ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்
அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –
பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–
———-
முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-மூன்றாம் பாதம் — 44 ஸூத்ரங்கள் –
கீழ் இரண்டு பாதங்களால்-
அஸ்பஷ்ட தரமாயும் அஸ்பஷ்டமாயும் உள்ள ஜீவாதி லிங்கங்கள் உடைய வாக்கியங்கள் நிரூபிக்கப்பட்டு
இதில்
ஸ்பஷ்டமான -பலவாறு தோன்றுதல் -நாடீ சம்பந்தம் -முதலிய லிங்கங்கள் உடைய வாக்கியங்கள் நிரூபிக்கப்படுகின்றன
முன் பாதத்தோடு சங்கதி
முன் அதிகரணத்தில் த்யு ப்ருத்வீ யாதி சம்பந்த புருஷன் பரமாத்மாவே என்று கூறப்பட்டது
இதில் பலவாறு தோன்றுதல் -நாடீ சம்பந்தம் -முதலிய லிங்கங்களால் ஆக்ஷேபித்து
ஜீவனாகத்தான் இருக்கக் கூடும் என்று
பூர்வபக்ஷம் செய்ய
அதுக்கு உத்தரம் இது என்று சங்கதி
மேலும் அத்ருஸ்யத் வதி கரணத்தில் முண்டக வாக்யங்களுக்கு த்ரை லோக்ய சரீர பரமாத்ம பரத்வம் ஸ்தாபிக்கப் பட்டது
அதை ஒட்டி வைஸ்வநர அதிகரணத்தில் சாந்தோக்யத்தில் உள்ள வைச்வானர வித்யா வாக்கியங்களும்
த்ரை லோக்ய சரீரத்வம் என்னும் லிங்கத்தால்
வைச்வானர ரூப ஜீவ பரத்வத்தை சங்கித்து பரமாத்ம பரத்வமே ஸ்தாபிக்கப் பட்டது –
இந்த அதிகரணத்தில் ப்ரசங்கத்தால் ப்ராப்தமான வேறு உபநிஷத் வாக்ய விசாரம் முடிந்த பின்
அத்ருஸ்யத் வதிகரண விஷயத்தை ஸ்தாபிக்க அதன் சேஷமாக முண்டகத்தில் உள்ள த்யுப் வாதி வாக்யமே
இங்கு சமாதானம் செய்யப்படுகிறது
முதல் பாதத்தை விட்டு மூன்றாம் பாதத்தில் அது ஏன் சொல்லப்படுகிறது -என்றால்
விலக்கத்தக்க ஜீவ லிங்கங்கள் இங்கு ஸ்பஷ்டமாய் இருப்பதால் அது பொருந்துவதாகும்
இதற்கு -ஸூத்ரம் -68– பிரகரணாத்–1-3-5—என்னும் ஸூத்ரத்தில் பலன் ஸ்பஷ்டமாய் உள்ளது –
1-3-1-த்யுத்வாத்யதிகரணம் -தேவலோகம் பூமி ஆகியவற்றின் இருப்பிடம் ப்ரஹ்மமே –
ஸூத்ரம் -64 –த்யுத்வாதி ஆயாதநம் ஸ்வ சப்தாத் –1-3-1-
பூமி தேவலோகம் பரம் பொருளுக்கே இருப்பிடம்
முண்டக –
யச்மிந்த்யௌ ப்ருத்வீ சாந்தரிஷ மோதம் மன சஹ பிராணைச்ச சர்வை தமேவைகம் ஜானதாத்மா நம் அந்யா வாசோ
விமுஞ்சத அம்ருதஸ் யைஷசேது–முண்டகம் 2-2-5–என்றும்
அரா இவ ரத நாபௌ சம்ஹதா யத்ர நாட்ய -ச ஏஷோ அந்தஸ் சர்தே பஹூதா ஜாயமான –முண்டகம்-2-2-6–என்றும்
மன சஹ பிராணை ஓதம் -என்றும்
நாராயண வல்லி உபநிஷத்தில்-1-3-2–
சந்ததம் சிராபிஸ்து லம்பத்யா கோச சந்நிபம் தச்யாந்தே ஸூஷிரம் சூஷ்மம் தஸ்மின் சர்வம் ப்ரதிஷ்டிதம் -என்று
ஜீவன்களின் நாடிகளுக்கும் பரம் பொருளே ஆதாரம் என்றும்
அதர்வணத்தில் முண்டக –யச்மிந்த்யௌ ப்ருத்வீ சாந்தரிஷ மோதம் -என்று தொட்ங்கும் வாக்கியத்தில்
தேவலோகம் பிருத்வீ இவற்றுக்கு ஆதாரமாக கூறப்படுபவன் ஜீவனா பரமாத்மாவா என்று சம்சயம்
ஜீவன் என்று பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
அரா இவ ரத நாபௌ சம்ஹதா யத்ர நாட்ய ச ஏஷோ அந்தஸ் சர்தே பஹூதா ஜாயமான –முண்டகம்-2-2-6-ஸ்லோகங்களில்
நாடீ சம்பந்தமும்
பஹுதா ஜாயமானத்வமும்
மனஸ் ப்ராண ஸம்பந்தமும்
ஜீவ லிங்கங்களாகக் காணப்படுவதால் ஜீவனே யாக்கலாம் என்று பூர்வ பக்ஷம்
இதுக்கு விடை
த்யுத்வாதி ஆயாதநம் ஸ்வ சப்தாத் –
த்யுத்வாதி ஆயாதநம் -இவற்றுக்கு ஆயதனமாகக் கூறப்படுபவன் பரமாத்மாவே -ஜீவன் அல்லன்
ஸ்வ சப்தாத்-அம்ருதஸ் யைஷசேது–முண்டகம் 2-2-5–என்ற படி தனக்கு அசாதாரணமான சப்தத்தால் கூறுகிற
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா அயனாய வித்யதே -ஸ்வேதாஸ்வர -3-8–இத்யாதிகளாலே
மோக்ஷ ஹேதுத்வம் பரமபுருஷனுக்கே தானே ப்ரஸித்தமாய் உள்ளது –
ஸ்ரீ கீதையில் –
அஜோ அபிசன் நவ்ய யாத்மா பூதா நாம் ஈஸ்வரோ அபிசன் ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய சம்பவாம் யாத்மமாயயா -என்றும் –
அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வ்யாப்யா நாராயண ஸ்தித -என்றும்
ஸ்வேஸ்வதார உபநிஷத்தில் –
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா அயனாய வித்யதே -ஸ்வேதாஸ்வர -3-8–என்றும்
முண்டக உபநிஷத்தில் –
யஸ் சர்வஜ்ஞ சர்வவித்–முண்டகம்-1-2-9–என்று அனைத்தும் பரம் பொருளையே ஆதாரமாகக் கொண்டது என்கின்றன –
பிறப்பற்றவன் -அழிவற்றவன் -சர்வேஸ்வரன் -சங்கல்பம் அடியாக -பஹுதா ஜாயமான-முண்டகம் -2-2-6-என்றும்
அஜாயமாநோ பஹுதா விஜாயதே தஸ்ய தீரா பாரிஜாநந்தி யோனிம்-தைத்ரியம் -3-13-என்றும்
சொல்லுகிறபடி நித்ய மங்கள விக்கிரகத்துடன் திருவவதரித்து
அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கிறான் -ஜீவனுடைய அனைத்து உபகரணங்களும் ஆதாரம் என்றபடி –
——————————————-
ஸூத்ரம் -65–முக்தோ உபஸ்ருப்ய வ்யபதேசாத் ச –1-3-2-
முண்டக உபநிஷத் –
யதா பஸ்ய பஸ்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரமீசம் புருஷம் ப்ரஹ்மயோநிம் ததா வித்வான் புண்ய பாபே
விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி–முண்டக -3-1-3- -என்றும்
யதா நத்ய ஸ்யந்தமாநா சமுத்ரேஸ் தம் கச்சந்தி நாம ரூபே விஹாய ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த
பராத்பரம் புருஷன் உபைதி திவ்யம் -முண்டக -3-1-8–என்றும்
நதிகள் ரூப நாமம் இல்லாமல் கடலை அடைவது போலே முக்தாத்மாக்கள்,பரம்பொருளை அடைகின்றனர்-
பொன்னிறம் கொண்டவன் -நியமிப்பவன் -காரணமானவன் -அவனைக் கண்டதும்
புண்ய பாபங்கள் அற்று பரம சாம்யம் அடைகிறான் –
முக்தனுக்கு பரம புருஷனே பரம ப்ராப்யன் என்றதாயிற்று
——————————————-
ஸூத்ரம் -66–ந அநு மாநம் அதச் சப்தாத் பிராண ப்ருச் ச –1-3-3–
ந அநு மாநம் -இந்தப் ப்ரகரணத்தில் அனுமான பிராமண கம்யமான பிரதானம் இவற்றுக்கு ஆயதனம் ஆகாது
அதச் சப்தாத் -அந்தப் பிரதானத்தைக் குறிக்கும் ஸப்தம் இல்லாமையாலே
பிராண ப்ருச் ச –இவ்வாறே ஜீவனும் ஆக மாட்டான்
முன்பு உள்ள ஸூத்ரங்களில் பிராண வாயுவைக் குறிப்பிடாதலால் –
இங்கு பிரக்ருதியையும் ஜீவனையும் கூறப்பட வில்லை –
———————–
ஸூத்ரம் -67–பேத வ்யபதேசாத் –1-3-4-
ஜீவனின் தன்மைகளில் இருந்து இவனை வேறுபடுத்தி சொல்வதாலும் இவன் பரம் பொருளே –
முண்டக –
சாமா நே வ்ருஷே புருஷோ நிமக் நோ அநீசயா சோசதி முஹ்ய மான –
ஜூஷ்டம் யதா பச்யத் யந்யமீசம் அஸ்ய மஹிமானம் இதி வீத சோக
மரம் போன்ற அழியக் கூடிய சரீரத்தில் அழுந்தி மயங்கிய ஜீவன் –
அதே சரீரத்தில் உள்ள பரமாத்மா -தன்னிலும் வேறுபட்டவன்-நியமிப்பவன் –
மேன்மை உடைய பரமாத்மா -என்று உணர்ந்து வருத்தம் நீங்குகிறான் என்றபடி –
இது போன்ற வாக்யங்களாலே ப்ரக்ருதிக்கு அதீனனான இந்த ஜீவனின்
சோகத்தை நீக்குபவனாக வேறுபடுத்திக் கூறுவதால்
அந்த ஆயதனன் ஜீவன் அல்லன்
—————
ஸூத்ரம் -68– பிரகரணாத்–1-3-5-
முண்டக உபநிஷத்தில் பரம் பொருளின் தன்மைகள் கூறப்பட்டு
வேறு எதையும் கூறப்படாத காரணத்தால் இங்கு கூறப்படுகிறவன் பரம் பொருளே –
1-2-22-அத்ருச்யத்வாதி குணக தர்மோக்த-அவனுக்கே உரித்தான தன்மைகளுடன்
யாராலும் காணப்படாமல் உள்ளவன்-
முண்டக உபநிஷத் –
அத பரா யயா ததஷரமதி கமே யத்ததத்ரேஸ்ய மக்ராஹ்ய மகோத்த்ரம வர்ணம் அசஷூ ஸ்ரோத்ரம்
தத பாணி பாதம் நித்யம் விபும் சர்வகதம் ஸூ ஸூஷ்மம் ததவ்யயம் யத் பூத யோ நிம் பரிபச்யந்தி தீரா -என்றும்
சொல்லப்படுபவர் பரமாத்மாவே என்றவாறு –
இங்கும் இத்தைச் சொல்வான் என் என்னில்
நாடீ சம்பந்தம் -பஹுதா ஜாயமானத்வம் -மனஸ் பிராணங்களின் ஆதாரத்வம் இவற்றால் நடுவில்
பர ப்ரஹ்ம பிரகாரணத்துக்குத் தடை -இடையூறு -ஏற்பட்டு விட்டதோ என்ற
சங்கையைத் தீர்க்கவே இந்த அதிகரணம் ஆரம்பிக்கப் பட்டது என்று கருத்து —
————————
ஸூத்ரம் -69–ஸ்தித்யத நாப்யாம் ச –1-3-6-
முண்டக உபநிஷத்தில் இந்த உடலில் இருக்கும் தன்மை
பரம் பொருளுக்கு உடலில் இருக்கும் இருப்பு மட்டுமே –
ஜீவாத்மாவுக்கு மட்டுமே கர்ம பலன் அனுபவிக்க வேண்டும் –
த்வா ஸூ பர்ணா சாயுஜா சகாயா சமானம் வ்ருக்ஷம் பரிக்ஷஸ்வ ஜாதே தயோர் அந்நிய பிப்பலாம் ஸ்வாத் வத்தி
அனஸ்ந்னந்தயோ அபிசாகாதீதி-முண்டகம் -3-1-1-என்கிறபடி –
உண்ணாமல் தேஜஸ் மிக்கு -இருப்பவன் பரமாத்மா என்றபடி
இத்தாலும் இவற்றுக்கு ஆயதனம் பரமாத்மாவுக்கே
அஜாயமானோ பஹுதா விஜாயதே என்றபடி ராம கிருஷ்ணாதி அவதாரங்களுடன் ஆவிர்பாவமும்
நாடீ ஆதாரத்தவாதிகளும் பரம புருஷனுக்கே பொருத்தம் என்றபடி –
முதல் அதிகரணம் -த்யுத்வாத்யதிகரணம்- முற்றிற்று
————————————-
இரண்டாம் அதிகரணம் –பூமாதிகாரணம்
பரமாத்ம ப்ரகரண தொடர்ச்சியால் முண்டகம் முழுவதும் -அடி முதல் -முடிவு வரை பரமாத்ம பரமே என்று நிரூபிக்கப் பட்டது
அப்படியாகில் சாந்தோக்யத்தில் பூம வித்யையில் ஜீவ ப்ரகரண தொடர்ச்சியாலே ஜீவன் நிரூபிக்கப் படுகிறான்
என்று பூர்வ பக்ஷம் தோன்றவே
பிரமாணங்கள் மூலம் நிரூபிக்கும் இந்த அதிகரணம் பொருந்துகிறது
முன் அதிகரண விஷயமாக முண்டகத்தில்
யே ந அக்ஷரம் புருஷன் வேத ஸத்யம்-என்று
ஸத்ய அக்ஷர சப்தங்களால் குறிக்கப்படும் பரமபுருஷனே ஸத்ய ஸப்த வாஸ்யன் -என்பதை
இந்த அதிகரணத்தில் சாதிக்கிறார் என்று சங்கதி –
ஸூத்ரம் -70–பூமா சம் ப்ரசாதாத் தத் உபதேசாத் –1-3-7-
பூமா -பெரியவன் -ஜீவனை விட உயர்ந்த பெருமை யுடைய பர ப்ரஹ்மம் –
சாந்தோக்யம் ஏழாம் அத்தியாயத்தில் –
யத்ர நாந்யத் பஸ்யதி நாந்யத் ச்ருணோதி நாந்யத் விஜா நாதி ச பூமா அத யத்ர நாந்யத் பச்யத்
அந்யஸ் ச்ருணோதி அந்யத் விஜா நாதி தத் அல்பம் -என்று
பூமா பற்றியும் அல்பம் பற்றியும்
சாந்தோக்யத்தில் நாரத முனிவர் சனத் குமாரரிடம் ப்ரஹ்மம் பற்றி விளக்கி சொல்ல கேட்க
வாக்கு மனம் ஈடுபாடு புத்தி ஞானம் வலிமை உணவு நீர் ஆகாயம் ஞாபக சக்தி குறிக்கோள் -பிராணன் -என்று சொல்லி
ஏவம் விஜானன் அதிவாதீ பவதி -என்று பிராணனை ப்ரஹ்மம் என்று உணர்ந்தவன் அதிவாதி –
உயர்ந்த ஞானம் உடையவன் ஆகிறான்
சாந்தோக்யத்தில் மேலும் ஏஷ து வா அதிவததி யஸ் சத்யேன அதிவததி என்று
சத்யம் என்று ப்ரஹ்மத்தை உணர்ந்தவன் அதிவாதி ஆகிறான்
சம் ப்ரசாதா என்றது
ஜீவனையா என்கிற சங்கைக்கு –
ஏஷ சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே என்று
இந்த உடலை விட்டு நீங்கி அந்த உயர்ந்த ரூபத்தை அடைகிறான்
இதன் மூலம் ஸம் ப்ரசாதனன் என்பது ஜீவனைக் குறிக்கும் என்று உணரலாம்
ஆத்மாவை அறிய விரும்பும் நாரதருக்கு ஸநத்குமார்
நாமம் முதல் பிராணன் வரை பலவற்றையும் உபாசிக்கத் தக்கவையாக உபதேஸிக்கிறார்
பிராணனை விட எது உயர்ந்தது என்ற வினாவோ விடையோ இல்லை
ஆகையால் பிராணன் என்னும் ஜீவன் வரையிலும் ஆத்ம உபதேஸம் என்று தோன்றுகிறது
இதற்கு மேலும் பூமா என்பதும் ப்ரத்யகத்மாவே என்பதே பூர்வ பக்ஷம் –
இனி ஸித்தாந்தம்
பூமா -பூம குண விசிஷ்டன் பரமாத்மாவே
ஏன் எனில்
சம் ப்ரசாதாத் தத் உபதேசாத்-சம் ப்ரசாதன் என்னும் ஜீவனை விட உயர்ந்தவனாக
ஸத்யம் எனப்படும் பரமபுருஷனையே உபதேஸிக்கையாலே
ஏஷ சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே என்று சொல்லி
ஏஷ து வா அதிவததி யஸ் சத்யேன அதிவததி ஸூகம் த்வேவ விஜிஜ்ஞாஸி தவ்யம்
பூமாத் வேவ விஜிஜ்ஞாஸி தவ்ய-என்று
ஏராளமான ஸூகம் உடையவனாய் சத்யம் எனப்படுபவனாய் உள்ள பரம புருஷனை உபதேசிப்பதால்
பூமா எனப்படுபவன் பரமாத்மாவே என்று தேறுகிறது
பிராண ஸப்தத்தின் பொருளே ஆத்மா என்று எண்ணி ஆத்மாவை விட எது பெரியது என்று கேட்க வில்லை
ஆச்சார்யரும் கிருபையாலே சத்யமே அறியத்தக்கது என்று
ஏஷது வா அதி வததி-முதலிய வாக்யத்தால் உபதேஸிக்கிறார்
அதி வாதித்வம் என்பது தான் உபாசிக்கும் பொருளையே எல்லாவற்றையும் விடச் சிறந்தது என்று கூறுதல் –
——————
ஸூத்ரம் -71-தர்மோபபத்தே ச-1-3-8-
பூமா என்பதற்கு பல தன்மைகள் சொல்லப் பட்டுள்ளன அது பரம் பொருளை மட்டுமே குறிக்கும்
அந்த பரமாத்மா எதில் பிரதிஷ்டை செய்யப் பெற்று இருக்கிறார் –
தனது மஹிமையில் முதலிய வாக்கியங்களில் விளக்கப்பட்ட
தன் மஹிமையை பிரதிஷ்டை பெறுதல்
ஸர்வ காரணத்வம்
ஸர்வாத்மத்வம் -முதலிய தர்மங்கள் பகவானிடம் உப பன்னம் -பொருந்தும் -என்பதால்
பூமா என்பது பரமாத்மாவே என்பது உறுதி யாயிற்று
இந்த வித்யையில் தியானிக்க வேண்டியவைகளை சொல்லும் கிரமத்தில்
தஸ்மின் யதந்த ததன்வேஷ்டவ்யம் -என்று தேட வேண்டிய பொருளுக்கு ஆதாரமான
தஹர ஆகாசத்தைச் சொல்லுகையாலும்
பூத ஆகாசமே என்பது முதல் பக்ஷம்
இதற்கு விடை கூறுகிறார் இந்த ஸூத்ரத்தில்
தஹர ஆகாசம் பர ப்ரஹ்மம் தான் பூத ஆகாசம் அன்று
ஏன் எனில்
உத்தரேப்ய -மேல் வாக்கியங்களில் சொல்லப்படும் ஹேதுக்களால்
ஏஷ ஆத்மா அபஹத பாப்மா விஜரோ விமிருத்யு -என்று தொடங்கும் வாக்கியம்
யம் காமம் காமயதே ஸோ அஸ்ய ஸங்கல்பா தேவ சமுத் திஷ்டாதி -முதலிய வாக்யங்களால் கூறப்படும்
குணங்கள் பூத ஆகாசத்துக்குப் பொருந்தாதவை
இப்படி தஹர ஆகாசத்தைப் பூத ஆகாசம் அன்று என்று நிரூபித்து
மேலே ப்ரத்யகாத்மாவாக இருக்கலாமோ என்ற சங்கையையும் நிராகாரணம் பண்ணுகிறார்
அத ஏஷ சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதேஎன்கிற வாக்கியத்தில்
இதர பராமர்சாத் -ப்ரஹ்மத்தைத் தவிர வேறே ஜீவனைப் பேசுவதால்
ஸ இதி சேத் -இந்த தஹர ஆகாசம் ஜீவனே என்றால்
ந -அது தவறு
அசம்பவாத் -கூறிய அபஹத பாப் மத்வாதிகள் ஜீவனிடம் சம்பாவிதம் அல்லவே
ஸம்ப்ரஸாதன் என்றது பகவானின் சம்பந்த ஞானத்தால் ரசிகனான ஜீவனைக் குறிக்கிறது
ஸங்கல்ப -நாம -த்யானம் -விஞ்ஞானம் -பலம் -அன்னம் – நீர் -தேஜஸ் -ஆகாசம் -மன்மதன் -திசை -பிராணன் என்னும் ஜீவன்
இவை அனைத்துக்கும் மேல் ஸத்ய ஸப்த பொருளாக பரமாத்மாவே பூம குண விசிஷ்டானாயும்
த்யானிக்கத் தக்கவனாயும் கொல்லப்படுகிறான் என்று கருத்து –
சாந்தோக்யம் –ஏதத் அம்ருதம்-பூமா அழிவற்றது என்றும்
சர்வே மஹிம் நி -மற்று எதையும் சாராமல் தன்னுடைய பெருமையால் விளங்கி நிற்கும் என்றும்
ச ஏவாத ஸ்தாத் ச ஏவேதம் சர்வம் -என்று
அதுவே மேலும் கீழும் முன்னும் பின்னும் தெற்கும் வடக்காகவும் உள்ளது
போன்ற தன்மைகள் பூமா பரம் பொருளுக்கே பொருந்தும் என்றதாயிற்று –
பூமாதி கரணம் சம்பூர்ணம்
——————————————–
1-3-3-அஷர அதிகரணம் -அஷரம் எனபது ப்ரஹ்மமே –
கீழ் அதிகரணங்களில் -ஸத்யம் அக்ஷரம் என்ற சொற்களுக்கும் பொருளாகக் கூறப்பட்ட பரம புருஷனே
பூமாதி கரணத்தில் -ஸத்யம் ஸப்தத்தின் பொருள் என்று ஸ்தாபித்து
இவ்வதி கரணத்தில் அக்ஷரம் என்ற சொல்லின் பொருளும் அவனே என்று ஸ்தாபிக்கப் படுகிறது –
அஷரம் அம்பராந்த த்ருதே-1-3-9-
ப்ருஹத் ஆரண்யாகாவில் –
ச ஹோவாச ஏதத்வை தத் அஷரம் கார்க்கி ப்ராஹ்மணா அபிவ தந்தி அஸ்தூலம் அநணு
அஸ்ரஸ்வம் அதீர்க்கம் அலோஹிதம் அஸ்நேந ஹமச்சாயம் –(ப்ரு -3–8–8-)
வசக்னு மகா ரிஷியின் பெண் கார்க்கி என்ற பெண் யாஜ்ஞவல்க்யர் இடம் -கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் )-என்று
அஷரம் பருத்ததும் அல்ல சிறியதும் அல்ல குட்டியும் அல்ல நெட்டையும் அல்ல நிழலும் அல்ல இருளும் அல்ல
காற்றும் அல்ல ஆகாசமும் அல்ல-எதனுடன் சேர்ந்ததும் அல்ல எதையும் உண்பவன் அல்ல -இப்படி பலவாறு சொல்லி –
யயா தத் அக்ஷரம் அதிகம்யதே–முண்டகம் –1–1–5-
முண்டக-2-1-2- அஷராத் பாரத பர -என்று அஷரம் என்பதை பிரக்ருதியாக சொல்லி
இவ்வாக்கியத்தில் -அக்ஷரம் -பிரதானமா ஜீவனா பரமாத்மாவா என்ற சங்கை வர
முதலில் பிரதானம் என்று பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
அக்ஷராத் பரத பர -என்ற இடத்தில்
அக்ஷர சப்தத்துக்குப் பிரதானம் என்ற பொருளில் பிரயோகம் காணப்படுகிறது
இதற்கு விடையே
அஷரம் -அக்ஷர ஸப்தத்தின் பொருள் பர ப்ரஹ்மமே
ஏன் எனில்
அம்பராந்த த்ருதே-ஆகாசத்தில் எல்லையான -முடிவான -காரணமான ஆகாசத்தினைத் தாங்குவதாகக் கூறுவதால்
எதில் ஆகாசம் பின்னப்பட்டு உள்ளது
சர்வ விகாரப் பொருள்களுக்கும் காரணமாய் -ஆகாசம் என்னும் சொல்லின் பொருளாய்
பிரதானத்துக்கும் ஆதாரமாகச் சொல்லப்பட்ட அக்ஷரம் பிரதானமாக இருக்க முடியாது
பரமாத்மா தான் -அது பிரதானத்துக்கு ஆதார பூதம் -அவனே அன்றி பிரதானம் எப்படி இருக்க முடியும்
ப்ருஹத் ஆரண்யாகாவில்-
யத் ஊர்த்வம் கார்க்கி திவோ யதர்வாக் ப்ருதிவ்யா யத் அந்தரா த்யாவா ப்ருத்வீ இமே யத் பூதஞ்ச பவச்ச
பவிஷ்யச் சேத்யா சஷதே-ஆகாச ஏவ தத் ஓதம் ச ப்ராதம் ச –5-8-4–என்று கேட்டு
ஆகாச ஏவ ததோதஞ்ச ப்ரோதஞ்ச -என்று அந்த பொருள்கள் சார்ந்து உள்ளது ஆகாசமே என்று பிரக்ருதியே ஆகும்
அது அஷரத்தை ஆதாரமாக கொண்டது என்பதால் அஷரம் ப்ரஹ்மமே-
—————————————————
ஆனால் ஜீவனுக்கும் அசேதனமான பிரதானத்துக்கான ஆதாரத்வம் கூடுமே
அக்ஷரம் என்பது ஜீவனாகலாம் என்கிற பக்ஷத்தை அடுத்துக் கண்டிக்கிறார் –
ஸூத்ரம் -73-சா ச பிரசாச நாத் –1-3-10-
அஷரம் ஸூரியனையும் சந்திரனையும் நியமிப்பதாக சொல்வதால் அது ப்ரஹ்மமே
யஸ்ய அஷரம் சரீரம் -என்பதால்
உடலுடன் தொடர்பு கொண்ட ஜீவனோ என்னில் –
ப்ருஹத் ஆரண்யாகாவில்-
ஏதஸ்ய வா அஷரஸ்ய பிரசாச நே கார்க்கி ஸூர்யா சந்திர மசௌ வித்ருதௌ திஷ்டத-என்று
ஸூரியனையும் சந்திரனையும் இயக்குவது என்பதால் ப்ரஹ்மமே
சா ச -அம்பராந்தமான பிரதானத்தின் த்ருதியும் -தாங்குதலும்
பிரசாச நாத் –இந்த அக்ஷரத்தின் நியமனத்தாலே ஏற்படுகிறது
ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய இத்யாதி -என்ற இது முதலியவற்றில்
தன் நியமத்துக்கு உள்பட்ட ஸர்வ வஸ்துக்களையும் தாங்குதல் பக்தனுக்கோ முக்தனுக்கோ கூடாது
ஆதலின் புருஷோத்தமன் ப்ர ஸாஸ்தா வான அக்ஷரமாம் –
———————
ஸூத்ரம் -74-அந்ய பாவ வ்யாவ்ருத்தே ச –1-3-11-
அஷரம் மிக உயர்ந்தது ஒப்பார் மிக்கார் இல்லாதது –
ப்ருஹத் ஆரண்யா காவில் கார்க்கி என்பர் கேட்க –
தத்வா ஏதத் அஷரம் கார்க்கி அத்ருஷ்டம் த்ரஷ்ட்ரு அஸ்ருதம் ஸ்ரோத்ரு-என்றும்
நான்யதோ அஸ்தி த்ரஷ்ட்ரு நான்யதோ அஸ்தி ஸ்ரோத்ரு-என்பதால்
அஷரம் பரம் பொருளே –
அந்ய பாவ -வேறு தன்மை -ப்ரதாநத்வமும் ஜீவத்வமும்
வ்யாவ்ருத்தே ச –விலக்கப்படுவதால் -அக்ஷரம் என்பது பரமாத்மாவே யாகும்
கார்கி இந்த அக்ஷரத்தின் இடமே ஆகாசம் குறுக்கும் நெடுக்குமாகப் பின்னப் பட்டுள்ளது
இந்த அக்ஷரமே பிறவற்றால் காணப்படாமல் தான் அனைத்தையும் காண்கிறது என்று சொல்லுகையால்
இப்படி ஸர்வஞ்ஞனாயும் ஸர்வ அந்தர்யாமியான ஸர்வ ஆதரன் எனும் அஷரம்
பிரதானத்தில் இருந்தும் ஜீவனிடம் இருந்தும் பிரிதாய் விலக்கிக் கூறப்படுகிறது என்று ஸித்தாந்தம் –
அஷர அதி கரணம் சம்பூர்ணம்
———————————————–
1-3-4-ஈஷதி கர்மாதிகரணம் -கானப்படுபவன் ப்ரஹ்மமே-
அத்ருஷ்டம் த்ரஷ்ட்ரு -என்று பரமாத்மா இதரங்களால் காணப்படாதவன் என்று கூறப்பட்டது
அப்படியாயின் -பராத்பரம் புரி சயம் புருஷம் ஈஷதே -என்று காணப்படுபவனாகக் கூறப்படுபவன்
பரமாத்மாவாய் இருக்க முடியாது என்ற சங்கை இந்த அதிகரணத்தில் தீர்க்கப்படுகிறது என்று சங்கதி –
ஸூத்ரம் -75-ஈஷதி கர்ம வ்யபதேசாத் ச –1-3-12-
ஜீவனுக்கும் மேலான புருஷன் என்று ப்ரஹ்மத்தை சொல்லிற்று –
ப்ரசன உபநிஷத்தில் -சத்யகாமன் என்பவனது கேள்விக்கு விடையாக
ய புநரேதம் த்ரிமாத்ரேண ஒம் இதி ஏதே ஏவ அஷரேண பரம்புருஷம் அபித்யாயித ச தேஜஸி ஸூர்யே சம்பன்ன-
யதா பாதோதரஸ் த்வாச்சா விநிர் முச்யதே ஏவம் ஹை வ ச பாப்மநா விநிர்முக்தி ச சமாபி உந்நீயதே ப்ரஹ்ம லோகம்
ச ஏதஸ்மாத் ஜீவநாத் பராத்பரம் புரிசயம் புருஷம் ஈஷதே – -என்று
புருஷன் என்ற ஹிரண்யகர்ப்பன் உபாசித்து ப்ரஹ்ம லோகம் அடைவதைச் சொல்லிற்று
என்பர் பூர்வ பஷத்தில்
அதர்வணத்தில் சத்யகாம ப்ரஸ்தானத்தில் -பராத்பரம் புரிசயம் புருஷம் ஈஷதே என்னும் பகுதியில்
தியானிக்கவும் பார்க்கவும் படும் புருஷன்
ஜீவ சமஷ்ட்டி ரூபமான நான்முகனா அல்லது பரம புருஷனா என்ற சம்சயம்
சமஷ்டி ரூபமான -ஜீவனான -சதுர்முகன்பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
ஒரு மாத்திரை அளவுள்ள ப்ரணவ உபாசன பலம் மனுஷ்ய லோகம் என்றும்
இரண்டு மாத்ரை அளவுள்ள ப்ரணவ உபாசன பலம் அந்தரிக்ஷ பிராப்தி என்றும்
மூன்று மாத்ரை உபாசன பலம் ப்ரஹ்ம லோக பிராப்தி என்றும் கூறப்பட்டு இருப்பதால்
அந்த லோகத்தை அடைந்து காணப்படுபவன் நான்முகனே என்று பூர்வ பக்ஷம்
இதுக்கு விடை –
ஆனால் மேலே –
யத்தத் சாந்தம் அஜாம் அம்ருதம் அபயம் பரஞ்ச –
என்பதால் உள்ள
யத்தத் கவயோ வேத யந்த -என்று
நித்ய ஸூரிகள் பார்க்கும் இடம் என்பதால் பரம புருஷனையே சொல்லிற்று-
ஈஷதி கர்ம -பார்வைக்கு விஷயமானவன்
ஸ -அந்த ஸ்ருதி ப்ரதிபாத்யனான பரமாத்மாவே -சதுர்முகன் அன்று ஏன் எனில்
வ்யபதேசாத் ச –சாந்தமாய் ஜாரை மரணம் அற்று அம்ருதமாய் அபயமாயும் பரமமான ப்ரஹ்மத்தை அடைகிறான்
என்று மேலே சொல்வதால்
இத்தகைய தர்மங்கள் பர ப்ரஹ்மத்துக்கே பொருந்தும்
அந்தரிக்ஷ லோகத்துக்கு மேலே நான்முகன் லோகம் என்பது சரி அல்ல
நடுவில் மஹர் லோகாதிகள் உண்டே
ஆகவே சர்வ பிராகிருத லோகங்களுக்கும் மேலே ஸ்ரீ வைகுண்டம் -யத்தத் கவயோ வேத யந்த -என்று
நித்ய ஸூரிகள் பார்க்கும் இடம் என்பதால் பரம புருஷனையே சொல்லிற்று-
ஆகவே நான்முகன் லோகம் அன்று என்று திரு உள்ளம் –
ஈஷதி கர்மாதிகரணம் சம்பூர்ணம்
——————————————————————-
1-3-5-தஹராதி கரணம் -தஹரா ஆகாயம் என்பதுவும் ப்ரஹ்மமே-
இப்படி கார்க அக்ஷர வித்யையில் அறியத் தக்க புரிசயனான புருஷனுக்கு பரமாத்மா நிலையை ஸ்தாபித்து
தஹர வித்யையில் ஆகாசம் எனப்படும் புரிசய புருஷனுக்கும் அப்ரமாத்மத் வம் இல்லை –
அவன் பரமாத்மாவே என்பது சங்கதி
ஸூத்ரம் -76-தஹர உத்தரேப்ய-1-3-13-
இதயத்தில் உள்ள தஹர என்னும் ஆகாயத்தில் உள்ளவனும் பர ப்ரஹ்மமே
சாந்தோக்யம் –8-1-1–அத யதிதம் அஸ்மின் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம தஹரோ அஸ்மின் அந்தரே ஆகாசாஸ்
தஸ்மின் யதந்தஸ் தத் அன்வேஷ்டவ்யம் தத்வாவ விஜிஜ்ஞாசி தவ்யம் -என்று
ஆகாயமா பரம் பொருளா ஜீவனா –
பஞ்சபூதங்களில் ஒன்றே என்பது முதல் பூர்வ பக்ஷம்
ஏன் என்னில்
ஆகாசம் என்ற சொல் அந்தப்பொருளிலே பிரசித்தம்
தஸ்மின் யதந்தஸ் தத் அன்வேஷ்டவ்யம் -என்று
தேட வேண்டிய பொருளுக்கு ஆதாரமான தஹர ஆகாசத்தைச் சொல்லுகையாலும் பூதாகாசமே என்பது முதல் பூர்வ பக்ஷம்
இதுக்கு விடை
தஹர -தஹர ஆகாசம் பர ப்ரஹ்மம் தான் பூத ஆகாசம் அல்ல
ஏன் என்னில்
உத்தரேப்ய-மேல் வாக்யங்களால் சொல்லப்படும் ஹேதுக்களாலே
அதே உபநிஷத்தில் மேலே –
ஏஷ ஆத்மா அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யூர் விசோகோ விஜிகத்சோ அபிபாபசஸ்
சத்ய காம சத்ய சங்கல்ப -என்பதால் பரம் பொருளே
மேலும் அதே உபநிஷத்தில் மேலே –
யாவான் வா அயமாகா சாஸ்தா வா நேஷோ அந்தர் ஹ்ருதய ஆகாச-8-1-3- -என்று
ஆகாயம் போலே என்பதால் தஹரா எனபது ஆகாசம் இல்லை-
அன்வேஷ்டவ்யம்-என்று சொன்னதும் கல்யாண குணங்களைப் பற்றியே
அத யதிதம் அஸ்மின் ப்ரஹ்மபுரே-என்ற விஷய வாக்கியத்தின் பொருள் மேலே சொல்லப்படும் –
——————————————————————-
ஸூத்ரம் -77-கதி சப்தாப்யாம் ததா ஹி த்ருஷ்டம் லிங்கம் ச –1-3-14-
அனைவரும் சென்று அடையும் இடம் என்பதாலும்
ப்ரஹ்ம லோகம் என்பதாலும்
தஹரா பர ப்ரஹ்மமே -பரம் பொருளே
சாந்தோக்யம் –
தத் யதா ஹிரண்ய நிதிம் நிஹித ம ஷேத்ரஜ்ஞா உபர்யுபரி சஞ்சரந்தோ ந விந்தேயுர் யேவ ஏவேமாஸ் சர்வா பிரஜா
அஹர் அஹர் கச்சந்த்ய ஏதம் ப்ரஹ்ம லோகம் ந விந்தந்தி அந்ருதேன ஹி பிரத்யூடா–8-3-2–என்றும்
ஏவமேவ இமா சர்வா பிரஜா சதி சம்பத்ய ந விதுஸ் சதி சம்பத்யா மஹயிதி-என்றும்
ப்ருஹத் ஆரண்யாகாவில்–
ஏஷ ப்ரஹ்ம லோகஸ் சம்ராடிதி ஹோவாச -என்பதால்
தஹரா என்றது பர ப்ரஹ்மமே-
நிலத்துக்குள் புதைந்து கிடைக்கும் புதையலை அறியாத மக்கள் அந்த நிலத்தின் மேலே அடிக்கடி நடமாடியும் அறிவது இல்லை
கதி சப்தாப்யாம் –
உபநிஷத் வாக்கியத்தில் ஏதம் என்று தஹர ஆகாசத்தைக் குறிப்பிட்டு ஸூ ஷுப்தி தசையில் செல்லும் -செல்லத்தக்க
தஹர ஆகாசத்தை ப்ரஹ்ம லோகம் என்று
இப்படி கமனத்தாலும் ப்ரஹ்ம லோக ஸப்தத்தாலும் குறிப்பது ப்ரஹ்மமே என்று சாதிக்க வல்லது
ததா ஹி த்ருஷ்டம்
இப்படி வேறு உபநிஷத்திலும் -ஏவமேவ இமா சர்வா பிரஜா சதி சம்பத்ய ந விதுஸ் சதி சம்பத்யா மஹயிதி-
முதலான வாக்கியங்களில் காணப்படுகிறது
லிங்கம் ச –
மற்ற ஸ்ருதிகளை விட்டு இதே ஸ்ருதியில் சொல்லும் கதியும் -ப்ரஹ்ம லோக ஸப்தமும்
வேறு எதையும் அபேக்ஷிக்காத லிங்கங்கள் என்றவாறு
———————————————-
ஸூத்ரம் -78-த்ருதேச்ச மஹிம் ந அஸ்ய அஸ்மின் உபலப்தே –1-3-15-
அனைத்துக்கும் ஆதாரமாக பற்றாக உள்ளவன் தஹரா என்பதால் பர ப்ரஹ்மமே –
சாந்தோக்யம் –
அத ய ஆத்மா ச ஹேதுர் வித்ருதி ரேஷாம் போகாநாம் சம்பேதாய-8-4-1–என்று
உலகங்கள் அனைத்துக்கும் ஆதாரம் என்றும்
ப்ருஹத் ஆரண்யாகாவில்–4-4-22- –
ஏஷ சர்வேஸ்வர ஏஷ பூதாதிபதி ரேஷ பூதபால ஏஷ சேதுர் விதரண
ஏஷாம் லோகா நாம சம்பேதாய -என்பதால் தஹரா என்றது பர ப்ரஹ்மமே-
த்ருதேச்ச மஹிம் ந அஸ்ய –இந்த பரமாத்மாவுக்கு ஜகத்தினைத் தங்குவது என்னும் மஹிமை
அஸ்மின் -இந்த தஹர ஆகாசத்தில்
உபலப்தே –தோன்றுகையாலே இந்த மகிமைக்கு ஆஸ்ரயமான தஹர ஆகாசம் பரமாத்மாவே தான்
யஸ் ஆத்மா ஸ சேதுர் வித்ருதி என்றும்
ஏஷாம் லோகாநாம் அசம்பேதாய இத்யாதி வாக்யங்களால் தாரணா ரூபமான மஹிமை சொல்லப்படுகிறது –
——————————————–
ஸூத்ரம் -79-பிரசித்தே ச –1-3-16-
ஆகாயம் என்று பரம் பொருளை ஒட்டியே பல இடங்களிலும் சொல்லப் பட்டதால்
தஹரா பர ப்ரஹ்மமே –
தைத்ரீய ஆனந்த வல்லியில் —
கோ ஹி ஏவ அந்யாத்க ப்ராணயாத் -யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத்-2-7-
மேலும் -சாந்தோக்யம்-1-9-1-
சர்வாணி ஹ வா இமானி பூதானி ஆகாசாத் ஏவ சமுத்பத்யந்தே– -என்று
ஆகாயம் பரம் பொருள் என்ற காரணத்தால்
தஹரா என்றது பர ப்ரஹ்மமே –
ஸ்ருதி ப்ரசித்தமும்
அபஹத பாப் மத்வாதிகளுடன் கூடிய ப்ரஸித்தி ப்ரபலம்
இப்படி பூத ஆகாசம் இல்லை என்று நிரூபித்து
மேலே பிரத்யக்தமா இல்லை என்று நிரூபிக்கிறார்
———————————————–
ஸூத்ரம் -80-இதர பராமர்சாத் ச இதி சேத ந அசம்பவாத் –1-3-17-
தஹரா ஜீவனாக இருக்க முடியாது -ஜீவனுக்கு பொருந்தாத தன்மைகள் சொல்லப் படுவதால்
சாந்தோக்யம் –
அத ய ஏஷ சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதிரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண
அபி நிஷ்பத்யதே ஏஷ ஆத்மேதி ஹோவாச ஏதத் அம்ருதம் அபயம் யேதத் ப்ரஹ்ம-8-3-3- -என்று
ஆத்மா சம்பிரசாதன் என்றும்
பரம் பொருளைக் காட்டிலும் வேறு ஒருவனாக சொல்லப் பட்டதால்
சாந்தோக்யத்தில் சொல்லப்பட்ட தஹரா ஆகாயத்தின் தன்மைகள்
பர ப்ரஹ்மத்துக்கு மட்டுமே பொருந்தும்-
அத ய ஏஷ சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதிரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண-என்கிற வாக்கியத்தில்
இதர பராமர்சாத் -ப்ரஹ்மத்தைத் தவிர வேறு ஜீவனைப் பேசுவதால்
ச இதி சேத் -இந்த தஹர ஆகாசம் ஜீவனே என்றால்
ந-அது தவறு
அசம்பவாத் –கூறிய அபஹத பாப் மதவாதி கல்யாண குணங்கள் சம்பாவிதம் அல்ல என்பதால்
ஸம் ப்ரஸாதன் என்றது பகவத் சம்பந்த ஞானத்தால் ரசிகனான ஜீவனைக் குறிக்கிறது –
——————————————–
ஸூத்ரம் -81-உத்தராத் சேத் ஆவிர்ப்பூத ஸ்வரூப து –1-3-18-
பிரஜாபதி ரிஷி இந்த்ரனிடம் ஜீவனுக்கும் உயர்ந்த தன்மைகள் ப்ரஹ்மத்தின் அருளால் –
சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதிரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண நிஷ்பத்யதே –
ஆனால் தஹரா ஆகாயத்துக்கு இந்த தன்மைகள் மறையாமல்
இயற்கையாகவே உள்ளன –
எனவே தஹரா ஜீவன் அல்ல பரம் பொருளே-
உத்தராத் சேத் -பிரஜாபதி வாக்யத்தால் -மேலே ஜீவனுக்கும் இந்த அபஹத பாப் மத்வாதிகள் கூறுவதால்
ஜீவனுக்கு அவை சம்பாதிக்காது என்று கூறுவது சரியில்லை
ஆவிர்ப்பூத ஸ்வரூப து –முதலில் கர்ம சம்பந்தத்தால் மறைக்கப்பட்ட ஸ்வரூபத்தை யுடைய ஜீவன்
பின்பு பரமாத்மா ஸம்பத்தியால் ஸ்வரூப ஆவிர்பாவம் அடைகிறான் என்று பிரஜாபதி வாக்கியம்
து -தஹர ஆகாஸனோ என்னில் -மறைக்கப்படாத ஸகல கல்யாண குணங்களும் ஸ் வாபாவிகமாக
இவனது ஸ்வரூப ஆவிர்பாகத்துக்கும் காரணமான பரமபுருஷனே -ஜீவன் அல்லன்
ஸத்யன் என்ற சொல்லின்படி சேதன அசேதன நியாமகன்
ஆகவே பரமாத்மாவே அன்றி ஜீவன் அல்லன்
இப்படியாகில் ஜீவனை ஸம் ப்ரஸாத என்று ஜீவனை ஏன் பிரஸ்தாபிக்க வேண்டும் என்றால் -மேல் –
——————————————
ஸூத்ரம் -82-அன்யார்த்த ச பராமர்ச –1-3-19-
ஜீவனுக்கு பரம் பொருளின் கடாஷத்தால் உயர்ந்த தன்மை அடைவதை சொல்லி
பரம் பொருளின் உயர்ந்த தன்மை காண்பிக்கப் பட்டது-
அன்யார்த்த ச பராமர்ச –
பராமர்ச -தஹர வாக்கியத்தில் ஜீவனை பிரஸ்தாபித்தது
அன்யார்த்த ச -தஹர ஆகாச ப்ராப்தியாலே முக்தனுடைய ஸ்வரூப ஆவிர்பாவம் ஏற்படுகிறது என்று
அவனது கல்யாண குணத்தை விளக்கவே என்றவாறு –
———————————————
ஸூத்ரம் -83-அல்ப ஸ்ருதே இதி சேத் தத் உக்தம் –1-3-20
தஹரா ஆகாயம் சிறியது என்பதால் பர ப்ரஹ்மம் அல்ல எனபது சரியல்ல –
இதயத்தில் உள்ளான் -1-2-7 ஸூத்ரம் சொல்லவே
சிறிய உருவம் உள்ளவனாக சொல்லப் பட்டது-
அல்ப ஸ்ருதே –ஆராக்ர சத பாகஸ்ய -இத்யாதி வாக்கியப்படி அணு பரிணாமம் ஜீவனுக்கே கூடும் என்றால்
இதி சேத்–அது தவறு
தத் உக்தம் -ஸர்வத்ர ப்ரஸித்த அதிகரணத்தில் -நிசாயத்வா தேவம் என்ற ஸூத்ரத்தில் இது விளக்கப்பட்டு விட்டது
உபாஸகர்கள் அனுக்ரஹத்துக்காக கட்டை விரல் அளவுள்ள
திருமேனி உள்ளவன் என்பதால் அல்பத்வம் சொல்லப்படுகிறது என்று திரு உள்ளம் –
———————————————–
ஸூத்ரம் -84-அநு க்ருதே தஸ்ய ச –1-3-21-
முண்டகம் –
யதா பஸ்ய பஸ்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரம் ஈசம் புருஷம் ப்ரஹ்ம யோநிம் ததா வித்வான்
புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யமுபைதி –3-1-3–என்பதால்
இயற்கையாக அந்த தன்மைகளைக் கொண்ட தஹரா ஜீவன் இல்லை பர ப்ரஹ்மமே-
அநு க்ருதே தஸ்ய ச
தஸ்ய -அந்த பரமாத்மாவின்
அநு க்ருதே -ஸாம்யத்தை அடைகையாலும்
சாம்யத்தை அடையும் ஜீவனைக்காட்டிலும் சாம்யத்தை உண்டாக்கும் பரமாத்மாவுக்கு தஹரத்துக்கு –
பேதம் ஸித்தமாயிற்று
நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபைதி -என்று முக்தனுக்கு ஸாம்யா பத்தி -சொல்லிற்றே –
————————————————-
ஸூத்ரம் -85-அபி ஸ்மர்யதே-1-3-22-
ஸ்ரீ கீதை –
இதம் ஜ்ஞானம் உபாஸ்ரித்ய மம சாதர்ம்யம் ஆகாதா–சர்க்கே அபி நோபே ஜாயந்தே
பிரளயே ந வ்யதந்தி ச -14-2- -என்று இதே கருத்து சொல்லப் பட்டதே-
இங்கும் பகவத் உபாஸனத்தாலே அவனுடன் ஸாம்யம் உடைய அனுக்ரஹம்
பகவானால் என்று சொல்லப்படுகிறதே
அதயதிதம் அஸ்மின் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம என்று அனுவதித்து
தஹரோ அஸ்மின் அந்தர ஆகாச என்ற வாக்கியத்தில் அஸ்மின் -இந்த அற்பமான இதயம் என்னும் தாமரையில்
அந்தர ஆகாச -உள்ளிருக்கும் ஆகாசம் எனப்படும் பரமாத்மா
ய -எவன் உள்ளானோ
தஸ்மின் -அவனிடம்
யத் -எந்த எந்த கல்யாண குணம் உள்ளதோ
தத் -அந்த ப்ரஹ்மமும் அந்த கல்யாண குண ஜாதங்களும் இரண்டும் உபாசிக்கத்தக்கவை
என்று யத் சப்தத்தை அத்தியாஹரம்-வருவித்திக் கொண்டும் கொள்ளாமலும் பொருள் சொல்லலாமே –
1-3-5-தஹராதி கரணம் சம்பூர்ணம்
——————————————–
1-3-6-ப்ரமிதாதி கரணம் -கட்டை விரல் அளவுள்ளவன் ப்ரஹ்மமே –
அல்ப ஸ்ருதே –ஸூத்ரத்தில் கூறிய அல்ப பரிமாணத்வம்
ஜீவனுக்கும் கடவல்லியில் கூறப்பட்டுள்ளதால்
அங்குஷ்ட ப்ரமிதன் ஜீவனாகவே இருக்கலாமே
என்ற சங்கையைப் பரிஹரிக்கவே
இந்த அதிகரணம் என்று சங்கதி –
ஸூத்ரம் -86-சப்தாத் ஏவ ப்ரமித–1-3-23-
கடவல்லியில் -அங்குஷ்ட மாத்ர புருஷ மத்ய ஆத்மனி திஷ்டதி என்றும்
ஈஸானோ பூத பவ்யஸ்ய ந ததோ விஜூ குப்சதே -என்றும்
அங்குஷ்ட மாத்ர புருஷோ ஜ்யோதிரிவா தூமக என்றும்
ஹ்ருதய ஸம் நிவிஷ்ட என்றும்
முதலிலும் நடுவிலும் இறுதியிலும் கூறப்பட்ட அங்குஷ்ட ப்ரமிதன்
ஜீவனா பரமாத்மாவான என்ற சங்கை
ஜீவனே என்று பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
ஸ்வேதாச்வதார உபநிஷத்தில்-
பிராணாதி ப சஞ்சரதி ஸ்வகர்மபி அங்குஷ்ட மாத்ர-என்றும்
அங்குஷ்ட மாத்ர ரவி துல்ய ரூப என்றும்
பிராண வாயு கர்ம வினைகள் சம்சாரம் என்பதால்
அங்குஷ்ட மாத்ர என்றது ஜீவனே பூர்வ பஷம்
சப்தாத் ஏவ ப்ரமித–பரமாத்மாவுக்கு அசாதாரணமான ஈஸானோ பூத பவ்யஸ்ய என்னும் ஸப்தத்தாலேயே
பிராணாதி ப சஞ்சரதி ஸ்வகர்மபி-என்ற வாக்கியத்தில் கர்ம சம்பந்தமாகிய ஜீவ லிங்க சப்தம் இருப்பது போல்
பரமாத்ம லிங்கம் இங்கு இருப்பதாலேயே
பரமாத்மாவே தான் ஜீவன் அல்லன் என்று திரு உள்ளம்
கடோ உபநிஷத்தில் –
ஈசா நோ பூத பவ்யச்ய ந ததோ விஜூ குப்சதே -என்று
முக் காலங்களையும் நியமிக்கும் தன்மை பரம் பொருளுக்கே உண்டு -எனவே
அங்குஷ்ட மாத்ரன் பரம் பொருளே-
ஆனால் விபுவான பரமாத்மாவுக்கு
அங்குஷ்ட ப்ரமிதத்வம் எவ்வாறு பொருந்தும் என்பதற்கு மேல் ஸூத்ரம்
———————————————————–
ஸூத்ரம் -87-ஹ்ருதி அபேஷயா து மனுஷ்யாதிகாரத்வாத்-1-3-24-
மனிதர்கள் இதயத்தில் பர ப்ரஹ்மம் உள்ளான் என்பதைக் காட்டவே கட்டை விரல் அளவு உள்ளவன் -என்கிறது –
உபாசனைக்கு ஏற்றவாறு என்றவாறு –
ஹ்ருதி அபேஷயா து மனுஷ்யாதிகாரத்வாத்
து சப்தம் சங்கையை விலக்குவது
ஹ்ருதி –மனிதனின் ஹ்ருதயத்தில் உபாஸனார்த்தமாக
தத் அபேஷயா -அத்தை அபேக்ஷித்து விபுவான பர ப்ரஹ்மத்துக்கு அந்த அளவு கூறப்பட்டது
மனுஷ்யாதிகாரத்வாத்-உபாஸனம் விதிக்கும் ஸாஸ்த்ரம் மனிதர்களை உத்தேசிக்கையாலே
அவர்கள் இருதயத்தை முன்னிட்டே இந்த அளவு என்று ப்ரஹ்மத்துக்குக் கூறப்பட்டது –
ப்ரமிதாதி கரணம் சம்பூர்ணம்
————————————————————-
மனிதர்களுக்கு உபாசனத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டு
பின்பு தேவத அதிகரணம்
மத்வாத் யதி கரணம்
அப ஸூத்ர அதிகரணம்
ப்ரசங்க சங்கதியால் இடையே வந்தன
இப்படி விசேஷ அதிகாரம் பற்றி நிரூபிப்பதால் ஸாமான்யமான அதிகாரத்தைப் பற்றிப் பேசும்
மூன்றாம் அத்யாயம் -நான்காம் பாதத்துடன் சாங்க்யம் -கலப்பு -என்ற தோஷம் இல்லை
இப்படி பிரசங்காத் வந்த மூன்றில் முதலில் தேவத அதிகரணத்தில்
தேவதைகளுக்குப் பொதுவாக உபாஸனத்தில் அதிகாரம் உண்டா என்று கேட்டு
அத்தை ஸ்தாபிக்கிறார் –
1-3-7-தேவாதிகரணம் -தேவர்களுக்கு ப்ரஹ்ம உபாசனை உண்டு
ஸூத்ரம் -88-தத் உபரி அபி பாதராயண சம்பவாத்-1-3-25-
உபாசனை மனிதர்களுக்கு மட்டும் அல்ல தேவர்களுக்கும் பொருந்தும் என்கிறார் பாதராயணர்-
உடல் இல்லையே துன்பம் வாராதே உபாசனை வேண்டாம் -என்பர் பூர்வ பஷிகள்
தத் -அந்த ப்ரஹ்ம உபாஸனம்
உபரி அபி -ஸ்வர்க்க லோகத்தில் உள்ள தேவர்களுக்கும்
பாதராயண -உண்டு என்று பாதாரயணர் கூறுகிறார்
சம்பவாத்-அநேந ஜீவேந அநு ப்ரவிஸ்ய நாம ரூப வியாகரவாணி -என்பதால்
தேவதைகளுக்கும் சரீரம் உண்டு
மோஷையில் ஆசையும் சாமர்த்தியமும் கூடுவதால் உபாஸனம் உண்டு –
நாம ரூப வியாகரணம் -தேவர்களுக்கும் பொருந்துமே –
சாந்தோக்யம் –
தௌ சமித் பாணி பிரஜாபதி சகாசமா ஜக்மது -என்பதால்
தேவர்களுக்கும் உடல் உண்டு உபாசிப்பார்கள் என்றதாயிற்று-
———————————————————–
ஸூத்ரம் -89-விரோத கர்மணி இதி சேத் ந அநேக பிரதிபத்தே தர்சநாத்–1-3-26-
தேவர்கள் பல உடல்களை எடுத்துக் கொள்ள முடியுமே –
ஒரே நேரத்தில் பல உடல்களை எடுத்துக் கொண்டு ஹவிர்பாஹம் பெறலாம்
சௌபரி பல உடல்களை கொண்டதும் உண்டே-
விரோத கர்மணி இதி சேத் ந
தேவதைகளுக்கு சரீரம் உண்டு என்று ஏற்றால் யாகாதி கர்மங்களில் எந்த இடத்துக்கு அவர்கள் செல்வார்கள்
என்னும் ஆஷேபம் தவறு
அநேக பிரதிபத்தே தர்சநாத்–ஒரே நேரத்தில் பல உடல்களை எடுத்துக் கொள்ளும் சாமர்த்தியம் உண்டே
எனவே விரோதம் வராது என்றவாறு
————————————————–
ஸூத்ரம் -90-சப்தே இதி சேத் ந அத பிரபவாத் ப்ரத்யஷ அநுமா நாப்யாம்-1-3-27-
தேவர்கள் உடலுடன் உள்ளவர்கள் என்றால் வேத வாக்யங்களுக்கு பங்கம் வருமோ என்றால் வாராது
இந்த்ரன் பொதுப் பெயர் வேத ஒலியைக் கொண்டே பிரஜாபதியைப் படைக்கின்றான் –
பூ என்ற சொல்லின் மூலம் பூமியைப் படைக்கின்றான்
ஆரம்பத்தில் வேத வாக்யங்கள் படைக்கப் பட்டன -அதில் இருந்தே அனைத்தையும் படைத்தான் -மனு ஸ்ம்ருதி-
விரோத -சொல்லை முன் ஸூத்ரத்தில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்
சப்தே -வைதிக சப்தத்தில் விரோதம் வரும்
சரீரம் உண்டு என்றாலே அவயவங்களுடன் இருந்து உத்பத்தி விநாசம் வரும்
உத்பத்திக்கு முன்னும் விநாசத்துக்குப் பின்னும் இந்திராதி சொற்களுக்கு உரிய பொருள் இல்லாமல் போகும்
அநித்யத்வமும் ஏற்க நேரிடுமே என்றால்
இதி சேத் ந -இப்படிச் சொல்வது தவறு
அத பிரபவாத் -இந்த்ராதிகள் நசித்தவுடன் நித்தியமான வேதங்களால் இந்த்ராதியின் ஆக்ருதிகளை நினைத்து
நான்முகன் புது புது இந்த்ராதிகளைப் படைக்கிறான்
ததா யதா பூர்வமே கல்பயத்
இதுக்குப் பிரமாணம் ஏது என்றால்
ப்ரத்யஷ அநுமா நாப்யாம்-ஸ்ருதியாலும் ஸ்ம்ருதியாலும் தெரிந்து கொள்கிறோம் –
ஆகையால் அவையே பிரமாணம்
வேதத்தில் –
வேதே ந நாம ரூபே வியாகரோத் ஸதா ஸதீ பிரஜாபதி என்றும்
ஸ்ம்ருதியில்
ஸர்வேஷாஞ்ச ஸ நாமானி கர்மாணி விவிதானி ச
வேத ஸப்தேப்ய ஏவாதவ் ப்ருதக் ஸம்ஸ் தாச்ச நிர்மமே -என்றும் உள்ளனவே –
———————————————–
ஸூத்ரம் -91-அத ஏவ ச நித்யத்வம் —1-3-28-
விஸ்வா மித்ரர் வசிஷ்டர் கூறியது போன்றவை –
இவர்கள் கல்ப காலத்தில் கர்ம பலன்களுக்கு தக்க படி தோன்றுகின்றனர்
அவர்களுக்கு வேதத்தில் குறிப்பட்ட பகுதிகள் தானாகவே தெரியத் தொடங்கும்
ஆக வேத வரிகள் ஒவ்வொரு கல்பத்திலும் தொடர்ச்சியாக ஒருவருக்குப் பின் ஒருவருக்கு உபதேசிக்கப் படும்
அத ஏவ -ப்ரஹ்ம தேவன் வைதிக சப்த்தத்தாலே ஜகத்தில் ஆகாரத்தை நினைத்து ஸ்ருஷ்டி செய்வதாலேயே
ச நித்யத்வம்-நித்யத்வம் ஸித்திக்கிறது
நைமித்திக பிரளயம் முடிந்த உடன் ப்ரஹ்ம தேவன் வஸிஷ்ட விச்வாமித்திராதியரின் பதவிகளுக்கு
உரிய புண்யம் மிக்க ஜீவர்களை நினைத்து
விச்வாமித்ரஸ்ய ஸூ க்தம் பவதி -முதலிய வேத பாகங்களையும் ஆராய்ந்து முன் கல்பங்களின் படியே
இந்த கல்பத்திலும் ஸ்ருஷ்டித்து அவர்கள் மூலமாக மந்த்ரங்கள் ஸூ க்தம் இவற்றைப் பரப்பச் செய்தார்
ஆனால் பிராகிருத பிரளயத்தில் ப்ரஹ்மாதிகள் யாவரும் நசித்த படியால்
பிராகிருத ஸ்ருஷ்டி தொடங்கும் போது நித்யம் எப்படிப் பொருந்தும்
என்ற சங்கையை மேல் பரிஹரிக்கிறார் –
————————————————-
ஸூத்ரம் -92-சாமான நாம ரூபாத்வாத் ச ஆவ்ருத்தௌ அபி அவிரோத தர்சநாத் ஸ்ம்ருதே ச —1-3-29-
பிரளய காலத்துக்கு பின்புமுன்பு உள்ளது போலே தோன்றுவதால் வேதங்கள் நித்யம் –
தைத்ரியம் –
ஸூர்யா சந்த்ரமசௌ தாதா யதா பூர்வமகல்பயத் -என்றும்
ஸ்வே தாஸ்வதார உபநிஷத்தில் –
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை -என்றும்
ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் –
யதர்த்துஷ் வ்ருது லிங்காநி நாநா ரூபாணி பர்யயே த்ருச்யந்தே தாநி தான்யேவ ததா பாவா யுகாதிஷூ -என்றும்
கல்பத்திலும் முன்பு இருந்தவை போலே அனைத்தும் தோன்றும் -என்றதே –
வேதங்களை முன் வரிசை மாறாமல் பிரமனுக்கு உபதேசிக்கிறார்
வேதத்துக்கு நித்யத்வம் என்பது முன்பு உச்சரித்த க்ரமத்தை நினைத்து
அதே க்ரமப்படி மறுபடியும் உச்சரிக்கப் படுவதே
அக்ஷரங்கள் நித்யம் என்பது அன்று –
தேவாதிகரணம் சம்பூர்ணம்
—————————————————-
1-3-8–மத்வதிகரணம் -தேவர்களுக்கு மதுவித்யை உண்டு-
கீழே தேவாதி சாமான்யத்துக்கு பகவத் உபாசன அதிகாரம் ஸ்தாபிக்கப் பட்டது
இதில் வஸ்வாதி தேவதா விசேஷங்களுக்கு மது வித்யை என்னும்
ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் உண்டு என்று ஸ்தாபிக்கிறார் –
ஸூத்ரம் -93-மத்வாதிஷூ அசம்பவாத் அநதிகாரம் ஜைமிநி-1-3-30-
மது வித்யை போன்ற விதைகளுக்கு தேவர்களுக்கு அதிகாரம் இல்லை -என்பர் ஜைமிநி
ஸூரியன் தேனை சேகரிக்கின்றான்-வேத ஓசைகளே தேன் –
நான்கு திசைகள் நான்கு வேதங்கள்-கிழக்கில் இருந்து ருக் வேதம்
இந்த அமிர்தம் போன்ற தேவை உபாசிப்பவன் வஸூக்களில் ஒருவன் ஆகிறான் –
சாந்தோக்யம் மது வித்யையில்
அசவ் வா ஆதித்யோ தேவ மது -என்று தொடங்கி
தத்யத் பிரதமம் அம்ருதம் தத் வசவ உப ஜீவந்தி –என்று கூறி –
ஸ ஏதத் அம்ருதம் வேத வஸூநா மேகோ பூத்வா அக்னிநைவ முகேந ஏத தேவ அம்ருதம்
த்ருஷ்ட்வா த்ருப் யந்தி –முதலிய வாக்யங்களால்
ருக் யஜுஸ் சாமாதி வேதங்களில் சொல்லப்பட்ட
கர்மாக்களால் ஏற்படும் ரசத்துக்கு ஆதாரம் ஆதலின்
ஆதித்யனை தேவமது என்றும்
கிழக்கில் வஸூக்கள்
தெற்கில் ருத்ரர்கள்
மேற்கே ஆதித்யர்கள்
வடக்கே மருத்துக்கள் சாத்யர்கள் போக்யமாக அனுபவிப்பதாகச் சொல்லி
அவர்கள் அனுபவிக்கும் ஆதித்யனின் அம்சங்களை உபாசிக்கத் தக்கவை யாகவும்
ப்ராப்யங்களாகவும் உபதேசிக்கிறது –
தேவர்கள் முன்பே வஸூக்களாய் உள்ளதால்
எப்படி தங்களையே உபாசிக்க முடியும் -எனவே பொருந்தாது –
பலனான வஸூத்வம் முன்னமே அடையப் பெற்று இருப்பதாலும் அதிகாரம் இல்லை என்பதே பொருந்தும்
என்பதும் பூர்வ பக்ஷம்
இதையே இரண்டு பூர்வ பக்ஷ ஸூத்ரங்கள் கூறும் –
மத்வாதிஷூ அசம்பவாத் -தாமே தம்மை உபாசித்து அசம்பாவிதம்
கர்மாவும் கர்த்தாவுமாய் இருக்காய் சம்பவியாது
அநதிகாரம் ஜைமிநி-
எனவே அதிகாரம் இல்லை என்று ஜைமினி
—————————————————-
ஸூத்ரம் -94-ஜ்யோதிஷி பாவாத் ச –1-3-31-
உயர்ந்த ஜ்யோதி ரூபமான பரம்பொருளை தேவர்கள் உபாசிப்பதால் –
ப்ருஹத் ஆரண்யாகாவில் –
தம் தேவா ஜ்யோதிஷாம் ஜயோதிராயுர் ஹோபாசதே அம்ருதம் -என்று சொல்லப்பட்டதே
அதனால் ப்ரஹ்ம உபாசனை தேவர்களுக்கும் மனுஷ்யர்களுக்கும் சொல்லப் பட்டாலும்
தேவர்களுக்கு அது சிறப்பு மது வித்யை பொருந்தாது-
ஜ்யோதிஷி -பர ப்ரஹ்மத்தின் இடம்
பாவாத் ச –தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதி -என்ற பர ப்ரஹ்ம உபாஸனம்
மனுஷ்ய தேவ இருவருக்கும் பொதுவாய் இருந்தும்
ஜ்யோதிஸ்ஸான பர ப்ரஹ்மத்தை தேவர்கள் உபாசிக்கிறார்கள் என்ற சிறப்பான வசனம்
வஸூ வாதிகளுக்கு மது வித்யையில் அதிகாரம் இல்லை என்று காட்டுகிறது என்பர் பூர்வ பக்ஷி
———————————————————
ஸூத்ரம் -95-பாவம் து பாதராயண அஸ்தி ஹி —1-3-32-
தேவர்களுக்கு மது வித்யையில் அதிகாரம் உண்டு என்று பாதராயணர் கருதுகின்றார் –
30/31 சூத்ரங்கள் பூர்வ பஷமாக்கி
இது சித்தாந்தம்
மது வித்யை மூலம் வஸூக்கள் தங்கள் அந்தர்யாமியாக உள்ள பரம் பொருளை உபாசிக்கிறார்கள் –
தங்களையே அல்ல-
இந்த கல்பத்தில் வஸூவாக உள்ளவர்கள் அடுத்த கல்பத்திலும் வஸூவாக இருக்க உபாசிக்கின்றனர்-
எனவே அவர்களுக்கும் அதிகாரம் உண்டு-
து சப்தம் ஜைமினி பக்ஷத்தை மறுதலிக்கிறது
பாவம் து பாதராயண -அதிகாரம் உண்டு என்று பாதராயணர் கூறுகிறார்
ஏன் எனில்
அஸ்தி ஹி-உபாஸ்யத்வமும் ப்ராப்யத்வமும் உள்ளன
ய ஏதா மேவம் ப்ரஹ்ம உபநிஷதம் வேத -என்று க்ருத்ஸன முழு மது வித்யைக்கும் ப்ரஹ்ம வித்யை என்றே பெயர்
இவர்களை சரீரமாகக் கொண்ட பர ப்ரஹ்ம உபாசனை என்றவாறு
கல்பாந்தரத்தில் தங்கள் தேஹ முடிவில் ப்ரஹ்மத்தை அடைவதில் விரோதம் இல்லையே –
————————————————————
2-9- அப ஸூத்ர அதிகரணம்
கீழே தேவாதிகளுக்கும்
வ ஸூ முதலிய தேவ விசேஷங்களுக்கும்
ஆர்த்தித்தவமும் சாமர்த்தியமும் இருப்பதால் ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் உண்டு என்று ஸ்தாபித்தார்
அப்படி என்றால் நான்கு வர்ணத்தாருக்கும் ஏற்கலாமே
என்ற சங்கையை நீக்குகிறார் இதில்
ஸூத்ரம் -96-ஸூகஸ்ய தத நாதர ஸ்ரவணாத் ததா ஆத்ரவணாத் ஸூச்யதே ஹி –1-3-33
அன்னப் பறவைகளின் பேச்சைக் கேட்ட ஜானஸ்ருதியின் சோகம் -அவன் உடனே
ரைக்வ ரிஷியிடம் ஓடியதில் இருந்து புரிகின்றது
இது முதல் 39- வரை ஸூத்ரர்களுக்கு ப்ரஹ்ம ஆராய்ச்சி பொருந்துமா என்றது பற்றி விளக்கும்
இரண்டு அன்னப் பறவைகள் -அவரை ரைக்வர் என்று நினைத்தாயோ என்றதும் ஓடி
ரைக்வரும் ஸூத்ரா உன்னுடைய மரியாதையைக் கண்டு மகிழ்ந்து உபதேசிக்கின்றேன் என்றார்
இது ஜாதி வாக்கியம் அல்லை
அன்னப் பறவைகள் பேச்சை கேட்டு மனம் வருந்தியதால் என்பதே பொருள்-
அர்த்தித்தவமும் சாமர்த்தியமும் ஸூத்ரர்களுக்கும் சம்பவிக்கலாமே
அக்னி கிடையாது என்றாலும் மனஸ்ஸாலே உபாஸிக்கலாமே
இதிஹாஸ புராணங்களைக் கேட்ட மாத்ரத்தாலேயே ப்ரஹ்ம ஸ்வரூபாதி ஞானம் ஏற்படலாமே
விதுரர் போன்றவர் ப்ரஹ்ம நிஷ்டர்கள் என்பது பிரசித்தம் அன்றோ
ஸம் சர்க்க வித்யையில் -ஆஜஹார இமாச் ஸூத்ர -என்று ஸூ த்ர சப்தத்தால்
ஞான சுருதியை அழைத்து ரைக்குவர் ப்ரஹ்ம வித்யையை உபதேஸிக்கையாலே
ஸூ திறனுக்கும் அதிகாரம் உண்டு என்பர் பூர்வ பக்ஷி
அதை நிரஸனம் செய்கிறார்
உபநயனம் செய்து வேத அத்யயனம் செய்து வேதாந்த ஞானத்தால் தான் ப்ரஹ்ம ஞானம் என்பது ஸாஸ்த்ர சித்தம்
இதிஹாஸ புராணாதிகள் ஸ்வ தந்திரமான உபாயங்கள் அல்ல -வேதாந்த விளங்கங்களே
விதுராதிகள் முன் ஜென்மத்தில் ப்ரஹ்ம வித்யா நிஷ்டர்கள் -அந்த ஸம்ஸ்காரமே இப்பிறவியிலும் தொடர்ந்தது
ஸூத்ர என்று அழைத்தது சோகம் அடைந்தவன் என்றவாறு -ஜாதி வசனம் அல்ல
தத நாதர ஸ்ரவணாத்-அந்த ஹம்ஸ ரூபம் கொண்ட இரு ரிஷிகளின் அநாதர வாக்யத்தைக் கேட்டு
ததா ஆத்ரவணாத்—ஜானை சுருதி ராஜா ரைக்குவரைத் தேடி ஓடி வந்ததால்
அஸ்ய -அந்த ஞான சுருதிக்கு
ஸூக் ஸூஸ்யதே ஹி –சோகம் காணப்படுகிறது அன்றோ
——————————————————————-
ஸூத்ரம் -97-ஷத்ரியத்வ கதே -ச-1-3-34-
தானம் அன்ன தானம் போன்றவை ஞானஸ்ருதி செய்ததால் அவன் ஷத்ரியன்-
ஸூத்ரர்களுக்கு ப்ரஹ்ம உபாசனை அதிகாரம் இல்லை
ஸம் வர்க்க வித்யையின் தொடக்கத்தில்
ஜானஸ்ருதிர் ஹ பவ்த்ராயண பஹு தாயீ -முதலிய வாக்யங்களால்
சிறந்த கொடையாளி -கிராமங்களை தானம் பண்ணினவன்
அன்னம் உண்பித்தவன் -என்று
ஷத்ரிய வர்ணாஸ்ரம நிறைந்தவன் என்பதாலும்
ஸூத்ரன் என்ற சங்கை வேண்டாம் –
———————————————————————
ஸூத்ரம் -98-உத்தரத்ர சைத்ரரதேன லிங்காத் —1-3-35-
உத்தரத்ர -இந்த வித்யையின் மேல் பகுதியில் ப்ராஹ்மண ஷத்ரியர்களுக்கே சம்பந்தம் காணப்படுகிறது
அதக ஸுநகம் காபேய மபி பிரதாரிணஞ்ச -இத்யாதி வாக்கியத்தில்
அபி ப்ரதாரீ என்று சைத்ரதரன் எனப்படும் ஷத்ரியன் சொல்லப்படுகிறான்
சைத்ரரதேன லிங்காத் —காபேயம் என்பதுடன் தொடர்பால் -லிங்கத்தால் -அபிப்ரதாரி என்பவன்
ஷத்ரியன் என்றும் சைத்ரதரன் என்றும் தோன்றுகிறது
மற்றோர் பிரகரணத்தில் காபேயனுடன் சம்பந்தம் உள்ளவன் சைத்ரரதன் ஷத்ரியனே என்றும் காணப்படுகிறது
ஏதே நவ சைத்ர ரதம் காபேயோ அயா ஜயன் -என்ற இடத்திலும்
சைத்ர ரதோ நாம ஏக க்ஷத்ர பதிர ஜாயத -என்கிற இடத்திலும் அவ்வாறே
ஆகவே இவ் வித்யையில் ப்ராஹ்மணரான ரைக்குவரை விட்டு
வேறான ஞானஸ்ருதியும் ஷத்ரியனாகவே இருக்க வேண்டும் என்று கருத்து –
சைத்த்ரரதன் என்பவன் ஷத்ரியன் என்பதற்கு அடையாளங்கள் உண்டே –
சம்வர்க்க வித்யையில்-சௌனகன் மகனான காபேயனும்-
காஷ சே நி என்பவரின் மகனான அபிப்ராதாரி இருவரும் உணவு உன்ன அமர்ந்த போது
ஒரு பிரமச்சாரி வந்து பிச்சை கேட்க –
இங்கு காபேயன் பிராமணன் என்றும் அபிப்ரதாரி ஷத்ரியன் என்றும்
ஏதேர வை சைத்ரரதம் காபேயா அயாஜயன் -என்பதன் மூலம் காபேயன் பிராமணன் என்றும்
சைத்ரரதோ நாம ஏக ஷத்ரபதி ஜாயத -என்பதன் மூலம்
அபிப்ரதாரி ஷத்ரியன் என்று அறியலாம்
இத்தால் காபேயனுடன் ப்ரஹ்ம விதியை பயின்ற அபிப்ரதாரி -சைத்ர ரத வம்சத்தில் வந்தவன் -ஷத்ரியன் என்றும்
ரைக்ருவர் உடன் தொடர்புடைய ஞான ஸ்ருதியும் ஷத்ரியனாக இருக்க வேண்டும் –
அதனால் ஸூத்ரர்களுக்கு ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்றதாயிற்று
————————————————————–
ஸூத்ரம் -99-சம்ஸ்கார பராமர்சாத் தத பாவாபி லாபாத் ச –1-2-36-
ப்ரஹ்ம வித்யை கூறும் வரிகளில் உப நயனம் பஞ்ச சம்ஸ்காரங்கள் கூறப்படுவதாலும்-
சாந்தோக்யம் உபத்வா நேஷ்யே-உப நயனம் செய்து வைக்கின்றேன் -என்று உள்ளது
ப்ரஹ்ம விதியை பற்றி சொல்லும் பகுதியில் –
ந ஸூத்ரே பாதகம் கிஞ்சித் ந ச சம்ஸ்காரம் அர்ஹதி –
ஸூத்ரர்களுக்கு உப நயனம் போன்றவை பொருந்தாது என்பதாலும் அவர்களுக்கு
ப்ரஹ்ம உபாசனைக்கு அதிகாரம் இல்லை
சம்ஸ்கார பராமர்சாத் -வித்ய உபதேச பிரகரணத்தில் -உபத்வா நேஷ்யே -என்று உபநயனத்தைக் கூறுகையாலே
தத பாவாபி லாபாத் ச – ந ஸூத்ரே பாதகம் கிஞ்சித் ந ச சம்ஸ்காரம் அர்ஹதி –என்று
ஸூத்ரனுக்கு உப நயனம் இல்லை என்று சொல்வதால் ஞானசுருதி ஸூத்ர ஜாதியன் அல்லன் –
எனவே ஸூத்ரர்களுக்கு ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்றதாயிற்று-
—————————————————————-
ஸூத்ரம் -100-தத் பாவ நிர்த்த்தாரேண ச ப்ரவ்ருத்தே —1-3-37-
நைதத் அப்ரஹ்மணோ வேத்தும் அர்ஹதி
ஸூத்திரன் அல்ல என்பதை உறுதி செய்த கொண்ட பின்பே ப்ரஹ்ம வித்யை உபதேசிக்கப் பட வேண்டும்
ஜபாலை என்பவரின் குமாரன் சத்யகாமன் ஒரு குருவிடம் ப்ரஹ்ம வித்யை கற்க செல்ல –
உனது கோத்ரம் என்ன என்று கேட்டதும் தெரியாது என்று சொன்னதும்
இத்தை கேட்டதும் பிராமணன் மட்டுமே இப்படி உண்மை சொல்வான் –
எனவே உனக்கு ப்ரஹ்ம வித்யை உபதேசிக்கிறேன் -என்றார் –
——————————————————————-
ஸூத்ரம் -101-ஸ்ரவணாத் யய நார்த்த பிரதிஷேதாத் —1-3-38-
ஸூத்ரர்கள் வேதத்தைக் கேட்பதும் பொருளை ஆராய்வதும் அதன் பலனை பெறுவதும் கூடாது என்று வேதங்கள் கூறும்
தஸ்மத் ஸூத்ர சமீபே நாத்யேதவ்யம்-என்பதாலும்
ஸூத்ரர்களுக்கு ப்ரஹ்ம உபாசனைக்கு அதிகாரம் இல்லை –
——————————————————————–
ஸூத்ரம் -102-ச்ம்ருதே ச-1-3-39-
ஸ்ம்ருதிகளும் ஸூத்ரர்கள் வேதம் கேட்டால் காதை அறுக்க வேண்டும் –
வேதம் ஓதினால் நாக்கை அறுக்க வேண்டும்
மனப்பாடம் செய்தால் உடலை அறுக்க வேண்டும் என்பதால் அதிகாரம் இல்லை-
அத ஹாஸ்ய வேதம் உப ஸ்ருண்வதஸ் த்ரபு ஜதுப்யாம் ஸ்ரோத்ர பரிபூரணம் –இத்யாதி
ஸ்ம்ருதியாலும் ஸூத்ரனுக்கு ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்று ஸித்தம்
அப ஸூத்ராதி கரணம் சம்பூர்ணம்
—————————————————————–
ஸூத்ரம் -103–ப்ரமிதாதி கரணம் சேஷம்-1-3-39-
அங்குஷ்ட ப்ரமித அதிகரணத்தில் மனுஷ்ய உபாஸன அதிகாரம் பற்றிய பேச்சால்
ப்ராசங்கிகமாக மூன்று அதிகரணங்களில் தேவதாதி அதிகாரத்தை பிரஸ்தாபித்து
ப்ரக்ருதமான அங்குஷ்ட பிரமிதனுக்குப் பரமாத்மத் வத்தை
இரண்டு ஸூத்ரங்களாலே சாதிக்கிறார் –
ஸூத்ரம் -104-கம்ப நாத் –1-3-40
அங்குஷ்ட மாத்ரனைக் கண்டு தேவர்களும் அஞ்சி நடுங்குவதால் அவனே பரம் பொருள் –
கட உபநிஷத் –
யதிதம் கிஞ்ச ஜகத் சர்வம் பிராண எஜதி நிஸ்ஸ்ருதம்
மஹத்பயம் வஜ்ர முத்யதம் ய ஏதத் விதுரம் ருதாஸ்தே பவந்தி
பயதா ச்யாக் நிஸ் தபதி பயாத் தபது ஸூர்ய
பயா இந்திரஸ்ஸ வாயுஸ்ஸ ம்ருத்யுர் தாவாதி பஞ்சம-
தைத்ரிய உபநிஷத் –
பீஷாஸ்மாத் வாத பவதே பீஷோ தேதி ஸூர்ய
பீஷாஸ் மாதக் நிஸ் சேந்த்ரஸ்ஸ ம்ருத்யும் தாவதி பஞ்சம –
இப்படிப்பட்ட பெருமைகளை யுடையவனே பர ப்ரஹ்மம்-
——————————————-
ஸூத்ரம் -105-ஜ்யோதிர் தர்சநாத் –1-3-41-
அங்குஷ்ட மாத்ரனை மிகுந்த ஒளி உள்ளவனாகச் சொல்லுவதால் அவனே பரம் பொருள் –
கட உபநிஷத் –
ந தத்ர ஸூர்யோபாதி ந சந்திர தாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதோயம் அக்னி –
தமேவ பாந்த மநு சர்வம் தஸ்ய பாஸா சர்வமிதம் விபாதி –
இப்படிப்பட்ட பெருமை உடையவன் பரம் பொருளாகவே இருக்க முடியும்-
ப்ரமிதாதி கரணம் சேஷம் சம்பூர்ணம்
————————————————–
1-3-10-அர்த் தாந்தரத்வ அதி வ்யபதேச அதிகரணம் -ஆகாயம் எனபது ப்ரஹ்மமே-
முன்பு அங்குஷ்ட பிரமிதம் பரமாத்மா என்று சாதிக்கப் பட்டது
அதற்கு முன் தஹர வித்யை புத்தியில் இருப்பதால்
அதற்கு அடுத்த ப்ரகரணத்தில் உள்ளதும்
தஹர வித்யைக்கு அங்கமுமான
ஆகாஸோ ஹவை நாம ரூபயோர் நிர்வஹிதா என்னும் வாக்யத்தில் முக்தாத்மாவே பேசப்படுகிறான்
என்று சங்கித்து
நிராகரிக்கிறார் என்று சங்கதி
ஸூத்ரம் -106-ஆகாச அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் —1-3-42-
ஆகாசத்துக்கும் மற்றவற்றுக்கும் வேறுபாடுகள் தெளிவாகக் காட்டப் பட்டுள்ளதால் ஆகாயம் எனபது பரம் பொருளே
முக்தி பெற்ற ஜீவனே ஆகாசம் என்பர் பூர்வ பஷி –
சாந்தோக்யம் –
அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம் சந்திர இவ ராஹோர் முகாத் ப்ரமுச்ய
தூத்வா சரீரமக்ருதம் க்ருதாத்மா ப்ரஹ்ம லோகமபி சம்பவாமி –
சித்தாந்தம் –
ஆகாயத்தைக் கூறும் பொழுது –
நாம ரூபயோர் நிர்வஹிதா -பெயர் மற்றும் உருவங்களை நிர்வஹிப்பவன்
என்பதால் ஆகாயம் ஜீவன் அல்ல பரம் பொருளே –
ஆகாச -ஆகாசம் எனப்படுவது பரமாத்மாவே -முக்தன் அல்லன்
ஏன் எனில்
அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் —பரமாத்மாவுக்கு அசாதாரணமான நாம ரூபங்களை நிர்வஹித்தலும்
அவற்றால் ஸம்பந்தப்படாமையும் கூறப்படுவதாலும்
மேலும்
நிருபாதிக ப்ரஹ்மத்வம் அம்ருதத்வம் ஆத்மத்வம் இவற்றாலும்
ஆகாசம் என்பது பரமாத்மாவே –
———————————————————
தத்வ மஸி -என்று ஜீவனுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஐக்யம் சொல்லுவதாலும்
நேஹ நா நாஸ்தி -என்று பேதத்தைத் தடுப்பதாலும்
ஜீவனைக் காட்டிலும் பரமாத்மாவுக்கு அர்த்தாந்தரம் சொன்னது தகாது என்ற சங்கை தோன்ற
விடை தருகிறார் –
ஸூத்ரம் -107-ஸூஷூப்த்யுத் க்ராந்த்யோ பேதேந –1-3-43-
தூங்கும் பொழுது உள்ள ஜீவனும் உயிர் பிரியும் பொழுது உள்ள ஜீவனும் வெவ்வேறு என்பதால்
ஜீவன் வேறு பரம்பொருள் வேறு
பூர்வ பஷி –
தத்வ மஸி–
அஹம் பிரம்மாஸ்மி –
நேஹ நா நாஸ்தி -என்பர்
சித்தாந்தம் –
ப்ருஹத் உபநிஷத் –
ப்ராஜ்ஞே நாத் மநா சம்பரிஷ்வக்தோ ந பாஹ்யம் கிஞ்சன வேத நாந்தரம் –
ஜீவன் உறங்கும் பொழுது பரம் பொருளால் அணைத்துக் கொள்ளப் படுகிறான் –
அப்பொழுது அவனுக்கு எதுவும் தெரியாத நிலையில் உள்ளான் என்றும்
ப்ராஜ்ஞே நாத் மநான் வாரூட உத்சர்ஜன்யாதி -என்று
பரம் பொருளுடன் சென்று சேர்த்தி பெறுகின்றான்
எனவே ஜீவனும் பரம் பொருளும் ஓன்று அல்ல -ஆகாயம் பர ப்ரஹ்மமே ஜீவன் அல்ல-
வ்யபதேசாத்-என்ற பதத்தைக் கூட்டிக் கொள்ள வேண்டும்
ஸூ ஷூப்த்யுத் க்ராந்த்யோ பேதேந –ஸூ ஷூப்ததி தசையிலும் யுத்க்ராந்தி தசையிலும்
அத்யந்த அஞ்ஞனனான ஜீவனைக் காட்டிலும்
யோ பேதேந –அதே சமயத்தில் ஸர்வஞ்ஞனான ஜீவனைக் குறிப்பிடுவதால் இரண்டும் வெவ்வேறே
பரமாத்மா அர்த்தாந்தர பூதனானவனே என்றவாறு –
————————————————————-
ஸூத்ரம் -108-பத்யாதி சப்தேப்ய —1-3-44-
பதி என்ற பதம் மூலம் ப்ரஹ்மம் அழைக்கப் படுவதால் அவனும் ஜீவனும் ஓன்று அல்ல
ப்ருஹத் உபநிஷத் -சர்வஸ்யாதி பதிஸ் சர்வஸ்ய வஸூ சர்வஸ் யேசாந-என்று
அனைத்துக்கும் நாயகன் -நியமிப்பவன் -சர்வேஸ்வரன் என்பதால்
பரம் பொருளும் ஜீவனும் வேறு -ஆகாசம் எனப்படுபவன் பரம் பொருளே –என்றதாயிற்று-
பத்யாதி சப்தேப்ய -ஸர்வஸ்ய அதிபதி –ஸர்வஸ் ஈஸாநா –ஸர்வஸ்ய வஸீ –இத்யாதிகளால்
தழுவப்படும் ப்ராஞ்ஞனை பதி என்றும் -ஈஸாநா என்றும் வஸீ என்றும் சொல்வதால்
ஆகாசம் பரமாத்மாவே என்று ஸித்தமாயிற்று
ஐக்யம் கூறியதும்
பேதத்தைத் தடுத்ததும்
ஸர்வ ஜகத்துக்கும் அந்தர்யாமி ஒருவனே
ஆதலாலும் ப்ரஹ்ம சரீரம் இல்லாத வஸ்துவே உலகில் இல்லாமையாலும் பொருந்தும் என்று
ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலான் -என்ற ஸ்ருதியிலே நன்கு கூறப்பட்டது என்று திரு உள்ளம்
அர்த் தாந்தரத்வ அதி வ்யபதேச அதிகரணம் சம்பூர்ணம்
———-
பத்து அதிகரணங்களால் கூறப்பட்ட கருத்துக்கள்
1-த்யுப் வாத் யாயதனம் –விஸ்வமே பகவானுக்கு ஆத்மா
2-பூமா -எல்லையற்ற கருணை
3-அக்ஷர -நியமனமும் ஸர்வ ஆதாரத்வமும்
4-ஈஷதி கர்ம வ்யபதேசம் -முக்தர்களுக்கு போக்யமான ஸ்வ பாவம்
5-தஹர -தஹரமான தன்னை ஆதாரமாகக் கொண்ட அனைத்தையும் கொண்டமை -தஹர ஸ்வாதார ஸர்வத்வம்
6-ப்ரமித -ஹ்ருதயத்தில் பரிமிதனாய் இருந்து ஸர்வ நியாந்தாவாதல்
7-தேவதா -தேவதைகளால் உபாஸிக்கப் படுதல்
8-மத்வதி கரணம் -வஸூ வாதி தேவதைகளால் ஸ்வ சரீரக பரமாத்மா உபாஸிக்கப் படுத்தல்
9-அப ஸூத்ர –ஸூ த்ராதிகளால் உபாஸிக்கக் தகாத தன்மை
10-அர்த்தாந்தரத்வா திவ்ய பதேச -நாம ரூபாதி ஏக கர்த்ருத்வம்
என்ற பத்து கல்யாண குணங்களாலே பூஷிதனான ஸ்ரீயப்பதி புருஷோத்தமன்
இந்த மூன்றாம் பாதத்தால் விசாரித்து ஸ்தாபிக்கப் பட்டான் –
என்று ஸ்வாமி தேசிகன் அருளுகிறார் –
————–—————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-