Archive for May 7th, 2015

புராதான ஸ்லோகங்கள் —

May 7, 2015

ஏக ஸ்லோக ஸ்ரீ மத் ராமாயணம் –

பூர்வம் ராமோ தபோவனானு கமனம் கத்வாம்ரு காஞ்சனம்
வைதேகி கரணம் ஜடாயு மரணம் சுக்ரீவ சம்பாஷணம்
வாலி நிக்ரஹணம் சமுத்திர சரணம் லங்காபுரி தகனம்
பட்சாத் ராவண கும்பகர்ண நிதானம் ஏதத் ராமாயணம் —

——————————————————————————————

ஏக ஸ்லோக ஸ்ரீ மத் பாகவதம் –

ஆதவ் தேவக தேவ கர்ப்ப ஜனனம் கோபி  ஹ்ருதே மர்த்தனம்
மாயா பூதன தேவ தாப கரணம் கோவர்த்தனோ தாரணம்
கம்ச சேதன கௌரவாதி கரணம் குந்தி ஸூதா பாலனம்
பட்சாத் பீஷ்ம சுயோதனாதி கரணம் ஏவம் மஹா பாகவதம் –

——————————————————————————————

ஸ்ரீ பட்சிராஜ ஸ்தோத்ரம் –

அம்ருத கலச ஹஸ்தம் காந்தி சம்பூர்ண காத்ரம்
சஹல விபூத வந்த்யம் வேத சாஸ்திர வந்த்யம்
ருஷிர விபூத பக்த்யம் வேத்யமான் ஆண்ட கோலம்
சகல விஷ்வ   நாசம் சிந்தையே பட்சி ராஜம்-

——————————————————————————————-

எம்பெருமான் திவ்ய வடிவு அழகு சேவை –

திருத் துழாயும் மகிழம் பூவும்
கவசமும் முத்தா கிரீடமும்
நெற்றியில் தீஷண கஸ்தூரி திலகமும்
மதனவில் போல் வளைந்த புருவமும்
கடை சூழ்ந்து செவ்வரி தாழ்ந்து கருமுகில் மிகுந்து அகன்று  நிமிர்ந்த செந்தாமரைக் கண்களும்
கூர்மையான கொடி மூக்கும்
செங்கனி வாயும்
மல்லிகை மலர்ந்தால் போல் பொன் சிரிப்பும்
தாமரை மலர்ந்தால் போ திரு முக மண்டலமும்
கரி வண்டு கவித்தால் போல் கரும் குழல் காற்றையும்
இரு சூரியன் உதித்தால் போல் மணி மகரக் குண்டலமும்
கபோலம் என்றும் கவை என்றும் கஞ்ச மலர்க் கையான் அஞ்சாதே என்று அடியார்களுக்கு அளித்த அபயச்த கரமும்
சந்திர ஸூரிய மண்டலமும் சேர்ந்து அமைந்தால் போல் பாஞ்ச சந்யமும்
திருத் தோள் அம்புறாத் துணியும்
திரு வரையிலே தங்கப் பிடி வைத்த நாந்தகக் கத்தியும்
கிளிவசை மாலையும் -மகிழம்பூ மாலையும் –தாழம்பூ மாலையும் திருத் துழாய் மாலையும் –
குங்குமம் கஸ்தூரி குமுகுமு என்ன பளபள என்ன குளிர்ந்த திருமேனி தேஜஸ் ஸாய் இருக்கிற
என் அப்பனே
ஸ்ரீ ரங்க நாதனே
கண்ணனே
தாமரைக் கண்ணனே
தூ மணி வண்ணனே
தோளுக்கு இனியானே
பத்ம நாபனே
பவள வாயனே
சிறு புலி மார்பனே
செங்கோல் உடையானே
கத்தியும் கேடையமும் கதையும் தரித்தோனே
ஆநிரை மேய்த்தோனே
அவன் உடம்பு பிழந்தோனே
கோனேரி காத்தோனே
கோவர்த்தன குடையானே
சிங்கம் போல் நடையானே
பீதக வாடை யுடையானே
பேய்முலை  யுண்டானே
பதினாறு லோகமும் ஆண்டானே
பச்சைத் திருத் துழாய் மாலை அணிந்தோனே
அரி அச்சுதனே
ஆராவமுதனே
சிந்திக்கத் தித்திக்கும் செவ்வேங்கடத்தானே
திருவேங்கடத்தானே
எம்மானே
எம்பெருமானே
இங்கே கண்டேனே –
ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி

—————————————————————————————————————-

ஸ்ரீ நரசிம்ஹ அஷ்டகம் -ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் அருளிச் செய்தது –

ஸூந்தர ஜாமாத்ரு முனே ப்ரபத்யே சரணாம் புஜம்
சம்சாரார்ணவ சம்மக்ன ஜந்து சந்தார போதகம் –தனியன் –

ஸ்ரீ மத கலங்க பரிபூர்ண சசிகோடி ஸ்ரீ தர மநோ ஹர  சடா படல காந்த
பாலய க்ருபாலய பவாம்புதி  மக்நம் தைத்ய வர கால நரசிம்ஹ நரசிம்ஹ

பாத கமலா வநத பாதகி ஜநாநாம்  பாதகதவாநல பதத்திரி வர கேதோ
பாவந பாராயண பவார்த்தி ஹரயாமாம் பாஹி க்ருபயைவ நரசிம்ஹ நரசிம்ஹ

துங்க நக பங்க்தி தலதா ஸூர வராஸ்ருக் பங்க நவ குங்கும விபங்கில மநோ ஹர
பண்டித நிதாந கமலாலய நமஸ்தே பங்கஜ நிஷண்ண நரசிம்ஹ நரசிம்ஹ

மௌலிஷூ விபூஷணமிவ அமரவராணம் யோகி ஹ்ருதயேஷூ ச சிரஸ்ஸூ நிகமா நாம்
ராஜதர விந்த ருசிரம் பதயுகம் தே தேஹி மம மூர்த்தி நரசிம்ஹ நரசிம்ஹ

வாரிஜ விலோசன மதந்திம தசாயாம் க்லேச விவசீக்ருத சமஸ்த கரணாயாம்
ஏஹி ரமயா சஹ சரண்யா விஹகா நாம் நாதமதி ருஹ்ய நரசிம்ஹ நரசிம்ஹ

ஹாடக கிரீடவர ரசனா மகர குண்டல மணீந்த்ரை
பூஷி தமசெஷா நிலையம் தவ வபுர்  சேதசி சகாச்து நரசிம்ஹ நரசிம்ஹ

இந்து ரவி பாவக விலோசன ரமாயா மந்திர மஹா புஜ லேசாத் வர ரதாங்க
ஸூ ந்திர சிராய ரமதாம் த்வயி மநோ மே நந்தித ஸூ ரேச நரசிம்ஹ நரசிம்ஹ

மாதவ முகுந்த மது ஸூ தன முராரே வாமன நருசிம்ஹா சரணம் பவ நதானாம்
காமத க்ருணின் நிகில காரண நயேயம் கால மாமாரேச நரசிம்ஹ நரசிம்ஹ

அஷ்ட கமிதம் சகல பாதக பயக்நம் காமதம் அசேஷ துரிதாமய சரிபுக்னம்
யா படதி ஸந்ததம சேஷ நிலயம் தே கச்சதி பதம் ஸ நரசிம்ஹ நரசிம்ஹ —

———————————————————————————————–

உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோமுகம்
நருசிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும்ருத்யும்  நமாம்யஹம்

ஓம் வஜ்ரா நகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி தந்நோ நாரசிம்ஹ ப்ரசோதயாத்

————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ சேனாபதி முனிவர் -ஸ்ரீ சேனை முதலியார் ஜீயர் -அருளிச் செய்த மணவாள மா முனிகள் நூற்றந்தாதி —

May 7, 2015

மா வளரும் கோயில் மணவாள மா முனிவன்
பூ வளரும் பொன்னடி மேல் பாமாலை –நா வலவன்
சேனாபதி முனிவன் சீருடை அந்தாதி தந்தான்
மேனாடரும் கற்க ஏய்ந்து-

குணவாளன் இந்திரை கோன் குணம் கூறும் மாறன் தாள்
தணவாத எதிராசன் தாள் வணங்கும் தன்மையனாய்ப்
பணவாதி சேடனருள் பரனேவ அவதரித்த
மணவாள மா முனிவன் மலரடியே அடை நெஞ்சே –1–

நெஞ்சுருகிக் கண் பனிப்ப நெடுமாலை நமன்று எழும்
தஞ்சமருள் மாரி புகழ் தாம் பரவும் எதிகட்கொரு
வான் சரணே வணங்கிய நம் மணவாள மா முனிவன்
இன்சரிதையின் சீரை இயம்பு எழாய் என் வாயே –2–

வாயாலும் மெய்யாலும் மனத்தாலும் பெரும்பூதூர்
மேயானை அடி பரவும் மெய்யடியார் தாள் நினைந்து
மாயாத மணவாள மா முனிவன் குணங்களையே
கூசாமல் வணங்கி எழாய் குறியுடைய என் தலையே –3—குறியுடைய -நல்நோக்கம் யுடைய —

தலையான எதிராசன் தன்வடிவை நினைக்க மனம்
விலையாதும் இல்லவன் சீர் விழுங்கியிட வாயடிமை
நிலையான முறை செய் நிச்சலும் கை வேண்டும் திரு
மலை யாழ்வார் அருள் பெற்ற மணவாள மா முனியே –4–

முனியேறாம் எதிராசன் முழுத் தகவால் முப்பதத்தின்
இனிய பொருள் நிலை வேண்டி இன்பமுடன் அவன் அடியில்
குனியும் எவரும் மதியடையக் கருது மணவாள முனி
தனியருளே நினைந்து அடியேன் தாரணியில் மகிழ்வேனே –5-

மகிழ் மாறன் அடி சூடும் எதிராசன் மலரடியின்
நிகழ காத்தற்கு இடைச் சுவரை நீக்கி  யருள் என்று இரந்து
மகிழு  மன மணவாள மா முனிவன் குணங்களையே
புகழாத புலவர்கள் இப்பூமிக்கோர்   பெரும் சுமையே –6-

மைந்தன் எதிராசர் அருள் மன்ன நைச்சியத்தை
ஐந்தாறு  கவிகளினால் ஆர்த்த மணவாள மாமுனி
பைந்தாமரை அடியைப் பரவுமவர் தாளிணைக்கே
நைந்துருகும் என் நெஞ்சம் நையாது பிறருக்கே –7—பல கவிகளால் -எதிராஜ விம்சதியில் –

அருக்கன் குல தெய்வ வணி அரங்கன் வரம் கொண்டு
செருக்கடித்த எதிராசன் திருவருளே அரணாக
இருக்கு மண வாள முனி இணையடியை இறைஞ்சுமவர்
திருக் கமலத் தாளிணையே தித்திக்கும் அடியேற்கே –8—-அருக்கன் குலம் -சூர்ய குலம்–

ஏற்கும் எதிராசனுடைய எழில் பதத்தின் சேவை தனைச்
சீர்த் திருவாய் மொழிப் பிள்ளை செழும் தகவால் தந்ததனை
மேற்கிளர அருள் என்று மேவும் மணவாள முனி
ஆர்க்கருளும் அடியேனுக்கு அல்லது நீர் சொல்லீரே –9–ஆர்த்திப் பிரபந்தத்தில் பிரார்த்திக்கும் மா முனிகள் என்றவாறு –

ஈரேழு புவனத்தார் இறைஞ்சு புகழ் எதிராசன்
சீரேற்ற நன்று இயலும் செம்மையினால் அருள் சூடி
நேரேற்றம் இல்லாமல் நுகளும் மணவாள முனி
பாரேத்து பெரும் புகழைப் பாடி மனம் களித்தேனே –10-

தேனமரு பூம் பொழில் சூழ் திருக் கச்சி நகர்ப் பொய்கைப்
பூ நடுவில் உதித்த முனி புகழ் பாடு எதிராசன்
மா நிலவில் வாய் மடுக்கும் மணவாள மா முனிவன்
ஞான வொளிக் கலையல்லால் நாம் என்றும் ஒதோமே–11–பொய்கை ஆழ்வார் புகழைப் பாடும் –எதிராசர் உடைய நிலவு போன்ற
திரு முக மண்டலத்தை போற்றும் மா முனிகள் உடைய திருவாக்கையே ஓதுவோம்  -என்றவாறு-

ஓதக் கடல் மலை ஒளி சூழ வந்துதித்த
பூதத்தார் இயலாதும் பூதூரின் மா முனிவன்
பாதத்தைப் பலகாலும் பரவு மணவாள முனி
கோதற்ற தென் மொழியைக் கொண்டாடிக் கூறுதுமே –12-

கூறிய சீர் மயிலையர் கோன் குணம் கொள்ளும் எதிராசன்
மாறிலடி வணங்கி மகிழ் மா முனிவன்
வீறுடைய மெய்ம்மொளியை விரும்பி யாரும் பொருள் அனைத்தும்
தேறுமவர் எஞ்ஞான்றும் தேசிகராய்த் திகழ்வாரே –13–மாறிலடி -நிகரற்ற / தேறுமவர் -உணர்பவர்-

வார் புனல் சூழ் மா மழிசை வாழ்வெய்த வரும் சோதி
சீர் புகழும் எதிராசன் சீலம் எல்லாம் குடைந்தாடும்
ஓர் புனிதன் மணவாள யோகி செயும் உலகாரியன்
ஏர் பனுவல் வியாக்கியையை என்னுமவர்க்கு ஏது அரிது –14-

அரிதேவன் அல்லாதார் அவனுரு வென்று உரைக் குருகா
புரிதேசிகன் பாதம் புகழும் எதிசெகரன் தன்
சரிதை நினைந்து உள்ளுருகும் சால மணவாள முனி
சொரி தேறல் கலை நுகரும் சோமபருக்குப் பசி ஏதே –15–தேன் பெருகும் திரு வாக்குகளைப் பருகும் சோம பானம் பருகுபவருக்குப் பசி எப்படி உண்டாகும் —

ஏதேனும் ஆவேன் நான் எம்பெருமான் பொன்மலை மேல்
ஈதே நங்காதல் எனும் எழில் வஞ்சிக் களத்து இறைவன்
பா தேங்கும் எதிராசன் பதம் கருது மணவாள
மா தேசிகன் கலையே மற்றதுமோர் அமுதுண்டே –16-

துண்டித்துப் பரமபதம் தூ நெறியைத் தாபித்துக்
கொண்டுய்த்த வில்லி புத்தூர்க் கோன் குணம் தேர் எதியரசைப்
பண்டுற்ற மணவாள மா முனுவன் பனுவல்களின்
ஒண் தத்துவப் பொருளை ஒர்ந்திடுவார் உறங்காரே –17–

காரேறு கருமுகில் போல் கண் வளரும் அரங்கேசன்
பாரேறு புகழ் பாடித் திருப்பள்ளி யுணர்த்தும் ஒரு
போரேற்றைத் திரு மண்டங்குடியில் உறும் எதிராசன்
சீரேறு மணவாளச் சீயருரை ஒதுமினே –18-

ஒதுமொரு மா முனியை ஓர்ந்து புகுந்து அரங்கனடிப்
போது முடியளவாம் போற்றி எனும் உறையூரான்
மீது முயல் எதிராசன் மணவாள மா முனியாய்த்
தீது முகந்து அறியாத தென்மறையை வளர்த்தானே–19-

தானேதன் வழிப்பட்ட தாமோதரன் பணியைக்
கானேறிப் பறித்து மனு கற்றுய்ந்த நம்
கோன் ஏத்தும் எதிராசன் கோமளவான் குணம் பாடி
வானேற்றும் மணவாள மா முனிவன் மன்னுரையே –20-

மன்னு திருவாய்ப்பாடி மங்கைகளில் தான் ஒன்றாய்
தன் உருக்குமணிக் கணவன் தகவடைந்த புதுவை  மயில்
என் அண்ணன் என வுகந்த எதிராசன் தாளிணையை
முன் நண்ணும் மணவாள முனி மொழியை முரலுமினே–21

முரலுமிவர் பதினொருவர் மொழிகளுக்கோர் இலக்காகும்
பரண் பெரிய பெருமாளைப் பணியும் எதிராசன் தாள்
விரல் தொடங்கி முடியளவும் விரும்பும் மணவாள  முனி
தரமறியும் பெரியோர் தம் தாளினை என் தலைக்கு அணியே –22-

அணியரங்கன் அடி வணங்கும் அருள் பெரிய பிராட்டி தனைப்
பணியும் எதிராசனடி பரவு மணவாள முனி
பிணி யகல அருள் செய்த பிரபந்தங்கள் பெரும் பொருளைத்
துணியுமவருக்கு ஒரு காலும் துயருதிக்க கில்லாவே –23-

இல்லாத குணம் காட்டி இன்னுயிரை இறை சேர்க்கும்
வல்லாளை அருள் பெரிய பிராட்டிதனை வணங்காமல்
செல்லாத சேனையர் கோன் செயல்பாடும் எதிராசன்
சொல்லாழும் மணவாள மணி சொற்கள் நன்னூலே–24–

கண்ணனை மா வுடன் மருவக் கற்பித்த வன்கிரிசை
திண்ணனவே  சுமக்கும் சேனையர் கோன் தாள் வணங்கும்
அண்ணல் அருள் மாறன் தாளடையும் எதிராசனையே
மணவாள முனி நற்கழலே நம் துணையே –25-

நந்தாதை மதுரகவி நற்கலையைத் தான் சவித்து
சிந்தாமல் சடகோபன் சீரருள்சேர் நாத முனி
முன் தாழும் எதிராச மூர்த்தி மணவாள முனி
அந்தாதி நூறையும் நாம் அனுசந்தித்து இருப்போமே   –26—–எதிராசருடைய மற்றொரு திரு உருவமான மணவாள மா முனி –

திருப்பொலி அருள் நாதன் சேவடி சேர் உயக் கொண்டார்
பருப்போடு போரும் தாள்கள் பணியும் எதிராசனிடை
விருப்போங்கு மணவாள முனி விரித்த கலையோதி
இருப்போமுக்கு இனியொருத்தர் இயல்கேட்க வழி என்ன –27—நாதன் -நாதமுனி –சேர்ந்த உயக்கொண்டார் திருவடிகளை —

வழக்கு என உயக் கொண்டார் வன் சரணாம் பதுமத்தின்
நிழல் கொண்டு நிகழ் மணக்கால் நம்பியை நண் எதிராசன்
கழல் கண்ட மணவாள முனி கலையை விரும்பாதார்
விழக் கண்ட நாமவற்றை விரும்பாத நாளுண்டே –28-

நாளவரி தாள் தொடருமவர் நற்பதத்தை அடைந்துய்ந்த
ஆளவந்தார் திருவடியில் அன்புறும் எம்பெருமானார்
தாளுவந்த மணவாள முனி தரு நூற்றந்தாதிக்கு
ஆளவன் தாள் பரவாமல் ஆராகக் கடவாரே–29—–அப்பொழுதைக்கு அப்பொழுது புதிதாக உள்ள திருமாலின் திருவடிகளை –

கடமாக ஆளவந்தார் கழல் பணிந்த பெரிய நம்பி
உடன் வர அடிபரவும் எதிராசன் உரை தேறும்
மட நெஞ்சு மணவாள மா முனிவன் மறையோதும்
திட நெஞ்சர் அடியேனைத் திருத்தி அருள் செய்தாரே –30–

ஆரே சீர் அமுதனாரை அந்தாதித் தேவதை சீர்
கூரேசன் குருகேசன் குரு முதலியாண்டான் போல்
காரே சீர்ப் பெரும் திரளைக் கருதும் மணவாள முனி
சீரே சிந்தனை செய்வார் சேவடி சேர்ந்து அகலோமே –31–

தகவுடைய எதிராசன் தாளடையும் எம்பார் தாள்
மிகவடையும் மணவாள மா முனிவன் மிழற்றிய சொற்கு
அகமுடையும் அதிகாரி யாரேனும் ஒருவரே தான்
செகமடையப் பரமார்த்தம் சிந்திக்கத் திருவுடைத்தே –32——-அகமுடையும் -அகம் குழைந்து உருகுபவர்-

உடையவராம் எதிராசர் உயர் தகவால் எம்பார் தாள்
அடையும் பராசர பட்டர்க்கு அற்ற மணவாள முனி
தடையறவே தமிழ்  தகவு செய் நூற்றந்தாதித்
தொடையதனைப் புலவர்கள் தாம் துதித்து நலம் பருகுவரே –33—–திருவாய் மொழிக்கு அருளிய திருவாய் மொழி நூற்றந்தாதி ஆகிய மாலை-

பெரும்பூதூர் முனிவன் அடி பேணிய நஞ்சீயரையே
விரும்பும் மணவாள முனி விரி நூற்றந்தாதி தனிக்
கரும்பூறு சாறமுதயாக் கருதாமல் திரிவார்கள்
அரும் பாவிகள் கண்டீர் அவருறவை அகற்றுமினே –34—

அகத்தில் எதிராசன் தாள் அகலாத நம்பிள்ளை
வகுத்த மலரடி வணங்கு மணவாள மா முனிவன்
செகத்துக்கா உபதேசம் செய்த மணி மாலைதனை
அகத்துக்கொர் அணியாக அணிவார் என் முடிக்கு  அணியே  –35–

முடிக்குரிய எதிராசன் முழு நலனும் முகந்துருகும்
படி வடக்குத் திரு வீதிப் பிள்ளையைக் சேர் மணவாளன்
அடிக்கமலத்து அன்புறுவார் அவன் மொழியை ஆராய்ந்து
படிப்பல்லால் பற்பல் கால் பால் பொழுது போக்குவரே   –36-

உவரோடு தமர் ஏத்தும் உத்தமர் எம்பருனார்
அவரே தம் சரணாக அடையும் உலகாரியனை
இவரே நம் குல தெய்வம் எனத் துணிந்த மணவாளர்க்கு
எவரேனும் ஆளானார் எழு பிறப்பும் எமக்கு அரசே –37—

கரை சேர்க்கும் எதிராசன்  கண் திருவாய் மொழிப் பிள்ளை
உரை செய்த பழை வழியே ஓதும் மணவாள முனி
விரை ஏற்று மலரடியே விரும்புமவர் எம் குருக்கள்
நிரை சேர்ந்து நிச்சலுமே நினைந்து என்றும் இகழாரே –38–

கழலாத முக்கோலான் கருணை நிதி எதிராசன்
கழல் அடித் திருக் குருகைப் பிரான் பிள்ளான் வியாக்கியையின்
நிழலாதும் இகழாதே நிற்கும் மணவாள முனி
கழலாத தொல்வழியைச் சூரிகளுக்கு அருள்வானே –39–

அருளாழி எதிராசன் அடி தாழும் நஞ்சீயர்
மருளாமல் செய்த வியாக்கியையை வாய்ந்து அருளும்
பொருளாதும் சோராமல் புகழும் மணவாள முனி
தெருளாழித் தீக்கதியைத் தேய்ந்து அழியத் தீர்த்தானே –40–

தீர்த்தன் எதிராசன் அடி சேர் ஆச்சான் பிள்ளை முன்னாள்
சீர்த்த தமிழ் வியாக்கியையைச் செப்பும்  மணவாள முனி
வார்த்தைகளில் ஒரொன்றே வானேற்றி உய்த்திடுமால்
பார்த்தவனைச் சேவித்தார் பாக்கியத்தைப் பணித்தோமோ–41—–பெரியவாச்சான் பிள்ளை முன் அருளிச் செய்த —

தாம் முன் இரும்பூதூர்க்   கோன் தான் வணங்கும் பரமபதம்
தீ முனிந்து சொரி வடக்குத் திருவீதிப் பிள்ளை சொல்லால்
தூ மனத்தனனாயத் தமிழ் மறையைத் தொகுத்துரைத்த  மணவாள
மா முனிவன் மலரடியை மருவாதார் வாலாரே –42–இவ்வுலக வாழ்க்கை தீயை வெறுத்து -சொரி -வழங்கும் -அருளிச் செய்த திரு வாக்குகளால் —

தாம் முன் இரும்பூதூர்க்   கோன் தான் வணங்கும் பரமபதம்
தீ முனிந்து சொரி வடக்குத் திருவீதிப் பிள்ளை சொல்லால்
தூ மனத்தனனாயத் தமிழ் மறையைத் தொகுத்துரைத்த  மணவாள
மா முனிவன் மலரடியை மருவாதார் வாலாரே –42–இவ்வுலக வாழ்க்கை தீயை வெறுத்து -சொரி -வழங்கும் -அருளிச் செய்த திரு வாக்குகளால் —

ஆழ்வார்கள் அருமறையை ஆர்த்த எதிராசனையே
சூழ் வாதி கேசரி சொல் சூரிகளுக்கு அருள் செய்யும்
தால்வாதும் இல்லாத தகவன் மணவாள முனி
வாழ்வாக மன்னவர்க்கு மந்திரத்தை விரித்தானே –43–

விரி புகழ் எம்பெருமானார் விசயத்தால் அவர்க்காளாய்ப்
பெரிய புகழ் அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
உரிய மொழிகளை அருளால் உரைக்கு மணவாள முனி
தெரிவரிய திருப் புகழைத் தேருமவர் தேவர்களே –44—

ஏறு புகழ் உலகாரியன் இயல் தத்துவத் திரயத்தின்
ஆறு விரித்து எதிராசர்க்கு ஆட்செய் மணவாள முனி
கூறு கலை அதிகரிக்கும் கூர்மதியோர் அல்லாமல்
வேறு சிலர் வேதாந்த விழுப் பொருளைக் காணாரே –45–

காணாதர் கபிலர் குரு கபாலி குதர்க்க மதங்கள்
காணாத படி யழியக் கலை செய் உலகாரியன் சொல்
பூணாக எதிபதியைப் போற்று மணவாளன் தாள்
பேணாத சேதனரைப் பேய் என்பர் பெரியோரே –46–

என் பரம காருணிகன் எதிராசன் என்று இறைஞ்சி
அன்பருய உலகாரியன் அருள் வசன பூடணத்தை
முன்பருளி நமக்குரைத்த மூர்த்தி மணவாள முனி
பொன் பற்பாம் திருவடியைப் போற்றுமவர் புகல் எமக்கே –47–

மக்கள் இறை பிறவி குரு மாதா பிதா மாதர் தனம்
தக்க கதி சரண் எல்லாம் தமக்கு  எதிராசன் என்று
மிக்கடைந்த வைய குரு மெய்க் கலையை விவரிக்கும்
முக்கிய சீர் மணவாள முனி மொழியில் மூழ்கினமே –48–

இனமேதும் இல்லாமல் இலகும் இராமானுசனை
தினமேத்தி வைய குரு திருத் தம்பி செய் கலையை
மனமேத்தி விரித்து அருளும் மணவாள மா முனியைத்
தினமேவும் அடியார்க்குத் தரம் அறிந்து மேவுமினே –49—அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச் செயல்களை மனத்தில் கொண்டு விரித்து உரைக்கும் —

மேவி எதிராசனையே மெய்ப் பொருளைச் சுருக்காகத்
தாவித்த விழாஞ்சோலைப் பிள்ளை தரத் தனி மொழியைப்
பாவித்த மணவாள மா முனிவன் பதங்களையே
சேவித்த திருவாளர் செகத்துக்கொர் செழும் பூணே  –50—-சப்தகாதை அருளிச் செயலின் கருத்துகளை விளக்கி —

பூணூலும் முக்கோலும் புனை சிகையும் துவருடையும்
சேணூர்த்துவ புண்டரமும் சேர்ந்த எதிசெகரன் முன்
நாள் நூற்றதி னிருபதாண்டு நான்மறையை நோக்கிப் பின்
காணூ லறி வரவரனாய்க் காத்தளித்தான் தமிழ்களையே–51–

களைகள் எழாக் கருணையினால் காத்தருளும் எதிபதியே
களைகண் எமக்கெனக் கருதிக் களித்த மணவாள முனி
விலை கழனி அருள் பயிர்க்கு விரும்புமவர்க்கு அரும் பிறப்பால்
தளை கழல அருள் அல்லால் தளர்ந்தவர்க்கு  ஆர் தாவளமே –52-

வளமிக்க எதிராசன் வண்மையினால் உய்ந்தமையால்
உளமகிழும்  மணவாள யோகி உபதேசத்தால்
இளமதி போல் மதிகிளைக்கும்  இலகு அட்ட திக்கயங்கள்
உளர்  அவன் தன் திருவடியை உலகர் அடைந்து உய்வதற்கே –53–

தர்க்கத்தால் வேண்டிற்றைத் தாபிக்கச் செருக்கிருக்க
முற்குருக்கள் உபதேசம் முக்கியம் எனத் தெளிந்து
கற்கு மணவாள முனி காண்மின் எதிராசனவன்
நிற்க மற்றோர் கற்பித்த நிலை நமக்கு வேண்டாமே –54-

வேண்டாமல் வெறும் புலவர் வீழ பொருளை மேலையர் சொல்
தாண்டாத எதிராசன் தாள் வணங்கும் வரயோகி
சேண் தாமரைத் தாள்கள் சென்னிக்கோர் மணி  முடியாய்
பூண்டார்க்குப் பூ முடியும் பொன் முடியும் பரமாமோ –55–

மாமேகம் என வண்மை இளை யாழ்வாரைத் துதித்தே
தாம் ஏக சிந்தையனாய்த் தரித்த வர வர முனியை
நாமேது நண்ணுவது என்று அகலாதே நற்படியே
யாமேவி வணங்குதும் வா நற்றினத்தால் நன்னெஞ்சே –56–

நன்னகராம் பூதூர்க் கோன் நலமுரைக்கும் மணவாளன்
பொன்னடியாம் செங்கமலப் போதுகளைக் கனவிலும் நாம்
சென்னியினில் சூட்ட வரும் சேமம் எல்லாம் ஆகிலும் நாம்
மன்னியிட வரை சுமந்து மறுமையிலும் மாயோமே –57–ஆகிலும் நாம் மலை மலையாக பாவங்களைச் சுமந்து
இம்மையில் மட்டும் அல்லாமல் மறுமையிலும் வாழ்ச்சி அடையாமல் போகிறோமே —

மெய்யன் எதிராசனையே மேவு மணவாள மணி
செய்ய திருவடிப்  போதைச் சென்னியினால் தரித்தனின்
மொய்ய செழும் துகளாடி மோந்து இதயத்து அழுத்தி  இட்டால்
உய்ய வகை தேடி நமக்கு உளம் துளங்க வேண்டாவே –58—

துளங்காமல் எதிபதியை துதிக்கும் மணவாள முனி
உளங்காலும் செங்கமல உள்ளிதழ் போல் திரு விரலும்
விளங்கவை மேல் வெண் முளை போல் இலகுகிரும் புறம் தளிர் போல்
வளங்காட்டும் புறங்காலும் வந்தடியேன் மனத்துளவே –59-

துளவமுடன் மணி வடமும் தோன்று திருப் பவித்ரமும்
வளபுரி நூலுடன் தரித்து வாழ் எதிராசனை வணங்கு
களபம் எனத் திகழும் வரயோகி திருக் கணைக் காலின்
வளமதணி  புறவடி போல் வாழ்ந்திடும் என் மழை மதியே –60—களபம் என -யானை போன்ற –வாழ்ந்திடும் என் மழை மதியே–என்னுடைய  ஞானமும் வாழ்ந்திடும்-

மழுங்காத எதிராசன் வாய் மடுத்த சேடமல்லால்
விழுங்காத மணவாள மா முனியின் விழுப்பமுடை
முழங்காலைச் சிந்தித்து முப்பொழுதும் வினைப் பிறவிக்கு
இழுங்காது மில்லாமல் எழக் கிள்ளிப் பொகட்டேனே–61—–இடம் ஏதும் இல்லாமல் கிள்ளி எறிந்து விட்டேன் –

கட்டேது எமக்கு இனி மேல் காமுறு சீர் எதிராசன்
மட்டேதுமில் சீரின் மன்னு வர யோகி   துவர்பா
பட்டே சூழ் திருத் துடையைப் பலகாலும் நினைந்தல்லால்
விட்டேசும் பிறர் சிரிப்பா வாய் வெருவப் பெற்றனனே –62—–நினைப்பது அல்லாமல் பிறர் என்னைச் சிரித்து ஏசி வாய் வெருவப் பெறுவேனோ-

பெற்றிமையோன்  எதிபதியைப் பேணும் மணவாள முனிக்கு
அற்று இமையாது   இருந்து அடியேன் அவன் உதர பந்தனத்தைப்
பற்றியல் மிக நோக்கம் பற்றி தலைக் கொண்ட பின்னால்
மற்றிமையோர் ஆட்சி தனில் மனம் மன்னி –63–

மாந்தர் இராமானுசர்க்கே மனமுருகி மற்று அறியா
காந்த மணவாள முனி கமல மணித் துளவ வடம்
சேர்ந்த திருப் பவித்ரமும் செபமயமே புரி நூலும்
செர்ந்தகன்ற திரு மார்பும் எங்கனம் நான் மறப்பதுவே –64-

மறமறியா எதிபதியை மறவாத வரயோகி
அறமுறையும் முக்கோலும் அஞ்சலியும் திகழ் திருக்கைத்
திறமறிந்து தினம் தினமும் சிந்தித்துத் தேறின பின்
அறமறுகும் இப்புவியில் அடிக்கொதிப்பை அடைந்தோமே–65–

அடையாளமாய் அமுதம் அக்கிணற்றில் சுமந்து ஆழும்
படையானை எதிபதியை உள்ளு மணவாள முனி
கிடையாத வலம்புரி போல் கிளர் ஒளி சேர் திருக் கழுத்தை
நடையாக நினைந்துருகி நல்லவர்க்காட் பட்டோமே –66–

ஆட்பட்ட இலக்குமண்ர்க்கு அற்ற மணவாள முனி
தோட்படை எழுச்சிகளும் தூய மணக்கும் திரு வாயும்
சேடபட்ட திரு மூக்கும் திருக் காதும் நினைந்து அடியேன்
கோட்பட்ட சிந்தையனாய்க் கொடும் தசையைத் தூர்த்தேனே –67—இலக்குமணன் திருவவதாரம் –துவயம் கமழும் திரு வாயும் —

தூராத காதலுடன் துவருடைய எதிராசன்
சீராதும் சோராமே சிந்திக்கும் வரயோகி
ஆராதரத் தடம் கண்ண அழகுக்கே தோற்று அவன் தன்
ஆராதனைக்கு இசைந்து அடியேன் எண்ணி மேல் பரந்து இருக்கே –68—இனி வேறு என்ன வேண்டும் —

இனியத்தில் இளையாழ்வார் திருப் புகழாம்
கனியதினில் சுவடு அறிந்து கவர்ந்து உய்ந்த மணவாள
முனியதிபன் திருப் புருவ முழுக் கருப்புச் சிலை நினைந்து
தனியதொரு பேரின்பம் தளைத்து அடியேன் தலைத்தேனே –69-

தழைத்த பெரும் பூதூர் தனி நாதன் திருவருளால்
பிழைத்த மணவாள முனி பிறை ஒளியைத் திரு நுதலும்
குழைத்து அணிந்த திருமணும் என் கூர் மதியில் தரித்த பின்னர்
அழைத்து அடியேன் தனையவனே யடிமை திருத் திண்ணனவே –70-

திண்ணனவே எதிராசன் சேவடி சேர் ஆயியிடம்
நண்ணி நமன்று ஆசாரிய விதயவுரை தான்  கேட்கும்
அண்ணல் மணவாள முனிக்கு அனுதினமும் அன்புடனே
வண்ண மலர் சாத்துமவர் வானவராய்த் திகழ்வாரே –71—

வார் புனல் சூழ் பூதூர் மன் வளமுரைக்கும் உலககுரு
சீர் வசன பூடனத்தின் செழும் பொருளைச் செகமறிய
நீர்மையுடன் வியாக்கியையை நிருமித்த வரயோகி
கார்முகிலைத் தினம் தோறும் கழல் பணிவார்க்கு ஈடிலையே –72–

இலை எதிராசற்கு நிகர் இவ்வுலகில் குரவர் என்று
நிலை நிறுத்தும் அருளாளப் பெருமாள் எம்பருமானார்
கலையறிந்து கருத்துரைக்கும் கருணை மணவாள முனி
மலரடிக்கு ஆள் அல்லாதார் வையகத்து வழங்காரே –73—-

காரேயும் கருணை இராமானுசனைக் காசினியில்
நேரே கண்டு அடி பணிய நியமித்த சடகோபன்
சீரேயும் தமிழ் மறைக்குச் சிறந்த குரு இவர் என்று
பேரேயும் மணவாள முனி கழலைப் பிரியோமே –74–திருவாய் மொழி ஈட்டு விளக்கம் அருள இவரே சிறந்தவர் என்று பெயர் பெற்ற —

மேதினியில் சித்திரையில் ஆதிரை நாள் விளங்க வென்று
பூதூரில் வந்துதித்த புனிதன் எதிராசன் தன்
பாத மலர்க்கு ஆளான பாகவதர் திலதம் எனப்
போதமுளோர் புகலும் மணவாள முனி புவிக்கு அரசே –75–போதமுளோர் –சிறந்த ஞானம் உள்ளவர்கள்-

அரசாகும் எதிரிகளுக்கு என்று அகில வுலகும் பணியும்
பரமன் இராமானுசர்க்குப் பாங்கான பத்தன் என்னும்
வர வர மா முனிவன் இந்த வையகத்தில் வந்திலனேல்
உரை  பெறு நற்றமிழ் வேதம் உலகறிவார் எவருண்டே –76-

உண்டோ ஒ எதிராசற்கு ஒருவர் நிகர் என்றுரைக்கும்
வண்டாரும் தொடை மௌலி மணவாள மா முனிவன்
விண்டலர்ந்த மலர்பபதத்தை விரும்பி யனுதினம் வணங்கும்
தொண்டர் தமக்கொரு காலும் துயருதிக்க கில்லாவே –77–

வேதாந்த விழுப் பொருளின் மேலிருக்கும் அரங்கேசர்
நாதன் நமக்கு என்று உரைக்கும் நற்குணனாம் எதிராசன்
மாதகவால் எவ்வுயிர்க்கும் வாழ்வு அளிக்கும் வரயோகி
பாதமடை பத்தர் பதம் பணிந்து ஏத்திப் பற்றுமினே –78–

மின்னு புகழ் எதிராசன் வீறுரைக்கும் வரயோகி
துன்னு புகழ் நாடோறும் துதிக்கும் அடியாரவர்கள்
பன்னு மொழியே சுருதி பார்வை செடிக்குத் தீயே
என்னுமது முன்னொருகால் இயம்புவர் எம் பெரியோரே –79–அடியவர்கள் கூறும் வார்த்தையே வேதம் -அவர்கள் கடாஷமே உலக வாழ்க்கை செடியை அழிக்கும் நெருப்பு —

பெரியோரும் சிறியோரும் பித்தரும் நற்பத்தருமே
பிரியாது வந்திறைஞ்சும் பிறங்கு புகழ் எதிராசன்
மருவாரும் மலரடிக் கீழ் வணங்கும் எழில் வர யோகி
அருளே நம் அனைவர்க்கும் அதிசயத்தைத் தரவற்றே –80-

வற்றாத புனல் பூதூர் மன்னடியைச் சேர்ந்து நங்கள்
வற்றாத பவக்கடலை வற்ற நினைவுற்ற பரன்
செற்றாரைச் செற்ற வர யோகி திருத் தாளிணையாம்
பொற்றாமரைப் போதைப் பூணாகத் தரிப்போமே –81—

தரிப்போமே தாரணியில் சகலகலை கற்றுணர்ந்து
கரிப்போமே சமுசாரக் கடலை மிகவும் கலைகள்
விரிப்போமே எதிபதி தாள் மேவு வரவர முனியருள் கொண்டு
இருப்போமே ஏற்றரும் சீர் இமையவர்கள் இனம் சென்றே –82-

சென்று கலியிருள் தன்னைச் செழு மறையின் ஒளியதனால்
கன்றும் எதிராசன் எழில் கண்ணனடி காட்டிலனேல்
இன்று உயிர்கள் அறிந்துய்ய எளிதோதான் என்று உரைக்கும்
துன்று புகழ் வர முனிவன் தூய தமிழ் மறைக்கு அரசே –83-

சேமம் குருகையர் கோன் திருவடி என்று என்று பணிந்து
தாமம் அடியார்க்கு அருளும் தகவன் எதிராசன் அடித்
தாமம் முடிக்கு அணியும் மணவாள முனி பூம் திருத் தாள்
பூ மது வுண் வண்டினமாம் பூசுரர்கள் என் துணையே –84-

துணர் பொழில் சூழ் அரங்கேசன் தொல் சீரின் மன்னும் எதி
கணமதுக்குத் தலைவன் இராமானுச நற் கழல் கமல
மணமிக வண் மணவாள மா முனிவன் கலை பொருள்கள்
குணமுடனே அடியவர்க்குக் கூறுகின்றது அதிசயமே –85– மா முனிகள் ஸ்ரீ ஸூ க்திகள் அடியவர்க்கு மேன்மையை அளிக்கும் –

சயமேவும் எதிராசன் அடிக்கடியன் நான் என்று
துயமுடனே சகல மறைத் துய்ய பொருள் உரைத்து எமக்குப்
பயன் அளிக்கும் வர யோகி பாருலகில் வந்திலனேல்
நயம் அறிவார் இல்லை என்று நா வலர்கள் ஒதுவரே –86–த்வய மந்த்ரத்துடன் அனைத்து மறைகளுக்கும் தூய பொருள் உரைத்து அருளும் —

ஒது மறையோர்க்கு இனிதாய் உரைத்தருளும் ஒள்ளிய  நூல்
தீதில் சிரீ பாச்சியத் தோன் சீர் மன்னு வரயோகி
மேதினியில் உதித்த பின்னர் விளங்கிய செந்தமிழ் மறைகள்
பேதமறக் கற்றுணர்ந்து பெருமை பெறுமின்கள் இன்றே –87–

இன்தமிழின் பொருள் எல்லாம் இவ்வுலகில் அறிந்துரைக்கும்
துன்று புகழ் ஆரியர்கள் துதிக்கும் எதிராசர் புகழ்
நின்றுரை செய் வரயோகி நீணிலத்தில் ஒரு மரத்தை
சென்றடையப் பரமபதம் செய்தருளும் நீர்மை என்னே –88—ஒரு மரத்தையும் பரமபதம் சென்று அடையும் படியாகச் செய்த கருணை தான் என்னே —

என் போலும் பிழை செய்வார் இவ்வுலகில் இல்லை என்றும்
உன் போலும் பொறுத்து அருள்வார் ஒருவர் இலையே என்றும்
அன்போடன்று எதிராசர்க்கு அதிசயம் சொல் வர முனிவன்
பொன் போலும் அடி முதலாப் போற்றுமின் நீர் முடியளவே –89–ஆர்த்திப் பிரபந்தத்தில் அன்போடு அருளிச் செய்த —

முடி யழகும் விழி யழகும் முகத் தழகும்திரு மேனிப்
படி யழகும் தூய முறுவல் பவள நீர் வாயழகும்
கடி யழகும் கரத் தழகும் கண்டு மகிழ்ந்து எதிராசர்
அடி பரவும் வர முனிவன் அடி யழகும் விடவற்றே –90-

வற்றாத பவக்கடலை வற்றுவித்து அந்தாமத்தில்
நற்றாதை பதமளிக்கு நம்மெதிராசன் பதத்தை
பற்றாகப் பற்று மணவாள முனி இவ்வுலகின்
முற்றாது எம் தீ வினையை முடித்த வகை அறியோமே –91–

மேவாத சமயிகளும் மேவியடி பணிகின்ற
மூவாத கதிகள் தரு மொய்ம்பு எதிராசற்கினிய
பாவாரும் தமிழ் மறைக்குப் பாங்கான குரு வென்று
தேவாதி தேவனுமே செப்பு மணவாளனையே –92–

மணவாள மா முனிவன் வண்மை திகழ் எதிராசன்
குணமேவு நற்பரமன் கூர் மதியோர் குருக்கள் எல்லாம்
துணையாகத் தொழுது தினம் துதிக்கும் அரவரசாகும்
இனியாரும் இல்லா திங்கு எழில் அரங்கம் இலங்குவனே –93—-இவரே அரவரசான ஆதிசேடன் ஆவார் —-

இலங்கு திகிரியின் ஒளியால் எழில் அத்தி கிரிமாலும்
கலங்கி எதி பதி யளித்த காரணமும் மா முனிவன்
துலங்கிய நற்குணங்களையும் தொல்லுலகோர்க்கு அளித்து அருளும்
வளம் கொள் மணவாள முனி மன்னிய சீர் வாழ்த்துமினே –94–

வாழ்த்துமின்கள் நாடோறும் மாறனடி பணி முனி தாள்
தாழ்த்து முடி மணவாள மா முனிவன் தன்னருளால்
சூழ்த்த வினைத் தூற்றை முற்றுரத்திப் பின் நல் வனந்தழைக்கும்
மூழ்த்த பெரு நீருலகீர் முத்தி தரும் முறை முறையே –95—-

முறை யுணரத் தமிழ் மறையை மூதுலகோர்க்கு அளித்து அருளும்
நறை வகுள மாறனடி நண்ணும் எதிராசர் புகழ்
திறலுறு நற் சிந்தை மணவாள முனி செய் கலையும்
நிறை புகழும் நெஞ்சில் வைத்து நீடுலகில் நில்லுமினே –96—

நிற்கின்ற திரு மலையும் நீள் விசும்பும் பாற் கடலும்
ஒக்க வளர் எதிராசர் ஓங்கு புகழ் இவ்வுலகில்
மிக்க வருள் மணவாளன் மேய்க்கலையில் மன மகிழும்
தக்க மறையோர் எனக்குத் தாரணியில் வான் துணையே –97–

துணையாளன் வயலரங்கன் தொல் சீரை ஏத்துமவர்க்கு
இணையில்லை என்றுரைக்கும் எதிராசன் எங்கதி என்றுணர்
மணவாள முனியோது கலைகளை உள் நினைந்தார்கள்
இணை மலர்த்தாள் இறைஞ்சுமவர் எழில் விசும்புக்கு இறையவரே –98–

இறையும் அறிவில்லாத ஈனரையும் தன்னருளால்
நிறை மதியார் ஆக்கியருள் நின்மலனாம் எதிராசன்
நறை மலர் தாள் முடிக்கணியாய் நற்றரிக்கும் மணவாளன்
விறல் மருவு தொன்னூலின் வியாக்கியைகள் விரும்பீரே –99–

விருப்பமுடன் திருமாலை மேவியுள்ளே நைந்துருகி
இருக்கு மகிழ் மாறனடி ஏத்தி யருள் மாரியடிக்கு
உருக்கமுரும் எதிராசர் குண மகிழும் தமிழ் மறையைப்
பெருக்கமுற ஒது மணவாளனடி பேணு நெஞ்சே –100—அருள் மாறி –திரு மங்கை ஆழ்வார் —

நெஞ்சே திருமாலை நித்தியமும் அடிபணியும்
மஞ்சேறு  குருகை மகிழ் மாறனடி பணிந்து உய்ந்து இங்கு
அஞ்சேல் என்று எமக்கு அருளும் எதிராசன் அடி மருவு
நஞ்சேமே வர முனிவன் நண்னுதி நீ நற் குணமே –101—-நஞ்சேமம்  -நமக்கு காப்பாக —

—————————————————————————————————————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸ்ரீ சேனாபதி முனிவர் திருவடிகளே சரணம் –திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்