Archive for the ‘Raamaanujar’ Category

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை –முதல் அத்யாயம் –மூன்றாம் பாதம் —

November 26, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

———-

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-மூன்றாம் பாதம் — 44 ஸூத்ரங்கள் –

கீழ் இரண்டு பாதங்களால்-
அஸ்பஷ்ட தரமாயும் அஸ்பஷ்டமாயும் உள்ள ஜீவாதி லிங்கங்கள் உடைய வாக்கியங்கள் நிரூபிக்கப்பட்டு
இதில்
ஸ்பஷ்டமான -பலவாறு தோன்றுதல் -நாடீ சம்பந்தம் -முதலிய லிங்கங்கள் உடைய வாக்கியங்கள் நிரூபிக்கப்படுகின்றன
முன் பாதத்தோடு சங்கதி

முன் அதிகரணத்தில் த்யு ப்ருத்வீ யாதி சம்பந்த புருஷன் பரமாத்மாவே என்று கூறப்பட்டது
இதில் பலவாறு தோன்றுதல் -நாடீ சம்பந்தம் -முதலிய லிங்கங்களால் ஆக்ஷேபித்து
ஜீவனாகத்தான் இருக்கக் கூடும் என்று
பூர்வபக்ஷம் செய்ய
அதுக்கு உத்தரம் இது என்று சங்கதி

மேலும் அத்ருஸ்யத் வதி கரணத்தில் முண்டக வாக்யங்களுக்கு த்ரை லோக்ய சரீர பரமாத்ம பரத்வம் ஸ்தாபிக்கப் பட்டது
அதை ஒட்டி வைஸ்வநர அதிகரணத்தில் சாந்தோக்யத்தில் உள்ள வைச்வானர வித்யா வாக்கியங்களும்
த்ரை லோக்ய சரீரத்வம் என்னும் லிங்கத்தால்
வைச்வானர ரூப ஜீவ பரத்வத்தை சங்கித்து பரமாத்ம பரத்வமே ஸ்தாபிக்கப் பட்டது –
இந்த அதிகரணத்தில் ப்ரசங்கத்தால் ப்ராப்தமான வேறு உபநிஷத் வாக்ய விசாரம் முடிந்த பின்
அத்ருஸ்யத் வதிகரண விஷயத்தை ஸ்தாபிக்க அதன் சேஷமாக முண்டகத்தில் உள்ள த்யுப் வாதி வாக்யமே
இங்கு சமாதானம் செய்யப்படுகிறது

முதல் பாதத்தை விட்டு மூன்றாம் பாதத்தில் அது ஏன் சொல்லப்படுகிறது -என்றால்
விலக்கத்தக்க ஜீவ லிங்கங்கள் இங்கு ஸ்பஷ்டமாய் இருப்பதால் அது பொருந்துவதாகும்
இதற்கு -ஸூத்ரம் -68– பிரகரணாத்–1-3-5—என்னும் ஸூத்ரத்தில் பலன் ஸ்பஷ்டமாய் உள்ளது –

1-3-1-த்யுத்வாத்யதிகரணம் -தேவலோகம் பூமி ஆகியவற்றின் இருப்பிடம் ப்ரஹ்மமே –

ஸூத்ரம் -64 –த்யுத்வாதி ஆயாதநம் ஸ்வ சப்தாத் –1-3-1-

பூமி தேவலோகம் பரம் பொருளுக்கே இருப்பிடம்
முண்டக –
யச்மிந்த்யௌ ப்ருத்வீ சாந்தரிஷ மோதம் மன சஹ பிராணைச்ச சர்வை தமேவைகம் ஜானதாத்மா நம் அந்யா வாசோ
விமுஞ்சத அம்ருதஸ் யைஷசேது–முண்டகம் 2-2-5–என்றும்

அரா இவ ரத நாபௌ சம்ஹதா யத்ர நாட்ய -ச ஏஷோ அந்தஸ் சர்தே பஹூதா ஜாயமான –முண்டகம்-2-2-6–என்றும்
மன சஹ பிராணை ஓதம் -என்றும்

நாராயண வல்லி உபநிஷத்தில்-1-3-2–
சந்ததம் சிராபிஸ்து லம்பத்யா கோச சந்நிபம் தச்யாந்தே ஸூஷிரம் சூஷ்மம் தஸ்மின் சர்வம் ப்ரதிஷ்டிதம் -என்று
ஜீவன்களின் நாடிகளுக்கும் பரம் பொருளே ஆதாரம் என்றும்

அதர்வணத்தில் முண்டக –யச்மிந்த்யௌ ப்ருத்வீ சாந்தரிஷ மோதம் -என்று தொட்ங்கும் வாக்கியத்தில்
தேவலோகம் பிருத்வீ இவற்றுக்கு ஆதாரமாக கூறப்படுபவன் ஜீவனா பரமாத்மாவா என்று சம்சயம்
ஜீவன் என்று பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
அரா இவ ரத நாபௌ சம்ஹதா யத்ர நாட்ய ச ஏஷோ அந்தஸ் சர்தே பஹூதா ஜாயமான –முண்டகம்-2-2-6-ஸ்லோகங்களில்
நாடீ சம்பந்தமும்
பஹுதா ஜாயமானத்வமும்
மனஸ் ப்ராண ஸம்பந்தமும்
ஜீவ லிங்கங்களாகக் காணப்படுவதால் ஜீவனே யாக்கலாம் என்று பூர்வ பக்ஷம்

இதுக்கு விடை
த்யுத்வாதி ஆயாதநம் ஸ்வ சப்தாத் –
த்யுத்வாதி ஆயாதநம் -இவற்றுக்கு ஆயதனமாகக் கூறப்படுபவன் பரமாத்மாவே -ஜீவன் அல்லன்
ஸ்வ சப்தாத்-அம்ருதஸ் யைஷசேது–முண்டகம் 2-2-5–என்ற படி தனக்கு அசாதாரணமான சப்தத்தால் கூறுகிற
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா அயனாய வித்யதே -ஸ்வேதாஸ்வர -3-8–இத்யாதிகளாலே
மோக்ஷ ஹேதுத்வம் பரமபுருஷனுக்கே தானே ப்ரஸித்தமாய் உள்ளது –

ஸ்ரீ கீதையில் –
அஜோ அபிசன் நவ்ய யாத்மா பூதா நாம் ஈஸ்வரோ அபிசன் ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய சம்பவாம் யாத்மமாயயா -என்றும் –
அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வ்யாப்யா நாராயண ஸ்தித -என்றும்

ஸ்வேஸ்வதார உபநிஷத்தில் –
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா அயனாய வித்யதே -ஸ்வேதாஸ்வர -3-8–என்றும்

முண்டக உபநிஷத்தில் –
யஸ் சர்வஜ்ஞ சர்வவித்–முண்டகம்-1-2-9–என்று அனைத்தும் பரம் பொருளையே ஆதாரமாகக் கொண்டது என்கின்றன –
பிறப்பற்றவன் -அழிவற்றவன் -சர்வேஸ்வரன் -சங்கல்பம் அடியாக -பஹுதா ஜாயமான-முண்டகம் -2-2-6-என்றும்
அஜாயமாநோ பஹுதா விஜாயதே தஸ்ய தீரா பாரிஜாநந்தி யோனிம்-தைத்ரியம் -3-13-என்றும்
சொல்லுகிறபடி நித்ய மங்கள விக்கிரகத்துடன் திருவவதரித்து
அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கிறான் -ஜீவனுடைய அனைத்து உபகரணங்களும் ஆதாரம் என்றபடி –

——————————————-

ஸூத்ரம் -65–முக்தோ உபஸ்ருப்ய வ்யபதேசாத் ச –1-3-2-

முண்டக உபநிஷத் –
யதா பஸ்ய பஸ்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரமீசம் புருஷம் ப்ரஹ்மயோநிம் ததா வித்வான் புண்ய பாபே
விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி–முண்டக -3-1-3- -என்றும்

யதா நத்ய ஸ்யந்தமாநா சமுத்ரேஸ் தம் கச்சந்தி நாம ரூபே விஹாய ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த
பராத்பரம் புருஷன் உபைதி திவ்யம் -முண்டக -3-1-8–என்றும்

நதிகள் ரூப நாமம் இல்லாமல் கடலை அடைவது போலே முக்தாத்மாக்கள்,பரம்பொருளை அடைகின்றனர்-

பொன்னிறம் கொண்டவன் -நியமிப்பவன் -காரணமானவன் -அவனைக் கண்டதும்
புண்ய பாபங்கள் அற்று பரம சாம்யம் அடைகிறான் –

முக்தனுக்கு பரம புருஷனே பரம ப்ராப்யன் என்றதாயிற்று

——————————————-

ஸூத்ரம் -66–ந அநு மாநம் அதச் சப்தாத் பிராண ப்ருச் ச –1-3-3–

ந அநு மாநம் -இந்தப் ப்ரகரணத்தில் அனுமான பிராமண கம்யமான பிரதானம் இவற்றுக்கு ஆயதனம் ஆகாது
அதச் சப்தாத் -அந்தப் பிரதானத்தைக் குறிக்கும் ஸப்தம் இல்லாமையாலே
பிராண ப்ருச் ச –இவ்வாறே ஜீவனும் ஆக மாட்டான்

முன்பு உள்ள ஸூத்ரங்களில் பிராண வாயுவைக் குறிப்பிடாதலால் –
இங்கு பிரக்ருதியையும் ஜீவனையும் கூறப்பட வில்லை –

———————–

ஸூத்ரம் -67–பேத வ்யபதேசாத் –1-3-4-

ஜீவனின் தன்மைகளில் இருந்து இவனை வேறுபடுத்தி சொல்வதாலும் இவன் பரம் பொருளே –
முண்டக –
சாமா நே வ்ருஷே புருஷோ நிமக் நோ அநீசயா சோசதி முஹ்ய மான –
ஜூஷ்டம் யதா பச்யத் யந்யமீசம் அஸ்ய மஹிமானம் இதி வீத சோக

மரம் போன்ற அழியக் கூடிய சரீரத்தில் அழுந்தி மயங்கிய ஜீவன் –
அதே சரீரத்தில் உள்ள பரமாத்மா -தன்னிலும் வேறுபட்டவன்-நியமிப்பவன் –
மேன்மை உடைய பரமாத்மா -என்று உணர்ந்து வருத்தம் நீங்குகிறான் என்றபடி –

இது போன்ற வாக்யங்களாலே ப்ரக்ருதிக்கு அதீனனான இந்த ஜீவனின்
சோகத்தை நீக்குபவனாக வேறுபடுத்திக் கூறுவதால்
அந்த ஆயதனன் ஜீவன் அல்லன்

—————

ஸூத்ரம் -68– பிரகரணாத்–1-3-5-

முண்டக உபநிஷத்தில் பரம் பொருளின் தன்மைகள் கூறப்பட்டு
வேறு எதையும் கூறப்படாத காரணத்தால் இங்கு கூறப்படுகிறவன் பரம் பொருளே –
1-2-22-அத்ருச்யத்வாதி குணக தர்மோக்த-அவனுக்கே உரித்தான தன்மைகளுடன்
யாராலும் காணப்படாமல் உள்ளவன்-

முண்டக உபநிஷத் –
அத பரா யயா ததஷரமதி கமே யத்ததத்ரேஸ்ய மக்ராஹ்ய மகோத்த்ரம வர்ணம் அசஷூ ஸ்ரோத்ரம்
தத பாணி பாதம் நித்யம் விபும் சர்வகதம் ஸூ ஸூஷ்மம் ததவ்யயம் யத் பூத யோ நிம் பரிபச்யந்தி தீரா -என்றும்
சொல்லப்படுபவர் பரமாத்மாவே என்றவாறு –

இங்கும் இத்தைச் சொல்வான் என் என்னில்
நாடீ சம்பந்தம் -பஹுதா ஜாயமானத்வம் -மனஸ் பிராணங்களின் ஆதாரத்வம் இவற்றால் நடுவில்
பர ப்ரஹ்ம பிரகாரணத்துக்குத் தடை -இடையூறு -ஏற்பட்டு விட்டதோ என்ற
சங்கையைத் தீர்க்கவே இந்த அதிகரணம் ஆரம்பிக்கப் பட்டது என்று கருத்து —

————————

ஸூத்ரம் -69–ஸ்தித்யத நாப்யாம் ச –1-3-6-

முண்டக உபநிஷத்தில் இந்த உடலில் இருக்கும் தன்மை
பரம் பொருளுக்கு உடலில் இருக்கும் இருப்பு மட்டுமே –
ஜீவாத்மாவுக்கு மட்டுமே கர்ம பலன் அனுபவிக்க வேண்டும் –

த்வா ஸூ பர்ணா சாயுஜா சகாயா சமானம் வ்ருக்ஷம் பரிக்ஷஸ்வ ஜாதே தயோர் அந்நிய பிப்பலாம் ஸ்வாத் வத்தி
அனஸ்ந்னந்தயோ அபிசாகாதீதி-முண்டகம் -3-1-1-என்கிறபடி –
உண்ணாமல் தேஜஸ் மிக்கு -இருப்பவன் பரமாத்மா என்றபடி

இத்தாலும் இவற்றுக்கு ஆயதனம் பரமாத்மாவுக்கே
அஜாயமானோ பஹுதா விஜாயதே என்றபடி ராம கிருஷ்ணாதி அவதாரங்களுடன் ஆவிர்பாவமும்
நாடீ ஆதாரத்தவாதிகளும் பரம புருஷனுக்கே பொருத்தம் என்றபடி –

முதல் அதிகரணம் -த்யுத்வாத்யதிகரணம்- முற்றிற்று

————————————-

இரண்டாம் அதிகரணம் –பூமாதிகாரணம்

பரமாத்ம ப்ரகரண தொடர்ச்சியால் முண்டகம் முழுவதும் -அடி முதல் -முடிவு வரை பரமாத்ம பரமே என்று நிரூபிக்கப் பட்டது
அப்படியாகில் சாந்தோக்யத்தில் பூம வித்யையில் ஜீவ ப்ரகரண தொடர்ச்சியாலே ஜீவன் நிரூபிக்கப் படுகிறான்
என்று பூர்வ பக்ஷம் தோன்றவே
பிரமாணங்கள் மூலம் நிரூபிக்கும் இந்த அதிகரணம் பொருந்துகிறது

முன் அதிகரண விஷயமாக முண்டகத்தில்
யே ந அக்ஷரம் புருஷன் வேத ஸத்யம்-என்று
ஸத்ய அக்ஷர சப்தங்களால் குறிக்கப்படும் பரமபுருஷனே ஸத்ய ஸப்த வாஸ்யன் -என்பதை
இந்த அதிகரணத்தில் சாதிக்கிறார் என்று சங்கதி –

ஸூத்ரம் -70–பூமா சம் ப்ரசாதாத் தத் உபதேசாத் –1-3-7-

பூமா -பெரியவன் -ஜீவனை விட உயர்ந்த பெருமை யுடைய பர ப்ரஹ்மம் –

சாந்தோக்யம் ஏழாம் அத்தியாயத்தில் –
யத்ர நாந்யத் பஸ்யதி நாந்யத் ச்ருணோதி நாந்யத் விஜா நாதி ச பூமா அத யத்ர நாந்யத் பச்யத்
அந்யஸ் ச்ருணோதி அந்யத் விஜா நாதி தத் அல்பம் -என்று
பூமா பற்றியும் அல்பம் பற்றியும்
சாந்தோக்யத்தில் நாரத முனிவர் சனத் குமாரரிடம் ப்ரஹ்மம் பற்றி விளக்கி சொல்ல கேட்க

வாக்கு மனம் ஈடுபாடு புத்தி ஞானம் வலிமை உணவு நீர் ஆகாயம் ஞாபக சக்தி குறிக்கோள் -பிராணன் -என்று சொல்லி

ஏவம் விஜானன் அதிவாதீ பவதி -என்று பிராணனை ப்ரஹ்மம் என்று உணர்ந்தவன் அதிவாதி –
உயர்ந்த ஞானம் உடையவன் ஆகிறான்

சாந்தோக்யத்தில் மேலும் ஏஷ து வா அதிவததி யஸ் சத்யேன அதிவததி என்று
சத்யம் என்று ப்ரஹ்மத்தை உணர்ந்தவன் அதிவாதி ஆகிறான்

சம் ப்ரசாதா என்றது
ஜீவனையா என்கிற சங்கைக்கு –
ஏஷ சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே என்று
இந்த உடலை விட்டு நீங்கி அந்த உயர்ந்த ரூபத்தை அடைகிறான்
இதன் மூலம் ஸம் ப்ரசாதனன் என்பது ஜீவனைக் குறிக்கும் என்று உணரலாம்

ஆத்மாவை அறிய விரும்பும் நாரதருக்கு ஸநத்குமார்
நாமம் முதல் பிராணன் வரை பலவற்றையும் உபாசிக்கத் தக்கவையாக உபதேஸிக்கிறார்
பிராணனை விட எது உயர்ந்தது என்ற வினாவோ விடையோ இல்லை
ஆகையால் பிராணன் என்னும் ஜீவன் வரையிலும் ஆத்ம உபதேஸம் என்று தோன்றுகிறது
இதற்கு மேலும் பூமா என்பதும் ப்ரத்யகத்மாவே என்பதே பூர்வ பக்ஷம் –

இனி ஸித்தாந்தம்
பூமா -பூம குண விசிஷ்டன் பரமாத்மாவே
ஏன் எனில்

சம் ப்ரசாதாத் தத் உபதேசாத்-சம் ப்ரசாதன் என்னும் ஜீவனை விட உயர்ந்தவனாக
ஸத்யம் எனப்படும் பரமபுருஷனையே உபதேஸிக்கையாலே
ஏஷ சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே என்று சொல்லி
ஏஷ து வா அதிவததி யஸ் சத்யேன அதிவததி ஸூகம் த்வேவ விஜிஜ்ஞாஸி தவ்யம்
பூமாத் வேவ விஜிஜ்ஞாஸி தவ்ய-என்று
ஏராளமான ஸூகம் உடையவனாய் சத்யம் எனப்படுபவனாய் உள்ள பரம புருஷனை உபதேசிப்பதால்
பூமா எனப்படுபவன் பரமாத்மாவே என்று தேறுகிறது

பிராண ஸப்தத்தின் பொருளே ஆத்மா என்று எண்ணி ஆத்மாவை விட எது பெரியது என்று கேட்க வில்லை
ஆச்சார்யரும் கிருபையாலே சத்யமே அறியத்தக்கது என்று
ஏஷது வா அதி வததி-முதலிய வாக்யத்தால் உபதேஸிக்கிறார்
அதி வாதித்வம் என்பது தான் உபாசிக்கும் பொருளையே எல்லாவற்றையும் விடச் சிறந்தது என்று கூறுதல் –

——————

ஸூத்ரம் -71-தர்மோபபத்தே ச-1-3-8-

பூமா என்பதற்கு பல தன்மைகள் சொல்லப் பட்டுள்ளன அது பரம் பொருளை மட்டுமே குறிக்கும்

அந்த பரமாத்மா எதில் பிரதிஷ்டை செய்யப் பெற்று இருக்கிறார் –
தனது மஹிமையில் முதலிய வாக்கியங்களில் விளக்கப்பட்ட
தன் மஹிமையை பிரதிஷ்டை பெறுதல்
ஸர்வ காரணத்வம்
ஸர்வாத்மத்வம் -முதலிய தர்மங்கள் பகவானிடம் உப பன்னம் -பொருந்தும் -என்பதால்
பூமா என்பது பரமாத்மாவே என்பது உறுதி யாயிற்று

இந்த வித்யையில் தியானிக்க வேண்டியவைகளை சொல்லும் கிரமத்தில்
தஸ்மின் யதந்த ததன்வேஷ்டவ்யம் -என்று தேட வேண்டிய பொருளுக்கு ஆதாரமான
தஹர ஆகாசத்தைச் சொல்லுகையாலும்
பூத ஆகாசமே என்பது முதல் பக்ஷம்

இதற்கு விடை கூறுகிறார் இந்த ஸூத்ரத்தில்
தஹர ஆகாசம் பர ப்ரஹ்மம் தான் பூத ஆகாசம் அன்று
ஏன் எனில்
உத்தரேப்ய -மேல் வாக்கியங்களில் சொல்லப்படும் ஹேதுக்களால்
ஏஷ ஆத்மா அபஹத பாப்மா விஜரோ விமிருத்யு -என்று தொடங்கும் வாக்கியம்
யம் காமம் காமயதே ஸோ அஸ்ய ஸங்கல்பா தேவ சமுத் திஷ்டாதி -முதலிய வாக்யங்களால் கூறப்படும்
குணங்கள் பூத ஆகாசத்துக்குப் பொருந்தாதவை

இப்படி தஹர ஆகாசத்தைப் பூத ஆகாசம் அன்று என்று நிரூபித்து
மேலே ப்ரத்யகாத்மாவாக இருக்கலாமோ என்ற சங்கையையும் நிராகாரணம் பண்ணுகிறார்

அத ஏஷ சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதேஎன்கிற வாக்கியத்தில்
இதர பராமர்சாத் -ப்ரஹ்மத்தைத் தவிர வேறே ஜீவனைப் பேசுவதால்
ஸ இதி சேத் -இந்த தஹர ஆகாசம் ஜீவனே என்றால்
ந -அது தவறு
அசம்பவாத் -கூறிய அபஹத பாப் மத்வாதிகள் ஜீவனிடம் சம்பாவிதம் அல்லவே
ஸம்ப்ரஸாதன் என்றது பகவானின் சம்பந்த ஞானத்தால் ரசிகனான ஜீவனைக் குறிக்கிறது

ஸங்கல்ப -நாம -த்யானம் -விஞ்ஞானம் -பலம் -அன்னம் – நீர் -தேஜஸ் -ஆகாசம் -மன்மதன் -திசை -பிராணன் என்னும் ஜீவன்
இவை அனைத்துக்கும் மேல் ஸத்ய ஸப்த பொருளாக பரமாத்மாவே பூம குண விசிஷ்டானாயும்
த்யானிக்கத் தக்கவனாயும் கொல்லப்படுகிறான் என்று கருத்து –

சாந்தோக்யம் –ஏதத் அம்ருதம்-பூமா அழிவற்றது என்றும்
சர்வே மஹிம் நி -மற்று எதையும் சாராமல் தன்னுடைய பெருமையால் விளங்கி நிற்கும் என்றும்
ச ஏவாத ஸ்தாத் ச ஏவேதம் சர்வம் -என்று
அதுவே மேலும் கீழும் முன்னும் பின்னும் தெற்கும் வடக்காகவும் உள்ளது
போன்ற தன்மைகள் பூமா பரம் பொருளுக்கே பொருந்தும் என்றதாயிற்று –

பூமாதி கரணம் சம்பூர்ணம்

——————————————–

1-3-3-அஷர அதிகரணம் -அஷரம் எனபது ப்ரஹ்மமே –

கீழ் அதிகரணங்களில் -ஸத்யம் அக்ஷரம் என்ற சொற்களுக்கும் பொருளாகக் கூறப்பட்ட பரம புருஷனே
பூமாதி கரணத்தில் -ஸத்யம் ஸப்தத்தின் பொருள் என்று ஸ்தாபித்து
இவ்வதி கரணத்தில் அக்ஷரம் என்ற சொல்லின் பொருளும் அவனே என்று ஸ்தாபிக்கப் படுகிறது –

அஷரம் அம்பராந்த த்ருதே-1-3-9-

ப்ருஹத் ஆரண்யாகாவில் –
ச ஹோவாச ஏதத்வை தத் அஷரம் கார்க்கி ப்ராஹ்மணா அபிவ தந்தி அஸ்தூலம் அநணு
அஸ்ரஸ்வம் அதீர்க்கம் அலோஹிதம் அஸ்நேந ஹமச்சாயம் –(ப்ரு -3–8–8-)
வசக்னு மகா ரிஷியின் பெண் கார்க்கி என்ற பெண் யாஜ்ஞவல்க்யர் இடம் -கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் )-என்று
அஷரம் பருத்ததும் அல்ல சிறியதும் அல்ல குட்டியும் அல்ல நெட்டையும் அல்ல நிழலும் அல்ல இருளும் அல்ல
காற்றும் அல்ல ஆகாசமும் அல்ல-எதனுடன் சேர்ந்ததும் அல்ல எதையும் உண்பவன் அல்ல -இப்படி பலவாறு சொல்லி –

யயா தத் அக்ஷரம் அதிகம்யதே–முண்டகம் –1–1–5-
முண்டக-2-1-2- அஷராத் பாரத பர -என்று அஷரம் என்பதை பிரக்ருதியாக சொல்லி

இவ்வாக்கியத்தில் -அக்ஷரம் -பிரதானமா ஜீவனா பரமாத்மாவா என்ற சங்கை வர
முதலில் பிரதானம் என்று பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
அக்ஷராத் பரத பர -என்ற இடத்தில்
அக்ஷர சப்தத்துக்குப் பிரதானம் என்ற பொருளில் பிரயோகம் காணப்படுகிறது
இதற்கு விடையே
அஷரம் -அக்ஷர ஸப்தத்தின் பொருள் பர ப்ரஹ்மமே
ஏன் எனில்
அம்பராந்த த்ருதே-ஆகாசத்தில் எல்லையான -முடிவான -காரணமான ஆகாசத்தினைத் தாங்குவதாகக் கூறுவதால்
எதில் ஆகாசம் பின்னப்பட்டு உள்ளது
சர்வ விகாரப் பொருள்களுக்கும் காரணமாய் -ஆகாசம் என்னும் சொல்லின் பொருளாய்
பிரதானத்துக்கும் ஆதாரமாகச் சொல்லப்பட்ட அக்ஷரம் பிரதானமாக இருக்க முடியாது
பரமாத்மா தான் -அது பிரதானத்துக்கு ஆதார பூதம் -அவனே அன்றி பிரதானம் எப்படி இருக்க முடியும்

ப்ருஹத் ஆரண்யாகாவில்-
யத் ஊர்த்வம் கார்க்கி திவோ யதர்வாக் ப்ருதிவ்யா யத் அந்தரா த்யாவா ப்ருத்வீ இமே யத் பூதஞ்ச பவச்ச
பவிஷ்யச் சேத்யா சஷதே-ஆகாச ஏவ தத் ஓதம் ச ப்ராதம் ச –5-8-4–என்று கேட்டு

ஆகாச ஏவ ததோதஞ்ச ப்ரோதஞ்ச -என்று அந்த பொருள்கள் சார்ந்து உள்ளது ஆகாசமே என்று பிரக்ருதியே ஆகும்
அது அஷரத்தை ஆதாரமாக கொண்டது என்பதால் அஷரம் ப்ரஹ்மமே-

—————————————————

ஆனால் ஜீவனுக்கும் அசேதனமான பிரதானத்துக்கான ஆதாரத்வம் கூடுமே
அக்ஷரம் என்பது ஜீவனாகலாம் என்கிற பக்ஷத்தை அடுத்துக் கண்டிக்கிறார் –

ஸூத்ரம் -73-சா ச பிரசாச நாத் –1-3-10-

அஷரம் ஸூரியனையும் சந்திரனையும் நியமிப்பதாக சொல்வதால் அது ப்ரஹ்மமே
யஸ்ய அஷரம் சரீரம் -என்பதால்
உடலுடன் தொடர்பு கொண்ட ஜீவனோ என்னில் –
ப்ருஹத் ஆரண்யாகாவில்-
ஏதஸ்ய வா அஷரஸ்ய பிரசாச நே கார்க்கி ஸூர்யா சந்திர மசௌ வித்ருதௌ திஷ்டத-என்று
ஸூரியனையும் சந்திரனையும் இயக்குவது என்பதால் ப்ரஹ்மமே

சா ச -அம்பராந்தமான பிரதானத்தின் த்ருதியும் -தாங்குதலும்
பிரசாச நாத் –இந்த அக்ஷரத்தின் நியமனத்தாலே ஏற்படுகிறது
ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய இத்யாதி -என்ற இது முதலியவற்றில்
தன் நியமத்துக்கு உள்பட்ட ஸர்வ வஸ்துக்களையும் தாங்குதல் பக்தனுக்கோ முக்தனுக்கோ கூடாது
ஆதலின் புருஷோத்தமன் ப்ர ஸாஸ்தா வான அக்ஷரமாம் –

———————

ஸூத்ரம் -74-அந்ய பாவ வ்யாவ்ருத்தே ச –1-3-11-

அஷரம் மிக உயர்ந்தது ஒப்பார் மிக்கார் இல்லாதது –
ப்ருஹத் ஆரண்யா காவில் கார்க்கி என்பர் கேட்க –
தத்வா ஏதத் அஷரம் கார்க்கி அத்ருஷ்டம் த்ரஷ்ட்ரு அஸ்ருதம் ஸ்ரோத்ரு-என்றும்
நான்யதோ அஸ்தி த்ரஷ்ட்ரு நான்யதோ அஸ்தி ஸ்ரோத்ரு-என்பதால்
அஷரம் பரம் பொருளே –

அந்ய பாவ -வேறு தன்மை -ப்ரதாநத்வமும் ஜீவத்வமும்
வ்யாவ்ருத்தே ச –விலக்கப்படுவதால் -அக்ஷரம் என்பது பரமாத்மாவே யாகும்
கார்கி இந்த அக்ஷரத்தின் இடமே ஆகாசம் குறுக்கும் நெடுக்குமாகப் பின்னப் பட்டுள்ளது
இந்த அக்ஷரமே பிறவற்றால் காணப்படாமல் தான் அனைத்தையும் காண்கிறது என்று சொல்லுகையால்
இப்படி ஸர்வஞ்ஞனாயும் ஸர்வ அந்தர்யாமியான ஸர்வ ஆதரன் எனும் அஷரம்
பிரதானத்தில் இருந்தும் ஜீவனிடம் இருந்தும் பிரிதாய் விலக்கிக் கூறப்படுகிறது என்று ஸித்தாந்தம் –

அஷர அதி கரணம் சம்பூர்ணம்

———————————————–

1-3-4-ஈஷதி கர்மாதிகரணம் -கானப்படுபவன் ப்ரஹ்மமே-

அத்ருஷ்டம் த்ரஷ்ட்ரு -என்று பரமாத்மா இதரங்களால் காணப்படாதவன் என்று கூறப்பட்டது
அப்படியாயின் -பராத்பரம் புரி சயம் புருஷம் ஈஷதே -என்று காணப்படுபவனாகக் கூறப்படுபவன்
பரமாத்மாவாய் இருக்க முடியாது என்ற சங்கை இந்த அதிகரணத்தில் தீர்க்கப்படுகிறது என்று சங்கதி –

ஸூத்ரம் -75-ஈஷதி கர்ம வ்யபதேசாத் ச –1-3-12-

ஜீவனுக்கும் மேலான புருஷன் என்று ப்ரஹ்மத்தை சொல்லிற்று –
ப்ரசன உபநிஷத்தில் -சத்யகாமன் என்பவனது கேள்விக்கு விடையாக
ய புநரேதம் த்ரிமாத்ரேண ஒம் இதி ஏதே ஏவ அஷரேண பரம்புருஷம் அபித்யாயித ச தேஜஸி ஸூர்யே சம்பன்ன-
யதா பாதோதரஸ் த்வாச்சா விநிர் முச்யதே ஏவம் ஹை வ ச பாப்மநா விநிர்முக்தி ச சமாபி உந்நீயதே ப்ரஹ்ம லோகம்
ச ஏதஸ்மாத் ஜீவநாத் பராத்பரம் புரிசயம் புருஷம் ஈஷதே – -என்று

புருஷன் என்ற ஹிரண்யகர்ப்பன் உபாசித்து ப்ரஹ்ம லோகம் அடைவதைச் சொல்லிற்று
என்பர் பூர்வ பஷத்தில்

அதர்வணத்தில் சத்யகாம ப்ரஸ்தானத்தில் -பராத்பரம் புரிசயம் புருஷம் ஈஷதே என்னும் பகுதியில்
தியானிக்கவும் பார்க்கவும் படும் புருஷன்
ஜீவ சமஷ்ட்டி ரூபமான நான்முகனா அல்லது பரம புருஷனா என்ற சம்சயம்
சமஷ்டி ரூபமான -ஜீவனான -சதுர்முகன்பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
ஒரு மாத்திரை அளவுள்ள ப்ரணவ உபாசன பலம் மனுஷ்ய லோகம் என்றும்
இரண்டு மாத்ரை அளவுள்ள ப்ரணவ உபாசன பலம் அந்தரிக்ஷ பிராப்தி என்றும்
மூன்று மாத்ரை உபாசன பலம் ப்ரஹ்ம லோக பிராப்தி என்றும் கூறப்பட்டு இருப்பதால்
அந்த லோகத்தை அடைந்து காணப்படுபவன் நான்முகனே என்று பூர்வ பக்ஷம்
இதுக்கு விடை –

ஆனால் மேலே –
யத்தத் சாந்தம் அஜாம் அம்ருதம் அபயம் பரஞ்ச –
என்பதால் உள்ள
யத்தத் கவயோ வேத யந்த -என்று
நித்ய ஸூரிகள் பார்க்கும் இடம் என்பதால் பரம புருஷனையே சொல்லிற்று-

ஈஷதி கர்ம -பார்வைக்கு விஷயமானவன்
ஸ -அந்த ஸ்ருதி ப்ரதிபாத்யனான பரமாத்மாவே -சதுர்முகன் அன்று ஏன் எனில்
வ்யபதேசாத் ச –சாந்தமாய் ஜாரை மரணம் அற்று அம்ருதமாய் அபயமாயும் பரமமான ப்ரஹ்மத்தை அடைகிறான்
என்று மேலே சொல்வதால்
இத்தகைய தர்மங்கள் பர ப்ரஹ்மத்துக்கே பொருந்தும்
அந்தரிக்ஷ லோகத்துக்கு மேலே நான்முகன் லோகம் என்பது சரி அல்ல
நடுவில் மஹர் லோகாதிகள் உண்டே
ஆகவே சர்வ பிராகிருத லோகங்களுக்கும் மேலே ஸ்ரீ வைகுண்டம் -யத்தத் கவயோ வேத யந்த -என்று
நித்ய ஸூரிகள் பார்க்கும் இடம் என்பதால் பரம புருஷனையே சொல்லிற்று-
ஆகவே நான்முகன் லோகம் அன்று என்று திரு உள்ளம் –

ஈஷதி கர்மாதிகரணம் சம்பூர்ணம்

——————————————————————-

1-3-5-தஹராதி கரணம் -தஹரா ஆகாயம் என்பதுவும் ப்ரஹ்மமே-

இப்படி கார்க அக்ஷர வித்யையில் அறியத் தக்க புரிசயனான புருஷனுக்கு பரமாத்மா நிலையை ஸ்தாபித்து
தஹர வித்யையில் ஆகாசம் எனப்படும் புரிசய புருஷனுக்கும் அப்ரமாத்மத் வம் இல்லை –
அவன் பரமாத்மாவே என்பது சங்கதி

ஸூத்ரம் -76-தஹர உத்தரேப்ய-1-3-13-

இதயத்தில் உள்ள தஹர என்னும் ஆகாயத்தில் உள்ளவனும் பர ப்ரஹ்மமே
சாந்தோக்யம் –8-1-1–அத யதிதம் அஸ்மின் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம தஹரோ அஸ்மின் அந்தரே ஆகாசாஸ்
தஸ்மின் யதந்தஸ் தத் அன்வேஷ்டவ்யம் தத்வாவ விஜிஜ்ஞாசி தவ்யம் -என்று
ஆகாயமா பரம் பொருளா ஜீவனா –

பஞ்சபூதங்களில் ஒன்றே என்பது முதல் பூர்வ பக்ஷம்
ஏன் என்னில்
ஆகாசம் என்ற சொல் அந்தப்பொருளிலே பிரசித்தம்
தஸ்மின் யதந்தஸ் தத் அன்வேஷ்டவ்யம் -என்று
தேட வேண்டிய பொருளுக்கு ஆதாரமான தஹர ஆகாசத்தைச் சொல்லுகையாலும் பூதாகாசமே என்பது முதல் பூர்வ பக்ஷம்
இதுக்கு விடை

தஹர -தஹர ஆகாசம் பர ப்ரஹ்மம் தான் பூத ஆகாசம் அல்ல
ஏன் என்னில்
உத்தரேப்ய-மேல் வாக்யங்களால் சொல்லப்படும் ஹேதுக்களாலே

அதே உபநிஷத்தில் மேலே –
ஏஷ ஆத்மா அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யூர் விசோகோ விஜிகத்சோ அபிபாபசஸ்
சத்ய காம சத்ய சங்கல்ப -என்பதால் பரம் பொருளே

மேலும் அதே உபநிஷத்தில் மேலே –
யாவான் வா அயமாகா சாஸ்தா வா நேஷோ அந்தர் ஹ்ருதய ஆகாச-8-1-3- -என்று
ஆகாயம் போலே என்பதால் தஹரா எனபது ஆகாசம் இல்லை-

அன்வேஷ்டவ்யம்-என்று சொன்னதும் கல்யாண குணங்களைப் பற்றியே
அத யதிதம் அஸ்மின் ப்ரஹ்மபுரே-என்ற விஷய வாக்கியத்தின் பொருள் மேலே சொல்லப்படும் –

——————————————————————-

ஸூத்ரம் -77-கதி சப்தாப்யாம் ததா ஹி த்ருஷ்டம் லிங்கம் ச –1-3-14-

அனைவரும் சென்று அடையும் இடம் என்பதாலும்
ப்ரஹ்ம லோகம் என்பதாலும்
தஹரா பர ப்ரஹ்மமே -பரம் பொருளே

சாந்தோக்யம் –
தத் யதா ஹிரண்ய நிதிம் நிஹித ம ஷேத்ரஜ்ஞா உபர்யுபரி சஞ்சரந்தோ ந விந்தேயுர் யேவ ஏவேமாஸ் சர்வா பிரஜா
அஹர் அஹர் கச்சந்த்ய ஏதம் ப்ரஹ்ம லோகம் ந விந்தந்தி அந்ருதேன ஹி பிரத்யூடா–8-3-2–என்றும்
ஏவமேவ இமா சர்வா பிரஜா சதி சம்பத்ய ந விதுஸ் சதி சம்பத்யா மஹயிதி-என்றும்

ப்ருஹத் ஆரண்யாகாவில்–
ஏஷ ப்ரஹ்ம லோகஸ் சம்ராடிதி ஹோவாச -என்பதால்
தஹரா என்றது பர ப்ரஹ்மமே-

நிலத்துக்குள் புதைந்து கிடைக்கும் புதையலை அறியாத மக்கள் அந்த நிலத்தின் மேலே அடிக்கடி நடமாடியும் அறிவது இல்லை
கதி சப்தாப்யாம் –
உபநிஷத் வாக்கியத்தில் ஏதம் என்று தஹர ஆகாசத்தைக் குறிப்பிட்டு ஸூ ஷுப்தி தசையில் செல்லும் -செல்லத்தக்க
தஹர ஆகாசத்தை ப்ரஹ்ம லோகம் என்று
இப்படி கமனத்தாலும் ப்ரஹ்ம லோக ஸப்தத்தாலும் குறிப்பது ப்ரஹ்மமே என்று சாதிக்க வல்லது
ததா ஹி த்ருஷ்டம்
இப்படி வேறு உபநிஷத்திலும் -ஏவமேவ இமா சர்வா பிரஜா சதி சம்பத்ய ந விதுஸ் சதி சம்பத்யா மஹயிதி-
முதலான வாக்கியங்களில் காணப்படுகிறது
லிங்கம் ச –
மற்ற ஸ்ருதிகளை விட்டு இதே ஸ்ருதியில் சொல்லும் கதியும் -ப்ரஹ்ம லோக ஸப்தமும்
வேறு எதையும் அபேக்ஷிக்காத லிங்கங்கள் என்றவாறு

———————————————-

ஸூத்ரம் -78-த்ருதேச்ச மஹிம் ந அஸ்ய அஸ்மின் உபலப்தே –1-3-15-

அனைத்துக்கும் ஆதாரமாக பற்றாக உள்ளவன் தஹரா என்பதால் பர ப்ரஹ்மமே –

சாந்தோக்யம் –
அத ய ஆத்மா ச ஹேதுர் வித்ருதி ரேஷாம் போகாநாம் சம்பேதாய-8-4-1–என்று
உலகங்கள் அனைத்துக்கும் ஆதாரம் என்றும்

ப்ருஹத் ஆரண்யாகாவில்–4-4-22- –
ஏஷ சர்வேஸ்வர ஏஷ பூதாதிபதி ரேஷ பூதபால ஏஷ சேதுர் விதரண
ஏஷாம் லோகா நாம சம்பேதாய -என்பதால் தஹரா என்றது பர ப்ரஹ்மமே-

த்ருதேச்ச மஹிம் ந அஸ்ய –இந்த பரமாத்மாவுக்கு ஜகத்தினைத் தங்குவது என்னும் மஹிமை
அஸ்மின் -இந்த தஹர ஆகாசத்தில்
உபலப்தே –தோன்றுகையாலே இந்த மகிமைக்கு ஆஸ்ரயமான தஹர ஆகாசம் பரமாத்மாவே தான்
யஸ் ஆத்மா ஸ சேதுர் வித்ருதி என்றும்
ஏஷாம் லோகாநாம் அசம்பேதாய இத்யாதி வாக்யங்களால் தாரணா ரூபமான மஹிமை சொல்லப்படுகிறது –

——————————————–

ஸூத்ரம் -79-பிரசித்தே ச –1-3-16-

ஆகாயம் என்று பரம் பொருளை ஒட்டியே பல இடங்களிலும் சொல்லப் பட்டதால்
தஹரா பர ப்ரஹ்மமே –

தைத்ரீய ஆனந்த வல்லியில் —
கோ ஹி ஏவ அந்யாத்க ப்ராணயாத் -யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத்-2-7-

மேலும் -சாந்தோக்யம்-1-9-1-
சர்வாணி ஹ வா இமானி பூதானி ஆகாசாத் ஏவ சமுத்பத்யந்தே– -என்று
ஆகாயம் பரம் பொருள் என்ற காரணத்தால்
தஹரா என்றது பர ப்ரஹ்மமே –

ஸ்ருதி ப்ரசித்தமும்
அபஹத பாப் மத்வாதிகளுடன் கூடிய ப்ரஸித்தி ப்ரபலம்

இப்படி பூத ஆகாசம் இல்லை என்று நிரூபித்து
மேலே பிரத்யக்தமா இல்லை என்று நிரூபிக்கிறார்

———————————————–

ஸூத்ரம் -80-இதர பராமர்சாத் ச இதி சேத ந அசம்பவாத் –1-3-17-

தஹரா ஜீவனாக இருக்க முடியாது -ஜீவனுக்கு பொருந்தாத தன்மைகள் சொல்லப் படுவதால்

சாந்தோக்யம் –
அத ய ஏஷ சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதிரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண
அபி நிஷ்பத்யதே ஏஷ ஆத்மேதி ஹோவாச ஏதத் அம்ருதம் அபயம் யேதத் ப்ரஹ்ம-8-3-3- -என்று
ஆத்மா சம்பிரசாதன் என்றும்
பரம் பொருளைக் காட்டிலும் வேறு ஒருவனாக சொல்லப் பட்டதால்
சாந்தோக்யத்தில் சொல்லப்பட்ட தஹரா ஆகாயத்தின் தன்மைகள்
பர ப்ரஹ்மத்துக்கு மட்டுமே பொருந்தும்-

அத ய ஏஷ சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதிரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண-என்கிற வாக்கியத்தில்
இதர பராமர்சாத் -ப்ரஹ்மத்தைத் தவிர வேறு ஜீவனைப் பேசுவதால்
ச இதி சேத் -இந்த தஹர ஆகாசம் ஜீவனே என்றால்
ந-அது தவறு
அசம்பவாத் –கூறிய அபஹத பாப் மதவாதி கல்யாண குணங்கள் சம்பாவிதம் அல்ல என்பதால்
ஸம் ப்ரஸாதன் என்றது பகவத் சம்பந்த ஞானத்தால் ரசிகனான ஜீவனைக் குறிக்கிறது –

——————————————–

ஸூத்ரம் -81-உத்தராத் சேத் ஆவிர்ப்பூத ஸ்வரூப து –1-3-18-

பிரஜாபதி ரிஷி இந்த்ரனிடம் ஜீவனுக்கும் உயர்ந்த தன்மைகள் ப்ரஹ்மத்தின் அருளால் –
சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதிரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண நிஷ்பத்யதே –

ஆனால் தஹரா ஆகாயத்துக்கு இந்த தன்மைகள் மறையாமல்
இயற்கையாகவே உள்ளன –
எனவே தஹரா ஜீவன் அல்ல பரம் பொருளே-

உத்தராத் சேத் -பிரஜாபதி வாக்யத்தால் -மேலே ஜீவனுக்கும் இந்த அபஹத பாப் மத்வாதிகள் கூறுவதால்
ஜீவனுக்கு அவை சம்பாதிக்காது என்று கூறுவது சரியில்லை
ஆவிர்ப்பூத ஸ்வரூப து –முதலில் கர்ம சம்பந்தத்தால் மறைக்கப்பட்ட ஸ்வரூபத்தை யுடைய ஜீவன்
பின்பு பரமாத்மா ஸம்பத்தியால் ஸ்வரூப ஆவிர்பாவம் அடைகிறான் என்று பிரஜாபதி வாக்கியம்
து -தஹர ஆகாஸனோ என்னில் -மறைக்கப்படாத ஸகல கல்யாண குணங்களும் ஸ் வாபாவிகமாக
இவனது ஸ்வரூப ஆவிர்பாகத்துக்கும் காரணமான பரமபுருஷனே -ஜீவன் அல்லன்
ஸத்யன் என்ற சொல்லின்படி சேதன அசேதன நியாமகன்
ஆகவே பரமாத்மாவே அன்றி ஜீவன் அல்லன்

இப்படியாகில் ஜீவனை ஸம் ப்ரஸாத என்று ஜீவனை ஏன் பிரஸ்தாபிக்க வேண்டும் என்றால் -மேல் –

——————————————

ஸூத்ரம் -82-அன்யார்த்த ச பராமர்ச –1-3-19-

ஜீவனுக்கு பரம் பொருளின் கடாஷத்தால் உயர்ந்த தன்மை அடைவதை சொல்லி
பரம் பொருளின் உயர்ந்த தன்மை காண்பிக்கப் பட்டது-

அன்யார்த்த ச பராமர்ச –
பராமர்ச -தஹர வாக்கியத்தில் ஜீவனை பிரஸ்தாபித்தது
அன்யார்த்த ச -தஹர ஆகாச ப்ராப்தியாலே முக்தனுடைய ஸ்வரூப ஆவிர்பாவம் ஏற்படுகிறது என்று
அவனது கல்யாண குணத்தை விளக்கவே என்றவாறு –

———————————————

ஸூத்ரம் -83-அல்ப ஸ்ருதே இதி சேத் தத் உக்தம் –1-3-20

தஹரா ஆகாயம் சிறியது என்பதால் பர ப்ரஹ்மம் அல்ல எனபது சரியல்ல –
இதயத்தில் உள்ளான் -1-2-7 ஸூத்ரம் சொல்லவே
சிறிய உருவம் உள்ளவனாக சொல்லப் பட்டது-

அல்ப ஸ்ருதே –ஆராக்ர சத பாகஸ்ய -இத்யாதி வாக்கியப்படி அணு பரிணாமம் ஜீவனுக்கே கூடும் என்றால்
இதி சேத்–அது தவறு
தத் உக்தம் -ஸர்வத்ர ப்ரஸித்த அதிகரணத்தில் -நிசாயத்வா தேவம் என்ற ஸூத்ரத்தில் இது விளக்கப்பட்டு விட்டது
உபாஸகர்கள் அனுக்ரஹத்துக்காக கட்டை விரல் அளவுள்ள
திருமேனி உள்ளவன் என்பதால் அல்பத்வம் சொல்லப்படுகிறது என்று திரு உள்ளம் –

———————————————–

ஸூத்ரம் -84-அநு க்ருதே தஸ்ய ச –1-3-21-

முண்டகம் –
யதா பஸ்ய பஸ்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரம் ஈசம் புருஷம் ப்ரஹ்ம யோநிம் ததா வித்வான்
புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யமுபைதி –3-1-3–என்பதால்
இயற்கையாக அந்த தன்மைகளைக் கொண்ட தஹரா ஜீவன் இல்லை பர ப்ரஹ்மமே-

அநு க்ருதே தஸ்ய ச
தஸ்ய -அந்த பரமாத்மாவின்
அநு க்ருதே -ஸாம்யத்தை அடைகையாலும்
சாம்யத்தை அடையும் ஜீவனைக்காட்டிலும் சாம்யத்தை உண்டாக்கும் பரமாத்மாவுக்கு தஹரத்துக்கு –
பேதம் ஸித்தமாயிற்று
நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபைதி -என்று முக்தனுக்கு ஸாம்யா பத்தி -சொல்லிற்றே –

————————————————-

ஸூத்ரம் -85-அபி ஸ்மர்யதே-1-3-22-

ஸ்ரீ கீதை –
இதம் ஜ்ஞானம் உபாஸ்ரித்ய மம சாதர்ம்யம் ஆகாதா–சர்க்கே அபி நோபே ஜாயந்தே
பிரளயே ந வ்யதந்தி ச -14-2- -என்று இதே கருத்து சொல்லப் பட்டதே-

இங்கும் பகவத் உபாஸனத்தாலே அவனுடன் ஸாம்யம் உடைய அனுக்ரஹம்
பகவானால் என்று சொல்லப்படுகிறதே

அதயதிதம் அஸ்மின் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம என்று அனுவதித்து
தஹரோ அஸ்மின் அந்தர ஆகாச என்ற வாக்கியத்தில் அஸ்மின் -இந்த அற்பமான இதயம் என்னும் தாமரையில்
அந்தர ஆகாச -உள்ளிருக்கும் ஆகாசம் எனப்படும் பரமாத்மா
ய -எவன் உள்ளானோ
தஸ்மின் -அவனிடம்
யத் -எந்த எந்த கல்யாண குணம் உள்ளதோ
தத் -அந்த ப்ரஹ்மமும் அந்த கல்யாண குண ஜாதங்களும் இரண்டும் உபாசிக்கத்தக்கவை
என்று யத் சப்தத்தை அத்தியாஹரம்-வருவித்திக் கொண்டும் கொள்ளாமலும் பொருள் சொல்லலாமே –

1-3-5-தஹராதி கரணம் சம்பூர்ணம்

——————————————–

1-3-6-ப்ரமிதாதி கரணம் -கட்டை விரல் அளவுள்ளவன் ப்ரஹ்மமே –

அல்ப ஸ்ருதே –ஸூத்ரத்தில் கூறிய அல்ப பரிமாணத்வம்
ஜீவனுக்கும் கடவல்லியில் கூறப்பட்டுள்ளதால்
அங்குஷ்ட ப்ரமிதன் ஜீவனாகவே இருக்கலாமே
என்ற சங்கையைப் பரிஹரிக்கவே
இந்த அதிகரணம் என்று சங்கதி –

ஸூத்ரம் -86-சப்தாத் ஏவ ப்ரமித–1-3-23-

கடவல்லியில் -அங்குஷ்ட மாத்ர புருஷ மத்ய ஆத்மனி திஷ்டதி என்றும்
ஈஸானோ பூத பவ்யஸ்ய ந ததோ விஜூ குப்சதே -என்றும்
அங்குஷ்ட மாத்ர புருஷோ ஜ்யோதிரிவா தூமக என்றும்
ஹ்ருதய ஸம் நிவிஷ்ட என்றும்
முதலிலும் நடுவிலும் இறுதியிலும் கூறப்பட்ட அங்குஷ்ட ப்ரமிதன்
ஜீவனா பரமாத்மாவான என்ற சங்கை
ஜீவனே என்று பூர்வ பக்ஷம்
ஏன் எனில்

ஸ்வேதாச்வதார உபநிஷத்தில்-
பிராணாதி ப சஞ்சரதி ஸ்வகர்மபி அங்குஷ்ட மாத்ர-என்றும்
அங்குஷ்ட மாத்ர ரவி துல்ய ரூப என்றும்
பிராண வாயு கர்ம வினைகள் சம்சாரம் என்பதால்
அங்குஷ்ட மாத்ர என்றது ஜீவனே பூர்வ பஷம்

சப்தாத் ஏவ ப்ரமித–பரமாத்மாவுக்கு அசாதாரணமான ஈஸானோ பூத பவ்யஸ்ய என்னும் ஸப்தத்தாலேயே
பிராணாதி ப சஞ்சரதி ஸ்வகர்மபி-என்ற வாக்கியத்தில் கர்ம சம்பந்தமாகிய ஜீவ லிங்க சப்தம் இருப்பது போல்
பரமாத்ம லிங்கம் இங்கு இருப்பதாலேயே
பரமாத்மாவே தான் ஜீவன் அல்லன் என்று திரு உள்ளம்

கடோ உபநிஷத்தில் –
ஈசா நோ பூத பவ்யச்ய ந ததோ விஜூ குப்சதே -என்று
முக் காலங்களையும் நியமிக்கும் தன்மை பரம் பொருளுக்கே உண்டு -எனவே
அங்குஷ்ட மாத்ரன் பரம் பொருளே-

ஆனால் விபுவான பரமாத்மாவுக்கு
அங்குஷ்ட ப்ரமிதத்வம் எவ்வாறு பொருந்தும் என்பதற்கு மேல் ஸூத்ரம்

———————————————————–

ஸூத்ரம் -87-ஹ்ருதி அபேஷயா து மனுஷ்யாதிகாரத்வாத்-1-3-24-

மனிதர்கள் இதயத்தில் பர ப்ரஹ்மம் உள்ளான் என்பதைக் காட்டவே கட்டை விரல் அளவு உள்ளவன் -என்கிறது –
உபாசனைக்கு ஏற்றவாறு என்றவாறு –

ஹ்ருதி அபேஷயா து மனுஷ்யாதிகாரத்வாத்
து சப்தம் சங்கையை விலக்குவது
ஹ்ருதி –மனிதனின் ஹ்ருதயத்தில் உபாஸனார்த்தமாக
தத் அபேஷயா -அத்தை அபேக்ஷித்து விபுவான பர ப்ரஹ்மத்துக்கு அந்த அளவு கூறப்பட்டது
மனுஷ்யாதிகாரத்வாத்-உபாஸனம் விதிக்கும் ஸாஸ்த்ரம் மனிதர்களை உத்தேசிக்கையாலே
அவர்கள் இருதயத்தை முன்னிட்டே இந்த அளவு என்று ப்ரஹ்மத்துக்குக் கூறப்பட்டது –

ப்ரமிதாதி கரணம் சம்பூர்ணம்

————————————————————-

மனிதர்களுக்கு உபாசனத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டு
பின்பு தேவத அதிகரணம்
மத்வாத் யதி கரணம்
அப ஸூத்ர அதிகரணம்
ப்ரசங்க சங்கதியால் இடையே வந்தன
இப்படி விசேஷ அதிகாரம் பற்றி நிரூபிப்பதால் ஸாமான்யமான அதிகாரத்தைப் பற்றிப் பேசும்
மூன்றாம் அத்யாயம் -நான்காம் பாதத்துடன் சாங்க்யம் -கலப்பு -என்ற தோஷம் இல்லை

இப்படி பிரசங்காத் வந்த மூன்றில் முதலில் தேவத அதிகரணத்தில்
தேவதைகளுக்குப் பொதுவாக உபாஸனத்தில் அதிகாரம் உண்டா என்று கேட்டு
அத்தை ஸ்தாபிக்கிறார் –

1-3-7-தேவாதிகரணம் -தேவர்களுக்கு ப்ரஹ்ம உபாசனை உண்டு

ஸூத்ரம் -88-தத் உபரி அபி பாதராயண சம்பவாத்-1-3-25-

உபாசனை மனிதர்களுக்கு மட்டும் அல்ல தேவர்களுக்கும் பொருந்தும் என்கிறார் பாதராயணர்-

உடல் இல்லையே துன்பம் வாராதே உபாசனை வேண்டாம் -என்பர் பூர்வ பஷிகள்

தத் -அந்த ப்ரஹ்ம உபாஸனம்
உபரி அபி -ஸ்வர்க்க லோகத்தில் உள்ள தேவர்களுக்கும்
பாதராயண -உண்டு என்று பாதாரயணர் கூறுகிறார்
சம்பவாத்-அநேந ஜீவேந அநு ப்ரவிஸ்ய நாம ரூப வியாகரவாணி -என்பதால்
தேவதைகளுக்கும் சரீரம் உண்டு
மோஷையில் ஆசையும் சாமர்த்தியமும் கூடுவதால் உபாஸனம் உண்டு –

நாம ரூப வியாகரணம் -தேவர்களுக்கும் பொருந்துமே –

சாந்தோக்யம் –
தௌ சமித் பாணி பிரஜாபதி சகாசமா ஜக்மது -என்பதால்
தேவர்களுக்கும் உடல் உண்டு உபாசிப்பார்கள் என்றதாயிற்று-

———————————————————–

ஸூத்ரம் -89-விரோத கர்மணி இதி சேத் ந அநேக பிரதிபத்தே தர்சநாத்–1-3-26-

தேவர்கள் பல உடல்களை எடுத்துக் கொள்ள முடியுமே –
ஒரே நேரத்தில் பல உடல்களை எடுத்துக் கொண்டு ஹவிர்பாஹம் பெறலாம்

சௌபரி பல உடல்களை கொண்டதும் உண்டே-

விரோத கர்மணி இதி சேத் ந
தேவதைகளுக்கு சரீரம் உண்டு என்று ஏற்றால் யாகாதி கர்மங்களில் எந்த இடத்துக்கு அவர்கள் செல்வார்கள்
என்னும் ஆஷேபம் தவறு
அநேக பிரதிபத்தே தர்சநாத்–ஒரே நேரத்தில் பல உடல்களை எடுத்துக் கொள்ளும் சாமர்த்தியம் உண்டே
எனவே விரோதம் வராது என்றவாறு

————————————————–

ஸூத்ரம் -90-சப்தே இதி சேத் ந அத பிரபவாத் ப்ரத்யஷ அநுமா நாப்யாம்-1-3-27-

தேவர்கள் உடலுடன் உள்ளவர்கள் என்றால் வேத வாக்யங்களுக்கு பங்கம் வருமோ என்றால் வாராது
இந்த்ரன் பொதுப் பெயர் வேத ஒலியைக் கொண்டே பிரஜாபதியைப் படைக்கின்றான் –
பூ என்ற சொல்லின் மூலம் பூமியைப் படைக்கின்றான்
ஆரம்பத்தில் வேத வாக்யங்கள் படைக்கப் பட்டன -அதில் இருந்தே அனைத்தையும் படைத்தான் -மனு ஸ்ம்ருதி-

விரோத -சொல்லை முன் ஸூத்ரத்தில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்
சப்தே -வைதிக சப்தத்தில் விரோதம் வரும்
சரீரம் உண்டு என்றாலே அவயவங்களுடன் இருந்து உத்பத்தி விநாசம் வரும்
உத்பத்திக்கு முன்னும் விநாசத்துக்குப் பின்னும் இந்திராதி சொற்களுக்கு உரிய பொருள் இல்லாமல் போகும்
அநித்யத்வமும் ஏற்க நேரிடுமே என்றால்
இதி சேத் ந -இப்படிச் சொல்வது தவறு
அத பிரபவாத் -இந்த்ராதிகள் நசித்தவுடன் நித்தியமான வேதங்களால் இந்த்ராதியின் ஆக்ருதிகளை நினைத்து
நான்முகன் புது புது இந்த்ராதிகளைப் படைக்கிறான்
ததா யதா பூர்வமே கல்பயத்
இதுக்குப் பிரமாணம் ஏது என்றால்
ப்ரத்யஷ அநுமா நாப்யாம்-ஸ்ருதியாலும் ஸ்ம்ருதியாலும் தெரிந்து கொள்கிறோம் –
ஆகையால் அவையே பிரமாணம்

வேதத்தில் –
வேதே ந நாம ரூபே வியாகரோத் ஸதா ஸதீ பிரஜாபதி என்றும்
ஸ்ம்ருதியில்
ஸர்வேஷாஞ்ச ஸ நாமானி கர்மாணி விவிதானி ச
வேத ஸப்தேப்ய ஏவாதவ் ப்ருதக் ஸம்ஸ் தாச்ச நிர்மமே -என்றும் உள்ளனவே –

———————————————–

ஸூத்ரம் -91-அத ஏவ ச நித்யத்வம் —1-3-28-

விஸ்வா மித்ரர் வசிஷ்டர் கூறியது போன்றவை –
இவர்கள் கல்ப காலத்தில் கர்ம பலன்களுக்கு தக்க படி தோன்றுகின்றனர்
அவர்களுக்கு வேதத்தில் குறிப்பட்ட பகுதிகள் தானாகவே தெரியத் தொடங்கும்
ஆக வேத வரிகள் ஒவ்வொரு கல்பத்திலும் தொடர்ச்சியாக ஒருவருக்குப் பின் ஒருவருக்கு உபதேசிக்கப் படும்

அத ஏவ -ப்ரஹ்ம தேவன் வைதிக சப்த்தத்தாலே ஜகத்தில் ஆகாரத்தை நினைத்து ஸ்ருஷ்டி செய்வதாலேயே
ச நித்யத்வம்-நித்யத்வம் ஸித்திக்கிறது
நைமித்திக பிரளயம் முடிந்த உடன் ப்ரஹ்ம தேவன் வஸிஷ்ட விச்வாமித்திராதியரின் பதவிகளுக்கு
உரிய புண்யம் மிக்க ஜீவர்களை நினைத்து
விச்வாமித்ரஸ்ய ஸூ க்தம் பவதி -முதலிய வேத பாகங்களையும் ஆராய்ந்து முன் கல்பங்களின் படியே
இந்த கல்பத்திலும் ஸ்ருஷ்டித்து அவர்கள் மூலமாக மந்த்ரங்கள் ஸூ க்தம் இவற்றைப் பரப்பச் செய்தார்

ஆனால் பிராகிருத பிரளயத்தில் ப்ரஹ்மாதிகள் யாவரும் நசித்த படியால்
பிராகிருத ஸ்ருஷ்டி தொடங்கும் போது நித்யம் எப்படிப் பொருந்தும்
என்ற சங்கையை மேல் பரிஹரிக்கிறார் –

————————————————-

ஸூத்ரம் -92-சாமான நாம ரூபாத்வாத் ச ஆவ்ருத்தௌ அபி அவிரோத தர்சநாத் ஸ்ம்ருதே ச —1-3-29-

பிரளய காலத்துக்கு பின்புமுன்பு உள்ளது போலே தோன்றுவதால் வேதங்கள் நித்யம் –
தைத்ரியம் –
ஸூர்யா சந்த்ரமசௌ தாதா யதா பூர்வமகல்பயத் -என்றும்

ஸ்வே தாஸ்வதார உபநிஷத்தில் –
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை -என்றும்

ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் –
யதர்த்துஷ் வ்ருது லிங்காநி நாநா ரூபாணி பர்யயே த்ருச்யந்தே தாநி தான்யேவ ததா பாவா யுகாதிஷூ -என்றும்
கல்பத்திலும் முன்பு இருந்தவை போலே அனைத்தும் தோன்றும் -என்றதே –

வேதங்களை முன் வரிசை மாறாமல் பிரமனுக்கு உபதேசிக்கிறார்
வேதத்துக்கு நித்யத்வம் என்பது முன்பு உச்சரித்த க்ரமத்தை நினைத்து
அதே க்ரமப்படி மறுபடியும் உச்சரிக்கப் படுவதே
அக்ஷரங்கள் நித்யம் என்பது அன்று –

தேவாதிகரணம் சம்பூர்ணம்

—————————————————-

1-3-8–மத்வதிகரணம் -தேவர்களுக்கு மதுவித்யை உண்டு-

கீழே தேவாதி சாமான்யத்துக்கு பகவத் உபாசன அதிகாரம் ஸ்தாபிக்கப் பட்டது
இதில் வஸ்வாதி தேவதா விசேஷங்களுக்கு மது வித்யை என்னும்
ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் உண்டு என்று ஸ்தாபிக்கிறார் –

ஸூத்ரம் -93-மத்வாதிஷூ அசம்பவாத் அநதிகாரம் ஜைமிநி-1-3-30-

மது வித்யை போன்ற விதைகளுக்கு தேவர்களுக்கு அதிகாரம் இல்லை -என்பர் ஜைமிநி
ஸூரியன் தேனை சேகரிக்கின்றான்-வேத ஓசைகளே தேன் –
நான்கு திசைகள் நான்கு வேதங்கள்-கிழக்கில் இருந்து ருக் வேதம்
இந்த அமிர்தம் போன்ற தேவை உபாசிப்பவன் வஸூக்களில் ஒருவன் ஆகிறான் –

சாந்தோக்யம் மது வித்யையில்
அசவ் வா ஆதித்யோ தேவ மது -என்று தொடங்கி
தத்யத் பிரதமம் அம்ருதம் தத் வசவ உப ஜீவந்தி –என்று கூறி –
ஸ ஏதத் அம்ருதம் வேத வஸூநா மேகோ பூத்வா அக்னிநைவ முகேந ஏத தேவ அம்ருதம்
த்ருஷ்ட்வா த்ருப் யந்தி –முதலிய வாக்யங்களால்
ருக் யஜுஸ் சாமாதி வேதங்களில் சொல்லப்பட்ட
கர்மாக்களால் ஏற்படும் ரசத்துக்கு ஆதாரம் ஆதலின்
ஆதித்யனை தேவமது என்றும்
கிழக்கில் வஸூக்கள்
தெற்கில் ருத்ரர்கள்
மேற்கே ஆதித்யர்கள்
வடக்கே மருத்துக்கள் சாத்யர்கள் போக்யமாக அனுபவிப்பதாகச் சொல்லி
அவர்கள் அனுபவிக்கும் ஆதித்யனின் அம்சங்களை உபாசிக்கத் தக்கவை யாகவும்
ப்ராப்யங்களாகவும் உபதேசிக்கிறது –

தேவர்கள் முன்பே வஸூக்களாய் உள்ளதால்
எப்படி தங்களையே உபாசிக்க முடியும் -எனவே பொருந்தாது –
பலனான வஸூத்வம் முன்னமே அடையப் பெற்று இருப்பதாலும் அதிகாரம் இல்லை என்பதே பொருந்தும்
என்பதும் பூர்வ பக்ஷம்
இதையே இரண்டு பூர்வ பக்ஷ ஸூத்ரங்கள் கூறும் –

மத்வாதிஷூ அசம்பவாத் -தாமே தம்மை உபாசித்து அசம்பாவிதம்
கர்மாவும் கர்த்தாவுமாய் இருக்காய் சம்பவியாது
அநதிகாரம் ஜைமிநி-
எனவே அதிகாரம் இல்லை என்று ஜைமினி

—————————————————-

ஸூத்ரம் -94-ஜ்யோதிஷி பாவாத் ச –1-3-31-

உயர்ந்த ஜ்யோதி ரூபமான பரம்பொருளை தேவர்கள் உபாசிப்பதால் –
ப்ருஹத் ஆரண்யாகாவில் –
தம் தேவா ஜ்யோதிஷாம் ஜயோதிராயுர் ஹோபாசதே அம்ருதம் -என்று சொல்லப்பட்டதே

அதனால் ப்ரஹ்ம உபாசனை தேவர்களுக்கும் மனுஷ்யர்களுக்கும் சொல்லப் பட்டாலும்
தேவர்களுக்கு அது சிறப்பு மது வித்யை பொருந்தாது-

ஜ்யோதிஷி -பர ப்ரஹ்மத்தின் இடம்
பாவாத் ச –தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதி -என்ற பர ப்ரஹ்ம உபாஸனம்
மனுஷ்ய தேவ இருவருக்கும் பொதுவாய் இருந்தும்
ஜ்யோதிஸ்ஸான பர ப்ரஹ்மத்தை தேவர்கள் உபாசிக்கிறார்கள் என்ற சிறப்பான வசனம்
வஸூ வாதிகளுக்கு மது வித்யையில் அதிகாரம் இல்லை என்று காட்டுகிறது என்பர் பூர்வ பக்ஷி

———————————————————

ஸூத்ரம் -95-பாவம் து பாதராயண அஸ்தி ஹி —1-3-32-

தேவர்களுக்கு மது வித்யையில் அதிகாரம் உண்டு என்று பாதராயணர் கருதுகின்றார் –
30/31 சூத்ரங்கள் பூர்வ பஷமாக்கி
இது சித்தாந்தம்

மது வித்யை மூலம் வஸூக்கள் தங்கள் அந்தர்யாமியாக உள்ள பரம் பொருளை உபாசிக்கிறார்கள் –
தங்களையே அல்ல-
இந்த கல்பத்தில் வஸூவாக உள்ளவர்கள் அடுத்த கல்பத்திலும் வஸூவாக இருக்க உபாசிக்கின்றனர்-
எனவே அவர்களுக்கும் அதிகாரம் உண்டு-

து சப்தம் ஜைமினி பக்ஷத்தை மறுதலிக்கிறது
பாவம் து பாதராயண -அதிகாரம் உண்டு என்று பாதராயணர் கூறுகிறார்
ஏன் எனில்
அஸ்தி ஹி-உபாஸ்யத்வமும் ப்ராப்யத்வமும் உள்ளன
ய ஏதா மேவம் ப்ரஹ்ம உபநிஷதம் வேத -என்று க்ருத்ஸன முழு மது வித்யைக்கும் ப்ரஹ்ம வித்யை என்றே பெயர்
இவர்களை சரீரமாகக் கொண்ட பர ப்ரஹ்ம உபாசனை என்றவாறு
கல்பாந்தரத்தில் தங்கள் தேஹ முடிவில் ப்ரஹ்மத்தை அடைவதில் விரோதம் இல்லையே –

————————————————————

2-9- அப ஸூத்ர அதிகரணம்

கீழே தேவாதிகளுக்கும்
வ ஸூ முதலிய தேவ விசேஷங்களுக்கும்
ஆர்த்தித்தவமும் சாமர்த்தியமும் இருப்பதால் ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் உண்டு என்று ஸ்தாபித்தார்
அப்படி என்றால் நான்கு வர்ணத்தாருக்கும் ஏற்கலாமே
என்ற சங்கையை நீக்குகிறார் இதில்

ஸூத்ரம் -96-ஸூகஸ்ய தத நாதர ஸ்ரவணாத் ததா ஆத்ரவணாத் ஸூச்யதே ஹி –1-3-33

அன்னப் பறவைகளின் பேச்சைக் கேட்ட ஜானஸ்ருதியின் சோகம் -அவன் உடனே
ரைக்வ ரிஷியிடம் ஓடியதில் இருந்து புரிகின்றது
இது முதல் 39- வரை ஸூத்ரர்களுக்கு ப்ரஹ்ம ஆராய்ச்சி பொருந்துமா என்றது பற்றி விளக்கும்

இரண்டு அன்னப் பறவைகள் -அவரை ரைக்வர் என்று நினைத்தாயோ என்றதும் ஓடி
ரைக்வரும் ஸூத்ரா உன்னுடைய மரியாதையைக் கண்டு மகிழ்ந்து உபதேசிக்கின்றேன் என்றார்
இது ஜாதி வாக்கியம் அல்லை
அன்னப் பறவைகள் பேச்சை கேட்டு மனம் வருந்தியதால் என்பதே பொருள்-

அர்த்தித்தவமும் சாமர்த்தியமும் ஸூத்ரர்களுக்கும் சம்பவிக்கலாமே
அக்னி கிடையாது என்றாலும் மனஸ்ஸாலே உபாஸிக்கலாமே
இதிஹாஸ புராணங்களைக் கேட்ட மாத்ரத்தாலேயே ப்ரஹ்ம ஸ்வரூபாதி ஞானம் ஏற்படலாமே
விதுரர் போன்றவர் ப்ரஹ்ம நிஷ்டர்கள் என்பது பிரசித்தம் அன்றோ
ஸம் சர்க்க வித்யையில் -ஆஜஹார இமாச் ஸூத்ர -என்று ஸூ த்ர சப்தத்தால்
ஞான சுருதியை அழைத்து ரைக்குவர் ப்ரஹ்ம வித்யையை உபதேஸிக்கையாலே
ஸூ திறனுக்கும் அதிகாரம் உண்டு என்பர் பூர்வ பக்ஷி
அதை நிரஸனம் செய்கிறார்

உபநயனம் செய்து வேத அத்யயனம் செய்து வேதாந்த ஞானத்தால் தான் ப்ரஹ்ம ஞானம் என்பது ஸாஸ்த்ர சித்தம்
இதிஹாஸ புராணாதிகள் ஸ்வ தந்திரமான உபாயங்கள் அல்ல -வேதாந்த விளங்கங்களே
விதுராதிகள் முன் ஜென்மத்தில் ப்ரஹ்ம வித்யா நிஷ்டர்கள் -அந்த ஸம்ஸ்காரமே இப்பிறவியிலும் தொடர்ந்தது
ஸூத்ர என்று அழைத்தது சோகம் அடைந்தவன் என்றவாறு -ஜாதி வசனம் அல்ல
தத நாதர ஸ்ரவணாத்-அந்த ஹம்ஸ ரூபம் கொண்ட இரு ரிஷிகளின் அநாதர வாக்யத்தைக் கேட்டு
ததா ஆத்ரவணாத்—ஜானை சுருதி ராஜா ரைக்குவரைத் தேடி ஓடி வந்ததால்
அஸ்ய -அந்த ஞான சுருதிக்கு
ஸூக் ஸூஸ்யதே ஹி –சோகம் காணப்படுகிறது அன்றோ

——————————————————————-

ஸூத்ரம் -97-ஷத்ரியத்வ கதே -ச-1-3-34-

தானம் அன்ன தானம் போன்றவை ஞானஸ்ருதி செய்ததால் அவன் ஷத்ரியன்-
ஸூத்ரர்களுக்கு ப்ரஹ்ம உபாசனை அதிகாரம் இல்லை

ஸம் வர்க்க வித்யையின் தொடக்கத்தில்
ஜானஸ்ருதிர் ஹ பவ்த்ராயண பஹு தாயீ -முதலிய வாக்யங்களால்
சிறந்த கொடையாளி -கிராமங்களை தானம் பண்ணினவன்
அன்னம் உண்பித்தவன் -என்று
ஷத்ரிய வர்ணாஸ்ரம நிறைந்தவன் என்பதாலும்
ஸூத்ரன் என்ற சங்கை வேண்டாம் –

———————————————————————

ஸூத்ரம் -98-உத்தரத்ர சைத்ரரதேன லிங்காத் —1-3-35-

உத்தரத்ர -இந்த வித்யையின் மேல் பகுதியில் ப்ராஹ்மண ஷத்ரியர்களுக்கே சம்பந்தம் காணப்படுகிறது
அதக ஸுநகம் காபேய மபி பிரதாரிணஞ்ச -இத்யாதி வாக்கியத்தில்
அபி ப்ரதாரீ என்று சைத்ரதரன் எனப்படும் ஷத்ரியன் சொல்லப்படுகிறான்
சைத்ரரதேன லிங்காத் —காபேயம் என்பதுடன் தொடர்பால் -லிங்கத்தால் -அபிப்ரதாரி என்பவன்
ஷத்ரியன் என்றும் சைத்ரதரன் என்றும் தோன்றுகிறது
மற்றோர் பிரகரணத்தில் காபேயனுடன் சம்பந்தம் உள்ளவன் சைத்ரரதன் ஷத்ரியனே என்றும் காணப்படுகிறது
ஏதே நவ சைத்ர ரதம் காபேயோ அயா ஜயன் -என்ற இடத்திலும்
சைத்ர ரதோ நாம ஏக க்ஷத்ர பதிர ஜாயத -என்கிற இடத்திலும் அவ்வாறே

ஆகவே இவ் வித்யையில் ப்ராஹ்மணரான ரைக்குவரை விட்டு
வேறான ஞானஸ்ருதியும் ஷத்ரியனாகவே இருக்க வேண்டும் என்று கருத்து –

சைத்த்ரரதன் என்பவன் ஷத்ரியன் என்பதற்கு அடையாளங்கள் உண்டே –
சம்வர்க்க வித்யையில்-சௌனகன் மகனான காபேயனும்-
காஷ சே நி என்பவரின் மகனான அபிப்ராதாரி இருவரும் உணவு உன்ன அமர்ந்த போது
ஒரு பிரமச்சாரி வந்து பிச்சை கேட்க –
இங்கு காபேயன் பிராமணன் என்றும் அபிப்ரதாரி ஷத்ரியன் என்றும்
ஏதேர வை சைத்ரரதம் காபேயா அயாஜயன் -என்பதன் மூலம் காபேயன் பிராமணன் என்றும்
சைத்ரரதோ நாம ஏக ஷத்ரபதி ஜாயத -என்பதன் மூலம்
அபிப்ரதாரி ஷத்ரியன் என்று அறியலாம்

இத்தால் காபேயனுடன் ப்ரஹ்ம விதியை பயின்ற அபிப்ரதாரி -சைத்ர ரத வம்சத்தில் வந்தவன் -ஷத்ரியன் என்றும்
ரைக்ருவர் உடன் தொடர்புடைய ஞான ஸ்ருதியும் ஷத்ரியனாக இருக்க வேண்டும் –

அதனால் ஸூத்ரர்களுக்கு ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்றதாயிற்று

————————————————————–

ஸூத்ரம் -99-சம்ஸ்கார பராமர்சாத் தத பாவாபி லாபாத் ச –1-2-36-

ப்ரஹ்ம வித்யை கூறும் வரிகளில் உப நயனம் பஞ்ச சம்ஸ்காரங்கள் கூறப்படுவதாலும்-
சாந்தோக்யம் உபத்வா நேஷ்யே-உப நயனம் செய்து வைக்கின்றேன் -என்று உள்ளது
ப்ரஹ்ம விதியை பற்றி சொல்லும் பகுதியில் –
ந ஸூத்ரே பாதகம் கிஞ்சித் ந ச சம்ஸ்காரம் அர்ஹதி –
ஸூத்ரர்களுக்கு உப நயனம் போன்றவை பொருந்தாது என்பதாலும் அவர்களுக்கு
ப்ரஹ்ம உபாசனைக்கு அதிகாரம் இல்லை

சம்ஸ்கார பராமர்சாத் -வித்ய உபதேச பிரகரணத்தில் -உபத்வா நேஷ்யே -என்று உபநயனத்தைக் கூறுகையாலே
தத பாவாபி லாபாத் ச – ந ஸூத்ரே பாதகம் கிஞ்சித் ந ச சம்ஸ்காரம் அர்ஹதி –என்று
ஸூத்ரனுக்கு உப நயனம் இல்லை என்று சொல்வதால் ஞானசுருதி ஸூத்ர ஜாதியன் அல்லன் –

எனவே ஸூத்ரர்களுக்கு ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்றதாயிற்று-

—————————————————————-

ஸூத்ரம் -100-தத் பாவ நிர்த்த்தாரேண ச ப்ரவ்ருத்தே —1-3-37-

நைதத் அப்ரஹ்மணோ வேத்தும் அர்ஹதி
ஸூத்திரன் அல்ல என்பதை உறுதி செய்த கொண்ட பின்பே ப்ரஹ்ம வித்யை உபதேசிக்கப் பட வேண்டும்

ஜபாலை என்பவரின் குமாரன் சத்யகாமன் ஒரு குருவிடம் ப்ரஹ்ம வித்யை கற்க செல்ல –
உனது கோத்ரம் என்ன என்று கேட்டதும் தெரியாது என்று சொன்னதும்
இத்தை கேட்டதும் பிராமணன் மட்டுமே இப்படி உண்மை சொல்வான் –
எனவே உனக்கு ப்ரஹ்ம வித்யை உபதேசிக்கிறேன் -என்றார் –

——————————————————————-

ஸூத்ரம் -101-ஸ்ரவணாத் யய நார்த்த பிரதிஷேதாத் —1-3-38-

ஸூத்ரர்கள் வேதத்தைக் கேட்பதும் பொருளை ஆராய்வதும் அதன் பலனை பெறுவதும் கூடாது என்று வேதங்கள் கூறும்
தஸ்மத் ஸூத்ர சமீபே நாத்யேதவ்யம்-என்பதாலும்
ஸூத்ரர்களுக்கு ப்ரஹ்ம உபாசனைக்கு அதிகாரம் இல்லை –

——————————————————————–

ஸூத்ரம் -102-ச்ம்ருதே ச-1-3-39-

ஸ்ம்ருதிகளும் ஸூத்ரர்கள் வேதம் கேட்டால் காதை அறுக்க வேண்டும் –
வேதம் ஓதினால் நாக்கை அறுக்க வேண்டும்
மனப்பாடம் செய்தால் உடலை அறுக்க வேண்டும் என்பதால் அதிகாரம் இல்லை-

அத ஹாஸ்ய வேதம் உப ஸ்ருண்வதஸ் த்ரபு ஜதுப்யாம் ஸ்ரோத்ர பரிபூரணம் –இத்யாதி
ஸ்ம்ருதியாலும் ஸூத்ரனுக்கு ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்று ஸித்தம்

அப ஸூத்ராதி கரணம் சம்பூர்ணம்

—————————————————————–

ஸூத்ரம் -103–ப்ரமிதாதி கரணம் சேஷம்-1-3-39-

அங்குஷ்ட ப்ரமித அதிகரணத்தில் மனுஷ்ய உபாஸன அதிகாரம் பற்றிய பேச்சால்
ப்ராசங்கிகமாக மூன்று அதிகரணங்களில் தேவதாதி அதிகாரத்தை பிரஸ்தாபித்து
ப்ரக்ருதமான அங்குஷ்ட பிரமிதனுக்குப் பரமாத்மத் வத்தை
இரண்டு ஸூத்ரங்களாலே சாதிக்கிறார் –

ஸூத்ரம் -104-கம்ப நாத் –1-3-40

அங்குஷ்ட மாத்ரனைக் கண்டு தேவர்களும் அஞ்சி நடுங்குவதால் அவனே பரம் பொருள் –

கட உபநிஷத் –
யதிதம் கிஞ்ச ஜகத் சர்வம் பிராண எஜதி நிஸ்ஸ்ருதம்
மஹத்பயம் வஜ்ர முத்யதம் ய ஏதத் விதுரம் ருதாஸ்தே பவந்தி
பயதா ச்யாக் நிஸ் தபதி பயாத் தபது ஸூர்ய
பயா இந்திரஸ்ஸ வாயுஸ்ஸ ம்ருத்யுர் தாவாதி பஞ்சம-

தைத்ரிய உபநிஷத் –
பீஷாஸ்மாத் வாத பவதே பீஷோ தேதி ஸூர்ய
பீஷாஸ் மாதக் நிஸ் சேந்த்ரஸ்ஸ ம்ருத்யும் தாவதி பஞ்சம –

இப்படிப்பட்ட பெருமைகளை யுடையவனே பர ப்ரஹ்மம்-

——————————————-

ஸூத்ரம் -105-ஜ்யோதிர் தர்சநாத் –1-3-41-

அங்குஷ்ட மாத்ரனை மிகுந்த ஒளி உள்ளவனாகச் சொல்லுவதால் அவனே பரம் பொருள் –

கட உபநிஷத் –
ந தத்ர ஸூர்யோபாதி ந சந்திர தாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதோயம் அக்னி –
தமேவ பாந்த மநு சர்வம் தஸ்ய பாஸா சர்வமிதம் விபாதி –

இப்படிப்பட்ட பெருமை உடையவன் பரம் பொருளாகவே இருக்க முடியும்-

ப்ரமிதாதி கரணம் சேஷம் சம்பூர்ணம்

————————————————–

1-3-10-அர்த் தாந்தரத்வ அதி வ்யபதேச அதிகரணம் -ஆகாயம் எனபது ப்ரஹ்மமே-

முன்பு அங்குஷ்ட பிரமிதம் பரமாத்மா என்று சாதிக்கப் பட்டது
அதற்கு முன் தஹர வித்யை புத்தியில் இருப்பதால்
அதற்கு அடுத்த ப்ரகரணத்தில் உள்ளதும்
தஹர வித்யைக்கு அங்கமுமான
ஆகாஸோ ஹவை நாம ரூபயோர் நிர்வஹிதா என்னும் வாக்யத்தில் முக்தாத்மாவே பேசப்படுகிறான்
என்று சங்கித்து
நிராகரிக்கிறார் என்று சங்கதி

ஸூத்ரம் -106-ஆகாச அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் —1-3-42-

ஆகாசத்துக்கும் மற்றவற்றுக்கும் வேறுபாடுகள் தெளிவாகக் காட்டப் பட்டுள்ளதால் ஆகாயம் எனபது பரம் பொருளே

முக்தி பெற்ற ஜீவனே ஆகாசம் என்பர் பூர்வ பஷி –

சாந்தோக்யம் –
அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம் சந்திர இவ ராஹோர் முகாத் ப்ரமுச்ய
தூத்வா சரீரமக்ருதம் க்ருதாத்மா ப்ரஹ்ம லோகமபி சம்பவாமி –

சித்தாந்தம் –
ஆகாயத்தைக் கூறும் பொழுது –
நாம ரூபயோர் நிர்வஹிதா -பெயர் மற்றும் உருவங்களை நிர்வஹிப்பவன்
என்பதால் ஆகாயம் ஜீவன் அல்ல பரம் பொருளே –

ஆகாச -ஆகாசம் எனப்படுவது பரமாத்மாவே -முக்தன் அல்லன்
ஏன் எனில்
அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் —பரமாத்மாவுக்கு அசாதாரணமான நாம ரூபங்களை நிர்வஹித்தலும்
அவற்றால் ஸம்பந்தப்படாமையும் கூறப்படுவதாலும்
மேலும்
நிருபாதிக ப்ரஹ்மத்வம் அம்ருதத்வம் ஆத்மத்வம் இவற்றாலும்
ஆகாசம் என்பது பரமாத்மாவே –

———————————————————

தத்வ மஸி -என்று ஜீவனுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஐக்யம் சொல்லுவதாலும்
நேஹ நா நாஸ்தி -என்று பேதத்தைத் தடுப்பதாலும்
ஜீவனைக் காட்டிலும் பரமாத்மாவுக்கு அர்த்தாந்தரம் சொன்னது தகாது என்ற சங்கை தோன்ற
விடை தருகிறார் –

ஸூத்ரம் -107-ஸூஷூப்த்யுத் க்ராந்த்யோ பேதேந –1-3-43-

தூங்கும் பொழுது உள்ள ஜீவனும் உயிர் பிரியும் பொழுது உள்ள ஜீவனும் வெவ்வேறு என்பதால்
ஜீவன் வேறு பரம்பொருள் வேறு

பூர்வ பஷி –
தத்வ மஸி–
அஹம் பிரம்மாஸ்மி –
நேஹ நா நாஸ்தி -என்பர்

சித்தாந்தம் –
ப்ருஹத் உபநிஷத் –
ப்ராஜ்ஞே நாத் மநா சம்பரிஷ்வக்தோ ந பாஹ்யம் கிஞ்சன வேத நாந்தரம் –
ஜீவன் உறங்கும் பொழுது பரம் பொருளால் அணைத்துக் கொள்ளப் படுகிறான் –
அப்பொழுது அவனுக்கு எதுவும் தெரியாத நிலையில் உள்ளான் என்றும்

ப்ராஜ்ஞே நாத் மநான் வாரூட உத்சர்ஜன்யாதி -என்று
பரம் பொருளுடன் சென்று சேர்த்தி பெறுகின்றான்

எனவே ஜீவனும் பரம் பொருளும் ஓன்று அல்ல -ஆகாயம் பர ப்ரஹ்மமே ஜீவன் அல்ல-

வ்யபதேசாத்-என்ற பதத்தைக் கூட்டிக் கொள்ள வேண்டும்
ஸூ ஷூப்த்யுத் க்ராந்த்யோ பேதேந –ஸூ ஷூப்ததி தசையிலும் யுத்க்ராந்தி தசையிலும்
அத்யந்த அஞ்ஞனனான ஜீவனைக் காட்டிலும்
யோ பேதேந –அதே சமயத்தில் ஸர்வஞ்ஞனான ஜீவனைக் குறிப்பிடுவதால் இரண்டும் வெவ்வேறே
பரமாத்மா அர்த்தாந்தர பூதனானவனே என்றவாறு –

————————————————————-

ஸூத்ரம் -108-பத்யாதி சப்தேப்ய —1-3-44-

பதி என்ற பதம் மூலம் ப்ரஹ்மம் அழைக்கப் படுவதால் அவனும் ஜீவனும் ஓன்று அல்ல

ப்ருஹத் உபநிஷத் -சர்வஸ்யாதி பதிஸ் சர்வஸ்ய வஸூ சர்வஸ் யேசாந-என்று
அனைத்துக்கும் நாயகன் -நியமிப்பவன் -சர்வேஸ்வரன் என்பதால்
பரம் பொருளும் ஜீவனும் வேறு -ஆகாசம் எனப்படுபவன் பரம் பொருளே –என்றதாயிற்று-

பத்யாதி சப்தேப்ய -ஸர்வஸ்ய அதிபதி –ஸர்வஸ் ஈஸாநா –ஸர்வஸ்ய வஸீ –இத்யாதிகளால்
தழுவப்படும் ப்ராஞ்ஞனை பதி என்றும் -ஈஸாநா என்றும் வஸீ என்றும் சொல்வதால்
ஆகாசம் பரமாத்மாவே என்று ஸித்தமாயிற்று
ஐக்யம் கூறியதும்
பேதத்தைத் தடுத்ததும்
ஸர்வ ஜகத்துக்கும் அந்தர்யாமி ஒருவனே
ஆதலாலும் ப்ரஹ்ம சரீரம் இல்லாத வஸ்துவே உலகில் இல்லாமையாலும் பொருந்தும் என்று
ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலான் -என்ற ஸ்ருதியிலே நன்கு கூறப்பட்டது என்று திரு உள்ளம்

அர்த் தாந்தரத்வ அதி வ்யபதேச அதிகரணம் சம்பூர்ணம்

———-

பத்து அதிகரணங்களால் கூறப்பட்ட கருத்துக்கள்

1-த்யுப் வாத் யாயதனம் –விஸ்வமே பகவானுக்கு ஆத்மா
2-பூமா -எல்லையற்ற கருணை
3-அக்ஷர -நியமனமும் ஸர்வ ஆதாரத்வமும்
4-ஈஷதி கர்ம வ்யபதேசம் -முக்தர்களுக்கு போக்யமான ஸ்வ பாவம்
5-தஹர -தஹரமான தன்னை ஆதாரமாகக் கொண்ட அனைத்தையும் கொண்டமை -தஹர ஸ்வாதார ஸர்வத்வம்
6-ப்ரமித -ஹ்ருதயத்தில் பரிமிதனாய் இருந்து ஸர்வ நியாந்தாவாதல்
7-தேவதா -தேவதைகளால் உபாஸிக்கப் படுதல்
8-மத்வதி கரணம் -வஸூ வாதி தேவதைகளால் ஸ்வ சரீரக பரமாத்மா உபாஸிக்கப் படுத்தல்
9-அப ஸூத்ர –ஸூ த்ராதிகளால் உபாஸிக்கக் தகாத தன்மை
10-அர்த்தாந்தரத்வா திவ்ய பதேச -நாம ரூபாதி ஏக கர்த்ருத்வம்

என்ற பத்து கல்யாண குணங்களாலே பூஷிதனான ஸ்ரீயப்பதி புருஷோத்தமன்
இந்த மூன்றாம் பாதத்தால் விசாரித்து ஸ்தாபிக்கப் பட்டான் –
என்று ஸ்வாமி தேசிகன் அருளுகிறார் –

————–—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை –முதல் அத்யாயம் –இரண்டாம் பாதம் —

November 26, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவிநீம்
பூர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூமதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

———-

முதல் பாதத்தில் மிகவும் தெளிவற்ற -அஸ்பஷ்ட தரமான -ஜீவாதி லிங்கங்களையுடைய
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் -முதலிய வேதாந்த வாக்கியங்களை
பரம புருஷனே காரணம் என்று விளக்குவன என்று ஸ்தாபித்த ஸ்ரீ பாஷ்யகாரர்
பின்வரும் மூன்று பாதங்களால்
அஸ்பஷ்டமாயும்
ஸ்பஷ்டமாயும்
ஸ்பஷ்ட தரமாயும் உள்ள
ஜீவாதி லிங்கங்களைக் கொண்ட வாக்கியங்களை முறையே
பரம புருஷ காரணத்வத்தை விளக்குவன என்று ஸ்தாபிக்கிறார் என்று இவ்விடம் சங்கதி

மேலும் முதல் பாதத்தால் வேதாந்த வாக்யங்கள் ப்ரஹ்ம பரம் அல்ல என்ற யோகம் விலக்கப்பட்டது -அயோக வ்யச்சேதம் –
மேல் வரும் மூன்று பாதங்களாலும் -அவ்வாக்கியங்கள் ப்ரஹ்மத்தைத் தவிர வேறு ஒன்றையும் விலக்காதவை
என்று அந்ய யோக வ்யச்சேதம் -என்று மற்றோர் சங்கதி

மேலும் முதல் பாதத்தில் சர்வ வேதாந்த வாக்கியங்களும் ப்ரஹ்மத்தைப் போதிப்பது வல்ல என்று ஆக்ஷேபித்து
ப்ரஹ்ம போதகங்களே என்று நிரூபிக்கப் பட்டது
பின் வரும் மூன்று பாதங்களிலோ ஒவ்வொரு வாக்கியம் ப்ரஹ்ம பரமானாலும் மற்றோர் வாக்யம் அப்படி அல்ல என்று
க்ரமமாகப் பல வாக்கியங்களையும் ஆக்ஷேபித்து ப்ரஹ்ம பரமே என்று சாதிக்கப் படுகிறது என்று மூன்றாவது சங்கதி –

இதனால் முதல் பாதம்
அடுத்து த்ரீ பாதீ -என்று இரு பிரிவாக்கப் பேசப்படுகிது

இரண்டாம் பாதத்தில் ஜகத்து ப்ரஹ்ம சரீரம் என்றும்

மூன்றாம் பாதத்தில் ப்ரஹ்மம் உலகின் ஆதாரமானவன் என்றும்

நான்காவதில் தாம் சொல்லும் கருத்துக்களுக்கு விரோதமாக வாதம் செய்யும் சாங்க்யாதிகளின்
பர பக்ஷிகளின் பக்ஷம் கண்டிக்கப்படுகிறது என்றும் சங்கதி –

————

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்- இரண்டாம் பாதம் -ஆறு அதிகரணங்கள் —33 ஸூத்ரங்கள் –

——–

முதல் அதிகரணம்-சர்வத்ர பிரசித்த அதிகரணம்-ப்ரஹ்மமே அனைத்தும் எனபது பரம் பொருளே-

முன் அதிகரணத்தில் –ப்ரதர்த்தன வித்யையில் –
இந்த்ர ப்ரணாதி ஸப்தங்கள் மஹா வாக்ய ஸ்வாரஸ் யத்தாலே எவ்வாறு ப்ரஹ்ம பரங்கள் ஆகின்றனவோ
அப்படியே சாண்டில்ய வித்யையும் மஹா வாக்ய ஸ்வாரஸ் யத்தாலே ஜீவாத்ம பரம் என்ற சங்கையால்
இவ் வதிகரணத்திற்கு சங்கதி

ஸூத்ரம் -33-சர்வத்ர பிரசித்த உபதேசாத்-1-2-1-

சர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலா நிதிசாந்த உபாசீத -அனைத்தும் ப்ரஹ்மமே
தோஷங்களும் கூட -கர்மம் தொடர்பு -தோன்றி மறைந்து -இவையுமா ப்ரஹ்மம்
அந்த்ர்யாமிதயா-என்பதால் –
எந்த ஒன்றிடம் இருந்து அனைத்தும் தோன்றுகிறதோ -எதனைச் சார்ந்து வாழ்கின்றதோ –
எதனிடம் சென்று மறைகின்றதோ அதுவே ப்ரஹ்மம்-

சாந்தோக்யம் -3-14-1- சர்வம் கல்விதம் ப்ரஹ்ம–தஜ்ஜலாநிதி
தைத்ரிய -3-1- யதோ வா இமாநி பூதா நி ஜாயந்தே யேன ஜாதாநி ஜீவநதி யத்ப்ரத்யபி சம்விசந்தி தத்விஜ்ஞாச ஸ்வதத் ப்ரஹ்ம –
தைத்ரிய உபநிஷத் –6-9-ஆனந்தோ ப்ரஹ்மேதி வ்யஜா நாத் ஆனந்தாத் ஏவ கல்வி மானி பூதானி ஜாயந்தே -என்று
ஆனந்தமாகவே ப்ரஹ்மத்தை அறிய வேண்டும்
ஸ்வேதாஸ்வர உபநிஷத் -6-9- ச காரணம் கரணாதி பாதிபோ ந சாஸ்ய கஸ்சித் ஜா நிதா ந சாதிப –அவனே காரணம் –
அனைத்து ஆத்மாக்களுக்கும் ஆத்மாவாக உள்ளவனும் அவனே -என்கிறது-

சாந்தோக்யம் இரண்டாம் அத்தியாயத்தில் ஜ்யோதிர் வித்யைக்குப் பிறகு சாண்டில்ய வித்யை
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம–தஜ்ஜலாநிதி-என்று தொடங்குகிறது
தன் கருத்தையும் பிறர் கருத்தையும் பின் பற்றி இங்கு பாஷ்யத்தில் இரண்டு நிர்வாஹங்கள் காட்டப்படுகின்றன

சர்வம் கல்விதம் ப்ரஹ்ம–தஜ்ஜலாநிதி -என்னும் இடத்தில்
ப்ரஹ்ம சொல் ஜீவனைக் குறிக்கிறதா பரமாத்மாவையா என்று சங்கை
இங்கு பரமாத்மா அல்ல -ப்ரத்யகாத்மா -ஜீவனே -என்று பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
ஜீவனுக்கே ஸர்வ பாபங்களுடன் ஸமமான இடத்தில் இருக்கும் நிலை உண்டு –
ஸர்வம் என்று குறிப்பிடும் ப்ரம்மா முதல் ஸ்தாவரம் வரையான ஜகத்தின் வடிவம் என்பது
ஜீவனுக்கே கூடும் என்கிறார்

இதனைக் கண்டிக்கிறார் ஸூத்ரகாரர் –

சர்வத்ர -ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம -இதில் ஸர்வம் என்று குறிப்பிடும் ஜகத்தில் –
ப்ரஹ்ம என்று சொல்லப்படும் ஜகத்தில் -ஆத்மா -ப்ரத்ய காத்மா -ஜீவன் அன்று –
பிரசித்த உபதேசாத்-வேறு ஸ்ருதிகளிலும் ப்ரஸித்தமான ஜன்ம ஸ்திதி லய காரணத்வத்தை
ஜகதாத் மத்வத்துக்கு ஹேதுவாக தஜ்ஜலான் -என்று உபதேஸிக்கையாலே
தஜ்ஜமாயும்
தல்லமாயும்
ததனமாயும்
இருப்பதால் மூன்று ஹேதுக்கள் ஆகின்றன
தஜ்ஜலான்–என்கிற பதம் நகாராந்தம்
ஜகத்தில் ஜன்மாதி ஹேதுத்வம் -ஏகோ ஹை வை நாராயண ஆஸீத் –முதலிய இடங்களில்
ப்ரஹ்மத்துக்குத் தானே ப்ரஸித்தம்
ப்ரஹ்மம் ஜகதாத்மகம் என்றது இரண்டும் ஸ்வரூபத்தால் ஓன்று என்று அன்று
சர்வத்துக்கும் காரணம் அந்தர்யாமி என்ற காரணத்தால் ஜகதாத்மகம் என்கிறோம்
இப்படி தாதாத்ம்யம் -அபேதம் -கூறினால் சரீரமான ஜகத்தில் உள்ள தோஷங்கள்
ப்ரஹ்மத்திடம் ஒட்டாதவை என்று திரு உள்ளம் –

———————

ஸூத்ரம் -34–விவஷித குணோபபத்தே —1-2-2-
குணங்கள் பொருந்த வேண்டும் என்றால் பரம் பொருளைக் குறித்தே ஆக வேண்டும்

சாந்தோக்யம் -3-14-2-
மநோமய பிராண சரீரோ பாருப சத்ய சங்கல்ப ஆகாசாத்மா சர்வ கர்ம சர்வ காம சர்வ கந்த
சர்வ ரசசர்வ மிதயப்யாத்த அவாக்ய அநாதர-
அனைத்து குணங்களும் பரமாத்மாவிடம் மட்டுமே பொருந்தும்
மநோ மயா -தூய்மையான மனத்தால் மட்டுமே அறியப்படுபவன்
பிராண சரீர -உயிர்களுடைய பிராணனை தாங்கி உள்ளவன்
யாரிடம் பிராணன் கட்டுப்பட்டு உள்ளதோ யாரிடம் அடங்கி உள்ளதோ யாருக்கு அடிமையாக உள்ளதோ
யாருக்கு சரீரமாக உள்ளதோ அவனே பிராண சரீரன் எனப்படுகிறான் –
சரீரம் எனபது -ஒன்றைத் தன்னுள் கொண்டும் -ஒன்றுக்கு அடங்கி -ஒன்றுக்கு அடிமையாக உள்ளது -என்பரே –

பாருப -என்றால் பிரகாசத்துடன் கூடியவன் -அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹம் -ஸமஸ்த கல்யாண குணாத்மகன்
சத்ய சங்கல்ப -தடையற்ற உறுதி -சங்கல்பத்தாலேயே செயல் ஆற்றும் தன்மை
ஆகாசாத்மா -தெளிவு ஸூஷ்மம் சர்வ வ்யாபி -அனைத்துக்கும் ஆத்மா
சர்வ கர்ம -இந்த உலகங்கள் அனைத்தும் அவன் செயல்கள்
சர்வ காம -அனுபவிக்கும் பொருள் அனுவ அனைத்தும் தூய்மை
சர்வ கந்த சர்வ ரச-இத்தால்
கட 3-15-அ சப்தம் அ ஸ்பர்சம் -இவ்வுலகில் காணப்படும் மணம் சுவை போன்றவை அல்லவே அவனது
தோஷம் அற்ற -எல்லை அற்ற -மங்களமானவை-அவனாலே மட்டும் அனுபவிக்கக் கூடிய பல என்றவாறு
சர்வ மிதயப்யாத்த -இந்தத் தன்மைகள் வந்தேறி அல்ல -ஸ்வா பாவிகம்
அவாக்ய அநாதர-அவாப்த ஸமஸ்த காமன் அன்றோ -சர்வேஸ்வரேஸ்வரன் அன்றோ

—————–

ஆனால் இத்தகைய குணங்கள் பத்தரான ஜீவாத்மாக்களுக்குக் கூடா விட்டாலும்
முக்தாத்மாவுக்குப் பொருந்தலாமோ என்னில்

ஸூத்ரம் -35–அநுபபத்தே து ந சாரீர –1-2-3-

முன்பு கூறப்பட்ட குணங்கள் யாவும் ஜீவாத்மாவுக்கு பொருந்தாது என்பதால் –
இவன் ஜீவன் அல்லன் -என்றவாறு

து ஸப்தம் சங்கையை செய்கிறது
முன் நிலையில் தீய குணங்களுக்கு இருப்பிடமாய் இருந்த முக்தனுக்கும்
இந்தக் கல்யாண குணங்கள் தகாதவை யாதலின்
சரீர சம்பந்த யோக்யனான முக்தனும் ப்ரஹ்மம் அல்லன்

———–

ஸூத்ரம் -36-கர்ம கர்த்ரு வ்யபதேசாத் ச –1-2-4-

பரமாத்மாவை அடையப்படுபவனாகவும்
ஜீவாத்மாவை அடைபவனாகவும் கூறுவதால் பரமாத்மாவே ஆகும்

சாந்தோக்யம் -3-14-4-ஏதமித ப்ரேத்ய அபி சம்பவி தாஸ்மி-என்று
அந்த பரமாத்மாவை இந்த உலகை விட்டு நான் சென்ற பின்பு அடைகின்றேன் -என்பதால் –

இங்கு இருந்து சென்று நான் இப் ப்ரஹ்மத்தை அடைகிறேன் –
ஏதமித ப்ரேத்ய அபி சம்பவி தாஸ்மி–என்று
ப்ரஹ்மம் ப்ராப்யமாகவும்
முக்தன் ப்ராப்தா அடைபவன் என்றும் சொல்வதால்
அடைபவனான ஜீவனும் அடையப்படும் ப்ரஹ்மமும் ஒன்றாக முடியாது –

—————————

ஸூத்ரம் -37-சப்த விசேஷாத் –1-2-5-

ஒரு விதமான சப்த காரணமாக இவன் ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறானாவான்

சாந்தோக்யம் -3-14-3-ஏஷ மே ஆத்ம அந்தர்ஹ்ருதயே -என்று
இதயத்தில் உள்ளவன் என்னுடைய ஆத்மா என்றும்

இதே பிரகரணத்தில் உள்ள மற்ற ஒரு வாக்கியத்தில்
மே என்று ஜீவாத்மாவை ஆறாம் வேற்றுமையாலும்
ஆத்மா என்று பரமாத்மாவை முதல் வேற்றுமையாலும் –

சதபத ப்ராஹ்மணத்தில்-10-6-3-2-
வ்ரீஹீர்வா யாவோ வா சயாமாநோ வா ச்யாமாக தண்டுலோ வா ஏவமய மந்த்ராத்மன் புருஷோ
ஹிரண்மயோ யதா ஜ்யோதிர்தாமம் –
நெல் மணி பார்லி ஸ்யமாக மணி போன்ற புருஷன் ஆத்மாவில் புகை இல்லாத ஜ்யோதி போன்று இருக்கிறான்
இங்கு ஆத்மாவை அந்தராத்மன் என்று ஆறாம் வேற்றுமையிலும்
புருஷ ஹிரண்மய -என்று உபாசிக்கப்படும் வஸ்துவை முதல் வேற்றுமையிலும் கூறி இருப்பதும் காண்க

இத்தால் பரமாத்மா ஜீவாத்மாவை விட வேறானவன் -என்றதாயிற்று –

———————

ஸூத்ரம் -38-ஸ்ம்ருதேச் ச–1-2-6-
ஸ்ம்ருதிகளிலும் இவ்வாறே கூறப்பட்டுள்ளதால் –

சர்வஸ்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்த ச்ம்ருதிர் ஞான அபோஹனம் -ஸ்ரீ கீதை -15-15-
யோ மாமேவ சம்மூடோ -15-19-
ஈஸ்வர சர்வ பூதா நாம் ஹ்ருத்தேச அர்ஜுன திஷ்டதி ப்ராமயன் சர்வ பூதானி யந்திர ரூடானி மாயயா–18-61-
தமேவ சரணம் கச்ச -18-62-

இவற்றில் ஜீவனை உபாசகனாகவும்
ப்ரஹ்மத்தை உபாஸ்யமாகவும் சொல்லிற்றே

————————–

ஸூத்ரம் -39-அர்ப்ப கௌகசஸ்வாத தத் வ்யபதேசாத் ஸ நேதி சேத ந நியாயத்வாத் ஏவம் வ்யோமவத் ஸ-1-2-7-

அர்ப்ப கௌகசஸ்வாத -மிகவும் சிறிய இடத்தில் இருத்தல்
சிறியதான ஹ்ருதயத்தை இருப்பிடமாகக் கொண்டதாலும் -சிறியவன் என்று ஓதப்படுவதாலும்
பரமாத்மா அல்ல என்று கூறுவது சரி இல்லை
உபாசன ஸுகர்யத்துக்காக தன்னை இப்படி அமைத்துக் கொள்கிறான் -ஆகாயம் போன்ற விபுவே அவன்

பூர்வ பக்ஷம்
சாந்தோக்யம் -3-14-3-ஏஷ ம ஆதமானந்தர் ஹ்ருதயே
அணீயான் வ்ரீஹேர் வா யாவத்
சர்வகதம் ஸூ ஸூ ஷ்மம் பரிபச்யந்தி தீரா-
இவற்றால் அவனே ஜீவாத்மா -என்பர்

சித்தாந்தம் –
ஜீவாத்மா அல்ல -உபாசனையின் பொருட்டே பரமாத்மாவே தான் சொல்லப் படுகிறான் –
அவன் ஆகாசம் போன்று மிகப்பெரியவன் என்பதை
சாந்தோக்யம் 3-14-3-
ஜ்யாயாந் ப்ருதிவ்யா ஜ்யாயான் அந்தரிஷாத் ஜ்யாயான் திவோ ஜ்யாயாத் அப்யோ லோகேப்ய–என்று சொல்லுமே

சந்தோக்ய உபநிஷத் -3-14-1-
சர்வே கல்விதம் ப்ரஹ்மம் தஜ்ஜலாநிதி சாந்த உபாசித-என்று
இவை அனைத்தும் ப்ரஹ்மமே – -காரணம் அனைத்தும் இதிலே உத்பத்தியாகி இதிலே லயிக்கிறது
ஆத்மாவாகவும் அந்தர்ப்ரேவேசித்து தரிக்க வைப்பதும் ப்ரஹ்மமமே -உபாசன வஸ்துவும் அவனே
சாந்தோக்யம் -3-14-1-
அத கலு க்ரதுமயோயம் புருஷோ யதா க்ரதுரஸ்மின் லோகே புருஷோ பவதி ததேத ப்ரேத்ய பவதி -என்று
புருஷன் நம்பிக்கை வடிவன் ஆவான் -அதே நம்பிக்கையுடன் இங்கு இருந்து செல்கிறான்
உபாசனை எவ்விதம் செய்யப்படுமோ அவ்விதமாகவே பலன் கிட்டும்
ஸ க்ரதும் குர்வீத -என்று சிறந்த நம்பிக்கையுடன் உபாசிப்பானாக –
சந்தோக்ய உபநிஷத்-3-14-4-
மநோ மய பிராண சரீரோ பாருப சத்யசங்கல்ப ஆகாசாத்மா சர்வகர்மா
சர்வகந்த சர்வரச சர்வ மிதமப்யாத்த அவாக்ய அநாதர-என்று
தூய்மையான மனத்தால் அறியத் தக்கவன் -பிராணனை சரீரமாகக் கொண்டவன் -பிரகாசம் ஆனவன் –
தடையில்லா சங்கல்பம் கொண்டவன் -ஆகாசம் போன்ற ஸூ ஷ்மரூபம் கொண்டவன்
அனைத்து செயல்களையும் செய்பவன் -தான் விரும்பும் அனைத்தையும் கொண்டவன் –
அனைத்து கல்யாண குணங்களையும் ஏற்றுக் கொண்டு யாரையும் சார்ந்து இராமல் யாரிடமும் வாய் பேசாமல் -என்கிறது
சாந்தோக்யம் -3-14-3-
ஏஷ ம ஆத்மாந்தர் ஹ்ருதயே அணியான் வ்ரீஹேர்வா யவாத்வா சர்ஷபாத்வா ச்யாமாகாத்வா ச்யாமாக தண்டுலாத்வா -என்று
இதயத்துள் ஆத்மாவாக உள்ள இவன் நெல்லைக் காட்டிலும்
கோதுமையைக் காட்டிலும் -கடுகைக் காட்டிலும் சயாமாகத்தைக் காட்டிலும் சிறியவன் என்றும்
சாந்தோக்யம் -3-14-3/4-
ஏஷ ம ஆத்மாந்தர் ஹ்ருதயே ஜ்யாயாத் ப்ருதிவ்யா ஜ்யாயாத் அந்தரிஷாத் ஜ்யாயாத் தயவோ ஜ்யாயாத்
அப்யோ லோகேப்ய சர்வ கர்ம சர்வகாம சர்வகந்த சர்வமிதப்யாத்தோ அவாக்ய அநாதர -என்று
இதயத்தில் உள்ள அவன் ஏன் ஆத்மா -பூமி -அந்தரிஷம் தேவ லோகம் அனைத்து லோகங்கள் காட்டிலும் முகப் பெரியவன்
அனைத்து செயல்களையும் செய்பவன் -அனைத்து விருப்பங்களும் நிறைவேற்றப் பெற்றவன்
அனைத்து நறுமணம் சுவைகள் கொண்டவன்
யாரையும் ஆதரீக்க வேண்டிய அவசியம் அற்றவன் –
உபாசிக்கப் படும் வஸ்து அவனே -அவனே அடைய வேண்டிய இலக்கு –

சாந்தோக்யம் –3-14-4-
ஏஷ மே ஆத்மா அந்தர்ஹ்ருதயே ஏதத் ப்ரஹ்ம —
இந்த ஆத்மா எனது இதயத்தில் உள்ளது -இது ப்ரஹ்மம்-
கருணை அடியாக நமது இதயத்தில் வந்து அமர்கின்றான்
சாந்தோக்யம் -3-14-4-
ஏதமித ப்ரேத்யாபி சம்பவி தாஸ்மி -என்று
இங்கு இருந்து புறப்படும் நான் அவனைச் சென்று அடைவேன் -உபாசனை மூலம் கிட்டப் பெறுவதைக் கூறும்
சாந்தோக்யம் -3-14-5-
யஸ்ய ஸ்யா தத்தா ந விசிசித் சாஸ்தி –என்று இத்தகைய உறுதி உள்ளவன் குறித்து எந்த சங்கையும் இல்லை

அர்ப்ப கௌகசஸ்த்வம் –சிறிய இடத்தைக் கொண்டு இருக்கை -இருதயத்தின் உள்ளே இருப்பதாகக் கூறுவதால்
அல்பமான ஹ்ருதயத்தை இடமாகக் கொண்டவன் ஆகையாலும்
தத் வ்யபதேசாத் -தானியன்களைக் காட்டிலும் சிறிய அணு ஸ்வரூபன் என்று கூறப்படுவதாலும்
இவன் விபுவான பரமாத்மாவாகக் கூடாது -ஜீவனாகத் தான் இருக்க வேண்டும்
ஸ நேதி சேத ந -இவ்வாறு கூறுவது தவறு
நியாயத்வாத் ஏவம் -பரம புருஷன் தானே உபாஸ்யனாகப் பேசப்படுகிறான்
வ்யோமவத் ஸ-விபுவான பரமாத்மாவே உபாசகர்களை அனுக்ரஹிக்க ஹ்ருதயத்துக்குள் அடக்கிய திருமேனியை யுடையவனாக்கிக் கொள்கிறான்
ஆதலால் அவனை இப்படி உபாஸிக்க வேண்டும் என்பது அல்பமாய்ச் சொல்வதின் கருத்து என்றவாறு –

———————

ஸூத்ரம் -40-சம்போக ப்ராப்திரிதி சேத் ந வை சேஷயாத்–1-2-8-

சரீரத்துக்குள் இருப்பதால் சுக துக்கங்கள் ஏற்படுமோ என்றால் அல்ல -வேறுபாடு உள்ளதால் ஆகும் –

பூர்வ பக்ஷம்
சரீர சம்பந்தம் அடியாக ஸூக துக்கங்கள் ப்ரஹ்மம் அனுபவிக்க வேண்டி வருமே

சித்தாந்தம்
அப்படி அல்ல –
கர்மங்கள் அடியாகவே ஜீவாத்மா ஸூக துக்கங்கள் அனுபவிக்கிறான்
ஸ்வாபாவிகமாக அபஹத பாப்மத்வாதி கல்யாண குணங்கள் கொண்ட ப்ரஹ்மம் வ்யாப்திகத தோஷம் அற்றவன்

சம்போக ப்ராப்திர் -சுக துக்கங்கள் ஏற்படுமே என்றால்
இதி சேத் ந -அது அல்ல
வை சேஷயாத்–விசேஷமான ஹேது இருப்பதால்
சுக துக்க போகத்திற்கு சரீரத்தின் உள் இருக்கு ஹேதுவல்ல -புண்ய பாப ரூப கர்ம பரவஸ்யமே
அது கர்ம சம்பந்தம் அற்ற ப்ரஹ்மத்துக்குப் பொருந்தாதே
ஸ்ருதியும் இத்தையே கூறுகிறது –
முண்டக உபநிஷத் -3-1-1-
தயோரன்ய பிப்பலம் ஸ்வா து அத்தி அநஸ்நன் அன்யோ அபி சாகசீதி -என்று
மரத்தில் இரண்டு பறவைகள் ஓன்று பழங்களை உண்கிறது மற்று ஓன்று அதனை நோக்கியபடி உள்ளது —

———–

2-2-அத்தா அதிகரணம் -உண்பவனாக கூறப்படுபவன் ப்ரஹ்மமே-

இப்படி பரமாத்மா கர்ம பல போக்தன் அல்லன் என்றால் கட வல்லியில் போக்தாவாகத் தோன்றுபவனும் ஜீவனாகவே ஏற்க நேரும்
என்ற சங்கையை பரிக்ரஹிக்கிறார் என்று சங்கதி
மேலும் கீழே ஹ்ருதயத்துக்குள் அல்ப ஸ்தானத்தில் பரம புருஷன் சிந்திக்கப் பட்டான்
இதில் குஹாம் ப்ரவிஷ்டவ்-என்று ஹ்ருதய குஹைக்குள் உள்ள பரமாத்மா சிந்திக்கப்படுகிறான் -என்பது கருத்து –

ஸூத்ரம் -41-அத்தா சராசர க்ரஹணாத்–1-2-9-

அனைவரையும் உண்பவனாகக் கூறப்படுபவன் பரமாத்மாவே -சேதன அசேதனங்களை உணவாகக் கூறப்படுவதால் ஆகும் –

விஷயம்
கடவல்லி –1-2-24-
யஸ்ய ப்ரஹ்ம ஸ ஷத்ரம் ஸ உபேபவத ஓதன –ம்ருத்யுர் யஸ்ய உபசேசநம் க இத்தா வேத யத்ர ஸ —
யாருக்கு அந்தணர் மற்றும் ஷத்ரியர் இருவரும் உணவாகிறார்களோ
யமன் யாருக்கு ஊறுகாய் ஆகிறானோ
அவன் எங்கு உள்ளான் என்று யார் அறிவார் -என்கிறது

பூர்வ பஷம் –
உண்பவனாக சொல்பவன் ஜீவாத்மாவே தான் -கர்ம பலன்களை அனுபவிப்பதால்

சித்தாந்தம்
சராசர க்ரஹணாத்-அனைத்தையும் உண்பவன் பரமாத்மாவே தான்
உண்பது என்றது கர்மம் காரணமாக அல்ல
படைத்து காத்து அழிக்கும் தன்மையைச் சொல்லும்
கடவல்லி -3-9-
ஸோ அத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்பதால்
அந்த விஷ்ணுவின் மிக உயர்ந்த இடத்தை அடைகிறான் என்பதால்
யமன் அனைவரையும் சம்ஹரிக்கிறான் -அந்தணர் ஷத்ரியர் என்றது அனைத்துக்கும் உப லஷணம்
ஆகவே இங்கு உண்பவனாக கூறப்படுவது பரமாத்வே தான் -எனபது சித்தாந்தம் –

அத்தா -அன்னத்தைப் பூஜிப்பவன் பரமாத்மாவே -ஜீவன் அன்று
ஏன் எனில்
சராசர க்ரஹணாத்-ஸமஸ்த சராசர ரூபமான ஜகத்தையும் ஒத்தனமாகக் கிரஹிக்கையாலே
இந்த போக்த்ருத்வம் கர்ம நிமித்தம் அன்று
ஜகத்தின் ஜென்ம ஸ்திதி லயங்களுக்குக் ஹேதுவான ஸம்ஹரிக்கும் தன்மையைக் குறிக்கிறது
மேலே வழியைக் கடந்து எம்பெருமானின் பரம பதத்தை அடைகிறான் என்று குறிப்பிடுவதாலும்
மிருத்யுவை உபசேசனமாகக் குறிப்படுவதாலும் அனைத்து சராசரங்களையும் போக்யமாகச் சொல்கிறது
இப்படியான அத்தாவின் -போக்தாவின் -தன்மை ஜீவனுக்கு கூடாது –

——————————

ஸூத்ரம் -41-ப்ரகரணாத் ஸ –1-2-10-

இங்கு உள்ள பிரகரணத்தாலும் பரமாத்மாவே ஆவான் –
இந்தப் பிரகரணமும் பரமாத்மா விஷயமே -அனைத்திலும் பரமாத்மாவே ப்ரக்ருதமாய் இருக்கிறான்

கடவல்லி -1-2-22-
மஹாந்தம் விபு மாதமா நம் மத்வா தீரோ ந சோசதி –
உய்ரந்தவனும் -எங்கும் வியாபித்து உள்ளவனும் ஆகிய பரமாத்மாவை உபாசிக்கும் அறிவாளி
ஒருத்தன் எதற்கும் வருத்தம் அடைய மாட்டான் –
கடவல்லி -1-2-23-
நாயமாத்மா ப்ரவசநேந லப்ய–ந மேதயா ந பஹிநா ச்ரு நேந யமைவைஷ வ்ருணுதே தநூம் ஸ்வாம்-என்று
பரமாத்மா சரவணம் மனனம் த்யானம் மூலம் மட்டுமே அடையச்ப் படுபவன் அல்லன் –
யார் ஒருவனைப் பரமாத்மா தேர்ந்து எடுக்கிறானோ அவனால் மட்டுமே அடையப் படுபவனாக உள்ளான் –
அவனுக்கு மட்டும் தனது ஸ்வரூபத்தைக் காண்பிக்கிறான்
கடவல்லி -1-2-24-
க இத்தா வேத யத்ர ஸ –
பரம்பொருள் இப்படிப் பட்டது என்பதை யார் அறிவார்கள் –
முன் கூறப்பட்ட பரமாத்மாவின் கருணையாலே மட்டுமே அவனை அடைய முடியும் என்றதாயிற்று –

பூர்வ பக்ஷம்
இங்கு உணவாக கொள்பவன் -என்று கர்ம பலனை அனுபவிப்பவனாகச் சொல்வது பரமாத்மாவாக இருக்க முடியாது
ஜீவாத்மாவாகவே தானே இருக்க முடியும்-
கடவல்லி -1-3-1-
ருதம் பிபந்தௌ ஸூ க்ருதச்ய லோகே குஹாம் பிரவிஷ்டௌ பரார்த்தே சாயதபௌ
ப்ரஹ்ம விதோ வதந்தி பஞ்சாக்நயோ யே ஸ த்ரிணா சிகேதா -என்று
கர்ம பலன்களை அனுபவிப்பவர் புண்ய லோகமான இந்த உலகில் இதயம் என்ற குகையில் நுழைந்து
இருப்பவர் என இருவர் உண்டு
இருளும் ஒளியும் போன்று -என்று இப்படி பஞ்சாக்னி செய்பவர்களும் மூன்று அக்னி கார்யம் செய்பவர்களுமான
ப்ரஹ்ம வித்துக்கள் கூறுவார்கள்-
இரண்டாவது என்றது புத்தி பிராணனை என்பவர் -பரமாத்மாவுக்குப் பொருந்தாது என்பர் –
இங்கு ஜீவாத்மாவும் புத்தி பிராணன் சொல்வதாகக் கொள்ள வேண்டும்-

—————————

மேலே ஒரு சங்கை
அத்தா என்றது பரமாத்மா ஆகாது
கீழே ருதம் பிபந்தௌ ஸூ க்ருதச்ய லோகே குஹாம் பிரவிஷ்டௌ பரார்த்தே சாயதபௌ
ப்ரஹ்ம விதோ வதந்தி பஞ்சாக்நயோ யே ஸ த்ரிணா சிகேதா -என்று
கர்ம பல போக்தாவான ஜீவனும் பிராணனும் ஹிருதய குகையுள் பிரவேசித்து உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது
ருதம் பிபந்தௌ-கர்ம பலனை அனுபவிப்பவர்கள் என்று பொருள்
கர்ம பல போகத்துக்கு உபகாரணமான பிராணனையும் கர்த்தா என்று உபசாரமாகக் கூறி
பிபந்தௌ-என்று ஜீவனையும் பிராணனையும் கூடச் சொல்கிறது என்ற
இந்த சங்கைக்கு விடை அடிசுத்த ஸூத்ரம் –

ஸூத்ரம் -42-குஹாம் பிரவிஷ்டை ஆத்மா நௌ ஹி தத் தர்சநாத் —1-2-11-

இதயம் என்கிற குகைக்குள் நிறைந்து இருப்பவர்கள் பரமாத்மாவும் ஜீவாத்மாவுமே —
புத்தியும் ஜீவாத்மாவும் அல்லர்-இவர்களுக்கு அவ்விதம் நுழைந்தது காணப்படுவதால்

சித்தாந்தம்
ஹ்ருதய குகையில் புகுந்து பலனைப் பருகுபவர்கள் பிராணனும் ஜீவாத்மாவுமோ புத்தியும் ஜீவாத்மாவுமோ அல்லர்
மாறாக ஜீவாத்மாவும் பரமாத்மாவுமே ஆவர் -ஏன் -என்றால்
தர்ச நாத் -இப்படியே காணப்படுவதால் ஆகும்

பரமாத்மாவைக் குறித்து
கடகவல்லி –2-12-
தம் துத்தச்சம் கூட மதுப்ரவிஷ்டம் குஹாஹிதம் கஹ்வரேஷ்டம் புராணம் அத்யாத்ம யோகாதி கமேன தேவம் மத்வா
தீரோ ஹர்ஷசோசௌ ஜஹாதி-என்று
காண்பதற்கு அரியவனும் -நம்முடைய கர்மம் காரணமாக மறைவாக உள்ளவனும் எங்கும் வியாபித்து உள்ளவனும்
இதயம் என்னும் குகையில் உள்ளவனும் -அந்தர்யாமியாக உள்ளவனும் -புராணமானவனும் தேவாதி தேவனும்
ஆகிய பரமாத்மாவை அறியும் ஒருவன் இன்ப துன்பங்களை விடுகிறான்

ஜீவாத்மாவைக் குறித்து
கடக வல்லி -4-7-
யா ப்ராணேந சம்பவதி அதிதிச் தேவதா மயீ குஹாம் பிரவிச்ய திஷ்டந்தீ யா பூதேபிர் வ்யஜாயத-என்று
கர்ம பலத்தை உண்பதால் அதிதி என்று கூறப்படும் எந்த ஒரு ஜீவாத்மா -அதிதி-
பிராணனுடன் வாழ்கின்றானோ -ப்ராணேந சம்பவதி-
தாமரை போன்ற இதயம் என்கிற குகையில் நுழைந்து -பிரவிச்ய திஷ்டந்தீ-உள்ளானோ –
தேவர்கள் எனப்படும் இந்திரியங்கள் மூலம் இன்பங்களைப் பெறுகிறானோ -தேவதா மயீ
பஞ்ச பூதங்களுடன் பிறக்கிறானோ -யா பூதேபிர் வ்யஜாயத–தேவாதி ரூபமாக பிறக்கிறான் –
என்று ஜீவாத்மாவைப் பற்றி கூறியது
ஆகவே
ருதம் பிபந்தௌ-இருவரும் புஜிக்கிறார்கள்-ஜீவாத்மா புஜிக்க பரமாத்மா புஜிக்கச் செய்கிறான் என்கிறது-

குஹாம் பிரவிஷ்டை –என்றும் -ருதம் பிபந்தௌ-என்றும் ஆத்மா நௌ ஹி -ஜீவனும் பிராணனும் கூறப்படவில்லை
ஜீவனும் பரமாத்மாவுமே குறிப்பிடப்படுகின்றனர்
ஏன் எனில்
தத் தர்சநாத் —அப்படிக் காண்கையாலே
இந்தப்பிரகரணத்தில் இரு ஆத்மாக்கள் குகையில் பிரவேசிப்பதாகவே குறிப்பிடப்படுகின்றனர்
தம் துத்தச்சம் கூட மதுப்ரவிஷ்டம் குஹாஹிதம் கஹ்வரேஷ்டம் புராணம் அத்யாத்ம யோகாதி கமேன தேவம் மத்வா
தீரோ ஹர்ஷசோசௌ ஜஹாதி–கடக வல்லி -2-12–என்று பரமாத்மாவுக்கு குஹ பிரவேசம் கூறப்படுகிறது –
யா ப்ராணேந சம்பவதி அதிதிச் தேவதா மயீ குஹாம் பிரவிச்ய திஷ்டந்தீ யா பூதேபிர் வ்யஜாயத-கடக வல்லி -4-7-என்று
ஜீவனுக்கு குஹ பிரவேசம் கூறப்படுகிறது
அத்தி -என்ற காரணத்தால் -கர்ம பலன்களை சாப்பிடுபவன் -அதிதி -எனப்படுபவன் ஜீவன்
ப்ராணேந சம்பவதி-ப்ராணனுடன் கூடி இருக்கிறது
தேவதா மயீ-இந்திரியங்களுக்கு அதீனமான போகங்களை யுடையது
குஹாம் பிரவிச்ய திஷ்டந்தீ யா -ஹ்ருதய கமலத்தினுள் இருப்பது
பூதேபிர் -பஞ்ச பூதங்களுடன்
வ்யஜாயத-தேவாதி ரூபங்களில் பலவாறாகத் தோன்றுகிறான் என்றபடி –

————————

ஸூத்ரம் -43-விசேஷணாத் ச –1-2-12-

ஜீவன் பரம்பொருள் தன்மைகள் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளதால்
சிறப்பித்துக் கூறப்படுவதால் -பரமாத்மாவே

கடவல்லி -1-7-
ப்ரஹ்மஜஜ்ஜம் தேவ மீட்யம் விதித்வா நிசாய்யே மாம் சாந்தி மத்யந்த மோதி -என்று
ஜீவாத்மா உபாசிப்பவன் என்று அதன் தன்மையை அறிந்த பின்னர் அவன் சாந்தியைப் பெறுகிறான்
ப்ரஹ்மஜஜ்ஜம்-ப்ரஹ்மத்தில் இருந்து வெளிப்பட்டவன் -ஞானம் நிறைந்தவன் -என்று ஜீவாத்மாவைக் குறிக்கும்
தேவ மீட்யம் விதித்வா-உபாசிப்பவன் -ப்ரஹ்மத்தை ஆத்மாவாக உள்ளவன்
கடவல்லி -3-2-
ய சேதுரீ ஜாநாநா மக்ஷரம் ப்ரஹ்ம யத்பரம் அபயம் ததீர்ஷதாம் பாரம் நாசிகேதம் சகேமஹி –என்று அடைபடும் ப்ரஹ்மம்
கடவல்லி -3-3-
ஆத்மாநம் ரதி நம் வித்தி சரீரம் ரதமேவ ச –என்று தொடங்கும் வரி மூலம் உபாசிப்பவனாக ஜீவாத்மா -என்றும்
கடவல்லி -3-9-
விஞ்ஞான சாரதீர் யஸ்து மன ப்ரக்ரஹ்வான் நர சோத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும்
கடவல்லி -3-1-
சாயாதபவ் -நிழலாகவும் ஸூர்ய ஒளியாகவும் -என்று அஞ்ஞாந மய ஸர்வஞ்ஞத்வ-
ஜீவாத்மாவைப் பற்றியும் பரமாத்மாவையும் பற்றி உண்டே –

பூர்வ பக்ஷம்
கடவல்லி-1-20-
யேயம் ப்ரேயதே விசிகித்சா மனுஷ்யே அஸ்தீத் ஏக நாயமஸ்தீந சைகே -என்று ஒரு மனிதன் மரணம் அடைந்த பின்னர்
சிலர் இதுவே அவன் என்றும் இது அவன் அல்லன் என்றும் சொல்வது ஜீவாத்மாவைப் பற்றியே

சித்தாந்தம்
அப்படி அல்ல -இங்கு சரீரத்தில் இருந்து கிளம்பிய ஜீவாத்மா உள்ளதா இல்லையா என்ற சங்கை பற்றிய கேள்வி இல்லை –
இப்படிக் கேட்க்கப் பட்டது என்று கொண்டால் கீழ் கேட்கப்பட்ட இரண்டு வரங்கள் பொருந்தாமல் இயலாமலுமாகும்
வாஜஸ்வரஸர் புத்ரன் நசிகேதஸ் -விஸ்வஜித் யாகம் நடத்தும் பொழுது கிழட்டுப்பசுக்கள் தானம் –
யமன் -மூன்று வரம் -வ்ருத்தாந்தம் கதை
இங்கு மரணத்தின் பின் மோக்ஷமான பரம புருஷார்த்தம் அடைவதையும் அடையாளத்தையும் பற்றிய கேள்வியே இது
பிருஹத் -2-4-12-ந ப்ரேத்ய சம்ஜ்ஞாஸ்தி -என்று உயிர் பிரிந்து ஸ்வரூப ஆவிர்பாவம் -அடைந்து
குறைவற்ற ஞானம் இல்லை என்கிறதே

சம்சார பந்தத்தில் விடுபட்ட பின்னர் உள்ளானா இல்லையா என்று ஸ்வரூபத்தைப் பற்றிய கேள்வி இது
மோக்ஷம் பற்றி பல தப்பான கருத்துக்கள் உண்டே
புத்தன் -அத்வைதி -நையாயிகன் -பாஸ்கரன் -நம் சித்தாந்தம் –
யமன் அவனை பரிஷித்த பின்பே உபதேசம்
கட 2-12-தம் துர்த்தர்சே கூட மநு ப்ரவிஷ்டம் -தொடங்கி -3-9-சோத்வன பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -முடிய
உபாசனம் பற்றியும் நசிகேதஸ் அறிய வேண்டியதைக் குறித்தும் உபதேசம்
ஆக இங்கு அனைத்தும் பொருந்தும் -சராசரங்களை உண்பவனாகக் கூறப்படுபவன் பரமாத்மாவே –

உபாசிப்பவன் உபாசிப்பிக்கப்படுபவன் -அடைபவன் -அடையப்படுபவன் -என்று கூறப்படுவதைக் காணலாமே
கட உபநிஷத் -ஜீவனைக் குறித்து –
ந ஜாயதே ம்ரியதே வா விபஸ்சித்-ஞானம் உள்ளவன் பிறப்பதும் இறப்பதும் இல்லை என்றும்
மஹாந்தம் விபு மாத்மானம் மத்வாதீரோ ந சோசதீ-என்று பரம்பொருளை
மிகப் பெரியவன் -எங்கும் உள்ளவன் -வருத்தப் படாதவன் -என்றும்
அணோர் அணீயான் மஹதோ மஹீயான் என்றும் கூறுவதால்
முன்பு சொல்லியவை ப்ரஹ்மத்தையும் ஜீவனையும் பற்றியவையே
பிராணன் அல்லது புத்தி பற்றியவை அல்ல என்கிறது-

இந்தப் ப்ரகரணத்தில் ஜீவனும் பரமாத்மாவும்
உபாஸகன் உபாஸ்யன் என்றும்
ப்ராப்தா ப்ராப்யன் என்றும்
விசேஷண விசேஷ்யங்கள் என்றும் கொண்டு விளக்கப்படுகிறார்கள்
ப்ரஹ்மஜஜ்ஜம் தேவ மீட்யம் விதித்வா நிசாய்யே மாம் சாந்தி மத்யந்த மோதி-என்று
ப்ரஹ்மத்தின் இடம் இருந்து தோன்றியதால் ப்ரஹ்மஜம் -ஜீவன் -என்பது ஞாதா
இத்தகைய ஜீவனை–ஈட்யம் தேவம் விதித்வா-வாஸூ தேவ ரூபியாக அறிந்து
நிசாய்யே -உபாஸித்து
மாம் சாந்தி மத்யந்த மோதி-அத்யந்த சம்சார நிவ்ருத்தியை அடைந்து விடுவான்
விஞ்ஞான சாரதீர் யஸ்து மன ப்ரக்ரஹ்வான் நர சோத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம்-என்று
விஷ்ணுவைப் ப்ராப்யம் என்றும் ஜீவனைப் ப்ராப்தா வாகவும் சொல்கிறதே
இந்த ருதம் பிபந்தவ் மந்த்ரத்திலும் -சாயாதபவ் என்று ஜீவனும் பரமாத்மாவும்
அஞ்ஞனும் ஸர்வஞ்ஞனுமாக முறையே குறிப்பிடுகின்றனர்

ஆகையால் பரமாத்மாவே அத்தா -ஜீவன் அல்லன் என்று தெரிகிறது –

ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூக்தி —

த்ரயந்த ஒஷ்ணா தஸ்து நிகில ஜகத் ஏக காரணஸ்ய -அசேஷ ஹேய ப்ரத்ய நீக -அனந்த ஞான ஆனந்த ஏக ஸ்வரூபஸ்ய-
ஸ்வ பாவிக அனவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கரஸ்ய -சகல இதர விலக்ஷனஸ்ய –
சர்வாத்ம பூதஸ்ய–பரஸ்ய ப்ரஹ்மண –ஜீவஸ்ய –பரமாத்மா அனுபவம் ஏவ மோஷமா சஷதே
யுக்தம் பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷ சாதனதயா ஜிஜ்ஞாஸ்யம் ஜெகஜ் ஜென்மாதி காரணம்
ப்ரஹ்ம அசித் வஸ்துன –பிரதான ரத –சேதநாச்ச -பக்த முக்த உபாய வஸ்தாத் விலக்ஷணம் –
நிரஸ்த ஸமஸ்த ஹேய காந்தம் சர்வஞ்ஞம் சர்வ சக்தி ஸத்யஸங்கல்பம்
ஸமஸ்த கல்யாண குணாத்மகம் சர்வாத்ம அந்தராத்மா பூதம் நிரங்குச ஐஸ்வர்யம் இதி

————-

2-3-அந்த்ராதிகரணம் -கண்களில் உள்ளவன் ப்ரஹ்மமே –

இப்படி ப்ரஹ்மத்துக்கு
தம் துர்த் தர்சம் கூடம் –க இத்தாவேத -என்று காண முடியாதவன் என்று செல்வதாலும்
ய ஏஷோ அக்ஷணி புருஷோ த்ருஸ்யதே -என்று கண்ணின் உள்ளே காணக் கூடியவன் என்று செல்வதாலும்
பரமாத்மா அல்ல என்ற சங்கை தோன்ற
அத்தைப் பரிஹரிக்கிறார்

முன் அதிகரணத்தில் உபாஸகன் ஹ்ருதயக் குகையில் இருக்கும் புருஷன் பரமாத்மா என்று நிரூபிக்கப் பட்டது
அதில் உபாஸகன் கண்ணில் இருக்கும் புருஷன் பரமாத்மா என்று நிரூபிக்கப் படுகிறது என்று சங்கதி –

ஸூத்ரம் -44-அந்தர உபபத்தே –1-2-13-

கண்ணில் இருப்பவனாக கூறப்படுபவன் பரம்பொருளே-அங்கு கூறுவது அவனுக்கு மட்டுமே பொருந்தும்

விஷயம்
சாந்தோக்யம் -4-15-1-
ய ஏஷோ ஷிணி புருஷோ த்ருச்யதே ஏஷ ஆத்மேதி ஹேவாச ஏதத் அம்ருதம் அபயமேதத் ப்ரஹ்ம-
அவனே ஆத்மா -அம்ருதம் -அபயம் -ப்ரஹ்மம்

சங்கை
கண்ணில் இருப்பதாகக் கூறப்படும் புருஷன்
ப்ரதிபிம்ப ஸ்வரூபமா
சஷுர் இந்த்ரிய அதிஷ்டான தேவதையா
ஜீவாத்மாவா
பரமாத்மாவா–என்று நான்கு வித சங்கைகள்

ய ஏஷ -என்று பிரசித்தம் போ சுட்டிக் காட்டுவதால் ஜீவனாகவும் இருக்கலாம்
ஜீவனுக்கும் கண்ணினுள்ளே சிறப்பாக இருப்பு பொருந்தும்
கண் திறந்தால் தானே சரீரத்திலஜீவனுக்கு ஸ்திதியையும் கதியையும் ஜனங்கள் நிச்சயிக்கிறார்கள்
கண்ணுக்கு அதிஷ்டான தேவதையாகவும் இருக்கலாம்
ஸூர்ய தேவதையாக -பிருஹத் 5-5-2-ரஸ்மி ப்ரேஷ -அஸ்மின் ப்ரதிஷ்டித -என்று
வேதப்பிரசித்தி இருப்பதால்
என்று பூர்வ பக்ஷம்

பூர்வ பக்ஷம்
காணப்படுபவன் என்பதால் அங்கு பிரதிபலிக்கும் ஒருவனே -ஜீவாத்மாவே –
உயிர் இருக்கிறதா இல்லையா என்று திறந்த கண்கள் மூலம் அறிவதால் அபிமான தேவதையே
பிருஹத் 5-5-2-ரஸ்மி ப்ரேஷ -அஸ்மின் ப்ரதிஷ்டித -என்று ஸூரயனில் காணப்படும் புருஷனே
இந்த மூவரில் ஒருவனே கண்ணில் உள்ளான்

சித்தாந்தம்
இதற்கு விடையாக
அந்தர -கண்ணுக்குள்ளே இருப்பவனான புருஷன் பரமாத்மாவே
ஏன் எனில்
உபபத்தே –
அங்கு கூறப்படும் விஷயங்கள் பொருந்த வேண்டும் என்பதால் -பரமாத்மாவே
சாந்தோக்யம்–4-15-3-
ஏஷ ஆத்மேதி ஹோவாச ஏததம்ருதமபயமேதத் ப்ரஹ்மேதி
ஏதம் சம்யத்வாம இத்யா சஷதே ஏதம் ஹி சர்வாணி வாமான்யபி சம்யந்தி
ஏஷ உ ஏவ வாமநீ ஏஷ ஹி சர்வாணி வாமானி நயதி
ஏஷ உ ஏவ பாம நீ ஏஷ ஹி சர்வேஷூ லோகேஷூ பாதி -சாந்தோக்யம் -என்று
அந்த பரம் பொருளே ஆத்மாவாகவும் -அமிர்தமாகவும் -அச்சம் இல்லாதவனாகவும் –
கல்யாண குணங்கள் நிரம்ப உடையவனாயும்–எல்லா நன்மை அளிப்பவனாயும் -எங்கும் உள்ளவனாயும் – போன்ற
பல தன்மைகள் உள்ளவனாய் சொல்லியதால் ப்ரஹ்மத்தையே சொல்லிற்று-

சமயத் வாமத்வம் என்பது -சிறந்த சுகமான புருஷார்த்தங்களுக்கு எல்லாம் இருப்பிடம் –
ஸம் யந்தி வாமாநி ஸூகாநி -என்று வ்யுத்பத்தி
வாம நீத்வம் -ஆஸ்ரிதர்களை அபீஷ்ட ஸூ கங்களை அடைவித்தல்
பாம நீத்வம் -எல்லையில்லா பிரகாசமுடைமை
இந்தக் கல்யாண குணங்கள் பரம புருஷனுக்கே கூடும் என்று திரு உள்ளம் –

————————

ஸூத்ரம் -45-ஸ்தா நாதி வ்யபதேசாத் ச –1-2-14-
கண்களில் இருப்பவன் -கண்களை ஆள்பவன் -போன்ற தன்மைகளால் அவனே பரம் பொருள்

ப்ருஹத் ஆரண்யகாவில் -3-7-18-
யச் சஷுஷி திஷ்டன் -என்று கண்ணில் உள்ளவன் -நியமிப்பவன் -என்று இருப்பதால்
சாந்தோக்யம் 4-15-1- ய ஏஷ அஷிணி புருஷ -கண்ணில் உள்ள புருஷன் பரமாத்மாவே
மேலும் சாந்தோக்யம் 4-15-1-த்ருஸ்யதே -காணப்படுகிறான் -என்பதால்
யோகிகளால் கண்ணில் இவனைக் காண இயலும் என்பதால் பொருத்தமே யாகும்

கண்ணுக்குள் ஸ்திதி நியமனம் முதலியவை பரமாத்மாவுக்கே கூறப்படுகின்றன
ப்ருஹத் ஆரண்யகாவில் -3-7-18-யச் சஷுஷி திஷ்டன்–முதலிய ஸ்ருதிகளில் காணப்படுகிறான் என்று
ப்ரத்யக்ஷமாகக் குறிப்பிடுவது யோகிகளால் காணப்படுகிறான் என்பதாகப் பொருந்துவதே –

——————

ஸூத்ரம் -46-ஸூ க விசிஷ்டாதிபா நாத் ஏவ ச –1-2-15-

சாந்தோக்யம் -4-10-5–கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம ப்ரஹ்மம் –
சுகத்துடன் பெரியதாக உள்ளவன் -ப்ரஹ்மமே
ய ஏஷோ அஷிணி –சுகமாக உள்ளவன் என்பதால் ப்ரஹ்மமே

மேலும் யாரிடம் அனைத்து விரும்பத்தக்க தன்மைகளும் உள்ளதோ அந்த ப்ரஹ்மம் என்றும் இங்கு உணர்த்தப்படுகிறது –
ஏவ -என்று இங்கு எடுக்கப்படும் வாதங்கள் மற்றவற்றுடன் தொடர்வு உடையவை அல்ல -இங்கு தனி வாதம்
கீழே -12–13-ஸூத்ர வாதங்கள் -18-ஸூத்ரத்தத்தில் நிகமனம்

பூர்வ பக்ஷம்
சாந்தோக்யம்-4-10-5- -கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம ப்ரஹ்மம் —தொடர்ந்து
சாந்தோக்யம்-4-15-1–ய ஏஷோ அஷிணி இரண்டையும் இணைக்க இயலாது
இரண்டுக்கும் நடுவில்-4-11-/-4 -13-முடிய உள்ளவற்றில் -மூன்று அக்னிகள் குறித்த வித்யை உபதேசம் -உபகோஸலனுக்கு –
அத ஹை நம் கார்ஹபத்யோ அநுச சாஸ -4-11-1-கார்ஹபத்யம் என்ற அக்னி தேவதை உபதேசம்
இதனால் பெற்ற ஞானம் பலமாக நீண்ட ஆயூஸூ -பரம்பரை இத்யாதிகள் ப்ரஹ்ம வித்யையின் பலன்களுக்கு
விருத்தியாகும் -என்பர் பூர்வ பக்ஷிகள்

சித்தாந்தம்
உபக்ரமம் உபஸம்ஹாரம் இரண்டிலும் ப்ரஹ்ம பதம் தெளிவாக உண்டே
சாந்தோக்யம் -4-10-5-ப்ரானோ ப்ரஹ்ம -என்று தொடங்கி
சாந்தோக்யம் -4-15-1-ஏதத் அம்ருதம் அபயம் ப்ரஹ்ம –
மேலும் சாந்தோக்யம் -4-14-1-ஆச்சார்யஸ்து தே கதிம் வக்தா -என்று பரம கதிக்கு ஆச்சார்யர் உபதேசிப்பார் –
என்பதால் ப்ரஹ்ம விதியையே உபதேசம்

மேலும் -அத ஹை நம் கார்ஹபத்யோ அநுச சாஸ -4-11-1-என்று ப்ரஹ்ம வித்யைக்குத் தகுதி உள்ள
ஒருவனுக்கே அக்னி வித்யை உபதேசிக்கப்படுகிறது
மேலும் சாந்தோக்யம் 4-10-3–வ்யாதிபி பிரதி பூர்ணோஸ்மி -என்று உலகவிஷய பீதனாக இருக்கும் படி சொல்லி
சாந்தோக்யம் -4-14-1-ஏஷா சோம்ய தே அஸ்மாத் வித்யா ஆத்மவித்யா ச -என்பதால்
இந்த அக்னி வித்யையானது ப்ரஹ்ம வித்யையின் அங்கமே
இவ்வாறு அறிந்த பின்பு மற்ற பலன்கள் குறித்த வாக்கியங்கள் அர்த்தவாதம் -வெறும் புகழ்ச்சி வாக்கியங்கள்
மட்டுமே என்று கொள்ள வேண்டும் –

மேலும் மோக்ஷத்துக்கு விரோதமாக எந்த ஒரு வாக்கியமும் காணப்பட வில்லை
சாந்தோக்யம் -4-11-2-
அபஹதே பாப க்ருத்யாம் லோகீ பவதி சர்வமாயுரேதி ஜ்யோக்ஜீவதி நாஸ்யா பர புருஷா ஷீயந்தே உபவயம்
தம் புஞ்ஜாமோ அஸ்மிச்ச லோகே அமுஷ்மிச்ச –என்று
அபஹதே பாப க்ருத்யாம்-ப்ரஹ்ம பிராப்தி பிரதிபந்தங்கள் நீங்கப் பெற்ற பின்னர்
லோகீ பவதி-நீங்கிய பின்பு பரமபதம் அடைகிறான்
சர்வமாயுரேதி-ப்ரஹ்ம உபாஸனைக்கு தக்க ஆயுசைப் பெறுகிறான்
ஜ்யோக்ஜீவதி-நோய் இல்லாமல் வாழ்கிறான்
நாஸ்யா பர புருஷா ஷீயந்தே -அவர்கள் சீடர்கள் பரம்பரைகளும் பர ப்ரஹ்மம் அடைகிறார்கள்

இது தவிர ப்ரஹ்ம வித்யையின் பலமாக முண்டக -3-2-9-/ மாண்டூக்ய -3-3-
நாஸ்யா ப்ரஹ்ம வித் குலே பவதி –என்று அவனுடைய குலத்தில் ப்ரஹ்ம வித்யை அறியாதவர்கள் பிறப்பது இல்லை
உபவயம் தம் புஞ்ஜாமோ அஸ்மிச்ச லோகே அமுஷ்மிச்ச —
வயம் என்றால் இங்கு -அக்னி என்று பொருள்
தம் -மோக்ஷ அதிகாரி
உப புஞ்ஜாமோ-ப்ரஹ்ம பிராப்தி வரை அனைத்து பிராப்தி பிரதிபந்தகங்களிலும் இருந்து காப்பாற்றுவோம் –

இதற்கு பூர்வ பக்ஷம்
சாந்தோக்யம் -4-14-1-ஆச்சார்யஸ்து தே கதிம் வக்தா –
ஆச்சார்யர் உனக்கு மார்க்கத்தைக் குறித்து உபதேசிப்பார்
என்பதால் போகும் பாதையை மட்டும் உபதேசம் –
மாறாக ப்ரஹ்ம உபாசனத்துக்கு இருப்பிடமோ அதன் குணங்களோ இந்தப்பகுதியில் சொல்வதாகக் கொள்ள முடியாது

சித்தாந்தம்
சாந்தோக்யம் -4-14-1-ஆச்சார்யஸ்து தே கதிம் வக்தா -என்று
உபாஸனை பற்றி இல்லாமல் அர்ச்சிராதி பற்றி சொல்வது
அவன் வருந்தி இருக்க -அவனது கைங்கர்யத்தால் மகிழ்ந்த அக்னிகள் அவனைத் தேற்ற ப்ரஹ்ம ரூபம் குறித்து
ப்ரஹ்ம வித்யையின் அங்கமாக அக்னி வித்யை உபதேசித்தன-

அதன் பின்னர் –சாந்தோக்யம் -4-9-3- ஆச்சார்யாத் ஏவ வித்யா விதிதா சா திஷ்டம் ப்ராப்யதி–என்று
ஆச்சார்யன் மூலம் பெரும் வித்யையே சிறந்தது என்ற வார்த்தை எண்ணிப் பார்க்க —
ப்ரஹ்ம உபாசனம் பூர்ணம் ஆச்சார்யனாலே என்றும் –
ப்ரஹ்மம் அனைத்தையும் தன்னுள் கொண்டது என்றும்
ப்ரஹ்மம் இருப்பிடம் இன்னது என்றும்
அர்ச்சிராதி மார்க்கம் பற்றியும் இந்த உபதேசம்-
ஆகவே கதி -மார்க்கம் மூலம் -எஞ்சிய பகுதிகள் என்றவாறு

இதனால் தான் ஆச்சார்யனும் –
சாந்தோக்யம் -4-14-3-அஹம் து தே தத் வஹ்யாமி –என்றும்
யதா யுஷ்கரபலாச ஆபோ ந ஸ்லிஷ்யந்த ஏவமேவம் விதி பாபம் கர்ம ந ஸ்லிஷ்யதே–என்றும்
கல்யாண குணங்கள் விஸிஷ்ட ப்ரஹ்மம் கண்ணின் உள்ளே இருப்பதாக உபதேசிக்க -ஆகவே
சாந்தோக்யம் -4-10-5-கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம என்ற வரியில் கூறப்பட்ட ப்ரஹ்மமே
கண்ணில் உள்ள பரமாத்மா என்றதாயிற்று

இதுக்கு பூர்வ பக்ஷம்
சாந்தோக்யம் -4-10-5-கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம என்று உபதேசிப்பதன் பொருட்டு –
ஒன்றை மற்ற ஒன்றின் மேலே ஏறிட்டு -7-1-5-நாம ப்ரஹ்ம என்றும் -7-3-2-மநோ ப்ரஹ்ம என்றும்
போன்றதே என்பர்

இதுக்கு சமாதானம் அடுத்த ஸூத்ரம்

—————————————————–

ஸூத்ரம் -47-அத ஏவ ச ச ப்ரஹ்ம —1-12-16-
இத்தகைய காரணங்களால்–க என்ற சப்தம் மூலம் கூறப்படும் ஆகாசமும் – ப்ரஹ்மம் என்றதாயிற்று

அத ஏவ ச -யத் வாவ கம் ததேவ கம் என்று அளவற்ற ஸூக ஸ்வரூபமான ப்ரஹ்மத்தைச் சொல்லி இருப்பதாலேயே
அந்த கம் என்னும் ஆகாசம்
ச ப்ரஹ்ம-ப்ரஹ்மமே
பிரசித்த ஆகாசமோ பிரசித்த ஸூ கமோ அன்று என்பதாம் –

உபகோசலனுக்கு -ப்ரஹ்ம வித்யையை அக்னி தேவன் -பிராணனே ப்ரஹ்மம் சுகமே ப்ரஹ்மம் ஆகாசமே ப்ரஹ்மம் –
சாந்தோக்யம் –4-10-5–
யதேவ கம் ததேவ கம் யதேவ கம் ததேவ கம் -என்று
ஆகவே கம் -ஆகாசத்தைக் குறிக்காது -ஸூகத்தையே குறிக்கும் –
ஆகாயம் போன்ற அளவற்ற சுகத்துடன் இருப்பவனே ப்ரஹ்மம் -என்பதால்
ஜீவனுக்கு பொருந்தாது -பரம் பொருளுக்கே பொருந்தும் —

இங்கே கூறப்படுவது இதுவே ஆகும் –
அக்னிகள் சாந்தோக்யத்தில் 4-10-5-
ப்ரானோ ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம -பிராணனே ப்ரஹ்மம் ஸூகமே ப்ரஹ்மம் -ஆகாசமே ப்ரஹ்மம் -என்று கூற
அப்போது உபகோஸலன் -சாந்தோக்யம் 4-10-5-
ஜீவனாம் யஹம் யத் ப்ரானோ ப்ரஹ்ம கம் ச து கம் ச ந ஜீவா நாமி –என்று
நான் முக்கிய பிராணன் ப்ரஹ்மம் என்று அறிவேன் –
ஆனால் அத்தகைய ப்ரஹ்மம் ஸூகம் என்றும் ஆகாசம் என்றும் நான் அறிய வில்லை என்றான்

ஸூகம் ஆகாசம் இவை ப்ரஹ்மத்தின் சரீரமே -ப்ரஹ்மத்தின் கட்டுப்பாட்டில் உள்ளவையே –
தனித்தனியே இவை உள்ளதால் ப்ரஹ்மத்தின் அபரிமித ஆனந்தத்தை சொல்லுமோ
இத்தை அறிந்த அக்னிகள் -சாந்தோக்யம் -4-10-5-
யதேவ கம் ததேவ கம் யதேவ கம் ததேவ கம்-என்று ப்ரஹ்ம ஸ்வரூபம் நிரதிசய ஆனந்த மயம் என்று சொல்லி நிறைவில் —
பிராணம் ச ஹாஸ்மை ததாகாசம் சோசு-என்றும் சொல்லி இந்த ப்ரஹ்மமே கண்ணுக்குள் உள்ளதாக சாந்தோக்யம் கூறும்

ஆகவே கண்ணுக்குள் உள்ளவன் பரமாத்மாவே தான் -என்றதாயிற்று

—————————————————————

ஸூத்ரம் -48-ஸ்ருத உபநிஷத் காக கத்யபி தா நாத் –1-2-17-
உபகோசலனுக்கு அக்னி தெளிவாக கூறியதால் கண்களில் உள்ளவன் பரம்பொருளே
பரமாத்மாவைக் குறித்து யாதாத்ம்ய ஞானம் உள்ளவன் அர்ச்சிராதி கதி சிந்தனம் எப்போதும்
பண்ணியபடியே இருக்க வேண்டும் என்பதால் கண்ணில் உள்ளவன் பரம புருஷனே ஆவான் –

சித்தாந்தம்
சாந்தோக்யம் -4-15-5-
தே அர்சிஷமே வாபி சம்பவந்தி அர்ச்சிஷோ அஹரஹ்ந அபூர்த்த்யமான பக்ஷம் என்று தொடங்கி
சாந்தோக்யம் -4-15-5-/6–
சந்த்ரமஸோ வித்யுதம் தத் புருஷோ அமாநவ ச ஏதாந் ப்ரஹ்ம கமயத்யேஷ தேவபதோ ப்ரஹ்ம பத ஏதேந
பிரதிபத்யமாநா இமாம் மாநவமாவர்த்த நாவர்த்தந்தே–-அர்ச்சிராதி கதி என்று உபதேசிக்கப்பட்டு நிகமிக்கப்பட்டது–

இந்தக் காரணத்தாலும் கண்களில் உள்ளவான் பரமாத்மாவே ஆவான் –
பரம்பொருளை அறிந்தவர்கள் அர்ச்சிராதி கதி மூலம் அவனை அடைகிறார்கள்

————————————————————

ஸூத்ரம் -49-அனவஸ்திதே அசம்பவாத் ச–1-2-18-
ஜீவன் எப்போதும் கண்களில் நிலை பெற்று இல்லையே –
மரணம் இன்றி இருப்பவன் என்பதும் ஜீவனுக்கு பொருந்தாது –

அனவஸ்திதே -ப்ரதிபிம்பாதிகளுக்கு கண்ணில் எப்போதும் ஸ்திதி இல்லாததாலும்
அசம்பவாத் ச-நிருபாதிகமான அம்ருதத்வம் முதலிய குணங்கள் பிரதி பிம்பாதிகளுக்கு சம்பவியாது என்பதாலும்
நேதர -அஷி புருஷன் அல்ல
ஆகவே அஷி புருஷன் என்பது பரம புருஷனே ஆகும் –

சித்தாந்தம்
கண்களால் காணப்படும் பொருள்களின் பிரதிபிம்பம் கண்களில் எப்போதும் இருப்பது இல்லை –
அம்ருதத்வம் போன்ற தன்மைகளும் அவற்றுக்கு இல்லையே
இந்திரியங்களை நியமிக்க ஜீவாத்மா ஹ்ருதயத்தில் உள்ளான் – கண்களின் உள்ளே இல்லையே –
இதே போன்று சூரியனும் கண்களின் உள்ளே இல்லை –

ப்ருஹத் ஆரண்யகா -7-5-10-
ரச்மிபிரேஷே அஸ்மின் ப்ரதிஷ்டித -ஒளிக்கதிர் மூலமாக சூரியன் கண்களில் உள்ளான் -கண்களுக்குப் புறப்படுகிறான்
அல்லாமல் கண்களில் உள்ளவனாக கூறப்பட வில்லை
மேலும் அம்ருதத்வம் போன்ற தன்மைகள் பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தும் -மற்றவர்களுக்குப் பொருந்தாது –
ஆகவே கண்களில் உள்ளவன் பரமாத்மாவே ஆவான் -என்று நிரூபணம்

————

முந்தைய மூன்று அதிகரணங்களிலும்
உபாஸகனின் சரீரம் -ஹ்ருதயம் -முதலியவற்றில் குறிப்பிட்ட அளவு இடமுள்ள
பரமாத்மாவே உபாஸ்யன் என்று சொல்லி
மேல் மூன்று அதிகரணங்களிலும்
விஸ்தாரமான பிரதேசத்தோடு கூடிய பரமாத்மா உபாஸ்யன் என்று கூறுவது
என்று பேடிகா

கீழே1-2-14-ஸ்தா நாதி வ்யபதேசாத் ச –என்று
கண்ணுக்குள் ஸ்திதி நியமனம் முதலியவற்றால் அஷி புருஷன் பரமாத்மா என்று சாதித்து
இந்த அதிகரணத்தில் அந்த ஸ்திதி நியமனாதிகளை ஸ்தாபிக்கிறார் என்று சங்கதி –

2-4-அந்தர்யாமி யதிகரணம் -அந்தர் யாமியாகக் கூறப்படுபவன் ப்ரஹ்மமே –

ஸூத்ரம் -50-அந்தர்யாமீ அதிதைவாதி லோகாதிஷூ தத் தர்ம வ்யபதேசாத்–1-2-19-

அதிதைவம் அதிலோகம் அந்தர்யாமியாக உள்ளவன் பரம் பொருளே-அவனுக்கே உரிய தர்மங்கள் கூறப்படுவதால்

அந்தர்யாமீ அதிதைவாதி லோகாதிஷூ –இவற்றால் கூறப்படும் அந்தர்யாமி அபஹத பாப்மாவான பரமாத்மாவே –ஜீவன் அல்லன்
ஏன் எனில்
தத் தர்ம வ்யபதேசாத்-பரமாத்மாவுக்கே உரிய சிறந்த தர்மங்கள் பேசப்படுவதால்
சர்வ லோக சர்வ பூத சர்வ தேவாதிகளையும் ஒருவனாகப் புகுந்து அந்தர்யாமியாய் நியமிக்கை
ஸ்ரீ மன் நாராயணனின் தர்மமாகவே ப்ரஸித்தம்
அப்படியே உத்தாலகர் சர்வலோக பூதங்களையும் நியமனம் செய்யும் அந்தர்யாமியைப் பற்றி எனக்கு கூறும் என்கிறார் –

விஷயம் –
1-2-14-ஸ்தா நாதி வ்யபதேசாத் ச –
கண்களில் இருப்பவன் -கண்களை ஆள்பவன் -போன்ற தன்மைகளால் அவனே பரம் பொருள்-என்பதன் மூலம்
ப்ருஹத் ஆரண்யாகாவில்-3-7-18-
யச் சஷுஷி திஷ்டன் — என்பதில் பரமாத்மாவே கண்ணில் உள்ளதாக ஓதப்படுகிறது என்று நிச்சயிக்கப்பட்டு –
அது மெய்யானதே ஆகும் என்று கூற உள்ளார் –
வாஜசநேயர்களில் இரண்டு பிரிவுகளான காண்வம் மற்றும் மாத்யந்தினம் ஆகிய இரண்டிலும்
பிருஹத் 3-7-3-
ய ப்ருதிவ்யாம் திஷ்டன் ப்ருதிவ்யா அந்தர யம் ப்ருத்வீ நீ வேத
யஸ்ய ப்ருத்வி சரீரம் ய ப்ருத்வீமந்தரோ யமயதி ஏஷ தா ஆத்மா அந்தர்யாமி யம்ருத -என்று
யார் ஒருவன் இந்த பூமியிலே நிற்கிறானோ -பூமியின் உள்ளே உள்ளானோ -அப்படி அவன் உள்ளதை பூமி அறியாமல் உள்ளதோ –
யாருடைய உடலாக இந்த பூமி உள்ளதோ -பூமியில் உள்ளே இருந்து இயக்குபவன் யாரோ
அந்த பரம் பொருளே ஆத்மாவாகவும் மரணம் அற்றவனாகவும் உள்ள அந்தர்யாமி யாவான் என்று படிக்கப்பட்டது –
இதன் பின்னர் – நீர் நெருப்பு வானம் -அந்தரிக்ஷம் -காற்று -த்யு லோகம் – சூர்யன்- திசைகள் சந்தரன் ஆகாசம் இருள் ஒளி–
போன்றவற்றின் அபிமான தேவதைகளின் உள்ளே வசிப்பவனாகவும் -அவனே அனைத்து உயிர்களின் உள்ளும் வசிப்பவனாகவும்
பிராணன் வாக்கு கண்கள் காதுகள் மனம் தோல் விஞ்ஞானம் புத்தி ரேதஸ் போன்ற அனைத்திலும் அந்தர்யாமியாக உள்ளவன்-
இப்படி ஒருவன் உள்ளதாகக் கூறி -ஒவ் ஒன்றின் உள்ளிலும் உள்ளவனாகப் படிக்கப் பட்டு –
அவ்விதம் அவன் உள்ளதை அவை அறியாமல் –ஒவ் ஒன்றும் அவன் சரீரமாக உள்ளன என்றும்
அவற்றை அவன் நியமிப்பவனாகவும் கூறி முடித்து
அவனை ஏஷ த ஆத்மா அந்தர்யாமி அம்ருத –என்று முடிக்கப்பட்டது

ஆனால் மாத்யான சாகையில் மேலும் சில கருத்துக்கள் உள்ளன -அதாவது
ய சர்வேஷு லோகேஷு திஷ்டன் சர்வேஷு வேதேஷு ய சர்வேஷு யஜ்ஜேஷு -என்று
லோகங்கள் வேதங்கள் யஜ்ஜ்ங்களிலும் உள்ளான் என்றும் படிக்கப்பட்டுள்ளது
காண்வ சாகையில் -ப்ருஹு 3-7-22-
யோ விஞ்ஞாநே திஷ்டன் –யார் விஞ்ஞானத்தில் உள்ளானோ என்று படிக்கப்பட்டுள்ளது –
மேலும் ஏஷ த அந்தர்யாமி அம்ருத என்பதற்குப் பதிலாக
ச த அந்தர்யாமி அம்ருத -என்னும் வேறுபாடும் உள்ளது

இதில் சங்கை -அந்தர்யாமி ஜீவாத்மாவா பரமாத்மாவா –

பூர்வ பக்ஷம்
அந்தர்யாமியாகக் கூறப்படுபவன் ஜீவாத்மாவே –
அவனே–பிருஹத் -3-7-23- த்ரஷ்டா ஸ்ரோதா –என்று
அந்தர்யாமியாக உள்ளவன் கண்ணால் பார்ப்பவன் காதால் கேட்பவன்
இப்படி இந்திரிய ஜன்ய ஞானம் ஜீவாத்மாவுக்கே
மேலும் ப்ருஹ 3-7-23–
ந அந்ன்யோ தோஸ்தி த்ரஷ்டா -இவனை விடப் பார்ப்பவன் வேறே யாரும் இல்லை –
ஆக இங்கு அந்தர்யாமி ஜீவாத்மாவே தான் என்பர் பூர்வ பக்ஷிகள்

சித்தாந்தம்
1-2-19-அந்தர்யாமீ அதிதைவாதி லோகாதிஷூ தத் தர்ம வ்யபதேசாத்
அதிதைவம் -மற்ற தேவதைகளுக்கும் தைவம்
அதி லோகம் -அனைத்து லோகங்களுக்கும் தெய்வம் –
இவற்றால் அந்தர்யாமியாக சொல்பவன் பரமாத்மாவே
காண்வ சாகையில் உள்ள அதி தைவம் மாத்யந்தின சாகையில் உள்ள அதி லோகம் பதங்களை ஒட்டியே இந்த ஸூத்ரம்-
தர்ம வ்யபதேசாத்–பரமாத்மாவுக்கே உரிய தர்மங்கள் ஓதப்பட்டுள்ளதால் ஆகும்

இந்தப் பகுதியில் உத்தாலகர் ஒரு கேள்வி -பிருஹத் 3-7-1-
ய இமம் ச லோகம் பரம் ச லோகம் ஸர்வாணி பூதாநி யோ அந்தரோ யமயதி –என்று தொடங்கி
பிருஹத் 3-7-2-தம் அந்தர் யாமிணம் ப்ரூஹி -என்று முடித்து
அதுக்குப் பதிலாக யஜ்ஞவல்க்யரால் 3-7-3-ய ப்ருதிவ்யாம் திஷ்டன் –இத்யாதியால்
அனைத்தையும் நியமிக்கும் தன்மையும் சர்வாத்மாவாக உள்ள தன்மையும் பரமாத்மாவுக்கு பொருந்தும்
தைத்ரியம் ஆனந்த வல்லீ -3-11-2-
அந்த ப்ரவிஷ்டா சாஸ்தா ஜனா நாம் சர்வாத்மா -என்றும்
தைத்ரியம் -2-6-
தத் ஸ்ருஷ்ட்வா தத் அநு ப்ராவிசத் தத் அநு பிரவிஸ்ய சச்ச த்யச்சா பவத் -என்றும் ஸ்ருஷ்டித்து புகுந்து சத் த்யத் ஆனான்
மேலும் ஸூ பால உபநிஷத்தில் -6-
நை வேஹ கிஞ்ச நாக்ர ஆஸீத் அமூலமநா தாரா இமா பிராஜா பிரஜா யந்தே திவ்யோ தேவ ஏகே நாராயண
சஷுச் ச த்ரஷ்டவ்யம் ச நாராயண ஸ்ரோத்ரம் ச ஸ்ரோதவ்யம் ச நாராயண —
ஸூ பால உபநிஷத்தும் –
ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹதபாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயணா-என்றும்
ச்வேதாஸ்வதார உபநிஷத்தில் –
அந்த சரீரே நிஹிதோ குஹாயோ மஜ ஏகோ நித்யோ யஸ்ய ப்ருத்வீ சரீரம் ய ப்ருதிவீம் அந்தரே சஞ்சரந்யம்
ப்ருத்வீ ந சேத் யஸ்ய ஆப சரீரம் -என்றும்
ச்வேதாஸ்வதார உபநிஷத்தில்
யஸ்ய ம்ருத்யு சரீரம் யோ ம்ருத்யும் அந்தரே சஞ்சரந்யம் ம்ருத்யுர் ந வேதைஷ சர்வ பூத அந்தராத்மா
அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண -என்றும் உள்ளதே

ஆக சர்வாத்மாவால்வும் அனைத்தையும் சரீரமாகக் கொண்டும் அனைத்தையும் நியமித்தல்
பரமாத்மாவுக்கே பொருந்தும்

மேலும் த்ரஷ்டா -காண்பவன் என்றாலும் பரமாத்மாவைச் சொல்வதில் குறை இல்லையே
ஸ்வபாவிக சர்வஞ்ஞத்வம் ஸத்யஸகல்ப்பத்வம் உண்டே
ஸ்வேதாஸ்வர -3-19-
பச்யத்ய சஷூ ச ஸ்ருணோத்ய கர்ண –அபாணி பாதோ ஜவநோ க்ருஹீதா –
இந்திரியங்களின் அவசியம் இல்லையே அவனுக்கு

மேலும் பிருஹத் -3-7-23-
நாந்யே அதோ அஸ்தி த்ரஷ்டா என்று இவனைப் போலே இல்லையே
இவனே நியமிக்கிறான்-இவனை நியமிப்பவர்கள் யாரும் இல்லை —
யாராலும் பார்க்கப்படாமல் பார்க்கிறான்

மேலும் காணவ சாகை பிருஹத் -3-7-23-ஏஷ த ஆத்மா -இது உனது ஆத்மா என்றும்
மாத்யாந்தின சாகையில் -ச த ஆத்மா அவன் உனது ஆத்மா என்று வெவ்வேறு விதமாகவும் உண்டு
ஜீவாத்மாவுக்கு ஆத்மாவாக தே என்று வேற்றுமை உருபால் பிரித்து சொல்வதால்
ஜீவாத்மாவின் அந்தராத்மாவாக ஜீவாத்மாவே இருக்க முடியாதே

————————————————————-

ஸூத்ரம் -51-ந ச ஸ்மார்த்தம் அதத்தர்மாபி லாபாத் சாரீர ச–1-2-20-

பிரக்ருதியும் ஜீவன்களும் அந்தர்யாமியாக இருக்க ஓயயலாதே-அவர்களுக்கு பொருந்தாத தன்மை கூறப்படுவதால்

சித்தாந்தம்
ந ச ஸ்மார்த்தம் அதத்தர்மாபி லாபாத் சாரீர ச
ஸ்மார்த்தம்-என்பது ப்ரக்ருதி-கபில ஸ்ம்ருதியில் கூறப்பட்ட
சாரீர-என்பது ஜீவாத்மா
இந்த இரண்டும்
ந ச -அந்தர்யாமி அல்ல
ஏன் எனில்
அதத் தர்மாபி லாபாத்-ஜீவனுக்கும் பிரதானத்துக்கும் சம்பவிக்காத சர்வ நியாமகத்வம்
போன்ற தன்மைகளைப் பேசுவதால்
எப்படி அசேதனமான பிரதானம் சர்வஞ்ஞாதிகள் கூடாமையாலே அந்தர்யாமி அன்றோ
அப்படியே சாரீரனும் ஜீவனும் என்று கருத்து –
கீழே சொல்லப்பட்ட தன்மைகள் இவற்றுக்குப் பொருந்தாதே

———————————————————–

ஸூத்ரம் -52-உபயே அபி ஹி பேதே ந ஏநம் அதீயதே-1-2-21-

இரண்டு சாகைகளிலும் அந்தர்யாமியாய் வேறுபட்டவனாக கூறப்பட்டுள்ளதே

உபயே அபி ஹி -காண்வர்களும் மாத் யந்தினர்களும்
ஏநம் -இந்த அந்தர்யாமியாய்
பேதே ந -ஆத்ம நியாந்தா என்றும் நியாம்யன் என்றும் பேதத்தாலே
அதீயதே-ய ஆத்ம நி திஷ்டன் -இத்யாதி வாக்யங்களாலே படிக்கிறார்கள்
ஆதலின் அந்தர்யாமி ஸ்ரீ மன் நாராயணனே என்று உறுதி யாயிற்று –

ப்ருஹத் ஆரண்யாகவில் -மாத்யந்தின சாகையில் -3-7-22-
ய ஆத்ம நி திஷ்டன் ஆத்ம நோ அந்தர யமாத்மா நவேத யச்யாத்மா சரீரம்
யா ஆத்மா நமந்த்ரோ யமயதி ச தா ஆத்மா அந்தர்யாம் அம்ருத -என்றும் –
காண்வ சாகையில் -3-7-22-
யோ விஜ்ஞான திஷ்டன் -என்றும் சொல்லி இருப்பதால் பரமாத்வையே சொன்னதாயிற்று –

2-4-அந்தர்யாமி யதிகரணம் சம்பூர்ணம்

——————————————————————-

2-5-அத்ருத்யச்வாதி குணாதிகரணம் -அஷரம் எனப்படுபவனும் ப்ரஹ்மமே-

முன் அதிகரணத்தில் அந்தர்யாமி வித்யையில் பரம புருஷனுக்கு ஜீவ நியாமகத்வம்
அத்ருஷ்டமாய் த்ருஷ்டா வாதல்-பிறரால் காணப்படாமல் தான் காண்பவனாய் –
இவை கூறப்பட்டமையால் ஜீவன் அந்தர்யாமி அல்லன் எனப்பட்டது
அதர்வண சைகையில் முண்டக உபநிஷத்தில் -பர வித்யையில் இத்தகைய
அத்ருஷ்டனாய் த்ருஷ்டா என்று கூறப்படவில்லை -அத்ருஸ்யன் என்று மட்டும் கூறப்பட்டு உள்ளது –
ஆதலின் அத்ருஸ்யனாயும் அஷராத் பரத பரனாயும் உள்ளவர் ப்ரக்ருதி அல்லது ஜீவனே யாகக் கூடும்
என்ற சங்கையால் சங்கதி

ஸூத்ரம் -53-அத்ருச்யத்வாதி குணக தர்மோக்த-1-2-22-

அவனுக்கே உரித்தான தன்மைகளுடன் யாராலும் காணப்படாமல் உள்ளவன்

முண்டக உபநிஷத் –
அத பரா யயா தத் அஷரம் அதி கமே யத் தத் த்ரேஸ்யம் அக்ராஹ்யம் அகோத்த்ரம் அவர்ணம் அசஷூ ஸ்ரோத்ரம்
தத் அபாணி பாதம் நித்யம் விபும் சர்வகதம் ஸூ ஸூஷ்மம் தத் அவ்யயம் யத் பூத யோநிம் பரிபச்யந்தி தீரா -என்றும்
முண்டக உபநிஷத்-2-1-2-
அஷராத் பாரத பர -என்றும்-

சங்கை -இங்கே காணப்படாத தன்மைகளுடன் கூடிய அக்ஷரம் இரண்டு இடங்களில் படிக்கப்படுகிறது –
ப்ரக்ருதியும் புருஷனுமா -இரண்டுமே பரமாத்மாவா

பூர்வ பக்ஷம்
இங்கு பிரக்ருதியும் புருஷர்களும் சொல்லிற்று
பிருஹத் 3-7-23-அத்ருஷ்டோ திருஷ்டோ –
முண்டக -2-1-2-அஷராத் பரத பர -என்று அஷரத்துக்கு காணப்படாத தன்மையும் –
ஸ்தூல மூல பிரக்ருதியைச் சொல்லி -இந்த பிரதானத்தைக் காட்டிலும் மேலான சமஷ்டி புருஷனையும் சொல்லிற்று
இப்படி புருஷனால் நிர்வகிக்கப்படும் பிரதானமானது மஹத்தாதி அனைத்தையும் ஏற்படுத்துகிறது என்பர் –

இதனை அடி ஒட்டியே முண்டக 1-1-7-
யதோர்ணாபி ஸ்ருஜதே க்ருஹ்ணேதே ச யதா ப்ருதிவ்யாம் ஒளஷதய சம்பந்தி யதா சதா புருஷாத் கேஸலோமாநி
ததா ஷராத் சம்பவ தீஹ விஸ்வம் –என்று
சிலந்திப்பூச்சி வலை -மண் தாவரம் -உடலில் முடி நகம் -போலே அக்ஷரத்தில் இருந்து உலகம் –
ஆகவே இங்கு பிரதானமும் ஜீவாத்மாவும் சொல்லப்பட்டது

சித்தாந்தம்
புருஷனால் அதிஷ்டிதமான ப்ரதானமே மஹத்தாதி விகாரங்கள் ஹேது என்பதைக் கண்டிக்கிறார்

அத்ருச்யத்வாதி குணக -அத்ருஸ் யத்வாதி குணங்களை யுடையவனும் அஷராத் பரதப்பரனும் பரமாத்மாவே
அத்ருச்யத்வாதி குணக -புல்லிங்காத்தால் -அஷராத் பரதப்பரன் வாக்கியமும் இங்கு விஷயம் என்று குறிப்பால் உணர்த்தப்படுகிறது –
தர்மோக்த-யஸ் ஸர்வஞ்ஞ ஸர்வவித் முதலிய வாக்யங்களால் ஸர்வஞ்ஞத்வம் சொல்லப்படுவதால்

முண்டகம் 1-1-5-யயா தத் அக்ஷரம் அதிகம்யதே-என்று எந்த ஒரு வித்யையால் அக்ஷரம் அறியப்படுகிறதோ -என்றும்
முண்டக -1-1-7-தத் அஷராத் சம்பவ தீஹ விஸ்வம் -இந்த அக்ஷரத்தில் இருந்து இந்த உலகம் வெளிப்படுகிறது
என்பதால் இந்த அக்ஷரமே காரணம்

தொடர்ந்து -முண்டக -1-1-9-
ய சர்வஞ்ஞ சர்வவித் யஸ்ய ஞானமயம் தபஸ் தஸ்மாத் ஏதத் ப்ரஹ்ம நாம ரூபம் அன்னம் ச ஜாயதே -என்று
அனைத்துக்கும் பிறப்பிடம் அவனே என்றும்
ததாஷராத் சம்பவதீஹ விச்வம் -என்றும்
பரம் பொருளில் இருந்து அஷரம்-அழிவு இல்லாத -உலகில் உள்ள அனைத்தும் தோன்றின-

மேலும் முண்டக -2-1-2-அஷராத் பரத பர-என்று அஷரத்துக்கும் அப்பால் பட்டவன்
இங்கு கீழே சொன்ன அக்ஷரம் இல்லை
இங்கு அக்ஷரம் அசேதனமான பிரக்ருதியையே சொல்லும்

————————————————————–

ஸூத்ரம் -54-விசேஷண பேத வ்யபதேசாப்யாம் ச ந இதரௌ-1-2-23-

தனித்துக் கூறுவதாலும் -வேறுபாட்டினை உரைப்பதாலும் -பிரகிருதி மற்றும் புருஷர்கள் கூறப்பட வில்லை

சித்தாந்தம்
முண்டகம் 1-1-1-
ச ப்ரஹ்ம வித்யாம் சர்வ வித்யா ப்ரதிஷ்டாம் அதர்வாய ஜ்யேஷ்ட புத்ராய பிராஹா -என்று
நான்முகன் தனது மூத்த புத்திரனான அதர்வனுக்கு ப்ரஹ்ம வித்யை உபதேசிக்க
அந்த பரம்பரையில் வந்த அங்கிரஸ்ஸும் ப்ரஹ்ம வித்யை அறிந்து இருந்தான்

முண்டக -1-1-3-
ஸுவ்நகோ ஹ வை மகாசாலோ அங்கிரஸம் விதிவத் உபசன்ன பப்ரச்ச கஸ்மிந்து பகவோ விஞ்ஞாதே
ஸர்வமிதம் விஞ்ஜாதம் பவதி -என்று மகாசாலர் என்னும் ஸுவ்நக பகவான் அங்கிரஸ்ஸு இடம் கேட்க

முண்டக 1-1-4-
தஸ்மை ச ஹி உவாச த்வே வித்யே வேதி தவ்யே இதி ஹ ஸ்ம யத் ப்ரஹ்ம விதோ வதந்தி பரா ச ஏவ அபரா ச -என்று
உயர்ந்த தாழ்ந்த இரண்டு ப்ரஹ்ம வித்யை பற்றிச் சொல்ல -ப்ரஹ்மத்தை நேராகவும் ஆழ்ந்த த்யானத்தாலும் –
உபாசனத்தால் அந்தர்யாமி தயாவாகும் இரண்டு விதம்
நேரடியாக -அபரோக்ஷ ஞானம் -பக்தி ரூபா பன்ன ஞானம் –

இதனை முண்டகம் -3-2-3-
யமே வைஷ வ்ருணுதே தேந லப்ய-என்று சொல்லுமே
உபாசனம் -சாதன சப்தகம் -விவேகாதிகள் -இதனை பிருஹத் -4-4-22-
தமேதம் வேதாநு வசநேந ப்ரஹ்மணா விவிதஷயந்தி யஜ்ஜேன தாநேந தபஸா நாசகேந -என்று சொல்லும்

இவை இரண்டையும் ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-60-60-
தத் பிராப்தி ஹேதுர் ஞானம் ச கர்ம சோக்தம் மஹா முநே ஆகமோத்தம் விசோகச்ச த்விதா ஞானம் ததோச்யதே–என்று
வேத ஜன்ய ஞானமும் -விவேகாதி ஜன்ய கர்மம் -என்றும் உண்டே

முண்டக -1-1-5-தத்ர அபரா ருக்வேதா யஜுர் வேதா -அபார வித்யை ருக் யஜு வேதங்களால் கிட்டும் -என்றும்
தர்ம சாஸ்த்ராணி -ப்ரஹ்ம ஞானம் பெற்று -அத பரா யயா தத் அக்ஷரம் அதிகம் யதே -என்று
எந்த ஒரு மேலான வித்யையில் அக்ஷரம் என்ற ப்ரஹ்மம் அறியப்படுகிறதோ -என்றும் சொல்லுமே

தொடர்ந்து -1-1-6-யத் தத்ரேஸ்யம் -எதனைக் காண இயலாதோ -என்று பரோக்ஷ அபரோக்ஷ ஞானங்கள் இரண்டுக்கும்
விஷயமான ப்ரஹ்ம ஸ்வரூபம் சொல்லி -1-1-7-யதோர்பண நாபி ஸ்ருஜதே க்ருண்ஹதே ச –என்று
சிலந்திப் பூச்சி நூலை உமிந்து இழுத்துக் கொள்வதைப் போலே பிரபஞ்ச ஸ்ருஷ்ட்டி –
என்பதை -1-1-8-தபஸா சீயதே-( சீயதே என்றால் வளருகிறது ) ப்ரஹ்ம ததோ அன்னம் அபி ஜாயதே அந்நாத் பிரானோ
மன சத்யம் (சத்யம் என்று அனைத்து சரீரங்கள் ) லோகா கர்மஸூ சாம்ருதம் -என்று
தபஸ்ஸால்-ஞானத்தால் – ப்ரஹ்மம் -ப்ரஹ்மத்தில் இருந்து அனைத்து -உத்பத்தி
யஸ்ய ஞான மாயம் தபஸ் 1-1-9-

அடுத்து முண்டக -1-1-9-ய சர்வஞ்ஞ சர்வ வித் -என்று அனைத்தையும் அறிபவன் -எண்ணியதை முடிக்க வல்லவன்
அக்ஷர ஏதத் கார்ய ஆகாரம் ப்ரஹ்மம் நாம ரூபம் ச ஜாயதே -உயர்ந்த ப்ரஹ்மத்தில் இருந்தே வெளிப்படுகிறது

தத் ஏதத் சத்யம் –ப்ரஹ்மத்தின் ஸ்வபாவிக சத்யத் தன்மை சொல்லி
மந்த்ரேஷு கர்மாணி கவயோ யாந்யபஸ்யன் தாநி த்ரேதாயாம் பஹுதா சந்த தாநி தாந்யா சரத நியதம் சத்ய காமா -என்று
ப்ரயோஜனாந்தரங்களை விட்டு ப்ரஹ்ம ப்ராப்திக்கே -ஏஷ வா பன்ன-இதுவே உனது மார்க்கம்
ப்லவா ஹி ஏதே அத்ருடா யஜ்ஜ ரூபா அஷ்டாத ஸோக்தமவரம் ஏஷு கர்ம ஏதச்சேயோ யே அவி நந்ததி மூடா
ஜரா ம்ருத்யும் தே புனரேவாபி யந்தி –என்று மூடர்கள் அல்ப பலன்களுக்கு யாகம் செய்கிறார்கள்

முண்டக 1-2-11-தபஸ் ஸ்ரத்தே ஹி உபவஸந்தி –என்று பலத் த்யாக பூர்வக தபஸ்ஸால் ப்ரஹ்ம பிராப்தி
பரீஷ்ய லோகான் – அல்ப அஸ்திரத்வாதி தன்மைகள் கொண்ட லோகங்களைப் புரிந்து கொண்டு
முமுஷுவாக குருவை அணுக அவனுக்கு குரு உபதேசம்
முண்டக -2-1-1-ததே தத் சத்யம் யதா ஸூ தீப்தாம் -என்று தொடங்கி
முண்டக -2-1-10-ஸோ அவித்யா க்ரந்திம் விக்ர தீஹ ஸோம்ய-என்று அறியாமை என்னும் முடிச்சுகளை அவிழ்த்துக் கொள்கிறான்
முண்டக -2-2-1–ஆவி சந்நிஹிதம்-யோகிகளால் காணப்படுகிறான்
சாம்யாபத்தி பெறுகிறான் -இப்படியாக சுருதியில் பிரகரணம் முடிகிறது

இவ்வாறு பல அசாதாரண விசேஷணங்களையும் சொல்லி மேலே ப்ரஹ்மத்துக்கும் பிரகிருதி ஜீவ வேறுபாட்டை
முண்டக -2-1-2-
திவ்யோ ஹி அமூர்த்த புருஷ ச பாஹ்யாப் யந்தரோ ஹி அஜ அப்ரானோ ஹி அமாந சுப்நோ ஹி அஷராத் பரத பர-என்றும் சொல்லுமே

கஸ்மிந்து பகவோ விஞ்ஞாதே ஸர்வமிதம் விஞ்ஜாதம் பவதி -முதலிய இடங்களில்
காரணத்தை அறிவதால் காரியப்பொருள்கள் அனைத்தையும் அறியலாம்
என்ற ப்ரதிஜ்ஜையால்
இந்த பூத யோனியான அக்ஷரத்தை விசேஷ்யமாகக் குறிப்பதாலும்
ந இதரௌ-பிரதானமும் ஜீவனும் குறிப்பிடப்பட வில்லை
இங்கு யயாத தக்ஷரம் என்று ப்ரஹ்மமே கூறப்படுகிறது
அஷராத் பரத்பரம் -என்ற இடத்தில் ஐந்தாம் வேற்றுமை ஈறான அக்ஷர பாதத்தால் பிரதானம் கூறப்பட்டது
பிரதானத்தை விட பரனான ஜீவனை விட மேம்பட்டவன் என்று இவ்வாக்கியம்பரமாத்மாவையே குறிப்பதாகும்-

ஆகவே அக்ஷரம் என்பது பரமாத்மாவே தான் –
அச் -தாது -பரவி இருப்பதை குறிக்கும்
ஷர -வெளி வருதல் -உண்டாக்குதல் பொருளில்
அக்ஷரம் -வேறு ஒன்றால் உண்டாக்கப்பட்டு வருதல் இல்லாதது என்றுமாம்

ஆகவே நாம ரூபம் வேறுபாடு இல்லாத பிரதானம் அக்ஷரம் என்ற சொல்லால் கூறப்பட்டாலும்
ஸூஷ்ம நிலையில் அனைத்திலும் பரவி உள்ளது என்பதாலும் –
மஹத்தாதிகள் போலே உண்டாவது இல்லை என்பதாலும்
இவ்விதம் அக்ஷரம் என்ற பதம் கொண்டு கூறப்பட்டாலும் அது எதில் இருந்தும் வெளி வருவது இல்லை என்பதால்
தனிப் பெயர் கொண்டு அழைக்கப்பட வேண்டிய தகுதி அதற்கு இல்லையே

——————————————————————-

ஸூத்ரம் -55-ரூப உபன்யா சாத் ச –1-2-24-

உலகம் அனைத்தும் -அக்ஷரத்தின் சரீரம் -பரம்பொருளின் அங்கம் என்பதால் அஷரம் எனபது பரம் பொருளே

முண்டக உபநிஷத் -2-1-4-
அக்னிர் மூர்த்தா சஷூஷீ சந்திர சூர்யௌதிச-ஸ்ரோத்ரே வாக்விவ்ருதாச்ச வேதா
வாயு பிரானா ஹ்ருதயம் விச்வமச்ய பத்ப்யாம் ப்ருத்வி ஹ்யேஷ சர்வ பூதாந்தராத்மா -என்று
அவனுக்கு அக்னி எனப்படும் த்யுலோகம் தலை -சந்திர ஸூர்யர்கள் கண்கள்-திசைகள் காதுகள் -வேத ஒலியே பேச்சு-
வாயு மூச்சு – உலகம் இதயம் -பூமியே கால்கள் -அனைத்துக்கும் அந்தராத்ம்னா-

அனைத்து உலகங்களையும் சரீரமாகக் கொண்டுள்ள இப்படிப்பட்ட வடிவம் –
அனைத்துக்கும் அந்தராத்மாவாக உள்ள பரமாத்மாவுக்கே மட்டுமே கூடும்

இவ்வாறு விஸ்வ ரூப உபந்யாசத்தாலும்
பரமபுருஷனே அத்ருஸ் யத்வாதி குணகன் அஷராத் பரதப் பரன் என்றும் நிரூபிதமாயிற்று –

ஆகவே அத்ருஸ்யத்வம் -காணப்படாமை -போன்ற தன்மைகள் கொண்டதாகக் கூறப்படும்
பூத யோனி அக்ஷரம் என்பது பரமாத்மாவையே குறிக்கும் –

2-5-அத்ருத்யச்வாதி குணாதிகரணம் சம்பூர்ணம்

————————————————————-

2-6-வைச்வா நராதிகரணம் -வைச்வா நரன் எனப்படுபவனும் பரம் பொருளே-

இப்படிக் கூறப்பட்ட விஸ்வ ரூபம் ப்ரஹ்மத்தைத் தவிர வைச்வா நரனுக்கும் காணப்படுவதால்
இந்த ரூபத்தால் பர ப்ரஹ்மத்தைச் சாதிக்க முடியாது என்று சங்கித்து
அந்த வைச்வா நரனும் பரமாத்மாவே என்று சாதிக்கிறார் என்று சங்கதி

மேலும் ரூபோ பன்யா ஸாச்ச –என்ற ஸூத்ரத்தில்
விஸ்வரூப உபந்யாசத்தாலலே த்யு மூர்த்தத்வாதி –ஆகாயமே தலை கற்பனையாலும்
பகவானுக்கு பரமபுருஷத்வம் சாதிக்கப் பட்டது
இந்த அதிகரணத்தில் மேற்படி கற்பனையால் வைச்வா நரன் என்பதும் பரமபுருஷன் என்று சாதிக்கப் படுவதால்
ப்ரசங்க சங்கதி –

ஸூத்ரம் -56-வைச் வா நர சாதாரண சப்த விசேஷாத்-1-2-25-

சாந்தோக்யத்தில் வைச்வா நரன் எனப்படுபவனும் பரம் பொருளே-பொதுவான பதத்தைச் சிறப்பித்து கூறுவதால்

விஷயம்
சாந்தோக்யம் -5-11-6-
ஆத்மா நமேவேமம் வைச்வா நரம் சம் ப்ரத்யத்யேஷி தமேவ நோ ப்ரூஹி –நீர் உபாசிக்கும் வைச்வா நாராத்மாவை
எங்களுக்கு உபதேசிப்பீராக -என்று தொடங்கி
சாந்தோக்யம் -5-18-1-
யஸ் த்வேவ மேதம் ப்ராதே சமாத்ரமபி விமானமாத்மாநம் வைச்வாநரம் உபாஸ்தே -என்று எங்கும் பரந்து –
அதனால் அளவற்ற வைச்வாநராத்மாவை –யார் உபாசிக்கிறானோ -என்று நிகமனம்

சங்கை
வைச்வாநராத்மா பரமாத்மாவா அல்லது வேறே யாரையேனும் குறிக்குமோ

பூர்வ பக்ஷம்
வைச்வாநரன் என்னும் பதம் நான்கு வித பொருள்களில் வரும்
ஜாடராக்னியும்
பஞ்சபூதங்களில் மூன்றாவதான அக்னியும்
அக்னி தேவதையிலும்
பரமாத்மாவிலும் என்ற நான்கு

பிருஹத் -5-9-1-
அயம் அக்னிர் வைச்வா நரோ யேநேதம் அன்னம் பச்யதே யதிதமத்யதே தஸ்யைஷ கோஷா பவதி யமேதத் கர்ணாவபிதாய
ஸ்ருனோதி ச யதோக்தபிஷ்யன் பவதி நைநம் கோஷம் ஸ்ருனோதி –என்று ஜடாராக்னி பொருளில் உண்டு

ரிக்வேதத்தில்
விச்வாத்ம அக்னி புவநாய தேவ வைச்வா நரம் கேதுமஹம் க்ருண்வன்-என்று தேவர்கள் பகல் இரவு வேறுபடுத்த
அக்னியை உண்டாக்கி என்று பஞ்ச பூத அக்னியே வைச்வா நரன் என்கிறது இங்கு

ருக்வேதம் 1-98-1-
வைச்வா நரஸ்ய ஸூமதவ் ஸ்யாம ராஜா ஹி கம் புவாநாநாமவி ஸ்ரீ –என்று அவன் ராஜா –
அவன் இடம் நற் பெயர் பெறுவோம் என்று தெய்வம் பொருளில்
தைத்ரிய ப்ராஹ்மணம் 3-11-8-
ததாத் மந்யேவ ஹ்ருதயே அக்நவ் வைச்வா நரே பிராஸ்யத்-என்றும்
ப்ரஸ்ன உபநிஷத் -1-7-
ச ஏஷ வைச்வா நரோ விஸ்வ ரூப ப்ரானோ அக்னிருதயதே -என்று
பரமாத்மா பொருளில் படிக்கப்படுகிறது
ஆக இங்கு பரமாத்மாவையே கூறும் என்று உறுதியாகக் கூற முடியாது என்பர் பூர்வ பக்ஷி

சித்தாந்தம் –
வைச்வா நரம் பரமாத்மாவையே சொல்லும்
நான்கு பொருள்களுக்கும் சாதாரணமான இந்த சப்தத்தை பரமாத்மாவுக்கு –
அசாதாரணமான தர்மங்களாலே விசேஷமாகச் சொல்லுகையாலே
அந்த தர்மங்களாவன
சாதாரண சப்த விசேஷாத்-பொதுவான சப்தம் சிறப்பித்துக் கூறப்படுவதால்

ப்ராசீன சாலர் – சத்ய யஜ்ஜர் இந்த்ரத்யும்னர் -ஜனர் -புடிலர் -ஐந்து மஹ ரிஷிகளும்
சாந்தோக்யம் -5-11-1-
கோ ந ஆத்மா கிம் ப்ரஹ்ம -என்ற கேள்வி கேட்டு விவாதம் தொடங்கி
அவர்களுக்கு ஆருணி என்பவரின் புத்திரர் உத்தாலகர் என்பவர் ஆத்மாவை வைச்வா நரன் என்று கருதி உபாசிக்கிறார் –

சாந்தோக்யம் 5-11-2-
உத்தாலகோ வை பகவந்தோ அயம் ஆருணி ஸம்ப்ரதீ மாமாத்மா நம் வைச்வா நரமத்யேதி தம் ஹந்தாப்யா கச்சாமி –என்று
இவர்கள் வர தனக்கு முழுமையான ஞானம் இல்லாமையால்

சாந்தோக்யம் -5-11-4-
அச்வபதிர்வே பகவந்தோ அயம் கேகய ஸம்ப்ரதீ மமாத்மாநம் வைச்வா நரமத்யேதி தம் ஹந்தாப்யா கச்சாமி –என்று
கேகேய நாட்டு அரசன் அஸ்வபதி இத்தை நன்கு அறிந்து உபாசிக்கிறார் -அவர் இடம் செல்வோம் என்று
ஆறு பெரும் சேர்ந்து அங்கே சென்றனர் –

அஸ்வபதி அவர்களை வரவேற்று கௌரவித்து சாந்தோக்யம் 5-11-5-ந மே ஸ்தேந –என்று தொடங்கி
யஷயமானோ ஹ வை பவந்தோ அஹம் அஸ்மி -என்றும்
யாவேதைகை காத்மா ருத்விஜே தானம் தாஸ்யாமி தாவத் பகவத்ப்யோ தாஸ்யாமி வசந்த பகவந்தோ –என்றும் உபசரித்து —
கோ ந ஆத்மா கிம் ப்ரஹ்ம –என்று இவர்கள் அவன் இடம் கேட்க –
ஆத்ம ப்ரஹ்ம சப்தத்தால் வைச்வா நரன் பரமாத்மாவே என்றதாயிற்று

மேலும் சாந்தோக்யம் 5-18-1-
ச சர்வேஷு லோகேஷு சர்வ வேஷு பூதேஷு சர்வேஷ் வாத்மஸ் வந்ந மத்தி -என்று
அவன் அனைத்திலும் உள்ளான் என்றும்

சாந்தோயம் -5-24-3-
தத்ய சேஷீகாத் லபக்நவ் ப்ரோதம் ப்ரதூயேத ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மாந ப்ராதூயந்தே –என்று
எஜமானின் பாபங்கள் போகின்றன –

பரமாத்மாவே என்பதற்கு மேலும் ஒரு காரணம் அடுத்த ஸூத்ரத்தில்

————————————————————————

ஸூத்ரம் -57-ஸ்மர்ய மாணம் அநு மாநம் ஸ்யாத் இதி –1-2-26-

இவ்விதமாக உலகம் அனைத்தையும் உருவமாகக் கொண்டதாக அறிவுறுத்தப்படுவதால்
வைச்வா நரன் பரமாத்மாவே -என்று கூறப்படும் விஷயத்தில் அடையாளமாகக் கூடும்

சித்தாந்தம்
அதர்வண வேதம் -முண்டக -2-1-4-
அக்னிர் மூர்த்தா சஷுஷி சந்த்ர ஸூர்யவ் திச ஸ்ரோத்ரே வாக் விவ்ருதாச்ச வேதா வாயு பிரானோ ஹ்ருதயம்
விஸ்மஸ்ய பத்ப்யாம் ப்ருத்வீ ஹி ஏஷ சர்வ பூத அந்தராத்மா –இங்கு அக்னி த்யு லோக அர்த்தம்

சாந்தோக்யம் -5-4-1-
அசவ் வை லோக அக்னி -என்றும்
த்யாம் மூர்த்தா நாம் யஸ்ய விப்ரா வதந்தி கம் வை நாபி சந்த்ர ஸூர்யவ் ச நேத்ரே திச ஸ்ரோத்ரே வித்தி பாதவ்
ஷுதி ச ஸோ அசித்யாத்மா சர்வ பூத ப்ரணேதா -என்றும்

சாந்தி பர்வம் -47-68-
யஸ் யாக்னி ராஸ்யம் த்யவ் மூர்த்தா கம் நாபிச் சரணவ் ஷிதிஸ் ஸூர்யச் சஷுர் திச ஸ்ரோத்ரம்
தஸ்மை லோகாத்மநே நம -என்றும் உண்டே

த்யு லோகம் முதல் பிருத்வீ லோகம் வரை வைச்வா நரனுக்கு மூர்த்தாதி அவயவமாக உபதேசிக்கப் படுகிறது
இந்த ரூபம் ஸ்ருதியிலும் ஸ்ம்ருதியிலும் பரம புருஷன் ரூபமாக பிரஸித்தம்

இதி -சப்தம் பிரகாரத்தைச் சொல்லுகிறது
இதி ஸ்மர்ய மாணம்-இந்தப் பிரகாரமான ரூபம்
அநு மாநம் ஸ்யாத் -இந்த வைச்வானர வித்யையில் ஸ்மரிக்கப் படுவதாய்க் கொண்டு
பரமாத்மாவே என்பதில் அனுமானம் சாதக லிங்கம் ஆகின்றது
ஆகையால் இத்தகைய தலை முதலியன கொண்ட வைச்வானரன் பரம புருஷனே என்று கருத்து

மேலும் இதுக்குப் பரிஹாரம் கூறுகிறார் –

————————————————————————–

ஸூத்ரம் -58-சப்தாதிப்ய அந்த பிரதிஷ்டா நாத் ச ந இதி சேத ந ததா தட்ருஷ்த்யுபதேசாத் அசம்பவாத் புருஷம் அபி ஏ நம் அதீயதே –1-2-27-

சப்தம் போன்றவற்றாலும் சரீரத்தின் உள் இருப்பவன் என்பதாலும் வைச்வா நரன் பரமாத்மாவே ஆவான் என்று கூற இயலாது
என்று சொல்வாய் ஆனால் அது சரி அல்ல –
ஜாடராக்னியைச் சரீரமாகக் கொண்டதாகவே பரமாத்ம உபாசனம் கூறப்படுவதாலும் –
அந்த ஜடராக்கினிக்கு மூன்று லோகத்தையும் சரீரமாகக் கொண்டு இருத்தல் என்பது பொருந்தாது என்பதாலும்
வைச்வா நரனே பரமாத்மா ஆகிறான் -இவனையே புருஷன் என்று வேதம் கூறும்

பூர்வ பக்ஷம்
வைச்வா நரன் பரமாத்மாவே என்று கூறப்பட்டது சரி யல்ல –
சப்தாதிப்ய அந்த பிரதிஷ்டா நாத் ச -சப்தம் போன்றவற்றாலும் உள்ளே இருப்பவன் என்பதாகும் –
யஜுர் வேதம் பின்பற்றும் வாஜசநேர்களின் வைச்வானர வித்யை பகுதியில் அக்னி என்பது வைஸ்வானரனுடன்
ஒத்தது போன்றே படிக்கப்பட்டுள்ளது –

சதபத ப்ராஹ்மணத்தில் 13-6-1-11–ச ஏஷ அக்னிர் வைச்வா நர -என்றும்
சாந்தோக்யம் -5-18-2-ஹ்ருதயம் கார்ஹபத்யோ மநோந் வாஹார்யபசந ஆஸ்யமாவஹநீய-என்று
வைச்வா நரனுடைய இதயம் கார்ஹபத்ய அக்னியாகவும் -மனம் அன்வாஹார்ய அக்னியாகவும் –
வாய் ஆஹவனீய அக்னியாகவும் -மூன்று வித அக்னிகளாக படிக்கப்படுகிறான் –

மேலும் சாந்தோக்யம் -5-19-1-
தத் யத் பக்தம் ப்ரதமம் ஆகச்சேத் தத்தோமீயம் ச மாம் பிரதமா மாஹிதம் ஜூஹூ யாத் ப்ராணாய ஸ்வாஹா –என்று
ப்ராணனுக்கு ஆதாரமாக வைச்வா நரன் கூறப்படுகிறான்

இது போன்று சதபத ப்ராஹ்மணம் 10-6-1-11-
ச யோ ஏதமேவ மாக்நிம் வைச்வா நரம் புருஷவிதம் புருஷேந்த ப்ரதிஷ்டிதம் –என்று புருஷனின்
சரீரத்துக்குள்ளே இருப்பதாக ஓதப்பட்டுள்ளது

இந்தக் காரணங்களால் வைச்வா நரன் வயிற்றில் உள்ள ஜாடராக்நியாக உள்ளான் –
எனவே பரமாத்மாவாக இருக்க முடியாது

இந்த சங்கையைப் பரிஹரிக்கிறார் இதி சேத் ந என்று

சித்தாந்தம்
ததா தட்ருஷ்த்யுபதேசாத் -இவ்விதம் பரமாத்ம உபாசனம் என்பது
ஜாடராக்கினியைச் சரீரமாகக் கொண்டுள்ள -என்றே கூறப்பட்டதால் –
வைச்வா நரவித்யா பிரகரணம் –
ச ஏஷா அக்னிர் வைச்வா நர -என்றும்

சாந்தோக்யத்தில் –
ஹ்ருதயம் கார்ஹபத்யோ மநோ அன்வா ஹார்யப ஆஸ்யமா ஹவ நீய-என்றும்
யாம் ப்ரத மாமா ஹூதிம் ஜூஹூயாத் தாம் ஜூஹூயாத் பிராணாய ஸ்வாஹா -என்றும்
ஏதமே வாக்னிம் வைச்வா நரம் புருஷவிதம் புருஷே அந்த ப்ரதிஷ்டிதம் -என்றும்-

அசம்பவாத் -ஜாடராக்னிக்கு மூன்று லோகங்களையும் சரீரமாகக் கொண்டு இருத்தல் பொருந்தாதே
எனவே ஜாடராக்னியை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தையே குறிக்கும்

புருஷம் அபி ஏ நம் அதீயதே –
இந்தக் கருத்தையே ஸ்ரீ பகவானும் ஸ்ரீ கீதையில் -15-14-
அஹம் வைச்வா நரோ பூத்வா பிராணி நாம் தேஹம் ஆஸ்ர த பிராண அபாந சமாயுக்த பசாம் யந்நம்
சதுர்விதம் –நான்கு வித உணவுகளை ஜீரணிக்கிறேன் -கடித்து -உறிஞ்சி -நாக்கில் தடவி குடிப்பது -என்றும் சொல்லுமே
இங்கும் ஜாடராலானத்தைச் சரீரமாகக் கொண்டு என்றே பொருள்

மேலும் சதபத ப்ராஹ்மணம் 10-6-1-11-
ச ஏஷோ அக்னிர் வைச்வா நரோ யத் புருஷ -என்று அந்த புருஷனே இந்த அக்னி
ஸ்வேதாஸ்வர -3-14-
சஹஸ்ரசீர்ஷா புருஷ -என்றும் –
ஸ்வேதாஸ்வர -3-15-
ததா புருஷ இத்யபி ஏவேதம் சர்வம் -என்றும் பரம் பொருளையே சொல்லிற்று-

புருஷம் அபி ஏ நம் அதீயதே
இந்த வைச்வாநரனையே வாஜஸனேயிகள் வைச்வாநர புருஷனாகப் படிக்கிறார்கள்
நிருபாதிக புருஷன் பரமாத்மா தான்

———————————————————————————

ஸூத்ரம் -59-அத ஏவ ந தேவதா பூதம் ச –1-2-28-

மேற் கூறிய காரணங்களால்
தேவதையான அக்னி தேவதையும்
பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியும் வைச்வா நரன் அல்ல

——————————————————————————–

ஸூத்ரம் -60-சாஷாத் அபி அவிரோதம் ஜைமினி –1-2-29-

வைச்வா நரன் அக்னி இரண்டுமே பரம் பொருளையே குறிக்கும் என்று ஜைமினி கூறுகின்றார் –
அக்னி என்ற பதத்துக்கு நேராகவே பரமாத்மா என்று பொருள் கொண்டாலும் விரோதம் இல்லை என்றபடி

சித்தாந்தம்
ஸ ஏஷோ அக்னிர் வைச்வானர என்பதுக்கு
அக்னி சப்தம் அக்னி சரீரக பரமாத்மா பரம் என்பது பாதராயணரின் திரு உள்ளம்

அக்னி என்பது அக்ரம் நயதி என்று கொண்டு
நேராகவே பரமாத்மாவைக் குறிக்கும் என்கிறார் ஜைமினி

வைச்வா நரன் அக்னி இரண்டுக்கும் சாமா நாதி கரண்யத்தால் ஒற்றுமை கூறப்பட்டு –
அக்னியே பரமாத்மா வாகும்-ஜாடராக்கினியை பரமாத்மாவை சரீரமாக கொண்டதால் –
ஆகவே பரமாத்மாவையே உபாஸிக்க வேண்டும் என்கிறார் ஜைமினி

விச்வேஷாம் நராணாம் நேத வைச்வா நர–அனைத்து உயிர்களையும் வழி நடத்துபவன் -என்றும்
அக்ரம் நயதீத் யக்நி-என்றும் நல்ல நிலைக்கு அழைத்து செல்பவன் என்றும் ஜைமினி கூறுகிறார்-

பரமாத்மாவை போலே அக்னி உயர்ந்த கதியான அர்ச்சிராதி கதிக்கு அழைத்து செல்வதால்
அக்னி பதமும் பரமாத்மாவையே குறிக்கும் என்றவாறு –

பூர்வ பக்ஷம்
சாந்தோக்யம் -5-18-1-
யஸ்த்வேவ மதம் ப்ராதேச மாத்திரம் அபி விமானம் –என்று
யார் ஒருவன் அளவற்றவனாக வைச்வா நரனை இப்படியாக த்யு லோகம் போன்ற பிரதேசங்களில் மட்டும்
அளவுபட்டவனாக உபாசிக்கிறானோ என்று உள்ளதே

அளவற்ற ப்ரஹ்மத்துக்கு இவ்வாறு அளவுள்ளது என்பது உபாசகர்களுக்கு
தெளிவு -அபி வ்யக்தி -ஏற்படவே என்பர் ஆஸ்மரத்யர்

தலையில் இருந்து பாதம் வரை அவயவ விசேஷங்கள் உடைய புருஷனாய் விளக்கியது
மோக்ஷம் விரும்புவோர் உபாசிக்கவே என்பர் பாதரி
இதுவும் தவறு அன்று
அனால் ஒரு சங்கை

ஆகவே உயர்ந்த ப்ரஹ்மம் அளவு படாதாக உள்ள போது பூமி மற்றும் த்யு லோகம் ஆகியவற்றுக்கு இடையே
அளவு கொண்டதாகக் கூறப்பட்டது எப்படி
ஆகவே வைச்வா நரன் ப்ரஹ்மம் அல்ல -என்பர் பூர்வ பக்ஷி

இதுக்கு சமாதானம் அடுத்த ஸூத்ரம்

————————————————————————————

ஸூத்ரம் -61-அபி வ்யக்தே இதி ஆஸ்மத்ரய-1-2-30-

உபாசகனுக்கு சங்கை இன்றி இருக்க ஆஸ்மத்ரயர் கூறுகின்றார் –

சித்தாந்தம்
சாந்தோக்யம் 5-18-1-
யஸ்த்வேவமேதம் ப்ராதேச மாதரம் அபி விமா நம் –
பிரதேச மாதரம் -பரம்பொருளின் உடலின் அங்கங்களாக-
ஸ்வர்க்கம் தலை என்றும் -ஆதித்யன் கண்கள் என்றும் -வாயு பிராணன் என்றும் -ஆகாசம் சரீர நடுப்பாகம் என்றும்
நீர் மூத்திரப்பை என்றும் -பூமி பாதங்கள் என்றும் –
உபாசகனுக்கு தோற்றுவதற்காக மட்டுமே இவ்விதம் அளவுபடுத்திக் கூறப்பட்டது

இதுக்கு பூர்வ பக்ஷம்
பரம புருஷனுக்கு தலை போன்றவை உள்ளதாக அவனை புருஷ ரூபியாக ஏன் கூற வேண்டும்

இதுக்கு சமாதானம் அடுத்த ஸூத்ரம்

————————————————————————————–

ஸூத்ரம் -62-அநு ச்ம்ருதே பாதரி-1-2-31-

பாதரி உபாசகனுக்கு -எளிதாகும்படி –அளவில்லாத பரம்பொருளை அளவு படுத்தி கூறுகின்றார்-

சித்தாந்தம்
சாந்தோக்யம் 5-18-1-
யஸ்த்வேவமேதம் ப்ராதேச மாதரம் அபி விமாந மாத்மா நம் வைச்வா நரம் உபாஸ்தே ச சர்வேஷு லோகேஷு
சர்வேஷு பூதேஷு சர்வேஷ்வாத்ம ஸ்வந் நமத்தி –என்று ப்ரஹ்மம் அடைய உபாசனம் கூறப்பட்டது
ஏதம் ஏவம் -இந்த ரூபம் கொண்ட அவன்
சர்வேஷு லோகேஷு சர்வேஷு பூதேஷு சர்வேஷ்வாத்ம-அனைத்து லோகங்களிலும் அனைத்து பூதங்களிலும்
அனைத்து ஆத்மாக்களிலும் உண்கிறான்
ப்ரஹ்மம் இது போன்று இருப்பதால் உபாசகன் பேர் ஆனந்தம் அடைகிறான்
கர்ம வஸ்யர் கர்ம பலமான அன்னத்தை உண்கிறார்கள் -முமுஷு அனுபவிக்கும் அன்னம் வேறாகும் –
அவன் மற்ற ஜீவாத்மாக்கள் அனுபவிக்கும் அன்னத்தைக் கை விட வேண்டும்

இதுக்கு பூர்வ பக்ஷம்
வைச்வா நரனே பரமாத்மா என்றால் உபாசகனுடைய ஹ்ருதயம் போன்ற அவயவங்களை ஏன் பலி பீடம்
போன்றவையாகக் கூற வேண்டும்
ஆனால் ஜடராக்னியைக் கூறுகிறது என்றால் சரியாகும்

இதற்கு சமாதானம் அடுத்த ஸூத்ரம்

————————————————————————————-

ஸூத்ரம் -63-சம்பத்தே இதி ஜைமினி ததா ஹீ தர்சயதி –1-2-32-

சம்பத்தே இதி ஜைமினி -இந்த வைச்வானர வித்யைக்கு அங்கமான ப்ராணாஹுதிக்கு
அக்னி ஹோத்ரத்தை நிரூபிக்கவே மார்பு முதலியவை வேதி முதலியவையாக உபதேசிக்கப் பெற்றன
என்று ஜைமினி கூறுகிறார்
ததா ஹீ தர்சயதி-பரமாத்ம உபாசனம் ஸர்வ பாப நிவர்த்தகம் என்றும் –
ப்ராணாஹுதியே அக்னி ஹோத்ரம் என்றும் ஸ்ருதியே காட்டுகிறது –

உபாசகனுடைய பல்வேறு அங்கங்களை பலி பீடம் போன்றவையாக உரைப்பது என்பது
வைச்வா நர வித்யையின் அங்கமாக உள்ள ப்ராணாஹுதியை அக்னி ஹோத்ரம் ஆக்குவதற்காகவே ஆகும்
என்று ஜைமினி எண்ணுகிறார் -ஸ்ருதியும் அப்படியே

சாந்தோக்யத்தில் –
உர ஏவ வேதிர் லோமாநி பர்ஹிர் ஹ்ருதயம் கார்ஹபத்ய-என்று
மார்பே வேதி என்னும் இடம் – -மயிர்களே தரப்பை -இதயமே கார்ஹபத்யம் என்றும்

சாந்தோக்யம் -5-24-1-
ய ஏததேவம் விதவாந் அக்னி ஹோத்ரம் ஜூஹோதி தஸ்ய
சர்வேஷூ லோகேஷூ பூதேஷு சர்வேஷ்வாத்மஸூ
ஹிதம் பவதி தத்யா சேஷீ கதூல மக்னௌ ப்ரோதம்
ப்ராதூயேத ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மா ந ப்ரதூயந்தே -என்று
ஐந்து முறை மந்த்ரம் சொல்லி பிரானா ஹூதி செய்பவன் வைச்வா நரனின் அக்னி ஹோத்ரமாக கொள்ளலாம்-

—————————————————————————-

ஸூத்ரம் -64-ஆமநந்தி ச ஏவம் அஸ்மின் –1-2-33-

இப்படி உபாசனம் செய்பவனின் உடலிலே வைஸ்வ நரன் உள்ளதாக உபநிஷத் சொல்லும்

ஆமநந்தி ச ஏவம் அஸ்மின்
ஏநம் -இந்தப் பரம புருஷனை
அஸ்மின்-இந்த உபாசகனின் சரீரத்தில் ப்ராணாஹுதியின் ஆதாரமாக
ஆமநந்தி -வேதங்கள் பேசுகின்றன

உபாசகன் தலையே பரமபதம் -கண்களே சூர்யன் -மூச்சுக் காற்றே வாயு -இடுப்பே ஆகாயம் –
மூத்திரப் பைகளே நீர் -கால்களே உலகம்
இப்படிப்பட்ட வைஸ்வ நரனுக்கு அக்னி ஹோத்த்ரம் அளிக்க வேண்டும் என்றதாயிற்று-

சித்தாந்தம்
சாந்தோக்யம் -5-18-2-
தஸ்ய ஹ வா ஏதாஸ்ய ஆத்மாநோ மூர்த்தவை ஸூ தேஜா –என்று உபாசகனுடைய தலையே
த்யு லோகம் என்னும் ஸ்வர்க்கம்

சாந்தோக்யம் 5-18-1-
யஸ்த்தேவமதம் ப்ராதேச மாத்ரபி விமான மாத்மாநம் வைச்வா நரம் உபாஸதே -என்று மூன்று லோகங்களையும்
சரீரமாகக் கொண்டதாக பரமாத்மா உபாசனம் சொல்லப்படுகிறது

தொடர்ந்து சாந்தோக்யம் -5-18-2-
தஸ்ய ஹ வா ஏதாஸ்ய ஆத்மாநோ மூர்த்தவை ஸூ தேஜா –என்று தொடங்குவதன் மூலம் ப்ராணாஹூதியை
அக்னி ஹோத்ரமாக கொள்ளப்பட வேண்டும் என்று கூறி வைச்வா நர உபாஸனையின் அங்கம் எனப்பட்டது —

உபாசகனின் தலை -ஸூ தேஜஸ் -த்யு லோகம்
உபாசகனின் கண்கள் -ஸூர்யன் -விஸ்வரூபம்
உபாசகனின் மூச்சுக்கு காற்று பிராணன் -வர்த்தமான்
உபாசகனின் இடைப்பகுதி பஹுளம்-ஆகாசம்
உபாசகனின் மூத்திரப்பை -வைச்வா நரேனின் மூத்திரப்பை
உபாசகனுடைய பாதங்கள் -வைச்வா நரனுடைய பாதங்கள் -பூமி
உபாசகனுடைய மார்பு -வேதி -பலி பீடம்/சரீர முடி -தர்பை /இதயம் கார்ஹபத்ய அக்னி /
மனாஸ் -அன்வாஹார்ய அக்னி /முகம் ஆஹவனீய அக்னி /
இவற்றைக் கொண்டு அக்னி ஹோத்ரம் செய்து ப்ராணாஹுதியை பரமாத்மாவுக்கு அளிக்கிறான்
இத்தை நிரூபிக்கவே அவயவங்கள் இது போன்று கூறப்படுகின்றன

இவ்விடம் ஸ்வர்க்கம் இத்யாதிகள் எல்லாம் பரமாத்மா என்றும் உபாசகன் சரீரத்தில்
உபாஸ்யனின் ஸ்வரூபமாக த்ருஷ்ட்டி பண்ணியும் உபாசன விதி
ஒன்றை மற்ற ஒன்றாக என்னும் பிராந்தி அன்று
அனைத்தும் ப்ரஹ்மமே என்னும் த்ருஷ்ட்டி தான்
அந்ய பொருள்களை த்யேயமாகக் கூறவில்லை
ஆகவே சங்கைக்கு இடம் இல்லை

இப்படியாக பரமாத்மாவான புருஷோத்தமனே வைச்வா நரன் என்று நிரூபிக்கப் பட்டான் –

—————–

1-ஸர்வத்ர பிரதீ ஸித்த அதிகரணத்தில் -தனக்கு அதீனமாக ஜகத் ஸ்தித்யாதிகளைக் கொண்டு
ஸர்வ பாவத்துடன் இருக்கும் கல்யாண குணம் அனுசந்தேயம்
2-அத்த அதிகரணத்தில் -உலகமுண்ட பெரு வாயன் என்னும் மங்கள குணம்
3-அந்தர் அதிகரணத்தில் -கண்களில் என்றும் நிலை பெற்று இருத்தல் என்ற திருக்குளம்
4-அந்தர்யாமி அதிகரணத்தில் சர்வத்தையும் சரீரமாகக் கொண்ட கல்யாண குணம்
5-அத்ருஸ்யத்வ அதிகரணத்தில் கல்பிதமான அக்னியாதி சரீரிகத்வ கல்யாண குணம்
6- வைச்வானர அதிகரணத்தில் ஸ்வர்க்காதி லோகங்களை அங்கமாகக் கொண்ட
வைச்வானர பதத்துக்கு விஷயமாகும் கல்யாண குணம்

இவ்வாறு ஆறும் என்று ஸ்வாமி தேசிகன் அருள் மொழி –

————–—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை –முதல் அத்யாயம் –முதல் பாதம் —

November 26, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

———-

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம–
ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்
வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத
வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி
புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே
–ஸ்ரீ வேதாந்த தீப-முதல் மங்கள ஸ்லோகம்

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே
–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

———

எம்பெருமானே உலகு உய்ய வேத வ்யாசராய் சாரீரீரக சாஸ்திரத்தை நான்கு அத்தியாயங்களாக அருளிச் செய்தார்
அதுக்கு போதாயன பகவான் அறுபதினாயிரம் படி வ்ருத்தி க்ரந்தமும்
கலியுக தொடக்கத்தில் டங்கர் ஆராயிரப்படியாக சுருக்கி அருளி
த்ரமிட முனிவர் அதற்கு பாஷ்யமும் அருளிச் செய்தனர்
நம் ஸ்வாமி அருளிச் செய்ததுக்கே ஸ்ரீ பாஷ்யம் என்று ஸ்ரீ சரஸ்வதி தேவியே திரு நாமம் சாத்தி அருளினாள்

ஸ்ரீ பாஷ்யம்
அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே -மங்கள ஸ்லோகமே ஸ்ரீ பாஷ்ய சாரம்
சமன்வய -காரணத்வ
அவிரோதித்தவ -அபாத்யத்வ
உபாயத்வ
பலத்தவ –அதிகாரங்கள் நான்கும்

இரண்டாவது மங்கள ஸ்லோகத்தால்
இங்கு ப்ரஹ்ம விஷயமே விசாரம் என்றும்
அவனே நாம் அடையும் பயன் என்றும் விசாரிக்கப்படும் பொருள் என்றும் சம்பந்தம் காட்டி
போதாயனர் விஸ்தாரமாக அருளிச் செய்ததை -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் விளக்க
மங்களா ஸாஸனம் பண்ணி அருளுகிறார்

வேதார்த்த விசாரம் -ஒரே ஸாஸ்த்ரம்
4 அத்தியாயங்கள் –
1-சமன்வய -காரணத்வ
2-அவிரோதித்தவ -அபாத்யத்வ
3-உபாயத்வ
4-பலத்தவ –அதிகாரங்கள் நான்கும்

16 பாதங்கள்
1-ஜீவ மிக அஸ்பஷ்ட மாயும்
2-ஜீவ அஸ்பஷ்ட மாயும்
3-ஜீவ ஸ்பஷ்ட மாயும்
4-ஜீவ ஸ்பஷ்ட மாயும்
5-ஸாங்க்யாதி ஸ்ம்ருதி மூலமான தோஷ பரிஹாரம் காட்டுவது
6-ஸாங்க்யாதி பக்ஷங்கள் கண்டனம்
7-ஆகாசாதி த்ரவ்யங்களுக்கு ஸ்வரூப பரிணாம ரூபமான கார்யத்வம் கூறுவது
ஆத்மாக்களுக்கு ஸ்வ பாவ அந்யதா பாவ ரூப கார்யத்வம் கூறுவது
8-ஜீவ உபகரணமான இந்திரியாதிகளின் உத்பத்தி க்ரமம் கூறப்படுவது
9-வைராக்ய நிமித்தமாக புருஷனுக்கு ஏற்படும் தோஷங்கள்
10-ப்ராப்யத்தில் ஆசை தோன்ற ப்ரஹ்மத்துக்கு நிர்த்தோஷமும் கல்யாணைக தானத்வமும்
11-பகவானிடம் செய்யும் பக்தியின் பிரகாரங்கள்
12–பக்திக்கு வர்ணாஸ்ரம தர்மங்களை அங்கங்களாக விதித்தல்
13-உபாஸனா ஸ்வரூபமும் அநுஷ்டான க்ரமமும் விளக்கப்படுத்தல் -வித்யா மகிமையும் கூறுதல்
14-ஜீவன் உடலை விட்டுப் புறப்படுதல் -உத் க்ரமணம்
15-ஜீவனின் மோக்ஷ கதி சிந்தனம்
16-பிராப்தி -பலம் -மோக்ஷம் –

ஸ்ரஷ்டா தேஹீ ஸ்வ நிஷ்டா –ஸ்லோகத்தால் ஸ்ரீ தேசிகன் 16 குணங்களுடன்
இப்பாதங்கள் விளக்குவதைக் காட்டி அருளுகிறார்

ஸ்ரஷ்டா தேஹீ ஸ்வநிஷ்ட: நிரவதிகமஹிமாபாஸ்தபாத: ஶ்ரிதாப்த:
காத்மாதே: இந்த்ரியாதே: உசிதஜநநக்ருத்ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ |
நிர்த்தோஷத்வாதிரம்ய: பஹுபஜநபதம் ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய:
பாபச்சித் ப்ரஹ்மநாடீகதிக்ருததிவஹந் ஸாம்யதஶ்ச அத்ரவேத்ய: || (19)

ஸ்ரஷ்டா – உலகைப் படப்பவன்(1-1),
தேஹீ – தன்னையொழிந்த அனைத்தையும் தனக்குச் சரீரமாகக் கொண்டவன் (1-2);
ஸ்வநிஷ்ட: – தன்னையே ஆச்ரயமாகக் கொண்டவன் (1-3);
நிரவதிமஹிமா – எல்லையற்ற பெருமைகளை உடையவன் (1-4);
அபாதஸப்தபாத: – ஸாங்க்யாதி ஸ்ம்ருதிகளால் கலக்கமுடியாதவன் (2-1);
ச்ரிதாப்த: – அண்டியவர்களுக்கு நண்பன் (2-2);
காத்மாதே: உசிதஜநநக்ருத் (2-3) –
ஆகாசம் ஆத்மா முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன் – இந்திரியாதே: உசிதஜநநக்ருத் (2-4)-
இந்த்ரியம் முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன்; ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ – ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷூப்திமூர்ச்சா மரணம் ஆகியவைகளை நிர்வஹிப்பவன் (3-1); நிர்தோஷத்வாதி ரம்ய: (3-2) –
தோஷங்கள் தட்டாதவன் ரம்யன்; பஹுபஜனபதம் (3-3) –
பல உபாஸநத்திற்கு இருப்பிடமாக அறியத்தக்கவன்; ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய: (3-4) –
ஜீவர்கள் தம் தம் ஆச்ரமங்களுடன் அநுஷ்டிக்கப்படும் கர்மாக்களால் ஸந்தோஷப்படுத்தப்படுபவன்; பாபச்சித் (4-1) –
பாபங்களை நீக்குபவன்; ப்ரஹ்மநாடீகதிக்ருத் (4-2)-
மோக்ஷத்தை அடைவிப்பவன்; அதிவஹந் (4-3) –
அழைத்துச் செல்பவன்; ஸாம்யத: (4-4)- தனக்கு ஸமமான யோகத்தைத் தருபவன்.

இப்படி மொத்தம் 16 திருக்குணங்கள் சொல்லப்பட்டுள்ளன.

* வேத வேத்ய * ந்யாயத்தால் வேத்யனான எம்பெருமான் பெருமாளாக (ஸ்ரீ ராமபிரானாக) திருவவதாரம் செய்தருளின பொழுது,
வேதமும் ஸ்ரீராமாயணமாக அவதாரம் செய்தது.
ஸ்ரீராமாயணமும் பெருமாளுக்கு * குணவாந் கச்ச வீர்யவாந் * என்று 16 திருக்குணங்களே இருப்பதாகப் ப்ரதிபாதித்தது!

முதல் அத்தியாயத்தில்-11+6+10+8=35 அதிகரணங்கள்

முதல் நான்கு அதிகரணங்கள் -ஒரே ஸூத்ரம் ஒவ்வொன்றும்
1-1-1- அததோ ப்ரஹ்ம ஜ்ஞ்ஞாச –
1-1-2- ஜந்மாதி அஸ்ய யத–
1-1-3- சாஸ்திர யோநித்வாத்-
1-1-4-தத் து சமன்வயாத் –

முதல் இரண்டும் சித்த ரூபமான ப்ரஹ்மத்தில் பிரமித்திதி ஏற்படுத்தவும்
அடுத்த இரண்டும் ஸாஸ்த்ரமும் அதனால் ஏற்படும் புத்தியும் வீண் என்ற வாத நிரஸனம்

அதிகரணம் என்பது
1-விஷயம்
2-சம்சயம்
3-பூர்வபக்ஷம்
4-சித்தாந்தம்
5-பிரயோஜனம்
என்ற ஐந்து பொருள்களைக் கொண்டது

————

முதல் அதிகரணம் -ஜிஜ்ஞாஸாதி அதிகரணம்

இதில் ப்ரஹ்ம விசார ஸாஸ்த்ரம் விஷயம்
அது ஆரம்பிக்க வேண்டியதா இல்லையா என்று சம்சயம்
ஆரம்பிக்க வேண்டாம் என்பது பூர்வ பக்ஷம்
ஆரம்பிக்க வேண்டுவதே என்பது ஸித்தாந்தம்
ஸாஸ்த்ரத்தை நிர்ணயம் செய்வதே பலம்

ஸூத்ரம் -1- அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா –1-1-1-

இதில் விஷய வாக்கியம்
பரீஷ்ய லோகான் கர்மசிதான் ப்ராஹ்மணோ நிர்வேத மாயாத் –தத் விஞ்ஞானர்த்தம் ஸ குருமே வாபி கச்சேத் –என்பது
கர்மாக்களால் பெறப்படும் லோகங்களை எல்லாம் ஆராய்ந்த ப்ராஹ்மணன்
அக்கர்மங்களால் அக்ருதனான -செயலுக்கு விஷயமாகாத -எம்பெருமான் பெறப்பட முடியாதவன் என்று நிர்வேதம் பிறந்து
ப்ரஹ்ம நிஷ்டனான ஸ்ரோத்ரியனை ஆச்சார்யராக வரித்து சமித்தாதிகளைக் கையிலே உபஹாரமாகக் கொண்டு
எம்பெருமானை அறிந்து கொள்ள பிரார்த்திப்பது ஆகும்

இங்கு ஒருவன் ப்ரஹ்ம விசாரம் செய்வது என்பது அவனது ஆசையாலேயே ஏற்படக் கூடிதயதாகையால்
கிடைக்காத ஒன்றை கிட்ட அபூர்வ விதி ஆகாது
பின் என் என்னில்
ப்ரஹ்ம விசாரம் செய்ய விரும்புபவன் அத்தை ஆச்சார்ய முகேன
உபதேச பூர்வகமாகவே செய்ய வேண்டும் என்ற நியமத்தை விதிப்பதால்
நியம விதியே யாகும்

பூர்வ மீமாம்ஸையில் கடைசி ஸூத்ரம் –
ஸ விஷ்ணு ராஹ ஹிதம் ப்ரஹ்மேத்யா சஷதே தம் ப்ரஹ்மேத்யா சஷதே-என்று உள்ளது
அந்த ப்ரஹ்மத்தின் விசாரம் தொடங்குகிறது என்று இதில் வ்யாஸர்

அத -பிறகு
அத– இக்காரணங்களாலே
ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா -ப்ரஹ்மத்தைப் பற்றி விசாரம் ஆராய்ச்சி செய்யத்தக்கது

கர்ம விசாரம் முடிந்து அவை அல்ப அஸ்திர பலன்களையே கொடுக்கும் என்றும்
ப்ரஹ்ம ஞானமே முடிவற்ற எல்லை இல்லா நிலையான பலனைக் கொடுக்கும் என்று
மேல் எழுந்தவாரி உணர்ந்து ப்ரஹ்ம விசாரத்தில் இழிகிறார் என்றவாறு

கர்ம விசாரம் செய்த பின்பே ப்ரஹ்ம விசாரம் என்பதற்கு -அத்வைதி பூர்வம் நடந்தது கர்ம விசாரமே அல்ல
1-நித்ய அநித்ய வஸ்து விவேகம்
2- சமதமாதி சாதன ஸம்பத்
3-இம்மை மறுமை பல போகத்தில் வைராக்யம்
4-மோக்ஷம் அடைய விருப்பம்
ஆகிய சாதன சதுஷ்டயமே பூர்வ விருத்தம் என்பர்

யாதவ பிரகாசரும் பாஸ்கரரும் முந்தையது தாப த்ரயத்தால் ஏற்பட்ட ஸ்ரமமே என்பர்
லகு பூர்வ பாசத்துக்கு லகு சித்தாந்தம் -மஹா பூர்வ பாசத்துக்கு மஹா சித்தாந்தம்
ப்ரஹ்ம ஆத்ம ஐக்ய ஞானமே உபாயம் என்றும்
நிர்விசேஷ ப்ரஹ்மமே ப்ராப்யம் என்றும்
இந்த ஐக்ய ஞானத்தால் அநிர் வஸநீய அஞ்ஞானமும் –
அதன் அடியாக பிரபஞ்சமும் நீக்கப்படுபவை என்றும் கூறுவார்
ஸ குண சாஸ்திரங்கள் குணங்களை அபேக்ஷிக்கையாலே துர்லபம் என்றும்
நிர்குண சாஸ்திரங்கள் பலம் மிக்கவை என்றும்

ஸத்யம் ஞானம் அநந்தம் -சோதக வாக்கியமும் நிர்குண ப்ரஹ்மத்தையே கூறும் என்பர்
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏக மேவம் அத்விதீயம் ப்ரஹ்மம் என்பதில்
ஸதேவ -விஜாதீயங்களான அசேதனங்களை விட்டு பேதத்தையும்
ஏகமேவ -என்று சஜாதீயன்களான சேதனங்களை விட்டு பேதத்தையும்
அத்விதீயம் என்று ப்ரஹ்மத்திடம் உள்ள ஸத்யத்வம் ஞானத்வம் போன்ற ஸ்வ கத தர்மங்களில் நின்றும் பேதத்தையும்
விலக்கி நிர்விசேஷ ப்ரஹ்மமே நிரூபிக்கப் படுகிறது
எனவே யஸ் ஸர்வஞ்ஞ ஸர்வவித்
தஸ்மாத் ஏதத் ப்ரஹ்ம நாம ரூப மன்னஞ்ச ஜாயதே முதலிய வாக்கியங்களில் உள்ள குணங்களை இல்லையாக்கி
நிர்க்குண ப்ரஹ்மமே கூறப்படுகிறது என்று காரண வாக்யத்துடன் ஐக்ய அர்த்தம் கொள்ள வேண்டும் என்பர் –

பிரமாணம் தர்க்கம் உபபாத்திகளைக் காட்டி நம் சித்தாந்தமான
பக்தி ரூபா பன்ன ஞானமே முக்தி உபாயம் -வெறும் தத்வ ஞானம் மட்டும் அல்ல
அது ஆசையால் கிட்டும் கேள்வி அறிவாலே கிட்டக்கூடியது விதிக்க வேண்டாம் என்று மஹா சித்தாந்தம்

இதுக்கு
ப்ரஹ்மத்தை அறிந்தவன் ப்ரஹ்மத்தை அடைகிறான் -அம்ருதம் ஆகிறான் சர்வ பாதங்களில் நின்றும் விடுபடுகிறான்
போன்ற வாக்யங்களிலே தத்வ ஞானமே முக்திக்கு வழி என்ற சங்கை
ஸ்ரவணம் மனனம் நிதித்யாஸனம்
காரணந்து த்யேய -என்பதால்
ஞானம் வேதனம் சொற்களுக்கு த்யானம் உபாஸனம் என்றே கொள்ள வேண்டும்
பக்தி ரூப ஞானமே முக்திக்கு சாதனம்
தஸ்மின் த்ருஷ்டே பராவரே -இதில் த்ருஷ்டே தர்சன சமானாகார சாஷாத்காரம் பெற தியானமே வழி
பேதங்களை ஏற்கக்கூடாது என்னும் பூர்வ பக்ஷிகளின் வாதத்தைக் கண்டித்து ஏற்க வேண்டும் என்று ஸ்தாபிக்கிறார்
தர்மமும் தர்மியும் எப்போதும் பேதம் உள்ளவையே

சத்யம் ஞானம் அநந்தம் ஸ்ருதி சஜாதீய பேதங்களைக் கண்டிக்க வில்லை
ஸதேவ -என்று ஸத்கார்ய வாதம்
ஏகமேவ -ஸூஷ்ம அவஸ்தை -உபாதான காரணம் காட்டும்
அத்விதீயம் -தன்னைத் தவிர வேறு நிமித்தம் இல்லை
கீதா வசனம் விஷ்ணு புராண வசனங்களைக் காட்டி அவன் ஒருவனே சமஸ்தத்துக்கும் அந்தர்யாமி என்று
நிர்விசேஷ ப்ரஹ்ம வாதத்தைக் கண்டித்தார்

ஏழுவித அனுபபத்திகள்
1- ஆஸ்ரய அனுப பத்தி -ஞானத்தால் பாதிக்கப்படும் அவித்யை ஞான ஸ்வரூபமான ப்ரஹ்மத்தையே
ஆஸ்ரயிப்பது பொருந்தாதே
ஸ்வரூப ஞானம் அவித்யைக்கு விரோதம் இல்லை என்பர்
இவன் தேவதத்தன்-இவனே தேவதத்தன் என்ற ப்ரத்யபிஜ்ஜை நினைவு ரூபமான ஞானத்துக்கும்-
இரண்டு நபர்கள் இல்லை என்று ஸ்தாபிக்கும் ஞானத்துக்கும் வாசி உண்டே
நீங்கள்கூறும் உதாரணம் வேறு வேறு காலத்து ஞானம்
ஆனால் இங்கோ ஒரே விஷயம் -நிர்விசேஷ ப்ரஹ்மம் பற்றிய ஞானம்
ஸ்வரூப ஞானமே ஜகத் என்னும் பிரமத்தைத் தடுக்கும் என்று கண்டிக்கிறார்
2-திரோதான அனுப பத்தி -ப்ரகாசமே வடிவான ப்ரஹ்மம் அவித்யையால் மூடப்பட்டது என்பது பொருந்தாதே
3-ஸ்வரூப அனுப பத்தி -ப்ரஹ்மத்திடம் அவித்யை தோஷம் உண்மையா சத்தியமா
உண்மை என்றாலே இரண்டு வஸ்துக்கள் கொண்டதாகும் அசத்தியம் என்றால்
அந்த அவித்யை பார்வையா பார்ப்பவனிலா பார்க்கப்படுபத்திலா –
ப்ரஹ்மமே தோஷம் என்றால் தோஷ நிவ்ருத்தியே ப்ரஹ்ம நாசமாகும்
4-அநிர்வசனீயத்வ அனுப பத்தி -அத்வைதிகள் அவித்யை ஸத் என்றோ அஸத் என்றோ
சொல்ல முடியாமல் அநிர்வசனீயம் என்பர்
ப்ரதீதி -உள்ளத்துக்குப் புலப்படுதலைக் கொண்டே அது ஸித்திக்க வேண்டும்
அது ஸத் என்றோ அஸத் என்றோ தோன்றுவதால் அநிர்வசனீயம் இல்லை
சத்தும் அசத்தும் இல்லாதது தான் அவித்யையின் விஷயம் என்றால் தோன்றாதது கூட ப்ரதீதியில் விஷயம் ஆகலாம்
அப்போது விஷயம் எது என்ற வ்யவஸ்தையே அற்றுப் போகும்
5-பிராமண அனுப பத்தி பாவ ரூபமான அஞ்ஞானம் உண்டு என்று ஏற்றுக் கொள்ள
அறிவற்ற நான் என்னையும் பிறரையும் அறிந்திலேன் -என்கிற ப்ரத்யஷம் பிரமாணம்
இந்தப் ப்ரத்யக்ஷம் உண்டாவதற்கு முன் இல்ல அபாவ -இன்மையை -விஷயமாகக் கொண்டது என்றால் பொருந்தாது
ஏன் எனில்
ஞானத்தின் பிராக் அபாவத்தை அதன் சம்பந்தியான பிரதியோகி ஞானத்தைக் கொண்டே நிரூபிக்க வேண்டும்
க்யாதி வாதங்கள்
சிப்பியைப்பார்த்து வெள்ளி என்ற பிரமம் -அநிர்வசநீயமான வெள்ளி உண்டாகிறது என்னும் அத்வைதி வாதம் நிரஸனம்
அக்யாதி
அந்யதா க்யாதி
ஆத்ம க்யாதி
அஸத் க்யாதி –பஷன்களில் அந்யதா க்யாதி சிறந்தது என்று விளக்கல்
அக்யாதி யோடே கூடிய யதார்த்த க்யாதியே சிறந்தது என்பதே ஸ்ரீ மன் நாத முனிகள் உகந்தது
சிப்பியில் வெள்ளியின் அம்சம் உண்டே
ஸ்வப்ன பொருள்களும் ஸத்யங்களே
கண்கள் ப்ரவ்ருத்தி விரலால் தடைப்பட்டு இரண்டு சந்திரன்கள் என்கை
மாயாந்து ப்ரக்ருதிம் –மாயா -விசித்ரார்த்த ஸ்ருஷ்ட்டி =மித்யா ஞானம் அல்ல
6- நிவர்த்தக அனுப பத்தி
தத் தவம் அ ஸி
அயம் ஆத்மா ப்ரஹ்ம
நிர்விசேஷ ப்ரஹ்மாத்மைகத்வ ஞானம் அவித்யை நிவ்ருத்தி செய்யும் என்பர்
இது தவறு
ஜகத்தின் சரீரியான ப்ரஹ்மத்தையே குறிக்கும்
அம்ச அதிகரணத்தில் விளக்கம் உண்டே
பாஸ்கரன் உபாதி பேத அபேத வாதி
யாதவப்ரகாசர் ஸ்வ பாவிக பேத அபேத வாதி
தார்க் கிகன் ஸ்வ நிஷ்ட பேத வாதி
பிரகாரம் அப்ருதக் சித்தம் என்று உணராமல் பிதற்றல்கள் இவை
7- நிவ்ருத்தி -அனுப பத்தி -ஐக்ய ஞானத்தால் பந்த நிவ்ருத்தி என்பது பொருந்தாது
பகவத் பக்தியாலேயே நிவ்ருத்தி என்பதே சுருதி சித்தம்
ஐக்ய ஞானத்துக்கும் ஞாதா தனியே இருக்க ஒண்ணாதே
ஞானம் ஞாதா ஜேயம்-மூன்றும் வேண்டுமே
ப்ரஹ்ம ஞானமே அநந்தமான ஸ்திர பலனைக் கொடுக்கும்

இனி ஸித்த வஸ்து ரூபமான ப்ரஹ்மத்தை போதிக்கும் சக்தி இல்லை என்னும் மீமாம்ஸகனை நிரசிக்கிறார்
ப்ரஹ்ம ப்ராப்திக்கு ப்ரஹ்மத்தை உபாஸிக்க வேண்டும் என்னும் வேத வாக்கியங்கள் பிரமாணங்களே
ப்ரஹ்ம விசாரம் தொடங்குவதில் எந்தவித விரோதமும் இல்லை –

1-அததோ ப்ரஹ்ம ஜ்ஞ்ஞாச –1-1-1-

அறிவதில் ஆராய்வதில் உள்ள விருப்பம் -எதனை ஆராய்வதில் எதனால் –
அத -இந்த காரணத்தினால் -மோஷ பலனை அளிக்க வல்ல

ப்ரஹ்ம சப்தேன ச ஸ்வ பாவதோ நிரஸ்த நிகில தோஷ –அனவதிக அதிசய அசங்க்யேய
கல்யாண குண கண -புருஷோத்தம -அபிதீயதே –

அத -வேதத்தின் ஒரு பகுதியான கர்ம காண்டத்தை விசாரித்த பின்பு
அத -ப்ரஹ்ம ஞானம் இல்லாதவன் கர்மங்கள் அல்ப அஸ்திர பலன்களையே கொடுக்கும் என்பதால்
ப்ரஹ்ம ஞானம் அநந்த ஸ்திரம் ஆகையாலும்
ப்ரஹ்ம விஷயகமான மீமாம்ஸை -விசாரம் –
கர்த்தவ்ய -என்ற பதம் வருவித்துக் கொண்டு செய்யப்பட வேண்டும்
ப்ரஹ்ம -அகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைக குணதானனாய் -ஸ்ரீயப்பதியான புருஷோத்தமன்
ஆகவே ப்ரஹ்ம விசாரம் செய்யத்தக்கதே –

அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா
ப்ரஹ்ம சப்தேன ஸ்வ பாவதோ நிரஸ்த நிகில தோஷ
அநவதிக அதிசய அசங்க்யேய புருஷோத்தம அபிபீதயதே
அநவதிக அதிசய -உயர்வற
அசங்க்யேய -உயர்
கல்யாண குண-நலம் உடையவன்
புருஷோத்தமன் -யவனவன்—

————

ப்ரஹ்மத்துக்கு லக்ஷணம் யாது என்ற கேள்வி எழ
இது தோன்றுகிறது

இரண்டாம் அதிகரணம் ஜந்மாத்யாதி அதிகரணம்

2- ஜந்மாதி அஸ்ய யத–1-1-2-

தைத்ரிய உபநிஷத் –
ப்ருகு தந்தை வருணனிடம் கேட்க வருணன் அளித்த பதில் –
யதோ வா இமாநி பூதா நி ஜாயந்தே -யேன ஜாதாநி ஜூவந்தி யத் பிரத்யந்த்யபி சம்விசந்தி
தத்வி ஜ்ஞ்ஞாச ஸ்வ தத் ப்ரஹ்மேதி —என்பதே விஷய வாக்கியம்

உலகில் பிறப்பு முதலியவற்றுக்கு காரணமாய் இருத்தல்
இது ப்ரஹ்மத்துக்கு லக்ஷணமாக இருக்கலாமா கூடாதா சம்சயம்
ஸ்ருஷ்டி காரணத்வம்
ஸ்திதி காரணத்வம்
லய காரணத்வம்
என்று விசேஷணங்கள் பலவாய் இருப்பதால்
விசேஷ் யாமும் பலவாகி விடுமே
ப்ரஹ்மமும் பலவாகி விடுமே
ஆகையால் லக்ஷணம் என்று ஏற்க முடியாது -பூர்வ பக்ஷம்

ஜன்மாதி –அஸ்ய –யத –மூன்று பதங்கள்–
இந்த விசித்திரமான ஜகத்துக்கு -ஸ்ருஷ்டி ஸ்திதி -ப்ரளயங்கள் -எந்த ப்ரஹ்மத்தினிடம்
இருந்து உண்டாகின்றனவோ அவனே ப்ரஹ்மம் -என்றவாறு
ப்ரஹ்மம் -காரணப்பெயராகக் கொண்டால் உபய லிங்கமும்
இடுகுறிப் பெயராகக் கொண்டால் ஸ்ரீயப்பதித்வமும் ஸித்திக்கும்
ஜன்மாதி காரணத்வம் விசேஷணமாகவும் உபலக்ஷணமாகவும் கொள்ளலாம்
ப்ரஹ்ம வித்யைகள் பல உண்டே
உபாஸ்ய குண பேதத்தால் உபாஸ்யமும் பின்னமாகலாம்

காரணந்து த்யேய
சதவித்யையில் காரணத்வம் அறிய வேண்டும் என்பதால் விசேஷணமாக கொள்ள வேண்டும்
தஹர உபாஸனத்தில் ப்ரஹ்மத்தில் தோற்றம் ஏற்படுகையில் பொருந்தியும் இருப்பதால் காரணத்வம் உப லக்ஷணம் ஆகும்
இதில் அபஹத பாப்மத்வாதிகளே அறியத்தக்க ஆதாரம் ஆகையால் ஸ்ம்ருதி வ்யக்தி தோறும் தொடர்ந்து
விசேஷணம் ஆகின்றன என்று வித்யா பேதத்தாலே விஷயமும் வெவ் வேறு ஆவதால்
பாஷ்யத்தில் இரண்டு வகைகளும் காட்டப்பட்டது பொருந்தும்

யதோவா இமானி பூதாநி –சேதன அசேதனாத்மகமான ஸமஸ்த வஸ்துக்களுடைய ஸ்வரூபத்தை நிரூபிப்பது
ஸத்யம் ஞானம் அநந்தம் வாக்கியம் வேறுபட்ட ஸ்வரூபத்தை விளக்கும்
ஆகையால் இரண்டு லக்ஷண வாக்யங்களுமே பயனுள்ளவையே –

———-

உபாதான காரணமாயும் நிமித்த காரணமாயும் உள்ள ப்ரஹ்மமே வேதாந்த வாக்யங்களால்
விளக்கப்படுகிறது என்று கூறுவது பொருந்தாது
ஏன் எனில்
ப்ரஹ்மம் அனுமானத்தாலேயே ஸித்திப்பதால்
அந்த அனுமானமே தர்மியான ப்ரஹ்மத்தைப் புரிந்து கொள்ளக்கூடிய பிரமாணமாகையாலே
பிரபலமாதலின் வேறு ப்ரமாணங்களாலே சாதிக்க முடியாததையே ஸாஸ்த்ரம் ஸாதிப்பதில் பயன் உண்டு என்பதால்
அனுமான ஸித்தமான ப்ரஹ்மத்தை ஸாஸ்த்ரம் உபாதான காரணனுமாகும் என்று கூற ஒவ்சித்யம் இல்லை
ஆதலின் ஸாஸ்த்ரம் ஆரம்பிக்கத் தேவை இல்லை என்று பூர்வ பக்ஷம்
அந்த அனுமானத்தைக் கண்டித்து
ஸாஸ்திரமே பிரமாணம் என்றும்
அதனால் ஆரம்பிக்கப் பட வேண்டியதே என்றும்
அடுத்தபடி ஸாதிக்கிறார் –

3-சாஸ்திர யோநித்வாதிகரணம்-

சாஸ்திர யோநித்வாத்–1-1-3-

ஸாஸ்த்ரத்தையே ப்ரமாணமாகக் கொண்டது ப்ரஹ்மம் என்றவாறு

பூமி முதலியவை கர்த்தாவைக் கொண்டவை -செய்யப்படும் பொருளாய் இருப்பதால் –குடம் முதலியவை போலே –
செய்யப்படாதவைக்குக் கர்த்தா கிடையாது –ஆத்மாவைப் போலே
என்று இவ்வாறு அந்வய கேவல வ்யாதிரிகி அனுமானங்களால் ஜகத் காரணமான ப்ரஹ்மம் அறியக்கூடுமாதலின்
யதோவா இமானி -இத்யாதி வாக்கியங்கள் ப்ரஹ்மத்தை உள்ளபடி அறிவிக்க மாட்டா என்பது பூர்வபக்ஷம்

ஜகத் என்பது கார்யம் -செய்யப்படுவதே என்றாலும்
ஒரே காலத்திலே ஒரே புருஷனாலே சர்வ ஜகத்தும் படைக்கப்பட்டது என்பதில் பிரமாணம் இல்லாதபடியால்
விச்வாமித்திராதிகளைப் போன்ற ஜீவர்களுக்கே விசித்ர ஸ்ருஷ்டி சம்பவிக்குமாகையாலே
ஜீவனை விட்டு வேறான ஸர்வஞ்ஞத் வாதி குணங்களை யுடைய ப்ரஹ்மம் அனுமானத்தால் ஸித்திக்காது
அதற்கு ஸாஸ்திரமே பிரமாணமாக வேண்டும் என்பது ஸித்தாந்தம்

அனுமானாதிகளாலே உள்ளவாறு அறிய ஒண்ணாமையாலே
யதோவா இமானி -என்ற வாக்கியம்
உபாதான காரணமாயும் நிமித்த காரணமாயும் உள்ள ப்ரஹ்மத்தைப் போதிப்பதால் ஸாஸ்திரமே பிரமாணம் ஆகிறது –
ஆகவே ப்ரஹ்மம் ஸாஸ்த்ர யோனியாகிறது
பிற பிரமாணங்கள் போதிக்காது என்பதாம் –

————-

ப்ரஹ்மம் ஸாஸ்த்ரத்தால் மட்டுமே அறியக் கூடியதாய் இருப்பினும் –
ஸப்தம் ஸித்த வஸ்துக்களைப் போதிக்கும் திறனைப் பெற்று இருப்பினும்
ப்ரவ்ருத்தி என்பது -அறிய வேண்டும் என்னும் விருப்பத்துக்குக் காரியமாக இருப்பதாலும் –
அவ்விருப்பும் பிரயோஜனம் பற்றிய ஞானத்தைச் சார்ந்து ஆதலாலும் –
அந்த பிரயோஜனமும் அதற்கான சாதனங்களை அனுஷ்ட்டிப்பத்தைச் சார்ந்து இருப்பதாலும்
ஸித்த பரமான வாக்யத்துக்கு பிரயோஜனமான சுகமும் -துக்க நிவ்ருத்தி -அவற்றின் சாதனத்தை அனுஷ்டித்தல்
இவற்றின் விஷயத்தில் போதனத்தினால் ப்ரவர்த்தகத்வம் என்பது இல்லாததால்
ப்ரயோஜனத்தில் முடிவு பெறுதல் என்பது இல்லை
ஆதலால் வேதாந்த வாக்யங்கள் ஸித்தமான வஸ்துவைப் போதிக்கும் கருத்துடையவை அல்ல என்பது சங்கை
இத்தை நீக்கவே இந்த அதிகரணம் –

4-சமந்வயாதிகரணம்-

தத் து சமன்வயாத் –1-1-4–

சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் போன்ற வாக்கியங்கள் ப்ரவ்ருத்திக்கும் நிவ்ருத்திக்கும்
விஷயமாகாத ப்ரஹ்மத்தை போதிக்க மாட்டா
ஆகையால் வேதாந்த அர்த்த விசார ரூபமான ஸாஸ்த்ரம் ஆரம்பிக்க வேண்டியது இல்லை
என்பது பூர்வ பக்ஷம்

வீட்டுக்குள் புதையல் இருக்கிறது போல் ஈடற்ற ஆனந்த ரூபமான ப்ரஹ்மத்தை
இந்த வாக்கியங்கள் போதிக்கும் சக்தி கொண்டவையே
ஆதலின் ஸாஸ்த்ர விசாரம் ஆரம்பிக்கத் தக்கதே என்பது சித்தாந்தம்

உபாசகனுக்கு பயனாக ப்ரஹ்மமும்-ப்ரஹ்மத்துக்கு பயனாக உபாசகனும் ஆவதால்
கர்மங்களையும் பலன்களையும் சொல்லும் வேதங்கள் பிரமாணங்கள் ஆகும்

தத் து சமன்வயாத் -மூன்று சொற்கள்
து பூர்வ பக்ஷ நிரஸனம்
தத் -சாஸ்திரத்தையே ப்ரமாணமாகக் கொண்டமை ஸம்மபவிப்பதே
சமன்வயாத்-ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்
ஆனந்தோ ப்ரஹ்ம
முதலிய வாக்யங்களுக்கு ப்ரயோஜன பூதமான ப்ரஹ்மத்தை ஆனந்த ரூபமாக விளக்கும் தன்மையால்
சமன்வயம் -பொருத்தம் ஏற்படுவதால்
ஸாஸ்த்ர யோனித்வம் கூடும் –

——————-

இவ்வாறு நான்கு அதிகரணங்களால் ஸாஸ்த்ர ஆரம்பத்தைச் சரியானதே என்று நிலை நாட்டி
ப்ரஹ்ம விசாரத்தை தொடங்குகிறார்

5-ஈஷத் யதிகரணம்

இதில் எட்டு ஸூத்ரங்கள்

கீழே வேதாந்த வாக்யங்களுக்கு ப்ரஹ்மத்தை பரம புருஷார்த்த ரூபமாக விளக்குவது
சமன்வயமே பொருத்தமே என்பதை பூர்வ பக்ஷி மறுக்கிறார்
புருஷார்த்தம் அல்லாத பிரதானம் முதலானவற்றை காரணமாக விளக்குவதால் என்று ஆக்ஷேபித்து
இந்த அதிகரணம் தொடங்குகிறது என்பது சங்கதி –

5- ஈஷதேர் ந அ சப்தம் –1-1-5-

சாந்தோக்யத்தில் -ஸ்வேதகேதுர் ஹாருணேய ஆச -என்று தொடங்கும் ஆறாம் அத்தியாயத்தில்
ஜகத் காரணமாகக் கூறப்படும் ஸத் -என்பது
அனுமானத்தால் சித்திப்பதும் சாங்க்யர்கள் கூறும் பிரதானம் -பிரகிருதியா அல்லது ப்ரஹ்மமா என்று சங்கை
பிரதானம் தான் என்று பூர்வ பக்ஷம்

ஏன் எனில்
இதம் என்ற சொல்லால் கூறப்படும் சேதனர்களின் போக்யமான ஸத்வ ரஜஸ் தமோ மயமான ஜகத்துக்கு
அதே விதமான பிரதானம் காரணம் என்கை உசிதமானது
ஜகாத்தை விட விலக்ஷணமான ப்ரஹ்மம் காரணம் என்பது பொருந்தாது
பிரதானம் ஜகத்துக்குக் காரணம் என்பதற்கு அனுமானம்
இந்த ஜகத்து தன்னைத் தவிர வேறே அல்லாமல் தன்னையே உபாதான காரணமாகக் கொண்டது
காரியமாய் இருப்பதால் குடம் போல் என்பதும்
இந்த ஜகத்து தன் காரணம் ஒன்றை அறிவதாலேயே முற்றும் அறியப்படுவது -காரியமாய் இருப்பதால்
ஒரு மண் உருண்டையால் தொடங்கப்பட்ட குடம் போல் என்பதும் ஆகிய இரண்டு அனுமானங்களாலும்
சாதனமானவை என்பது பூர்வ பக்ஷம் –

பரம புருஷனே ஜகத் காரணம் என்றும் ஸத் என்றும் சொல்லப்படும் பர ப்ரஹ்ம ஸ்வரூபம்
அவனே ஸூஷ்ம சேதன அசேதனங்களுடன் சேர்ந்தவன் என்ற ரூபத்தால் காரணமானாலும்
ஸ்தூலமான சேதன அசேதனங்களுடன் சேர்ந்தவன் என்ற ரூபத்தால்
காரியமாகிய ஜகத்தின் ரூபத்தில் உள்ளவன் என்பதால் காரியமும்
காரியமும் காரணமும் ஒரே விதமானமையால் பரமபுருஷனே ஸத் எனப்படும்
ஜகத் காரணம் என்பது சித்தாந்த யுக்தி –

ஈஷதேர் ந அ சப்தம் –
இதில்
அ -சப்தம் மட்டும் ப்ரமாணமாகக் கொள்ளாத அனுமான பிராமண கம்யமான பிரதானம்
ந -ஸத் எனப்படும் ஜகத் காரணம் அன்று
ஏன் எனில்
ஈஷதேர்-நான் பலவிதமாக மாறப்போகிறேன் என்று சங்கல்பித்துக் கொண்டார்
தத் ஈஷதே பஹுஸ்யாம் ப்ரஜாயேய -என்ற சங்கல்பம்
அசேதனமான ஜகத்துக்குச் சேராதே என்பதால்
ஸர்வஞ்ஞத்வம் முதலியவற்றுடன் கூடிய ப்ரஹ்மமே ஜகத்தின் காரணமாகும் என்பதாம் –

——–

6- கௌண சேத் ந ஆத்ம சப்தாத் –1-1-6-

தேஜஸ் பார்த்தது தண்ணீர் பார்த்தது முதலிய வாக்கியங்களில்
ஈஷ என்ற வினைப்பகுதியால் சங்கல்பம் என்பதை உபசார வாக்காக -கௌணமாக -கொள்வது போல்
இங்கும் கொண்டால் பிரதானம் காரணம் என்பதில் தடை இல்லையே
ஈஷணம் என்பது ஸ்ருஷ்டிக்கு முந்திய நிலையாகிய முக்கியமில்லாத ஈஷணத்தைச் சொல்வது என்றால்

கௌண சேத் ந -அஃது இல்லை
ஏன் எனில்
ஆத்ம சப்தாத் -ஐததாம்யம் இதம் ஸர்வம் தத் ஸத்யம் ச ஆத்மா என்று –
சேதன அசேதன ரூபமான சர்வ ஜகத்துக்கும் ஸத் என்பதே ஆத்மா என்பதால்
பிரதானம் ஸர்வ ஜகத்துக்கும் அந்தர்யாமியான ஆத்மாவாய் இருத்தல் பொருந்தாது என்று கருத்து –

———

7-தந் நிஷ்டஸ்ய ச மோஷ உபதேசயாத் –1-1-7-

தந் நிஷ்டஸ்ய ச -சத்தே ஆத்மா என்றது -சந்திக்கும்
மோஷ உபதேசயாத் –புருஷனுக்கு உடலை விட்டதும் ப்ரஹ்மத்தை அடைதல் என்கிற மோக்ஷத்தை உபதேசிப்பதால்
அசேதனமான பிரதானம் காரணம் -காரணமே த்யானிக்கப் படுவதால் –
எதை உபாஸிக்கிறானோ அதே பலம் -தத் க்ரது -நியாயத்தால் –
தாப த்ரயங்களுக்கு காரணமான அசேதனத்தை அடைதலே -சம்பத்தியே -மோக்ஷம் -என்றதாகும்
பிரதானத்தைக் காரணமாக் கூறும் சாங்க்யர்களும் இதனை ஏற்பது இல்லையே என்று கருத்து –

யாதாக்ரது ரஸ்மின் லோகே புருஷோ பவதி ததேத ப்ரேத்ய பவதி -சாந்தோக்யம் -3-14-1–என்றபடி
பிரக்ருதியை எவ்வாறு உபாசிக்கிறானோ இறந்தபின் அப்படியே ஆகிறான் -எனவே சத் எனபது பிரகிருதி அல்ல-

சத் வித்யா பிரகரணத்தில்-சாந்தோக்யத்தில் –
ஆச்சார்யவான் புருஷ வேத -தஸ்ய தாவதேவ சிரம் யாவன்ன விமோஷ்யே அத சம்பத்ஸ்யே-என்று
சத் உபாசனமே மோக்ஷ உபாயமாக சொல்லப்பட்டது –
எவனுக்கு உபதேஷ்டாவான ஆச்சார்யன் இருக்கிறானோ அவனே ப்ரஹ்ம வித்தாவான் –
சரம சரீரத்தில் இருந்து விடுபடலாம் அளவே அவனுக்கு கால தாமதம் –
சரம சரீரம் விழுந்த உடனே சத் சப்த நிஷ்டானாய் ஜகத் காரண பூதனான பரம புருஷனை அடைகிறான்
சத் உபாசன நிஷ்டனுக்கு சரீரம் விழும் அளவு தான் மோக்ஷ ப்ராப்தியில் தாமதம் –
சரீரம் தொலைந்த உடன் முக்தன் ஆகிறான் –
அதனால் நாராயணனே ஸச் சப்த வாச்யன் என்று அறுதி விடப்படுவதால்
ப்ராக்ருதமான வஸ்து பிரதானம் அன்று என்பதே ஸூத்ரத்தின் தாத்பர்யம்

தமேவ வித்வான் அம்ருத இஹ பவதி -இத்யாதிகளால்–இதே தத் சப்தம் –
இதே தத் சப்தம் -தன்னிஷ்டஸ்ய -வாக்யத்திலும்
எனவே – நாராயண உபாசனமே மோக்ஷ உபாயம் -என்றதாயிற்று

————

8-ஹேயத்வா வச நாத் ச –1-1-8-

சத் என்பதை தாழ்வாகவும் தவறாகவும் சொல்ல வில்லை –
உபாசனை செய்யலாம் -எனவே அது ப்ரஹ்மமே

ப்ரதானமே ஸத் எனும் ஜகத் காரணமாகில்
மோக்ஷம் விரும்புகிற ஸ்வேதகேதுவுக்கு தன்னை பிரதான ஆத்மகன் என்று உபாஸிப்பது
மோக்ஷ விரோதியாதலின் அது விலக்கத் தக்கது என்று உபதேசித்து இருக்க வேண்டும் –
அவ்வாறு உபதேசிக்காமையாலும் பிரதானம் காரணம் அன்று –

———–

9-பிரதிஜ்ஞ்ஞா விரோதாத் –1-1-9-

சத் -ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்றோம் அதனால் அது பிரகிருதி இல்லை ப்ரஹ்மமே –
அறிவற்ற பொருள் அறிவுடையார்க்கு உணர்த்தாதே –

பிரதானம் காரணம் என்னில் செய்த ப்ரதிஜ்ஜையும் விரோதிக்கும் –
அதாவது முதலில் -யேநா ஸ்ருதம் ஸ்ருதம் பவதி –என்று
காரணத்தை அறிந்தால் கார்யங்கள் அனைத்தும் அறியப்பட்டு விடும் என்று ப்ரதிஜ்ஜை செய்யப் பட்டது
ஸத் என்பது ப்ரஹ்மமே என்று கொண்டால் தான் இந்த ப்ரதிஜ்ஜை பொருந்தும்
பிரதானம் ஸத் என்னும் சொல்லின் பொருள் என்றால்
அந்த சேதனம் சேதனத்துக்குக் காரணம் ஆக மாட்டாதே என்பதால்
ஜகத் அத்தனையும் அறியலாம் என்ற ப்ரதிஜ்ஜை பொருந்தாது ஆகும் –

———–

10 –ஸ்வாப்யயாத்–1-1-10-

தூங்கும் பொழுது சத் உடன் கலக்கிறோம்
சத் ப்ரஹ்மமே

சாந்தோக்யம் -6-8-1-
யத்ரை தத் புருஷ ஸ்வ பிதி நாம சதா சோம்ய ததா சம்பந்நோ பவதி ஸ்வ மபீதோ பவதி
தஸ்மா தேநம் ஸ்வ பி தீத்யாஸ் ஷதே ஸ்வம் ஹயபீதோ பவதி –

ஸதா சோம்ய ததா சம்பந்நோ பவதி ஸ்வ மபீதோ பவதி-முதலிய வாக்யங்களில் ஸூஷுப்தி தசையில் ஜீவன்
ஸத்திலே லயித்து இருப்பதாகக் காண்கிறது
பிரளயம் என்பது காரியப்பொருள் காரணத்திலே லயம் அடைதலே
இதனாலும் பிரதானம் காரணம் அன்று
எங்கு இந்த ஜீவன் உறங்குகிறானோ என்னும் இடத்தில் புருஷ என்னும் சொல்
விழித்து இருக்கும் ஜீவனை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தைக் குறிப்பிடுகிறது
அந்த ப்ரஹ்மம் ஸூஷுப்தி காலத்தில்
மனுஷ்யாதி நாம ரூப சம்பந்தத்தை விட்டு வெறும் ஸத் என்ற சொல்லின் பொருளாகிறது என்பதாம் –

————-

11-கதி சாமான்யாத் –1-1-11–

ஐத் ரேய உபநிஷத் -1-1-
ஆத்மா வை இதம் ஏக ஏவாக்ர ஆஸீத் -ஆத்மா என்னும் பொருளாக இது -சத் -இருந்தது –
தைத்ரியம் -2-1-1-
ஆத்மன ஆகாச சம்பூத -இந்த பிரமத்தில் இருந்து ஆகாசம் யுண்டாயிற்று
இவற்றால் ஸ்ரீ மன் நாராயணனே சத் என்றும் உலகின் காரணம் என்றதும் ஆயிற்று –

கதி சாமான்யாத்-
கதியாவது -பிரவ்ருத்தி -அதாவது அர்த்த போதகத்வம் –
சாமான்யாத்-அது சாமானமாய் இருக்க வேண்டியது அவசியம் ஆகையால் -என்றவாறு
காரண வாக்கியங்கள் எல்லாம் ஒரே மிடறாக இருக்க வேண்டியதாகையாலே என்றவாறு
அத புருஷோ ஹ வை நாராயணோ காமயத -என்றும்
ப்ரஜாஸ் ஸ்ருஜ்யேதி-என்றும் –
ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் –என்றும்
ந ப்ரஹ்மா நேசாநோ நேம த்யாவா ப்ருத்வீ -என்றும்
நாராயணனுக்கே ஜகத் காரணத்வம் ஓதப்பட்டுள்ளதே
ஸச் சப்த தேவதா வாக்கியங்கள் -சப்தங்கள் நாராயணன் இடமே பர்வசிக்கும் –
பிரதானம் பிரகிருதி ஸச் சப்த வாஸ்யம் அன்று-

இது போன்ற பல உபநிஷத் வாக்யங்களுக்கு எந்த கதியோ -நியாயமோ -அதே கதி
முன்பு ஸத் ஒன்றாய் இருந்தது முதலிய வாக்யத்துக்கும் சமானம்
அவற்றில் எல்லாம் பரம புருஷனே ஜகத் காரணம் என்று நிச்சயித்து இருக்கிற படியால்
பரம புருஷனே ஸத் என்ற சொல்லின் பொருளாம் –

———-

12- ஸ்ருதத்வாச்ச –1-1-12–

ஆத்மத பிராண ஆத்மத ஆகாச ஆத்மத ஏவேதம் சர்வம்–சாந்தோக்யம் -7-26-1- என்று
இந்த ப்ரஹ்மத்தில் இருந்து சுவாசம் ஆகாசம் அனைத்தும் உண்டானது என்பதால்-

அத சர்வஞ்ஞ -சர்வ சக்தி -சர்வேஸ்வரேஸ்வர-நிரஸ்த நிகில தோஷ கந்த -அனவதிக அதிசய அசங்க்யேய
கல்யாண குண கணவ் மஹார்ணவ -புருஷோத்தமோ நாராயண ஏஷ நிகில
ஜகத் ஏக காரணம் ஜிஜ்ஞ்ஞாஸ்யம் ப்ரஹமேதி ஸ்திதம்

இந்த ஸத் வித்யையிலும் ஸத் என்பதே ஆத்மா என்ற பெயருடன் நாம ரூபங்களை ஏற்படுத்தியது என்றும்
ஸர்வஞ்ஞன்–பாபங்கள் ஒட்டாதவன் -போன்ற பல கல்யாண குணங்கள்
இந்த ஜீவாத்மாவுடன் அனுபிரவேசம் செய்து நாம ரூபங்களை விளக்குகிறேன்
இந்த எல்லா பிரஜைகளும் சத்தை காரணமாக் கொண்டவையே
பாபம் அற்றவன் ஜரா மரணாதிகள் அற்றவன் முதலிய வாக்யங்களால் பொருத்தமாகக் கூறப்படுபவன்
ஸத் எனப்படும் ஸகல ஜகத் காரணமான பரம புருஷனே என்று ஸித்தாந்தம்

இந்த அதிகரணத்தால் கல்யாண குண பூர்ணனான பர ப்ரஹ்மமே ஸத் என்பதால்
நிர் குணம் நிர் விசேஷமாய் உள்ள ப்ரஹ்மம் என்ற அத்வைதி வாதம் நிரசிக்கப் பட்டது –

———–

6-ஆனந்த மயாதிகரணம்-

கீழே ஈஷணம் -சங்கல்பம் இல்லாத அசேதனத்தை விட ப்ரஹ்மம் விலக்ஷணம் என்று நிரூபணம்
ஈஷணம் சத்துக்கு வேண்டும் என்றால் அதுக்குத் தகுதி உள்ள ஜீவனே ஸத் என்றும் காரணம் ஆகட்டும்
அல்லது ஸத் வித்யையில்
அநேந ஜீவேந ஆத்மநா
தத் த்வம் அஸி என்று
விசேஷண விசேஷ்ய பாவ சாமானாதி கரண்யத்தால் ஜீவ ப்ரஹ்மங்களுக்கு ஐக்யம் சொல்லுவதாலும்
பக்தன் முக்தன் இரு நிலைகளை உடைய ஜீவனே காரணமாகட்டுமே
என்ற சங்கையை நிரஸிக்க
ஸத் எனப்படும் ப்ரஹ்மத்துக்கு ஜீவனைக் காட்டிலும் வேறு பாட்டை நிரூபிக்கிறார் இதில்
என்று அதிகரண சங்கதி –

13- ஆனந்த மய அப்யாசாத் –1-1-13-

தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஜ்ஞானமயா தன்யோந்தர ஆத்மாநந்தமய தே நைஷபூர்ண -ஆனந்த வல்லி–என்று
விஷய வாக்யம்

முந்திய வரில் ஆத்மாவிடம் இருந்து ஆகாயம் -ஆகாயத்தில் இருந்து காற்று -காற்றில் இருந்து அக்னி -அக்னியில் இருந்து நீர்
நீரில் இருந்து பூமி -பூமியில் இருந்து தாவரங்கள் -தாவரங்களில் இருந்து உணவு -உணவில் இருந்து உடல் –
விஜ்ஞான மயம் மட்டும் அல்ல ஆனந்தமே உருவாக ஓன்று உள்ளது –

ஆனந்த மயம் என்பது பக்தனும் முக்தனும் அல்லாத பரமாத்மாவா அல்லது ஜீவனா என்ற சங்கை
ஜீவனே என்று சாங்க்யன் -பூர்வபஷி
ஏஷ ஏவ சாரீர ஆத்மா
தத் த்வம் அஸி -என்பதாக ஜீவ ப்ரஹ்ம ஐக்யம் தோன்றுவதால் ஜீவனே என்பது பூர்வ பக்ஷம்
சாரீரத்வம் சரீர சம்பந்தம் ஜீவனுக்கே பொருந்தும் என்பர்

இவ்வாறு கூறும் சாங்க்யனை ப்ரஹ்மத்துக்கு அஞ்ஞானம் கூறும் அத்வைதி எதிர்க்க
நநுச ப்ரஹ்ம புச்சம் ப்ரதிஷ்டா என்று அத்தை சாங்க்யன் எதிர்க்க
அந்த சாங்க்யனையும் -நைவ -என்று தொடங்கி சித்தாந்தி கண்டிக்கிறார் –

இந்த அதிகரணத்தில் பூர்வ பக்ஷ ஹேதுக்கள் இரண்டு –
தத் த்வம் அஸி-என்றும் சாமானாதி கரண்யமும் -சாரீரத்வமும்
நிர் விசேஷமே பொருள் என்றால் பிரகரணத்தின் விரோதமும் –
இரண்டு பதங்களின் பரியாலோசனையுடன் சாமானாதி கரண்யம் பற்றி ஆலோசியாமையும் குற்றமாகின்றன
சாமானாதி கரண்யம் என்பதற்கு வையாகரணர் கூறிய லக்ஷணம் –
வெவ்வேறு பொருளுள்ள பதங்கள் ஒரே பொருளை விளக்கும் நிலை -என்றபடி
விசிஷ்டமான அர்த்தத்தைக் காட்டுவதாக சமர்த்திக்கின்றார்

அந்த லக்ஷணமாவது –
பின்ன பிரவ்ருத்தி நிமித்தானாம் ஸப்தானாம் ச ஏகஸ்மின்னர்த்தே வ்ருத்தி
அதாவது
ப்ரவ்ருத்தி என்றால் ஒரு சொல் இந்த அர்த்தத்தைப் போதிக்கும் என்ற நியதி
சிறப்பாக விசேஷ் யமான சொல்லின் பொருளையே விசேஷணமும் போதிக்கை தான் ப்ரவ்ருத்தி
அதுக்கு நிமித்தம் -த்வாரம் -விசேஷமான ஜாதி இனம் குணம் முதலியவை
அவற்றைக் குறிப்பிடும் சொற்கள் ஒரே விசேஷ் யமான அர்த்தத்தை
வ்ருத்தி -போதித்தல்

இந்த சாமானாதிகரண்யம் நிர் விசேஷத்தைப் போதிக்க மாட்டாது என்று கண்டித்ததுடன்
தன் மதத்தில் மீமாம்சகர் கூறும் அருணாதி கரண நியாயம் பொருத்தமாய் இருப்பதையும்
அவ்வதிகரணத்துக்கு நிரீஸ்வர மீமாம்சகன் அர்த்தத்தைக் கண்டித்து
தம் மதப்படியான பூர்வ பக்ஷ சித்தாந்தகளையும் கூறி அருளுதல்
பின்னர் தத் த்வம் இரு சொற்களுக்கும் விஸிஷ்ட அர்த்தமே பொருள் என்று நிறுவி
ஜாதி இனம் குணம் இவற்றைக் குறிக்கும் சொற்கள் கோ பசு முதலியவை குறிப்பிட்ட
வியக்தியை – பொருளை -விளக்கும் ஆற்றல் பெற்று இருப்பது போலவே
சரீரத்தைக் கூறும் சொற்களும் சரீரியான ஆத்மா வரை பொருளைக் காட்டுமவை எனக் காட்டல்
இவ்வாறு சாமானாதி கரண்யம் என்ற ஹேதுவைக் கண்டித்து
பின் சாரீரத்வம் -சரீர சம்பந்தம் -என்ற ஹேதுவையும் கண்டிக்கிறார்

பரம புருஷனே – தச்யைஷ ஏவ சாரீர ஆத்மா –தைத்ரியம்
ஞான மயன் ஆத்மா-ஜீவன் தான் அவனுக்குள்ளும் இருக்கும் ஆனந்த மயன் பரமாத்மா –
சாரீரம் எனப்படுபவன் ஆதலின்
அவனது ஆனந்தத்தை அளக்க இயலாது –

சைஷா நந்தஸ்ய மீமாஸ் ஸா பவதி –
மனுஷ்ய ஆனந்தத்தை விட பல கோடி நூறாயிரம் மடங்கு ஆனந்தம்

யஸ்யாத்மா சரீரம் சுருதி வாக்யத்தால்
அந்த பரம் பொருளுக்கு உடல் தொடர்பு உண்டே -எனவே
ஆனந்த மயனாக சொல்லப் படுபவன் பரம் பொருளே-

————-

14-விகார சப்தாத் ந இதி சேத் ந ப்ராசுர்யாத் –1-1-14-

ஆனந்த மய என்பதில் மய என்ற விகுதி புலப்படுதலால்-விகாரம் என்ற பொருளில் அவ் விகுதி உள்ளமையால்
நிர் விகாரமான ப்ரஹ்மத்தை ஆனந்த மயம் என்ற சொல் பொருந்தாது
இயற்கையாய் ஆனந்த ரூபமான ஜீவனுக்கு சுக துக்கங்களுக்குக் காரணமாக சம்சார நிலை விகாரமாதலின்
ஆனந்தமயன் என்பது ஜீவனே
பரம புருஷன் ஆனந்த மயன் அல்லன் என்றால்

இதி சேத் ந -இவ்வாறு கூறுவது பொருந்தாது
ப்ராசுர்யாத் –யாத்ரை முழுவதும் வண்டி மயம் போல் ப்ராசுர்யம்-மிகுதி என்ற பொருளிலும்
மயட் -என்ற விகுதி பயன்படுத்தப் படுவதால்
நிகரற்ற ஆனந்தம் நிறைந்தவனான பரம புருஷனே ஆனந்த மயன் ஆவான்

ஆனால் ஆனந்தம் பிரசுரம் -மிகுதி என்றால்
துக்கமும் ஸ்வல்பம் உண்டு என்று பொருளாகுமே
அப்போது ப்ரஹ்மம் துக்கம் கலந்து என்னலாகாதோ என்னில்
அப்படி அன்று
கிரணங்கள் மிகுந்தவன் கதிரவன் என்றால் இருளும் சிறிது கலந்தவன் என்ற பொருள் எப்படி ஆகாதோ
அப்படியே அபஹத பாப்மா விஜர முதலிய வாக்யங்களால் துக்கம் அல்பமும் ஒட்டாது என்று கருத்து –

———–

15-தத்தேது (ஹேது)-வ்யபதேசாத் ச-1-1-15–

ஏஷ ஹ்யேவா நந்தயாதி -என்று அவன் ஆனந்தம் அளிப்பவன் என்றும்
கோ ஹ்யேவான்யாத் கே ப்ராண்யாத் யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத்-என்று
அவன் இல்லை என்றால் யாராலும் ஆனந்தம் அனுபவிக்க முடியாது என்றும் தைத்ரியம் கூறுவதால்
ஆனந்தம் அடையும் ஜீவனை விட ஆனந்தத்தில் காரணமான பரமாத்மா வேறானவன் என்றவாறு

———-

16-மாந்த்ர வர்ணிக மேவ ச கீயதே–1-1-16-

தைத்ரியம் –
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -என்றும்
ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்றும் ப்ரஹ்மம் ஜீவனை விட உயர்ந்தது என்கிறது

ஜீவனுக்கு ப்ரஹ்மமே ப்ராப்யம் -என்று கூறி
ததேஷாப்யுக்தா -முதலிய ப்ராஹ்மணம் மந்த்ரவர்ணம் முதலிய வாக்யங்களாலே சொல்லி
அந்த ப்ரஹ்மமே ஆனந்த மயன் -ஜீவனில் வேறு பட்டவன் என்று உறுதி ஆகிறது

————–

இவ்வாறு ப்ரஹ்மத்துக்கு பக்தனான ஜீவனில் பேதத்தைக் கூறி
மேல் முக்த ஜீவனில் பேதத்தைக் காட்டுகிறார் –

17-ந இதர அநுபபத்தே –1-1-17-

தைத்ரியம் –
சோஸ்நுதே சர்வ காமான் சஹ ப்ரஹ்மணா விபஸ்தேதி -என்று
மிகுந்த ஞானம் உள்ள ப்ரஹ்மத்தின் இடம் இருந்து ஜீவன் தான் விரும்பும் அனைத்தையும் பெறுகிறான் –
என்பதால் ஆனந்த மயன் ஜீவன் அல்ல –

இதர -பரமாத்மாவின் வேறுபட்ட முக்தாத்மாவும்
ந -மந்த்ர வர்ணத்தால் கூறப்படுபவன் அல்லன்
அநுபபத்தே –சோஸ்நுதே சர்வ காமான் சஹ ப்ரஹ்மணா விபஸ்தேதி-என்று கூறப்படும் இயற்கையான விபச்சித்த்வம்
அதாவது இயற்கையான ஸத்ய ஸங்கல்பம் முக்தனுக்குக் கூடாததாலால்
ஸோ காமாயத பஹுஸ்யாம் ப்ரஜாயேய-என்று குறிப்பிடும் விபச்சித்வம்
முந்தைய நிலையில் சம்சாரியாய் இருந்த முக்தனுக்கும் பொருந்தாது என்று கருத்து –

———-

18-பேத வ்யபதேசாத் ச–1-1-18-

தஸ்மாத்வா ஏதஸ்மாத் விஜ்ஞான மயாத் அந்ய அந்த்ர ஆத்மா ஆனந்தமய –தைத்ரியம்- என்று
ஆனந்தமயன் விஜ்ஞான மயனை விட மாறுபட்டவன் என்பதால்-ப்ரஹ்மமே -ஜீவன் அல்ல என்றதாயிற்று –

தஸ்மாத்வா ஏதஸ்மாத்மான ஆகாசஸ் ஸம்பூத –போன்ற வாக்யங்களாலே
அன்னமயம் பிராண மயம் மநோ மயங்களைக் காட்டிலும்
வேறான விஞ்ஞான மயனான ஜீவனைக் காட்டிலும் வேறு பட்டவனாக
அந்ய அந்த்ர ஆத்மா ஆனந்தமய–என்று
பரமாத்மாவுக்கு பேதத்தைக் கூறுவதால் மந்திர வர்ணத்தில் கூறப்படும் ஆனந்தமயன்
ஜீவன் அல்லன் என்பது தெளிவாகிறது –

———-

19-காமாத் ச ந அநுமாநாபேஷா –1-1-19-

பஹூச்யாம் சங்கல்பத்தால் -உடல் புலன்கள் இல்லாமல் பிரகிருதி உதவி இல்லாமல் செய்பவன் –
என்பதால் ப்ரஹ்மமே-ஜீவன் இல்லை-

காமாச்ச –பஹுஸ்யாம் என்று அருளிய ஸங்கல்பத்தால் தான் விசித்திரமான ஜகத்தின் ஸ்ருஷ்டி சொல்லப்படுகிறது
அதற்கு அனுமான அபேஷா ந –பிரதானத்தின் அபேக்ஷை இல்லை
சதுர்முகாதிகளுக்கு சரீர நிலையை அடைந்த பிரதானத்தின் சேர்க்கை தேவைப்படுவது போலே
பரமாத்மா சங்கல்பத்தால் ஸ்ருஷ்டிப்பதற்குப் பிரதானத்தின் தேவையில்லை –
ஆதலால் ஆனந்த மயன் என்பது ஜீவனின் வேறு ஆனவனே –

———–

20-அஸ்மின் அஸ்ய ச தத் யோகம் சாஸ்தி –1-1-20-

ஆனந்த மயனுடன் சேரும் பொழுது ஜீவனுக்கும் ஆனந்தம் உண்டாகும்

இவ்வாறு ஆனந்த மயன் முக்தனுக்குக் கிட்டிய வுடன்
தத் யோகம் -அந்த ஆனந்தத்துடன் சம்பந்தத்தை
சாஸ்தி -ஸாஸ்த்ரம் கூறுகிறது
ஸாஸ்த்ரமாவது –ரஸோ வை ஸ ரஸம் ஹ்யே வாயம் லப்தவா ஆனந்தீ பவதி -என்பது
ஆகையால் பக்த முக்த விலக்ஷணனான பரம புருஷனே ஆனந்த மயன் என்பதாகும்

முன் தத் ஹேது வ்யபதேசாத் -என்ற ஸூத்ரம்
உபாஸன தசையில் ஆனந்தப்படுத்துகிறான் என்பதைக் கூறியது
இதில் முக்தி தசையில் ஆனந்தப்படுத்துகிறான் என்பதைக் கூறுகிறது
ஆகையால் புநர் யுக்தி தோஷம் இல்லை –

———–

1-7-அந்தர் அதிகரணம்–ஸூரியனுக்கு உள்ளே உள்ளவனும் ப்ரஹ்மமே .

ஸ்வல்ப புன்யர்களான ஜீவர்களால் ஸங்கல்ப மாத்ரத்தைக் கொண்டு
ஜகத் ஸ்ருஷ்ட்டியையும்
மிகுந்த ஆனந்தத்தையும்
பய அபய ஹேதுத்வமும் பெற முடியாமல் போகலாம்
ஆயினும் விலக்ஷண புண்யம் கொண்ட ஆதித்யன் இந்திரன் பிரஜாபதி முதலியோருக்கு
இந்த குணங்கள் சம்பவிக்கலாமே
என்ற சங்கையை இங்கு நீக்குகிறார் என்று சங்கதி

மேலும் இவ்வதிகரணத்தில் அந்தர்யாமி என்ற தன்மையால் மட்டும் சரீராத்ம பாவம் சொல்லப்பட வில்லை -பின் என் எனில்
பாணி பாத அஷி கேசாதிகளான பிரிவுகள் போல் சரீர சம்பந்தம் உள்ள புருஷன் கூறப்படுகிறான்
அந்தப் புருஷன் ஜீவன் தான் என்று பூர்வ பக்ஷம் தோன்றுவதே இங்கு சங்கதி

காரண வாக்கியங்கள் பரமாத்ம போதகங்கள் என்று ஸ்தாபிப்பதே இவ்விடம் பிரஸக்தம்
காரண வாக்கியம் இல்லாத அந்தராதித்ய வித்யா நிரூபணம் அயுக்தமே
ஆயினும் முன் அதிகரணத்தின் சேஷமாக நிரூபிப்பதில் தவறு இல்லை
எப்படி எனில்
ஆனந்தவல்லியில் -ஸ யச்சாயாம் புருஷே யச்சா ஸ ஆதித்யே ஸ ஏக -என்று
ஆனந்த மயனுக்கு ஆதித்யனின் உள் இருப்பு கூறப்பட்டது
சாந்தோக்யத்தில் சொன்ன ஆதித்ய மண்டை அந்தர்வர்த்தியான புருஷனுக்கு கர சரணாதி விஸிஷ்ட
தேஹ சம்பந்தம் சொல்லுகையாலே இரண்டு இடங்களிலும் ஒருவனே பேசப்படுபவன்
ஆகையால் ஆனந்தமயனும் ஜீவன் தான் என்கிற சங்கையை நிவர்த்திக்க
முன் அதிகரண சேஷமாக இங்கு நிரூபிக்கிறார் என்று விடை –

அதற்கு சேஷமாவது அங்கங்கு தேவையான பொருளை விளக்குதல்
அப்படி என்றால் வெவ்வேறு அதிகரணங்கள் என்று எவ்வாறு பேதம் கூற முடியும் எனில்
கூறிய நியாயத்துக்கு விஷயமான உபநிஷத்து மாறுபட்டதால் பேதம் வருவது பொருந்துமே

21-அந்த தத் தர்மோபதேசாத் –1-1-21-கண்கள் உள்ளும் சூரியன் உள்ளும் இருப்பவன் ப்ரஹ்மமே-

ய ஏஷ யந்தர் ஆதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ஹிரண்யஸ் மஸ்ரூர் ஹிரண்ய கேசக ஆப்ரணகாத்
சர்வ ஏவ ஸூ வர்ண -தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணி என்றும் –
ய ஏஷ அந்தர் அஷிணி புருஷோ த்ருஸ்யதே தஸ்யை தஸ்ய ததேவ ரூபம் யதமுஷ்யரூபம்
ச ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உதித-என்று பாபங்களால் தீண்டப்படாமல் இருப்பவன் -என்றும்
சைவ ருக் தத் சாமததுக்க்கம் தத்ய ஜூ ஸ் தத் ப்ரஹ்ம-என்றும்
இவை விஷய வாக்கியங்கள் –

இங்கு கீழ்ச் சொன்னபடி ஜீவர்கள் அல்ல ப்ரஹ்மமே-

அந்தஸ் -கண்ணின் உள்ளும் ஸூர்ய மண்டலத்தின் உள்ளும் இருப்பவனாகச் சொல்லப்படும் புருஷன்
ஜீவனைக் காட்டிலும் இதரனான பரமாத்மாவே
எப்படி என்றால்
தத் தர்மோபதேசாத் –ஸ்ருத் யந்தரங்களில் பிரசித்தமான பரமாத்மாவின் தர்மங்களை உபதேஸிப்பதால்
அவை -அபஹத பாப்மா -அஜர -அசோக —ஸத்ய காம –ஸத்ய ஸங்கல்ப -சர்வ லோக சர்வ காம நியந்த்ருத்வம் –
புண்டரீகாக்ஷத்வமும் திவ்ய மங்கள விக்ரஹம்முதலிய தர்மங்களும் உபதேசிக்கப்படுகின்றன
எனவே ஜீவ விலக்ஷண ஸ்ரீயப்பத்யே ஆதித்ய மண்டலத்தில் ஒளிரும் புருஷன்
இங்கு கூறும் சரீரம் கர்ம நிமித்தம் அன்று -அதுவே ஹேயமாகும் –
முமுஷுக்களுக்கு ஹேய நிவ்ருத்தமான திவ்ய மங்கள விக்ரஹம் என்பதேயாகும்
யதோவா இமானி பூதானி ஜாயந்தே ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம முதலிய பிராமண பலத்தாலே
ஸத்யத் ஞானத் வாதிகள் ஸித்திப்பது போல்
வித்யுத் புருஷாததி
ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத்
அஜயமானோ பஹுதா விஜாயதே
அஜோபிசன் அவ்யயாத்மா
ஸம்பவாமி ஆத்ம மாயயா –முதலிய ப்ரமாணங்களால்
ஆஸ்ரிதர்களை அநுக்ரஹிக்க திவ்ய மங்கள விக்ரஹ ரூபமான தர்மமும்
தத் தர்ம உபதேசாத் -என்கிற பதத்தில் கருதப்படுகிறது என்று திரு உள்ளம் –

————-

22- பேத வ்யபதேசாத் ச அந்ய –1-1-22-

ப்ருஹத் ஆரண்யகாவில் –
ய ஆதிதயே திஷ்டன் ஆதித்யாத் அந்த்ரோயம் ஆதித்யோ நவேத யஸ்யா தித்ய சரீரம் ய ஆதித்யம் அந்தரோ யமயதி -என்று
யார் சூரியனில் அந்தர்யாமியாக உள்ளானோ -அவன் சூரியனுக்கு தெரியாமல் அப்படி உள்ளவன் யாரோ –
அவனுக்கு சூர்யன் உடம்பாக உள்ளான் -அவனே சூர்யனை வழி நடத்துகிறான்

ஸூபால உபநித்தும் இது போலே ஜீவர்களுக்குள் அந்தர்யாமாவாக உள்ளத்தை சொல்லும் –
அவனே பரம்பொருள் ஜீவன் அல்ல என்றதாயிற்று-

அபஹத பாபனான இப்பரமாத்மா
அந்ய–ஆதித்யாதி ஜீவர்களைக் காட்டிலும் வேறானவன்
பேத வ்யபதேசாத் ச
ய ஆதித்யே திஷ்டன் –யம் ஆதித்யோ ந வேத -யஸ்ய ஆதித்யச் சரீரம் -ய ஆதித்யம் அந்தரோ யமயதி
ய ஆத்மனி திஷ்டன்
யஸ்ய அக்ஷரச் சரீரம்
யஸ்ய ம்ருத்யுச் சரீரம் –என்று இப்படியாக ஹிரண்ய கரப்பான் முதலிய ஸகல ஜீவர்களையும் சரீரமாகக் காட்டி
நாராயணனை அந்தராத்மாவாகப் பேதப்படுத்திக் காட்டுவதால்
பரமாத்மா ஜீவனைக்காட்டிலும் அந்நியன் தான் என்பதாம் –

——–

இப்படி யதோவா இமானி பூதாநி ஜாயந்தே என்கிற வாக்யத்தால் ஜகத்தின் காரணம் ப்ரஹ்மம் எனப்பட்டது
அத்தகைய ப்ரஹ்மம் எது என்ற ஐயம் எழுந்தால்
ஸதேவ சோம்யே இதம் அக்ர ஆஸீத்
ஆத்மாவா இதம் ஏகம் ஏவ அக்ர ஆஸீத் –முதலிய வாக்யங்களால்
சாமான்யங்களான -ஸத் -ப்ரஹ்மாதி சப்தங்களால் -ஸத் -ப்ரஹ்மாதிகள் காரணங்கள் என்று குறிக்கப்பட்டன

அடுத்து ஸ்ருதி லிங்க வாக்ய ப்ரகரண ஸ்தான சமாக்யைகளில் முந்தியது பிந்தையதை விட பலம் மிக்கது என்றபடி
லிங்கத்தை விட ஸ்ருதி பலம் மிக்கது என்றாலும் -விசேஷமான லிங்கத்தைக் காட்டிலும் ஸ்ருதி துர்ப்பலை யாதலின்
விசேஷ லிங்கங்கள் பிரதானாதிகளை விலக்குவனவாய் பிரபலமாய் இருப்பதால்
ஈஷத் அதிகரணத்தில் முக்கியமான ஈஷணமும்
ஆனந்த மய அதிகரணத்தில் ஆனந்த விசேஷமும்
அந்தராதித்ய அதிகரணத்தில் திவ்ய மங்கள விக்ரஹமும் ஆகிய
அர்த்த ஸ்வ பாவமான -லிங்கங்களாலே -அடையாளங்களாலே –
ப்ரஹ்மத்துக்கு -பிரதானம் -ஜீவாத்மா -இவை இரண்டிலும் இருந்தும் பேதம் தீர்மானிக்கப் பட்டது –

அப்படி இருப்பினும்
விசேஷ ஸ்ருதிக்கு விசேஷ லிங்கத்தை விட ப்ராபல்யம் இருப்பதால்
சர்வாணி ஹ வை இமானி பூதானி ஆகாசதேவ சமுத்பத்யந்தே ஆகாசம் ப்ரத்யச்தம் யந்தி=போன்ற இடங்களிலே
ஆகாசம் போன்ற விசேஷ சப்தங்களாலே சொல்லப்பட்ட ப்ரஸித்தமான ஆகாசம் பிராணன் முதலியவை
காரண ப்ரஹ்மம் என்கிற சங்கையை நீக்கி
கல்பிக்கப்பட்ட யோக காரணப்பெயர் -கல்பிக்க வேண்டிய ரூடி இடுகுறிப்பெயரை பாதிக்கும் என்ற நியாயப்படி
யோக சக்தி-காரணத்தை அடிப்படையாகக் – கொண்டு
ஆகாசம் முதலிய சொற்கள் பரமாத்மாவையே போதிக்க வல்லவை
என்பதை கீழ் வரும் அதிகரணங்களால் விளக்குகிறார் –

———–

1-8-ஆகாசாதி கரணம் -ஆகாயம் எனப்படுவதும் ப்ரஹ்மமே –

23-ஆகாஸ தல் லிங்காத் —1-1-23-

சர்வாணி ஹ வை இமானி பூதானி ஆகாசதேவ சமுத்பத்யந்தே ஆகாசம் ப்ரத்யச்தம் யந்தி என்று
ஆகாசமே மூல காரணம் என்றும் பரம ப்ராப்யம் என்றும் சொல்லிற்று
இதில் ஆகாசம் -பூத ஆகாசமா -அல்லது முன் லக்ஷணம் கூறப்பட்ட ப்ரஹ்மமா என்று சங்கை
பிரசித்தமான
ஆகாசமே என்று பூர்வ பக்ஷம்
ஈஷணம் -சங்கல்பம் பற்றிய லிங்கத்தை விட விசேஷ ஸ்ருதி பலம் வாய்ந்ததாகையாலும்
ஆகாசம் என்பது பூத ஆகாசத்தில் ப்ரஸித்தமாகையாலும்
ஸத் -ப்ரஹ்மம் -முதலிய சாமான்ய சப்தங்களும் பிரசித்த ஆகாசத்தையும் கூறுபவை என்பதே பூர்வ பக்ஷம் –

சித்தாந்தம்
ஆகாஸ -அசேதனமான ஆகாசத்தை விட வேறு பட்டவனாக பரமாத்மாவே ஆகாசம் என்று கூறப்படுகிறான்
தல் லிங்காத் —அந்தப் பரம புருஷனின் லிங்கங்கள் அடையாளங்கள் காணப்படுவதால் –
அவை யாவன
அனைத்துக்கும் காரணமாதல்
எல்லாவற்றையும் விட பழமை
அனைத்துக்கும் பரம அடைக்கலம் –முதலிய தர்மங்கள்
தஸ்மாத் விராட் அஜாயத
ஏகோஹவை நாராயண ஆஸீத் –முதலிய உபநிஷத் வாக்கியங்களில் கூறப்பட்ட
விராட் புருஷத்வம் -நாராயணத்வம் -முதலிய தர்மங்கள்
ஆ –நாற்புறமும்
காச -பிரகாசிப்பது
என்ற காரணப் பெயராகக் கொண்டு பரம புருஷன் தான் ஆகாசம் என்பதாம் –

இங்குள்ள சிறப்பாவது
காரணப்பெயரை -யோகப்பெயரை -விட இடுகுறிப்பெயரே -ரூடியே -மேலானது என்ற நியாயம் இருந்தாலும்
கல்பிதமான யோகம் கல்பிக்கப்பட இருக்கிற ரூடியைப் பாதிக்கும் என்ற நியாயத்தால்
இங்கு -யதேஷ ஆகாச ஆனந்தோ நஸ்யாத்-என்ற வாக்யத்தில்
ஆகாச சப்தத்துக்கு யோகத்தால் -காரணத்தால் -பொருள் கல்பிக்கப்பட்டு இருப்பதால்
இந்த யோகாசக்தி பொருளை ரூடி சக்தி பாதிக்க மாட்டாது –
ஆகையால் முன் கூறிய லக்ஷணங்கள் –
ஈஷணம் -ஆனந்த விசேஷம் திவ்ய மங்கள விக்ரஹம் -முதலான சிறப்பான லிங்கங்களால்
ஸத் -ப்ரஹ்ம -பொதுச் சொற்களும்
ஆகாசம் போன்ற சிறப்புச் சொற்களும்
ஸமஸ்த ஜகத் காரணனாய் -சர்வஞ்ஞாதி கல்யாண குணங்களை யுடைய பரம புருஷனையே
விளக்குகின்றன என்பது திரு உள்ளம் –

———-

அடுத்தபடி -ஆகாசம் என்பது பரமாத்மா என்ற காரணம் இருக்கட்டும் –
சகல ஜனங்களுக்கும் ஸ்திதியோ ப்ரவ்ருத்தியோ ப்ராணனைச் சார்ந்து இருப்பதால்
சாந்தோக்யம் முதல் அத்யாயம் ஒன்பதாவது கண்டத்தில்
பிரஸ்தோ தர்யோ தேவதா ப்ரஸ்தாவ மன்வாயத்தா -என்று தொடங்கி
இந்த பூதங்கள் அனைத்தும் ப்ராணனையே சார்ந்து இருக்கின்றவை என்று கூறப்பட்டு இருப்பட்டு இருப்பதால்
பிரசித்தமான பிராணனே ஜகத் காரணம் என்று கூறலாமே என்று மேற்கொண்டு அதிகமான ஓர் சம்சயம் தோன்ற
அதைக் கண்டிக்கவே இந்த அதிகரணம் –

1-9-ப்ராணாதி கரணம்–பிராணம் எனப்படுவதும் ப்ரஹ்மமே

24-அத ஏவ பிராண –1-1-24-

சர்வாணி ஹ வா இமானி பூதானி பிராணமேவாபி சம்விசந்தி பிராணமப் யுஜ்ஜிஹதே –

தோன்றி மறையும் தன்மை பரம் பொருளுக்கே உண்டு-

அத ஏவ -பிரசித்தம் போலே நிர்தேசம் இருப்பதினாலேயே
பிராண -பிராண சப்தத்தால் சொல்லப் படுபவன்
அந்நிய -பிராண வாயுவில் காட்டில் வேறுபட்டவன் –

சர்வாணி ஹி வா இமானி பூதாநி ப்ராணம் ஏவ அபி சம்விசந்தி ப்ராணம் அப்யுஜ்ஜி ஹதே
சைஷா தேவதா ப்ரஸ்தாவம் அந்யாவத்தா –ஹை வை -பிரதித்தம் -சாந்தோக்யம்
பிராணன் இடத்திலே லயம் அடைகின்றன -பிராணன் இடத்தில் இருந்தே வெளிவருகின்றன
ப்ராணயதி– ஜீவயதி என்கிற வியுத்பத்தியால் பர ப்ரஹ்ம பர சப்தம்
உத்பத்தி ஸ்திதிகளை பிராண அதீனமாக கண்டாலும் சேதன ஸ்வரூபத்தின் ஸ்திதி
பிராண அதீனமாக அல்லாமையாலே இதுவும் பரமார்த்த பரமே

அத –ஆகாசத்தில் கூறியபடியே சகல ஜலத்தின் உள் நுழைதல் வெளியேறுதல் முதலிய பரமாத்ம லிங்கம் இருப்பதாலேயே
ப்ராண –பிராணன் என்ற சொல்லால் கூறப்படுபவனும்
பரமாத்மாவே என்று பொருள்
சேதனர்களிடம் பிரசித்தமான பிராணன் உள் நுழைவதும் வெளி ஏறுவதும் இருப்பினும்
அசேதனமான கல் மரக்கட்டை முதலியவற்றில் அது சம்பவிக்காது
ஆதலின் பரமாத்மாவுக்கே அது பொருந்தும் என்பதைக் கொண்டு
எதிலும் உள் நுழையவும் வெளியேறவும் வல்ல பரமாத்மாவே பிராணன் என்றதாகும் –

———-

1-10-ஜ்யோதிர் அதிகரணம் -ஜோதி என்பதும் ப்ரஹ்மமே –

இனி காரணத்வத்தை நிரூபிக்க வல்ல நிரதிசயமான தீப்தி -பிரகாசம் –
ஹித தமமான உபாசனத்துக்கு உரிய கர்மா -செயப்படு பொருள் என்னும் தன்மை
இவற்றுடன் கூடிய ஜ்யோதிஸ் என்பதும்
இந்த்ரன் பிராணன் முதலிய சொற்களும் கூறப்படுவதும்
உலகில் பிரசித்தமான ஒளி இந்திரன் இவற்றை விட்டு விலக்ஷணமான ப்ரஹ்மமே என்பதை
இந்த ஜ்யோதிர் அதிகரணத்திலும்
அடுத்த இந்திர பிராணாதி கரணத்திலும்
நிலை நாட்டுகிறார் என்று சங்கதி –

அது மட்டும் இன்றியே ஸ்ருதியிலே
ஆகாசாத் வாயு வாயுர் அக்னி -என்று கூறியுள்ள க்ரமப்படி
முதலில் ஆகாசம்
பின் வாயு -பிராணன் –
அடுத்து அக்னி –
என்ற க்ரமத்தைப் பின் பற்றி
ஆகாசாதி கரணத்தின் பின்
பிராணன் பற்றியும்
பின் ஜ்யோதிஸ் பற்றியும் விசாரிக்கிறார் என்றும் சங்கதி –

1-2-25-ஜ்யோதி சரணாபிதா நாத் —
ஜோதியும் ப்ரஹ்மமே -மற்றவை அதன் பாதங்களில் பணியும்-

அத்யதத பரோதிவா ஜ்யோதிர் தீப்யதே விஸ்வத ப்ருஷ்டேஷூ சர்வத ப்ருஷ்டேஷூ அனுததமேஷூ
உத்தமேஷூ லோகேஷூ இதம் வாவ ஸர்வத தத் யதிதம் அஸ்மின் அந்த புருஷே ஜ்யோதி –சாந்தோக்யம் -மூன்றாம் அத்தியாயத்தில்
மது வித்யைக்குப் பிறகு காயத்ரீ ஸப்தப் பொருளான பரமாத்மா ஜ்யோதிர் வித்யையிலே பேசப்படுகிறார்
இதுவே விஷய வாக்கியம்

இங்கு ஜ்யோதிஸ் என்பது பிரசித்தமான ஸூர்யாதிகளான ஜ்யோதிஸ் ரூபங்களைக் குறிப்பிடுகிறதோ
அல்லது உலக காரணமான எல்லையில்லா ஒளி வடிவமான பரமாத்மாவையே குறிப்பதா என்பதே சம்சயம் –

ஆகாசம் பிராணன் போன்ற வாக்கியங்களை போலே இதில்
நிகில ஜகத் ஏக காரணத்வம் போன்ற பரமாத்மாவின் சிறப்பான லிங்கம் ஏதும் இல்லாமையால்
இதம் வாவதத் என்று தொடங்கி புருஷனின் வயிற்றில் உள்ள ஜ்யோதியுடன்
இந்த ஜ்யோதியை ஒன்றாகக் கூறுவதால்
பிரசித்தமான ஜ்யோதிஸ்ஸாகவே இருக்கலாம் என்று பூர்வ பக்ஷம்
அதைக் கண்டிக்கிறார்

ஜ்யோதி -தேவ லோக சம்பந்தியாகக் கூறப்பட்ட ஏராளமான ஒளி உள்ள ஜ்யோதி என்பது பரம புருஷனே
ஏன் எனில்
சரணாபிதா நாத் –பாதோஸ்ய விச்வா பூதாநி த்ரிபதாஸ் யம்ருதம் திவி -என்று
சர்வ பூதங்களும் இந்த ஜ்யோதிஸ்ஸுக்கு ஒரு பாதமாகவும்
பரமபதத்தில் மூன்று பாதங்களும் இருப்பதாகச் சொல்வதால்
பிரசித்தமான எந்த சோதிக்கும் அது பொருந்தாது
பரமபுருஷனே ஜ்யோதிஸ் ஸப்த பொருளாவான்

இந்த தேவலோக சம்பந்தியான ஜ்யோதிசை ஜாடராக்னி சரீரமாகக் கொண்டது என்று உபாசித்தால்
ஆபி ரூப்யாதிகள் -பொருத்தமான அழகு போன்றவை ஸித்திக்கும் என்பதால்
கௌஷேய-வயிற்று ஜ்யோதிஸ்ஸுடன் ஐக்யம் கூறுகிறது என்று திரு உள்ளம் –

உயர்வற உயர்ந்த ஒளி உள்ளதாக ஓதப்பட்ட ஜ்யோதிஸ்ஸூக்கு –
பாதோஸ்ய சர்வ பூதாநி த்ரிபதாஸ் யாம்ருதம் தீவி -என்ற புருஷ ஸூக்த்தத்தின்
மந்திரத்தின் பொருள் நினைவூட்டப் படுகிறது –
ஆகையால் வேதாந்தமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமசஸ் து பாரே –
பரம புருஷன் பரமாக கொள்ள வேண்டும்
அஹம் வைச்வா நரோ பூத்வ பிராணி நாம் தேஹமா ஸ்ரீ தா -ஸ்ரீ கீதை –
உடம்பில் உள்ள அக்னியும் ப்ரஹ்மமே

————–

26-சந்தோ அபிதா நாத் ந இதி சேத் ந ததாசே தோர்ப்பண நிஹமாத் ததாஹி தர்சனம்–1-1-26-

காயத்ரி சந்தஸில் கூறப்படுபவன் ப்ரஹ்மமே-காயத்ரி போலே ப்ரஹ்மத்தையும் மனசில் கொள்ள வேண்டும் –
காயத்ரிவா இதம் சர்வம் -காயத்ரி சந்தஸ் பிரமத்தைப் போலே நான்கு பாதங்கள் உடையது –

சந்தோ அபிதா நாத் ந
அத்யதத பரோதிவா ஜ்யோதிர் தீப்யதே–இத்யாதி வாக்யத்துக்கு முன்பு காயத்ரி சந்தஸ்ஸை சொல்லி
பின்பு ததே தத் ருசாப் யுக்தம் –என்று கூறிய ருக்குக்கும் காயத்ரீ என்னும் சந்தஸ்ஸே விஷயமாகையாலே
இங்கு பரமபுருஷனைப் பற்றிய பேச்சே இல்லை என்று ஐயம் தோன்றிற்று
இதி சேத் ந -இவ்வாறு கூறுவது தவறு என்கிறார் –
ஏன் எனில்
ததாசே தோர்ப்பண –அவ்வாறு சித்தத்தாலே அனுசந்தானம் விதிக்கப்படுவதால்
அந்த காயத்ரியைப் போலவே பரம் ஜோதிசை நான்கு பாதங்கள் உள்ளதாக அனுசந்திக்கச் சொல்கிற படியால்
நிஹமாத் -நிச்சயிக்கப் படுவதனால் ஸப்த ரூபமான காயத்ரீ சர்வ பூதாத்மிகை என்பது பொருந்தாமையால்
பரம புருஷனை காயத்ரீ துல்யனாக நான்கு பாதம் உள்ளவனாக அனுசந்திக்க வேண்டும் என்று
நிச்சயிக்கிற படியால் பரம புருஷனே காயத்ரீ சப்தத்தின் பொருளாம்
ததாஹி தர்சனம்-அவ்வாறு நான்கு பாதங்கள் உள்ள காயத்ரியும் சில இடங்களில் காணப்படுகிறது
இந்த்ரச் சசீபதி வலே ந பீடித துச்சய வநோ வ்ருஷா ஸமித் ஸூ ஸஹி – என்று காணலாம் –

————-

27-பூதாதி பாத வ்யபதேசா அபபத்தே ச ஏவம்–1-1-27-

சாந்தோக்யத்தில்
பூதங்கள் பூமி உடல் இதயம் ஆகிய நான்கு பாதங்கள் உள்ளதாக சொல்வதால்
காயத்ரி என்றதும் ப்ரஹ்மமே –

பூத ப்ருத்வீ சரீரங்களைச் சுட்டி இது நான்கு கால் உள்ளது என்பதற்குப் பொருத்தம் வர வேண்டுமானால்
ஏவம் -இவ்வாறு ப்ரஹ்மமே காயத்ரீ என்ற சொல்லின் பொருள் என்றாலே பொருத்தம் ஏற்படும்
பூத ப்ருத்வீ சரீர ஹ்ருதயங்களை-என்பதில்
பூதம் -ஆத்ம வர்க்கம்
ப்ருத்வீ -இந்த லோகம்
சரீரம் -கர்மாக்களால் ஆர்ஜிதமான போகத்திற்கு உரிய இடமும் -அதன் உபகரணமும்
ஹ்ருதயம் -ஆத்மா தங்குவதற்கான இடம் –

———–

28-உபதேச பேதாத் ந இதி சேத் ந உபய அஸ்மின் அபி அவிரோதாத் –1-1-28-

பரம் பொருளின் மூன்று பாதங்கள் பரம பதத்தில் இருப்பதாகவும் 1-1-25- சொல்லி –
சாந்தோக்யம் பரோதிவ ஜ்யோதி -என்று
பரம பதத்துக்கு மேலே உள்ளதாகச் சொல்லப் பட்டுள்ளது –
இரண்டுக்கும் பேதம் இல்லை
மரத்தின் மேலே பறவை என்பதும்
மரத்தில் பறவை என்பதும் ஓன்று போலே –

உபதேச பேதாத்
பூர்வ வாக்கியத்தில் த்ரி பாத் ஸ்யாம்ருதம் திவி என்று த்யு லோகத்தை ஆதாரமாகவும்
இந்த வாக்கியத்தில் திவ என்று த்யு லோகத்தைக் காட்டிலும் என்று எல்லையாகவும் உபதேசம் வேறு வேறாய் இருப்பதால்
முன் வாக்கியத்தில் கூறிய ப்ரஹ்மம் இந்த வாக்யத்தில் தோன்றவில்லை

இதி சேத் ந-என்று கூறுவது சரியில்லை

உபய அஸ்மின் அபி அவிரோதாத் –இரண்டுக்கும் அர்த்த ஸ்வ பாவம் ஒன்றே யாதலின் நினைவுக்கு விரோதம் இல்லை
மரத்தின் நுனியில் பருந்து என்றாலும்
மரத்தின் நுனிக்கு மேலே பருந்து என்றாலும் போலே இங்கும் அர்த்தம் ஒன்றே யாதலின்
ஏதாவான் அஸ்ய மஹிமா பாதோஸ்ய விஸ்வா பூதாநி-என்ற புருஷ ஸூக்த நினைவாலே
ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் -என்கிற எல்லையில்லா ப்ரகாசமுடைய புருஷோத்தமனே
அத யதத பரோ திவோ ஜ்யோதி என்று கூறப்படுகிறான் என்று திரு உள்ளம் –

ஸ்ரீ பாஷ்யத்தில் இவ்வதிகரணத்தின் அவதாரிகையில்-எல்லையில்லா பிரகாசம் என்னும்
லிங்கத்தாலே பூர்வ பக்ஷம் தோன்றுகிறது என்று காட்டி
பின்பு ப்ரசித்தவத் நிர்தேசம் இருந்தாலும் ஆகாசம் பிராணன் இவற்றைப் போலே
தன் வாக்கியத்தில் எடுக்கப்பட்ட பரமாத்மாவுக்கான லிங்கம் இல்லாமையால் என்று அருளியது
முன் பின்னாக முரணாக உள்ளதே என்னில்

அத யதத பரோ –என்னும் வாக்கியத்தில் காரணத்தைக் காட்டவல்ல
ஸர்வத ப்ரகாசமயமான தன்மை எனும் லிங்கம் உள்ளது
அப்படி இருந்தாலும் உபய லிங்கத்வாதிகள் கூடியதும் -பரமபுருஷனை நிலை நிறுத்தக் கூடியதுமான
ஜகத் காரணத்வம் என்னும் லிங்கம்
அத யத்த பாரோ வாக்கியத்தில் கிடையாது என்னும் பூர்வ பசியின் கருத்தால்
அருளிச் செய்வதால் முரண்பட்டு இல்லை
அப்படியான சிறப்பான லிங்கம் தன் வாக்கியத்தில் இருப்பதாகத் திரு உள்ளம் –

————

1-11-இந்திர பிராணாதி கரணம்-

இதில் காரணத்தோடு வியாப்தமான -முமுஷுக்களால் உபாஸிக்கத் தன்மை கொண்ட
இந்திரப் பிராணன் -என்று சொல்லப்படுபவனும் பரம புருஷனே என்று ஸ்தாபிக்கிறார்

1-1-29-ப்ராணா ததா அநுகமாத் –

ஹித தமமாக உபாசனம் செய்யத்தக்க இந்த்ர பிராணன் என்று
கௌஷீதகி ப்ராஹ்மணத்தில் சொன்னது ஜீவனா அல்லது பரமாத்மாவான என்று சம்சயம்
ஜீவன் தான் என்பது பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
இந்த்ர சப்தம் ஜீவனைக் குறிப்பதாகவே ப்ரஸித்தம்
தான் என்று குறிப்பிடும் இந்த்ரனாகவும் பிராணனாகவும் உள்ளது
பிரசித்தமான இந்த்ரனைக் குறிப்பது என்பது பொருந்தாது

பிராணனாக நான் உள்ளேன் என்று இந்த்ரன் கூறியதும் ப்ரஹ்மத்தை தான் –
கௌஷீதகி ப்ராஹ்மணத்தில்
தன்னை உபாசித்த ப்ரதர்த்தனன் என்பவன் இடம் –
சா ஹோவாச ப்ராணோஸ்மி ப்ராஜ்ஞாத்மா தம் மாம் ஆயுர் அம்ருதம் இத் உபாஸ்வ –
உயிராகவும் அமிர்தமாகவும் சொன்னான்
அதே கௌஷீதகி ப்ராஹ்மணத்தில்-
ச ஏஷ ப்ராணா ஏவ ப்ராஜ்ஞாத்மா ஆனந்தோஜரோம்ருத-என்று
பிராணன் ஆனந்தமாயும் இளமையுடனும் அழியாமலும் உள்ளதாக சொல்லி இருப்பதால்
பிராணன் என்றது இந்த்ரன் தனக்கு உள்ளே உள்ள ப்ரஹ்மத்தை தான்-

ப்ராணா –ப்ராணோஸ்மி ப்ராஜ்ஞாத்மா -என்று சொன்ன இந்த்ரப்ரண ஸப்த வாஸ்யன் ஜீவன் அல்லன்
அவனை விட விலக்ஷணமான பர ப்ரஹ்மமே ஆகும்
ஏன் எனில்
ததா அநுகமாத் –அப்படியே தொடர்வதால்
ச ஏஷ ப்ராணா ஏவ ப்ராஜ்ஞாத்மா ஆனந்தோ ஜர அம்ருத-என்று
ஆனந்தம் முதலிய தர்மங்களுக்கு தர்மியாகப் பிராணனைத் தொடர்வதாலே
ப்ரஸித்தமான இந்த்ரனுக்கு ஆனந்த் வாதிகள் கூடாமையாலே பரம புருஷனே
இந்த்ர பிராணன் என்ற சொல்லின் பொருள் ஆகும் –

————-

30-ந வக்து ஆத்ம உபதேசாத் இதி சேத் அத்யாத்ம சம்பந்த பூமா ஹ்யஸ்மின்-1-1-30-

ஏஷ ஏவ சாது கர்ம காரயதி தம் யமேப்யோ லோகேப்ய உன்நிநீஷதி ஏவசாது கர்ம காரயதி தம் யமதோ நிநீஷதி-என்று
நன்மை தீமைகள் பரம் பொருளால் விளையும் என்றும் –
தத் யதா ரதஸ் யாரேஷூ நேமி ரர்ப்பிதா நாபாவர அர்ப்பித்தா ஏவ மேவைதா பூத மாத்ரா ப்ராஜ்ஞா மாத்ரா ப்ராணே அர்ப்பிதா-என்று
தேரின் சக்கரத்தில் உள்ள கம்புகள் சக்கரத்தின் நடுவில் சேர்க்கப் பட்டது போலே
அசேதனங்கள் சேதனங்களின் இடமும் சேதனங்கள்
ப்ரஹ்மத்திடமும் இணைக்கப் பட்டுள்ளன என்பதால் இந்த்ரன் பிராணன் ஆகியவை பரம்பொருளையே குறிக்கும்-

ந -இந்த்ர ப்ராண சப்தத்தின் பொருள் பர ப்ரஹ்மம் அன்று
ஏன் எனில்
வக்து ஆத்ம உபதேசாத் இதி சேத் –தொடக்கத்தில் -மூன்று தலையுள்ள த்வாஷ்ட்ரனைக் கொன்றேன் என்று கூறி
விஸ்வ ரூப வதம் முதலியவற்றால் ப்ரஸித்தமான ஜீவ பாவத்துடன் ப்ரஞ்ஞாத்மாவான பிராணனாய் இருக்கிறேன்
என்று பேசும் தன் ஆத்மாவை உபாஸீ என்று உபதேஸிப்பதால் ஜீவன் தான் என்றால்
அத்யாத்ம சம்பந்த பூமா ஹ்யஸ்மின்-பிராண ஸப்தத்தால் குறிப்பிடும் இந்த ப்ரஹ்மத்திடம் உள்ள குணங்கள் -தர்மங்கள் –

அத்யாத்ம தர்மங்கள் -அவற்றின் சம்பந்தங்கள் -அவற்றின் பூமா -மிகுதியாய் உள்ளது அல்லவா
உபக்ரமத்தை விட மஹா வாக்யம் பிரபலமாகையால் இந்த ப்ரதர்தன வித்யையில்
ஆதி முதல் அந்தம் வரை பரமாத்வாவின் சிறப்பான தர்மங்கள் பேசப்படுகின்றன
அதாவது ப்ரதர்தன் இந்த்ரனிடம் -நீயே மனிதர்க்கு ஹித தமமாய் எண்ணும் வரத்தைத் தருக–என்று கூறிப் பின்
அனைத்து நல்ல காரியங்களையும் நிறைவேற்றுபவனாகவும் தேரின் குடத்தில் -ஆரங்களில் -சக்ரம் நிலை பெற்றது போல்
உலகிற்கே ஆதாரமாய் இருப்பவனும் -ஆனந்த வடிவாய் ஜரை மரணம் முதலியவை அற்றவனாய் –
உலகின் தலைவனாய் ஸகல கல்யாண குணா கரனுமாக இந்த வித்யையில் சொல்லப்படுகையாலே
பரம புருஷனே இந்த்ர பிராணன் என்பது கருத்து

————

ஆனால் இந்திரன் தன்னையே உபாஸிக்கச் சொல்வதால் பொருந்துமோ
என்ற சங்கைக்கு மேலே விடை தருகிறார் –

31-சாஸ்திர த்ருஷ்ட்யா து உபதேச வாமதேவவத் –1-1-31-

வாசுதேவரைப் போலே இந்த்ரனும் வேதங்கள் மூலம் உண்டான ஞானத்தினால் இவ்வாறு கூறினான் –
சாந்தோக்யம் –
அநேன ஜீவேன ஆத்ம நா அநு பிரவிச்ய நாம ரூபே வ்யாகரவாணி -என்று ஜீவன் மூலமாக
அசித்துக்களை ஆக்கிரமித்து பெயரும் ரூபமும் கொடுக்கிறேன் என்றும்
ப்ருஹத் ஆரண்யா காவில்-
ய ஆத்மினி திஷ்டன் ஆத்ம நோந்தர யமாத்மா ந வேத யச்யாத்மா சரீரம் ய ஆத்மாநமந்திரோ யமயதி -என்று
எந்த பரம்பொருள் ஜீவாத்மாவில் உள்ளதோ -எந்த பரம்பொருளை ஜீவாத்மா அறியவில்லையோ -யாருக்கு ஜீவாத்மா உடலாக உள்ளதோ –
உள்ளே புகுந்து ஜீவாத்மாவை யார் இயக்குகின்றானோ -என்று தனக்கு உள்ளே உள்ள பரம்பொருளை இந்த்ரன் குறிப்பிட்டான்-
ப்ருஹத் ஆரண்யா காவில் –
தத்தைதத் பஸ்யன் ருஷிர் வாமதேவ பிரதிபதே அஹம் மநுரபவம் ஸூர்யச்யாஹம்-என்று
ப்ரஹ்மத்தை உணர்ந்த வாமதேவர் தானே மனுவாகவும் ஸூர்யனாகவும் –
பரம்பொருளே அந்தர்யாமியாகவும் உணர்ந்து -இப்படிக் கூறினார்-

து -சங்கையை நீக்குகிறது
உபதேஸ முமுஷுக்கள் தன்னை உபாஸிக்க வேண்டும் என்று உபதேசித்தல்
சாஸ்திர த்ருஷ்ட்யா–ஆத்மநி திஷ்டன் -ஆத்மநோ நந்தர -யம் ஆத்மா ந வேத –
யஸ்ய ஆத்மா சரீரம் -முதலிய ஸாஸ்திரத்தாலே
உபதேச -ஜீவ சரீரிகனான பரமாத்மாவை அறிந்து ஜீவனைக் குறிக்கும் அஹம் த்வம் முதலிய சொற்களும்
பரமாத்மாவையே போதிப்பது என்று அறிந்து
என்னையே அறிந்து உபாஸனை செய் என்று தன் ஆத்மாவைச் சரீரமாகக் கொண்ட பரமாத்மாவை உபாஸிக்கிறான் இந்த்ரன் –
வாமதேவவத் –வாமதேவர் என்ற மஹ ரிஷி இப்படியே ஸாஸ்த்ர கண்ணோட்டத்தாலே
அஹம் மனுரபம் ஸூர்யச்ச -நானே மனுவாகவும் ஸூர்யனாகவும் இருந்தேன் என்று இருக்கிறார்
அப்படியே இந்த்ரனும் கூறுகிறான் -என்றபடி
ப்ரஹ்லாதனும் இப்படியே எம்பெருமான் எங்கும் நிறைந்து இருப்பதால் அவனாகவே நானும் இருக்கிறான் –
என்னிடம் இருந்தே எல்லாம் தோன்றுகிறது
நானே எல்லாமுமாய் ஆவேன் என்று கூறுகிறான் என்று கருத்து
கடல் ஞாலம் செய் தேனும் யானே என்னும் என்றாரே ஆழ்வாரும் –

———-

இந்தப் ப்ரகரணத்தில் ஜீவாத்மாவைக் குறிக்கும் சொற்களாலும்
ப்ராணாதி சப்தங்களாலும்
உபாஸ்யமான பர ப்ரஹ்மத்தைச் சொல்லுகையில்
காரணத்தைச் சந்தேகம் தெளிவிப்பதன் மூலம் அருளுகிறார்

32-ஜீவ முக்ய பிராண லிங்காத் ந இதி சேத் ந உபாசாத்ரை வித்யாத் ஆஸ்ரிதத்வாத் இஹ தத் யோகாத் –1-1-32-

கௌஷீதகி ப்ரஹ்மணத்தில்-
ந வாசம் விஜிஜ்ஞா சீத வக்தாரம் வித்யாத் -என்றும்
த்ரிசீர்ஷாணம் த்வாஷ்ட்ரம் அஹம் அருன்முகான் யதீன் சாலாவ்ருகேப்ய ப்ராயச்சம் -என்றும்
இந்திரனைப் பற்றி சொல்லிற்று –
யாவதஸ்மின் சரீரே ப்ராணோ வசதி தாவதாயு -என்றும் பிராணனைக் குறித்தும் சொல்லிற்று
பரம்பொருளை உபாசிப்பது -தைத்ரியம்
ஆனந்தோ ப்ரஹ்ம-சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம- -உள்ளபடியே உபாசிப்பது ஒரு முறை –
ஜீவாத்மாவை உடலாக உடையவன் -என்று உபாசிப்பது ஒரு முறை –
பிராண வாயுவை உடலாக உடையவன் -அந்தர்யாமியாக உள்ளவன் என்பதையே சொல்லும் —

ஜீவ முக்ய பிராண லிங்காத் ந –த்வஷ்ட்ர வதம் முதலான ஜீவ லிங்கங்களாலேயும்
இவ்வுடலில் பிராணன் உள்ள வரையிலும் தான் ஆயுள் என்று கூறும் பிராண லிங்கத்தாலும்
பரமாத்ம விஷய சம்பந்தம் மிகுதி என்பது இல்லை

இதி சேத் ந -என்று கூறுவது தவறு

உபாசாத்ரை வித்யாத் –மூன்றுவிதமாக உபாஸிக்க வேண்டும் என்றே உபதேஸிக்கிறார்
மூன்று வித உபாஸனமாவது
1- ஸமஸ்த காரணனான ப்ரஹ்மத்தை சத்யத்வ ஞானாதிகள் உடையதாய் உபாஸிப்பது
2-போக்த்ரு வர்க்கமான- ஜீவர்களை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தை உபாஸிப்பது
3-போக்ய போக உபகரணமான -அசேதனங்களைச் சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தை உபாஸிப்பது –
என மூன்று வித உபாஸனங்கள்

ஆஸ்ரிதத்வாத் –தைத்ய ஸ்ருதியிலும் ஆஸ்ரயிக்கப் படுகிறது
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம-என்றும்
ஆனந்தோ ப்ரஹ்ம-என்றும் பகவத் ஸ்வரூப அனுசந்தானம் கூறப் படுகிறது
பின்னர் தத் ஸ்ருஷ்ட்வா ததே அநு ப்ரவிசேத் -என்று தொடங்கி
சேதன சரீரகமாயும் அசேதன சரீரிகமாயும் அனுசந்தானம் கூறப்படுகிறது

இஹ தத் யோகாத்-இந்த உபநிஷத்திலேயும் அந்த மூன்று வித உபாஸனங்களும் கூடும்
எப்படி என்றால்
என்னை உபாஸி -என்றதால்-என்னைச் சரீரமாகக் கொண்ட பரமாத்மாவை உபாஸி என்று
சேதன சரீரிக ப்ரஹ்ம அனுசந்தானமும்
ப்ராஞ்ஞாத்மாவான பிராணனாய் இருக்கிறேன் என்றதால்
அசேதன சரீரிக ப்ரஹ்ம அனுசந்தானமும்
சொல்லப் படுகின்றன
ஆனந்தோ -அஜரா -அம்ருத -என்று ப்ரஹ்ம ஸ்வரூப அனுசந்தானம் சொல்லப் படுகிறது
இவ்வாறு வேறு உபநிஷத்துக்களிலும் பரமாத்மாவின் சிறப்பான தர்மங்கள் சொல்லப்பட்டன
ஹிரண்ய கர்பாதிகளைக் குறிக்கும் சொற்களும் பரமாத்மாவையே குறிக்குமாம்

ஆகையால் இந்த்ர ப்ராண சப்தத்தால் குறிக்கப் படுபவன் ஜீவனை விட வேறுபட்ட பரமாத்மாவே என்று தேறிற்று –

இந்திர பிராண அதிகரணம் சம்பூர்ணம்

——–

இந்தப்பாதத்தில்
ஆகாசாதிகரணம் முதல் இறுதி வரை நான்கு அதிகரணங்களிலும்
ஆகாசம் -பிராணம் -என்ற சொற்கள் பிரித்துப் பொருள் கொள்ளும் காரணப் பெயராய்
யதேஷ ஆகாஸ ஆனந்தோ நஸ்யாத்–முதலிய ஸ்ருதிகளிலே க்லுப்தமான படியாலே
ரூடி சக்தியை விட்டு ஸர்வார்த்ர்யாமியாய் –ஸர்வ பிராணிகளையும் உயிரூட்டுபவனாய் உள்ளான் -என்பதாக
நிமித்த பேதம் காரணமாக ஸ்ரீ மன் நாராயணனையே போதிப்பவை என்றும்

ஜ்யோதிஸ் ஸப்தம் குஷி கதமான ஜ்யோதிஸ்ஸுடன் ஒன்றாக உபதேசித்து விசேஷ லிங்கம் இருந்தாலும்
ரூடி சக்தியால் பரம புருஷனையே குறிக்கிறது

இந்த்ர ப்ராணாதி ஸப்தங்களும் -த்வாஷ்ட்ர வதாதி லிங்கங்கள் இருப்பினும் அத்தகைய லிங்கங்களுடன் கூடிய
இந்த்ராதி சரீரகனான பரமாத்மாவையே போதிப்பன என்பதாக ஆச்சார்யர்கள் நிரூபித்து உள்ளனர்

பர வித்யாஸூ ஜீவோக்தி நிரூக்த்யாதே பராஸ்ரயா
தல்லிங்கா நந்யதா ஸித்தவ் தத் விஸிஷ்டாபி தாயினீ –என்று விளக்கினார்கள்
அதாவது
பரவித்யைகளில் காணும் ஜீவனைக் குறிக்கும் சொற்கள் பரமாத்மாவையே குறிப்பவை
அதன் லிங்கங்கள் மாற்ற முடியாமல் நிற்கையில் சேதனாதிகளைச் சரீரமாய்க் கொண்ட ப்ரஹ்மம்
என்ற பொருளைக் குறிப்பிடுவனவாம் என்றவாறு –

இந்தப்பாதத்தில் அதிகரணங்கள் -11-
முதல் நான்கும் உபோத்காதம் -முன்னுரை
அடுத்த ஏழிலும் ஸ்ரீயப்பதியின் கல்யாண குணங்கள் அனுபவிக்கப் படுகின்றன
1-ஈஷத் அதிகரணத்தில் -ஸ்வ இச்சையால் சர்வத்துக்கும் காரணத்வமும்
2-ஆனந்தமய அதிகரணத்தில் சுபமான குண கணங்களுடன் எல்லையில்லா ஆனந்தம் உடைமையும்
3-அந்தராதித்ய அதிகரணத்தில் கர்ம சம்பந்தம் அற்ற ஸுத்தமான திவ்ய மங்கள விக்ரஹ யோகமும்
4-ஆகாஸ அதிகரணத்தில் எல்லையற்று நாற்புறங்களிலும் பிரகாசித்தலும்
5-ப்ராண அதிகரணத்தில் சேதன அசேதன சகல ஜகத்தையும் உயிர் வாழ்விக்கும் திறனையும்
6-ஜ்யோதிர் அதிகரணத்தில் திவ்யமாய் நிகரற்ற ஜ்யோதிஸ் ஸ்வரூபமும்
7-இந்த்ர ப்ராண அதிகரணத்தில் இந்த்ரன் பிராணன் முதலியவற்றுக்கு அந்தராத்மாவாய் விளங்குவதுமாகிய
கல்யாண குணங்கள் ஏழும் உடைய பரம புருஷன் முதல் பாதத்தில் விளக்கப்படுகிறான் –

————

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-முதல் பாதம் -அயோக வ்யவச்சேத பாதம்-சம்பூர்ணம்-

————–—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை –இரண்டாம் அத்யாயம் –நாலாம் பாதம் —

November 13, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————————————————————-

ஜகத்து முழுவதும் ப்ரஹ்மத்தின் கார்யம் என்பதை சமர்த்திக்க
சில ஸ்ருதிகளில் மேல் எழுந்த வாரியாக இந்திரியங்கள் நித்யங்கள் என்னும் எண்ணம்
சில மாந்தர்களுக்குத் தோன்ற இடம் இருப்பதால் அவ்வெண்ணத்தை நீக்க
ஜீவனின் உப கரணமான இந்திரியங்களுக்கு கார்யத்வத்தை சாதிக்கிறார் என்பது சங்கதி

இந்திரியங்கள் ஜீவன் போல் உண்டாவது இல்லையா –
ஆகாசாதிகள் போல் உண்டாகின்றனவா என்று சம்சயம்
உண்டாவது இல்லை என்பது பூர்வ பக்ஷம்

அஸத்வா இதம் அக்ர ஆஸீத் ததாஹு கிம் ததா ஸீத் இதி ருஷயோ வாவதே அக்ர ஆஸீத்
ததாஹு கேதே ருக்ஷய இதி ப்ராணா வாவ ருஷய இதி –
பிரளய காலத்தில் பிராண ஸப்த வாஸ்யங்களான இந்திரியங்களுக்கு இருப்பு கூறுவதால்
உத்பத்தி இல்லை என்பதாம் –

ஸூத்ரம் –265-கதா ப்ராணா –2-4-1- பூர்வ பக்ஷ ஸூத்ரம்

ஜீவன் எவ்வாறு உத்பத்தியும் மரணமும் இல்லாதவனோ
ந ஜாயதே ம்ரியதே வா விபச்சித்
அப்படியே பிராணா -இந்திரியங்களும்
அஸத்வா –என்னும் ஸ்ருதிகளால் உத்பத்தி ஆவது இல்லை என்பது பூர்வ பக்ஷம்

அதைக் கண்டிக்கிறார் –

—————

ஸூத்ரம் –266-கௌண்ய சம்பவாத் தத் ஸ்ருதேச் ச –2-4-2-

ச என்றது து என்ற பொருளாய் பூர்வ பக்ஷத்தை நிரசிக்கிறது
இந்திரியங்களும் வ்யத் யாதிகளைப் போலே உத் பன்னங்களே
தத் ப்ராக் ஸ்ருதேச் ச -அந்த பரமாத்மாவுக்கே பிரளய காலத்தில் இருப்பு ஸ்ருதியில் கூறப்படுவதால்
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் –இத்யாதி ஸ்ருதிகளில்
ஏகோ ஹவை நாராயண ஆஸீத் -ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனே பிரளய காலத்தில் இருக்கிறான் என்பது ப்ரஸித்தம்
ப்ராண ஸப்தமும் பிராணம் அபி ஸம் விசந்தி -என்ற ஸ்ருதியால் பரமாத்மாவைக் குறிப்பது
எல்லாவற்றையும் ஸாஷாத் கரிக்க வல்ல ரிஷி என்ற தன்மையும் அவருக்கே கூடும்
இப்படியாகில் ப்ராணா வாவ ரிஷயே என்ற பஹு பன்மை வசனம்
கௌணீ -உபசார வார்த்தை
ஏன் எனில்
அசம்பவாத் -இந்திரியங்கள் பிரளய காலத்தில் இல்லாமையால் –

————————–

ஸூத்ரம் –267-தத்வ பூர்வகத்வாத் வாச –2-4-3-

வாச -பரமாத்மேதரமான எல்லா நாமதேயங்களும்
தத்வ பூர்வகத்வாத் -அந்த அந்த வஸ்துவின் ஸ்ருஷ்ட்டியை முன்னதாகக் கொண்டு இருப்பதால்
தத்தே தந்தர் ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் -தன் நாம ரூபாப்யாம் வியாக்ரியத -என்கிற ஸ்ருதி
அந்த வஸ்துக்களையும் நாமங்களையும் ப்ரஹ்மமே படைத்தது என்று சொல்வதால்
இந்திரியாதி ஸ்ருஷ்டிகளும் முன் உள்ள பிராணன் என்பது பரமாத்மாவே என்று சித்திக்கிறது –

——————

இதில் இந்திரியங்களின் எண்ணிக்கையைக் காட்டுகிறார்
என்று சங்கதி

ஸூத்ரம் –268–ஸப்தகதேர் விசேஷி தத்வாச்ச–2-4-4-பூர்வ பஷ ஸூத்ரம்

இந்திரியங்கள் ஏழா பதினொன்றா என்று சம்சயம்
ஏழே என்று பூர்வ பக்ஷம்
ஏன் எனில்

கதே ஸப்தப் ப்ராணா ப்ரபவந்தி-என்று
ஜீவனுடன் சேர்ந்து கதி சொல்வதால்
விசேஷி தத்வாச்ச
யதா பஞ்ச அவதிஷ்டந்தே ஞானாமி மனஸா ஸஹ –புத்திச்ச ந விசேஷ்டேதே தமாஹு பரமாம் கதிம் -என்று
ஏழு விஞ்ஞானங்களும் ஸ்திரமாய் இருந்தால் யோகம் ஸித்திக்கும் என்று விசேஷித்து
ஞானி என்று ஞான ஸாதனங்களான இந்திரியங்களை விசேஷிக்கையாலும்
ஸ்ரோத்ரம் -த்வக் -சஷுஸ்-ஜிஹ்வா -கிராணம் -மனஸ் -புத்தி -என்று ஏழு இந்திரியங்கள்
வேறே இல்லை என்பது பூர்வ பக்ஷம் –

——————–

ஸூத்ரம் –269-ஹஸ்தாத யஸ்து ஸ்திதே அதோ நைவம் –2-4-5-

அவ்வாறு அல்ல -இந்திரியங்கள் ஏழு என்பது சரி யல்ல
ஸ்ரோத்ரம் முதலிய ஞான இந்திரியங்கள் ஐந்து
மனம் ஓன்று -கர்ம இந்திரியங்கள் ஆக -11 இந்திரியங்கள்
அவற்றுள் ஐந்து ஞான இந்திரியங்களும் ஜீவனுடன் வேறு சரீரத்தில் கூட இணைந்தே செல்கின்றன
ஹஸ்தாத யஸ்து–கர்மா இந்த்ரியங்களோ எனில்
ஸ்திதே -உடல் உள்ளவரை உள்ளன -சரீரம் தோன்றும் போது தோன்றி மறையும் போது மறைபவை
அதோ நைவம்-ஆகையால் இந்திரியங்கள் ஏழு என்பது இல்லை
புத்தி அஹங்காரம் சித்தம் என்ற வளாகங்களை மநோ விருத்தியின் பேதங்களே யாதலின் வேறே அல்ல
ஆக இந்திரியங்கள் பதினொன்றேயாது

இவ்வாறு வியாக்யானம் தீபத்தைத் தழுவியது –

இங்கு ஓர் பூர்வ பக்ஷம்
ஜீவன் இருக்கையில் ஹஸ்தாதிகள் அவனுக்கு உபகாரமாய் இருப்பதாலும் எடுப்பது வைப்பது போன்ற
செயல்கள் இயற்றுவதாலும் இந்த்ரியத்தில் தடை இல்லை
ஆகையால் அவை ஏழு தான் என்று கூறப்படுவது இல்லை -அவை பதினொன்றே
ஜீவன் சரீரத்தை அடையும் போது கர்ம இந்திரியங்கள் உண்டாகி சரீரம் நசிக்கும் போது அடியோடு நசிக்கின்றன
ஜீவன் லோகாந்த்ரம் தேஹாந்த்ரம் அடையும் போது ஞான இந்த்ரியங்களே உடன் போகின்றன
கர்ம இந்திரியங்கள் போவது இல்லை என்ற இவ் வர்த்தங்களைச் சாதிக்க வில்லை

ஸ்ருத பிரகாசிகையிலோ -பதினோரு இந்த்ரியங்களுமே அஹங்காரத்தில் இருந்து தோன்றியவை யாதலின்
ஜீவனின் லோகாந்தர தேஹாந்தர கமனத்திலும் இவை கூடவே செல்கின்றன என்றும்
பிரளய தசையில் தவிர மற்ற காலங்களில் இவற்றுக்குப் பிரிவே கிடையாது என்றும் கூறி
ஏழே இந்திரியங்கள் என்பதைக் கண்டிக்கிறார்

சிந்தாமணியிலும் -ஸப்த இமே லோகா யேஷு சரந்தி பிராணா -என்கிற சுருதியில்
ஜீவனுடன் செல்லுதல் ஞான இந்திரியங்களுக்கு மட்டும் கூறினாலும்
கர்ம இந்திரியங்களுக்கு உப லக்ஷணம் என்று கூறப்பட்டுள்ளது
இப்படி இருக்க தீப அனுசாரியாக வியாக்யானம் செய்யலாமோ என்பது பூர்வ பக்ஷம்

இவ்விஷயத்தில் நியாய பரிசுத்தி கிரந்தம் சமாதானமாகக் கூறும் வழியைக் காண்போம்
யாதவ பிரகாசர் மதத்தைப் போல் கர்ம இந்திரியங்களுக்கு ஒவ்வோர் சரீரத்திலும்
உத்பத்தி விநாசங்களை ஏற்றுக் கொண்டாலும் அவற்றுக்கு இந்த்ரியத்வம் ஸித்தமாகிறது என்பதால்
இந்த ஸூத்ரத்துக்குப் பொருத்தமான பொருள் ஓன்று கூறப்பட்டது
ஆகையால் பதினோரு இந்த்ரியங்களுமே வேறே சரீரங்களிலும் தொடர்கின்றன என்பதே
ஸ்ரீ பாஷ்யகாரர் திரு உள்ளம் என்று அறிகிறோம்
சரீரே ஸ்திதே -என்றும் பிரயோஜனந்தரத்தாலும் பிறர் மதத்தை அனுவதித்து
இந்திரியங்கள் பதினொன்றே என்று ஸ்தாபித்தாலும்
தீபத்தில் சொல்லியதத்திற்கும் விரோதம் இல்லை என்பதாம் –

—————

மூன்றாம் அதிகரணம் –பிராண அணுத்வ அதிகரணம்

ஸூத்ரம் –270-அணவச்ச –2-4-6-

இந்திரிய பரிமாணம் இதனால் கூறப்படுகிறது
இந்திரியங்கள் ஸர்வ கதங்களா அணுக்களா என்று சம்சயம்
ஸர்வ கதங்களே –ஏதே ஸர்வ ஏத சமாஸ் ஸர்வே அநந்தா -என்று அனந்தத்வம் சொல்வதால் –
என்று பூர்வபக்ஷம்

அத்தை நிரசிக்கிறார்
அணவச்ச –இந்திரியங்கள் அணுக்களே
பிராணம் அனூத்க்ரா மந்தம் சர்வே ப்ராணா அனூத் க்ராமந்தி -என்று
இந்திரியங்கள் ஜீவனுடன் செல்வது கூறப்பட்டுள்ளதால் அணுவே
அநந்தம் -என்று சொன்னதோ -அதஹை தாந நந்தானு பாஸ்தே -என்று
இந்திரியங்களின் உபாஸனத்தால் வரும் பலன்களின் மிகுதியைக் காட்டவேயாம் –

————–

ஸூத்ரம் –271-ஸ்ரேஷ்டச்ச –2-4-7–

இந்திரியங்களுக்கு நிர்வாஹகம் ஆகையால் ஸ்ரேஷ்டமான பிராண வாயுவும் உண்டாகிறது
ஏதஸ் மாஜ் ஜாயதே பிராண மன -என்று சொல்வதால்
இங்கு ப்ராணனைச் சொன்னது மேலே பிராணனின் ஸ்வரூபத்தை விசாரிக்க வாம் –

———

நான்காம் அதிகரணம் -வாயு க்ரிய அதிகரணம் —

ஸூத்ரம் –272- ந வாயு க்ரியே ப்ருதக் உபதேசாத் –2-4-8-

இந்த ஸ்ரேஷ்ட பிராணன் கேவல வாயு ஸ்வரூபமா -அல்லது வாயுவின் சலனாதி கிரியையா
அல்லது தேஹாதி தாரணத்துக்கு அனுகுணமான ஒரு அவஸ்தா விசேஷத்தோடு கூடின வாயுவா என்று சம்சயம்
கேவல வாயுவே –முதல் பக்ஷம் –யஸ் பிராணா ச வாயு -என்று சொல்வதால்
இரண்டாவது பக்ஷம் -உஸ்வாச நிச்வாஸ ரூபமான வாயுவின் கிரியையே பிராணன் என்பது
இவற்றை நிரசிக்கிறார்

ந வாயு க்ரியே -வாயு மாத்ரமோ அதன் கிரியையோ அன்று
ப்ருதக் உபதேசாத்–ஏதஸ் மாஜ் ஜாயதே பிராண மனஸ் ஸர்வ இந்த்ரியாண ச
கம் வாயு -என்று
வாயுவும்
பிராணனும்
ப்ரஹ்மத்தின் இடம் இருந்து உண்டாகின்றன என்று தனித்தனியே சொல்வதால் என்றபடி
ஆகையால் தேஹ தாரண யோக்யதா ரூபமான விசேஷத்தை யுடைய வாயுவே பிராணன் என்று சித்தம்

———–

இப்படி வாயுவைக் காட்டிலும் தனியாகச் சொல்லப்பட்ட அக்னியாதிகளைப் போலே
வேறே ஒரு பூதமோ என்னும் சங்கையைப் பரிஹரிக்கிறார்

ஸூத்ரம் –273-சஷுராதி வத் து தத் ஸஹ சிஷ்ட் யா திப்ய –2-4-9-

து சப்தம் சங்கையை நிவர்த்திப்பிக்கிறது
பிராணன் தேஜஸ் முதலியவை போல் பூதம் அல்ல
சஷுராதி வத்–கண்–இந்திரியங்கள் போல் ஜீவனுக்கு உபகரணம் ஆகாது
தத் ஸஹ சிஷ்ட் யா திப்ய–உபகரணங்களான அவற்றுடன் சேர்ந்து உபதேசம் செய்யப்பட்டு இருப்பதால்
பிராண சம்வாதத்தில் -ஸர்வே ப்ராணா அஹம் ஸ்ரேயஸே விவத மானா -என்று
ச ஷுராதி இந்த்ரியங்களையும் பிராண வாயுவையும் கூட்டி பிராண ஸப்தத்தாலே உபதேசிக்கிறது
ச ஷுராதிகளைப் போலே பிராண வாயுவும் உபகரணம் என்ற வகையில் சமமானால் தான் பொருந்தும்
யோ அயம் முக்ய ப்ராணா -என்று ப்ராண சப்தத்தால் குறிப்பிடப்பட்டுள்ள கரணங்களுள்
பிராண வாயு முக்கியம் என்று கூறியது
ஸஹ சிஷ்ட் யா திப்ய-என்று ஆதி ஸப்தத்தின் பொருள் –

————–

ஸூத்ரம் –274-அகரணத் வாச்ச ந தோஷ ததாஹி தர்சயதி–2-4-10-

அகரணத் வாச்ச ந தோஷ –ஜீவனுக்கு உபகரிக்கை என்னும் காரணம் இல்லாமையாலே
ப்ராணனுக்கு உபகரணத்வம் கூடாது என்ற தோஷமும் இல்லை
ததாஹி தர்சயதி–யஸ்மின் உத் க்ராந்தே இதம் சரீரம் பாபிஷ்ட தரமிவ த்ருச்யதே ஸவை ஸ்ரேஷ்ட –என்றும்
ஸ்ருதி தானே பிராண வாயுவுக்கு தேஹ இந்திரியாதி அசை தில்ய கரண ரூபமான உபசாரத்தைக் காட்டுகிறது
ஆகையால் தோஷம் இல்லை என்பதாம் –

——————-

ஸூத்ரம் –275–பஞ்ச வ்ருத்திர் மநோ வத் வ்யபதிஸ்யதே–2-4-11–

பஞ்ச வ்ருத்திர்-ஒரே பிராண வாயு தான் பிராண அபா நாதி வ்ருத்தி பேத மூலமாக
ஐந்து பெயர்களால் கூறப்படுகிறது
மநோ வத்-ஒரே மனம் எப்படி காம நாதி வ்ருத்தி பேதத்தால்
காமம்
சங்கல்பம் விசிகித்சா
ஸ்ரத்தா
அஸ்ரத்தா
த்ருதி
அத்ருதி ‘
ஹ்ரி -வெட்கம்
தீ புத்தி
பீ பயம்
என்று வெவ்வேறாக கூறப்படுகிறது அப்படியே பிராணனும் ஐந்து இடங்களில் இருப்பைக் கொண்டு
பிராணன் அபானன் இத்யாதி பெயர்களால் குறிக்கப் படுகிறது

———————-

ஐந்தாம் அதிகரணம் –அணுச் ச அதிகரணம்

இந்தப் பிராணன் வாயுவா அல்லவா என்று சம்சயம்
சர்வகதன்-விபு -என்று பூர்வ பக்ஷம்
ஸ ஏபி த்ரி பி லோகை சம என்று அனந்தயம் சொல்வதால் என்று பூர்வ பக்ஷ ஹேது
இதை நிரசிக்கிறார்

ஸூத்ரம் –276–அணுச் ச –2-4-12–

தம் உத் க்ரமாந்தம் பிரானோ அனூத் க்ரமாதி –என்று உத் க்ராந்தி சொல்வதால்
இந்திரியங்கள் போலவே பிராணனும் ஸூஷ்ம பரிணாமம் உள்ளது
த்ரி பி பிராணை சம -என்றது பிராணனை ஸ்துதிப்பது அன்று வேறு இல்லை –

———–

ஆறாம் அதிகரணம் -ஜ்யோதிராத் அதிகரணம்

பராத் து தத் ஸ்ருதே -என்னும் அதிகரணத்தில் சொன்ன அர்த்தத்தை
இதில் ஸ்திரப்படுத்துகிறார் என்று சங்கதி

ஸூத்ரம் –277-ஜ்யோதிராத் யதிஷ்டா நந்து ததா மனனாத் ப்ராண வதா சப்தாத் –2-4-13–

ப்ராண வதா-பிராணனின் நியந்தா என ஜீவனுடன் கூடி
ஜ்யோதிராத் யதிஷ்டாநம் -அக்னி யாதி தேவதைகளுக்கு வாக் யாதி இந்த்ரியங்களில் அதிஷ்டானமானது
ததா மன நாத் து –ஆபி முக்யேந மனனம் ஆ மனனம் ஸங்கல்பம் –
அந்த பரம புருஷனின் சங்கல்பத்தாலே ஏற்படுகிறது என்று கருத்து
ஏன் எனில்
சப்தாத்-யோ அக்னவ் திஷ்டன் அக்னி மந்தரோ யமயதி ய ஆத்மனி திஷ்டன் –இத்யாதி
சப்தங்களால் என்றபடி –

——————–

ஸூத்ரம் –278- தஸ்ய ச நித்யத் வாத் –2-4-14–

தஸ்ய -ஸமஸ்த வஸ்துக்களும் பரமாதிஷ்டிதம் என்பதற்கு
நித்யத் வாச் ச -ஸ்வரூப அனு பந்தியாய் நியதத்வம் இருப்பதால்

ஆகவே பகவத் ஸங்கல்பத்தாலே தான் அக்னி யாதி தேவதைகளுக்கு
இந்திரிய அதிஷ்டாத்ருத்வம் தவிர்க்க முடியாததாகிறது –
தத் ஸ்ருஷ்ட்வா ததே வா அனு ப்ராவிசத் தத் அனு ப்ரவிஸ்ய சச்சத் யச்சா பவத் என்று
சர்வ நியாந்தாவாய் இருந்து அனு பிரவேசம் செய்தார் என்ற ஸ்ருதி இருப்பதால் என்று கருத்து –

————

ஏழாம் அதிகரணம் –இந்த்ரிய அதிகரணம்

ஸூத்ரம் –279-த இந்த்ரியாணி தத் வ்யபதேசாத் அந் யத்ர ஸ்ரேஷ்டாத் –2-4-15–

ஸர்வே பிராணா -என்று சஷு ராதிகளையும் பிராண வாயுவையும் பிராண சப்தத்தாலேயே சொல்லுகையாலே
முக்ய பிராணனையும் இந்த்ரியம் என்னலாம்
என்பதைக் கண்டிக்கிறார்
ஸ்ரேஷ்டாத் அந் யத்ர-ஸ்ரேஷ்ட பிராணன் அல்லாத பிற ப்ராணங்கள்
த இந்த்ரியாணி-அவையே இந்த்ரியங்கள்
தத் வ்யபதேசாத் -அவற்றையே அவ்வாறு வழங்குவதால்
இந்திரியாணி தசை கஞ்ச -என்று முக்ய பிராணனை விட்டு -சஷுராதி மனம் வரையானவற்றையே
இந்த்ரியம் எனக் குறிப்பிடுவதால்
முக்ய ப்ராணனுக்கு இந்த்ரியம் என்ற பெயர் கிடையாது என்பதாம் –

——————

ஸூத்ரம் –280-பேத ஸ்ரு தேர் வை லக்ஷண்யாச் ச–2-4-16–

பேத ஸ்ரு தேர்
ஏதஸ் மாஜ் ஜாயதே பிரானோ மனஸ் ஸர்வ இந்த்ரியாணி ச -என்று
பிராணனையும் இந்திரியங்களை வேறாகச்
சொல்லுகையாலும்
வை லக்ஷண்யாச் ச–இந்திரியங்கள் லயம் அடைந்த பிறகும் பிராண வ்யாபாரத்தைக் காண்கையாலே
இவற்றின் இடையே வேறுபாடு இருப்பதாலும் என்றபடி

இத்தாலும் ஸ்ரேஷ்ட ப்ராணனைத் தவிர்த்த ஏனைய சஷு ராதிகளே இந்த்ரியங்கள் என்று ஸித்தம் –

———–

எட்டாம் அதிகரணம் –ஸம்ஞா மூர்த்தி க்லுப்த் யதி கரணம்

வ்யத் அதிகரணம் தொடங்கி இது வரை -14- அதிகரணங்களாலே
பூத இந்திரியாதிகளின் சமஷ்டி ஸ்ருஷ்டியை நிரூபித்து
இவ்வதி கரணத்திலே
தேவ மனுஷ்யாதி வ்யஷ்டி ஸ்ருஷ்டியை இங்கு நிரூபிக்கின்றார் என்று சங்கதி

ஸூத்ரம் -281–ஸம்ஞா மூர்த்தி க்லுப்திஸ் து த்ரி வ்ருத் குர்வத உபதேசாத் -2-4-17-

பிரபஞ்ச ஸ்ருஷ்டியை சதுர்முகன் செய்கிறானா
சதுர்முக சரீரக பரமாத்மா செய்கிறானா
என்ற ஸம்சயத்தில்
அநேந ஜீவேந ஆத்ம நா அனு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி -என்று
ஜீவனைத் த்வாரமாகக் கொண்டு நாம ரூப வியாகரணம் சொல்லுகையாலே
சதுர் முகனே வ்யஷ்டி ஸ்ருஷ்டியை செய்பவன் என்று பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
த்ரி வ்ருத் குர்வத உபதேசாத் –
நாம ரூப வ்யாகரவாணி தாஸாம் த்ரி வ்ருதம்
த்ரி வ்ருதம் ஏகை காம் கரவாணி -என்று த்ரி வ்ருத கரணம் பண்ணுபவனுக்கே நாம ரூப வியாகரணம் உபதேசிக்கையாலே
த்ரி வ்ருத் க்ருதங்களான தேஜோ அப்பு அன்னங்களால் உத் பன்னமான அண்டத்தில் உள்ள சதுர்முகன்
அந்த த்ரி வ்ருத் கரணத்தின் கர்த்தா ஆக மாட்டான்
த்ரி வ்ருத் கரணமும் வ்யஷ்டி ஸ்ருஷ்டியும் பரம புருஷனால் தான் செய்யப் பட்டன என்றாலே
வ்யாகரவாணி என்ற உத்தம புருஷனும் -தன்மை ஒருமை வினை முற்றும் -பொருந்தும்
ஜீவேந ஆத்ம நா என்ற சாமா நாதி கரண்யமும் -விசேஷண விசேஷ்ய பாவமும் முக்கியப் பொருளாகும்
ஜீவேந ஆத்ம நா–ஜீவ சரீரகனான என்னால் என்றபடி–

————-

ஆமாம் அன்ன மசிதம் த்ரேதா விதீயதே என்று தொடங்கி
சதுர்முகன் படைத்த அன்னாதிகளிலும் த்ரி வ்ருத் கரண பிரகாரம் உபதேசிக்கப் படுகிறதே
ஆகையால் அவனும் த்ரி வ்ருத் கரணம் செய்யச் சக்தன் தானே என்ற சங்கையைப் பரிஹரிக்கிறார்

ஸூத்ரம் –282–மாம் ஸாதி பவ்மம் யதா ஸப்தம் இதர யோச்ச 2-4-18–

மாம் ஸாதி பவ்மம் -மாம்சமும் மனமும் பவ்மம்-பூமி சம்பந்தம் உள்ளவை
அவை ஆப்யமோ தைஜஸமோ அல்ல
யதா ஸப்தம் -ஆப -பீதா தேஜோ அஸிதம் -என்று ஸ்ருதி சொன்னபடியே
இதர யோச்ச-அன்னம் மசிதம் என்ற பிரதம பர்யாயம் தவிர்த்த
ஆப -பீதா தேஜோ அஸிதம் -என்ற இரண்டு பர்யாயங்களிலும் மூத்ர பிராணங்களுக்கு ஆப்யத்வமும்
அஸ்தி மஜ்ஜைகளுக்கு தைஜஸத்வமும் உபதேசிக்கப் படுகின்றன
இதன் பொருளாவது

தாஸாம் த்ரி வ்ருதம் என்று அண்ட ஸ்ருஷ்டிக்கு என்று குறிப்பிடப்பட்ட த்ரி வ்ருத் கரணம்
அன்ன மசிதம் த்ரேதா விதீ யதே -என்பதால் விதிக்கப்பட வில்லை
ஆனால் அண்டத்துக்குள் இருக்கும் ஸ்வேதகேது எளிதில் புரிந்து கொள்ள மனிதனால் உட் கொள்ளப்படும்
அன்னம் ஜலம் முதலியவற்றில் மூன்று வகைப்பிரிவு கூறப்பட்டது
தஸ்ய யஸ் ஸ்தவிஷ்டோ பாக தத் புரீ ஷம் யோ மத்யம் தன் மாம்ஸம் யோ அ ணிஷ்ட தன் மன –என்று
மாம்சமும் புரீ ஷமும் மனஸ்ஸும் போல் பவ்மம் என்று உபதேசிக்கப் படுகிறது
ஏன் எனில்
அன்ன மசிதம் த்ரேதா விதீ யதே–என்று தொடக்கத்தாலும்
அன்ன மயம் ஹி சோம்ய மனஸ் –என்று வாக்ய சேஷத்தாலும் என்றபடி

தேஜோ ஆபன்னங்களுக்குத் த்ரி வ்ருத் கரண பிரகாரம் இதில் சொல்லப் படுகிறது எனில்
மாம்சமும் மனஸ்ஸும் பவ்மமான புரீ ஷத்தைக் காட்டில் அணீ யஸ்ஸாகையாலே
ஆப்யத்வமும் தைஜஸத்வமும் ப்ரஸக்தமாகும்
அவ்வாறே ஆப பீத தேஜோ உசிதம் என்ற இரு பர்யாயங்களிலும்
லோஹிதம் மூத்ரம் பிராணன் இம் மூன்றுக்கும் ஆப்யத்வமும்

தேஜஸ் பர்யாயத்தில் அஸ்தி மஜ்ஜை வாக்கு இவை மூன்றுக்கும் தைஜஸத்வமும் சொல்லப்படுகிறது
ஏன் எனில்
பீதா என்று தொடங்குவதாலும் ஆபோ மய ப்ராண என்ற வாக்ய சேஷத்தாலும்
அப்படியே தேஜோ உசிதம் என்ற தொடக்கத்தாலும்
தேஜோ மயீ வாக் என்ற வாக்ய சேஷத்தாலும்
என்றபடி

இப்படி இல்லாமல் த்ரி வ்ருத் கரணத்தை உபதேசிக்கிறது என்றால் மூத்ரம் ஸ்தவிஷ்டமாகையாலே பவ்மம் ஆகிவிடும்
பிராணனும் அணீ யஸ் யாதலின் தைஜஸம் ஆகி விடும்
தேஜோ அஸிதம் என்ற மூன்று பர்யாயத்தாலும் அஸ்தி -பவ்மமாயும் மஜ்ஜை ஆப்யமாகவும் ஆகும்
உபக்ரம வாக்ய சேஷங்களுக்கு விரோதம் வருமாதலின் முன்பே த்ரி வ்ருத் க்ருதமான அன்னாதிகளுக்கு
ஜாட ராக்னி யாலே மூன்று விதமாகப் பரிணாமம் உபதேசிக்கப் படுகிறது

—————-

முன்பே த்ரி வ்ருத்தமானால் வெறும் அன்னம் முதலிய சொற்களால் எப்படி வழங்கலாம்
என்பதற்கு விடை தருகிறார்

ஸூத்ரம் –283-வைசேஷ்யாத் து தத் வாத தத் வாத –2-4-19–

து சப்தம் சங்கையை நிவர்த்திப்பதாம்
வைசேஷ்யம்–விசேஷ பாவ -ப்ருத்வீ ஜலாதிகள் முன்னரே த்ரி வருத் க்ருத்யங்கள் ஆயினும்
பிருத்வீயில் தன் அம்சம் பாதியும் ஜல தேஜோ அம்சங்கள் கால் காலும் உள்ளது என்பது போலே
அந்த அ ந்த பூதத்தில் விசேஷமானது தன் பாகம் ஆதலாலும் அன்னம் அப்பு தேஜஸ் என்கிற வ்யவஹாரம் ஏற்பட்டது

தத் வாத தத் வாத -இரு முறை கூறி அத்யாய முடிவைக் காட்டுகிறது

இங்கு ஸ்வாமி தேசிகன்
அநேந ஜீவேந ஆத்மனா அனு ப்ரவேஸ்ய-என்ற ஸ்ருதியும்
அந்தராத்மா வேறு என்றும்
மற்றவன் சரீரம் என்றும் பேதத்தைக் ஊறி இருப்பதால்
ஜீவனுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஐக்யத்தைக் கூறவில்லை
ஆகையால் எம்பெருமான் சேதன அசேதன சரீர விசிஷ்ட ஸ்வ பாவனாய் அனு ப்ரவேசத்திலும் கர்த்தா ஆகிறான்
அனு ப்ரவேசத்தில் கர்த்தா பின்னர் ஆவதால் த்வா ப்ரத்யயம் ஜீவனுக்கு கர்த்ருத்வத்தைக் காட்டாது என்று அருளினார்
ஒருவன் அனு பிரவேசம் செய்வதாயும்
மற்றவன் வியாகரணம் செய்வதாயும்
கர்த்தா வேறான -சமான கர்த்ருகத்வம் இல்லாமையாலே
த்வா ப்ரத்யயம் வாராது என்பதாகும் –

————-

இப்பாதத்தில் எட்டு அதிகரணங்களால் கூறப்பட்ட கருத்துக்கள்

1-பிராண அதிகரணத்தில் இந்திரியங்களின் உத்பத்தியும்
2-ஸப்த கத் யதிகரணத்தில் அவற்றுக்கு பதினோரு எண்ணிக்கையும்
3-பிராணஅணவ-அதிகரணத்தில் -அவற்றின் பரிமாணமும்
4-வாயு க்ரியா அதிகரணத்தில் பிராண வாயு ஸ்வரூபமும்
5-அணுச்ச அதிகரணத்தில் -பிராணனின் ஸூஷ்மத்வமும்
6-ஜ்யோதிராத் அதிகரணம் –அக்னி தேவதைகளின் வாக் யாதி அதிஷ்டானத்தில் பகவத் பாரதந்தர்யத்வமும்
7-த இந்த்ரிய அதிகரணம் -ப்ராணனுக்கு அதீந்த்ரத்வமும்
8-ஸம்ஞா மூர்த்தி க்லுப்த் யதி கரணம் -தன் நாபியில் தோன்றிய சதுர்முக சரீரகனாய் ஆத்யனாய்
பஞ்சீ கரண கர்த்தாவான பரம புருஷனிடம் சித் அசித் என்னும் வ்யஷ்டி நாம ரூப உத்பத்தியும்
என்பவை எட்டு அதிகரணங்களால் விளக்கப்பட்டன –

————–—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ அமலனாதி பிரானும் –ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதியும்–

October 10, 2021

அமலனாதி பிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே –1–

இப் பதங்களில் அடைவே ஆழ்வார் அனுபவித்த படி-
1-மோக்ஷ பிரதத்வம் -சம்சார நிவர்த்தக காஷ்டை -அமலன்
2-ஜகத் காரணத்வ காஷ்டை-ஆதி
3-ஜகத் சரண்யத்வ காஷ்டை-ஆதி
4-சர்வ உபகாரத்வ காஷ்டை-பிரான்
5-கிருபா விசேஷத்வ காஷ்டை-அடியார்க்கு ஆட்படுத்த
6-ஸ்வாதந்தர்ய காஷ்டை-என்னை ஆட்படுத்த
7-நித்ய நிர்தோஷத்வ காஷ்டை-விமலன்
8-நித்ய ஸூரி நிர்வாஹத்வ -திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டா ஸ்வாமித்வ காஷ்டை-விண்ணவர் கோன்
9-ஸுலப்ய காஷ்டை-வேங்கடவன்
10-ஸுசீல்ய காஷ்டை-நிமலன்
11-வாத்சல்ய காஷ்டை-நின்மலன்
12-கைங்கர்ய சாதன விசேஷத்வ ப்ராப்ய காஷ்டை-நீதி வானவன்
13-சர்வ ஸ்வாமித்வ ஆஸ்ரித பக்ஷபாத காஷ்டை-அரங்கத்து அம்மான்
14-திருவடிகள் பாவானத்வ காஷ்டை-திருப் பாதம்
15-திருவடிகள் போக்யத்வ காஷ்டை- கமல பாதம்
16-அயத்ன -அநாயாசேந போக்யத்வ காஷ்டை-வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றவே

—————-

ஆசார்ய அபிமானமே உத்தாரகம் .

ஸ்ரீயப்பதியாகிய எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனிடத்தில் நாம் கொள்ளும் அடிமைத்திறம்
முதல் பருவத்தின் நிலை, பிரதமபர்வ நிலை என்றும், ஆசாரியர் திறத்தில் கொண்ட
கடைப்பருவத்தின் நிலை சரமபர்வை நிஷ்டை என்று கூறப்படும்.

இரத்தினத்தின் சிறப்பை உணர உணர, அதனைக் கொடுத்த வள்ளலிடம் மதிப்பு உயர்வது போல,
எம்பெருமானுடைய பெருமையை உணர, உணர,
அவனுக்கு நம்மை ஆளாக்கின ஆசாரியன் திறந்து மதிப்பு ஏறி, அவனுக்கு ஆட்படுதல் இயல்பு.

நிர்ஹேதுமுகமாக, எம்பெருமான், மாதவனால் மயர்வற மதினலம் அருளப்பட்ட ஆழ்வார்கள் அருளிச்செய்த
திவ்யப்பிரபந்தங்கள் எம்பெருமானுடைய புகழைக் கொண்டவைகளாக இருப்பினும்
அவற்றின் சாரமான திரண்ட பொருள் “சரமபர்வ நிஷ்டை என்பதேயாகும்.
அதாவது ஆச்சாரியர் திறத்தில் கொண்ட அடிமைத்திறமேயாகும் .
“ மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சினுள் நிறுத்தினான்”- —
தேவுமற்றறியன் என்று மதுர கவிகள் அருளிச் செய்ததும்,
நின் திருவெட்டெழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை (பெரிய திருமொழி 8.10.3) என்று
திருமங்கையாழ்வார் அருளிச்செய்ததும் இவ்விடம் நோக்கத்தக்கது.

ஆசார்ய அபிமான நிஷ்டன் பகவானை அறவே விட்டவனாக மாட்டான்.
ஆசார்யானது வழிபாட்டிலேயே, எம்பெருமானும் வழிபட்டவன் ஆகின்றான்.
இதை அறுதியிட்டே எம்பெருமானாகிய இராமானுஜரை வழிபட்டனர் முன்னோர்கள் .
இராமானுஜ நூற்றாந்தாதியின் “இருப்பிடம் வைகுந்தம் “ எனும் 106 வைத்து பாசுரம்
இதை மிக அழகாக உணர்த்துகிறது .
இத்தகைய அரிய இராமானுஜ நூற்றந்தாதி,
‘ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்’ என்ற கருத்தினை அழகாக உணர்த்துகிறது.

ஆக, எம்பெருமானாரை பற்றுவதே பிரபத்தி.
“ ராமானுஜ “ எனும் சதுரா க்ஷரியே திருமந்திரம்.
அவரது திருவடிகளிலே பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தம், என்று
நடாதூரம்மாள் அருளிச் செய்தது, இவ்விடம் நோக்கத் தக்கது.
எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருப்பதே நமக்கு கிட்டிய பெரும் பேறு.

மெய்யான தவம் சரணாகதி. அத்தையுடையவர் எம்பெருமானார்.
தம்மைச் சார்ந்தவர்கள் அனைவருடைய பாபங்களை பொறுத்தருளுமாறு பெருமாளிடம் சரணாகதி செய்து வரம் பெற்றுள்ளமையால்,
அத்தகைய வல்லமை அவருக்கு வந்தது. அவர் செய்த பிரபத்தியினாலேயே நாம் அனைவரும் அவர் சம்பத்தை முன்னிட்டு
பிரபன்னர்களாகி வினையினின்றும் விடுபடுகின்றோம் .
பிரபன்ன ஜனங்களாகிய நம் அனைவருக்கும் அவரே கூடஸ்தர் என்று நம்மால் அவர் போற்றப்படுகிறார்.
நம் கூடஸ்தர் நமக்கு வைத்திருக்கும் சொத்து சரணாகதி . அதுவே நமக்கு உஜ்ஜீவனம்.

எவனொருவன் புத்தி கெட்டவனாய் , காமத்தினால் பீடிக்கப்பட்டவனாய் இருப்பினும்,
“ ராமனுஜாய நமஹ என்னும் சொல்லை மட்டும் அடிக்கடி சொல்லி புகுந்தால்,
பகவானைக் சார்ந்தவர்களான யோகியர், எந்த மோஷத்தைப் பெறுவதற்காக ஒதுகின்றனரோ ,
அந்த மோக்ஷத்தை அடைகிறான்.–

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறனடி பணிந்து உய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த விராமானுசன் சரணார விந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -1 –

பூமன்னு மாது ;; பெரிய பிராட்டி.
பொருந்திய மார்பன் ;; பெரிய பெருமாள்
புகழ் மலிந்த பா ;; திருவாய்மொழி
பாமன்னு மாறன் ; வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன், நம்மாழ்வார்.
மாறன் அடி பணிந்து உய்ந்தவன் .’ பகவத் ராமானுஜர்.
மேற்படி ஐந்தும் பஞ்சாம்ருதம் போன்று திருவரங்கத்து அமுதனாரால்
இராமானுஜ நூற்றந்தாதியில் முதல் பாசுரமாக விளக்கப்பட்டுள்ளது .

எம்பெருமானுக்கே உரியவன் நான் என்பது தத்வ ஞானம். எனக்கெற்புடைய வழி,
சித்தோபாயமான எம்பெருமானே என்னும் உணர்வு , ஹித ஞானம்.
அத்தகைய வழியால் பெறப்படும் பேறு, அனுபவித்தற்குரிய கல்யான குணங்களையுடைய எம்பெருமானே என்று அறிந்து
உணர்வு அடையும் ஞானம் ‘புருஷார்த்தம் ஆகும்.
இவ்வாறு தத்வ, ஹித, புருஷார்த்த ஞானம் முதிர்ந்த நிலையில், இம்மூன்றும் ஆழ்வாரே என்று உணர்ந்தவர் எம்பெருமானார்.
அவர் திருவடிகளே அடையவேண்டியதே நமக்கு ப்ராப்யம் ஆகும்.

கள்ளார் பொழில் தென் அரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரான் அடிக்கீழ்
விள்ளாத வன்பன் இராமானுசன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு ஓன்று அறியேன் எனக்குற்ற பேர் இயல்வே – 2-

பெரிய பெருமாளாம், ஸ்ரீ ரங்கநாதனுடைய பாதாரவிந்தங்களிலே சரணாகதி பண்ணுவதற்கு இட்டுப்பிறந்த மனுஷ்ய பிறவியைப் பற்றியும்,
அவன் திருவடிகளில் நெஞ்சு கொள்ளாத மனிதரை விட்டு நீங்கி, குறையலூர் பிரானாகிய திருமங்கையாழ்வாரிடம், அடிபணிந்த இராமானுஜரின்
சீல குணத்தையே தம் நெஞ்சு ஆட்கொண்டதைக் கூறுகிறார்.
அத்தகைய செயலுக்கு தம் நெஞ்சுக்கு அடிபணிந்ததாக சொல்கிறார் இரண்டாம் பாசுரத்தில்.

பேரியல் நெஞ்சே அடி பணிந்தேன் உன்னைப் பேய்ப் பிறவிப்
பூரியரோடு உள்ள சுற்றம் புலத்திப் பொருவரும் சீர்
ஆரியன் செம்மை இராமானுசன் முனிக்கு அன்பு செய்யும்
சீரிய பேறு உடையார் அடிக் கீழ் என்னைச் சேர்ததற்கே -3-

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி மருள் சுரந்த
முன்னைப் பழ வினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என்
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதை வில்லையே -4 –

எம்பெருமானைப் பற்றுதல் ஞானத்தின் முதிர்ந்த நிலை.
அவ்வளவல்லாது எம்பெருமானார் அடியார்களவும் பற்றுதல் ஞானத்தின் முதிர்ச்சிக்கு எல்லை நிலமாகும்.
அப்படியான உயர்ந்த நிலையில் தம்மை வைத்துள்ளார் எம்பெருமானார் என்று அமுதனார் வியக்கிறார் நான்காம் பாசுரத்தில்.

எனக்கு உற்ற செல்வம் இராமானுசன் என்று இசையகில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர்
தனக்குற்ற அன்பர் அவன் திரு நாமங்கள் சாற்றும் என் பா
இனக்குற்றம் காணகில்லார் பத்தி ஏய்ந்த இயல்விது என்றே -5 –

அறிவிலா மாந்தர் உலகில் காணும் செல்வத்தை யன்றி மற்றொன்றைச் செல்வமாக கொள்ளார்.
ஒருக்கால் மனக் குற்றம் சிறிது மாறி சாஸ்திரத்தின் பொருளாகிய ஸர்வேஸ்வரனைச் செல்வமாக ஏற்றுக் கொண்டாலும்,
சாஸ்திரத்தின் உட்பொருளாகிய ‘ஆசார்யனை செல்வமாக இசையவே மாட்டார்கள்.
காரணம் அவர்கள் பகவத் ப்ரசாதத்தால் மனக் குற்றம் நீங்கப்பெறாமையே.
புலமை மற்றும் போதாது. பகவானுடைய அனுக்ரஹமும் வேண்டும், சாஸ்திரத்தின் உட்பொருள் அறிவதற்கு.
அதை உணர்ந்த அமுதனார் , எனக்குற்ற செல்வம் ராமானுஜர் என்கிறார்.

இயலும் பொருளும் இசையத் தொடுத்து ஈன் கவிகள் அன்பால்
மயல் கொண்டு வாழ்த்தும் இராமானுசனை மதியின்மையால்
பயிலும் கவிகளில் பக்தி இல்லாத வென்பாவி நெஞ்சால்
முயல்கின்றனன் அவன் தன் பெரும்கீர்த்து மொழிந்திடவே – 6 –

மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம் கூரத் ஆழ்வான் சரண் கூடிய பின்
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி எல்லா
வழியைக் கடத்தல் எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே -7-

வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செம்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்து அன்று எரித்த திரு விளக்கைத் தன் திரு உள்ளத்தே
யிருத்தும் பரமன் இராமானுசன் எம் இறையவனே -8 –

முழுமை வாய்ந்த ஆசார்யர் எம்பெருமானாரே. ஆதலின் அவரே வேதத்தின் உட்பொருள்.
அவரைப்பற்றி இருத்தலே வேத மார்கம்.
மற்றவர்களையும் அங்ஙனம் பற்றி நிற்கச் செய்வதே, வேதமார்க்கத்தை பிரதிஷ்டாபனம் செய்தல்.
ஆகவே, “ஸ்ரீமத் பிரதிஷ்டாபனச்சார்யார் : என்னும் விருது எம்பெருமானாரையே சாரும்.
அத்தகைய பெருங்குணம் வாய்ந்த இராமானுஜர், தம்மை இப்புவியில் ஒரு பொருளாக ஆக்கியதையும்,
அவரையே தனக்குற்ற செல்வமாகக் கொண்டதையும் தெரிவிக்கிறார்.

இறைவனைக் காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்னும்
நிறை விளக்கு ஏற்றிய பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து
உறைய வைத்து ஆளும் இராமானுசன் புகழோதும் நல்லோர்
மறையினைக் காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே – 9-

பரபக்தியாவது பிரிவில் வருந்தும்படியான நிலையையும் கூடும் போது மகிழும்படியான நிலையையும் விளைவிப்பதான தனிப்பட்ட அன்பு.
பரஞானமானது அத்தகைய அன்பு முதிர்ந்த நிலையில் ஏற்படும் சாஷாத்காரம், நேரடியான தோற்றம்.
பரம பக்தியாவது ஷண காலமும் பிரிவை சஹிக்கமாட்டாது, அனுபவித்தே ஆகவேண்டிய முதிர்ந்த பேரன்பு.
இதுவே ஞானமேன்னும் நிறை விளக்கு என்கிறார் 9ம் பாசுரத்தில்.

மன்னிய பேரிருள் மாண்ட பின் கோவலுள் மா மலராள்
தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்
பொன்னடி போற்றும் இராமானுசற்கு அன்பு பூண்டவர் தாள்
சென்னியில் சூடும் திரு உடையார் என்றும் சீரியரே – 10-

திருக்கோவலூரில் பெரிய பிராட்டியுடன் கூட ஆயனார் எனும் எம்பெருமானைக் காட்டிக்கொடுத்த மூன்றாம் ஆழ்வார் பேயாழ்வார்.
அன்னவரது திருவடிகளை புகழும் இயல்பினரான எம்பெருமானாரிடத்தில் பக்தியுடையவர்களுடைய திருவடிகளைத்
தலைக்கு அணியாகக் கொள்ளும்படியான செல்வத்தை உடையவர்கள் யாரோ,
அவர்கள்தான் என்றைக்கும் நித்ய ஸ்ரீமான்கள் என்கிறார் அமுதனார், தனது பத்தாம் பாட்டில்..

சீரிய நான் மறைச் செம் பொருள் செம் தமிழால் அளித்த
பாரியிலும் புகழ்ப் பாண் பெருமாள் சரணாம் பதுமத்
தாரியல் சென்னி யிராமானுசன் தன்னைச் சார்ந்தவர் தம்
காரிய வண்மை என்னால் சொல்ல ஒண்ணாது இக்கடலிடத்தே – 11-

சிறப்பு வாய்ந்த நான்கு வகைப்பட்ட வேதங்கள் பரம்பொருளாகிய ஸ்வரூபம், ரூபம், குணம், விபூதி(ஐஸ்வர்யம்)
இவைகளை உள்ளபடியே விளங்க வைக்கின்றன. இதுவே வேதத்திற்கு உண்டான சீர்மை.
இதுவே சீரிய நான்மறை என்கிறார் அமுதனார்.
ஸ்வரூபம் என்பது பகவானுடைய திவ்யாத்ம தத்துவம்.
ரூபமாவது உடம்பானது.
குணமானது ஆத்ம தத்வத்தைப் பற்றி நிற்கும் ஞானம், சக்தி, கிருபை முதலிய பண்புகளும் ,
சுடருடம்பைப் பற்றி நிற்கும் அழகு, மென்மை , இளமை முதலியவைகளாகும்.
விபூதியாவது, நித்யவிபூதி என்றழைக்கப்படும் பரமபதமும், லீலாவிபூதி என்றழைக்கப்படும் இவ்வுலங்களும் இறைவனது சொத்தாகும்.
வேதத்தின் இவ்வரிய பொருளை திருப்பாணாழ்வார் “அமலனாதிபிரான் “ என்றும் பாசுரத்தில்,
அமலன், விமலன், நின்மலன்,நீதிவானவன் என்று பல சொற்களால் அருளிச் செய்ததைப் போற்றுகிறார் 11ம் பாசுரத்தில்..

இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப் போது
அடங்கும் இதயத்து இராமானுசன் அம் பொன் பாதம் என்னும்
கடம் கொண்டு இறைஞ்சும் திரு முனிவர்க்கு அன்றி காதல் செய்யாத்
திடம் கொண்ட ஞானியர்க்கே அடியேன் அன்பு செய்வதுவே —12-

ஆழ்வார் ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ என்ற கீர்த்தியை யுடைய திருமழிசை ஆழ்வாரின் திருக் கமலப் பதங்களையே
பற்றியிருக்கும் எம்பெருமானரின் தாள் பற்றி இருப்பவரின் திருப்பதங்களையே பற்றி இருப்பவர்களை ‘திரு முனிவர்’ என்கிறார்.
அத்தகைய ஞானம் கொண்டவற்கே தாம் அன்பு செய்வதாக அமுதனார் கூறுகிறார்.
அதாவது, எம்பெருமானாரின் அடியவர்க்கு அடியவர்களுக்கே அவர் அன்பு செய்ய விரும்புகிறார். (12)

செய்யும் பசும் துளவத் தொழில் மாலையும் செம் தமிழில்
பெய்யும் மறைத் தமிழ் மாலையும் பேராத சீர் ரங்கத்
தய்யன் கழல்க்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா
மெய்யன் இராமானுசன் சரணே கதி வேறு எனக்கே – 13-

காவேரியே விரஜையாறு. ஸ்ரீ ரங்க விமானமே ஸ்ரீ வைகுண்டம். ஸ்ரீ ரங்கநாதனே பரவாசுதேவன்.
ஆக, கண்ணனெதிரே தோன்றும் பரமபதமாகிய ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீ ரங்கநாதனுக்கு
திருத்துழாய் மாலையும், செந்தமிழ் பாக்களால் ஆன சொல் மாலையும் சமர்ப்பித்து வந்த தொண்டரடிப்பொடியாழ்வார்
திருவடிகளையே ஆச்ரயித்த ராமானுஜர் திருவடிகளே தமக்கு சரண் ஆகும் என்கிறார். (13)

கதிக்குப் பதறி வெம்கானமும் கல்லும் கடலும் எல்லாம்
கொதிக்க தவம் செய்யும் கொள்கை ஆற்றேன் கொல்லி காவகன் சொல்
பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமானுசனைச் சொர்விலனே -14 –

ஒரு மாலையில் இடமறிந்து ரத்னங்களைப் பதிப்பது போல ,
குலசேகராழ்வார் அருளிச்செய்த பெருமாள் திருமொழியில் சொற்கள் தக்கவாறு பதிக்கப்பட்டுள்ளன.
அத்தை மனத்தில் கொண்ட எம்பெருமானார் திருவடிகளை பற்றியவரது பாதங்களை தாம் பற்றுவதால்,
கானகத்திலும், மலையிலும், கடல்களிலும் தவம் செய்ய முற்பட வேண்டிய கட்டாயம் தமக்கு இல்லை என்கிறார் அமுதனார். (14 )

சோராத காதல் பெரும் சுழிப்பால் தொல்லை மாலை யொன்றும்
பாராதவனைப் பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள்
பேராத வுள்ளத்து இராமானுசன் தன் பிறங்கிய சீர்
சாரா மனிசரைச் சேரேன் எனக்கு என்ன தாழ்வு இனியே -15 –

எம்பெருமானின் அழகை மட்டும் கண்டு, அவனது ரஷிக்கும் ஆற்றலை காணாமையால் உண்டான அச்சத்தில்
விஷ்ணுசித்தர் என்னும் பெரியாழ்வார் சாதித்தது ‘பல்லாண்டு பல்லாண்டு என்று ‘. இது அஸ்தான பய சங்கை எனப்படும்.
அதாவது, பயமே ஏற்பட வேண்டாத இடத்தில், அன்பு மிகுதியால், என் பெருமானுக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ என்று பயப்படுதல்.
பரம பதத்தில் சாமவேத கோஷ்டி சப்தத்தைக் கண்டு , ஆதிசேஷன் எம்பெருமானுக்கு ஆபத்து வந்ததோ என அஞ்சி சீறுவதுபோல.
அப்படிப்பட்ட பெரியாழ்வாரின் பதம் பணிந்த ராமானுஜரின் பாதம் பணியாத அற்ப மனிதரை சேர மாட்டேன் என்கிறார். (15)

தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே
யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே – -16 –

ப்ரத்யக்ஷம், அனுமானம், சப்தம் என்ற பிரமானங்களில் சப்தப் பிரமானத்தில் அடங்கியது மறை எனப்படும் வேதம்.
அத்தகைய தாழ்வொன்றுமில்லாத வேதம் பிற்காலத்தில் தாழ்வு படுத்தப்பட்டது.
பாஹ்யர்களும் , குத்ருஷ்டிகளும் கலி புருஷனுடைய கையாட்கள்.
வேதம் நித்யமன்று என்று கூறி வேதத்தை ஒப்புகிக்கொள்ளாத புற மதத்தவர்கள் . இவர்கள் பாஹ்யர்கள் எனப்படுவர்.
அவ்வாறன்றி, வேதத்தைப் ப்ரமாணமாக ஒப்புக்கொண்டு உட்புகுந்தாலும், அதன் உண்மைப் பொருளை உணராது ,
தமக்குத் தோன்றிய வகையில் விளக்கமளிக்கும் மனிதர் குத்ருஷ்டிகள் எனப்படுவர்.
இவ்விரு திறத்தாரால் மாசு படுத்தப்பட்ட வேதத்தை ‘கலியும் கெடும் கண்டு கொண்மின்’ என்பதற்கிணங்க,
மறையைத் தாழ்வு நிலையினின்று ‘ஸ்ரீ பாஷ்யம் ‘ மூலமாக மிக உயர்ந்த நிலைக்கு அளித்தருளியவர் இராமானுஜர் .
ஆண்டாளின் அன்புக்கு பாத்திரமானவர். அவள் கிருபையால் வாழ்கின்ற வள்ளல் ‘திருப்பாவை ஜீயர் என அழைக்கப்படும் இராமானுஜர் .(16)

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ண மங்கை நின்றானைக் கலை பரவும்
தனியானைக் தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்
இனியானை எங்கள் இராமானுசனை வெந்து எய்தினரே -17 –

வேதமனைத்தும் தன் ஒருவனையே துதிக்கும் நோக்கமுடையவைகளாய் இருத்தல் பற்றி வந்த செருக்கால்,
ஒப்பற்ற மதம் பிடித்த யானையைப் போல் தோற்றமளிக்கிறான் ,
திருக்கண்ணமங்கை என்கிற திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் பத்தராவிப் பெருமாள்.
அவன் திருமங்கையாழ்வாரின் தமிழ்ப் புலமைக்கு அடியவனாகி, ஆவணி ரோஹிணியில் பெரியவாச்சான் பிள்ளையாக அவதரித்தான் .
திருமங்கையாழ்வாரும் கார்த்திகை கார்த்திகையில் நம்பிள்ளையாக அவதரித்து திராவிட வேதத்தின் பொருளை
ஆச்சார்ய ஸ்தானத்தில் இருந்து அருளிச்செய்ததாக கூறுவர் பூர்வர்.
அத்தகைய குறையல்பிரானடிக்கீழ் அன்புடைய இராமானுஜரிடம் அடிபணிந்தவர்கள் துயரங்கள் முந்தினும் வருந்தார்.
இன்பங்கள் மொய்த்திடினினும் சந்தோஷப்பட மாட்டார்கள். அவைகள் கர்ம பலன்களாக தாமே வந்து போகின்றது என்று அமைதியாக இருப்பர்,(17)

எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தை யுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறு துணையே – 18- –

கீதை அருளிச் செய்வதற்காகவே கண்ணன் அவதரித்தது போலே , திருவாய்மொழி அருளிச் செய்வதற்காகவே அவதரித்தவர் நம்மாழ்வார் .
‘நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளாய், ஆக, யானே பெரியவன் என்று
நம்மாழ்வார் தன்னைப் பெரியன் என்று கூறுகிறார், பெரிய திருவந்தாதி 75ம் பாசுரத்தில்.
அத்தகைய நம்மாழ்வாரையும் தன் உள்ளத்தே ஆசார்யனாய் கொண்ட மதுர கவிகளை ‘பெரியவர்” என்று கூறுகிறார் அமுதனார்.
எம்பெருமானை தம் உள்ளத்திலே வைத்துக்கொண்டு கொள்ளுதல் எல்லா ஆழ்வார்களுக்குமுண்டான முதல் நிலையாகும்.
ஆனால் ஆசார்யனையே முதலும் இறுதியுமாக வைத்துக்கொள்ளல் மதுரகவியாருக்கே உள்ள சீர்மையாக அமைந்தபடியால்
அவரே ‘பெரியவர்’ ஆகிறார். (18)

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆரமுதே – – 19-

எப்படி உன் சரீரம் உன் விருப்பத்திற்கேற்ப பயன்பட்டு , தனக்கொரு பயன் கருதாது உனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறதோ ,
அதுபோல உன் ஆத்மாவை தனக்கு சரீரமாகக் கொண்டுள்ள எம்பெருமானுக்கு,
நீயும் அவன் விருப்பப்படி பயன்பட்டு, உனக்கொரு பயன் கருதாது , அந்த எம்பெருமானுக்கு மகிழ்ச்சியை ஊட்டுதல் வேண்டும்
என்கிற ‘அனன்யார்ஹசேஷத்வ’ ஞானத்தை திருவாய்மொழி உணர்த்துகிறது.
நம்மாழ்வாருக்கு ‘திருமாலிருஞ்சோலை என்கிற 98 வது திருவாய்மொழி முடிய பர பக்தியும்,
99 வது திருவாய்மொழியான ‘சூழ் விசும்பும் பணிமுகில் ‘ பரஞானமும்
100 வது திருவாய்மொழியான ‘முனியே நான்முகனே’ பரம பக்தியும் எம்பெருமான் அருளால் விளங்கியதாக பெரியோர் கூறியுள்ளனர் .
அத்தகைய அரிய திருவாய்மொழி எனும் இந்த திவ்ய அமுதத்தை உலகத்திருக்கு தெரியப்படுத்திய
இராமானுஜரே எமக்கு ஆராவமுது என்கிறார் அமுதனார். (19)

ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திருவாய்
ஈரத் தமிழ் இன் இசை யுணர்ந்தோர்கட்கு இனியவர் தம்
சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால்
வாரிப் பருகும் இராமானுசன் என்தன் மா நிதியே – -20

நாதமுனிகளுக்கு ‘கண்ணினுந் சிறுத்தாம்பு ‘காட்டியவர் , மதுரகவிகள் வம்சத்திலுதித்த பராங்குச நம்பி என்பவர்.
அத்தைக் கொண்டு ‘ஆராவமுது ‘ ஆகிய நாலாயிர திவ்ய பிரபந்தகளையும் நமக்கு காட்டியவர் ஸ்ரீமத் நாதமுனிகள்.
அதுகொண்டே அருள் கொண்ட நாதமுனியை நெஞ்சால் வாரிப் பருகுகியவர் இராமானுஜர்.
அதுபற்றியே அவரை சீலங்கொண்ட நாதமுனிகள் என்கிறார் அமுதனார். (20)

நிதியைப் பொழியும் முகில் என்ன நீசர் தம் வாசல் பற்றித்
துதி கற்று உலகில் துவள் கின்றிலேன் இனித் தூய் நெறி சேர்
எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை அடியாம்
கதி பெற்றுடைய இராமானுசன் என்னைக் காத்தனனே – 21- –

தான் செய்வதாக நினையாமல்,’ பகவான் என்னைக் கொண்டு தன் பணியை தன் உகப்புக்காகச் செய்து கொள்கிறான்’
என்கிற நினைப்போடு, அதாவது, அஹங்காரக் கலப்பில்லாமல் செய்து கொள்வது ‘சாத்வீகத் தியாகம்’ என்று கூறுவர்.
அத்தகைய மேன்மையான குணம் கொண்டு வாழ்ந்து காட்டியவர் யமுனைத் துறைவன் எனும் ஆளவந்தார் –
அவரை இறைவனென்று போற்றுகிறார்.
அவரைப் பற்றி பற்றிய பின்பு, நான் நீசர்கள் வாசல் நின்று
அவர்களை ‘நிதியை பொழியும் முகிலென்று’ கூறமாட்டேன் என்கிறார். (21)

கார்த்திகையானும் கரி முகத்தானும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதிகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –

ஆழ்வார்களையும் ஆச்சார்யர்களையும் போற்றி பணிந்தவர் ராமானுஜர்.
என்றும் அவரை போற்றி பணிந்தவர் தாள்களிலே தாம் அடிபணிவதாக அருளிச்செய்த அமுதனார் 22ம் பாசுரத்தில்.
பாணாசுரனை அழித்த கண்ணனைக் கூறுகிறார்.
அந்த மாய கண்ணனை போற்றும் ரமானுஜனை தனது வைப்பு நிதி என்கிறார்.
“நேர் சரிந்தான், கொடிக் கொழி கொண்டான்” என்றபடி பாணாசுரனை அழித்த கண்ணபிரானின் ‘பரத்வம்’ சொல்லப்படுகிறது.

வைப்பாய வான் பொருள் என்று நல்லன்பர் மனத்தகத்தே
எப்போதும் வைக்கும் இராமானுசனை இரு நிலத்தில்
ஒப்பார் இலாத வுறுவினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து
முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இது அவன் மொய் புகழக்கே -23 –

எம்பெருமானார் திருவடிகளில் அந்நயப் ரயோஜனர்களாய் பக்தி பண்ணுபவர்கள்
கூரத்தாழ்வான் , முதலியாண்டான், எம்பார், பிள்ளையுறங்காவில்லிதாசர் , திருக்குருகைப்பிள்ளான் பிரான் போன்றவர்கள்.
அவர்கள், எம்பெருமானாரை ஆபத்து காலத்தில் உதவும் பொருட்டு சேமித்து வைக்கப்பட்டுள்ள மாநிதியைப் போல வைத்துள்ளனர் .
நல்லன்பர்கள் அங்ஙனம் மனத்தகத்தே வைத்த இராமானுஜன் என்னும் நிதியை
மகா பாபியான நான் வஞ்சித்து வைத்துக் கொள்வது இராமானுஜனுக்கு இழுக்கு உண்டாகாதோ என அமுதனார் அஞ்சுகிறார் . (23)

மொய்த்த வெம் தீ வினையால் பல்லுடல் தோறும் மூத்து அதனால்
எய்த்து ஒழிந்தேன் முன நாள்கள் எல்லாம் இன்று கண்டு உயர்ந்தேன்
பொய்த் தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்து அவிய
கைத்த மெய் ஞானத்து இராமானுசன் என்னும் கார் தன்னையே – 24- –

தேன் கூட்டிலே ஈக்கள் மொய்த்துக் கொண்டிருப்பதுபோலே, ஒரு ஜீவனின் ஆத்ம தத்வத்தை புண்ய பாபங்கள் எனும்
இரு தீய வினைகள் மொய்த்துக் கொண்டுள்ளன.
அனுபவித்ததாலோ, ப்ராயசித்தத்தினாலோ தொலைந்து ஒழியாதபடியுள்ள இந்த அருவினைகள்,
உடல்தோறும் மூத்து,துன்புற்று களைத்துப் போகின்றன .
நீசச் சமயங்ளை அழித்தொழித்து, மறைகளைக் காக்க அவதரித்த எம்பெருமானாரின் திருவடி சம்பந்தம் தமக்கு கிடைக்கப் பெற்று,
தாம் தீய வினைகளினின்று உயர்ந்தமையைக் கூறுகிறார். (24)

காரேய் கருணை இராமானுசா இக்கடல் இடத்தில்
ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான் வந்து நீ என்னை யுத்த பின் உன்
சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே -25 – –

தாமே வந்து தன்னை ஆட்கொண்டதால், எம்பெருமானாரது சௌலப்பியமும்,
தமது தாழ்மையையும் கருதாது ஆட்கொண்டமையால் அவரது சௌசீல்யமும்,
நிர்ஹேதுகமாய் கொண்டதால் ஸ்வாமித்யமும்,
கருணை இராமானுஜ என்றதால் கருபையும் , வாத்சல்யமும் எம்பெருமானாரிடம் தோன்றுகிறது.
இக்குணங்கள் தம் அல்லலைத் தீர்த்து , தித்திக்க வைக்கின்றன என்கிறார்.
அவைகளே தமக்கு தாரகமும் , போஷகமும், போக்யமும் ஆகின என்கிறார். (25)

திக்குற்ற கீர்த்தி இராமானுசனை என் செய்வினையாம்
மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர்
எக்குற்றவாளர் எது பிறப்பே எது இயல்வாக நின்றோர்
அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல்வே நம்மை ஆள் கொள்ளுமே –26- –

பிறப்பாலும், அறிவாலும், நடத்தையாலும் தனக்கு கீழ் பட்டவர்களாக பாகவதர்களை நினைப்பதும் அபசாரமாகும்.
அதுபோல, அவர்களுடைய பெருமைகளை நினையாதிருப்பதும் அபசாரமாகும்.
அதாவது அவர்கள் ஆசார்யனுக்கு சமானவர்கள் என்றும்,
தன்னிலும் , ஈஸ்வரனிலும் அதிகர் என்றும் நினையாதிருப்பதும் அபச்சாரமாக தலைக்கட்டும்
என்று ஸ்ரீ வசன பூஷணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
அவ்வாறே, எம்பெருமானாரைப் பற்றுவதற்கு முன் ஒருவரிடமுள்ள குறை, அறிவினாலோ, பிறப்பினாலோ, நடத்தையினாலோ
உண்டாயிருப்பினும் அதுவே அவரது நலமாகக் கொள்ளப்படும். இவை ஒரு தடையாக இருக்க மாட்டாது.(26)

கொள்ளக் குறைவற்று இலங்கிக் கொழுந்து விட்டு ஓங்கிய உன்
வள்ளல் தனத்தினால் வல் வினையேன் மனம் நீ புகுந்தாய்
வெள்ளைச் சுடர் விடுமுன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று
தள்ளுற்று இரங்கும் இராமானுச என் தனி நெஞ்சமே -27-

மாசு படிந்த தமது கீழ்மையை நோக்காது, எம்பெருமானாருடைய மேன்மையான குணத்தினால், மஹா பாபியான,
அருவருக்கத் தக்க குணங்களை யுடைய தன் மனஸ்ஸிலேயும் புகுந்தார்.
இது அவரது உயர்ந்த குணத்துக்கு இழுக்கு உண்டாகாதோ என அஞ்சுகிறார் 27ம் பாட்டில்.

நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள்
பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா
வஞ்சர்க்கு அரிய இராமானுசன் புகழ் அன்றி என் வாய்
கொஞ்சிப் பரவ கில்லாது என்ன வாழ்வின்று கூடியதே – -28 –

கம்சன் பால் சீற்றம் கொண்ட கண்ணனையும், நப்பின்னை பால் காதல் கொண்ட கண்ணனையும் நண்ணாதவர்கள் வஞ்சகர்களே.
கண்ணனுக்கு பரதந்திரனான நாம் , நம்மை ஸ்வதந்திரனாக நினைப்பது ஆத்ம அபஹாரம்.
அத்தகையவர்களுக்கு கிட்டமுடியாதவர் இராமானுஜர்.
பிரதம பருவம் என்கிற எம்பெருமானின் அடித் திறத்தையும் அறியாத நான் எதிர்பாராது,
சரம பர்வத்தின் எல்லை நிலமான ஆசார்யரைத் துதிக்கப் பெற்றேன்.
அத்தகைய ஆசார்யரின் குணங்களையொழிய என் வாக்கானது மற்றவரை மறந்தும் துதிக்க மாட்டாது.
இது எனக்கு நேர்ந்த ஆச்சர்யமான வாழ்வு என்கிறார். (28)

கூட்டும் விதி என்று கூடும் கொலோ தென் குருகைப் பிரான்
பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த இராமானுசன் புகழ் மெய் உணர்ந்தோர்
ஈட்டங்கள் தன்னை என்னாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே -29 –

திருவாய்மொழியை ஈன்று எடுத்த தாய் சடகோபன். அதனை வளர்த்து , அந்த வளர்ச்சியைக் கண்டு உய்த்தவர் இராமானுஜர்.
கண்ணனைப் பெற்றெடுத்த தேவகியை விட அவனை வளர்த்த யசோதையே இன்பம் அனைத்தும் பெற்றாள்.
அவ்வாறு திருவாய்மொழி என்னும் திராவிட வேதத்தை மறைகளைக் கொண்டு, தெளிவு படுத்திய இராமனுஜரை உள்ளபடி அறிந்திருப்பவர்கள் ,
கூரத்தாழ்வான், எம்பார், முதலியாண்டான் எழுநூறு சந்நியாசிகள், எழுபத்து நான்கு சிம்மாசனதிபதிகள்,
எண்ணற்ற ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆகியோர்.
அவர்களின் திறளான கூட்டங்களை கண்ணால் கண்டு களிக்க வேண்டும் என்கிறார். (29)

இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் எண்ணிறந்த
துன்பம் தரு நிரயம் பழ சூழில் என் தொல் உலகில்
மன் பல் உயிர் கட்கு இறையவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் இராமானுசன் என்னை ஆண்டனனே – -30 –

அனாதியான இவ்வுலகத்தில் எண்ணற்ற ஆத்மாக்களுக்கு சேஷியாக விளங்குபவன் எம்பெருமானே என்று
அருளிச் செய்த வள்ளல் எம்பெருமானார். அவர் என்னை இன்று அடிமைத்திறமாக கொண்டார்.
இனிமேல் எனக்கு இன்பத்தைத்தரும் பெரு வீடான பரமபதம் கிடைத்தால் என்ன ?
அல்லது துயரத்தைத் தரும் ஸம்ஸாரம் என்னும் நரகம் வாய்த்தால் தான் என்ன என்கிறார். (30)

ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலம் எல்லாம் மனமே
ஈண்டு பல் யோநிகள் தோற் உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே
காண்டகு தோள் அண்ணல் தென்னத்தியூரர் கழல் இணைக் கீழ்
பூண்ட அன்பாளன் இராமானுசனைப் பொருந்தினமே – 31-

ஆண்டுகள் நாள் திங்களாய், பலவகைப் பிறப்பிலும், இறப்பிலும் இருந்த பிறவிகள் எண்ணிக்கை யில்லை.
இப்படிப்பட்ட நாம், இப்பிறப்பிலே எம்பெருமானாருடைய நிர்ஹேதுக க்ருபையினாலே அவரை அடைய பெற்றோம்.
அழகிய திருத்தோள்களை உடைய ஸ்வாமியாய், அழகிய திரு அத்தியூரில் எழுந்தருளியுள்ள,
பேரருளாளன், தேவாதி ராஜனின் திருவடிகளில் பக்தி செலுத்துபவருமான எம்பெருமானாரை சேர்ந்து
இப்போது நிலைக்கப் பெற்றோம், என்று களிப்புறுகிறார். (31)

பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த
அரும் தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே – 32-

கலி தோஷத்தினால் துன்புற்ற இந்த ஞாலத்தியுள்ளோரை தன்னுடைய வள்ளல் தனத்தினால் அவதரித்து,
கை தூக்கி விட்டு காப்பற்றியவரும் சரணாகதி என்கிற அரிய தபஸ்ஸை அனுஷ்டிப்பவருமான எம்பெருமானாரையே சேர்பவர்களுக்கு,
தங்கள் தன்மைக் குண்டான மதிப்பும் , பொறுமையும், சாமர்த்தியமும், கீர்த்தியும், நல்ல விலக்ஷணமான அறிவும்,
பக்திச் செல்வமும் தாமாகவே வந்து அடையும். (32)

அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் கை யாழி என்னும்
படையோடு நாந்தகமும் படர் தாண்டும் ஒண் சார்ங்கமும் வில்லும்
படையார் புரி சங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு என்று
இடையே இராமானுச முனியாயின விந் நிலத்தே -33 –

மனம் – சக்கரம், புத்தி – கதை, ஞானம் – நந்தகம், ஸாத்வீக அஹங்காரம்-வில், தாமஸ அஹங்காரம் – சங்கு.
ஆக இவைகள் எம்பெருமானுக்கு ஆயுதங்களாகவும், ஆபரணங்களாகவும் உள்ளன.
பிராட்டியினுடைய சன்னதியில் இந்த திவ்யாயுதங்கள் அழிப்பவனாகவில்லை. காப்பவைகளாகவே உள்ளன.
இவள் இல்லாதபோது ஆயுதங்கள் இராவணனை அழித்தன.
அவள் உள்ளபோது ப்ரம்மாஸ்திரமும் கூட காகத்தை அழிக்கவில்லை. காகம் காக்கப் பெற்றது.
நித்ய ஸூரிகளான இந்த பஞ்சாயுதங்கள், ராமானுஜர் ஆதிசேஷனுடைய ஸாஷாத் அவதாரம் ஆகையினாலே,
அவரது ஆவேச அவதாரமாக வந்து அவதரித்தன இப்பூவுலகில் என்கிறார் 33ம் பாட்டில்.

நிலத்தை செறுத்து உண்ணும் நீசக் கலியை நினைப்பரிய
பலத்தைச் செறுத்தும் பிறங்கிய தில்லை என் பெய் வினைதென்
புலத்தில் பொறித்த வப்புத்தகச் சும்மை பொறுக்கிய பின்
நலத்தைப் பெறுத்தது இராமானுசன் தன நயப் புகழே -34 –

உலகத்திலுள்ளோரை நிலை குலையச் செய்யும் நீசக் கலியை அழித்தத்தினால் எம்பெருமானார் புகழ் ப்ரகாசிக்க வில்லை.
எப்போது அவர் புகழ் பிரகாசித்தது எனில், தாம் எண்ணற்ற பாவங்களை செய்து, அவை சித்திர குப்தனால் புஸ்தங்களாக எழுதப்பட்டு,
அவைகளை ராமானுஜர் , தம்மீது, காரணமில்லாக் கருணை கொண்டு அழித்தபின்னரே, ஏற்பட்டது என்கிறார். (34)

நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தை
புயலே எனக் கவி போற்றி செய்யேன் பொன்னரங்கம் என்னில்
மயலே பெருகும் இராமானுசன் மன்னு மா மலர்த் தாள்
அயரேன் அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே -35 –

தீராத வினைகள் ஏற்பட மூன்று வழியுண்டு.
முதலாவதாக, எம்பெருமான், ஸ்ரீமன் நாராயணனைத் தவிர மற்ற தெய்வங்களைக் கொள்ளுதல்.
‘ஆதிப்பிரான் நிற்க மற்றதெய்வம் நாடுதிறே ‘ என்றபடி.
இரண்டாவது, சேவிக்கத் தகாத மனிதர்களை வேண்டி பொருள் பெற அவர்களை போற்றுதல்.
மூன்றாவது, அழியக்கூடிய சப்தாதி விஷயங்களில் ஈடுபடுதல்.
இவைகள் அருவினை எனப்படும்.
இராமானுஜனை அடைந்த என்னை இந்த அருவினைகள் என்ன செய்யும் என்று கேட்கிறார்.(35)

அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திட தானும் அவ் ஒண் பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமானுசன் தன் படி இதுவே -36 –

அர்ஜுனனை வ்யாஜ்யமாகக் கொண்டு பகவான் கிருஷ்ணன் பெருங்கடலிடையே ரத்தினங்கள் மறைந்து கிடப்பது போல,
வேதமாகிற சமுத்திரத்தில் மறைந்து கிடந்த விலக்ஷணமான வேதார்த்தங்களை ஆராய்ந்து கண்டு அளித்தார், ஸ்ரீமத் பகவத் கீதை மூலமாக.
இப்படி அளித்த பின்னும் உலகத்தவர் தமது அறியாமையினால் இடரின் கண் வீழ்ந்தனர் .
இவர்கள் படும் துன்பத்தை சஹியாதே, எம்பெருமானார் ‘கீதா பாஷ்யம்’ என்ற நூலின் மூலமாக
அரும் பொருளை இலகுவாக அறியும்படி அருளிச் செய்தார் (36).

படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
குடி கொண்ட கோயிலில் இராமானுசன் குணம் கூறும்
கடி கொண்ட மா மலர்த்தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே – 37-

ஆக்கி யடிமை நிலைப்பித்தனை என்னை யின்றவமே
போக்கிப் புறத்திட்ட தென் பொருளா முன்பு புண்ணியர் தம்
வாக்கில் பிரியா விராமானுச நின்னருளின் வண்ணம்
நோக்கில் தெரிவரிதால் உரையாய் இந்த நுண் பொருளே – 38-

இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் எபெருமானாருடைய நெஞ்சில் ஆழமாக புகுந்து தேங்கிக் கொண்டது.
‘ அஹம் சர்வம் கரிஷ்யாமி ‘என்று சகலவித கைங்கர்யங்களையும் பண்ணி இளைய பெருமாள் இளையாழ்வாராக அவதரித்தவரன்றோ?,
இராமானுஜர். அத்தகைய எம்பெருமானாரின் பாதாரவிந்தகளில் மனம் பொருந்தி, அன்பு கணிந்திருக்கும் மஹானுபவர்கள்
தம்மை எம்பெருமானார்க்கு ஆட்படுத்தினார்கள் என்கிறார் அமுதனார்.
ஆக, தானும் பற்றவில்லை. அவரும் சுவீகரிக்கவில்லை. உடையவருடைய சம்பந்த, சம்பந்திகளே, கொண்டு சேர்த்தார்கள்.
அப்படி இன்று நிலைப்பித்த என்னை, இத்தனை காலம் புற விஷயங்களிலே தள்ளி வைத்தது எக்காரணம் பற்றி என்று
ஆதங்கத்துடன் வினவுகிறார் பின் வரும் இரண்டு பாசுரங்களிலே.(37/38)

பொருளும் புதல்வரும் பூமியும் பூம் குழலாரும் என்றே
மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே மற்றுளார் தரமோ
இருள் கொண்ட வெந்துயர் மாற்றித் தன்னீறிலபெரும் புகழே
தெருளும் தெருள் தந்து இராமானுசன் செய்யும் சேமங்களே -39 –

‘தாயே தந்தையே என்றும் தாரமே கிளைமக்களே’ என்றும் இவற்றையே பெரும் பேறாக எண்ணி,
இதற்கு மேல் மேம்பட்டது வேறு ஒன்று உண்டு என்னும் தெளிவற்ற ஞானமின்றி திரிந்த நமக்கு,
அஞ்ஞானமாகிய இருளை நீக்கியவர் இராமானுஜர்.
அதுமட்டும் இன்றி தம்முடைய கணக்கற்ற கல்யாண குணங்களையே சிந்திக்கத் தக்கதான ஞானத்தையும் அருளினார்.
இவை இராமானுஜர் செய்த ஷேமங்களே என்கிறார்.(39)

சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
யாமது காமம் அறம் பொருள் வீடி தற்கென்று உரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே -40 – –

அறம் , பொருள்,வீடு, காமம், என்கிற நான்கு புருஷார்த்தங்களில்
‘ கண்ணனுக்கே ஆனது காமம்’ என்பது ராமானுஜ முனியின் சித்தாந்தம்.
காமமே முக்கிய புருஷார்த்தம் என்பது அவர் தெளிவு.
அக் காமம் தனக்கு இன்பமாயிருக்கும் என்றோ, கண்ணனுக்கு இன்பமாயிருக்கும் என்றோ, எண்ணலாகாது.
கண்ணனுக்கே இன்பமாயிருக்க வேண்டும்.
அவன் இன்புறுவதைக் காண்பதைத் தவிர, தனக்கு வேறு புருஷார்த்தம் இல்லை என்று கருதிச் செலுத்தும் காமமே பரம புருஷார்த்தம்.
எம்பெருமானாரும் பக்தி ரூபமான இந்த பகவத் காமத்தின் விஷேஷத்தை ஸ்ரீ பாஷ்ய முகேன அருளிச் செய்துள்ளார் .(40)

மண் மிசை யோநிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய வப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினரே – 41-

‘அஜாயமானோ பஹுதோ விஜாயதே’ என்கிறபடி, பிறப்பே இல்லாத எம்பெருமான்,
தேவனாக உபேந்தரனாகவும், மனிதனாக இராமனாகவும், க்ருஷ்ணனாகவும், விலங்கினமாக மீனாகவும், ஆமையாகவும், வராஹமுமாகப் பிறந்தான்.
மக்களைக் காப்பதற்கு பிராட்டியாருடன் ‘மாதவனாக’ பிறந்தும் உலகத்தார் அவனை புரிந்து கொள்ளவில்லை.
அவனையும் தம்மைப் போல ஒரு மனிதன் என்று உலகத்தவர் நினைக்கின்றனர் என்று பகவான் ஸ்ரீ மத் பகவத் கீதையில் கூறியுள்ளார்.
ஆனால் பகவத் ராமானுஜர் அவதரித்த பிறகு, ஸ்ரீ பாஷ்யம் போன்ற க்ரந்தங்களாலே தத்துவ, ஹித, புருஷார்த்தங்கள் விளங்கி,
‘ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாமாயன் ‘ நாராயணனே பரம்பொருள் என்பதை
உலகத்தார் உள்ளங்கை நெல்லிக்கனி என அறிந்து ஞானம் பெற்றனர். (41)

ஆயிழையார் கொங்கை தங்கு மக்காத லளற்ற ழுந்தி
மாயும் என்னாவியை வந்து எடுத்தான் இன்று மா மலராள்
நாயகன் எல்லா வுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
தூயவன் தீதில் இராமானுசன் தொல்லருள் சுரந்தே -42 – –

சேற்றிலே விழுந்தவர்களைக் காக்க முற்படுபவர்கள் சாமர்த்தியம் உடையவர்களாய்,
அச் சேற்றிலே பாய்ந்து அதிலே தத்தளிப்பவர்களை எடுப்பது போல
எம்பெருமானார் , நங்கையர்களின் ஸ்தனமாகிய காமச் சேற்றில் விழுந்தவர்களை தாமே வந்து எடுத்து அருளினார்.
“ போலி அழகில் மயங்கி சேற்றில் விழுந்தாயே, அழகுத் தெய்வமாகிய மாமலராள் காதலுறும் நாயகனுடைய
மெய்யழகிலன்றோ ஈடுபட வேண்டும்” என்று பிள்ளை உறங்கா வில்லி தாசரை எம்பெருமானார் திருத்தி அருளின ரன்றோ?.
அங்ஙனமே அனைத்து உலகத்தவரையும் நாராயணனுக்கு சேஷ பூதராக்கினார். (42)

சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாயமுதம்
பரக்கும் இருவினை பற்றவோடும் படியிலுள்ளீர்
உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறு கலியைத்
துரக்கும் பெருமை இராமானுசன் என்று சொல்லுமினே – 43-

நாராயண நாமம் சொல்லச் சொல்ல அமுதமாக இருக்கிறது.
நம்மாழ்வார் நாமம் ஒருகால் சொன்னாலே, நாவிலே அமுதம் ஊறிக்கொண்டே இருக்கிறது என்றார் மதுரகவி ஆழ்வார்.
ஆனால் இராமானுச நாமமோ, சொல்லத் தொடங்கியவுடனே அமுதனார்க்கு நாவில் அமுதம் பாய்கிறதாம்.
அனாதி காலமாக சப்தாதி விஷங்களிலேயே போந்த உங்களுக்கு ஒரு ஹிதம் சொல்கிறேன்.
ராமானுஜ நாமம் என்கிற திருநாமத்தை சொல்லுங்கோள் .
கைங்கர்யம் சம்பத்தும் , ஸ்வரூப ஞானமும் தன்னடைவிலேயே வந்து சேரும் என்கிறார் 43ம் பாட்டில்.

சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை
யில்லா வற நெறி யாவும் தெரிந்தவன் எண்ணரும் சீர்
நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்பிக்
கல்லார் அகலிடத்தோர் எது பேறென்று காமிப்பரே – -44 –

இந்தப் பரந்த உலகில் புருஷார்த்தத்தை தேடி அலைபவர்க்கு இராமானுஜரின் திருநாமமே பரம புருஷார்த்தம் ஆகும் .
இதனை மனதில் கொள்ளாமல், இராமானுச திருநாமத்தின் மீது நம்பிக்கைக் கொண்டு
சொல்லாதவர்களின் தன்மையை நினைந்து வருந்துகிறார் 44ம் பாட்டில்.

பேறு ஓன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அப் பேறு அளித்ததற்கு
ஆறு ஒன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி என்று இப்பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லாற்
கூறும் பரம் அன்று இராமானுச மெய்ம்மை கூறிடிலே – 45- –

“ ராமானுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே” என்று கூரத்தாழ்வானும் எம்பெருமானாரது திருவடிகளையே உபாயமாகப் பற்றினார்.
அவரைப் பற்றி பின்பற்றி , அமுதனாரும், தனக்கு ப்ராப்யம், பிராபகம் இரண்டுமே எம்பெருமானார் திருவடிகளே என்கிறார் 45ம் பாசுரத்தில்.
சரம பர்வத்துக்குண்டான வாசி அறியாதவரக்கே பிரதம பருவம் ப்ராப்யமாகிறது.
அதாவது ஆச்சார்ய அபிமானம் உள்ளவருக்கு, எம்பெருமான் மீது அபிமானமும் இரண்டாம் பக்ஷம் என்கிறபடி.

கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே
மாறன் பணித்த மறை யுணர்ந்தோனை மதியிலியேன்
தேறும்படி என் மனம் புகுந்தானைத் திசை யனைத்தும்
ஏறும் குணனை இராமானுசனை இறைஞ்சினமே -46- –

பௌத்தம், சார்வாஹம், நையாயிகம், ஜைனம், சாங்கியம், யோகம், ஆகிய ஆறு புற சமயத்தினரும் அழியும்படி செய்ய
அவதரித்த இராமானுஜர், நம்மாழ்வார் அருளிச் செய்த தமிழ் வேதமாகிய திருவாய்மொழியை கண்டறிந்தவர்.
‘நீசனேன், நிறைவொன்றுமிலேன்” எனும்படி நீசத்தனத்தில் நிகரற்றவனாக உள்ள நானும்,
அருள் புரிவதில் நிகரற்றவறான தேவரீரும் நிலைத்து ஏன் இணைய மாட்டோம், என்கிறார் அமுதனார்.
அவ்வாறு பகவத் விஷயத்துக்கு கூட இடமின்றி, எம்பெருமானார் அமுதனாரது சிந்தையினுள்ளே நிறைந்திருந்தார் என்றபடி. (46)

இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத்
தரம் செப்பும் அண்ணல் இராமானுசன் என் அருவினையின்
திறம் செற்று இரவும் பகலும் விடாது என் தன் சிந்தை உள்ளே
நிறைந்து ஒப்பற விருந்தான் எனக்காரும் நிகர் இல்லையே – 47- –

கண்ணாலே காணும்படி தன் ஈஸ்வரத்தன்மை வெளிப்பட, தானே வந்து ஸ்ரீ ரங்கத்தில் கண் வளர்ந்தருளுகிற ஸ்ரீரங்கநாதன் என்பார்
எம்பெருமானார். “ராமோ விக்ரஹவான் தர்ம:” என்றும்
க்ருஷ்ணம் தர்மம் சநாதனம்” என்றும்,
அதர்ம வழியிலே போகும் இவ்வுலகத்தாற்கு தர்மோபதேசம் செய்த ராமானுஜரை “ அறம் செப்பும் அண்ணல்” என்கிறார் அமுதனார்.
அத்தகைய பெருமை மிகு எம்பெருமானார் என் சிந்தையில் புகுந்ததினால், எனக்கு நிகர் யாருமில்லை என்று
‘ஸாத்வீக அஹங்காரம்’ தோற்ற கூறுகிறார். (47)

நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றிப்
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அக்தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச இனி நாம் பழுதே
யகலும் பொருள் என் பயன் இருவோருக்கும் ஆன பின்னே – -48 —

“வானவர்க்கு ஈசன் என்றால் தேசமோ திருவேங்கடத்தானுக்கு” என்பது போல்
குற்றமற்றவரை ஏற்பத்தில் அருளுடையொருக்கு சிறப்பில்லை.
குற்றம் நிறைந்தவரை ஏற்றுக்கொள்வதில் தான் அருளுடையோருக்கு சீர்மை.
நான் நீசத்தனத்தில் நிகரற்றவன்.தேவரீர் அருள் புரிவதில் நிகரற்றவர்.
நமது நிகரற்றத் தன்மையில் நம் இருவருக்கும் ஒற்றுமை இருக்கும் போது,
நாம் ஒருவரை விட்டு ஒருவர் அகல தேவையில்லை என்று நைச்சியானந்தம் தோற்றக் கூறுகிறார்.(48)

ஆனது செம்மை யற நெறி பொய்ம்மை அறு சமயம்
போனது பொன்றி இறந்தது வெங்கலி பூம் கமலத்
தேனதி பாய் வயல் தென்னரங்கன் கழல் சென்னி வைத்துத்
தானத்தில் மன்னும் இராமானுசன் இத்தலத்து உதித்தே -49 –

தென்னரங்கத்தில் வயல்கள் நீரால் விளைவன அல்ல.
அவை தம்மிடத்துத் தோன்றிய தாமரை மலரிலிருந்து பெருகும் தேன் பாய விளைவனவாம்.
அத்தகைய ஸ்ரீரங்கத்தில், ‘அரசருக்கு தம்முடி போல இவருக்கு
தென்னரங்கனின் திருமுடிகள் நினைத்தபோது சூடலாம்படி சொந்தமாயின போலும்.
அவர் அவதரித்ததினால் வைதீக மார்க்கம் செழிப்புற்றது.
புல் விளைய களை அழியுமாப் போல, இவர் அவதரிக்கவும் அறு சமயங்கள் அழிந்தது என்கிறார் 49ம் பாட்டில்.

உதிப்பன வுத்தமர் சிந்தையுள் ஒன்றலர் நெஞ்சம் அஞ்சிக்
கொதித்திட மாறி நடப்பன கொள்ளை வன் குற்றம் எல்லாம்
பதித்த வென் புன் கவிப் பாவினம் பூண்டன பாவு தொல் சீர்
எதித்தலை நாதன் இராமானுசன் தன் இணை யடியே – – 50-

அடியைத் தொடர்ந்து எழும் ஐவர் கட்காய் அன்று பாரதப்போர்
முடியப் பரி நெடும் தேர் விடும் கோனை முழுது உணர்ந்த
அடியர்க்கு அமுதம் இராமானுசன் என்னை யாள வந்திப்
படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே –51 –

பார்த்தசாரதியின் திருவருளால் அவதரித்த எம்பெருமானார் தமது அடியார்களுக்கு அம்ருதமாகவே உள்ளாராம்.
அத்தகைய இராமானுஜர் தமக்காகவே அவதாரம் செய்தார் என்கிறார் 51ம் பாட்டில்.

பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப இப் பார் முழுதும்
போர்த்தான் புகழ் கொண்டு புன்மையினேன் இடைத்தான் புகுந்து
தீர்த்தான் இரு வினை தீர்த்து அரங்கன் செய்ய தாள் இணையோடு
ஆர்த்தான் இவை எம் மிராமானுசன் செய்யும் அற்புதமே –52-

அதுமட்டுமன்றி, அதிமானுஷமான செயல்கள் புரிந்து, என்னை ஸ்ரீ ரங்கநாதனின் தாள் பணியச் செய்தார்.
இது இராமானுஜர் செய்யும் அற்புதமே என்கிறார். (52)

அற்புதன் செம்மை இராமானுசன் என்னை யாள வந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய
பற் பல்லுயிர்களும் பல்லுலகி யாவும் பரன தென்னும்
நற் பொருள் தன்னை இந் நானிலத்தே வந்து நாட்டினனே – -53 –

பிரதான பிரதி தந்திரம் என்பது, பிற மதத்தவரால் ஏற்கப்படாது, நம் மதத்தவரால் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்ட
முக்கிய வேதப் பொருள் எனப்படும். அது சித்,அசித் ஈஸ்வரன் என்கிற தத்வத்ரயமும், சரீர,சரீரி பாவமும் ஆகும்.
இது நற்பொருள் என்றும் அத்தைத் தெரிவித்து உலகத்தவரை தெளிவுபடுத்திய
எம்பெருமானாரை ‘என்னை ஆளவந்த கற்பகம்’ என்கிறார்.(53)

நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது தென் குருகை வள்ளல்
வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமானுசன் தன்னியல்வு கண்டே – 54- –

நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன. நாரணைக்காட்டிய வேதம் களிப்புற்றது.
‘ நாராயண பர ப்ரம்ஹ தத்வம் நாராயண; பர;, அந்தர் பஹீச்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித; என்னும்படி.
இப்படியான பேரெழுச்சி எழுந்ததன் காரணம் பூலோகத்தில் திரண்ட சீல குணமுடையவரான
எம்பெருமனாருடைய ஸ்வபாவத்தைப் பார்த்து, என்கிறார் அமுதனார் 54ம் பாசுரத்தில்.
சிங்கத்தைக் கனவில் கண்டாலும் சாமான்யமான மிருகங்கள் தானே நசித்தொழியும்.
அவற்றைக் கொல்வதற்கு சிங்கம் ஒரு முயற்சியும் செய்ய வேண்டா.
அதுபோல நீசச் சமயங்கள் இராமானுஜரின் இயல்பு கண்டவாறே மாண்டன.

கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென்னரங்கன்
தொண்டர் குலாவும் இராமானுசனைத் தொகை யிறந்த
பண்டரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்
கொண்டலை மேவித் தொழும் குடியாம் எங்கள் கோக்குடியே – -55 –

‘என் அமுத்தினைக் கண்ட கண்கள்,மற்றொன்றைக் காணாவே’ என்று பாண் பெருமாள் அருளிச்செய்தபடி ,
கண்டவர் சிந்தையை கவருபவன் , கடிபொழில் தென்னரங்கன்.
‘சர்வ கந்த, சர்வ ரஸ’ எனும்படி வேதங்களாலே போற்றப்படும் அரங்கன் இருக்கும் இடம் தொண்டுக்குப் பாங்கான இடம்.
அத்தகைய அரங்கனை வேதாந்த விழுப் பொருள் என்று ஸ்ரீ பாஷ்யத்தாலே நிரூபித்து,
வேதம் களிப்புறும்படிச் செய்தவர் இராமானுஜர்.
நீர், நிலம், காடு மலை என்று வேறுபாடின்றி மேகமானது மழையைப் பொழிவது போல,
எந்த பயனையும் கருதாது உபகரித்தமையால், இராமானுஜரை ‘கொண்டல்’ என்கிறார்.
அநந்யப் ப்ரயோஜனராய், இவ்வாறு எம்பெருமானரை ஆச்ரயித்தவர்கள் குலமே நம்மை ஆளும் குலம் என்கிறார் 55ம் பாட்டில்.

கோக்குல மன்னரை மூ வெழு கால் ஒரு கூர் மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனம் எங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமானுசனை யடைந்த பின் என்
வாக்குரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே -56-

56ம் பாட்டில் எம்பெருமானின் ஆவேச அவதாரமாகிய பரசுராம அவதாரம் கூறப்படுகிறது.
அவரைப் பற்றி போற்றிய இராமானுஜரை புனிதன் என்கிறார்.
அந்தப் புனிதனை அடைந்த பின் என் வாக்கானது வேறெதையும் பேசாது. நெஞ்சும் நினைவில் கொள்ளாது என்கிறார்.

மற்றொரு பேறு மதியாது அரங்கன் மலரடிக்கா
ளுற்றவரே தனக்குற்றவராய்க் கொள்ளும் உத்தமனை
நற்றவர் போற்றும் இராமானுசனை யின் நானிலத்தே
பெற்றனன் பெற்ற பின் மற்று அறியேன் ஒரு பேதமையே -57-

அரங்கன் மலரடிக்கு ஆளுகையே பேறு .
திருவரங்கத்தில் அரங்கன் திருவடிவாரத்தில் பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தம்.
மற்ற புருஷார்த்தங்கள், புருஷார்த்தங்களாக மதிக்கத் தக்கனவல்ல என்று அரங்கனுக்கு ஆளுற்றவர் கருதுகின்றனர்.
இவர்கள் பரமபதநாதனுக்கு ஆளுகையும் பெரிய பேறாக மதிக்கிலர்.

திருவரங்கத்தில் ஈடுபட்டவர்கள், பரமபதத்தையும் விரும்ப மாட்டார்கள் என்பதனை பெரியவாச்சான் பிள்ளை
‘’ ஸ்ரீ ரங்கத்தில் உள்ளவர்கள் ‘பரமபதம் வரில் என் செய்வதென்’ என்று நடுங்குபவர்கள் போலே காணும் ,
அவ்வூரில் வர்த்திக்கின்றவர்கள் ‘ என்று ரசமாக அருளிச் செய்துள்ளார்.

பராசர பட்டர், ஒரு திருமஞ்சனத்தின் போது எம்பெருமான்,
’ பட்டரே, சீக்கிரம் பரமபதம் போக வேண்டுமே என்று அஞ்சினாயோ’ என்று வினவ,
அதற்கு பட்டர், பரமபதம் போக நான் அஞ்சவில்லை. உம்முடைய குளிர்ந்த முகமும், திருநாமத் தழும்பையும்
இழந்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன் ‘ என்றாராம்.

அதே போல, ஆளவந்தார் மகன் சொட்டை நம்பியும் ‘ ஸ்ரீ வைகுண்டத்தில் சென்றால், நம்பெருமாளுடைய குளிர்ந்த முகம்போல்,
ஸ்ரீ வைகுண்ட நாதனின் முகம் குளிர்ந்ததில்லையாகில், முறித்துக் கொண்டு இங்கு வந்துவிடுவேன்’ அன்று அருளிச் செய்துள்ளார்

அவ்வாறு ஸ்ரீ ரங்கநாதனான மாதவனின் திருவடிகளை உபாயமாகவும், உபேயமாகவும் கொள்ளுமவர், உத்தம அதிகாரி எனப்படுவர்.
தவங்களுள் சிறந்தது சரணாகதி. சரணாகதியைக் கைக் கொண்டும், தம்முடைய உபதேசத்தாலும், நூல்களாலும்
உலகினரை சரணாகதி நெறி ஒழுகச் செய்தும், சரணாகதியை நிலை நிறுத்தின எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பிறகு,
தமது பேதமை விலகியதாக அமுதனார் கூறுகிறார்.(57)

பேதையர் வேதப் பொருள் இது என்று உன்னிப் பிரமம் நன்று என்று
ஓதி மற்று எல்லா வுயிரும் அக்தென்று உயிர்கள் மெய் விட்டு
ஆதிப் பிரானோடு ஒன்றாம் என்று சொல்லும் அவ்வல்லல் எல்லாம்
வாதில் வென்றான் எம் இராமானுசன் மெய்ம் மதிக் கடலே – 58-

கடளவாய திசை எட்டினுள்ளும் கலி யிருளே
மிடை தரு காலத்து இராமானுசன் மிக்க நான்மறையின்
சுடர் ஒளியால் அவ் இருளைத் துரந்திலனேல் உயிரை
யுடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை யுற்று உணர்ந்தே – -59-

‘’அஹம் ப்ரம்மாஸ்மி, தத்வமஸி “ போன்ற சில வேத வாக்கியங்களை மட்டும் எடுத்துக் கொண்டு
அனைத்தும் பிரம்மம் என்றும் கடைசியில் அனைத்தும் ப்ரம்மத்தில் ஐக்கியமாகி விடுகின்றன என்றும்
சில குத்ருஷ்டிகளின் மாயா வாதத்தை இராமானுஜர் முறியடிக்கா விடில்,
நாராயணனே பரம்பொருள் என்று இவ்வுலகத்தார் அறியாமலே போயிருப்பர் என்கிறார் 58,59ம் பாட்டில்.

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம் தொறும் திரு வாய் மொழியின்
மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் இராமானுசன் என்னும் குலக் கொழுந்தே – -60 –

அர்த்த பஞ்சகத்தை உணர்ந்த மெய்ஞ்ஞானியர் கூடுமிடமெல்லாம் புக்கு நிற்கிறார் எம்பெருமானார்.
அதாவது திருவாய்மொழி பாடும் இடங்களில் எல்லாம் பரம ரசிகருமான எம்பெருமானார் தானும் இருக்கிறார்.
மேலும் திருமங்கையாழ்வ்வரைப் போல , பிராட்டியார் நித்ய வாசம் பண்ணக்கூடிய அழகிய மார்பை யுடைய
எம்பெருமான் எழுந்தருளியுள்ள திருப்பதிகள் தோறும் மண்டி அனுபவிக்கப் புகுபவர் எம்பெருமானார்.
அவர் எங்கள் குலக் கொழுந்து என்கிறார் 60ம் பாட்டில்.

கொழுந்து விட்டோடிப் படரும் வெங்கோள் வினையால் நிரயத்
தழுந்தி யிட்டேனை வந்தாட் கொண்ட பின்னும் அரு முனிவர்
தொழும் தவத்தோன் எம் இராமானுசன் தன புகழ் சுடர்மிக்கு
எழுந்தது அத்தால் நல்லதிசயம் கண்ட திரு நிலமே – 61- –

‘ஸ மஹாத்மா ஸு துர்லப’ என்று க்ருஷ்ண பகவான் தான் அவதரித்த விபவாதாரத்துக்குப் பின்பு
நம்மாழ்வார் அவதரிக்கையாலே, அவருடைய காட்சி தமக்கு கிடைக்காமல் போனதே
என்று நினைத்துச் சொன்னான்’ என்று பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம்.
திருக்கண்ணமங்கை எம்பெருமான் கண்ணனும், பெரியவாச்சான் பிள்ளையாக அவதரித்தார் என்று சொல்வர் பெரியோர்.
நம்மாழ்வாரின் க்ருபைக்குப் பாத்திரமான நாதமுனிகளையும் , ஆளவந்தாரையும் அரு முனிகள் என்கிறார்.
அத்தகையோர் தொழுதேத்தும் இராமானுஜனை அடைந்து இவ்வுலகும் அதிசயம் கண்டது . (61)

இருந்தேன் இருவினை பாசம் கழற்றி இன்றி யானிறையும்
வருந்தேன் இனி எம் இராமானுசன் மன்னு மா மலர்த்தாள்
பொருந்தா நிலைவுடைப் புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மை செய்யாப்
பெரும் தேவரைப் பரவும் பெரியோர் தம் கழல் பிடித்தே – -62 –

பெருந்தேவர்கள் என்று கூறப்படும், நித்ய ஸூரிகளுக்கு இணையான, ஸ்ரீ வைஷ்ணவர்கள் கழல் பிடித்த பின்,
தமது இரு வினைகளும் கழிந்தன என்றும்
அவ்வாறு கழிந்த பின் தான் புரிய வேண்டிய செயல்கள் ஏதுமில்லாது ‘க்ருத்க்ருதயனானேன் ‘ என்கிறார்.
அதாவது பேற்றினைப் பெறுவதற்கு செய்ய வேண்டியவைகளைச் செய்து முடித்தவன் ஆனேன் என்கிறார்.
“ ஆதலின் நீ உண்மையாக என்னைப் பற்றிய அறிவிலும், காண்டலிலும் அடைதலிலும் ஐயமற்றவனாய்,
சுகமாய் இரு என்று சரணாகதி கத்யத்தில் எம்பெருமானின் திருவாக்காக இந்த க்ருத க்ருத்யதமே பேசி முடிக்கப்படுகிறது.
சரம ஸ்லோகத்தில் சரண் ஏற்ற எம்பெருமான் ‘மாசுச:(கவலைப்படாதே என்பதற்கும் இதுவே பொருளாம். (62)

பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கிய சீர்
அடியைத் தொடரும் படி நல்க வேண்டும் அறு சமயச்
செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்தோட வந்திப்
படியைத் தொடரும் இராமானுசா மிக்க பண்டிதனே – 63- –

பெண் யானையை, அது எதிர்வழி கொடாத நிலையிலும், பேராத பேரன்பால் அதனையே பின் தொடர்ந்து திரியும்
ஆண் யானையை போல் அடியேன் தேவரீருடைய பிரகாசிக்கும் தன்மை வாய்ந்த குணங்களைக் கொண்ட
திருவடியை பின்பற்றித் திரியும் ஸ்வபாவத்தைத் தந்தருளவேண்டும்.
‘ பகுத்தறிவு அற்றவர்கள் சப்தாதி விஷயங்களில் எத்தகைய பற்று நீங்காது உள்ளனரோ,
அத்தகைய ப்ரீதி உன்னைத் தொடர்ந்து நினைத்த வண்ணம் இருக்க வேண்டும் என்று
பிரகலாதாழ்வான் அச்சுதனிடம் வேண்டியது போல், எம்பெருமானாரிடம் வேண்டுகிறார். (63)

பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம் மெய்ம்மை
கொண்ட நல் வேதக் கொழும் தண்டம் ஏந்திக் குவலயத்தே
மண்டி வந்தேன்றது வாதியர்காள் உங்கள் வாழ்வற்றதே – – 64- –

அன்பு கொண்ட யானையைப் போலல்லாமல்,மதம் கொண்ட வேழமென் இராமனுசமுனி வேழம்,
பசுந்தமிழாகிற திருவாய்மொழி அனுபவத்திலுண்டான ஆனந்தம் மதநீராகிப் பாய்ந்து, வேதமேன்னும் ‘கதை’யை எடுத்துக்கொண்டு
பாஹ்யர்களையும், குத்ருஷ்டிகளையும் வாழ்வறச்செய்தார் என்று அமுதனார் 64ம் பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார் .
தெற்கே திருமாலிருஞ்சோலையில் ஒரு யானையாகவும்,
வடக்கே திருவேங்கடமுடையான் என்று ஒரு யானையும்,
கிழக்கே திருக்கண்ணபுரத்து எம்பெருமானாக ஒரு யானையும்,
மேற்கே ஒரு மதம் பிடித்த யானை சாய்ந்தாற்போலே திருவரங்கத்தில் ஒரு யானையும் ஆகிய
நான்கு யானைகளுக்கு ஒத்தாற்போல் ஐந்தாவது வேழமாக எம்பெருமானார் விளங்குகிறார் என்றபடி. (64)

வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர் தம்
தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது தத்துவ நூல்
கூழற்றது குற்றமெல்லாம் பத்திதா குணத்தினர்க் கந்
நாழற்றது நம்மிராமானுசன் தந்த ஞானத்திலே – – 65-

எம்பெருமானார் அருளிய ஞானத்தாலே, பூமண்டலமானது பாக்யம் பெற்றது, எவ்வாறு எனில்,
களையெடுத்தபின் பயிர் தலை நிமிர்ந்து ஓங்கி வளருமாப்போலே, இவர் அவதரித்தபின் புறச்சமய வாதியர்கள் அழிந்தனர் .
வைதீகர்கள் பூமியெங்கும் தலைநிமிர்ந்து திரிந்தனர். தத்வ சாஸ்திரங்களில் உள்ள சந்தேகங்கள் தீர்ந்து
பொய்ஞானம் அகன்று மெய்ஞானமே விளங்கியது.
குற்றங்களும் தோஷங்களும் தன்னுள் பொதிந்துள்ளவர்கள், அக்குற்றம் நீங்கியவர்கள் ஆயினர். (65)

ஞானம் கனிந்த நலம் கொண்டு நாடொறும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில்
ஈனம் கடிந்த விராமானுசன் தன்னை எய்தினர்க்கத்
தானம் கொடுப்பது தன் தகவென்னும் சரண் கொடுத்தே -66 –

ஞானம் கனிந்து பக்தியாகி அந்த பக்தி ப்ரபத்தியான பின்னரே மாதவன் மோக்ஷம் கொடுக்கிறான்.
எம்பெருமானாரோ, தன் கிருபையை தானே வலிய சென்று அளிக்கிறார்.
பிராட்டியுடன் கூடிய எம்பெருமான் இருவராக அளிக்கும் மோஷப் பிரவாகத்தை,
எம்பெருமானார் தாம் ஒருவராகவே அளித்து உத்தாரக ஆசாரியர் ஆகிறார். (66)

சரண மடைந்த தருமனுக்காப் பண்டு நூற்றுவரை
மரண மடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரண மிவை வுமக் கன்று என்று இராமானுசன் உயிர் கட்
கரணங்கு அமைத்திலனேல் அரணார் மற்று இவ் வார் உயிர்க்கே – 67- –

இந்த தேகமும் அவயவங்களும் அவனுடைய சரணார விந்தங்களைப் பற்றுவதற்காகவே அவனால் கொடுக்கப்பட்டது.
இப்படி சம்சாரத்திலிருந்து விடுபடுவதற்கு சாதனாமாகக் கொடுத்த கரணங்களைக் கொண்டு,
நதியைக் கடக்கக் கொடுத்த தெப்பத்தைக் கொண்டு அத்தைக் கடவாதே வெள்ளதோடு போவாரைப் போல் ,
இந்த கரணங்கள் உங்கள் உபயோகத்துக்காக வைக்கப்பட்டவைகளல்ல என்று உபதேசித்தவர் எம்பெருமானார்.
அத்தகைய ரஷையை அவர் செய்யா விடில் இந்த ஆத்மாவை காப்பது யார் என்கிறார்.
‘ ராமானுஜ என்கிற சாமர்த்தியம் படைத்த நான்கு அக்ஷரங்கள் இல்லாமற்போனால்,
என் போன்ற ஜந்துக்கள் எந்த நிலையை அடைவோம் என்று கூரத்தாழ்வான் சொன்னார்ப் போலே
சொல்லுகிறார் அமுதனார் 67ம் பாசுரத்தில்.

ஆரெனக்கின்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன விராமானுசனைப் பணியும் நல்லோர்
சீரினில் சென்று பணிந்தது என்னாவியும் சிந்தையுமே – 68- –

அரசன் சிம்மாசனத்திலிருந்து செப்புகிறாப்போலே, கண்ணன் தேர்த் தட்டிலிருந்து சொன்ன கீதையின் செம்மைப் பொருளை
இந்த உலகத்தார் அறிய மாட்டாது இடர் பட்டனர்.
எம்பெருமானார் கீதையின் சீரிய பொருளை தெள்ளத் தெளிவாக, தாம் இயற்றிய கீதா பாஷ்யத்தில் அருளிச் செய்தார்.
இந்த சீர்மையை உணர்ந்து எம்பெருமானாரை பணிந்தனர் நல்லவர்கள். அவர்களிடம் எனது ஆவியும் பணிந்தது.
ஆக எனக்கு ஒப்பாவார் யார் என்று சாத்வீக அஹங்காரத்தால் வந்த களிப்பில் கூறுகிறார். (68).

சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன்னாள்
அந்தமுற்றாழ்ந்தது கண்டு அவையென் தனக்கு அன்றருளால்
தந்த வரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து
எந்தை இராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே – 69- –

அரங்கன் தந்தவை இந்த ஊன உடலும் சம்சாரத்தில் விழுந்து உழலுவதற்கு உறுப்பான கரணங்கள்.
ஆனால் எம்பெருமானார் தந்தவைகளோ அந்த அரங்கனின் திவ்ய சரணங்களாகும் என்று 69ம் பாசுரத்தில் கூறுகிறார்.

என்னையும் பார்த்து என்னியல்வையும் பார்த்து எண்ணில் பல் குணத்த
உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் அன்றி என்பால்
பின்னையும் பார்க்கில் நலமுளதே யுன் பெரும் கருணை
தன்னை என் பார்ப்பர் இராமானுசா வுன்னைச் சார்ந்தவரே – 70 –

அரங்கன் தராததையும் தந்த பின்னரும், அனாதிகாலமாக தொடரும் வல்வினையால் வந்த வாசனா லாபம்,
அத்தாலே சப்தாதி விஷயங்களில் தலை தூக்கி வளரும் ருசிகள் ஆகியவையே அமுதனாரது இயல்பாகி விட்டனவாம்.
அவ்வாறிருந்தும் தம்மை ஆட்கொண்ட எம்பெருமானாரது கருணை, பெருங்கருணையாகும்.
இதை ஆராய்ந்து பார்த்தால், இராமானுஜரை ஆஸ்ரயிப்பவர்கள், குறைவாக நினைக்க மாட்டார்களோ என ஆதங்கப்படுகிறார். (70)

சார்ந்த தென் சிந்தை வுன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும்
கூர்ந்த தத் தாமரைத் தாள்களுக்கு உன்தன் குணங்களுக்கே
தீர்ந்த தென் செய்கை முன் செய்வினை நீ செய்வினையதனால்
பேர்ந்தது வண்மை யிராமானுசா ! எம் பெரும் தகையே !–71-

விஷய ப்ரவணனாகிய தாம் எங்கே, சரம சேஷியாகிய தேவரீர் எங்கே?
சபலத் தன்மை வாய்ந்த என் நெஞ்சு தேவரீர் திருவடிக்கீழ் பொருந்தியதென்றால் , அது தேவரீரின் கடாஷத்தாலன்றோ?
திருக்கோஷ்டியூரில் கேட்போரின் தன்மையை ஆராயாது, உபதேசத்தின் சீர்மையை பாராது, தம் பெருந்தன்மைக்கேற்ப,
ஆசையுடையோர்க்கெல்லாம், தாம் அரும்பாடுபட்டு பெற்ற சரம ஸ்லோக அர்த்தத்தை
அருளிச் செய்தமையினால் ‘ எம்பெருத்தகை’ என்கிறார் அமுதனார். (71)

கைத்தனன் தீய சமயக் கலகரைக் காசினிக்கே
உய்த்தனன் தூய மறை நெறி தன்னை என்றுன்னி வுள்ளம்
நெய்த்த வன் போடிருந்தேத்தும் நிறை புகழோருடனே
வைத்தனன் என்னை இராமானுசன் மிக்க வண்மை செய்தே -72- –

அந்த ஓவ்தார்ய குணத்தால் தீய சமயங்கள் அழிந்தன. தூய வேத நெறிகள் நிலைநிறுத்தப்பட்டன.
தம்மையும் அந்த தூய குணங்களையுடைய பெரியோரிடம் சேர்த்து வைத்தார் என்கிறார் தமது 72ம் பாசுரத்தில்.

வண்மை யினாலும் தன் மாதகவாலும் மதி புரையும்
தண்மை யினாலும் இத்தாரணி யோர்கட்குத் தான் சரணாய்
உண்மை நன் ஞானம் உரைத்த விராமானுசனை வுன்னும்
திண்மை யல்லால் எனக்கில்லை மற்றோர் நிலை நேர்ந்திடிலே – – 73- –

அவரே தமக்கும் உலகத்தோர்க்கும் ரஷகர் ஆகிறார். ருசி, விசுவாசம் இல்லாதவரையும் வலுவில்
ருசி, விசுவாசஸங்களை விளைவித்து, சரம உபாயத்துக்கு ஆளாக்கினார் எம்பெருமானார். (73)

தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக்
கூராழி கொண்டு குறைப்பது கொண்டலனைய வண்மை
ஏரார் குணத் தெம்மி ராமானுசன் அவ் எழில் மறையில்
சேராதவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே – -74-

நித்யமாயிருத்தல்,அபௌர்ஷமேயம், ப்ரத்யஷ ப்ரமானம், எல்லா சேதனர்களுக்கும் நல்லதும், தீயதும், உணர்த்தல்,
எம்பெருமானுடைய ஆக்ஜைக்கு உட்பட்டிருத்தல் ஆகிய மிக்க சீர்மையை உடையது வேத சாஸ்திரங்கள்.
அதை மீறுபவர்களை தனது கூராயுதத்தால் அழிப்பது எம்பெருமான்.
ஆனால் எம்பெருமானாரோ, அவ்வப்போத, தமது சிந்தையில் தோன்றும் சிறந்த யுக்திகளைக்கொண்டே,
அவர்களை சிதைக்கிறார் என்க.(74)

செய்த்தலைச் சங்கம் செழு முத்த மீனும் திருவரங்கர்
கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி நம் கண் முகப்பே
மெய்த்தலைத் துன்னை விடேன் என்று இருக்கிலும் நின் புகழே
மொய்த்தலைக்கும் வந்து இராமானுசா ! வென்னை முற்று நின்றே – – 75-

ஆச்சார்ய அபிமானமே உத்தாராகம்’ என்றிருப்பவர்களை மிகவும் உகக்கிறான் சர்வேஸ்வரன்.
உகப்பின் மிகுதியால், அவர்கள் திறத்து தானே மேல் விழுந்து தன் கைச் சக்கரத்து அழகும், வடிவழுகம் காட்டி,
‘உன்னை விடேன்’ என்றாலும் முக்கோலேந்திய எம்பெருமானாரின் கைத்தல அழகு , என்னை ஈடுபடச்செய்கிறது.
சஸ்திரமேந்திய, எம்பெருமானைவிட, சாஸ்திரமேந்திய உடையவரின் கைத்தலமே என்னை ஈரக்கிறதென்கிறார் 75ம் பாட்டில்

நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற்
குன்றமும் வைகுண்ட நாடும் குலவிய பாற் கடலும்
உன்றனக் கெத்தனை இன்பந்தரு முன்னிணை மலர்த்தாள்
என்றனக்கு மது இராமானுசா !இவை ஈந்தருளே – -76 –

கீர்த்தி மிக்க திருவேங்கடப் பொற்குன்றமும், நித்ய ஸூரிகள் சேர்ந்த இடமான ஸ்ரீ வைகுந்தமும்,
சயன திருக்கோலமுடைய திருப்பாற்கடலும் எம்பெருமானார்க்கு ப்ரீதி உள்ள இடங்களாகும்.
அவ்வாறே, அமுதனார்க்கு மிகவும் ப்ரீதி உள்ள இடம்,
எம்பருமானாரின் அழகுமிகுந்த, இணையத் திருவடிகளே என்கிறார் 76ம் பாசுரத்தில்.
‘திருபொலிந்த சேவடி என் சென்னிமேல் பொறித்தாய் ‘ என்றபடி.
எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் நின்ற, வீற்றிருந்த , சயனத் திருக்கோலங்களை கூறுகிறார்.
அவை உடையவருக்கு எவ்வளவு இன்பம் அளிக்குமோ, அவ்வளவு உடையவரது திருத்தாமரையடிகள்
அமுதனார்க்கு இன்பம் பயக்கின்றனவாம்.

ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக் குறும்பைப்
பாய்ந்தனன் அம்மறைப் பல் பொருளால் இப்படியனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை வேர் பறியக்
காய்ந்தனன் வண்மை இராமானுசற்கு என் கருத்து இனியே – 77 –

வினைகளுக்கு வேர் போன்றதான என் வாசனைகளை அறவே போகும்படி விரட்டிய பின்னும்,
உதவுவதற்கு ஏதேனும் உண்டோ என வினவுகிறார் 77ம் பாட்டில்.

கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றிக் கருதரிய
வருத்தத்தினால் மிக வஞ்சித்து நீ யிந்த மண்ணகத்தே
திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் என்னெஞ்சினில்
பொருத்தப்படாது எம்மிராமானுச! மற்றோர் பொய்ப் பொருளே – – 78- –

இப்படி எம்பெருமானார் தன்னை திருமகள் கேள்வனுக்கே ஆக்கிய பின், வேறொரு மெய்ப் பொருள்
இந்த நெஞ்சில் பொறுத்தப் படாது என்கிறார் 78ம் பாட்டில்.

பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து இந்தப் பூதலத்தே
மெய்யைப் புரக்கும் இராமானுசன் நிற்க வேறு நம்மை
உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கி யாதென்று லர்ந்தவமே
ஐயப்படா நிற்பர் வையத்துள்லோர் நல்லறி விழந்தே – – 79- –

ஆதிப்பிரான் நிற்க மற்றத் தெய்வம் நாடுதிறே ‘ என்றார் நம்மாழ்வார்.
பொய்மையைச் சுரக்கும் புற சமயத்தை அழித்தொழித்து, மெய்ம்மையே சுரக்கும் வேதத்தை ஒளி பெறச்செய்த
ராமானுஜர் இருக்க, நம்மை உஜ்ஜீவிக்க நல்லதொரு தெய்வம் எங்கே என்று தேடுகிறார்களே
இவ்வுலகத்தவர் என்கிறார் 79ம் பாட்டில்.

நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்ப
வல்லார் திறத்தை மறவாதவர்கள் யவர் அவர்க்கே
எல்லா விடத்திலும் என்றும் எப்போதிலும் எத் தொழும்பும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே – -80 – –

ராமானுஜ’ என்னும் இந்த திறமை வாய்ந்த நான்கு அக்ஷரங்கள் இல்லை யெனில், என்னைப் போன்ற ஜந்துக்கள்
எந்த நிலைமையை அடைந்திருக்கும் என்று கூரத்தாழ்வான்,
இந்த திருநாமத்தின் சீர்மையை நினைத்து அதன்பால் மஹா விஸ்வாசம் கொண்டு பேசுகிறார்.
அத்தகைய கூரத்தாழ்வான், எம்பார், முதலியாண்டான் போன்ற அடியவர்களையே
தமக்கு உரிய தெய்வமாகக் கொண்டு ‘ஒழிவில் காலமெல்லாம் வழுவிழா அடிமை” செய்வேன் என்கிறார் 80ம் பாசுரத்தில்.

சோர்வின்றி வுன்தன் துணை அடிக்கீழ் தொண்டு பட்டவர் பால்
சார்வின்றி நின்ற வெனக்கு அரங்கன் செய்ய தாளிணைகள்
பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமானுச இனி யுன்
சீரொன்றிய கருணைக்கு இல்லைமாறு தெரிவுறிலே – – 81- –

பாகவத சேஷத்வத்தின் சுவை அறியாதிருந்த எனக்கு, அந்த பாகவதற்கே உரியது
இந்த ஆத்மா என்னும் உணர்வை உண்டு பண்ணினார் , எம்பெருமானார்.
அவ்வித பாகவத சேஷத்வத்திலே ஊறி நின்றவர்க்கே அரங்கதெம்பெருமான் தன் திருவடிகளை
விட்டுப் பிரியாத நிலையை விளைவிக்கிறான்.
அவ்வித பாக்கியத்தை தமக்கு தந்தளித்த எம்பெருமானாரின் மஹத்வம் ஒப்புயர்வற்றது என்கிறார் 81ம் பாசுரத்தில்.

தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது வெந்தீ வினையால்
உருவற்ற ஞானத் துழல்கின்ற வென்னை ஒரு பொழுதில்
பொருவற்ற கேள்வியனாக்கி நின்றான் என்ன புண்ணியனோ !
தெரிவுற்ற கீர்த்தி இராமானுசன் என்னும் சீர் முகிலே – – 82- –

நல்லதை பற்றிய அறிவு தமிடம் இல்லாததால் அல்லதைப் பற்றிய அறிவே என்னிடம் இருந்தது.
அப் பேர்ப் பட்ட என் நெஞ்சிலும் சாஸ்திரத்தின் மிகச் சீரிய உட்பொருள் பதியுமாறு, சாரமாக உபதேசித்து
என்னை ஒப்பற்ற கேள்வி ஞானமுடையவனாக செய்தருளினார் எம்பெருமானார்.
உலகெங்கும் பரவிய கீர்த்தியை உடையவரும், மேகம் போன்ற வள்ளல் தன்மை உடையவருமான
என்ன தார்மீகரோ எம்பெருமானார் என்று வியக்கிறார் 82ம் பாட்டில்.

சீர் கொண்டு பேரறம் செய்து நல்வீடு செறிதும் என்னும்
பார்கொண்ட மேன்மையர் கூட்டனல்லேன் உன் பத யுகமாம்
ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய
கார் கொண்ட வண்மை இராமானுச ! இது கண்டு கொள்ளே – – 83-

பகவானிடம் சரணாகதி பண்ணி நல் வீடாகிய பரம பதத்தை நாடும் பிரபன்னர்கள் நாட்டில் பலர் உள்ளனர்.
அடியேனோ, சரம பருவத்தின் எல்லை நிலமாகிய ஆசார்யராகிய தேவரீரைப் பற்றிக்கொண்டு,
அத்திருவடிகளே , பரமபத்தைவிட விலக்ஷணமான மோக்ஷமாக அடியேனுக்கு அமைந்துள்ளது
என்று தமக்கு பேரின்பம் விளைவிக்கும் எமாபெருமானார் திருவடிகளே மோஷப் ப்ரதாயகம்
என்று கூறுகிறார் அமுதானார் 83ம் பாட்டில்.

கண்டு கொண்டேன் எம் இராமானுசன் தன்னை காண்டலுமே
தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொற்றாளில் என் தொல்லை வெந்நோய்
விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்தின்
றுண்டு கொண்டேன் இன்னுமுற்றனவோ தில் உலப்பில்லையே – -84 – –

கண்டேன் கமலமலர்ப் பாதம்: காண்டலுமே வின்டேயொழிந்தன வினையாயின வெல்லாம் : என்றார் நம்மாழ்வார்.
அவ்வாறே அமுதனாரும் இராமானுசனைக் கண்டு கொண்டேன்.
கண்ட மாத்திரத்திலே அவரோடே நில்லாது அவர்க்கு ஆட்பட்டாருடைய அழகிய திருவடிகளில் அடிமைப்பட்டு விட்டேன்.
எனது அனாதியான கொடிய பாபங்கள் நீங்கப் பெற்றேன். இப்படி தாஸ்யத்திலேயே அன்வயிக்கவே,
எனது அருவினைகள் அனைத்தும் தொலைந்தன .
இன்னும் நான் பெற்ற நன்மைகள் சொல்ல முடிவில்லாதது என்கிறார். . (84)

ஓதிய வேதத்தின் உட் பொருளாய் அதன் உச்சி மிக்க
சோதியை நாதன் என வறியாது உழல்கின்ற தொண்டர்
பேதைமை தீர்த்த விராமானுசனைத் தொழும் பெரியோர்
பாத மல்லால் என்தன் ஆர் உயிர்க்கு யாதொன்றும் பற்று இல்லையே – – 85- –

“ எந்த ப்ராம்மனன் நான்கு வேதங்களையும் நெஞ்சில் தாங்கிக்கொண்டு இருப்பினும் , வாசுதேவனை அறியவில்லையோ ,
அவன் வேதச் சுவையின் பளுவினால் ஆச்ரயிக்கப்பட்ட கழுதை ஆவான். ‘குங்கமப்பூ சுமந்த கழுதை போலாவான்.
வேதத்திலும், வேதாந்தத்திலும் இந்த சரீரம் – ஆத்மா என்னும் சம்பந்தம் காட்டப்பட்டிருப்பதால்
உடல் உயிருக்கே சேஷப்பட்டிருப்பது போல் நாம் அனைவரும் நமது ஆத்மாவான இறைவனுக்கே அடிமைப்பட்டவர்கள் ஆவோம்.
இறைவன் அந்தர்யாமியாக இருந்து எல்லோரையும் நியமிக்கின்றான். அதனால் அவன் எல்லார்க்கும் ஆத்மா.
நாம் அனைவரும் அவனுக்கு அடிமைபட்டவர்கள் என்னும் அனன்யார்ஹசேஷத்வ ஞானம் அறியப் பெறாமையால்
பிறர்க்கே தொண்டுபட காரணமாயிற்று இந்தப் பேதமையை நீக்கியவர் இராமானுஜர் (85)

பற்றா மனிசரைப் பற்றி அப் பற்று விடாதவரே
உற்றார் என உழன்றோடி நையேன் இனி ஒள்ளியநூல்
கற்றார் பரவும் இராமானுசனைக் கருதும் உள்ளம்
பெற்றார் யவர் அவர் எம்மை நின்றாளும் பெரியவரே – – 86-

‘ஊருக்கே உழைத்து ஏழையானேன்’ என்று திருமங்கையாழ்வார் கூறியது போல்,
ஒன்றுக்கும் பற்றாத, அதாவது எதனுக்கும் திறமையற்ற அற்ப மனிதர்களை அண்டி அவர்களையே உறவென்று கருதி,
அலைந்து கஷ்டப்பட்டு, அவர்களைக் காணவேண்டும் என்று ஓடி இனிமேல் நிலைகுலைந்து போகமாட்டேன்.
தத்துவ, ஹித புருஷார்த்தங்களைத் தெள்ளத் தெளிவாக அறிந்து , மிக்க ப்ரேமையால் ,
தங்கள் கல்விக்கு ப்ரயோஜனம் இதுவே என்று எம்பெருமானாரை ஆச்ரயிக்கும் கூரத்தாழ்வான் போன்றவரே
என்னை ஆளும் பெரியவர் என்று அமுதனார் கூறுகிறார்.(86)

பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன் குணம் கட்கு
உரிய சொல்லென்றும் உடையவன் என்று என்றென்று உணர்வில் மிக்கோர்
தெரியும் வண் கீர்த்தி யிராமானுசன் மறை தேர்ந்து உலகில்
புரியு நன் ஞானம் பொருந்தாதவரைப் பொரும் கலியே – – 87- –

கடலில் செல்ல இயலாவிடிலும், தன் சுத்திக்காக கரை யோரத்தில் மூழ்கி எழுவாரைப் போல,
அறிவாற்றல் கொண்டு பேசமுடியாவிடினும் தங்கள் தகுதிக்கு முயன்றவரை,
எம்பெருமானாரை போற்றுபவர்கள் உள்ளனர்.
எம்பெருமானார் என்னும் ஆச்சார்யனாகிற துறையில், சத்வ குணம் தலை யெடுத்து, ஞான ஸ்நானம் செய்தவர்கள்
தூயவர்களாயிருப்பவர்கள் ஆதலாலே, அவரை கலி நலியாது.
அவ்வாறு அடையாதவர்களையே கலிதோஷம் நல்கும் என்கிறார் 87ம் பாசுரத்தில்.

கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமாள்
ஒலி மிக்க பாடலைக் வுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால்
வலி மிக்க சீயம் இராமானுசன் மறைவாதியராம்
புலி மிக்கதென்று இப்புவனத்தில் வந்தமை போற்றுவனே – – 88- –

மிகவும் கொடியவர்களான குத்ருஷ்டிகள் எனும் புலிகள் மிகுந்து சாதுக்களான உலகியனரை நலிந்து திரிய,
அப்புலிகளைத் தொலைக்க வல்ல உயர் மிக்க ஸிம்ஹமாய் வந்து
புவனத்தைக் காக்க முற்படுகின்றார் எம்பெருமானார் என்கிறார் 88ம் பாட்டில்.

போற்றரும் சீலத்து இராமானுச நின் புகழ் தெரிந்து
சாற்றுவனேலது தாழ்வது தீரில் உன் சீர் தனக்கோர்
எற்றமென்றே கொண்டிருக்கிலும் என் மனம் ஏத்தி யன்றி
ஆற்ற கில்லாது இதற்கென்னினைவா என்றிட்டஞ்சுவனே – – -89 – –

நினையார் பிறவியை நீக்கும் பிரானை இந்நீணிலத்தே
எனையாள வந்த விராமானுசனை இருங்கவிகள்
புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந்தொடையல்
வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே – – 90-

பெரிய பெருமாளைச் சரணடைந்து எம்பெருமானார், தம்மோடு ஏதேனும் ஒருவகையில் சம்பந்தம் உடையோர் அனைவருக்கும்
வீடு தரவேண்டி ப்ரார்த்தித்து , அத்தைப் பெற்றவராகையாலே , அவரை நினைப்போர்க்கெல்லாம் பிறவியை நீக்கும் உபகாரத்தை ,
அதாவது மோக்ஷத்தை தரவல்லவராவார்.
ஆனால் அத்தகைய எம்பெருமானரை மனம், வாக்கு, செயல் ஆகிய முக்கரணங்களில்
ஒன்றிலாவது ஈடுபடாமல் இருக்கின்றனர் மாந்தர்.
இவர்கள் ‘உய்ய ஒரே வழி,, உடையவர் திருவடி’ என்று அறியாமல், பிறப்பினால் நேரும் துன்பங்களில் அழுந்தி
துன்புறுவர்களாக உள்ளனர் என்கிறார் 90ம் பாசுரத்தில்.

மருள் சுரந்தாகம வாதியர் கூறும் அவப் பொருளாம்
இருள் சுரந் தெய்தவுலகிருள் நீங்கத் தான் ஈண்டிய சீர்
அருள் சுரந் தெல்லாவுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
பொருள் சுரந்தான் எம்மிராமானுசன் மிக்க புண்ணியனே – – -91 —

எல்லா ஆத்மாக்களுக்கும் தலைவன் பெரிய பெருமாளே என்கிறார் 91ம் பாட்டில்.
வேதம் கூறிய உண்மைப் பொருளைக் கூறாது அவப் பொருளைக் கோரும் ஆகம வாதிகளைச் சாடுகிறார்.
நாராயணனே முதற்பெருங்கடவுள். பிரமன் ருத்ரன் முதலியோர் படைப்புக்கு உட்பட்டவர்களே.
அப்பெருங்கடவுளான, எம்பெருமானே உலகினுக்கு உபாதான காரணமாகவும்,
தானே சங்கல்பித்து மாறுதலினால் நிமித்த காரணமும் அவனே என்பது வேதத்தின் உண்மைப் பொருள்.
அவ்வாறில்லாமல் பரம் பொருளைக் கீழ்ப் படுத்தியும், கீழ்ப் பொருளை பரம் பொருளாக்கியும், கூறுவது அவப் பொருளாகும்.
இந்த உண்மைப் பொருளை உலகுக்கு உணர்த்திய எம்பெருமானார் புண்ணியனே என்கிறார்.

புண்ணிய நோன்பு புரிந்துமிலேன் அடி போற்றி செய்யும்
நுண்ணரும் கேள்வி நுவன்றுமிலேன் செம்மை நூற் புலவர்க்
கெண்ணரும் கீர்த்தி இராமானுச ! இன்று நீ புகுந்ததென்
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற விக் காரணம் கட்டுரையே – – 92–

அர்ச்சா மூர்த்தியின் வழிபாட்டைப் பேசும் பஞ்சராத்ரம் பகவான் திருவடிகளையே உபாயமாய் பற்றும்படி புகழ்கின்றது.
அரங்கனாம் பெரிய பெருமாளும், நீட்டிய திருக்கரத்தாலே தன் திருவடிகளையே உபாயமாய் பற்றும்டி
காட்டிய வண்ணமாய் பள்ளிக் கொண்டிருப்பதாலே, வைகுந்தத்தில் எழுந்தருளியுள்ள
பரவாசுதேவனான நாராயணன், அரங்கனே என்பது எம்பெருமானாரின் சொல்லாகும்.
‘ நீசனேன் நிறைவொன்றுமிலேன் ‘என்கிறபடி நல்லதோர் விரதத்தை அனுஷ்டித்திலேன் .
கேள்வியறிவு ஞானத்தையும் பெற்றிலேன். அவ்வாறிருக்க, இராமானுஜர் தாமாகவே வந்து
அடியேனுடைய கண்ணிலுள்ளும், நெஞ்சினிலும் நிறைந்த நிர்ஹேதுக கிருபையின் காரணத்தைச்
சொல்ல வேண்டும் என்கிறார். 92ம் பாட்டில்.

கட்டப் பொருளை மறைப் பொருளென்று கயவர் சொல்லும்
பெட்டைக் கெடுக்கும் பிரானல்லனே என் பெரு வினையைக்
கிட்டிக் கிழங்கொடு தன்னருள் என்னும் ஒள் வாளுருவி
வெட்டிக் களைந்த இராமானுசன் என்னும் மெய்த்தவனே – – -93 –

மெய்யான தவம் சரணாகதி . அத்தை யுடையவர் எம்பெருமானார்.
தம்மைச் சார்ந்தவர் அனைவருடைய பாபங்களையும் பொறுத்தருளுமாறு பெருமாளிடம் சரணாகதி செய்து
வரம் பெற்றுள்ளமையால் அத்தகைய வல்லமை அவருக்கு வந்தது.
அவர் செய்த பிரபத்தியினாலேயே நாம் அனைவரும் அவர் சம்பந்தத்தை முன்னிட்டு பிரபன்னர்களாகி வினையினுன்றும் விடுபடுகிறோம்.
பிரபன்ன ஜனங்களாகிய நம் அனைவருக்கும் அவரே கூடஸ்தர் என்று நம்மால் அவர் போற்றப் படுகிறார் .
நம் கூடஸ்தர் நமக்கு வைத்திருக்கும் சொத்து சரணாகதி. அதுவே நமக்கு உஜ்ஜீவனம்.
அவரே தமது பெருவினையை கிழங்கோடு தொலையும்படி செய்தார் என்கிறார் அமுதனார் தமது 93ம் பாட்டில்.

தவந்தரும் செல்வம் தகவும் தரும் சரியா பிறவிப்
பவந்தரும் தீவினை பாற்றித் தரும் பரந்தாம மென்னும்
திவந்தரும் தீதிலிராமானுசன் தன்னைச் சார்ந்தவர் கட்கு
உவந்தருந்தேன் அவன் சீரன்றி யான் ஒன்றும் உள் கலந்தே – – – 94- –

அநேக கல்யாண குணங்களையுடைய எம்பெருமானார் தம்மை வந்து அடைந்தவர்களுக்கு சரணாகதி நிஷ்டையை கொடுத்தருளினார்.
அவர்கட்கு பிறப்பினால் ஏற்படும் சம்சாரத்தை உண்டாக்கும் கொடிய கர்மங்களை தூள் தூளாகும்படி செய்தார்.
அதற்கும் மேலே ‘பரந்தாமம்’ என்று சொல்லப்படுகின்ற ஸ்ரீவைகுந்த லோகத்தை கொடுத்தருளுவார்.
ஆயினும் நான் அந்த எம்பெருமானாருடைய குணங்களைத் தவிர வேறொன்றையும்
மனம் மகிழ்வுற்று விரும்பி அநுபவிக்க மாட்டேன் என்கிறார் அமுதனார்.
“ எம்பெருமானாரைப் பற்றுகையே பிரபத்தி. ‘ராமானுஜ என்கிற சதுர்ஷாரியே திருமந்திரம்.
அவர் திருவடிகளிலே பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தம் .
இதுவே முடிவு கட்டின என் சித்தாந்தம்’ என்று அருளிச்செய்தாரென்றோ நடாதூரம்மாள் .
இதுவே அமுதனாரது நிலை. (94)

உண்ணின்று உயிர் களுக்கு உற்றனவே செய்து அவர்க்கு உயவே
பண்ணும் பரனும் பரிவிலனாம் படி பல்லுயிர்க்கும்
விண்ணின் தலை நின்று வீடளிப்பன் எம்மிராமானுசன்
மண்ணின் தலத் துதித்துய் மறை நாலும் வளர்த்தனனே – – -95 – –

அனாதி காலமாக பலப் பல பிறப்புகள் பிறந்து சம்சாரத்திலே உழல்கின்றனர் இந்த ஆத்மாக்கள்.
அவர்களை உய்விக்கும் நோக்கத்துடன், அவர்கள் மேல் கொண்ட வாத்சல்யத்தினால் எம்பெருமான்
அந்தர்யாமியாய் நின்று உற்றனவே செய்து உய்விக்கின்றான்.
நெருங்குவதற்கும் அருவருக்கத்தக்க குற்றங்கள் மலிந்த உயிருக்குள் புகுந்து ,
இவ்வளவு பரிவு வாய்தவனாக எம்பெருமான் இருக்கின்றான்.
இருப்பினும், எம்பெருமானாரோவெனின், பலவகைப்பட்ட உயிர்களுக்கெல்லாம் நேரடியாகவே வீடு அள்ளிப்பதற்காகவே ,
விண்ணகத்தினின்றும் இம்மண்ணகத்திற்கு நேரே வந்து அவதரித்தார் என்கிறார் 95ம் பாட்டில்.

வளரும் பிணி கொண்ட வல்வினையால் மிக்க நல்வினையில்
கிளரும் துணிவு கிடைத்தறியாது முடைத்தலை யூன்
தளருமளவும் தரித்தும் விழுந்தும் தனி திரிவேற்கு
உளரெம் மிறைவன் இராமானுசன் தன்னை வுற்றவரே – – 96- –

நான்கு வேதங்களையும் வளரும்படி செய்தருளினார்,
சேதனர்கள் உய்வதற்கு . அனுபவித்தோ, பரிகாரம் பண்ணியோ, தீராத, தொடர்ந்து வரும், கர்மவினையினால்,
எம்பெருமானார் வழி காட்டிய ப்ரபத்தி மார்க்கத்தில் தமக்கு மஹா விசுவாசம் ஏற்படவில்லை என்கிறார் 96ம் பாட்டில்.

தன்னை வுற்றாட் செய்யும் தன்மையினோர் மன்னு தாமரைத் தாள்
தன்னை வுற்றாட் செய்ய என்னை வுற்றானின்று தன் தகவால்
தன்னை வுற்றாரன்றித் தன்மை வுற்றாரில்லை என்றறிந்து
தன்னை உற்றாரை இராமானுசன் குணம் சாற்றிடுமே – – -97 –

அப்பேர்ப்பட்ட எனக்கு சம்சாரத்தில் தரித்து, தனியாக திரியவிடாமல் எம்பெருமானாரைச் சார்ந்த அடியவர்கள் துணையாக உள்ளார்கள்.
குழியைக்கடக்கும் கூரத்தாழ்வான் போன்றோர், தேவுமற்றறியேன் என்று சம்சாரக் குழியில் விழாது என்னைக் காக்க வல்லவர்கள் என்கிறார்.
தம்மைத்தாமே பற்றியிருக்கும் கூரத்தாழ்வான், எம்பார், முதலியாண்டான் போன்றோருடைய குணநலன்களை உலகரியச் செய்வதர்க்கு,
அவர்களை பற்றி நிற்குமாறு அடியார்களின் அடியார்களை ஆட்கொள்ளச் செய்தார் எம்பெருமானார்.
இவ்வாறு எம்பெருமானார், தம்மை, ஆழ்வானை பற்றியிருக்கச் செய்ததையும் ,
ஆழ்வானும் தமக்கு ஆசாரியன் ஆகிய சம்பவத்தையும், குறிப்பால் உணர்த்துகிறார், 97ம் பாட்டில்.

இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னும் நரகிலிட்டுச்
சுடுமே யவற்றைத் தொடர்தரு தொல்லைச் சுழல் பிறப்பில்
நடுமே யினி நம் இராமானுசன் நம்மை நம் வசத்தே
விடுமே சரணமென்றால் மனமே நையல் மேவுதற்கே – – -98 – –

“ எவனொருவன் புத்தி கெட்டவனாயும் , காமத்தால் பிடிக்கப்பட்ட பட்டவனாயும் இருந்தபோதிலும்,
“ராமானுஜாய நமஹ; எனும் சொல்லை மட்டும் அடிக்கடி சொல்லிப் புகுந்தால்,
பகவானைச் சார்ந்தவர்களான யோகியர்கள் ப்ருக்ருதி மண்டலத்துக்கு அப்பாலுள்ள., எந்த மோஷத்தைப் பெறுவதற்கு ஒதுகின்றனரோ,
அந்த மோஷத்தையே அடைகிறான்” என்று ராமானுஜாஷ்டக சுலோகத்தில் கூறப்பட்டுள்ளது.
எம்பெருமான் சர்வ ஸ்வந்திரனாததால் , நாம் சரணம் செய்தும், நம்முடைய அளப்பரிய வினைப் பயன்களால்,
நரகம் அளிப்பானோ என்று அஞ்ச வேண்டாம்.
காரணம், எம்பெருமானாரைப் பற்றியவர்கள் பேற்றுக்காக வருந்தவேண்டாம் என்கிறார் 98ம் பாசுரத்தில்.

தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன்
சொற் கற்ற சோம்பரும் சூனியவாதரும் நான் மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே
பொற் கற்பகம் எம்மிராமானுச முனி போந்த பின்னே – – 99- –

விசாலமான இப்பூமியில், சிறந்த கற்பக வ்ருஷம் போல உதாரரான ஸ்வாமி எம்பெருமானார் அவதரித்த பின்பு
புற மதத்தவர்களான, வேதத்தை ஒத்துக்கொள்ளாத பாஹ்யர்களும், வேதங்களை பிரமானமாகக் கொண்டும்,
அதை தங்கள் மனம் போனபடி வகுத்தெடுத்துக் கொண்ட குத்ருஷ்டிகளும், அறவே மாண்டனர்.
ஸ்ரீ ராமானுஜர் அருளிச் செய்த ஸ்ரீ பாஷ்யம் இவ்வித பாஹ்யர்களையும், குத்ருஷ்டிகளையும்
அடியோடு அழியச் செய்ததால் எம்பெருரமானாரை “பொன் கற்பகம்” என்கிறார். (99)

போந்ததென் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனதடிப் போதில் ஒண் சீ
ராம் தெளி தேனுண்டமர்ந்திட வேண்டி நின் பாலதுவே
ஈந்திட வேண்டும் இராமானுச இதுவன்றி யொன்றும்
மாந்தகில்லாது இனிமற்றொன்று காட்டி மயக்கிடலே – – 100- –

எனது மனதாகிற பொன் வண்டு தேவரீரின் திருவடிப் பூவினையே விரும்புகிறது.
அத் திருவடிகளிலுள்ள மென்மை , குளிர்ச்சி, மணம் , அழகு போன்ற கல்யாண குணங்களில் ஈடுபட்டு
அங்கேயே நித்யவாஸம் பண்ண வேண்டுமென்று தேவரீரிடம் வந்தது.
மற்றபடி வேறொன்றைக் காண்பித்து என்னை மயங்கப் பண்ணாதேயும் என்று இறைஞ்சுகிறார் 100ம் பாட்டில்.
இங்கு ‘வேறொன்று’ என்று எம்பெருமானின் திருவடியைக் கூறுகிறார்.
இது சரமபர்வ நிஷ்டையான , ஆச்சார்ய நிஷ்டையைக் குறிக்கிறது.

மயக்கு மிருவினை வில்லியிற் பூண்டு மதி மயங்கித்
துயக்கும் பிறவியில் தோன்றிய வென்னைத் துயரகற்றி
உயக்கொண்டு நல்கு மிராமானுச என்ற துன்னை வுன்னி
நயக்கு மவர்க்கி திழுக்கென்பர் நல்லவ ரென்று நைந்தே – – 101- – –

எம்பெருமானாருக்கு இயல்பாக அமைந்த குணங்கள் இரண்டு.
தன்னை அண்டியவர்களின் பாபத்தைப் போக்குவதும், தன்னையே அனுபவிக்கும் போகியத்தவமுமாகும்.
இதுவரையில் தமது பாபங்களாகிய கர்ம வினைகளை எம்பெருமானார் நீக்கியத்தையே பேசி வந்த நான்,
அவரையே அனுபவிக்கக்கூடிய போக்யத்தை அதிகம் பேசாததால்,
மற்றவர்கள் அதை எனது பிசகு என்று கருதுவார்கள் என்று அஞ்சுகிறார் 101ம் பாட்டில்.

நையும் மனமுன் குணங்களை வுன்னி என் நா விருந்தெம்
ஐயன் இராமானுசன் என்று அழைக்கும் அருவினையேன்
கையும் தொழும் கண் கருதிடும் காணக் கடல் புடை சூழ்
வையமிதனில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே – – 102- –

“நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்” “பாவமே செய்து பாவியானேன்” என்கிறபடி,
அனாதி காலமாக என்னை தொடர்ந்து வந்த வல்வினைகள் , எம்பெருமானாரை பற்றியபின் அழிந்துவிட்டது.
“ உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை “ என்கிறபடி,
தமது மெய் , நா, மனம் ஆகிய மூன்றும் எம்பெருமானாரிடத்திலேயே தங்கிவிட்டது என்கிறார்.
எல்லோரையும் மயக்கும் இந்த வள்ளல் தனமும், ஹௌதார்ய குணமும் என்னையும் என் கரணங்களையும் ஈடுபடும்படி செய்தது,
எக்காரணத்தினாலோ? என்று வினவுகிறார் 102ம் பாசுரத்தில்.

வளர்ந்த வெங்கோப மடங்க லொன்றாய் அன்று வாளவுணன்
கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயி ரெழுந்து
விளைந்திடும் சிந்தை யிராமானுசன் என்தன் மெய்வினைநோய்
களைந்து நன்ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே – – 103 –

சிங்கப்பெருமானது சீற்றம் அடியார்க்கு தினந்தோறும் சிந்திப்பதற்கு உரியது. அதுவே உய்யும் வழி.
தன் திறந்து அபராதங்களைப் பொறுக்கும் எம்பெருமான், தனது அடியார் திறத்து செய்யப்பட்ட அபராதங்களைப் பொறுக்காதவனாய்,
அவுணனின் ஆகம் (மார்பு) பிளந்தமை ஆகிய இந்த கீர்த்திகள் எம்பெருமானார் திருவுள்ளத்திலே ஓங்கி வளர்ந்த பயிர்களாக விளைகிறதாம்.
ஆத்திரம் தீர, நகத்தால் முடித்ததோடு நில்லாமல், பிணத்தைப் பார்த்தும் , நாமடித்துக் கோபத்தைக் காட்டுவதே
நரசிங்கனது சீற்றத்தின் எல்லை..
பெரியவாச்சான் பிள்ளை, முதல் திருவந்தாதி 65ம் பாசுர வ்யாக்யானத்தில்
‘’ சரணா கதற்கு தஞ்சமான தனமாவது ஆஸ்ரிதார்த்தமாக இரண்யனைப் பற்றப் பண்ணும் சீற்றம்” என்கிறார்.
நரம் கலந்த சிங்கமான ந்ருஸிம்ஹனே வல்வினை போக்கி தெள்ளறிவுடன் வாழ்விப்பார் என்பது ஞானம்.
அத்தகைய ஞானத்தை உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தருகிறார் எம்பெருமானார் என்கிறார், அமுதனார். (103)

கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டலே – – -104 –

எம்பெருமானாருடைய திருமேனியழகை அனுதினமும் அனுபவிப்பதான க்ருபையை அருளிச் செய்தால்,
கொடிய நரகமாகிய ஸம்ஸாரத்திலும் தரித்திருப்பேன்.
அவ்வனுபவம் கிடைக்கப்பெறாவிடில், பரமபத்திலும் தயாரித்திருக்க மாட்டேன் என்கிறார் 104ம் பாட்டில்.
உள்ளங்கை நெல்லிக்கனியென அந்தக் கண்ணனையே காட்டித் தரிலும் தமக்கு மிகவும் பிரியமானது,
எம்பெருமானாரது திருவடிவழகும், திருமேனியில் விளங்கும் குணங்களுமேயாகும் என்கிறார்.
கருத்த மேகமானது தன்னிடமுள்ள முழுமையான நீரனைத்தையும் பொழிந்த பிறகு, வெளுத்துப் போகும் .
அவ்வாறு செழுமை வாய்ந்த மேகம் போல் இராமானுஜர் உள்ளதால் அவரை “செழுங்கொண்டல் “ என்கிறார்.

செழும் திரைப் பாற்கடல் கண்டுயில்மாயன் திருவடிக் கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நன்ஞானி நல் வேதியர்கள்
தொழும் திருப்பாதன் இராமானுசனைத் தொழும் பெரியோர்
எழுந் திரைத்தாடுமிடம் அடியேனுக் கிருப்பிடமே – – -105 –

“ஸதா பச்யந்தி சூரய; என்றபடி நித்யஸூரிகளிடையே ஸ்ரீ வைகுந்தத்தில் இன்பத்தை அளித்துக் கொண்டிருக்கும் எம்பெருமான்,
ஸம்ஸாரிகளை கைவிடாத வாத்சல்ய குணத்தாலே அங்கிருந்து வந்து இறங்கிய இடம் திருவேங்கட மாமலை.
இரண்டு குழந்தைகளுக்கிடையே கிடந்து பாலூட்டும் தாய் போலே, தரையிலும் இறங்காமல் விண்ணகத்திலும் தங்காமல்
வேங்கட மலை உச்சியில் உள்ளான்.
அவன் மேலும் உகப்படைந்து தன்னைச் சரணடையாதார் திறத்திலும் தானே வலுவாக சென்ற இடம்,திருமாலிருஞ்சோலை .
இவ்விடங்களைக் கோவில் கொண்டது போல், எபெருமானார் இதயத்தையும் கோயிலாகக் கொண்டான், எம்பெருமான்.
அந்த எம்பெருமானார் இப்போது எழுந்தருளியுள்ள இடம் தன்னுடைய இதயத்தினுள் என்கிறார் 106ம் பாட்டில்.

ஆசார்ய சம்பத்தினுடைய மகிமை, அமுதனார் கால் பாவமாட்டேன் என்று ஒதுக்கிய ஸ்ரீ வைகுந்தமும்,
ஆச்சார்யனோடும், அவனுகந்த ஈஸ்வரனோடும் தானாகவே இவரை நாடி வருகின்றன.
இதனால் ஆசார்யனைப் பற்றுகை பகவானைப் பற்றுகையினின்றும் வேறுபட்டதன்று:.
பேற்றினை எளிதில் தர வல்லது என்பது தெளிவாகின்றது.
“ ஈஸ்வனைப் பற்றுகை கையைப் பிடித்து காரியம் கொள்ளுமா போலே, ஆச்சார்யனைப் பற்றுகை
காலைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமாப்போலே” என்று ஸ்ரீ வசன பூஷனம் 47ம் சூர்ணிகையில்
பிள்ளைலோகாச்சார்யார் அருளிச் செய்துள்ளார்.

இன்புற்ற சீலத்து இராமானுச என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோய் உடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
துன்புற்றுவீயினும் சொல்லுவது ஓன்று உண்டு உன் தொண்டர்கட்கே
அன்புற்று இருக்கும்படி என்னை யாக்கி யங்கு யாட்படுத்தே – – – 107-

அடுத்த பாசுரத்தில், (107) அடியேன் செய்யும் விண்ணப்பம் ஒன்றுண்டு என்று கூறி,
வியாதிகளுக்கு இருப்பிடமான சரீரம் தோறும் பிறப்பதும், இறப்பதுமாய் எண்ணரிய துன்பங்களால் தாக்கப்பட்டு,
நாசமடையும் நிலை ஏற்பட்டாலும் தேவரீருடைய அடியவர்களுக்கே அன்புடையவனாக ,ஆட்கொண்டு,
அடியேனை அவ்வடியார்கள் திறத்திலே அடிமையாக அமையும்படி அருள் புரிய வேண்டும் என்று அமுதனார் விண்ணப்பிக்கிறார்.

அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாக மன்னும்
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமானுசனடிப் பூ மன்னவே – – 108-

நீர் உளது எனில் உளது மீன். மார்பு உளது எனின் உள்ளாள் , பெரிய பிராட்டி.
நாரத்தைப் (நீர்) பற்றியுள்ளன கயல் மீன்கள். நாராயணனைப் பற்றியுள்ளாள் பங்கயப்பாவை.
தென்னரங்கனுடைய திருமார்பிலே நித்யவாசம் பண்ணுகிறவளாய், சிறந்த தாமரைப்பூவிலே பிறந்த பாவையான
ஸ்ரீ ரங்க நாச்சியாரை , புருஷாகாரமாகப் போற்றுவோம் என்கிறார் அமுதனார் தமது 108ம் பாசுரத்தில்.

சரமபர்வ நிஷ்டருக்கு ப்ராப்யம் ஆச்சார்ய சரணாவிந்தம் என்பதையும்,
இவ்விடமும் பரமபதத்திலும் கூட அவரது திருவடிகள் சரணம் என்றும்
அது பிரிவின்றி நிரந்தரமாக உள்ளதாக பற்றுபவர்கள் ,
ஆச்சார்ய நிஷ்ட்டைக்கு அதிகாரிகள் என்பதையும் அமுதனார் இங்கு காட்டியுள்ளார்.

“இராமானுஜ சரணாரவிந்தம் நம் தலைமிசை மின்ன, மங்கள வாழ்க்கை பெற்று, நிரந்தரமாக வீற்றிருப்பதற்கு ,
மலர் சூடி , மங்கள வடிவினளான மலர்மகளைப் போற்றுவோம்” என்று
“ பூ மன்னு மாது “ என்று தொடங்கி “
“ கடைசியில் “பங்கய மாமலர்ப் பாவை “ என்று சொல்லி,
“சர்வம் சம்பத்யதே” என்று இராமானுஜருக்கு சரணாகதி அளித்த ஸ்ரீ ரங்கா நாச்சியரைப் போற்றிப் பொலிவு செய்து,
இந்த நூற்றாந்தாதியை தலைக் கட்டி யருளுகிறார் , திருவரங்கத்தமுதனார்.

—————

1-மோக்ஷ பிரதத்வம் -சம்சார நிவர்த்தக காஷ்டை -அமலன்

பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த
அரும் தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே – 32-

அபிபவியா நின்று உள்ள கலி தோஷத்தாலே துக்கப்பட்ட பூமியை -இத்தலையிலே அர்த்தித் வாதி நிரபேஷமாக
தம்முடைய ஒவ்தார்யத்தாலே -வந்து -நிமக்நோத்தாரணம் பண்ணி -ரஷித்தவராய் -பிரபன்ன ஜன கூடஸ்தர் ஆகையாலே –
தஸ்மான் நியாச மேஷாம் தபஸா மதிரிக்த மாஹூ-தைத்ய நாரரா -என்கிறபடியே
சர்வ தபச்சுக்களிலும் மேலாய்க் கொண்டு -துர்லபமாய் இருக்கிற சரணாகதி ரூப தபஸ்ஸை உடையராய்-
எங்களுக்கு தம்மை முற்றூட்டாக தந்த-ஸ்ரீ எம்பெருமானாரை-சேரும் அவர்களுக்கு
ஸ்வரூப அனுரூபமான மதிப்பும்-
வியசன சுகங்களில் அனவ சாதா நுத்தர்ஷ-ஹேதுவான ஷமா குணமும் –
ஜிதேந்த்ரியத்வ ரூபமான பராபிபவன சாமர்த்த்யமும்-
குணவத்தாப்ரதையும்-
தத்வ ஹித புருஷார்த்தங்களை விஷயமாக வுடைத்தாய் ஆகையாலும்-கட்டளைப் பட்டு இருந்துள்ள ஜ்ஞானமும்-
தத் கார்யமான பக்தி ரூப சம்பத்தும்-
ரதிர் மதி –ஸ்ரீ குணரத்னகோசம் -17 – இத்யாதி -ஸ்லோகத்தின் படியே
ஸ்ரீ பிராட்டி கடாஷ லஷ்யமானவர்களுக்கு-அவை தானே மேல் விழும் என்றால் போலே-
இங்கும் அபேஷியாது இருக்க தானே வந்து சேரும் –
பொருந்துதல்-சேருதல்-அதாவது ஸ்வரூப அனுரூபத்வம்
தேசு-மதிப்பு–

ஸ்ரீ உடையவர் நித்ய விபூதியும் -இஹ பர லோக இன்பம் அருளுவார் –
அல் வழக்குகள் போக்கி அடியார்க்கு ஆட்படுத்த வல்லவர் அன்றோ –

—————

2-ஜகத் காரணத்வ காஷ்டை-ஆதி

————

3-ஜகத் சரண்யத்வ காஷ்டை-ஆதி

———–

4-சர்வ உபகாரத்வ காஷ்டை-பிரான்

——————

5-கிருபா விசேஷத்வ காஷ்டை-அடியார்க்கு ஆட்படுத்த

————–

6-ஸ்வாதந்தர்ய காஷ்டை-என்னை ஆட்படுத்த

—————

7-நித்ய நிர்தோஷத்வ காஷ்டை-விமலன்

——————

8-நித்ய ஸூரி நிர்வாஹத்வ -திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டா ஸ்வாமித்வ காஷ்டை-விண்ணவர் கோன்

—————

9-ஸுலப்ய காஷ்டை-வேங்கடவன்

—————-

10-ஸுசீல்ய காஷ்டை-நிமலன்

—————–

11-வாத்சல்ய காஷ்டை-நின்மலன்

——————

12-கைங்கர்ய சாதன விசேஷத்வ ப்ராப்ய காஷ்டை-நீதி வானவன்

—————-

13-சர்வ ஸ்வாமித்வ ஆஸ்ரித பக்ஷபாத காஷ்டை-அரங்கத்து அம்மான்

————-

14-திருவடிகள் பாவானத்வ காஷ்டை-திருப் பாதம்

————–

15-திருவடிகள் போக்யத்வ காஷ்டை- கமல பாதம்

—————

16-அயத்ன -அநாயாசேந போக்யத்வ காஷ்டை-வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றவே

———–

அமலன்- தனக்கு அடிமை -பொருந்திய தேசம்
விமலன் -அடியார்க்கு தன்னை
நிமலன் -நிர்ஹேதுகம் -காரேய்
நின்மலன் -தனக்கு இன்புறவே அடியார்க்கு
இதுக்கும் மேல்
மண் மிசை –நாரணர்க்கு ஆளாயினரே
புண்யம் போத -வகுள பூஷண பாஸ்கரர் போல்
பிராட்டி -லகுதரா ராமஸ்ய கோஷ்ட்டி
காரேய் கருணை -அங்கு உடன் இருந்த ராக்ஷஸிகள் -இவரோ நம் வரை ஏறிப்பாயும்
க்ரந்தஸ்தம் மூலம் -ஆச்சார்ய பரம்பரை மூலம்

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ராமானுஜரும், ஸ்ரீமணவாள மாமுனிகளும்–

October 8, 2021

ஐப்பசி மூலம்-ஸ்ரீமணவாள மாமுனிகள்/பெரிய ஜீயர்/ஸ்ரீசடகோப முனி/ஸ்ரீயதீந்த்ர ப்ரவணர்/
அழகிய மணவாளர்/ரம்ய ஜாமாதர முனி/அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்/காந்தோபயந்த்ரூ முனி/
வரவர முனி/இராமானுசன் பொன்னடி/செளம்ய ஜாமாத்ரு யோகீந்த்ரர்—
ஸ்ரீமணவாள மாமுனிகள்,ஸ்ரீ ராமானுஜரின் மறு அவதாரம்;
ராமானுஜர் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்ற ஸ்ரீமந் நாராயணனால், ஸ்ரீவைகுண்டத்திலிருந்து
அனுப்பி வைக்கப்பட்ட ஆதிசேஷ அவதாரம் என்பது அனைவரும் அறிந்ததே.
ராமானுஜர் மற்றும் மாமுனிகளின் வாழ்க்கைநெறி/கைங்கர்யங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால்
பல தெய்வீகத் தன்மைகள்/ஒற்றுமைகள்புலப்படுகின்றன

1.ராமானுஜருக்கு அவருடைய தாய் மாமாவும்,ஸ்ரீஆளவந்தாரின் சீடருமான,பெரிய திருமலைநம்பிகள்
‘இளையாழ்வார்’ என்று பெயரிட்டார்.

மாமுனிகளுக்கு அவருடைய தாய் வழித் தாத்தாவும்,ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரின் சீடருமான ஸ்வாமிகள்
‘அழகிய மணவாளன்’என்று பெயரிட்டார்.

2.இளையாழ்வார்,தம்வைணவ வாழ்க்கை நெறிக்கும்,கைங்கர்யங்களுக்கும் இல்லறம் தடையாக இருப்பதை
உணர்ந்து துறவறம் மேற்கொண்டார். காஞ்சி தேவப்பெருமாளிடம் காஷாயம் பெற்று’எதிராஜர்’ ஆனார்.

அழகிய மணவாளர் லெளகீக வாழ்க்கையின் தீட்டு முதலான தோஷங்கள் தம் கைங்கர்யங்களுக்கு இடையூறாக இருப்பதால்
துறவறம் மேற் கொண்டார்.தம் ஆசார்யர் திருவாய் மொழிப்பிள்ளையின் சந்நியாசி சீடர் ,
சடகோப யதியிடம், ஆழ்வார் திருநகரியில் துறவு பூண்டார்.’சடகோப முனி’ ஆனார்.

3.ராமானுஜர் அவரது மானசீக ஆசார்யர் ஆளவந்தாரின் ஆசைப்படி,ஆசார்யர் திருவரங்கப் பெருமாள் அரையரால்
ஸ்ரீரங்கம் அழைத்து வரப்பட்டு,ஸ்ரீ வைஷ்ணவ பீடத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

மாமுனிகள் தம் ஆசார்யர் திருவாய்மொழிப் பிள்ளையின் ஆணைப்படி ஸ்ரீரங்கம் சென்று
ஸ்ரீவைஷ்ணவத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

4.ஸ்ரீரங்கம் வந்த ராமானுஜரை தம்முடைய தகுதிப் பெயரான “உடையவர்”
(அனைத்து லீலாவிபூதிகளையும்,நித்ய விபூதியையும் உடையவர்)என்னும் பெயரால் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் அழைத்தார்.

ஸ்ரீரங்கம் வந்த மாமுனிகளை-சடகோபமுனியை,தம் பெயரான”அழகியமணவாளன்”என்னும் திருநாமத்தால்அழைத்தார்,
ஸ்ரீரங்கநாதர்.(மாமுனிகளின் இயற்பெயரே அழகிய மணவாளன்;ஆனாலும்,துறவு பூண்ட பின்’சடகோபமுனி’எனனும் பெயர் பெற்றார்.
ஆனால் நம்பெருமாள் அழகியமணவாளன் என்னும் பெயரிட்டே அழைத்தார்.
அந்தப் பெயராலேயே மணவாள மாமுனிகள் என்னும் பேறு பெற்றார்.

5.உடையவருக்கு, சேரன் மடத்தை இருப்பிடமாகத் தருமாறு கோவில் மணியகாரரை நியமித்தார் நம்பெருமாள்.
அந்த சேரன் மடத்தில் தான் உடையவர் ஸ்ரீரங்கத்தில் இருந்த காலம் முழுதும் வாசம் செய்தார்.
(வடக்கு உத்திர வீதியில் இருக்கும் இன்றைய ஸ்ரீரங்கநாராயண ஜீயர் மடம்).

மாமுனிகளுக்கு,பல்லவராயன் மடத்தை இருப்பிடமாகத் தருமாறு நியமித்தார் நம்பெருமாள்.
மாமுனிகள் தம் அந்திமக்காலம் வரை அந்தத் திருமாளிகையில் தான் இருந்தார்.
(தெற்கு உத்திர வீதியில் இருக்கும் மணவாள மாமுனிகள் சந்நிதி).

6.ராமானுஜரிடம் சங்கும், ஆழியும் பெற்று அவரைத் தம் ஆசார்யராக ஏற்றுக்கொண்டார் திருவேங்கடவர்
(திருக்குறுங்குடி நம்பியும் உபதேசம் பெற்றும், திருமண்காப்பு சேஷம் தரித்தும் ராமானுஜரை ஆசார்யராக ஏற்றுக் கொண்டார்).
திருவேங்கடவர் திருமலை கோவில் வளாகத்தில் தம் ஆசார்யர் ராமானுஜருக்கு மட்டுமே, சந்நிதி தந்து ஏற்றம் அளித்துள்ளார்.
திருவேங்கடவர் அனந்தாழ்வானுக்கு அருளிய தனியனில்
“ஸ்ரீமத் ராமானுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்”என்று அனந்தாழ்வானை ராமானுஜரின் பொன்னடி என்று போற்றுகிறார்.

ஸ்ரீரங்கநாதர்-நம்பெருமாள், மணவாளமாமுனிகளிடம்,திருவாய்மொழி ஈடு காலட்சேபம் கேட்டு,தம் ஆசார்யராக ஏற்றுக்கொண்டார்.
ஆசார்யருக்கு “ஸ்ரீசைலேச தயாபாத்ரம், தீபக்யாதிகுணார்ணவம், யதீந்த்ரப்ரவணம்,
வந்தே ரம்ய ஜாமாதர முநிம்” என்னும் பிரசித்தி பெற்ற தனியனைச் சமர்ப்பித்தார்.
இங்கும் ‘யதீந்தரப்ரவணர்’ என்று ராமானுஜர் மீது மாமுனிகள் வைத்திருக்கும் பக்தியைக் கொண்டாடுகிறார்.
ஆசார்யர் மாமுனிகளுக்கு, தம்முடைய சொத்தான சேஷ பீடத்தையே,தந்து ஏற்றம் அளித்தார் நம்பெருமாள்.

7.ராமானுஜர்,திருவேங்கடவர் சந்நிதியில்”வேதார்த்த ஸங்க்ரஹம்” என்னும் உபநிஷத்துகளின் சாரத்தை இயற்றி அருளினார்.
மாமுனிகள், திருவேங்கடவருக்கு திருப்பள்ளியெழுச்சி பாடச் செய்தார்.
தம் சீடர் பிரதிவாதி பயங்கரம் அண்ணா ஸ்வாமிகளிடம் நியமிக்க அவர் இயற்றிய திருப்பள்ளி யெழுச்சிப் பாசுரங்களே,
“கெளசல்யா ஸுப்ரஜாராமா, பூர்வா ஸந்த்யா”என்று தொடங்கும் வேங்கடேச சுப்ரபாதம் ஆகும்.

8.ராமானுஜர் பிரம்ம சூத்திரங்களுக்கும், உபநிஷத்துகளுக்கும் விரிவுரைகளாக”ஸ்ரீபாஷ்யம்”
முதலான கிரந்தங்களை இயற்றினார்.

மாமுனிகள்( பிள்ளை லோகாசார்யரின்) ரஹஸ்ய கிரந்தங்களுக்கு விரிவுரைகள் இயற்றினார்.

9.ராமானு தம் மானசீக ஆசார்யர் ஆளவந்தாரின் விருப்பத்துக்கிணங்க, திருவாய்மொழிக்கு விரிவான உரை எழுதச் செய்தார்
(திருக்குருகைப் பிள்ளானின் ஆறாயிரப்படி வ்யாக்யானம்).

மாமுனிகள் தம் ஆசார்யர் திருவாய்மொழிப்பிள்ளையின் நியமனத்துக்கு ஏற்ப திருவாய்மொழி ஈடு
காலட்சேபம் செய்வதையே (நம்பெருமாளுக்கும் கூட) முக்கியமான கைங்கர்யமாகச் செய்து வந்தார்.

10.பெரிய கோவில் ஜீயர், என்று,பெரிய கோவில் பொறுப்பு அதிகாரியாக இருந்த திருவரங்கத்து அமுதனார்
ராமானுஜரைச் சரணடைந்து அவர் சீடரானார். பெரிய கோவில் சாவியை ராமானுஜரிடம் ஒப்படைத்தார்.
உடையவரைப் போற்றும் பிரபந்ந காயத்ரி என்று போற்றப்படும்”இராமாநுச நூற்றந்தாதி” அருளித் தந்தார்.

பெரிய கோவிலில் முக்கிய கைங்கர்யங்களைச் செய்து வந்த,கோவில் கந்தாடை அண்ணன் ஸ்வாமி,
மாமுனிகளைச் சரணடைந்து, ஆசார்யராக ஏற்றுக்கொண்டார்
மாமுனிகள் மீது”மாமுனிகள் கண்ணிநுண் சிறுத்தாம்பு” பாடினார்.

11.ராமானுஜர் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தைப் பரப்ப 74 சீடர்களை நியமித்து அவர்களைச் ‘சிம்மாசனாதிபதிகள்’ ஆக்கினார்.

மணவாள மாமுனிகள் 8 பிரதான சீடர்களை நியமித்து அவர்களை ‘அஷ்டதிக் கஜங்கள்’ ஆக்கினார்.

12.ராமானுஜரும்,மாமுனிகளும் தங்களை,ஆதிசேஷ அவதாரங்கள் என்று சில வைபவங்கள் மூலம் உணர்த்தினர்.

13.ராமானுஜர் பெரும்பாலும் ‘திருப்பாவை’யை அனுஸந்தானம் செய்து கொண்டேஇருப்பார்.
மாமுனிகள்’த்வயமந்த்ரம்’அனுஸந்தானம் செய்து கொண்டே இருப்பார்.

14.ராமானுஜர்,திருமாலிருஞ்சோலை அழகருக்கு,நூறு தடா அக்காரவடிசலும்,வெண்ணெயும் சமர்ப்பித்து விட்டு
ஸ்ரீவில்லிபுத்தார் சென்ற போது,ஆண்டாள் தம் நிலையிலிருந்து சற்றே முன்னே வந்து “நம்அண்ணாவோ”என்று விழித்தார்.
ஆண்டாளுக்கு அண்ணனான உடையவர் ‘கோவில்அண்ணா/கோதாக்ரஜர்’என்று போற்றப்பட்டார்.

மார்கழி மாத நீராட்டு உற்சவத்துக்கு,ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற மாமுனிகள், ஏழுநாள் நீராட்டு உற்சவம் முடிந்து தான் சென்று சேர முடிந்தது.
நீராட்டு உற்சவம் சேவிக்க முடிய வில்லையே,என்று ஏங்கிய மாமுனிகளுக்காக, எட்டாம் நாளன்றும்-
தைமுதல் நாள்-நீராட்டு சேவை சாதித்தார் கோதை நாச்சியார். அந்த வைபவம் இன்றும் தை முதல் நாள் நடைபெறுகிறது.

15.ராமானுஜர் தம் அந்திம திசை வரை, தம் சீடர்களுக்கு நல் வார்த்தைகளை உபதேசம் செய்து கொண்டேயிருந்தார்.

மாமுனிகளும் காலட்சேபம்/கிரந்தங்களை இயற்றுதல் ஆகியவற்றை இறுதி வரை செய்து கொண்டேயிருந்தார்.

16.ராமானுஜர் தாம் வாழ்ந்த காலத்திலேயே ,அவருடைய திருமேனிகள் இரண்டை நிர்மாணித்த பொழுது,
அவற்றுக்குத் தாமே உகந்து மங்களாசாசனம் செய்து அருளினார்.
அவற்றில் ஒன்று ஸ்ரீபெரும்புதூரில் நாம் சேவிக்கும் “தான் உகந்த திருமேனி”.
மற்றொன்று திருநாராயணபுரத்தில்(மேல்கோட்டை) எழுந்தருளியுள்ள “தமர் உகந்த திருமேனி”

மாமுனிகளும், தாம் வாழ்ந்த காலத்திலேயே தம் திருமேனிகள் இரண்டுக்கு மங்களாசாசனம் செய்து அருளினார்.
தம் சீடர்களில் ஒருவரான அப்பாச்சியார் அண்ணாவின் வேண்டுதலுக்கு இணங்க,
மாமுனிகள் தாம் உபயோகித்த ராமானுஜம் என்னும் சொம்பை உருக்கி இரண்டு திருமேனிகள் செய்யப் பணித்தார்.
அவற்றில் ஒன்று சிங்கப் பெருமாள் கோவில் (பூந்தமல்லி) முதலியாண்டான் திருமாளிகையில் எழுந்தருளப் பண்ணப்பட்டுள்ளது.
இன்னொரு திருமேனியை நாங்குநேரி வானமாமலை மடத்தில் சேவிக்கலாம்.
(முதல் அஷ்டதிக்கஜமும்,வானமாமலை மடத்தின் முதல் ஜீயருமான பொன்னடிக்கால் ஜீயருக்குத் தந்தருளியது).

17.ராமாநுஜர் அவதாரம் செய்து, வேதத்துக்குத் தவறான அர்த்தம் கற்பித்த வந்த
புறச் சமயவாதிகளையும்,குதிர்ஷ்டிகளையும் வாதில் வென்றும்,கிரந்தங்களை இயற்றியும்
ஸ்ரீமந்நாராயணின் விசிஷ்டாத்வைத நெறியை நன்றாக நிலை நாட்டினார்.
74 சிம்மாசனாதிபதிகளை நியமித்து அவர்கள் வம்சத்தார் மூலம் என்றென்றும்
ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் செழித்து வளர வழிவகை செய்தார்.

12/13 ஆம் நூற்றாண்டுகளில் முஸ்லீம் படையெடுப்புகளால்,
இந்து மத சம்பிரதாயங்களும், கோவில்களும் பெரிதும் பாதிக்கப்பட்டன.வைணவ சம்பிரதாயத்துக்கும் பின்னடைவு ஏற்பட்டது.
அந்தக் கால கட்டத்தில் தான், 1370 ஆம் ஆண்டு மாமுனிகள் அவதரித்தார்.
அவர் செய்த ரஹஸ்யக் கிரந்த வியாக்யானங்களும், திருவாய்மொழி காலட்சேபங் களும்
பல வித்வான்களையும் சாஸ்த்ர விற்பன்னர்களையும் அவருக்குச் சீடர்களாக்கின.
அவர்கள் மூலம் வைணவம் பெரிதும் வளர்ந்தது.திவ்ய தேசங்களில் கைங்கர்யம் செழித்தது.
மாமுனிகளால் உடையவர் காலத்தில் இருந்த மேன்மையை மீண்டும் அடைந்தது வைணவம்!!

18.ராமானுஜர் மனத்திலும், மாமுனிகள் மனத்திலும் இருந்து அருளும் பெருமான்:
அமுதனார், இராமாநுச நூற்றந்தாதியில்
“இருப்பிடம் வைகுந்தம், வேங்கடம்,மாலிருஞ்சோலை என்னும்,
பொருப்பிடம் மாயனுக்கு என்பர் நல்லோர் அவை தம்மோடும் வந்து,
இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து இன்றவன் வந்து இருப்பிடம்”என்று
பரவாசுதேவரானாலும்,திருவேங்கடவரானாலும்,அழகரானாலும் அவரவர் தம் இருப்பிடங் களுடனே வந்து,
ராமானுஜர் மனதில் இருந்து அருள்வார்கள் என்று பாடுகிறார்.

பிரதிவாதி பயங்கரம் அண்ணா,ஸ்ரீவேங்கடேச மங்களாசாசனத்தில்,
“ஸ்ரீமத் ஸுந்தர ஜாமாத்ரு முநி மாநஸ வாஸிநே!
ஸர்வலோக நிவாஸாய ஸ்ரீனிவாஸாய மங்களம்!!”
–(மணவாள மாமுனிகள் உளத்திருந்து பேருலகக் கணம் புரந்து,களித்தருளும் வேங்கடவா மங்களங்கள்) என்று பாடுகிறார்.

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ராமரும் ஸ்ரீ ராமானுஜரும் —

October 7, 2021

1–திரு அவதார ஒற்றுமை

சித்திரை ராமன், ராமானுஜர் இருவருமே
சூரியன் உச்சநிலையில் பிரகாசிக்கும்
சித்திரை மாதத்திலே அவதரித்தவர்கள்.
சைத்ர மாஸே ஸிதே பக்ஷே நவம் யாஞ்ச புனர்வஸு என்பது இராமர் அவதாரத்தைக் குறிக்கும் சுலோகம்.
(அதாவது சித்திரைநவமியில் புனர்பூசத்தில் அவதரித்தார்.)

ராமானுஜ அவதாரம் மேஷார்த்ரா ஸம்பவம் விஷ்ணோர் தர்ஸன ஸ்தாபனநோத் சுகம் என்று
மேஷ மாதமான சித்திரையில் நிகழ்ந்ததாக சுலோகம் குறிக்கிறது.
ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும்,
வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர் – ஏழ்பாரும்
உய்ய எதிராசர் உதித்தருளும் “சித்திரையில்
செய்ய திருவாதிரை” – என்று மாமுனிகள் இயற்றிய உபதேச இரத்தின மாலை,
இராமானுஜர் அவதாரத்தை இன்னும் சிறப்பாக கூறும்.

இருவருமே கடக லக்னத்தில் இத் தரணி வாழ அவதரித்தவர்கள்.

———–

ஸ்ரீ மான்கள்

நட்சத்திரம் ராமன் அவதரித்தது புனர்பூசம்
ஆயினும் பொதுவான பெருமாள் நட்சத்திரம் திருவோணம்.
ராமரின் மூல சொரூபமான பெருமாளின் நட்சத்திரம் திருவோணம்.
வைணவத்தில் திரு என்கிற அடைமொழியோடு இருக்கக்கூடிய இரட்டை நட்சத்திரங்களில்
ஒன்றில் எம்பெருமான் அவதரித்தான். அது திருவோணம்.
இரண்டாவது திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தவர் எம்பெருமானார். அதாவது ராமானுஜன்.

—————-

3-புத்திர காமேஷ்டி யாகம்-

ராமனுடைய அவதாரத்திற்காக, (அதாவது ராமனைப் பிள்ளையாகப் பெறுவதற்காக)
தசரதன், வசிஷ்டரின் ஆலோசனையின் பேரில், புத்திர காமேஷ்டி யாகம் செய்தார்.
அதனால் சாட்சாத் மகாவிஷ்ணுவே தசரதனுடைய பிள்ளையாக இம்மண்ணுலகில் அவதாரம் செய்தார்.

அதைப் போலவே,
ராமானுஜர் பெற்றோர்களான கேசவ சோமையாஜி காந்திமதி அம்மையாருக்கு,
பலகாலம் பிள்ளை இல்லாமல் இருந்து, அந்த புத்திரசோகம் தீர, திருக்கச்சி நம்பிகளின் ஆலோசனையின் பேரில்,
திருவல்லிக்கேணியில் புத்திரகாமேஷ்டி யாகம் இயற்றி, அதன் வழியாக ராமானுஜர்
இப்பூவுலகில் அவதரித்தார்.

————–

4-வைகுண்டம் பெற…

இந்த உலகம் வளமாகவும் நலமாகவும் வாழ வேண்டும். எல்லோரும் வைகுண்டத்தை அடையும் பேற்றினைத் தர வேண்டும்
என்பதற்காகவே, மேலே இருந்து கீழே இறங்கி (அவதாரம்) வந்தான்,
ராமன்.
புற்பா முதலா புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்குள் உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே

அதைப் போலவே இந்த உலகத்தில் இருக்கக் கூடிய ஒவ்வொரு ஆன்மாவும் கடைத்தேற வேண்டும் என்பதற்காகவே
ராமானுஜனுடைய அவதாரம்.
அதனால் அவரை அனைத்துலகும் வாழப் பிறந்த எதிராச மாமுனிவர் என்று கொண்டாடுகின்றோம்

—————

5-அழகு –

ராமா என்கிற பெயருக்குப் பிரமிக்கச் செய்பவன். பார்ப்பவர் விரும்பும் அழகு உடையவன்.
ஆடவர்கள் பெண்மையை விரும்பும் தன்மை உடையவன் என்று பொருள். இதைக் கம்பன்.

தோள்கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே
வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ்கொண்ட சமயத்து அன்னான் உருவுகண் டாரை ஒத்தார்- என்று வர்ணிக்கிறார்.
பும்ஸாம் த்ருஷ்டி ஸித்த அபஹாரிணாம் –
கண்டவர் தம் மனம் வழங்கும் அழகன் –

ராமானுஜர் வடிவழகும் அப்படிப்பட்டதே என்பதை கீழே இருக்கக் கூடிய
எம்பார் அருளிய பாசுரம் காட்டுகின்றது.
பற்பமெனத் திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும்
பாவனமாகிய பைந்துவராடை பதிந்த மருங்கழகும்
முப்புரி நூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்
கற்பகமே விழி கருணை பொழிந்திடு கமலக் கண்ணழகும்
காரிசுதன் கழல் சூடிய முடியும் கணநற் சிகைமுடியும்
எப்பொழுதும் எதிராசர் வடிவழகு என் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர் இல்லை எனக் கெதிர் இல்லை எனக்கெதிரே

——————-

6-வேதங்களையும்,
தர்மங்களையும்
காப்பாற்றுவதற்காக–திரு அவதாரங்கள்

வேதம் தான் ராமாயணமாக அவதரித்தது.
வேத நாயகன் தான் ராமனாக அவதரித்தான்.

ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்த்
தாழ் இரும் சடைகள் தாங்கித், தாங்கரும் தவ மேற்கொண்டு,
பூழி வெம் கானம் நண்ணிப், புண்ணியத் துறைகள் ஆடி,
ஏழிரண்டு ஆண்டில் வா – என்ற ஆணைக்கேற்ப,
காடு ஆளச் சென்றது, அங்கே இருக்கக்கூடிய துறவிகளைக் காப்பாற்றுவதற்காக என்பதை,
ராமாயணம் நமக்கு நன்றாகத் தெரிவிக்கிறது.

‘‘செருமுகத்துக் காத்தி என நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி” என்று கேட்கிறார் விஸ்வாமித்திரர்.
விசுவாமித்திரர் அழைக்க அவருடன் ராமன் சென்றதுகூட விசுவாமித்திரர் செய்கின்ற யாகத்தைக் காப்பாற்றுவதற்காக.

ஆரண்ய காண்டம் சர்க்கம் 17ல் ரிஷிகள் ராமனிடம் முறையிடுகிறார்கள்.
“ராமா! நாங்கள் அக்னி ஹோத்திரங்களையும், பருவ காலங்களில் இஷ்டிகளையும் செய்யும்போது,
ராட்சர்கள் ஓடிவந்து கெடுக்கிறார்கள். ராமா நீ யக்ஞ மூர்த்தி.
யாகங்களைக் கெடுக்கிறவர்கள் உனக்கே அபராதம் செய்தவர்கள் அல்லவா!
எனவே, நீயே அபயப் பிரதானம் தந்து வேத தர்மத்தைக் காக்க வேண்டும்.”

இப்போது ராமன் அவர்களிடம் சொல்கின்றான்.

‘‘ரிஷிகளே! நான் உங்களுக்கு சத்தியம் செய்கின்றேன். என் செல்வம், என் மனைவி, ஏன்… என் அன்புக்குரிய தம்பி,
எல்லோரையும் இழந்தாலும், நான் உங்களுக்கு தந்த வாக்குறுதிப்படி நடப்பேன்.
இதற்காகவே ராட்சஸர்களை பகைத்துக் கொண்டு சீதையைப் பிரிந்தார்.
யாகத்தைக் காப்பாற்றுவதன் மூலமாக, யாக மந்திரங்களாகிய வேதங்களைக் காப்பாற்றுகிறார்.
எனவே, ராமாவதாரத்தில் முக்கிய நோக்கமே சாதுக்களையும் வேதங்களையும் காப்பாற்றுவது.

ராமானுஜனுடைய அவதார நோக்கத்தையும் இதிலே பொருத்திப் பார்த்தால்,
அவரும் வேதங்களையும், வேதங்களின் தர்மங்களையும் காப்பாற்றுவதற்காகவே அவதரித்தார்.
வேதத்தின் உபநிடத வாக்கிய சூத்திரங்களான பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் செய்ததன் மூலம், அவர் வேத சம்ரட்சணம் செய்தார்.
தமிழ் வேதமான திருவாய்மொழியை நாடெங்கும் பரப்பி, அதன் மூலமாகவும், உபய வேதங்களையும் அவர் காத்தார் என்பது
ராமானுஜருக்கு கூடுதல் ஏற்றம்.
வேதத்தையும், வேத தர்மத்தையும் காப்பதற்காக, 74 சிம்மாசனாதிபதிகளையும் அவர் நியமித்தார்.

வேத தர்மத்தை ரட்சிப் பதற்காக சுவாமி ராமானுஜரும் மனைவியை பிரியும் சூழல் ஏற்பட்டது.
சீதையை பிரிந்து வேத தர்மத்தை காப்பாற்றுவேன் என்றான் ராமன்.
தன் மனைவியை பிரிந்து வேத தர்மத்தை இரட்சித்தார் ராமானுஜன்.
அதனால் தான் வேதம் தழைத்தது என்று திருவரங்கத்து அமுதனார் பாடுகிறார்.

பண் தரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய்மதமாய்-
விண்டிட எங்கள் இராமாநுச முனி வேழம் மெய்ம்மை-
கொண்ட நல் வேதக் கொழுந்தண்டமேந்திக் குவலயத்தே-
மண்டி வந்தேன்றது* வாதியர்காள்! உங்கள் வாழ்வற்றதே.

———-

7-வெற்றி -வில்லாலும் சொல்லாலும்

ராமனைப் பொறுத்த வரையிலே
வெற்றியைத் தவிர வேறு அறியாதவர். அவர் பெற்ற வெற்றி வில் அம்புகளால் பெற்ற வெற்றி.
அதைப் போலவே ராமானுஜர் பற்பல வாதப் பிரதிவாதங்களை நடத்தினார்.
அதன் மூலமாக யாதவப் பிரகாசர் தொடங்கி, யஞ்ஜமூர்த்தி வரையில் வென்று, தம்முடைய சமய மரபுக்கு கொண்டு வந்தார்.
அவர் எந்த சாஸ்திர தர்க்க வாதங்களிலும் தோற்றது கிடையாது.

ராமனின் வில் அம்பும், ராமானுஜரின் சொல் அம்பும் தோற்றதேயில்லை.
ராமன் தனி ஆளாக பன்னீராயிரம் போர்வீரர்களை கர தூஷண வதத்திலே வென்றார்.
ராமானுஜர் மேல்கோட்டையில் தம்முடன் எதிர்த்து வாதிட்ட பன்னீராயிரம் சமணர்களை தனி ஒருவராக தர்க்க வாதத்தில் வென்றார்.

ராமரின் வில் அம்பும் ராமானுஜரின் சொல் அம்பும் அமோகம் –

———-

8-ஆசார்யர்களாக இருந்து பெருமை பெற்றனர்  

வசிஷ்டர் விசுவாமித்திரர் போன்றவர்கள் ராமனுக்கு ஆசார்யர்களாக இருந்து,
ராமனால் பெருமை பெற்றனர்.

ராமானுஜரின் வாழ்வில் பெரிய நம்பிகள், திருக்கோட்டியூர் நம்பிகள் உள்ளிட்ட ஆசாரியர்கள்
ராமானுஜரால் பெருமை பெற்றனர்.

———–

9-எல்லோரையும் அரவணைத்து…

குகன் தொடங்கி சுக்ரீவன், வீடணன் வரை எல்லோரையும் அரவணைத்து தம்முடைய உறவுகளாக
தம்பிகளாக ஏற்றுக் கொண்டான் ராமன்.
ராமானுஜரும் தாம் வாதில் வென்றவருக்கு மடாதிபதி பட்டம் சூட்டி தன்னுடைய பெயரையே கொடுத்து எம்பெருமானார் ஆக்கினார்.
அவருக்கு அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்கிற பெயரையே சூட்டினார்.
அதைப்போலவே தன்னுடைய சகோதரி பையனான கோவிந்தனை திருத்திப் பணி கொண்டு
அவருக்கும் எம்பார் என்கிற பெயரை வழங்கினார்.

ராமன் வேடுவர் குல குகன் போன்றவர்களையும் தமது உசாத் துணையாகக் கொண்டு கைங்கரியம் பெற்றது போல,
ராமானுஜரும் வடுக நம்பி, பிள்ளை உறங்காவில்லிதாசர் போன்ற வேடர் குலத்தைச் சேர்ந்தவர்களையும்
தம்முடைய துணைவராக வைத்துக் கொண்டு, நட்பு பாராட்டி, அவர்கள் பெருமையை உலகறியச் செய்தார்.

—————

10-சரணாகதி சாஸ்திரம்

சரணாகதி சாஸ்திரத்தைக் காட்டிக் கொடுத்தார் ராமன்.
அபயம் என்று அடைந்துவிட்டால் அவர்களை காப்பாற்றாமல் ஓய மாட்டேன்.
அதுவே என்னுடைய வாழ்நாளில் நோக்கம் என்பதையே வீடண சரணாகதி படலத்தில்,
தனது கடற்கரை வார்த்தையாக, (சரம ஸ்லோகமாக ) ராமபிரான் சாதித்தார்.

(ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ் மீதி ஸ யாசதே அபயம் சர்வ பூதேப்யோ ததாம் யேதத் வ்ரதம் மம-யுத்த -18-33-)

(இதன் பொருள்: ஒரு தரமே என்னை பிரபத்தி பண்ணினவன் பொருட்டும், இனி நான் உனக்கு அடியேனாய் ஆகிறேன்
என்று யாசிக்கிறவன் பொருட்டும், எல்லா பிராணிகள் இடத்தும் நான் அபயம் அளிக்கிறேன். இது எனக்கு விட முடியாத சங்கல்பம்)

வீடணன் வந்து சேர்ந்தபோது ராமன், அவனைச் சேர்த்துக்கொள்வது குறித்து அபிப்பிராயம் கேட்கிறார்.
பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்தார்கள். அனேகமாக அனுமனைத் தவிர,
யாருமே வீடணனைச் சேர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை.
அனுமன் கூட அவன் நல்லவன் என்பதால் சேர்த்துக் கொள்ளலாம் என்று தன்னுடைய கருத்தை வெளியிட்டார்.
அப்போது நிறைவாக ராமன் வெளியிட்ட கருத்து.

“அவன் கெட்டவனாகவே இருந்தாலும் கூட, என்னுடைய திருவடியில் சரணடைந்து விட்டால்,
அவனைக் காப்பாற்றுவதே என்னுடைய வாழ்வின் நோக்கம் என்று சொல்லிச் சேர்த்துக் கொண்டார்.

சரணாகதியின் உச்ச நிலை இது. அதனால்தான் போர்க்களத்திலே கூட, தன்னோடு எதிர் அம்பு கோத்த ராவணனே எதிர் நின்ற போதும்,
அவன் ஆயுதங்களை இழந்து தவித்தபோதும், இன்றுபோய் நாளை வா என்று சொன்னார்.
கச்சாநுஜாநாமி ரணார்திதஸ்த்வம் ப்ரவிஸ்ய ராத்ரிசரராஜ லங்காம் ஆஸ்வாஸ்ய நிர்யாஹி ரதீசதன்வீ
ததாபலம் த்ரக்ஷ்யஸி மே ரதஸ்த என்பது வான்மீகி சுலோகம்.

“இன்று உன்னிடம் ஆயுதம் இல்லை.ரதம் இல்லை. தவிர சோர்வாக இருக்கிறாய்.இன்று திரும்பிப் போ.
நாளை வா. என் போர் வீரம் காண்பாய்.” இதையே கம்பன் பாடுவது இன்னும் அற்புதம்.

‘ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு
நாளை வா’ என நல்கினன்- நாகு இளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்.

இப்படி எதிரிக்கும் அபய பிரதானம் தந்தவன் ராமன்.

ராமானுஜரும் ஒரு பங்குனி உத்திரத் திருநாளில், பிராட்டியும் பெருமாளும் சேர்த்தியாக இருக்கக்கூடிய நேரத்தில்,
“இந்த உலக மக்களெல்லாம் உன்னிடத்திலே சரண் அடைவார்களோ, சரணடைய மாட்டார்களோ தெரியாது;
ஆனால், அவர்களுக்காக, இன்று உங்கள் இருவர் திருவடிகளிலே நான் சரணம் அடைகிறேன்” என்று சொல்லி
அதற்காகவே கத்யத்ரயம் என்கின்ற மூன்று நூல்களை இயற்றினார். அந்த மூன்று நூல்களின் ஒன்றுதான் சரணாகதி கத்யம்.

————

11-சரணாகத ரக்ஷணம்.

பெண்ணுக்கு சாப விமோசனம் தன் திருவடி பலத்தால் அகலிகைக்கு சாப விமோசனம் தந்தான் ராமன்.
காஞ்சி மன்னனின் மகளுக்கு ப்ரம்ம ராட்ஷஸ் பிடித்து அவள் புத்தி ஸ்வாதீனமில்லாமல் இருந்தபோது ராமானுஜர்
தம் திருவடியை அவள் சிரசின் மீது வைத்து குணமாக்கி சாப விமோசனம் தந்தார்.

ராமன் ஜடாயு என்கிற பறவைக்கு தன் சங்கல்பத்தினால் மோட்சம் அளித்தார்.
ராமானுஜரும் ஒரு தயிர் விற்கும் பெண்மணிக்கு ஓலை கொடுத்து மோட்சம் கொடுத்தார்.

—————

12-திருவரங்கனிடத்திலே ஈடுபாடு

வைணவத்தில் கோயில் என்று சொன்னால் அது திருவரங்கத்தைக் குறிக்கும்.
திருவரங்கப் பெருமானை பெரிய பெருமாள் என்பர்.
அப்படிச் சொல்வதற்குக் காரணம், பெருமாளாகிய ராமபிரான் தன்னுடைய குல தெய்வமாக வழிபட்ட பெருமாள் அரங்கநாதர்.
அரங்கனுக்குக் கைங்கரியம் செய்து கொண்டு பூஜித்தவர் ராமபிரான்.

ஆராத அருளமுதம் பொதிந்த கோயில்
அம்புயத்தோன் அயோத்தி மன்னற் களித்த கோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்குத் துணையாங் கோயில்
சேராத பயனல்லாஞ் சேர்க்குங் கோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்த கோயில்
தீராத வினையனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்க மெனத் திகழுங் கோயில் தானே!

அதே அரங்கனுக்குக் கைங்கரியம் செய்து கொண்டு திருவரங்க செல்வம் முற்றும் திருத்தி வைத்து
திருவரங்க கோயிலின் ஏற்றத்தை திக்கெல்லாம் பரப்பியவர் ராமானுஜர்.
ராமனுக்கும் ராமானுஜருக்கும் அரங்கனிடத்திலே அதிக ஈடுபாடு என்பது அவர்கள் இருவருக்குமான ஒற்றுமை.

—————-

13-திருநாமச் சிறப்பு

“ராம” என்னும் நாமம் சொல்லும் பொழுது, பகவானுடைய நாமத்தை மட்டும் தான் உச்சரிக்கிறோம்.
ஆனால் “ராமானுஜ” என்கிற நாமத்தை உச்சரிக்கின்ற போது,
பரம ஆச்சார்யனின் திருநாமத்தையும் சேர்த்து உச்சரிக்கிறோம் என்பது சிறப்பு அல்லவா.
இப்படித் தொட்ட தொட்ட இடமெல்லாம் ராமருக்கும் ராமானுஜருக்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டு வியக்கலாம்.

—————–

14-பஞ்ச சம்ஸ்காரம் ராமர் சந்நிதியில் மதுராந்தகம்

ஆசார்யர்களோடும் தொடர்பு பெற்று விளங்குகிறது இந்தத் தலம்.
ஆதியில் வகுளாரண்யம் என்று பெயர் பெற்ற மகிழ மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாகத் திகழ்ந்தது.
கிளியாறு என்ற ஆற்றின் கரையில் அமைந்துள்ள இது மதுராந்தகச் சோழரின் நினைவாக இப்பெயர் பெற்றதாகக் கூறுவர்.
மதுரமான (இனிமையான) பல புண்யதீர்த்தங்களையுடைய இடம் என்றும் பொருள் கொள்ளலாம்.
கல்வெட்டுக்களில் மதுராந்தக சதுர்வேதி மங்கலம் என்று குறிப்பிடப்பட்டுள்ள இவ்வூர்
சோழ மன்னனால் வேதம் ஓதும் அந்தணர்களுக்கு மான்யமாக அளிக்கப்பட்டது.
ப்ரஹ்ம வைர்த்தம், பார்க்கவம் போன்ற புராணங்களில் இந்தத் தல மஹாத்மியம் கூறப்பட்டுள்ளது.

விபண்டக மஹர்ஷி கிளியாற்றின் கரையில் தவம் புரிந்தபோது ராமபிரான் வனவாசம் முடித்துத் திரும்பி
அயோத்தி செல்லும் போது புஷ்பக விமானம் இத்தலத்தைக் கடக்க முடியாமல் நின்றது.
ஸீதாபிராட்டியின் கையைப் பற்றி விமானத்திலிருந்து இறங்கி முனிவருக்கு ராமபிரான் காட்சி அளித்த இடமே இத்திருத்தலம்.
5 நிலை கோபுரங்களுடன் கூடிய ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது இந்தத் தலம்.
சுகர் என்ற மஹர்ஷியும் தவம் செய்த இடம் இதே மதுராந்தகம் தான்.

கோவிலில் நின்றதிருக்கோலத்தில் மூலவராகக் கோதண்டராமர் கல்யாண கோலத்தில்
ஸீதை, லக்ஷ்மணருடன் காட்சி தருகிறார்.
உற்சவ மூர்த்தியான கோதண்ட ராமர் சற்றுப் பெரிய வடிவினராக ஸீதை லக்ஷ்மணருடன் ஸேவை ஸாதிக்கிறார்.
மூலவர் விபாண்டக மஹர்ஷிக்கு ஸேவை தந்த கோலத்தில் பாணிக்கிரகண பாணியில் ஸீதையின் கையைப் பற்றிக் கொண்டுள்ளார்.
விபாண்டக மஹர்ஷியும் ஸந்நிதியில் எழுந்தருளியுள்ளார்.

சற்றே சிறய அளவில் உள்ள மற்றொரு உற்சவமூர்த்தியே கருணாகரப் பெருமாள்.
அவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி உள்ளார்.
இவரையே ராமபிரானாக விபாண்டக மஹர்ஷி ஆராதித்துத் தனக்குக் காட்சி அளிக்கும்படி வேண்டினாராம்.
கருணாகரப் பெருமாளின் நாச்சியாரே ஜனகவல்லித் தாயார்.
இவர் தனி ஸந்நிதியில் மூலவராகவும், உற்சவராகவும் உள்ளார்.
எல்லா உற்சவங்களும் கருணாகரப் பெருமாளுக்கே.
ஸ்ரீ ராமநவமி மஹோத்சவம் மட்டும் கோதண்ட ராமருக்கு. உற்சவ மூர்த்தி கண்ணன இவர் ஸந்நிதியில் உள்ளார்.

மற்றும் பிற ஸந்நிதிகளில் ஆண்டாள், விஷ்வக்ஸேனர், ராமானுஜர், பெரியநம்பிகள்,
நிகமாந்த மஹாதேசிகன், மணவாள மாமுனிகள் உளளனர்.
ஆஞ்சனேயர் ராமபிரான் கோவிலுக்கு எதிரில் தனி ஸந்நிதி கொண்டு விளங்குகிறார்.
லக்ஷ்மி ந்ருஸிம்ஹர், உற்சவரான ப்ரஹ்லாதவரதர் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் உள்ளார்.
சக்கரத்தாழ்வாரும், ந்ருஸிம்ஹரும் சேர்ந்து ஒரு ஸந்நிதியில் உள்ளனர்.
சக்கரத்தாழ்வாரின் உற்சவ மூர்த்தியும் அங்கேயே உள்ளது.

இந்தக் கோவில் புஷ்கரிணியை ராமச்சந்திர புஷ்கரிணி என்றழைக்கின்றனர்.
சரித்திரப்புகழ் பெற்ற ஏரியைக் காணக்கோவில் அருகில் உள்ள பாதை வழியே படிகள் உள்ளன.
ஏரிக்கும் இந்தப் படிகள் உள்ள நடைபாதைக்கும் நடுவில் வண்டிகள் செல்லும் பாதை உள்ளது.
இங்கு அஹோபில மடத்தினரால் நடத்தப்படும் ஸம்ஸ்க்ருதக் கல்லூரியும், ஓரியண்டல் பள்ளியும் உள்ளன.

ஒரு காலம். 1825ஆம்ஆண்டு ஏரி மழையில் நிறைந்து ததும்புகிறது. தண்ணீரின் வேகத்திற்கு கரைகள் ஈடுகொடுக்கவில்லை.
எத்தனை முறை அடைத்தாலும் கரைஒருபக்கம் உடைந்துகொண்டே இருக்கிறது.
அப்போது கிழக்கிந்திய அதிகாரி லயனல் பிளேஸ் பொறுப்பில் இருக்கிறார்.
கரை உடைபடுவதை தடுக்க வழி தேடி அவர் தவித்தபோது, ஒருவர் சொல்கிறார்.
இங்குள்ள கோதண்டராமர் மிகவும் சக்தி வாய்ந்தவர், பாழ்பட்டு இருக்கும் ஜனகவல்லி தாயார் சன்னதியை சரிசெய்து
கொடுப்பதாக வேண்டிக்கொள்ளுங்கள் என்கிறார்.
அவரை எள்ளி நகையாடி அனுப்பிவிட்டாலும் லயனல் பிளேசுக்கு உள்ளூர ஒரு நப்பாசை. வேண்டிக்கொள்கிறார்.

வேண்டிக்கொண்ட நாளில் இடி, மின்னல், மழை..மனம் பதைக்கிறது. ஏரி உடைந்தால் மதுராந்தகம் மட்டுமின்றி
சுற்றுவட்டார கிராமங்களும் மூழ்கிவிடும். எத்தனை உயிர் போகுமோ? நினைக்கவே பதறியது. குதிரையில் ஏறி கிளம்புகிறார்.
மழை கொஞ்சம் கூட விடுவதாக இல்லை. பதற்றத்தோடு கரையை நெருங்குகிறார்.
தூரத்தில் கரையோரம் இரண்டு பேர் நின்றிருக்கிறார்கள்.
நல்ல உயரம்.. கருநிற வைரமாய் ஜொலிக்கும் ஒருவரின் கைகளில் வில் ஏந்தி நிற்கிறார்,
பக்கத்தில் அவருக்கு ஈடு கொடுத்து மற்றொருவரும் வில்லேந்தி நிற்கிறார். இருவரும் கரையோரம் நடக்கிறார்கள்.
லயனல் பிளேசுக்கு பதற்றம் உண்டாகிறது. எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்றிருக்கும் கரை மேல் நிற்கிறார்களே.
அருகில் போக நினைக்கிறார். போக முடியவில்லை. ஒரு ஒளிப்பிழம்பாக அவர்கள் இருவரும் கரையில் நடந்தபடியே இருக்கிறார்கள்.
விடிகிறது. அத்தனை மழைக்கும் கரை உடையவில்லை. லயனல் பிளேஸ் ஆச்சரியத்தில் உறைகிறார்.
வந்தது இதோ இந்த ஏரி காத்த ராமரும் லட்சுமணரும் தான் என்று உணர்ந்து மெய் சிலிர்த்து போகிறார்.
பிறகு வேண்டியபடி அவர் ஜனகவல்லித் தாயார் சன்னதியை சீரமைத்து தருகிறார். அதற்கான ஆதாரங்கள் கோவிலில் இன்றும் இருக்கின்றன.

ஆனி மாத ப்ரஹ்மோத்சவமும், பங்குனி மாதத் திருக்கல்யாண உத்சவமும், மார்கழி மாத அத்யயன உத்சவமும் இங்கு புகழ் பெற்றவை

வைணவ சித்தாந்தத்தின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டிய ஸ்ரீ ராமானுஜருக்கு வைஷ்ணவ
தீக்ஷை யாகிய பஞ்ச ஸம்ஸ்காரங்கள் செய்யப்பட்டது இத்தலத்தில் உள்ள மகிழ மரத்தடியில் தான்.
மகிழ மரமே இந்தத் தல வ்ருக்ஷம்.
இங்கே ஆவணி சுக்ல பக்ஷ பஞ்சமியில் சுவாமி ராமானுஜருக்கு
ஸ்ரீ பெரிய நம்பியால் த்வய மந்திரம் உபதேசிக்கப்பட்டு பஞ்ச சம்ஸ்காரம் செய்விக்கப்பட்டது.
அதனால் மதுராந்தகத்தை ”த்வயம் விளைந்த திருப்பதி” என ஸ்ரீ வைஷ்ணவர்கள் சொல்வார்கள்.

ராமானுஜருக்கு,பெரிய நம்பிகள் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து வைத்த தாமிரத்தால் ஆன,
சங்கு, சக்கரம்,பெரிய நம்பிகளின் திருவாராதனைப் பெருமாளான ஶ்ரீ நவநீத கிருஷ்ணர்,
தாமிரத்தால் ஆன திருவாராதனை வட்டில்கள் ஆகியவை இன்றும் உள்ளன.
அவற்றுக்கும் பூஜை நடைபெற்று வருகிறது. 1937 ல் தான் இவை கண்டு பிடிக்கப்பட்டன.
சேத் மகன்லால் பங்கூர் என்பவர் 1937 ல் கோவில் திருப்பணி செய்தார்.
அப்பொழுது கோவில் திருச்சுற்றில் ஒரு குகை இருந்ததைப் பார்த்தார்கள்.
அதைத் தோண்டிப் பார்த்த போது 20 அடிக்குக் கீழே ஒரு சிறிய மண்டபமும்,
அதனுள் மேற்குறிப்பிட்ட திருச்சின்னங்களும் இருந்தன.

பரதாழ்வானுக்கு அடி சூடும் அரசு அளித்தது போலவே
பெரிய நம்பியும் தம்மை ஆளவந்தார் திருவடி ஸ்தானமாகவே கொண்டு பஞ்ச ஸம்ஸ்காரம் பண்ணி அருளி
குரு பரம்பரை பூர்வகமாக ரஹஸ்ய த்ரயங்களையும் உபதேசித்து அருளுகிறார்

ஸ்ரீ ராமாநுஜரே , இதையெல்லாம் நான் உமக்கு செய்வித்தேன்.
எப்படி ஸ்ரீ ராமன் தனது பாதுகைகளை, பரதாழ்வானிடம் அளித்து, இனி நீ நாடாளவேண்டும் என்று கூறி காடு ஏகினாரோ,
அவ்வாறு ஸ்வாமி ஆளவந்தார் தனது பாதுகைகளை (நிர்வாக பொறுப்பை) உம்மிடம் அளித்து
இனி நீவிர் தரிசன நிர்வாகம் செலுத்தவேண்டும் என கூறிவிட்டு ஸ்ரீ வைகுண்டம் சென்றுவிட்டார்.
அடியேன் சுவாமி ஆளவந்தாரின் கட்டளையை நிறைவேற்றினேன்.
இனி தாங்கள் பொறுப்பேற்று அவர் விருப்பத்தை பூர்த்தி செய்யவேண்டும் ” என்கிறார் பெரிய நம்பி.

லட்சுமிநாதன் ஒரு பெரிய கருணை நிறைந்த கார்மேகம்,
அதிலிருந்து ஞானம் என்கிற ஜலம் பெருகி அதை நம்மாழ்வார் எடுத்து நாதமுனி என்ற மலை சிகரத்தில் பொழியச் செய்து,
அந்த ஜலதாரை அகண்டமாக பெருகி இரு நீர் வீழ்ச்சிகளாகியது.
அந்த ரெண்டு நீர்வீழ்ச்சிகள் தான் உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி ஆகியோர்.
நீர்வீழ்ச்சிகளின் ஜலம் பிரவாகமாக ஓடி ஒரு ஆறாகியது. அந்த ஆறு தான் ஆளவந்தார்.
அந்த ஆறு அப்புறம் ஐந்து ‘பெரிய” கால்வாய்களாக பிரிந்து ஓடும் என்று ‘ நம்பி’ னார்கள்.
அவையே ஸ்ரீ பெரிய நம்பி, பெரிய திருமலை நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திருவரங்க பெருமாள் அரையர்,
திருமாலை ஆண்டான் ஆகியோர்.
அதோடு மட்டும் இல்லை. ஆற்றின் நீர் ஒரு பெரிய ஏரியாக உருமாறியது. அதுவே ஸ்ரீ ராமானுஜர்.
அந்த பெரிய ஏரிக்கு 74 கணவாய்கள், கண்மாய்கள், அவர்கள் தான் சிம்ஹாசனாதிபதிகள்.
ஸ்ரீ வைணவம் பெருகி இவர்கள் மூலம் எங்கும் பரவியது.

————-

15-இராமாயண காலஷேபம் பிதாமஹருக்கும் பிதா மஹாரான திருமலை நம்பி இடம்

பிரமாணம் ப்ரமேய பிரமாதா
இருப்பிடம் வைகுண்டம் வேங்கடம் -ப்ரமேயம் பிரமாதா எம்பெருமான் மனதுக்குள் வந்தார்
பிரமாணம் -படி கொண்ட கீர்த்தி ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் தானே இவர் திரு உள்ளம்
பிரமாதாவான ஆச்சார்யர் திருவடிகளை பற்றவே -ஒன்றைப் பற்றவே -பிரமாணமும் ப்ரமேயமும் கை புகுமே
உன்னுடைய கருணையை விட வேறே உபாயம் இல்லை -மா முனிகளும் அருளிச் செய்கிறார் அன்றோ –

————

16-அனைத்திலும் விஞ்சி –

கருணையால் மிக்கு
அழகால் மிக்கு
சத்ருக்கனன் படி
ராமானுஜ திவ்ய ஆஜ்ஜா -திருவரங்கம் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே

ராமர் கோஷ்ட்டி ராமானுஜர் கோஷ்ட்டி வாசி அறிந்து விஸ்வஸித்து இரும் பிள்ளை உறங்கா வல்லி தாசர்
மிதுனத்தில் சரணாகதி -கத்ய த்ரயம்

ஸ்ரீ ரெங்க நாயகியாரே ஸ்ரீ சீதா பிராட்டி
திருத்திப் பணி கொள்ளும் பொழுது
தமது அந்தரங்க கிங்கர்களையே கொண்டு
பரிகரங்களை மாற்ற வேண்டாம் -ஸ்ரீ சீதா குணம்

லகுதரா ராமஸ்ய கோஷ்ட்டி
திருவடியை மறுதலித்து ராக்ஷஸிகளை ரக்ஷித்து அருளி –
பரிகரங்கள் தவறே இழைத்தாலும் மாற்ற வேண்டாம்
நம்பெருமாள் தானே ராமனாகவே சொல்லிக் கொண்டார்
ராமோ த்விர் ந பாஷயே
ஏலாப்பொய்கள் பேசும் கண்ணன் அல்ல -என்றாரே –

ராமானுஜன் -ராமன் செய்தவற்றை விஞ்சி செய்தலால் இவரே அண்ணன் ஸ்தானம்

——————————————-

நான்காவது ராமரும், நான்காவது லக்ஷ்மணரும்-

மாசி மகம் மகத்தான, மாசில்லாத, மணக்கால் நம்பி ஸ்வாமி திருநட்சித்திரம்.

ஸ்வாமியின் தனியன்:

“அயத்நதோ யாமுநம் ஆத்ம தாஸம் அலர்க்க பத்ரார்ப்பண நிஷ்க்ரயேண |
ய: க்ரீதவான் ஆஸ்தித யௌவராஜ்யம் நமாமிதம் ராமமேய ஸத்வம் ||”

“பட்டத்து இளவரசாகிய யாமுனாசார் யரைத் தூதுவளை தந்து,மிக எளிதாகத் திருத்திப் பணிகொண்ட
ஸ்ரீராம மிச்ரர் எனும் அளவிலா ஸாத்விகோத்தமரை வணங்குகிறேன்.”

இவருக்கும் ஸ்ரீ ராமானுஜருக்கும் உள்ள ஒற்றுமை ஆய்ந்து பார்ப்போம்.

ஶ்ரீரங்கத்துக்கு அருகில் உள்ள அன்பில் என்னும் ஊரின் கிராமப் பகுதியான மணக்கால் என்னுமிடத்தில் அவதரித்தார்
‘ராம மிஸ்ரர்.’ நாம் நாளும் ஸ்தோத்திரம் செய்யும் குருபரம்பரை ஸ்லோகத்தில் உள்ள ராம மிஸ்ரர் இவரே.
இவரை நம் சம்பிரதாயத்தில் நான்காவது ராமராக பரசு ராமர்,சீதா ராமர்,பல ராமருக்குப் பின் கொண்டாடுகிறார்கள்.

ஸ்ரீதேசிகன் ஸ்வாமி “யதிராஜ சப்ததி”–7 ஆவது ஸ்லோகத்தில்,
“அனுஜ்ஜித ஷமாயோகம்,
(பரசுராமர் பொறாமையால்,
ராமபிரானிடமே சண்டையிட்டார்.கோபத்தால் சத்திரிய குலத்தையே அழித்தார்.
ஆனால் மணக்கால் நம்பிகளிடம் இந்தக் குணங்கள் துளியும் இல்லை)

அபுண்ய ஜனபாடகம்,
(ராமர் புண்ய ஜனங்கள் என்று அழைக்கப் பட்ட ராட்சசர்களை அழித்தார்.
நம்பி யாரையும் அழிக்கவில்லை.புண்ய ஜனங்களுக்கு உபதேசித்தார்/உதவினார்)

அஷ்புருஷ்த மத ராகம்,
(பலராமர் லெளகீகச் செயல்களில் அதிக ஈடுபாடு/ருசி வைத்தார்;
நம்பி எதன் மேலும் பற்று/அக்கறை இல்லாமல் பகவத்/பாகவத/ஆசார்ய கைங்கர்யமே பிரதானமாக இருந்தார்)

தும் ராமம் துரியம் உபாஸ்மகே”
(குறை/குற்றம் ஒன்றில்லாத நான்காவது ராமரான ராம மிஸ்ரரை உபாசிப்போம்)
என்று மணக்கால் நம்பியைக் கொண்டாடுகிறார்.

அந்த வகையில் ஆதிசேஷனின் அவதாரங்களான இளைய பெருமாள்
(லட்சுமணர்),பல ராமர், லட்சுமணரின் அம்சமான ஆழ்வார் திருநகரி உறங்காப் புளிய மரம் ஆகியோருக்குப் பின்
நான்காவது லட்சுமணர் நம் லட்சுமண முனி ராமானுஜர் ஆவார்.

2.மண்ணில் மார்புற, விழுந்த மஹநீயர்கள்

மணக்கால் நம்பியின் ஆசார்யர் ஶ்ரீ உய்யக்கொண்டாரின் தேவியர், இளமையிலேயே பரம பதம் அடைந்து விட்டதால்,
அவருடைய குடும்ப காரியங்களையும்,இரு திருக் குமாரத்திகளையும் கவனித்துக் கொண்டார் உத்தம சீடர் நம்பி.
ஒரு நாள் காலையில்,பெண்குழந்தைகள் இருவரையும் ஆற்றில் நீராடவைத்துக் கூட்டி வரும்போது வழியில் ஓரிடத்தில்
சேறும்,சகதியுமாக இருந்தது.அவர்கள் அந்த இடத்தைத் தாண்ட முடிய வில்லை.நம்பிகள் அந்த சேற்றின் மீது குப்புறப் படுத்தார்.
அவர் முதுகின் மீது ஏறிச் சென்று குழந்தைகள அந்த இடத்தைக் கடந்தனர் !
அதனாலேயே அவர் மணல்(க்) கால் நம்பி ஆனார் என்றும்,
அவர் இருந்த கிராமமும் மணக்கால் என்றழைக்கப்பட்டது என்றும் ஒரு கூற்று உண்டு.!!

ஒரு சமயம்,ஶ்ரீரங்கத்தில் ராமாநுஜருக்கு உணவில் விஷம் கலந்து விட்டனர்.(உஞ்சவிருத்தியின் போது).
அந்த சூழ்நிலையில் அவர் பல நாட்கள் உண்ணாவிரதம் இருக்க நேரிட்டது.
இதைச் செவியுற்ற ஆசார்யர் திருக்கோஷ்டியூர் நம்பி,அருந்தவச் சீடரைப் பார்க்க விரைந்து வந்தார்.
தம் ஆசார்யர் வருகிறார் என்றறிந்து,(திருமேனி மிகத் தளர்ந்த நிலையிலும்)
அவரை எதிர்கொண்டு அழைக்க ராமானுஜர் திருக்காவேரிக்குச் சென்றார்.
ஆசார்யரைக் கண்டவுடன், அந்த மத்யான வெயிலில்,காவிரியின் சுடுமணலில் விழுந்து தண்டம் சமர்ப்பித்தார்.
யாராவது தண்டம் சமர்ப்பித்தால்,ஆசி கூறி உடனே எழச்சொல்லி விடுவார்கள் பெரியவர்கள்.
ஆனால் ஆசார்யர் ஒன்றும் சொல்லாமல் சுற்று முற்றும் பார்த்தார்.
சிறிதுநேரம்,உடையவர் சுடு மணலில் கிடந்தார்.அங்கு சுற்றி நின்றிருந்தவர்களும் ஒன்றும் சொல்ல முடியாமல் தவித்தனர்.

அப்போது கிடாம்பி ஆச்சான் என்பவர் ஓடி வந்து நம்பியைப் பார்த்து
”இது,என்ன ஆசார்ய, சிஷ்ய நிஷ்டை”என்று கூறிவிட்டு,ராமானுஜரை அள்ளி எடுத்துக் கொண்டார்.
உடனே நம்பிகள் ”உம் போன்ற ஒருவர் வர மாட்டாரா, என்று தான்காத்திருந்தேன்,”
என்று அவரைத் தழுவிக் கொண்டு,
“இனிமேல் நீரே உடையவரை நன்றாகப் பார்த்துக்கொள்ளும்.அவருக்குத் தளிகை செய்வது, திருமேனியைக்
கவனிப்பது போன்றவற்றைக் குறைவின்றி நடத்தி வாரும்”என்று நியமித்தார்.

3.)தூது விடுத்து,வைணவம் வளர்த்த, தூய் மனத்துப் பெரியோர் !!

நம் சம்பிரதாயத்தில் தூதுக்கு ஒரு தனி வலிமை உண்டு.
ஶ்ரீராமாயணத்தில் ஆஞ்சநேயர் தூது,
மஹாபாரதத்தில் பகவான் கிருஷ்ணரின் தூது என்று.
அந்த வகையில் இந்த நான்காவது ராமர்,சோழ நாட்டின் ஒரு பகுதிக்கு மன்னராக விளங்கிய ஆளவந்தாருக்கு
“தூதுவளைக் கீரையையே” தூது அனுப்பினார்.
மன்னரை ஒரு சாமான்யர் எளிதில் சந்திக்க முடியாததால், அவருக்குப் பிடித்தமான தூதுவளைக் கீரையை
அரண்மனைக்குத் தினமும் கொடுத்து வந்தார் ராம மிஸ்ரர்.
திடீரென்று ஒருநாள் நிறுத்தி விட்டார்.
இதனால் ஆளவந்தாருக்கு ஆர்வத்தைத் தூண்டி,இவரை அழைத்து வரச்செய்து சந்திக்கும், சூழ்நிலையை உண்டாக்கி விட்டார்.
அந்த முதல் சந்திப்பையும், அதனால் ஏற்பட்ட மற்ற சந்திப்புகளை யும், பயன்படுத்தி அரசருக்கு,
ஶ்ரீவைஷ்ணவத்தைப் பற்றி எடுத்துரைத்து, ஶ்ரீரங்கத்துக்கு அழைத்து வந்து,பெரிய பெருமாள் முன்னர் நிறுத்தி விட்டார்.
அன்று வந்தவர் அங்கேயே இருந்து விட்டார்.அரசர் ஆளவந்தார், “பரமாசார்யர்” ஆளவந்தாராகி விட்டார்.

ராமானுஜர் தம் உத்தமசீடர் முக்குறும்பு அறுத்த கூரத்தாழ்வானை பெரிய கோயில் நம்பியிடம்,
தூது அனுப்பிஅவரிடம் இருந்த கோயில் பொறுப்பையும்,சாவியையும் வாங்கினார்.
சாவி மட்டுமா கிடைத்தது? அரசர் ஆளவந்தார் ஆசார்யராக மலர்ந்ததைப் போல்,
பெரிய கோயில் நம்பி,”திருவரங்கத்து அமுதனார்” ஆக மலர்ந்தார்..
நாம் நாளும் சேவித்து இன்புறுவதற்கு “இராமானுச நூற்றந்தாதி” என்னும் பிரபன்ன காயத்ரியைப் பாடிக் கொடுத்தார்.

4.பகவத் கீதைக்கு பாஷ்யம் சொன்ன, ஞானாசார்யர்கள்:

தூதுவளை கொடுத்து அரண்மனைக்குள் சென்ற மணக்கால் நம்பி
ஆளவந்தாருக்கு பகவத் கீதையின் 18 அத்யாயங்களையும் ஒவ்வொரு முறையும் வரிசையாக விளக்கி உரைத்து
அவரைத் திருத்திப்பணி கொண்டார்.

நம் போன்றோரைத் திருத்திப் பணி கொள்ள நவரத்தினங்களை வழங்கிய எம்பெருமானார் அருமையான
“கீதா பாஷ்யம்” அருளிச் செய்தார்.

5.பெண் குழந்தைகளைப் பேணிக் காத்த பேராளர்கள்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெண் குழந்தைகளை மணக்கால் நம்பி எப்படிப் போற்றினார் என்று (குறிப்பு 2)பார்த்தோம்.

உடையவரின் ஆசார்யர் பெரியநம்பி ஸ்வாமியின் திருக் குமாரத்தி,
அத்துழாய்க்குப் புகுந்த வீட்டார் பல பிரச்னை களை ஏற்படுத்தினர்.
அந்தக் காலத்து வழக்கப்படி,பெண் வீட்டுச் சீர் வரிசையுடன் “சீதனவெள்ளாட்டி” என்று ஒருவரை,
வேலக்காரர்(காரி) ஆகவும் அனுப்ப வேண்டும்.பெரிய நம்பிகளுக்கு அவ்வாறு அனுப்பும் அளவு வசதி யில்லை.
ஆனால் புகுந்தவீட்டார் அத்துழாயிடம் அடிக்கடி சொல்லிக் காட்டினர்.எனவே அவர் தம் தந்தை யாரிடம் முறையிட்டார்.
அவர் ‘என்னிடம் சொல்லி என்ன பயன்?உன் அண்ணன் ராமானுஜரிடம்சொல்’என்றார்.
ராமனுஜர் உடனே அதற்கு ஏற்பாடு செய்தார். அதுவும் எத்துனையோ பேர் இருக்க,தமக்கு மிக வேண்டியவரும்,
துறவியாகி அனைத்து ஆசைகளயும் விட்டாலும் முதலியாண்டானை விட முடியாது என்று சொல்லும்
அளவுக்கு,உயர்ந்த ஆசார்யர் முதலியாண்டானை அனுப்பி வைத்தார்.

மேலும் உடையவர் காலத்தில் பல பெண்களுக்கு–கூரத்து ஆண்டாள்,
பொன்னாச்சியார்,அம்மங்கி அம்மாள்,
திரிபுரா தேவியார்,கொங்கில் பிராட்டியார்-சம்பிரதாய விஷ்யங்களில் முக்கியத்துவம் கொடுத்தார்.

மணக்கால் நம்பிகள் வாழி பாசுரம்:

“நேசமுய்யக் கொண்டவர் தாள் சென்னி வைப்போன் வாழியே !
தென்னரங்கர் சீரருளைச் சேர்ந்திருப்போன் வாழியே !
தாசரதி திருநாமம் தழைக்க வந்தோன் வாழியே !
தமிழ் நாதமுனி உகப்பைத் தாபித்தான் வாழியே !
நேசமுடன் ஆரியனை நியமித்தான் வாழியே !
நீணிலத்தில் பதின்மர் கலை நிறுத்தினான் வாழியே !
மாசி மகந்தனில் விளங்க வந்துதித்தான் வாழியே !
மால் மணக்கால் நம்பி பதம் வையகத்தில் வாழியவே!!!”

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மணக்கால் நம்பி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ப்ரஹ்ம வித்யைகள்–

June 11, 2021

ஸ்ரீ ப்ரஹ்ம வித்யைகள் –32-ஸ்ரீ பாஷ்யத்தில் வெவ்வேறே அதிகரணங்களில் உண்டு —

(1) ஸத் வித்யை –சாந்தோக்யம் -6 அத்யாயம் -ஸ்வேதகேதுவுக்கு தகப்பனார் உத் கலர் – உபதேசம் –
ப்ரஹ்மத்தின் ஸ்வரூப நிரூபக தர்மங்கள் ஆறும் உபாசனம் இதில் -ஸமஸ்த இதர வஸ்து விலக்ஷணம் ப்ரஹ்மம்
1-ஸத்யத்வம் -பத்த ஜீவாத்மாவின் வ்யாவ்ருத்தம் -ஸ்வரூபத்திலும் ஸ்வபாவத்திலும்
2-ஞானத்தவம் –முக்தாத்மாவில் வ்யாவ்ருத்தம்
3-அனந்தத்வம் –தேச கால வஸ்து அபரிச்சேத்யன் –சர்வ வ்யாபி -சர்வ அந்தர்யாத்மா -நித்யரில் வ்யாவருத்தன்
4-ஆனந்தத்வம் –உயர்வற அற உயர் நலம் உடையவன் அவன்
5-அமலத்வம்
6- ஸ்ரீ யபதித்தவம்

ப்ரஹ்மத்தின் அசாதாரண கல்யாண குணங்கள் இதில் உபாஸனம்
1- ஜகத் உபாதானத்வம் –உபாதான காரணம்
2- ஜகத் நிமித்தத்வம் –நிமித்த காரணம்
3-ஸர்வ ஞாநத்வம்
4- ஸர்வ சக்தி யோகம்
5–ஸத்ய ஸங்கல்பம்
6-ஸர்வ அந்தர்யாமித்வம்
7- சர்வ தாரத்வம்
8- சர்வ நியந்த்ருத்வம்

சாந்தோக்யம் அத்யாயம் -6- இந்த ப்ரஹ்ம வித்யை பலம் ப்ராரப்த கர்ம அவசானத்திலே மோக்ஷ பிராப்தி என்கிறது –

——–

2)ஆனந்த மய வித்யா –
ஆனந்த வல்லி -தைத்ரியம்
கீழே சொன்ன ஆறு அசாதாரண ஸ்வரூப நிரூபக தர்ம விசிஷ்ட ப்ரஹ்ம உபாசனம்

அசாதாரண கல்யாண குணங்கள் –
1-பஞ்ச பூதங்கள் ஸ்ரஷ்டா
2-அன்ன மய -பிராண மய -மநோ மய -விஞ்ஞான மய -அனைத்துக்கும் அந்தர்யாமி
3- ஸங்கல்ப ஏக லவ தேசத்திலே ஸ்ரஷ்டா
4- ஸமஸ்த சேதன அசேதன சரீரீ
5-நிருபாதிக ரக்ஷகன் -அந்தமில் பேர் இன்பம் அளிப்பவன்
6- பீஷாத் –இத்யாதி –தேவர்கள் பயந்து விதித்த கார்யங்களை காலப்படி சரியாகச் செய்கிறார்கள் –
7- இந்த ப்ரஹ்ம வித்யைக்கு மோக்ஷ பிராப்தி

———–

3-அந்தர் ஆதித்ய வித்யை -சாந்தோக்யம் -முதல் அத்யாயம் -1-6-6-
இது உத்கீத வித்யையின் அங்கம்
மோக்ஷ பலன் இல்லை –

——-

4-அக்ஷய வித்யை
சாந்தோக்யம் முதல் அத்யாயம் -1-9-
இதுவும் உத்கீத வித்யையின் அங்கம்
ஆகாச அதிகரணம்
இதுக்கும் மோக்ஷ பலன் இல்லை –

——–

5-பிராண வித்யை
சாந்தோக்யம் -1-11-5-
இதுவும் உத்கீதா வித்யையின் அங்கம்
மோக்ஷ பலன் இல்லை
பிராண அதிகரணம்

———-

6-காயத்ரி ஜ்யோதிர் வித்யை –
சாந்தோக்யம் -3-12-
மோக்ஷ பலன்
ஜ்யோதிர் அதிகரணம்

————

7-ப்ரதர்தன வித்யை
கௌஷீதகி உபநிஷத் -3 அத்யாயம்
முதலில் ஸ்வர்க்க லோக பிராப்தி -பின்பு மோக்ஷ பலன்
இந்த்ர பிராண அதிகாரணம்

———–

8-சாண்டில்ய வித்யை
சாந்தகோக்யம் –3-14-
அக்னி ரஹஸ்யம்
ப்ரஹதாரண்யம் –7-6-1-
மோக்ஷ பலன்
ஸர்வத்ர ப்ரஸித்தி அதிகரணம்

———-

9-நச்சிகேத வித்யை
யமதேவன் நச்சிகேதுக்கு உபதேசம்
கட உபநிஷத்
மோக்ஷ பலன்
அத்ர அதிகரணம்

—————-

10-உபகோஸல வித்யை
சத்யகாமவமுனிவர் உபகோஸலருக்கு உபதேசம்
சாந்தோக்யம் -4-அத்யாயம் -10-15 காண்டங்கள்
மோக்ஷ பலன்
அந்தர அதிகரணம்

———-

11-அந்தர்யாமி வித்யா
ப்ருஹதாரண்யம் -5 அத்யாயம் -7 ப்ராஹ்மணம்
ஸூபால உபநிஷத்
மோக்ஷ பலன்
அந்தர்யாமி அதிகரணம்

————

12-அக்ஷர பர வித்யா
முண்டகம்
மோக்ஷ பலன்
அத்ரஸ்யத்வாதி அதிகரணம்

————-

13-வைச்வானர வித்யை
அஸ்வபதி ராஜா -ஆறு முனிவர்களுக்கு உபதேசம்
சாந்தோக்யம் –5-11-24
மோக்ஷ பலன்
வைச்வானர அதிகரணம்

———–

14-பூமா வித்யை
ஸநத்குமாரர் நாரதருக்கு உபதேசம்
சாந்தோக்யம் –7 அத்யாயம்
மோக்ஷ பலன்
பூமா அதிகரணம்

———–

15-கார்கி அக்ஷர வித்யை
ப்ரஹதாரண்யம் –5-8-8-
மோக்ஷ பலன்

————

16-ஹ்ரி மாத்ர ப்ரணவ வித்யை
ப்ரஸ்ன உபநிஷத் –5-5-
மோக்ஷ பலன்
ஈஷதி கர்ம அதிகரணம்

———–

17-தஹர வித்யை
சாந்தோக்யம் -8 அத்யாயம்
மோக்ஷ பலன்
தஹர அதிகரணம்

———-

18-அங்குஷ்ட ப்ரமித வித்யா
கட உபநிஷத்
மோக்ஷ பலன்
ப்ரமித அதிகரணம்

—————-

19-ஜ்யோதிஷாம் ஜ்யோதிர் வித்யா
ப்ரஹதாரண்யம் –6-4-16-
மோக்ஷ பலம்
மத்வ அதிகரணம்

————

20-மது வித்யை
சாந்தோக்யம் –3-1-
மோக்ஷ பலன்
மத்வ அதிகரணம்

———–

21-ஸம் வர்க்க வித்யா
ரைக்குவர் ஞானஸ்ருதிக்கு உபதேசம்
சாந்தோக்யம் –4-3-
மோக்ஷ பலன்
அப ஸூத்ர அதிகரணம்

————

22-ஆகாச வித்யை
சாந்தோக்யம் -8 அத்யாயம்
மோக்ஷ பலன்
அர்த்தாந்தர வியபதேச அதிகரணம்

—————

23-பாலகி வித்யை
கௌஷிதகி உபநிஷத்
ப்ரஹதாரண்யம்
மோக்ஷ பலன்
ஜகத்வ சித்வ அதிகரணம்

————–

24-மைத்ரேயி வித்யை
ப்ருஹதாரண்யம் –4-4-
மோக்ஷ பலன்
வாக்ய அந்வய அதிகரணம்

——————

25-பஞ்ச அக்னி வித்யை
ப்ரவாஹன அரசர் அருணி முனிவருக்கு உபதேசம்
சாந்தோக்யம் –5-3-
மோக்ஷ பலன்
தத் அந்தர பிரதிபத்தி அதிகரணம்

————–

26-புருஷ வித்யை
தைத்ரியம்
மோக்ஷ பலன்
புருஷ வித் அதிகரணம்

————-

27-அஷிஸ்த ஸத்ய ப்ரஹ்ம வித்யை
ப்ரஹதாரண்யம் –5-7-
மோக்ஷ பலன்

———————

28-ஈசாவாஸ்ய வித்யை
ஈசாவாஸ்ய உபநிஷத்
மோக்ஷ பலன்

———–

29-உஷஸ்திகஹோல வித்யை
யஜ்யவல்க்யர் உஷஸ்தருக்கும் கஹோலருக்கும் உபதேசம்
ப்ரஹதாரண்யம் –5-4/5-5-
மோக்ஷ பலம்
அந்தரத்வ அதிகரணம்

—————-

30-பர்யங்க வித்யை
கௌஷீதகி முதல் அத்யாயம்
மோக்ஷ பலன்

—————

31வ்யாஹ்ருதி வித்யை
ப்ருஹதாரண்யம் –7-5-1-
மோக்ஷ பலன்

—————–

32-ந்யாஸ வித்யை
தைத்ரியம்
ஸ்வேதாஸ்வரம்
மோக்ஷ பலன்

——–

1. மதுவித்யை

தேனாக ஸுர்யனையை த்யானம் செய்வது. ஸுர்ய மண்டலத்தை, தேவதைகள் உட்கொள்ளும் தேனாகவும்,
மேலுலகில் அந்தரிக்ஷம் எனப்படும் தேன் அடை இருப்பதாகவும்,
வண்டுகள் மலர்களிலிருந்து தேனை எடுத்து சேர்க்குமாப் போலே”வேத மந்த்ரங்கள்” என்றும்,
வஸு – ருத்ர – ஆதித்ய – மருத் ஸாத்ய கணங்கள் 4 திக்குகளிலும், மேல் புறத்திலும் நிற்பதாகவும்
தேனாக ஸுர்யனைப் பாவித்தும் அவனுக்கு அந்தர்யாமியாக பகவானை உபாஸனம் செய்தல்.

——–

2. காயத்ரீ ப்ரஹ்ம வித்யை

காயத்ரீ சந்தஸ்ஸுக்கு மூன்று பாதங்கள், 24 அக்ஷரங்கள்.
ப்ரஹ்மத்திற்கு 4 பாதங்கள் (பூதம், ப்ருத்வி, சரீரம், ஹ்ருதயம்) .
வாக்கானது ஸர்வ பூதங்களையும் குறிக்கிறது.
இரு குணங்கள் . ப்ருத்வியை பாதமாக உடைய இதற்கு ஸர்வ பூதங்களும் ஆதாரம் . அவைகளால் மீள முடியாது.
சரீரமாயும் ஹ்ருதயமாகவும் இப்படி ப்ருஹ்மத்திற்கு ஆதாரமாக இருக்கிறது. இப்படி உபாஸிக்கச் சொல்கிறது.
இதற்கு அங்கமாக ஹ்ருதயத்தில் நான்கு பக்கங்களிலும் ,மேலுமாக ஐந்து குழிகள் இருப்பதாகவும்,
அங்கு ப்ராணன்கள் சஞ்சரிப்பதாகவும், ஐந்து குழிகளிலும் ஐந்து துவாரபாலகர்கள் மற்றும் ஆதித்யன், சந்த்ரன்,
அக்னி, பர்ஜன்யன், ஆகாசம் இவைகளின் தேவதைகள்
இருப்பதாகவும் உபாஸனம் செய்யுமாறு சொல்கிறது.
இது ”காயத்ரீ ப்ருஹ்ம வித்யை” எனப்படும்.

———-

3. கௌக்ஷய ஜ்யோதிர் வித்யை

ப்ரம்மமே வைச்வாநரன். இவன் அக்னிக்கு அந்தர்யாமி–
இங்ஙனம் உபாசிக்கும் முறை தான் இந்த வித்யை.
காதுகளை கைகளால் மூடிய போது காதுக்குள் ஒரு சப்தம் கேட்கிறதல்லவா?
அது, இந்த ப்ரஹ்மத்தைக் காட்டுகிறது.

——–

4. சாண்டில்ய வித்யை

ப்ரும்மமே எல்லாவற்றிற்கும் காரணம் என்று அறிந்து காம
க்ரோதங்கள் இன்றி சாந்தத்துடன் ப்ரும்மத்தை உபாஸிப்பது.

———

5. கோஸ விஜ்ஞானம் (வித்யை)

தன் புத்ரன் தீர்க்க ஆயுளோடு இருக்க செய்யப்படும் உபாஸனம்.
வாயுவை திக்குகளின் குமாரனாக நினைத்து மந்த்ரங்களைச் சொல்லி உபாஸிக்க வேண்டும்.

———-

6. புருஷ வித்யை

தன்னை ஒரு யக்ஞமாக கருதி தன் ஆயுட் காலத்தை (116 வருமூம்) மூன்றாக பிரித்து
வஸு , ருத்ர, ஆதித்யர்களாக நினைத்து, பசி, தாகங்களைத் தீக்ஷையாகவும்,
உட்கொள்வதை உபஸத்தாகவும் சிரிப்பு இவைகளை ஸ்தோத்ரங்களாகவும்,
சாஸ்த்ர சம்பந்தமாகச் செய்யப்படுவதை ஸம்பாவனையாகவும்,
மரணத்தை அவப்ருதமாகவும் பாவித்து, சாஸ்திர விதிப்படி உபாஸித்தால்,
நோயை விலக்கி நீடித்து வாழ்வான் என்கிறது.
”ஐதரேய மஹிதாஸர்” என்பவர் இப்படி வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.
இவர், இந்த வித்யையை, ஸ்வேத கேதுவுக்கு உபாசித்ததாகவும் சொல்வர்.
அந்திம காலத்தில் ஜபிக்க வேண்டிய மந்த்ரங்களை ஜபித்தால், மோக்ஷம் அடைவான் என்றும் கூறுகிறது.
(தைத்திரீய முடிவில் சொல்லப்படும் புருஷ வித்யை இதுவல்ல).

—————————

7 – ரைக்வ வித்யை

இது ஸம்வர்க்க வித்யை என்றும் சொல்லப்படும்.
”ஜாநச்ருதி” என்பவர் மிகவும் தர்மிஷ்டர். வீடுகள், சத்திரங்கள் கட்டி எல்லா இடங்களிலும் அன்னதானம் முதலிய எல்லா
தானங்களையும் ச்ரத்தையோடு செய்பவர். ஒரு நாள் இரவில் அவர் தன்னுடைய மாளிகையின் மேல் மாடியில்
படுத்திருக்கும்போது, அவருக்கு மேலே ஆகாயத்தில் அன்னங்கள் பறந்தன. அதில் முன்னே போகும் அன்னத்தை,
பின்னே செல்லும் அன்னம், ”உனக்கு கண்ணில்லையா ?
தர்மிஷ்டனான ”ஜாநச்ருதி” படுத்திருக்க, அவன் மேலாகப் பறந்து போகிறாயே?” என்று கேட்டது.
முன்னே செல்லும் அன்னம்,”வண்டியுடன் எப்போதும் வசிக்கும் ரைக்ரவராஇவர்?” என்று கேட்டது.
”அது யார்? வண்டியோடு இருக்கும் ரைக்வர்” என்று, பின்னால் செல்லும் அன்னம் கேட்டது.
சூதாட்டங்களில் ”க்ருதம்” என்கிற ஆட்டம் தெரிந்தவர் எல்லா ஆட்டங்களும் தெரிந்ததற்குச் சமம்.
”ரைக்வர்” எல்லாம் அறிந்தவர்.
அந்த பெருமை இந்த ஜாநச்ருதிக்கு ஏது?” என்று முன்னே செல்லும் அன்னம் சொல்லிற்று.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜாநச்ருதி , காலையில் எழுந்து ”ரைக்வர் எங்கிருக்கிறார்?” என்று அறிய எல்லா
பக்கங்களிலும் ஏவலர்களை அனுப்பினார். பல பேர் காணவில்லை என்று திரும்பி வர, ஒருவன் மட்டும் ”ஓரிடத்தில்
வண்டியின் அடியில் சிரங்குகளைச் சொறிந்து கொண்டுஅமர்ந்திருக்கிறார்” என்று சொன்னார்.

ஜாநச்ருதி, பசுக்கள், குதிரைகள் இவற்றை ஏராளமாகக் கொண்டுபோய் ரைக்வரிடம் கொடுத்து அடிபணிந்து
தேவதாக்ஞானம் உபதேசிக்க ப்ரார்த்தித்தார். ரைக்வர் மறுத்தார்.
மறுபடியும் ஏராளமான செல்வங்களையும் மற்றும் தன் புத்ரியையும் கொடுத்து உபதேசிக்குமாறு ப்ரார்த்தித்தார்.
இப்போது மனம் கனிந்து, ரைக்வர் உபதேசித்ததுதான் ரைக்வவித்யை.

————-

8 – ஸம்வர்க வித்யை

(ஸத்ய காம ஜாபாலர் என்கிற மஹரிஷி ஸ்வேதகேதுவுக்கு உபதேசித்தது)
காபேயன், அபிப்ரதாரி , என்கிற இருவர் சாப்பிட உட்கார்ந்த சமயத்தில் ஒரு ப்ரஹ்மச்சாரி பிக்ஷை கேட்டார்.
இருவரும் பிக்ஷை போடவில்லை. ப்ரஹ்மச்சாரி , ”உலகத்தை தாங்குபவன் நான்கு
நான்கு மஹாத்மாக்களை விழுங்கியுள்ளான். பற்பல உருவாக வசிப்பவன் அவன். இவனை மனிதர்கள் தெரிந்து கொள்வதில்லை.
இந்த அன்னம் யாருக்கு உள்ளதோ அவனுக்கு அளிக்கப்படவில்லை” என்றான்.

காபேயன், ”ப்ரஹ்மச்சாரியே ! எல்லாவற்றையும் ச்ருஷ்டிப்பவன் ஸர்வக்ஞன். இவன் ஒருவராலும்
சாப்பிடப்படாததைச் சாப்பிடுகிறான். இப்படி நாங்கள் உபாஸிக்கிறோம்” என்று சொல்லி, பிக்ஷை அளித்தான்.
அக்னி, ஸ@ர்யன், சந்த்ரன் இவற்றிற்கு லயஸ்தானம் வாயு.
உடம்பில் கண், காது, வாக்கு, மனஸ் இவைகளுக்கு லயஸ்தானம் ப்ராணன்.
இவற்றைத் தெரிந்து உபாஸிப்பவன் , ப்ரஹ்மத்தை அனுபவிப்பான். (இது பலன்) என்று இதில் சொல்லப்படுகிறது.

———

9 – ஷோடச கல ப்ரஹ்ம வித்யை

ஸத்ய காமன் என்கிற மஹரிஷியின் வரலாறு சொல்லப்படுகிறது. ஸத்ய காமன் ஆசார்யரை வரிக்கப்
போவதற்கு முன்பு தன் தாயாரிடம் கோத்ரத்தின் பெயரைக் கேட்டான். ”கோத்ரம் எதுவென்று தெரியாது” என்று சொன்ன
தாயார், ஆசார்யனிடத்தில் ”என் தாயார் ஜாபாலை. நான் ஸத்ய காமன் என்று சொல்!” என்றாள்.
ஸத்ய காமன் கௌதம-ஹாரித்ருபாதர் என்கிற ரிஷியிடம் சென்று இதைச் சொல்ல, குருவும் இவனை அங்கீகரித்து
இளைத்த 400 பசுக்களை வளர்த்துவரச் சொன்னார். அவற்றை வெகு சிரமப்பட்டு பல வருஷங்கள் வளர்த்து ஆயிரம்
பசுக்களாக்கினான். அவற்றில் ஒரு காளை ஸத்ய காமனுக்கு ”ப்ரகாசவா” என்கிற பாதத்தை உபதேசித்து, அதற்கு நான்கு
அவயவங்கள் என்று கூறி, ”அக்னி உனக்கு இன்னொரு பாதத்தைச் சொல்லும்” என்று சொல்லிற்று.

மறுநாள் ”ஸமிதாதானம்” செய்யும் சமயத்தில், அக்னி ”அனந்தவான்” என்கிற பாதத்தையும், அதன் நான்கு
பாகங்களையும் உபதேசித்தது. ”ஹம்ஸம் உனக்கு மூன்றாவது பாதத்தைச் சொல்லும்” என்றது.
மறுநாள் மாலை அன்னத்திடம் ஜ்யோதிஷ்மான் என்கிற பாதத்தையும்,
அதன் நான்கு பாகங்களையும் அறிந்தான். அன்னம், ”மற்றொரு பாதத்தை நீர்ப்பறவை சொல்லும்” என்றது.
அதற்கடுத்த மறுநாள் மாலை நீர்ப்பறவையிடம் ”ஆயதனவான்” என்கிற பாதத்தையும், அதன் பாகங்களையும் அறிந்தான்.
இப்படியாகக் கற்று நன்கு அறிந்த ஆசார்யனைப் போன்ற தேஜஸ் முகத்தில் தெரிய ஆயிரம் மாடுகளையும் ஓட்டிக் கொண்டு
ஆசார்யரி டம் சென்றான்.

ஆசார்யர் இவனைப் பார்த்து ”ப்ரஹ்மத்தை அறிந்தவனாக உன் முகம் சொல்கிறது. யார் உனக்கு சொன்னது?” என்று கேட்க,
ஸத்ய காமன் எல்லாவற்றையும் சொல்லி , ”இருந்தாலும் ஆசார்ய முகமாக உபதேசம் செய்யவேண்டும்” என்று ப்ரார்த்திக்க மனம்
சந்தோஷம் அடைந்து ஆசார்யனும் உபதேசம் செய்தார்.
(இரண்டு உபதேசமும்-அதாவது எல்லாம் ஒன்றாக இருந்தன).

இந்த ஸத்ய காமனின் சிஷ்யன் உபகோஸலன். பன்னிரண்டு வருடம் ஆசார்யனின் வைதீக அக்னியைப் பாதுகாத்து வந்தான்.
ஆசார்யன் இவனுடன் இருந்த மற்ற சிஷ்யர்களுக்கு உபதேசம் முதலியவற்றை முடித்தவர் , உபகோஸலனுக்கு ஒன்றும்
சொல்லவில்லை. ஆசார்யருடைய மனைவி ப்ரார்த்தித்தும் எதுவும் சொல்லாமல், ஆசார்யன் வெளியூர் சென்று விட்டார்.

பன்னிரண்டு வருஷ காலம் பாதுகாத்து வந்த அக்னி இவனிடம் கருணை கொண்டு ”கம என்பது நமது சுகம், வம்
என்பது இந்த்ரியம் அல்லது வானம் போன்றது என்றும், ப்ராணன் ப்ருஹ்மம், கம்-ப்ருஹ்மம் (வம்) என்று உபதேசித்தான்.

பிறகு ”அக்னி வித்யையை” உபதேசித்து இதற்கு மேல் உனக்கு ஆசார்யன் உபதேசிப்பார் என்று அக்னி சொன்னான்.

வெளியூர் சென்றிருந்த ஆசார்யன் திரும்பி வந்தார்.
சிஷ்யனின் முகத்தைப் பார்த்தார். ”ப்ரஹ்ம தேஜஸ் ப்ரகாசிக்கிறதே? யார் உபதேசித்தது?” என்று கேட்டார்.

உபகோஸலன் நடந்த உண்மையைச் சொன்னான். ஆசார்யன் சந்தோஷமடைந்து மேற்கொண்டு உபதேசம் செய்தார்.
அதாவது
ஆத்மாவானது த்ரேகத்தில் இருப்பது. ஆத்மாவிற்கு அழிவு கிடையாது. இதை நன்கு தெரிந்து கொண்டால் பாபம்
ஆத்மாவில் ஒட்டாது என்று ஆரம்பித்து பலவற்றையும் உபதேசித்தார். இவ்வாறு உபாஸனம் செய்தவன் முமுக்ஷுவாக
இருப்பதால் இவன் மரணமடைந்த பிறகு இவனுக்கு செய்யவேண்டிய சடங்குகளைச் செய்யாவிட்டாலும் இவன் ஆத்மா
அர்ச்சிராதி மார்க்கம் என்கிற தேவயான மார்க்கத்தாலே ப்ரஹ்மத்திடம் சேர்க்கப்படுவான். இதன் பிறகு துக்கம் என்பதே
கிடையாது என்று உபதேசித்தார்.

———-

10 – மேலே சொல்லப்பட்டது உபகோஸல வித்யை, என்றும் சொல்வர்

———

11 – நடுவில் அக்னி உபதேசித்தது இதைச் சார்ந்த அக்னி வித்யை
(ஆக, ஷோடச கலை ப்ரஹ்மவித்யை, உபகோஸல வித்யை, அக்னி வித்யை மூன்றும் சொல்லப்பட்டது)

———–

12 – ப்ராண வித்யை

ப்ராணன் மூத்தது. அதாவது கர்ப்ப வாஸத்தில் ப்ராணன் ஏற்பட்ட பிறகுதான் மீதி இந்த்ரியங்கள் உண்டாகின்றன.
ஆதலால் ப்ராணன் ”ஜ்யேஷ்டன்”.

ப்ராணனுக்கும் மீதி இந்த்ரியங்களுக்கும் ஒரு கலகம் ஏற்பட்டது. ”யார் உயர்ந்தவர்?” என்பதே அது.
ஸ்ருஷ்டி செய்த ப்ரஜாபதியிடம் சென்று, இந்த வ்யவஹாரத்தைத் தீர்க்குமாறு கேட்டுக் கொண்டன.
அவர் உங்களுக்குள் யார் சரீரத்திலிருந்து வெளிப்பட்டால்
சரீரம் குலைந்து போகுமோ அவரே ச்ரேஷ்டர், உயர்ந்தவர் என்றார்.

வாக்கு ஒரு வருஷ காலம் சரீரத்தை விட்டு வெளிப்பட்டு இருந்தது. ஊமை போல சரீரம் வாழ்ந்தது. இதைப்போலவே
கண்கள், காதுகள் மற்ற இந்த்ரியங்களும் வெளிப்பட்டு சரீரத்தைச் சோதித்தது.
சரீரத்தில் அந்தந்த அங்கத்திற்கு குறைவு ஏற்பட்டதே
தவிர, சரீரம் ஜீவித்திருந்தது. ப்ராணன், சரீரத்தை விட்டு வெளியே கிளம்பின தருணத்தில்
எல்லா அவயவங்களும் செயலிழக்கத் தொடங்கின. அவை ப்ராணனை வெளியே போக வேண்டாம் என்று வேண்டி,
ப்ராணனே ச்ரேஷ்டன் அதாவது உயர்ந்தவன் என்றன.
ப்ராணன்,தனக்கு அன்னம், ஆடை எல்லாம் அளிக்க வேண்டும் என்று கேட்டது. அன்னம் ப்ராணனுக்கு என்றும், முன்னும் பின்னும்
அருந்தும் ஆசமன தீர்த்தம் ப்ராணனுக்கு உடை என்றும் சொல்லி அவை யாவும் ப்ராணனை உபாசித்தன.

————-

13. பஞ்சாக்னி வித்யை

அருண மஹரிஷியின் குமாரர் ஆருணீ. அவரின் குமாரர் ச்வேதகேது. அவர் ஒரு சமயம் பாஞ்சால தேசத்தில் நடந்த
ஸதஸ்ஸுக்கு (விவாதங்கள் நடக்கும் சபை) சென்றார்.
ப்ரவாஹணன் என்ற பாஞ்சால தேசத்து அரசன் நடத்திய சபைக்கு அவர் சென்றார்.
அந்த அரசன் ச்வேதகேதுவை சில கேள்விகள் கேட்டார்.

அரசன்:ரிஷி புத்ரரே! உமக்கு தகப்பனார் உபதேசங்களைச் செய்திருக்கிறாரா ?

ச்வேதகேது: ஆம்

அரசன்: ப்ரஜைகள் மரணம் அடைந்த பிறகு போகும் இடம் எது?
(அதாவது யாக தான பூர்த்தாதி புண்ய கர்மாக்களைச் செய்தவர்கள் எந்த லோகத்திற்கு போகிறார்கள்)

ச்வேதகேது: தெரியாது

அரசன்: திரும்பி வரும் வழி எது? (யாகாதிகளை அனுஷ்டித்தவர் திரும்பி வரும் வழி எது ?)

ச்வேதகேது: தெரியாது

அரசன்: தேவயான மார்க்கம், பித்ருயாண மார்க்கம் இவற்றின் வேறுபாடு தெரியுமா? (வேத்தபதோ தேவயானஸ்ய
பித்ருயானஸ்யச வ்யாவர்த்தனா ?)

ச்வேதகேது: தெரியாது

அரசன்: மேலுலகம் சென்றவர்கள் யார் தெரியுமா? (இந்த லோகத்திலிருந்து செல்பவர்களில் ஸ்வர்க்க லோகத்தை
அடையாதவர்கள் யார் ?)

ச்வேதகேது: தெரியாது

அரசன்: ஐந்தாவது ஆஹூதியில் மனிதன் பிறக்கிறான் என்பது
தெரியுமா? (வேத்த யதா பஞ்ம்யாமாஹூ தாவாப புருஷவசஸோ பவந்தீதி ?)

ச்வேதகேது: ஒன்றும் தெரியாது

இங்ஙனம் கேள்விகள் கேட்ட பாஞ்சால தேசத்து அரசன் ”ரிஷிபுத்ரரே, இவை ஒன்றையும் அறியாது, நீர் பெற்றுக் கொண்ட
உபதேசம் தான் என்ன ? எப்படி உபதேசம் பெற்றதாகக் கூறமுடியும் ?” என்று கேட்க,
ச்வேதகேது மானபங்கப்பட்டு
தகப்பனாரிடம் ஓடி வந்து (ஆருணி) விஷயத்தைச் சொல்ல, அவர்
தனக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று வருத்தப்பட்டு, அரசனிடமே கேட்கலாம் என்று புறப்பட்டார்.
ச்வேத கேதுவையும் அழைத்தார். பிள்ளை வரவில்லை.
தான் மட்டும், ப்ரவாஹணன் என்கிற அந்த பாஞ்சால தேசத்து அரசனிடம் சென்றார்.
தன்னுடைய பிள்ளையிடம் கேட்ட கேள்விகளுக்கு தனக்கு பதில் தெரியாது என்றும் அதைத் தெரிந்து கொள்ள வந்திருப்பதாகவும்
சொன்னார். அரசன் ஆருணி என்கிற உத்தாலகருக்கு உபதேசித்ததே ”பஞ்சாக்னி வித்யை”.

ச்ரத்தையோடு புண்ய கர்மாக்களைச் செய்தவன் மரணம் அடைந்ததும், உடலில் இருந்து கிளம்பிய அவனும் (ஜீவாத்மா),
ப்ராணேயந்த்ரியங்களும், பூத ஸூக்ஷ்ம ஸரீரம் எடுத்து, முதல் அக்னியான ”ஸ்வர்க்கத்தில்” ஹோமம் செய்யப்படுகிறது.
வெகு போக்யமான ஸரீரம் எடுத்து (போக ஸரீரம்) போகங்களை அனுபவித்த பிறகு இந்த பூத சுக்ஷ்ம ஸரீரம் ”மேகம்” என்கிற
அக்னியில் சேர்க்கப்படுகிறது.
பிறகு மழை மூலமாக, பூமி என்கிற நிலத்தில் விழுந்து, தான்யங்களில் புகுந்து, ஆகாரமாக புருஷனின் (நாலாவது அக்னி)
உடலில் சேர்ந்து, பிறகு ஸ்த்ரி எனப்படும் ஐந்தாவது அக்னியில் சேர்ந்து ஏறக்குறைய பத்து மாதங்கள் இருந்து உலகில் பிறக்கிறது.
இதுவே பஞ்சாக்னி வித்யை.

ஆயுள் பர்யந்தம் வரை இருந்து, மறுபடியும் மரணம் அடைந்து, முன்பு சொன்னதைப் போல ஐந்து அக்னிகளில்
இருந்து மறுபடியும் பிறந்து இப்படி எண்ணற்ற சங்கிலித் தொடராக,ஜீவன் பிறவிகள் எடுக்கிறது. இப்படி இருப்பதை
உணர்ந்து ஆத்மாவை வேறாகப் பாவித்து, உபாஸிப்பவரும் ச்ரத்தையுடன் ப்ரஹ்மத்தையே உபாஸிப்பவரும், மரணம்
அடைந்ததும் ”தேவயான மார்க்கம்” என்று சொல்லப்படும்அர்ச்சிராதி மார்க்கத்தாலே ப்ரஹ்மத்தை அடைகின்றனர்.
(அர்ச்சிராதி மார்க்கம் – இதில் விரிவாகவே சொல்லப்படுகிறது)
யக்ஞம் செய்தவர்கள், குளம் முதலியன வெட்டியவர்கள்,
ஆலயம் கட்டியவர்கள், தான தர்மம் செய்தவர்கள், பித்ருயான மார்க்கமான புகை, இரவு, க்ருஷ்ண பக்ஷம், தக்ஷிணாயனம், பித்ரு
லோகம், ஆகாசம், சந்த்ர லோகம் மூலமாக ஸ்வர்க்கம் சென்று போகத்தை அனுபவித்து பிறகு ஆகாசம், வாயு, புகை, மேகம்,
மழை, ஓஷதிகள் என்று திரும்பி வந்து புருஷனிடம் போய் சேர்வதில் முன் கர்ம வினைகளுக்கு தக்கபடி தாமதம் முதலியன
ஏற்பட்டு கர்ப்பம் மூலமாக ஸ்த்ரீயை அடைந்து – மறுபடியும் ஜனனம், மறுபடியும் மரணம். இப்படி பலப்பல ஜன்மங்கள்.
கொசு, புழு, பூச்சி போன்ற ஜந்துக்கள் பிறப்பதும், மரிப்பதுமாய் இருக்கும். இவற்றிற்கு மேலுலகம் என்பது இல்லை.
ஸ்வர்க்க லோகம் தான் அக்னி. ஸுர்யன்-ஸமித். ஸுர்ய கிரணங்கள்-புகை. அஹஸ் – அர்ச்சிஸ். சந்த்ரன்-அங்காரம்
அதாவது தணல். நக்ஷத்திரங்கள் – நெருப்பு பொறிகள்.

———–

14. வைச்வாநர வித்யை

ப்ராசீனசாலர் , சத்யஜ்ஞர், இந்த்ரத்யும்னர், ஜனர், புடிலர் – ஆகிய ஐந்து மஹரிஷிகளும் ஒன்று கூடி ”நம் ஆத்மா யாது ?
ப்ரஹ்மம் யாது ?” என்று விசாரம் செய்து, தெளிவு ஏற்படாமல்,
அருண மஹரிஷியின் புதல்வரான உத்தாலக மஹரிஷியை அணுகினர். அவரும் இதை நான் அறியேன் அல்லேன்! இதனை
அறிந்தவர் கேகய தேசத்து அரசன் அச்வபதி என்பவர். அவரை
அணுகுவோம் என்று ஆறு மஹரிஷிகளும் அச்வபதியை அடைந்தனர்.

அச்வபதி மன்னர் இந்த மஹரிஷிகளைக் கொண்டுருத் விக்குகளாக வரித்து யாகம் செய்து தக்ஷிணையைக்
கொடுக்கிறேன் என்றார். இவர்கள் வைச்வாநர வித்யையை தானமாக (தக்ஷிணை) வேண்டினர்.(அக்காலத்தில் ஞானத்தைப்
பெறுவதற்கு மிகவும் ஆவலும், அதற்கான வழிகளில் இழிவதும் மஹரிஷிகளிடையே இருந்தது )
அரசன் இவர்களை ஒவ்வொருவராக அழைத்து, வைச்வாநர உபாஸனம் இதுவரை எப்படி செய்கிறார்கள் என்று கேட்டான்.
ப்ராசீனசாலர் த்யுலோகத்தையும், சத்யயஜ்ஞர் ஆதித்யனையும், இந்த்ரத்யும்னர் வாயுவையும் ஜனர் ஆகாசத்தையும், புடிலர்
ஜலத்தையும், உத்தாலகர் ப்ருத்வியையும் உபாசிப்பதாகச் சொன்னார்கள்.
அரசன், இவை யாவும் வைச்வாநர ஆத்மாவின் அவயவங்கள். இவை இம்மை பலனை மட்டுமே அளிக்கும்.
ஆனால் இவற்றையெல்லாம் சேர்த்து ”விச்வரூப வைச்வாநர” உபாஸனம் செய்ய வேண்டும் என்று உபதேசித்தான். இதன் பலன்
”பரப்ரம்ம உபாஸனை” என்றும் சொன்னான்.
இவற்றைத் தன் உடலில் அங்கங்களாக வைத்து ப்ராணாக்னியை வைச்வாநர அக்னியாக பாவித்து, அன்னத்தை
ஐந்து ப்ராணாஹூதிகளாக முறைப்படி செய்வது. பஞ்சப்ராணங்களை இப்படி உபாஸித்தால், அவற்றின் வழியே இந்த்ரியங்கள்,
அவற்றை நியமிக்கும் தேவர்கள், அவர்கள் சார்ந்த உலகங்கள், யாவும் திருப்தி அடையும். இப்படி உபாஸிப்பவனின்
பாபம் தீயில் இட்ட பஞ்சு போல எரிந்து போகும் என்று, அரசன் சொன்னான்.

————————

15. ஸத் வித்யை
அருண மஹரிஷியின் பேரன் ச்வேதகேது. உத்தாலகரின் குமாரன். பன்னிரெண்டு வயதான ச்வேதகேது தகப்பனாரின்
கட்டளைப்படி குருகுல வாஸம் செய்து வேதத்தை எல்லாம் அத்யயனம் செய்து 24 வயதில் திரும்பி வந்தான்.
உத்தாலகர் பிள்ளையைக் கேட்டார். ச்வேதகேது
எல்லாவற்றையும் குருகுலவாஸத்தில் அறிந்து கொண்டாயா? எதைக் கேட்டு, சிந்தனை செய்து, த்யானித்தால், உலகத்தில்
எல்லாவற்றையும் கேட்டு ,சிந்தித்துத் த்யானிக்கப் பெற்றதாக ஆகுமோ அப்படி ஸர்வத்தையும் நியமிக்கும்படியானதை
ஆசார்யன் உபதேசித்தாரா ? நீ கேட்டு தெரிந்து கொண்டாயா ?

ச்வேதகேதுவுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. ஆசார்யன் இதைச் சொல்லவில்லையே, தந்தையிடமே ப்ரார்த்திப்போம்
என்று தந்தையிடம் இதற்கு அவரையே உபதேசமாக சொல்லுமாறு கேட்டுக் கொண்டான்.
உத்தாலகர் சொன்னார்.
ஸத் என்கிற வஸ்து, தான் பலவாறாக ஆகக்கடவேன் என்று ஸங்கல்பம் செய்து கொண்டு ”தேஷஸ்”ஸை
ச்ருஷ்டித்தது. ”தேஷஸ்” ஸங்கல்பம் செய்துகொண்டு ஜலத்தை ச்ருஷ்டித்தது. ஜலம் , இவ்வாறு
ப்ருத்வியை ச்ருஷ்டித்தது. இவைகள் பூமியில் பிராணிகள் என்ற பூதங்களாயின.

அந்த பிராணிகள் அண்டஜம், ஜீவஜம், உத்பிஜ்ஞம் என்று மூன்று வகை.
அண்டஜம் – முட்டையிலிருந்து உண்டாவது.
ஜீவஜம் – பிராணிகளிடமிருந்து பிறப்பது (மனிதர்களையும் சேர்த்து)
உத்பிஜ்ஞம் – பூமியைப் பிளந்து வளர்வது (மரம், செடி,கொடிகள்).
(உத்பிஜ்ஞத்தில் வியர்வையிலிருந்து உண்டாவதும் சேரும்).

ஸத் என்பது ஜீவாத்மாவோடு ப்ரவேசித்து, பலவகை நாம ரூபங்களை உண்டாக்க சங்கல்பித்துக் கொண்டு, அதற்காக
தேஜஸ், ஜலம், ப்ருத்வி என்கிற மூன்று மகா பூதங்களையும் த்ருவித்க்கரணம் செய்தது.
அதாவது ஜலத்தில் மற்ற இரண்டும்(தேஜஸ், ப்ருத்வி) கலந்திருக்கும்.
தேஜஸ்ஸில் ஜலம், ப்ருத்வி கலந்திருக்கும். ப்ருத்வியில் தேஜஸ், ஜலம் கலந்திருக்கும்
(இவற்றை பஞ்ச பூதங்கள் என்று சொல்லும்போது பஞ்சீகரணம் என்று பெயர்).

இப்படி கலந்திருப்பதிலிருந்து உடலை ச்ருஷ்டித்து,
ஜீவாத்மாவுடன் தானும் அதன் உள்ளே புகுந்து, ஒவ்வொரு வஸ்துவாகவும், ”ஸத்” என்கிற பரப்ரம்மம் இருக்கிறது .
ஒவ்வொன்றிலும் அசேதனம், சேதனன், ஈச்வரன் சேர்ந்து இருக்கிறது என்பதை அறிவாயாக.

தேஷஸ்ஸுக்கு நிறம் சிவப்பு. ஜலத்திற்கு நிறம் வெண்மை.
ப்ருத்விக்கு நிறம் கருப்பு. நெருப்பு எரியும்போது இந்த மூன்று நிறங்களையும் காணலாம்.
இப்படி மூன்று மஹா பூதங்களிலிருந்து உண்டான அன்னம், உடலை வளர்த்து, மூன்று பரிணாமங்களைப் பெறுகின்றது.
அஸாரபாகம் – மலமாக ஆகிறது.
ஸாரபாகம் -உடலில் மாம்ஸம்.
மிகவும் ஸாரமானது மனஸைப் போஷிக்கிறது.

அருந்தும் ஜலமும், நீர், இரத்தம், மனஸைப் போஷிக்கும் பாகம் என்று மூன்றாக மாறுகிறது.
தேஜோமயமான ஆகாரமும்,எலும்பு, அதற்கு வேண்டிய ஸ்னேஹம் (பசை), வாக்கை வளர்க்கும் பாகம் என
மூன்றாக மாறுகிறது.
ஆக மனஸ்-அன்னமயம்,
ப்ராணன்- ஜலமயம்,
வாக்கு – தேஜோமயம்.
”15 நாட்கள் ஆகாரம் இல்லாமல் வெறும் ஜலத்தைப் பானம் பண்ணி வந்தால்கூட, ப்ராணன் அழியாது. அப்படி இருந்து
மறுபடியும் என்னிடம் வா” என்றார் தகப்பனார்.

ச்வேதகேது, அப்படியே 15 நாட்கள் பட்டினி கிடந்து அப்போது தீர்த்தத்தை மாத்திரம் அருந்தி தகப்பனாரிடம் வந்தான்.
தகப்பனார் வேதங்களைச் சொல்லச் சொன்னார். ச்வேதகேதுவால் எதுவும் சொல்லமுடியவில்லை.
அப்போது ”நீ சாப்பிடாத போது16 அம்சங்களில் 15 அம்சங்கள் போய் விட்டன. இப்போது சாப்பிட்டு விட்டு வா” என்றார்.
ச்வேதகேது சாப்பிட்ட பிறகு சொல்வதற்கு பலம் வந்தது.அன்னத்தால் புஷ்டி ஏற்படுகிறது என்று விளக்கினார்.

இதைப் போல எல்லா உலகுக்கும் காரணமான வஸ்து எல்லாவற்றிலும் உட்புகுந்து நியமிக்கும்
சக்தியோடு இருக்கிறது என்று சொன்னார்.
பலவகை புஷ்பங்களிலிருந்து தேனீக்கள் தேனைச் சேகரிக்கின்றன. அந்த தேன் துளிகள், ”நான் இந்த புஷ்பத்தைச்
சேர்ந்தவன்” என்று தனியாகப் பிரித்துச் சொல்ல முடியுமா ?
அப்படியே ”ஸத்” எனப்படும் பராமாத்மாவிடம் ஒன்றின ஜீவாத்மாக்கள், தங்களைத் தாங்களே தெரிந்து கொள்ள இயலாது.
பல நதிகளிலிருந்து தண்ணீர் ஸமுத்திரத்தில் சேர்ந்த பிறகு அவை இன்னின்ன நதியின் ஜலம் என்று பிரித்து சொல்ல
முடியுமா ? முடியாது.

ஒருவன் மரணம் அடையும் தருவாயில் அவனைச் சேர்ந்தவர்கள் அருகில் அமர்ந்து சில கேள்விகள் கேட்கும்போது
அவற்றை அவன் உணர்வதில்லை. ஏனெனில் அவனது வாக்கு மனஸ்ஸிலும், மனஸ் ப்ராணனிலும், ப்ராணன் தேஜஸ் எனப்படும்
பூத ஸக்ஷ்ம சரீரத்திலும் அதன் காரண வஸ்துவான பரமாத்மாவிடமும் லயித்து விடுவதால், உணர்வதில்லை.
உலகெங்கும் பரமாத்மா இருக்கிறான் என்றும், அவன் அழிவற்றவன், தோஷமற்றவன், எல்லா உயிர்களுக்கும் அவன்
ஆத்மா, உனக்குள்ளும் அவன் இருக்கிறான் என்று ச்வேதகேதுவுக்கு உத்தாலகர் உபதேசித்தார்.

இந்த ஸத்வித்யையில் 16 கண்டங்கள்
இவற்றில் சொல்லப்பட்டவை.
(1) ”ஸத்” என்பது எல்லா உலகத்துக்கும் காரணம்.
(2) ”ஸத்” முதலில் ”ஸமஷ்டி ச்ருஷ்டி” செய்கிறது.
(3) பூதங்களை ஒன்றோடொன்று சேர்த்து ”வியஷ்டி” ச்ருஷ்டி செய்கிறது.
(4) த்ருவித்கரணம் என்கிற பூதங்களின் சேர்க்கைசெய்யப்படுகிறது.
(5) தேஜஸ், ஜலம், ப்ருத்வி இவற்றால் உடல் வளர்க்கப்படுகிறது.
(6) அன்னத்தின் நுண்ணிய பாகம் வாக், ப்ராணன், மனஸ்ஸை வளர்க்கிறது.
(7) இது இல்லையேல் மனஸ் க்ஷீணமாகி விடுகிறது.
(8)”ஸத்” – சேதனங்களில் லயஸ்தானம்.
(9) இப்படி லயிக்கும் ஜீவன்கள் கணக்கில்லாதவை
(10) கடலில் இருந்து ஜலம் ஆவியாகி, மழையாகி, நதியாவது போல சேதனர்கள் (ஜீவன்கள்) ஸத்திலிருந்து புறப்படுவர்.
(11) இந்த சேதனர்களுக்கு அழிவில்லை.
(12) ”ஸத்” என்பது மிக மிக ஸக்ஷ்மமானது
(13) ”ஸத்” – எங்கும் கரந்து ,பரந்து உள்ளது.
(14) ஆசார்யன் மூலமாக இதை அறிய வேண்டும்
(15) இந்த வித்யையை உபாஸிப்பவனுக்கு எல்லா அநிஷ்டமும் போகும்
(16) அதனால் மீண்டும் ஸம்ஸார பந்தம் இல்லை.
உத்தாலகரின் உபதேசம் உலகில் உள்ளோர் மனங்களில் நன்கு பதியும்படி இருப்பதாகச் சொல்வர்.

——————————–

16. பூம வித்யை
நாரதர், ஸனத்குமாரரை அணுகி உபதேசம் செய்யும்படி ப்ரார்த்தித்தார். அவரது மனம் கலங்கியிருந்தது. நாரத மஹரிஷி
யாவும் அறிந்தவர். அவருக்கே கலக்கம் என்றால்?
ஸனத்குமாரர்,நாரதரைப் பார்த்து உமக்கு தெரிந்ததையெல்லாம் முதலில் சொல்லுங்கள் என்றார்.
நாரதர் நான் எல்லா ஸப்தங்களையும்அறிந்திருக்கிறேன் என்றார்.
இதை உபாஸித்து (ப்ரம்மமாக)ஸப்தங்கள் கேட்குமிடங்களிலெல்லாம்
ஸஞ்சரித்து ஆனந்தம் அடையலாம் என்று ஸனத்குமாரர் சொல்ல,
நாரதர் இதற்கு மேலும் உண்டா என்று கேட்டார். ஸம்பாஷணை தொடர்ந்தது.

ஸப்தம், வாக்கு, மனஸ், ஸங்கல்பம், சித்தம், த்யானம், விஜ்ஞானம், பலம், அன்னம், தண்ணீர், தேஜஸ், ஆகாயம்,
நினைவு, ஆசை என்று பதினான்கையும் ப்ரம்மமாக உபாஸிக்கலாம் என்று ஸம்பாஷணை தொடர்ந்தது.

இதற்கும் மேலானது எது என்கிற கேள்வி வந்தபோது,
”ப்ராணனை” மேலானதாக உபாஸிக்கலாம் என்றும், ப்ராணன் என்பது ஜீவாத்மா என்றும்
இந்தப் ப்ராணனை உயர்ந்த புருஷார்த்தமாக உபாஸிக்கலாம் என்றும் சொன்னார்.

ஸனத்குமாரர் மேலும் சொன்னார்.
இதை விட ”ப்ரம்மத்தை” உபாஸனை செய்வது மேலானதாகும். அதற்கு உபாஸனம், மனனம், இதில் ச்ரத்தை,
இதில் அசைக்க முடியாத பற்றுதல், அதற்கு தகுந்த செய்கைகளில் ஊக்கம், இப்படி இருந்து அந்த ப்ரம்மத்தை
உபாஸிப்பது ”பூமா” எனப்படும். இதற்கு மேம்பட்டது இல்லை.
இது எல்லாவற்றிற்கும் ஆத்மா-பரமாத்மா.
இப்படி உபாஸனம் செய்பவன், கர்மங்களிலிருந்து விடுபடுகிறான் இதற்கு மனஸ் சுத்தம் வேண்டும்.
மனஸ் சுத்தமாவதற்கு சுத்தமான ஆகாரத்தைச் சாப்பிட வேண்டும். இப்படி ஸனத் குமாரர் பதில் சொன்னார்.
இவரை ”ஸ்கந்தர்” என்றும் சொல்வதுண்டு.

——

17. தஹர வித்யை

இந்த ஸரீரத்திற்கு ”ப்ரஹ்ம புரம்” என்று பெயர். இதன் உள்ளே இருக்கிற புண்டரீகம் (தாமரைப்பூ) போன்ற சிறிய ஹ்ருதயத்திலே
ஆகாசம் இருக்கிறது. வெளியில் உள்ள ஆகாசத்தைப் போலவேதான், இதுவும். உடல் அழியும்போது, புண்டரீகம்
அழியும் போது இவ்வாகாசம் அழிவதில்லை. இப்படி உள்ள ஆகாசத்தின் உள்ளே கல்யாண குணங்களான எட்டு –
இதை உபாஸிக்க வேண்டும். இதனால் உபாஸிப்பவன் –
1) அபஹதபாப்மா (வினை இல்லாதவன்)
2) விஜர: (மூப்பில்லாதவன்)
3) விம்ருத்யு (மரணத்திற்கு இடமாகாதவன்)
4) விசோக: (துக்கமற்றவன்)
5) விஜிகத்ஸ: (பசியற்றவன்)
6) அபிபாஸ: (தாகமற்றவன்)
7) ஸத்யகாம: (நிலையான போக்யங்களை உடையவன்)
8) ஸத்யஸங்கல்ப: (தடையில்லாத ஸங்கல்ப சக்தியுள்ளவன்)
— ஆக எட்டு குணங்களை அடைகிறான்.

வேதத்தில் சொல்லப்பட்ட சில கர்மாக்களைச் செய்து புண்ணிய பலன்களைப் பெற்றாலும், அதை அனுபவித்ததும்
யாவும் அழிந்து விடும்.
ஆனால் ஆத்மாவையும் அதன் குணங்களையும் உபாஸிப்பவனுக்கு எல்லா பலன்களும் உண்டு.
இந்த பரமாத்மாவின் கல்யாண குணங்களை நாம் அறியாமல் இருப்பது நமது பாபத்தாலே. பூமிக்குள்ளே புதையல்
இருந்தும், பூமியின் மேலே நடப்பவனுக்கு அது தெரிவதில்லை.
அதைப் போல பரமாத்மாவை அறியாமல் இருக்கிறோம். இவன் ஹ்ருதயத்திலே இருக்கிறான். உபாஸகனாகிய ஜீவாத்மா
உடலிலிருந்து பிரிந்த பிறகு பரஜ்ஞோதியை அடைகிறான் என்பது இந்த பரமாத்மாதான்.
இவன் —இந்தப் பரமாத்மா—-சேதனம், அசேதனம்எல்லாவற்றையும் ஆள்கிறவன். எல்லா உலகங்களையும் எல்லா
பூதங்களையும், எல்லா வஸ்துக்களையும் ஒன்றோடொன்று கலந்து அழியாதபடி ஆங்காங்கு நிறுத்தி அதன் அதன்
தன்மையோடு காக்கின்றான்.
இவனிடத்தில் எந்த தோஷமும் இல்லை. இவனை அடைவதால் ”தாப த்ரயம்” நீங்கும்.

இவனைப் பெற, ப்ரம்மச்சர்யம் வேண்டும்.
ப்ரம்மச்சர்யத்தாலே ப்ரம்ம லோகத்தில் ”அரம்”என்றும் ”புண்யம்”என்றும் சொல்லப்படும் இரண்டு ஸமுத்திரங்களையும்
”ஐரம்மதீயம்” என்கிற தடாகத்தையும், ”ஸோமஸவனம்” என்னும் அரச மரத்தையும் தாண்டி ”அபராஜிதை” என்கிற ப்ரம்மத்தின்
(பரமாத்மா) ராஜதானிக்குச் சென்று, பரமாத்மா எழுந்தருளியுள்ளஅழகிய ஸ்தானத்தை அடைந்து ப்ரும்மானுபவம் பெறுகிறான்.
(பரமபதம் அடைகிறான்).

ஹ்ருதயத்தில் உள்ள எல்லா நாடிகளுக்கும் ஸூர்ய க்ரணங்களுக்கும் சம்பந்தம் உண்டு. ஹ்ருதயத்தில் உள்ள 101
நாடிகளில் ஒரு நாடி தலைப் பக்கம் உள்ள நாடியின் வழியே ஸூர்ய மண்டலம் போய் மனோவேகமாய் பரமபதம்
(வைகுண்டம்) சேர்ந்தால் மேலே சொன்ன பலன்கள் உண்டு.
இதுவே ”தஹர வித்யை” எனப்படுகிறது.

————–

18. ப்ரஜாபதி வித்யை

மேலே சொன்ன ”பர” வித்யைக்கு இந்த ப்ரஜாபதி வித்யை அங்கம் (முண்டகோபநிஷத்தைப் பார்க்க).
ப்ரஜாபதி தன் பிள்ளைகளான தேவர்களும், அசுரர்களும் க்ஷேமமாக இருப்பதற்காக ஆத்மாவை எட்டு குணங்களோடு
அறிந்தவனுக்கு ஸர்வ லோகமும், ஸர்வ சுகமும் உண்டு என்பதாக சொன்னதே இந்த வித்யை.

தேவர்களில் ப்ரதானன் இந்திரனும், அசுரர்களில் ப்ரதானன் விரோசனனும், 32 வருஷ காலம் ப்ரம்மச்சர்யம் அனுஷ்டித்து
ப்ரஜாபதியை அணுக அவர், ”ஆத்மா கண்ணில் தெரிகிறதா ?” என்று கேட்டார்.
கண்ணில் இருக்கும் நிழலை-அதன் பிரதிபிம்பம் தான் ஆத்மா என்று நினைத்தனர். விரோசனன் இதனையே
அசுரர்களுக்கு உபதேசித்தான். அதனால் அவர்கள் தேஹாத்மவாதிகள் ஆனார்கள்.

இந்த்ரனுக்கு திருப்தி இல்லை.
அவன் ப்ரஜாபதியை மறுபடியும் கேட்க, அவர் படிப்படியாக ஸ்வப்ன அவஸ்தையில் உள்ள ஆத்ம ஸ்வரூபம், உறக்கத்தில்
உள்ள ஆத்மஸ்வரூபம், இவற்றைச் சொல்ல இப்பொழுதும் இந்த்ரன் திருப்தி அடையவில்லை.

101 வருஷங்கள் ப்ரம்மச்சர்யம் இருந்து ”தஹர வித்யையில்” பகவானுக்கு உள்ள எட்டு குணங்களும் இவனுக்கும் உண்டு.
இவன் ,உடலில் இருந்து புறப்பட்டு பரமாத்மாவை அடைந்து சுகப்படுகிறான் என்று உபதேசித்தார். இந்த்ரனும் திருப்தி அடைந்து
தேவர்களுக்கு இதை உபதேஸித்தான். ஆத்மஸ்வரூபத்தை இந்த வித்யையினாலே ஜ்ஞான யோக பலத்தாலே அடைந்து
பக்தியோகத்தில் இழிந்து மோக்ஷம் அடைவதே பலன்.

”பகவானை கரிய திருமேனி உடையவனாகவும், சேதனஅசேதனங்களுக்கு அந்தர்யாமியாகவும் இருவகைகளாக
உபாஸிக்கிறேன். குதிரை, மயிரை சிலிர்த்து உதறுவது போலே பாபங்களை உதறித்தள்ளி ராகுவினின்று விடுபட்ட
சந்த்ரன்போலே சரீரத்திலிருந்து விடுபட்டு பரமபதம் சேருகிறேன்.”
ஸத்வ குணத்தை அழித்து சுக்லதாதுவை உட்கொள்ளும் ஜன்மம் இல்லை.

இந்த ஸாந்தோக்ய உபநிஷத்தில் சொன்ன வித்யை யாவும்
ப்ரஹ்மா ப்ரஜாபதிக்கும், ப்ரஜாபதி மனுவுக்கும், மனு ப்ரஜைகளுக்கும் உபதேசித்தது.
ஆசார்யனை அணுகி உபதேசம் பெற்று இந்த்ரியங்களை ஆத்மாவிடம் செலுத்தி (இந்த்ரியங்களை அடக்கி)
வைதீக கர்மாக்களைச் செய்து, ஜீவஹிம்சை செய்யாமல் மேற்சொன்ன வித்யைகளில் ஒன்றை உபாஸிப்பவர் ஆயுட்காலம்
முடிந்ததும் ப்ரஹ்மத்தை (பரமாத்மா) அடைகிறான்.

ப்ரம்மத்தை அறிவது உபநிஷத்துக்களைக் கொண்டு. அந்த ப்ரம்மத்தை நான் உபாஸிப்பேன். ப்ரம்மம் என்னை ஆதரிக்கட்டும்.
ஆத்ம விஷயங்களில் ஈடுபட்ட எனக்கு உபநிஷத்துக்களில் சொல்லப்பட்ட தர்மங்கள் எல்லாம் ஸித்திக்க வேண்டும்.
அவை என்னை ரக்ஷிக்க வேண்டும்.

——————-

19. புருஷாத்ம வித்யை

இது ப்ரஹதாரண்யத்தில் உள்ளது
முதன் முதலில் ஆத்மா ஒரே புருஷ ரூபமாக இருந்தது. இதற்கு (பரமாத்மா) புருஷன் என்றே பெயர்.
தனிமையில் சுகம்பெறாமல், இரண்டாவதாக ஒன்றை விரும்பி ஸ்த்ரீயும், புருஷனும் சேர்ந்ததோர் உருவமாகி,
பிறகு ஸ்த்ரீ வேறு, புருஷன் வேறு என்று பிரித்துக் கொண்டது.

இருவரும் புணரும் போது, தான் பிறப்பித்த ஸ்த்ரீயோடு தானே புணர்வது சரியல்ல என்று கருதி,பரமாத்மா ஸங்கல்பித்தவுடன் ,
ஸ்த்ரீயானவள் பசுவாக மாறினாள்.
இங்ஙனம், ஒவ்வொன்றிலும்,ஸ்த்ரீ புருஷ பேதம், எல்லா ஜீவராசிகளிலும்
ச்ருஷ்டி செய்து,தன் உள்ளங்கையிலிருந்து பரமாத்மா அக்னியைப் படைத்தார் .

தேவர்கள் ச்ருஷ்டி, ஸனக, ஸனந்தாதி முதலியவர்களின் ச்ருஷ்டி செய்யப்பட்டது. அவை ஒவ்வொன்றிலும் பரமாத்மா உட்புகுந்தார் .

அந்த ஆத்மாவை உபாஸிக்க வேண்டும்.அடையப்பட வேண்டியது அதுவே. இதற்கு ”ஆத்மோபாஸனம்” என்று பெயர்.

இவனுக்கு தேவர்களும் இடைஞ்சல் செய்ய மாட்டார்கள்.
ஆனால், தேவர்களையோ மற்ற தேவதைகளையோ உபாஸிப்பவன், அவர்களுக்கு தாஸனாய், மாடு போல் உழைக்க
வேண்டியவனாகிறான். மனிதர்களுக்கு ஆத்மஜ்ஞானம் ஏற்படுவதை தேவர்களும், இதர தேவதைகளும் விரும்புவதில்லை.
தனக்கு உழைக்கும் மாடு தன்னை விட்டு போய் விடுகிறது அல்லவா !
ஒருவன் பூர்ணனாவதற்கு, மனைவி, புதல்வன், பணம், நல்ல செய்கை என்கிற நான்கும் பொருந்தியிருக்க வேண்டும்.

வாக்கு-மனைவி,
ப்ராணன் – புதல்வன்,
கண்ணும், காதும்-பணம்.
உடலே -நல்ல செயல்களைச் செய்ய உதவுகிறது.
இவ்வளவாக ஜீவன் பூரணணாக இருந்து பரமாத்மாவை உபாஸிக்க வேண்டும்

அனைவருக்கும் தந்தையான பரமாத்மா ஏழு அன்னங்களை உண்டாக்கினான். அவற்றில் ஒன்றை எல்லாருக்கும் பொதுவாக
ஆக்கினான். (இது நாம் தினந்தோறும் உண்பது. தேவர்கள், விருந்தினர் இவர்களுக்கு அளித்த பிறகே நாம் உண்ண வேண்டும்.
ஏனெனில் இது யாவருக்கும் பொது அல்லவா!)

தேவர்களுக்கு இரண்டை அளித்தான் (வேதங்களிலும், ஸ்ம்ருதிகளிலும்
அவர்களுக்காக விதிக்கப்பட்ட தர்ஸபூர்ண மாஸங்கள் என்கிற கர்மாக்கள்)
ஒன்றை பசுவுக்கு அளித்தான். (இது பாலைக் கொடுக்கிறது).
மூன்றை தனக்காக வைத்துக் கொண்டான் (மனம், வாக்கு, ப்ராணன்)

எல்லா இந்த்ரியங்களுக்கும் மனஸே முக்கியம்.
மனஸ் வேறு ஏதாவதில் லயித்திருந்தால் கண்ணில் பட்டது காணப்படாது. காதில் கேட்டது கேட்கப்படாது.
விருப்பம், ஸங்கல்பம், ஐயம்,நம்புதல், அவநம்பிக்கை, தைர்யம், அதைர்யம், வெட்கம், அறிவு,
பயம் — இவை எல்லாவற்றுக்கும் காரணம் மனஸே. இப்படியே வாக்கு என்கிற இந்த்ரியமும் முக்கியமானது.
மூன்றாவது ப்ராணன்.
இது ப்ராண-அபான- வ்யான-உதான-ஸமானங்களாக இருக்கின்றன. மூன்று அன்னங்களாலே ஆத்மா தன்னுடைய
நிலையைப் பெறுகிறது.

இவற்றில் ப்ராணனுக்கு தேவதை சந்த்ரன். அவனுக்கு 16 கலைகள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலையாக 15 கலைகள்
அழியும். அவையே மறுபடியும் வளரும். 16வது கலை அழிவற்றது. அமாவாஸ்யை அன்று சந்த்ரன் இந்த கலை (16வது
கலை)மூலம் எல்லா பிராணிகளுக்குள்ளும் புகுந்திருப்பான்
.
சந்த்ரனைப் போலவே புருஷனுக்கும் 16 கலைகள். தானே ஒரு கலை. அது அழிவற்றது. அழியும் கலைகள் 15. இது அவருடைய
சொத்து. சொத்துகள் அழிவதும், வளர்வதும் நாம் பார்க்கிறோம்.

இப்படிப்பட்ட புருஷன், புத்திரனைப் பெற்று மனுஷ்ய லோகத்தையும், காம்ய கர்மங்களைச் செய்து பித்ரு லோகத்தையும்,
பக்தியோகம் செய்து தேவ லோகத்தையும் (பரமபதம் என்று இங்கு பொருள் கொள்க) பெற வேண்டும்.

வாயு தேவதை எப்போதும் வீசிக் கொண்டே இருக்கிறது.
அக்னி எரித்துக் கொண்டே இருக்கிறது. வெயில் காய்ந்து கொண்டே இருக்கிறது. நிலவும் அப்படியே.
இவைகளுக்கெல்லாம் அஸ்தமனம் என்பது உண்டு
ஸுர்ய,சந்த்ரர்கள் வானத்தில் சஞ்சரிப்பதற்கு வாயுவின் சகாயம் வேண்டும். வாயுவே உயர்ந்தது. ப்ராணனும் ஒரு வாயுவே.

இந்த்ரியங்களில் ப்ராணன் உயர்ந்தது. ப்ராணனுக்கு மேற்பட்ட ஜீவாத்மாவும், பரமாத்மாவும் கூட ப்ராணன் என்றே
அழைக்கப்படுவது உண்டு.
ப்ராணன் அம்ருதம்; ஆத்மா அம்ருதம்.
இப்படி ஜகத்காரணனான பரமாத்மாவை உபாஸிக்க வேண்டும்.

—————-

20 – பாலாகி வித்யை

(இதுவும் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் உள்ளதே).
அஜாத சத்ரு என்கிற அரசனிடம், பாலாகி என்பவன் தன்னுடைய ப்ரஹ்ம ஜ்ஞான அறிவை வெளிப்படுத்த ஆவல்
கொண்டு அரசனிடம் சென்று தன்னுடைய அறிவாற்றலை வெளிப்படுத்தினான்.
ஸுர்ய மண்டலம், சந்த்ர மண்டலம்,மின்னல், ஆகாயம் இப்படி ஒவ்வொன்றாகச் சொல்லி அங்கேயுள்ள ஆத்மாவை (ஜீவாத்மா)
ப்ரம்மமாகச் சொன்னான்.
அஜாதசத்ரு இதை ஒப்புக் கொள்ளாமல், இவற்றை மறுத்து, வாதிட்டான். பாலாகி அஜாதசத்ருவைப் பணிந்து, ப்ரம்மத்தைப்
பற்றி சொல்லுமாறு கேட்டான்.
அஜாதசத்ரு பாலாகியை அழைத்துக் கொண்டு, தூங்குபவன் அருகில் சென்று, அவனை எழுப்பினான்.
அவன் எழுந்திருக்காமல் இருக்கவே, கையால் அசைத்து எழுப்பினான். அவன் எழுந்தவுடன், அரசன்
பாலாகியைப் பார்த்து ”இப்போது விழித்தவன், உறங்கும்போது எங்கு இருந்தான் என்பது உனக்கு தெரியுமா? எங்கேயிருந்து
வந்தான் என்பது தெரியுமா ?” என்று கேட்டான். பாலாகிக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

அரசன், இப்போது, அவனுக்கு உபதேசித்தான்.
தூங்க ஆரம்பிக்கும்போது, இந்த்ரியங்கள் வேலை செய்வதிலிருந்து ஓய்வு பெற ஆரம்பிக்கின்றன. ஜீவன், ஸ்வப்னம்
காண இருக்கும் நாடிகளில் சென்று ஸ்வப்னங்களைக் கண்டு, பிறகு ஹ்ருதயத்திற்குச் சென்று, அங்கிருந்து ஆகாசம் சென்று
பரமாத்மாவிடம் உறங்குகிறது. இப்படி தூங்கி எழுந்திருக்கும்போது பரமாத்மாவிடமிருந்து வெளிப்படும்போது
இந்த்ரியங்களுடன் சேர்ந்து எல்லா உணர்ச்சிகளையும் திரும்பப் பெறுகிறது.
(கௌஷீதகி உபநிஷத்தில் இது விவரமாகச் சொல்லப்பட்டுள்ளது).

ஜீவாத்மா அதாவது ப்ராணன் – பசுங்கன்று. இதற்கு கர்ப்பஸ்தானம் ஹ்ருதயம். இது வெளிப்பட்டு விளங்கும் ஸ்தானம்
உடல். அன்னம் என்கிற கயிற்றால் கட்டப்பட்டுள்ளது.
இப்படி உணர்ந்தவருக்கு ஏழு சத்ருக்களால் அழிவில்லை.
(இரண்டு கண், இரண்டு காது, இரண்டு நாசித்வாரம், வாய் ஆக ஏழு).
தலையில் நிலைத்துள்ளது ப்ராணன்.

ப்ரம்மத்திற்கு இரண்டு ரூபங்கள்.
மண், நீர், நெருப்பு இதில் தங்கியிருப்பது ஒரு ரூபம்.–இது மூர்த்தரூபம்.
வாயுவும்,ஆகாயமும் மற்றொரு ரூபம் – இது அமூர்த்தரூபம்.
இது சத்யத்திற்கெல்லாம் சத்யம். (சத்யம்-ஜீவாத்மா. அவற்றுக்கெல்லாம் சத்யம் -ப்ரம்மம்-பரமாத்மா).

————

21. மைத்ரேயி வித்யை

(இதுவும் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் உள்ளதே)
யாஜ்ஞவல்க்யர் மஹரிஷி . அவருக்கு இரண்டு மனைவிகள்.

மூத்த மனைவி மைத்ரேயி. இளைய மனைவி காத்யாயனி.
இது யாஜ்ஞவல்க்யருக்கும் அவரது மனைவி மைத்ரேயிக்கும் நடந்த ஸம்வாதம்.

மைத்ரேயி – பூமி அளவு பணம் கிடைத்தாலும், அதனால் மோக்ஷம் பெற முடியுமா ?

யாஜ்ஞவல்க்யர் – முடியாது. சொத்து இருந்தால் இந்த உலக வாழ்க்கைக்கு உபயோகப்படும். மோக்ஷம் பெற இயலாது.

மைத்ரேயி – சொத்தை பிரித்துக் கொடுப்பதாகச் சொன்னீர்கள். மோக்ஷத்திற்கு உபயோகப்படாதது எனக்கு எதற்கு?
மோக்ஷ உபாயத்தை உபதேசியுங்கள்.

யாஷ்ஞவல்க்யர் – மிக்க சந்தோஷம். நான் சொல்வதை கவனமாகக் கேள்.
ஒருவருக்கொருவர் பிரியமாவது என்பது நாம் நினைப்பதால் அல்ல.
பரமாத்மா அப்படி நினைத்தால்தான் அது நடக்கும். எப்போதும் ப்ரியமாக இருக்கும் பரமாத்மாவை உபதேசம்
மூலமாக கேட்டு, அறிந்து, த்யானித்து ,அனுபவிக்க வேண்டும். இதை அடைய இந்த்ரியங்களை அடக்க வேண்டும்.
இந்த பரமாத்மா, விஜ்ஞானாத்ம (ஜீவாத்ம) ஸ்வரூபனாய் பஞ்ச பூதங்களோடு கலந்து வருகிறது.

மைத்ரேயி – இதை விளக்க வேணும்

யாஜ்ஞவல்க்யர் – எல்லாம் ஆத்மாவே என்று அறியாதவன்-
அறிகிறவன்,
அறியும் கருவி,
அறியப்படுபவது இவற்றை வெவ்வேறாக பார்ப்பான்.
எங்கும் வ்யாபித்துள்ள ஆத்மாவாகவே எல்லாவற்றையும் காண்பவனுக்கு இப்படி வேறுபாடு தோன்றாது.
எதைக் கண்டாலும் ஆத்மாவைக் காண்பதாகவே தோன்றும்.

—————

22 – பர்யங்க வித்யை (இது கௌஷீதகி உபநிஷத்தில் உள்ளது)

சித்ரன் என்கிற அரசன், அருணரின் புதல்வரை யாகம் செய்விக்க வேண்டினான். அவர் தன் புத்ரனான ச்வேதகேதுவை
அனுப்பினார். அரசன், ச்வேதகேதுவைப் பார்த்து, ”என்னையோ மற்றவரையோ (மற்ற அரசர்களையோ) யாகம் செய்வித்து
அதனால் அடையப்படும் லோகத்தைப் பற்றிய ரகஸ்யம் உள்ளதா? அது உங்களுக்கு தெரியுமா? அதன் மார்க்கம் என்ன?”
என்று கேட்டார்.
ச்வேத கேதுவுக்கு பதில் சொல்ல தெரியவில்லை.
தகப்பனாரிடம் திரும்பி விட்டான். தகப்பனாரிடம் நடந்ததைச் சொன்னான். தகப்பனாருக்கும் தெரியவில்லை. அவர் அரசனிடம்
சென்று இதை தெரிவிக்க வேண்டினார்.

அரசன் சொன்னதாவது – இவ்வுலகில் மரணம் அடைபவர் சந்த்ர லோகம் செல்கின்றனர். சந்த்ரன் மேலுலகத்திற்கு வாசல்
போன்றவன். சந்த்ரன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்பவரை மேலே செல்லுமாறு அனுமதிக்கிறான். பதில்
தெரியாதவனை மழை மூலமாகத் திருப்பி, உலகத்திற்கே அனுப்புகிறான். அப்படி திரும்பியவன் இவ்வுலகில் மறு பிறவி
எடுக்கிறான்.

சந்த்ரன் ”நீ யார்?” என்று கேட்க,
பஞ்சாக்னி வித்யையில் சொல்லியபடி ஐந்து நிலைகளைப் பெற்று, பிறவியை அடைந்தவன். இனி என்னை அவ்வாறு பிறக்குமாறு
விடவேண்டாம், பகவான் சத்யம் என்று தவத்தாலே உணர்ந்தேன் என்று பதில் சொல்பவனை சந்த்ரன் விட்டு விடுகிறான்.
அப்படிச் சொல்பவனை மேலே (அர்ச்சிராதி மார்க்கத்தில்) போக அனுமதிக்கிறான். அப்படி அனுமதிக்கப்பட்டவன் அக்னி லோகம்,
வாயு லோகம், வருண லோகம், ஆதித்ய லோகம், இந்த்ர லோகம், ப்ரம்ம லோகம் என்று இப்படி அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்கிறான்.

ப்ரம்ம லோகத்தில் அரம் என்கிற மடு உள்ளது.
முஹூர்த்தர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள், அயலாரை தடியால் அடித்து விரட்டுவார்கள். இதற்கு மேலே ”விரஜை ”
என்கிற ஆறு. திவ்யம் என்கிற வ்ருக்ஷம். ”ஸாலஜயம்” என்று சொல்லப்படும் ”அபராஜிதம்” என்கிற ராஜதானி.
இதற்கு இந்த்ரன்,ப்ரஜாபதி என்று இரண்டு த்வாரபாலகர்கள்.
”ப்ரபுவிமிதம்”,”விஷப்ரமிதம்” என்று சொல்லப்படும் விசாலமான மண்டபம்.
”விசக்ஷணை” என்கிற பீடம். அமிதௌஜஸ் எனப்படும் அளவற்ற ப்ரகாசம் உடைய கட்டில். எல்லாவற்றையும் தங்கள் ஸௌந்தர்யத்தால்
கொள்ளை கொள்ளும் தேவியர்கள். எண்ணற்ற ஸ்த்ரீ ரத்னங்கள்.
இத்தகைய ப்ரம்ம லோகத்திற்கு இவன் வருகிறான்.

பகவான் ”விரஜை ” ஆற்றின் அருகே வந்து கட்டளையிட்டதும்,
கையில் மாலையுடன் 100 திவ்ய அப்ஸரஸ்கள், மையை வைத்துக் கொண்டு 100 திவ்ய அப்ஸரஸ்கள், கந்தப் பொடி, பட்டு வஸ்த்ரம்,
ஆபரணங்கள் இவைகளை ஏந்திக் கொண்டு நூறு, நூறு அப்ஸரஸ்கள்-ஆக 500 அப்ஸரஸ்கள் இவனுக்கு அலங்காரம் செய்கின்றனர்.

அர்ச்சிராதி மார்க்கத்தில் வந்த ஜீவன் (முக்தன்) ”அரம்” என்கிற மடுவை நினைத்த மாத்திரத்தில் தாண்டி,
முஹுர்த்தர்கள் விலகி வழிவிட ”விரஜை ” ஆற்றையும் நினைத்த மாத்திரத்தில் கடந்து,
”திவ்யம்” என்கிற மரத்தை அணுகி, ப்ரம்மத்தின் நறுமணம் இவனுடைய சரீரத்திற்கு ஏற்பட
”ஸாலஜ்யம்” என்கிற இடத்திற்கு வந்து
”அபராஜிதம்” என்கிற அரண்மனையில் புகுந்து ”ப்ரம்ம தேஜஸ்” ஜொலிக்க,
இந்த்ரன்,ப்ரஜாபதி என்கிற இரு த்வாரபாலகர்கள் வழிவிட, ”விஷப்ரமிதம்” என்கிற மண்டபத்தை அடைந்து,
”ப்ரம்மயசஸ்” வந்து சேர,விசக்ஷணை என்கிற பீடத்தை நெருங்கி, ”அமிதௌஜஸ்” என்கிற கட்டிலை அடைய,

பகவான் இவனை ”நீ யார் ? ” என்று கேட்க,

முக்தன் ”ஸ்வர்க்கத்திலிருந்து ஆகாசம், வாயு, மேகம் முதலிய
வழிகளில் கீழே இறங்கி எண்ணற்ற பிறப்புகள் எடுத்த ஜீவாத்மா.
நீர் எல்லா ஜீவாத்மாக்களுக்கும் ஆத்மா அதாவது பரமாத்மா. அடியேனுக்கும் ஆத்மா.
நான் மனஸ், வாக்கு, உடல் மற்றும்இந்த்ரியங்களின் உதவியுடன் ஆண், பெண், அலி என்று பற்பல ஜென்மம்,உருவங்கள் எடுத்தேன்.
உடல், இந்த்ரியம், மனஸ்,ப்ராணன், அறிவு இவற்றையெல்லாம் விட நான் மேலானவன் என்று தெரிந்து கொண்டேன்.
தேவரீரை ஆத்மாவாக உடையவன். தேவரீருக்கே சேஷபூதன்” என்று பதில் சொல்கிறான்.

பர்யங்க வித்யையான இதில் சொல்லப்பட்டபடி பகவானை உபாஸிப்பவர் பகவானின் திருவடிகளை அடைவர்.

—————

23. ப்ரதர்தந வித்யை
(இதுவும் கௌஷீதகி உபநிஷத்தில் உள்ளது).

திவோதாஸன் என்பவரின் குமாரன் ப்ரதர்தனன். மிகவும் பராக்ரமசாலி. சண்டைகளில் இந்த்ரனுக்கு உதவி செய்தவன். ஒரு
சமயம் இந்த்ரன் இடமான ஸ்வர்க்க லோகம் சென்றான். இந்த்ரன் இவனிடம் ”வரன் அளிக்கிறேன் கேள்” என்றான். ப்ரதர்தனன்
”மனிதனுக்கு எது ஹிதமோ, அதையே வரமாக எனக்கு அளிப்பாயாக” என்றான்.

இந்த்ரன் சொன்னதாவது:
என்னை உபாஸனை செய். என்னை உபாஸித்தால் மாத்ருஹத்தி, பித்ருஹத்தி, களவு, கர்ப்பஹத்தி போன்றவற்றால்
வரும் பாபம் கிடையாது. பாபம் செய்ததற்காக முகம் கருக்காது.
நான் ப்ராணன். என்னை ஆயுள் என்றும், அம்ருதம் என்றும் உபாஸனம் செய். இதனால் முழு ஆயுளைப் பெற்று ஸ்வர்க்க
லோகத்திலும் அழியாமல் இருப்பாய்.

ப்ராண வாயு எல்லா இந்த்ரியங்களிலும் வ்யாபித்து இந்த்ரியங்களை வேலை செய்யச் செய்கிறது. ப்ராணனே
ப்ரஜ்ஞை. ப்ரஜ்ஞையே ப்ராணன். இரண்டும் சேர்ந்தே இருக்கும்.சேர்ந்தே உடலிலிருந்து புறப்பட்டு விடும்.
ப்ரஜ்ஞை என்பது ஜீவன். இவற்றுக்கு ஆத்மா பகவான். ஆனந்த ஸ்வரூபன்;
பிறப்பு இறப்பு அற்றவன்; நல்வினை, தீவினைகளுக்கு அப்பாற்பட்டவன் ; உலகங்களைக் காப்பவன் ; நியமிக்கிறவன் ;
இப்படிப்பட்டவனை எனக்கும் ஆத்மாவாக உபாஸனை செய். இதுவே ”ப்ரதர்தன வித்யை” ஆகும்.

—————-

24. சாண்டில்ய வித்யை
(அக்னி ரஹஸ்யத்தில் இருக்கிறது)

ஸத்யத்தை ப்ரம்மமாக உபாஸிப்பாயாக. ஸத்யம் என்கிற ப்ரம்மம் எல்லாவற்றுக்கும் ஆத்மா. எங்கும் பரந்தவன்.
அணுவுக்கும் அணுவானவன். எல்லாவற்றிலும் பெரியவன்.
எனக்கும் ஆத்மா என்று உபாஸனை செய்ய வேண்டும் என்று ச்வேதகேதுவுக்கு சாண்டில்யர் கூறினார்.

————

25. புருஷ வித்யை மற்றும்
26. ந்யாஸ வித்யை
ப்ரஹ்மணேத்வா மஹஸ ஓம் இதி ஆத்மாநம் யுஜ்ஜீத….. என்று ஆரம்பிப்பது
”ந்யாஸ வித்யை”. தஸ்யை – வம் விதுஷ ———-…..என்று ஆரம்பித்துச் சொல்லப்படுவது
”புருஷ வித்யை” (புருஷ வித்யை—தைத்திரீய நாராயண உபநிஷத் )
ஆத்மாவாகிற ஹவிஸ்ஸை பரமாத்மாவிடம் சேர்ப்பித்தலாகிற யாகம் என்று சொல்லலாம்
(யஜ்ஞரூபமாகச் செய்யப்படுகிற ந்யாஸ வித்யை)
இதற்கு ஆத்மா – யஜமானன்.
ஸ்ரத்தா – ஆஸ்திக புத்தி.
பத்னீ – தர்மபத்னீ.
ஸரீரம் – ஸமித்து.
மார்பானது, யாகம் பண்ணுமிடம், அதாவது அக்னிகுண்டம்.
உடம்பில் உள்ள ரோமங்கள் – பரிஸ்தரணம்.
தலைமயிர் -தர்ப்பக்கட்டு.
ஹ்ருதயம் – யூபஸ்தம்பம்.
ஆசையானது நெய் .
கோபமானது – வெள்ளாடு.
ஆலோசிக்கிற அறிவு – நெருப்பு.
எல்லா வஸ்துக்களுக்கும் அநுகூலமாக இருக்கிற அறிவு – தக்ஷிணை.
வாக்கு – ஹோதா.
ப்ராணன் – ஸாமகானம் பண்ணுகிற ருத்விக்.
கண் – அத்வர்யு என்கிற ருத்விக்.
மனம் – ப்ரஹ்ம என்கிற ருத்விக்.
காது -அக்நீத்ரன் என்கிற ருத்விக்.
எவ்வளவு காலம் உயிருடன் இருக்கிறோமா அது யாக தீக்ஷை .
எதைச் சாப்பிடுகிறானோ, குடிக்கிறானோ – அது ஸோமபானம்.
விளையாடுகிறான் என்று சொல்லப்படுவது ”உபஸத்” என்கிற யாகம்.
நடப்பது, எழுந்திருப்பது, உட்காருவது – அது”ப்ரவர்க்யம்” என்கிற யாகம்.
முகம் – ஆஹவநீயம் என்கிற அக்னி.
இவரது அறிவு – ஹோமப் பொருள். காலையிலும், மாலையிலும்
சாப்பிடுவது – அது ஸமித்.
மாலை, காலை, மதியம் என்பவை மூன்று ஸவனங்கள் (தாநி, ஸவநாநி போன்றவை)
பகல் இரவுகள் -தர்ச பூர்ணமாஸ இஷ்டிகள்.
பக்ஷங்கள், மாதங்கள் – சாதுர்மாஸ்ய யாகம்.
ருதுக்கள் -பசு பந்தம்.
வருஷங்கள், அவற்றின்உட்பிரிவுகள் – அஹர்கணம்.
இந்த யாகமானது எல்லாச் சொத்தையும் தக்ஷிணையாகக் கொண்டது.
மரணம் – அவப்ருத ஸ்நானம்

(சாந்தோக்யத்தில் 3 -16-1 சொல்லப்பட்ட புருஷ வித்யை வேறு)
சாந்தோக்யத்தில் சொல்லப்பட்டது, ஆயுப்ராப்தியை பலமாக உடைய
ஸ்வதந்த்ர வித்யை என்று ஸ்வாமி தேசிகன் அதிகரண ஸhராவளியில் அருளியுள்ளார்.

அர்ச்சிராதி மார்க்கம் — இந்த மார்க்கம், உபகோசல வித்யை, பஞ்சாக்னி வித்யை, பர்யங்க வித்யைகளில் விவரமாகச்
சொல்லப்பட்டிருக்கிறது. ப்ரஹ்ம உபாஸகர்கள் எல்லோரும் அர்ச்சிராதி கதியைச் சிந்தனை செய்ய வேண்டும் என்கிற
எண்ணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
உபநிஷத்தில் விவரிக்கப்பட்டுள்ள (பக்தி யோகத்தில் சொல்லப்படும்) மிகக் கடினமான ப்ரஹ்ம வித்யைகள் – 32. இவை
உபாஸனா மார்க்கங்கள். அவையாவன :———–
1. அக்னி வித்யை
2. அக்ஷர வித்யை
3. ஆனந்த வித்யை
4. அதிம்ருத்யுபாஸன வித்யை
5. பாலாகி வித்யை
6. பூம வித்யை
7. ப்ரஹ்ம வித்யை
8. சாண்டில்ய வித்யை
9. தஹர வித்யை
10. ஜ்யோதிர் வித்யை
11. கோச விஜ்ஞான வித்யை
12. மது வித்யை
13. மைத்ரேயி வித்யை
14. கௌரக்ஷ ஜ்யோதிர் வித்யை
15. ந்யாஸ வித்யை
16. பஞ்சாக்னி வித்யை
17. பர வித்யை
18. பர்யங்க வித்யை
19. ப்ரஜாபதி வித்யை
20. ப்ராண வித்யை
21. ப்ரதர்ன வித்யை
22. புருஷ வித்யை
23. புருஷாத்ம வித்யை
24. ரைக்வ வித்யை
25. புருஷோத்தம வித்யை
26. ஸத் வித்யை
27. ஸர்வ பர வித்யை
28. ஷோடஸ கல ப்ரஹ்ம வித்யை
29. உத்கீத வித்யை
30. உபகோஸல வித்யை
31. வைஷ்ணவ வித்யை
32. வைச்வாநர வித்யை

இந்த 32 வித்யைகளுக்கும் ஆதாரம் ஸ்ரீ ஹயக்ரீவன். எல்லா வித்யைகளுக்குமே ஆதாரம் ஸ்ரீ ஹயக்ரீவன்.
பகவான், ஸ்ரீ ஹயக்ரீவ அவதாரம் எடுத்து வேதங்களை, மது, கைடபர்களிடமிருந்து மீட்டுத் திரும்பவும்
ப்ருஹ்மாவுக்கு உபதேசித்ததால்தான், வேதம் எல்லா உலகங்களிலும் பரவி இருக்கிறது.
நீங்கள், உங்கள் இரண்டுகாதுகளையும் இரண்டு கைகளால்
இலேசாக மூடிக்கொண்டவுடன், கேட்கும் சப்தம் வேதம் சம்பந்தப்பட்டது.
ஸ்ரீ ந்ருஸிம்ஹ தாபநீய உபநிஷத்தில் ஸ்ரீ ந்ருஸிம்ஹ அநுஷ்டுப் மந்த்ரம் 32 அக்ஷரங்களாக உள்ளது.
ஸ்ரீ ஹயக்ரீவனைப் பற்றிய முக்ய மந்த்ரம் 32அக்ஷரங்களிலுள்ள அநுஷ்டுப் ச்லோகம்.
இவை, 32 ப்ரஹ்ம வித்யைகளைக் குறிப்பதாகப் பெரியோர் சொல்வர்.
ஆக 32 ப்ரஹ்ம வித்யைகளின் பெருமையையும், அருமையையும் சொல்லில் விவரிக்க இயலாது.

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ருத ப்ரகாசகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேத வியாசர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாஷ்ய சுருக்கம் — நான்காம் அத்யாயம்–

June 10, 2021

விஷயம் –சம்சயம் -பூர்வ பக்ஷம் -சித்தாந்தம் -பிரயோஜனம் -ஆகிய ஐந்தும் உண்டே ஒவ் ஒரு அதிகரணங்களிலும்

முதல் இரண்டு அத்தியாயங்கள் பரம தத்வம்
அடுத்து பரம ஹிதம்
இறுதியில் பரம புருஷார்த்தம்

1-சமன்வய அத்தியாயம் -அந்வயம் –பொருத்தம் -சமன்வயம் -நல்ல பொருத்தம் –
1-1-அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்–அயோக வியச்சேத பாதம் -ஸ்ரஷ்டத்வம் கல்யாண குணம்
1-2-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்-அந்நிய யோக விவச்சேத பாதம்–தேஹி அந்தர்யாமி நியாந்தா -சர்வ சரீரீ
1-3-ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்–ஸ்வ இஷ்டத்வம்
1-4-ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்–நிரவதிக மஹிமை – உபாதான நிமித்த ஸஹ காரி -த்ரிவித காரணமும் இவனே –

2-அவிரோத அத்யாயம்
2-1-ஸ்ம்ருதி பாதம் –கபில ஸ்ம்ருதி நிரசனம்- அபஸ்த பாதத்வம் –யாராலும் மறுக்க ஒண்ணாத காரணத்வம்
2-2- தர்க்க பாதம் -சாங்க்ய வைசேஷிக புத்த ஜைன பாசுபத மதங்கள் நிரஸனம் -பாஞ்சராத்ர மத ஸ்தாபனம் -ஸ்ரீ தப்தத்வம் -ஆஸ்ரித பக்ஷ பாதி இவனே
2-3-வ்யுத் பாதம் –கத்மதீ உசித ஞான க்ருத்வம் -தர்ம பூத ஞானம் சுருங்கி விரிந்து -கர்மாதீனம் -ஸ்வரூப அந்யத் பாவ
2-4-இந்த்ரிய உசித ஞான க்ருத்வம் –தகுந்த புலன்கள் அருளும் தன்மை

3-சாதன அத்யாயம்
3-1-வைராக்ய பாதம் -ஸம்ஸ்ருதவ் தந்த்ர வாஹித்வம் –சம்சார தோஷ தர்சனம் -ஜாக்ருத ஸூஷூப்தி ஸ்வப்ன மூர்ச்சா அவஸ்தா சதுஷ்ட்யம்
3-2-உபய லிங்க பாதம் -நிர்தோஷத்வாதி ரம்யத்வம்
3-3- குண உப ஸம்ஹார பாதம் —32- ப்ரஹ்ம வித்யைகளைக் காட்டி அருளி –நாநா சப்தாதி பேதாத் —பஹு பஜன பாதம்
3-4-அங்க பாதம் -ஸ்வார்த்த கர்ம ப்ரஸாத்ய –பக்தி யோக அங்க விளக்கம் -வர்ணாஸ்ரம கர்ம பல ப்ரதத்வம்

4-பல அத்யாயம் –
4-1-ஆவ்ருத்தி பாதம் -பாபாச்சித்வம் –தைல தாராவத் -அவிச்சின்ன த்யான பல பிரதன்
4-2-உக்ராந்தி பாதம் -ப்ரஹ்ம நாடி கதி க்ருத்வம் —
4-3- கதி பாதம் -அர்ச்சிராதி மார்க்கம் –
4-4-பல பாதம் –அஷ்ட குண ஸாம்யம் -ஸாம்யா பத்தி பிரதன்

———

4-1-ஆவ்ருத்தி பாதம் –11- அதிகரணங்கள்

இடைவிடாமல் த்யானம் -சாதனமாக இருந்தாலும் இங்கு பல அத்தியாயத்தில் —
திவ்ய மங்கள விக்ரஹம் கல்யாண குணங்கள் ஸ்வரூபம் விபூதி -இவற்றை
தியானிப்பது மனஸ் ஸூக்கு போக்யமாக இருப்பதால் –

4-1-1-ஆவ்ருத்தி அதிகரணம்
பூர்வபக்ஷம் -ஐஹிக பலன்களுக்குத் தான் மீண்டும் மீண்டும் -உமியில் இருந்து நெல்லை எடுப்பது போல்
அம்முஷ்மிக அத்ருஷ்ட பலன்களுக்கு ஒரு தடவை போதும் –
ஸூத்ரகாரர்
ஆவ்ருத்தி அஸக்ருத் உபதேசாத் -என்று அத்தை நிரசிக்கிறார் –

தைத்ரியம் -ப்ரஹ்ம வித் ப்ரஹ்மத்தை ஸ்ரீ வைகுண்டத்தில் அடைகிறான் -த்யானம் உபாசனம் வேதனம் –
அஸக்ருத் ஆவ்ருத்தி -மீண்டும் மீண்டும் -இடைவிடாமல் தைலதாராவத் –

4-1-2-ஆத்மாத்ம உபாசன அதிகரணம் –
ப்ரஹ்மம் தனியாக ஜீவனில் வேறுபட்டதாகஉபாசனமா -ஜீவாத்மாவுக்கும் ஆத்மாவாக எண்ணி உபாசனமா -என்று விசாரம் –
பூர்வ பக்ஷம் -தனித்து வேறுபட்டதாக –
ஸூத்ரகாரர்
ஆத் மேதி து உப கச்சந்தி க்ரஹயந்தி ச
ப்ரஹதாரண்யம் -அந்தர்யாமி ப்ராஹ்மணம்

——–

4-1-3-ப்ரதீக அதிகரணம்
இதுவும் அடுத்ததும் ப்ராசங்கிகம்
ப்ரதீக உபாசனம் -3-3- பார்த்தோம் -மனசை ப்ரஹ்மத்துக்கு பிரதியாக நினைத்து உபாசனம் -த்ருஷ்ட்டி விதி –
இது ஐஹிக பலன்களுக்கு உபாசனம் -மோக்ஷத்துக்கு அல்ல –
இதே போல் முக்ய பிராண உபாசனமும் ப்ரதீக உபாசனமே –
ப்ரஹ்மத்தை ஆத்மாவாக எண்ணி உபாசனமும் ப்ரதீக உபாசனம் தான் என்று பூர்வ பக்ஷம் –
இத்தை நிரசித்து ஸூத்ரகாரர்
ந ப்ரதீகே ந ஹி ச –
ஸூத்ரகாரர் -ஒன்றை ப்ரஹ்மமாக நினைத்து உபாசித்து சிறந்ததே -என்றும் சொல்கிறார் –

—–

4-1-4-ஆதித்ய தீமிதி அதி கரணம்
சாந்தோக்யம் –உத்கீத உபாசனம் –
ஆதித்ய உபாசனமும் உத்கீத உபாசனம் போல் செய்வதே உசிதம் பூர்வ பக்ஷம்
ஸூத்ரகாரர்
ஆதித்ய தீமத ய ச அங்க உபபத்தே —
ஆதித்ய உபாசனமே சிறந்தது -உத்கீதா உபாசனம் இதுக்கு அங்கம்

——-

4-1-5-அஸீன அதிகரணம்
உபாசனம் ஆசனத்தில் இருந்தா நின்றா நடந்தா தூங்கும் பொழுதா -விசாரம்
ஸூத்ரகாரர்
அஸீன ஸம்பவத் -ஆசனத்தில் இருந்தே செய்ய வேண்டும் –
ஆழ்ந்த தியானத்துக்கு அசையாமல் இருக்க வேண்டும் –
ஸ்ரீ கீதா- ஸ்வேதேஸ்வர உபநிஷத் பிரமாணங்கள் –

——

4-1-6-ஆ பிரயாண அதிகரணம்
ஆ ப்ரயாணாத் தத்ர அபி த்ரிஷ்டம்
ஸ்ரீ வைகுண்ட பிராப்தி கிட்டும் வரை -என்றவாறு
பக்தி யோகம் -பல பிறவிகளில் பின்பே பலம் கிட்டும் –

——

4-1-7—ததிகம அதிகரணம்
தர்சன சாமான ஆகாரம் –
பூர்வாக உத்தராக கர்ம விநாச விசாரம்

——-

4-1-8—இதர அதிகரணம்
கீழே பாப விநாச விசாரம்
இங்கு புண்ய விநாச விசாரம்

———

4-1-9-அநாரப்த கார்ய அதிகரணம்
சஞ்சிதம் -அநாரப்தம்
ப்ராரப்தம் -முழுவதும் கழிந்தால் தானே மோக்ஷம் -சாந்தோக்யம் -ஆறாம் அத்யாயம் –
ததிகமன அதிகரணம் போய பிழையும் புகுதறுவான் நின்றனவும் தீயினில் தூசாகும் என்றது சஞ்சிதம்
ப்ராரப்தம் அனுபவித்தே கழிக்க வேண்டும் பக்தி யோக நிஷ்டனுக்கு –


4-1-10-அக்னி ஹோத்ராதி அதிகரணம்

அக்னி ஹோத்ராதி து தத் கர்யாய ஏவ தத் தர்சநாத்
நித்ய நைமித்திகாதி கர்மங்களை விடாமல் பக்தி யோக நிஷ்டனும் செய்ய வேண்டும் –
புண்யங்கள் அனுகூலருக்கும் பாபங்கள் பிரதிகூலருக்கும் சென்று சேரும் -கர்மங்கள் கழிந்த பின்பே மோக்ஷ பிராப்தி –

——–

4-1-11-இதர ஷபனாதி கரணம்

போகேந து இதர ஷபயித்வ அத சம்பத்யதே -என்று ப்ராரப்த கர்மங்கள் முடிந்த பின்பே பிராப்தி
ஜென்மங்கள் பல பல எடுக்க வேண்டி இருக்கும் –

——-

4-2-உதக்ரந்தி பாதம் –11 அதிகரணங்கள் –
ஜீவன் முக்த வாத நிரஸனம்
சாந்தோக்யம் 6 அத்யாயம் ஸத் வித்யை

4-2-1- வாக் அதிகரணம் –
வாக் இந்திரியம் மனசிலும் மனஸ் முக்ய ப்ராணனிலும் -முக்ய பிராணன் ஜீவனிலும் –
ஜீவன் ப்ரஹ்மத்திலும் சேர்ந்து -சம்பத்தி
இங்கு பூர்வ பக்ஷம் -வாக்குக்கு மனஸ்ஸூ காரணம் இல்லையே எவ்வாறு –
எனவே இங்கு வாக் இந்திரியத்தை சொல்ல வில்லை -வாக்கையே சொல்லும் என்பர்
இதை நிரஸித்து ஸூத்ரகாரர்
வாக் மனசி தர்சநாத் சப்தாச் ச -என்று வாக் இந்த்ரியத்தையே சொல்லுகிறது –
அனைத்து இந்திரியங்களுக்கும் உப லக்ஷணம்

————–

4-2-2-மநோ அதிகரணம்
தன் மான பிராண உத்தர
உத்தர என்றது உபநிஷத் வாக் மனசி ஸம்பத்யதி என்றதன் பின் மன பிராண என்பதால்- –
இந்த அதிகரணத்தில் மேலும் ஒரு சங்கை நிவர்த்திக்கப் படுகிறது –
உபநிஷத் —அன்ன மயம் ஹி சவும்ய மன–அன்னம் அஸ்ரு ஜந்த — ஆபோ மய பிராண –என்பதால்
மனதுக்கு அன்னமும் அன்னத்துக்கு நீரும் -ப்ராணனுக்கும் நீரும் காரணம் என்பதால் -மனசு தண்ணீரில் சேரும் என்பர் பூர்வ பக்ஷம்
இவை காரணம் அல்ல -நல்ல செயல்பாட்டுக்கு உதவும் என்பதையே உபநிஷத்துக்கள் சொல்லுகின்றன –

—–

4-2-3-அத்யக்ஷ அதிகரணம்
சாந்தோக்யத்தில்
பிராண தேஜஸி தேஜஸ் பரஸ்யாம் தேவதயம் -என்பதில் ஜீவ -ஸப்தம் இல்லாததால்
பூர்வ பக்ஷம் முக்கிய பிராணன் இந்திரியம் மனஸ் நேராக தேஜஸ் பஞ்ச பூதங்கள் உடன் சேர்ந்தன என்பர் –
இத்தை நிரசித்து ஸூத்ர காரர்
சோதியஷே தத் உப கம திப்ய
யமுனை கடலில் கலக்கிறது–கங்கையில் கலந்து பின் கலக்கிறது – என்பது போல்
ஆதி சப்தத்தால் முக்கிய பிராணன் ஜீவனுடன் சேர்ந்து
இதே போலே மேலும் உபநிஷத் வாக்கியங்கள் உண்டே

—-

4-2-4-பூதோதி கரணம்
இதில் தேஜஸ் மட்டுமா அனைத்து பூதங்களுமா என்கிற சங்கை தீர்க்கிறார்
பூர்வ பக்ஷம் பிராணா தேஜஸ் சாந்தோக்யம் என்பதால் தேஜஸ் மட்டுமே
ஸூத்ரகாரர்
பூதேஷு தஸ் ஸ்ருதே —
எல்லா பூதங்களுடனே -ப்ரஹதாரண்யம் சொல்லுமே
பூர்வ பக்ஷம் மீண்டும் ஜீவன் ஒவ்வொரு பூதமாக என்று கொள்ளலாமே –
அனைத்தும் சேர்ந்து என்று கொள்ள வேண்டாமே என்ன
நைகஸ்மின் தர்ஷ யதோஹி –தனியாக பூதம் செயல்படாதே –
பஞ்சீ கரணம் த்ரவீ கரணம் ஏற்பட்டால் தானே செயல்பாடு –

———-

4-2-5-அஸ்ருத்யுப க்ரம அதிகரணம்
ஜீவமுக்தி வாதம் நிராசனம் இதில் –
கீழ் சொன்ன க்ரமம் அவித்யை உள்ள ஜீவாத்மாவுக்கே -அவித்யை இல்லா ஜீவாத்மா ஞானம் வந்தது முக்தி என்பர் பூர்வ பக்ஷம்
இத்தை ஸூத்ர காரர் நிரசிக்கிறார்
ஸமானச் ச அஸ்ருத்யுப க்ரமாத் அமிர்தத்வம் ச அநு போஷ்ய
அர்ச்சிராதி மார்க்கம் வழியே தான்
கட உபநிஷத்
யதே ஸர்வே ப்ரமுச்யந்தே காம யஸ்ய ஹ்ருதி ஸ்ரீதஸ் அத மர்த்ய அமிர்தோ பவதி அத்ர ப்ரஹ்ம ஸம்ஷ்னுதே
அநு போஷ்ய-என்று சரீரம் எரிப்பதுக்கு முன்பே அம்ருதத்வம் அடைகிறான் –
மேலும் ஸூஷ்ம சரீரம் கொண்டு விரஜையில் நீராடி வாஸனா ருசிகளைப் போக்கி ப்ரஹ்ம பிராப்தி –

——–

4-2-6-பர சம்பத்தித்த அதிகரணம்
இது நான்காவதுக்கு அடுத்து இருக்க வேண்டும்
ஜீவமுக்தி நிரஸிக்க த்வரித்து கீழ் அதிகரணம்
இதில் ஜீவாத்மா அந்தராத்மாவாய் உள்ள ப்ரஹ்மத்துடன் சம்பந்தம் அடைவதைச் சொல்கிறது –
பூர்வ பக்ஷம் -உபநிஷத்
தேஜஸ் பரஸ்யம் தேவதயம் -என்று பூத சூஷ்மம் இந்திரியம் மனஸ் முக்ய பிராணன் இவற்றை மட்டுமே சொல்லிற்று –
இத்தை நிரசித்து ஸூத்ர காரர்
தானி பர தத ஹி அஹ –என்று
இவை அனைத்தும் பரமாத்மா இடம் ஒன்றி –
இது ஸ்வர்க்கம் நரகம் போகும் ஜீவாத்மாவுக்கும் ஒய்வு எடுத்துக் கொள்ள உண்டே –

———–

4-2-7-அவி பாகதி கரணம்
இதில் ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஐக்யம் பூர்வ பக்ஷம்
அவி பாகோ வஸனாத் –சம்பத்யதே –என்று இரண்டும் அப்ருதக் சித்தம் தானே ஒழிய ஒன்றே அல்ல –

——-

4-2-8- ததோகோ அதிகரணம் –
ப்ரஹ்ம வித் ப்ரஹ்ம நாடி வழியாகவும் மற்றவர்கள் வேறே நாடி வழியாகவும்
கீழ் வரை அனைவருக்கும் பொது
உபநிஷத் -ஷதம் சைக ஹ்ருதயஸ்ய நாட்யா –தசம் மூர்த்தானாம் அபி நிஸ்ருதைக
தய ஊர்த்வ மயன் அம்ருதத்வ மேதி விஸ்வ ஞாந்ய உத் க்ரமண பவந்தி -என்று
மூர்த்நா நாடி வழியே தற்செயலாகச் செல்கிறான் என்கிறது
ஸூத்ர காரர்
ததோகோ அக்ர ஜ்வலனம் தத் ப்ரகாசிதா த்வாரா வித்யா சமர்த்யத் தத் சேஷ கதி அநு ஸ்ம்ருதி –
யோ கச்ச ஹார்த்ந அநு க்ருஹீத — இதுவே அதிக நீளமான ஸூத்ரம்
அவனது அனுக்ரஹத்தாலே 101 நாடி மூலம் செல்கிறான் -என்கிறது –

———–

4-2-9-ரஸ்மி அதிகரணம்
சாந்தோக்யம் -அத யத்ர ஏ தஸ்மாத் சரீரத் உத் க்ரமாதி அத எதைரேவ ரஸ்மி அபி ஊர்த்வம் அ க்ரமதே —
பூர்வபக்ஷம் இரவில் ரஸ்மி இல்லையே –
ஸூத்ர காரர்
ரஸ்மி அநு சாரி –ஸூர்ய கிரணங்கள் மூலமே செல்கிறான் –
மேகங்கள் கிரணங்களை மறைத்தாலும் இரவிலும் நாம் காணாமல் இருந்தாலும் எப்பொழுதும் கிரணங்கள் உண்டே –

———-

4-2-10-நிஷாதி கரணம்
பகல் சுக்ல பக்ஷம் உத்தராயணம் இல்லாமல் இரவு கிருஷ்ண பக்ஷம் தஷிணாயணம் -என்றால்
மோக்ஷ பிராப்தி இல்லை பூர்வ பக்ஷம்
அத்தை நிரசித்து ஸூத்ரகாரர்
நிஷி நேதி சேதன சம்பந்தஸ்ய ஏவத் தேஹ பவித் வத் தர்சய யதி ச –
சாந்தோக்யம்
தஸ்ய தாவத் ஏவ சிரம் யாவத்ந வி முக்ஷ்யே அத சம்பத்ஸ்யே –என்று
பிராரப்த கர்ம அவசானத்தில் மோக்ஷ பிராப்தி என்கிறதே -அதனால் தர்சயதி ச என்கிறார் –

————

4-2-11-தஷிணாய அதிகரணம்
தைத்ரியம்
அத்ய தக்ஷிண ப்ரமியதே பித்ருநாம் ஏவ மஹிமானாம் கத்வ சந்த்ர மாச சாயுஜ்யம் கச்சதி –
பித்ரு லோகம் வழியாக சந்த்ர போவதாக உள்ளது
பீஷ்மர் இதற்காகவே உத்தராயணத்துக்கு காத்து இருந்தார் – -பூர்வ பக்ஷம்
இத்தை நிரசித்து ஸூத்ரகாரர்
அத ச அயனே அபி தஷிணே —
சந்த்ர லோகத்தில் ஒய்வு எடுத்து கொண்டு
தஸ்மாத் ப்ரஹ்மனோ மஹிமானாம் ஆப்நோதி -என்கிறது அதே தைத்ரியம் –
யோகின பிரதி ஸ்மர்யதே ஸ்மர்தேச்ச ஏதே -என்று ஒரு ஸூத்ரத்தால்
மேலும் தூமாதி மார்க்கம் வழியாக செல்பவனே திரும்புகிறான்
அர்ச்சிராதி மார்க்கம் வழியாக சென்றவன் திரும்ப மாட்டான் என்கிறது –

——

4-3-கதி பாதம் –இதில் ஐந்து அதிகரணங்கள் –

அர்ச்சிஸ் ஜ்வல்நா –அஹா திவச –ஜ்யோத்ஸ்ன பக்ஷம் -உத்தராராயண –ஷட் அங்கீத மாஸே —
ஸம் வத்ஸர –வாயு பாவன –ஸூர்ய ஆதித்ய தாபன –சந்த்ரமாஸ –
வித்யுத் அமானவ புருஷன் -வருண -இந்திர-பிரஜாபதி
நால்வரும் விரஜா நதி வரை கூட்டிச் செல்வர் என்பவர்

—-

4-3-1-அர்ச்சிராதி அதி கரணம்
சாந்தோக்யம்–4-14- / 8-4-உபகோஸல வித்யையிலும் –
கௌஷிகி ப்ருஹதாரண்யம்
இந்த மூன்றிலும் சில -வேறுபாடுகள்-
ஏதாவது ஒரு வழியை முக்தாத்மா எடுத்துக் கொள்ளலாம் பூர்வ பக்ஷம்
இத்தை நிரசித்து –ஸூத்ரகாரர்
அர்ச்சிரதின தத் பிரதிதே -ஒரே ஒரு மார்க்கமே
குண உப ஸம்ஹார பாதம் படியே சமன்வயப்படுத்தி கொள்ள வேண்டும் –

——

4-3-2-வாயு அதிகரணம்
இந்த சாந்தோக்யம் சம்வத்சரத்துக்கு பின் ஸூர்யன்
ப்ரஹதாரண்யம் -வாயு லோகம் -இதுவே தேவ லோகம் -சம்வத்சரத்துக்கும் ஸூர்யனுக்கும் நடுவில் –
பூர்வ பக்ஷம் இந்த வேறுபாட்டால் -ஏதாவது ஒன்றை முக்தாத்மா கொள்ளலாம் என்றும்
வாயு லோகமும் தேவ லோகமும் ஓன்று அல்ல என்றும் சொல்வர் –
ஸூத்ரகாரர் இதுக்கு
வாயும் அப்தத் அவி ஷேஷவிஷே ஸப்யம் -என்று
வாயு லோகம் சம்வத்சரத்துக்கு மேலும் ஸூர்யனுக்கு கீழும் கொள்ள வேண்டும் என்றும்
தேவ லோகமும் வாயு லோகமும் ஒன்றே என்றும்
பத க்ரமம் வேறே அர்த்த க்ரமம் வேறே என்றும் அர்த்த க்ரமம் படியே கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் –

———–

4-3-3-வருண அதிகரணம்
கௌஷிதகி உபநிஷத் -அக்னி லோகம் -வாயு லோகம் -வருண லோகம் -ஸூர்ய லோகம் –
இந்திர லோகம் -பிரஜாபதி லோகம் -ஸ்ரீ வைகுண்டம்
கீழே தேவ லோகம் -வாய் லோகம் சம்வத்சரத்துக்கும் ஸூர்ய லோகத்துக்கு நடுவில் என்றது
ஸூத்ரகாரர்
ததிஹ ஆதி வருண சம்பந்தாத் –
வருண லோகம்-ததிஹ– வித்யுத் -மின்னல் புருஷனுக்கு மேலே கொண்டு
இந்திர ப்ரஜாபதியும் வருண லோகத்துக்கு மேலே கொள்ள வேண்டும் என்கிறார் –
.
——–

4-3-4-ஆதி வாஹிக அதிகரணம்
பூர்வ பக்ஷம் -12 இடங்களும் போகம் அனுபவிக்கும் இடங்கள் என்பர்
ஸூத்ரகாரர் —ஆதி வாஹிக தல் லிங்காத்
வித்யுத் புருஷன் பற்றி உபநிஷத் -ச ஏநன் ப்ரஹ்ம கமயதி -என்கிறது
இங்கு சொன்னது மற்ற 11 புருஷர்களும் கூட்டிச் செல்பவர்கள் என்பதற்கு உப லக்ஷணம்

————

4-3-5-கார்ய அதிகரணம்
முக்தாத்மா மட்டுமே ஸ்ரீ வைகுண்டம் செல்கிறார்
கூட்டிச் செல்லும் இவர்கள் அல்ல என்கிறது –
பாதராயணர் தமது சிஷ்யர்களான பதரி -ஜைமினி இருவரையும் அவர்கள் கருத்துக்களை சொல்லக் சொல்கிறார் –
கார்யம் பதரி அஸ்ய கதி உப பத்தே
கார்யம் என்று ஹிரண்யகர்பன் -நான்முகனை சொல்கிறது -காரணம் ப்ரஹ்மம் கார்யம் நான் முகன் என்றவாறு

பர ப்ரஹ்மம் விபு எங்கும் இருப்பவன் -எவ்வாறு இவர்கள் அழைத்து செல்ல முடியும்
புருஷ அமானவ ஏத்ய ப்ரஹ்மா லோகன் கமயதி -என்றும் உபநிஷத்
லோகன் -லோகங்கள் -பல அண்டங்கள் -பல பிரம்ம லோகங்கள் –
மேலும் உபநிஷத் —பிரஜாபதி சபம் வேஷ்ம ப்ரபத்யே -பிரஜாபதி லோகம் அடைகிறான் –
ஆதிவாஹிகர் இங்கு தான் கூட்டிச் செல்கிறார்கள் -ஸ்ரீ வைகுண்டம் அல்ல என்கிறார் பதரி –
ஐந்து ஸூத்ரங்களால் மேல் சொன்னபடி பதரி
பின்பு ஜைமினி மூன்று ஸூத்ரங்களால் –
பரம் ஜைமினி முக்யத் வத் –பர ப்ரஹ்மம் இடம் கூட்டிச் செல்கிறார்கள்
சாந்தோக்யம் 8 அத்யாயம் -பரஞ்சோதி இடம்
மேலும் இரண்டு ஸூத்ரங்களால்
தர்சனச் ச –என்றும்
ந ச கார்யே ப்ரத்யபி சந்தி -என்றும்

அடுத்து பாதராயணர் பத்ரி கூற்றைத் தள்ளி ஜைமினி கூற்றை கொஞ்சம் கொண்டு
அப்ரதி கலம்பனம் நயதீதி பாதராயண உபயத ச தோஷாத் தத் க்ரது ஷ -என்கிறார்

ப்ரஹ்ம த்ருஷ்ட்டி உபாசகர்கள் இரண்டு வகை
பிரதிக ஆலம்பனர்
அப்ரதிக ஆலம்பனர்
சாந்தோக்யம் 7 அத்யாயம் -சனத்குமாரர் -நாரதருக்கு உபதேசம்
நாமம் -வாக்கு -மனஸ் -சங்கல்பம் -சித்தம் -த்யானம் -விஞ்ஞானம் -பலம் -அன்னம்-நீர் -தேஜஸ் –
ஆகாசம் -ஸ்ம்ருதி -ஆசை -பிராணன் -இப்படி 15 -ப்ரஹ்மாத்மக வஸ்து உபாசனம் ஐஹிக பலன்களுக்கு
அப்ரதிக ஆலம்பனர் -மோக்ஷ பலனுக்காகாவே
“Svatma Sariraka Paramatma upasaka:
ஸ்வாத்ம சரீரிக பரமாத்மா உபாசகர்கள் –
உபநிஷத் -ஏஷ ஸம் ப்ரஸாத அஸ்மத் சரீரத் உத்தய பரஞ்சோதி உப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபினிஷ் பத்யதே
ப்ரஹமாத்ம க ஸ்வாத்ம உபாஸகர்-அதாவது – பஞ்சாக்னி வித்யா நிஷ்டர்கள்
உபநிஷத் –
தத் யா இத்தம் விது ஏ சேமே அரண்யே ஸ்ரத்தா தப இத்யுபசதே தே அர்ச்சிஷம் அபி சம்பவந்தி
இவர்களும் அர்ச்சிராதி வழியாக ஸ்ரீ வைகுண்டமே செல்கிறார்கள்
தத் க்ரதுஷ –உபாசித்த படியே ப்ரஹ்மத்தை காண்கிறார்கள் –

——-

அதிகரண சாராவளி–496-ஸ்லோகம்
பீஷ்மர் -அஷ்ட வசுக்களில் ஒருவர் -ஆகவே மீண்டும் வசு பதவிக்கு சென்று
மது வித்யை அனுஷ்ட்டித்து பின்பே மோக்ஷம் அடைந்தார் என்கிறார்
498-502-ஸ்லோகங்கள் மது வித்யை பற்றியவை
சிசு பாலன் அர்ச்சிராதி மார்க்கம் மூலம் செல்ல வில்லை
ஹிரண்யாக்ஷன் ஹிரண்ய கசிபு -ராவணன் கும்பகர்ணன் -சிசுபாலன் –தந்தவக்த்ரன்
ராமர் அயோத்யா பிரஜைகளை சாந்தாநிக -கார்ய ஸ்ரீ வைகுண்டம் –
இந்த்ரர்களும் சதுர்முக ப்ரம்மாக்களும் ப்ரஹ்ம வித்யை அனுஷ்ட்டித்து அர்ச்சிராதி மார்க்கம்
இவர்கள் லோகம் தொடங்கியே செல்கிறார்கள்

——

4-4-பல பாதம் –ஆறு அதிகரணங்கள் இதில் –

கௌஷிதகி உபநிஷத் -சாந்தி பர்வம் -பாஞ்சராத்ர சம்ஹிதை -ஸ்ரீ வைகுண்ட கத்யம் –
அஷ்டாதச ரஹஸ்யங்களில் ஒன்றான அர்ச்சிராதி கதி பிரபந்தம் –
இவை ஸ்ரீ வைகுண்டம் பற்றி விளக்கும் –

ஆதார சக்தி க்ரமம் -ஸ்ரீ பகவத் ராமானுஜர் ஸ்ரீ நித்ய கிரந்தத்தில் காட்டி அருளியது

1-ஆதார சக்தி
2-மூல பிரகிருதி
3-அகில ஜகத் ஆதார கூர்ம ரூபி -நாராயணன் –
4-ஸ்ரீ அநந்தன் -சேஷன்
5- பூ லோகம்
6- ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகம்
7- ஸ்ரீ வைகுண்ட திவ்ய பதம்
8- ஸ்ரீ வைகுண்ட திவ்ய நகர்
9- ஸ்ரீ வைகுண்ட திவ்ய விமானம் –
10-ஆனந்தமய மண்டபம்
11-மண்டபத்தில் ஆதி சேஷன்
12- தர்ம பீட பதம் -திவ்ய சிம்ஹாசனத்தில் தென் கிழக்கில்
13-ஞான பீட பதம் -தென் மேற்கில்– நிரு ருதி
14-வைராக்ய பீட பதம் வட மேற்க்கில் -வாயவ்ய –
15-ஐஸ்வர்ய பீட பதம் -வட கிழக்கு -ஈசான்யம்
16–அதர்ம -கிழக்கு பகுதி மெத்தைக்கு பெயர்
17-அஜன –தெற்கு பகுதி மெத்தைக்கு பெயர்
18-அவைராக்யா -மேற்கு பகுதி மெத்தைக்கு பெயர்
19-அ நைஸ்வர்யா -வடக்கு பகுதி மெத்தைக்கு பெயர்
20-அநந்தா -ஸர்வ அவஸ்த்தை கைங்கர்ய பரன்
21)ஸ்ரீ பத்மம் அதுக்கு மேல்
பரம பத சோபனத்தில் ஸ்ரீ பத்மத்துக்கு மேல் ஆதி சேஷன் என்று மாறி உள்ளது –
22-விமல சரம ஹஸ்தம் -கிழக்கு பக்க சாமரம் வீசுபவர்
23-உத் கர்ஷிணை சரம ஹஸ்தம் -தென் மேற்கு பக்க சாமரம் வீசுபவர்
24-ஞான சரம ஹஸ்தம் -தெற்கு பக்க சாமரம் வீசுபவர்
25-கிரியா சரம ஹஸ்தம் -தென் கிழக்கு பக்க சாமரம் வீசுபவர்
26-யோக சரம ஹஸ்தம் -மேற்கு பக்க சாமரம் வீசுபவர்
27-பிரஹ்வ சரம ஹஸ்தம் -வடகிழக்கு பக்க சாமரம் வீசுபவர்
28-ஸத்ய சரம ஹஸ்தம் -வடக்கு பக்க சாமரம் வீசுபவர்
29-ஈஸந சரம ஹஸ்தம் -வட கிழக்கு பக்க சாமரம் வீசுபவர்
30- அனுக்ரஹ சரம ஹஸ்தம் -கிழக்கு பக்க சாமரம் வீசுபவர்
31-ஜகத் ப்ரக்ருதி யோக பீடம் -ப்ரஹ்மாண்டங்களுக்கும் திருப்பாற் கடலுக்கும் காரணம்
32-திவ்ய யோக பீடம் -மெத்தை
33-ஸஹஸ்ர பணா மண்டித ஆதி சேஷன்
34-பாத பீட ஆதி சேஷன்
35-அநந்த கருட விஷ்வக் சேனாதிகள் –நித்ய ஸூரிகள் பத்மாஸனத்தில் எழுந்து அருளி
36- அஸ்மத் ஆச்சார்யர்கள் எழுந்து அருளி
37-ஸ்ரீ மன் நாராயணன்
38-ஸ்ரீ மஹா லஷ்மி வலப்புறம்
39-ஸ்ரீ பூமா தேவி இடப்புறம்
40-ஸ்ரீ நீளா தேவி இடப்புறம்
41–க்ருத மகுடாதி பதி
42-க்ருத மாலா அபீடகாத்ம –
43-தக்ஷிண குண்டல மகரம் -வலது திருக்காதில்
44- வாமன குண்டல மகரம் -இடது காதில்
45-வைஜயந்தி வனமாலா
46-திருத்துளசி மாலா
47-ஸ்ரீ வத்ஸம்
48-ஸ்ரீ கௌஸ்துபம்
49- காஞ்சி குண உஜ்வல பீதாம்பரம்
50-ஸ்ரீ ஸூ தர்சன ஹேதி ராஜன்
51- ஸ்ரீ நந்தக ஷட்கதிபதி
52- ஸ்ரீ ஹஸ்தபத்மம்
53-ஸ்ரீ பாஞ்ச ஜன்ய சங்காதிபதி
54-ஸ்ரீ கௌமோதகி கட்க அதிபதி
55-சார்ங்க்ய ச அதிபதி
56- ஸ்ரீ பகவத் பாதாரவிந்த ஸம் வாஹினி
57-ஆதி சேஷன் பின் புறமும்
58-ஸ்ரீ பகவத் பரிஜனங்கள்
59- ஸ்ரீ பகவத் பாதுகா
60-ஸ்ரீ பகவத் பரிச் சேதங்கள் –வெண் கொற்றக் குடை போல்வன
61- வைநதேயன் முன் புறம்
62- விஷ்வக்சேனர் திருக்கை பிரம்புடன் வாடா கிழக்கில் தெற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்
63- கஜானனன்
64-ஜயத் சேனன்
65-ஹரி வக்த
66-கால ப்ரக்ருதி சம்ஞான

67-சண்ட ப்ரசண்ட -கிழக்கு வாசல் காப்போர்
68-பத்ர ஸூ பத்ர –தெற்கு பகுதி வாசல் காப்போர்
69-ஜய விஜய -மேற்கு பகுதி வாசல் காப்போர்
70-தத்ர விதத்ர -வடக்கு பகுதி வாசல் காப்போர்
அனைவரும் சங்கு சக்கரம் கதை ஏந்தி நான்கு திருக்கரங்களுடன்

71-குமுத கணாதி பதி ச வாஹன பரிவார ப்ரஹரண பரிஷத –கிழக்கே
72-குமுதாஷா கணாதி பதி ச வாஹன பரிவார ப்ரஹரண பரிஷத –தென் கிழக்கே
73-புண்டரீகாஷா கணாதி பதி ச வாஹன பரிவார ப்ரஹரண பரிஷத –தெற்கே
74-வாமன கணாதி பதி ச வாஹன பரிவார ப்ரஹரண பரிஷத –தென் மேற்கே
75-சங்கு கர்ண கணாதி பதி ச வாஹன பரிவார ப்ரஹரண பரிஷத –மேற்கே
76-சர்ப நேத்ர கணாதி பதி ச வாஹன பரிவார ப்ரஹரண பரிஷத –வட மேற்கே
77-சுமுக கணாதி பதி ச வாஹன பரிவார ப்ரஹரண பரிஷத –வடக்கே
78-ஸுப்ரதிஷ்டய–கணாதி பதி ச வாஹன பரிவார ப்ரஹரண பரிஷத — வட கிழக்கே

—–

4-4-1—ஸம்பத்ய ஆவிர்பாவ அதி கரணம்
சாந்தோக்யம் -ஸ்வரூப ஆவிர்பாவம் -அஷ்ட குண ஸாம்யம் –
தர்மபூத ஞான விகாசம்
பூர்வ பக்ஷம் இவை புதிதாக உண்டாவது –
ஸூத்ரகாரர் முதல் ஸூத்ரத்தில்
ஸம்பத்ய ஆவிர்பாவ ஸ்வேந ஸப்தாத் -ஸ்வ ஸ்வரூப ஆவிர்பாவம் தான் -புதிதாக வந்தவை அல்ல –
உபநிஷத் சொல்வதும்
ஏஷ ஸம் ப்ரஸாத அஸ்மத் சரீரத் ஸமுத்தய பரஞ்சோதி உப ஸம் பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ் பத்யதே –
இரண்டாம் ஸூத்ரத்தில் –முக்த ப்ரதி ஞானத் –என்றும்
மூன்றாம் ஸூத்ரத்தில் –ஆத்ம ப்ரகாரணாத் –என்றும் –
அஷ்ட குண ஸாம்யம்
மாணிக்கம் சேற்றில் விழுந்தால் கழுவிய பின்பு அதன் முன்புள்ள தேஜஸ் மீண்டும் பெறுவது போலவும்
கிணறு தோண்ட இருக்கும் நீர் கிடைப்பது போலவுமே இங்கும் –

—-

4-4-2—அவி பாகேந த்ருஷ்டவத் அதிகரணம்
ப்ரஹ்மத்தை பரஞ்சோதியாக அனுபவம் –
தைத்ரியம் -முண்டகம் -ஸ்ரீ கீதை –
பூர்வ பக்ஷம் -ப்ருதக் சித்தம்
ஸூத்ரகாரர் -அப்ருதக் சித்தமே –ஸூத்ரம் –அவி பாகேந த்ருஷ்டவத்–
சரீரீ சரீரம் பாவம் — விட்டுப் பிரிக்க முடியாத சம்பந்தம் உண்டே –
தத்வமஸி -என்றும்
அயம் ஆத்மா ப்ரஹ்மம் –என்றும்
சர்வம் கலு இதம் ப்ரஹ்மம் -என்றும் இத்தையே சொல்கிறது
அனைத்தும் ப்ரஹ்மாத்மகமே —
மேலும்
ய ஆத்மனி திஷ்டன் ஆத்மன அந்தர யம் ஆத்மா ந வேத யஸ்ய ஆத்மா சரீரம்
ய ஆத்மாநம் அந்தர யமயதி சதே ஆத்ம அந்தர்யாமி அம்ருத -என்றும்
அந்த ப்ரவிஷ்ட ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா -என்றும் –
வாக்ய அந்வய அதிகரணத்திலும் -அவஸ்திதே இதி கஷ க்ருத்ஸன –உண்டே

————-

4-4-3-ப்ரஹ்ம அதிகரணம்
முதல் அதிகரணத்துடன் நேரடித் தொடர்பு இதற்கு
அஷ்டகுண சாம்யமும் தர்ம பூத ஞான விகாசமும் –
ஜைமினி ஓவ்டோல்மி–இருவரும் தங்கள் கருத்துக்களை சொல்லி பின்பு பாதராயணர் ஸித்தாந்தம்
ப்ரஹமேந கைமினி உபந்யாசதிப்ய –என்றும்
சித்தி தன் மாத்ரேண ததக்த்மத்வத் இதி ஓவ்டோல்மி–என்றும்
ப்ரஹதாரண்யமும்
ச எத சைந்தவ கண அனந்தர அபாஹ்ய க்ருத்ஸனஹ் ரஸ ஞான ஏவ விஞ்ஞான கண ஏவ -என்கிறது
சித்தாந்த ஸூத்ரமாக மூன்றாவது
ஏவம் அபி உபந்யாசத் பூர்வ பாவத் அவிரோதம் பாதராயண
இரண்டும் ஒன்றே -விரோதம் இல்லையே –

————

4-4-4-ஸங்கல்ப அதிகரணம்
சாந்தோக்யம் சொல்லும்
ச உத்தம புருஷ சதத்ர பரேயேதி ஜக்க்ஷத் க்ரீடன் ரமமாண ஸ்த்ரீ பிர்வ யேனைர்வ நோபஞ்சனம் ஸ்மரன் இதம் சரீரம்
கைங்கர்யம் செய்து உகக்கிறான் -சம்சாரத்தை நினைத்தே பார்ப்பது இல்லை
மீண்டும்
ச யதி பித்ரி லோக காமோ பவதி ஸங்கல்பத் ஏவ பிதர ஸமுத் திஷ்டந்தி தேன பித்ரு லோகேந ஸம் பன்னோ பவதி
ச யதி மாத்ரு லோக காமோ பவதி ஸங்கல்பத் ஏவ மாதர ஸமுத் திஷ்டந்தி–என்றும்
முக்தாத்மா நினைத்தால் முன்னோர்களை காணலாம் -என்றும் -ராமன் கிருஷ்ணன் போலே
தாய் தந்தையை தேர்ந்து எடுத்து மீண்டும் இச்சையால் பிறக்கலாம் அவன் அவதாரம் போலவே -என்றும் சொல்கிறதே –
பூர்வ பக்ஷம் -யத்னம் பண்ணியே நடக்கும்
ஸூத்ரகாரர்
ஸங்கல்பத் ஏவ தத் ஸ்ருதே –யத்னம் வேண்டாம்
மீண்டும்
அத ஏவ ச அநந்யதிபதி
விதி நிஷேதம் இல்லாமல் ஸத்ய ஸங்கல்பம் கொண்டவன் –
ஸ்வராட் -ஆகிறான் —

————

4-4-5- அபாவ அதிகரணம்
கைங்கர்யம் செய்ய தேகம் கொள்வானா இல்லையா விசாரம்
பதரி -தேகம் கர்மம் அடியாக போகம் துக்கம் அனுபவத்துக்கு தானே ஆகவே வேண்டாம்
அபாவம் பதரி அஹாஹி ஏவம்
ஜைமினி உபநிஷத் படி
ச ஏகதா பவதி த்ரிதா பவதி பஞ்சதா பவதி ஸப்ததா பவதி –
பாவம் ஜைமினி விகல்ப அமனாத்
பின்பு ஸூத்ரகாரர்
த்வாதஸ யாஹ வத் உபய விதம் பாதராயணா அத –இரண்டும் கொள்ளலாம் –
த்வாதஸ யாஹம் -ஸத்ரயாகம் -ஒருவரும் செய்யலாம் பலரும் செய்யலாம் –
பலர் செய்தால் லோக க்ஷேமம் -அப்பொழுது சத்ர யாகம் பெயர்
ஒருவர் செய்தால் -அஹீனம் இதற்கே பெயர் ஆகும்
கல்யாண குண அனுபவத்துக்கு சரீரம் தேவை இல்லை
கைங்கர்யங்களுக்கு சரீரம் வேண்டும் –
அடுத்த ஸூத்ரம்
தன்வ பாவே ஸந்த்யாவத் உபபத்தே –என்று
ஸ்வப்னத்தில் ஸ்ருஷ்ட்டி போல் உருவம் கொள்ளலாம்
அடுத்த ஸூத்ரம்
பாவே ஜாக்ரத்வத்–ஸ்வப்னத்தில் இருந்து எழுந்து அனுபவம் போல் இவனும் கைங்கர்யம்
தாய் தந்தையை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்
அடுத்த ஸூத்ரம்
ப்ரதீப வத் அவேஷ ததேஹி தர்ஷயதி –என்று அணுவான ஜீவாத்மா எவ்வாறு பல சரீரம் கொண்டு கைங்கர்யம்
என்பதற்கு விளக்குக்கு ப்ரதீபை போல் என்கிறது –
அடுத்து
ஸ்வப்யய சம்பத்யோ யத்ர பக்ஷம் ஆவிஷ் கிருதம் ஹி –என்று
தூங்கி எழுந்த ஜீவனைப் பற்றியே உபநிஷத் வாக்கியம் -முக்தாத்மாவைப் பற்றியது அல்ல –

——-

4-4-6-ஜகத் வியாபார வர்ஜ அதிகரணம்
ஜகத் காரணத்வம்
மோக்ஷ பிரதத்வம்
ஸர்வ தாரத்வம்
ஸர்வ நியந்த்ருத்வம்
ஸர்வ ஸரீரத்வம்
ஸர்வ ஸப்த வாஸ்யத்வம்
ஸர்வ வேத வேத்யத்வம்
ஸர்வ லோக சரண்யத்வம்
ஸர்வ முமுஷு உபாஸ்யத்வம்
ஸர்வ பல பிரதத்ரித்வம்
ஸர்வ வியாபத்வம்
ஞான ஆனந்த ஸ்வரூபத்வம்
ஸ்ரீ யபதித்தவம்
ஸ்ரீ பூமி நீளா நாயகத்வம்
ஆதிசேஷ பர்யங்கத்வம்
கருட வாஹனத்வம்
புண்டரீகக்ஷத்வத்ம்
இவை அனைத்தும் அவனுக்கே அசாதாரண்யம் –

பூர்வ பக்ஷம்
முண்டகம் –நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபபத்தி –ஸத்ய ஸங்கல்பத்வம் இருப்பதால்
இவை அனைத்தும் இவனுக்கும் உண்டு
இத்தை நிரஸித்து ஸூத்ரகாரர்
ஜகத் வியாபார வர்ஜம் ப்ரகரணாத் அஸந்நிஹதத் வாச்ச —

யதோவ இமானி பூதாநி ஜாயந்தே யேந ஜாதானி ஜீவந்தி யத் ப்ரயந்தி அபி ஸம் விஷந்தி
தத் விஞ்ஞான சக்வ ப்ரஹ்ம –என்றும்

சதேவ சோம்ய இதம் அக்ரே ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் ததைக ஈஷதே
பஹுஸ்யாம் ப்ரஜா ஏயேதி தத் தேஜோ அஸ்ருஜத் –என்றும்

ப்ரஹ்மம் ஏவ இதம் அக்ர ஆஸீத் என்றும்

ஆத்ம வா இதம் அக்ரீ ஆஸீத் -என்றும்

ஏகோ ஹவை நாராயண ஆஸீத் –என்றும் –

ய ஆத்மநி திஷ்டன் –என்றும்

அஸந்நிஹிதத் வாச்ச –என்றும் -உண்டே –

பூர்வ பக்ஷம்
ச ஸ்வராட் பவதி தஸ்ய ஸர்வேஷு லோகேஷு காம சாரே பவதி–
இமான் லோகானி காம ரூப்யானி ஸஞ்சரன்

அடுத்த ஸூத்ரம்
ப்ரத்யக்ஷ உபதேசாத் ந இதி சேத் ந அதி காரிக மண்டலஸ்த யுக்தே

மூன்றாவது ஸூத்ரம் –விகார வர்த்திச் ச ததாஹி ஸ்திதிம் அஹ
உபநிஷத் வாக்கியங்கள் –
யத ஹி ஏவ ஏஷ ஏதஸ்மிந் அத்ருஷ்யே அநந்தம்யே அ நிருக்தே-
அ நிலயநே அபயம் ப்ரதிஷ்டம் விந்ததே — என்றும்

ரஸம் ஹி ஏவ அயம் லப்த்வ ஆனந்தி பவதி– என்றும்

தஸ்மின் லோகா ஸ்ரித ஸர்வே -என்றும்
முக்தாத்மாவுக்கு ஜகத் வியாபார வர்ஜம் சொல்லிற்றே

நான்காம் ஸூத்ரம்
தர்ஷயதஷ ஏவம் ப்ரத்யக்ஷ அநு மானே –என்று
பரமாத்மாவுக்கு இவை அசாதாரணம் என்கிறார் –
ஸ்ருதி ஸ்ம்ருதி வாக்கியங்களும் உண்டே

ஸ்ருதி வாக்யங்கள் –
பீஷாஸ் மத் வாத பவதே பிஷோ தேதி ஸூர்ய பீஷாஸ்மாத்
அக்னி ச இந்த்ர ச மிருத்யு தவதி பஞ்சம –என்றும்

ஏதஸ் யவ அஷரஸ்ய பிரஷசநே கார்கி ஸூர்ய சந்த்ர மச வித்ரு தவ் திஷ்டத-என்றும்

ஏஷ ஸர்வேஸ்வர ஏஷ பூதாதி பதி ஏஷ பூத பல ஏஷ சேது விதர்சன ஏஷாம் லோகநாம் அசம் பேதய –என்றும்

ஸ்ம்ருதி வாக்யங்கள்

மயா தஷேந ப்ரக்ருதி ஸூயதே ச சராசரம் —
விஷ்டப்யஹம் இதம் க்ரித்ஸ்னம் ஏகம் ஷேந ஸ்திதோ ஜகத் –ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள்

ஐந்தாவது ஸூத்ரம்
போக மாத்ர ஸாம்ய லிங்காச் ச
உபநிஷத்தும்
ச அஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மண விபஸ்ச்சித –

நிகமனத்தில் ஆறாவது ஸூத்ரம்
அநா வ்ருத்தி சப்தாத் –அநா வ்ருத்தி சப்தாத் –

நிகில ஹேய ப்ரத்ய நீக –கல்யாணைக தான –ஜகத் ஜன்மாதி காரணம் –ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் –
ஆஸ்ரித வாத்சல்ய ஏக ஜலதி –பரம காருணிகா —
நிரஸ்த சம அப்யதிக சம்பவன –பர ப்ரஹ்ம பிதான -பரம புருஷ அஸ்தீதி ஸப்தாத் -அவகம்யதே

ஏவம் அஹ அஹ அனுஷ்ட்டியா மான வர்ணாஸ்ரம தர்மனு க்ரிஹித தத் உபாசன ரூப தத் ஸமாராதன ப்ரீத

உபாசநேந அநாதி கால ப்ரவ்ருத்த அநந்த துஷ் க்ருத கர்ம ஸஞ்சய ரூப அவித்யாம் விநிவ்ருத்ய ஸ்வ யதாத்ம்ய
அனுபவ ரூப அநவதிக அதிசய அநந்தம் ப்ராப்யய புநர் அநாவர்த்த யதி இதி ஸப்தாத் அவகம்யதே

சப் தச ஸகலவ் ஏவம் வர்த்தயன் யாவத யுஷம் ப்ரஹ்ம லோகம் அபி ஸம் பத்யதே
ந ச புனர் ஆவர்த்ததே ந ச புனர் ஆவர்த்ததே தே இத்யதிக –

பகவத ஸ்வயம் ஏவ யுக்தம் -மாம் உபேத்ய புனர் ஜென்ம துக்காலயம் அஷஷ்வதம் ந ஆபுன வந்தி மஹாத்மன ஸம் சித்திம் பரமம் கத
ஆ ப்ரஹ்ம புவநாத் லோகா புனரா வர்தினா அர்ஜுனா மாம் உபேத்யே து கௌந்தேய புனர் ஜென்ம ந வித்யதே இதி –

ந ச வுச்சின்ன கர்ம பந்தஸ்ய அ சங்குசித ஞானஸ்ய பர ப்ரஹ்மணே பாவ ஸ்வ பாவைகஸ்ய தத் ஏக ப்ரியஸ்ய
அனாவதிகாதி ச வ அநந்தம் ப்ரஹ்மணவ் பவத அந்நிய அபேக்ஷ தத் அர்த்த அசம்பவாத் புனர் ஆவ்ரிதி சங்க

ந ச பரம புருஷ ஸத்ய ஸங்கல்ப அத்யர்த்த பிரியம் ஞானிநாம் லப்த்வ கதாசித் ஆவர்த்த யிஷ்யதி

ப்ரியோகி ஞானினா அத்யர்த்தம் அஹம் மம ச ச ப்ரிய உதார ஸர்வ இவைத் ஞானி து ஆத்மைவ மே மதம்
ஆஸ்தித ஸஹி யுக்தாத்மா மாம் ஏவ அநுத்தமம் கதிம் பஹுனாம் ஜன்மானாம் அந்தே ஞானவான்
மாம் பிரபத் யதே வாஸூ தேவ சர்வம் இதி ச மஹாத்மா ஸூ துர் லப -இதி –

இது சர்வம் சமஞ்சஸ்த்வம் –
ஆறு இடங்களில் வரும் -2-3-3-ஆத்ம அதிகாரணத்திலும் வரும்
ஜிம்பகமான அவதாரமாக இருந்தாலும் அஜிம்பகமான வாக்கு அன்றோ ஸ்ரீ பாஷ்யகார வாக்குக்கள்
ஜிம்பாகம் -அரவுபாம்பு -அஜிம்பாகம் -அம்பு -நேராக உண்மைப் பொருளை உள்ளபடி காட்டி அருளும் ஸ்ரீ ஸூக்திகள்
இரண்டு நாக்குகள் இவருக்கும் -வேத அங்கங்களையும் அருளிச் செயல்களையும் ஐக கண்டமாக கொண்டவர்

—————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருத ப்ரகாசகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்—

ஸ்ரீ பாஷ்ய சுருக்கம் — மூன்றாம் அத்யாயம்–

June 9, 2021

விஷயம் –சம்சயம் -பூர்வ பக்ஷம் -சித்தாந்தம் -பிரயோஜனம் -ஆகிய ஐந்தும் உண்டே ஒவ் ஒரு அதிகரணங்களிலும்

முதல் இரண்டு அத்தியாயங்கள் பரம தத்வம்
அடுத்து பரம ஹிதம்
இறுதியில் பரம புருஷார்த்தம்

1-சமன்வய அத்தியாயம் -அந்வயம் –பொருத்தம் -சமன்வயம் -நல்ல பொருத்தம் –
1-1-அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்–அயோக வியச்சேத பாதம் -ஸ்ரஷ்டத்வம் கல்யாண குணம்
1-2-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்-அந்நிய யோக விவச்சேத பாதம்–தேஹி அந்தர்யாமி நியாந்தா -சர்வ சரீரீ
1-3-ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்–ஸ்வ இஷ்டத்வம்
1-4-ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்–நிரவதிக மஹிமை – உபாதான நிமித்த ஸஹ காரி -த்ரிவித காரணமும் இவனே –

2-அவிரோத அத்யாயம்
2-1-ஸ்ம்ருதி பாதம் –கபில ஸ்ம்ருதி நிரசனம்- அபஸ்த பாதத்வம் –யாராலும் மறுக்க ஒண்ணாத காரணத்வம்
2-2- தர்க்க பாதம் -சாங்க்ய வைசேஷிக புத்த ஜைன பாசுபத மதங்கள் நிரஸனம் -பாஞ்சராத்ர மத ஸ்தாபனம் -ஸ்ரீ தப்தத்வம் -ஆஸ்ரித பக்ஷ பாதி இவனே
2-3-வ்யுத் பாதம் –கத்மதீ உசித ஞான க்ருத்வம் -தர்ம பூத ஞானம் சுருங்கி விரிந்து -கர்மாதீனம் -ஸ்வரூப அந்யத் பாவ
2-4-இந்த்ரிய உசித ஞான க்ருத்வம் –தகுந்த புலன்கள் அருளும் தன்மை

3-சாதன அத்யாயம்
3-1-வைராக்ய பாதம் -ஸம்ஸ்ருதவ் தந்த்ர வாஹித்வம் –சம்சார தோஷ தர்சனம் -ஜாக்ருத ஸூஷூப்தி ஸ்வப்ன மூர்ச்சா அவஸ்தா சதுஷ்ட்யம்
3-2-உபய லிங்க பாதம் -நிர்தோஷத்வாதி ரம்யத்வம்
3-3- குண உப ஸம்ஹார பாதம் —32- ப்ரஹ்ம வித்யைகளைக் காட்டி அருளி –நாநா சப்தாதி பேதாத் —பஹு பஜன பாதம்
3-4-அங்க பாதம் -ஸ்வார்த்த கர்ம ப்ரஸாத்ய –பக்தி யோக அங்க விளக்கம் -வர்ணாஸ்ரம கர்ம பல ப்ரதத்வம்

4-பல அத்யாயம் –
4-1-ஆவ்ருத்தி பாதம் -பாபாச்சித்வம் –தைல தாராவத் -அவிச்சின்ன த்யான பல பிரதன்
4-2-உக்ராந்தி பாதம் -ப்ரஹ்ம நாடி கதி க்ருத்வம் —
4-3- கதி பாதம் -அர்ச்சிராதி மார்க்கம் –
4-4-பல பாதம் –அஷ்ட குண ஸாம்யம் -ஸாம்யா பத்தி பிரதன்

——-

3-1-வைராக்ய பாதம்
சாந்தோக்யம் -5 அத்யாயம் -அருணி தன குமாரர் ஸ்வேதகேதுவை ஜிபிலை குமாரர் ப்ரவஹன அரசர் இடம்
உபதேசத்துக்கு அனுப்ப -அரசன் இவர் இடம் ஐந்து கேள்விகள்
ஜீவன் செல்லும் இடம் -மீண்டும் பிறக்கும் மார்க்கம் -தேவ யானம் பித்ரு யானம் -பஞ்ச அக்னி வித்யைகள் – பற்றி –
த்யு பர்ஜன்ய பிருத்வி புருஷ யோஷித் —

ஆறு அதிகரணங்கள் இதில்

3-1-1- தத் அந்தர பிரதிபத்தி அதிகரணம் –ஏழு ஸூத்ரங்கள் –
ஜீவாத்மா பூத ஸூஷ்மங்களுடன் செல்கிறானா –
இல்லை -பூர்வ பக்ஷம் –
ஸித்தாந்தம் -முதல் ஸூத்ரம் -தத் அந்தர பிரதி பத்தன் ரம்ஹதி ஸம் பரிஷ் வக்த ப்ரஸ்ன நிரூ பணப்யம் —
பூத ஸூஷ்மங்கள் உடனே தான் செல்கிறான்
முக்ய பிராணன் -11-இந்திரிய ஸூஷ்மங்கள் உடனே ஜீவன் உடலை விட்டு செல்லும் பொழுது செல்கிறது

3-1-2—க்ரதத்ய அதிகரணம்
ஸ்வர்க்க லோகத்தில் இருந்து திரும்பும் ஜீவன் கொஞ்சம் மீதி புண்ய பாபங்கள் மீதத்துடன் வருகிறானா -விசாரம்
பூர்வ பக்ஷம் -கர்மங்கள் இல்லாமல் வருகிறான் –
இதை மறுத்து ஸூத்ர காரர்
க்ரிதத்யயே அநு சயவன் ரிஷ்டஸ்ம்ரிதிப்யம் யதேதம் அநேவம்ச —
தூமாதி மார்கம் -பித்ரு யான மார்க்கம் -இதுவே -ஸ்வர்க்கம் போகும் வழி –தூமா -புகை -இரவு -கிருஷ்ண பக்ஷம் –
தஷிணாயணம் -பித்ரு லோகம் -ஆகாசம் -சந்திரன் -ஸ்வர்க்கம்
திரும்பும் பொழுது -சந்திரன் -ஆகாசம் வாயு -தூமா அபரம்-நீர் உண்ட மேகம் -மேகம்
போகும் பொழுது பித்ரு லோகம் வழி திரும்பும் பொழுது வாயு லோகம் -என்ற வாசி
வர்ணாஸ்ரம நித்ய நைமித்திக கர்மாக்களை விடாமல் பண்ண வேண்டும் –

———

3-1-3-அநிஷ்ட திகர்யதி கரணம் -இந்த அதிகரணத்தில் பத்து ஸூத்ரங்கள் -ஐந்து பூர்வ பக்ஷம் -ஐந்து சித்தாந்தம் –
இஷ்ட அதிகாரிகள் நித்ய நைமித்திக காம்ய கர்மங்களை பண்ணி தூமாதி மார்க்கம் வழியாக ஸ்வர்க்காதிகளுக்கு செல்கிறார்கள்
அநிஷ்ட அதிகாரிகள் -க்ருத்ய அகர்ண அக்ருத்ய கரண -பகவத் அபசாரங்கள் பாகவத அபசாரங்கள் அஸஹ்ய அபசாரங்கள் செய்பவர்கள் –
மோக்ஷ அதிகாரிகள் -காம்ய கர்மங்களில் ஆசை இல்லாமல் பக்தி பிரபத்தி மூலம் முக்தி அடைபவர்கள்
இந்த அதிகரணத்தில் அநிஷ்ட அதிகாரிகள் நரகம் செல்வதற்கு முன் சந்த்ர லோகம் செலிரார்களா என்று விசாரம்
கௌஷிகி உபநிஷத் -அனைவரும் இது வழியே போகிறார்கள் என்கிறது –

முதல் ஸூத்ரம் -பூர்வ பக்ஷம் –
அநிஷ்ட அதிகாரி ணாம் அபி ச ஸ்ருதம்
கௌசிக உபநிஷத் சொல்வதால் –
ஸூத்ர காரர் -இத்தை விளக்கி நரக அனுபவத்துக்கு பின்பே சந்த்ர லோகம் வழியாக திரும்புகிறான் என்கிறார் அடுத்த ஸூத்ரத்தில்
அடுத்த ஸூத்ரத்தில் இந்த லோகத்தில் இருந்து செல்லும் ஜீவாத்மா யம வசத்திலே இருப்பதாக ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்வதைக் காட்டுகிறார் –
“Vidyakarmanorithi thu Prakrathathvath”.
வித்ய கர்ம நோரிதி து ப்ரக்ரதத்வத் —
இந்த ஸூத்ரத்தில் வித்யா -மோக்ஷ அதிகாரி -கர்ம -இஷ்ட அதிகாரி –
நரக அனுபவத்துக்கு பின்பு மாரு பிறவிக்கு பஞ்ச அக்னி மூலம் இல்லாமல் புழு பூச்சிகளாகவே பிறக்கிறார்கள் –
அதிகம் புண்யம் செய்த சில ஜீவர்களும் பஞ்ச ஆஹுதி மூலம் வராமல் -திரௌபதி போல் அக்னி குண்டத்தில் இருந்து பிறப்பார்கள் –
ஜீவஜம் -அண்டஜம் -பஞ்ச ஆஹுதி மூலம்
ஸ்வேதஜம் உத்பிஜம் -பஞ்ச ஆஹுதி இல்லாமல்

———

3-1-4—தத் ஸ்வாபவ்ய பத்தி அதிகரணம்
ஜீவர்கள் திரும்பும் பொழுது ஆகாசம் வாயு தூமா கார் மேகம் வழியாக வரும் பொழுது அங்கு போகம் அனுபவிப்பார்களா -விசாரம்
இல்லை என்பதே ஸித்தாந்தம் –
தத் ஸ்வாபவ்ய பத்தி உப பத்தே -என்பது ஸூத்ரம்

——-

3-1-5-நதி சிர் அதிகரணம்
பஞ்ச ஆஹுதி -ஜீவாத்மா -ஆகாசம் வாயு தூமா கார் மேகம் -இங்கு எல்லாம் விரைவாக வந்தாலும் –
பல காலம் அன்ன தானியங்களில் இருந்தே பிறக்கிறான் என்கிறது

——–

3-1-6-அந்ய அதிஷ்டித அதிகரணம்
தானிய சரீரமாக கொள்வது அங்கு இருந்து அனுபவிக்க இல்லை என்கிறது –
முதல் ஸூத்ரம் -அந்ய அதிஷ்டித பூர்வ வத் அபிலபத்
தானியத்தில் வேறே ஒரு ஜீவன் கர்ம அனுகுணமாக உள்ளான் –

அஸூத்த மிச்சே ந ஸப்தத் -யாகங்களில் ஆஹுதி கொடுப்பது பாப செயல் இல்லை -அது ஸ்வர்க்கம் செல்லும் –

————

3-2-உபய லிங்க பாதம்
அகில ஹேய ப்ரத்ய நீக –அஸங்க்யேய கல்யாண குண மஹோததி —
ஜாக்ருத தசா தோஷங்கள் கீழே வைராக்ய பாதத்தில்
இதில் மற்ற மூன்றும் -ஸ்வப்ன -ஆழ்ந்த தூக்கம் -மூர்ச்சா அவஸ்தா தோஷங்கள்

3-2-1-ஸந்த்ய அதிகரணம்
ஸந்த்யா -ஸ்வப்ன ஸ்தானம்
ப்ரஹதாரண்யம் -யஜ்ஜ்வல்க்யர்
கட உபநிஷத்
ஸ்வப்னத்தில் உள்ளவற்றை ஸ்ருஷ்டிப்பது ஜீவனா ப்ரஹ்மமா விசாரம்
முதல் இரண்டு ஸூத்ரங்கள் பூர்வ பக்ஷம் -ஜீவனே
சந்த்யே ஸ்ருஷ்டிர் அஹாஹி
நிர்மதரம் ச ஏக புத்ர தயா ஷ
அடுத்த நான்கும் ஸித்தாந்த ஸூத்ரங்கள்
ப்ரஹ்மமே பாப புண்யங்கள் அடிப்படையில் ஸ்ருஷ்டிக்கிறார் –
மாயா மாத்ரம் து கர்த்ஸ்ந்யேந அநபிவியக்த ஸ்வரூபத்வத் –
மாயங்கள் ஸ்ருஷ்டிக்க வல்ல ப்ரஹ்மமே ஸத்ய ஸங்கல்பன் –

தேஹ யோகத்வ சோபி —
ஆத்மாவின் ஸத்ய சங்கள்பாதி குணங்களுக்கு சுருக்கம் தேஹ சம்பந்தத்தால் தானே -என்கிறது –

———

3-2-2-தத் அபாவ அதிகரணம் –இரண்டு ஸூத்ரங்கள்
ஆழ்ந்த உறக்கம் நிலை விசாரம்
சாந்தோக்யம் -6 அத்யாயம் -8 அத்யாயம்
ப்ருஹதாரண்யம் -4 அத்யாயம்
நாடியில் -பூரிததில் -பரமாத்மா இடம் ஒன்றியதாக இங்கு சொல்லும்
இவை விகல்பமா சமுச்சயமா என்று விசாரம்
பூர்வ பக்ஷம் விகல்பமே என்பர்
மூன்று இடங்களிலும் இருக்க முடியாதே என்பர் –
இத்தை நிரஸித்து முதல் ஸூத்ரம் -தத் அபாவ நாடீஷூ தத் ஸ்ருதே அத்நநி ச –
படுக்கையில் கட்டிலில் வீட்டில் போல் இவை மூன்றும் –
இரண்டாம் ஸூத்ரம் -ஆழ்ந்த உறக்கத்துக்குப் பின்பு பரமாத்மா ஜீவனை எழுப்புகிறார் என்கிறது –

——

3-2-3-கர்ம அநு ஸ்ம்ருதி அதி கரணம்
அதே ஜீவன் எழுந்து இருக்கிறாரா வேறயா
பூர்வ பக்ஷம் –வேறே என்பர் -பரமாத்மா இடம் சேர்ந்த பின்பு திரும்ப மாட்டாரே என்பதால்
இதை நிரஸித்து ஸூத்ர காரர்
ச ஏவ கர்ம அநு ஸ்ம்ருதி சபல விதிப்யா
கர்மங்கள் இன்னும் இருப்பதால் அதே ஜீவன் திரும்புகிறார்
தத்வ ஞானாத் ப்ராக் தேநைவ போக்தவ்யம் -என்கிறார் பாஷ்யகாரர்

——–

3-2-4–முக்தி அதிகரணம்
மூர்ச்சா அவஸ்தா விசாரம்

முக்தே அர்த்த ஸம் பதி பரி ஷேஷாத் –

————

3-2-5-உபய லிங்க அதிகரணம் –இதில் -15 ஸூத்ரங்கள்
பூர்வ பக்ஷம் -அந்தர்யாமியாக இருப்பதாலேயே ப்ரஹ்மமும் -சாக்கடைக்குள் விழுந்த மணி போல் -தோஷம் அடையும் –
இத்தை நிரசித்து முதல் ஸூத்ரம்
ந ஸ்தானதோபி பரஸ்ய உபய லிங்கம் ஸர்வத்ர ஹி –
எப்பொழுதும் அபஹத பாப்மா -உபய லிங்கம் எங்கு இருந்தாலும் மாறாமல் இருப்பான் –
சாந்தோக்யம் 8 அத்யாயம் –
அபஹத பாப்மா -விஜர -வி ம்ருத்யு -விசோக -விஜி கட்ச -அபி பாச
ஸத்ய காம -சத்யா சங்கல்ப
முண்டக ஸ்வேதேஸ்வர -ஸமான வ்ருஷ -இத்யாதி –
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்
நேதி நேதி
ப்ரக்ருத ஏத வத் வம் ப்ரதி ஷேததி ததோ ப்ரவீதிச பூய
வேதைக சமைதி கம்யன்

—-

3-2-6-அஹி குண்டல அதிகரணம் –நான்கு ஸூத்ரங்கள்
இரண்டு பூர்வ பக்ஷம் -இரண்டு ஸித்தாந்தம் –
முதல் பூர்வ பக்ஷ ஸூத்ரம்
உபய வியபதேஷாத் அஹி குண்டலவத் –
இத்தை நிரசித்து
பூர்வ வத்வா -அம்ச அதிகரணம் -2 அத்யாயம் -3 பாதம் பார்த்தோம் –

ப்ரதி ஷேதச் ச –அம்ச அம்சி பாவம் போல் –

——–
3-2-7-பராதி கரணம் –ஏழு ஸூத்ரங்கள் -ஓன்று பூர்வ பக்ஷம் -ஆறு சித்தாந்தம்

பர மாத சேது உன்மான ஸம்பந்த பேத வ்யபதேசப்ய
சேது என்றால் இவன் மூலம் வேறே ஒன்றை அடைவது பூர்வ பக்ஷம்
சமன்யத்து –ஸினோதி -சேதன அசேதன -சேர்த்து
அபரிச்சேத்யன் நமக்காக நம்முள் அணுவுக்குள் அணு போல்
உபபத்தேச –

ஸ்வேதேஸ்வரம் தத யத் உத்தர தரம் -உள்ளே உயர்ந்த வஸ்து
தத அந்நிய ப்ரதிஷ்டாத்

அநேந ஸர்வ கதத்வம் அயம ஸப்ததிப்ய

——-

3-2-8-பல அதிகரணம் -நான்கு ஸூத்ரங்கள்
மூன்றாவது மட்டும் பூர்வ பக்ஷ ஸூத்ரம் -ஜைமினி தான் பூர்வ பக்ஷி இங்கு
முதல் ஸூத்ரம் –பலம் அத உப பத்தே -பலம் தருபவர் ப்ரஹ்மமே
ஜைமினி அபூர்வம் -பலம் கொடுக்கும் என்பர்
இறுதி ஸூத்ரம் –பூர்வந்து பாதராயண ஹேது வ்யபதேசாத்
அவனே பல ப்ரதன்
சாதனா ஸப்தகம்
விவேகம் -விமோகம் -அப்யாசம் – க்ரியா –கல்யாணம் -அவவசாதம் -அநுத்தர்ஷம் –

————-

3-3-குண உப ஸம்ஹார பாதம் –26-அதிகரணங்கள் –

3-3-1-.–ஸர்வ வேதாந்த ப்ரத்யய அதி கரணம்
வைச்வானர வித்யை -பல உபநிஷத்துக்களில் சொன்னது ஒன்றையே தானா -விசாரம்
வெவ்வேறே பூர்வ பக்ஷம்
ஸர்வ வேதாந்த ப்ரத்யயம் சோநாதி அவிசேஷாத் –
ஒன்றே ஆகும் தஹர அதிகரணம் -சாந்தோக்யம் தைத்ரியம் ப்ரஹதாரண்யம் -ஒன்றையே சொல்கின்றன

——–

3-3-2-.–அந்யத்வ அதிகரணம்
உத்கீத வித்யை சாந்தோக்யம் ப்ரஹதாரண்யம்
இரண்டும் வேறே வேறே தான்
சாந்தோக்யத்தில் முக்ய பிராணனையும் ப்ரஹதாரண்யத்தில் முழு கானத்தையும் சொல்வதால் –

———–

3-3-3- ஸர்வ அபேத அதிகரணம்
பிராண வித்யை -சாந்தோக்யம் -ப்ரஹதாரண்யம் -கௌஷதகி
மூன்றும் ஒன்றே -கௌஷதகியில் சொன்ன குணங்கள்கையும் சேர்ந்தே கொள்ள வேண்டும் –
இந்த்ரியங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொன்றாக விலகி –
பிராணன் உயர்ந்தது -இன்றியமையாதது -என்று அறிந்து கொண்ட வ்ருத்தாந்தம்
ஜ்யேஷ்டத்வம் -ஸ்ரேஷ்டத்வம் -வஸிஷ்டத்வம் -பிரதிஷ்டத்வம் -சம்பத்வம்–ஆயதனத்வம் –
அனைத்தும் உண்டு என்று அறிந்து கொண்டன –

————

3-3-4-ஆனந்த அதிகரணம்
ஸ்வரூப நிரூபக தர்மங்கள் -ஸத்யத்வம் ஞானத்வம் அநந்தத்வம் ஆனந்தத்வம் அமலத்வம் ஸ்ரீ யபதித்வம்–

———-

3-3-5–கார்யக்யநாதி கரணம்
முக்கிய ப்ராணனுக்கு துணியாக நீர் -ஆசமனம் செய்து பிராண வித்யை தொடங்கி முடிக்க வேண்டும் –

——

3-3-6-சமனாதி கரணம்
சாண்டில்ய வித்யை அக்னி ரஹஸ்யம் -ப்ருஹதாரண்யம் -இரண்டிலும் ஒன்றே -என்கிறது

——–

3-3-7-சம்பந்த அதிகரணம்
ஆதித்ய மண்டல மத்திய வர்த்தி உபாசனமும் கண்ணுக்குள் இருக்கும் ப்ரஹ்மம் உபாசனமும் -ஒன்றே –
பூர்வ பக்ஷம் ஸூத்ரம் -சம்பந்தத் ஏவம் அந்யத்ரபி –
ஸித்தாந்தம் ஸூத்ரம் நவ விசேஷாத் –வேறே வேறே தான் -ரூபம் வேறாக இருப்பதால் –

————–

3-3-8-சம்ப்ருதி அதிகரணம்
அனைத்தையும் தரிப்பவன்-விபு எங்கும் பரந்துள்ளான் ப்ரஹ்மம் –
இவற்றை எல்லா ப்ரஹ்ம வித்யைகளிலும் அனுசந்திக்க வேண்டும் -பூர்வ பக்ஷம்

சம்ப்ருதித்யு வ்யாப்திச்ச அத
அல்ப ஸ்தான வித்யைகளில் த்யு வியாப்த குணம் அனுசந்திக்க வேண்டாம் –

————-

3-3-9-புருஷ வித்ய அதிகரணம்
தைத்ரியம் —நியாஸ வித்யைக்கு அங்கமாகவும் சாந்தோக்யம் -நீண்ட ஆயுஸ்ஸூக்காகவும்
ஒன்றே பூர்வ பக்ஷம்
ஸித்தாந்த ஸூத்ரம்
புருஷ வித்யயம் அபி ச இதரேஷாம் அநாம்நாத் –
பலத்தில் வேறுபாடு -எனவே ஓன்று அல்ல –

—————-

3-3-10- வேத அத்யாய அதிகரணம்
ஷாந்தி பாடம் -அங்கமா -இல்லையா விசாரம் –
வேதாதி அர்த்த பேதாத் –அங்கம் அல்ல ஸித்தாந்தம்

———-

3-3-11- ஹாநி அதிகரணம்
முக்தனுக்கு -இறுதியில் -பாப புண்யங்கள் தீர்க்கும் வழி
ஹாநி என்றும் உபாயானம் -என்றும் சில இடங்களில் உண்டு
இவை விகல்பமா சமுச்சயமா விசாரம்
சமுச்சயமே ஸித்தாந்தம்
ஹாநவ் து உபாயான ஸப்த சேஷத்வத் குஷச் சந்த ஸ்துதி உபகனவத் தத் யுக்தம் -ஸூத்ரம்

——
3-3-12-சம்பிரய அதிகரணம்
கர்மங்களைமுக்த ஜீவன் உடலில் பிரிந்த உடனே போக்குகிறானா விரஜையில் நீராடிய பின்பா -விசாரம்

ஸம்பரயே தர்தவ்ய பாவாத் ததாஹி அன்யே –பிரிந்த உடனே தான் -மீதம் உள்ள கர்ம பலன் அனுபவிக்காததால் –

———-

3-3-13- அ நியம அதிகரணம்
அர்ச்சிராதி கதி மார்க்கம் பக்தி யோக நிஷ்டருக்கும் பிரபன்னருக்கும் பொதுவானதா இல்லையா
உபகோஸல வித்யையிலும் பஞ்சாக்னி வித்யையிலும் மட்டுமே அர்ச்சிராதி மார்க்கம் சொல்லப்பட்டுள்ளதால் இந்த சங்கை –
ஸித்தாந்தம் –
அ நியம ஸர்வேஷாம் அ விரோத ஸப்த அநு மானப்யம் –அனைவருக்கும் இதே மார்க்கம் –

——–

3-3-14-அக்ஷர அத்ய அதிகரணம்
அமலத்வ குண அனுசந்தேயம் யஜ்ஜ்வல்க்யர் கார்க்கி ஸம்வாதம்
திவ்யாத்ம ஸ்வரூபம் -அஸ்தூலம் –அ அணு –அஹ்ரஸ்வம் -அதீர்க்கம் –அலோஹிதம் –அஸ்நேஹம் –அச்சாயம் –அதமஸ் –
அவாயு -அனகாசம் –அசங்கம் -அரசம் –அகந்தம் -அ ஸஷு சம் -அ ஸ்ரோத்ரம் –அவாக் -அமநஸ் -அதேஜஸம் -அபிராணன் –
அமுக்தம் -அனந்தரம் – அ பாஹ்யம் –தத் ந கிஞ்சன அஸ்னாதி -ந தத் அஸ்னாத கச்சன —

ஸூத்ரம் –அக்ஷரதியம் து அவரோத சமன்ய தத் பாவ அபாவ்யம் ஓவ்ப ஸதவத் தத் யுக்தி–

———-

3-3-15-அந்தரத்வ அதிகரணம்
ப்ருஹதாரண்யம் -உஷஸ்த யஜ்ஜ்வல்க்யர் சம்வாதம்
கோகோல யஜ்ஜ்வல்க்யர் சம்வாதம் –
இரண்டும் வேறே வேறே ப்ரஹ்ம வித்யையா என்று விசாரம்
இரண்டும் ஒன்றே ஸித்தாந்தம்

———

3-3-16-காமாதி கரணம்
தஹர வித்யை -சாந்தோக்யம் ப்ரஹதாரண்யம் வேறே வேறா விசாரம்
சாந்தோக்யத்தில் ப்ரஹ்மத்தை ஆகாச ஸப்த மாக அஷ்ட கல்யாணகுணங்கள் கொண்டவராகவும்
ப்ரஹதாரண்யம் ப்ரஹ்மத்தை ஆகாசத்தில் கண் வளர்ந்து வஸிப்பதாகவும் உள்ளது
இரண்டும் ஒன்றே ஸித்தாந்தம்
வஸித்வமும் அஷ்ட குணங்கள் உடன் சேர்ந்தே கொள்ள வேண்டும் –

———

3-3-17-தந் நிர்த்தன அதிகரணம் —
உத்கீத வித்யா விசாரம் -பிரணவ உபாசன அங்கம் -இது கட்டாயமா இல்லையா –
பூர்வ மீமாம்ஸையில்
கோ தாநேந பசு காம பிரணயேத் –என்று கோ தானத்துக்கு ப்ரோடாசம் -கட்டாயம் இல்லை என்றும்
பரணமயீ ஜூஹூ -கட்டாயம் என்றும் இரண்டும் இருப்பதால் சங்கை
கட்டாயம் இல்லை என்பதே ஸித்தாந்தம் —

—————

3-3-18-பிரதான அதிகரணம்
அபஹத பாப்மதாதி குணங்களை மட்டும் உபாஸிக்க வேண்டுமா -இவற்றுடன் சேர்ந்த ப்ரஹ்மத்தையா -விசாரம்
சேர்ந்த ப்ரஹ்மத்தையே -ஸித்தாந்தம் —

———-

3-3-19-லிங்க புயஸ்தவத் அதிகரணம்
நாராயண அநுவாகம் -தைத்ரியம் –தஹர வித்யைக்கு அங்கமா
சித்தாந்த ஸூத்ரம்
லிங்க புயஸ்த்வத் தத் ஹி பத்லியஸ் ததாபி —
லிங்கம் -அடையாளம்
இந்த அனு வாகத்தில் அக்ஷரம் ஷாம்பு இந்திரன் பிரம்மன் இவர்களுக்கு அந்தராத்மாவாக சொல்லும்
ப்ரஹ்ம வித்யையில் நாராயணனை நேராகவே தியானிக்க வேண்டும் –

———

3-3-20-பூர்வ விகல்ப அதிகரணம்
இது ப்ராசங்கிகம் -அக்னி ரஹஸ்ய விசாரம்

—-

3-3-21-சரீர பாவ அதிகரணம்
அநு மானிக அதிகரண ஸூத்ரம் —த்ரய நாம் ஏவ ச உபந்யாச ப்ரஸ்ன ச –என்று
உபாஸ்ய –உபாஸக –உபாஸனம் மூன்றையும் சொல்லி
உபாஸகர் -அறிந்து -செய்து அனுபவிப்பவனாக உபாஸிக்க வேண்டுமா –
அஷ்ட குண ஸாம்யம் அடைந்தவனாக எண்ணி உபாஸிக்க வேண்டுமா என்ற விசாரம் –

ஸூத்ரம் –வியதிரேக தத் பாவ பவித்வத் ந து உபலப்திவத் –
என்று அஷ்ட குண ஸாம்யம் அடைந்தவனாக எண்ணி உபாஸிக்க வேண்டும் என்கிறது –

——————-

3-3-22-அங்க வபத்த அதி கரணம்
உத்கீத வித்யை பற்றியது இதுவும்

—-

3-3-23- புமஜ்ய யஸ்த்வ அதிகரணம் —
வைச்வானர வித்யா விசாரம் -வ்யஸ்த உபாசனமா ஸமஸ்த உபாசனமா –
ஸமஸ்த உபாசனமே பண்ண வேண்டும் ஸித்தாந்தம்

———

3-3-24-ஸப்தத் பேதாதி கரணம் –
ப்ரஹ்ம வித்யைகள் 32- அனைத்தும் ஒன்றா வேறே வேறயா
வேறு வேறு தான் என்பதே ஸித்தாந்தம்

3-3-25-விகல்பாதி கரணம்
அனைத்தையும் பண்ண வேண்டுமா -விசாரம்

விகல்ப அ விஸிஷ்ட பலத் வத் —
ஒன்றையே பண்ணினாள் போதும் -பலத்தில் ஸாம்யம் என்பதால் –

—-

3-3-26–யத் ஆஸ்ரய பாவ அதிகரணம்

இது கீழே -3-3-17-தந் நிர்தன நியம அதிகாரணம் போல்
உத்கீத வித்யை கட்டாயம் என்று மீண்டும் பூர்வ பக்ஷம்
அத்தை நிரசிக்கவே இந்த அதிகரணம்

———–

பஞ்ச அக்னி வித்யையில் மட்டும் -ப்ரஹ்மாத்மக ஸ்வ ஆத்ம உபாசனம்
மற்றவை ப்ரஹ்ம உபாசனம் -ஸ்வ ஆத்ம சரீரக பரமாத்மா உபாசனம்

———-

3-4- அங்க பாதம் –15-அதிகரணங்கள் இதில் –

3-4-1-புருஷார்த்த அதிகரணம் –இதில் 20 ஸூத்ரங்கள்
இந்த அதிகரணம் தான் மிக அதிகமான ஸூத்ரங்கள் கொண்டது –
கர்மத்தால் ப்ரஹ்ம வித்யை ஞானத்தாலா -புருஷார்த்தம் என்று விசாரம் –
முதல் ஸூத்ரம் –புருஷார்த்த அத சப்தாதி பாதராயண
பக்தி யோகத்தாலோ பிரபத்தியாலோ புருஷார்த்தம் ஸித்தம் என்கிறது –

ஜைமினி அடுத்த ஆறு ஸூத்ரங்களால் ப்ரஹ்ம வித்யை கர்மத்துக்கு அங்கம் தான் –
கர்மமே பிரதானம் என்கிறார்
1-அஸ்வபதி ஜனகர் போல்வார் கர்ம நிஷ்டர் ப்ரஹ்ம ஞானிகளாக இருந்தாலும் –
2-உத்கீத வித்யையில் கர்மத்துக்கு அங்கமாக ப்ரஹ்ம வித்யை –
3- சாந்தோக்யத்தில் ப்ரஹ்ம வித்யை அனுஷ்டிப்பவர் கர்ம அனுஷ்டானம் செய்ய வேண்டும் என்றும் உள்ளது
4-ஈசாவாஸ்ய உபநிஷத்தில் 100 வருஷம் இருந்து கர்ம அனுஷ்டானம் பண்ண வேண்டும் என்றும் உள்ளது
பாதராயணர் -இவற்றுக்கு பதில் –
ப்ரஹ்மம் நியாந்தா -ஸாஸ்த்ரம் மூலம் கர்ம அனுஷ்டான ஸாஸனம் தந்துள்ளார்
கர்மம் த்ரிவித த்யாகங்களுடன் செய்ய வேண்டும் -ப்ரஹ்ம வித்யை மோக்ஷ பலத்துக்காகவே –
ஸந்யாஸி போல்வார் கர்மங்களுக்கு -யாகாதிகளுக்கு அதிகாரி இல்லாமல் ப்ரஹ்ம வித்யையாலே பலம் பெறுகிறார்கள் –
எனவே ப்ரஹ்ம வித்யை கர்மத்துக்கு அங்கம் இல்லை –

——

3-4-2-ஸ்துதி மாத்ர அதிகரணம் –இதில் இரண்டு ஸூத்ரங்கள்
இதுவும் அடுத்ததும் ப்ராசங்கிகம் –

3-4-3-பரிப்ல வர்த்த அதிகரணம்
பரிப்ல வம் -என்று புகழ்வதை சொன்னபடி
பிரவர்தன வித்யையில் இந்திரனை புகழ்வது -ஸ்வேதகேது ஸத்வித்யையில் புகழ்வது –
அஸ்வமேத யாகத்தில் அரசரை புகழ்வது போல்வன
ப்ரஹ்ம வித்யைகளின் ஏற்றம் சொல்லவே –

—-

3-4-4-அக்னி இந்தந அதிகரணம்
இது முதல் அதிகரணத்துடன் நேரடித் தொடர்பு கொண்டது –
அக்னி கார்யம் செய்ய அதிகாரம் இல்லாத சந்யாசிகள் எவ்வாறு ப்ரஹ்ம உபாசனத்துக்கு
அதிகாரி ஆவார்கள் என்பதைக் காட்டவே இந்த அதிகரணம்
நித்ய நைமித்திக கர்மாக்களை விடாமல் த்ரிதண்டி ஸ்ரீ வைஷ்ணவ சந்யாசிகள்

——

3-4-5- ஸர்வ அபேக்ஷ அதிகரணம்
கிரஹஸ்தர்களுக்கு அக்னி கார்யம் கட்டாயமா -விசாரம்
பக்தி யோகத்துக்கு அங்கமாக கர்ம யோகமும் வேண்டுமே –
உபாஸன மார்க்கமே வழி -தத்வமஸி வாக்ய ஜன்ய ஞானமே மோக்ஷ ஹேது ஆகாதே —

——-

3-4-6- சம தமாதி அதி கரணம்
புலன் அடக்கம் மன அடக்கம்
இவை பக்தி யோகத்துக்கு வேண்டிய அங்கங்கள் என்றவாறு –

——–

3-4-7-சர்வ அன்ன அநுமதி அதிகரணம்
சாந்தோக்யம் -சத்வ அன்னம் -த்ருவனு ஸ்ம்ருதி –பக்தி யோகம் –
ஜாதி ஆஸ்ரய நிமித்த தோஷங்கள் இல்லாத அன்னம் –ஆகார நியமம் —
உஷஸ்தி பிராணன் தரிக்க உண்டு பின்பு நீர் கூட குடிக்க தவிர்த்த வ்ருத்தாந்தம் –

————-

3-4-8-விஹிதத் வாதி அதிகரணம்
நித்ய அநித்ய ஸம்யோக விரோதம்
ஸந்த்யாவந்தனாதிகள் முமுஷுகளுக்கு மட்டுமா அனைவருக்குமா -விசாரம்
ஸித்தாந்தம் -அனைவருக்குமே
விஹிதவச் ச ஆஸ்ரம கர்ம அபி -ஸூத்ரம்
இவை விநியோக ப்ருதக்தவம் கோடியிலே சேராது

3-4-9-விதுர அதிகரணம்
விதுர -மனைவி இழந்தவர் யாகாதிகளுக்கு அதிகாரிகள் இல்லை -நித்ய நைமித்தி கர்மங்களை செய்தே ஆக வேண்டும் –
இவர்கள் பக்தி யோகத்துக்கு அதிகாரிகளோ சங்கைக்கு ஆம் என்கிறார் ஸூத்ரகாரர்
அந்தர ச அபி து தத் த்ருஷ்தே :
அக்னி கார்யம் செய்ய அதிகாரம் இல்லை என்றாலும் காயத்ரி மந்த்ரம் அஷ்டாஷர மந்த்ர ஜபாதிகள் இவர்கள் மனசை ஸூத்தி பண்ணும்
அநாஸ்ரமியாக நீண்ட நாள் இருக்க வேண்டாம் என்றும் ஸூத்ரகாரர் காட்டி அருளுகிறார் –

——–

3-4-10-தத் பூதாதி கரணம்
ஆஸ்ரம ப்ரஷ்டர் -நழுவி இருப்பார் -ப்ரஹ்ம உபாசனத்துக்கு அதிகாரிகளோ என்ற விசாரம் –
பூர்வ பக்ஷம் இவர்கள் தானாதிகள் கொடுத்து பிராயச்சித்தம் செய்து ப்ரஹ்ம உபாசனம் செய்யலாம்
ஸூத்ரகாரர் -இவர்கள் அதமர்கள் -பிராயச்சித்தம் ஸாஸ்த்ரம் விதிக்க வில்லை என்கிறார் –
இவர்கள் பிரபன்னர் ஆகி ஆச்சார்யர் மூலம் ப்ரஹ்ம பிராப்தி பெறலாம்

———

3-4-11-ஸ்வாமி அதிகரணம்
ப்ராசங்கிகம் இது -உத்கீத உபாசன அதிகாரம் பற்றிய விசாரம் –
யஜமானா ஹோதா அத்வர்யு உத்காதா பிரஸ்தோதா ப்ரதிஹர்த்தா -ப்ரம்மா போன்ற ருத்விக்குகள்
உத்கீத உபாசனம் எஜமானர் செய்ய வேண்டுமா ருத்விக்குகள் செய்ய வேண்டுமா –
பாதராயணர் சிஷ்யர் ஆத்ரேயர் யஜமானாரே செய்ய வேண்டும் –
ஸ்வாமி யே ந பல ஸ்ருதே இதி ஆத்ரேய
ஒவ்டோல்மி -ருத்விக் யஜமானருக்காக பண்ணலாம் –
ஸூத்ரகாரர் இத்தை சம்மதித்து அருளுகிறார் –

——-

3-4-12-ஸஹ காரி அந்தர விதி அதிகரணம்
ப்ருஹதாரண்யம் –
பண்டிதர் மௌனமாக திவ்ய மங்கள விக்ரஹ த்யானத்துடனே ப்ரஹ்ம உபாஸனம்
மனன சீலத்தவம் ப்ரஹ்ம உபாசனத்துக்கு அங்கம் ஸஹ காரி என்றவாறு –

———-

3-4-13-அநவிஷ்கார அதிகரணம்
ப்ரஹதாரண்யம் -5 அத்யாயம்
ப்ரஹ்மவித் கர்வம் இல்லாமல் குழந்தை போல் இருக்க வேண்டும்
பூர்வ பக்ஷம் விளையாடி எல்லாம் உண்ணலாம்
தன்னை வித்வானாக காட்டிக் கொள்ளக் கூடாதே என்பதே தாத்பர்யம் –

——–

3-4-14-ஐஹிக அதிகரணம்
உபாசனம் முடிந்த பின்பே ஐஹிக பலனைப் பெறுவானா -இந்த ஜென்மத்திலேயா -மறு பிறவியிலா -விசாரம்
பூர்வ பக்ஷம் உபாசானம் முடிந்த உடனே
சித்தாந்தம் -வேறே பாப கர்ம தடங்கல் இல்லாமல் இருந்தால் தான் நடக்கும்
உத்கீத வித்யாதிகள் மூலம் பிரதிபந்தங்கள் கழிந்த பின்பே ஐஹிக பலன் கிட்டும் –

———-

3-4-15- முக்த பல அதிகரணம்
ப்ரஹ்ம வித் அபசாராதிகள் இருந்தால் முக்தி பலம் உடனே கிட்டாதே –
பாகவத அபசாரம் முக்தி பலனைக் கொடுக்காமலே போக வைக்கும்
தத் அவஸ்தா த்ருதே -தத் அவஸ்தா த்ருதே -மீண்டும் சொல்லி
அத்யாயம் நிகமனம் என்பதைக் காட்டி அருளுகிறார் –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருத ப்ரகாசகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்—