Archive for the ‘ஸ்ரீ.வில்லிபாரதம்’ Category

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 66–(ஸ்ரீ கிருஷ்ணேன ஸ்ரீ பாமா க்ரோதகாரணப்ரஷ்னம்)–ஸ்ரீ சத்யபாமாவின் சினமும் ஸ்ரீ கேசவனின் ஆறுதலும் |–

January 30, 2021

ஸ்ரீ சத்யபாமாவின் மாளிகைக்குச் சென்ற ஸ்ரீ கிருஷ்ணன்; பொறாமையில் வெந்து கொண்டிருந்த ஸ்ரீ சத்யபாமாவைத் தேற்றும் வகையில் பேசியது; தபம் செய்ய அனுமதி கேட்ட ஸ்ரீ சத்யபாமா-

வைஷ²ம்பாயன உவாச
உபவிஷ்டம் முனிம் ஜ்ஞாத்வா ருக்மிண்யா ஸஹ கேஷ²வ꞉ |
நிஷ்²சக்ராமாப்ரமேயாத்மா வ்யபதே³ஷே²ன ஸர்வவித் ||2-66-1

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அனைத்துக் காரியங்களையும் அறிந்தவனான கேசவன் {கிருஷ்ணன்}, அந்த முனிவர் {நாரதர்}, ருக்மிணியின் அருகில் அமர்ந்திருப்பதைக் கண்டு, ஏதோ காரியத்துக்காக (சத்யபாமாவின் மாளிகைக்குப்) புறப்பட்டுச் சென்றான்

ஜகா³ம த்வரிதஷ்²சைவ ஸத்யபா⁴மாக்³ருஹம் மஹத் |
ரம்யே ரைவதகோத்³தே³ஷே² நிர்மிதம் விஷ்²வகர்மணா ||2-66-2

இனிமை நிறைந்த ரைவத மலையில் விஷ்வகர்மனால் கட்டப்பட்ட சத்யபாமாவின் பெரிய மாளிகையை நோக்கி அவன் விரைந்து சென்றான்.

அபி⁴மானவதீமிஷ்டாம் ப்ராணைரபி க³ரீயஸீம் |
ஜானன்ஸாத்ராஜிதீம் விஷ்ணுர்விவேஷ² ஷ²னகைரிவ ||2-66-3

விஷ்ணு {கிருஷ்ணன்}, தன் அன்புக்குரியவளும், உயிருக்கும் மேலானவளும், சத்ராஜித்தின் மகளுமானவள் {சத்யபாமா} பொறாமையுடன் கூடிய கோபத்தில் இருப்பதை அறிந்து (அந்த மாளிகைக்குள்) மெதுவாக நுழைந்தான்.

ருஷிதாமிவ தாம் தே³வீம் ஸ்னேஹாத்ஸங்கல்பயன்னிவ |
பீ⁴தபீ⁴த꞉ ஸ ஷ²னகைர்விவேஷ² மது⁴ஸூத³ன꞉ ||2-66-4

மதுசூதனன், பொறாமையில் இருக்கும் தன் அன்புக்குரியவளை பாசத்துடன் நினைத்து, அச்சத்துடன் மெல்லடிகளை எடுத்து வைத்து மெதுவாகச் சென்றான்.

ஸேவகம் த்³வாரதே³ஷே² து திஷ்டே²த்யுக்த்வா விவேஷ² ஹ |
நாரத³ஸ்யோபசாரார்த²ம் ப்ரத்³யும்னம் விநியுஜ்ய ஸ꞉ ||2-66-5

நாரதருக்கு மகிழ்ச்சியூட்டி அவரைக் கவனித்துக் கொள்வதில் பிரத்யும்னனை ஈடுபடுத்திவிட்டு வந்த அவன், தன் பணியாளான {தேரோட்டியான} தாருகனிடம், “வாயிலில் காத்திருப்பாயாக” என்று சொல்லிவிட்டு சத்யபாமாவின் அரண்மனைக்குள் நுழைந்தான்.

ஸ த³த³ர்ஷ² ப்ரியாம் தூ³ராத்க்ரோதா⁴கா³ரக³தாம் ததா³ |
ப்ரேக்ஷ்யாமிவ ஸ்தி²தாம் கோபாந்நி꞉ஷ்²வஸந்தீம் முஹுர்முஹு꞉ ||2-66-6

அங்கே தன் அன்புக்குரிய மனைவி {சத்யபாமா}, பொறாமையுடன் கூடிய சினத்தில் வெப்பப் பெருமூச்சை அடிக்கடி விட்டுக் கொண்டு, பணிப்பெண்களுக்கு மத்தியில் கோப அறைக்குள் {கோபக்ரஹத்திற்குள்}[“பழங்காலத்து ராணிகள், தங்கள் கணவர்களின் செயல்பாட்டில் தாங்கள் கொள்ளும் விருப்பமின்மையையோ, கோபத்தையோ குறிப்பால் உணர்த்த தங்கள் அரண்மனைகளில் பயன்படுத்தும் தனி அறையாகும்”] கிடப்பதைத் தொலைவிலிருந்தே கண்டான்

கரஜாக்³ராவலீட⁴ம் து பங்கஜம் முக²பங்கஜே |
ஸம்ஷ்²லேஷயித்வா நி꞉ஷ்²வஸ்ய விஹஸந்தீம் புன꞉ புன꞉ ||2-66-7

அவள், தாமரை போன்ற தன் முகத்தின் அருகே ஒரு தாமரையைக் கொண்டு வந்து தன் நகங்களால் அதைக் கிள்ளி ஏளனமாகச் சிரித்துக் கொண்டிருந்தாள் (அதை அவன் கண்டான்).

கிஞ்சிதா³குலிதாக்³ரேண சரணேன வஸுந்த⁴ராம் |
க்ருத்வா ப்ருஷ்டே²(அ)த² வத³னம் விஹரந்தீம் புன꞉ புன꞉ ||2-66-8

சில வேளைகளில் அவள், தன் காலின் கட்டைவிரலைச் சற்றே வளைத்து பூமியைக் கீறிக் கொண்டிருந்தாள், (சில வேளைகளில்) தன் முகத்தைப் பின்னே திருப்பிப் புன்னகைத்துக் கொண்டிருந்தாள்

கரபத்³மே புன꞉ ஸவ்யே முக²பத்³மம் நிவேஷ்²ய ச |
வனிதாம் சாருஸர்வாங்கீ³ம் த்⁴யாயந்தீம் கமலேக்ஷணாம் ||2-66-9

எழில்மிகு வடிவத்தையும், தாமரைக் கண்களையும் கொண்ட தன் ராணி, சில வேளைகளில் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியவளாகத் தாமரை போன்ற தன் முகத்தை இடது உள்ளங்கையில் தாங்கிக் கொண்டிருப்பதையும் அவன் கண்டான்.

ஸரஸம் சந்த³னம் க்³ருஹ்ய ப்ரேஷ்யாஹஸ்தாத³னிந்தி³தாம் |
ப்ரஹ்ராத³யித்வா ஹ்ருத³யம் க்ஷிபந்தீம் நிர்த³யம் புன꞉ ||2-66-10

குற்றங்குறையற்றவளான தன் மனைவி, சிலவேளைகளில் பணிப்பெண்களின் கையிலிருந்த சந்தனத்தைப் பறித்துத் தன் மார்பில் பூசிக் கொண்டு, இரக்கமற்றவளாக அதை வீசி எறிந்தாள்

புனருத்தா²ய ஷ²யனாத்பதந்தீம் ச புன꞉ புன꞉ |
தாஸ்தாஷ்²சேஷ்டா꞉ ப்ரியாயாஷ்²ச ததா²ன்யா த³த்³ருஷே² ஹரி꞉ ||2-66-11

அவள் தன் படுக்கையில் இருந்து எழுந்து மீண்டும் மீண்டும் அதில் விழுவதையும் அவன் கண்டான். இவற்றையும், (சினத்தின் ஆழத்தை எடுத்துக் காட்டும்) தன் அன்புக்குரிய மனைவியின் பிற செயல்பாடுகளையும் ஹரி அங்கே கண்டான்

அவகு³ண்ட்²ய யதா³ வக்த்ரமுபதா⁴னே ந்யவேஷ²யத் |
இத³மந்தரமித்யேவம் ததா³ க³த்வா ஜனார்த³ன꞉ ||2-66-12

சத்ராஜித்தின் மகள் {சத்யபாமா} தலையணையில் முகம்புதைத்த போது, “(அவளது அறைக்குள் நுழைய) இதுவே எனக்குத் தக்க தருணம்” என்று ஜனார்த்தனன் நினைத்தான்

ப்ரேஷ்யாஜனம் ஸ ஸஞ்ஜ்ஞாய அனாக்²யேயோ(அ)ஸ்மி ஸஞ்ஜ்ஞயா |
ஸ ஷ²ங்கிதப்ரசாரஷ்²ச வாரிதோ(அ)ன்வக³மத்ஸ தாம் ||2-66-13

பிறகு அவன், தன் இருப்பை அறிவிக்க வேண்டாமெனக் குறிப்புகள் மூலம் {சமிக்ஞையால்} பணிப்பெண்களுக்கு ஆணையிட்டுவிட்டுத் தயங்கிய நடையுடன் சத்யபாமாவை அணுகினான்.

க்³ரஹாய வ்யஜனம் சைவ ஸ்தி²த்வா ஸ பரிபார்ஷ்²வத꞉ |
ஷ²னைரிவாஸ்ருஜத்³வாதம் ஜஹாஸ ஷ²னகைரிவ ||2-66-14

அவன், விசிறியை எடுத்து, அவளது பின்பக்கமாக நின்று கொண்டு, மெதுவாக விசிறியபடியே மெல்லப் புன்னகைத்தான்

ஸ பாரிஜாதபுஷ்பஸ்ய ஸம்ஸர்கா³த³னுவாஸித꞉ |
ப³பா⁴ர ப⁴க³வான்க³ந்த⁴ம் தி³வ்யம் மானுஷது³ர்லப⁴ம் ||2-66-15

பாரிஜாத மலருடைய தொடர்பின் விளைவால் மணம் நிறைந்திருந்த அந்தச் சிறப்புமிக்கவன் (ஹரி), தெய்வீகமானதும், மீமானிடத் தன்மையைக் கொண்டதும், அரிதானதுமான நறுமணத்தை அங்கே பரப்பிக் கொண்டிருந்தான்.

அத்யத்³பு⁴தம் ஸுக³ந்த⁴ம் ச ஜிக்⁴ரித்வா விஸ்மயான்விதா |
அபாவ்ருணோன்முக²ம் ஸத்யா கிமேததி³தி சாப்³ரவீத் ||2-66-16

சத்யா {சத்யபாமா}, அற்புதமான அந்த மணத்தை நுகர்ந்ததும், ஆச்சரியமடைந்தவளாகத் தன் முகத்தைத் திறந்து, “என்ன இது?” என்று கேட்டாள்.

ஸோத்தி²தா ப்ருஷ்ட²தோ தே³வமபஷ்²யந்தீ ஷு²சிஸ்மிதா |
பர்யப்ருச்ச²த³தோ² ப்ரேஷ்யா க³ந்த⁴ஸ்ய ப்ரப⁴வே ததா³ ||2-66-17

தூய மென் புன்னகையுடன் கூடிய அவள், தன் படுக்கையில் இருந்து எழுந்து, தேவனைப் போன்ற தன் கணவனின் மீது பார்வையைச் செலுத்தாமல், நறுமணத்தின் காரணம் குறித்துத் தன் பணிப்பெண்களிடம் கேட்கத் தொடங்கினாள்.

தா꞉ ப்ருஷ்தாஸ்த்வப்ரபா⁴ஷந்த்யோ ஜானுப்⁴யாம் த⁴ரணீம் க³தா꞉ |
அதோ⁴முக்²யஸ்ததஸ்தஸ்து²꞉ க்ருதாஞ்ஜலிபுடாஸ்ததா³ ||2-66-18

ஆனால் இவ்வாறு கேட்கப்பட்ட பணிப்பெண்கள், ஏதும் சொல்ல முடியாமல், பூமியை நோக்கும் முகங்களுடன் தங்கள் கரங்களைக் கூப்பித் தரையில் மண்டியிட்டு (பணிவுடன்) காத்திருந்தனர்.

தத³பூர்வமத்³ருஷ்ட்வைவ க³ந்த⁴ம் முஞ்சதி மேதி³னீ |
கத²மேகதரஸ்தஸ்யா க³ந்தோ⁴(அ)யமிதி தத்க²லு ||2-66-19

அற்புதம் நிறைந்த நறுமணத்தின் பிறப்பிடத்தைச் சத்யபாமாவால் காண முடியாத போது, அவள் தனக்குள்ளே, “பூமியானவள் பல்வேறு வகை மணங்களை வெளியிடுகிறாள்; இந்த மணம் அவளுடைய சிறப்புமிக்க வெளிப்பாடுகளில் ஒன்றாயிருக்குமோ?” என்று நினைத்தாள்.

கிம் த்வித³ம் ஸ்யாதி³தி ச ஸா விவேக்ஷந்தீ ஸமந்தத꞉ |
த³த்³ருஷே² கேஷ²வம் தே³வீ ஸஹஸா லோகபா⁴வனம் ||2-66-20

இஃது என்னவாக இருக்கக்கூடும் என்று அவள் சிந்தித்துக் கொண்டே அனைத்துப் பக்கங்களிலும் பார்த்தபோது அவளுடைய பார்வையானது உலகங்களின் படைப்பாளனான கேசவன் மீது தீடீரெனத் தன் ஒளியைச் சிந்தியது.

யுஜ்யதீதி ததோவாச ஸஹஸாஸ்ராவிலேக்ஷணா |
அவதிக்தேவ ரோஷேண ப³பூ⁴வ ப்ரணயான்விதா ||2-66-21

“ஆ! சரிதான்” என்று அவள் சொன்ன போது, மேலும் பொறாமையுடன் கூடிய கோபத்தில் அவளை நிறைத்த செறிவான அன்பில் உண்டான கண்ணீர் அவளது கண்களை மங்கச் செய்தது.

ஸா ப்ரஸ்பு²ரிதசார்வோஷ்டீ² நி꞉ஷ்²வஸ்யாதோ⁴முகீ² ததா³ |
முஹூர்தமஸிதாபாங்கீ³ தஸ்தா²வன்யமுகீ² ஷு²பா⁴ ||2-66-22

கருங்கண்களைக் கொண்ட அந்த அழகிய மங்கை, மென்மையான உதடுகள் துடிக்க, பெருமூச்சு விட்டுக் கொண்டு தன் முகத்தை மற்றொரு புறத்தில் {வேறுபக்கம்} திருப்பிக் கொண்டாள்.

நிப³த்⁴ய ப்⁴ருகுடிம் வாமாம் ஸம்யக்³விக்ஷிப்ய லோசனே |
நிவேஷ்²ய வத³னம் ஹஸ்தே ஷோ²ப⁴ஸீத்யப்³ரவீத்³த⁴ரிம் ||2-66-23

பிறகு ஏற்கமுடியாத கோபத்துடன் புருவங்களைச் சுருக்கிய அவள், தன் உள்ளங்கைகளில் தன் முகத்தை வைத்துக் கொண்டு, கண்களை உயர்த்தி, “அழகாக இருக்கிறீர்” என்று ஹரியிடம் சொன்னாள்.

தஸ்யா꞉ ஸுஸ்ராவ நேத்ராப்⁴யாம் வாரி ப்ரணயகோபஜம் |
குஷே²ஷ²யபலாஷா²ப்⁴யாமவஷ்²யாயஜலம் யதா² ||2-66-24

தாமரை இதழ்கள் இரண்டில் இருந்து விழும் பனித்துளிகளைப் போல அவளது கண்களில் இருந்து பொறாமையுணர்வுடன் கூடிய கண்ணீர் வழியத் தொடங்கியது.

ஸமுத்பத்ய ஜலம் தத்ர பதிதம் வத³னாம்பு³ஜாத் |
ப்ரதிஜக்³ராஹ பத்³மாக்ஷ꞉ கராப்⁴யாமதிஸத்வர꞉ ||2-66-25

தாமரைக் கண் கிருஷ்ணன், தாமரை போன்ற முகத்தைக் கொண்ட தன் மனைவியின் முகத்தில் வழியும் கண்ணீரைக் கண்டு விரைவாக அவளிடம் சென்று அவற்றை {அந்தக் கண்ணீரைத்} தன் கைகளில் ஏந்தினான்

அதோ²ரஸி பதத்தோயம் ஸ்ரீவத்ஸாங்கோ(அ)ம்பு³ஜேக்ஷண꞉ |
ப்ரியாநயனஜம் தே³வ꞉ பரிம்ருஜ்யேத³மப்³ரவீத் ||2-66-26

ஸ்ரீவத்சமெனும் அடையாளத்தை {மச்சத்தைத்} தாங்கியவனும், தாமரைக் கண்ணனுமான அந்த விஷ்ணு, அவளது மார்பில் வழியும் கண்ணீரைத் தன் கைகளால் துடைத்துப் பின்வருமாறு அவளிடம் பேசினான்,

ஸ்ரவத்யஸிதபத்ராக்ஷி கிமர்த²ம் தவ பா⁴மினி |
தோயம் ஸுந்த³ரி நேத்ராப்⁴யாம் புஷ்கராப்⁴யாமிவோத³கம் ||2-66-27

“ஓ! தாமரைக் கண்களைக் கொண்டவளே {நீலாயதாக்ஷி}, ஓ! மிகச் சிறந்த அழகிய பெண்ணே, தாமரைகள் இரண்டிலிருந்து விழும் பனித்துளைகளைப் போல உன் கண்களில் இருந்து கண்ணீர் வழிவதற்கான காரணம் யாது?

ப்ரபா⁴தே புர்ணசந்த்³ரஸ்ய மத்⁴யாஹ்னே பங்கஜஸ்ய ச |
பி³ப⁴ர்தி தவ கிம் வக்த்ரம் வபுஸ்தவ மனோஹரே ||2-66-28

ஓ! கண்ணைக் கவரும் பெண்ணே, ஏன் உன்னுடைய முகமும், உன் உடலும், காலை வானில் முழு நிலவைப் போலவோ, நடுப்பகலில் முற்றாக மலரும் தாமரையைப் போலவோ வடிவங்கொள்கின்றன (தோன்றுகின்றன)?[காலையில் நிலவு தேயும், நடுப்பகலில் தாமரை வாடும். அந்தப் பெண்ணின் வெளிறிய, அமைதியான தோற்றத்தைக் குறித்துக் கேட்கும் வகையில் இங்கே கிருஷ்ணன் சுற்றி வளைத்துப் பேசுகிறான்”]

கிமர்த²ம் கௌங்குமம் வாஸோ மஹாராஜதமேவ ச |
நானுக்³ருஹ்ணாஸி ஸுஷ்²ரோணி ஷு²க்லம் வாஸோ(அ)னுக்³ருஹ்யதே ||2-66-29

ஓ! சிற்றிடையாளே, செந்தூரம் தெளிக்கப்பட்டு, தங்கச் சரிகையுடன் கூடிய ஆடைகளை உடுத்தாமல் வெறுமையான வெள்ளை நிற ஆடைகளை இன்று நீ தேர்ந்தெடுத்தது ஏன்?

வாஸஸ்யேதே தவாபீ⁴ஷ்டே மஹாரஜதகௌங்குமே |
தே³வாபி⁴க³மநாதூ³ர்த்⁴வம் ஷு²க்லம் நேஷ்டம் ஹி தத்ஸ்த்ரியா ||2-66-30

செந்தூரத்தாலும், சரிகையாலும் அலங்கரிக்கப்பட்ட ஆடைகள் உன் விருப்பத்திற்குரியவை என்றாலும், தேவர்களை வழிபடும் காலத்தில் மட்டுமே பெண்கள் அணிய விரும்பும் வெள்ளை ஆடையை நீ உடுத்தியிருப்பது ஏன்?

கிஞ்சாநாப⁴ரணம் கா³த்ரம் ஸுகா³த்ரி தவ கத்²யதாம் |
சித்ரகஸ்தா²னமாக்ராந்தம் கஸ்மாத³வரவர்ணினி ||2-66-31

ஓ! அழகிய அங்கங்களைக் கொண்டவளே, உன் அங்கங்கள் ஆபரணங்களால் அலங்கரிக்கப்படாதது ஏன்? ஓ! மிகச் சிறந்த பெண்ணே, சித்திரகத் துணிக்கான {கடித ஓலைக்கான} இடம் கண்ணீரால் நனைந்திருப்பது ஏன்?

ஷ்²வேதேன தவ பாதே³ன வாஸஸா ப்ரியத³ர்ஷ²னே |
லலாடம் ஸேவ்யதே கஸ்மாச்சந்த³னேன ஸுக³ந்தி⁴னா ||2-66-32

ஓ! அழகிய வடிவங்கொண்டவளே, உன் அழகிய நெற்றியை (செஞ்சந்தனமல்லாமல்) வெண்சந்தனமும், (மஞ்சள் அல்லது நீலப் பட்டல்லாமல்) வெண்பட்டுத் துணியும் மறைத்திருப்பது ஏன்?

ஸரஸேனாயதாபாங்கி³ காந்தேன ஹ்ருத³யப்ரியே |
ப்ரபோ⁴பமர்த³ம் கேனாபி காரணேனானனஸ்ய ச |
கரோஷி மம வாத்யர்த²ம் மனோ க்³லாபயஸி ப்ரியே ||2-66-33

ஓ! என் இதயத்திற்கு இனியவளே, ஓ! அகன்ற விழிகளைக் கொண்டவளே, ஓ! அன்புக்குரியவளே, உன் முகப் பிரகாசத்தை இவ்வாறு குறைத்து என் மனத்தில் பெரும் வேதனையை உண்டாக்கியிருக்கிறாய்.

ப்ரஸ்ருதஷ்²சந்த³னரஸ꞉ கபோலப்ரணயீ தவ |
பத்ரலேகா²ஸபத்னத்வம் ப்ராப்தோ நாதிவிராஜதே ||2-66-34

உன் நெற்றியை மிகவும் விரும்பும் பசைபோன்ற குளிர்ச்சியான சந்தனம், கடித ஓலைக்கான அந்த இடத்தில் {பத்திரலேகையில்} இருப்பது அழகாகத் தெரியவில்லை[“சித்தரிக்கப்பட வேண்டிய உனது கன்னங்கள் சந்தனப் பூச்சால் ப்ரகாசிக்கவில்லையே” ].

ரத்னைஷ்²சாப⁴ரணைர்முக்தா தவ க்³ரீவா ந ஷோ²ப⁴தே |
க்³ரஹநக்ஷத்ரரஹிதா த்³யௌரிவாவ்யக்தஷா²ரதீ³ ||2-66-35

கோள்களும், நட்சத்திரங்களும், வெள்ளி போன்ற சந்திரனின் ஒளிக் கற்றைகளும் இல்லாத கூதிர் கால வானைப் போலவே ஆபரணங்களற்ற உன் கழுத்து அழகாகத் தெரியவில்லை.

பூர்ணசந்த்³ரஸபத்னேன ஸ்மேரேணாப³ஹுபா⁴ஷிணா |
கிமு நோ பா⁴ஷஸே மாத்³ய முகே²னோத்பலக³ந்தி⁴னா ||2-66-36

முழுநிலவின் எழிலோடு போட்டியிடுவதும், தாமரை மணத்தை மூச்சாக இழுத்துப் புன்னகை ததும்புவதுமான உன் முகம் {வாய்} புகழும் மொழியால் இன்று நீ என்னை வரவேற்காதது ஏன்?

அர்தா⁴க்ஷ்ணாபி ஹி தாவன்மாம் கிமர்த²ம் ந நிரீக்ஷஸே |
முஞ்சஸ்யேவ ஸநிஷ்²வாஸம் தோயமஞ்ஜனது³ர்தி³னம் ||2-66-37

பாதி மூடிய விழிகளால் ஏன் இன்று என்னைப் பாராதிருக்கிறாய்? ஆழப்பெருமூச்சு விட்டபடியே கண்ணீர் சிந்தி, உன் அஞ்சன மை விழிகளின் அழகை ஏன் நீ கெடுத்துக் கொள்கிறாய்?

அலமிந்தீ³வரஷ்²யாமே ருதி³தேன மனஸ்வினீ |
ஜலமஞ்ஜனகல்மாஷம் மா மோக்ஷீரானனத்³விஷம் ||2-66-38

ஓ! நீலத் தாமரை {கருநெய்தல்} போன்ற காந்தியுடையவளே, ஓ! நுண்ணறிவுமிக்கப் பெண்ணே, இனியும் அழாதே. உன்னுடைய ஒப்பற்ற முக எழிலுக்கு ஓரவஞ்சனை செய்யும் வகையில் விழிகளின் அஞ்சனமை கறைந்துருகக் கண்ணீர் சிந்தாதே.

த்வதீ³யோ(அ)ஹம் யதா³ தே³வி க்²யாதோ ஜக³தி கிங்கர꞉ |
ந ஜ்ஞாபயஸி கிம் மாம் த்வம் புரேவ வரவர்ணினி ||2-66-39

ஓ! தெய்வீக அழகுடையவளே, நான் உன் பணியாளென்றே உலகில் அறியப்படுகிறேன்; அவ்வாறிருக்கையில், ஓ! மிகச் சிறந்த பெண்ணே, முன்பு போல் ஏன் எனக்கு ஆணையிடாமல் இருக்கிறாய்?

கிமகார்ஷமஹம் தே³வி விப்ரியம் தவ பா⁴மினி |
யேனாதிமாத்ரமாத்மானமாயாஸயஸி ஸுந்த³ரி ||2-66-40

ஓ! அழகிய ராணி, உனக்கு வெறுப்பூட்டும் செயலெதனை நான் செய்தேன்? ஓ! அன்பானவளே, எதன் காரணமாக நீ இவ்வளவு வேதனையடைகிறாய்?

மனஸா கர்மணா வாசா ந த்வாமதிசராம்யஹம் |
ஸர்வதா² ஸர்வசார்வஞ்கி³ ஸத்யமேதத்³ப்³ரவாம்யஹம் ||2-66-41

எண்ணத்தாலோ, செயலாலோ, சொற்களாலோ ஒருபோதும் நான் உன்னைப் புறக்கணித்ததில்லை; ஓ! நேர்த்தியான அங்கங்களைக் கொண்டவளே {சர்வாங்கசுந்தரி}, இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்.

ப³ஹுமானோபமாந்யாஸு ஸ்த்ரீஷு ஸர்வாஸு ஷோ²ப⁴னே |
ஸ்னேஹஷ்²ச ப³ஹுமானஷ்²ச த்வாம்ருதே(அ)ந்யாஸு நாஸ்தி மே ||2-66-42

ஓ! அழகிய பெண்ணே, என் மனைவிகள் பிறரையும் நான் மகிழ்விப்பது உண்மையென்றாலும் உன்னில் மட்டுமே என் மதிப்பும், அன்பும் எல்லையற்றவையாக இருக்கின்றன.

நைவ த்வாம் மத³னோ ஜஹ்யான்ம்ருதே(அ)பி மயி மாமக꞉ |
இதி மே நிஷ்²சிதம் வித்³தி⁴ சேத꞉ ஸுரஸுதோபமே ||2-66-43

ஓ! தேவர்களின் மகளுக்கு ஒப்பானவளே, என் உயிரே போனாலும் உன் மீது நான் கொண்ட அன்பு {வேட்கை} தேயாது; என் உறுதியான நம்பிக்கை இஃது என்பதை அறிவாயாக

க்ஷமாத³யஷ்²ச மேதி³ன்யாம் ஷ²ப்³தா³த்³யாஷ்²சாம்ப³ரே கு³ணா꞉ |
த்⁴ருவம் பங்கஜக³ர்பா⁴பே⁴ த்வயி ஸ்னேஹஸ்ததா² மம ||2-66-44

ஓ! தாமரை மொட்டின் காந்தியைக் கொண்டவளே, பூமியின் நிலையான குணமான பொறுமை, வெளியின் நிலையான குணமான ஒலி ஆகியவற்றைப் போலவே நான் உன்னிடம் கொண்ட அன்பும் நிலையானதே.

ருசிரக்³னௌ யதா² தி³வ்யா ப்ரபா⁴ சைவ தி³வாகரே |
காந்திஷ்²ச ஷா²ஷ்²வதீ சந்த்³ரே ஸ்னேஹஸ்த்வயி ததா² மம ||2-66-45

நெருப்பில் தழல் {அக்னி ஜ்வாலை}, சூரியனின் தெய்வீக ஒளி, நிலவின் மங்காத எழில் ஆகியவற்றைப் போலவே உன்னிடம் நான் கொண்ட அன்பும் நிலையானது, உன்னில் மட்டுமே அது நிலைத்திருக்கிறது” என்றான் {கிருஷ்ணன்}.

ஏவம்வாதி³னமாத்மேஷ்டம் ஸத்யபா⁴மா ஜனார்த³னம் |
ஷ²னைருவாச நேத்ராப்⁴யாம் ப்ரம்ருஜ்ய ஸுப⁴கா³ ஜலம் ||2-66-46

இவ்வாறு ஜனார்த்தனன் தன் நியாயத்தைச் சொன்ன போது, அருள்நிறைந்த சத்தியபாமா, தன் விழிகளின் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மெதுவாகப் பின்வரும் முறையில் அவனிடம் பேசினாள்

மதீ³யஸ்த்வமிதி ஹ்யாஸீன்மம நித்யம் மன꞉ ப்ரபோ⁴ |
அத்³ய ஸாதா⁴ரணம் ஸ்னேஹம் த்வயி தாவத்³க³தாஸ்ம்யஹம் ||2-66-47

{சத்யபாமா}, “ஓ! தலைவா, இதற்கு முன்பு நீர் என்னுடையவர் என்பது என் உறுதியான நம்பிக்கையாக இருந்தது. ஆனால் இன்றோ என் மீது நீர் கொண்ட அன்பு சாதாரணமானதை விட அதிகமானது இல்லை என்றும், பொதுவானது என்றும் உணர்கிறேன்.

நாஜ்ஞாஸிஷமஹம் பூர்வமநித்யம் காலபர்யயம் |
அத்³ய லோகக³திம் க்ருத்ஸ்நாமவக³ச்சா²மி ந த்⁴ருவம் ||2-66-48

காலப்போக்கு நிலையற்றது என்பதை நான் முன்பே அறிந்தேனில்லை. ஆனால் இன்றோ உலகப்போக்கு நிலையற்றது என்பதை அறிந்து கொண்டேன்

அம்ருதாயா த்³விதீயோ(அ)பி ஜன்மௌ ஹி மம ஸர்வதா² |
கிமத்ர ப³ஹுனோக்தேன ஹ்ருத³யம் வேத்³மி தே(அ)ச்யுத ||2-66-49

நான் வாழும் வரை நீரே எனது இரண்டாம் சுயம் என்றும், நானும் உமக்கு அவ்வாறே {இரண்டாம் சுயம்} என்றும் நம்பிக்கையை வளர்த்து வந்தேன். ஓ! தவறு செய்யாதவரே, அதிகம் பேசுவதால் பயனென்ன; நான் உமது இதயத்தை அறிவேன்.

வாங்மாத்ரமேவ பஷ்²யாமி மாது⁴ர்யம் ஸம்ப்ரயுஜ்யஸே |
மயி ஸ்னேஹஷ்²ச க்ருதகஸ்தவான்யத்ர ந க்ருத்ரிம꞉ ||2-66-50

நீர் பேச்சில் மட்டுமே மோகத்தைப் பயன்படுத்துகிறீர், நீர் என்னிடம் கொண்ட அன்பும் போலியானது என்று காண்கிறேன்; அதே வேளையில் உமது பிற மனைவிகளைப் பொறுத்தவரையில் {அந்த அன்பு} உண்மையாக இருக்கிறது

ருஜுஸ்வபா⁴வாம் ப⁴க்தாம் ச ஸர்வதா² புருஷோத்தம |
அவஜானாஸி ஜானன்மாம் கைதவீம் வ்ருத்திமாஸ்தி²த꞉ ||2-66-51

ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, நான் எளியவள் என்றும், உம்மிடம் அன்பு கொண்டவள் என்றும் அறிந்து கொண்டு கொடூரமானதும், தந்திரமானதுமான உமது நடத்தையின் மூலம் என்னைப் புறக்கணிக்கிறீர்.

ஏதாவத்க²லு பர்யாப்தம் த்³ருஷ்டம் த்³ரஷ்டவ்யமவ்யயம் |
ஷ்²ருதம் சாப்யத² யச்ச்²ராவ்யம் த்³ருஷ்ட꞉ ஸ்னேஹப²லோத³ய꞉ ||2-66-52

இது நிச்சயம் போதுமானது. காணத்தகுந்ததைக் கண்டேன், கேட்கத் தகுந்ததைக் கேட்டேன். நீர் என்னிடம் கொண்டுள்ள அன்பிற்கான பலனை நான் உணர்கிறேன்

யதி³ த்வஹமனுக்³ராஹ்யா மாமனுஜ்ஞாதுமர்ஹஸி |
தபஸ்யே(அ)ஹம் பரம் க்ருத்வா நிஷ்²சயம் புருஷோத்தம ||2-66-53

ப⁴ர்துஷ்²ச²ந்தே³ன நாரீணாம் தபோ வா வ்ரதகானி வா |
நிஷ்ப²லம் க²லு யத்³ப⁴ர்துரச்ச²ந்தே³ன க்ரியேத ஹி ||2-66-54

எது எப்படியிருப்பினும், கடுந்தவங்களில் என்னை அர்ப்பணித்துக் கொள்ள மனத்தை ஆயத்தம் செய்திருக்கிறேன், என்னிடம் உமக்கு அன்பேதும் இருந்தால் அவ்வாறு செய்ய என்னை அனுமதிப்பீராக; பெண்கள் என்ன நோன்புகளை, என்ன விரதங்களை மேற்கொண்டாலும் அவை தங்கள் கணவர்களின் அனுமதியுடன் செய்யப்பட வேண்டும். ஏனெனில், கணவர்களின் சம்மதம் இல்லாமல் மேற்கொள்ளப்படுபவை நிச்சயம் பலனற்றவையே” என்றாள் {சத்யபாமா}.(53,54)

இதீத³முக்த்வா புனரேவ ஷோ²ப⁴னா
முமோச தோயம் நயனோத்³ப⁴வம்ஸதீ |
க்³ரஹாய பீதம் ஹரிவாஸஸ꞉ ஷு²பா⁴
படாந்தமாதா³ய முகே² ஷு²சிஸ்மிதா ||2-66-55

கற்புடையவளும், அழகியுமான அவள் இவ்வாறு பேசிவிட்டு, தன் கண்களில் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்; பிறகு இனிய புன்னகையைக் கொண்ட அவள், ஹரியின் மஞ்சள் ஆடையின் {பீதாம்பரத்தின்} நுனியைப் பிடித்து, அதைக் கொண்டு தன் முகத்தை மறைத்துக் கொண்டாள்” என்றார் {வைசம்பாயனர்}.

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
பாரிஜாதஹரணே ஷட்ஷஷ்டிதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 65–(பாரிஜாதநிபம்தநம் ஸத்யாகோபம்)-ஸ்ரீ ருக்மிணிக்குப் பாரிஜாதம் கொடுத்த ஸ்ரீ கிருஷ்ணன் |–

January 30, 2021

ஸ்ரீ நாரதர் கொடுத்த பாரிஜாத மலர்; அதை ஸ்ரீ ருக்மிணி அடைந்தது; ஸ்ரீ ருக்மிணியைத் துதித்த நாரதர்; ஸ்ரீ சத்யபாமாவின் பொறாமை.

ஜநமேஜய உவாச
ப்ராது³ர்பா⁴வே முநிஶ்ரேஷ்ட² மாது²ரே சரிதம் ஶுப⁴ம் |
ஶ்ருண்வந்நைவாதி⁴க³ச்சா²மி த்ருப்திம் க்ருஷ்ணஸ்ய தீ⁴மத꞉ ||2-65-1

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, மதுராவில் பிறந்த கிருஷ்ணனின் மங்கல வரலாற்றை மீண்டும் மீண்டும் கேட்டு இன்னும் என்னால் முழுமையான நிறைவை எட்ட முடியவில்லை.

த்³வாரகாயாம் நிவஸத꞉ க்ருததா³ரஸ்ய ஷட்³கு³ணம் |
சரிதம் ப்³ரூஹி க்ருஷ்ணஸ்ய ஸர்வம் ஹி விதி³தம் தவ ||2-65-2

மனைவியரை மணந்து கொண்டு துவாரகையில் வசித்தவனும், ஆறு குணங்களைக் கொண்டவனுமான கிருஷ்ணனின் வரலாற்றை நீர் நன்கறிவீர். இப்போது எனக்கு அதைச் சொல்வீராக” என்று கேட்டான்[“த்வாரகையில் வசிக்கும் மணம் புரிந்து கொண்ட கிருஷ்ணனது ஆறு குண விசேஷம் பொருந்திய சரித்ரத்தைச் சொல்லும். உமக்கும் எல்லாம் தெரிந்ததல்லவா”].

வைஶம்பாயந உவாச
ஜநமேஜய க்ருஷ்ணஸ்ய க்ருததா³ரஸ்ய பா⁴ரத |
நிபோ³த⁴ சரிதம் சித்ரம் தஸ்யைவ ஸத்³ருஶம் ப்ரபோ⁴ ||2-65-3

வைசம்பாயனர், “ஓ! ஜனமேஜயா, ஓ! பரதனின் வழித்தோன்றலே, பலம்வாய்ந்தவனான கிருஷ்ணன் தன் மனைவியரை மணந்து கொண்ட பிறகு செய்த செயல்கள் அனைத்தும் அவனுக்குத் தகுந்தவையே {அற்புதம் நிறைந்தவையே}. நான் அவற்றைச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.

ப்ராப்ததா³ரோ மஹாதேஜா வாஸுதே³வ꞉ ப்ரதாபவாந் |
ருக்மிண்யா ஸஹிதோ தே³வ்யா யயௌ ரைவதகம் ந்ருப ||2-65-4

ஓ! மன்னா, பெருஞ்சக்திவாய்ந்தவனும், பலம்வாய்ந்தவனுமான வாசுதேவன் தன் திருமணத்திற்குப் பிறகு ஒருமுறை ருக்மிணியுடன் சேர்ந்து ரைவத மலைக்குச் சென்றான்.

உபவாஸாவஸாநம் ஹி ருக்மிண்யா꞉ ப்ரதிபூஜயந் |
தர்பயிஷ்யந்ஸ்வயம் விப்ராஞ்ஜகா³ம மது⁴ஸூத³ந꞉ ||2-65-5

ருக்மிணி நோற்ற நோன்பு முடியும் நாளில் நடக்கப் போகும் பெரும் விழாவில் பிராமணர்களைத் தன்னால் நிறைவடையச் செய்ய முடியும் என்பதால் மதுசூதனனே நேரடியாக அந்த இடத்திற்குச் சென்றான்

குமாரா꞉ ப்ரயயுஸ்தத்ர புத்ரப்⁴ராதர ஏவ ச |
ப்ரேஷிதா வாஸுதே³வேந நாரத³ஸ்யாப்⁴யநுஜ்ஞயா ||2-65-6

ஓ! மன்னா, நாரதரின் ஆணையின்படியே அந்த வாசுதேவனின் மகன்களும், அவனது சகோதரர்களும் ஏற்கனவே அங்கே அனுப்பப்பட்டனர்.

ஷோட³ஶ ஸ்த்ரீஸஹஸ்ராணி ஜக்³முரேவ ச தீ⁴மத꞉ |
ருத்³த்⁴யா பரமயா ராஜந்விஷ்ணோரேவாநுரூபயா ||2-65-7

நுண்ணறிவுமிக்க மாதவனின் பதினாறாயிரம் மனைவிகளும், தங்கள் தகுதிக்குத் தகுந்த காந்தியுடன் அங்கே சென்றனர்.

ததஸ்தத்ர த்³விஜாதீநாம் காமாந்ப்ராதா³த³தோ⁴க்ஷஜ꞉ |
அர்தி²நாம் த⁴ர்மநித்யாநாம் ப³ந்தி³நாமிஷ்டவாதி³நாம் ||2-65-8

புலனடக்கத்துடன் கூடிய அந்தத் தலைவன் அங்கே, இருபிறப்பாளர்களுக்கும், பிச்சைக்காரர்களுக்கும், எப்போதும் அறச்சடங்குகளைச் செய்பவர்களுக்கும், தன் நலத்தை நாடிய அனைவருக்கும் அவர்கள் விரும்பியவற்றைக் கொடுத்தான்.

கல்யாணநாமகோ³த்ராணாம் மஹதாம் புண்யகர்மணாம் |
யௌநை꞉ ஶ்ரௌதைஶ்ச மாகை²ஶ்ச ஶுத்³தா⁴நாம் குருநந்த³ந꞉ ||2-65-9

தர்பயித்வா த்³விஜாந்காமைரிஷ்டைரிஷ்ட꞉ ஸதாம் க³தி꞉ |
ஜ்ஞாதீந்ஸம்தர்பயாமாஸ யதா²ர்ஹம் ப⁴க்தவத்ஸல꞉ ||2-65-10

ஓ! குருவின் வழித்தோன்றலே, யௌனேயர், சிரௌதேயர், மௌகேயர்[“திருமணம் செய்து கொண்ட பெண்ணின் வழியில் அமையும் உறவினர்கள் யௌனேயர்கள், தன்னுடன் கல்வி பயின்றவர்கள் சிரௌதேயர்கள், வேள்வி புரோஹிதர்கள் மௌகேயர்கள்”], நண்பர்கள், தூய்மையானவர்கள், பேரறச்சடங்குகளை எப்போதும் செய்பவர்கள், பெருங்குலங்களில் பிறந்தவர்கள் ஆகியோருடன் அங்கே சென்றவனும், தன்மீது பற்றும், ஆர்வமும் கொண்டவர்களிடம் எப்போதும் அன்பு கொண்டவனும், பக்தர்களின் புகலிடமுமான அந்தத் தலைவன் {கிருஷ்ணன்}, வேள்வியால் பிராமணர்களையும், தன்னுடைய உற்றார் உறவினரின் பதவிக்குத் தகுந்தபடி அவர்களையும் நிறைவடையச் செய்தான்.(9,10)

உபவாஸாவஸாநே(அ)த² ப⁴க³வாந்ஸ விஶேஷத꞉ |
ப³ஹு மேநே ப்ரியாம் பா⁴ர்யாம் ருக்மிணீம் பீ⁴ஷ்மகாத்மஜாம் ||2-65-11

தன் அன்புக்குரிய மனைவியும், பீஷ்மகனின் மகளுமான ருக்மிணியின் நோன்பு முடிந்ததும் அந்தத் தலைவன் அவளை உயர்வாகக் கௌரவித்தான்.

வஸதஸ்தஸ்ய க்ருஷ்ணஸ்ய ஸதா³ரஸ்யாமிதௌஜஸ꞉ |
ஸஹாஸீநஸ்ய ருக்மிண்யா நாரதோ³(அ)ப்⁴யாயயௌ முநி꞉ ||2-65-12

பெருஞ்சக்திவாய்ந்த கிருஷ்ணன் அங்கே வசித்து வருகையில் அவன் தன் மனைவியர் சூழ ருக்மிணியுடன் ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தபோது அங்கே நாரத முனிவர் வந்தார்.

ஆக³தம் சாப்ரமேயாத்மா முநிமிந்த்³ராநுஜஸ்ததா³ |
ஶாஸ்த்ரத்³ருஷ்டேந விதி⁴நா அர்சயாமாஸ கேஶவ꞉ ||2-65-13

முனிவர்களில் சிறந்தவரான அவர் அங்கே வந்த போது, வாசவனின் தம்பியும், அளவற்ற சக்தி கொண்டவனுமான கேசவன், சாத்திரங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளின்படி முறையாக அவரைத் துதித்தான்.

ஸோ(அ)ர்சிதோ வாஸுதே³வேந முநிரர்ச்ய தம꞉ ஸதாம் |
பாரிஜாததரோ꞉ புஷ்பம் த³தௌ³ க்ருஷ்ணாய பா⁴ரத ||2-65-14

ஓ! பரதனின் வழித்தோன்றலே, வசுதேவனின் மகனான கிருஷ்ணனால் துதிக்கப்பட்ட முனிவர்களில் சிறந்த நாரதர், பக்திமான்களால் துதிக்கப்படும் பாரிஜாத மலரொன்றை அவனிடம் {கிருஷ்ணனிடம்} கொடுத்தார்.

தத்³வ்ருக்ஷராஜகுஸுமம் ருக்மிண்யா꞉ ப்ரத³தௌ³ ஹரி꞉ |
பார்ஶ்வஸ்தா² ஸா ஹி க்ருஷ்ணஸ்ய போ⁴ஜ்யா நரவராப⁴வத் ||2-65-15

ஓ! மன்னா, போஜனின் மகளான ருக்மிணி தன்னருகே இருந்ததால் ஹரியும் {கிருஷ்ணனும்} அந்தப் பாரிஜாத மலரை அவளிடம் {ருக்மிணியிடம்} கொடுத்தான்.

ப்ரதிக்³ருஹ்ய து தத்புஷ்பம் காமாரணிரநிந்தி³தா |
ஶிரஸ்யமலபத்ராக்ஷீ த³தௌ³ க்ருஷ்ணேங்கி³தாநுகா³ ||2-65-16

களங்கமற்றவளும், கிருஷ்ணனின் அன்புக்குரியவளுமான அந்தப் பெண்ணும், அவனுடைய குறிப்பை அறிந்து அந்த அழகிய மலரைத் தன் கூந்தலில் சூடிக்கொண்டாள்

த்ரைலோக்யரூபஸர்வஸ்வம் நாராயணமநோஹரா |
ஶுஶுபே⁴ தே³வபுஷ்பேண த்³விகு³ணம் பை⁴ஷ்மகீ ததா³ ||2-65-17

மூவுலகங்களில் உள்ள அழகுகளின் மொத்த வடிவமாகத் திகழ்ந்தவளும், நாராயணனை எப்போதும் ஈர்ப்பவளுமான அந்தப் பீஷ்மகனின் மகள், அந்நேரத்தில் அந்தத் தெய்வீக மலரால் இருமடங்கு அழக்கூட்டப்பட்டாள்-

தாம் நாரத³ஸ்ததோ²வாச முநிர்ப்³ரஹ்மஸுதஸ்ததா³ |
தவைவௌபயிகம் புஷ்பமேகம் தே³வி பதிவ்ரதே ||2-65-18

அப்போது பிரஜாபதியின் மகனான நாரதர், காமனின் {மன்மதனின் / பிரத்யும்னனின்} அன்னையிடம் (ருக்மிணியிடம்}, “ஓ! தேவி, ஓ! கற்புக்கரசியே, இந்த மலர் உனக்குத் தகுந்ததே

அலங்க்ருதம் புஷ்பமேதத்ஸம்ஸர்கா³த்தவ ஸர்வதா² |
அத்யர்ஹா ச மதா மே த்வமேதத்புஷ்பாத்³த்⁴ருதவ்ரதே ||2-65-19

ஓ! உறுதியான நோன்புகளைக் கொண்டவளே, இம்மலரைச் சூட நீயே தகுந்தவளென்றும், உன் தொடர்பு ஏற்பட்டதால் இது மிகச் சரியாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது என்றும் நான் நினைக்கிறேன்.

கல்யாணகு³ணஸம்பந்நே ஸததம் ப⁴ர்த்ருவத்ஸலே |
அம்லாநமேதத்ஸததம் புஷ்பம் ப⁴வதி காமிநி ||2-65-20

ஓ! மங்கல குணங்களைக் கொண்டவளே, ஓ! கணவனிடம் எப்போதும் அன்பு கொண்டவளே, இந்த மலர் ஒருபோதும் வாடாது.

ஸம்வத்ஸரபரம் காலம் காலஜ்ஞே கு³ணஸம்மதே |
ஈப்ஸிதாநபி க³ந்தா⁴ம்ஶ்ச த³தா³தி வத³தாம் வரே ||2-65-21

ஓ! நற்குணங்கள் பலவற்றைக் கொண்டவளே, ஓ! காலஞானம் அறிந்தவளே, ஓராண்டு காலம் இந்த மலர் விரும்பிய மணத்தை வெளியிடும்.

ஶீதோஷ்ணே சேச்சி²தே தே³வி புஷ்பமேதத்ப்ரயச்ச²தி |
ஸ்ரவத்யபி ரஸாந்தே³வி மநஸா காங்க்ஷிதாந்வராந் ||2-65-22

ஓ! இனிய வாக்கைக் கொண்ட அழகிய பெண்ணே, விரும்பிய வெப்பத்தையும், குளிர்ச்சியையும் இந்த மலர் அளிக்கும், விரும்பிய வண்ணம் பல்வேறு சாறுகளும் இதிலிருந்து வெளிவரும்

ஸேவ்யமாநம் ச ஸௌபா⁴க்³யம் த³தா³தி வரவர்ணிநி |
ஸ்ரவத்யபி ததா² க³ந்தா⁴நீப்ஸிதாந்ப்ரீதிவர்த்³த⁴நாந் ||2-65-23

ஓ! அழகிய பெண்ணே, வேண்டும்போது நற்பேற்றை அருளும் இந்தப் பாரிஜாத மலர், இனிமை நிறைந்த நறுமணத்தையும் வீசும்.

யாநி யாநி ச புஷ்பாணி த்வம் தே³வ்யபி⁴லஷிஷ்யஸி |
குஸுமம் வ்ருக்ஷராஜஸ்ய தாநி தாநி ப்ரதா³ஸயதி ||2-65-24

ஓ! தேவி, நீ எந்த மலரை விரும்பினாலும் மரங்களின் மன்னனான பாரிஜாத மரத்தின் இம்மலர் அதைக் கொடுக்கும்.

ஏததே³வ ப⁴கா³தா⁴நம் த⁴ர்மிஷ்டே² புத்ரத³ம் ததா² |
மதிம் ச நாஶுபே⁴ த⁴த்தே தா⁴ர்யமாணம் ஸதா³ ஶுபே⁴ ||2-65-25

ஓ! மங்கலப் பெண்ணே, நல்லவளே, நற்பேற்றின் வேராகத் திகழும் இஃது அறம் வளர்க்கும், சூடுவோரின் மனத்தைத் தீய பாதையில் திரும்ப விடாது.

யத்³யதி³ச்ச²ஸி வர்ணம் ச தத்ஸர்வம் தா⁴ரயிஷ்யதி |
ஸ்வல்பம் வா யதி³ வா ஸ்தூ²லம் ச²ந்த³தஸ்தே ப⁴விஷ்யதி ||2-65-26

நீ காண விரும்பும் நிறத்தை இஃது ஏற்கும், நீ விரும்பியவாறே மெலிதாகவோ, பருமனாகவோ மாறும்.

அநிஷ்டக³ந்த⁴ஹரணம் தத்ஸமம் க³ந்த⁴வர்த்³த⁴நம் |
ப்ரதீ³பகர்ம ராத்ரௌ ச கரோதி கமலேக்ஷணே ||2-65-27

ஓ! தாமரைக் கண்களைக் கொண்டவளே, விரும்பத்தகாத நாற்றத்தை நீக்கி, நறுமணத்தை அதிகரித்து, இரவில் விளக்கின் பணியை இது செய்யும்

ஸம்தாநகஸ்ரஜோ மாலாம் புஷ்பவஸ்த்ராதி³ வாச்யுதம் |
புஷ்பமண்ட³பமுக்²யாநி சிந்திதேந ப்ரதா³ஸ்யதி ||2-65-28

மேலும் மலர்களில் மிகச் சிறந்தவையான சந்தானக மலர் மாலையை இஃது உனக்குத் தரும், நினைக்கும்போதெல்லாம் சிதைவற்ற உடைகளையும் உனக்குக் கொடுக்கும்.

பு³பு⁴க்ஷா வா பிபாஸா வா க்³லாநிர்வாப்யத² வா ஜரா |
தே³வவத்³தா⁴ரயந்த்யாஸ்தே ஸ்வச்ச²ந்தே³ந ப⁴விஷ்யதி ||2-65-29

நீ இம்மலரைச் சூடும்போதெல்லாம், ஒரு தேவியை {தேவர்களைப்} போலவே பசி, தாகம், களைப்பு, முதுமை ஆகியவற்றை வெல்வாய்.

அநுகீ³தாநி கீ³தாநி தா³ஸ்யத்யபி ச சிந்திதே |
ஸுவாதி³த்ராந்ஸுமது⁴ராம்ஸ்ததை²வ தவ ஸம்மதாந் ||2-65-30

நீ விரும்பும்போதெல்லாம் இது நல்ல இசைக்கருவிகளின் துணையுடன் இசையை ஒலிக்கும்.

பூர்ணம் ஸம்வத்ஸரே தே³வி புஷ்பமேதத்தவாந்திகாத் |
நிர்வர்த்ஸ்யதே தருவரம் ஸமயே ந ப்ரயாஸ்யதி ||2-65-31

ஓர் ஆண்டுக் காலம் நிறைவடைந்ததும், இஃது உன்னிடம் இருந்து சென்றுவிடும் என்பது இம்மலரின் விதியாகும்.

க்ருதிரேஷா ஹி ப⁴த்³ரம் தே பாரிஜாதஸ்ய ஸுப்ரபே⁴ |
நிஸர்க³த꞉ ஸர்க³க்ருதா ஸத்காரார்தே²(அ)ஸுரத்³விஷாம் ||2-65-32

ஓ! அழானவளே, உனக்கு நன்மை நேரட்டும். தேவர்களை நிறைவடையச் செய்வதற்காகவே படைப்பாளன் {பிரம்மன்} பாரிஜாத மலருக்குள் இந்தப் பண்பைப் பொதிந்திருக்கிறான்.

உமா தே³வவரஸ்யேஷ்டா ஹிமாலயஸுதா ஸதீ |
த⁴ரயந்தீஶ்வரீ நித்யம் புஷ்பாண்யேதாநி ஸுப்ரபே⁴ ||2-65-33

தேவர்களில் முதன்மையான மகாதேவனின் அன்புக்குரிய மனைவியும், இமயத்தின் மகளும், அண்டத்தின் தலைவியுமாக இருப்பதால் உமா தேவி இம்மலரை எப்போதும் சூடுகிறாள்.

அதி³திஶ்ச ஸபௌலோமீ மஹேந்த்³ரஸுரதாரணீ |
ஸாவித்ரீ தே³வமாதா ச ஶ்ரீஶ்ச ஸர்வகு³ணோசிதா ||2-65-34

தே³வபத்ந்யஸ்ததை²வாந்யா தே³வாஶ்ச வஸுதே³வதா꞉ |
ஸம்வத்ஸரபர꞉ கால꞉ ஸர்வேஷாம் ந து ஸம்ஶய꞉ ||2-65-35

ஓ! குணவதியே, மகேந்திரனுக்கும், பிற தேவர்களுக்கும் அன்னையான அதிதி, புலோமனின் மகளான சசி {இந்திராணி}, தேவர்களின் அன்னையான சாவித்ரி, ஸ்ரீதேவி ஆகியோரும் எப்போதும் இம்மலரைச் சூடுகின்றனர். தேவர்களின் மனைவியருக்கும், முன்னணி தேவர்களான வசுக்களின் மனைவியருக்கும், பிறருக்கும் கூட இதைச் சூடிக்கொள்ளும் கால அளவு ஓராண்டைக் கடப்பதில்லை.(34,35)

ஷோட³ஶஸ்த்ரீஸஹஸ்ராணாம் மத்⁴யே த்வம் க²லு வர்தஸே |
அத்³யேஷ்டாம் வாஸுதே³வஸ்ய வேத்³மி த்வாம் போ⁴ஜநந்தி³நி ||2-65-36

ஓ! போஜனின் மகளே {ரும்மிணியே}, வாசுதேவனின் பதினாறாயிரம் மனைவியருக்கு மத்தியில் முதன்மையானவளாகவும், அவனது பெரும் அன்புக்குரியவளாகவும் உன்னையே நான் கருதுகிறேன்.

ஸபத்ந்யஸ்தே கு³ணோபேதே ஸர்வா꞉ ஸர்வேஶ்வரப்ரியே |
அவமாநாவஸேகேந த்வயா ஸிக்தாத்³ய பா⁴மிநி ||2-65-37

ஓ! குணவதியே, ஓ! அனைவருக்கும் தலைவனாக இருப்பவனின் அன்புக்குரிய மனைவியானவளே, நற்குணத்தைக் கொண்டவர்களான உன் சக்காளத்திகள் அனைவரும் இன்று கௌரவ நீரால் உன்னால் நனைக்கப்பட்டனர் {அவர்கள் அனைவரையும் இன்று நீ விஞ்சிவிட்டாய்}.

ப்ரகாஶமத்³ய ஸௌபா⁴க்³யமநிவார்யம் யஶஶ்ச தே |
மந்தா³ரகுஸுமம் த³த்தம் யத்தே மது⁴நிகா⁴திநா ||2-65-38

மதுசூதனனான கிருஷ்ணன், இந்த மந்தார மலரை உனக்கு அளித்ததால் உன் நற்பெறும், புகழும் வெளிப்பட்டது

அத்³ய ஸாத்ரஜிதீ தே³வீ ஜ்ஞாஸ்யதே வரவர்ணிநீ |
ஸௌபா⁴க்³யாத்³யம் ஸதா³ வேத்தி யா(ஆ)த்மாநம் ஸுப⁴க³ம் ஸதீ ||2-65-39

ஓ! அழகிய பெண்ணே, நற்பேறு படைத்தவளும், கற்புக்கரசியும், எப்போதும் தன்னைப் பெரும்பேறு பெற்றவளாகக் கருதிக் கொள்பவளும், சத்ராஜித்தின் மகளுமான சத்யபாமா இன்று உன்னுடைய நற்பேற்றைக் குறித்து அறியப் போகிறாள்.

ஸாம்ப³மாதா ச கா³ந்தா⁴ரீ ப⁴ர்யாஶ்சாந்யா மஹாத்மந꞉ |
ஸௌபா⁴க்³யார்தோ²த்³யதாகாங்க்ஷாமத்³ய போ⁴க்ஷ்யந்தி நி꞉ஸ்ப்ருஹா꞉ |2-65-40

சாம்பனின் அன்னையான ஜாம்பவதியும், காந்தாரியும், உயரான்ம வாசுதேவனின் பிற மனைவியரும், நற்பேற்றுக்கான தங்கள் பேராசையை இன்று கைவிடுவார்கள்.

ஸௌபா⁴க்³யைகரதோ² ஜைத்ரஸ்தவ தே³வ்யத்³ய நி꞉ஸ்ருத꞉ |
மநோரத²ரதா²நாம் ய꞉ ஸஹஸ்ரைரபி து³ர்ஜய꞉ ||2-65-41

ஓ! தேவி, ஆயிரம் மனோரதங்களாலும் வெல்ல இயலாத நற்பேறெனும் வாகைசூடும் உன்னுடைய வெற்றிரதம் இன்று வெளிவந்திருக்கிறது.

அத்³யாஹமவக³ச்சா²மி ஸர்வதா² ஸர்வஶோப⁴நே |
ஆத்மா த்³விதீய꞉ க்ருஷ்ணாஸ்ய போ⁴ஜே த்வமிதி பா⁴மிநி ||2-65-42

ஓ! போஜனின் மகிமை பொருந்திய அழகிய மகளே, நான் இன்று கிருஷ்ணனின் மற்றொரு ஆன்மாவாக உன்னை அறிகிறேன்

த்ரைலோக்யரத்நஸர்வஸ்வமத³தா³த்³யத்தவாச்யுத꞉ |
ஜீவிதாதிஶயஸ்தேந த்வயா ப்ராப்தோ ஹரிப்ரியே ||2-65-43

ஓ! ஹரியின் அன்புக்குரிய மனைவியானவளே, மூவுலகங்களின் ரத்தினத் திரளைப் போன்ற இந்த மலரை அச்யுதன் {கிருஷ்ணன்} உனக்கு அளித்திருப்பதால் உன் வாழ்வு அருளப்பட்டதாகும்” என்றார் {நாரதர்}.

நாரதே³நைவமுக்தம் து தத்²யம் வாக்யம் நராதி⁴ப |
தத்ரஸ்தா²꞉ ஶுஶ்ருவு꞉ ப்ரேஷ்யா꞉ ப்ரேஷிதா꞉ ஸத்யபா⁴மயா ||2-65-44

ஓ! பேரரசே {ஜனமேஜயா}, சத்யபாமாவால் அங்கே அனுப்பப்பட்டிருந்த பெண் பணியாட்கள் நாரதரின் இந்தச் சொற்களைக் கேட்டனர்.

தே³வீநாம் ச ததா²ந்யாஸாம் பத்நீநாம் ச விஶாம்பதே |
த்³ருஷ்ட்வா தா꞉ ஸவிஶேஷம் ச நாரதே³நாப்⁴யுதா³ஹ்ருதம் ||2-65-45

ஓ! மன்னா, கிருஷ்ணனின் மற்ற மனைவியரும் அங்கே தங்களுடைய பணிப்பெண்களை அனுப்பியிருந்தனர். அவர்களைக் கண்டே நாரதர் ருக்மிணியைக் குறித்து இவ்வாறு சொன்னார்.

தச்ச ஶ்ருத்வா ஸுநிகி²லம் ப்ரேஷ்யாபி⁴꞉ ஸ்த்ரீஸ்வபா⁴வத꞉ |
ப்ரகாஶீக்ருதமேவாஸீத்³விஷ்ணோரந்த꞉புரே ததா³ ||2-65-46

இவை அனைத்தையும் குறிப்பாகக் கேட்ட அந்தப் பணிப் பெண்கள் அனைவரும், பெண்களுக்குரிய தங்கள் இயல்பின் விளைவால் இந்தச் செய்தியைக் கிருஷ்ணனின் அந்தப்புரத்திற்குக் கொண்டு சென்றனர்.

கர்ணாகர்நி ததோ தே³ய꞉ கௌலீநமிவ ஸங்க⁴ஶ꞉ |
மந்த்ரயாஞ்சக்ரிரே ஹ்ருஷ்டா ருக்மிண்யதிகு³ணோத³யம் ||2-65-47

இதைக் கேட்ட அந்தத் தேவியர், குலத்துக்குத் தகுந்த ருக்மிணியின் குணங்களைப் புகழ்ந்து ஒருவருக்கொருவர் காதுகளில் முணுமுணுக்கத் தொடங்கினர்.

அர்ஹேதி புத்ரமாதேதி ஜ்யேஷ்டே²தி ச ஸமாக³தா꞉ |
ப்ராயேண ப்ரவத³ந்தி ஸ்ம ஹ்ருஷ்டா தா³மோத³ரஸ்த்ரிய꞉ ||2-65-48

தாமோதரனின் {கிருஷ்ணனின்} மனைவியரில் கிட்டத்தட்ட அனைவரும், “ஏன் இது நடக்கக்கூடாது? ருக்மிணியே கேசவனின் முதல் மனைவியும், அவருடைய மகனின் அன்னையும் ஆவாள். எனவே அவள் இத்தகைய மதிப்புக்குத் தகுந்தவளே” என்று சொன்னார்கள்.

மம்ருஷே ந ஸபத்ந்யாஸ்து தத்ஸௌபா⁴க்³யகு³ணோத³யம் |
ஸத்யபா⁴மா ப்ரியா நித்யம் விஷ்ணோரதுலதேஜஸ꞉ ||2-65-49

ஆனால், பெருஞ்செருக்குடையவளும், விஷ்ணுவின் அன்புக்கு எப்போதும் உரியவளுமான சத்யபாமாவால் தன் சக்காளத்தி இத்தகைய நற்பேற்றை அடைந்ததைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ரூபயௌவநஸம்பந்நா ஸ்வஸௌபா⁴க்³யேந க³ர்விதா |
அபி⁴ம்நவதீ தே³வீ ஶ்ருத்வைவேர்ஷ்யாவஶம் க³தா ||2-65-50

இளமை நிறைந்த அந்த அழகிய தேவி, எப்போதும் தன் நற்பேற்றில் செருக்குடையவளாகவும், உணர்ச்சி மிகுந்தவளாகவும் இருந்தாள். தன் சக்காளத்தி அடைந்த இத்தகைய நற்பேற்றைக் கேட்டதும் அவள் பொறாமையால் பீடிக்கப்பட்டாள்

ஸமுத்ஸ்ருஜந்தீ வஸநம் ஸகுங்குமம்
ஶுசிஸ்மிதா ஶுக்லதமைகமம்ஶுகம் |
ஜக்³ராஹ ரோஷாகுலிதேந சேதஸா
வஹ்நேஸ்ததா³ ஶ்ரீரிவ வர்த்³தி⁴தேந்த⁴நா ||2-65-51

புன்சிரிப்பைக் கொண்ட அவள், எரிதழலைப் போன்ற கோபத்தால் பீடிக்கப்பட்டவளாகக் குங்குமத்தையும், பட்டாடையையும் கைவிட்டு, வெள்ளுடை உடுத்தினாள்.

த³ந்த³ஹ்யமாநா ஜ்வலநேந வர்த்³த⁴தா
ஈர்ஷ்யாஸமுத்தே²ந க³தப்ரபே⁴வ |
க்ரோதா⁴ந்விதா க்ரோத⁴க்³ருஹம் விவிக்தம்Â
விவேஶ தாரேவ க⁴நம் ஸதோயம் ||2-65-52

பொறாமையில் பெருகும் நெருப்பில் எரிந்தவளும், காந்தியிழந்தவளுமான அவள், மேகத்திற்குள் நுழையும் நட்சத்திரத்தைப் போலக் கோபமெனும் அந்தப்புரத்திற்குள் தனியாக நுழைந்தாள்

ப³த்³த்⁴வா லலாடே ஹிமசந்த்³ரஶுக்லம்
து³கூலபட்டம் ப்ரியரோஷசிஹ்நம் |
பர்யந்ததே³ஶம் ஸரஸேந தே³வீ
விலிப்ய ஸா லோஹிதசந்த³நேந ||2-65-53

தன் கணவனின் {கிருஷ்ணனின்} மீது கொண்ட கோபத்தின் அடையாளமாக அவள் குளிர்ந்த சந்திரனைப் போன்ற வெள்ளைத் துணியை நெற்றியில் கட்டினாள். சிவந்த சந்தனத்தை அந்தத் துணிக்கு அருகில்பூசினாள்.

ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ஶிர꞉ ஸரோஷம்
ப்ரகம்பமாநா ஸமுபோபவிஷ்டா |
தி³ர்கோ⁴பதா⁴நே ஶயநே(அ)பநீய
விபூ⁴ஷணாந்யேவ நிப³த்³த⁴வேணீ ||2-65-54

எனவே சத்யபாமா தேவி அவற்றை மறக்காமல் நினைத்துக் கொண்டே இருந்தாள். பெரும் தலையணையைக் கொண்ட கட்டிலில் அவள் தன் ஆபரணங்களை வீசினாள். பிறகு ஒற்றைப் பின்னல் பின்னிக் கொண்டு தன் சக்காளத்தியின் நற்பேற்றை மீண்டும் மீண்டும் நினைத்துக் கோபத்தில் தன் தலையை அசைத்துக் கொண்டே அங்கு அமர்ந்திருந்தாள்.

அகாரணார்தே²ந விக்ருஷ்யமாணா
ப்ரேஷ்யா ஜநஸ்யாபி⁴ஜநாந்விதாபி |
விசூர்ணயாமாஸ குஶேஶயம் ஸா
நி꞉ஶ்வஸ்ய நி꞉ஶ்வஸ்ய நகை²ர்நதப்⁴ரூ꞉ ||2-65-55

கேசவன் அவளை அன்புடன் வருடினாலும், பணிப்பெண்கள் சொன்ன கோளால் கோபத்தில் இருந்த அவள், தன் புருவத்தை வளைத்து, பெருமூச்சு விடத் தொடங்கி, தான் விளையாடும் தாமரைகளைத் தன் நகங்களால் கிழிக்கத் தொடங்கினாள்[“ஸத்யபாமை பணிப்பெண்களால் “உயர்ந்த குலத்தினளாகிய நீ அகாரணமாகக் கோபங்கொள்ளக் கூடாது” என்று கூறி வெளியில் இழுக்கப்பட்டவளாய் வளைந்த புருவமுடைய அவள் பெருமூச்சு விட்டு தாமரை புஷ்பத்தைப் பிய்த்து எறிந்தாள்” ]” என்றார் {வைசம்பாயனர்}

இதி ஶ்ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஶே இஷ்ணுபர்வணி
பாரிஜாதஹரணே பஞ்சஷஷ்டிதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 64–(பாரிஜாதஹரணம்)–அதிதியைச் சந்தித்த கிருஷ்ணன் |–

January 30, 2021

நரகனின் செல்வங்கள் அனைத்தையும், பதினாறாயிரம் கன்னியரையும் துவாரகைக்கு அனுப்பிய கிருஷ்ணன்; அதிதியிடம் சென்று காது குண்டலங்களைக் கொடுத்தது; பாரிஜாத மரத்தைப் பிடுங்கி துவாரகைக்குப் புறப்பட்டது–

வைஶம்பாயந உவாச
நிஹத்ய நரகம் பௌ⁴மம் வாஸவோபமவிக்ரமம் |
வாஸவாவரஜோ விஷ்ணுர்த³த³ர்ஶ நரகாலயம் ||2-64-1

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “இந்திரனின் தம்பியான விஷ்ணு, வாசவனைப் போன்று பலமிக்கவனும், பூமியின் மகனுமான நரகனைக் கொன்றுவிட்டு அவனது வீட்டைத் தேடத் தொடங்கினான்

அதா²ர்த²க்³ருஹமாஸாத்³ய நரகஸ்ய ஜநார்த³ந꞉ |
த³த³ர்ஶ த⁴நமக்ஷய்யம் ரத்நாநி விவிதா⁴ணி ச ||2-64-2

நரகனின் கருவூலத்தை அடைந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, அங்கே அளவற்ற செல்வத்தையும், பல்வேறு வகை ரத்தினங்களையும் கண்டான்.

மநிமுக்தாப்ரவாலாநி வைதூ³ர்யஸ்ய ச ஸஞ்சயாந் |
மாஸாரக³ல்வகூடாநி ததா² வஜ்ரஸ்ய ஸஞ்சயாந் ||2-64-3

வைரங்கள், முத்துக்கள், பவளங்கள், வைடூரியங்கள், இந்திரநீலக் கற்கள், பல்வேறு ரத்தினங்கள்

ஜாம்பூ³நத³மயாந்யஸ்ய ஶாதகும்ப⁴மயாநி ச |
ப்ரதீ³ப்தஜ்வலநாபா⁴நி ஶீதரஶ்மிநிபா⁴நி ச ||2-64-4

தங்கக் குவியல்கள், விலைமதிப்புமிக்கப் பிற பொருட்கள், சந்திரனைப் போல ஒளிரும் விலையுயர்ந்த படுக்கை,

ஶயநாநி மஹார்ஹாணி ததா² ஸிம்ஹாஸநாநி ச |
ஹிரண்யத³ண்ட³ருசிரம் ஶீதரஶ்மிஸமப்ரப⁴ம் ||2-64-5

எரியும் நெருப்பைப் போன்று பிரகாசிக்கும் சிங்க வடிவத்திலான அரியணை {சிம்மாசனம்}

த³த³ர்ஶ தந்மஹச்ச²த்ரம் வர்ஷமாணமிவாம்பு³த³ம் |
ஜாதரூபஸ்ய ஶுப்⁴ரஸ்ய தா⁴ரா꞉ ஶதஸஹஸ்ரஶ꞉ ||2-64-6

மழைக்கால மேகங்களின் வண்ணத்திலானதும், சந்திரனின் ஒளியைக் கொண்டதும், தங்கப் பிடி கொண்டதுமான அழகிய குடை ஆகியவற்றையும் அங்கே கண்டான்

வருணாதா³ஹ்ருதம் பூர்வம் நரகேணேதி ந꞉ ஶ்ருதம் |
யாவத்³ரத்நம் க்³ருஹே த்³ருஷ்டம் நரகஸ்ய த⁴நம் ப³ஹு ||2-64-7

நைவ ராஜ்ஞ꞉ குபே³ரஸ்ய ந ஶக்ரஸ்ய யமஸ்ய ச |
ரத்நஸம்நிசயஸ்தாத்³ருக்³த்³ருஷ்டபூர்வோ ந ச ஶ்ருத꞉ ||2-64-8

ஓ! ஜனமேஜயா, வருணனிடம் இருந்து கொண்டுவரப்பட்ட நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான நீரோடைகளைக் கொண்டதும், தங்கத்தாலானதுமான நீரூற்றும் அங்கே இருந்ததாக நாம் கேள்விப்படுகிறோம்; குபேரன், யமன், இந்திரன் ஆகியோரின் அரண்மனைகளில் கூட நாம் காணாதவையும், கேட்காதவையுமான ரத்தினக்குவியல்கள் அந்த நரகனின் கருவூலத்தில் இருந்தன.(7,8)

ஹதே பௌ⁴மே நிஸுந்தே³ ச ஹயக்³ரீவே ச தா³நவே |
உபாநிந்யுஸ்ததஸ்தாநி ரத்நாந்யந்த꞉புராணி ச ||2-64-9

தா³நவா ஹதஶிஷ்டா யே கோஶஸஞ்சயரக்ஷிண꞉ |
கேஶவாய மஹார்ஹாணி யாந்யர்ஹதி ஜநார்த³ந꞉ ||2-64-10

பூமியின் மகனான நரகன், நிசுந்தன், ஹயக்ரீவன் ஆகியோர் கொல்லப்பட்ட பிறகும் பிழைத்திருந்த அவனது {நரகனின்} கருவூலக் காவலர்கள், கேசவனுக்குத் தகுந்தவையெனக் கருதி விலைமதிப்புமிக்க அந்த ரத்தினங்களையும், அந்தப்புரக் காரிகையரையும் அவனிடம் {கிருஷ்ணனிடம்} கொண்டு சென்றனர்.(9,10)

தை³த்யா ஊசு꞉
இமாநி மணிரத்நாநி விவிதா⁴நி ப³ஹூநி ச |
பீ⁴மரூபாஶ்ச மாதங்கா³꞉ ப்ரவாலவிக்ருதாங்குஶா꞉ ||2-64-11

அந்தத் தைத்தியர்கள், “ஓ! ஜனார்த்தனா, பல்வேறு வகைகளிலான இந்த ரத்தினங்களும், செல்வங்களும், பவளத்தால் செய்யப்பட்ட இந்தப் பொருட்களும்,

ஹேமஸூத்ரா மஹாகக்ஷாஶ்சாபதோமரஶாலிந꞉ |
ருசிராபி⁴꞉ பதாகாபி⁴꞉ ஶப³லா ருசிராங்குஶா꞉ ||2-64-12

தே ச விம்ஶதிஸாஹஸ்ரா த்³விஸ்தாவத்ய꞉ கரேணவ꞉
அஷ்டௌத³ஶ ஸஹஸ்ராணி தே³ஶஜாஶ்சோத்தமா ஹயா꞉ ||2-64-13

தங்கச் சரங்களுடன் கூடிய இந்த அழகிய கொடிகளும், விற்களையும், தோமரங்களையும், பிற ஆயுதங்களையும் சுமந்த செல்லும் இந்த இருபதாயிரம் களிறுகளும் {ஆண்யானைகளும்}, நாற்பதாயிரம் பிடிகளும் {பெண் யானைகளும்}, மிகச் சிறந்த இனத்தைச் சேர்ந்த எட்டு லட்சம் குதிரைகளும்(12,13)

கோ³ஷு சாபி ப⁴வேத்காமோ யாவத்தவ ஜநார்த³ந |
தாவதீ꞉ ப்ராபயிஷ்யாமோ வ்ருஷ்ண்யந்த⁴கநிவேஶநம் ||2-64-14

உன்னிடம் கொண்டு வரப்படும். மேலும் நீ விரும்பும் எண்ணிக்கையிலான பசுக்களை அந்தக, விருஷ்ணிகளின் வீடுகளுக்கு நாங்கள் எடுத்துச் செல்வோம்.

ஆவிகாநி ச ஸூக்ஷ்மாணி ஶயநாந்யாஸநாநி ச |
காமவ்யாஹாரிணஶ்சைவ பக்ஷிண꞉ ப்ரியத³ர்ஶநா꞉ ||2-64-15

ஓ! தலைவா, நல்ல வேலைப்பாடுகளைக் கொண்ட கம்பளிப் படுக்கைகள், விரும்பியவாறு பேசும் அழகிய பறவைகள்,

சந்த³நாக³ருகாஷ்டா²நி ததா² காலீயகாந்யபி |
வஸு யத்த்ரிஷு லோகேஶூ த⁴ர்மேணாதி⁴க³தம் தவ ||2-64-16

சந்தனம், அகில், மலை ரத்தினங்கள், மூவுலகங்களிலும் திரட்டப்பட்ட செல்வங்கள் ஆகியவையும் நரகனின் அரண்மனையில் இருக்கின்றன

ப்ராபயிஷ்யாம தத்ஸர்வம் வ்ருஷ்ண்யந்த⁴கநிவேஶநம் |
தே³வக³ந்த⁴ர்வரத்நாநி பந்நகா³நாம் ச யத்³வஸு |
தாநி ஸர்வாணி ஸந்தீஹ நரக்ஸ்ய நிவேஶநே ||2-64-17

தேவர்கள், கந்தர்வர்கள், பன்னகர்கள் ஆகியோரிடம் முன்பு இருந்த செல்வங்களும், ரத்தினங்களும் இப்போது நரகனின் வீடுகளில் இருக்கின்றன” என்றனர் {கருவூலக் காவலர்கள்}”.

வைஶம்பாயந உவாச
தச்ச ஸர்வம் ஹ்ருஷீகேஶ꞉ பரிக்³ருஹ்ய பரீக்ஷ்ய ச |
ஸர்வமாஹாரயாமாஸ தா³நவைர்த்³வாரகாம் புரீம் ||2-64-18

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மதுசூதனனான ரிஷிகேசன், இந்த ரத்தினங்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டு, அவற்றை ஆய்வு செய்து, தானவர்களின் மூலம் அவை அனைத்தையும் விரைவாகத் துவாராவதிக்கு அனுப்பி வைத்தான்

ததஸ்தத்³வாருணம் ச²த்ரம் ஸ்வயமுத்க்ஷிப்ய மாத⁴வ꞉ |
ஹிரண்யவர்ஷம் வர்ஷந்தமாருரோஹ விஹங்க³மம் ||2-64-19

க³ருட³ம் பதக³ஶ்ரேஷ்ட²ம் மூர்திமந்தமிவாம்பு³த³ம் |
ததோ(அ)ப்⁴யயாத்³கி³ரிஶ்ரேஷ்ட²மபி⁴தோ மணிபர்வதம் ||2-64-20

அவன், பொன்னைப் பொழியவல்ல வாருணியெனும் குடையைத் தனக்கு எடுத்துக் கொண்டு, மேகத்தின் உடல்வடிவமே ஆனவனும், பறவைகளில் முதன்மையானவனுமான கருடன் மீது ஏறி, முதன்மையான மணி மலைக்குப் புறப்பட்டுச் சென்றான்.(19,20)

தத்ர புண்யா வவுர்வாதா ஹ்யப⁴வம்ஶ்சாமலா꞉ ப்ரபா⁴꞉ |
மணீநாம் ஹேமவர்ணாநாமபி⁴பூ⁴ய தி³வாகரம் ||2-64-21

தத்ர வைதூ³ர்யரத்நாநி த³த³ர்ஶ மது⁴ஸூத³ந꞉ |
ஸதோரணபதாகாநி த்³வாராணி ஶிக²ராணி ச ||2-64-22

வித்³யுத்³க்³ரதி²தமேகா⁴ப⁴꞉ ப்ரப³பௌ⁴ மணிபர்வத꞉ |
ஹேமசித்ரவிதாநைஶ்ச ப்ராஸாதை³ருபஶோபி⁴த꞉ ||2-64-23

ஜனார்த்தனன், அந்த மணி மலையில் வாயில்களையும், கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட வைடூரியச் சிகரங்களையும், கதவுகளையும் கண்டான். தங்க வண்ணம் பூசப்பட்ட மாளிகைகளின் வரிசைகளால் அலங்கரிக்கப்பட்ட மொத்த மணி மலையும், மின்னல்களால் அலங்கரிக்கப்பட்ட மேகத்தைப போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தது.(21-23)

தத்ர தா வரஹேமாபா⁴ த³த³ர்ஶ மது⁴ஸூத³ந꞉ |
க³ந்த⁴ர்வஸுரமுக்²யாநாம் ப்ரியா து³ஹிதரஸ்ததா² ||2-64-24

த³த³ர்ஶ ப்ருது²லஶ்ரோணீ꞉ ஸம்ருத்³தா⁴ கி³ரிகந்த³ரே |
நரகேண ஸமாநீதா ரக்ஷ்யமாணா꞉ ஸமந்தத꞉ ||2-64-25

தூய்மையானவர்களும், தங்க நிறம் கொண்டவர்களும், உருண்டு திரண்ட இடைகளைக் கொண்டவர்களும், கந்தர்வர்கள், முன்னணி அசுரர்கள் ஆகியோரின் மகள்களுமான கன்னிகையர், நரகனால் பலவந்தமாகக் கடத்தி வரப்பட்டு அங்கே அடைக்கப்பட்டிருப்பதை மதுசூதனன் கண்டான். அவர்கள் அனைத்து வகை இன்பங்களையும் இழந்தவர்களாக இருந்தாலும்,(24,25)

த்ரிவிஷ்டபஸமே தே³ஶே திஷ்ட²ந்தீரபராஜிதா꞉ |
நிர்விஶந்த்யோ யதா² தே³வ்ய꞉ ஸுகி²ந்ய꞉ காமவர்ஜிதா꞉ ||2-64-26

தேவர்களின் நகரத்தில் இன்னும் வசித்துக் கொண்டிருப்பவர்களைப் போலவும், தெய்வீகக் காரிகையரைப் போலவும் அங்கே மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தனர். நரகனுடைய சக்தியின் காரணமாக எவராலும் அவர்களை அபகரிக்க முடியவில்லை

பரிவவ்ருர்மஹாபா³ஹுமேகவேணீத⁴ரா꞉ ஸ்த்ரிய꞉ |
ஸர்வா꞉ காஷாயவாஸிந்ய꞉ ஸர்வாஶ்ச நியதேந்த்³ரியா꞉ ||2-64-27

வ்ரதோபவாஸதந்வங்க்³ய꞉ காங்க்ஷம்த்ய꞉ க்ருஷ்ணத³ர்ஶநம் |
ஸமேத்ய யது³ஸிம்ஹஸ்ய ஸர்வாஶ்சக்ரு꞉ ஸ்த்ரியோ(அ)ஞ்ஜலீந் ||2-64-28

அந்தக் காரிகையர், யதுக்களில் முதன்மையானவனும், பெருந்தோள்களைக் கொண்டவனுமான கிருஷ்ணனைக் காண்பதற்காகத் தங்கள் புலன்களை அடக்கி, நோன்புகள் நோற்று மெலிவடைந்து, பட்டுடை உடுத்தியவர்களாகவும், ஒற்றைப் பின்னல் கொண்டவர்களாகவும் கூப்பிய கரங்களுடன் ஜனார்த்தனனை அணுகி அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(27,28)

நரகம் நிஹதம் ஜ்ஞாத்வா முரம் சைவ மஹஸுரம் |
ஹயக்³ரீவம் நிஸுந்த³ம் ச தா꞉ க்ருஷ்ணம் பர்யவாரயந் ||2-64-29

பேரசுரர்களான நரகன், முரன் {முரு}, ஹயக்ரீவன், நிசுந்தன் ஆகியோர் இறந்ததை அறிந்ததால் அவர்கள் அச்சமில்லாதவர்களாகக் கிருஷ்ணனைச் சூழ்ந்து கொண்டனர்

யே சாஸாம் ரக்ஷிணோ வ்ருத்³தா⁴ தா³நவா யது³நந்த³நம் |
க்ருதாஞ்ஜலிபுடா꞉ ஸர்வே ப்ரணிபேதுர்வயோ(அ)தி⁴கா꞉ ||2-64-30

அவர்களின் காவலர்களாக இருந்த முதியவர்கள், அதிக வயதைக் கொண்டவர்களாக இருப்பினும் கூப்பிய கரங்களுடன் யது குல வழித்தோன்றலான கிருஷ்ணனை வணங்கினர்.

தாஸாம் பரமநாரீணாம்ருஷபா⁴க்ஷம் நிரீக்ஷ்ய தம் |
ஸர்வாஸாமேவ ஸங்கல்ப꞉ பதித்வேநாப⁴வத்தத꞉ ||2-64-31

தஸ்ய சந்த்³ரோபமம் வக்த்ரம் நிரீக்ஷ்ய முதி³தேந்த்³ரியா꞉ |
ஸம்ப்ரஹ்ருஷ்டா மஹாபா³ஹுமித³ம் வசநமப்³ருவந் ||2-64-32

பெருந்தோள் படைத்த கிருஷ்ணனின் சந்திரன் போன்ற முகத்தைக் கண்ட அந்த அழகிய காரியர் அனைவரும், அவனையே தங்கள் கணவனாகக் கொள்ள விரும்பினர்.
அதன்படியே அவர்கள் மகிழ்ச்சிமிக்க இதயங்களுடன்,(31,32)

ஸத்யம் ச யத்புரா வாயுரிஹாஸ்மாந்வாக்யமப்³ரவீத் |
ஸர்வபூ⁴தமதிஜ்ஞஶ்ச தே³வர்ஷிரபி நாரத³꞉ ||2-64-33

“அனைத்து உயிரினங்களின் இதயங்களையும் அறிந்த தெய்வீக முனிவர் நாரதரும், காற்றின் தேவனும் {வாயு தேவனும்} எங்களிடம் முன்பு சொன்ன அனைத்தும் உண்மையே

விஷ்ணுர்நாராயணோ தே³வ꞉ ஶங்க²சக்ரக³தா³ஸிப்⁴ருத் |
ஸ பௌ⁴மம் நரகம் ஹத்வா ப⁴ர்தா ச ப⁴விதா ஸ வ꞉ ||2-64-34

சங்கு, சக்கர, கதாதாரியான அண்டத் தலைவன் நாராயணன், பூமியின் மகனான நரகனைக் கொன்ற உடனேயே உங்கள் கணவனாவான் என்று அவர்கள் சொன்னார்கள்.

ஸுப்ரியம் ப³த பஶ்யாமஶ்சிரஶ்ருதமரிந்த³மம் |
த³ர்ஶநேந க்ருதார்தா² ஹி வயமத்³ய மஹாத்மந꞉ ||2-64-35

எப்போதும் நாங்கள் கேள்விப்பட்டுக் கொண்டே இருந்தவரும், பகைவரைக் கொல்பருமான எங்கள் அன்புக்குரிய தலைவரை இதோ காண்கிறோம். ஓ! உயரான்ம தேவனான இவரைக் கண்டதன் மூலம் இன்று நாங்கள் அருளப்பட்டோம்” என்றார்கள்

ததஸ்தா꞉ ஸாந்த்வயாமாஸ ப்ரமதா³ வாஸவாநுஜ꞉ |
ஸர்வா꞉ கமலபத்ராக்ஷீர்த்³ருஷ்ட்வா சோவாச மாத⁴வ꞉ ||2-64-36

யதா²ர்ஹத꞉ பூஜயித்வா ஸமாபா⁴ஷ்ய ச கேஶவ꞉ |
யாநை꞉ கீங்கரஸம்யுக்தைருவாஹ மது⁴ஸூத³ந꞉ ||2-64-37

இவ்வாறு அந்தத் தாமரைக் கண் கொண்ட காரிகைகளால் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்ட வாசவனின் தம்பி {கிருஷ்ணன்}, அவர்கள் அனைவரையும் தேற்றினான். அந்தப் பெண்கள் அனைவராலும் வரவேற்கப்பட்ட தாமரைக் கண்ணனும், கேசவனுமான மதுசூதனன், அவர்கள் அனைவரையும் தேரில் {பல்லக்குகளில்} ஏற்றித் தன் பணியாட்களின் {கிங்கரர்களின்} பாதுகாப்புடன் துவாரகைக்குக் கொண்டு சென்றான்.(36,37)

கிங்கராணாம் ஸஹஸ்ராணி ரக்ஷஸாம் வாதரம்ஹஸாம் |
ஶிபி³காம் வஹதாம் தத்ர நிர்கோ⁴ஷ꞉ ஸுமஹாநபூ⁴த் ||2-64-38

அந்த வாகனத்தை {பல்லக்குகளைச்} சுமந்து செல்லும்போது, காற்றைப் போல வேகமாகச் செல்லும் ராட்சசர்கள் மத்தியில் பேரராவரம் எழுந்தது.

தஸ்ய பர்வதராஜஸ்ய ஶ்ருங்க³ம் யத்பரமார்சிதம் |
விமலார்கேந்து³ஸங்காஶம் மணிகாஞ்சநதோரணம் ||2-64-39

ஸபக்ஷிக³ணமாதங்க³ம் ஸம்ருக³வ்யாலபாத³பம் |
ஶாகா²ம்ருக³க³ணாகீர்ணம் ஸுப்ரஸ்தரஶிலாதலம் ||2-64-40

பலவான்களில் முதன்மையான விஷ்ணு, அந்தச் சிறந்த மலையின் பிரகாசமிக்க அழகிய சிகரத்தை வேரோடு பெயர்த்துவிட்டு, பறவைகளில் சிறந்த கருடனில் ஏறிச் சென்றான். தெளிந்த சூரியனையும், சந்திரனையும் போன்றிருந்த அது {அந்த மணி மலை}, ரத்தினங்களாலும், தங்கத்தாலும் அமைந்த வாயில்களைக் கொண்டிருந்தது. பறவைகளும், மான்களும், பல்வேறு விலங்குகளும், யானைகளும் அங்கு நிறைந்திருந்தன. அது மரங்களால் அழகூட்டப்பட்டதாகவும், குரங்குகள் நிறைந்ததாகவும் இருந்தது.(39,40)

ந்யங்குபி⁴ஶ்ச வராஹைஶ்ச ருருபி⁴ஶ்ச நிஷேவிதம் |
ஸப்ரபாதம் மஹாஸாநும் விசித்ரஶிக²ரத்³ருமம் ||2-64-41

அத்யத்³பு⁴தமசிந்த்யம் ச ம்ருக³வ்ருந்த³விலோடி³தம் |
ஜீவஞ்ஜீவகஸங்கை⁴ஶ்ச ப³ர்ஹிபி⁴ஶ்ச நிநாதி³தம் ||2-64-42

தத³ப்யதிப³லோ விஷ்ணுர்தோ³ர்ப்⁴யாமுத்பாட்ய பா⁴ஸுரம் |
ஆரோபயாமாஸ ப³லீ க³ருடே³ பக்ஷிணாம் வரே ||2-64-43

பெரும்பாறைகளும், பன்றிகளும், எருமைகளும், மான்களும் அங்கே இருந்தன. அதன் மேட்டுச் சமவெளி நீரூற்றுகளால் நிறைந்திருந்தது, பல்வேறு வகை மரங்களையும் கொண்டிருந்தது. விலங்குகள் பலவும், மயில்களும் அங்கே உலவிக் கொண்டிருந்தன. அது புத்தியைக் கடந்த அற்புதமாக இருந்தது.(41-43)

மணிபர்வதஶ்ருங்க³ம் ச ஸபா⁴ர்யம் ச ஜநார்த³நம் |
உவாச லீலயா பக்ஷீ க³ருட³꞉ பததாம் வர꞉ ||2-64-44

பறவைகளின் மன்னனான கருடன், ஜனார்த்தனனையும், அவனது மனைவியையும் மேரு மலைக்கு எளிதாகச் சுமந்து சென்றான்.

ஸ பக்ஷப³லவிக்ஷேபைர்ஹிமாத்³ரிஶிக²ரோபமம் |
தி³க்ஷு ஸர்வாஸு ஸம்ஹ்ராத³ம் ஜநயாமாஸ பக்ஷிராட் ||2-64-45

பெரும் மலைச்சிகரத்தைப் போன்ற அந்தப் பறவைகளின் மன்னன், தன் வலுவான சிறகுகளை அடித்து, அனைத்துப் பக்கங்களிலும் பேரமளியை ஏற்படுத்தினான்.

ஆருஜந்பர்வதாக்³ராணி பாத³பாம்ஶ்ச ஸமுத்க்ஷிபந் |
ஸஞ்ஜஹார மஹாப்⁴ராணி விஜஹார ச காநிசித் ||2-64-46

அவனுடைய பாதங்களின் கனத்தால் மலைநுனிகள் நொறுங்கின, மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டன, பெரும் மேகங்களும் கலைந்தன, அவற்றில் {மேகங்களில்} சில அற்புத வடிவையும் ஏற்றன.

விஷயம் ஸமதிக்ரம்ய தே³வயோஶ்சந்த்³ரஸூரயயோ꞉ |
யயௌ வாதஜவ꞉ பக்ஷீ ஜநார்த³நவஶே ஸ்தி²த꞉ ||2-64-47

இவ்வாறே மனோ வேகம் கொண்ட அந்தப் பறவையானவன், ஜனார்த்தனன் விரும்பியவாறு சூரிய, சந்திரப் பாதைகளைக் கடந்து சென்றான்

ஸ மேருகி³ரிமாஸாத்³ய தே³வக³ந்த⁴ர்வஸேவிதம் |
தே³வஸத்³மாநி ஸர்வாணி த³த³ர்ஶ மது⁴ஸூத³ந꞉ ||2-64-48

ஓ! பேரரசே, ஓ! பகைவரைக் கொல்பவனே, தன் எதிரிகளைக் கொல்பவனான கேசவன் சுமேரு மலையை அடைந்து தேவர்களின் வசிப்பிடங்களைக் கண்டான்.

விஶ்வேஷாம் மருதாம் சைவ ஸாத்⁴யாநாம் ச நராதி⁴ப |
ப்⁴ராஜமாநாந்யதிக்ராமந்நஶ்விநோஶ்ச பரம்தப ||2-64-49

விஷ்வதேவர்கள், சத்யஸ்கள், மருத்துகள், அஸ்வினி இரட்டையர்கள் ஆகியோரின் வசிப்பிடங்களையும்,

ப்ராப்ய புண்யதமாம்ˮல்லோகாந்தே³வலோகமரிம்த³ம |
ஶக்ரஸத்³ம ஸமாஸாத்³ய ப்ரவிவேஶ ஜநார்த³ந꞉ ||2-64-50

ஒளிர்ந்து கொண்டிருக்கும் மங்கலமான பிற பகுதிகளையும் கடந்து தேவலோகத்தை அடைந்து, தேவர்களின் மன்னனுடைய அரண்மனைக்குள் நுழைந்தான்.

அவதீர்ய ஸ தார்க்ஷ்யாத்து த³த³ர்ஶ விபு³தா⁴தி⁴பம் |
ப்ரீதஶ்சைவாப்⁴யநந்த³த்தம் தே³வராஜ꞉ ஶதக்ரது꞉ ||2-64-51

மாதவன், கருடனின் முதுகில் இருந்து இறங்கிச் சென்று தேவர்களின் மன்னனைச் சந்தித்தான். இந்திரனும் பெரும் மகிழ்ச்சியுடன் அவனை வரவேற்றான்.

ப்ராதா³ய குண்ட³லே தி³வ்யே வவந்தே³ தம் ததா³ச்யுத꞉ |
ஸபா⁴ர்யோ விபு³த⁴ஶ்ரேஷ்ட²ம் நரஶ்ரேஷ்டோ² ஜநார்த³ந꞉ ||2-64-52

அர்சிதோ தே³வராஜேந ரத்நைஶ்ச ப்ரதிபூஜித꞉ |
ஸத்யபா⁴மா ச பௌலோம்யா யதா²வத³பி⁴நந்தி³தா ||2-64-53

மனிதர்களில் முதன்மையான ஜனார்த்தனன், தன் மனைவியுடன் சென்று, அதிதிக்குச் சொந்தமான காது குண்டலங்களை, தேவர்களின் மன்னனிடம் கொடுத்து வணங்கி, பதிலுக்கு அவனால் வரவேற்கப்பட்டான். சத்தியபாமாவை புலோமனின் மகள் {இந்திராணி சசி} முறையாக வரவேற்றாள்.(52,53)

வாஸவோ வாஸுதே³வஶ்ச ஜக்³மது꞉ ஸஹிதௌ ததா³ |
அதி³த்யா ப⁴வநம் தி³வ்யம் தே³வமாதுர்மஹர்த்³தி⁴மத் ||2-64-54

அதன் பிறகு, வாசவனும் {இந்திரனும்}, வாசுதேவனும் {கிருஷ்ணனும்} தங்கள் மனைவியருடன் சேர்ந்து, தேவர்களின் அன்னையான அதிதியின் செழிப்பான வசிப்பிடத்திற்குச் சென்றனர்.

தத்ராதி³திமுபாஸ்யந்தீமப்ஸரோபி⁴꞉ ஸமந்தத꞉ |
த³த்³ருஶாதே மஹாத்மாநௌ மஹாபா⁴கா³ம் தபோ(அ)ந்விதாம் ||2-64-55

அங்கே சென்ற அந்தப் பெருந்தேவர்கள் இருவரும், தவத்தில் ஈடுபட்டுவரும் பெரும் அதிதியைச் சூழ்ந்து அமர்ந்து அசுரர்கள் வழிபட்டுக் கொண்டிருப்பதைக் கண்டனர்.

ததஸ்தே குண்ட³லே தி³வ்யே ப்ராதா³த³தி³திநந்த³ந꞉ |
வவந்தே³ தாம் ஶசீப⁴ர்தா மாதரம் ஸ்வாம் புரம்த³ர꞉ ||2-64-56

அதிதியின் மகனும், சசியின் தலைவனுமான புரந்தரன், ஜனார்த்தனனை முன் வைத்துக் கொண்டு, தன் அன்னையை அணுகி வணங்கி, அவளுடைய காது குண்டலங்களை அவளிடமே திருப்பிக் கொடுத்துக் கேசவனின் மகத்தான செயல்களை விவரித்தான்.

ஜநார்த³நம் புரஸ்க்ருத்ய கர்ம சைவ ஶஶம்ஸ தத் |
அதி³திஸ்தௌ ஸுதௌ ப்ரீத்யா பரிஷ்வஜ்யாபி⁴நந்த்³ய ச ||2-64-57

அவற்றைக் கேட்ட அதிதி, பெரும் நிறைவடைந்தவளாகத் தன் மகன்கள் இருவரையும் தன் மடியில் அமர்த்திக் கொண்டாள் {பாராட்டினாள்}

ஆஶீர்பி⁴ரநுகூலாபி⁴ருபா⁴வப்யவத³த்ததா³ |
பௌலோமீ ஸத்யபா⁴மா ச ப்ரீத்யா பரமயா யுதே ||2-64-58

அக்³ருஹ்ணீதாம் வரார்ஹாயா தே³வ்யாஸ்தே சரநௌ ஶுபௌ⁴ |
தே சாப்யப்⁴யவத³த்ப்ரேம்ணா தே³வமாதா யஶஸ்விநீ ||2-64-59

அவள் அவர்களிடம் மங்கல வாழ்த்துகளைச் சொல்லி வரவேற்றுக் கௌரவித்தாள். அதன் பிறகு புலோமனின் மகளும் {சசியும்}, சத்யபாமாவும் பெரும் மகிழ்ச்சியுடன் அதிதி தேவியின் பாதங்களை மதிப்புடன் வணங்கினர். சிறப்புமிக்கவளான தேவர்களின் அன்னை அவர்களை அன்புடன் வரவேற்ற பிறகு, கேசவனிடம்,(58,59)

யதா²வத³ப்³ரவீச்சைவ ஜநார்த³நமித³ம் வச꞉ |
அத்⁴ருஷ்ய꞉ ஸர்வபூ⁴தாநாமவத்⁴யஶ்ச ப⁴விஷ்யஸி ||2-64-60

“என் மகனே, தேவர்களின் மன்னனான இவன் {இந்திரன்} உலகங்களெங்கும் வணங்கப்படுவதைப் போலவே நீயும் எந்த உயிரனத்தாலும் கொல்லப்பட முடியாதவனாக இருக்கிறாய்

யதை²வ தே³வராஜோ(அ)யமஜிதோ லோகபூஜித꞉ |
ப⁴வத்வியம் வராரோஹா நித்யம் ச ப்ரியத³ர்ஶநா ||2-64-61

ஸர்வலோகேஷு விக்²யாதா தி³வ்யக³ந்தா⁴ மநோரமா |
ஸத்யபா⁴மோத்தமா ஸ்த்ரீணாம் ஸுப⁴கா³ ஸ்தி²ரயௌவநா ||2-64-62

உன் மனைவியர் அனைவரிலும் மிகச் சிறந்தவளும், உலகங்கள் அனைத்தாலும் கொண்டாடப்படுபவளும், காண்பதற்கு இனிய அழகியுமான இந்தச் சத்யபாமா, எப்போதும் இளமை நிறைந்தவளாகவும், நல்லூழ் கொண்டவளாகவும் இருப்பாள்.(61,62)

ஜராம் ந யாஸ்யதி வதூ⁴ர்யாவத்த்வம் க்ருஷ்ண மாநுஷ꞉ |
ஏவமப்⁴யர்சித꞉ க்ருஷ்ணோ தே³வமாத்ரா மஹாப³ல꞉ ||2-64-63

அவளது மேனியில் எப்போதும் தெய்வீக நறுமணங்கமழும். ஓ! கிருஷ்ணா, நீ மனித வடிவில் இருக்கும் வரை உன்னுடைய மனைவியான இவள் {சத்யபாமா} மூப்பெய்தமாட்டாள்” என்றாள்.
தேவர்களின் அன்னையால் இவ்வாறு கௌரவிக்கப்பட்டவனும்

தே³வராஜாப்⁴யநுஜ்ஞாதோ ரத்நைஶ்ச ப்ரதிபூஜித꞉ |
வைநதேயம் ஸமாருஹ்ய ஸஹித꞉ ஸத்யபா⁴மயா ||2-64-64

பெருஞ்சக்திவாய்ந்தவனுமான கிருஷ்ணன், பல்வேறு ரத்தினங்களுடன் வாசவனால் கௌரவிக்கப்பட்டான். அதன் பிறகு அவன், தேவர்களின் மன்னனுடைய அனுமதியைப் பெற்றுக் கொண்டு சத்யபாமாவுடன் சேர்ந்து வினதையின் மகன் மீது ஏறி,

தே³வாக்ரீட³ம் பரிக்ராமந்பூஜ்யமாநம் ஸுரர்ஷிபி⁴꞉ |
ஸ த³த³ர்ஶ மஹாபா³ஹுராக்ரீடே³ வாஸவஸ்ய ஹ ||2-64-65

தி³வ்யமப்⁴யர்சிதம் தே³வை꞉ பாரிஜாதம் மஹாத்³ருமம் |
நித்யபுஷ்பத⁴ரம் தி³வ்யம் புண்யக³ந்த⁴மநுத்தமம் ||2-64-66

தேவர்களின் மொத்தக் கூட்டத்தால் வழிபடப்பட்டவனாக தெய்வீக நந்தவனங்களில் திரியத் தொடங்கினான். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கேசவன், வாசவனின் நந்தவனத்தைக் கடந்த போது, மிகச் சிறந்ததும், புனிதமானதும், தெய்வீகமானதும், எப்போதும் புனித நறுமணங்கமழ்வதும், நாளுக்கு நாள் மலர்வதும், அருகில் அணுகியவரின் முற்பிறவி நினைவை மீட்கவல்லதுமான பெரும் பாரிஜாத மரத்தைக் கண்டான்.(65,66)

யமாஸாத்³ய ஜந꞉ ஸர்வோ ஜாதிம் ஸ்மரதி பௌர்விகீம் |
ஸம்ரக்ஷ்யமாணம் தே³வைஸ்தம் ப்ரஸஹ்யாமிதவிக்ரம꞉ ||2-64-67

அந்த மரத்திற்குக் காவலாகத் தேவர்கள் நிறுத்தப்பட்டிருந்தாலும், அளவில்லா ஆற்றலைக் கொண்ட கிருஷ்ணன், அதை வேரோடு பிடுங்கி கருடனின் தலையில் வைத்தான்.

உத்பாட்யாரோபயாமாஸ விஷ்ணுஸ்தம் க³ருடோ³பரி |
ஸோ(அ)பஶ்யத்ஸத்யபா⁴மா ச தி³வ்யமப்ஸரஸாம் க³ணம் ||2-64-68

ப்ருஷ்ட²த꞉ ஸத்யபா⁴மா ச தி³வ்யா யோஷா ச வீக்ஷிதாம் |
ப்ராயாத்ததோ த்³வாரவதீம் வாயுஜுஷ்டேந வை பதா² ||2-64-69

அதன்பிறகு உபேந்திரனும் {கிருஷ்ணனும்}, சத்யபாமாவும், அப்சரஸ்களைக் கண்டவாறே துவாரகை நோக்கி வான்வழியில் சென்றனர். அந்தத் தெய்வீகக் காரிகையர், சத்தியபாமாவைப் பின்னால் இருந்தே கண்டனர்.(68,69)

ஶ்ருத்வா தம் தே³வராஜஸ்து கர்ம க்ருஷ்ணஸ்ய தத்ததா³ |
அநுமேநே மஹாபா³ஹு꞉ க்ருதகர்மேதி சாப்³ரவீத் ||2-64-70

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணனின் இந்தச் செயலைக் கேள்விப்பட்ட தேவர்களின் மன்னன் {இந்திரன்}, தன் மறுப்பைத் தெரிவிக்காமல், “கிருஷ்ணன் எப்போதும் வெல்வான்[“அவன் செய்யப்பட்ட கார்யம் (உபகாரங்கள்) உடையவன்”]” என்றான்

ஸ பூஜ்யமாநஸ்த்ரித³ஶை꞉ ஸப்தர்ஷிக³ணஸம்ஸ்துத꞉ |
ப்ரதஸ்தே² த்³வாரகாம் க்ருஷ்ணோ தே³வலோகாத³ரிந்த³ம꞉ ||2-64-71

பகைவரைக் கொல்பவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான கிருஷ்ணன், இவ்வாறு தேவர்களால் துதிக்கப்பட்டு, ஏழு முனிவர்களால் பாடப்பட்டுத் தேவலோகத்தில் இருந்து துவாரகைக்குப் புறப்பட்டுச் சென்றான்

ஸோ(அ)பி⁴பத்ய மஹாபா³ஹுர்தி³ர்க⁴மத்⁴வாநமல்பவத் |
பூஜிதோ தே³வராஜேந த³த்³ருஶே யாத³வீம் புரீம் ||2-64-72

அந்த நீண்ட தொலைவை குறுகிய ஒன்றாகக் கடந்து சென்று யாதவர்களின் நகரத்தை {துவாரகையைக்} கண்டான்

ததா² கர்ம மஹத்க்ருத்வா ப⁴க³வாந்வாஸவாநுஜ꞉ |
உபாயாத்³த்³வாரகாம் க்ருஷ்ண꞉ ஶ்ரீமாந்க³ருட³வாஹந꞉ ||2-64-73

வாசவனின் தம்பியான தலைவன் கிருஷ்ணன் அந்த அருஞ்செயலைச் சாதித்துவிட்டுக் கருடன் மீதேறி துவாரகைக்குத் திரும்பினான்” {என்றார் வைசம்பாயனர்}

இதி ஶ்ரிமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஶே விஷ்ணுபர்வணி
பாரிஜாதஹரணே த்³வாரகாப்ரவேஶே சது꞉ஷஷ்டிதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 63–(நரகவதம்)–

January 30, 2021

நரகன் அபகரித்து வைத்திருந்த பதினாறாயிரம் கன்னியர்; துவாரகையில் அமைந்திருந்த கிருஷ்ணனின சபைக்கு வருகை தந்து, நரகனை அழிக்க வேண்டிய இந்திரன்; கிருஷ்ணனுடன் சென்ற சத்யபாமா; முரு, நிசுந்தன், ஹயக்ரீவன் ஆகியோரைக் கொன்ற கிருஷ்ணன்; நரகாசுரனுடன் போர்; நரகன் கொல்லப்பட்டதும், குண்டலங்களைத் தந்த பூமாதேவி.–

ஜநமேஜய உவாச
ப்ரத்யேத்ய த்³வாரகாம் விஷ்ணுர்ஹதே ருக்மிணி வீர்யவாந் |
அகரோத்³யந்மஹாபா³ஹுஸ்தந்மே வத³ மஹாமுநே ||2-63-1

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! பெரும் முனிவரே, பெருஞ்சக்திவாய்ந்த விஷ்ணு {கிருஷ்ணன்}, ருக்மியை அழித்துவிட்டு துவாரகைக்கு வந்த பிறகு என்ன செய்தான் என்பதை எனக்கு விரிவாகச் சொல்வீராக” என்று கேட்டான்.

வைஶம்பாயந உவாச
ஸ தை꞉ பரிவ்ருத꞉ ஶ்ரீமாந்புரீம் யாத³வநந்த³ந꞉ |
த்³வாரகாம் ப⁴க³வாந்விஷ்ணு꞉ ப்ரத்யவைக்ஷத வீர்யவாந் ||2-63-2

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அழகனும், பெருஞ்சக்திவாய்ந்தவனும், தாமரைக் கண்களைக் கொண்டவனும், யாதவர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனுமான விஷ்ணு, அவர்களால் {யாதவர்களால்} சூழப்பட்டவனாகத் துவாரகையை நோக்கித் தன் மனத்தைத் திருப்பினான்.

ப்ரத்யபத்³யத ரத்நாநி விவிதா⁴நி வஸூநி ச |
யதா²ர்ஹம் புண்த³ரீகாக்ஷோ நைர்ருதாந்ப்ரத்யவாரயத் ||2-63-3

தத்ர விக்⁴நம் சரந்தி ஸ்ம தை³தேயா꞉ ஸஹ தா³நவை꞉ |
தாஞ்ஜகா⁴ந மஹாபா³ஹுர்வரத்³ருப்தாந்மஹாஸுராந் ||2-63-4

அவன் அடைந்த பல்வேறு செல்வங்களையும், ரத்தினங்களையும் ராட்சசர்களின் {நைருதர்களின்} மூலம் தன் வீட்டுக்குக் கொண்டு வரச் செய்தான். வரங்களை அடைந்த தானவ, தைத்திய பேரசுரர்களும் அந்நேரத்தில் பல தடைகளை ஏற்படுத்தினர்; ஆனால் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட மாதவன் {கிருஷ்ணன்} அவர்கள் அனைவரையும் அழித்தான்.(3,4)

விக்⁴நம் சாஸ்யாகரோத்தத்ர நரகோ நாம தா³நவ꞉ |
த்ராஸந꞉ ஸர்வதே³வாநாம் தே³வராஜரிபுர்மஹாந் ||2-63-5

ஓ! மன்னா, மாதவன் துவாரகையில் வாழ்ந்து வந்த போது, தேவர்களின் மன்னனுடைய {இந்திரனின்} பெரும் பகைவனும், தேவர்களுக்குப் பயங்கரனுமான தானவன் நரகன் அவனது வழியில் பல தடைகளை ஏற்படுத்தினான்

ஸ ப³பௌ⁴ மூர்திலிங்க³ஸ்த²꞉ ஸர்வதே³வாதி⁴பா³தி⁴தா |
தே³வதாநாம்ருஷீணாம் ச ப்ரதீபமகரோத்ததா³ ||2-63-6

மூர்த்திலிங்கத்தில்[“லிங்க ரூபமுடைய க்ருஹத்தில் எல்லாத் தேவர்களையும் மிகத் துன்புறுத்தும் அந்நரகாஸுரன், அப்போது தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தொல்லை செய்தான்”] வசித்துத் தேவர்கள் அனைவரையும் ஒடுக்கிவந்த அந்தத் தானவன், எப்போதும் தேவர்களையும், ரிஷிகளையும் எதிர்த்து வந்தான்.

த்வஷ்டுர்து³ஹிதரம் பௌ⁴ம꞉ கஶேருமக³மத்ததா³ |
க³ஜரூபேண ஜக்³ராஹ ருசிராங்கீ³ம் சதுர்த³ஶீம் ||2-63-7

யானையின் வடிவை ஏற்ற அந்தப் பௌமன் {நரகாசுரன்}, துவஷ்டாவின்[துவஷ்டா என்பது பொதுவாகத் தேவதச்சனான விஷ்வகர்மனைக் குறிக்கும்] மகளும், அழகிய அங்கங்களைக் கொண்டவளுமான கசேரு, பதினான்கு வயதை அடைந்த போது அபகரித்துச் சென்றான்.

ப்ரமத்²ய தாம் வராரோஹாம் நரகோ வாக்யமப்³ரவீத் |
நஷ்டஶோகப⁴யோ மோஹாத்ப்ராக்³ஜ்யோதிஷபதிஸ்ததா³ ||2-63-8

ஜோதிஷத் தலைவன் {பிராக்ஜோதிஷ மன்னன் நரகன்}, அழகிய கன்னியரில் சிறந்தவளான அவளை அபகரித்துச் சென்று, கவலையும், அச்சமும் இல்லாதவனாகச் செருக்குடன் பின்வரும் சொற்களைச் சொன்னான்.

யாநி தே³வமநுஷ்யேஷு ரத்நாநி விவிதா⁴நி ச |
பி³ப⁴ர்தி ச மஹீ க்ருத்ஸ்நா ஸாக³ரேஷு ச யத்³வஸு ||2-63-9

அவன், “தேவர்களிடமும், மனிதர்களிடமும் இருக்கும் அனைத்து வகை ரத்தினங்களையும், பூமியில் ஒளிர்பவையும், மொத்தப் பெருங்கடலில் உள்ளவையுமான செல்வங்கள் அனைத்தையும்

அத்³யப்ரப்⁴ருதி தாநீஹ ஸஹிதா꞉ ஸர்வநைர்ருதா꞉ |
மமைவோபாஹரிஷ்யந்தி தை³த்யாஶ்ச ஸஹ தா³நவை꞉ ||2-63-10

தைத்திய, தானவர்களுடன் கூடிய அசுரர்கள் அனைவரும் இன்று முதல் எனக்கு (காணிக்கையாக) அளிக்கட்டும்” என்றான்.

ஏவமுத்தமரத்நாநி வஸ்த்ராணி விவிதா⁴நி ச |
ஸ ஜஹார ததா³ பௌ⁴மஸ்தச்ச நாதி⁴சகார ஸ꞉ ||2-63-11

இவ்வகையில் அந்தப் பௌமன் (நரகன்) சிறந்த ரத்தினங்களையும், பல்வேறு வகைத் துணிமணிகளையும் அடைந்தான். ஆனால் அவன் அவற்றைப் பயன்படுத்தாமல் இருந்தான்-

க³ந்த⁴ர்வாணாம் ச யா꞉ கந்யா ஜஹார நரகோ ப³லீ |
யாஶ்ச தே³வமநுஷ்யாணம் ஸப்த சாப்ஸரஸாம் க³ணா꞉ ||2-63-12

பலம்வாய்ந்தவனான அந்த நரகன், தேவர்கள், கந்தர்வர்கள், மனிதர்கள் ஆகியோரிடம் உள்ள கன்னிகையர் அனைவரையும், ஏழு வகை அப்சரஸ்களையும் கவர்ந்து சென்றான்.

சதுர்த³ஶ ஸஹஸ்ராணி ஏகவிம்ஶச்ச²தாநி ச |
ஏகவேணீத⁴ரா꞉ ஸர்வா꞉ ஸதீமார்க³மநுவ்ரதா꞉ ||2-63-13

இவ்வாறு ஒற்றைப் பின்னலுடன் கூடிய {கன்யா விரதம் பேணும்} தூய்மையான கன்னிகையர் பதினாறாயிரத்து நூறு {16100} பேர் {அவனிடம்} கொண்டு வரப்பட்டனர்

வைஶம்பாயந உவாச
தாஸாம் புரவரம் பௌ⁴மோ(அ)காரயந்மணிபர்வதம் |
அலகாயாமதீ³நாத்மா முரோ꞉ ஸ்வவிஷயம் ப்ரதி ||2-63-14

பலம்வாய்ந்தவனான பௌமன் {நரகன்}, தைத்தியனான முரனின் ஆட்சிப்பகுதிக்கு அருகில் அளகையில் {அளகாபுரியில்} உள்ள மணி மலையில் {மணிபர்வதத்தில்} அவர்களுக்காக {அந்தக் கன்னிகையருக்காக} ஒரு வீட்டை அமைத்தான்

தாஶ்ச ப்ராக்³ஜ்யோதிஷபதிம் முரோஶ்சைவ த³ஶாத்மஜா꞉ |
நைர்ருதாஶ்ச யதா² முக்²யா꞉ பாலயந்த உபாஸதே |
ஸ ஏஷ தமஸ꞉ பாரே வரத்³ருப்தோ மஹாஸுர꞉ |2-63-15

அங்கே முரனின் பத்து மகன்களும், அந்தக் கன்னியரும், முன்னணி ராட்சசர்கள் பிறரும் பிராக்ஜோதிஷ மன்னனின் ஆணையை ஏற்று அவனைத் துதித்து வந்தனர். ஓ! மன்னா பேரசுரனும், வரம்பெற்றவனுமான அந்த நரகன் நீலக் கடற்கரையில் வாழ்ந்து வந்தான்

ந சாஸுரக³ணை꞉ ஸர்வை꞉ ஸஹிதை꞉ கர்ம தத்புரா |
க்ருதபூர்வம் ததா³ கோ⁴ரம் யத³கார்ஷீந்மஹாஸுர꞉ ||2-63-16

அசுரர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகத் திரண்டாலும் கூட இந்தப் பேரசுரன் செய்த பயங்கரச் செயல்களைச் செய்ய முடியாது.

அதி³திம் த⁴ர்ஷயாமாஸ குண்ட³லார்தே² மஹாஸுர꞉ |
யம் மஹீ ஸுஷுவே தே³வீ யஸ்ய ப்ராக்³ஜ்யோதிஷம் புரம் ||2-63-17

ஓ! ஜனமேஜயா, பூமாதேவிக்குப் பிறந்தவனும், பிராக்ஜோதிஷத்தைத் தலைநகராகக் கொண்டவனுமான அந்தப் பேரசுரன் நரகன், {தேவர்களின் அன்னையான} அதிதியின் காது குண்டலங்களை அடைவதற்காக அவளையும் ஒடுக்கினான்.

த்³வாரபாலாஶ்ச சத்வாரஸ்தஸ்யாஸந்யுத்³த⁴து³ர்மதா³꞉ |
ஹயக்³ரீவோ நிஸுந்த³ஶ்ச வீர꞉ பஞ்சநத³ஸ்ததா² ||2-63-18

அவன், போரில் பயங்கரர்களும், ஹயக்ரீவன், நிசுந்தன், வீரன், பஞ்சநதன் என்ற பெயர்களைக் கொண்டவர்களுமான வாயில்காப்போர் நால்வரை கொண்டிருந்தான்.

முரு꞉ புத்ரஸஹஸரைஶ்ச வரத³த்தோ(அ)ஸுரோ மஹாந் |
ஆதே³வயாநமாவ்ருத்ய பந்தா²நம் ஸமுபஸ்தி²த꞉ |
வித்ராஸந꞉ ஸுக்ருதிநாம் விரூபை ராக்ஷஸை꞉ ஸஹ ||2-63-19

அந்தப் பேரசுரனும், முரனும், அவனது ஆயிரம் மகன்களும் வரங்களைப் பெற்றவர்களாக இருந்தனர். வடிவப்பழுது கொண்டவர்களான ராட்சசர்கள், தேவர்களின் பாதையில் தடையை ஏற்படுத்தியும், நற்செயல்களைச் செய்வோரை அச்சுறுத்தியும் வந்தனர்.

தத்³வதா⁴ர்த²ம் மஹாபா³ஹு꞉ ஶங்க²சக்ரக³தா³ஸிப்⁴ருத் |
ஜாதோ வ்ருஷ்ணிஷு தே³வக்யாம் வஸுதே³வாஜ்ஜநார்த³ந꞉ ||2-63-20

அவனை {நரகாசுரனை} அழிப்பதற்காகவே வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், சங்கு, சக்கரம், கதாயுதம், வாள் ஆகியவற்றை ஏந்தியவனுமான ஜனார்த்தனன், வசுதேவன் மூலம் தேவகியிடம் பிறந்தான்

தஸ்யாத² புருஷேந்த்³ரஸ்ய லோகப்ரதி²ததேஜஸ꞉ |
நிவாஸோ த்³வாரகா தே³வைருபாயாது³பபாதி³தா ||2-63-21

தேவர்கள் தங்களுக்குள் ஆலோசனை செய்து, பெரும்புருஷனும், பூமியில் ஆற்றலுக்காக நன்கறியப்பட்டவனுமான மாதவன் வசிப்பதற்காகத் துவாரகா நகரத்தைத் தேர்ந்தெடுத்தனர்

அதீவ ஹி புரீ ரம்யா த்³வாரகா வாஸவக்ஷயாத் |
மஹார்ணவபரிக்ஶிப்தா பஞ்சபர்வதஶோபி⁴தா ||2-63-22

பெருங்கடலால் சூழப்பட்டதும், ஐந்து மலைகளால் அழகூட்டப்பட்டதுமான அந்தத் துவாராவதி நகரம், அழகில் இந்திரனின் நகரைவிட {அமராவதியைவிட} சிறந்திருந்தது

தஸ்யாம் தே³வபுராபா⁴யாம் ஸபா⁴ காஞ்சநதோரணா |
ஸா தா³ஶார்ஹீதி விக்²யாதா யோஜநாயாமவிஸ்த்ருதா ||2-63-23

தத்ர வ்ருஷ்ண்யந்த⁴கா꞉ ஸர்வே ராமக்ருஷ்ணபுரோக³மா꞉ |
லோகயாத்ராமிமாம் க்ருத்ஸ்நாம் பரிரக்ஷந்த ஆஸதே ||2-63-24

தேவர்களின் சபாமண்டபத்திற்கு ஒப்பானதும், ஒரு யோஜனை அளவு கொண்டதும், தங்கத்தாலான பெரும் வாயில்களைக் கொண்டதுமான அந்நகரின் சபாமண்டபம் தாசார்ஹம் {தாசார்ஹீ} என்ற பெயரில் கொண்டாடப்பட்டது; ராமகிருஷ்ணர்களின் தலைமையிலான விருஷ்ணி, அந்தகக் குல முன்னணி உறுப்பினர்கள் அங்கே நாள்தோறும் தங்கள் பணிகளைச் செய்து வந்தனர்.(23,24)

தத்ராஸீநேஷு ஸவஷு கதா³சித்³ப⁴ரதர்ஷப⁴ |
தி³வ்யக³ந்தோ⁴ வவௌ வாயு꞉ புஷ்பவர்ஷம் பபாத ஹ ||2-63-25

ஓ! பாரதர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயனே}, ஒரு காலத்தில் யாதவர்கள் அந்த மண்டபத்தில் அமர்ந்திருந்தபோது, தெய்வீக மணங்கமழும் தென்றல் அங்கே வீசியது, மலர்மாரியும் அங்கே பொழிந்தது.

தத꞉ கிலகிலாஶப்³த³꞉ ப்ரபா⁴ஜாலாபி⁴ஸம்வ்ருத꞉ |
முஹூர்தமந்தரிக்ஷே(அ)பூ⁴த்ததோ பூ⁴மௌ ப்ரதிஷ்டி²த꞉ ||2-63-26

மத்⁴யே து தேஜஸஸ்தஸ்ய பாண்டு³ரம் க³ஜமாஸ்தி²த꞉ |
வ்ருதோ தே³வக³ணை꞉ ஸர்வைர்வாஸவ꞉ ஸமத்³ருஶய்த ||2-63-27

ஒரு கணத்தில் ஒளி வலையால் மறைக்கப்பட்ட பேரொலி வானத்தில் கேட்டது. அந்த ஒளிக்குள் தேவர்கள் சூழ வெள்ளை யானையில் அமர்ந்திருக்கும் வாசவன் {இந்திரன்} தென்பட்டான்.(26,27)

ரமக்ருஷ்ணௌ ச ராஜா ஸ வ்ருஷ்ண்யந்த⁴கக³ணை꞉ ஸஹ |
ப்ரத்யுத்³யயுர்மஹாத்மநம் பூஜயந்த꞉ ஸுரேஶ்வரம் ||2-63-28

ராமன் {பலராமன்}, கிருஷ்ணன், மன்னன் உக்ரசேனன் ஆகியோரும் முன்னணி யாதவர்கள் பிறரும் வெளியே சென்று தேவர்களின் மன்னனை வரவேற்றனர்.

ஸோ(அ)வதீர்ய க³ஜாத்தூர்ணம் பரிஷ்வஜ்ய ஜநார்த³நம் |
ஸஸ்வஜே ப³லதே³வம் ச தம் ச ராஜாநமாஹுகம் ||2-63-29

அதன் பிறகு அந்த யானைகளின் தலைவனிடம் {ஐராவதத்தில்} இருந்து விரைவாக இறங்கி வந்த தேவர்களின் மன்னன் {இந்திரன்}, ஜனார்த்தனனையும், பலதேவனையும், மன்னன் ஆஹுகனையும் {உக்ரசேனனையும்} ஆரத்தழுவிய பிறகு,

வ்ருஷ்நீநந்யாந்ஸஸ்வஜே ச யதா²காலம் யதா²வய꞉ |
பூஜிதோ ராமக்ருஷ்ணாப்⁴யாமாவிவேஶ ஸ தாம் ஸபா⁴ம் ||2-63-30

வயதுக்கும், தகுதிக்கும் ஏற்ற வகையில் பிற யாதவர்களையும் தழுவினான். அதன்பிறகு ராமகிருஷ்ணர்களால் துதிக்கப்பட்ட அவன் அந்த மகத்தான சபா மண்டபத்திற்குள் நுழைந்தான்.

தத்ராஸீநோ(அ)ப்⁴யலங்க்ருத்வா ஸபா⁴ம் தாமமரேஶ்வர꞉ |
அர்கா⁴தி³ஸமுதா³சாரம் ப்ரத்யக்³ருஹ்ணாத்³யதா²விதி⁴ ||2-63-31

தேவர்களின் மன்னன் அங்கே அமர்ந்து, அதைப் புகழ்ந்து, அர்க்கியத்தையும், விருந்தோம்பலுக்கான பிற பொருட்களையும் முறையாக ஏற்றுக் கொண்டான்.

வைஶம்பாயந உவாச
அதோ²வாச மஹாதேஜா வாஸவோ வாஸவாநுஜம் |
ஸாந்த்வபூர்வம் கரேணாஸ்ய ஸம்ஸ்ப்ருஶ்ய வத³நம் ஶுப⁴ம் ||2-63-32

அப்போது பெருஞ்சக்திவாய்ந்த வாசவன் {இந்திரன்}, தன் தம்பியின் (கிருஷ்ணனின்) மங்கல முகத்தைத் தன் கரங்களால் தீண்டிப் பின்வரும் தெளிவான சொற்களைச் சொன்னான்.

தே³வகீநந்த³ந வச꞉ ஶ்ருணு மே மது⁴ஸூத³ந |
யேந த்வாபி⁴க³தோ(அ)ஸ்ம்யத்³ய கார்யேணாமித்ரகர்ஶந ||2-63-33

{இந்திரன்}, “ஓ! தேவகியின் மகனே, ஓ! மதுசூதனா, ஓ! பகைவரைக் கொல்பவனே, நான் வந்த காரணத்தைக் கேட்பாயாக.

நைர்ருதோ நரகோ நாம ப்³ரஹ்மணோ வரத³ர்பித꞉ |
அதி³த்யா꞉ குண்ட³லே மோஹாஜ்ஜஹார தி³திநந்த³ந꞉ ||2-63-34

பேரசுரன் நரகன், பிரம்மனால் தனக்கு அளிக்கப்பட்ட வரத்தால் செருக்கடைந்த மூடத்தனத்தில், அதிதியின் காது குண்டலங்களைக் களவாடினான்.

தே³வாநாம் விப்ரியே நித்யம்ருஷீணாம் ச ஸ வர்ததே |
தம் ச தே³வாந்தரம் ப்ரேக்ஷ்ய ஜஹி த்வம் பாபபூருஷம் ||2-63-35

எப்போதும் தேவர்களுக்கும், பிராமணர்களுக்கும் பகையாகச் செயல்பட்டு வரும் அவன், சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறான். எனவே நீ அந்தப் பாவியைக் கொல்வாயாக.

அயம் த்வாம் க³ருட³ஸ்தத்ர ப்ராபயிஷ்யதி காமக³꞉ |
காமவீர்யோ(அ)திதேஜஸ்வீ வைநதேயோ(அ)ந்தரிக்ஷக³꞉ ||2-63-36

வினதையின் மகனும், பெருஞ்சக்திவாய்ந்தவனும், எப்போதும் வானத்தில் திரிபவனுமான இந்தக் கருடன் உன்னை அங்கே கொண்டு செல்வான்.

அவத்⁴ய꞉ ஸர்வபூ⁴தாநாம் பௌ⁴ம꞉ ஸ நரகோ(அ)ஸுர꞉ |
நிஷூத³யித்வா தம் பாபம் க்ஷிப்ரமாக³ந்துமர்ஹஸி ||2-63-37

ஓ! உபேந்திரா, பூமியின் மகனான நரகன் எந்த உயிரினத்தாலும் கொல்லப்பட முடியாதவனாவான். நீ அந்தப் பாவியை உடனே கொன்று திரும்புவாயாக” என்றான்.

இத்யுக்த꞉ புண்ட³ரீகாக்ஷோ தே³வராஜேந கேஶவ꞉ |
ப்ரதிஜஜ்ஞே மஹாபா³ஹுர்நரகஸ்ய நிப³ர்ஹணே ||2-63-38

தேவர்களின் மன்னனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், தாமரைக் கண்ணனுமான கேசவன், நரகனைக் கொல்வதாக உறுதியளித்தான்

தத꞉ ஸஹைவ ஶக்ரேண ஶங்க²சக்ரக³தா³ஸிப்⁴ருத் |
ப்ரதஸ்தே² க³ருடே³நாத² ஸத்யபா⁴மாஸஹாயவாந் ||2-63-39

அவன், தன் சங்கு, சக்கரம், கதாயுதம், வாள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, சத்யபாமாவுடன் சேர்ந்து கருடனின் முதுகில் அமர்ந்து கொண்டு சக்ரனுடன் விரைவாகப் புறப்பட்டுச் சென்றான்[“பூமாதேவியின் ஒப்புதலுடன் மட்டுமே நரகனின் மரணம் நேர முடியும். எனவே பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமாவின் ஒப்புதலுடன் மட்டுமே நரகனைக் கொல்ல முடியும்-ஹரிவம்சத்தின் தென்பாடத்தில் சத்யபாமாவுக்கும், நரகனுக்கும் இடையில் நடந்த போர் ஒரு முழு அத்தியாயமாகச் சொல்லப்பட்டிருக்கிறது”)

க்ரமேண ஸப்தஸ்கந்தா⁴ந்ஸ மருதாம் ஸஹவாஸவ꞉ |
பஶ்யதாம் யது³ஸிம்ஹாநாமூர்த்⁴வமாசக்ரமே ப³லீ ||2-63-40

அந்தக் கேசவன், முன்னணி யதுக்களின் கண்களுக்கு முன்பாகவே பெருஞ்சக்திவாய்ந்த கருடனின் துணையுடன், காற்று தேவர்களின் ஏழு பகுதிகளையும் {ஸப்த மருத்துகளின் இடங்களையும்} கடந்து உயர எழுந்தான்.

வாரணேந்த்³ரக³த꞉ ஶக்ரோ க³ருட³ஸ்தோ² ஜநார்த³ந꞉ |
விதூ³ரத்வாத்ப்ரகாஶேதே ஸூர்யாசந்த்³ரமஸாவிவ ||2-63-41

யானைகளின் தலைவன் மீது அமர்ந்திருந்த தேவர்களின் மன்னனும், கருடனின் மீது அமர்ந்திருந்த ஜனார்த்தனனும், {அவர்கள் சென்ற} தொலைவின் காரணமாகச் சூரியனையும், சந்திரனையும் போலத் தோன்றினர்.

அந்தரிக்ஷே ச க³ந்த⁴ர்வைரப்ஸரோபி⁴ஶ்ச கேஶவ꞉ |
ஸ்தூயமாநோ(அ)த² ஶக்ரஶ்ச க்ரமேணாந்தரதீ⁴யத ||2-63-42

அப்போது வானத்தில் அவர்களது மகிமைகளைப் பாடிக் கொண்டிருந்த கந்தர்வர்களும், அப்சரஸ்களும் மெதுவாக மறைந்தனர்.

ஸமாதா⁴யேதிகர்தவ்யம் வாஸவோ விபு³தா⁴தி⁴ப꞉ |
ஸ்வமேவ ப⁴வநம் ப்ராயாத்க்ருஷ்ண꞉ ப்ராக்³ஜ்யோதிஷம் ப்ரதி ||2-63-43

பிறகு கிருஷ்ணன் என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கிய தேவர்களின் மன்னன் {இந்திரன்} தன் வசிப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றதும், அவன் {கிருஷ்ணன்} பிராக்ஜோதிஷ நகரத்திற்குச் சென்றான்.

பக்ஷாநிலஹதோ வாயு꞉ ப்ரதிலோமம் வவௌ ததா³ |
ததோ பீ⁴மரவா மேகா⁴ ப³ப்⁴ரமுர்க³க³நேசரா꞉ ||2-63-44

அப்போது கருடனின் சிறகடிப்பால் காற்று முரண்திசையில் வீசியது, பயங்கர ஒலியெழுப்பும் மேகங்களால் பறவைகள் அஞ்சின

க்ஷநேந ஸமநுப்ராப்தௌ த்³விஜேநாகாஶகே³ந வை |
தூ³ராதே³வ ச தாந்த்³ருஷ்ட்வா ப்ரயயௌ யத்ர தே ஸ்தி²தா꞉ ||2-63-45

வானுலாவும் அந்தப் பறவையின் உதவியால் தான் விரும்பிய இடத்தை விரைவில் அடைந்த மாதவன், தொலைவிலிருந்தே வாயில் காப்போர் எங்கிருக்கின்றனர் என்பதைக் கண்டு அங்கே சென்றான்.

அபஶ்யத்³த்³வாரி தத்ரஸ்தா²ம் ஹஸ்த்யஶ்வரத²வாஹிநீம் |
க்ஷுராந்தாந்மௌரவாந்பாஶாந்ஷட்ஸஹஸ்ராந்த³த³ர்ஶ ஹ ||2-63-46

மணி மலையின் வாயிலை அடைந்த அவன், யானைகளையும், குதிரைகளையும், தேர்வீரர்களையும், கத்தி போன்று கூரிய ஆறாயிரம் சுருக்குக் கயிறுகளையும் {இரு முனைகளிலும் கத்திகள் தொங்கும் ஆறாயிரம் மௌரவப் பாசங்களையும் கண்டான்}

வைஶம்பாயந உவாச
க³ருட³ஸ்யோபரி ஶ்ரீமாஞ்ச²ங்க²சக்ரக³தா³த⁴ர꞉ |
பி³ப்⁴ரந்நீலாம்பு³தா³காரம் பீதவாஸாஶ்சதுர்பு⁴ஜ꞉ ||2-63-47

வநமாலாகுலோரஸ்க꞉ ஶ்ரீவத்ஸாங்கிதபூ⁴ஷண꞉ |
கிரீடமூர்த்³தா⁴ ஸூர்யாப⁴꞉ ஸவித்³யுதி³வ சந்த்³ரமா꞉ ||2-63-48

அழகனும், {கருடன் மீதிருந்தவனும்}, நாற்கரங்களில் சங்கு, சக்கரம், கதாயுதம், வாள் ஆகியவற்றை ஏந்தியவனும், கழுத்தில் காட்டு மலர்மாலை சூடியவனும், மார்பில் ஸ்ரீவத்ஸமெனும் சந்திரன் போன்ற மாயக்குறியைத் தாங்கியவனும், மின்னலின் துணையுடன் கூடிய சூரியனையோ, சந்தினையோ போன்ற பிரகாசமுடைய மகுடந்தரித்தவனும், நீலக் கடல் போலத் தெரிந்தவனும், மஞ்சள் ஆடை {பீதாம்பரம்} உடுத்தியவனுமான கிருஷ்ணனைக் கண்டும்,(47,48)

ஜ்யாம் விகூஜந்மஹாஶப்³த³꞉ ஶ்ரூயதே(அ)ஶநிநி꞉ஸ்வந꞉ |
ஜ்ஞாத்வா ச தா³நவ꞉ ஸர்வம் ஸ்வயம் விஷ்ணுரிஹாக³த꞉ ||2-63-49

வஜ்ரத்தின் இடிக்கு ஒப்பான அவனது வில்லின் நாணொலியைக் கேட்டும் வந்திருப்பவன் விஷ்ணு என்பதைத் தானவர்கள் புரிந்து கொண்டனர்

க்ரோதா⁴த்³த்³விகு³ணரக்தாக்ஷோ முரு꞉ காலாந்தகோபம꞉ |
அப்⁴யதா⁴வத வேகே³ந ஶக்திம் க்³ருஹ்ய மஹாஸுர꞉ ||2-63-50

காலனுக்கு ஒப்பானவனும், வைரத்தாலும், தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டவனுமான பேரசுரன் முரு, தன் சக்தி ஆயுதத்தை எடுத்துக் கொண்டு அவனை {கிருஷ்ணனை} நோக்கி விரைந்து சென்று அவன் மீது அந்தப் பேராயுதத்தை ஏவினான்

சிக்ஷேப ஸுமஹாஶக்திம் வஜ்ரகாஞ்சநபூ⁴ஷிதாம் |
தாமாபதந்தீம் ஶக்தீம் து மஹோல்காம் ஜ்வலிதாமிவ ||2-63-51

எரிகொள்ளியைப் போலத் தன்னை நோக்கி வரும் அந்தச் சக்தி ஆயுதத்தைக் கண்ட வாசுதேவன், பொன் இறகுகளைக் கொண்ட தன் கணைகளை எடுத்தான்.

ஸமாத⁴த்த ஶரம் சைகம் ருக்மபுங்க²ம் ஜநார்த³ந꞉ |
த்³விதா⁴ச்சி²நத்க்ஷுரப்ரேண வாஸுதே³வ꞉ ஸ வீர்யவாந் ||2-63-52

பெருஞ்சக்திவாய்ந்தவனான வாசுதேவன், மின்னலைப் போல் எரிந்து கொண்டிருந்த அந்தக் கணையை ஏவியபோது அஃது அந்தச் சக்தி ஆயுதத்தை இரண்டாக அறுத்தது.

ஶக்திம் சிச்சே²த³ தத்ராஸௌ வித்³யுத்புஞ்ஜ இவ ஜ்வலந் |
புநஶ்ச க்ரோத⁴ரக்தாக்ஷோ முருர்க்³ருஹ்ய மஹாக³தா³ம் ||2-63-53

அந்தச் சக்தி ஆயுதம் வெட்டப்பட்ட போது கோபத்தில் கண்கள் சிவந்த முரு, பெரும் கதாயுதம் ஒன்றை எடுத்து, தேவர்களின் மன்னன் வஜ்ரத்தை ஏவுவதைப் போல அதை ஏவினான்

இந்த்³ராஶநிரிவேந்த்³ரேண விக்ருஷ்ட இவ நி꞉ஸ்வந꞉ |
ஆகர்ணமுக்தம் சிக்ஷேப அர்த⁴சந்த்³ரம் ஸுரோத்தம꞉ ||2-63-54

மத்⁴யதே³ஶே து சிச்சே²த³ க³தா³ம் தாம் ருக்மபூ⁴ஷிதாம் |
புநஶ்சிச்சே²த³ ப⁴ல்லேந தா³நவஸ்ய ஶிரோ ரணே ||2-63-55

தேவர்களில் முதன்மையான கேசவன், பிறைவடிவம் கொண்ட தன் ஆயுதத்தை {அர்த்தச்சந்திர பாணத்தைக்} காது வரை இழுத்துப் பொன்னாலான அந்தக் கதாயுதத்தின் நடுப்பகுதியில் வெட்டினான். அதன் பிறகு ஒரு பல்லத்தைக் கொண்டு அந்தத் தானவனின் {முருவின்} தலையைக் கொய்தான்.(54,55)

ஸஞ்சி²த்³ய பாஶாண்ஸர்வாம்ஸ்தந்முரும் ஹத்வா ஸபா³ந்த⁴வம் |
ஸோ(அ)க்³ர்யாந்ரக்ஷோக³ணாந்ஹத்வா நரகஸ்ய மஹாப³லாந் ||2-63-56

அந்தத் தேவகி மகன் {கிருஷ்ணன்}, இவ்வாறு முருவையும், அவனது நண்பர்களையும் கொன்று, அவனது சுருக்குக் கயிறுகளையும் {பாசங்களையும்} அறுத்துப் பெருஞ்சக்திவாய்ந்த நரகனின் ராட்சசப் படைவீரர்களையும் கொன்றான்.

ஶிலாஸங்கா⁴நதிக்ரம்ய ப⁴க³வாந்தே³வகீஸுத꞉ |
அபஶ்யத்³தா³நவம் ஸைந்யம் நிஸுந்த³ம் ச மஹாப³லம் ||2-63-57

அவன் அந்த மலையைக் கடந்ததும், நிசுந்தனையும், திதியின் மகனான ஹயக்ரீவனையும், பல்வேறு வழிகளில் போரிடவல்ல பிற வீரர்களையும் கொண்ட தானவப் படையைக் கண்டான்

ஹயக்³ரீவம் ச தி³திஜம் ததா²ந்யாம்ஶ்சித்ரயோதி⁴ந꞉ |
ரோத⁴யாமாஸ தந்மார்க³ம் ஸ்வஸைந்யேந மஹாப³ல꞉ ||2-63-58

அதன் பிறகு, பெருஞ்சக்தி வாய்ந்தவனான நிசுந்தன், வேகமாகத் தன் தேரில் ஏறி, பொன்னாலான தெய்வீகக் கவசத்தை அணிந்து கொண்டு, தன் படையின் மூலம் கேசவனின் பாதையில் தடையை ஏற்படுத்தினான்

நிஸுந்தோ³ ப³லிநாம் ஶ்ரேஷ்டோ² ரத²மாருஹ்ய ஸத்வரம் |
ஜக்³ராஹ கார்முகம் தி³வ்யம் ஹேமப்ருஷ்ட²ம் து³ராஸத³ம் ||2-63-59

அதன் பிறகு அவன் {நிசுந்தன்}, {கார்முகம் என்ற தன் தெய்வீக வில்லை எடுத்துக் கொண்டு}, கேசியையும், மதுவையும் கொன்றவவனை {கேசவனை/ மதுசூதனனை} பத்துக் கணைகளால் துளைத்தான்.

விவ்யாத⁴ த³ஶபி⁴ர்பா³ணைர்நிஸுந்தோ³ மது⁴ஸூத³நம் |
கேஶவஶ்சாபி ஸப்தத்யா விவ்யாத⁴ நிஶிதை꞉ ஶரை꞉ ||2-63-60

அவனோ {கிருஷ்ணனோ} சிறகு படைத்த எழுபது கணைகளால் அந்தத் தானவனைப் பதிலுக்குத் தாக்கி, அவனது கணை தன்னை நெருங்கும் முன்பே வானத்தில் அதை அறுத்தான்

அப்ராப்தாம்ஶ்சாந்தரிக்ஷே தாஞ்ச²ராம்ஶ்சிச்சே²த³ மாத⁴வ꞉ |
தே ஸர்வே ஸைநிகா꞉ க்ருஷ்ணம் ஸமந்தாத்பர்யவாரயந் ||2-63-61

அப்போது கேசவனை அவனது {நிசுந்தனின்} படை முற்றிலும் சூழ்ந்து கொண்டது. தேவர்களில் முதன்மையான ஜனார்த்தனன் அவனது கணை வலையால் மறைக்கப்பட்டிருந்தாலும்,

ஶரஜாலேந மஹதா சா²த்³யமாந꞉ ஸுரோத்தம꞉ |
த்³ருஷ்ட்வா தாந்தா³நவாந்ஸர்வாந்ஸக்ரோதோ⁴ மது⁴ஸூத³ந꞉ ||2-63-62

ததோ தி³வ்யேந சாஸ்த்ரேந பார்ஜந்யேந ஜநார்த³ந꞉ |
மஹதா ஶரவர்ஷேண வாரயாமாஸ தத்³ப³லம் ||2-63-63

அந்தத் தானவர்களைக் கண்டு பெருஞ்சீற்றமடைந்து, மேகம்போன்ற ஆயுதங்களையும், கணைகள் பிறவற்றையும் மழையாகப் பொழிந்து அந்தத் தானவப்படையை எதிர்த்தான்.(62,63)

பஞ்சபஞ்சஶரைஸ்தேஷு ஏகைகேந ச தாந்ப³ஹூண் |
பார்ஜந்யஸ்ய ப்ரபா⁴வேண ஸர்வாந்மர்மஸ்வதாட³யத் ||2-63-64

து³த்³ருவுர்ப⁴யஸம்த்ரஸ்தா ப⁴க்³நாஸ்தே தா³நவா ரணே |
ஸ்வஸைந்யம் வித்³ருதம் த்³ருஷ்ட்வா நிஶ்சக்ராம புநர்ம்ருதே⁴ ||2-63-65

அதன் பிறகு அவர்கள் ஒவ்வொருவரையும் ஐந்து ஐந்து கணைகளால் தாக்கி, அவர்களின் முக்கியப் பகுதிகளை மேகம் போன்ற ஆயுதங்களால் துளைத்தான். அப்போது அந்தத் தானவப் படை அச்சத்தால் நிறைந்து போர்க்களத்தைவிட்டுத் தப்பி ஓடியது. இவ்வாறு தன் படை தப்பி ஓடுவதைக் கண்ட அவன் {நிசுந்தன்} மீண்டும் போரிட்டான்.(64,65)

விஸ்ருஜச்ச²ரவர்ஷாணி சா²த³யாமாஸ கேஶவம் |
ந விபா⁴தி ரணே ஸூர்யோ நாபி வ்யோம தி³ஶோ த³ஶ ||2-63-66

அவன் கணைமாரியால் கேசவனை மறைத்தான். அப்போது சூரியனோ, வானமோ, பத்துத் திக்குகளோ புலப்படவில்லை.

ஶரை꞉ ஸஞ்சா²த³யாமாஸ நிஸுந்தோ³ க³ருட³த்⁴வஜம் |
ஸாவித்ரம் நாம தி³வ்யாஸ்த்ரம் ஜக்³ராஹ புருஷோத்தம꞉ ||2-63-67

அதன்பிறகு புருஷர்களில் முதன்மையான ஹரி, சாவித்ரம் என்ற பெயர் கொண்ட தெய்வீக ஆயுதம் ஒன்றை எடுத்துக் கொண்டு போர்க்களத்தில் அவனது கணைகளை வெட்டி வீழ்த்தினான்.

தேந பா³ணேந தாந்பா³ணம்ஶ்சிச்சே²த³ ஸமரே ஹரி꞉ |
பா³ணைர்பா³ணாம்ஶ்ச ஸம்ச்சி²த்³ய தஸ்ய க்ருஷ்ணோ மஹாப³ல꞉ ||2-63-68

ச²த்ரமேகேந பா³ணேந ரதே²ஷாம் ச த்ரிபி⁴꞉ ஶரை꞉ |
புநஶ்சிச்சே²த³ தாநஶ்வாம்ஶ்சதுர்பி⁴ஶ்சதுர꞉ ஶரை꞉ ||2-63-69

பெருஞ்சக்திவாய்ந்த கிருஷ்ணன், தன் கணைகளால் தானவர்களின் கணைகளை வெட்டி, ஒரு கணையால் அவனது {நிசுந்தனின்} குடையையும், மூன்றால் அவனது தேரின் அச்சையும் வெட்டி வீழ்த்தினான். மேலும் நான்கு கணைகளால் அவனது நான்கு குதிரைகளை அழித்து,(68,69)

ஸாரதி²ம் பஞ்சபி⁴ர்பா³ணாஇர்த்⁴வஜமேகேந சிச்சி²தே³ ||
ஶரைகேந வபு꞉ க்ருஷ்ண꞉ ஸுதீக்ஷ்ணேந ஶிதேந வை ||2-63-70

ஶிரஶ்சிச்சே²த³ ப⁴ல்லேந நிஸுந்த³ஸ்ய ஸுரோத்தம꞉ |
ய꞉ ஸஹஸ்ரஸமாஸ்த்வேக꞉ ஸர்வாந்தே³வாநயோத⁴யத் ||2-63-71

ஐந்தால் அவனது சாரதியைக் கொன்று, ஒன்றால் அவனது கொடிக்கம்பத்தை வெட்டி வீழ்த்தினான். தேவர்களில் முதன்மையான கிருஷ்ணன், பழங்காலத்தில் தேவர்கள் ஆயிரம் வருடங்கள் போரிட்டும் வெல்லப்படமுடியாத அந்த நிசுந்தனின் தலையைக் கூர் முனை கொண்ட பல்லத்தால் அறுத்தான்.(70,71)

நிஸுந்த³ம் பதிதம் த்³ருஷ்ட்வா ஹயக்³ரீவ꞉ ப்ரதாபவாந் |
ஶிலாம் ப்ரக்³ருஹ்ய மஹதீம் தோலயாமாஸ தா³நவ꞉ ||2-63-72

மலையைப் போன்ற பிரகாசம் கொண்ட ஹயக்ரீவன், அசுரர்களில் முதன்மையான நிசுந்தன் இவ்வாறு கொல்லப்பட்டதைக் கண்டு, பெரும்பாறை ஒன்றை எடுத்து பெருவிசையுடன் அதை எறிந்தான்.(71,72)

ஆவித்⁴ய ஸஹஸாமுஞ்சச்சி²லாம் ஶைலஸமாம் ப்ரபு⁴꞉ |
க்³ருஹீத்வா தி³வ்யபார்ஜந்யமஸ்த்ரமஸ்த்ரவிதா³ம் வர꞉ ||2-63-73

ஆயுதப் பயன்பாட்டை நன்கறிந்தவர்களில் முதன்மையான விஷ்ணு, மேகம்போன்ற தன் தெய்வீக ஆயுதத்தை {பார்ஜன்யாயுதத்தை} எடுத்து அந்தப் பாறையை ஏழு துண்டுகளாக நொறுக்கினான்

தி³வ்யாஸ்த்ரேண ஶிலாம் விஷ்ணு꞉ ஸப்ததா⁴க்ருத தேஜஸா |
தத்³விதா³ர்ய மஹச்சாஶ்ம பாதயாமாஸ பூ⁴தலே ||2-63-74

அந்தக் கற்கள் பூமியில் விழுந்தன. ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, சாரங்க வில்லில் இருந்து ஏவப்பட்ட பல்வேறு வண்ணங்களிலான பெருங்கணைகளால், தேவாசுரப் போரைப் போன்று பல்வேறு ஆயுதங்கள் நிறைந்த பயங்கரப் போர் அங்கே நேரிட்டது.

ததஸ்தை꞉ ஶார்ங்க³நிர்முக்தைர்நாநாவர்ணைர்மஹாஶரை꞉ |
யதா² தே³வாஸுரம் யுத்³த⁴மப⁴வத்³ப⁴ரதர்ஷப⁴ |
நாநாப்ரஹரணாகீர்ணம் ததா² கோ⁴ரமவர்தத ||2-63-75

தத꞉ ஶார்ங்க³விநிர்முக்தைர்நாநாவர்ணைர்மஹாஶரை꞉ |
க³ருட³ஸ்தோ² மஹாபா³ஹுர்நிஜகா⁴ந மஹாஸுராந் ||2-63-76

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஜனார்த்தனன் இவ்வாறு கருடன் மீது அமர்ந்து கொண்டு அசுரர்களை அழிக்கத் தொடங்கினான்;(75,76)

மஹாலாங்க³லநிர்பி⁴ந்நா꞉ ஶங்க²ஶக்திநிபாதிதா꞉ |
விநேஶுர்தா³நவா꞉ ஸர்வே ஸமாஸாத்³ய ஜநார்த³நம் ||2-63-77

நாராயணனை அணுகிய தானவர்கள் அனைவரும் பெரும் கலப்பையால் தாக்கப்பட்டு, கணைகளாலும், வாள்களாலும் கொல்லப்பட்டனர்.

கேசிச்சக்ராக்³நிநிர்த³க்³தா⁴ தா³நவா꞉ பேதுரம்ப³ராத் |
ஸம்நிகர்ஷக³தா꞉ கேசித்³க³தாஸுவிக்ருதாநநா꞉ ||2-63-78

சிலர், {சுதர்சனச்} சக்கரத்தின் நெருப்பால் எரிக்கப்பட்டு வானில் இருந்து விழுந்தனர், சிலர் அருகில் நெருங்கி கடும் முகத்துடன் தங்கள் ஆவியை {உயிரை} விட்டனர்.

அஸ்ருஜச்ச²ரவர்ஷாணி வ்ருஷ்டிமந்த இவாம்பு³தா³꞉ |
விக்ருதாங்கா³ஸுரா꞉ ஸர்வே க்ருஷ்ணபா³ணப்ரபீடி³தா꞉ ||2-63-79

பல வழிகளில் போரிடவல்ல சில அசுரர்கள், கிருஷ்ணனின் கணைகளால் சிதைக்கப்பட்டாலும், நீர்த்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலத் தங்கள் கணைமாரியைப் பொழியத் தொடங்கினர்

ஶோணிதாக்தா꞉ ஸ்ம த்³ருஶ்யந்தே புஷ்பிதா இவ கிம்ஶுகா꞉ |
வ்யத்³ரவந்த ஸுவித்ரஸ்தா ப⁴க்³நாஸ்த்ராஹ்ஸ்சித்ரயோதி⁴ந꞉ ||2-63-80

மலர்ந்த கின்சுக மரங்களைப் போல மேனியில் குருதி பூசப்பட்ட அவர்கள் தங்கள் நொறுங்கிய ஆயுதங்களுடன் அச்சத்தால் நிறைந்து ஓட்டம் பிடித்தனர்.

புநஶ்ச க்ரோத⁴ரக்தாக்ஷோ வாயுவேகே³ந தா³நவ꞉ |
த³ஶவ்யாமோச்ச்²ரிதம் வ்ருக்ஷம் ஸமாருஹ்ய வநஸ்பதிம் ||2-63-81

இதனால் கோபத்தில் கண்கள் சிவந்து வெந்த தானவன் ஹயக்ரீவன், காற்றின் வேகத்துடன் கூடியவனாகப் பத்துப் பாகம் உயர்ந்த {அறுபது அடி உயரம் கொண்ட வனஸ்பதி [பாதிரி]} மரத்தைப் பிடுங்கினான்.

வ்ருக்ஷமுத்பாட்ய வேகே³ந ப்ரதிக்³ருஹ்யாப்⁴யதா⁴வத |
சிக்ஷேப ஸ மஹாவ்ருக்ஷம் ஶிக்ஷயா ஸுக⁴நாக்ருதி꞉ ||2-63-82

வ்ருக்ஷவேகா³நிலோத்³பூ⁴த꞉ ஶுஶ்ருவே ஸுமஹாஸ்வந꞉ |
தத꞉ ஶரஸஹஸ்ரேண யதமாநோ ஜநார்த³ந꞉ ||2-63-83

மேகவண்ணம் கொண்ட ஹயக்ரீவன், அம்மரத்தை வேரோடு பிடுங்கி விரைந்து சென்று, தன் பயிற்சியின் விளைவால் அந்த மரம் காற்றில் கடந்து செல்லும் போது ஏற்படும் பேரொலி அனைவராலும் கேட்கப்படும் வகையில் அதை எறிந்தான். ஜனார்த்தனன் ஓராயிரம் கணைகளால் அம்மரத்தைப் பல துண்டுகளால் வெட்டி,(82,83)

நைகதா⁴ தம் ப்ரசிச்சே²த³ சித்ரப⁴க்திநிபா⁴க்ருதிம் |
புநஶ்சைகேந பா³ணேந ஹயக்³ரீவஸ்ய சோரஸி ||2-63-84

ஒரு கணையால் ஹயக்ரீவனின் மார்பில் தாக்கினான். நெருப்பு போல எரிந்த அந்தக் கணை

விவ்யாத⁴ ஸ்தநயோர்மத்⁴யே ஸாயகோ ஜ்வலநப்ரப⁴꞉ |
விவேஶ ஸோ(அ)பி வேகே³ந ஹ்ருத³ம் பி⁴த்த்வா விநிர்க³த꞉ ||2-63-85

பெரும் வேகத்துடன் அந்தத் தானவனின் மார்புக்குள் நுழைந்து, அவனது முக்கிய அங்கங்களைத் துளைத்தபடியே வெளியே வந்தது

தம் ஜகா⁴ந மஹாகோ⁴ரம் ஹயக்³ரீவம் மஹாப³லம் |
அபாரதேஜா து³ர்த்³த⁴ர்ஷ꞉ ஸ வை யாத³வநநத³ந꞉ ||2-63-86

பயங்கரனும், அளவற்ற ஆற்றலைக் கொண்டவனும், யாதவர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனுமான ஏற்கனவே தேவர்களுடன் ஓராயிரம் வருடம் தனிமையில் போரிட்டவனும், தடுக்கப்பட முடியாதவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான ஹயக்ரீவனை ஜனார்த்தனன் கொன்றான்.

மத்⁴யே லோஹிதக³ங்க³ஸ்ய ப⁴க³வாந்தே³வகீஸுத꞉ |
ஔத³காயாம் விரூபாக்ஷம் பாப்மாநம் புருஷோத்தம꞉ ||2-63-87

அஷ்டௌ ஶதஸஹஸ்ராணி தா³நவாநாம் பரம்தப꞉ |
நிஹத்ய புருஷவ்யாக்⁴ர꞉ ப்ராக்³ஜ்யோதிஷமுபாத்³ரவத் ||2-63-88

புருஷர்களில் முதன்மையானவனும், பகைவரைக் கொல்பவனும், தலைவனுமான அந்தத் தேவகியின் மகன் கிருஷ்ணன், கடும் முகம் கொண்டவனும், கொடியவனுமான ஹயக்ரீவனை, லோஹிதங்க மாகாணத்தில் மதில்களால் சூழப்பட்ட ஒரு நகரத்தில் இவ்வாறு கொன்றுவிட்டு, எட்டு லட்சம் {800000} தானவர்களையும் கொன்றுவிட்டு பிராக்ஜோதிஷ நகருக்குப் புறப்பட்டுச் சென்றான்.(87,88)

ஹத்வா பஞ்சநத³ம் நாம நரகஸ்ய மஹாஸுரம் |
தத꞉ ப்ராக்³ஜ்யோதிஷம் நாம தீ³ப்யமாநமிவ ஶ்ரியா ||2-63-89

பெருஞ்சக்தி கொண்ட கேசவன், ஒளிர்ந்து கொண்டிருந்த பிராக்ஜோதிஷ நகரத்திற்குள் நுழைந்து,

புரமாஸாத³யாமாஸ யுத்³த⁴ம் தத்ராப⁴வந்மஹத் |
தத꞉ ப்ராத்⁴மாபயச்ச²ங்க²ம் பாஞ்சஜந்யம் மஹாப³ல꞉ ||2-63-90

ஶுஶ்ருவே ஸுமஹாஶப்³த³꞉ ஸம்வர்தநிநதோ³ யதா² |
ஶ்ரூயதே த்ரிஷு லோகேஷு பீ⁴மக³ம்பீ⁴ரநி꞉ஸ்வந꞉ |
தம் ஶ்ருத்வா நரகஶ்சாஸீத்க்ரோத⁴ஸம்ரக்தலோசந꞉ ||2-63-91

பல போர்களைச் செய்து, நரகனின் தொண்டனான பேரசுரன் பஞ்சனனைக் கொன்று, தன் சங்கான பாஞ்சஜன்யத்தை முழக்கினான். மேக முழக்கத்தையும், சுழலையும் போன்ற பயங்கரமான அந்த முழக்கம், மூவுலகம் எங்கும் கேட்டுக் கொண்டிருந்தது. அவ்வொலியைக் கேட்ட வீரன் நரகனின் கண்கள் கோபத்தால் சிவந்தன.(90,91)

லோஹசக்ராஷ்டஸம்யுக்தம் த்ரிநல்வப்ரதிமம் ரத²ம் |
ரத்நகாஞ்சநசித்ராட்⁴யம் வேதி³காபோ⁴க³விஸ்தரம் ||2-63-92

தன்னுடைய தெய்வீகத் தேரில் ஏறிக் கொண்ட அவன் {நரகாசுரன்}, மாலை நேரச் சூரியனைப் போல ஒளிர்ந்தான். இரும்பாலான எட்டுச் சக்கரங்களைக் கொண்ட அது {அந்தத் தேர்} பொன் வண்ணத்தாலும், சிவப்பு வண்ணத்தாலும் பூசப்பட்டதாகவும், அகன்ற இருக்கைகளைக் கொண்டதாகவும்,

வஜ்ரத்⁴வஜேந மஹதா காஞ்சநேந விராஜிதம் |
ஹேமத³ண்ட³பதாகாட்⁴யம் வைதூ³ர்யமணிகூப³ரம் ||2-63-93

தங்கக் கொடிமரத்தில் தங்கக் கொடிகளையும், முக்கோணக் கொடிகளையும் கொண்டதாகவும் இருந்தது. வைரங்களாலும் {வைடூரியங்களாலும்}, முத்துக்களாலும் அமைந்த அச்சைக் கொண்டதாகவும்,

யுக்தமஶ்வஸஹஸ்ரேண ரத²ம் பரரதா²ருஜம் |
லோஹஜாலைஶ்ச ஸஞ்ச²ந்நம் சித்ரப⁴க்திவிராஜிதம் ||2-63-94

ஆயிரம் குதிரைகளால் இழுக்கப்படுவதாகவும், இரும்பு வலையால் மறைக்கப்பட்டதாகவும், பல்வேறு ஆயுதங்கள் நிறைந்ததாகவும, பொன்னாலானதாகவும் இருந்தது

ரத²மத்⁴யக³தோ வீர꞉ ஸஸந்த்⁴ய இவ பா⁴ஸ்கர꞉ |
நாநாப்ரஹரணாகீர்ணம் ரத²ம் ஹேமபரிஷ்க்ருதம் ||2-63-95

வஜ்ரம் ரதோ²ரச்ச²த³மிந்து³வர்ணம்
வ்யாநத்³த⁴முக்தாமலதுல்யதேஜா꞉ |
கிரீடமூர்த்³தா⁴ர்கஹுதாஶநாப⁴꞉
கர்நௌ ததா² குண்ட³லயோர்ஜ்வலந்தௌ ||2-63-96

அந்நேரத்தில் நரகனின் முகம் எரிகொள்ளியைப் போலப் பிரகாசிப்பதாகத் தெரிந்தது. வெண்மையானதும், சந்திரனைப் போன்றதுமான மார்புக் கவசத்துடன் அவன் அழகாகத் தெரிந்தான். சூரியனைப் போன்ற ஒளிமிக்க மகுடம் அவனது தலையில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. காது குண்டலங்களால் அவனது காதுகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன.(95,96)

தூ⁴ம்ரவர்ணா மஹாகாயா ரக்தாக்ஷா விக்ருதாநநா꞉ |
நாநாகவசிந꞉ ஸர்வே தை³த்யதா³நவராக்ஷஸா꞉ ||2-63-97

கடும் முகமும், பழுப்பு வண்ணம் கொண்டவர்களும், பேருடல் படைத்தவர்களுமான தைத்தியர்களும், தானவர்களும், பல்வேறு கவசங்களைத் தரித்துக் கொண்டு ராட்சசர்களுடன் சேர்ந்து வெளிப்பட்டனர்;

க²ட்³க³சர்மத⁴ரா꞉ கேசித்கேசித்தூர்ணத⁴நுர்ப்⁴ருத꞉ |
ஶக்திஹஸ்தாஸ்ததா² கேசிச்சூ²லஹஸ்தாஸ்ததா²பரே ||2-63-98

அவர்களில் சிலர் வாள்களையும், கேடயங்களையும் கொண்டிருந்தனர், சிலர் கணைகளையும், அம்பறாத்தூணிகளையும் கொண்டிருந்தனர், சிலர் சக்திகளையும், சிலர் ஈட்டிகளையும் {சூலங்களையும்} கொண்டிருந்தனர்.

க³ஜவாஜிரதௌ²கை⁴ஶ்ச காலயந்தஶ்ச மேதி³நீம் |
நிர்யயுர்நக³ராத்ஸர்வே ஸுஸந்நத்³தா⁴꞉ ப்ரஹாரிண꞉ ||2-63-99

நல்ல உடற்கட்டைப் பெற்றவர்களும், போரில் திறம்பெற்றவர்களுமான அந்த வீரர்கள், யானைகளையும், குதிரைகளையும் செலுத்திக் கொண்டு, பூமி அதிர அந்த நகரத்தைவிட்டு வெளியே வந்தனர்.

வ்ருதோ தை³த்யக³ணை꞉ ஸார்த⁴ம் நரக꞉ காலஸம்நிப⁴꞉ |
பே⁴ரீஶங்க²ம்ருத³ங்கா³நாம் பணவாநாம் ஸஹஸ்ரஶ꞉ ||2-63-100

காலனைப் போன்றவனான நரகன், தைத்தியர்கள் சூழ வந்த போது, ஆயிரக்கணக்கான பேரிகள், சங்குகள், மிருதங்கங்கள், பணவங்கள் ஆகியவற்றின் ஒலிகள் மேக முழக்கத்திற்கு ஒப்பாக அனைத்துப் பக்கங்களிலும் கேட்டது.

வாத்³யமாநாநி ஶுஶ்ராவ ஜீமூதநிநதோ³பம꞉ |
யத꞉ க்ருஷ்ணஸ்ததோ க³த்வா ஸர்வே தே விக்ருதாநநா꞉ ||2-63-101

பரிவார்ய க³ருத்மந்தம் ஸர்வே(அ)யுத்⁴யந்த ஸங்க³தா꞉ |
மஹதா சா²த³யாமாஸு꞉ ஶரவர்ஷேண ஸைநிகா꞉ ||2-63-102

கடும் முகம் கொண்ட அந்த வீரர்கள் ஒற்றுமையுடன் சேர்ந்து கிருஷ்ணன் காத்திருந்த இடத்திற்குச் சென்று அவனோடு போர்புரியத் தொடங்கினர். அந்தப் படைவீரர்கள் தங்கள் கணைமாரியால் வாசுதேவனை மறைத்தனர்.(101,102)

ஶக்திஶூலக³தா³ப்ராஸாம்ஸ்தோமராந்ஸாயகாந்ப³ஹூந் |
ஆகாஶம் சா²த³யாமாஸுர்விமுஞ்சந்த꞉ ஸஹஸ்ரஶ꞉ ||2-63-103

அவர்கள், ஆயிரக்கணக்கான சக்திகளையும், கதாயுதங்களையும், வேல்களையும், கணைகளையும் ஏவி ஆகாயத்தை மறைத்தனர்.

க்ருஷ்ண꞉ க்ருஷ்ணோம்பு³தா³கார꞉ ஶார்ங்க³ம் க்³ருஹ்ய த⁴நுஸ்தத꞉ |
விஸ்பா²ர்ய ஸுமஹச்சாபம் த⁴நுர்ஜலத³நி꞉ஸ்வநம் ||2-63-104

கருநீல மேகம் போலத் தெரிந்த ஜனார்த்தனன், மேக முழக்கத்தைப் போல நாணொலி எழுப்பும் தன் சாரங்க வில்லை அப்படியும், இப்படியும் அசைத்து,

வ்யஸ்ருஜச்ச²ரவர்ஷாணி தா³நவாநாம் ஜநார்த³ந꞉ |
ஶரவர்ஷேண தத்ஸைந்யம் வ்யத்³ரவத்து மஹாஹவாத் ||2-63-105

தானவர்கள் மீது கணைமாரியைப் பொழியத் தொடங்கினான். பெருஞ்சக்தி வாய்ந்த அந்தப் படைவீரர்கள் இதன் காரணமாகப் பெரிதும் தாக்கப்பட்டனர்.

தத்³யுத்³த⁴மப⁴வத்³கோ⁴ரம் கோ⁴ரரூபேண ரக்ஷஸா |
ப⁴க்³நவ்யூஹாஶ்ச தே ஸர்வே க்ருஷ்ணபா³ணப்ரபீடி³தா꞉ ||2-63-106

இவ்வாறே அந்த இடத்தில் அவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, கடுந்தோற்றம் கொண்ட ராட்சசர்களுக்கும் இடையில் ஒரு பயங்கரப் போர் நடந்தது; கிருஷ்ணனின் கணைகளால் காயமடைந்த தானவர்கள் முறியடிக்கப்பட்டனர்.

கேசிச்சி²ந்நபு⁴ஜாஶ்சைவ ச்சி²ந்நக்³ரீவாஶிராநநா꞉ |
கேசிச்சக்ரத்³விதா⁴ச்சி²ந்நா꞉ கேசித்³பா³ணார்தி³தோரஸ꞉ ||2-63-107

சில தானவர்களின் கைகள் நொறுங்கியிருந்தன; சிலரின் தலையிலும், கழுத்திலும் காயம் ஏற்பட்டிருந்தது; சிலர் சக்கரத்தால் இரண்டாகப் பிளக்கப்பட்டிருந்தனர்; மேலும் சிலர் கணைகளால் மார்பில் காயமடைந்திருந்தனர்.

கேசித்³த்³விதா⁴க்ருதா꞉ ஶக்த்யா க³ஜாஶ்வரத²வாஹநா꞉ |
கேசித்கௌமோத³கீபி⁴ந்நா꞉ கேசிச்சக்ரவிதா³ரிதா꞉ ||2-63-108

தேர்வீரர்களிலும், யானை மாவுத்தர்களிலும், குதிரைப்படையினரிலும் சிலர் இரண்டாக வெட்டப்பட்டிருந்தனர், சிலர் கணைகளாலும், வேல்களாலும் காயமடைந்திருந்தனர்.

ஏவம் விமதி²தா ஸர்வா நராஶ்வரத²வாஹிநீ |
தத்ராஸீந்நரகேணாஸ்ய யுத்³த⁴ம் பரமதா³ருணம் ||2-63-109

இவ்வாறே யானைகளையும், குதிரைகளையும், தேர்களையும் கொண்டிருந்த அந்த மொத்தப் படையும் முழுமையாக நொறுங்கியிருந்தது. அப்போது அவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, நரகனுக்கும் இடையில் ஒரு பயங்கரப் போர் நேரிட்டது

யத்ஸமாநேந வக்ஷ்யாமி தந்மே நிக³த³த꞉ ஶ்ருணு |
த்ராஸந꞉ ஸுரஸங்கா⁴நாம் நரக꞉ புருஷோத்தமம் ||2-63-110

யோத⁴யாமாஸ தேஜஸ்வீ மது⁴வந்மது⁴ஸூத³நம் |
க்ரோத⁴ரக்தாந்தநயநோ நரகோ க⁴நஸம்நிப⁴꞉ ||2-63-111

நான் சுருக்கமாகச் சொல்கிறேன் கேட்பாயாக. தேவர்களுக்குப் பயங்கரனும், பேராற்றல் வாய்ந்தவனுமான நரகன், புருஷர்களில் முதன்மையான மதுசூதனனுடன் அந்த மதுவைப் போலவே போரிட்டான். காலனைப் போன்ற அந்த வீர நரகன், அந்தப் போரில் சிவந்த கண்களுடன்(110,11)

ஜக்³ராஹ கார்முகம் வீர꞉ ஶக்ரசாபமிவோச்ச்²ரிதம் |
ததா²ர்ககிரணப்ரக்²யம் பா³ணம் ஜக்³ராஹ கேஶவ꞉ ||2-63-112

சக்ரனின் வில்லுக்கு ஒப்பான {கார்முகம் என்றழைக்கப்பட்ட} பெரும் வில்லை எடுத்த போது, சூரியனின் கடுங் கதிரைப் போன்ற ஒரு கணையை எடுத்துக் கொண்ட கேசவன்,

தி³வ்யேநாஸ்த்ரேண ஸமரே பூரயாமாஸ தம் ரத²ம் |
உத்தமாஸ்த்ரம் மஹாபாதம் முமோச நரகோ ப³லீ ||2-63-113

தெய்வீக ஆயுதங்களால் அவனது தேரை நிரப்பினான். பெருஞ்சக்திவாய்ந்த நரகன் பெரும் ஆயுதம் {மஹாபாதம்} ஒன்றை எடுத்துக் கொண்டு

வஜ்ரவிஸ்பூ²ர்ஜிதாகாரமாயாந்தம் வீக்ஷ்ய கேஶவ꞉ |
சிச்சே²தா³ஸ்த்ரம் மஹாபா⁴க³ஶ்சக்ரேண மது⁴ஸூத³ந꞉ ||2-63-114

போர்வெறி கொண்டவனும், மின்னலைப் போன்று பிரகாசிக்கும் முகத்தைக் கொண்டவனும், மதுசூதனனுமான அந்தப் பெரும் ஜனார்த்தனனை எதிர்கொண்டபோது, அவன் தன்னுடைய சக்கரத்தால் அந்த ஆயுதத்தை வெட்டி,

வ்யஹநத்ஸ ரத²ம் சாஸ்ய ஶரைகேண ஜநார்த³ந꞉ |
ஸரத²ம் ஸத்⁴வஜம் ஸாஶ்வம் ஜகா⁴ந த³ஶபி⁴꞉ ஶரரை꞉ ||2-63-115

கணை ஒன்றால் அவனுடைய தேரோட்டியை யமனுலகுக்கு அனுப்பி வைத்தான். பிறகு அந்த மதுசூதனன் பத்துக் கணைகளால் குதிரைகளுடன் கூடிய தேரையும், கொடிமரங்களையும் அழித்து,

தநுத்ரம் சைவ சிச்சே²த³ ஶரேண மது⁴ஸூத³ந꞉ |
ததோ விமுக்தகவச꞉ ஸர்பஸ்யேவ தநுர்யதா² ||2-63-116

மற்றொரு கணையால் அவனது கவசத்தையும் அறுத்தான். குதிரைகள் கொல்லப்பட்டு, சட்டை இழந்த பாம்பைப் போலக் கவசமும் அறுக்கப்பட்ட அந்த வீர தானவன் நரகன்,

ஹதாஶ்வோ(அ)பி ரணே வீரோ விதநுத்ரஶ்ச தா³நவ꞉ |
ஜக்³ராஹ விமலஜ்வாலம் லோஹபா⁴ரார்பிதம் த்³ருட⁴ம் ||2-63-117

மின்னலைப் போன்ற பிரகாசமிக்க இரும்பு ஈட்டியை {சூலத்தைத்} திடீரென எடுத்து, அதைச் சுழற்றி வீசினான்.

ஆவித்⁴ய ஸஹஸா முக்தம் ஶூலமிந்த்³ராஶநிப்ரப⁴ம் |
ததா³பதத்ஸ ஸம்ப்ரேக்ஷ்ய ஶூலம் ஹேமபரிஷ்க்ருதம் ||2-63-118

அற்புதச் செயல்களைச் செய்யும் கிருஷ்ணன், பொன்னால் மறைக்கப்பட்ட அந்த ஈட்டி தன்னை நோக்கி வருவதைக் கண்டு கத்தி வடிவம் கொண்ட தன்னுடைய ஆயுதத்தால் {க்ஷுரப்ரத்தால்} அதை இரண்டாக வெட்டி வீழ்த்தினான்

த்³விதா⁴ சி²ந்நம் க்ஷுரப்ரேண க்ருஷ்ணேநாத்³பு⁴தகர்மணா |
தத்³யுத்³த⁴மப⁴வத்³கோ⁴ரம் கோ⁴ரரூபேண ரக்ஷஸா ||2-63-119

இவ்வாறே பெருஞ்சக்திவாய்ந்தவனும், கடும் முகம் கொண்ட ராட்சசனுமான நரகனுடன் மிகச் சிறந்த ஆயுதங்கள் நிறைந்த பயங்கரப் போர் நடந்தது.

ஶஸ்த்ரபாதமஹாகா⁴தம் நரகேந மஹாத்மநா |
முஹூர்தம் யோத⁴யாமாஸ நரகம் மது⁴ஸூத³ந꞉ ||2-63-120

நரகனுடன் போரிட்டுக் கொண்டிருந்த பயங்கரனான ஜனார்த்தனன், ஒரே கணத்தில் தன் பிரகாசமிக்கச் சக்கரத்தால் அவனை {நரகாசுரனை} இரண்டாக வகுந்தான்.

அதோ²க்³ரசக்ரஶ்சக்ரேண ப்ரதீ³ப்தேநாகரோத்³த்³விதா⁴ |
சக்ரத்³விதா⁴க்ருதம் தஸ்ய ஶரீரமபதத்³பு⁴வி ||2-63-121

விப⁴க்தம் குலிஶேநைவ கி³ரே꞉ ஶ்ருங்க³ம் த்³விதா⁴க்ருதம் |
க்ருஷ்ணமாஸாத்³ய தே³வேஶம் ஜகா³மாஸ்தமிவாம்ஶுமாந் ||2-63-122

சக்கரத்தால் இரண்டாக வெட்டப்பட்ட அவனது உடல், இடியால் தகர்க்கப்பட்ட மலையைப் போலப் பூமியில் இரண்டாக விழுந்தது. கிருஷ்ணனைப் போன்ற கருமேகங்களால் சூரியன் மறைக்கப்பட்டதைப் போலத் தெரிந்தது.(121,122)

சக்ரோத்க்ருந்திதகா³த்ரோ(அ)ஸௌ தா³நவ꞉ பதிதோ ரணே |
வஜ்ரப்ரஹாரநிர்பி⁴ந்நம் யதா² கை³ரிகபர்வதம் ||2-63-123

சக்கரத்தால் வெட்டப்பட்ட அவனது தலை, வஜ்ரத்தால் தகர்க்கப்பட்ட தாது மலையைப் போலப் போர்க்களத்தில் தோன்றியது[நரகாசுரனைக் கொல்லும் இந்தப் பகுதி மஹாபாரதம் வனபர்வம் அத்யாயம் 141ல் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ].

பூ⁴மிஸ்து பதிதம் புத்ரம் நிரீக்ஷ்யாதா³ய குண்ட³லே |
உபாதிஷ்ட²த கோ³விந்த³ம் வசநம் சேத³மப்³ரவீத் ||2-63-124

த³த்தஸ்த்வயைவ கோ³விந்த³ த்வயைவ விநிபாதித꞉ |
யதே²ச்ச²ஸி ததா² க்ரீட³ பா³ல꞉ க்ரீட³நகைரிவ ||2-63-125

இமே தே குண்ட³லே தே³வ ப்ரஜாஸ்தஸ்யாநுபாலய ||2-63-126

தன் மகன் கொல்லப்பட்டதைக் கண்ட பூமி {பூமாதேவி}, காது குண்டலங்கள் இரண்டுடன் கோவிந்தனிடம் வந்து, “ஓ! கோவிந்தா, பொம்மைகளுடன் விளையாடும் சிறுவனைப் போல விளையாடுகிறீர். நீர் கொடுத்தவனை உமது கையால் நீரே கொன்றுவிட்டீர். எனினும், ஓ! தலைவா, நீர் நரகனைக் கொல்வதற்குக் காரணமான இந்தக் குண்டலங்களை ஏற்றுக் கொண்டு அவனது பிள்ளைகளைக் காப்பீராக” என்றாள் {பூமாதேவி}” என்றார் {வைசம்பாயனர்}.

இதி ஶ்ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஶே Vஇஷ்ணுபர்வணி
நரகவதே⁴ த்ரிஷஷ்டிதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 62–(பலதேவமாஹாத்ம்யம்)–

January 30, 2021

ஹஸ்தினாபுரத்தைக் கங்கையில் இழுத்த பலராமன் மகிமை; மற்போரில் பீமனை வீழ்த்தியது; துரியோதனனைச் சீடனாக ஏற்றது-

ராஜோவாச
பூ⁴ய ஏவ து விப்ரர்ஷே ப³லதே³வஸ்ய தீ⁴மத꞉ |
மாஹாத்ம்யம் ஶ்ரோதுமிச்சா²மி ஶேஷஸ்ய த⁴ரணீப்⁴ருத꞉ ||2-62-1

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! விப்ரரே, பூமியை நிலைநிறுத்துபவனும், சேஷனின் வடிவமும், நுண்ணறிவுமிக்கவனுமான பலதேவனின் மகிமைமிக்கச் செயல்களை நான் மீண்டும் கேட்க விரும்புகிறேன்

அதீவ ப³லதே³வம் தம் தேஜோராஶிமநிர்ஜிதம் |
கத²யந்தி மஹாத்மாநம் யே புராணவிதோ³ ஜநா꞉ ||2-62-2

தஸ்ய கர்மாண்யஹம் விப்ர ஶ்ரோதுமிச்சா²மி தத்த்வத꞉ |
அநந்தம் யம் விது³ர்நாக³மாதி³தே³வம் நகே³ஶ்வரம் ||2-62-3

புராணங்களை நன்கறிந்த முனிவர்கள், மிக உன்னதனென்றும், பெருஞ்சக்திவாய்ந்த தலைமை தேவனான அனந்தனென்றும் பலதேவனைச் சொல்கிறார்கள். எனவே, ஓ! விப்ரரே, அவனது செயல்களைக் குறித்து நான் துல்லியமாகக் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான்.(2,3)

வைஶம்பாயந உவாச
புராணே நாக³ராஜோ(அ)ஸௌ பட்²யதே த⁴ரணீத⁴ர꞉ |
ஶேஷஸ்தேஜோநிதி⁴꞉ ஶ்ரீமாநகம்ப்ய꞉ புருஷோத்தம꞉ ||2-62-4

யோகா³சார்யோ மஹாவீர்யோ தே³வமந்த்ரமுகோ² ப³லீ |
ஜராஸம்த⁴ம் க³தா³யுத்³தே⁴ ஜிதவாந்யோ ந சாவதீ⁴த் ||2-62-5

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “பெருஞ்சக்திமிக்கவனும், பலம்வாய்ந்தவனுமான இந்தப் பலதேவனே, ஒளிச்சுரங்கமான நாக மன்னன் சேஷன் என்றும், பூமியை நிலைநிறுத்துபவனென்றும், புருஷர்களில் முதன்மையானவன் என்றும், யோகாசிரியன் என்றும், வேதங்களில் உள்ள மந்திரங்களை அறிந்தவர்களில் முதன்மையானவன் என்றும் புராணங்களில் விளக்கப்படுகிறான். கதாயுதப் போர் புரிந்து பல முறை ஜராசந்தனை வீழ்த்தியிருந்தாலும் அவன் அவனைக கொல்லவில்லை.(4,5)

ப³ஹவஶ்சைவ ராஜாந꞉ ப்ரதி²தா꞉ ப்ருதி²வீதலே |
அந்வயுர்மாக³த⁴ம் ஸர்வே தே சாபி விஜிதா ரணே ||2-62-6

மகதப் பேரரசனைப் பின்தொடர்ந்தவர்களும், கொண்டாடப்பட்டவர்களுமான பிற மன்னர்களும் போரில் அவனால் வீழ்த்தப்பட்டனர்.

நாகா³யுதப³லப்ராணோ பீ⁴மோ பீ⁴மபராக்ரம꞉ |
அஸக்ருத்³ப³லதே³வேந பா³ஹுயுத்³தே⁴ பராஜித꞉ ||2-62-7

ஓர் ஆயுத அளவு {பத்தாயிரம்} யானைகளின் பலத்தையும், பேராற்றலையும் கொண்ட பீமனே கூட மற்போரில் இவனால் {பலதேவனால்} வீழ்த்தப்பட்டான்.

து³ர்யோத⁴நஸ்ய கந்யாம் து ஹரமாணோ ந்யக்³ருஹ்யத |
ஸாம்போ³ ஜாம்ப³வதீபுத்ரோ நக³ரே நாக³ஸாஹ்வயே ||2-62-8

துரியோதனனின் மகளான லக்ஷ்மணையை {கிருஷ்ணன் மற்றும்} ஜாம்பவதியின் மகனான சாம்பன் அபகரித்துச் சென்றதால் ஹஸ்தினாபுரத்தின் {நாகநகரத்தின்} இளவரசர்களால் அவன் அந்நகரத்தில் சிறைபிடிக்கப்பட்டான்.

ராஜபி⁴꞉ ஸர்வதோ ருத்³தே⁴ ஹரமாணோ ப³லாத்கில |
தது³பஶ்ருத்ய ஸம்ருத்³த⁴மாஜகா³ம மஹாப³ல꞉ ||2-62-9

பெருஞ்சக்திவாய்ந்த ராமன் {பலராமன்}, அவன் சிறையிலிடப்பட்டதைக் கேட்டு அவனை விடுவிப்பதற்காக அந்நகரத்திற்கும் சென்றும்

ராமஸ்தஸ்ய து மோக்ஷார்த²மாக³தோ நாலப⁴ச்ச தம் |
ததஶ்சுக்ரோத⁴ ப³லவாநத்³பு⁴தம் சாகரோந்மஹத் ||2-62-10

அவனை அவனால் கண்டுபிடிக்க இயலவில்லை. இதனால் கோபமடைந்த அந்தப் பலம்வாய்ந்த வீரன், பின்வரும் அற்புதச் செயலைச் செய்தான்.

அநிவார்யமபே⁴த்³யம் ச தி³வ்யமப்ரதிமம் ப³லே |
லாங்க³லாஸ்த்ரம் ஸமுத்³யம்ய ப்³ரஹ்மமந்த்ராபி⁴மந்த்ரிதம் ||2-62-11

ப்ராகாரவப்ரே விந்யஸ்ய புரஸ்ய ச மஹாத்³யுதி꞉ |
ப்ரக்ஷேப்துமைச்ச²த்³க³ங்கா³யாம் நக³ரம் கௌரவஸ்ய தத் ||2-62-12

அவன், வெல்லப்படமுடியாததும், ஒப்பற்றதும், தெய்வீகமானதும், பிரம்மாயுதத்தைப் போன்றதுமான தன் கலப்பையை எடுத்துக் கொண்டு அந்நகரத்தின் மதிலில் {கோட்டையில்} பொருத்தி கௌரவர்களின் அந்நகரை கங்கைக்குள் இழுத்துப் போட நினைத்தான்.(11,12)

தத்³விகூ⁴ர்ணிதமாலக்ஷ்ய புரம் து³ர்யோத⁴நோ ந்ருப꞉ |
ஸாம்ப³ம் நிர்யாதயாமாஸ ஸபா⁴ர்யம் தஸ்ய தீ⁴மத꞉ ||2-62-13

மன்னன் துரியோதனன், தன் நகரம் இவ்வாறு சுழற்றப்படுவதைக் கண்டு, சாம்பனையும் அவனது மனைவியையும் பெருஞ்சக்திவாய்ந்த ராமனிடம் கொடுத்து,

த³தௌ³ ஶிஶ்யம் ததா³த்மாநம் ராமஸ்ய ஸுமஹாத்மந꞉ |
க³தா³யுத்³தே⁴ குருபதிம் ஶிஷ்யம் ஜக்³ராஹ தம் ச ஸ꞉ ||2-62-14

தன்னைச் சீடனாக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டான். ராமனும் அந்தக் குரு மன்னனை {துரியோதனனை} கதாயுதப் போரில் தன் சீடனாக ஏற்றுக் கொண்டான்.

தத꞉ ப்ரப்⁴ருதி ராஜேந்த்³ர புரமேதத்³விகூ⁴ர்ணிதம் |
ஆவர்ஜிதமிவாபா⁴தி க³ங்கா³மபி⁴முக²ம் ந்ருப ||2-62-15

ஓ! மன்னா, இவ்வாறு சுழற்றப்பட்டது முதலே அந்நகரம் பெருங்கடலை {கங்கையை} நோக்கி இழுக்கப்பட்டதைப் போன்ற தோற்றத்தைக் கொண்டது.

இத³மத்யத்³பு⁴தம் கர்ம ராமஸ்ய கதி²தம் பு⁴வி |
பா⁴ண்டீ³ரே கதி²தம் ராஜந்யத்க்ருதம் ஶௌரிணா புரா ||2-62-16

ஓ! மன்னா, முன்னர்ப் பிருந்தாவனத்தில் சூரனின் மகனான இந்த ஹலாயுதன் {பலராமன்}, தன் முஷ்டியின் ஒரே அடியில் பிரலம்பனைக் கொன்றான். இதுவும் பூமியின் நன்கறியப்பட்ட இவனது செயல்களில் ஒன்றாகும்.

ப்ரலம்ப³ம் முஷ்டிநைகேந யஜ்ஜகா⁴ந ஹலாயுத⁴꞉ |
தே⁴நுகம் து மஹாவீர்யம் சிக்ஷேப நக³மூர்த⁴நி |
ஸ க³தாயு꞉ பபாதோர்வ்யாம் தை³த்யோ க³ர்த³ப⁴ரூபத்⁴ருக் |2-62-17

பேருடல் படைத்த தைத்தியனான தேணுகன், கழுதை வடிவில் வந்த போது அவனை மரத்தின் உச்சிக்குத் தூக்கி எறிந்தான். அவனும் பூமியின் பரப்பில் இறந்து விழுந்தான்

லவணஜலக³மா மஹாநதீ³ த்³ருதஜலவேக³தரங்க³மாலிநீ |
நக³ரமபி⁴முக²ம் யதா³ ஹ்ருதா ஹலவித்⁴ருதா யமுநா யமஸ்வஸா ||2-62-18

இந்தக் கலப்பைதாரி {ஹலாயுதன் / பலராமன்}, யமனின் தங்கையும், வேகமாகப் பாய்பவளும், உப்பு நீர் கடலை நோக்கிச் செல்பவளுமான யமுனையின் போக்கை நகரம் நோக்கித் திருப்பினான். இதுவும் அவனது அற்புதச் செயல்களில் ஒன்றாகும்.

ப³லதே³வஸ்ய மாஹாத்ம்யமேதத்தே கதி²தம் மயா |
அநந்தஸ்யாப்ரமேயஸ்ய ஶேஷஸ்ய த⁴ரணீப்⁴ருத꞉ ||2-62-19

ஓ! மன்னா, இவ்வாறே, ஒப்பற்ற பலம் கொண்டவனும், அனந்தன் என்ற பெயரைக் கொண்ட சேஷனின் வடிவமுமான பலதேவனின் பலம்வாய்ந்த செயல்களை உனக்கு விளக்கிச் சொன்னேன்

இதி புருஶவரஸ்ய லாங்க³லே-
ர்ப³ஹுவித⁴முத்தமமந்யதே³வ ச |
யத³கதி²தமிஹாத்³ய கர்ம தே
தது³பலப⁴ஸ்வ புராணவிஸ்தராத் ||2-62-20

நீ புராணங்களைக் கேட்கும்போது, புருஷர்களில் முதன்மையான இந்த ஹலாதரன் செய்தவையும், இன்று என்னால் விளக்கிச் சொல்லப்படாதவையுமான மிக அற்புதமான செயல்கள் பலவற்றைக் கேட்பாய்” என்றார் {வைசம்பாயனர்}

இதி ஶ்ரிமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஶே விஷ்ணுபர்வணி
ப³லதே³வமாஹாத்ம்யே த்³விஷஷ்டிதமோ(அ)த்³யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 61–( ஸ்ரீபிரத்யும்ந விவாஹோ ருக்மிவதம்)-ஸ்ரீ ருக்மவதியின் திருமணம் | –

January 29, 2021

ருக்மியின் மகளான சுபாங்கி கிருஷ்ணனின் மகனான பிரத்யும்னனைத் திருமணம் செய்து கொண்டது; கிருஷ்ணனின் பேரனான அநிருத்தன் ருக்மியின் பேத்தியான ருக்மவதியைத் திருமணம் செய்து கொண்டது; பகடையால் உயிரை இழந்த ருக்மி.

வைஶம்பாயந உவாச
தத꞉ காலே வ்யதீதே து ருக்மீ மஹதி வீர்யவாந் |
து³ஹிது꞉ காரயாமாஸ ஸ்வயம்வரமரிந்த³ம꞉ ||2-61-1

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “வெகு காலம் கழிந்ததும், பகைவர்களைக் கொல்பவனான பலம்வாய்ந்த ருக்மி, தன் மகள் {சுபாங்கி சுயம்வரத்தில்} கணவனைத் தேர்ந்தெடுக்க உள்ளதாக அறிவித்தான்.

தத்ராஹூதா ஹி ராஜாநோ ராஜபுத்ராஶ்ச ருக்மிணா |
ஸமாஜக்³முர்மஹாவீர்யா நாநாதி³க்³ப்⁴ய꞉ ஶ்ரியாந்விதா꞉ ||2-61-2

செல்வந்தர்களும், பலம்வாய்ந்தவர்களுமான மன்னர்களும், இளவரசர்கள் பலரும் பல்வேறு நாடுகளில் இருந்து ருக்மியால் அழைக்கப்பட்டு அவனுடைய வீட்டுக்கு வந்தனர்.

தத்ராஜகா³ம ப்ரத்³யும்ந꞉ குமாரைரபரைர்வ்ருத꞉ |
ஸா ஹி தம் சகமே கந்யா ஸ ச தாம் ஶுப⁴லோசநாம் ||2-61-3

ஶுபா⁴ங்கீ³ நாம வைத³ர்பீ⁴ காந்தித்³யுதிஸமந்விதா |
ப்ருதி²வ்யாமப⁴வத்க்²யாதா ருக்மிணஸ்தநயா ததா³ ||2-61-4

மற்ற இளவரசர்களுடன் சேர்ந்து {கிருஷ்ணனின் மகனான} பிரத்யும்னனும் அங்கே சென்றான். ருக்மியின் மகள் அவனைக் கண்டதும் அவனையே மணந்து கொள்ள விரும்பினாள். அருளுடனும், பிரகாசத்துடனும் கூடிய அவளும் தன் அழகுக்காகப் பூமியில் கொண்டாடப்பட்டாள். எனவே, கேசவனின் மகன், அழகிய கண்களைக் கொண்ட அவளை மணந்து கொள்ள விரும்பினான்[அங்கு மற்ற ராஜகுமாரர்களால் சூழப்பட்டு (க்ருஷ்ணன் மகன்) ப்ரத்யும்னன் வந்தான். அந்தப் பெண் (ருக்மி புத்ரி) அவனையே விரும்பினாள். அவனும் அழகிய கண்களுடைய அவளை விரும்பினான். அப்போது விதர்ப்ப ராஜன் “சுபாங்கி” எனும் பெயர் கொண்டவள். ருக்மி புத்ரி, காந்தியுடனும், ஒளியுடனும் கூடி பூமியில் புகழ் பெற்றவளாயிருந்தாள்” ].(3,4)

உபவிஷ்டேஷு ஸர்வேஷு பார்தி²வேஷு மஹாத்மஸு |
வைத³ர்பீ⁴ வரயாமாஸ ப்ரத்³யும்நமரிஸூத³நம் ||2-61-5

பலம்வாய்ந்த மன்னர்கள் அனைவரும் சுயம்வர மண்டபத்தில் தங்கள் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, விதர்ப்ப மன்னனின் மகள் {சுபாங்கி} பகைவரைக் கொல்பவனான பிரத்யும்னனைத் (தன் கணவனாகத்) தேர்ந்தெடுத்தாள்.

ஸ ஹி ஸர்வாஸ்த்ரகுஶல꞉ ஸிம்ஹஸம்ஹநநோ யுவா |
ரூபேநாப்ரதிமோ லோகே கேஶவஸ்யாத்மஜோ(அ)ப⁴வத் ||2-61-6

அவன் {பிரத்யும்னன்} ஆயுதங்களில் தேர்ச்சி பெற்றவனாகவும், சிங்கம் போன்ற கட்டுடலுடனும் இருந்தான். அதையுந்தவிர அந்தக் கேசவன் மகன் பூமியில் ஒப்பற்ற அழகனாகவும் இருந்தான்.

வயோரூபகு³ணோபேதா ராஜபுத்ரீ ச ஸாப⁴வத் |
நாராயணீ சந்த்³ரஸேநா ஜாதகாமா ச தம் ப்ரதி ||2-61-7

அழகும், இளமையும், குணமும் கொண்ட அந்த இளவரசியும் நாராயணனின் மனைவியான இந்திரசேனையைப் போல அவனுடன் அன்புடன் இருந்தாள்.

வ்ருத்தே ஸ்வயம்வரே ஜக்³மூ ராஜாந꞉ ஸ்வபுராணி தே |
உபாதா³ய ச வைத³ர்பீ⁴ம் ப்ரத்³யும்நோ த்³வாரகாம் யயௌ ||2-61-8

சுயம்வரம் முடிந்ததும் மன்னர்கள் தங்கள் தங்களுக்குரிய நகரங்களுக்குச் சென்றனர், பிரத்யும்னனும் விதர்ப்ப இளவரசியுடன் {சுபாங்கியுடன்} துவாரகைக்குச் சென்றான்

ரேமே ஸஹ தயா வீரோ த³மயந்த்யா நலோ யதா² |
ஸ தஸ்யாம் ஜநயாமாஸ தே³வக³ர்போ⁴பமம் ஸுதம் ||2-61-9

அந்த வீரன், நளனும் தமயந்தியும் வாழ்ந்ததைப் போல அவளுடைய துணையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான்

அநிருத்³த⁴மிதி க்²யாதம் கர்மணாப்ரதிமம் பு⁴வி |
த⁴நுர்வேதே³ ச வேதே³ ச நீதிஶாஸ்த்ரே ச பாரக³ம் ||2-61-10

பிரத்யும்னன் அவளிடம், தேவனின் மகனைப் போன்றவனும், பூமியில் ஒப்பற்ற செயல்களைச் செய்பவனும், அநிருத்தன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு மகனைப் பெற்றான்.

அப⁴வத்ஸ யதா³ ராஜந்நநிருத்³தோ⁴ வயோ(அ)ந்வித꞉ |
ததா³ஸ்ய ருக்மிண꞉ பௌத்ரீம் ஶ்ரீமதீம் ருக்மஸந்நிபா⁴ம் |
பத்ந்யர்தே² வரயாமாஸ நாம்நா ருக்மவதீதி ஸா ||2-61-11

வேதங்களிலும், வில் அறிவியலிலும், அறநெறி விதிகளிலும் தேர்ச்சியடைந்த அநிருத்தன், வயதை அடைந்த போது, ருக்மியின் பேத்தியும், பொன் போன்ற அழகியுமான[ருக்மம் என்றால் பொன் என்று பொருள்] ருக்மவதியை அவனுடைய மனைவியாகத் தேர்ந்தெடுத்தான்.

அநிருத்³த⁴ம் கு³ணைர்தா³தும் க்ருதபு³த்³தி⁴ர்ந்ருபஸ்தத꞉ |
ப்ரீத்யா ஹி ரௌக்மிணேயஸ்ய ருக்மிந்யாஶ்சாப்யுபக்³ரஹாத் ||2-61-12

விஸ்பர்த்³த⁴ந்நபி க்ருஷ்ணேந வைரம் த்யஜ்ய மஹாயஶா꞉ |
த³தா³மீத்யப்³ரவீத்³ராஜா ப்ரீதிமாஞ்ஜநமேஜய ||2-61-13

ஓ! ஜனமேஜயா, பெருஞ்சிறப்புமிக்கவனும், நுண்ணறிவுமிக்கவனுமான மன்னன் ருக்மி எப்போதும் கிருஷ்ணனிடம் பகைமை பாராட்டி வந்தாலும், அவனுடைய மகனிடமும் {பிரத்யும்னனிடமும்}, ருக்மிணியிடமும் கொண்ட அன்பினால் தன் பகைமையைக் கைவிட்டு, “குணம் நிறைந்தவனும், அமைதியான இயல்பைக் கொண்டவனுமான அநிருத்தனுக்கு ருக்மவதியை நான் கொடுப்பேன்” என்று மகிழ்ச்சியுடன் சொன்னான்.(12,13)

கேஶவ꞉ ஸஹ ருக்மிண்யா புத்ரை꞉ ஸங்கர்ஷணேந ச |
அந்யைஶ்ச வ்ருஷ்ணிபி⁴꞉ ஸார்த⁴ம் வித³ர்பா⁴ந்ஸப³லோ யயௌ ||2-61-14

அந்தச் சந்தர்ப்பத்தில் கேசவன், ருக்மிணியுடனும், சங்கர்ஷணனுடனும் {பலராமனுடனும்}, தன் மகன்களுடனும், பிற யாதவர்களுடனும் சேர்ந்து தன் படை சூழ விதர்ப்பத்திற்குச் சென்றான்.

ஸம்யுக்தா ஜ்ஞாதயஶ்சைவ ருக்மிண꞉ ஸுஹ்ருத³ஶ்ச யே |
ஆஹூதா ருக்மிணா தே(அ)பி தத்ராஜக்³முர்நராதி⁴பா꞉ ||2-61-15

ருக்மியின் உற்றார் உறவினர், நண்பர்கள், கூட்டாளிகள் ஆகியோரும் அவனது {ருக்மியின்} அழைப்பின் பேரில் அங்கே வந்தனர்.

ஶுபே⁴ திதௌ² மஹாராஜ நக்ஷத்ரே சாபி⁴பூஜிதே |
விவாஹ꞉ ஸோ(அ)நிருத்³த⁴ஸ்ய ப³பூ⁴வ பரமோத்ஸவ꞉ ||2-61-16

ஓ! மன்னா {ஜனமேஜயா}, அதன் பிறகு மங்கல நட்சத்திரம் கொண்ட ஒரு மங்கல நாளில் அநிருத்தனின் திருமணம் பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது

பாநௌ க்³ருஹீதே வைத³ர்ப்⁴யாஸ்த்வநிருத்³தே⁴ந தத்ர வை |
வைத்³ரப⁴யாத³வாநாம் ச ப³பூ⁴வ பரமோத்ஸவ꞉ ||2-61-17

இவ்வாறு அநிருத்தன், விதர்ப்ப இளவரசியைத் திருமணம் செய்து கொண்ட போது, வைதர்ப்பர்களும், யாதவர்களும் பெரும் விழா எடுத்தனர்.

ரேமிரே வ்ருஷ்ணயஸ்தத்ர பூஜ்யமாநா யதா²மரா꞉ |
அதா²ஶ்மகாநாமதி⁴போ வைணுதா³ரிருதா³ரதீ⁴꞉ ||2-61-18

விருஷ்ணிகள் தேவர்களைப் போலக் கொண்டாடப்பட்டவர்களாக அங்கே வாழ்ந்தனர்.
அப்போது, தயாள மன்னன் அஷ்மகன், வேணுதாரி,

அக்ஷ꞉ ஶ்ருதர்வா சாணூர꞉ க்ரத²ஶ்சைவாம்ஶுமாநபி |
ஜயத்ஸேந꞉ கலிங்கா³நாமதி⁴பஶ்ச மஹாப³ல꞉ ||2-61-19

அக்ஷன், சுருதர்வன், சாணூரன், கிராதன், அம்சுமான், பெருஞ்சக்திவாய்ந்த கலிங்க மன்னன் ஜயத்சேனன்

பாண்ட்³யஶ்ச ந்ருபதி꞉ ஶ்ரீமாந்ருஷீகாதி⁴பதிஸ்ததா² |
ஏதே ஸம்மந்த்ர்ய ராஜாநோ தா³க்ஷிணாத்யா மஹர்த்³த⁴ய꞉ ||2-61-20

பாண்டிய மன்னன், ரிஷீகத்தின் அழகிய மன்னன் ஆகிய தக்காணத்தின் {தென்னாட்டைச் சேர்ந்த} பெருஞ்செல்வந்த தலைவர்கள் அனைவரும்,

அபி⁴க³ம்யாப்³ருவந்த்ஸர்வே ருக்மிநம் ரஹஸி ப்ரபு⁴ம் |
ப⁴வாநக்ஷேஷு குஶலோ வயம் சாபி ரிரம்ஸவ꞉ |
ப்ரியத்³யூதஶ்ச ராமோ(அ)ஸாவக்ஷேஷ்வநிபுணோ(அ)பி ச ||2-61-21

பலம்வாய்ந்த ருக்மியிடம் ரகசியமாக, “பகடையில் {சொக்கட்டானில்} வல்லவன் நீ, நாங்களும் விளையாட விரும்புகிறோம்; ராமன் {பலராமன்} அனுபவமற்றவன்

தே ப⁴வந்தம் புரஸ்க்ருத்ய ஜேதுமிச்சா²ம தம் வயம் |
இத்யுக்தோ ரோசயாமாஸ ருக்மீ த்³யூதம் மஹாரத²꞉ ||2-61-22

எனவே உன்னைப் பின்தொடர்ந்து ராமனை நாங்கள் வீழ்த்த விரும்புகிறோம்” என்றனர்.
பெருந்தேர்வீரனான ருக்மி இவ்வாறு வேண்டிக்கொள்ளப்பட்டதும் (அவர்களின் முன்மொழிவை) ஏற்றுக் கொண்டான்

தே ஶுபா⁴ம் காஞ்சநஸ்தம்பா⁴ம் குஸுமைர்பூ⁴ஷிதாஜிராம் |
ஸபா⁴மாவிவிஶுர்ஹ்ருஷ்டா꞉ ஸிக்தாம் சந்த³நவாரிணா ||2-61-23

அதன் பிறகு அவர்கள் அனைவரும் தங்கத் தூண்களைக் கொண்டதும், மலர்களால் தரை மறைக்கப்பட்டதுமான ஓர் அழகிய மண்டபத்திற்குள் நுழைந்தனர். அங்கே சந்தன நீர் தெளிக்கப்பட்டிருந்தது.

தாம் ப்ரவிஶ்ய தத꞉ ஸர்வே ஶுப்⁴ரஸ்ரக³நுலேபநா꞉ |
ஸௌவர்ணேஷ்வாஸநேஶ்வாஸாம்சக்ரிரே விஜிகீ³ஷவ꞉ ||2-61-24

அழகிய மாலைகளாலும், களிம்புகளாலும் அலங்கரிக்கப்பட்டவர்களும், வெற்றியடைய விரும்பியவர்களுமான அந்த மன்னர்கள், அந்த மண்டபத்திற்குள் நுழைந்து, அங்கே இருந்த பொன் இருக்கைகளில் அமர்ந்தனர்.

ஆஹூதோ ப³லதே³வஸ்து கிதவைரக்ஷகோவிதை³꞉ |
பா³ட³மித்யப்³ரவீத்³த்⁴ருஷ்ட꞉ ஸஹ தீ³வ்யாம பண்யதாம் ||2-61-25

வஞ்சகம் நிறைந்தவர்களும், பகடையாட்டத்தில் நிபுணர்களுமான அந்த மன்னர்களால் அழைக்கப்பட்ட ராமனும், “நான் விளையாடுகிறேன்”[“சேர்ந்து விளையாடுவோம். பந்தயம் வைக்கப்படட்டும்” ] என்று மகிழ்ச்சியாகச் சொன்னான்.

நிக்ருத்யா விஜிகீ³ஷந்தோ தா³க்ஷிணாத்யா நராதி⁴பா꞉ |
மணிமுக்தா꞉ ஸுவர்ணம் ச தத்ராநிந்யு꞉ ஸஹஸ்ரஶ꞉ ||2-61-26

தக்காணத்தின் தலைவர்கள் {தென்னாட்டு மன்னர்கள்} வஞ்சகமாக விளையாடி ரேவதியின் கணவனை வீழ்த்துவதற்காக எண்ணற்ற ரத்தினங்களையும், முத்துக்களையும், பொன் நாணயங்களையும் சூதாட்டக்களத்திற்குக் கொண்டு வந்தனர்.

தத꞉ ப்ராவர்தத த்³யூதம் தேஷாம் ரதிவிநாஶநம் |
கலஹஸ்யாஸ்பத³ம் கோ⁴ரம் து³ர்மதீநாம் க்ஷயாவஹம் ||2-61-27

அதன்பிறகு, பயங்கரச் சச்சரவுகளைத் தோற்றுவிக்கவல்லதும், தீய மனம் கொண்டோரின் அழிவுக்குப் பிறப்பிடமும், நட்புக்குப் பகையுமான பகடையாட்டம் தொடங்கியது.

நிஷ்காணாம் ச ஸஹஸ்ராணி ஸுவர்நஸ்ய த³ஶாதி³த꞉ |
ருக்மிணா ஸஹ ஸம்பாதே ப³லதே³வோ க்³லஹம் த³தௌ³ ||2-61-28

ருக்மியுடனான பகடையாட்டத்தில் பலதேவன் பத்தாயிரம் பொன் நாணயங்களைப் பணயம் வைத்தான்

தம் ஜிகா³ய ததோ ருக்மீ யதமாநம் மஹாப³லம் |
தாவதே³வாபரம் பூ⁴யோ ப³லதே³வம் ஜிகா³ய ஸ꞉ ||2-61-29

பெருஞ்சக்திவாய்ந்த பலதேவன் மிகக் கவனமாக இருந்தாலும், அந்த ஆட்டத்தை வென்ற ருக்மி மேலும் அத்தகைய தொகையைப் பணயமாக வைத்தான்.

அஸக்ருஜ்ஜீயமாநஸ்து ருக்மிநா கேஶவாக்³ரஜ꞉ |
ஸுவர்ணகோடீர்ஜக்³ராஹ க்³லஹம் தஸ்ய மஹாத்மந꞉ || 2-61-30

பெருஞ்சக்திவாய்ந்தவனும், கேசவனின் அண்ணனுமான அவன் {பலராமன்}, இவ்வாறு மீண்டும் மீண்டும் ருக்மியால் வீழ்த்தப்பட்டு ஒரு கோடி பொன் நாணயங்களைப் பணயமாக வைத்தான்.

ஜிதமித்யேவ ஹ்ரூஷ்டோ(அ)த² தமாஹ்வ்ருதிரபா⁴ஷத |
ஶ்லாக்⁴யமாநஶ்ச சிக்ஷேபா ப்ரஹஸந்முஸலாயுத⁴ம் ||2-61-31

வஞ்சகம் நிறைந்த ருக்மி, “நீ வீழ்த்தப்பட்டாய்” என்று முசலாயுதனிடம் {உலக்கையை ஆயுதமாகக் கொண்ட பலராமனிடம்} சொல்லி புன்னகைத்தவாறே பகடையை வீசினான். பிறகு அவன் மீண்டும் செருக்குடன்,

அவித்³யோ து³ர்ப³ல꞉ ஶ்ரீமாந்ஹிர்ண்யமமிதம் மயா |
அஜேயோ ப³லதே³வோ(அ)யமக்ஷத்³யூதே பராஜித꞉ ||2-61-32

“போரில் வெல்லப்பட முடியாதவனாக இருப்பினும், பகடையில் திறனற்றவனும், அனுபவமற்றவனுமான பலதேவன் எண்ணிலடங்கா பொன் நாணயங்களை என்னிடம் இழந்து விட்டான்” என்று சொல்லி ஏளனம் செய்தான்

கலிங்க³ராஜஸ்தச்ச்²ருத்வா ப்ரஜஹாஸ ப்⁴ருஶம் ததா³ |
த³ந்தாந்ஸந்த³ர்ஶயந்ஹ்ரூஷ்டஸ்தத்ராக்ருத்³த்⁴யத்³த⁴லாயுத⁴꞉ ||2-61-33

ருக்மிணஸ்தத்³வச꞉ ஶ்ருத்வா பராஜயநிமித்தஜம் |
நிக்³ருஹ்யமாணஸ்தீக்ஷ்ணாபி⁴ர்வாக்³பி⁴ர்பீ⁴ஷ்மகஸூநுநா ||2-61-34

இதைக் கேட்ட கலிங்க மன்னன், மகிழ்ச்சியடைந்தவனாகத் தன் பற்களைக் காட்டி உரக்க நகைத்தான். ஹலாயுதன் (பலராமன்), தன் தோல்வி தொடர்பாக ருக்மி சொன்ன அந்தச் சொற்களைக் கேட்டுக் கோபமடைந்தான்.(33,34)

ரோஷமாஹாரயாமாஸ ஜிதரோஷோ(அ)பி த⁴ர்மவித் |
ஸம்க்ருத்³தோ⁴ த⁴ர்ஷணாம் ப்ராப்ய ரௌஹிணேயோ மஹாப³ல꞉ ||2-61-35

ரோஹிணியின் அற மகன் {பலராமன்}, கோபத்தை அடக்கி ஆள்பவனாக இருந்தாலும், பீஷ்மகனின் மகன் {ருக்மி} சொன்ன கூரிய சொற்களால் தாக்கப்பட்டவனாக மீண்டும் பெருங்கோபம் அடைந்தான்.

தை⁴ர்யாந்மந꞉ ஸந்நிதா⁴ய ததோ வசநமப்³ரவீத் |
த³ஶகோடிஸஹஸ்ராணி க்³லஹ ஏகோ மமாபர꞉ ||2-61-36

பெருஞ்சக்திவாய்ந்த ராமன், கோபத்துடன் இருந்தாலும், தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அமைதியாக, “ஓ! மன்னா, நூறு கோடி பொன் நாணயங்கள் என் அடுத்தப் பணயம்.

ஏநம் ஸம்பரிக்³ருஹ்ணீஷ்வ பாதயாக்ஷாந்நராதி⁴ப |
க்ருஷ்ணாக்ஷாம்ˮல்லோஹிதாக்ஷாம்ஶ்ச தே³ஶே(அ)ஸ்மிம்ஸ்த்வதி⁴பாம்ஸுலே ||2-61-37

பாவம் நிறைந்த {தூசி படிந்த} இந்த நாட்டில் தாமிரச் சிவப்பு வண்ணப் பாச்சிகைகளை உருட்டி இவை அனைத்தையும் எடுத்துக் கொள்வாயாக[அதிகத் தூசி படிந்தவிடத்தில் கருப்பு மஞ்சள் பாசகங்களை உருட்டு” ]” என்றான்.

இத்யேவமாஹ்வயாமாஸ ருக்மிணம் ரோஹிணீஸுத꞉ |
அநுக்த்வா வசநம் கிஞ்சித்³பா³ட⁴மித்யப்³ரவீத்புந꞉ ||2-61-38

ரோஹிணியின் மகனால் {பலராமனால்} இவ்வாறு சொல்லப்பட்டதும், மனிதர்களில் இழிந்தவனான ருக்மி முதலில் ஒன்றையும் சொல்லாமல், பிறகு “மிக்க நன்று” என்று சொல்லிக் கொண்டே மீண்டும் பாச்சிகையை உருட்டினான்.

அக்ஷாந்ருக்மீ ததோ ஹ்ருஷ்ட꞉ பாதயாமாஸ பார்தி²வ꞉ |
சாதுரக்ஷே து நிர்வ்ருத்தே நிர்ஜித꞉ ஸ நராதி⁴ப꞉ ||2-61-39

நான்கு அடையாளங்களைக் கொண்ட பாச்சிகையை ருக்மி உருட்டிய போது, அவன் ராமனால் நியாயமாக வெல்லப்பட்டான்.

ப³லதே³வேந த⁴ர்மேண நேத்யுவாச ததோ ப³லம் |
தை⁴ர்யாந்மந꞉ ஸமாதா⁴ய ஸ ந கிஞ்சிது³வாச ஹ ||2-61-40

ப³லதே³வம் ததோ ருக்மீ மயா ஜிதமிதி ஸ்மயந் |
ப³லதே³வஸ்து தச்ச்²ருத்வா ஜிஹ்மம் வாக்யம் நராதி⁴ப꞉ ||2-61-41

ஆனால் போஜனின் வழித்தோன்றல் {ருக்மி} அதை ஏற்காமல் புன்னகைத்தவாறே, “நானே வென்றேன்” என்றான்.
வஞ்சகம் நிறைந்த அந்தச் சொற்களைக் கேட்ட பலதேவன் மீண்டும் கோபத்தால் நிறைந்ததால் எந்த மறுமொழியும் கொடுக்காதிருந்தான்.(40,41)

பூ⁴ய꞉ க்ரோத⁴ஸமாவிஷ்டோ நோத்தரம் வ்யாஜஹார ஹ |
ததோ க³ம்பீ⁴ரநிர்கோ⁴ஷா வாகு³வாசாஶரீரிணீ ||2-61-42

அப்போது உயரான்ம பலதேவனின் கோபத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் புலப்படாத குரலொன்று {அசரீரியானது}, மேக முழக்கத்தைப் போல விழுமிய முறைமையுடன்,

ப³லதே³வஸ்ய தம் க்ரோத⁴ம் வர்த⁴யந்தீ மஹாத்மந꞉ |
ஸத்யமாஹ ப³ல꞉ ஶ்ரீமாந்த⁴ர்மேணைஷ பராஜித꞉ ||2-61-43

அநுக்த்வா வசநம் கிஞ்சித்ப்ராப்தோ ப⁴வதி கர்மணா |
மநஸா ஸமநுஜ்ஞாதம் தத்ஸ்யாதி³த்யவக³ம்யதாம் ||2-61-44

“அழகிய ராமன் உண்மையைச் சொன்னான். நியாயமான விளையாட்டில் ருக்மி வீழ்த்தப்பட்டான். தோல்வியை இவர்களின் இதயம் அறிந்தாலும் சொற்களில் ஏற்காமல் இருக்கிறார்கள். பலதேவன் ஏதும் சொல்லாதிருந்தாலும், உண்மையில் அவனே ஆட்டத்தை வென்றான். இதுவே உண்மை” என்றது.(43,44)

இதி ஶ்ருத்வா வசஸ்தத்²யமந்தரிக்ஷாத்ஸுபா⁴ஷிதம் |
ஸங்கர்ஷணஸ்ததோ²த்தா²ய ஸௌவர்ணேநோருணா ப³லீ ||2-61-45

பலம்வாய்ந்த சங்கர்ஷணன் {பலராமன்}, நன்கு வெளிப்படுத்தப்பட்ட இந்த வாய்மை நிறைந்த சொல்லை வானத்தில் இருந்து கேட்டு எழுந்து, ருக்மிணியின் அண்ணனை பகடைப் பலகையால் பூமியில் தள்ளி நையப் புடைக்கத் தொடங்கினான்.

ருக்மிண்யா ப்⁴ராதரம் ஜ்யேஷ்ட²ம் நிஜகா⁴ந மஹீதலே |
விவாதே³ குபிதோ ராம꞉ க்ஷேப்தாரம் கில ருக்மிணம் |
ஜகா⁴நாஷ்டாபதே³நைவ ப்ரமத்²ய யது³நந்த³ந꞉ ||2-61-46

யதுக்களில் முதன்மையான ராமன் {பலராமன்}, இந்தச் சொற்களால் கோபமடைந்து, கொடுஞ்சொல் பேசுபவனும், பொறாமை கொண்டவனுமான ருக்மியை {எட்டுப் பகுதிகளைக் கொண்ட பகடைப் பலகையால்} அடித்துக் கொன்றான்.

ததோ(அ)பஸ்ருத்ய ஸங்க்ருத்³த⁴꞉ கலிங்கா³தி⁴பதேரபி |
த³ந்தாந்ப³ப⁴ஞ்ஜ ஸம்ரம்பா⁴து³ந்நநாத³ ச ஸிம்ஹவத் ||2-61-47

அங்கிருந்து கோபத்துடன் வெளிப்பட்ட அவன், கலிங்க மன்னனின் பற்களை நொறுக்கி, அங்கே சிங்கம் போலக் கோபத்தில் முழங்கத் தொடங்கினான்

க²ட்³க³முத்³யம்ய தாந்ஸர்வாம்ஸ்த்ராஸயாமாஸ பார்தி²வாந் |
ஸ்தம்ப⁴ம் ஸபா⁴யா꞉ ஸௌவர்ணமுத்பாட்ய ப³லிநாம் வர꞉ ||2-61-48

க³ஜேந்த்³ர இவ தம் ஸ்தம்ப⁴ம் கர்ஷண்ஸங்கர்ஷணஸ்தத꞉ |
நிர்ஜகா³ம ஸபா⁴த்³வாராத்த்ராஸயாமாஸ கைஶிகாந் ||2-61-49

அதன் பிறகு தன் குத்து வாளை எடுத்துக் கொண்டு அங்கிருந்த மன்னர்கள் அனைவரையும் அச்சுறுத்தினான். பலவான்களில் முதன்மையான சங்கர்ஷணன், ஒரு யானையைப் போல மண்டபத்தின் தங்கத் தூண்களைப் பிடுங்கி அங்கிருந்த கைசிகர்களை அச்சுறுத்தி வாயில் வழியே வெளிப்பட்டான்.(48,49)

ருக்மிணம் நிக்ருதிப்ரஜ்ஞம் ஸ ஹத்வா யாத³வர்ஷப⁴꞉ |
வித்ராஸ்ய வித்³விஷ꞉ ஸர்வாந்ஸிம்ஹ꞉ க்ஷுத்³ரம்ருகா³நிவ ||2-61-50

யதுக்களில் முதன்மையான ராமன், அற்ப மானை {அற்ப விலங்கைத்} தாக்கும் சிங்கத்தைப் போலத் தீய ருக்மியைக் கொன்று,

ஜகா³ம ஶிபி³ரம் ராம꞉ ஸ்வயமேவ ஜநாவ்ருத꞉ |
ந்யவேத³யத்ஸ க்ருஷ்ணாய தத்ர ஸர்வம் யதா²ப⁴வத் ||2-61-51

தன் மக்கள் சூழத் தன் கூடாரத்திற்குத் திரும்பி, நடந்தவை அனைத்தையும் கேசவனிடம் சொன்னான்.

நோவாச ஸ ததா³ க்ருஷ்ண꞉ கிஞ்சித்³ராமம் மஹாத்³யுதி꞉ |
நிக்³ருஹ்ய ச ததா³(ஆ)த்மாநம் க்ருச்ச்²ராத³ஶ்ரூண்யவர்தயத் || 2-61-52

பேரொளி படைத்த கிருஷ்ணன் பலராமனிடம் ஏதும் சொல்லாதிருந்தான். தன் மனத்தைக் கடுமையாகக் கட்டுப்படுத்திக் கொண்ட அவன் கண்ணீர் நிறைந்த கண்களுடன் அழுதான்.

ந ஹதோ வாஸுதே³வேந ய꞉ பூர்வம் பரவீரஹா |
ஜ்யேஷ்டோ² ப்⁴ராதாத² ருக்மிண்யா ருக்மிணீஸ்நேஹகாரணாத் ||2-61-53

பகைவீரர்களைக் கொல்பவனும், ருக்மிணியின் அண்ணனுமான ருக்மியை, ருக்மிணியின் மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக வாசுதேவன் முன்பே கொல்லாதிருந்தான்.

ஸ ராமகரமுக்தேந நிஹதோ த்³யூதமண்ட³லே |
அஷ்டாபதே³ந ப³லவாந்ராஜா வஜ்ரத⁴ரோபம꞉ ||2-61-54

வஜ்ரதாரியுடன் (இந்திரனுடன்) ஒப்பிடத்தக்க அந்தப் பலம்வாய்ந்த மன்னன் (ருக்மி), பகடையாட்டத்தின் போது பலராமன் கையில் இருந்து விடுபட்டதும், எட்டு பகுதிகளைக் கொண்டதுமான பகடைப் பலகையால் கொல்லப்பட்டான்

தஸ்மிந்ஹதே மஹாவீர்யே ந்ருபதௌ பீ⁴ஷ்மகாத்மஜே |
த்³ருமபா⁴ர்க³வதுல்யே வை த்³ருமபா⁴ர்க³வஶிக்ஷிதே ||2-61-55

{கிம்புருஷன்} துருமனுக்கும், பார்க்கவருக்கும் (பரசுராமருக்கும்) இணையானவனும், அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டவனும், பெரும் வீரனும், பீஷ்மகனின் மகனுமான அந்த மன்னன் {ருக்மி} இவ்வாறே கொல்லப்பட்டான்.

க்ருதௌ ச யுத்³த⁴குஶலே நித்யயாஜிநி பாதிதே |
வ்ருஷ்ணயஶ்சாந்த⁴காஶ்சைவ ஸர்வே விமநஸோ(அ)ப⁴வந் ||2-61-56

சாதனைகளைச் செய்தவனும், போரில் நிபுணனும், நாளுக்கு நாள் வேள்விகளைச் செய்து வந்தவனுமான அவன் கொல்லப்பட்டதில் விருஷ்ணிகளும், அந்தகர்களும் என அனைவரும் கவலை கொண்டனர்.

வைஶம்பாயந உவாச
ருக்மிணீ ச மஹாபா⁴கா³ விலபந்த்யார்தயா கி³ரா |
விலபந்தீம் ததா² த்³ருஷ்ட்வா ஸாந்த்வயாமாஸ கேஶவ꞉ ||2-61-57

சிறப்புமிக்கவளான ருக்மிணி துன்பம் நிறைந்த சொற்களைச் சொல்லி அழுதாள். கேசவன், ருக்மிணி அழுவதைக் கண்டு அவளைத் தேற்றினான்.

ஏதத்தே ஸர்வமாக்²யாதம் ருக்மிணோ நித⁴நம் யதா² |
வைரஸ்ய ச ஸமுத்தா²நம் வ்ருஷ்ணிபி⁴ர்ப⁴ரதர்ஷப⁴ ||2-61-58

ஓ! பாரதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, ருக்மி விருஷ்ணிகளுடன் பகை கொண்டது, அவன் கொல்லப்பட்டது ஆகிய அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.

வ்றிஷ்ணயோ(அ)பி மஹாராஜ த⁴நாந்யாதா³ய ஸர்வஶ꞉ |
ராமக்ருஷ்நௌ ஸமாஶ்ரித்ய யயுர்த்³வாரவதீம் ப்ரதி ||2-61-59

ஓ! மன்னா, ராமனையும், கிருஷ்ணனையும் சார்ந்திருந்த விருஷ்ணிகள், தங்களால் ஈட்டப்பட்ட செல்வங்கள் அனைத்துடன் துவாராவதி நகருக்குச் சென்றனர்” என்றார் {வைசம்பாயனர்}.

இதி ஶ்ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஶே விஷ்ணுபர்வணி
ருக்மிவதோ⁴ நாமைகஷஷ்டிதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 59–(ஸ்ரீ ருக்மிணீ ஹரணம்)–

January 29, 2021

ருக்மிணியை அபகரித்துச் சென்ற கிருஷ்ணன்; ஜராசந்தனுடனும், சிசுபாலனுடனும் கடும்போர் செய்த யாதவர்கள்-

வைஶம்பாயந உவாச
ஏதஸ்மிந்நேவ காலே து ஜராஸந்த⁴꞉ ப்ரதாபவாந் |
ந்ருபாநுத்³யோஜயாமாஸ சேதி³ராஜப்ரியேப்ஸயா ||2-59-1

ஸுதாயா பீ⁴ஷ்மகஸ்யாத² ருக்மிண்யா ருக்மபூ⁴ஷண꞉ |
ஶிஶுபாலஸ்ய ந்ருபதேர்விவாஹோ ப⁴விதா கில ||2-59-2

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அதேவேளையில் வலிமைவாய்ந்த ஜராசந்தன், சேதிகளின் மன்னனை நிறைவடையச் செய்யும் வகையில், “மன்னன் சிசுபாலனுக்கும், பீஷ்மகனின் மகளான ருக்மிணிக்கும் இடையில் பொன் நாணய, ஆபரணக் கொடைகளுடன் திருமணம் நடைபெறும்” என அறிவித்தான்.(1,2)

த³ந்தவக்த்ரஸ்ய தநயம் ஸுவக்த்ரமமிதௌஜஸம் |
ஸஹஸ்ராக்ஷஸமம் யுத்³தே⁴ மாயாஶதவிஶாரத³ம் ||2-59-3

பெரும் பலம்வாய்ந்தவனும், ஆயிரங்கண் தேவனைப் போன்று மாயைகளில் தேர்ந்தவனும், தந்தவக்ரனின் மகனுமான சுவக்தரன்,

பௌண்ட்³ரஸ்ய வாஸுதே³வஸ்ய ததா² புத்ரம் மஹாப³லம் |
ஸுதே³வம் வீர்யஸம்பந்நம் ப்ருத²க³க்ஷௌஹிணீபதிம் ||2-59-4

பெருஞ்சக்தியும், வலிமையும் கொண்டவனும், ஓர் அக்ஷௌஹிணி படைவீரர்களின் தலைவனுமான சுதேவன், பௌண்ட்ர மன்னன் வாசுதேவனின் மகன்,

ஏகலவ்யஸ்ய புத்ரம் ச வீர்யவந்தம் மஹாப³லம் |
புத்ரம் ச பாண்ட்³யராஜஸ்ய கலிங்கா³தி⁴பதிம் ததா² ||2-59-5

பெருஞ்சக்திவாய்ந்த ஏகலவ்யனின் மகன், பாண்டிய மன்னனின் மகன், கலிங்கத்தின் பலம்வாய்ந்த மன்னன்,

க்ருதாப்ரியம் ச க்ருஷ்ணேந வைணுதா³ரிம் நராதி⁴பம் |
அம்ஶுமந்தம் ததா² க்ராத²ம் ஶ்ருதத⁴ர்மாணமேவ ச ||2-59-6

கிருஷ்ணனின் பகைவனான மன்னன் வேணுதாரி, அம்சுமான், கிரதன் சுருததர்மன்,

நிர்வ்ருத்தஶத்ரும் காலிங்க³ம் கா³ந்தா⁴ராதி⁴பதிம் ததா² |
ப்ரஸஹ்ய ச மஹாவீர்யம் கௌஶாம்ப்³யதி⁴பமேவ ச ||2-59-7

பகைவரைப் புறமுதுகிடச் செய்யும் காளிங்கன், காந்தார மன்னன், பெரும் வீரமிக்கவனான கௌசம்பியின் மன்னன்,

ப⁴க³த³த்தோ மஹாஸேந꞉ ஶல꞉ ஶால்வோ மஹாப³ல꞉ |
பூ⁴ரிஶ்ரவா மஹாஸேந꞉ குந்திவீர்யஶ்ச வீர்யவாந் |
ஸ்வயம்வரார்த²ம் ஸம்ப்ராப்தா போ⁴ஜராஜநிவேஶநே ||2-59-8

பெரும்படையுடன் கூடிய பகதத்தன், சலன், பலம்வாய்ந்தவனான சால்வன், பெரும்படையுடன் கூடிய பூரிஸ்ரவஸ், வீரனான குந்திவீர்யன் ஆகியோரையும் இதை ஆதரிக்குமாறு அவன் {ஜராசந்தன்} தூண்டினான்” என்றார்

ஜநமேஜய உவாச
கஸ்மிந்தே³ஶே ந்ருபோ ஜஜ்ஞே ருக்மீ வேத³விதா³ம் வர꞉ |
கஸ்யாந்வவாயே த்³யுதிமாந்ஸம்பூ⁴தோ த்³விஜஸத்த்ம ||2-59-9

ஜனமேஜயன், “ஓ! வேதங்களை அறிந்த இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, பிரகாசமிக்கவனான மன்னன் ருக்மி எந்நாட்டில் பிறந்தான்? எக்குலத்தில் பிறந்தான்?” என்று கேட்டான்.

வைஶம்பாயந உவாச
ராஜர்ஷேர்யாத³வஸ்யாஸீத்³வித³ர்போ⁴ நாம வை ஸுத꞉ |
விந்த்⁴யஸ்ய த³க்ஷிணே பார்ஶ்வே வித³ர்பா⁴யாம் ந்யவேஶயத் ||2-59-10

வைசம்பாயனர், “அரசமுனியான யாதவனின் மகன் விதர்ப்பன், விந்திய மலைக்குத் தென்புறத்தில் விதர்ப்பம் என்ற பெயரில் ஒரு நகரத்தை அமைத்தான்

க்ரத²கைஶிகமுக்²யாஸ்து புத்ராஸ்தஸ்ய மஹாப³லா꞉ |
ப³பூ⁴வுர்வீர்யஸம்பந்நா꞉ ப்ருத²க்³வம்ஶகரா ந்ருபா꞉ ||2-59-11

பலம்வாய்ந்தவர்களும், சக்திமிக்கவர்களுமான கிரதன், {கைசிகன்} முதலிய அவனுடைய மகன்கள் அனைவரும் தனித்தனி நாடுகளின் மன்னர்களாகி, தனித்தனி குலங்களை நிறுவினர்

தஸ்யாந்வவாயே பீ⁴மஸ்ய ஜஜ்ஞிரே வ்ருஷ்ணயோ ந்ருபா꞉ |
க்ரத²ஸ்ய த்வம்ஶுமாந்வம்ஶே பீ⁴ஷ்மக꞉ கைஶிகஸ்ய து ||2-59-12

ஹிரண்யரோமேத்யாஹுர்யம் தா³க்ஷிணாத்யேஶ்வரம் ந்ருபா꞉ |
அக³ஸ்த்யகு³ப்தாமாஶாம் ய꞉ குண்டி³நஸ்தோ²(அ)ந்வஶாந்ந்ருப꞉ ||2-59-13

ஓ! மன்னா, அவர்களில் விருஷ்ணிகள் பீமனின் குலத்தில் பிறந்தனர். அன்சுமான், கிரதனின் குலத்திலும், ஹிரண்யரோமன் என மக்களால் அழைக்கப்படுபவனும், தக்காணத்தின் மன்னனுமான பீஷ்மகன் கைசிகனின் குலத்திலும் பிறந்தனர். குண்டின நகரத்தில் {குண்டினபுரத்தில்} வாழ்பவனும், அகஸ்தியரால் தலைமை தாங்கப்படும் தெற்குப் பகுதியை ஆள்பவனுமான மன்னன் பீஷ்மகனுக்கு,(12,13)

ருக்மீ தஸ்யாப⁴வத்புத்ரோ ருக்மிணீ ச விஶாம்பதே |
ருக்மீ சாஸ்த்ராணி தி³வ்யாநி த்³ருமாத்ப்ராப மஹாப³ல꞉ ||2-59-14

ருக்மி என்ற பெயரில் ஒரு மகனும், ருக்மிணி என்ற பெயரில் ஒரு மகளும் இருந்தனர். பெருஞ்சக்திவாய்ந்த ருக்மி, துருமனிடமிருந்து தெயவீக ஆயுதங்களையும்,

ஜாமத³க்³ந்யாத்ததா² ராமாத்³ப்³ராஹ்மமஸ்த்ரமவாப்தவாந் |
ப்ராஸ்பர்த்³த⁴த ஸ க்ருஷ்ணேந நித்யமத்³பு⁴தகர்மணா ||2-59-15

ஜமகதக்னியின் மகனான ராமரிடமிருந்து {பரசுராமரிடமிருந்து} பிரம்மாயுதத்தையும் {பிரம்மாஸ்திரத்தையும்} அடைந்தான். அற்புதச் செயல்களைச் செய்பவனான கிருஷ்ணனின் முன்பு எப்போதும் அவன் தற்பெருமை பேசிக் கொண்டிருந்தான்.

ருக்மிணீ த்வப⁴வத்³ராஜந்ரூபேணாஸத்³ருஶீ பு⁴வி |
சகமே வாஸுதே³வஸ்தாம் ஶ்ரவாதே³வ மஹாத்³யுதி꞉ ||2-59-16

ஓ! மன்னா, பெரும்பிரகாசம் கொண்டவனான வாசுதேவன், பூமியில் ஒப்பற்ற அழகு படைத்த ருக்மிணியைக் குறித்துக் கேள்விப்பட்ட உடனேயே அவளை அடைய விரும்பினான்.

ஸ ததா² சாபி⁴லஷித꞉ ஶ்ரவாதே³வ ஜநார்த³ந꞉ |
தேஜோவீர்யப³லோபேத꞉ ஸ மே ப⁴ர்தா ப⁴வேதி³தி ||2-59-17

பலமும், சக்தியும் கொண்ட ஜனார்த்தனனைக் குறித்துக் கேள்விப்பட்ட ருக்மிணியும் “அவர் மட்டுமே என் கணவராக முடியும்” என்று {அவனை} விரும்பினாள்.

தாம் த³தௌ³ ந ச க்ருஷ்ணாய த்³வேஷாத்³ருக்மீ மஹாப³ல꞉ |
கம்ஸஸ்ய வத⁴ஸந்தாபாத்க்ரூஷ்ணாயாமிததேஜஸே |
யாசமாநாய கம்ஸஸ்ய த்³வேஷ்யோ(அ)யமிதி சிந்தயந் ||2-59-18

பெருஞ்சக்தி வாய்ந்த கிருஷ்ணன் ருக்மிணியை வேண்டினாலும், பெரும்பலமிக்கவனும், கம்சனின் மரணத்தால் துயரில் நிறைந்தவனுமான ருக்மி, “இவன் அவனுடைய {கம்ஸனின்} பகைவன்” என்று நினைத்து, அவளை அவனுக்குக் கொடுக்காதிருந்தான்.

சைத்³யஸ்யார்தே² ஸுநீத²ஸ்ய ஜராஸம்த⁴ஸ்து பூ⁴மிப꞉ |
வரயாமாஸ தாம் ராஜா பீ⁴ஷ்மகம் பீ⁴மவிக்ரமம் ||2-59-19

பேரரசன் ஜராசந்தன், சுனீதனின் {தமகோஷனின்} மகனான சேதி மன்னன் சிசுபாலனுக்காகப் பெரும்பலம்வாய்ந்தவனான பீஷ்மகனிடம் அந்தக் கன்னிகையை {ருக்மிணியை} வேண்டினான்.

சேதி³ராஜஸ்ய து வஸோராஸீத்புத்ரோ ப்³ருஹத்³ரத²꞉ |
மக³தே⁴ஷு புரா யேந நிர்மிதோ(அ)ஸௌ கி³ரிவ்ரஜ꞉ ||2-59-20

மகத மாகாணத்தில் முன்னர்க் கிரிவ்ரஜ நகரத்தை அமைத்த மன்னன் பிருஹத்ரதன், சேதி மன்னனான வசுவின் மகனாவான்

தஸ்யாந்வவாயே ஜஜ்ஞே(அ)ஸௌ ஜராஸம்தோ⁴ மஹாப³ல꞉ |
வஸோரேவ ததா³ வம்ஶே த³மகோ⁴ஷோ(அ)பி சேதி³ராட் ||2-59-21

அவனுடைய குலத்திலேயே பெரும்பலம் வாய்ந்த ஜராசந்தன் பிறந்திருந்தான்; சேதி மன்னன் தமகோஷனும் அதே குலத்திலேயே பிறந்தவனாவான்.

த³மகோ⁴ஷஸ்ய புத்ராஸ்து பஞ்ச பீ⁴மபராக்ரமா꞉ |
ப⁴கி³ந்யாம் வஸுதே³வஸ்ய ஶ்ருதஶ்ரவஸி ஜஜ்ஞிரே ||2-59-22

அந்தத் தமகோஷன், {கிருஷ்ணனின் தந்தையான} வசுதேவனின் தங்கை ஸ்ருதஸ்ரவையிடம்

ஶிஶுபாலோ த³ஶக்³ரீவோ ரைப்⁴யோ(அ)தோ²பதி³ஶோ ப³லீ |
ஸர்வாஸ்த்ரகுஶலா வீரா வீர்யவந்தோ மஹாப³லா꞉ ||2-59-23

பேராற்றல் படைத்தவர்களான சிசுபாலன், தசக்ரீவன், ரைப்யன், உபதிசன், பலி எனும் ஐந்து மகன்களைப் பெற்றான்.

ஜ்ஞாதே꞉ ஸமாநவம்ஶஸ்ய ஸுநீத²꞉ ப்ரத³தௌ³ ஸுதம் |
ஜராஸம்த⁴ஸ்து ஸுதவத்³த³த³ர்ஶைநம் ஜுகோ³ப ச ||2-59-24

மன்னன் சுனீதன் {தமகோஷன்}, தன் குலத்தில் பிறந்தவனான ஜராசந்தனிடம் தன் மகன் சிசுபாலனைக் கொடுத்தான், அவனும் {ஜராசந்தனும்} தன் மகனைப் போலவே அவனை {சிசுபாலனை} வளர்த்து வந்தான்.

ஜராஸம்த⁴ம் புரஸ்க்ருத்ய வ்ருஷ்ணிஶத்ரும் மஹாப³லம் |
க்ருதாந்யாகா³ம்ஸி சைத்³யேந வ்ருஷ்ணீநாம் சாப்ரியைஷிணா ||2-59-25

ஜராசந்தனின் பாதுகாப்பில் வளர்ந்த சேதி மன்னன் சிசுபாலன், பெருஞ்சக்திவாய்ந்தவனும், விருஷ்ணிகளின் பகைவனுமான அவனை {ஜராசந்தனை} நிறைவடையச் செய்வதற்காக அவர்களுடன் {விருஷ்ணிகளுடன்} சச்சரவு செய்து வந்தான்.

ஜாமாதா த்வப⁴வத்தஸ்ய கம்ஸஸ்தஸ்மிந்ஹதே யுதி⁴ |
க்ருஷ்ணார்த²ம் வைரமப⁴வஜ்ஜராஸம்த⁴ஸ்ய வ்ருஷ்ணிபி⁴꞉ ||2-59-26

கம்சன், ஜராசந்தனின் மருமகனாவான். அரங்கத்தில் அவன் {கம்சன்} கிருஷ்ணனால் கொல்லப்பட்டதன் காரணமாக அவனுக்கும் {ஜராசந்தனுக்கும்}, விருஷ்ணிகளுக்கும் இடையில் பகை ஏற்பட்டது.

பீ⁴ஷ்மகம் வரயாமாஸ ஸுநீதா²ர்தே² ச ருக்மிணீம் |
தாம் த³தௌ³ பீ⁴ஷ்மகஶ்சாபி ஶிஶுபாலாய வீர்யவாந் ||2-59-27

அந்த நேரத்தில்தான் அந்த மகத மன்னன் {ஜராசந்தன்}, சுனீதனின் மகனான சிசுபாலனுக்காகப் பலம் வாய்ந்த பீஷ்மகனிடம் இருந்து ருக்மிணியைப் பெற விரும்பினான்.

ததஶ்சைத்³யமுபாதா³ய ஜராஸம்தோ⁴ நராதி⁴ப꞉ |
யயௌ வித³ர்பா⁴ந்ஸஹிதோ த³ந்தவக்த்ரேண யாயிநா ||2-59-28

அதன் பேரில் பேரரசன் ஜராசந்தன், சிசுபாலனுடனும், தந்தவக்ரனுடனும் விதர்ப்பத்திற்குப் புறப்பட்டுச் சென்றான்.

அநுஜ்ஞாதஶ்ச பௌண்ட்³ரேண வாஸுதே³வேந தீ⁴மதா |
அங்க³வங்க³கலிங்கா³நாமீஶ்வர꞉ ஸ மஹாப³ல꞉ ||2-59-29

நுண்ணறிவுமிக்கப் பௌண்ட்ர மன்னன் வாசுதேவனும், பெருஞ்சக்திவாய்ந்தவர்களான அங்க, வங்க, கலிங்க மன்னர்களும் அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.

மாநயிஷ்யம்ஶ்ச தாந்ருக்மீ ப்ரத்யுத்³க³ம்ய நராதி⁴பாந் |
வரயா பூஜயோபேதாம்ஸ்தாந்நிநாய புரீம் ப்ரதி ||2-59-30

ருக்மி, அந்த மன்னர்களை எதிர்கொண்டழைத்துக் கௌரவித்து அவர்களைத் தன் நகரத்திற்கு வரவேற்றான்.

பித்ருஷ்வஸு꞉ ப்ரியார்த²ம் ச ராமக்ரிஷ்ணாவுபா⁴வபி |
ப்ரயயுர்வ்ருஷ்ணயஶ்சாந்யே ரதை²ஸ்தத்ர ப³லாந்விதா꞉ ||2-59-31

ராமனும் {பலராமனும்}, கிருஷ்ணனும், தங்கள் தந்தையின் தங்கையை {தங்கள் அத்தையை} நிறைவடையச் செய்வதற்காக வலிமைமிக்க விருஷ்ணி குலத் தேர்வீரர்களுடனும், தங்கள் படையுடனும் அந்த நகரத்திற்கு {குண்டினபுரத்திற்குச்} சென்றனர்.

க்ரத²கைஶிகப⁴ர்தா தாந்ப்ரதிக்³ருஹ்ய யதா²விதி⁴ |
பூஜயாமாஸ பூஜார்ஹாந்ப³ஹிஶ்சைவ ந்யவேஶயத் ||2-59-32

கிரத, கைசிகர்களின் நாட்டை ஆண்ட மன்னன் {பீஷ்மகன்}, நகரத்திற்கு வெளியே வாழ்ந்து வந்த அந்த வழிபடத்தகுந்த யாதவர்களை {ராமகிருஷ்ணர்களை} முறையாக வரவேற்று அழைத்துச் சென்றான்.

ஶ்வோ பா⁴விநி விவாஹே ச ருக்மிணீ நிர்யயௌ ப³ஹி꞉ |
சதுர்யுஜா ரதே²நைந்த்³ரே தே³வதாயதநே ஶுபே⁴ ||2-59-33

இந்த்³ராணீமர்சயிஷ்யந்தீ க்ருதகௌதுகமங்க³லா |
தீ³ப்யமாநேந வபுஷா ப³லேந மஹதா வ்ருதா ||2-59-34

மங்கலக் குறிகள் அனைத்தையும் கொடையாகக் கொண்டவளும், புனிதச் சடங்குகளைச் செய்த பிறகு அழகில் ஒளிர்ந்தவளுமான ருக்மிணி, திருமணத்திற்கு முந்தைய நாளில் {ஜேஷ்ட /கேட்டை நட்சத்திரத்தில்}, சசிதேவியை {இந்திராணியை} வழிபடுவதற்காக, நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் படைவீரர்களின் பாதுகாப்புடன் தன் வீட்டில் இருந்து இந்திரனின் கோவிலுக்குப் புறப்பட்டுச் சென்றாள்.(33,34)

தாம் த³த³ர்ஶ ததா³ க்ருஷ்ணோ லக்ஷ்மீம் ஸாக்ஷாதி³வ ஸ்தி²தாம் |
ரூபேணாக்³ர்யேண ஸம்பந்நாம் தே³வதாயதநாந்திகே ||2-59-35

வஹ்நிரேவ ஶிகா²ம் தீ³ப்தாம் மாயாம் பூ⁴மிக³தாமிவ |
ப்ருதி²வீமிவ க³ம்பீ⁴ராமுத்தி²தாம் ப்ருதி²வீதலாத் ||2-59-36

எரிதழலைப் போன்றவளும், பெண்களில் முதன்மையானவளும், சந்திரக் கதிர்களைப் போன்று மென்மையானவளும், அழகியரில் சிறந்தவளுமான ருக்மிணியைப் பூமியில் இறங்கிவந்த மாயா தேவியையோ, பாதாளத்தில் இருந்து புறப்பட்ட பூமாதேவியையோ, தன் மனைவியாவதற்காகவே தாமரையைவிட்டு இறங்கி வந்த ஸ்ரீதேவியையோ போல அந்தக் கோவிலின் அருகில் அவன் {கிருஷ்ணன்} கண்டான்.(35,36)

மரீசிமிவ ஸோமஸ்ய ஸௌம்யாம் ஸ்த்ரீவிக்³ரஹாம் பு⁴வி |
ஶ்ரீமிவாக்³ர்யாம் விநா பத்³மம் ப⁴விஷ்யாம் ஶ்ரீஸஹாயிநீம் |
க்ருஷ்ணேந மநஸா த்³ருஷ்டாம் து³ர்நிரீக்ஷ்யாம் ஸுரைரபி ||2-59-37

ஶ்யாமாவதா³தா ஸா ஹ்யாஸீத்ப்ருது²சார்வாயதேக்ஷணா |
தாம்ரௌஷ்ட²நயநாபாங்கீ³ பீநோருஜக⁴நஸ்தநீ ||2-59-38

கருநீலவண்ண மேனியையும்[“அவள் உத்தம லக்ஷணம் வாய்ந்த கார்மேனியள்” ], அகன்ற விழிகளையும் கொண்ட காரிகையான ருக்மிணி, தேவர்களின் மனத்தாலும் காணமுடியாத வகையில் தேரில் அமர்ந்திருந்தாலும் அவளைக் கிருஷ்ணனால் காண முடிந்தது. அவளுடைய உதடுகளும், கடைக்கண்களும் தாமிரம்போல {சிவந்து} இருந்தன, தொடைளும், இடையும், மார்பும் திரண்டிருந்தன,(37,38)

ப்³ருஹதீ சாருஸர்வாங்கீ³ தந்வீ ஶஶிஸிதாநநா |
தாம்ரதுங்க³நகீ² ஸுப்⁴ரூர்நீலகுஞ்சிதமூர்த⁴ஜா ||2-59-39

அத்யர்த²ம் ரூபத꞉ காந்தா பீநஶ்ரோணிபயோத⁴ரா |
தீக்ஷ்ணஶுக்லை꞉ ஸமைர்த³ந்தை꞉ ப்ரபா⁴ஸத்³பி⁴ரலங்க்ருதா ||2-59-40

அவளுடைய மேனி நெடியதாக இருந்தாலும் மெலிதாகவும், அழகாகவும் இருந்தது; அவளுடைய முகம் நிலவைப் போன்று இருந்தது. புருவங்கள் எழில்மிக்கனவாகவும், கூந்தல் சுருள் முடிகளைக் கொண்டு கருமையானதாகவும் இருந்தன, அவளுடைய அழகு காண்பதற்கினியதாக இருந்தது. நிகர்வரிசை கொண்ட வெண்பற்களால் அவளது முகம் அழகூட்டப்பட்டிருந்தது.(39,40)

அநந்யா ப்ரமதா³ லோகே ரூபேண யஶஸா ஶ்ரியா |
ருக்மிணீ ரூபிணீ தே³வீ பாண்டு³ரக்ஶௌமவாஸிநீ ||2-59-41

தாம் த்³ருஷ்ட்வா வவ்ருதே⁴ காம꞉ க்ருஷ்ணஸ்ய ப்ரியத³ர்ஶநாம் |
ஹவிஷேவாநலஸ்யார்சிர்மநஸ்தஸ்யாம் ஸமாத³த⁴த் ||2-59-42

பெண்களில் முதன்மையானவளும், நீல ஆடை உடுத்தியிருந்தவளும், அக்கால உலகில் அழகிலும், புகழிலும், அருளிலும் ஒப்பற்றவளாகத் திகழ்ந்தவளுமான அந்த அழகிய ருக்மிணியைக் கண்டதும் அவளிடம் ஈர்ப்புக் கொண்ட கிருஷ்ணனின் மனத்தில் நெய்யூட்டப்படும் நெருப்பைப் போலப் பெருஞ்சக்தியுடன் ஆசை வளர்ந்தது.(41,42)

ராமேண ஸஹ நிஶ்சித்ய கேஶவஸ்து மஹாப³ல꞉ |
தத்ப்ரமாதே²(அ)கரோத்³பு³த்³தி⁴ம் வ்ருஷ்ணிபி⁴꞉ ப்ரணீதா⁴ய ச ||2-59-43

கேசவன், விருஷ்ணிகளிடம் ஆலோசிப்பதற்கு முன் ராமனிடம் ஆலோசனை செய்து விட்டு, அவளைக் {ருக்மிணியைக்} களவு செய்வதெனத் தன் மனத்தில் தீர்மானித்தான்.

க்ருதே து தே³வதாகார்யே நிஷ்க்ராமந்தீம் ஸுராலயாத் |
உந்மத்²ய ஸஹஸா க்ருஷ்ண꞉ ஸ்வம் நிநாய ரதோ²த்தமம் ||2-59-44

ருக்மிணி, பூஜையை முடித்துக் கொண்டு கோவிலை விட்டு வெளியே வந்ததும், அவளது மெய்க்காப்பாளர்கள் அனைவரையும் தாக்கிவிட்டு அவளைப் பலவந்தமாகத் தன் தேருக்கு அபகரித்துச் சென்றான் ஜனார்த்தனன்.

வ்ருக்ஷமுத்பாட்ய ராமோ(அ)பி ஜகா⁴நாபதத꞉ பராந் |
ஸமநஹ்யந்த தா³ஶார்ஹாஸ்ததா³ஜ்ஞப்தாஶ்ச ஸர்வஶ꞉ ||2-59-45

ராமனும் {பலராமனும்}, பெரும் மரமொன்றை வேரோடு பிடுங்கிப் பகைவரைத் தாக்கி யமலோகத்திற்கு விருந்தினர்களாக அவர்களை அனுப்பத் தொடங்கினான்.

தே ரதை²ர்விவிதா⁴காரை꞉ ஸமுச்ச்²ரிதமஹாத்⁴வஜை꞉ |
வாஜிபி⁴ர்வாரணைஶ்சைவ பரிவவ்ருர்ஹலாயுத⁴ம் ||2-59-46

பலதேவனின் ஆணையின் பேரில் தாசார்ஹர்களும் முழுமையாக ஆயுதந்தரித்தனர்; குதிரைகளுடனும், யானைகளுடனும், ஏற்றப்பட்ட கொடிகளுடன் கூடிய தேர்கள் ராமனைச் சூழ்ந்து கொண்டன.

ஆதா³ய ருக்மிணீம் க்ருஷ்ணோ ஜகா³மாஶு புரீம் ப்ரதி |
ராமே பா⁴ரம் தமாஸஜ்ய யுயுதா⁴நே ச வீர்யவாந் ||2-59-47

கிருஷ்ணன், ருக்மிணியுடன் துவாரகைக்கு விரைந்து சென்றான். போருக்கான பொறுப்பை ராமன் {பலராமன்}, யுயுதானன் {சாத்யகி},

அக்ரூரே விப்ருதௌ² சைவ க³தே³ ச க்ருதவர்மணி |
சக்ரதே³வே ஸுதே³வே ச ஸாரணே ச மஹாப³லே ||2-59-48

அக்ரூரன், விப்ருது, கதன், கிருதவர்மன், சக்ரதேவன், சுதேவன், பெருஞ்சக்திவாய்ந்த சாரணன்

நிவ்ருத்தஶத்ரௌ விக்ராந்தே ப⁴ங்கா³காரே விதூ³ரதே² |
உக்³ரஸேநாத்மஜே கங்கே ஶதத்³யும்நே ச கேஶவ꞉ ||2-59-49

நிவ்ருதசத்ரு, வீரமிக்கப் பங்ககாரன், விதூரதன், உக்ரசேனனின் மகன் கங்கன், சத்யத்யும்னன்

ராஜாதி⁴தே³வே ம்ருது³ரே ப்ரஸேநே சித்ரகே ததா² |
அதிதா³ந்தே ப்³ருஹத்³து³ர்கே³ ஶ்வப²ல்கே ஸத்யகே ப்ருதௌ² ||2-59-50

வ்ருஷ்ண்யந்த⁴கேஷு சாந்யேஷு முக்²யேஷு மது⁴ஸூத³ந꞉ |
கு³ருமாஸஜ்ய தம் பா⁴ரம் யயௌ த்³வாரவதீம் ப்ரதி ||2-59-51

ராஜாதிதேவன், மிருதுரன், பிரஸேனன், சித்ரகன், அதிதாந்தன், பிரஹத்துர்கன், ஸ்வபல்கன், சத்யகன், பிருது முதலிய விருஷ்ணி, அந்தகக் குல வீரர்கள் ஆகியோரிடம் {அந்தப் போருக்கான பொறுப்பை} மதுசூதனன் ஒப்படைத்திருந்தான்.(50-51)

த³ந்தவக்த்ரோ ஜராஸம்த⁴꞉ ஶிஶுபாலஶ்ச வீர்யவாந் |
ஸந்நத்³தா⁴ நிர்யயு꞉ க்ருத்³தா⁴ ஜிகா⁴ம்ஸந்தோ ஜநார்த³நம் ||2-59-52

கவசந்தரித்தவர்களும், பலம்வாய்ந்தவர்களுமான தந்தவக்ரன், சிசுபாலன், ஜராசந்தன் ஆகியோர் ஜனார்த்தனனைக் கொல்வதற்காகக் கோபத்துடன் புறப்பட்டனர்.

அஞ்க³வங்க³கலிங்கை³ஶ்ச ஸார்த⁴ம் பௌண்ட்³ரைஶ்ச வீர்யவாந் |
நிர்யயௌ சேதி³ராஜஸ்து ப்⁴ராத்ருபி⁴꞉ ஸ மஹாரதை²꞉ ||2-59-53

பெரும்பலம்வாய்ந்த சேதி மன்னனும் {தமகோஷனும் / சுனீதனும்} கூட, அங்க, வங்க கலிங்க, பௌண்ட்ர மன்னர்களுடனும், வலிமைமிக்கத் தேர்வீரர்களான தன் சகோதரர்களுடனும் புறப்பட்டுச் சென்றான்.

தாந்ப்ரத்யக்³ருஹ்ணந்ஸம்ரப்³தா⁴ வ்ருஷ்ணிவீரா மஹாரதா²꞉ |
ஸங்கர்ஷணம் புரஸ்க்ருத்ய வாஸவம் மாருதோ யதா² ||2-59-54

வாசவன் தலைமையிலான தேவர்களைப் போலச் சங்கர்ஷணனின் {பலராமனின்} தலைமையிலான பெருஞ்சக்திவாய்ந்த விருஷ்ணிகளும் தங்கள் பகைவருடன் கோபத்துடன் போரிட்டனர்

ஆபதந்தம் ஹி வேகே³ந ஜராஸம்த⁴ம் மஹாப³லம் |
ஷட்³பி⁴ர்விவ்யாத⁴ நாராசைர்யுயுதா⁴நோ மஹாம்ருதே⁴ ||2-59-55

அந்தப் பெரும்போரில் சாத்யகி, தங்களைத் தாக்கிய பலம்வாய்ந்த ஜராசந்தனை ஆறு நாராசங்களால் வேகமாகத் துளைத்தான்

அக்ரூரோ த³ந்தவக்த்ரம் து விவ்யாத⁴ நவபி⁴꞉ ஶரை꞉ |
தம் ப்ரத்யவித்³த்⁴யத்காரூஷோ பா³ணைர்த³ஶபி⁴ராஶுகை³꞉ ||2-59-56

அக்ரூரன் ஒன்பது கணைகளால் தந்தவக்ரனைத் தாக்கியபோது, அந்தக் காரூஷ மன்னன் வேகமாகச் செல்லும் பத்துக் கணைகளால் அவனைப் பதிலுக்குத் தாக்கினான்.

விப்ருது²꞉ ஶிஶுபாலம் து ஶரைர்விவ்யாத⁴ ஸப்தபி⁴꞉ |
அஷ்டபி⁴꞉ ப்ரத்யவித்³த்⁴யத்தம் ஶிஶுபால꞉ ப்ரதாபவாந் ||2-59-57

விப்ருதுவின் ஏழு கணைகளால் தாக்கப்பட்டவனும், பலம்வாய்ந்தவனுமான சிசுபாலன், பதிலுக்கு எட்டுக் கணைகளால் அவனை {விப்ருதுவைத்} துளைத்தான்.

க³வேஷணஸ்து சைத்³யம் து ஶட்³பி⁴ர்விவ்யாத⁴ மார்க³ணை꞉
அதிதா³ந்தஸ்ததா²ஷ்டாபி⁴ர்ப்³ருஹத்³து³ர்கை³ஶ்ச பஞ்சபி⁴꞉ ||2-59-58

ப்ரதிவிவ்யாத⁴ தாம்ஶ்சைத்³ய꞉ பஞ்சபி⁴꞉ பஞ்சபி⁴꞉ ஶரை꞉ |
ஜகா⁴நாஶ்வாம்ஶ்ச சதுரஶ்சதுர்பி⁴ர்விப்ருதோ²꞉ ஶரை꞉ ||2-59-59

அப்போது கவேஷணன் ஆறு கணைகளாலும், அதிதாந்தன் எட்டாலும், பிருஹத்துர்கன் ஐந்து கணைகளாலும் சேதி மன்னனைத் தாக்கினர். அவனும் அவர்கள் ஒவ்வொருவரையும் ஐந்து ஐந்து கணைகளால் பதிலுக்குத் தாக்கி, நான்கு கணைகளால் விப்ருதுவின் நான்கு குதிரைகளைக் கொன்றான்.(58,59)

ப்³ருஹத்³து³ர்க³ஸ்ய ப⁴ல்லேந ஶிரஶ்சிச்சே²த³ சாரிஹா |
க³வேஷணஸ்ய ஸூதம் து ப்ராஹிணோத்³யமஸாத³நம் ||2-59-60

பகைவர்களைக் கொல்பவனான சேதி மன்னன், அடுத்தக் கணத்திலேயே ஒரு பல்லத்தால் பிருஹத்துர்கனின் தலையைக் கொய்து, கவேஷணனின் தேரோட்டியை யமனுலகுக்கு அனுப்பி வைத்தான்.

ஹதாஶ்வம் து ரத²ம் த்யக்த்வா விப்ருது²ஸ்து மஹாப³ல꞉ |
ஆருரோஹ ரத²ம் ஶீக்⁴ரம் ப்³ருஹத்³து³ர்க³ஸ்ய வீர்யவாந் ||2-59-61

பெரும்பலம்வாய்ந்த விப்ருது, குதிரைகள் கொல்லப்பட்ட தன்னுடைய தேரைக் கைவிட்டு, பிருஹத்துர்கனின் தேரில் விரைவாக ஏறிக் கொண்டான்.

விப்ருதோ²꞉ ஸாரதி²ஶ்சாபி க³வேஷணரத²ம் த்³ருதம் |
ஆருஹ்ய ஜவநாநஶ்வாந்நியந்துமுபசக்ரமே ||2-59-62

அவனுடைய {பிருஹத்துர்கனின்} தேரோட்டி, கவேஷணனின் தேரில் ஏறிக் கொண்டு வேகமாகச் செல்லும் அவனுடைய குதிரைகளைச் செலுத்தினான்.

தே க்ருத்³தா⁴꞉ ஶரவர்ஷேண ஸுநீத²ம் ஸமவாகிரந் |
ந்ருத்யந்தம் ரத²மார்கே³ஷு சாபஹஸ்தா꞉ கலாபிந꞉ ||2-59-63

அப்போது கரங்களில் விற்களுடனும், கணைகளுடனும் இருந்த யாதவர்கள், தேரில் ஆடிக் கொண்டிருந்தவனான சுனீதனை {தமகோஷனை / சிசுபாலனை} கணைமாரியால் மறைத்தனர்.

சக்ரதே³வோ த³ந்தவக்த்ரம் பி³பே⁴தோ³ரஸி பத்ரிணா |
ஷட்³ரத²ம் பஞ்சபி⁴ஶ்சைவ விவ்யாத⁴ யுதி⁴ மார்க³ணை꞉ ||2-59-64

அந்தப் போர்க்களத்தில் தந்தவக்ரனின் மார்பைக் கணைகளால் துளைத்த சக்ரதேவன், மேலும் ஐந்து கணைகளால் பிரகாசனையும் தாக்கினான்.

தாப்⁴யாம் ஸ வித்³தோ⁴ த⁴ஶபி⁴ர்பா³ணைர்மர்மாதிகை³꞉ ஶிதை꞉ |
ததோ ப³லீ சக்ரதே³வம் பி³பே⁴த³ த³ஶபி⁴꞉ ஶரை꞉ |2-59-65

அவனும் {சக்ரதேவனும்} அவ்விருவரின் {தந்தவக்ரன், பிரகாசன் ஆகியோரின்} பத்துக் கணைகளால் முக்கிய அங்கங்களைத் துளைக்கப்பட்டுக் காயமடைந்தான். அதன்பிறகு சிசுபாலனின் தம்பியான பலி பத்துக் கணைகளால் சக்ரதேவனுக்கும்,

பஞ்சபி⁴ஶ்சாபி விவ்யாத⁴ ஸோ(அ)பி தூ³ராத்³விதூ³ரத²ம் |
விதூ³ரதோ²(அ)பி தம் ஷட்³பி⁴ர்விவ்யாதா⁴ஜௌ ஶிதை꞉ ஶரை꞉ ||2-59-66

ஐந்தால் விதூரதனுக்கும் காயமேற்படுத்தினான். அப்போது பெருஞ்சக்திவாய்ந்த விதூரதன் கூராக்கப்பட்ட ஆறு கணைகளால் பலியைத் தாக்கி, பதிலுக்கு முப்பது கணைகளால் தானே காயமடைந்தான்.

த்ரிம்ஶதா ப்ரத்யவித்⁴யத்தம் ப³லீ பா³ணைர்மஹாப³லம் |
க்ருதவர்மா பி³பே⁴தா³ஜௌ ராஜபுத்ரம் த்ரிபி⁴꞉ ஶரை꞉ ||2-59-67

ந்யஹநத்ஸாரதி²ம் சாஸ்ய த்⁴வஜம் சிச்சே²த³ ஸோச்ச்²ரிதம் |
ப்ரதிவிவ்யாத⁴ தம் க்ருத்³த்³த⁴꞉ பௌண்ட்³ர꞉ ஷட்³பி⁴꞉ ஶிலீமுகை²꞉ ||2-59-68

கிருதவர்மன், மூன்று கணைகளால் பௌண்ட்ர வாசுதேவனின் மகனைத் துளைத்துத் தேரோட்டியைக் கொன்று, அவனுடைய கொடிக்கம்பத்தையும் வெட்டி வீழ்த்தினான். இதைக் கண்ட பௌண்ட்ரன் ஆறு கணைகளால் பதிலுக்கு அவனைத் தாக்கி,(67,68)

த⁴நு꞉ சிச்சே²த³ சாப்யஸ்ய ப⁴ல்லேந க்ருதவர்மண꞉ |
நிவ்ருத்தஶத்ரு꞉ காலிங்க³ம் பி³பே⁴த³ நிஶிதை꞉ ஶரை꞉ |
தோமரேணாம்ஸதே³ஶே தம் நிர்பி³பே⁴த³ கலிங்க³ராட் ||2-59-69

ஒரு பல்லத்தால் அவனுடைய வில்லையும் அறுத்தான். நிவ்ருதசத்ரு, கூரிய கணைகளால் கலிங்க மன்னனைத் தாக்கினான். கலிங்க மன்னனும், ஓர் இரும்பு உலக்கையால் அவனுடைய தோளைத் தாக்கினான்

க³ஜேநாஸாத்³ய கங்கஸ்து க³ஜமங்க³ஸ்ய வீர்யவாந் |
தோமரேண பி³பே⁴தா³ங்க³ம் பி³பே⁴தா³ங்க³ஶ்ச தம் ஶரை꞉ ||2-59-70

சித்ரகஶ்ச ஶ்வப²ல்கஶ்ச ஸத்யகஶ்ச மஹாரத²꞉ |
கலிங்க³ஸ்ய ததா²நீகம் நாராசைர்பி³பி⁴து³꞉ ஶதை꞉ ||2-59-71

வீரமிக்கவனான கங்கன் {உக்ரசேனனின் மகன்} தன் யானையை அங்க மன்னனின் யானை மீது பாயச் செய்து உலக்கையால் அவனது மேனியில் காயமேற்படுத்தினான். அங்கனும், தன் கணைகளால் அவனை {கங்கனைத்} தாக்கினான். வலிமைமிக்கத் தேர்வீரர்களான சித்ரகன், ஸ்வபல்கன், சாத்யகி ஆகியோர் தங்கள் நாராசங்களால் கலிங்கத் தேர்வீரர்களைத் தாக்கினர்.(70,71)

தம் நிஸ்ருஷ்டத்³ருமேணாஜௌ வஞ்க³ராஜஸ்ய குஞ்ஜரம் |
ஜகா⁴ந ராம꞉ ஸங்க்ருத்³தோ⁴ வங்க³ராஜம் ச ஸம்யுகே³ ||2-59-72

அந்தப் போர்க்களத்தில் ராமன் {பலராமன்}, கோபத்துடன் ஒரு மரத்தைப் பிடுங்கி எறிந்து வங்க மன்னனையும், அவனது யானையையும் கொன்றான்.

தம் ஹத்வா ரத²மாருய்ஹ்ய த⁴நுராதா³ய வீர்யவாந் |
ஸஞ்ஃக²ர்ஷணோ ஜகா⁴நோக்³ரைர்நாராசை꞉ கைஶிகாண்ப³ஹூந் ||2-59-73

வீரமிக்கச் சங்கர்ஷணன் {பலராமன்}, வங்க மன்னனைக் கொன்றுவிட்டு அவனது தேரில் ஏறி, ஒரு வில்லை எடுத்துக் கொண்டு தன்னுடைய பயங்கரக் கணைகளால் எண்ணற்ற கைசிகர்களை யமலோகம் அனுப்பி வைத்தான்.

ஷட்³பி⁴ர்நிஹத்ய காரூஷாந்மஹேஷ்வாஸாந்ஸ வீர்யவாண் |
ஶதம் ஜகா⁴ந ஸம்க்ருத்³தோ⁴ மாக³தா⁴நாம் மஹாப³லே ||2-59-74

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், பலம்வாய்ந்தவனுமான அந்தத் தேர்வீரன், ஆறு கணைகளால் காரூஷர்களில் பெரும் வில்லாளிகளைக் கொன்று, அதன்பிறகு, மகதப் படையின் நூற்றுக்கணக்கான யானைகளையும் கொன்றுவிட்டு ஜராசந்தனை நோக்கி விரைந்தான்.

நிஹத்ய தாந்மஹாபா³ஹுர்ஜராஸம்த⁴ம் ததோ(அ)ப்⁴யயாத் |
தமாபதந்தம் விவ்யாத⁴ நாராசைர்மாக³த⁴ஸ்த்ரிபி⁴꞉ ||2-59-75

அந்தக் கதாதாரி (ராமன்) தன் மேல் பாயப் போவதைக் கண்ட மகத மன்னன் {ஜராசந்தன்} மூன்று நாராசங்களை அவன் மீது ஏவினான்.

தம் பி³பே⁴தா³ஷ்டபி⁴꞉ க்ருத்³தோ⁴ நாராசைர்முஸலாயுத⁴꞉ |
சிச்செ²த³ சாஸ்ய ப⁴ல்லேந த்⁴வஜம் ஹேமபரிஷ்க்ரூதம் ||2-59-76

அவனும் {பலராமனும்} பதிலுக்கு எட்டு நாராசங்களால் அவனுக்குக் காயமுண்டாக்கி கோபத்துடன் ஒரு பல்லத்தால் அவனது தங்கக் கொடிக்கம்பத்தை அறுத்தான்

தத்³யுத்³த⁴மப⁴வத்³கோ⁴ரம் தேஷாம் தே³வாஸுரோபமம் |
ஸ்ருஜதாம் ஶரவர்ஷாணி நிக்⁴நதாமிதரேதரம் ||2-59-77

இவ்வாறு கணைகளைப் பொழிந்த அவ்விருவருக்கிடையில், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்றதைப் போன்ற பயங்கரப் போர் நடந்தது.

க³ஜைர்க³ஜா ஹி ஸம்க்ருத்³தா⁴꞉ ஸம்நிபேது꞉ ஸஹஸ்ரஶ꞉ |
ரதை² ரதா²ஶ்ச ஸம்ரப்³தா⁴꞉ ஸாதி³நஶ்சாபி ஸாதி³பி⁴꞉ ||2-59-78

யானைவீரர்கள், யானைவீரர்களோடும், தேர்வீரர்கள் தேர்வீரர்களோடும், குதிரைப்படை குதிரைப்படையோடும்,

பதா³தய꞉ பதா³தீம்ஶ்ச ஶக்திசர்மாஸிபாணய꞉ |
சி²ந்த³ந்தஶ்சோத்தமாங்கா³நி விசேருர்யுதி⁴ தே ப்ருத²க் ||2-59-79

ஈட்டிகள், வாள்கள், கவசங்கள் தரித்த காலாட்படை வீரர்கள் காலாட்படையினருடனும் என ஒருவரோடொருவர் கோபத்துடன் போரிட்டு, தலைகளை வெட்டியபடியே அவர்கள் போர்க்களத்தில் திரியத் தொடங்கினர்.

அஸீநாம் பாத்யமாநாநாம் கவசேஷு மஹாஸ்வந꞉ |
ஶராணாம் பததாம் ஶப்³த³꞉ பக்ஷிணாமிவ ஶுஶ்ருவே ||2-59-80

வாள்களும், கணைகளும், கவசங்களும் விழுவது பறவைகளின் கதலைப் போல அங்கே கேட்டது.

பே⁴ரீஶங்க²ம்ருத³ங்கா³நாம் வேணூநாம் ச ம்ரூதே⁴ த்⁴வநிம் |
ஜுகூ³ஹ கோ⁴ஷ꞉ ஶஸ்த்ராணாம் ஜ்யாகோ⁴ஷஶ்ச மஹாத்மநாம் || 2-59-81

பேரிகைகள், சங்குகள், மிருதங்கங்கள் ஆகியவற்றின் ஒலியானது, அந்தப் பெரும் போர்வீரர்களின் ஆயுதங்களின் ஒலியையும், வில்லின் நாணொலியையும் மறைத்தது” என்றார் {வைசம்பாயனர்}.

இதி ஶ்ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஶே விஷ்ணுபர்வணீ
ருக்மிணீஹரணே ஏகோநஷஷ்டிதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 58–(ஸ்ரீமத் த்வாரவதீநகரநிர்மாணம்)–

January 29, 2021

விஷ்வகர்மன் துவாரகை நகரத்தைப் பெரியதாக அமைத்தல்; தேவசபையான சுதர்மம் துவாரகைக்குக் கொண்டு வரப்பட்டது; யாதவர்களை சுகமாகக் கவனித்துக் கொண்ட கிருஷ்ணன்; ரேவதியை மணந்த பலராமன்.

வைஶம்பாயந உவாச
தத꞉ ப்ரபா⁴தே விமலே பா⁴ஸ்கரே உதி³தே ததா³ |
க்ருதஜாப்யோ ஹ்ருஷீகேஶோ வநாந்தே நிஷஸாத³ ஹ ||2-58-1

பரிசக்ராம தம் தே³ஶம் து³ர்க³ஸ்தா²நதி³த்³ருக்ஷயா |
உபதஸ்து²꞉ குலப்ராக்³ர்யா யாத³வா யது³நந்த³நம் ||2-58-2

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “தெளிந்த விடியலில் சூரியன் உதித்தபோது, யதுகுல ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, அந்தக் காலைக்கான தன் தூய்மைச் சடங்குகளைச் செய்துவிட்டு, காட்டுப்புறத்தில் சிறிது நேரம் அமர்ந்து ஒரு கோட்டை கட்டுவதற்கான இடத்தைத் தேடத் தொடங்கினான். யது குலத்தின் முக்கிய உறுப்பினர்கள் அவனைப் பின்தொடர்ந்தனர்.(1,2)

ரோஹிண்யாமஹநி ஶ்ரேஷ்டே² ஸ்வஸ்தி வாச்ய த்³விஜோத்தமாந் |
புண்யாஹகோ⁴ஷைர்விபுலைர்து³ர்க³ஸ்யாரப்³த⁴வாந்க்ரியாம் ||2-58-3

பிறகு ரோஹிணி நட்சத்திர ஆதிக்கம் கொண்ட ஒரு மங்கல நாளில் பிராமணர்களுக்கு ஏராளமான கொடைகளை அளித்து, அவர்களைக் கொண்டு மங்கலச் சடங்குகளைச் செய்தான். அதன் பிறகு கோட்டை கட்டும் பணியைத் தொடங்கினான்

தத꞉ பங்கஜபத்ராக்ஷோ யாத³வாந்கேஶிஸூத³ந꞉ |
ப்ரோவாச வத³தாம் ஶ்ரேஷ்டோ² தே³வாந்வ்ருத்ரரிபுர்யதா² ||2-58-4

இவ்வாறு கோட்டையின் கட்டுமானத்தைத் தொடங்கியபோது, படைப்பாளர்களில் முதன்மையானவனும், கேசியைக் கொன்றவனுமான அந்தத் தாமரைக் கண்ணன் {கேசவன்}, தேவர்களிடம் பேசும் இந்திரனைப் போல யாதவர்களிடம்

கல்பிதேயம் மயா பூ⁴மி꞉ பஶ்யத்⁴வம் தே³வஸத்³மவத் |
நாம சாஸ்யா꞉ க்ருதம் புர்யா꞉ க்²யாதிம் யது³பயாஸ்யதி ||2-58-5

“ஓ! யாதவர்களே, நான் தேர்ந்தெடுத்திருக்கும் இடம் தேவர்களின் வசிப்பிடத்தைப் போன்றிருப்பதைக் காண்பீராக. பூமியில் இவ்விடம் எப்பெயரால் கொண்டாடப்பட இருக்கிறதோ அதையும் நான் தேர்ந்தெடுத்திருக்கறேன்

இயம் த்³வாரவதீ நாம ப்ருதி²வ்யாம் நிர்மிதா மயா |
ப⁴விஷ்யதி புரீ ரம்யா ஶக்ரஸ்யேவாமராவதீ ||2-58-6

தாந்யேவாஸ்யா꞉ காரயிஷ்யே சிஹ்நாந்யாயதநாநி ச |
சத்வாராந்ராஜமார்கா³ம்ஶ்ச ஸம்யக³ந்த꞉புராணி ச ||2-58-7

முற்றங்கள், உல்லாச வீதிகள், சமப்படுத்தப்பட்ட நல்ல சாலைகள், அந்தப்புரங்கள் என நகரத்திற்குரிய அனைத்து அடையாளங்களுடன் அமைக்கப்படும் என் நகரம் இந்திரனின் அமராவதியைப் போலப் பூமியில் துவாராவதி என்ற பெயரில் கொண்டாடப்படும்.(6,7)

தே³வா இவாத்ர மோத³ந்து ப⁴வந்தோ விக³தஜ்வரா꞉ |
பா³த⁴மாநா ரிபூநுக்³ராநுக்³ரஸேநபுரோக³மா꞉ ||2-58-8

உக்ரசேனரை உங்கள் முன்னிலையில் கொண்டு உங்கள் பகைவரின் பாதைகளில் தடைகளை ஏற்படுத்தித் தேவர்களைப் போலக் கவலைகளற்றவர்களாக இங்கே இன்புற்றிருப்பீராக.

க்³ருஹ்யந்தாம் வேஶ்மவாஸ்தூநி கல்ப்யந்தாம் த்ரிகசத்வரா꞉ |
மீயந்தாம் ராஜமார்கா³ஶ்ச ப்ராஸாத³ஸ்ய ச யா க³தி꞉ ||2-58-9

வீடுகள் கட்டுவதற்காக நீங்கள் அனைவரும் நிலங்களை எடுத்துக் கொள்வீராக; தோட்டங்களும், நாற்சந்தி சாலைகளும் அமைக்கப்படட்டும், சாலைகளும், மதில்களும் கட்டுவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படட்டும்

ப்ரேஷ்யந்தாம் ஶில்பிமுக்²யாநாம் யுக்தாநாம் வேஶ்மகர்மஸு |
நியுஜ்யந்தாம் ச தே³ஶேஷு ப்ரேஷ்யகர்மகரா ஜநா꞉ ||2-58-10

வீடுகள் கட்டுவதில் நிபுணர்களான கலைஞர்களும், கொத்தர்களும் {சிற்பிகளும்} நாடு முழுவதும் அனுப்பப்படட்டும்” என்றான் {கிருஷ்ணன்}.

ஏவமுக்தே து யத³வோ க்³ருஹஸங்க்³ரஹதத்பரா꞉ |
யதா²நிவேஶம் ஸம்ஹ்ருஷ்டாஶ்சக்ருர்வாஸ்துபரிக்³ரஹம் ||2-58-11

இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்ட யாதவர்கள், தங்கள் வீடுகளைக் கட்டிக் கொள்வதற்காக மகிழ்ச்சியுடன் இடங்களைத் தேர்ந்தெடுத்தனர்

ஸூத்ரஹஸ்தாஸ்ததோ மாநம் சக்ருர்யாத³வஸத்தமா꞉ |
புண்யே(அ)ஹநி மஹாராஜ த்³விஜாதீநபி⁴பூஜ்ய ச ||2-58-12

ஓ! மன்னா, சில யாதவர்கள் கயிறுகள் {நூல்கள்} கொண்டு தங்கள் நிலங்களை அளப்பதில் ஈடுபட்டனர்,

வாஸ்துதை³வதகர்மாணி விதி⁴நா காரயந்தி ச |
ஸ்த²பதீநத² கோ³விந்த³ஸ்தத்ரோவாச மஹாமதி꞉ ||2-58-13

அவர்களில் சிலர், அந்த மங்கல நாளில் பிராமணர்களைத் துதிப்பதன் மூலம் காவல்தெய்வத்தை வழிபடத் தொடங்கினர்[“அந்த மங்கல நாளில் அந்த இடத்திற்கான தேவர்களுக்குரிய சடங்குகளைச் செய்ய அவர்களுக்குச் சிலர் (சில பிராமணர்கள்) தேவைப்பட்டனர்”].அதன்பிறகு உயர்ந்த மனம் கொண்ட கோவிந்தன், கொத்தர்களிடம் {சிற்பிகளிடம்},

அஸ்மத³ர்தே² ஸுவிஹிதம் க்ரியதாமத்ர மந்தி³ரம் |
விவிக்தசத்வாரபத²ம் ஸுநிவிஷ்டேஷ்டதை³வதம் ||2-58-14

“முற்றங்கள், சாலைகளுடன் என் காவல் தெய்வத்திற்கான கோவிலை எனக்குக் கட்டித் தாருங்கள்” என்றான்[“இந்த இடத்தில், நாற்சந்திகளுடனும், நன்கு அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளுடனும் எங்களுடைய தேவர்களை நிறுவுவதற்கான மாளிகை கட்டப்பட வேண்டும்”].

தே ததே²தி மஹாபா³ஹுமுக்த்வா ஸ்த²பதயஸ்ததா³ |
து³ர்க³கர்மாணி ஸம்ஸ்காராநுபகல்ப்ய யதா²விதி⁴ ||2-58-15

அதற்கு அந்தக் கொத்தர்கள், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணனிடம், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லிவிட்டு, கோட்டை கட்டுவதற்கான பொருட்கள் அனைத்தையும் திரட்டிக் கொண்டு, வாயிலையும், எல்லைக் கோட்டையும் வடிவமைக்கத் தொடங்கினர்.

யதா²ந்யாயம் நிர்மிமிரே து³ர்கா³ண்யாயதநாநி ச |
ஸ்தா²நாநி நித³து⁴ஶ்சாத்ர ப்³ரஹ்மாதீ³நாம் யதா²க்ரமம் ||2-58-16

அபாமக்³நே꞉ ஸுரேஶஸ்ய த்³ருஷதோ³லூக²லஸ்ய ச |
சாதுர்தை³வாநி சத்வாரி த்³வாராணி நித³து⁴ஶ்ச தே ||2-58-17

அவர்கள், வேள்விகளின் தேவனான பிரம்மனுக்கும், இந்திரனுக்கும், நெருப்பு, நீர் ஆகியனவற்றின் தலைமை தேவர்களுக்கும், பிற தேவர்களுக்கும் அவரவருக்கு உரிய இடங்களில் கோவில்களைக் கட்டினார்கள். பிறகு அவர்கள், அந்தக் கோவில்களில் (சுத்தாக்ஷம், ஐந்த்ரம், பல்லாடம், புஷ்பதந்தம் என்ற பெயர்களைக் கொண்ட) நான்கு வாயில்களைக் கட்டினார்கள்[“ப்ரஹ்மா முதலியவர்களுக்கு இடங்களையும் கர்மப்படி அமைத்தனர். அப்பு (ஜல) தேவதை, அக்னி, இந்திரன், லிங்க தேவதை (சிவன்) ஆகிய நான்கு தேவதைகளையுடைய நான்கு வாயில்களை அமைத்தனர். சுத்தாஷ, ஐந்த்ர, பல்லாட, புஷ்பதந்த இந்த நான்கு மூர்த்திகளை ஆவாஹனம் செய்து அந்த வீடுகளில் மஹாத்மாக்களான யாதவர்கள் வந்து சேர்ந்ததும் மாதவன் நகரம் சீக்ரம் அமைக்க ஆலோசித்தான்” ].

ஶுத்³தா⁴க்ஷமைந்த்³ரம் ப⁴ல்லாடம் புஷ்பத³ந்தம் ததை²வ ச |
தேஷு வேஶ்மஸு யுக்தேஷு யாத³வேஷு மஹாத்மஸு ||2-58-18

புர்யா꞉ க்ஷிப்ரம் நிவேஶார்த²ம் சிந்தயாமாஸ மாத⁴வ꞉ |
தஸ்ய தை³வோத்தி²தா பு³த்³தி⁴ர்விமலா க்ஷிப்ரகாரிணீ ||2-58-19

இவ்வாறே உயரான்ம யாதவர்களின் வீடுகளும் கட்டப்பட்டபோது, மாதவன் அந்த நகரை மிக விரைவாக வடிவமைக்கும் எண்ணம் கொண்டான். அப்போது யாதவர்களுக்கும், அந்த நகரத்திற்கும் நலம் விளைவிக்கக் கூடியதும், அந்த நகரை விரைவாகவே அமைக்கவல்லதுமான தூய எண்ணம் அவனது மனத்தில் தற்செயலாக எழுந்தது.(18,19)

புர்யா꞉ ப்ரியகரீ ஸா வை யதூ³நாமபி⁴வர்த்³தி⁴நீ |
ஶில்பிமுக்²யஸ்து தே³வாநாம் ப்ரஜாபதிஸுத꞉ ப்ரபு⁴꞉ ||2-58-20

விஶ்வகர்மா ஸ்வமத்யா வை புரீம் ஸம்ஸ்தா²பயிஷ்யதி |
மநஸா ஸமநுத்⁴யாய தஸ்யாக³மநகாரணாத் |
த்ரித³ஶாபி⁴முக²꞉ க்ருஷ்ணோ விவிக்தே ஸமபத்³யத ||2-58-21

பிரஜாபதியின் மகனும், வடிவமைப்பாளர்களில் முதன்மையானவனும், வலிமைமிக்கவனுமான விஷ்வகர்மன் அந்நகரைக் கட்ட வேண்டும் என்று அவன் நினைத்தான். பிறகு கிருஷ்ணன், தேவலோகத்தை நோக்கித் திரும்பிய முகத்துடன் ஒரு தனிமையான இடத்தில் அமர்ந்து, “விஷ்வகர்மன் இங்கே வரவேண்டும்” எனத் தன் மனத்தில் நினைத்தான்.(20,21)

தஸ்மிந்நேவ தத꞉ காலே ஶில்பாசார்யோ மஹாமதி꞉ |
விஶ்வகர்மா ஸுரஶ்ரேஷ்ட²꞉ க்ருஷ்ணஸ்ய ப்ரமுகே² ஸ்தி²த꞉ ||2-58-22

அதேவேளையில், உயர்ந்த புத்தியைக் கொண்டவனும், தேவர்களில் முதன்மையானவனும், தெய்வீக வடிவமைப்பாளனுமான விஷ்வகர்மன் அங்கே வந்து கிருஷ்ணன் முன்பு நின்றான்.

விஶ்வகர்மோவாச
ஶக்ரேண ப்ரேஷித꞉ க்ஷிப்ரம் தவ விஷ்ணோ த்⁴ருதவ்ரத |
கிங்கர꞉ ஸமநுப்ராப்த꞉ ஶாதி⁴ மாம் கிம் கரோமி தே ||2-58-23

விஷ்வகர்மன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! உறுதியான நோன்புகளைக் கொண்ட விஷ்ணுவே, உனது அடிமையான நான் தேவர்களின் மன்னனுடைய {இந்திரனுடைய} ஆணையின் பேரில் விரைந்து வந்தேன்; நான் நிறைவேற்ற வேண்டிய ஆணையென்ன?

யதா²ஸௌ தே³வதே³வோ மே ஶங்கரஶ்ச யதா²வ்யய꞉ |
ததா² த்வம் தே³வ மாந்யோ மே விஶேஷோ நாஸ்தி வ꞉ ப்ரபோ⁴ ||2-58-24

ஓ! தேவா, பெரும்பாட்டனையும் (பிரம்மனையும்), முக்கண்ணனையும் போல நீ என்னால் துதிக்கப்படத் தகுந்தவன். ஓ! தலைவா, உங்கள் மூவருக்கு மத்தியில் எந்த வேறுபாடும் கிடையாது

த்ரைலோக்யஜ்ஞாபிகாம் வாசமுத்ஸ்ருஜஸ்வ மஹாபு⁴ஜ |
ஏஷோ(அ)ஸ்மி பரித்³ருஷ்டார்த²꞉ கிம் கரோமி ப்ரஶாதி⁴ மாம் ||2-58-25

ஓ! பெருந்தோள்களைக் கொண்டவனே, மூவுலகங்களுக்கும் விதிப்பதைப் போலவே மகிழ்ச்சியாக எனக்கு அணையிடுவாயாக” என்றான்.

ஶ்ருத்வா விநீதம் வசநம் கேஶவோ விஶ்வகர்மண꞉ |
ப்ரத்யுவாச யது³ஶ்ரேஷ்ட²꞉ கம்ஸாரிரதுலம் வச꞉ ||2-58-26

யதுக்களில் முதன்மையானவனும், கம்சனைக் கொன்றவனுமான கேசவன், விஸ்வகர்மனின் பணிவான சொற்களைக் கேட்டு ஒப்பற்ற சொற்களில் மறுமொழி கூறினான்

ஶ்ருதார்தோ² தே³வகு³ஹ்யஸ்ய ப⁴வாந்யத்ர வயம் ஸ்தி²தா꞉ |
அவஶ்யம் த்விஹ கர்தவ்யம் ஸத³நம் மே ஸுரோத்தம ||2-58-27

{கிருஷ்ணன்}, “ஓ! தேவர்களில் முதன்மையானவனே, தேவர்களின் நன்மைக்காகத் {தேவர்களுடன்} தனிமையில் நடந்த நமது ஆலோசனைகளில் நீயும் இருந்து கேட்டிருக்கிறாய். நீ இப்போது இங்கே எனக்கொரு வீடு கட்ட வேண்டும்

ததி³யம் பூ꞉ ப்ரகாஶார்த²ம் நிவேஶ்யா மயி ஸுவ்ரத |
மத்ப்ரபா⁴வாநுரூபைஶ்ச க்³ருஹைஶ்சேயம் ஸமந்தத꞉ ||2-58-28

ஓ! உறுதியான நோன்புகளைக் கொண்டவனே, என் சுயத்தை வெளிப்படுத்துவதற்காக இங்கே ஒரு நகரத்தைக் கட்டி, என் சக்திக்குத் தகுந்த வீடுகளால் அதை அலங்கரிப்பாயாக.

உத்தமா ச ப்ருதி²வ்யாம் வை யதா² ஸ்வர்கே³(அ)மராவதீ |
ததே²யம் ஹி த்வயா கார்யா ஶக்தோ ஹ்யஸி மஹாமதே ||2-58-29

மம ஸ்தா²நமித³ம் கார்யம் யதா² வை த்ரிதி³வே ததா² |
மர்த்யா꞉ பஶ்யந்து மே லக்ஷ்மீம் புர்யா யது³குலஸ்ய ச ||2-58-30

ஓ! பெரும்புத்திமானே, நிபுணனான உனக்கு இன்னும் நான் சொல்ல என்ன இருக்கிறது? அமராவதியைப் போலப் பூமியில் கொண்டாடப்படும் வகையில் ஒரு நகரத்தை எனக்குக் கட்டுவாயாக; என் நகரத்தின் அழகையும், யது குலத்தின் பெருமையையும் மனிதர்கள் காணும் வகையில் தேவலோகத்தில் எனக்குள்ளதைப் போலவே இங்கே எனக்கொரு வீட்டைக் கட்டுவாயாக” என்றான் {கிருஷ்ணன்}.(29,30)

ஏவமுக்தஸ்தத꞉ ப்ராஹ விஶ்வகர்மா மதீஶ்வர꞉ |
க்ருஷ்ணமக்லிஷ்டகர்மாணம் தே³வாமித்ரவிநாஶநம் ||2-58-31

இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்ட நுண்ணறிவுமிக்க விஷ்வகர்மன், களைப்பறியா செயல்களைச் செய்பவனும், தேவர்களின் பகைவரை அழிப்பவனுமான கிருஷ்ணனிடம்,

ஸர்வமேதத்கரிஷ்யாமி யத்த்வயாபி⁴ஹிதம் ப்ரபோ⁴ |
புரீ த்வியம் ஜநஸ்யாஸ்ய ந பர்யாப்தா ப⁴விஷ்யதி ||2-58-32

ப⁴விஷ்யதி ச விஸ்தீர்ணா வ்ருத்³தி⁴ரஸ்யாஸ்து ஶோப⁴நா |
சத்வார꞉ ஸாக³ரா ஹ்யஸ்யாம் விசரிஷ்யந்தி ரூபிண꞉ ||2-58-33

“ஓ! தலைவா, நீ விதித்த அனைத்தையும் நான் செய்வேன். ஆனால் இத்தனை மனிதர்களை உள்ளடக்கிக் கொள்ள உன் நகரம் போதுமானதல்ல. பெருங்கடல்கள் நான்கும் தங்கள் முழு வடிவங்களுடன் இங்கே இருக்கும் வகையில் உன் நகரம் மிகப் பெரியதாக இருக்க வேண்டும்.(32,33)

யதீ³ச்சே²த்ஸாக³ர꞉ கிம்சிது³த்க்ரஷ்டுமபி தோயராட் |
தத꞉ ஸ்வாயதலக்ஷண்யா புரீ ஸ்யாத்புருஷோத்தமா ||2-58-34

ஓ! புருஷர்களில் முதன்மையானவனே, பெருங்கடல் {சமுத்ரராஜன்} இன்னும் கொஞ்சம் இடம் கொடுத்தால் உன் நகரம் மிகப் பெரியதாக மாறும்” என்றான்.

ஏவமுக்தஸ்தத꞉ க்ருஷ்ண꞉ ப்ராகே³வ க்ருதநிஶ்சய꞉ |
ஸாக³ரம் ஸரிதாம் நாத²முவாச வத³தாம் வர꞉ ||2-58-35

பேசுபவர்களில் முதன்மையான கிருஷ்ணன் இதை முன்பே தீர்மானித்திருந்தான். எனவே தெய்வீக வடிவமைப்பாளன் {விஷ்வகர்மன்} இவ்வாறு பேசியதும், ஆறுகளின் தலைவனான பெருங்கடலிடம் அவன் {கிருஷ்ணன்},

ஸமுத்³ர த³ஶ ச த்³வே ச யோஜநாநி ஜலாஶயே |
ப்ரதிஸம்ஹ்ரியதாமாத்மா யத்³யஸ்தி மயி மாந்யதா ||2-58-36

“ஓ! பெருங்கடலே, உனக்கு என் மீது மதிப்பேதும் இருந்தால், பனிரெண்டு யோஜனைகள் தொலைவுக்கு நீரில் உன் வடிவை விலக்கிக் கொள்வாயாக.

அவகாஶே த்வயா த³த்தே புரீயம் மாமகம் ப³லம் |
பர்யாப்தவிஷயா ரம்யா ஸமக்³ரம் விஸஹிஷ்யதி ||2-58-37

நீ இடம் கொடுத்தால், செல்வங்களும், இன்பங்களும் நிறைந்த இந்த நகரமானது என் பெரிய படை தங்குவதற்கு உகந்ததாக இருக்கும்” என்றான் {கிருஷ்ணன்}.

தத꞉ க்ருஷ்ணஸ்ய வசநம் ஶ்ருத்வா நத³நதீ³பதி꞉ |
ஸ மாருதேந யோகே³ந உத்ஸஸர்ஜ ஜலாஶயம் ||2-58-38

விஶ்வகர்மா தத꞉ ப்ரீத꞉ புர்யா꞉ ஸம்லக்ஷ்ய வாஸ்து தத் |
கோ³விந்தே³ சைவ ஸந்மாநம் க்ருதவாந்ஸாக³ரஸ்ததா³ ||2-58-39

ஆறுகளின் தலைவனான பெருங்கடலானவன், கிருஷ்ணனின் சொற்களைக் கேட்டு, {காற்றுடன் சேர்ந்த மாருத} யோகத்தில் ஆழ்ந்து {நீரை விலக்கிக் கொண்டு}, தன் படுக்கையை {நீர்ப்படுகையை} அவனுக்கு அளித்தான். விஷ்வகர்மன், கோவிந்தனிடம் பெருங்கடல் வெளிப்படுத்தும் மதிப்பைக் கண்டும், நகரம் கட்டுவதற்கான இடத்தைக் கண்டும் பெரிதும் மகிழ்ந்தான்.(38,39)

விஶ்வகர்மா தத꞉ க்ருஷ்ணமுவாச யது³நநத³நம் |
அத்³யப்ரப்⁴ருதி கோ³விந்த³ ஸர்வே ஸமதி⁴ரோஹத ||2-58-40

மநஸா நிர்மிதா சேயம் மயா பூ꞉ ப்ரவரா விபோ⁴ |
அசிரேணைவ காலேந க்³ருஹஸம்பா³த⁴மாலிநீ ||2-58-41

அப்போது விஷ்வகர்மன், யதுவின் வழித்தோன்றலான கிருஷ்ணனிடம், “இன்றே இந்த நாளிலேயே நீ இந்நகரில் தங்குவாயாக. ஓ! தலைவா, நான் ஏற்கனவே இந்த மிகச்சிறந்த நகரத்திற்கான திட்டத்தை என் மனத்தில் வகுத்துவிட்டேன். எனவே, இப்போதே இது வீடுகளின் வரிசைகளால் அலங்கரிக்கப்படும்.(40,41)

ப⁴விஷ்யதி புரீ ரம்யா ஸுத்³வாரா ப்ராக்³ர்யதோரணா |
சயாட்டாலககேயூரா ப்ரூதி²வ்யாம் ககுதோ³பமா ||2-58-42

இந்த எழில்மிகு நகரம் அதன் அழகிய நுழைவாயில்கள், தோரணங்கள், மேல்மாடங்களின் {உப்பரிகைகளின்} காரணமாகப் பூமியின் திமிலாக {பூமியில் உயர்ந்ததாக} விளங்கும்” என்றான் {விஷ்வகர்மன்}.

அந்த꞉புரம் ச க்ருஷ்ணஸ்ய பரிசர்யாக்ஷயம் மஹத் |
சகார தஸ்யாம் புர்யாம் வை தே³ஶே த்ரித³ஶபூஜிதே ||2-58-43

அவன், தேவர்களும் விரும்பும் பகுதியில் அந்நகரைக் கட்டிவிட்டு, நீராடும் வீடுகளைக் கொண்ட கிருஷ்ணனின் அந்தப்புரத்தைக் கட்டினான்[“தேவர்களால் பூஜிக்கப்பட்ட இடமான அந்நகரில் க்ருஷ்ணனுக்குப் பரிசர்யை செய்யும் இடமாகிய பெரிய அந்தப்புரத்தையும் செய்தான்” ]

தத꞉ ஸா நிர்மிதா காந்தா புரீ த்³வாரவதீ ததா³ |
மாநஸேந ப்ரயத்நேந வைஷ்ணவீ꞉ விஶ்வகர்மணா ||2-58-44

இவ்வாறே துவாரவதி என்ற பெயரைக் கொண்ட அந்த அழகிய வைஷ்ணவ நகரம் விஷ்வகர்மனின் மனோ முயற்சியில் கட்டப்பட்டது.

விதா⁴நவிஹிதத்³வாரா ப்ராகாரவரஶோபி⁴தா |
பரிகா²சயஸம்கு³ப்தா ஸாட்டப்ராகாரதோரணா ||2-58-45

அந்த நகரம் உரிய வகையிலான கதவுகளால் பாதுகாக்கப்பட்டும், மிகச்சிறந்த மதில்களால் அலங்கரிக்கப்பட்டும், அகழிகளெனும் பள்ளங்களாலும், அரண்மனைகள்,

காந்தநாரீநரக³ணா வணிக்³பி⁴ருபஶோபி⁴தா |
நாநாபண்யக³ணாகீர்ணா கே²சரீவ ச கா³ம் க³தா ||2-58-46

அழகிய ஆண் பெண்கள், வணிகர்கள், பல்வேறு வணிகப் பொருட்கள் ஆகியவற்றாலும் நிறைந்ததாகவும் இருந்தது. அது பூமியில் நிறுவப்பட்டிருந்தாலும், வானத்தில் உலவுவதைப் போலத் தோன்றியது.

ப்ரபாவாபீப்ரஸந்நோதா³ உத்³யாநைருபஶோபி⁴தா |
ஸமந்தத꞉ ஸம்வ்ருதாங்கீ³ வநிதேவாயதேக்ஷணா ||2-58-47

குளங்கள், தூய நீரைக் கொண்ட சிற்றோடைகள், தோட்டங்கள் ஆகியவற்றால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. அஃது அகன்ற கண்களைக் கொண்ட ஒரு காரிகையைப் போல அனைத்துப் பக்கங்களிலும் மறைக்கப்பட்டிருந்தது.

ஸம்ருத்³த⁴சத்வரவதீ வேஶ்மோத்தமக⁴நாசிதா |
ரத்²யாகோடிஸஹஸ்ராட்⁴யா ஶுப்⁴ரராஜபதோ²த்தரா ||2-58-48

வளமான முற்றங்கள், மேகங்களால் தாக்கப்படும் உயர்ந்த மாளிகைகள், {புழுதியற்ற} தெளிவான அரசவீதிகள், வண்டிகளுக்கான சாலைகள் ஆகியவற்றையும் கொண்டிருந்தது.

பூ⁴ஷயந்தீ ஸமுத்³ரம் ஸா ஸ்வர்க³மிந்த்³ரபுரீ யதா² |
ப்ருதி²வ்யாம் ஸர்வரத்நாநாமேகா நிசயஶாலிநீ ||2-58-49

தேவலோகத்திற்கு அழகூட்டும் இந்திரனின் நகரத்தைப் போலவே அனைத்து வகை ரத்தினங்களாலும் செழித்த அந்நகரமும் பூமியில் பெருங்கடலை அலங்கரித்துக் கொண்டிருந்தது.

ஸுராணாமபி ஸுக்ஷேத்ரா ஸாமந்தக்ஷோப⁴காரிணீ |
அப்ரகாஶம் ததா³காஶம் ப்ராஸாதை³ருபகுர்வதீ ||2-58-50

வீரர்களுக்கான அழகிய களமும், அண்டை நாட்டு மன்னர்களின் இதயங்களில் பொறாமையை உண்டாக்குவதுமான அந்நகரம், தன்னகத்தே கொண்ட மாளிகைகளால் வானத்தையும் மறைத்தது.

ப்ருதி²வ்யாம் ப்ருது²ராஷ்ட்ராயாம் ஜநௌக⁴ப்ரதிநாதி³தா |
ஓகை⁴ஶ்ச வாரிராஜஸ்ய ஶிஶிரீக்ருதமாருதா ||2-58-51

அந்த நகரம், பூமியில் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து வந்த மக்களின் ஒலியால் நிறைந்ததாகவும், கடலலைநீரால் நிறைந்த காற்றைக் கொண்டதாவும் இருந்தது

அநூபோபவநை꞉ காந்தை꞉ காந்த்யா ஜநமநோஹரா |
ஸதாரகா த்³யௌரிவ ஸா த்³வாரகா ப்ரத்யராஜத ||2-58-52

பெண்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் அழகிய நகரமான அந்தத் துவாரகை, எழில்மிகு கடற்புறங்களுடனும், தோட்டங்களுடனும் நட்சத்திரங்கள் பதிக்கப்பட்ட ஆகாயத்தைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.

ப்ராகாரேணார்கவர்ணேந ஶாதகௌம்பே⁴ந ஸம்வ்ருதா |
ஹிரண்யப்ரதிவர்ணைஶ்ச க்³ருஹைர்க³ம்பீ⁴ரநி꞉ஸ்வநை꞉ ||2-58-53

ஶுப்⁴ரமேக⁴ப்ரதீகாஶைர்த்³வாரை꞉ ஸௌதை⁴ஶ்ச ஶோபி⁴தா |
க்வசித்க்வசிது³த³க்³ராக்³ரைருபாவ்ருதமஹாபதா² ||2-58-54

சூரியனைப் போன்றவையும், தங்கத்தின் ஒளியுடன் கூடியவையுமான மதில்களால் சூழப்பட்ட அந்நகரம், பொன்மாளிகைகளாலும், வெண்மேகங்களைப் போன்ற வாயில்களாலும் நிறைந்ததாகவும், அரண்மனைகளால் அலங்கரிக்கப்பட்டதாகவும் இருந்தது. சில இடங்களில் நெடுஞ்சாலைகள் தோறும் உயர்ந்த மாளிகைகள் நிறைந்திருந்தன.(53,54)

தாமாவஸத்புரீம் க்ருஷ்ண꞉ ஸர்வே யாத³வநந்த³நா꞉ |
அபி⁴ப்ரேதஜநாகீர்ணாம் ஸோம꞉ க²மிவ பா⁴ஸயந் ||2-58-55

யாதவர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனும், தன் மக்களால் சூழப்பட்டவனுமான கிருஷ்ணன், வானத்திற்கு ஒளியூட்டும் சந்திரனைப் போலவே ரத்தினங்கள் நிறைந்ததும், விஷ்வகர்மனால் கட்டப்பட்டதுமான அந்தத் தெய்வீக நகரத்தில் வாழத் தொடங்கினான்

விஶ்வகர்மா ச தாம் க்ருத்வா புரீம் ஶக்ரபுரீமிவ |
ஜகா³ம த்ரிதி³வம் தே³வோ கோ³விந்தே³நாபி⁴பூஜித꞉ ||2-58-56

தெய்வீக வடிவமைப்பாளன் {விஷ்வகர்மன்}, தேவர்களின் நகருக்கு ஒப்பான அந்த நகரத்தை அமைத்த பிறகு, கோவிந்தனால் கௌரவிக்கப்பட்டுத் தேவர்களின் உலகத்திற்குச் சென்றான்.

பூ⁴யஶ்ச பு³த்³தி⁴ரப⁴வத்க்ருஷ்ணஸ்ய விதி³தாத்மந꞉ |
ஜநாநிமாந்த⁴நௌகை⁴ஶ்ச தர்பயேயமஹம் யதி³ ||2-58-57

இவ்வாறு அந்த நகரமைந்த போது, ஆன்ம அறிவை அறிந்த கிருஷ்ணன், தன் மக்களில் வறியோரை ஏராளமான செல்வங்களால் நிறைவடையச் செய்ய விருப்பம் கொண்டான்[“தன் ஸ்வரூபமறிந்த க்ருஷ்ணனுக்கு மறுபடியும் எண்ணம் உண்டாயிற்று; இந்த ஜனங்களைச் செல்வக் குவியல்களால் நான் திருப்திப்படுத்துவேன்”].

ஸ வைஶ்ரவணஸம்ஸ்ப்ருஷ்டம் நிதீ⁴நாமுத்தமம் நிதி⁴ம் |
ஶங்க²மாஹ்வயதோபேந்த்³ரோ நிஶி ஸ்வே ப⁴வநே ப்ரபு⁴꞉ ||2-58-58

ஸ ஶங்ஃக்²ஹ꞉ கேஶவாஹ்வாநம் ஜ்ஞாத்வா ஹி நிதி⁴ராட்ஸ்வயம் |
ஆஜகா³ம ஸமீபம் வை தஸ்ய த்³வாரவதீபதே꞉ ||2-58-59

ஒருநாள் இரவில், பலம்வாய்ந்தவனான உபேந்திரன் {கிருஷ்ணன்}, வளங்களின் தேவனான வைஷ்ரவணனின் {குபேரனின்} பணியாளும், நிதிகளில் முதன்மையானவனுமான சங்கனைத் தன் வீட்டுக்கு அழைத்தான். துவாராவதியின் தலைவனான கேசவன் விரும்பியதைப் போலவே, சங்கன் அவனிடம் வந்தான்.(58,59)

ஸ ஶங்க²꞉ ப்ராஞ்ஜலிர்பூ⁴த்வா விநயாத³வநிம் க³த꞉ |
க்ருஷ்ணம் விஜ்ஞாபயாமாஸ யதா² வைஶ்ரவணம் ததா² ||2-58-60

வைஷ்ரவணனை எப்போதும் மதிப்பதைப் போலவே, பணிவுடனும், கூப்பிய கரங்களுடனும் அவனை {கிருஷ்ணனை} வணங்கிய சங்கன்

ப⁴க³வந்கிம் மயா காற்யம் ஸுராணாம் வித்தரக்ஷிணா |
வியோஜய மஹாபா³ஹோ யத்கார்யம் யது³நந்த³ந ||2-58-61

“ஓ! தலைவா, தேவர்களுடைய கருவூலங்களின் தலைவன் நான். ஓ! யதுவின் வழித்தோன்றலே, ஓ! பெருந்தோள்களைக் கொண்டவனே, நான் நிறைவேற்ற வேண்டிய உன் ஆணையென்ன என்பதை எனக்குச் சொல்வாயாக” என்றான்.

தமுவாச ஹ்ருஷீகேஶ꞉ ஶங்க²ம் கு³ஹ்யகமுத்தமம் |
ஜநா꞉ க்ருஶத⁴நா யே(அ)ஸ்மிம்ஸ்தாந்த⁴நேநாபி⁴பூரய ||2-58-62

இதைக் கேட்ட ரிஷிகேசன், குஹ்யர்களில் சிறந்தவனான அந்தச் சங்கனிடம், “என்னுடைய நகரில் குறைந்த செல்வம் கொண்ட மனிதர்களுக்குப் போதுமான வளங்களை அளிப்பாயாக.

நேச்சா²ம்யநஶிதம் த்³ரஷ்டும் க்ருஶம் மலிநமேவ ச |
தே³ஹீதி சைவ யாசந்தம் நக³ர்யாம் நிர்த⁴நம் நரம் ||2-58-63

இந்நகரில் பசித்தவர், மெலிந்தவர், அழுக்கடைந்தவர், வறியவர் எவரையும் காண நான் விரும்பவில்லை. “ஏதாவது கொடுப்பீராக” என்று எவரும் இரந்தழுவதைக் கேட்கவும் நான் விரும்பவில்லை” என்றான் {கிருஷ்ணன்}”

வைஶம்பாயந உவாச
க்³ருஹீத்வா ஶாஸநம் மூர்த்⁴நா நிதி⁴ராட் கேஶவஸ்ய ஹ |
நிதீ⁴நாஜ்ஞாபயாமாஸ த்³வாரவத்யாம் க்³ருஹே க்³ருஹே ||2-58-64

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குபேரனின் பணியாட்களில் முதன்மையான சங்கன், கேசவன் விதித்ததை நிறைவேற்றும் வண்ணம், துவாராவதியின் ஒவ்வொரு வீட்டிலும் செல்வக்குவியல்களைப் பொழிய அவற்றுக்கு {நிதிகளுக்கு / செல்வங்களுக்கு} ஆணையிட்டான், அவையும் அவ்வாறே செய்தன.

த⁴நௌகை⁴ரபி⁴வர்ஷத்⁴வம் சக்ரு꞉ ஸர்வம் ததா² ச தே |
நாத⁴நோ வித்³யதே தத்ர க்ஷீணபா⁴க்³யோ(அ)பி வா நர꞉ ||2-58-65

க்ருஶோ வா மலிநோ வாபி த்³வாரவத்யாம் கத²ஞ்சந |
த்³வாரவத்யாம் புரி புரா கேஶவஸ்ய மஹாத்மந꞉ ||2-58-66

எனவே, அங்கே எந்த மனிதனும் வறியவனாகவோ, வழிமுறைகள் எதனிலும் குறைந்தவனாகவோ இல்லை. {பேரான்மாவான கேவசனின் துவாராவதி நகரில் மெலிந்தவராகவோ, அழுக்கடைந்தவராகவோ ஒருபோதும் எவரும் இல்லை}.(65,66)

சகார வாயோராஹ்வாநம் பூ⁴யஶ்ச புருஷோத்தம꞉ |
தத்ரஸ்த² ஏவ ப⁴க³வாந்யாத³வாநாம் ப்ரியங்கர꞉ ||2-58-67

ப்ராணயோநிஸ்து பூ⁴தாநாமுபதஸ்தே² க³தா³த⁴ரம் |
ஏகமாஸீநமேகாந்தே தே³வகு³ஹ்யத⁴ரம் ப்ரபு⁴ம் ||2-58-68

அதன்பிறகு, யாதவர்களுக்கு எப்போதும் நன்மை செய்வதையே விரும்பும் அந்தத் தெய்வீகப் புருஷன், விலங்குகளின் உயிர்க்காற்றான வாயுவை (காற்றின் தேவனை) அழைத்தான். தனியாக அமர்ந்திருக்கும் கதாதரன் {கிருஷ்ணன்} முன்பு தோன்றிய அவன் {வாயு},(67,68)

கிம் மயா தே³வ கர்தவ்யம் ஸர்வகே³நாஶுகா³மிநா |
யதை²வ தூ³தோ தே³வாநாம் ததை²வாஸ்மி தவாநக⁴ ||2-58-69

“ஓ! தேவா, எங்கும் பெரும் வேகத்தில் செல்லக்கூடியவன் நான். உனக்கு நான் செய்ய வேண்டியதென்ன? ஓ! பாவமற்றவனே, தேவர்களுக்குத் தூதனாக இருப்பதைப் போலவே நான் உனக்கும் தூதனாவேன்” என்றான்.

தமுவாச தத꞉ க்ருஷ்ணோ ரஹஸ்யம் புருஷோ ஹரி꞉ |
மாருதம் ஜக³த꞉ ப்ராணம் ரூபிணம் ஸமுபஸ்தி²தம் ||2-58-70

இதைக் கேட்ட ஹரி புருஷோத்தமன், அண்டத்தின் உயிரும், தன் வடிவில் அங்கே வந்தவனுமான வாயுவிடம்,

க³ச்ச² மாருத தே³வேஶமநுமாந்ய ஸஹாமரை꞉ |
ஸபா⁴ம் ஸுத⁴ர்மாமாதா³ய தே³வேப்⁴யஸ்தமிஹாநய ||2-58-71

“தேவர்களிடமும், அவர்களின் மன்னனிடமும் {இந்திரனிடமும்} சென்று நான் அவர்களிடம் கொண்டிருக்கும் மதிப்பைச் சொல்லி, சுதர்மை என்ற சபா மண்டபத்தை அவர்களிடம் பெற்று துவாரகைக்கு அதைக் கொண்டு வருவாயாக

யாத³வா தா⁴ர்மிகா ஹ்யேதே விக்ராந்தாஶ்ச ஸஹஸ்ரஶ꞉ |
தஸ்யாம் விஶேயுரேதே வை ந து யா க்ருத்ரிமா ப⁴வேத் ||2-58-72

ஓ! வாயுவே, அறம்சார்ந்தவர்களும், {எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கானோரும்}, ஆற்றல்மிகுந்தவர்களுமான இந்த யாதவர்கள் அதற்குள் செல்ல வேண்டும்; எனவே போலியைக் கொண்டு வராதே {அது செயற்கையானதாக இருக்கக்கூடாது};

யா ஹ்யக்ஷயா ஸபா⁴ ரம்யா காமகா³ காமரூபிணீ |
ஸா யதூ³ந்தா⁴ரயேத்ஸர்வாந்யதை²வ த்ரித³ஶாம்ஸ்ததா² ||2-58-73

எங்கும் செல்லவல்லதும், விரும்பிய வடிவை ஏற்கவல்லதுமான அந்த அழிவற்ற சபா மண்டபத்தால் மட்டுமே தேவர்களைப் போன்ற இந்த யாதவர்களுக்கு இடமளிக்க முடியும்” என்றான் {கிருஷ்ணன்}.

ஸம்க்³ருஹ்ய வசநம் தஸ்ய க்ருஷ்ணஸ்யாக்லிஷ்டகர்மண꞉ |
வாயுராத்மோபமக³திர்ஜகா³ம த்ரிதி³வாலயம் ||2-58-74

ஸோ(அ)நுமாந்ய ஸுராந்ஸர்வாந்க்ருஷ்ணவாக்யம் நிவேத்³ய ச |
ஸபா⁴ம் ஸுத⁴ர்மாமாதா³ய புநராயாந்மஹீதலம் ||2-58-75

மனோ வேகம் கொண்டவனான வாயு, களைப்பறியா செயல்களைச் செய்யும் கிருஷ்ணனின் சொற்களைக் கேட்டு, தேவலோகத்துக்குச் சென்று கேசவனின் வாழ்த்துகளையும், வேண்டுகோளையும் தேவர்களிடம் தெரிவித்தான். அதன் பிறகு சுதர்மை எனும் சபா மண்டபத்தைப் பெற்றுக் கொண்டு பூமிக்குத் திரும்பினான்.(74,75)

ஸுத⁴ர்மாய ஸுத⁴ர்மாம் தாம் க்ருஷ்ணாயாக்லிஷ்டகாரிணே |
தே³வோ தே³வஸபா⁴ம் த³த்வா வாயுரந்தரதீ⁴யத ||2-58-76

அதன்பிறகு அந்தக் காற்றின் தேவன் அறம்சார்ந்தவனும், ஆற்றல்மிக்கவனுமான கிருஷ்ணனிடம் சுதர்மை மண்டபத்தைக் கொடுத்தவிட்டு மறைந்தான்

த்³வாரவத்யாஸ்து ஸா மத்⁴யே கேஶவேந நிவேஶிதா |
ஸுத⁴ர்மா யது³முக்²யாநாம் தே³வாநாம் த்ரிதி³வே யதா² ||2-58-77

தேவர்களுக்காகத் தேவலோகத்தில் உள்ளதைப் போலவே, முன்னணி யாதவர்களுக்காக அந்தச் சுதர்மை மண்டபத்தைத் துவாராவதியில் கேவசன் நிறுவினான்.

ஏவம் தி³வ்யைஶ்ச போ⁴கை³ஶ்ச ஜலஜைஶ்சாவ்யயோ ஹரி꞉ |
த்³ரவ்யைரலங்கரோதி ஸ்ம புரீம் ஸ்வாம் ப்ரமதா³மிவ ||2-58-78

இவ்வாறே நித்தியனும், நுண்ணறிவுமிக்கவனுமான ஹரி, தேவலோகம் சார்ந்த, பூமி சார்ந்த, நீர் சார்ந்த பொருட்களால் ஒரு பெண்ணைப் போலத் துவாராவதி நகரை அலங்கரித்தான்

மர்யாதா³ஶ்சைவ ஸஞ்சக்ரே ஶ்ரேணீஶ்ச ப்ரக்ருதீஸ்ததா² |
ப³லாத்⁴யக்ஷாம்ஶ்ச யுக்தாம்ஶ்ச ப்ரக்ருதீஶாம்ஸ்ததை²வ ச ||2-58-79

உக்³ரஸேநம் நரபதிம் காஶ்யம் சாபி புரோஹிதம் |
ஸேநாபதிமநாத்⁴ருஷ்டிம் விகத்³ரும் மந்த்ரிபுங்க³வம் ||2-58-80

யாத³வாநாம் குலகராந்ஸ்த²விராந்த³ஶ தத்ர வை |
மதிமாந்ஸ்தா²பயாமாஸ ஸர்வகார்யேஷ்வநந்தராந் ||2-58-81

ரதே²ஶ்வதிரதோ² யந்தா தா³ருக꞉ கேஶவஸ்ய வை |
யோத⁴முக்²யஶ்ச யோதா⁴ணாம் ப்ரவர꞉ ஸாத்யகி꞉ க்ருத꞉ ||2-58-82

நகரத்தின் எல்லைகளைத் தீர்மானித்த பின்னர், படைத்தலைவர்களையும், குலத்தலைவர்களையும் அவரவருக்குரிய இடங்களில் பேரரசன் உக்ரசேனன் நிறுவினான். அதன்பிறகு புரோஹிதர் சாந்தீபனி, படைத்தலைவன் அனாதிருஷ்டி, அமைச்சர்களில் முதன்மையான விக்ருது, யாதவர்களின் பணிகளில் எப்போதும் ஈடுபடுபவர்களும், உத்தவரால் தலைமைதாங்கப்பட்டவர்களுமான பத்து முதியவர்களும் அவரவருக்குரிய இடங்களில் இருத்தப்பட்டனர். தேர்வீரர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனான தாருகன் கேசவனின் தேரோட்டியாகவும், போர்வீரர்களில் முதன்மையான சாத்யகி அவனுடைய படைத்தலைவனாகவும் நியமிக்கப்பட்டனர்[“கிருஷ்ணன் ஒழுக்க நெறிகளை நிறுவி, வரிசைமுறைகளையும், தரமுறைகளையும் அமைத்து, படைத்தலைவர்களையும், மேலாளர்களையும் இயல்பில் ஈடுபடுத்தினான்.(79) உக்ரசேனன் மன்னனாகவும், காசியர் (சாந்தீபனி) புரோஹிதராகவும், அதிருஷ்டி படைத்தலைவனாகவும், விக்ருது முதலமைச்சராகவும் நிறுவப்பட்டனர்.(80) பெரும் நுண்ணறிவைக் கொண்ட கிருஷ்ணன், யாதவக் குலத் தலைவர்களான பத்து முதியவர்களை அனைத்துக் காரியங்களின் அமைச்சர்களாக நிறுவினான்.(81) சாரதிகளில் சிறந்த தாருகன், கேசவனின் தேரைச் செலுத்துவதில் ஈடுபட்டான். போராளிகளில் சிறந்த சாத்யகி போர்த்தலைவனாக நியமிக்கப்பட்டான்.(82)”].(79-82)

விதா⁴நமேவம் க்ருத்வாத² க்ருஷ்ண꞉ புர்யாமநிந்தி³த꞉ |
முமுதே³ யது³பி⁴꞉ ஸார்த⁴ம் லோகஸ்ரஷ்டா மஹீதலே ||2-58-83

பழியற்றவனும், உலகின் படைப்பாளனுமான கிருஷ்ணன், தன் நகரில் இந்த ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, யாதவர்களுடன் சேர்ந்து பூமியில் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினான்

ரைவதஸ்யாத² கந்யாம் ச ரேவதீம் ஶீலஸம்மதாம் |
ப்ராப்தவாந்ப³லதே³வஸ்து க்ருஷ்ணஸ்யாநுமதே ததா³ ||2-58-84

சில நாட்கள் கழிந்ததும், ரேவதி என்ற பெயரைக் கொண்டவளும், நல்லியல்புடன் கூடியவளுமான ரேவதனின் மகளைக் கேசவனின் ஒப்புதலுடன் பலதேவன் அடைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.

இதி ஶ்ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஶே விஷ்ணுபர்வணி
த்³வாரவதீநிர்மாணே(அ)ஷ்டபஞ்சாஶத்தமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 57–(காலயவநவதம்)–

January 29, 2021

காலயவனன் தோற்றம்; துவாரகையில் இருந்து தனியாக மதுராவுக்குச் சென்ற கிருஷ்ணன்; முசுகுந்தனால் எரிக்கப்பட்ட காலயவனன்

ஜநமேஜய உவாச
ப⁴க³வஞ்ச்²ரோதுமிச்சா²மி விஸ்தரேண மஹாத்மந꞉ |
சரிதம் வாஸுதே³வஸ்ய யது³ஶ்ரேஷ்ட²ஸ்ய தீ⁴மத꞉ |2-57-1

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! மதிப்புமிக்க ஐயா, உயரான்மாவும், நுண்ணறிவு மிக்கவனும், யதுக்களில் முதன்மையானவனுமான வாசுதேவனின் {கிருஷ்ணனின்} வரலாற்றை விரிவாக நான் கேட்க விரும்புகிறேன்.

கிமர்த²ம் ச பரித்யஜ்ய மது²ராம் மது⁴ஸூத³ந꞉ |
மத்⁴யதே³ஶஸ்ய ககுத³ம் தா⁴ம லக்ஷ்ம்யாஶ்ச கேவலம் ||2-57-2

ஓ! இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, (செழிப்பின் தேவியான) லக்ஷ்மியின் ஒரே வசிப்பிடமும், மத்திய இந்தியாவின் (மிக உயர்ந்த) பகுதியும் {மத்திய தேசத்தின் முக்கியப் பகுதியும்}, பூமியின் சிகரமும்

ஶ்ருஞ்க³ம் ப்ருதி²வ்யா꞉ ஸ்வாலக்ஷ்யம் ப்ரபூ⁴தத⁴நதா⁴ந்யவத் |
ஆர்யாட்⁴யஜலபூ⁴யிஷ்ட²மதி⁴ஷ்டா²நவரோத்தமம் ||2-57-3

அயுத்³தே⁴நைவ தா³ஶார்ஹஸ்த்யக்தவாந்த்³விஜஸத்தம |
ஸ காலயவந்ஶசாபி க்ருஷ்ணே கிம் ப்ரத்யபத்³யத ||2-57-4

தானியங்கள், செல்வம், அழகிய வீடுகள் ஏராளமாக நிறைந்ததும், வழிபடத்தகுந்த ஆரியர்கள் பலரைக் கொண்டிருந்ததுமான மதுராவை விட்டு ஜனார்த்தனன் போரிடாமல் அகன்றதேன்? காலயவனன் கிருஷ்ணனிடம் எவ்வாறு நடந்து கொண்டான்?(3,4)

த்³வாரகாம் ச ஸமாஸாத்³ய வாரிது³ர்கா³ம் ஜநார்த³ந꞉ |
கிம் சகார மஹாபா³ஹுர்மஹாயோகீ³ மஹாதபா꞉ ||2-57-5

கடுந்தவங்களில் பெரும் யோகியும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான ஜனார்த்தனன், நீர்க்கோட்டையான துவாரகையை அடைந்தபிறகு செய்ததென்ன?

கிம்வீர்யா꞉ காலயவந꞉ கேந ஜாதஶ்ச வீர்யவாந் |
யமஸஹ்யம் ஸமாலக்ஷ்ய வ்யபயாதோ ஜநார்த³ந꞉ ||2-57-6

காலயவனன் யாருடைய மகன்? அவனுடைய பலமென்ன? இவையனைத்தையும் எனக்கு நீர் விளக்கிச் சொல்வீராக” என்று கேட்டான் {ஜனமேஜயன்}

வைஶம்பாயந உவாச
வ்ருஷ்ணீநாமந்த⁴காநாம் ச கு³ருர்கா³ர்க்³யோ மஹாமநா꞉ |
ப்³ரஹ்மசாரீ புரா பூ⁴த்வா ந ஸ்ம தா³ராந்ஸ விந்த³தி ||2-57-7

ததா² ஹி வர்தமாநம் தமூர்த்⁴வரேதஸமவ்யயம் |
ஶ்யாலோ(அ)பி⁴ஶஸ்தவாந்கா³ர்க்³யமபுமாநிதி ராஜநி ||2-57-8

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “உயர்ந்த மனம் கொண்ட கார்க்கியர் அந்தக, விருஷ்ணி குலங்கள் இரண்டிற்கும் ஆசானாக இருந்தார். அவர் எப்போதும் பிரம்மச்சரிய நோன்பை நோற்றுவந்தார்; அவர் மனைவியைக் கொண்டிருந்தார் என்றாலும் அவளை அறிந்தாரில்லை[ஹரிவம்ச பர்வம் 35ம் அத்தியாயத்தில் ஏற்கனவே இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. அதிலும் அவர் மனைவியைக் கொண்டிருந்தார் என்ற குறிப்பில்லை. ]. ஆசைகளை ஆள்பவரும், நித்தியருமான கார்க்கியர் இவ்வாறு தன் நாட்களைக் கழித்துவந்த போது, அவருடைய மைத்துனர் {சியாலர் /சைசிராயணர்}[இவர் திரிகர்த்த மன்னனின் புரோஹிதரான சைசிராயணர் என்று ஹரிவம்ச பர்வம் 35ம் அத்தியாயத்தின் 11,12ம் ஸ்லோகங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.] அவரை ஆண்மையற்றவரென {அபிசஸ்தரென} மன்னனின் முன்பு சொன்னார்.(7,8)

ஸோ(அ)பி⁴ஶஸ்தாஸ்ததா³ ராஜந்நக³ரே த்வஜிதம் ஜயே |
அலிப்ஸம்ஸ்து ஸ்த்ரியம் சைவ தபஸ்தேபே ஸுதா³ருணம் ||2-57-9

ஓ! மன்னா, இவ்வாறு அஜிதம்ஜயனின் நகரத்தில்[“இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவரும், வெல்லப்படமுடியாததையும் வென்றவருமான கார்க்கியர், பெண்களை விரும்பாமல் கடுந்தவத்தில் ஈடுபட்டார்” ] அவமதிக்கப்பட்ட கார்க்கியர் தமது மைத்துனரின் மீது கொண்ட கோபத்தால் மனைவியுடன் சேர விரும்பாமல், ஒரு மகனை அடைவதற்காகக் கடுந்தவங்களில் ஈடுபட்டார். பனிரெண்டு ஆண்டுகள் இரும்பு சூர்ணத்தை உண்டு திரிசூலபாணியான மஹாதேவனை

ததோ த்³வாத³ஶவர்ஷாணி ஸோ(அ)யஶ்சூர்ணமப⁴க்ஷயத் |
ஆராத⁴யந்மஹாதே³வமசிந்த்யம் ஶூலபாணிநம் ||2-57-10

அவர் வழிபட்டு வந்தார். இதன் காரணமாக விருஷ்ணி, அந்தகக் குலங்களின் வழித்தோன்றல்களால் போரில் வீழ்ப்பட இயலாத பலமிக்க மகனை அடையும் வரத்தை ருத்திரன் அவருக்கு அளித்தான்.

ருத்³ரஸ்தஸ்மை வரம் ப்ராதா³த்ஸமர்த²ம் யுதி⁴ நிக்³ரஹே |
வ்ருஷ்ணீநாமந்த⁴காநாம் ச ஸர்வதேஜோமயம் ஸுதம் ||2-57-11

தத꞉ ஶுஶ்ராவ தம் ராஜா யவநாதி⁴பதிர்வரம் |
புத்ரப்ரஸவஜம் தை³வாத³புத்ர꞉ புத்ரகாமிதா ||2-57-12

யவனர்களின் மன்னன் மகனற்றவனாக இருந்தான். அந்த மன்னன், இருபிறப்பாளர்களில் முதன்மையான கார்க்கியருக்கு மஹாதேவன் அளித்த வரத்தைக் கேட்டு, அவரைத் தன் நாட்டுக்கு[யவனர்களின் நாடுகள் என்பன பொதுவாக ரோம கிரேக்க நாடுகளைக் குறிக்கும். ஆனால் இங்கே இமயத்திற்கு வடக்கே உள்ள ஏதோவொரு நாட்டைக் குறிக்கிறது. இதன்பின்வரும் 19,20 ஸ்லோகங்களும் இதை உறுதி செய்யும் வண்ணம் இருக்கின்றன. ஹரிவம்ச விஷ்ணு பர்வம் 54ம் அத்தியாயத்தில் சால்வ மன்னன் விதர்ப்ப நாட்டில் இருந்து யவனர்களின் நாட்டுக்குச் செல்கிறான். அப்போது அவனது விமானம் தெற்கிலிருந்து வருவதை யவனர்கள் கண்டனர் என்ற குறிப்பு 8-11 ஸ்லோகங்களில் காணப்படுகிறது.] அழைத்து வந்தான்.(11,12)

ஸ ந்ருபஸ்தமுபாநாய்ய ஸாந்த்வயித்வா த்³விஜோத்தமம் |
தம் கோ⁴ஷமத்⁴யே யவநோ கோ³பஸ்த்ரீஷு ஸமாஸ்ருஜத் ||2-57-13

அவன் அவருக்கு ஆறுதலளித்துக் கோபிகையர் கவனித்துக் கொள்ளும்படிக்கு அவர்களது வசிப்பிடத்திலேயே அவரை இருக்கச் செய்தான்.(

கோ³பாலீ த்வப்ஸராஸ்தத்ர கோ³பஸ்த்ரீவேஷதா⁴ரிணீ |
தா⁴ரயாமாஸ கா³ர்க்³யஸ்ய க³ர்ப⁴ம் து³ர்த⁴ரமச்யுதம் ||2-57-14

கோபாலி என்ற பெயர் படைத்த அப்சரஸ் ஒருத்தி ஒரு கோபிகையின் வடிவை ஏற்று, கார்க்கியரின் மூலம் அந்த அழிவற்ற, பயங்கரமான கருவைத் தன் கருவறையில் கொண்டாள்.

மாநுஷ்யாம் கா³ர்க்³யபா⁴ர்யாயாம் நியோகா³ச்சூ²லபாணிந꞉ |
ஸ காலயவநோ நாம ஜஜ்ஞே ஶூரோ மஹாப³ல꞉ ||2-57-15

இவ்வாறு திரிசூலபாணியின் ஆணையின் பேரில் கார்க்கியர், ஒரு பெண்ணின் வடிவில் இருந்தவளும், மனைவியைப் போன்று தம்முடன் வாழ்ந்தவளுமான {கோபாலி என்ற} அந்த அப்சரஸிடம் பெரும் பலம்வாய்ந்த வீரனான காலயவனனைப் பெற்றார்

அபுத்ரஸ்யாத² ராஜ்ஞஸ்து வவ்ருதே⁴(அ)ந்த꞉புரே ஶிஶு꞉ |
தஸ்மிந்நுபரதே ராஜந்ஸ காலயவநோ ந்ருப꞉ ||2-57-16

பிள்ளையற்றவனான யவனர்களின் மன்னனால் தன் மகனைப் போல அவன் {காலயவனன்} அந்தப்புரத்தில் வளர்த்து வரப்பட்டான். ஓ! மன்னா, அந்த யவனர்களின் தலைவன் இறந்த பிறகு காலயவனன் மன்னன் ஆனான்

யுத்³தா⁴பி⁴காமோ ந்ற்^பதி꞉ பர்யப்ருச்ச²த்³த்³விஜோத்தமாந் |
வ்ருஷ்ண்யந்த⁴ககுலம் தஸ்ய நாரதே³ந நிவேதி³தம் ||2-57-17

போரிடும் விருப்பத்தில் அவன் இருபிறப்பாளர்களில் முதன்மையான நாரதரிடம் கேட்ட போது, அவர் விருஷ்ணி, அந்தகக் குல வீரர்களை அவனுக்குச் சுட்டிக் காட்டினார்.

ஜ்ஞாத்வா து வரதா³நம் தந்நாரதா³ந்மது⁴ஸூத³ந꞉ |
உபப்ரைக்ஷத தேஜஸ்வீ வர்த்³த⁴ந்தம் யவநேஷு தம் ||2-57-18

மதுசூதனனான கிருஷ்ணன், யவனர்களுக்கு மத்தியில் வளர்ந்து வந்தாலும், காலயவனன் பெற்றிருக்கும் வரத்தின் கதையை நாரதர் மூலம் கேள்விப்பட்டதால் அவனைக் கருத்தில் கொள்ளாமல் இருந்தான்[மதுசூதனன், இவ்வாறு கொடுக்கப்பட்ட வரம் குறித்து நாரதர் மூலம் அறிந்தான். எனவே, அவன் வளர்ந்து வந்த யவனனின் பலத்தைப் புறக்கணித்தான்” ]

ஸம்ருத்³தோ⁴ ஹி யதா³ ராஜா யவநாநாம் மஹாப³ல꞉ |
தத ஏவம் ந்ருபா ம்லேச்சா²꞉ ஸம்ஶ்ரித்யாநுயயுஸ்ததா³ ||2-57-19

ஶகாஸ்துஷாரா த³ரதா³꞉ பாரதா³꞉ ஸ்ருங்க³லா꞉ க²ஸா꞉ |
பஹ்லவா꞉ ஶதஶஶ்சாந்யே ம்லேச்சா² ஹைமவதாஸ்ததா² ||2-57-20

யவனர்களின் மன்னன் பெருஞ்சக்தியுடன் வளர்ந்தபோது, இமயத்தின் அருகில் வாழ்ந்து வந்த சகர்கள், துஷாரர்கள், தரதர்கள், பாரடர்கள், தங்கணர்கள் {சிருங்கலர்கள்}, கசர்கள், பஹ்லவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மிலேச்ச மன்னர்கள் அவனிடம் தஞ்சமடைந்தனர்.(19,20)

ஸ தை꞉ பரிவ்ருதோ ராஜா த³ஸ்யுபி⁴꞉ ஶலபை⁴ரிவ |
நாநாவேஷாயுதை⁴ர்பீ⁴மைர்மது²ராமப்⁴யவர்தத ||2-57-21

அந்த யவனர்களின் மன்னன் {காலயவனன்}, விட்டில் பூச்சிக் கூட்டத்திற்கு ஒப்பான அந்தத் தஸ்யு மன்னர்களால் சூழப்பட்டவனாகவும், பல்வேறு உடைகளைத் தரித்தவனாகவும், பல்வேறு ஆயுதங்களைத் தாங்கியவனாகவும் மதுராவுக்குப் புறப்பட்டுச் சென்றான்

க³ஜவாஜிக²ரோஷ்ட்ராணாமயுதைரர்பு³தை³ரபி |
ப்ருதி²வீ கம்பயாமாஸ ஸைந்யேந மஹதா வ்ருத꞉ ||2-57-22

எண்ணற்ற குதிரைகள், யானைகள், கழுதைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றுடன் கூடிய ஒரு பெரும்படையுடனும் அவன் பூமியின் பரப்பைக் கலங்கச் செய்தான்

ரேணுநா ஸூர்யமார்க³ம் து ஸமவச்சா²த்³ய பார்தி²வ꞉ |
மூத்ரேண ஶக்ருதா சைவ ஸைந்யேந ஸம்ஸ்ருஜே நதீ³ம் ||2-57-23

படைவீரர்களால் எழுப்பப்பட்ட புழுதியில் சூரியனின் பாதை மறைக்கப்பட்டது. அந்தப் படை கழித்த மலஜலங்களால் ஓர் ஆறே உண்டானது

அஶ்வோஷ்ட்ரஶக்ருதாம் ராஶேர்நிஸ்ஸ்ருதேதி ஜநாதி⁴ப |
ததோ(அ)ஶ்வஶக்ருதி³த்யேவம் நாம நத்³யா ப³பூ⁴வ ஹ ||2-57-24

குதிரைகள் மற்றும் ஒட்டகங்களின் மலத்தில் இருந்து உண்டானதால் அந்த ஆறு அஷ்வகிருத் என்ற பெயரில் அழைக்கப்பட்டது

தத்ஸைந்யம் மஹதா³யாத்³வை ஶ்ருத்வா வ்ருஷ்ண்யந்த⁴காக்³ரணீ꞉ |
வஸுதே³வ꞉ ஸமாநாய்ய ஜ்ஞாதீநித³முவாச ஹ ||2-57-25

விருஷ்ணிகளுக்கும், அந்தகர்களுக்கும் தலைவனான வாசுதேவன் {கிருஷ்ணன்}, இந்தப் பெரும்படையின் வரவைக் கேள்விப்பட்டுத் தன் உற்றார் உறவினரிடம்,

இத³ம் ஸமுத்தி²தம் கோ⁴ரம் வ்ருஷ்ண்யந்த⁴கப⁴வம் மஹத் |
அவத்⁴யஶ்சாபி ந꞉ ஶத்ருர்வரதா³நாத்பிநாகிந꞉ ||2-57-26

“விருஷ்ணி, அந்தகக் குலங்களுக்குப் பேராபத்து நேரப் போகிறது. திரிசூல பாணியால் {ருத்திரனால்} பகைவனுக்குக் கொடுக்கப்பட்ட வரத்தின் காரணமாக அவன் நம்மால் கொல்லத்தகாதவனாக இருக்கிறான்.

ஸாமாத³யோ(அ)ப்⁴யுபாயாஶ்ச விஹிதாஸ்தஸ்ய ஸர்வஶ꞉ |
மத்தோ மத³ப³லாப்⁴யாம் து யுத்³த⁴மேவ சிகீர்ஷதி ||2-57-27

அவனை வெல்வத்றாக {அவனுடன் சமாதானம் செய்து கொள்வதற்காக} வேற்றுமை நீக்கும் பிற வழிமுறைகள் அனைத்தையும் நான் செய்தேன். ஆனால் செருக்கால் நிறைந்த அவன் போரையே விரும்புகிறான்

ஏதாவாநிஹ வாஸஶ்ச கதி²தோ நாரதே³ந மே |
ஏதாவதி ச வக்தவ்யம் ஸாமைவ பரமம் மதம் ||2-57-28

{இதுவரை} நான் இங்கே வாழலாம்” என்று நாரதர் என்னிடம் சொன்னார்; நானும் இதையே உங்களுக்குச் சொல்கிறேன்.

ஜராஸம்த⁴ஶ்ச நோ ராஜா நித்யமேவ ந ம்ருஷ்யதே |
ததா²ந்யே ப்ருதி²வீபாலா வ்ருஷ்ணிசக்ரப்ரதாபிதா꞉ ||2-57-29

கேசித்கம்ஸவதா⁴ச்சாபி விரக்தாஸ்தத்³க³தா ந்ருபா꞉ |
ஸமாஶ்ருத்ய ஜராஸம்த⁴மஸ்மாநிச்ச²ந்தி பா³தி⁴தும் ||2-57-30

பேரரசன் ஜராசந்தன் {தன் மருமகனான கம்சனைக் கொன்றதற்காக} நம்மை மன்னிக்கவில்லை; விருஷ்ணி சக்கரத்தாலும் {கூட்டத்தாலும்}, கம்சனின் அழிவாலும் தாக்கப்பட்ட பிற மன்னர்களும் நம்முடன் நிறைவில்லாதவர்களாக மகத மன்னனிடம் தஞ்சம்புகுந்தனர். ஜராசந்தனின் பாதுகாப்பில் இருக்கும் அவர்கள் நமக்குத் தடை ஏற்படுத்துகின்றனர் {நம்மை ஒடுக்குகின்றனர்},(29,30)

ப³ஹவோ ஜ்ஞாதயஶ்சைவ யதூ³நாம் நிஹதா ந்ருபை꞉ |
வர்த்³தி⁴தும் நைவ ஶக்ஷ்யாம புரே(அ)ஸ்மிந்நிதி கேஶவ꞉ ||2-57-31

யாதவர்களின் உறவினர்கள் பலர் அவர்களால் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்நகரத்தில் வாழ்ந்து வந்தால் நம்மால் ஒருபோதும் செழிப்படைய இயலாது எனும்போது மேலும் எதை அடையமுடியும்?” என்றான் {கிருஷ்ணன்}.

அபயாநே மதிம் க்ருத்வா தூ³தம் தஸ்மை ஸஸர்ஜ ஹ |
தத꞉ கும்பே⁴ மஹாஸர்பம் பி⁴ந்நாஞ்ஜநசயோபமம் ||2-57-32

இதைச் சொல்லிவிட்டுப் பின்வாங்க விரும்பிய கேசவன் {கிருஷ்ணன்}, யவனர்களின் மன்னனிடம் {காலயவனனிடம்} ஒரு தூதனை அனுப்பினான். பெரும் நுண்ணறிவைக் கொண்ட மாதவன், அவனை (யவனர்களின் மன்னனை) அச்சுறுத்தும் வகையில் மைத்திரளுக்கு ஒப்பான பயங்கரமான கரும்பாம்பு ஒன்றை ஒரு குடுவைக்குள் இட்டு அடைத்தான்.

கோ⁴ரமாஶீவிஷம் க்ருஷ்ணம் க்ருஷ்ண꞉ ப்ராக்ஷேபயத்ததா³ |
ததஸ்தம் முத்³ரயித்வா து ஸ்வேந தூ³தேந ஹாரயத் ||2-57-33

நித³ர்ஶநார்த²ம் கோ³விந்தோ³ பீ⁴ஷயாமாஸ தம் ந்ருபம் |
ஸ தூ³த꞉ காலயவநே த³ர்ஶயாமாஸ தம் க⁴டம் ||2-57-34

அதன் பிறகு அதைத் தன் தூதன் மூலம் யவனர்களின் மன்னனுக்கு அனுப்பிவைத்தான். ஓ! பாரதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, அந்தத் தூதன், “கிருஷ்ணன் பயங்கரப் பாம்பைப் போன்றவன்” என்று சொல்லி காலயவனனிடம் அந்தக் குடுவையைக் காட்டினான்.(33,34)

காலஸர்போபம꞉ க்ருஷ்ண இத்யுக்த்வா ப⁴ரதர்ஷப⁴ |
தத்காலயவநோ பு³த்³த்⁴வா த்ராஸநம் யாத³வை꞉ க்ருதம் ||2-57-35

தன்னை அச்சுறுத்துவதற்காக யாதவர்கள் இதை அனுப்பியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு காலயவனன், அந்தக் குடுவையை பயங்கர எறும்புகளால் நிறைத்தான்.

பிபீலிகாநாம் சண்டா³நாம் பூரயாமாஸ தம் க⁴டம் |
ஸ ஸர்போ ப³ஹுபி⁴ஸ்தீக்ஷ்ணை꞉ ஸர்வதஸ்தை꞉ பிபீலிகை꞉ ||2-57-36

ப⁴க்ஷ்யமாண꞉ கிலாங்கே³ஷு ப⁴ஸ்மீபூ⁴தோ(அ)ப⁴வத்ததா³ |
தம் முத்³ரயித்வா து க⁴டம் ததை²வ யவநாதி⁴ப꞉ |
ப்ரேஷயாமாஸ க்ருஷ்ணாய பா³ஹுல்யமுபவர்ணயந் ||2-57-37

அதன் பிறகு அந்தப் பாம்பானது கூரிய பற்களைக் கொண்ட அந்த எண்ணற்ற எறும்புகளால் உண்ணப்பட்டுச் சாம்பலானாது. காலயவனன் அந்தக் குடுவையை அடைத்து ஏராளமான விளக்கங்களுடன் அதைக் கிருஷ்ணனிடம் அனுப்பி வைத்தான்.(36,37)

வாஸுதே³வஸ்து தம் த்³ருஷ்ட்வா யோக³ம் விஹதமாத்மந꞉ |
உத்ஸ்ருஜ்ய மது²ராமாஶு த்³வாரகாமபி⁴ஜக்³மிவாந் ||2-57-38

வாசுதேவன் தன் தகுமுறை வீணானதைக் கண்டு மதுரா நகரைவிட்டு துவாரகைக்குச் சென்றான்.

வைரஸ்யாந்தம் விதி⁴த்ஸம்ஸ்து வாஸுதே³வோ மஹாயஶா꞉ |
நிவேஶ்ய த்³வாரகாம் ராஜந்வ்ருஷ்ணீநாஶ்வாஸ்ய சைவ ஹ ||2-57-39

பதா³தி꞉ புருஷவ்யாக்⁴ரோ பா³ஹுப்ரஹரணஸ்ததா³ |
ஆஜகா³ம மஹாவீர்யோ மது²ராம் மது⁴ஸூத³ந꞉ ||2-57-40

ஓ! மன்னா, அதன் பிறகு, பெருஞ்சிறப்புமிக்கவனும், பலம்வாய்ந்த வீரனுமான வாசுதேவன், பகைமைகளுக்கு ஒரு முடிவைக் கொண்டு வரும்பொருட்டு, வீரர்கள் அனைவரையும் தேற்றி துவாரகையில் அமர்த்திவிட்டு, தன் கரத்தை மட்டுமே ஆயுதமாகக் கொண்டு கால்நடையாக மதுராவுக்குப் புறப்பட்டுச் சென்றான்.(39,40)

தம் த்³ருஷ்ட்வா நிர்யயௌ ஹ்ருஷ்ட꞉ ஸ காலயவநோ ருஷா |
ப்ரேக்ஷாபூர்வம் ச க்ருஷ்ணோ(அ)பி நிஶ்சகர்ஷ மஹாப³ல꞉ ||2-57-41

அதா²ந்வக³ச்ச²த்³கோ³விந்த³ம் ஜிக்⁴ருக்ஷுர்யவநேஶ்வர꞉ |
ந சைநமஶகத்³ராஜா க்³ரஹீதும் யோக³த⁴ர்மிணம் ||2-57-42

காலயவனன் அவனைக் கண்டதில் நிறைவடைந்து சினத்துடன் அவனை எதிர்கொண்டான். பெருஞ்சக்திவாய்ந்த கிருஷ்ணனும் அவனை ஈர்த்தபடியே தன் பின்னால் இழுத்துச் சென்றான். யவனர்களின் தலைவன் கோவிந்தனைப் பிடிப்பதற்காக அவனைப் பின் தொடர்ந்து சென்றாலும் அந்த யோகியை அவனால் பிடிக்கமுடியவில்லை.(41,42)

மாந்தா⁴துஸ்து ஸுதோ ராஜா முசுகுந்தோ³ மஹாயஶா꞉ |
புரா தே³வாஸுரே யுத்³தே⁴ க்ருதகர்மா மஹாப³ல꞉ ||2-57-43

வரேண ச²ந்தி³தோ தே³வைர்நித்³ராமேவ க்³ருஹீதவாந் |
ஶ்ராந்தஸ்ய தஸ்ய வாகே³வம் ததா³ ப்ராது³ரபூ⁴த்கில ||2-57-44

ப்ரஸுப்தம் போ³த⁴யேத்³யோ மாம் தம் த³ஹேயமஹம் ஸுரா꞉ |
சக்ஷுஷா க்ரோத⁴தீ³ப்தேந ஏவமாஹ புந꞉ புந꞉ ||2-57-45

பெருஞ்சக்திவாய்ந்தவனும், சிறப்புமிக்கவனும், மாந்தாதாவின் மகனும், தேவர்களுக்கும், அசுரர்களுக்கு இடையில் நடந்த போரில் ஈடுபட்டு வெற்றியடைந்தவனும், {போரில் ஏற்பட்ட களைப்பால்} உறக்கம் வேண்டி நின்றவனுமான மன்னன் முசுகுந்தனுக்கு, முன்னவர்கள் {தேவர்கள்} ஒரு வரத்தை அளித்தனர். அவன் {முசுகுந்தன்} போரில் களைத்திருந்ததால் மீண்டும் மீண்டும், “ஓ! தேவர்களே, என்னை உறக்கத்தில் இருந்து விழித்தெழச் செய்பவனைக் கோபத்தில் எரியும் என் கண்களால் நான் எரித்துவிடுவேன்” என்றான்.(43-45)

ஏவமஸ்த்விதி தம் ஶக்ர உவாச த்ரிதி³வை꞉ ஸஹ |
ஸ ஸுரைரப்⁴யநுஜ்ஞாதோ ஹ்யத்³ரிராஜமுபாக³மத் ||2-57-46

ஸ பர்வதகு³ஹாம் காம்சித்ப்ரவிஶ்ய ஶ்ரமகர்ஶித꞉ |
ஸுஷ்வாப காலமேதம் வை யாவத்க்ருஷ்ணஸ்ய த³ர்ஶநம் ||2-57-47

தத்ஸர்வம் வாஸுதே³வாய நாரதே³ந நிவேதி³தம் |
வரதா³நம் ச தே³வேப்⁴யஸ்தேஜஸ்தஸ்ய ச பூ⁴பதே꞉ ||2-57-48

க்ருஷ்ணோ(அ)நுக³ம்யமாநஶ்ச தேந ம்லேச்சே²ந ஶத்ருணா |
தாம் கு³ஹாம் முசுகுந்த³ஸ்ய ப்ரவிவேஶ விநீதவத் ||2-57-49

தேவர்களும், அவர்களுடைய மன்னனும் {இந்திரனும்}, “அவ்வாறே ஆகட்டும்” என்றனர். இவ்வாறு தேவர்களின் ஆணையைப் பெற்ற அந்த மன்னன் {முசுகுந்தன்}, மிகவும் களைப்படைந்தவனாக மலைகளின் மன்னனிடம் {இமய மலையிடம்} முதலில் வந்தான். பிறகு ஒரு குகைக்குள் நுழைந்து, கிருஷ்ணனால் காணப்படும் வரை அங்கேயே உறங்கிக் கிடந்தான். முசுகுந்தன் அடைந்த வரத்தையும், அவனது சக்தியையும் நாரதர் கிருஷ்ணனிடம் சொல்லியிருந்தார். எனவே அவன் தன்னுடைய மிலேச்சப் பகைவன் {காலயவனன்} தன்னை விரட்டி வந்த போது பணிவுடன் முசுகுந்தனின் குகைக்குள் நுழைந்தான்.(46-49)

ஶிர꞉ஸ்தா²நே து ராஜர்ஷேர்முசுகுந்த³ஸ்ய கேஶவ꞉ |
ஸம்த³ர்ஶநபத²ம் த்யக்த்வா தஸ்தௌ² பு³த்³தி⁴மதாம் வர꞉ ||2-57-50

நுண்ணறிவுமிக்கவர்களில் முதன்மையான கேசவன், அந்த அரசமுனியின் {முசுகுந்தனின்} பார்வையைத் தவிர்க்கும் வகையில் அவனது தலையின் அருகில் அமர்ந்தான்

அநுப்ரவிஶ்ய யவநோ த³த³ர்ஶ ப்ருதி²வீபதிம் |
ஸ தம் ஸுப்தம் க்ருதாந்தாப⁴மாஸஸாத³ ஸுது³ர்மதி꞉ ||2-57-51

வாஸுதே³வம் து தம் மத்வா க⁴ட்டயாமாஸ பார்தி²வம் |
பாதே³நாத்மவிநாஶாய ஶலப⁴꞉ பாவகம் யதா² ||2-57-52

தீய மனம் கொண்ட யவன மன்னன், வாசுதேவனைப் பின்தொடர்ந்து வந்து குகைக்குள் நுழைந்து அந்த மன்னனை {முசுகுந்தனை} அங்கே கண்டான். பூச்சியானது நெருப்புக்குள் விழுவதைப் போலவே அவன் {காலயவனன்} தன் அழிவுக்காகத் தன் காலால் அந்த மன்னனை {முசுகுந்தனை} உதைத்தான்.(51,52)

முசுகுந்த³ஸ்து ராஜர்ஷி꞉ பாத³ஸ்பர்ஶப்ரபோ³தி⁴த꞉ |
நித்³ராச்சே²தே³ந சுக்ரோத⁴ பாத³ஸ்பர்ஶேந தேந ச ||2-57-53

கால் தீண்டியதால் விழிப்படைந்த அரசமுனி முசுகுந்தன், தன் உறக்கம் கலைந்ததால் பெருஞ்சீற்றமடைந்தான்.

ஸம்ஸ்ம்ருத்ய ஸ வரம் ஶக்ராத³வைக்ஷத தமக்³ரத꞉ |
ஸ த்³ருஷ்டமாத்ர꞉ க்ரோதே⁴ந ஸம்ப்ரஜஜ்வால ஸர்வஶ꞉ ||2-57-54

இந்திரனால் கொடுக்கப்பட்ட வரத்தை நினைவுகூர்ந்த அவன், கோபம் நிறைந்த தன் கண்களால் அந்த யவன மன்னனை {காலயவனனைக்} கண்டான். அவ்வாறு அந்த யவனர்களின் மன்னன் {காலயவனன்} பார்க்கப்பட்ட உடனேயே முற்றிலும் எரிந்து போனான்.

த³தா³ஹ பாவகஸ்தம் து ஶுஷ்கம் வ்ருக்ஷமிவாஶநி꞉ |
க்ஷணேந காலயவநம் நேத்ரதேஜோவிநிர்க³த꞉ ||2-57-55

ஓ! மன்னா {ஜனமேஜயா}, உலர்ந்த மரத்தை எரிக்கும் மின்னலைப் போலவே முசுகுந்தனின் கண்களுடைய சக்தியால் உண்டான அந்த நெருப்பும் மிக விரைவிலேயே காலயவனனைச் சாம்பலாக்கியது

தம் வாஸுதே³வ꞉ ஶ்ரீமந்தம் சிரகு³ப்தம் நராதி⁴பம் |
க்ருதகார்யோ(அ)ப்³ரவீத்³தீ⁴மாநித³ம் வசநமுத்தமம் ||2-57-56

இவ்வாறு தன் புத்தியால் வெற்றியை அடைந்த வாசுதேவன், நீண்ட காலம் உறக்கத்தில் இருந்த பேரரசன் முசுகுந்தனிடம் சென்று, பின்வரும் மிகச் சிறந்த சொற்களைச் சொன்னான்

ராஜம்ஶ்சிரப்ரஸுப்தோ(அ)ஸி கதி²தோ நாரதே³ந மே |
க்ருதம் மே ஸுமஹத்கார்யம் ஸ்வஸ்தி தே(அ)ஸ்து வ்ரஜாம்யஹம் ||2-57-57

“ஓ! மன்னா, நீர் நீண்ட காலமாக உறங்கிவருகிறீர் என்பதை நாரதர் மூலம் நான் கேள்விப்பட்டேன். நீர் எனக்காகப் பெரும்பணியைச் செய்திருக்கிறீர். உமக்கு நன்மை நேரட்டும். நான் சென்று வருகிறேன்” என்றான்.

வாஸுதே³வமுபாலக்ஷ்ய ராஜா ஹ்ரஸ்வம் ப்ரமாணத꞉ |
பரிஷ்க்ருதம் யுக³ம் மேநே காலேந மஹதா ததா³ ||2-57-58

உவாச ராஜா கோ³விந்த³ம் கோ ப⁴வாந்கிமிஹாக³த꞉ |
கஶ்ச கால꞉ ப்ரஸுப்தஸ்ய யதி³ ஜாநாஸி கத்²யதாம் ||2-57-59

மன்னன் முசுகுந்தன், வடிவில் உயரம் குறைந்த வாசுதேவனைக் கண்டு தன் மனதில், “நான் நீண்ட காலம் உறங்கியிருக்கிறேன், யுகமும் மாறியிருக்கிறது” என்று நினைத்தான். அதன்பிறகு அந்தப் பேரரசன் {முசுகுந்தன்}, கோவிந்தனிடம், “யார் நீ? ஏன் இங்கே வந்தாய்? நான் எவ்வளவு காலம் உறங்கினேன் என்பதை உன்னால் முடிந்தால் சொல்வாயாக” என்று கேட்டான்.(58,59)

ஶ்ரீக்ருஷ்ண உவாச
ஸோமவம்ஶோத்³ப⁴வோ ராஜா யயாதிர்நாம நாஹுஷ꞉ |
தஸ்ய புத்ரோ யது³ர்ஜ்யேஷ்ட²ஶ்சத்வாரோ(அ)ந்யே யவீயஸ꞉ ||2-57-60

யது³வம்ஶாத்ஸமுத்பந்நம் வஸுதே³வாத்மஜம் விபோ⁴ |
வாஸுதே³வம் விஜாநீஹி ந்ருபதே த்வாமிஹாக³தம் ||2-57-61

கிருஷ்ணன் {முசுகுந்தனிடம்}, “நகுஷனின் மகனும், யயாதி என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு மன்னன் சந்திர குலத்தில் புகழ்பெற்றிருந்தான். யது அவனுடைய மூத்த மகனாவான். அவனுக்குத் துர்வசு உள்ளிட்ட இன்னும் நான்கு மகன்கள் இருந்தனர். ஓ! தலைவா, அந்த யதுவின் குலத்தில் வசுதேவரின் மகனாகப் பிறந்த வாசுதேவனாக என்னை அறிவீராக. ஒரு பணிக்காகவே நான் உம்மிடம் வந்தேன்.(60,61)

த்ரேதாயுகே³ ப்ரஸுப்தோ(அ)ஸி விதி³தோ மே(அ)ஸி நாரதா³த் |
இத³ம் கலியுக³ம் வித்³தி⁴ கிமந்யத்கரவாணி தே ||2-57-62

ஓ! மன்னா, திரேதா யுகத்தில் இருந்து நீர் உறங்கிக் கொண்டிருக்கிறீர் என்பதை நான் நாரதர் மூலம் கேள்விப்பட்டேன். {அடுத்த துவாபர யுகத்தையும் தாண்டி} இப்போது கலி யுகம் தொடங்கப் போகிறது. தற்போது என்னால் உமக்குச் செய்ய முடிந்ததை எனக்குச் சொல்வீராக.

மம ஶத்ருஸ்த்வயா த³க்³தோ⁴ தே³வத³த்தவரோ ந்ருப |
அவத்⁴யோ யோ மயா ஸங்க்²யே ப⁴வேத்³வர்ஷஶதைரபி ||2-57-63

ஓ! மன்னா, தேவர்களால் உமக்கு அளிக்கப்பட்ட வரத்தின் மூலம், நூறு வருடங்கள் போரிட்டாலும் என்னால் கொல்ல முடியாதவனைச் சாம்பலாக்கிவிட்டீர்” என்றான் {கிருஷ்ணன்}”

வைஶம்பாயந உவாச
இத்யுக்த꞉ ஸ து க்ருஷ்ணேந நிர்ஜகா³ம கு³ஹாமுகா²த் |
அந்வீயமாந꞉ க்ருஷ்ணேந க்ருதகார்யேண தீ⁴மதா ||2-57-64

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் முசுகுந்தன் குகையைவிட்டு வெளியே வந்தான். தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்ட நுண்ணறிவுமிக்க வாசுதேவனும் அவனைப் பின்தொடர்ந்து சென்றான்.

ததோ த³த³ர்ஶ ப்ருதி²வீமாவ்ருதாம் ஹ்ரஸ்வகைர்நரை꞉ |
ஸ்வல்போத்ஸாஹைரல்பப³லைரல்பவீர்யபராக்ரமை꞉ |
பரேணாதி⁴ஷ்டி²தம் சைவ ராஜ்யம் கேவலமாத்மந꞉ |2-57-65

குகையின் வாயிலில் இருந்து வெளிவந்த அவன், வடிவில் உயரம் குறைந்தவர்களும், குறைந்த சக்தியையும், ஆற்றலையும், பலத்தையும் கொண்டவர்களுமான மனிதர்களால் பூமி மறைக்கப்பட்டிருப்பதையும், தன் நாடு பிறரால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதையும் கண்டான்

ப்ரீத்யா விஸ்ருஜ்ய கோ³விந்த³ம் ப்ரவிவேஶ மஹத்³வநம் |
ஹிமவந்தமகா³த்³ராஜா தபஸே த்⁴ருதமாநஸ꞉ ||2-57-66

இவை அனைத்தையும் கண்ட அந்த மன்னன், கடுந்தவங்களில் ஈடுபடத் தீர்மானித்துக் கிருஷ்ணனுக்கு விடைகொடுத்து அனுப்பி, இமய மலையின் அடர்ந்த காடுகளுக்குள் புகுந்தான் {பதரிகாசிரமத்தை அடைந்தான்}.

தத꞉ ஸ தப ஆஸ்தா²ய விநிர்முச்ய கலேவரம் |
ஆருரோஹ தி³வம் ராஜா கர்மபி⁴꞉ ஸ்வைர்ஜிதாஶுபை⁴꞉ ||2-57-67

கடுந்தவங்கள் பயின்று அங்கேயே இறந்து தன்னுடைய நற்செயல்களின் விளைவால் அடையப்பட்ட தேவலோகத்திற்குச் சென்றான்

வாஸுதே³வோ(அ)பி த⁴ர்மாத்மா உபாயேந மஹாமநா꞉ |
கா⁴தயித்வா(ஆ)த்மந꞉ ஶத்ரும் தத்ஸைந்யம் ப்ரத்யபத்³யத ||2-57-68

ப்ரபூ⁴தரத²ஹஸ்த்யஶ்வவர்மஶஸ்த்ராயுத⁴த்⁴வஜம் |
ஆதா³யோபயயௌ தீ⁴மாந்ஸ ஸைந்யம் நிஹதேஶ்வரம் ||2-57-69

அற ஆன்மா கொண்டவனும், நுண்ணறிவுமிக்கவனுமான வாசுதேவன் {கிருஷ்ணன்}, தன் தகுமுறையின் மூலம் தன் பகைவனுக்கு அழிவைக் கொண்டுவந்து, அவனுடைய படைவீரர்களிடம் சென்று, தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றைக் கொண்டதும், தங்கள் தலைவனை இழந்ததுமான அந்தப் படையுடன் {யவனப் படையுடன்} புறப்பட்டுச் சென்றான்.(68,69)

நிவேத³யாமாஸ ததோ நராதி⁴பே தது³க்³ரஸேநே ப்ரதிபூர்ணமாநஸ꞉ |
ஜநார்த³நோ த்³வாரவதீம் ச தாம் புரீமஶோப⁴யத்தேந த⁴நேந பூ⁴ரிணா ||2-57-70

ஜனார்த்தனன் இவ்வாறு தன் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றிய பிறகு, அந்த நால்வகைப் படையை மன்னன் உக்ரசேனனுக்கு அளித்துத் தன்னால் அடையப்பட்ட செல்வத்தைக் கொண்டு துவாரகா நகருக்கு அழகூட்டினான்” {என்றார் வைசம்பாயனர்}.

இதி ஶ்ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஶே விஷ்ணுபர்வணி
காலயவநவதே⁴ ஸப்தபஞ்சாஶத்தமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 56–காலயவநஸ்யாபியோகோ த்வாரவதீப்ரயாணம்)-ஸ்ரீ மத் துவாரகை செல்ல முன்மொழிந்த ஸ்ரீ கிருஷ்ணன் |

January 29, 2021

கிருஷ்ணனுடைய விருப்பத்தின் பேரில் மதுரையைவிட்டுக் குசஸ்தலிக்குச் சென்ற யாதவர்கள்

வைஶம்பாயந உவாச
கஸ்யசித்த்வத² காலஸ்ய ஸப்⁴யாம்ஸ்தாந்யது³ஸம்ஸதி³ |
ப³பா⁴ஷே புண்ட³ரீகாக்ஷோ ஹேதுமத்³வாக்யமுத்தமம் ||2-56-1

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஒரு காலத்தில் தாமரைக் கண்ணனான கிருஷ்ணன், யதுக்களின் சபையில் அவர்களிடம் பின்வரும் அறிவார்ந்த சொற்களைச் சொன்னான்.

யாத³வாநாமியம் பூ⁴மிர்மது²ரா ராஷ்ட்ரமாலிநீ |
வயம் சைவேஹ ஸம்பூ⁴தா வ்ரஜே ச பரிவர்த்³தி⁴தா꞉ ||2-56-2

{கிருஷ்ணன்}, “இந்த மதுரா நகரம் யதுக்களின் வசிப்பிடமாகும். நாங்கள் இங்கே பிறந்தோம், விரஜத்தில் {ஆயர்பாடியில்} வளர்க்கப்பட்டோம்.

ததி³தா³நீம் க³தம் து³꞉க²ம் ஶத்ரவஶ்ச பராஜிதா꞉ |
ந்ருபேஷு ஜநிதம் வைரம் ஜராஸம்தே⁴ந விக்³ரஹ꞉ ||2-56-3

எனினும் நம் அனைவரின் துன்பங்களும் அகன்றன, பகைவரும் வீழ்த்தப்பட்டனர். இப்போது நமக்கு மன்னர்களுடனான பகைமையும், ஜராசந்தனுடன் போரும் தொடங்கியிருக்கின்றன.

வாஹநாநி ச ந꞉ ஸந்தி பாதா³தம் சாப்யநந்தகம் |
ரத்நாநி ச விசித்ராணி மித்ராணி ச ப³ஹூணி ச ||2-56-4

நம்மிடம் எண்ணற்ற காலாட்படையினர் இருக்கின்றனர், விலங்குகளும் இருக்கின்றன. நம்மிடம் போதுமான அளவு ரத்தினங்களும் இருக்கின்றன, நண்பர்களும் இருக்கின்றனர்.

இயம் ச மாது²ரீ பூ⁴மிரல்பா க³ம்யா பரஸ்ய து |
வ்ருத்³தி⁴ஶ்சைவ பராஸ்மாகம் ப³லதோ மித்ரதஸ்ததா² ||2-56-5

நமது நண்பர்களின் மூலமும், படைவீரர்களின் மூலமும் நாம் செல்வத்தைத் திரட்டியிருந்தாலும், மதுரா நகரம் பகைவர் எளிதில் நுழையும் வண்ணம் மிகச் சிறியதாக இருக்கிறது.

குமாரகோட்யோ யாஶ்சேமா꞉ பதா³தீநாம் க³ணாஶ்ச யே |
ஏஷாமபீஹ வஸதாம் ஸம்மர்த³முபலக்ஷயே ||2-56-6

அதையுந்தவிர, ஒரு கோடி இளவரசர்களும், காலாட்படையினரும் இங்கே சேர்ந்து வாழ்ந்து வந்தால், அவர்களுக்குள் பிளவு ஏற்படுவதற்குரிய போதுமான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன[இங்குக் காலாட்படைக்கும், யுவகோடிகளுக்கும் கைகலப்பு எதிர்பார்க்கிறேன். இங்கு வசிப்பது எனக்கு உசிதமாகப் படவில்லை” ].

அத்ர நோ ரோசதே மஹ்யம் நிவாஸோ யது³புஞ்க³வா꞉ |
புரீம் நிவேஶயிஷ்யாமி மம தத்க்ஷந்துமர்ஹத² ||2-56-7

எனவே, ஓ! முன்னணி யதுக்களே, நாம் வேறெங்காவது சென்று வாழ்வது சிறந்தது என நான் கருதுகிறேன்.

ஏதத்³யத³நுரூபம் வோ மமாபி⁴ப்ராயஜம் வச꞉ |
ப⁴வாய ப⁴வதாம் காலே யது³க்தம் யது³ஸம்ஸதி³ ||2-56-8

யதுக்களின் இந்தக் கூட்டத்தின் முன்பு நமது நன்மைக்காக நான் சொன்னதை நீங்கள் ஒப்புக்கொண்டால் உரிய காலத்தில் அதைச் செயல்படுத்துவேன்” என்றான் {கிருஷ்ணன்}.

தமூசுர்யாத³வா꞉ ஸர்வே ஹ்ருஷ்டேந மநஸா ததா³ |
ஸாத்⁴யதாம் யத³பி⁴ப்ரேதம் ஜநஸ்யாஸ்ய ப⁴வாய வை ||2-56-9

இதைக் கேட்ட யாதவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக, “ஓ! கிருஷ்ணா, இந்த மக்கள் அனைவரின் நன்மைக்கும் உகந்ததென நீ கருதுவதைச் செய்வாயாக” என்றனர்.

தத꞉ ஸம்மந்த்ரயாமாஸுர்வ்ருஷ்ணயோ மந்த்ரமுத்தமம் |
அவத்⁴யோ(அ)ஸௌ க்ருதோ(அ)ஸ்மாகம் ஸுமஹச்ச ரிபோர்ப³லம் ||2-56-10

அதன்பிறகு விருஷ்ணிகள் இந்த மிகச் சிறந்த முன்மொழிவு குறித்த ஆலோசனைகளைத் தங்களுக்குள் செய்யத் தொடங்கினர், {அவர்கள்} “நம் பகைவனான மன்னன் ஜராசந்தன் நம்மால் கொல்லத்தகாதவனாக விதிக்கப்பட்டிருக்கிறான். அவன் பெரும்பலம் கொண்டவனாகவும் இருக்கிறான்.

க்ர்^இத꞉ ஸைந்யக்ஷயஶ்சாபி மஹாநிஹ நராதி⁴பை꞉ |
ப³ஹுலாநி ச ஸைந்யாநி ஹந்தும் வர்ஷஶதைரபி |
ந ஶக்ஷ்யாமோ ஹ்யதஸ்தேஷாமபயாநே(அ)ப⁴வந்மதி꞉ ||2-56-11

மன்னர்களின் படைகள் பலவும் இந்த மதுரா நகரத்தில் அழிக்கப்பட்டது உண்மையே. ஆனால் நூறு ஆண்டுகள் ஆனாலும் அழிக்க முடியாத அளவுக்கு அவனது படைவீரர்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கின்றனர்” {என்றனர்}.

தஸ்மிம்ஶ்சைவாந்தரே ராஜா ஸ காலயவநஸ்ததா³ |
ஸைந்யேந தத்³விதே⁴நைவ மது²ராமப்⁴யுபாக³மத் ||2-56-12

அந்த நேரத்தில், ஓ! மன்னா, பேரரசன் ஜராசந்தன், காலயவனனுடன் சேர்ந்து தன் படையுடன் மதுராவை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

ததோ ஜராஸம்த⁴ப³லம் து³ர்நிவார்யமபூ⁴த்ததா³ |
தே காலயவநம் சைவ ஶ்ருத்வேத³ம் ப்ரதிபேதி³ரே ||2-56-13

தடுக்கப்பட முடியாத பெரும் படையுடன் ஜராசந்தனும், காலயவனனும் வருவதைக் கேள்விப்பட்ட யாதவர்கள் முன்பு சொன்னதைப் போலவே பின்வாங்க நினைத்தனர்.

கேஶவ꞉ புநரேவாஹ யாத³வாந்ஸத்யஸங்க³ர꞉ |
அத்³யைவ தி³வஸ꞉ புண்யோ நிர்யாம꞉ ஸ்வப³லாநுகா³꞉ ||2-56-14

வாய்மைநிறைந்த கிருஷ்ணன், மீண்டும் யாதவர்களிடம், “இன்று மங்கலமான நாளாக இருக்கிறது. எனவே இன்றே நாம் நமது படையுடனும், தொண்டர்களுடனும் மதுராவை விட்டுப் புறப்படுவோம்” என்றான்.

ததோ நிஶ்சக்ரமு꞉ ஸர்வே யாத³வா꞉ க்ருஷ்ணஶாஸநாத் |
ஓகா⁴ இவ ஸமுத்³ரஸ்ய ப³லௌக⁴ப்ரதிநாதி³தா꞉ ||2-56-15

ஸங்க்³ருஹ்ய தே கலத்ராணி வஸுதே³வபுரோக³மா꞉ |
ஸுஸந்நத்³தை⁴ர்க³ஜைர்மத்தை ரதை²ரஶ்வைஶ்ச த³ம்ஶிதை꞉ ||2-56-16

கிருஷ்ணனின் ஆணையைக் கேட்ட வசுதேவனின் தலைமையிலான யாதவர்கள், தங்கள் மனைவிமாருடனும், தேர்கள், யானைகளுடனும், கடலலைகளுக்கு ஒப்பான படைவீரர்களின் ஒலியால் நாற்புறத்தையும் எதிரொலிக்கச் செய்தவாறே புறப்பட்டுச் சென்றனர்.(15,16)

ஆஹத்ய து³ந்து³பீ⁴ந்ஸர்வே ஸ்வஜநஜ்ஞாதிபா³ந்த⁴வா꞉ |
நிர்யயுர்யாத³வா꞉ ஸர்வே மது²ராமபஹாய வை ||2-56-17

ஸ்யந்த³நை꞉ காஞ்சநாபீடை³ர்மத்தைஶ்ச வரவாரணை꞉ |
ஸூதை꞉ ப்லுதைஶ்ச துரகை³꞉ கஶாபார்ஷ்ணிப்ரணோதி³தை꞉ ||2-56-18

அந்த யாதவர்கள், தங்கள் செல்வத்துடனும், உற்றார், உறவினர், நண்பர்கள் ஆகியோருடனும், தங்கத் தேர்கள், மதங்கொண்ட யானைகள், பொன்னால் அலங்கரிக்கப்பட்டு நடைபயிலும் குதிரைகள் ஆகியவற்றுடனும் மதுராவை விட்டுப் புறப்பட்டுச் சென்றனர்.(17,18)

ஸ்வாநி ஸ்வாநி ப³லாக்³ராணி ஶோப⁴யந்த꞉ ப்ரகர்ஷிண꞉ |
ப்ரத்யங்முகா² யயுர்ஹ்ருஷ்டா வ்ருஷ்ணயோ ப⁴ரதர்ஷப⁴ ||2-56-19

ஓ! பாரதர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அந்த யாதவர்கள் தங்கள் தங்களுக்குரிய படையணிகளை அலங்கரித்து அவற்றைத் தூண்டிவிட்டு மேற்கு நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.

ததோ முக்²யதமா꞉ ஸர்வே யாத³வா ரணகோவிதா³꞉ |
அநீகாக்³ராணி கர்ஷந்தோ வாஸுதே³வபுரோக³மா꞉ ||2-56-20

வசுதேவனும், போர்க்களத்தை எப்போதும் அலங்கரிக்கும் முன்னணி யாதவர்களும் படையினர் முன்பு நின்று அவர்களுக்கு வழிகாட்டினர்.

தே ஸ்ம நாநாலதாசித்ரம் நாலிகேரவநாயுதம் |
கீர்ணம் நாக³ப³லை꞉ காந்தம் கேதகீக²ண்ட³மண்டி³தம் ||2-56-21

தாலபுந்நாக³ப³குலத்³ராக்ஷாவநக⁴நம் க்வசித் |
அநூபம் ஸிந்து⁴ராஜஸ்ய ப்ரபேதுர்யது³புங்க³வா꞉ ||2-56-22

இவ்வாறு அந்த முன்னணி யதுக்கள் நெடுந்தொலைவைக் கடந்து கடற்கரையை அடைந்தனர். அந்த இடம் பல வகைச் செடிகொடிகளுடன் கூடியதாகவும், தென்னை மரங்களும், அழகிய யானைகளும் நிறைந்ததாகவும், பனைமரங்கள், புன்னைரங்கள், பகுள மரங்கள், திராட்சை தோட்டங்களால் மறைக்கப்பட்டதாகவும் இருந்தது.(21,22)

தே தத்ர ரமணீயேஷு விஷயேஷு ஸுக²ப்ரியா꞉ |
முமுது³ர்யாத³வா꞉ ஸர்வே தே³வா꞉ ஸ்வர்க³க³தா இவ ||2-56-23

காண்பதற்கினிய இத்தகைய இடத்தை அடைந்த யாதவர்கள் தேவலோகத்தையே அடைந்து விட்டதைப் போலப் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர்.

புரவாஸ்து விசிந்வந்ஸ க்ருஷ்ணஸ்து பரவீரஹா |
த³த³ர்ஶ விபுலம் தே³ஶம் ஸாக³ரேணோபஶோபி⁴தம் ||2-56-24

பகைவீரர்களைக் கொல்பவனான கிருஷ்ணன், நகரம் அமைப்பதற்கான இடத்தைத் தேடி வந்து கடற்கரையில் அமைந்திருந்த இந்தப் பெருநிலத்தைக் கண்டான்.(

வாஹநாநாம் ஹிதம் சைவ ஸிகதாதாம்ரம்ருத்திகம் |
புரலக்ஷணஸம்பந்நம் க்ருதாஸ்பத³மிவ ஶ்ரியா ||2-56-25

கற்களுடன் கலந்த தாமிர வண்ண மண்ணைக் கொண்ட அந்த நிலம், விலங்குகளை {வண்டிகளைச்} சுமக்கத் தகுந்ததாகவும், ஒரு நகரத்திற்கான நல்ல அடையாளங்களைக் கொண்டதாகவும், செழிப்பின் தேவியே {ஸ்ரீதேவியே} விரும்பி வசிக்கும் இடமாகவும் இருந்தது

ஸாக³ராநிலஸம்வீதம் ஸாக³ராம்பு³நிஷேவிதம் |
விஷயம் ஸிந்து⁴ராஜஸ்ய ஶோபி⁴தம் புரலக்ஷணை꞉ ||2-56-26

அங்கே கடல் காற்று வீசிக் கொண்டிருந்தது, அந்த இடத்திற்குப் பெருங்கடல் நீரளித்துக் கொண்டிருந்தது.

தத்ர ரைவதகோ நாம பர்வதோ நாதிதூ³ரத꞉ |
மந்த³ரோதா³ரஶிக²ர꞉ ஸர்வதோ(அ)பி⁴விராஜதே ||2-56-27

அதன் அருகிலேயே மந்தர மலையைப் போன்ற எழில்மிகுந்த ரைவத மலையும் அழகில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

தத்ரைகலப்³த⁴ஸம்வாஸோ த்³ரோணேநாத்⁴யுஷிதஶ்சிரம் |
ப்ரபூ⁴தபுருஷோபேத꞉ ஸர்வரத்நஸமாகுல꞉ ||2-56-28

ரத்தினங்கள் அனைத்தையும் கொண்டதும், பெரும் மனிதர்கள் அவ்வப்போது வந்து செல்லும் இடமாக இருந்ததுமான அந்த மலையில் {ரைவத மலையில்} துரோணர் நீண்ட பல ஆண்டுகள் வாழ்ந்திருந்தார்.

விஹாரபூ⁴மிஸ்தத்ரைவ தஸ்ய ராஜ்ஞ꞉ ஸுநிர்மிதா |
நாம்நா த்³வாரவதீ நாம ஸ்வாயதாஷ்டாபதோ³பமா ||2-56-29

அங்கேதான் மன்னன் ஏகலவ்யனும் வாழ்ந்திருந்தான். {அங்கே} அவனால் {கிருஷ்ணனால்} பகடைக்களம் போன்று அமைக்கப்பட்ட விளையாட்டுக் களம் துவாராவதி என்ற பெயரில் கொண்டாடப்பட்டது[அஃது ஏகலவ்யன் வஸித்த இடம், வெகு மனிதர்கள் இருந்தவிடம் எல்லா ஸ்ரேஷ்டமான பொருள்கள் இருக்குமிடம். அங்கேயே அந்த உக்ரஸேன ராஜாவுக்கு விளையாடுமிடம் நன்கு நிர்மாணிகப்பட்டுள்ளது. “த்வராவத்” எனும் பெயர்” என்றிருக்கிறது. உக்ரசேனனுக்காக அமைக்கப்பட்ட விளையாட்டுக் களம்].

கேஶவேந மதிஸ்தத்ர புர்யர்தே² விநிவேஶிதா |
நிவேஶம் தத்ர ஸைந்யாநாம் ரோசயந்தி ஸ்ம யாத³வா꞉ ||2-56-30

தே ரக்தஸூர்யதி³வஸே தத்ர யாத³வபுங்க³வா꞉ |
ஸேநாபாலாம்ஶ்ச ஸஞ்சக்ரு꞉ ஸ்கந்தா⁴வாரநிவேஶநம் ||2-56-31

கேசவன் அந்த இடத்தையே தன் நகரத்திற்காகத் தேர்ந்தெடுத்தான், யாதவர்களும், தங்கள் படைவீரர்களுடன் அங்கேயே முகாமிட விரும்பினர். அதன் பிறகு யது குலத் தளபதிகள் இரவைக் கழிப்பதற்காக அங்கே கூடாரங்களை அமைத்தனர்.(30,31)

த்⁴ருவாய தத்ர ந்யவஸத்கேஶவ꞉ ஸஹ யாத³வை꞉ |
தே³ஶே புரநிவேஶாய ஸ யது³ப்ரவரோ விபு⁴꞉ ||2-56-32

யதுக்களில் முதன்மையான தலைவன் கிருஷ்ணன் அங்கே தன் நகரத்தை அமைக்கும் நோக்கில் அவர்களுடன் சேர்ந்து கவலைகளின்றி வாழ்ந்து வந்தான்.

தஸ்யாஸ்து விதி⁴வந்நாம வாஸ்தூநி ச க³தா³க்³ரஜ꞉ |
நிர்மமே புருஷஶ்ரேஷ்டோ² மநஸா யாத³வோத்தம꞉ ||2-56-33

மனிதர்களில் முதன்மையானவனும், யாதவர்களின் தலைவனும், கதனின் அண்ணனுமான அவன் {கிருஷ்ணன்}, அந்த நகரத்தில் அமைய இருக்கும் பல்வேறு வீடுகளுக்கான பெயர்களைத் தன் மனத்துக்குள் நினைத்தான்

ஏவம் த்³வாரவதீம் சைவ புரீம் ப்ராப்ய ஸபா³ந்த⁴வா꞉ |
ஸுகி²நோ ந்யவஸந்ராஜந்ஸ்வர்கே³ தே³வக³ணா இவ ||2-56-34

ஓ! மன்னா {ஜனமேஜயா}, இவ்வாறு துவாராவதி நகரை அடைந்த யாதவர்கள், தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து தேவலோகத்தில் வசிக்கும் தேவர்களைப் போல அங்கே மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

க்ருஷ்ணோ(அ)பி காலயவநம் ஜ்ஞாத்வா கேஶிநிஷூத³ந꞉ ||
ஜராஸம்த⁴ப⁴யாச்சைவ புரீம் த்³வாரவதீம் யயௌ ||2-56-35

ஓ! பரதனின் வழித்தோன்றலே, கேசியைக் கொன்றவனான கிருஷ்ணன் {கேசவன்}, இவ்வாறு காலயவனன் வருவதைக் கேட்டு, ஜராசந்தனின் மீது கொண்ட அச்சத்தால் துவாரவதி {குசஸ்தலி} நகரத்திற்குப் புறப்பட்டு வந்தான்” என்றார் {வைசம்பாயனர்}

இதி ஶ்ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஶே விஷ்ணுபர்வணி
த்³வாரவதீப்ரயாணே ஷட்ப~சாஶத்தமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-