில்-சீமா பூமிதாம்படி அனுசந்தித்தார் ஸ்ரீ ஆழ்வார் –
ஐஸ்வர்யம்-ஆத்ம பிராப்தி அளவாய் இருக்கும் –
ஆத்மா பிராப்தி-பகவத் பிராப்தி -அளவாய் இருக்கும் –
இந்த பகவத் பிராப்தி பாகவத பிராப்தி சாபேஷமாய் இருக்கும்-
இந்த புருஷார்த்ததுக்கு மேல் எல்லை இல்லை -ஆகை இறே முழுதும் உறுமோ -என்றது –

கொண்ட பெண்டிர் தாம் முதலாக் கூறும் உற்றார் கன்மத்தால் அண்டினவர் என்றே யவரை விட்டு –
தொண்டருடன் சேர்க்கும் திருமாலைச் சேரும்–81-
கையில் தனத்தை அழிய மாறிக் கொண்ட ஸ்திரீகள் கொண்ட -என்று அதில் ஔபாதிகதவம் தோற்றுகிறது-
தான் என்று கொண்ட பெண்டீரில் ப்ராதான்யம் தோற்றுகிறது –
கூடும் உற்றார் -என்ற பாடமான போது ஆகந்துகமாக வந்து கூடினவர்கள் -என்றாகிறது –
கர்ம ஔபாதிகமாக அடைந்தவர்கள் என்றே-ஔபாதிக பந்து வர்க்கங்களை விட்டு –
தன்னை ஆஸ்ரயித்தவர்களை தனக்கு சேஷ பூதர் ஆனவர்கள் உடன் சேர்க்கும் ஸ்ரீ யபதியை ஆஸ்ரயுங்கோள் -என்றார் –

பண்டை யுறவான பரனைப் புளிங்குடிக்கே கண்டு எனக்கு எல்லா வுறவின் காரியமும் -தண்டற நீ
செய்தருள் என்றே யிரந்த –82-
அநாதி சித்தமான சம்பந்தத்தை யுடைய-சர்வ ஸ்மாத் பரனை –
அன்றிக்கே -கண்கள் சிவந்து -தொடங்கி -நடந்து வருகிற- ஸ்ரீ திரு மந்திர பிரதிபாத்யமான நவவித சம்பந்த யுக்தனான-
சர்வ ஸ்மாத் பரனை -என்றாகவுமாம்-
ஸ்ரீ திருப் புளிங்குடியிலே கண்டு-குடி குடி வழி வந்து ஆட்செய்யும் தொண்டர் -என்றும்-வழி வருகின்ற அடியர் -என்றும்
தொல் அடிமை வழி வரும் தொண்டர் -என்றும்-சொல்லும்படியான எனக்கு-எல்லா உறவின் காரியமும் வேணும் -என்கிறார் ஸ்ரீ ஆழ்வார்

ஓரா நீர் வேண்டினவை உள்ளதெல்லாம் செய்கின்றேன் நாராயணன் அன்றோ நான் என்று –பேருரவைக்
காட்ட அவன் சீலத்தில் கால் தாழ்ந்த–83-
ஓரா -ஓர்ந்து-அது வேணும் இது வேணும் என்று ஆராய்ந்து – நீர் அர்த்தித அவை உள்ளதெல்லாம் என்னுதல்
அன்றிக்கே-நீர் அர்த்திதவற்றை எல்லாம்-இன்னது உபகரிக்க வேணும் என்று நாம் நிரூபித்து -என்னுதல்
இப்படி பந்து க்ருத்யமாய் உள்ளவற்றை எல்லாம்-நாமே அர்த்திகளாய் செய்கிறோம் -சர்வ வித பந்துத்வமும் நடத்தும் படி
நான் ஸ்ரீ நாராயண சப்த வாச்யன் அன்றோ -என்று-அத்தாலே பெரிதான தன் சர்வ வித பந்துத்வத்தைக் காட்ட
இப்படி குணவான் என்னும்படியான —சீல குணத்திலே ஆழம் கால் பட்டு அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்-

மையார் கண் மா மார்பில் மன்னும் திருமாலை கையாழி சங்கு டனே காண வெண்ணி -மெய்யான
காதலுடன் கூப்பிட்டுக் கண்டு உகந்த–84-
அஸி தேஷணையான லஷ்மி-வஷஸ் ஸ்தலத்திலே நித்ய வாசம் பண்ணும்படியாக அத்தாலே ஸ்ரீ யபதியான ஸ்ரீ சர்வேஸ்வரனை-
அச் சேர்த்தியை காத்தூட்ட வல்ல ஸ்ரீ ஆழ்வார்கள் உடன் அனுபவிக்க எண்ணி –
இத்தால் – மையார் கரும் கண்ணி -என்று தொடங்கி-உன்னைக் காணக் கருதும் என் கண்ணே -என்று
முதல் பாட்டை கடாஷித்து அருளிச் செய்தபடி -யகாவத்தான பிரேமத்தோடே கூப்பிட்டு அப்படியே கண்டு ஹ்ருஷ்டரான -வெளி இட்டார்

இன்னுயிர் மால் தோற்றினது இங்கு என் நெஞ்சில் என்று கண்ணால் அன்று அவனைக் காண வெண்ணி யாண் பெண்ணாய் –
பின்னையவன் தன்னை நினைவிப்ப வற்றால் தான் தளர்ந்த–85-
இத்தசையில் எனக்குத் தாரகனான ஸ்ரீ சர்வேஸ்வரன் சாஷாத் கரித்தது மானஸ ஞான விஷயம் என்று –
சஷூர் விஷயமாக அவனை தர்சிக்க எண்ணி அது லபியாமையாலே பும்ஸ்த்வம் குலைந்து ஸ்த்ரீத்வ பத்தியைப் பஜித்து-
இப்படி-ஸ்த்ரீத்வ பத்தியை பஜித்த-அநந்தரம்-அவனை பிரணய கதகத ஸ்வரத்தாலும் ரூபவத்தையாலும்-ஸ்மரிப்பிக்கும் அவற்றாலே-
விகூ ஜக்பிர்வி ஹங்க மை -என்னும்படியான பஷி சமூஹங்களாலும்-மேக சமூஹங்களாலும்-மிகவும் பாரவச்யத்தை அடைந்த

உருகுமால் என்நெஞ்சம் உன் செயல்கள் எண்ணி பெருகுமால் வேட்கை எனப்பேசி -மருவுகின்ற
இன்னாப்புடன் அவன் சீர் ஏய்ந்து உரைத்த–86-
உன்னுடைய தாழ்ந்த செயல்களை அனுசந்தித்து என்னுடைய மனசானது த்ரவ்ய த்ரவ்யம் போல் உருகா நின்றது –
அதுக்கு மேலே-அபி நிவேசமும் மிக்குவாரா நின்றது என்று அருளிச் செய்து –கீழே-ஸ்மாரக பதார்த்தங்களாலே நோவு பட்டு
அந்த அனுவ்ருதமான வெறுப்போடு-அவனுடைய-இருத்தும் வியந்திலே-அறியேன் மற்று அருள் -இத்யாதியாலே
அருளிச் செய்த பிரணயித்வ குணங்களை-திரு உள்ளத்திலே பொருந்த அருளிச் செய்த-

எம் காதலுக்கு அடி மால் ஏய்ந்த வடிவு அழகு என்று அங்காது பற்றாசா ஆங்கு அவன் பால் -எங்கும் உள்ள
புள்ளினத்தைத் தூதாகப் போக விடும்–87-
என்னுடைய பிரேமத்துக்கு ஹேது -ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய ஸ்வரூப அனுபந்தியாய் அனுரூபமான விக்ரஹ சௌந்தர்யம்-என்று –
அத்தசையில் அவன் சௌந்தர்யமே பற்றாசாக -ஆலம்பனமாக – அவ்விடத்தில் அவன் விஷயமாக
ஸ்ரீ திரு மூழிக் களத்து உறையும் அவன் விஷயமாக சர்வ திக்குகளிலும் உண்டான பஷி சமூஹத்தை
தம்முடைய பிராண ரஷக அர்த்தமாக தூத பரேஷணம் பண்ணும் ஸ்ரீ ஆழ்வார் -வடிவு அழகு பற்றாசாக பல பஷிகளைத் தூது விட்டார்
நம் பிழையும்-சிறந்த செல்வமும்-படைத்த பரப்பும்-தமரோட்டை வாசமும்
மறப்ப்பித்த
ஷமா-தீஷா-ஸாரஸ்ய சௌந்தர்யங்களை-யுணர்த்தும்
வ்யூஹ-விபவ-பரத்வத்வய-அர்ச்சைகள்
தூது நாலுக்கும் விஷயம் -என்று இறே-ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது –

அறுக்கும் இடர் என்று அவன் பால் அங்கு விட்ட தூதர் மறித்து வரப் பற்றா மனத்தால் -அறப் பதறிச்
செய்ய திரு நாவாயில் செல்ல நினைந்தான்–88-
நம்முடைய துக்கத்தை போக்கி அருளும் என்று -வினை காரணம் -இடர் கார்யம் -ஸ்ரீ திரு மூழிக் களத்து யுறைவார்
விஷயமாக அவ் விடத்திலே விட்ட தூதர் -திரும்பி மீண்டு வந்து மறுமாற்றம் சொல்ல பற்றாத திரு உள்ளத்தாலே –
மிகவும் த்வரித்து -அழகிய ஸ்ரீ திரு நாவாயிலே எழுந்து அருளும்படி-எண்ணிய ஸ்ரீ ஆழ்வார் –

மல்லடிமை செய்யும் நாள் மால் தன்னைக் கேட்க அவன் சொல்லும் அளவும் பற்றாத் தொன்னலத்தால் செல்கின்ற
ஆற்றாமை பேசி யலமந்த–89-
மல்லடிமை -சம்ருத்தமான அடிமை –பரிபூரணமான கைங்கர்யம் -அது செய்யும் காலம் எப்போதோ என்று ஸ்ரீ சர்வேஸ்வரனை
நாளேல் அறியேன் -எனக்கு உள்ளன -என்று கேட்க -அவன்-மாலை நண்ணியிலே-மரணமானால் -என்று
நாள் அறுதி இட்டு அருளிச் செய்யும் அத்தனையும் பற்றாத-ஸ்வா பாவிகமான பக்தியாலே —
தமக்கு நடந்து செல்லுகிற-தரியாமையை – அலமாப்பை -ஆற்றாமையை அருளிச் செய்து-முன்னாடி தோற்றாமல்
அலமந்து நிலம் துழாவின ஸ்ரீ ஆழ்வார்

மால் உமது வாஞ்சை முற்றும் மன்னு உடம்பின் முடிவில் சால நண்ணிச் செய்வன் எனத் தான் உகந்து –
மேல் அவனைச் சீரார் கணபுரத்தே சேரும் எனும்-90-
ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் உம்முடைய அபேஷிதங்கள் எல்லாம் ஆத்மாவுடன் பொருந்தி இருக்கிற
சரீரத்தின் உடைய வியோக அனந்தரத்திலே ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே மிகவும் கிட்டிச் செய்வன் -என்னுதல்
அன்றிக்கே-உம்மைக் கிட்டி-மிகவும் செய்வன்-என்னுதல் – அங்கனும் அன்றிக்கே-அந்தக் கார்யத்திலே-மிகவும் உற்று -என்னுதல் —
ஸ்ரீ கண்ணபுரம் ஓன்று உடையான் -என்று அருளிச் செய்ய – தான் உகந்து –அவனைக் கொண்டு நாள் அவதி இட்டுக் கொண்ட
தாம்-ஹ்ருஷ்டராய் -நாள் அவதி இட்டுக் கொடுத்ததுக்கு மேலாக ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே வந்து அத்யா சன்னனாய் இருக்கிறவனை –
மேலான அவனை-ஐஸ்வர் யாதிகளும் – சீலாதி குணங்களும்-புற வெள்ளம் இடும்படியான ஸ்ரீ திருக் கண்ணபுரத்தில் நிலையில் –
ஆஸ்ரயிங்கோள் என்று-அனைவரையும் குறித்து அருளிச் செய்யும் ஜ்ஞானப் ப்ரேமாதி குணங்களை யுடைய–ஸ்ரீ ஆழ்வார்-

தாள் அடைந்தோர் தங்கட்குத் தானே வழித் துணையாம் காள மேகத்தைக் கதியாக்கி -மீளுதலாம்
ஏதமிலா விண்ணுலகில் ஏக வெண்ணும்–91-
சரணமாகும் தனதாள் அடைந்தார்கட்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -என்று
தன் திருவடிகளை உபாயமாக அடைந்தவர்களுக்கு தானே மார்க்க பந்துவாம் -சாம்சாரிக தாபம் எல்லாம் ஆறும்படி-
சௌந்த்ர்ய அம்ருத வர்ஷியான ஸ்ரீ காளமேகத்தை வழிக்கு ரஷகமான கதி ஆக்கி -பரம வ்யோம சப்த வாச்யமான -பரமபதத்திலே
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணுமே -என்று எழுந்து அருள மனனம் பண்ணுகிற மோஷ லஷ்மியை உடைய ஸ்ரீ ஆழ்வார்

கெடுமிடர் வைகுந்தத்தைக் கிட்டினால் போல் தடமுடை அனந்தபுரம் தன்னில் -படவரவில்
கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான்–92-
கைங்கர்ய சித்தியாலே நிவ்ருத்த துக்கராம்படி பண்ண வற்றான ஸ்ரீ வைகுண்டத்தை –
அன்றிக்கே – துக்க ரஹிதமான ஸ்ரீ வைகுண்டத்தை என்னுதல்-
கிட்டினால் போல் – அத்தை பிராபித்து அடிமை செய்யப் பெற்றால் போலே படமுடை அரவில் பள்ளி பயின்ற
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அடிமை செய்ய அபேஷித்தார்-

வேய் மரு தோள் இந்திரை கோன் மேவுகின்ற தேசத்தைதான் மருவாத் தன்மையினால் தன்னை யின்னம் பூமியிலே
வைக்கும் எனச் சங்கித்து மால் தெளிவிக்கத் தெளிந்த–93-
அணைக்கைக்கு பணை போல் இருக்கிற தோளை யுடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் ஆனவன் –
படமுடை அரவில் பள்ளி பயின்றவன் -என்று ஸ்ரீ அனந்த சாயியாய்- திரு மாற்கு அரவு -என்கிறபடி இருவருமாய்ச் சேர்த்தியாய்
இருக்கிற தேசத்தை -நாமும் போய் நணுக வேணும் -என்னும் அபி நிவேசத்தை யுடைய தாம்
போய் புகப் பெறாத படியாலே -தம்மை ஸ்வா தந்த்ர்யாதிகளாலே சம்சாரத்திலே இட்டு வைக்குமோ என்று பஹூ முகமாக சங்கிக்க-
அணி மிகு தாமரைக் கையாலே அஞ்சேல் என்று ஆச்வசிபபித்து
உம்முடைய அபேஷித்ததின் படியே செய்கிறோம் என்று அதி சங்கையைத் தீர்த்தான் ஆயிற்று
அதாவது பசு நிரை மேய்ப்பு ஒழிகை -அத்தைப் பற்ற -தாமோதரன் -என்றார்—

சார்வாகவே யடியில் தானுரைத்த பத்தி தான் சீரார் பலத்துடனே சேர்ந்ததனை -சோராமல் கண்டுரைத்த–94–
ஸ்ரீ வீடுமின் முற்றத்திலும் ஸ்ரீ பத்துடை அடியவரிலும் பரோபதேச ரூபேண எல்லாருக்கும் அபாஸ்ரயமாக அருளிச் செய்த
பிரபத்தி யோடு விகல்பிக்கலாம் படியான பக்தி யானது தான் சாஷாத் பலத்தோடே தலைக் கட்டினால் போலே –
இப்படி அருளிச் செய்த பக்தி மார்க்கம் ஆனது-சாத்தியமான பலத்தோடே பொருந்தின படியையும்
அடியே தொடங்கி அருளிச் செய்து போருகிற-பிரபத்தி-ஸ்வ சாத்தியத்தோடு-பொருந்தினப டியையும் –
இவ் வர்த்தமானது வ்யர்த்தமே-நழுவிப் போகாமே-இஸ் ஸூஷ்ம அர்த்தத்தை தர்சிப்பித்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்-

கண்ணன் அடி இணையில் காதல் உறுவார் செயலை திண்ணமுறவே சுருங்கச் செப்பியே -மண்ணவர்க்குத்
தான் உபதேசிக்கை தலைக் கட்டினான்–95-
ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளிலே-பக்தி உக்தராய் இருப்பார்-க்ருத்யத்தை -த்ருடமாகவே-அதிலே-ஊன்றும்படி-
சங்க்ரஹமாக அருளிச் செய்து -பிருத்வியில் யுண்டான-சர்வாத்மாக்களுக்கும் –
ஸ்ரீ பிராட்டி-விதித-சுந்தர 21-25- -இத்யாதி யாலே பரோபதேசத்தை முடித்தால் போலே
கீழே உபதேசித்துக் கொடு போந்த-பரோபதேசத்தை பரி சமாப்தி பண்ணி அருளினார்-பெரு மதிப்பரான ஸ்ரீ ஆழ்வார் –
ஸ்ரீ பகவத் பிரபாவம் ஸ்ரீ சீதை பிராட்டி சொல்லி நிகமிக்க பிராட்டி பாகவத பிரபாவம் சொல்லி இவர் நிகமிக்கிறார் –

அருளால் அடியில் எடுத்த மால் அன்பால் இருளார்ந்த தம்முடம்பை இச்சித்து -இரு விசும்பில்
இத்துடன் கொண்டேக இசைவு பார்த்தே யிருந்த–96-
கரண களேபரைர்க் கடயிதும் தயமா நாம நா -என்றும்-அந்நாள் நீ தந்த ஆக்கை -என்றும்-அடியிலே எடுத்த படியால் –
அன்றிக்கே மயர்வற மதிநலம் அருளினான் -என்று-கேவல நிர்ஹேதுக கிருபையாலே
அஜஞாநாவஹமான சம்சாரத்தில் நின்றும் அடியிலே எடுத்த சர்வேஸ்வரன்-என்றாதல்
அதுவும் அன்றிக்கே-மால் அருளால் மன்னு குருகூர் சடகோபன் -என்னும்படி
அயோக்யா அனுசந்தானத்தாலே-அகன்று-முடியாத படி எடுத்த-என்றாகவுமாம் —
அந்தாமத்து அன்பு செய்யும் அன்பாலே-இருள் தரும் மா ஞாலத்தில் ‘ஜன்மம் ஆகையாலே-இருளார்ந்த தம் உடம்பை இச்சித்து
ஜ்ஞானப் பிரசுரமான-தம் தேஹத்தை-வாஞ்சித்து-ஸ்ரீ திருவாய்ப் பாடியிலே வெண்ணெயை-ஆதரித்தால் போலே
ஜ்ஞான பரிமளம் விஞ்சின-சரம சரீரம் ஆகையாலே இவர் திரு மேனியை அவன் ஆதரிக்கப் புக்கான்-
பெரிய வானிலே இவர் அஜஞாநாவஹம்-என்று அநாதரிக்கிற-இச் சரீரத்துடனே கொண்டு போக
இவர் அனுமதி பார்த்து இருந்தவனுடைய-சுத்தியை சொல்லும் ஸ்ரீ ஆழ்வார்

செஞ்சொல் பரன் தனது சீராரும் மேனி தனில் வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சை தனின் -விஞ்சுதலைக்
கண்டவனைக் காற்கட்டிக் கை விடுவித்துக் கொண்ட–97-
செவ்விய சொல்லால் ஆன இத் திருவாய் மொழியால்-பிரதிபாதிக்கப் படுகிற சர்வ ஸ்மாத் பரனான ஸ்ரீ சர்வேஸ்வரன் –
பிறவி அஞ்சிறையிலே-ஜ்ஞான பக்த்யாதிகள் விஞ்சி இருக்கிற-விக்ரஹத்திலே –
இதன் தோஷ தர்சன பூர்வகமாக-அவனைக் கால் கட்டி-தம் கால் கட்டை விடுவித்துக் கொண்டபடி –

திருமால் தன்பால் விருப்பம் செய்கின்ற நேர் கண்டுஅரு மாயத்து அன்று அகல்விப்பான் என் -பெருமால் நீ
இன்று என்பால் செய்வான் என் என்ன இடருற்று நின்றான்–98-
ஸ்ரீ யபதியானவன் தம் விஷயத்தில்-அத்யாதாரம் பண்ணுகிற படியைக் கண்டு -அன்று-அநாதி காலம்-துரத்யயமான பிரக்ருதியிலே
இட்டு வைத்து அகற்றி விடுவான் என் -இன்று நிர்ஹேதுகமாக-நிரவதிக வ்யாமோஹத்தை
சர்வஞ்ஞனாய் சர்வசக்தனாய் நிரஸ்த சமஸ்த ஹேயனான நீஅஞ்ஞனாய் அசக்தனாய் ஹேய சம்சர்க்க அர்ஹனாய் இருக்கிற
என் விஷயத்தில் இப்படிச் செய்வான் என் – இப்படி அநாதி அநாதர ஹேது சொல் என்று மடியைப் பிடித்து கேட்க
அவனும் சில ஹேது பரம்பரைகளை இவர் உத்தரத்துக்கு பிரத்யுத்தரமாக சொல்லிக் கொடு போர
இவர் தம் நா வீருடைமையாலே அவனை நிருத்தனாம்படி பண்ண -இப்படி இவர் அருளிச் செய்ய மேல் போக்கடி காணாமல்
தரைக் கீறி கவிழ தலை இட்டு ஸ்தப்தனாய் நின்றான்-இடராவது-அதிகோக்தி சொல்ல முடியாத ஆகுலம் –

சூழ்ந்து நின்ற மால் விசும்பில் தொல்லை வழி காட்ட ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து -வாழ்ந்து அங்கு
அடியருடனே இருந்தவாற்றை யுரை செய்தான்–99-
கீழ் இவரைச் சூழ்ந்து கொண்டு நிவ்ருத்தனாய் நின்ற ஸ்ரீ சர்வேஸ்வரன் ஸ்ரீ பரம ஆகாசத்திலே தேஜக்ரச்சாச்வதே மதே -என்று
பூர்வ மார்க்கமான ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கத்தையும் ஆதிவாஹிக சத்கார க்ரமத்தையும்மேல் ஸ்ரீ நித்ய சூரிகள் பிரத்யுக்தராய் சத்கரிக்கும் க்ரமத்தையும்
த்வாராத்ய ஷரர்சத்கரிக்கும் க்ரமத்தையும் திவ்ய அப்சரஸ் சத்கார க்ரமத்தையும் ஸ்ரீ சர்வேஸ்வரனும் ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் ஆதரிக்கும் படியையும்
திவ்ய சூரி பரிஷத்தில் இருந்து ஆனந்த நிர்பரராய் அனுபவிக்கும் படியையும் காட்ட அதிலே ஆழம் கால் பட்டு-
அவன் காட்டின எல்லாவற்றையும் கட்டடங்க அடைவே அனுபவித்து-க்ருதார்த்தராய் -ஸ்ரீ பரம பதத்திலே ஆனந்த மயமான ஸ்ரீ திரு மா மணி மண்டபத்திலே
ஸ்ரீ அனந்த ஸ்ரீ கருட ஸ்ரீ விஷ்வக் சேனர் பிரமுகராய் உள்ள-அடியரோடு ஆனந்த நிர்பரராய் இருந்த பிரகாரத்தை அருளிச் செய்தார்-
சூழ் விசும்பு அணி முகில் தொடங்கி-அடியரோடு இருந்தமை என்னும் அளவும் அருளிச் செய்தார் – எல்லாரும் விஸ்வசித்து உஜ்ஜீவிக்கைக்காக –

முனி மாறன் முன்புரை செய் முற்றின்பம் நீங்கி தனியாகி நின்று தளர்ந்து -நனியாம் பரம பத்தியால் நைந்து பங்கயத்தாள் கோனை
ஒருமை யுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து –100-
ஸ்ரீ சர்வேஸ்வரன் -முனியே -என்னும்படி சதவஸ்தமான சம்ஹ்ருதி சமயத்தில் சர்வ சேதன ரஷணத்திலே
த்யாநாந்தஸ்தனாய் இருக்குமா போலே-இவரும் நித்ய சம்சாரிகளாய் சம்சாரித்து
அசித் ப்ராயரான ஆத்மாக்கள் விஷயத்திலும் ரஷண சிந்தை பண்ணிப் போருகையாலே முனி -என்கிறது –
பகவத் விஷயத்தில்-எண்ணா தனகள் எண்ணும் நல் முனிவர்-என்னுதல் –
பிரக்ருததுக்குச் சேர-ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்தில்-பரம பக்தி பர்யந்தமாக நிரந்த சிந்தா உக்தராய் இருக்குமவர் -என்னுதல் –
இப்படி மனன சீலராய் இருக்கிற ஸ்ரீ ஆழ்வார் —
முன்பு பேற்றை பெற்றதாக அருளிச் செய்த சமஸ்த ஆனந்தமும் நிரஸ்தமாய்ப் போய் அது எல்லாம் மானச அனுபவ மாத்ரமாய்-
பிரத்யஷ சாஷாத் காரத்திலே அபேஷை யுடையவராய் அத்தை அப்போதே பெறாமல் மீளவும் அஜஞாநாவஹமான சம்சாரத்த்லே இருக்கக் கண்டு
பூர்வத்தில் ஆனந்தமும் அபூர்வமாம்படி கழிந்து-தனியாகா நின்று தளர்ந்து மிகவும் அவசாதத்தை உடையவராய் தரைப்பட்டு-
ஆற்றாமையாலே-அவசன்னராய்க் கூப்பிட்டு வீடு திருத்தி -என்றும்-விண்ணுலகம் தருவானே விரைகின்றான் -என்றும்
வானே தருவான் எனக்காய் என்னுள்ளே ஒட்டி -என்றும்-த்வரிக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் திரு உள்ளத்தோடு சேரும்படி
இவர் திரு உள்ளமும் த்வரித்து -ஒரு தளைத்து -என்னுதல்-
அன்றிக்கே பர பக்தி பர ஞான பரம பக்தி உக்தராய்-பேற்றுக்குத் த்வரித்து அவாவாலே கூப்பிட்டுப் போந்த இவர் திரு உள்ளமும் –
முதித பரிஷச்வஜே -என்னும்படி-என் அவா அறச் சூழ்ந்தாயே -என்று இவர் அபி நிவேசம் தீரும்படி சம்ஸ்லேஷிக்கையாலே
அவா அற்று வீடு பெற்ற பிரகாரத்தை-ஆகவுமாம்-

—————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி நூற்றந்தாதி -ஸ்ரீ பிரதிவாதி பயங்கர சம்பத் ஸ்வாமிகள் –

August 20, 2018

திருமங்கை ஆழ்வார் மங்கள ஸ்லோகங்கள்

ஸ்ரீ மதாலி ஸ்ரீ நகரீ நாதாய கலிவைரிணே
சதுஷ்கவி ப்ரதானாய பரகாலாய மங்களம்
பத்மா நியுக்த குமதவல்யா ப்ரிய சிகர்ஷயா
ஆராதித விஷ்ணு பக்தாய பரகாலாய மங்களம்
கருணாகர காஞ்சீச ஸூ கந்த புரா நாதத
நிவ்ருத்த ராஜபாதாய பரகாலாய மங்களம்
சர்வஸ்வே விநியுக்தே அபி ராஜோஸ்ர்த் தைஸ் சோரிதைரபி
பூஜி தாஸ்யுத பக்தாய பரகாலாய மங்களம்
ரங்கேச ஸும்ய ஜாமாத்ரு சகலார்த்தாப ஹாரிணே
தத் பக்த பூஜ நார்த்தம் து பரகாலாய மங்களம்
பக்தாராதன ஸூ ப்ரீதாத் ரங்க தாம்ந க்ருபாகராத்
ப்ராப்த அஷ்டாக்ஷர மந்த்ராய பரகாலாய மங்களம்
ஸுவர்ண பாஹ்ய பிம்பேண ரங்கினோ கோபுராதிகம்
ஷட் கைங்கர்யம் க்ருதவதே பரகாலாய மங்களம்
ரங்காதி திவ்ய தேசான் ஷாட் ப்ரபந்தைர் மநோரமை
பக்த்யா ஸ்து தவதே பூயாத் பரகாலாய மங்களம் –

————————–

வாடி முன் வீழ் பொருட்க்கு மால் அருளால் மந்திரத்தின்
பீடு பொருள் கண்டு கலியன் தொண்டீர் நாடும் எந்தை
சீர் குடந்தை என் அமுதம் தாயில் ஏற்றம் செய் சொல்லைச்
சேர உயிர் வாலிய தாம் -1-

வாலிமை -வெளுப்பு-சத்வ குணத்தால் – பெருமை
தாயில் ஏற்றம் -குலம் தரும் இத்யாதிக்கு உப லக்ஷணம்
அமுதம் தாயில் ஏற்றம் செய் சொல் என்பது திரு மந்த்ரத்துக்கும் மங்கையர் கோன் சொல்லுக்குமாகவுமாம் –

———————————-

வால் இமயம் வானோர் வணங்கவும் பத்தர் தம்
பால் அகலத் துன்பம் இன்பம் மிகவும் மால் சேர்
பிரீத்தி எடை நெஞ்சே என்னும் கலியன் நம் பால்
அருவினை அகற்றும் முற்றும் —

வால் -வெண்மை –

——————————————

முற்ற மெய்யின் பொய் நாசமான பாசத்தின் புன்மை
உற்ற மால் ஏற்றத்தோடு உரைத்து மூப்பு -முற்று முன்
மந்த்ரம் ஈந்தோன் சேர் வதரி வணங்கு என்னு நீலன்
சிந்தையான் ஆனான் என்னும் -3-

மந்த்ரம் ஈந்தோன் -நர நாராயணனாய் சிங்காமை விரித்தவன் –
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே -4-9-2-நீலன் சிந்தையுள் எப்பொழுதும் உள்ள ஸ்ரீ வராஹாவதாரம் -ஏனம் என்றவாறு –

———————————

ஏனமானான் உய்ய நர நாராயணனாய் எட்டு எழுத்தின்
ஞானம் ஈந்து கங்கை வதரி யுள்ளானவனை
நெஞ்சை வணங்க பரகாலன் தான் பணிக்கும்
செஞ்சொல் நாம் உய்யும் கலை–4-

ஞானப் பிரான் உலகை இடந்து -/ நர நாராயணனாய் சிங்காமை விரித்தவனும் ஞானம் அளித்து -தர்மி ஐக்கியம்
விரோதி நிரசனத்வம் -ஆஸ்ரித ரக்ஷணத்வம் -கங்கை கங்கை வாசகம் என்று கங்கையின் பெருமை பாட்டுக்கள் தோறும் உள்ள பதிகம்

————————————————-

கலைப்பெருமான் அன்பர் பண்டம் கொண்டு உகப்பான்
அலைப்பான் நண்ணாரை அரன் தன் -தலை இடர்
நீக்குவான் சேர் சாளக்கிராமம் அடை என்று உரை செய்
வாக்கு இரு வினைக்கு வாள்–5-

கலைப்பெருமான் ஒலி மிக்க பாடலை யுண்டு /
இருவினை -மாளாத பெரிய -புண்ய பாபங்கள் என்றுமாம் –

———————————————

வாணுதலார் பேணி இரந்தார்க்கு ஈயாமல் பிறர்க்குக்
கோணை செய் தீ நெறியால் சேர் பயனை –
நாணி நடுங்கி நைமிசாரண்யத்து எந்தையை மா முன்
அடைந்தான் சரண் நீலன் அங்கு –6-

மா முன் -பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகக் கொண்டு
கோணை –தீங்கு–

—————————————————

அங்கம் இரணியனை ஆளரியாக் கீண்டான் சேர்
சிங்க வேள் குன்றம் செலவரிதென் -பொங்கும்
பிரிவால் பரகாலன் பா பயிலும் பத்தர்க்கு
உரிய நறவுடைக் கொங்கு -7-

வேள் –ஆசை -அபிநிவேசத்துடன் பொருந்தி உள்ள குன்றம்
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா-எளிதில் யாரும் அங்கு சென்று எம்பெருமானுக்கு
தீங்கு இளைக்க முடியாது என்று பொங்கும் பிரிவால் அருளிச் செய்த பதிகம்
கொங்குடை நறவு -வாசனையுடைய தேன்–

——————————————————

கொங்கை பூ மகள் வேங்கடத்து எட்டு எழுத்து உரைப்பார்
பொங்க மாற்றார் மங்க கரந்து எங்கும் உளன் -தங்கியுளன்
தன்நெஞ்சை அ ங்கடைய சொல்லும் கலியன் நம்
தஞ்சமாம் நல் தந்தை தாய் -8-

காரார் வரைக் கொங்கை –தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும் என்னும் இவையே முலையா -என்பதற்கு ஏற்ப
திரு வேங்கடம் பூ -நில மகள் கொங்கையாகக் கொள்ளப்பட்டது –
மலராள் தனத்துள்ளான் போலே வேங்கடத்து தங்கி உளன் –

——————————————————–

தாய் தந்தை வேறுளர் என்றும் இன்பம் துன்பம் என்றும்
ஈயாது இரங்கா முன் தண்மை கூறி-ஆய நிலை
தேர்ந்து ஆட்செய மா முன் வேங்கடவன் தாளடையும்
சீர்க் கலியன் நந்தமக்குக் கண் -9-

முன் தண்மை –முன்னிருந்த புல்லிய தண்மை
முன் தன்மை-என்றாலும் ஒக்கும் -முன்னிருந்த ஸ்வ பாவம் என்றவாறு
ஆய நிலை தேர்ந்து –தனக்குற்ற நிலையை ஆராய்ந்து -ஆய பதார்த்த கைங்கர்ய பிரார்த்தனை –
அப்பதத்தை ஆராய்ந்து நேர்ந்து என்றவாறு
கைங்கர்ய ஸ்ரீ யுடைய கலியன்

————————————————-

கண்ணுலகுக்குக் கண்ணனாய் அடியார் கைப்பொருள்
நண்ணி நண்ணார் நலியும் வேங்கடத்து -அண்ணல் -அன்பு
தான் மிகத் தான் தனது நீங்க வேண்டும் நீலன் உள்ளம்
தான் புகுந்தான் அருள் செய்வான் -10-

தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பன் மண்ணோர் விண்ணோர்க்கு என்றும் கண்ணாவான் –
கண் உலகுக்கு -சஷூர் தேவானாம் உதமர்த்யாநாம் -சுருதி
அன்னவனே கண்ணனாய் -ஆஸ்ரிதர் ஸ்பர்ச வெண்ணெய் உகந்து அடைந்தான் -கைப்பொருள் நண்ணி
வேங்கடத்து அண்ணல் –திருவேங்கட மா மலை மேய பெருமான் –
தான் தனது நீங்க வேண்டும் நீலன் -யானே என் தனதே என்ற நிலை மாறி யானே நீ என்னுடைமையும் நீயே -என்ற நிலை எய்த
அருள் செய்வான் -வான் விகுதி பெற்ற வினை எச்சம் -செய்வதற்காக
எந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் -என் நெஞ்சினுள்ளானே –என் மனம் குடி கொண்டு இருந்தாய் –

———————————————–

வானவர் தம் சிந்தை போல் வேங்கடவன் தனக்கு
ஆன தொண்டு செய்ய சாராமல் மற்ற -ஈன மதம்
தான் இசைந்த நெஞ்சமதைக் கொண்டாடும் ஆலி நாடன்
தான் இசைந்த பா நந்தம் காசு -11-

பாஹ்ய மதங்கள் -ஈன மதம் -இவற்றைச் சாராமல் நித்ய ஸூரிகள் போலே
கைங்கர்யம் செய்பவர் விண்ணுளாரிலும் சீரியர்களே

———————————————

காசினியின் நன்மை உன்னும் மா போல் தொண்டரை
நேசிக்கும் வானோர் வாக்குக்கு எட்டான்–ஈசன்
இனியன் இன்னார் தூதன் என எவ்வுளூரில் நின்றான்
எனும் நீலன் நாமம் நவில் -12-

பாண்டவர் தூதன் -ஆஸ்ரித பக்ஷபாதி – பரதந்த்ரன் –குணத்தைப் பிரகாசிப்பிக்கும் நாமம் பெற்ற பின்பே
திரு எவ்வுளூரிலே தான் தரித்து நின்றான் –
அவன் திருநாமம் பேசும் நீலன் நாமங்களை நாம் நவில்வோம்
நீலன் நாமம் –குறையால் பிரான் -ஆலி நாடன் -மங்கை வேந்தன் -மங்கையர் கோன்-
கலியன் -பரகாலன் -கலைப்பெருமாள் -வாட் கலியன் -வேல் கலியன் -கலி கன்றி-நாலு கவிப் பெருமாள் –
அருள் மாரி-திரு மங்கை மன்னன் -இரும் தமிழ் நூல் புலவன் -முதலிய திரு நாமங்களுக்கும் உப லக்ஷணம் –

—————————————————————————

வில் நுதல் அண்டர் கரிக்கு சார்வு பற்றாய் நீக்கியவர்
அல்லல் கிடந்தது இருந்து நின்று புள்ளூர் -செல்வனாம்
ஓர் அஞ்சுவை அமுதைக் கண்டான் கலிகன்றி
சீர் அல்லிக் கேணியுள் அன்று–13-

சார்வு -ரக்ஷகத்வம் /பற்று -சரண்யத்வம்/ஓர் -அத்விதீயம் -ஓர்தல் -என்றுமாம் -/
புள்ளூர் செல்வன் -கஜேந்திர வரத்தான் நித்ய சேவை /
கோயில் திருமலை பெருமாள் கோயில் -ஒரே திவ்யதேச சேவையால் வந்த சீர்மை –
எம்பெருமானாராக அவதரித்த சீர்மையும் உண்டே –
கண்ணனும் ராமனும் குடும்ப ஸஹித சேவையால் வந்த சீர்மையும் உண்டே
அஞ்சுவை அமுதம் -மன்னாதன் கிடந்து-தெள்ளிய சிங்கர் இருந்தும் -பார்த்த சாரதி நின்றும் –
புள்ளூர் செல்வன் வரதன் -மனத்துக்கு இணையான நின்றும் –
கலிகன்றி கண்ட அஞ்சுவை அமுதம் அன்றோ இவர்கள் –
வில் நுதல் -திரௌபதி /அண்டர் தேவர் இடையர் -இருவர் இடர் தீர்த்தமை பாசுரங்களில் உண்டே –

——————————————————

அன்றி தொண்டர் துன்பம் தவிர்த்து ஆய் பூ மங்கையொடு
நின்ற நீர் வண்ணன் மலை நீர் அடைமின் -வன் சேறாம்
வேறு மதத்துள் வீழாது என்னும் நீலன் வினையைப்
பாறு பாறாக்கும் பான்மை பார் -14-

அன்றி -சீறி
பாஹ்ய குத்ருஷ்டிகள் -சேறு
பாறு பாராக்குதல் -பொடியாக்கி –பண்டை வல்வினை பற்றி அருளினான் போலே –

——————————————

பாரமாய தூறு பாற்றிப் பத்தர்க்கு எளியனாம்
பார மல்லை ஞானத்து ஒளி யுருவை ஆறு பேறாக்
கொள்ள கள்ள நூல் தள்ளச் சொல் நீலன் சொல் வல்லார்
அள்ளல் அருவினை நண்ணார் -15-

ஞானத்து ஒளி யுருவன் -ஏனத்துருவாய் நிலமங்கை எழில் கொண்டவன் அன்றோ
அள்ளல் -கள்ள நூலே அள்ளல் -/ அள்ளல் நரகம் என்றுமாம் -விடியா வெந்நரகம் சம்சாரம்
ஆறு பேறு-உபாய உபேயம் தவ தத்வம் நது குணவ்-ஸ்ரீ ரெங்கராஜா ஸ்தவம்
பார மல்லை -புகழையுடைய மல்லை -தேசாந்திர தேகாந்தர காலாந்தரம் இல்லாமல்
இங்கேயே இப்பொழுதே இத்தேகத்துடனே -சேவை அன்றோ
தூறு பற்றி -குதிரையோட்டி-போலே பெயர்ச் சொல்லாகவுமாம் –
பக்தர் வினைகளை போக்குவதே ஸ்வ பாவமாகக் கொண்டவன் அன்றோ-

—————————————————————-

நண்ணாமல் மால் அடியார் அல்லாரை சீர் மல்லையான்
தொண்டர் தம் தொண்டரையே ஆறு பேறாய் -திண்ணிதா
எண்ணு நீலன் தொண்டர் எல்லைத் தானாய்ச் சொல் இன் தமிழை
எண்ண மதி திவளும் -16-

தொண்டரை அடையாவிடிலும் தொண்டர் அல்லாரோடு கூடாமையே முக்கியம்
அடியாரையே ஆறு பேறாகக் கொள்வதே நம பத தாத்பர்ய அர்த்தம்
வாய்த்த திரு மந்திரத்தின் மத்திமம் பாதத்தின் எல்லையான பொருளை நாம் எண்ண
நம்முடைய சேஷத்வ பாரதந்தர்யங்களாம் ஸ்வரூபம் -நன்கு பிரகாசிக்கும் –
மதி திவளும் -புத்தி சுடர் விட்டுப் பிரகாசிக்கும்
சீர் -திரு மல்லைக்கும் -மல்லையானிலும் மல்லை தொண்டரிலும் -மல்லையான் தொண்டர் தம் தொண்டரிலும் அந்வயிக்கும் –

———————————————————————

திவளும் இடவெந்தையின் சீலத்தால் எழிலால்
துவள அவன் தன் நினைவே -நவை நீங்க
பாங்கு எனத் தாய்ச் சொல்லாய்ப் பரகாலன் பேசுகின்ற
தீம் தமிழில் நெஞ்சே திரி -17-

அவன் தன் நினைவே -உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்று ஒரு கால் சொன்னால் போல்
ஒன்பதில் கால் சொல்லியமைக்குச் சேரும்
நாவை -துன்பம் / தீம் -இனிய /
தாய் சொல்லாய் துணிவையும் மகள் சொல்லாய் பதற்றமும் பதிகத்தில் உண்டே –
திரி -ஆழ்வாருடைய ஈரச் சொற்களில் அவகாஹித்து -சுழன்று சுழன்று கால ஷேபம்-

———————————————————————–

திரித்து எழில் பூண் மேன்மை படை அட்டபுயன்
எரித்த சுடர் உட்கண்ணால் கண்டு -பரிவால்
உரு வெளிப்பாடா உரையாடல் நிகழ்ந்தது என்று
உரை செய் நீலன் சொல்லே சொல் -18-

அட்டபுயன் -அட்டபுய அகரத்தில் உள்ளான் ஒருவன் -அட்ட புயகரத்தான்
அவனது அழகு ஆபரணம் பரத்வம் ஆயுதங்கள் -திரிகள் -எரித்த சுடர்
இந்த அருளிச் செயலே சொல் மற்றவை சொல் அல்ல – இவற்றையே சொல் என்றுமாம்
பரிவால் எரித்த சுடர்
பரிவால் வெளிப்பாடா உரையாடல் நிகழ்ந்தது என்றுமாம் –
பரிவு -ஆர்வம் -அன்பு -ஆர்வமே நெய்யாக போலே –

——————————————–

சொல் சொல்லும் காரணன் முத்தர் பத்தர்க்கு ஈடாக
நல்ல கொடுத்து அல்ல கெடுப்பான் உறையும் பல்லவர் கோன்
வந்திக்கும் கச்சி விண்ணகர் சொல் அருள் மாரி
இந்த பாருய் வான் பொழி மஞ்சாம் -19-

கச்சி விண்ணகர் -பரமேஸ்வர விண்ணகரம்
பாருய் வான் -வான் விகுதி பெற்ற வினை எச்சம் -உய்வதற்காக என்றவாறு
அருள் மாரி என்பதால் பொழி மஞ்சாம்-ஆன்மா உயர்கதி பெற்று விளங்க அன்றோ இவருடைய அருளிச் செயல்கள்-

————————————–

மஞ்சு சேர் தீயோம்பி பலன் வேளாது நற்குணமே
விஞ்சு செஞ்சொல் வேதியர் வாழ் கோவலூருள்-விஞ்சு வலி
நீர்மை வினை நீக்கு மாலிக் கண்டு கொண்டேன் என்று நீலன்
நேர்ந்த சொல் நீக்கும் நெஞ்சு இருள் -20-

நெஞ்சு இருள் -அஞ்ஞான அந்தகாரம்
கோவலூர் –திவ்ய தேச திரு நாமமே நீர்மையை சொல்லும்பொழுது
உள்ளே உறையும் பெருமானின் நீர்மை வாய்க்கு எட்டுமோ –

—————————————————————-

இரு நிலம் இடந்து இரும் துன்பம் தொண்டர் அண்டர்க்கு
உருத்து ஆல்மேல் சேர் அடியார் மெய்யன் -பொருந்தும்
அயிந்தை சீர் உட்பொருள் உடன் சொல் கலியன்
செயரில் பா நாம் உண்னும் ஊண்–21-

உருத்து -கோபித்து -அதனால் அழித்து-/செயிர் -குற்றம் /செயரில் -குற்றம் அற்ற /
கமல நன் மலர்த் தேறல் அருந்தி இன்னிசை முயன்று எழும் அளிகுலம் பொதுளி அம் பொழில் சூடி
செருந்தி நாண் மலர் சென்று அணைந்து உழி தரு —
தேனேமலரும் திருப்பாதத்தை தேறல் அருந்தி அவன் புகழ் பாடி பின்னர்
பரமபத நாதனின் -பத்தே பரமே மத்வ உத்ஸா -பாத மலர் நறவு அருந்தச் செல்வர்
அளிகுலம் -வண்டு–ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்றவாறு–

———————————————

ஊன் ஒறுத்து உண்ணாது நீர் நெருப்பு ஊடு நின்று
வானடைய நீர் வருந்த வேண்டா நம் -கோனமரும்
சித்திர கூடம் சேர் என்னும் கலியன் தாள் அடையும்
பத்தர்க்கு இங்கு இல்லை வாடல் –22-

மூவாயிரம் மறையாளர் நாளும் வணங்கும் –தில்லை மூவாயிரம் நாங்கை நாலாயிரம் –

———————————————-

வாட வேழம் மல்லர் அரவம் மருதம் மால் விடை
பாடு அழித்துப் பிள்ளை பிள்ளைக்கு அளித்தது -ஈடா நாம்
எண்ணிய செய்யும் சித்திர கூடத்தான் என் நீலன்
ஒண் கழல்கள் உன்னும் ஒருங்கு -23-

பிள்ளை-அவன் பிள்ளை ப்ரஹ்லாதன் /பின்னை -நப்பின்னைப்பிராட்டி
மருதம் -அசுராவேச நள கூபரன் -மணிக்ரீவன் –காமம் க்ரோதாதி இரட்டைகள்
உன்னும் -உள்ளுதல் -நினைத்தால் -/ ஒருங்கு முழுவதும் /
மால் விடை ஏறு ஏழும்-காமம் க்ரோதம் -லோபம் -மோஹம்–மதம் –மாத்சர்யம் -அஸூயை /
வருவான் -என்று ஒன்பதில் கால் பதிகத்தில் அருளிச் செய்தது -வீதியில் எழுந்து அருளும் போது
மங்களா சாசனம் செய்தமை தோற்றும் –

——————————————————————

ஒருவன் அயன் வாலி வாணன் இந்திரன் பொன்னன்
அரன் பெருக்கெடுத்து மலர் மங்கைக்கு -அருளுமா
போல் அருள் சீராம விண்ணகர் உள்ளான் என்னும்
வேல் கலியன் ஏத்தும் உவந்து -24-

ஒருவன் -அத்விதீயன் /
ப்ரஹ்மாவின் செருக்கை அளிக்க உரோமசர் முனிவர் விருத்தாந்தம் -வாணன் –
கற்பகாக்காவை சத்யா பாமை பிராட்டிக்கு -இவ்வாறு அஹங்காரங்கள் அழித்து
குரு மா மணிப் பூணாய்ப் பூணுதற்கு வேடிக்கை கொண்ண்டு திவ்யதேசங்களில் உகந்து எழுந்து அருளி –
வேல் கலியன் -ஞான சம்பந்தர் செருக்கு அழித்தமை –

————————————————————-

வந்து வுவந்து சிந்தை புகும் ஆலியம்மானைத் தன்னின்
சிந்தை நீங்க ஒட்டாது தொல்லடிமை -முந்துறக்
கொள்ள அறப் பதறிக் கோரும் கலியனை
உள்ளி ஏத்தும் மலர்த்தூய்–25-

தன்னின் சிந்தை -சிந்தைக்கு இனியான் அன்றோ
வந்து வந்து -சமயம் பார்த்து என்றுமாம்
உள்ளி ஏத்தும் மலர்த்தூய் -உள்ளுதல் நினைத்தல் மானஸ வியாபாரம் -ஏத்துதல் -வாக்கின் செயல் –
மலர்தூவுதல் காயிக வியாபாரம்-முக்கரணங்களும் ஒருப்பட நின்று கைங்கர்யம் –
பதற்றம் -தலைவி கார்யம் -பேற்றுக்கு த்வரிக்கையும் வேண்டுமே –

—————————————

தூவி சேர் தும்பி ஆலியான் பால் தூது விட்டு
நோவை உரைத்து அது ஆறாத் தானே யன் நோவை
உரை செய் பரகாலன் ஒப்பில் அருளால் நம்
கரையில் வினை கொள் கள்வன் -26-

கங்குகரை இல்லாப் பாவங்களை நம்முடைய இசைவு பாராது கொள்பவர் ஆழ்வார் –
தூவி -இறகுகள் –ஞானம் அனுஷ்டானங்கள் –
கள்வன் கொல்-பிராட்டி திண்ணம் அல்லவே இவர்கள் புகுவது –
திண்ணம் திருக்கோளூர் புகும் பராங்குச நாயகி போலே அல்லவே

————————————————-

கள்ளக் குறளன் நெஞ்சுள் செல்லும் தோற்றத்தை
உள்ளத்துள் தேற்றமாக்க ஓர்ந்ததனை தெள்ளி தாத்தான்
ஆலி யம்மானுக்கு அற்ற தன்மை யுரை ஆலி நாடன்
ஞாலத்து நந்தா விளக்கு -27-

கள்ளக் குறளனாய் திரு வாமநவதாரமும் திருவாலி அம்மானும் தர்மி ஐக்யத்தால் ஒருவரே
தாய் மனம் நின்று இரங்கத் தனியே பெருமாள் துணையா புனலாலி புகுந்தாள்-பல சுருதி பாசுரத்தால்
அவனுக்கே அற்றுத் தீர்ந்தமை விவஷிதம்
அர்ச்சாவதார சேவையால் இந்த லோகத்தில் ஆழ்வார் நந்தா விளக்காக நம்முடைய
அஞ்ஞான அந்தகாரங்களை அடியோடு நீக்கி அருளுகிறார் –

—————————————————–

நந்தா இன்பம் நம்ப உம்பர் களிறு காத்து
வந்த பேய் அரக்கர் மாய்த்து ஆய்ச்சியர் -தம் துகில் கொள்
பின்னை மணாளன் மணி மாடக் கோயில் அடைமின்
என்னு நீலன் காக்கும் சலம் -28-

வானோர் -குறையாத இன்பம் எமக்கு அருளாய் -என்று வந்து இறைஞ்சுவர்
சலம் -கபடமான எண்ணம்
நம்பும் -ஆசைப்படும்
வணங்கு என் மனனே என்றாலும் பரோபதேசமாக கொள்வது நன்று –

—————————————

சலத்தால் நிலம் கொண்டான் எண்ணி நைவார் காப்பு
உலகுய்க்கும் நான்கை வைகுந்தன் -நலத்தால்
அசித்தும் அடையும் ஆனந்தம் என்னும் நீலன்
கசிந்து அருள் செய் நம் திரு -29-

சலத்தால்-மூவடி நீரொடும் கொண்டதால் ஜலம் என்றும்-கபடம் என்றுமாம்
காப்பு -நைந்து உள் கரைந்து உருகும் அடியார்க்கு அரணாய் நின்று ரக்ஷிக்குமவன்
நம் திரு -ஆழ்வாரே நம் செல்வம் என்றவாறு –

——————————————————

திருமால் அடியார் அடைய தடை தீர்த்து
வரு துயர் வீழ்த்துத் தாள் அடைய -அரிமேய
விண்ணகர் மேவி யுகந்துள்ளான் என்னும் கலியன்
பண்ணில் நெஞ்சே போக்கு போது–30-

பண்–பாட்டு -ராகம் -இசையோடு கூடிய ஒலி மிக்க பாடல்-

——————————————–

போதமர் மா வானவர் வேட்ப வழங்கித் தான்
கோது அற்று எங்கும் கரந்து பாருண்டு ஆல் மீது துயில்
நான்கை தேர்வானார் தொகையான் நல்கும் அருள் என்னு நீலன்
பால் மனமே செய் சேவகம் -31-

போதமர் மா -அலர்மேல் மங்கை
கரந்து -நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான் -எல்லாப் பொருளும் தன்னுள் நின்றாலும்
கோது அற்று உறைவது -வியாப்ய கத தோஷம் தட்டாமல்

————————————-

கம்பத்தின் தோன்றல் அயன் அரனைத் தோற்றுவித்து
உம்பர் இடர் நீக்க அவர் எதிர் அம்பு கோக்க
வென்று அளிக்கும் வண் புருடோத்தமனைக் கூறு நீலன்
பன்னு தமிழ் நம் பேரணி -32-

பேரணி -ஆழ்வார் ஸ்ரீ ஸூக் திகளே நமக்கு சிறந்த ஆபரணம் –

————————————————

பேரணி சீர் பால் கார் அமுதம் தேன் பான்மையான்
பேர் அறிவன் இன்பன் மாறில் மாலை -சீர் மறையோர்
செம்பொன் செய் கோயிலுள் மாவோடு கண்டுய்ந்த நீலன்
நம் பிறவியாம் வினைக்கு மாற்று -33-

நாங்கை நன்னடுவுள் உள்ள திவ்ய தேசம்
பேர் அணி சீர் -அணி அணியாகத் திரண்ட கல்யாண குணங்கள்
அவை தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதமுமாய் தித்திக்கும் பான்மை -தன்மை அன்றோ
பேர் அறிவன்-சர்வஞ்ஞன்
மாறில் மால் -அவிகாராய ஸூத்தாய-சதைக ரூப ரூபாய
மாறில் ஒப்பில்லாத அத்விதீயன் என்றுமாம்
கண்டு உய்ந்தமை ஒவ் ஒரு பாட்டிலும் இறுதியில் உண்டே –

————————————————

மாற்றில் இடர் மாற்றி அடியர்க்கு மாகம் மா நிலம்
போற்ற அளித்துத் தடையாவும் பற்றி ஆட்கொள்
வான் தெற்றி யம்பலத்தான் என்றுரை மங்கையர் கோன்
தான் போக்கும் நம் பவத்தூறு -34-

மாகம் -பரமாகாசம் / மா நிலம் -வையம் //இட ஆகுபெயர் -அங்குள்ளாரை சொன்னபடி -/

————————————————

தூம்புகை மா துயர் தீர்த்துத் தொண்டர் காமுற்ற
சோம்பாது ஈந்து யாரையும் யாவையும் ஓம்புமவன்
நங்கை மணிக்கூடத்தான் என்னும் நீலன்
யாம் இன்பம் சேர தா வளம் -35-

தூம்புகை மா துயர் -தூம்பு துளை-தூம்பு காய் மா -விலங்கு -ஆனை-
ஸ்ரீ கஜேந்த்ரனுடைய பெரிய துயர் -யானையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்-

—————————————————

தா வளந்து தான் உழலும் ஊன் குரம்பை தான் ஒழிய
காவல் தானும் பிறரும் அன்று என்று காவளம்
பாடி கண்ணன் பாதம் அடையும் பரகாலன் பாதம்
நாடி நீர் நீங்கும் இடுக்கண் –36-

தாவளந்து –தாவி அளந்து -தட்டித்திரிந்து -பல் யோனிகள் தோறும் புகுந்து ஆக்கையில் ஆப்புண்டு தடுமாறும் உயிர்
பெருமாள் திருவடி அடையும் ஆழ்வார் திருவடி அடைவதே நமக்கு கர்த்தவ்யம் –

———————————————

கண் நா நாட்டார் புகழ் அன்பார் வேதியர் வாழும்
கண் அழிவில் வண் திரு வெள்ளக் குளத்து அண்ணனைப்
பேற்றுக்கு ஆக்கை நீக்க மா முன் சரண் அடையும்
நால் கவியார் சேர்க்க வளம் –37-

கண்ணார் புகழ் -நாவார் புகழ் -நாட்டார் புகழ் -என்று அந்வயிக்கலாம்
கண் –எண் சாண் உடம்புக்கும் தலை பிரதானம் -அதற்கு கண் பிரதானம் -கண் ஞானத்தையும் குறிக்கும்
கண் இடம் -தாம் இருக்கும் இடம் புகழ் பாடும்படி யுள்ளதாய் இருத்தல் –
கண் அழிவில் -திண்ணமாக
வண்மை-திவ்ய தேசத்துக்கும் பெருமாளுக்கும் அன்வயம் –
நால் கவியார் -சதுஷ்கவி ப்ரதானாய பரகாலாய மங்களம் –
ஆசுகவி -சித்திர கவி-மதுர கவி -விஸ்தர கவி –

—————————————————-

கவளக் களிறு அரக்கர் பேய் தம் உயிரைக்
கவர்ந்தான் மறை நால் தொடர் பவன் பார்த்தன்
பள்ளி காயா வண்ணனைக் கூடாமை கூறு நீலன்
நள்ள நலம் நல்கும் நுமக்கு –38-

மறை நால் -நான்மறை என்று மாற்றிப் பொருள் –
நான் மறைகள் தேடியோடும் செல்வன் -நான்மறைகள் தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் –
வேத பாராயண கோஷ்ட்டி பின் தொடருவதையும் -வேதங்கள் அவனை சொல்லி முடிக்காமையும் குறிக்கும்
காயா வண்ணன் -காமரு சீர் குவளை மேகமென்ன மேனி -வேலையன்ன கோல மேனி வண்ணன்
பார்த்தன் பள்ளிப் பெருமாளைக் கூடாமையால் வந்த துன்பத்தை கூறும் ஆழ்வாரை –
நள்ளி -அணுகி -வாழ்பவர் நல் வாழ்வைப் பெறுவர் என்றபடி–

—————————————–

நும் அடியோமுக்கு நும்மைக் காட்டாது அடியேனை
நும் அடியாரோடு ஒப்ப எண்ணுதிர் என நம் கலியன்
இந்தளூரானுக்கு இயம்பினான் தன இன்னாமையைத்
தன்னிலை மாறாதவனாய் -39-

தன்னிலை மாறாதவனாய் –தானான தன்மையில் ஊடுகிறார் –
பக்தானாம் தவம் ப்ரகாஸஸே-என்றதின் எதிர்த்தட்டாய் இருந்தமையால் –
தம்முடைய மார்த்தவத்தையும் வெளியிட்டு அருளுகிறார் இந்த பதிகத்தில்
எம்பெருமானைப் போல் அல்லாமல் நமக்காக எப்பொழுதும் சேவை என்பதால் நம் கலியன்
தூது விடுவதும் அணுகரிப்பதும் ஊடுவதும் அர்ச்சாவதார பெருமாள் இடம் தானே நம் கலியனுக்கு –

——————————————–

ஆய்ச்சியர் அன்பர் கைப்பொருளை உகக்கும் தான் சேரா
சேர்க்கும் அழிய மாருதி தொண்டர் இடர் தீர்க்கும்
திரு வெள்ளியங்குடியான் வாழ்த்தும் கலியன்
திரு மொழி ஏத்தும் அறிந்து -40-

அகடிதகடநா சமர்த்தன் -ஆலிலை -நரஸிம்ஹம்-போன்று
பரத்வத்தை அழிய மாறி ஸ்தாவர திர்யக் மனுஷ்ய யோனிகளில் திருவவதாரம்

—————————————–

அறிவது அரியான் அடியார் தேவிமார் உய்யத்தான்
கிறி செய்வான் தேர்வார்க்கு அமுதில் அறிவினியன்
புள்ளம் பூதங்குடியான் என்னும் பரகாலன்
உள்ளூர் உம்பர் தாம் -41-

கோலா வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்டதும்
அழகைக் காட்டி தன்பால் ஆழ்வாராதிகளின் ஆதரம் பெறுக வைப்பதும் போன்ற கிறிகள்
அறிவினியன்-அறிவதற்கே இனியவன் -அறிந்த பின்பு கண்டு அனுபவிக்க இனியவன் –
அவனைப் பற்றிய அறிவே இனிக்குமே
உம்பர் -நித்ய ஸூரி கள் என்றவாறு-

———————————————-

தாம் அறியாத் தன்னுள் புகுமவன் தன் பெருமை
தான் அரியான் தொண்டர்க்கு அறியுமாறு தான் அருளும்
கூடலூரான் ஊர் எழிலுடன் சொல் கலியனைக்
கூடி வானில் விளங்கும் வென்று -42

யாதோ வாசோ நிவர்த்தந்தே என்ற வேதம் போல் அன்றிக்கே-எம்பெருமானுடைய கல்யாண குணங்களை
அருளிச் செய்வதில் விளாக்குலை கொள்வதால்
தன் பெருமை தான் அறியா விடிலும் தன் அடியார் அறியும்படி அருளுபவன் அன்றோ –
வானில் சென்று விளங்கும் -என்றும் வானை விட வாழ்ச்சி இங்கு என்றும் கொள்ளலாம் –

————————————————-

வென்று விளங்கு வினை வீயச் செய் மாலடிக்கே
என்றும் அன்பால் ஏவல் இசைந்து ஆட்செய்ய ஓன்று நீலன்
வெள்ளறையானை வேண்டும் பாடலை உள்ளத்துள்
உள்ள உகந்து நெஞ்சே உந்து -43-

ஓன்று நீலன் -ஒருமைப்பாட்டை -இசைந்த நீலன் ஏவ மற்றமரர் ஆட் செய்வார்-என்கிறபடியே
பெருமான் சோதி வாய் திறந்து பணித்தபடியே ஆட் செய்தல் உற்றதாகும் –

———————————————

உந்தி அயன் ஓங்குவித்து வையமாக்கிக் காத்து அழித்து
எங்கும் கரந்து உறையும் மாயமுடை எந்தை தன்மை
தன் நன்மைக்கு என்று எண்ணித் தென்னரங்கம் பாடு நீலன்
சொல் மறவாமல் வாய் வெருவு -44-

மாயம் -ஆச்சர்யம் -மித்யை பொய் அன்று –
எந்தை தன்மை -எம்பெருமானுக்கு நமக்கும் உள்ள ஒழிக்க ஒழியாத சம்பந்தம் அறிவதற்கு மேல் ஒரு ஸூஹ்ருதம் உண்டோ
பெருமாள் அடியார்க்கு அருள் செய்தமை தனது நன்மைக்கு என்று யார் ஒருவன் எண்ணுகிறானோ
அவனே உண்மையான உத்தம ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் உடையவன் –

——————————————–

வெருவித் தான் தன்னது தன்பால் அரங்கன் அன்பை
இருத்த ஆட் செய்யா கூடாத்தன்னின் வருத்தம் போம்
ஆறு அறியாது ஆற்றாமைத் தாய்க் கூற்றாய் நீலனுரை
கூறல் வாய்க்குற்ற வகை -45-

அரங்கன் அன்பைத் தன்பால் இருத்த ஆறு அறியாமலும்
தன்னின் ஆட் செய்யா வருத்தம் போம் ஆறு அறியாமலும்
தன்னின் கூடா வருத்தம் போம் ஆறு அறியாமலும் -என்று அன்வயம் –

—————————————————-

கை கழிந்த அன்பர் முன் கை கட்டித் தான் நின்றும்
கையர் நலிந்தும் வையம் நலம் எண் ஐயன்
அரங்கனைக் கைக்கனியாய்க் காண் கலியன் பாதம்
பரவ வினைப் பாறிடுமே பண்டு -46-

கை கழிந்த அன்பார் -மிக்க பெரும் சீர் தொண்டர் என்றபடி -பரத்வம் வந்தேறி அன்றோ அரங்கனுக்கு
கையர் -கயவர்
வையம் நலம் எண் -உறங்குவான் போலே யோகு செய்யும் -வ்யூஹ ஸுஹார்த்தம் –

——————————————

பண்டைய காரணன் அண்டர் அல்லல் விண்டு ஒழித்து
தொண்டர்க்காய்த் தான் தரணியில் திண்ணம் அண்டர் கோன்
வந்து இருக்கும் கோயில் எண்ணித் தான் உய்க்கும் நீலன் தாள்
வந்தியாதார் தாம் ஏழையர் -47-

காரணன் -காரணம் ஸ்து த்யேய-
தரணி -உலகம் -திண்ணம் வந்திருக்கும் -சம்சாரம் வேரோடு கிழங்கு அறுத்தால் அன்றி பேரேன்-என்று இருக்கும் சீர் –

—————————–

ஏழைமை சூழ் பிறப்பு கூற்றத்து இழிவு ஒழிய
வாழ்வாம் ஆட் செய்வு அவன் சிந்தையதாய் -ஆழியான்
ஆராமம் சூழ் அரங்கன் ஆடகத்தான் ஆறாய்ச் சேர்
சீரார் நீலன் தொழும் என் கை -48-

சரணாகதிக்கு அபேக்ஷித்தமான ஐந்து அங்கங்களையும் அருளிச் செய்து சரண் அடைகிறார் அரங்கன் திருவடிகளில் –
அடக்கம் -பொன் -உலகம் அளந்த பொன்னடியாகையாலே-
ஆழியான் -கம்பீர ஸ்வ பாவன்-ஆழி நீர் வண்ணன் -கருமை நிறமுடையவன் –

——————————————-

கை கூப்புவார் கூப்பாதார் இறை தாமாய் நினைவார்
ஐயன் அசோதை நப்பின்னைக்கு பொய்யிலானாம்
பேரான் உள்ளம் புகுந்த வாழ்த்தி உயு நீலன்
பேரே தீர்க்கும் நந்தம் தீது -49-

—————————————

தீதறத் தொண்டர் துயர் தீர்த்து அவர்க்கு மீளுதலாம்
ஏதமில் வான் ஈந்து கரந்து எங்கும் உறை ஏதமில்லா
நந்தி புர விண்ணகரான் நண்ண நீலன் தானுரை செய்
செந்தேன் பருகு வண்டாய் –50-

ஏதமில் வான் -ஸ்ரீ வைகுண்டம் -கைவல்யத்தில் வ்யாவ்ருத்தி
நீலன் உரை செந்தேன் பருகு வண்டாய் தேனிலும் இனிதான திருமொழி –

————————————–

வண்டாம் தெய்வத்தாளில் விஞ்சு விருப்பம் மிக்க
வண்டார் குழலார் பால் தான் வெறுப்பும் கொண்டமையை
விண்ணகரானுக்குச் செஞ்சொல்லால் கலியன் செய்
விண்ணப்பம் பொற்பே பொறு –51-

பொற்பு -அழகு / பொறு -தாங்கு /
எம்பெருமான் பால் ஆதாரஅதிசயமும் பிராக்ருத பதார்த்தங்களில் வெறுப்பும் வளர
ஓவுதல் இல்லாமல் ஆழ்வார் அருளிச் செயல்களை மனனம் செய்ய நெஞ்சை இரக்கிறார் –

—————————————–

பொறுக்க ஓணாச் சுற்றம் பொருள் புலன்கள் தம்மைத்
துறந்து விண்ணாட்டுச் சீர் நீலன் பெற மா முன்
ஆர்த்தனாய் விண்ணகரான் சீர்த்தாள் சரண் அடைந்தான்
சீர்த்தாள் சேர் மற்ற துறந்து -52-

பொறுக்க ஓணா–சுற்றம் பொருள் புலன்கள் மூன்றிலும் அன்வயம்
பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஓணாப் போகாமே நுகர்வான் புகுந்து ஐவர் அறுத்துத் தின்றிட -7-7-1-

———————————————-

துறக்க அரிய சிற்றின்பம் தேவல்லாரை
இறையா நினைதல் இகந்து -மறவாமல்
விண்ணகரான் எண்ணும் தனக்கு விண் வேண்டும் நீலன்
திண்ணமதா நம் களை கண் –53-

———————————————

கண்டால் பொருள் இன்பம் கொண்டாடி அற்ற காலை
கண்ட பேசி ஏசுவாராய்க் கை விட்டு தண்ணறையூர்
பற்றாத் தொழு நெஞ்சே என்னு பரகாலன் சொல்
கற்றார்க்கு இல்லை கலக்கம் -54-

அற்ற காலை –பொருள் இல்லாத போது –

———————————————-

கலங்கச் செய் துன்பம் தீர்த்து அண்டர் மா தொண்டர்
துலங்கச் செய் நம்பி நறையூர் கலங்கா வான்
ஒக்கும் எனும் மங்கை வேந்தன் பாதம் நமக்கு அளிக்கும்
இக்கரையாம் அம்பரம் -55-

இக்கரை ஏறி இளைத்து இருந்தேனே –பெரியாழ்வார் -5-3-7-இக்கரை எனப்படும் வானாடு-அம்பரம் -பரமபதம் –
திவ்ய தேசமே பரமபதத்தில் உத்தேச்யம் –
சிந்தை மற்று ஒன்றின் திறத்து அல்லாத தன்மை தேவபிரான் அறியும் –திருவாய் -7-10-10-

————————————————

அம்பரம் தீ தானாய் அவை விழுங்கி ஆயன் அரி
அம்மீனாயத் தோன்று நம்பி சேர் நறையூர் அம்பணி செய்
செம்பியன் சீர் ஊர் எழிலுடன் செப்பும் சீர்க் கலியன்
செம் கழல் சேர்ந்து வான் ஆளும் –56-

செஞ்சுடரும் நிலனும் பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெறுக்கிப் புகப்
பொன் மிடறு அத்தனை போது அங்காந்தவன் –10-6-1-
வான் ஆளும் -ஆண்மின்கள் வானகம் -திருவாய் -10-9-6-
கலி wயனுடைய செம் கழல் சேர்வது வான் ஆள்வதற்கு ஒப்பாகும்
வான் செம் கழல் சேர்ந்து ஆளும் -உபய விபூதி -இங்கே இருந்து கிட்டும்-

——————————————————————–

ஆளுமவன் தான் தனக்காட் செய்யும் அறிவு அருளி
ஆளறக் கொள் நம்பி புகழ் பேறாய்த் தான் -ஆள் கொள்வான்
நன்னறையூர் நின்றான் அங்காட் செய்து உயும் என்றான்
மங்கையர் மன்னன் எம்மான் -57-

புகல்-ரக்ஷகன் /பேறு-பெரும் பலன் புருஷார்த்தம் /
சேஷிக்கு உகந்த அடிமை செய்வதே உய்வதற்கு ஆறும் பேறுமாகும்–

—————————————————

மானமுடை வானவர் தொண்டர்க்கு வாசியற
தான் அழிய மாறி அருள் நம்பியிடம் நான் உகந்த
மாற்ற வூரான் பான்மை நீலன் கண்டான் நறையூரில்
உற்ற திருவாம் பெடையோடு-58-

திருவேங்கடம் திருவாலி திருநாவாய் திரு மெய்யம் திருகி குடந்தை திரு நறையூரில் கண்டதாக அருளிச் செய்கிறார்
நரசிம்மம் கண்ணன் இராமன் தன்மைகளையும் கண்டார் –
உற்ற திரு -பகவான் நாராயண அபிமத அனுரூப ஸ்வரூப ரூபம் –
நமக்கு உற்ற திரு என்றுமாம் –

——————————————–

பெடையாம் பூ மங்கையோடு பத்தர் தம் பண்டம்
அடைந்து உகந்து அண்டர் தொண்டர் தம் இடையூறு
நீக்கு நிறையூர் நம்பி தாள் சரணாய் நீலன் தான்
நோக்கும் புகலாய்க் கிடந்து -59-

புகலாய்க் கிடந்து -ஒரே சொல்லாக்க கொண்டு ரக்ஷகனாகக் கொண்டு என்றபடி
சரணாய் நோக்கும் -சரணாகதி அடைகிறார் என்றவாறு
உலகம் உண்ட பெறுவான் போலே இந்த பதிகத்தில் பாசுரம் தோறும் எம்பெருமான் அடியிணை உண்டே –
பூ மங்கை -மலர்மகள் மண் மகள் இருவரையும் குறிக்கும்
பெடையாம் பூ மங்கையோடு -பூ மங்கையாம் பெடையோடு என்று மாற்றி பொருள் –

——————————————–

கிடந்த பவ்வன் நாமமுடன் நம்பி நறையூரான்
இடர் கடிவான் விண் மண் இரண்டும் கடவன் ஈசன்
மாதவன் மாயன் காரணன் சீலன் என் நீலன்
வேத சாரம் சொல் கறவை -60-

கிடந்த பவ்வன்-ஷீராப்தி நாதன்
நாமமுடன் நம்பி நறையூரான் -திருமந்த்ரார்த்தத்தை பொருளுடன் அடைவே விவரிக்கிறார்
இடர் கடிவான் -விரோதி நிரசன சீலன்
விண் மண் இரண்டும் கடவன் -உபய விபூதி நாதன் -ப்ராப்தியை யுடையவன்
ஈசன் –நியமிப்பதை ஸ்வ பாவமாக யுடையவன்
மாதவன்–திருமால் –
மாயன்–ஆச்சர்ய சேஷிடிதங்களை யுடையவன் –
காரணன்–காரணம்ஸ்து த்யேயா –
சீலன்–ஸுசீல்யன்
என் நீலன் -என்று நாராயண நாமார்த்தை அருளிச் செய்யும் கலியன்
வேத சாரம்–ஆரண சாரம்
சொல் கறவை -ஆழ்வார் பசு -ஆச்சார்யர் ஸ்தானம் –

————————————–

கறவையாய் நம்பியைத் தான் மற்ற ஊர் சீரோடு
மறவாது அழைத்துச் சிறையாம் பிறவி அற
தாய் கரும்பு வள்ளல் கதியாய்க் கலியன் காண்
மாயன் ஆனான் புள் ஏனம் -61-

தாய் நினைந்த கன்றே ஓக்க என்னையும் தன்னையே நினைக்கச் செய்து -7-3-2-கறவை எம்பெருமானே –
தாயாய் உலகு அளித்தும் -கரும்பின் சுவை போலே போக்யனாயும் அபேக்ஷிதங்கள் அருளும் வள்ளலாயும்-
அடையும் கதியாகவும் –
ஆக உபாய உபேயமாக இருக்கும் தன்மையைக் காட்டிக் கொடுத்து அருளுகிறான்
புள் ஏனம் ஆனான் -அன்னமாய் அருமறை பயந்து –
வென்று சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள்ளெயிற்று ஒள்ளெரித்தறு கண் பன்றியாய்
யன்று பார்மகள் பயலை தீர்த்தவனாய் -இவ்வாறு பல பல திருவவதாரங்கள் மூலம் உபகரித்து அருளுபவர்
இவற்றைக்காட்டக் கண்ட கலியன் தானே நமக்கு இவை எல்லாம் –

—————————————

புள் ஏனம் ஆம் நம்பி நெஞ்சுட் புகுந்தானைத்
தள்ளேன் வையத்து வான் இன்பம் விட மெய் உள்ளத்தோடு
சிந்தையால் எய்தி இன்புற்றேன் என் சீர்க் கலியன்
சிந்திப்பார்க்கு இல்லை சினம் -62-

விட மெய் -விடத்தக்க உடல் -நஞ்சாகிய உடல் என்றுமாம்
என் சீர்க் கலியன் -என்று அருளிச் செய்யும் ஆழ்வார் –

—————————————-

சினத்துச் செரு நீர் செற்றான் உட் புகுந்து
நனி நீங்கா தீது தீர் நம்பிக்கு மனம் செயல்
வாக்கற்றுக் கைம்மாறிலாமை சொல் வாட் கலியன்
வாக்கால் மலரும் உட் கண் -63-

என் கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் -என்பதால் நீங்காமை சொல்லி
கண் இணைகள் க்ளிப்பைக் களித்தேன் -அன்பனை அன்று ஆதரியேன் -என் மனம் தாழ்ந்து நில்லாது
என் மனம் சிந்தை செய்யாது -பண்பலை யான்றிப் பாடல் செய்யேன் –
எம் அண்ணல் வண்ணமே அன்றி என் வாய் யுரையாதே –
மனம் செயல் வாக்கு எம்பெருமானுக்கே அற்றுத்தீர்ந்தமையை அருளிச் செய்தார் –
என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கு என்றும்
என் மனத்தே இருக்கும் புகழ் என்றும் கைம்மாறு இல்லாமையையும் அருளிச் செய்தார் –

———————————————————-

கண் காண் விபவவித்தாம் பாற் கடல் பள்ளியானை
எண்ணும் விண்ணில் பொலி சீர் சேறையான்-தொண்டரை நீங்காது
அவர்க்கு ஆளாய் இன்பம் முப்புலன் எய்திற்று உரை செய்
காதல் நீலன் நம் தந்தை -64-

காதல் நீலன் -அன்பர்பால் ஆராத காதல் யுடைமையை தானே திருச்சேறை பதிகத்தில் அருளிச் செய்தார்
நீலன் நம் காதல் தந்தை என்று கொண்டு-ஆழ்வார் நம் பால் ஆராத அன்பால்
நன்மை செய்யும் தஞ்சமாகிய தந்தை அன்றோ ஆழ்வார்
இங்குள்ள அடியார் விண்ணுளாரிலும் சீரியர் என்பதால் தன் மேலாராக அருளிச் செய்து
மத்திய பர்வ நிஷ்ட அக்ரேஸராக விளங்குகிறார்
பாற் கடல் பள்ளியான் விபவ வித்தாம் -வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்து அன்றோ –

———————————————

தந்து கனவில் கலவி ஆல் துயில் தானாம்
அந்நிலை காட்டி ஐம்புலன் கொண்டு வந்து புகும்
மாடு அழுந்தூரானைப் பகரும் கலியன் ஒலி
பாடல் உண்பார் ஒப்பார் சிங்கம் -65-

மாடு -பக்கம் -செல்வம் -பொன்-அனைய அழுந்தூரான்
ஆழ்வார் பாடல் -பரசமயப் பஞ்சுக் கனலின் பொறி –ஒலி மிக்க பாடலை யுண்டு –வலி மிக்க சீயம் –

————————————————

சிங்கம் விண்டார்க்கு அன்பன் தொண்டர்க்கு காப்பவன்
பொங்கு வித்தாய் மூவர் வாக்கு எட்டான் பூ நங்கை சேர்
ஆராவமுதை அழுந்தைக் கண்டு இன்புறும்
சீரார் நீலன் நம் திரு -66-

விண்டார் -அடியார்களுக்கு சத்ருக்கள் -/காக்கும் இயல்பினன் கண்ணபிரான் /
பொங்கும் வித்து -த்ரிவித காரணன்
மூவர் வாக்கு எட்டான் -இந்திரன் அயன் அரன்-வாக்கு எட்டான்-
யானும் ஏத்தி ஏழு உலகும் முற்றும் ஏத்தி பின்னையும் தானும் ஏத்திலும் தன்னை ஏத்த ஏத்த எங்கு எய்தும்-

———————————

திரு வழுந்தூரான் நெடியான் நல் துணையான் தூயன்
திருவன் நிறைவறிவன் என்று திருத்த ஐவர்
செய் துயரை வேறு புகலின்றி கலிகன்றி சேர்ந்தான்
உய்ய தாளாம் செங்கமலம் -67-

ஐவர் -ஐந்து புலன்கள்
நெடியான் -தேவராய நிற்கும் அத்தேவும் அத்தேவரில் மூவராய் நிற்கும் முது புணர்ப்பும்
அம்மூவரில் முதல்வனாக நிற்கும் நெடியான் -மனிசர்க்குத் தேவர் போலெ தேவர்க்கும் தேவனான தேவாதி தேவன்
நிறைவறிவன் -சர்வஞ்ஞன் –

———————————————-

செங்கண் பொன்னன் கஞ்சன் மல்லர் இலங்கையன்
மங்க மறை இந்திரன் வெள்ளம் பூ மங்கை
அளிக்கும் அழுந்தூர் அமரர் கோ அடைந்து உய்யும் என்
கலியன் கெடுக்கும் கள்ளம் -68-

—————————

கள்ள மதம் கொள்ளாச் சல சயனத்தார் தாள் நீர்
கொள்ளும் என்றும் பெண்டிர் நிரயம் தான் வெள்கி யவை
நீங்க பேறாச் சேர்ந்தான் பரகாலன் நெஞ்சே சொல்
பாங்காய் அவன் பெருமை -69-

——————————————-

பெருமான் இனியன் அழகன் தேவன் துப்பன்
திருத்தன் சேராச் சேர்ப்பன் நாதன் -விருத்தம் எனக்
கண்ணமங்கை கண்டு கலியன் சொல் அமுதப்பா
உண்ண பிறப்புக்கு நச்சிலை -70 –

தேவன் -விளங்கு சுடர்ச் சோதி/திருத்தன்-திருப்தன்-அவாப்த ஸமஸ்த காமன்
விருத்தம் -விருத்த விபூதி நாதன்-
வானவர் தன நாயகன் -மூத்தவன் –
ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடையவன்

———————————–

சிலை முதலா ஐந்து பூணாச் சீராகும் சேர் பல்
கலன் கலியன் கண்டு பிரியா நிலை எய்திக்
கண்ணபுரத்தான் பால் அவா மிகுதல் தான் கூறும்
தண் தமிழ் கற்பார் தெள்ளியார் -71-

ஐந்து பூண் — ஆழி சங்கு தண்டு வாள் வில் -பஞ்சாயுதங்கள் –
திவ்யாயுதங்கள் அநுகூலருக்கு திவ்ய ஆபரணங்கள் ஆகுமே
ஆக்கம் -திரு மார்பி -திரு மேனிக்கு உப லக்ஷணம்
ஒரு காலும் பிரிகின்றலேன் என்கின்றாளால் -தாய் வார்த்தையால் –
தெள்ளியார் -தெளிந்த ஞானத்தர்–

———————————

தெள்ளிதாத் தான் கண்ணபுரம் உள்ள வெம்மை நீங்க தொழில்
உள்ள அணுக்கரித்தல் ஆறு பேறாய் கொள்வது என
இன்னாமை கூறும் இரும் தமிழ் நூல் புலவன்
தன் தாள் வானாம் இக்கரை -72-

உள்ள வெம்மை -உள்ளத்தில் தோன்றும் ஆற்றாமை
நீர் மலி வையத்து நீடு நிற்பார்கள் -பல சுருதி -அங்கே தெள்ளியார் அனுபவம் இல்லையே –

——————————————-

கரை வளை மாமை இழந்தேன் கணபுரத்தான் தன்
கரையில் செயல் எண்ணி என்று உரை செய்
பரகாலன் தான் தனது விட்டமை கூறும்
வரந்தமிழால் வாய்க்குமோ விண்-73-

கரை வளை -சப்திக்கின்ற வளை /
கரையில் செயல் /-எல்லையில்லாத சேஷ்டிதங்கள் /
வரையெடுத்து -கரி வெருவ மருப்பு ஓசித்து-விடைகள் அடர்த்து -மதி கோள் விடுத்து
புனர் மருதம் இற நடந்து/ தாய் எடுத்த சிறு கோளுக்கு உழைத்து ஓடி / தயிர் வெண்ணெய் உண்டு /
இரணியனை அணி யுகிரால் முரண் அழித்து / உண்டு உமிழ்ந்து போன்றவை
/ வரந்தமிழ் -சிறந்த தமிழ்
கலை வளை -அஹம் மம க்ருதிகள்
———————————–

விண்டு ஒழியத் தன் வாட்டம் கண்ணபுரத்தான் துளவம்
வண்டான தொண்டரை வசமத்து கொண்டூத
வேண்டி உய்யும் விரகு கூறும் பரகாலன்
வேண்டினார்க்குத் தஞ்சமாம் தந்தை –74–

அடியாரை வண்டாக /
பிராகிருத தந்தையிலும் விருத்தி தஞ்சமாகிய தந்தை -ஆத்மாவின் உஜ்ஜீவனத்துக்கு –

———————————

தன் தன்மையில் மீதி வேய் ஆ மணி தென்றல் இருள்
அன்றில் அந்தி செய்ய நலிவு ஒன்றில்
ஒருவனாய்த் தான் நீலனாய் ஆய்ச்சியர் தம் அல்லல் உற்ற
உரைப்பது எவ்வாறு தொண்டீர் -75-

வேய் -மூங்கில் ஆகுபெயர் புல்லாங்குழலைக் குறிக்கும்
உற்ற -உற்றாமையின் கடைக்குறை -ஆழ்வார் ஒருவரே சாயங்காலப் பொழுதில்
ஆய்ச்சியர் அனைவரும் அனுபவித்த அல்லலை அடைந்தமை காட்டும் –
அவ்வாறு நலிவுற்ற ஆழ்வார் பிரிவாற்றாமையை தாம் கூற வாய் திறக்க வலி உண்டோ
ஆழ்வாருடைய அவா மண் திணி ஞாலமும் ஏழு கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிது அன்றோ –

——————————————

தொண்டர்க்கு வேண்டிற்றுச் செய்யும் கணபுரத்தான்
நண்ணார் ஒழிப்பானை ஆறாக நண்ணவும்
நண்ணா நம் மேல் வினை என்றுத் தேற்றியும் கூறும்
அண்ணலை போற்றும் வியந்து -76-

வியந்து -விருப்புற்று /
வருந்தாது இரு மட நெஞ்சே நம் மேல் வினைகள் வாரா என்றும்
மாலாய் மனமே யாரும் துயரில் வருந்தாது இரு நீ -என்றும் தேற்றிய
ஆழ்வாரை விருப்பமுடன் போற்றுவதும் மேல் ஒரு நன்மை இல்லை –

———————————————–

வியன் ஞாலத்தில் மல்கு சீரால் நாள் வானில்
நயமுடைக் கண்ணபுரம் பேறாக உயவடைக்
கூறு நீலன் சித்ர கவி தேரும் அடியார் தாம்
ஏறுவர் ஏதுமின்றி வான் –77-

நாதனும் நித்ய முக்தர்களும் இங்கே ஆசையுடன் உக்காந்து வந்து நித்யவாஸம் இருப்பதால்
இத்தையே உபாயமாகக் கொண்டு உஜ்ஜீவிக்க ஆழ்வார் உபதேசித்து அருளுகிறார்
கூற்று எழுத்துக்களைக் கொண்டே அருளிச் செய்த பதிகம் -சித்ரா கவித்துவம் பொலிய உள்ளது
நல் வான் -கைவல்யத்தில் வ்யாவ்ருத்தி –

——————————————-

வான் மண் உய்வான் தான் அவதாரம் பத்து செய்யும்
வானவனைக் கண்ணபுரத்துள் கலியன் கோனாகக்
கண்டு கொண்டேன் என்னும் சொல் உய்வார் கருத்தினில்
திண்ணமதாம் ஞானக்கை -78-

ஆழ்வாருடைய ஈரச் சொற்களே உய்ய நினைப்பார்க்கு நிச்சயமான ஞானக்கை –

—————————————

கைம்முதல் இன்றித் தன்னுள்ளத்து உற்றானாய் நோக்கி
வெம் நரகை நீக்க மிக்கானாய்க் கணபுரம் நிற்பார்க்கு
அல்லால் பிறர்க்கு இன்மை தான் பகரும் சீர்க் கலியன்
சொல் தேன் பருகு வண்டாய் -79-

நிர்ஹேதுகமாக -உற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்ற முதல்வன்
உற்றான் -ஒழிக்க ஒழியாத நவவித சம்பந்தம் உண்டே
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ -அநந்யார்ஹத்வம் –

—————————————–

வண்டாம் தெய்வத் கண்ணபுரத்தான் பற்று ஆறு பேறாக்
கொண்டு ஏத்தி வேற்று இறை தேறுவாரை அண்டாதே
மந்திரத்தின் உட்பொருள் சொன்னான் கலியன் தான் தொண்டர்
தொண்டன் என மாலாம் வங்கர்க்கு -80-

தெய்வ வண்டு-எம்பெருமான் –
மாலாம் வங்கர்க்கு -வங்கமாம் மாலுக்கு -வங்கம்-கப்பல்
மால் -கருமை பெருமை மையல்
வைகுந்தம் என்பதோர் தோனி பெறாது உழல்கின்றேன்
மந்திரத்தின் உட்பொருள் -உற்றதும் உன்னடியார்க்கு அடிமை –

—————————————–

வங்கக் கடல் துயின்று இங்குப் பிறந்து தொண்டர் தாம்
பொங்காத் துயர் அகற்றி ஏதலரை மங்குவித்து
கண்ணங்குடியுள் நின்றான் புகலாய் என்னு நீலன்
பொன்னடியே நம் தமக்குப் பொன்-81-

பொங்க -நன்றாக வாழும்படி-

——————————————-

பொன்னுரு சங்காழி பல் பூண் நாகை அழகியாரின்
எண் கடந்த மேன்மை எழில் சிறப்புட் கண் கண்டும்
ஆட் செய்யா ஆற்றாமை நாயகியாய்ச் சொல் கலியன்
தாள் சேர்க்கும் சீர் வான் தன்னை -82-

சிறப்புட் கண்–சிறப்பு உட் கண்
பொன்னுரு -அழகிய -ஹிரண்ய வர்ணை அலர்மேல் மங்கை உறை மார்பன் அன்றோ –
ஹிரண்மயவபு -உபநிஷத் –

—————————————–

தன்னளவில் நைந்து நொந்து தன்னிலைக்கு அல்ல செய்து
பின்னும் தொழுது தான் புல்லாணி சென்று சேர
எண்ணியமை கூறி இன்னாமை உணர்த்தும் ஆலி நாடன்
பண் எண்ண வானோர்க்கு ஆவார் -83-

அக்ருத்ய க்ருத்யம் -ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால்
ஒளி மா மலர் பாத நாளும் பணிவோம் நமக்கே நலமாதலின் –
பண் -ராகம் -குன்றா இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை –
செவிக்கினிய செஞ்சொல் கேட்டு வானவர் ஆரார் அன்றோ –

—————————————————

காவாமை தந்த உள் மெய் நோய் கூற புட் தூதும்
ஆவார் சொல் கேளாமை ஆழி மதி -ஓவாத
இன்னாமையும் கலியன் புல்லாணி மால் குரை சொல்
உன்ன உள்ளம் தவளமாம் -84-

எந்நிறம் பண்டு பண்டு போல் ஒக்கும் -11-1-9-பண்டே போல் இருந்தால்
உள்ளத்து நோய்க்கோ உடல் நோய்க்கோ வருந்த வேண்டியது இல்லையே-
தளம் -வெண்மை -சத்வகுணம் -சமதர்மம் உண்டானால் ஆச்சார்யன் கை புகுரும் –
திரு மந்த்ரம் ஈஸ்வரன் கை புகுவார்கள்
வைகுண்ட மா நகர் மற்றது கையதுவே -என்றபடி ப்ராப்ய பூமியும் காய் புகுருமே –

———————————————–

தவத்தை வேள் சேமணி வேய் தென்றல் அன்றில் வாடை
அவற்றுடன் வேலை திங்கள் செய் நவை தீரும்
உற்றார் குறுங்குடிக்கு உய்த்தால் என்று உணர்த்து நீலன்
முற்ற வகற்றும் நம் மயக்கு -85-

மயக்கு -சம்சயம் -அஞ்ஞானம் -விபர்யயம் விஸ்ம்ருதி ஆகியவற்றுக்கும் உப லக்ஷணம்
தவத்தை -பிரபத்தியை -தன்மையை தெள்ளிதாக ஆழ்வார் அருளிச் செய்கிறார் –

——————————————

அக்காணி அன்பர்க்கு அகற்ற குறுங்குடியுள்
முக்காலம் முன்னிற்கும் நம்பியை தக்க தொண்டர்
தம்முடன் சென்று தொழ எண்ணும் கலிகன்றி
நம் நலம் நல்கும் தந்தை –86-

நலம் -பக்திக்கும் நல்ல வாழ்வுக்கும்
அக்கு ஆணி -எலும்பாலாகிய சரீரம் -என்பு தூண் நாட்டி
அக்காணி கழித்து –பெரிய திருமொழி -5-2-3-
தீ நீர் வண்ண மா மலர் கொண்டு தூ நீர் பரவித் தொழுமின் எழுமின் தொண்டீர்காள் -என்றும்
நாறார் இண்டை நாண் மலர் கொண்டு ஆரா வன்போடு எம்பெருமானூர் அடைமின்கள் -என்றும்
நின்ற வினையும் துயரும் கெட சென்று பணிமின் எழுமின் தொழுமின் தொண்டீர்காள் -என்றும்
அருளிச் செய்கிறார் அன்றோ இப்பதிகத்தில்
முக்காலம் முன் நிற்கும் -எப்பொழுதும் நமக்கு முன்னே வந்து திவ்ய தேசம் உகந்து
நித்ய வாசம் செய்வதே நமக்கு அருளுவதற்காகவே –

———————————————————–

தந்தை கிளை தன் நிலைக்கு ஆகா இன்பம் மெய்யாம் நோய்
நஞ்சு செல்வம் கள்ளச் சமயமவை தஞ்சம் அன்று
என்று கலியன் நெஞ்சை வல்ல வாழ் வல்லையாய்ச் சொல்லு
என்ற பாடல் கற்றிடவே முந்து -87-

நஞ்சு செல்வம் -நஞ்சு போன்ற செல்வம் -நஞ்சாகிய செல்வம் –
மெய்யாம் நோய் –நோய் எல்லாம் பெய்ததோர் ஆக்கை -அன்றோ

————————————————–

முந்துற ஆசை முற்ற விட்டு பற்றாய்த் தான் எவர்க்கும்
சிந்தித்தந்து துயர் சிந்துவிக்கும் எந்தை சேர்
மாலிரும் சோலை வணங்கு என்னும் மங்கை வேந்தன்
மால் ஆக்கும் மூவர் முதல் -88-

மங்கை வேந்தன் மால் -ஆழ்வார் பால் நமது பக்தியும் -நம்பால் ஆழ்வாருடைய வ்யாமோஹமும் –

————————————————–

மூவர் முதல்வன் பார் ஆக்கி உண்டும் காத்து அளந்தும்
யாவரும் வேண்டிற்று நல்கும் சோலை மலை மேயவனைக்
கூடுவனோ என்று சங்கித்துத் தெளிந்த சீராலி
நாடன் எங்கள் எம் இறை –89-

கூடுவனோ –ஒன்பது பாசுரங்களில் கொல்-என்று சங்கை –
பல சுருதி பாட்டில் ஆடல் பறைவையனை அணியாயிழை காணும் என்று -சங்கை நீங்கி
நிச்சயமாக கூடுவாள் –
ஆழ்வார் நம்முடைய கடவுள் –

—————————————————–

எங்கள் இமையோர் ஈசன் தொண்டர் எண்ணும் வண்ணத்தன்
அங்கம் அரர்க்கு உகந்து நல்கு சீலன் இங்கு அயனில்
மிக்கார் வாழ் கோட்டியூரான் என்று உரை செய் மங்கை வேந்தன்
உக்க வினை தீர்க்கும் ஒருவர் -90-

உக்க -பொடிப்பொடியாக
எண்ணும் வண்ணத்தன் -பாலின் நீர்மை இத்யாதி –
அவ்வாறான ஸ்வபாவம் யுடையவன் என்றுமாம்
தன் நிறத்தையும் ஸ்வ பாவத்தையும் அடியார் எண்ணப்படியே மாற்றி அருளுபவர்
ஆஸ்ரிதரை தன்னை அழிய மாறியும், நோக்குபவன் –

———————————————————–

ஒருத்தி வேட்டகம் புகு முன் உற்றார் சொல்வாள் போல்
திருப்பதிகள் வான் சேர் முன் கண்டு அரும் தேன் பொன்
ஆரமித்து ஆறு பேறு எம்பிரான் என்னும் கலியன்
கார் எனக் காட்டும் இரக்கம் -91-

இப்பதிகத்தில் -27-திவ்ய தேச மங்களா சாசனம் –
அரும் தேன்–சர்வ ரஸ/ பொன் -அழகும் செல்வமும் -அச்சோ ஒருவர் அழகிய வா -வைத்த மா நிதி –

————————————————

இரக்கமில் அரக்கன் சொல் கொள்ளாமல் சீதை
சிறை வைத்தும் வாயு மைந்தன் ஆற்றல் முறைப் பெண்டிர்
சேது பந்தம் பாரா பட்டான் எனத்தான் பொங்கத்தம்
ஓதும் கலியனை ஏத்து –92-

வாயு மைந்தன் ஆற்றல் பாரா -முறைப்பெண்டிர் பாரா -சேது பந்தம் பாரா -என்று அன்வயம் –

———————————————–

ஏத்து ராமன் தம்பி சுக்கிரீவன் அங்கதன் அனுமன்
கூத்தாய் குலமணி தூரமாடும் தோற்ற
அரக்கராக நீலன் இராமன் செயல் சொல் செஞ்சொல்
பொருந்தும் நம் சந்த மலர் -93-

சந்தமலர் –சந்தஸ் -ஒலி மிக்க பாடல்-அழகு வாசனை என்றும் பொருள்கள் உண்டே- கருத்து மிக்கு என்றுமாம் –

————————————————–

சந்தமலர் சேர் ஆகத்தான் கண் முன் தீம்பு செய்யும்
நந்தன் செய் வித்தகன் கண்ணனை சந்தியில் வா
அம்மம் உண்ண என்று அசோதையாய்க் கூவும் ஆலி நாடன்
செம்மலர்த்தாள் நம் சென்னிப் பூ -94-

ஆக்கம் -திரு மார்பு -ஸ்ரீ வைஜயந்தி வனமாலை திகழும்
செம்மலர்த்தாள் -செவ்வி -ஆர்ஜவம்
ஆர்ஜவமாவது -என் சென்னிக்கு உன் கமலமன்ன குரை கழல் என்றவன் தாளிணையை விட
ஆழ்வார் தம்முடைய தாளிணை -ருஜுத்வம் – மிக்கது -மோக்ஷ ஏக ஹேதுவாகையாலே –

——————————————————

பூங்குருந்து ஓசித்து சாடு உதைத்துப் பேய் நஞ்சுண்டு
தூங்குறி வெண்ணெய் கொல் தாமோதரனாம் ஆங்கு அவனை
ஆய்ச்சியாய்ச் சப்பாணி கொட்ட கூறும் ஆலி நாடன் தன்
வாய்ந்த தாள் நம் பற்று எங்கணும் -95-

இங்கும் அங்கும் நமக்கு பொருந்திய பற்று சரண் ஆழ்வார் திருவடிகளே –
சப்பாணி -ஸஹ பாணி -ஒரு கையேடு ஒரு கையைச் சேர்த்து ஒலி எழுப்புதல் –

———————————————

எங்கும் எவர்க்கும் மிக்கான் ஈசன் மிடுக்கு உடையான்
இங்கு அன்பார் பால் வேண்டற்பாடுடையான் அங்கு ஆய்ச்சி
கட்ட நீர்மையால் கட்டுண்டான் என் கலியன் நாம்
கட்கண்ணால் கான் பெருமான் -96-

மிடுக்கு -நித்ய சம்சாரிகளையும் நித்ய ஸூரி பரிஷத்தில் நிற்க வைக்கும் ஆற்றல்-

—————————————

மான வேறு ஏழ் செற்று காளியன் சகடம் பாய்ந்து உம்பர்
கோன் உண்டி கொண்டு வெண்ணெய்த் தான் விழுங்கும் கோன் செயல்
ஆய்ச்சியர் அசோதை பேச்சாய் நீலன் செய் சொல்
ஆய்வார்க்குத் துன்பம் புகாது -97-

மானம் -பெருமை -வழியிலும் உருவிலும் கோபத்திலும் பெரிதான
ஆழ்வாருடைய இன்னிசை மாலைகள் ஆராய்ந்து கற்பவர்க்கு இம்மையே இடர் இல்லை –
இறந்தால் தங்குமூர் அண்டமே கண்டு கொண்மின் -எனவே எங்கும் இன்பமேயாம் –

————————————————

காதலால் கண்ணன் புறம்பு கூடித் தான் முன் குறித்த
போது மறித்தான் எனத்தான் ஆயர் மாதராய்
ஊடி ஆற்றாமை சொல் குறையல் பிரான் பாடல்
பாடியாட ஒப்பர் ஓடும் புள் -98-

ஆழ்வார் அருளிச் செயல்களை–மொய்ம் மாம் பூம் பொழில் பொய்கை -3-5-படியே
பாடி ஆடுவார் பெரிய திருவடிக்கு ஒப்பாவாரே–கைங்கர்ய நிரதராவாரே –
வேதாத்மா -தம்முள் எம்பெருமானைக் கொண்டுள்ளது போலே அடியார் தம் மனத்தில்
எம்பெருமான் எழுந்து அருளி இருப்பான் என்னவுமாம் –
ஓடும் புள்ளேறி–திருவாய் -1-8-1-

——————-

புள்ளூர்தி ஆற்றல் எழில் சீர் மிடுக்கால் ஓர் பொருளாய்
உள்ளத்து ஓராமைப் பழ மொழியால் உள்ளி மால்
பால் அன்பு மிக்கது உரைத்துத் தான் அருள் வேண்டும்
நீலன் நம் திண்ணம் திரு -99-

புள்ளூர்தி-எழுவாய் –
பிள்ளை தன் கையில் கிண்ணம் ஓக்க
முன்றில் எழுந்த முருங்கையில் தேனா
அங்கையில் வட்டம்
தொண்டர் கைத்தண்டு
பெரு வழி நாவல் கனியிலும் எளியன்
எருக்கு இலைக்காக எழுமறி வோச்சல் கோழி வெண் முட்டைக்கு என் செய்வது குறுந்தடி
கவுள் கொண்ட நீராம்
ஆரழல் ஓம்பும் அந்தணன் தோட்டம் -போன்ற பழ மொழிகள்

—————————————–

திருமாலைத் தன்னுடன் கூட்டித் துன்பம் நீக்க
பரகாலன் கண்ட புட்கள் தம்மை இரந்து தான்
இன்னாமை நாயகியாய்க் கூறும் எழில் தமிழின்
இன்பமது என்றும் குன்றாது -100-

நாயகியாய் –தலைவி பாசுரமாக
செம்போத்து காக்கை குயில் கிளி கோழி இவற்றுடன் பல்லியையும் கண்டு
அவை செய்யும் நிமித்தங்களால் எம்பெருமானுடன் சேர்க்க வழி காண -மகள் பாசுரமாக –
ஆற்றாமையை வெளியிடுகிறார்
தொண்டீர் பாடுமினே -என்று இரட்டித்து -சிறு பாட்டாயும் போக்யமாகவும்
எங்கும் எப்பொழுதும் என்றும் குன்றாமல் இருப்பதில் வியப்பில்லையே –

——————————————————–

குன்றால் ஆ காத்துக் குவலயம் நோக்கும் அம்மான்
தென்றல் தொடக்கமானவை நலிகை என்று எண்ணி
ஆற்றாமைத் தான் விளைத்தான் என்னும் ஆலி நாடன் சொல்
பாற்றும் நமது பாவக் குன்று -101-

புயலுற வரை மழை பொழி தர மணி நிரை மயலுற வரை குடை எடுய்யா நெடியவர்
குவலயம் -உலகம் / நோக்கும் ஜகத் ரக்ஷண சிந்தை /
சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே என்று அன்றோ பல சுருதி –

———————————————————–

குன்றாமல் சேராதார்க்கு இன்னல் செய் வேய் மணி
அன்றில் ஆழி வாடையால் ஆற்றாது சென்று மாலைக்
காணத் தான் முற்படும் நால் கவியார் தானிணையைப்
பேணி நிலையாக மன்னும் -102-

தாளிணையை நிலையாகப் பேணி மன்னும் என்னவுமாம் -மன்னுதல் பொருந்துதல்

——————————————

மன்னு சீர் மால் தொண்டர் அன்றிச் செல்லாமை காட்ட நீலன்
தன் பதற்றம் ஆற்றாமை மால் திறத்து சென்று அமைக்கும்
வாசிகத் தொண்டுக்கு மகிழ்ந்தான் மலர்ப்பாதம்
வாசியின்றி நம் நிலையிடம் -103-

———————————–

நிலை அழியத் தான் மாறித் தொண்டரை நோக்கும்
தலைவன் தோ ற்றங்கள் எண்ணி பொலிவு எய்திக்
கூடுமின் மால் என்று கூறும் ஆலி நாடன் ஞாலத்தார்
கூடும் எளியனாம் எம்மான் -104-

தோற்றம் -விபவ அவதாரங்கள்
நிலை அழிதல்-பரத்வமான நிலையில் இருந்து மீன் ஆமை வராஹம் அன்னம் குப்ஜா மரம் போன்ற அவதாரங்கள் –

————————————

மான மேன்மை பேசி நீர்மை ஏசி இரண்டு சீரும்
ஆன தொண்டர்க்கு என்று அங்கு உகந்து எண்ணி ஊனமற
மால் உள்ளத்து உள்ளான் என்னும் கலியன் தாளிணை
பால் செய்யும் நீர் பத்திமை -105-

மான பெருமை -ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்கள் அனைத்திலும் பெருமையை யுடையவன் அன்றோ
கலிகன்றி உள்ளத்தின் உள்ளே உளன் கண்டாய் -வியக்தமாக அருளிச் செய்கிறார்
பத்திமை -ஒரே சொல் பக்தி -பக்தி மை -பத்தி சித்தாஞ்சனம் என்றுமாம் –

————————————————–

மைப்படி மாயன் காப்பு ஈசன் உற்றான் என்றுமற்ற
தேவு என்பார் உண்டு உமிழப் பட்டாராய் கை விட்டு
ஆதியானை ஏத்தும் எனும் ஆலி நாடன் அந்தமிழை
ஓதி சேரும் மால் நீள் ஆகத்து -106-

மைப்படி -அஞ்சன மா மணி வண்ணன் -முகில் உருவம் எம் அடிகள் உருவம் தானே
உற்றான் -பிராப்தி யுடையவன் -பிதா ரக்ஷகச் சேஷீ பார்த்தா –இத்யாதி
நீள் ஆகம் –வரைபுரை திரு மார்பு -மணி மிகு மார்பிலே குரு மா மணியாய் அணையும் வஸ்து –

————————————————-

நீள் நகர் மாற்கு உற்ற காரணத்தால் புறம்பர் நீர்
நாண் இன்றி ஆட்பட்டு வீழாதே பேணி அடி
யார்க்கு இனியன் தொண்டு பூண்டு வாழும் எனும் ஆலி நாடன்
ஆர்ந்த நம் தீ வினைக்கு மாற்று -107-

தாழ்ச்சி மாற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி
நச்சு நல் மா மருந்தும் ஆழ்வார் –

——————————————

மாற்ற வேண்டும் தம் பிறவிக்கு அஞ்சி ஒண்ணாது தன்னால்
மாற்ற மால் வல்லான் என்று அவன் அருளை பேற்றுக்கா
நாடும் ஆலி நாடன் தாள் நாடி என் தன் நெஞ்சமே
கூடி வாழ் நையாது வாடாது -108-

தாள் நாடி கூடி வாழ் -கொக்கு வாயும் படு கண்ணியும் போலே நமது சென்னி
ஆழ்வார் திருவடித் தாமரைகளில் சேரப் பெறுவதே வாழ்ச்சியாகும்
நையாது வாடாது கூடி வாழ்வோம்

—————————————————————-

வாடி முன் வீழ் பொருட்க்கு மால் அருளால் மந்திரத்தின்
பீடு பொருள் கண்டு கலியன் தொண்டீர் நாடும் எந்தை
சீர் குடந்தை என் அமுதம் தாயில் ஏற்றம் செய் சொல்லைச்
சேர உயிர் வாலிய தாம் -1-

—–

மால் நீர்மைக்கு எல்லை உகந்த ஊர் நூற்று எட்டு
சால நண்ணி யுள்ள கணக்கு இனிதாய் ஆலி நாடன்
செய்யும் திரு மொழி நூற்று எட்டும் ஓதிடுவார்
எய்துவர் வைகுந்தம் ஏய்ந்து–

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் சம்பத் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –

January 22, 2018

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் –26-ஸ்லோகங்கள் —
ஸ்ரீ த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -130-ஸ்லோகங்கள் சாரம் –

சாம வேதம் –1000-சாகைகள் / ரிக் வேதம் -21-சாகைகள் / யஜுர் வேதம் -100-சாகைகள் / அதர்வண வேதம் -1-

————————————————–

ஸ்ரீ யபதியாய்
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணைக நாதனாய்
அவாப்த ஸமஸ்த காமனாய்
ஸர்வேஸ்வரனான
திரு வேங்கடமுடையான் திரு அவதாரமாகவும்
தத் திவ்ய கண்ட அவதாரமாகவும்
ஸூ ப்ரஸித்தராய்
ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் காட்ட -திரு வருளால்
அன்றே அடைக்கலம் கொண்ட நம் அத்திகிரித் திருமால் -என்கிறபடியே
பேர் அருளாளன் அருள் பெற்று –

காவலர் எங்கள் கிடாம்பிக் குலபதி அப்புளார் தம் தே மலர்ச்சேவடி சேர்ந்து பணிந்தவர்
தம் அருளால் நா வலரும் தென் வட மொழி நல் பொருள் பெற்று
விம்சத் யப்தே விஸ்ருத நாநா வித வித்ய த்ரிம்ச த்வாரம் ஸ்ராவித ஸாரீரக பாஷ்யம் –என்கிறபடியே
இருபது திரு நக்ஷத்ரத்திலே அதிகத ஸகல வித்யர் -என்றும்
முப்பது தரம் ஸ்ரீ பாஷ்யத்தை ஸச் சிஷ்யர்களுக்கு அருளினார் -என்றும்
ஸர்வ ஜனங்களாலே ஸ்லாக நீயராய்

ஸ்ரீ ரெங்கராஜ திவ்ய ஆஜ்ஜா லப்த வேதாந்த ஆச்சார்ய பதராய்
ஸ்ரீ பெரிய பிராட்டியாராலே ஸர்வ தந்த்ர ஸ்வ தந்திரர் என்றும் திரு நாமத்தைப் பெற்றவராய்
கவி கதக குஞ்சர கண்டீரவர் என்று பிரதி திஸம் ப்ரக்யாத வைபவரான
சீராரும் தூப்புல் திரு வேங்கடமுடையான்

உயர்வற உயர் நலம் உடையவனாய் அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஸ்ரீ யபதியால்
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற நம்மாழ்வார் அருளிச் செய்ததாய்
ஸர்வாதிகாரமாய்
ஸர்வ ஸாஸ்த்ர ஸங்க்ரஹ ரூபமாய்
முமுஷுக்களுக்கு அவசியம் உபாதேயமான திராவிட உபநிஷத்தான திருவாய் மொழியின் தாத்பர்யங்களை
மந்த மத்தியிலும் எளிதில் அறிந்து அனுசந்தித்து உஜ்ஜீவிக்கும் படிக்கு

எம்பெருமானார் ஸம்ஸார அக்னி விதீபந வ்யபகத ப்ராணாத்ம ஸஞ்ஜீவனமான பரமாச்சார்ய வசன அம்ருதத்தை
பவ்ம ஸூ மநோ போக்யமாகச் செய்து அருளினால் போலே
அழகிய மணவாளன் –ஆழ்வார் –எம்பெருமானார் -நியமனப்படிக்கு
ஸஹ்ருதய ஹ்ருத யங்க மங்களான பத்யங்களாலே
த்ராமிட உபநிஷத் சாரம் -என்ற பெரு பிரபந்த ரத்நத்தை அருளிச் செய்தார் –

இதில்
ஸதக ஸங்கதிகளும்
ஸதக குணங்களும்
தத் உப பாதங்களான தசக குணங்களும்
மற்றும் உள்ள விசேஷ அர்த்தங்களும்
ஸம் ஷிப்தமாய் இருக்கும் –

இது தான் மஹா ரத்ன கர்ப்பமான மாணிக்கச் செப்பு போலவும் –
மஹா அர்த்த கர்ப்பிதமான திரு மந்த்ரம் போலவும்
கம்பீர
மதுரமாய்
ந அதி சங்ஷேப விஸ்தரம் – என்கிறபடியே
அநபேஷித விஸ்தரம் -அபேக்ஷித ஸங்கோசம் – முதலிய தோஷம் இன்றிக்கே
சார பூதமாய் இருக்கையாலே ஸாரம் -என்று பெரியோர்கள் கொண்டாடும்படியான ஒன்றாய்த்து –

———-

முதல் ஸ்லோகத்தாலே
வஸ்து நிர்தேச ரூப மங்களா ஸாஸனம் செய்து அருளா நின்று கொண்டு
திருவாய் மொழியின் ஸதக குணங்களை பிரகாசிப்பித்து அருளுகிறார் —

சேவா யோக்யோ அதி போக்யா ஸூபாஸ் உபகதனு சர்வ போக்ய அதிசய
ஸ்ரேயஸ் தத் ஹேதுதத பிரபதன சுலபோ அநிஷ்ட வித்வம்ச சீலன்
பக்த சந்த அனுவர்த்தி நிருபாதிக ஸூ ஹ்ருத் சதபத அவ்யயம் சஹாயா
ஸ்ரீ மன் சர்வ உசிதாம் உபநிஷாதி மிஷத்யேஷ கதா சடைர்மா –1–

1-சேவா யோக்யோ -ஸ்ரீ யபதியே சேவா யோக்கியன்
2-அதி போக்யா -ஒப்பார் மிக்கார் இல்லாத அதி போக்யன்
3-ஸூபாஸ் உபகதனு –ஸூ பாஸ்ர்ய திவ்ய மங்கள விக்ரஹம் உடையவன்
4-சர்வ போக்ய அதிசய –சர்வ போக வஸ்துக்களையும் பக்தர்களுக்காக யுடையவன்
5-ஸ்ரேயஸ் தத் ஹேதுதத -சகல புருஷார்த்தங்களும் அளித்து அருளுபவன்
6-பிரபதன சுலபோ –பிரபன்னர்களுக்கு சர்வ ஸூலபன்
7-அநிஷ்ட வித்வம்ச சீலன் -சர்வ சக்தன் -பிரதிபந்தங்களை நிரசித்து தன் பேறாக கலப்பவன்
8-பக்த சந்த அனுவர்த்தி -யாத்தொத்தகாரி -ஆஸ்ரித பாரதந்தர்யம் தனது ஸ்வா தந்திரம் அடியாக ஏறிட்டுக் கொள்பவன்
9-நிருபாதிக ஸூ ஹ்ருத் -சர்வருக்கும் சர்வ காலத்திலும் சர்வ அவஸ்தையிலும் நிருபாதிக ஸூஹ்ருத்
10-சதபத அவ்யயம் சஹாயா -அர்ச்சிராதி கதி மார்க்கம் பக்தர்களையும் பிரபன்னர்களையும் கூட்டிச் செல்பவன்

ஸ்ரீ மன் சர்வ உசிதாம் உபநிஷாதி மிஷத்யேஷா காதா சடைர்மா –
இப்படி பத்து அர்த்தங்களையும் உபநிஷத்துக்கள் படியே ஸ்ரீ சடகோபர் பத்து பத்தாலும் அருளிச் செய்கிறார் –

சேவ்யத்வாத் போக்யா பாவாத் சுப தனு விபாவாத் சர்வ போக்யாதிகத்வாத்
ஸ்ரேயஸ் தத் ஹேது தானாத் ஸ்ரீ தவிவ சதய ஸ்வ ஆஸ்ரித அநிஷ்ட ஹரத்வாத்
பக்த சந்த அனுவ்ருத்தேத் நிருபாதிக ஸூ ஹ்ருத் பாவத்தாத சத் பத அவ்யயம்
சஹாயாச்சா ஸ்வ சித்தே ஸ்வயமிக கரணாம் ஸ்ரீ தர ப்ரத்யபாதி –ஸ்ரீ த்ராமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி –ஸ்லோகம் -8-

———————————–

இரண்டாம் ஸ்லோகத்தால்
ஸதக அர்த்தங்களை சங்கதி அருளிச் செய்கிறார் –

அத்யே பஸ்யன் உபாயம் ப்ரபுமிஹ பரம ப்ராப்ய பூதம் த்விதியே
கல்யாண உதாரமுருத்தே த்விதார்யமிதாமிதி ப்ரேக்க்ஷமணா த்ரீதீயே
ஐஸ்வர்யதேஸ் சதுர்த்தே விஷ மது துல்ய அநந்ய போக்யத்வம் இச்சன்
ஷட்பிஸ் ஸ்வாம் பஞ்சமத்யா அனிதர கதி தாமாக காக்ஷே முனீந்திரா –2-

அத்யே பஸ்யன் உபாயம் -ஒருவனே உபாயம்
ப்ரபுமிஹ பரம ப்ராப்ய பூதம் த்விதியே-அவனே பரம ப்ராப்யமும் ஆவான்
கல்யாண உதாரமுருத்தே த்விதார்யமிதாமிதி ப்ரேக்க்ஷமணா த்ரீதீயே -சுபாஸ்ரய திருமேனி பற்றி
அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் பெற நமக்கு உபதேசம் மூன்றாவதில்
ஐஸ்வர்யதேஸ் சதுர்த்தே விஷ மது துல்ய அநந்ய போக்யத்வம் இச்சன் -விஷயாந்தரங்கள் விஷம் கலந்த மது போல்வன
ஷட்பிஸ் ஸ்வாம் பஞ்சமத்யா அனிதர கதி தாமாக காக்ஷே முனீந்திரா –மேல் உள்ள ஐந்து முதல் பத்து வரை
அவனே அவனை பெற உபாயம் என்று சடகோப முனி அருளிச் செய்கிறார் –

பிராச்சே சேவா அனுகுனியாத் ப்ரபுமிக சடகே மாம்ஸ்த முக்தே உபாயம்
முக்த ப்ராப்யம் த்விதீய முனிர் அனுபுபதே போக்யதா விஸ்தாரன
ப்ராப்யத்வ உபாய பாவவ் சுபாஸ் உபகதனவ் இதயவாதித் த்ரயே
அநந்ய ப்ராப்யாஸ் சதுர்த்தே சம்பவித்ததரை அபி அநந்ய உபாயஹ–தாத்பர்ய ரத்னாவளி -6-

தேவா ஸ்ரீமான் ஸ்வ சித்தே காரணாம் இதி வதன் ஏகம் அர்த்தம் ஸஹர் –இதுவே ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரார்த்தமும் –

ஆக
இப்பிரபந்தத்துக்கு ப்ரதிபாத்யன் உபாயத்வே -உபேயத்வே -விசிஷ்டனான ஸ்ரீ யபதி
அதில்
முதல் பத்தில் சேவ்யத்வாத் உபாயத்வமும்
இரண்டாம் பத்தில் போக்யத்வாத் உபே யத்வமும்
மூன்றாம் பத்தில் இவ் உபாயத்வ உபேயத்வ யுக்த திவ்ய மங்கள விக்ரஹ யோகமும் –சொல்லப்படுகிறது –
நாலாம் பத்தில் உபேயத்வத்தை ஸ்தீகரிக்கிறது
மேல் ஆறு பத்துக்களும் உபாயத்வத்தை ஸ்தீகரிக்கின்றன-என்றதாய்த்து –

———————————-

ஸேவ்யத்வ ஸ்தாபகங்களாக முதல் பத்தில் பத்து திருவாய் மொழிகளாலும் ப்ரதிபாதிதங்களான
பத்து குணங்களையும் அடைவே ஸங்க்ரஹித்து அருளுகிறார் –

பரம் நிர் வைஷம்யம் சுலபம் அபராத ப்ரஸஹனம்
ஸூசீலம் ஸ்வ ஆராதனம் சரச பஜனம் ஸ்வார்ஜவ குணம்
ஸூ சாத்ம்யஸ் ஸ்வ ஆனந்த ப்ரதம் அநக விஸ்ரானன பரம்
முகுந்தம் நித்யயன் முனிரதீ ஜகாவாத்ய சடகே–3-

பரம் –பரத்வம் அனைத்திலும்
நிர் வைஷம்யம் -சமோஹம் ஸர்வேஷாம்
சுலபம் -பக்தர்களுக்கு ஸூலபன்
அபராத ப்ரஸஹனம் –அபராத சஹத்வம் உண்டே
ஸூசீலம் –எல்லையில்லா ஸீலவான் -நிகரில் புகழ் –
ஸ்வ ஆராதனம் சரசபஜனம்– ஆராதனத்துக்கு எளியவன் -ஸூ ஸூகம் கர்த்தும் பஜனமும்
ஸ்வார்ஜவ குணாம்–செம்மை -ஆர்ஜவ குணம்
ஸூ சாத்ம்யஸ் ஸ்வ ஆனந்த ப்ரதம்–தன்னையே தந்து அருளுவான்
அநக விஸ்ரானன பரம் –அகில ஹேய ப்ரத்ய நீகன் -கல்யாணை கதானன்
முகுந்தம் நித்யயன் முனிரதீ ஜகாவாத்ய சடகே-

ஆதவ் இதம் பரத்வாத் அகில சமத்ய பக்த ஸுலப்ய பூம்னா
நிஸ் சேஷக சஹத்வாத் க்ருபணா சுகதநாத் சக்யா சம்ராதானத்வாத்
ஸ்வா துஸ் உபாசனத்வாத் ப்ரக்ருதிர் ருஜுதயா சாத்ம்ய போக்ய பிரதத்வாத்
அவ்யாஜோதரா பாவாத் அமானுத சடகே மாதவம் சேவானியம் –ரத்னாவளி -22-

1–பரத்வம்-உயர்வற –நிரதிசய கல்யாணமான சர்வத்துடன் கூடி இருக்கை /
சேதன அசேதன விலக்ஷண ஸ்வரூபம் / சர்வமும் இவன் அதீனம் / சரீராத்மா பாவம் –
2–நிர் வைஷம்யம் -வீடுமின் முற்றவும் –
3–பக்த ஸூலபன் -பத்துடை அடியவர்க்கு எளியவன்
4–அபராத சஹத்வம்
5—ஸுசீல்யம்
6—ஸூலப ஆராதனன்
7–ச ரஸ போக்ய பஜனம்
8—ஆர்ஜவம்
9–சாத்மிக போக பிரதன்-
10–அநக விஸ்ரானன பரம்

அவ்யாஜ உதார சீலத்தவம் -பதிக சாரம்

முதல் திருவாய் மொழியிலே
எம்பெருமான் ஸ்வரூப ரூப குண விபவாதிகளாலே ஸர்வ உத்க்ருஷ்டன் ஆகையால் ஸர்வ ஸ்மாத் பரன் -என்கிறார் –

இரண்டாம் திருவாய் மொழியிலே
பகவத் ஏக போகத்வ உபாயமான பக்தி யோகத்தை சம்சாரிகளுக்கும் உபதேசிக்கையாலே ஸர்வ சமன் என்று அருளிச் செய்தார்

மூன்றாம் திருவாய் மொழியிலே
அவன் தான் பக்த ஜனங்களால் கட்டுண்ணும் படி எளியனாய் இருப்பவன் ஒருவன் ஆகையால் சர்வ ஸூலபன் என்கிறார்

நான்காம் திருவாய் மொழியிலே
ஸர்வ த்ரஷ்டா ந கணயதி தேஷாமப க்ருதிம் -என்கிறபடியே அவன் தான் ஸர்வஞ்ஞனாய் இருந்து வைத்தும்
ஆஸ்ரித அபராதங்களைக் கணிசியாத ஒருவன் என்று கொண்டு அபராத சஹன் என்கிறார்

ஐந்தாம் திருவாய் மொழியில்
அயர்வரும் அமரரர்கள் அதிபதியான தன்னை சம்சாரிகளும் -வெண்ணெய் தொடுவுண்ட கள்வா -என்னிலும்
அது கொண்டு ஆபி முக்யம் பண்ணி
நிஷா தாநாம் நேதா கபி குல பதி காபி சபரீ குசேல குப்ஜா ஸா வ்ரஜ யுவதயோ மால்ய க்ருததி
அமீஷாம் நிம் நத்வம் வ்ருஷ கிரி பதேருந்நதி மபி ப்ரபூதைஸ் ஸ்ரோதோபி பிரசவம் அநு கம்பே சமயஸி -என்கிறபடி
தன அபார காருண்யத்தாலே தன் மேன்மை பாராதே அவர்களோடே ஒரு நீராகக் கலக்கும் ஸ்வ பாவனாய்
இருப்பான் ஒருவன் என்று கொண்டு நிரதிசய ஸுசீல்ய ஜலதி என்று அருளிச் செய்தார்

ஆறாம் திருவாய் மொழியில்
அவன் ஆராதனத்துக்கு என்று த்ரவ்யவ்யயம் தேஹ ஸ்ரமம் முதலியவை வேண்டாதபடி ஸூலபமான குஸூம ஸலீலாதிகளைக் கொண்டு பூஜிக்கிலும்
மாதங்க மானுஷாபீ ததா ந விசேஷ ஹேது -என்கிறபடி அதிகாரி நியமம் பாராதே -இது யோக்யம் இது அயோக்யம் என்று பாராதே
அண்வ ப்யு ஹ்ருதம் பக்தை ப்ரேம்ணா பூர்யேவ மே பவத் -என்று உகப்பவன் ஒருவன் ஆகையால் ஸ்வாராதன் என்று அருளிச் செய்தார்

ஏழாம் திருவாய் மொழியிலே
எம்பெருமான் வைப்பான் மருந்தாம் -1-7-2-என்று ஆஸ்ரிதற்கு சேமித்து வைக்கும் நிதி போலே தன்னை
இஷ்ட விநியோக அர்ஹனாக்கி வைப்பவன் ஒருவன் ஆகையால் அவனுடைய போஜனம் அம்ருத பானம் போலே
ச ரசமாய் இருக்கும் என்று கொண்டு ச ரஸ பஜனன் என்று அருளிச் செய்தார்

எட்டாம் திருவாய் மொழியில்
எம்பெருமான் ஆஸ்ரிதர் அபேக்ஷித்தபடி அடிமை கொண்டு அனுபாவ்யன் ஆவான் ஒருவன் என்று கொண்டு ஆர்ஜவ குணத்தை அருளிச் செய்தார்

ஒன்பதாம் திருவாய் மொழியிலே
லஷ்மீ யசோதா கருடாதிகளில்பண்ணும் ஸம்ச்லேஷ பிரகாரங்கள் எல்லாவற்றையும் பண்ணி பூர்வ பூர்வ அனுபவம் சாத்மிக்க சாத்மிக்க –
மேல் மேல் என அனுபவிப்பான் ஒருவன் என்று கொண்டு சாத்ம்ய போக பிரதன் என்று அருளிச் செய்தார்

பத்தாம் திருவாய் மொழியிலே
அவன் தான் உபாய லாகவமும் உபேய கௌரவமும் பாத்ர அபகரஷமும் பாராதே ஸ்வாத்ம ப்ரதானம் பண்ணும்
ஸ்வ பாவன் என்று கொண்டு மஹா உதாரன் என்று அருளிச் செய்தார்

இப்படி
சர்வ ஸ்மாத் பரத்வாதிகளாலே எம்பெருமான் ஸேவ்யன் –
அத ஏவ மோக்ஷ உபாயம் என்று முதல் பத்திலே அருளிச் செய்தார் ஆயிற்று –

—————————

இனி காரணத்வம் அபாத்யத்வம் உபாயத்வம் உபேயதா –என்று சொன்ன சாரீரக ஸாஸ்த்ர அர்த்தத்தை
பிரதம த்விதீய தசகங்களாலே ப்ரதிபாதித்து அருளினார் என்கிறார் –

த்விகாப்யாம் த்வி அஷ்டாங்க்ரி துரதிகமன் இதிஸ்த புடித
யதாந்த்ய மீமாம்ச ஸ்ருதி சிகாரதத்வம் வ்யவர்ணுத
ததாதவ் காதாபிர் முனீர் அதி கவிம் சாபிரிக நா
க்ருதி சாரா க்ரஹாம் வ்யாதராதிக சமக்ரய க்ருபயா —-4

முதல் ஆறு பாசுரங்கள்-1-1-1-தொடங்கி -1-1–6- -சமன்வய அத்யாய அர்த்தங்கள் -ஜகத் காரணன் -சேதன அசேதன விலக்ஷணன் –
அகில ஹேய ப்ரத்யநீகன் -கல்யாணைக குண விசிஷ்டன் /அந்தர்யாமி -நியமனம் -ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி அவன் அதீனம் –
மேலே -1–1–7-தொடங்கி -1–1–9-மூன்றும் அவிரோத அத்யாயம் அர்த்தங்கள் –சரீராத்மா பாவம்
மேலே -1–2–1-தொடங்கி -1–2–9-ஒன்பதும் சாதனா அத்யாயம் அர்த்தங்கள்
மேலே -1-2–10-தொடங்கி -1–3–5-ஏழும் பல அத்யாயம் அர்த்தங்கள் –

ஜகத் காரணத்வம் -முதல் அத்யாய அர்த்தம்
தத் பாத்யத்வம் –இரண்டாம் அத்யாய அர்த்தம்
முமுஷு உபாஸ்யத்வம் -மூன்றாம் அத்யாய அர்த்தம்
முக்த ப்ராப்யத்வம் -நான்காம் அத்யாய அர்த்தம்
நான்கையும் காட்டி அருளி
முதல் திருவாய் மொழியில்
முதல் ஆறு பாட்டுக்கள் பிரதம அத்யாய அர்த்தங்கள்
மேல் ஐந்தும் த்விதீய அத்யாய அர்த்தங்கள்
இரண்டாம் திருவாய் மொழியில்
ஒன்பது பாட்டுக்கள் த்ருதீய அத்யாய அர்த்தங்கள்
மேல் இரண்டும் சதுர்த்த அத்யாய அர்த்த ஸங்க்ரஹம்

அன்றிக்கே
முதல் திருவாய் மொழியில் பூர்வ த்விக அர்த்தங்கள்
இரண்டாம் திருவாய் -ஒன்பது பாசுரங்கள் -த்ருதீய அத்யாய அர்த்தங்கள்
மேல் பட்டாலும்
மூன்றாம் திருவாய் மொழி -வணக்குடைத் தவ நெறி -1-3-5- பாட்டு அளவாக
சதுர்த்த அத்யாய அர்த்தங்கள் சங்க்ருஹீதம்

ரத்நா வளியிலும்
ஆதவ் சாரீரிக அர்த்த க்ரமம் இஹ விசதம் விம்சதிர் வக்தி சாக்ரா-என்று அருளிச் செய்தது –

——————————

முதல் பத்துக்கும் இரண்டாம் பத்துக்கும் சங்கதி அருளிச் செய்கிறார் இதில் –

பரத்வாத்யை இதம் பரிசரணா சக்தோ குண கணைஹி
ப்ரபும் சேவா யோக்யம் பிரதம சதகே வீக்ஷ்ய வரதம்
தமேவ ஸ்வாத்யர்த ப்ரியமத ச போக்தும் வியவசிதோ
வரேண்யத்வம் தஸ்ய பிரதம வரணீயம் ப்ரதயத்தி –5–

பேரருளாளன் -அமரர்கள் அதிபதி இமையோர் தலைவன் -ஒருவனே பராத்பரன் –
அவனே பஜனீயத்துக்கு பிரதி சம்பந்தி -பரிசரண சக்தோ குண கணை பிரபு –
வரதம் பிரதம வரணீயம் இதி வியவஸ்திதோ தஸ்ய வரேண்யத்வம் ப்ரதயதி
சேவா யோக்கியன் பிரதம வரணீயன்-இரண்டுமே பேரருளாளனுக்கே பொருந்தும் –

இப்படி முதல் பத்தில் ஸர்வ ஸ்மாத் பரத்வாதி குண தசகத்தாலும் எம்பெருமான் ஸேவ்யன் என்று உபபாதித்து அருளி
அவனே மோக்ஷ உபாயம்
அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -1-1-1-என்று
தம் திரு உள்ளத்தை அநு சாஸித்து நின்றாராய் இருந்தது
மேல்
இப்படி ஸேவ்யத்வாத் உபாய பூதனான எம்பெருமான்
உபேயனுமாய் இருக்கும் என்று கொண்டு
தமக்கு நிரதிசய பிரியனான அவனை அனுபவிக்கக் கடவராய்
அதுக்கு உறுப்பாக அவனுடைய அதி போக்யத்வத்தை இரண்டாம் பத்தில் பிரகாசிப்பித்து அருளுகிறார் –

இங்கு வரதம் என்று அருளிச் செய்தது
வாரண வெற்பில் மழை முகில் போல் நின்ற –என்றும்
காலே ந கரி சைல கிருஷ்ண ஜலத -என்றும் அருளிச் செய்தபடி –
கரி கிரி மேல் நின்று அனைத்தும் காக்கின்ற பேர் அருளாளனை –

இதன் கருத்து என் என்னில் –
உடையவர் ஸ்ரீ பாதத்து முதலிகள் திருவாய் மொழியை அனுசந்தித்து
ஆழ்வார் எம்பெருமானார் எல்லாரையும் பாடினாராய் அருளிச் செய்தது -நம் பேர் அருளாளானைப் பாடிற்று இல்லையே -என்ன
உடையவரும் -முதல் பத்து முழுவதும் நம் பேர் அருளாளனை இறே பாடிற்று -என்ன
இது எங்கனே அறியல் ஆய்த்து -என்ன
முதல் அடியிலே அயர்வறும் அமரர்கள் அதிபதி என்கையாலும்
மேல் பல இடங்களில் நித்ய ஸூரி நாயகத்வத்தையே அருளிச் செய்கையாலும் –
நம் பேர் அருளாளனே தேவ பிரான் ஆகையாலும் அறியலாய்த்து -என்ன –

தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3-என்றும்
தென் குறுங்குடி நின்ற -1-10-9-என்றும் அருளிச் செய்தது இல்லையோ என்ன –
ஆகில் என் -நம் பேர் அருளாளனுக்கே வேங்கடாசல வாஸித்வம் திருக்குறுங்குடி வாஸத்வம் ஆகிற சம்பத்தைச் சொல்லுகிறது என்ன
அது என் -அவர்களுக்கே நித்ய ஸூரி நாயகத்வம் சொல்ல அடுக்காதோ -என்ன

நம் பேர் அருளாளன் ஸந்நிதியில் ஆழ்வார் திவ்ய மங்கள விக்ரஹத்தாலே முதல் பத்து
பேர் அருளாளனையே பாடிற்று என்னும் இடம் ஸூ வியக்தம் அன்றோ –
திரு மார்பில் ஞான முத்திரை வைத்து எழுந்து அருளி இருக்கிறது –
முன்பு கலியன் மற்றை திவ்ய போலே இடது திருக்கை திரு மடியிலும் -வலது திருக்கை ஞான முத்ரையாகவும்
ஆழ்வார் திவ்ய மங்கள விக்ரஹத்தை உகந்து அருளிப் பண்ணி வைக்க முயல
மூன்று தடவையும் இப்படியே ஆகி -ஆழ்வார் அங்கெ ஒருவர் இடம் ஆவேசித்து
இதை இங்கனேயே நம் பேர் அருளாளன் சந்நிதியில் பிரதிஷ்டை செய்க -என்ன
தம் திரு உள்ளத்துக்கு அனுசந்தானம் பண்ணும் படி மேல் உள்ளாறும் அறியலாம் படி –
இவ்வர்த்தம் திருமாலை ஆண்டான் அருளிச் செய்ய முதலிகள் போர விஸ்மிதர் ஆனார்கள் –

ஆக இப்படி அயர்வரும் அமரர்கள் அதிபதி என்று தொடங்கி
மணியை வானவர் கண்ணனை –1-10-11-என்னும் அளவாக பேர் அருளாளனையே பேசிற்று என்னும் இடம் ஸூ வ்யக்தம் –

——————————–

இதில் போக்யத்வ ஸ்தாபகங்களாக -இரண்டாம் பத்தில் பத்து திருவாய் மொழிகளாலும்
ப்ரதிபாதிதங்களான பத்து குணங்களையும் ஸங்க்ரஹித்து அருளிச் செய்கிறார் –

த்வதீயே அதி கிலேச க்ஷண விரஹ முத்துங்க லலிதம்
மில்லத் சர்வஸ் வாதம் வியஸன சமனம் ஸ்வாப்தி முதிதம்
ஸ்வ வைமுக்யத் ரஸ்தம் ஸ்வ ஜன ஸூஹ்ருதம் முக்தி ரசதம்
ஸ்வ கைங்கர்யோதேஸ்யம் சுபகச விதஸ்தம் நிரவிசத் –6-

முதல் பத்தால் ஆஸ்ரயணீயன்-மோக்ஷ உபாயம் அவனே /
இரண்டாம் பத்தால் -இவன் அனுபவ போக்யன் –பரம புருஷார்த்தம் அவனே

அதி கிலேச க்ஷண விரஹ –வாயும் திரை –
ஸர்வஸ் ஸ்மாத் பரன்-உத்துங்க லலிதம் -திண்ணன் வீடு –
சர்வ மதுர ரஸ ஊனில் வாழ்
ஆஸ்ரித வியஸன சமன ஸ்வபாவம் -ஆடி யாடி
ஸ்வ ஆஸ்ரித பிராப்தி ஸந்துஷ்டன் -ஆஸ்ரித சம்ச்லேஷ பிரியன் -அந்தாமத்து அன்பு
ஆஸ்ரித விரகம் அஸஹத்வம் -வைகுந்த
சம்பந்த சம்பந்திகளுக்கும் ஸூஹ்ருத் -கேசவன் தமர்
முக்த சாரஸ்யம் ததா –அணைவது அரவணை மேல்
ஸ்வ கைங்கர்யோதேஸ்யம்-எம்மா வீடு
சுப நிலையன்-அதி போக்யன் -கிளர் ஒளி

முதல் திருவாய் மொழியில் -எம்பெருமான் தன்னைப் பிரிந்தாருக்கு நித்ரா விச்சேதாதிகளைப் பண்ணுமவன் ஆகையாலே
அவனுடைய க்ஷண மாத்ர விரஹமும் அத்யஸஹம் என்று கொண்டு அதி கிலேச க்ஷண விரஹன் -என்று அருளிச் செய்தார்

இரண்டாம் திருமொழியில் -எம்பெருமான் மனுஷ்ய ஸஜாதீயனாய் அவதரித்து இருக்கச் செய்தேயும்
ஸர்வ ஸ்மாத் பரனாய் இருக்கும் என்று கொண்டு
லலித உத்தங்கன் என்று அருளிச் செய்தார் –

மூன்றாம் திருவாய் மொழியில் எம்பெருமான் ஸர்வ ரஸ சமாகாரம் போலே ரஸ்யனாய்க் கொண்டு தம்மோடு கலைக்கையாலே
அவன் தான் ஸமஸ்த மதுர பதார்த்தங்களினுடைய ரஸத்தை யுடைத்தான போக்யதையை யுடையவன் என்று கொண்டு
ஸர்வ ஆஸ்வாத ஆஸ்ரயன் -என்று அருளிச் செய்தார் –

நான்காம் திருவாய் மொழியிலே -ஆஸ்ரிதருடைய ஆபத்தில் வந்து முகம் காட்டி
வ்யஸநங்களைப் என்று கொண்டு வியசன சமனன் என்று அருளிச் செய்தார்

ஐந்தாம் திருவாய் மொழியில் –
யதா தாதம் தசரதம் யதா ஐஞ்ச பிதாமஹம்
ததா பவந்தம் ஆஸாத்ய ஹ்ருதயம் மே ப்ரஸீததி -என்கிறபடியே
தான் ஆஸ்ரிதரோடு ஸம்ஸ்லேஷிக்கப் பெறில் நிரதிசயமாக ஆநந்திக்கும் ஸ்வ பாவன் என்று கொண்டு
ஸ்வ பிராப்தி ஸம் ப்ரீதிமான் -என்று அருளிச் செய்தார் –

ஆறாம் திருவாய் மொழியில் எம்பெருமான் -வளவேழ் உலகில் போலே ஸ்வ அநர்ஹதா அநுசந்தானாதிகளாலே
ஆஸ்ரிதற்கு தன் பக்கல் வைமுக்யம் வருகிறதோ என்று வியாகுலனாய் இருக்குமவன் ஆகையாலே –
ஸ்வ விரஹ சகிதன் என்று அருளிச் செய்தார் –

ஏழாம் திருவாய் மொழியிலே -பெருமாளுக்கு ஸ்ரீ விபீஷணன் பக்கல் ஓரம்
க்ரியதாம் அஸ்ய ஸம்ஸ்காரா மமாப்யேஷ யதா தவ –என்று ராவணன் அளவும் சென்றால் போலே
எம்பெருமான் ஆஸ்ரிதர் பக்கல் அபி நிவேசத்தால் தத் சம்பந்தி சம்பந்திகளையும் விஷயீ கரித்து
அருளுமவன் ஆகையாலே ஸ்வ ஜன ஹிதன் -என்று அருளிச் செய்தார் –

எட்டாம் திருவாய் மொழியில் -எம்பெருமான் முக்தி தசையில் ரஸாவகனாய் இருக்கும் என்று கொண்டு
முக்தி ஸாரஸ்ய ஹேது என்று அருளிச் செய்தார் –

ஒன்பதாம் திருவாய் மொழியில் -உன் கைங்கர்யமே எனக்கு உத்தேச்யம் என்று கொண்டு
பரவா நஸ்மி காகுத்ஸத த்வயி வர்ஷ சதம் ஸ்திதே
ஸ்வயம் து ருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -இத்யாதிகளைப் போலே ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகையாலே
கைங்கர்ய உத்தேச்யன் என்று அருளிச் செய்தார்

பத்தாம் திருவாய் மொழியில் எம்பெருமான் தம்மோடு ஆஸ்ரிதர் நினைத்த வகை எல்லாம் பரிமாறி
அனுபவிக்கும் படி தர்ச நீயமான தெற்குத் திருமலையில் நின்று அருளுகையாலே
ஸூப ஸவித கிரி நிலையன் -என்று அருளிச் செய்கிறார்

இப்படி அத்ய அஸஹ்ய க்ஷண விரஹாதிகளாலே அத்யந்த போக்யனான எம்பெருமானை –
ஆழ்வார் அனுபவித்துத் தலைக் கட்டுகையாலே
போக்யத்வேன முக்த ப்ராப்யன் என்று இரண்டாம் பத்தில் அருளிச் செய்தார் என்கிறார் –

—————————

இதில் கீழ் பத்துக்களோடு மேல் பத்துக்களின் சங்கதி அருளிச் செய்கிறார் –

உபாயத்வைகாந்தம் ப்ரதமமிஹ சேவ்யத்வமுதிதம்
ததாஸ் ச ப்ராப்யத்வ உபயிகமதி போக்யத்வ மவதத்
த்வயம் தத் ஸ்வாசாதாரணா தனு விசிஷ்டஸ்ய கணயன்
த்ருதீய விஸ்வேசம் ஸூபஸ் ஸூபக ரூபம் கதயதி–7–

உபாய உபேய விக்ரஹ ஸ்வரூபம் -அர்ச்சா ரூப ஸூபாஸ்ரய திவ்ய மங்கள விக்ரஹம் -மூன்றாம் பத்தின் சாரம்

அந்நிய த்ருஸ ஸுந்தர்யம் –முடிச் சோதி
லோகைக நாதன் -தனுர் விஹித சர்க்கதி சுபகன் -முந்நீர் ஞாலம் படைத்த முகில் வண்ணன் -திருமேனியாலே ஸ்ருஷ்ட்டி
ஸ்வ இச்சா சேயாகரன்-ஒழிவில் காலம் கைங்கர்யம் கொள்ள அர்ச்சா திரு மேனி —
சர்வ சரீரி புகழ் நல் ஒருவன் –
மோஹன தனு -சுப சுபாக ரூபம் -மொய்ம் மாம் பூம் பொழில்
ஸுலப்யன்-செய்ய தாமரை
பயிலும் சுடர் ஒளி-பாகவத சேஷத்வம்
சதா த்ருஸ்யன்-முடியானே
சர்வ பாப நிவர்த்தகன் -சன்மம் பல பல

இப்படி
முதல் பத்தில் எம்பெருமான் ஒருவனே ஸேவ்யத்வாத் உபாயம் என்றும்
இரண்டாம் பத்திலே போக்யத்வாத் உபேயம் என்றும் அருளிச் செய்தார்
இவ்வுபாயத்வ ப்ராப்யத்வங்கள் இரண்டும்
அநிதர சாதாரண திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டனுக்கே என்று கொண்டு எம்பெருமான்
ஸூபாஸ்ரய திவ்ய ரூப விசிஷ்டன் என்று மூன்றாம் பத்திலே அருளிச் செய்கிறார் என்கிறார் —

—————————————

இதில் உபாயத்வ உபேயத்வ யுக்த ஸூபாஸ்ரய திவ்ய மங்கள விக்ரஹவத் ஸ்தாபகங்களாக
மூன்றாம் பத்தில் பத்து திருவாய் மொழிகளாலும் ப்ரதிபாதிதங்களான பத்து குணங்களையும்
அடைவே ஸங்க்ரஹித்து அருளிச் செய்கிறார் –

அநீத்ருக் ஸுந்தர்ய தனு விஹித சர்காதிஸ் உபகம்
ஸ்வ சேவார்த்தாகாரம் ப்ர குண வபுஷாம் மோஹன தனும்
அப்ஸயாலபி அர்ச்சா வைபவமாதி அதிசய வஹதனும்
சதா த்ருஸ்யம் ஸ்துதித்ய கீர்த்திமக விருத்தி க்ருதிமிக –8—

ஏவம் ஸுந்தர்ய பூம்நா தனு விஹித ஜகத் க்ருத்ய ஸுபாக்ய யோகாத்
ஸ்வ இச்சா சேவ்யா க்ருதிவாத் நிகில தனுதயோன் மாததானார்ஹ காந்த்யா
லபிஅர்ச்சா வைபவதாவத் குண ரசிக குனோத் கர்ஷ்ணா தக்ஷகர்ஷ்யதே
ஸ்துத்யத்வாத் பாபங்காத் ஸூபாஸ் உபக தனும் பிராஹ நாதம் த்ருதீயே –தாத்பர்ய ரத்னாவளி –44-

அநீத்ருக் ஸுந்தர்யம் -ஸுந்தர்ய பூம்நா
தனு விஹித சர்காதிஸ் உபகம் -தனு விஹித ஜகத் க்ருத்ய ஸுபாக்ய யோகாத்
ஸ்வ சேவார்த்தாகாரம் –ஸ்வ இச்சா சேவ்யா க்ருதிவாத்
ப்ர குண வபுஷாம் மோஹன தனும்–நிகில தனுதயோன் மாததானார்ஹ காந்த்யா
அப்ஸயாலபி அர்ச்சா வைபவமாதிம்-லபிஅர்ச்சா வைபவதாவத்
அதிசய வஹதனும் – குண ரசிக குனோத் கர்ஷ்ணா தக்ஷகர்ஷ்யதே
சதா த்ருஸ்யம் மோஹன தனும் இக – ஸூபாஸ் உபக தனும் பிராஹ நாதம் த்ருதீயே-

அநீத் ருக் ஸுந்தர்யம்
முதல் திருவாய் மொழியில்
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை யொவ்வா
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது-3-1-2- என்று
அவன் சவுந்தர்யத்துக்கு ஓர் உவமை சொல்லாவற்றாய் இல்லாமை கொண்டு
எம்பெருமான் அத்தியாச்சார்ய ஸுந்தர்ய யுக்தன் என்று அருளிச் செய்தார் –

இரண்டாம் திருவாய் மொழியில் எம்பெருமான் தன் திருமேனியின் நின்றும்
ஜகத் ஸ்ருஷ்டி யாதிகளைப் பண்ணுமவன் ஆகையாலே
தநு விஹித ஜகத் க்ருத்ய ஸுபாக்யவான் –என்று அருளிச் செய்தார் –

மூன்றாம் திருவாய் மொழியிலே -அவதாரத்தில் பிற்பட்டாரும் இழக்க வேண்டாத படி –
ஆஸ்ரிதர் நினைத்த வகை எல்லாம் கிட்டி அனுபவிக்கலாம் படி அர்ச்சா ரூபனாய்
திருமலையில் எழுந்து அருளி இருக்குமவன் ஆகையாலே
ஸ்வ இச்சா சேவ்யாகாரன் -என்று அருளிச் செய்தார்

நான்காம் திருவாய் மொழியிலே -எம்பெருமான் பூத பவ்திகாதி ரூப சர்வ சித்த அசித் சரீரகன்
ஆகையால் சர்வ சரீரன் -என்று அருளிச் செய்தார்

ஐந்தாம் திருவாய் மொழியிலே எம்பெருமான் தன்னுடைய குண சேஷ்டிதங்களை அனுபவிப்பாரைத்
தன்னுடைய திரு மேனி காந்தியாலே பிச்சேற்றிப் பாடுவது ஆடுவதாக அக்ரமமாக ஹர்ஷ சேஷ்டிதங்களை
உடையராம் படி பண்ணுமவன் என்று கொண்டு
மோஹன விக்ரஹவான் -என்று அருளிச் செய்தார் –

ஆறாம் திருவாய் மொழியில்
தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்த தெப்பெர் மற்றப்பேர் தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம் —ஸ்ரீ முதல் திருவந்தாதி—44–என்கிறபடியே
எம்பெருமான் ஆஸ்ரிதர் ஏதேனும் ஒரு த்ரவ்யத்தைத் தனக்குத் திருமேனியாகக் கோலினால்
திரு மேனியாகக் கொள்ளுகை முதலாக ஆஸ்ரிதர் இட்ட வழக்காம் படி அத்யந்த ஸூ லபனாய் இருக்கும்
என்று கொண்டு அர்ச்சாவதார வைபவத்தை அருளிச் செய்தார்

ஏழாம் திருவாய் மொழியில் எம்பெருமான் தன் திருமேனி சோபைக்குத் தோற்று அடிமை செய்யும் ஸ்ரீ வைஷ்ணவர்களை
சர்வ உத்க்ருஷ்டராகப் பண்ணுமவன் ஆகையாலே அந்த ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய தாஸர்கள் எனக்கு ஸ்வாமிகள் என்று கொண்டு
அதி தாஸ்யாவஹ விக்ரஹன் – என்று அருளிச் செய்தார் –

எட்டாம் திருவாய் மொழியிலே எம்பெருமான் தன் கல்யாண குணங்களாலே மனஸ்ஸூ முதலான
சர்வ இந்திரியங்களை ஆகர்ஷிக்குமவன் என்று கொண்டு -நித்ய த்ருஸ்ய அங்கன் -என்று அருளிச் செய்தார் –

ஒன்பதாம் திருவாய் மொழியில் எம்பெருமான் ஒருவனே ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு யோக்யன் என்றும்
அல்லாதார் அயோக்கியர்கள் என்றும் அருளிச் செய்கையாலே
ஸ்துத்ய விக்ரஹவான் -என்று அருளிச் செய்தார் –

பத்தாம் திருவாய் மொழியில் எம்பெருமான் தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு ஸர்வ பாபங்களையும் போக்கடிப்பவன் என்று கொண்டு
அக சமந விக்ரஹவான் -என்று அருளிச் செய்தார்

இப்படி சித்ர சவுந்தர்யாத் வாதிகளாலே ஸூப ஸூபக விக்ரஹனாக எம்பெருமானை அனுபவித்துத் தலைக்கட்டுகையாலே
உபாயத்வ ப்ராப்யத்வங்கள் இரண்டும்
ஏத அத்ருஸ ஸூபாஸ்ரய திவ்ய ரூப விசிஷ்டனுக்கே என்று ப்ரதிபாதித்து அருளினார் என்றது ஆயிற்று –

—————————————–

இதில் கீழ்ப் பத்துக்களோடே மேல் பத்துக்கு சங்கதி அருளிச் செய்கிறார் –

ஸ்ரீய காந்தா அநந்தஸ் ஸூப தனு விசிஷ்ட பலமசவ்
பலா வாப்தேர் ஹேது ஸ்வயமிதி ச நிர்த்தார்ய சதகை
இதாநீம் புத்திஸ் தக்ரமத இஹ உக்த்யா முனி வர
பலத்தவம் தஸ்ய இவ த்ரடயதி ததன்யேஷு விமுக—-9—

ஸ்ரீ யபத்யே–ப்ராப்யம் என்று முதல் பத்திலும் –
உபேயம் பரம போக்யம் என்று இரண்டாம் பத்திலும்
ஸூ பாஸ்ரய திவ்ய மங்கள விசிஷ்டன்- என்று மூன்றாம் பத்திலும்-
அருளிச் செய்த அனந்தரம் –
ஸ்ரீ யபதியே காந்தன்–அனந்தன் -சுப தனு விசிஷ்டன் -பல அவாப்த்தி ஹேது -பரம புருஷார்த்தம் என்று
நிர்த்தாரணம் பண்ணி அருளுகிறார் நான்காம் பத்தால் –

யமேவைஷ -இத்யாதிப்படியே
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாண குண கணனான ஸ்ரீ யபதி
ஸ்வ ப்ராப்தே -ஸ்வயம் ஏவ -சாதன பூதன் என்கிற அர்த்தத்தை அகண்டமான இத்திருவாய் மொழியிலே
உபபாதிப்பதாகக் கோலி
அதில் முதல் பத்தில் அவனுடைய உபாயத்வே உபயுக்தமான ஸேவ்யத்வத்தையும்
இரண்டாம் பத்தில் உபேயத்வே உப யுக்தமான போக்யத்வத்தையும்
மூன்றாம் பத்திலே இவ்வுபாயத்வ ப்ராப்யத்வங்கள் இரண்டும் திவ்ய மங்கள விக்ரஹனுக்கே உள்ளது என்று கொண்டு
அவனுடைய ஸூப ஸூப விக்ரஹத்வத்தையும் உப பாதித்து அருளி
மேல்
இரண்டாம் பத்தில் சொன்ன போக்யத்வம் புத்திஸ்தமானது கொண்டு பல த்வா பர பர்யாயமான
நிரதிசய போக்யத்வத்தை தத் அந்ய வைமுக்ய பூர்வகமாக த்ருடீ கரித்து அருளுகிறார் என்கிறார் –

முதல் பத்தில் சொன்ன உபாயத்வத்தை த்ருடீ கரியாமே
இரண்டாம் பத்தில் சொன்ன பலத்வத்தை த்ருடீ கரிக்கும் படி எங்கனே என்னில்
பிரதம ஸதக ப்ரதிபாத்ய உபாயத்வ அபேக்ஷையா இரண்டாம் பத்து ஸந்நிஹிதமாய் –
தத் ப்ரதிபாத்ய பலத்வமே புத்திஸ்தம் ஆகையாலே முந்துற பலத்வத்தை ஸ்த்ரீ கரித்து
ஐந்தாம் பத்து முதலாக மேல் உபாயத்வத்தை ஸ்த்ரீ கரித்து அருளுகையாலே
விரோத கந்தம் இல்லை என்று திரு உள்ளம் —

———————————

ஸ்திர ஐஸ்வர்யம் துர்யே சஹஜ பஹு போக்யம் நிரவிசத்
மிதா ஸ்லிஷ்டம் கிலேசாவஹம் ஸஹித துல்யம் நிஜ ஜனம்
க்ருதார்த்தி குர்வந்தம் பிரணயி பிஷஜம் சத் பகு குணம்
ஸ்வ ஹேயஸ்வ அபேக்ஷ்யம் ஸ்வமத பல முகை ஸ்வாகதம் –10–

நான்காம் பத்தில்
1–ஸ்திர ஐஸ்வர்யம்
2- சஹஜ பஹு போக்யம்
3- ஆஸ்ரிதர்கள் உடன் நித்ய சம்ச்லேஷ ஸ்வ பாவன்
4- விஸ்லேஷ சமயங்களில் கிலேசாவஹம்
5-செய்த வேள்வியர் களுக்கு உண்ணும் சோறு இத்யாதி எல்லாமே ப்ராப்ய பூதன்
6- பிரணயிகளுக்கு மருத்துவனாய் நிற்கும் மா மணி வண்ணன்
7-ஸமஸ்த குண சாகரம்
8- பிரதிகூல வர்ஜனத்துக்கு ஸஹாயன்
9- சர்வ பல பிரதன்
10- நிரதிசய ஆனந்த மயன் –

நித்ய ஐஸ்வர்யம் து துர்யே சஹஜ பஹுள சத் போக்யம் அந்யோன்ய சக்தம்
கிலேசா பாதிஸ்வ துல்யம் ஸ்வ ஜன க்ருத க்ருதார்த்தி க்ரிதிம் ஸ்னேஹா வைத்யம்
சம் யுக்தம் சத் குண உகைஹா ஸ்வ ஜன பரிஹ்ருத அபேஷா மிஷ்டார்த்த ரூபம்
ஸ்ரேஷ்டாம் நிஸ் சேஷ போக்யதா மநுத சடாகே தேவதா ஸார்வ பவ்மன் –தாத்பர்ய ரத்னாவளி –58–

————————-

உபாயத்வம் யதாத் பிரதம சதகே அபாவ்யத விபோ
அநந்ய உபாயசத் த்ரதாயதி பரம் பஞ்சம முகையைஹ
நிரீ ஹஸ்த்ராதவ் நிரவதிக நிர் ஹேதுகதயா
சரித்ஸ்ரோதவ் பத்மம் சரணாயதி நாதஸ்ய சரணம் –11-

உபாயத்வம் யதாத் பிரதம சதகே அபாவ்யத விபோ–முதல் பத்தாலே அவனே நிருபாதிக உபாயம்
அநந்ய உபாயசத் த்ரதாயதி பரம் பஞ்சம முகையைஹ–உபாயாந்தர தோஷங்களை காட்டி அருளி
அத்தை ஸ்திரீகரித்தார் மேல் உள்ள பத்துக்களாலே
நிரீ ஹஸ்த்ராதவ் நிரவதிக நிர் ஹேதுகதயா சரித்ஸ்ரோதவ் பத்மம் சரணாயதி –தாமரை திருவடிகளில் சரணாகதி
நாதஸ்ய சரணம் பத்மம் சரணாயதி–அந்த திருவடிகளே ப்ராப்யம் –

பிரச்யே சேவா அனுகுணயாத் பிரபுமிக சடகே மம்ஸ்த முக்தே உபாயம்
முக்த ப்ராப்யம் த்விதீய முனிர் அனுபபுதே போக்யதா விஸ்தரேண
ப்ராப்யத்வ உபாய பாவவ் சுபாஸ் உபகதனோ இத்யவாதித் த்ரீயே
அநந்ய ப்ராப்யா சதுர்த்தே சம்பவதித்தரை அப்ய அநந்யாத் உபாய –ரத்னாவளி -6-

—————————————

தயா நிக்நம் பக்தைர் அக விமதனம் பிரேம ஜனகம்
ஜகத் ரஷா தீக்ஷம் ஸ்ம்ருதி ஜூஷாமஹம் பாவ விஷயம்
சரண்யம் தீனானாம் ஸ்வ ரஸ க்ருத தாஸ்யாபி உபகமம்
பிரகாக்யவ் தம் பிராப்தம் பிரச கனக்ர்த்தம் பஞ்சம சதே–12–

தயா நிக்நம் –தயா ஊற்று அவன்
பக்தைர் அக விமதனம் –பக்தர்களுக்கு பிறர் பாபங்களை போக்கும் சக்தி அளிப்பவன்
பிரேம ஜனகம் –தன் பால் ஆதாரம் பெறுக வைக்கும் அழகன்
ஜகத் ரஷா தீக்ஷம் –ரக்ஷணத்தில் தீக்ஷை -மம விரதம் என்பவன் அன்றோ
ஸ்ம்ருதி ஜூஷாமஹம் பாவ விஷயம் –நினைப்பவர் ஸூ பாஸ்ரய திவ்ய மங்கள விக்ரஹத்தில்-ஆழங்கால் படும்படி விஷயமானவன்
சரண்யம் தீனானாம் -தீனர்களுக்கு புகலிடம்
ஸ்வ ரஸ க்ருத தாஸ்யாபி உபகமம் –ப்ரீதி காரித கைங்கர்யங்களை கொடுத்து அருளுபவன்
பிரகாக்யவ் தம் பிராப்தம் பிரச கன க்ர்த்தம் பஞ்சம சதே–பக்தியில் அசக்தர்களுக்கு பிரபத்தி -அர்ச்சையில் சரண் அடையச் செய்வித்து
இங்கேயே இப்பிறப்பே கைங்கர்ய ரசம் அளிப்பவன் –

இத்தம் காருண்யா நிக்னம் துரித ஹர ஜனம் பிரேம தீவ்ரம் துகானாம்
லோகாநாம் ரஷிதாரம் ஸ்மருதி விஷயம் அஹம் பாவனா கோசாரம் ச
தீனானாம் சச்சரண்யாம் ஸ்வ ரஸ க்ருத நிஜ ப்ரேயதாவாஞ்சமுசசே
பிராப்தம் சக்தி ப்ரதம் ஸ்ரீ பதி மிக சடகே ஸ்ரேயஸே மேக ஹேதும் –ரத்னாவளி –69-

————————————

அநாதி அந்த ஆனந்த ஸ்வ ரஸ கருணா கண்ட ஜெனித
ப்ரேனோ துர் வியாபார பிரபதன விபாகார்ஹ உதித
தம் ஆச்சார்யோ பஜனம் சிர விரஹித ஸ்வாத மகதன
ஸ்ப்ருஹ அசக்திம் சஷ்டே முனிர சரணோ யாதி சரணம் —13-

ஸ்வ பாவிக கிருபையை ஐந்தாம் பத்தில் அருளிச் செய்து இசைவித்து தன் தாளிணைக் கீழ் இருத்தும்
அவன் ஸ்வ பாவத்தை ஆறாம் பத்தில் அருளிச் செய்கிறார் – சரணாகத ரஷாக வைபவம் அருளிச் செய்கிறார் –
ஆதி மத்திய அந்த ரஹிதன் / அநாதி / ருசி ஜனகன் / ஸ்வ ரஸ கருணா கந்த ஜனகன் /
சிர விரஹித ஸ்வாத மகதன ஸ்ப்ருஹ அசக்திம்-க்ஷண காலம் விரஹமும் ஸஹிக்க ஒட்டாமல் –
கிருபையால் ஆச்சார்யர்கள் இடம் நம்மை சேர்த்து அருளுகிறான்

———————————————–

குரு த்வாரா உபாயம் ஸ்வயம் அபிமதம் வைரிக தாகம்
சரித்ரை கர்ஷந்தம் பரிவிக தானம் ஸ்வான்வித ஹரம்
நிதானம் த்ர்த்யா தெர்காதகவ சபூதி த்வயமாகாத்
அநர்ஹத் வைகாத்யம் தவ விகில சரண்யா ஸ்திதிமிக –14-

குரு த்வாரா உபாயம் ஸ்வயம் அபிமதம் –ஆச்சார்யர் அனுக்ரஹம் மூலம் தானே நம்மை சேர்த்துக் கொள்கிறான்
வைரிக தாகம்-அகடிதா கடிநா சாமர்த்தியம் -விருத்த விபூதி நாயகத்வம்
சரித்ரை கர்ஷந்தம் பரிவிக தானம் ஸ்வான்வித ஹரம் -அதிமானுஷ சேஷ்டிதங்களை காட்டி
நம் அஹங்கார மமகாரங்களை போக்குவிக்கிறான்
நிதானம் த்ர்த்யா தெர்காதகவ –தறியமும் திட விசுவாசமும் பிறப்பிக்கிறான்
சபூதி த்வயமாகாத் –உபய விபூதி நாதன்
அநர்ஹத் வைகாத்யம் தவ விகில சரண்யா ஸ்திதிமிக -பொருள் அல்லாத நம்மை சத்தை பிறப்பித்து அருளுகிறான்

இத்தம் சத்வார கம்யம் ஸ்வயம் இதம் அஸஹஸ்த இனாம் யோஜநார்ஹம்
கர்ஷந்தம் ஸ்வைஸ் சரித்ரை விகதித விஜநம் ஸ்வான் விதஸ் தேய தக்க்ஷம்
த்ர்யத்தினாம் நிதானம் கடக வச மஹாபுதி யுகமம் சடாரி
வைக்க த்யாஸ்யாப்யன் அர்ஹம் பிரபதன சுலபம் பிராஹா ஷஷ்ட்யயே சரணம் –ரத்னாவளி –80-

————————————–

ததேவம் சஷ்டாந்தம் விஹித ச விசேஷ பிரபதன
பல அலாபாத் கின்னஸ் த்வரிதா ஹ்ருதயே சப்தம சதே
அனிஷ்டோப ந்யஸ பிரபத்திபி அநிஷ்ட பிரசமனே
ஸ்வதா சித்தசிலம் ப்ரபும் அபிமுகம் சம்முகாயதி –15-

ததேவம் சஷ்டாந்தம் விஹித ச விசேஷ பிரபதன–ஆறு அங்கங்களுடன் கீழே ஆறு பத்துக்களிலும் பிரபதனம் செய்த ஆழ்வார்
பல அலாபாத் கின்னஸ் –பலம் உடனே கிட்டாததால் மனஸ் சிதிலம் அடைந்து
த்வரிதா ஹ்ருதயே சப்தம சதே அனிஷ்டோப ந்யஸ பிரபத்திபி அநிஷ்ட பிரசமனே -ஆஸ்ரிதர்களை
அனிஷ்டங்களிலே உழன்று இருக்க விடாத ஸ்வ பாவனாய் இருக்க
ஸ்வதா சித்தசிலம் ப்ரபும் அபிமுகம் சம்முகாயதி –மஹா விச்வாஸம் கொண்டு தனக்கு முன் தோன்றி ஸம்ஸலேஷிக்க பிரார்த்திக்கிறார்
இதுவே சங்கதி ஏழாம் பத்துக்கு -ஸ்வா பாவிக அநிஷ்ட நிவாரகன் தானே –

——————————————–

சகன் சத்ய சங்கன் உப சமித கர்ஹா பிரகதயன்
ஸ்வ கோப்த்ருத்வம் குப்தி க்ரமம அகில ஐந்து பிரணயிதம்
ஸ்ரீதா க்ரந்தச்செத்தா ஸ்மரண விசதச்சித்ர விபவ
ஸ்துதவ் யஞ்சன் ஸ்தோத்ரு வியஸன நிஜத்ததர்சி பிரபுரிக –16-

ஸ்ரீதா க்ரந்தச்செத்தா–ஆஸ்ரிதர் கண்ண நீரைப் போக்கி -மானஸ சாஷாத்காரம் பண்ணி அருளி
ஸ்மரண விசதச்சித்ர விபவ -ஒப்பில்லாத விரிந்த ஐஸ்வர்யங்களை நினைவூட்டி
ஸ்துதவ் யஞ்சன்-ஸ்தோத்ரங்களிலே மூட்டி அருளி
ஸ்தோத்ரு வியஸன நிஜத்ததர்சி பிரபுரிக-ஸ்தோத்ரம் பண்ணுபவர்களின் சகல பிரதிபங்கங்களையும் போக்கி அருளி

ஸாத்யா சங்கா ஸஹிஷ்ணும் பிரசாமிதா ஜன தாகர்ஹனாம் ஸ்பஷ்ட ரஷாம்
வியாகுர்வந்தம் ஸ்வ ரஷா க்ரமம் அகில ஜன ஸ்னேஹிதம் தர்சாயந்தம்
ஸ்வீயா கிரந்த சித்தோதகம் ஸ்மரண ஸூ விசதம் விஸ்மயார்ஹத் விபூதிம்
ஸ்தோத்ர யுஞ்சநாத்மாக ஸ்துதி கிருத்தகஹரம் சப்தமே அநிஷ்டாசோராம் –ரத்னாவளி -91-

————————————–

அதனிஷ்டான் பும்ஸாம் ஸ்வயம் உப ஜிஹீர்ஷான் அபி விபு
தத் இச்சாம் பஹ்யேஷு பிரசமயிது காம க்ரமவசாத்
நிஜேச்சேச்ச சம்சித்த தெரிவித்த சித் அசித் வஸ்து விததி
ஸ்ரீ தேச்சா வைச்சித்ரீவச இதி வதத்யஷ் தமஸதே -17-

ஸ்வரூப ஸ்திதி பிரவிருத்தி-அனைத்தும் சகல த்ரிவித சேதன அசேதன -தனது சங்கல்ப அதீனமாய் இருக்கச் செய்தேயும்
ஆஸ்ரிதர் இச்சா பேதங்கள் படி தன்னையே அமைத்துகே கொள்கிறான்

——————————————

த்ருக்க்ஷாயாம் த்ரஸ்ய பிரபுரகநீ நிஸ் சங்க சுலப
ஸ்வ விஸ்லேஷ காந்தா ஸ்ரீத விகித புஷ்கல்ய விபவா
அபேஷாஸ் சாபேஷா ஸ்வ விதரனாஸ் சஜ்ஜோ ஹ்ருதி ரத
ஸ்வ தாஸ்யம் தன் நிஷ்டாம் தத்வதிமபிஹ பிரகதயன் –18-

பக்தி சித்த அனுசாரி – தன்னையே வழங்கும் வள்ளல் /

சித்தம் ஸூரி த்ரிக்க்ஷூ த்ர்ஷி விஷயமாவைத் நிஸ் ப்ரஹைரேவ லப்யம்
ஸ்வாநாம் விஸ்லேஷ போக்யம் ஸ்ரீத விஹித சமக்ரத்வ பூதிம் சடாரி
ஸ்வ அபேஷாஸ் அவ்யபேஷம் ஸ்வ விதரண பரம் ஹ்ருத்கதம் ஸ்பஷ்டயந்தம்
தாஸ்யம் ஸ்வ தாஸ்ய நிஷ்டாம் ததவதிம் அபி சாப்யஸ்தமே ஸ்வ இஷ்டா வசம் –ரத்னாவளி –102-

தரிசன சாஷாத்காரம் -ஸ்வப்னம் பூலே / பக்த ஸுலபன் / பக்தர்களை உடையவர் ஆக்கி மகிழ்பவன் /
வியாஜ்ய மாத்திரம் தன்னையே தந்து அருளுபவர் /

————————————————

அபீஷ்டம் விஸ்வஸ்மின் விஷம பல காங்க்க்ஷி நிய விஷமம்
பிரயச்சந்தம் த்ருஷ்ட்வா பரம புருஷார்த்தைக ரசிகா
நிரஸ்த அன்யா அபேஷா நிகிலா ஜெகதீதஸ்ய நவமே
நிதானம் சித்தினாம் நிருபாதிக்க ஸூ ஹ்ருதம் கானயதி –19-

நிருபாதிக ஸூ ஹ்ருத் / நித்ய நிரவத்ய பரம புருஷார்த்தை ரசிகை -கைங்கர்ய ரசம் /

இத்தம் சர்வைக பந்தும் சிர க்ருதக்ருநாம் சிதில சிந்தும் பதித்வாத்
சம்பந்தாத் ரஷிதாராம் ஸ்வ குணாகரிமாசம் ஸ்மாரகம் ப்ராஹ நாதம்
விஸ்மர்தும் சாப்ய சக்யம் கடாகமுகாசு விஸ்ரம்ப ணீயம் சுமதய
லஷ்மயா ஸ்லிஷ்டம் ஸ்வ சித்தி உன்முகாஸ்

சர்வ பந்து / கிருபாவான் / குண சாகரம் / ரக்ஷணத்துக்கு இசையும் அவகாசம் பார்த்து இருக்கும் ஸ்ரீ யபதி/

—————————————————

அபாவ்யகோ பந்து சிர க்ருத தயா சீல ஜலாதி
ஸ்வ சம்பந்தாத் கோப்தா ஸ்வ குண கரிம ஸ்மராணா பர
அசக்யோ விஸ்மர்தும் கடக முக விசரம்ப விஷயான்
சமுஞ்ஞானி சித்தி உன்முகாஸ் ஸமய இச்சான வஸரம் -20-

சர்வவித நிருபாதிக பந்து / தயாளு / சீலக்கடல் / சர்வ அவஸ்தையிலும் சர்வ ரக்ஷகன் /
குணக்கடலுள் அழுந்த வைத்து தன்னுடன் சேர்ப்பிப்பவன் /கடகர்கள் மூலம் சேர்த்துக் கொள்பவன் /

—————————

உதந்தை இத்யேவம் நிருபாதிக ஸு ஹார்த்தபி சுனை
உதந்தயாம் உத்வேலாம் உபஜனித்தவந்தம் நிஜபதே
த்ரை வர்க்காதி க்ராந்த ஸ்திர நகரி கந்தா பத கதே
சஹாயி குர்வாணா சரம சதகே விந்தத்தி முநி –21-

———————————–

கதிம் வ்யாத்வக்லே சச்சிதாம் பத ஸங்காஸ் பத ரசம்
பஜத்பி சுப்ராபம் விதித்த பஜன ப்ரக்ரியமிக
பலே தீவ்ரத் யோகம் ஸ்வ விஷய க்ருதாத்யா தரமகாத்
யதர்ச்சா துஷ்டம் சத்சரநிமா புனர் ஜன்ம சாயுஜ்யம் –22-

ஏவம் ஸ்வாநாம் கதிம் வியத்வஜ துரித ஹராஸ்தான சங்கார்ஹ ராகம்
சுப்ராபம் பக்தி பாஜாம் பஹுவித போஜன ப்ரக்ரியாம் ஸ்ரீ சடாரி
தீவ்ரோ த்யோகம் ஸ்வ தானே ஸ்வ ஜன தனு க்ருதார்த்யாதரம் பிராஹ காந்தே
ஸ்வேச்சா துஷ்டாம் சுக அர்ச்சீர் முகாஸ் சரணிமுக்தாம் மோஷாதம் முக்த போக்யம் –ரத்னாவளி –124-

அவனே அர்ச்சிராதி வழித் துணை ஆப்தன் /

———————————-

பரம் ப்ராப்யம் பஸ்யன் பரிசரணா ஹேதும் விஞ்ஞாயன்
பரிஷுக்குருவன் அஞ்ஞானம் அனிதர சரண்ய சரண்யன்
அநிஷ்ட ப்ரத்வம்ச ப்ரப்ரிஷு நிதானம் ச கதயன்
முகுர்த்தேவம் லஷ்ம்யா ஸஹிதமிக பேஜே முனிவரா -23-

பரம் ப்ராப்யம் பஸ்யன் பரம புருஷார்த்தம் இவனே /
பரிசரணா ஹேதும் விஞ்ஞாயன் – கைங்கர்யம் கொண்டு அருள உபாயமும் அவனே /
பரிஷுக்குருவன் அஞ்ஞானம்-சர்ம ஸ்லோகப்படி சர்வ தர்மான் பரித்யஜ்ய– செய்தால் —
சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -செய்பவனும் அவனே
அனிதர சரண்ய சரண்யன் -புகல் ஒன்றும் இல்லாத அனன்யா கதிகளுக்கு அவனே சரண்யன்
அநிஷ்ட ப்ரத்வம்ச ப்ரப்ரிஷு நிதானம் ச கதயன் முகுர்த்தேவம் லஷ்ம்யா ஸஹிதமிக–
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் மிதுனமே ஒரே நிருபாதிக ரக்ஷை –

இத்தம் சேவ்யம் ஸூ போக்யம் ஸூபாஸ் உபகதனும் சர்வ போக்ய ப்ரக்ருஷ்தே
ஸ்ரேயஸ் தத ஹேது பூதம் பிரபதன சுலபம் ஸ்வ ஆஸ்ரித அநிஷ்ட ஜிஷ்ணும்
பக்த சந்த அநு க்ருதம் நிருபாதிக ஸூ ஹ்ருதம் சத் பத அவ்யய ஸஹாயம்
ஸ்ரீ சம் பிராஹ ஸ்வ சித்தே ஸ்வயம் இஹ கரணாம் ஸ்வ பிரபந்தே சடாரி –ரத்னாவளி -125-

ஆத்யே ஸ்வ பிரபந்தே சதஜித பிதாதே ஸம்ஸரதேர் துஸ் சஹத்வம்
த்வைதிகே ஸ்வரூபாத்ய அகில மத ஹரேர் அனுவபூத் ஸ்பஷ்ட த்ரஷ்டாம்
தார்த்திகே ஸு க்யம் பகவத் அநுபவே ஸ்போரயாம்ஸ தீவ்ரம்
அசாம் துர்யே யதேஷ்டம் பகவத் அனுபவா தாப முக்திக்கு சடாரி –ரத்னாவளி –126-

திரு விருத்தத்தில் சம்சார சுழல்களால் வரும் துரிதங்களையும் -அதில் இருக்க மாட்டாமையையும் -அருளிச் செய்து
திருவாசிரியத்தில் ஜீவ பர ஸ்வரூப குணாதி களை அருளிச் செய்து
பெரிய திருவந்தாதியில் -தனது மானஸ அனுபவத்தையும் -பாஹ்ய சம்ச்லேஷத்தில் ஆர்த்தியையும் வெளியிட்டு அருளி
திருவாய் மொழியிலே அவா அற்று வீடு பெற்றதை அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ மான் சீமாதி லங்கிஸ்திரதர கருணா சர்வவித் சர்வ சக்திர்
ஸ்வாமி ஸர்வஸ்ய ஐந்தோ ஸ்வ சரண யுகள ஸ்வீ க்ருதாஸ்மாக பர
கிம் ந க்ருத்யம் ஸ்வ ஹேதவ் கிமிக ந சுலபம் க விபதிர் பவித்ரி
கஸ்யான் யஸ்யா தர்மனா வயமிதி விதிஷாமாக துங்கத்வ மந்தே–ரத்னாவளி -127-

ஸ்ரீ மான் சீமாதி லங்கிஸ்திரதர கருணா சர்வவித் சர்வ சக்திர்
ஸ்வாமி ஸர்வஸ்ய ஐந்தோ ஸ்வ சரண யுகள ஸ்வீ க்ருதாஸ்மாக பர – கல்யாண குணக்கடல் /கருணா சாகரம் /
உலோகரை எல்லாம் திருவடியால் தீண்டி அணைக்கும் தாய் /
இப்படி உணர்ந்தோர் மார்பில் கை வைத்து-உபாயமாக ஒன்றுமே செய்யாமல் கைங்கர்யமாக
அவன் ஆனந்தத்துக்கு மட்டுமே செய்வது தானே அடுத்து /
கிம் ந க்ருத்யம் ஸ்வ ஹேதவ் – இவ்வாறு உள்ளோரால் செய்ய முடியாதது தான் எது –
துக்க கேசமும் இவர்களை அணுகாவே -வேறே எவருக்கும் பணியா அமரர்கள் ஆவார்கள்

—————————————

புரா சோகா ஸ்லோகா பவதிதி நயாதிதி உபநிஷத்
முநே புண்யா ஸ்லோகாத ஜநி பர பக்தே பரிணாதி
வ்யாபோக்ய ஸ்வாம் பாவம் ஹரி சரணா சந்தான லிகாம்
அவிக்ஷத் யோகி யஸ்தனுமதனு காருண்ய விவசா –24-

வால்மீகி சோகத்தால் பிறந்த ஸ்ரீ இராமாயண ஸ்லோகங்கள் /
சடகோப முனி ஆழ்ந்த பக்தியால் பிறந்த தமிழ் உபநிஷத்தான திருவாய் மொழி
கருணைக் கடலுள் ஆழ்ந்து -அவனையே நினைந்து அவன் அருளாலே அவனை அடைந்தார்

சோகா ஸ்லோகாத்வமப் யாகத இதை வதத சுத்த போதார்ண போத்யன்
நாநாக லோலா நாதானுபவ ரஸ பரிவாஹத ஸ்ராவ்ய வேதாத்
வேதாந்த சார்யக ஸ்ரீ பஹுமத பஹுவித் வேங்கடேசா ஸ்தோத்ரேயம்
ரம்யா தாத்பர்ய ரத்னாவளிர் அநக குண ரஞ்சினி ரங்க பர்த்ரு–130-

—————————–

சதாம் இத்தம் சாரம் த்ராமிட நிகமஸ் யான்வகதயத்
பஹு நாம் வித்யா நாம் பஹு மதி பதம் வேங்கடபதி
திசா சவ்தா ஸ்ரேநீ த்ர்தா கதிதா ஜைத்ர த்வஜ பதி
பராமர் ஸப்ரஸ்யாத் ப்ரதிமத நிராபாத நிகம–25-

இத்தம் சத் சம்பிரதாய க்ரம சமதிகதா சேஷ வர்ணார்ஹ வேத
ஸ்ரத்தாஸ் சுத்த சயானா மகதயாதநகம் கௌதுகம் வேங்கடேச
சம்யக்த்வே தஸ்ய சாஷாத் சடாரி புரத்வா சர்வ சாக்ஷி ச சாக்ஷி
சாவத்யத்வேபி சோதும் பிரபவதி பஜதாம ப்ரகாம்ப யனுகம்பா –ரத்னாவளி –129-

————————————

மனு வியாச ப்ராசேதச பரிஷ்தர்ஹா க்வசிதியம்
ஸூதாஷிக்த ஸூக்தீ ஸ்வயம் உதயமனவிச்சதி ஜநே
ந்ருந்த்யுஹ்கே விந்த்யாசல விகத ஸந்த்யா ந தஜ
தாபரிப்ராந்தா பங்கோ உபரி யதி கங்கா நிபததி –26-

இந்த பிரபந்தம் மஹா முனிகளான மனு பகவான் வியாச பகவான் வால்மீகி ரிஷி போன்றார் கூட்டங்களாலே கேட்கத் தக்கது-
அவனது நிருபாதிக ஸூ ஹ்ருதம் அடியாகவே பிறந்தது –
விந்தியமலை சாரல் -கங்கா நதி -திருச்சித்ர கூடம் -உண்டாக்கி அருளினால் போலே
அடியேனையும் ஆக்கி இப்பிரபந்தம் அருளப்பண்ணினான்

———————–

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்—

ஸ்ரீ த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -உபோத் காதம் –ஸ்ரீ உ வே .மன்னார்குடி ராஜ கோபால ஸ்வாமிகள்–

December 12, 2016

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரி
வேதாந்த சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

ஸ்ரீ யபதி கல்யாண குணங்கள் ஒவ்வொரு திருவாய் மொழியிலும் —
10 ஸ்லோகங்கள் உபோத் காதம் –
100 ஸ்லோகங்கள் -திருவாய்மொழி
10 ஒவ்வொரு நூற்றுக்கும்
1-4-திருவாய்மொழிக்கு-அஞ்சிறைய மட நாராய் -இரண்டு ஸ்லோகங்கள்
4-9-திருவாய்மொழிக்கு -நண்ணாதார் முறுவலிப்ப – மூன்று ஸ்லோகங்கள்
4-7-திருவாய்மொழிக்கு சீல மில்லா சிறிய னேலும் – இரண்டு ஸ்லோகங்கள்
ஆக 114 ஸ்லோகங்கள்
6 ஸ்லோகங்கள் -உப சம்ஹாரம்
ஆக மொத்தம் — 130 ஸ்லோகங்கள்
————————
முதல் ஸ்லோகம் –
சாரஸ் சாரஸ் வதா நாம் சடரி புபணிதி -சாந்தி ஸூத்தாந்த சீமா
மாயா மாயா மி நீபி ஸ்வ குண விததி-பிரபந்த யந்தீம் தயந்தீ
பாரம் பாரம் பரீதோ பவ ஜல திபவந் மஜ்ஜ நா நாம் ஜனா நாம்
ப்ரத்யக் ப்ரத்யக்ஷ யேந்த பிரதி நியதரமா -சந்நிதானம் நிதானம் -1-

சடரி புபணிதி–ஸ்ரீ சடகோபன் -திரு வாய் மொழி -எப்படிப் பட்டது –
1-சாரஸ் சாரஸ் வதா நாம்-சரஸ்வதி -வாக் இந்த்ரியங்களால் வெளிப்படட வேதம் -நா-வில் நின்று மலரும் ஞானக் கலைகள் -சாரம் -சார தமம்-
சாரம் -சாரஸ்வதானாம் -சரஸ்வதி -வாக்கு -சாரஸ்வது -வேதம் -இதிஹாச புராணங்கள் –
2-சாந்தி ஸூ த்தாந்த சீமா -எல்லை நிலம் -அளவற்ற பெருமை -சாந்தி -மனஸ் கலக்கல் இல்லாத -ஸூ த்தாந்த -அந்தப்புரம் ஏகாந்தம் -ஸ்தானம்
-ஏகாந்த புத்தி -நம் சித்தாந்தம் ஸூத்தாந்த சித்தாந்தம் -மறந்தும் புறம் தொழா மாந்தர் -திரு மடப்பள்ளி சம்ப்ரதாயம் -பரிசுத்தம் ஏகாந்தம் கலக்கம் இல்லாத
மடப்பள்ளி வந்த மணம் எங்கள் வார்த்தையில் மன்னியதே –
3-ஆயாமம் -வளர்ச்சி மேலும் மேலும் ஸ்வ குண விததி -முக்குண மயம்-தொடர்ந்து -வளர்ந்து -வரும் மாயா -பிரகிருதி
பந்தயந்தீம் கட்டிப் போட வல்லது -பந்த ஹேது-முக்குணங்களுமே –மம மாயா துரத்யயா
தயந்தீ -விநாசம் பண்ணும் -குளகம் நீர் பருகுவது போலே -எடுத்து பானம் பண்ணுவது போலே எளிதாக நீக்கும்
4–பாரம் பாரம் பரீதோ பவ ஜல திபவ- ந் மஜ்ஜ நா நாம் ஜனா நாம்
பாரம் -அக்கரை-பாரம்பரீத -படிப்படியாக -பாவ -சம்சாரம் ஜலதி சாகரம் -மூழ்கிக் கொண்டே இருக்கும் ஜனங்கள்
படிப்படியாக -பாரம் பவ ஜல மக்னனானாம் ஜனானாம் பாரம் -சம்சார சாகரம் -முழுகும் ஜனங்கள் –பாரம் -அடையும் கரை –
5-ப்ரத்யக் ப்ரத்யக்ஷ யேந்த பிரதி நியதரமா -சந்நிதானம் நிதானம் –
ரமா சந்நிதானம் -பெரிய பிராட்டியார் -கூடவே –
மேலும் நியதமாக-எல்லா இடங்களிலும் -என்றவாறு
-இவன் அவள் இல்லா இடத்திலும் இருக்கலாமே -அத்தை நிவர்த்திக்க பிரதி நியதமாக -என்கிறார் –
நிதானம் -ஆதார ஆஸ்ரய புதன் –
ப்ரத்யக்ஷமாக காட்டி அருளி -நக -நமக்கு -ப்ரத்யக் ப்ரத்யக்ஷ-அந்தராட்டிஹ்மா அந்தராத்மாகாவும் காட்டி அருளுகிறார் என்றபடி

———————

ப்ரஜ்ஞாக்யே மந்த சைலே பிரதித குண ருசிம்-நேத்ர யன் சம்ப்ரதாயம்
தத் தல்லப்தி ப்ரசக்தைர நுபதி விபுதை ரர்த்திதோ வேங்கடேச
தல்பம் கல்பாந்த யூன சடஜித் உபநிஷத் துக்த்த சிந்தும் விமத் நன்
க்ரத் நாதி ஸ் வாது காதா லஹ ரித ச ச தீ -நிர்க்கதிம் ரத்ன ஜாதம் –2-

ப்ரஜ்ஞாக்யே மந்த சைலே -அவன் மந்தர பர்வதம் -இவர் சதாச்சார்யர் உபதேசம் கொண்டு -அசைக்க முடியாத
-அது ஜடம் –இது ப்ரஜ்ஞா -மந்த -மத்து -சைலம் மலை
பிரதித குண ருசிம்– ஸ்திரமான பிரசித்தமான -கல்யாண குணங்களை அனுபவிக்கும் ஊற்றம் கொண்ட கயிறு
நேத்ர யன் சம்ப்ரதாயம் -சம்ப்ரதாயம் படி பூர்வாச்சார்யர் வியாக்யானம் கொண்டு -உபதேச பரம்பரை -நேத்ரம் -கண் என்றும் கயிறு என்றும் –
தத் தல்லப்தி ப்ரசக்தைர நுபதி விபுதை -விபுதர்கள் பிரயோஜனாந்த பார்த்தார்கள் அர்த்திக்க அவன் -இவர் இடம் அனுபதி -அநந்ய பிரயோஜனர்கள் அர்த்திக்க
அர்த்திதோ வேங்கடேச-
தத் தல்லப்தி-அந்த அந்த பாசுரங்களில் உள்ள கல்யாண குணங்களை காட்டித் தர அர்த்திக்க –
தல்பம் கல்பாந்த யூன -கல்பங்கள் முடிவில் நித்ய யுவ -யுவா ஆறாம் வேற்றமை சேர்ந்து யூன
-தல்பம் படுக்கை -சேஷ -சுத்த விமலா மனசா -வேத மௌலி-வேதாந்தம் –
சடஜித் உபநிஷத் துக்த்த சிந்தும் விமத் நன் -திருவாய் மொழி பாற் கடல் -திராவிட உபநிஷத் -துக்த சிந்து -பாற் கடல் -விமத் நன் -கடைந்து
க்ரத் நாதி ஸ் வாது காதா லஹரிதசசதீ -க்ரத் நாதி-முகம் பார்த்து அனுபவிக்கும் படி
நிர்க்கதிம் ரத்ன ஜாதம் — ரத்ன குவியல் -ரத்நாகரம் சமுத்திரம் –
கல்யாண குணங்களே அமிர்தம் –ரத்ன குவியல் -ரத்னாகாரம் -சமுத்ரம் -நிர்க்கதம் -ஆயிரம் அலைகள் -கிரந்தாதி -கோத்து-
ரத்னாவளி -அருளிச் செய்கிறார் -ஸ்வாது -அத்யந்த போக்யம்-பிரசக்தயதி –

———————– ——————————————————————————-

பாஞ்சாலீ காத்ர சோ பாஹ்ருத ஹ்ருதய வதூ வர்க்க பும்பாவ நீதயா
பத்யவ் பத்மா சஹாயே பிரணயிநி பஜத -ப்ரேயஸீ பாரதந்தர்யம்
பக்தி ஸ் ருங்கார வ்ருத்தயா பரிணமிதி முநேர் பாவ பந்த ப்ரதிம்நா
யோகாத் ப்ராகுத்தரா வஸ்தி திரிஹ விரஹோ தேசிகா ஸ் த்ரதூதா –3-

பாஞ்சாலீ காத்ர சோ பாஹ்ருத ஹ்ருதய வதூ வர்க்க பும்பாவ நீதயா-திரௌபதி சரீர அழகு -அபகரிக்க பட்ட மற்ற பெண்கள்
-புருஷ பாவம் அடைய -வன பர்வம் வேத வியாசர் -பத்ம பத்ராக்ஷி -பிராகிருத பெண்ணை பார்த்தே இப்படி என்றால் -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபகாரம்
பத்யவ் பத்மா சஹாயே பிரணயிநி பஜத -அநபாயினி -சஹா அயம் -பிரயணித்வம் -கோவை வாயாள்-சத்தை ஒவ் ஒருவருக்கு ஒருவர் –
ப்ரேயஸீ பாரதந்தர்யம் -சர்வ பிரகாரத்தாலும் அவன் அதீனம்-ஸ்ரீ மான் -விடாமல் சேர்ந்து இருக்கும் -ஸ்ரீ யபதி என்பதே அர்த்தம் என்பர்
-ப்ரீதிக்கு விஷயம் அவள் பாரதந்தர்யம் -அளவற்ற பாரதந்தர்யம்
பக்தி ஸ்ருங்கார வ்ருத்தயா பரிணமிதி முநேர் பாவ பந்த ப்ரதிம்நா-புருஷருக்கு -அதுக்கு மேலே -விரக்தருக்கு -ஞானாதிகர் வேறே
-எப்படி ஸ்த்ரீ பாவம் -சிருங்கார விருத்திகள் -முதல் ஸ்ரீ யப்படி-காமுகன் வார்த்தை என்று அஞ்சிறைய மட நாரை-1-4- கேட்டு விலகினான் —
ஆனந்த பரிவாஹ திருவாய் மொழி – – பாஹ்ய ஹானியால்-போனானே -தூது விட்டு திர்யக் காலிலே விழுந்து –
சிருங்காரம் -அபி நிவேசம் -பரிணமித்த பக்தி -நிரூபாதிக பதி-மற்றவர் அனைவரும் ஸ்த்ரீ பிராயர்கள் -அவனும் பிரணயித்தவமும் காட்டி
-உன் மணாளனை எம்முடன் நீராட்டு -அவளும் கூடவே இருக்க –
ப்ரதிம்நா-பாவ பந்த கனத்தால் –
யோகாத் ப்ராகுத்தரா வஸ்தி திரிஹ விரஹோ தேசிகாஸ் த்ரதூதா -யோகம் மானஸ அனுபவம்
-ஸ்வரூப ரூப குண விபூதிகள் பத்தும் பத்துமாக அனுபவித்து -அனுபவ ஜெனித ப்ரீதி பரிவாஹம்-வியோகம் துக்கம் விரஹம் ஆற்றாமை
– யோகாத் -ப்ராக் உத்தர அவஸ்தா -முன்னும் பின்னும் பகவத் அனுபவம் இல்லை -ஏற்ற நோற்றேற்க்கு என்ன குறை
-வீற்று இருந்து -திருவாயமொழி -நித்ய விபூதி அனுபவம் இங்கேயே அனுபவித்து -சூழ் விசும்பு அணி முகில் அடுத்து அன்றோ இது
இருந்து இருக்க வேண்டும் -தீர்ப்பாரை யாமினி வருவது அறியாமல் அன்றோ அருளிச் செய்கிறார் –
பக்ஷிகளை கடகராக தூது விடுகிறார் -தேசிகாஸ் த்ரதூதா-

———————————————————————————————————–

பாஷா கீதி ப்ர சஸ்தா பகவதி வசநாத் -ராஜ வச்சோபசாராத்
சா சாகஸ்த்ய ப்ரா ஸூதாத் விதி பரி ஜக்ருஹே பூமிகா பேத யோக்யா
யத் தத் க்ருத்யம் ஸ்ருதீ நாம் முனி கண விஹிதை-சேதி ஹாசை புராணை
ஸ்தத்ரா சவ் சத்த்வ ஸீம் ந சடமத நமு நே -சம்ஹிதா ஸார்வ பவ்மீ -4-

பாஷா கீதி ப்ர சஸ்தா பகவதி வசநாத்
-பாஷா -திராவிட -நிஷிதா -நகர்த்தவ்ய -வைதிக பரிக்ரீருஹீதம் இல்லை -வசனம் இருந்தாலும்
-ப்ரசாஸ்தா -கொண்டாடப் படுவதாய் இருக்கும் -எதனால் பகவத் வசனமாக இருப்பதால் -ஸ்வரூப ரூப குண விஷயம் என்பதால்
பகவதி ஏழாம் வேற்றுமை உருபு கொண்டு -மத்ஸ்ய புராணம் வசனம் -தார்மிக ராஜா -நரகம் போக -பகவத் குணம் பேசிய ப்ராஹ்மணன் நாடு கடத்தினாயே –
-ராஜ வச்சோபசாராத்-ராஜாவைஉபசாரம் பண்ணுவது போலே பண்ணத் தக்கது -ராஜாதி ராஜ சர்வேஸ்வரன் அன்றோ
-தங்கள் தங்கள் பாஷையில் கொண்டாடுவது போலே
சா சாகஸ்த்ய ப்ரா ஸூதாத் –
சாக அகஸ்த்யா -உப லஷிதம் பெருமை உடைய –சமஸ்க்ருதம் அறிய பெற்றவர் -மதி நலம் அருள பெற்றவர்
-அகஸ்ய பாஷா வபுஷா சரீரம் போலே வேதத்துக்கு –
விதி பரி ஜக்ருஹே பூமிகா பேத யோக்யா
-பல பல வேஷங்கள் பூமிகா பேதம் -ரெங்கே தாமினி -தசாவதாரம் நாடகம் என்பர் தேசிகன் –
பக்தர் பிரபன்னர் ப்ரேமத்தால் தாய் மகள் தன் பேச்சு -ஆழ்வார் -இவை பேச யோக்கியமான தமிழ் என்றபடி -தெளியாத மறை நூல்கள் தெளிய –
யத் தத் க்ருத்யம்- ஸ்ருதீ நாம் முனி கண விஹிதை-சேதி ஹாசை புராணை
-வேதங்கள் இதிகாசம் புராணங்கள் இருக்க -இவை உத்க்ருஷ்டம் -தேவதா பரத்வம் சொல்லாமல் -சாத்விக புராணம் –
ஆதித்ய ஹ்ருதயம் ஸ்ரீ ராமாயணத்தில் இடைச் செருகல் என்பர்
-இவற்றை விட ஸ்ரேஷ்டம்- திருவாய் மொழி -சத்வ குணமே பூர்ணமாக இருப்பதால் –
ஸ்தத்ரா சவ் சத்த்வ ஸீம் ந சடமத நமு நே –
சடகோப முனி சத்வ குணம் ஸீம்னா-உண்ணும் சோறு -எல்லாம் கண்ணன் –
சம்ஹிதா ஸார்வ பவ்மீ –
விச்சேதம் இல்லாமல் -தொடர்ந்து -அந்தாதி ரூபமாக அருளிச் செய்யப் பட்டதால் –

—————————————————————————————————–

ஆதவ் சாரீர கார்த்தக்ரமமிஹ விசதம் விம்ச திரவத்தி சாக்ரா
சங்ஷேபோ அசவ் விபாகம் பிரத்யதி சருசாம் சாரு பாடோ ப பன்னம்
சமயக்கீதாநுபந்தம் சகல மநுகதம் சாம சாகா சஹஸ்ரம்
சம்லஷ்யம் ஸாபி தே யைர் யஜுரபி தசகைர் பாத்ய தர்வார சைஸ்ஸா –5-

ஆதவ் சாரீர கார்த்தக்ரமமிஹ விசதம்-தொடக்கத்தில்
விம்ச திரவத்தி சாக்ரா -அக்ரா–சார்வே -கண்ணன் -அருள் -முனியே வரை ஆறு சதகங்கள் –விம்சதி -முதல் 11 பாசுரங்கள்
சித்த த்விகம் சர்வ ஜகத் காரணத்வம் -அடுத்த 10- வீடு மின் முற்றவும் -சாதிய த்விகம் விசத்தமாக
சாரீர -545 ஸூ த்ரங்கள்-4 அத்தியாயங்கள் –16 பாதங்கள் – -2 த்விகம் – சித்தம் சாத்தியம் -ராக பிராப்தமான சாத்தியம் –
முமுஷு மோக்ஷம் இச்சா பிராப்தம் பலம் -உபாயம் விதேயம் -அத்தை தான் சாஸ்திரம் விதிக்கும் -ப்ரஹ்மம் ஸ்வரூபாதிகள் சித்தம்
-ஸ்ம்ருதிகள் சமன்வய அதிகாரம் -சம்யக் அன்வயம் -வேதாந்த வாக்கியங்கள் ப்ரஹ்மத்திடமே அன்வயம் -முதலில் சொல்லி அடுத்து
-வேத வருத்தம் -கபிலர் -ஹிரண்யகர்ப யோக ஸ்ம்ருதிகள் போல்வன -பாஹ்ய குத்ருஷ்டிகள் வாதம் -வேதாந்த விரோதமானவற்றை மட்டும் நிராகரித்து –
-அவிரோதம் -நிரூபித்தவற்றை திருடிகரித்து –வேதாந்த சாஸ்திரம் -சர்வ சரீரி அந்தர்யாமி என்பதால் சாரீரா சாஸ்திரம் -சாதனா அத்யாயம் -பல அத்யாயம் –
அர்த்த க்ரமம்-ஸ்ருத்தி -வேதாந்த வாக்கியங்களை திரட்டி –அதிகரண சாராவளி -சிரேஷ்டா
-ஸ்திதி சம்ஹாரம் உப லக்ஷணம் -காரண பூதன் -1-1- இதில் -7 அதிகரணங்கள் – தேஹீ -1-2- சரீரமாக கொண்டவன்
-ஸமஸ்த சேதன அசேதனங்களையும் -தாரகன் நியாந்தா சேஷி -ஸ்வரூபம் சங்கல்பத்தாலும் –
பிரயோஜகத்வம் -சரீரத்வம் -ஜவ த்வாராவாகவும் -அவ்யஹிதமாகவும் -சரீரி -தானே ஸ்வரூபேண தரிக்கிறான்
-சர்வம் கல்விதம் இதம் ப்ரஹ்ம-இதி சாந்த உபஷித -காரண கார்யம் பேதம் நிரூபிக்க பட்டதும் -இங்கே சரீர ஆத்ம பாவம் -தஜ்ஜலான் இதி –
ஸூ நிஷ்டா -தானே தனக்கு ஆதாரம் -அடுத்து -1-3-
நிரவதி மஹிமா -1-4 -அசைக்க முடியாத -சாங்க்யர்களாலும்-
2-1-அபார்த்த பாதகம் -விரோதங்கள் அற்ற –
2-2- ஸ்ரீத ஆப்த -ஆஸ்ரிதர்களுக்கு ஆப்தம் –
சங்ஷேபோ அசவ் விபாகம் பிரத்யதி சருசாம் சாரு பாடோ ப பன்னம்
21 சாகைகள் ரிக் வேதம் –மந்த்ரம் 4 பாதங்கள் -சமமான அக்ஷரங்கள் -சாரு பாடம்-அழகிய -கீதா பிரதானம் சாம வேதத்துக்கு -சேஷ யஜுர் லக்ஷணம் –
21 பாசுரங்கள் இவற்றை காட்டும்
சமயக்கீதா நு பந்தம் சகல மநுகதம் சாம சாகா சஹஸ்ரம்
1000 பாசுரங்கள் -சாம சாகா சகஸ்ரம் –
மநு -மந்த்ரம் -சாந்தோக்யம் கொண்ட சாம வேதம் -ப்ரஹ்ம வித்யைகள் கொண்டது -இசையுடன் கூடிய திருவாய் மொழி
சம்லஷ்யம் ஸாபி தே யைர் யஜுரபி –
யஜுவ்ர் வேத லக்ஷணம் -ரிக் ஸ்துதி பிரதானம் -1300 ஸூ க்தங்கள் கொண்ட ரிக்வேதம் யோகத்தால் ஆராதிக்கும் தேவதைகளை ஸ்துதி பண்ணும்
-சாம வேதம் காண பிரதானம் -யகாதி அனுஷ்டானம் வேத பிரயோஜனம் -அக்னி ஹோத்ரம் தொடக்கமான யாகாதிகள் செய்வதே வேதாத்யயனம் செய்வதின் பலம்
-ஆத்மசமர்ப்பணம் நிரூபித்து திருவாய் மொழி யஜுவ்ர் வேத சாம்யம் -அபிதேயம் -சப்த சமுதாயார்த்தம் அபிதானம் –
தசகைர் பாத்ய தர்வார சைஸ்ஸா-
பாத்ய அதர்வா -அதர்வண -மிகுந்த ரசங்கள் கூடிய திருவாய் மொழி -8 சாகைகள் அதர்வண வேதத்தில் -அஷ்ட ரசங்கள் -சாந்தி ரஸா பிரதானம்
-ஸ்ருங்காரா தொடங்கி-நவ ரசம் -சாந்தி ரசம் அபிநயித்து காட்ட முடியாது அஷ்ட ரசம் என்பர் -பரத நாட்டியம் -ஒன்பதாவது சாந்தி சேர்த்து -சமதமாதிகள் சாந்தி –
வீரம் உத்ஸாகம் -பூரணமான திருவாய்மொழி-சாந்தி கிட்டும் –

————————————————————————————————-

விஷய சங்க்ரஹம் சாதிக்கிறார் -மேல் ஐந்து ஸ்லோகங்களால் –
முதல் நான்கு பத்துக்கள் -சாஸ்த்ரா பிரதிபாத்யர்த்தங்கள் –

ப்ராஸ்யே சேவா நு குண்யாத் ப்ரபு மிஹ சதிகே சமம்ஸ்தே முக்தேருபாயாம்
முக்த ப்ராப்யம் த்வ தீயே மு நிரநுபுபுதே போக்யதா விஸ்தரேண
ப்ராப்யத்வோ பாயாபா வவ் ஸூ ப ஸூ ப கத நோ நித்யா வா தீத்த்ருதீயே
அநந்ய ப்ராப்யஸ் சதுர்த்தே சம பவ திதரை ரப்ய நன்யாத் யுபாய –6-

ப்ராஸ்யே -சதகே-முதல் சதகத்தில்-
சேவா நு குண்யாத் ப்ரபு மிஹ -பிரபுவை -அசாதாரண சப்தம் -பிரபாவதி -சர்வ நியாந்தா -பல பிரதானம் -அஹம் சர்வ எஜ்ஜாம் பிரபு ரேவச –
சமம்ஸ்தே முக்தேருபாயாம் -அமம்ஸத்த -தெளிவாக அனுசந்தித்தார் -முக்தேர் உபாயம் -என்பதற்கு விதேயம் பிரபு -எது இல்லா விட்டால் எது உண்டாகாது அது விதேயம் –
ஹேது -சேவா அணுகுண்யாத் -சேவ்யத்வம் இருப்பதால் -சேவைக்கு உரியவனாய் இருப்பதால் –
பத்து குணங்கள் -பரத்வம் ஆசிரயணீத்வம் –போக்யத்வம் ஆர்ஜத்வம் சாத்மீக போக பிரத்வம் நிருபாதிக ஸுஹார்த்தம் இத்யாதி –
முக்த ப்ராப்யம் -அவனே முக்த பிராப்யம்
த்வ தீயே-இரண்டாம் சதகத்தில்
மு நிரநுபுபுதே -அணு சந்தானம் -அநு புபுதே தொடர்ந்து சிந்தனை பண்ணி
போக்யதா விஸ்தரேண-போக்யம் தானே ப்ராப்யம் -உபாயம் பண்ணி பய வஸ்துவை அடைவோம் –
ஹேது போக்யத்வம் -வாயும் திரை -வியதிரேகத்தால் நிரூபிக்கிறார் -முதலில் -க்ஷணம் காலமும் விட்டு பிரிய முடியாதே -சமான துக்கம் -லலித உத்துங்க பாவம் –
திண்ணன் வீடு -நம் கண்ணன் -பரத்வம் சொல்லி -நம் சொல்லி ஸுலப்யம் எல்லை -கோபால கோளரி –மூன்று அடிகள் பரத்வம் ஒரே சப்தம் எளிமை –
அடியார்களுக்கு கொடுப்பான் போக்யத்தை தேனும் பாலும் கன்னலும் ஓத்தே –ஆடி ஆடி -போகம் சாத்திமிக்க
-அந்தாமத்து -தனது பேறாக இதில் -ஊனில் வாழ் உயிர் ஆழ்வாருக்கு பேறு -அந்தாமத்து அன்பு இவனுக்கு புருஷார்த்தம் -அதிசங்கை பண்ண
மா ஸூ ச என்கிறார் ஆழ்வார் -வைகுந்த -உன்னை நான் பிடித்தேன் கோல் சிக்கெனவே -என்கிறார் –
சம்பந்திகள் அளவும் -கேசவன் தமர் –எமர்-இருவரும் இதனால் விரும்ப –
அணைவது -பரம பத முக்த ப்ராப்ய போகம் -தாய் தந்தை படுக்கையில் அஹம் ப்ரஹ்மாஸ்மி இங்கே போதராய்
-அகஸ்திய பாஷையில் கலந்து பேசி அனுபவித்து -தனக்கே யாக அதுவும் –
ப்ராப்யத்வோ பாயாபா வவ்
ஸூ ப ஸூ ப கத நோ நித்யா வா-அழகிய பாவானத்வம் திவ்ய மங்கள விக்ரஹமே
தீத்த்ருதீயே சதகம் -மூன்றாம் பத்தால்-திவ்ய மங்கள விக்ரஹத்தால் உபாயம் உபேயத்வம்
முடிச்சோதி –தொடங்கி -அருளிச் செய்தார் இத்தையே மூன்றாம் பத்தால்
அநந்ய ப்ராப்யஸ் -அவன் ஒருவனையே பற்ற -பரம பிராப்யம்
சதுர்த்தே -நாலாம் பத்தால் -மற்றவை அல்பம் அஸ்திரம்
ஒரு நாயகமாய் -தொடங்கி –
சம பவ து -இதரை ரப்ய நன்யாத் யுபாய -மேலே அவனை அநந்ய ப்ராபகம்-5-10 பத்தால் -அவனே அநந்ய உபாய பூதன் -என்று சாதித்து அருளுகிறார் –

—————————————————————————-

தேவ ஸ்ரீ மான் ஸ்வ சித்தே கரணமிவ வத ந்நேகமர்த்தம் ஸஹஸ்ரே
சேவ்யத் வாதீன் தசார்த்தான் ப்ருதஸிக சதகை ர்வக்தி தத் ஸ் தாப நார்த்தான்
ஐகை கஸ்யாத் பரத்வா திஷூ தசத குணே ஷ்வாய தந்தே ததா தே
தத் தத் காதா குணா நாம நு வித ததி தத் பஙக்த்ய பங்க்தி சங்க்யா-7-

ப்ராப்ய ப்ராபக ஐ க்யமே -பிரபந்த பிரதிபாத்ய குணம் -அனந்த வேதங்களுக்கும் த்வத் பிராபியே ஸூயமேவ உபாயா சுருதிகள் கோஷிக்குமே
தேவ ஸ்ரீ மான் -சகல ஜகத்தையும் நிரூபாதிக்க சேஷி -ஸ்ரீ மான் -தேவ -சாமான்ய -ஸ்ரீ மான் -விசேஷணம்
ஸ்வ சித்தே -தன்னை பலமாக அடைய
கரணமிவ -சாதனம் -உபகரணம் -தானே என்று
வத ந்நேகமர்த்தம் ஸஹஸ்ரே-ஒரே பொருளை அறிவித்து கொண்டு -வதன் ஏகம் அர்த்தம் –
சேவ்யத் வாதீன்- தசார்த்தான் –
ப்ருதஸிக சதகை ர்வக்தி தத் ஸ்தாபநார்த்தான் -ஸ்தாபனம் -ஸ்தாபிக்க வேண்டிய குணங்கள் -பத்தும்
சேவ்யத்வம் போக்யத்வம் திவ்ய மங்கள வி க்ரஹத்வம் -மற்றவை அல்பம் அஸ்திரம் —
பிராபத்தான ஸூ லபன் –அநிஷ்ட நிவ்ருத்தி –சிந்தா அனுவ்ருத்தி -இஷ்டா -நிருபாதிக்க பந்து -அர்ச்சிராதி போன்ற பத்தும்
இவற்றை விஸ்தீரத்து நூறு -பரத்வம் /ஆசிரயணீய சாமான்யன் ஸுலப்யம் அபராத சஹத்வம் -ஸுசீல்யம் -ஸூராத்யன்
-அதி போக்யத்வ ஆராதனத்வம் -ஆர்ஜவம் -சாத்திமிக்க போக பிரதத்வம் -உதார பாவன் –
க்ஷணம் விரக /இப்படி நூறு குணங்கள் காட்டி அருளி –
ஐகை கஸ்யாத்- பரத்வா திஷூ தசத குணேஷ்-பரத்வாதி தச குணங்களை
வாயதந்தே ததா தே -தத் தத் காதா குணா நாம
அநு வித ததி தத் பஙக்த்ய பங்க்தி சங்க்யா–1000 பாசுரங்களில் –
இவற்றை 1000 குணங்களாக வெளிப்படுத்தி –
நி ஸ் சீமா கல்யாண குணங்கள் / முழு நலம் -ஞானானந்த /அனந்த லீலை விஷயம் /சத்தா ஸ்திதி பிரவ்ருத்திகள் நிவ்ருத்திகள் தன் ஆதீனம்
/விஸ்வரூபியாத் -கரந்து எங்கும் பரந்துளன் -/சர்வாத்மாபாவம் /ஸ்திர சுருதி சித்தன் -சுடர் மிகு சுருதி –
சர்வ வியாபி -பரத்வத்தை விஸ்தீரத்து -பரன் அடி மேல் குருகூர் சடகோபன் –

—————————————————————————————————–

சேவ்யத்வாத் போக்யபாவாத் ஸூ பத நு விபவாத் சர்வ போக்யாதிகத்வாத்
ஸ் ரேயஸ் தத்தேதுதா நாத் ஸ் ரித விவிச தயா ஸ் வாஸ்ரித நிஷ்ட ஹ்ருத்த்வாத்
பக்தச்சந்தா நு வ்ருத்தே நிருபதிக ஸூ ஹ்ருத் பாவத சத் பதவ்யாம்
சாஹாயாச்ச ஸ்வ சித்தே ஸ்வயமிஹ கரணம் ஸ்ரீ தர ப்ரத்யபாதி–8-

சேவ்யத்வாத் -சேவா யோக்யத்வாத்
போக்யபாவாத் –
ஸூ பத நு விபவாத்-திவ்ய மங்கள விக்ரஹம்
சர்வ போக்யாதிகத்வாத்
ஸ் ரேயஸ் தத்தேதுதா நாத் -தத் ஹே து -தானே உபாயம் உபேயம்
ஸ் ரித விவிச தயா-ஆஸ்ரிதர் வசப்பட்டவன் ஆறாம் பத்து
ஸ் வாஸ்ரித நிஷ்ட ஹ்ருத்த்வாத் -ஆஸ்ரிதர் அநிஷ்டங்கள் அபகரிப்பவன் -ஏழாம் பத்து
பக்தச்சந்தா நு வ்ருத்தே ஆஸ்ரிதர் -விருப்பம் அனுகுணமாக தான் -தமர் உகந்த செயல்கள் -செய்பவன்
நிருபதிக ஸூ ஹ்ருத் பாவத -நிருபாதிக பந்து ஒருவனே
சத் பதவ்யாம் -சாஹாயாச்ச -அர்ச்சிராதி வழி துணை பெருமாள்
ஸ்வ சித்தே ஸ்வயமிஹ கரணம்-
ஸ்ரீ தர ப்ரத்யபாதி –நிரூபிக்கப் பட்டான்

———————————————————————————————————–

ப்ரூதே காதா சஹஸ்ரம் முரமதந குண ஸ் தோமா கர்பம் மு நீந்த்ர
ப்ரத்யே கஞ்சாத்ர காதா பிரதித விபு குணா ஸ் யஷ்ட மத்யக்ஷ யாம
தத்ரா சங்கீர்ண தத் தத்த சக குண சதா ஸ்தாபநவ் சித்ய யுக்தான்
ஐதம் பர்யா வருத்தாந கணித குணி தான் தத் குணா நுதக்ருணீ ம –9-

ப்ரூதே காதா சஹஸ்ரம் -அருளிச் செய்கிறார் ஆயிரம் பாசுரங்கள்
முரமதந குண ஸ் தோமா கர்பம் -முரன்-நிரசித்த முர மதன -ஸ்தாமம் சமுதாயம் -கல்யாண குணங்களை -தன்னுள் அடக்கி
மு நீந்த்ர–பகவத் குண -மனன சீல -சிரேஷ்ட
ப்ரத்யே கஞ்சாத்ர காதா
பிரதித விபு குணா ஸ் யஷ்ட மத்யக்ஷ யாம -பிரத்யக்ஷமாக நாம் தேசிகன் காண்கிறார் -கௌரார்த்த பஹு வசனம் -ஸ்பஷ்டமாக கண்டார் -சாஷாத் கரித்து
தத்ர அசங்கீர்ண தத் தத்த சக குண-அனுபவித்த குணங்களை -தசக குணங்கள் நூறு -பரத்வம் —அபராத சஹத்வம் போல்வன
-அசங்கீர்ணம் புனர் யுக்தி இல்லாமல் -தத்ர -இப்படி அனுபவித்த அவற்றை
சதா ஸ்தாபநவ் சித்ய யுக்தான் -ஸ்தாபிக்க ஓவசித்தம் யுக்தான் —
ஐதம் பர்யா வருத்தா ந -தன்னைத் தானே -காட்டி -வேறு ஒன்றை எதிர்பார்க்காமல் –
அகணித குணிதான்-எண்ணிக்கை இல்லாத -பெருமை ஒவ் ஒன்றுக்கும்
தத் குணா நுதக்ருணீ ம -வெளிப்படுத்தி அருளுகிறார் -உத்க்ரஹணம் -நாம் அனுபவிக்க –

———————————————————————————————-

இச்சா சாரத்ய சத்யாபித குண கமலா காந்த கீதான் த சித்ய
ச்சுத்தாந்தாசாரா ஸூ த்தை ரியம நக குண க்ரந்தி பந்தா நு பத்தா
தத்தாத் ருக்தாம் பர்ணீ தடகத சடஜித் த்ருஷ்ட சர்வீய சாகா
காதா தாத்பர்ய ரத்நா வலி சில பயோத் தாரிணீ தாரணீ யா -10-

இச்சா சாரத்ய சத்யாபித குண -இச்சையால் சாரத்யம் பண்ணிய -சத்யாபிதா குணங்கள் -அதனாலே -வெளிப்பட்ட
கமலா காந்த கீதான் த சித்ய -ஸ்ரீ கீதையில் -ஸ்ரீ யபதி -சரம ஸ்லோகத்தில் -மெய்ம்மை பெரு வார்த்தை விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பார் -இவரே சாக்ஷி —
ச்சுத்தாந்தாசாரா ஸூ த்தை-அந்தப்புர -பரமை ஏகாந்திகளுக்கு -சாத்திக் கொள்ள –
ரியம நக குண க்ரந்தி பந்தா நு பத்தா-இயம்-இந்த -அநக குணம் -ஹேயப்ரத்ய நீக-முகம் பார்த்து கோக்கப் பட்ட
தத்தாத் ருக்தாம்பர்ணீ தடகத -அவனுக்கு ஒத்த பெருமை -தாம்ரபரணீ தடம் -சேர்ந்த ஆழ்வார் -பொரு நல் -சங்கணி துறைவன் -வடகரை –
சடஜித் த்ருஷ்ட சர்வீய சாகா-சாஷாத் கரிக்கப் பட்ட -த்ருஷ்டா -விசுவாமித்திரர் காயத்ரி மந்த்ரம் கண்டால் போலே -ரிஷிகள் மந்த்ர த்ரஷ்டாக்கள்-
சர்வீய சாகை -அனைவரும் அதிகரிக்கும் படி —
காதா தாத்பர்ய ரத்நா வலி -தாத்பர்ய ரத்னங்களால் கோக்கப் பட்ட மாலை
அகில பயோத் தாரிணீ தாரணீ யா –சாத்திக் கொள்ள -நெஞ்சுக்கு உள்ளும் -கொண்டு –அகிலம் சம்சாரம் -தாண்டுவிக்க -உத்தாரணம்

——————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை   அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே .மன்னார்குடி ராஜ கோபால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -1-6-

November 19, 2016

அவாப்த சமஸ்த காமனாய் -பரிபூர்ணனான -ஸ்ரீ யபதியாய் இருக்கிற ஈஸ்வரனை ஷூத்ரனும் ஷூத்ர உபகரணனுமாய் இருக்கிறவன்
ஆஸ்ரயிக்கைக்கு உபாயம் உண்டோ -என்னில்
இவன் இட்டது கொண்டு வயிறு நிறைய வேண்டும்படி குறை இல்லாமையாலே அந்த பூர்த்தியும் ஸ்வா ராததைக்கு உறுப்பு
ஸ்ரீ யபதித்வமும் தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்கும் சீலாதிகளுக்கு அடியாகையாலே அதுவும் ஸ்வா ராததைக்கு உடலாகக் கடவது
வித்த அவ்யய ஆயாசங்கள் இல்லாமையாலும் -பிரத்யவாய பிரசங்கம் இல்லாமையாலும் – -த்ரவ்யாதி கார்யங்கள் யுடைய விசேஷநியதி இல்லாமையாலும்
த்வத் அங்க்ரி முத்திச்ய —யா க்ரியா-பத்ரம் புஷ்பம் -அந்ய பூர்ணாத் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே ஆஸ்ராயணம் ஸூகரம் என்கிறார் –

———————————————————————————————–

ஆஸ்ரயிப்பார்க்கு த்ரவ்ய நியதி இல்லை என்கிறார் –

பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர்
பிரிவகையின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே –1-6-1-

பரிவதில் ஈசனைப்
ஹேய ப்ரத்ய நீகனான சர்வேஸ்வரனை
பரிவு என்று துக்கமாதல் -பஷபாதம் ஆதல் –
உபாசகனுக்கு துக்கேன ஆஸ்ரயிக்க வேண்டியிருக்குமதுவும் -ஆஸ்ரய ணீ யனுக்கு ஹீயம்-
குருவாக ஆஸ்ரயித்தன் பக்கலிலே பஷபதித்து -லகுவாக ஆஸ்ரயித்தன் பக்கலிலே நெகிழ்ந்து இருத்தல் செய்யுமதுவும் ஆஸ்ரயணீய வஸ்துவுக்கு ஹேயம்-
இவை இல்லாமையாலே ஹேய ப்ரத்ய நீகன்-என்கை-
ஹேய ப்ரத்ய நீகதை புக்க விடத்தே கல்யாண குணங்களும் புகக் கடவதாகையாலே இது அதுக்கும் உப லஷணம்
ஈசனை –
இவன் இடுவதில் குறையுள்ளது தன் குறையாம் படி இருக்கிற சம்பந்தத்தைச் சொல்லுகிறது –
இழவு பேறு தன்னதாம் படி இருக்கும் சம்பந்தத்தை யுடையவனை
ஆஸ்ரயணீயனும் ப்ராப்யனும் ஆகையிறே-உபய வாக்யத்திலும் நாராயண சப்த பிரயோகம் பண்ணிற்று
அல்லாதார் துராராதர் ஆகையாலே அநாஸ்ரயணீயர் –

பாடி –விரிவது மேவலுறுவீர்
சம்சாரான் முக்தராய் சமஸ்த கல்யாண குணாத்மகனை அனுபவிக்கையாலே -அவ்வனுபவத்துக்குப் போக்குவீடாக
எதத் சாம காயன் நாஸ்தே -என்கிறபடியே பாடி விஸ்ருதராகை யாகிற சம்பத்தை பெற வேண்டி இருப்பீர்
இந்த கனத்த பேற்றுக்குச் செய்ய வேண்டும் கிருஷி என் என்னில்
பிரிவகையின்றி
பிரிவாகிற வகை இன்றி
நினைந்து நைந்து -சூட்டு நன் மாலைகள் -என்கிறபடியே விலஷணர் ஆஸ்ரயிக்கும் அவனை நாம் ஆஸ்ரயிக்கை யாவது என் -என்று
அகலுகைக்கு ஒரு வகையிட்டுக் கொண்டு அகலாதே
நன்னீர்த்
ஒரு கந்தத்தாலும் உபஸ்கரியாத வெறும் நீர்
தூயப் –
அக்ரமாகப் பிரயோகித்து
-புரிவதும்
நீங்கள் அருள் கொடையாகக் கொடுக்குமதுவும்
புகை பூவே
அகில் புகை -கரு முகைப் பூ என்று விசேஷியாமையாலே ஏதேனும் புகையும் ஏதேனும் புஷ்பமும் அமையும்
இது ஸ்வாராததையைப் பற்றிச் சொல்லிற்று
இவனைப் பார்த்தால் -எண்டிசையும் உள்ள பூக்களைக் கொண்டும் -என்றும் -நாடாத மலர் நாடி –
தூய நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு -என்றும் சொல்லக் கடவது இ றே
அவனைப் பார்த்தால் -கள்ளார் துளாயும்-இத்யாதிகளில் சொல்லுகிற மாத்ரமே அமையும்
ந கண்ட காரிகா புஷ்பம் தேவாய வி நிவேதயத் -என்கிற விதியாலே தவிருகிறதும் -ப்ரேம பரவசனாய்ச் சென்று
பறிக்கிறவன் கையில் முள் பாயாமைக்காக என்று பட்டர் அருளிச் செய்வர்
ஸ்ரீ வராஹ புராணத்திலே ஸ்ரீ வராஹ நாயனாருக்கு முத்தக்காசை அமுதுபடியாக சொல்லிற்று –

———————————————————

த்ரவ்ய நியதி இல்லாமையே அன்று -அதிகாரி நியமும் இல்லை என்கிறார் –

மதுவார் தண்ணம் துழாயான் –முது வேத முதல்வனுக்கு
எதுவேது என் பணி என்னாது அதுவே ஆட்செய்யுமீடே –1-6-2-

மதுவார் தண்ணம் துழாயான் –
பூவே -என்றது கீழ் -மதுவார் -என்று தொடங்கிற்று இதில் -அந்தாதிக்கு சேரும்படி என் என்னில் –
பூவாகில் மதுவோடு கூடி இருக்கையாலே சேரும் -என்று சொல்லுவர் தமிழர் –
ஐஸ்வர்ய ஸூசகமாய் திருக் குழலின் ஸ்பர்சத்தாலே மதுஸ் யந்தியான திருத் துழாயை யுடையவன் –
சர்வேஸ்வரத்வ லஷணம் இது வி றே
ஐஸ்வர் யமும் போக்யதையும் இருக்கிற படி
-முது வேத முதல்வனுக்கு
இவ்வொப்பனை அழகை அனுபவித்து ஏத்தப் புக்கு ஷமர் அன்றிக்கே -இவ்விஷயத்தை பேசும் போது
அபௌரு ஷேயம் ஆகையாலே நித்தியமான வேதமே யாக வேண்டாவோ -என்கிறார் –
வேத முதல்வன் ஆகையாவது -சாஸ்திர யோநித்வாத் -என்கிறபடியே வேத பிரதிபாத்யன் என்கை
திருத் துழாய் மாலையாலே அலங்கருதன் என்கைக்கு மேல் இல்லை சர்வாதிகன் என்கைக்கு
அதுக்கு மேலே ஓன்று இ றே வேதைக சமதிகன்யன் என்னுமது

எதுவேது என் பணி என்னாது அதுவே
வேத முதல்வனுக்கு பணி எது -என் பணி ஏது-என்னாததுவே
நித்ய ஸூ ரிகள் அன்றோ அவனுக்கு சத்ருசர் -நாம் செய்யுமது ஏது -என்று கை வாங்காது ஒழிகை
அந்தரங்க வ்ருத்தியோடு பஹிரங்க வ்ருத்தியோடே வாசி இன்றிக்கே அஹம் சர்வம் கரிஷ்யாமி என்று இருக்கை என்னவுமாம்
ஆட்செய்யுமீடே
ஆட்செய்கைக்கு அதிகாரம் –

——————————————————–

கீழ் இரண்டு பாட்டிலும் சொன்ன குணங்களை அனுசந்தித்து -தாம் அதிகரித்த கார்யத்தை மறந்து அவன் பக்கல் தம்முடைய
மநோ வாக் காயங்கள் ப்ரவணமாய் இருக்கிறபடியை அருளிச் செய்கிறார்

ஈடும் யெடுப்புமிலீசன் -மாடு விடாது என் மனனே
பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே –1-6-3-

ஈடும் யெடுப்புமிலீசன் –
ஜன்ம வ்ருத்தாதிகளால் உத்க்ருஷ்டன் என்று ச்வீகரித்தல் -அபக்ருஷ்டன் என்று உபேஷித்தல் செய்யாத சர்வேஸ்வரன்
ஜாத்யாதிகள் பார்க்க விறகு இல்லையே
சம்பந்தம் சாதாரணம் ஆனபின்பு ஆரை விடுவது
மாடு விடாது என் மனனே
அவன் பரிசரத்தை விடுகிறது இல்லை என் மனஸ்சானது
பிரயோஜனத்தைப் பற்றிக் கிட்டிற்று ஆகில் இ றே பலத்து அளவிலே மீளுவது
நான் அதிகரித்த காரியத்துக்கு நெஞ்சு ஒழிகிறது இல்லை
உம்முடைய அஹ்ருதமான உக்தியே அமையாதோ எங்கள் ஹிததுக்கு என்ன
பாடும் என் நா அவன் பாடல்
என்னுடைய வாக்கானது அவனுடைய குண பிரதிபாதிதமான காதா விசேஷங்களைப் பாடா நின்றது
உம்முடைய ஹஸ்த முத்ரையே அமையாதோ எங்களுக்கு அர்த்த நிச்சயம் பண்ணுகைக்கு என்ன
ஆடும் என் அங்கம் அணங்கே
என்னுடைய சரீரமும் தைவாவிஷ்டரைப் போலே ஆடா நின்றது
தம்முடைய கரணங்கள் தனித் தனியே மேல் விழக் கண்ட ப்ரீதியாலே -என் மனன் -என் நா -என் அங்கம் -என்று உகக்கிறார் –

———————————————————————

கீழ்ச் சொன்ன ப்ராவண்யம் காதாசித்கம் அன்றிக்கே நித்யமாய்ச் செல்லா நின்றது என்கிறார் –

அணங்கு என ஆடும் என் அங்கம் -வணங்கி வழி படும் ஈசன்
பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கெழு கொள்கையினானே –1-6-4-

அணங்கு என ஆடும் என் அங்கம் வணங்கி வழி படும்-
கீழ் அணங்கு என்றதுக்கு அர்த்தம் இங்கே தெரிவித்தார் இ றே
தைவாவிஷ்டரைப் போலே ஆடா நிற்கிற என் சரீரம் அவன் பக்கலிலே வணங்கி வழி படா நின்றது
வழி படுகையாவது -அதுவே யாத்ரையாகச் செல்லுகை-

ஈசன் பிணங்கி யமரர் பிதற்றும் –
அமரர் என்கிறது -நித்ய ஸூ ரிகளை -ஏக ரசர் ஆனவர்களை விபிரதிபத்தி உண்டோ என்னில்
தாம்தாம் அனுபவித்த குணங்களில் ஏற்றத்தை -நான் முந்துறச் சொல்ல -நான் முந்துறச் சொல்ல -என்று
ஒருவருக்கு ஒருவர் பிணங்கா நிற்பார்கள்
பிதற்றும் –
ஜ்வர சந்நிபரைப் போலே கூப்பிடா நிற்கை

குணங்கெழு கொள்கையினானே-ஈசன்
ரத்நாகரம் போலே ஏவம் விதமான குணங்கள் வந்து சேருகைக்கு ஆஸ்ரயமாய் உள்ளான் என்னுதல்-
இக்குணங்கள் வந்து கெழுமுகையை ஸ்வ பாவமாக யுடையான் என்னுதல்

பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கெழு கொள்கையினானே-ஈசனைக் கண்டு -அணங்கு என ஆடும் என் அங்கம்
-வணங்கி வழி படும்பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கெழு கொள்கையினான் கிடீர் என்கிறார் –
நித்ய ஸூ ரிகளுடைய யாத்ரையே தம்முடைய கரணங்களுக்கும் யாத்ரையாய் செல்லா நின்றது என்கிறார் –

——————————————————-

திரியவும் தாம் அதிகரித்த கார்யத்தே போந்து -அவன் அநந்ய பிரயோஜனருக்கு நிரதிசய போக்யனாம் என்கிறார் –

கொள்கை கொளாமை இலாதான் எள்கல் இராகம் இலாதான் –
-விள்கை விள்ளாமை விரும்பி –உள் கலந்தார்க்கு ஓர் அமுதே —1-6-5-

கொள்கை கொளாமை இலாதான்-
ஆஸ்ரிதரோடு பரிமாறும் இடத்தில் அவர்கள் பக்கல் தாரதம்யம் பாராதவன்
அதாவது -இவன் உத்க்ருஷ்டன் -அந்தரங்க வ்ருத்தியைக் கொள்வோம்
இவன் அபக்ருஷ்டன் -புறத் தொழிலைக் கொள்ளுவோம் -என்னுமவை இல்லாதவன் –
எள்கல் இராகம் இலாதான் –
அடிமை கொள்ளும் இடத்தில் வாசி இல்லையே யாகிலும் அவ்வாசியை நினைத்து இருக்குமோ -என்னில்
ராக த்வேஷ விபாகம் இன்றிக்கே எல்லார்க்கும் ஒக்க வத்சலனாய் இருக்கும்
ஆனால் இவன் தன்னைக் கிட்டினார் பக்கல் பார்க்குமது ஏது என்னில்
-விள்கை விள்ளாமை விரும்பி –
விள்கை -பிரயோஜநாந்தரங்களைக் கொண்டு விடுகை –
விள்ளாமை -அநந்ய பிரயோஜனனாகை
விரும்பி -ஆதரித்துப் பார்த்து
-உள் கலந்தார்க்கு ஓர் அமுதே-
அநந்ய பிரயோஜ நற்கு நிரதிசய போக்யனாய் இருக்கும் –

————————————————————–

நிரதிசய போக்யனான அவனை உபாயமாகப் பற்றி ப்ரயோஜ நாந்தரங்களை கொண்டு அகலுகிறவர்களை நிந்திக்கிறார்

அமுதம் அமரர்கட்கு ஈந்த -நிமிர் சுடராழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன் நிமிர் திரை நீள் கடலானே –1-6-6-

அமுதம் அமரர்கட்கு ஈந்த –
சாவாமைக்கு பரிஹாரம் பண்ணித் தர அமையும் -என்று இருக்கிறவர்களுக்கு –
ஷூத்ரத்தை அபேஷித்தார்கள்-என்று இகழாதே கடலைக் கடைந்து அம்ருதத்தை கொடுத்த பரம உதாரன்
நிமிர் சுடராழி நெடுமால்
நால் தோள் அமுது -என்றும் -அமுது என்றும் தேன் என்றும் -தம்முடைய அம்ருதம் இருக்கிறபடி
மிக்க தேஜஸ்சை யுடைத்தான திரு வாழியை யுடைய சர்வேஸ்வரன்
இவர்கள் அபேஷித்தத்தை தலைக் கட்டிக் கொடுத்த ப்ரீதியால் வந்த புகர்திரு வாழி யிலே தோற்றி இருக்கை-
பிரயோஜ நாந்தரமே யாகிலும் நம்மைக் கொண்டு பெறப் பெற்றோமே -என்று இவர்கள் பக்கல் வ்யாமோஹத்தை யுடையவன் என்னவுமாம்

அமுதிலும் ஆற்ற இனியன்
இவர்கள் போக்யம் என்று இருக்கிற அம்ருதத்தில் காட்டில் நிரதிசய போக்யன் ஆனவன்
வாசி அறிவார்கள் ஆகில் அவனையே கிடீர் பற்ற அடுப்பது என்கை -பிள்ளை திருவழுதி நாடு தாசர் வார்த்தை –
அற்ற இனியன்
மிகவும் இனியன்
நிமிர் திரை நீள் கடலானே
அவ்வம்ருதம் படும் கடலிலே கிடீர் அவன் சாய்ந்து அருளுகிறது
தன் வாசி அறியாதே இருப்பார்க்கும் எழுப்பிக் கடைவித்துக் கொள்ளலாம் படி கண் வளர்ந்து அருளுகிறவன்
நிமிர் திரை
அவனோட்டை ஸ்பர்சத்தாலே கொந்தளித்த திரை
நீள் கடல்
தாளும் தோளும் முடிகளும் -என்கிறபடியே அசங்குசிதமாக கண் வளர்ந்து அருளுகைக்கு இடம் போந்து இருக்கை –

—————————————————–

அவன் போக்யதை நெஞ்சில் பட்டால் -பிராப்தி அளவும் செல்ல
சக்கரவர்த்தி திருமகனுடைய வீர சரிதத்தை அனுசந்தித்து காலத்தைப் போக்குங்கோள் என்கிறார்

நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்-தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே –1-6-7-

நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்
சத யோஜன விச்தீர்ணமான கடல் -அகழ்-
அது மிகை என்னும்படி அரண் மிக்க ஊர் –
அவை மிகை என்னும்படி ராஷசன் ஆனவன் மிடுக்கு
-தோள்கள் தலை துணி செய்தான்
அகப்பட்டான் இ றே -என்று கொன்று விடாதே தோள்களைக் கழித்து -தலைகளை க்ரமத்தில் அறுத்து
அவன் இளைத்து நின்ற அளவிலே -நீ இளைத்தாய்-இன்று போய்ப் பின்னை வா -என்று போது போக்காகக் கொன்ற படி –
தாள்கள் தலையில் வணங்கி-
திருவடிகளிலே நிர்மமனாய் வணங்கி
நாள் கடலைக் கழிமினே –
ஜ்ஞானம் பிறந்தால் ப்ராப்தி அளவும் -ஒரு பகல் ஆயிரம் ஊழி-என்னுமா போலே கால ஷேபம் அரிதாய் இ றே இருப்பது
திருவடியைப் போலே தசரதாத் மஜனுடைய வீர சரிதத்தை அனுசந்தித்துக் காலத்தைப் போக்குவது
அன்றிக்கே
சக்கரவர்த்தி திருமகனை ஆஸ்ரயித்து சம்சார ஆர்ணவத்தை மாற்றிக் கொள்ள பாருங்கோள் என்கிறார் என்றுமாம்
நாழ் -குற்றம்

———————————————————-

சக்கரவர்த்தி திருமுகனை ஆஸ்ரயித்து விஷய ப்ராவண்யத்தைத் தவிரவே
ப்ராப்தி பிரதிபந்தகங்களை போக்கி நித்ய கைங்கர்யத்தை தரும் என்கிறார் –

கழிமின் தொண்டீர்காள் கழித்துத் தொழுமின் அவனைத் தொழுதால்
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி யாக்கம் தருமே –1-6-8-

கழிமின் தொண்டீர்காள்
பகவத் விஷயத்தில் நசையுடையீர் –
விஷயங்களில் ருசியைக் கழியுங்கோள்
கழித்துத் தொழுமின்
இந்த விஷயங்களில் ருசியைக் கழித்து அந்தச் சக்கரவர்த்தி திருமகனைத் தொழும்கோள்
கழித்து என்கிற அநு பாஷணத்தாலே-விஷய விரக்தி தானே பிரயோஜனமாக போரும் என்கை
கழிக்கை யாவது -இது பொல்லாது என்று இருக்கை
அவனைத் தொழுதால்
கரும்பு தின்னக் கூலி போலே தொழுகை தானே பிரயோஜனம் என்கை
வழி நின்ற வல்வினை மாள்வித்து –
ஸ்வயம் பிரயோஜனமான ஆஸ்ரயணத்துக்கு பலம் இருக்கிற படி –
இவ்வாத்மாவுக்கு ஸ்வரூப அனுபந்தியோ -என்னும் படி இருக்கிற பிரபல கர்மங்களை சவாசனமாகப் போக்கி
நடுவே நின்று பிராப்தியை விரோதிக்கிற கர்மம் என்னவுமாம்
அழிவின்றி யாக்கம் தருமே
அபுநாவ்ருத்தி லஷண மோஷமான-நிரவதிக சம்பத்தைத் தரும் -அதாவது -கைங்கர்யம் தரும் -இவ்வர்த்தத்தில் சம்சயம் இல்லை –

—————————————————————-

தன்னைப் பற்றின மாத்ரத்தில் இது எல்லாம் செய்து அருளக் கூடுமோ -என்னில்
-ந கச்சின் ந அபராத்யதி -என்னுமவள் அருகே இருந்து தருவிக்கும் என்கிறார் –

தரும வரும பயனாய -திருமகளார் தனிக் கேள்வன்
பெருமையுடை பிரானார் -இருமை வினை கடிவாரே–1-6-9-

உபநிஷத்துக்களிலே பரம பிரயோஜனமாக பிரசித்தமானவற்றை தரும் திருமகளார் –
தர்மத்தினுடைய பரம பிரயோசனமான திருமகளார் -என்றுமாம்
அத்விதீயனான வல்லபன்
ஸ்ரீ யபதித்வ நிபந்தனமான பெருமையை யுடையவர்
ஆஸ்ரித அனுக்ரஹமே ஸ்வரூபமாய் உள்ளவர் –
புண்ய பாப ரூபமான கர்மங்களைப் போக்குவர் –

——————————————————–

அவள் பொறுப்பிக்க பொறுக்கும் இடத்தில் விளம்பம் இல்லை -அரை ஷணத்தில் பொறுப்பர் -என்கிறார் –

கடிவார் தீய வினைகள் -நொடியாரும் அளவைக் கண்
கொடியாவடு புள்ளுயர்த்த-வடிவார் மாதவனாரே –1-6-10–

தன்னால் போக்கிக் கொள்ள ஒண்ணாத கொடிய பாபங்களைப் போக்கும் ஸ்வபாவர் –
நொடி நிறையும் அளவிடத்திலே ஷண மாத்ரத்திலே என்றபடி –
ப்ரதிபஷ நிரசன ஸ்வ பாவனான பெரிய திருவடியைக் கொடியாக எடுக்கையை ஸ்வபாவமாக யுடையவர் –
இன்று ஆஸ்ரயித்தவனையும் நித்ய ஆஸ்ரிதரோடு ஒக்க விஷயீ கரிக்கும் என்னும் இடத்துக்கு ஸூசகம் என்றுமாம் –
வடிவார் என்று தனியேயாய்-அழகிய வடிவை யுடையவர் என்றுமாம்
பிராட்டி அருகே இருந்து போக்குவிக்க வாயிற்று வினை போக்குவது –

——————————————————–

நிகமத்தில் -இத்திருவாய்மொழி கற்றார் பகவத் அனுபவத்துக்கு மேட்டு மடையான சம்சாரத்தில் பிறவார் என்கிறார் —

மாதவன் பால் சடகோபன் தீதவம் இன்றி யுரைத்த
ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே –1-6-11-

தீதாவது -தன் மேன்மையைப் பார்த்து எழ நிற்கை
அவமாவது -ஆஸ்ரயிக்கிறவனுடைய சிறுமை பார்த்து கையிடுகை –
இன்றியுரைத்த -இரண்டு குற்றமும் இல்லாமையைச் சொன்ன –
ஏதமில் ஆயிரம் -லஷண ஹாநியால் வரும் குற்றம் இன்றிக்கே இருக்கை
ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்
பிறவார் -பிறக்கை இ றே -மாத்ரு சுஸ்ருஷணம் அழகிது -என்னுமோ பாதி -பகவத் சமாஸ்ரயணம் எளிது என்று உபதேசிக்க வேண்டுகிறது
உபதேச நிரபேஷமாக ஜன்ம சம்பந்தம் அற்று பகவத் ஏக போகராகப் பெறுவார்
தீது அவம் ஏதம் -என்று கர்த்தாவுக்கும் -கவிக்கும் -பாட்டு உண்கிறவனுக்கும் உள்ள மூன்று குற்றத்தையும் சொல்லுகிறது -என்றும் சொல்லுவர் –

———————————————————–

கந்தாடை    அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -192- இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–64/76/88/98/105/106/107/108–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

July 27, 2016

பெரிய ஜீயர் அருளிய உரை –
-அவதாரிகை –
அறுசமயச் செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்தோட வந்து -என்று
பாஹ்ய மத நிரசன அர்த்தமாக -எம்பெருமானார் எழுந்து அருளின பிரகாரத்தை யனுசந்தித்தார்-கீழில் பாட்டில் .
அந்த ப்ரீதி பிரகர்ஷத்தாலே பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிற வாதிகளைப்-பார்த்து -இராமானுச முனி யாகிற யானை
உங்களை நாடிக் கொண்டு பூமியிலே-வந்து எதிர்ந்தது -உங்கள் வாழ்வு இனிப் போயிற்று -என்கிறார் -இதில் .

பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம் மெய்ம்மை
கொண்ட நல் வேதக் கொழும் தண்டம் ஏந்திக் குவலயத்தே
மண்டி வந்தேன்றது வாதியர்காள் உங்கள் வாழ்வற்றதே – – 64- –

வியாக்யானம்
எங்களுக்கு விதேயமாய் இருக்கும் இராமானுச முனி யாகிற யானை –
பண்ணார் பாடல் -திருவாய் மொழி – 10-7-5- -என்னும்படி ஆழ்வார் பண்ணிலே-உபகரித்து அருளின செவ்வித் தமிழான
திருவாய் மொழியால் விளைந்த ஆனந்தமானது –ஒழுகா நின்றுள்ள -மாதமாய்க் கொண்டு -விஸ்த்ருதமாக -வேத நூலோதுகின்றதுண்மை – என்னும்படி
யதாபூத வாதித்வத்தால் வந்த மெய்ப்பாட்டை உடைய விலஷன வேதமாகிற எழில்-தண்டையும் ஏந்திக் கொண்டு
–நீங்கள் தன்னரசாக நடத்துகிற பூமியிலே ஒருவருக்கும்-நேர் நிற்க ஒண்ணாதபடி -தள்ளிக் கொண்டு வந்து உங்கள் மேலே எதிர்ந்தது –
வாதிகளாய் உள்ளீர் -சிஷ்யர்களும் பிரசிஷ்யர்க்களுமாய் பல்கிப் பணைத்து இருந்த-உங்களுடைய சம்பத்து முடிந்ததே –
லோகம் பிழைத்ததே -என்று கருத்து .
ஏகாரம் ஈற்றசையாய் உங்கள் வாழ்வு முடிந்தது என்று தலைக் கட்டவுமாம் .
பண்டரு மாறன் பசும் தமிழ் -என்றதுக்கு பண்டே உள்ளதாய் -பெறுதற்கு அரிதாய் –இருந்துள்ள மாறன் பசும் தமிழ் -என்று பொருள் ஆனாலோ என்னில்
-அது ஒண்ணாது .பண்டு என்கிற சொல்லு பூர்வ கால வாசி இத்தனை அல்லது பூர்வ காலீன வஸ்து வாசி-யல்லாததினாலே.
பசுமை -செவ்வி / விள்ளுதல் -விரிதலாய் விஸ்ருதயைச் சொல்லுகிறது /மண்டுதல்-தள்ளுதல் -விரிதலுமாம்–

————————————————————-

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை –
அறுசமய செடியை தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்தோட வந்து -என்று பாஹ்ய மத-நிரசன அர்த்தமாக எம்பெருமானார்
எழுந்து அருளின பிரகாரத்தை அனுசந்தித்தார் கீழ் –
அந்த ப்ரீத்தி-பிரகர்ஷத்தாலே பாஹ்ய குத்ர்ஷ்டிகள் ஆகிற வாதிகளைப் பார்த்து -ராமானுச முனியாகிற யானை –
வேதாந்தம் ஆகிற கொழும் தண்டத்தை கையிலே எடுத்துக் கொண்டு -உங்களை நிக்ரஹிக்கைக்காக-
இந்த பூமியிலே நாடிக் கொண்டு வந்தது-இனி உங்களுடைய வாழ்வு வேரோடு அற்றுப் போயிற்று என்கிறார் –

வியாக்யானம் –
எங்கள் இராமானுச முனி வேழம் –
எங்கள் இராமானுசன் -எம் இராமானுசன் -என்னை ஆள-வந்து இப்படியில் பிறந்தது -என்று பாட்டுத் தோறும் இப்படி அருளிச் செய்தது –
அவருடைய விக்ரக விஷய-பிரேம அதிசயம் காணும் –
எங்களுக்காக வவதரித்த எம்பெருமானாராகிற மத்த கஜம் -லோகத்தில் பிராக்ர்த்த கஜம் போலே –ஞான சந்கோசமாய் -இருக்கை அன்றிக்கே
-சர்வதா அபதே ப்ரவர்த்தான ஹீனரை நிரசிக்கைக்கும் -அவர்களுக்கு-உபதேசித்து சன் மார்க்கத்தில் நிறுத்துகைக்கும்
-அனுகூலரை ரஷிக்கைக்கும் -மனனம் பண்ணுக்கைக்கும் உடலான-ஞான விகாசத்தோடே இருக்கும் ஆனை –
இப்படி அப்ராக்ருதமான ஆனைக்கு உண்டான ஞானம் அதுக்குத் தக்கதாய்-இருக்கும் இறே
-கஜமாக உத்ப்ரேஷிக்கிறது -விபஷிகளை சித்ரவதம் பண்ணவும் -தாம் பரிக்கிரகித்தவர்களை-பட்டாபிஷேக யோக்யராம்படி செய்யவும் வல்லவர் ஆகையாலே
-பண்டரு மாறன் பசும் தமிழ் –
எழுத்து அசை சீர்-பந்தம் அடி தொடை நிரை நிறை ஓசை தளை இனம் யாப்பு பா துறை பண் இசை தாளம் முதலான செய் சொல்லும்
இதுக்கு உண்டாகையாலே -யாழினிசை வேதத்தியல் -என்று காநோ பலிஷிதங்களான -சகல லஷணங்களும்-
அனுசந்தாக்களுக்கு தெளிந்து -அனுபவிக்கும்படியாய் இருக்கிற –
அன்றிக்கே பண்டு அரு என்ற பதச் சேதமாகில்-
பண்டு என்கிற பதம் காலபரமே யானாலும் -கங்கா யாகோஷம் – என்கிற இடத்தில் கங்கா சப்தம் தீர வாசகம் ஆனால் போலே –
லஷணையாய் இச் சப்தம் காலீன வஸ்து வாசகம் என்று சொல்லலாம் இறே -அந்த பஷத்தில்
-பிரதித்வாபராந்தரத்திலும்-வியாச அவதாரம் பண்ணி -சம்ஸ்ர்க வேதங்களை சர்வேஸ்வரன் தானே வ்யவசிக்குமா போலே பிரதி கலி யுகத்திலும்
ஜ்ஞான யோகியாய் அவதரித்து த்ரமிட வேதங்களை சர்வேஸ்வரன் வெளி இட்டு போகிறான் என்று –
பிரம்ம பார்க்கவா-வ்ர்த்தபாத்மாதி புராணங்களிலே சூபிரசித்தமாக சொல்லுகையாலே -நித்தியமாய் -அ பௌருஷேயமாய் இருந்துள்ள-திருவாய் மொழி –
பாகவதர்கு ஒழிய -அந்யருக்கு வாக் மனச்சுக்களாலே ஸ்பரசிக்கவும் கூட அரிதான -என்றபடி –
மாறன் -நம் ஆழ்வாருக்கு பிரதம உபாத்தமான திரு நாமம் –
பசும் தமிழ் -அவராலே கட்டப்பட்டு -அசந்கலிதமான-சுத்த திராவிட பாஷையாய் விளங்குகிற திருவாய்மொழி –
மாறன் பணித்த தமிழ் மறை -என்றும் -ஈன்ற முதல் தாய் சடகோபன் -என்றும் -சொல்லுகிறபடியே-நம் ஆழ்வார் சம்பந்தியான திருவாய் மொழி என்றபடி –
ஆனந்தம் பாய் மதமாய் –
லஷ்மி நாதாக்ய சிந்தவ்-சடரிபுஜலத ப்ராப்ய காருண்ய நீரம் நா தாத்ரா வப்யஷி சத்த நுர குபதாம்போஜா சஷூர் ஜ்ஜ்ராப்யாம் –
கத்வாதாம்ய மு நாக்யாம் சரிதம நுய தீந்த்ராக்ய பத்மாகரேந்த்ரம் சம்பூர்ய ப்ரானிசச்யே ப்ரவஹதி நிதராம்-தேசிகேந்திர பிரமௌநை –என்கிறபடியே
-ஸ்ரீ ய பதி யாகிற கடலில் நின்றும் -ஆழ்வார் ஆகிற முகில் –
பெரும் கருணை யாகிற நீரை முகந்து -பெரிய முதலியார் ஆகிற குன்று தன்னிலே வர்ஷிக்க -அக் கருணை யானது
மணக்கால் நம்பி உய்யக்கொண்டார் -ஆகிய திரு வருவியாய் -பரம ஆசார்யரான ஆள வந்தார் -ஆகிற
ஆற்றிலே சென்று -எம்பெருமானார் ஆகிய பொய்கையை பூரித்து -பூர்வாச்சார்யர்கள் ஆகிற மடையாலே
தடையறப் பெருகி -சம்சாரி சேதனராகிற பயிரை நோக்கி -ரஷித்தது என்று சொல்லுகையாலே –
கவியமுதம் -என்றும் -தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலை -என்றும் ஸ்லாக்கிக்கும்படி-சர்வருக்கும்-அமுதமயம் ஆகையாலே
-ஆனந்தாவஹமான திருவாய் மொழியாலே விளைந்த ஆனந்த மானது –இவ்வளவாக பெருகி வாரா நின்றுள்ள -அம்ர்தமாய்க் கொண்டு
-விண்டிட –
எல்லா காலத்திலும்-எல்லா இடத்திலும் விஸ்த்ரமாய் இருக்க -விள்ளுதல்-விரிதலாய் -விஸ்த்ரியை சொல்லுகிறது –
மெய்ம்மை கொண்ட நல் வேதக் கொழும் தண்டம் ஏந்தி –
மெய்ம்மை -சத்யம் -அதாவது-வேத நூல் ஓதுகின்றது உண்மை -என்னும்படியான யதாபூதவாதித்வம் -இப்படிப்பட்ட
மெய்ப்பாட்டை உடைத்தாய் இருக்கையாலே சகல பிரமாண விலஷணமான வேதம் -நன்மை வை லஷண்யம் –
சத்யம் ஞானம் அநந்தம் பிரம்மம் -என்கிற பரத்வத்தை பிரகாசிக்குமதான வேதம் -என்றபடி –
பராவர தத்வா நியாதாவத்-வேதய தீதி வேத -என்று இறே இதுக்கு வுயுத்பத்தி இருப்பது –
மெய்ம்மை கொண்ட -என்ற விசேஷணத்துக்கு தாத்பர்யம்
ரஜ்ஜாவயம்சர்ப்ப -என்கிற ப்ரமத்துக்கு-இயம் ரஜ்ஜு ரேவ ந சர்ப்ப -என்கிற ஞானம் நிவர்த்தகமாம் போலே –
அநாதி அஞ்ஞான மூலங்களாய் ஸ்வ கபோல கல்பிதங்களாய்-பாஹ்ய குத்ர்ஷ்டி சமயங்களுக்கு -யதா பூதார்த்த வாதியான
வேதம் நிவர்த்தகமாய் இருக்கும் என்று -ஆகையாலே பிரதிவாதிகளுடைய நிரசனத்துக்கு உறுப்பான
-வேதமாகிற-அழகிய தண்டையும் ஏந்திக் கொண்டு
-கொழுமை -பெருமை -அன்றிக்கே -இங்கு சொன்னது சம்ஸ்க்ருத வேதமானாலும் –கீழ் அருளிச் செய்த த்ரமிட வேதத்தோடு கூடின வேதம் என்றுமாம்
-அப்படிப்பட்ட வேத ரூபமாய் -மகத்தாய் -அழகிதான –கதையை -கையிலே எடுத்துக் கொண்டு -என்றபடி –
ச காரத்தாலே கையிலே தண்டத்தை ஏந்திக் கொண்டு நின்ற-மாத்ரம் அன்றிக்கே – அத்தால் பர்யாப்தி பிறவாமல் -காலாலே மிதித்தும் –
கொம்பாலே குத்தியும் பிரதிவாதிகளை சித்ரவதம் பண்ணுகைக்கு வந்தபடியை அருளிச் செய்கிறார் –
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் -என்கிறபடி சர்வேஸ்வரன் -எப்போதும் திரு வாழியையும்-திருச் சங்கையும் ஏந்திக் கொண்டு இருக்கிறாப் போலே
-இவரும் வேத ரூபமான பெரும் தண்டை-ஏந்திக் கொண்டு இருந்தார் காணும் -குவலயத்தே மண்டி வந்து ஏன்றது –
நீங்கள் தன்னரசு நாடாக எண்ணி நடத்துகிற-ஆசேது ஹிமாசலமாக -வேங்கடாசல -யாதவாசல -சாரதாபீடாதி திவ்ய ஸ்தலங்களிலே எதிர்கொண்டு
பிரத்யவச்த்தானம்-பண்ணின வாதிகளை கட்டடங்க நிரசித்துக் கொண்டு வந்து -உங்கள் மேலே எதிர்த்தது -மண்டுதல்-தள்ளுதல்-யேன்றுதல்-எதிர்த்தல் –
வாதியர்காள்-
பாஹ்ய குத்ர்ஷ்டி சமய நிஷ்டராய் கொண்டு வாதியர்களாய் உள்ளீர் –
உங்கள் வாழ்வு அற்றதே
-சிஷ்யர்களும் பிரசிஷ்யர்க்களுமாய் பணைத்து இருந்த உங்களுடைய சம்பத்து முடிந்ததே –
சிஷ்ய பிரசிஷ்ய பர்யந்தமாகக் கொண்டு வர்த்திக்க வேணும் என்று நீங்கள் நினைத்து இருந்த உங்களுடைய-துர்மதங்கள் அடங்கலும் விநஷ்டமாய் போயின என்றபடி
-சங்கர பாஸ்கர யாதவ பாட்ட பிராபகர் தங்கள் மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்னச் சதுர்மறை வாழ்ந்திடும் நாள் -என்று இவ்வர்த்தத்தை ஜீயரும் அருளிச் செய்தார் இறே –
கணதா பரி பாடிபி -என்கிற ஸ்லோகமும் -காதா தாதா கதானாம் -என்கிற ஸ்லோகமும் இவ் வர்த்தத்துக்கு பிரமாணமாக-அனுசந்தேயம் –

—————————————————————————————————————-

பெரிய ஜீயர் அருளிய உரை
-அவதாரிகை –
பகவத் வைலஷண்யம் காணாமையாலே தேவரீரை ஒழிய அறியேன் என்று இருக்கிறேன் அல்லேன் –
கண்ட காலத்திலும் நான் தேவரீரை ஒழிய அறியேன் என்றார் கீழ் .
இப்படி இவர் விண்ணப்பம் செய்தவாறே எம்பெருமானார் மிகவும் உகந்து அருளி
இவர்க்கு எத்தைச் செய்வோம் என்னும் இடம் தோற்ற எழுந்து அருளி இருக்கிற படியைக் கண்டு
தம்முடைய ப்ராப்யத்தை நிஷ்கர்ஷித்து அபேஷிக்கிறார் இதில் .

நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற்
குன்றமும் வைகுண்ட நாடும் குலவிய பாற் கடலும்
உன்றனக் கெத்தனை இன்பந்தரு முன்னிணை மலர்த்தாள்
என்றனக்கு மது இராமானுசா !இவை ஈந்தருளே – -76 –

வியாக்யானம்
காதா சித்கம் அன்றிக்கே ஒருபடிப்பட்டு நின்ற அழகிய கீர்த்தியும்-
வார் புனல் அம் தண் அருவி -திருவாய் மொழி – 3-5 8- – என்னுமா போலே –
ஒழுகுடைய புனலும் நிறைந்து இருப்பதாய் -திருவேம்கடம் என்னும்-திரு நாமத்தை உடைத்தாய் -ச்ப்ருஹணீயமான திருமலையும் –
ஸ்ரீ வைகுண்டம் ஆகிற திரு நாடும் –ஆர்த்தர ரஷண அர்த்தமாக வந்து கண் வளர்ந்து அருளுகிற இடம் என்று
விசேஜ்ஞ்ஞர் எல்லாம் கொண்டாடும் திருப்பாற்கடலும் –தேவரீருக்கு யாதோரளவு ஆனந்தத்தை விளைக்கும் –
தேவரீருடைய -சேர்த்தி அழகை உடைத்தாய் -போக்யமாய் -இருந்துள்ள-திருவடிகள் எனக்கும் அவ்வளவான ஆனந்தத்தை உண்டாக்கும் .
ஆன பின்பு தேவரீர் திருவடிகளை எனக்கு தந்து அருள வேணும் –
குலவுதல்-கொண்டாட்டம் / ஈதல் -கொடுத்தல் .
பாட்டு கேட்க்கும் இடமும் கூப்பீடு கேட்க்கும் இடமும் குதித்த இடமும் ஊட்டும் இடமும் வளைத்த இடமும் வகுத்த இடமான ஆச்சார்யர் திருவடிகளே –

—————————————————————————————-

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை –
கீழ் பாட்டில் பும்ஸா சித்த அபஹாரியான சர்வேஸ்வரன் -சமஸ்த திவ்ய பூஷணம் களாலும்-சமஸ்த திவ்ய ஆயுதங்களாலும் ஒப்புவித்துக் கொண்டு வந்து
-என் முன்னே நின்று-உன்னை நான் விடுகிறேன் அல்லேன்என்று பலாத்காரம் பண்ணினான் ஆகிலும்
-குணைர் தாஸ்யம் உபாகத -என்றால் போலே தேவரீர் உடைய கல்யாண-குணங்களிலே ஈடுபட்ட அடியேனை அக் குணங்கள் தானே
தேவரீருக்கு அனந்யார் ஹனாம் படி பண்ணிற்றன என்று-விண்ணப்பம் செய்ய கேட்டருளி –
இவருடைய பாவ பந்தம் எங்கனே -என்று மிகவும் உகந்து -இவருக்கு நாம் எத்தை செய்வோம்-என்னும் இடம் தோற்ற
-அவர் எழுந்து அருளி இருக்கிற படியைக் கடாஷித்து -தேவரீருக்கு அபிமதங்களாய் இருந்துள்ள –
தண்ணார் வேங்கடமும் -வைகுந்த மா நகரும் -திருப்பாற்கடலும் -யாதொரு ஆனந்தத்தை விளைக்குமோ-
அப்படியே -தேவரீருடைய பரம போக்யமான திருவடிகளும் அடியேனுக்கு அவ்வளவு ஆனந்தத்தை உண்டாக்கும் –
ஆகையாலே அவற்றைத் தந்தருள வேணும் என்று அபேஷித்து அருளுகிறார் -இப்பாட்டில்

வியாக்யானம் –
நின்ற வணகீர்த்தியும்
-ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி -என்கிறபடியே -காதாசித்கம் அன்றிக்கே -கால த்ரய வர்த்தியாய்
-அழகியதாய் -தெழில் அருவித் திரு வேங்கடம் -என்றும் -பரன் சென்று சேர்-திரு வேங்கட மா மலை -என்றும்
-வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு -என்றும் –
வில்லார் மலி வேங்கட மா மலை -என்றும் -ஆழ்வார்கள் ஈடுபடுக்கைக்கு உடலான குணவத்தா ப்ரதையையும் –
நீள் புனலும் –
வார் புனல் தண அருவி வட திரு வேங்கடம் -என்றும் -குளிர் அருவி வேங்கடம் -என்றும் –
செங்கயல் திளைக்கும் சுனைத் திரு வேங்கடம் -என்றும் -சொல்லுகிறபடி அநவரதம் பாயா நின்று உள்ள- நீண்ட திரு அருவிகளும்
-நிறை வேங்கடப் பொற் குன்றமும் –
இவை இரண்டாலும் நிறைந்து இருப்பதாய்-தெள்ளியார் வணங்கும் மலை திரு வேங்கடம் -என்கிறபடியே –
திரு வேங்கடம் என்னும் திரு நாமத்தை உடைத்தாய் –எம்பெருமான் பொன் மலை -என்கிறபடியே அத்யந்த ச்ப்ர்ஹநீயமாய் –
பரன் சென்று சேர் திரு வேங்கடம் –என்கிறபடியே வகுத்த சேஷியான சர்வேஸ்வரன் உகந்து அருளின நிலமான திரு மலையும் –
வைகுந்த நாடும்
-யத்ர பூர்வே சாத்த்யாஸ் ஸந்தி தேவா -என்றும் -விஷ்ணோர் யத் பரமம் பதம் -என்றும் –
தேவாநாம் பூரயோத்வா -என்றும் -அத்யர்க்கா நல தீப்தம் தத் ஸ்த்தானம் விஷ்ணோர் மகாத்மன-என்றும் –
வைகுண்டேது பரே லோகே ஸ்ரீ யா சார்த்தம் ஜகத்பதி -ஆஸ்தே விஷ்ணுர சிந்தயாத்மா பக்தைர் பாகவதைஸ் சஹா –என்றும் -சொல்லுகிறபடியே
-அந்தமில் பேர் இன்பத்து அடியாரான நித்ய சூரிகளுக்கு இருப்பிடமாய் –
சர்வேஸ்வரனுக்கு போக விபூதியான -நலமந்தம் இல்லாதோர் நாடாய்-ஸ்ரீ வைகுண்டம் என்னும்-பேரை உடைத்தான பரம பதமும்
-குலவிய பாற்கடலும்
-பாற்கடலில் பையத் துயின்ற பரமன் அடிபாடி –என்கிறபடி ஆஸ்ரிதரான தேவர்கள் உடைய கூப்பீடு கேட்பதாக சர்வேஸ்வரன் வந்து கண் வளர்ந்து
அருளுகிற இடம் என்று விசேஷஞ்ஜர் எல்லாரும் கொண்டாடும்படியாய் இருந்துள்ள திருப்பாற் கடலும் –
குலவுதல் -கொண்டாட்டம் -இப்படிப் பட்ட உகந்து அருளின நிலங்கள்
-உன் தனக்கு எத்தனை இன்பம் தரும் –
ஆநந்த நிலயே சேஷ தல்பே வேங்கட பூதரே -இத்யாதிகளிலும் -ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் ஷீரார்ணவே நிகேதன –
நாக பர்யங்க முத்சர்ஜ்ய ஹ்யாகதோ மதுராம்புரிம் -இத்யாதிகளிலும் கௌ ஷீதகீ பிராமணத்தில் பர்யங்க வித்தையிலும்-சொல்லுகிறபடியே –
திரு வேங்கடமுடையானுக்கும் திரு பாற்கடல் நாதனுக்கும் -வான் இளவரசு வைகுந்த-குட்டனுக்கும் -பர்யங்கமாய் இருக்கிற தேவரீருக்கு
எவ்வளவு ஆனந்தத்தை கொடுக்கும் –இப்படி அவ்வவ-ஸ்தலங்கள் தோறும் ஸ்ரீ ய பதியினுடைய திவ்ய மங்கள விக்ரகத்தாலே வந்த ஆனந்தத்தை அறியுமவர்
இவர் ஒருவருமே இறே -ரம்மணாவ நேத்ராய -என்றிவர் தம் அவதாரத்துக்கு பூர்வ அவதாரமான இளைய பெருமாளுக்கு
அந்த திவ்ய தம்பதிகளுக்கு உண்டான ஆனந்த்ததோடு ஒத்த ஆனந்தம் உண்டாய்த்து என்று சொன்னான் இறே-ரிஷியும் –
உன் இணை மலர்த் தாள் –
அநந்தம் பிரதமம் ரூபம் -இத்யாதிகளில் படியே -சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைய-சோதியிலே -வான் இள வரசு வைகுந்த குட்டன் விஷயமாக
-நிவாஸா சய்யாசன பாதுகாம் ஸூ கோ பதா ந-வர்ஷாதப வாரணாதிபி-சரீர பேதைஸ் தவ சேஷ தாங்கதைர்ய தோசிதம் சேஷ இ தீரி தேஜ நை -என்கிறபடியே
அநேக சேஷ வ்ர்த்திகளிலும் அந்வயித்து -சேஷன் -என்னும் திரு நாமத்தை உடையராய் –
பால்யாத் ப்ரப்ர்தி ஸூ ஷ் நிக்த -என்கிறபடியே அவதார தசையிலும் பால்யம் தொடங்கி பெருமாள் திருத் தொட்டிலோடு
இணைத் தொட்டில் இடாத போது பள்ளி கொண்டு அருளாதே -அவர் பக்கலிலே அதி வ்யாமுக்தராய் –
முஹூர்த்தம்-அபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்ய விவேர்த்த்ர்ரௌ-என்று பிரியில் தரியாமையை விண்ணப்பம் செய்து மகா ஆரண்யமான
தண்ட காரண்யத்தில் சென்று -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று பிரார்தன பூர்வகமாக வழு இலா அடிமைகள் செய்து
நம்பி மூத்த பிரானாக அவதரித்த தசையிலும் அவனை அனுவர்த்திதுக் கொண்டு போந்து -அங்குத்தைக்கு அந்தரங்கராய் –
இருந்துள்ள தேவரீர் உடைய பாவநத்வ போக்யத்வங்களுக்கு ஒன்றுக்கு ஓன்று போலியாய் -சேர்த்தி அழகை உடைத்தாய்
புஷ்பஹாச ஸூ குமாரமாய் பரம போக்யமாய் இருந்துள்ள திருவடிகள் -என் தனக்கும் அது -கீழ் சொன்னபடியே அந்தரங்கராய்
சர்வஜஞ்ராயிருக்கிற தேவரீருக்கு அவ்வவ விஷயங்களிலே எத்தனை ப்ரீதி உண்டோ –
அப்படியே இவ்வளவும் விமுகனாய்-அஞ்ஞா னாய்ப் போந்த அடியேனுக்கு ஸ்வ விஷயமாய் இருந்துள்ள அவ்வளவு ஆனந்தத்தை உண்டாக்கும்
-எம்பெருமானார் உடைய-ஆனந்தம் பிரதம பர்வ விஷயம் ஆகையாலே -அரையாறு பட்டு
-அமுதனார் உடைய ஆனந்தம் சரம பர்வ விஷயம் ஆகையாலே-கரை புரண்டு காணும் இருப்பது –
இராமானுச –
-எம்பெருமானாரே –
இவை ஈந்து அருளே
-எனக்கு புருஷார்த்தம் தேவரீர் உடைய-திருவடிகளே யான பின்பு -அவற்றை தேவரீர் தாமே பரகத ச்வீகாரமாக கொடுத்து அருள வேணும் ஈதல்-கொடுத்தல் –
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் -நின் செம்மா பாத பற்புத் தலை மேல் சேர்த்து ஒல்லை -கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா அடியேன் வேண்டுவது ஈதே -என்று பிரதம பர்வத்தில் நம் ஆழ்வாரும் இப்படியே அபேஷித்து அருளினார் இறே –
அங்கும் மூன்றை தவிர்த்து ஒன்றைக் கேட்டார் -த்யாஜ்ய அம்சத்தில் வாசி உண்டே –

———————————————————————————————————————

பெரிய ஜீயர் அருளிய உரை –
-அவதாரிகை –
எம்பெருமானார் உபகரித்த ஜ்ஞானத்தில் அந்வயம் இல்லாதாரை-கலி தோஷம் நலியும் என்றார் கீழே .
அந்த ஜ்ஞானத்தை வுபகரிக்கைக்காக அவர் வந்து அவதரித்த படியை யனுசந்தித்து –
எம்பெருமானார் ஆகிற சிம்ஹம் குத்ருஷ்டிகள் ஆகிற புலிகளை-நிரசிப்பதாக-லோகத்திலே வந்த பிரகாரத்தை சொல்லி
ஸ்தோத்ரம் பண்ணக் கடவேன் -என்கிறார் -இதில் –

கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமாள்
ஒலி மிக்க பாடலைக் வுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால்
வலி மிக்க சீயம் இராமானுசன் மறைவாதியராம்
புலி மிக்கதென்று இப்புவனத்தில் வந்தமைபோற்றுவனே – – 88- –

வியாக்யானம்
உழுவது -நடுவது -அறுப்பதாக செல்லுகிற ஆரவாரத்தால் மிக்க செந்நெற்கள் விளையா நின்றுள்ள
வயல்களை உடைய -திருக் குறையலூருக்கு நிர்வாஹகராய் –இரும் தமிழ் நூல் புலவராகையாலே -பெரிய திரு மொழி -1- 7-10 -சாஸ்திர ரூபமான
பிரபந்தங்களை செய்து அருளின வைபவத்தை வுடையரான -திரு மங்கை ஆழ்வார் உடைய –
ஒலி கெழு பாடல்-பெரிய திரு மொழி -11-4 10- -என்னும்படி மிக்க த்வனியை உடைத்தான-திருமொழியை தாரகமாகவும் -போக்யமாகவும் -அனுபவித்து –
தம்முடைய திரு உள்ளம் பூரித்து -அத்தாலே
பிரதி பஷ தர்சநத்தை சஹியாதபடி – – அதி பிரபலமான சிம்ஹம் போலே இருக்கிற எம்பெருமானார் –
பாஹ்யரைப் போல் அன்றிக்கே -வேதங்களை அங்கீகரித்துக் கொண்டு நின்று –வாதங்களைப் பண்ணி -லோகத்தை நசிப்பிக்கிற குத்ருஷ்டிகள் ஆகிற புலிகள்
மிக்கதென்று -சாது மிருகங்களை நலியா நின்றுள்ள -துஷ்ட மிருகமான புலி மிக்க-காட்டிலே அவை தன்னை நிரசிக்க வற்றான தொரு சிம்ஹம் வந்து தலைப் படுமாலே –
சன்மத தூஷகரான குத்ருஷ்டிகள் வர்த்திக்கிற இந்த பூமியிலே-தன்மத தூஷகராய் வந்து அவதரித்த பிரகாரத்தை ஸ்துதிக்க கடவேன்
கலி -ஆரவாரம் மிடுக்குமாம் / அப்போது பூ சரத்தை சொல்லுகிறது / கழனி -வயல் /சீயம் -சிம்ஹம் / போற்றுதல் -புகழ்தல்–

———————————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –
கீழ்ப் பாட்டில் எம்பெருமானார் உபதேசித்த ஞானத்தில் அந்வயம் இல்லாதவரை கலி-பிரயுக்தமான தோஷம் ஆக்கிரமித்து நலியும் என்று சொல்லி –
இதில் -அந்த ஞானத்தை லோகத்தார் எல்லாருக்கும்-உபதேசிக்கைக்காக –
அவர் விண்ணின் தலை நின்றும் -மண்ணின் தலத்து உதித்தபடியை அனுசந்தித்து -செந்நெல்-விளையா நின்றுள்ள வயல்களை உடைய
திருக் குறையலூருக்கு ஸ்வாமியான திரு மங்கை ஆழ்வாருடைய-திவ்ய பிரபந்தமாகிற பெரிய திரு மொழியை அனுபவித்து களித்து –
பிரதி பஷிகளுடைய கந்தத்தையும் சகிக்க மாட்டாதே –பிரபலமான சிம்ஹம் போலே இருக்கிற எம்பெருமானார்
-வேத பாஹ்யர் போல் அன்றிக்கே -வேதத்தை பிரமாணமாக-இசைந்து -அதுக்கு விபரீத அர்த்தங்களை சொல்லி
-லோகத்தை நசிப்பித்த குத்ருஷ்டிகள் ஆகிய புலிகள்-தன்னரசு நாடாக கொண்டு தடையற நடமாடா நின்ற
-அவர்களுடைய மதங்களை நிரசிக்கைக்காக அவர்கள்-நடையாடும் இந்த பூமியிலே வந்து அவதரித்த பிரகாரத்தை ஸ்துதிக்க கடவேன் என்கிறார் –

வியாக்யானம் –
கலி மிக்க செந்நெல் கழனி
-உழுவது நடுவது அறுப்பதாய் கொண்டு சர்வ காலத்திலும் செல்லுகிற-ஆரவாரத்தாலே மிக்க செந்நெல்லை உடைத்தான கழனி களுடைய
-கலி-ஆரவாரம் -அன்றிக்கே -கலி -என்று மிடுக்காய்-சாரவத்தானே பூமியிலே விளைந்த செந்நெல் என்னுதல் –
கழனி -வயல் -குறையல் கலை பெருமான் -இப்படிப் பட்ட-செந்நெல் களோடு கூடின வயல்களை உடைத்தாய் ஆகையாலே –
மன்னிய சீர் தேங்கும் குறையலூர் –என்கிறபடியே சகல சம்பத்துக்களையும் உடைத்தான திருக் குறையலூருக்கு நிர்வாஹராய்
-இரும் தமிழ் நூல்-புலவன் -என்கிறபடியே சாஸ்திர ரூபங்களான திவ்ய பிரபந்தங்களை செய்து அருளி -உபகரித்த மகா உபகாரரான
திரு மங்கை ஆழ்வார் உடைய–குறையல் பிரான் அடிக் கீழ் -என்று இப் பிரபந்தத்திலேயும் இவருடைய உபகாரத்தை அனுசந்தித்தார் இறே –
செய் -தவம்சத்தில் கிருதஜ்ஜராய் போருகிறவர் இவரும் அவருமே காணும்-
ஒலி மிக்க பாடல்
-இம்மாகா உபகாரத்தால் அருளிச் செய்யப்பட திரு மொழி -திரு குறும் தாண்டகம்-திரு நெடும் தாண்டகம் -தொடக்கமான திவ்ய பிரபந்தங்களை
-இன்பப் பாடல் -என்கிறபடியே அனுசந்திக்கப்-புக்கவர்களுக்கு -அர்த்த ரசத்தாலும் போக்யதையாலும் ஆனந்தம் மிகுதியாய் கரைபுரண்டு இருக்கையாலே
மிகுந்து -கலியனது ஒலி மாலை -என்கிற படியே பெரு மிடறு செய்து அனுசந்திக்க வேண்டுகையாலே-
மிக்க த்வனி யை உடைத்தான திவ்ய பிரபந்தங்கள்-மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன் ஆறங்கம் கூறுவதாக பண்ணி
அருளின திவ்ய பிரபந்தங்கள் என்றபடி
-ஒலி த்வனி -அந்த பிரபந்தங்களை தாரகமாகவும்-போஷகமாகவும் போக்யமாகவும் நினைத்துக் கொண்டு முற்றூட்டாக அனுபவித்து –
தன்னுள்ளம் தடித்து –
அந்த அனுபவ ஜனித ப்ரீதியாலே தம்முடைய திரு உள்ளம் பூரித்து -இவ் வனுபவத்தாலே காணும் பிரதி பஷ-நிரசனத்துக்கு தகுதியான மிடுக்கு
அவருக்கு உண்டானது -தடித்தல் -பூரிக்கை-அதனால்
வலி மிக்க சீயம் –
அந்த-பரி பூர்ண ஞானம் ஆகிற மிக்க பலத்தை உடையராய் –சிம்ஹம் போலே இருக்கிற இராமானுசன் -எம்பெருமானார் –
பிரதி பஷ தர்சனத்தை சகியாதே அவர்களை பக்னராய் பண்ணுமவர் ஆகையாலே -வலி மிக்க சீயம் -என்கிறார்
வலி -பலம் -சீயம் -சிம்ஹம் -மறை வாதியராம் -வேத அப்ராமான்ய வாதிகளான பௌத்தாதிகளை போல்
அன்றிக்கே -வேதத்தை பிரமாண மாக அங்கீ கரித்து வைத்து -அதுக்கு அபார்த்தங்களை சொல்லி -இவற்றைக் கொண்டு
துர்வாதம் பண்ணி லோகத்தார் எல்லாரையும் பிரமிக்க பண்ணி நசிப்பித்து கொண்டு போகிற குத்ர்ஷ்டிகள்
ஆகிற -புலிமிக்கதென்று -புலி கள் மிக்கது என்று -நிவாரகர் இல்லாமையாலே அவை தனிக்கோல் செலுத்தா நின்றன என்று –
இப்புவனத்தில் வந்தமை-சாது ம்ர்கங்ககளை நலியா நின்றுள்ள துஷ்ட ம்ர்கமான புலி மிக்க காட்டிலே
அவை தன்னை நிரசிக்க வற்றான தொரு சிம்ஹம் வந்து தலைப்படுமா போலே -சந்மத தூஷிகரான குத்ர்ஷ்டிகள்
வர்த்தித்து தனிக்கோல் செலுத்துக்கிற இந்த பூமியிலே தன்மத தூஷகராய் கொண்டு
-விண்ணின் தலை நின்று –வந்து அவதரித்த பிரகாரத்தை போற்றுவனே -ஸ்துதிக்க கடவேன் –
போற்றுதல் -புகழ்தல் -குரும் பிரகாச எத்தீ மான் –என்கிறபடியே அவர் தம்முடைய குண சேஷ்டிதங்களை புகழக் கடவேன் என்று அருளிச் செய்தார் ஆய்த்து –

————————————————————————————————————————————

பெரிய ஜீயர் அருளிய உரை
-அவதாரிகை –
இப்படி எம்பெருமானார் செய்த உபகாரத்தை பேசினவாறே-இவர் திரு உள்ளமானது –
நிருபாதிக பந்துவான ஈஸ்வரன் அநாதி காலம் ஸ்வர்க்க நரக கர்ப்பங்களிலே-தட்டித் திரிய விட்டு இருந்தது -கர்மத்தை கடாஷித்து அன்றோ –
பிரகிருதி சம்பந்தம் கிடக்கையாலே துர் வாசனை மேலிட்டு-விபரீதங்களிலே போகவும் யோக்யதை உண்டே –
இன்னும் ப்ராப்தி பர்யந்தம் ஆனால் இறே என்று தளர –எம்பெருமானார் தன்னை சரணம் என்றால் -அப்படி ஒன்றிலும் விட்டுக் கொடார்
ஆகையாலே ப்ராப்தி நிமித்தமாக நீ கிலேசிக்க வேண்டா -என்கிறார் .

இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னும் நரகிலிட்டுச்
சுடுமே யவற்றைத் தொடர்தரு தொல்லைச் சுழல் பிறப்பில்
நடுமே யினி நம் இராமானுசன் நம்மை நம் வசத்தே
விடுமே சரணமென்றால் மனமே நையல் மேவுதற்கே – – -98 – –

வியாக்யானம் –
தம்மை உத்தரிப்பிக்கைக்காக வந்து அவதரித்த எம்பெருமானார் –தேவரே சரணம் -என்று ஓர் உக்தி மாதரம் பண்ணினால் –
-பிரகிருதி வச்யருக்கு-சப்தாதி போக விஷயங்களாலே இனிதாக தோற்றி இருக்கும் ஸ்வர்க்கத்திலே இட்டு வைப்பாரோ –
தம் திருவடிகளைப் பற்றின பின்பும் நரகத்திலே இட்டு வைத்து தபிப்பிப்பரோ –
அந்த ஸ்வர்க்க நரக அனுபவத்துக்கு ஈடான கர்மம் ஜென்மத்துக்கு உருப்பாகையாலே –
அவற்றை அநுசரித்து கொண்டு இருப்பதாய் -அநாதியாய் -வளைய வளைய வரா நின்றுள்ள-ஜன்மத்திலே நிறுத்துவரோ –
மேலுள்ள காலம் நம்மை நம்முடைய ருசி அநு குணமாக விடுவரோ –
ஆன பின்பு ப்ராப்தி நிமித்தமாக-நெஞ்சே சிதிலமாகாதே கொள் –
மேவுதல்-பொருந்துதல் -அதாவது ப்ராபித்தல் /
சோற்றுக்கு கரையாதே கொள் -என்றால் சோறு நிமித்தமாக கரையாதே கொள் -என்னுமா போலே –
/மேவுதற்கு நையல் -என்றது மேவுதல் நிமித்தமாக -என்றபடி /நடுதல்-ஸ்த்தாபித்தல்–

——————————————————————————-

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை
-இப்படி எம்பெருமானார் தம்முடைய சர்வ உத்கர்ஷ்டமான அதிகாரத்திலே மூட்டின-உபகாரத்தை அனுசந்தித்து ஹ்ர்ஷ்டரானவாறே –
இவருடைய திரு உள்ளமானது -நீர் இப்படி சொன்னீரே யாகிலும் –
சர்வ நியந்தாவான சர்வேஸ்வரன் -அநாதி காலம் தொடங்கி -தத் தத் கர்ம அனுகுணமாக பலத்தை
கொடுப்பதாக சங்கல்பித்துக் கொண்டு இருக்கிறான் ஒருவன் ஆகையாலே
-இவ்வளவும் ஸ்வர்க்க நரக-கர்ப்பங்களிலே இடைவிடாது அடைவே தட்டித் திரிய விட்டு இருந்து -நம்முடைய கர்மத்தை-கடாஷித்து அன்றோ –
அக் கர்மங்களை உண்டாக கடவதான பிரகிருதி சம்பந்தம் நமக்கு இன்னும் கிடைக்கையாலே
துர்வாசனை மேலிட்டு திரும்பவும் நிக்ரஹத்துக்கு உடலான துஷ்கர்மங்களிலே அன்வயிக்கவும் -யோக்யதை-உண்டே
-ப்ராப்தி பர்யந்தம் ஆனால் இறே -நீர் இப்படி நிர்பரராய் சொல்லக் கூடுவது என்று தளரா நிற்க –
எம்பெருமானார் தம்மை சரணம் என்றால் அப்படி ஸ்வர்க்க நரகாதிகள் ஒன்றிலும் விட்டுக் கொடுக்கும்-ஸ்வபாவர் அல்லர் ஆகையாலே –
இனி பிராப்தி நிமித்தமாக நீ கிலேசிக்க வேண்டாம் என்கிறார் –

வியாக்யானம் –
மனமே –
இப்படி அதி சங்கை பண்ணா நிற்கிற நெஞ்சே –
எம் இராமானுசன் –
சாஷான் நாராயணோ தேவ க்ர்த்தவா மர்த்த்யமயீம் தநும் -மக்னா நுத்தரதே லோகன் காருண்யாஸ் சாஸ்திர பாணி நா –என்றும் –
பாபத்வாந்த ஷயாயச -ஸ்ரீ மான் ஆவிரபூத் பூமவ் ராமானுஜ திவாகர -என்றும் சொல்லுகிறபடியே
எங்களுடைய முன்னை வினை பின்னை வினை யார்த்தம் என்று மூன்று வகைப் பட்டு இருக்கிற வினைத் தொகை-அனைத்தும் நசிப்பித்து –
சம்சார கர்த்தத்தில் நின்றும் உத்தரிப்பிக்க வேணும் என்று தீஷித்துக் கொண்டு –இக்கொடு உலகத்தில் திருவவதரித்து அருளின எம்பெருமானார் –
சரணம் என்றால்-ராமானுஜச்ய சரணவ் சரணம் பிரபத்யே -என்றும் சரணமேமி ராமானுஜம் -என்றும் –
இராமானுசா உன் சரணே கதி -என்றும்
-மூலே நிவேச்ய மஹதாம் நிகமத்ருமாணாம் முஷ்ண ந ப்ரதாரக பயம்-
த் ர்த நைக தண்ட -ரங்கேச பக்த ஜன மானஸ ராஜ ஹம்ஸோ ராமானுஜஸ் சரணமஸ்து முநிஸ் ஸ்வயந்ர – என்றும்
ராமானுஜாய முநயே நம உக்தி மாதரம் காமாதுரோபிகுமதி கலயன்ன பீஷணம் -யாமாம நந்திய மிநாம்
பகவஜ் ஜாநாநாம் தாமேவவிந்தித கதிம் தமஸ பரஸ்தாத் – என்கிறபடியே-
தேவரீரே சரணம் -என்கிற ஒரு-உக்தி மாத்ரத்தை பண்ணினால் –
இனிய ஸ்வர்க்கத்தில் –
பிரகிருதி வச்யராய் இருப்பார்க்கு -சப்தாதி போக விஷயங்களாலே அத்யந்தம்-போக்யமாய் தோற்றுகிற ஸ்வர்க்கத்திலே -இனிமை -போக்யதை
-ஸ்வர்க்கமாவது -த்ரைவித்யாமாம்-சோம பர பூத பாபா -யஜ்ஞை ரிஷட் வாஸ்வர்காதிதம் ப்ரார்த்தயந்தே -தே புண்யமாசாத்யா ஸூ ரேந்த்ரலோகம்
அஸ் நந்தி திவ்யான் திவிதேவ போகான் –தேதம் புக்த்வா ஸ்வர்க்க லோகம் விசாலம் ஷீணே புன்யே
மர்த்த்யலோகம் விசந்தி -என்கிறபடியே -நச்வரமாய் சோபாதிகமாய் இருப்பதொரு ஸூக விசேஷம்-இறே இப்படி பட்ட ஸ்வர்க்கத்தில்
–இடுமே –
இட்டு வைப்பாரோ –தந்தும் கேன சம்பின்னம் -இத்யாதிப்படியே அதுக்கு இதோபி விலஷனமாய் இருந்ததே ஆகிலும் –
முமுஷுக்கு நரக கல்பமாயும் -பிரதி கூலமாயும் இறே இருப்பது –
தேவேந்திர த்வாதி கம்பதம் ஏதேவைநிரயாஸ் ததாஸ் த்தா நஸ்ய பரமாந்தமான –ஷேத்ராணி மித்ராணி தனானி நாத புத்ராச ச தாரா
பஸவொக்ரஹாநித்வத் பாத பத்ம ப்ரவனாத்மாவர்த்தேர்ப்பவந்தி சர்வே பிரதி கூல ரூபா -என்னக் கடவது இறே
பல நீ காட்டிப் படுப்பாயோ இன்னம் கெடுப்பாயோ -போர வைத்தாய் புறமே -நெறி காட்டி நீக்குதியோ –
அற்ப சராசரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன் -கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –
என்று ப்ராக்ர்த்த ஸூகத்தை கட்டடங்க பிரதி கூலமாகவும் ஸ்வரூப நாசககமாகவும் நம் ஆழ்வார்-அனுசந்தித்து அருளினார் இறே –
இன்னும் நரகில் இட்டு சுடுமே
-உபாய உபேய பாவேன தத்வதஸ் சர்வே தேசிகை -ஸூ நிச்சிதான்க்ரி பத்மாய –என்கிறபடியே –
தன திருவடிகளையே உபாயம் உபேயம் என்று அத்யவசித்து -அனந்யார்ஹராய் போன பின்பு
கேட்ட உடனே அஞ்சும்படி -அதி துஸ் சகங்களான ரௌவராதி நரகங்களிலே விழ விட்டு தஹிப்பிப்பாரோ-
கர்ச்ச்ரென தேஹான் நிஷ்க்ராந்திம் யாம் யகிங்கர தர்சனம் -யாத நாதேக சம்பந்தம் யாம்யபாசைஸ் ச கர்ஷணம் –
உக்ர மார்க்க கதின்லேசம் யமச்ய புர தஸ்திதம்–தன்னி யோகேன தாயாதா யாதனாச்ச சகஸ்ரசா -ஸ்ருத்வாஸ்
ம்ர்த்வாச தூயேஹம் தத் ப்ரேவேச பயாகுல -என்றும்
-கடும் சொலார் கடியார் காலனார் தமரால் படுவதோர்-கொடுமிறைக்கு அஞ்சி – என்றும் –
எண்ணிறந்த துன்பம் தரு நிரயம் பல -என்றும் சொல்லப்பட்ட நரகங்களிலே சென்று-துக்கப்ப்படும்படி உதாசீனராய் இருப்பாரோ -என்றபடி
அவற்றை தொடர் தரு தொல்லை சுழல் பிறப்பில் சுடுமே
-கர்ம பிரம்மோத் த்பவம் வித்தி -என்கிறபடி –
அந்த ஸ்வர்க்க நரகாதிகளுக்குஈடான புண்ய பாப் ரூப கர்மார்ஜனத்துக்கு -பிரம சப்த வாச்யமான சரீரம்-
ஹேதுவாய் இருக்கையாலே அத்தை அனுசரித்து கொண்டு இருப்பதாய்
-தொன் மாயப் பல் பிறவி –
என்கிறபடி -அநாதியாய் -ஏவம் சம்சர்த்தி சக்ரச்தே ப்ராம்ய மானே ஸ்வ கர்மபி -என்றும் -மாறி மாறி-பல பிறப்பும் பிறந்து -என்றும் சொல்லுகிறபடி
-சக்ரம் போல் சுழன்று வாரா நின்றுள்ள ஜன்ம பரம்பரைகளில்-நிறுத்துவாரோ -அவற்றில் அன்வயிக்கும்படி பிரவர்த்திப்பிப்பாரோ என்றபடி
-நடுதல் -ஸ்தாபித்தல் –
இனி நம்மை நம் வசத்தே விடுமே –
-எம்பெருமானார் திருவடிகளுக்கு நிழலும் அடிதாறும் போல் அத்யந்த-
பரதந்த்ரராய் போந்த நம்மை மேல் உள்ள காலம் எல்லாம் ஸ்வ தந்த்ரராக்கி -நம்முடைய ருசி அனுகுணமாக
ச்வைர சம்சாரிகளாய் போகும்படி விட்டு விடுவாரோ
-எம்பெருமானார் திருவடிகளை ஆஸ்ரயித்து-
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஏதே -என்னும்படியான நிஷ்கர்ஷத்தைப் பெற்ற அடியோங்களை –
அப்ராப்தமானவை ஒன்றும் தட்டாதபடி பண்ணி அருளுவார் -என்று கருத்து-
த்ர்ணீ க்ரத விரிஞ்சாதி நிரம்குச விபூதய -ராமானுஜ பதாம் போஜ சமாஸ்ரயண சாலி ந -என்றும்
மதன கதனைர் நக்லிச்யந்தே யதீஸ்வர சம்ஸ்ரயா -என்னக் கடவது இறே
-மேவுதற்கு –
அடியார் குழாம் களை உடன்-கூடுவது என்று கொலோ – என்றும் -ராமானுஜச்ய வசக பரிவர்த்தி ஷீய -என்றும் சொல்லுகிறபடியே -நம்மால்
பிரதி பாதிக்க படுகிற ப்ராப்தி நிமித்தமாக -நையல் -சிதிலமாகாதே கொள் -மேவுதல் -பொருந்துதல் -அதாவது ப்ராபித்தல் –
சோற்றுக்கு கரையாதே கொள் என்றால் -சோறு நிமித்தமாக கரையாதே கொள் என்னுமா போலே
மேவுதற்கு நையேல் என்றது –
மேவுதல் நிமித்தமாக நையல் வேண்டா -என்றபடி -ந புக்தம் ஷீயதே கர்ம கல்ப கோடி சதைரபி -அவசியம் அனுபோக்தவ்யம் க்ர்தம் கர்ம ஸூ பா ஸூ பம் –
என்கிற சாஸ்த்ரத்தை உட் கொண்டு சர்வேஸ்வரன் சம்சாரத்தில் மூட்டும் ச்வாபவனாய் விட்டாப் போலே
எம்பெருமானாரும் தம் சாஸ்திர மரியாதையை உட் கொண்டு உதாசீனராய் இருப்பாரோ என்று அதி சங்கை
பண்ணின நெஞ்சைக் குறித்து -எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பும் -பிரபன்னராய் -சரம பர்வ நிஷ்டராய் இருக்கும்
நம்மை உபாசகரைப் போலே ப்ராப்ய அவசான பர்யந்தம் சம்சார வெக்காயம் தட்டும்படி காட்டிக் கொடார் -என்றது ஆய்த்து –
மனமே நையல் மேவுதற்கே –
என்று சேதன சமாதியால் அருளிச் செய்கிறார் -அசித்தை கூட திருத்தும் படி காணும்
இவர் உபதேசம் இருப்பது -நகலு பாகவதாய மவிஷயம்கச்சந்தி -பரிஹர மது ஸூ தன பிரபன்னான் பிறப்பு ரஹமன்ய நிர்னாம்
-த்யஜபட தூரதரென தானபாபான் -என்னக் கடவது இறே –
எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே – என்று-
இவ்வர்த்தத்தை பிரதம பர்வத்தில் திரு மழிசைப் பிரானும் அருளிச் செய்தார் இறே –

——————————————————————————————————————-
பெரிய ஜீயர் அருளிய உரை
-அவதாரிகை
எல்லாரும் சம்சாரம் த்யாஜ்யம் பரம பதம் உபாதேயம் என்று அறுதி இட்டு-வஸ்தவ்யதேசம் அதுவே என்று அங்கே போக ஆசைப்படா நிற்க –
நீர் பரம பதத்தையும் சம்சாரத்தையும் சஹபடியா நின்றீர் –
உமக்கு வஸ்தவ்ய தேசமாக நீர் தாம் அறுதி இட்டு இருப்பது எது -என்ன-அருளிச் செய்கிறார் –

செழும் திரைப் பாற்கடல் கண்டுயில்மாயன் திருவடிக் கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நன்ஞானி நல் வேதியர்கள்
தொழும் திருப்பாதன் இராமானுசனைத் தொழும் பெரியோர்
எழுந் திரைத்தாடுமிடம் அடியேனுக் கிருப்பிடமே – – -105 – –

வியாக்யானம் –
அழகிய திரைகளை வுடைத்தான திருப்பாற் கடலிலே –கடலோதம் காலலைப்ப கண் வளரும் -திருவந்தாதி – 16- என்கிறபடியே-
துடைகுத்த உறங்குவாரைப் போலே -அத்திரைகளானவை திருவடிகளை அநு கூலமாக அசைக்க-
கண் வளரா நிற்பானாய் – உறங்குவான் போல் -திருவாய்மொழி -5 4- 11- – யோகு செய்கிற
ஆச்சர்யத்தை உடையவனான சர்வேஸ்வரனுடைய குணத்தில் ஈடுபட்டு –ஜிதந்தே -என்று
திருவடிகளின் கீழே விழுந்திருந்த ஸ்வபாவத்துக்கு ஒருகாலும் சலனம் அற்று இருக்கிற
கலக்கமில்லா நல் தவ முனிவரும் -திருவாய் மொழி -8-3 10–
இது ஒரு ஞான வைபவமே-என்று இத்தையே பல காலும் ஸ்லாகித்துக் கொண்டு போருகையாலே -அவர்கள் நெஞ்சிலே
மேவப்பட்ட விலஷணமான ஜ்ஞானத்தை உடையவராய் -பரம வைதிகரானவர்கள்
ப்ராணாமாத்ய அநு வர்த்தங்களைக் பண்ணா நின்றுள்ள திருவடிகளை வுடையரான-எம்பெருமானாரை
நித்யாஞ்சலி புடாஹ்ருஷ்டா -பார மோஷ -என்கிறபடியே சதா அனுபவம் பண்ணா நின்று உள்ள-வைபவத்தை உடையவர்கள் –
அவ் அனுபவ ஜனித ஹர்ஷ பிரகர்ஷத்தாலே உடம்பு இருந்த இடத்தில் இராதே
கிளர்ந்து கடல் இரைத்தால் போலே இரைத்துக் கொண்டு சசம்பிரம வியாபாரங்களை பண்ணும் இடம்-அவர்கள் அடியானான எனக்கு வஸ்த்வ்ய தேசம்
செழுமை -அழகு பெருமையுமாம் / பாற்கடல் பள்ளி கொள் மாயன் -என்றும் பாடம் சொல்லுவர்–

—————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை –
கீழே -எம்பெருமானார் தமக்கு பண்ணி அருளின உபகாரத்தை அனுசந்தித்து-மகா உதாரரான எம்பெருமானாரே -என்று அவரை சம்போதித்து-
தேவரீர் சுலபனான கிருஷ்ணனை-கரதலாமலகமாக பண்ணிக் கொடுத்தாலும் –அவன் நித்ய வாசம் பண்ணுகிற பரம பதத்தை கொடுத்தாலும் –
அவனுக்கு கிரீடாகந்துக ஸ்தாநீயமான இந்த லீலா விபூதியைக் கொடுத்தாலும் -தேவரீர் உடைய திவ்ய மங்கள விக்ரக-அனுபவம் ஒழிய
அவற்றில் ஒன்றும் எனக்கு வேண்டுவது இல்லை -ஆகையால் இவ் அனுபவம் எனக்கு எப்போதும்
நடக்கும்படி கிருபை பண்ணில் தரிப்பன் – இல்லை யாகில் ஜலாதுத்தர்த்த மத்ஸ்யம் போலே தரிக்க மாட்டேன் என்ன –அத்தைக் கேட்டவர்கள்
-ஜ நிம்ருதி துரித நிதவ் மே ஜகதி ஜிஹா சாந்த்ரஜாம் பிதா பவத -பவ நு ச ந பசி பரஸ்மின் நிரவதிகா-நந்த நிர்ப்ப ரெலிப்ச – என்கிறபடியே
லோகத்தார் எல்லாரும் சம்சாரம் த்யாஜ்யம் என்றும் -பரம பதம் உபாதேயம் என்றும் -அறுதி இட்டு அங்கே போக ஆசைப்படா நிற்க
-நீர் இவ்விரண்டையும் சஹ படித்து சொன்னீர் –இனி உமக்கு வஸ்தவ்ய தேசமாக அறுதி இட்டு இருப்பது என் என்று கேட்க –
திருப்பாற் கடலிலே-கண் வளர்ந்து அருளின சர்வேஸ்வரனுடைய குணங்களில் ஈடுபட்டு -கலக்கமில்லா நல் தவ முனிவராலே
விரும்பப்பட்ட விலஷண ஞானத்தை உடையரான -பரம வைதிகராலே – தொழுது முப்போதும் -என்கிறபடியே
அநவரதம் சேவிக்கப் படா நின்றுள்ள திருவடிகளை உடைய எம்பெருமானாரை -தேவும் மற்று அறியேன் –
என்று சதா அனுபவம் பண்ணிக் கொண்டு இருக்குமவர்கள் எழுது அருளி இருக்குமிடம் அவர்கள் அடியேனான
எனக்கு வஸ்தவ்ய தேசம் என்று கீழே தாம் சொன்ன ப்ராப்யத்தை நிஷ்கர்ஷித்து அருளுகிறார் –

வியாக்யானம் –
செழும் திரை பாற்கடல் கண் துயில் மாயன்
-செழும் என்றது -திரைக்கு விசேஷணம் ஆகவுமாம்-கடலுக்கு-விசேஷணம் ஆகவுமாம் –திரைக்கு விசேஷணம் ஆனபோது
-செழுமை -அழகியதாய் -பால் கிளருமா போலே-ஒன்றுக்கு ஒன்றாக திரண்டு வருகிற இவற்றினுடைய சமுதாய சோபையை சொன்னபடி –
கடலுக்கு-விசேஷணம் ஆன போது-செழுமை -பெருமையாய் -நளி நீர் கடலைப் படைத்து தன் தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி -என்கிறபடி
-சர்வேஸ்வரனுக்கு இடங்கை வலங்கை கொண்டு கண் வளருகைக்கு-ஈடான பரப்பை உடைய கடல் என்றபடி –
அன்றிக்கே -செழுமை மாயவனுக்கு விசெஷணம் ஆகவுமாம் –இப்படிப் பட்ட திரு பாற் கடலிலே -கடலோதம் கால் அழைப்ப கண் வளரும் -என்கிறபடி
துடைகுத்த-உறங்குவாரைப் போலே -திரைகளானவை திருவடிகளை அனுகூலமாக அலைக்க – ஊஞ்சலிலே-கண் வளருமவனைப் போலே –
கண் வளரா நிற்பானாய் -உறங்குவான் போலே யோகு செய்கிற -ஆச்சர்யத்தை-உடையனான சர்வேஸ்வரன்
-ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் -ஷீரார்ணவ நிகேதன -என்றும் -வெள்ளத்தரவில்-துயில் அமர்ந்த வித்தினை -என்றும் சொல்லுகிறபடி –
அநந்த அவதார கந்தமாய்க் கொண்டு திருப்பாற்-கடலிலே கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரன் -என்றபடி
-செழும் திரை பாற்கடல் பள்ளி கொள் மாயன் –என்றும் பாடம் சொல்லுவார்கள் –
திருவடிக் கீழ் விழுந்து இருப்பார் –
பாற் கடலான் பாதம் வழுவா வகை நினைந்து –என்கிறபடியே அப்படிப் பட்ட சர்வேஸ்வரனுடைய கல்யாண குணங்களை அனுபவித்து -அவற்றிலே
ஈடுபட்டு -உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றபடி -அவனுடைய திருவடிகளின் கீழே நிழலும் அடி தாறும்
போலே பிரியாதே விழுந்து இருக்குமவர்களான – கலக்கமிலா நல் தவ முனிவராலே –நெஞ்சில் மேவும்-நல் ஞானி -இது ஒரு ஞான வைபவமே என்று
இத்தையே பலகாலும் அவர்கள் ஸ்லாகித்துக் கொண்டு –போருகையாலே அவர்கள் நெஞ்சிலே வைக்கப்பட்ட ஞான வைலஷண்யத்தை உடையவராய் –
மேவுதல் -விரும்புதல் –
நல் வேதியர் –
பரம வைதிகர் ஆனவர்கள் -தொழும் திருப் பாதன் -லஷ்மணாய முநயே தஸ்மை நமஸ் குர்மஹே-என்றும்
–தஸ்மை ராமானுஜார்யாய நம பரம யோகினே -என்றும் – பிரமாணம் லஷ்மண முநி ப்ரதி க்ர்ஹ்ணா து மாமாம் –என்றும்
ராமானுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்த்நா-என்றும் சொல்லுகிறபடியே பிரணமாத்ய அனுவர்த்தனந்களை-பண்ணா நின்றுள்ள திருவடிகளை உடையனான
-இராமானுசனை
-எம்பெருமானாரை -தொழும் பெரியோர் –நித்யாஞ்சலி புடா ஹ்ர்ஷ்டா -என்றும் -புணர்த்தகையனராய் – என்றும் -கைகள் கூப்பிச் சொல்லீர் -என்றும் –
சொல்லுகிறபடியே சர்வ காலமும் சேவித்துக் கொண்டு இரா நின்றுள்ள பெருமையை உடையவர்கள் –
எழுந் திரைத்தாடுமிடம்
-அவ அனுபவ ஜநிதமான ஹர்ஷம் உந் மஸ்தகமாய் -அத்தாலேஉடம்பு இருந்த இடத்தில் இராதே கிளர்ந்து கடல் இரைத்தால் போல் இரைத்துக் கொண்டு –
சசம்ப்ரம வியாபாரங்களை பண்ணுமிடம்-
அடியேனுக்கு இருப்பிடமே –
தன்னை உற்றாட் செய்யும் தன்மையினோர்-மன்னு தாமரைத் தாள் தன்னை உற்றாட் செய்ய என்னை உற்றான் -என்கிறபடியே
அவர்களுக்கு-சரமாவதி தாசனான அடியேனுக்கு வஸ்தவ்ய தேசம்
-சிரீதரன் தொல் புகழ் பாடி கும்பிடு-நட்டமிட்டாடி கோகுகட்டுண்டு உழலுகிற -பிரதம பர்வ நிஷ்டரைப் போலே -இச் சரம பர்வதத்திலும்
எழுந்து இரைத்து ஆடுமவர்கள் இருக்குமிடம் அடியேனுக்கு இருப்பிடம் என்கிறார் –
யா வைகுண்ட கதா ஸூ தாரச புஜாம் ரோசேத நோ சேதசே-என்றும் -வாஸ ஸ்தானம் ததிஹ க்ர்தி-நா பாதி வைகுண்ட கல்பம் –என்றும்
-வஸ்தவ்யம் ஆசார்ய சந்நிதியும் -என்னக் கடவது இறே-

—————————————————————————————————–

பெரிய ஜீயர் அருளிய உரை
-அவதாரிகை –
இப்படி இவர் தமக்கு -தம் பக்கல் உண்டான அதி மாத்திர ப்ராவண்யத்தை கண்டு –
எம்பெருமானார் -இவர் திரு உள்ளத்தை மிகவும் விரும்பி யருள –அத்தைக் கண்டு உகந்து அருளிச்-செய்கிறார் .

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிரும் சோலை யென்னும்
பொருப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர் -அவை தன்னொடும் வந்
திருப்பிடம் மாய னிராமானுசன் மனத்துன்றவன் வந்
திருப்பிடம் என் தனி தயத்துள்ளே தனக்கின்புறவே – – 106- –

வியாக்யானம்-
ஸ்வரூப ரூப குண விபூதிகளால் – ஆச்சர்ய பூதனான சர்வேச்வரனுக்கு வச்தவ்ய தேசம்-
ஸ்ரீ வைகுண்டமும் -வடக்குத் திரு மலையும் -திரு மால் இரும் சோலை என்று பிரசித்தமான -திருமலை யாகிற –ஸ்த்தலமுமாக-
வைகுந்தம் கோயில் கொண்ட –திருவாய் மொழி – 8-6 5- வேங்கடம் கோயில் கொண்டு -திருவாய்-மொழி – 2-1 7-
அழகர் தம் கோயில் -திருவாய்மொழி – -2 9-3 – என்று- சொல்லா நிற்பவர்கள்-பகவத் தத்வத்தை சாஷாத் கரித்து இருக்கிற விலஷணரானவர்கள் —
அப்படி பட்டு இருந்துள்ள சர்வேஸ்வரன் -அழகிய பாற்கடலோடும் -பெரிய திருமொழி 5-2 10– என்கிறபடியே
அந்த ஸ்த்தலங்கள் தன்னோடே கூட வந்து எழுந்து அருளி இருக்கிற ஸ்த்தலம்-என்னுடைய ஹ்ருதயத்துக்குள்ளே –

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை –
திருவடிகளை ஆஸ்ரயித்த மகாத்மாக்கள் -அவர் தம்முடைய குண அனுபவ ஜனித
ஹர்ஷ பிரகர்ஷத்தாலே களித்து சசம்ப்ர்ம ந்ர்த்தம் பண்ணும் இடம் தமக்கு வாசஸ்தானம் என்று கீழ்ப்-பாட்டில் அருளிச் செய்து –
இப்பாட்டிலே -வேத -தத் உப பிரமனாதிகளாலே பரிசீலனத்தை பண்ணி இருக்குமவர்கள்
சர்வேஸ்வரனுக்கு உகந்து அருளின நிலங்களாக சொல்லுகிற -ஸ்ரீ வைகுண்டம் வட திருமலை தென் திருமலை
தொடக்கமான திவ்ய தேசங்களோடு கூட எம்பெருமானாருடைய திரு உள்ளத்திலே அவன் மிக விரும்பி-வர்த்திக்குமா போலே –
இப்போது -அந்த திவ்ய தேசங்களோடும் – அந்ததிவ்ய தேசங்களுக்கு நிர்வாஹனான-
சர்வேச்வரனுடனும் கூட வந்து எம்பெருமானார் தாமும் நிரதிசய சுகமாக எழுது அருளி இருக்கிற ஸ்தலம்-
தம்முடைய திரு உள்ளம் என்று அனுசந்தித்து பிரீதர் ஆகிறார் –

வியாக்யானம்-
வைகுந்தம் –
அவ்யாஹதளம் கல்பம் வஸ்து லஷ்மி தரம் விது -என்கிறபடியே சமஸ்த சங்கல்ப்பங்களும்
மாறாதே செல்லுக்கைக்கு உடலான தேசமாய் -நலமந்த மில்லதோர் நாடு -என்று ஸ்லாக்கிக்கப் படுமதான-ஸ்ரீ வைகுண்டமும் –
அன்றிக்கே -தர்ம பூத ஞானத்துக்கு திரோதானம் இல்லாத தேசம் என்னுதல் –
வேங்கடம் –
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு தண்ணார் வேம்கட விண்ணோர் வெற்பு -என்றும்
பரன் சென்று சேர் திரு வேங்கட மா மலை -என்றும் சொல்லுகிறபடியே -இரண்டு பிரஜையை பெற்ற
மாதாவானவள் இருவருக்கும் முலை கொடுக்க பாங்காக நடுவே கிடைக்குமா போலே –நித்ய சூரிகளுக்கும்-நித்ய சம்சாரிகளுக்கும் ஒக்க முகம் கொடுக்கைக்காக –
அவன் நின்று அருளின திரு மலையும் மாலிரும் சோலை என்னும் பொருப்பிடம் -புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில் -என்றும் –
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை -என்றும் -கிளர் ஒளி சேர் கீழ் உரைத்த பேறு கிடைக்க-வளர் ஒளி மால் சோலை மழை -என்றும் சொல்லுகிறபடியே
-திருமால் இரும் சோலை என்னும்-பேரை உடைத்தாய் -ஆழ்வார் பிராரத்து அருளின படியே உகந்து வர்திக்கைக்கு ஏகாந்த ஸ்தலம்
என்று அவன் விருப்பத்தோடு வர்த்திக்கிற தென் திருமலை ஆகிய ஸ்தலமும் –
பொருப்பு
-பர்வதம்-இருப்பிடம் -ஆவாஸ ஸ்தானம் -மாயனுக்கு -யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹா -என்றும்
நமே விதுஸ் ஸூ ர கணா-என்றும் -பிரபவன்ன மகர்ஷய -என்றும் -யவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன் –
என்றும் சொல்லுகிற படியே அசிந்த்ய ஸ்வபாவனாய்-ததை ஷத பஹூச்யாம் பிரஜாயேயேதி-என்றும்
தான் ஒரு உருவாய் தனி வித்தாய் -என்றும் -சொல்லுகிறபடியே சர்வ காரண பூதனாய் -ஸ்வரூப ரூப
குண விபூதிகளால் ஆச்சர்ய பூதனான சர்வேஸ்வரனுக்கு
-நல்லோர் –
மகாத்மா ந சதுமாம் பார்த்த-தைவீம் ப்ரகர்தி மாஸ்திதா -பஜன்த்ய நன்ய மனசொஜ்ஞாத்வா பூதாதி மவ்யயம் -என்கிறபடியே பரா வரதத்வயா
தாத்ம்ய விதக்ரே ஸ்ரரான மக ரிஷிகள் -என்பர் -சொல்லுவார்கள்
-வைகுண்டேது பார் லோகே ஸ்ரீ யா சார்த்தம்-ஜகத்பதி -ஆச்தே விஷ்ணுர சிந்த்யா த்மா பக்தைர் பாகவதஸ் சஹா -இத்யாதியாலே பிரதிபாதிப்பர் -என்றபடி
அன்றிக்கே -நல்லோர் -மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்வார்கள் என்றுமாம் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும் -திரு மால் வைகுந்தம் என்றும் –
தெண்ணல் அருவி மணி பொன் முத்து-அலைக்கும் திரு வேம்கடத்தான் -என்றும் –
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில் வளர் இளம் பொழில் சூழ்-மால் இரும் சோலை -என்றும்
-விண் தோய் சிகரத் திருவேங்கடம் -என்றும் -சீராரும் மால் இரும் சோலை -என்றும் –
வேங்கடத்து மாயோன் -என்றும் -விரை திரை நீர் வேங்கடம் -என்றும் -மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தான் -என்றும் –
வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் -என்றும் இத்யாதிகளாலே அருளிச் செய்வார்கள் -என்றபடி –
அவை தன்னொடும் –
அந்த வைகுண்டம் வேங்கடம் மால் இரும் சோலை தொடக்கமான திவ்ய தேசங்களோடு கூட-வந்து –
அழகிய பாற்கடலோடும் -என்கிறபடியே அந்த திவ்ய தேசங்களில் -அவரைப் பெறுகைக்கும்
ஜகத் ரஷணம் பண்ணுகைக்கும் -உறுப்பாகையாலே அந்த கிருதக்ஜ்ஜையாலும் தனக்கு பிராப்யரான
இவர் தம்முடைய ப்ரீதி விஷயங்கள் ஆகையாலும் -அவற்றை பிரிய மாட்டாதே -அந்த திவ்ய தேசங்களோடு கூடே தானே வந்து –
மாயன் –
சுவையன் என்னும்படி நிரதிசய போக்யனான சர்வேஸ்வரனுக்கு – ஜ்ஞாநீத்வாத் மைவமே மதம் -என்று
அவன் தானே சொல்லும்படி -தாரகராய் இருக்குமவர் -அன்றிக்கே -ஏன் நின்ற யோனியுமாய் பிறந்தாய் -என்கிறபடி
சர்வேஸ்வரன் தானே வந்து உபகரித்து -படாதன பட்டு -உபதேசித்தாலும் திருந்தாத ப்ராக்ருத ஜனங்களை எல்லாம்
அனாயாசேன திருத்திப் பணி கொண்ட ஆச்சர்ய பூதர் -என்னுதல் -இராமானுசன் -இப்படிப் பட்ட எம்பெருமானாருடைய –
மனத்து –
திரு உள்ளத்திலே வாசஸ்தானமாக எழுந்து அருளி இருந்தார் -என்றபடி –
இன்று-
அடியேனை-அந்தரங்கராக கைக் கொண்ட இப்போது -என் தன் இதயத்து உள்ளே – தம்முடைய திரு உள்ளம் போல் பக்தி ரச
சந்துஷிதமாய் -நிச்ச்சலமாய் – விஷய விரக்தமாய் -இருக்கை அன்றிக்கே -கஷ்கமாய் -சஞ்சலமாய் -விஷய சங்கியான –என்னுடைய ஹ்ருதயத்திலே
-தனக்கு இன்புறவே –
அந்த எம்பெருமானார் தமக்கு -யமைவைஷ வர்நுந்தேதேலப்ய – என்னும்படி நிரவதிக பிரீதி யோடு-எழுந்து அருளி இருக்கும் இடம் –
காமினி உடம்பில் அழுக்கை காமுகன் உகக்குமா போலே என் பக்கல்-
வ்யாமோஹத்தாலே என் ஹ்ர்தயத்தை விட்டு மற்று ஒன்றை விரும்பார் என்றபடி -உச்சி உள்ளே நிற்கும் –
என்னும் படி சர்வேஸ்வரன் ஆழ்வார் திரு முடிக்கு அவ்வருகு போக்கு இல்லை என்று அங்கே தானே-
நின்றால் போலே எம்பெருமானாரும் இவர் திரு உள்ளத்துக்கு அவ்வருகே போக்கு ஓன்று இல்லை என்று திரு உள்ளமாய் –
அங்கே தான் ஸ்தாவர பிரதிஷ்டையாக எழுந்து அருளி இருந்தார் காணும் –

——————————————————————————————-

பெரிய ஜீயர் அருளிய உரை
-அவதாரிகை
இப்படிதம் பக்கலிலே வ்யாமோஹத்தை பண்ணா நிற்கிற-எம்பெருமானார் உடைய திரு முகத்தைப் பார்த்து –
தேவரீருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுவது ஓன்று உண்டு -என்று-தம்முடைய அபேஷிதத்தை விண்ணப்பம் செய்கிறார் –

இன்புற்ற சீலத்து இராமானுச என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோய் உடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
துன்புற்றுவீயினும் சொல்லுவது ஓன்று உண்டு உன் தொண்டர்கட்கே
அன்புற்று இருக்கும்படி என்னை யாக்கி யங்கு யாட்படுத்தே – – – 107- –

வியாக்யானம் –
எத்தனையேனும் தண்ணியனான என்னுடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்து –அது தன்னைப் பெறாப் பேறாக நினைத்து –
ஆநந்த நிர்பரராய் -எழுந்து அருளி இருக்கிற சௌசீல்யத்தை உடையவரே –
இப்படி இருக்கிற தேவரீருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுவது-ஒரு கார்யம் உண்டு –அது ஏது என்னில் –
ஐயார் கண்டமடைக்கிலும் நின் கழல் எய்யாது ஏத்த –என்னுமா போலே -திரு வாய் மொழி -2 9-3 – –
தோற்புரையே போமதன்றியிலே அஸ்த்திகதமாய் இன்று நலிய கடவ-வியாதிகளுக்கு பாஜனமான சரீரங்கள் தோறும் -ஜநிப்பது மரிப்பதாய் –
அசந்க்யேய துக்கங்களை அனுபவித்துமுடியிலும்-சர்வ காலத்திலும் -சர்வ தேசத்திலும் -தேவரீருக்கு அனந்யார்ஹ்ராய் இருக்கும்
அவர்களுக்கே மாறுபாடுருவின ச்நேஹத்தை உடையேனாய் இருக்கும்படியாக செய்து-என்னை அவர்கள் திருவடிகளிலே அடிமையாம்படி பண்ணி யருள வேணும் .
இதுவே அடியேனுக்கு புருஷார்த்தம் -என்று கருத்து .
இன்பு -சுகம்
சீலமாவது -பெரியவன் தண்ணியன் உடன் புரையறக் கலக்கும் ஸ்வபாவம்
என்பு -எலும்பு
துன்பு -துக்கம் –

—————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை
கீழ்ப் பாட்டிலே எம்பெருமானார் தம்முடைய திரு உள்ளத்திலே புகுந்து நிரதிசய ப்ரீதி யோடு கூட
நித்ய வாசம் பண்ணா நின்றார் -என்று தம் அளவிலே அவர் பண்ணின விஷயீ காரத்தை அனுசந்தித்து – இதிலே
அப்படி பட்ட வியாமோஹத்தையும் நிரவதிக சௌசீல்யத்தையும் உடையவரே என்று சம்போதித்து –
அஸ்திகதமாய் நின்று நலிய கடவ வியாதிகளுக்கு பாஜநமான சரீரங்கள் தோறும் ஜநிப்பது மரிப்பதாய் கொண்டு –
அசந்க்யேயமான துக்கங்களை அனுபவித்து உரு மாய்ந்து முடியிலும் -சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும்
தேவரீருக்கு அனந்யார்ஹராய் இருக்குமவர்கள் பக்கலிலே அதி வ்யாமுக்தனாய் -அவர்களுக்கு க்ரய விக்ரய அர்ஹனாய்
கொண்டு அடிமைப் படும் படி அடியேனைப் பண்ணி அருள வேண்டும் என்று தம்முடைய அபேஷிதத்தை விண்ணப்பம்-செய்கிறார் –

வியாக்யானம்
-இன்புற்ற சீலத்து இராமானுசா –
திரு வேம்கட முடையானுக்கும் திரு குறும்குடி நம்பிக்கும்-திரு இலச்சினையும் -ஸ்ரீ பாஷ்யதையும் பிரசாதித்த ஆசார்யராகவும் –
செல்லப் பிள்ளைக்கு பிதாவாயுமாய் இருக்கிற-தேவரீருடைய மதிக்கையும் -அத்யந்த பாபிஷ்டனான என்னுடைய தண்மையையும் பாராதே -என்னை
தேவரீருக்கு அவ்வருவாக எண்ணி -என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து -அது தன்னையே பெறா பேறாக நினைத்து –
ஆனந்த நிர்பரராய் எழுந்து அருளி இருக்கிற சௌசீல் யத்தை உடைய எம்பெருமானாரே
-இன்பு -ஸூ -கம்
சீலமாவது பெரியவன் தண்ணியரோடு புரை யறப் பரிமாறும் ஸ்வாபம் -இப்போதாக காணும் இவருடைய
சீலம் அமுதனாருக்கு வெளியாகத் தொடங்கிற்று –
சொல்லுவது ஓன்று உண்டு
-சர்வஞ்ஞாரான தேவரீருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுவது ஓன்று உண்டு –
நத்வே வாஹம் -என்று தொடங்கி- கர்ம ஞான பக்திகளை பரக்க உபதேசித்து கொண்டு போந்து -சர்வ குஹ்ய தமம்
பூய ஸ்ருணுமே பரமம் வச -என்று உபதேசிக்கும் போது கீதச்சர்யன் அருளிச் செய்தால் போலே இவரும் –
இராமானுசா இது என் விண்ணப்பமே -என்கிறபடியே இவ்வளவும் தம்முடைய அபிநிவேசம் எல்லாம் விண்ணப்பம் செய்து-
இப்பாட்டிலே தம்முடைய அபேஷிதத்தை நிஷ்கரிஷித்து அருளிச் செய்கிறார் –
-அங்கு சேஷி உடைய உக்தி –இங்கு சேஷ பூதனுடைய அபேஷிதம் -ஒரு பிரயோஜனம் உண்டு என்றீர் அது என் என்ன
-என்புற்ற நோயுடல் தோறும்-பிறந்து இறந்து எண்ணரிய துன்புற்று –
-நோய் -வியாதி -அதாகிறது -ஆத்யாத்மிகாதி துக்கங்கள் -அந்த நோயானது-
அந்தர்பஹிந்திரிய வியாபார ரூப ஸ்வ க்ரத கர்ம பலம் ஆகையாலே தோற்புரையே போம் அது அன்றிக்கே –
அஸ்திகதமாய் கொண்டு இருக்கையாலும் ஆத்மா நாசகம் ஆகையாலும் -என்புற்ற -என்று விசேஷிக்கிறார் –
என்பு -எலும்பு -உறுகை -அத்தைப் பற்றி நிற்கை -உடல் தோறும் -அப்படி அஸ்திகதங்களாய் கொண்டு நலியக்
கடவ வியாதிகளுக்கு பாஜநமான சரீரம் தோறும் -துர்வார துரித மூலம் துஸ்தர துக்காநாம் பந்த நீ ரந்தரம்வபு –என்னக் கடவது இறே –
அன்றிக்கே – நோயெல்லாம் பெய்ததோர் ஆக்கை -என்கிறபடியே அந்த வியாதி
தானே உருக் கொண்டு இருக்கிற -தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபமான சரீரங்கள் என்று என்னுதல் –
ஜன்ம பரம்பரைகள் தோறும் -என்றபடி-பிறந்து இறந்து என்ற இது மற்ற அவஸ்த தாந்தரங்களுக்கும் உப லஷணம் –
இறப்பு -நாசம் -பிறந்து இறந்து எண்ணற்ற துன்புற்று வீயினும்
-அவ்வவ ஜன்மங்களிலே ஜநிப்பது-மரிப்பது தொடக்கமான அவஸ்தா சப்தகத்திலும் விரலை மடக்கி ஓன்று இரண்டு என்று எண்ணப் புக்கால்
அது கால தத்வம் உள்ள அளவும் எண்ணினாலும் எண்ணித் தலைக் கட்ட அரிதான துக்கங்களை ஒன்றும்
பிறிகதிர் படாதபடி அனுபவித்து முடியிலும் -போற்றலும் சீலத்து இராமானுச -என்கிறபடியே தேவரீர் உடைய
சீல குணத்தை அளவிட்டு சொல்லினும் -இஸ் சரீர அனுபந்தியான துக்கத்தை அளவிட்டு சொல்ல
ஒண்ணாது என்கிறார் காணும் -துன்பு -துக்கம்
-என்றும் -எல்லா காலத்திலும் -எவ்விடத்தும் -எல்லாஇடத்திலும் -உன் தொண்டர் கட்கே
-பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இராதே மோஷ-பிரதான தீஷிதராய் அன்றோ -இவ்வளவாக திருத்தி என்னுடைய
ஹிருதயத்திலே புகுந்து நித்ய-வாசம் பண்ணா நிற்கிற தேவரீருக்கு அனந்யார்ஹா சேஷமாய் இருக்கும் அவர்களுக்கே –
அவதாரணத்தாலே -அந்யயோக வ்யவச்சேதம் பண்ணுகிறார் -உனக்கே நாம் ஆட செய்வோம் —
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே — ஆறேனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் – என்றும்
தமேவசாத்யம் புருஷம் பிரபத்யே -என்றும் பிரதம பர்வத்தில் சொல்லுகிறபடியே –
குருரேவ பரம் பிரம்ம -என்றும் -உபாய உபேயே பாவேன தமேவ சரணம் வ்ரஜேத் -என்றும்
தேவு மற்று அறியேன் -என்றும் தீதில் சரணா கதி தந்த தன் இறைவன் தாளே அரணாக மன்னுமது –
என்றும் சரம பர்வத்தில் சொல்லுகிறபடியே சொல்லுவித்தார் -இறே
-அன்புற்று இருக்கும் படி –
-நிரவதிக-பிரேம யுக்தனாய் இருக்கும்படி -அன்பு -ச்நேஹம் –
என்னை ஆக்கி –
-தேவரீருக்கு கிருபா விஷய பூதன் ஆகும் படி-என்னைப் பண்ணி –
அங்கு ஆள்படுத்தே –
பவதீயர் திருவடிகளில் விஷயமான எல்லா அடிமைகளிலும் அன்வயித்து-க்ர்த்தார்த்தனாம் படி பண்ணி அருள வேணும் என்கிறார்
-ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல் நீங்காது ஏத்த-அருள் செய் எனக்கே என்று இப்படியே ஆழ்வாரும் அருளிச் செய்தார் இறே –

—————————————————————————————————————

பெரிய ஜீயர் அருளிய உரை
-அவதாரிகை –
நிகமத்தில்
இப்ப்ரபந்த ஆரம்பத்திலே
-இராமானுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ -1 – என்ற ப்ராப்யம்-தமக்கு யாவதாத்மபாவியாம்படி கை புகுருகையும் –
அந்த ப்ராப்ய ருசி ரூப பக்தி பௌஷ்கல்யமே தமக்கு அபேஷிதமாகையாலே –
தத் உபய சித்யர்த்தமாக ஸ்ரீ ஆகையாலே –
தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு என்றும் சார்வு -மூன்றாம் திருவந்தாதி-100 –
என்கிறபடியே சர்வாத்மாக்களுக்கும் என்றும் ஒக்க சார்வாய் -சம்பத் ப்ரதையான-பெரிய பிராட்டியாரை ஆஸ்ரயிப்போம்-என்கிறார் .

அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாக மன்னும்
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமானுசனடிப் பூ மன்னவே – – 108-

வியாக்யானம் –
நெஞ்சே -பக்தி தத்வமானது நிரவசேஷமாக -நம் அளவிலே குடி கொண்டது என்னும்படி
சம்ருத்தமாய் விஸ்ருதையான கீர்த்தியை உடைய ரான எம்பெருமானார் உடைய-திருவடிகள் ஆகிற செவ்விப் பூ –
மயிர் கழுவிப் பூ சூட விருப்பாரைப் போலே எப்போதோ என்று-ஆசைப் பட்டு இருக்கிற நம் தலை மேலே நித்ய வாசம் பண்ணும்படியாக –
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கம் -திரு வாய் மொழி -7 2-1- -என்கிறபடியே
ஜல சம்ருதியாலே அழகிய கால்கள் உகளா நின்றுள்ள -வயல்களை உடைத்தாய் –
தர்சநீயமான கோயிலையே தமக்கு நிரூபகமாக உடையரான பெரிய பெருமாளுடைய
அழகிய திரு மார்விலே -இறையும் அகலகில்லேன் -திரு வாய் மொழி -6 10-10 – என்று நித்ய வாசம்
பண்ணா நிற்பாளாய்–ஸ்லாக்கியமான தாமரைப் பூவை பிறப்பிடமாக வுடையாளாய் –நிரூபாதிக ஸ்த்ரீத்வத்தை வுடையாளான
ஸ்ரீ ரங்க நாச்சியாரை ஆஸ்ரயிப்போம் ..
போற்றுதல் -வணங்குதல் புகழ் தலுமாம்
அடியில் பூ மன்னு மாது – 1-என்றார் –இங்கே பங்கய மா மலர் பாவை -108- என்றார்
அங்கே பொருந்திய – – என்றார் –இங்கு -அணியாகமன்னும் — – என்றார்
அங்கு -இராமானுசன் உன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ -1- – என்றார் – இங்கு -தலை மிசையே இராமானுசனடிப் பூ மன்ன – 108- என்றார் .
அங்கு நெஞ்சே – 1- என்று திரு உள்ளத்தையும் கூட்டிக் கொண்டு உபக்ரமித்தார் –
இங்கு –நெஞ்சே – 108- என்று திரு உள்ளத்தோடு கூட அனுசந்தித்து தலைக் கட்டினார் .
இத்தால்
ப்ராப்ய ருசி வ்ருத்தியும்–ப்ராப்ய சித்தியும் ஆகிற –ஸ்வரூப அநு ரூப சம்பத் சித்திக்கடி –
சகல ஆத்மாக்களுக்கும் -தத் தத் அதிகார அநு குணமாக அபேஷித்த சம்பத் விசேஷங்களை-
ஸ்வ கடாஷ விசேஷங்களாலே உண்டாக்கி யருளும் –பெரிய பிராட்டியார் என்றும் –ப்ராப்யம் தான் ஆசார்ய சரணாரவிந்தம் -என்றும் –
அத்ரபரத்ர சாபி நித்யம் -ஸ்தோத்ர ரத்னம் – 2- என்கிறபடியே-யாவதாத்மம் விச்லேஷம் அற்று இருக்கை என்றும் –
இதுக்கு அதிகாரிகளும் இந்த ப்ராப்யத்தில் சஹ்ருதயமான ப்ராவண்யம் உடையவர்கள் என்றும் சொல்லிற்றாயிற்று –

——————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
-ஸ்ரீ மதே ரம்ய ஜாமாத்ர முநயே விததே நம
யச்மர்திஸ் சர்வ ஸித்தீ நாமந்தராய நிவர்ரணே –
அவதாரிகை
-நிகமத்தில் -கீழ் இரண்டு பாட்டிலும் எம்பெருமானார் தம்மை நிர்ஹேதுகமாக-அபிமானித்து
தம்முடைய திரு உள்ளத்திலே எழுந்து அருளி இருந்து நித்ய வாசம் பண்ணுகிற-படியையும் –
அநந்தரம் தமக்கு ததீய பர்யந்தமாக ப்ரேமம் பிறந்து -அவர்கள் விஷயத்தில் அசேஷ சேஷ-வ்ர்த்திகளும் பண்ணிக் கொண்டு போரும்படி
என்னை கடாஷித்து அருள வேணும் என்று தம்முடைய-அபிமத்தை அருளிச் செய்து –
இப்பாட்டிலே -எம்பெருமானார் திருவடிகள் ஆகிற செவ்விப்பூவை-நம்முடைய தலை மேலே கலம்பகன் மாலை அலங்கரிப்பாரைப் போலே அலங்கரித்து
ஸ்தாவர-பிரதிஷ்டையாக நிறுத்தி அருளினார் ஆகையாலே -அந்த பரிக்ரஹா அதிசயத்தை கொண்டு திவ்ய தம்பதிகளான
ஸ்ரீ -ஸ்ரீயபதிகளை மங்களா சாசனம் பண்ணுவோம் என்று பக்தி தத்வம் எல்லாம் தன்னளவிலே-குடி கொண்டது என்னும்படி
அத்ய அபி வர்த்தமான தம்முடைய திரு உள்ளத்தோடு கூடி-பலத்தை சொல்லித் தலைக் கட்டுகிறார் –

வியாக்யானம் -நெஞ்சே –
இப் பிரபந்த ஆதியிலே தமக்கு உசாத் துணையாக தம்முடைய மனசைக் கூட்டிக் கொண்டு –
எம்பெருமானார் உடைய திரு நாமத்தை சொல்லுவோம் வா என்று -உத்யோகித்தபடியே செய்து –
அத்தாலே தமக்கு பலித்த அம்சத்தை -இருவர் கூடி ஒரு கார்யத்தை பண்ண ஒருப்பட்டு –
அது தலைக்கட்டினவாறே அதிலே ஒருவன் தனக்கு தோழனான இரண்டாம் அவனுக்கு அந்த செய்தியை சொல்லுமா போலே
இவரும் தமக்கு சகாவான திரு உள்ளத்தை சம்போதித்து சொல்லுகிறார் –
-அடியிலே நெஞ்சு என்னும் திரு உள்ளத்தைக்-கூட்டிக் கொண்டு உபக்ரமித்தார் ஆகையாலே -இங்கே நெஞ்சே என்று தம் திரு உள்ளதோடு கூடி
அனுபவித்து தலை கட்டுகிறார் –
பத்தி எல்லாம் தங்கிய தென்னத்து தழைத்து நெஞ்சே –
-பக்தி சப்த வாச்யம் எல்லாம்-ஏக ரூபமாய் கொண்டு உன்னளவிலே சேர்ந்து குடி கொண்டு இருந்தது என்னும் படி சம்ர்த்தமாய்-இருக்கிற நெஞ்சே
-போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு -உனதடிப் போதில் ஒண் சீராம்
தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி நின்பால் -என்று இவர் தாமே தம்முடைய திரு உள்ளம்
பக்த பரிதம் என்னும் இடத்தை கீழே அருளிச் செய்தார் இறே –
அன்றிக்கே -பக்தி எல்லாம் தங்கிய தென்னத்து தழைத்து -என்கிற இத்தை எம்பருமானார் திருவடிகளுக்கு-விசேஷணம் ஆக்கவுமாம்-
-பக்தி எல்லாம் தங்கிய தென்னத்து தழைத்து
-சஹ்யத்தில் ஜலம் எல்லாம்-கீழே குதித்து ஒரு மடுவாகத் தங்கினால் போலே -என்னுடைய பக்தி ரசம் எல்லாம் பரம பக்தி ரூபமாய்க் கொண்டு
பரி பக்குவமாய் படிந்து -எம்பெருமானார் திருவடிகளிலே தங்கிற்று -என்னும் படி தழைத்து இருக்கிற –
பொங்கிய கீர்த்தி
–ஏய்ந்த பெரும் கீர்த்தி -என்கிறபடியே பரம பதத்தின் அளவும் வளர்ந்து கொண்டு ஓங்கி இருக்கிற-கீர்த்தியை உடையரான
-இராமானுசன் –
எம்பெருமானாருடைய –
உபக்ரமத்திலே -பல்கலையோர் தாம் மன்ன வந்த இராமானுசன் -என்கிறார் ஆகையாலே -இங்கு பொங்கிய கீர்த்தி-இராமானுசன் -என்கிறார்
-அடிப்பூ–
கீழ் சொன்ன தழைப் பதோடு கூடி இருக்கிற எம்பெருமானாருடைய-திருவடித் தாமரைகள் –
அடியிலே சரணாரவிந்தம் -என்கிறார் ஆகையாலே -இங்கே அடிப்பூ என்கிறார் –
மன்னவே
-யாவதாத்மபாவி ஸூபிரதிஷ்டமாய் இருக்கையாலே
–அம் கயல் பாய் வயல் தென்னரங்கன்-அணி யாகம் மன்னும் -செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய் -என்கிறபடியே உபய காவேரி களினுடையவும்
ஜல சம்ர்த்தியாலே வளர்ந்த மத்ச்யங்கள் உகளா நின்றுள்ள -கேதாரங்களாலே சூழப்பட்டு -அத்யந்த
தர்சநீயமான -அரங்கத்துக்கு நிர்வாஹனாய் -அத்தையே நிரூபகமாக உடையரான -பெரிய பெருமாளையும் –
அவர் தம்முடைய அழகிய திரு மார்பிலே அலங்கார பூதையாய் -இறையும் அகலகில்லேன் -என்றும்
அப்ரமேயம் ஹிதத் தேஜோ யச்யஸா ஜனகாத்மஜா -என்கிறபடியே பிரபையும் ப்ரபாவனையும் போலே –
அப்ர்தக் சித்தையாய்-ஸ்வரூப நிரூபகையாய் -கொண்டு நித்ய வாசம் பண்ணுமவளாய் —
உபக்ரமத்திலே -பொருந்திய மார்பன் -என்றார் ஆகையாலே -இங்கே மன்னும் -என்கிறார் –
அம் -அழகு கயல்-மத்ஸ்யம் -பாய்தல்-சலித்தல் வயல்-கழனி அணி -அலங்காரம் -ஆகம்-மார்பு
மன்னுதல் -பொருந்துதல்
-பங்கய மா மலர் பாவையை
-தாமரை மலரிலே பெரிய பிராட்டியார் அவதரிக்கையாலே
அத்தை கடாஷித்து அதற்கு ஒரு மகத்வத்தை சொல்லுகிறார் – அப்படிப்பட்ட தாமரைப்பூவை பிறப்பிடமாகவும்
நிரூபகமாவும் உடையவளாய் -பால்ய யவன மத்யச்தையான ஸ்ரீ ரெங்க நாயகியாரையும் -அலர்மேல் மங்கை
என்னக் கடவது இறே –
பாவை -ஸ்திரீ -அடியிலே பூ மன்னு மாது என்றார் ஆகையாலே இங்கு-பங்கய மாமலர் பாவையை -என்கிறார்
-போற்றுதும் -இப்படி இருந்துள்ள திவ்ய தம்பதிகளை –மங்களா சாசனம் பண்ணுவோம் -போற்றுதல்-புகழ்தல்
-ஆசார்யன் சிஷ்யனை திருத்துவது –சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டு -என்கிறபடியே –
பகவத் விஷயத்திலே யாவதாத்மா பாவியாக-மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு போருகை -இறே
-உகந்து அருளின நிலங்களிலே-ஆதர அதிசயமும் -மங்களா சாசனமும் சதாசார்ய பிரசாதத்தாலே வர்த்திக்கும்படி பண்ணிக்-கொண்டு போர்க் கடவன்
-என்று ஸ்ரீ வசன பூஷணத்திலே பிள்ளையும் அருளிச் செய்தார் இறே –
ஆக இத்தாலே -எம்பெருமானார் தம்முடைய நிர்ஹேதுக பரம கிருபையாலே பரகத ஸ்வீகார பாத்ரனான-பின்பு -அதற்கு பலமாக
-இப்படி மங்களா சாசன பரராய் இருந்தோம் என்று -தாம் பெற்ற பேற்றை
தம் திரு உள்ளத்தை குறித்து அருளிச் செய்து -இப்பிரபந்தத்தை தலை கட்டி அருளினார் ஆய்த்து –
திருப்பல்லாண்டு -ஆரம்பித்து -போற்றுதும் -மங்களா சாசனத்தில் நிகமித்து அருளிச் செயல்கள் உள்ளனவே —

—————————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருவரங்கத்து அமுதனார் திருவடிகளே சரணம் –
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -191- இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-1/2/7/16/18/19/20/25/31/44–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

July 27, 2016

ஸ்ரீ யபதி அவதாரங்கள் -ஆழ்வார்கள் அவதாரங்கள் -ஆச்சார்யர்கள் -அவதாரங்கள் –
ஒரு சேர -ஸ்ரீ பகவத் ராமானுஜர் – ஸ்ரீ ஆதி சேஷ -அடையார் கமலத்து -பஞ்ச திவ்ய ஆயுதங்கள் சக்தி உடன் -கலியும் கெடும் கண்டு கொண்மின் –
செய்ய திருவாதிரை -ஆதி கேசவ பெருமாள் அனுக்ரகம்
அனந்தம் பிரதம ரூபம் -இளைய பெருமாள் -பல பத்ரன் -ராமானுஜர் —
பகுமுகம் கைங்கர்யம் -கிரந்த நிர்மாணம் -திருக் கோயில்கள் கைங்கர்யம் -அண்ணல் ராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே –
பெரிய கோயில் நம்பி -திருவரங்கத்து அமுதனார் -பங்குனி ஹஸ்தம் திருவரங்கம் -ரெங்கார்ய ஸ்வாமி திருக் குமாரர்
சதுரா சதுரக்ஷரீ -ராமானுஜர் -பிரபன்ன காயத்ரி –
சப்தாவரணம் -ராமானுஜர் வாழ்ந்த காலத்திலேயே நம்பெருமாள் கேட்டு அருள -திருச் செவி சாதிக்க வாத்யத்தையும் நிறுத்தி –நிதானமாக செவி சாய்த்து அருளி-
திருவேங்கடமுடையான் -தனியாக 22 நாள் அத்யயன உத்சவம் அனந்தாழ்வான் விண்ணப்பம் படி -தண்ணீர் அமுது திருத்தும் உத்சவம் 23- தாதா கூட்டு –
உய்வதற்கு ஒரே வழி உடையவர் திருவடிகளே -எம்பெருமானார் திருவடிகளே சரணம் –
பகவத் விஷயம் பகவானுக்கு பிடித்த விஷயம்
-திருப் பல்லாண்டு -கண்ணி நுண் சிறுத்த தாம்பு -ஆச்சார்ய அபிமானம் -பக்தாம்ருதம் -ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி –
-அவன் ப்ரீதி அடைவது கண்டு நாமும் உகக்க-இந்த நான்கும் அனுபவிக்கிறோம் –

——————————————————————————-

வேத பிரான் பட்டர் அருளிய முதல் தனியன்-

முன்னை வினை அகல மூங்கில் குடி அமுதன்
பொன் அம் கழல் போது இரண்டும் என் உடைய
சென்னிக்கு அணியாக சேர்த்தினேன் தென் புலத்தார்க்கு-
என்னுக்கு கட வுடையேன் யான்….

பெருமாள் -ஆழ்வார்கள் -ராமானுஜர் -அமுதனார் -நாம் -திருவடிகள் -தாங்கும் – பரம்பரை -விஸ்வம் பரா -பாதுகை பெருமை போலே
அரங்க மா நகர் உளானே -நின் நாமம் கற்ற ஆவலிப்புடைமை கண்டாய் -நமன் தமர் தலைகள் மீதே -நாவலிட்டு
உழி தருகின்றோம் ( திருமாலை -1 – )என்றும்
அரங்கம் என்று அழைப்பராகில் பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் ஒழிந்து ஒழியும் அன்றே ( திருமாலை -13 – )என்றும்
அரங்கத்து அமுதனார் என்றால் சொல்ல வேண்டாமே
ராமானுஜர் பத்து மடங்கு பெருமாள் இடம் ஸ்ரீ பரத ஆழ்வான் கொடுத்தால் போலே -செல்வம் முற்றும் திருத்தி -மாதவனுக்கு ஆள் ஆக்கினார்
-கைகேயியும் கூட திருந்தி பெருமாள் மேலே காதல் மிக்கு இருக்க -பெருமாள் ராஜ்ஜியம் வண்ணான் குறை உண்டே

—————————————-

நயம் தரு பேரின்பம் எல்லாம் பழுது என்று நண்ணினார் பால்
சயம் தரு கீர்த்தி இராமானுசமுனி தாள் இணை மேல்
உயர்ந்த குணத்துத் திருவரங்கத் தமுது ஓங்கும் அன்பால்
இயம்பும் கலித்துறை யந்தாதி யோத விசை நெஞ்சமே –

நல்ல நெஞ்சே -தொழுது எழு -நீயும் நானும் நேர் நிற்கில் – நெஞ்சைக் கூட்டிக் கொள்ள வேண்டுமே -மன ஏவ காரணம் பந்த மோக்ஷம் –
இசைவித்து உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான் –

——————————————————————————————-

அமுதனார் அருளி-செய்த தனியன்-அபியுக்தர் அருளி செய்த-தனியன்-என்றும் சொல்வர்

சொல்லின் தொகை கொண்டு உனதடிப்போதுக்கு தொண்டு செய்யும்
நல்லன்பர் ஏத்தும் உன் நாமம் எல்லாம் என் தன் நாவினுள்ளே
அல்லும் பகலும் அமரும்படி நல்கு அரு சமய
வெல்லும் பரம இராமானுச இது என் விண்ணப்பமே –

நாமம் எல்லாம் -சங்கல்பித்து -மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று சகஸ்ர நாமங்கள் போலே
இவர் ராமானுஜர் திரு நாமங்கள் பலவற்றுக்கும் -சொல்லி இருப்பார்
சதா சொல்லும் ராமானுஜர் -அல்லும் பகலும் -சாமர்த்திய திரு நாமம் -நெறி முறைப்படுத்தி சமுதாயம் முழுவதுக்கும் –
மா முனிகள் ஆஞ்ஜை திருக் குருகூரில் –
ஆறு சமய செடி அதனை அறுத்து -சங்கர பாஸ்கர –நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன -சஞ்சீவினீம் -சிம்ஹாசனத்தில் ஸ்தாபித்து -அருளினார் –

——————————————————————————

பெரிய ஜீயர் அருளி செய்த உரையின் அவதாரிகை –

சகல சாஸ்திர சந்க்ரஹமான திரு மந்த்ரத்தின் உடைய தாத்பர்யமாய் —பகவத் ஆகஸ்மிக க்ருபா லப்த பரிசுத்த ஜ்ஞானரான –
ஆழ்வார்களுடைய திவ்ய பிரபந்த சாரார்தமாய் —பரம காருணிகரான நம் ஆழ்வார் உடைய – பரி பூர்ண கடாஷ பாத்ர பூதரான-
ஸ்ரீ மதுரகவிகள் உடைய–உக்த்யனுஷ்டங்களாலே ப்ரகடிதமாய் –ஆழ்வார் தம்மாலே நாத முனிகளுக்கு அருளி செய்யப் பட்டதாய் –
–அவர் திருவடிகளை ஆஸ்ரயித்த யோக்ய விஷயங்களுக்கு உபதேசித்து அருள —அவர்கள் தாங்களும் அப்படியே உபதேசிக்கையாலே –
-உபதேச பரம்பரா ப்ராப்தமாய்–அகில சேதனருக்கும் ஸ்வரூப உபாய புருஷார்த்த -யாதாத்ம்ய ரூபேண அவஸ்ய அபேஷிதமாய்–
பரம ரகஸ்யமாய் இருந்துள்ள -சரம பர்வ நிஷ்ட பிரகாரத்தை-
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்னும் இத்தையே -இவற்றுக்கே முன்புள்ள விசேஷணங்கள் –
-எம்பெருமானார்–கேவல கிருபையாலே தம்மை ஆழ்வான் திருவடிகளிலே ஆஸ்ரயிப்பித்து—தந் முகேன உபதேசித்து அருள கேட்டு –
—அவ்வர்த்தங்களை யதா தர்சனம் பண்ணி —அனவரதம் எம்பெருமானார் திருவடிகளை சேவித்துக் கொண்டு —போரா நின்றுள்ள பிள்ளை அமுதனார்–

அவருடைய திவ்ய குணங்களை தம்முடைய பிரேமதுக்கு போக்கு வீடாக பேசி-அனுபவிக்கும் படியான தசை தமக்கு விளைகையாலும்–
இவ்வர்த்த ஞானம் அப்பொழுதே –சேதனர்க்கு சூக்ரஹமாம் படி பண்ண வேணும் என்கிற பரம கிருபையாலும்–
தாம் எம்பெருமானாருடைய திவ்ய குணங்களை -பிரேம அநு குணமாக பேசுகிற பாசுரங்களாலே –
—தத் பிரபாவத்தை எல்லார்க்கும் பிரகாசிப்பியா நின்று கொண்டு-
–முன்பு ஆழ்வார் திருவடிகளுக்கு அனந்யார்ஹமான ஸ்ரீ மதுர கவிகள்–ஸ்வ நிஷ்டா கதன ரூபேணவும் –
-பர உபதேச ரூபேணவும் – உஜ்ஜீவன அர்த்தத்தை–லோகத்துக்கு வெளி இட்டு அருளினால் போலே-
-தாமும் ஸ்வ நிஷ்ட கதன ரூபத்தாலும் -பர உபதேசத்தாலும் – அவரைப் போலே சங்கரஹேன பத்துப் பாட்டாக அன்றிக்கே- பரக்கக் கொண்டு
-ஆசார்ய அபிமான நிஷ்டர்க்கு ஜ்ஞாதவ்யங்களை எல்லாம் – இப்ப்ரபந்த முகேன அருளி செய்கிறார் –

எம்பெருமானார் திருவடிகளில் ப்ரேமம் உடையவர்களுக்கு சாவித்திரி போலே இது நித்ய அனுசந்தேய விஷயமாக வேணும் -என்று ஆயிற்று
-பாட்டு தோறும் திரு நாமத்தை வைத்து நூற்று எட்டு பாட்டாக அருளி செய்தது -ஆகையால்
இத்தை பிரபன்ன சாவித்திரி என்று ஆயிற்று நம்முதலிகள் அருளி செய்தது-

பத்துப் பாட்டாக அன்றிக்கே- பரக்கக் கொண்டு-ஓன்று பத்தாக்கி பிராட்டி நடத்துமா போலே –

—————————————————————————————————–

பெரிய ஜீயர் அருளி செய்த உரை-

முதல் பாசுரம்-
தம் திரு உள்ளத்தை குறித்து -எம்பெருமானார் உடைய திருவடிகளை நாம் பொருந்தி-
வாழும் படியாக அவருடைய திரு நாமங்களை சொல்லுவோம் வா -என்கிறார்

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறனடி பணிந்து உய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த விராமானுசன் சரணார விந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -1 –

பூ மன்னு மாது
மாது பொருந்திய மார்பன்
மார்பன் புகழ் மலிந்த பா –புகழ் -கல்யாண குணங்கள்
பா மன்னு மாறன்
மாறனடி பணிந்து உய்ந்தவன் –
உய்ந்தவன் -பல்கலையோர்-தாம் மன்ன வந்த விராமானுசன் சரணார விந்தம்-
விராமானுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ –
நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே-

பத்மேஸ்த்திதாம்-ஸ்ரீசூ -என்கிறபடியே தாமரைப் பூவை இருப்பிடமாக வுடைய பெரிய பிராட்டியார்-
இந்த போக்யதையைக் கண்ட பின்பு அதை யுபேஷித்து-இறையும் அகலகில்லேன் – திருவாய் மொழி -6 10-10 – -என்று
நித்ய வாசம் பண்ணும் திரு மார்பை வுடையவனுடைய கல்யாண குணங்களால் சம்ருத்தமாய்-இருந்துள்ள திரு வாய் மொழியிலே –
கவியமுதம் நுகர்ச்சி யுறுமோ முழுதும் -திருவாய் மொழி -8-10 5- -என்னும்படி திரு உள்ளத்தில்-
ஊற்றத்தை உடையரான ஆழ்வார் உடைய திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவித்தவராய் –
அநேக சாஸ்த்ரங்களை அதிகரிக்க செய்தேயும்
-தத்வ ஹித புருஷார்த்த நிர்ணயம் பண்ண-அறியாதே ஒன்றிலும் ஒரு நிலை அற்று இருக்கும் அவர்கள் –
அவற்றின் உடைய யாதாம்ய வேத நத்தாலே ஸூ ப்ரதிஷ்டிதராம்படியாக வந்து அவதரித்த-
எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளை -இதுவே ப்ராப்யம் -என்று அறிந்த நாம்-
பொருந்தி வாழும்படியாக நெஞ்சே அவருடைய திரு நாமங்களை பேசுவோம்-

தாம் மன்ன என்றது தாங்களே வந்து ஆஸ்ரயிக்கும் படி என்றுமாம்-
நாம் -என்றது அநாதி காலம் இதர விஷயங்களின் கால் கடையில் துவண்ட நாம் என்னவுமாம்
மன்னுதல் -பொருந்த்தமும் நிலைப்பாடும் –

—————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –

பிள்ளை அமுதனார் -தமக்கு ஆசார்ய பிரசாதத்தாலே -லப்தமாய் –
மந்திர ரத்ன கண்ட த்வயார்த்த யாதாத்ம்ய ஜ்ஞான ரூபமாய் –
பரம ரகஸ்யமாய் இருந்துள்ள -அர்த்த விசேஷங்களை -ஏகஸ் ஸ்வா து ந புஞ் ஜீத –
என்கிறபடியே கிண்ணத்தில் இழிவார்க்கு -துணை தேட்டமாமாப் போலே –
எம்பெருமானருடைய கல்யாண குண சாகரத்திலே -இழிவதுக்கு துணைத் தேட்டமாய் –
உபய விபூதியிலும் ஆராய்ந்தால் –நித்ய விபூதியில் உள்ள நித்ய சூரிகளும் முக்தரும் -சதா பஸ்யந்தி -என்கிறபடியே –
பரத்வத்தை முற்றூட்டாக அனுபவித்து -சாம கானம் பண்ணிக் கொண்டு களித்து –
நோபஜன ஸ்மரன் நித சரீரம் -என்கிறபடியே -லீலா விபூதியிலே -கண் வையாதே-இருந்தார்கள் ஆகையாலும் –
லீலா விபூதியில் உள்ள சம்சாரி ஜனங்கள் ப்ராக்ர்தத்வேன அஜ்ஞ்ஞர் ஆகையாலே –
நந்தத்த்யுதித ஆதித்ய நந்தன் த்யச்தமி தேரவவ் -என்றும்
உண்டியே உடையே உகந்தோடும் இம் மண்டலம் -என்றும்
சொல்லுகிறபடியே உண்டு உடுத்து -புறமே புறமே யாடி -என்கிறபடி
லீலா விபூதியிலே -ஸௌ ரி சிந்தா விமுகராய் -விஷயாந்தரந்களிலே மண்டி இருக்கையாலும் –
எம்பெருமானார் சம்பந்தம் உடைய ஜ்ஞாநாதிகர் எல்லாரும் -பாலே போல் சீர் -என்கிறபடியே
பரம போக்யமான அவருடைய கல்யாண குணங்களை -அனுபவித்து -காலாழும் நெஞ்சழியும் –
இத்யாதிப் படியே அவ் அனுபவத்தில் ஆழம்கால் பட்டு -குமிழ் நீருண்டு நின்றார்கள் ஆகையாலும் –
இந் நால்வரும் துணை யாகாது ஒழிகை யாலே –
தம்முடைய சுக துக்கங்களுக்கு எப்போதும் பொதுவாய் இருக்கிற தம் மனசே துணையாக வேண்டும் என்று
திரு உள்ளம் பற்றி -அது தன்னையே சம்போதித்து சொல்லுகிறார் .

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் –
பத்மேஸ்திதாம் -என்றும் -மலர் மேல் மங்கை என்றும் -அரவிந்த வாசிநீ-என்றும் சொல்லுகிறபடியே –
ஸௌ கந்த ஸௌ குமார்யங்களாலே -அத்யந்த போக்யமான தாமரைப் பூவின்-பரிமளம் தானே ஒரு வடிவு கொண்டாப் போலே –
அதிலே அவதரித்த பெரிய பிராட்டியார்-ஸ்வயம் பத்மினி -என்கிற பேரை உடையளாய் -அவ்வீட்டின் போக்யதையாலே அத்தை விட மாட்டாதே –
இருப்பிடமாக அதிலே இருந்து -அதுவே நிரூபகமாக சொல்லப் பட்ட பின்பு –
சாஷான் மன்மத மன்மதமான -நாராயணன் தனக்கு பத்நியாக பரிணயித்து பரிஷ்வங்கம் பண்ணவே –
அவன் திரு மார்பை அனுபவித்து -அந்த போக்யதையிலே ஈடு பட்டு நின்ற பின்பு -தாமரைப் பூவின்-போக்யதையும் அருவருத்து –
ஒருக்காலும் அத்தை ஸ்மரியாதே- இறையும் அகலகில்லேன் -என்று-நித்ய வாசம் பண்ணப் படுகிற திருமார்வை உடையனான சர்வேஸ்வரனுடைய –
பூ மன்னு மாது பொருந்திய மார்பன் -என்று விசேஷ்ய பூதனான சர்வேஸ்வரனுடைய-நாம நிர்த்தேசம் பண்ணாதே
-அமுதனார் விசேஷண பூதையான பெரிய பிராட்டியாரை-மாத்ரமே அருளிச் செய்தது
-அகஸ்த்யப்ராதா – என்றால் போலே-மாமான் மகளே போலே – இருக்கிறது காணும் –
அப்படியே இறே ச்ருதி ஸ்ம்ருதிகளிலும் -ச்ரத்தயா தேவோ தேவத்வமச்னுதே -என்றும்
அப்ரமேயஹிதத்தேஜோ யச்யாசாஜன காத்மஜா -என்றும் இவளை இட்டே அவனுடைய-அதிசயம் சொல்லப்படுகிறது –
-பிதுச்சத குண மாதா கௌ ர வேணா த்ரிச்யதே -என்று-பர்த்தாவுக்கு இப்படியே பிரபத்தி வுண்டாக வேண்டி இருக்கும் இறே –

புகழ் மலிந்த-
உயர்வற உயர் நலம் உடையவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி –உபய லிங்க உபய விபூதி விசிஷ்டன்
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை-படர் பொருள் முழுவதும் ஆய் அவை அவை தொறும்
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்-சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரன் –
-நீர் தொறும் பரந்துளன் பரந்த வண்டமிதென -என்றும்-வியாபகத்வம்
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று
நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -என்றும்- காரணத்வம்
உலகமுண்ட பெருவாயா வுலப்பில் கீர்த்தி யம்மானே –என்றும் –
புணரா நின்ற மரம் எழ அன்று எய்த ஒரு வில் வலவாவோ
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ -என்றும்-வீர தீர பராக்ரமம்
நோலாதாற்றேன் உனபாதம் காண வென்று நுண்ணுர்வில்
நீலார் கண்டத்தம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும் -என்றும்
செந்தாமரைக்கண் செங்கனிவாய் நால் தோள் எந்தாய் எனது உயிரே -என்றும்-ஸுந்தர்யம்
முனியே நான்முகனே முக்கண் அப்பா -என்றும்-சர்வ சரீரத்வம்
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர் சோதீயோ –
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ -என்றுதலைக் கட்டுகையாலே
உயர்வற -என்று தொடங்கி-உயர்ந்தே -என்னும் அளவும் -ஆதி மத்திய அவசானங்களிலே-ஒருபடிப்பட்ட கல்யாண குணங்களால் ஏற்பட்ட –

பா –
பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை உள்ளபடி விசததமா வனுபவிக்க வனுபவிக்க-அது உள்ளடங்காமே –
பக்தி பலாத்காரத்தாலே வந்ததானாலும் –
பாதபத்தோஷ ரசமச்தன் த்ரீலய சமன்வித -என்னுமாபோலே- நிர்ஹேதுக பகவத் விஷயீகாரத்தாலே-சர்வ லஷனோபேதமாய்
கவியமுதம் -என்றும்-தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் -என்றும் –
தாமே ஸ்லாக்கிக்கும்படியான திருவாய் மொழியிலே –

மன்னு
சர்வதா நிச்சலராய் இருந்துள்ள-மாறன்
அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன்
குழல் மலிய சொன்ன ஓர் ஆயிரம் இறே –
கர்ப்பம் போலே திருவாய்மொழி மன்னி இருந்ததே –

மாறன்
இது வாய்த்து பிரதம உபாதானமான திரு நாமம் .
விநாசாய சதுஷ்க்ர்தாம் -என்னுமா போலே பாஹ்ய குத்ர்ஷ்டிகளை சிஷித்து-அவர்களுடைய சம்சார நாசகர் ஆனவர் –
மாறன்
அஞ்ஞானத்துக்கு மாரகர்-
அன்றிக்கே
சாஷான் மன்மத மன்மத -என்கிறவனும் பிச்சேறி ஊமத்தங்காய் தின்றவனைப் போலே
மின்னிடை மடவாரில் வ்யாமுக்தனாம் படி பண்ண வல்லதாய் பெண் பிள்ளைத் தனத்தையும் –
ஊனில் வாழ் உயிரிலே ஒரு நீராக கலந்து வ்யாமுக்தனாம்படி பண்ண வல்ல ஜ்ஞாநாதிக்யத்தை-வுடையவர் ஆகையாலே
-மாறன் -என்னவுமாம்-இப்படிப் பட்ட ஆழ்வாருடைய-

அடி
ஆழ்வார் பர்யந்தம் அல்ல இவர் தம்முடைய ச்வாமித்வ அத்யாவசயம்-
ஆக -தமக்கு நிருபாதிக ஸ்வாமி யானவன் -என்னுதல்-
தம்மை வசீகரிக்கைக்கு மூலமானவன் என்னுதல் -இப்படிப் பட்ட திருவடிகளை-

பணிந்து-
ஆஸ்ரயித்து -ஸ்ரீ மத் ததன்க்ரி உகளம் ப்ரணமாமி மூர்த்த்னா -என்று ஆளவந்தார் அருளிச் செய்தது –
அடியிலே இப்படி அருளிச் செய்கையாலே -இப் ப்ரபந்தம் சரம பர்வ நிஷ்டர் விஷயம் என்று தோற்றுகிறது –

உய்ந்தவன் -உஜ்ஜீவித்தவன்
இவருக்கு உஜ்ஜீவனம் அன்ன பாநாதிகளாலே அன்று காணும் .
-ஆழ்வார் தம்முடைய திருவடிகளை-இவருக்கு படியாக விட்டுப் போந்தார் இறே-
அவ் ஆழ்வார் திருவடிகளைப் பணிந்த பின்பு இவர் அவை தன்னையே-அனுபவித்து போந்தார் –
ஆழ்வாருக்கும் இவர்க்கும் கால விப்ரக்ர்ஷ்டமானாலும் –
-முதலிலே ஆழ்வார் நாதமுனிகளுக்கு-உபதேசம் பண்ணும் போது -இவரை த்யானம் பண்ணி
-யஸ்வாப காலே கருணா கரஸ் சந் பவிஷ்யதாசார்யா வர ஸ்யரூபம்
சந்தர் சயாமாச மகானுபாவ தகாரி சூனு சரணம் பிரபத்யே -என்கிறபடியே-
இவருடைய பவிஷ்யதாசார்யா விக்ரகத்தை ஸ்வப்ன முகேன நாதமுனிகளுக்கு கொடுத்திட்ட படியை-அபிமானித்து –
பரகத ச்வீகாரத்தாலே அவருக்கு ஆசார்யர் ஆகையாலே இவரும் அவ் ஆழ்வார் திருவடிகளைப் பற்றி –
அவர் -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் -என்று
அத்யவசித்த பகவத் பிரபாவத்தை -ஸ்ரீ பாஷ்ய முகேன -பெருமையையும் பக்தி மஹாத்ம்யத்தையும் –பிரகாசிப்பித்தது-
-வேங்கடாசல யாதவாசல ஸ்தலங்களை –
குத்ருஷ்டி குஹ நாமுகேனி பதத பர பிரமண சுரக்ரஹா விசஷனே ஜயதி லஷ்மனோயமுனி-என்கிறபடியே
நிர்வகித்து -சகல திவ்ய தேசங்களையும் திருத்தி -இதுவே உஜ்ஜீவனமாய் இருக்கிறவர் -என்றபடி –

பல் கலையோர்-
சகல சாஸ்திர பாரீணரான-கூரேச குருகேச கோவிந்த தாசரதி முதலான முதலிகளும் –பிரத்யவச்தானம் பண்ணி –
பிரசங்கித்த பின்பு -எம்பெருமானார் தம்முடைய விஷயீகாரத்தாலே-
தத்வ ஹித புருஷார்த்த யாதாம்ய ஞானத்தைப் பெற்ற -யாதவ பிரகாச- யஜ்ஜமூர்த்யாதிகளும் –

தாம் மன்ன-
யதாவஸ்த்தித ஞானத்தினாலே சூப்ரதிஷ்டராம் படி -மன்னுதல் -பொருத்தமும் -நிலைப்பாடும்-
வந்த
பரம பதத்தினின்றும் சர்வேஸ்வரன் உடைய நியமனத்தாலே எழுந்து அருளின-
இராமானுசன்
இவர் சக்கரவர்த்தி திரு மகனை அனுசரித்து ஜனித்தார் காணும் –
அவன் -அபயம் சர்வ பூதேப்யோ-ததாம்யே தத் வ்ரதம் மம -என்று சர்வர்க்கும் அபாயப் பிரதானம் பண்ணினாப் போலே -இவரும்
மோஷ உபாயமான மந்த்ரத்தை பூரிதானம் பண்ணினார் இறே -இப்படிப் பட்ட எம்பெருமானார் உடைய –

சரணாரவிந்தம்
அரவிந்தம் என்கிற மன்மத பானம் போலே தம்மை மோஹிப்பித்தவை யாகையாலே –
-சரணங்களுக்கு-அரவிந்தத்தைப் போலியாக சொல்கிறார்
-ஆஸ்ரிதற்கு பாவனத்வ போக்யதைகளாலே -ஏக ரூபமாய் இருக்கையாலே-ஏக வசன பிரயோகம் பண்ணுகிறார்-
மன்னி
ஆஸ்ரயித்து -நிச்சலமாக -த்ரட அத்யாவச்யத்தை பண்ணி நாம் வாழ-
நான் ஒருத்தனுமே ஆஸ்ரயிக்க -என்னுடைய சம்பந்தி சம்பந்திகள் எல்லாம்-உஜ்ஜீவிக்கும்படியாக-
வாழ
ஸ்ரீ மதே ராமானுஜாய நாம -என்றபடி-
நெஞ்சே
ஒரு மகா நிதி லாபத்தால் அந்தரங்கராய் இருப்பார்க்கு சொல்லுவார் லவ்கிகர்-
அப்படியே தனக்கு அந்தரங்கமான மனசை சேவித்து தாம்பெற்ற பேற்றை சொல்லுவதாக சம்போதிக்கிறார்-
சொல்லுவோம் அவன் நாமங்களே
நாம் இருவரும் கூடி அவன் திரு நாமங்களை சொல்லுவோம் –வாசா தர்ம மவாப்நுஹி-என்கிறார் –
ஒரு உக்தி மாத்ரத்திலே பிராப்ய ப்ராபகங்கள் இரண்டும் -தர்ம பூதமான சரணார விந்தத்திலே-
அத்திருநாமம் தானே நம்மைச் சேர்க்கும் -ரச்யமான பதார்த்தம் லபித்தால் – இனியது தனி அருந்தேல் –
அன்யோன்யம்-ரசித்து கொண்டு அனுபவிக்கக் கடவோம் -என்றபடி-

அவன் நாமங்களே –
தேவு மற்று அறியேன் -என்று அநந்ய பரராய் கொண்டு அவருடைய திரு நாமங்களைச் சொல்லுவோம் –
த்ரிவித கரணங்களால் இல்லையாகிலும் -நாம சங்கீர்த்தனம் மாத்ரமே அமையும் –
குரோர் நாம சதா ஜபேத் -என்னக் கடவது இறே –
நெஞ்சே சொல்லுவோம் -என்றது தமக்கு உபகரித்த உபகாரத்தை அனுசந்தித்து சேதன சமாதியாக சொல்லுகிறார் –
நசேத் ராமானுஜேத் ஏஷா சதுரா சதுரஷரீ-காமஹச்தா ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ர்சா -என்றான் இறே ஆழ்வான்-
வேதம் ஒரு நான்கினுள் உள் பொதிந்த மெய்ப் பொருளும் -கோதில் மனு முதல் கூறுவதும் –
தீதில் சரணாகதி தந்த தன் இறைவன் தாளே -அரணாகும் என்னும் அது -என்று-அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்தார் இறே –
பூ மகள் கோன் தென்னரங்கன் பூம் கழற்கு பாதுகமாய்
தாம் மகிழும் செல்வச் சடகோபர் தேமலர்தாட்கு ஏய்ந்து
இனிய பாதுகமாம் எந்தை இராமானுசனை வாய்ந்து எனது
நெஞ்சமே வாழ் -என்று இறே ஜீயரும் அருளிச் செய்தது –

————————————————————————————–

பெரிய ஜீயருரை

என்னுடைய நெஞ்சானது எம்பெருமானாருடைய சீல குணம் ஒழிய-வேறு ஒன்றை நினையாத படி யாயிற்று
–இது எனக்கு சித்தித்த பெரு விரகு ஒன்றும் அறிகிலேன் என்கிறார் –

கள்ளார் பொழில் தென் அரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரான் அடிக்கீழ்
விள்ளாத வன்பன் இராமானுசன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு ஓன்று அறியேன் எனக்குற்ற பேர் இயல்வே – 2-

மது மிக்க பொழிலை உடைத்தாய் -தர்சநீயமாய் இருந்துள்ள கோயிலிலே –கண் வளர்ந்து அருளுகையாலே
-அத தேச சம்பந்தத்தை இட்டுத் தம்மை நிரூபிக்கலாம் படி இருக்கிற –
பெரிய பெருமாளுடைய விகாசாதிகளால் தாமரை போலே போக்யமான திருவடிகளைத் தங்கள் மனசிலே
ஒரு காலும் வையாதே -சாஸ்திர வச்யமான ஜன்மத்திலே பிறந்து வைத்து நிர் பாக்யராய் இருக்கும் அவர்களை விட்டு
அகன்று திருக் குறையலூரை திரு அவதார ஸ்தலமாக உடையவராய்-
-திவ்ய பிரபந்த நிர்மாண முகத்தாலே லோக உபகரகாரகரான திரு மங்கை ஆழ்வாரை உடைய-
திருவடிகளின் கீழ் விண்டு நீங்காத சிநேகத்தை உடையராய் இருந்துள்ள-
எம்பெருமானார் உடைய நிரவதிகமான சீல குணத்தை ஒழிய என்னுடைய நெஞ்சானது-வேறு ஒன்றையும் சிந்திக்கிறது இல்லை –
விள்ளுதல்-நீங்குதல்
இயல்வு -விரகு

——————————-

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை

அவதாரிகை-
கீழில் பாட்டில் -நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -என்று தம்முடைய மனசோடு கூடி உபதேசித்த வாறே
மனசானது அவனுடைய சீல குணத்திலே ஆழம் கால் பட்டு -அநந்ய சிந்தயந்தோமாம் -என்கிறபடியே-
அவர் திருவடிகளை அனுபவித்துக் கொண்டு -தத் வ்யதிரிக்தமானவற்றை விரும்பாதே இருந்தது –இது என்ன ஆச்சர்யம் -என்கிறார் .
திருமங்கை ஆழ்வார் அடிக் கீழ் மாறாத காதல் இன்றும் ஸ்ரீ ராமானுஜர் திரு உருவம் –
திருநகரியில் திருமங்கை ஆழ்வார் திருவடியில் சேவை உண்டே –

வியாக்யானம்-
கள்ளார் பொழில் –
மது இருந்து ஒழுகின மா மலர் எல்லாம் -கொழும் கொடி முல்லையின் கொழு மலர் அணவிக் கூர்ந்தது –
குணதிசை மாருதும் இதுவோ -எழுந்தன மலர் அணைப் பள்ளி கொண்ட அன்னம் ஈர் பனி நனைந்த –
தமிரும் சிறகு உதறி -பைம்பொழில் கமுகின் மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற வைகறை கூர்ந்தது
மாருதம் இதுவோ -என்றும்-
வான் திகழும் சோலை மதிள் அரங்கர் -என்றும்
பூகி கண்ட த்வய சசரசஸ் நிக்த நிரோபகண்ட ஆவிர் மோதாஸ் திமிதச குநா நுதி தப்ரம்மகோஷாம்-என்றும்-சொல்லுகிறபடி –
மதுச்யந்தியான புஷ்ப விசெஷங்களால் வ்யாப்தங்களான உத்யானங்களாலே சூழப்பட்ட-
தென்னரங்கன் –
அத்தாலே தர்சநீயமான திருவரங்கமே தனக்கு நிரூபகமாம்படி நித்ய வாசம் பண்ணுகிற ஸ்வாமி உடைய-திருப்பதி – என்றபடி –
இவ்விடத்துக்கு இது முக்யமான திரு நாமம் -காணும் –
கமலப்பதங்கள் –
கமலப்பதம் -தீர்த்த வாசகமாய் -பாவனமான -என்னுதல்-
சம்சார தாபதப்தனுடைய ஸ்ரமஹரமான -என்னுதல் –
பாத கமலம் -என்னாதே- முந்துற முன்னம் கமலம் என்றது -சர்வேஸ்வரன் திருவடிகளை சேவிக்கும் போது
பாவநத்வாதிகளுக்கு முன்பே போக்யதையைக் கண்டு முற்றூட்டாக அனுபவித்தவர் ஆகையாலே –
நெஞ்சில் கொள்ளா மனிசரை –
விசித்ரா தேக சம்பந்தி ரீச்வராய நிவேதிதும் பூர்வமே வக்ர்தா பிரம்மன் ஹஸ்த பாதாதி சாயுதா -என்கிறபடியே-
அலாப்யலாபமாக பகவச் சரண கமல பரச் சரணத்திற்கு இட்டு பிறந்த மனுஷ்ய தேகத்தை பெற்றும் –
திருவடிகளை நெஞ்சில் கொள்ளாதே இருக்கிற -கர்ப்ப நிர்பாக்யர் கோஷ்டியில் -நின்றும்-
நீங்கி
அகன்று – சர்வரும் ஸ்லாகிக்கும்படி -பாஹ்ய குத்ருஷ்டிகளை பராஜிதமாக பண்ணுவித்து குறையல் பிரான் –
திருக் குறையலூரில் அவதரித்து -திவ்ய பிரபந்த நிர்மாணத்தாலும் –
-திரு அத்யயனத்துக்கு-ஏகாதசியிலே திரு நாள் நடப்பித்த படியாலும் –
அவ்விடத்திலே பெருமாளுக்கு அரணாக திரு மதிளை-நிர்மாணம் பண்ணி வைத்த படியாலும்
-ருத்ர பஷபாதிகளான குத்ருஷ்டிகளுடன் தர்க்கித்து அவர்களை ஜெயித்து –
அவர்களாலே பழிக்கப் பட்ட திவ்ய தேசங்களை நிர்வஹித்த படியாலும் -இப்படிகளாலே-உபகாரகரான திரு மங்கை ஆழ்வார் உடைய –

இவ்விடத்திலே இன்னும் ஒரு யோஜனையும் உண்டு –
குறையல் பிரான் -குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -என்கிறபடியே ஹேய பிரத்யநீகனான கோவிந்தன் –
கோவர்த்தநோதாரணம்இந்திரன் கோவிந்த பட்டாபிஷேகம் பண்ணினவாறே பண்ணின போது –
கோப கோபி ஜனங்களை ரஷித்த உபகாரகன் -அந்த அவதாரத்திலே பூதனா சகட யமளார்ஜுன வரிஷ்ட
ப்ரலம்ப தேனுக காளிய கேசி குவலயாபீட சாணூர கம்சாதிகளை நிரசித்து -ஸ்வ ஆஸ்ரிதர்களான
பாண்டவர்களுக்கு தூத்ய சாரத்யங்களை பண்ணி -தத்வ உபதேசம் பண்ணியும் பண்ணியும் -இப்படி
நிகில மனுஜ மநோ நயன ஹாரி திவ்ய சேஷ்டிதங்களை பண்ணின உபகாரகன் –
இதில் சரம ஸ்லோகத்தை உபதேசிக்கை உபகாரங்களில் பிரதானம் –
இப்படி ஒரு அர்த்த விசேஷம் தோன்றினாலும் நம் ஆசார்யர்கள் திரு மங்கை மன்னன் விஷயமாக
அருளிச் செய்கையாலே -பேசிற்றே பேசுகையே அவர்களுக்கு ஏற்றம் என்று முதல் சொன்ன-பொருளே சங்கதமாக கடவது –
அடிக்கீழ்
திரு மங்கை ஆழ்வார் உடைய திருவடிகளின் கீழே –
விள்ளாத அன்பன் –
இவ் ஆழ்வார் பிரதம பர்வ நிஷ்டர் ஆகையாலே -அணி பொழில் திருவரங்கத்து அம்மானை பிரார்த்தித்துக் கொண்டே- இருப்பர் –
இவ் எம்பெருமானார் சரம பர்வத்தில் ஊற்றமுடையவர் ஆகையாலே அவ் ஆழ்வாருடை திருவடிகளிலே –
ஒருக்காலும் விடாதே சக்தமான பக்தியை உடையராய் இருப்பர் .
விள்ளுதல் -நீங்குதல் -அன்பு -பக்தி –
இராமானுசன் –
பூர்வ அவதாரத்திலே ராம அனுவர்த்தனம் பண்ணின வாசனை இப்போதும் அநுவர்த்திக்கையாலே-
இதுக்கு சரம பர்வமான இதிலே ஈடுபட்டார் காணும் –
மிக்க சீலமல்லால் –
தாம் மகானுபவராய் இருந்து வைத்தும் -என் போலாம் மந்த மதிகளோடே -புரையறக் கலந்து-
பரிமாறின சீல குணம் ஒன்றிலே ஈடுபட்டு -அது ஒழிய வேறு ஒன்றிலும் போக மாட்டாது-
உள்ளுதல் -சிந்தித்தல்
என் நெஞ்சு-
என் மனசு -என்னாலே உபதேசிக்கப் பட்ட நெஞ்சு-
ஓன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே-
என்ன ஆசார்யம்-இப்படி ப்ரவணனாய் ஆகுகைக்கு விரகு ஒன்றும் அறிகிலேன்
எனக்கு –
பகு ஜன்மங்கள் தன்னில் தபோ ஜ்ஞான சமாதிகளை பண்ண வேண்டி இருக்க -அங்கன் இன்றிக்கே-
சொல்லுவோம் அவன் நாமங்களே -என்று அத்யாவாஸ்யம் மாத்ரம் பண்ணின படி -எனக்கு –
பகவத் பிரசாதம் -கர்மா ஞான ஸ்தானங்களில் ஆழ்வாருக்கு -இவருக்கு ராமானுஜர் நாமமே -என்றவாறு –
உற்ற -சித்தித்த
பேர் இயல்வே -சமஸ்த உபாயங்களை காட்டிலும் -பெரியதாய் விலஷணமான உபாய விசேஷம் –ஓன்று அறியேன் –
எத்தாலே இந்த சொல் சேர்த்தி லபித்தது –நான் ஒன்றும் அறிகிலேன் –
முந்துற்ற நெஞ்சே -நீ அறிந்தே ஆகில் சொல்லிக் காண்-
நிர்ஹேதுகமாக சித்தித்த ஒன்றாய் ஆய்த்து-இயல்வே -விரகு –

——————————————————————————————————

ஏழாம் பாட்டு –
பெரிய ஜீயர் உரை –
அவதாரிகை –
இப்படி தம்முடைய அயோக்யதையை பார்த்து -நமக்கு இது துச்சகம் -என்று மீள நினைத்தவர் –
ஆழ்வான் திருவடிகளில் சம்பந்தமுண்டான பின்பு எனக்கு அசக்ய அம்சம் ஒன்றும் இல்லை -என்று-ஸ்தோத்ரத்திலே பிரவ்ருத்தர் ஆகிறார் –

மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம் கூரத் ஆழ்வான் சரண் கூடிய பின்
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி அல்லா
வழியைக் கடத்தல் எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே -7-

பேச்சுக்கு நிலம் இல்லாத பெரிய புகழை உடையராய் -ஆத்ம அபஹாரத்தை விளைப்பதாய் —
தனித் தனியே பிரபலமாய்க் கொண்டு மூலை அடியே நடத்துவதான –
அபிஜன / வித்யா / வ்ருத்தங்கள்-ஆகிற படு குழியைக் கடந்து இருப்பாராய்-
நமக்கு நாதரான கூரத் ஆழ்வான் உடைய திருவடிகளை ஆஸ்ரயித்த பின்பு-
பழி போலே அவஸ்யம் அனுபோக்த்யமான பாப கர்மங்களிலே மக்னர் ஆகாதபடி-
நிஸ்தரிப்பிக்கும் எம்பெருமானார் உடைய திவ்ய குணங்களை ப்ரீதி ப்ரேரிரிதராய் கொண்டு-பாடி
ஸ்வரூபம் அனுரூபம் இல்லாத மார்க்கங்களை தப்புகையாலே எனக்கு இனி ஒன்றும்-அருமை இல்லை –
குழியைக் கடத்தும் -என்று பாடம் ஆன போது தம்முடைய அபிமான அந்தர்பூதரையும்-இப் படு குழியில் விழாமல் கடத்தும் அவர் -என்கை –
எம் கூரத் ஆழ்வான் -என்றும் பாடம் சொல்லுவார்கள்-

———————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–
அவதாரிகை -கீழ்ப் பாட்டிலே-ஆறாம் பாட்டில் – ஞான பக்த்யாத்யா அனுபவ ரூபமான தம்முடைய அயோக்யதையை-
நினைத்து பிரபந்த ஆரம்பத்திலே பிற்காலித்து-இப்பாட்டிலே
ஆழ்வான் திருவடிகளின் சம்பந்தம் ஆகிய ராஜ குல மகாத்ம்யத்தை அனுசந்தித்து –
இப் பிரபந்த உத்யோகம் கடினம் அல்ல — சுலபமாயே யாய் இருக்கும் என்று-அதிலே ஒருப்படுகிறார் .
வியாக்யானம் –
மொழியைக் கடக்கும் பெரும் புகழான் –
-ஒரு சப்தத்தை இட்டு வர்ணிக்க அரியதாய் -நித்ய அபிவ்ர்த்யங்களாய்-கொண்டு –
-பரம பதத்தளவும் பெருகி வருகிற கல்யாண குணங்களை உடையவன் –வாசா மகோசரம் –
ஆச்சார்ய லக்ஷண பூர்த்தியையும் சிஷ்ய லக்ஷண பூர்த்தியையும் பூர்ணமாகக் கொண்டவர் அன்றோ –
வஞ்ச முக்குறும்பாம் -வஞ்சக ஹேதுக்களாய்-ததீய விஷயத்திலே ஸ்வ சாம்ய புத்திகளையும்
ஸ்வ ஸ்மின் ஆதிக்ய புத்திகளையும் பிறப்பித்து -ஸ்வரூப நாசங்களாய் இருந்துள்ள –
அபிஜன வித்யா வ்ர்த்தங்கள் ஆகிற அஹங்கார த்ரயமும் -ஜகத் பிரதாரகங்களான இம் மூன்றும் ஆகிற-
குழியை கடத்தும் -தம்முடைய அபிமான அந்தர் பூதரை அந்த படு குழியில் விழாதபடி தம்முடைய-உபதேசத்தாலே –
தத்வ ஹித புருஷார்த்த யாதாம்ய ஞானத்தை பிறப்பித்து -அதில் நின்றும்-கடத்துமவன் -கடத்துகை -தாண்டுவிக்கை –
குழியைக் கடக்கும் -என்று பாடமான போது -இம் மூன்றுமாகிய படு குழியை கடந்து இருக்குமவர்-என்றபடி –
நம் கூரத் ஆழ்வான் -நம்முடைய கூரத் ஆழ்வான் -இவரை உத்தரிப்பிக்கைக்கு காணும்-அவருடைய அவதாரம் –
ஆகையால் இறே நம் கூரத் ஆழ்வான் என்கிறார் .கூரம் என்னும் திவ்ய தேசத்துக்கு
நிர்வாஹரான ஸ்வாமி உடைய திரு நாமத்தை வஹித்தவர் -எம் கூரத் ஆழ்வான் -என்றும் பாடம் சொல்லுவார்கள்-
சரண் கூடிய பின் –
இப்படிப் பட்ட வைபவத்தை உடையரான -ஆழ்வான் உடைய திருவடிகளை –
ஆஸ்ரயித்த பின்பு -இப்படிப் பட்ட ராஜ குல மகாத்ம்யத்தை நான் பெற்ற பின்பு –
பழியை கடத்தும்
-இவ்வளவாக நான் மூலை யடியே நடந்து போகையாலே வந்தேறியாய் –
லோக கர்ஹிதமாய் -தம்முடைய குண கீர்த்தனம் பண்ணுகைக்கு விரோதியான என்னுடைய-
பாபத்தை சவாசனமாக நிவர்திப்பிக்கீம்
-இராமானுசன் –
எம்பெருமானார் உடைய –புகழ் பாடி –
-ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனிவன்-தமிழ் மறைகள் ஆயிரமும் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் -இராமானுசன்-
என்னும்படியான-அவருடைய கல்யாண குணங்களை -இப் ப்ரபந்தம் முகேன கீர்த்தனம் பண்ணி –
அல்லா வழியை கடத்தல் –
என்னுடைய அபத ப்ரவர்தியை தப்புகை – அன்றிக்கே -கர்ப்ப-யாம்ய தூமாதிகளை ஆக்ரமிக்கையால் என்னுதல் –
எம்பெருமானார் உடைய திருவடிகளைக் கிட்டி அனுபவிக்கையில் -என்றபடி –
எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே –
-எனக்கு இனி -இப்படி எம்பெருமானார் உடைய-கைங்கர்யத்தில் அதி கரித்து க்ர்தார்த்தனான எனக்கு –
-இத்தனை நாளும் சில உபத்ரவம்-உண்டாய் இருந்தாலும் -இன்று முதலாக மேலுள்ள காலம் எல்லாம்-
யாதும் -எந்த விஷயத்திலே யாகிலும் /வருத்தம் அன்றே -அசாத்தியமானது இல்லை-
அல்லா வழியை என்று -அம் மார்க்கங்கள் அதி ஹேயங்கள் ஆகையாலே -திருப் பவளத்தாலே-இன்னது என்று நிர்தேசிக்க அருவருத்து –
-சாமான்யேன அருளிச் செய்கிறார் .
அல்லா வழியை கடத்தல் எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே –
சகல பாப விமோஷன பூர்வகமான பரம பதத்தை பெருகையிலும் இவருக்கு ஒரு-கண் அழிவு இன்றிக்கே
அத்யந்த சுலபமாய் காணுமிருப்பது –
வைகுந்த மா நகர் மற்றது கையதுவே -என்னக் கடவது இறே –

—————————————————————————————–

பெரிய ஜீயர் அருளிய உரை
-அவதாரிகை-
இப்படி ஸ்வ லாப அனுசந்தானத்தாலே ஹ்ருஷ்டரானவர் -எல்லாரும் தம்மைப் போலே-
தத் விஷய பிரவணர் ஆகைக்கு உறுப்பாக -பகவத் வல்லபையான ஆண்டாள் உடைய-
ப்ரஸாத பாத்ரமான எம்பெருமானார் லோகத்துக்கு செய்த உபகாரத்தை அருளி செய்கிறார் –

தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே
யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே – -16 –

பெரிய பெருமாள் உடைய திருமுடியை -சூழா நின்று உள்ள திரு மாலையை -தன்னுடைய திருக் குழலிலே சூடி-
வாஸிதம் ஆக்கிக் கொடுத்த வைபவத்தை உடையளான ஆண்டாள் உடைய ஸ்வாபாவிகமான கிருபையையே-
விளை நீராக வாழா நிற்பவராய் –பரம ஒவ்தாரராய் -முனி ஸ்ரேஷ்டரான -எம்பெருமானார் –
நித்யத்வ -அபௌருஷேயத்வ -பிரயுக்தமாய் -பிரத்யஷாதி பிரமாண விலஷணமாய் -யதாபூதவாதயாய் –
இருக்கையாலே -ஸ்வ பிரமாண்யத்தில் -ஒரு குறை வற்று இருக்கிற வேதமானது
-பாஹ்ய குத்ருஷ்டிகளாலே –அபிபூதமாய் கொண்டு -இழிவு பட்டு -தீப சங்கோசத்திலே திமிர வ்யாப்தி போலே பூமி எங்கும் கலி யுகமானது-
தனிக்கோல் செலுத்துகிற காலத்திலே-அபேஷா நிரபேஷமாய் வந்து -அந்த வேதத்தை உத்தரிப்பித்து –லோகத்தை ரஷித்து அருளினவர் காணும் கோள்–
ஆதலால் நீங்களும் என்னைப் போலே அவரை அல்லாது-அறியோம் என்று இருக்கை அன்றோ அடுப்பது என்று கருத்து –

என்றும் -பாட பேதம் –

————————————————-

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –
கீழ்ப் பாட்டிலே பெரியாழ்வார் சம்பந்தத்தை இட்டு எம்பெருமானாரைக் கொண்டாடி –
இப்பாட்டிலே -அந்த ஆழ்வாருடைய பெண் பிள்ளையான ஆண்டாளுடைய ஸ்வபாவிக கிருபையாலே
வாழ்ந்து கொண்டு -பரமோதார ஸ்வபாவராய்-அத்தாலே எல்லார்க்கும் பரம பதத்தை கொடுக்கைக்கு
மனனம் பண்ணிக் கொண்டு போருகிற எம்பெருமானார்
-வேத மார்க்கம் எல்லாம் அழிந்து -பூ மண்டலம்-எங்கும் ஒக்க -வியாபித்து காலியானது -சாம்ராஜ்யம் பண்ணுகிற காலத்தில்
-விண்ணின் தலை நின்றும் –மண்ணின் தலத்து உதித்து -எல்லாரையும் ரஷித்து அருளின நல்லன்பர் என்று சர்வரும் தம்மைப் போலே
தத் விஷய ப்ரவணர் ஆகைக்கு உடலாக அவர் செய்து அருளின உபகாரத்தை அருளிச் செய்கிறார் –

வியாக்யானம் –
அரங்கர் மௌலி
-கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் தானே-
ஸ்ரீ வில்லி புத்தூரிலே வட பெரும் கோவில் உடையான் என்னும் திரு நாமத்தை உடையராய் கொண்டு
கண் வளர்ந்து அருளுகையாலே -அவரை -அரங்கர் -என்று அருளிச் செய்கிறார் -அப்படி பட்ட ஸ்வாமி உடைய-உத்தமாங்கத்துக்கு –
சூழ்கின்ற மாலையை –
அலங்கரிக்கத் தக்க புஷ்ப மாலையை -சூடிக் கொடுத்தவள்-முந்துற முன்னம்-
தாழ் குழலாள்-என்னும்படியான தன்னுடைய திருக் குழலிலே அலங்கரித்துக் கொண்டு -அது தன்னை களைந்து
ஸ்வாமிக்கு சமர்ப்பிக்கும்படி கொடுத்தவள் -இப்படி யாகையாலே இவளுக்கு -சூடிக் கொடுத்தவள் -என்று அதுவே நிரூபகமாய்
ஆய்த்து -சூடிக் கொடுத்த சுடர் கொடியே -என்னக் கடவது இறே –
தொல் அருளால்
-உததி பரம வ்யேம் நோர்க்கவிஸ் ம்ர்த்யமாதர்ச ரேஷன ஷமமிதிதி யாபூயஸ் ஸ்ரீ ரங்க தாமனி மோதசே –என்றும்
-அனுக்ரஹா மயீம் வந்தே நித்ய அஞ்ஞான நிக்ரஹம் -என்றும் சொல்லுகிறபடி-இயற்கையான அருள் என்றவாறு –
அகில ஜகன் மாத்ர்த்வத்தால் வந்த குடல் துடக்கை உடைத்தான -அவளுடைய ஸ்வபாவிகமான கிருபையாலே –
வாழ்கின்ற –
அவளுடைய கிருபையிலே காணும் இவருடைய வாழ்வு எல்லாம் -எம்பெருமானார் சரணா கதி பண்ணும் போது –
ஸ்ரீ ரெங்க நாயகியார் உடைய சந்நிதியிலே -அழகிய மணவாளன் சேர்த்தி கொடுத்து இருக்க செய்தே –
பகவன் நாராயண அபிமத அநு ரூப -என்று தொடங்கி முந்துற முன்னம் அவள் திருவடிகளில் பிரபத்தி பண்ணிற்று-பிரசித்தம் இறே
-வள்ளல்-
இப்படி அவள் முன்னிலையாக அவன் திருவடிகளில் பிரபத்தி பண்ணி தாம் பெற்ற பலத்தை-இந்த லோகத்தில் எல்லாருக்கும் கொடுத்த பரமோதாரன் –
காலத்ர யேபி கரண த்ரய நிர்மிதாதி பாபக்ரியச்ய சரணம் பகவத் ஷமைவ –
சரஸ்த்வைகமலா ரமேனேர்த்திதா யத்ஷேமஸ் யேவஹீயதேந்திர பவத்ச்ரிதானாம்-என்று இந்த சௌந்தர்யத்தை –ஜீயரும் அருளிச் செய்தார் இறே –
என்றும் மா முனி –
-இப்படி பரமோதாரர் ஆகையாலே சர்வ காலத்திலும் ஸ்வ ஆஸ்ரித-ரஷனத்தில் தானே மனனம் பண்ணிக் கொண்டு இருக்கிற
-இராமானுசன் –
எம்பெருமானார் –
தாழ்வு ஒன்றும் இல்லா மறை
-வேதத்துக்கு தாழ்வு ஒன்றும் இல்லாமையாவது –
ப்ரமப்ரமாத விப்ரலம்பாதி தர்ம விசிஷ்டத்வம் புருஷ ப்ரநீதத்வம் -ஸ்வ ப்ராமான்யே அந்ய சாபேஷத்வம்-
அநித்யத்வம் -தொடக்கமான வற்றில் ஓன்று இன்றிக்கே -யதா பூதவாதியாய் -அபௌருஷேயமாய்-நித்யமுமாய் இருக்கை-
மறை தாழ்ந்து
-இப்படிப் பட்ட வேதமானது -ஈர்ஷ்யாடம்பரான பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆதல் –கலி தோஷத்தாலே யாதல் -அபிபூதமாய்க் கொண்டு இழிவு பட்டு
-கலி யுகமானது வேதத்தை-சங்கோசிப்பித்து அழித்தபடி
-ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் ஸ்ரீ மத் பாகவதத்திலும் விஸ்த்ரென-உபபாதிக்கப் பட்டது இறே –
கலவ் ஜகத்பதிம் விஷ்ணும் சர்வஸ்ரஷ்டாரமீச்வரம் -நார்ச்சயிஷ்யந்தி
மைத்ரேய பாஷண்டோ பகதாஜன -என்றும் -அந்தஸ் சக்தாம் -பஹிஸ் சைவம் சபரமேத்யதுவைஷ்ணவம்
கலவ் கஷ்டா ப்ரவர்த்தந்தே வர்ணாஸ்ரம ஜனாமுனே கலவ் கார்த்த யுக தர்மம் கர்த்தும் இச்சதி யோ நர
ச்வாமித்ரேர் ஹீதிதம் மத்வா தஸ்மை பிரத்விஷதே கலி -என்றும் சொல்லுகிறபடி
-நிஷித்த-மார்க்கத்தை நடப்பித்துக் கொண்டு -போருகிற கலி தோஷத்தாலே -வேத மார்க்கமானது மூலையடியே நடந்து –
தல முழுதும் கலியே ஆள்கின்ற நாள் –
தீப சங்கோசத்தில் -திமிரவ்யாப்தி போலே -இருள் தரும் மா ஞாலமான-பூமிக்கு -கலி யுகமானது தனிக் கோல் செல்லும்படி
-சாம்ராஜ்யம் பண்ணுகிற காலத்தில் –தேச காலங்கள் சமீசீநங்களானால் திருத்தி ரஷிக்கலாம்–
அப்படி இன்றிக்கே தேசமோ அநேக பூயிஷ்டமானது –காலமோ தத் வசருக்கு வர்த்தகமானது –
வந்து
-இப்படி அதி க்ரூரங்களான தேச காலங்களிலே பரம பதத்தில்-நின்றும் இந்த விபூதியிலே -ஸ்ரீ பெரும் புதூரிலே அவதரித்து
அருளி -அளித்தவன் காண்மின் –
உத்தரிப்பித்து இந்த-லோகத்தை ரசித்தவர் காணும் கோள்-எல்லாரும் இவரை ரஷகர் என்று தெளிந்து -ஆஸ்ரயித்து உஜ்ஜீவியும் கோள்-என்று கருத்து –
கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்னக் கடவது இறே –

——————————————————————————————————————

பெரிய ஜீயர் அருளிய உரை –
பதினெட்டாம் பாட்டு-அவதாரிகை-
நம் ஆழ்வாரைத் திரு உள்ளத்திலே வைக்க அநுரூப வைபவரான ஸ்ரீ மதுர கவி ஆழ்வார்
குணங்களை சகல ஆத்மாக்களும் உஜ்ஜீவிக்கைக்காக உபகரிக்கும் எம்பெருமானார்-எனக்கு ஆன துணை -என்கிறார் –

எய்தற்குஅரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தை யுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறு துணையே – 18- –

துஷ் ப்ராபங்களான வேதங்களை –
பிரவணம் போலே சுருங்கி இருத்தல்-
வேதம் போலே பரந்து இருத்தல் -செய்கை அன்றிக்கே -ஆயிரம் பாட்டாகவும்-அது தான் சாரமாகவும்
ஸ்திரீ பாலர்களுக்கும் கற்கலாம் படி யான பாஷையிலே செய்து அருளுகைக்கு லோகத்திலே வந்து-அவதரித்து அருளினவராய் –
பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிய சடர்க்கு பிரதிபடராய் இருக்கையாலே –சடகோபர் -என்னும் திரு நாமத்தை உடையவரான ஆழ்வாரை –
தம் திரு உள்ளத்திலே வைக்கைக்கு-தகுதியாய் இருந்துள்ள -பிரபாவத்தை உடையரான ஸ்ரீ மதுர கவிகள் உடைய -ஜ்ஞாநாதி குணங்களை-
சகல ஆத்மாக்கள் உடையவும் உஜ்ஜீவன அர்த்தமாக உபகரித்து அருளா நிற்கும் -எம்பெருமானார் –எனக்கு சீரிய துணை
அதவா
சடகோபனை சிந்தை உள்ளே பெய்தற்கு இசையும் பெரியவர் -என்று-
ஆழ்வாரை அல்லது அறியோம் என்று இருக்கும் அவர் எல்லோரையும் சொல்லவுமாம்-

—————————————-

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –
கீழில் பாட்டுக்களில் பிரதி பாதிக்கப் பட்ட ஆழ்வார்களில் வைத்துக் கொண்டு –பிரதாநராய் -சர்வாதிகார்ரராம் படி –
திருவாய்மொழி என்கிற பிரபந்தத்தை அருளிச் செய்கைக்காக-அவதரித்து அருளின நம் ஆழ்வாருக்கு —
அனந்யார்ஹரான ஸ்ரீ மதுரகவி ஆழ்வாருடைய -கல்யாண குணங்களை-சகல ஆத்மாக்களும் உஜ்ஜீவிக்கைக்காக –
உபகரித்து அருளின எம்பெருமானார் -எனக்கு சகாயம் என்கிறார் .
ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் மதுரகவி ஆழ்வார் எதிராசராம் இவர்கள் வாழ்வாக வந்து உதித்த மாதங்கள் நாள்கள்
தம்மின் வாசியையும் இந்த உலகோர்க்கு உரைப்போம் நாம் -சரம பர்வ நிஷ்டர்கள் மூவரும் –

வியாக்யானம் –
எய்தற்கு அரிய மறைகளை –
அநந்தாவை வேதா – என்கிறபடி ஒரு சங்கையை இட்டு –சொல்லப் போகாத படி ஒரு அபரிமிதங்களாய்
-சர்வோப ஜீவியங்கள் ஆகாதே -அதிக்ர்த்தாதிகாரங்களாய்-அந்யோப மரத்தக வாக்யங்களாலே –
-ஸ்வார்த்தத்தை தெளியும் போது -எத்தனையேனும் அதிசய-ஞானர் ஆனவர்களுக்கும் அருமைபடுத்த கடவதான சம்ஸ்க்ருத வேதங்களை –
ஆயிரம் இன் தமிழால் –
வரணாதி நியதி இன்றிக்கே -ருசி பிறந்தவர்கள் எல்லாரும் அதிகரிக்கும் படியாய் –
ஆயிரம் என்ற ஒரு சங்கையுடன் கூடி இருப்பதாய் -உயர்வற உயர்நலம் -என்று தொடங்கி -உயர்ந்தே -என்னும் அளவும் –
ஆதி மத்திய அவசானங்களிலே -பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் -சேதன அசேதன ரூப ச்வபாவங்களையும் –
சேதனருடைய சம்சார பந்த ஹேதுக்களையும் -தந் நிவர்தன உபாயமான தத் விஷய ப்ரீதி ரூபாபன்ன ஞானத்தையும் –
ஜகத் காரண வஸ்து நாராயணனே என்று -தேவதா வஸ்து விசேஷ நிர்த்தாரணத்தையும் -அவனுடைய சமஸ்த கல்யாண குணாத் மகத்வத்தையும்
-அநந்த கருட விஷ்வக் சேநாதி திவ்ய சூரி பரிசர்யமான நளினனாய்க் கொண்டு நின்ற படியையும் –
தாம் அனுபவித்த படியே எல்லாரையும் அனுபவிப்பைக்காக -தம்முடைய நிர்ஹேதுக பரம கிருபையாலே –
லவ்கிகரைக் குறித்து உபதேசித்த படியையும் -தம்முடைய அபிநிவேசம் எல்லாம் தீரும்படி அவனை ப்ராபித்த படியையும்
-விசதமாக பிரதிபாதிப்பதாய் -ஸ்வா ர்த்தத்தை எல்லாம் சூஸ்பஷ்டமாகவும் ஸூக்ரஹமாகவும் தெரிவிக்குமதாய் –
அத ஏவ அத்யந்த சுலபமாய் -பக்தாம்ர்தம் -தொண்டர்க்கு அமுதுண்ண சொல் மாலைகள் –என்னும்படி –
அநு போக்தாக்களுக்கு அத்யந்தம் போக்யமாய் -நடை விளங்கு தமிழான -த்ரமிட-பாஷையாலே -திருவாய் மொழி என்கிற பிரபந்த ரூபேண
-செய்தற்கு
-அவதரிப்பிப்பதர்க்கு –ஆவிர்பாவத்தை பண்ணுவதற்கு -என்றபடி –
உலகில் –
அசுத்தாஸ் தேசமஸ்தாஸ்து தேவாத்யாம-கர்ம யோநயா ஆவிரிஞ்சாதி மங்களம் – என்றும்
-இருள் தரும் மா ஞாலம் -என்றும் –
கர்ம ஜன்மாத்யவஸ்தாச-துக்கமத்யந்த துச்சகம் -ந கிஞ்சித் கணயன் நித்யம் சராமீந்த்ரிய கோசர -என்றும் –
சொல்லப்படுகிற-இந்த லீலா விபூதியிலே -வரும் சடகோபனை –
வரும்
என்ற வர்த்தமான நிர்தேசத்துக்கு –அவருடைய திவ்ய-மங்கள விக்ரகம் -சமஸ்த திவ்ய தேசங்களிலும்
சமஸ்த பிரபன்ன ஜனங்களுடைய திரு மாளிகைகளிலும் –நவம் நவமாய்க் கொண்டு ஆராத்யமாகையும் -அவருடைய திவ்ய சூக்திகள்
-இந்த லோகத்தில் இவ்வளவும்-இன்னும் உள்ள காலத்திலும் நடை யாடிப் போருகையும் பொருளாகக் கடவது
-சடகோபனை –
சடராவார் –ஸ்வரூப ஞானம் இல்லாத சம்சாரிகள் -அவர்களைக் குறித்து -ஒரு நாயகத்திலும் -நண்ணாதார் முறுவலிலும் –பருஷம் பண்ணினவனை
-பாஹ்ய குத்ர்ஷ்டிகள் ஆகிற சடர்க்கு பிரதிபடர் ஆனாரை -என்னுதல் .-இப்படிப்பட்ட நம் ஆழ்வாரை
-சிந்தை உள்ளே
-தம்முடைய திரு உள்ளத்திலே -பெய்தற்கு -தமக்கு பர தேவதையாய்-ஆராத்யராய் இருக்கும்படி வைக்கைக்கு
-இசையும்-
வுபயுக்தமான பிரபாவத்தை உடைய -மேவினேன் அவன் பொன்னடி-மெய்ம்மையே தேவு மற்றறியேன் -என்றும்
-மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் –என்றும் -இறே இவர் தாம் அருளிச் செய்த படி –
பெரியவர்
-உண்ட போது ஒரு வார்த்தையும் உண்ணாத போது ஒரு வார்த்தையும் சொல்லுவார்-
பத்துப் பேர் உண்டு இறே -அவர்கள் பாசுரம் கொண்டு அன்று இவ்வர்த்தம் அறுதி இடக் கடவது –
அவர்களைச் சிரித்து இருப்பார் ஒருவர் உண்டு இறே -அவர் பாசுரம் கொண்டு இவ் வர்த்தம் அறுதிஇடக் கடவோம் -என்று
ஸ்ரீ வசன பூஷணத்தில் சொல்லுகிறபடியே-
யஸ்மாத் ததுபதேஷ்டா ஸௌ-தஸ்மாத் குருதரோ குரு – அரச்ச நீயச்ய சவந்த்யஸ்ச -இத்யாதி சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்ட
சரம பர்வ-நிஷ்டராயும் -தத் ப்ரவர்த்தகராயும் -இருக்கை யாகிற மகா பிரபாவத்தை உடையவர் ஆகையாலே
சர்வாதிகரான ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் உடைய –
சீரை –
மாறன் சடகோபன் வண் குருகூர் எங்கள் வாழ்வாம்-என்று ஏத்தும் மதுரகவியார் யம்மை யாள்வார் அவரே அரண் -என்றும்
-பார் உலகில் மற்று உள்ள ஆழ்வார்கள்-வந்து உதித்த நாள்களிலும் -உற்றது எமக்கு என்று நெஞ்சே ஓர் -என்று இப்படி ச்லாக்கிக்கப்பட்ட
கல்யாண குணங்களை –
உயிர்கள் எல்லாம் –
வர்ணாஸ்ரம குண வ்ருத்தாத் உத்கர்ஷ்ட அபகர்ஷ்ட விபாகம் அற –ருசி உடையரான சகல சம்சாரிகள் உடையவும்
-உய்தற்கு –
உஜ்ஜீவன அர்த்தமாக -இது ஒழிந்த உபாயங்கள்-எல்லாம் உஜ்ஜீவன ஹேதுக்கள் அன்று காணும் -இந்த வமுதனாருடைய திரு உள்ளத்தில் ஓடுகிறது –
உதவும் –
உபகரித்து அருளும் -எல்லாருக்கும் மோஷ உபாயமான திரு மந்திர அர்த்தத்தை உபதேசிக்கும் வேளையிலே
அர்த்த விசேஷங்கள் எல்லாம் ததீய பர்யந்தமாக அனுசந்திக்க வேணும் -என்னும் மதுரகவி ஆழ்வாருடைய நிஷ்டையே காணும்-
எம்பெருமானார் உபதேசிப்பது –
இராமானுசன் எம் உறு துணையே –
இப்படிப் பட்ட எம்பெருமானார் எனக்கு த்ர்டமான துணை –
துணை-
சகாய பூதர் -உறு -த்ர்டம் -இத்தால் பரம பதத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்றபடி –
அன்றிக்கே -பெரியவர் என்ற பதத்துக்கு –
ஆழ்வாருடைய திருவடிகளை தம் திரு உள்ளத்திலே நிறுத்திக் கொண்ட-ஸ்வாமிகள் எல்லாரும் -என்று பொருள் ஆகவுமாம்-

———————————————————————————————–

பெரிய ஜீயர் உரை
-அவதாரிகை –
ஐஸ்வர்யாதி பர தேவதா பர்யந்தமான அபேஷித வஸ்துக்கள் எல்லாம் திருவாய் மொழியே –
என்று ஜகத் பிரசித்தமாக நின்ற எம்பெருமானார் எனக்கு நிரதிசய போக்யர் -என்கிறார் –

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆரமுதே – – 19-

ஸ்வ சம்பந்தத்தை வுடையவர்களுக்கு இன்னார் என்னும் மதிப்பை கொடுக்குமதாய்-
ஹித பரமுமாய் -ப்ரியகரமுமாய் -அஞ்ஞாத ஜ்ஞாபகமுமாய் -பிராப்ய ப்ராபகங்களுமாய்-இருக்கையாலே –
சீரியதாய் -நிரவதிகமான சம்பத்தும் -பிதாவும் -மாதாவும் -சதாசார்யனும் –
பரிமளிதமான புஷ்பத்தை பிறப்பிடமாக உடைய பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான சர்வேஸ்வரனும் –
ஆழ்வார் பகவத் ப்ரசாதத்தாலே தமக்கு பிரகாசித்த -பரபக்தி -யாதி –ச்வபாவங்களின் உடைய அடைவிலே –
உபகரித்து அருளின -திராவிட வேதமான திருவாய் மொழியே-என்று –
இம் மகா ப்ருதிவியில் உள்ளார் அறியும்படி நின்ற எம்பெருமானார் எனக்கு-நிரதிசய போக்யர் –
அதவா
விளங்கிய சீர் நெறி தரும் என்றது -சீர்த் தொடை யாயிரம் -திருவாய் மொழி -1 2-11 – –
என்னும்படி தமக்கு பிரகாசித்த பகவத் குணங்களை அடைவே உபகரித்து அருளின -என்னவுமாம் –

————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –
ஐ ஹிக ஆமுஷ்மிக சமஸ்த சம்பத்தும் -சர்வவித பந்துக்களும் -வகுத்த சேஷியானஸ்ரீயபதியும் –
நம் ஆழ்வார் -தமக்கு பகவத் நிர்ஹெதுக கிருபையாலே பிரகாசியா நின்று உள்ள அர்த்த விசேஷங்களை
அடைவே அருளிச் செய்த த்ரமிட உபநிஷத்தே என்று சகல ஜனங்களுக்கும் உபதேசிக்கிற எம்பெருமானார்
எனக்கு நிரதிசய போக்யர் – என்கிறார்-

வியாக்யானம்
-உறு பெரும் செல்வமும்
-அவிந்தந தனஞ்சய பிரசமதம் தனம் தந்தனம் -என்கிறபடியே-அப்ராப்தமான சம்பத் அன்றிக்கே –
-தனஞ்சய விவர்த்தனம் தனமுதூட கோவர்த்தனம் சூசாத நம பாதநம்-சூ மனசா சமாராதனம் -என்றும்
-ஸாஹி ஸ்ரீ ர்ம்ர்தாசதாம் -என்றும் -முக்த ஐச்வர்யத்துக்கு உடல் ஆகையாலே –
ப்ராப்தமாய் –பெரும் -ஷீணே புன்யே மர்த்த்ய லோகாம் விசந்தி -என்றும்
-ஒரு நாயகம் ஓட வுலகுஉடன் ஆண்டவர்-கரு நாய்கவர்ந்த காலர் சிதைகிய பானையர் பெரு நாடு காண இம்மையிலே
பிச்சை தாம் கொள்வர் -என்றும்-சொல்லுகிறபடியே அதி ஸ்வல்பமாய் -அநித்யமாய்-இருக்கை அன்றிக்கே -கொள்ளக் குறைவற்று இலங்கி –
கொழுந்து விட்டோங்கிய -என்கிறபடியே – கொள்ளக் கொள்ள பெருகி வரக் கடவதாய் இருக்கிற –
செல்வமும் -சம்பத்தும் -அளவியன்ற யந்தாதி யாயிரம் இறே -இது
-தந்தையும் தாயும் –
மாதா பித்ர் சஹஸ்ரேப்யோ-வஸ்தலதரம் சாஸ்திரம் -என்று -சகல ஜன உஜ்ஜீவன ப்ரவர்த்தமாய் இறே
-வேதத்வ சாமான்ய விசிஷ்ட வேதம்-எல்லாரும் விரும்புவது -அப்படியே -திராவிட வேத சாகரம் -என்று இத்தை வேதமாக நிதர்சிக்கையாலே –
சகல ஜன உஜ்ஜீவன ஏக ப்ரவர்த்தம் ஆகையாலும் -பக்தாம்ர்தம் விஸ்வ ஜன அநு மோதனம் -என்றும்
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் -என்றும் சொல்லுகிறபடியே பிரியத்தையே-நடத்தக் கடவதாகையாலும் –
திரு வாய் மொழியிலே -வீடு முன் முற்றவும் -என்று தொடங்கி -கண்ணன் கழலினை –என்னும் அளவும்
ஆதி அந்தத்திலே ஹிதத்தையே போதிக்கையாலே – ஹிதத்தை நடத்தக் கடவதாகையாலும்-தாயும் தந்தையுமாய் இருக்கும் என்றபடி –
உயர் குருவும் –
-புத்ரான் பந்தூன் சகீன் குருன் -சர்வ தர்மாம்ச சம் த்யஜ்ய – என்று த்யாஜ்ய கோடியிலே-பரி கணிக்கப்பட்ட -குரு அன்றிக்கே –
அத்ர பரத்ர சாபி – என்கிறபடியே உபய விபூதியிலும் இச் சேதனனுக்கு-உபாதேய தமனாய் –
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி -அஞ்ஞாத ஜ்ஞாபனம் பண்ணின சதாசார்யனும் –
இவ் உபகார ஆதிக்யத்தாலே காணும் இவன் பரித்யாஜ்யனாகாதே ஒழிந்தது -உயர்த்தியை உடையனானதும் –
சேதனருடைய அஞ்ஞான அந்தகாரத்தை நிவர்த்திப்பவன் ஆகையாலே குரு -என்கிறார் –
-அந்தகார-நிரோதித்வாத் குரு ரித்யபி தீயதே -என்னக் கடவது இறே –
வெறி தரு பூ மகள் நாதனும் –
வெறி -பரிமளம் -இந்த பதம் புஷ்பத்துக்கு விசெஷணமாய்-பரிமளமான-புஷ்பத்தை பிறப்பிடமாக உடையளான பெரிய பிராட்டியாருக்கு
-பூ மகளார் தனிக் கேள்வன் -என்கிறபடியே-வல்லபனான சர்வேஸ்வரன் -என்றபடி –
–அன்றிக்கே -வெறி தரு பூ மகள் -வெறி -என்கிற பதம் பிராட்டிக்கு-விசேஷணமாய் -கந்தத்வாரம் – என்கிறபடியே
-திவ்ய கந்த பிரதமான திரு மேனியை உடைய பெரிய பிராட்டியார்-என்னவுமாம்
-அன்றிக்கே -வெறி தரு பூ மகள் நாதனும் -வெறி -என்கிற பதம் ஈஸ்வரனுக்கு விசேஷணமாய் –
சர்வ கந்த -என்கிறபடியே -திவ்ய பரிமள ஸ்வரூபனான ஸ்ரீ யபதி என்றும் சொல்லவுமாம் –
இவ் அபிநிவேசம் எல்லாம் இவருக்கு எவ் விஷயத்தை பற்ற -என்றால்
-மாறன் விளங்கிய சீர் நெறி-தரும் செந்தமிழ் ஆரணமே –
என்று -மாறன் -நம் ஆழ்வார் உடைய -பிதாவான காரியாலே சமர்ப்பிக்கப் பட்டதிரு நாமம் ஆய்த்து -இது
-இப்படிப் பட்ட நம் ஆழ்வாருக்கு -விளங்கிய -பிரகாசித்த -சர்வேஸ்வரன் தன்னுடைய நிர்ஹேதுக
கிருபையாலே உபய விபூதி வ்ருத்தாந்தகளை எல்லாம் -அடைவே அறியலாம்படி -மயர்வற மதிநலம் அருளப் பெற்ற –
நம் ஆழ்வாருக்கு -ஏவம் நித்யாத்ம பூகாதாஸ் சடகோப ப்ரனேஷ்யதி – என்கிறபடி நித்ய அபௌருஷேயமாய் இருக்கிற இது –
அவர் தம்மாலே உண்டாக்கப் பட்டது என்று –தோற்றும் -பிரகாசித்தது -என்றபடி -ஆகையாலே இறே விளங்கிய –
என்று அருளிச் செய்கிறார் .
சீர் நெறி தரும் –
பகவத் ஸ்வரூப ரூப குண விபூதி ஸ்ரீ யை எல்லாம் -எல்லாரும்-அறியும் படி -சாத்மிக்க சாத்மிக்க அனுபவிக்குமதாய்
-நெறி -ஒழுக்கம்-அதாகிறது சாத்மிக்க -என்றபடி –
அன்றிக்கே -மாறன் விளங்கிய சீர் நெறி தரும் -ஆழ்வார் பகவத் பிரசாதத்தாலே தமக்கு பிரகாசித்த
பர பக்தியாதி ச்வபாவங்களின் உடைய அடைவிலே உபகரித்து அருளின என்று யோஜிக்க்கவுமாம் –
அங்கன் அன்றிக்கே –
சீர் நெறி தரும் –
அகஸ்த்யோ பகவான் சாஷாத் தஸ்ய வியாகரணம் வ்யதாத்-சந்தஸ் சாஸ்திர அநு சாரனே வ்ர்த்தானா அபி லஷணம்-
உக்த மந்யைஸ் சதாசார்யை த்ராமிடச்யமகாமுனே-சம்ச்கர்தச்ய யதாசந்தி பாட்யபந்த ச்ய சர்வத லஷணா நிதாதே -சாந்தி திராமிட ஸ்யாபி பூதலே -என்கையாலே
எழுத்து அசை சீர் பந்தம் அடி தொடை நிரை பா -என்று சொல்லப் படுகிற பிரபந்த லஷண பேதமாய் இருக்கும் என்னவுமாம் –
சீர் -என்கிற இது -எழுத்து அசை தொடக்கமானவற்றுக்கு உப லஷணமாக கடவது –
நெறி -ஒழுக்கம் அதாவத்-ஸ்வபாவமாய்-லஷணம் -என்றபடி -தருகை -உடைத்தாகை
-செந்தமிழ் ஆரணமே என்று –
ஆதி மத்திய-அவசானங்களிலே ஏக ரூபமாய் திராவிட பாஷா ரூபமான உபநிஷத்தே -என்று -அவதாரணத்தாலே –
அனநயோக வியவச்சேதம் பண்ணுகிறது -இது காணும் எம்பெருமானாருடைய பிரதி பத்தி –
எம்பெருமானார்-தமக்கு ஐஸ்வர்யாதி பரதேவதா பர்யந்தமான புருஷார்த்தங்கள் எல்லாம் திரு வாய் மொழியே அன்றி
வேறு ஒன்றை அத்யவசித்து இரார் -என்றபடி
-இந் நீணிலத்தோர் அறிதர நின்ற –
இவ் அர்த்தத்தை விச்தீர்னையான-இந்த ப்ர்திவியில் உள்ள சேதனருக்கு
அஞ்ஞான ஜ்ஞாபனம் பண்ணுகைக்கு நின்று அருளின –
அன்றிக்கே -இவ் அர்த்தத்தை மகா ப்ர்த்வியில் உள்ளோர் எல்லாரும் அறியும் படி நின்று அருளின -என்னவுமாம் –
ஏதத் வ்ரதம் மம – என்கிறபடியே பக்த கங்கணராய் இருக்கிற என்றபடி
-இராமானுசன்
-எம்பெருமானார் –எனக்கு ஆரமுதே -அடியேனுக்கு அபர்யாப்த்தாம்ர்தம் -நிரதிசய போக்யர் -என்றபடி –

———————————————————————————————————————

பெரிய ஜீயர் உரை
அவதாரிகை –
நாதமுனிகளை தம் திரு உள்ளத்திலே அபிநிவேசித்து அனுபவிக்கும் எம்பெருமானார்
எனக்கு பரம தனம் -என்கிறார்-

ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திருவாய்
ஈரத் தமிழ் இன் இசை யுணர்ந்தோர்கட்கு இனியவர் தம்
சீரைப் பயின்று உய்யும் சீலம்கோல் நாதமுனியை நெஞ்சால்
வாரிப் பருகும் இராமானுசன் என்தன் மா நிதியே – -20 –

சந்தனச் சோலைகளை உடைத்தாய் -தர்சநீயமான திருநகரிக்கு நாத பூதரான ஆழ்வார் உடைய-
பரம போக்யமான திருப் பவளத்தில் பிறந்த ஈரப் பாட்டை உடைத்தான திரு வாய் மொழி இன் இசையை-
அறிந்தவர்களுக்கு ச்நிக்தராய் இருக்கும் அவர்கள் உடைய குணங்களிலே செறிந்து –
தன் சத்தை பெறா நிற்கும் -ஸ்வபாவத்தை உடையரான நாதா முனிகளை பெரு விடாயர்
மடுவிலே புகுந்து வாரிப் பருகுமா போலே தம் திரு உள்ளத்தாலே அபிநிவிஷ்டராய்க் கொண்டு
அனுபவிக்கும் எம்பெருமானார் எனக்கு அஷயமான நிதி –
ஆரம்-சந்தனம்–

—————————————————

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –
தர்சநீயமான திரு நகரிக்கு நிர்வாஹரான நம் ஆழ்வார் உடைய அமிர்தமய திவ்ய சூக்தி
ரூபமாய் இருந்துள்ள -திருவாய் மொழியை சார்த்தமாக அப்யசிக்க வல்லார் திரத்திலே -அதி ப்ரவணராய்
இருக்குமவர்களுடைய -கல்யாண குணங்களிலே சக்தராய் -உஜ்ஜீவிக்கும் ஸ்வபாவத்தை உடையரான
ஸ்ரீமன் நாதமுனிகளை -தம்முடைய மனசாலே அனுபவிக்கும் எம்பெருமானார் அடியேனுக்கு- மகா நிதியாய் இருப்பார் என்கிறார் –

வியாக்யானம் –
ஆரப் பொழில் தென் குருகை
-திருத் தாம்ரபர்ணீ தீர்மாகையாலும் -நீர் வாசியாலும்-நித்ய அபி வர்த்தங்களான சந்தன சோலையாலே சூழப்பட்டு
தர்சநீயமான திருக் குருகூருக்கு –ஆரம்-சந்தனம்
பிரான்
-சர்வர்க்கும் சேவ்யமாம் படி உபகாரகர் -குயில் நின்று ஆல் பொழில் சூழ் குருகூர் நம்பி -என்று ஸ்ரீ மதுரகவி-ஆழ்வார் அருளிச் செய்தார் இறே
-குருகை பிரான் –
திருக் குருகையிலே அவதரித்து -சகல ஜனங்களுக்கும்-திருவாய் மொழி முகத்தாலும் -நாத முனிகளுக்கு சகல அர்த்தங்களையும் -உபதேசித்து
சம்ப்ரதாயத்தை நடத்தின படியாலும்-உபகாரகர் -என்றபடி
-அமுதத் திருவாய் ஈரத் தமிழின்
-இப்படிப் பட்ட நம் ஆழ்வாருடைய -தொண்டர்க்கு அமுது உண்ண சொல்-மாலைகள் சொன்னேன் -என்கிறபடியே பரம போக்யமாய் கொண்டு
-திருப் பவளத்திலே பிறந்ததே -ஸ்வ நிஷ்டரான-சேதனருடைய சம்சார தாபம் எல்லாம் ஆறும் படியாக ஈரப் பாட்டை உடைத்ததாய்
-த்ரமிட பாஷா ரூபமான-திருவாய் மொழி யினுடைய -இசை -கானம் ராகாதி லஷனன்களோடு கூடி -உணர்ந்தோர்கட்கு
-அப்யசித்து-பின்னையும் ஆவர்த்தி பண்ணி -அதிலே பூர்ண ஜ்ஞானம் உடையவர்களுக்கு –
ஸ்ரீ மன் மதுர கவிகள் -திரு மங்கை ஆழ்வார்-முதலானவர்களுக்கு -என்றபடி –
இனியவர் –
அவர்களுக்கு அத்யந்தம் பிரிய தமராய் -ஸ்ரீ மன் நாத முனிகளுக்கு -கண்ணி நுண் சிறுத் தாம்பினை-உபதேசித்து அருளின
-ஸ்ரீ பராங்குச நம்பி -இனியர் தம் சீரைப் பயின்று -அவர்களுடைய கல்யாண குணங்களை-
சர்வ காலமும் அனுசந்தித்து -அவர் செய்த உபகாரத்தை விஸ்மரியாதே -க்ர்த்கஞராய்க் கொண்டு –
பயிலுதல் -அனுசந்திக்கை -உய்யும் -அவ்வளவாக இவருக்கு உஜ்ஜீவனம் இல்லை -அந்த மதுரகவி ஆழ்வார் உடைய
சம்ப்ராயச்தரான ஸ்ரீ பராங்குச நம்பி உபதேசித்த அநந்தரம் -அவர் பக்கலிலே க்ர்த்கஞராய் போந்த பின்பு -காணும்-இவர் உஜ்ஜீவித்தது
-சீலம் கொள் நாத முனியை –
இப்படி உஜ்ஜீவனமே ஸ்வபாவமாக உடையரான-ஸ்ரீ மன் நாத முனிகளை-ஸ்ரீ ரங்க நாதருடைய திருநாமத்தை வகித்து
-ஆழ்வார் தமக்கு உபதேசித்த-அர்த்தங்களை அடைவே சர்வதா -மனனம் பண்ணிக் கொண்டு எழுந்து அருளி இருக்கிற-ஸ்ரீ மன் நாதமுனிகளை -என்றபடி
நெஞ்சால் வாரிப் பருகும் –
சமான காலமானால் -காயிகமாகத்-தழுவி -முழுசிப் பரிமாறி அனுபவிப்பார் காணும் –அத்யந்த கால வ்யவதானமாக இருக்கையாலே-அந்த ஸ்ரீ மன் நாதமுனிகளை
-நெஞ்சாலே அள்ளிக் கொண்டு –
பிறி கதிர் படாதபடி விக்ரக குணங்களோடு-கூட அனுபவிக்கை -பருக்கை-அனுபவிக்கை –
இராமானுசன் –
-எம்பெருமானார் –
என் தன் மா நிதியே
-லோகத்தார் எல்லாருக்குமாக அவதரித்தார் ஆகிலும் அமுதனாருடைய-அத்யாவசாயம் -தமக்கேயாக அவதரித்தார் என்று காணும்
-என் தன் மாநிதி –
அடியேனுடைய மகா நிதி –நவநிதியான தனங்களும் -தைனம்தினய பிரளயத்திலும் அழிவு உண்டு –
அப்படி அன்றிக்கே அவற்றைக் காட்டில்-விலஷணமாய் அப்ராக்ருதமான நிதி -என்றபடி –
-அத்ர பரத்ர சாபி நித்யம் யாதிய சரணவ் சரணம் மதீயம்-என்று அருளிச் செய்தார் இறே ஆள வந்தாரும் .

—————————————————————————————————————–

பெரிய ஜீயர் அருளிய உரை –
-அவதாரிகை –
எம்பெருமானார் தம் பக்கல் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்து அத்தாலே அவர் திருமுகத்தை
பார்த்து -தேவரீர் உடைய க்ருபா ஸ்வபாவம் இந்த லோகத்தில் யார் தான் அறிவார் என்கிறார் –

காரேய் கருணை இராமானுசா இக்கடல் இடத்தில்
ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான் வந்து நீ என்னை யுத்த பின் உன்
சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே -25 – –

வியாக்யானம் –
ஜல ஸ்தல விபாகம் பாராதே வர்ஷிக்கும் மேகம் போலே சர்வ விஷயமாக உபகரிக்கும்
கிருபையை உடையவரே –
துக்கத்துக்கு நேரே ஆவாச பூமியே இருப்பானொருவன் நான் –
இப்படி இருக்கிற என்னை தேவரீர் தாமே வந்து ப்ராபித்து அருளின பின்பு தேவரீர் உடைய
கல்யாண குணங்களே ஆத்மாவுக்கு தாரகமாய் -அடியேனுக்கு இன்று ரசியா நின்றது-
தேவரீர் உடைய கிருபையின் ஸ்வபாவத்தை இக்கடல் சூழ்ந்த பூமியில் யார் தான் அறிவார் –
காரேய் கருணை -என்றது -கார் ஏய்ந்த கருணை என்றபடி –
ஏய்கை-ஒப்பு–

ஊமைக்கு திருவடி அருளி /கொங்கு பிராட்டிக்கு இரண்டு தடவை த்வயார்த்தம் சாதித்து அருளி /ஷீராப்தி செய்தி
/ப்ரஹ்ம ரஜஸ் /வீடு தந்தோம்-நீட்டும் இடத்தில் பரம் பொருள் / /கிரந்த நிர்மாணம் /ஆசை உடையார்க்கு எல்லாம் /
பூதூரில் வந்து உதித்த புண்ணியனோ/ஸ்ரீ பாஷ்யம் அருளி /ஸூ கம்பீரம் –

————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை-
அவதாரிகை –
-மேகம் போலே சர்வ விஷயமாக உபகரிக்கும் க்ர்பையை உடைய எம்பெருமானாரே –
சதுஸ் சமுத்திர பரிவேஷ்டிதமான இந்த பூ பிரதேசத்திலே -தேவரீர் உடைய கிருபா ஸ்வபாவத்தை
தெளிந்தவர் யார் -சகல துக்கங்களுக்கும் சாஷாதாகரமான என்னை தேவரீரே எழுந்து அருளி-
அங்கீ கரித்த பின்பு -தேவரீர் உடைய கல்யாண குணங்கள் -என்னுடைய பிராணனுக்கு பிராணனாய் –
அடியேனுக்கு ரசியாது நின்றது என்று -எம்பெருமானார் திரு முகத்தைப் பார்த்து -நேர் கொடு நேரே
விண்ணப்பம் செய்கிறார் –

வியாக்யானம் –
காரேய் கருணை –
ஜல ஸ்தல விபாகம் அற வர்ஷூ கவலாஹகம் போலே –
அனலோசித விசெஷா லோக சரண்யமான – க்ர்பை -சித்தே ததீய சேஷத்வே -சர்வார்த்தாஸ் சம்பவந்திஹி –என்னக் கடவது இறே –
-கார் -மேகம் ஏய்கை -ஒப்பு -இப்படிப் பட்ட க்ர்பையை உடைய -இராமானுச -எம்பெருமானாரே –
இக் கடல் இடத்திலே –
சதிஸ் சமுத்திர பரி வேஷ்டிதமான -இந்த -இருள் தரும் மா ஞாலத்திலே –
நின் அருளின் –
பர துக்க அசஹிஷ்ணுத்வ நிராசி கீர்ஷத்வாதி லஷணங்களோடு கூடி இறே கிருபை இருப்பது –
அப்படிப் பட்ட கிருபைக்கு நின் அருளின் என்று ஆஸ்ரிய ப்ராபல்யத்தாலே வந்த வெளிச் செறிப்பு
ஸ்வர்ணத்துக்கு பரிமளம் வந்தால் போலே-காணும் -இருப்பது –
தன்மை
-இப்படிப் பட்ட கிருபை ஸ்வபாவத்தை –
ஆரே அறிபவர் –
தெளிந்தவர் தான் யார் –
நித்ய விபூதியில் இருந்தவர்கள் ஆகில் -சதா பச்யந்தி -என்றும் -விப்ராச -என்றும் -ஜாக்ர்வாசா -என்றும் –
சார்வஜ்ஞம் உடையவர் ஆகையாலே -அறியக் கேட்டவர்கள் இத்தனை
-யாநிசா சர்வ பூதாநாம் தஸ்யா ஜாகர்த்தி சமயமி –என்னும்படி அஜ்ஞானத்தை விளைப்பிக்கும் பூலோகத்தில் இருந்தவர் தெரிகிலர்-என்றபடி –
அல்லலுக்கு –
-கர்ப்ப ஜன்மாத்யவச்தாஸ் துக்கம் அத்யந்த துச்சகம் -என்னும் படியான துக்கங்களுக்கு –
நேரே உறைவிடம் நான் –
-சாஷாத் ஆவாச பூமியாய் இருப்பான் ஒருவன்நான் – சரீர சம்பந்திகளுக்கு
வந்த துக்கங்கள் எல்லாம் தத் சம்பந்தத்தாலே -எனக்கு ப்ராப்தமானால் சிறிது இலகுவாய் இருக்கும் –
அப்படி அன்றிக்கே சாஷாத் எனக்கு வந்தது ஆகையாலே அவற்றுக்கு எல்லாம் நான் த்ர்டமான ஆஸ்ரயமாய்-இருந்தேன் -என்றபடி –
வந்து நீ –
நீ வந்து -தேவரீர் பர துக்க அசஹிஷ்ணுவாகையாலே -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய- ஆர்த்த த்வனி கேட்டவாறே
சர்வேஸ்வரன் அரை குலைய தலை குலைய வந்தால் போலே -பரம பதத்தின் நின்றும்-இவ்வளவாக எழுந்து அருளி
-என்னை
-துக்க ஆஸ்ரயமான என்னை –
உற்ற பின் –
த்வயாபி லப்த்த பகவன் நிதா நீ மனுத்த-மாம்பாத்ரம் இததயாயா -என்றால் போலே அலாப்ய லாபமாக என்னைப் பெற்றபின்பு –
உன் சீரே
-தேவரீர் உடைய கல்யாண குணங்களே – குணா நாமா கரோ மஹார் -என்றால் போலே சீர் என்னும்படியான-வாத்சல்ய சௌசீல்யாதி குணங்களை
-உயிர்க்கு உயிராய்
-ஆத்மாவுக்கு தாரகமாய் -லோகத்தில் எல்லாருக்கும் தம் தாமுடைய பிராணன் ஜீவன ஹேதுவாய் இருக்கும்
-இங்கு அப்படி அன்றிக்கே இவருடைய பிராணனுக்கு பிராணனாய்-காணும் அவருடைய சீர் இருப்பது
-அடியேற்கு
-சேஷ பூதனான எனக்கு -இன்று -இன்று -ரசஹ்யே வாயலப்த்த்வா நந்தீ பவதி -என்றும் –
சோச்நுதே சர்வான் காமான் சஹா -என்றும் –சொல்லப்படுகிற பிரம்மத்தின் உடைய கல்யாண குண அமர்த்த அனுபவமும்
-அடியார்கள் குழாம் களை-உடன் கூடுவது என்று கொலோ -என்று ததீயர் உடன் கூடிப் பண்ணக் கடவேன் என்று பிராத்தித்தபடி
தலைக் கட்டுவது பரம பதத்திலே யாய் இருக்கும் -அப்படி அன்றிக்கே எனக்கு இந்த பந்த -பத்த -தசையிலே தானே –
தித்திக்குமே –
ரச்யமாய் -ஆனந்த அவஹமாய் இருக்கும் என்று ஆய்த்து -தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித்
தித்தித்தால் போலே ஆய்த்து -என்றபடி -அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே – என்னக் கடவது இறே—

————————————————————————————–

பெரிய ஜீயர் அருளிய உரை
-அவதாரிகை –
அநாதி காலம் அசங்க்யாதமான யோநிகள் தோறும் தட்டித் திரிந்தநாம் இன்று-நிர்ஹேதுகமாக
எம்பெருமானரை சேரப் பெற்றோமே என்று -ப்ரீதி பிரகர்ஷத்தாலே –திரு உள்ளத்தை குறித்து அருளி செய்கிறார் –

ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலம் எல்லாம் மனமே
ஈண்டு பல் யோநிகள் தோற் உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே
காண்டகு தோள் அண்ணல் தென்னத்தியூரர் கழல் இணைக் கீழ்
பூண்ட அன்பாளன் இராமானுசனைப் பொருந்தினமே – 31-

வியாக்யானம் –
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இருக்கையாலே இரண்டு தசையிலும் கூடி நிற்கிற நெஞ்சே –
தினமாய்-மாசமாய் -சம்வத்சரங்களாய் -கொண்டு வர்த்தியா நின்றுள்ள -காலம் எல்லாம் –
தேவாதி பேதத்தாலும் -அதில் அவாந்தர பேதத்தாலும் -பரிகணிக்க ஒண்ணாதபடி -திரண்டு-பல வகைப்பட்ட -யோநிகள் தோறும் –
ஒரு கால் நுழைந்த இடத்தே -ஒன்பதின் கால் நுழைந்து-தட்டித் திரிந்த நாம்-இன்று ஒரு நினைவு இன்றிக்கே இருக்க செய்தே
-காணத் தகுதியாய் இருந்துள்ள-திருத் தோள்களை உடையராகையாலே -ரூப குணத்தாலும் உத்தேச்யராய் -நமக்கு வகுத்த சேஷிகளாய் –
தர்சநீயமான திரு வத்தியூரிலே -நித்ய வாசம் பண்ணுகையாலே -அவ்வூரைத் தமக்கு நிரூபகமாக-உடைய பேர் அருளாள பெருமாள் உடைய –
பரஸ்பர சத்ருசமான -திருவடிகளின் கீழே -பிணிப்புண்ட-சிநேகத்தை உடையரான -எம்பெருமானாரை சேர்ந்து கொண்டு நிற்கப் பெற்றோம் –
நிகழ்தல்-வர்த்தித்தல் / ஈண்டுதல்-திரளுதல் /யோனி-ஜாதி–

—————————————————-

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –
லோகத்தில் ஒருவனுக்கு ஒரு நிதி லபித்தால் தன்னுடைய அந்தரனுக்கு சொல்லுமா போலே –
இவரும் தம்முடைய பந்த மோஷங்களுக்கு எல்லாம் பொதுவான மனசை சம்போதித்து கலா முகூர்த்தாதி
ரூபமாய்க் கொண்டு வர்த்திக்கும் காலம் எல்லாம் தேவாதி தேகங்கள் தோறும் சஞ்சரித்து இவ்வளவும் போந்தோம் –
இப்போது ஒரு சாதனம் இன்றிக்கே -சுந்தர பாஹுவாய் -தமக்கு உபாகரகரான பேர் அருளாளன் திருவடிகளின் கீழே
அங்குத்தைக்கு -ஒரு ஆபரணம் போலே இருந்துள்ள பிரேமத்தை உடையரான எம்பெருமானாரை சேர்ந்து கொண்டு-
நிற்கப் பெற்றோம் கண்டாயே -என்று சொல்லி ஹ்ர்ஷ்டர் ஆகிறார் –

வியாக்யானம் –
ஆண்டுகள் நாள் திங்களாய் –
நிகழ் காலம் எல்லாம் -கலா முகூர்த்தம் க்ர்ஷ்டாச்சா ஹோராத்ரச்சா-சர்வச -அர்த்தமாசாமா சாரிதவத்சம் வத்சரஸ் சகல்பதம் -என்றும் –
நிமேஷோ மாநுஷோயோசவ் மாத்ரா மாத்ர ப்ரமாணாத –தைரஷ்டாதசபி காஷ்டாத்ரி சத்காஷ்டா கலாச்ம்ரத்தா –
நாடிகாது பிரமானே னகலா தசசபஞ்சச -நாடிகாப்யா மதத்வ்யாப்யோ-முஹூர்த்தொர்விஜச த்தம -அஹோராத்ரா முஹூர்த்தாஸ்து
த்ரிம்சன்மாசாஸ் துதைச்ததா -மாசைர்த்வாதச பிர்வர்ஷா-மகோராத்ரம் துதத்வி -என்றும் சொல்லப்படுகிற – சர்வ காலமும்
-ஆண்டுகள்-வத்சரங்கள் -நாள்-தினம் -திங்கள்-மாசம் –நிகழ்தல் -வர்த்தித்தல்
ஈண்டு பல் யோனிகள் தோறு உழல்வோம் –
தேவ மனுஷ்யாதி ஜாதிகள் -ஒவ் ஒன்றிலே தானே அநேகம் அநேகமாக-அவாந்தர ஜாதிகள் உண்டு -அவை எல்லாவற்றிலும்
ஒருக்கால் புகுந்ததிலே ஒன்பதின் கால் புகுந்து –மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -என்கிறபடியே அநாதிகாலம் பிடித்து
-சஞ்சரித்து போந்தோம் -ஈண்டுதல் -திரளுதல் -யோநி-ஜாதி -உழலுகை -தட்டித் திரிகை
-மனமே –
-பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் -அறிவுக்கு பிரசவ த்வாரமான-நீ அறிந்தாய் என்று -அந்தரங்கமான மனசை சம்போதித்து அருளிச் செய்கிறார்
-ஏவம் சம்ஸ்ர்தி சக்ரச்தே பிராமய மானேஸ்-ச்வகர்மபி ஜீவேது காகுலே -என்கிறபடி இவ்வளவும் சஞ்சரித்துப் போந்தோம்
-இன்று-
இப்போது-
ஓர் எண் இன்றியே –
-நான் ஒன்றை எண்ணிக் கொண்டு இராதே இருக்க –எம்பெருமானார் திருவடிகளிலே-ஒரு சைதன்ய கார்யத்தையும் பண்ணாதே இருக்க –
காண் தகு தோள் அண்ணல் –
ஆயதாஸ்ஸ சூவ்ர்த்ததாச சபாஹவ பரிகோபமா சர்வ பூஷண பூஷார்ஹா -என்கிறபடியே இருந்துள்ள-
திருத் தோள்களை உடையவராய் -விந்த்யாடவியில் நின்றும் காஞ்சி புரத்துக்கு துணையாக வந்து –
அஹம் ஏவ பரதத்வம் -என்று திரு கச்சி நம்பி மூலமாக உபதேசித்த உபாகாரகனாய் –
தென் அத்தியூர் –
தர்சநீயமான –நகரேஷு காஞ்சி -என்னப்பட்ட காஞ்சி புரத்திலே -ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்வல பாரிஜாதம் -என்று தாமே அருளிச் செய்யும்படி
ஹஸ்த கிரியில் எழுந்து அருளி வகுத்த சேஷியான பேர் அருளப் பெருமாள் உடைய –
-கழல் இணைக் கீழ் –
-பாவனத்வ-போக்யத்வங்களுக்கு பரஸ்பர சதர்சமான திருவடிகளின் கீழே பூண்ட அன்பாளன் -சிரோ பூஷணமான-
திரு அபிஷேகத்தை அலங்கரிக்கும் அவர்களைப் போலே தம்மாலே அலங்கரிக்கப்பட்ட-பக்தி பிரகர்ஷத்தை உடையரான –
இராமானுசனை –
-எம்பெருமானாரை –
பொருந்தினமே –
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே-என்றும் -ராமானுஜ பதாச்சாயா -என்றும் சொல்லுகிறபடியே பொருந்தி விட்டோம் கண்டாயே -என்று
தாம் பெற்ற வாழ்வுக்கு ஹர்ஷித்துக் கொண்டு நின்றார் ஆய்த்து –

—————————————————————————————————-

பெரிய ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை-
இப்படி உபதேசித்த விதத்திலும் ஒருவரும் இதில் மூளாமையாலே-அவர்கள் உடைய படியை அனுசந்தித்து இன்னாதாகிறார் –

சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை
யில்லா வற நெறி யாவும் தெரிந்தவன் எண்ணரும் சீர்
நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்பிக்
கல்லார் அகலிடத்தோர் எது பேறென்று காமிப்பரே – -44 –

விச்தீர்னையான பூமியில் உள்ளோர் புருஷார்த்தம் எது என்று இச்சியா நிற்பார்கள் –
சொல் நிரப்பத்தை உடைத்தாய் -அத்விதீயமாய் -இயல் இசை நாடக சம்பந்தத்தாலே-மூன்று வகைப்பட்டு இருந்துள்ள தமிழும் –
ருகாதி சதுர்வேதங்களும் -அசங்யேயமான -தர்ம மார்க்கங்களான சகலமும் -அலகலகாக ஆராய்ந்து இருக்குமவராய் –
எண்ணப் புக்கால் எண்ணித் தலைக்கட்ட வரிதான கல்யாண குணங்களை உடையவராய் –
சத்துக்களுடைய ப்ரீதி பிரகர்ஷத்தாலே அடைவு கெட ஏத்தும்படியாய் இருக்கிற-
எம்பெருமானாருடைய -திரு நாமத்தை -நான் சொன்ன வார்த்தையை -விஸ்வசித்துக் கற்கிலர்கள் .
ஐயோ இவர்கள் அளவு இருந்தபடி என் என்று கருத்து –
எண்ணரும் சீர் -என்கிற இது நல்லாருக்கு விசெஷணம் ஆகவுமாம் –
நம்புதல்-விருப்பமுமாம் –

———————————————————————————————

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –
கீழ் பாட்டில் லோகத்தார் எல்லாருக்கும் அவருடைய அதிகார நதிகார விபாகம் பாராதே அத்யந்த விலஷணமான
உபாயத்தை உபதேசித்ததாலும் -அத்தை அத்யவசிக்க மாட்டாதே புருஷார்த்தம் எது என்று சந்தேகியா நின்று கொண்டு –
சிஷிதமான சப்த ராசியால் நிறையப் பட்டதாய் –அத்விதீயமாய் இயலும் இசையும் சந்தர்ப்பமும் கூடிய விலஷணமான
இப் பிரபந்தமும் -ரிகாதி வேத சதுஷ்டயமும் -அபரிமாய் தத் உப பிரஹமணமான தர்ம சாச்த்ரமாகிற இவற்றை
அடைவே ஆராய்ந்து இருக்குமவராய் -சத்துக்களாலே அடைவு கெட ஸ்துதிக்கும்படியாய் இருக்கிற எம்பெருமானாருடைய
திருநாமத்தை அப்யசியாதே போனார்களே என்று இன்னாதாகிறார்-

வியாக்யானம் –
அகலிடத்தோர் –
அநந்தா என்றும் விபுலா என்றும் பேரை உடைத்தான இந்த மகா ப்ர்த்வியில் உள்ள சேதனர்கள்-
எது பேறு என்று காமிப்பர்-நான் இவர்களது இழவைக் கண்டு பொறுக்க மாட்டாதே
-மந்த்ரம் யத்நேன கோபயேத்-என்கிற-சாஸ்திரத்தையும் அதிக்ரமித்து -அத்யந்த சுலபமாய் குரோர் நாம சதா ஜபேத் -என்கிறபடியே
-ததீய சேஷ தைகரஸ்-ஸ்வரூப அநு ரூபமாய் -பரம போக்யமான சதுரஷரியை உபதேசித்தாலும் -அதிலே நிஷ்டர் ஆகமாட்டாதே
அறிவு கெட்டு -பின்னையும் -நமக்கு ஓர் சரணம் எது என்று இங்கும் அங்கும்நாடி -அந்த இச்சையோடு காலம் எல்லாம் இப்படியே
வ்யர்தமாகப் போக்குகிறார்கள் -ஐயோ இவர்கள் ப்ராப்தத்தின் உடைய க்ரௌர்யம் இங்கனே யாய் தலைக்கட்டிற்று-என்று இன்னாதாகிறார்
ஆனால் அத்யயனம் பண்ணுவிக்கும் அவர்கள் மந்த மதிகளுக்கு பின்னையும் ஒரு சந்தையை சொல்லி
அவர்கள் தரிக்கும் அளவும் க்ர்ஷி பண்ணுவார்கள் இறே-அப்படியே நீரும் செய்ய வேண்டாவோ என்ன –
யச்சகிம் கிஞ் ஜகத் சர்வம் த்ர்சயதே ச்ருயதேபிவா -அந்தர்பகிச்த தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்த்தித -என்றும்-
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே -என்றும் பிரபாவ புரச்சரமாக
அந்த மந்த்ரத்தை உபதேஸித்தால் போலே -இவரும் தாம் முன்பு அருளிச் செய்த சதுரஷரி மந்த்ரத்தை எதிரிட்டு
பிரபாவ வர்ணன பூர்வகமாக அருளிச் செய்கிறார் –
-சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் –
சீர் தொடை ஆயிரம் -என்றும்-சடகோப வாங்மயம் -என்றும் சொல்லுகிறபடியே கோமளங்களாய்-
தத்வார்த்த நிச்சாயகங்களான சப்தங்களாலே நிறையப்பட்ட-தமிழ் என்று -திரு வாய் மொழி –
ஒரு
என்ற சப்தம் காகாஷி நியாயேன பூர்வ உத்தர பதங்களிலே அன்வயிக்கும் -லோகத்திலும்-வேதத்திலும் அதுக்கு சதர்சமான பிரமாணம் இல்லை என்ற படி –
மூன்றும் -அதுக்கு மூன்று பிரகாரமாக கணிசிக்க தக்கதாய்-அத்விதீயமான மற்ற மூவாயிரப் பிரபந்தமும்-
-இப்படி ஆழ்வார் பதின்மராலும் செய்யப்பட சமஸ்த திவ்ய பிரபந்தங்களும் –
அன்றிக்கே ஒரு மூன்று என்றது திருவிருத்தம் திருவாசிரியம் பெரிய திருவந்தாதி யும் பொருள் ஆகவுமாம்.
அன்றிக்கே சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் -சொல் நிரப்பத்தை உடையதாய் -அத்விதியீமாய் –
இயல் இசை நாடக சம்பந்தத்தாலே மூன்று வகைப்பட்டு இருந்துள்ள தமிழ் என்னவுமாம் –
ஸ்ருதிகள் நான்கும் –
பிரமானாந்தரன்களைப் போலே அநித்யுமுமாய் சாபேஷையுமாய் இருக்கை-
அன்றிக்கே -வாசாவிருபு நித்யா -என்றபடி நித்தியமாய் அபௌருஷேயுமாய் சவாத பிரமாண முமாய்-புஸ்தக நிரீஷனாதி சாத்தியம் அன்றிக்கே
-ஸ்வாத்யா யோத்யே தவ்ய-என்கிறபடியே -ஆசார்ய உச்சாரண-அநு உச்சாரண மகாத் அயன சாத்தியமாய்
-ரிசோ யஜூ சி சாமானி ததைவா தர்வணாநிச -என்னும்படியான-பேர்களை உடைத்தாய் கொண்டு நாலு வகைப்பட்ட வேதங்களும்
-எல்லை இல்லா அற நெறி –
அந்த வதந்களிநிடைய-அர்த்த பிரகாசங்களாய் தொகை இட்டு சொல்ல ஒண்ணாதபடி -அனந்தமான தர்ம மார்க்கங்களை –
யாவும் தெரிந்தவன்
-வேத மார்க்க பிரதிஷ்டாப நாசார்யா – உபய வேதாந்த சார்யர் -ஆகையாலே-இவை எல்லாவற்றையும் அலகலகாக ஆராய்ந்து இருக்குமவராய்
-எண்ணரும் சீர் –
இவர் பகவத் அவதாரம் ஆகையாலே-சங்க்ய அனும் நை வசக்யந்தே குணா -என்னும்படி அனந்த கல்யாண குனாகரராய்
-நாதச்யேச கஸ்ய நதஸ்ய நாம மகத்யச –என்னும்படியான அவனுடைய கீர்த்தியை பரிச்சேதிக்கிலும்-இவருடைய கீர்த்தியை பரிச்செதிக்க ஒண்ணாது காணும் –
அன்றிக்கே -எண்ணரும் சீர் -என்றது -நல்லோர் என்ற பதத்துக்கு விசேஷணம் ஆகவுமாம் -அப்போது
-வாசா மகோசர-மகா குணா தேசிகாக்ர்ய கூராதி நாத -என்னும்படி எண்ணித் தலைக் கட்ட அரிதான கல்யாண குணங்களை உடையவரான
ஆழ்வான் பிள்ளான் எம்பார் தொடக்கமானவர் -என்றபடி
-நல்லார் பரவும்
-ஜயதி சகல வித்யா வரஹி நீ ஜன்ம சிலோ –இத்யாதியாலும் -காதா தாதா கதானாம் -இத்யாதியாலும் -வாழி எதிராசன் -இத்யாதியாலும்
–அந்த சத்துக்கள் உடைய-பிரதி பிரகர்ஷத்தாலே அடைவு கெட ஏத்தும்படி இருக்கிற –
இராமானுசன் திருநாமம் –
எம்பெருமானாருடைய திருநாமம் –ராமானுசன் என்கிற இத் திருநாமத்தை
-நம்பிக் கல்லார் –
இவருடைய பிரபாவத்தை அறிந்து விச்வசித்து -இவருக்குதிருநாமமான சதுரஷரி மந்த்ரத்தை -அப்யசியாதே போனார்கள்
-குரங்கானாலும் மகாராஜர் ப்ரத்யயம் பண்ணின பின்பு-விச்வசித்தார் இறே -இவர்கள் சதசத் விவேசனம் பண்ணுகைக்கு
-யோக்யரான மனுஷ்யராய் இருந்தும் –நம்மை-எம்பெருமானார் விஷயீ கரித்ததை தெளிவித்து ப்ரத்யயம் பண்ணிக் கொடுத்தாலும்
-இவர்கள் விச்வசிக்க-மாட்டாதே போனார்கள் -இவர்கள் அபாக்யத்தின் க்ரௌர்யம் என் என்று இன்னாதாகிறார் —

————————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருவரங்கத்து அமுதனார் திருவடிகளே சரணம் –
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -190- திருவாய்மொழி – -10-10-6….10-10-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

July 26, 2016
எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய் உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6- பிராட்டி பக்கல் பிரணயி போலே நிரதிசய பிரணயித்தவம் போக்யத்தை காட்டி அருளினாய் -மேலும் -முழுக்க நிர்வகிக்க வேணும் புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்-காயாம்பூ தன்னிலம் -புண்டரீகம் போலே திருக்கண்கள் உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் -தாமரை மலரால் -பத்மாலயா பத்மாசனம் -நிரதிசய போக்யதை பூதை மணம் பரிமளம் உருவெடுத்தால் போலே -ஆத்மகுணம் கொண்ட அன்பேயோ-அன்பே யாகவே தர்மமாகவே -அன்பே வடிவமாகக் கொண்ட -எனக்கு எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை -நிரதிசய போக்யத்தை ஹேயமான எனது பிரக்ருதியை -விலக்ஷண ஆத்மாவையும் -ஆவி சரீரம் மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் திருப்தி பெறாத படி விரும்பி அனுபவித்து -இனி குறையும் புஜிப்பித்தே விட வேண்டும் -அவன் புஜித்து-அவன் ஆனந்தம் கண்டு நாம் மகிழும் படி -உனது அவனுக்கு நிருபாதிக போக்த்ருத்வம் சேதனனுக்கு போக்யமும் -அனுபவ ஜெனித ப்ரீதி கண்டு ஜீவன் ஆனந்தம் -அஹம் அன்னம் ஸ்வரூபம் -ஞானத்துக்கு வடிகால் வேண்டுமே -கைங்கர்யம் பண்ணி அவன் அனுபவிக்க – அவன் ஆனந்தம் கொண்டு நாம் ஆனந்தம் -அப்ரதானம் என்றபடி – பெரிய பிராட்டியார் பக்கல் போலே-என் பக்கல் மிக்க காதலை உடையவனாய் என் சரீரத்திலும் ஆத்மாவிலும் மிக்க விருப்பத்தைச் செய்து-அனுபவித்த நீ என்னைக் கைவிடாமல் ஈண்டென-அங்கீ கரித்து அருளாய் –என்கிறார்- எனக்கு ஆரா அமுதமாய் – தேவசாதியினுடைய உப்புச் சாறு போலே அன்றியே- எப்பொழுதும் அனுபவிக்கத் தகுந்ததாய்-நித்ய சூரிகள் கூட அனுபவிக்கும் உன்னை- பிறவியிலே உழந்து திறக்கிற எனக்கு தந்தாய் – எனது ஆவியை – என்னுடையது என்னுமதுவே காரணமாக- காதலியின் அழுக்கு உகக்கும் காமுகனைப் போலே-என் உடம்பை விரும்பினாய் – இன்னுயிரை – பகவான் உடைய அபிப்ராயத்தாலே- தவதவ நாறுகிற படி – தவ -பாரதந்த்ர்யம் மற்றொரு தவ -உரிச் சொல் அன்றிக்கே செவ்வாய் கிழமை மங்கள வாரம் என்னுமா போலே – சரீரத்தோடு சேர்ந்து இருக்கையாலே தண்ணிது -என்று சொல்கிறார் -என்னவுமாம்- மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் – மனத்துக்கு அமையாமையாலே-எக்காலத்தும் அனுபவித்தாய் – இனி உண்டு ஒழியாய்- நீ தொடங்கின கார்யத்தையும்-நடுவே குறை கிடக்க விடாதே-அங்கீ கரித்து அருளாய் -என்றது நீ இவ்வளவு புகுர நிறுத்துகைக்கு நான் துணை செய்தது உண்டோ –திருவிருத்தம் தொடங்கி அனுபவித்தாயே – உன் கார்யத்துக்கு உன்னை வேண்டிக் கொள்ள வேண்டுமோ- இவருடைய அமுதத்துக்கு அனுபவிக்கும் தன்மை உண்டு காணும் –போக்த்ருத்வம் உண்டே – இவ்வாத்மாவையும்-இதனுடைய சரீரத்தையும் விரும்புகை உனக்குச் சேருமோ- நீ உகந்தாருக்குச் சேருமோ – புனக்காயா நிறத்த- தன்னிலத்தில் அலர்ந்த-காயம் பூ போலே ஆயிற்று -வடிவு இருப்பது – புண்டரீகக் கண் – வாத்சல்யம் ஆகிற அமுத மழையைப் பொழியும்படி-ஆயிற்று கண்கள் இருப்பன – செங்கனி வாய் – சிவந்து கனிந்து ஆயிற்று-முறுவல் இருப்பது-பிராட்டி விரும்பும் துறைகள் அல்லவோ இவை- அக்காயா தாமரை பூத்துக் கனியப் பழுத்தால் போலே ஆயிற்று- திரு மேனியும் திருக் கண்களும் திருப் பவளமும் -இருப்பது- உனக்கு ஏற்கும் கோலம் – இவனைப் போன்று வார்த்தையால்- கசக்குதற்கும் பொறாத மிருதுத் தன்மை உடையவள்- இப்படிப் பட்ட உனக்கு ஒத்த அழகினை உடையளாய்- மலர்ப் பாவைக்கு அன்பா – மலரில் மணத்தை வடித்து வகுத்தால் போலே -வடிவை ஆக்கினால் போலே –இருக்கிற பிராட்டிக்கு அன்பனே உனக்கு ஏற்கும் கோலம் -என்று-அவ் அழகினை இங்கே ஏறிடுகிறார் -நியாயாதிதேசம் – அதிதேசம் = ஏறிடுதல் ஸ்வரூப அதிதேசம் இல்லை இங்கு -முற்றுவமை இல்லை- நியாய அதிதேசம் -அது போன்று இது -சிறப்புடைத்து – காயம் பூ பொருந்தாதே ஹிரண்ய வர்ணை அன்றோ -அதனால் பெருமை பொருந்தும் -அவனைப் போன்ற அழகு உடையவள் என்றபடி — கோலம் மலர்ப் பாவைக்கு அன்பா -என் அன்பேயோ- அவள் பக்கல் அன்புடையவன் -என்று தோற்றி இரா நின்றது- தம் பக்கல் -அன்பு என்றும் -அது உடையவன் என்றும்-தெரிக்க போகிறது இல்லை – ஞானத்தை உடையவனை ஞானம் என்ற சொல்லால் கூறுவது போன்று- தத் குண சாரத்வாத் து தத் வ்யபதேச ப்ராஜ்ஞவத் -சாரீரக மீமாம்சை-2-2-20- ஞானத்தை முக்கிய குணத்தை உடையவன் ஆகையாலே ஜீவன் ஞானம் என்று இறைவனைப் போன்று கூறப்படுகிறான் – ——————————————————————————————————————- கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக் கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7- ஆச்ரித ரக்ஷகனான உன்னை பெற்று வைத்து இனி விடுவேனோ -வராஹ நாயனாரை பெற்றதும் – கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ-வடிவு அழகு -போக்யத்தை-உடைய பிராட்டிக்கு உகப்பான வைத்தாலே ஏன் பாக்கள் அதி பிறாவண்யம் -அந்தப்புர பரிகாரம் என்பதால் நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்-கடலில் -நீல ரத்ன கிரி -சந்திரர்கள் ஒட்டி -கோரைப் பற்கள் சந்திரர்கள் -அழுக்கு போலே பூமா தேவி ஒட்டிக் கொண்டு கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் வி லக்ஷணமான வடிவை -ஸ்ரீ பூ வராகன் ஸ்ரீ மூக்ஷணம் -அத்விதீயமான -மஹா வராஹா பெரும் கேழலார் -புண்டரீகம் நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார் -விஷயீ கரிக்க தேடி ஆழ்வாரை பிடித்து -எங்கும் பக்க நோக்கு அறியான் பைம் தாமரைக்கு கண்ணன் நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ–இறுதி இனி -வராஹ அவதாரம் சொல்லி நியமிக்கிறார் -ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே திரு விருத்தத்திலும் -நிகமித்தார் பூமியை பிரளயத்தில் புக்கு முழுகி எடுத்து திருமுடியில் வைத்து -இத்தால் சம்சாரத்தில் இருந்து என்னை எடுத்துக் கொண்ட சம்சார ஆர்ணவம் -ஸூ சிப்பிக்கவே இந்த திருவவதாரம் – உன் வடிவில் நிழலீட்டாலே -நீலக் கடல் -பாற் கடல் -ஸ்ரீ தேவிக்காக -நீல ரத்னங்கள் உள்ள கடல் -நீல மூலிகைகள் இருந்து நீலம் என்றுமாம் மூன்றாவது இத்திரு -அருமை தொழில் செய்து ஆஸ்ரிதரை ரஷித்தவனே -புருஷகார பூர்வகமாக எனக்கு நல்லையாய் -உன்ன பெற்று லபித்து க்கை புகுந்த பின்பு நழுவ விடுவேனோ நான் பெரிய பிராட்டியாரை சார்ந்தவன் ஆகையால்-பிரளயத்தில் மூழ்கின ஸ்ரீ பூமிப் பிராட்டியாரை எடுத்து அவளோடு கலந்தால் போலேயும்- கடலைக் கடைந்து பெரிய பிராட்டியாரோடு கலந்தால் போலேயும்-பிறவிக் கடலில் மூழ்கின என்னை எடுத்து என்னோடு கலந்தருளி- என் பக்கல் மிக்க காதலைச் செய்த-உன்னைப் பெற்று வைத்து இனி தப்ப விடுவேனோ-என்கிறார்- கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ – பிராட்டி பக்கல் உள்ள அன்பின் மிகுதியாலே-அந்த அன்பே காரணமாக அவளால் அங்கீ கரிக்கப் பட்ட- என் பக்கலிலே மிக்க அன்புள்ளவன் ஆனவனே- ரிஷிகளை ரக்ஷித்து அன்றோ பிராட்டியால் ஆலிங்கனம் பெற்றார் பெருமாள் பட்டர் தம்முடைய அந்திம தசையில் அருளிச் செய்த வார்த்தை- பெரிய பிராட்டியார்க்கு அன்பன் ஆகையாலே-அவளால் அங்கீ கரிக்கப் பட்ட நமக்கும் அன்பனாம் என்று இப்பாட்டினை-நம்முடையார் த்வயத்தின் அர்த்தத்தோடு அனுசந்திப்பார்கள் -என்பது -என்று ஜீயருக்கு அருளிச் செய்தார் – திரு மால் என்னை ஆளும் மால் -10-7-5-என்னும்படியே- தம்முடைய அன்புக்கு அடி சொல்லுகிறார் –அந்தப்புரத்தைச் சார்ந்தவன் அன்றோ –என் அன்புக்கு அடி இல்லையோ – திருவுக்கு பரிகரமான என்னிடமும் மால் -மால் நடுவில் -திரு என்னை இரண்டு பக்கமும் – திரு மால் இடம் பேசி இருவருமாக என்னை ஆள்வார்கள் -கைங்கர்யம் கொள்ளுவார்கள் -என்றபடி – நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக் – ஒரு நீல மலை-இரண்டு பிறையைக் கவ்வி-நிமிர்ந்தால் போலே- பிறையில் மறுவைப் போன்றதாயிற்று -திரு எயிற்றில் கிடந்த பூமி – கோல வராகம் – மாசு உடம்பில் நீர் வாரா நின்ற நிலை அன்றோ-இவருக்கு ஆலத்தி வழிக்க விஷயம் ஆயிற்று- அன்றிக்கே- பாசி தூரத்து கிடந்த பார் மகள் -என்கிறபடியே- காதலி அழுக்கோடு இருக்க-தாமான படியே வருவார் ஆகில்-காதலுக்கு குறைவாம் இத்தனை அன்றோ –என்னுதல்- அவன் அழிவுக்கு இட்ட வடிவிற்கே அன்றோ இவர் ஆலத்தி வழிக்கிறது- மாசுடம்பின் நீர் வாரா மானமிலா பன்றி இவர் கண்ணுக்கு கோலா வராஹம் -ஆலத்தி எடுக்கும் படி – பிரணயித்துவுக்கு நமஸ்காரமாகுமே அலங்கரித்து வந்தால் -தாம் தாமான படியில் வரக் கூடாதே -ராஸிக்யம் பூர்த்தி – ஒன்றாய் – வராகத்த்தின் இனத்தோடு சேர்ந்ததாய் -என்னுதல்- மூன்று உலகங்களையும் கண் செறி இட்டால் போலே -மறைத்தால் போலே-விம்ம வளர்ந்த படியாலே ஒப்பு அற்றதாய் -என்னுதல்- நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் – பிரளயம் கொண்ட பூமியை அண்டத்தின் உடைய சுவரிலே புக்கு-திரு எயிற்றிலே கொண்டு எடுத்தால் போலே- பிறவிக் கடலிலே மூழ்கின என்னை எடுத்தவனே – நீலக் கடல் கடைந்தாய் – பிராட்டியைப் பெறுகைக்காக-கடலைக் கடைந்தவனே-கடைகிறவனுடைய நிழலீட்டாலே-நீலக் கடல் -என்கிறார் – அன்றிக்கே – எல்லா மருந்துகளையும் போகடுகையாலே வந்த-நிற வேறுபாட்டாலே சொல்லுகிறார் -என்னவுமாம்- அன்றிக்கே- நீலம் -எனபது நீல இரத்தினத்தைச் சொல்லிற்றாய்-அவை மிக்கு இருந்த காரணத்தால்- இரத்தினாகரம் -என்ற பெயரை நோக்கி கூறுகின்றார் என்னவுமாம் – உன்னைப் பெற்று இனி போக்குவனோ – ஸ்ரீ பூமிப் பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்- பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்-என்னை பெறுகைக்கு செய்து- என்னைக் கிட்டப் பெற்ற பின்பு-உன்னைப் போக விடுவேனோ- நீ செய்த செயலின் பலத்தால் சேர்ந்த நான்-கைப்பட்ட செல்வத்தை விடத் தக்கவனோ- ————————————————————————————————- பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய் முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8- துர் அவகமானான் அறிய அறிய ஸர்வதாத்மா மறைந்து இருந்து தாரகனாக உன்னைப் பெட்ரா பின்பு க்கை விடுவேனோ பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்-புண்ய பாபங்களை நிர்வாகன்-கர்மாவைஷ்யனான ஆத்மாவுக்கு நியாந்தா -கர்மங்களால் உண்டான சுக துக்கம் பிரதனானாக முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு-அடக்கி உள்ள மூல பிரக்ருதியை பிரகாரமாக கொண்டு -கர்மா நிபந்தமாக புகுந்த முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-வித்து தனி வித்து முதல் வித்து -ஸூ சங்கல்பத்தால் ஸ்வ தந்த்ரனாக சங்கல்ப ஆதீனத்தால் பிரவேசித்து -அறிய ஒண்ணாதபடி அதி சூஷ்மமாக எனக்கு அடைய பிரதம ஸூ ஹ்ருத் நீயே தானே -அத்விதீய காரணம் -வித்து -காரணம் -தனி அத்விதீயம் – எனக்கு நிரூபணம் அபரிச்சின்ன பிராண பூதன்-மூன்றையும் சேர்த்து -தனி -பேர் உயிர் -மூன்றையும் உவமானம் இல்லாமல் – -அபரிச்சின்ன -பிராணன் -உன்னை விடில் முடியும் அவஸ்தை பிறந்த பின்பு விட முடியுமோ – ஓ பயத்தால் -துக்கம் -விட்டால் என்ன செய்வேன் – சிறிதும் அறிய முடியாதவனான உன்னை-பெற்று வைத்து-இனி விட உபாயம் -இல்லை-என்கிறார்- பெற்று இனிப் போக்குவேனோ உன்னை – ஓர் அச்சு இல்லாக் காசாய் போகிற்றாகில் போகிறது-என்று இருக்கிறேனோ- அன்றிக்கே-உன்னை நீ அறியாயோ -என்னுதல் மிக மிகத் தாழ்ந்தவனாய் இருந்த எனக்கு-மிகவும் தாரகனான உன்னைப் பெற்று வைத்து- இனி நான் உன்னை விடுவேனோ – என் தனிப் பேர் உயிரை – வரில் போகடேன் -கெடில் தேடேன் -என்று-இருக்கிற ஆத்மாவின் அளவேயோ- இயம் சீதா -ப்ரதீச்ச -பத்ரம் -மேல் விழுந்து அங்கீ கரிக்க வேணும் -என்றார் ஸ்ரீ ஜனக மகாராஜர் – உன்னை -என்றதனை விவரிக்கிறார் -மேல் உலகங்கட்க்கு எல்லாம் ஓர் உயிரேயோ -8-1-5-என்கிறபடியே- எல்லா ஆத்மாக்களுக்கும் ஆத்மாவான உன்னை – பெற்று இனிப் போக்குவேனோ -என்றது -மற்றைய இலாபங்களில் வேறு பாடு-இஹ பார லோக ஐஸ்வர்யம் போலே இல்லையே – என் தனிப் பேர் உயிரை -என்றது தம்மில் வேறுபாடு –கைவல்யத்தில் இருந்து மாறுபாடு – உற்ற இரு வினையாய்- ஆத்மாவைப் பற்றிக் கிடக்கிற நல்வினை தீவினை கட்கு நிர்வாஹகன் ஆனவனே- உன்னை ஒழிய வேறு சில கர்மங்களை-தனித்து இயலும் தன்மையை உடையவனாய்- நினைத்து இருந்தேன் ஆகில் அன்றோ உன்னை விடல் ஆவது – உயிராயப்- நல்வினை தீ வினைகளைச் செய்கிற ஆத்மாவுக்கு-நிர்வாஹகனாய்- அந்த இரு வினைகளைச் செய்கிறவன் தான் உனக்கு உரியவன் அன்றாகில் அன்றோ உன்னை விடலாவது –அனுஷ்டாதாவும் உன் ஆதீனம் — பயன் ஆயவையாய் – அக் கர்மங்களின் உடைய பலத்துக்கு நிர்வாஹகனாய்-நல்வினை தீ வினைகளின் பலன் உன்னை ஒழிய- வேறு சிலரால் கிடைக்கின்றது என்று-இருந்தேன் ஆகில் அன்றோ விடலாவது- முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு- இவை எல்லாம் ஆகிய த்ரை லோக்யம் ஆகிய தூற்றை -அனுஷ்டாதா கர்மம் கர்ம பலன்கள் -பிரகிருதி த்யாஜ்யம் ஆகிய சம்சாரம் உன்னை ஒழிய வேறு இல்லையே – பெரும் தூறு சம்சாரம் புக்க இடமும் போந்த இடமும் தெரியாத படி அன்றோ சம்சாரம் -அறிய முடியாதபடி என்றவாறு – புக்கு -அநாயாசேன தேவரீர் புக்கு – தூறாய் -உபாதான காரணமாக இருந்து உண்டாக்கி -கடல் ஞாலம் செயதேனும் யானே என்னும் – முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ- நீ வியாபியாது இடம் உண்டாகில் அன்றோ விடுவது -வியாப்பியங்கள் அறியாத படி அன்றோ நின்றாய் கண்ணுக்கு விஷயம் ஆனாய் ஆகில் பிழையேனோ -மறைந்து அன்றோ உள்ளாய் அல்லாதாருக்கு வெளியிடாமல் இருந்து என் முதல் தனி வித்து – அறிவித்து அருளி -பிரதம ஸூ ஹ்ருத் நீ அன்றோ – நான் ஓர் அடி விட நின்றேன் ஆகில் ஆறி இருப்பேன் – —————————————————————————————- முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம் முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான் முதல் தனி எங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய் முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–10-10-9- ருசி வளர்ந்ததை யம் – -பிரகார பிரகாரி பாவம் /சரீர சரீரி பாவம் /காரண கார்ய பாவம் நினைவு படுத்தி யும் – ஆர்த்தி துடிப்பையும் – அறிவிக்கிறார் – காரண கார்ய அவஸ்தை -சூஷ்ம ஸ்தூல -உபய அவஸ்தையிலும் -சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம் -பின்ன பிரவ்ருத்தி நிமித்தானாம் -ஒரே இடத்தில் பர்யவசாயம் ப்ரஹ்மம் -ஒன்றே -உன்னை -விசேஷயம்- பிரகாரி பிரதானம் -தத் தத் வியா வ்ருத்தமான-விலக்ஷண ஸ்வரூபம் குணாதிகளை -தனிச் சிறப்பு -உன்னை என்று வந்து கிட்டுவின் முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்-உபாதானம் நிமித்த காரணம் -முதல் நிமித்த -தனி -உபாதான -அபின்ன நிமித்த காரணம் – வியஷ்ட்டி சிருஷ்டியை சொல்லி ஸமஸ்த வஸ்துக்களுக்கு எல்லாம் -பிரதான நிமித்த காரணம் -சஹகாரி நிரபேஷமான உபாதான காரணம் முதல் தனி எங்கும் இங்கும் முழு முற்று உறு-கரந்து வியாபித்து -மஹான் அஹங்காரம் விகாரம் அடைந்து – அண்டத்துக்கு உள்ளும் வெளியிலும் அத்விதீய காரணம் அண்டத்துக்கு அந்தர்கதமாயும் -பூர்ண ஸமஸ்த பதார்த்தங்களில் வியாபித்து -நியாந்தா தாராகம் -அத்விதீய காரணம் வாழ் பாழாய்-பிரகிருதி -/போக மோக்ஷம் இரண்டுக்கும் /வாழ்வதற்கு இடம் கொடுக்கும் பாழ் /விளை நிலம் -மூலப் பிரகிருதி மண்டலம் பிராகிருத பூமிக்கு நியாமகன் முதல் தனி -நியந்த்ருத்வம் -பிரதானம் –போகத்துக்கும் மோக்ஷத்துக்கும் -அபேஷா நிரபேஷமாக தன் பேறாக கொடுப்பவன் – அசித் ஸ்வ பாவ வியாவருத்தியால் -ஸ்வரூப விகாரம் இல்லை -உவமானம் இல்லாமல் சித்தை போலே ஸ்வ பாவக விகாரம் இல்லை – சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ-அவி நாசி ஆத்ம சமஷடிக்கு நிர்வாஹன் -ஆத்மதத்வம் -ஒவ் ஒன்றாய் ஒன்றுக்குள் வியாபிக்கும் அணு தானே ஆத்மா -கோடானு கோடி ஆத்மா -தர்ம பூத ஞானத்தால் பரவி – ஆத்ம வர்க்கத்துக்கு நியாந்தா -பத்து திக்கிலும் ஞானம் -இப்படிப்பட்ட தேவரீரை முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்-ஜெகதாகாரம் அன்றியே -அத்யந்த விலக்ஷணன் -உன்னை உன்னை -நீ யாகிய உன்னை -சேதன அசேதன விசிஷ்டம் நீ குற்றம் தட்டாத உன்னை – ஸ்வரூப ரூப குணங்கள் -பெரும் விடாய் பட்ட நான் என்று வந்து கூடக் கட வேன் – தானி சர்வாணி தத் வபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-86-அவை யாவும் அவனுடைய சரீரம் என்றும் யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய ப்ரதிவி சரீரம் -அந்தர்யாமி ப்ரஹ்மணம்-எவனுக்கு ஆத்மாக்கள் சரீரமோ எவனுக்கு மண் சரீரமோ -என்றும் தத் சர்வம் வை ஹரே தாணு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-38-அது முழுதும் அவனுடைய சரீரம்-என்றும்-சொல்லுகிறபடியே எங்கும் வந்து முகம் காட்டலாம்படி- உலகத்தை உருவமாகக் கொண்டு இருக்கும்-இருப்பைக் காட்டித் தந்தோம் அன்றோ -என்ன- அது உகந்தார்க்கும் உகவாதார்க்கும் பொதுவாய் இருந்தது- வேறு உருவம் இல்லையாகில் அன்றோ-அதுவே அமையும்-என்று ஆறி இருக்கலாவது- பரம பதத்தில் வேறுபாட்டோடு கூடியதாய்-எல்லாம் நிறைந்ததாய் இருக்கும் இருப்பை-காண வேண்டும் –என்கிறார் – முழு மூ உலகு ஆதிக்கு எல்லாம் முதல் தனி வித்தேயோ – மூன்று உலகங்கள் தொடக்கமான-எல்லாவற்றுக்கும்-மூன்று விதக் காரணங்களும் ஆனவனே- இதனால் -காப்பாற்ற என்று புக்கால்-காப்பாட்ட படுகின்ற பொருள்களின்-துணை வேண்டாதவனே -என்பதனைத் தெரிவித்த படி – முதல் -நிமித்த காரணம்- தனி -துணைக் காரணம்- வித்து -முதல் காரணம்- முதல் தனி உன்னை – முதன்மை பெற்றவனாய்-ஒப்பற்றவனாய்-குணம் விபூதி முதலியவற்றால் நிறைந்து இருக்கின்ற நீயான உன்னை- தனி -சஹகாரி வேண்டாதவன் – ஸூய ரக்ஷணம் – அவனது உணவை பறித்தால் போலே – எனை நாள் வந்து கூடுவன் நான் – என்று வந்து கூடுவேன்- அவன் கொடுத்த ஞானத்தாலே ஸ்வரூபத்தை-உணர்ந்தாருக்கு- தன்னை பிராட்டிமாரோடே சேர்ந்து பேசலாம் படியாய் இருக்கையால் -வந்து கூடுவேன் – -என்கிறார்- நான் -பரம பதத்தில் சுவடு அறிந்த நான் -என்றது- உனக்கு உரியதான விக்ரகத்தை காண ஆசைப் பட்ட நான் -என்றபடி- முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உரு வாழ் பாழ் ஆய் – முதன்மை பெற்றதாய்-உபமானம் இல்லாததாய்-அங்கும் இங்குமான மகத்து முதலான தத்வங்கள்-முழுவதிலும் எங்கும் ஒக்கப் பரந்து- ஆத்மாக்களுக்கு போகங்களையும் மோஷத்தையும்-விளைக்கும் விலை நிலமாக-இருக்கிற மூலப் பகுத்க்கு ஆத்மா ஆனவனே- உன்னை உன்னை -சேதன அசேதன விசிஷ்டனான உன்னை – உபய விபூதி நாதத்வம் -உபய லிங்க வைசிஷ்ட்யம் -அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை ஏக நாதன் – நடுவில் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் எழுந்து அருள-மீண்டும் அவதாரிகையும்-வியாக்யானமும் அருளுகிறார் – மூன்று ஸ்ரீ யபதி படி -ஆரம்பத்திலும் இங்கே போலே பலர் வர மீண்டும் அருளிச் செய்தால் போலே -இங்கும் வந்தார்கள் சாத்துமுறை அன்று — முதல் தனி வித்தேயோ – முதல் -நிமித்த காரணம்- தனி -துணைக் காரணம்- வித்து -முதல் காரணம்- முழு மூ உலகு ஆதிக்கு எல்லாம் – மூ உலகு என்கையாலே- கிருதகம்- அக்ருதகம்-கிருதகாகிருதகம் – என்று-மூன்று வகைப்பட்ட அண்டத்தைச் சொல்லுகிறது- கல்பாந்தக காலத்தில் அழிவதும் அழியாததும் -அழிந்தும் அழியாமலும் இருப்பதும் –மகர் லோகம் -நெருப்பால் கதுவப் படும் -மேலே போவார்களாம் – அண்டாநாம் து சஹாஸ்ரானாம் சஹாஸ்ராணி அயுதாநிச-ஈத்ருசாநாம் ததா தத்ர கோடி கோடி சதானி ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-7-27 அந்த மூலப் பகுதியில் ஆயிரம் அண்டங்கள் உடைய ஆயிரமும்-பதினாயிரமும்- இப்படிப் பட்ட அண்டங்கள் பல கொடிகள் இருக்கின்றன -என்று சொல்லப் பட்ட- எல்லை இல்லாத அண்டங்களைச் சொல்லுகிறது -ஆதி -என்கையாலே- இவ் வண்டங்கட்கு காரணமான ஆவரணங்களை-மதிள்களைச் சொல்லுகிறது- ஆக மூன்று உலகங்கள் தொடக்கமான ஓன்று ஒழியாமல் எல்லாவற்றுக்கும்-மூன்று வித காரணங்களும் -ஆனவனே என்றபடி- முதல் தனி உன்னை – மேலே நீயான உன்னை -உலக உருவான உன்னை–இனி உன்னை உன்னை -பரம பதத்தில் உள்ள-முதல்வனாய்- ஒப்பு இன்றிக்கே-குணம் விபூதி முதலியவற்றால் நிறைந்த வனாய்-உலகத்தை உருவகமாக கொண்டு இருக்கிற உன்னை- ஜெகதாகாரமாக இருப்பைச் சொல்லி மேலே அசாதாரண விக்ரக விசிஷ்டனை அருளிச் செய்கிறார் – ஆக- இத்துணையும் லீலா விபூதியோடு கூடி இருக்கிற இருப்பை சொல்லிற்று – நித்ய சூரிகளுக்கு இனியனாய் இருக்கும் வடிவு அழகினை-கண்டு அனுபவிக்க வேண்டும் என்கிறார் மேல்- உன்னை- பரமபதத்தில் எழுந்து அருளி இருக்கும் நிலையைச் சொல்லுகிறது- உன்னை என்ற அளவில் பரமபதத்தில் எழுந்து அருளி இருக்கும் நிலையைக் காட்டுமோ என்னில் –காட்டும்- ஒண் தொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்க கண்ட சதிர் -4-9-10-என்கிறபடியே- அவனையும் அவளையும் சொல்லவே பரமபதமும் அடங்கிற்றே அன்றோ– ஸ்ரீ தேவி பூமா தேவி நடுவில் நின்ற நிலையை அன்றோ இந்த பதிகத்தில் சொல்லிக் கொண்டே வருகிறார் – உன்னை முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ –8-1-1-என்று ஐயுறும்படி இருக்கும் திரு முடியும்- மாயன் குழல் –7-7-9-என்னும்படியான திருக் குழலும்- கோளிளைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்- கோளிளைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்- கோளிளை யாவுடைய கொழும் சோதி வட்டம் கொல் -7-7-8-என்னும்படியான-அழகிய திருமுகமும்- நாய்ச்சிமார் உடைய திருக் கரங்களின் ஆபரணங்களால் அடையாளம் செய்யப் பட்டதாய்-கனக வளையா முத்ரா – கமுகினுடைய இளம் கழுத்தையும் சங்கையும் ஒத்ததாய் இருந்துள்ள திருக் கழுத்தும்- கற்பகம் கா அன்ன நற் பல தோள்களும் -6-5-8- பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமாக -என்றும் அனுபவித்துக் கொண்டு- இருக்கச் செய்தேயும் அகலகில்லேன் -என்று அவள் பிச்சேற்றும் படி -லஷ்மீ லலித க்ருஹம் -கௌஸ்துப ஸ்வஸ்தி தீபம் — குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்பும் -1-8-10- உள்ளத்துள் நின்று நிலாவுகின்றதே -அமலனாதி பிரான் -4–என்கிறபடியே நித்யர் முக்தர் இவர்கள் உடைய உள்ளங்களிலே அழகு செண்டு ஏறுகிற -வையாளி கண்டு அருளும் -திரு உதர பந்தமும்- வனப்பாகிற வாரிதி இத்தலப் பட்டு சுளித்தால் போல் இருக்கிற திரு உந்தியும்-தாமோதரத்வம் பிரதம தர விபூஷணம் — ஒரு அடை மொழி இட வேண்டாதே -அல்குலும் -5-5-8- என்னும்படி இருக்கிற அல்குலும் -சிற்றிடையும்- மாலைக் காலத்தில் தோன்றுகிற செந் நிறத்தாலே அழகு பெற்ற ஆகாசம் போலே இருக்க- திரு அரை பூத்தால் போல் இருக்கிற -அந்தி போல் நிறத்தாடையும் – வாழை மரம் முதலானவற்றைப் போன்ற கம்பீரமான திருத் தொடைகளும்- தாமரை நாளம் போலே -பிராட்டி மார் தீண்டுவதால் மயிர் செறித்து-முட்களோடு கூடிய திருக் கணைக் கால்களும்- சங்கு-சக்கரம் கற்பகம் கொடிதாமரை அங்குஜம் வஜ்ரம் ஆகிய-அடையாளம் பண்ணப் பட்டதாய் – நாய்ச்சிமாரும் கூட கூசித் தொட வேண்டும்படி மெல்லடியாக – தேனே மலரும் -என்கிறபடி எல்லை இல்லாத இனியவான திருவடிகளையும் உடையையாய்- ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல வீற்று இருந்து அருளுகிற உன்னை – எனை நாள் வந்து கூடுவன்- என்று வந்து கிட்டக் கடவேன்- மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே பிராட்டிமாரைப் போன்று பேசலாய் இருக்கிறபடி- நான்- அவ் வடிவு அழகினைக் காண ஆசைப் பட்ட நான்- முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ பாழ் ஆய் – முதன்மை பெற்றதாய்-உபமானம் இல்லாததாய்- அங்கும் இங்குமான மகத் தத்துவங்கள் முழுவதிலும் பரந்து- மக்களுக்கு போகங்களையும் மோஷத்தையும் விளைத்துக் கொள்ளுகைக்கு ஈடான-கருநிலமாய் உள்ள மூலப் பகுதிக்கு ஆத்மாவாய்- ஆய் -சரீர ஆத்மா காரண கார்ய நிபந்தமான சாமா நாதி கரண்யம் – முதல்- மூலப் பகுதியை நோக்க -தான் முதன்மை பெற்றதாய்-நியமிக்க கூடியதாய்- தனி- உபமானம் இல்லாததாய்- சூழ்ந்து- மூலப் பகுதியிலும் மூலப் பகுதியால் ஆன பொருள்களிலும் பரந்து – அகன்று ஆழ்ந்து உயர்ந்த – பரந்து இருக்கும் இடத்தில்-ஞானத்தாலே பத்து திக்குகளிலும் பரந்த- முடுவிலீயோ – அளவிட்டு அறிய முடியாததான-ஆத்மா தத்வத்துக்கு நிர்வாஹகன் ஆனவனே- முடிவு -எனபது அழிவினைக் குறிப்பதாகக் கொண்டு- சரீரத்தை போன்று அழிந்து போவது அன்றிக்கே-என்றும் உள்ளதான ஆத்ம தத்துவம் -என்னவுமாம் – முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்-முழு உலகு ஆதிக்கு எல்லாம் முதல் தனி வித்தாய்- முதல் தனிச் சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவிலியாய்-இருக்கிற முதல் தனி உன்னைக் கண்டேன்- பரம பதத்தில் நித்ய சூரிகளுக்கு இனியனாய் இருக்கிற-உன்னை எனை நாள் வந்து கூடுவேன் நான்- காரண கார்யங்கள் ஆன இரண்டு நிலைகளை உடைய-சித்துக்கும் அசித்துக்கும் நிர்வாஹகனாய்- இருக்கிற இருப்பைக் காட்டி அனுபவிப்பித்த இவ்வளவும் போராது- உனக்கே உரிய விக்ரகத்தை உடையவனாய்-பரம பதத்தில் இருக்கும் இருப்பைக் கண்டு-அனுபவிக்க வேண்டும் -என்றதாயிற்று- ——————————————————————————————— சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10- தத்வ த்ரயத்துக்கும் அவ்வருகான-கபளீ கரம் பண்ணும் படி -அபி நிவேசம் -அவா -காதல் பக்தி -சர்வ பிரகார பரி பூர்ணனாக கொண்டு ஸம்ஸலேஷித்து சாயுஜ்யம் – சோஸ்ச்னுதே ஸர்வான் காமான் – சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ-பிரகிருதி -அகன்று -ஆழ்ந்து உயர்ந்து ஆகையால் சூழ்ந்து -விஸ்தீர்ணமாய் வியாபித்து -பத்து திக்கிலும் சந்நிஹிதமாய்-பிரக்ருதிக்கு கீழ் எல்லை இல்லை உத்பத்தி விநாச ரஹிதம் நித்யம் -தத்வ த்ரயமும் நித்யம் -நிலை மாறும் அவஸ்தா பேதம் -ஸமஸ்த காரியங்களுக்கும் அவ்வருகு பெரும் -இவற்றை பிறப்பிக்கும் – அபரிச்சின்னமாய் போக மோக்ஷங்கள் விளை நிலம் – சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ-தத் ஞானத்தால் வியாபித்து மேலாய் ஸ்வயம் பிரகாசத்தால் – அணு -சூஷ்மம் -ஞானத்தால் பெருத்ததால் -சூழ்ந்து -நல்ல ஞானம் உடைய மலர் விகாசம் அடைந்த சோதி ஞான வடிவம் -ஏக ரூபாத்வாதிகளால் மேலால் -ஞான பிரபையை உடைய -ஆத்மதத்வம் பிரகாரமாக கொண்டு சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ-கல்யாண குணங்களால் உஜ்வலமான-சுடர் ஞான இன்பம் – ஞானம் ஆனந்தம் கட்டடங்க உணர் முழு நலம் முழு உணர்வு முழு நலம் -முன்பே பார்த்தோம் -அத்தையே ஞானம் இன்பம் இங்கும் -சுடர் வளர்ந்து கொண்டே -லக்ஷணம் ஸ்வரூபம் – ஆத்மா ஞானத்தால் -ப்ரஹ்மம் ஞானம் ஆனந்தங்களாலே ஆக்கப் பட்டது – சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே-தத்வ த்ரயங்களையும் வளைத்துக் கொண்டு அதுக்கு அவ்வருகு -சமிக்கும் படி அவன் -தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்கள் திருமேனி விபூஷணம் மஹிஷீ பரிஜன ஸ்தான விசிஷ்டானாய் கொண்டு பரி பூர்ணனாய் -சூழ்ந்து – பரஞ்சோதி -வடிவுடன் -ஆழ்வார் காதல் தனக்கு உள்ளே ஆகும் படி சாயுஜ்யம் அளித்து – சேர்ந்து இருந்து குணானுபவம் பண்ணும் பேறு– ஓ அதிசயம் ஒவ் ஒரு இடத்திலும் அடி தோறும் ஹ்ருஷ்டர் ஆகிறார் -பேர் ஆனந்தம் பெற்றார் – எம்பெருமானுக்கு இவர் விரும்பிய கார்யத்தை செய்து அல்லது நிற்க ஒண்ணாத படி- பெரிய பிராட்டியார் ஆணை இட்டுத் தடுத்து-மிகப் பெரிய துன்பத்தோடு கூப்பிட்டு-இவர் வேண்டிக் கொண்ட படியே- எல்லா வற்றாலும் நிறைந்தவனாய் கொண்டு வந்து கலந்து அருளக் கண்டு- அளவிட முடியாததான மூலப் பகுதி தத்வத்தாலும்-ஆத்ம தத்வத்தாலும்- உன்னுடைய நினைவின் உருவமான ஞானத்திலும்-பெரியதான என் விடாய் எல்லாம் தீர-வந்து -என்னோடு -கலந்தாய்- என்னுடைய விருப்பமும் ஒருபடி முடியப் பெற்றது-என்கிறார் – இனி இல்லை -என்னும்படி என்னை விடாய்ப்பித்து-அதற்கு அவ்வருகான விடாயை உடையனாய்க் கொண்டு-என்னோடு வந்து கலந்து- உன்னுடைய விடாயும் ஒரு படி நீங்கியதே -என்கிறார்-என்னவுமாம் – அங்கே பாரதம் ஆரோப்ய முனின பரிஷச்வஜே -யுத்தம் -180-39-பரதனை மடியிலே வைத்து சந்தோஷத்துடன் தழுவினார் -என்னும்படியே- க்ருதக்ருத்ய ததா ராமா விஜுரஹ பிரதமோதக — துயர் ஆறு சுடர் அடி -அறுக்கும் அறும் சுடர் அடி -இரண்டு நிர்வாகம் போலே – ஆழ்வார் விடாயைத் தீர்த்து அவன் விடாயும் தீர பெற்றான் என்று நிகமிக்கிறார் – தம்முடைய அபி நிவேசம் பெருத்த படியை இவற்றின் பெருமையை சொல்லி –ஈஸ்வரனை ஒழிய ப்ருதக் ஸ்திதி இல்லையே அப்ரஹமாதமக தத்வம் இல்லையே -அதனால் இவற்றை சொல்கிறார் அவனையே சொல்லலாம் படி – சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ- தன்னிடத்தில் உண்டான மகத்து முதலான தத்துவங்களை-பத்து திக்கிலும் புக்கு-எங்கும் ஒக்கப் பரந்து- என்றும் உள்ளதாய் -அளவிட முடியாததாய்- மக்களுக்கு புருஷார்த்தத்தை விளைத்துக் கொள்ளலாம் நிலமான-மூலப் பகுதிக்கு ஆத்மா ஆனவனே – சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ- அதற்குள்ளும் பரந்து-அதனைக் காட்டிலும் பெரியதாய்-அதனை ஏவுகின்றது ஆகையாலே மேலாய்- விகாரம் முதலானவைகள் இல்லாமையாலே சிறந்ததாய்- மலர்ந்த ஒளி உருவமான ஆத்மா வஸ்துவுக்கும்-ஆத்மா ஆனவனே – பேறு பெறுகிற இப்பொழுது-மூலப் பிரக்ருதியையும் ஆத்மாவையும் சொல்லுகிறது- கீதையில் ஆத்மாவை -சர்வ கதம் -வெல்வேறு ஜீவாத்மாக்கள் -மூலம் வியாப்தி -என்றபடி – தம்முடைய காதல் பெரியவற்றிலும் பெரியது என்கைக்காக – அவற்றுக்கும் ஈஸ்வரனை ஒழிய-தோன்றுதல் நிலைத்தல் இல்லாமையாலே அவ்வளவும் சொல்லுகிறது – சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ – சுடர் இன்ப ஞானமேயோ -ஞானத்துக்கு இருப்பிடம் ஆனவனே- சுடர் -சங்கல்ப ரூபமான -தடை இல்லாததால் சுடர் என்கிறார்- அவை இரண்டினையும் தன்னுள் அடக்கிக் கொண்டு-அவற்றுக்கு நிர்வாஹகனான-நினைவின் உருவகமாய்- சுகத்தின் உருவமான ஞானத்தை உடையவனே என்று-நினைவின் உருவமான ஞானத்தினைச் சொல்லுதல்- அன்றிக்கே சுடர் ஞான இன்பமேயோ என்று-ஒளி உருவனும் -இன்பத்தின் உருவனும் ஆனவனே -என்று எம்பெருமானைச் சொல்லுதல் – அனுகூல ஞானமே ஆனந்தம் – சூழ்ந்து – மேலே கூறிய மூன்று தத்துவங்களையும்-விளாக்குலை கொண்டு – அதனில் பெரிய – அவை குளப்படியாம் படி பெரிதான – என் அவா – என்னுடைய காதலை அறச் சூழ்ந்தாயே- அதனிலும் பெரிய உன் காதலைக் காட்டி வந்து கலந்தாயே –என்னுடைய கூப்பீடும் ஒருபடி ஒவும்படி பண்ணிற்றே- பரதனை மடியில் ஏற்றுக் கொண்டு மகிச்சி உற்றவராய் தழுவினார் -என்கிறபடியே-மீண்டு புகுந்து- ஸ்ரீ பரத ஆழ்வானை மடியிலே வைத்து-உச்சியை மோந்து உகந்து-அணைத்தால் போலே -ஆயிற்று- இவருடைய விடாய் கெடும்படி கலந்தது – அற -வஸ்து அல்பம் -என்கிறார் அபாவம் என்கிறார் இல்லை -சங்கல்பம் தடுக்க முடியாத ஞானம் – -அனுகூலமானதால் ஆனந்தம் -ஆஸ்ரயம் ஞானமேயோ-ஞானத்துக்கு ஆஸ்ரயம் ஞாதா என்றவாறு – மேரு மலை மேல் கீழே உள்ள கடுகு பார்த்து அல்பம் என்னுமா போலே -அல்பத்தவம் என்றவாறு – ——————————————————————————————————- அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல் அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11- பல அவாப்த்தி பிரகாரம் பிரதிபாதித்துக் கொண்டு -வீடு பெட்ரா -பலமாக ஞானம் உடையவர் ஜென்ம உதகர்ஷம் அருளிச் செய்கிறார் உயர்ந்தே பிறந்தார் என்றவாறு -உயர்ந்தவர்களாகவே பிறப்பார்கள் அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி-ஆச்ரித அபி நிவேசம் -தீரும் படி நிரவதிக சம்ச்லேஷ அனுபவம் விஸ்லேஷ துக்கம் தீரும் படி – கார்யந்து ஜைமினி -காரணம் தியானிக்க -ஹிரண்ய கர்ப்பம் பூர்வ பஷிதயா சங்கீதா நான்முகன் -ந பிரம்மா ந – இத்யாதி இவர்களும் ஸ்ருஷ்ட்யர் -ஏகோகை நாராயண ஆஸீத் – சைவர் காபாலிகர் பாசுபதர் -அந்தராத்மா பரம ப்ராப்யம் இவனே -கார்ய காரண நிபந்தனை சாமா நாதி கரண்யம் த்வரையாலே கூப்பிட்டு அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்-பிராப்தி சித்தி பெற்று அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த-அதி பரம பக்தி ரூபமான சரம பக்தி பரம பக்தி முடிந்த அவா – அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே-இந்த பத்தும் அனுசந்தித்து -உயர்ந்தே பிறந்தார் அவா அற -மூன்று தத்துவங்களையும் கபளீ கரித்து வஸ்ய புத்தி பண்ணும் படி அவா அறும் படி குணங்களால் அபஹரித்துக் கொண்டு – அர்த்த பஞ்சகம் – ஸ்ரீ யபதி நாராயணன் -சர்வ பிரகார சேஷ பூதனுடைய -உபாயத்வேந பிரவ்ருத்தனாய் -அநிஷ்ட நிவ்ருத்தி -இஷ்ட பிராப்தி மஹா வாக்கியம் -அவாந்தர -ப்ராப்ய பிரம்மா ஸ்வரூபம் -ஆதிகளாய் அர்த்த பஞ்சகம் – முதல் இரண்டு பத்தால் ரக்ஷகத்வம் -போக்யத்வ விசிஷ்டமான சேஷித்வம் -அகாரார்த்தம் அநந்யார்ஹ சேஷ பூதன் -மூன்றாம் நான்காம் பத்தில் ததேக அனுபவம் ததேக பிரிய -மகார்த்தம் இந்த நாலும் -பிரதம அக்ஷரத்தில் சேஷித்வம் சேஷத்வ ஆஸ்ரயம் சொல்லி- அவதாரண உகாரத்தால் சம்பந்தம் அநந்யார்ஹத்வம் -பிரணவ அர்த்தம் சொல்லி – உபாய ஸ்வரூபம் ஐந்தாம் பத்தால் உபாய வரணம் ஆறாம் பத்தால் ஏழாம் பத்தில் விரோதி ஸ்வரூபம் எட்டாம் பத்தில் தத் நிவ்ருத்தி சாப்தமாகவும் ஆர்த்தமாகவும் -நமஸ் அர்த்தம் அருளிச் செய்து –அகங்கார மமகார நிவ்ருத்தி சர்வ வித பந்துத்வ பிரதி சம்பந்தத்வம் ஒன்பதாம் பத்தாம் பத்தில் அருளிச் செய்து -நாராயணாய அர்த்தம் -கைங்கர்ய பிரதிசம்பந்தி -விசிஷ்டமான பல அவாப்த்தி -சரம பதார்த்தம் முதல் பாட்டில் உயர்வற -உயர்நலம் -சங்க்ரஹமான – உத்கீத ப்ரணவம் மாறாடி -பத்து பத்திலும் விரித்து – மீண்டும் சங்க க்ரஹமாக சொல்லி பிரதமத்வத்தில் ஸ்ரீ யபதித்தவ நாராயண -கோலத் திரு மகள் உடன் – -சீல ஸுலப் யாதிகளை சொல்லி கிரியா பாதத்தால் பிரபத்யே -பகவத் கைங்கர்யம் சொல்லி வாக்ய த்வயம் -பின் மூன்று பூர்வ -முதல் மூன்று உத்தர வாக்கியம் –சரணாகத ஸ்வரூபம் விகசித்து அருளினார் தத் இதர தர்மங்களை விட -பரித்யஜ்ய மாம் -உபாய வரணம் – உபாய பூதன் அத்விதீயம் மாம் ஏக்கம் -பிரதிபாதித்து ஸமஸ்த விரோதிகள் நிவ்ருத்தி பல சித்தி நினைப்பித்தன தாதார்த்யம் சரம ஸ்லோகார்த்தம் வீசாதீ கரித்து சர்வ பிரகார சேஷ பூதன் அநந்ய பிரயோஜனம் அநந்ய யாரஹருக்கு -ரகஸ்ய த்ரயமும் நித்ய அனுசந்தேயம் சாத்விக அக்ரேஸருக்கு – நிகமத்தில் அகில ஹேய பிரத்யநீகனாய்-கல்யாண குண ஏக நாதனாய்- ஞான ஆனந்தஙகளே வடிவு உடையவனாய்-உயர்வற உயர்நலம் உடையவனாய்- வனப்பு முதலாயின வற்றுடன் திவ்ய மங்கள விக்ரகத்தை உடையவனாய்- அளவிறந்த திவ்ய ஆபரணங்களை உடையவனாய்- திருமகள் மணமகள் ஆய்மகள் மூவருக்கும் நாயகனாய்- அஸ்தானே பயசங்கை செய்யும் நித்யசூரிகள் -திரு வநந்த ஆழ்வான் -பெரிய திருவடி எப்பொழுதும் அடிமை செய்யும் திருவடித் தாமரைகளை உடையவனாய்- ஸ்ரீ வைகுண்டத்தில் எழுந்து அருளி இருப்பவனாய்-சர்வேஸ்வரனாய்- தன்னாலே ஏவப்படும் பரமன் முதலாயினவர்கட்கும் அந்தராத்மாவாய்- தன்னைக் காண வேண்டும் என்று விடாய் கொண்டு அடைகின்ற அடியவர்கள் விடாய்-தீரக் கலக்கும் தன்மையான எம்பெருமானைக் காண வேண்டும் என்று கூப்பிட்டு- அவனைப் பெற்று துக்கம் அற்றவராய்-எல்லா தடைகளும் நீங்கினவராய்- ஆழ்வாரின் பக்தியின் தூண்டுதலால் பிறந்த-ஆயிரம் திருவாய் மொழியும்-அவற்றில் வைத்துக் கொண்டு- மேலே கூறிய படி அன்றிக்கே பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படி- பரமபக்தியால் பிறந்த அந்தாதியான-இத் திருவாய்மொழி வல்லார்- சம்சாரத்தில் பிறந்து வைத்தே-அயர்வறும் அமரர்களோடு ஒப்பர்-என்கிறார்- அவா அறச் சூழ் அரியை – விரும்பியவற்றை எல்லாம் அருளும் சர்வேஸ்வரனை –தம்முடைய காதல் கெட வந்து கலந்த படியாலே- ஒரு அடைவு கொடாதே அது தன்னையே சொல்கிறார் – அவா அறச் சூழுகையாவது- தன்னைக் காண வேண்டும் என்னும் விடாய் உள்ள-அடியவர்களின் விடாயை தீர கலக்கை – அயனை அரனை அலற்றி- தன்னுடைய ஏவல் ஆள்களான பிரமன் சிவனுக்கும் அந்தராத்மாவானவனை- அயனை அரனை -என்கிற சாமாநாதி கரண்யத்தால்- பிரமன் சிவன் போல்வார் ஈஸ்வரர் ஆவார்களோ என்னும் மக்கள் கொள்ளும் ஐயத்தை அறுக்கிறார்- அவர்களுடைய ஸ்வரூபம் ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி எல்லாம் சர்வேஸ்வரன் அதீனமாய்- இருப்பதாலே அவர்களுக்கு பாரதந்த்ர்யமே ஸ்வரூபம் –தலைவர்களாய் இருக்கும் தன்மை அவர்கள் செயல்கள் காரணமாக வந்த இத்தனை – இச் சாமாநாதி கரண்யத்தை அறியும் தன்மை இன்றியே எளியராய் இருப்பார்-அறியத் தகும் முறையிலே கூறப்படும் வகைகளும் உண்டு- அவை அயனை அரனை அவா அற்று-அரியை அலற்றி-வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் -ஒரு வகை – அயனை அரனை அவா அறச்-சூழ் அரியை அலற்றி-வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் –மற்று ஒரு வகை- அலற்றி அவா அற்று வீடு பெற்று – கூப்பிட்டு அவனைப் பெற்று எல்லா தடைகளும் நீங்கியவர்-ஆகையாலே துக்கம் இல்லாத ஆழ்வார் அருளிச் செய்த- அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரம் – பக்தியின் தூண்டுதலாலே பிறந்த ஆயிரம்- இவருடைய அவா -மைத்ரேய பகவான் ஸ்தானத்திலே நிற்கிறது ஆயிற்று – ஸ்ரீ பராசர பகவான் ஸ்ரீ விஷ்ணு புராணம் அருளியது மைத்ரேய பகவான் தூண்டுதல் போலே – அன்றிக்கே- அவா உபாத்தியாராக நடத்த -நடந்த ஆயிரம் -என்னுதல்- ஆழ்வாருக்கு பிறகு நூறாயிரம் கவிகள் பேரும் உண்டானார்கள்- அவர்கள் கவிகளோடு கடல் ஓசையோடு வாசி அற்று-அவற்றை விட்டு இவற்றைப் பற்றுகைக்கு அடி- இவருடைய காதல் பெருக்கு வழிந்து புறப்பட்ட சொல் ஆகை அன்றோ – -பக்தர்களுக்கு ஹிதமாக-பராங்குசர் அருளிச் செய்தவை – நாவலம் தீவில் கவிகள் எல்லாம் சில நாள் கழியப் பூவலம் தீவது போலவ வல்லார் குருகூர்ப் புலவன் கேவலம் தீம் கரும்பாம் கவி போல் எங்கும் கூவலம் தீம் புனலும் கொள்ளுமே வெள்ளம் கோள் இழைத்தே-சடகோபர் அந்தாதி -58 உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என ஒன்றும் இன்றி விரிக்கும் தொறும் வெறும் பாழாய் விடும் பிறர் புன் கவி மெய் தெரிக்கின்ற கோச் சடகோபன் தன் தெய்வக் கவி புவியில் சுரிக்கின்ற நுண்மணல் ஊற்று ஒக்கும் தொண்டர் சுரத்தலினே -சடகோபர் அந்தாதி -68 முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து தரிக்க ஒண்ணாத படியான-பரம பக்தியால் பிறந்த தாயிற்று-இத் திருவாய்மொழி இந்த அவாவிற்கு உதவிற்றிலன் ஆகில்-ஈஸ்வரனுக்கு சைதன்யம் இன்றிக்கே ஒழியும் – சூழ் விசும்பு அணி முகில் -என்ற திருவாய் மொழிக்கு முன்பு-பர பக்தியாலே சென்றது – சூழ் விசும்பு அணி முகில் -என்ற திருவாய் மொழி -பர ஞானத்தால் சென்றது இத் திருவாய்மொழி -பரம பக்தியாலே – பகவானுடைய திருவருள் பாதியும்-தாங்கள் பாதியுமாக சொல்லுமவர்களுக்கு- சரீரத்தின் முடிவிலே இப் பரபத்தி முதலானவைகள் உண்டாகும்- இவர் அடியிலே மயர்வற மதி நலம் அருளப் பெறுகையாலே-எழுந்து அருளி இருக்கும் போதே உண்டாயின – கர்மத்தாலும் ஞானத்தாலும் உண்டாகின்ற பக்தியினுடைய இடத்திலே- சர்வேஸ்வரனுடைய திருவருள் நிற்க – அது அடியாக பிறந்த-பரபக்தி பர ஞான பரம பக்திகள் அன்றோ இவரது – அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே – இதனை அறிந்தவர்கள்-இவ் உலகத்தில் பிறந்து வைத்தே-நித்ய சூரிகளோடு ஒப்பர் – பிறந்தே உயர்ந்தார் – சர்வேஸ்வரனுடைய அவதாரம் போன்றதாம்-இவர்களுடைய பிறப்பும் – பிறக்க பிறக்க அவனுக்கு உதகர்ஷம் உண்டானாப் போலே -அனுக்ரஹ நிபந்தனம் சர்வேஸ்வரன் அவதாரம் — அவா -சாமான்யம் -தத் தத் அதிகாரி அனுகுணமாக -உண்டே – மோக்ஷம் பெற அவா -என்னால் முமுஷுவாக ஆழ்வாருக்கு அயன் அரன் போல்வாருக்கு மோக்ஷம் அபேக்ஷை இல்லையே வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதி ஆபத் விமோசனம் அவா அவர்களுக்கு போக்கி அருளினான் – ஸூ விபூதி பூதர்-அவர்களுக்கு பார தந்தர்யம் சொல்வது -சரீரமாக இருந்து -பிரகாரத்தால் – சகல அபேக்ஷித பிரதன்-ஸம்ஸலேஷிக்கும் ஹரி – விஸ்லேஷ துக்கம் அபகரிக்கும் ஹரி அவா அறச் சூழ் அரி -நாராயணன் என்னால் -இதுவே நிரூபணம் – அரன் அயன் இவர்கள் இடம் அவா இல்லாமல் அரியை அலற்றி -என்றுமாம் ஸ்ரீ மைத்ரேயர் கேட்க கேட்க சொன்னது போலே ஆழ்வாருக்கு பக்தி உந்த அருளிச் செய்கிறார் என்றவாறு – பக்தி பூர்வகமாக பிறந்த பிரபந்தம் -பரமபக்தி அளவும் -வேதத்துக்கும் பரிக்ரகம் கிடைத்ததே ஆழ்வார் வாயனவாய் ஆனதால் பொற்குடம் ஆனதே சர்வரும் அனுபவிக்கும் படி – ————————————————————————————————————- திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தத் தர்ச நஞ்ச மனசையைவ ஸஷுஸா தைவ இதி பக்த்யாதயா பரமயா ஸூ அபீஷ்டம் அச்யுதபாதம்- நச புன பார்த்ததே மாந்த்யம் பத்தமாஞ்ஞாஜாய பகவதா பரிக்ருதயா மாந்த்யம் மாந்தத்தன்மை போக்க திரு ஆணை

ஆச்சாரயோதயா பந்தாதி த்ராவிட ஆநாயாயம் சங்கதி அப்யதா து ஆச்சார்யா து அபிராம வராமர் வராஹயத்

—————————————————————————————— திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் – ப்ரஹ்மே ச அந்தர் பிரவேசத் வாத் ஜல நிதி சுதயா ஸந்நிரோதபவ்ய பாவாத் திவ்ய ஸ்ரீ விக்ரஹத்வாத் அகில தனு தயா அத்ருப்த்ய பீயூஷா பாவாத் பத்மா பந்துத்வாத் பூம் உத்தரணாத் புண்ய பாப ஈஸி தத்வாத் முக்தேகே தாதா அனுபாவாத்யாத் சடஜித் முக்திமான – 1–ப்ரஹ்மே ச அந்தர் பிரவேசத் வாத்–முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா 2–ஜல நிதி சுதயா -ஸந்நிரோதபவ்ய பாவாத் –மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய் 3–திவ்ய ஸ்ரீ விக்ரஹத்வாத்–என் பொல்லாக் கருமாணிக்கமே ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் 4–அகில தனு தயா–உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ 5–அத்ருப்த்ய பீயூஷா பாவாத்–தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே 6–பத்மா பந்துத்வாத்–உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ 7–பூம் உத்தரணாத்–கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ 8–புண்ய பாப ஈஸி தத்வாத்–உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய் 9-முக்தேகே தாதா அனுபாவாத்யாத்–முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம் முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான் 10-சடஜித் முக்திமான – சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே– அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் ——- ஏவம் ஸ்வாநாம் கதிம் வியத்வஜ துரித ஹராஸ்தான சங்கார்ஹ ராகம் சுப்ராபம் பக்தி பாஜாம் பஹுவித போஜன ப்ரக்ரியாம் ஸ்ரீ சடாரி தீவ்ரோ த்யோகம் ஸ்வ தானே ஸ்வ ஜன தனு க்ருதார்த்யாதரம் பிராஹ காந்தே ஸ்வேச்சா துஷ்டாம் சுக அர்ச்சீர் முகாஸ் சரணி முக்தாம் மோஷாதம் முக்த போக்யம் –ரத்னாவளி –124- அவனே அர்ச்சிராதி வழித் துணை ஆப்தன் ———— இத்தம் சேவ்யம் ஸூ போக்யம் ஸூபாஸ் உபகதனும் சர்வ போக்ய ப்ரக்ருஷ்தே ஸ்ரேயஸ் தத ஹேது பூதம் பிரபதன சுலபம் ஸ்வ ஆஸ்ரித அநிஷ்ட ஜிஷ்ணும் பக்த சந்த அநு க்ருதம் நிருபாதிக ஸூ ஹ்ருதம் சத் பத அவ்யய ஸஹாயம் ஸ்ரீ சம் பிராஹ ஸ்வ சித்தே ஸ்வயம் இஹ கரணாம் ஸ்வ பிரபந்தே சடாரி –ரத்னாவளி -125- ஆத்யே ஸ்வ பிரபந்தே சதஜித பிதாதே ஸம்ஸரதேர் துஸ் சஹத்வம் த்வைதிகே ஸ்வரூபாத்ய அகில மத ஹரேர் அனுவபூத் ஸ்பஷ்ட த்ரஷ்டாம் தார்த்திகே ஸு க்யம் பகவத் அநுபவே ஸ்போரயாம்ஸ தீவ்ரம் அசாம் துர்யே யதேஷ்டம் பகவத் அனுபவா தாப முக்திக்கு சடாரி –ரத்னாவளி –126- திரு விருத்தத்தில் சம்சார சுழல்களால் வரும் துரிதங்களையும் -அதில் இருக்க மாட்டாமையையும் -அருளிச் செய்து திருவாசிரியத்தில் ஜீவ பர ஸ்வரூப குணாதி களை அருளிச் செய்து பெரிய திருவந்தாதியில் -தனது மானஸ அனுபவத்தையும் -பாஹ்ய சம்ச்லேஷத்தில் ஆர்த்தியையும் வெளியிட்டு அருளி திருவாய் மொழியிலே அவா அற்று வீடு பெற்றதை அருளிச் செய்கிறார் – ஸ்ரீ மான் சீமாதி லங்கிஸ்திரதர கருணா சர்வவித் சர்வ சக்திர் ஸ்வாமி ஸர்வஸ்ய ஐந்தோ ஸ்வ சரண யுகள ஸ்வீ க்ருதாஸ்மாக பர கிம் ந க்ருத்யம் ஸ்வ ஹேதவ் கிமிக ந சுலபம் க விபதிர் பவித்ரி கஸ்யான் யஸ்யா தர்மனா வயமிதி விதிஷாமாக துங்கத்வ மந்தே–ரத்னாவளி -127- ஸ்ரீ மான் சீமாதி லங்கிஸ்திரதர கருணா சர்வவித் சர்வ சக்திர் ஸ்வாமி ஸர்வஸ்ய ஐந்தோ ஸ்வ சரண யுகள ஸ்வீ க்ருதாஸ்மாக பர – கல்யாண குணக்கடல் –கருணா சாகரம் — உலோகரை எல்லாம் திருவடியால் தீண்டி அணைக்கும் தாய் — இப்படி உணர்ந்தோர் மார்பில் கை வைத்து-உபாயமாக ஒன்றுமே செய்யாமல் கைங்கர்யமாக அவன் ஆனந்தத்துக்கு மட்டுமே செய்வது தானே அடுத்து — கிம் ந க்ருத்யம் ஸ்வ ஹேதவ் – இவ்வாறு உள்ளோரால் செய்ய முடியாதது தான் எது – துக்க கேசமும் இவர்களை அணுகாவே -வேறே எவருக்கும் பணியா அமரர்கள் ஆவார்கள் ——– இத்தம் சத் சம்பிரதாய க்ரம சமதிகதா சேஷ வர்ணார்ஹ வேத ஸ்ரத்தாஸ் சுத்த சயானா மகதயாதநகம் கௌதுகம் வேங்கடேச சம்யக்த்வே தஸ்ய சாஷாத் சடாரி புரத்வா சர்வ சாக்ஷி ச சாக்ஷி சாவத்யத்வேபி சோதும் பிரபவதி பஜதாம ப்ரகாம்ப யனுகம்பா –ரத்னாவளி –129- ——— சோகா ஸ்லோகாத்வமப் யாகத இதை வதத சுத்த போதார்ண போத்யன் நாநாக லோலா நாதானுபவ ரஸ பரிவாஹத ஸ்ராவ்ய வேதாத் வேதாந்த சார்யக ஸ்ரீ பஹுமத பஹுவித் வேங்கடேசா ஸ்தோத்ரேயம் ரம்யா தாத்பர்ய ரத்னாவளிர் அநக குண ரஞ்சினி ரங்க பர்த்ரு–130- ——- ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் – உதந்தை இத்யேவம் நிருபாதிக ஸு ஹார்த்தபி சுனை உதந்தயாம் உத்வேலாம் உபஜனித்தவந்தம் நிஜபதே த்ரை வர்க்காதி க்ராந்த ஸ்திர நகரி கந்தா பத கதே சஹாயி குர்வாணா சரம சதகே விந்தத்தி முநி –21- ———————————– கதிம் வ்யாத்வக்லே சச்சிதாம் பத ஸங்காஸ் பத ரசம் பஜத்பி சுப்ராபம் விதித்த பஜன ப்ரக்ரியமிக பலே தீவ்ரத் யோகம் ஸ்வ விஷய க்ருதாத்யா தரமகாத் யதர்ச்சா துஷ்டம் சத்சரநிமா புனர் ஜன்ம சாயுஜ்யம் –22- ———- பரம் ப்ராப்யம் பஸ்யன் பரிசரணா ஹேதும் விஞ்ஞாயன் பரிஷுக்குருவன் அஞ்ஞானம் அனிதர சரண்ய சரண்யன் அநிஷ்ட ப்ரத்வம்ச ப்ரப்ரிஷு நிதானம் ச கதயன் முகுர்த்தேவம் லஷ்ம்யா ஸஹிதமிக பேஜே முனிவரா -23- பரம் ப்ராப்யம் பஸ்யன் பரம புருஷார்த்தம் இவனே — பரிசரணா ஹேதும் விஞ்ஞாயன் – கைங்கர்யம் கொண்டு அருள உபாயமும் அவனே — பரிஷுக்குருவன் அஞ்ஞானம்-சர்ம ஸ்லோகப்படி சர்வ தர்மான் பரித்யஜ்ய– செய்தால் — சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -செய்பவனும் அவனே அனிதர சரண்ய சரண்யன் -புகல் ஒன்றும் இல்லாத அனன்யா கதிகளுக்கு அவனே சரண்யன் அநிஷ்ட ப்ரத்வம்ச ப்ரப்ரிஷு நிதானம் ச கதயன் முகுர்த்தேவம் லஷ்ம்யா ஸஹிதமிக– அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் மிதுனமே ஒரே நிருபாதிக ரக்ஷை – ——- புரா சோகா ஸ்லோகா பவதிதி நயாதிதி உபநிஷத் முநே புண்யா ஸ்லோகாத ஜநி பர பக்தே பரிணாதி வ்யாபோக்ய ஸ்வாம் பாவம் ஹரி சரணா சந்தான லிகாம் அவிக்ஷத் யோகி யஸ்தனுமதனு காருண்ய விவசா –24- வால்மீகி சோகத்தால் பிறந்த ஸ்ரீ இராமாயண ஸ்லோகங்கள் — சடகோப முனி ஆழ்ந்த பக்தியால் பிறந்த தமிழ் உபநிஷத்தான திருவாய் மொழி கருணைக் கடலுள் ஆழ்ந்து -அவனையே நினைந்து அவன் அருளாலே அவனை அடைந்தார் சோகா ஸ்லோகாத்வமப் யாகத இதை வதத சுத்த போதார்ண போத்யன் நாநாக லோலா நாதானுபவ ரஸ பரிவாஹத ஸ்ராவ்ய வேதாத் வேதாந்த சார்யக ஸ்ரீ பஹுமத பஹுவித் வேங்கடேசா ஸ்தோத்ரேயம் ரம்யா தாத்பர்ய ரத்னாவளிர் அநக குண ரஞ்சினி ரங்க பர்த்ரு–130- ——- சதாம் இத்தம் சாரம் த்ராமிட நிகமஸ் யான்வகதயத் பஹு நாம் வித்யா நாம் பஹு மதி பதம் வேங்கடபதி திசா சவ்தா ஸ்ரேநீ த்ர்தா கதிதா ஜைத்ர த்வஜ பதி பராமர் ஸப்ரஸ்யாத் ப்ரதிமத நிராபாத நிகம–25- இத்தம் சத் சம்பிரதாய க்ரம சமதிகதா சேஷ வர்ணார்ஹ வேத ஸ்ரத்தாஸ் சுத்த சயானா மகதயாதநகம் கௌதுகம் வேங்கடேச சம்யக்த்வே தஸ்ய சாஷாத் சடாரி புரத்வா சர்வ சாக்ஷி ச சாக்ஷி சாவத்யத்வேபி சோதும் பிரபவதி பஜதாம ப்ரகாம்ப யனுகம்பா –ரத்னாவளி –129- ——- மனு வியாச ப்ராசேதச பரிஷ்தர்ஹா க்வசிதியம் ஸூதாஷிக்த ஸூக்தீ ஸ்வயம் உதயமனவிச்சதி ஜநே ந்ருந்த்யுஹ்கே விந்த்யாசல விகத ஸந்த்யா ந தஜ தாபரிப்ராந்தா பங்கோ உபரி யதி கங்கா நிபததி –26- இந்த பிரபந்தம் மஹா முனிகளான மனு பகவான் வியாச பகவான் வால்மீகி ரிஷி போன்றார் கூட்டங்களாலே கேட்கத் தக்கது- அவனது நிருபாதிக ஸூ ஹ்ருதம் அடியாகவே பிறந்தது – விந்தியமலை சாரல் -கங்கா நதி -திருச்சித்ர கூடம் -உண்டாக்கி அருளினால் போலே அடியேனையும் ஆக்கி இப் பிரபந்தம் அருளப் பண்ணினான் ————————————————————————————- திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 100-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்- அவதாரிகை – இதில் – ஸ்ரீ பரம பத்தியாலே-பர ப்ராப்தியான படியை பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் கீழ் சூழ் விசும்பு அணி முகிலிலே ஸ்ரீ பரம பதத்திலே புக்கு நிரதிசய ஆனந்த உக்தராய் நித்ய சூரிகள் திரளிலே இருக்கிறாராக-தம்மை அனுசந்தித்த இது ஜ்ஞான அனுசந்தானம் மாத்ரமாய் பாஹ்ய சம்ச்லேஷ யோக்கியம் அல்லாமையாலே மேரு சிகரத்திலே ஸூ கோத்ரமாக இருந்தவன் பேர் ஆழமான பள்ளத்திலே தலை கீழாக தள்ளுண்டு-விழுந்து நோவு படுமா போலே அனந்த கிலேச பாஜனமான சம்சாரத்தில்-தாம் இருக்கிற படியைக் கண்டு ஸ்ரீ ஈஸ்வரனுக்கு பண்டு போலே ஒரு குணாவிஷ்காராதிகளால் பரிஹரிக்க ஒண்ணாத படி ஆற்றாமை தலை எடுத்து ஒரு தூத ப்ரேஷாணாதிகளால் இட்டு நீட்டுகையும் இன்றிக்கே தாமே அவன் முகத்தைப் பார்த்து தம்மால் இது பரிஹரித்துக் கொள்ளப் போகாது இருக்கிறபடியும் சாதநாந்தரங்களை அனுஷ்டித்தாலும் அவன் கை பார்த்து இருக்க வேண்டி இருக்கும் படியையும் சொல்லிக் கொண்டு ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆணை இட்டு-தடுத்தும்-வளைத்தும் அவனைப் பெற வேண்டும்படியான பரம பக்தி தலை எடுத்து நிர்க்குணர் உடைய ஹிருதயங்களும் கூட இரங்கும் படியாகவும் அவனுக்கும் தம் கார்யம் செய்து அல்லது ஸ்ரீ திரு நாட்டிலே குடி இருப்பு அரிதாம்படியாகவும் பெரும் மிடறு செய்து கூப்பிட்டு பெரிய ஆர்த்தியோடே திருவடிகளிலே சரணம் புக ஸ்ரீ பெரிய திருவடி திருத் தோளிலே ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடு கூட இவர் அபேஷித்த படியே ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து தோற்றி கால் கட்டான பிரகிருதி சம்பந்தத்தையும் அறுத்து ஸ்ரீ பரம பதத்திலே கொடு போய் நித்ய சூரிகளோடே ஒரு கோவை யாக்கி-நித்ய கைங்கர்யம் கொண்டருள- அத்தாலே-தாம் நிரஸ்த பிரதிபந்தகராய் பிராப்த சமஸ்த மநோ ரதரான படியை-சொல்லித் தலைக் கட்டுகிற முனிய நான் முகனே யில் அர்த்தத்தை முனி மாறன் இத்யாதியாலே அருளிச் செய்து தலைக் கட்டுகிறார் -என்கை – ————————————————- முனி மாறன் முன்புரை செய் முற்றின்பம் நீங்கி தனியாகி நின்று தளர்ந்து -நனியாம் பரம பத்தியால் நைந்து பங்கயத்தாள் கோனை ஒருமை யுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து –100- ————————————————- வியாக்யானம்– முனி மாறன் ஸ்ரீ சர்வேஸ்வரன் -முனியே -என்னும்படி சதவஸ்தமான சம்ஹ்ருதி சமயத்தில் சர்வ சேதன ரஷணத்திலே த்யாநாந்தஸ்தனாய் இருக்குமா போலே இவரும் நித்ய சம்சாரிகளாய் சம்சாரித்து அசித் ப்ராயரான ஆத்மாக்கள் விஷயத்திலும் ரஷண சிந்தை பண்ணிப் போருகையாலே முனி -என்கிறது – அன்றிக்கே – பகவத் விஷயத்தில்-எண்ணா தனகள் எண்ணும் நல் முனிவர்-என்னுதல் – அன்றிக்கே பிரக்ருததுக்குச் சேர-ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்தில்-பரம பக்தி பர்யந்தமாக நிரந்த சிந்தா உக்தராய் இருக்குமவர் -என்னுதல் – இப்படி மனன சீலராய் இருக்கிற ஸ்ரீ ஆழ்வார் — முன்புரை செய் முற்றின்பம் நீங்கி – அதாவது களிதாகி சிந்தையனாய் களிக்கின்றேன் -என்றும் விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே -என்றும் உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை-மேலைத் தொண்டு களித்து அந்தி தொழும் சொல்லும் பெற்றேன் -என்றும் கண்ணுள் நின்று அகலான் -என்றும் உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன் -என்றும் வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து அந்தமில்-பேரின்பத்து அடியரோடு இருந்தமை -என்றும் இப்படி முன்பு பேற்றை பெற்றதாக அருளிச் செய்த சமஸ்த ஆனந்தமும் நிரஸ்தமாய்ப் போய் அது எல்லாம் மானச அனுபவ மாத்ரமாய்-பிரத்யஷ சாஷாத் காரத்திலே அபேஷை யுடையவராய் அத்தை அப்போதே பெறாமல் மீளவும் அஜஞாநாவஹமான சம்சாரத்த்லே இருக்கக் கண்டு பூர்வத்தில் ஆனந்தமும் அபூர்வமாம்படி கழிந்தது -என்கை – தனியாகி நின்று தளர்ந்து – அந்தமில் பேர் இன்பத்து அடியாரான-ஸூரி சங்கங்கள் உடனே இருந்தும் ஸ்வப்ன கல்பமாய் பழைய சம்சாரத்தில் தனிமையே சேஷித்து ஸ்ரீ பிராட்டி ஸ்ரீ திரு அயோத்யையிலே ராவாணந்தகரான ஸ்ரீ பெருமாளை பரமனும் தம்பி சத்ருக்னனும் இலக்குமனோடு மைதிலியும் -என்னும்படி சேர்த்தியாய் இருந்து அனுபவித்து பின்பு பிரிந்து காந்தார மத்யே விஜகே விஸ்ருஷ்டா பாலேவ கன்யா விலலாப சீதா -என்னும்படி தனியே நின்று கூப்பிட்டாப் போலே தனியேன் ஆர் உயிரே -என்று தனியாகா நின்று தளர்ந்து மிகவும் அவசாதத்தை உடையவராய் தரைப்பட்டு- அதாவது – கனிவாய்த் தாமரை கட்கரு மாணிக்கமே –மாயம் செய்யேல் என்னை -என்றும் மாயம் செய்யேல் என்று தொடக்கி –திரு வாணை நின் ஆணை-கண்டாய் –கூ விக் கொள்ளை வந்து அந்தோ -என்றும் ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின் அல்லால் அறிகின்றிலேன் நான் -என்றும் உம்பர் பரம் தண் பாழேயோ–என்னைப் போற விட்டிட்டாயே -என்றும் எனக்கு ஆரா வமுதானாயே -என்றும் எனக்கு ஆரா அமுதாய் எனது ஆவியை இன்னுயிரை மனக்காராமை மன்னி யுன்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய் -என்றும் கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ-உன்னைப் பெற்று இனி போக்குவேனோ -என்றும் முதல் தனி உன்னை எனை நாள் வந்து கூடுவன் நான் -என்றும் இப்படி ஆற்றாமையாலே-அவசன்னராய்க் கூப்பிட்டு -என்கை – நனியாம் பரம பக்தியால் நைந்து — அதனில் பெரிய அவா -என்னும்படி தத்வ த்ரயங்களிலும் பெரியதாய்-முடிந்த அவாவான பரம பக்தியாலே-பரிபக்வராய் – நனி -பெருமை அன்றிக்கே பரம பக்தியால் அலைந்து -என்ற பாடமான போது அவா வாகிற அமுத வெள்ளமான-ஆனந்த சாகரத்திலே மக்னராய் -அலைந்து -என்றுமாம் – பங்கயத்தாள் கோனை – அந்த பரம பக்திக்கு விஷயமான-ஸ்ரீயபதியை – கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ – உன்னைப் பற்றி இனி போக்குவேனோ -என்று அருளிச் செய்தவனை உத்தர வாக்யத்தில் கைங்கர்ய பிரதி சம்பந்தியான ஸ்ரீயபதியை – ஒருமையுற்று வீடு திருத்தி -என்றும் விண்ணுலகம் தருவானே விரைகின்றான் -என்றும் வானே தருவான் எனக்காய் என்னுள்ளே ஒட்டி -என்றும் த்வரிக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் திரு உள்ளத்தோடு சேரும்படி இவர் திரு உள்ளமும் த்வரித்து -ஒரு தளைத்து -என்னுதல்- அன்றிக்கே பர பக்தி பர ஞான பரம பக்தி உக்தராய்-பேற்றுக்குத் த்வரித்து அவாவாலே கூப்பிட்டுப் போந்த இவர் திரு உள்ளமும் – முதித பரிஷச்வஜே -என்னும்படி என் அவா அறச் சூழ்ந்தாயே -என்று இவர் அபி நிவேசம் தீரும்படி சம்ஸ்லேஷிக்கையாலே அவா அற்று வீடு பெற்ற பிரகாரத்தை-ஆகவுமாம்- பங்கயத்தாள் கோனை –ஒருமை யுற்று –உயர்ந்து -சேர்ந்தான் – அதாவது கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ -என்கிற-இழவு தீர ஸ்ரீ யபதியான ஸ்ரீ சர்வேஸ்வரனை-ஒரு தலைத்த பரமபக்தி உக்தராய் அத்தால் நித்ய சூரிகள் ஆச்சார்யத்தை-இங்கே யுடையராய் பிரத்யஷ சாஷாத்காரமாம் படி கிட்டி-இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்வார் திரு மாலுக்கே -என்னும்படி – அடிமை செய்யப் பெற்றார் – அங்கே பரதமாரோப்ய முதித பரிஷச்வஜே -என்று-இவரைப் பெற்று ஹ்ருஷ்டனாக இவரும் அத்தலையில்-முகோல்லாசத்தைப் பெற்று -அனுபவித்து-ஹ்ருஷ்டரானார் – அத்தை யாயிற்று-ஒருமை யுற்றுச் சேர்ந்தான் -என்கிறது – இத்தால் அவா அற்று வீடு பெற்ற குருகூர் சடகபன் – என்றத்தை நினைக்கிறது- சாஷாத் கரித்த பரம பிராப்திக்கு தலை மிசையாய் வந்து-தாள்களைப் பூண்டு-போகாமல் தடுத்து திரு வாணை இட்டு-கூசம் செய்யாதே-செய்திப் பிழை யற்று கொம்பற்ற கதி கேடு போர விட்ட பெரும் பழி-புறம்பு போனால் வரும் இழவு உண்டிட்ட முற்றீம்பு அன்பு வளர்ந்த அடி யுரம்-உயிர் உறவு முதல் அளவு துரக் கைகளாலே பெறா வாணை அல்லவாக்கின-பேரவா-குளப்படியாம்படி-கடல் போன்ற ஆதாரத்தோடு சூழ்ந்து தாபங்களை ஹரித்தமையை-வெளியிடுகிறார் பத்தாம் பத்தில் -என்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிச் செய்தார் – கண்டு களிப்பளவும் -பரஞ்ஞான கர்ப்ப பரபக்தி இருந்தமை -என்றது பூர்ண பரஞ்ஞானம் முடிந்த அவா என்றது பரமபக்தி இவை ஞான தர்சன பிராப்தி அவஸ்தைகள் -என்று இந்த பரபக்தியாதி பேதத்தையும் அருளிச் செய்தார் — ஏவம்விதமான பரமபக்தியாலே-பரிபக்வராய்-பலத்தோடு சேர்ந்தார் -என்கிற ஸ்ரீ திருவாய்மொழியில் அர்த்தத்தை-இப்பிரபந்தத்தில்-இப்பாட்டாலே சேகரித்து அருளினார் ஆயிற்று — ———————————————————————————— உயர்வே பரன்படியை யுள்ளதேல்லாம் தான் கண்டு உயர் வேத நேர் கொண்டு உரைத்து -மயர்வேதும் வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல் வேராகவே விளையும் வீடு —————————————————————————– மாறன் -1/2/3/4/5/6/7/8/9/10/11/12/13/14/ சடகோபன் –15 மாறன் –16/17/18/19/20/21/ குருகையர் கோன் -22 மாறன் –23/24/25/26/27/28 குருகூர் மன்-29 மாறன் -30/31- குருகூரில் வந்து உதித்த கோ -32 மாறன் -33/34/35/36 குருகூர் ஏறு -37 மாறன் -38/39 மொய்ம் மகிழோன் -40 மாறன் -41/42/43/44/45/46/47/48/49/50 காரிமாறன் -51 குருகையர் கோன் -52 மாறன் -53 பராங்குசன் -54 மாறன் -55/56/57/58 காரிமாறன்-59 மாறன் -60/61/62 சடகோபர் -63 மாறன் -64/65 அண்ணல் -66 மாறன் -67/68/69/70/71/72/73/74 சடகோபன் -75 மாறன் -76 சடகோபர் -77 காரிமாறன் -78 மாறன் -79/80/81/82/83/84/85/ மாறன் -86/87/88/89/90/91/92/93/94/95/96/97/98 ஞான முனி -99 முநி மாறன் -100- மாறன் -1/2/3/4/5/6/7/8/9/10/11/12/13/14/-16/17/18/19/20/21/—-23/24/25/26/27/28–30/31—33/34/35/36– -38/39—41/42/43/44/45/46/47/48/49/50–53–55/56/57/58—60/61/62–64/65–67/68/69/70/71/72/73/74–76- –79/80/81/82/83/84/85/ -86/87/88/89/90/91/92/93/94/95/96/97/98 சடகோபன் –15–75 குருகையர் கோன் -22–52 குருகூர் மன்-29 குருகூரில் வந்து உதித்த கோ -32 குருகூர் ஏறு -37 மொய்ம் மகிழோன் -40 காரிமாறன் -51–59-78 பராங்குசன் -54 சடகோபர் -63–77 அண்ணல் -66 ஞான முனி -99 முநி மாறன் -100 ————————————————————————————— ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் . ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம் ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் – ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் – ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம் ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம் ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம் ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் – ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -189- திருவாய்மொழி – -10-10-1….10-10-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

July 26, 2016

முனியானே -பிரவேசம் –

பரமபதத்திலே புக்கு-அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை -என்கிறபடியே
எல்லை இல்லாத ஆனந்தத்தை உடையராய்-
அத் திரளிலே இருந்த இருப்பு நினைக்கக் கூடிய ஞானமே மாத்ரமாய்-
புறம்பே கண்டு அனுபவிப்பதற்கு தகுதி இன்றிக்கே இருந்தது –அதற்கு மேலே-
இல்லை கண்டீர் இன்பம் -9-1-6–என்றும்
பிறப்பாம் பொல்லா அருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலம் -திரு விருத்தம் -100-என்றும்
தாம் பிறருக்கு உபதேசிக்கிற இவ் உலகத்திலே சரீரத்தோடு கட்டுப் பட்டவராய்-
இருக்கிற படியையும் கண்டார் –
கண்டு -மேருவின் உச்சியில் துக்கம் இல்லாதவனாய்-மேலான சுகத்தை உடையவனாய் இருக்கிறான் ஒருவன்-
பல பல துக்கங்களை உடையதாய்-தாண்ட முடியாததாய்-பேர் ஆழமாய்-
ஓர் இடத்திலும் நிலை இன்றிக்கே இருக்கும்படியான பாதாளத்திலே-
விழுந்து நோவு படுமாறு போலே துக்கம் கொண்டவர் ஆனார் –

அதற்கு மேலே
பண்டு அவன் தமக்கு கை வந்த படியையும் -என்னை உயிர் வேறு அன்றி ஒன்றாக –
தன்னைப் பெறுகைக்கு உபாயம் தானே அல்லது வேறு இன்றிக்கே இருக்கிற படியையும்-
ஆவிக்கு ஒரு பற்றுக் கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் –
தன் தலையிலே ஒரு உபாயத்தை ஏறிட்டுக் கொண்டு ஒழுகுமவனுக்கும் -மேவித் தொழும் பிரமன் சிவன் –
தன் கை பார்த்து இருக்க வேண்டும் படி-
எல்லா பொருள்களையும் காப்பாற்றுகின்றவனாய்-இருக்கும் படியையும் நினைந்து-
அக்கணத்தில் பெறாமையாலே-
இப்படி இருக்கிறவன் நம்மை இங்கனே நோவு பட விட்டு வைப்பதே என்று-மிகவும் துக்கம் கொண்டவர் ஆனார்-

அங்கனம் துக்கம் கொண்டவர் -தாய் தந்தையர்கள் முன்னே இருக்க பசியாலும் தாகத்தாலும்-
நோவு படுகிற சிறு குழவியானது துன்பத்தின் மிகுதியாலே தாய் பேரைச் சொல்லிக் கூப்பிடுமாறு போலே-
வள வேழ் உலகின் -என்ற திருவாய் மொழியில் கூறிய தன்மையை உடைய தாம்-
தம் தன்மையை நினைக்க ஆற்றல் இல்லாதவராய் –
தூதர் மூளவும் அறிவிக்கவும் இயலாதவராய்-
அவனே எதிரே நின்று பிராட்டி ஆணை இட்டு தலக்கு -நாணம் -அற்றுச் சொல்லும்படியான ஆற்றாமையோடு-
இரக்கம் இல்லாதவர் உடைய மனங்களும் இரங்கும்படியாக-
அவனுக்கு தம்மைக் காப்பாற்றி அல்லது பரம பதத்தில் இருப்பு அரிதாம் படியாகவும்-
காற்றுத் தீயிலே அகப்பட்டாரைப் போலே துயர ஒலியோடு பெரு மிடறு செய்து கூப்பிட்டு-

தே யத்யமானா பதிதா சவிரா ந நத்யமானா பயசல்யவித்யா
சாகா ம்ருகா ராவணா சாயகர்த்தா ஜக்மு சரண்யம் சரணம் சம ராமம் -யுத்தம் -50-45
வானரங்கள் ராவணனுடைய அம்பால் துன்பம் உற்றவனாய் ஓடின
புகலிடமான ராமனை சரணம் அடைந்தன -என்கிறபடியே
தரிக்க மாட்டாமையாலே அவன் திருவடிகளிலே சரணம் புக்கார்

இவர் சரணம் புக
அவன் அருள்கடல் ஆகையாலே-இவரை இப்படி நோவுபட இட்டு வைத்தோமே அன்றோ -என்று
இவரைக் காட்டிலும் தாம் நொந்து
கோலத் திரு மாகளோடு உன்னைக் கூடாதே –
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்து –
பிராட்டிமாரோடே பெரிய திருவடி மேலே இவர் விரும்பியபடியே எல்லாவற்றாலும் நிறைந்தவனாய் வந்து தோற்றி
இவருடைய சரீர சம்பந்தத்தையும் அறுத்து
அடியார்கள் குழாம களை உடன் கூடுவது என்று கொலோ -என்று இவர் ஆசைப் பட்ட படியே
அத்திரளிலே புகப் பெற்று-
என் அவா அறச் சூழ்ந்தாயே -என்றும்
அவா அற்று வீடு பெற்ற -என்றும்
இவர் தாமே சொல்லலாம்படி இவர் விடாயும் தீர
இவர் விடாய்க்கு அவ்வருகான தன்னுடைய விடாயும் தீரும் படி கலந்து அருளினான் -என்கிறார்-

இப் பிரபந்தத்துக்கு தலைவன் சர்வேஸ்வரன் -பிரமேயம் –
இப்பிரபந்தம் -அவாவில் அந்தாதி -பிரமாணம்
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் கவி பாடினார் -பிரமாதா
இனி இவருடைய அவதாரம் தான்-சர்வேஸ்வரனுடைய அவதாரத்தைப் போன்று
சாதுக்களின் உடைய புண்ணியத்தின் பலம்
பிரமேய பிரமான பிரமாதா வைலஷணயத்தையும்
இவர் அவதார வைலஷணயத்தையும்
அருளிச் செய்கிறார் –

ஷேமுசி பக்தி ரூபா -பக்தி ரூபாபன்ன -மதி நலம் -பக்தி பூமா என்றுமாம் –
அகில புவன ஜென்ம ஸ்தேம பங்க-ஆதி லீலே-
உலகம் யாவையும் -தாம் உளவாக்கலுக்கும் நிலை பெறுத்தலும் நீங்கலும் நீங்கலா -அலகிலா விளையாட்டுடை அண்ணல் அவன் –

—————————————————————————————————————

முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-

ஸ்ருஷ்டியாதி முகத்தால் அடியே பிடித்து உபகாரகனாய் போந்து -வடிவு அழகைக் காட்டி -ருசியைப் பிறப்பித்து -உன்னை ஒழிய தரியாதபடி ஆக்கி –
இனி குண அனுபவம் கொடுத்து பிரிக்காதே –
முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்-நாம ரூப விபாக அநர்ஹமாய் -சித்த அசித்- அவிசேஷமாய் -ஒன்றும் தேவும் இத்யாதி
-இதம் அக்ரே –சதேவ ஏக மேவ அத்விதீயம் ஆஸீத் -ஏகி பவித்து -அபின்ன நிமித்த -விசித்ரா தேக சம்பந்தி ஆச்ரயண அர்த்தமாகக் கொண்டு
-சேதன வர்க்கத்துக்கு -கரண களேபரங்கள் கொடுப்பவனாக தயாமானாவானாகக் கொண்டு -தாய் தன பேராக குழந்தையை அணைத்து
-சிருஷ்ட்டி பிரகாரம் மனனம் பண்ணி
மஹத்தாதி சமஷ்டி ஸ்வயம் ஏவ ஸ்ருஷ்டித்து -பஞ்ச பூதம் –அண்ட கடாகங்கள் -அண்டாந்தர வர்த்தி – ஸ்ருஷ்ட்டி பண்ண
-பிரஜாபதி உன்னை சரீரமாகக் கொண்டு பண்ணுவேன்
ஸம்ஹ்ருதி -சரஷ்ஷடமான ஜகத்தின் உப சம்ஹார அர்த்தமாக த்ரி நேத்ரம் -சம்ஹார சக்திக்கு அடையாளம்
அப்பா -உபகாரகன் -அழித்து-மேல் பாபங்கள் சேர்க்க முடியாதே -அதிபிரிவர்த்த கரணங்கள் முடித்து
இருவர் நடுவில் ரக்ஷகனான தசையில்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா-ருசி பிறக்கைக்கு அடியான பக்குவ பலமான -போக்யமாய் -ஆதாரம்
-தாமரைப் பூ போலே தர்ச நீயமானதுளையாத கரிய மாணிக்கம் -முழுவதாக -அநாதி ஆத்ம அபகாரம் பண்ணி சோரனான
என்னையும் வஞ்சித்து அபகரித்து -நின்றார் அறியா வண்ணம்
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு-அபிராப்த பலம் என்பதால் தனிமைப் பட்ட எனக்கு குணங்களைக் காட்டி தரிக்காமல்
-பரி பூர்ணனான -தான் ஏறி தலை மிசையாய் பிராணன் போலே
இனி நான் போகல ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே-சம்சார தோஷம் -அறிந்து -புருஷார்த்தமும் காட்டி அருளி
-ஆர்த்தியையும் அபி நிவேசமும் ஜெநிப்பித்த பின்பு -நான்கையும் அருளிய பின்பு
முன்பு போலே நீ அகன்று போக ல் ஓட்டேன் -இது 19 வைத்து இனி -3 தடவை 17 தடவை -இன்னும் ஒரு இனி தான் உண்டு
உன் த்வரையும் அறிந்த பின்பு -உன்னைப் பெறாவிடில் முடியும் நிலையில் உள்ள என்னை -சம்சார தசையில் விஷயாந்தரங்கள் காட்டி
பல நீ காட்டி படுத்த மாயம் ருசி பிறந்த பின்பு குணங்களைக் காட்டி பராக்கு பார்க்க வைத்தாய் -ஆசுவாசிப்பித்தாய் முன்பு
-அது போலே இனி மேல் மாயம் இனி செய்யேல் -என்னை -வஞ்சியாதே கொள்ள வேண்டும் –
நிர்ஹேதுகமாக-உன்னுடைய வனப்பு முதலானவற்றையும் காட்டி-உன்னை ஒழிய செல்லாதபடி என்னைச் செய்து
நிர்ஹேதுகமாக-உன்னுடைய வனப்பு முதலானவற்றையும் காட்டி-உன்னை ஒழிய செல்லாதபடி என்னைச் செய்து-
பொறுக்கக் கூடாததான இவ் உலகத்தில் என்னை வைத்துநீ சென்று பண்டு போலே ஒரு குணத்தை அனுபவிப்பிக்க-
விட ஒண்ணாது-என்கிறார்-
பொறுக்கக் கூடாததான இவ் உலகத்தில் என்னை வைத்து – நீ சென்று -பண்டு போலே ஒரு குணத்தை அனுபவிப்பிக்க-விட ஒண்ணாது-என்கிறார்-

நிர்ஹேதுகமாக-உன்னுடைய வனப்பு முதலானவற்றையும் காட்டி-உன்னை ஒழிய செல்லாதபடி என்னைச் செய்து
பொறுக்கக் கூடாததான இவ் உலகத்தில் என்னை வைத்துநீ சென்று பண்டு போலே ஒரு குணத்தை அனுபவிப்பிக்க-
விட ஒண்ணாது-என்கிறார்-

முனியே –
பஹுஸ்யாம் -சங்கல்ப -முனி -சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மம் –
பஹு பாவன சங்கல்ப விசிஷ்டன் -நிமித்த கார்யம் சித்திக்க
சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம் -உபாதான காரணம் –
விகாரத்வம் வருமோ -அவிகாராயா சுத்தாயா –
சரீராத்மா பாவம் -சொல்லி -ஆத்மாவுக்கு நிர்விகாரத்வம் சித்திக்கும் –
ப்ரஹ்மத்துக்கு அம்சம் -அறிந்து நிர்பரராய் -பொறுப்பாய் -இருப்போமே-
விசிஷ்ட ப்ரஹ்மம் சொல்லி -பல பிரமாணம் சொல்லி –
முனியே –
பஹூச்யாம் –
சர்வம் கலு இதம் ப்ரஹ்ம தஜ்ஜலான் இதி –
அவன் இடத்தில் பிறக்கையாலும்
அவன் இடத்தில் இலயிக்கையாலும்
அவனாலே காக்கப் படுகையாலும்
இப்பொருள்கள் யாவும் அவனே -என்றும்
விஷ்ணுவானவன் சூஷ்மமான சித் அசித்துகளுடன் கூடின தன்னை படைப்பில்-
ஸ்தூல சித் அசித்துகள் உடன் கூடினவனாக படைக்கிறான்-
காப்பாற்றப் படுகின்ற பொருளான தன்னைக் காப்பாற்றுகிறான் –
பிரளய காலத்தில் தான் அழிக்கப் படுகிறான் தான் அழிக்கிறான்-என்றும்-
இதம் சர்வம் -கார்ய தசை –
காரண தசை சேதனம் அசேதனம் –
ப்ரஹ்மம் ஒன்றே இரண்டு தசைகள் – ஸ்தூல சூஷ்ம சேதன அசேதன விசிஷ்டம் -ப்ரஹ்மம் –
விசேஷணம் மாறி விசேஷயம் ஒன்றாக இதம் சர்வம் -காரியம் -ப்ரஹ்மம் காரணம் -என்றவாறு
இதம் சர்வம் ப்ரஹ்ம-ஒன்றாக ஹிந்து தஜ்ஜலான் -என்கிறது –
சதேவ -சத்தாகவே ஸ்ருஷ்டிக்கு முன்னால் இருந்தது -ஏக மேவ ஒன்றாகவே இருந்தது

ஸ்ருஷ்டௌ ஸ் ருஜதிசை ஆத்மாநாம் விஷ்ணு பால்யஞ்ச பாதிச-உப சம்ஹ்ரியதே சாந்தே சம்ஹர்த்தாச ஸ்வயம் பிரபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-67-
ஸ ஏவ ஸ்ருஜ்ய ஸ் ச ஸ்ர்க்க கர்த்தா-ஸ ஏவபாதி அத்திச பால்யதி-ப்ரஹ்மாதி அவஸ்தாபி அசேஷ மூர்த்தி-விஷ்ணு வசிஷ்ட வரத வரேண்ய-
வசிஷ்ட வரத வரேண்ய-சேஷித்வம் சரண்யத்வம் பிராப்யத்வம்
அவனே படைக்கப் படுகிறான் -அவனே படைக்கிறான் -அவனே பாதுகாக்கின்றான் அழிக்கின்றான்
அவனே பாதுகாக்கப் படுகின்றான்
பிரமன் சிவன் முதலிய நிலைகளோடு கூடி எல்லாப் பொருள்களையும் சரீரமாக உடையவனாய்
மேம்பட்டவனாய் சிறந்த வரங்களைக் கொடுப்பவனாய் இருப்பவன் விஷ்ணுவே -என்றும்
மமைவ அம்ஸ ஜீவலோகே ஜீவபூத சனாதன-மன ஷஷ்டாதி இந்த்ரியாணி பிரகிருதி ஸ்தாதி கர்ஷதி -ஸ்ரீ கீதை -15-7-
என்னுடைய சரீரமாயும் அநாதியாயும் இருக்கின்ற உயிரானது மாயையில் அடங்கி இருக்கிற
மனத்தினை ஆறாவதாக உடைய இந்த்ரியங்களை-இவ் உலகத்தில் இன்பத்தின் பொருட்டு இழுக்கிறது -என்றும்
அம்ஸ நானா வ்யபதேசாத் அந்ய தாச-அபிதாச கிதவாதித்யம் அதீயதே ஏக -சாரீரக மீமாம்சை -2-3-42
அம்சம் -ஜீவாத்மா பரமாத்மாவுக்கு -நாநா-வெவ்வேறாக -என்றும் ஓன்றும் என்றும் சொல்லி – பேத அபேத சுருதிகள் இரண்டையும் சேர்த்து கடக சுருதி
பிரியாமல் இருப்பதால் ஓன்று -தனித்த தனி தத்வங்கள் அதனசால் நாநா -அம்ச அம்சி பாவம் என்றதாயிற்று -ஈசன் அநீசன் இரண்டும் உண்டே –
ப்ரஹ்மமே தாசர் ப்ரஹ்மமே கிதவத்ய -/தத்வம் அஸி -அபேத சுருதி
பிருத்தாகாத்மானம் பிரேரிராத் தாஞ்ச மத்வ -பேத சுருதி –

உயிர் பரம் பொருளின் கூறே யாகும்-அது பரம் பொருளின் வேறாகவும் ஒன்றாகவும்-
ஸ்ருதிகளிலே சொல்லப் பட்டு இருக்கிறது -என்றும் சொல்லுகிறபடியே-
சித் அசிதுக்களோடு கூடின தானே படைத்தலையும் அழித்தலையும் செய்கிறான்–

ப்ருத்வீ அப்ஸூ ப்ரலீயதே-ஆப தேஜச லியந்தே
தேஜோ வாயோ லீயதே-வாயு ஆகாசே லீயதே
ஆகாசம் இந்த்ரியேஷூ-இந்த்ரியாணி தன்மாத்ரேஷூ
தன்மாத்ரேஷூ பூதாதௌ லியந்தே-பூதாதி மஹதி லியதே
மஹான் அவ்யக்த லீயதே-அவ்யக்தம் அஷரே லீயதே
அஷரம் தமசி லீயதே-தம பரதேவ ஏகீபவதி-சுபால உபநிஷதம் –
படைத்தல் அழித்தலை முன்னிட்டு கொண்டு உள்ளது ஓன்று ஆகையாலே
முந்துற அளிக்கும் முறையை அருளிச் செய்கிறார்
ஆகையாலே பூமி தண்ணீரிலே மறைகிறது -தண்ணீர் நெருப்பிலே மறைகிறது
நெருப்பு காற்றிலே மறைகிறது காற்று ஆகாசத்தில் மறைகிறது
ஆகாசம் -இந்த்ரியங்கள் -தன் மாத்ரைகள் –அஹங்காரம் -மஹத் தத்வம் -அவ்யக்தம் -அஷரம் -தமஸ்
பரம் பொருளில் மறைகிறது -என்கிறபடியே-தன்னிடத்தில் மறைந்து இருக்கிற இதனை
பஹுச்யாம் பிரஜாயேயேதி -தைத்ரியம் -என்று நினைந்து விளங்கச் செய்து –
தமஸ் -அஷரம் -அவ்யக்தம் -மஹான் அஹங்காரம் –தன்மாத்ரைகள் -உண்டாக்கி
அவற்றை பூதங்களாக முற்றுவித்து அண்டத்தை படைத்தல் முடிவாக உதிய உலகத்தினை படைத்தல்
செய்கிற திவ்ய சங்கல்ப்பத்தினை உடையவனாய்
பகவான் என்ற சொல்லால் சொல்லப் படுகின்ற பரப் ப்ரஹ்மம்-பரமாத்மா போன்ற பல
சொற்களால் வேதாந்தங்களில் சொல்லப் பட்ட-ஸ்வரூபத்தால் நிலை பேறு உடையனாய் இருந்த பரம புருஷன் -என்றபடி-

ஆகாசத்துக்கு இந்திரியங்கள் காரணம் இல்லாமையால் -இதர பூத சதுஷ்டயம் -இந்திரியங்களுக்கு ஆப்யாயகமாகக் கொண்டு
ஆகாசம் -சப்தம் -காதுக்கு /வாய் -ஸ்பர்சம் -தொக்கு /பிருதிவி -கந்தம் –
இந்திரியங்களுக்கு தன்மாத்திரைகள் பூத சூஷ்மம் காரணம் இல்லாமையால் -ஆப்யாயகம் -அனுபவிப்பதால் –
சப்தம் தன்மாத்திரை -ஆகாசமும் ஸ்பர்ச தன்மாத்திரை பிறக்கும் -இதனால் பூதங்களுக்கு தன்மாத்திரை காரணம்
அவ்யக்தம் -அக்ஷரம் -தமஸ் மூன்று நிலைகள் /விதை -பருத்து -வெடிக்கும் முளை விடும் -மூன்று தசைகள் –
அவ்யக்தம் தெளிவு இல்லாமல் மஹான் தெளிவு பிறக்கும் -மேலே அஹங்காரம் -பூத தன் மாத்திரைகள் -பூதங்கள் –

அன்றிக்கே
ஸ ஏவாகி ந நமேத -வெறுத்தவன் துறந்தவன்-
அப்பரம புருஷன் தன்னம்தனியே இருந்த காலத்தில் மகிழ்ச்சி கொண்டான் இலன் -என்கிறபடியே-முனிதல் கோபித்தல் –
எல்லா பொருள்களும் தம் தம் பெயரையும் உருவத்தையும் இழந்து-
பரம் பொருளின் பெயரும் உருவமுமேயாய் அசித் கல்பமாய் கிடந்தால் போலே-
ஜலத்தின் நாமரூபமேயாய் லயித்தால் போலே -காரணதசையில் லயித்தால் போலே குடம் மண்ணேயாய் என்றவாறு –
எப்பொழுது பரதன் சத்ருக்கனன் இளைய பெருமாள் உடன் கூடுவேனோ -கூடவே இருந்தாலும் அசத்சமம் என்றவாறு –
சர்வேஸ்வரனும் தானும் இவற்றைப் பிரிந்து அசித்தைப் போன்ற தன்மை உடன் இருந்தான் என்பதை சொல்கிறது-
தத ராவண நீதாயா சீதையா சத்ரு கர்ஸன-இயேஷ பதம் அந்வேஷ்டும் சரனாசரிதே பதி-சுந்தர -1-1-
ஜாம்பவானால் புகழ்ந்து பேசப் பட்ட பின்னர் பகைவர்களை அழிக்க வல்ல அனுமான்-
இராவணனால் கொண்டு போகப்பட்ட பிராட்டி இருக்கும் இடத்தை தேடுவதற்கு-
தேவர்கள் சஞ்சரிக்கிற ஆகாசம் வழியாக செல்வதற்கு விரும்பினார் -என்கிறபடியே –
சிறை புகுந்தவள் ஏற்றம் -வலிய அன்றோ சிறை புகுந்தாள்-கண்டு பிடிக்க திருவடி திரு உள்ளம் கொண்டால் போலே
சர்வேஸ்வரன் நம்மை – கடல் கொண்ட பொருளை நாடுவதற்கு திருவடி இச்சித்தால் போலே-
உரு மாய்ந்த மக்களை உண்டாக்க நீ மனனம் பண்ணிற்று –
நான் இல்லாத அன்று ஒரு காரணம் இல்லாமல் என்னை உண்டாக்கின நீ-
நான் உண்டாய் நோவு படுகிற இன்று எனக்கு உதவ வேண்டாவோ-
முனியே
அம்மே -என்பாரைப் போலே -என்றது
உறுப்புகளும் சரீரமும் கரண களேபரம் இல்லாதவாய் இவை கிடந்த அன்று உண்டாக்கினாய்-
ஆசைப்பட்ட எனக்கு இன்று உதவல் ஆகாதோ -நீ நினைக்கும் அன்றோ உதவல் ஆவது-
நான் நினைக்கும் அன்று உதவல் ஆகாதோ -என்றபடி-
இனி
சாகா ம்ருகா ராவண சாயகர்த்தா ஜக்மு சரண்யம் சரணம் சம ராமம் -யுத்தம் -60-45
வானரங்கள் ராவணன் உடைய அம்பால் துன்புற்று ஓடின
புகலிடமான ராமனை சரணம் அடைந்தன -என்றும்
ராஷச ஸ வத்யமானனாம் வானரானாம் மகா சமு-சரண்யம் சரணம் யாதா ராமம் தசரதாத்மஜம் -யுத்தம் -94-17-
அரக்கர்களால் துன்புறுத்தப் பட்ட வானரர்கள் உடைய பெரிய கூட்டமானது-
காப்பாற்றுகின்றவனான ஸ்ரீ ராமனை புகலாக அடைந்தது என்றும் சொல்லுகிறபடியே-
உன்னை ஒழிய ஒரு புகல் இல்லாதவருக்கு உதவுமவன் அன்றோ-

நான்முகனே –
வ்யஷ்டி சிருஷ்டிக்கு தகுதியாக-சமஷ்டி புருஷனான பிரமனுக்கு அந்தராத்மாவாக
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோவை வேதாம்ச்ச ப்ரஹினொதி தஸ்மை –
முதல் முன்னம் பிரமனை எவன் படைத்தானோ -என்கிறபடியே பிரமனைப் படைத்து-
அவன் ஆத்மா வழியாக அவன் சரீரத்திலே அனுபிரவேசித்து-
சேதனர் அசேதனமான தங்கள் சரீரங்களைக் கொண்டு
தங்கள் தங்கள் நினைவுக்கு தக்கபடி போதல் வருதல்-முதலிய செயல்களை செய்யுமாறு போலே-
தன்னுடைய சரீரமாய் இருக்கிற பிரமனுக்கு அந்தர்யாமியாய்-அவனைக் கொண்டு மற்றும் நினைவுக்கு தகுதியாக
தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர உருவமான உலகத்தை படைத்த படியைச் சொல்லுகிறது-
இதனால் இவன் நினைத்த அன்று ஏதேனும் கொண்டு கார்யம் கொள்ள வல்லவன் -என்பதனைத் தெரிவித்த படி –
இருந்து படைக்கும் ஆசனத்தைப் போன்றவன் பிரமன் –
அசேதன பொருள்களான மகத்த முதலான தத்வங்களைக் கொண்டு படைத்ததோடு-
அறிவுள்ளவனான பிரமனைக் கொண்டு படைத்ததோடு வேறு பாடு இல்லை அவனுக்கு –
சேதன பொருள்கள் -அசேதனப் பொருள்கள் என்று தம்மில் தாம் வேற்றுமை உண்டாகிலும்-
அவனைக் குறிக்க பரதந்த்ரம் ஆகும் இடத்தில் இரண்டும் ஒக்கும் –ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய –
தேவர் மனுஷ்யர் திர்யக் -என்றும்
பிராமணன் ஷத்ரியன் வைஸ்யன்-என்றும் அந்த அந்த சரீரங்களை காட்டும் சொற்களாலே-
அவற்றில் வேறாய் இருந்துள்ள அவர்களும் சொல்லப் பட்டால் போலே -இங்கும் –
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய ப்ரத்வி சரீரம் –என்றும் –
ஜகத் சர்வம் சரீரம் தே ஸ்தைர்யம் தே வசூதாதலம்-அக்னி கோப பிரசாத தே சோம ஸ்ரீவஸ்த லஷனை-யுத்தம் -118-80-–என்றும் –
தஸ்ய ஸ்ருஜ்யச்ய சம்பூதௌ தத் சர்வம் தத ஹரேஸ்து-என்றும்
யானி மூர்த்தாதி ய மூர்த்தாதி யானி அத்ர அன்யத்ரவா கிவசித்-சந்திவைவஸ்து ஜாதாதி தாதி சர்வாணி தத்வபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் ––என்றும் –
உனக்கு உலகம் முழுதும் சரீரம் -அவை யாவும் அவனது உடல் -என்றும் –
அவை எல்லாம் அரியினுடைய உடல் என்றும் – சொல்லுகிறபடி-
சரீரத்தை காட்டுகிற சொல் ஆத்மா வரையிலும் தன் பொருளைக் குறிக்கும் என்கிற-நியாயத்தாலே
தனக்கு சரீரமாய் இருக்கும் பிரமனைக் காட்டக் கூடிய நான் முகன் என்ற சொல்லாலே-
அவனில் வேறாய் அவனுக்கு ஆத்மாவாய் இருக்கிற எம்பெருமான் சொல்லப் படுகையாலே-
நான்முகனே -என்ற சொல்லால் -எம்பெருமானை விளிக்கிறது —

முக்கண் அப்பா –
யஸ்ய ப்ரஹ்மா ஷத்ரஞ்சஉபே பவத ஓதனம்–என்றும் -ம்ருத்யு யஸ்ய உபசேசனம்சு இத்தா வேத யத்ர ஸ -கடவல்லி-என்றும் –
ம்ருத்யு -நெருப்பு எமன் சிவன் -இவர்களைச் சொல்லுகிறது
எவனுக்கு பிராமணனும் ஷத்ரியனும் உணவாகிறார்களோ-அழிக்கிறவன் வெஞ்சன பொருளோ
அத்தகைய அவனுடைய பெருமை இவ்வளவு என்று அறிகிலர் -என்கிறபடியே
அழிக்கப் படுகின்ற பொருள்களோடு

அழிக்கின்ற வனையும் அழிக்கின்ற சர்வேஸ்வரனுக்கு சரீரமாய் இருக்கிற சிவன் உடைய
முக்கண் -என்ற பெயராலே -அவனில் வேறாய் -அவனுக்கு அந்தராத்மாவாய் இருக்கும் எம்பெருமானையே விளிக்கிறது –
அப்பா –
என்கிற சொல் உபகாரத்தைக் காட்டுகிறது-
படைத்தலைக் காட்டிலும் அழித்தல் உபகாரமே அன்றோ –
நான்கு நாள்கள் கழித்து படைத்தாலும் ஆத்மா கிடக்கும்-
சடக்கென அழிக்கா விட்டால் ஆத்மாவை இழக்க வேண்டும்படி தீம்பிலே ஆயிற்று கை வளர்வது –
எங்கனே என்னில்
தம் தாம் கைகளைக் கொண்டு கண்களை கலக்கிக் கொள்வாரைப் போலே
படைத்த படைப்பு பேற்றுக்கு உடல் அன்றியே தீம்புக்கு உடல் ஆனவாறே-
சிறு குழந்தைகளை கால்களிலும் கைகளிலும் விலங்கிட்டு காப்பாற்றும் தாய் தந்தையரைப் போலே-
உறுப்புகளையும் உறுப்பக்களோடு கூடிய சரீரத்தையும் நீக்கி அழித்திட்டு விக்கியும் உபகாரமாம் படி இருக்கிறபடி-
ஏக த்வம் அஸி லோகஸ்ய ஸ்ரஷ்டா சம்ஹாரக ததா-அத்யஷஸ் சானுமந்தாச குணமாயா சமாவ்ருத -ஜிதந்தா
நீ ஒருவனே உலகத்தை படைக்கிறவனும்-அப்படியே உலகத்தை அழிக்கின்றவனும் ஆகின்றாய் -என்றபடி-

கோஹவை நாராயண ஆஸீத் -ந ப்ரஹ்ம ந ஈசான நேமே தயாவா ப்ருத்வி-ந நஷத்ராணி ந ஆப ந அக்னி ந சோம ந சூர்ய ஸ் ஏகாகி
நா மேதி தஸ்ய த்யானாத்தச்ய தஸ்ய ஏகாகத்யா ந சேந்த்ரியாணி — அனபுனரேவ நாராயண ஸ் அத்யம் காமம்
மனஸா த்யாலீத-தஸ்ய த்யாநாத் தச்தச்ய லலாடாத் ஸ்வேத அபதத் தா இமா ஆப
தத் ஹிரண்மயம் அண்டம் அவ்வத் -தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ ஜாயதே-என்று உபநிஷத்திலும் சொல்லப் பட்டதே -என்கிறார்
நாராயணன் ஒருவனே ஆதியில் இருந்தான் -பிரமனும் இல்லை -சிவனும் இல்லை –
இந்த விண்ணும் இல்லை மண்ணும் இல்லை -நஷத்ரங்கள் இல்லை நீர் இல்லை நெருப்பு இல்லை
சந்தரன் இல்லை சூர்யன் இல்லை -அவன் தனியனாய் வருந்தினான் –
தன்னுடைய த்யானத்திலே இருக்கிறவனுக்கு ஒரு மனம் பத்து இந்த்ரியங்கள் -என்று தொடங்கி
பின்பு மீண்டும் அந்த நாராயணன் வேறு ஒன்றினை சங்கல்ப்பிக்க நினைந்து த்யானம் செய்தான் –
த்யானம் செய்கின்ற அவன் நெற்றியிலே இருந்து வேர்வை கீழே விழுந்தது-
அது தான் தண்ணீர்-
அது பொன் மயமான அண்டம் ஆயிற்று-
அந்த அண்டத்தின் நின்று நான்கு முகங்களை உடைய பிரமன் உண்டானான்-
பின்பு மீண்டும் அந்த நாராயணன் வேறு ஒன்றினை சங்கல்பிக்க நினைத்து த்யானம் செய்தான்-
அங்கனம் த்யானம் செய்கின்ற அவன் நெற்றியிலே இருந்து வேர்வை கீழே விழுந்தது-
அவ் வேர்வையின் நின்றும் குமுழி உண்டாயிற்று-
அந்த குமுழியின் நின்றும் முக்கண்களை உடையனாய்-
சூலத்தை கையிலே தரித்தவனாய் ஒரு புருஷன் உண்டானான்-
என்று சொல்லுகிற மகா உபநிஷத் வாக்யத்தை நினைப்பூட்டுதல் செய்கிறது –
முனியே நான் முகனே முக் கண் அப்பா -என்கிற இந்த விளி வாக்கியம்
அதபுனரேவ நாராயணஸ் அநயம் காமம் மனஸா த்யாயீத தஸ்ய த்யானாந்தச்ய தஸ்ய லலாடாத் ஸ்வேத
அபதத் -ஸ்வேதான் புத் புதம் அபதத் புத்புநாத் த்ர்யஷ-சூல பாணி புருஷோ ஜாயதே -மகா உபநிஷத் வாக்கியம்
சிருஷ்டி ஸ்திதி அந்தகரனீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகம்-ஸ சம்ஜ்ஞானம் யாதி பகவான் ஏக ஏவ ஜனார்த்தனா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-23-
படைத்தல் காத்தல் அழித்தலைச் செய்கிற-பிரமன் விஷ்ணு சிவன் என்ற பெயர்களை-
பகவானான அந்த ஜனார்த்தனனே அடைகிறான் –

என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே –
படைத்தல் அழித்தல்களுக்கு இடையில்
பருந்து இறாஞ்சினால் போலே இறாஞ்சிக் கொண்டு போவார்களே அன்றோ காப்பார் இல்லா விட்டால்
அதற்காக படைத்தல் அழித்தல் செய்யும் தலைவர்களாய்
ஆதி தேவர்களாய் உள்ள
பிரமனுக்கும் சிவனுக்கும் நடுவே தான் இட்சுவாகு குலத்தாரோடும் யது குலத்தாரோடும் ஒத்த தரத்தனாய் கொண்டு திரு அவதாரம் செய்தாப் போலே-
ஆதி தேவனாய் -விஷ்ணு -என்னும் திருப் பெயரை உடையவனாய்-
தனது உருவத்தினாலேயே திரு அவதாரம் செய்து காப்பாற்றும் படியைச் சொல்லி விளிக்கிறது
பரமாத்மாச சர்வேஷாம் ஆதார பரமேஸ்வர-விஷ்ணு நாமா சவேதேஷூ-வேதான் தேஷு ச கீயதே -எல்லா பொருள்களுக்கும் ஆதாரமாய்
உள்ள பரமாத்மா சர்வேஸ்வரன் வேதம் வேதாங்களில் பேசப்படுகிறான்-
கர்மம்களுக்கு தகுதியாக உயர்வு தாழ்வு இன்றி-கண் அழிவு இன்றி செய்ய வேண்டுவது ஓன்று ஆகையாலே
படைத்தல் அழித்தல் களுக்கு ஆள் இடும் –கார்மீதீனம் -தானே இவை தயைக்கு வேலை இல்லையே அங்கு எல்லாம் –
காத்தலானது தானே தண்ணளி செய்து செய்ய வேண்டுவது ஓன்று ஆகையாலே வேறு ஆள் இட ஒண்ணாது
ஆள் இட்டாலும் வேறு சிலரால் காப்பாற்ற ஒண்ணாது
நஹி பாலன சாமர்த்தியம் ருதே சர்வேச்வரம் ஹரிம்-ச்திதௌ ஸ்திதம் மஹாத்மானம் பவதி அன்யச்ய கச்யசித் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-13-
காப்பாற்றுவதில் நிலை நின்றவரும்-
எல்லா பொருள்களுக்கும் ஈச்வரனாயும் மகாத்மாவாயும் இருக்கிற திருமாலைத் தவிர வேறு
ஒருவருக்கும் பாது காக்க ஆற்றல் இல்லை -இது பிரசித்தம் –
ந சம்பதாம் சமாஹாரரே விபத்தாம் விநிவதத்தே-சமர்த்தோ த்ருச்யதே கச்சித் தம்வினா புருஷோத்தமா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-
எல்லா செல்வத்தை கொடுப்பதிலும் ஆபத்துக்களை போக்குவதிலும் அந்த
புருஷோத்தமனான விஷ்ணுவைத் தவிர வேறு ஒருவருக்கும் ஆற்றல் இல்லை -என்றும் சொல்லுகிறபடியே-

நான் முகனே முக்கண் அப்பா –
என்கிற இடத்தில் கண்களை செம்பளித்துக் கொண்டு போய் விசேடியத்திலே இளைப்பாறினார்-
இங்கு விசேஷணமே தம் குறிக்கோள் ஆனபடியைச் சொல்கிறது –
என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே -என்று-ஆழ்வார்கள் திரு மேனிக்கு அப்பால் போக அறியார்கள்-
இந்த திரு மேனியை பற்றுக் கோடாக சொல்லா நிற்கச் செய்தே-இதனை விட்டு திவ்ய ஆத்மா ஸ்வரூபத்து அளவும் போ என்கிறது-
இதனை விடச் சொல்லுகிறது அன்று-திவ்ய ஆத்ம ஸ்வரூபத்து அளவும் போவான் என் -என்கையிலே தான் கருத்து-

பொல்லா என்பதனை -கரு மாணிக்கம் -என்பதனோடு சேர்ப்பது-பொல்லாக் கரு மாணிக்கம் என்று கண் எச்சில் வாராமைக்கு கரி பூசுகிறார்-
அன்றிக்கே
அழகிலே வேறுபட்ட சிறப்பினை உடைமையாலே கூறுகிறது -என்னுதல்
கனிவாய் –
அவாக்ய அநாதர -பேசாதவன் -விருப்பமில்லாதவன் என்று சொல்லப் படுகிறவன் –
அனுகூலரைக் கண்டு -அங்கனம் சொல்லப் படுகின்ற நிலை நீங்கி புன் முறுவல் செய்து நிற்கும்படியைச் சொல்கிறது –
ஸ்வ கர்மாதல தப்தானாம் த்யாயினாம் கேதசாந்தயே –
தங்களுடைய வினைத் தீயினால் வந்தவர்களுக்கு துன்பம் நீங்கும் படி –
தாமரைக் கண் –
வினவப் புக்கு விக்கித் தடுமாறினால் குறையும் தலைக் கட்டும் கண்களைச் சொல்லுகிறது-
தேவ பிரபன்னார்த்திஹர பிரசாதம் குரு கேசவ-அவலோகன தானேன பூயோ மாம்பாலய அவ்யய-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-20-14-
தேவனே அடைக்கலம் அடைந்தவர்கள் உடைய துன்பத்தை போக்குகிறவனே கேசவனே அழிவு இல்லாதவனே-
திருவருள் புரிய வேண்டும்-பார்வையைச் செய்தலாலே மறுபடியும் என்னை காப்பாற்றி அருள வேண்டும் -என்கிறபடியே
கரு மாணிக்கமே –
குளிர்ந்து -இவ் உலகத்தில் விடாய் தீர அணைக்கும் உடம்பைச் சொல்லுகிறது
ஏஷ சர்வச்ய பூதச்து பரிஷ்வங்கோ ஹனூமத-மா காலம் இமம் ப்ராப்ய தந்த தஸ்ய மகாத்மான -யுத்த -1-14-
இரண்டு சரீரங்களையும் உளவாக்கின மகாத்மாவான அந்த திருவடிக்கு காலம் கருதி என்னால்
விருப்பத்தோடு கொடுக்கப் பட்ட எல்ல பொருள் களுமான-இந்த ஆலிங்கனம் ஆவது அவனது பெரிய கோடிக்கு ஒத்தது ஆகாது -என்கிறபடியே
கனி வாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே –
தாமரை பூத்தது ஒரு மாணிக்கம் புன் முறுவல் செய்தாப் போலே ஆயிற்று வடிவு இருப்பது-

என் கள்வா –
என் இசைவு இன்றிக்கே என்னைக் கவர்ந்தவனே –
கருமத்தாலே இறைவன் உடையதான ஆத்மாவை முன் தோற்றாதே நின்று கவர்வான் இவன்-வடிவினைக் காட்டி இவனைக் கவர்வான் அவன் –
சர்வேஸ்வரனுக்கும் தனது பொருளை களவு கொண்டு கொள்ளும் படிக்கு ஈடாக அன்றோ-இவனுடைய -என்னின் -உரம் இருப்பது-
பண்டே உன் தொண்டாம் பழ உயிரை என்னது என்று-கொண்டேனைக் கள்வன் என்று கூறாதே -திவ்ய கவி
ஸ்ரீ ஜனக ராஜன் பெண் பிள்ளையை நீர் வார்ப்பித்து தனக்கு ஆக்கினாப் போலே அன்றோ –ஆத்மாவை தனக்கு ஆக்கிக் கொள்ளுகையாவது –

தனியேன் ஆர் உயிரே –
என் இசைவு இன்றிக்கே என்னை அங்கீ கரித்த அளவேயோ –
உன் சுவட்டினை அறிவித்து-பிரிந்தாலும் முடியாதபடி குணங்களின் தோற்றரவாலே உளேன் ஆம்படி செய்தவனே
இவ் உலக மக்களோடு பொருந்தாமையும்-பரமபதத்திலே புகப் பெறாமையும்-நோக்கித்- தனியேன் -என்கிறார் –
பிராட்டி அசோக வனத்தில் அரக்கிகள் நடுவே இருந்தால் போல் காணும் இவருக்கு-இவ் உலக மக்கள் நடுவே இருப்பு
உன்னைப் பிரிந்து பொருந்தாத இவ் உலகத்தில் இருக்கின்ற எனக்கு உயிருக்கு காரணமாய் உள்ளவனே —

என் தலை மிசையாய் வந்திட்டு –
செழும் பறவை தான் ஏறி திரிவான தாள் இணை என் தலை மேலே -10-8-5-
தலை மேலே தாள் இணைகள் -என்று சொல்லுகிறபடியே குறைவு இல்லாமல் வந்து தோற்றி –நிர்ஹேதுகமாக வந்து தோற்றி -என்னுமாம் –

இனி-
உன்னைக் காட்டின மாத்ரம் அன்றியே-பரம பதத்தில் சுவட்டினை அறிவித்த பின்பு-

நான் –
வழிச் சுவடு அறிந்த நான்

போகல் ஒட்டேன் –
தம்முடைய செல்லாமையாலும்-சம்பந்தத்தாலும்-தடுக்கவும் வளைக்கவும் உரியர் ஆனபடி –
அநாஹரோ நிராலோகோ ததஹீனா யதாத்விஜா-சேஷ்யே புரஸ்தாத் சாலாய யாவத்மே ந பிரசிதிதி -அயோத்யா -111-14
ஸ்ரீ பரத ஆழ்வான்-உணவு இல்லாதவனும்-ஒளி இழந்த முகத்தை உடையவனும்-
செல்வம் இல்லாத பிராமணன் போலே-எத்துணைக் காலம் என்னிடம் இரங்க இல்லையோ-
அத்துணைக் காலம் இலைக் குடிலின் முன்பு படுக்கிறேன்- என்றான் இறே-

போகல் ஒட்டேன் –
வரும் போது உன் ஸ்வா தந்த்ர்யத்தால் வரலாம் அத்தனை -அல்லது-போம் போது உன் கார்யம் உன்னதோ –
இவர்க்கு இப்படி சொல்லல் ஆகிறது -சர்வஞ்ஞன் அறிய தமக்கு உண்டான விரைவாலேயும்-
விரும்பிய அளவில் இவர் கார்யம் செய்யப் பெறாத பிற்பாட்டுக்கு-
ப்ரசீநந்து பவந்த மீ ஹ்ரீ ஏஷா ஹி மமதுலா-யத் ஈத்ருசை அஹம் விப்ரை உபச்தேயை உபஸ்தித -ஆரண்ய -10-9-
நான் அடையத் தக்கவர்களான இப்படிப் பட்ட அந்தணர்களால்-நான் அடையப் பட்டேன் என்னும் இது எனக்கு-
மிகவும் நாணமாய் இருக்கிறது -நீங்கள் என்னுடைய தவறினைப் பொறுத்து அருள வேண்டும் -என்று-
நாணம் கொள்ளுபவன் ஆகையாலும் அன்றோ –

ஒன்றும் மாயம் செய்யேல் –
உன்னை அறிவதற்கு முன்பு-விடத்தக்க விஷயங்களைக் காட்டி அதுவே அமையும் என்னச் செய்தாய்-
உன்னை அறிந்த பின்பு குணங்களை அனுபவிப்பித்து-
உம்பர் என் குறை -10-8-7-என்னவும்
ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் -10-8-10-என்னவும் செய்தாய்
அப்படியே இனி ஒரு குணத்தை அனுபவிக்கச் செய்து-நான் பெற்றேனாக செய்து என்னை வஞ்சியாதே கொள் –

அங்கன் வேண்டுவான் என் -என்ன
என்னையே –
ஏஹீ பஸ்ய சரீராணி முநினாம் பாவிதாத்மநாம்-ஹதானாம் ராஷசை கோரி பஹூதாம் பஹூதாவனே -ஆரண்ய -6-16-
காட்டிலே கொடிய அரக்கர்களால்-பல வகையிலே துன்புறுத்த பட்டவர்களாய்
பலரை இருக்கிற முனிவர்கள் உடைய-சரீரங்களை பார்த்து அருள வேண்டும் -எழுந்து அருள வேண்டும் –என்கிறபடியே
விரகம் தின்று-குறைவு பட்ட உடம்பினை காட்டுகிறார் –
அங்கு சரீர மாத்ரம் -அவர்களுக்கு-இவருக்கு ஆத்மாவின் நாசம் அன்றோ –

முனியே என்று சமஷ்டி ஸ்ருஷ்டியையும் –
நான் முகனே என்று வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டியையும் –
தத் ஸ்ருஷ்ட்வா –தத்அனுபிரவேச -படைத்த பின்பு -இரண்டு அனுபிரவேசம் –
ஜீவனை சரீரமாகக் கொண்டு அனுபிரவேசம் -அண்ட கடாகம் ஸ்ருஷ்டித்த பின்பு தானே -முன்பு சமஷ்டி சிருஷ்டியில் நேராக புகுகிறார் –
பிரதம ஜீவன் நான்முகன் –
முக்கண் அப்பா சம்ஹாரத்தையும் –
கரு மாணிக்கமே -பாலனத்தையும் அருளிச் செய்தார்

——————————————————————————————————-

மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-

மாயம் தொடர -தம்முடைய கார்யம் செய்ய மறுக்க ஒண்ணாத -பரனுக்கு அங்குசம் -நின் ஆணை திரு ஆணை
ஆண் யானை பெண் யானை பிடி களிறு -பிரணய ரோஷம் திருமால் இரும் சோலை -பிடி பிடிவாதமாக இருக்க -அழகர் பேரில் ஆணை
-இசையாமல் -திரு ஆணை தாயார் பேரில் ஆணை இட்டதும் கோபம் தணிந்ததாம் -வல்லபை மேல் ஆணை –
மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை-முன்பு குண ஆவிஸ்காரம் செய்து அகன்றால் போலே
-க்ஷணம் காலம் பிரிந்தால் முடியும் தசை நினைத்தபடி செய்வோம் என்று ஸ்வ தந்திரம் கொண்டு திரு உள்ளம் ஆனால்
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்-உனக்கு திரு -உன்னுடைய திரு -நிருபாதிக சம்பத் ஆகையால்
-சம்பந்தம் நித்யம் அன்றோ -சர்வாதிகமான ஸ்வரூபம் -நிரூபக பூதை -இன்றியமையாத அடையாளம் -ஸ்ரீ யபதித்தவம்-
உன்னுடைய திரு -மார்வம் -பிராட்டி எழுந்து அருளி -மார்வத்து மாலை நங்கை-பரிபாகம் ஒத்து கரு நீலம் செக்கச் சிவந்த செய்யாள்
-கோபம் சாந்தி -சூர்யன் சந்திரன் -ஹிரண்யமயமான மாலை போலே -கண்டிகையில் பத்மாவதி தாயார்-திவ்ய மங்கள -விக்கிரகத்துக்கு
நிருபாதிக பூதை-நாச்சியார் திருமொழி திரு மஞ்சனம் பொழுது சேவை -எம்பெருமானார் ஏற்பாடு -ஸமஸ்த கல்யாண பூர்ணை நங்கை –
தர்பண இவ பிரசரம் -நம்பி -பிரதிபலிக்கும் அழகு -குணங்கள் நிறம் பெறும்படி பண்ணுமவள் –
சர்வ கந்த உனக்கும் அதி வாசகமாய் -இயற்க்கை மணமா-கந்தம் கமழும் குழலி -நறு மணம் ஊட்டும்
விலக்ஷணமான திரு குழல் -அபிமானி -உபய விபூதிக்கும் –
திருவின் ஆணையே உன் ஆணையே -அவள் விருப்பமே உன் விருப்பம் -ஸமஸ்த ஜகத்தையும் நிர்வகிக்கும் –
ஆணை இட்டு நிர்பந்திப்பது த்வரையாலே என்று நினைத்து
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே-நிர்ஹேதுகமாக -தோஷம் தீண்டாத உன்னுடன் -தோஷமே –
நிரூபகமான என்னை -உன்னது என்னதாவி -ஒன்றாகவே -என்னது உன்னதாவி ஆத்ம பேதம் பிறவாதபடி-
ஸ்வரூபம் ஐக்கியம் இல்லை ஸாம்ப்பயாத்தி-அப்ருதக் ஸ்திதி
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ-தாழ்ந்தவன் என்று கூசாமல் கொண்டாய்
-அடியே பிடித்து அங்கீ கரித்து அருளினாய்
உனது பிரவ்ருத்தி அறிந்த என்னை -ஆழ்வீர் போதீரே என்று திரு மிடற்று ஓசையைக் கேட்க வேணும்
அந்தோ நீயே த்வரிக்க வேண்டிய காரியத்துக்கு நான் கூவ வேண்டி இருக்கிறதே –
எங்கோ திரிந்த என்னை வளைத்த பின்பு –

தாம் விரும்பியது-செய்து அல்லாது நிற்க ஒண்ணாதபடி-அவனுக்கு திரு ஆணை-இடுகிறார்-

மாயம் செய்யேல் –
மேல் மாயம் செய்யேல் -என்னச் செய்தே-மீண்டும் சொல்லுகிறது என்ன ஆற்றாமை தான் –
இப்படி இவர் நிர்பந்தித்த இடத்திலும் -உம்மை மாயம் செய்யோம் -துக்கப் பட வேண்டா -என்னாமையாலே-
மாயம் செய்யேல் -என்று மீண்டும் கூறுகிறார் –மா ஸூ ச சொல்ல வேண்டாமோ –

என்னை –
என் ஒருவனையும் -அடைக்கலம் புகுந்த என்னை –இதனால் உன்னுடைய லீலா விபூதி முடிந்து விடாதே காண் –
அன்றிக்கே –
தைவீஹி ஏஷா குணமயி மம மாயா துரத்யயா-மா மேவ யே பிரபத்யந்தே மாயம் ஏதாம் தரந்தி தே-ஸ்ரீ கீதை -7-14-
என்னையே எவர்கள் சரணமாக அடைகின்றார்களோ-அவர்களே இந்த மாயையைத் தாண்டுகிறார்கள் -என்கிற-உன்னுடைய வார்த்தையை நம்பி-
அலர் மேல் மங்கை உறை மார்பா உன் அடிக் கீழ் புகுந்தேன் -என்றுபுகல் புக்க என்னை வஞ்சியாதே கொள் -என்னுதல் –
தனியனாக என்னை -சரணாகதனான என்னை என்றபடி-

இப்படி நிர்பந்திக்கச் செய்தேயும் -துக்கப் படாதே -என்னாமையாலே -அவனுக்கும் மறுக்க ஒண்ணாத படி-
பெரிய பிராட்டியார் திரு ஆணை இடுகிறார் –
உன் திரு –
நித்யைவ ஏஷா ஜகத்மாதா விஷ்ணோ ஸ்ரீ அநபாயிநீ-யதா சர்வகதா விஷ்ணு ததைவ இயம் த்வ்ஜோத்தம -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-17
விஷ்ணுவுக்கும் செல்வமாய் இருப்பவள் -என்கிறபடியே-
உலகத்துக்கு எல்லாம் செல்வம் அவன் -அவனுக்கும் செல்வம் இவள் –
அன்றிக்கே
விஷ்ணுவுடைய திரு -என்றபடி-உன்னுடைய செல்வம் -என்னுதல்-
திருவுக்கும் திருவாகிய செல்வா -பெரிய திருமொழி -7-7-1-என்றும்-
ஸ்ரிய ஸ்ரீயம் பக்த ஜனைக ஜீவிதம்-சமர்த்ததம் ஆபத்சகம் அர்த்தி கல்பகம் -ஸ்தோத்ர ரத்னம் -45
தாம் ஸ்ரீ இதி த்வத் உபசம்ஸ்ரயநாத நிராஹூ-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -29
திருமகளாலே சர்வேஸ்வரன் தெய்வத் தன்மையை அடைகிறான் –
யாவர் ஒருவனுக்கு அந்த ஜனக ராஜன் குலத்தில் பிறந்த பிராட்டி மனைவியாய் இருக்கின்றாளோ-
அவருடைய ஆற்றல் அளவிட்டு அறியக் கூடாததாய் இருக்கிறது -என்கிறபடியே-
ஆதாரப் பிரதானமாய் இருத்தல்-ஆதேயப் பிரதானமாய் இருத்தல் –
ஆதேயத்துக்கு ஆதாரத்தை ஒழிய உளதாம் தன்மையும் இல்லை-
நிரூப்யத்துக்கு நிரூபகத்தை ஒழிய ஸ்வரூபத்தின் நிலை இல்லை –
ஒன்றை ஓன்று ஒழியில் ஸ்வரூபம் நிலை பெறுதல் இல்லை –
தன் ஆகத் திரு மங்கை தங்கிய திரு மார்வன் -நாச்சியார் திருமொழி -8-4-
தான் உளன் ஆகைக்காக -தன் சத்தை பெறுகைக்காக-நித்ய யுவதியான பெரிய பிராட்டியார் நித்ய வாசம் செய்யும்
வீறு உடைய திரு மார்பு –
சிரஞ்ஜீவதி வைதேஹி யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணம் அபி விநாதாம் அஸி தேஷணா-யுத்தம் -66-10-
பிராட்டியைப் பிரிந்தால் ஒரு கண நேரமும் உய்யேன் என்கிறபடியே –
ஸ்ரத்தாயா -லஷ்மயா -தேவத்வம் ஈஸ்வரத்வம்-அடைகிறான் -ஆதார பிரதான்யம் -சர்வ ஆதாரம் ஈஸ்வரன் -பரிமளம் புஷ்ப்பம் இடமும்
– ஒளி ரத்னம் -ஆதேயம் பிரதான்யம் -இங்கு மட்டும் சமப்பிரதான்யம் -என்றவாறு –
ச குடும்ப சமேதராய் -இரண்டு சகாரம் -தன்னாகத்து திருமங்கை தங்கிய சீர் மார்பன் -இரண்டும் சொல்லி
ஆதார நிரூபக பிரதான்யம் இரண்டும் சொல்லி
ஆகத்து திருமங்கை -அவளுக்கு பிரதான்யம் -தங்கிய சீர் மார்பன் -அவனுக்கு பிரதான்யம் –

மார்வத்து மாலை –
கேவலம் செல்வமாய் இருக்கை அன்றிக்கே-திரு மார்புக்கு அலங்காரமாய் இருக்கை –
மார்புக்கு அலங்காரம் அவள்-அவளுக்கு அலங்காரம் மார்பு –
ந தே ரூபம் நா ஆகார ஆயுதானி நச ஆஸ்பதம்-ததாபி புருஷாகார பக்தாநாம் த்வம் பிரகாசசே -ஜிதந்தே -5-
அடியார்களுக்காகவே தேவரீர் உடைய ஸ்வரூபம் திரு மேனி-
அடியார்களுக்காகவே பிரகாசித்துக் கொண்டு இருக்கிறீர் -என்றபடி –

நங்கை-
வடிவு ஒழிய-மற்றை ஸ்வரூபம் குண விபூதிகளும் -அவளாலே என்கை-
பதிம் விச்வச்ய ஆத்மேச்வரம் சாஸ்வதம் சிவம் அச்யுதம் –
உலகங்கள் எல்லாவற்றுக்கும் தலைவன் -என்கிறவனுக்கும் இவள் நினைவால்-பொரி புறம் தடவ வேண்டும்படி இருக்கை –
பிரமன் சிவன் மற்றையோரைக் காட்டிலும் வேறுபாடு இத்தனையுமே அன்றோ-
திருவாளனுக்கு திரு இல்லாதவர் ஒப்பு ஆகார் அன்றோ –
ஜ்ஞானமே வடிவாக இருத்தலில் ஒற்றுமை-
நரநாரீ மயோ ஹரி -பெருமானும் பிராட்டியும் சேர்ந்த உருவமே ஹரி என்னும் பொழுது-
உன்னுடைய திரு -எனபது ஆதார பிரதானமாக இருத்தலால் –
வாசம் செய் பூங்குழலாள் –
நாற்றத்துக்கும் நாற்றம் கொடுக்கும் குழல்-
சர்வகந்த -என்பவனுக்கும் நாற்றம் கொடுக்கும் குழல்-
சர்வ கந்த -என்னும் ஏற்றம் அவனுக்கு இத் தலையாலே காணும் அவனுக்கு வந்தது-
இத் தலை மயிராலே ரசோக்தியாக அருளிச் செய்கிறார்-
ஸ்ரத்தாயா அதேவ அஸ்னுதே தேவன் ஆனான் என்பர் ரஸோக்தியால் –
பூங்குழல்-
பூவை உடைத்தான குழல் -என்னுதல்
அழகிய குழல் -என்னுதல்

திரு ஆணை நின் ஆணை கண்டாய் –
திருவினுடைய ஆணை காண் –
என் கார்யம் செய்து அல்லது இட்ட அடி பேர ஒண்ணாதபடி உனக்கு இட்ட ஆணை –
போக வல்லை யாகில் போய்க் காண் -எனபது கருத்து –
இவளே திரு -தானே -திவ்ய பிரபந்த கோஷ்ட்டி தாண்டி போக வில்லையே இன்றும் –
வளைத்து வைத்தேன் -இனிப் போகல ஒட்டேன் உன் தன் இந்த்ர ஞாலங்களால்-
ஒளித்திடில் இன் திரு ஆணை கண்டாய் நீ ஒருவர்க்கும் மெய்யன் அல்லை -பெரியாழ்வார் திருமொழி -5-3-2-

எல்லார்க்கும் அறப் பெரியவன் ஆகையாலே மற்றையோர்க்கு எல்லாம் உன்னுடைய ஆணை-
உனக்கு நீ உகந்தார் இடும் ஆணை அத்தனை அன்றோ –
அன்றிக்கே –
மாதரம் ரஷ கைகேயீம் மா ரோஷம் குரு தாம் ப்ரதி-மயா ச சீதாயாசைல சப்த அஸி ரகுநந்தன -அயோத்யா 118-27-
ஒ பரதனே தாயான கைகேயியைக் காப்பாற்று-அவள் இடம் கோபம் வையாதே-
மயா ச சீதாயா-என் மேலும் சீதை மேலும் ஆணை -என்ற பெருமாள் போலே-இங்கேயும்-
பெரிய பிராட்டியார் ஆணை-நின் ஆணை -காண் -என்கிறார் -என்னலுமாம் –

நீர் இட்ட ஆணை உம்முடைய ஸ்வரூபத்துக்கு மாறு பட்டது காணும் –
அடியார் ஆனால் நாம் செய்து இருக்கிறபடி கண்டு இருக்க வேண்டும் காணும்-என்ன-
மாறுபட்டது அன்று -என்கிறார் பின் இரண்டு அடிகளாலும் தாவது -ஆற்றாமையின் மிகுதியைச் சொல்லி நீக்குகிறார் -என்றபடி-
உமக்கு பாரதந்த்ர்யம் ஸ்வரூபம் ஆனால் தலைவன் செய்த படி கண்டு இருக்கும் அத்தனை காணும் -என்ன-
அடியவன் உளனாய் கண்டு இருக்க வேண்டுமே -உயிர் வேறு இன்றி -என்று-
தம்முடைய இல்லாமையை விவரிக்கிறது மேல் இரண்டு அடிகளாலும்-மேலில் பாட்டுக்களாலும்-
பாரதந்த்ர்யம் ஸ்வரூபம் ஆனால் வேறு நிற்றலும் வேறாகத் தோன்றலும் உண்டோ -என்கிறார்-
கண்கள் சிவந்து -2 1/2 பாட்டுக்கள் -பரமாத்மா ஸ்வரூபம் -மேலே 7 1/2 பாட்டுக்கள் ஜீவாத்மா ஸ்வரூபம் பிரித்தால் போலே
இங்கும் மேலே 8 1/2 பாசுரங்கள் -என்றவாறு –
நேசம் செய்து –
பெரிய பிராட்டியார் பக்கலிலும் செய்யாத அன்பை என் பக்கலிலே செய்து –
நான் அன்பு செலுத்த இருந்தாயோ-என் விடாய்க்கு அடி உன் விடாய் அன்றோ-ஈஸ்வரஸ்ய அஸ்ய ஸுஹார்த்தம் முதல் படி அன்றோ –
அகலகில்லேன் இறையும் -என்று அவள் செல்லாமை கண்டே அன்றோ அவள் பக்கல் அன்பு செலுத்தினாய் –
இன்னும் ஒரு மாசம் தான் இருப்பேன் -மன்னன் மேல் ஆணை -திருவடி வார்த்தை சொல்லக் கேட்டு பெருமாள் கார்யம் செய்தாரே-

உன்னோடு என்னை –
உன்னை அறிந்தாயோ-என்னை அறிந்தாயோ –
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னல் கவி நீ -3-6-7-அதற்கு எதிர் தலை அடியேன் -நீசனேன் நிறை ஒன்றும் இலேன்
அன்றிக்கே
இவன் அணு அளவினன்-ஏவப்படுகின்றவன் –நாம் எங்கும் பரந்து இருப்பவன் -ஏவுகின்ற்றவன் -என்று பார்த்தாயோ -என்னுதல் –

உயிர் வேறின்றி ஒன்றாகவே –
உயிர் வேறுபாடு இல்லாதபடி அன்றோ என்னை அங்கீ கரித்தது-உன்னது என்னதாவியுமஎன்னது உன்னதாவியும் -4-3-9-
என்னும்படி
என்னைப் பிரித்துக் காண ஒண்ணாதபடி அன்றோ நீ தலையாலே சுமந்தது-
தலை தடுமாறாக செயல் புரிந்தது -கலவிக் காலத்தில் என் ஸ்வரூபம் நீ இட்ட வழக்காயும்
உன் ஸ்வரூபம் நான் இட்ட வழக்காயும் படி அன்றோ -நீ செய்த செயல் –
தலை தடுமாறி பரிமாற்றினாய் -தட்டு மாறின சீலம் திருக் காட்கரை அப்பன் –
சக்யா சோபயிதும் ந அஹம் ஐஸ்வர்யேண நநேனவா-அனன்யா ராகவேண அஹம் பாஸ்கரேண பிரபா யதா -சுந்தர -21-15-
சூர்யனோடு கூடிய ஒளி போன்று என்ற விளக்கம் இல்லை என்னலாம் படி செய்தான் என்றபடி –
சூரியன் பிரபை என்று பிரித்து சொல்லும் படி அங்கு -இங்கு உயிர் வேறு இன்றி -விசத தமமாகப் பண்ணி -அன்றோ கலந்து –

கூசம் செய்யாது கொண்டாய் –
சர்வஞ்ஞனான நீயும் வாசி வைத்துக் கலக்க அறிந்திலை-என் பக்கல் உள்ள தாழ்மையைப் பாராதே அங்கீ கரித்தாய் –
முதலிலே என்னுடைய முன்னைய செயல்களைப் பாராதே மதி நலம் அருளினாய்-
பின்பு -வளவேழ் உலகில் -நான் தாழ்ந்தவன் என்று அகல-என்னை என் வழியில் விடாதே-
உன் செல்லாமையும் காட்டிச் சேர்த்துக் கொண்டாய்-இப்படி அன்று நீ செய்திலை யாகில் இன்று வருந்த வேண்டா ஆயிற்று –

என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து –
ஆனபின்பு என்னை ஈண்டென வந்து அணுகப் பாராய்-
1-சாஸ்த்ரங்களால் அறிவிக்கும் அளவு போராது-
2-குணங்களை அனுபவிக்கும் அளவாலே போராது-
3-உட் கண்ணால் காணலும் போராது –
4-உன்னைக் கிட்டி அனுபவிக்கும் படி செய்ய வேண்டும் –
வர வேண்டும் கூவ வேண்டும் -நடை அழகைக் காண வேண்டும் -மிடற்று ஓசையை கேட்க வேண்டும் -கைங்கர்யம் கொள்ள வேண்டும் –
அந்தோ –
தன்னை ஒழியச் செல்லாமையை-தானே விளைத்து-கூப்பிட வந்து முகம் காட்டாது ஒழிவதே-

————————————————————————————————————

கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-

ப்ரஹ்மாதி காரணன் -நாபி கமலம் -மூலமாக -நீ வந்து விஷயீ
கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே-நிரதிசய போக்யன் -விலக்ஷண மேனி
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்-தஞ்சமாக பிடிக்க உபகனம்
உன் கார்யம் நான் சொல்ல வேண்டி இருக்கிறதே அந்தோ
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்-ப்ரஹ்மாதிகள் எல்லாம் தம் தாம் பிரயோஜனங்கள் பெற
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பர் அந்த அதுவே-வித்து ஜகத் காரணன் -கந்த பூதன்-
ஸ்ருஷ்யர் அல்லாத நித்ய ஸூ ரிகளுக்கும் அந்த அதுவே -லோகத்தில் பிரசித்தம் -அத்தனை பெருமை படைத்த
-உம்பருக்கும் பிராப்யம்-சத்தா ஸ்திதி யாதிகளுக்கு நிர்வாகன்

பெரு மிடுக்கரான பிரமன் முதலாயினோர்கள்-உடைய ஸ்வரூபம் ஸ்திதி பேறு-முதலாயின வற்றுக்கு எல்லாம்-நிர்வாஹகனான நீ
உன்னால் அல்லது ஜீவிக்க விரகு இன்றிக்கே இருக்கிற என்னை-ஐயோ -வந்து அங்கீ கருத்து அருள வேண்டும்-என்கிறார் –

கூவிக் கொள்ளாய் –
மேலே கூவிக் கொள்ளாய் -என்றவர்
இங்கேயும் -கூவிக் கொள்ளாய் -என்கிறார் காணும் –விடாய் கொண்டவன் -தண்ணீர் தண்ணீர் -என்னுமாறு போலே
ஆற்றாமை மிக்கு செல்லா நின்றாலும் பாசுரம் இது அன்று இன்றிக்கே இருக்கிறபடி –

கூவிக் கொள்ளும் அளவும் போராது-வந்து கூவிக் கொள்ள வேண்டும் -என்பார் –
வந்து -என்கிறார் –
ஆற்றாமை மிக்காலும் நான் வந்து கிட்டுகை முறைமை அன்று-
உனக்கு தாழ்ச்சியுமாம் -என்கிறார் –எழுதும் என்னும் இது மிகை -9-8-9- என்பவனுக்கு-
நாம் செல்லுதல் என்னும் அது பொறுக்க முடியாதது -என்னும் இடம் சொல்ல வேண்டாவே அன்றோ
–வருகை -அவனுக்கே உரியதாய் இருக்கிறபடி-
சரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பிரபலார்த்தன-மாம் நயெத் யதி காகுத்ச தஸ் தஸ்ய சத்ருசம் பவேத் -சுந்தர 9-9-
பகைவர்கள் வலியை அழிப்பவரான ஸ்ரீ ராம பிரான் இலங்கையை அம்புகளாலே-
நெருக்கினதாக செய்து என்னை அழைத்துக் கொண்டு செல்வராகில்-அந்த செயலே அவருக்குத் தக்கதாக இருக்கும் -என்றாளே பிராட்டியும்-

அந்தோ –
உனக்கு நிறம் அன்று என்று நான் சொல்ல வேண்டுவதே –

என் பொல்லாக் கருமாணிக்கமே-
தொளையாத மாணிக்கம் –அனுபவிக்கப் படாத ரத்னம் -என்றபடி –
அன்றிக்கே
உலகத்துக்கு ஒப்பான அழகு அன்றிக்கே வேறு பட்டு இருக்கையாலே-பொல்லா -என்கிறார் -என்னுதல்-வைஜாயத்யம்–
அன்றிக்கே
கண் எச்சில் வாராமைக்காக -பொல்லா -என்கிறார் -என்னுதல்
நீ அழைத்த போது கண்டு இருக்கல் ஆயிற்றே- நீ நீ அன்றிக்கே இருந்தாய் ஆகில் –என்பார் -பொல்லாக் கரு மாணிக்கமே -என்கிறார் –
க்ரமத்தில் அழைக்க நினைத்தாய் ஆகில் -அழகைக் காட்டி -உனக்கே உரியவன் ஆகும்படி செய்தது என் –என்பார் -என் பொல்லாக் கரு மாணிக்கமே -என்கிறார்

நன்று -உலகங்கட்கு எல்லாம் வேறு பட்டவனாய் இருப்பினும்-ஸ்வரூபத்தை பார்த்து ஆறி இருக்க வேண்டாமோ -என்னில்
அது செய்யும் இடத்தில் நான் உன்னை ஒழிய உளனாக வேண்டுமே -என்கிறார் -மேல்-
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான் –
பற்றுக் கொம்பு வரையறை செய்யப் பட்டதாய் இருக்கிறபடி-
கொடி -கொள் கொம்பை ஒழிய நிற்க வற்றோ-வேரை அறுத்து படர் என்றால் படருமோ என்றபடி –
என் உயிர் பிழைப்பதற்கு காரணமாய் இருப்பது ஓன்று உன்னை ஒழிய வேறு ஓன்று காண்கின்றிலேன் –
நச சீதா த்வயா ஹீனா நசாஹமபி ராகவ-முஹூர்த்தமபி ஜீவாவ ஜலான் மத்ச்யாயிவ உத்ருதௌ -அயோத்யா -53-31
நீருள எனின் உள மீனும் நிலமும்-பாருள எனின் உள யாவும் பார்ப்பு தன்
தாருள தது உளாய் நானும் சீதையும்-ஆர் உளர் எனின் உளேம் அழகு வாய் என்றான் -என்கிறபடியே-

ஆயின் பேற்றுக்கு உடலாக நீரும் சில செய்தாலோ என்ன-
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்நாவிக் கமல முதல் கிழங்கே-
செருக்கு அற்றவர்கள் ஆகித் தொழும் பிரமன் சிவன் முதலாயினோர்கட்கு எல்லாம்-காரணமான திரு நாபிக் கமலத்துக்கும் கிழங்கு ஆனவனே –
கார்யம் இல்லாத போது ஒருவருக்கு ஒருவர் மாறு பட்டவர்களாய்-
இருப்பார்கள் ஆதலாலும் -தங்களுக்கு ஒரு கார்யம் வந்த வாறே எல்லாரும் கூடி தொழுவார்கள் ஆதலானும்-
மேவித் தொழும் -என்கிறார்
அன்றிக்கே
யான் எனது -என்ற செருக்கு அற்றவர்களாய் தொழுகிறார்கள் என்பார் -மேவித் தொழும் -என்கிறார் என்னுதல் –
இதனால் மற்றை பிரமன் முதலாயினோர் தங்கள் கார்யம் தாங்களே செய்து கொள்கின்றார்கள் இலர் என்பதனையும்-
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு -என்று சொல்லாதவர்களுக்கும்-உதவுமவன் அன்றோ நீ –என்பதனையும் தெரிவித்த படி –
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு -என்று சொல்ல அறியாமையாலே-பிரமன் முதலாயினோர்கள் சொல்லார்கள் –

நித்ய சூரிகள் யான் எனது என்ற பற்று இல்லாதவர்கள் ஆகையாலும்-
புதிதாக சொல்ல வேண்டாமையாலும் சொல்லார்கள்-
-உம்பர் அந்த அதுவே –
அவர்களுக்கும் மேலான நித்ய சூரிகட்கும்-
அப்படிப் பட்ட-உபய லிங்க விசிஷ்டனாய் -எளிதில் அடையத் தக்க பொருளாக இருப்பவனே-ஸூ பாஸ்ரயமான திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டன் –
சதா பஸ்யந்தி சூரய -பிரமாண பிரசித்தியைச் சொல்லுகிறார்-
அது -என்று-
நித்ய சூரிகளோடு-
பிரமன் முதலாயினர்களோடு-
வேறுபாடு அற நிர்வாஹகனாய் இருக்கிற-
நீ வந்து என்னைக் கூவிக் கொள்ளாய் –
இப்பாட்டால் முன்னும் பின்னும் சொல்லுகிற-சாமாநாதி கரண்யத்துக்கு காரணம்-
கார்ய காரண பாவம் என்னும் அத்தை அருளிச் செய்தார் ஆயிற்று-
சர்வம் கலு இதம் ப்ரஹ்மம் -சுருதி -இவை எல்லாம் ப்ரஹ்மம் அல்லவா-

——————————————————————————————————————————–

உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4-

சர்வ பிரகார விசிஷ்டன் -பிரகார பூதனான என் கார்யம் செய்வதாக உபக்ரமித்து போர விட்டது எதனால்
உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ-பூதமான மஹதாதிகளுக்கு எல்லாம் மேலான
-உனக்கு லீலை உபகரணம் அழகிய குளிர்ந்த -சத்வம் ரஜஸ் தாமஸ் சாம்யம் -போக மோக்ஷங்கள்விலைக்கும் ஸ்தானம்
அதனுள் அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ-அண்ட காரணம் -தேஜஸ் -பஞ்ச பூதங்கள் -ப்ரஹ்மாதிகளை உத்பாத்தித்து பிரகாரமாகக் கொண்டு
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ-தத் தத் கர்மா விபாகம் பண்ணி ஸ்ருஷ்டித்த பின்பு
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே-என்னுடைய தேகம் -பிராப்தி பர்யந்தமாக -கண் முன்னால் காட்டிய பின்பு விட்டாயே
ஓ ஒவ் ஒரு இடத்திலும் -சேர்த்து -உம்பர் அம் தண் பாழேயோ-நீ ஓ / அதனுள் மிசை நீயேயோ-நீ ஓ
அம்பரம் நற் சோதி -ஓ /அதனுள் பிரமன் அரன் நீ-ஓ /உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ ஓ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயேஓ /
பொறுப்பை நிர்வகிக்கத்த பின்பு -ஓர் ஒன்றே ரசிக்க ஹேதுவான பின்பு அநாதரிப்பது -ஆர்த்தி மிக கூப்பிடுகிறார்

எல்லாப் பொருள்களுக்கும் நிர்வாஹகனான நீ-என் கார்யத்தை நானே செய்து கொள்வேனாய் பார்த்தாய் ஆகில்
என்னைக் கை விட்டாய் அல்லையோ-என்கிறார்

உம்பர் அம் தண் பாழேயோ –
மஹான் முதலிய காரணங்களுக்கு எல்லாம் காரியம் ஆகையாலே மேலாய் –
தன்னுடைய ஒரு கூற்றாலே கார்ய வர்க்கத்தை பிறப்பிக்க வற்றான ஆற்றலை உடைத்தாய்-
வியக்கத் தக்க பரிணாமத்தை உடையதாய்-
ஆத்மாக்களுக்கு போகத்தையும் மோஷத்தையும் விளைத்துக் கொள்ளலாம்-நிலமாய் இருந்துள்ள மூல பிரக்ருதிக்கு நிர்வாஹகன் ஆனவனே
உம்பர் -மேல்
அம் தண் -அழகிய குளிர்ந்த
பாழ் -மூல பிரகிருதி -படைத்ததற்கு தகுதியாய் இருக்கை-கிருஷிக்கு யோக்யமாய் இருக்கை-
காரண நிலையில் கார்யத்துக்கு தகுதியாய் நின்று-தன் கார்யத்தாலே-
ஆத்மாக்களுக்கு போகத்தையும் மோஷத்தையும் விளைக்கவற்று -என்னும் இடத்தை சொல்லுகிறது –
வெண்மை என்று கொண்டு பிரித்துக் காட்டும் சொல்லாலே-தர்மத்தை பிரிய சொல்லுமாறு போலே-
பிரியச் சொல்லப் போகாது இறைவனுக்கு சரீரம் ஆனவற்றை-ஆதலின் பாழேயோ -என்கிறார்-
உம்பர் அம் தண் பாழ் -என்கிற இதனால்-ஆத்மாக்களுக்கு சரீரமாய் -அவ்வழியாலே ஈஸ்வரனுக்கு சரீரம் ஆகை-அன்றிக்கே
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய பிர்த்வி சரீரம் –
ஆத்மாக்களுக்கு வேறு பட்டதான அசேதனப் பொருள்களுக்கும்-அவனை ஒழிய நிர்வாஹகர் இல்லை என்பதனை தெரிவித்த படி-
பாழேயோ -என்கிற இதனால்
சுத்த பேதம் கொள்ளுகிற மீமாம்சகரையும்–
ஸ்வரூபத்தால் தாதாத்மியம் கொள்ளுகிற மாயாவாதிகளையும் அழிக்கிறது –

அந்த மூலப் பிரக்ருதிலே மறைந்து நிற்கிற சிறப்புடைத்தான-ஆத்மாவுக்கு நிர்வாஹகன் ஆனவனே-
நுட்பமான சித் அசித்துக்களை சரீரமாக உடையவன் காரணம் ஆகையாலே-காரணனாய் உள்ள நிலை சொல்லிற்று-
இதனால் விசேஷணத்துக்கு முதன்மை சொல்லும் நியாய வைசேடிக மதங்களும்-
விசேஷணதுக்கு பொய்மை கூறும் மாயாவாதி மதங்களும்-ஆழ்வாருக்கு உடன்பாடு அன்று -என்றதாயிற்று
நீயேயோ -என்கிற இதனால்-
ஆத்மாவை ஒழிய சரீரத்துக்கு நிலை இல்லாதது போலே-
ஈஸ்வரனை ஒழிய ஆத்மாவுக்கு நிலை இல்லை என்றது ஆயிற்று –

பிரகாரி பிரகார சம்பந்தம் -காரிய காரண சம்பந்தம் -நீயே பாழ்–சர்வம் கல் இதம் ப்ரஹ்மம் –
நீ ஆத்மா தத் தவம் அ ஸி -அதனுள் மீசை நீயே யோ
ஜகத் வியதிரிக்த விஷயங்களில் -நிஷ்கர்ஷம் தர்மம் தர்மம் சொல்லும் தர்மியை சொல்லாதே –
பூவின் மணம் -மணத்தை தானே குறிக்கும் பூவைக் குறிக்காதே
பகவத் விஷயத்தில் நிஷ்கர்ஷமான சொல்லும் அவனையே குறிக்கும் -நீ பிரகிருதி பாழ் சொல்லலாம் -என்றவாறு –
பிரகிருதி சப்தம் அவன் அளவில் பர்யவசிக்கும் -சர்வ சப்த வாச்யத்வம் –
பிரகார பிரகாரி சரீர ஆத்மா சம்பந்தம் இவனைப் போலே இல்லையே -நமக்கும் சரீர சம்பந்தம் இந்த பிறவியில்
-பிரகிருதி சம்பந்தம் மோக்ஷம் அடைந்ததும் போகுமே
என் உடம்பு நாம் சொல்ல வேண்டும் -அவன் நானே உடம்பு -சொல்லலாம்
ஆடையின் வெண்மை -படஸ்ய ஸுக்லயம் -வெண் தன்மை -நிஷ்கர்ஷகம்
வெண் ஆடை -அநிஷ்கர்ஷகம்
வை வைஷிகா நிஷ்கர்ஷகம்-சுக்ல பட -வெண் ஆடை சொல்லாமல் ஆடையின் வெளுப்பு
நியதி -நிஷ்கர்ஷகம்-கந்தம் பிருத்வி மண்ணில் மணம்
தர்மத்தை மட்டும் சொல்லும் தர்மியை சொல்லாதே
ஈஸ்வரன் இடத்தில் -அப்ஸு ரஸோஹம் தண்ணீரில் ரசம் நான் -கௌந்தேய -சொல்கிறான் –
அனைத்தும் நீயேயாக இருக்க நீ போர விட்டால் எங்கே போவேன் என்கிறார் –
சேதனம் உடன் கூடி இருந்தாலும் கூடாமல் இருந்தாலும் அவனுக்கு சரீரம் -அவனே நிர்வாககன்
அசித் மிஸ்ரான் -விசுத்த ஜீவன் -பக்த முக்த —அசித்தை பிரிந்த ஜீவனும் உண்டே –
அழுக்கு குறைகள் தட்டும் என்பதால் வேறே என்பர் மீமாம்ஸய்கர் -அப்படி அல்ல -ஆத்மாவுக்கு தட்டாது போலே அவனுக்கு –
அத்வைதி மாயாவாதிகள் -சர்வம் கல் இதம் ப்ரஹ்மம் ஒன்றாக -ஸ்வரூபத்தால் ஓன்று -அதுவே இது இதுவே அது என்பர் –
தத் ப்ரஹ்மத்தை சொல்லி த்வம் ஸ்வகேதுவைச் சொல்லுமே -ஜீவனுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஐக்கியம் சொல்வார் அத்வைதிகள்
-பிரக்ருதிக்கும் ப்ரஹ்மத்துக்கும் சொல்லார் ஆழ்வார் அத்தையும் சொல்லி சரீர ஆத்ம பாவத்தால் –
சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் காரணம் -என்றவாறு –
நிர்விசேஷ சின் மாத்ர ப்ரஹ்மம் -அத்வைதிகள் –
விசேஷண பிரதான்யம் சொல்லும் வைசேஷிகர் –
நீ என்பதற்கு தானே ஆழ்வார் பிரதான்யம் என்கிறார் –
பொய் இல்லை -விசேஷணம் உண்டு என்கிறார் -ஆகையால் இரண்டு மதங்களையும் கண்டனம் பண்ணி அருளுகிறார் –

அம்பரம் நற் சோதி –
ஆகாசமும் சிறப்புடைத்தான ஒளியும்-
இவை இரண்டும் மற்றைய பூதங்களுக்கும் உப லஷணம்-
யத் அம்பு வைஷ்ணவ காயா தத விபர வசூந்தரா-பத்மாகாரா சமுத்பூதா பர்வதாப்த்யாதி சம்யுதா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-
விஷ்ணு உடைய சரீரம் யாதொரு காரணத்தால் தண்ணீர் ஆயிற்றோ -இதில்
தண்ணீரை சொல்லி மற்றைய பூதங்கட்கு உப லஷணம் ஆனால் போலே –

அதனுள் பிரமன் அரன் நீ –
பஞ்சீக்ருதமான ஐம் பெரும் பூதங்களால் உண்டான-அண்டங்களிலே வசிக்கிற பிரமன் சிவன் முதலாயினார்களும்-நீ இட்ட வழக்கு -என்கிறது –

உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ –
தேவர்களையும் மற்றும் உள்ளாரையும் படைத்த முனியாய்-பிரசித்தமாய் இருப்பவனும் நீ-
பிரமன் அரன் நீ -என்ற ஒற்றுமை தன்மை-கார்ய காரண தன்மை அடியாய் வந்தது-
பரம் பொருளின் இடத்தும் உண்டானவை-அவனால் அழிக்கப் படுகின்றவை -காக்கப் படுகின்றன-
ஆதலால் காணப் படுகின்றன இவை எல்லாம் ப்ரஹ்மம் அல்லவா -என்னுமாறு போலே-
எல்லா பொருள்களையும் கர்மங்கட்கு தகுதியாக படைப்பதற்கு-
அவர்கள் செய்த முன் கர்மங்களை நினைக்கும் அவன் -முனி ஆகிறான்-
நாம ரூப வேறுபாடு அற்ற சூஷ்ம சேதனங்கள் அசேதனங்கள் உடன் கூடிய அந்த பரம் பொருளே-
நாம ரூப வேறுபாட்டுக்கு உரிய ஸ்தூல சேதன அசேதன பொருள்களாக கடவேன் -என்று எண்ணியது-
இதனால் ஸ்தூலமான சித்தியும் அசித்தையும் சரீரமாக உடையவன் என்பதனாலே-காரியமாம் தன்மை சொல்லிற்று ஆயிற்று –
சதேவ ஏக மேவ அத்விதீயம் நீயே தான் காரணமும் காரியமும் -சாந்தோக்யம் தமிழ் செய்த மாறன் –

எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே –
என் கார்யத்தை நீயே செய்வதாக ஏறிட்டுக் கொண்டு-அதனை விட்டு-அசேதனப் பொருளை பொகடுமாறு போலே பொகட்டாய்-என்னுதல்-
அன்றிக்கே –
எல்லாவற்றையும் நிர்வஹிக்கிற நீ-என் ஒருவனையும் என் கார்யம் செய்வேனாகப் பார்த்து-
உன் பக்கல் நின்றும் போர விட்டு விரும்பாமல் இருந்தாய் -என்னுதல்-
என்னை-
உன்னால் அல்லது செல்லாத என்னை-
போர விட்டாய்-
அவன் பக்கலில் நின்றும் பிரி கதிர் பட்டு போந்தாராய் இருக்கிறபடி-குணம் நடையாடாத தேசத்திலே தள்ளினாய் -என்கிறார்-
தெளிந்த ஞானத்தினை உண்டாக்கி-பேற்றின் அளவும் செல்லாமல் இருக்கிற இது-
நளன் தமயந்தி வழி காட்டி விட்டால் போலே இருக்கிறது காணும்-

——————————————————————————————————

போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5-

நிரவாதிக பாக்ய பூதனாக வைத்து உபேக்ஷித்தால் எனக்கு உஜ்ஜீவனம் உண்டோ
போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்-வாசி அறிந்து பிராப்தி பர்யந்தம் பிரகாசிப்பித்த நீ
அத்தை குலைத்து அநாதரித்து அனன்யா கைதியான என்னை விஷயாந்தரங்களில் போக விட்டால்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்-அசக்தன் நான் புருஷார்த்த சாதகனாய் இருப்பார்
யாரைக் கொண்டு என்ன சாதிப்பெண் வேறே உபாயமும் பிறப்பியமும் இல்லையே எனது என்பது என் யான் என்பது என்
காரணங்கள் இல்லை உபாயம் இல்லை -யான் தனியாக ஸ்வ தந்த்ரன் இல்லை -இனி வேறு உண்டோ
யாரை கொண்டு எத்தை -விருத்த யுக்தி -சேதனனைக் கொண்டு அசேதனத்தை -சொல்லி எத்தை கொண்டு யாரை சொல்ல வில்லை
புருஷார்த்தம் ஆழ்வாருக்கு அவனே -ஐஸ்வர்யார்த்திகளை கண்டிக்கிறார் -யாரை -உபாயாந்தரங்கள் -செத்தான் தானே கொடுப்பான்
ஜகத் யுக்தி மாற்றி அருளிச் செய்கிறார் –
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை-காய்ச்சல் தீரும் படி -எனது ஆத்மாவின்
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே-விடாய் தீரும் படி திருப்தி அடைய முடியாத அமுது ஆனாய் –
பூர்ணமாக பானம் பண்ண பரம போக்யன் என்று பிரகாசிப்பித்தாய்

எல்லா பொருள்களையும் பாது காக்கின்ற நீ கை விட்டால்-என் கார்யம் -நான் செய்யவோ-
பிறர் செய்யவோ-முடிந்தேனே அன்றோ –என்கிறார்-

போர விட்டிட்டு –
உன் பக்கலில் நின்றும் பிரித்து-உபேஷித்து-

என்னை –
வேறு கதி இல்லாத என்னை –
அன்றிக்கே –
அறிவின்மை -ஆற்றல் இன்மைகளுக்கு எல்லாம்-எல்லையான -என்னை -என்னுதல்-

நீ –
படைப்பே தொடங்கி-இவ்வளவும் வரப் புகுர நிறுத்தின நீ -என்றது-
ஞானத்தாலும் ஆற்றலாலும் நிறைவுற்று இருக்கிற நீ -என்னுதல் என்றது-
ஆள் பார்த்து உழி தரும் நீ -நான்முகன் அந்தாதி -60-
எதிர் சூழல் புக்கு திரியும் நீ -2-7-6-என்றபடி
அக்கரை ஏறமாட்டாதான் ஒருவனை அமுக்கினால் போலே இருக்கிறது காணும்-

என்னை நீ –
கண்ணும் காலும் இன்றிக்கே இருப்பான் ஒருவன்-கண்ணும் காலும் உடையனாய் இருப்பான் ஒருவன்-
யாருக்கு யார் வழி காட்டுவார் -என்கிறது –
நைவ கிஞ்சித் பரோஷம்தே பிரத்யஷோசி ந கச்யசித் -ஜிதந்தே-
உன்னால் அறியப் படாத பொருள் ஒன்றும் இல்லை-
நீ ஒருவருக்கும் அறிய ஒண்ணாதவனாய் இருக்கிறாய் -என்றபடி –

புறம் போக்கல் உற்றால் –
புறம்பே போக்குகையிலே நினைத்தால் -என்றது-
என் கார்யம் நான் செய்வேனாகப் பார்த்து-என்னைக் கை விட்டால் -என்றபடி –

பின்னை யான் ஆரைக் கொண்டு எத்தை –
அளவில்லா ஆற்றல் உடைய நீ கை விட்ட பின்பு-ஆற்றல் இல்லாதவனான நான்-
என்ன உபாயத்தைக் கொண்டு-என்ன புருஷார்த்தை முடிப்பது –
பேற்றினைப் பெறுவது இறைவனாலே-
அறிவு இல்லாத கர்மங்களின் கூட்டத்தால் அன்று –
என்னும் இடம் தோற்றுகைக்காக –எத்தைக் கொண்டு எண்ணாதே -ஆரைக் கொண்டு -என்கிறார் –
ப்ரஹ்மம் தானே பல பிரதன் -அசேதன கிரியா கலபரங்கள் இல்லையே –

அந்தோ –
மாம் ஏகம் சரணம் விரஜ -என்ற
உனக்கு நான் உபதேசிக்க வேண்டுவதே –
எனது என்பன் என் யான் எனபது என் –
முடிந்தேன் -அன்றோ என்கிறார் –
நானும் இல்லை கரணங்களும் இல்லை என்றவாறு –
பேறு உம்மதானால் -அதற்கு செய்ய வேண்டிய உபாயமும் –
உம்முடைய தலையில் ஆக வேண்டாவோ -என்ன
எனக்கு உபாயமாய் இருப்பது ஓன்று உண்டு என்பதோர் பொருள் உண்டோ-
பிரிந்து நிற்பதற்கு தகுதியாய் இருப்பது ஒரு நான் உண்டோ-ப்ருதக் ஸ்திதியே இல்லையே –
சரீரியை ஒழிய சரீரத்தை பாது காப்பதற்கு வேறு சிலர் உளரோ –என்கிறார்-

தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரைஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –
நெருப்பினால் நன்கு காய்ச்சப் பட்ட இரும்பு-காய்ச்சல் தீர நீரை முற்றும் உண்ணுமாறு போலே
என் ஆத்மாவை முற்றும் உண்ணுவதற்காக-
எனக்கு உன்னுடைய எல்லை இல்லாத இனிமையைக் காட்டி-என்னை அடிமைப் படுத்தினாய் –
என் விடாய் தீரக் கலந்தாய் -என்று இருந்தேன்
உன் விடாய் தீரவாய் இருந்ததே அன்றோ -என்றது
உனக்காக அன்றோ உன்னைக் காட்டிற்று -என்றபடி-
அன்றிக்கே
உயிரை என்ற இரண்டாம் வேற்றுமையை முதல் வேற்றுமையாகக் கொண்டு-
என் ஆர் உயிர் ஆனது உன்னை ஆரப் பருக -என்னவுமாம்-
அப்போது காய்ந்த இரும்பு அக் காய்ச்சல் தீரும்படி-நீரைப் பருகுமாறு போலே-
என் ஆர் உயிர் ஆனது என் தாபம் எல்லாம் தீரும்படி-
உன்னை அனுபவிக்க எனக்கு பண்டு எல்லை இல்லாத-இனியன் ஆனவனே -என்றுமாம் –
இரும்புண்ட நீர் மீள்கினும் யென்னுழையில்-கரும்புண்ட சொல் மீள்கிலன் காணுதியால்-கம்பர் ஜடாயு உயிர் நீத்த படலம் -104

———————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

பகவத் விஷயம் காலஷேபம் -188- திருவாய்மொழி – -10-9-1….10-9-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

July 25, 2016

சூழ் விசும்பு -பிரவேசம் –

மேலான யோகிகளுக்கு பிறக்கக் கூடியதான பரபக்தி இவருக்கு பிறக்க –
அதனால் உளவாகும் தன்மைகளை இத் திருவாய் மொழி அளவும் வர அனுபவித்து –
இனி இங்கு இருந்து அனுபவிக்குமது ஓன்று இல்லாமையாலே-
பரம பதத்துக்கு ஏறப் போக வேண்டும் -என்று எண்ணுகிற இவரை
தம்மிற்காட்டிலும் சடக்கென கொடு போக வேண்டும் என்று விரைகின்ற ஈஸ்வரன்
அங்குத்தை அனுபவத்துக்கு ஈடாம்படி மிக்க விடாய் பிறக்கைக்காக-
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை கண்களாலே கண்டால் போன்று-பிரத்யக்ஷ சமானஹார சாஷாத்காரம் —
தெளிவாக விளங்கும்படி செய்து அருளினான் –
பரஞானம் -தர்சன -தசை –தர்சன -சமா நாகாரமான தசை -இடைப்பட்ட நிலை —

அதாவது
வேதாந்தங்களில் பிரசித்தமான அர்ச்சிராதி நெறியையும்-
சரீரம் பிரியும் போது வரும் துக்கம் எல்லாம் ஆறும்படி தான் வந்து முகம் காட்டும் படியையும் –
போகும் நெறியில் உள்ளவர்களான தேவர்கள் செய்யும் உபசாரங்களையும்-
அந் நெறியாலே சென்று புகக் கூடிய பரமபதத்தையும்-
நித்ய சூரிகள் வந்து ஆதரிக்கும் படியையும்-
பிராட்டி மாரும் ஸ்ரீ வைகுண்ட நாதனும் எதிரே வந்து ஆதரிக்கும் படியையும்-
நித்ய சூரிகள் சேவிக்க பிராட்டிமாரோடே வீற்று இருந்து அருளுகிறபடியையும்-
அடையத் தகுந்தவர்களில் மேலான வர்களான நித்ய சூரிகள் நடுவே தாம் பாரம் அற்றவராய்
ஆனந்தத்தை உடையவராய் இருக்கும்படியையும்-
காட்டி அருளக் கண்டு ப்ரீதராய்
அதனை அன்யாபதேசத்தாலே பேசி அனுபவிக்கிறார் –
தமக்கு அவன் செய்து கொடுத்த பேற்றினை ஸ்ரீ வைஷ்ணவர் எல்லாரும்-பெற்றாராக பேசின இது அன்யாபதேசம் ஆவது-
அதற்குப் பிரயோஜனம் -இங்கு உள்ளார் நமக்கும் ஆழ்வார் பேறு தப்பாது -என்று இருக்கை-

தூமாதி மார்க்கம் அர்ச்சிராதி மார்க்கம் —சுக்ல கிருஷ்னே –தேவயான மார்க்கம் -முக்தி அபிலாஷை -ஹார்த்தா அனுக்ரஹ தானே வந்து முகம் காட்டி –
7 பாசுரம் வரை பிரகிருதி ஸத்காரம் 8-11- மேலே –
மாதவன் வைகுந்தம் புகவே -அந்த மார்க்கம்
முடி உடை வானவர் எதிர் கொள்ள -நித்ய ஸூ ரிகள்-ஸத்காரம்
பிராட்டிமாரும் -தானுமாக – வந்தவர் –மா மணி மண்டபத்து அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை –
மாதவன் தமர் -என்பதால் அந்யாபதேசம் –
ஸோஸ்ச்னுதே ஸர்வான் காமான் -சக ஸ்ருதி
பரமம் சாம்யம் உபைதி -சாம்ய ஸ்ருதி
மம சமதர்மம் -சமதர்ம ஸ்ருதி –
சூர்ய கிரணம் பிடித்தே –தேக சம்பந்தம் நீங்கிய பின்பு உடனே -மோக்ஷம் -பகலோ இரவோ -தஷிணாயனமோ உத்தரணமோ –
அர்ச்சிஸ் /பகல்/சுக்ல /உத்தர அயனம் /-சம்வத்சரம் / வாயு லோகம் -முதல் ஆறு –
சூர்ய லோகம் / சந்த்ர லோகம் /வித்யுத் -அமானவான்-/வருண லோகம் /-சுவர்க்கம் /சத்ய லோகம் -ஆகிய 12 -தாண்டி
இவ்வளவையும் காட்டி -மேலும் ருசியை வளர்க்க -நமக்கு அருளிச் செய்ய –
அர்ச்சிராதி மார்க்க பிரதர்சனம் -மார்க்கம் காட்டிக் கொடுத்த குணம் –

28 சூர்ணிகைகள் -கல்யாண குணங்கள் -காட்டி -30 திவ்ய தேசங்கள் -நவ திருப்பதி கணக்கில் 8 திவ்ய தேசம் –
தெளிந்த என் சிந்தை -ஒரே சூர்ணிகை மூன்று திவ்ய தேசங்கள் –
வன் பெரு வானக முதல் உய்ய இனிதாகத் திருக் கண்கள் வளர்கின்ற திருவாளர் திருப்பதி வடிவுடை கடலிடம் கட்கிலீ என்னுமவற்றில்
இவள் திறத்து என் கொலோ என்பிக்கிற வியூஹ ஸுஹார்த்த பிரதானம் -159
மண்ணோர் விண்ணோர் வைப்பில் போகின்ற ஏழ் உலகுக்குக் உயிர் பாசம் வைத்த நிகரில் வாத்சல்யம் உஜ்வலம் -160
உபய பிரதான ப்ரணவமான உறை கோயிலிலே எத்தேவும் என்னும் பரே சத்வம் பொலியும்-161 –
வைஷ்ணவ வாமனத்தில் நிறைந்த நீல மேனியின் ருசி ஜனக விபவ லாவண்யம் பூர்ணம் -162-
ருசி விவசரக்குப் பாதமே சரணாக்கும் உதாரயம் வானமா மலையிலே கொழுந்து விடும் -163-
களை கண் அற்றாரை உருக்கும் மாதுர்யம் கூட மூக்கிலே ப்ரவஹிக்கும் -164
மெலிவிலும் சேமம் கோள்விக்கும் க்ருபை தென்னகரிலே நித்யம் -165
வ்யவசா யஜ்ஞர் ரக்ஷண ஸ்தைரியம் பம்பா உத்தர தேசஸ்த்தம் -166-
விளம்ப விரோதம் அழிக்கும் விருத்த கட நா சாமர்த்தியம் நன்னகரிலே விஸ்தீரணம் -167-
கடி தகட கவி கடநா பாந்தவம் அவ்வூரிலே த்வி குணம் -168-
கைம்முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரிலே சம்ருத்தம் -169
சென்று சேர்வார்க்கு உசாத் துணை யறுக்கும் ஸுந்தர்யம் மா நகரிலே கோஷிக்கும் -170
ப்ரவண சித்தம் பரத்வ விமுகமாக்கும் ஆனந்த வ்ருத்தி நீணகரிலே -171-
சாதராரைப் பரிசு அழிக்கும் சேஷ்டித்த ஆஸ்ச்சர்யம் குளத்தே கொடி விடும் -172-
ஸ்ரம மனம் சூழும் ஸுகுமார்யா பிரகாசம் ஆய்ச்சேரியிலே -173
மஹா மத்தியில் அச்சம் கேட்டு அமரும் ஸுர்யாதிகள் சிற்றாற்றிலே கொழிக்கும் -174-
சாத்ய ஹ்ருதி ஸ்த்தனாயும் சாதனம் ஒருக்கடுக்கும் க்ருதஜ்ஞதா கந்தம் தாயப்பதியிலே -175-
அவகாஹித்தாரை அநந்யார்ஹம் ஆக்கும் நாயக லக்ஷணம் வளம் புகழமூரிலே கூட்டமிடும் -176-
போக்ய பாகத் த்வரை தெளிந்த சந்தைக்கு முன்னிலை மூன்றிலும் பிறக்கட்டும் -177
போகத்தில் தடுமாறும் சீலம் காட்கரையிலே கரை அழிக்கும் -178
மகாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்தவம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும் -179
பிரிந்த துன்பக் கடல் கடத்துக் விஷ்ணு போது ஆன்ரு சம்சயம் நாவாயிலே நிழல் எழும் -180
சரண்ய முகுந்தத்வம் உத்பலாவதாகத்திலே பிரசித்தம் -181-
மார்க்க பந்து சைத்யம் மோஹ நத்தே மடுவிடும் -182-
ச ஸைன்ய புத்ர சிஷ்ய சாத்ய சித்த பூ ஸூரார்ச்சிநத்துக்கு முக நாபி பாதங்களை த்வார த்ரயத்தாலே காட்டும் சாம்யம் அநந்த சயனத்தில் வ்யக்தம் -183-
மோக்ஷ தானத்தில் ப்ரண பாரதந்தர்யம் வளம் மிக்க நதியிலே கரை புரளும் -184-
த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் மருள்கள் கடியும் மயல் மிகு பொழிலிலே தலைக்கும் -185
அங்கீ கரிக்க அவகாசம் பார்க்கும் ஸ்வாமித்வம் பெரு நகரிலே பேர் பெற்றது -186-
12 மலை நாட்டு திவ்ய தேசங்கள் / 5 சோழ நாட்டு திவ்ய தேசங்கள் / 1 வட நாட்டு திவ்ய தேசம் / 12 பாண்டிய நாட்டு திவ்ய தேசங்கள் /-ஆக 30 –
38 திவ்ய தேசங்கள் –ஊரகம் / பாடகம்/ வெக்கா/ அயோத்யா/ த்வாரகா / வட மதுரை / பாற்கடல் / பரம பதம் -சேர்த்து -38-

அது வரை தான் கால தாமதம் -பிராரப்த கர்மம் தொலையும் வரை -ஞானம் ஆதித்யவது -கர்மங்களால் மூடப்படாமல் -விளங்கி –
சூஷ்ம சரீரம் -நுண்ணிய மேனி உடன் சென்று -ஸத்காரம் -பெரிய கல்யாணம் போலே
-பரன் போலே சஜாதீயம் தானே ஞாத்ருத்வம் -ஆனந்தமயத்வம் -சேஷத்வம் -பாரதந்தர்யம் –
சக சாம்யா சமதர்ம சுருதிகள்
இடத்தால் கூடி இருந்து -சாமியாபுத்தி பெற்று -சமதர்மம் பெற்று -ஞானா ஆனந்தங்களில் சாம்யம் -போக மாத்ர சாம்ய லிங்காசா -ஸூ த்ரம்-
ஜகத் வியாபாரம் வர்ஜம் -ஏக போக உரிமை அவனுக்கு -யுக பத்தாக அனுக்கிரக கார்யம் –
சேஷி மற்ற சேஷ பூதர்களையும் இப்படி ஆக்க பரம காருண்யத்தால் செய்யும் கிரியைகள் –
ஆனந்தம் இங்கே -அங்கு எதிர்பார்ப்பு -மகிழ்ச்சி -ஆழ்வார் திரு அடி சேவை -கைகளில் எழுந்து அருளி -பெருமாள் திருவடிகளில் –
பிரத்யக்ஷ மாக பிரமாணம் காட்டி -நம்பிக்கை கொடுத்து நமக்கும் இந்த பேறு-சூழ் விசும்பு -பாசுரம் அனுசந்தித்து
நம்பெருமாள் அனைத்தையும் களைந்து ஆழ்வாருக்கு சம்பாவனையாக கொடுத்து அருளி
செம்மா பாத பற்பு தலை மேல்சேர்த்து -இளையவர்க்கு கவித்த மௌலி – சர்வ ஸ்வதானம்-பண்ணி – பிரபன்ன ஜன கூடஸ்தர் –
பிரபத்தி ஏற்றம் காட்டி அருளி -திருத் துழாய் வைத்து மறைத்து -அவா அற ச் சூழ் -சாத்து முறை பாசுரம் சாதித்து பிரசாதம் சாதிப்பார்கள் –
பிரகிருதி உள்ளார் ஆர்ப்பாராம் முதல் இரண்டு பாசுரங்கள் –

———————————————————————————————————-

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –10-9-1-

அர்ச்சிராதி மார்க்கம் கமனத்தில் ஒருப்பட்டவராய் -சர அசர ஸ்தாவரங்கள் ஜங்கங்கள் ப்ரீதியால் விகாரம் அடைந்து –
தமர்கள் -அந்யாபதேசம்-போக்கிய குண பூர்ணன் சர்வேஸ்வரன் குணங்களை அனுபவிக்க –
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின-எல்லா இடமும் சூழ்ந்து -சர்வ பிரகாரத்தாலும் –
ஆகாசத்துக்கு அலங்காரமாக மேகங்கள் தூரிய வாத்யம் போலே முழங்க
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின-ஆகாத பகவத் பக்தி சிந்த -ஆழ்ந்த -அலைகள் ஆர்ப்பரிக்க
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்-சப்த தீபங்களை உபகார வஸ்துக்கள் சமர்ப்பித்து -புதுக் கணிப்பு என்றுமாம் –
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே-வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –
கல்யாண குணங்கள் பாட வாழ்க்கை கிட்டும் இதுவே திருவாய் மொழி உடைய சாரம் –
அசாதாரண பந்து -ஆனந்தாவாஹமான குணங்கள் சீர்மை -அசாதாரண பந்துக்கள் சேஷ பூதர் –

ஸ்தாவர ஜங்கமங்கள்-கடல் முகில் விகாரம் அடைந்ததை அருளிச் செய்கிறார் –

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின-
பூமியை சூழ்ந்த ஆகாசத்தில்
ஆபரணமாக -விசும்புக்கு -முகில்
ஆகாசப் பரப்பு அளவிலிலும் அணியப்பட்ட முகில் -ஒப்பனை செய்தால் போலே வியாபிக்கப் பட்ட
தூரியம்-முழங்க -கந்தர்வர்கள் -அப்சரஸ் கணவர்கள் —
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
மத்திய ராத்ரீ புஷப வ்ருஷடீ-ஜாய மானே ஜனார்த்தனே -விஷ்ணு தர்மம் –தூ வானம் போலே மழை பொழிய –
இயற்க்கை மேகம் -விகாரம் –
இவன் போக்குக்கு அடியான அவன் வரவிலே பிறந்த விக்ருத்தி – இ றே- இவன் போகும் போகும் பொழுது சொல்ல வேண்டுமோ
அவற்றுக்கு அபிமானிகள் இந்திரன் வருணன் -பர்ஜன்யங்கள் -சொன்னதாகவுமாம்
எல்லா வற்றையும் தன்னுள்ளே அடக்க வல்ல கடல்கள் -தைர்ய பங்கம் பிறந்து –
அஷோபியாம் -கலக்க முடியாத கடல் -சமுத்திர இவை காம்பீர்யம்
-அலையா நிற்கும் அலைகள் கைகள் கொண்டு ஆர்ப்பரிக்க
அவன் அவதாரம் நம்மை அங்கே கூட்டிச் செல்லவே –
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
புதுக் கணித்தன -உபகாரங்களை தரித்தன
அப்பன் வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே-
என் ஸ்வாமி உடைய -பரம பந்து -நிருபாதிக்க சம்பந்த -சம்பந்திகளையும் -ஆத்ம பந்து -ஆதரிக்க வேண்டி இருக்கும்
யாரையும் எள்ளி நடையாடக் கூடாதே -பகவத் சம்பந்தம் வெட்டக் கூடாதே -சம்பந்தம் சாதாரணம் –
தாழ்ந்தவர்கள் என்று கீழ் நோக்கி பார்க்கக் கூடாது –
பிரகிருதி மண்டலம் முழுவதும் ஆர்பரித்தவாறு
ராஜா புத்ரன் போகா நின்றால்-ஆனந்தமாக -செய்ய வேண்டுமே –
சர்வேஸ்வரன் ஆழ்வார் சம்பந்திகளை பின் தொடர்ந்து விஷயீ கரிப்பானே
அடியார்கள் வாழும் படியான கல்யாண குணங்கள்
கேட்க்கும் என்னும் பீதியாலேயோ
உகந்தே –

—————————————————————————–

நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–10-9-2-

முதல் பாசுர சேஷம் -7 பாசுரம் வரை பிரகிருதி மண்டல ஸத்காரம்
நிருபாதிக சேஷி நாராயணன் சேஷ பூதர்களைக் கண்டு லோகத்தார் சதிகரிக்க
நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்-நிருபாதிக சேஷி உடைய சேஷ பூதர்கள் -சுத்தமான நீர்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்-உயர்ந்த ஆகாசத்தில் பூரணமான பொன் குடம் போலே பூரிக்க
-நீல வர்ணம் -ஆழ்வாரை கண்ட பள பளப்பு –
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்-நீரை வகிக்கும் கடல்கள் ஒருபடிப் படி நின்று கோஷிக்க
நெடு வரையில் மலைகள்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே-தோரணம் கட்டி -உலகில் உள்ளார் எல்லா பக்கமும் தொழ
முகில் ஒருமை ஜாதி பரம் -முகில்கள் அனைத்தும்
அந்தரிக்ஷ பர்யந்தம் பூ லோகம் உகந்து சதிகரிப்பதை சொல்லிற்றே -உலகு -உயர்ந்தோர் மாட்டே –

மேல் உள்ள உலகங்கள்-செய்த உபகாரங்களை அருளிச் செய்கிறார் –

நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில் பூரண பொற் குடம் பூரித்தது -உயர் விண்ணில்-
நிர்ஹேதுகமான சேஷியாய் இருக்கின்றவனுடைய-அடியார்களைக் கண்டு
நல்ல நீரை உடையனவான மேகங்கள் ஆனவை-
உகப்பாலே உயர்ந்த ஆகாசத்திலே பூர்ண கும்பங்களாக-சமைந்தன –முற்பட கண்டு உகந்தன-
பின்பு அவை தானே பூர்ண கும்பங்கள் ஆயின -என்கை-
ஒரு கால் வாத்திய ஒலியைச் செய்தோம் -என்று இருக்கின்றன இல்லை –
அன்றிக்கே-ஆகாசத்தில் சஞ்சரிக்கின்றவர்களான தேவர்களாலே-ஆகாசம் எல்லாம் பூர்ண கும்பம் வைக்கப் பட்டன —என்றுமாம் –

நீரணி கடல்கள் நின்றார்த்தன-
நீராலே அணியப்பட்ட கடல்கள்-ஒரு கால் ஆடினோம் என்று இராமல்-உவகையால் எப்பொழுதும் ஆர்த்துக் கொண்டன –

உலகே- நெடுவரைத் தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் –
அவ்வவ் உலகங்களில் உள்ளார் நெடிய வரை போலே இருந்துள்ள தோரணங்களை நட்டு-

தாங்களும் தொழுதார்கள் –
உலகம் எனபது உயர்ந்தோரை அன்றோ –
அன்றிக்கே-அங்கு உள்ளாரைச் சொன்னபடியுமாம்-
சத்ர சாமர பணிஸ்து லஷ்மன அனுஜகாம ஹ-ஜூ கோப பிராதரம் பிராதா ரதம் ஆஸ்தாய ப்ருஷ்டத -அயோத்யா -18-92-
இலக்குமணர் குடை சாமரம் இவற்றைக் கையிலே உடையவராய்-
தமையனாரோடு தேரிலே ஏறிக் கொண்டு தமையனாரைக் காத்து வந்தார்-
என்கிறபடியே உவகையாலே எல்லா அடிமைகளையும் செய்யா நின்றார்கள் –

—————————————————————————————

தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர்பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3-

அநந்யார்ஹதா ஆபாதகன் த்ரிவிக்ரமன் -எல்லை நடந்து –சேஷ பூதர் -ஆதி வாஹிக லோகத்தில் உள்ளார் ஸத்காரம்
தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை-அகில் புகை தூபம் -புஷ்ப்ப வர்ஷம் -மென்மை பரிமளம் -புகை இல்லை மணம் மட்டும்
-சுற்றும் விளக்கு -விளக்கு தெரியாது வெளிச்சம் மட்டும் -புகை இல்லை பரிமளம்க மழும் –
அஞ்சலி -சேஷத்வ அனுரூபம் -அவர்கள் எல்லாம் பக்தாத்மா-தானே முக்தரை பார்த்து தொழுதனர்
பொழிவனர்பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே-மகாபலி என்னது என்று அபிமானித்த அன்று -ஓங்கி உலகு அளந்த உத்தமன் உடைய சேஷ பூதர்கள்
எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர் முனிவர்கள்-
மௌன விரதம் கலைத்து -வாக் நியதி உடையவர் –
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே-போவார்க்கு வழிஇது என்று சொல்லி -எழுந்து அருளல் ஆகாதோ என்று
இரு பக்கமும் சாதாரமாக கனிவுடன் இசைத்து -பகர்ந்தார் -ஆதரவு உடன் –

ஆதி வாஹிக லோகங்களில் உள்ளார்-எதிரே வந்து மலர் மழையைப் பொழிந்து-கொண்டாடுகிற படியை-அருளிச் செய்கிறார்-

தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை பொழிவனர்-
உலகர்கள் தூப நல் மலர் மழை பொழிவனர்–தொழுதனர்-
ஆதி வாஹிக லோகங்களில் உள்ளார் -கை படைத்த பிரயோஜனத்தைப் பெற்றோம் -என்று-
தூபத்தையும் நல்ல மலர் மழையையும்-பொழிந்து-தொழா நின்றார்கள் –

பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே –
ஸ்ரீ வாமனனாய் திரு உலகு அளந்து அருளின செயலுக்கு தோற்று அடிமை புக்கவர்கள் என்று ஆயிற்று-அவர்கள் ஆதரிக்கிறது –
மூவடி மண் கொண்டு அளந்த மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன் -பெரிய திரு மொழி -3-4-2-என்னுமவர் போல்வர் உண்டே –
அவன் திரு உலகு அளந்து அருளின நினைவைப் பயன் உடையதாகச் செய்தவர்கள் என்று ஆயிற்று-அவர்கள் ஆதரிக்கிறது –
திருவடியால் தீண்டி சம்பந்தம் கொடுத்து தன்னிடம் சேர்த்துக் கொள்ள பட்ட பலன் அன்றோ இவர்கள் அங்கு செல்வது –

எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர் முனிவர்கள் –
இங்கே எழுந்து அருள வேண்டும் -என்று இரண்டு அருகும்-நின்று சொன்னார்கள்
முனிவர்கள் -என்றது -பேசலாகாது -என்று இருந்தமை தவிர்ந்தமைக்கு அறிகுறி –மௌனத்துக்கு விஷயம் புறம்பே என்று இருந்தார்கள் –
சம்பாஷணாதி பூஜாந்த்தம் – -ஜெப மத்யே -வைஷ்ணவோ சமாகதா –

வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே –
பரமபதம் செல்வார்க்கு வழி இது -என்று எதிரே வந்து சொன்னார்கள்-
சுக்ல கிருஷ்ண கதீஹ்யதே ஜகத சாஸ்வதே மத-ஏகயா யாதி அநாவ்ருத்திம் அத்யயாவர்த்ததே புன -ஸ்ரீ கீதை -8-26-
உலகத்திற்கு பழைமையானவை -என்கிறபடியே-குறித்தவர் எல்லாரும் போகக் கூடியதாய் கிடக்கிற வழி-
இன்று இது உண்டாகிறது அன்றோ-பிரசித்தமாக இருந்தாலும் இவர்கள் சொல்வது தங்கள் ஸத்காரம் பெற –
பாகவதர் விஷயத்திலே தொண்டு செய்து நாம் நிலை பெற வேண்டும் என்று-
எதிரே தம் தாமுடைய நிலைகளைக் கடந்து வந்து ஆதரித்தார்கள் –
முதலிகள் தங்கள் சத்தை இழக்க கூடாது என்று அன்றோ பெருமாள் இடம் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் வரவை சொன்னால் போலே —
வைகுந்தர்க்கு-
வேறு தேசத்திற்கு சென்று இருந்த அரசன் தன் தேசத்திலே புகுமாறு போலே-
அங்கு நின்றும் பிரிகதிர் பட்டு போந்தாராய் இருக்கிறபடி –
ஆஜகாம -ஸ்ரீ விபீஷணன் பெருமாள் இடம் -சேர்ந்தால் போலே -அக்கரை -அநர்த்தம் சம்சாரம் இக்கரை -ஸ்ரீ வைகுந்தம்
எதிர் எதிர் -எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர்
பூமி அன்று அளந்தவர் தமர் முன்னே-தூப நல் மலர் மழை பொழிவனராய்க் கொண்டு-
முனிவரான உலகர் தொழுதனர் –
வைகுந்தர்க்கு வழி இது என்று எதிரே வந்து-எழுமின் என்று இரு மருங்கும் இருந்தனர் -என்க-

————————————————————————————————

எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-10-9-4-

போக்யதா பூர்ணர் ஸ்ரீ யப்பத்தி உடைய -சேஷ பூதரைக் கண்டு தேவ லோகத்தார் ஸத்கரிக்க –
தமர்கள் பெற்ற பேற்றை அருளிச் செய்கிறார் -ஆசை உடையார்க்கு எல்லாம் -ஆசையே தகுதி -இந்த பேற்றைப் பெற –
கருணை உடன் சேர்ந்த காதல் -பிரி கதிர் பட்டு அன்றோ பிரிந்து உள்ளோம் -கிருஷிகன் மகிழ்ந்து அன்றோ திரட்டி எடுத்துக் கொண்டு போவான் –
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்-அநிமிஷர் -வாசல் ஸ்தானம் -நீர்ப்பந்தல் கூடாரங்கள் -இருப்பிடம் சமைத்து
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்-துவாதச ஆதித்யர்கள் -தேஜஸ் கை காட்டி -அடுத்து அடுத்து நின்று -கிரணங்கள் ஆகிற கை –
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த-பிரவர்த்திப்பித்த முரசங்கள்-கடல் ஓசைக்கு சமமாக இருக்க
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-மதுவை பிரவஹிக்கும் -திரு அபிஷேகம் -ஸ்ரீ யபதி

மேலே உள்ள உலகங்களில் தேவர்கள்-இவர்கள் போகிற வழிகளிலே-
தங்குகைக்காக தோப்புக்கள் அமைத்தும்-
வாத்தியம் முதலானவற்றால் ஒலியை உண்டாக்கியும்-கொண்டாடுகிற படியை அருளிச் செய்கிறார்-

எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர் –
பரந்த இடம் எங்கும் -இவர்கள் இங்கே தங்கிப் போவார்களோ-இங்குத் தங்கிப் போவார்களோ என்னும்-
நசையால் தேவர்கள் தோப்பு சமைத்தார்கள்-
இமையவர் என்றது -இயற்கையைச் சொன்னது அன்று-
தோப்பு சமைக்கையில் உண்டான விரைவாலே கண் விழித்து இருக்கிற படியைச் சொல்கிறது-
இளைய பெருமாள் அடிமை செய்வதற்கு உறுப்பாக உறங்காமல் இருந்தது போன்று –
இவர்கள் அங்கே புக்கு தங்குகிறார்கள் அன்று –
தங்கள் தங்கள் ஸ்வரூப லாபத்திற்கு தொண்டு செய்கிற படி அன்றோ இது-
அரசர்கள் ஒரு கால் கண்டு சிரித்து அழகிது என்று புகைக்காக மாநாவி சமைப்பாரைப் போலே-
மஹா நவமி அன்று ராஜா துவாரம் அலங்காரம் பண்ணுவாரைப் போலே –

கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர் –
சூர்யர்கள் நிலை விளக்கு போலே-இங்கனே எழுந்தருள இங்கனே எழுந்தருள-தேஜோ விசிஷ்டர் -நிலை விளக்கு –
பார்த்தருள- பார்த்தருள என்று – கைகளை நிறையே காட்டினார்கள்-
அன்றிக்கே அர்ச்சிராதிகளான ஆதி வாஹிக கூட்டங்கள் ஆகவுமாம்-

அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த –
அங்கே கால் தாழ்வார்கள் என்று-அது கேளாதபடி-அதிரா நின்றுள்ள ஒலியை உடைய முரசங்கள்-
அலையை உடைய கடல் போலே முழங்கின-
அன்றிக்கே
இங்கு தங்குகையில் உண்டான ஆசையின் மிகுதி தோற்ற வாத்தியங்களை ஒலிக்கச் செய்தார்கள் என்றுமாம் –

மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே –
கொட்டு ஓசையாலும்-
ஆள்கள் எதிரே சென்று சொல்லுகையாலும்-
சென்ற இவர்களுக்கு ஒப்பித்த படியே கொடுக்கைக்காக-பிராட்டியோடு கூட அழித்து அழித்து ஒப்பிக்கிறபடி-
விரி என்பதால் -அலங்காரம் மாற்றி -என்றவாறு-
மாதவன் தமர்க்கே
பிராட்டி யினுடைய புருஷகாரம் மூலமாக பற்றியவர்கள்-
பிராட்டி முன்னாக அடிமை செய்வதற்கு வாரா நின்றார்கள்-என்று ஒப்பிக்கிறபடி –
திருமகள் கேள்வனுடைய ஒப்பனை அழகிலே அகப்பட்டு-அடிமை புக்கவர்களுக்கு -என்னுதல்-
இங்கு-பூமியிலே – ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்றதே காரணமாக பங்கு பெறாதே-
திரியுண்ட ஸ்ரீ வைஷ்ணவர்களை அங்குள்ளார் எதிர் கொண்டு இருப்பிடங்களை கொடுக்கிறபடி-

மிளகு ஆழ்வான் படை வீட்டிலே அகரத்துக்கு -அக்ரகாரகதுக்கு – செல்ல-
நீ ஆந்தராளிகன்-சம்சார்யும் இன்றி முக்தனும் இன்று நடு நிலையாளன் – -உனக்கு பங்கு இல்லை -என்ன-
நன்மையில் குறை உண்டாய்ச் சொல்லுகிறீர்களோ அன்றோ -என்ன-
நன்மையில் குறை இல்லை -இது அன்றோ கரணம் என்ன-
நம் நெஞ்சில் இல்லையாகிலும் இவர்களால் ஸ்ரீ வைஷ்ணவன் என்று கை விடப் பெற்றோமே அன்றோ –
என்று புடைவையை முடிந்து எறட்டுக் கூத்தாடினார்-

—————————————————————————————————————

மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–10-9-5-

கைவல்யார்த்தி -முக்தி அடைந்தாலும் அர்ச்சிராதி கதியில் போக வில்லை -அங்கே உபாசனமோ பிரபத்தியோ பண்ண முடியாதே –
அத்துடன் ஆத்மாவை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும் -ஏடு நிலைத்து இடுவதன் முன்னம் —சரீரம் முடிந்தால் திரும்ப முடியாதே –
குருகா நீளா- பற்று அற்றது எனில் வீடு பெறும்-உற்றது வீடு உயிர் -பெற்றது அது மண் உரில்–
விரஜைக்கு இப்பால் தான் கைவல்யார்த்தி திரும்பலாம் என்பர் தேசிக சம்ப்ரதாயம் –
ப்ரஹ்ம நிஷ்டன் -பஞ்சாக்கினி நிஷ்டன் -உபாசனம் படியே பலன் -பிரதீக உபாலம்பம் -அவயவங்கள் உடன் சேர்ந்து –
ஜைமினி வேத வியாசர் -ஸுமந்து பைலர் வைசம்பாயனர் ஜைமினி -நான்கு சிஷ்யர்
ஜைமினி -பஞ்சாக்கினி நிஷ்டர்
வியாசர் ப்ரஹ்ம நிஷ்டர் -ப்ரதீக உபாலம்பம் பண்ண மாட்டான் -ஆறு வித உபாசகர் -அசேதனம் -ப்ரஹ்மம் உடைய அவயவம்
கைவைளயார்த்தி ஆத்மா
ஆத்மா அசேதனம்
கூடிய ப்ரஹ்மம் உபாசனம்
ஆறு பேருக்கும் பரம பத பிராப்தி இல்லை
அவயவம் இல்லாத நிஷ்டர்க்கு உண்டு -பரமாத்மாவை விசேஷமாக -கொண்டு தன்னை பிரதானமாகக் கொண்டு
இருவரும் பேறு பெறுவார்கள் -நேராக கொண்டால் ப்ரஹ்ம நிஷ்டர்
பிராப்தியில் தாரதம்யம் உண்டு பிள்ளை லோகாச்சார்யார்
தேசிகன் -இல்லை என்பர்
ஜீவனை முக்கியமாக கொண்ட பஞ்சாக்கினி நிஷ்டனுக்கு ப்ரஹ்மம் அடைந்தாலும் வாசி உண்டு
பாதராயனார் இருவரும் அர்ச்சிராதி மார்க்கம் –
ஜைமினி பஞ்சாக்கினி நிஷ்டர்க்கு இல்லை என்பர் –
குரு சிஷ்ய கிரந்த விரோதம் –
இவை எல்லாம் உபாசகனைப் பற்றியே -நமக்கு சம்பந்தம் இல்லையே -பிரபன்னர் ஆண்மின்கள் வானகம் என்று ப்ரீதனாய் அளிக்கிறான்
கௌஷீதகி உபநிஷத் –
ப்ருஹதாரணீயம்
சாந்தோக்யம் –
கொஞ்சம் வாசி சம்வத்சரம் அப்புறம்
வருஷம் -அப்புறம் வாயு -ஆறாவது வியாசர் -தேவ லோகம் தேவர்கள் உடைய வாயு பகவான் –
அவிசேஷ சொல்லாலும் வாயு விசேஷ சொல்லாலும் சொன்னதால்
மின்னல் லோகம் மேலே வருணன் சம்பந்தத்தால் –
மின்னல் தான் அமானவன் –சத்ய லோகம் அடைந்தால் குருக்கே வருணன் -இந்திரன் –
கூடி வருவார்களாம் -சத்ய லோகம் வரை -பரஞ்சோதி ஸ்வரூபம் அடைகிறான் -ஜோதி சப்தம் ப்ரஹ்மாவை குறிக்காதே –
சத்ய லோகம் போனால் திரும்பி வருவானே-
வித்யுத் இந்திரன் வருணன் -கூட வந்து -விராஜா தாண்ட முடியாதே -போக ஆசை கொள்ளலாம் –
ஆதிவாஹிஹா தத் லிங்காத்-
அடையாளங்கள் -என்பர்
போக பூமி என்பர்
இவை இல்லை ஆதி வாஹ்யகர்கள் -தான் குறிக்கும் –

பிரகிருதி மண்டலம் -வருண இந்திர பிரஜாபதிகள் -சுக்ல பக்ஷ சம்வத்சர வாயு சொல்லாமல் இங்கு -ஸ்ரீ யபதி சேஷ பூதர் –
மாதவன் தமர் என்று வாசலில் வானவர்-தலை வாசலில் வந்து நின்று ஸ்ரீ யாபதிக்கு சேஷ பூதர் என்று பொன்னடி சாத்தி தங்கு வேட்டையாக –
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்-இங்கு புகுந்து பஹு மானம் சதிகரித்து-
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே-வேதங்களை ஓத கூடியவர்கள் -திருவடியில் யாக பலம் சமர்ப்பித்து
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்–குதிரை வடிவம் கின்னர்கள் -ஆனந்த வல்லி-பெருக்கி பெருக்கி -கர்மஜ தேவர்

ஆதி வாஹிகத் தலைவர்களான-வருணன் இந்த்ரன் முதலானவர்களும்-மற்றும் உள்ளாறும்-
இவனுக்குச் செய்யும் உபகாரங்களை-அருளிச் செய்கிறார் –

மாதவன் தமர் என்று –
பிராட்டி புருஷகாரமாக பற்றின -அந்தப் புரத்துக்கு உரியவர்கள் அன்றோ –என்று ஆயிற்று அவர்கள் சொல்லுவது-
ப்ரஹ்மசாரி எம்பெருமானைப் பற்றினவர்கள் அன்றே –

வாசலில் வானவர் –
வழியில் தேவர்கள்-
வாசல் -வழி-அவர்கள் ஆவார் -வருண இந்திர பிரஜாபதிகள் –

போதுமின் எமது இடம் புகுதுக என்றலும் –
இங்கனே எழுந்தருள வேண்டும்-
எங்கள் அதிகாரங்களைக் கைக் கொள்ள வேண்டும்-என்று வேண்டிக் கொள்கிற அளவிலே –

கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் –
கின்னர்களும் கருடர்களும் பாட்டுக்களைப் பாடினார்கள் –
கின்னர தேசத்தில் உள்ளாறும் கெருட தேசத்தில் உள்ளாறும் பாடினார்கள் –

வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே –மடுக்க -எச்சத திரிபு
மேலே உள்ள லோகங்களிலே-வைதிகராய்க் கொண்டு யாகங்களைச் செய்கின்றவர்கள்-
தங்கள் யாகங்களின் பலன்களை-இவர்கள் திருவடிகளிலே சமர்ப்பித்தார்கள் –
விருப்பம் இல்லாதவராய் போகின்ற இவர்களுக்கு-
தம் தம் அதிகாரங்களைக் கொடுப்பார் பாடுவார்-
யாகங்களின் பலன்களை சமர்ப்பிப்பார் ஆகிறார்கள்-தங்கள் தங்கள் விருப்பத்தாலே –
அதனைக் கேட்டு-
பிரீத கஸ்சித் முநி தாப்யாம் சம்ஸ்தித கலசம் ததௌ-பிரசன்ன வல்கலாம் கஸ்சித் ததௌ தாப்யாம் மகாயஸா -பால 4-20-
ஒரு முனிவர் மகிழ்ந்து அவர்களுக்கு கலசத்தை கொடுத்தார்-
புகழ் பெற்ற மற்று ஒரு முனிவர் எதிரே வந்து மர உரியை கொடுத்தார் -என்கிறபடியே-
தங்கள் தங்களுக்கு உள்ளனவற்றை கொடுக்கும் அத்தனை -அன்றோ –

———————————————————————————————

வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–10-9-6-

ஆதி வாஹிக பத்நிகள்-சேஷித்வ சிஹ்னம்-அடியார் -மஹிஷிகள் –
வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை-வைதிகர் தங்கள் யாக பலன்களை சமர்ப்பித்த வாறே -ஸூ கந்தமான தூபம் கலந்து
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்-வாத்தியங்கள் சங்குகள் த்வநித்து
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று-ஸ்வர்க்காதி லோகங்களை இதுவும் லீலா விபூதி தானே -ப்ரீதி
முன்பே செங்கோலைக் கொடுத்து புருஷர்கள் -இங்கு இவர்களும் கை ஓலை போட்டு கொடுத்தபடி –
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே-ஒளி தர்ச நீயமான தேவ ஸ்த்ரீகள் –

உபசரித்தல் முன்னாக-தெய்வப் பெண்கள் உகந்து-இவர்களை வாழ்த்தினார்கள் –என்கிறார் –

வேள்வி உள் மடுத்தலும்
-அவர்கள் தங்கள் யாகத்தின் பலன்களை சமர்ப்பித்த அளவிலே-வேறே சிலர் –

விரை கமழ் நறும் புகை –
வாசனை மிக்கு இருந்தமையால் விரும்பத் தக்கவான-
அகில் தொடக்கமான பொருள்களைக் கொண்டு-நல்ல புகைகளை உண்டாக்கினார்கள் –

காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர் –
அவர்கள் கொடுக்கிறவற்றை இவர்கள் கைக் கொள்ளுகிற அளவில் வேறே சிலர்-
காளங்களையும் வலம் புரி களையும் கலந்து ஒலிக்கச் செய்தனர்-
கலந்து எங்கும் இசைத்தல் ஆவது-
மாறி மாறி எங்கும் ஒக்க ஒலிக்கச் செய்தல் –

ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று –
சர்வேஸ்வரனுக்கு அடியவர்களான நீங்கள்-
இவ்விடத்தை ஆளீர் கோள்-என்று ஆயிற்று துதிப்பது –
நதேரூபம் நசாகார நாயுதானி ந சாஸ்பதம்-ததாபி புருஷாகார பக்தாநாம் தவம் பிரகாசச -ஜிதந்தா -5-
பக்தர்களுக்காகவே என்றோ அன்றோ இருப்பது –
ஆளுகைக்கு குறை என் என்பார்கள் –
பொன்னுலகு ஆளீரோ புவனி எல்லாம் ஆளீரோ என்றார் அன்றோ –

வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே –
ஆதி வாஹிகத் தலைவர்கள் உடைய மனைவிமார்கள் வாழ்த்தினார்கள்-
வேறு தேசத்துக்கு போன குழந்தையை தாய் மார்-குளிரப் பார்க்குமாறு போலே-
ஓளியை உடையைவாய அழகிய கண்களாலே குளிர நோக்கின்படி-
கணவன்மார்கள் பணி செய்கையாலே -நாமும் செய்யத் தகும் -என்று-கருதிச் செய்கிறார்கள் அன்று –
ப்ரீதியாலே செய்கிறார்கள் இத்தனை ஆதலின் -மகிழ்ந்து -என்கிறார் –
இங்குப் பகவான் உடைய சம்பந்தமே காரணமாக நீசராலே-பரிபவம் செய்யப் பட்டவன்-
சரீரத்தை விட்டு பிரிந்த காலத்தில் தங்களுக்கு மேலே ஒருவர் இல்லாதாரான-
தேவர்கள் கொண்டாடும்படி அன்றோ இவன் பேறு-

———————————————————————————–

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-

ஷீரார்ணவ சாயி -சர்வாதிகன் -அர்ச்சாவதார சுலபம் -கோவலன் -வைபவம் -அனைத்தையும் சேர்த்து சொல்லி –
பர வாசுதேவன் விஷயமாக -என் கேசவன் -அந்தர்யாமி -சொல்லி –
சேஷ பூதர்களுக்கு மருத் கணங்கள் -திதி தேவி கர்ப்பம் -இந்திரனை வெல்ல -ஆசாரம் குறைந்தால் வீணாகும்
-காலை மடித்து மாலை படுக்க தலை கூந்தல் காலில் பட்டு ஆசார குறைவு -இந்திரன் வஜ்ராயுதம் ஏழாக வெட்டி மீண்டும் ஏழாக
வாயு கணங்கள் -அஷ்ட வசுக்கள் –
மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்-தம் தாம் ஸ்த்ரீகள் வாழ்த்த -அனுபவ த்வரையால்-
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்-
வேகமாக தொடர்ந்து சென்று -முக்தன் -பகவத் அனுபவ த்வரையால் போலே இவர்களும் தொடர்ந்து ஸ்தோத்ரம் பண்ண –
தொடு -தொண்டப் பட்டதால் சாகரம் -சகரன் பிள்ளை தோண்டிய தொடு கடல்
ஆழம் காண முடியாத கடல் -ப்ரஹ்மாதிகள் உத்பாதகன் என் போல்வாருக்கும் உத்பாதகன் –
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி-அனுபாவ்யமான திரு அபிஷேகம் சேஷிக்கு அடையாளம் -சர்வாதிகன் ஆதிராஜ்ய -ரத்னகசிதமான திரு அபிஷேகம் –
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே-திருக் குடந்தை -குடந்தை கிடைத்த மாலை அடி நாயேன் நினைந்திட்டேனே
தொடக்கமும் -சூழ் புனல் குடந்தையே தொழுது -ஆறு பிரபந்தங்களும் இவனுக்கே -இதனால் தானே
திவ்ய பிரபந்தம் கிடைக்க மூல கர்த்தா -திராவிட ஸ்ருதி தர்சனகாயா நம -அர்ச்சனை உண்டே –
குடைத்தையன் -கோவலன் -கண் வளர்ந்து அருளி -கிருஷ்ணன் -சந்தானமாக அடிமை -குடி குடி வந்து ஆட் செய்த –

மருத்துக் கணங்களும்-வசுக் கணங்களும்-தங்கள் எல்லைக்கு இப்பாலும் தொடர்ந்து சென்று
இவர்களை துதி செய்தார்கள்-என்கிறார் –

மடந்தையர் வாழ்த்தலும் –
அத் தெய்வப் பெண்கள் புகழ்ந்த அளவிலே-

மருதரும் வசுக்களும் –
மருத்துக் கணங்களும் வசுக் கணங்களும் –

தொடர்ந்து எங்கும் –
தங்கள் எல்லைக்கு அப்பால் செல்லலாம் இடம் எங்கும் சென்று-

தோத்திரம் சொல்லினர் –
புகழ்ந்தார்கள் –
ஒரு காண நேரத்தில்-ஒரு உலகத்தின் நின்றும் வேறு உலகத்துக்கு ஏறப் போமவர்கள் ஆகையாலே
தங்கள் எல்லைக்குள்ளில் புகுந்த அளவால் மனம் நினைவு பிறவாமையாலே
தொடர்ந்து புகழ்கின்றார்கள் ஆகையால் -எங்கும் தொடர்ந்து -என்கிறார் –
அவர்கள் தாம் சடக்கென போகிற இதற்கு அடி என் என்னில் –
தாங்கள்-
கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்ற சங்கம் -திரு விருத்தம் -47 -என்றும்
காண்பது எஞ்ஞான்று கொலோ -5-9-4- என்றும்
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் என்னும் -9-8-7-என்றும்
உடன் கூடுவது என்று கொலோ-8-9-10-என்றும் இருக்கையாலே-
சிரஞ்ஜீவதி வைதேஹி யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணம் அபி விதாதாம் அஸி தேஷ ணாம் -சுந்தர 66-10-
பிராட்டியைப் பிரிந்து காண நேரமும் உயிர் வாழேன் என்று இருக்குமவன் கருத்து அறியுமவர்கள் ஆகையாலும் ஆம் –

தொடு கடல் கிடந்த-
பரம பதத்தை கலவிருக்கையாக உடையவன் அதனை விட்டு-பிரமன் முதலாயினார்கட்கு முகம் கொடுக்கைக்காக-
திருப் பாற் கடலிலே திருக் கண் வளர்ந்து அருளுகிற படி-ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ -இத்யாதி –
தொடு கடல்-
தோண்டப்பட்ட கடல்-ஆழ்ந்த கடல் -என்றபடி –

எம் கேசவன்-
அடியார்களுக்காக கிருஷ்ணனாய் வந்து பாதுகாத்தவன் –

-குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே —
அவதாரத்துக்கு பிற்பாடர் இழவாதபடி-திருக் குடந்தையிலே திருக் கண் வளர்ந்து அருளுகிறவன் –
கிருஷ்ணன் தானே வந்து திருக் குடந்தையிலே-கண் வளர்ந்து அருளுகிறான் -என்கிறது-

கிளர் ஒளி மணி முடி-குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே-
பரத்வன்- ஷீராப்தி நாதனாகவும்- ஸ்ரீ கிருஷ்ணனாகவும் -அந்தர்யாமியாகவும் -அர்ச்சாவதாராமாகவும்
ஆவிர்பவித்து பட்ட பாடு எல்லாம் பலித்ததே -நீர்மை சொல்லப் பட்டது –
அவன் சென்று பண்ணின கிருஷியின் பலம் அன்றோ என்று அன்றோ ஸ்தோத்ரம் செய்வார்கள் –
ஆதி ராஜ்யம் -கோள் சொல்லிக் கொடுக்கும் -நீர்மையில் தோற்று சந்தானமாக எழுதிக் கொடுத்த அடியவர்கள் அன்றோ இவர்கள் –
அடியார்களை தொடர்ந்து எங்கும் ஸ்தோத்ரம் சொன்னார்கள் என்றபடி
குடந்தையன் கோவலன் -குடந்தை எம் கோவலன் பாட பேதங்கள்

——————————————————————————–

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–10-9-8-

சுத்த சத்வமயம் -கீழே மிஸ்ர சத்வம் -பிரகிருதி வரைக்கும் –
தமஸ் தாண்டி –
ஆஸ்ரித சுலப கிருஷ்ண அடியார்கள் -நித்ய ஸூ ரிகள் நாட்டு எல்லையில் வந்து எதிர் கொள்ள
குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று-கோவலன் -அவனுக்கே ஆட் பட்டு
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள-நித்ய ஸூ ரிகள்-ஸாரூப்யம் கொண்ட நித்ய ஸூ ரிகள்
-தம் தாம் தரங்கள் தப்பாமல் -நீதி வானவர்கள் அன்றோ -முறை மாறாமல்
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
கொடிகளால் அலங்க்ருதம் -கோபுரம் நோக்கி -முக்தர்களும் நித்யர்களும் தலை வாசலுக்கு வந்து எதிர் கொள்ளுகிறபடி
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே-அலங்க்ருதமான வடிவு -புதுசாக -கொண்ட அலங்காரம் -ந கால இருந்தாலும்
-எல்லாம் உண்டே -விஸ்வரூபம் – புது பரிவட்டம் -காலம் இல்லை என்றாலும் –
முக்த ஜீவன் வர -விஷ்வக் சேனர்-பட்டியல் கொடுத்து -அவனும் அவளும் -சேர்ந்து -கூட எழுந்து அருளி
-மாதவன் -மிதுனத்தில் தானே ப்ராப்யம் -ஒரே ஆசனம் -கைங்கர்யம் கொடுக்க வேண்டும் -புதுசாக உருவாக்க முடியாதே
-அது தான் அவளது சாமர்த்தியம் -காந்தஸ்ய புருஷோத்தம -தாஸ தாஸீ கணம் -சர்வேஸ்வரன் உடைய ஸ்ரீ வைகுந்தம் –

இவ் உலகங்கட்கு எல்லாம் அவ்வருகே-பரமபததுக்கு புறம்பாக-
நித்ய சூரிகள் இவர்களை-எதிர் கொள்ளுகிறபடியை-அருளிச் செய்கிறார் –

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று –
கோவிந்தன் தனக்கு -இவர் -குடி அடியார் -என்று –அவனுடைய எளிமையில் தோற்று-
உற்றார் உறவினர்களோடு எழுதிக் கொடுத்தவர்கள் என்றாயிற்று-நித்ய சூரிகள் ஆதரிப்பது –
குடந்தை எம் கோவலன் குடி அடியார் -என்றார் மேலே –
குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு -என்றது இங்கே –
இதற்கு கருத்து என் என்னில்
இவர்கள் அவதாரங்களைப் பற்றினவர்கள்-
இவர்கள் உகந்து அருளின நிலங்களைப் பற்றினவர்கள் என்று ஆயிற்று அவர்கள் சிறப்பிப்பது –

முடி யுடை வானவர் –
அவனைப் போன்ற பெருமையில் குறைவு அற்றவர்கள் ஆயிற்று இவர்களை ஆதரிப்பார்கள்-
திருமுடி அவனுக்கும் நித்ய சூரிகளுக்கும் ஒக்குமாகில் வாசி என் என்னில்-
அவன் சேஷித்வத்துக்கு முடி சூடி இருப்பான்-
இவர்கள் சேஷத்வத்துக்கு முடி சூடி இருப்பவர்கள் –

முறை முறை எதிர் கொள்ள –
வகை வகையாக தாம் தப்பாமல் எதிர் கொள்ள –
யத்ர பூர்வே சாத்யா -புருஷ சூக்தம்-
எவ்விடத்தில் முன்னோர்கள் பற்றத் தக்கவர்கள்-
சாத்யா -உத்தேச்யர்-
அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ -3-3-10- என்றும்-சொல்லுகிறபடியே-
தங்களுக்கு உத்தேயர் ஆனவர்களுக்கு உத்தேச்யர் ஆகிறார் அன்றோ இவர்கள்-

கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர் –
இவர்கள் வருகிறார்கள் என்று கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு இருப்பதாய்-
ஒக்கத்தை உடைத்தாய் -பரம பதத்துக்கு எல்லையான-திரு மதிளிலே திருக் கோபுரத்தை சென்று கிட்டினார்கள் –

வடிவுடை மாதவன்-
மகோத்சவம் இவ ஆசாத்யா புத்ரானன விலோகனம்-
யுவவே வாசுதேவ அபூத் விஹாய அப்யாகதாம் ஜராம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-52-
கிழத்தன்மை விட்டு வாசுதேவன் காளைப் பருவத்தை அடைந்தான் -என்கிறபடியே-
கம்சனைக் கொன்ற பின்பு பிள்ளையைக் கண்ட-ஸ்ரீ வசுதேவரும் தேவகி பிராட்டியாரும் போலவும் –
நந்தாமி பஸ்யநபி தர்சனேன பவாமி த்ருஷ்ட்வாச புன யுவா-அயோத்யா -12-105-
பெருமாளைக் கண்ட சக்கரவர்த்தி மீண்டும் இளமைப் பருவம் அடைந்தார்-என்று சொல்லப் பட்டால் போலவும் –
வா போகு-இத்யாதி -சுப்ரமண்யன் போன்ற அழகன் -ரிஷி கரி பூசுகிறான் –
அன்றிக்கே –
வடிவுடை மாதவன் –
தங்கள் வரவால் உண்டான உவகையாலே புதுக் கணித்த-வடிவை உடைய-திருமகள் கேள்வன் -என்னுதல் –

வைகுந்தம் புகவே –
பரம பதத்தில் புகுகைக்காக-வந்து கிட்டினார் -என்றவாறே
தனக்கும் பிராட்டிக்கும் வடிவு இட்டு மாறினால் போலேயாம் -என்றபடி-
வைகுந்தம் புகவே மாதவன் வடிவுடை ஆனார்கள் -என்றபடி -திருவா மாலா வாசி தெரியாதபடி மாறினால் போலே –

—————————————————————————————-

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-

திருவாசல் காக்கும் முதலிகள் ஸத்காரம் –
வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்-புக்க அளவில் கோயில் வாசல் காக்கும் முதலிகள்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று-எங்களுக்கு சேஷி -பொன்னடி சாத்தி அருள வேணும் -புகுத்துக என்று -அகத்தில் அதிகாரத்தில்
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்-கைங்கர்ய நிஷ்டர்கள் குணானுபவ நிஷ்டர்கள் -அனுபவித்து உருகி –
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே-பாக்யம் -என்றவாறு -கிருபையால் -பூமியிலே சப்தாதி பிரவணராய்
-இங்கே வருவதே என்று உகந்து -ஆச்சரியமாக எமது இடம் புகுந்து வியந்தனர் என்றவும் –
அமரரும் முனிவரும் வியந்தனர் என்றும் -கொள்ளவுமாம்

பரமபதத்தில் சென்று திரு வாசலில்-முதலிகளால் உபசரிக்கப் பட்டவர்களாக-
அங்குள்ள நித்ய சூரிகள்
பரம பதத்தில் வருவதே –இது என்ன புண்ணியத்தின் பலம் –என்று ஈடுபட்டார்கள் -என்கிறார் –

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர் –
பரம பதத்தை சென்று கிட்டின அளவில்-திரு வாசல் காக்கும் முனிவர்கள் –

வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று –
ஸ்ரீ வைகுண்ட நாதன் உடையார் எங்கள் உடைய ஸ்வாமிகள்-
எங்கள் பதத்தினைக் கைக் கொள்ள வேண்டும் -என்று ஆயிற்று அவர்கள் பாசுரம் –
பயிலும் திரு உடையீர் எவரேலும் அவர் எம்மை ஆளும் பரமர் -2-7-1- என்ற இவரைப் போலே ஆயிற்று -அங்கு உள்ளாறும் இருப்பது -என்றது
திருவாசலில் முதலிகள் எதிரே வந்து உபசரித்து கையைக் கொடுத்து-கொண்டு புக்கு தங்கள் கைப் புடைகளிலே இருத்தி
திருக் கையில் பிரம்பையும் கொடுப்பார்கள் -ஆயிற்று -என்றபடி –
சென்று புகுகிற வர்களுக்கும் அடிமை வேலையே உத்தேச்யம்-
அங்கு இருக்கிற வர்களுக்கும் அடிமை வேலை செய்தலே தொழில் ஆகையாலே-
கைங்கர்யமே உத்தேச்யம் கைங்கர்யமே யாத்திரை என்றவாறு -இவர்கள் கொள்ளுவதும் அது-
–புகுத -என்றது -புகுதுக -என்றபடி –

வைகுந்தத்து அமரரும் முனிவரும் –
ஸ்ரீ பரத ஆழ்வானையும் இளைய பெருமாளையும் போலே-குணநிஷ்டரும் கைங்கர்ய நிஷ்டரும் –

வியந்தனர்-
ஈடுபட்டார்கள் –

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே –
கடலிலே உள்ள நீர் மலையிலே ஏறக் கோத்தால் போன்று-இப்பிறவியிலே உழன்று திரிகின்றவர்கள்-
பரம பதத்தில் புகுரும்படிக்கு ஈடாக-புண்ணியத்தை பண்ணுவதே -என்று ஆழம் கால் பட்டார்கள் –

————————————————————————————–

விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10-

ஸ்ரீ வைகுண்ட நாதன் ஆணையால் சூரிகளும் திவ்ய அப்சரஸ் களும் ஆதரித்த படி
விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்-ஈஸ்வரன் நியோகப்படி ஆனைப் படி -இதில் தான் புகுந்தனர் –
விலக்ஷண வேதாந்தம் பிரசித்த ஸூ ரிகள் -பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்-தங்கள் திவ்ய ஸ்தானங்களில்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்-தானம் மதியம் -ஆஸ்ரிதர்களுக்கு திருவடி -திருச் சூரணம் பூர்ண கும்பம் மங்கள தீபம்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே-இவர்கள் தரிசனத்தால் ஒளி பெற்ற முகம் -எதிரே வந்து ஏந்தினார்கள் -பாரதந்தர்யம் ஸூ சகம் -மடப்பம் –

நித்ய சூரிகள் இவர்களை-கொண்டாடும் படியை-அருளிச் செய்கிறார் -.

விதி வகை புகுந்தனர் என்று —
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -என்று இவர்கள் சொல்லுகிற வார்த்தை அன்று என்று-வேறு சிலர் –
இவர்கள் இங்கே வந்து புகுரப் பெற்றது-
நாம் செய்த புண்ணியத்தின் பலம் அன்றோ -என்பர் -என்றது-
விஷயங்கள் நடை யாடுகிற இவ் உலகத்தில் இருந்து வைத்து-வேறு பயனைக் கருதாதவராய் –
பகவானுடைய குணங்களை அனுபவிக்கிற மகா புருஷர்களாய்-விண்ணுளாரிலும் சீரியர் எனப்படுகிற-
இவர்கள் வந்து புகுரப் பெற்றது நாம் செய்த புண்ணியத்தின் பலம் என்றோ என்பார்கள் என்றபடி –
மேலே -வைகுந்தம் புகுவது -என்றார் –
இங்கு புகுந்தனர் -என்கையாலே தங்கள் புண்யத்தைக் காட்டுகிறது –

நல் வேதியர் –
ஸ்ரீ புருஷ ஸூ க்தாதிகளில் பிரதிபாத்யம் -சொல்லப் பட்டவர்கள் -என்றபடி –
யத்ர ரிஷய பிரதம ஜாயே புராணா-
எவ்விடத்தில் காண்கின்றவர்களும் முன் தோன்றியவர்களும்-பழமையானவர்களும் –
புராணர்-புரா நவ -பகவத் அனுபவத்தால் இளகிப் பதித்தவர்கள் -ஸ்துதி பண்ணி அனுபவத்தில் ஏக சிந்தையராய்
யத்ர பூர்வே சாத்யா சந்திதேவ –
எங்கும் உள்ளவர்களும் பற்றத் தக்கவர்க்களுமான தேவர்கள்-
தத் விப்ராச விபத்யவ ஜாகுயாம்ச சமிந்ததே விஷ்ணோ யத் பரமம் பதம்-
எங்கும் பரந்து இருக்கின்ற திரு மாலுக்கு யாதொரு சிறந்த இடம் உண்டோ

அந்த பரம பதத்தை -ஞானம் நிறைந்தவர்களும்-துதிப்பதையே தன்மையாய் உடையவர்களும்
எப்பொழுதும் ஜாக்ரதையோடு கூடினவர்களுமான
நித்ய சூரிகள் அடைகிறார்கள் -என்று-வேதங்களால் சொல்லப் பட்டவர்கள் –

பதியினில் –
ஆதி சேடன் -பெரிய திருவடி முதலானவர்கள்
தங்கள் திரு மாளிகைகளிலே கொடு புக்கு –

பாங்கினில் பாதங்கள் கழுவினர் –
இவன் பிறப்பு இறப்புகளில் உழன்று திரிந்து போந்த ஒருவன்-
நாம் சம்சாரத்தின் வாசனை தீண்டப் பெறாதவர்கள்-என்ற வாசி வையாதே-
இவனை சிங்காசனத்திலே உயர வைத்து-
அவர்களுக்கு பாங்காக தாங்கள் இருந்து-திருவடிகளை விளக்குவார்கள் –
சிஷ்யர்கள் ஆகவுமாம் புத்திரர்கள் ஆகவுமாம் -பகவத் சம்பந்திகள் கௌரவம் பண்ணப் படுபவர்கள் -நீராடப் போதுவீர்-
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் –
கண்ணபுரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்னப் பெறுவரோ
பராசர பட்டர் ஸ்ரீ பாத தீர்த்தம் திருத்த தாயார் ஆண்டாள் சுவீகரித்துக் கொண்டாளே

நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
அவ்வளவிலே பகவானுக்கு தொண்டு செய்கிறவர்கள் வந்து-எதிர் நிற்ப்பார்கள்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு செல்வமான திருவடி நிலைகளையும்
திருச் சுண்ணப் பிரசாதத்தையும்
நிறை குபங்களையும்-மங்கள தீபங்களையும் -ஏந்தி –

மதி முக மடந்தையர் -ஏந்தினர் வந்தே
வேறு தேசத்திற்கு போன பிள்ளைகள் வந்தால்-தாய் முகம் குளிர்ந்து இருக்குமா போலே
உவகையாலே பூர்ண சந்தரனைப் போலே
இருக்கிற முகங்களை உடையவர்கள் வந்து எதிர் கொண்டார்கள் —

—————————————————————————-

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-

பகவத் அனுபவம் பலம் -மனன சீலர் முனிவர் -பகவத் அனுபவம்
வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து-வந்து அவர் எதிர் கொள்ள -பெருமாளும் பிராட்டியும் சேர்ந்து -லஷ்மீ ஸஹாயர் அவரே –
பிரதான விஷ்வக் சேனர் முதலானோர் என்றுமாம் –
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை-நித்ய முக்தர்கள் உடன் இருந்தமையை -முடிவு இல்லாதவாகவும் அபரிச்சின்னமானவாகவும் -இருந்த பிரகாரத்தை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்-பூ கொத்து -திரு நகரிக்கு நிர்வாகர்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே-ஆயிரத்து பத்து -இங்கு இவை பத்தும் சொல்லாமல் -பர பக்தி தசையில் -அப்படி
விருத்தம் பேதங்கள் உண்டே வெண்பா பா இனம் போல்வன -இவை இந்த பத்தையும் அனுசந்திக்க வல்லார்
-வைகுந்தது அமரர் முனிவர் -குண நிஷ்டர் -குண மனன சீலர் ஆவார்கள்
சந்தஸ் -வேதம் ஆகவுமாம் -தமிழ் வேதரூபம் என்றவாறு –

நிகமத்தில்
இத் திருவாய் மொழியைக் கற்றவர்-நித்ய சூரிகளோடு ஒப்பர்-என்கிறார்-

வந்தவர் எதிர் கொள்ள –
அவர் வந்து எதிர் கொள்ள –
வடிவுடை மாதவன் -அவர் -பிராட்டி யோடு கூட எம்பெருமான்-தானே வந்து எதிர் கொள்ள –
அன்றிக்கே –
இந்த பிரகிருதி சம்பந்தம் இல்லாத -நல் வேதியர் -அயர்வறும் அமரர்கள் எதிர் கொள்ள -என்னவுமாம் –

மா மணி மண்டபத்து –
ஆனந்த மயமான திரு மா மணி மண்டபத்திலே –

அந்தமில் பேர் இன்பத்து –
அநந்த கிலேச பாஜநம் சம்சாரம் –எல்லை இல்லாத கிலேசங்களுக்கு எல்லாம் எதிர் தட்டே அன்றோ –
இந்த உலக வாழ்க்கையில் சுகம் என்று மயங்கும் இத்தனையே உள்ளது துக்கமேயாம்-
பாண்டு ஒருவன் மேல் -மான் உருக் கொண்ட மனைவி உடன் சேர்ந்த முனிவன் -மேல் அம்பை விட-சாபம் -கொடுத்து –
இவ் உலக வாழ்க்கையில் ஆயிரம் கூற்றில் ஒரு கணம் ஆயிற்று சுகம் உள்ளது-
அதனையும் அனுபவிக்க ஒட்டிற்று இல்லையே -என்றானே அன்றோ –ரிஷிகளையும் மயக்கும் படி அன்றோ ஐம்புலன் இன்பங்கள் –
பர்வத பரமாணு வாசி இதனால் தானே -ரிஷிகள் -ஆழ்வார் -பெரியாழ்வார் -ஆண்டாள் -மதுரகவி ஆழ்வார் —
அநந்த ஸ்திர பலம் -இது -அல்ப அஸ்திர பலம் அது என்றவாறு –

அடியரொடு இருந்தமை –
அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ -2-8-10 என்று ஆசைப் பட்டபடியே இருந்தமை –

கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்-
எப்பொழுதும் மலர்களை உடைத்தான சோலையாலே-சூழப் பட்ட-திரு நகரியை உடைய ஆழ்வார் அருளிச் செய்த –
போக்கிலே ஒருப்பட்ட வாறே திரு நகரியே தொடங்கி போலே காணும் சோலை செய்வது -அலர் –
அந்தமில் பேர் இன்பத்து -ஆழ்வாருக்கும் கொள்ளலாம்

சந்தங்கள் ஆயிரத்து –
விருத்தங்களை உடைத்தான ஆயிரம் -என்னுதல்
சந்தோ ரூபமான -வேதத்தின் உருவான ஆயிரம் -என்னுதல் –

இவை வல்லார் முனிவரே –
இப்பதத்தினை கற்க வல்லார்-
அப் பரம பதத்திலே பகவான் உடைய குணங்களை அனுபவித்து-அவற்றிலே ஈடுபட்டவராய்-
அதற்கு அவ்வருகு கால் வாங்க மாட்டாதே-இருக்குமவர்களைப் போலே ஆவார்கள்- இங்கேயே முக்தர்களைப் போலே ஆவார்கள் –

வகுள மாலை -சாத்தி -சேஷத்வ ஸூ சகம் -குறவன் கொண்டை -கிளி கொண்டை நித்யம் சாத்தி சேவை சாதிப்பார் –
குறட்டில் எழுந்து அருளி -கொட்டு வந்ததா -என்பர் -ஆச்சர்யமான உத்சவம் –
நாலாயிரம் -ஸ்ரீ வசன பூஷணம் -ஆச்சார்ய ஹிருதயம் பெண்கள் நித்ய அனுசந்தானம் ஆழ்வார் திருநகரியில்
-ஞானம் பிரேமம் மிக்கு -ஆழ்வார் மேலே வெய்யில் படாமல் –

————————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

நவமே சடாரி ஆசாதீதோ முனி ரபோத்
தத்ர ஸ்திதிக்கு சுகமயீஞ்ச ஹரி பிரியாணாம் ததீய ஜனீ
ஸத்காரம் சுரைர் அபி அத்வனி
சந்நிஹ்ருஷ்டேபிரதி உத் கதிம் பரம தாம்நி –

————————————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ஸ்வாமி த்வாத் ஸ்ரீ சன் நாராயணன் இதி விக்ரமாது விஷ்டமானாம்
ஸ்ரீ மத்வாத் மதுரா மது சக்ரவத்வாத் ஜல நிதி சயநாச்சாபீ
கோவிந்தன் பாவாத் வைகுண்ட ஸ்வாமி பாவாத் அபிச
நிஜ ஜன அர்ச்சிராதி கம்ய ஸ்ரீ சடாரி பபூவ-கதயாமாச-

1–ஸ்வாமி த்வாத்-ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன் வாழ் புகழ் நாரணன்–

2–ஸ்ரீ சன் நாராயணன் இதி–நாரணன் தமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில் பூரண பொற் குடம் பூரித்தது

3-விக்ரமாது விஷ்டமானாம் –பொழி வனர் பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர்

4-5-ஸ்ரீ மத்வாத்—மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே—என்றும்
மாதவன் தமர் என்று வாசலில் வானவர் போதுமின் எமது இடம் புகுதுக என்றலும் கீதங்கள் பாடினர்–என்றும் –
மதுரா மது -லவணாசுரன் மது அப்பா பிள்ளை

6–சக்ரவத்வாத்–ஆழியான் தமர் என்று வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே

7–ஜல நிதி சயநாச்சாபீ–கடல் கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே

8–கோவிந்தன் பாவாத்–குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள

9–வைகுண்ட ஸ்வாமி பாவாத் அபிச–வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர் வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர் வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே-

10-நிஜ ஜன அர்ச்சிராதி கம்ய–நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும் மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே

ஸ்ரீ சடாரி பபூவ-கதயாமாச–வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல் சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–

———————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 99-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

இதில் ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்க சத்காரத்தை அடையக் காட்ட அனுபவித்து அருளிச் செய்த பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார்-அது எங்கனே என்னில் –
இவரை அமர்ந்த நிலமான ஸ்ரீ பரம பதத்திலே கொடு போய் வைத்து இவரும் தானுமாக அனுபவிப்பதாக ஸ்ரீ சர்வேஸ்வரன் விசாரித்து
இவருக்கு ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கத்தையும்-அங்கு உள்ளார் பண்ணும் சத்கார விசேஷங்களையும்
ஸ்ரீ பரமபத பிராப்தியையும் அங்கு உள்ளார் வந்து எதிர் கொண்டு சத்கரிக்கும் கட்டளைகளையும்
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் இவருக்கு கண்டு அனுபவிக்கலாம்படி
பர ஜ்ஞான தசையை பிறப்பித்துக் காட்டிக் கொடுக்க
இவரும் கட்டடங்க கண்டு அனுபவித்து
தாம் பெற்ற பேற்றை அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற சூழ் விசும்பு அணி முகிலில் அர்த்தத்தை
சூழ்ந்து நின்ற மால் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை-

———————————————–

சூழ்ந்து நின்ற மால் விசும்பில் தொல்லை வழி காட்ட
ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து -வாழ்ந்து அங்கு
அடியருடனே இருந்தவாற்றை யுரை செய்தான்
முடி மகிழ் சேர் ஞான முனி –99-

————————————————-

வியாக்யானம்–

சூழ்ந்து நின்ற மால் விசும்பில் தொல்லை வழி காட்ட –
கீழ் இவரைச் சூழ்ந்து கொண்டு நிவ்ருத்தனாய் நின்ற ஸ்ரீ சர்வேஸ்வரன்
ஏஷா சாத்ருச்யதே -இத்யாதி படியே- ஸ்ரீ பரம ஆகாசத்திலே தேஜக்ரச்சாச்வதே மதே -என்று
பூர்வ மார்க்கமான ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கத்தைக் காட்ட
அமந்திர ஜோஸ்த்வ கோஷம் போலே ஏறப் பெறுகிற எழுச்சியை ஸூசிப்பிக்கிற
மேக சமுத்திர பேரீ கீத காஹள சங்கா சீச்துதி-கோலாஹலம்-செவிப்படும் படியையும் –
அலங்கார விகிம்க்ருதச்னாம் காரயமாச வேசமான -என்கிறபடியே-அங்குள்ள ஆதிவாஹிக சத்கார க்ரமத்தையும்
மேல் ஸ்ரீ நித்ய சூரிகள் பிரத்யுக்தராய் சத்கரிக்கும் க்ரமத்தையும்
த்வாராத்ய ஷரர்சத்கரிக்கும் க்ரமத்தையும் திவ்ய அப்சரஸ் சத்கார க்ரமத்தையும்
ஸ்ரீ சர்வேஸ்வரனும் ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் ஆதரிக்கும் படியையும்
திவ்ய சூரி பரிஷத்தில் இருந்து ஆனந்த நிர்பரராய் அனுபவிக்கும் படியையும்
தொல்லை வழி காட்ட -என்ற அதிலே இவ்வளவும் அனுவர்த்தித்த படி –

ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து —
அதிலே ஆழம் கால் பட்டு-அவன் காட்டின எல்லாவற்றையும் கட்டடங்க அனுபவித்து
அதாவது –
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின-ஆழ் கடல் அலை திரை கை எடுத்து ஆடின-என்றும்
நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்-பூரண பொற் குடம் பூரித்த உயர் விண்ணில் -என்றும்
தொழுதனர் உலகர்கள் -என்று தொடங்கி வழி இது வைகுந்ததற்கு என்று வந்து எதிர் எதிர் -என்றும்
எதிர் எதிர் இமையவர் என்று தொடங்கி-மது விரி துழாய் முடி மாதவன் தமர்கே-என்றும்
மாதவன் தமர் என்று வாசலில் வானவர் -என்று தொடங்கி-வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே -என்றும்
வேள்வியுள் மடுத்தலும் -என்று தொடங்கி -வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் -என்றும்
மடந்தையர் வாழ்த்தலும் -என்று தொடங்கி -குடந்தையன் கோவலன் குடி குடி யார்க்கே -என்றும்
குடியடியார் -என்று தொடங்கி-வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே -என்றும்
வைகுந்தம் புகுதலும் -என்று தொடங்கி-வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -என்றும்
விதிவகை -என்று தொடங்கி -மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே -என்றும்
வந்தவர் எதிர் கொள்ள மா மணி –பேரின்பத் தடியரோடு இருந்தமை -என்றும்
இப்படி-முழுவதும் அனுபவித்த படி -என்கை –

அனுபவித்து வாழ்ந்து –
இவ் வனுபவத்தை அடைவே அனுபவித்து க்ருதார்த்தராய் –

அங்கு அடியருடனே இருந்தவாற்றை யுரை செய்தான் –
ஸ்ரீ பரம பதத்திலே ஆனந்த மயமான ஸ்ரீ திரு மா மணி மண்டபத்திலே
ஸ்ரீ அனந்த ஸ்ரீ கருட ஸ்ரீ விஷ்வக் சேனர் பிரமுகராய் உள்ள-அடியரோடு
ஆனந்த நிர்பரராய் இருந்த பிரகாரத்தை அருளிச் செய்தார்

முடி மகிழ் சேர் ஞான முனி –
முடியுடை வானவரோடே கூடுகையாலே-முடியை யுடையராய் பிரபந்தம் தலைக் கட்டுகையாலே
ஸ்ரீ ஆழ்வாரும்-அளக பந்தத்திலே வகுள பந்தத்தை யுடையராய் தலைக் கட்டின படியை அருளிச் செய்கிறார் –
அவன் – மது விரி துழாய் மாதவன் –
இவர் -முடி மகிழ் சேர் ஞான முனி-பர ஜ்ஞானத்தை உடைய பராங்குச முனியானவர் –

அடியருடனே இருந்த வாற்றை யுரை செய்தான் –
சூழ் விசும்பு அணி முகில் தொடங்கி-அடியரோடு இருந்தமை என்னும் அளவும் அருளிச் செய்தார் –
எல்லாரும் விஸ்வசித்து உஜ்ஜீவிக்கைக்காக –

——————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-