Archive for the ‘பெரிய திரு மொழி’ Category

ஸ்ரீ பெரிய மொழி -1-7–அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோராளரியாய்– ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

November 20, 2022

அவதாரிகை

கீழ்த் திருமொழியில், தாம் செய்த பலபல பாவங்களை யெடுத்துரைத்து, அந்தோ! இப்படி கணக்கில்லாத பாவங்களைச் செய்துவிட்டேனே!; யமலோகத்திலே யமபடர்களால் நேரக்கூடிய கொடுமைகளை நினைக் குங்கால் அளவற்ற அச்சமும் நடுக்கமும் உண்டாகின்றதே!’ என்று பலவாறாகச் சொல்லித் தம்முடைய அநுதாபந் தோற்றக் கதறினார்.

அப்படி கதறின ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், “ஆழ்வீர்! நம்முடைய பக்தனான ப்ரஹ்லாதன் உமக்குத் தெரியுமே ; யமகிங்கரர்களாலும் செய்யமுடியாத துன்பங்களை அவனுக்கு அவனுடைய தகப்பனான ஹிரண்யகசிபு என்பவன் செய்வித்தானென்பதும் உமக்குத் தெரியுமே. அப்படி பல்வகைத் துன்பங்களுக்கு ஆளான அந்த ப்ரஹ்லாதனை நாம் ரக்ஷிக்க வேண்டி ஆச்சரியமான ஒரு அவதாரம் செய்ததும் உமக்குத் தெரியுமே.

அந்த நரஸிம்ஹாவதாரம் பிற்பட்டவர்களுக்குப் பயன் படாமற் போயிற்றேயென்று வயிறெரியவும் வேண்டாதபடி நாம் சிங்கவேள் குன்றமென்னும் விலக்ஷணமான திவ்ய தேசத்திலே நித்யஸந்நிதியும் பண்ணி வைத்திருக்கிறோமே. ஆச்ரிதர்களின் விஷயத்தில் நாம் இவ்வளவு பரிந்து காரியஞ் செய்வோம் என்பது உமக்குத் தெரியாதோ ? ஏன் நீர் வருந்துகின்றீர்?” என்றருளிச் செய்ய,

ஆழ்வாரும் பரமஸந்தோஷமடைந்து அந்த நரஸிம்ஹாவதாரத்தையும் அந்த திவ்யதேசத்தையும் அநுபவித்து இனியராகிறார் இத்திரு மொழியில்.

கீழ்த்திருமொழியில் ஒன்பதாம் பாட்டிலே ‘தேனுடைக் கமலத்திரு வினுக்கரசே!” என்று பெரிய பிராட்டியாரை முன்னிட்டுச் சரணாகதி செய்தது போலவே இத்திருமொழியிலும் ஒன்பதாம் பாட்டில் “அல்லிமாதர்புல்க நின்ற ஆயிரந்தோளன்” என்று லக்ஷ்மீஸம்பந்தத்தை முன்னிட்டே அநுபவிக்கிறார்.

இத்திருமொழியில் எட்டாம்பாட்டுவரையில் ஒவ்வொருபாட்டிலும் முன் னடிகளில் நரஸிம்ஹாவதார வ்ருத்தாந்தமும் பின்னடிகளில் சிங்கவேள் குன்றத்தின் நிலைமையும் வருணிக்கப்படுகின்றன.

இத்திருப்பதியின் திருநாமம் அஹோ பிலம் என வழங்கப்படும். இது வடநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று. ‘சிங்க வேள் குன்றம்’ என்றும் ‘சிங்கவேழ்குன்றம்’ என்றும் இதனை வழங்குவதுண்டு. சிங்கம் – நரஸிம்ஹ ஸ்வரூபியாய், வேள் – யாவராலும் விரும்பப்படுகின்ற கட்டழகுடையவரான பெருமான் எழுந்தருளிய, குன்றம் – திருமலை எனவும்; நரஸிம்ஹமூர்த்தி யெழுந்தருளியிருக்கின்ற ஏழு குன்றங்களையுடைய தலம் எனவும் பொருள் படுமாறு காண்க.

இத்தலம், சிங்கம் புலி முதலிய பயங்கரமான விலங்குகள் ஸஞ்சரிக்கப்பெற்ற, கல்லும் புதரும் முள்ளும் முரடுமான கொடிய அரணியமாக இப்போது இருப்பது போலவே ஆழ்வார்காலத்திலும் இருந்த தென்பது இத்திருமொழியில் வர்ணனைகளால் நன்கு விளங்கும்.

இப்படிப்பட்ட பயங்கரமான துஷ்ட மிருகங்களும் கொடிய வேடர் முத லானவர்களும் அத்தலத்தின்கண் இருப்பதும்- மங்களாசாஸநபரர்களான நம் ஆழ்வார்களுக்கு ஒருவகையான ஆநந்தத்திற்கு ஹேதுவாகின்றது போலும் ;

எல்லாரும் எளிதாக வந்து அணுகக்கூடிய தேசமாயிருந்தால் ஆஸுரப்ரக்ருதிகளும் பலர் வந்து எம்பெருமானுக்கு ஏதாவது தீங்கு இழைக்கக்கூடுமேயென்கிற அச்சத்திற்கு அவகாசமில்லாமல் ‘தெய்வம ல்லால் செல்ல வொண்ணா” என்னும்படி கஹநமாயிருப்பது மங்களாசாஸநருசியுடையார்க்கு மகிழ்ச்சியேயிறே.

—————–

அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோராளரியாய் அவுணன்
பொங்காவாகம் வள்ளு கிரால் போழ்ந்த புனிதன் இடம்
பைம் கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக்கீழ்
செங்கணாளி யிட்டு இறைஞ்சும் சிங்க வேள் குன்றமே–1-7-1-

பதவுரை

அங்கு

(‘நீ சொல்லுகிற விஷ்ணு இங்கில்லை’ என்று இரணியன் சபதஞ் செய்த) அவ்விடத்திலே
அம் கண் ஞாலம் அஞ்ச ஓர் ஆள் அரி ஆய்

அழகியதாய் விசாலமான பூமியிலுள்ளாரெல்லாரும் பயப்படும்படியான ஒப்பற்ற நரசிங்கமூர்த்தியாய் (எம்பெருமான் தோன்றினதைக் கண்டு)
அவுணன் பொங்க

இரணியன் கிளர்ந்த வளவிலே,
ஆகம்

அவனது உடலை
வள் உகிரால்

கூர்மையான நகங்களாலே
போழ்ந்த

இருபிளவாகப் பிளந்த
புனிதன் இடம்

பரம பரிசுத்தனான எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடமாவது;-
செம் கண் ஆளி

(சீற்றத்தால்) சிவந்த கண்களையுடைய சிங்கங்களானவை
பை கண் ஆனை கொம்பு கொண்டு

பசுமையான கண்களையுடைய யானைகளின் தந்தங்களைக் கொணர்ந்து
பத்திமையால்

பக்தியினாலே
அடி கீழ்

(பகவானுடைய) திருவடிகளிலே
இட்டு

ஸமர்ப்பித்து
இறைஞ்சும்

ஆச்ரயிக்கப்பெற்ற
சிங்கவேள் குன்றம்

அஹோபிலமென்கிற சிங்க வேள்குன்றமாம்.

கீழ் இரண்டாந் திருமொழியின் நான்காம் பாட்டின் உரையில் நரஸிம்ஹாவதார ப்ரமேயங்களை மிக்க விரிவாக வரைந்தோ மாதலால் அங்கே கண்டு கொள்வது.

பக்தசிரோமணியான ப்ரஹ்லாதனுக்கு நேர்ந்த துன்பங்களை ஸஹிக்கமுடியாமையினாலே எம்பெருமான் அளவற்ற சீற்றங்கொண்டு பயங்கரமான வொரு திருவுருவத்தை ஏறிட்டுக்கொண்டான்; அந்தச் சீற்றம் ப்ரஹ்லாத விரோதியான இரணியனளவில் மாத்திரமே உண்டானாலும், அளவு மீறியிருந்ததனால் ‘உலகங்கட்கெல்லாம் இப்போதே உபஸம்ஹாரம் விளைந்திடுமோ!’ என்று அனைவரும் அஞ்சி நடுங்கும்படி யிருந்தது பற்றி அங்கண்ஞாலமஞ்ச அங்கோராளரியாய் என்றார்.

இவ்விடத்திலே வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்க:- ”நரஸிம்ஹமாயிற்றுத்தான் ஜகத்ரக்ஷணத்துக்காகவிறே; அங்கனேயிருக்கச் செய்தேயும் விளைவதறியாமையாலே ஜகத்தாக நடுங்கிற்றாயிற்று. இது எவ்வளவாயத் தலைக்கட்டுகிறதோ! என்றிருந்ததாயிற்று.”

இனி, அங்கண்ஞால மஞ்ச என்பதற்கு – இரணியனுடைய ஒப்பற்ற தோள் வலியைக் கண்டு உலகமெல்லாம் அஞ்சிக்கிடந்த காலத்திலே என்று பொருளு ரைப்பாருமுளர்.

அங்கு என்றது-

“எங்குமுளன் கண்ணனென்ற மகனைக்காய்ந்து, இங் கில்லையாலென்று இரணியன் தூண் புடைப்ப, அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப்பிரான் ” (திருவாய்மொழி 2-8-9.)என்றபடியே இரணியன் எந்த இடத்தில் எம்பெருமானில்லை யென்று தட்டினானோ அந்த இடத்திலேயே என்றபடி.

” அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங்க வுருவாய் ” -(பெரியாழ்வார் திருமொழி 1-6-9.)

அவுணன் பொங்க = அசுரர்கட்கு அவுணர் என்று பெயர். இங்கு ஹிரண் யாஸுரனைச் சொல்லுகிறது. இவன் அன்று வரையில் தனக்கு விரோதியாகத் தன் முன்னே வந்து தோற்றின ஒருவனையும் கண்டறியாமல் அன்றுதான் புதிதாக நரசிங்கமூர்த்தியாகிய எதிரியைக்கண்டபடியால் கண்டகாட்சியிலே கொதிப்படைந்தனனாம்.

அப்படி அவன் கொதிப்படைந்தவளவிலே அவனது ஆகத்தை (மார்வை) தீக்ஷ்ணமான திருநகங்களாலே கிழித்தெறிந்தனன் எம்பெருமான். பொங்க என்பதை ஆகத்துக்கு அடைமொழியாக்கி, அவுணனுடைய அகன்ற மார்பை என்றுரைப்பர் சிலர்.  

போழ்ந்த புனிதன் = புனிதனென்றால் பரிசுத்தன் என்றபடி. இரணியனது மார்பைப் பிளந்ததனால் என்ன பரிசுத்தி உண்டாயிற்று என்று கேட்கக்கூடும்; ஜகத்தைஸ்ருஷ்டித்தல் முதலிய தொழில்களில் பிரமன் முதலானவர்களை ஏவிக் காரியம் நடத்திவிடுவது போல் ப்ரஹ்லாதனை ரக்ஷிப்பதிலும் ஒரு தேவதையை ஏவிவிடாமல் தானே நேராக வந்து தோன்றிக் கைதொட்டுக் காரியஞ்செய்தமையே இங்குப் பரிசுத்தியெனக்கொள்க.

இப்படி பரிசுத்தனான எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடம் எதுவென்றால், சிங்கவேள் குன்றமென்னும் திருப்பதியாம். அஃது எப்படிப்பட்ட தென்னில் ; சிங்கம் யானை முதலிய பிரபல ஜந்துக்கள் திரியுமிடம் அது என்பதைக் காட்டுகிறார் பின்னடிகளில்.

பகவானுடைய ஸந்நிதாநமஹிமையினால் அவ்விடத்து மிருகங்களும் பகவத்பக்தி மிக்கிருக்கின்றன வென்கிறார். சிங்கங்கள் யானைகளைக் கொன்று அவற்றின் தந்தங்களைப் பிடுங்கிக் கொண்டு வந்து பெருமாள் திருவடிகளிலே ஸமர்ப்பித்து வணங்குகின்றனவாம்.

यदन्नः पुरुषो भवति तदन्नास्तस्य  देवता  யதந்நபுருஷோபவதி ததந்நாஸ் தஸ்ய தேவதா” [ஸ்ரீராமாயணம் அயோத்யா காண்டம் 103-30.] (எந்தெந்த உயிர்கட்கு எது எது ஆஹாரமோ, அந்தந்த உயிர்கள் அந்த ஆஹாரத்தைக் கொண்டு தம் தேவதைகளை ஆராதிக்கும்) என்பது சாஸ்த்ரமாதலால் யானைகளின் அவயவங்களை ஆஹாரமாகவுடைய சிங்கங்களும் யானைத்தந்தங்களைக் கொண்டு பகவதாராதநம் நடத்துகின்றனவென்க.

ஆளி என்று சிங்கத்துக்கும் யாளிக்கும் பெயர் ; இங்கே சிங்கத்தைச் சொல் லுகிறது.

செங்கண் = (இங்கே வியாக்கியான ஸ்ரீஸுக்தி) “இவற்றுக்கு ஆனைகளின் மேலே சீற்றம் மாறாதே யிருக்கச் செய்தேயும் பகவத் பக்தி ஒரு படிப்பட்டுச் செல்லுமாயிற்று; சீற்றம் விக்ருதியாய் பகவத் பக்தி ப்ரக்ருதியாயிருக்கு மாயிற்று.”

—————–

அலைத்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
கொலைக் கையாளன் நெஞ்சிடந்த கூர் உகிராளன் இடம்
மலைத்த செல் சாத்தெறிந்த பூசல் வன் துடிவாய் கடுப்ப
சிலைக்கை வேடர் தெழிப் பறாத சிங்க வேள் குன்றமே—1-7-2-

பதவுரை

அலைத்த பேழ்வாய்

(சீற்றத்தாலே) நாக்கு அலையா நின்றுள்ள பெரிய வாயையும்
வாள் எயிறு

ஒளி பொருந்திய பற்களையுமுடையதாய்
ஓர்

ஒப்பற்றதாய்
கோள்

மிடுக்கையுடையதான
அரி ஆய்

நரஸிம்ஹமாய்க்கொண்டு
கொலை கையாளன் அவுணன் நெஞ்சு இடந்த

ஜீவ ஹிம்சையில் கைகாரனான இரணியனுடைய மார்வைக் கிழித்தெறிந்த
கூர் உகிராளன் இடம்

கூர்மையான நகங்களையுடைய எம்பெருமான்  எழுந்தருளியிருக்கு மிடமாவது:-
மலைத்த

(வேடர்களாலே) ஆக்கிரமிக்கப்பட்ட
செல் சாத்து

வழிப்போக்கு ஜனங்களின் ஸமூகத்தாலே
எறிந்த

(பிரதியாகச்) செய்யப்பட்ட
பூசல்

சண்டையிலே
வல் துடி வாய் கடுப்ப

கடூரமான தொனியை யுடைத்தான பறையானது கோஷம் செய்ய,
சிலை கை வேடர்

வில்லைக் கையிலேயுடைய வேடருடைய
தெழிப்பு

ஆரவாரமானது
அறாத

எப்போதும் மாறாத

சிங்கவேள்குன்றம்-.

சீற்றத்தாலே கடைவாயுடனே நாக்கை எற் றிக்கொள்ளுகிற பெரிய வாயையுடைய நரசிங்கமூர்த்தியாய்த் தோன்றி, பர ஹிம்ஸையே போது போக்கான இரணியனுடைய மார்பைப் பிளந்த பெருமான் எழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேழ்குன்றம்.

அவ்விடத்தின் நிலைமையைப் பேசுகிறார் பின்னடிகளில்; தீர்த்தயாத்திரையாகப் பலர் அங்குச் செல்லுகின்றனராம்; அவர்களை அவ்விடத்து வேடர்கள் வந்து தகைந்து சண்டை செய்வர்கள்; பரஸ்பரம் பெருஞ்சண்டை நடக்கும்; அந்தச் சண்டையிலே வேடர்களின் பறையோசையும் வில்லோசையும் இடை விடாது இருந்து கொண்டேயிருக்கும். இதுவே அத்தலத்தின் நிலைமை-என்கிறார். உள்ளதை உள்ளபடி சொல்லவேண்டுமிறே.

மலைத்த செல்சாத்து = மலைத்தலாவது ஆக்கிரமித்தல்; வேடர்களாலே ஆக்கிரமிக்கப்பட்ட என்றாவது, வேடர்களை எதிரிட்டு ஆக்கிரமித்த என்றாவது பொருள் கொள்ளலாம். வேடர்கள் வந்து பொருகிறபோது தாங்கள் வெறுமனிரார்களே , தாங்களும் ப்ரதியுத்தம் செய்வர்களே, அதைச் சொல்லுகிற தென்னலாம்.

(செல் சாத்து.) வடமொழியில் ஸார்த்தம் என்ற பதம் ஸமூஹ மென்னும் பொருளது; அப்பதமே இங்கே சாத்து என விகாரப்பட்டிருக்கின்றது. செல்கின்ற சாத்து எனவே யாத்திரை செய்பவர்களின் கூட்டம் என்று பொருள் கிடைத்தது.

பூசல் என்றபதத்திற்கு யுத்தம் என்றும், பெரிய கோஷம் போடுதல் என்றும்  பொருளுண்டு. இரண்டு பொருளும் இங்குக் கொள்ளலாம்.

வேடர்களாலே ஆக்கிரமிக்கப்பட்ட  வழிப்போக்கர்கள் போடும் கூசலானது பெரிய பறையடித்தாற்போல ஒலிக்கின்றது என்றும் வேடர்கள் வழிப்போக்கர்களை மறித்துச் செய்கிற சண்டையிலே வேடர்களுடைய பறைகள் கர்ண கடூரமாக ஒலிக்கின்றன என்றும் கருத்தாகலாம்

————-

ஏய்ந்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
வாய்ந்த வாகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம்
ஓய்ந்த மாவுமுடைந்த குன்றும் அன்றியும் நின்றழலால்
தேய்ந்த வேயுமல்ல தில்லாச் சிங்க வேள் குன்றமே–1-7-3-

பதவுரை

ஏய்ந்த பேழ்வாய் வாள் எயிறு

(வடிவுக்குத்) தகுதியாகப் பெருத்த வாயையும் வாள் போன்ற பற்களையுடைமுடையதாய்
ஓர் கோள் அரி ஆய்

ஒப்பற்றதாய் மிடுக்கையுடையதான நரசிங்கமாகி
அவுணன்

இரணியாசுரனுடைய
வாய்ந்த ஆகம்

வளர்ந்த உடலை
வள் உகிரால்

கூர்மையான நகங்களாலே
வகிர்ந்த

கிழித்தெறிந்த
அம்மானது இடம்

ஸ்வாமி எழுந்தருளி யிருக்கிற இடமாவது:-
ஓய்ந்த மாவும்

(கடினமான நிலங்களில் அங்குமிங்கும் திரிந்து அலைந்ததனால்) களைத்துப்போன மிருகங்களும்
உடைந்த குன்றும்

உடைந்துபோன சிறு மலைகளும்
அன்றியும்

இன்னமும்
நின்று அழலால் தேய்ந்த வேயும் அல்லது

இருந்தபடியே நெருப்பாலே குறைகொள்ளியாய்க் கிடக்கிற மூங்கிலும் ஆகிய இவைகள் தவிர
இல்லா

வேறொன்றுமில்லாத

சிங்கவேள்குன்றம்-.

வடிவின் பெருமைக்குத் தகுதியாகப் பெரிய வாயையும், ஒளி பொருந்திய (அல்லது, வாள் போன்ற) கோரப்பற்களையு முடைய நரசிங்கமாகத் தோன்றி இரணியனுடைய மாம்ஸஞ் செறிந்த மார்வைப் பிளந்த பெருமான் உறையுமிடம் சிங்கவேள் குன்றம்.

“நறிய மலர்மேல் சுரும்பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாட, பொறி கொள் சிறைவண் டிசைபாடும்” ( பெரிய திருமொழி 5-1-1.)என்றும்,

“வண்டின முரலுஞ்சோலை மயிலினமாலுஞ்சோலை, கொண்டல்மீதணவுஞ்சோலை குயிலினங் கூவுஞ்சோலை” ( திருமாலை. 14.)என்றும்

வருணிக்கத் தக்க நிலைமையோ அவ்விடத்தது என்றால்; இல்லை, அந்த ஸந்நிவேசம் வேறுவகையானது என்கிறார் .

ஆனை குதிரை சிங்கம் புலி முதலிய மிருகங்கள் இங்குமங்கும் ஓடியலைந்து ஓய்ந்து நிற்கக் காணலாம்; உடைந்து கிடக்கும் கற்பாறைகளைக் காணலாம்; இன்னமும் சில காணவேண்டுமானால், மூங்கில்கள் நெருப்புப்பற்றி யெரிந்து குறைக் கொள்ளியாயிருக்குமாற்றை விசேஷமாகக் காணலாம்; இவை யொழிய வேறொன்றும் காண்பதற்கில்லையாம் அங்கு. இவையெல்லாம் இவ்வாழ்வார்க்கு வண்டின முரலுஞ் சோலை போலே தோற்றுகின்றன வென்பர் பெரியவாச்சான் பிள்ளை.

“அது விதுவுது என்ன லாவனவல்ல என்னையுன் செய்கை நைவிக்கும்” ((3) திருவாய்மொழி 5-10-2.)என்றபடி எம்பெருமானுடைய சரித்திரம் எதுவாயிருந்தாலும் எல்லாம் ஆழ்வார்களுடைய நெஞ்சைக் கவர்வது போல், அப்பெருமான் உகந்தருளின நிலங்களில் உள்ளவைகளும் எதுவா யிருந்தாலும் அவ்விடத்தவை’ என்கிற காரணத்தினால் எல்லாம் இவர்க்கு உத்தேச்யம் என்பது அறியத்தக்கது.

“பிறர்க்குக் குற்றமாய்த் தோற்றுமவையும் உபாதேயமாய்த் தோற்றுகையிறே ஒரு விஷயத்தை உகக்கையாகிறது” என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தியுங் காண்க.

ஓய்ந்தமாவும் என்பதற்கு – நிலத்தின் வெப்பத்தினால் பட்டுப்போன மா மரங்களும் என்றும் பொருள் கொள்ளலாம்.   

—————-

எவ்வம் வெவ்வேல் பொன் பெயரோன் எதலனின் இன்னுயிரை
வவ்வி ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம்
கவ்வு நாயும் கழுகும் உச்சிப் போதொடு கால் சுழன்று
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச் சிங்க வேள் குன்றமே—1-7-4-

பதவுரை

எவ்வம் வெம்வேல்

துன்பத்தை விளைப்பதாய் தீக்ஷ்ணமான வேலாயுதத்தையுடையனாய்
ஏதலன்

பாகவத விரோதியான
பொன் பெயரோன்

இரணியனுடைய
இன் உயிரை

இனிமையான பிரானணை
வவ்வி

அபஹரித்து
ஆகம்

(அவனுடைய) சரீரத்தை
வள் உகிரால்

கூர்மையான நகங்களாலே
வகிர்ந்த அம்மானது இடம்

கிழித்தெறிந்த பெருமான் எழுந்தருளியிருக்குமிடமாவது:-
கவ்வும் நாயும்

(கண்டவர்களை) யெல்லாம் கவர்கின்ற நாய்களும்
கழுகும்

கழுகுகளும் (நிறைந்திருப்பதனாலும்)
உச்சிப் போ தொடு கால் சுழன்று

கொழுத்த வெய்யிலும் சுழல்காற்றும் எப்போது மிருப்பதனாலும்
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா

தேவதைகள் தவிர மற்றையோர் சென்று கிட்ட  முடியாததான

சிங்கவேள்குன்றம்-.

கையும் வேலுமாயிருக்கிற விருப்பைக் கண்ட காட்சியிலே எல்லாரையும் துக்கப்படுத்தவல்லவனான இரணியனுடைய உயிரைக் கவர்ந்து அவனது மார்வைப் பிளந்தருளின பெருமான் உறையுமிடமாவது சிங்கவேழ்குன்றம்.

வேற்று மனிசரைக் கண்டபோதே வந்து துடைகளிலே கவ்விக் கடிக்கிற நாய்களும், அப்படி கடிக்கப்பட்டு மாண்டொழிந்த பிணங்களைக் கவ்வுகின்ற கழுகுகளும் ஆங்கு மிகுதியாகக் காணப்படுமாம்.

செடி மரமொன்று மில்லாமையினாலே நிழலென்பது காணவே முடியாது; உச்சிவேளையில் எப்படிப் பட்ட வெய்யில் காயுமோ, அதுவே எப்போதும் காய்கின்றது; சுழல்காற்றுகள் சுழன்றபடியே யிராநின்றன.

இப்படி யிருக்கையினாலே ஸாமாந்யரான மனிசர் அங்குச் சென்று கிட்டுதல் அரிது; மிக்க சக்தி வாய்ந்த தேவதைகளே அங்குச் செல்லுதற்கு உரியர்; இங்ஙனே கஹநமான தலமாயிற்று இது.

எவ்வும் என்றும் எவ்வம் என்றும் பாடபேதம். பொன் பெயரோன் = ஹிரண்யம் என்ற வடசொல் பொன் என்னும் பொருளுடையதாதலால் ஹிரண்யாஸுரனைப் பொன்பெயரோனென்பது.

ஏதலன் என்று சத்ருவுக் குப் பெயர்; ஸர்வபூதஸுஹ்ருத்தான எம்பெருமானுக்கு இவன் நேரே சத்ரு வல்லனாகிலும் பாகவதசிரோமணியான ப்ரஹ்லாதாழ்வானுக்கு சத்ருவான முறைமையாலே பகவானுக்கும் சத்ருவாயினன்.

ஆச்ரிதர்களின் விரோதிகளைத் தன் விரோதிகளாக நினைத்துப் பேசுமவனிறே எம்பெருமான்.

”ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்து இன்னுயிரை வவ்வினான்” என்று – மார்வைப் பிளந்தது முன்னமும் உயிரைக் கவர்ந்தது அதன்பின்புமாகச் சொல்ல வேண்டியிருக்க இங்கு மாறாடிச் சொன்னது- இரணியன் நரசிங்க மூர்த்தியைக் கண்ட க்ஷணத்திலேயே செத்த பிணமாக ஆய்விட்டானென்ற கருத்தைக் காட்டு தற்கென்க.

”கவ்வுநாயுங் கழுகும் உச்சிப்போதொடு கால் சுழன்று” என்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் கூறலாம்.

உச்சிப்போது என்று ஸுர்யனையே சொல்லுகிறதாகக் கொண்டு, நாய்களும் கழுகுகளுங்கூட அவ்விடத்தில் நடக்கும்போது தரையின் வெப்பம் பொறுக்க முடியாமல் கால் தடுமாறி திண்டாடுகின்றன; அப்படியே ஸுர்யனும் அவ்விடத்திலே வந்தால் அவனுக்கும் இதுவே கதி; தன்னுடைய தாபத்தைத் தானே பொறுக்கமாட்டாமல் அவனும் கால் தடுமாறிப் பரிதபிப்பன் என்றவாறுமாம்.

இத்திருப்பதியிற் சென்று ஸேவிக்க விருப்பமுடையரான இவ்வாழ்வார் “தெய்வமல்லால் செல்ல வொண்ணா” என்று அருமை தோன்ற அருளிச்செய்யலாமோ? எனில்; நரஸிம்ஹமூர்த்தியின் அழகைக்கண்டு அஸூயைப் படுவதற்கும் அவனுக்கு ஏதேனும் அவத்யத்தை விளைப்பதற்கும் உறுப்பாக ஆஸுரப்ரக்ருதிகள் அங்குச் செல்லமுடியாது; எம்பெருமானுடைய ஸம்ருத்தியைக் கண்டு உகந்து பல்லாண்டு பாடவல்ல ஆழ்வார் போல்வார்க்குத்தான் அவ்விடம் அணுகக் கூடியது என்ற கருத்துத் தோன்ற அருளிச் செய்கிறா ரென்க

—————-

மென்ற பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
பொன்ற வாகம் வள்ளுகிரால்  போழ்ந்த புனிதனிடம்
நின்ற செந்தீ மொண்டு சூறை நீள் விசும்பூடிரிய
சென்று காண்டற்கரிய கோயில் சிங்க வேள் குன்றமே–1-7-5-

பதவுரை

மென்ற பேழ்வாய்

(சீற்றத்தாலே) மடித்த பெரிய வாயையும்
வாள் எயிறு

வாள்போன்ற பற்களையுமுடையதாய்
ஓர்

ஒப்பற்றதாய்
கோள்

மிடுக்கையுடையதான
அரி ஆய்

நரசிங்கமாகி
பொன்றஅவுணன்

(தன்னைக் கண்டமாத்திரத்திலே) செத்துப்போன இரணியனுடைய
ஆகம்

உடலை
வள் உகிரால்

கூர்மையான நகங்களாலே
போழ்ந்த

பிளந்திட்ட
புனிதன் இடம்

பரிசுத்தனான பகவான் எழுந்தருளியிருக்குமிடமாவது:-
சூறை

சுழல்காற்றானது
நின்ற செம் தீ மொண்டு

குறைவில்லாமலிருக்கிற சிவந்த நெருப்பை வாரிக்கொண்டு
நீள் விசும்பூடு இரிய

விசாலமான ஆகாசமடங்கலும் ஓடிப்பரவுகிறபடியாலே
சென்று காண்டற்கு அரிய கோயில்

கிட்டிச் சென்று ஸேவிக்க முடியாத கோயிலான

சிங்கவேள்குன்றம்-.

சீற்றத்தாலே பல்லோடு நாக்கைச் செலுத்தி மென்றுகொண்டே யிருக்கிற பெரிய வாயையும் ஒளிவிடுகிற எயிற்றையும் மிடுக்கையுமுடைய நரசிங்கமாய்த் தோன்றி இரணியன் உயிர்மாளும்படியாக அவனது மார்வைப் பிளந்த பெருமானெழுந்தருளி யிருக்குமிடம் சிங்கவேழ் குன்றம். அஃது எப்படிப்பட்டது? மாறாமல் நின்று எரிகிற அக்நியைச் சுழல் காற்றானது முகந்து கொண்டு ஆகாயமெங்கும் பரவி வீசியெறிகையாலே சென்று காண்பதற்கு அருமைப்படும் கோயில்.

”அவுணன் பொன்றவாகம்” என்ற விடத்திற்கு இரண்டு வகையாகப் பொருள் கூறலாம். நரசிங்கத்தைக் கண்டவுடனே இரணியன் பொன்ற – முடிந்து போக, முடிந்தபிறகு அந்தப் பிணத்தைக் கிழித்துப்போட்டான் என்னலாம் இது அதிசயோக்தி. அன்றி, அவுணன் பொன்றும்படியாக (முடியும் படியாக) அவனது உடலைக் கிழித்தானென்னவுமாம்.

சூறை — சூறாவளிக்காற்று எனப்படும். அக்காற்று செந்தீயை மொண்டு கொண்டு ஆகாயத்திலே ஓடுகின்றதாம்.

“நீள் விசும்பூடு எரி” என்றும் பாட மருளிச்செய்வர். ஆகாயத்திலே போய் ஜ்வலிக்க என்றபடி.

சென்று காண்டற்கரிய கோயில் என்றவிடத்து வியாக்கியான ஸ்ரீஸுக்தி காண்க. “இப்படி யிருக்கையாலே ஒருவர்க்கும் சென்று காண்கைக்கு அரிதா யிருக்குமாயிற்று. பரமபதம்போலே இந்நிலத்துக்கும் நாம் பயப்பட வேண்டா என்று ஹ்ருஷ்டராகிறார்” என்று –

—————–

எரிந்த பைங்கண் இலங்கு பேழ் வாய் எயிற்றொடி தெவ்வுரு வென்று
இரிந்து வானோர் கலங்கியோடே இருந்த வம்மானதிடம்
நெரிந்த வேயின் முழை யுள் நின்று நீண் எரி வா யுழுவை
திரிந்த வானைச் சுவடு பார்க்கும் சிங்க வேள் குன்றமே–1-7-6–

பதவுரை

எரிந்த

(சீற்றத்தாலே) ஜ்வலிக்கின்ற
பை கண்

பசுமைதங்கிய கண்களோடும்
இலங்கு பேழ்வாய் எயிற்றொடு

விளங்கா நின்ற பெரிய வாயில் பற்களோடும் கூடியிருக்கிற
இது

இந்த நரசிங்கத் திருக்கோலமானது
எவ்வுரு என்று

என்ன பயங்கரமான ரூபம்! என்று அஞ்சி
வானோர்

தேவர்கள்
இரிந்து கலங்கி ஓட

அங்குமிங்கும் சிதறிக் கால் தடுமாறி ஓடும்படியாக
இருந்த

எழுந்தருளியிருந்த
அம்மானது இடம்

ஸர்வேசரனுடைய இடமாவது:-
உழுவை

புலிகளானவை
நெரிந்த வேயின் முழையுள் நின்று

நெருக்கமான மூங்கிற் புதர்களினின்றும்
நீள் நெறி வாய்

பெரிய வழியிலே (வந்து)
திரிந்த ஆனை சுவடு பார்க்கும்

காட்டில் திரிகின்ற யானைகள் போன அடையாளத்தைஆராய்ந்து பார்க்குமிடமான

சிங்கவேள்குன்றம்-.

சீற்றத்தாலே அக்நிஜ்வாலைபோலே ஜ்வலிக்கிற சிவந்த கண்ணையும் ஒளிவிடாநின்ற பெரிய வாயையும் கோரப்பற்களையும் கண்டு “அப்பப்ப! இதென்ன உரு!” என்று பயப்பட்டு தேவர்கள் அங்கு மிங்கும் கால் தடுமாறிச் சிதறி ஓடும்படியாக நரசிங்கவுருக்கொண்டு எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேழ்குன்றம்.

அஃது எப்படிப்பட்ட இடமென்னில்; மூங்கில் புதர்களினின்றும் புலிகள் பெருவழியிலே வந்து சேர்ந்து “இங்கு யானைகள் நடமாடின அடையாள முண்டோ?” என்று பார்க்கின்றனவாம். யானைகளை யடித்துத் தின்பதற்காக அவை உலாவின இடங்களைத் தேடித் திரிகின்ற புலிகள் நிறைந்ததாம் அத் தலம்.

—————-

முனைத்த சீற்றம் விண் சுடப் போய் மூ வுலகும் பிறவும்
அனைத்தும் அஞ்ச வாளரியாய் இருந்த வம்மானிதிடம்
கனைத்த தீயும் கல்லும் அல்லா வில்லுடை வேடருமாய்
தினைத்தனையும் செல்ல ஒண்ணாச் சிங்க வேள் குன்றமே—-1-7-7-

பதவுரை

முனைத்த சீற்றம்

மிக்க கோபமானது
போய்

வளர்ந்து சென்று
விண் சுட

ஆகாயத்தைக் கொளுத்தவும்
மூ உலகும்பிறவும்

மூன்று லோகங்களும் மற்றுமுள்ளவைகளும்
அனைத்தும்

எல்லாம்
அஞ்ச

பயப்படவும்

ஆள் அரியாய் இருந்த அம்மானது இடம்:-

கனைத்த தீயும்

ஒலி செய்கின்ற நெருப்பும்
கல்லும்

(அந்த நெருப்பினால் வேகின்ற) கற்களும்
அல்லா வில் உடை வேடரும் ஆய்

உலகத்தில் கண்டறியாத விற்களையுடைய வேடர்களும் நிறைந்திருப்பதனாலே
தினை தனையும் செல்ல ஒண்ணா

க்ஷணகாலமும் கிட்ட வொண்ணாததான

சிங்கவேள்குன்றம்-

நரசிங்கமூர்த்தி இரணியன் மீது கொண்ட கோபம் அளவற்றிருந்ததனால் அந்தக் கோபாக்நி  மேலுலகமளவும் போய்ப் பரவி எங்கும் தஹிக்கப்புகவே ஸர்வலோக ஸம்ஹாரஸமயம் பிறந்துவிட்ட தென்று மூவுலகத்திலுள்ளோரும் அஞ்சி நடுங்கும்படியா யிருந்ததாம். அப்படிப்பட்ட உக்ர நரஸிம்ஹன் எழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேள் குன்றம்.

அவ்விடம் எப்படிப்பட்டது?; எரிகிறபோதுண்டான வெடுவெடென்கிற ஓசையையுடைத்தான நெருப்பும், அந்த நெருப்பிலே வைக்கோல் போர்போலே வேகின்ற கல்லுகளும், இவற்றிற்காட்டிலும் கொடியவர்களான கையும் வில்லுமாய்த் திரிகின்ற வேடர்களும் அங்கு நிறைந்திருப்பதனாலே ஒரு நொடிப் பொழுதும் சென்று கிட்ட முடியாத தலமாம் அது. –

“உகவாதார்க்குக் கண்ணாலே காணலாம்படி சென்று கிட்டிக்கண்ணெச்சில் பட வொண்ணாதபடி யிருந்த தேசமாயிற்று” என்ற பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீஸுக்தி இங்கு நோக்கத் தக்கது.

தினைத்தனையும் = தினை என்று ஒரு சிறிய தானியத்திற்குப் பெயர் ; அவ்வளவும் என்றது – ஸ்வல்பகாலமும் என்றபடி.

“எட்டனைப்போது” (திருநெடுந்தாண்டகம் – 11) என்ற விடத்து எள் என்ற தானியத்தை யெடுத்துக்காட்டின தொக்கும் இது–

————

நாத் தழும்ப நான் முகனும் ஈசனுமாய் முறையால்
ஏத்த அங்கு ஓர் ஆளரியாய் இருந்த வம்மானதிடம்
காய்த்த வாகை நெற்றொலிப்பக் கல்லதர் வேய்ங்கழை போய்
தேய்த்த தீயால் விண் சிவக்கும் சிங்க வேள் குன்றமே–1-7-8-

பதவுரை

நான் முகனும் ஈசனும் ஆய்

பிரமனும் சிவனும் கூடிக் கொண்டு
நா தழும்ப

நாக்குத் தடிக்கும்படி
முறையால் ஏத்த

கிரமப்படி ஸ்தோத்ரம் பண்ண

ஓர் ஆள் அரி ஆய்இருந்த அம்மானது இடம்-.

காய்த்த

காய்கள் நிறைந்த
வாகை

வாகை மரங்களினுடைய
நெற்று

நெற்றுகளானவை
ஒலிப்ப

சப்திக்க,
கல் அதர்

கல்வழிகளிலேயுண்டான
வேய் கழை

குழல் மூங்கிற் செடிகள்
போய்

ஆகாசத்தை அளாவிப்போய்
தேய்த்த

(மூங்கில்கள் ஒன்றோடொன்று) உராய்கையினாலுண்டான
தீயால்

நெருப்பினால்
விண் சிவக்கும்

ஆகாசம் சிவந்திருக்கப்பெற்ற

சிங்கவேள்குன்றம்-.

நான்முகக் கடவுளாகிய பிரமனும் சிவனும் முறைவழுவாது துதிக்கும்படியாக விலக்ஷணமான நரசிங்கவுருக் கொண்டு எம்பெருமா னெழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேள் குன்றம்.

அஃது எப்படிப்பட்டது? – காய்கள் காய்த்துத் தொங்கப் பெற்ற வாகை மரங்களின் நெற்றுக்களானவை காற்றடித்துக் கலகலென் றொலிக்கின்றனவாம் சில விடங்களில். மற்றுஞ் சில விடங்களிலோ வென்னில்; ஆகாசத்தளவும் ஓங்கி வளர்கின்ற மூங்கில்கள் ஒன்றோடொன்று உராய்ந்து நெருப்புப்பற்றி யெரிந்து விண்ணுலகத்தையும் சிவக்கடிக்கின்றனவாம்.

நாத்தழும்ப என்றதனால் இடைவிடாது அநவரதமும் துதிக்கின்றமை தோன்றும். முறையால் ஏத்த என்பதற்கு மாறிமாறித் துதிக்க என்றும் பொருள் கொள்ளலாம். ஒருசந்தை நான்முகனும் மற்றொரு சந்தை சிவனுமாக இப்படியே மாறிமாறி ஏத்துகின்றமையைச் சொன்ன படி.

நெற்று – உலர்ந்த பழம். அதர் – வழி. வேய் + கழை = வேய்ங்கழை

——–

நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான்
அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் இடம்
நெல்லி மல்கிக் கல்லுடைப்பப் புல்லிலை யார்த்து அதர் வாய்ச்
சில்லி சில் லென்ற சொல் அறாத சிங்க வேள் குன்றமே—1-7-9-

பதவுரை

நெஞ்சே

ஓ மனமே!
நல்லை

நீ மிகவும் நல்லவன்;
நம்முடை நம்பெருமான்

நமக்கு ஸ்வாமியாய்
அல்லி மாதர் புல்க நின்ற

பெரிய பிராட்டியாரை அணைத்துக் கொண்டிருப்பவனாய்
ஆயிரம் தோளன் இடம்

ஆயிரந்தோள்களை யுடையனான எம்பெருமான் எழுந்தருளியிருக்கு மிடமாய்,
நெல்லி

நெல்லி மரங்கள்
மல்கி

நிறைந்து

(கற்களினுள்ளே வேரோட்டத்தினால்)

கல் உடைப்ப

பாறைகளை உடைக்கவும்
புல் இலை ஆர்த்து

பனையோலைகள் ஒலிசெய்யவும்
அதர் வாய்

வழிகளிலே
சில்லி

சுவர்க்கோழிகளையுடைய
சில் என்று ஒல் அறாத

சில் என்கிற ஒலி இடைவிடாமல் ஒலிக்கவும் பெற்ற
சிங்கவேள் குன்றம்

சிங்கவேள்குன்றத்தை
நாம்தொழுதும்

நாம் ஸேவிப்போம்.

கீழ்ப்பாட்டுகளில் தெய்வமல்லால் செல்ல வொண்ணா” என்றும், சென்று காண்டற்கு அரிய கோயில்” என்றும், ‘தினைத்தனையுஞ் செல்லவொண்ணா” என்றும் இத்திவ்ய தேசத்தின் அருமையைச் சொல்லிவந்தாரே;

அந்த அருமை ஆஸுரப்ரக்ருதிகளான பகவத் விரோதிகளுக்கேயொழிய, உகந்திருக்கும் அடியவர்களுக்கு அன்றே. அதனை இப்பாட்டில் வெளியிடுகிறார்.

பெரிய பிராட்டியாரை முன்னிட்டுக்கொண்டு நாம் அஞ்சாமல் சிங்கவேள் குன்றத்திலே சென்று தொழுவோம் நெஞ்சமே! என்கிறார் .

அல்லிமாதரான பிராட்டியோடே அணைந்திருப்பதனாலே நரசிங்க மூர்த்தியின் கோபாக்நிக்கு நாம் அஞ்சவேண்டியதில்லையென்றும்,

அவன் தான் நம்முடை நம்பெருமானாகையாலே அந்நிலத்தின் கொடுமைக்கும் அஞ்ச வேண்டிய தில்லையென்றும் குறிப்பிட்டபடி.

நம்பெருமான் என்றாலே போதுமாயிருக்க “நம்முடை நம்பெருமான்” என்றது அடியார் திறத்தில் அவன் மிகவும் விதே யனாயிருக்கும்படியைக் காட்டும்.

அல்லிமாதர்புல்க நின்ற ஆயிரந்தோளன் என்ற சொல் நயத்தால்-பிராட் டியை அணைக்கும் போது எம்பெருமானுக்கு ஸந்தோஷ மிகுதியினால் தழுவுதற்கு உறுப்பான தோள்கள் ஸஹஸ்ர முகமாக வளர்கின்றமை விளங்கும்.

“இவளணைத்தால் இவளைக் கட்டிக்கொள்ள ஆயிரம் தோள் உண்டாமாயிற்று” என்பர் பெரியவாச்சான் பிள்ளையும்.

”தாள்களை யெனக்கே தலைத்தலைச் சிறப்பத்தந்த பேருதவிக்கைம்மாறாத், தோள்களையாரத் தழுவியென்னுயிரை அறவிலை செய்தனன்” (திருவாய்மொழி 8-1-10.)என்று ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணினத்தாலுண்டான ஸந்தோஷத்தினால்

“தோள்களாயிரத்தாய் முடிகளாயிரத்தாய் துணை மலர்க் கண்களாயிரத்தாய், தாள்களாயிரத்தாய் பேர்களாயிரத்தாய்” (திருவாய்மொழி 8-1-10.) என்னும்படி யானால் பிராட்டியின் சேர்த்தியினால் உண்டாகக் கூடிய உடல் பூரிப்பு சொல்ல வேணுமோ ?

(நெல்லி மல்கி இத்யாதி.) நெல்லி மரங்களானவை கல்லிடைகளிலே முளைத்து வளர்ந்து கல்லிடைகளிலே வேரோடுகையாலே அந்த வேர்கள் பருத்துப் பாறைகளைப் பேர்க்கின்றனவாம்.

பெரியவாச்சான் பிள்ளையும் ”நெல்லி மரங்கள் வேரோடிக் கற்களையுடையப் பண்ணும்” என்றே அருளிச் செய்கிறார்;

இங்கே சிலர் சொல்லும் பொருளாவது – நெல்லி மரங்களிலிருந்து இற்றுவிழுகின்ற நெல்லிக்காய்கள் பாறைகளின் மீது விழுந்து கற்களையுடைக்கின்றன என்பதாம். அப்போது, நெல்லி என்றது ஆகுபெயரால் நெல்லிக்காய்களைச் சொல்லவேண்டும்.

புல்லிலை யார்த்து = மூங்கிலிலைகளின் ஓசையைச் சொல்லிற்றாகவுமாம். பனை யோலைகளின் ஓசையைச் சொல்லிற்றாகவுமாம். ஆர்த்தல் – ஒலித்தல்.

சில்லி சில்லென்றொல்லறாத = வடமொழியில் சுவர்க்கோழிக்கு ‘ஜில்லிகா’ என்று பெயர்; அச்சொல்லே இங்குச் சில்லி யென்று கிடக்கிறது. “நல்லை நெஞ்சே ” (நல்ல நெஞ்சே)” என்பன பாட பேதங்கள்

————-

செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே—-1-7-10-

பதவுரை

செம்கண் ஆளி

சிவந்த கண்களையுடைய சிங்கங்கள்
இட்டு

(தமக்குக் கிடைத்த யானைத் தந்தம் முதலியவற்றைத்) திருவடிகளிலே ஸமர்ப்பித்து
இறைஞ்சும்

வணங்குமிடமான
சிங்க வேழ் குன்று உடைய

சிங்கவேழ் குன்றத்தை இருப்பிடமாகவுடையனாய்
எங்கள் ஈசன்

ஸம்ஸாரிகளான நமக்கெல்லார்க்கும் ஸ்வாமியாய்
எம் பிரானை

நமக்கு உபகாரகனாயுமுள்ள ஸ்ரீ நரஸிம்ஹமூர்த்தி விஷயமாக,
இரு தமிழ் நூல் புலவன்

பெரிய தமிழ் சாஸ்த்ரத்தில் வல்லவராய்
மங்கை ஆளன்

திருமங்கை நாட்டுக்குத் தலைவராய்
மன்னு தொல்சீர்

நித்யஸித்தமான ஸ்ரீ வைஷ்ணவலஷ்மியை உடையவராய்
வண்டு அறைதார்

வண்டுகள் படிந்து ஒலி செய்கின்ற மாலையை யணிந்தவராய்
செம் கை ஆளன்

மிக்க உதாரரான
கலியன்

ஆழ்வாரருளிச்செய்த
செம் சொல் மாலை

செவ்விய இச்சொல் மாலையை
வல்லவர்

ஓதவல்லவர்கள்
தீது இலர்

தீமை யொன்றுமின்றி நன்மை பெற்றவராவர்.

வீரலக்ஷ்மி விளங்குங் கண்களையுடைய சிங்கங் களானவை யானைக்கோடு முதலியவற்றைக் கொண்டு ஸமர்ப்பித்து வணங்குமிட மான சிங்கவேழ் குன்றத்திலே யெழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான் விஷயமாகத் திருமங்கை மன்னன் அருளிச்செய்த சொல்மாலையை ஓதவல்லவர்கள் தீங்கின்றி வாழ்வார்கள் என்று – இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.

செங்கணாளியிட்டிறைஞ்சும் என்றவிடத்து –नवं शवमिदं पुण्यं वेदपारगमच्युत | यज्ञ्शीलं महाप्राज्ञं ब्राह्मणं शिवमुत्तमम् || நவம் சவமிதம் புண்யம் வேதபாரகமச்யுத – யஜ்ஞ்சீலம் மஹா ப்ராஜ்ஞம் ப்ராஹ்மணம் சிவ முத்தமம் என்ற கண்டாகர்ணனுடைய வசனம் நினைக்கத்தகும். அவன், தனக்கு உண வாகிய பிணங்களை எம்பெருமானுக்கு நிவேதநஞ் செய்து உண்டது போல, சிங்கங்க ளும் செய்கிறபடி.

————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய மொழி -1-6–வாணில முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார்— ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

November 19, 2022

நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதி யல்லாதன செய்தும்
துஞ்சினார் செல்லும் தொன்னெறி கேட்டே துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா வானவர் தானவர்க்கு என்றும்
நஞ்சனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—-1-6-7-

பதவுரை

விளங்கனி முனிந்தாய்

விளாம்பழமாய் வந்து தோன்றின அஸுரனைச் சீறித் தொலைத்தவனே!
வஞ்சனேன் அடியேன் 

நெஞ்சினில் பிரியா வானவா

வஞ்சகனான என்னுடைய நெஞ்சினுள்ளும் புகுந்து பிரியாதிருக்கிற தேவனே!
தானவர்க்கு என்றும் நஞ்சனே

அசுரர்களுக்கு எப்போதும் மிருத்யுவாயிருப்பவனே!

நைமிசாரணியத்துள் எந்தாய்!-;

நீதி அல்லாதன

அநீதியான ஒழுக்கங்களை
நெஞ்சினால் நினைந்தும்

(முதலில்) நெஞ்சாலே நினைத்தும்
வாயினால் மொழிந்தும்

(பிறகு) வாயாலே சொல்லியும்
செய்தும்

(பிறகு) செய்கையினால் அனுட்டித்தும்
துஞ்சினார்

முடிந்தவர்கள்
செல்லும்

அடையத்தக்க
தொல் நெறி

நரகமார்க்கத்தை
கேட்டே

(கற்றுணர்ந்த பெரியோர் சொல்லக்) கேட்டமாத்திரத்திலே
துளங்கினேன்

நடுங்கினவனாய்க்கொண்டு உன் திருவடி அடைந்தேன்-.

மனமொழி மெய்கள் மூன்றாலும் பாவங் களையே செய்து செத்தவர்கள் போகிற வழியின் கொடுமையைக் கேள்விப்பட்ட மாத்திரத்திலே நடுநடுங்கி வந்து உன் திருவடிகளைப் பற்றினேன் என்கிறார்.

சிலர் பாவஞ் செய்யவேணுமென்று முன்னாடி நெஞ்சால் நினையாமலும் வாயால் சொல்லாமலுமிருந்தாலும் திடீரென்று விதிவசமாகப் பாவஞ்செய்து விட நேருவதுண்டு; அப்படிப்பட்டவர்களுடைய பாவங்கள் பொறுமைக்கு விஷயமாகவுங்கூடும்;

அங்ஙனன்றிக்கே, ‘நாம் கட்டாயம் பாவஞ் செய்ய வேணும் ‘ என்று நெடுநாளாகவே நெஞ்சில் பாரித்துக் கொண்டு அதை அடிக்கடி வாயாலுஞ் சொல்லிக் கொண்டிருந்து அப்படியே செய்கையிலும் செய்து தீர்ப்பவர்களுடைய பாவங்கள் அநுபவித்தே தீரவேண்டியவையாகையால் நீதியல்லாதன நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் செய்தும் ” என்றார்.

இங்ஙனே செய்து செத்தவர்கள் செல்லுகிற தொன்னெறியாவது நரகமார்க்கம். தொல் நெறி = அநாதியான வழி; பகவத்கீதையில் எட்டாவது அத்யாயத்தில் “శుక్లకృష్ణగతీ హ్యేతే జగతళ్ళాశ్వతే మ | ఏకయా యాతనావృత్తి మన్యయావర్తతే పునః” = சுக்லக்ருஷ்ணகதீ ஹ்யேதே ஜகதச் சாச்வதே மதே-ஏகயா யாத்யநாவ்ருத்தி மந்யயாவர்த்ததே புந:” (சுக்லகதியென்கிற அர்ச்சிராதிமார்க்கமும் க்ருஷ்ண கதியென்கிற தூமாதிமார்க்கமும் உலகத்திற்கு சாச்வதமாய் ஏற்பட்டவைகள் ; இவற்றுள் சுக்லகதியாற் சென்றவன் மறுபடியும் இவ்வுலகத்திற்குத் திரும்பி வருகிறதில்லை ; க்ருஷ்ணகதியாற் செல்லுமவன் திரும்பிவிடுகிறான்) என்னும் போது அர்ச்சிராதிமார்க்கம் போலவே தூமாதி மார்க்கமும் நித்தியம் என்றமை யால் இங்குத் தொன்னெறி என்றது பொருந்துமென்க.

சாச்வதம் என்கிற விஷயத்தில் இரண்டு மார்க்கங்களும் ஒத்திருந்தாலும் அர்ச்சிராதிமார்க்கம் பெரும் பாலும் புல்மூடிக்கிடக்கும்; தூமாதிமார்க்கம் இடையறாத ஆட்களையுடைத்தாய் வழி தேய்ந்திருக்குமென்று வாசி காண்க.

விளங்கனி முனிந்த வரலாறு வருமாறு :- கண்ணபிரானைக் கொல்லும்படி கம்ஸனால் ஏவப்பட்ட அஸுரர்களில் கபித்தாசுரன் விளாமரத்தின் வடிவமாய் கண்ணன் தன்கீழ்வரும்பொழுது மேல்விழுந்து கொல்வதாக எண்ணிவந்து நிற்க, அஃதறிந்த க்ருஷ்ணபகவான், அவ்வாறே தன்னைக கொல்லும் பொருட்டுக் கன்றின் வடிவங்கொண்டு வந்த வத்ஸாஸுரனைப் பின்னிரண்டு கால்களையும் பிடித்து எடுத்துச் சுழற்றி விளாமரத்தின் மேலெறிய, இருவரும் இறந்து தமது அசுரவடிவத்துடனே விழுந்தனரென்பதாம்.

” அடியேன் “ என்று கபடமாக ஒருவார்த்தை சொன்னாலும் அதை மெய் யன்போடு சொன்ன சொல்லாகத் திருவுள்ளம்பற்றி நெஞ்சை விட்டு அகலாது நெஞ்சிலேயே குடிகொண்டிருப்பன் என்கிற ஸௌசீல்ய குணத்தைப் பேசுகிறார் வஞ்சனேனடியேன் னெஞ்சினில் பிரியாவானவா என்று.

இப்படிப்பட்ட ஸௌசீல்யம் பிரதிகூலர் பக்கலிலும் இருக்குமாகில் அர்த்தமாகுமே; அப் படியில்லை என்கிறார் தானவர்க்கு என்றும் நஞ்சனே! என்று

———–

ஏவினார் கலியார் நலிக வென்று என் மேல் எங்கனே வாழுமாறு ஐவர்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல் வண்ணா
பாவினாரின் சொல் பன் மலர் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து என்
நாவினால் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—1-6-8-

பதவுரை

குறுங்குடி

திருக்குறுங்குடியிலெழுந்தருளியிருக்கிற
நெடு கடல் வண்ணா

பெரிய கடல் போன்ற திருநிறமுடையவனே!

நைமிசாரணியத்துள் எந்தாய்-;

கலியார்

கலிபுருஷனென்கிற ஒரு மஹாப்ரபுவானவர்
நலிக என்று

“இந்தத் திருமங்கை மன்னனை ஹிம்ஸியுங்கோள்” என்று சொல்லி
என் மேல்

என் மேலே
ஐவர் ஏவினார்

பஞ்சேந்திரியங்களையும் ஏவிவிட்டார்;
எங்ஙனே வாழும் ஆறு

அந்தக் கலிபுருஷர் இனி பிழைக்க வழி ஏது? (ஏனென்னில்;)
நான்

அடியேன்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன்

குறும்பர்களான அந்த இந்திரியங்கள் செய்யத்தக்க கொடுமைகளை அப்புறப்படுத்திவிட்டேன்;

(அதுதானெப்படிச் செய்தீரென்னில;)

என் நாவினால்

எனது நாவினாலே
பா ஆர் இன் சொல் பல் மலர்கொண்டு

நல்ல சந்தங்கள் நிறைந்த இனிய சொற்களாகிற புஷ்பங்கள் பலவற்றையுங் கொண்டு
உன் பாதமே பரவி

உன் திருவடிகளையே தோத்திரஞ்செய்து
பணிந்து

கீழே விழுந்து

உன் திருவடிவந்து  அடைந்தேன்-;

(ஆதலால் கலியை வென்றேனென்றபடி.)

கலி புருஷன் என்னைத் துன்பப்படுத்த நினைத்துத் தனக்குக் கையாட்களான இந்திரியங்களையழைத்து நீங்கள் திருமங்கை யாழ்வாரை நன்றாக ஹிம்வித்துவிடுங்கள் என்று ஏவினான் ;

நான் இத்தனை நாளும் இருந்தபடியே இருந்தேனாகில் அவற்றால் மிகவும் துன்பப்பட்டிருப்பேன்;

தைவாதீநமாக நான் பழைய நிலைமையில் நின்றும் நீங்கி உன் திருவடிகளில் புஷ்பங்களை ஸமர்ப்பித்தும் நமஸ்காரம் செய்தும் தோத்திரங்கள் பண்ணியும் வருகிறேனாகையால் இந்திரியங்களின் செங்கோன்மை என்னிடம் செல்லவொண்ணாதபடி தடுத்துவிட்டேன்;

கலி புருஷனுடைய கட்டளை பாறிப்பறந்து போயிற்று; அந்தக்கலி புருஷன் இனி இவ்வுலகில் வாழ்வதற்கே வழியில்லை – என்று திருவுள்ளமுவந்து அருளிச் செய்கிறாராயிற்று.

கலியார் = பெருமைப்படுத்திச் சொல்லுகிற வார்த்தையன்று; கோவமும் பகையும் இழிவுந்தோற்றச் சொல்லுகிறபடி. ”வினையார் ” என்று பாவங்களைச் சொல்வது போல. நலிக = வியங்கோள் வினைமுற்று.

“எங்ஙனே வாழுமாறு என்பதற்கு இனி நான் எப்படி வாழ்வேன்’ என்று ஆழ்வார் இந்திரியங்களுக்கோ கலிபுருஷனுக்கோ அஞ்சி நடுங்கிச் சொல்லுகிறதாகப் பொருள் கூறுவர் சிலர் ; அது பிரகரணத்திற்குச் சேராது.

“கோவினார் செய்யுங் கொடுமையை மடித்தேன்” என்று உடனே அருளிச் செய்கிறாராகையாலே, தாம் அஞ்சின தாகப் பொருள் கொள்ள வொண்ணாது. அந்தக் கலி புருஷன் இனி வாழ்வதற்கு வழி யுண்டோ ? என்பதாகவே கொள்க

——————-

ஊனிடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்
தானுடைக் குரம்பை பிரியும் போது உன் தன் சரணமே சரணம் என்று இருந்தேன்
தேனுடைக் கமலத் திருவினுக்கு அரசே திரை கொள் மா நெடும் கடல் கிடந்தாய்
நானுடைத் தவத்தால் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—1-6-9-

பதவுரை

தேன் உடை கமலம் திருவினுக்கு அரசே

தேன் நிறைந்த தாமரைப்பூவிற் பிறந்த பெரிய பிராட்டியார்க்குப் பதியானவனே!
திரை கொள்மா நெடு கடல் கிடந்தாய்

அலைகள் நிரம்பிய மிகப்பெரிய திருப் பாற்டலில் கண் வளர்ந்தருளுமவனே!

நைமிசாரணியத்துள் எந்தாய்!-;

ஊன்

மாமிசத்தை
இடை சுவர் வைத்து

நடுநடுவே சுவராக வைத்து
என்பு

எலும்புகளை
தூண் நாட்டி

கம்பங்களாக நட்டு
உரோமம் வேய்ந்து

மயிர்களை மேலே மூடி
ஒன்பது வாசல் தான் உடை

நவத்வாரங்களையுடையதாகச் செய்யப்பட்ட
குரம்பை

குடிசை போன்ற இந்த சரீரத்தை
பிரியும் போது

விட்டுப்பிரியுங்காலத்தில்
உன்தன் சரணமே சரணம் என்று இருந்தேன்

உன்னுடைய திருவடிகளே ரக்ஷகமாக வேணுமென்று நினைத்திருந்தேன்;
நானுடை தவத்தால் திருஅடி அடைந்தேன்

(இப்போது) என்னுடைய பாக்கியத்தினால் திருவடிவாரத்தில் சேரப்பெற்றேன்.

தம்முடைய அத்யவஸாயத்தை வெளி யிடுகிறாரிதில்.

சரீரத்தை ஒரு குடிசையாக உருவகப்படுத்துகின்றார். குடிசையில் இடையிடையே சுவர்கள் வைக்கப்பட்டிருக்கும்; இவ்வுடலில் மாம்ஸபிண்டங்கள் சுவர்போலிருக்கின்றன; குடிசையில் தூண்கள் நாட்டப்பட்டிருக்கும்; இதில் எலும்புகள் தூண்கள் போன்றுள்ளன. குடிசையில் பல வாசல்களுண்டு;

உடலிலும் நவத்வாரங்கள் ப்ரத்யக்ஷமே. குடிசை ஓலைக்கொத்து முதலியவற்றால் மூடப்பட்டிருக்கும்; இதுவும் உரோமங்களால் மூடப்பட்டிராநின்றது.

ஆக இவ்வகைகளாலே ஒரு குடிசை யென்னலாம்படி யிராநின்றதிறே இவ்வுடல்; குடிசையிலே நாம் வாழ்வதுபோல் இவ்வுடலில் ஆத்மா வாழ்கின்றான்; இவ்வுடலைவிட்டு ஆத்மா வெளிக்கிளம்புங்காலமே மரணமெனப்படும்.

அப்படி மரணம் நேர்ந்தபிறகு இவ்வாத்மா போய்ச் சேரவேண்டிய இடம் எம்பெருமான் திருவடிகளே – என்கிற அத்யவஸாயம் தமக்கு இருக்கிறபடியை முன்னடிகளால் அருளிச் செய்தாராயிற்று.

யமபடர்கள் வந்து என்னைப்பற்றியிழுத்துக் கொண்டு போய்ப் பலவகையான ஹிம்ஸைகளைச் செய்வதற்கு உறுப்பான பாவங்களை நான் வேண்டியபடி செய்து வைத்திருந்தாலும், இன்று தேனுடைக்கமலத்திரு வாகிய பெரியபிராட்டியாரை முன்னிட்டு உன்னைச் சரணமடையும்படியான பாக்கியம் எனக்கு நேர்ந்ததனால் இனி நான் யமபுரம் சென்று வருந்த வேண்டிய ப்ரஸக்தியில்லை;

உன் திருவடிகளையே கிட்டி ஆநந்திக்க வழி ஏற்பட்டுவிட்டது என்று தம்முடைய மகிழ்ச்சியை வெளியிட்டாரென்றுணர்க.

“நானுடைத் தவத்தால்”என்றது என்னுடைத்தவத்தால் என்றபடி.

இவருடைய தவமாவது என்ன? என்றால், எம்பெருமானுடைய திருவருளையே தம்முடைய தவமாகச் சொல்லிக்கொள்வர்கள் ஆழ்வார்கள்.

உன்னருளாலே உன்னடி வந்து பணிந்தேனென்றபடி.

————–

ஏதம் வந்து அணுகா வண்ண நாம் எண்ணி எழுமினோ தொழுதும் என்று இமையோர்
நாதன் வந்து இறைஞ்சும் நைமி சாரணி யத்து எந்தையைச் சிந்தையுள் வைத்து
காதலே மிகுத்த கலியன் வாய் ஒலி செய் மாலை தான் கற்று வல்லார்கள்
ஓத நீர் வையகம் ஆண்டு வெண் குடைக் கீழ் உம்பரும் ஆகுவர் தாமே–1-6-10-

பதவுரை

ஏதம் வந்து அணுகா வண்ணம்

“துக்கங்கள் நம்மிடம் வந்து சேராத வகையை
நாம் எண்ணி

நாம் எண்ணியிருப்போமாகில்
தொழுதும் எழு மின் என்று

(நைமிசாரண்யத்திலேபோய்த்) தொழுவோம் வாருங்கள்” என்று சொல்லி

(தேவர்களெல்லாரையுங்கூட்டிக்கொண்டு)

இமையோர் நாதன் வந்து

தேவேந்திரன் வந்து
இறைஞ்சும்

ஆச்ரயிக்கப்பெற்ற
நைமிச அரணியத்து எந்தையை

நைமிசாரண்யத்தில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமானை
சிந்தையுள் வைத்து

தியானம் செய்து
காதல் மிகுந்த

பகவத்பக்தி அதிகரிக்கப்பெற்ற
கலியன்

திருமங்கையாழ்வார்
வாய் ஒலி செய்மாலை

அருளிச் செய்த இச்சொல் மாலையை
கற்று வல்லுநர்கள் தாம்

அப்யஸித்துத் தேறினவர்கள்
ஓதம்நீர் வையகம்

கடல் சூழ்ந்த இப்பூமண்டலத்தை
வெண் குடை கீழ் ஆண்டு

வெளுத்த குடை நிழலின் கீழே இருந்துகொண்டு அரசாட்சி செய்தபின்பு
உம்பரும் ஆகுவர்

நித்யஸூரிகளோடும் சேரப்பெறுவர்கள்.

இமையோர் நாதனாகிய இந்திரன் தனது பரிவாரங்களை யெல்லாம் அழைத்து நாம் எல்லாரும் நைமிசாரணியத்துள் சென்று எம்பெருமானை ஸேவிப்போம் வாருங்கள்;

ஸேவித்தோமாகில் நம் முடைய ஏதங்களெல்லாம் ஓடிப்போய்விடும்’ என்று சொல்லி எல்லாரையும் கூட்டிக்கொண்டு வந்து ஸேவித்திருக்குமிடமாம் நைமிசாரணியம்.

அவ்விடத்தில் அரண்ய ரூபியாக ஸேவைஸாதிக்கின்ற எம்பெருமான் விஷயமாகத் திரு மங்கையாழ்வாரருளிச் செய்த இச்சொல்மாலையை ஓதவல்லவர்கள், இவ்வுலகத்து அநுபவங்களில் விருப்பமுண்டாகில் அவற்றை உண்டுகளித்தபின் நித்ய ஸூரிகளின் கோஷ்டியிலும் சென்று சேர்ந்து நித்யாநந்தம் அநுபவிக்கப்பெறுவர்கள் என்று இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.

———–

அடிவரவு:- வாணிலா சிலம்பு சூதினை வம்பு இடும்பையால் கோடிய நெஞ்சினால் ஏவினார் ஊன் ஏதம் அங்கண்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய மொழி -1-5–கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம்– ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

November 19, 2022

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய மொழி -1-4–ஏனம் முனாகி யிரு நிலம் இடந்து– ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

November 19, 2022

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய மொழி -1-3–முற்ற மூத்துக் கோல் துணையா— ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

November 19, 2022

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய மொழி -1-2—வாலி மா வலத்தொருவன துடல்– ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

November 18, 2022

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய மொழி -1-1—வாடினேன் வாடி– ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

November 18, 2022

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருக்கண்ண புரம்-மூலவர் உத்சவர் -த்யான ஸ்லோகார்த்தம்-ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் —

February 14, 2022

மூலவர்: ஸ்ரீநீலமேகப்பெருமாள்
உற்சவர்: ஸ்ரீசவுரிராஜப்பெருமாள்
தாயார்: ஸ்ரீகண்ணபுரநாயகி
தீர்த்தம்: நித்யபுஷ்கரிணி
நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார் போன்ற
ஆழ்வார்களால் மங்களாசாஸனம் பண்ணப்பட்ட பெருமாள்.

இல்லையலல் எனக்கேல் இனியென்குறை அல்லி மாத ரமரும் திரு மார்பினன்
கல்லிலேயந்த மதில்சூழ் திருக்கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாரவே.-ஸ்ரீநம்மாழ்வார்

இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் உத்பலாவதக விமானம் எனப்படுகிறது.

முன்னொரு காலத்தில் சில முனிவர்கள் இத்தலத்தில் பெருமாளை வேண்டி தவம் செய்து கொண்டிருந்தனர்.
சாப்பாடு, தூக்கம் என எதனையும் பொருட்படுத்தாமல் பெருமாளை மட்டும் எப்போதும் தியானித்து வணங்கி வந்ததால்
அவர்கள் நெற்கதிர்கள் போன்று மிகவும் மெலிந்த தேகம் உடையவர்களாக இருந்தனர்.
மகாவிஷ்ணுவிடம் “அஷ்டாட்ஷர மந்திரம்’ கற்றிருந்த உபரிசிரவசு எனும் மன்னன் ஒருசமயம் தன் படையுடன்
இவ்வழியாக திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது வீரர்களுக்கு பசியெடுத்தது.
எனவே, இங்கு தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களை நெற்கதிர்கள் என நினைத்த வீரர்கள் அவர்களை வாளால் வெட்டினர்.
முனிவர்களின் நிலையைக் கண்ட விஷ்ணு, சிறுவன் வடிவில் வந்து உபரிசிரவசுவுடன் போர் புரிந்தார்.
மன்னனின் படையால் சிறுவனை ஒன்றும் செய்ய முடியவில்லை.
எனவே, இறுதியாக மன்னன் தான் கற்றிருந்த அஷ்டாட்சர மந்திரத்தை சிறுவன் மீது ஏவினான்.
அம்மந்திரம் சிறுவனின் பாதத்தில் சரணடைந்தது.
இதைக்கண்ட மன்னன் தன்னை எதிர்த்து நிற்பது மகாவிஷ்ணு எனத் தெரிந்து மன்னிப்பு கேட்டான்.
விஷ்ணு அவனை மன்னித்து நீலமேகப்பெருமாளாக காட்சி தந்தார்.
அவனது வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார்.
பின், மன்னன் விஸ்வகர்மாவைக் கொண்டு இங்கு கோயில் எழுப்பினான்.

‘ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தின் முடிவு நிகழ்ந்த இடம் இது. அஷ்டாச்சர சொரூபி மந்திர உபதேசம் பெற்ற தலம்.
இந்த ஊரில் கால் பட்டாலே வைகுந்தம் கிடைக்கும் என்பதால் இந்த பெருமாள் தலத்தில் சொர்க்க வாசல் கிடையாது.
மற்ற தலங்களில் அபய காட்சியோடு பெருமாள் இருப்பார்.
இங்குள்ள பெருமாள் தானம் வாங்கிக் கொள்தல் போல காட்சியில் இருப்பார்.
இதன் பொருள் நம் கஷ்டங்களை பெருமாள் வாங்கிக் கொள்ளுதல் போல ஐதீகம்.

இத்தலத்தில் பெருமாள் சக்கரம் பிரயோகச் சக்கரம் வதம் பண்ணுவதாய் உள்ளது.
சவுரிராஜப் பெருமாளிடம் திருமங்கை ஆழ்வார் மந்திர உபதேசம் பெற்ற தலம் இது.

திருமங்கை ஆழ்வார் 100 பாசுரம் இத்தலம் குறித்து பாடியுள்ளார்.
குலசேகர ஆழ்வார் சவுரிராஜப் பெருமாளை இராமனாக நினைத்துக் கொண்டு தாலேலோ
(ராத்திரி தூங்க வைக்கப் பாடும் பாசுரம்)பாடிய திவ்ய தேசம் திருக்கண்ணபுரம் மட்டுமே.
நம்மாழ்வார் 11 பாசுரம் பாடியுள்ளார்.

கருட தண்டக மகரிஷிக்கு பெருமாள் காட்சி தந்த தலம்.

பஞ்ச கிருஷ்ணாரண்ய ஷேத்திரம் என்று
திருக்கண்ணபுரம் , திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி, கபிஸ்தலம், திருக்கோயிலூர் என்று
இந்த ஐந்தும் கிருஷ்ணன் வாழ்ந்து உறைந்த இடம்

இத்தலத்தில் உள்ள உற்சவர் “சவுரிராஜப் பெருமாள்’ என்ற பெயருடன், தலையில் முடியுடன் இருக்கிறார்.
அமாவாசையன்று உலா செல்லும்போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும்.
“சவுரி’ என்ற சொல்லுக்கு “முடி’ என்றும், “அழகு’ என்றும் பொருள்கள் உண்டு.

கோயிலின் பெருமைகள் ;

1.ஸ்ரீமந் நாராயணன் எல்லா அக்ஷரங்களிலும் இந்தக்ஷேத்திரத்தில் ஸாந்நித்யம் செய்கிறபடியால்
இந்த ஸ்தலம் “ஸ்ரீமத்ஷ்டாக்ஷர மஹா மந்தரஸித்தி க்ஷேத்திரம்” என்று பெயர் பெற்றது.

2. திருமங்கையாழ்வாருக்கு திருமந்திர உபதேசம் செய்யப்பட்ட ஸ்தலம்.

3. ரங்கபட்டர் என்கிற அர்ச்சகர் சோழ அரசனுக்கு . பெருமாளுக்கு கேசம் வளர்ந்ததை காட்டுவதாக வாக்களித்ததைக்
காப்பாற்ற, பெருமாள் தன் திருமுடியில் திருக்குழல் கற்றையை வளர்த்துக் கேசத்தைக் காட்டியருளியதால்
செளரிராஜன் என்று அழைக்கப்பட்டார்.

4. விபீஷண ஆழ்வாருக்கு, ஸ்ரீ ரங்கநாதர் அருளியபடி அமாவாசை தினத்தன்று
பகவான் நடை அழகை காட்டியருளிய ஸ்தலம்.

5.பெருமாள் தன் சக்ராயுத்தால் விகடாக்ஷன் என்ற துஷ்டாசுரனை நிக்ரஹம் செய்தார்.
மஹரிஷிகளின் பிரார்த்தனைப்படி சக்ரப்பிரயோகம் செய்த கோலத்தில். மூலவர் காட்சி அளிக்கிறார்.

6. முனையதரையர் என்ற மஹாபக்திமான் தம்முடைய மனைவி சமைத்த பொங்கலை அர்த்தஜாமத்திற்குப் பிறகு
கோயிலுக்குள் போக முடியாமல் மானஸீகமாக பக்தியுடன் ஸமர்ப்பித்தார்.பகவான் அதை ஏற்றுக் கொண்டார்.
மூடிய கோயிலில் மணி ஓசை கேட்டு பட்டர்கள் பார்த்த போது மூலஸ்தானத்தில் வெண்பொங்கல் வாசனை நிரம்பி இருந்தது.
அது முதல் அர்த்தஜாமப் பொங்கல் நிவேதனத்திற்கு “முனியோதரம் பொங்கல்” என்ற பெயர்.
தினந்தோறும் வெண்ணெய் உருக்கி, பொங்கல் செய்து பெருமாளுக்கு நிவேதனம் செய்வது விசேஷம் .

திருக்கண்ணபுரத்தின் சிறப்புப் பிரசாதம் ’முனையதரன் பொங்கல்’. இந்த சிறப்புப்பொங்கலுக்கு தனி வரலாறு உண்டு.
சோழ மண்டலச் சதகம் எனும் நூலின் 42 வது பாடலில் இவ்வரலாறு கூறப்படுகின்றது. பாடல்:

புனையும் குழலாள் பரிந்தளித்த பொங்கல் அமுதும் பொறிக்கறியும்
அனைய சவுரிராசருக்கே ஆம் என்று அழுத்தும் ஆதரவின்
முனையதரையன் பொங்கல் என்று முகுந்தற்கு ஏறமுது கீர்த்தி
வளையும் பெருமை எப்போதும் வழங்கும் சோழ மண்டலமே

மங்களாசாஸனம்: பாசுரங்கள்
பெரியாழ்வார் – 71
ஆண்டாள் – 535
குலசேகராழ்வார் – 719- 729
திருமங்கையாழ்வார் _ 1648-1747- 2067- 2078- 2673 (72)
நம்மாழ்வார் – 3656-3666
மொத்தம் 128 பாசுரங்கள்.

திருநெற்றியில் தழும்பு
உற்சவ மூர்த்தியின் திருமேனியில் வலப்புருவத்திற்கு மேல் சிறு தழும்பும் இன்றும் காணலாம்.
முன் காலத்தில் அந்நியர் திருமதில்களை இடித்து வந்தபோது திருக்கண்ணபுரத்து அரையர், மனம் புழுங்கி,
“பெருமானே பொருவரை முன்போர் தொலைத்த பொன்னழி மற்றொரு கை என்றது பொய்த்ததோ’ என்று
கையிலிருந்த தாளத்தை வீசி எறிந்தார். அது பெருமானது புருவத்தில் பட்டது.
“தழும்பிருந்த பூங்கோரையாள் வெருவப் பொன்பெயரோன் மார்பிடந்த வீங்கோத வண்ணர் விரல்’ என்ற
பாசுரத்தில் போல இத்தழும்பை இன்றும் காட்டித் தமக்கு அடியாரிடம் கொண்ட பரிவைப் பெருமான் விளங்குகின்றார்

காளமேகப்புலவரும் கண்ணபுரம் பெருமாளும்
வைணவக்குடும்பத்தில் பிறந்த காளமேகம் சைவராக மாறிவிட்டாரே என்று கண்ணபுரம் பெருமாளுக்கு கோபம் ஏற்பட்டதாம்.
மழைநாளில் கண்ணபுரம் பெருமாள் கோயிலில் மழைக்காக புலவர் ஒதுங்க, கோயில் கதவுகளை மூடிப்
பெருமாள் உள்ளே விடவில்லை.உடனே காளமேகப்புலவர் கவிதை ஒன்று இயற்றி,
பெருமாளை நோக்கிப் பாட கோயில் கதவுகள் திறந்தனவாம்.

கண்ணபுரமருவே கடவுனினும் நீயதிகம்
உன்னிலுமோ நான் அதிகம் ஒன்று கேள் – முன்னமே
உன் பிறப்போ பத்தாம் உயர் சிவனுக் கொன்றுமாம்
என் பிறப்போ எண்ணத் தொலையாது

————————

புண்டரீக விசாலாக்ஷம் சரத் சந்த்ர நிபா நநம்
நீலாத்ரி இவ த்ருஷ்டந்தம் நீல மேகம் அஹம் பஜே

புண்டரீக விசாலாக்ஷம் -தாமரை போன்ற திருக்கண்கள் -அகன்ற பருத்த நீண்ட
சரத் சந்த்ர நிபாநநம் –சரத் காலச் சந்த்ரன் நிர்மலம் தெளிந்த அழகிய அம்ருத தாரை சொட்டும்
கோவர்த்தனம் -சரத் பூர்ணிமா கொண்டாடுவார்கள் -த்வாரகையிலும் பல லக்ஷம் பேர் வருவார்களே –
அதே போல் திருமுக மண்டலம் –
நீலாத்ரி இவ த்ருஷ்டந்தம் கருவரை போல் நின்றானை
நீல மேகம் -நைல்யம்-சமஸ்க்ருதத்தில் – கறுமை -கான்சத்யாமாம் கார் முகில் கார் வானம்
அஹம் பஜே -அடியேன் வணங்குகிறேன்

16 குணங்கள் இதில் உண்டே -நான்கு விசேஷணங்களிலும் உண்டே
ஷோடஸ கலா பரிபூர்ணன்

புண்டரீகாக்ஷ விசாலாக்ஷம்
தாமரைக்கண்ணன் –
1-பராத்பரன்
மனிசர்க்குத் தேவர் போலே தேவருக்கும் தேவாவோ
கப்யாஸம் புண்டரீக மேவ அக்ஷிணீ -சாந்தோக்யம்
க புண்டரீக நயன புருஷோத்தம
ஸ்ரீ யபதி -கண்ணபுர நாயகி கேள்வன் -சர்வாதிகன்
இணைக் கூற்றங்களோ அறியேன்
தூது செய் கண்கள்

2-ஸுந்தர்யம்
கரியவாகி –பேதைமை செய்தனவே
அதீர்க்கம் –ஸூ ந்தர பஹு ஸ்தவம்
தாமரை ஒப்புமை சொல்ல முடியாதே
பும்ஸாம் த்ருஷ்டி ஸித்த அபஹாரிணாம்
கண்டவர் தம் மனம் கமழும் கண்ணபுரத்தம்மானே

3-ஸுலப்யம்
தூது செய் கண்கள் ஓன்று பேசி -முதல் தொடர்பு
கடாக்ஷித்து வஸ்துவாக்கி -குளிரக் கடாக்ஷித்து –
ஸம்பாஷணம் –வீக்ஷணனே -பராசர பட்டர்

4- வாத்சல்யம்
செவ்வரியோடி -ஐஸ்வர்யத்தாலும் சிவந்து – -வாத்சல்யம் அடியாகவும் சிவந்து —
ஸூத்த ஸத்வ குணத்தால் -குற்றங்களையே குணமாகக் கொண்டு –
காட்டவே கண்டார் திருப்பாணாழ்வார்

5-பாவந கரத்வம் –தோஷங்களைப் போக்கி -பூதராக்கின நெடு நோக்கு –
காம க்ரோதம் அஹங்கார மமகாரங்கள் -கர்மங்கள் அனைத்தையும் போக்கி
செங்கண் சிறுச் சிறிதே –எங்கள் மேல் சாபம் களைந்து

சரத் சந்த்ர நிபாநநம்
மாசற்ற பூர்ண சந்திரன் போல் அழகிய முகம்
அபூத உவமை
6-ஆஹ்லாத கரத்வம்
தாபத் த்ரயங்கள் போகும்படி –
ஆத்யாத்மிக-ஆதி தைவிக -ஆதி பவ்திக

7-ப்ரீதி கரத்வம்
சந்த்ர காந்த –அத்தீவை ப்ரிய தர்சனம் –பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரிணாம்

8- நிர்ஹேதுக விஷயீ காரத்வம்
ஸூர்யன் இவ ஞானம் -ப்ரயத்னம் -ஸூர்ய துல்ய யாதாத்ம்ய ஞானம் -ரிஷிகள் -உபாசகர்கள்
முளைத்து எழுந்த திங்கள் தானாய் -மயர்வற மதிநலம் அருளி –
அக்லிஷ்ட்ட அத்புத அசிந்த்ய ஞான வைராக்ய ராஸயே ம் -நாதனுக்கு ஆழ்வார் அருள –

நீலாத்ரி இவ –
ஊற்றம் உடையாய் பெரியாய்
மலை இலங்கு தோள் நான்காய்
கருவரை போல் நின்றானே
9-தைர்யம் -ஹிமவான் இவ
அடியார் ரக்ஷண தீக்ஷிதம்
சுக்ரீவன் -விபீஷணன்
பிராட்டி இளைய பெருமாள் எனது உயிர் விட்டாலும் தீஷிதம் விடேன் -பெருமாள் -சத்ய ப்ரதிஜ்ஜை -ஸ்திர ப்ரதிஞ்ஞன்

10-ரக்ஷகத்வம்
காக்கும் இயல்பினன் கண்ணன்
கோவர்த்தனமே ரக்ஷிக்கும் காட்டிய வ்ருத்தாந்தம்

11-ஜகத் காரணத்வம்
த்ரிவித காரணம்
நதிகளுக்கு உத்பத்தி ஸ்தானம் -சாக்யாத்ரி -காரணம்
ஆறு பெருகும் ஸ்தானம்
உபாதான நிமித்த ஸஹ காரி ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் -ஆறுக்கும் காரணம்

த்ருஷ்டந்தம்
நிலையார நின்றானே
ஆதி அம் சோதி உருவை அங்கே வைத்து நின்ற வண்ணம் நிற்கவே
12-அபேக்ஷ நிரபேஷத்வம்
கருட வாஹனனும் நிற்க
ஒன்றும் தேவும் –நின்ற ஆதிப்பிரான் நிற்க -மற்றது தெய்வம் நாடுதிரே
64 சதுர்யுகங்களாக நின்று அருளி இங்கு

13-ஸூஹ்ருதத்வம்
இரா மடமூற்றுவாரைப் போலே
என் ஊரைச் சொன்னாய் -பேரைச் சொன்னாய்
சோம்பாது -திருத்திப் பணி கொள்ளவே அனைத்து வியாபாரங்களும் –
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று அவசர ப்ரதீஷிதனாய் நிற்கிறான்

நீலமேகம் கரு முகில்
14- வள்ளல் தன்மை
வஸிஸிஷ்டர் சண்டாள விபாகம் அற –
கார் வானம் நின்ற கண்ணபுரத்து அம்மானைக் கண்டார் கொலோ
மின்னு மா மழை தவழும் மேக ஒண்ணா
மழை முகிலே ஒக்கும்

15-பர கத ஸ்வீ காரம்
மலை இருக்கும் இடம் நாம் செல்ல வேண்டும்
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட
வந்து உனது அடியேன் உளம் புகுந்தாய் புகுந்த பின் சிந்தனைக்கு இனியாய்

16-சரண்ய முகுந்தத்வம்
மிக சேஷனே -மேகம் -எங்கும் தெளிக்கும் சாமர்த்தியம்
ஸகல பல ப்ரதத்வம்
மலையிலே படிந்து உள்ள சீதள காள மேகம் -பட்டர்

———————-

உத்பலாவதகே திவ்யே புஷ்பக்ரேஷணம்
சவுரி ராஜம் அஹம் வந்தே ஸதா ஸர்வாங்க ஸூந்தரம்

விமானம் –உத்பலா வதகம் என்ற பெயருடனும் திவ்யமாகவும் உள்ள விமானம்
மாம்ஸ -பலம் ஆசை விட்டு -உபேக்ஷித்து
ஆத்மாவில் நோக்கு தேகத்தில் ஆசை இல்லாமல்
ஆழ்வார் திருமங்கை ஆழ்வார் ஆகிறார்
ஆத்மாவை நிழலிலே வைத்து தேகத்தை பேணாமல் வெய்யிலில் வைத்தவர்
கைங்கர்யத்துக்கு வேண்டிய அளவு -தர்ம சாதனம் சரீரம் –

வாடினேன் வாடி -இத்யாதி
ஆத்ம ஞானம் வந்து -அனைத்தும் அவனது சரீரம் -உணர்ந்து
இதுவே உத்பல –
மோக்ஷமே பரம புருஷார்த்தம் -அத்தை அருளவே இதன் கீழே நிற்கிறார்
உத்பலரானவர்களுக்கு அருளவே –
விக்ரமாதித்யன் ஸிம்ஹாஸனம் போல்
கோயிலுக்குள்ளே இருந்து சேவிக்க முடியாது
வெளிப்பிரகாரத்தில் உள்ள திருமங்கை ஆழ்வார் சந்நிதியில் இருந்து ஸேவை யாகும்படி
சிற்பக்கலை அர்த்தம் அறிந்து செய்தது
காரியத்தால் வந்த பண்புப்பெயர் இது

திவ்யமான விமானம்
மோக்ஷ பூமி திவ்ய பூமி -அப்ராக்ருதம் -ப்ரக்ருதி மண்டலத்துக்கு அப்பால்
ஸூத்த ஸத்வ மயம் –

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பு
மூன்றும் இங்கு உண்டே
அஞ்ஞானம் -அனுஷ்டானம் தப்பாக்கும் -அதன் காரணமாக தூய்மையான ஆத்மாவுக்கு அழுக்கு உடம்பு கிடைக்குமே –
அர்த்த பஞ்சக ஞானம் வேண்டுமே

புஷ்பம் -ஈஷணம் கண் அழகும் குழல் அழகும் சேர்ந்து
மீனுக்கு எங்கும் தண்ணீர் போல் எங்கு சேவித்தாலும் ஸூந்தரம்
நீல மகத்துக்கு உள்ளே ஒளி பிழம்பு போல்
ஸுவ்ரி ராஜன் -குழல் அழகர் –
அருகிலேயே திரு நாகை அழகியார் -சவுந்தர ராஜன்
அழகும் அரசும் சேர்ந்தால் -ஆசையுடன் கைங்கர்யம் ராக பிராப்தம் –

வணங்குதல் -வாசக -காயிக -மாநஸம் –
வணங்கா முடி -உள்ளம் அடங்காமல் அஹங்காரம் கொண்டவன் –

பொய் நின்ற ஞானம் -பாசுரம் அர்த்த பஞ்சகமும் உண்டே
இனி யாம் உறாமை அடியேன் செய்யும் விண்ணப்பம் இதர விஷய சங்கம் அற்று —
வாசிக கைங்கர்ய பிரார்த்தனை -உபேய ஸ்வரூபம்
அடியேன் -ஜீவாத்ம-ஸ்வ ஸ்வரூபம்
இமையோர் தலைவா -பர ஸ்வரூபம்

உத்பல வதகம்-விரோதி ஸ்வரூபம்
அஹம் -ஸ்வ ஸ்வரூபம்
ஸுரி ராஜம் -பர ஸ்வரூபம்
வந்தே -சரணம் வரிக்கச் செய்யும் -புஷ்கர ஈஷணம் -உபாயம்
ஸர்வாங்க ஸூந்தரம் -பல்லாண்டு பாடுவதே -கைங்கர்யம் -புருஷார்த்தம்
பொய் நின்ற ஞானம் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -விரோதி ஸ்வரூபம்
அருளாய் -ப்ராபக -உபாய ஸ்வரூபம்
பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு தானே –

ஸுரி ராஜம் அஹம் வந்தே
திருவல்ல வாழ் கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1-
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் –
ஆசை யுடையோருக்கு எல்லாம் ஆரியர்கள் கூறும் –வரம்பு அறுத்து –

வந்தே -வணங்கத் தகுதி
உத்பலா –அஹம் -வைராக்யம் யுடைய அடியேன் –
புஷ்கர ஈஷணம் -அஹம் -தாமரைக் கண்ணுக்கு இலக்கண அடியேன்
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடரே
உன் அருளுக்கும் அதுவே புகல்-இனி அகலும் பொருள் என் -பயன் இருவோருக்குமான பின்பு -அமுதனார் –
இரக்கத்துத் தகுதியான அடியேன்
ஸுரி ராஜம் அஹம் -ஸ்வாமி சொத்து அறிந்த அடியேன்
ஸதா வந்தே அஹம் -ஸ்வரூப ஞானம் விடாமல் எப்போதும் இருக்கும் அடியேன்
ஸர்வாங்க ஸூந்தரம் அஹம் –போக்யம் –காட்டிலே எரிந்த நிலைக்கு ஆகாமல் -அனுபவிக்க -எப்போதும் ஏங்கும் அடியேன்

வந்தே பதம் தோறும் -சேர்த்து
ஜிதந்தே போற்றி பல்லாண்டு வந்தே பர்யாயம்
புஷ்கர ஈஷணம் வந்தே -தாமரைக் கண் கடாக்ஷம் உபாயம்
நம -ந ம -ச கண்ட வாகவும் -அகண்ட வாகவும் -வணங்குகிறேன் -நான் எனக்கு அல்லேன்
உனது கடாக்ஷம் உபாயம் -விஷ்ணோர் கடாக்ஷம் பெற்றால் தானே கார்ய கரம் ஆகும் -சகண்ட நமஸ் ஸூ
ஸுரி ராஜம் வந்தே -ஸ்வாமி -அரசே வணக்கம் அகண்ட நமஸ்ஸூ
அஹம் வந்தே -ஸ்வரூப ஞானம் வந்து பல்லாண்டு பாடுதல் இங்கு அர்த்தம் -அவனுக்கே அற்றுத் தீர்ந்து -சேஷத்வம் பாரதந்தர்யம் அறிந்து –
ஸதா வந்தே -சூழ்ந்து இருந்து -இங்கும் அங்கும் -வினைச் சொல் இல்லாத பல்லாண்டு பாசுரம் -போல் -இருக்க வேண்டுமே –
திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்
ஸதா ஸர்வாங்க ஸூ ந்தரம் வந்தே -எல்லா இடங்களிலும் அழகு
சங்கு சக்கரம்
திருப் பிராட்டியார்
திரு அபிஷேகம்
திரு ஆபரணம்
ததீய சேஷத்வம் -அடியார்களுக்கு பரதந்த்ரம் சேஷத்வம் அறிந்து -பல்லாண்டு
அடியோமோடும் நின்னோடும் -பாசுரார்த்தம் உணர வேண்டுமே –
அந்தமில் பேர் இன்பத்து அடியோரோடும் பல்லாண்டு –

——————————————————–

மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே -8-10-3-

தாய் எட்டு அடி பாய்ந்தால் குழந்தை 16 அடி பாடுமே
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்
அநன்யார்ஹ சேஷத்வ அநந்ய சரண்யத்வ அநந்ய போக்யத்வங்கள்
யாதாத்மயமே ததீய பர்யந்தம் –
திருமந்த்ரார்த்தமும் இந்த த்யான ஸ்லோகம் சொல்லுமே
அறிவு உணர்வு உணர்த்தி -அநந்யார்ஹ சேஷத்வம்-ஸுரி -ராஜா என்றாலே சேஷி -ஓங்கார பிரணவம் அர்த்தம்
திட அத்யவசாயம் -உத்பல வதகே திவ்யே விமானே -அருகில் ஸந்நிஹிதன் -அநந்ய சரண்யத்வம்
பேற்றுக்கு த்வரிக்க–ஸதா -ஸர்வாங்க ஸூந்தரம் -இனிமை அழகு இனிமை -அநந்ய போக்யத்வம்

———–

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-

மந்த்ர ரத்னத்தில் மத்யமபத நிஷ்டர்கள்
அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான்
இருவருக்கும் நிரூபகமாய் இருக்கிற படி
இவர் அருள் பெறுவார் அடியார் தம் அடியார்
அவன் ஆழியான்
இருவருக்கும் நிரூபகம் ததீயரே

———–

திவ்ய விமானே -இரங்கி வந்து ஸுசீல்யம்
புஷ்கார ஈஷனே -வாத்சல்யம் -செவ்வரியோடே
சவுரி ராஜா ஸ்வாமித்வம்
ஸதா சர்வாங்க ஸூ ந்தரம் –ஸுலப்யம் –
கொற்றப் புள் ஏறி –ஸகல மனுஷ நயன விஷய தாங்கம்

பற்றின பின்பு
ஞாப்தி பக்தி இருக்க முக்தி தருவான் ஆவான்
ஆஸ்ரித கார்ய ஆபாத கல்யாண குணங்கள்
1-சர்வஞ்ஞத்வம்
2-ஸர்வ சக்தித்வம்
3-பிராப்தி
4-பூர்த்தி
நான்கும் வேண்டுமே

திவ்யே விமானே –நம்முடையவர் -பிராப்தி உண்டே -64 சதுர்யுகமாக நமக்காக உள்ளானே
புஷ்கர ஈஷணம் -ஸர்வஞ்ஞத்வம்-கண் என்றாலே ஞானம்
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்
சவுரி ராஜா -சர்வ சக்தித்வம்
கோதில மணி வண்ணன் வேண்டிற்று எல்லாம் தருவான்
ஸதா சர்வாங்க ஸூந்தரம் -பூர்த்தி

————

சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால்
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால்
முலை இலங்கு பூம் பயலை முன்போட அன்போடு இருகின்றாளால்
கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத்தம்மானை கண்டாள் கொலோ 8-1-1-

செருவரை முன்னா சறுத்த சிலையன்றோ கைத்தலத்து என்கின்றாளால்
பொருவரை முன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை என்கின்றாளால்
ஒருவரையும் நின்னொப்பார் ஒப்பிலா வென்னப்பா வென்கின்றாளால்
கருவரை போல் நின்றானைக் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-2-

துன்னு மா மணி முடி மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால்
மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால்
பொன்னின் மா மணியாரம் அணியாகத் திலங்குமால் என்கின்றாளால்
கன்னி மா மதிள் புடை சூழ் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-3-

தாராய தண் துளப வண்டுழுத வரை மார்பன் என்கின்றாளால்
போரானைக் கொம்பொசித்த புட்பாகன் என்னம்மான் என்கின்றாளால்
ஆரானும் காண்மின்கள் அம்பவளம் வாயவனுக்கு என்கின்றாளால்
கார்வானம் நின்றதிரும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-4-

அடித் தலமும் தாமரையே அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
முடித் தலமும் பொற் பூணும் என் நெஞ்சத்து உள்ளகலாது என்கின்றாளால்
வடித்தடங்கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள் என்கின்றாளால்
கடிக்கமலம் கள்ளுகுக்கும்கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-5-

பேராயிரம் உடைய பேராளன் பேராளன் என்கின்றாளால்
ஏரார் கன மகரக் குண்டலத்தன் எண் தோளன் என்கின்றாளால்
நீரார் மழை முகிலே நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால்
காரார் வயல்மருவும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-6-

செவ்வரத்த உடை ஆடை யதன் மேலோர் சிவ்ளிகைக் கச்சென்கின்றாளால்
அவ்வரத்த வடியிணையும் அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
மைவளர்க்கும் மணியுருவம் மரகதமோ மழை முகிலோ என்கின்றாளால்
கைவளர்க்கும் அழலாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-7-

கொற்றப் புள் ஓன்று ஏறி மன்றூடே வருகின்றான் என்கின்றாளால்
வெற்றிப் போர் இந்திரர்க்கும் இந்திரனே யொக்குமால் என்கின்றாளால்
பெற்றக்கால் அவனாகம் பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாளால்
கற்ற நூல் மறையாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-8-

வண்டமரும் வனமாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்
உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-9-

மாவளரும் மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று
காவளரும் கடி பொழில் சூழ் கண்ண புரத் தம்மானைக் கலியன் சொன்ன
பாவளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
பூவளரும் கற்பகம் சேர் பொன்னுலகில் மன்னவராய் புகழ் தக்கோரே –8-1-10-

ஸுரிக்கொண்டைக்கு ராஜா -முன்னிலும் பின் அழகு பெருமாள்
புஷ்கார ஈஷணம் -ஸுரி ராஜம் -அவயவ சோபை சவுந்தர்யம்
ஸர்வாங்க ஸூந்தரம் – சமுதாய சோபை லாவண்யம்
அரசன் என்று -வந்தே-வணங்குவது – வேறே வகை ஸ்வரூப க்ருத தாஸ்யம் -ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம்
அழகுக்கு -வந்தே-வணங்குவது குண க்ருத தாஸ்யம் -இதுவே நிலைக்கும்

——

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-

——–

ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் -நமக்கு வேண்டும்
ஆஸ்ரயண ஸுபாதக ஆபாதக கல்யாண குணங்கள்
ஆஸ்ரிய கார்ய ஆபாதக கல்யாண குணங்கள்
இரண்டு வகைகளும் அவனுக்கு உண்டே

அகலகில்லேன் இறையும் என்று* அலர்மேல் மங்கை உறை மார்பா,*
நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய்!* என்னை ஆள்வானே,*
நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும்* திருவேங்கடத்தானே,*
புகல் ஒன்று இல்லா அடியேன்* உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.

நிகர் இல் புகழாய் –வாத்சல்யம்
உலகம் மூன்று உடையாய்! -ஸ்வாமித்வம்
என்னை ஆள்வானே,–ஸுஸீல்யம் -ஸ்ரீ ரெங்க நாத மம நாத
நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும்* திருவேங்கடத்தானே,* -ஸுலப்யம்

வைத்த அஞ்சல் என்ற கையும் –இத்யாதி
குற்றம் கண்டு வெறுவாமைக்கு வாத்சல்யம்
கார்யம் செய்யும் என்று துணிகைக்கு ஸ்வாமித்வம்
ஸ்வாமித்வம் கண்டு அகலாமைக்கு ஸுசீல்யம்
கண்டு பற்றுகைக்கு ஸுலப்யம்
விரோதியைப் போக்கித் தன்னைக் கொடுக்கைக்கு ஞான சக்திகள் –முமுஷுப்படி –138-

திருக்கையிலே பிடித்த திவ்ய ஆயுதங்களும்
வைத்து அஞ்சல் என்ற கையும்
கவித்த முடியும்
மிகவும் முறுவலும்
ஆஸன பத்மத்திலே அழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலையே நமக்குத் தஞ்சம் —

கையும் உழவு கோலும் பிடித்த சிறுவாய்க்கயிறும் ஸேனா தூளி தூ சரிதமான திருக்குழலும்
தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளுமாய் நிற்கிற சாரத்ய வேஷத்தை மாம் என்று காட்டுகிறான்

இவற்றுக்கு எல்லாம் அடி
திருக் கண்ண புர நாயகித் தாயார்
பரத்வ ஸுலப்ய இரண்டுக்கும் இவள் ஸம்பந்தமே ஹேது

———–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீகண்ணபுரநாயகி ஸமேத ஸ்ரீநீலவண்ண பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கோயில் பெரிய திருமொழி -ஸ்ரீ பரகாலன் பனுவல்கள் —

April 8, 2021

ஸ்ரீ கோயில் பெரிய திருமொழி –

1-வாடினேன் வாடி
2-தாயே தந்தை
3-விற் பெரு விழவும்
4-அன்றாயர்
5-திவளும்
6-தூ விரிய
7-நும்மைத் தொழுதோம்
8-ஏழை ஏதலன்
9-பெடை அடர்த்த
10-கண் சோர
11-தெள்ளியீர்
12-மூவரில்
13-காதில் கடிப்பு
14-மாற்றமுள

———–

ஸ்ரீ பரகாலன் பனுவல்கள் —

மஞ்சுலாம் சோலை வண்டறை மா நீர் மங்கையார் வாள் கலிகன்றி செஞ்சொலால் எடுத்த தெய்வ நன் மாலை யிவை–1-1-10-

மங்கையர் கலியனது ஒலி மாலை அரிய வின்னிசை –1-2-10-

மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை–1-3-10-

கலியன் வாயொலி செய்த பனுவல் வரம் செய்த வைந்தும் ஐந்தும்–1-4-10-

மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை–1-5-10-

காதலே மிகுத்த கலியன் வாய் ஒலி செய் மாலை–1-6-10-

இரும் தமிழ் நூல் புலவன் மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன் செங்கை யாளன் செஞ்சொல் மாலை-1-7-10-

மங்கையர் தலைவன் கலிகன்றி வண்டமிழ்ச் செஞ்சொல் மாலைகள்-1-8-10-

திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன் பண்ணார் பாடல் பத்து-1-9-10-

கல்லார் திரடோள் கலியன் சொன்ன மாலை–1-10-10-

———-

கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி இன் தமிழால் உரைத்த இம் மன்னு பாடல்-2-1-10-

மங்கையர் கோன் கலியன் கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈரைந்தும்-2-2-10-

கன்னி நன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க் கலிகன்றி சொன்ன சொல் மாலை பத்து-2-3-10-

மங்கையர் கோன் அமரில் கட மா களியானை வல்லான் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை-2-4-10-

கடமாரும் கருங்களிறு வல்லான் வெல் போர்க் கலி கன்றி யொலி செய்த வின்பப் பாடல் திடமாக விவை யைந்தும் ஐந்தும் வல்லார்–2-5-10-

வடி கொள் நெடு வேல் வலவன்கலிகன்றி யொலி -2-6-10-

மன்னு மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் பன்னிய பனுவல்–2-7-10-

கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை–2-8-10-

மங்கையர் தம் தலைவன் கலிகன்றி குன்றாது உரைத்த சீர் மன்னு செந்தமிழ் மாலை -2-9-10-

மங்கை வேந்தன் வாள் கலியன் ஒலி யைந்தும் யைந்தும்-2-10-10-

————–

வேல் வலவன் கலி கன்றி விரித்து உரைத்த பாவு தண் தமிழ் பத்திவை-3-1-10-

உலகுக்கு அருளே புரியும் காரார் புயல் கைக் கலி கன்றி குன்றா வொலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும்-3-2-10-

மங்கையர் கோன் மருவார் ஊனமர் வேல் கலி கன்றி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்-3-3-10-

அங்கமலத் தடம் வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி யரட்டமுக்கி யடையார் சீயம் கொங்குமலர் குழலியர் கோன்
மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன சங்க முத்தமிழ் மாலை பத்து–3-4-10-

கல்லின் மன்னு திண தோள் கலியன் ஒலி செய்த நல்ல இன்னிசை மாலை நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும்–3-5-10-

கையிலங்கு வேல் கலியன் கண்டுரைத்த தமிழ் மாலை ஐயிரண்டும் இவை-3-6-10-

காய்சின வேல் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை பத்து-3-7-10-

நெடுமாலுக்கு என்றும் தொண்டாய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய் தமிழ் மாலை -3-8-10-

மங்கையர் தம் தலைவன் மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன
சங்க மலி தமிழ் மாலை பத்து இவை–3-9-10-

————-

கூரார்ந்த வேல் கலியன் கூறு தமிழ் பத்து–4-1-10-

ஆலிமன் அருள் மாரி பண்ணுளார் தரப் பாடிய பாடல் இப் பத்து-4-2-10-

மங்கையார் வாள் கலிகன்றி ஊனமில் பாடல் ஒன்பதோடு ஒன்றும்–4-3-10-

கூரணிந்த வேல் வலவன் ஆலி நாடன் கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி
பாரணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் –4-4-10-

மங்கையர் தலைவன் வண்டார் கலியன் வாயொலிகள்–4-5-10-

கலியன் சொன்ன பாவளம் பத்தும் –4-6-10-

கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை–4-7-10-

வார்கொள் நல்ல முலை மடவாள் பாடலைத் தாய் மொழிந்த மாற்றம்
கூர் கொள் நல்ல வேல் கலியன் கூறு தமிழ் பத்து–4-8-10-

காரார் புறவில் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த சீரார் இன் சொல் மாலை-4-9-10-

வண்டறை சோலை மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்-4-10-10-

————

கற்றார் பரவும் மங்கையர் கோன் காரார் புயல் கைக் கலி கன்றி சொல் தான் ஈரைந்து இவை -5-1-10-

கோவைத் தமிழால் கலியன் சொன்ன பா–5-2-10-

நஞ்சுலாவிய வேல் வலவன் கலி கன்றி சொல் ஐ இரண்டும்–5-3-10-

கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலி கன்றி சொல் நல்லிசை மாலைகள் நாலிரண்டும் இரண்டும் –5-4-10-

நீல மலர்க் கண் மடவாள் நிறைவழிவைத் தாய் மொழிந்த வதனை நேரார் கால வேல் பரகாலன் கலி கன்றி ஒலி மாலை–5-5-10-

காமரு சீர்க் கலிகன்றி யொலி செய்த மலி புகழ் சேர் நாமருவு தமிழ் மாலை நால் இரண்டோடு இரண்டினையும்–5-6-10-

மன்னு மா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாய் ஒலிகள் பன்னிய பனுவல்–5-7-10-

மாட மாளிகை சூழ் திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும் ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் சூழ்
திரு வரங்கத் தம்மானை நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த பாடல் –5-8-10-

மாட மங்கை திண் திறல் தோள் கலியன் செஞ்சொலால் மொழிந்த மாலை–5-9-10-

ஒளி சேர் கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை யிவை ஐந்தும் ஐந்தும்–5-10-10-

————-

காமரு சீர்க் கலிகன்றி சொன்ன பாமரு தமிழ் இவை–6-1-10-

வானாரும் மதிள் சூழ் வயல் மங்கையர் கோன் மருவார் ஊனார் வேல் கலியன் ஒலி செய் தமிழ் மாலை –6-2-10-

காரார் புயல் தடக்கைக் கலியன் ஒலி மாலை-6-3-10-

கறையார் நெடுவேல் மங்கையர் கோன் கலி கன்றி சொல்–6-4-10-

காமக் கதிர் வேல் வல்லான் கலியன் ஒலி மாலை–6-5-10-

பொய்ம் மொழி யொன்றில்லாத மெய்ம்மையாளன் புலங்கைக் குல வேந்தன் புலமை யார்ந்த
அம் மொழி வாய்க் கலிகன்றி யின்பப் பாடல்–6-6-10-

கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை–6-7-10-

வம்பவிழ் தார்க் கன்னவிலும் தோளான் கலியன் ஒலி–6-8-10-

வண் களக நில வெறிக்கும் வயல் மங்கை நகராளன் பண் களகம் பயின்ற சீர் பாடல் இவை பத்து–6-9-10-

காவித் தடங்கண் மடவார் கேள்வன் கலியன் ஒலி மாலை–6-10-10-

————-

நறையூர் நம்பிக்கு என்றும் தொண்டாய் கலியன் ஒலி செய் தமிழ் மாலை–7-1-10-

கன்னீர் மால் வரைத் தோள் கலிகன்றி மங்கையர் கோன் சொன்னீர் சொல் மாலை –7-2-10-

தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி நாடன்
நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச் சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும்
தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை பாடல் பத்திவை–7-3-10-

தேர் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை–7-4-10-

மங்கை வேந்தன் பரகாலன் சொல்லில் பொதிந்த தமிழ் மாலை -7-5-10-

யணி யாலியர் கோன் மருவார் கறை நெடுவேல் வலவன் கலிகன்றி சொல் ஐ இரண்டும்–7-6-10-

கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி ஆலி நாடன் மங்கைக் குல வேந்தன்
சொன்ன இந் தமிழ் நன் மணிக் கோவை தூய மாலை இவை பத்து–7-7-10-

கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன் கலி கன்றி ஒலி செய்த இன்பப் பாடல்
ஒன்றினோடு நான்கும் ஓர் ஐந்தும்–7-8-10-

காரார் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை–7-9-10-

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை–7-10-10-

———–

மாவளரும் மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று காவளரும் கடி பொழில் சூழ்
கண்ண புரத் தம்மானைக் கலியன் சொன்ன பாவளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும்–8-1-10-

கார்மலி கண்ண புரத்து எம் அடிகளை பார்மலி மங்கையர் கோன் பரகாலன் சொல்–8-2-10-

கடல் சூழ் வயலாலி வள நாடன் காமரு சீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ் மாலை–8-3-10-

வண்டமரும் சோலை வயலாலி நன்னாடன் கண்ட சீர் வென்றிக் கலியன் ஒலி மாலை–8-4-10-

வார் கொள் மென் முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து ஆர்வத்தால் அவர் புலம்பிய
புலம்பலை யறிந்து முன்னுரை செய்தn கார் கொள் பூம்பொழில் மங்கையர் காவலன் கலிகன்றி ஒலி–8-5-10-

கருமா முகில் தோய் நெடுமாடக் கண்ண புரத் தெம்மடிகளைத் திரு மா மகளால் அருள் மாரிச் செழு நீராலி வள நாடன்
மருவார் புயல் கைக் கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி –8-6-10-

மலி புகழ் கண புர முடைய வெம்மடிகளை வலி கெழு மதிளயல் வயலணி மங்கையர்
கலியன தமிழிவை விழுமிய விசையினொடு ஒலி –8-7-10-

கண்ண புரத் தடியன் கலியன் ஒலி -8-8-10-

செரு நீர் வேல் வலவன் கலிகன்றி மங்கையர் கோன் கரு நீர் முகல் வண்ணன் கண்ண புரத்தானை
இரு நீரின் தமிழின் இன்னிசை மாலைகள்–8-9-10-

கண்ட சீர்க் கண்ண புரத்துறை யம்மானை கொண்ட சீர்த் தொண்டன் கலியன் ஒலி மாலை–8-10-10-

————–

பெற்றம் ஆளியைப் பேரில் மணாளனைக் கற்ற நூல் கலிகன்றி யுரை செய்த சொல் –10-1-10-

அங்கு வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை யழித்தவன் தன்னைப்
பொங்கு மா வலவன் கலிகன்றி புகன்ற பொங்கத்தம்–10-2-10-

வென்ற தொல் சீர் தென்னிலங்கை வெஞ்சமத்து அன்று அரக்கர்
குன்ற மன்னார் ஆடி யுய்ந்த குழ மணி தூரத்தை–10-3-10-

எழில் தோள் கலிகன்றி செம்மைப் பனுவல் நூல் கொண்டு செங்கண் நெடியவன் தன்னை
அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை ஐந்தும் ஐந்தும்–10-4-10-

காரார் புயல் கைக்கலி கன்றி மங்கையர் கோன்
பேராளன் நெஞ்சில் பிரியாது இடம் கொண்ட
சீராளா செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த்
தாராளா கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி –10-5-10-

அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டு இருந்த பெருமான் அடி மேல்
நன்றாய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை –10-6-10-

கடல் சூழ் கன்னி நன் மா மதிள் மங்கையர் காவலன் காமரு சீர்க் கலிகன்றி
இன்னிசை மாலைகள் ஈரேழும்-10-7-14-

அல்லிக் கமலக் கண்ணனை யங்கோர் ஆய்ச்சி எல்லிப் பொழுதூடிய ஊடல் திறத்தைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை-10-8-10-

வாள் திறல் தானை மங்கையர் தலைவன் மான வேற் கலியன் வாய் ஒலிகள்
தோட்டலர் பைந்தார்ச் சுடர் முடியானைப் பழ மொழியால் பணிந்து உரைத்த பாட்டிவை–10-9-10-

சுரும்பார் பொழில் மங்கையர் கோன் ஒண்டார் வேல் கலியன் ஒலி மாலைகள்–10-10-10-

—————

அன்று பாரதத்து ஐவர் தூதனாய்ச் சென்ற மாயனைச் செங்கண் மாலினை
மன்றிலார் புகழ் மங்கை வாள் கலி கன்றி சொல்–11-1-10-

வென்று விடை யுடன் ஏழு அடர்த்த வடிகளை மன்றின் மலி புகழ் மங்கை மன் கலி கன்றி சொல் ஓன்று நின்ற ஒன்பதும்–10-2-10-

பெற்றார் ஆயிரம் பேரானைப் பேர் பாடப் பெற்றான் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை-11-3-10-

வேலை புடை சூழ கலி கெழு மாட வீதி வயல் மங்கை மன்னு கலி கன்றி சொன்ன பனுவல் ஒழி கெழு பாடல்–11-4-10-

கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ
வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும் கலி கன்றி
உள்ளத்தின் உள்ளே யுளன் கண்டாய் சாழலே—11-5-10-

யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன
காவளரும் பொழில் மங்கைக் கலி கன்றி யொலி மாலை–11-6-10-

மெய்நின்ற பாவம் அகலத் திருமாலைக்
கைநின்ற ஆழியான் சூழும் கழல் சூடி
கைந்நின்ற வேற்க் கை கலியன் ஒலி மாலை
ஐ ஒன்றும் ஐந்தும் இவை பாடி ஆடுமினே –11-7-10-

குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை
மன்றில் மலி புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல்
ஒன்றும் வினையாயின சார கில்லவே —11-8-10-

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய திருமொழி நூற்றந்தாதி–ஸ்ரீ திரு கே பக்ஷிராஜன்-

March 26, 2021

ஸ்ரீ நம்மாழ்வார் ஆழ்வார்களில் பிரதானமானவர்.
திருமால் என்னும் உயிரான கருத்தின் விளக்கத்திற்கு வாய்த்த உடலாக இருப்பவர்.
அவருடைய நான்கு பிரபந்தங்கள் திருவிருத்தம், பெரிய திருவந்தாதி, திருவாசிரியம், திருவாய்மொழி என்பன.
இந்த நான்கும் அவர் மூலம் வெளிப்பட்ட நான்கு திராவிட வேதங்கள், தமிழ் மறைகள் என்பது ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயம் கூறும் கருத்து.
இதில் முக்கியமானது திருவாய்மொழி ஆயிரம் பாட்டுகள்.
இவருடைய திவ்ய பிரபந்தங்கள் உடல் என்றால் அந்த உடலுக்கு உறுப்புகளாக நின்று பொருள் விளங்க உதவும் நூல்கள்
திருமங்கையாழ்வார் என்னும் கலியன் அவர்களது ஆறு நூல்களாகும்.
பெரிய திருமொழி, திருவெழுகூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய திருமடல், திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் என்பன.
மற்றைய ஆழ்வார்களின் நூல்களும் இவ்வாறு உறுப்புகள் என்ற நிலையில் கொள்ளப்படும்.

நம்மாழ்வாரின் திருவாய்மொழியை நாம் எடுத்துக்கொண்டால், அதில் ஆயிரம் பாட்டுகளும் பத்து பத்துகளாகவும்,
ஒவ்வொரு பத்துக்கும் பத்து திருவாய்மொழிகளாகவும், ஒவ்வொரு திருவாய்மொழிக்கும் பத்து பாசுரங்களாகவும் பகுக்கப்பட்டிருக்கின்றன.
அது மட்டுமின்றி ஒவ்வொரு பாசுரமும் முன்பின் பாசுரத்திற்கு அந்தாதி என்னும் தொடையில் அமைந்துள்ளது.
முதல் பாசுரமும் கடைசி, அதாவது பத்தாம்பத்து பத்தாம் திருவாய்மொழியின் பத்தாவது பாசுரமும் அந்தாதியாக அமைந்துள்ளன.
அதாவது, உயர்வற என்று ஆரம்பித்து திருவாய்மொழி உயர்வே என்று முடிகிறது.

இதற்கு ஒவ்வொரு திருவாய்மொழிக்கும் அதன் சாரமான பொருளை உள் பொதிந்து ஒவ்வொரு வெண்பாவாக
அப்படி நூறு வெண்பாக்கள் பாடியிருக்கிறார் பெரிய ஜீயர் என்று வைணவ உலகம் குலவும் ஸ்ரீ மணவாள மாமுனிகள்.
திருவாய்மொழி எப்படி அமைந்திருக்கிறது? அந்தாதியாகவன்றோ?
அப்படியே நூறு வெண்பாக்களும் அந்தாதித் தொடையில் அமையுமாறு பாடியுள்ளார் மாமுனிகள்.
முதல் வெண்பாவின் முதல் சொல் உயர்வில் ஆரம்பித்து நூறாவது வெண்பாவின் ஈற்றுச் சொல் உயர்வு என்று முடியவேண்டும்.
ஒவ்வொரு வெண்பாவிலும் மாறன் பெயர் வரவேண்டும். மையக்கருத்து இடம் பெற வேண்டும்.
அந்தத் திருவாய்மொழிக்கான முக்கியமான விளக்கக் குறிப்பும் உள்ளே பெய்திருக்க வேண்டும்.
ஈடு போன்ற பெரும் விளக்க உரைகளோடு உயிரான கருத்தில் நன்கு பொருந்துவதாய் அமைந்திருக்க வேண்டும்.
இத்தனை அம்சங்களும் பூர்ணமாய் நிறைய திருவாய்மொழி நூற்றந்தாதியை இயற்றியுள்ளார் ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகள்.
இதைச் சுருக்கமாக வெண்பாவில் ஈடு என்று சொல்லிவிடலாம். அவ்வண்ணம் நன்கு சிறப்புற அமைந்த துணை நூல் இதுவாகும்.
இந்தத் திருவாய்மொழி நூற்றந்தாதிக்கு பிள்ளைலோகம் ஜீயர் என்பவருடைய அருமையான வியாக்கியானம் இருக்கிறது.
வெண்பாக்களும், வியாக்கியானமும் சேர்ந்து பெருங்கடலுக்குள் சிறு கடல் என்னும் ஆழமும் விரிவும் கொண்டு இலகுபவை.

பல நூற்றாண்டுகளாக வைணவத்தில் வரியடைவே கற்கப்படும் பனுவல் பயிற்சியான காலக்ஷேபம் என்னும் முறையில்
கற்கப்படும் நூலாகவும் இருந்து வருவது திருவாய்மொழி நூற்றந்தாதி.
வழிவழியாகப் பல வித்வான்களும், பக்தர்களும் திருவாய்மொழிக்கு இப்படி ஓர் அற்புதமான வெண்பாவில்
அந்தாதி அமைந்தது போல திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழிக்கும் அமைந்திருந்தால்
நன்றாக இருந்திருக்குமே என்று நினைத்ததுண்டு.

அவ்வண்ணம் ஒரு முறை ஸ்ரீராமானுஜனில் ஸ்ரீ உ வே பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர்
அவ்வாறு பெரிய திருமொழிக்கு ஒரு நூற்றந்தாதி அமையாது போனதைக் குறித்து
வருத்தம் தெரிவித்ததைப் படித்தார் ஒரு தமிழறியும் பெருமாள்.
அவர்தான் திருக்குருகூர் வரி பாடிய திரு கே பக்ஷிராஜன், வழக்குரைஞர் அவர்கள். வைணவத்தில் ஆழங்கால் பட்டவர்.
அருமையான தமிழ்ப் புலமையும் இருக்கிறது. கூடவே திருமாலின் தண்ணருள், அடியாரின் ஆசி. கேட்க வேண்டுமா?
அற்புதமாகப் பாடியிருக்கிறார் திருமொழி நூற்றந்தாதி என்று. 16-11-1969ல் பரகாலன் பைந்தமிழ் மாநாட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது.
மொத்தம் இருபது பக்கங்கள். பெற்றவர்கள் எல்லாம் பெருநிதியம் பெற்றார்கள்தாம்.!

திருமங்கையாழ்வார் தமது பெரிய திருமொழியை ஆயிரம் பாட்டுகளாகப் பாடியிருந்தாலும் அவற்றை அந்தாதியாக அமைத்துப் பாடவில்லை.
ஆனால் பத்து பாசுரங்கள் ஒரு திருமொழி, பத்து திருமொழிகள் ஒரு பத்து அது போல் பத்து பத்துகள் என்று அமைப்புகள்.
ஒவ்வொரு திருமொழிக்கும் ஒரு வெண்பா என்று திரு பக்ஷிராஜன் ஸ்வாமி அந்தாதியாகவே பாடியிருக்கிறார்.
மாறன் செந்தமிழ் மாநாடு போன்று பரகாலன் பைந்தமிழ் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்து
அதற்கு திரு பக்ஷிராஜன் அவர்களை ஏதாவது எழுத்துப் பங்கு அளிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.
திரு N S கிருஷ்ணன் என்பாரின் தூண்டுதல் இவருக்கு உற்சாகத்தை மூட்டியிருக்கிறது.

முன்னுரையில் எழுதுகிறார் –

“திருமங்கை மன்னன் கிருபையையும், ஸ்ரீமணவாள மாமுனி திருவருளையும் அவலம்பித்து,
ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான அவதாரிகைகளையும் ஒவ்வொரு திருமொழிப் பருப் பொருளையும் பொதுவாக நோக்கி
அப்பொருளின் சாயையிலே வெண்பாவாக எழுத முற்பட்டேன்”

கடவுள் வாழ்த்திலேயே நல்ல நறுந்தமிழுக்கு அச்சாரம் போட்டுவிடுகிறார் திரு பக்ஷியார்.

மாலை வழி மறித்தே மந்திரங்கொள் வாட் கலியன்
கோலத் திரு மொழியால் கூறு பொருள் – ஞாலத்தார்க்
கந்தாதி யில் சுருக்கி ஆக்க முயல் பணியைச்
சிந்தாதே காத்திடுமத் தேவு.

மாறன் எனுமங்கி மற்றை யவன் அங்கமாக்
கூறும் குறையலூர்க் கொற்றவனாம் – வீறுடைய
நீலன் இருவரது நீள் பதங்கள் சூடுகின்றேன்
கோல வணியாகக் கொண்டு.

பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வாரின் முதல் திருமொழி ஆரம்பிக்கிறது.

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந் துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர்-தம்மோடு
அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்
உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்

திருமொழி அந்தாதி பேசுகிறது –

வாடி வருந்துமுயிர் வாழ்வு பெறற் கேற்றவழி
ஏடுடைய எட்டெழுத்தே ஏத்துமென – நீடுலகத்
தின்பிலே நைந்த கலியன் இசை மொழிகள்
அன்புடனே தாமொழிந்த வால்.

அடுத்த திருமொழி ஆரம்பம்

வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட
வரி சிலை வளைவித்து அன்று
ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற
இருந்த நல் இமயத்துள்
ஆலி மா முகில் அதிர்தர அரு வரை
அகடு உற முகடு ஏறி
பீலி மா மயில் நடம் செயும் தடஞ் சுனைப்
பிரிதி சென்று அடை நெஞ்சே

திருமொழி நூற்றந்தாதி பேசுகிறது –

வாலி மதனழித்த வல் வில்லி நம் வாழ்வு
கோலிப் பிரிதியிலே கூடினான் – கோல நெஞ்சே
கிட்டி வணங்கென்றே கலியன் கிளத்தினான்
முட்டி வரு பேரார்வ முற்று.

அடுத்த திருமொழி தொடக்கம்

முற்ற மூத்து கோல் துணையா முன் அடி நோக்கி வளைந்து
இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையா முன்
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு உயிரை
வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே

திருமொழி நூற்றந்தாதி –

முற்ற மூத்து மொய் குழலார் முன்னின் றிகழாமுன்
பற்றிடுமின் தொண்டீர் பதரியுறை – நற்றவன் தன்
தாளை யவன் ஆயிரம் பேர் சாற்றி எனும் கலியன்
மீள வுரை தந்தே நமக்கு

இவ்வாறு போகிறது திருமொழி நூற்றந்தாதி.

ஏனமாய் மண்ணேந்தும் எம்மான் வதரியெனும்
தேனமரும் ஆச்சிரமம் சேர்ந்துள்ளான் – ஊனில்
நலி நெஞ்சே நாளும் தொழு தெழுகென்றே சொல்
கலியனுரை வேதக் கலை.

கலையொடுதீ ஏந்தியவன் சாபம் கழல
அலைகுருதி அன்போ டளித்தான் – நிலவிடுசீர்ச்
சாளக் கிராமமே சாருமெனும் நீலனெனும்
வாளுழவன் சொல் வினைக்கு வாள்.

__________________

வாணிலவு மாதர் நகை தப்பி நிமி வனத்தே
சேணுயர் வான் சேவடியே சேர்தி யெனப் – பேணு நெஞ்சை
மங்கையர்கோன் சொன்ன மறைபேணின் நம்மைவினை
அங்கணுகா மாநிலத்தங் கண்.

__________________

அங்க ணரியாய் அவுணனுடல் கீண்டானைச்
சிங்கவேள் குன்றதனில் சேவித்தே – பொங்குமுளத்
தொள்வாள் கலியன் உரை தேர்ந்து நஞ்சென்னி
கொள்வமவன் பாதமலர்க் கொங்கு

__________________

கொங்கலரும் சோலைக் குளிர்வேங் கடமலையே

இங்கடைவாய் நெஞ்சென் றிதமுரைத்து – மங்கையர்கோன்

செஞ்சொலால் சொன்ன திருமொழியே நந்தமக்குத்

தஞ்சமவன் நங்களுக்குத் தாய்.

__________________

தாய்தந்தை மக்களொடு தாரமெனும் நோய்தவிர்ந்தேன்

வேயுயரும் வேங்கடமே மேவினேன் – மாயா

புவியிலெனை ஆட்கொள் எனப்புகன்ற நீலன்

கவிநமக்கு வாழ்வருளும் கண்

__________________

கண்ணார் கடலை அடைத்தானை வேங்கடத்தே
நண்ணி இடர் களைந்து நல்கெனவே – பண்ணால்
வணங்கியே வேண்டிடுமொள் வாட் கலியன் சொல்லால்
வணங்குவர் ஏறிடுவர் வான்.

———————————–

ஈயத்தால் ஆகாதோ இரும்பினால் ஆகாதோ
பூயத்தால் மிக்கதொரு பூதத்தால் ஆகாதோ
நேயத்தே பித்தளை நற் செம்புகளால் ஆகாதோ
மாயப் பொன் வேணுமோ மதித்து உன்னைப் பேணுகைக்கே

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு கே பக்ஷிராஜன்- திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –