உபாய வைபவம் –
சூரணை -14
அறியாத அர்த்தங்களை அடைய அறிவித்து –
ஆச்சார்ய க்ருத்யர்த்தையும்
புருஷகார க்ருத்யர்த்தையும்
உபாய க்ருத்யர்த்தையும்
தானே ஏறிட்டு கொள்ளுகையாலே
மகா பாரதத்தில் -உபாய வைபவம் சொல்லிற்று ஆய்த்து –
க்ருபாதிகளை வெளி இட்டமை சொன்ன போதே -ஸ்ரீ ராமாயணத்தில் புருஷகார
வைபவம் முக்தமான படியை உபபாதித்தாராய் -மகா பாரதத்தில் உபாய வைபவம்
முக்தமானமையை உபபாதிக்கிறார் –
அஞாதஞாபனம் ஆச்சார்ய கிருத்யம் இறே -சரண்ய கிருத்யம் அன்றே –
ஆகை இறே என்னைப் பெற்ற அத் தாயாய் தந்தையாய் -திரு வாய் மொழி -2 -3 -2 -என்று
பிரிய கரத்வ ஹித கரத்வங்கள் ஆகிற -மாதா பித்ரு க்ருத்யங்களை ஸ்வ யமேவ தமக்கு
செய்த உபகாரத்தை அருளி செய்த அநந்தரம்-ஆச்சார்யன் செய்யும் விசேஷ உபகாரத்தையும்
தானே தமக்கு செய்தமையை அருளி செய்கிற ஆழ்வார் -அறியாதன அறிவித்த -என்று அருளி செய்தது –
இவ்விடத்தில் இவர் அருளி செய்கிற வாக்கியம் தான் அந்த திவ்ய சூக்திக்கு சூசகமாய் இறே இருக்கிறது -அறியாத அர்த்தங்களை அடைய அறிவிக்கை யாவது –
தத்வ விவேகம் தொடங்கி -பிரபத்தி பர்யந்தமாக -அர்ஜுனனுக்கு முன்பு அஞ்ஞாதமாய் இருந்த
அர்த்தங்களை எல்லாம் அறிவிக்கை –
தேக ஆத்மா அபிமானியாய் –
தேக அநு பந்திகளான பந்துக்கள் பக்கலிலே அஸ்தானே சிநேகத்தை பண்ணி நிற்கிற இவனை –
பிரகிருதி ஆத்ம விவேகாதிகளாலே தெளிவிக்க வேண்டுகையாலே –
நத்வ வாஹம் ஜாது நாசம் நத்வம் நேம ஜனாதிபா
நசைவ நபவிஷ்யாமஸ் சர்வே வயமித பரம்
தேஹி நோச்மின் யதா தேஹே கௌ மாரம் யௌ வனம் ஜரா ததா
தேகாந்தர ப்ராப்திர் தீரஸ் தத்ர ந முஹ்யதி-இத்யாதிகளாலே
பிரகிருதி ஆத்ம விவேகம்
ஆத்ம பரமாத்ம விவேகம் ஆகிய தத்வ விவேகத்தையும் –
அந்தவந்த இமே தேஹா நித்யச்யோக்தா ச்சரீரின
அனாசினோ பிரேமயச்ய தஸ்மாத் யுத்யஸ்வ பாரத
ந ஜாயதே ம்ரியதேவா கதாசின் நாயம் பூத்வா பவிதாவா நபூய
அஜோ நித்யஸ் சாஸ்வதோயம் புராணோ நஹன்யதே
ஹன்யமானே சரீரே வாஸாம்சி ஜீர்னாணி யதா விஹாய
நவானி க்ருஹ்னாதி நரோ பராணி ததா சரீராணி
விஹாய ஜீர்னான் யன் யானி சம்யாதி நவானி தேஹீ -இத்யாதிகளாலே
ஆத்ம நித்யத்வ
தேஹாத்ய அனித்யங்களையும்
பிரதமம் உபதேசித்து -இவனுடைய ச்வாதந்திர பிரமத்தை தவிர்க்கைக்காக –
பூமிரபோ நலோ வாயு கம் மனோ புத்தி ரேவச அஹங்கார இதீயம்
மே பின்னா பிரகிருதி ரஷ்டதா அபேரே யமிதஸ் த்வன்யாம்
ப்ரக்ருதிம் வித்தி மே பராம் ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத் -என்கிறபடியே –
சேதன அசேதன சரீரியாய் –
சர்வச்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்தஸ் ச்ம்ருதிர் ஞான மபோஹநஞ்ச -என்றும்
ஈஸ்வர சர்வ பூதானாம் ஹ்ருத் தேசெர்ஜூன திஷ்டதி ப்ராமயன்
சர்வ பூதானி யந்த்ரா ரூடானி மாயயா -என்றும் சொல்லுகிறபடி
சர்வ ஜன ஹ்ருதயச்தனாய் நின்று –
சகல பிரவ்ருத்திநிவ்ருத்திகளையும் பண்ணுவிக்கை யாகிற தன்னுடைய
நியந்த்ருவத்தையும் –
அப்படிசர்வ நியந்தாவாய்கொண்டு சர்வச்மாத்பரனாய் இருக்கும் அளவன்றிக்கே –
பரித்ரானாயா சாதூனாம் வினாசாயச துஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே -என்று அவதாரப்ரயுக்தமான
தன்னுடைய சௌலப்யத்தையும் –
சமோஹம் சர்வ பூதேஷு ந மே த்வேஷ்யோச்தி ந ப்ரிய-என்று
தன்னுடைய ஆஸ்ரயனித்வ சாம்யத்வையும் –
ப்ரக்ருதே க்ரியமானாதி குணை கர்மாணி சர்வச
அஹங்கார விமுடாத்மா கர்த்தா ஹமிதீ மந்யதே -என்று
அஹங்கார தோஷத்தையும் –
யாததோ ஹ்யபி கௌ ந்தேய புருஷஸ்ய விபச்சித
இந்திரியாணி பரமாதீனி ஹரந்தி பிரசபம் மன -என்று
இந்திரிய பிராபல்யத்தையும் –
அசம்சயம் மகாபாஹோ மனோ துர் நிக்ரகஞ் சலம் -என்றுஅந்த ப்ராபல்யத்தில் மற்றை இந்திரியங்களை பற்றவும் மனசினுடைய
ப்ராதான்யத்தையும் தர்சிப்பிக்கையாலே -ஆச்ராயண விரோதிகளையும் –
தானி சர்வாணி சம்யய யுக்த ஆஸீத் மத் பர -வசேஹி யச்யேந்திரியாணி
தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா -என்றும் –
யதோ யதோ நிச்சலதி மனஸ் சஞ்சலம் அஸ்திரம் ததஸ் ததோ
நியம்யை ததாத் மன்யமேவ வசம் நேத் -என்று
ஆச்ராயண உப கரணங்களான பாஹ்யாப்யாந்தர கரணங்களை
சுவாதீனமாக நியமிக்கும் பிரகாரத்தையும் –
சதுர்விதா பஜந்தே மான் ஜனாஸ் சூக்ருதிநோர்ஜூன
ஆர்த்தோ ஜிஞ்ஞா சூரரத்தார்த்தீ ஜ்ஞானிச பரதர்ஷப -என்று
ஆஸ்ரயிக்கும் அதிகாரிகளுடைய சாதுர் வித்யத்தையும்
த்வவ் பூத சர்கவ் லோகேச்மின் தைவ ஆசூர ஏவச
தைவீ சம்பத் விமோஷாய நிபந்த்தாயா சூரி மாதா -என்று தன்னுடைய
ஆஞ்ஞா அநு வர்த்தன பரரானவர்கள் தேவர்கள்
தத் அதிவர்த்தன பரரானவர்கள் அசுரர்கள் என்று
தேவ அசுர விபாகத்தையும் –
ஹந்த தே கதயிஷ்யாமிவிபூதி ராத்மனஸ் சுபா ப்ராதான்யாத குரு ஸ்ரேஷ்ட நாச்த்யந்தோ விச்தரச்ய மே-என்று தொடங்கி-
இவ் விபூதியில் சமஸ்த பதார்த்தங்களுக்கும் வாசகமான சப்தங்கள் தன அளவிலே பர்யவசிக்கும் படி
இவற்றை அடைய ஸ்வ பிரகாரமாக கொண்டு வியாபித்து நிற்கும் படியையும் –
திவ்யம் ததாமி தே சஷூ பஸ்ய மே யோகமைச்வர்யம் -என்று திவ்ய சஷுசை கொடுத்து
பச்யாமி தேவான் தவ தேவ தே ஹே சர்வாந்ததா பூத விசேஷ சங்காத்
பிரம்மாண மீசம் கமலா சனச்ச்தம் ருஷீம்ச்ச சர்வான் உரகாம்ச்ச தீப்தான் -இத்யாதியாலே –
தன்னுடைய விஸ்வரூபத்தை கண்டு பேசும்படி பண்ணுகையாலே –
தான் உகந்தாருக்கு திவ்ய ஞானத்தை கொடுத்து தன படிகளை தர்சிப்பிக்கும் என்னும் அத்தையும் –
மன்மனா பவ மத் பக்தோ மத்யாஜீ மாம் நமஸ் குரு மாமேவைஷ்யசி யுக்த்வைவம் ஆத்மானம் மத் பராயணா –
என்று இப்படி இருந்துள்ள பரதவ சௌலப்ய யுக்தனான தன திரு அடிகளை பிராபிக்கை ஆகிற
பரம புருஷார்த்ததுக்கு உபாயமாய் இருந்துள்ள கர்ம ஞான ரூப அங்க சஹிதையான பக்தியையும் -மாமேவ யே பிரத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே தமேவசாத்யம் புருஷம் பிரபத்யேத்
தமேவ சரணம் கச்ச சர்வ பாவேன பாரத -என்று அந்த பக்தி அங்கமான பிரதி பத்தியையும் –
சரம ச்லோகத்தாலே -அந்த பக்தி உபாயத்தின் துஷ்கரத்வாதிகளை உணர்ந்து சோகிப்பாருக்கு
சூகரமுமாய் -ஸ்வரூப அநு ரூபமான உபாயம் பிரபத்தி என்னும் அத்தையும்
தானே அறிவித்து அருளினான் இறே-
ஆக இப்படி அறியாதன அர்த்தங்களை எல்லாம் அறிவிக்கையாலே
ஆச்சார்யா க்ருத்யத்தை தான் ஏறிட்டு கொண்டான் என்கிறது -இனி புருஷகார க்ருத்யமும் -சரண்யனான தன்னதன்றே -பிராட்டி க்ருத்யம் இறே –
மத் ப்ராப்திம் ப்ரதி ஜந்தூனாம் சம்சாரே பததாமத லஷ்மீ
புருஷகாரத்வ நிர்திஷ்டா பரமர்ஷிபி மமாபி ச மதம் ஹ்யேதத் நான்யதா லஷணம் பவேத் -இத்யாதிகளாலே –
பகவத் சாஸ்த்ரத்திலே தானே அருளி செய்தான் இறே –
இவனுக்கு தத்வ ஜ்ஞானாதிகளை உண்டாக்கி கொள்ள வேண்டுகையாலே
ஆச்சார்ய க்ருதயத்தை ஏறிட்டு கொண்டான் ஆகிறான் –
புருஷகார க்ருத்யம் ஏறிட்டு கொள்ள வேண்டுவான் என்-
அங்கீகரித்து விட அமையாதோ என்னில் -அங்கீகாரத்துக்கு இதுவும் அவஸ்ய அபேஷிதம் ஆகையாலே –
எங்கனே என்னில் -இவ் உபாயத்துக்கு புருஷ சாபேஷை யோபாதி புருஷகார சாபேஷைதையும் உண்டு இறே இவ் உபய சாபேஷைதையும் -உபாய வர்ண ரூபமான பூர்வ வாக்யத்தில்
பிரதம சரம பதங்களிலே காணலாம் -ஸ்ரீ -சப்தத்தாலே புருஷகாரத்தையும் உத்தமனாலே
அதிகாரியையும் இறே சொல்லுகிறது –
ஆகையால் சேதனர் தன்னை உபாயமாக பற்றும் இடத்தில் -ஸ்வ அபராத பயத்தாலே
பிராட்டியை புருஷகாரமாக முன்னிட -அவள் இவன் அபராத நிபந்தனமான தன திரு உள்ளத்தின்
கலக்கைத்தையும் தானே தணித்து கொண்டு இவனை சேர்த்து கொள்ளுகையாலும் –
அதுதான் செய்கிற அளவில் -அர்த்தித்வ நிரபேஷமாக செய்கையாலும் –
புருஷகார க்ருத்யத்தையும் தானே ஏறிட்டு கொண்டான் -என்கிறது -இனி உபாய க்ருத்யம் தன்னதாய் இருக்க -அத்தையும் தானே ஏறிட்டு கொண்டான் என்கிறது –
த்வமேவ உபாய பூதா மே பவ -என்று இவர் அர்த்தித்தால் -கார்யம் செய்ய அமைந்து இருக்க –
நாமே இவனுக்கு உபாயமாய் அநிஷ்ட நிவ்ருத்தி யாதிகளை பண்ணக் கடவோம் என்று தானே என்று கொண்டு –
மாம் ஏகம் சரணம் வ்ரஜ-சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்கையாலே –
அல்லது -உபாய உபேயத்வே ததிஹா தவ தத்தவம் ந்து கு னவ்-என்கிற வஸ்துவுக்கு
உபாய க்ருத்யத்வம் வந்தேறி அன்று இறே –
உபய லிங்க விசிஷ்டத்வத்தாலே உபாய உபேயத்வங்கள் இரண்டும் ச்வதஸ் சித்தமாய் இறே இருப்பது –
அன்றிக்கே உபேயமான தன்னை உபாயம் ஆக்குகையாலே உபாய க்ருத்யத்தை ஏறிட்டு கொண்டான்
என்கிறது என்பாரும் உண்டு -அது பால் மருந்தாம் போலே இவனும் உபாயமாம் இடம் இங்கும் உள்ளது ஒன்றாகையாலே
அர்ஜுனனுக்கு இப்போது அசாதாராணமாக செய்தது ஓன்று அல்லாமையாலும் –
உபாயம் -என்றே வஸ்துவை நிர்தேசித்து தத் வைபவம் சொல்லுகிற பிரகரணம் ஆகையாலும்
இவ் இடத்துக்கு உசிதம் அன்று -ஆன பின்பு கீழ் சொன்ன படியே பொருளாக வேணும் –
ஆச்சார்ய க்ருத்யம் ஏறிட்டு கொள்ளுகிற அளவில் -கார்பண்ய தோஷோபகத ஸ்வபாவ
ப்ருச்சாமி த்வா தர்ம சம்மூட சேதா-யச்ஸ்ரேயஸ் சியான் நிச்சிதம் ப்ரூஹி தந்மே சிஷ்யஸ்
தேஹம் சாதி மாம் த்வாம் பிரபன்னம் என்று இவன் அர்த்தித்வம் உண்டாகையாலே
அந்ய க்ருத்யத்தை தான் ஏறிட்டு கொண்ட மாத்ரமே விவஷிதம் ஆகையாலும் –
புருஷகார க்ருத்யம் ஏறிட்டு கொள்ளுகிற அளவில் அந்ய க்ருத்யத்தை ஏறிட்டு கொண்டமையும் –
அது தன்னை அர்த்தித்வ நிரபேஷமாக ஏறிட்டு கொண்டமையும் விலஷிதம் ஆகையாலும் –
ஸ்வ க்ருத்யம் ஏறிட்டு கொள்ளுகிற அளவில் அர்த்தித்வ நிரபேஷமாக செய்த அளவே
விவஷிதம் ஆகையாலும் –
தானே ஏறிட்டு கொள்ளுகையாலே -என்கிற இது -க்ருத்ய த்ரயத்திலும் யதாயோகம்
அந்வயிக்க கடவது –
ஆச்சார்ய அஞ்ஞாத ஞாபனம் பண்ண –
பிராட்டி புருஷீகரிக்க –
வந்த தன்னை உபாயமாக பற்றினவனுக்கு
அநிஷ்ட நிவ்ருத்தி யாதிகளை பண்ணி கொடுக்க அமைந்து இருக்க –
இவை எல்லா வற்றையும் தானே ஏறிட்டு கொண்டது வைபவம் இறே –
ஏறிட்டு கொள்ளுகையாலே மகா பாரதத்தில் உபாய வைபவம் சொல்லிற்று ஆய்த்து-என்றது
ஏறிட்டு கொண்டமையை பிரதிபாதிகையாலே சொல்லிற்று ஆய்த்து -என்றபடி –
————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்