ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ் ஸ்ரீ தரஸ் சதா —ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை அருளிச் செய்த தனியன்
ஸ்ரீ யாமுனாசார்யர் குமாரரும், எவர் க்ருபையினால் ஸ்ரீ எம்பெருமானை எளிதில் அடைய முடியுமோ அந்த ஸ்ரீ கிருஷ்ணர் எனும் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையைத் துதிக்கிறேன்.
ஸ்ருத் யர்த்த சார ஜனகம் ஸ்ம்ருதி பால மித்ரம்
பத்மோல்ல ஸத் பகவத் அங்க்ரி புராண பந்தும்
ஞானாதி ராஜம் அபய ப்ரத ராஜ புத்ரம்
அஸ்மத் குரும் பரம காருணிகம் நமாமி –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் அருளிச் செய்த தனியன்
(வேதப் பொருள்களின் ஸாரத்தைக் கடைந்து எடுப்பவராய்
ஸ்ம்ருதி௧ளாகிற தாமரைகளுக்கு -மலர வைக்கும் -இளஞ்சூரியனாய்,
ஶ்ரீய:பதியின் திருவடிகளுக்குப் -தாமரை இணை அடிகள் -பழைய உறவினராய்,-திருமாலே நானும் உனக்குப் பழ அடியேன்
ஞானங்களுக்கு -அதி ராஜம் -பேரரசராய்,
அபய ப்ரத ராஜரின் பிள்ளையாய்,
பரம காருணிகரான-பரம காருணிகம்-பெரியவாச்சான் பிள்ளையைப் போலவே
இவரும் ஞானாதி ராஜம் -பரம காருணிகர் என் ஆசார்யரை வணங்குகிறேன்.)
அபீஷ்டவ்தி ஸ்ரீ யம் தேவீம் அகிலாத்ம ஏக மாதரம்
விஷ்ணு பத்நீம் விஸாலாஷீம் யாமுனார்யோ மஹா மதி —
எல்லாமும் ஆத்மாக்களுக்கும் ஒரே தாயாய் -விஷ்ணு பத்நீயாய் -பரந்த திருக் கண்களை யுடையவளான ஸ்ரீ தேவியை மஹா புத்திமானான யாமுனாசார்யர் ஸ்துதிக்கிறார்-
யத் பதாம்போருஹ-த்யான வித்வஸ்தாசேஷ-கல்மஷ
வஸ்துதாம்-உபயாதோ-ஹம் யாமுநேயம் நமாமி தம்.-ஸ்ரீ கீதா பாஷ்யத்தின் தொடக்கத்தில் உள்ள ஸ்வாமி ஸ்ரீ ஆளவந்தார் பற்றிய தனியன்”
ஸ்ரீ ஆளவந்தார் உடைய இரண்டு திருவடிகளை மட்டும் உத்தேசிக்கப் படுகின்றன அல்ல
யதோதாம் போருஹ –ஆறு எழுத்துக்களுக்கு வர்ணக்ரமம் சொன்னால் 14 எழுத்துக்கள் தேறும்
யகார -அகார -தகார -பகார -அகார – ககார -ஆகார -மகார-மாகார ஓகார -ரெப -உகார -ஹகார -அகார
ஸ்ரீ நம் ஆழ்வார் -ஸ்ரீ ஆளவந்தார் -தம்முடைய பஞ்ச ஆச்சார்யர்கள் திருவடிகளை
யஸ்ய பதாம் போரு ஹி -சம்பந்த சாமானே ஷஷ்டி –
மாதா பிதா -வகுளாபிராமம் ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்னா
பத -ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளை சொல்லி
அம்போருஹ-தாமரைக்கு வாசகமான -தம்முடைய பஞ்ச ஆச்சார்யர்களையும்
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே போலே
ஸ்ரீ பராங்குச தாசர் -பெரிய நம்பி–என்று ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் காட்டி அருளுகிறார்
(நான்காம் அத்தியாயத்தில்-நான்கு கீதா ஸ்லோகங்கள் -அவதார ரஹஸ்யங்கள் ஆறு அர்த்தங்கள்
2-45-2-48-சதுஸ் ஸ்லோகி -நான்கு ஸம்ஹிதைகள்
கோதா சதுஸ் ஸ்லோகி -ராமானுஜ சதுஸ் ஸ்லோகி-
மண்டோதரி சதுஸ் ஸ்லோகி
பல இருந்தாலும் பிரசித்தமானது ஆளவந்தார் அருளிச் செய்த இந்தப் பிரபந்தமே)
மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ ஆச்சார்ய தேவோ பவ அதிதி தேவோ பவ -என்று கொண்டு இச் சேதனனுக்கு ஸ்வரூப அநுரூபமாக உபகாரகராகிறார் -அகில ஜகன் மாதாவான பிராட்டியும் -அவ்வயயஸ் பிதாவான ஈஸ்வரனும் –அறியாதது அறிவித்த ஆச்சார்யனும் -அதிதி ஸப்த வாஸ்யனான அவனடியாரும் -என்று இந் நால்வர் பக்கலிலும் உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலே உத்தேச்ய பிரதிபத்தி பண்ணி உஜ்ஜீவிக்கக் கடவன் என்றும் வேதாந்தங்களிலே வ்யாக்யாதமாக விதிக்கையாலே விசேஷஞ்ஞர் எல்லோரும் விரும்பி அனுஷ்ட்டிக்க வேண்டும்படி விசேஷ யர்த்தங்களாய் இறே இவ்வர்த்தங்கள் தான் இருப்பது –இந் நால்வர் பண்ணும் உபகாரமும் நவரத்ன மாலையிலே நன்றாகக் காணலாம் இறே –
(ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ நவரத்ன மாலை —
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தனியன் –
லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-
(சரணாகதன் ஆனவன் –
1-தன்னையும் –
2-தனக்கு விரோதியான தேஹத்தையும் –
3- தேஹத்தைப் பற்றி வரும் பந்துக்களையும் –
4-சம்சாரிகளையும் –
5- தேவதாந்தரங்களையும் –
6-ஸ்ரீ வைஷ்ணவர்களையும் –
7- ஆச்சார்யர்களையும் –
8- பிராட்டியையும் –
9-ஈஸ்வரனையும் –
நினைத்து இருக்கும் படி எங்கனே என்னில் –
1- உடம்பில் வேறுபட்டு நித்யனாய் ஒருபடிப் பட்டு அணுவாய் –ஞானத்தையும் ஆனந்தத்தையும் வடிவாக யுடையனாய் ஜ்ஞானத்துக்கும் ஆனந்தத்துக்கும் இருப்பிடமாய் எம்பெருமானை ஒழிய வேறு ஓன்று நினைத்தால் சொல்லுதல் செய்ய மாட்டாதே -எம்பெருமானுக்கே உரியனாய் தன் கார்யத்துக்கு தான் கடவன் அன்றிக்கே -அவனையே பலமாக யுடையனாய் இருக்கும் என்று தன்னை நினைப்பான் –
2- தன்னை உள்ளபடி அறிய ஒட்டாதே விபரீத ஜ்ஞானத்தை ஜனிப்பித்து இருபத்து நாலு தத்துவங்களினுடைய திரளாய் அநித்யமாய் எப்போதும் ஒக்க பரிணமிக்கக் கடவதாய் ஒரு நாளும் ஜ்ஞானத்துக்கு இருப்பிடம் அன்றிக்கே அநந்த துக்கங்களை விளைப்பிக்கக் கடவதாய் சப்தாதி விஷயங்களிலே மூட்டி நசிப்பிக்கும் என்று தன் தேஹத்தை நினைப்பான் –
3-ஆத்ம ஜ்ஞானத்தையும் பகவத் ஜ்ஞானத்தையும் பகவத் விஷயத்தில் ருசியையும் த்வரையையும் குலைத்து தேஹாத்மா அபிமானத்தையும் அஹங்கார மமகாரங்களையும் காம க்ரோதாதிகளையும் விளைப்பித்து பலபடியாலும் -அனர்த்தத்தை பண்ணுவார்கள் என்று தேஹத்தைப் பற்றி வரும் பந்துக்களை நினைப்பான் —
4-பகவத் அனுபவத்துக்கும் பகவத் கைங்கர்யத்துக்கும் விரோதிகளாய் சம்சார வர்த்தகராய் இருப்பார்கள் என்று சம்சாரிகளை நினைப்பான் –
5-அஜ்ஞராய் அசக்தராய் எம்பெருமான் பக்கலிலே பிறந்து அவன் கொடுத்த பதங்களை யுடையராய் எதிரிட்டு துர்மாநிகளாய் தங்களைப் போர பொலிய நினைத்து நாட்டாரை பிரமிப்பித்து அனர்த்தத்தைப் பண்ணுவார் சிலர் என்று தேவதாந்தரங்களை நினைப்பான் —
6-பகவத் ஜ்ஞானத்துக்கும் இதர விஷய வைராக்யத்துக்கும் பகவத் பக்திக்கும் வர்த்தகராய் -உசாத் துணையாய் –பிராப்யத்துக்குஎல்லை நிலமாய் -இருப்பார்கள் என்று ஸ்ரீ வைஷ்ணவர்களை நினைப்பான் –
7- தன் கடாஷத்தாலே என்னைத் திருத்தி சர்வேஸ்வரன் கைக் கொள்ளுகைக்கு யோக்யனாம் படி பண்ணி அவன் திருவடிகளிலே சேர்த்து அறியாதன அறிவித்து-திருவாய் -2-3-2- ஸ்வாமியாய் என்றும் ஒக்க அடிமை கொள்ளும் மஹோபகாரகன் -என்று ஆசார்யனை நினைப்பான்-
8- நம்முடைய சர்வ அபராதத்தையும் பொருப்பித்து ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யத்தையும் குலைத்து அவனுடைய காருண்ய வாத்சல்யாதி குணங்களைக் கிளப்பி நமக்கு புருஷகார பூதையாய் மாதாவாய் ஸ்வாமிநியாய் ப்ராப்யையாய்—இருக்கும் என்று பிராட்டியை நினைப்பான் –
9- சிருஷ்டி காலத்திலேயே சரீரத்தையும் இந்த்ரீயங்களையும் தந்து அந்தர்யாமியாய் நின்று சத்தையை நோக்கி அத்வேஷத்தையும் ஆபிமுக்யதையும் சத் சங்கதி தொடக்கமான ஆத்ம குணங்களையும் பிறப்பித்து சதாசார்யனோடே சேர்த்து நம்முடைய சர்வ அபராதங்களையும் பொறுத்து சம்சார சம்பந்தத்தையும் கழித்து அர்ச்சிராதி மார்க்கத்தையும் -பரமபதத்தையும் -குண அனுபவத்தையும் தந்து யாவதாத்மா பாவி நித்ய கைங்கர்யம் கொள்ளும் ஸ்வாமி என்று சர்வேஸ்வரனை நினைப்பான் –
நவார்த்த ரத்ன மாலேயம் சத் பிர்தார்யா சதா ஹ்ருதி
பாத்தா யோ நா அதியசசா தம் ஜகத் குரும் ஆஸ்ரயே —
ஸ்ரீ நவ ரத்ன மாலை முற்றிற்று-)
இப்படிப்பட்ட உபகாரங்களை அனுசந்தித்து
சீதை என்பதோர் தெய்வம் -பெரிய திரு -10-2-5-
திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும் -இரண்டாம் திருவந்தாதி-57
தேவு மற்றறியேன் -கண்ணி -2-
குலதெய்வம் -பெரிய திரு -2-6-4-
என்று நால்வர் பக்கலிலும் தேவதா பிரதிபத்தியைப் பண்ணா நின்றார்கள் இறே
செம்பொன் நீண் முடி எங்கள் ராவணன் சீதை என்பதோர் தெய்வம் கொணர்ந்து
வம்புலாம் கடிகாவில் சிறையா வைத்ததே குற்றமாயிற்றுக் காணீர்
கும்பனொடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி
அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ—-10-2-5-
திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும்
கருமம் கடைப்படிமின் கண்டீர் -உரிமையால்
ஏத்தினோம் பாதம் இரும் தடக்கை எந்தை பேர்
நாற்றிசையும் கேட்டீரே நாம்–57-
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே-2-
விண்டாரை வென்றாவி விலங்குண்ண மெல்லியிலார்
கொண்டாடு மல்லகலம் அழலேற வெஞ்சமத்து
கண்டாரைக் கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரை
கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே –2-6-4-
ஆகையாலே ஸகல வேதாந்த வித் அக்ர கண்யராய்-ஆஸ்திக அக்ரேஸராய் -பரபஷ ப்ரதிஷேப ஸ்வ பக்ஷ ஸ்தாபகத்வத்தாலே ஆளவந்தார் என்றும் அகில லோக பிரஸித்தமான அபிமானத்தை யுடையரான யாமுனாச்சார்யர் தான் ஸதாச்சார்ய ஸ்ரேஷ்டரானமை தோற்ற
ஆசரதீத் யாசார்ய
ஸ்வயம் ஆசரதே யஸ்து ஸ ஆசார்ய இதி ஸ்ம்ருத–என்கிறபடியே ஆதர அதிசயத்தாலும்
ஸ்வ அபிமான அந்தர்பூதமான அஸ்மதாதிகள் எல்லோரும் இவ்வர்த்தங்களை அனுஷ்டித்து ஆத்ம உஜ்ஜீவனத்திலே அத்யபி நிஷ்டராக வேணும் என்கிற தம்முடைய ஆகஸ்மிக கிருபையாலும் -உபகாரகரான இந்நால்வர் பக்கலிலும் தமக்குண்டான பிரதிபத்தி விசேஷத்தை க்ரந்தஸ்தமாக பிரகாசிப்போம் என்று திரு உள்ளம் பற்றி பிரதமத்திலே
மாத்ரு தேவோ பவ -என்று மஹா உபகாரகையாகச் சொல்லப்பட்ட பெரிய பிராட்டியாருடைய ஸ்வரூப குண விபூதிகளை அனுசந்தித்து அவ்வனுபவ ஜெனீத ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே தத் விஷய ஸ்தோத்ரத்திலே ப்ரவ்ருத்தராகிறார் –
காந்தஸ்தே -இத்யாதியாலே
பித்ரு தேவோ பவ -என்று தொடங்கிச் சொல்லப்படும் மூவரிடத்தில் உண்டான விசேஷ பிரதிபத்தியை ஸ்தோத்ரம் ரத்னத்திலே வெளியிட்டு அருளினார் -எங்கனே என்னில் -பிரதமத்திலே
ஆச்சார்ய தேவோ பவ -என்று மஹா உபகாரகராகச் சொல்லப்பட்ட ஆச்சார்ய விசேஷத்தில் தமக்குண்டான பாவ பந்த விசேஷங்களை
நமோ அசிந்த்ய அத்புத-1- -என்றும்
தஸ்மை நம-2- -என்றும்
பூயோ நம -3- -என்றும்
ப்ரணமாமி நம -4- -என்றும் பிரகாசிப்பித்தார்
நமோ’சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஶயே |
நாதாய முநயே’காத பகவத் பக்தி ஸிந்தவே ||
நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை
எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார்.
அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர். பகவத் பக்திக் கடலாக இருப்பவர்.
இப்படிப்பட்டவரை வணங்குகிறேன்.
தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||
மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக
விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும்.
அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||
நம்மாழ்வாரின் திருவடிகளே எனக்கும் என் குலத்தவர்களுக்கும், தாய், தந்தை, மனைவி, மக்கள், சிறந்த செல்வம் மற்றும் எல்லாமாகும்.
மகிழ மாலையால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும், கைங்கர்யச் செல்வத்தை உடையராயிருக்கும், நம் வைஷ்ணவ குலத்துக்குத்
தலைவரான நம்மாழ்வாரின் இரண்டு திருவடிகளில் என் தலையை வைத்து வணங்குகிறேன்.)
நிருபாதிக பிதாவான ஈஸ்வர விசேஷத்தில் தமக்குண்டான பிரதிபத்தி விசேஷத்தை
யன் மூர்த்நி மே -6- -என்று தொடங்கி பஹு பிரகாரமாக பிரகாசிப்பித்தார்
வருவிருந்தை -பெரியாழ்வார் -4-8-2-
விருந்தாகும் பெருந்தக்கோர் -பெரிய திருமொழி -6-6-10-
என்கையாலே அதிதி ஸப்த வாஸ்யரான ததீய விஷயத்தில் தமக்குண்டான விசேஷ பிரதிபத்தியை
த்வத் ஆஸ்ரிதாநாம் –என்றும்
தவ தாஸ்ய ஸூக ஏக சங்கிநாம் -என்றும்
ஸக்ருத் த்வதாகார -என்றும் வெளியிட்டார் இறே
த்வதாஶ்ரிதாநாம் ஜகதுத்பவ ஸ்திதி
ப்ரணாஶ ஸம்ஸார விமோசநாதய: |
பவந்தி லீலா விதயஶ்ச வைதிகா:
த்வதீய கம்பீர மநோநுஸாரிண:-ஶ்லோகம் 20 – ||
ப்ரஹ்மா முதலான உன் அடியார்களுக்கு இவ்வுலகைப் படைப்பது, காப்பது, அழிப்பது மற்றும் இந்த ஸம்ஸாரத்தை கடக்க உதவுவது
ஆகியவை எளிய விளையாட்டாக இருக்கும்;
வேதத்தின் விதிகளும் கூட உன்னுடைய அடியார்களின் ஆழமான நெஞ்சங்களையே தொடரும்.
பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகளை நால்வரையும்
இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப் படுத்த உறைப்பனூர்
மறைப் பெரும் தீ வளர்த்து இருப்பார் வரு விருந்தை அளித்து இருப்பார்
சிறப்புடைய மறையவர் வாழ் திருவரங்கம் என்பதுவே – 4-8-2 –
செம்மொழி வாய் நால்வேத வாணர் வாழும் திரு நறையூர் மணி மாடச் செங்கண் மாலைப்
பொய்ம்மொழி யொன்றில்லாத மெய்ம்மையாளன் புலங்கைக் குல வேந்தன் புலமை யார்ந்த
அம்மொழி வாய்க் கலிகன்றி யின்பப் பாடல் பாடுவார் வியனுலகில் நமனார் பாடி
வெம்மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்தாகும் பெரும் தக்கோரே–6-6-10-
ஆனால் மாத்ரு தேவோ பவ -என்கிற பிராட்டிமார் வைபவம் அங்கு ப்ரதிபாதிக்க வில்லையே வென்னில்
கஸ் ஸ்ரீ ஸ்ரீய-என்றும்
தயா ஸஹாஸீநம் -என்றும்
ஸூசிப்பித்த மாத்ரம் இறே ஸ்தோத்ரத்தில் உள்ளது –
கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரமஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||-ஶ்லோகம் 12 –
ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது?
யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி,
பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப்பொருள்களாக விரிந்திருக்கும் இவ்வுலகத்தைத் தாங்குகிறது?
தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||-ஶ்லோகம் 39 –
ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால்
ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–
அப்படியாகில் இவ்வளவு போராதோ -இதுக்காக ஒரு பிரபந்தம் நேர வேண்டுவான் என் என்னில்
பேராளன் பேரோதும்
அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை -என்கிற
பாகவத அநுவர்த்தனமாகிற பரமப்ராப்ய லாபம் ஆச்சார்யனாலேயாய்-ஆச்சார்ய லாபம் ஈஸ்வரனாலேயாய் -ஈஸ்வர லாபம் பெரியபிராட்டியாராலே யாகையாலே
இந்நால்வரிலும் மஹா உபகாரிகையாய் இறே இவள் தான் இருப்பது –
ஆகை இறே மாத்ரு தேவோ பவ என்றும் பிரதமோபாத்தை யாயிற்று -இப்படி ஸர்வ வ்யாவ்ருத்த உபகார ஸீலை யாகையாலே ஸாமான்யமான ஆகாரேண ப்ரதிபாதித்த அளவன்றிக்கே தத் விசேஷமாக ஒரு பிரபந்தம் நேர வேணும் என்று நிர்ணயித்து விஷயத்திலே தமக்குண்டான பாவ பந்தம் எல்லாம் தோன்ற சதுஸ் ஸ்லோகியாலே உப ஸ்லோகிக்கிறார் –
தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால் பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேனே–7-4-4-
வந்துஅவர் எதிர்கொள்ள* மாமணி மண்டபத்து*
அந்தம்இல் பேரின்பத்து* அடியரோடு இருந்தமை*
கொந்துஅலர் பொழில்* குருகூர்ச்சடகோபன்* சொல்-
சந்தங்கள்ஆயிரத்து* இவைவல்லார் முனிவரே
கர்ம பரதந்த்ரனான ப்ரம்மாவின் ப்ரஸாதத்தாலே
ஸோக ஸ்லோகத்வம் ஆகத -(ஸமாஷரைச் சதுர்ப்பிர்ய பாதைர் கீதோ மஹாத்மநா ஸோ அநு வ்யாஹரணாத் பூயஸ் ஸோக ஸ்லோகத்வம் ஆகத–யாதொரு சோகமானது சமமான எண்ணிக்கையுடைய அக்ஷரங்களுடன் கூடிய நான்கு பாதங்கள் கொண்டதாக அந்த மஹாத்மாவான வாழ்மீகியினால் பாடப்பட்டதோ அந்தப் சோகம் அடிக்கடி உச்சரிப்பதால் ஸ்லோகமாயிற்று -)-என்கிறபடியே
சோக வேக ஜெனிதமான ஸ்லோகங்கள் போல் அன்றிக்கே ஸூ மங்கள ஆகாரையான இவள் ப்ரஸாதம் அடியாக வந்ததாகையாலே ஸூ ஸ்லோகங்களாய் இறே இஸ் ஸ்லோகங்கள் தான் இருப்பது -(ராஜ்ஜியம் துரந்து -வனவாசம் சென்று – சீதா நாஷ்டா- ஜடாயு இழந்த சோகங்கள் நிறைந்த ஸ்ரீ இராமாயண)
இனி அங்குப் போனாலும் –அஹம் ஸ்லோக க்ருத் -(நான் ஸ்ரீ மன் நாராயணன் விஷயமாக உத்தம ஸ்லோகங்களை இயற்றுபவன்)என்று உத்தம ராஜ கன்யையான இவள் விஷயமாக உத்தம ஸ்லோக ரஸநை பண்ணி உஜ்ஜீவிக்கை இறே உள்ளது
க்ருத்ஸ்னம் ஸீதாயஸ் சரிதம் மஹத் -என்று (காவ்யம் இராமாயணம் க்ருத்ஸ்னம் ஸீதாயாச் சரிதம் மஹத் பவுலஸ்த்ய வதம் இத்யேவ சகார சரிதவ்ரத –விரத அனுஷ்டானமுடைய அவ்வால்மீகி சீதாதேவியின் பெரும் கதையான இராமாயணம் முழுவதையும் பவ்லஸ்ய வதம் என்றே இயற்றினார் -)எல்லாமே ஸீதா சரிதமாய் இருக்கவும் –
ரகுவர சரிதம் -(ததுபகத ஸமாஸ ஸந்தியோகம் ஸம மதுரோபநதார்த்த வாக்ய பத்தம் -ரகுவர சரிதம் முனி ப்ரணீதம் தஸ ஸிரஸ்ச் ச வதம் நிஸா மயத்வம் –பால -2-44-தானாகவே அமைந்த ஸமாஸ ஸந்தச் சேர்க்கைகளை உடையதும் சமமாயும் மதுரமாயும் சேர்ந்து இருக்கிற அர்த்தங்களுடன் கூடிய வாக்கியங்கள் இணைக்கப் பெற்றதும் வால்மீகி முனிவரால் இயற்றப்பட்டதும் ரகுவர சரிதம் என்றும் ராவண வதம் என்றும் பெயர் பெற்றதுமான கதையைக் கேட்கச் செய்யுங்கள்)என்று சொல்லப்படுவதாய் -கங்கா சம்பவாத் யஸத் கதா கீர்த்தனை வர்ணன முகத்தாலே –அதி விஸ்தாரமாய் -துர்ஜ்ஜேயமான ஸ்ரீ இராமாயணம் போல் அன்றிக்கே விசேஷண விசேஷ்ய உபய ப்ரதாநமான -திருமாலவன் கவி (திருவிருத்தம் -48)-(திரு விசேஷணம் மால் விசேஷ்ய -சமமாக அன்றோ அது) போலும் இன்றிக்கே -விசேஷண பரமேயா யிருக்கவும் அதி ஸங்க்ரஹ மாகையாலே துரவகாஹமான ஸ்ரீ ஸப்தம் போலும் இன்றிக்கே அநாக்ராதா வத்யமாய்(ஆக்ராத அநவத்யமாய்-குற்றத்தின் வாசனை கூட இல்லாமல்) -வைதக்த்ய வர்ண குண கும்பந (சிறந்த எழுத்துக்களின் வரிசைகளில் சேர்க்கை)கௌரவங்களாலே கண்டூல கர்ண குஹரராய்க் கொண்டு கர்ணாம்ருதமாகப் பானம் பண்ணலாம் படி பரம போக்யமாய் -ப்ரேம யுக்தருக்கு ஸ்வார்த்த ப்ரகாஸந சாதுர்யத்தை யுமுடைத்தான சதுஸ் ஸ்லோஹீ ஸூ க்ரஹமாய் இருக்கையாலே அகில பிரபந்த விலக்ஷணமாய் இருக்கும் –
பகவத் ஸ்தோத்ரம் பண்ணுவார்க்கு எல்லாம் ஸ்தோத்ர ரத்னம் முதலானாப் போலே -பிராட்டி விஷயத்தில் ஸ்தோத்ரம் பண்ணுவாருக்கு எல்லாம் இப்பிரபந்தம் மூல க்ரந்தமாகையாலே முக்யமாய் இருக்கும் -இவள் மூலமாக விறே எல்லாமே உண்டாவது -ஆகையிறே ஸ்தோத்ர சதுஸ் ஸ்லோகிகளை அடியொற்றி கத்ய த்ரயமும் ஸ்ரீ ஸ்துதி முதலான பஞ்ச ஸ்தவமும் ஸ்ரீ குண ரத்ன கோஸமும் -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் முதலான திவ்யப்ரபந்தங்களும் அவதரித்தன-
ஆக இத்தால் மாத்ரு தேவோ பவ என்கிற வாக்யார்த்த விவரணமான ஸ்ரீ ஸூக்தார்த்தத்தை இஸ் ஸ்லோக ரூபேண வெளியிடுகிறார் –
அதில் பிரதம ஸ்லோகத்தால் –ஸ்ரீ யம் தேவீம் உபஹ்வயே ஸ்ரீர்மா (அஸ்வ பூர்வாம் ரத மத்யாம் ஹஸ்தி நாத ப்ரபோதிநீம் ஸ்ரீயம் தேவீ முபஹ்வயே ஸ்ரீர் மா தேவீ ஜூஷதாம் –-ஸ்ரீ ஸூக்தம் -8-ஸர்வ வ்யாபியான பகவானை முன்னிட்டு இருப்பவளும் சரீரமாகிற -அல்லது ஓங்காரமாகிற -ரதத்தின் நடுவிலே இருப்பவளும் கஜங்களின் நாதத்தாலே திருப்பள்ளி யுணருமவளுமான ஸ்ரீ தேவியை அருகில் அழைக்கிறேன் -என் விஷயத்தில் பிராட்டி ப்ரீதி அடையட்டும் -)என்கிற வாக்யங்களாலும்
விஷ்ணோர் ஸ்ரீ – (நித்யைவைஷா ஜகன்மாதா விஷ்ணோர் ஸ்ரீர் அநபாயிநீம் யதா ஸர்வகதோ விஷ்ணுஸ் ததைவேயம் த்விஜோத்தம -விஷ்ணு பு -1-8-17–ஜகன்மாதாவாய் விஷ்ணுவுக்குச் செல்வமாய் இருப்பவளாய் இறையும் அகலகில்லாதவளான இந்தப் பிராட்டி நித்யையே -ப்ராஹ்மண உத்தமரே எப்படி பகவான் ஸர்வ வியாபியாய் இருக்கிறானோ அப்படியே இவளும் ஸர்வ வியாபிநியாய் இருக்கிறாள்) என்கிற வாக்யங்களாலும்
ஸ்ரீ வத்ஸ வஷா (தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீர் அஜய்ய ஸாஸ்வதோ த்ருவ -யுத்த -114-15-இந்த ராமபிரானே தமஸ்ஸுக்கு மேற்பட்டவனாய் -ஸர்வ தாரகனாய் -சங்கு சக்ர கதா தரனாய் -ஸ்ரீ வத்ஸம் என்னும் மருவைத் திரு மார்பிலே யுடையவனாய் எப்போதும் ஸ்ரீ தேவியுடனே கூடியவனாய் ஜெயிக்கப்படாதவனாய் நித்யனாய் நிலையானவனான நாராயணன் )என்கிற தத் உப ப்ரும்ஹணங்களாலும்
ப்ரதிபாதிக்கிற தத் அசாதாரணமான திரு நாமத்தை ஸார்த்தமாக அனுசந்திக்கிறார் –
வ்யக்தமேஷ மஹோ யோகீ பரமாத்மா ஸநாதந
அநாதி மத்யநித நோ மஹத பரமோ மஹான்
தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதா தர
ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீ ரஜய்ய சாஸ்வதோ த்ருவ
மா நுஷம் வபுராஸ்தாய விஷ்ணு சத்யபராக்கிரம
சர்வை பரிவ்ருதோ தேவைர் வா நரத்வமுபாகதை
சர்வ லோகேஸ்வர சாஷால் லோகா நாம்ஹித காம்யயா
சராஷஸ பரீவாரம் ஹதவரம் ஸ்த்வாம் மஹாத்யுதி–யுத்த -114-14/15/16/17–
—————–
முதல் ஸ்லோகம் அவதாரிகை –
ஸ்ரீஞ்ஸேவாயாம் -என்கிற தாதுவிலே நிஷ்பந்நமாகையாலே ஸேவா வாசியான ஸ்ரீ ஸப்தத்தில்
ஸ்ரயதி இதி ஸ்ரீ
ஸ்ரீயத இதி ஸ்ரீ
என்கிற கர்த்தரி கர்மணி வ்யுத்பதி த்வய சித்தங்களான பகவத் ஆஸ்ரயணத்தையும்
தத் தேதுகமான உபய விபூதி சேஷத்வத்தையும் உடையதாய்
அத்தாலே ஸ்ரீ என்று ஸர்வ உத்கர்ஷ ஹேதுவான திருநாமத்தையும் உடையையாய் ஞான ஸக்த்யாதி கல்யாண குண பரிபூர்ணையுமான உன்னைப் பரிமித ஞாந சக்திகரான நாங்கள் பரிச்சேதித்துப் பேசுவது எங்கனே என்கிறார் –
காந்தஸ் தே புருஷோத்தம பணி பதிஸ் சய்யா ஆசனம் வாஹனம்
வேதாத்மா விஹகேச்வரோ யவ நிகா மாயா ஜகன் மோஹிநீ
ப்ரஹ்மே ஸாதி ஸூ ரவ் ரஜஸ் சத யிதஸ் த்வத் தாஸ தாஸீ கண
ஸ்ரீரித் யேவ ச நாம தே பகவதி ப்ரூம கதம் த்வாம் வயம்–1-
பகவதி-கல்யாண குணங்களால் நிறைந்தவளே
புருஷோத்தம-புருஷோத்தமனான ஸ்ரீ பகவான்
தே காந்தஸ் உனக்கு பிரியமான கணவன்
பணி பதிஸ்-நாகங்களுக்கு அரசனான ஸ்ரீ ஆதிசேஷன்
சய்யா-படுக்கை
வேதாத்மா விஹகேஸ்வரோ–வேதத்தை சரீரமாக உடைய புள்ளரையனான ஸ்ரீ பெரிய திருவடி
ஆசனம் வாஹனம்-ஆசனமாகவும் வாகனமாகவும் இருப்பவன்
ஜகன் மோஹிநீ-உலகத்தை மோஹிக்கச் செய்வதான
மாயா -பிரகிருதி
யவ நிகா-உனக்கு முகத்திரையாய் இருக்கிறது –
சத யிதஸ்-தங்கள் மனைவிமார்களுடன் கூடிய
ப்ரஹ்மே ஸாதி ஸூரவ் ரஜஸ்-பிரமன் சிவன் முதலிய தேவ சமூகம்
த்வத் தாஸ தாஸீ கண-உன்னுடைய தாச கணமாயும் தாஸீ கணமாயும் இருக்கிறது
தே நாம ச -உன்னுடைய திரு நாமமும்
ஸ்ரீரித் யேவ -ஸ்ரீ என்பதே யாய் இருக்கிறது
த்வாம் வயம்-இப்படிப்பட்ட பெருமைகள் பொருந்திய உன்னை அறிவிலிகளான நாங்கள்
ப்ரூம கதம் –எப்படிச் சொல்லுவோம்
வியாக்யானம்
காந்தஸ்தே புருஷோத்தம
ஸஹஸ்ர சீர்ஷா புருஷ (ஸஹஸ்ராஷஸ் ஸஹஸ்ர பாத் -பரம புருஷன் முடிகள் ஆயிரத்தையும் கண்கள் ஆயிரத்தையும் தாள்கள் ஆயிரத்தையும் யுடையவன் )
பூர்ணம் புருஷேண(யஸ்மாத் பரம் நாபரமஸ்தி கிஞ்சித் யஸ்மான் நாணீயோ ந ஜ்யாயோ அஸ்தி கஸ்சித் வ்ருஷ இவ ஸ்தப்தோ திவி திஷ்டத்யேகஸ் தேநேதம் பூர்ணம் புருஷேண ஸர்வம் -எவனைக் காட்டிலும் சிறியதும் பெரியதும் ஒன்றில்லையோ எவனொருவன் பரம பதத்தில் ஒப்பற்றவனாய் வணங்காத வ்ருக்ஷம் போல் எழுந்தருளி இருக்கின்றானோ அந்தப்புருஷனாலே இது அனைத்தும் நிறைந்துள்ளது -)
புருஷம் மஹாந்தம்(வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸஸ் பரஸ்தாத் -தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா அயனாய வித்யதே -வேத புருஷனாகிற நான் ஸ்வரூப ரூப குண விபூதிகளில் பெரியவனும் ஸூர்யன் போல் பிரகாசிப்பவனும் பிரக்ருதிக்கு அப்பாற் பட்டவனுமான இந்தப் புருஷனை அறிகிறேன் -அவனை இம்மாதிரி அறிபவன் இங்கேயே முக்தனாக ஆகிறான் -மோக்ஷத்திற்கு வேறு வழியில்லை )
புருஷ ஏவேதம் ஸர்வம் (புருஷ ஏவேதம் ஸர்வம் யத் பூதம் யச்ச பவ்யம் -கழிந்தவையும் இருப்பதையும் இனி வருமாவையுமாகிய எல்லாமே புருஷனே )
ஸ யஸ்சாயம் புருஷே-(ஸ யஸ்சாயம் புருஷே யஸ்சா ஸாவாதித்யே ஸ ஏவம–யாவனொரு பரமாத்மா இந்த ஜீவனிடம் இருக்கிறானோ -எவனொருவன் ஆதித்யனுள் இருக்கிறானோ அவன் ஒருவனே )
ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே-(யஸ் ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ஹிரண்ய ஸ்மஸ்ருர் -ஹிரண்ய கேச ஆப்ரணகாத் ஸர்வ ஏவம் ஸூ வர்ண -தஸ்ய யதா கப் யாஸம் புண்டரீக மேவ மஷிணீ–ஸூர்யனுக்கு நடுவில் ஸூ வர்ணம் போல் அழகிய உருவையுடைய எந்த இந்தப் பரம புருஷன் காணப்படுகிறானோ அவன் ஸூ வர்ணம் போன்று அழகான மீசையையும் கேசங்களையும் எல்லா அவயவங்களையும் உடையவன் -அவனுக்கு ஸூர்யனால் மலரும் தாமரை போன்று இரு கண்கள் உள )
மஹா புருஷ பூர்வ ஜ-(ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வ பாவந நமஸ்தே அஸ்து ஹ்ருஷீகேஸ மஹா புருஷ பூர்வ ஜ -செந்தாமரைக் கண்ணா உன்னால் இவ்வாத்ம வஸ்து ஜெயிக்கப்பட்டது -இது என்னுடையதல்லவே -உன்னுடையதாயிற்றே -உலகையெல்லாம் உண்டாக்கினவனே -இந்திரியங்கள் நியமிப்பவனே -கொடுப்பதில் சிறந்த மஹா புருஷனே முற்பாடானாய்ப் பிறப்பவனே -இவ்வாத்ம வஸ்து எனக்காகை தவிர்ந்து உனக்கேயாக வேணும் -)
ஜாநாதி புருஷோத்தமம்-(யோ மாமேவ அஸம் மூடோ ஜாநாதி புருஷோத்தமம் ஸ ஸர்வ வித் பஜதி மாம் ஸர்வ பாவேந பாரத -அர்ஜுன எவனொருவன் புருஷோத்தமனான என்னை மயக்கமற்றவனாய் அறிகிறானோ அவன் எல்லாம் அறிந்தவன் -எல்லா விதத்தாலும் அவன் என்னை பஜநம் செய்கிறான்)
புருஷ புண்டரீகாக்ஷ ஸம்ஜ்ஞக-(புண்டரீகாக்ஷன் என்னும் பெயரை யுடையவன் பரம புருஷன்)
தம் விநா புருஷோத்தமம்-(ந ஸம் பதாம் ஸமாஹாரே விபதாம் விநிவர்த்தநே -சமர்த்தோ த்ருஸ்யதே கஸ்சித் தம் விநா புருஷோத்தமம் –செல்வங்களைச் சேர்த்துக் கொடுப்பதிலும் ஆபத்துக்களை அடியோடு போக்குவதிலும் சமர்த்தனா யிருப்பவன் அந்தப் புருஷோத்தமனைத் தவிர வேறு ஒருவனும் காணப்படுகிறதில்லை)
உத்தம புருஷஸ் த்வன்ய-(த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்சாக்ஷர ஏவ ச
க்ஷர: ஸர்வாணி பூதாநி கூடஸ்தோऽக்ஷர உச்யதே–15-16–உலகத்தில் இரண்டு வகைப் புருஷருளர்; அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என. க்ஷர புருஷன் என்பது
எல்லா உயிர்களையுங் குறிக்கும்.-கூடஸ்தனே அக்ஷர புருஷன்.
உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத்யுதாஹ்ருத:
யோ லோகத்ரயமாவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர:-17-இவரில் வேறுபட்டோன் உத்தம புருஷன். அவனே பரமாத்மா எனப்படுவோன்.அவன் மூன்று உலகுகளினுட் புகுந்து அவற்றைத் தரிக்கிறான்; கேடற்ற ஈசுவரன்.
யஸ்மாத்க்ஷரமதீதோऽஹமக்ஷராதபி சோத்தம:
அதோऽஸ்மி லோகே வேதே ச ப்ரதித: புரு÷ஷாத்தம:-18-நான் அழிவு கடந்தோனாதலாலும், அக்ஷர புருஷனைக் காட்டிலும் சிறந்தோனாதலாலும்,
உலகத்தாராலும் வேதங்களாலும் புருஷோத்தமனென்று கூறப்படுகிறேன்.)
க்ஷமஸ்வ புருஷோத்தம(உபசாராபதேஸேந க்ருதாந ஹரஹர் மயா அபசாரா நிமான் ஸர்வான் க்ஷமஸ்வ புருஷோத்தம-புருஷோத்தமனே உபசாரம் என்னும் பெயரால் என்னாலே தினம்தோறும் செய்யப்படும் இவ்வாபசாரங்கள் எல்லாவற்றையும் க்ஷமித்து அருள்வாயாக ))
புருடோத்தமனடி -பெரியாழ்வார் -4-7-11
புருடோத்தமன் -4-7-2-
புருடோத்தமமே -4-2-1-
என்னும் இத்யாதி ப்ரமாண சதங்களாலே ஸகல சேதன அசேதன விலக்ஷணனான பறவை யேறு பரம்புருடன் -என்றவாறு -இத்திருநாமம் தான் த்ரிவித சித் அசித் ப்ருந்த வைலக்ஷண்யத்தை ஸாப்தமாகக் காட்டக் கடவது இறே
புருஷ என்றும் அசித் வ்யாவ்ருத்தரான பத்தரையும்
உத் புருஷ என்று தத் வ்யாவ்ருத்தரான முக்தரையும்
உத்தர புருஷ என்று அவர்களில் வ்யாவ்ருத்தரான நித்யரையும் சொல்லி
உத்தம புருஷ என்று தத் வ்யாவ்ருத்தனான ஈஸ்வரனைச் சொல்லிற்று இறே
ஹேய மூலமான அசித்தும்
ஹேய ஸஹிதரான பத்தரும்
ஹேய ரஹிதரான முக்தரும்
ஹேய ப்ராக் அபாவரான நித்யரும்
ஹேய நிவர்த்தகனுக்கு சத்ருஸர் அன்று இறே
ஸ்வரூப ஸ்வபாவ அந்யதா பாவ யுக்தங்களான சேதன அசேதனங்களைப் பற்ற தத் உபய அநந்யதா பாவ ரூப வைலக்ஷண்யத்தாலே தத் உபய விலக்ஷணன் என்று கொண்டு புருஷோத்தமன் என்கிறார்
யஸ்மாத் ஷரமதீதோ அஹம் அஷராதபி சோத்தம
அதோ அஸ்மி வேதே லோகே ச ப்ரதித புருஷோத்தம என்னைக் கடவது இறே
த்வாவிமவ் இத்யாதி-
ஆக இப்படி ஸர்வ உத்க்ருஷ்டனாக ப்ரதிபாதிக்கப்படுகிற பரமபுருஷன் சர்வாதிகையாக ப்ரமாண ப்ரஸித்தையாய் இருக்கிற உனக்கு அநு ரூபனான பதி
அதவா
புருஷோத்தம தே காந்த
ஷணு தாநே -என்று தாந வாசியாய்
புரு ஸநோ தீதி புருஷ -என்று அதிக தாதாவைச் சொல்லி -அவர்களில் உத்தமன் என்று மோஷாதி ஸகல பல ப்ரதன்
ஐஸ்வர்யம் -இத்யாதிப்படியே பரம உதாரை என்றும் ப்ரஸித்தையான உனக்குப் பதி என்னவுமாம்
புருஷோத்தமஸ் தே காந்த
மங்களா நாஞ்ச மங்களம் -என்று சொல்லப்படுகிறவன் -ஸகல மங்கள ஆஸ்பதத்வேந பிரஸித்தையான உனக்குப்பதி
புருஷோத்தமஸ் தே காந்த
நாரீணாம் உத்தமைக்குப் பதியாம் போது புருஷோத்தமனாக வேணும் இறே -விஸ்வ பதியானல் யாயிற்று இவளுக்குப் பதி என்னாலாவது –
இவள் தான் லோக பர்த்தாவை இறே மம பர்த்தா என்று வரிப்பது(ஸ்ரீ ரெங்க நாதா என்னாதா -அரங்கமாளி என்னாளி -லோக பர்த்தா மம பர்த்தா -மூவர் அனுபவம்) -அல்லாதாரை நீசஸஸவத் என்றும் ஒரு நரியாக விறே எண்ணுவது –
புருஷோத்தமன் தே -என்கையாலே
ராகவ –துல்ய சீல வயோ வ்ருத்தாம் அர்ஹதி -என்னும் அர்த்தமும்
ஏதத் ப்ரதிகோட் யர்த்தம் –புருஷோத்தமஸ்ய த்வம் -என்று அஸி தேஷணா தம் அர்ஹதி -என்னும் அர்த்தமும் தோற்றுகிறது
உனக்கேற்கும் -திருவாய் -10-10-6-என்று இவள் அவனுக்கு சத்ருசையாய் இருக்குமா போலே அவனும் திருத்தக்க செல்வனாய் -நான்முகன் -62-இறே இருப்பது
புருஷோத்தமஸ் தே காந்த
லஷ்மீஸ் ச பத்ந்யவ் -என்று பத்நீ ஸம்பந்தத்தாலே அவனுக்கு உத்கர்ஷம் சொன்னாப் போலே –புருஷோத்தமஸ் தே காந்த என்று பதி ஸம்பந்தத்தாலே இவளுக்கு உத்கர்ஷம் சொல்கிறார்
ஸ்ரீ யபதி என்று அவனுக்கு உத்கர்ஷம்
வரத வல்லபா என்று இறே இவளுக்கு உத்கர்ஷம்
தே காந்த புருஷோத்தம
உனக்குக் காந்தனான பின்பிறே அவன் புருஷோத்தமன் ஆயிற்று-
கஸ் ஸ்ரீ ஸ்ரீய என்ற பின்பிறே புருஷோத்தம க-என்றது
ஜெகன்நாதோ அபி நாராயணோ தந்யம் மந்யத ஈஷாணாத் (ஐஸ்வர்யம் மஹ தேவ வா அல்பம் அதவா த்ருச்யதே பும்ஸாம் ஹி யத்
தல் லஷ்ம்யாஸ் சமு தீக்ஷணாத் தவ யதஸ் சார்வத்ரிகம் வர்த்ததே
தேநை தேந ந விஸ்மயே மஹி ஜகந்நாதோ அபி நாராயண
தந்யம் மந்யத ஈஷணாத் தவ யதஸ் ஸ்வாத்மா நமாத் மேஸ்வரா –-ஸ்ரீ ஸ்தவம் 6-மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! உனது உயர்ந்த கடாக்ஷம் எதன் மீது சென்று அதிகமாக விழுந்ததோ, அந்தப் பொருள் ப்ரஹ்மம் எனப்பட்டது.-அந்தக் கடாக்ஷங்கள் எந்தப் பொருள்களின் மீது குறைவாக விழுந்ததோ, அவை இந்திரன் முதலான பரப்ரஹ்மத்தை விடத் தாழ்வான பொருள்களாக ஆனது.
எனவே பரப்ரஹ்மத்தைக் குறித்தும், இந்திரன் முதலான தேவர்களைக் குறித்தும் உள்ள வேதங்கள் உன்னையே மறைமுகமாக கூறுகின்றன என உறுதியாகக் கூற இயலும்.
ஒரு நகரத்தைப் பற்றியும், அந்த நகரத்தின் செல்வச் செழிப்பைப் பற்றியும் ஒரு நூல் கூறுவதாக வைத்துக்கொள்வோம். அந்த வர்ணனை, அந்த நாட்டின் அரசனை அல்லவா மறைமுகமாக குறிக்கிறது?) -என்று வேதாந்தங்கள் பரதத்வம் என்று நிர்ணயித்ததும் உன்னுடைய பாத சிஹ்னங்களை அவன் மார்பிலே கண்டபின்பிறே
ஸஹ தர்ம சாரிணியான இவளைப் பாணி க்ரஹணம் பண்ணின பின்பாயிற்று அவன் ஸ்ரீ மானுமாய் சர்வாதிகனுமாய் அநு ரூபாக்ஷனுமாய் முமுஷு உபாஸ்யனுமாய் யாய்த்து -ஆகையிறே
திரு நின்ற பக்கம் திறவிது -நான்முகன் -62-என்று ஸத்துக்கள் பரிக்ரஹித்து அல்லாதார் திருவில்லாத தேவராகையாலே நிஸ் ஸ்ரீ கராய் புருஷ அதமராய் விருபாஷராய் அனுபாஸ்யராய் யாயிற்று -ஆகையிறே –ஸ்ரீ நிவாஸ சப்தேந பாஸூ பதா திவ்ய தாஸ -என்று அருளிச் செய்ததும்
காணிலும் உருப்பொலார் -திருச்சந்த -69-
திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு -நான்முகன் -54 என்று ஸத்துக்கள் பரித்யஜித்ததும் –
தே காந்த புருஷோத்தம
திருமகளார் தனிக்கேள்வன் பெருமையுடைய பிரானார் -திருவாய் -1-6-9-என்று இவளுக்கு கேள்வனான பின்பிறே பெருமையுடைய பிரானாராயிற்று –
ஸ்ரீயா விஷ்ணுர் அஸூ ஸூபே -என்று இவள் தனக்கென்ன இட்டுப் பிறந்த தன்மையாகையாலே இறே அப்ரமேய தேஜஸ்ஸை யுடையனாய் அவன் விளங்கிற்று –
ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்நுதே
திருமகள் தன்னோடும் திகழ்கின்ற -10-6-9-என்னைக் கடவது இறே
புருஷோத்தம
புருஷாணாம் உத்தம -என்ற ஷஷ்ட்டி விபக்தியாதல்
புருஷே ஷுத்தம -என்ற ஸப்தமீ விபக்தியாதல்
புருஷோத்தம-என்று ஸர்வேஸ்வராபேஷயா ப்ரஹ்மாதிகளுடைய அதமத்வம் ப்ரதிபாதிக்கையாலே தத் பத்னிகளில் காட்டிலும் இவளுடைய வ்யாவ்ருத்தியும் தோற்றுகிறது –
மலை மங்கையும் -நா மங்கையும் பூ மங்கைக்குப் போலியாக மாட்டார்கள் இறே நா பதியும் உமா பதியும் ரமா பதிக்கு உபமானமானவன் என்றிறே இவளுக்கு அவள் ஒப்பாவது –
ஆக இத்தால் தத் பத்நீத்வத்தாலும் நாரகோடி கடிதையாகையாலும் அவனை ஆஸ்ரயித்துத் தத் சேஷ பூதையாய் சத்தை பெற்று இருக்கும் -என்கிற கர்த்த்யர்த்தம் சொல்லப்பட்டது
மலர்மகள் பிடிக்கும் மெல்லடி -9-2-10-
திருமகளும் செம்பொன் திருவடி யினிணை வருட -பெரிய திருமொழி -7-8-1-என்கிறபடியே அகிஞ்சித்க்கரனுக்கு சேஷத்வம் இல்லாமையாலே இவள் தான் கிஞ்சித்கரித்து ஸ்வரூப லாபமாய் இருப்பாள் ஒருத்தி இறே -அவதார தசையிலும் திருமங்கை போத்தந்தாள் -பெரியாழ்வார் -1-3-7-என்று கிஞ்சித்கரித்தாள் இறே
இனிமேல் -ஸர்வ லோக மாதாவாகையாலும் -ஸர்வ ஸ்வாமிநீ யாகையாலும் ஸகல சேதனருக்கும் ஆஸ்ரயிக்கப் படா நின்றாள் என்கிற கர்மணி வ்யுத்பத்தியில் ஸித்தமான உபய விபூதி சேஷத்வத்தை அருளிச் செய்கிறார் -பணி பதி -இத்யாதியால்
நித்யைவைஷா ஜகன்மாதா விஷ்ணோர் ஸ்ரீர் அநபாயினீ
ஸ்ரீயதே ச அகிலைர் நித்யம் ஸ்ரயதேச பரம் பதம் என்னும் இத்யாதி ப்ரமாண சித்தங்களாய் இறே இவ் வ்யுத்பத்தி த்வயமும் இருப்பது –
ஆகில் உப ஜீவ்ய ப்ரமாண அநுஸாரேண வ்யுத்பத்தி த்வயத்தை அருளிச் செய்யாதே வ்யுத் க்ரமமாக அருளிச் செய்வான் என் என்னில் -கடகையான இவளுக்குச் சேதன ஈஸ்வரர் பக்கல் சம்பந்தம் அவிசிஷ்டமாய் இருந்ததே யாகிலும் -பித்ருத்வ ப்ரயுக்தமான ஹித ஸ்ரோதா வ்ருத்தியாலே கலங்கி ஸாபராதரான இச்சேதனரை நிக்ரஹிக்கத் தேடும் என்று-கிமேதந் நிர்த்தோஷ க -என்று உசித உபாயங்களாலே அவனை வசீகரித்து அனுக்ரஹ ஏக பரனாம்படி திருத்தும் போது தத் ஸம்பந்தம் அவஸ்ய அபேக்ஷிதமாகையாலும்
இனித்தான் பிராட்டியை ஆஸ்ரயிக்கிறது தத் சம்பந்தம் விஸிஷ்டை என்றாகையாலும் –புருஷோத்தமஸ் தே காந்த -என்று பிரதான்யேன கர்த்தயர்த்தத்தை அருளிச் செய்து -அநந்தரம் தத் ஸம்பந்த ஸ்தாப்யமான கர்மண் யர்த்தத்தை யருளிச் செய்கிறார்
மச் சேஷ பூதா ஸர்வேஷாம் ஈஸ்வரீ(பாஞ்சராத்ர ஸம்ஹிதை) -என்று இவ்வர்த்த கிரமத்தை ஸ்வயமேவ அருளிச் செய்தான் இறே
தேவ தேவ திவ்ய மஹிஷீம் அகில ஜெகன் மாதரம் -என்று பாஷ்யகாரரும் இவருடைய திவ்ய ஸூக்தியை உட்க்கொண்டு பகவத் ஸமாஸ்ரயணத்தை பிரதானமாக அருளிச் செய்தார் இறே
இனித்தான் பகவத் விஷயத்தைப் பற்றுகை -பவதீ ஸம்பந்த த்ருஷ்ட்டியாலே இறே -பிராட்டியைப் பற்றுமது பகவத் ஸம்பந்த விஸிஷ்டை என்று இறே -இங்கனம் அன்றிக்கே தத் ஸம்பந்த ரஹிதமாகப் பற்றுமன்று தலையும் செவியும் தரியுண்டு வைரூப்ய விநாசங்களே பலித்துவிடும் இறே -ஆகையால் இவ்வாகாரத்தைப் பற்ற இங்கனே அருளிச் செய்யக் குறை யில்லை –
ஆகில்–மச் சேஷ பூதா-என்று (மச் சேஷ பூதா ஸர்வேஷாம் ஈஸ்வரீ மம வல்லபா -பாஞ்சராத்ரம் -ஸ்ரீ தேவி எனக்கு சேஷபூதையாய் இருப்பவள் -மற்ற எல்லாருக்கும் ஈஸ்வரீயாய் இருப்பவள் -எனக்குப் பிரியையாய் இருப்பவள் )அருளிச் செய்தபடி பிராட்டியும் பகவத் சேஷ பூதையானால் சேஷ பூதர்கள் எல்லாரும் ஸர்வ சேஷிக்கு சேஷமாய் இருக்கை ஒழிய உபய விபூதியும் பிராட்டிக்கு சேஷமாய் இருக்கும் என்கைக்கு பிரமாணம் என் என்னில்
ஸர்வே ஹ்யாத்மாந –தாஸ பூதாஸ் -என்று உபய விபூதியும் பரமாத்ம சேஷமானால் -தத் பத்நியான இவளுக்கு அகில சேதனரும் சேஷ பூதர் என்னுமிடத்தில் ப்ரமாணந் வேஷணம் வேண்டா விறே -பர்த்தாவுக்கு சேஷமான க்ருஹ க்ஷேத்ர புத்ராதிகள் பார்யைக்கும் சேஷம் என்னுமிடம் லோக ஸித்தம் இறே -அவன் தான் உபய விபூதியையும் இவளுக்குப் படுக்கைப் பற்றாக்கி இறே வைப்பது
ஈஸாநா தேவீ புவநஸ்ய அதி பத்நீ-யஜுர் காட 3-3-என்று–(உலகிற்கு ஈஸ்வரியாகவும் சர்வாதிகனுக்குப் பத்னியாயும் இருப்பவள் )
ஈஸ்வரீம் ஸர்வ பூதாநாம் த்வாம் இஹ உபஹ்வயே ஸ்ரீ யம் -ஸ்ரீ ஸூக்தம் -9–(ஸர்வ பூதங்களுக்கும் ஈஸ்வரியாய் ஸ்ரீ தேவியான உன்னை இங்கு வரும்படி அழைக்கின்றேன் )
மகாரஸ்து தயோர் தாஸஸ் -(அகாரேண உச்யதே விஷ்ணுஸ் ஸர்வ லோக ஏக ஈஸ்வரோ ஹரி -உத்த்ருதா விஷ்ணுநா லஷ்மீர் உகாரேண உச்யதே ஸதா மகாரஸ்து தயோர் தாஸ இதி ப்ரணவ லக்ஷணம் -ஸ்ருதி –ஸர்வ லோகங்களுக்கும் ஈஸ்வரனும் ஹரி என்றும் விஷ்ணு வென்றும் சொல்லப்படுபவனுமான எம்பெருமான் அகாரத்தினால் சொல்லப்படுகிறான் -விஷ்ணுவினால் மார்பில் எப்போதும் தரிக்கப்பட்டு இருப்பவளான லஷ்மீ உகாரத்தினால் சொல்லப்படுகிறாள் -அவர்களுக்கு மகார வாஸ்யனான ஜீவன் தாஸன் என்பதே பிரணவத்தின் பொருள் -)என்று இவ்வர்த்தத்தில் பிரமாணங்களும் உண்டிறே
அஸ்யா மம ச சேஷா ஹா விபூதிரூபயாத்மிரா -(பஞ்ச ராத்ரம் -உபய விபூதியில் இவளுக்கும் எனக்கும் சேஷமாய் இருக்கும் )என்றும்
ஸர்வேஷாம் ஈஸ்வரீ மம வல்லபா -என்றும் இவ்வர்த்தத்தை ஸ்வயமேவ அருளிச் செய்தான் இறே
திரு நாரணன் தொண்டர் -3-7-4-
திருமாலுக்கு உரிய தொண்டர் -6-9-11-திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன் -திருப்பல்லாண்டு -11-
திருமாற்கரவு -முதல் திருவந்தாதி -53-என்று
மிதுன சேஷத்வம் ஸர்வ அசாதாரணம் என்னும் இடத்தை தத்வ வித்துக்களான நம் ஆழ்வார்களும் அருளிச் செய்தார்கள் இறே
ஆக இப்படி வேதங்களாலும் -வேதாந்த வேத்யனாலும் -மிக்க வேதியராலும் ப்ரதிபாதிக்கப்பட்ட உபய விபூதி சேஷித்வத்துக்கு பிரதிசம்பந்தி வக்தவ்யமாகையாலே உபய விபூதியில் உள்ளாரும் இவளுக்கு கிஞ்சித்கரித்து சேஷபூதரராய் இருக்கும்படியை பிரயோகிப்பதாகத் திரு உள்ளம் பற்றி-
அதில் பிரதமத்திலே நித்ய ஸூரிகளில் தலைவரான திருவனந்தாழ்வான் இவள் விஷயத்திலே கிஞ்சித்கரித்து ஸ்வரூபம் பெற்று இருக்கும்படியை அருளிச் செய்கிறார் -பணி பதி –இத்யாதியாலே –
அதாவது
இருளிரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி யணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த-1-1–என்றும்
வாயோர் ஈரைஞ்சூறு -1-2-
மன்னிய பல் பொறி சேர் ஆயிரவாய் வாளரவின் சென்னி மணிக்குடுமி-பெரிய திருமடல் – -என்றும் சொல்லுகிறபடியே
மதுரவாறு-திருமாலை -35 -என்றும்
இன்பவாறு -திருக்குறுந்தாண்ட -2- என்றும்
சொல்லும்படி நிரதிசய போக்யமான பகவத் அனுபவத்துக்கு அனுபவ பரிவாஹ ரூபமாக வாயாரப் புகழுகைக்கு ஈடாகப் பலவாய்த்தலைகளை உடையனாய் –
அநந்ததா பவதி –என்கிறபடியே அநேக தேஹங்களைப் பரிக்ரஹித்து -அசேஷ சேஷ விருத்தியிலும் அன்வயித்து -சேஷ வ்ருத்தி பரரான அசேஷருக்கும் உபமான பூமியாய் –ஆங்கார வாரத்தில் படியே -நான்முகன் திரு -10-அஸ்தானே பய சங்கை பண்ணி அழல் உமிழ்ந்து அனவரத மங்களா சாஸன பரனாய் இருக்கையாலே
அரவரசப் பெருஞ்சோதி அனந்தன் -5-10-11-என்றும்
யதோசிதம் சேஷ -என்றும் திருநாமங்களை உடையனாய்
ப்ரக்ருஷ்ட விஞ்ஞான பல ஏக தாமாவாய்
உனக்குப் படுக்கையான முறையாலே –நாகணை மிசை நம்பிரான் -என்று எல்லாருக்கும் புருஷகார பூதனாய்
ஏவம் வித் பாதேநாத் யாரோஹதி(கௌஷீதகி -1-51-இப்படியறிபவன் பகவானுடைய படுக்கையின் மேல் அடியிட்டு ஏறுகிறான் ) என்றும் பர்யங்க வித்யையில் படியே தன் மடியிலே அடியிட்டு ஏறலாம்படி ஆஸனமாய் -அந்தரங்கனாய் -பகவத் ஸ்வரூப நிரூபக பூதையான உன்னைப்போல் நாகணை மிசை நம்பிரான் -என்று அவனுக்கு ஸர்வ ஸ்மாத் பரத்வ ஸூசகனாய்
ஆஸ்தே பாதாள மூலஸ்த சேஷோ அசேஷ ஸூ ரார்ச்சித -தஸ்ய வீர்யம் ப்ரபாவஞ்ச ஸ்வரூபம் ரூபமேவ ச -ந ஹி வர்ணயிதும் ஸக்யம் ஞாதும் வா த்ரிதஸை ரபி –(ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-5-21-எல்லாத் தேவர்களாலும் பூஜிக்கப்படும் சேஷன் பாதாளத்தின் அடியிலே எழுந்தருளி இருக்கிறார் -அவருடைய வீர்யம் பெருமை ஸ்வரூபம் ரூபம் ஆகியவைகளை தேவர்களாலும் வர்ணிக்கவோ அறியவோ முடியாது )என்கிறபடியே அபரிச்சேத்ய ஸ்வரூப ரூப குண விபவதாதிகளை உடையவனுமான திருவனந்தாழ்வான் பள்ளி கொண்டு அருளினால் படுக்கையாய் இருந்தால் சிங்காசனமாய் இப்படி பஹு முகமாக அடிமை செய்து லப்த ஸ்வரூபனாய் இருக்கும் –
பணி பதி ஸப்தத்தாலே –ஸைத்ய மார்த்தவ ஸுரப்ய விசால உந்நதத்வாதியான பர்யங்க குணங்கள் பிரகடிதங்கள் ஆகிறன –பஞ்ச சயனம்-திருப்பாவை -19- என்னக் கடவது இறே
சய்யா ஆஸனம் -என்று த்வயத்தைச் சொன்னது -த்வயத்தில் படியே –திருமாற்கு அரவு –சென்றால் குடையாம் –முதல் திரு -53-
நிவாஸ சய்யா ஆஸந -என்று தொடங்கி இருவருமாக சேர்த்தியிலே அஹம் சர்வம் கரிஷ்யாமி -(பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே -அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ஸ்வ பதச் ச தே -அயோத்தி -31-25-நீர் பிராட்டியுடன் கூட மலைத்தாழ்வாரைகளில் விளையாடுவீர் -அடியேன் விழித்துக் கொண்டு இருக்கும் போதும் -தூங்கும் போதும் -உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன் -)என்று பண்ணும் ஸர்வ வித கைங்கர்யங்களுக்கும் உப லக்ஷணம் –
யதா யதா ஹி கௌசல்யா – (கிம் சைநாம் ப்ரதி வஹ்யாமி க்ருத்வா விப்ரியமீத்ருஸம் -யதா யதா ஹி கௌசல்யா தாஸீவச் ச ஸகீவ ச -பார்யா வத் பகிநீவச் ச மாத்ருவச் ச உப திஷ்டதி -அயோத்யா -12-68-கௌசல்யா தேவி தாஸியைப் போலும் சகியைப் போலும் மனைவியைப் போலும் சஹோதரியைப் போலும் தாயைப் போலும் ஸூஸ்ருஷை செய்யும் போதெல்லாம் இப்படிப்பட்ட அநிஷ்டமான கார்யத்தைச் செய்துவிட்டு அவளுக்கு என்ன பதில் சொல்லுவேன் -)என்றும் ஒரு அபலை அப்ராப்த விஷயத்தில் பலபடியாகப் பரிசர்யை பண்ணினாள் என்றால் ப்ரக்ருஷ்ட ஞான சக்திகளையுடைய இவன் ப்ராப்த விஷயத்தில் பல அடிமைகளும் செய்கை ப்ரதிபன்னம் இறே -இப்படி பரத்வத்தில் பல அடிமைகள் செய்யும் அளவன்றிக்கே -தேவத்வே தேவ தேஹேயம் (புநச் ச பத்மா ஸம்பூதா ஆதித்யோ அபூத் யதா ஹரி -யதா து பார்க்கவோ ராமஸ் ததாஸீத் தரணீ த்வியம் -அன்யேஷு ஸாவதாரேஷு விஷ்ணோர் ஏஷ அநபாயினீ -தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ -விஷ்ணோர் தேஹ அனுரூபாம் வை கரோத்யேஷா ஆத்மநஸ் தநும் -ஸ்ரீ விஷ்ணு புரா -1-9-143-144-145)பகவான் ஆதித்யனாய் அவதரித்த போது பத்மையானாள் -பரசுராமனான போது தரணியானாள் -ராகவனான போது சீதையாகவும் -கிருஷ்ண அவதாராத்தில் ருக்மிணியாகவும் ஆனாள் -மற்ற அவதாரங்களிலும் இவள் பகவானைப் பிரியாதவளாய் இருக்கிறாள் -அவன் தேவனாய் இருக்கும் போது இவளும் தேவ தேஹம் எடுக்கிறாள் -மனுஷ்யனாகும் போது இவளும் மனுஷ்யையாகிறாள் -விஷ்ணுவின் தேஹத்திற்குத் தகுந்ததாகத் தன் தேஹத்தை அமைத்துக் கொள்ளுகிறாள் -இப்பிராட்டி -)என்று அனுவர்த்தித்த இவளைப்போலே அவதாரம் தோறும் அடுத்த வடிவு கொண்டு இதுக்கென்று ஸ்ருஷ்டனாய் –ஸீதாம் உவாச -(ஸா ப்ராதுச் சரணவ் காடம் நிபீட்ய ரகு நந்தன -ஸீதாம் உவாஸாதியஸா ராகவஞ்ச மஹா வ்ரதம் -அயோத்யா -31-2-ரகுநந்தனாய் பெரும் கீர்த்தியினனான லஷ்மணன் தமையனின் பாதங்களை நெருக்கிப் பிடித்துக் கொண்டு பிராட்டியையும் ஆஸ்ரித ரக்ஷணமாகிய பெரிய விரதத்தையுடைய பெருமாளையும் பார்த்துச் சொன்னான் -)என்று இவள் புருஷகாரமாக இவள் சமஷத்திலே ஸ்வ அபேக்ஷித்ங்களைப் பேசி வைதேஹ்யா ஸஹ என்றும் இவள் சேர்த்தியிலே பாவஞ்ஞனாய் அஹம் ஸர்வம் என்றும் ஸர்வவித கைங்கர்யங்களையும் பிரார்த்தித்து அடிமை செய்யப்பெற்று
ப்ரகர்ஷயாமி யில் படியே உகப்பித்து உவந்து பணி செய்து -10-8-10-என்னும்படி ரமித்து லப்த ஸ்வரூபனாய் இருப்பான் ஒருவன் இறே
அணைவது அரவணை மேல் பூம் பாவை யாகம் புணர்வது -2-8-1-
தீ வாய் நாகணையில் துயில்வானே திருமாலே -பெரிய திரு -7-7-9-
சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை -8-7-1-என்று
இருவருமாக சேர்த்தியிலே அடிமை செய்து வாழும்படியை ஆழ்வார்கள் அனுசந்தித்தார்கள் இறே
இவர் தாமும் ஸ்ரீயா ஸஹ ஆஸீநம் அநந்த போகிநி என்றும் அருளிச் செய்தார் இறே
சேஷ போகே ஸ்ரீயா ஸஹ ஆஸீநம் -(மஹதி திவ்ய யோக பர்யங்கே அனந்த போகினி ஸ்ரீ மத வைகுண்ட ஐஸ்வர்யாதி திவ்ய லோகம் ஆத்ம காந்த்யா விஸ்வம் ஆப்யா யந்த்யா சேஷ சேஷாச நாதி சர்வ பரிஜனம் பகவத தத்தத வஸ்தோ சித பரிசர்யாயாம் ஆஜ்ஞா பயந்த்யா சீல ரூப குண விலாசாதிபி ஆத்ம அனுரூபயா ஸ்ரீ யா சஹ ஆஸீனம்-(ஸ்ரீ வைகுண்ட கத்யம்)ஸ்ரீமத் வைகுண்ட நகரம் முதலான திவ்ய லோகங்கள் எல்லாவற்றையும் தன் காந்தியால் போஷிப்பவளாய் சேஷன் விஷ்வக்சேனர் முதலான பரிஜனங்கள் அனைவரையும் அந்தவந்த நிலைகளுக்குத் தகுந்த கைங்கர்யங்களிலே ஆஜ்ஜை இடுபவளாய் -சீல ரூப குண விலாஸாதிகளாலே தன்னை ஒத்தவளான ஸ்ரீ தேவியுடன் திருவனந்தாழ்வான் மடியிலே எழுந்தருளி இருப்பவனை)என்று பாஷ்யகாரர்
ஸ்ரீஸ்தநாபரணம் தேஜஸ் –உத் சங்கே அநந்த போகிந-(ஸ்ரீஸ்தநாபரணம் தேஜஸ் ஸ்ரீ ரெங்கேசம் ஆஸ்ரயே -சிந்தாமணி மிவோத் வாந்தமுத் சங்கே அநந்த போகிந –ஸ்ரீரெங்கராஜ ஸ்தவம் -1-8-திருவானந்தாழ்வான் மடியிலே கக்கப்பட்ட மாணிக்கம் போலும் பிராட்டியின் திருமுலைத் தடங்களுக்கு ஆபரணம் போலும் இருக்கும் ஸ்ரீ ரெங்கநாதனான தேஜஸ்ஸை ஆஸ்ரயிக்கிறேன் ) -பட்டர் –
பணி பதி சய்யா ஆஸனம்
போக பிரியா போகவதீ போகீந்த்ர சயான ஆசானா -(ப்ராஹ்மம் ஸ்ரீ ஸஹஸ்ர நாமம் -120-போகப்பிரியை போகவதி போகீந்த்ரனான ஆதிசேஷனைப் படுக்கையாகவும் ஆசனமாகவும் கொண்டவள்-)என்று இவளுக்கு அசாதாரணமாக ஆநைஸயநாதியான அடிமை செய்யும் படியை ஸ்ரீ ஸஹஸ்ர நாமத்திலே சொல்லிற்று இறே
ஸ்ரீ மதே -த்வயம் –என்கிறபடியே கைங்கர்யம் ஸித்திப்பதும் ரஸிப்பதும் கைங்கர்ய வர்த்தகையாய் பரம ப்ராப்யையான இவள் சேர்த்தியிலே யாகையாலே இவள் சேர்த்தியிலே அடிமை செய்கை இறே ஸ்வரூப ப்ராப்தம் -ஆகையிறே –திருமாலே நின்றே ஆட்ச்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான் என்றே – -8-3-8-என்று ப்ரபந்ந ஜன கூடஸ்தர் பிரார்த்தித்து அருளிற்று –
ஸ்ரீ நிவாஸே –பக்தி ரூபா பவது(அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே விநத விவித பூத வ்ராத ரக்ஷ ஏக தீஷே ஸ்ருதி ஸிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே பவது மம பரஸ்மின் ஸேமுஷீ பக்தி ரூபா –ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகம் -எல்லா உலகையும் படைத்து அளித்து அழிப்பதை விளையாட்டாகக் கொண்டவனும் விசேஷமாய் பல பூத ஸமூஹங்களை ரஷிப்பதையே விரதமாகக் கொண்டவனும் வேதாந்தத்தில் விளங்குபவனுமான ஸ்ரீ நிவாஸனான ப்ரஹ்மத்தின் இடத்தில் பக்தி ரூபமான ஞானம் எனக்கு உண்டாகட்டும் -)
ஸ்ரீய காந்தோ யஸ் தத் பாதாப்ஜே பரிசரண ஸக்தம் பவது மே -(ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்-வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத-வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே–ஸ்ரீ வேதாந்த தீப முதல் மங்கள ஸ்லோகம்–ஸ்ரீயப்பதியாய் சிறந்த கல்யாண குணங்களுக்கு ஒரே இருப்பிடமான சரீரத்தை யுடையவனாய் -குற்றம் ஒன்றும் அற்றவனாய் பரமபத நிலையனாய் -வாக்குக்கும் மனஸுக்கும் எட்டாதவனாய் -அடியார்களின் கண்களுக்கு இலக்காமவனாய் ஆதிபுருஷனான அனந்தனுடைய திருவடித்தாமரைகளில் கைங்கர்யம் செய்வதற்கு என் மனம் ஆசை கொள்ளட்டும் -)என்று கைங்கர்ய உபகரணமான பக்தியையும் கைங்கர்யத்தையும் இவள் சந்நிதியிலே பிரார்த்தித்து அருளினார் இறே
அனந்தன் பாலும் கருடன் பாலும் -5-4-8-என்று இவனுக்கு அனந்தரம் வ்யாமோஹ விஷயமான பெரிய திருவடி இவள் விஷயத்திலே கிஞ்சித்கரித்து ஸ்வரூபம் நிறம் பெறும் படியை அருளிச் செய்கிறார் மேல் –வேதாத்மா என்றும் தொடங்கி -ஆஸன பதம் காகாஷி நியாயத்தாலே மேலோடும் அன்வயித்து –வேதாத்மா விஹகேஸ்வர ஆஸனம் வாஹனம் -என்று யோஜித்துக் கொள்வது –
வேதாத்மா
ஸூபர்ணோ அஸி கருத்மான் த்ரி வ்ருத் தே ஸிரோ காயத்ரம் சஷுஸ் ஸ்தோம ஆத்மா ஸாம தே தனூர் வாமதேவ்யம் ப்ருஹத்ர தந்தரே பஷவ் யஞ்ஞா யஞ்ஜீயம் புச்சம் சந்தாம்ஸ் யங்காநி திஷ்ணியா ஸபா யஜும்ஷி நாம -என்கிற ஸுவ் பர்ண ஸ்ருத்யர்த்தத்தை விவஷித்து வேதாத்மா என்கிறார் –
த்ரயீ மய -என்றார் இறே இவர் தாமும்
வேதாத்மா
வேதா திஷ்டாத்ருதயா வேதாநாம் ஆத்மா
வேதா அதிஷ்டா த்ருதையினாலே வேதாநாம் ஆத்மா-என்று தத் புருஷனாதல்
தத் விசிஷ்டத்வேந தத் சாமானாதி கரண்யத்தாலே வேத ஆத்மா யஸ்யேதி -என்று பஹு வ்ரீஹி யாதல் –
இத்தால் இவனுடைய ஸர்வஞ்ஞத்வம் ஸூசிதமாயிற்று -அம்ருத அஹராணாதிகளிலே இவனுடைய சக்தி மகத்துவம் ஸித்தம் இறே
(நேத்ரம் காயத்ரமூசி த்ரிவ்ருத் இதி ச சிரோ நாமதேயம் யஜும்ஷி
சந்தாம் சி அங்கானி திஷ் நியதாம் அபி அஜனி சபை விக்ரஹோ வாம தேவ்யம்
யஸ்ய ஸ்தோமாத்மந அசவ் ப்ருஹத் இதர கருத் தாத்ர்சாம்நாத புச்ச
ஸ்வா சந்த்யம் ந ப்ரஸூதாம் ஸ்ருதி சத சிகர அபிஷ்டுதாத்மா கருத்மான் —கருட பஞ்சாசஸ் -3-
சாமவேத சோமனே கருத்மான் -காயத்ரி மந்திரமே–காயந்தம் த்ராயதி இதி-அவன் திருக் கண்கள் -த்ரி விருத் மந்திரமே அவன் திரு முடி –
யஜுர் வேதமே அவன் திரு நாமம் – வேத சந்தஸ் ஸூக்களே அவன் அங்கங்கள்
“ஸ்தோமம்” என்னும் ஸாம வேத பாகமே அவரது ஆத்ம ஸ்வரூபம்.
“காயத்ரம்” என்கிற ஸாமம் அவருக்கு கண்கள்.
“த்ரிவ்ருத்” என்ற ஸாமம் அவருக்கு சிரசு.
யஜுர் வேதங்கள் அவருடைய திருநாமங்கள்.
சந்தஸ்ஸுக்கள் அவரது திருக் கரங்கள்.
“திஷ்ண்யம்” எனப்படும் வேள்வி மேடைகள் அவரது திருப்பாதங்கள்.
“வாமதேவ்யம்” என்கிற ஸாமம் அவரது திருமேனி,
“ப்ருஹத்” , “ரதந்தரம்” என்னும் ஸாமங்கள் அவருடைய இரு சிறகுகள்.
“யஜ்ஞாயஜ்ஞியம்” என்கிற ஸாமம் அவருக்கு வால்.
இவ்வாறு வேத பாகங்களெல்லாம் கருடனுடைய திருமேனிகளாய் விளங்குவதால்
கருடனை “வேத ஸ்வரூபன்” என்கிறார்கள் பெரியோர்.)
விஹகேஸ்வர
புள்ளரையன் புகழ் குழறும் –பெரியாழ்வார் -4-9-5-என்கிறபடியே பக்ஷிராஜன் என்று ப்ரஸித்தனாய் இருப்பான் ஒருவன் இறே -இத்தால் –ஸத்யஸ் (ப்ருத்யஸ் )ஸூபர்ணோ கருடஸ் தார்ஷ்யஸ்து விஹகேஸ்வர-என்று ஸ்ரீ சாத்வாதிகளிலே (ஸத்யஸ் ஸூபர்ணோ கருடஸ் தார்ஷ்யஸ்து விஹகேஸ்வர –ஸாத்வம் –ஸத்யன் ஸூபர்ணன் கருடன் தார்ஷ்யன் விஹகேஸ்வரன் -என்பவை பெரிய திருவடியின் வ்யூஹ ரூபங்கள் )ப்ராணாதி பஞ்சகாதிபதித்வேந அவஸ்திதனான இவனுடைய வ்யூஹ விசேஷத்தைச் சொல்லுகிறது -இவன் தான் நித்ய விபூதியிலே ஓடும் புள்ளேறி –1-8-1-என்று அடிமை செய்யும் அளவன்றிக்கே லீலா விபூதியிலும் கூடத் தொடர்ந்து நாக பாச விமோசனம் பண்ணுவது
அருளாழி புட்க்கடவீர் அவர் வீதி ஒருநாள்-1-4-6- –என்றும்
அசுரர் உயிர் எல்லாம் தகர்த்துண்டு உழலும் புட்ப்பாகன்–8-10-6- -என்றும் சொல்லுகிறபடி ஆஸ்ரித ரக்ஷணத்துக்கும் தத் விரோதி நிரஸனத்துக்கும் அனுகூலனாம் படி கிருபாசமுத்திரமாய் இருப்பானோ ஒருவன் இறே -ஏவம் வித வைபவனான பெரிய திருவடி எழுந்தருளி இருந்தால் ஸிம்ஹாஸனமுமாய் உலாவி அருளும் போது வாஹனமுமாய் கிஞ்சித்கரித்து லப்த ஸ்வரூபனாய் இருக்கும்
வாஹனம்
விஸ்லேஷ தசையில் வெஞ்சிறைப்புள் (1-4-1)-என்று வெறுக்கும்படியும் அஞ்சிறைப்புள் -(பெரிய திரு 9-2-8) என்றும் சம்ஸ்லேஷ தசையில் ஸ்லாகிக்கும்படியும் அத்தலைக்கு அந்தரங்க வாஹனமாய்
த்வத் அங்கரி சம்மர்த்த கிணாங்க ஸோபியாய் விஜய த்வஜமாயிருக்கிற விநதா தநயன்
ஊரும் புட்கொடியும் அஃதே -10-2-3-
தாஸஸ் ஸஹா வாஹநம் ஆஸநம் த்வஜ -என்றும் சொல்லுகிற ஸர்வவித கைங்கர்யங்களிலும் அன்விதனாய் -சத்தை பெற்று இருக்கும் என்கிற அர்த்தத்தை ஆஸநம் வாஹநம் -என்கிற பத த்வயமும் பிரகாசிப்பிக்கிறது –
பொரு சிறைப்புள் உவந்தேறும் பூ மகளார் -1-9-3-
திருவிருந்த மார்வன் -நான்முகன் -92-
கருடன் மேற்கொண்ட-மூன்றாம் திரு -57-என்று சொல்லுகிறபடியே இவள் சேர்த்தியிலே இவர்கள் அடிமை செய்யும்படியை தர்சிப்பித்து அனுபவித்தார்கள் இறே -இத்தால் கருடா கருடாஸநா – (ஸ்ரீ ஸஹஸ்ர நாமம் -100-கருடை என்னும் பெயரை யுடையவள் -கருடனை ஆஸனமாக யுடையவள்) என்கிற ப்ரமாணார்த்தம் சொல்லப்பட்டது –
வேதாத்மா வாஹநம் -என்கையாலே
ஸ்வ குண அநு குணமாக ஸ்வ ஸ்வ தாமஸ வாஹனங்களையுடைய அதம தேவதா பார்யைகளில் இவளுக்கு உண்டான உத்கர்ஷம் தோற்றுகிறது –
பறவையேறு பரம் புருடா –5-4-2-என்கிறபடியே கருட வாஹனன் என்கை அவனுக்கு சர்வாதிகத்வ த்யோதகமானால் போலே இவளுக்கும் ஸர்வ உத்கர்ஷ ஹேதுவாய் இருக்குமிறே –
பணி பதி சய்யா ஆஸனம் வாஹனம் வேதாத்மா -என்கையாலே அன்யோன்யம் விருத்த ஜாதியரையும் யுகபத் அவிருத்தமாக அடிமை கொள்ளுகிற அகடித கடநா ஸாமர்த்யம் தோற்றுகிறது
புட் கொடியாய் தீ வாய் நாகணையில் துயில்வானே திருமாலே -பெரிய திரு -7-7-9-என்று சர்வாதிகத்வ லக்ஷணங்கள் மூன்றையும் சேர்த்து அனுபவித்தால் போலே -இவரும் காந்தஸ்தே –இத்யாதியாலே விஷ்ணு பத்நீத்வ சேஷ ஸாயித்வ கருட வாஹனத்வங்களை யுகபத் ஏவ அருளிச் செய்தாராயிற்று –
ஆக இப்படி அகில ஸூரி பரி ப்ருடரான சேஷ பெரிய திருவடி யுடைய சேஷத்வம் சொன்ன போதே சேஷாஸநர் முதலான அசேஷ சேஷ வர்க்கத்தினுடைய சேஷத்வமும் கைமுதிக நியாய ஸித்தம் இறே
த்வதீய புக்தோஜ்ஜித சேஷ போஜிநா
ஹதா கில கிலேசமலை -என்கிற ஸ்லோக த்வயத்தாலும் அகில ஸூரி வர்க்கங்களும் அகில ஜெகன் மாதாவான இவள் திறத்தில் அடிமை செய்யும் படியை இவர் தாமே அருளிச் செய்தார் இறே –
ஸ்ரீயா ஸஹ ஆஸீநம் -என்று இவளோட்டைச் சேர்த்தியிலே இறே அசேஷ பரிஜனமும் அடிமை செய்வது-இவருடைய ஸ்ரீ ஸூக்தியின் படியே பாஷ்ய காரரும் ஸ்ரீ வல்லப என்று தொடங்கி –சேஷ சேஷாஸந ப்ரமுக நாநாவித அநந்த பரிஜன பரிசாரிகா பரிசரித சரண யுகள –(ஸ்வாபி⁴மத நித்ய நிரவத்³யாநுரூப ஸ்வரூபரூப கு³ண விப⁴வ ஐஶ்வர்ய * ஶீலாத்³யநவதி⁴காதிஶய அஸங்க்²யேய கல்யாண கு³ண க³ண ஶ்ரீவல்லப⁴! * ஏவம்பூ⁴த பூ⁴மி நீளா நாயக!ஸ்வச்ச²ந்தா³நுவர்த்தி ஸ்வரூப ஸ்தி²தி ப்ரவ்ருʼத்தி பே⁴தா³ஶேஷ ஶேஷதைக ரதி ரூப * நித்ய நிரவத்³ய நிரதிஶய ஜ்ஞாநக்ரியைஶ்வர்யாதி³ * அநந்த கல்யாண கு³ண க³ண * ஶேஷ ஶேஷாஶந க³ருட³ ப்ரமுக² * நாநாவித⁴ * அநந்த பரிஜந பரிசாரிகா பரிசரித * சரணயுக³ள!-சரணாகதி கத்யம் -5)என்று அனுசந்தித்து அருளினார் இறே
தந் யாஸ்தே பரிசார கர்மணி ஸதா பஸ்யந்தி யே ஸூரய-என்று பட்டர் அருளிச் செய்தார் இறே –
இனித்தான் திருமகள் என்று இறே குற்றேவல் செய்வது-
சேஷ சேஷாஸநாதி ஸர்வம் பரிஜனம் பகவதஸ் தத்ததவஸ்தோசித பரிசர்யாயா மாஜ்ஞாப நந்த்யா -என்று இவருடைய ஆஜ்ஞ அனு வர்த்தந பரராய் இறே அசேஷ பரிஜனமும் இருப்பது –
அவன் தான்
ஸஹ பத்ந்யா -(கதே புரோஹிதே ராம ஸ்நாதோ நியத மாநஸ ஸஹ பத்ந்யா விஸாலாஷ்யா நாராயண முபாகமத் -அயோத்யா -6-1-புரோஹிதர் சென்றவுடன் ராமன் குளித்து மனதை அடக்கி பரந்த கண்களையுடைய பத்னியுடன் கூடியவனாய் நாராயணனை ஆராதனம் செய்ய அடைந்தான் -)என்று பத்நீ ஸஹிதனாய் ப்ராப்த விஷய பரிசர்யை பண்ணும் என்கையாலும் -ப்ரஹ்மாதிகள் ஸதயிதராய்க் கொண்டு தாஸ தாஸீ கணமாய் இருப்பர்கள் என்றும் மேலே சொல்லுகையாலும் இவர்களும் ஸ பத்நீகராய்க்கொண்டு விஷ்ணு பத்னிக்கு அடிமையாய் இருப்பர்கள் என்னுமிடம் ஸித்தம் இறே -இவர்கள் தான் அஞ்சலி விஸோகைகளோடும் காந்தி வாருணிகளோடும் ருத்ர அநு கீர்த்திகளோடும் ஸூத்ரவதியோடும் ஸூதர்சன பத்னி விஜய பத்னியோடும் கூட ஸ குடும்பமாக இறே ஜகத் குடும்பியான ஸ்ரீ யபதிக்கு அடிமை செய்வது-ஆகையிறே –பரிஜன பரிசாரிகா பரிசரித சரண யுகள –என்று அருளிச் செய்தது -இவர்கள் தான் பாகவத ஸத்கார தசையிலும் –பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவி -பூசித்து நல்குவது தம் தேவியரோடே சேர விறே
இனி இவர்களிலும் இவர்கள் மஹிஷிகள் -தேவ தேவ திவ்ய மஹிஷிக்கு அந்தரங்க பரிசாரகைகளாய் இருக்கும்படியை –ஸைன்ய துரீண பிராண ஸஹாயாம் ஸூத்ரவதீ மாஸிஸ்ரயமம்பாம் -ஸ்ரீ பதலாஷாலாஞ்சித ஸேவா ப்ரோதல ஸத்தோர் வல்லி விலாஸம்-1-51-ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய திருவடிகளில் சாத்தின செம்பஞ்சுச் சாறு தன்னால் அடையாளம் இடப்பெற்ற கைங்கர்ய அர்த்தமான ப்ரேரத வஸ்திரத்தினால் விளங்கா நின்ற கொடி போன்ற கையின் அழகை யுடையவளும் ஸ்ரீ சேனை முதலியாரின் பிரிய பத்னியுமான ஸ்ரீ ஸூத்ரவதி தேவி என்கிற தாயாரை ஆஸ்ரயித்தேன் -என்றும்
தார்ஷ்யா பக்ஷ திவதஸ்ய வல்லபாம் ருத்ரயா ஸஹ ஸூ கீர்த்திம் அர்ச்சயே -ஹர்ஷ பாஷ்பமபி கீர்த்தி மர்த்திநாம் யந் முகேந கமலா கடாஷயேத் -1-54-ஸ்ரீ பெரிய பிராட்டியார் அபேக்ஷகர்களுக்கு ஆனந்த பாஷ்யத்தையும் கீர்த்தியையும் எந்த பெரிய திருவடியின் பத்னிகளுடன் மூலமாக கடாக்ஷித்து உண்டாக்குவாரோ-ருத்ரா -ஆனந்த பாஷ்யம் பெறுகச் செய்பவள்-ஸூகீர்த்தி -சிறந்த கீர்த்தி அளிப்பவள்-இருவரும் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு நேத்ர ஸ்தாநீயர்கள் –-ஸ்ரீ பெரிய திருவடியின் பஷ மூலம் போல் காதலியான நிரந்தரமான ஆலிங்கனத்துக்கு உரியவர்களைப் பூஜிக்கிறேன்-என்று பட்டர் அருளிச் செய்தார் இறே
இனி பூமி நீளைகளும் இவளுக்கு சேஷ பூதராய் ஸேவித்து இருப்பர்கள் -ஸ்ரீ ஸஹாய உபாப்யாம் பூமி நீளாப்யாம் ஸேவித-(வைகுண்டே து பரே லோகே ஸ்ரீ ஸஹாயோ ஜனார்த்தன -உபாப்யாம் பூமி நீளாப்யாம் ஸேவித பரமேஸ்வர -வைகுண்டமாகிற மேலான உலகத்தில் ஸ்ரீ தேவியுடன் கூடிய பகவான் பூமி நீளைகள் இருவராலும் ஸேவிக்கப்பட்டு விளங்குகிறாள் – )என்றது இறே
மாதவ த்வயி –அஹம் ஸிஷ்யா ச தாஸி ச பக்தா ச -(ஸ்ரீ வராஹ புராணம் -ஸ்ரீ மந் நாராயணனே பூமியாக நான் உன்னிடத்தில் சிஷ்யையாகவும் தாஸியாகவும் பக்தையாகவும் இருப்பவள் -)என்று தான் அருளிச் செய்தாள் இறே
உத்புல்ல பங்கஜ தடாக மிவோபயாநி ஸ்ரீ ரெங்கராஜமிஹ தக்ஷிண ஸவ்யஸீம்நோ -லஷ்மீம் விஹார ரசிகாமிவ ராஜ ஹம்ஸீம் சாயாமிவாப் யுதயிநீமவ நீஞ்ச தஸ்யா -(ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -63-இந்தக் கர்ப்ப க்ருஹத்தில் மலர்ந்த தாமரைகளை யுடைய பொய்கை போன்றுள்ள ஸ்ரீ ரெங்கநாதனை ஆஸ்ரயிக்கக் கடவேன் -வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் விளையாடுகிற ராஜ அன்னப் பேடை போன்றுள்ள பெரிய பிராட்டியாரையும் மேன்மேலும் வளர்கின்றதான அவளுடைய நிழல் போல் இருக்கும் பூமிப்பிராட்டியையும் அடையக் கடவேன்)என்று இவளுக்குப் பதச் சாயை போலே பரதந்த்ரர்களாய் இருப்பர்கள் என்றும்
புஷ்பாங்க ராகங்களோ பாதி போக உபகரணங்களாய் -ஸ்தந பாஹு த்ருஷ்டிகள் போலே அவயவ பூதராய் இறே அல்லாத மஹிஷீ வர்க்கங்கள் இருப்பது என்றும் பட்டர் அருளிச் செய்து அருளினார் இறே
குழல் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும் நிழல் போல்வனர் -திருவுரு -3-என்னைக் கடவது இறே
ஆகவே பூமி நீளைகள் முதலான மஹிஷிகளும் திருவடி திருவனந்தாழ்வான் முதலான ஸூரி வர்க்கமும் கரை கண்டோர் -திருவாய் -8-3-10-என்கிற முக்தரும் இவளுக்கு சேஷபூதர் என்று சொல்லுகையாலே நித்ய விபூதி யடங்க இவளுக்கு சேஷமாய் இருக்கும் என்னுமிடம் தர்சிக்கப்பட்டது -அநந்தரம் லீலை விபூதியில் அடங்க இவளுக்கு சேஷமாய் இருக்கும் என்னுமிடத்தை அருளிச் செய்ய உபக்ரமித்து -அதில் பிரதமம் லீலா விபூதி காரணமான மூலப்பிரக்ருதி இவளுக்கு சேஷமாய் இருக்கும்படியைத் தர்சிப்பித்து அருளுகிறார் -யவனிகா மாயா ஜகன்மோஹிநீ
ஜெகன் மோஹிநீ மாயா தே யவனிகா
அநாதி அஞ்ஞானத்தாலே ஜகத்தை மோஹிப்பிக்கக் கடவதாய் -விசித்திர கார்யகராண உபகரணமாகையாலே மாயா ஸப்த வாஸ்யையாய் இருக்கிற மூலப்பிரக்ருதி ஸுந்தர்ய லாவண்ய யவ்வநாத் அநந்த குண கண விஸிஷ்டமான உன்னுடைய திவ்ய மங்கள விக்ரஹமும் தத் ஆதாரமான திவ்யாத்ம ஸ்வரூபமும் பிரதிகூலர் த்ருஷ்டி கோசாரமாகாமல் மறைக்கைக்குத் திரையாய் இருக்கும் -திரையாவது-அந்தர் வர்த்தி பதார்த்தங்களை பஹிச்சரருக்குத் தெரியாதபடி திரோதானம் பண்ணுவதாய் -ஸூக்ல கிருஷ்ண ரக்த தந்துக்களால் சமைக்கப்பட்டு நாநா வர்ணங்களாலே விசித்ரையாய் அத்யாச்சர்ய விசிஷ்டையாய் இருபத்தொன்று -இதுவும் திவ்ய தம்பதிகளுடைய தியாத்ம ஸ்வரூபத்தையும் திவ்ய மங்கள விக்ரஹத்தையும் திவ்ய அவயவங்களையும் அநாஸ்ரிதருக்குக் கோசரியாதபடி அஞ்ஞானத்தை விளைத்துத் திரோதாயகமான திரஸ்கரணியாய் இருக்கையாலும்
லோஹித ஸூக்ல க்ருஷ்ணாம்(அஜா மேகாம் லோஹித ஸூக்ல க்ருஷ்ணாம் பஹ்வீம் ப்ரஜாம் ஜநயந்தீம் ஸ ரூபாம் அஜோ ஹ்யேகோ ஜூஷமாணோ அநு ஸேதே ஜஹாத்யேநாம் புக்த போகாமஜோ அந்ய -தைத் நா -10-5-சிவப்பு -ராஜஸம் வெளுப்பு ஸத்வம் கறுப்பு தாமஸம் நிறங்களுடன் -குணங்களுடன் -கூடியதாய் -தன் போன்ற பல பிரஜைகளை ஸ்ருஷ்டிப்பதாய் -பிறப்பற்றதுமான பிரக்ருதியாகிற ஒரு ஸ்த்ரீயைப் பிறப்பற்றவனாகிற ஒரு ஸம்ஸாரி ஜீவன் ப்ரீதியுடன் புஜிக்கிறான் -இவனைப்புஜித்த மற்றொரு முமுஷு ஜீவன் இவனை விட்டுச் செல்கிறான் -) –என்கிறபடியே குணத்ரய விஸிஷ்ட விசித்திர கர்ம ஸூத்ரத்தாலே கட்டுப்பட்டு விசித்திர ஸ்ருஷ்டியைப் பண்ணுகையாலே ஆச்சர்ய தமையாய் இருக்கையாலும் திரையாக நிரூபிக்கிறார் –
ஜகன் மோஹிநீ
பரமாத்மா விஷயமாகவும் பிரத்யாகாத்ம விஷயமாகவும் ஸ்வ விஷயமாகவும் அந்யதா ஞான விபரீத ஞானங்களைப் பிறப்பித்து -அத்தாலே ஜகத்தை மோஹிப்பிக்கையாலே -ஜகன் மோஹிநீ-என்கிறார் –பரமாத்மாவின் இடத்தில் அந்யதா ஞானம் விபரீத ஞானங்களைப் பிறப்பிக்கையாவது -ஸ்ரீ யபதியாய் -நிகில ஹேய ப்ரத்யநீக கல்யாண குண விஸிஷ்டனாய் -உபய விபூதியில் நிர்வாஹகனாய் இருக்கிற புருஷோத்தமனை -நிர்விசேஷ சிந் மாத்ர வஸ்து -என்று மாயாவாதம் சொல்லுதல் -சித் அசித் ஈஸ்வரர்கள் மூன்றும் ஏகத்ரவ்ய பரிணாமம் -என்று பேதாபேதம் சொல்லுதல் -கர்ம அனுஷ்டானத்துக்குச் சேதனன் உண்டாகில் பல பிரதானத்துக்குக் கர்மம் உண்டாகில் இனி ஈஸ்வரன் ஏதுக்கு -என்று தத் ஸத் பாவத்தை இசையாது ஒழிதல் -ஏவமாதிகளான புத்திகளைப் பிறப்பிக்கை –
பிரத்யாகாத்மாவின் இடத்தில் அந்யதா ஞானம் விபரீத ஞானங்களைப் பிறப்பிக்கை யாவது –அநாத்மன் யாத்ம புத்திர்யா -(அநாத்மன் யாத்ம புத்திர்யா சாஸ்வே ஸ்வமிதி யா மதி ஸம்ஸார தரு ஸம்பூதி பீஜமேதத் த்விதா ஸ்திதம் -விஷ்ணு பு -6-7-11-ஆத்மா அல்லாத தேஹத்தில் ஆத்மா என்னும் புத்தியும் தனதல்லாத வஸ்துவில் தன்னுடையது என்னும் புத்தியும் ஸம்ஸாரமாகிற விஷ வ்ருக்ஷத்தில் விருத்திக்கு இருவகையாக விருக்கும் விதையாகும் -)-என்கிறபடியே தேஹமே ஆத்மா என்னுதல் -இந்திரியாதிகளை ஆத்மா என்னுதல் -தேஹ பரிணாமம் என்னுதல் -அந்ய சேஷம் என்னுதல் -ஸ்வ தந்த்ரம் என்னுதல் -ஏவமாதியான விப்ரதிபத்திகளை விளைக்கை –ஸ்வ விஷயமாக விபரீத தீயை விளைக்கை யாவது -ஸ்வ கார்யமான ஸப்தாதிகளிலே போக்யத்வ புத்தியைக் பிறப்பிக்கை -இவ்வர்த்தத்தை பாஷ்யகாரர் பகவத் ஸ்வரூப திரேதாந கரீம் விபரீத ஞான ஜநநீம் ஸ்வ விஷயா யாஸ் ச போக்ய புத்தேர் ஜநநீம் —மாம் தாரய -சரணாகதிகத்யம் -12-(பகவத் ஸ்வரூபத்தை மறைப்பதும் விபரீத ஞானத்தை உண்டாக்குவதும் தன் விஷயமாக போக்ய புத்தியை விளைப்பதுமான பிரகிருதியில் இருந்து என்னைத் தாண்டுவிப்பாயாக )என்று அருளிச் செய்தார் இறே –
மாயா ஸப்தத்தாலே
மாயாந்து ப்ரக்ருதிம் வித்யாந் மாயிநம் து மஹேஸ்வரம்-ஸ்வே -4-10 –(ப்ரக்ருதியை ஆச்சார்யமான ஸ்ருஷ்டிக்கு ஹேதுவாய் இருப்பதால் மாயை என்றும் அந்த மாயையைத் தூண்டுபவனை மஹேஸ்வரன் என்றும் அறியக் கடவன்) –என்கிறபடியே மூலப் பிரக்ருதியைச் சொல்கிறது -இது தான் மாயை யாகையாலே இறே ஜகன் மோஹினியாயிற்று –அநாதி மாயயா ஸூப்தோ யதா ஜீவ ப்ரபுத்யதே ( கௌட காரிகை -21-அநாதி மாயையாகிற பிரக்ருதியிலே கட்டுண்டு உறங்குகிற ஜீவன் எப்போது உணர்கிறானோ )என்னைக் கடவது இறே -அஞ்ஞான ஹேதுவாய் இறே இதுதான் இருப்பது –
ஆக இப்படி மாயா ஸப்த வாஸ்யையாய் -ஜகன் மோஹினியான மூலப்ப்ரக்ருதி யவனிகா ரூபேண கிஞ்சித்கரித்து சேஷமாய் இருக்கும் என்றதாயிற்று -யவனிகையாகில் அந்தரவர்த்திகளோடு பஹிச் சாரரோடு வாசியற த்ருஷ்ட்டி பிரசரண விரோதத்தாலே அந்யோன்ய அவலோகந ரோதினியாய் இறே இருப்பது -அப்படியே பிரக்ருதியை யவனிகையாக நிரூபிக்கும் போது பிராட்டிக்கும் கர்ம வஸ்யத்வமும் அத்தாலே பகவன் மாயா திரோஹித ஞானத்வமும் அங்கீ கரித்ததாய் விடுமிறே -ஆகையால் இது சேரும்படி என் என்னில்-தச் சேஷபூதையாய் -தந் நியாம்யையாய் -தத் அதீன வியாபாரத்தையுமுடைத்தான ப்ரக்ருதி ஸ்வாமினியாய் நியாமகையுமாய் இருக்கிற இவளுடைய ஸர்வ விஷய த்ருஷ்ட்டி திரோதானம் பண்ண மாட்டாது இறே
மாயயா ஸந் நிருத்த -என்று கொண்டு கர்ம வஸ்யையாக விறே மாயா திரோஹித ஸ்வ ப்ரகாஸையாய் இருப்பது -ஈஸ்வரனைப் போலே அகர்ம வஸ்யையான இவளுக்குத் திரோதானம் கூடாது இறே -ஆகையாலே பிரதிகூலருக்கும் தத் ஸ்வரூப ரூபாதிகள் யாதாவாகத் தோற்றாதபடி திரோதானம் பண்ணுமத்தைப் பற்றத் திரஸ்கரணியாக ரூபித்தவித்தால் ஒரு விரோதமில்லை
ஆக-கீழ் நித்யவிபூதியிலுள்ளார் இவளுக்கு சேஷபூதராய் இருக்கும்படியை தர்சிப்பித்து அருளி -லீலா விபூதி காரணமான மூலப்ப்ரக்ருதி யினுடைய சேஷத்வத்தை அருளிச் செய்து -ததாராப்த அண்டாந்தர் வர்த்திகளாய் தாத்ருஸ ப்ரக்ருதி மோஹிதராய் -கர்ம வஸ்யருமான ப்ரஹ்மாதிகள் ஸ பத்நீகராய்க் கொண்டு இவளுக்கு அடிமையாய் இருக்கும்படியை அருளிச் செய்கிறார் மேல் -ப்ரஹ்ம ஈஸாதீத்யால்
திரை வளைத்து இருக்க வேண்டும்படி லோக விலக்ஷணரான திவ்ய தம்பதிகளைச் சொல்லி ஜாக்ரதஸ் ஸ்வ பதச்ச -என்று கொண்டு திரைக்குள்ளொடு புறம்போடு வாசியற உடலாய் மன்னி வழுவிலா அடிமை செய்து வாழும் அந்தரங்கரைச் சொல்லி
திரை தன்னைச் சொல்லி-திரைக்குப் புறம்பு நின்று ஸேவித்து இருக்கும் அவர்களைச் சொல்லுகிறது –
கடிக்கமலத்துள் இருந்தும் காண்கிலான் இறே
நீறாடி தான் காண மாட்டாத
கார் செறிந்த கண்டத்தான் எண் கணான் காணான் அவன் வைத்த பண்டைத் தானத்தின் பதி -என்று அருளிச் செய்தார்கள இறே ஸர்வஞ்ஞரான ஆழ்வார்கள் –
நெற்றி மேல் கண்ணானும் நிறை மொழி வாய் நான்முகனும் நாட்டம் ஆயிரத்தானும் தாந்தாம் கற்ற பெற்றியால் வணங்கும் அத்தனை போக்கி கரையருகே நின்று கூப்பிடுகிறவர்கள் கரை காண மாட்டார்கள் இறே –சிவற்கும் திசை முகற்கும் தாம் அறியலாமோ –என்னக் கடவது இறே
ப்ரஹ்ம ஈஸ இத்யாதி
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் –(யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹிணோதி தஸ்மை -தம் ஹ தேவமாத்மபுத்தி ப்ரஸாதம் முமுஷுர் வை சரணமஹம் ப்ரபத்யே –தை நா -11-எவன் பிரமனை முன் படைத்தானோ எவன் வேதங்களையும் அவனுக்கு உபதேஸித்தானோ அப்படிப்பட்ட தேவனும் தன் விஷயமான ஞானத்தை பிரகாசிப்பவனுமான பரமபுருஷனை மோக்ஷமடைய விரும்பும் நான் சரணம் அடைகிறேன் – )என்கிறபடியே திரு நாபீ கமலத்தில் அவ்யவதாநே பிறக்கையாலே உனக்குப் புத்ரனான ப்ரஹ்மா தஜ்ஜ்யேஷ்ட புத்ரனாகையாலே உனக்குப் பவ்த்ரனான ருத்ரன் –
ஆதி ஸப்தத்தாலே –ஸேந்தர (ஸ ப்ரஹ்மா ஸ ஸிவஸ் சேந்தரஸ் ஸோ அக்ஷர பரம ஸ்வராட் -தை நா -11-அவனே ப்ரஹ்மாவுக்கும் அந்தர்யாமி -அவனே சிவனுக்கும் அந்தர்யாமி -அவனே இந்திரனுக்கும் அந்தர்யாமி -அவனே அழிவற்றவனாய் மேலானவனாய் கர்ம வஸ்யன் இல்லாதவனுமான முக்தனுக்கும் அந்தராத்மா )-தளிரொளி இமையவர் தலைவன் -நின்ற சசிபதியை -வெண் பகட்டில் ஒருவன் -என்று இவர்களோடே ஸஹ படிக்கும் படியான நிலைமையுடைய இந்த்ரனையும் –இந்த்ரனுள்ளிட்ட தேவர் குழாத்தையும் சொல்லுகிறது –
ஆக இப்படி விபூத ஸ்ரேஷ்டரான ப்ரஹ்ம ருத்ரர்கள் முதலான தேவதா ஸமூஹம் உனக்கும் தாஸ கணமாய் -தத் பத்னிகளான ஸரஸ்வதீ ருத்ராணீ இந்த்ராணீ ப்ரக்ருதிகளும் தத் தாஸீ பூதரான அப்சரஸ் ஸமூஹங்களும் உனக்கும் தாஸீ கணமாய் தாஸ கிருத்யத்திலே அந வரத அந்வயத்தை உடையராய்க் கொண்டு ஸத்தை பெற்று இருப்பர்கள் -இத்தால் நீலார் கண்டத்தம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும் –சேலேய் கண்ணார் பலர் சூழ ஸேவித்து இருக்கும்படியைச் சொல்லிற்று ஆயிற்று –
திருமாலைக் கை தொழுவர் –
ஹிரண்ய கர்ப்பஸ் ஸமவர்த்த தாக்ரே பூதஸ்ய ஜாதஸ் பதிரேக ஆஸீத் -(முதலில் பூதங்களுக்கு எல்லாம் ஒரே பதியான ஹிரண்யகர்ப்பன் -ஜீவாத்ம ஸமூஹத்தைத் தன்னுள் கொண்ட பகவான் -இருந்தான் )என்றும்
யோ தேவாநாம் ப்ரதமம் புரஸ்தாத் விஸ்வாதிகோ ருத்ரோ மஹர்ஷிஸ் ஹிரண்ய கர்ப்பம் பஸ்யதி ஜாயமாநம் ஸ நோ தேவஸ் ஸூபயா ஸ்ம்ருத்யா ஸம்யுநக்து -(ஸம்ஸாரமாகிற புண்ணைப் போக்கடிப்பதால் ருத்ர ஸப்த வாஸ்யனாய் -மஹா ஞானியான எந்த பகவான் தேவர்களுக்குள் முதல்வனான ஹிரண்யகர்ப்பன் ஆதியில் பிறக்கும் போது அவனைக் கடாஷிக்கிறானோ அந்தப் தேவன் நமக்கு நல்ல புத்தியை அளிக்கட்டும் -) என்றும் சொல்லுகிறபடியே காரணத்வ நிபந்தநோத் கர்ஷ தர்சனத்தாலே ஈஸ்வரத்வ சங்காஸ் பதரான ப்ரஹ்ம ருத்ராதிகளோடு தச்சங்கா ஆநஸ்பதரான இந்த்ராதிகளோடு வாசியற ஸர்வரும் இவளுக்கு தாஸ பூதர் என்று தோற்றுகைக்காக -ஸூர வ்ரஜ -என்கிறார் -இங்கனே யாகில் (ஸ்ருஷ்ட்டி ஸம்ஹார )ஜகத் காரண பூதராக ப்ரமாண ப்ரஸித்தராய் இருக்கிற இவர்கள் இம்மிதுனத்துக்கு இனமினமாக வழிபாடு செய்வார்கள் என்று சொல்லுகை கீழ்ச் சொல்லுகிற ப்ரமாணங்களுக்கு விருத்தமன்றோ என்னில் -கீழ்ச் சொன்ன ஹிரண்யகர்ப்ப ருத்ர ஸப்தங்கள் யோகத்தாலும் அபர்யவஸாந வ்ருத்தியாலும் நாராயணனை ப்ரதிபாதிக்கிறன வாகையாலே விரோதமில்லை –
ஆகையிறே -ந ப்ரஹ்மா நேஸாந -என்று (ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் -ந ப்ரஹ்மா நேஸாந –தத்தேஜோ ஹிரண்யம் அண்டம் -தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ அஜாயதே –த்ர்யக்ஷ ஸூலபாணி புருஷோ அஜாயத -மஹா உபநிஷத் -நாராயணன் ஒருவரே முதலில் இருந்தார் -பிரமனும் இல்லை சிவனும் இல்லை -அவரிடமிருந்து ஸூவர்ண மயமான அண்டம் யுண்டாயிற்று -அதில் நான்முகனான பிரமன் பிறந்தான் –முக்கண்ணனாய் ஸூல பாணியான புருஷன் உண்டானான் )இவர்களை ஸம்ஹாரியராகச் சொல்லி
அத புருஷோ ஹ வை நாராயணோ ஆகாமயந ப்ரஜாஸ் ஸ்ருஜேயேதி -நாராயணாத் இந்த்ரோ ஜாயதே நாராயணாத் துவாதச ஆதித்யா ருத்ரோ வசவஸ் ஸர்வாணி சந்தாம்ஸி -என்றும்(நாராயண உபநிஷத் -புருஷனான நாராயணன் பிரஜைகளை ஸ்ருஷ்ட்டிக்கக் கடவேன் என்று ஸங்கல்பித்தான் -நாராயணனிடம் இருந்து பிரமன் பிறந்தான் -நாராயணனிடம் இருந்து ருத்ரனும் யுண்டானான் -நாராயணனிடம் இருந்து இந்திரன் பிறந்தான்-நாராயணனிடம் இருந்து பன்னிரண்டு ஆதித்யர்களும் ருத்ரர்களும் வஸூக்களும் எல்லா வேதங்களும் தோன்றினர் )
தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ அஜாயத –
த்ரி யஷச் ஸூல பாணி புருஷோ அஜாயத -என்று இவர்களை ஸ்ருஜ்யராகச் சொல்லிற்று -ஆகையிறே -ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் -என்று நாராயணனே ஸகல ஜகத் காரண பூதன் -என்று உபநிஷத்துக்கள் ஓதிற்று –
நான்முகக் கொழு முளை ஈன்று முக்கண் ஈசனோடு தேவு பல நுதலி மூவுலகும் படைத்த யுக்தி மாயக்கடவுள் மா முதலடியே -என்றும்
நான்முகன் தன்னோடு தேவருலகோடு உயிர் படைத்தான் -என்றும் இவ்வர்த்தத்தை த்ரமிட உபநிஷத்து தர்சிப்பித்தது இறே
ஹஸ்யோதரே ஹர விரிஞ்சி முகஸ் ப்ரபஞ்ச -என்றும்
விபர் நாபீ பத்மோ விதி சிவ நிதாநம் –என்றும் (த்ரயோ தேவாஸ் துல்யாஸ் த்ரிதயமத் வைதமதிகம் த்ரிகாதஸ்மாத் தத்த்வம் பரமிதி விதர்க்கான் விகடயன் விபோர் நாபீ பத்மோ விதி சிவ நிதானம் பகவத ததன்யத் ப்ரூ பங்கீ பரவத்தி ஸித்தாந்தயதி யஸ் -ர ஸ்த 1-116-மும்மூர்த்திகளும் சமர் என்றும் இம்மூன்று மூர்த்திகளும் ஒன்றே என்றும் இம்மூன்றைக்காட்டிலும் மேற்பட்டதொன்றே பரதத்வம் என்றும் சொல்லும் விப்ரபத்திகளைப் போக்கடிப்பதாய் -பிரமருத்ரர்களுக்கு மூலக்கிழங்காய் இருக்கிற பெரிய பெருமாளுடைய நாபிக்கமலமானது அவனை ஒழிந்த எல்லாப்பொருள்களும் அவளுடைய புருவ நெறிப்புக்கு வசப்பட்டு இருப்பது என்றும் நமக்கு முடிவு கட்டித்தருகின்றது)ஆழ்வார்களை அடியொற்றின ஆச்சார்யர்களும் இப்படி தர்சிப்பித்தார்கள் இறே –
இப்படி உபய உபநிஷத் ப்ரஸித்தமான ஜகத் காரணத்வத்திலே -ஸ்திர சர ரசநா தாரதம்யத்திலே ப்ரமாணமான ப்ரூ பங்கத்தையுடையளாய் -ஸ்வர்க்க துர்க்கதியாதிகளைப் பண்ணும் போது ஸ்வ இங்கித பராதீனனாயக் கொண்டு ஸர்வத்தையும் பண்ணும்படி தத் வல்லபையாய் -அவனுடைய -சித் அசித் விதாந வ்யாஸனத்தை ஸார்த்த மாக்குமவளாய் -தத் பத்னியாகையாலே ஸர்வ லோகத்துக்கும் மாதாவாய் -அவன் பிதாவாகையாலே ஸர்வருக்கும் பிதா மாதாக்கள் –மாதவ என்னும்படி (ஸர்வேஷாமேவ லோகாநாம் பிதா மாதா ச மாதவ கச்சத்வமேகம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -ஆரண்ய பர்வம் -192-56-புருஷ ஸ்ரேஷ்டர்களே எல்லாமே உலகங்களுக்கும் தந்தையும் தாயும் லஷ்மீ நாதனே -சரணமடையத்தகுந்த இவனை சரணமடையுங்கள் )திருமால் இறே -ஆகையிறே -திசைமுகனார் தங்களப்பன் -பெரிய திருமொழி -2-2-7–என்றும் –நான்முகற்குத் தந்தை காண்- -11-5-2- என்றும் ப்ரஹ்மாதிகளுக்கும் பிதா வென்றும் –பித்ரு தேவோ பவ -என்கிறபடியே -ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்-நான்முகன் -96- -என்றும் –பரதேவதை யாகவும் அருளிச் செய்தது -இவர்கள் தாங்களும் எந்தை எமக்கு அருள் என நின்றும்-பெரிய திரு மொழி -4-1-4 -என்று பித்ருத்வத்தை அனுசந்தித்து —எம்மை — நின்னுள்ளே தோன்றிய இறைவா –திருவாய் -2-2-10-என்று பித்ருத்வ ப்ரயுக்தமான சேஷ சேஷி பாவ ஸம்பந்தத்தை உணரந்து –இறையாதல் அறிந்து ஏத்திக் கந்த மலர் கொண்டு தொழுது -மந்திர மா மலர் கொண்டு மறைந்துவராய் -அந்தியம் போதிலே திருவந்திக் காப்பிட்டு -சிற்றம் சிறுகாலையிலே வந்து திருப்பள்ளி உணர்த்தி -அலங்கலம் தொடையல் கொண்டு -மா நிதி கபிலை முதலான படி மெய்க்கலம் காண்டற்கு ஏற்பன வாயின கொண்டு -என்று சொல்லும்படி ஆராத உபகரணங்களை எல்லாம் ஏந்திக்கொண்டு அடியிணை பணிந்து -வண்ணச் சிறு தொட்டில் வரக்காட்டுவது
இடைவிரவிக் கோத்த உடையார் கன மணியோடு ஒண் மாதுளம் பூ விடு தருவது
எழிலுடைக் கிண் கிணி தந்துவனாய் நிற்பது –
சங்கின் வலம்புரியும் அங்கைச் சரி வளையும் போத்தருவது
அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு தொழுவது
ஓதக்கடலின் ஒளி முத்தின் ஆரமும் சாதிப்பவளமும் சந்தச் சரிவளையும் விடு தருவது
ஆகவிப்படி நீரேறு செஞ்சடை நீல கண்டனும் நான்முகனும் முறையால் சீரேறு வாசகம் செய்ய நின்ற திருமால் -பெரியாழ்வார் -4-1-5-என்கிறபடியே இவர்கள் எல்லாரும் சேஷ சேஷி பாவ முறையாலே ஸ்ரீயப்பதிக்கு அடிமை செய்து -என் திரு மார்வன் தன்னை -திருவாய் -7-6-7-என்று தொடங்கி அருளிச் செய்த படியே இவர்கள் தங்கள் மஹிஷிகளோடே விசிஷ்டத்துக்குப் பிரகாரமாய் இருக்கையாலே இருவருக்கும் சேஷபூதராய் இருக்கும்படியைத் திரு உள்ளம் பற்றி-ப்ரஹ்ம ஈஸாதி ஸூர விரஜஸ் ஸதயிதஸ் த்வத் தாஸ தாஸீ கண -என்கிறார் –
தாஸீ கண -லோகத்திலே வனஸ்பதி ப்ருஹஸ்பதி தாரதம்ய ஹேதுவான பரிபூர்த்தியை யுடைய பாரதியைப் பாத சேடியாயுடையவளாயிறே -மலைமகளுக்குத் தலைமகளான கலைமகள் மலர் மகளுக்கு மனை யடிமை என்றபோதே மற்றுள்ளார் அடிமை என்னுமிடம் சொல்ல வேண்டா விறே
த்ரய ஏவாதநா ராஜன் பார்யா -என்கிற நியாயத்தாலே ப்ரஹ்மாதிகள் சேஷபூதர் என்றபோதே தத் பத்னிகளுக்கும் சேஷத்வம் ஸித்தமாய் இருக்க-ஸதயித -என்று விசேஷித்து அருளுவான் என் என்னில் -ப்ரஹ்மாதிகள் பக்கல் சிலருக்கு ஈஸ்வரத்வ சங்கா பிராந்தியாலே தத் பத்நிகள் பக்கலிலும் லஷ்மி யம்சம் பிராந்தி உண்டாய் இருக்குமிறே -தந் நிராகரண அர்த்தம் ஸதயித –என்று விசேஷித்து அருளுகிறார் -அவர்கள் பக்கல் ஈஸ்வரத்வ சங்கா நிராகரண ஸ்ருத்யாதிகளாலே தத் பத்நிகள் பக்கல் லஷ்மி யம்ச வாதமும் நிராக்ருதமிறே என்னில் -தாத்பர்யத்தாலே ஸித்திப்பதிலும் சப்ததஸ் சொல்லுகை மிகவும் ஸ்பஷ்டமாய் இருக்குமிறே -அது தோன்ற இப்படி அருளிச் செய்யக் குறையில்லை -ஆக இப்படி பிரதானரான ப்ரஹ்மாதிகள் இவளுக்கு சேஷபூதரானால் இவ்வருகு உள்ளார் சேஷபூதர் என்னுமிடம் கிம்புநர் நியாய ஸித்தம் இறே –ஆக உபய விபூதியில் இவளுக்கு சேஷமென்று தர்சிப்பித்தாராயிற்று –
இப்படி காந்தஸ்தே புருஷோத்தம-என்று கர்த்ரு அர்த்தத்தையும்
பணி பதி —– தாஸீ கண -என்று கர்மண் யர்த்தத்தையும் உடையவளா கையாலே ஸ்ரீ என்றும் உனக்குத் திருநாம என்கிறார் –ஸ்ரீரித்யேவ ச நாம தே -இத்யாதியாலே
ஸ்ரீயத இதி ஸ்ரீ –என்றும்
ஸ்ரயத இதி ஸ்ரீ –-என்றும் சொல்லுகிற வ்யுத்பத்தி த்வயார்த்தமும் உண்டானாலிறே ஸ்ரீ ஸப்தம் ஸார்த்தமாவது -அன்றிக்கே கீழ்ச் சொன்ன விஷ்ணு பத்நித்வத்துக்கும் உபய விபூதியில் சேஷித்வத்துக்கும் ஸ்ருதி ஸ்ம்ருதிகள் தேட வேணுமோ -ஸர்வ சேஷித்வ வாசகமாய் உனக்கு அசாதாரணமான திரு நாமமே போதாதோ -என்கிறார் ஆகவுமாம் –
ஸ்ரீ ரித்யேவ ச நாம தே பகவதி –
அந்தர் பஹிஸ் ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண -என்றும்
எண் பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் -என்றும்
பொங்கு புணரி -பெரிய திருமொழி -6-10-9-என்றும் அர்த்தத்தைச் சொல்லிப் பின்பு ஸப்தத்தைச் சொன்னால் போலே
இங்கும் ஸ்ரீ ஸப்தார்த்தத்தை முந்துற அருளிச் செய்து -அநந்தரம் ஸ்ரீ ஸப்தத்தை அருளிச் செய்கிறார் –ஸ்ரீரிதி -என்று
தேவோ நாம ஸஹஸ்ரவாந் -என்று பேராயிரம் கொண்டதோர் பீடுடையனானாலும் நாராயணன் என்றும் அவனுக்கு நிரூபகமானாப் போலே –லஷ்மீ என்றும் தொடங்கி அநேகம் திருநாமங்கள் உண்டே யாகிலும் இவளுக்கு அசாதாரண நிரூபக ஸ்ரீ என்கிற திருநாமமாகையாலே –ஸ்ரீரித்யேவ ச நாம தே -என்கிறார் –ஸர்வாதிக வஸ்துவுக்கு வாசக ஸப்தம் இது வல்லதில்லாமையாலே -ஸ்ரீரித்யேவ-என்று அவதரிக்கிறார் –
ஸ்ரீங் ஸேவாயாம் -ஸ்ரு விஸ்தாரே -ஸ்ரு-ஹிம்ஸாயாம் -ஸ்ரு-ஸ்ரவணே -இத்யாதி தாது பேதத்தாலே ஸ்ரீ ஸப்தத்துக்கு அநேக அர்த்தங்கள் உண்டாயிறே இருப்பது (தொண்டு செய்தல் -குணங்களைப் பெருக்குதல் -பாபங்களை ஹிம்ஸித்து-தொல்லை செய்தல் -காதால் கேட்பது )-அவ்வர்த்த பேதங்களைப் பற்ற நிருக்தி பேதங்கள் உண்டாய் இருக்குமிறே -ஆகையாலே –ஸ்ரீ யத இதி ஸ்ரீ -ஸ்ருணாதீதி -ஸ்ரீ -ஸ்ருணோதீதி -ஸ்ரீ -ஸ்ராவயதீதி -ஸ்ரீ -இத்யாதி நிருத்திகள் இவ்விடத்திலே விவஷிதங்கள் –
ஸ்ருணாதி நிகிலான் தோஷான் – ஸ்ரூணாதி ச குணைர் ஜகத் -ஸ்ரீ யதே ச அகிலைர் நித்யம் ஸ்ரயதே ச பரம் பதம் -ஸ்ரயந்தீம் ஸ்ரீய மாணாஞ்ச ஸ்ருண்வதீம் ஸ்ருணதீமபி -என்று இவைகள் தான் ப்ரமாண ப்ரஸித்தங்களாய் இறே இருப்பது -அகில சேதனருக்கும் ஆஸ்ரயணீயையாய் -தான் அவனை ஆஸ்ரயித்து லப்த ஸ்வரூபையாய் -ஆஸ்ரித தோஷங்களை ஹிம்ஸித்து -அத்வேஷாதி குணங்களை விஸ்தரிப்பித்து -ஆஸீததைன்ய யுக்திகளை ஸ்ரவித்து -இவர்களை அங்கீ கரிக்கைக்கு அனுகுணமான வசனங்களை அவனை ஸ்ரவிப்பிக்கை முதலான ஆகாரங்கள் புருஷகார பூதையான பிராட்டிக்கு அவஸ்ய அபேக்ஷிதங்கள் வாகையாலே இந்நிருக்திகள் எல்லாவற்றையும் ஸ்ரீ ஸப்தத்துக்கு அர்த்தமாக ஆச்சார்யர்கள் அனுசந்திப்பார்கள் –
இப்படி கீழ்ச் சொன்ன ஆகாரங்களாலே அவனுக்கும் பூஜ்யையாய் இருக்கும்படியை அருளிச் செய்கிறார் –பகவதி -என்று –தத்ர பூஜ்ய பதார்த்த யுக்தி பரிபாஷா ஸமந்வித -என்று பகவச் சப்தம் பூஜ்ய வாசியாய் -அகில சேதனருக்கும் பூஜ்யனான அவன் தனக்கும் பூஜ்யையாய் இருக்கும் என்றபடி –பகவந் நாராயணனுக்கு பூஜ்யையாகையாலே இறே -பகவதீம் என்றும் அருளிச் செய்தது -ஆகையிறே –நன் மார்பின் மேலும் -என்று அர்ச்சிக்கிறது -இப்படி ஸ்வரூபத்தாலும் குணத்தாலுமாயிருக்கும் ஞான ஸக்த்யாதி குணங்களையுடையளாய் ஹேய குண ரஹிதையுமாய் இருக்கையாலே –பகவதி -என்கிறார் –
மைத்ரேய பகவச் சப்தஸ் சர்வ காரண காரணே
சம்பர்த்தேதி ததா பர்த்தா பகாரோ அர்த்த த்வ்யாந்வித
நேதா கமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததா முனே
ஐஸ்வர் யஸ்ய சமக் ரஸ்ய வீர்யஸ்ய யஸஸச் ஸ்ரீய
ஜ்ஞான வைராக்யயோஸ் சைவ ஷண்ணாம் பக இதீரணா
வஸந்தி தத்ர பூதானி பூதாத்மன் யகிலாத்மனி
ச ச பூதேஷ் வசேஷஷூ வகாரார்த்தஸ் ததோ அவ்யய
ஜ்ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம் சயசேஷத
பகவஸ் ஸப்த வாஸ்யானி விநா ஹேயைர் குணாதிபி-என்கிறபடியே (மைத்ரேயரே பகவான் என்கிற சப்தம் சர்வ காரணங்களுக்கும் காரண பூதனான சர்வேஸ்வரன் விஷயத்திலே சொல்லப்படுகிறது -ப்ரக்ருதியை கார்ய தசையை அடையச் செய்பவன் -ஸ்வாமி என்னும் அர்த்தங்களுடன் கூடியது பகாரம் –
முனிவரே அப்படியே ரஷிப்பவன் சம்ஹரிப்பவன் ஸ்ருஷ்டிப்பவன் என்பது ககாரத்தின் அர்த்தம்
சம்பூர்ணமான ஐஸ்வர்யம் வீர்யம் யசஸ் செல்வம் ஞானம் வைராக்யம் இந்த ஆறு குணங்களுக்கும்
பக என்னும் பதம் வாசகமாய் இருக்கிறது –
பூதங்களை சரீரமாகக் கொண்டவனும் எல்லாவற்றுக்கும் ஆத்மாவாய் இருப்பவனுமான அவன் இடத்தில் பூதங்கள் வசிக்கின்றன –
அவனும் எல்லா பூதங்களிலும் வசிக்கிறான் -ஆகையால் அழிவற்றவனான பகவான் வகாரத்துக்கு அர்த்தம் ஆகிறான் –
கீழானவையான முக் குணங்கள் முதலியவற்றுடன் சேராத ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் -என்னும் எல்லாக் குணங்களும் பகவான் என்னும் சப்தத்தினால் சொல்லப்படுகின்றன)ஹேய குண ராஹித்ய ஸத் குண ஸாஹித்யங்கள் இரண்டும் பகவச் ஸப்த வாஸ்யங்களாய் இறே இருப்பது -ஆகையிறே -ஷண்ணாம் பக இதீரணா -என்று பகவச் ஸப்தத்துக்கு ஞாநாதி குணங்கள் அர்த்தமாகவும் -அந் -என்கிற பதத்துக்கு ஹேய குண ராஹித்யம் அர்த்தமாகவும் பட்டர் வியாக்யானம் செய்தருளிற்று -அந் -என்கிறது நஞர்த்தமாய் இருக்கிறது எங்கனே என்னில் -ந என்கிறவிடத்தில் ந் அ என்ற பிரிவு உண்டாய் அதிலே ந் என்கிறது ப்ரக்ருதியாய் அ என்கிறது ஸூக முக உச்சாரணமாய் இறே இருப்பது -இவ்விடத்தில் அந் என்று முன் பின்னாய் பின் முன்னாய் இருக்கிறது -சாந்தஸ பிரயோகம் இருக்கும்படி -இவ்விடத்தில் -பஸ்யக -காஸ்யபோ பவதி என்றாப் போலே -என்று இறே அருளிச் செய்தது -ஆகையாலே ஹேய குண ராஹித்ய ஸத் குண ஸாஹித்யங்கள் பகவச் சப்த வாஸ்யங்கள் என்னத் தட்டில்லை
இவ்விடத்தில் ஹேயமாவது -ஆஸ்ரித தோஷ குண ஹானிகள் பார்த்து அவர்களை உபேஷிக்கை –தத் ராஹித்யமாவது -அவையிரண்டும் அடுகுவளமாக அங்கீ கரிக்கை -ஆர்த்த அபாராதைகளான ராக்ஷஸிகளை அபராதமே பற்றாசாக அங்கீகரித்து ரக்ஷித்தாள் இறே –த்ராஹி த்ராஹி -(நாதனான பகவானை நோக்கி த்ராஹி தராஹீதி பர்த்தாரம் உவாஸ தயயா விபும் -நாதனான பகவானை நோக்கி காத்தருள்வாயாக காத்தருள்வாயாக -என்று கிருபையுடன் கூறினாள் பிராட்டி-)என்ற அண்டஜ அதமனையும் -காகாசூரனையும் அங்கீகரித்துத் திருவடிகளிலே தலையாக ரஷித்ததும் உண்டு இறே –குணங்களாவன ஞான சக்த்யாதிகள் –தத் ஸாஹித்யமாவது -அவை ஸ்வ ரக்ஷண ஹேதுவாய் தன் பக்கலிலே சுவறி விடுகை யன்றிக்கே பர ரக்ஷணத்துக்கு உறுப்பாகப் புற வெள்ளமிடும்படி ஸம்பன்னமாய் இருக்கை -இவற்றை ஸ்வ ரக்ஷணத்துக்கு உறுப்பாக்காமல் –தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் – (ஸரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலசர்த்தக மாம் நயேத் யதி காகுத்ஸ்தஸ் தத் தஸ்ய சத்ருஸம் பவேத் -ஸூந்தர -39-30-சத்ருக்களின் பலத்தை அழிப்பவரான ஸ்ரீ ராமபிரான் லங்கையை பாணங்களால் கலங்கச் செய்து என்னை அழைத்துப் போவாராகில் அப்படிச்செய்வது அவருக்கே தகுந்ததாகும் -) என்றிருந்து–ஸீதோ பவ -என்றும்(யத் யஸ்தி பதி ஸூஸ்ரூஷா யத் யஸ்தி சரிதம் தப யதி வா அஸ்த்யேக பத்நீத்வம் ஸீதோ பவ ஹநூமத-ஸூந்தர -53-29-எனக்கு பதி ஸூஸ்ரூஷை உள்ளதாகில் என்னால் தவம் செய்யப்பட்டு இருக்குமாகில் -என் நாதனுக்கு -ஏக பத்நீத்வ விரதம் உள்ளதாகில் ஹநுமானுக்கு அக்னியாகிய நீ குளிர்ந்தவனாவாயாக -) பவேயம் சரணம் ஹி வ -என்றும் (ததஸ் ஸா ஹ்ரீமதீ பாலா பர்த்துர் விஜய ஹர்ஷிதா அவோசத் யதி தத் தத்யம் பவேயம் சரணம் ஹி வா –ஸூந்தர -58-90-லஜ்ஜை நிரம்பியவளாய் கணவனின் ஜயத்தைக் கேட்டு ஆனந்தம் அடைந்தவளான அப்பிராட்டி அக்கனவு உண்மையானால் உங்களுக்கு நான் அடைக்கலமாகிறேன் என்று உரைத்தாள்)என்றும் பர ரக்ஷணத்துக்கு உறுப்பாக்கினாள் இறே -இவற்றை குணம் என்னாலாவது -பரார்த்தமான போதிறே -ஆகையிறே –குணகணாச்ச ஞான சக்த்யாதயஸ்தே –சகலம் ஸம்ஸ்ரிதார்த்தம் சகர்த்த (பரிஜன பரி பர்ஹா பூஷணாநி ஆயுதாநி ப்ரவர குண கணாச்ச ஞான சக்த்யாதயஸ்தே
பரமபதம் அத அண்டானி ஆத்ம தேஹஸ் ததாத்மா வரத சகலமேதத் சம்ஸ்ரிதார்த்தம் சகர்த்த -ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் –63- சேஷாசநாதி பரிஜனங்களும்-சத்ர சாமராதி பரிச் சதங்களும்-கிரீட குண்டலாதி பூஷணங்களும்-திரு ஆழி திருச்சங்கு முதலிய திவ்ய ஆயுதங்களும்-ஞான சக்தி முதலிய ப்ரசித்தங்களான
சிறந்த குண கணங்களும்-பரமபதமும்-அண்டங்களும்-ஸ்வ அசாதாரண விக்ரஹமும்-திவ்ய ஆத்ம ஸ்வரூபமும்-ஆகிய இவை எல்லாவற்றையும்-ஆஸ்ரிதர்களுக்கு ஆக்கினாய்-)-என்று அருளிச் செய்தது –இவன் குணங்களுக்கு வ்யாவர்த்யர் தத் வ்யதிரிக்தர் -இவள் குணங்களுக்கு வ்யாவர்த்யன் அவன் -அவன் குணங்கள் பும்ஸ்த்வ ப்ரயுக்தமான ஸ்வா தந்தர்ய விசிஷ்டமாய் பித்ருத்வ ப்ரயுக்தமான ஹித ஸ்ரோதோ வ்ருத்தியாலே கலங்கின போதுண்டான பிரதாபத்தாலே துராசதமாய் -அத ஏவ புருஷகார சாபேக்ஷமாயிருக்கும் –ஆகையிறே இவள் குணங்களாலே தத் கோஷ்ட்டி லகுதரை யாயிற்று –
ஆக இப்படிப் பாபமே பச்சையாக அங்கீகரிக்கைக்கு ஹேதுவாய் பரார்த்த ஏக வேஷமான ஞான சக்த்யாதி கல்யாண குண பூர்த்தியைப் பகவச்சப்தம் சொல்லுகிறது –ஞானாதி ஷட் குண மயா –என்றும்(ததைவைகா பரா சக்தி ஸ்ரீஸ்தஸ்ய கருணாஸ்ரய ஞாநாதி ஷட் குண மயீ யா ப்ரோக்தா ப்ரக்ருதி பரா-ஸநத்குமார ஸம்ஹிதை -கருணைக்கோர் இருப்பிடமானவளாய் ஞானம் முதலான ஆறு குணங்கள் நிரம்பப் பெற்றவளாய் மேலான ப்ரக்ருதியாகச் சொல்லப்படுபவளான ஸ்ரீ தேவி அந்த பகவானுடைய மேலானதொரு சக்தியாவாள் -)என்றும்-ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி ப்ரபாவிநீம்(அஹி ஸம்ஹிதை -21-9--ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் என்னும் ஆறு கிரணங்களையுடைய ஸ்ரீ தேவியை) -என்னக் கடவது இறே –ஸ திசது பகவாந சேஷ பும்ஸாம் -(இதி விவிதமஜஸ்ய யஸ்ய ரூபம் ப்ரக்ருதி பராத்மமயம் ஸ நாதஸ்ய ப்ரதி ஸது பகவான் அசேஷ பும்ஸாம் ஹரிரபஜந் மஜராதிகாம் ஸ சித்திம் —வி பு -6-8-64-பிறப்பற்றவனும் பழமையானவனுமான எந்த விஷ்ணுவுக்குப் பலவிதமான ப்ரக்ருதி என்ன -அதைக் காட்டிலும் மேலான திவ்ய மங்கள விக்ரஹம் என்ன-ஆத்ம ஸ்வரூபம் என்ன-இவை இம்மாதிரியாக சரீரங்களாய் இருக்கின்றனவோ -அந்த பகவான் ஹரி எல்லா மனிதர்களுக்கும் பிறப்பு மூப்பு இவைகளைப் போக்கடிக்கும் மோக்ஷ ஸித்தியை அருள்வானாக -)-என்றும் –ஸ்மார்த்தவ்யோ பகவான் -(மஹத்யாபதி ஸம் ப்ராப்தே ஸ்மார்கத்தவ்யோ பகவான் ஹரி -பேராபத்து வந்த காலத்தில் பகவானாக ஹரி நினைக்கத்தக்கவன்)என்றும் –மோததே பகவான் – (அநியோஜ்யோ அப்ரமேயஸ் ச யஸ்து காம சரீர த்ருத் -மோததே பகவான் பூதைர் பால க்ரீடாநைரிவ -சபா -40-78-எதிர்த்துப் பேசப்படாதவனும் அறிய முடியாதவனும் -இஷ்டப்பட்ட உருவங்களை தரிப்பவனுமான பகவான் சிறுவன் விளையாட்டுக் கருவிகளுடன் விளையாடுவது போலே பூதங்களுடன் விளையாடி ஸந்தோஷிக்கிறான்) என்றும்-பகவன் நாராயண -என்றும் அவனை நிர்த்தேசித்தாப் போலே தத் துல்ய சீலையான இவளை வ்யவஹரிப்பதும் பகவதீ என்று இறே -இந்தப்பூர்த்தி தான் கீழ் –புருஷோத்தமன் என்று சொன்ன பூர்த்திக்கு அடியாயிறே இருப்பது –பகவன் நாராயண -த்வயம் -என்றிறே அவன் பூர்த்திக்கு அடியுடைமை –ஸ்வதஸ் ஸ்ரீ –-இத்யாதி –
(ஸ்வத: ஸ்ரீ: த்வம் விஷ்ணோ: ஸ்வம் அஸி தத ஏவ ஏஷ: பகவாந்
த்வத் ஆயத்த ருத்தித்வேபி அபவத் அபராதீந விபவ:
ஸ்வயா தீப்த்யா ரத்நம் பவத் அபி மஹார்கம் ந விகுணம்
ந குண்ட ஸ்வாதந்த்ர்யம் பவத் இதி ச ந ச அந்ய ஆஹித குணம்–ஸ்ரீ குணரத்னகோசம் 31–மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நீ ஸ்ரீரங்கநாதனுக்கு உரிமை உள்ளவளாக எப்போதும் இருக்கிறாய்.-இதனால்தானே உன் மூலம் பெருமைகள் அடைந்த அவன் தனது இயல்பான பெருமைகளையும் கொண்டு விளங்குகிறான்.-ஒரு இரத்தினக்கல்லுக்கு பெருமை, மதிப்பு போன்ற அனைத்தும் அதிலிருந்து வீசும் ஒளிக்கே உரியது.-ஆயினும் அந்தக் கல்லைக் காணும் யாரும் ஒளியை மட்டும் மதித்து விட்டு,
இரத்தினக்கல் முக்கியத்வம் கொண்டது இல்லை என்று ஒதுக்கி விடுவதில்லையே.
ஆகவே ஒளியால் உண்டாகிய சிறப்பை இரத்தினம் ஏற்கிறது அல்லவா?இங்கு இரத்தினம் என்று நம்பெருமாளையும், அதிலிருந்து வெளிப்படும் ஒளியாக ஸ்ரீரங்கநாச்சியாரையும் கூறுகிறார்.-இவ்விதம் அவனை ஒளிர வைப்பது இவளே என்றார்.
அது மட்டும் அல்ல, அந்த இரத்தினக்கல்லை ஒளிர வைப்பதன் மூலம் நமக்கு,
“இதோ இரத்தினம் இங்கே உள்ளது”, என்று காண்பிக்கவும் உதவுகிறாள்.)
இப்படிப்பட்ட அதிசய சாலியான உன்னை யதாவத்தாக ஸ்தோத்ரம் பண்ணப்போமோ -என்கிறார் –த்வாம் வயம் கதம் ப்ரூம -என்று –த்வாம் -உக்தத்ப்ரக்ரியையாலே விஷ்ணு பத்னியாய் தத் இதர ஸர்வ ஸ்வாமிநியாய் -தத் அனுரூப அசாதாரணமான நாம நிர்திஷ்டையாய் -பகவத் விலக்ஷண ஞான சக்த்யாதி கல்யாண குண பூஷிதையாய் -இவ்வாகாரங்களினாலே ஸகல உபநிஷத் ப்ரஸித்தையான உன்னை –த்வாம் வயம் கதம் ப்ரூம-ப்ரஹ்ம பாவனைக நிஷ்டரான ஸநகாதிகளுக்கும் உபய பாவநா நிஷ்டரான ப்ரஹ்மாதிகளுக்கும் ப்ரஹ்ம ப்ரதிபாதகங்களான வேதங்களுக்கும் பரிச்சேதிக்க ஒண்ணாத ப்ரபாவத்தை யுடைய உன்னைப் பரிமித ஞான சக்திகரான நாங்கள் பரிச்சேதித்துப் பேசுவது எங்கனே என்கிறார் –
ந தே வர்ணயிதும் சக்தா குணான் ஜிஹ்வாபி வேதஸ ப்ரஸீத தேவி பத்மாக்ஷி மாஸ்மாம்ஸ்த்யாஷீ கதாசன -வி பு -1-9-133-(பிரமனின் நாவும் உன்னுடைய குணங்களை வர்ணிக்க சக்தி யுடையவனல்லன் -தாமரைக் கண்களை யுடைய பிராட்டியே அருள் புரிவாயாக -எங்களை ஒருபோதும் விட்டுச் செல்ல வேண்டா-) -என்றும்
ப்ரஹ்மாத்யாஸ் ஸகலா தேவா முனயச்ச தபோதன -த்வாம் ஸ்தோதுமபி நேஸாகாஸ் த்வத் ப்ரஸாத லவம் விநா -(பிரமன் முதலிய எல்லாத் தேவர்களும் தவத்தையே தனமாகக் கொண்ட முனிவர்களும் உன்னுடைய அருளில் ஒரு துளியாவது இருந்தாலொழிய உன்னை ஸ்துதிக்க வல்லார் அல்லர் – )-என்றும் –உத்பாஹுஸ் த்வாம் உபநிஷதஸாவாஹ நைகா நியந்த்ரீம் -என்னைக் கடவது இறே
உத்பாஹு: த்வாம் உபனிஷத் அஸௌ ஆஹ ந ஏகா நியந்த்ரீம்
ஸ்ரீமத் ராமாயணம் அபி பரம் ப்ராணிதி த்வத் சரித்ரே
ஸ்மர்த்தார: அஸ்மத் ஜநநி யதமே ஸேதிஹாஸை: புராணை:
நிந்யு: வேதா ந அபி ச ததமே த்வந் மஹிம்நி ப்ராமாணம்.–14-நான் பிறப்பதற்குக் காரணமாக இருந்தவளே! ஸ்ரீரங்கநாயகி! இத்தகைய ஸ்ரீஸூக்தம் போன்றவை மட்டும்
தங்கள் கைகளை உயர்த்தி உன்னைப் புகழ்ந்து நிற்கவில்லை.
ஸ்ரீமத் இராமாயணமும் உனது சரிதத்தை வெகுவாகவே கூறியுள்ளது
(ஸ்ரீரங்கநாதனுக்கும் இராமனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த இராமன் ஆராதனை செய்து வந்த பெருமாள் ஸ்ரீரங்கநாதன் ஆவான்.
இதனால்தான் இராமாயணத்தைக் கூறுகிறார் போலும்). இவை மட்டும் அல்ல, பராசரர் போன்ற ஸ்ம்ருதி ஒதியவர்களுக்கும் கூட – புராணங்கள், வேதங்கள் ஆகியவை உன்னைக் குறித்துக் கூறுவதாகப் பல மேற்கோள்களையும் ஆதாரங்களையும் காண்பித்தனர்.-இங்கு இராமாயணமானது இவளது சரிதத்தைக் கூறுவதாக எவ்விதம் கூறினார்?
இதனை வால்மீகி முனிவரே – ஸீதாயாச் சரிதம் மஹத் – ஸீதையின் சரிதமே இதில் ப்ரதானம் – என்று கூறியதைக் காண்க
நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் திருமால் தன்மையை யார் அறிகிற்பார் -திருவாய் -8-3-9- என்றும் –மா மலராள் வார் சடையான் என்றும் இவர்கட்க்கு எண்ணத்தானாமோ –மூன்றாம் திரு -97-என்றும் ப்ரஹ்மாதிகளும் இவளுடைய வைபவத்தை ஸ்தோத்ரம் பண்ண அஸமர்த்தர் -என்று அருளிச் செய்தார்கள் இறே -மேலே மேலே புருஷர்களைக் கல்பித்து உத்ப்ரேஷித்த அளவிலும் ஓரொரு குணங்களை அவதி காண ஒண்ணாமையாலே யதோ வாசே நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ ஆநந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ்சந -(எந்த ப்ரஹ்மத்தின் இடமிருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அதை அளவிட்டு அறியாமல் திரும்புகின்றனவோ அந்தப் பரமாத்மாவின் ஆனந்தத்தை அறிந்தவன் எதனிடமும் பயப்படமாட்டான் )–என்று வேதங்களும் நிவ்ருத்தமாம்படி நிரவதிகமான ஆனந்தத்துக்கும் ஹேதுபூதையாய் -சுலகித பகவத் வைஸ்வாரூப்ய அனுபாவையுமான இவளுடைய பிரபாவம் பரிச்சேதிக்க ஒண்ணாது என்னுமிடம் சொல்ல வேண்டாவிறே –
வயம்-என்று ஆத்மநி பஹு வசனம் –என்னுடை யாருயிரார் என்னுமா போலே ஷேப உக்தியாகவுமாம் –மஹ்யம் நமோ அஸ்து கலயே -என்று தம்மைக் கர்ஹித்துக் கொண்டார் இறே –
ஸ்தோதும் கே வயமித்யதச்ச ஜக்ருஹு ப்ராஞ்சோ விரிஞ்சாதய -என்னக் கடவது இறே
யத் யாவத் தவ வைபவம் ததுசித ஸ்தோத்ராய தூரே ஸ்ப்ருஹா ஸ்தோதும் கேவயம் இதி அத: ச ஜக்ருஹு: ப்ராஞ்ச: விரிஞ்சி ஆதயச்ச அபி ஏவம் தவ தேவி வாங் மநஸயோ: பாஷா அநபிக்ஞம் பதம் காவாச: ப்ரயாதாமஹே கவயிதும் ஸ்வஸ்தி ப்ரசஸ்த்யை கிராம்.–5-(அம்மா! ஸ்ரீரங்கநாயகியே! உன்னுடைய மகிமையானவை எப்படிப்பட்டவை,-அதற்கு அளவு ஏதும் உள்ளதா, அது எத் தன்மை உடையது என்று உணர்ந்து, அந்த மகிமைகளைப் புகழ்ந்து கூறும் விருப்பம் யாருக்கு உள்ளது? பல யுகங்களாக இருந்து, அதனால் மிகவும் அனுபவமும் அறிவும் பெற்றுத் திகழ்கின்ற ப்ரம்மன் முதலானோர், உன்னைப் பற்றிப் புகழ்ந்து பாடுவதற்கு எண்ணம் கொண்டனர். ஆயினும் அவர்கள், “இவளைப் பற்றி நம்மால் புகழ்ந்து பாட இயலுமா? நாம் எம் மாத்திரம்?”, என்று கூறும் சொற்களையே கூறினர். இப்படியாகச் சொற்களால் மட்டும் அன்றி மனதால் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உனது பெருமைகள் உள்ளன. இதனை நன்றாக அறிந்திருந்தும், உனது பெருமைகளை வர்ணிக்கச், சரியாகச் சொற்களைக் கூட அமைக்கத் தெரியாத நான், முயற்சி செய்கிறேன். ஆயினும் உனது அருள் மூலமாக அப்படிப்பட்டச் சொற்களுக்கும் நன்மைகள் உண்டாக வேண்டும்) அதவா
வயம் -மஹார்ண வாந்தர் நிமஞ்ஜதோராணு குலாசலயோ கோ விசேஷ-என்கிறபடியே வேதங்களுக்கும் சதுர்முகப் பிரமுகருக்கும் –அபி மே ஜென்மம் சதுர்முகாத்மநா என்றும் அவர்களைத் த்ருணீ கரித்திருக்கிற தமக்கும் அந்யோன்யம் தாரதம்யம் உண்டேயாகிலும் இவளுடைய மஹிமார்ணவத்திலே மக்நராமிடத்தில் ஒரு வைஷம்யம் இல்லாமையாலே எல்லாரையும் கூட்டிக்கொண்டு வயம் என்கிறார் ஆகவுமாம் –மாதங்கச்ச மஹான் இத்யாதி -கீழ் உக்தரானவர்களோடு ஒருவராய்ப் பரிச்சேதிக்க மாட்டாமை அன்றிக்கே எல்லாரும் கூடி ஏக கண்டராய்ப் பேசினாலும் மேல் எல்லை காண ஒண்ணாது என்று வயம் என்கிறாராதல் –
த்வாம் வயம் -அவன் எவ்விடத்தான் யான் யார் -என்னுமா போலே -ஸ்தோத்ர ஸ்தோதவ்ய கத யுத்க்ர்ஷ அபகர்ஷங்களுடைய எல்லை நிலத்தை ஸூஸிப்பைக்காக த்வாம் வயம் -என்கிறார் –(திருவல்லவாழ் கோனாரை அடியேன் என்னுமா போல் )அவரை நாம் –அவ்வண்ணத்தவர் என்னுமத்தனை என்றால் போலே -த்வாம் வயம் கதம் ப்ரூம -என்கிறார் –
ஆக இத்தால் -பகவத் விலக்ஷண ஞான ஸக்த்யாதி கல்யாண குண பூர்ணையாய் -குணங்களுக்கு வாசகமாய் -ஸர்வ உத்கர்ஷ ப்ரகாசகமான திருநாமத்தை யுடையையாய் சதயிதரான ப்ரஹ்மாதிகளை தாஸ தாஸீ கணமாக உடையயாய் -அண்ட காரணமான மூலப்பிரக்ருதி நிர்வாஹகையாய் -விஷ்ணு பத்நீ என்கிற மேன்மையை யுடையயாய்-இவ்வாகாரங்களாலே ஸ்ருதி ஸ்ம்ருதி ப்ரமாண ப்ரஸித்தையாய் இருக்கிற உன்னைப் பரிமித ஞான சக்திகரான நாங்கள் பரிச்சேதித்துப் பேசுவது எங்கனே என்று பிராட்டியுடைய பெருமையைத் தர்சிப்பியா நின்று கொண்டு –ஸ்துமஹே வயம் நிமிதி தம் ந சக்னுமே -என்றால் போலே ஸ்தோத்ரா ஷேப புரஸ் ஸரமாக ஸ்தோத்ர அந்நிவ்ருத்தராகிறார் -இஸ் ஸ்லோகத்தால் கடவல்லி யுபநிஷத் ஸித்தமான த்வயத்தில் ஸ்ரீ ஸப்தத்தை ஸார்த்தமாக அனுசந்தித்து அருளினார் யாயிற்று –
அமதம் மதம் மதம் அத மதம் ஸ்துதம் பரி நிந்திதம் பவதி நிந்திதம் ஸ்துதம்
இதி ரெங்கராஜம் உதஜூ குஷத் த்ரயீ ஸ்துமஹே வயம் கிம் இதி தம் ந சக்நும –ர ஸ் – 1-13-பர ப்ரஹ்மம் அறியப் படாதது என்று எண்ணப் பட்டால்=அப்போது அது அறியப் பட்டதாகிறது –பின்னையும் பர ப்ரஹ்மம் அறியக் கூடியது என்று கருதப் பட்டால் அறியப் படாதது ஆகிறது-பர ப்ரஹ்மம் ஸ்துதித்து முடிக்கத் தக்கது என்று கருதப் பட்டால் அது இகழப் பட்டதாகிறது-உள்ளபடி ஸ்துதிக்க முடியாது என்று கருதப் பட்டால் ஸ்துதிக்கப் பட்டதாகிறது-என்று இவ்விதமாக வேதமானது எம்பெருமான் இடத்தில் முறையிட்டுக் கிடக்கிறது-இப்படி இருக்க-அந்த ஸ்ரீ ரெங்கராஜனை அறிவிலிகளான நாம்-சக்தியும் பக்தியும் இல்லாத நாம்-பஹு வசனம் கவி மரபு –ஸ்துத்ய அநதி காரம் சர்வ சாதாரணம் என்பதால் பஹு வசனம் என்றுமாம் –என்ன வென்று-ஸ்துதிக்க இழிகிறோம்–ஸ்துதிக்க வல்லோம் அல்லோம் –யஸ்யா மதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேதச -வேத ஸ்ருதியை அடி ஒற்றி அருளிச் செய்கிறார் –
—————
யஸ் யாஸ்தே மஹிமாந மாதமந இவ த்வத் வல்லபோ அபி பிரபு
நாலம் மாதுமியத்தயா நிரவதிம் நித்யாநுகூலம் ஸ்வத
தாம் த்வாம் தாஸ இதி ப்ரபன்ன இதி ச ஸ்தோஷ்யாம் யஹம் நிர்ப்பயோ
லோகைகேஸ்வரி லோக நாத தயிதே தாந்தே தயாந்தே விதன்–2-
லோகைகேஸ்வரி -லோகத்துக்கு ஒரே ஈஸ்வரியாய் இருப்பவளே
லோக நாத தயிதே-லோகங்களுக்கு எல்லாம் ஸ்வாமியான எம்பெருமானுக்கு பிரிய மஹிஷியாய் இருப்பவளே(பந்தார் விரலி-விபூதியையும் விபூதிமானையும் அணைத்துக் கொண்டு )
தாந்தே-கருணா கல்பவல்லியே
யஸ் யாஸ்தே -எந்த உன்னுடைய
நிரவதிம்-அளவற்றதும்
ஸ்வத நித்யாநுகூலம் –இயற்கையாகவே பகவானுக்கு எப்போதும் அனுகூலமாய் இருப்பதுமான
மஹிமாநம் -பெருமையை
பிரபு த்வத் வல்லபோ அபி -ஈஸ்வரனான உன்னுடைய வல்லவனும்
ஆத்மந இவ -தன்னுடைய பெருமையைப் போலே
இயத்தயா-இவ்வளவு என்று
மாதும் ந அலம் -அளவிட்டு அறிய மாட்டானோ
தாம் த்வாம் -அப்படிப்பட்ட உன்னை
தாஸ இதி -தாசன் என்றும்
ப்ரபன்ன இதி ச -சரண் அடைந்தவன் என்றும்
தே த யாம் விதன் அஹம் -உன்னுடைய கருணையை அறியும் நான்
நிர்ப்பய–பயம் அற்றவனாய்
ஸ்தோஷ்யாம் –ஸ்துதிக்கிறேன்
அவதாரிகை -(ஸ்தோத்ரம் பாடமாட்டேன் என்றும் இருந்த ஆளவந்தார் -போர் புரியமாட்டேன் என்ற அர்ஜுனன் போல்-அது ஷத்ரிய கர்மயோகம் -இது இவருக்கே வைதிக கர்மயோகம் )
ஜ்யேஷ்டானாகையாலே ராஜ்ய தாரங்களைப் பறி கொடுத்துச் சரணமடைந்த ஸூக்ரீவனைப் போலே -ஜ்யேஷ்ட புத்ரன் கையிலே அவை இரண்டையும் –பொய்ச் சூதில் தோற்க்கையாலே -பொறை யுடை மன்னரான பாண்டவர் தம்முடைய பாஞ்சாலியை -மறுக்கி வல் வலைப்படுத்துகைக்கு -அரசர் தம் அரசற்கு இளையவனான துச்சாதனன் அவ்வணியிழையைச் சென்று என் தமக்கு உரிமை செய் என்று சுரி குழலையும் துகிலையும் பற்றி வர வீர்க்க -கிருஷ்ணயையும் கோ கிரஹண ப்ராப்த்தையாய்க் கொண்டு -அஸூத்தையாய் ஏக வஸ்த்ரையான என்னை குருக்களுடைய முன்னே நயிப்பிக்கை அந்யாயம் காண் -என்று கூப்பிடச் செய்தேயும் கலை தலைகளைக் கைவிடாமையாலே -கைவிடும்படி ஸம் ப்ராப்தமான மஹா ஆபத்திலே –ஹா க்ருஷ்ண த்வாரகா வாஸிந் -இத்யாதி(ஹா க்ருஷ்ண த்வாரகா வாஸிந் க்வா அஸி யாதவ நந்தன -இமாமவஸ்தாம் ஸம் ப்ராப்தாம நாதாம் கிமுபேஷஸே -சங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்யுத -கோவிந்த புண்டரீ காஷ ரக்ஷமாம் சரணாகதாம் –சபா பர்வம் -66-கிருஷ்ணனே -த்வாரகா வாஸியே -யாதவ குல நந்தனனே -எங்கிருக்கிறாய் -இவ்வவஸ்தையை யடைந்த அநாதையான என்னை ஏதுக்காக உபேக்ஷிக்கிறாய் -சங்க சக்ர கதா பாணியே -த்வாரகையிலே நிற்பவனே -அடியவரை நழுவ விடாதவனே -கோவிந்தனே -செந்தாமரைக் கண்ணா -சரணாகதையான என்னைக் காத்தருள்வாயாக – )
எங்குற்றாய் எம்பெருமான் -இவ்வவஸ்த்தையை ஆபன்னையாய் அநாதையான என்னை ஏதுக்காக உபேக்ஷிக்கிறாய் -உன்னுடைய ஆஸ்ரித ரக்ஷண த்வரை எங்கே போயிற்று -சங்கு சக்ர கதா பாணே –இத்யாதி -ரக்ஷண பரிகரங்களான சங்கு சக்ராதிகளைத் தரித்துக் கொண்டு -இங்கே அடுத்து அணித்தாக வந்து நின்று ஆஸ்ரிதரை நழுவ விடாதவனுமாய்-இடக்கை வலக்கை அறியாத அஞ்ஞருக்கும் ஆஸ்ரயிக்கலாம் படி ஸர்வ ஸூ லபனாய் ஆபன்னரானாருடைய ஆர்த்தியை ஹரிக்கும்படி அலர்ந்த செந்தாமரைப் பூப் போலே இருக்கிற திருக்கண்களை யுடையையாய் இருக்கிறவனே –சரணாகதையான என்னை ரக்ஷிக்க வேணும் என்று ஆக்ரந்திக்கும் படி அபிமான பங்கமாகப் பரிபவிக்க அதற்காக அவர்கள் தங்குமூராகப் புக்கைந்து வேண்டிப் பெறக் கொடாமையாலே ஊரொன்று வேண்டிலும் -கத்தக் கதித்துக் கிடந்த பெரும் செல்வம் ஒத்துப் பொருந்திக்கொண்டு உண்ணாதே தன் குடி கெடும்படி தானே மண்ணாள்வானான கொத்துத் தலைவன் -ஸூஸ்யக்ரமும் ( குண்டூசியும் கூட )கொடேன் என்றும் தள்ளி விடுகையாலே ஒன்றும் பெறாத உரோடத்தாலே -பார் ஒன்றிப் பாரதம் கை செய்தும் ஸ்தான ப்ரஷ்டராய்த் தளர்ந்து பறி கொடுத்த ராஜ்யத்தை பிராபிக்கைக்கு -பற்றலர் வீயக்கோல் கையிலே கொண்டு பார்த்தன் செல்வத்தேர் ஏறு சாரதியாய் -கழல்கள் சலங்கைக் கலந்து எங்கும் ஆரவாரிப்ப கையும் மாக்கோலும் பிடித்த கடிவாளக்கயிறும் விரித்த தலையுமாய்க் கொண்டு விநயம் தோற்ற முன்னின்றானை அர்ஜுனனும் ஹே கிருஷ்ண என்றழைத்து உபய ஸேனா மத்யத்திலே ரதத்தை ஸ்தாபி என்று பாரித்துக் கொண்டு தர்ம ஷேத்ரத்திலே(தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே ஸம வேதா யுயுத்ஸவ மாமகா பாண்டவாஸ் சைவ கிமகுர்வத சஞ்சய-1-1-சஞ்சயனே தர்மக்ஷேத்ரமான குருஷேத்ரத்தில் யுத்தம் செய்ய விரும்பியவர்களாய்க் கூடின என் பிள்ளைகளான துர்யோதனாதியரும் பாண்டவர்களும் என்ன செய்தார்கள் -) -சினப்போரிலே -யுயுத்ஸவ -என்னும்படி உத்யுக்தனாய் -இத்தைக்கொண்டு மலை புரை தோள் மன்னவரும் மா ரதரும் மற்றும் பலருமாய்க் கொண்டு -பாரித்து எழுந்த படை மன்னனான அந்தகன் சிறுவனைக் கண்ட இந்திரன் சிறுவனும் -அஸ்தானே ஸ்நேஹ காருண்ய தர்ம அதர்மபி யாகுலனாய் பந்துக்கள் பக்கல் வத பீதியாலே -கிம் நோ ராஜ்யேன கோவிந்த கிம் போகைர் ஜீவிதேந வா -யேஷாமர்த்தே காங்ஷிதம் நோ ராஜ்யம் போகாஸ் ஸூகாநி ச -த இமே அவஸ்திதா யுத்தே-1-33- -என்று ராஜ்ய போக ஸூகங்களும் ஸ்வ ஜன ரக்ஷணார்த்தமாயன்றோ இருப்பது -அவர்கள் தாங்களே யுத்தத்தில் அவஸ்திதரான பின்பு அவர்களை ஹிம்ஸித்து ராஜ்ய போகங்களால் என்ன பிரயோஜனமுண்டு -ந ஹி மே ஜீவிதே நார்த்த-(எனக்கு உயிரினால் பயனில்லை )என்றும் ந காங்ஷே விஜயம் கிருஷ்ண- ந ச ராஜ்யம் ஸுகாநி ச-1-32–என்று கொண்டு -விஸ்ருஜ்ய சைரம் சாபம் (ஏவமுக்த்வார்ஜுந: ஸங்க்யே ரதோபஸ்த உபாவிஸத் விஸ்ருஜ்ய ஸஸரம் சாபம் ஸோகஸம்விக்நமாநஸ:-1-47-சஞ்ஜயன் சொல்லுகிறான்: செருக் களத்தில் இவ்வாறு சொல்லி விட்டுப் பார்த்தன் அம்புகளையும் வில்லையும் எறிந்து போட்டுத் துயரில் மூழ்கிய மனத்தனாய்த் தேர்ப் பீடத்தின் மேலுட்கார்ந்து கொண்டான்)-என்னும்படி போர்ப்படைகளையும் விட்டு ந யோத்ஸ்யாமி (ஸர்வதா அஹம் ந யோத்ஸ்யாம் இத் யுக்த்வா –உபாவிஸத் -கீதாபாஷ்யம் -1-ஒருபோதும் நான் யுத்தம் செய்ய மாட்டான் என்றும் உட்கார்ந்தான் )என்று யுத்தாந் நிவ்ருத்தனானபடியைக் கண்டு -மாம் -என்று (ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -18-66)தன் ஸுலப்யத்தைக் காட்டி -கரிஷ்யே வசனம் தவ -என்னப் பண்ணி (நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்லப்தா த்வத்ப்ரஸாதாந்மயாச்யுத ஸ்திதோऽஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யே வசநம் தவ-18-73-அர்ஜுனன் சொல்லுகிறான்: மயக்க மழிந்தது நின்னருளாலே, அச்சுதா, நான் நினைவு அடைந்தேன்; ஐயம் விலகி நிற்கிறேன்; நீ செய்யச் சொல்வது செய்வேன்.)யுத்தே ப்ரவர்த்திப்பித்த கிருஷ்ணனைப் போலே- விஸ்மார்ய தஸ்யாத்மகம் -என்கிறபடியே (சப்தாதீந் விஷயாந் ப்ரதர்ச்ய விபவம் விஸ்மார்ய தாஸ்யாத்மகம் வைஷ்ணவ்யா குணமாயா ஆத்ம நிவஹாந் விப்லாவ்ய பூர்வ: புமாந் பும்ஸா பண்யவதூ விடம்பி வபுஷா தூர்த்தாந் இவ ஆயாஸயந் ஸ்ரீரங்கேச்வரி கல்பதே தவ பரீஹாஸாத்மநே கேளயே.–20-ஸ்ரீரங்கநாயகியே! தாயே! உனது கணவனான ஸ்ரீரங்கநாதன் செய்வது என்ன?-இந்த உலகில் உள்ள மனிதர்களின் ஆத்மாக்களுக்கு, அவை தனது அடிமை என்பதை மறக்கச் செய்கிறான். அவர்களை ஓசை, மணம் போன்றவற்றில் மயங்கச் செய்கிறான். மூன்று குணங்கள் நிறைந்த இந்தப் ப்ரக்ருதியில் அவர்களை ஆழ்த்தி விடுகிறான். இதனை அவன் எப்படிச் செய்கிறான்? இந்த உலகில் உள்ள ஆண்களை, ஆண் ஒருவன் பெண் வேடம் பூண்டு மயங்கச் செய்பவது போன்று, மனிதர்களை மயக்கி நிற்க வைக்கிறான். இதனை உனது மன மகிழ்ச்சிக்காக அல்லவா அவன் செய்கிறான்?) பிராட்டி விஷயத்திலே அநாதி காலம் இழந்த அனுபவ பரீவாஹ ரூப வாசிக கைங்கர்யமாகிற ஸ்தோத்ரத்திலே பாரித்துக் கொண்டு உத்யுக்தராய் விஷய வைலஷண்யத்தைப் பார்த்தவாறே -வேதங்களாலும் வைதிக புருஷர்களாலும் எல்லை காண ஒண்ணாதபடி அபரிச்சேதயமாய் இருக்கையாலும் -தத் வைலக்ஷண்ய அனுரூப ஸ்தோத்ர கரண ஹேதுவான ஞான சக்திகள் தமக்கு இல்லாமையாலும் -ஸ்தோத்ர ஸ்தோதவ்ய கத உத் கர்ஷ அப கர்ஷங்களுடைய ஸீமா பூமியை அனுசந்தித்து இப்படிப் பூர்ண விஷயத்தைப் புல்லியரான நாம் பேசில் -மாசூணாதே -மழுங்காதே –என்கிறபடியே அவத்யத்தை விளைப்பதில் கைங்கர்ய ஸாம்ராஜ்யத்தை இழந்து கடந்து நிற்கையே கர்த்தவ்யம் என்று கருதி -அழுக்கு உடம்புடன் எச்சில் வாயால் தூய்மையில் தொண்டனேன் நான் சொல்லினேன் தொல்லை நாமம் பாவியேன் பிழைத்தவாறு என்றும் அஞ்சினேற்கு –என்கிறபடியே பீத பீதராய்த் தம்மை கர்ஹித்துக் கொண்டு த்வாம் வயம் கதம் ப்ரூம -என்று கொண்டு ஸ்தோத்ராந் நிவ்ருத்தரான இவரை
பெரிய பிராட்டியார் நமக்கு மேன்மை ஸ்வரூபமானவோபாதி நீர்மையும் ஸ்வரூபம் காணும் -ஆனபின்பு பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவாய்க் காணும் நாம் இருப்பது -விசேஷித்து மாத்ருத்வ ப்ரயுக்தமான வாத்சல்யத்தாலும் –கிம் ம்ருஷ்டம் ஸூத வசனம் (கிம் ம்ருஷ்டம் ஸூத வசனம் புநரபி ம்ருஷ்டம் ததேவ ஸூத வசனம் ம்ருஷ்டாதபி ம்ருஷ்டதரம் ததேவ பரிபக்வம் ஸூத வசனம் -எது போக்யமானது -சிசுவான குழந்தையின் மழலைச் சொல்லே போக்யமானது -மறுபடியும் இனிதாய் இருப்பது பாலனான அக்குழந்தையின் பிள்ளைப் பேச்சுக்களே -போக்யமான ஸகல பதார்த்தங்களிலும் போக்யமாயுள்ளது யுவாவான அப்பிள்ளையின் அறிவு நிரம்பிய அந்த வார்த்தைகளே யாகும் )-என்கிற நியாயத்தாலும்-இளைய புன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே –என்கிறபடியே உம்முடைய மழலைச் சொல் போக்யமாகக் காணும் இருப்பது -என்று இவருடைய வாக் வ்ருத்தி ரூப ஸ்தோத்ரத்தாலே ஸ்தோத்ர கரண விரோதியான அவித்யாதிகள் நசித்து ஸ்தோத்ர கரண ஹேதுவான ஞானம் சக்த்யாதிகள் உண்டாய் நிர்ப்பயராய் ஸ்தோத்ரத்திலே ப்ரவ்ருத்தராம்படி –அஞ்சல் என்று காவி போல் வண்ணர் வந்தென் கண்ணுளே தோன்றினார் –என்கிறபடியே அபய ப்ரதாந பூர்வகமாக -மயர்வற மதிநலம் அருளினன் –என்கிறபடியே இவர் பக்கலிலே கருணா கடாக்ஷத்தைப் பண்ண பூ வளரும் திருமகளால் அருள் பெற்று நிவ்ருத்த விரோதிகராய் ப்ராப்தமான பரபக்த்யாதிகளை உடையராய்க் கொண்டு தத் ஸ்வரூப ரூபா -குண விசேஷங்களை விசதமாக சாஷாத்காரித்து அனுபவ பரிவாஹ ரூபமான வாசிக கைங்கர்யத்திலே ப்ரவ்ருத்தராகிறார்
கீழ் பரத்வ அனுசந்தானத்தாலே பயப்பட்டு நிவ்ருத்தரானார் -இங்கு கீழ் ஸ்தோத்ர ஆரம்ப அபேஷ சம்பந்த ஞானம் பூர்வகமாக சரணம் புகுந்து ஹேதுவாகச் சொன்ன ஸ்தோதவ்ய குண உத்கர்ஷத்தை த்ருடீ கரியா நின்று கொண்டு ததுபசித ஸுலப்ய விசேஷ அனுசந்தானத்தாலே பயம் சமித்து ஸமாஹிதராய் ஸ்தோத்ரத்திலே ப்ரவ்ருத்தராகிறார் -என்னினைவாய் என்றிட்டு அஞ்சுவனே -என்கிறபடி விஷய வைலக்ஷண்ய அனுசந்தானத்தாலும் -ஸ்வ தோஷ அனுசந்தானத்தாலும் ஸ்தோதாக்களுக்கு ஒரு பயம் ஜனிக்கும் -அந்தப்பயம் ஸுலப்யாதி குண அனுசந்தானத்தாலே சமிக்கவும் கண்டோம் இறே -துரந்தஸ்யாநாதே -என்று தொடங்கி ஸ்வ தோஷ அனுசந்தானத்தாலே பயப்பட்டு –தவ ஸ்மாரம் ஸ்மாரம் குண கண மிதீச்சாமி கதபீ -என்று பகவத் குண அனுசந்தானத்தாலே அப்யங்கதானார் இறே –ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ்சந (யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ்ஸந -தை ஆந -9-1-எந்தப் ப்ரஹ்மத்தின் இடமிருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அதை அளவிட்டு அறியாமல் திரும்புகின்றனவோ அந்தப் பரமாத்மாவின் ஆனந்தத்தை அறிந்தவன் எத்தனிடமும் பயப்பட மாட்டான் –) -என்னக் கடவது இறே
(போற்றருஞ் சீலத் திராமானுச,நின் புகழ் தெரிந்து
சாற்றுவ னேலது தாழ்வது தீரில்,உன் சீர் தனக்கோர்
ஏற்றமென்றே கொண் டிருக்கிலு மென் மனம் ஏத்தி யன்றி
ஆற்றகில்லாது, இதற் கென்னினை வாயென்றிட் டஞ்சுவனே.–89-)
இனித்தான் ஸ்தோத்ர இச்சை உண்டானாலும் -ஸ்தோது மீஹாமஹே யுக்தாம் பாவய பாரதீம் (ஹே ஸ்ரீர் தேவி ஸமஸ்த லோக ஜநநீம் த்வாம் ஸ்தோதும் ஈஹா மஹா யுக்தாம் பாவய பாரதீம் ப்ரகுணய ப்ரேம ப்ரதாநாம் தியம் பக்திம் பந்தய நந்தய ஆஸ்ரிதம் இமம் தாஸம் ஜனம் தாவகம் லஷ்யம் லஷ்மி கடாக்ஷ வீசி விஸ்ருதேஸ் தே ஸ்யாம சாமீ வயம் -ஸ்ரீ ஸ்தவம் –2-பெரிய பிராட்டியாரே –எல்லா உயிர்கட்க்கும் தாயாகிய உம்மை –அடியோம் ஸ்துதிக்க விரும்புகிறோம் –உம்மை ஸ்துதிப்பதற்குத் தகுதியான வாக்கை எமக்கு நீர் அருள வேணும்–அன்பு மிகுந்த பக்தியை வளரச் செய்ய வேணும் –பக்தியை நல்லதாகச் செய்ய வேணும் -பரம பக்தி அளவாக வளரச் செய்ய வேணும் -என்கை-உம்மை அடைந்து இருக்கின்ற இந்த ஜனத்தை -அடியேனை ––உம்முடைய ஏவல் சேவகனாக -அடிமை கொண்டு ––நீர் ஏற்று மகிழ்ந்து அடியேனை ஆனந்தப் படுத்த வேண்டும் -இந்த அடியோங்களும் உம்முடைய –அமீ -என்று-கடாக்ஷம் பெறாமல் துவண்டு கிடைக்கும் நிலையை ஏஹி பஸ்ய சரீராணி -படியே உடம்பைத் தொட்டுக் காட்டுகிற படி – –கடாக்ஷ வீக்ஷணங்கள் ஆகிற அலைகளின் பரவுதலுக்கு –இலக்காகக் கடவோம்)-என்றும் ஸூக்திம் ஸமக்ரயது நஸ் (ஸூக்திம் ஸமக்ரயது ந: ஸ்வயம் ஏவ லக்ஷ்மீ: ஸ்ரீரங்கராஜ மஹிஷீ மதுரை: கடாக்ஷை: வைதக்த்ய வர்ண குண கும்பந கௌரவை: யாம் கண்டூல கர்ண குஹரா: கவய: தயந்தி–குணரத்னகோசம் 7–ஸ்ரீரங்கநாயகியைக் குறித்த இந்த ஸ்லோகங்களில் குறையுடன் கூடிய சொற்கள் பல இருக்கக் கூடும்.-ஆயினும் அவற்றைத் திருத்த நான் எந்த விதமான முயற்சியும் செய்யவில்லை.-அந்த ஸ்ரீரங்கநாதனின் பட்ட மஹிஷியான ஸ்ரீரங்கநாச்சியார் இவற்றைப் பிழை திருத்தி ஏற்றுக் கொள்வாள்.-இப்படியாக என் மீதும், எனது துதிகள் மீதும், குளிர்ந்த அவள் அருள் பார்வை பொழிந்து நிற்கும். இதன் மூலம் எனது துதிகளில் பொருள் விளக்கும் அழகு (அணி போன்றவை) , சொல்லின் அழகு, தெளிவான நடை, இனிமையான பதங்கள் போன்றவை தாமாகவே ஏற்பட்டு விடும். இதனால் இந்த உலகில் உள்ள நல்லவர்கள் எனது துதிகளைத் தங்கள் காதுகளால் பருகும் நிலை உண்டாகி விடும்)என்றும் சொல்லுகிறபடியே விஷய வைலக்ஷண்ய அனுகுணமாக அநாக்ராதாவத்யமாய் அநிமிஷ நிஷேவ்யமான ஸப்த சந்தர்ப்ப ஹேதுவான ஸம்யக் ஞான பகுதிகள் பெரிய பிராட்டியாருடைய கருணா கடாக்ஷத்தாலே அல்லது ஸித்தியாது இறே-யம் த்வம் தேவி நிரீக்ஷஸே –ஸ புத்திமான் (ஸ ஸ்லாக்யஸ் ஸ குணீ தந்யஸ் ஸ குலீநஸ் ஸ புத்திமான் ஸ குரஸ் ஸ ச விக்ராந்தோ யம் த்வம் தேவி நிரீக்ஷஸே -வி பு -1-9-131-தேவியே நீ எவளைக் கடாஷிக்கிறாயோ அவனே சிறந்தவன் -அவனே குணவான் -அவனே பாக்கியசாலி -அவனே நற்குலத்தவன் -அவனே புத்திமான் -அவனே சூரன் -அவனே பராக்ரமசாலி )-என்னக் கடவது இறே -ஆகையால் ஸ்வ விஷய ஸ்தோத்ரத்திலே பாரித்துக் கொண்டு ப்ரவ்ருத்தரானபடியையும் -விஷய வைலக்ஷண்ய அனுரூப ஸ்தோத்ர கரண ஞான சக்திகள் தமக்கு இல்லாமையால் ஸ்தோத்ராந் நிவ்ருத்தரானபடியையும் கண்டு இவர் பண்ணுகிற ஸ்தோத்ர ஸ்ரவண கௌதுகத்தாலே யதா ஸ்தோத்ரம் பண்ண வல்லராம்படி இவர் பக்கலிலே விசேஷ கடாக்ஷம் பண்ணி யருள -அத்தை அறிந்து காருண்ய ரூபையான இவள் கருணைக்கு இலக்காய் -தாது பிரஸாதான் மஹிமாந மீஸம் தமக்ரதும் பஸ்யதி வீத சோகா(அணோர் அணீயாந் மஹதோ மஹீயாந் ஆத்மா குஹாயாம் நிஹிதோஸ்ய ஜந்தோ: | தமக்ரதும் பஶ்யதி வீத ஶோகோ தாது ப்ரஸாதாத் மஹிமாந மீஸம் –தைத் நா -9-1-அணுவைக் காட்டிலும் அணுவாய் மஹத்தைக் காட்டிலும் மஹத்தான பரமாத்மா இந்த ஜீவனுடைய ஹ்ருதய குகையில் இருக்கிறான் -கர்ம ஸம்பந்தம் அற்றவனாய் மஹிமசாலியான அப்பரமாத்மாவை அவன் அருளாலே கண்டு சோகம் நீங்கப் பெறுகிறான்) -என்றால் போலே தாந்தே மயி தே தயாம் விதந்தே மஹிமாநம் நிர்ப்பயஸ் ஸ்தோஷ்யாமி -என்று கொண்டு விஷயத்தை மாறுபாடுருவப் பேசுகிறேன் என்றும் ப்ரதிஜ்ஜை பண்ணுகிறார் —
இப்படிப் பெரிய பிராட்டியாருடைய ப்ரஸாதம் பெற்றாராகில் இவர் இப்போது விசேஷமாக அறிந்து பேசுகிறது என் என்னில் -கீழ் வேதங்களும் ப்ரஹ்மாதிகளும் பேச நிலமல்ல என்றார் -இங்கு எங்களுக்கும் மணாளனாய் ப்ரஹ்மாதிகளுக்கும் ஜனகனாய் ஸர்வஞ்ஞனாய் ஸர்வ சக்தியாய் இருக்கிற ஸர்வேஸ்வரனுக்கும் பரிச்சேதித்துப் பேச ஒண்ணாது என்கிறார் –யஸ் யாஸ்தே மஹிமாந மாதமந இவ த்வத் வல்லபோ அபி பிரபு-நாலம் மாதுமியத்தயா நிரவதிம் நித்யாநுகூலம் ஸ்வத-என்று -இதுவாய்த்து இவர் பிராட்டி ப்ரஸாதத்தாலே பெற்ற விசேஷம் -இவ்விசேஷ கடாக்ஷம் இல்லாதவர்-இவள் ஸ்வரூப ஸ்வ பாவங்களை உள்ளபடி அறியாமல் பகவத் அந்தரங்க விசேஷணத்வ த்யோதகமான அர்த்தமாக –பகவத் சத்தை-அஹந்தை -பிரபை -இச்சை -சக்தி -வித்யை என்றும் -ப்ரக்ருதே புருஷாச் ச அந்நியஸ் த்ருதீயோ நைவ வித்யதே —என்கிறபடியே ஸ்ரீ ஸ்ரீ சர்களுடைய ப்ரக்ருதி புருஷ ரூப விபக்த விபூதி விசேஷ அபிமானத்வ த்யோதகமாக மூலப்ப்ரக்ருதிரீஸாநி -என்றும் -சொல்லுகிறவற்றைக் கொண்டு- ஸ்வரூபத்தை அசேதனமாக ப்ரமிப்பது -கர்ம வஸ்யை என்பது -ஸர்வாதி (ஸத்தாதி)விசிஷ்ட பகவான் தானே ஸ்ரீ என்பது ஸ்திரி ரூப நித்ய விக்ரஹாந்தர விசிஷ்டனான அவனே இவள் என்பது -தைத்ய மோஹனார்த்தமாகப் பெண்ணாக அமுதூட்டின வடிவு போலே ஸ்வயமேவ போகார்த்தமாகப் பரிக்ரஹித்த காதாசித்க காந்த விக்ரஹ விசிஷ்டனானவனே ஸ்ரீ என்பதாய்க் கொண்டு இப்புடைகளிலே பகவத் ஐக்யம் சொல்லுவது -அநித்யை என்பதாய்க் கொண்டு அநர்த்தப்படுவர்கள் -ஆஹுந் வேதா ந மாநம் -இத்யாதி
(யோ யோ ஜகதி பும்பாவ ஸ விஷ்ணுரிதி நிஸ்ஸய யோ யஸ்து நாரீ பாவ ஸ்யாத் தத்ர லஷ்மீர் வ்யவஸ்திதா -ப்ரக்ருதே புருஷாச் சாந்யஸ் த்ருதீயோ நைவ வித்யதே அத கிம் பஹுநோக்தேந நரநாரீ மயோ ஹரி -ஸநத் குமார ஸம்ஹிதை –உலகில் ஆண்மை காணப்படும் இடமெல்லாம் ஹரி இருக்கிறான் என்பது நிச்சயம் -பெண்மையுள்ள இடமெல்லாம் பிராட்டி இருக்கிறாள் -ப்ரக்ருதிக்கு அபிமானியாகிற பிராட்டியையும் புருஷ அபிமானியான பகவானையும் தவிர மூன்றாவது ஒன்றும் இல்லை -பல சொல்லி யென் -ஸ்த்ரீ புருஷர்கள் எல்லாமாய் இருப்பவன் ஸ்ரீ மந் நாராயணனே –)
ஆஹு: வேத ந அமாநம் கதிசன கதிசா ராஜகம் விஸ்வம் ஏதத்
ராஜந்வத் கேசித் ஈஸம் குணிநம் அபி குணை: தம் தரித்ராணம் அந்யே
பிக்ஷௌ அந்யே ஸுராஜம்பவம் இதிச ஜடா: தே தலாதலி அகார்ஷு:
யே தே ஸ்ரீரங்க ஹர்ம்ய அங்கண கநகலதே நக்ஷணம் லக்ஷ்யம் ஆஸந்–ஸ்ரீ குணரத்ன கோஸம்–11-
ஸ்ரீரங்க விமானத்தில் காணப்படும் தங்கக் கொடியே! ஸ்ரீரங்கநாயகி! இங்கு பல விதமான, அறிவற்ற மனிதர்கள் உள்ளனர்.-அவர்கள் – வேதங்கள் அனைத்தும் சரியானவை அல்ல, அவை பரம் பொருளைக் காண்பிக்க வில்லை என்றனர்(இது பௌத்தர்கள், ஜைனர்களைக் குறிக்கும்); இந்த உலகம் இறைவனால் இயக்கப்படுவது அல்ல என்றனர் (இது சாங்கியர்களின் கொள்கை); நல்ல தலைவனாக மட்டும் ஒருவன் உண்டு என்றனர் (இது கணாத மதம் ஆகும்); சிலர் அனைத்தையும் ஆள்பவனாகவும், பல குணங்களை உடையவனாகவும் பரம் பொருள் உள்ள போதிலும் அவனுக்குக் குணங்கள் கிடையாது என்றனர் (இது அத்வைதம்); மேலும் சிலர் பிச்சை எடுக்கும் ஒருவனிடம் இறைவனுக்கான தன்மை உண்டு என்றனர் (இது சைவ மதம்) – இப்படியாகப் பல மதங்களைச் சேர்ந்தவர்கள் விவாதம் செய்து, கைகளால் அடித்தும் கொள்கின்றனர்.அவர்கள் அனைவரும் உனது கடாக்ஷம் நிறைந்த பார்வை பெறாதவர்கள் என்பது)
இவர் அங்கன் அன்றிக்கே திவ்ய சஷுஸ்ஸைப் பெற்றவராகையாலே தத் ஸ்வரூப ஸ்வ பாவங்களை உள்ளபடி அறிந்து –பரம சேதனை என்றும் –அகர்ம வஸ்யை என்றும் ப்ரக்ருதியாதி வ்ருத்தை என்றும் –பகவத் ஸ்வரூப பின்னை என்றும் நித்யை என்றும் தத் அந்தர் அபிமதை என்றும் ஸர்வ உத் க்ருஷ்டை என்றும் சர்வேஸ்வரனாலும் பரிச்சேதிக்க ஒண்ணாத மஹிமாவை யுடையவள் என்றும் நிர்ணயித்து அனுபவிக்கிறார்
மநஸி விலஸதாஷ்ணா பக்தி சிந்தாஞ்சநேந ஸ்ருதி ஸ்ரஸி நீகூடம் லஷ்மி தே வீக்ஷமாணா -நிதிமிவ மஹிமாநம் புஞ்சதேயே அபி தன்யா ந நு பகவதி தைவீம் ஸம் பதம் தே அபி ஜாதா —
பகவதி -ஸகல கல்யாண குண சம்பன்னையாய் இருக்கிற
ஹே லஷ்மி -வாரீர் பெரிய பிராட்டியாரே
தந்யா -தனம் ப்ராப்தா தன்யா –என்கிறபடியே தேவரீர் கடாக்ஷ விஷயத்வ ரூப பாக்யத்தை உடையவர்களாய் இருக்கிற
யே அபி -யாதொரு புருஷர்கள் -யே அபி-என்கிற இத்தால் அவர்களுடைய அதிசயம் வாசா மகோசரம் என்று ஸூசிதம்
பக்தி சித்தாஞ்சநேந -உன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளில் அநிதர ஸாதாரண ப்ராவண்யமாகிற கூடாரத்த ப்ரகாசக சித்தாஞ்சன விசேஷம் போலே இரா நின்றும் –
மநஸி விலஸதா -அத ஏவ ஹிருதயத்திலே ப்ரகாசியா நின்றுள்ள
அக்ஷணா -திருஷ்ட்டியாலே -ஞானக் கண்ணாலே என்றபடி
ஸ்ருதி ஸ்ரஸி -உபநிஷத்துக்களிலே -ஜாத்யேக வசனம் -ஸ்ருதி ஸ்ரஸ்ஸூ என்றபடி
நி கூடம் -அத்யந்த வேத ரஹஸ்யமாகையாலே மறைக்கப்படா நின்றுள்ள
தே மஹிமாநம் -உன்னுடைய ஸ்வரூபாதி ஐஸ்வர்யத்தை
நிதிமிவ வீக்ஷமாணாஸ் ஸந்த – ஆபத்துக்கு உறு துணையாம் சேம வைப்புப் போலே சாஷாத் கரியா நின்று கொண்டு
புஞ்சதே-அனுபவிக்கிறார்களோ
தே புருஷா தைவீம் ஸம் பதம் -அவர்கள் மோக்ஷ ஹேதுபூத மாய் தேவ சம்பந்த த்யோதமான குணங்களை யுடையவர்
திருவுக்கும் திருவாகிய என்றும் –ஸ்ரீ ஸ்ரீய என்றும் –அகலகில்லேன் என்றும் -நீ தண்ணீர் தண்ணீர் என்னும்படியான அந்தப் பகவத் விக்ரஹமாகிற ஐஸ்வர்யத்தை அபி சாஷாத்காரித்து அபிஜாதா தநு -அனுபவிக்க இட்டுப் பிறந்தவர்கள் அன்றோ –அபிமுகீ க்ருத்ய ஜாதா –உத் பன்னா பவந்தீதிஷே –என்னக் கடவது இறே
தே -என்று யுஷ்மச் ஸப்த சம்போதாதைகளாலே சேதனத்வமும் ப்ரஹ்மேஸாதி -இத்யாதியாலே கர்ம வஸ்ய தாதாம்யா பாவமும் –மாயா தே யவனிகா -என்று ப்ரக்ருதேர் அந்யதவமும்-காந்தஸ்தே புருஷோத்தம-என்று வ்யதிகரணத்தாலே -பகவத் ஸ்வரூப பின்னத்வமும் -ஸர்வாணி ரூபாணி காட உப கூடாநி -என்று நித்யத்வமும் –லோக நாத தயிதே -என்று பகவத் அபிமதத்வமும் –லோக ஏக ஈஸ்வரி -என்று ஸர்வ உத் க்ருஷ்டதையும் –ப்ரபுர் மாதுர் ந அலம் -என்று அபரிச்சேத்யத்வமும் -இவரால் ப்ரதிபாதிக்கப் பட்டது இறே –
ஹ்ரீஸ் ச தே லஷ்மீஸ் ச பத்ன்யவ் -என்றும் விஷ்ணு பத்னீ (அஸ்யேஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ -யஜுர் ஸம்ஹிதை -4-4-120-இவ்வுலகிற்கு ஈஸ்வரியாகவும் விஷ்ணுவுக்குப் பத்னியாகவும் இருப்பவள்) -என்றும் பர்த்ரு பத்னிகளுடைய ஸ்வரூப பேதமும் –பத்ம ப்ரியா (பத்மபிரியா ஸூ ப்ரஸந்நா -ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ர நாமம் -48 –பத்மத்தில் பிரியமுள்ளவள் -மிகவும் பிரசன்னையாய் இருப்பவள்) என்றும் தொடங்கி பரம சேதனத்வமும் –பும் ப்ரதாநேஸ்வரேஸ்வரீ (ஸ்ரீ வாஸூ தேவர் மஹிஷி பும் ப்ரதாநேஸ்வரேஸ்வரீ -ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ரநாமம் -1- ஸ்ரீ வாஸூ தேவனுடைய மஹிஷி சித் அசித் ஈஸ்வரர்களுக்கு ஈஸ்வரியாய் இருப்பவள்) -என்று பிராக்ருதேர் அந்யத்வ அகர்ம வஸ்யத்வ பகவத் அபிமதத்வாதிகளும் –நித்யைவைஷா -என்று நித்யத்வமும் –ஸர்வ உத் க்ருஷ்டா ஸர்வ மயீ (ஸர்வ உத்க்ருஷ்டா ஸர்வ மயீ -ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ரநாமம் -43- -எல்லாரையும் விட உயர்ந்தவள் -எல்லாமாய் இருப்பவள்)-என்று உத் க்ருஷ்டதையும் –வாசஸ் பரம ப்ரார்த்தயிதா ப்ரபத்யேந் நியதஸ் ஸ்ரீயம்(வாசஸ் பரம் ப்ரார்த்தயிதா பிரபத்யேன் நியதஸ் ஸ்ரீயம் -ஸுநக ஸம்ஹிதை –வாக்குக்கு எட்டாத பிராட்டியின் ஸ்வரூபத்தை அடைய விரும்புமவன் நியமமாக அப்பிராட்டியை சரணம் அடையக் கடவன்) -என்று அபரிச்சேத்யத்வமும் ஸ்ருதி ஸ்ம்ருதி சித்தங்களாய் இறே இருப்பது –தேவி ஸ்ருதிம் பகவதீம் (தேவி ஸ்ருதிம் பகவதீம் ப்ரதமே புமாம்ஸ: த்வத் ஸத் குண ஒக மணிகோச க்ருஹம் க்ருணந்தி தத் த்வார பாடந படூநிச ஸேதிஹாஸ ஸந்தர்க்கண ஸ்ம்ருதி புராண புரஸ்ஸராணி–ஸ்ரீ குணரத்ன கோஸம்-10–தாயே! ஸ்ரீரங்க நாயகி! முன்னோர்கள் பலரும், மிகவும் உயர்ந்த வேதங்கள் நான்கையும் உன்னுடைய இனிமையான திருக் கல்யாண குணங்கள் என்னும் உயர்ந்த கற்கள் வைத்துள்ள ஒரு பெட்டி என்றே கருதி அவற்றை மிகவும் போற்றி, பாதுகாத்து வந்தனர். இந்தப் பெட்டியைத் திறக்கும் திறவு கோலாக (சாவி) உள்ளவை எவை என்றால் – இதிகாசங்கள் (இராமாயணம், மஹாபாரதம்), மீமாம்ஸை போன்றவை (ஸந்தர்க்கணம்), ஸ்ம்ருதிகள் – என்பவை ஆகும்.)-என்று பட்டரும் அருளிச் செய்தார் இறே -ஏதாத்ருஸ ப்ரமாண ப்ரஸித்தி தோற்ற -யஸ்யாஸ்தே –என்கிறார் –
தே -என்று கீழ்ச் சொன்ன ஆகாரங்கள் எல்லாம் நிறம் பெறும்படி அதி விலக்ஷணமாய் -தத் ஆஸ்ரயமான அசாதாரண ஸ்வரூபத்தை அருளிச் செய்கிறார் –உணர் முழு நலம் –என்கிறபடியே கட்டடங்க விஞ்ஞான கநமாய் பிரஞ்ஞானகநமாய் -பகவத் ஸ்வரூபம் போலே –ஞான ஆனந்த மய (-நாயம் தேவோ ந மர்த்யோ வா ந திர்யக் ஸ்தாவரோபி வா -ஞான ஆனந்த மயஸ் த்வாத்மா ஸேஷோ ஹி பரமாத்மந –இந்த ஜீவாத்மா தேவனும் அல்லன் -மிருகமும் அல்லன் -மரமும் அல்லன் -நாலுவகைப்பட்ட இந்த சரீரங்களில் இருக்கும் ஞான ஆனந்த மயமான ஆத்மா பரமாத்மாவுக்கு தாஸனாய் இருப்பவன் அன்றோ –அசேதன பரமாத்மா இருவராலும் வேறுபட்ட ஆத்மா என்றபடி–) -என்கிறபடி ஞான ஆனந்த பிராஸுர்யத்தையுடைய திவ்யாத்ம ஸ்வரூபத்தை அனுபவிக்கிறார் -ஆழ்வார் யவன் -அவன் என்று பகவத் ஸ்வரூபத்தை யத் தச் ஸப்தங்களாலே அனுபவித்தால் போலே -இவரும் பிராட்டியுடைய ஸ்வரூப வைலக்ஷண்யத்தை –யஸ்யாஸ்தே -என்று யத் தச் ஸப்தங்களாலே நிர்த்தேசித்து அனுபவிக்கிறார் –
தே -படர்க்கையாக அன்றிக்கே முன்னிலையாக அருளிச் செய்கையாலே இவர் பண்ணுகிற ஸ்தோத்ர ஸ்ரவணத்திலே தனக்குண்டான கௌதுகம் தோன்ற முன்னே வந்து முகம் காட்டி சாஷாத் கரிப்பித்தபடியும் தோற்றுகிறது -குருகைக் காவலப்பன் யோகத்தில் –எங்கும் பக்கம் நோக்கறியாதே அனுபவிக்கிற ஸர்வேஸ்வரன் அவ்வனுபவத்தை விட்டு இவர் பக்கலிலே வ்யாமோஹம் பண்ணினபடி கண்டால் மாத்ருத்வ ப்ரயுக்த வாத்சல்ய விசிஷ்டையாய் -ஸர்வ ஸூலபையான இவள் இவரை விஷயீ கரிக்கச் சொல்ல வேணுமோ -இவர் தான் –நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு —என்கிறபடியே இருவருடையவும் அருள் கொண்டாடும் அடியவராய்த்து -அவ்விஷயீ காரம் இவர் அளவில் அன்றிக்கே இவ்வம்சத்தார் எல்லாருக்கும் நைசர்க்கம் இறே
மஹிமாநம் -கீழ் காந்தஸ்தே என்றும் தொடங்கிச் சொன்ன உபய விபூதி சேஷித்வ ரூபமான மஹிமாவை
மஹிமாநம் -ஸர்வேஸ்வரனுக்கு அத்யந்த அனுரூபங்களுமாய் இருக்கிற ஸ்வரூப வைலக்ஷண்யத்தையும் குணாதி வைலக்ஷண்யத்தையும் அனுசந்தித்துத் திரள மஹிமாநம் என்கிறார் –
தே மஹிமாநம்-என்கையாலே -மஹிமாநம் ஈசம் -என்கிற மஹிமாவில் வ்யாவ்ருத்தி தோற்றுகிறது -இது அவனையும் தண்ணீர் தண்ணீர் என்னப் பண்ணுமது இறே
த்வத் வல்லப -ந ஜீவேயம் ஷணமபி (சிரம் ஜீவதி வைதேஹீ யதி மாஸம் தரிஷ்யதி -ந ஜீவேயம் ஷணமபி விநா தாமஸிதேஷணாம் –ஸூந்தர -66-10-ஸீதை ஒரு மாஸம் தரித்து இருப்பாளாகில் வெகுகாலம் பிழைத்து இருந்தவளாகிறாள் -கறுத்த கண்களையுடைய அவளைவிட்டு ஒரு க்ஷண நேரமும் நான் பிழைத்து இருக்க மாட்டேன்)-என்று இறையும் அகலகில்லாத உன்னுடைய உள் மானம் புற மானமாய் அனுபவித்து அந்தரங்கனாய் அத்யந்த அபிமதனாய் இருக்கிறவன் –
ப்ரபு -யோ வேத்தி யுகபத் ஸர்வம் ப்ரத்யஷேண ஸதா ஸ்வதஸ் (யோ வேத்தி யுகபத் ஸர்வம் ப்ரத்யஷேண ஸதா ஸ்வதஸ் தம் ப்ரணம்ய ஹரிம் ஸாஸ்த்ரம் நியாயதத்வம் ப்ரசஷ்மஹே -நாதமுனிகள் அருளிச் செய்த நியாயதத்வம் -எவனொருவன் எப்போதும் எல்லா வஸ்துக்களையும் ஒரே சமயத்தில் தானாகவே நேரில் அறிகிறானோ -அந்த ஹரியை வணங்கி நியாயதத்வம் என்னும் கிரந்தத்தைச் சொல்லுகிறோம்)-என்று ஸர்வத்தையும் ஏக காலத்திலேயே சாஷாத்கரிக்க வல்ல ஸாமர்த்யத்தை யுடையவன் -அதவா உபய விபூதி ஐஸ்வர்யத்தை யுடையவன் –
இயத்தயா மாதும் நாலம் -இப்படி உனக்கும் வல்லபனாய் -பிரபுவாய் இருக்கிறவனும் இவ்வளவென்று பரிச்சேதிக்க மாட்டான் –
த்வத் வல்லபஸ்தே மஹிமாநம் மாதும் நாலம் –
பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு -என்றும் தான் முயங்கும் –(சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்-தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்-தேனமரும் பூ மேல் திரு ——100-)என்கிறபடியே குமிழ் நீருண்டு கண்ணாஞ்சுழலை இடுமது ஒழிய பரிச்சேதிக்க சக்தனோ
தே மஹிமாநம் இயத்தயா மாதும் -சமர்த்தோ த்ருஸ்யதே கச்சித் (ந ஸம் பதாம் ஸமாஹாரே விபதாம் விநிவர்த்தநே -சமர்த்தோ த்ருஸ்யதே கஸ்சித் தம் விநா புருஷோத்தமம் -பரம ஸம்ஹிதை -செல்வங்களைச் சேர்த்துக் கொடுப்பதாலும் ஆபத்துக்களை அடியோடு போக்குவதாலும் ஸமர்த்தனாய் இருப்பவன் அந்தப் புருஷோத்தமனைத் தவிர வேறொருவனும் காணப்படுகிறதில்லை –) -என்று அதி ஸமர்த்தன் என்னா அபரிச்சேத்ய வஸ்துவைப் பரிச்சேதிக்கலாமோ -பரிச்சேதிக்கிறோம் என்றும் இத்தைப் பரிச்சேதிக்க இழிந்தானாகில் அசமர்த்தனாய் விடுமத்தனை –
தே மஹிமாநம் மாதும் நாலம் –
தன் மஹிமாவைத் தான் அளவிட்டு அறிய மாட்டாதவன் தன் ஸ்வரூப வைலஷண்ய யுக்தமான உன்னுடைய மஹிமாவை அறிய வல்லனோ –
மஹிமாநம் மாதும் நாலம் –
ஸ்வ ஸ்வரூப வைலக்ஷண்யத்தைப் பரிச்சேதித்து அறியாதவன் உன்னுடைய ஸ்வரூப வைலக்ஷண்யத்தைப் பரிச்சேதிக்கவோ -ரூப வைலக்ஷண்யத்தைப் பரிச்சேதிக்கவோ -குண வைலக்ஷண்யத்தைப் பரிச்சேதிக்கவோ-எத்தைத் தான் இவன் பரிச்சேதிப்பது -தர்மியான ஸ்வரூப வைலக்ஷண்யம் சத்தயா தாரகமாகையாலே –ந ஜீவேயம் ஷணமபி -என்னப் பண்ணும் -ரூப வைலக்ஷண்யம் தஞ்சேயம் அஸி தேஷணா –என்கிறபடியே ததோ அப்யதிகமாய் இருக்கும் -குண வைலக்ஷண்யம் தத் குணங்களை லகூ கரிக்கும்படி யாயிருக்கும் (லுகுதரா ராமஸ்ய கோஷ்ட்டி -சரணம் சொல்லாத ராக்ஷஸிகளையும் ரஷித்த குணம் அன்றோ )-
இயத்தயா மாதும் நாலம்
அபரிச்சேத்யம் அத்தனை என்றும் அளவிடுமல்லால் இவ்வளவு என்றும் பரிச்சேதிக்க மாட்டான்
இவ்வர்த்தத்தை த்ருஷ்டாந்த முகேந த்ருடீ கரிக்கிறார் –ஆத்மந இவ –என்று –ஆத்மநோ மஹிமாநமிவ தே மஹிமாநமியத்தயா மாதும் நாலம் –தனக்கும் தன் தன்மை அறிவரியானை என்கிறபடியே தாம் தம் பெருமை அறியாதாப் போலே உன்னுடைய மஹிமாவை இவ்வளவு என்று அறிய மாட்டான் -அவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகள் ஓரொன்றே அபரிச்சேத்யம் இறே -ஆனந்த குணத்தைப் பரிச்சேதிக்க இழிந்த வேதங்கள் பட்டது படுமத்தனை -உன்னுடைய பெருமையைப் பேச இழிந்த இவனும் -அவனுடைய யதோ வாசோ நிவர்த்தந்தே (யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ்ஸந -தைத் ஆ -9-1- எந்த ப்ரஹ்மத்தினிடமிருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அதை அளவிட்டு அறியாமல் திரும்புகின்றனவோ அந்தப் பரமாத்மாவின் ஆனந்தத்தை அறிந்தவன் எதனிடமும் பயப்பட மாட்டான் –) -என்கிறதுக்கு விஷயம் இதுவாய்த்து –ஆத்மந இவ என்றும் தே மஹிமாநம் என்றும் அருளிச் செய்கையாலே பிராட்டிக்கு அனுரூபங்களான அவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் சேர்த்து அனுபவித்தமை தோற்றுகிறது -பாஷ்யகாரரும் -பகவந் நாராயண -என்றும் –அபிமத அனுரூப ஸ்வரூப ரூப குண -என்றும் இருவருடையவும் ஸ்வரூபாதிகளைச் சேர்த்து அனுபவித்து அருளினார் இறே
த்வத் வல்லபோ அபி -என்கிற அபி ஸப்தம் சமுச்சய அர்த்தமாய் கீழ்ச் சொன்ன ப்ரஹ்மாதிகளோடே இவனையும் சமுச்சயித்து -நுண் உணர்வில் நீலார் கண்டத்து அம்மானும் நிறை நான்முகனும் -என்றும் எல்லையில் ஞானத்தன் –என்கிறபடியே அதி ஸூஷ்ம ஞானிகளான ப்ரஹ்ம ருத்ராதிகளும் ஸ்வதஸ் ஸர்வஞ்ஞனான ஈஸ்வரனும் க்ருத சங்கேதராய்ப் பேசிலும் உன்னுடைய மஹிமாவைப் பரிச்சேதிக்க மாட்டார்கள் என்கை -அல்ப ஞானம் சக்திகரான ப்ரஹ்மாதிகளோடே அதிசயித ஞான சக்திகனான ஈஸ்வரனை சமுச்சியிக்கலாமோ -என்னில் -இவர்களுக்கு அந்யோன்யம் ஞான தாரதம்யம் உண்டேயாகிலும் இவளுடைய மஹிமார்ணவத்திலே மக்நராம் இடத்தில் ஒரு விசேஷம் இல்லாமையால் இங்கனே யோஜிக்கத் தட்டில்லை -பர்வத பரமாணுக்களுக்கு அணுத்வ மஹத்வ ரூபேண அந்யோன்யம் வாசியுண்டே யாகிலும் மஹார்ணவத்திலே மக்னங்களாம் இடத்திலே தன்னில் ஒரு வாசியில்லை இறே –
அதவா -அபி ஸப்தம் அதிசயத்திலேயாய் –யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் (யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் யஸ்ய ஞானமாயம் தபஸ் –முண்ட -1-1-10–எந்தப் பரமாத்மாவானவன் எல்லாமே வஸ்துக்களுடைய ஸ்வரூபத்தையும் ஸ்வ பாவங்களையும் அறிகிறானோ -எவனுடைய ஸங்கல்பமானது ஞானமயமாய் இருக்கின்றதோ —) –என்றும் –பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே (பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வா பாவிகீ ஞான பல க்ரியா ச -ஸ்வே –6–இந்தப் பரமாத்மாவுக்குப் பலபடிப்பட்டதும் மேலானதுமான சக்தியும் இயற்கையான ஞானமும் பலமும் ஸ்ருஷ்டித்தல் முதலிய காரியங்களும் உண்டு என்றும் அறியப்படுகிறது –) -என்கிற குணங்களை சமுச்சயித்து -ஆத்மா இவ தே –என்கிறபடியே ஸர்வஞ்ஞனாய் ஸர்வ சக்திகனுமாய் இருக்கிறவனும் என்னவுமாம் -அங்கனும் அன்றிக்கே –த்வத் வல்ல பச்ச ந ப்ரபு த்வஞ்ச -என்று சமுச்சயித்து உனக்கு வல்லபனான அவனும் அவனுக்கு வல்லபையான நீயும் க்ருத சங்கேதராய்ப் பரிச்சேதிக்கப் பார்த்தாலும் பரிச்சேதிக்கப் போகாது -என்கை –
இப்படி லோக விலக்ஷண ஞான சக்திகரான இருவரும் பரிச்சேதிக்க மாட்டார்கள் என்கை -இவர்களுடைய ஸர்வஞ்ஞதைக்குச் சேருமோ என்னில் -அபரிச்சேதய வஸ்துவை அளவிடுகிறேன் என்கை அஞ்ஞதைக்கு எல்லை நிலமாய் இருக்கும் -ஆகையால் இப்படிச் சொல்லக் குறையில்லை -இவ்வர்த்தத்தைத் தத்வ வித் அக்ரேஸரான ஆழ்வான் –தேவி த்வன் மஹிமா வதிர் ந ஹரிணா நாபி த்வயா ஞாயதே -என்று தொடங்கி ஸ்பஷ்டமாக ப்ரதிபாதித்து அருளினார் இறே
தேவி த்வந் மஹிம அவதிர் ந ஹரிணா நாபி த்வயா ஜ்ஞாயதே
யத் யப்யேவ மதாபி நைவ யுவயோஸ் சர்வஜ்ஞதா ஹீயதே
யந் நாஸ்த்யேவ ததஜ்ஞாதம் அநு குணாம் சர்வஞ்ஞதாயா விது
வ்யோமாம் போஜ மிதந்தயா கில விதந் ப்ராந்தோய மித்யுச்யதே –ஸ்ரீ ஸ்தவம்-8-தேவியே -உமது பெருமையின் எல்லையானது எம்பெருமானாலும் அறியப்படுகிறது இல்லை-உம்மாலும் அறியப்படுகிறது இல்லை-இப்படி ஒருவராலும் அறியப்படாது இருந்த போதிலும் உங்கள் இருவர்களுடைய ஸர்வஞ்ஞத்வ பிருதானது குறையப்படுகிறதே இல்லையே —ஏன் என்றால் யாது ஒரு வஸ்துவானது உலகில் அடியோடு கிடையாதோ அந்த அசத் வஸ்துவை அறிந்து கொள்ளாமல் இருப்பதை –சர்வஞ்ஞத்திற்கு ஒத்ததாக -விவேகிகள் -அறிகின்றார்கள் -ஆகாசத் தாமரை உள்ளதாக -இது ஆகாசத் தாமரைப் பூ என்று அறிகிறவன் –இவன் பைத்யகாரன் என்று உலகத்தாரால் சொல்லப்படுகிறான் அன்றோ)
இப்படி ஸர்வஞ்ஞராய் ஸர்வ சக்திகராய் இருக்கிற இருவருக்கும் பரிச்சேதிக்க ஒண்ணாமைக்கு ஹேதுவேன் -என்ன -அருளிச் செய்கிறார் –நிரவதிம் –என்று -இது தான் ஹேது கர்ப்ப விசேஷணமாய் அவதி ரஹிதமாகையாலே ஒருவருக்கும் பரிச்சேதிக்கப் போகாது என்கை -இத்தால் அபரிச்சின்ன வஸ்துவைப் பரிச்சேதிக்க மாட்டாமை ஸர்வஞ்ஞத்வத்துக்கு பஞ்சகம் என்றதாயிற்று –
இப்படி அவனுடைய மஹிமாவானது ஆஸ்ரிதற்கு அனுபவ யோக்யமாய் -ப்ராப்ய அந்தர் கதத்வ ஞாபகமாய் சேஷி சேஷ பூதர் இருவருக்கும் அனுகூலமாய் (அனுபவமும் ப்ரீதியும் கைங்கர்யமும் பிராப்திகளே -அனுபவ ஜெனித ப்ரீதிகாரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம் )-எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி யூழி தொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமாய் இருக்கும் என்கிறார் –நித்ய அனுகூலம் ஸ்வதஸ் -என்று
ஸ்வதஸ் நித்ய அனுகூலமாய் இருக்கையாவது -தன்னதொரு ஸ்வ பாவத்தாலே நிலா தென்றல் சந்தனம் போலே எப்போதும் சேதன ஈஸ்வரர் இருவர்களுக்கும் அனுகூலமாய் இருக்கை –
த்வாம் -கீழ் ப்ரதிபாதிக்கப்பட்ட பரத்வத்தாலே வந்த ப்ரஸித்தியை உடைய உன்னை -இப்படி ஸ்தோத்ரம் தான் இவருக்கு (இருவருக்கும்)ஸ்வரூப ப்ரயுக்தமாகையாலே அத்தலையில் நிறைவையும் இத்தலையில் குறைவையும் பார்த்துப் பிற்காலிக்க வேண்டாதபடியான சம்பந்தம் உண்டாகையாலே தாஸ இத்யஹம் நிர்ப்பய ஸ்தோஷ்யாமி -என்கிறார் –
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்தார் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனைப் பாடிப் பறை கொள்ளுகைக்காக -உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது என்று சம்பந்தத்தை முன்னிட்டால் போலே இவரும் பிராட்டியுடைய உத் கர்ஷத்தையும் தம்முடைய நிகர்ஷத்தையும் பார்த்துக் கதம் ப்ரூம -என்று பிற்காலித்தவர் -தத் அவிநா பாவ ஸம்பந்த அனுசந்தானத்தாலே ஸமாஹிதராய் ஸ்தோத்ரத்திலே ப்ரவர்த்திக்கக் குறையில்லை –பணி பதி என்று தொடங்கி த்வத் தாஸ தாஸீ கண –என்று உபயவிபூதியில் உள்ளாரும் இவளுக்கு சேஷபூதர் என்று சொல்லுகையாலே தம்முடைய சேஷத்வமும் அர்த்தாத் ஸித்தமாய் இருக்க இங்கு விசேஷித்து அருளிச் செய்வான் என் என்னில் ஆஷே பத ப்ராப்தமாகையைப் ஆபிதாமுகம் முக்யமாகையாலே தாஸோஹம் -என்கிறார் –அரங்கமாளி என்னாளி விண்ணாளி -என்றும் ஸ்ரீ ரங்க நாத மம நாத(ஸ்ரீ ரெங்கநாத மம நாத -ஸ்ரீ ரெங்ககத்யம் -7-ஸ்ரீ ரெங்க நாதனே என்னுடைய நாதனே) என்றும் விசேஷித்து அனுசந்தித்தார்கள் -அங்கு ஸ்வரூபம் சொல்லிற்று -இங்கு ஸ்தோத்ர கரண யோக்யதைக்காகச் சொல்லுகிறது என்னவுமாம்
த்வதீய ஹேதுவை அருளிச் செய்கிறார் –ப்ரபந்ந -என்று -த்வாம் ப்ரபந்நோ காம் நிர்ப்பய ஸ்தோஷ்யாமி -அசரண்ய சரண்யையான உன்னை (பற்றிலார் பற்ற நின்ற என்றபடி )அநந்ய சரணனான நான் சரணம் புகுந்தேன் -என்னுடைய பூர்வ அபராதங்களையும் உன்னுடைய பூர்த்தியையும் அனுசந்தித்து அப்பூர்த்திக்கு அனுரூப ஸ்தோத்ர கரண காரண ஞான சக்த்யாதி அனுசந்தானத்தாலே நிர்ப்பயனாய் ஸ்தோத்ரம் பண்ணுகிறேன் –பூ மேல் இருப்பாள் வினை தீர்க்கும் –-என்கிறபடியே உன்னுடைய ஆஸ்ரித விரோதி நிரசன அனுசந்தானத்தாலே என்னுடைய பூர்வ அபராதங்களுக்கு அஞ்ச வேண்டியதில்லை -ஆர்த்த அபராதைகளாய் வதார்ஹராய் இருப்பாரையும் ந கஸ்சின் ந அபராத்யதி (பாபாநாம் வா ஸூபாநாம் வா வாதார்ஹாணாம் ப்லவங்கம -கார்யம் கருணமார்யேண ந கச்சின் நாபராத்யதி-யுத்த -116-44- வானர பாபிகளாயினும் புண்யமுள்ளவராயினும் கொல்லத்தகுந்தவர்களாக இருந்தாலும் குணவானாய் இருப்பவனால் அவன் விஷயத்தில் கருணை காட்டப்பட வேண்டும் -அபராதம் செய்யாதவன் ஒருவனுமே இல்லையே –)என்றும் மறுதலைத்து மன்றாடி ரக்ஷிப்பது -அவர்கள் பயம் சமிக்கும் படி பவேயம் சரணம் ஹி வ -என்று உன்னுடைய அபய பிரதானத்தினுடைய நீர்மையை அனுசந்தித்தால் உன்னுடைய பூர்த்திக்கு அஞ்ச வேண்டியதில்லை -ஆர்த்த அபராதைகளாய் வதார் ஹராய் இருப்பாரையும் மாத்ருத்வ ப்ரயுக்தமான வாத்சல்யத்தாலே த்வத் கருணா நிரீஷண ஸூதா என்னும்படியான உன்னுடைய கடாக்ஷ ப்ரபாவத்தையும் அனுசந்தித்தால் என்னுடைய அஞ்ஞான அசக்திகளுக்கு அஞ்ச வேண்டியதில்லை-
த்வாம் ப்ரபந்ந அஹம் நிர்ப்பய –உபயாந்தரங்களைப் பற்றினால் இறே –வர்த்ததே மே மஹத் பயம் –(காலேஷ்வபி ச சர்வேஷு திஷு ஸர்வாஸூ ச அச்யுத சரீரே ச கதவ் சாபி வர்த்ததே மே மஹத்பயம் -ஜிதந்தே -1-9-அச்யுதனே -எல்லாப் புண்ய காலங்களிலும் எல்லாத் திசைகளிலும் உள்ள புண்ணிய ஷேத்ரங்களிலும் -தர்ம சாதனமான சரீரத்திலும் சரீராந்தர கதியிலும் அடியேனுக்கு அதிகமாக பயம் உள்ளது –)என்னும்படி பயப்பட வேண்டுவது –
த்வாம் ப்ரபந்ந அஹம் நிர்ப்பய —
உபாய பூதனான ஈஸ்வரனைப் பற்றினேனோ –வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க -(நச்சராவணைக் கிடந்த நாத பாத போதினில் வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீயினம் மெய்த்தன் வல்லை யாதலால் அறிந்தனன் நின் மாயமே உய்த்து நின் மயக்கினில் மயக்கல் என்னை மாயனே –85-)என்னும்படி அவனுடைய ஸ்வா தந்தர்யத்தை நினைத்து அஞ்சுகைக்கு -பாபமே பச்சையாக அங்கீ கரித்து -பரதந்த்ர ஏக வேஷையாய் -பர்த்தாவான அவனையும் –த்ராஹி த்ராஹீ தீ என்று கடிப்பிக்க வல்ல ஸுலப்யத்தையுமுடைய உன்னைப் பற்றின எனக்கு உபாய விஷயமாகக் கர்தவ்ய அம்சம் ஒன்றும் இல்லாமையாலே உபேய பூதையான உன் விஷயத்திலே –அஹம் ஸ்லோக க்ருத் -என்று அனுபவ பரிவாஹ ரூபமான ஸ்லோக ரசனையைப் பண்ணி ஸ்துதிக்கிறேன் என்கிறார்
த்வாம் ப்ரபந்ந -என்கையாலே தாம் பத்ம நேமிம் சரணம் அஹம் ப்ரபத்யே -(சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸா ஜ்வலந்தீம் ஸ்ரியம் லோகே தேஜுஷ்டா-முதாராம் தாம் பத்மினீமீம் ஸரண-மஹாம் ப்ரபத்யே அலக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே-ஸ்ரீ ஸூக்தம் -5–உலகோர்க்கு குளிர்ச்சி வழங்குவதில் நிலவைப் போன்றவளும் பரந்த தேஜஸ்ஸூ மிக்கவளும் -தனது மகிமையால் சுடர் விட்டு ஒளிபவளும் தேவர்களால் ஸ்துதிக்கப்படுபவளும் வண்மை மிக்கவளும் -தாமரைப் பூவை ஏந்திக் கொண்டு இருப்பவளும் ஈம் என்ற பீஜ மந்த்ரத்த்தின் பொருளாகத் திகழ்பவளும்-அந்த மனதிற்கு உகந்த ஸ்ரீ மஹா லஷ்மியை–அடியேன் சரணமாகப் பற்றுகிறேன் –உன்னை வேண்டுகிறேன்-என்னிடம் உள்ள அலஷ்மிகள் நசிக்கட்டும்)என்கிற ஸூக்த்தார்த்தத்தை அனுஷ்டித்தமை தோற்றுகிறது – இத்தை அடியொற்றி இறே பாஷ்யகாரரும் –ப்ரபத்யே -என்று பற்றிற்று –
ஆக இப்படி ஸ்தோத்ரத்திலே ப்ரவ்ருத்தராய்க் கொண்டு ஸ்ருதிச் சாயையாலே ஸ்தோத்ரம் பண்ணுகிறார் –
லோக ஏக ஈஸ்வரி லோக நாத தயிதே -(அஸ்யேஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ -யஜுர் ஸம்ஹிதை -4-4-12-இவ்வுலகிற்கு ஈஸ்வரியாகவும் விஷ்ணுவுக்குப் பத்னியாகவும் இருப்பவள் —)என்று –
இப்பத த்வயத்தாலும் அஸ்ய ஈஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ –என்கிற ஸ்ருதி அர்த்தம் ஸூசிதமாயிற்று
லோக ஏக ஈஸ்வர-லோக்யத இதி லோக -என்கிற பிரகிரியையாலே ப்ரமாண சித்தங்களான த்ரிவித சேதன அசேதனங்களுக்கும் அத்விதீய நிர்வாஹகன் -ஈஸ்வர ஸப்தம் ஸ்ருதியாதிகளிலே ப்ரதிபாதிக்கிற ஸர்வ சேஷித்வத்தையும் காட்டுகிறது –
பதிம் விஸ்வஸ்ய -(பதிம் விஸ்வஸ் யாத்மேஸ்வரம் –நாராயணம் -தைத் நா -11–உலகிற்கெல்லாம் பதியாய் இருப்பவனும் தனக்குத்தானே ஈஸ்வரனாய் இருப்பவனும்)என்று ஸர்வ சேஷித்வத்தையும்
யாஸ் பாஸ்ஸ மஹேஸ்வர -(யத் வேதாதவ் ஸ்வரஸ் ப்ரோக்தா வேதாந்தே ச ப்ரதிஷ்டித -தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய யஸ் பரஸ் ஸ மஹேஸ்வர -தை நா -10-24- வேதத்தின் ஆதியிலும் அந்தத்திலும் யாதொரு ஸ்வரமானது சொல்லப்படுகிறதோ -தனக்குக் காரணமான அகாரத்தால் ஒடுங்கிய ஓங்காரமாகிய ஸ்வரத்துக்குப் பொருளாய் இருப்பவனே மகேஸ்வரன் –)என்று யோ லோகத்ரயம் ஆவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர என்னும் ஸர்வ நியந்த்ருத்வத்தையும் நாராயண அனுவாகங்களிலே ப்ரதிபாதித்தது இறே -இப்படி ஸர்வ நியாந்தாவானவனுக்கு வேறொரு நியந்தா வில்லை என்னுமத்தை -ஆத்மேஸ்வரம் -என்றும் நாதனை ஞாலம் விழுங்கும நாதனை என்றும் ப்ரதிபாதித்தது இறே(வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற-நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை ஞாலந்தத்தும் பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே –திரு விருத்தம் 79)
லோக ஏக ஈஸ்வர என்றவிடத்திலே ஏக சப்தத்தாலே –ஏகஸ் ஸ்வதந்த்ரோ ஜகதோ பபூவ -(–ஏகஸ் ஸ்வ தந்த்ரோ ஜகதோ பபூவ -தை -நா -11-உலகிற்கு ஒரே ஸ்வ தந்த்ரன் ஸ்வாமியாய் நாராயணன் விளங்கினான்) -என்றும்ஷராத்மாநா வீஸதே தேவ ஏக – (க்ஷரம் ப்ரதாநம் அம்ருத அக்ஷரம் ஹர ஷாரத்மாநா வீஸதே தேவ ஏக -ஸ்வே -1-10-க்ஷரம் எனப்படுவது பிரக்ருதியே -அம்ருதமாகையால் அக்ஷரம் எனப்படுபவன் ஜீவனே -பிரகிருதி ஜீவர்களை ஒரு தேவன் நியமிக்கிறான்)என்றும் ஏக ஸாஸ்தா ந த்வீதீயோ அஸ்தி கச்சித் -(ஏகஸ் ஸாஸ்தா ந த்வதீயோ அஸ்தி ஸாஸ்தா கஸ்ஸித் யோ ஹ்ருச்சயஸ் தமஹமநு ப்ரவீமி-தேநைவ யுக்தஸ் பிரவணாதி வோதகம் யதா நியுக்தோ அஸ்மி ததா வஹாமி -ஆச்வ பர்வம் -27-1-நாராயணன் ஒருவனே நியமிப்பவன் -நியமிப்பவர் வேறு இல்லை -எந்த பகவான் ஹ்ருதயத்தில் எழுந்தருளி இருக்கிறானோ அவனையே நான் சொல்லுகிறேன் -ஜலம் பள்ளத்தை நோக்கி ஓடுவது போலே -அவனுடன் சேர்ந்தவனாய் அவன் ஏவின வேலையைத் தாங்கிச் செல்லுகிறேன்)என்றும் இத்யாதி ப்ரமாணங்களிலே ஸர்வ நியந்த்ருத்வம் இவனுக்கு ஐகாந்திகமாகச் சொல்லுகையாலே அத்விதீய நிர்வாஹகத்வம் சொல்லுகிறது -இப்படி அத்விதீய ஸர்வ நிர்வாஹகன் பத்னியாகையாலே லோக ஏக ஈஸ்வரி -என்கிறார் -இத்தால் –ஈஸாநா தேவீ புவநஸ்ய அதி பத்நீ –என்றும்
விஸ்வஸ்ய பர்த்ரீ ஜகதஸ் ப்ரதிஷ்டா -(விஸ்வஸ்ய பர்த்ரீ ஜகதஸ் ப்ரதிஷ்டா -யஜுர் காட -3-3–உலகிற்கு ஸ்வாமிநியாகவும் ஆதாரமாகவும் இருப்பவள்)என்கிற ஸ்ருத்யர்த்தம் ஸூசிதம்
அதவா
லோக ஸப்தத்தாலே லோக சித்தனான லோக நாதனையும் சொல்லி தத்வத்ரய நிர்வாஹிகை -என்னவுமாம்
பும் ப்ரதாநேஸ்வக்ரேஸ்வரீம் -(ஸ்ரீ வாஸூ தேவர் மஹிஷி பும் ப்ரதாநேஸ்வரேஸ்வரீ -ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ரநாமம் -1- ஸ்ரீ வாஸூ தேவனுடைய மஹிஷி சித் அசித் ஈஸ்வரர்களுக்கு ஈஸ்வரியாய் இருப்பவள்)என்னக் கடவது இறே –ஈஸ்வரீம் ஸர்வ பூதாநாம் -என்கிற விடத்தில் ஸர்வ சப்தத்துக்கு ஸங்கோசம் இல்லாமையாலும் கர்மணி வ்யுத்பத்தியில் கர்த்ரு சங்கோச ராஹித்யத்தாலும் ஈஸ்வர ஈஸ்வரி என்னத் தட்டில்லை -அவன் பரம ப்ரணயி யாகையாலே இவளுக்கு நியாம்யனாய் ப்ருகுடி படனாய் இறே இருப்பது –யஸ்யா வீஷ்ய -ஜெகன்நாதோ அபி இத்யாதி –
ஸ்வஸ்தி ஸ்ரீர் திசதாத் அசேஷ ஜெகதாம் சர்க்க உப சர்க்க ஸ்திதீ
ஸ்வர்க்கம் துர்க் கதிம் ஆப வர்க்கிக பதம் ஸர்வஞ்ச குர்வந் ஹரி
யஸ்யா வீஷ்யா முகம் தத் இங்கித பராதீநோ விதத்தே அகிலம்
க்ரீடேயம் கலு ந அந்யதா அஸ்ய ரஸதா ஸ்யாத் ஐக ரஸ்யாத் தயா -ஸ்ரீ ஸ்தவம்–1-
ஸர்வேச்வரனாகிய ஸ்ரீமந்நாராயணன் இந்த உலகில் பலவகையான சேதனங்களையும், அசேதனங்களையும் படைத்து வருகிறான்.அப்படிப் படைத்து வரும்போது, தனது படைப்புகள் பயன் உள்ளவையா, அல்லவா என்று எண்ணுகிறான்.இதனால் அவனுக்கு ஒரு விதமான சோர்வு உண்டாகிறது (இதனை வ்யஸனம் என்றார்).இந்தச் சோர்வை பெரிய பிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியார் நீக்குகிறாள் – எப்படி?அவனது படைப்புகள் அனைத்தையும் தாம் ஒப்புக்கொண்டதாக கூறி, அவற்றைப் பயனுள்ளதாகச் செய்கிறாள்.(அங்கீகாரிபி என்ற பதம் ஏற்பதையும், ஸார்த்த யந்த்யை என்ற பதம் பயனுள்ளதாக மாற்றுதலையும் குறிக்கின்றன).இவள் தனது சம்மதத்தை பெரியபெருமாளிடம் எப்படிக் கூறுகிறாள் என்றால், திருவாய் மூலமாக அல்ல.பெரியபெருமாளிடம் உள்ள வெட்கம் காரணமாக, இவள் தனது கண்களால், கண்களின் அசைவால் பெரியபெருமாளுக்குச் சம்மதத்தை உணர்த்துகிறாள் (இதனை ஆலோகை என்ற பதம் கூறுகிறது).இப்படிப்பட்ட பெரிய பிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியாருக்கு எனது அஞ்ஜலிகள்!
ஐஸ்வர்யம் மஹ தேவ வா அல்பம் அதவா த்ருச்யதே பும்ஸாம் ஹி யத்
தல் லஷ்ம்யாஸ் சமு தீக்ஷணாத் தவ யதஸ் சார்வத்ரிகம் வர்த்ததே
தேநை தேந ந விஸ்மயே மஹி ஜகந்நாதோ அபி நாராயண
தந்யம் மந்யத ஈஷணாத் தவ யதஸ் ஸ்வாத்மா நமாத் மேஸ்வரா -ஸ்ரீ ஸ்தவம்–6-
மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! உனது உயர்ந்த கடாக்ஷம் எதன் மீது சென்று அதிகமாக விழுந்ததோ, அந்தப் பொருள் ப்ரஹ்மம் எனப்பட்டது.-அந்தக் கடாக்ஷங்கள் எந்தப் பொருள்களின் மீது குறைவாக விழுந்ததோ, அவை இந்திரன் முதலான பரப்ரஹ்மத்தை விடத் தாழ்வான பொருள்களாக ஆனது. எனவே பரப்ரஹ்மத்தைக் குறித்தும், இந்திரன் முதலான தேவர்களைக் குறித்தும் உள்ள வேதங்கள் உன்னையே மறைமுகமாக கூறுகின்றன என உறுதியாகக் கூற இயலும். ஒரு நகரத்தைப் பற்றியும், அந்த நகரத்தின் செல்வச் செழிப்பைப் பற்றியும் ஒரு நூல் கூறுவதாக வைத்துக்கொள்வேம்.
அந்த வர்ணனை, அந்த நாட்டின் அரசனை அல்லவா மறைமுகமாக குறிக்கிறது?-இவள் தனது பரிபூர்ணமான கடாக்ஷத்தை வீசியபடி உள்ளதாலேயே நம்பெருமாளுக்கு ஸ்வாமித்வம் போன்றபல தன்மைகள் நித்யமாக உள்ளன.
இப்படி ஸர்வ நிர்வாஹகனான ஸர்வேஸ்வரனும் நியாம்யனாகைக்கு ஹேது வென் என்ன ததத் யந்தர் அபிமதையாகையாலே என்கிறார் –லோக நாத தயிதே -என்று –சக்ரத்தான் –தண் துழாய்த் தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் –என்கிறபடியே(சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த் தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண் தேனமரும் பூ மேல் திரு ——100-)என்கிறபடியே ஸர்வ நியந்தாவாய் ஸர்வ ஸ்மாத் பரனான ஸர்வேஸ்வரனும் அதி வ்யாமுக்தனாய் நியாம்யனாம்படி தத் வல்லபையாய் இருக்குமவன் என்கை -(ஸ்ரீ வாஸூ தேவர் மஹிஷி பும் ப்ரதாநேஸ்வரேஸ்வரீ -ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ரநாமம் -1- ஸ்ரீ வாஸூ தேவனுடைய மஹிஷி சித் அசித் ஈஸ்வரர்களுக்கு ஈஸ்வரியாய் இருப்பவள்)
அதவா
லோக ஏக ஈஸ்வரி என்கிற லோக நியந்த்ருத்வத்துக்கு ஹேது லோக நாத தயிதை யாகையாலே என்னவுமாம் –
லோக நாத தயிதே -ராமஸ்ய தயிதா பார்யா -(ராமஸ்ய தயிதா பார்யா நித்யம் ப்ராண சம ஷிதா -பால-1-26–ராமனுக்குப் பிரியபத்னியாயும் எப்போதும் அவனுடைய ப்ராணனைப் போலே நன்மையைச் செய்பவளாகவும் இருப்பவள் ஸீதை)என்னக் கடவது இறே -ஸ அபராத சேதனரை அபராத அனுகுணமாக தண்டிக்கும் நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரனோடே கடிப்பித்து ரஷிப்பிக்கும் இவளுக்கு இதம் ப்ரதமமில்லாத ஈஸேஸி தவ்ய ஸம்பந்தமும் -தத் பத்நீத்வ ஸம்பந்தமும் ப்ரதானமாகையாலே –லோக ஏக ஈஸ்வரி லோக நாத தயிதே -என்று உபய ஸம்பந்தத்தையும் அருளிச் செய்கிறார் –இவள் தாயாய் -என்று தொடங்கி -அவனுக்குப் பத்னியாய் -என்று ஸம்பந்த த்வயத்தையும் அருளிச் செய்தார் இறே அபியுக்த அக்ரேஸரான பிள்ளை லோகாச்சார்யாரும் –
(இவள் தாயாய் இவன் க்லேசம் பொறுக்க மாட்டாதே -அவனுக்கு பத்நியாய்-இனிய விஷயமாய் இருக்கையாலே கண் அழிவற்ற புருஷகாரம்–ஸ்ரீ முமுஷுப்படிசூரணை -128-அவன் தன்னை வைலஷண்யத்தை கண்டு பிச்சேறி தன் சொல் வழி நடக்கும் படி அபிமத விஷயமாய் இருக்கையாலே -கண் அழி வற்ற புருஷகாரம்-என்கை-)
ஸ்தோத்ரத்தில் ப்ரவ்ருத்தராவது -பரத்வ அனுசந்தானத்தாலே நிவ்ருத்தராவது -தாஸன் என்பது -ப்ரபன்னன் என்பது -ஸம்பந்தத்தை முன்னிடுவது -தத் வசீகரண ஸாதனமான ஸுலப்யத்தைச் சொல்வதாய்க்கொண்டு ஸ்தோத்ரத்திலே உத்யுக்தரானாலும் -ஸ்தோத்ர விரோதியான அவித்யாதிகள் நசித்து ஸ்தோத்ர கரண சாதன ஞான பக்திகள் உண்டான போதிறே ஸ்தோத்ர ப்ரவ்ருத்தி ஸபலமாவது -ஆனபின்பு அவை இரண்டுமே இல்லையென்று நிவ்ருத்தரான நீர் இப்போது ப்ரவர்த்திகைக்கு ஹேது வென் என்ன-என்னுடைய அவித்யாதி நிவர்த்தகமாய் ஞான பூர்த்தி ப்ரதமுமான ப்ரஸாத விசேஷத்தை என் பக்கலிலே பண்ணி அருளுகையாலே உன்னுடைய தயா ப்ரபாவத்தை அறிந்து பய ரஹிதனாய் ஸ்தோத்ரம் பண்ணுகிறேன் என்கிறார் –தாந்தே தயாம் தே விதந் -என்று –
(தாந்தே -இரண்டு அர்த்தங்கள் – சம்போதானம் என்றும் -தாந்தி உள்ள புருஷர்களிடத்தில் கடாஷிக்கிறீர் என்றுமாம்)
இப்படி இவ்விசேஷ கடாக்ஷம் இல்லாத போது கீழ் நிவ்ருத்தரான இவர் உடனே ஸ்தோத்ரத்திலே ப்ரவர்த்திக்கக் கூடாது இறே –த்வாம் ஸ்தோதுமபி நேஸாநாஸ் த்வத் ப்ரஸாத லவம் விநா –என்று தத் ப்ரஸாதத்தை ஒழிய ஸ்தோத்ரம் பண்ண ஷமரன்று என்றது இறே(ப்ரஹ்மாத்யாஸ் ஸகலா தேவா முனயச்ச தபோதன -த்வாம் ஸ்தோதுமபி நேஸாகாஸ் த்வத் ப்ரஸாத லவம் விநா -பிரமன் முதலிய எல்லாத் தேவர்களும் தவத்தையே தனமாகக் கொண்ட முனிவர்களும் உன்னுடைய அருளில் ஒரு துளியாவது இருந்தாலொழிய உன்னை ஸ்துதிக்க வல்லார் அல்லர் –) -ஆன பின்பு இவர் ஸ்தோத்ரம் பண்ண வல்லராம்படி இவருக்கே விசேஷ கடாக்ஷத்தைப் பண்ணினாள் என்கிற இவ்விசேஷம் ஸித்திக்கைக்காக தாந்தே மயி -என்று கூட்டிக் கொள்வது –
தாந்தே மயி-க்ருபோத்தம்பக தீநாவஸ்தா விஸிஷ்டனாய் ப்ரபன்னனான என் விஷயத்திலே –
அதவா -தாந்தே –என்று ஸம்புத்தி யாகவுமாம் -கருணாம்ருத ஸம் வர்த்திதையான கற்பகக் கொடியே –லஷ்மீ கல்பக வல்லீ -லஷ்மீ கல்ப லதா -மலர் வைகு கொடி -இன்னிள வஞ்சிக்கொடி -ஒருவல்லித் தாமரையாள் –என்கிறபடியே கனக கமலத்தில் உண்டான கல்பக லதை போலே –லோக நாதனான தெய்வ வந்து துதைந்த வென் பெண்மை -என்னலாம் படி தத் ஸம்ஸ்லேஷத்தாலே துவண்ட வடிவை யுடையவளே –
படி புல்கு மடி யிணைப் பலர் தொழ மலர் வைகு
கொடி புல்கு தட வரை யகலமது டையவர்
முடி புல்கு நெடு வயல் படை செல வடி மலர்
கடி புல்கு கண புர மடிகள் தமிடமே —8-7-8-
மன்னு மரகதக் குன்றின் மருங்கே யோர் ————77
இன்னிள வஞ்சிக் கொடி யொன்று நின்றது தான்
அன்னமாய் மானாய் அணி மயிலாய் ஆங்கிடையே ——–78
மின்னாய் இளவேய் இரண்டாய் இணைச் செப்பாய்
முன்னாய தொண்டையாய்க் கெண்டைக் குலம் இரண்டாய் ——79
அன்ன திருவுருவம் நின்றது அறியாதே-பெரிய திருமடல்
வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்-அந்தி விளக்கும் அணிவிளக் காம், – எந்தை-ஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன்,-திருவல்லிக் கேணியான் சென்று.
பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாலோ
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4-
தே –மாத்ருத்வ ப்ரயுக்த வாத்சல்ய விசிஷ்டையான உன்னுடைய
தே தயாம் என்றும் பகவத் கிருபையை வ்யாவர்த்திக்கிறார் -பகவத் காருண்யத்திலும் அதிசயித்து இறே காருண்ய ரூபையான இவள் கருணை இருப்பது –
(லஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீகேசோ தேவ்யா காருண்ய ரூபயா
ரஷக சர்வ சித்தாந்தே வேதாந்தே அபி ச கீயதே –ஸ்ரீ லஷ்மீ தந்திரம்)
தே தயாம் -வதார்ஹ காகாசூர விபீஷணாதிகளை -சரண உக்திகள் கைம்முதலாக ரஷித்த காகுத்ஸனுடைய கோஷ்ட்டியையும் (கண்ணனும் வாரானால் காகுத்தனும் வாராமல் -வம்ச ஏற்றத்தாலேயே இப்பத பிரயோகம் )-ஆர்த்த அபராதைகளான ராக்ஷஸிகளைச் சித்ரவதம் பண்ணத் தேடின சொல் மிறுங்கனான பவனாத்மஜன் பக்கல் –பாபாநாம் வா ஸூபாநாம் வா —என்னும் –ராஜ ஸம்ஸ்ரய வஸ்யாநாம் குர்வந்தீ நாம் பராஞ்ஞயா –(ராஜ ஸம்ஸ்ரய வஸ்யாநம் குர்வந்தீநாம் பரஞ்ஞயா விதேயேநாம் ச தாஸீநாம் ந குப்யேத் வாநரோத்தம -யுத்த -116-38- வானர ஸ்ரேஷ்டனே ராஜாவுக்குப் பரதந்த்ரர்களும் அவனுடைய ஆஜ்ஜையினால் எனக்குத் துன்பத்தைச் செய்பவர்களும் அவனுக்கு வசப்பட்டவர்களுமான தாஸிகளிடத்தில் எவன் கோபிப்பான் –)என்று மறுத்து மன்றாடி ரஷித்த உன்னுடைய தயா வைபவத்தாலே லகூ கரிக்கும்படி யன்றோ கருணா சகியான ஷாந்தியின் பிரபாவம் இருப்பது -இப்படி பகவத் காருண்ய ஷாந்திகளிலும் அதிசயிதமான பிராட்டியினுடைய கருணா சகியான ஆகஸ்மிக ஷாந்தியை –ஸாந்த்ர மஹா கஸ –கஸ் ஸூகயது -(மாதர் மைதிலி ராக்ஷஸீ: த்வயி ததைவ ஆர்த்ராபராதா: த்வயா-ரக்ஷந்த்யா பவநாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா காகம் தஞ்ச விபீஷணம் சரணம் இதி உக்தி க்ஷமௌ ரக்ஷத: ஸாந: ஸாந்த்ர மஹாகஸ: ஸுகயது க்ஷாந்தி: தவ ஆகஸ்மிகீ–50–பிராட்டியுடைய ஷமா குணத்துக்கும் பெருமாளுடைய ஷமா குணத்துக்கும் பர்வத பரமாணு வோட்டை வாசி-என்று அருளிச் செய்து -அப்படிப்பட்ட ஷமா குணம் தம் மேலே ஏறிப் பாய பிரார்த்தனை இதில்-தாயே! இராமபிரானின் நாயகியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனாக உதித்த இராமன் தன்னைச் சரணம் என்று புகுந்த விபீஷணனையும், காகம் ஒன்றையும் மட்டுமே காப்பாற்றினான்.-ஆனால் நீயோ குற்றங்கள் பல புரிந்த அரக்கிகளை, அவர்கள் உன்னிடத்தில் சரணம் என்று புகாமலேயே-அனுமனிடம் இருந்து காப்பாற்றினாய். இதன் மூலம் இராமனின் புகழ் தாழ்ந்தது.-ஆக இப்படியாகத் தனக்குத் துன்பம் விளைவிப்பவர்களையும் காக்கும் உனது பொறுமைக் குணமானது பல விதமான குற்றங்கள் உடைய எங்கள் மீது படர வேண்டும்) என்று பட்டர் பிரார்த்தித்து அருளினார் இறே -இன்னமும் க்ருபயா பர்யபாலயத் –(ஸ தம் நிபதிதம் பூமவ் சரண்ய சரணாகதம் வாதார்ஹமபி காகுத்ஸ்த க்ருபயா பர்யபாலயத் -ஸூந்தர -38-35–பூமியில் விழுந்தவனும் சரணமடைத்தவனுமான அந்தக் காகாசூரனை கொல்லத் தகுந்தவனாய் இருந்த போதிலும் சரணமடையத் தகுந்தவனான ராமபிரான் தன் அருளாலே ரக்ஷித்தான்)என்று பலிபுக்கான காகத்தை ரக்ஷித்த கிருபைக்கும் அடி –த்ராஹி தராஹீதீ பர்த்தாரம் உவாச தயயா விபும் –என்னும் (த்ராஹி தராஹீதி பர்த்தாரம் உவாஸ தயயா விபும் -நாதனான பகவானை நோக்கி காத்தருள்வாயாக காத்தருள்வாயாக -என்று கிருபையுடன் கூறினாள் பிராட்டி-)என்னும் உன் தயை இறே
தயாம் —ஸ்வார்த்த நிரபேஷா பரதுக்க அஸஹிஷ்ணுதா தயா – (-ஸ்வார்த்த நிரபேஷா பர துக்க அஸஹிஷ்ணுதா தயா -ஸ்ரீ பாஷ்யம் -தன் ப்ரயோஜனத்தை எதிர்பாராமல் பிறர் துக்கத்தைக் கண்டு பொறாமலிருக்கை தயையாகிறது –)என்கிற லஷண லஷிதையான க்ருபை –மர்ஷயாமீஹ துர்ப்பலா (தாஸீநாம் ராவணஸ்யாஹம் மர்ஷயாமீஹா துர்ப்பலா -யுத்த -116-41- அவர்களுடைய கண்கள் கலங்கக் காணமாட்டாத துர்ப்பலையான நான் ராவணனுடைய தாசிகளாகிற இவர்களை மன்னிக்கிறேன்-) என்ற உன் பக்கலிலே அனுஷ்டான சேஷமாய் அன்றோ இருப்பது –
விதந் -இப்படி ஸமாப்யதிக ரஹிதையாய் -ஸர்வ லோக ப்ரஸித்தையாய் -த்வத் தயை ஏக தாரகனாய் தயநீயனான என்னை விஷயீ கரித்த உன் தயா ப்ரபாவத்தை அறியா நின்று கொண்டு –தாந்தே புருஷே தே தயாம் விதந் -என்று ஸாமான்யமாக யோஜிக்கவுமாம் -அப்போதும் அந்த நியாயம் தமக்கும் ஒக்கும் இறே -இப்படி சாமான்யேன வரும் அந்வயத்திலும் விசேஷ அந்வயத்துக்கு விசேஷ பிரயோஜனம் உண்டு
(தர்ம நித்யே மஹா புத்தவ் ப்ரஹ்மண்யே ஸத்ய வாதிநி ப்ரஸ்ரிதே தாந ஸீலே ச சதைவ நிவஸாம் யஹம் –தர்மத்தில் எப்போதும் ஈடுபட்டு இருப்பவன் -மஹா புத்திமான் ப்ரஹ்மவித் ஸத்யவாதி வணங்கியவன் தாஸ சீலன் -ஆகிய இவர்களிடம் நன் எப்போதும் வஸிக்கிறேன் –)
(தீனர்கள் இடமும் மட்டுமே தயை என்பதை விட திருவடியை அடைந்த பிரபன்னனிடம் பொழிந்த தயைக்கு விசேஷம் உண்டே-பிரஹலாதன் கூப்பிட்ட குரலுக்கும் கஜேந்திரன் கூப்பிட்ட குரலுக்கும் வந்து ரஷித்ததும் திரௌபதிக்கு உதவினதும் விசேஷம் அன்றோ)
லோகைகேஸ்வரி– லோக நாத தயிதே-யஸ் யாஸ்தே –நிரவதிம -ஸ்வதோ -நித்ய அனுகூலம் -மஹிமாநம் -பிரபுஸ் -த்வத் வல்லபோ அபி-ஆத்மந இவ-இயத்தயா- மாதும் -நாலம் -தாம் த்வாம் அஹம் -தாஸ இதி ப்ரபன்ன இதி-ச -தாந்தே மயி தே தயாம் விதன்-நிர்ப்பய-ஸ்தோஷ்யாம் -இத் அந்வயம்
———————————————-
அவதாரிகை -பிரதம ஸ்லோகத்தாலே பெரிய பிராட்டியாருடைய ஸர்வ உத்கர்க்ஷ ப்ரகாசகமான பரத்வத்தை அனுசந்தித்து –அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான் யான் யார் -என்றால் போலே ஸர்வ உத் க்ருஷ்ட விஷயத்தை ஸர்வ அபக்ருஷ்டனான நான் ஸ்தோத்ரம் பண்ணுகையாவது என் -என்று பீதராய் –த்வாம் வயம் கதம் ப்ரூம -என்று நிவ்ருத்தரானார் –
த்வதீய ஸ்லோகத்தாலே நிவ்ருத்தரான தம்முடைய ஸ்தோத்ர ஸ்ரவண கௌதுகத்தாலே ஸ்தோத்ர விரோதிகள் நசித்து ஸ்தோத்ர கரண காரண ஞானாதிகள் உண்டாம்படி கடாஷித்து தயையைப் பண்ண -அத்தை அறிந்து -சம்பந்த ஞான பூர்வகமாக சரணம் புகுந்து -கீழ் ஸ்தோத்ர ஆரம்பாஷேப ஹேதுவாகச் சொன்ன ஸ்தோத்தவ்யகத உத்கர்ஷத்தை முகாந்தரேண த்ருடீ கரியா நின்று கொண்டு தத் உபச் லிஷ்ட ஸுலப்ய விசேஷத்தை அனுசந்தித்து ஸ்தோத்ரு கத தயநீய தசானுரூப ஹேதுவாலே ஸ்துத்யாரம்ப ஸமாதானம் பண்ணினார் -இப்படி ஸ்தோத்ர ஆரம்பாஷேப சமாதானே வ்யாஜேன பிராட்டியினுடைய பரத்வ ஸுலப்யங்களை அனுசந்தித்து -ஸ்தோத்ரத்திலே உபக்ரமித்து -தத் ஸர்வ சமாஸ்ரயணீயத்வ க்யாபன அர்த்தமாக ஸகல புருஷார்த்த ப்ரதத்வத்தை உதாஹரண ஸஹிதமாக உபபாதிக்கிறார் -இதில் -ஈஷத்வத் -இத்யாதியாலே –
ஈஷத் த்வத் கருணா நிரீஷண ஸூதா சந்து ஷணாத் ரஷ்யதே
நஷ்டம் ப்ராக் தத் அலாபதஸ் த்ரி புவனம் சம்ப்ரத்ய நந்தோ தயம்
ஸ்ரேயோ ந ஹ்யரவிந்த லோசன மன காந்தா பிரசாதாத் ருததே
சம்ஸ்ருத் யஷர வைஷ்ணவாத் வஸூ ந்ருணாம் சம்பாவ்யதே கர்ஹிசித்--3-
தத் அலாபதஸ்–அந்தக் கடாக்ஷம் இல்லாமையால்
ப்ராக் நஷ்டம் -முன் நஸித்துக் கிடந்ததான
த்ரி புவனம்-மூவுலகும்
சம்ப்ரதி–இப்போது
ஈஷத் -சிறிது போது
த்வத் கருணா நிரீஷணஸூதா சந்து ஷணாத் –உன்னுடைய கருணா கடாக்ஷமாகிற அம்ருத வர்ஷத்தினாலே
அநந்தோ தயம்-அளவற்ற பெருமையை உடைத்தாகும் படி
ரஷ்யதே-காப்பாற்றப்படுகிறது
ந்ருணாம்-மானிடர்களுக்கு
சம்ஸ்ருத் யஷர வைஷ்ணவாத் வஸூ-ஐஸ்வர்யம் கைவல்யம் பரம பதம் இவைகளில்
ஸ்ரேயோ -மேன்மையானது-(அத்வா -மூன்று பாதைகளில்)
அரவிந்த லோசன மன காந்தா -தாமரைக் கண்ணனின் மனத்துக்கு இனியவளான ஸ்ரீ தேவியின்
பிரசாதாத் ருததே–அருள் இல்லாமல்
ந ஹி சம்பாவ்யதே -ஏற்படாதது அன்றோ
(த்ரி புவனம் -மூலப்பிரக்ருதி விகாரம் இல்லாதது -மற்ற விகாரமாயும் மற்றவற்றை பிறப்பிப்பதாயும் –மஹான் -அஹங்காரம் -இத்யாதி பிருத்வி -மற்றவற்றைப் படைக்காமல் -எல்லாம் –க்ருத க்ருதாக்ருத அக்ருத-நித்ய விபூதி இல்லாமல் அனைத்தும் லீலா விபூதியையும் சொன்னவாறு –
அநந்த உதயம் -முன்பு பிரளயத்தில் நசித்துக் கிடந்தோம் என்ற எண்ணமே இல்லாமல் –ஒழிவில் காலம் எல்லாமே -முன்பு இழந்தவற்றையும் மறக்கும்படி கைங்கர்யம் போல் –த்வத் கருணா நிரீஷண ஸூதா சந்து ஷணாத்-)
தாந்தே மயி தே தயாம் விதந் அஹம் நிர்ப்பயஸ் ஸ்தோஷ்யாமி -என்று நாம் உம்மைக் கடாஷித்தோமாகவும் -அத்தாலே உம்முடைய அபிமதம் சித்தித்தாகவும் சொன்னீர் -லோகத்திலே சேதநருக்கு இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிஹாரங்களுக்கு ஹேதுக்கள் அவ்வவருடைய புண்ய பாபங்களாய் யன்றோ இருப்பது -ஆயிருக்க உம்முடைய அபிமதம் நம்முடைய கடாக்ஷத்தாலே சித்தித்தது என்னுமிடம் நம் பக்கலிலே ஆதார அதிசயத்தாலே சொன்ன வித்தனை இறே -என்ன -நான் ஒரு விஷயத்திலே பக்ஷபாதத்தாலே சொல்லுகிறேன் அல்லேன் -வஸ்து ஸ்திதியை ஆராய்ந்து பார்த்தவிடத்தில் த்ரி க்ஷணா அவஸ்தாயியாய் -நசித்துப் போகிற புண்ய பாபங்கள் மூர்த்தீ கரித்திருந்து பலப்ரதமாகிறன வல்ல விறே -புண்யா புண்யா ஈஸ்வர ப்ரீதி கோபவ் – (-புண்யம் பாபம் என்பது ஈஸ்வரனுடைய ப்ரீதி கோபங்களே யாகும்)-என்கிறபடியே-துன்ப வின்ப வினைகளுக்கு (துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய்-உயர நின்றது ஓர் சோதி யாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந் தான் தனை அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினைஅச்சு தன் தனைத்-தயர தற்கு மகன் தனை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே.-3-6-8-)_நிர்வாஹகனான ஈஸ்வரனுடைய ப்ரிய அப்ரியங்கள் அபிமத அநபிமத ஸித்திகளுக்கு ஹேதுக்கள் -அவனுடைய கோப ப்ரசாதங்களுக்கும் அடி உன்னுடைய கடாக்ஷ ததபர்வங்களாகையாலே ஸகல சேதனருடைய அநர்த்தாப்யுதயங்களுக்கு ஹேது -உன்னுடைய கருணா கடாக்ஷ லாப அலாபங்களாய் இருக்கும் -ஆன பின்பு என்னுடைய அபிமத ஸித்திக்கே யன்றிக்கே –ஸகல சேதனருக்கும் ஐஸ்வர்யாதிகளால் ஸ்ரேயஸ்ஸூ உன்னுடைய ப்ரஸாதத்தாலே அல்லது சம்பவியாதிறே என்று தத் புருஷார்த்த பிரதத்வத்தை ஸ உதாஹரணமாகப் ப்ரதிபாதிக்கிறார் -ஈஷத் இத்யாதி ஸ்லோகத்தாலே-
பிராட்டியினுடைய அனுக்ரஹ ஏக தேசம் அநந்த அநிஷ்ட நிவ்ருத்திக்கும் அநந்தாப்யுதய ஸித்திக்கும் நிதானம் என்கிற விசேஷ த்யோதனார்த்தமாக ஈஷத் -என்கிறார் –த்வத் ப்ரஸாத லவம் விநா –என்றது இறே –த்வச் ஸப்தத்தாலே –ப்ரணிபாத பிரசன்னையாய் -ஷிப்ர ப்ரஸாதினியாம் படியான அசாதாரண ஸ்வ பாவம் ஸூசிக்கப்படுகிறது –இத்தால் நிக்ரஹ அனுக்ரஹ ஸ்வ பாவனான ஈஸ்வரனில் வ்யாவ்ருத்தமான அனுக்ரஹ ஏக ஸ்வபாவத்வம் சொல்லப்பட்டது –பத்மே ஸ்திதா பத்ம வர்ணா பத்ம நாபப்ரியா ஸூபா -ஸதா அனுக்ரஹ சம்பந்நா ஸா தேவீ மே ப்ரஸீதது –(மங்கள ஸம்ஹிதை தாமரையில் இருப்பவளாய் -தாமரை நிறத்தவளாய் -தாமரை யுந்தியான் மனைவியாய் -மங்கள ஆகாரையாய் எப்போதும் அருள் நிரம்பியவளான அந்தப் தேவி என்னிடம் அருள் புரியட்டும் –)என்றும்
அனுக்ரஹ பராம் ருத்திம் அநகாம் ஹரி வல்லபாம் -நமாமி கமலாம் காந்தாம் ஷமாம் ஷீரோத சம்பவாம் –என்றும் (-ஸ்ரீ லஷ்மீ அஷ்டோத்தர சதம்
அருள் நிரம்பியவளாய் -செல்வமாய் இருப்பவளாய் -பாபமற்றவளாய் -ஹரிக்குப் பிரியையாய் கமலையாய் காந்தையாய் பொறுமையாய் பாற்கடலில் உதித்தவளுமான பிராட்டியை நமஸ்கரிக்கிறேன் –)என்றும் அனுக்ரஹ ஏக ஸ்வபாவத்வம் சொல்லப்பட்டது இறே
ஈஷத் த்வத் கருணா நிரீஷண ஸூதா சந்து ஷணாத்-உன்னுடைய அநிஷ்ட நிவர்த்தன இஷ்ட ப்ராபண அனுகுணமான கருணையை ஹேதுவான யுடைத்தான கடாக்ஷ லேஸ அம்ருத உத்ரேகத்தாலே –
கருணா நிரீஷணம் -கருணா ஹேதுக நிரீஷணம் -கருணயா விஷயீ கரணம் நிரீஷண ஸப்தத்தாலே உபகரிக்கிறதாகவுமாம் -கருணா ப்ரேரிதமாய் இறே நிரீக்ஷணம் உண்டாவது –காருண்ய மாருதா நீதை (த்வ தீக்ஷண ஸுதா ஸிந்து வீசிவிக்ஷேப கரை: காருண்ய மாருதா நீதை ஸ்ஸீகரைர் அபிஷிஞ்ச மாம்!!”-ஸ்ரீ தேவராஜ அஷ்டகம்—ஸ்லோகம் 8:–காருண்யம் என்னும் மாருதத் தென்றலால் தள்ளப்பட்ட உம்முடைய கடாக்ஷம், குளிர்ச்சியுள்ள கடல் அலைகளில்-நீர்வீழ்ச்சிகளில், அடியேனை,உம்முடைய கைங்கர்யமாகிற ஸாம்ராஜ்யத்தில் பட்டாபிஷேகம் செய்யும்படி நன்றாக திருமஞ்சனம் செய்து வைக்க வேண்டுகிறேன்.)-என்றது இறே –நிரீக்ஷண ஸூதா சந்துஷணாத் -த்வதீஷண ஸூதா ஸிந்து வீசி விஷேபஸீகரை –(சம் தப்த்தம் விவிதைர் துஃகை: துர்வசைரேவம் ஆதிபி:தேவ ராஜ தயா ஸிந்தோ தேவ தேவ ஜகத் பதே!!”-தேவராஜ அஷ்டகம் 7–த்வ தீக்ஷண ஸுதா ஸிந்து வீசிவிக்ஷேப கரை: காருண்ய மாருதா நீதை ஸ்ஸீகரைர் அபிஷிஞ்ச மாம்!!”-8-இப்படிப்பட்ட பலவித துக்கங்களினால் சூழப்பட்டு, தாபங்கள் மிகுந்தவனாக வாழும் அடியேனை, தேவாதி தேவர்களின் தேவனான, ஸ்ரீ தேவராஜ மஹா பிரபுவான உந்தன் கருணையின் குளிர்ச்சி தான் சீர்படுத்த வேண்டும்.-காருண்யம் என்னும் மாருதத் தென்றலால் தள்ளப்பட்ட உம்முடைய கடாக்ஷம், குளிர்ச்சியுள்ள கடல் அலைகளில்-நீர்வீழ்ச்சிகளில், அடியேனை,உம்முடைய கைங்கர்யமாகிற ஸாம்ராஜ்யத்தில் பட்டாபிஷேகம் செய்யும்படி நன்றாக திருமஞ்சனம் செய்து வைக்க வேண்டுகிறேன்)என்கிறபடியே.–கடாக்ஷ அம்ருத த்ருஷ்டிகளாலே என்கை -ஏவம் பூத கடாக்ஷம் தான் சகலாத்ம ஸஞ்ஜீவனமாய் இருக்கையாலே ஸூதையாக நிரூபிக்கிறார் -ஸூதையாலுண்டான ஸம்யக் உல்லாஸத்தாலே -கடாக்ஷ நிஷேபத்தாலே என்கை –
ரஷ்யதே -உபத்ரவ ரஹிதமாக ஸ்தாபிப்பப்படுகிறது –
ப்ராக் -உன்னுடைய உபேஷா காலத்திலே
தத் அலாப -உன்னுடைய நிரீக்ஷணா லாபத்தால் அல்லது உன்னுடைய கோபத்தால் அன்றிறே –கஸ் குப்யேத் வாநரோத்தம –எந்தத் சொல் மினுங்கனுக்கும் உபதேசிக்கிற உனக்கும் கோபமுண்டாக ஸம்பாவனை இல்லை இறே -நஷ்டம் -விநஷ்ட ப்ராயமான –
த்ரிபுவனம் -இத்தால் த்ரைலோக்ய அந்தர் வர்த்தியான ஸகல ஜனங்களையும் உப லஷிக்கிறது –மஞ்சா க்ரோஸந்தி இதிவத்
ஸம் ப்ரதி -உன்னுடைய கடாக்ஷ வீஷாக்ஷண லஷ்யமான தசையிலே –
அநந்தோதயம் யதா பவதி -பூர்வ காலத்திலும் அதிசயித அப் யுதயமாம் படி -ரஷ்யதே -ப்ராக் தத் அலாபதோ நஷ்டம் த்ரிபுவனம் ஸம் ப்ரதி ஈஷத் த்வத் கருணா நிரீக்ஷணாத் அநந்தோதயம் ரஷ்யதே –
துர்வாஸ சாபத்தாலே நிஸ்ஸ்ரீகமாம்படி புவன த்ரயத்தையும் பரித்யஜித்து பயோததியிலே பிராட்டி எழுந்தருளின போது தத் கடாக்ஷ அபாவத்தாலே அசன்னேவ என்னும்படி நஷ்டமான த்ரிபுவனம் -பின்பு –ஷீரோதாஸ் ஸ்ரீஸ் ஸமுத்பன்னா ஸ்ரூயதே அம்ருத மந்தநே -(ஷீரோதாஸ் ஸ்ரீஸ் ஸமுத்பன்னா ஸ்ரூயதே அம்ருத மந்தநே -ப்ருகோ க்யாத்யாம் ஸமுத்பன்னேத் யேததாஹ கதம் பவாந் -வி பு -1-8-16-அம்ருத மதன காலத்தில் பாற்கடலிலிருந்து ஸ்ரீ தேவி உண்டானதாகக் கேள்விப் படுகிறேன் -ப்ருகுவுக்கு க்யாதி என்னும் பத்னியிடம் பிராட்டி யுண்டானதாகத் தாங்கள் சொல்வது எப்படி–மைத்ரேயர் பராசர மகரிஷியிடம் கேட்க )என்றும் –செழும் கடலமுதினில் பிறந்த அவளும் -பெரிய திரு மொழி -2-7-1-என்னும்படி அமுதில் வரும் பெண்ணமுதாய் அவதரித்து (அண்ணல் செய்து அலை கடல் கடைந்து அதனுள்-கண்ணுதல் நஞ்சு உண்ணக்கண்டவனே விண்ணவர் அமுது உண அமுதில் வரும்-பெண் அமுது உண்ட எம் பெருமானே-ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே)-திவ்ய மால்யாம் பரதரா ஸ்நாதா பூஷண பூஷிதா -பஸ்யதாம் ஸர்வ தேவாநாம் யயவ் வஷஸ் ஸ்தலம் ஹரே – (-வி பு -1-9-105-திவ்யமான மாலைகளையும் வஸ்திரங்களையும் தரித்தவளாய் ஸ்நாநம் செய்தவளாய் —ஆபரணங்களால் அலங்கரிக்கப் பெற்றவளான பிராட்டிக்கு எல்லாத் தேவர்களும் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே எம்பெருமானுடைய திருமார்பை அடைந்தாள் –)-என்கிறபடியே(லஷ்மீ கல்யாண ப்ரக்ரியை) ஸ்நாதையாய் மஹார்ஹ வஸநையாய் சித்ர மால்ய அநு லேபையாய்க் கொண்டு -திகழ்கின்ற திருமார்பில் சேர்ந்து -பெரிய திரு மொழி -2-7-1-என்றும் அகலகில்லேன் இறையும் -6-10-10-என்று திருக் கலந்து சம்ச்லேஷித்த அநந்தரம் -உன்னுடைய காருண்ய ஸீதல கடாக்ஷ ஸூதா வர்ஷத்தாலே வழிய வார்க்க-அநந்தரம் அத்தாலே சத்தை பெற்று ஸம்ருத்தியான படியை இஸ் ஸ்லோகத்தில் அருளிச் செய்கிறார் –
த்வயா தேவி பரித்யக்தம் ஸகலம் புவன த்ரயம் -விநஷ்ட ப்ராயம் அபவத் த்வயேதா நீம் சமேதிதம் -(விபு -1-9-123- தேவியே உன்னால் கைவிடப்பட்ட மூவுலகு முழுவதும் நசித்துக் கிடந்தது -இப்போது உன் அருளாலே உஜ்ஜீவித்தது )என்று இவ்வர்த்தம் இந்த்ரனாலே சொல்லப்பட்டது இறே -இப்படி அந்வய வ்யதிரேகங்களாலே ப்ரஹ்ம இந்திரனின் ப்ரப்ருதி சேதனருடைய ஐஸ்வர்யம் பிராட்டியினுடைய கடாஷாதீனம் என்னுமிடம் தர்சிக்கப்பட்டது –
ப்ரஹமாத் யாச்ச ஸூராஸ் ஸர்வே முந யச்ச தபோதநா -ஏதந்தே த்வத் பதச்சாயம் ஆஸ்ரித்ய கமலேஸ்வரி – (காஸ்யபீயம்-கமலையே பிரமன் முதலான எல்லாத் தேவர்களும் தவத்தையே தனமாகக் கொண்ட முனிவர்களும் உன் திருவடி நிழலை அண்டி உஜ்ஜீவிக்கிறார்கள் –)என்னக் கடவது இறே-யஸ்யா கடாக்ஷணம் அநு க்ஷணம் -இத்யாதி(யஸ்யா கடாக்ஷணம் அநு க்ஷணம் ஈஸ்வராணாம் ஐஸ்வர்ய ஹேதுரிதி சர்வ ஜநீநம் ஏதத் தாம் ஸ்ரீ ரிதி த்வத் உபஸம்ஸ்ரியணாத் நிராஹு த்வாம் ஹி ஸ்ரியஸ் ஸ்ரியம் உதாஹு உதார வாச –-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்–29–யாவளொரு பிராட்டியின் கடாக்ஷமானது இந்திராதி தேவர்களுக்கும் அடிக்கடி ஐஸ்வர்ய ஹேதுவாகிறது என்பது சர்வ ஜன சம்மதம் ஆனதோ -அந்தப் பிராட்டியை தேவரீர் இடத்தில் ஆஸ்ரயித்து இருப்பது காரணமாகவே ஸ்ரீ என்று நிருத்தி கூறுகின்றார்கள் உதார வாக்குகளான திருமங்கை ஆழ்வார் போல்வாரும்-(ஆளவந்தாரும் கஸ் ஸ்ரீ இத்யாதி ) தேவரீரை அன்றோ-திருவுக்கும் திருவாகிய செல்வன் என்கிறார்கள் )
அதவா –ஈஷத் த்வதித்யாதி -ப்ருதிவ்யப்ஸூ லீயதே -இத்யாரப்ய -என்றும் –ஆபஸ் பரே தேவ ஏகி பவதி –என்றும் –ந ப்ரஹ்மா நே ஸாந -என்றும் -ஆஸீ திதம் தமோ பூதம் அபிரஞ்ஞாதம் அலக்ஷணம் -அப்ரதர்க்யம் அவிஞ்ஜேயம் ப்ரஸூப்த்தமிவ ஸர்வதா -(ஸோ அபித்யாய சரீராத் ஸ்வாத் விஸ்ருஷுர் விவிதா ப்ரஜா –அப ஏவ ஸ சர்ஜாதவ் தாஸூ பீஜமவாஸ்ருஜத் –ஸோ அபித்யாய சரீராத் ஸ்வாத் ஸிஸ்ரூஷுர் விவிதா ப்ரஜா –அப ஏவ ஸ சர்ஜாதவ் தாஸூ பீஜமவாஸ்ருஜத்–மநு1-5,6.7.8-இவ்வுலகம் தமஸ்ஸில் லயித்து இருப்பதாய் -ப்ரத்யக்ஷம் இல்லாததாய் -அனுமானத்தாலும் அறியப்படாததாய் -தர்க்கத்தாலும் அறியப்படாததாய் -சப்தத்தாலும் அறியப்படாததாய் -எல்லாவிதத்திலும் காரியம் செய்ய முடியாததாய் -ஆதியில் இருந்தது –அந்தப் பரமாத்மா விதவிதமான பிரஜைகளை ஸ்ருஷ்டிக்க விரும்பி ஸங்கல்பித்துத் தன் சரீரத்திலிருந்து ஜலத்தை முதலில் ஸ்ருஷ்டித்தார் -அதில் ஜீவனாகிய விதையை விதைத்தார் –)என்றும் ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றுமோர் யாதுமில்லா அன்று-என்றும் இத்யாதிப்படியே ஸர்வ ஸம்ஹார காலத்திலே உன்னுடைய கடாக்ஷ அம்ருத வ்ருஷ்ட் யலாபத்தாலே அசன்னேவ என்னும்படி நாம ரூப விபாக அநர்ஹமாய் நஷ்டமான த்ரிபுவனமானது-அப ஏவ ஸஸர்ஜாதவ் -தத் ஸ்ருஷ்ட்வா –-(ததேவ அநு ப்ராவிஸத் -தை ஆந -6-அந்த ஜகத்தை ஸ்ருஷ்டித்தவன் -அந்த ப்ரஹ்மம் அதை வியாபித்தது )என்று சொல்லுகிற ஸ்ருஷ்ட்டி காலத்திலே –நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே -ஸர்வே நிமேஷ ஜஜ்ஜிரே -ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர-அநேந ஜீவேநாத்மநா அநு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி -நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -நான்முகனை நாராயணன் படைத்தான் -இத்யாதி ப்ரமாண ப்ரகாரேண அண்டங்களினுடையவும் தத் அந்தர்வர்த்தி தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூப சதுர்வித பூதங்களுடையவும் ஸ்ருஷ்ட் யுன்முகனாய்க் கொண்டு –ததைஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி –தேஜ ஐஷத -ஆப ஐஷந்த -என்று(ததைஷத பாஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோ அஸ்ருஜத தத் தேஜ ஐஷத பாஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி தபபோ அஸ்ருஜத –தா ஆப ஐஷந்த –சாந்தோ -6-2,3,4)-அந்தப்பர ப்ரஹ்மம் நானே பலவாக ஆகக்கடவேன் என்று சங்கல்பித்தது -அது தேஜஸ்ஸை ஸ்ருஷ்ட்டி செய்தது -தேஜஸ்ஸை சரீரமாகக் கொண்ட அந்தப்ப்ரஹ்மம் நான் பலவாகக் ஆகக்கடவேன் என்றும் சங்கல்பித்தது -அது ஜலத்தை ஸ்ருஷ்டித்தது -ஜலத்தை சரீரமாகக் கொண்ட அந்தப்ப்ரஹ்மம் சங்கல்பித்தது –) என்று ஸ்ருஷ்டிக்கு கடவனாய் பார்த்து அருளின போது –யத் ப்ரூபங்கா ப்ரமாணம் ஸ்திர சர ரஸநா தாரதம்யே முராரே –ஸமஸ்த சித் அசித் விதாந வ்யஸனம் ஹரே அங்கீ காரி பிராலோகைஸ் ஸார்த்த யந்த்யை –உல்லாஸ பல்லவித பாலித ஸப்த லோகீ நிர்வாஹ கோரகித கடாக்ஷ லீலாம் –அஸேஷ ஜெகதாம் சர்க்க உபசர்க்க ஸ்திதீ ஸ்வர்க்கம் –என்று தொடங்கி –யஸ்யா வீஷ்யா முகம் ததிங்கித பராதீனோ விதத்தே அகிலம் —(யத் ப்ரூ பங்கா: ப்ரமாணம் ஸ்திர சர ரசநா தார தம்யே முராரே: வேதாந்தா: தத்வ சிந்தாம் முரபித் உரஸி யத் பாத சிஹ்நை: தரந்தி போக உபோத் காத கேளீ சுளுகித பகவத் வைச்வ ரூப்ய அநுபவா ஸா ந: ஸ்ரீ: ஆஸ்த்ருணீதாம் அம்ருதல ஹரிதீ லங்கநீயை: அபாங்கை:-ஸ்ரீ குணரத்ன கோஸம்-–4–இந்த உலகில் ஸ்ரீமந் நாராயணனின் படைப்பில் பல ஏற்ற தாழ்வுகள் உள்ளன. இவற்றுக்குக் காரணமாக உள்ளது இவளது புருவத்தின் அசைவுகளே ஆகும். இவள் தனது புருவ அசைவு மூலம் யாரை உயர்த்த வேண்டும் என்று கூறுகிறாளோ,ஸ்ரீமந் நாராயணன் உடனே அப்படியே செய்து விடுகிறான். யார் ஒருவனது திருமார்பில் மஹாலக்ஷ்மியின் திருவடி அடையாளம் உள்ளனவோ அவனே பரம்பொருள் என்று வேதங்கள் முழங்குகின்றன. ஆக, அவனது திருமார்பில், இவளது திருவடிகளில் பூசப்ப்ட்ட செம்பஞ்சுக் குழம்பின் அடையாளங்கள் காணப்படும். இவளது திருக் கல்யாண குணங்கள் எப்படிப்பட்டது என்றால் – ஸ்ரீமந் நாராயணன் விச்வரூபமே எடுத்து வந்தாலும் அவளது திருக்கல்யாண குணங்களை அவனால் முழுமையாகக் காண இயலாது. இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாச்சியாரின் கடைக்கண் பார்வையில் கடாக்ஷம் என்பது அமிர்தம் நிறைந்த கடல் போன்று பெருகி உள்ளது. அப்படிப்பட்ட அவளது அருள் பார்வை என் மீது சற்று விழவேண்டும்.)இத்யாதி ப்ரமாண ப்ரகரேண உன்னுடைய ப்ருகுடி படனாய் -த்வத் இங்கித பராதீனனாய்க் கொண்டு சமஸ்த சித் அசித் விதானம் பண்ணுகிற அவனுடைய அந்தக்கடாக்ஷ அனுகுணமாகக் கருணா அம்ருத கடாக்ஷ நிக்ஷேபங்களை நீ பண்ணுகையாலே யன்றோ நாம ரூப விபாக அர்ஹமாய்க் கொண்டு ரக்ஷிக்கப்படுகிறது -ஈஷத் த்வத் கருணா நிரீஷண ஸூதா சந்து ஷணாத் -ஸம் ப்ரத்யனந்தோ தயம் யதா பவதி ததா ரஷ்யதே
(ப்ருகுடி படனாய்-புருவ அசைப்பைக்கு பராதீனனாய் -அவன் கடாக்ஷத்துக்கு அனுகுணமாய் -பொருத்தமாய் -அன்றோ தேவரீர் கடாக்ஷம்)
ப்ராக் தத் அலாபதஸ் த்ரி புவனம் சம்ப்ரதி ஈஷத் த்வத் கருணா நிரீஷண ஸூதா சந்து ஷணாத் நந்தோ தயம் ரஷ்யதே-எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள் —என்கிறபடியே கடும் கோடையில் கமர் பிளந்து உலர்ந்து போந்த பயிரானது நினைவற மேகமேறி வர்ஷித்தால் சத்தை பெற்றுத் தரித்து பலபர்யந்தமாப் போலே –மழைக்கண் மடந்தையான நீ குளிரக்கடாஷிக்கையாலே யன்றோ முன்பு நஷ்டமான ஜகத்து இப்போது மஹீ மஹீ தர ஜலதி ரூபமாய் தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூப சதுர்வித தேஹ பிரவேச சதுரரான ஆத்மாக்களை யுடைத்தாய் -போக்ய போக உபகரண போக ஸ்தான ரூபேண அபி வ்ருத்தமாய்த்து என்று அப்யய (ஸம்ஸார )பூர்விகையான ஸ்ருஷ்டியிலே இவளுக்கு அந்வயம் சொல்லவுமாம் -இப்படி ஜகத் காரணத்வத்தில் இவளுக்கு அந்வயமுண்டோ என்று ப்ரஸ்னம் பண்ணின நடாதூர் அம்மாளைக் குறித்து பிள்ளான் அருளிச் செய்த வார்த்தையை இவ்விடத்தில் அனுசந்திப்பது -அதாவது -இவ்வர்த்ததில் ஸந்தேஹமுண்டோ –ஆவாப்யாம் கர்மாணி கர்த்தவ்யானி ப்ரஜாஸ் சோத்பாதயி தவ்யா -(தம்பதிகளாகிய நாம் இருவரும் சேர்ந்து கர்மங்களைச் செய்ய வேண்டும் -பிரஜைகளைப் பிறப்பிக்க வேண்டும் )என்று பிரமாணம் சொல்லுகையாலே ஸஹ தர்ம சாரிணியான இவளுக்கும் அந்வயமுண்டு என்று அருளிச் செய்தது –
யுக்தார்த்த ஸமர்த்தன வ்யாஜத்தாலே ஸகல புருஷார்த்தங்களும் தத் ப்ரஸாத அதீனமாய் இருக்கும் என்கிறார் –ஸ்ரேய-இத்யாதியாலே -யரவிந்த லோசன மன காந்தா பிரசாதாத் ருததே–ந்ருணாம்-சம்ஸ்ருத் -யஷர -வைஷ்ணவாத் வஸூ-ஸ்ரேய-கர்ஹிசித் ந சம்பாவ்யதே ஹி –
அரவிந்த லோசன -தஸ்ய யதா கப் யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ -என்று கம்பீராம்பஸ் ஸமுத்பூதமாய் -ஸூம்ப்ருஷ்ட நாளமாய் -ரவிகர விகசிதமுமான புண்டரீக தளம் போலே அமலாயதேஷணன் இறே அவன்(அமல ஆயத-மிகப்பெரிய அமலங்களாக விழிக்கும் கரியவாகி புடை பெயர்ந்து அப்பெரியவாய திருக்கண்கள்) –ஏதத் துல்ய சீலையான அஸி தேஷ்ணை இறே இவள் -த்வத் ப்ரஸாதாத்ருதே –என்ன வமைந்து இருக்க -இவ்விசேஷணம் என் என்னில் –ஜிதந்தே -தாமரைக் கண்ணனை -என்று உபய விபூதியையும் எழுத்து வாங்குகிற அனைத்துலகுமுடைய அரவிந்த லோசனனையும் வசீகரிக்க வல்ல வாலப்ய ப்ரஸித்தி தோற்ற விசேஷிக்கிறார் -இத்தால் சர்வ ஸ்மாத் பரனாய் ஸ்வதந்த்ரனான அவனும் இவள் ப்ரஸாத பாத்ரமானார்க்கு ஒழியக் கார்யம் செய்யான் என்னுமிடம் தோற்றுகிறது
(ய ஏஷ அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ஹிரண்ய ஸ்மஸ்ருர் ஹிரண்ய கேச ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸூவர்ண தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ -சாந்தோக்யம் -1-6-7-ஸூர்யனுக்கு நடுவிலே ஸூ வர்ணம் போல் அழகிய உருவையுடைய எந்த இந்தப்பரம புருஷன் காணப்படுகிறானோ அவன் ஸூவர்ணம் போன்று அழகான மீசையையும் கேசங்களையும் எல்லா அவயவங்களையும் உடையவன் -அவனுக்கு ஸூர்யனால் மலரும் தாமரை போன்று இரு கண்கள் உள –)
(ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வ பாவன நமஸ்தே அஸ்து ஹ்ருஷீகேச மஹா புருஷ பூர்வஜ –ஜிதந்தே -1-1--செந்தாமரைக்கண்ணா உன்னால் இவ்வாத்ம வஸ்து ஜெயிக்கப்பட்டது -இது என்னுடையதல்லவே -உன்னுடையதாயிற்றே -உலகை எல்லாமே உண்டாக்கியவனே இந்திரியங்களை நியமிப்பவனே கொடுப்பதில் சிறந்த மஹா புருஷனே முற்பாடானாய்ப் பிறப்பவனே -இவ்வாத்ம வஸ்து எனக்காகை தவிர்ந்த உனக்கேயாக வேணும் )
(ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் —யாதிருச்சா ஸூஹ்ருதம்-விஷ்ணோர் கடாக்ஷம்-அத்வேஷம்-ஆபி முக்யம்-சாத்விக சம்பாஷணம்ஆச்சார்ய பிராப்தி )
அரவிந்த லோசந மந காந்தா -என்கையாலே -விஷ்ணோர் கடாக்ஷம் -யம் பஸ்யேன் மது ஸூதந –(விஷ்ணோர் கடாக்ஷம் -விஷ்ணுவின் கடாக்ஷ ஸத்வ குணத்தை அளிக்க வல்லது-ஜாயமானம் ஹி புருஷம் யம் பஸ்யேன் மது ஸூதந ஸாத்விகஸ் ஸ து விஜ்ஜேயஸ் ஸ வை மோஷார்த்த சிந்தக–சாந்திபர்வம் -358-73 பிறக்கும் போது எவனை மது ஸூதனன் காண்கிறானோ அவன் ஸாத்விகன் என்று அறியத்தக்கவன் -அவனே மோக்ஷ புருஷார்த்தத்தைத் சிந்திப்பவன் –)என்று சொல்லுகிற அவனுடைய ஸுஹார்த்த ப்ரகாசகமான கடாக்ஷமும் ஏதத் அதீனம் என்னுமிடம் சித்தமிறே – மந காந்தா -ததத்யந்த அபிமதை -என்றபடி -கீழ் காந்தஸ்தே என்றும் இங்கு மந காந்தா -என்றும் சொல்லுகையாலே பரஸ்பர அனுகூலதயா ஸர்வ அபிமத பிரதத்வத்திலே உபயருக்குமுள்ள ஸுஹ்ருத ஸாம ரஸ்யம் ஸ்பஷ்டமாயிற்று –அஸ்யா தேவ்யா -இத்யாதி ப்ரஸாதாத் –(அஸ்யா தேவ்யா மனஸ் தஸ்மிந் தஸ்ய ஸாஸ்யாம் ப்ரதிஷ்டிதம் -ஸூந்தர -15-52–தேவிவின் மனம் பெருமாளிடமும் அவர் மனம் அவளிடமும் நிலை நிற்கிறது)தயா விசேஷத்தாலே – காந்தா ப்ரஸாதாத் -ப்ரஸாத பரமவ் -என்று (ப்ரஸாத பரமவ் நாதவ் மம கேஹம் உபாகதவ் தன்யோஹம் அர்ச்சயிஷ்யாமி இத்யாஹ மால்ய உப ஜீவந -வி பு -5-19-21–மேலான அருளை யுடையவர்களும் ஸ்வாமியாய் இருப்பவர்களுமான இந்த ராமகிருஷ்ணர்கள் என்னுடைய வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் -நான் தன்யனானேன் -அவர்களைப் பூஜிக்கிறேன் என்று பூவை விற்று வயிறு வளர்க்கும் மாலாகாரர் சொன்னார் –)என்றுசொல்லுகிற அவனுடைய ப்ரஸாதத்துக்கும் அடியான ப்ரஸாதத்தாலே -மழைக்கண் மடந்தை யாகையாலே அவனுடைய குளிர்ந்த அருளும் வெந்நீர் என்னலாம் படி அதி சீதளமாய் இறே சீதள ஸ்வ பாவயையான இவள் தயை இருப்பது -ருதே -அனுக்ரஹ ஏக ஸ்வ பாவையான இவளுக்கு ஓரிடத்திலும் நிக்ரஹம் சம்பவியாமையாலே தன் நிவ்ருத்தி ரூப ப்ரஸாதா யோகத்தால் ஒழிய என்கை -தயா விசேஷ ரூப ப்ரஸாதத்தால் ஒழிய -என்றபடி –
ஸம்ஸ்ருத் யஷர வைஷ்ணவ அத்வஸூ -பாரிசேஷ்ய ப்ரமாணத்தாலும் புருஷார்த்த சமபி வ்யாஹாரத்தாலும் –ஸம்ஸ்ருதி -ஸப்தம் ஐஸ்வர்ய பரம் –ஐஸ்வர்யம் அஷர கதிம் பரமம் பதம் வா –என்று விஸதீ கரித்து அருளினார் இறே (பட்டர்)-ஆனால் ஐஸ்வர்யத்தை ஸம்ஸ்ருதி சப்தத்தால் அருளிச் செய்வான் என் என்னில் –கொள் என்றும் கிளர்ந்து எழுந்த பெரும்செல்வம் நெருப்பாக –என்று சொல்லுகிறபடியே ஐஸ்வர்யம் அல்லல் எனத் தோற்றி எரி தீயில் சுடும்படியான வைராக்யத்தாலே –இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யானும் வேண்டேன் –பெற்றாலும் ஆதரியேன் -வானாளும் செல்வமும் இம்மண்ணரசும் யான் வேண்டேன் – -என்று ஐஹ லௌகிகமான ஐஸ்வர்யத்தையும் -பார லௌகிகமான ஐஸ்வர்யத்தையும் பரித்யஜித்து –மா ஸ்ம பூத் -என்று(தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம்
பவநேஷ்வஸ் த்வபி கீடஜந்ம மே | இதராவஸதேஷு மா ஸ்ம பூத் அபி மே ஜந்ம சதுர் முகாத்மநா ||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்-ஶ்லோகம் 55 – எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும்.-மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.) இருக்கும் ஸ்வ அபிப்ராயத்தாலும் -அநர்த்தாக்யம் என்னும்படி அநர்த்தாவஹம் ஆகையாலும் -அல்ப அஸ்திரத்வாதி தோஷ துஷ்டமாகையாலும் –தனம் ப்ராப்ய மாத்யன் உச்சைர் ந மாம் ஸ்மரேத் – அநர்த்தாக்யம் தனம் ப்ராப்ய மாத்யந்துச் சைர் ந மாம் ஸ்மரேத் -அநர்த்தம் என்னும் தனத்தை அடைந்து மிகவும் மதமடைந்தவனாய் என்னை நினைப்பதில்லை) என்கிறபடி மத ஹேதுவாய் -பகவத் ஸ்மரண விரோதியாய் -இவ்வாகாரங்களினாலே ஸம்ஸாரம் அவத்யகரமாய் இருக்கையாலும் –ஸம் ஸ்ருதி சப்தத்தாலே ஐஸ்வர்யத்தை அருளிச் செய்கிறார் –அக்ஷர ஸப்தத்தாலே ஆத்ம அனுபவத்தைச் சொல்லுகிறது –வைஷ்ணவாத்வ ஸப்தத்தாலே –ஸோ அத்வந பாரமாப்நோதி -என்கிற கதி விசேஷ த்வாரா பகவத் ப்ராப்தியை லஷிக்கிறது -இவற்றில்
(விஞ்ஞான சாரதிர் யஸ்து மநஸ் ப்ரக்ரஹவான் நர-ஸோ அத்வந பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -கட-1-3-9--எவனொருவன் நல்ல ஞானத்தை சாரதியாகவும் மனத்தை கடிவாளமாகவும் கொண்டிருக்கிறானோ அவன் ஸம்ஸாரத்துக்கு அக்கரையான விஷ்ணுவினுடைய பரமபதத்தை அடைகிறான் –)
இவற்றில் ஸ்ரேயஸ் ஸ்ரேஷ்ட தம ஸூகம் –என்றும் அவற்றைத் தரும் ஸூஹ்ருத விசேஷமுமாகவுமாம்(புண்ய ஸ்ரேயஸீ ஸூஹ்ருதம் வ்ருஷ -புண்யம் ஸ்ரேயஸ் ஸூஹ்ருதம் வ்ருக்ஷம் -தர்மம் -என்னும் நாலு பாதங்களும் ஒரே பொருளை யுடையவை)
ந்ரூணாம் -அகில ஷேத்ரஞ்ஞருக்கு எல்லாம் என்றபடி –ந ஸம் பாவ்யதே -ந ஸித்யதி -என்றபடி ––மூன்றுக்கும் பிரமாணங்கள்-மூன்றிலும் திருவின் பிரசாதம் ஸ்பஷ்டம் -திரு மா மகள் தன்னருளால் உலகில் தேர் மன்னராய் –என்றும் –செடியாராக்கை அடியாரைச் சேர்தல் தீர்க்கும் திருமால் -என்றும் –திருமகளால் அருள் பெற்றுப் பொன்னுலகில் பொலிவர் தாமே –என்றும் அருளிச் செய்தபடியே ஐஸ்வர்ய கைவல்ய பகவல்லாப ரூப புருஷார்த்தங்கள் எல்லாம் பெரிய பிராட்டியாருடைய ப்ரஸாதத்தால் அல்லது பெற அரிதாகையாலே –ஸம் ஸ்ருத் யக்ஷர வைஷ்ணவாத் வஸூ ஸ்ரேய ப்ரஸாஸாத்ருதே நிரூணாம் ந ஸம் பாவ்யதே ஹி -என்கிறார் –பத்ம யோநி ரிதம் ப்ராப்ய படந் ஸ்தோத்ரம் தத பரம் -திவ்யம் ச அஷ்ட குண ஐஸ்வர்யம் தத் ப்ரஸாதாச் ச லப்தவான் -என்றும்(-ப்ரஹ்ம புராணம் நாபிக்கமலத்தில் இருந்து உண்டான நான்முகன் இந்த ஸ்தோத்ரத்தை அடைந்து படைத்து அதன்பின் திவ்யமான எட்டுவிதச் செல்வத்தையும் அப்பிராட்டியின் அருளாலே அடைந்தான்)என்றும்(
ப்ரஹ்மாதீநாம் யதா யத்தம் வைபவம் யஸ்ய ஸா ஸ்வயம் –தஸ்ய கைமுத்ய நிர்த்தார்யம் ஈஸ்வரத்வம் ஸ்ரீ யபதே – (-ப்ரஹ்ம புராணம்
ப்ரஹ்மாதிகளுடைய வைபவம் எவளாலேயோ அந்தப்பிராட்டி எவனுக்கு சேஷபூதையோ அந்த ஸ்ரீ யப்பதியின் ஈஸ்வரத்வம் கிம் புநர் நியாய ஸித்தம்)என்று ப்ரஹ்ம ஐஸ்வர்யத்தோடு ப்ரஹ்ம ஜனகனான ஈஸ்வரனுடைய ஐஸ்வர்யத்தோடு வாசியற தத் ப்ரஸாத அதீனமாயிருக்கும் படியைப் ப்ரதிபாதித்தது இறே –ஆ குக்ராம நியாமகாத் -என்றும் ஏகோ முக்தாத பத்ர ப்ரஸல மணி கணாத் காரி -என்றும் –ஐஸ்வர்யம் அக்ஷரம் கதிம் -என்றும் பட்டரும் இவ்வர்த்தத்தை ப்ரகடீ கரித்து அருளினார் இறே
ஆகுக்ராம நியாமகாத் அபி விபோ: ஸர்வ நிர்வாஹகாத்
ஐச்வர்யம் யத் இஹ உத்தரோத்தர குணம் ஸ்ரீரங்கபர்த்து: ப்ரியே
துங்கம் மங்களம் உஜ்ஜ்வலம் கரிமவத் புண்யம் புந: பாவநம்
தந்யம் யத் தத் அதச்ச வீக்ஷ்ணபுவ: தே பஞ்சஷா விப்ருஷ:–15–
ஸ்ரீரங்கநாதனின் மனதைக் கவர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகி! ஒரு சிறிய நாட்டை ஆளும் அரசன் தொடக்கமாக, அனைத்தையும் (உனது அருளால்) ஆள்பவனாக உள்ள ப்ரம்மன் வரையில் உள்ளவர்களை எடுத்துக் கொள்வோம். அவர்களிடம் இருக்கும் செல்வங்கள்; மேலும் இந்த உலகில் காணப்படும் மேரு மலை போன்ற உயர்ந்த பொருள்கள்,
இரத்தினம் போன்ற ஒளிவீசும் பொருள்கள், இமயமலை போன்ற பருத்த பொருள்கள், யாகம் முதலான புண்ணியப் பொருள்கள் – இவை அனைத்தையும் ஆண்டு அனுபவிக்கக்கூடிய வல்லமை – எப்படி உண்டாகுகிறது? எனது தாயே! ஸ்ரீரங்கநாயகீ! கருணையும் கடாக்ஷமும் வீசுகின்ற உனது பார்வை மூலமாக அல்லவோ?-தேவரீருடைய கடாக்ஷகந் தளிதங்களான ஐந்து ஆறு திவலைகளால் நன்மை பெற்று விளங்குகின்றன –
ஏக: முக்தாதபத்ர ப்ரசல மணி கணாத்காரி மௌளி: மநுஷ்ய:
த்ருப்யத் தந்தாவளஸ்த: ந கணயதி நதாந் யத் க்ஷணம் க்ஷோணி பாலாந்
யத் தஸ்மை திஷ்டதேந்ய: க்ருபணம் சரண: தர்சயந் தந்த பங்க்தீ
தத் தே ஸ்ரீரங்கராஜ ப்ரணயிநி நயந: உதஞ்சி்த ந்யஞ்சிதாப்யாம்–16-
இந்த உலகின் நிலை என்ன? ஒரு மனிதன் மிகுந்த மன மகிழ்வுடன், யானை மீது கம்பீரமாக அமர்ந்து கொண்டு , முத்துக் குடையைப் பிடித்தபடி, அந்தக் குடையில் உள்ள ரத்ன மணிகள் அசையும்படி வருகிறான். அந்த இரத்தினங்கள் உள்ள அவனது க்ரீடமோ “கண கண” என்று ஒலி எழுப்புகிறது. அவனிடம் அரசர்கள் கூட வந்து வணங்கி நிற்கின்றனர். ஆயினும் அவனோ அந்த அரசர்களைப் பொருட்படுத்தாமல் சென்று விடுகிறான்.
மற்றொரு மனிதன் எந்த கதியும் இல்லாதவனாக, தனது ஏழ்மையை தன்னுடைய பற்களின் இளிப்பு மூலமாக அந்த யானை மீது உள்ளவனுக்குக் காண்பிக்கிறான். முதல் மனிதன் செல்வக் களிப்பில் உள்ளதும், அடுத்தவன் வறுமையின் பிடியில் உள்ளதும் ஏன்? ஸ்ரீரங்கநாதனின் ப்ராணனாகவே உள்ளவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அருள் நிறைந்த பார்வை திறப்பதும் மூடுவதாலும் அல்லவா இந்த ஏற்றத் தாழ்வுகள் உள்ளன?
ஐச்வர்யம் அக்ஷர கதிம் பரமம் பதம் வா
கஸ்மைசித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இதி அத அம்ப
த்வம் லஜ்ஜஸே கதய க: அயம் உதாரபாவ:–58-
தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு முன்னால் நின்று கொண்டு ஒருவன் தனது இரு கரங்களையும் தலைக்கு மேல் தூக்கி வணங்கினால் நீ துடித்துப் போகிறாய்! என்ன காரணம்? அவனது கைகள் நோகுமே என்றும், அந்தப் பாரத்தை அவன் தாங்குவானா என்றும் என்ணுகிறாய். இதனால் அவனுக்கு மிகுந்த செல்வமும், உனக்குக் கைங்கர்யம் செய்யும் வாய்ப்பையும், உயர்ந்த மோக்ஷத்தையும் அளிக்கிறாய்.
இத்தனை செய்த பின்னரும் உனது நிலை எப்படி உள்ளது? “ஐயோ! எதனை நினைத்து இந்தக் குழந்தை நம்மிடம் வந்தானோ? நாம் அளித்தது போதுமானதாக இருந்ததா? இதன் மூலம் இவனது வேண்டுதல் பலித்ததா? தெரியவில்லையே!
நாம் குறைவாகக் கொடுத்து விட்டோமோ?”, என்று பலவாறு எண்ணியபடி,
நீ வெட்கப்பட்டுத் தலையைச் சற்றே தாழ்த்தி அமர்ந்திருக்கிறாய்.
இத்தகைய உனது கொடைத்திறன் எத்தன்மை உடையது என்பதை நீயே கூறுவாயாக.
-ப்ரஸாதாத்ருதே ஸ்ரேயோ ந ஸம் பாவ்யதே -என்கையாலே -அவனுடைய ஸகல பல ப்ரதத்வமும் -ஏதத் அதீனம் என்னுமிடம் தோற்றுகிறது –அசேஷ ஜெகதாம் சர்க்க உப சர்க்க ஸ்திதீ ஸ்வர்க்கம் துர்க்கதிம் அபவர்க்கிக பதம் ஸர்வஞ்ச குர்வன் ஹரி -யஸ்யா வீஷ்ய முகம் ததிங்கித பராதீநோ விதத்தே அகிலம் -(ஸ்வஸ்தி ஸ்ரீர் திசதாத் அசேஷ ஜெகதாம் சர்க்க உப சர்க்க ஸ்திதீ ஸ்வர்க்கம் துர்க் கதிம் ஆப வர்க்கிக பதம் ஸர்வஞ்ச குர்வந் ஹரி யஸ்யா வீஷ்யா முகம் தத் இங்கித பராதீநோ விதத்தே அகிலம் க்ரீடேயம் கலு ந அந்யதா அஸ்ய ரஸதா ஸ்யாத் ஐக ரஸ்யாத் தயா –1-எல்லா உலகங்களுக்கும்–ஸ்ருஷ்ட்டி சம்ஹார ரக்ஷணங்களையும் –ஸ்வர்க்கத்தையும் நரகத்தையும் மோக்ஷ ஸ்தானத்தையும்-மற்றும் உள்ள எல்லாவற்றையும் –உண்டு பண்ணா நிற்கிற எம்பெருமான் –யாவள் ஒரு பிராட்டியினுடைய முகத்தை நோக்கிக் கொண்டு–அந்த முகத்தின் புருவ நெறிப்பு முதலிய குறிப்புகளைப் பின் சென்றவனாய் –ஸ்ருஷ்ட்டி முதலாக கீழ்ச் சொன்ன எல்லாவற்றையும் உண்டு பண்ணுகிறானோ-அப்படி அவள் முகக் குறிப்பைப் பின் செல்லா விடில்–இந்த எம்பெருமானுக்கு –அப்பிராட்டியோடே –ஒரு நீராக ஒருமித்து இருக்க வேண்டிய காரணத்தினாலே -ஸ்ருஷ்ட்டி முதலான இந்த விளையாட்டானது–இந்த எம்பெருமானுக்கு ஆனந்தத்தை விளைப்பதாக–ஆக மாட்டாது அன்றோ –அந்தப் பெரிய பிராட்டியார் –நன்மையை அளிக்கக் கடவள்)என்று ஜகத் ஸ்ருஷ்ட்யாதிகளும் புருஷார்த்த ஸ்ருஷ்டியும் ததிங்கித பராதீனமானால் புருஷார்த்த ப்ரதத்வம் தத் அதீனம் என்று சொல்ல வேண்டா விறே -ஹி -ஸப்தம் ஸ்ரீ ஸூக்த்தாதி ப்ரஸித்த பரம் -இவளுடைய ப்ரஸாதமும் -பிரபாவமும் -இந்த்ராதிகள் பிரபாவம்-ப்ரஸாதம் போலே கால பேத பேத்யமாய் இருக்கும் அது –ஸத்ய ஸங்கல்ப அதீன ப்ரபாவமாகையாலே இது ஏக ரூபமாய் இருக்கும் என்றபடி –
நநு -அம்ருதஸ்யைஷ ஸேது -(-முண்ட -2-2-5-ஸம்ஸாரக்கடலின் அக்கரையான மோக்ஷத்தை அடைய இந்த பகவானே ஸேது -அணை -உபாயம் ஆவான்) என்றும்-ஸ ப்ரீதோ அலம்பலாய -(த்ரமிட பாஷ்யம் -ப்ரீதியடைந்த பகவானே பலனைக் கொடுக்க சக்தன்)என்றும் –பலமத உப பத்தே – (-ப்ரஹ்ம ஸூத்ரம் -3-2-27-இந்தப் பரம புருஷனிடமிருந்தே மோக்ஷ பலம் உண்டாகிறது -அதுவே பொருந்தியதாகையால்) என்றும்-மோக்ஷ மிச்சேஜ் ஜநார்த்தநாத் – (ஆரோக்யம் பாஸ்கராதிச் சேத் தனமிச்சேத் ஹுதாஸநாத் ஈஸ்வராத் ஞானம் அன்விச்சேத் மோக்ஷம் இச்சேத் ஜனார்த்தநாத் -மாத்ஸ்ய புராணம் -67-41-ஸூர்யனிடமிருந்து ஆரோக்யத்தை விரும்பக்கடவன் -அக்னியிடமிருந்து பொருளை விரும்ப வேண்டும் -ஈஸ்வரனிடமிருந்து ஞானத்தை விரும்பக் கடவன் -ஜனார்த்தனனிடமிருந்து மோக்ஷத்தை விரும்பக் கடவன்) இத்யாதி பிரமாணங்கள் மோக்ஷ பிரதத்வத்தை முகுந்தனுக்கே அசாதாரணமாக ப்ரதிபாதியா நிற்க (மு கு த சரண்ய முகுந்தத்வம்-மு மோக்ஷம் கு லீலா விபூதி த தருபவள் -உத்பலா வதகே -)-இங்கே பிராட்டிக்கு மோக்ஷ உபாயத்வம் சொல்லுகை ஸ்வ இதர சமஸ்த ஸஹாயா நபேஷ உபாயத்வத்துக்குச் சேருமோ வென்னில் -இவள் புருஷகாரமானால் அல்லது ஈஸ்வரன் கார்யம் செய்யான் -என்கிற நிச்சய நிபந்தனமாகப் பரம்பரயா மோக்ஷ பிரதத்வம் சொன்ன இத்தால் தந்நிரபேஷ உபாயத்வ விரோதம் பிரசங்கியாது இறே –உபாய உபேயத்வே ததிஹ தவ தத்வம் –என்று உபாயத்வம் ஸ்வதஸ் ஸித்தமானாலும் இவள் புருஷீ கரியாத விடத்தில் அது காரியகரமாகாது இறே -அந்வய வ்யதிரேகங்களாலே தலை பெற்றாரும் தலை அறுப்புண்டாருமயிறே இருப்பது –
உபா தத்தே சத்தா ஸ்திதி நியமந ஆத்யை சித் அசிதவ்
ஸ்வம் உத்திஸ்ய ஸ்ரீ மாந் இதி வததி வாக் ஓவ்பநிஷதீ
உபாய உபேயத்வ தத் இஹ தவ தத்வம் ந து குணவ்
அத த்வாம் ஸ்ரீ ரெங்கேசய சரணம் அவ்யாஜம் அபஜம்–2-87-
ஹே ஸ்ரீ ரெங்கநாதனே -ஸ்ரீ மந் நாராயணன் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி நியமனம் முதலிய காரியங்களால் சேதன அசேதனங்களைத் தனக்கேயாக ஸ்வீ கரிக்கிறான் என்றும் உபநிஷத் வாக்கியங்கள் சொல்லுகின்றன -ஆகையால் இங்கு உபாயத்வமும் உபேயத்வமும் உனக்கும் ஸ்வரூபன் -குணங்கள் அல்ல -இவை ஸ்வரூப நிரூபக தர்மங்கள் –நிரூபித்த ஸ்வரூப விசேஷணங்கள் அல்லவே ––ஆகையால் உம்மை நிர்வ்யாஜமான உபாயமாக அடைந்தேன் -அநந்ய சாதனர் என்று சரணம் புகுகிறார் –
(சரண வரண காலத்தில் ஷமிஷ்யாமி –இவளால் தலை யெடுக்குமாம் கல்யாண குணங்கள்- மாம் -ஆஸ்ரித சவுகர்ய ஆபாத குணங்கள் –கார்ய காலம் -அநிஷ்ட நிவாரகம் இஷ்ட பிராப்தி-ஆஸ்ரித கார்ய ஆபாத குணங்கள் அஹம் -இதற்கு புருஷகாரம் வேண்டாமே-ஞானம் சக்த்யாதி குணங்களைத் தடுக்க ஸ்வா தந்தர்யம் பிரதிபந்தகமில்லையே – -பின்பு கைங்கர்யம் ஒன்றை பத்தாக்கித் தர வேண்டும்)
அதில் புருஷகார ஸாபேஷத்வம் உபாய நைரபேஷ்ய பஞ்சகமாகாதோ -என்னில் -ஸ்வீ கார தசையில் ஸ்வீ கர்த்தவ்ய ஸா பேஷமானவோபாதி புருஷகார ஸா பேஷமானாலும் பல ப்ரதான தசையில் பல பிரதத்வ ஹேதுவான ஞான சக்த்யாதிகளால் பூர்ணனாகையாலே உபய நிரபேஷமாகக் கார்யம் செய்ய வல்லனாகையாலே புருஷகார சாபேஷத்வம் உபாய நைரபேஷ்ய பஞ்சகமாகாது இறே -இத்தால் கார்ய காலத்தில் ஸா பேஷத்வம் நிரபேஷத்வ பஞ்சகமாகாது என்றதாயிற்று -ஆகையிறே உபாய ஸ்வீ காரத்தில் புருஷ ஸா பேஷமுமாய் புருஷகார ஸா பேஷமுமாய் இருக்கும் -கார்ய காலத்தில் உபய நிரபேஷமாய் இருக்கும் என்றும் ஆச்சார்ய அக்ரேஸரரான பிள்ளை லோகாச்சார்யாரும் அருளிச் செய்தது – புருஷகார சாபேஷம் என்னில் -உபாயத்தினுடைய நைரபேஷ்ய ஹானி வாராதோ -என்கிற சங்கையில்-அருளிச் செய்கிறார் -உபாயம் ஸ்வீகார காலத்தில் -புருஷ சாபேஷமுமாய்-புருஷகார சாபேஷமுமாய் -இருக்கும் –-கார்ய காலத்தில் -உபய நிரபேஷமாய் இருக்கும் –சூரணை -268–அதாவது-சகாயாந்தர சம்சர்க்க அசஹமான சித்த உபாயம் சரண வரண ரூப ஸ்வீகார காலத்தில் -ஸ்வீகர்த்தாவான புருஷனையும் – ஸ்வீகரிப்பிக்கும் புருஷ காரத்வத்தையும் -அபேஷித்து இருக்கும் – ஸ்வீக்ருதமான தான் இவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வ இஷ்ட பிராப்தியைப் பண்ணுகை யாகிற -கார்ய காலத்தில் – புருஷனும் -புருஷ காரமும் -ஆகிற உபயததையும் அபேஷியாதே-தானே செய்து தலைக் கட்டும் -என்கை – கார்ய காலத்தில் ஸஹ காரி சபேஷம் உண்டாகில் இறே உபயத்தினுடைய நைர பேஷ்யதுக்கு ஹானி வருவது என்று கருத்து –நிரபேஷமான சித்த உபாயம் சரண வரண ரூப ஸ்வீகாரத்தில்– -ஸ்வீ கர்த்தாவும்- ஸ்வீ கரிப்பிக்கும் அவளும் வேணுமே – ஸ்வீ கர்த்தா இல்லை என்றால் ஸ்வீ காரமும் இல்லையே – புருஷகாரம் இல்லை என்னில் அதிகாரம் இல்லை ஸ்வீகார அநந்தரம் -கார்ய பல -காலத்தில் -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி சமயத்தில் இருவரையும் எதிர் பார்க்காமல் தானே செய்யுமே-ஆக நைர பேஷ்யத்துக்கு பங்கம் இல்லையே –சரணமாகும் தன தான் அடைந்ததற்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்–சரம ஸ்லோகம் -ஏக சப்தம் -இரண்டு பக்ஷங்கள் –என்னை தவிர வேறே ஒன்றுமே உபாயம் இல்லை ஸ் வீ காரத்தில் உபாய புத்தி தவிர்க்கிறது – இதே போல் ஆத்மாவை பரமாத்மா அழிக்க முடியுமா -சக்தி இருந்தாலும் சத்ய சங்கல்பனாகையாலே அழிக்க மாட்டான் -இங்கும் கார்யம் செய்ய வல்லவன் -புருஷனை எதிர்பார்ப்பது போல் புருஷகாரத்தையும் எதிர்பார்க்கிறான்) லஷ்ம்யா ஸஹ ரக்ஷக- (லஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீ கேஸோ தேவ்யா காருண்ய ரூபயா ரக்ஷகஸ் ஸர்வ சித்தாந்தே வேதாந்தேஷு ச நீயதே -லஷ்மீ தந்த்ரம் -28-14- காருண்யமே வடிவெடுத்த பிராட்டியுடன் கூடியே பகவான் ரக்ஷகன் ஆகிறான் என்றும் எல்லா சித்தாந்தங்களிலும் வேதாந்தங்களிலும் புகழப்படுகிறான்-)என்கிறவிடத்தில் இவளுக்கும் உபாய அந்வயம் சொல்லிற்றிறே யென்னில் -அங்கும் அப்ரதானார்த்தே திருதீயை யாகையாலே அப்ரதான ரக்ஷணமான புருஷகார பாவம் சொல்லுகிறது – உபாய வரண ப்ரதிபாதகமான பூர்வ வாக்கியத்திலே வாத்சல்யாதிவத் ஞான சக்த்யாதிவத் -விக்ரஹ வத் இவளையும் உபாய விசேஷணமாகச் சொல்லுகையாலே இவளுக்கு குணாதிவத் உபாயத்வம் சித்தமிறே யென்னில் -வாத்சல்யாதிகள் ஆஸ்ரயண ஸுவ் கர்ய ஆபாதங்களாகவும் ஞான சக்த்யாதிகள் ஆஸ்ரித கார்ய ஆபாதங்களாகவும் விக்ரஹம் ஸூபாஸ்ரயமாகவும் உபயோகிக்குமவை யாகையாலே இவற்றுக்குத் தத் அனுவிதாயித்வ மாத்ரமே இறே உள்ளது -இப்படியே இவளும் தத் அனுவிதாயியாய் இருக்கையாலே புருஷகார பாவமே இவளுக்கு நியதமாய் இருக்கும் என்று இறே த்வயத்திலும் நிர்ணயித்தது -கிஞ்ச குணாதிகளுக்கு உபாயத்வ யுண்டாகிலும் இவளுக்கு புருஷகார பாவம் நியதமாய் இருக்கும் என்றிறே ஆச்சார்யர்கள் நிர்வஹித்தது -ஆகையால் இவளுக்குப் புருஷகார பாவமே அங்கீ கார்யம் என்றதாயிற்று
(நார-குணங்கள் -சரணம் விக்ரஹம் -ஸ்ரீ பிராட்டிக்கு சம்பந்தம் -இவை மூன்றும் விசேஷணங்கள் -அவர தத்துவத்தில் நின்றும் வ்யாவ்ருத்தி -பூர்வ வாக்கியத்திலே வாத்சல்யாதிவத் ஞான சக்த்யாதிவத் -விக்ரஹ வத் இவளையும் உபாய விசேஷணமாகச் சொல்லுகையாலே-என்றவாறு -வாத்சல்யாதி -கல்யாண குணங்கள் -உபாயத்தில் அன்வயம் உண்டே-என்னில்-தத் அனுவிதாயித்வ மாத்ரமே இறே உள்ளது-அனு பின்தொடர்தல் –அப்ரதானம் -கௌனம் இவை என்றவாறு)
லஷ்மீ குணாதிகளுக்கு விசேஷணத்வம் அவிசிஷ்டமாய் இருக்க குணங்களுக்கு உபாயத்வம் அங்கீ கரித்துப் பிராட்டிக்கு புருஷகாரத்வம் அங்கீ கரிக்கைக்கு ஹேது என் என்னில் -குணங்கள் கார்ய உபயோகிகளாகையாலும் இவளுக்கு கார்ய உபயோகித்வம் இல்லாமையாலும் குணங்களுக்கு உபாயத்வமும் இவளுக்குப் புருஷகாரத்வமும் அங்கீ கரிக்கத் தட்டில்லை –
நநு பிராட்டிக்கு உபாயத்வ கொள்ளில் உபாய நைர பேஷ்யம் ஸித்தியாதோபாதி குணங்களுக்கு உபாயத்வம் கொள்ளில் தந் நைர பேஷ்ய ஹாநி வாராதோ என்னில் -குணங்கள் ப்ருதக் புத்தி ப்ரவர்த்தகம் அல்லாமையாலே குண த்வாரா குணி கார்யம் செய்கை நைர பேஷ்ய பஞ்சகம் அன்று-த்ரவ்யத்வேந பிராட்டிக்கு ப்ருதக் புத்தி ப்ரவ்ருத்தி யோக்யதை யுண்டாகையாலே தத் உபாயத்வே உபாய நைர பேஷ்யம் ஜீவியாது இறே -ஆகையிறே உபாயா அனுஷ்டான ப்ரகாசகமான பூர்வ வாக்கியத்தில் சித்ரகுமாநய-என்கிற விடத்தில் போலே பிராட்டிக்கு உப லக்ஷணத்வமும் உபேய பிரார்த்தனா ப்ரகாசகமான உத்தர வாக்கியத்தில் தண்டிநமாநய என்கிறவிடத்தில் போலே விசேஷணத்வமும் நிர்ணயித்து அனுசந்தித்ததும் – இரண்டு இடத்திலும் ஸப்தம் ஒத்து இருக்கையாலே ஏக பிரகாரமாக உபயத்ர நிர்வாஹம் பண்ண ப்ராப்தமாயிருக்க ஏகத்ர உபலக்ஷணத்வமும் அந்யத்ர விசேஷணத்வமும் என்று இப்படி விபஜிக்கிறதுக்கு கமணிகை என் -என்னில் வாக்ய த்வயத்திலும் விசேஷ்ய ப்ரதிபாத்ய ஸப்தங்கள் சமானமாய் இருக்கச் செய்தேயும் -அர்த்தாத் ப்ரகரணால் லிங்காதவ் சித்யாதர்த்த நிர்ணய -என்கிற நியாயத்தாலே (அர்த்தாத் ப்ரகரணால் லிங்காதவ் ஸித்யார்த்த நிர்ணய -அர்த்தத்திலிருந்தும் பிரகரணத்திலிருந்தும் -அடையாளங்களிருந்தும் -ஒவ்சித்யத்திலிருந்தும் பொருளை நிர்ணயிக்க வேண்டும் –)பூர்வ வாக்யம் உபாய பிரகரணமாகையாலே வாத்சல்யாதி குண விசிஷ்டன் உபாயம் என்றும் -உபேய பிரகரணமான உத்தர வாக்கியத்தில் ஸர்வ சேஷியான வஸ்துவே உபேயம் என்றும் -விபஜித்து அர்த்த நிர்ணயம் பண்ணினால் போலே -விசேஷண ப்ரதிபாதக ஸப்தங்கள் உபயத்ர சமானமாய் இருந்ததே யாகிலும் உபாய பிரகரணத்தில் பகவத் உபாயத்வ நைர பேஷ்ய ஸித்திக்காக பிராட்டிக்கு உபாயத்வ அநங்கீகாரேண புருஷகாரத்வம் கொள்ளுகை உசிதமாகையாலும் உபேய ப்ரகரணத்தில் மிதுன விஷய கைங்கர்யமே ஸ்வரூப அனுரூபமாகையாலும் பிராட்டிக்கு விசேஷணத்வம் கொள்ளுகை உசிதமாகையாலும் -ஆகிற இவ்வர்த்த ஸ்வாரஸ்யத்தைப் பற்ற இப்படி விபஜிக்கத் தட்டில்லை
(ஸ்ரீ மத் பூர்வ வாக்கியத்தில் உபலக்ஷணம் என்றும் ஸ்ரீ மதே உத்தர வாக்கியத்தில் விசேஷணமாகவும் அர்த்தம் கொள்கிறோம் -பிரகரணத்துக்குச் சேர–அர்த்தம் –பிரகரணம் -இடத்துக்குப் பொருத்தமாகப் பொருள் கொள்ளுவது -லிங்கம் அடையாளம் -உசிதமாக பொருள் கொள்ள வேண்டுமே-வாத்சல்யாதி குண விசிஷ்டன்-ஸர்வ சேஷியான வஸ்து-விபஜித்து அர்த்த நிர்ணயம் பண்ணினால் போலே–மாலுக்கு இரண்டு விதமாகக் கொண்டது போல் திருவுக்கும் இரண்டு விதமாகக் கொள்வதில் தப்பில்லையே)
உபலக்ஷணமாவது -உப லஷ்யாத் பஹிர்ப்பூதமாய் உப லஷ்ய ப்ரதீத் யுபாயமான தர்ம விசேஷம் -சாகாயாம் சந்த்ர-இத்யாதி -பிதாவுக்கு ஹித பரத்வம் அசாதாரணமாய் ப்ரிய பரத்வம் இருவருக்கும் அவிசிஷ்டமாய் இருக்கை லோக ஸித்தம் இறே -மாதாவுக்கு ப்ரஜா ஹித பரத்வம் பாரதந்தர்ய பஞ்சகம் இறே –
கிஞ்ச -சரணம் என்றும் ஏகவசன பிரயோகம் பண்ணினால் உப லக்ஷணமாய் விசேஷணத்துக்கும் உபாய அந்வயம் சம்பவித்தது விடும் என்றும் தத் வ்யாவ்ருத்யர்த்தம் இறே த்வி வசன ப்ரயோகம் பண்ணுகிறது -த்வி வசனம் மற்ற ஒன்றையும் ஸஹியாது இறே -விசேஷ்ய ப்ராதான்யத சொன்ன த்வி வசனம் பத்னீ விசேஷணத்துக்கும் அவிசிஷ்டம் என்னில் -அப்போதும் ப்ரதான்யம் விசேஷ்யத்துக்கேயாய் விசேஷணத்துக்கு அப்ராதான்யமாகையாலே அப்ரதான உபாயமான புருஷகார பாவமே ஸித்தித்து விடுமிறே (தண்டு வைத்த புருஷன் -நாநாவித பசுக்களுடன் கூடிய கோவிந்தன் -உபலக்ஷணம் பஹிர் பூதம் -சரணாகா பஹு வசனம் -நான்கு திருவடிகளைச் சொல்லவில்லையே -சரணம் என்றும் ஏக வசனமும் சொல்லவில்லையேயே -சரணவ்-இரண்டு திருவடி இணைகள் -)-இருவரும் ப்ரத்யேக யுபாயம் என்னுமது லஷ்மீ விசிஷ்டம் உபாயம் என்கிறதோடு சேராது -விசிஷ்டம் உபாயம் என்று அங்கீ கரித்து இவளுக்கும் பல பிரதத்வம் சொல்லும் போது ஈஸ்வரனுக்குப் பல ப்ரதான ஹேதுவான ஞான சக்த்யாதிகள் இன்றியிலே ஒழிய வேணும் -ஞான சக்த்யாதிகள் உண்டு என்னில் அப்போது ஏததுபாய பாவ நிரபேஷமாக ஸ்வயமேவ பல ப்ரத க்ஷமன் இறே -பலப்ரதான ஹேதுவான ஞான சக்த்யாதிகள் உண்டாக்குகிறாள் என்னில் -குணங்கள் வந்தேறியாய் ஸ்வாபாவிகங்கள் இன்றியிலே ஒழியும் -ஸ்வா தந்தர்யதிரோஹிதங்களான வாத்சல்யாதிகளை பிரகாசிப்பிக்கிறாப் போலே திரோஹித ஞானம் சக்திகளை பிரகாசிப்பிக்கிறாள் என்னில் -அவற்றுக்கு ஸ்வாதந்தர்யம் போலே இவற்றுக்கு ஒரு திரோதாயக குணமில்லை -உண்டு என்னில் -ஞானம் அக்தே கொண்டு எல்லாக் கருமங்களை செய் -திருவாய் -3-10-8-என்கிறபடியே ஞானம் கொண்டு சோம்பாதே நிரந்தர ஸ்ருஷ்ட்டி பண்ணக்கூடாது இறே -யேந கேந பிரகாரேண உபாய அந்வயம் சொல்லில் -சீதோ பவ -(யத் யஸ்தி பதி ஸூஸ்ரூஷா யத் யஸ்தி சரிதம் தபஸ் யதி வா அஸ்த்யேக பத்நீத்வம் ஸீதோ பவ ஹனூமத-ஸூந்தர -53-29-எனக்கு பதி ஸூஸ்ரூஷை உள்ளதாகில் -என்னால் தவம் செய்யப்பட்டு இருக்குமாகில் -என் நாதனுக்கு ஏக பத்நீ விரதம் உள்ளதாகில் ஹநுமானுக்கு அக்னியாகிய நீ குளிர்ந்தவனாவாயாக) என்ன வல்ல திவ்ய சக்தி உண்டாயிருக்க ஸ்வ பாரதந்தர்ய ஹானி வாராமல் அந்தராத்மா ச மே ஸூத்த – (ஆஸம்ஸேயம் ஹரி ஸ்ரேஷ்ட க்ஷிப்ரம் மாம் ப்ராப்ஸ்யதே பதி -அந்தராத்மா ச மே ஸூத்தஸ் தஸ்மிம்ஸ் ச பஹவோ குணா -ஸூந்தர -37-14-வானரத் தலைவனே என் கணவன் விரைவிலேயே என்னை அடைந்து விடுவார் என்று எதிர்பார்க்கிறேன் -என் மனம்- தன்னை ரக்ஷிக்கத் தான் முயற்சி செய்வதாகிற -அசத்தி யற்று இருக்கிறது -அவனிடம் குணங்கள் பலவுள்ளன –) என்று ஸ்வ ரக்ஷணே ஸ்வ ப்ரவ்ருத்தி யாகிற அஸூத்தி இத்தலையில் இல்லை என்றும் -தஸ்மிம்ச் ச பஹவோ குணா என்றும் உபாய பூர்த்திக்கு அடியான குணபூர்த்தி அத்தலைக்கே உள்ளது என்றும் தர்சிப்பித்து ஸ்வ ப்ராப்திக்கும் தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் என்று ஸ்வ ஸ்வரூப அனுரூப பாரதந்தர்ய அனுசந்தானமாக தந்நிரபேஷ உபாயத்வத்தைப் பார்த்திருக்கும்படியான இவள் பரி ஸூத்த ப்ரக்ருதிக்கு அது சேராது இறே
நநு -ஸ்ரீயப்பதியே உபாயம் என்றும் அங்கீ கரிக்க வேண்டுமாகையாலே நிரூப்ய ஸ்வரூபத்துக்குச் சொன்ன உபாயத்வம் நிரூபக ஸ்வரூபத்துக்கும் -யத்யபி ஸச் சித்த -(யத்யபி ஸச் சித்தோ ந நிர்ப்புக்ண தைவதம் குண கணம் மனஸா அநு தாவேத் ததாப் யந்தர்க்குணாமேவ தேவதாம் பஜதே தத்ராபி ஸ குணைவ தேவதா ப்ராப்யதே -த்ரமிட பாஷ்யம்-சத்தாகிற ப்ரஹ்மத்தை த்யானிப்பவன் தேவனாகிற அந்த ப்ரஹ்மத்தை விட்ட குண ஸமூஹத்தை மனஸ்ஸினாலே தியானிக்க முடியாவிடினும் குணங்களுடன் கூடிய தேவதையையே உபாஸிக்கிறான் -அதிலும் குணத்துடன் கூடிய தேவதையையே அடைகிறான் –) என்கிற நியாயத்தாலே அநிவர்த்யமாய்க் கொண்டு தன்னடையே வாராதோ என்னில் ஸ்வரூப நிரூபகத்வேந நிரூப்ய நிரூபகங்களுக்கு அவர்ஜனீய ஸம்பந்தம் உண்டேயாகிலும் உபாய வரண தசையில் ஸ்வரூப நிரூபகங்களான ஞான ஆனந்தங்கள் உபயோகம் இல்லாமையாலே நிரூபக மாத்ரமாய் நிற்கிறாப் போலே பகவத் ஸ்வரூப நிரூபகமான லஷ்மீ ஸ்வரூபமும் காரணத்வ தசையில் போலே உபாய தசையில் தன்னால் கொள்வ தொரு பிரயோஜனம் இல்லாமையாலே தத் ஸ்வரூப நிரூபக மாத்திரத்திலே அன்வயித்து தத் அசாதாரண உபாயத்வத்தில் அந்வயியாமல் இருக்கையாலே நிரூபகமான ஏதத் ஸ்வரூபத்துக்கு உபாயத்வம் வாராது இறே –
கிஞ்ச -உபாய விசேஷணமான குண விக்ரஹங்களுக்கு சவுகர்ய ஆபாகத் வேனவும் கார்ய ஆபாகத் வேனவும் ஸூபாஸ்ரயத் வேனவும் கார்ய பேதம் உண்டாகிறாப் போலே -தத் விசேஷண பூதையான பிராட்டிக்கும் உபாய தசையில் உபாயத்வ ரஹிதமாகப் புருஷகாரத்வ ரூப காரியபேதம் உண்டாகத் தட்டில்லை–லஷ்மீ பர்த்துர் தாஸ தாஸஸ்ய தாஸ – (புவந பவந ஸ்தித்யபாய ஏக ஹேதோ லஷ்மீ பர்த்துர் நரஹரிதநோர் தாஸ தாஸஸ்ய தாஸ-பாகவதம்-உலகங்களைப் படைத்து அளித்து அழிக்கும் ஒரே காரண புருஷனாய் இருக்கும் ஸ்ரீயப்பதியான நரஸிம்ஹனுக்கு தாஸனுக்கும் தாஸனுக்கும் தாஸனாய் இருக்கிறேன் –)என்றும் திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன் – சேஷத்வ ஸ்வரூபத்துக்கும் -(விருத்திக்கு பிரமாணம் மேல் )–ஸ்ரியா ஸார்த்தம் ஆஸ்தே ஜகத் பதி இத்யாதி என்றும் -திருமாலே நின்றே ஆட்ச்செய்ய -(8-3-)-என்கிறபடியே -என்கிறபடியே ஸ்வரூப அனுரூபமான ப்ராப்ய தசையில் கைங்கர்யத்துக்கும் மிதுனமே பிரதிசம்பந்தியாக வேண்டினவோபாதி உபாய அனுரூபமான உபாய தசையிலும் அவஸ்ய அபேக்ஷிதமான உபாய பிரதிசம்பந்தித்வத்தில் ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த சஹாயா அந பேஷமான உபாயத்தினுடைய மாம் ஏகம் என்கிற நைரபேஷ்ய பஞ்சகமான உபாயத்வத்தில் அந்வயமற்று தத் அவிரோதமாகப புருஷகாரத்வ ரூப ப்ரதி சம்பந்தித்வத்திலே இவளுக்கு அன்வயமாகக் கடவது –
(சேஷத்வம் -பக்தபக்தர்களுக்கும் -கைங்கர்யமும் அடியார் அடியாருக்கும் -கொண்டு உபாயத்வ ஒன்றுக்கும் மாம் ஏகம் -என்று ஸஹாயாந்தர நிரபேஷமாக கொள்ள வேண்டும் -கத்யத்தில் பிராட்டியை முதலில் பற்றியதும் மோக்ஷத்துக்கு அன்று- அவனே உபாயம் என்ற உறுதி மாறாமல் இருக்கவே தானே-உபாய உபாயமாக புருஷகாரம் பண்ணுபவள் என்றவாறு)
நநு –ஸ்வா யம்புவே ஸர்வ காம ப்ரதாம் ரம்யாம் ஸம்ஸார ஆர்ணவ தாரிணீம் -ஷிப்ர ப்ரஸாதி நீம் தேவீம் சரண்யாம் சிந்தயேதிதி -(எல்லா இஷ்டங்களையும் தருமவளும் அழகியவளும் ஸம்ஸார ஸாகரத்தை தாண்டுவிப்பவளும் விரைவில் அருள் செய்யுமவளுமான பிராட்டியை சரணமடையத் தகுந்தவளாக நினைக்கக் கடவன்-)என்றும் வைஷ்ணவே –ஆத்ம வித்யா ச தேவி த்வம் விமுக்தி பலதாயிநீ –(-வி பு -1-9-20-தேவியே நீயே ஆத்மஞானத்தைக் கொடுப்பவளாயும் முக்தி பலத்தைக் கொடுப்பதையே இயற்கையாகவே உடையவளாயும் இருக்கிறாய் –) என்றும்-ப்ராஹ்மே –ஸக்ருத் விபாதா ஸர்வார்த்தி ஸமுத்ர பரி ஸோஷிணீ –பவ பங்காப ஹரிணீ பர நிர்வாணதாயிநீ – (ஸ்ரீ ஸஹஸ்ர நாமம் -87-122-23-உடனே பிரகாசிப்பவள் ஸமஸ்த துக்கங்களாகிற ஸமுத்ரத்தையும் வற்றச் செய்பவள் -ஸம்ஸாரமாகிற தாழ்மையைப் போக்கடிப்பவள் -மேலான மோக்ஷத்தை அளிப்பவள் -என்பவை பிராட்டியின் ஆயிரம் திருநாமங்களில் சில –)என்றும் -இத்யாதி பிரமாணங்கள் இவளுடைய உபாய பாவத்தைச் சொல்லிற்றே யாகிலும் அவை சரண்யனுடைய இச்சானுவிதாயித்வ ஸூ சகங்களாகக் கடவது -இதுக்கு நியாமகம் என் என்னில் –லஷ்மீ புருஷ காரேண வல்லபா ப்ராப்தி யோகிநீ -ஏதஸ் யாச் ச விஸேஷோ அயம் நிகமாந்தேஷு சப்த்யதே -என்றும்
லஷ்மீ புருஷகாரத்வே நிர்திஷ்டா –நான்யதா லக்ஷணம் பவேத்- (ஆகிஞ்சன்ய ஏக சரணா கேசித் பாக்யாதிகா புநஸ் -மத் பதாம் போருஹ த்வந்த்வம் ப்ரபத்ய ப்ரீத மாநஸா -லஷ்மீம் புருஷகாரேண வ்ருத வந்தோ வராநந -மத் ஷமாம் ப்ராப்ய ஸேநேஸ ப்ராப்யம் ப்ராபக மேவ மாம் லப்த்வா க்ருதார்த்தா ப்ராப்ஸ் யந்தே மாமேவா நந்ய மாநஸா -விஷ்வக்ஸேன ஸம்ஹிதை-அழகிய முகத்தையுடைய சேநா பதியே ஒரு கைம்முதலும் அற்று இருக்கையையே பற்றாசாகக் கொண்ட சில பாக்யசாலிகளோ வென்னில் என் திருவடித்தாமரை இணையை அன்புடன் கூடிய மனத்தராய்ச் சரணடைந்து லஷ்மீ தேவியைப் புருஷகாரமாகப் பற்றி என் பொறுமைக்கு இலக்காகி என்னையே ப்ராப்ய ப்ராபகங்களாக அடைந்த க்ருதார்த்தர்களாய் வேறு ஒன்றிலுமே நெஞ்சு செல்லப் பெறாதவர்களாய் என்னையே அடைவார்கள்-அஹம் மத் ப்ராப்த் யுபாயேர் வை ஸாஷால் லஷ்மீ பதி ஸ்வயம் லஷ்மீ புருஷகாரேண வல்லபா ப்ராப்தி யோகிநீ ஏதஸ்யாஸ் ச விசேஷோ அயம் நிகமாந்தேஷு ஸூப்த்யதே -பாஞ்சராத்ரம் –லஷ்மீ பதியான நானே என்னையடைய உபாயமாவேன் -என் பிரியையான லஷ்மீ யானவள் புருஷகாரத்தினால் என்னை அடைய உதவி புரிகிறாள் -புருஷகாரத்துவமாகிற இப்பெருமை இவளுக்கு வேதாந்தங்களில் சொல்லப்படுகிறது –- –மத் ப்ராப்திம் ப்ரதி ஐந்தூ நாம் ஸம்ஸாரே பததாமத லஷ்மீ புருஷகாரத்வே நிர் திஷ்டா பரமரிஷிபி -மமாபி ச மதம் ஹ்யேதந் நாந்யதா லக்ஷணம் பவேத் -பாஞ்சராத்ரம் –ஸம்ஸாரத்தில் கீழே விழுகின்ற ஜந்துக்களுக்கு என்னை அடையும் விஷயத்தில் லஷ்மீ தேவியானவள் பரம ரிஷிகளாலே புருஷகாரத்துவத்தில் நியமிக்கப்பட்டு இருக்கிறாள் -எனக்கும் இதுவே இஷ்டம் -வேறான உபாயத்வமாகிற ஆகாரம் இல்லை –)என்றும் -புருஷகாரத்வத்தையே லக்ஷணமாகச் சொல்லி அந்யதா லக்ஷணம் இல்லையென்று உபாயத்வத்தை நிஷேதித்தது இறே -அந் வயத்திலும் வ்யதிரேகம் அர்த்த தார்ட்யத்துக்கு உறுப்பாகையாலே -இதுவே பிரபல ப்ரமாண ப்ரஸித்தமாகையாலும் பகவத் அபிமதமாகையாலும் பிராட்டிக்கு அத்யந்த அபிமதமாகையாலும் ஸம்ப்ரதாய ஸித்தமாகையாலும் ஏதத் அனுகுணமாக அவற்றைத் யோஜிக்கத் தட்டில்லை -தத் அநனுகுணமாக இவற்றை யோஜிக்குமிடத்தில் பிரபல ப்ரமாண விரோதமும் -பகவத் அநபிமதத்வமும் லஷ்மி அநபிமதத்வமும் சம்பிரதாய விரோதமும் ஸம்பவிக்கும் -ஆகையாலே ஸகல ப்ரமாண ப்ரமாத்ரு பரிக்ருஹீதமான புருஷகார பாவமே சார அசார விவேக சதுரர்க்குப் பரிக்ராஹ்யம் என்றதாயிற்று–தர்மஞ்ஞமைய ப்ரமாணம் வேதாச் ச -(ஆபஸ்தம்ப ஸூத்ரம் –தர்மத்தை அறிந்தவர்களுடைய ஆசாரம் முக்கியமான பிரமாணம் வேதங்களும் பிரமாணம் )-யத் தாசாரதி ஸ்ரேஷ்ட -(யத்ய தாசரதி ஸ்ரேஷ்டஸ் தத்ததேவேதரோ ஜந: ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் ததநுவர்ததே-3-21-எதனை யெதனை உயர்ந்தோன் செய்கிறானோ அதையே மற்ற மனிதர் பின்பற்றுகிறார்கள்.-அவன் எதை பிரமாணமாக்குகிறானோ, அதையே உலகத்தார் தொடருகிறார்கள்.)-மேலையார் செய்வனகள் வேண்டுவன –என்னக் கடவது இறே
ஆக-இஸ் ஸ்லோகத்தாலே பெரிய பிராட்டியார் ஸ்வ கருணா கடாக்ஷ லேசத்தாலே ஸ்வ ஆஸ்ரிதருக்கு ஸகல புருஷார்த்தங்களையும் ப்ரஸாதித்து அருளுவார் -ஸகல புருஷார்த்த விலக்ஷண மோக்ஷத்தை தத் அசாதாரண உபாய பூதனாய் ஸ்வ வஸ வர்த்தியாய் ஸ்வ அபாங்க இங்கித பராதீனனான ஈஸ்வரனைக் கொண்டு கொடுப்பித்து அருளுவர் -ஆனபின்பு புருஷார்த்தங்களோடு -விலக்ஷண புருஷார்த்தத்தோடு விசேஷமற ஸகல ஸ்ரேயஸ்ஸூம் தத் ப்ரஸாதத்தாலே அல்லது சம்பவியாது என்னுமிடத்தை ஸ்த்திரீ கரித்து அருளினார் ஆய்த்து -ஸ்ரீ ஸாத்வதத்திலே அவனுக்கு மோக்ஷ பிரதத்வமும் தேவிக்கு ஐஸ்வர்ய பிரதத்வமும் விபஜித்து ஸ்வயமேவ ஸ்பஷ்டமாக அருளிச் செய்தார் இறே
தாமரைக் கை அவனது செந்தாமரைக் கை இவளது –
————-
அவதாரிகை
த்ரயாணாம் பரதாதீநாம் ப்ராத்ரூணாம் தேவதா ச யா -ராமஸ்ய ச மந காந்தா ப்ராணேப்யோ அபி கரீயஸீ –(ஸூந்தர -55-26-பரதன் முதலான மூன்று சஹோதரர்க்கும் எந்தப் பிராட்டியானவள் தேவதையாய் இருக்கிறாளோ -ராமனுக்கும் மநோ வல்லபையாய் ப்ராணனைக் காட்டிலும் ப்ரியையாய் இருக்கிறாளோ —)என்கிற ப்ரமாண அனுஸாரேண –காந்தஸ்தே புருஷோத்தம-என்று கர்த்தரி யர்த்தத்தையும்(ஸ்ராயதே -தான் பற்றுவதையும் )-பணி பதி என்று தொடங்கிக் கர்மண் யர்த்தத்தையும் (மற்றவர்கள் இவளைப் பற்றுவதையும் )அனுசந்தித்து -ஆக -இப்படி உபய விபூதியில் உள்ளாருக்கும் ஆஸ்ரயணீயையாய் -உபய விபூதி நாதனை ஆஸ்ரயித்துக் கொண்டு இருக்கையாலே ஸ்ரீ என்றும் அசாதாரணமான திருநாமத்தை உடையையாய் -அவனுக்கும் பூஜ்யையாம் படியான குண பூர்த்தியை யுடைய உன்னை ஞான சக்த்யாதி குண ஹீனனான நான் ஸ்தோத்ரம் பண்ணுவது எங்கனே என்று பீத பீதராய் ஸ்தோத்ராந் நிவ்ருத்தரானார் பிரதம ஸ்லோகத்திலே
இப்படி நிவ்ருத்தரான படியைக்கண்டு இவர் பண்ணுகிற ஸ்தோத்ரத்தை ஸ்ரவித்து -ஸ்ரவிப்பித்தால் அன்றோ ஸ்ருணோதீதி -ஸ்ரீ -ஸ்ராவயதீதி —ஸ்ரீ -என்கிற நிருக்த் யநுரூப அசாதாரண நாமம் நமக்கு நிலை நிற்பது -ஆனபின்பு இவர் யதா ஸ்தோத்ரம் பண்ண வல்லராம் படி கடாஷிப்போம் என்று கணிசித்து -இவர் பக்கலிலே கருணா கடாக்ஷத்தைப் பண்ண -இதொரு தயா விசேஷம் இருந்தபடி என் என்று தத் ஸுலப்ய அனுசந்தானத்தாலே ஸமாஹிதராய் ஸம்பந்த ஞான பூர்வகமாக சரணம் புகுந்து -கீழ் ஸ்ரீ யதே -ஸ்ரயதே -என்று சொன்ன வ்யுத்பத்தி த்வயார்த்தமும் –அஸ்ய ஈஸாநா -இத்யாதி வேதாந்த ஸித்தம் என்னுமிடத்தை லோக ஏக ஈஸ்வரி லோக நாத தயிதே -என்று ஸூசிப்பியா நின்று கொண்டு ஸமாஹிதராய் பயமும் சமித்து ஸ்தோத்ரத்திலே ப்ரவ்ருத்தரானார் த்வதீய ஸ்லோகத்திலே –
இப்படி ஆக்ஷேப சமாதான வ்யாஜேந ப்ரவ்ருத்தமான ஸ்லோக த்வயத்தாலும் -தத் பரத்வ ஸுலப்யங்களை அனுசந்தித்து -திருவடிகளை ஆஸ்ரயித்தாருக்குத் தத் கடாக்ஷ லேசத்தாலே ஸகல புருஷார்த்தங்களும் ஸம்பவிக்கும் -அது இல்லாதாருக்கு ஒரு ஸ்ரேயஸ்ஸூம் சித்தியாது (ஸ்ருணாதி -சகல அநிஷ்டங்களையும் போக்கி அருளி –ஸ்ரீநாதி -சகல இஷ்டங்களையும் அளித்து அருளுகிறாள்)என்று கொண்டு பிராட்டியினுடைய ஸர்வ சமாஸ்ரயணீயத்வ க்யாபந அர்த்தமாக ஸகல புருஷார்த்த பிரதத்வத்தை அருளிச் செய்தார் த்ருதீய ஸ்லோகத்தாலே
ஆக இப்படி ஸ்லோக த்ரயத்தாலும் ப்ரக்ருதியான ஸ்ரீ சப்தார்த்தை அருளிச் செய்து -அநந்தரம் ப்ரத்யயமான மதுப்பின் அர்த்தத்தை அருளிச் செய்வதாகத் திரு உள்ளம் பற்றி பகவத் ஸ்வரூப ரூப குணாதிகளிலே தத் ஸஹ தர்ம சாரிணியான இவளுடைய ஸ்வரூபாதிகளுக்கு யுண்டான அயோக வ்யச்சேதத்தை அநுஸந்தியா நின்று கொண்டு -லஷ்ம்யா ஸஹ –ரக்ஷக -ஸ்ரீ யா ஸார்த்தம் —என்கிறபடியே உபய விபூதிக்கும் நித்ய ரக்ஷகமாய் நித்ய ப்ராப்யமான நித்ய யோகத்தை அனுபவித்து நிரஸ்த சமஸ்த பிரதிபந்தகராய் ப்ராப்த பரிபூர்ண மநோ ரதராய் –திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் –என்கிறபடியே ஸ்ரீயப்பதியினுடைய நிர்ஹேதுக கிருபையாலே நிரதிசய ஆனந்தத்தை பிராபித்து ஸ்தோத்ரத்தைத் தலைக்கட்டுகிறார் -துரீய ஸ்லோகத்தாலே –
(லஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீகேஸோ திவ்யோ காருண்ய ரூபயா ரக்ஷக சர்வ சித்தாந்தே வேதாந்ததே அபி ச ..-இங்கு நித்ய ரக்ஷகமாயும் – வைகுண்டே து பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி:-அங்கு அனுபவ தசையில் மட்டுமே தானே -ஆகவே நித்ய ப்ராப்யமான நித்ய யோகத்துக்கு இரண்டு பிரமாணங்கள் காட்டி அருளிச் செய்கிறார்)
(மேல் நாராயண சப்தார்த்தங்களை ஸ்தோத்ர ரத்னத்தில் அருளிச் செய்கிறார்)
சாந்தா நந்த மஹா விபூதி பரமம் யத் ப்ரஹ்ம ரூபம் ஹரே
மூர்த்தம் ப்ரஹ்ம ததோ அபி தத் ப்ரியதரம் ரூபம் யத்த் யத்புதம்
யான் யன்யானி யதா ஸூ கம் விஹரதோ ரூபாணி சர்வாணி தான்
யாஹூ ஸ் வைர நுரூப ரூபா விபவைர் காடோப கூடாநி தே(அநந்த -பாடபேதம் )–4-
சாந்த –ஷடூர்மிகள் அற்றதாய்
ஆநந்த -ஆனந்த மயமாய்(அநந்த -பாடபேதம் -த்ரிவித பரிச்சேத ரஹிதமாய் இருக்கும் )
பரமம்–தனக்கு மேலானது அற்றதாய்
ப்ரஹ்ம–பெரியதாய் இருப்பதாலும் -பிறரைப் பெரியதாகச் செய்வதாலும் ப்ரஹ்ம சப்தத்தால் சொல்லப்படுவதாய் இருக்கும்
ஹரே யத் ரூபம் -ஹரியினுடைய யாதொரு ஸ்வரூபம் உண்டோ
ததோ அபி-அதைக் காட்டிலும்
தத் ப்ரியதரம்-அந்த பகவானுக்கு மிகவும் பிரியமாய் இருப்பதும்
மூர்த்தம்-கண்ணால் காணக் கூடியதும்
ப்ரஹ்ம -ப்ரஹ்ம சப்தத்தால் சொல்லப்படுவதும்
யத் யத்புதம்-மிகவும் அத்புதமானதுமான
ரூபம் யத் -யாதொரு ரூபம் உண்டோ
யதா ஸூ கம் விஹரதோ –இஷ்டப்படி விளையாடும் எம்பெருமானுக்கு
யன்யானி ரூபாணி யாநி –மற்றும் யாவை சில ரூபங்கள் உண்டோ
தாநி சர்வாணி -அந்த ரூபங்கள் எல்லாம்
தே -உனக்கு
ஸ்வைர் அநுரூப ரூப விபவைர்-அசாதாரணங்களாய் தகுந்தவையாய் இருக்கும் திவ்ய ரூபங்களால்
காடோப கூடாநி ஆஹூ-நன்றாக ஆலிங்கனம் செய்யப்பட்டவை என்று பிரமாணங்கள் சொல்லுகின்றன
சாந்தா நந்த மஹா விபூதி பரமம் யத் ப்ரஹ்ம ரூபம்-என்கிற இவ்வளவாலே திவ்யாத்ம ஸ்வரூபத்தை அனுபவிக்கிறார் –சாந்தா நந்தம் சிதா நந்தம் யத் ப்ரஹ்ம பரமம் த்ருவம் -மஹா விபூதி ஸம் ஸ்தாநம் ஸர்வதஸ் சமதாம் கதம் -(ல த-17-5-
ஆறு ஊர்மிகளும் அற்றதாய் அளவற்றதாய் ஞானானந்த மயமாய் உயர்ந்ததாய் நிலையானதாய் பெரிய விபூதிகளையும் திருமேனியையும் யுடையதாய் எங்கும் சம நிலையைப் பெற்றதான யாதொரு ப்ரஹ்ம ஸ்வரூபம் உண்டோ ) என்கிற திவ்யாத்ம ஸ்வரூப நிர்ணாயக பிரமாணத்தை உட்க்கொண்டாய்த்து இவர் இப்படி அருளிச் செய்தது –
சாந்தேதி -சாந்தியாவது -அசநாயா அபிபிபாஸே ச சோக மோஹௌ ஜராம்ருதீ ஷடூர் மிபிர் விஸூத்தா -(பசி தாகம் சோகம் மோகம் கிழத்தனம் மரணம் என்னும் ஆறு ஊர்மிகள் அற்றது) என்ற ஸ்ருதி ஸித்த ஷடூர்மி ரஹிதமாய் -அபஷய விநாசாப்யாம் பரிணாமர்த்தி ஜன்மபிவர்ஜித சக்யதே வக்தும் யஸ் சதாஸ் ஸ்தீதி கேவலம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-11-(குறைவு படுதல் நாசமடைதல் மாறுபாடு அடைதல் வளருதல் பிறத்தல் இவைகள் அற்றவனாகவும் எப்போதும் இருக்கிறான் என்றே சொல்லப்படுபவனாகவும் இருப்பவன் பகவான்) என்ற புராண ரத்ன யுக்த பிரகாரத்தாலே ஷட்பாவ விகார ரஹிதமுமாய் இருக்கை -இத்தால் அகில ஹேய ப்ரத்ய நீகமாய் இருக்கும் திவ்யாத்ம ஸ்வரூபம் என்றதாயிற்று -1-ஸ்வயம் ஹேய ரஹிதமாய் இருக்கை யன்றிக்கே 2-ஹேய பிரதிபடமுமாய் -3ஸ்வ ஆஸ்ரித ஹேய நிவர்த்தகமுமாய் இறே இருப்பது (துயரறு சுடரடி -துயர் அறுப்பவர் என்றும் தமது துயரை அறுப்பவர் என்றும் போல் )-ஹேய ப்ரத்ய நீகம் சொன்ன இப் பதத்தாலே கல்யாணைக தாநத்வமும் அர்த்ததா சித்தமாயிற்று –ஹேய ப்ரத்ய நீகம் புக்கவிடத்தே கல்யாணைக தாநத்வமும் புகும் என்று இறே அருளிச் செய்தது –அருகலிலாய பெருஞ்சீர் -திருவாய் -1-9-3-என்கிறபடியே (அகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைகதாந –ஸ்வரூப -சரணாகதி கத்யம்-தாழ்வு அனைத்துக்கும் எதிர்த்தட்டாயும் மங்களங்களுக்கு ஒரே இருப்பிடமாகவும் இருக்கும் ஸ்வரூபத்தை யுடையவன்-)அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணைகதாந என்று உபய லிங்க விஸிஷ்ட வஸ்துவை அனுபவித்து அருளினார் இறே பாஷ்யகாரர் –ஈஸ்வரன் அகில ஹேய ப்ரத்ய நீக அநந்த ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனாய் -என்று தத் திவ்ய ஸூக்தியைப் பின்சென்று அனுபவித்து அருளினார் இறே பிள்ளை லோகாச்சார்யரும் – சாந்தானந்தம் சிதாநந்தம் -என்று முக்த கண்டமாகச் சொன்ன லஷண த்வயத்தில் இங்கு ஒன்றை ஓன்று லஷிக்கிறது -இத்தால் அபஹத பாப்மா விஜர-என்று தொடங்கி ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்ப-என்ற ப்ரமாண அர்த்தம் சொல்லிற்று (-யஸ் ஆத்மா அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யுர் விசோகோ விஜிகத்ஸோ அபி பாஸஸ் ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்பஸ் ஸோந் வேஷ்டவ்ய-சாந்தோ -8-7-1- எந்த ஆத்மாவானவன் பாபமற்றவனாகவும் கிழத்தனமற்றவனாகவும் ம்ருத்யுயற்றவனாகவும் சோகமற்றவனாகவும் பசியற்றவனாகவும் வீண் போகாத இஷ்டத்தையும் சங்கல்பத்தை யுமுடையனாகவும் இருக்கிறானோ அவன் தேடத்தக்கவன் –)-
அநந்த பதத்தாலே –த்ரிவித பரிச்சேத ரஹிதமாய் இருக்கும் என்றபடி -அதாவது விபுத்வாத் தேசதஸ் பரிச்சேத ரஹிதமாய் -நித்யத்வாத் காலதஸ் பரிச்சேத ரஹிதமாய் -ஸமஸ்த வஸ்து பிரகாரித்வாத் ஸ்வ சத்ருஸ வாஸ்து பரிச்சேத ரஹிதமாய் இருக்கும் –என்றபடி –
அதவா –சாந்த ஆனந்த என்ற பாடமாய் –ஞான ஆனந்த மயம் யஸ்ய ஸ்வரூபம் பரமாத்மந யதா சைந்தவ கநோ அநந்தரோ அபாஹ்ய க்ருத்ஸனோ ரஸ கந ஏவ ஏவம்-வா அரே அயமாத்மா அநந்தரோ அபாஹ்ய க்ருத்ஸனோ ப்ரஞ்ஞான கந ஏவ -ப்ருஹ்தா -6-5-3–(எந்தப் பரமாத்மாவின் ஸ்வரூபம் ஞானாநந்த மயமாயுள்ளதோ —எப்படி உப்புக்கட்டியானது வெளியிலும் உள்ளேயும் முழுவதும் ரஸம் நிறைந்துள்ளதோ அப்படியே இந்த ஆத்மா வெளியேயும் உள்ளேயும் முழுவதும் ஞான மயமாகவே உள்ளது – )என்கிறபடியே ஆனந்த மயனாய் இருக்கும் என்னவுமாம் –உணர் முழு நலம் -என்னக் கடவது இறே –முழு உணர்வும் முழு நலமுமாய் யதா சைந்தவகந என்னுமாப் போலே விஞ்ஞான கனமுமாய் பிரஞ்ஞான கனமுமாய் இறே ஸ்வரூபம் இருப்பது -இத்தால் ஸ்வ அனுபவ தசையில் ப்ரகாசமுமாய் ஸூக ரூபமுமாய் இருக்கும் என்கை –
(ஞான ஆனந்தமயம் யஸ்ய ஸ்வரூபம் பரமாத்மந —யதா சைந்தவ கநோ அநந்தரோ அபாஹ்ய க்ருத்ஸனோ ரஸ கந ஏவ ஏவம்-வா அரே அயமாத்மா அநந்தரோ அபாஹ்ய க்ருத்ஸனோ ப்ரஞ்ஞான கந ஏவ -ப்ருஹ்தா -6-5-3–எந்தப்பரமாத்மாவின் ஸ்வரூபம் ஞானாநந்த மயமாயுள்ளதோ —எப்படி உப்புக்கட்டியானது வெளியிலும் உள்ளேயும் முழுவதும் ரஸம் நிறைந்துள்ளதோ அப்படியே இந்த ஆத்மா வெளியேயும் உள்ளேயும் முழுவதும் ஞான மயமாகவே உள்ளது –)
சாந்தாநந்த -என்று ஸ்வரூப நிரூபகங்களான ஞான ஆனந்த அமலத் வாதிகளைச் சொன்ன வித்தால் நிரூபித ஸ்வரூப விசேஷணங்களான ஞான சக்த்யாதி அஸங்க்யேய கல்யாணம் குண கணங்களும் யுக்த பிராயங்கள் -ஸ்வரூப அனுபந்திகளாய் இறே இவை இருப்பன-சஹஸ்ராக்ஷ-ஸர்வஞ்ஞ-சஹஸ்ர சீர்ஷா புருஷ -பரா அஸ்ய சக்தி -இத்யாதி ப்ரமாண சித்தமிறே
மஹா விபூதி-மஹத்துக்களாய் ஸூத்த அஸூத்தங்களான விபூதி த்வயத்தை யுடைத்தாய் -அகல் விசும்பும் நிலனும் இருளார் வினைகெட -திருவிருத்தம் -33–அங்காதும் சோராமே ஆள்கின்ற-நாச்சியார் -11-3-பாதோ அஸ்ய விச்வா பூதாநி -த்ரி பாதாஸ்யா அம்ருதம் திவி —(ஏதாவா நஸ்ய மஹிமா அதோ ஜ்யாயாம்ஸ் ச பூருஷ -பாதோ அஸ்ய விஸ்வ பூதாநி த்ரி பாதஸ் யாம்ருதம் திவி -பு ஸூ -3- இவனுடைய மஹிமை இப்படிப்பட்டது பரமபுருஷன் அதைக்காட்டிலும் மேலானவன் -எல்லா உலகங்களும் இவனுடைய விபூதியில் கால் பாகம் -பரம பதத்தில் இவனுடைய விபூதியில் அழிவற்ற முக்கால் பாகம் உள்ளது –)என்கிறபடியே உபய விபூதி யோகமும் சொல்லுகிறது –
பரமம் -பரோ மா யஸ்மாத் ஸ பரம -என்று நிரூபமாகையாலே ஸர்வ உத்க்ருஷ்டமாய்
யத் -ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம –(ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம யோ வேத நிஹிதம் குஹாயாம் ஸோ அஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்சிதேதி -தை ஆந -1-2-விகாரமற்று இருப்பதால் ஸத்யமாயும் ஞானமயமாயும் அளவற்றதாய் இருப்பதால் அநந்தனாயுமுள்ள ப்ரஹ்மத்தை ஹ்ருதய குஹையில் இருப்பதாக எவன் அறிகிறானோ -அவன் ஸர்வஞ்ஞனான ப்ரஹ்மத்துடன் கூட எல்லாக் கல்யாண குணங்களையும் அனுபவிக்கிறான் –) ஆனந்தோ ப்ரஹ்ம — (தை ஆந -5-ஆனந்த மயனான ஆத்மாவே ப்ரஹ்மம்) ஆனந்தோ ப்ரஹ்மேதி வ்ய்ஜாநாத் – (தை ப்ருகு -6-ஆனந்தம் ப்ரஹ்மம் என்றும் அறிந்தார்) நிஷ்களங்கோ நிரஞ்சன் -(நிஷ் களங்கோ நிரஞ்ஜநோ நிர் விகல்போ நிராக்யாதஸ் ஸூத்தோ தேவ ஏகோ நாராயண — நாராயண உபநிஷத் -2–களங்கமற்றவனாய் தோஷமற்றவனாய் ப்ராக்ருதமான பேத நாமங்கள் அற்றவனாய் சுத்தனாய் இருக்கும் தேவன் நாராயணன் ஒருவனே –)ந தத் சமஸ் ச அப்யதிகஸ் ச த்ருஸ்யதே -ஓத்தார் மிக்கார் இலையாய -2-3-2-
சம்ஜாயதே (ஸம்ஜ்ஞாயதே யேந ததஸ்த தோஷம் ஸூத்தம் பரம் நிர்மல மேக ரூபம் -ஸந்த்ருஸ்யதே வாப்யதிகம்யதே வா தத் ஞானம் அஞ்ஞானம் அதோ அந்யதுக்கம் – எந்த அறிவினால் தோஷம் அற்றதும் சுத்தமானதும் மிகவும் மலமற்றதும் ஒப்புயர்வற்றதுமான அந்தப்பரவஸ்து அறியப்படுகிறதோ பார்க்கப்படுகிறதோ அதுவே ஞானம் -அதைக் காட்டிலும் வேறானது அஞ்ஞானம் –) இத்யாதி-மனன் உணர்வளவிலன் -இத்யாதி ப்ரமாண ஸித்தியை -யச் -சப்தம் ஸூ சிப்பிக்கிறது
ப்ரஹ்ம -ப்ருஹத்த்வாத் ப்ரும்ஹணத்வாச் ச ப்ரஹ்ம இத்யபிதீயதே – (பெரியதாய் இருப்பதாலும் பிறரைப் பெரியதாகச் செய்வதாலும் ப்ரஹ்மம் என்று சொல்லப்படுகிறது அது –) என்று நிரதிசய ப்ருஹத்வ ப்ரும்ஹணத்வம் யுக்தமாய் இத்தால் ஸ்வரூப விபுத்வம் சொல்லுகிறது
ரூபம் -ஸ்வரூபம்
ஆக அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணைக தானமாய் த்ரிவித பரிச்சேத ரஹிதமாய் -விபூதி த்வய நிர்வாஹகமுமாய் நிருபமுமாய் விபுபாய் ஸகல உபநிஷத் பிரஸித்தமான திவ்யாத்ம ஸ்வரூபத்தை அனுபவித்தாராய்த்து
சாந்த-என்கையாலே அவிகாராய ஸூத்தாயா –(அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே சதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே -வி பு -1-2-1- விகாரமற்றவனாய் -ஸூத்தனாய் -நித்யனாய் -பரமாத்மாவாய் எப்போதும் ஒருபடிப்பட்ட ரூபத்தை உடையனாய் -எல்லாரையும் ஜெயிப்பவனான விஷ்ணுவுக்கு நமஸ்காரம் –) என்கிற பத த்வய அர்த்தமும் அநந்த பதத்தாலே நித்யாய என்கிற பதார்த்தமும் பரம் ரூபம் என்கையாலே பரமாத்மநே என்கிற பதார்த்தமும் மேலே ரூபம் என்கையாலே சதைக ரூப ரூபாய என்கிற பதார்த்தமும் ஹரேர் ப்ரஹ்ம என்கையாலே விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே -என்கிற பதார்த்தமும் ஸ்பஷ்டமாயிற்று –
ஹரே -ஹரிர் ஹரதி பாபாநீ — (ஹரிர் ஹரதி பாபாநி துஷ்ட சித்தைரபி ஸ்ம்ருத அநிச்சயா அபி ஸம் ஸ்ப்ருஷ்டோ தஹத்யேவ ஹி பாவக -ஹர்யஷ்டகம்-கெட்ட மனத்தால் -விருப்பமில்லாமல் நினைக்கப்பட்ட போதிலும் ஹரியானவன் பாபங்களைப் போக்கடிக்கிறான் -விருப்பமில்லாமல் தொடப்பட்ட போதிலும் நெருப்பு சுட்டே தீருமன்றோ –)என்கிறபடியே ஸ்வ ஆஸ்ரிதருடைய ஸ்வ ப்ராப்தி பிரதிபந்தக ஸகல பாப நிவர்த்தகனானவனுடைய
(அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல் அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே-ஆர்த்தி ஹரத்வமே பத்தாம்பத்தின் அனுபவம் )
அதவா -ஹரே -தேவ தேவோ ஹரி பிதா –– (த்வம் மாதா ஸர்வ லோகாநாம் தேவதேவோ ஹரிபிதா -த்வயைதத் விஷ்ணுநா சம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் -வி பு -1-9-126– தாயே எல்லா உலகங்களுக்கும் நீ அன்னை -தேவனாகிய ஹரி தந்தை -உன்னாலும் விஷ்ணுவாலும் இவ்வுலகம் வியாபிக்கப்பட்டுள்ளது –)என்கிறபடியே ஸகல சேதனருக்கும் ஸாஷாத் பிதாவானவனுடைய -என்றாகவுமாம் –பித்ரு மாத்ரு ஸூதா (பித்ரு மாத்ரு ஸூத ப்ராத்ரு தார மித்ரா தயோரபி வா ஏகைக பல லாபாய ஸர்வ லாபாய கேசவ தந்தை தாய் மகன் ஸஹோதரன் மனைவி நண்பன் முதலானோர் ஒவ்வொரு பலனை அடைவதன் பொருட்டாவார்கள் -கேசவன் எல்லாப் பலன்களையும் அடைவதற்காக ஏற்பட்டவன்)-இத்யாதி-நாம ஸஹஸ்ரவான் — (ஸஹஸ்ராஸ்யஸ் ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரசரணோ விபு ஸஹஸ்ர பாஹுஸ் ஸர்வஜ்ஜோ தேவோ நாம ஸஹஸ்ரவாந் -பாரதம்-முடிகள் ஆயிரம் கண்கள் ஆயிரம் கால்கள் ஆயிரம் கைகள் ஆயிரம் கொண்டவனாய் ஸர்வஞ்ஞனாய் ஸர்வ ஸக்தியாய் விளங்கும் பகவான் பேராயிரம் யுடையவன் )என்கிறபடியே ஆயிரம் பேருடைய பிரானாயிருக்கவும் இவ்விடத்தில் ஹரி என்ற திரு நாமத்தை அருளிச் செய்ததுக்குக் கருத்து என் என்னில் -பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகப் பற்றின ப்ரீதி அதிசயத்தாலே –அவாவறச் சூழ் அரியை –என்றால் போலே ஸ்வ அனுபவ ஸகல பிரதிபந்தக நிவ்ருத்தி பூர்வகமாக ஸ்வ அபேக்ஷிதமான இருவருமான சேர்த்தியை யதா மநோ ரதம் அபிநிவேசம் தீர அனுபவித்து படியை ஸ்பஷ்டமாக்குகைக்காக ஹரி என்ற திருநாமத்தை அருளிச் செய்கிறார் –ஸர்வ அபேக்ஷித ப்ரதானான ஸர்வேஸ்வரனை -என்று இறே அருளிச் செய்தது –
ப்ரஹ்மாணம் இந்த்ரம் ருத்ரஞ்ச யமம் வருணம் ஏவ ச -ப்ரஸஹ்ய ஹரதே யஸ்மாத் தஸ்மாத் தரிரி தீர்யதே (ஹர்யஷ்டகம் -பிரமனையும் இந்திரனையும் உருத்திரனையும் யமுனையும் வருணனையும் பலாத்கரித்து ஸம் ஹரிக்கிறானாகையாலே ஹரி எனப்படுகிறான் –)என்கிறபடியே –நெற்றில் மேல் கண்ணானும் நிறை மொழி வாய் நான்முகனும் நீண்ட நால் வாய் ஒற்றைக்கை வெண் பகட்டில் ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும் கடலரையன் விழுங்காமல் தான் விழுங்கி -பெரிய திரு-11-6-3-என்றும் தம பரே தேவ ஏகீ பவதி —என்கிறபடியே தன் ஸங்கல்பத்தில் ஏகி பவிக்கும்படியான ஸர்வ என்றும் (ரக்ஷது த்வாம் அசேஷாணாம் பூதாநாம் ப்ரபவோ ஹரி யஸ்ய நாபி ஸமுத்பூத பங்கஜாதபவஜ் ஜகத் -வி பு -5-5-14–எவனுடைய நாபிக் கமலத்தில் இருந்து உலகம் உண்டாயிற்றோ ஸர்வ பூத காரணானான அந்த ஹரி உன்னை ரக்ஷிக்கட்டும் –)என்றும் ஹர்த்ருத்வத்தையும் -அசேஷாணாம் ஹி பூதாநாம் ப்ரபவோ ஹரி —யஸ்ய நாபி ஸமுத்பூத பங்கஜா தபவஜ் ஜகத் –-என்கிறபடியே அப்யய பூர்வகமான ஜகத் காரணத்வத்தையும் ப்ரதிபாதிக்கிற இத்திருநாமத்தை அருளிச் செய்கையாலே நாராயண சப்தார்த்தத்தை விவஷித்து அருளிச் செய்தார் என்னுமிடம் தோற்றுகிறது –
நராஜ்ஜாதாநி தத்தவாநி –ஆபோ நாரா இதி ப்ரோக்தா — (-நராஜ் ஜாதாநி தத்தவாநி நாராணீதி ததோ விது -தாந்யேவ சாயநம் தஸ்ய தேந நாராயண ஸ்ம்ருத-ஆநு பர்வம் -186-7–நரனாகிற பகவானிடமிருந்து உண்டானவை தத்துவங்கள் எல்லாம் -ஆகையாலே அவற்றை நாரங்கள் என்று அறிகின்றனர் -அவையே அவனுக்கு இருப்பிடமாயின -ஆகையால் அவன் நாராயணன் என்று எண்ணப்படுகிறான் –)என்கிறபடியே ஜகத் காரணத்வ வாசகமாய் இறே நாராயண ஸப்தம் தான் இருப்பது -அந்த ஜகத் காரணத்வந்தான் –ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா அன்று நான்முகன் தன்னொடு தேவருலகோடு உயிர் படைத்தான் —என்கிறபடியே (ஆபோ நாரா இதி ப்ரரோக்தா ஆபோ வை நர ஸூநவே தா யதஸ்யாயநம் பூர்வம் தேந நாராயண ஸ்ம்ருத-மநு -1-10-ஜலம் நாரம் எனப்படுகிறது -நரனாகிற பகவானிடம் இருந்து உண்டானதன்றோ அது -அந்த ஜலம் அவனுக்கு முதலில் இருப்பிடமாயிற்று -ஆகையால் அவன் நாராயணன் எண்ணப்படுகிறான் –)(ஆஸீதிதம் தமோ பூதம ப்ரஞ்ஞா தம லக்ஷணம் -அப்ரதர்க்யம விஜ்ஜேயம் ப்ரஸூப்த்மிவ ஸர்வதா –ஸோ அபித்யாய சரீராத் ஸ்வாத் விஸ்ருஷுர் விவிதா ப்ரஜா –அப ஏவ ஸ சர்ஜாதவ் தாஸூ பீஜமவாஸ்ருஜத் –ஸோ அபித்யாய சரீராத் ஸ்வாத் ஸிஸ்ரூஷுர் விவிதா ப்ரஜா –அப ஏவ ஸ சர்ஜாதவ் தாஸூ பீஜமவாஸ்ருஜத்–மநு1-5,6.7.8-இவ்வுலகம் தமஸ்ஸில் லயித்து இருப்பதாய் -ப்ரத்யக்ஷம் இல்லாததாய் -அனுமானத்தாலும் அறியப்படாததாய் -தர்க்கத்தாலும் அறியப்படாததாய் -சப்தத்தாலும் அறியப்படாததாய் -எல்லாவிதத்திலும் காரியம் செய்ய முடியாததாய் -ஆதியில் இருந்தது –அந்தப் பரமாத்மா விதவிதமான பிரஜைகளை ஸ்ருஷ்டிக்க விரும்பி ஸங்கல்பித்துத் தன் சரீரத்திலிருந்து ஜலத்தை முதலில் ஸ்ருஷ்டித்தார் -அதில் ஜீவனாகிய விதையை விதைத்தார்)அப்யய பூர்வகமாய் இருக்குமிறே -அந்த அப்யய பூர்வகமான ஜகத் காரணத்வத்தை இத்திரு நாமம் பிரதிபாதிக்கையாலே நாராயண பத பர்யாயம் என்னுமிடம் சித்தமிறே -ஆகையாலிறே –விஸ்வம் நாராயணம் ஹரிம் -(-தை நா -11-உலகிற்கு எல்லாமே அந்தர் யாமியாயும் ஸம்ஹாரகனாகவும் இருப்பவன் நாராயணனே ) என்றும் –அற்புதன் நாராயணன் அரி –என்றும் வேதாந்த த்வயத்திலும் நாராயண பதத்வ பர்யாயமாக ஹரி ஸப்தத்தை அருளிச் செய்தார் இறே
(ஈசாநாம் ஜகதாம் அதீச தயிதாம் நித்யாநபாயாம் ச்ரியம்
ஸம்ஸ்ரீத்யாச்ரயணோசிதாகில குணஸ்யாங்க்ரீர் ஹரேராச்ரயே |
இஷ்டோபாயதயா ச்ரியாச ஸஹிதாயாத்மேஸ்வராயார்த்தயே
கர்த்தும் தாஸ்யம் அசேஷமப்ரதிஹதம் நித்யம் த்வஹம் நிர்மம:-ஸ்ரீஅஷ்ட ஸ்லோகீ-6-
பிராட்டியை முன்னிட்டு எம்பெருமானிடத்தில் கைங்கர்ய ப்ரார்த்தனையைத் தெரிவிக்கிறது. உலகத்தை நியமிப்பவனாம் எம்பெருமானுடைய அன்பைப் பெற்றவளும் என்றைக்கும் அழிவில்லாதவளுமான பிராட்டியை முன்பு ஆச்ரயித்து ஆச்ரயணத்துக்குத் தேவையான எல்லாக் குணங்களையும் பெற்றிருக்கும் எம்பெருமானுடைய திருவடிகளை நான் பற்றுகிறேன். எனக்கு இஷ்டமான மோக்ஷத்துக்கு உபாயமாகப் பற்றுகிறேன். பிராட்டியுடன் கூடியவனும் சேதனங்களுக்கு நியாமகனுமான எம்பெருமானை உத்தேசித்தே நித்தியமான எல்லா விதமான கைங்கர்யத்தைச் செய்யவும் அடியேனுக்குக் கைங்கர்ய பலத்தில் ஸம்பந்தம் இராமலும் தடையின்றிச் செய்ய வேண்டும் எனப் ப்ரார்த்திக்கிறேன்.)
(-மந்த்ர ப்ரஹ்மணி மத்யமேன நமஸா பும்ஸஸ்வரூபம் கதிர்கம்யம்
சிக்ஷிதமீக்ஷிதேந புரத: பஸ்சாதபி ஸ்தாநத: |
ஸ்வாதந்தர்யம் நிஜ ரக்ஷணம் ஸமுசிதா வ்ருத்திஸ் ச நாந்யோசிதா
தஸ்யைவேதி ஹரேர் விவிச்ய கதிதம் ஸ்வஸ்யாபி நார்ஹம் தத: ||–2-
பெரிய திருமந்த்ரமான திருவஷ்டாக்ஷரத்தில் நடுவில் உள்ள ‘நம:’பதத்தால் மனிதனுடைய கதி கம்யம் என்று சொல்லக்கூடிய உபாய உபேயங்கள், ஸ்வரூபம் இவை சிக்ஷிக்கப் பட்டன. முன் பதமான ப்ரணவத்தை அநுஸரித்தும், பின் பதமான ‘நாராயண’ பதத்தை அநுஸரித்தும் உள்ள இடத்தை அநுஸரித்தும் மூவகையான பொருள் கூறப்படுகிறது. தனக்குரிமை, தன் ரக்ஷணம், பிறர்க்குரியனல்லாமை இவை எம்பெருமானுக்கே என்று கூறி அதனால் அநுபவிக்கும் இடத்தில் ஸுகத்திலும் தனக்கு ஸம்பந்தமின்மையைக் காட்டுகிறது.)
(அஷ்ட ஸ்லோகியில் உபாய பாவத்தையும் பிராப்ய பிரார்த்தனையும் ஹரி ஸப்தத்தாலே அருளிச் செய்துள்ளார் -அன்றோ த்வயத்தில் பூர்வ உபாய வாக்கியங்களில் நாராயண பதத்துக்கு ஸத்ருசமாக அன்றோ ஹரி பதமும் உள்ளது)
அநந்தரம் கீழ் அனுபூதமாய் அமூர்த்தமுமான ஸ்வரூபத்துக்கு ஆஸ்ரயமாய் -மூர்த்தமான திவ்ய மங்கள விக்ரஹத்தை அனுபவிக்கிறார் -மூர்த்தம் ப்ரஹ்ம –என்று தொடங்கி யதத்யத்புதம் -என்னுமளவாக –மூர்த்தம் ப்ரஹ்ம ததோ அபி தத் ப்ரியதரம் ரூபம் யத்த் யத்புதம்-
மூர்த்தம் -ஸ்பர்ச ரூபாதி குணங்களோடே கூடி பரமபத பர்யங்காதி தேச பரிச்சின்ன விக்ரஹமாய் இருக்கை (தானே ஸங்கல்பித்து பரத்வாதி பஞ்ச பிரகாரங்களில் அளவுக்கு உட்பட்ட தன்மையில் மூர்த்தமாக தன்னைக்காட்டி அருளுகிறவன் -தமர் உகந்த திருமேனி இத்யாதி – )-
மூர்த்தம் -சக்தய பஞ்ச விக்யாதா பஞ்ச உபநிஷதாக்யயா — (பாஞ்சராத்ரம்-பஞ்ச உபநிஷத்துக்கள் என்றும் பெயர் பெற்ற ஐந்து சக்திகள் ப்ரஸித்தி பெற்றவை )என்கிறபடியே-பஞ்ச உபநிஷத்துக்களாவன –பரமேஷ்டீ புமாந் விஸ்வோ நிவ்ருத்திஸ் ஸர்வ ஏவ ஹி —என்கிறபடியே பரமேஷ்டி புருஷ விஸ்வ நிவ்ருத்தி ஸர்வ ஸம்ஜ்ஜிகங்களான அப்ராக்ருத பூத பஞ்சகங்கள் -ஏவம்வித பஞ்ச உபநிஷத்துக்கள் தான் ஸப்தாதி பஞ்ச குண விஸிஷ்டங்களாய் இருக்கையாலே- பரமேஷ்டீ ஸ்ம்ருதச் சப்தே ஸ்பர்ஸே து புருஷா ஸ்ம்ருத-விஸ்வாத்ம தேஜஸி ப்ரோக்தோ நிவ்ருத்யாத்மா ரஸே ஸ்ம்ருத ஸர்வாத்மா கதிதோ கந்தே விஷயே புருஷஸ் ஸ்ம்ருத- (பாஞ்சராத்ரம்-பரமேஷ்டி புமாந் விஸ்வன் நிவ்ருத்தி ஸர்வன் என்னும் ஐந்தும் பஞ்ச உபநிஷத்துக்களாம் -பரமேஷ்டி ஸப்தத்தையும் புமாந் ஸ்பர்சத்தையும் விஸ்வன் ரூபத்தையும் நிவ்ருத்தி ரஸத்தையும் ஸர்வன் கந்தத்தையும் புருஷன் விஷயத்தையும் உடையவனாகச் சொல்லப் படுகிறது –)என்கிறபடியே பரமேஷ்ட்யாதி சம்ஜ்ஜிகங்களான பூத பஞ்சகமும் -ஸப்த ஸ்பர்ச ரூப ரஸ கந்த சம்ஜ்ஜிக பஞ்ச குணத்வேந ப்ரமாண ப்ரஸித்தங்களாய் இருக்குமிறே -ஆகையாலே ஏதாத்ருஸ பஞ்சகுண காஸ் ஆகாசாத் யப்ராக்ருத பூத பஞ்சகமாய் இருக்கையாலே மூர்த்தம் –என்கிறார் –
இச்சேதனன் கர்ம அனுகுணமாகப் பரிக்ரஹிக்கும் தேஹமாகிலிறே –மண்ணாய் நீர் எரி கால் மஞ்சுலாவும் ஆகாசமுமாம் –பெரிய திரு-1-9-6-என்றும் மஞ்சு சேர் வான் ஏரி நீர் நிலம் காலிவை மயங்கி நின்ற அஞ்சு சேர் ஆக்கை -பெரிய திரு -9-7-8-என்கிறபடியே பிராகிருத பஞ்ச பூத மயமாய் இருப்பது -இங்கன் இன்றிக்கே –பஞ்சை தாச் சக்த்ய ப்ரோக்தா பரஸ்ய பரமாத்மந -அசேஷ ஜகதாதாரா பதே திவ்யே வ்யவஸ்திதா – (பாஞ்சராத்ரம்-இவைகளைக் காட்டிலும் மேலானவனான பரமாத்மாவுக்கு சக்திகளாகச் சொல்லப்படும் இவ்வைந்தும் பரமபதத்திலிருந்து கொண்டு எல்லா உலகையும் தாங்குகின்றன –) என்று-பகவச் சக்தித்வேந ஸமஸ்த கார்ய பதார்த்த ஆதாரங்களாய்க் கொண்டு பரமபதத்திலே ஏதத் விக்ரஹமாயும் ததீய விக்ரஹங்களாயும் விமான மண்டப கோபுர ப்ரஸாதாதி ரூபேணவும் பரிணமிக்கிற அப்ராக்ருத பூத பஞ்சகமாய் இறே இருப்பது -ஆகையாலேயிறே -ந தஸ்ய பிராக்ருதா மூர்த்திர் மாம்ஸமேதோ அஸ்தி சம்பவா – (வராஹ பு -34-40-அவனுக்கு மாம்ஸம் மஜ்ஜை எலும்பு ஆகிய இவற்றாலுண்டான ப்ரக்ருதி சம்பந்தமுள்ள உடம்பு இல்லை –)- ந பூத சங்க ஸம்ஸ்தாநோ தேஹோ அஸ்ய பரமாத்மந – (-சாந்தி -206-60- இந்தப் பரமாத்மாவின் திருமேனி பஞ்ச பூதங்களுடைய சேர்க்கையால் உண்டானதன்று –) என்றும்-பஞ்ச சக்தி மயோ தேவ-– (பாஞ்சராத்ரம் -ஐந்து சக்திகளை உருவாகக் கொண்ட தேவன்) ப்ராக்ருதத்வ நிஷேத பூர்வகமாக அப்ராக்ருதத்வத்தை ப்ரதிபாதிக்கிறது -இப்படி அப்ராக்ருதமாகையாலே ஸூத்த ஸத்வ மயமுமாயிறே விக்ரஹம் இருப்பது -ரஜஸ் தமஸ்ஸுக்கள் கலசாதே ஸூத்தி யோகத்தால் -கேவல ஸத்வமாய் –ஸத்வம் விஷ்ணு ப்ரகாசகம் -(ஸத்வ குணமானது விஷ்ணுவைப் பிரகாசிப்பது-) என்றும்-தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத் ப்ரகாச கமநா மயம் – (தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத் ப்ரகாஸகமநாமயம்-ஸுகஸங்கேந பத்நாதி ஜ்ஞாநஸங்கேந சாநக –ஸ்ரீ கீதை 15-6-அவற்றுள்ளே சத்வம், நிர்மலத்தன்மையால் ஒளிகொண்டது; நோவற்றது, பாவமற்றோய் அது இன்பச் சேர்க்கையாலும் ஞானச் சேர்க்கையாலும் கட்டுப்படுத்துவது.ஆரோக்யத்தை அளிப்பது-ந வேதாந்தாத் சாஸ்திரம்- ந மது மதநாத் சாத்விக பதம்- ந சத்வாத் ஆரோக்யம் ந புத பஜனாத் போத ஜனகம் ந முக்தே ஸுக்யம் ந த்வய வஸனாத் ஷேம கரம் -தேசிகன் இங்கும் ஸத்வ குணம் ஒன்றே ஆராக்யம் அளிக்கும் என்கிறார் அன்றோ )என்றும் அதி ப்ரகாசக வஸ்துவாகையாலே ஞான ஆனந்த மய சேதன தத் குண திரோதாயக த்ரிகுணாத்மக ப்ராக்ருத சரீரம் போல் அன்றிக்கே ஸ்வ வைலக்ஷண்யத்தாலே ஸ்வ அந்தர் கத சாமீகர(தங்கம் ) ப்ரகாசக மாணிக்ய மஞ்ஜூஷை போலே (மாலே மணி வண்ணா -ஸுலப்ய குணங்கள் வெளிப்பட்டு காட்டுமாப் போல்)ஸ்வாந்தஸ் ஸ்தித திவ்யாத்ம ஸ்வரூப தத் குண கண ஸம்யக் ப்ரகாஸந சாதுர்ய ஸஹிதமுமாய் இருக்கும் -இப்படி அப்ராக்ருதமாய் ஸூத்த ஸத்வாத்மகமாய் இருந்ததே யாகிலும் -ஸவ்யம் பாதம் ப்ரசார்ய ஸ்ரீததுரித ஹரம் -(ஸவ்யம் பாதம் ப்ரசார்ய ஸ்ரீததுரித ஹரம் தக்ஷிணம் குஞ்சயித்வா ஜாநுந் யாதாய சவ்யேதரமிதர புஜம் நாக போகே நிதாய-பஸ்ஸாத் பாஹு த்வயேந ப்ரதிபட சமநே தாரயன் சங்கசக்ரே தேவீ பூஷாதி ஜூஷ்டோ ஜநயது ஜெகதாம் சர்ம வைகுண்ட நாத –அஷ்டாக்ஷர த்யான ஸ்லோகம்-அடியார் துன்பத்தைப் போக்கும் இடது திருவடியையே நீட்டி -வலது திருவடியை மடக்கி -வலது கையை வலது முழங்காலில் பொருத்தி இடதுகையை ஆதிசேஷன் மேல் வைத்து பின்னுள்ள இரண்டு கைகளால் விரோதிகளை நிரசிக்கும் சங்கு சக்கரங்களைத் தரித்து தேவிமார் கௌஸ்துபம் முதலான ஆபரணங்கள் முதலியவற்றால் சேவிக்கப் பெற்றவனாய் விளங்கும் வைகுண்டநாதன் உலகிற்கு ஸூகத்தை அளிப்பானாக —)இத்யாதிப்படியே சரண கமல கர கமல நயன அரவிந்த வக்த்ர அரவிந்த ப்ரமுக திவ்ய அவயவ சங்காத்மகமாய் இருக்கையாலே -யத்ர தூமஸ் தத்ர அக்னி – (தார்க்கிக்க வாக்கியம் –எங்கு புகையுள்ளதோ அங்கு நெருப்பு இருக்கும்-) இதிவத்-அநித்யத்வ வ்யாப்த ஸ அவயத்வ ஹேதுவாலே அநித்யத்வ வ்யாப்ய ஸ அவயத்வ ப்ரயுக்த ப்ராக்ருத சரீரவத் அநித்யத்வம் ப்ரசங்கிக்குமே என்னில் -ந ப்ரஸங்க ஸர்வத்ர அநித்யத்வே ஸ அவயவத்வம் ஹேதுவாக மாட்டாது -பின்னை ஏது என்றால் அவயவ ஆராப்தமே அநித்யத்வே ஹேதுவாகக் கடவது -இங்கன் அன்றாகில் ஹஸ்த பாதாத் யவயவ ஸம் யுக்தனான சேதனனுக்கும் அநித்யத்வம் பிரசங்கிக்கும் -ஆகையால் திவ்ய விக்ரஹத்துக்கு அவயவ ஆராப்தத்வே பிரமாணம் இல்லாமையாலும் -ஸதா பஸ்யந்தி ஸூரயா –பஸ்யந்தி ச ஸதா தேவம் நேத்ரைர் ஜ்ஞாநேந – (தத் விஷ்ணோர் பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரயோ -சாமவேதம் -3-18-2-4-விஷ்ணுவினுடையதான அந்தப் பரம பதத்தை நித்ய ஸூரிகள் எப்போதும் காண்கின்றனர்-என்றும்–பஸ்யந்தி ச ஸதா தேவம் நேத்ரைர் ஞாநேந -அறிவாகிற கண்களாலே தேவனை எப்போதும் காண்கின்றனர் –)இத்யாத் யுப ப்ரும்ஹணங்களாலே நித்யத்வேந ப்ரதீதங்களாகையாலும் விக்ரஹ நித்யத்வம் சித்தமிறே
(அவயவ ஆராப்தத்வமே அநித்யத்வே ஹேதுவாகக் கடவது –உண்டாகி இருந்தால் தானே அநித்யத்வம் வரும் -ஜீவாத்மா அவயவங்களுடன் கூடிய இருந்தாலும் ஆத்மா நித்யம் தானே -உருவானது உண்டானது என்றால் அநித்தியம் வரும் –கூடியே இருந்தால் அநித்தியம் வராதே –)
(அஜாயமாநோ பஹுதா விஜாயதே -பு ஸூ -2-4-பிறப்பற்றவனாயினும் பலபடியாகப் பிறக்கிறான் பரமபுருஷன்-ஸ்ரீபகவாநுவாச–பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந
தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப–4-5- ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அர்ஜுனா, எனக்குப் பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன. உனக்கும் அப்படியே. பரந்தபா, நான் அவற்றை எல்லாம் அறிவேன். நீ அவற்றை அறிகிலை.-மேல் விபவ -அவதாரங்களில் உருவான அவயவங்கள் -பரிணாமமுடன் இருப்பதால் அநித்யமாக இருக்குமோ என்னில் இல்லை என்கிறார் –கர்ம வஸ்யன் அல்லவே -இச்சா க்ருஹீதம் அன்றோ என்றும் மேல் விளக்கி அருளுகிறார்)
இங்கனேயாகிலும் இது தான் அநந்த அவதார கந்தமாகையாலே இந்த விக்ரஹத்தினின்றும் ஸாது பரித்ராண அர்த்தமாக –பஹுதா விஜாயதே -பஹுநி -பிறப்பில் பல் பிறவிப்பெருமான் -என்னும்படி யுகே யுகே ஸம்பவிக்கிற பாஹு திவ்ய ஜென்மங்கள் தோறும் அஸங்க்யாதங்களான அபிமதோரு தேஹங்கள் யுண்டாகையாலே உபசயாத்மக ப்ராக்ருத தேஹம் போலே ஸதத விகார ஆஸ்பதமாய் இருக்குமோ என்னில் –யஸ்ய திவ்யம் ஹி தத் ரூபம் ஹீயதே வர்த்ததே ந ச (எவனுடைய அந்த திவ்ய ரூபமானது குறைவதும் வளர்வதும் இல்லை –)-சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் பெருக்குவாரை இன்றியே பெருக்கம் எய்தி பெற்றியோய் –என்கிறபடியே கர்ம அனுகுண விகார ரஹிதமாகவும் -சம்பவாம் யாத்ம மாயயா -(அஜோऽபி ஸந்நவ்யயாத்மா பூதாநாமீஸ்வரோऽபி ஸந்ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்மமாயயா-4-6–ஸ்ரீ பகவான் பிறப்பற்றே னெனினும், அழிவற்றே னெனினும், உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும், தனது பிரகிருதியில் நிலைபெற்று ஆத்ம மாயையால் பிறப்பெய்துகிறான்-அவதரிக்கிறான்)-தேவரீர் இரக்க வேண்டி வந்து பிறந்ததும் —தேவைரர்த்திதோ ஐஜ்ஜே -(ஸ ஹி தேவைருதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி அர்த்திதோ மானுஷே லோகே ஜஜ்ஜே விஷ்ணு ஸநாதந -அயோத்யா -1-7--கொழுத்தவனான ராவணனுடைய வதத்தை விரும்பும் தேவர்களால் பிரார்த்திக்கப் பட்டவரும் பழமையானவருமான விஷ்ணு மனுஷ்ய லோகத்தில் ராமனாகப் பிறந்தார் –) என்றுஇச்சா க்ருஹீதமாகவும் சொல்லுகையாலே ஏக ரூபமாயும் இருக்கும் -கர்மக்ருத விகாரம் தோஷாயவும் இச்சா க்ருஹீத விகாரம் குணாயவுமாகையாலே ஏகரூபமாக இருக்கத் தட்டில்லை -அநேக விக்ரஹம் பரிக்ரஹிக்கச் செய்தேயும் சதைக ரூப ரூபாய-என்றதிறே-
–கிமாத்மிகா பகவதோ வ்யக்தி -என்று ப்ரஸ்னம் பண்ண –யதாத்மகோ பகவான் -என்று உத்தரம் யுக்தமான வனந்தரம் கிமாத்மகோ பகவான் -என்று ப்ரஸ்னம் பண்ண –ஞானாத் மகோ பகவான் என்றும் அஜடத்வ அபிப்ராயேண ஞானத்தவ மஹத்வம் உத்தரமாகச் சொல்லுகையாலே (-கிமாத்மிகா பகவதோ வ்யக்தி -யதாத்மகோ பகவான் -கிமாத்மகோ பகவான் -ஞாநாத் மகோ பகவான் -பாஞ்சராத்ரம்பகவானுடைய திருமேனி எத்தாலானது -பகவான் எவ்வுருவாய் இருக்கிறானோ அத்தாலானது -பகவான் எவ்வுருவாய் இருக்கிறான் -ஞான மயனாய் இருக்கிறான் பகவான்)ஞானாத்மகமான பகவத் ஸ்வரூபம் ஸ்வரூப அனுரூபமாய் –வித்யுல்லேகேவ பாஸ்வரா -(லதோயாத மத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா -தை நா -11-நீல மேகம் கொண்ட மின்னல் போல் ஒளிவிடுவது திருமேனி)நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி -திருவாய் -6-10-1-என்றும் ஒண் சுடர்க்கற்றையை -திருவாய் -1-7-4-என்றும் தேஜஸாம் ராஸி மூர்ஜிதம் –(தம் த்ருஷ்ட்வா தே ததா தேவா சங்க சக்ர கதா தரம் -அபூர்வ ரூப ஸம்ஸ்தானம் தேஜஸாம் ராஸி மூர்ஜிதம் -வி பு -1-9-67–சங்கு சக்ர கதாதரனாய் அபூர்வமான திருமேனியமைப்பை யுடையவனாய் உறுதியானவனாய் தேஜோ ராஸியான அந்தப் பகவானைக் கண்ட தேவர்கள் ஸ்துதிக்கத் தொடங்கினர் –) இத்யாதி ப்ரமாண பிரகாரேண நிரவதிக தேஜோ ரூபமுமாய் இருக்கும் –
பகவத் விக்ரஹமும் நித்ய முக்தர் விக்ரஹங்களும் பஞ்ச உபநிஷண் மயமாகையாலே யுக்த விசேஷண விஸிஷ்டத்வம் அவிஷ்டமாய் ஏக ஜாதீய த்ரவ்யமாய் இருந்ததே யாகிலும் ஏக ஜாதீய த்ரவ்யாத்மக மனித்யுமணி மஹோ மத்யே கத்யோத காந்திவத் ஸாவதிக தேஜோ ரூப ததீயா விக்ரஹத்தை கதியோதகல்பம் என்னலாம்படி நிரவதிக தேஜோ ரூபமாய் இருக்கை -(மணி ஸூர்யன் ஒளிக்கு முன் மின்மினி போல் அவன் அருளாலே பெற்ற முக்த நித்யர்களின் திருமேனி ஒளி அவனது திவ்ய மங்கள விக்ரஹ தேஜஸ்ஸுக்கு ஒவ்வாததாய் அன்றோ இருக்கும் )-ஏதத் விஷயம் -இனி அவ்வளவன்றிக்கே நிரவதிக சவுந்தர்ய ஸுகந்த்ய ஸுகுமார்ய லாவண்ய யவ்வநாத் யநந்த குண கண சமவேதமாய் -ஸ்புரத் கிரீட –ஸ்வ உசித விசித்ர -இத்யாதி யுக்த பிரகிரியா –ஸ்புரத் கிரீட மகுடாத் யசங்க்யேய திவ்ய பூஷண பூஷிதமாய் ஆபரண கோடியிலும் ஆயுத கோடியிலும் அந்விதங்களான சங்க சக்ர கத அஸி ஸார்ங்காத் யசங்க்யேய திவ்யாயுத ஸோபிதமாய் –
(ஸ்புரத் கிரீடாங்கத ஹாரகண்டிகா
மணீந்த்ர காஞ்சீகுண நூபுராதிபி: |
ரதாங்க ஶங்காஸி கதா தநுர்வரைர்
லஸத் துளஸ்யா வநமாலயோஜ்ஜ்வலம் ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —ஶ்லோகம் 36 –
எம்பெருமான் ஒளிவிடும் திருமுடி (கிரீடம்), தோள் காப்புகள், ஹாரம், கழுத்தில் அணியும் சங்கிலி, ஸ்ரீகௌஸ்துப மணி, திவ்ய அரை நாண், திவ்ய சதங்கைகள் முதலிய திவ்ய ஆபரணங்களாலும், திருவாழி, திருச்சங்கு, திருநாந்தகம் என்னும் வாள், கௌமோதகீ என்னும் கதை, சார்ங்கம் என்னும் வில் ஆகிய திவ்ய ஆயுதங்களாலும், அவனுடைய திருமேனி ஸம்பந்தத்தால் ஒளி விடும் திருத்துழாய் மற்றும் வனமாலையால் மிகவும் ஜ்வலித்துக் கொண்டிருக்கிறான்.
ஸ்வோசிதவிவித⁴விசித்ராநந்த * ஆஶ்சர்ய நித்ய நிரவத்³ய * நிரதிஶய ஸுக³ந்த⁴ நிரதிஶய ஸுக²ஸ்பர்ஶ * நிரதிஶய ஔஜ்ஜ்வல்ய * கிரீட மகுட சூடா³வதம்ஸ * மகரகுண்ட³ல க்³ரைவேயக * ஹார கேயூர கடக * ஶ்ரீவத்ஸ கௌஸ்துப⁴ முக்தாதா³ம * உத³ரப³ந்த⁴ந * பீதாம்ப³ர காஞ்சீகு³ண நூபுராத்³யபரிமித * தி³வ்யபூ⁴ஷண! *
ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோ அஸ்மி க்ரீஷ்மே ஸீதமிவ ஹ்ரதம் – (ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோ அஸ்மி க்ரீஷ்மே ஸீதமிவ ஹ்ரதம் ஸாம்யாமி பரிநிர்வாமி ஸூகம் மாமேதி கேவலம் கோடையில் குளிர்ந்த குளத்தில் குடைந்தாடுவது போல் இந்த ப்ரஹ்மத்தினுள் குடைந்தாடுகிறேன் -அதனால் சாந்தனாகிறேன் -தாபம் ஆறினவனாகிறேன் -ஸூ கத்தையே அடைகிறேன் –)-என்கிறபடியே ஸகல தாப ஹரமாய் –அளவில்லா சிற்றின்பம் யவை ஒழிந்தேன் -4-9-10-என்னலாம் படி சமஸ்த போக வைராக்ய ஜனகமாய் யோகி த்யேயமாய் ஸூபாஸ்ரயமுமாய் இருக்கிற விக்ரஹ வைலக்ஷண்யத்தை அனுசந்தித்து -மூர்த்தம் ப்ரஹ்ம -என்கிறார் –
இதில் சவுந்தர்யாமாவது -சர்வதா அனுபவியா நின்றாலும் அப்பொழுதைக்கு அப்பொழுது ஏகைக அவயமே அபூர்வவத் விஸ்மயகர அநேக போக பரம்பரா ஜனக அத்யந்த சக்தியாலே -ஸதா பஸ்யந்தி -பண்ணுகிற ஸூரிகளை நிரதிசய காந்தி சாகர ஸ்வ தரங்க தாடன தரள சித்த வ்ருத்திகராம் படி தத்த்ருஷ்ட்டி நிமஞ்ஞந ஷமமான திவ்ய அவயவ ஸூஷுமை -சவுந்தர்ய ஸாகரத்திலே ஆழங்கால் பட்டுக் கரையேற மாட்டாதே –அரும்பினை அலரை -பெரிய திரு -7-10-1-என்னலாம் படியான யவ்வநாத் முகீ பூத ஸூகுமார தநு -(க்வ யவ்வன உந்முகீ பூத ஸூகுமார தநுர் ஹரி க்வ வஜ்ர கடிநா போக சரீரோ அயம் மஹா ஸூர-மோக்ஷ -4-50 யவ்வனத்தை நோக்கி நிற்கும் ஸுகுமார்யத்துடன் கூடிய தேஹத்தை யுடைய கண்ணன் எங்கே -வஜ்ரம் போல் கடினமான சரீரத்தையுடைய இவ்வசுரன் எங்கே –)-என்றதறே
ஸுகந்தியமாவது -தெருவெல்லாம் காவி கமழ் -திருவாய் -9-6-1-என்கிறபடியே த்ரிபாத் விபூதி யடைய –வாஸம் செய் -10-10-2-என்னுமா போலே ஸ்வ காந்தியாலே வாசிதமாம்படி சர்வதோதிக்கமாகப் புறப்பட்டு ப்ரவஹிக்கிற நாநாவித திவ்ய கந்தம்-ஸர்வ கந்த ஸர்வ ரஸ –சாந்தோக் -3-14-2-பரமாத்மா எல்லா கந்தங்களையும் யுடையவன் -எல்லா ரசங்களையும் யுடையவன்-என்னக் கடவது இறே-
ஸுகுமார்யாமாவது -புஷ்ப ஹாஸ இதி நாம துஹாநம் ஸுகுமார்யமதி வாங்மனசம் ந –என்கிறபடியே பேசப் பிசகும்படியாய் திவ்ய மஹிஷிகள் வடிக்கோல வாள் நெடும் கண்களாலே அடுத்தடுத்துப் பார்க்கிற பார்வையிலும் தாந்தி ஸீலமாய் –மலர்மகள் பிடிக்கும் மெல்லடி -9-2-10- என்கிறபடியே கூசித் தொட வேண்டும்படியான புஷ்ப ஹாசாக்யமாய் இருக்கிற அத்யந்த மார்த்தவம்
ரங்க பர்த்து அபி லோசநஸ் சர்சாம் சாகச ஆவலிஷு லேகய மாநம் புஷ்ப ஹாஸ இதி நாம துஹா நம் ஸுவ்குமார்யம் அதி வாங் மநசம் ந –ரெங்க ராஜ சத்வம் -88-
தன் மேல் கண்கள் படுவதையும் ஸாஹஸ காரியங்களின் வரிசைகளில் எழுதும்படி செய்யா நிற்பதும் பெரிய பெருமாள் தானே நோக்கினாலும் சஹியாத மார்த்வம் புஷ்ப ஹாசம்-என்னும் திரு நாமத்தை விளைவிப்பதுமான ஸ்ரீ பெரிய பெருமாளாது ஸுவ்குமார்யமானது நம்முடைய வாக்குக்கும் சிந்தைக்கும் விஷயம் அன்று )
(வடிக்கோல வாள் நெடுங்கண் மா மலராள் செவ்விப்
படிக்கோலம் கண்டு அகலாள் பன்னாள்-அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என் கொலோ
கோலத்தால் இல்லை குறை–82–)
(மென்மையான அடி இல்லாமல் மென்மை என்றே சொல்லலாம்படி –புஷ்ப ஹாசாக்யமாய் இருக்கிற அத்யந்த மார்த்தவம்-மஹாத்மாக்கள் விரஹம் ஸஹியாத மார்த்தவம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும்.)
லாவண்யமாவது -ஏகைகஸ்மிந் பரம வயவே அநந்த சவுந்தர்ய மக்நம் ஸர்வம் த்ரஷ்யே கதமிதி முதா மாமதா மந்த சஷுஸ் -த்வாம் ஸுப்ராத்ர வ்யதிகரகரம் ரங்க ராஜ அங்ககாநாம் தல் லாவண்யம் பரிணமயிதா விஸ்வ பாரீண வ்ருத்தி –என்கிறபடியே ஒரோ அவயவங்களின் மேலே அநந்த சவுந்தர்யத்திலே முழுகினதாகக் கொண்டு சவுந்தர்ய ஸாகரத்திலே ஆழங்கால் பட்டுக் கரையேற மாட்டாதே தடுமாறுகிற நித்ய முக்தர் திருக்கண்களை –முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ –என்கிறபடியே திவ்ய அவயவங்களுக்கு அந்யோன்யமுண்டான ஸுப்ராத்ரத்தாலே தத் வ்யதிகரத்தைப் பண்ணா நின்று கொண்டு -ஸர்வ பாரீண வ்ருத்தியாய் ஸர்வ அவயவங்களையும் கரை கண்டு அனுபவித்துக் கரையேற்றவற்றாய் அத்தாலே லாவண்யமாகிற மரக்கலம் என்று சொல்லலாம்படியாய் ஸுந்தர்ய சாகர நிமக்நருக்கு நாவம் போலே தாரகமாய் ஆபாத சூடம் அவிரதமாய் ப்ரவஹிக்கிற நிரவதிக காந்தி சாகர கல்லோல மாலை போலே விளங்குகிற ஸமுதாய ஸூஷுமை
ஹே மந்த -அல்ப லாவண்யம் என்று ஓன்று உண்டு என்றும் அறியாத சஷுஸ்ஸு -கண்ணே –ஏகமேகம் ஏகைகம் தஸ்மிந் -ஓரொன்றான அவயவத்தில் -பரம் -அதன் மேலே –அநந்தம் ஸுந்தர்யம் தஸ்மிந் மக்நம் ஸத் -அபரிச்சின்னமான சவுந்தர்யத்தில் முழுகினதாய்க் கொண்டு –ஸர்வம் -மற்று எல்லா அவயவ சவுந்தர்யத்தையும் கதம் -எங்கனே –த்ரஷ்யே -அனுபவிக்கப் போகிறேன் –இதி -என்று -முதா -வ்யர்த்தமாக -மா மதா -மா மந்த -விசாரம் மா குரு -சங்கியாதே கொள் –யத என்றும் அத்யாஹாரம் -யாதொரு காரணத்தாலே –ரங்கராஜ அங்காநாம் -பெரிய பெருமாளுடைய திவ்ய அவயவங்களுக்கு -(ஸுப்ராதுர்பாவ-ஸுப்ராத்ரம் -தஸ்ய வ்யதிகரம் கரோதீதி தத்) -ஒன்றுக்கொன்று நல்ல ப்ராதாவாய் இருக்கையினுடைய -ஸுகட்யத்தினுடைய -சம்பந்தத்தைப் பண்ணா நின்றுள்ள -(வ்யதிகர )சாங்கத்யம்-தத் கரோதீதி ததோக்தம் ஸுஹார்த்தம் இத்யர்த்த -(தத் )ஸர்வ விலக்ஷணமான (லாவண்யம் )சமுதாய சோபையானது அன்றிக்கே -தஸ்ய லாவண்யம் -என்றாய் பெரிய பெருமாளுடைய லாவண்யம் என்றபடியாகவுமாம் (த்வயம் )ஸர்வத்தையும் அனுபுபூஷிக்கிற உன்னை -(விஸ்வஸ்மிந் பாரீணா வ்ருத்தி யஸ்ய தத் )ஸர்வ அவயவத்திலும் அக்கரைப்பட்ட அனுபவத்தை உடைத்தானதாக (பரிணமயிதா )பண்ணப் போகிறது -விஸ்வேஷு ஸர்வேஷ்வயவேஷு –பராங்கதா -வ்ருத்தி -அநுபவோ யஸ்ய தத் ததோக்தம் -பரிணமயிதா-பரிணதம் கர்த்தா ல்யுட்
யவ்வனமாவது -யுவா குமார (யவ்வனத்தை யுடையவனாகவும் சிறிது பாலனாகவும் இருப்பவன் –யுவா அகுமார -என்று பதச்சேதம் -அகுமார என்றவிடத்திலுள்ள நஞ் ஷத் -சிறிது என்னும் அர்த்தத்தில் பிரயோகிக்கப் பட்டுள்ளது –)என்கிறபடியே கௌமார அவஸ்தையில் கழிவான தசையாய் யவ்வன அவஸ்தா ப்ராதுர்ப்பாவமாய் இருக்கை –க்வ யவ்வநோந் முகீ பூத ஸூகுமார தனுர் ஹரி -என்றது இறே -ஏதாத்ருஸ ஸ்திதியே நிலை நிற்கையாலே நித்ய யவ்வனமாய் இருக்கும் – ஸர்வேஸ்வரன் ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக அஸங்க்யாத திவ்ய விக்ரஹ பரிக்ரஹம் பண்ணி ஸைஸவாத் யவஸ்தா பன்னனாகிலும் இந்த யவ்வன அவஸ்தை குலையாமையால் அன்றோ –உன்னையும் ஓக்கலையில் கொண்டுதமில் மருவி உன்னொடு தங்கள் கருத்தாயின செய்து வரும் கன்னியரும் மகிழ-என்று ஸைஸவ அவஸ்தையிலே யவ்வனம் கண்டு அனுபவித்தது –
ஆக ஏதாத்ருஸ அஸங்க்யேய கல்யாண குண விஸிஷ்டதையால் உண்டான திவ்ய விக்ரஹ வைலக்ஷண்யத்தை மூர்த்தம் என்று தொடங்கி அனுபவிக்கிறார் -ப்ரஹ்ம ஸப்தத்தாலே விக்ரஹத்தினுடைய அதி மஹத்த்வமும் -ஸ்வ ஆஸ்ரித அஞ்ஞான நிவ்ருத்தி பூர்வக விஞ்ஞான விகாஸகத்வமும் விவஷிதம் -இதற்கு மூர்த்தம் ப்ரஹ்ம -என்றிறே திரு நாமம் –(ததோபி தத் ப்ரியதரம் )ஆனந்த மய ஸ்வரூபத்திலும் ஆனந்தாவஹ தத் அசங்க்யாத குணங்களிலும் அதிசயித சவுந்தர்யாதி குண யோகத்தாலே நிரதிசய ஆனந்தாவஹமாய் -அத ஏவ-நிரவதிக ப்ரீதி விஷயமாய் இருக்கை – இச்சா க்ருஹீதா அபிமதோரு தேஹ -(ஸமஸ்த கல்யாண குணாத்மகோ அசவ் ஸ்வ ஸக்தி லேசோத்த்ருத பூத சர்க்க இச்சா க்ருஹீ தாபிமதோரு தேஹஸ் ஸம்ஸாதிதா அசேஷ ஜகத்திதோ அசவ் -வி பு -6-5-84-இந்த பகவான் சகல கல்யாண குணங்களையும் இயற்கையாகவே யுடையவன் -தன்னுடைய சக்தியில் ஒரு சிறிய பகுதியினாலேயே தரிக்கப்பட்ட பூதங்களை யுடையவன் -இச்சையினாலேயே எடுக்கப் பட்டவையும் இஷ்டமானவையுமான பல தேஹங்களை யுடையவன் -இவன் எல்லா ஜகத்துக்கும் நன்மையைச் செய்பவன் ) என்னக் கடவது இறே-(தத் பிரியதாம் )தஸ்ய ப்ரியதாம் என்னுதல் -தத் என்றும் வ்யஸ்தமாக்கி யத் தத் என்றும் யோஜிக்கவுமாம் -அப்போது –புருஷம் க்ருஷ்ண பிங்களம் -ஸர்வ யஞ்ஞ மயம் வபு -த்யேயஸ் ஸதா -கிரீட குண்டல தரம் -(புருஷம் க்ருஷ்ண பிங்களம் தை நா -12-கறுப்பும் மஞ்சளும் கலந்த உருவையுடைய புருஷன்-கா த்வன்யா த்வாம் ருதே தேவி ஸர்வ யஞ்ஞமயம் வபுஸ் அத்யாஸ்தே தேவ தேவஸ்யே யோகி சிந்த்யம் கதாப்ருத -வி பு -1-9-122-ஹே தேவி கதவைத் தரித்தவனும் தேவதேவனுமான எம்பெருமானுடைய யோகிகளால் நினைக்கத்தக்கதும் சர்வ யஞ்ஞமயமுமான சரீரத்தில் உன்னைத்தவிர வேறு எவன் இருக்கிறான்-த்யேஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயணன் சரஸிஜாஸந சந்நிவிஷ்ட கேயூரவான் மகர குண்டலவாந் கிரிடீ ஹாரீ ஹிரண்மய வபுர் த்ருத சங்க சக்ர -நரஸிம்ஹ புராணம் ஸூர்ய மண்டலத்தில் நடுவிலே இருப்பவனும் கமலாசனத்தில் வீற்று இருப்பவனும் தோள்வளை மகரகுண்டலம் கிரீடம் ஹாரம் இவைகளை யுடையவனும் சங்க சக்கரங்களைத் தரித்தவனுமான நாராயணன் எப்போதும் த்யானிக்கத் தக்கவன் –கிரீட குண்டல தரம் மித்ராணாம் அபயப்ரதம் -கிரீட குண்டலங்களைத் தரித்து இருப்பவனும் நண்பர்களுக்கு அபயம் அளிப்பவனுமான பகவான்-)இத்யாதி விக்ரஹ வைலக்ஷண்ய ப்ரதிபாதக ப்ரமாண பிரதிஸித்தி அதிசயத்தை த்யோதிப்பிக்கிறது -(ரூபம் )
இங்கே ரூப ஸப்தம் விக்ரஹ பரம் -யச்சப்தம் -ஏகரூபத்வ நித்யத்வ நிரவத்யத்வ அசிந்த்யத்வ ப்ரகாசக ப்ரமாண ப்ரஸித்தி பரம் -(அத்யத்புதம் )ஸ்வ சன்னிவேச பூர்வோக்த சவுந்தர்யாத் அநந்த குண யோகங்களாலே -அபி நவரஸ ஜனகமாய் அதி விஸ்மயா வஹமாய் இருக்கை –இவ்விடத்திலே –ஸ்வ அபித அனுரூப ஏக ரூப–விக்ரஹ -என்கிற சூர்ணிகா த்வய ப்ரதிபாதித விக்ரஹ வைலக்ஷண்யம் எல்லாமே அனுசந்தேயம்
இத்தால் ஸ்வரூப தத் குணாத்யந்த அபிமதமாய் -அதி விஸ்மயா வாஹமாய் -ஸ்ருதி ஸ்ம்ருதியாதி பிரசித்தமான ஸ ஆலம்பன யோக விஷயா அசாதாரண விக்ரஹத்தை ஸூபாஸ்ராயமாக அனுபவித்தாராய்த்து –யோகி த்யேயம் இறே -(ஸதா த்யேயம் -எப்போதும் நினைக்கத் தக்கது)
மேல் இந்த விக்ரஹத்தின் நின்றும் ஆஸ்ரித அர்த்தமாகப் பரிக்ரஹித்த வ்யூஹ விபவ அந்தர்யாமி ரூபங்களை அனுபவிக்கிறார் –யான் யன்யானி யதா ஸூ கம் விஹரதோ ரூபாணி சர்வாணி – யதா ஸூ கம் விஹரதோ-அன்யானி யாநி ரூபாணி சந்தி தாநி சர்வாணி-என்று ஸம்பந்தம் -(யாநி )இவ்விடத்தில் யச் சப்தம் –ஜென்ம கர்ம ச மே திவ்யம் – (ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத– த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந—৷৷4.9৷৷அர்ஜுனா என்னுடைய திவ்யமான பிறப்பையும் செயலையும் எவன் ஒருவன் இவ்வாறு உள்ளபடி அறிகிறானோ அவன் இப்போது உள்ள உடலை விட்டு நீங்கியதும் மறுபடியும் மற்று ஒரு உடலைக் கொள்ளும் பிறப்பை அடைவது இல்லை -என்னையே அடைகிறான்) என்கிறஅவதார ரஹஸ்ய ப்ரகாசக ப்ரமாண ப்ரஸித்தியை ஸூ சிப்பிக்கிறது –யாநி என்கிற பஹு வசனம் –அஜாயமாநோ பஹுதா விஜாயதே –பிறப்பில் பல் பிறவிப் பெருமான் -திருவாய் -2-9-5-பஹுநி ரூபாணி -ஸதஸோ அத ஸஹஸ்ரஸ –(ஸ்ரீ பகவாநுவாச-பஸ்ய மே பார்த்த ரூபாணி ஸதஸோத ஸஹஸ்ரஸ– நாநா விதாநி திவ்யாநி நாநா வர்ணா க்ருதீநி ச–৷৷11.5৷৷-ஸ்ரீ பகவான் கூறினான் -குந்தீ புத்திரனே -என்னுடைய எங்கும் உள்ள உருவங்களைக் காண்பாய் –மேலும் நூற்றுக் கணக்காகவும் ஆயிரக் கணக்காகவும் இருப்பவையாய் பலவகைப் பட்டவையாய் ஆச்சர்யமானவையாய் பல நிறங்களையும் ஆகாரங்களை உடையவையான சரீரங்களையும் காண்பாய்-பார் -பஸ்ய –உடனே -பார்க்கும் படி ஆக்குகிறேன் என்றபடி –) இத்யாதிகளில் சொல்லுகிற அவதார அசங்க்யாதத்வத்தை ஸூசிப்பிக்கிறது -(அன்யானி ) பரரூபத்தினின்றும் ஆதியஞ்சோதி யுருவை அங்கு வைத்து இங்கு பிறக்கையாலே தத் சன்னிவேச வர்ணாதிகளைப் போலே வைலக்ஷண்ய விசிஷ்டங்களாய் இருக்கை –அந்நிய –என்கிறாப் போலே அன்யானி என்கையாலே வ்யாவ்ருத்தியும் தோற்றுகிறது –
(யதா ஸூகம் )மனுஷ்ய சஜாதீயனாய் அவதரித்த தசையிலும் ஸ்வா பாவிக ஸூகாதி நிவ்ருத்தி என்ன துக்க பாக்த்வம் என்ன இவை இன்றிக்கே கேவலம் ஸூகமாய் இருக்குமாதொரு படி -(ஸூ கம் யதா பவதி ததா )க்ரியா விசேஷணமான அவ்யயம் (விஹரத) என்கிற இத்தால் அவதார ரூபங்கள் இச்சா க்ருஹீதங்கள் என்னுமிடமும் —வீட்டைப் பண்ணி விளையாடும் -இன்புறும் இவ்விளையாட்டுடையான் -கிரீடதோ பலகஸ்யேவ ) (க்ரீடதோ பாலகஸ்யேவ சேஷ்டாம் தஸ்ய நிஸாமய -வி பூ -1-2-18-சிறுவனைப் போலே விளையாடும் அந்தப்பாகவானுடைய ஜகத் ஸ்ருஷ்டியாதிகளாகிற செயல்களைக் கேட்ப்பாயாக –) என்கிறபடியே க்ரீடார்த்தங்களாய் இருக்கும் என்னுமிடம் கர்ப்பிதம் -ஆகையால் இவனுடைய சரீர க்ரஹணம் கர்ம க்ருதமின்றிக்கே -கேவலம் தர்ம த்ராணார்த்த மாயிருக்கும் என்கை -(நா காரணாத் ) (நாகாரணாத் காரணாத் வா காரணாகாரணாந் ந ச சரீர க்ரஹணம் வ்யாபின் தர்ம த்ராணாய கேவலம் -வி பூ -5-1-50-ஸர்வ வியாபியே நீ சரீரத்துடன் பிறப்பது ஸூகத்தின் பொருட்டாவது துக்கத்தின் பொருட்டாவது ஸூக துக்கச் சேர்க்கையின் பொருட்டாவது ஆவதில்லை -தர்ம ரக்ஷணத்திற்காகவே உன் பிறப்பு ஏற்பட்டிருக்கிறது –)இத்யாதி-(ஸர்வாணி தாநி )கீழ்ச் சொன்ன இத்தால் ஸ்வரூப ரூபாதிகளில் அத்யல்பமாகிலும் பெரிய பிராட்டியாராலே அநந்விதமாய் இருப்பதில்லை என்னுமிடத்தை த்யோதிப்பைக்காக ஸர்வாணி தாநி என்கிறார் -(ஸர்வாணி ரூபாணி )என்றாப் போலே இருக்கிறதாய்த்து (தைஸ் ஸ்வைரநுரூப ரூப விபவை )உன்னுடைய அசாதாரணங்களான அனுரூப ரூப விபவங்களாலே -அனுரூபங்களான ரூப ஸம்பத்துக்களாலே என்கை –
அதவா ரூபங்களாகிற விபவங்களாலே என்னவுமாம் -இவ்விடத்தில் ரூப ஸப்தம் –பகவன் நாராயண அபிமத அனுரூபங்களான ஸ்வரூப ரூப குண விபூதிகளைச் சொல்லுகிறது -(யதா ஸூகம் விஹரதோ ஹரேஸ் ஸர்வாணி ரூபாணி தைஸ்தைரனுரூப ரூப விபவைர் காடோப கூடா நீத்யாஹு )த்வத் அபிமத அனுரூபங்களான தத் ஸ்வரூப ரூப குணாதிகள் -தத் அபிமத தத் ஸ்வரூபாத் யநுரூபங்களான உன்னுடைய ரூபாதிகளிலே யதா க்ரமம் த்ருட ஸம்பந்தங்களாய் இருக்கும் என்றும் ஸ்ருதி ஸ்ம்ருதிகள் -வசிஷ்ட பராசர பாரஸர்யாதிகளான பரமரிஷிகள் சொல்லுவார்கள்
அனுரூபமாய் இருக்கையாவது -ரத்ன காஞ்சன நியாயத்தாலே ஸ்வ ஸம்பந்திக்கு ஸோப அதிசய ஹேதுவாய் இருக்கை -(காடோப கூடாநி ) வியோக அநர்ஹங்களாய் இருக்கும் என்கை -இறையும் அகலகில்லேன் -என்று இருக்க-அவன் ந ஜீவேயம் க்ஷணம் அபி -என்று இருக்க- இருவர் ஸ்வரூபாதிகளும் வியோகித்து இருக்க விரகுண்டோ –விஷ்ணோர் ஸ்ரீர் அநபாயினி -ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீ -என்றும் -திருவிருந்த மார்பன் -என்றும் -திரு மெய்யுறைகின்ற -என்றும் -தன்னொடும் பிரிவிலாத திருமகள் மருவும் –இத்யாதி ப்ரமாண ப்ரவர்த்தகரான தத்வ தர்சிகள் இந்நித்ய யோகத்தைச் சொன்னார்கள் –
(தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர ஸ்ரீ வத்ஸ வஷா நித்யஸ்ரீர் அஜய்ய ஸாஸ்வதோ த்ருவ -யுத்த -114-15-இந்த ராமபிரான் தமஸ்ஸுக்கு மேற்பட்டவனாய் ஸர்வ தாரகனாய் சங்கு சக்ர கதாதரனாய் ஸ்ரீ வத்ஸம் என்னும் மருவைத் திரு மார்பிலே யுடையவனாய் ஜெயிக்கப்படாதவனாய் நித்யனாய் நிலையனானவனான நாராயணன் –)
இத்தால் (1)சாபராத சேதனர் ஸ்வ அபராதத்தை நினைத்து அஞ்சி அகலாமல் ருசி பிறந்த போதே ஆஸ்ரயிக்கலாம் படி புருஷகார பூதையான இவள் சந்நிதி அவஸ்யம் வேண்டுகையாலும் -(2)பிராப்தி தசையில் சேர்ப்பாலும் கண்ட சக்கரையும் கலந்தாப் போலே நிரதிசய போக்யார்த்தமாகவும் –(3)வைதேஹ்யா ஸஹ –என்கிறபடி இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்கை முறையாகையாலும்(4) அடிமை தான் ஸித்திப்பதும் ரசிப்பதும் சேர்த்தியிலே யாகையாலும் இப்படி உபாய தசையோடு உபேய தசையோடு வாசியற –இங்கும் அங்கும் திருமாலன்றி இன்புற விரகில்லாமையாலே -எழில் மலர் மாதரும் தானுமாய்க் கொண்டு இவ்வேழுலகை இன்பம் பயக்க இனிதுடன் வீற்று இருக்கிற நித்ய யோகத்தை அனுசந்தித்து அருளினாராய்த்து –
இங்கும் அங்கும் திரு மால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குரு கூர்ச் சட கோபன்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து
எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே.–7-9-11-
இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1-
மதுப் யர்த்த ப்ரதிபாதகமான இஸ் ஸ்லோகத்தாலும் பிரதம ஸ்லோகத்தாலும் நாராயண ஸப்தார்த்தம் சங்க்ருஹீதம் -எங்கனே என்னில் –சாந்தாநந்த –என்று தொடங்கி திவ்யாத்ம ஸ்வரூபத்தை ப்ரதிபாதிக்கையாலே அயன ஸப்தார்த்தம் சங்க்ருஹீதம்-குண குணிகள் அப்ருதக் ஸித்தங்களாகையாலே குணியான ஸ்வரூபத்தைச் சொன்ன இது தந் நிரூபக குணங்களான ஞான ஆனந்த அமலத்வாதிகளுக்கும் -நிரூபித ஸ்வரூப விசேஷணங்களான ஞான சக்த்யாதிகளுக்கும் சவுகர்ய ஆபாதகங்களான வாத்சல்ய ஸுசீல்யாதிகளுக்கும் உப லக்ஷணம் –மூர்த்தம் –ரூபம் -என்று தொடங்கிச் சொன்ன திவ்ய விக்ரஹம் -தத் குணங்களான காந்தி ஸுகுமார்யாதிகளுக்கும் ததாதேயமான திவ்ய பூஷணங்களுக்கும் ஆபரண கோடியிலே அந்விதமான திவ்ய ஆயுதங்களும் உப லக்ஷணம் -தே -என்று பெரிய பிராட்டியாரைச் சொன்னது பூமிப் பிராட்டி தொடக்கமான மற்றை நாச்சிமாருக்கும் உப லக்ஷணம் -பணி பதி என்று நித்ய ஸூரிகளைச் சொன்னது சத்ர சாமராதிகள் தொடங்கி பரமாகாசத்துக்கும் உப லக்ஷணம் -மாயா -என்று பிரக்ருதியைச் சொன்னது பத்தாத்மாக்களுக்கும் கால மஹதாதி விகாரங்களுக்கும் உப லக்ஷணம் –ப்ரஹ்மேஸாதி -என்று அண்டத்துக்கு உட்பட்ட தேவாதி பதார்த்தங்களைச் சொன்னபோதே அண்டமும் ஸித்தம் இறே –ஆக நார ஸப்தார்த்தமும் சங்க்ருஹீதம்–விக்ரஹத்தைச் சொன்ன போதே சரண ஸப்தார்த்தம் சங்க்ருஹீதம் -உபாய உபேயங்களுக்கு அவிசிஷ்டமான நித்ய யோகத்தைச் சொல்லுகையாலே உபாய ஸ்வீ காரமும் உபேய பிரார்த்தனையும் யுக்த ப்ராயம் -அதவா ஸ்லோக த்ரயத்தாலே பூர்வ வாக்யார்த்தத்தையும் துரீய ஸ்லோகத்தாலே உத்தர வாக்யார்த்தத்தையும் அனுசந்திக்கவுமாம் –
நநு -இஸ் ஸ்லோகத்தில் இருவருடையவும் நித்யயோகம் சொல்லுகிறதாகில் –பரமாத்மா பரோ யோ அசவ் நாராயண சமாஹ்வய-தஸ்ய அநபாயிநீ சக்திர் தேவீ தத் தர்ம தர்மிணீ — (-பாஞ்சராத்ரம் –நாராயணன் என்னும் பெயரையே யுடையவனாய் மேலானவனாயுள்ள எந்தப் பரமாத்மா ஒருவன் இருக்கிறானோ அவனை விட்டுப் பிரியாத சக்தியாகவும் அவனுடைய குணங்களையே தன்னிடம் யுடையவளாகவும் இருப்பவள் லஷ்மீ தேவி –)என்றும்-விஷ்ணோர் ஸ்ரீர் அநபாயிநீ-என்றாப் போலே திரள ஒரு பாசுரம் இட்டு அருளிச் செய்யாமல் -பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகள் -லஷ்மீ ஸ்வரூப ரூப குண விபூதிகளோடே யதாக்ரமம் கடாச்லிஷ்டங்களாய் இருக்கும் என்றும் இப்படி விபஜித்து அருளிச் செய்வான் என் என்னில் -(1)த்வயத்தில் பிரதம பதத்தில் விசேஷ்ய பரமான நாராயண பதத்தில் பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை ப்ரதிபாதிக்கையாலும் -(2)தத் விசேஷண பரமான ஸ்ரீ சப்தத்தில் பிராட்டியினுடைய ஸ்வரூப ரூப குணாதிகளை ப்ரதிபாதிக்கையாலும் (3)உபயருடையவும் ஸ்வரூபாதிகளுக்கு உண்டான அவிநா பாவ ஸம்பந்தத்தை மதுப்பு ப்ரதிபாதிக்கையாலும் மதுப்பர்த்த ப்ரகாசகமான இஸ் ஸ்லோகத்தாலே புருஷகார உபாயங்களுடைய ஸ்வரூபாதிகளுக்கு அந்யோன்யம் உண்டான அவிநா பாவ ஸம்பந்தத்தை விஸ்தரேண அருளிச் செய்யக் குறையில்லை –
(ஸ்ரீ தாதர்த்தம் ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டும்
ஸ்ரீ மத் நாராயண ஸ்வரூப ரூப சரணம் -ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டும்
ஆகவே பிரித்து அவிநா பாவ ஸம்பந்தத்தை விஸ்தரேண அருளிச் செய்யக் குறையில்லை -)
இப்படி பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளோடே பிராட்டிக்கு உண்டான அவிநா பாவ சம்பந்தத்தை வேதங்களும் ரிஷிகளும் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் விரும்பி அனுசந்தித்தார்கள் –தேவ ஜூஷ்டாம் -என்றும் –ஸ்ரீமன் நாராயண -என்றும் -தத் ஸ்வரூபாதிகளோடே ஏதத் அவிநா பாவ சம்பந்தத்தை வேதாந்தங்கள் விரும்பிற்றன –அஹந்தா ப்ரஹ்மணஸ் தஸ்ய ஸா அஹமஸ்மி ஸநாதநீ -ஆத்மா ஸ ஸர்வ பூதாநாம் அஹம் பூதோ ஹரி ஸ்ம்ருத -அஹந்தயா விநா அஹம் ஹி நிருபாக்யோ ந ஸித்த்யதி -அஹமர்த்தம் விநா அஹந்தயா நிராதாரா ந ஸித்த்யதி –(-லஷ்மீ தந்த்ரம் -17-30,31-பழமையானவளான நான் ப்ரஹ்மமாகிற அந்த பகவானுக்கு அஹந்தை -நான் என்னும் தன்மை -யாயிருக்கிறேன் -ஸர்வ பூதங்களுக்கும் ஆத்மாவான ஹரியானவர் அஹம் பூதராய் இருக்கின்றார் -அஹந்தையை விட்டு அஹமர்த்தமானது பெயரற்றதாய் ஸித்திக்காது -அஹமர்த்தத்தை விட்டு அஹந்தையானது ஆதாரமற்றதாய் ஸித்திக்காது) இத்யாதிகளாலே பகவத் ஸ்வரூப அவிநாபாவ ஸம்பந்தம் ஸ்பஷ்டமாயிற்று –கா சா அந்யா த்வாம்ருதே தேவி -ஸர்வ யஜ்ஞமயம் வபு அத்யாஸ்தே தேவ தேவஸ்ய யோகி சிந்த்யம் கதாப்ருத -(வி பு -1-9-122-ஹே தேவி கதையைத் தரித்தவனும் தேவதேவனுமான எம்பெருமானுடைய யோகிகளால் நினைக்கத்தக்கதும் சர்வ யஞ்ஞமயமுமான சரீரத்தில் உன்னைத்தவிர வேறு எவன் இருக்கிறான்) என்றும் -ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீ -என்றும் யயவ் வக்ஷஸ் ஸ்தலம் ஹரே —இத்யாதிகளாலே விக்ரஹ அந்வயம் விசதமாய்த்து –
ராஜ ராஜோ அகிலஸ் யாஸ்ய விஸ்வஸ்ய பரமேஸ்வர -காந்தஸ்ய தஸ்ய தேவஸ்ய விஷ்ணோஸ் ஸத் குணாஸாலிந -தயிதா அஹம் ஸதா தேவீ ஞான ஆனந்த மயீ ஸதா -அநவத்யா அநவத்யாங்கீ நித்யம் தத் தர்ம தர்மிணீ — (-லஷ்மீ தந்த்ரம் -17-30,31-ராஜராஜனாய் இவ்வுலகிற்கு எல்லாமே பரமேஸ்வரனாய் இருப்பவன் பகவான் -காந்தனாய் நற்குணங்கள் பொருந்தியவனாய் -தேவனான அந்தப் விஷ்ணுவிற்கு நான் தேவியாய் -எப்போதும் பிரியையாய் -ஞானானந்த மயியாய் எப்போதும் குற்றமற்ற குணங்களையும் தேஹத்தையும் யுடையவளாய் எப்போதும் அவனுடைய தர்மங்களையே தர்மமாக யுடையவளாய் இருப்பவள் )இத்யாதிகளாலே குண அவிநா பாவம் கோஷிக்கப்பட்டது –
வைகுண்டே து பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி ஆஸ்தே -(-சைவபுராணம் –
மேலான உலகமான வைகுண்டத்தில் ஜகத்பதியும் நினைக்க ஒண்ணாத ஸ்வரூபத்தை யுடையவருமான விஷ்ணு பாகவதர்களுடனும் கூடியவராய் ஸ்ரீ தேவியுடன் கூட எழுந்தருளி இருக்கிறார் –) என்றும்-தத்ர திவ்ய வபு ஸ்ரீ மான் தேவ தேவோ ஜனார்த்தன -ஆஸ்தே நாராயண ஸ்ரீ மான் வாஸூ தேவஸ் ஸநாதன (அங்கு தேவதேவனாய் ஜனார்த்தனன் வாஸூ தேவனே என்னும் பெயர்களைக் யுடையவனாய் திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனாய் பிராட்டியுடன் கூடியவனான ஸ்ரீ மன் நாராயணன் எழுந்தருளி இருக்கிறான் –)-என்றும் வைகுண்டே து பரே லோகே ஸ்ரீஸஹாயோ ஜனார்த்தன – (-உபாப்யாம் பூமி நீளாப்யாம் சேவித பரமேஸ்வர -வைகுண்டமாகிற மேலான உலகத்தில் ஸ்ரீ தேவியுடன் கூடிய பகவான் பூமி நீளைகள் இருவராலும் சேவிக்கப்பட்டு விளங்குகிறாள் –)இத்யாதிகளாலே விபூதி அந்வயம் விஸ்தரிக்கப்பட்டது –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன – (நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் -ஹரிவம்சம் -113-52-பாற்கடலில் பள்ளிகொண்டவனான இந்த ஸ்ரீ மன் நாராயணனே மதுராபுரிக்கு வந்திருக்கிறான் –)என்றும் -தேவத்வே தேவதேஹயம் மனுஷ்யத்தவே ச மானுஷீ –ராகவத்வே அபவத் ஸீதா -(புநச் ச பத்ம ஸம்பூதா ஹ்யா நித்யோ அபூத் யதா ஹரி -யதா து பார்க்கவோ ராமஸ் ததா ஆஸீத் தரணீ த்வியம் -ராக்வத்வே அபவத் ஸீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி அன்யேஷு சாவதாரேஷு விஷ்ணோர் ஏஷா அநபாயினீ தேவத்வே தேவதேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ விஷ்ணோர் தேஹ அனுரூபம் வை கரோத் யேஷா ஆத்மநஸ் தநும் -வி பு -1-9-143,144.145-பகவான் ஆதித்யனாய் அவதரித்த போது பிராட்டி பத்மையானாள் -பரசுராமனான போது தரணியானாள் -ராகவனான போது சீதையாகவும் கிருஷ்ண அவதாரத்தில் ருக்மிணியாகவும் ஆனாள் -மற்ற அவதாரங்களிலும் இவள் பகவானைப் பிரியாதவளாய் இருக்கிறாள் -அவன் தேவனாய் அவதரிக்கும் போது இவளும் தேவ தேஹம் எடுக்கிறாள் -மனுஷ்யனாகும் போது இவளும் மனுஷ்யையாகிறாள் -விஷ்ணுவின் தேஹத்துக்குத் தகுந்ததாகத் தன் தேஹத்தை அமைத்துக் கொள்கிறான் இப்பிராட்டி –) என்றும்–வ்யூஹேஷு சைவ ஸர்வேஷு விபவேஷு ச ஸர்வஸ-ததா வ்யூஹீ பவத் யேஷா மம சைவ அநபாயிநீ -(-பாஞ்சராத்ரம் -எல்லா வ்யூஹங்களிலும் எல்லா விபவங்களிலும் என்னை விட்டுப் பிரியாதவளாய் இப்பிராட்டியும் அவதாரம் எடுக்கிறாள் –) இத்யாதிகளாலே வ்யூஹ விபவா அவிநா பாவம் வ்யாக்யாதம் யாயிற்று –
தைஸ்தைரநு குணைர் பாவைர் யாஹம் தேவஸ்ய சாரங்கிண–கரோமி ஸகலம் கிருத்யம் ஸர்வ பாவ அனுகாமிநீ –(லஷ்மீ தந்த்ரம் -17-4-அந்தந்தத் தன்மைகளோடு கூடிய நான் சார்ங்கம் என்னும் வில்லாண்ட தேவனை எல்லாத் தன்மைகளிலும் பின் தொடர்ந்தவளாய் எல்லாக் காரியங்களையும் செய்கிறேன்) இத்யாதிகளாலே ஐஸ்வர்ய அந்வயம் ஆதரிக்கப்பட்டது – இப்படி பிரத்யேகமாக ப்ரதிபாதிக்கை யன்றிக்கே –குணைர் விவாஸை ரூபைச் ச ஸ்வாத்மநா வா ஆத்ம நீஸ்வரம் -நியச்சந்தீம் அகண்டாண்ட நியந்த்ரீஞ்ச ஸ்துமஸ் ஸ்ரீ யம் -(பாஞ்சராத்ரம் குணங்களாலும் செயல்களும் ரூபங்களாலும் தன்னிடத்தில் ஈஸ்வரனை அடக்கிக்கொண்டு இருப்பவளாய் எல்லா அண்டங்களையும் நியமிப்பவளான ஸ்ரீ தேவியை ஸ்துதிக்கிறோம் –)என்று ஸகல அவிநா பாவ சம்பந்தமும் ஸங்க்ரஹிக்கப்பட்டது இறே
(ஸ்வரூப ரூப குண விபூதி ஐஸ்வர்ய வ்யூஹ விபவ -அந்தர்யாமித்வம்-அர்ச்சா -ஸகல அவிநா பாவ சம்பந்தங்களுக்கும் பிரமாணம் காட்டி அருளி மேல் இவற்றுக்கு அருளிச் செயல்களையும்-ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூக்திகளையும் – அருளிச் செய்கிறார்)
மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறலடிகள்1-3-1- தன்னோடும் பிரிவிலாத திருமகள்- -இத்யாதிகளாலே ஸ்வரூப அவிநாபாவ சம்பந்தமும் –என் திருமகள் சேர் மார்பனே -7-2-9– திருமார்வினில் சேர் திருமாலே-9-4-1- – -அலர்மேல் மங்கை யுறை மார்பா -6-10-10- திருமகளும் கூறாளும் தனி யுடம்பன் -4-8-1- ரூப அவிநாபாவ சம்பந்தமும்-நிகரில் புகழாய் -மிகும் திருமால் சீர்க்கடலை -பெரிய திருவந்தாதி -69-என்று குண அவிநாபாவ சம்பந்தமும்-திருமால் வைகுந்தம் -10-7-8-என்றும் விபூதி யந்தர்பாவமும் -திருமால் கடல் -மாதவா கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா-1-5-5- –சீ மாதவன் கோவிந்தன் -8-2-7–திருமால் வந்தென் நெஞ்சு நிறையப் புகுந்தான் -10-8-1–வேங்கடத்தென் திருமால்-நாச்சியார் -8-1– -என்று வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சாவதார அவிநாபாவமும்–பூம்பாவை யாகம் புணர்வது இருவரவர் முதலும் தானே -2-8-1-அல்லி மலர் மகள் போக மயக்குகளாகியும் நிற்க்கும் அம்மான் –3-10-8-எல்லா கருமங்களை செய் -என்று ஜகத் ஸ்ருஷ்ட்டி யுந் முகாத் யந்தர்பாவமும் ஆழ்வார்களாலும் அனுசந்திக்கப்பட்டது இறே
இவர்களை அடி ஒற்றின ஆச்சார்ய ஸ்ரேஷ்டரான பட்டரும் –ஸ்வரூபம் ஸ்வா தந்தர்யம் பகவத இதம் சந்த்ரவதனே -த்வதாஸ்லேஷோத் கர்ஷாத் பவதி கலு நிஷ்கர்ஷ ஸமயே -த்வமாசீர் மாதஸ் ஸ்ரீ கமி துரிதமித் தந்த்வலிபவைஸ் தத் அந்தர்பவாத் த்வாம் ந ப்ருதகபி தத்தே ஸ்ருதிரபிர- (சந்திரனைப் போன்ற குளிர்ந்த முகம் உடையவளே! தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நன்றாக ஆராய்ந்து பார்த்தால் உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் ஸ்வரூபம், திருக்கல்யாண குணங்கள் போன்றவை உனது தொடர்பு அவனுக்கு உள்ளதால் அல்லவோ உண்டாகிறது? இப்படியாக உனது கணவனுடைய ஸ்வரூபமாகவும், இனிய குணங்களாகவும் நீயே விளங்குகின்றாய். வேதங்கள் இதனை நன்கு உணர்ந்துள்ளன. அவை உன்னை நம்பெருமாளின் ஸ்வரூபமாகவும், திருக்கல்யாண குணங்களாகவும் கண்டன. ஆகவேதான் அவை உன்னைத் தனியே ஓதவில்லை போலும்!) என்று ஸ்வரூப அவிநா பாவ ஸம்பந்தமும் –
அநு கலதநு காண்டாலிங்க நாரம்ப ஸூம்பத் – (ஜசாக ஸ்ரீஸக அநோகஹ ருத்தி:ஸ்தந நயந குளுச்ச ஸ்பார புஷ்ப த்விரேபா ரசயது மயி லக்ஷ்மீ கல்ப வல்லீ கடாக்ஷாந்–-ஸ்ரீ குணரத்ன கோஸம்-3-ஸ்ரீரங்கநாதன் ஒரு கற்பக மரமாக இருந்து அடியார்கள் வேண்டுவனவற்றை அருள்பவனாக உள்ளான்-அப்படிப்பட்ட கற்பகமரம் போன்று உள்ள அவனைப் பின்னிப் பிணைந்து விளங்கும் கற்பகக் கொடி போன்று ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள்–இவளுடைய படர்தல் காரணமாக, அவனது கிளைகள் போன்ற நான்கு திருத்தோள்களும் நான்கு திசைகளிலும் பரவி நின்று,அவளை மேலும் அணைத்துக் கொள்கின்றன-இப்படிப்பட்ட செழிப்புடையவளான அவளது ஸ்தனங்கள், அந்தக் கொடியில் உள்ள மலர்க் கொத்துக்கள் போன்று உள்ளன-அந்த மலர்ச் செண்டுகளை மொய்க்கும் வண்டுகள் போன்ற கண்களைக் கொண்டு அவள் உள்ளாள்-இப்படி உள்ளவள் யார் என்றால் – லக்ஷ்மீ கல்ப வல்லீ – என்றார். அவள் மஹாலக்ஷ்மியாகிய ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள்-அவள் தனது அருள் நிறைந்த பார்வையை என் மீதும் (ஸ்ரீரங்கநாதன் மீது படர விட்டது போன்று ) சிறிது படர விடுவாளாக.)என்று ரூப ஸம்பந்தமும் –
ப்ரஸகந பல ஜ்யோதிர் ஞாநைஸ்வரீ விஜய ப்ரதா ப்ரணத வரண ப்ரேம ஷேமங்கரத்வ புரஸ் ஸரா -அபி பரிமள காந்திர் லாவண்ய மர்ச்சிரிதீந்திரே -தவ பகவதச் சைதே ஸாதாரணா குண ராசய –(ஸ்ரீரங்கநாயகீ! சக்தி, பலம், தேஜஸ், ஞானம், ஐஸ்வர்யம், வீர்யம் முதலான ஆறு குணங்கள்;
அடியார்களுக்குத் தன்னையே கொடுத்தல்; அடியார்களை அரவணைத்தல்; அடியார்களைப் பிரிந்தால் தவித்து நிற்பது; அடியார்களுக்கு எப்போதும் நன்மையே செய்தல்; நறுமணம் வீசும் திருமேனி; பளபளக்கும் திருமேனி – ஆக இப்படியான பல திருக்கல்யாண குணங்கள் குவியலாக உன்னிடமும் ஸ்ரீரங்கநாதனிடமும் பொதுவாக உள்ளதல்லவா?) -அன்யே அபி யவ்வன முகா யுவயோஸ் சமாநா ஸ்ரீ ரெங்க மங்கள விஜ் ரும்பண வைஜயந்தி -தஸ்மிம்ஸ்தவ த்வயி ச தஸ்ய பரஸ்பரேண ஸம்ஸ்தீர்ய தர்ப்பண இவ ப்ரசுரம் ஸ்வ தந்தே -என்றும் (ஸ்ரீரங்கத்திற்கு மங்களம் சேர்க்கின்ற கொடி போன்று உள்ளவளே! ஸ்ரீரங்கநாயகீ! என்றும் இளமையாக உள்ளது போன்ற தன்மையும் உங்களுக்கு (உனக்கும், நம்பெருமாளுக்கும்) பொதுவாகவே உள்ளது. இப்படியாக உனது திருக் கல்யாண குணங்களை ஸ்ரீரங்கநாதனும், அவனுடைய திருக் கல்யாண குணங்களை நீயும் கண்ணாடி போன்று ப்ரதிபலிக்கின்றீர்கள் அல்லவோ? உங்கள் இருவருக்கும் இது இனிமையாக உள்ளது போலும்.-இங்கு இவளால் அவனது அழகும், அவனால் இவளது அழகும் வெளிப்படுகின்றன என்றார்.“உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை” என்று ஆழ்வாரும் புகழ்ந்தாரே!)என்றும் -யுத்வத் வாதவ் துல்யே அப்ய பர வஸதாஸத்ருஸம்ந –(யுவத்வாதௌ துல்யே அபி அபரவசதா சத்ருசமந ஸ்திரத்வ ஆதீந் க்ருத்வா பகவதி குணாந் பும்ஸ்த்வ ஸுலபாந் த்வயி ஸ்த்ரீத்வ ஏகாந்தாந் ம்ரதிம பதி பாரார்த்த்ய கருணா க்ஷமா ஆதீந் வா போக்தும் பவதி யுவயோ: ஆத்மநி பிதா–34–ஸ்ரீரங்கநாயகீ! மேலே கூறப்பட்ட இளமை முதலியவை உங்கள் இருவருக்கும் பொதுவாக உள்ளது என்றாலும் ஸ்ரீரங்கநாதனிடம் ஆண்களுக்கே உரிய சில குணங்கள் உள்ளன. அவையாவன – மற்றவர்களுக்கு எளிதில் வசப்படாமல் இருத்தல், அடியார்களின் பகைவர்களை அழித்தல், என்ன இடையூறு வந்தாலும் அடியார்களைக் காத்து நிற்பது – இவை முதலான குணங்கள் அவனிடம் மட்டுமே உண்டு. உன்னிடம் பெண்களுக்கே உரிய குணங்கள் பொதிந்து உள்ளன. அவையாவன் – இரக்கம் நிரம்பிய மனம்,
ஸ்ரீரங்கநாதனின் குறிப்பறிந்து நடத்தல், கருணை, பொறுமை போன்ற பல குணங்கள் உன்னிடம் உள்ளன. இப்படியாக உங்கள் இருவரிடமும் உள்ள குணங்களில் வேறுபாடு உள்ளது.)என்றும்
இத்யாதிகளாலே குண அவிநா பாவமும் –
தத்ர ஸ்ரக் ஸ்பர்ஸ கந்தம் ஸ்புரதுபரி பணா ரத்ன ரோஸிர் விதாநம் விஸ்தீர்ய அநந்த போகம் -(தத்ர ஸ்ரக் ஸ்பர்ச கந்தம் ஸ்புரத் உபரி பணாரத்ந ரோசி: விதாநம்
விஸ்தீர்ய அநந்த போகம் ததுபரி நயதா விச்வம் ஏகாதபத்ரம் தை: தை: காந்தேந சாந்தோதித குண விபவை: அர்ஹதா த்வாம் அஸங்க்யை: அந்யோந்ய அத்வைத நிஷ்டா கநரஸ கஹநாந் தேவி பத்நாஸி போகாந்–25-இப்படியாக நீ அமர்ந்துள்ள மண்டபத்தில் ஆதிசேஷன் எப்படி விளங்குகிறான் என்றால் –அவனது உடலானது மலர் மாலைகள் போன்று மென்மையாகவும், நறுமணம் வீசுவதாகவும் உள்ளது; அவனது படத்துடன் கூடிய தலைகளில் ஒளிர்கின்ற இரத்தினக் கற்கள், மேல் விதானம் விரித்தது போன்று உள்ளது – இப்படியாக விரிந்த உடலையும் கவிழ்க்கப்பட்ட குடை போன்ற தலைகளையும் ஆதிசேஷன் கொண்டுள்ளான். அதன் மீது கம்பீரமாக நம்பெருமாள் அமர்ந்து இந்த உலகத்தை வழி நடத்தியபடி உள்ளான். அவனது திருக்கல்யாண குணங்கள் எண்ணற்றவையாகவும், அதிசயங்கள் நிரம்பியவையாகவும் உள்ளன. இதனால் அன்றோ அவன் உனக்குத் தகுந்தவனாக உள்ளான்? இப்படியாக நீ உனது மனதிற்குப் பிடித்த நம்பெருமாளோடு ஒன்றாகவே உள்ளாய். நீங்கள் இருவரும் அன்யோன்யமான திவ்ய தம்பதிகளாகவே உள்ளீர்கள்.
இப்படியாக அல்லவா நீ போகங்களை அனுபவிக்கிறாய்?)என்று விபூதி யந்தர் பாவமும்-
ததிமாதம் மத்நதஸ் ஸ்ராந்தி ஸாந்த்யை –ஸ்மித நயன ஸூதாபிஸ் சிஞ்சதீ சந்த்ரிகேவ – (ஸ்கலித கடக மால்யை: தோர்பி: அப்திம் முராரே:-பகவதி ததிமாதம் மத்நத: ச்ராந்தி சாந்த்யை
ப்ரமத் அம்ருத தரங்க வர்த்தத: ப்ராதுராஸீ: ஸ்மித நயந ஸுதாபி: ஸஞ்சதீ சந்த்ரிகேவ–49-
-பகவானுக்கு ஏற்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! தேவர்களுக்காகத் திருப்பாற்கடலைக் கடைந்த போது எம்பெருமானின் திருக்கரங்களில் இருந்த ஆபரணங்கள் நழுவின; அவனது மாலைகள் நழுவின. இப்படிப்பட்ட திருக்கைகளை உடைய அவன், தயிர் கடைவது போன்று திருப்பாற்கடலைக் கடைந்தான். இப்படியாகச் சோர்ந்த அவனது களைப்பு நீங்கும்படியாக எழில் வீசும் புன்னகையும் கனிவான பார்வையும் கொண்டபடி நீ தோன்றினாய். இப்படியாக அமிர்தமாகிய அலைகள் வீசும் அந்தத் திருப்பாறகடலில் இருந்து, வெண்மையான குளிர்ந்த நிலவு போல நீ தோன்றினாய் அல்லவா?) என்று வ்யூஹ அந்தர் பாவமும்-
யதி மநுஜதி ரச்சாம் லீலயா துல்ய வ்ருத்தோநுஜநுநுரூபா தேவி நாவா தரிஷ்யா -அஸரஸமபவிஷ்யன் நர்ம நாதஸ்ய மாதர் தரதளதரவிந்தோ தந்தகாந்தாய தாஷி – (தாயே! ஸ்ரீரங்கநாயகீ! மலர்கின்ற தாமரை மலர் போன்று அழகானதும் சிவந்தும் உள்ள திருக்கண்களை உடையவளே! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் – இந்த உலகில் மனிதர்கள், மிருகங்கள் போன்றவற்றுடன் தனது விருப்பம் காரணமாக அவைகளுள் ஒன்றாக வந்து பிறக்கிறான்.
நீ என்ன செய்கிறாய் – அவனுடைய அவதாரங்களுக்கு ஏற்ப உடன் பிறக்கிறாய்.
அப்படி நீ அவனது அவதாரங்களின்போது அவனுடன் பிறக்கவில்லை என்றால்,
அந்த அவதாரங்கள், சுவையற்றதாக அவலம் நிறைந்ததாக அல்லவா இருந்திருக்கும்?)-என்றும் அநுஜநுரநுரூப ரூப சேஷ்டா ந யதி ஸமாகம மிந்த்ரா அகரிஷ்யத் -அசரஸமதாவா அப்ரியம் பவிஷ்ணு த்ருவமாகரிஷ்யத ரங்கராஜ நர்ம – (பெரிய பெருமாள் அவதரித்து அருளும் அவதாரங்கள் தோறும் பெரிய பிராட்டியார் அந்த அந்த அவதார அநு குணமான விக்ரஹ சேஷ்டிதங்களை உடையவளாய்க் கொண்டு ஸம்லேஷிக்கா விடில் அந்த அவதார லீலை ரஸ்வத் இன்றிக்கே- புருஷகாரம் இல்லாமல் ஆஸ்ரித ரக்ஷண சித்தி ரூப அநிஷ்ட சாதிக்கையும் ஆகும் என்கிறார் — அநிஷ்டவஹமாக நிச்சிதமாக ஆகும்)என்று விபவ அந்தர் பாவமும் –
ஸ்ரீ ஸ்தநா பரணம் தேஜஸ் ஸ்ரீ ரங்கேசயம் – (ஆஸ்ரயே சிந்தாமணிம் இவ உத்வாந்தம் உத்ஸங்கே அநந்த போகிந –8- ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய திரு முலைத் தடங்களுக்கு அலங்காரமானதும் –எல்லாருக்கும் தன்னைப் பற்ற ஸ்வரூப லாபமாய் இருக்க தனக்கும் அவளைப் பற்றி ஸ்வரூப லாபமாய் இருக்குமே-ஸ்ரீ ஆதி சேஷனுடைய –திரு மடியிலே-கக்கப்பட்ட–சிந்தாமணி போன்றதும்–ஸ்ரீ திரு வரங்கத்தில் பள்ளி கொண்டு அருளும் பச்சை மா மலை திரு மேனியனான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய ஒப்பற்ற தேஜஸ்ஸை ஆஸ்ரயிக்கிறேன்-)என்று அர்ச்சாவதார அந்தர் பாவமும்
ஸ்ரீயை ஸமஸ்த சித் அசித் விதாந வ்யஸனம் ஹரே -என்றும் யத் ப்ரூ பங்கா ப்ரமாணம் -(யத் ப்ரூ பங்கா: ப்ரமாணம் ஸ்திர சர ரசநா தார தம்யே முராரே: வேதாந்தா: தத்வ சிந்தாம் முரபித் உரஸி யத் பாத சிஹ்நை: தரந்தி போக உபோத் காத கேளீ சுளுகித பகவத் வைச்வ ரூப்ய அநுபவா
ஸா ந: ஸ்ரீ: ஆஸ்த்ருணீதாம் அம்ருதல ஹரிதீ லங்கநீயை: அபாங்கை:-ஸ்ரீ குணரத்ன கோஸம்-–4–
இந்த உலகில் ஸ்ரீமந் நாராயணனின் படைப்பில் பல ஏற்ற தாழ்வுகள் உள்ளன.
இவற்றுக்குக் காரணமாக உள்ளது இவளது புருவத்தின் அசைவுகளே ஆகும்.
இவள் தனது புருவ அசைவு மூலம் யாரை உயர்த்த வேண்டும் என்று கூறுகிறாளோ,
ஸ்ரீமந் நாராயணன் உடனே அப்படியே செய்து விடுகிறான்.
யார் ஒருவனது திருமார்பில் மஹாலக்ஷ்மியின் திருவடி அடையாளம் உள்ளனவோ
அவனே பரம்பொருள் என்று வேதங்கள் முழங்குகின்றன.
ஆக, அவனது திருமார்பில், இவளது திருவடிகளில் பூசப்ப்ட்ட செம்பஞ்சுக் குழம்பின் அடையாளங்கள் காணப்படும்.
இவளது திருக் கல்யாண குணங்கள் எப்படிப்பட்டது என்றால் –
ஸ்ரீமந் நாராயணன் விச்வரூபமே எடுத்து வந்தாலும் அவளது திருக்கல்யாண குணங்களை அவனால் முழுமையாகக் காண இயலாது.
இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாச்சியாரின் கடைக்கண் பார்வையில் கடாக்ஷம் என்பது அமிர்தம் நிறைந்த கடல் போன்று பெருகி உள்ளது.
அப்படிப்பட்ட அவளது அருள் பார்வை என் மீது சற்று விழவேண்டும்.)என்றும்
அநு சிகினி சிகீவ க்ரீடசி ஸ்ரீ சமஷம் –(பிரளய சமய ஸூப்தம் ஸ்வம் சரீர ஏக தேசம்
வரத சித் அசித் ஆக்யம் ஸ்வ இச்சையா விஸ்த்ருணாந கசிதம் இவ கலாபம் சித்ரம் ஆதத்ய தூந்வந் அநு சிகிநீ சிகீ இவ க்ரீடசி ஸ்ரீ சமஷம்–44- ஹே வரத-பிரளய காலத்தில் ஒடுங்கிப் போன சேதன அசேதன ஆத்மகமான தனது திருமேனியின் ஏக தேசத்தை –தன் சங்கல்பத்தினாலேயே விசித விசித்திர ஜகத் ரூபமாய்ப் பரப்பா நின்று கொண்டு–மயில் பெடையின் எதிரே–நாநா விதமான தோகையை ஆகாசத்தை அளாவியது போலே–விரித்து உதறுகின்ற ஆண் மயில் போலே ஸ்ரீ பெரிய பிராட்டியார் முன்னிலையில் தேவரீர் விளையாடா நின்றீர்-ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மமே ஸ்தூல சித் அசித் விசிஷ்டமாக பரிணமிக்கிறது என்றவாறு-கலாபம் ஆண் மயிலுக்கே -அதே போலே ஜகத் காரணத்வம் அவனுக்கே – பிராட்டிக்கு இல்லை -என்றவாறு –அவன் ஸ்ருஷ்ட்டி செய்து அருளுவதும் அவளது லீலைக்காகவே –)என்று ஜகத் வியாபார அந்தர் பாவமும் ஸ்பஷ்டமாக அருளிச் செய்தார் இறே-
ஆத்மந்யாத்மா வபுஷி ச வபுர் வைபவைர் வைபவஞ்சேத் யாகாரைஸ்தைரநு குண தயா ஸர்வ பாவாநுயாதா -இச்சா ரூபாண்யபி பகவதஸ் ஸ்வாதயந்த்யாத்தரூபா தூரீ குர்யான்நஹி மதுரதாதுக்த ஸிந்தோஸ் தரங்காத் – (பகவத் ஸ்வரூபத்தில் தன் ஸ்வரூபமும் அவனுடைய தேஹத்தில் தன் தேஹமும் அவனுடைய விபூதிகளில் தன் வைபவமும் அடங்கும்படி இப்படிப்பட்ட ஆகாரங்களாலே அவனுக்குத் தகுந்தவளாய் அவனுடைய எல்லா நிலைகளையும் பின் தொடருமவளாய் பகவானுடைய இச்சையினால் எடுக்கப்பட்ட அவதார ரூபங்களையும் அவற்றுக்குப் பொருந்தின உருவங்களை எடுப்பதன் மூலம் இனிக்கச் செய்பவளான பிராட்டிக்கு இனிமையே வடிவாய் இருக்கும் பகவத் அனுபவமாகிற பாற்கடலின் அலைகளில் இருந்து நம்மை விலக்க மாட்டாளன்றோ –)என்று பிராட்டிக்கு உண்டான பகவத் ஸ்வ ரூபாத் யவிநா பாவ ஸம்பந்தத்தை அபி யுக்தர்களும் அனுசந்தித்தார்கள் இறே –
ஆக இப்படி ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களாலும் -அவற்றை அடி ஒற்றின ஆழ்வார்கள் திவ்ய ப்ரபந்தங்களாலும் ப்ரதிபாதிக்கிற திவ்ய தம்பதிகளுடைய ஸ்வரூபாதிகளுக்கு அந்யோன்யம் உண்டான அவிநா பாவ ஸம்பந்தத்தை இஸ் ஸ்லோகத்தால் அருளிச் செய்தாராய்த்து –
(அபிமத அனுரூப -இவள் அணுவாய் இருக்க விபுவான அவனுக்கு அனுரூபமத்வமும் அதிசய ஆகாரமுடையவள் என்று ஸ்தோத்ரம் பண்ணவும் எவ்வாறு பொருந்தும் என்பதை அடுத்து விளக்கி அருளுகிறார்)
இப்படி இருவருக்கும் உண்டான அவிநா பாவ ஸம்பந்தத்தை அருளிச் செய்கிறவிடத்தில் ப்ரதமத விபுவான பகவத் ஸ்வரூபத்தோடே லஷ்மீ ஸ்வரூபத்துக்கு அனுரூப ஸ்வரூப ஸம்பந்தம் சொல்லுமளவில் -பிராட்டிக்கும் ஸ்வரூபத விபுத்வம் அங்கீ கரிக்க வேணும் -ஸ்வரூப விபுத்வம் அங்கீ கரித்தாலிறே பகவத் ஸ்வரூப அனுரூபத்வமும் அதிசய ஆகாரேண ஸ்துதியும் ஸித்திப்பது
பத்நிக்கி பதி ஸ்வரூப அனுரூப்யா அவஸ்யம்பாவித்வத்தை ஸ்ருதியும் ஸூசிப்பித்தது இறே -விஷ்ணுவுக்குப் பத்னியாம்போது வ்யாபன லீலையாக வேணும் –பகவன் நாராயண அபிமத அனுரூப ஸ்வரூப ரூப-என்று பகவத் ஸ்வரூப அனுரூபத்வத்தை பாஷ்யகாரரும் பிரதமத்திலே ஸாதித்து அருளினார் இறே -இப்படி ப்ரமாண ஸித்தமுமாய் -ப்ரமாத்ரு ஸித்தமுமாய் -யுக்தி யுக்தமுமான விபுத்வத்தை அங்கீ கரியாமல் அணுத்துவத்தை அங்கீ கரிக்கும்போது பகவத்வ ரூப ஏகதேச வ்யாப்தியே இறே சித்திப்பது -அது ஸகல சேதன சமானமாகையாலே பிராட்டிக்கு ஓர் அதிசயித்த ஸ்தோத்ரம் ஸித்தியாது –அனுரூப ரூப விபவை -என்கிற பதத்துக்கும் பகவத் ஸ்வரூபாதிகளும் அல்ப தேசமாகிலும் இவளால் அநந்விதமாய் இருபத்தொரு இடமில்லை என்னுமிடத்தை ப்ரதிபாதிக்கிற ஸர்வாணி என்கிற பதத்துக்கும் வையர்த்தமும் வரும் -அணு ஸ்வரூபையாய் இருக்கவும் விகாஸக சக்தியால் விபுபாய் இருக்கும் என்னில் -அப்போது சாமான ந்யாயத்தாலே ஸகல ஆத்மாக்களுக்கும் ஸ்வரூப விகார அங்கீ காரத்திலே தோஷமின்றிக்கே ஒழியும் -ஆத்ம நிர்வாகரத்வ ப்ரதிபாதிதமான ப்ரமாணங்களுக்கும் விரோதமாம் – ஆகில் ஞான வ்யாப்தியைச் சொல்லுகிறது என்னில் –வாலாக்ர ஸத பாகஸ்ய -என்று தொடங்கி –ஸ சாநந்த்யாய கல்பதே –(வாலாக்ர சதபாகஸ்ய ஸததா கல்பிதஸ்ய ச பாகோ ஜீவஸ் ஸ விஜ்ஜேயஸ் ச ச அனந்த்யாய கல்பதே -ஸ்வே -5-9-கோதுமை நுனியின் நூற்றில் ஒரு பங்கை நூறு கூறிட்டதில் ஒரு பகுதியே ஜீவன் என்றும் அறியத்தக்கவன் -அவன் முக்தியடையும் போது ஞானத்தின் மூலம் அளவற்றவனாகிறான் –)என்று முக்தாத்மாக்களுக்கும் ஞான வ்யாப்தி யுண்டாகையாலே இங்கு ஒரு அதிசயமும் அனுரூபத்வமும் ஸித்தியாது -இவர்களைப் போலே ப்ரத்வம்ச அபாவம் மாத்திரமே இன்றிக்கே ப்ராக் அபாவத்தைப் பற்றச் சொல்லுகையாலே அதிசயமும் அனுரூபத்வமும் ஸித்திக்கிறது என்னில் -அது நித்யருக்கும் உண்டாகையாலே அவை இரண்டுமே ஸித்தியாது -கிஞ்ச அனுரூபத்வ உக்தியாலே அதிசய ஸ்துதி ஸித்திக்கிறது என்னில் அந்த அனுரூபத்துவமாவது -அணுத்துவத்தில் வைஷம்யம் உண்டானாலும் ஸ்வ தந்த்ர சேஷியைக் குறித்து சேஷத்வ பாரதந்தர்யங்களாலே அதிசயாவஹத்வம் என்னில் அதுவும் ஸகல சேதன அசேதன சமானமாகையாலே விசேஷம் ஸித்தியாது – கிஞ்ச –யதா ஸர்வதோ விஷ்ணுஸ் ததைவேயம் த்விஜோத்தம -த்வயதைத் விஷ்ணுநா சம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் –-இத்யாதிகளிலே ஸ்வரூபதோ விபுத்வம் ப்ரஸித்தமாய் இருக்க தத் அங்கீ காரேண அணுத்துவ அங்கீகாரமும் ப்ரமாண விரோதமும் பிரசங்கிக்கும் – ஆக அனுரூபத்வ சித்திக்காகவும் -அதிசயித ஸ்துதி ஸித்திக்காகவும் ப்ரமாண வையர்த்த நிவ்ருத்தி யர்த்தமாகவும் பிராட்டிக்கு ஸ்வரூப விபுத்வம் அவர்ஜனீயமாகையாலே அவஸ்யம் அங்கீ கார்யமிறே என்னில்
(விபு சர்வ மூர்த்தவ த்ரவ்யம் சம்யோகம் -அளவுக்கு உட்பட்ட வடிவுடன் உள்ள பொருள்களை ஸ்பர்சிப்பது -ப்ரஹ்மம் விபு -முக்தர்களின் தர்மபூத ஞானமும் விபு -கண்ணுக்கு பட வேண்டிய அவஸ்யம் இல்லை –பிராட்டி அணு என்றால் ஜீவாத்மா கோஷ்ட்டியில் சேர்க்க வேண்டி வரும் -விபு என்றால் ஈஸ்வர கோஷ்ட்டியில் சேர்க்க வேண்டி வரும் -அவன் ஸர்வகதா போல் இவளும் -விஷ்ணு புராணம் –யதா ஸர்வகதா விஷ்ணு என்கிறது –பிராட்டியின் ஸ்வரூபம் நன்றாக அறிய மேல் விளக்கி அருளுகிறார் -)
(ஸ்வரூபத்தால் அணுவாக இருந்தாலும் அகடி கடநா சக்தியால் -அவனது சங்கல்பத்தால் வந்த சக்தி -ரூபத்தால் விபு –விக்ரஹ வியாப்தி -இத்தை ஏற்றுக்கொண்டால் தான் அனைத்து வாக்யங்களுக்கும் பொருந்த படி அருளிச் செய்ய முடியும்)
மைவம் (மா ஏவம் இப்படியாக இல்லை )லஷ்மீ ஸ்வரூபத்தை நிரூபிக்கும் அளவில் ஸ்வரூப விபுத்வம் கூடாது -எங்கனே என்னில் –போக்தா போக்யம் ப்ரேரிதாரஞ்ச மத்வா -ஷராத்மாநாவீஸதே தேவ ஏக -இத்யாதி வேதாந்த ஸித்தமான அர்த்தங்கள் நம் தர்சனத்துக்கும் உண்டிறே – (ஏதத் ஜேயம் நித்யமேவாத்ம ஸம்ஸ்த்தம் நாத பரம் வேதிதவ்யம் ஹி கிஞ்சித் போக்தா போக்யம் ப்ரேரிதாரஞ்ச மத்வா ஸர்வம் ப்ரோக்தம் த்ரிவிதம் ப்ரஹ்ம மேதத் -ஸ்வே -1-12-ஆத்மாவினுள் அந்தர்யாமியாய் இருக்கும் இந்தப் பர ப்ரஹ்மமானது என்றும் அறியத் தகுந்தது -இதைக் காட்டிலும் அறிய வேண்டியது வேறு ஒன்றுமில்லை -அனுபவிப்பவனான ஜீவனுக்கு அந்தர்யாமியாயும் அனுபவிக்கப்படும் அசித்துக்கு அந்தர்யாமியாகவும் நியமிப்பவனான தம்முடைய ஸ்வரூபத்தோடு கூடியவனாய் ஆக இப்படி ப்ரஹ்மம் மூன்று விதமாகச் சொல்லப்படுகிறது –) (க்ஷரம் பிரதானம் அம்ருத அக்ஷரம் ஹரா ஷராத்மாநா வீசதே தேவ ஏக -ஸ்வே -1-10-க்ஷரம் எனப்படுவது மூலப்பிரக்ருதி யாகும் -அழிவற்றவனாய் இருக்கையாலே அக்ஷரம் எனப்படுமவன் போக்தாவான ஜீவனாவன் -அசித்தையும் ஜீவனையும் ஒரு தேவனே நியமிக்கிறான் –) இவற்றில் அசித் தத்வ அந்தர் பூதையோ -ஜீவதத்வ அந்தர் பூதையோ -ஈஸ்வர தத்வ அந்தர் பூதையோ -தத்வ த்ரய அதிரிக்தையோ -என்று விகல்பித்து நிரூபிக்கும் அளவில் அசித்து ஞான சூன்யமாகையாலும் இவள் ஞாத்ருத்வ விசிஷ்டை யாகையாலும் -ஞாத்வ அஞ்ஞத்வ விரோத பிரசங்கத்தாலே அசித் தத்வ அந்தர் பாவம் கூடாது -ஈஸ்வர த்வித்வ பிரசங்கத்தாலும் –ஈஸதே தேவ ஏக -என்கிற ஏகத்வ ஸ்ருதியோடும் –ந தத் ஸமஸ்ச அப்யதிகஸ் ச த்ருஸ்யதே -(ந தஸ்ய கார்யம் கரணம் ச வித்யதே ந தத் சமச்சாப் யதிகச்ச த்ருஸ்யதே பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச -ஸ்வே -6-8-அவனுக்கு ப்ராக்ருதமான சரீரமும் இந்திரியங்களும் இல்லை -அவனுக்கு ஒப்பாரும் மிக்காரும் காணப்படுவதில்லை -இவனுடைய மேலான சக்தியும் இயற்கையான ஞான பல கிரியைகளும் விதவிதமாகச் சொல்லப்படுகின்றன –)என்கிற சமாதிக தரித்ரத்வ ப்ரகாசாக ஸ்ருதியோடும் விரோதம் பிரசங்கிக்கையாலும் ஈஸ்வர அந்தர் பாவம் கூடாது -பகவத் ஐக்யம் சொல்லில் பத்நீத்வ பரமான ஸ்ருதியோடும் பேத பரமான ஸ்ருதியோடும் விரோதம் பிரசங்கிக்கும் -ஐக்ய பரங்களான ஸ்ருதிகள் அத்யந்த பாரதந்தர்யத்தாலே அவிநா பாவ நிபந்தனங்கள் -பேத ப்ரதிபாதங்கள் ஸ்வரூப பேத பரங்கள் -கிஞ்ச ஈஸ்வர த்வித்வத்தில் அந்யோன்யம் ஆஞ்ஞா வ்யாகாதத்தாலே அநீச்வரத்வமும் பிரசங்கிக்கும் -அதிரிக்த தத்வத்தில் ப்ரமாணம் இல்லாமையால் தத்வ த்ர்ய அதி ரிக்தை என்னக் கூடாது –இனி பாரி சேஷ்யாத் ஜீவ தத்வ அந்தர் பூதை என்னுமிடம் ஸித்தம்
ஆனபின்பு –ஏஷோ அணுர் ஆத்மா -த்ரசரேணு ப்ரமாணாஸ்தே ரஸ்மிகோடி விபூஷிதா -என்று (-முண்ட -3-1-9-அணுவாகிற இந்த ஜீவாத்மா மனத்தாலே அறியத்தக்கவன்-என்றும்-ஞானமயமான கோடிக்கணக்கான கிரணங்களையுடைய அந்த ஜீவர்கள் த்ரஸ ரேணுவைப்போல் அளவுள்ளவர்கள்)ஆத்மாக்களுக்கு அணுத்துவத்தை லக்ஷணமாகச் சொல்லுகையாலும் ஜீவ சமஷ்டி வாசகமான மகாரத்தில் –மாங்–மாநே -என்கிற தாதுவாலே (மதி ஹர்ஷே –ஆனந்தமுடையவன் என்றும் மந ஞாநே அவபோதநே –ஞானமயன் ஞானமுடையவன் என்றும் தாதுக்கள் உண்டே)ஆத்மாக்கள் அணு பரிமாணர் என்று சொல்லுகையாலும் ஜீவ தத்வ அந்தர் பூதையான இவளுக்கும் அணுத்துவம் அவர்ஜனீயமாகையாலே ஸ்வரூப விபுத்வம் சேராது -கிஞ்ச ஜீவ தத்வ அந்தர் பாவத்தை அங்கீ கரித்து அணுத்துவ அநங்கீகாரேண -அணுத்வஸ்ய ஏதத் வ்யதிரிக்த ஜீவ விஷயத்வேன விபுத்வம் ஏதத் விஷயம் (அணுத்துவமே தத் வ்யதிரிக்த ஜீவவிஷயம் ஜீவத்வே அபி விபுத்வம் ஏதத் விஷயம் )என்னில் -அப்போது ஜீவத்வம் அணுத்துவ வ்யாப்தமாகையாலே (வ்யாப்தமாகாமையாலே)ஜீவ லக்ஷணத்துக்கு அவ்யாப்தி தோஷம் பிரசங்கிக்கும் –விபுத்வே சதி சேதனத்வம் –என்கிற ஈஸ்வர லக்ஷணத்துக்கு அதி வ்யாப்தியும் பிரசங்கிக்கும் (அசேதனமாகவும் விபுவாகவும் முக்தர்களின் தர்மபூத ஞானமும் அங்குள்ள காலதத்வமும்)-ஜீவ அணுத்துவ ப்ரதி பாதிகையான ஸ்ருதியோடும் விரோதிக்கும் -ஆகையிறே ஸ ச அனந்த்யாய கல்பதே -என்கிற (வாலாக்ர சதபாகஸ்ய ஸததா கல்பிதஸ்ய ச பாகோ ஜீவஸ் ஸ விஜ்ஜேயஸ் ச ச அனந்த்யாய கல்பதே -ஸ்வே -5-9-கோதுமை நுனியின் நூற்றில் ஒரு பங்கை நூறு கூறிட்டதில் ஒரு பகுதியே ஜீவன் என்றும் அறியத்தக்கவன் -அவன் முக்தியடையும் போது ஞானத்தின் மூலம் அளவற்றவனாகிறான் –)இடத்திலும் முக்தருக்கும் ஸ்வரூப விபுத்வம் சொல்லாமல் ஞான வியாப்தியை ப்ரதிபாதிக்கிறது -இவ்வர்த்தம் ப்ரதீப தாவேச – (ப்ரதீபவதா வேஸஸ் ததா ஹி தர்சயதி–ப்ரஹ்ம ஸூத்ர-4-4-15-விளக்கைப்போல் தேசாந்தரத்திலும் வியாபித்து இருத்தல் ஜீவனுக்கும் அறிவினால் முடியும் –வாலாக்ர –என்று தொடங்கும் ஸ்ருதியும் அப்படியே காண்பிக்கிறதன்றோ)இத்யாதி ஸூத்ரத்திலே ப்ரதிபாதித்தது இறே
நநு முக்தருக்கு ஜீவத்வ ஸாம்யத்தாலே அவர்ஜனீயமான அணுத்துவத்துக்கு பாதக பிரமாணம் இல்லாமையாலும் -தத் அனுக்ராஹக ப்ரமாண ஸத்பாவத்தாலும் அணுத்துவம் அங்கீகரிக்கலாம் -பிராட்டிக்கு ஜீவத்வ சாம்ய யாகாரத்தாலே ப்ராப்தமான அணுத்துவத்துக்கு தத் வியாபக ப்ரமாணம் பாதகமாகையாலே அணுத்துவம் கூடாதிறே என்னில் -மைவம் -தத் விபுத்வ பிரமாணங்கள் ஸ்வரூப விபுத்வ பரங்கள் அன்றிக்கே விக்ரஹ வ்யாப்தி ப்ரதிபாதங்களாகையாலே தத் அணுத்துவ பாதகங்கள் அல்லவிறே என்கை -நநு யதா பிரமாணம் தத் விபுத்வ அங்கீகாரத்தில் பாதகம் இல்லாமல் இருக்கவும் பிரமாணங்களுக்கு அந்யார்த்தம் கல்பிக்கை யுக்தமில்லாமையாலே தத் விபுத்வ பிரமாணங்கள் தத் அணுத்தவே பாதகங்கள் இறே என்னில் விபு த்வய அசம்பவமே இவ்விடத்தில் பாதகம் ஆகையால் அணுத்துவம் அவர்ஜனீயம் என்கை –
நநு காலாதிகளுக்கு விபுத்வம் உண்டாயிருக்கவும் ஈஸ்வர த்வித்வம் வராதாப் போலே லஷ்மீ விபுத்வத்திலும் ஈஸ்வர த்வித்வம் பிரசங்கியாமையாலே அது விரோதம் அன்றே என்னில் -காலாதிகளுக்கு விபுத்வம் உண்டாய் இருக்கவும் ஈஸ்வர த்விதம் வராதாப் போலே என்கிற த்ருஷ்டாந்தம் சேராது -எங்கனே என்னில் சைதன்ய அநாதார்த்தவே சதி விபுத்வம் -என்கிறது இறே லக்ஷணம் -சைதன்ய ஆதாரத்வே சதி விபுத்வம் -ஈஸ்வர லக்ஷண மாகையாலே சைதன்ய விசிஷ்டையான இவளுக்கு விபுத்வம் கொள்ளில் ஈஸ்வர த்வித்வம் பிரசங்கிக்கையாலே இவளுக்கு அணுத்துவமே அசாதாரண லக்ஷணம் என்னத் தட்டில்லை
நநு –யோ லோக த்ரய மாவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர -உத்தம புருஷஸ் த்வந்ய-என்று ஸர்வ வ்யாபகத்வத்தாலும் ஸர்வ நியந்த்ருத்வத்தாலும் (வியாபித்து தாங்கி-நியந்த்ருத்வ- ஸ்வாமியாய் -மூன்றும் சேர்ந்த புருஷோத்தமன் -15 அத்யாயம் -)ஈஸ்வரனுக்கு ஜீவ அநந்யத்வம் சாதித்தாப் போலே –யதா ஸர்வ கதோ விஷ்ணுஸ் ததைவேயம் த்விஜோத்தம –ஈஸ்வரீம் ஸர்வ பூதாநாம் –இத்யாதி (வ்யாபகத்வ நியந்த்ருத்வ-இரண்டுக்கும் பிரமாணங்கள்)பிரமாண சித்தங்களான ஸர்வ வ்யாபகத்வ நியந்த்ருத்வங்களாலே பிராட்டிக்கு ஜீவஜாத் யநந்தர்பாவம் சாதிக்கலாமிறே -எங்கனே என்னில் –நேய மாத்ம ஜாத் யந்தர்ப்பூதா –குத–ஸர்வ வ்யாபகத்வாத் ஸர்வ நியந்த்ருத்வாத் யதா ஈஸ்வர ததா சேயம் தஸ்மாத் ததேதி –என்று பஞ்ச அவயமான அனுமானத்தாலே (நேய மாத்ம ஜாத் யந்தர்ப்பூதா –(ப்ரதிஜ்ஜை )-குத–ஸர்வ வ்யாபகத்வாத் ஸர்வ நியந்த்ருத்வாத் (இரண்டு ஹேதுக்கள் )யதா ஈஸ்வர (உதாஹரணம் )ததா சேயம் (உப நயனம் )தஸ்மாத் ததேதி(நிகமனம் )ஆத்ம தத்வ அநந்யத்வம் சாதித்து -அத ஏவ தஜ் ஜாதீயத்வா கதாணுத்வம் நிவ்ருத்தமாகையாலும் ஸ்ரீ யப்பதியே ஸர்வ வியாபக வஸ்து -என்று அங்கீகரிக்க வேண்டுகையாலும் நிரூப்ய நிரூபக அவிநா பாவ சம்பந்தம் நிபந்தனமாக நிரூப்ய ஸ்வரூபத்துக்கு உண்டான விபுத்வம் தந் நிரூபக ஸ்வரூபத்துக்கும் அவர்ஜனீயமாகக் கொண்டு தன்னடையே வருகையாலும் இவளுக்கு ஸ்வரூபதோ விபுத்வம் நியாயத ப்ராப்தமாகையாலும் அணுத்வ பக்ஷம் அயதார்த்தமிறே என்னில்
(ஆனால் அவனைப்போல் இவள் ஸர்வ நியாந்தா அல்லவே -அவனுக்கு ஸ்வரூப வ்யாப்தி உண்டு -இரண்டும் இவள் இடத்தில் இல்லையே -த்ருஷ்டாந்தம் எடுக்கக்கூடாதே)
மைவம் -இவ்விடத்தில் த்ருஷ்டாந்த யுக்த தார்ஷ்டாந்திகங்கள் ஸத்ருசங்கள் அன்றிறே -ஸ்வரூப விபத்வத்தாலும் ஸர்வ நியந்த்ருத் வத்தாலும் இறே ஸர்வேஸ்வரனுக்கு ஜீவ அந்யத்வத்தை ஸாதித்தது -தார்ஷ்டாந்தகத்தில் அந்த ஹேதுத்வம் இல்லை இறே -எங்கனே என்னில் -பிராட்டிக்கு ஆத்மஜாத் யநந்தர்பாவ சாதகங்களாகச் சொன்ன ஹேது த்வயத்தில் -பிரதம ஹேது விக்ரஹ வியாப்தி விஷயமாகையாலே ஸ்வரூப அஸித்தம் -அங்கு விக்ரஹ வ்யாப்தியைச் சொல்லுகிறது என்கைக்கு த்யோதகம் என் என்னில் -ஷீரோதாச் ஸ்ரீஸ் ஸமுத்பன்னா ஸ்ரூயதே அம்ருத மந்தநே -ப்ருகோ க்யாத்யாம் ஸமுத்பன்னேத் யேததாஹ கதம் பவான் -என்று செழும் கடல் அமுதினில் பிறந்தாள்-– (ஷீரோதாச் ஸ்ரீஸ் ஸமுத்பன்னா ஸ்ரூயதே அம்ருத மந்தநே ப்ருகோ க்யாத்யாம் ஸமுத்பன்னேத்யே ததாஹ கதம் பவான் -வி பு -1-8-16-அம்ருதம் கடைந்த காலத்தில் பாற்கடலில் இருந்து ஸ்ரீ தேவி யுண்டானதாகச் சொல்லப்படுகிறது -ப்ருவுவிற்கு க்யாதி என்னும் மனைவியிடம் உண்டானதாகத் தாங்கள் எப்படிச் சொல்கிறீர்கள்)-என்றும் ப்ருகு பந்தியான க்யாதியினிடத்தில் பிறந்தாள் என்றும் பராசர பகவான் உபதேசிக்கக் கேட்ட மைத்ரேய பகவான் நித்யையான லஷ்மிக்கு உத்பத்திமத்வம் உண்டானால் நித்யத்வம் கூடும்படி எங்கனே என்று ப்ரஸ்நம் பண்ண -அதுக்கு உத்தரமாக -நித்யைவைஷா ஜகன்மாதா விஷ்ணோர் ஸ்ரீர் அநபாயிநீ -யதா ஸர்வ கதோ விஷ்ணுஸ் ததைவேயம் த்விஜோத்தம -என்று உபதேசித்தான் -அது எங்கனே என்னில் –நித்யாநாம் நித்யனாய் -அவ்யய பிதாவான ஸர்வேஸ்வரன் ஸாது பரித்ராண அர்த்தமாக ஸர்வ ஜாதியிலும் அவதரித்து -தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே -முதல் திரு -44 என்றும் உமர் உகந்துகந்த உருவம் நின்னிருவம் -திருவாய் -8-1-4-என்கிறபடியே ஆஸ்ரிதர் உகந்த அவ்வோ திருமேனிகளாலே ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தைகளிலும் யாதொருபடி ஸந்நிஹிதனாகிறான் -அப்படியே நித்யையாய் ஜகன்மாதாவாய் விஷ்ணுவுக்கு ஸம்பத் ரூபையாய் அநபாயினியாய் இருக்கிற இவளும் மாத்ருத்வ ப்ரயுக்தமான வாத்சல்யத்தாலே அவதரித்து தத் ரூப அனு ரூபங்களான அவ்வோ ரூப விசேஷங்களாலே ஸர்வத்ர சந் நிஹைதையாய் இருக்கும் -ஆகையால் உத்பத்திமத்வம் நித்யத்வ பஞ்சகம் அன்று-கர்மக்ருத உத்பத்தியாகில் இறே தோஷாயவாவது -அனுக்ரஹ அர்த்தமான அவதாரம் குணயவாம் இத்தனை -என்று பிரதி வசனம் பண்ணுகையாலே ஸர்வ வ்யாபித்துவ வசனம் அர்த்தாந்தர விஷயம் -இவ்வளவு அன்றிக்கே –புநச் ச பத்ம ஸம்பூதா ஹ்யா நித்யோ அபூத் யதா ஹரி -யதா து பார்க்கவோ ராமஸ் ததா ஆஸீத் தரணீ த்வியம் -ராக்வத்வே அபவத் ஸீதா – (புநச் ச பத்ம ஸம்பூதா ஹ்யா நித்யோ அபூத் யதா ஹரி -யதா து பார்க்கவோ ராமஸ் ததா ஆஸீத் தரணீ த்வியம் -ராக்வத்வே அபவத் ஸீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி அன்யேஷு சாவதாரேஷு விஷ்ணோர் ஏஷா அநபாயினீ தேவத்வே தேவதேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ விஷ்ணோர் தேஹ அனுரூபம் வை கரோத் யேஷா ஆத்மநஸ் தநும் -வி பு -1-9-143,144.145-பகவான் ஆதித்யனாய் அவதரித்த போது பிராட்டி பத்மையானாள் -பரசுராமனான போது தரணியானாள் -ராகவனான போது சீதையாகவும் கிருஷ்ண அவதாரத்தில் ருக்மிணியாகவும் ஆனாள் -மற்ற அவதாரங்களிலும் இவள் பகவானைப் பிரியாதவளாய் இருக்கிறாள் -அவன் தேவனாய் அவதரிக்கும் போது இவளும் தேவ தேஹம் எடுக்கிறாள் -மனுஷ்யனாகும் போது இவளும் மனுஷ்யையாகிறாள் -விஷ்ணுவின் தேஹத்துக்குத் தகுந்ததாகத் தன் தேஹத்தை அமைத்துக் கொள்கிறான் இப்பிராட்டி –)இத்யாதிகளாலே மேலும் இந்த விக்ரஹ வியாப்தியே ப்ரதிபாதிக்கப்பட்டது இறே –சவும்ய அசவ்ம்யைர் ஜகத் ரூபைஸ் த்வயை தத் தேவி பூரிதம் –( -வி பு -1-9-121–தேவியே அழகியதும் க்ரூரமானதுமான உருவங்களால் இவ்வுலகமானது உன்னால் வியாபிக்கப் பட்டுள்ளது –) என்று மேலே விவரிக்கையாலே த்வயை தத் விஷ்ணு நா சம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் (த்வம் மாதா ஸர்வ லோகாநாம் தேவதேவோ ஹரிபிதா -த்வயைதத் விஷ்ணுநா சம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் -வி பு -1-9-126-தாயே எல்லா உலகங்களுக்கும் நீ அன்னை -தேவனாகிய ஹரி தந்தை -உன்னாலும் விஷ்ணுவாலும் இவ்வுலகம் வியாபிக்கப்பட்டுள்ளது –)என்கிறதும் விக்ரஹ வ்யாப்தி விஷயம் – ஆகையாலே இவளுக்கு ஸ்வரூப வ்யாப்தி பரிஹாரேண விக்ரஹ வ்யாப்தியே உள்ளது என்றும் நீர்ணீதமாய்த்து
(யதா ஸர்வ கதோ விஷ்ணுஸ் ததைவேயம்-என்கிற விஷ்ணு புராண வசனத்துக்குத் விஷ்ணு எப்படி வியாபிக்கிறாரோ அப்படியே இவளும் வியாபிக்கிறாள் என்று கொள்ளாமல் -வியாபிக்கிற விஷ்ணு எத்தகையவனோ அத்தகையவளே இவள் -வியாப்தியைத் தொடாமல் அர்த்தம் சொல்லலாம் அன்றோ -யதா ஸர்வ கதோ விஷ்ணுஸ் ததைவேயம்- எங்கள் ஆழ்வான் வியாக்யானம் -பகவான் விபுத்வேன ஸர்வ கதா வியாபகன் -அவனுடைய சக்தியாலேயே இவள் அணுவாக இருந்தாலும் எங்கும் எல்லாம் அவன் இருக்கிறானோ அங்கு எல்லாம் இவளும் வியாபிக்கிறாள் -ஸர்வ கதனான விஷ்ணு எந்தத்தன்மையானோ இவளும் அந்த ஸ்வ பாவங்களுடன் இருக்கிறாள் -சர்வகதராயும் கல்யாண குணங்கள் இவை பொது )
கிஞ்ச -இருவருக்கும் ஸ்வரூப வ்யாப்தியைச் சொல்லில் –தேவ திர்யங் மனுஷ்யேஷு புந்நாம பகவான் ஹரி ஸ்தீரீ நாம்நீ லஷ்மீர் மைத்ரேய -நா அநயோர் வித்யதே பரம் -அர்த்தோ விஷ்ணுரியம் வாணீ -(மைத்ரேயரே தேவர் திர்யக் -ஊர்வன -மநுஷ்யர்கள் ஆகிய ஜீவ ராசிகளுள் ஆணாய் இருப்பது பகவான் ஹரியின் அம்சம் பெற்றது -பெண்ணாய் இருப்பது லஷ்மியின் அம்சம் பெற்றது -இவ்விருவரைக் காட்டிலும் மேலானதில்லை –)என்ற விபூதி விபாக விரோதம் பிரசங்கிக்கும் – த்விதீய ஹேதுவான ஸர்வ நியந்த்ருத்வம் பாகர் அஸித்தமாகையாலே சாத்ய சாதக சத்தேது வன்று -எங்கனே என்னில் ஸகல புருஷ நியந்த்ருத்வத்தை இறே அங்கு புருஷ தத்வ அந்யத்வ சாதகமாகச் சொல்லிற்று -அந்த ஸர்வ நியந்த்ருத்வம் இவளுக்குக் கூடாது இறே –ஏகோந நியந்த்ருத்வம் இறே இவளுக்கு உள்ளது – அது தன்னிலும் அந்தப்பிரவிஸ்ய நியந்த்ருத்வம் இல்லை இறே – தாவன் மாத்ரத்தாலே ஆத்மஜாத் யநந்தர்ப்பாவம் கொள்ளும் போது சர்வருக்கும் அபும்ஸ்தவம் பிரசங்கிக்கும் -ஸ்வ சரீர மாத்ரத்துக்கும் அநீசனாய் இருப்பான் ஒருவன் இல்லை இறே (பகவான் லஷ்மி ச ஆஸ்துமா ஜாதியில் சேர மாட்டார்கள் -அநு பிரவேசம் பண்ணியோ பண்ணாமலோ ஒரு சிலரை நியமிக்கிறார்கள் -என்னில் -சர்வ வியாபகம் -விக்ரஹ வியாபகம் குறைத்து -அந்தர் பிரவேசமும் இல்லாமல் -சர்வரையும் குறைத்து ஒரு சிலரை -என்று குறைத்தால் -ஜீவர்களும் அந்தரப்ரவேசம் இல்லாமல் ஒரு சிலரை நியமிப்பது; ஜீவன் ஜாதியில் பெற மாட்டார்கள் என்றும் வருமே )- ஆக இப்படி ஆத்ம தத்வ அந்யத்வ ஸாதகங்களான ஹேது த்வயமும் அசித்தங்களாகையாலும் நிரூப்ய நிரூபகங்களுக்கு அவிநா பாவம் உண்டாகிலும் லஷ்மீ ஸ்வரூப நிரூபித பகவத் ஸ்வரூபத்துக்கே வியாப்தி சொல்லுகையாலே ஜீவ தத்வ அந்தர் பூதையாய் தஜ்ஜாதீயத்வேந ப்ராப்தமான அணுத்துவத்தை ஸ்வரூபமாக உடைய இவளுக்கு ஸ்வரூபதோ விபுவான ஈஸ்வரனைப் போலே ஸ்வரூப வியாப்தி இல்லை என்று நிர்ணயிக்கப்பட்டது –
ஆகில் யத் ப்ரஹ்ம ரூபம் தத்தே அனுரூப ரூப விபவைர் காடோப கூடாநி -என்று ஸர்வ வியாபக ஸ்வரூபத்தோடே தந் நிரூபக பூதையான லஷ்மீ ஸ்வரூபத்துக்கு அவிநா பாவ சம்பந்தம் சொல்லுகையாலே சன்னியோக விஸிஷ்ட நியாய ஸித்தமான (சன்னியோக விஸிஷ்ட நியாயம் -சேர்க்கை விதிக்கப்பட்டதால் இருவருக்கும் இல்லை என்ற இருவருக்கும் உண்டு என்ற சொல்ல வேண்டுமே )ஸ்வரூப விபுத்வம் இவ்விடத்தில் சேரும்படி எங்கனே என்னில் -இப்படி அனுபபத்யமாந அர்த்த தர்சனத்தாலே உபபத்யமாந அர்த்தாந்தரத்தைக் கல்ப்பிக்கை யாகிற அர்த்தாப்பத்தி ப்ரமாண ஸித்தமமான அகடிதகடநா ஸக்தியாலே அணு ஸ்வரூபையாய் இருக்கவும் விபுவான ஈஸ்வர ஸ்வரூபத்தோடே பரிசமாப்ய வியாபித்து இருக்கையை இவ்விடத்தில் சொல்லுகையாலே விரோதமில்லை – எங்கனே என்னில் -மஹதோ மஹீயான்(அணோர் அணீயாந் மஹதோ மஹீயாந் ஆத்மா குஹாயாம் நிஹிதோஸ்ய ஜந்தோ: | தமக்ரதும் பஶ்யதி வீத ஶோகோ தாது ப்ரஸாதாத் மஹிமாந மீஸம் –தைத் நா -9-1-அணுவைக் காட்டிலும் அணுவாய் மஹத்தைக் காட்டிலும் மஹத்தான பரமாத்மா இந்த ஜீவனுடைய ஹ்ருதய குகையில் இருக்கிறான் -கர்ம ஸம்பந்தம் அற்றவனாய் மஹிமசாலியான அப்பரமாத்மாவை அவன் அருளாலே கண்டு சோகம் நீங்கப் பெறுகிறான்) என்னும்படி அதி மஹத்துவமான ஈஸ்வரன் அணோரணீயான் -என்கிறபடியே அணீயாநாம் அணீயனாயக் கொண்டு அணு வியக்திகள் தோறும் அசங்குசிதமாக நிரங்குச ஐஸ்வர்யத்தோடே தன்னுடைய அகடிதகடநா சக்தியால் பரிசமாப்ய வர்த்திக்குமா போலே தத் ஸ்வரூப நிரூபக பூதையான இவளும் அணுவாய் இருக்கவும் நிரூப்ய வஸ்து வியாபித்து நிற்கும் இடம் எங்கும் ஈஸ்வரீம் என்று சுருதி ப்ரஸித்தமான தன்னுடைய அகடிதகடநா சக்தியாலே வியாபித்து விபூவாய் இருக்கை இவ்விடத்தில் விவஷிதமாகையாலே விரோதமில்லை இறே – ஆகையாலே ஸ்வரூபதோ விபுவான ஈஸ்வர தத்வ வ்யாவ்ருத்தியும் கேவலம் குணதோ விபுவான ஆத்ம தத்வ வ்யாவ்ருத்தியும் சைதன்ய அநாதாரமான அசித் தத்வ வ்யாவ்ருத்தியும் -பகவத் ஸ்வரூப அனுரூபத்வமும் அதிசயித ஸ்தோத்ரமும் ஸித்திக்கும் இறே
(ஆகாசம் -குடாகாசம் -ஆகாசத்தில் ஒரு பகுதி தானே -அணுவுக்குள் விபுவான இவன் முழுவதுமாக பரிசமாப்ய வர்த்திக்கும் -ப்ரஹ்மத்தின் ஒரு பகுதி இல்லை ஜாதிவத் வியாபித்து இருக்குமாப் போலே-இவள் ஈஸ்வர சேதன அசேதன வ்யாவ்ருத்திக்குக் காரணங்களையும் அருளிச் செய்கிறார் -)
அனுரூப்யமாவது –ஈசேதே தேவ ஏக –ஈச்வரஸ் ஸர்வ பூதாநாம் (எல்லா வித்யைகளுக்கும் ஈசன் -எல்லா பூதங்களுக்கும் ஈஸ்வரன்)என்கிற தத் ஸ்வரூபத்துக்கு அனுரூபமாக அஸ்யே ஸாநா –ஈஸ்வரீம் ஸர்வ பூதாநாம் என்னும்படி இருக்கை இறே உசிதம் -அதவா -அவனுடைய சத்தை ஏதத் அதீனையாய் இவளுடைய சத்தை தத் அதீனையாய் இருக்கை அந்யோன்ய அனுரூபத்துவமாகவுமாம் -எல்லாப்படியாலும் உனக்கேற்கும் –10-10-6- என்னும்படி துல்ய சீலையாய் இருக்கை இறே அனுரூப்யமாவது –
(அவனுடைய சத்தை ஏதத் அதீனையாய் இவளுடைய சத்தை தத் அதீனையாய் இருக்கை -இன்றியமையாமை -உண்டே -மாயா சீதா -விருத்தாந்தம்)
நநு விபுவான சர்வேஸ்வரன் அகடிகடநா சாமர்த்தியத்தாலே அணு ஸ்வரூபனாய் கொண்டு அணு வியக்திகள் தோறும் ஜாதிவத் வியாபித்து இருக்குமாப் போலே -இவளும் அணுவாய் இருக்கவும் அகடிகடநா சக்தியாலே விபுவாய்க் கொண்டு வியாபித்து இருக்கும் என்கிறவிடத்தில் த்ருஷ்டாந்தம் கூடாது -எங்கனே என்னில் -விபுவான ஈஸ்வரனுக்கு உபாத் யவச்சேத மாத்ரத்தாலே இறே அணுத்வ விபுத்வங்கள் சொல்லுகிறன-ஸ்வரூபதஸ் அணுத்துவம் சொல்ல ஒண்ணாது இறே -அகடிகடநா சக்தியாலே அணுத்துவ மஹத்வ ரூப விருத்த சமுச்சயம் கூடும் என்னில் அப்போது ஸர்வ அத்வைத பேதாபேத பக்ஷங்களும் அங்கீகார்யங்களாம் இறே -ஆகையாலே பிரதிவஸ்து பூர்ணத்வமாவது -ஓரொரு உபாத் யவசின்ன ப்ரதேசமே ஸர்வத்தையும் நிர்வஹிக்க வல்ல சக்தியை யுடைத்தாய் இருக்கை -இங்கன் அன்றிக்கே அந்தர் வியாப்தியை ஸ்வரூப சாமாப்ய வியாப்தி என்று அங்கீகரிக்கும் போது பஹிர் வியாப்தி சேராது -கிஞ்ச -நிரவயமான ஆத்மாவுக்கு ஷட் பாவ ராஹித்யத்தாலே உள்ளென்றும் புறம்பென்றும் ஒரு வ்யவஹாரம் கூடாமையாலே அந்தர் வ்யாப்தியே அங்கீகார்யம் -ஆகையாலே பகவத் அந்தர் வியாப்தி த்ருஷ்டாந்த பலத்தாலே லஷ்மீ விபுத்வம் அஸாத்யம்
கிஞ்ச -ஸ்வரூப வியாப்தியும் விக்ரஹ வியாப்தியும் இன்றிக்கே அகடிகடநா சக்தியாலே அணு ஸ்வரூபையாய் இருக்கவும் விபுவோடே வியாபித்து இருக்கும் என்னில் ஸ்வரூப விகாரித்வம் அங்கீகரித்ததாய் விடும் -அப்போது ஆத்ம நிர்விகாரத்வ ப்ரதிபாதிக பிரமாணங்களுக்கு விரோதம் பிரசங்கிக்கும் -ஆனபின்பு லஷ்மீ ஸ்வரூப விபுத்வமே அங்கீகார்யம் -ஜீவத்வே அபி விபுத்வ அங்கீகாரத்திலும் அணுத்வே ஸதி சேதனத்வம் என்கிற ஜீவ லக்ஷணத்துக்கு அவ்யாப்த்யதி வ்யாப்தி தோஷ பரிஹார அர்த்தமாக அணு சேதனத்வம் ஏதத் வ்யதிரிக்த ஜீவ விஷயம் -பரதந்த்ர சேதனத்வம் ஏதல் லக்ஷணம் என்றும் ஸ்வ தந்த்ர சேதனத்வம் ஈஸ்வர லக்ஷணம் என்றும் லஷண பேதம் கல்பிக்கலாம் இறே -அன்றிக்கே ஜீவ லக்ஷணத்தில் அணு ஸப்தம் பரிச்சின்ன மாத்ர பரமாய்-பகவத் பராதீனையான இவள் விஷயத்தில் ஸ்வதந்த்ர குண பரிச்சேதன வர்த்திக்கிறதாகவுமாம் -அதாவது -ஸ்வரூபதோ நிரதிசயத்வே யபி பாரதந்தர்யாதி யோகத்தாலே குணதஸ்ஸ அதிசய யுக்தையாய் இருக்கும் என்றபடி -இத்தால் ஸ்வரூபத்தாலும் குணத்தாலும் ஸ அதிசயரான சேதனரில் வ்யாவ்ருத்தியும் -தத் உபயதோ நிரதிசயனான ஈஸ்வரனில் வ்யாவ்ருத்தியும் -ஸித்திக்கும் இறே -ஆகையால் ஜீவ தத்வ அந்தர் பாவத்திலும் ஸ்வரூபதோ விபுவாகையாலே பகவத் ஸ்வரூப அனுரூபத்வமும் அதிசயேந ஸ்துதியும் சித்திக்கையாலே அணுத்துவம் அநங்கீகார்யம் இறே என்னில்–மைவம் -சர்வேஸ்வரன் அணு த்ரவ்யங்கள் தோறும் ஸ்வரூபேண பரிஸமாப்ய வர்த்திக்கும் என்னுமிடம் கூடாதாகில் -அந்தர் பஹிச்ச தத் ஸர்வம் வியாப்ய நாராயணஸ் ஸ்தித–அந்தப் ப்ரவிஷ்ட ஸாஸ்தா ஜனாநாம் -யஸ் ஆத்மாநமந்தரோ யமயதி -என்று (யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதே அபி வா அந்தர் பஹிச்ச தத் ஸர்வம் வியாப்ய நாராயணஸ் ஸ்திதஸ் -தை நா -11-இவ்வுலகில் காண்பனவும் கேட்பனவாயும் இருக்கும் பொருள்கள் எல்லாவற்றிலும் உள்ளும் புறமும் நாராயணன் வியாபித்து நிற்கிறான்)(அந்தப்ரவிஷ்டஸ் ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா -யஜுர் ஆர -3-11-21-ஸர்வ அந்தர்யாமியான நாராயணன் ஜனங்களை உள் நுழைந்து நியமிக்கிறான்)(யஸ் ஆத்மனி திஷ்டன் ஆத்மந அந்தரோ யமாத்மா ந வேத யஸ்யாத்மா சரீரம் ய ஆத்மாநம் அந்தரோ யமயதி ஏஷ த ஆத்மா அந்தர்யாம் யம்ருத -ப்ருஹ் -5-7-22- எவனொருவன் ஆத்மாவில் நின்றும் கொண்டும் ஆத்மாவின் உள்ளிருந்தும் விளங்குகிறானோ எவனை ஆத்மா அறியவில்லையோ எவனுக்கு ஆத்மா சரீரமோ எவன் ஆத்மாவை உள்ளே நுழைந்து நியமிக்கிறானோ அந்தப் பரமாத்மாவே அம்ருதமயனாய் உனக்கும் அந்தர்யாமியாய் விளங்குமவன் )என்று அந்தர் வியாப்தியைச் சொல்லுகிற பிரமாணங்களுக்கு வையர்த்தமும் -பரந்த தண் பரவையுள் நீர் தொறும் –கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் –பரந்த அண்டமிது எனக் கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே -என்கிற திவ்ய ஸூக்தியோடும் விரோதிக்கும் -வியாப்பிய வியாபகங்களான ஜீவ ஈஸ்வர ஸ்வரூபங்கள் ஞான மயங்களாகையாலே தேஜோ த்ரவ்யங்களாய் அதிஸ்வச் சங்களாய்க் கொண்டு ப்ரதிகாதா பாவத்தாலே அந்யோன்யம் அந்தப் பிரவேசிக்கை மிகவும் உபபன்னமாகையாலே ஜாதி வியக்தி தோறும் பரிஸமாப்ய வர்த்திக்குமா போல பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே -என்று ஸ்ருதி ஸித்தமான அகடிகடநா சக்தியாலே வியாப்ருத வஸ்துக்கள் தோறும் ஸ்வரூபேண பரிஸமாப்ய வர்த்திக்கக் குறையில்லை இறே -இப்படி ஸ்ருதி ஸித்தமாய் யுக்தி யுக்தமுமான அந்தர் வியாப்தி பஹிர் வியாப்திக்கு விரோதமாகாமையாலும் விருத்த சமுச்சய பக்ஷங்களில் விருத்த சமுச்சய நிபந்தனமாக ஈஸ்வரனுடைய அகடிகடநா சக்தியைக் கொள்ளாமையாலே பரபஷத்தின்படி ஆகாமையால் அது தத் பிரதிபந்தி யல்லாமையாலும் விபு ஸ்வரூபன் அகடிகடநா சக்தியாலே அணுக்கள் தோறும் ஸ்வரூபேண பரிஸமாப்ய வர்த்திக் கிறாப் போலே பிராட்டியும் அணு ஸ்வரூபையாய் இருக்கவும் அகடிகடநா சக்தியாலே விபு ஸ்வரூபத்தோடே வியாபித்து இருக்கையாகிற விபுத்வம் இஸ் ஸ்லோகத்தில் விவஷிதமாகையாலே விரோதமில்லை –
(ஸ்ருதி ஸித்தமாய் யுக்தி யுக்தமுமான அந்தர் வியாப்தி பஹிர் வியாப்திக்கு விரோதமாகாமையாலும்-என்றது ஞான த்ரவ்யம் தேஜோ விஷயம் தடுக்காது -கீழே சொல்லி -ஜாதியானது வ்யக்தி தோறும் முழுவதும் வர்த்திக்குமே -அகடி கடநா சாமர்த்தியத்தாலே முழுவதும் வர்த்திக்கலாம் -இவ்வாறு இரண்டையும் கொள்ளும் போது பிரதிபந்தகங்கள் சொல்ல முடியாது என்றபடி -)
கிஞ்ச –ஏக மேவ அத்விதீயம் — (ஸதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக் -6-2-1-குழந்தாய் ஆதியில் சத்தாகிற ப்ரஹ்மமாகவே இவ்வுலகம் இருந்தது -ஒன்றாகவே விளங்கிற்று -இரண்டு அற்றதாய் விளங்கிற்று -நிமித்த உபதான சஹகாரி காரணங்களாக ப்ரஹ்மமே இருந்தது என்றபடி –)என்கிறபடியே ஜகத்துக்கு த்ரிவித காரணமும் ப்ரஹ்மமே யாகையாலே –ப்ரக்ருதிச்ச ப்ரதிஞ்ஞாத் த்ருஷ்டாந்த அநுப ரோதாத் – (ப்ரஹ்ம ஸூத்ரம் -1-4-23-ப்ரஹ்மம் உபாதான காரணமாகவும் ஆகிறது -அப்படி இருந்தாலேயே ஒன்றை அறிந்தால் எல்லாமே அறிந்ததாகும் என்னும் ப்ரதிஜ்ஜையும் ம்ருத் பிண்ட கடாதி த்ருஷ்டாந்தமும் ஓட்டுமாகையால்-)என்கிற ஸூத்ர பிரகாரத்திலே உபாதான காரணமாய்க் கொண்டு ப்ரஹ்மம் ஜகத்தாகப் பரிணமிக்கும் போது தன்னுடைய சக்தியாலே ஸ்வரூபத்துக்கு விகாரம் வாராமல் பரிணமிக்குமா போலே -இவளும் அணுவாய் இருக்கவும் -அகடிகடநா சக்தியாலே தன் ஸ்வரூபத்துக்கு விகாரம் வாராமல் விபு ஸ்வரூபத்தோடே வியாபித்து இருக்கக் குறை இல்லாமையாலும் -லஷ்ய வர்க்கத்துக்கு எல்லாம் ஏறுகிற லக்ஷணத்தை விட்டு லஷ்ய விபாகம் பண்ணி லஷண பேதம் கல்பிக்கை யுக்தம் அல்லாமையாலும் -ஜீவ விஷயத்தில் அணு ஸப்தம் -ஜ்யாயா நந்தரிஷாத் – (ஏஷ ம ஆத்மா அந்தர் ஹ்ருதயே ஜ்யாயாந் ப்ருதிவ்யா ஜ்யாயா நந்தரிஷாத் ஜ்யாயாந் திவோ ஜ்யாயாந் அப்யோ லோகேப்யஸ் -சாந்தோக்ய -3-14-3- ஹ்ருதயத்தின் உள்ளிருக்கும் இந்த என்னுடைய ஆத்மாவானவன் பூமியைக் காட்டிலும் அந்தரிக்ஷத்தைக் காட்டிலும் தேவலோகத்தைக் காட்டிலும் இவ்வுலகங்கள் எல்லாவற்றையும் காட்டிலும் பெரியவன் –)என்கிற மஹத்வ பிரதி கோடியான அணுத்துவத்தைச் சொல்லுகையாலே வாலாக்ரே–இத்யாதிப்படியே ஸூஷ்ம பரிணாமத்தைச் சொல்லுமத்தனை அல்லது பரிச்சின்ன மாத்ரபரம் அல்லாமையாலும் ஜீவ தத்வ அந்தர் பூதையாய் -தஜ் ஜாதீயத்வேந ஆகதமான அணுத்துவத்தை ஸ்வரூபமாக யுடைய இவள் தம்முடைய அகடிகடநா சக்தியாலே ஸ்வ விகார ரஹிதமாக விபு ஸ்வரூபத்தோடே வியாபித்து இருக்கும்படியை இஸ் ஸ்லோகத்தாலே வியாக்யானம் பண்ணி யருளினாராய்த்து –
அதவா -விக்ரஹ வியாப்தியை (மட்டுமே)இஸ் ஸ்லோகத்திலே ப்ரதிபாதிக்கிறது என்றும் அருளிச் செய்வர் -ஆகில் –யத் ப்ரஹ்ம ரூபம் -என்று ப்ரதமம் ஸ்வரூபத்தைச் சொல்லுவான் என் என்னில் –மூர்த்தம் ப்ரஹ்ம -என்று சொல்லுகிற திவ்ய விக்ரஹம் திவ்யாத்ம ஸ்வரூபத்திலும் ப்ரியதரமாய் இருக்கும்படியை பிரகாசிப்பிக்கைக்காக முந்துற முன்னமே ஸ்வரூபத்தை ப்ரதிபாதித்தது அத்தனை என்றும் யோஜித்துக் கொள்வது -இந்த யோஜனையில் –ஹரேச் சாந்தாநந்த மஹா விபூதியில் பரமம் ப்ரஹ்ம யத் ஸ்வரூபம் ததோ அபி தத் ப்ரியதரம் அத்யத்புதம் மூர்த்தம் ப்ரஹ்ம யத் ரூபம் -யத் விக்ரஹம் அஸ்தி தச்ச யதா ஸூகம் விஹரதோ ஹரேரந்யாநி யாநி ஸர்வாணி ரூபாணி சந்தி தாநி ச தைஸ்தைர் அனுரூப ரூபா விபவை –விக்ரஹ விபவை -காடோப கூடா நி –ஸ்லிஷ்ட பரிஷ்வங்காந் யாஹூ -இத் யன்வய
பிரதம யோஜனையில் -ஹரேச் சாந்தாநந்த மஹா விபூதி-பரமம் ப்ரஹ்ம யத் ரூப மஸ்தி தச்ச ததோபி ப்ரியதரம் அத்யத்புதம் மூர்த்தம் ப்ரஹ்ம யத் ரூபமஸ்தி தச்ச யதா ஸூகம் விஹரதோ ஹரேரந்யாநி யாநி ஸர்வாணி ரூபாணி சந்தி தாநிச தைஸ்தைரநு ரூப ரூப விபவை –ஸ்வரூபாதி விபவை காடோப கூடாந்யாஹு -என்று ஸ்வரூபாதிகளை பிரத்யேகமாக சம்பந்தித்து யோஜித்துக் கொள்வது –
ஆக இஸ் ஸ்லோகத்தாலே–யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே -என்று தொடங்கி –தத் விஜிஜ்ஞாஸஸ்வ –என்றும் (யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே-யேந ஜாதாநி ஜீவந்தி -யத் பிரயந்த்யபி ஸம் விசந்தி-தத் விஜிஜ்ஞாஸஸ்வ-தத் ப்ரஹ்மே தி -தைத்ரியம் பிருகுவல்லி -எதனிடமிருந்தது இந்த பூதங்கள் பிறக்கின்றனவோ -உண்டானவை எதனால் உயிர் வாழ்கின்றனவோ -பிரளய காலத்தில் எதனிடம் லயிக்கின்றனவோ அதுவே ப்ரஹ்மம் என்று அதை அறிவாயாக – )-தஜ்ஜலாநிதி சாந்த உபாஸீத -)ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலாநிதி சாந்த உபாஸீத–(சாந்தோக்யம் -3 -14-1)அந்த ப்ரஹ்மத்தினிடம் இருந்தே பிறக்கையாலும் அதிலேயே லயிக்கையாலும் அதனாலேயே உயிர் வாழ்வதாலும் -இவையெல்லாம் ப்ரஹ்மம் அன்றோ என்றும் சாந்தனாய் உபாஸிக்கக் கடவன் )என்றும் –காரணந்து த்யேய (அதர்வசிகை )(காரண வஸ்துவே த்யானிக்கத் தக்கது )-என்றும் –அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாசா -1-1-1-(கர்மவிசாரத்தின் பிறகு அக்காரணத்தாலேயே ப்ரஹ்மத்தை அறிவதில் இச்சை உண்டாகிறது )-என்றும் -ஜன்மாத்யஸ்ய யத-1-1-2 (இவ்வுலகிலன் பிறப்பு முதலியவை எத்தனிடமிருந்தோ –அதுவே ப்ரஹ்மம் )என்றும் –த்யேயோ நாராயணஸ் ஸதா -(ஆலோட்ய ஸர்வ சாஸ்த்ராணி விசார்ய ச புந புந -இதமேகம் ஸூ நிஷ்பன்னம் த்யேயோ நாராயணஸ் ஸதா -எல்லா ஸாஸ்த்ரங்களையும் ஆராய்ந்து மறுபடியும் மறுபடியும் விசாரித்தாலும் நாராயணன் எப்போதும் த்யானிக்கத் தக்கவன் என்னும் பொருளே நன்கு தேறி நிற்கும் ) என்றும் த்யேயஸ் ஸதா -என்றும் -சொல்லுகிற ப்ரமாண பிரகாரத்திலே
பகவத் த்யேயத்வ ஹேதுவான ஜகத் காரணத்வத்தை ப்ரதிபாதிக்கிற நாராயண ஸப்த பர்யாயமாய் பூர்வ வாக்கியத்தில் படியே -ஸ்வீ க்ருத உபாயனுக்கு ப்ராப்தி பிரதிபந்தக ஸகல பாப நிவர்த்தந கத்வ ஹேதுகமாய் -ஸ்வ இதர ஸமஸ்த ஸஹாயாந பேஷ உபாயத்வ ப்ரகாசகமாய்–
உத்தர வாக்கியத்தில் படியே ப்ரார்த்திதப்ராயனுக்குப் பரம ப்ராப்யமான அனுபவ கைங்கர்யாதிகளில் ஸ்வ போக்த்ருத்வாதி ரூப விரோதி நிவ்ருத்திக்கும் வாசகமாய் இருக்கிற ஹரி ஸப்தத்தை ப்ரயோகித்து -தத் வாஸ்யனான ஸர்வேஸ்வரனுடைய ஸ்வரூபாதிகள் -புருஷகார ஏக லக்ஷணையாய் -ப்ராப்ய ஏக வேஷையாய் -கைங்கர்ய பிரதி சம்பந்திநியுமாய் -தத் வர்த்தகையுமான பிராட்டியினுடைய ஸ்வரூபாதிகளாலே காடாச் லிஷ்டங்களாய் இருக்கும் என்றும் திவ்ய தம்பதிகளுடைய நித்ய யோகத்தை அருளிச் செய்கையாலே-
ப்ரயத பாணி சரணமஹம் ப்ரபத்யே (கை கூப்பியவனாய் நான் சரண் அடைகிறேன்)-ஸ்வஸ்தி சம்பாதேஷ் வபயம்நோ அஸ்து (மங்களங்களுக்கு இடையூறு ஏற்படும்போது எங்களுக்கு பயமின்மை யுண்டாகட்டும் )-என்கிற ப்ரமாண ப்ராகாரத்திலே வாக்ய த்வ யுக்த உபாய உபேயங்களை விசதீகரித்து அருளினார் என்னுமிடம் வ்யக்தமாகிறது –
விஸ்வம் நாராயணம் ஹரிம் -என்று ஸ்ருதியும் நாராயண ஸப்தத்தோடு ஹரி ஸப்தத்தை ஸஹ படித்தது இறே –வாஸூ தேவம் ஜகத் யோநிம் நவ்மி நாராயணம் ஹரிம் (வாஸூ தேவ ஹரி சப்த வாஸ்யனாய் ஜகத்காரணனான ஹரியை நமஸ்கரிக்கிறேன் )-ரஷிஷ்யதி ஹரி ஸ்ரீ மான் ஸ்ரீ தாநிதி நிச்சயாத்(ஸ்ரீ மானான ஹரி அடியார்களைக் காத்து அருள்வான் என்னும் நிச்சயத்தினால் ) -என்று ஜகத் காரணத்வ வாசகமான நாராயண ஸப்தத்தோடு ஹரி ஸப்தத்தை பிரயோகித்தது -தத் வாஸ்யனோடே லஷ்மீ ஸம்பந்தத்தையும் அனுசந்தித்து உபாய வரணம் பண்ணி –நாராயணாய நாதாய ஹரயே ஸ்ரீ மதே நம(ஹரி ஸப்த வாஸ்யனான ஸ்ரீ மந் நாராயணாகிற ஸ்வாமிக்கு நமஸ்காரம் ) -என்று ஸ்வ போக்த்ருத்வாதி விரோதி நிவர்த்தகனாய் ஆர்த்தி ஹரனாகையாலே ஹரி ஸப்தம வாஸ்யனாய் -ஸர்வ சேஷியுமான நாராயணனும் -ஸர்வ ஸ்வாமிநியுமான பெரியபிராட்டியாருமான நித்ய யோகத்தை ப்ரதிபாதித்து அனுபவ கைங்கர்யாதிகளை பிரார்த்தித்தார்கள் இறே பரம வைதிகரும் –கதிர் கம்யச்சாசவ் ஹரி -என்னக் கடவது இறே (அவித்யாதோ தேவே பரிப்ருடதயா வா விதி தயா ஸ்வ பக்தேர் பூம்நா வா ஜகதி கதி மன்யா மவிதுஷாம் -கதிர் கம்யஸ் சாஸவ் ஹரிரிதி ஜிதந்தாஹ்வய மநோ ரஹஸ்யம் வ்யாஜஹ்ரே ஸ கலு பகவான் சவுனக முனி -பட்டர் முக்தகம் -பகவத் விஷயத்தில் அறியாமையினாலாவது நன்றாக அறிந்து இருப்பதினாலேயாவது தனது பக்தியின் ஆதிக்யத்திலாவது இவ்வுலகில் வேறு உபாயத்தை அறியாதவர்களுக்கு உபாயமும் உபேயமும் இந்த ஹரியே என்றும் ஜிதந்தே என்ற பெயரையுடைய மந்திரத்தின் ரஹஸ்யத்தை பகவான் சவுனகமுனி வெளிப்படுத்தினார் அன்றோ)-இதுதான் பகவான் ஹரி என்கிறபடியே உபாய பூர்த்தியையும் உபேய பூர்த்தியையும் உடைத்தான திருநாமம் இறே
—————
ஆக-சதுஸ் ஸ்லோகியாலே -ஹ்ரீச் ச தே லஷ்மீச் ச பத்ன்யவ் –விஷ்ணு பத்னீ -விஷ்ணோர் ஸ்ரீ -தேவ தேவ திவ்ய மஹிஷீம் –இத்யாதி ப்ரமாண ஸித்தமான விஷ்ணு பத்நீத்வத்தையும்
அஸ்ய ஈஸாநா ஜகத–ஈஸாநா தேவீ புவநஸ்ய -ஈஸ்வரீம் ஸர்வ பூதாநாம் -என்கிற ப்ரமாண ப்ரதிபாத்யமான உபய விபூதி சேஷித்வத்தையும் உடையளாய் –
தாம் பத்ம நேமிம் சரணமஹம் ப்ரபத்யே –என்கிறபடியே அசரண்ய சரண்யையாய் (பற்றிலார் பற்ற நின்றவன்)-
உதாரம் –என்கிறபடியே ஸகல புருஷார்த்த பிரதையாய்
சமன்வய அவிரோத சாதன பல விஷயமான சாரீரிக ஸாஸ்த்ர சதுர் அத்யாயீ சமதிகதனான
ஸர்வேஸ்வரனுக்கு
ஸர்வ பிரகார அபிமத அனுரூப ஸ்வரூப ரூப குணாதிகளை யுடையளாய்க் கொண்டு
தத் ஸ்வரூபாத் யவிநா பூதையாய் இருக்கையாலே
தேவ ஜூஷ்டாம் – (சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸா ஜ்வலந்தீம் ஸ்ரியம் லோகே தேஜுஷ்டா-முதாராம் தாம் பத்மினீமீம் ஸரண-மஹம் ப்ரபத்யே அலக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே-ஸ்ரீ ஸூக்தம் -5–உலகோர்க்கு குளிர்ச்சி வழங்குவதில் நிலவைப் போன்றவளும் பரந்த தேஜஸ்ஸூ மிக்கவளும் -தனது மகிமையால் சுடர் விட்டு ஒளிபவளும் தேவர்களால் ஸ்துதிக்கப்படுபவளும் வண்மை மிக்கவளும் -தாமரைப் பூவை ஏந்திக் கொண்டு இருப்பவளும் ஈம் என்ற பீஜ மந்த்ரத்த்தின் பொருளாகத் திகழ்பவளும்-அந்த மனதிற்கு உகந்த ஸ்ரீ மஹா லஷ்மியை–அடியேன் சரணமாகப் பற்றுகிறேன் –உன்னை வேண்டுகிறேன்-என்னிடம் உள்ள அலஷ்மிகள் நசிக்கட்டும்)என்கிற தந் நித்ய யோகத்தையும் உடையளாய் இருந்துள்ள பெரிய பிராட்டியாருடைய வைபவத்தை பஹு முகமாகப் பேசி அனுபவித்து
இப்படி ஸர்வ பிரகாரத்தாலும் மாத்ரு தேவோ பவ -என்கிற வேதாந்த வாக்யார்த்தத்தை ஸ்வ ஆஸ்ரிதரான அஸ்மதாதிகளும் -அறிந்து -அனுசந்தித்து -உஜ்ஜீவிக்கும் படி உபகரித்து அருளினாராய்த்து –
(மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ ஆச்சார்ய தேவோ பவ அதிதி தேவோ பவ -என்று கொண்டு இச் சேதனனுக்கு ஸ்வரூப அநுரூபமாக உபகாரகராகிறார் -1-அகில ஜகன் மாதாவான பிராட்டியும் -2-அவ்வயயஸ் பிதாவான ஈஸ்வரனும் -3-அறியாதது அறிவித்த ஆச்சார்யனும் -4-அதிதி ஸப்த வாஸ்யனான அவனடியாரும் –என்று இந் நால்வர் பக்கலிலும் உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலே உத்தேச்ய பிரதிபத்தி பண்ணி உஜ்ஜீவிக்கக் கடவன் என்றும் வேதாந்தங்களிலே வ்யாக்யாதமாக விதிக்கையாலே விசேஷஞ்ஞர் எல்லோரும் விரும்பி அனுஷ்ட்டிக்க வேண்டும்படி விசேஷ யர்த்தங்களாய் இறே இவ்வர்த்தங்கள் தான் இருப்பது)
ஸ்தோத்ர-சதுஸ் ஸ்லோகீ -இரண்டிலும் -நாலும் உண்டேயாகிலும் ஒன்றுக்கு பிரதம வாக்யத்திலே நோக்கு -ஒன்றுக்கு த்வதீய வாக்யத்திலே நோக்கு -ஸ்வாதயந் நிஹ ஸர்வேஷாம் த்ரயந்தார்த்தம் ஸூ துர்க்ரஹம் ஸ்தோத்ர யாமாஸ (யோகீந்த்ரஸ் தம் வந்தே யாமுநாஹ்வயம் -ஆளவந்தார் தனியன்-அறியவரிதான வேதாந்தார்த்தத்தை அனைவருக்கும் ரஸிக்கச் செய்து கொண்டு ஸ்தோத்ரம் செய்தருளின யாமுந முனிவரை ஸ்துதிக்கிறேன்)என்று கொண்டு துர்க்ரஹமான வேதாந்தார்த்தங்களை ஸூக்ரஹ ஸ்வாதுக்களாம் படி ஸ்தோத்ரமாகப் பண்ணி யருளினார் என்கையாலும் இப்பிரபந்தங்களில் ப்ரதிபாதிக்கிற அர்த்தங்களை நிரூபித்துப் பார்த்தால் அவ்வர்த்தங்களாயே இருக்கையாலும் இந்நாலு வாக்யத்தையும் இவற்றுக்கு வாக்யார்த்தமாக யோஜிக்கலாம் இறே
ஹேலாயாம் அகிலம் சராசரம் இதம் போகே விபூதி: பரா:
தந்யா: தே பரிசார கர்மணி ஸதா பஸ்யந்தி யே ஸூரய:
ஸ்ரீரங்கேஸ்வர தேவி கேவல க்ருபா நிர்வாஹ்ய வர்கே வயம்
சேஷித்வே பரம: புமாந் பரிகரா ஹ்யேதே தவ ஸ்பாரணே–22–
ஸ்ரீரங்கநாதனின் நாயகியே! தாயே! அசைகின்ற பொருள்களும் அசையாத பொருள்களும் நிறைந்த இந்த உலகம் உனது பொழுதுபோக்கிற்காகவே உள்ளது.
என்றும் உன்னையும் நம்பெருமாளையும் விட்டுப் பிரியாமல் வணங்கியபடி நின்றுள்ள,
புண்ணியம் பல செய்தவர்களான நித்ய ஸூரிகள் (கருடன், ஆதிசேஷன், முதலானோர்)
உனது கட்டளைக்காகவே காத்துக் கிடக்கின்றனர்.
உனது கருணையை வெளிப்படுத்துவதற்காகவே, அந்தக் கருணை உபயோகப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த உலகத்தில் நாங்கள் உள்ளோம்.
உனக்குப் பலவகையிலும் உதவிட நம்பெருமாள் உள்ளான்.
ஆக உனக்காக உள்ளவை என்பது எண்ணில் அடங்காதவை ஆகும்.
மஹதி திவ்ய யோக பர்யங்கே அனந்த போகினி ஸ்ரீ மத வைகுண்ட ஐஸ்வர்யாதி
திவ்ய லோகம் ஆத்ம காந்த்யா விஸ்வம் ஆப்யா யந்த்யா சேஷ சேஷாச நாதி சர்வ பரிஜனம்
பகவத தத்தத வஸ்தோ சித பரிசர்யாயாம் ஆஜ்ஞா பயந்த்யா சீல ரூப குண விலாசாதிபி
ஆத்ம அனுரூபயா ஸ்ரீ யா சஹ ஆஸீனம்-(ஸ்ரீ வைகுண்ட கத்யம்)ஸ்ரீமத் வைகுண்ட நகரம் முதலான திவ்ய லோகங்கள் எல்லாவற்றையும் தன் காந்தியால் போஷிப்பவளாய் சேஷன் விஷ்வக்சேனர் முதலான பரிஜனங்கள் அனைவரையும் அந்தவந்த நிலைகளுக்குத் தகுந்த கைங்கர்யங்களிலே ஆஜ்ஜை இடுபவளாய் -சீல ரூப குண விலாஸாதிகளாலே தன்னை ஒத்தவளான ஸ்ரீ தேவியுடன் திருவனந்தாழ்வான் மடியிலே எழுந்தருளி இருப்பவனை
யத் பதாம்போஜ கடிதா பிரணதிர் துர்லபாந் யபி
பதாநி பரமாம் முக்திம் ஸூதே தாம் ஸ்ரீ யம் ஆஸ்ரயே—ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை ஸ்வாமிகள் அருளிச் செய்த தனியன்–யாருடைய திருவடித் தாமரைகளை சேர்த்து சமர்ப்பிக்கப்பட்ட ப்ரணாமமானது -துர்லபமான பெரிய பதங்களையும் அளித்து அதற்கும் மேலான -தன்னில் மேம்பட்ட -கைவல்யமும் முக்தி தானே -ஆகவே இங்கு பரமமான ஸ்ரீ வைகுண்டம் ப்ராப்தியையும் அருளும் -அப்படிப்பட்ட ஸ்ரீ மஹா லஷ்மியை வணங்குகிறேன்
—————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
