Archive for February, 2023

ஸ்ரீ ப்ரஹ்ம புராணம் —ஸ்ரீ சீதாராம ஸ்வாமிகள் தொகுத்தவை-

February 24, 2023

ப்ரஹ்ம புராணம்
– ஆதி புராணம்
– 246 அதிகாரங்களையும், 14,000 பாடல்களையும் கொண்டது
– 12 ஆண்டுகள் நைமிசாரண்யத்தில் நடந்த யாகத்தில் ரோம ஹர்ஷணர் கூறியது.
– புராண லக்ஷணங்கள்: அண்டங்கள், படைப்பும் ஒடுக்கமும், மன்வந்த்ரங்கள், ஸூர்ய சந்த்ர வம்ச வர்ணனை, அரச பரம்பரைகள்
– ப்ரஹ்மா தக்ஷனுக்குக் கூறியது

குறிப்புகள்:
– தக்ஷன் ப்ரஹ்மாவின் புத்ரன் அல்ல !!
– பல்லுயிர்கள், தேவர், அசுரர் படைப்பு விதம்
– குமரன் தோற்றம்
– படைப்புகளின் அதிபதிகள்

இக்ஷ்வாஹு பரம்பரை பெயர்க் காரணங்கள்

தமிழ் மன்னர் பரம்பரை குறிப்புகள்

கோனார்க் கோவிலும், பன்னிரெண்டு ஆதித்யர்களும், அஷ்டோத்ரமும்

பூரி ஜகன்னாதர், புவனேஶ்வர் வரலாறு
– கௌதம கங்கை பிறப்பும், சிறப்பும்

ததீசி முனிவரும், வஜ்ராயுதமும்
– மணிகுண்டலனும், விபீஷணனும்

யோகம், காயத்ரீ மஹிமை
எங்கும் நீர் சூழ்ந்திருந்த உலகில் நாராயணன் சயனித்திருக்க, அந்த நீரிலிருந்து வெளியே வந்த
பொன்னிற முட்டையின் இரு பகுதிகளாக ஆகாயம், பூமியையும், அவைகளில் திசைகள், மொழிகள்,
உணர்வுகள், காலங்களை ஸ்வயம்புவான நான் உண்டாக்கினேன்.
மனதால் ஸப்த ரிஷிகளையும், ருத்ரன், சனகாதியர்களையும் படைத்தேன், ஸ்வாயம்புவ மனு-ஶதரூபையிடம் வீரன்,
ப்ரியவ்ரதன், உத்தானபாதனை உண்டாக்கினேன்.
உத்தானபாதன் மகன் த்ருவன், அவன் பரம்பரையில் வந்த ப்ராசீனபர்ஹிக்கு ப்ரசேதனர்கள் எனும் பத்து பேர் பிறந்தனர்.
அவர்கள் தவத்தில் நாட்டம் கொண்டு ராஜ்யத்தை விட்டதால் எங்கும் காடாய் பெருகியது.
அவர்கள் கோபம் கொண்டு வாயு, அக்னியை தோற்றுவித்து காட்டை அழிக்கலாயினர்.
இதைத் தடுத்து சந்த்ரன் மரீஷை என்ற பெண்ணை அவர்களுக்கு மணம் முடித்து, அவள் மூலம் அரசாள
ஒருவனை உண்டாக்குமாறு கூற, அப்படியே அவர்கள் தக்ஷனை உண்டு பண்ணினர்.
(தக்ஷ ப்ரஜாபதி ப்ரஹ்மன் கால் கட்டை விரலிலிருந்து தோன்றினான் என்பது வேறொரு சதுர்யுகத்தில்).

தக்ஷன் ஆட்சியில் தான் உண்டுபண்ணின ஆயிரக்கணக்கானவர்களையும் ஒவ்வொரு முறையும்
நாரதர் தவம் செய்ய அனுப்பி விட, தக்ஷன் 60 பெண்களை படைத்து, 27 பெண்களை சோமனுக்கும்,
பத்துப் பெண்களை தர்ம தேவதைக்கும், 13 பேர்களை கஶ்யபருக்கும், எஞ்சிய பெண்களை அரிஷ்டநேமி,
ஆங்கீரசா முதலிய முனிவர்களுக்கும் , ப்ரியா என்பவளை பிரம்மனுக்கும் மணம் முடித்தான்.
தர்ம தேவதையை மணந்த பத்துப் பெண்களுள் அருந்ததிக்கு ‘உலகத்திலுள்ள பொருள்கள்’எனும் குழந்தைகளும்,
வசுவிற்கு அஷ்டவசுக்களும் பிறந்தன. அஷ்ட வசுக்களுள் ஒருவனாகிய அனலன் என்பவனுக்குக் குமரன் பிறந்தான்.

கார்த்திகைப் பெண்கள் வளர்த்தமையின் அவன் கார்த்திகேயன் எனப் பெயர் பெற்றான்.
அஷ்ட வசுக்களுள் ஒருவனாகிய பிரபசாவுக்கு விஸ்வகர்மா பிள்ளையாகப் பிறந்தான்.
சாத்யாவின் மக்கள் சாத்ய தேவர்கள், விஶ்வாவின் மக்கள் விஶ்வேதேவர்கள்,
அதிதிக்கு 12 ஆதித்தர்களும், திதிக்கு ஹிரண்யன், ஹிரண்யாக்ஷன் முதலிய அரக்கர்களும்,
அவர்கள் சகோதரியாகிய சிம்ஹிகாவிற்கு வாதாபி, வில்வலன், மாரீசன் முதலிய அரக்கர்களும் தோன்றினர்.
தானவர் வம்சத்தில் பௌலமர், காலகேயர்கள் தோன்றினர்,
அரிஷ்டாவிற்கு(அர்ஷிதா) கந்தர்வர்களும், காசாவிற்கு யக்ஷர்களும், சுரபிக்கு பசுக்களும், எருமைகளும்,
வினதைக்கு அருணனும், கருடனும், தாம்ராவின் ஆறு பெண்களிடம் ஆந்தை, கழுகு, ராஜாளி, காக்கை,
நீர்ப்பறவைகள், குதிரை, ஒட்டகங்கள், கழுதைகளும், க்ரோதவசைக்கு நாகர்களும், இளையிடம் கொடி, புதர், மரங்களும்,
கத்ருவுக்கு அனந்தன், வாசுகி, தக்ஷன், நஹுஷன் போன்ற நாகர்களும், முனிக்கு அப்ஸரஸ்ஸுகளும் தோன்றினர்.

திதி தேவர்களை வெல்ல ஒரு பிள்ளை வேண்டி வ்ரதமிருக்கையில் விரதபங்கமான சமயத்தில்
இந்த்ரன் அணுவாய் நுழைந்து அந்த கருவை 7 துண்டுகளாகவும், மீண்டும் 49 துண்டுகளாகவும் சேதித்து விட
அவர்கள் ஸப்த மருத்துக்களாக அவனுக்கு நண்பனாகவே பிறந்து போனார்கள்.

துருவன் பரம்பரையில் வந்து நேர்மையாக அரசாண்டவன் அங்கன். அவன் மனைவியாகிய சுனிதா மிருத்யுவின் மகளாவாள்.
அவள் மகனான வேனன் மிருத்யுவுடன் சேர்ந்து கொண்டு எல்லையற்ற அகங்காரம் கொண்டவனாக திரிந்தான்.
அத்ரி முனிவர் வேனன் வலக்காலைக் கடைந்து. மிகக் குரூரமானதும், கொடியதும், பயங்கர மானதும்,
கரியதுமான குள்ளன் ஒருவனை வெளிக்கொணர்ந்தார்.
நிஷிதர்(உட்கார்) என்று அவனை அத்ரி கூறினார்.
துஷாரர்கள், துண்டுரர்கள், நிஷாதர்கள் இவன் வழி வந்தவர்கள்.
மீண்டும் வேனன் கையை கடைந்தபோது ஒளி வடிவுடன் சிறந்த கவசம் பூண்டு ப்ருது வெளிப்பட்டான்.

வேனன் இறந்து விட்டான். அவனை பூமிக்கு அரசனாக்கிய ப்ரஹ்மா, அவனுக்கு உதவி புரிய மரம், செடி, கொடிகள், விண்மீன்கள், கோள்கள்,
யாகங்கள், தியானம், வேதியர்களுக்கு சோமனையும், வருணனை கடலுக்கும், குபேரனை செல்வத்திற்கும்
அரக்கர்களுக்கும். பன்னிரண்டு ஆதித்தியர்களுக்கும் விஷ்ணுவையும், அஷ்ட வசுக்களுக்கு அக்னியையும்,
பிரஜாபதிகளுக்கு தக்ஷனையும், 49 மருத்துக்களுக்கும் இந்திரனையும், தைத்திரியர்கள், தானவர்கள்களுக்கு பிரஹலாதனையும், பிதுர்க்களுக்கு யமனையும், யட்சர்கள், ராட்சதர்கள்,
பிசாசுகளுக்கு ருத்ரனையும், மலைகளுக்கு இமவானையும், நதிகளுக்குக் கடலையும்,
பாம்புகளுக்கு வாசுகியையும், கந்தர்வர்களுக்கு சித்ரரதனையும், பறவைகளுக்குக் கருடனையும்,
யானைகளுக்கு ஐராவதத்தையும் தலைவர்களாக நியமித்தார். நான்கு திசைகளுக்கும் நான்கு தலைவர்களை நியமித்தார்.

ப்ருதுவின் ஆட்சியை புகழ்ந்து பாட முனிவர்கள் யாக வேள்வியில் சூதர், மாகதர்களை தோற்றுவித்தனர்.
அவர்களால் ப்ருதுவின் புகழை அறிந்து வறட்சியில் இருந்த மக்கள் அவனிடம் முறையிட அவன் கோபம் கொண்டு பூமி தேவியை மிரட்ட,
பசுவின் உருவில் இருந்த அவள் மிரண்டு மலைகளை சமவெளிகளாக்கி நீரைப் பாய்ச்சி வளம் கொழிக்க
செய்து கொள்ளும் முறையை அவனுக்குக் கூற அவனும் அப்படியே செய்து நல்லாட்சி புரிந்தான்.

மன்வந்த்ரங்கள்: இதுவரை சுவயம்புமனு முதல் ஆறு மனுக்கள் தோன்றி மறைந்துள்ளனர்.
இப்பொழுது நடைபெறும் ஏழாவது மன்வந்திரத்திற்குத் தலைவன் ‘வைவஸ்வத மனு.
நான்கு யுகங்களும் சேர்ந்து ஒரு மகாயுகம். எழுபத்தோரு மகாயுகங்கள் ஒரு மன்வந்த்ரம்.
ஒவ்வொரு மன்வந்திரத்திலும் அதற்குரிய மனு, இந்திரன், தேவர்கள், முனிவர்கள் என்பவர்கள் மாறுவார்கள்.
இந்தக் கலியுகத்தில் அத்ரி, வசிஷ்டர், காசியபர், கெளதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர் மற்றும் ஜமதக்கினி
ஸப்த ரிஷிகள். 12 ஆதித்யர்கள், 11 ருத்ரர்கள், 8 வசுக்கள், 2 அஶ்வினி தேவர்களே
இந்த மன்வந்த்ரத்திற்கு தேவர்கள்.
பதினான்கு மன்வந்த்ரங்கள் கொண்டது ஒரு கல்பம்.

ஸூர்ய வம்சம்: ஆதித்யனுக்கு ஸம்ஞா, சாயா என்று இரு மனைவிகள்.
சம்ஞாவிற்கு வைவஸ்வத மனு, யமன், யமுனையும், சாயாவிற்கு சாவர்ணி மனுவும் தோன்றினார்கள்.
வைவஸ்வத மனு யாகப்பயனாக இக்ஷ்வாஹு, ந்ருகன், த்ருஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன், நாபாகன், அரிஷ்டன்,
கரூஷன், வ்ருஷத்ரன் என்ற ஒன்பது மைந்தர்களையும், இளை எனும் பெண்ணையும் பெற்றான்.
இளைக்கும் சந்த்ரன் மகனான புதனுக்கும் புரூரவஸ் பிறந்தா, இளை ஸுத்யும்னன் எனும் ஆணாக மாறி விட்டான்,
அவனுக்கு உத்கலன், கயா, வினதஷ்வா எனும் புத்ரர்கள் பிறந்தனர்.
உத்கலன் கிழக்கையும், கயையை கயாவும், வினதஷ்வா மேற்கையும், இளையின் பூமியை புரூரவஸ்ஸும் ஆண்டனர்,

இக்ஷ்வாஹுவின் நூறு மகன்கள் மூத்தவன் விகுக்ஷி(சசகன்) யாக வேள்விக்கு கொண்டு வரவேண்டிய இறைச்சியை பசியால் உண்டுவிட,
வஸிஷ்டர் ஆணைப்படி நாடு கடத்தப்பட்டு, இக்ஷ்வாஹுவுக்கு பின் வந்து அயோத்தியை ஆண்டான்.
(சசக – முயல் இறைச்சி). விகுக்ஷியின் மகன் காகுஸ்தன். அந்த வம்சத்தில் வ்ரிஹதஷ்யன் மகன் குபலாஶ்வன்,
இவன் உதங்க முனிவன் வேண்டுதலில் தன் நூறு புத்ரர்களுடன் சென்று கடற்கரையில் தன் மூச்சுக்காற்றால்
மணல் மேடுகளை உண்டாக்கி எல்லாரையும் ஹிம்சித்துக்கொண்டிருந்த துந்துபி எனும் அரக்கனை அழித்தான்,

த்ரிதஸ்வன், சந்த்ரஶ்வன், கபிலஶ்வன் என்ற புத்ரர்கள் தப்பினர்.
இதனால் இவன் துந்துமாறன் எனும் பெயரும் பெற்றான். துந்துமாறனுக்குப் பின் த்ரிதஸ்வனும் அவன் வழியில் த்ரையாருணியும் ஆண்டனர்.
த்ரையாருணி மகன் சத்யவ்ரதன் துஷ்டனானபடியால் வஸிஷ்டரால் காட்டுக்கு விரட்டப்பட்டான்.
த்ரையாருணி தவம் செய்ய வனம் புகுந்ததும் அரசனின்றி பஞ்சம் படர்ந்தது பன்னிரண்டு ஆண்டுகள்.
அப்போது விஶ்வாமித்ரர் காட்டில் தவத்தில் இருந்தார். நாட்டில் இருந்த அவர் மனைவி தன் மகனை கழுத்தில் கயிறு கட்டி (காலவன்)
விற்க முற்பட்டபோது சத்யவ்ரதன் அவர்களை காத்து, பசித்த அவர்களுக்கு வஸிஷ்டரின் பசுவை கொன்று, தானும் உண்டு அவர்களுக்கும் தந்து காத்தான்.
வஸிஷ்டர் அவன் மீது தந்தை சொல் கேளாதது, பசு கடத்தல், பசு வதை என்று மூன்று குற்றங்களை சாட்டினார்.
அன்றிலிருந்து அவன் த்ரிசங்கு எனப்பட்டான். விஶ்வாமித்ரர் காட்டிலிருந்து வந்து அவனையே அரசனாக்கி ஆளச்செய்தார்.
அவனுக்கு ஸ்வர்க்கத்தையும் படைத்தார்.

திரிசங்குவின் மகன் அரிச்சந்திரன். அவன் பரம்பரையில் வந்தவன் பாஹு, பகைவர்கள் படையெடுத்தபோது
கர்ப்பிணி மனைவியோடு வனம் புகுந்த அவன் அங்கேயே இறந்தான்.
அவன் மனைவியைக் காத்து அவுர முனிவர் வளர்த்துவந்தார்.
அவள் சக்களத்தி கொடுத்த விஷத்தோடே பிறந்த குழந்தை சகரன்.
அவனை வளர்த்த முனிவர் அனுக்ரஹத்தாலும், உபதேசித்த ஆக்னேய அஸ்த்ரத்தாலும் அவன்
கோனசர்ப்பர், மஹிஷகர், தார்வர், சோழ, கேரளர்களை வென்றான், வஸிஷ்டர் உத்தரவால் அவர்களை கொல்லாமல் விட்டான்.
சகரனுக்கு கேசினி, சுமதி என்று இரு மகன்கள். அவுர முனிவர் அருளால் கேசினிக்கு பஞ்ச ஜனனும், சுமதிக்கு
நெய்க்குண்டத்தில் அறுபதினாயிரம் பிள்ளைகளும் பிறந்தனர்.
இவர்களில் வர்ஹிகேது, ஸுகேது, பஞ்சஜனன் ஆகியோர் தவிர ஏனையோர் தென் கடற்கரையில் கபிலர் பார்வையால் சாம்பலாயினர்,
பஞ்சஜனன் மகன் அம்ஶுமான், அவன் மகன் திலீபன். அவன் மகனாகிய பகீரதன்.

இவர்கள் வழியில் தோன்றியவன் ரகு.
இவனுடைய பேரனே பிரசித்தி பெற்ற இராமனின் தந்தையாகிய தசரதன், அஜனின் மகன்.

சந்த்ர வம்ஶம்:
ப்ரஹ்மாவின் மானஸீக புத்ரர்களில் ஒருவரான அத்ரியின் தவப்பலனாக சோமன் பிறந்தான்.
அவன் பல்லாண்டுகள் தவமிருந்து செடி, கொடி, மரங்கள், பிராமணர்கள், சமுத்திரங்களின் தலைமைப் பதவியை ப்ரஹ்மனால் கொடுக்கப்பட்டான்.
ராஜசூய யாகமும் செய்த அவன் அகந்தையால் தேவகுரு ப்ருஹஸ்பதியின் மனைவியைக் கடத்திச் சென்று அவளிடம் புதனை மகனாகப் பெற்றான்.
அவளை மீட்க ப்ருஹஸ்பதியின் பக்கம் தேவர்களும், சிவபெருமானும் சோமனின் பக்கம் சுக்ராச்சார்யாருடன் அசுரர்களும் போரிட்டனர்.
ப்ரஹ்மா இதை நிறுத்தி தாரையை ப்ருஹஸ்பதிக்கு மீட்டுக்கொடுத்தார். தேவகுரு புதனை ஏற்கவில்லை.

புதனுக்கும் இளைக்கும் தோன்றியவன் புரூரவஸ். அந்த வம்சத்தில் வந்தவன் நகுஷன்,
அவனுக்கும் விரஜாவுக்கும் பிறந்தவர்கள் யதி, யயாதி, ஸம்யாதி, ஆயாதி, வியாதி, க்ருதி என்ற அறுவர்.
யயாதி, சுக்ரரின் மகள் தேவயானியையும், தானவர் மகளான ஶ்ரமிஷ்டையையும் மணந்து கொண்டான்.
தேவயானிக்கு யது, துர்வஸு என்ற புதல்வர்களும், த்ருஹ்யு, அனு, புரு மூவர் ஷ்ரமிஷ்டாவிற்கும் பிறந்தனர்.

புருவிடம் இளமையைப் பெற்றுக் கொண்ட யயாதி, நீண்ட காலம் உலகைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து மகனிடம் அவன் இளமையைத் தந்தான்.
புருவின் பரம்பரையில் வந்தவன் பரதகண்டம் என்று பெயர் வரக் காரணமான பரதனாவான்.
பரதனின் பரம்பரையில் வந்த ‘குரு’ என்ற மன்னனின் பரம்பரையில் வந்தவர்களே கெளரவர்கள்.

யயாதி மன்னனின் மகனாகிய துர்வாசுவின் பரம்பரையில் வந்தவர்களே பாண்டியர்கள், கேரளர்கள், சோழர்கள்.

த்ருஹ்யு பரம்பரையில் வந்தவர்களே காந்தார மன்னனாகிய சகுனி முதலிய காந்தார தேசத்தவர்,
யயாதியின் பேரனாகிய சஹஸ்ரதனின் வழியில் வந்தவனே இராவணனை வென்ற கார்த்தவீர்யார்ஜுனன், இவர்கள் ஹைதயர்கள் எனப்படுவர்.
யதுவிற்கு ஸஹஸ்ரதன், பயோதன், க்ரோஷ்டு, நீலன், அஞ்சிகன் புதல்வர்கள். குரோஷ்டுவின் வழியில் வந்தவர்கள் வ்ருஷ்ணிகள், அந்தகர்கள்.

பூமண்டல வர்ணனை: விஷ்ணு புராணத்தில் விரிவாக. கல்பங்கள் முடியும் போது பூ, புவ:, ஸுவ: லோகங்கள் மட்டுமே அழியும்.
உத்கல (ஒரிஸ்ஸா) தேசத்தில் கோனார்க் அல்லது கோனாதித்யனுக்குக் கோவில் உள்ளது (அர்க்கன், ஆதித்யன் சூர்யனின் பேர்கள்).
இக் கோயிலின் எதிரே கிழக்கு முகமாக நின்று கொண்டு எதிரே உள்ள மணலில், எட்டு இதழ்களை உடைய ஒரு தாமரையை
சந்தனக் கட்டையால் வரைய வேண்டும். அத்தாமரையின் நடுவே ஒரு தாமிரப் பாத்திரத்தில் நெய், எள், தண்ணிர், சிவந்த சந்தனக் கட்டை,
சிவப்புப் பூக்கள், தர்ப்பை ஆகியவற்றைப் போட்டு, தாமரையின் நடுவே அப்பாத்திரத்தை வைத்து
சூரியன் புறப்படுகின்ற நேரத்தில் வழிபட்டால் முன் ஏழு ஜென்மங் களில் செய்த பாவங்களைப் போக்கிக் கொள்ளலாம்.

ஒரே ஆதித்தன் பன்னிரண்டு வகையான பணிகளைச் செய்கிறான்.
இந்திரன் அசுரர்களை அழிக்கிறான். தத்தன் உயிர்களைப் படைக்கிறான். பர்ஜன்யன் மழை பொழிவிக்கிறான்.
த்வஷ்டா தாவரங்களிலும், பூஷ்ணன் தான்யங்களை உற்பத்தி செய்கிறான், அர்யமாவாக காற்றை வீசுகிறான்,
பகலனாக எல்லா உயிர்களிலும் இருக்கிறான். விவஸ்வான் நெருப்பிலும், விஷ்ணு பகைவர்களையும் அழிக்கிறான்.
அம்சுமான் காற்றிலும், வருணன் நீரில், மித்ரன் சந்த்ரனிலும், சமுத்ரத்திலும் இருக்கிறான்.

இப்படி ஒரே சூர்யன் 12 மாதங்களில் 12 அணுக்களில் ஒளிர்கிறான். 12 சிறப்புப் பெயர்களும் அவனுக்குத் தரப்பட்டுள்ளன.
அவை ஆதித்யா, சவிதா, சூர்யன், மித்ரன், அர்க்கன், பிரபாகரன், மார்த்தாண்டன், பாஸ்கரன், பானு, திவாகரன்,
சித்ரபானு, ரவி. தவிர நான்முகனே சூரியனுக்கு 108 பெயர்களைக் கூறுகிறார் பிரம்ம புராணத்தில்.

பூரி ஜகன்னாதர்: சத்தியயுகத்தில் மாளவ தேசத்தை அவந்தி என்னும் ஊரினைத் தலைநகராகக் கொண்டு
இந்திரத்யும்னன் என்னும் மன்னன் ஆட்சி செய்து வந்தான்.
ஷிப்ரா நதி பாய்ந்தோடும் அவந்தி நகரத்தில், அந்நதிக் கரையில் மகாகாளர் கோயிலும், கோவிந்தஸ்வாமி,
விக்ரம ஸ்வாமி என்ற இரண்டு விஷ்ணு ஆலயங்களும் ஏற்கெனவே இருந்தன.
மஹாகாளரை ஒருமுறை வழிபட்டால் ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்ததற்கான பலன் உண்டு,
இதெல்லாம் தாண்டி ஒரு புது ஆலயம் விஷ்ணுவுக்கு எழுப்ப இடம் தேடி புருஷோத்தம க்ஷேத்ரம் அடைந்தான்.
பல காலத்திற்கு முன் விஷ்ணுவின் சக்தியின் பெரும்பகுதி பெற்ற மகா விஷ்ணு விக்கிரகம் இந்த இடத்தில் இருந்தது.
யார் வந்து அதனை ஒருமுறை தரிசித்தாலும் அவருடைய பாபங்கள் அனைத்தும் அப்பொழுதே நீங்கிவிடும். எனவே மக்கள் அனைவரும் இங்கு வந்து இந்தச் சிலையை தரிசித்து பாபங்களினின்று நீங்கினதால் எமனுக்கு வேலையில்லாமல் போயிற்று.
எமன் மகாவிஷ்ணுவை வணங்கித் தன் குறையைத் தெரிவித்தான்.
அவனுடைய குறையைப் போக்க வேண்டி மகாவிஷ்ணு இந்தப் பிரசித்திபெற்ற சிலையை மணலுக்குள் புதைத்து விட்டார்.

அந்த க்ஷேத்ரத்திலே தான் இப்போது கோயில் நிர்மாணம் தொடங்கு வதற்கு முன் ஒர் அஸ்வமேத யாகம் செய்யவேண்டுமென
அரசன் விரும்பியதால் பொன்னாலேயே ஒரு மண்டபம் தயாரிக்கப்பட்டது.
பரத கண்டம் முழுவதிலிருந்து மன்னரும், மக்களும் பொன்னையும் பொருளையும் கொண்டு வந்து சேர்த்தனர்.
எந்த விக்கிரகத்தை எவ்வாறு தேர்ந்தெடுத்து இங்கே பிரதிஷ்டை செய்வது என்ற கவலையுடன் உறங்கிய அரசனுக்கு
விஷ்ணு கனவில் தோன்றி சமுத்திரக் கரையில் உள்ள மரத்தை அடையாளம் காட்டி அதனைப் பயன்படுத்திச் சிலைகள் செய்ய வழிகாட்டினார்.
மறுநாள் அந்த மரத்தை வெட்டித் தயாரித்த பொழுது விஷ்ணுவும், விஸ்வகர்மாவும் அந்தணர் வேடத்தில் வந்து உடனடியாக
பலராமன், கிருஷ்ணன், சுபத்திரை ஆகிய மூவருடைய சிலைகளையும் விநாடி நேரத்தில் செய்து முடித்தனர்.

12 வருட பிரளய நெருப்பை அணைக்கும் மாமழை பன்னிரண்டு வருடங்கள் விடாது பெய்தது.
இப்பொழுது நெருப்புக்குப் பதிலாக எங்கும் நீர் மயம். நீரில் மிதந்த ஆலமரத்தின் கிளை ஒன்றில் ஒரு பொன் படுக்கையில்
பாலகன் ஒருவன் படுத்திருக்கக் கண்டார் மார்க்கண்டேயர்.
அப்பாலகனின் ஆணையின்படி அவன் வாயினுள் சென்றார் மார்க்கண்டேயர். பாலகன் வயிற்றினுள்
அண்டங்கள் அனைத்தும் பாதுகாப்புடன் இருப்பது கண்ட மார்க்கண்டேயர் வெளியே வந்து விஷ்ணுவை துதித்துக் கொண்டு பல்லாண்டுகள் அவருடனேயே இருந்தார்.
அவர் தவத்தை மெச்சிய விஷ்ணு, அவர் வேண்டும் வரத்தைக் கொடுப்பதாகக் கூறினார்.
உடனே மார்க்கண்டேயர் புருஷோத்தம க்ஷேத்திரத்தில் சிவனுக்கு ஒரு கோயில் அமைக்க வேண்டும்.
மக்கள் மனத்தில் அரியும் சிவனும் ஒன்று என்ற எண்ணம் நிலைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.
விஷ்ணுவும் அதற்கிசையவே சிவபெருமானுக்கு “புவனேஷ்வர்” ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது.
ஸ்வேதா என்ற நேர்மையுள்ள அரசன் ஜகந்நாதர் ஆலயத்திற்கு அருகில் ஸ்வேத மாதவன் என்ற பெயருடைய விஷ்ணு ஆலயத்தைக் கட்டினார்.

மஹாபலி கதை: மற்ற புராணங்களில் விரிவாக.
கங்கை கௌதமியான கதை:
விக்ரம அவதாரத்தில் ப்ரஹ்மன் கமண்டல நீரால் விஷ்ணுவின் பாதத்தைக் கழுவ, அது நாற்புறங்களில் பிரிந்து ஓடியது.
ஒரு பகுதி சிவனார் தலையில் கங்கையானது. பார்வதியின் கவலையைப் போக்க கங்கையை
சிவன் தலையிலிருந்து கீழே இறக்க விக்னேசர் விரும்பினார்.
எங்கும் பஞ்சம் படர்ந்திருந்த போது கௌதமர் ஆஶ்ரமம் மட்டும் செழிப்பாயிருக்கக்கண்டு தேவர்கள் அங்கிருந்தனர்.
பார்வதியின் தோழி ஜயாவை ஒரு பசுவாக அவர் ஆஶ்ரமத்தில் அங்குமிங்கும் ஓடச்சொன்னார்.
கௌதமர் ஒரு தர்ப்பையால் அதை விரட்ட முயன்ற போது அது இறந்து விட்டது.
பசுவைக் கொன்ற காரணத்தால் அங்கிருந்த புறப்பட்ட தேவர்கள் இருக்க, விக்னேசர் கங்கையை வரவழைத்து அப்பசுவை எழுப்பச்சொன்னார்.
அப்படியே கௌதமர் தவம் செய்து சாதித்தார்.

கபோத தீர்த்தம்: (கபோத – புறா) கங்கையின் ஒரு படித்துறை. ஜோடிகளில் ஒரு புறாவை வேடன் பிடித்து,
இரவு உறங்கும்போது மற்றொரு புறா அவன் குளிரைப் போக்க நெருப்பை மூட்டி அதில் விழுந்து உயிரை விட்டது,
இதைக் கண்டு இரங்கிய வேடன் மற்றொரு புறாவை விடுவித்ததும் என்னை உணவாக்கிக்கொள் என்று அதுவும் அந்த தீயில் விழுந்து உயிரை விட்டது.
விருந்தோம்பலில் சிறந்த இரண்டையும் தேவலோக தேர் வந்து அழைத்துச்சென்றது கண்ட வேடன் அன்றிலிருந்து தன் தொழிலை விட்டான்.

கருட தீர்த்தம்: நாகர்களில் ஒருவனான அனந்தன் மகன் மணிநாகன் பரமேஶ்வரனைத் தவம் புரிந்து கருடனால் அழிக்க முடியாத வரம் பெற்றான்.
ஆனால் அவனை கருடன் பிடித்து சிறை வைத்து விட்டான், நந்திதேவர் மூலம் இதையறிந்த மஹாவிஷ்ணு அவனை விடுவிக்கச் சொன்னார்.
நீங்கள் என் பலத்தாலேயே பறந்து பகைவர்களை வென்றீர்கள், உங்களை விட பலவான் நான் என்று அவரிடமே கூறினான் கருடன்.
அவனைத் தன் சுண்டு விரலால் நசுக்கி விட்டார். வருந்தி விமோசனமாக ஈஶ்வரனைத் துதித்து அவர் சொற்படி 15 நாட்கள் மூழ்கி விடுதலை பெற்ற படித்துறை.

விஶ்வாமித்ர தீர்த்தம்: உலகெங்கும் பஞ்சம் படர்ந்த போது, வழியில்லாமல் இறந்து கிடந்த நாயின் உடலைத் தீயிலிட்டு
தேவர்கள், பித்ருக்களுக்கு படைத்து சீடர்களோடு உண்ண முற்பட்டார்.
இந்த்ரன் அதற்கு பதில் அம்ருதம் தந்த போது உலகம் பஞ்சத்தில் இருக்க எனக்கு மட்டும் அம்ருதம் வேண்டாம்.
இந்த சூழலில் நாயிறைச்சியே போதும் என முற்பட்டபோது, வேறு வழியின்றி தேவேந்த்ரன் மழையைப் பொழிந்து வளத்தை உண்டாக்கினான். அந்த துறையே இது.

ஶ்வேதா என்ற வேதியன் பெரும் சிவபக்தன், அவன் இறந்த போது, உயிரை எடுத்துச்செல்ல வந்த யமபடர்களையும்,
யமனையும் கார்த்திகேயன் நந்தி, விக்னேசரோடு சேர்ந்து கொன்று விட்டார்.
கௌதமி தீர்த்தத்தை மீண்டும் கொண்டு வந்து தெளித்த போது அவர்கள் உயிர்த்தெழுந்தனர்.
சிவபக்தர்களை இனி அணுகுவதில்லை என்று சென்றனர்.

குபேரனோடு நட்புடன் இருந்த ராவணாதியர்கள் தாய் சொற்படி அவனை விரட்டி விட அவன் தாத்தா புலஸ்த்யர் சொற்படி
சிவனைக் குறித்து கௌதமி நதிக்கரையிலேயே தவமிருந்து அழியாத செல்வத்திற்கு அரசனானான்.

ஹரிச்சந்த்ரன் மகப்பேறின்றி வருந்தியபோது பர்வதர், நாரதர் சொற்படி வருணனை வேண்டி ரோஹிதனைப் பெற்றான்.
ஆனால் அவனைத் தனக்கே பலியாகக் கேட்டான் வருணன்.
ஒப்புக்கொண்ட ஹரிச்சந்த்ரன் தீட்டு கழியவில்லை, பல் முளைக்கவில்லை, இது பால் பற்கள்,
இன்னும் க்ஷத்ரிய கலைகளைக் கற்கவில்லை என்று தள்ளிக்கொண்டிருந்தான்.
அடுத்த முறை வருணன் வந்த போது ரோஹிதன் தான் விஷ்ணுவைக் குறித்து ஒரு யாகம் செய்து விட்டு பலியாகிறேன் என்று கூறினான்.
காட்டிற்குச் சென்றிருந்த போது அஜிகர்த்தா எனும் முனிவரிடம் பெரும் தானங்களைக் கொடுத்து அவர் மூன்று
பிள்ளைகளை நடுவுள்ள ஸுனக்ஷேபனை யாகப்பசுவாகப் பெற்று வந்தான்.
ப்ராஹ்மண ஹத்திக்கு ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று ஹரிச்சந்த்ரன் மறுத்த போது, கௌதமி நதிக்கரையில் செய்யும் யாகங்களில் பலி தேவையில்லை,
அங்கே செய்யுங்கள் என அசரீரி ஒலிக்க அனைவரும் அப்படியே செய்தனர். சுனக்ஷேபனை விஶ்வாமித்ரர் தத்தெடுத்துக்கொண்டார்.

ததீசியின் தவபலத்தால் அவர் ஆஶ்ரமத்திற்கு அசுரர்கள் பயம் இல்லை.
இதையறிந்த தேவர்கள் தங்கள் ஆயுதங்களை அவரிடம் ஒப்படைத்திருந்தனர்.
பூஜை, உபயோகம் இன்றி ஒளி குறைந்து மறையத்தொடங்கிய ஆயுதங்களை, உலகப் பற்றை விட்டவர் இவைகளை வைத்திருத்தல் ந்யாயமில்லை,
இதனால் அசுரர்களோடு விரோதம் வரும் என்று மனைவி லோபாமுத்ரை சொற்படி கங்கையில் கழுவி அதன் நீரை குடித்ததும்
அவர் உடல் மேலும் பலமடங்கு ஒளி பெற்றது. மீண்டும் தேவைப்பட்டபோது தேவர்கள் வந்து ஆயுதங்களைக் கேட்க
அவர் யோக வழியில் தன் உடலை விட்டு தன் எலும்பில் ஆயுதங்களை உண்டாக்கிக்கொள்ள சொன்னார்.
அப்படியே விஶ்வகர்மா வஜ்ராயுதம் செய்து தந்தான், கர்ப்பவதியான முனிவர் மனைவி பின்னர் இதை அறிந்து குழந்தை பிறந்ததும்
அதை ஒரு அத்தி (பிப்பலம்) மரத்தின் காப்பில் விட்டு, தீயில் உயிரை மாய்த்துக்கொண்டாள்.
பிப்பலன் வளர்ந்து தவத்தால் பலம் பெற்று சிவனைக்குறித்து தேவர்கள் அழிவிற்கு வேண்டினான்.
சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பூதம் முதலில் அவனும் தேவர்கள் படைப்பில் வந்தவனே என்று துரத்தியது.
சிவனிடம் பணிந்த அவனுக்கு தேவ விமானத்தில் அவன் பெற்றோர்களை காட்டியருளினார். பூதமும் ஒரு நதியாகி கங்கையோடு கலந்து விட்டது.

விருத்த ஸங்கமம்: கௌதமரின் மகன் விருத்த கௌதமன் ஒரு மூக்கரையன், படிப்பில்லாதவன், இளவயதடைந்த அவன் ஒரு சமயம் காட்டில்
ஒரு குகையைக் கண்டு அதில் இருந்த வயதான ஒரு மூதாட்டியை வணங்க முற்பட்டான்.
அவள் அவனை தனக்கு குரு என்று கூறி தடுத்து விட்டாள். நான் உன் குழந்தையல்லவா, நான் எப்படி உனக்கு குருவாவேன் என்று அவன் கேட்க,
ரிஷத்வஜன் எனும் அரசனுக்கும் சுஷ்யமை எனும் அப்ஸர ஸ்த்ரீக்கும் தான் பிறந்ததாகவும், நான் முதலில் காணும்
ஆடவனே எனக்குக் கணவன் என்று அவர்கள அங்கேயே விட்டுச்சென்று விட்டதாகவும், பல ஆண்டுகள் கழிந்த தான்
இப்போது முதல் முதலாக ஒரு ஆடவனை, உன்னை காண்கிறேன், மணக்காவிட்டால் இறந்து விடுவேன் என்றாள்.
இவன் ஒரு வழியாக தான் அழகாகவும், கல்விமானாகவும் ஆனதும் உன்னை மணப்பேன் என்றான்.
அவள் தனது வருண, ஸரஸ்வதி உபாஸனையால் அவனை அங்கனமே செய்து மணந்து கொண்டாள்.
இந்த ஜோடியை மற்ற முனிசீடர்கள் கேலி செய்யவே, அகஸ்த்யர் சொற்படி கௌதம கங்கையில் நீராடி
இருவருமே இளைய, அழகிய வடிவினரானார்கள். அந்த துறையே விருத்த ஸங்கமம்

நாக தீர்த்தம்: சூரசேன ராஜனுக்கு வெகு காலம் கழித்து ஒரு குழந்தை அதுவும் நாகமாக பிறந்தது.
ஆனால் காலம் கழிந்து அது மனித மொழியில் பேசி, வேத சாஸ்த்ரங்களையும் முடித்தது.
ஸ்வர்க்கம் கிட்ட தனக்கு மணம் முடித்து வைக்கவேண்டும் இல்லாவிட்டால் இறந்து விடுவேன் என்றது.
ஒருவருக்கும் தெரியாமல் வளர்ந்த இதன் விபரம் தெரியாத அவர் அமைச்சர் விஜயராஜனின் மகள் போகவதியை தேர்ந்தெடுத்தார்.
இளவரசன் சார்பில் அவன் வாளுக்கு மாலையிட்டு புகுந்த வீட்டுக்கு வந்த அவள் விஷயம் தெரிந்ததும்,
மானுடப்பிறவியான தனக்கு நாகராஜன் கிடைத்தது பாக்யமே என்று விட்டாள்.
சிவ கிங்கரர்களில் ஒருவனாயிருந்து சிவ-பார்வதி பேச்சின்போது சிரித்து விட்ட காரணத்தால் சபிக்கப்பட்ட
அவனுக்கு முன் ஜென்ம நினைவுகளும் வந்தன. கௌதம கங்கையில் நீராடி இருவரும் விமோசனம் பெற்றனர்.

நான்முகனும், மாத்ரி தீர்த்தம்: முன்பொரு சமயம் ஹரி, ப்ரஹ்மாதிகளாலும் வெல்ல முடியாத தேவர்களுக்கு ஆதரவாக
பரமேஶ்வரன் இருந்து அசுரர்களை பாதாளத்திற்கு விரட்டியடித்தபோது, அவரின் வியர்வைத் துளிகளிலிருந்து
மாத்ரி கணங்கள் புறப்பட்டு அவைகளும் அசுரர்களை கொன்று குவித்தன.
அந்த இடமே மாத்ரி தீர்த்தம். அப்போது ப்ரஹ்மனின் ஐந்தாவது தலை கழுதை உருவிலிருந்து கொண்டு பயந்தோடிய
அசுரர்களை மீண்டும் போரிடச்சொல்லி ஆதரவாயிருப்பதாக பேசியது.
மற்ற தலைகள் தங்களுக்கு சார்பாக இருக்க இது மட்டும் அசுரர்களுக்கு சாதகமாயிருக்கக்கண்டு பயந்த தேவர்களை
சிவபெருமானையே மீண்டும் சரணடையச்சொன்னார் மஹாவிஷ்ணு.
கீழே விழுந்தால் பூமி சிதறிவிடும் என்றிருந்த அந்த ஐந்தாவது தலையை கிள்ளி தன் கையிலேயே வைத்துக்கொண்டார் பரமேஶ்வரன்.
அந்த இடமே ப்ரஹ்ம தீர்த்தம்

யம தீர்த்தம், அக்னி தீர்த்தம்: அனுஹ்ரதன்-ஹேதி என்ற புறா ஜோடிகளும், உலூகன்-உலூகி என்ற
ஆந்தை ஜோடியும் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.
அனுஹ்ரதன் யமனின் பேரன், உலூகன் அக்னி குலத்தைச் சேர்ந்தது.
தங்களிடமிருந்து ஆயுதங்களையெடுத்து இவைகள் போரிட்டுக்கொண்டிருந்ததில் அழிவைக் கண்ட அவர்கள் இவர்களை சமாதானப்படுத்தினர்.
இவைகள் வசித்த இடமே இந்த தீர்த்தங்கள்.

பில்லா தீர்த்தம்: பில்லா என்ற வேடனும், வேதா என்ற ப்ராஹ்மணனும் மாறி, மாறி ஒருவரை ஒருவர் அறியாமல்
காட்டிலிருந்து ஒரு சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வந்தனர்.
இவனுடைய இறைச்சி படையல்களை அகற்றி அவர் பூஜிப்பதும், அவர் பூக்களை அகற்றி இவனும் பூஜித்து இருந்தனர்.
ஒரு நாள் அவனுக்கு இறைவன் காட்சி தந்ததை கண்ட ப்ராஹ்மணர் உங்களை உடைப்பேன் என கோபித்தார்.
மறுநாள் வரை அவரை பொறுமை காக்கச் சொன்ன இறைவன் மறுநாள் ரத்தத்துளிகள் தென்பட இருந்தார்.
இந்த ப்ராஹ்மணர் அவைகளை துடைத்து விட்டு நீரால் கழுவி பூஜித்து முடித்தார்.
பின்னர் வேடன் வரும்போது மீண்டும் அவனையும் சோதித்தார்.
இறைவன் உடலில் ரத்தத்துளிகளை கண்ட அவன் தன் பாவங்களும் காரணமாயிருக்கும் என்று தன்னையும் உடல் முழுதும் கீறிக்கொண்டான்.
உண்மை பக்தியை உணர்ந்தார் ப்ராஹ்மணர்.

கௌதமன் என்ற அதர்ம வழியில் வளர்ந்த அந்தணனும், மணிகுண்டலனெனும் தர்ம வழி வளர்ந்த வைஶ்யனும் நண்பர்கள்.
அயல் நாடு சென்று திரவியம் ஈட்டலாம் என்று கௌதமன் மணிகுண்டலனை வற்புறுத்தி பெரும் பொருளோடு வரச்செய்தான்.
வழியில் தர்மவழி தான் உயர்ந்தது, அதர்ம வழியே உயர்ந்தது என்றும் வாதிட்டுக்கொண்டே வந்தனர் இருவரும்.
யாரையாவது கேட்டு முடிவெடுக்கலாம் என்று கேட்டபோது அனைவரும் அதர்ம வழியில் வாழ்பவனே செழிக்கிறான் என்றே சொன்னார்கள்.
பணயத்தின் படி மணிகுண்டலன் செல்வமனைத்தையும் பிடுங்கிக்கொண்டான் கௌதமன்.
அப்போதும் தர்ம வழியையே பாராட்டிப் பேசினான் மணி குண்டலன்.
அடுத்தடுத்த பணயத்தில் கரங்களையும், கண்களையும் இழந்தான் மணிகுண்டலன்.
எனினும் தர்மத்தையே உயர்த்தி பேசிய அவனை காட்டில் விட்டுச்சென்று விட்டான் கௌதமன்.

அந்த இடம் கௌதமி நதிக்கரை. அங்கிருந்த விஷ்ணு விக்ரஹத்திற்கு இரவில் விபீஷணனின் மகன் தினமும் வந்து பூஜை செய்வது வழக்கம்.
அன்றிரவு கீழே கிடந்த இவனைக் கண்ட அவன் விஷயங்களை அறிந்து தன் தந்தையிடம் சொன்னான்.
விபீஷணன் அப்போது மரமாய் வளர்ந்திருந்த விஶல்யகரணி மூலிகையைக் கொண்டு மணிகுண்டலனை குணப்படுத்தி அழைத்துச்சென்றான்.
வழியில் தன் குருட்டுப் பெண்ணை குணப்படுத்துபவனுக்கே அவளை மணம் முடித்து, ராஜ்யத்தை ஒப்படைப்பது என்ற முடிவில் இருந்த ஒரு
அரசனின் பெண்ணை விஶல்யகரணியைக் கொண்டு குணப்படுத்திய மணிகுண்டலன் அந்நாட்டுக்கு அரசனாக்கப்பட்டான்.
பிற்காலத்தில் பொருள்களை இழந்து இழிவான நிலையில் கொண்டு வரப்பட்ட கௌதமனுக்கும் நிதிகளைத் தந்து தேற்றினான் மணிகுண்டலன்.

கண்டு முனிவரின் உக்ரமான தவத்தைக் கெடுக்க ப்ரேமலோசனை எனும் அப்ஸரஸை அனுப்பினான் இந்த்ரன்.
அவளும் அவரை மயக்கி மனைவியானாள். அவளோடு திளைத்திருந்த கண்டு முனிவர் பலகாலங்கள் அனுஷ்டானங்கள் இன்றி
அதில் கழிந்து விட்டதை உணர்ந்து மனைவியானதால் அவளை சபிக்காமல் திருப்பி அனுப்பி விட்டு,
புருஷோத்தம க்ஷேத்ரத்தில் விஷ்ணுவால் தவம் செய்ய ஆசிர்வதிக்கப்பட்டார். இவர்கள் பெண்ணே மரீஷை.

சண்டாளன் ஒருவன் ஒரு சமயம் ப்ரஹ்மராக்ஷஸனிடம் அகப்பட்டுக்கொண்டான்.
20 வருடங்களாக ஏகாதஸி கொண்டாடி வருவதாகவும், அன்றைய ஏகாதஸி முடிந்ததும் நான் உனக்கு உணவாகிறேன் என்று கூறி
அதன்படியே வந்த அவனிடமிருந்து 2 மணி நேர ஏகாதஸி புண்ணியத்தை யாசித்துப் பெற்று அதனால் சாப விமோசனம் பெற்ற
அந்த ப்ரஹ்ம ராக்ஷஸன் உபநயனத்திற்கு முன்பே யாகங்களில் கலந்து கொண்ட பாவத்தால் ப்ராஹ்மணனான தான் இந்த சாபம் பெற்றதைச்சொல்லி,
சொல் தவறாது திரும்ப வந்த நீயும் சண்டாளனாக இருக்க முடியாது என்று கூறிச்சென்றான்.
பின் தவம் செய்த இந்த சண்டாளன் முற்பிறவியில் வேத பண்டிதனாயிருந்த போது, யாசித்துப் பெற்ற உணவில்
பசுவின் தூளி சிறிது விழுந்து விட்டதால் அதை வீசியெறிந்து விட்டதற்காக சண்டாளனானது குறித்து நினைவு கொண்டான்.
தவத்தால் விமோசனம் பெற்றான்.

ஸ்வயம்புவான ப்ரஹ்மாவின் தவத்தின் பலனாக ப்ரணவ ஒலி கேட்கப்பெற்றார்.
அதன் பிறகு அவரது முகங்களிலிருந்து 24 எழுத்துக்கள் கொண்ட காயத்ரியும், பின்னர் வேதங்களும் தோன்றின. வேதங்களுக்கு காயத்ரியே மாதா.

யோகம் என்பது ஆத்மாவை பரப்ரஹ்மத்துடன் சேர்ப்பது. எல்லா உயிர்களிலும் உறையும் ஆத்மா ஒன்றே என நிலைப்படுவது.
வேத, புராணங்களை பயின்று முறையாக யோகப்பயிற்சி, புலனடக்கம், சாத்வீக உணவு, இனிய ப்ரதேசத்தில் வாசத்தை மேற்கொண்டால் இந்நிலையை அடையலாம்.

ஸ்ரீ ப்ரஹ்ம புராணம் முற்றிற்று.

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மத் பாகவதம் தசம கந்த சுருக்கம் –

February 24, 2023

புத்தகங்களில் ஸ்ரீமத்பாகவதமாக இறைவன் இருக்கிறார்.

 “ஸ்ரீமத் பாகவதாக்யேயாம் ப்ரத்யக்ஷ: க்ருஷ்ண ஏவ ஹி” என்பது பாகவத மாஹாத்ம்யத்தில் இருக்கும் ஒரு ஸ்லோகம்.

ஸ்ரீமத்பாகவதத்தின் உருவில் ப்ரத்யக்ஷமாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே இருக்கிறார்.

இந்த பாகவதத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.

ஸ்ரீவேதவ்யாஸர் ஸ்ரீமத்பாகவதத்தை வேதம் என்ற மரத்தில் பழுத்த பழம் என்கிறார்.
அந்த பழத்தை ஸ்ரீசுகர் என்னும் முனிவர், கிளி வடிவில் கொத்தி சுவைத்து நமக்காக அருளியுள்ளார்.

https://haripriyabala.blogspot.com/p/skandam-10.html

ஸ்ரீமத் பாகவதத்தில், தசம ஸ்கந்தம் மிக முக்கியமானது.இதை, நவீன பாணியில்,

பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனிடம் நேரில் பேசுவதைப்போல எழுதியிருக்கிறேன்

இவை யாவும் பல வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது. ஈ –மெயில் மூலமாக அவ்வப்போது யாவருக்கும் அனுப்பப்பட்டது. அச்சமயம். பற்பல வாசகர்கள் படித்து, உருகி, அவர்களும் கண்ணனுடன் பேசி இருக்கிறார்கள்.

தற்போது, ”ஸ்ரீ காஞ்சி பேரருளாளன் ” ஆன்மிக மாதப் பத்திரிகையில் வெளிவந்து கொண்டிருக்கிறது. முடியும் தருவாயில் உள்ளது.

இதனை, உங்கள் விருப்பத்துக்கு இணங்க, மறுபடியும் , அத்யாயம் அத்தியாயமாக உங்களுக்கு அனுப்புகிறேன்.

ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணமஸ்து

 

தசமஸ்கந்த தொடக்கத்தில் , பரீக்ஷித் ராஜன் , ஸ்ரீ சுகப்ரஹ்மத்தைக் கேட்பதான வ்யாஜத்தில்,பகவான்ஸ்ரீகிருஷ்ணன் அவதார மஹிமையை, அனுக்ரஹிக்கச் செய்த , அந்த உத்தரையின் புத்ரனை நமஸ்கரிக்கிறேன்.
அவனாலன்றோ , ஸ்ரீ கிருஷ்ண மஹா சரிதத்தைப் படிக்கக் கூடிய / கேட்கக்கூடிய பாக்யம்கிடைத்ததுஅதற்காகஅந்த அர்ஜுன பௌத்ரனை, உத்தரை மைந்தனை —-ஸ்ரீ பரீக்ஷித் மகாராஜனைஎப்போதும்நமஸ்கரிக்கிறேன்.

ஸ்ரீ சுகப்ரஹ்ம ரிஷி —-ஸ்ரீ வ்யாஸ பகவானின் புத்ரர் ———பிக்ஷைக்காக எவர் வீட்டின் முன்பும் “பால் கறக்கும் வேளை ” தாண்டி (கோதாஹண வேளை ) நிற்க மாட்டார் . அப்படிப்பட்ட மஹரிஷி , ஏழு நாட்கள் கங்கைக் கரையில் , பரீக்ஷித் மஹாராஜன் முன்பு உட்கார்ந்து, ஸ்ரீ கிருஷ்ண சரிதத்தைச் சொன்னார். பரீக்ஷித் மகாராஜாவுக்குச் சொல்லும் வ்யாஜத்தில், இந்த க்ரந்தத்தை எல்லாருக்கும் சொன்ன ,
ஸ்ரீ சுகப்ரஹ்ம ரிஷியை மனசாலும், உடலாலும், வாக்காலும் நமஸ்கரிக்கிறேன்; பலதடவை நமஸ்கரிக்கிறேன் . அவர் அல்லவா, இந்த அம்ருதத்தை; தேவாம்ருதத்தை; திகட்டாத அம்ருதத்தை நமக்கெல்லாம் பருகக் கொடுத்தவர் ! நம்மைக் கொடுத்து வைத்தவர்களாகஆக்கியவர்!
ஆக,சுகப்ரஹ்ம ரிஷிக்குக்ருதஜ்ஞ்சதையைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தைத்யர்கள், தானவர்கள், அஹங்காரம் மற்றும் மதம் பிடித்த அரசர்களாக த்வாபரயுகத்தில் பூமியில் பிறந்து வேத வ்ருத்தமான அக்ரமங்களைச் செய்து, அட்டஹாசம் பொங்கி எழ சாதுக்களை ஹிம்சைப் படுத்தி வாழ்ந்து , பூமி பாரத்தை
அதிகரிக்கச் செய்து, பூமிப் பிராட்டிக்கு கஷ்டத்தைக் கொடுத்த சமயத்தில், பூமிப் பிராட்டியை அழைத்துக் கொண்டு, , ப்ரஹ்மா , தேவர்கள் புடைசூழ , க்ஷீராப்தியை அடைந்து, பகவானான உன்னை, புருஷ ஸூக்தம், விஷ்ணு ஸூக்தம், நாராயண அநுவாகம் —-இவற்றால் துதித்து, சாது சம்ரக்ஷணத்துக்காக ராக்ஷஸ ர்களை அழிக்க , பூவுலகில் அவதாரம் செய்ய உன்னைப் ப்ரார்த்தித்ததற்காக , உன் அனுக்ரஹத்தைப் பெற்றதற்காக ,
பூமிப் பிராட்டியையும், ப்ரஹ்மாவையும் பல தடவை நமஸ்கரிக்கிறேன்.

மதுராவில், நித்ய வாஸம் செய்யும் கிருஷ்ணனே !
மதுரா ராஜ்யத்தின் அரசனான உக்ரசேனனுடைய தம்பி, —–தேவகனுடைய புத்ரியான “தேவகியை “, சூரன் எனப்படும் யாதவ குலத் தலைவனின் பிள்ளையான வஸுதேவர், விவாஹம் செய்துகொண்டு தேவகியுடன் ரதத்தில் , தன்னுடைய நகருக்குத் திரும்பும்போது, ராஜாவான உக்ரசேனனின் பிள்ளை “கம்ஸன் ” , தன் தங்கையின் மீது ( ஒன்று விட்ட தங்கை ) வாத்ஸல்யம் மிகுதியாக , தேரின் மீது ஏறி, தானே தேரைச் செலுத்தினான்.
பாதி வழியில், —-ஆகாசத்திலிருந்து குரல்—- கம்ஸனிடம் பேசியது.
” முட்டாளே ! இவளுடைய எட்டாவது கர்பத்தில் தோன்றும் குழந்தை , உன்னைக்கொல்வான்.எந்தத்தங்கையைப்பாசத்துடன், தேரில் , குதிரைகளைப் பிடித்து அழைத்துச் செல்கிறாயோ, அந்தத் தேவகியின் எட்டாவது கர்பத்தில் பிறக்கும் சிசு , உனக்கு ம்ருத்யு ” என்று சொன்னது. உடனே, பாபியும், துஷ்டனுமான கம்ஸன் , குதிரைகளின் கடிவாளத்தை விட்டு விட்டு, மஹா கோபத்துடன், கத்தியை எடுத்து,
தேவகியைக் கொல்ல முயற்சித்தான். அப்போது, வஸுதேவர் , அவனைத் தடுத்து, இனிய வார்த்தைகளைச்சொன்னார்.
” ஒரு ஆத்மா, த்ரேகம் எடுத்ததும் , ம்ருத்யு கூடவே வருகிறது; இந்த த்ரேகத்தில், ஐந்து , ஐந்து இந்த்ரியங்கள்இருந்துத்ரேகம்அழியும்போது, அவையும் மறைகின்றன. ஆத்மா, தன் கர்ம வினைக்கு ஏற்ப , மற்றொரு த்ரேகத்தை எடுத்துக் கொள்கிறது; தூக்கத்தில் இருந்தாலும், ஸ்வப்னத்தில் இருந்தாலும், ஆத்மாவை,மாயையால் , பகவான் செயல்பட வைக்கிறான்; மாயையின் மூன்று குணங்களால் உள்ள த்ரேகத்துடன்,
மனஸ் ஸும் சேர்ந்து, மாயையினால் ஆத்மா செயல் படுகிறது; பிறகு, க்ஜானம் வரப்பெற்று, மாயையிலிருந்து விடுபடுகிறது; ஆதலால், ஒரு ஜீவன் , இன்னொரு ஜீவனுக்குத் த்ரோகசிந்தனையுடன் நடந்து கொள்ளக் கூடாது; உன்னுடைய க்ஷேமத்துக்காகபிறருக்குப்பயத்தை ஏற்படுத்தக் கூடாது; உன் தங்கை சிறியவள்; உனக்குப் புத்ரியைப் போன்றவள்; புதிதாக விவாஹம் ஆனவள்; கொல்லத்தகாதவள் ” என்று, பலப்பல புத்திமதிகளைச்சொன்னார்.
கம்ஸன் சமாதானம் அடையவில்லை. க்ரூர ஸ்வபாவத்துடன் தன்எண்ணத்தைநிறைவேற்றிக்கொள்ளமுயன்றான்.
வஸுதேவர் யோசித்தார். இப்போதைக்கு, இவளுக்கு ஏற்பட்ட ம்ருத்யுவைத் தடுக்க வேண்டும்.என்றுஆலோசித்து,
” ஹே, கம்ஸ !இவளிடமிருந்து, பயப்பட ஒன்றுமில்லை; குழந்தைகள் பிறந்தவுடன் , உன்னிடம்கொடுத்துவிடுகிறேன்;ஆகாசத்திலிருந்து, அசரீரி, இவளுடைய குழந்தையால் தானே, நீ கொல்லப்படுவாய் என்றது ? குழந்தைகளை உன்னிடம் கொடுத்து விடுகிறேன். நீ இஷ்டப்படி செய்துகொள்என்றார்.
இதைக் கேட்டதும் கம்ஸன் , சரியென்று தலையை அசைத்து, தேரை விட்டு இறங்கிச் சென்றான். வஸுதேவர் , தேவகியுடன் தன்னுடைய வீட்டுக்குச் சென்றார். சில நாட்கள் சென்றன;

தேவகி கர்ப்பமடைந்து, முதல் குழந்தையைப் பெற்றாள். இக்குழந்தையின் பெயர் ” கீர்த்தமான் “. சொன்ன சொல் தவறாத வஸுதேவர், மனஸ் சங்கடப் பட்டுக்கொண்டே , பிறந்தகுழந்தையைகம்ஸனிடம்கொடுத்தார்.
கம்சன், குழந்தையைப் பார்த்தான். சந்தோஷப்பட்டான். சிரித்துக் கொண்டே, “இந்தக் குழந்தைஉன்னிடமேஇருக்கட்டும்;எட்டாவதுகுழந்தைதானே எனக்கு ம்ருத்யு ” என்றான். வஸுதேவர் “சரி” என்று சொல்லி குழந்தையுடன் வீட்டுக்குத் திரும்பினார். இருந்தாலும், கம்ஸனிடம்அவருக்குச்சந்தேகம்தான்.

நாரதர் , கம்ஸனுடைய சபைக்கு வந்து, ப்ரஹ்மாவின் முயற்சி , பூமிப்பிராட்டியின்பாரம்தீரபகவானின்அவதாரம், என்கிறதேவரஹச்யங்களைக் கம்ஸனுக்குச் சொல்லிவிட்டுச் சென்றார். கம்சன் மிகவும் பயப்பட்டான். தேவகி, வஸுதேவரைச் சிறையிலிட்டான். பிதாவான உக்ரசேனரை, சிறையில் அடைத்து, ராஜ்யத்தைப் பறித்து, தானே அரசன் ஆனான். தேவகி, வஸுதேவர் இவர்களுக்குப் பிறந்த குழந்தைகளைப் பிறந்தவுடன் கொன்றான்.

ஹே, ப்ரபோ ! உன்னுடைய சங்கல்பத்தாலன்றோ வஸுதேவர்—-தேவகி விவாஹம் நடந்தது;உன்சங்கல்பத்தால்அல்லவா கம்ஸன் தானே முன்வந்து, வஸுதேவர்—தேவகி வந்த தேரைச் செலுத்தினான்; உன் ஆக்ஜைப்படிதானே, ஆகாசத்தில் , அசரீரி கம்ஸனிடம்பேசி அவனுக்குப் பயத்தை ஏற்படுத்தியது; நாரதர், கம்ஸனிடம் வந்து பேசியது எல்லாம், உன்னுடைய லீலை தானே; கம்ஸனுக்கு, அஹங்காரமும்,
கோபமும், பயமும் ஏற்பட்டு தகப்பனாரைச் சிறையில் அடைத்ததும் ராஜ்யத்தை அபஹரித்துக்கொண்டதும்,கர்பத்திலிருந்துபிறந்த ஒவ்வொரு குழந்தையையும் கொன்றதும் உன்னுடைய எண்ணம் தானே! அப்படிப்பட்ட சங்கல்பத்துக்கும் ,ஆஞ்ஜைக்கும், லீலைக்கும், எண்ணத்துக்கும் , அடியேனுடைய க்ருதக்ஜதை உரித்தாகுக. உனக்கு முன்பு பிறந்துஉயிரை விட்டஏழுகுழந்தைகளின்த்யாகம்அல்லவா உன்அவதாரத்துக்கு வித்திட்டது ! அவர்களால்அல்லவா,உன்திருஅவதாரம்ஏற்படப்போகிறது !
அந்தக் குழந்தைகளை, பக்தியுடனும், நன்றியுடனும் நமஸ்கரிக்கிறேன்

நீ, தேவகியைத் தாயாக அடைந்தாய். தேவகி, கம்ஸனின் ஸ்வப்னத்தில் அடிக்கடிதோன்றினாள்.கம்ஸன்மிகவும்பயந்தான்.
தன்னை அழிப்பவன், எட்டாவது கர்பமாக தேவகியின் வயிற்றில் இருக்கிறான் ; அவன் பிறந்ததும்,அந்தக்குழந்தையைக் கொன்றுவிடவேண்டும் என்று,எப்போதும்உன் நினைவாகவேஇருந்தான்.

தேவகியின் கர்பத்தில், நீ வாஸம் செய்யும்போது, உன்னை, ருத்ரன், ரிஷிகள்,தேவர்கள்,முன்னிலையில்ப்ரஹ்மா துதித்தார். அல்லவா ? அதை , அடியேனும் சொல்லிஉன்னைஸ்தோத்ரம்செய்கிறேன்

இனி 2 வது அத்யாயம்

தமஸ்கந்த பாராயணம்—–நவீன பாணியில்
—————————————————-
அத்யாயம் –2–
பகவான், தேவகியின் கர்ப்பத்தை அடைவது, ப்ராஹ்மாவின் ஸ்துதி
—————————————-

கம்ஸனுக்கு யாதவ குலத்தின் மீதே அசூயை ஏற்பட்டது.
அந்தக் குலத்தையே அழிக்க முற்பட்டான்.

இவனுடன், ப்ரலம்பகன், சாணூரன், த்ருணாவர்த்தன், முஷ்டிகன், அரிஷ்டன், த்விதன், பூதனை,
கேசி, தேனுகன், பாணன், பௌமன், மகத தேசத்து அரசனும் மாமனாருமான ஜராஸந்தன்
என்பவர்களும் சேர்ந்து கொண்டனர். அஸுரர்கள் பலம் இப்படி வளர்ந்தது. தேவகியின் கர்ப்பத்தில் ஏற்பட்ட
ஆறு குழந்தைகளையும் , கம்ஸன், ஒருவர் பின் ஒருவராகப் பிறக்கப் பிறக்கக் கொன்றான்.

ஏழாவது கர்ப்பம் —-ஸ்ரீ விஷ்ணுவின் அம்சமாக அனந்தன் என்கிற ஆதிசேஷன் ஆவிர்ப்பவித்தார்.
இப்போது, கம்ஸனுக்கு , மரண பயம் மிகவும் அதிகரித்தது.

பகவானே ! பயத்தை நீதானே உண்டாக்கினாய் !இப்போது, நீ தானே யோகமாயையை அழைத்து,
“ஹே, யோக மாயை ! வசுதேவருடைய இன்னொரு பத்னி —ரோஹிணீ—-, கோகுலத்தில்
, நந்தகோபன் பாதுகாப்பில் வசிக்கிறாள்
( வசுதேவருக்கு ஏழு மனைவிகள் . தேவகி கடைசி மனைவி )தேவகியின் வயிற்றில் , என் அம்சமாக அனந்தன் இருக்கிறான்;அந்த கர்ப்பத்தை இழுத்து, , ரோஹிணீயின் வயிற்றில் வைத்து விடு;
நான் , தேவகிக்கு எட்டாவது பிள்ளையாக அவதரிப்பேன்; நீ, நந்தகோபனுடைய மனைவி யசோதையின் கர்ப்பத்தில் அவதரிப்பாயாக; நான் பூமியில் அவதரித்ததும், வசுதேவர் என்னை , நந்தகோபன் வீட்டில் யசோதைக்குப்பக்கத்தில் வைத்துவிட்டு, யசோதை வயிற்றில் பிறக்கும் உன்னை, வசுதேவர் தன்னுடைய இருப்பிடமானகாரக்ருஹத்துக்குக் கொண்டு வந்து விடுவார்; நீ, இடம் மாறி தேவகியிடம் வந்து சேர்; உன்னை, உலக மக்கள் துர்க்கை, காளி, விஜயா,
வைஷ்ணவீ , குமுதா, சண்டிகா, கிருஷ்ணை, மாதவி, கன்யகா, மாயா, நாராயணீ, ஈசானீ ,
சாரதா, அம்பிகா, என்று பலப் பலப் பெயர்களில் பூஜை செய்வர் ” என்று ஆஜ்ஜை இட்டாய்.
உன் கட்டளைப்படிதானே,யோகமாயை என்கிற யோக நித்ரை “சரி ” என்று சொல்லி,
உன்னைப் பிரதக்ஷணம் செய்து, தேவகியின் ஏழாவது கர்ப்பத்தை, ரோஹிணிக்கு மாற்றினாள்; நீ செய்த மாயையால் தானே, தேவகியின் ஏழாவது கர்ப்பம் அழிந்து விட்டதாக நம்பி ஜனங்கள் ுக்கப்பட்டனர்

பகவானாகிய நீ, தேவகியின் கர்ப்ப வாசத்துக்காக, முதலில் வசுதேவர் மனஸ்சில் புகுந்தாய்;
அதனால், அவர், ஜகஜ்ஜோதியாகக் காக்ஷி அளித்தார் ; ஆசார்யன் , தன் கடாக்ஷத்தினால்சிஷ்யனை அனுக்ரஹிப்பதைப்போல, வசுதேவரால் , தேவகி அனுக்ரஹிக் கப்பட்டாள்.
இதுவும் உன் மாயையால், நடந்தது தானே . நீ, தேவகியைத் தாயாக அடைந்தாய்.
தேவகி, கம்ஸனின் ஸ்வப்னத்தில் அடிக்கடி தோன்றினாள் கம்ஸனின் பயம் மிக மிக
அதிகமாக ஆகிவிட்டது. தன்னை அழிப்பவன் , எட்டாவது கர்ப்பமாக, தேவகியின் வயிற்றில் இருக்கிறான்; அவன் பிறந்ததும் அந்தக் குழந்தையைக்கொன்றுவிட வேண்டும் என்று , சதா சர்வ காலமும்
உன் நினைவாகவே இருந்தானல்லவா
ஹே, ஸத்ய வ்ரதரே! நீ சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும், நீயே ப்ரமாணம்.
அதை,ஸத்யமாக ஆக்குவதும் நீயே.”” ஆகாயம் சரிந்தாலும், கடல் வற்றினாலும்,
நான் சொல்வது எப்போதும் பொய்யாகாது ,ஸத்யமே ” என்று,த்ரௌபதிக்கு வாக்களித்த கண்ணனே ! ஸத்யனே ! , நித்யனே! சநாதனனே ! சரணாகத ரக்ஷகனே ! நீ தேவகி கர்ப்பத்தில் இருந்தபோது,
ருத்ரன், ரிஷிகள், தேவர்கள் கூடியிருக்க, ப்ரஹ்மா உன்னை ஸ்தோத்ரம் செய்துசரணமடைந்ததைப் போல, பிரபன்னனாகிய அடியேனும்,அந்த ஸ்தோத்ரத்தையே சொல்லி, உன்னைச் சரணம் அடைகிறேன்.

பிரும்மாவின் ஸ்துதி
————-
ஓ… …. ஆதி வ்ருக்ஷமான பகவானே !

இந்த சம்ஸாரம் ஓர் அஸ்வத்த வ்ருக்ஷம் ஆதியும் இல்லை; அந்தமும் இல்லை; அநாதி; மேலே ஆகாயத்தை நோக்கி வேர்களும், கீழே பூமியில் கப்பும் , கிளையும் ,இலையுமாக மண்டிக் கிடக்கிறது; இதற்கு, ஸுகம் , துக்கம் என்கிற இரண்டு பழங்கள்;
மூன்று ஆணி வேர்கள்—- இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம்என்கிற காலமான மூன்று ஆணி வேர்கள்;
முக்குணங்கள் —-ரஜஸ், தமஸ்,ஸத்வம் என்கிற மூன்று குணங்கள்;
நான்கு விதமான புருஷார்த்தங்கள் , இந்த வ்ருக்ஷத்துக்கு, மரப்பட்டை;
ஐந்து இந்த்ரியங்கள் –கரணங்கள் ;
ஆறு அவஸ்தைகள் —அதாவது, ஆறு நிலைகள் ..பிறப்பு, ஸ்திதி, வளர்ச்சி,முதுமை, மரணம், அறிவு .
மற்றும் , பசி, தாகம், வருத்தம், மோஹம் , முதுமை, மரணம் .
ஏழு தாதுக்கள் —கபம், ரத்தம், வியர்வை( பருமன் ),மாம்சம், மஜ்ஜை, எலும்பு, ரேதஸ் என்கிற ஏழு தாதுக்கள்;
எட்டு கிளைகள்—-ஐந்து இந்த்ரியங்கள், மனஸ், புத்தி, அஹங்காரம் என்கிற எட்டு கிளைகள்;
ஒன்பது கண்கள், அதாவது த்வாரங்கள்— இரண்டு கண்களின் பொந்துகள், இரண்டு காதுகளின்
த்வாரங்கள், மூக்கின் இரண்டு த்வாரங்கள், வாய், குறி, ஆசன வாய்—என்கிற ஒன்பது த்வாரங்கள்;
பத்துப் ப்ராண ப்ரவ்ருத்திகள்— பிராணன், அபானன், வ்யானன், ஸமானன், உதானன்,நாகன், கூர்மன், க்ருகசன், தேவதத்தன், தநஞ்ஜயன்—ஆகிய பத்துப் பிராணன்கள்
இரண்டு பக்ஷிகள்—-ஜீவாத்மா, பரமாத்மா
இப்படிப்பட்ட ஆதி வ்ருக்ஷமான உன்னை, நீ, தேவகியின் கர்ப்பத்தில் இருந்தபோது,
ப்ரஹ்மா ஸ்தோத்ரம் செய்து சரணம் அடைந்ததைப் போல,பிரபன்னனாகிய அடியேனும், அவற்றைச் சொல்லி -உன்னைச் சரணம் அடைகிறேன்.

நீயே புருஷோத்தமன்; உபாதான காரணமும் நீயே; நிமித்த காரணமும் நீயே;
நீயே எல்லா உலகங்களையும் , ஜீவன்களையும் படைக்கிறாய்; காப்பாற்றுகிறாய்;
பிரளய சமயத்தில், அழித்து, நீயே லயஸ்தானமாக இருக்கிறாய்;
உன் நியமனத்தால், எல்லாப் பிரவ்ருத்திகளும் உண்டாகின்றன;
உனது மாயையால், சேதனர்கள் அக்ஜானத்தில் மூழ்கி, நீயே யாவும்,
நீதான் ஒருவன், நீயே எல்லா உலகங்களிலும் வ்யாபித்து இருக்கிறாய் என்பதை மறந்து,
புத்தி பேதலித்து, அறிவை இழந்து, உன்னை—நானா வகைப் பட்ட —பலவைப் பட்ட பொருள்களாகப் பார்க்கிறார்கள்; ஆனால், வித்வான்கள்,
அண்டசராசரம் அனைத்துக்கும் , அவற்றின் க்ஷேமத்துக்கும், நீதான் காரணம் என்று உணர்கிறார்கள்;
உன் சுத்வ ஸத்வ அவதாரங்கள், சாதுக்களுக்கு சுகத்தையும் மங்களத்தையும் அளிக்கிறது;
அதுவே, துஷ்டர்களுக்குத் தீங்கையும் நாசத்தையும் அளிக்கிறது;
உனது, அன்றலர்ந்த தாமரைக் கண்களின் கடாக்ஷத்தால், எல்லா ஸத்வங்களுக்கும் இருப்பிடமான
உன் ரூப லாவண்யத்தை, ஸுபாஸ்ரயத்தை, ஸாதுக்கள் மனத்தில் தரித்து,
சமாதி நிலையிலும் அவற்றை அனுபவிக்கிறார்கள்;

அதனால், ஸம்சாரமாகிய, இந்தப் பெரிய ஸமுத்ரத்தை, கன்றுக் குட்டியின் கால் குளம்பில்( கோவத்ஸபதம்)
தேங்கின ஜலத்தைத் தாண்டுவதைப் போலத் தாண்டி, உனது திருவடிகளையே நம்பி, அதையே தெப்பமாக (படகு ) வைத்துக் ,கடக்கிறார்கள்;
இப்படிப்பட்ட பெருமைகள் உள்ள நீ, தேவகியின் கர்ப்பத்தில் இருந்தபோது,
ருத்ரன், ரிஷிகள், தேவர்கள் முன்னிலையில்
ப்ரஹ்மா ஸ்தோத்ரம் செய்து சரணமடைந்ததைப் போல,
பிரபன்னனாகிய அடியேனும், அவற்றைச் சொல்லி, உன்னைச் சரணம் அடைகிறேன்..
உன்னை பூஜை செய்யும் பக்தர்கள், உன் திருவடிகளை நமஸ்கரித்துப்பூஜிக்கிறார்கள்;
அதனால், கஷ்டங்கள் நிறைந்த, கடக்க முடியாத “பவார்ணவத்தை”, —பயங்கரமானதும்,
சௌஹார்த்த மில்லாததுமான அடர்ந்த பெரிய இருளை, உனது பிரகாசத்தால் கடக்கிறார்கள்;
அப்படிக் கடந்து, சம்சாரக் கடலைக் கடந்து, அக்கரையான –உனது திவ்ய வாசஸ்தலமான
பரமபதத்தை அடைந்த முக்தர்கள், உலகத்தில் உள்ளவர்களுக்கு, உதாரணமாக —ஆதர்ச புருஷர்களாக
இருக்கிறார்கள்; ஆனால், ஹே, கண்ணா! ….எவ்வளவு க்ஜானம் இருந்தும் , பண்டிதனாக இருந்தும்,
உன்னிடம் பக்தி இல்லாதவர்கள் , இந்த மார்க்கத்திலிருந்து நழுவி, கஷ்டப்படுகிறார்கள்;
உன்னிடத்தில் பரமபக்தி உள்ளவர்கள், உன்னையே நம்பி, பயமே இல்லாமல், எவ்வளவு
ஆபத்து வந்தாலும், அந்த ஆபத்துகளைச் சுலபமாகத் தாண்டுகிறார்கள்;
பெரிய பண்டிதர்களாக இருந்தாலும், வித்வான்களாக இருந்தாலும், பெரிய நல்ல குடும்பங்களில்
பிறந்து, அந்த நல்ல பிறவியினால் கர்வம் கொண்டவர்கள், உன்னைத் துதிக்காமல்,
பக்தி செய்யாமல், முக்தியை அடைவதில்லை; உன்னிடம் பரம பக்தி உள்ளவர்கள்,
எல்லா வகைகளிலும் உன்னால் காப்பாற்றப் பட்டு, தேவர்களின் தலைமீது
தங்கள் பாதங்களை வைத்து, பயமில்லாமல் சஞ்சரிக்கிறார்கள்;
நீ ஸுத்த ஸத்வ ஸ்வரூபி! பக்தர்கள் ( ஜீவாத்மாக்கள் ) ஆஸ்ரம தர்மங்களை, நன்கு அனுஷ்டித்து,
அவற்றால் ஏற்படும் பலன்களைத் தள்ளி விட்டு ( உனக்கே அர்ப்பணித்து ) உன்னை ஆராதிக்கிறார்கள்;
யாகம், யஜ்ஜம், யோகம், தபஸ், தானம், புண்ய தீர்த்தாடனம், ஸமாதி இவைகளால் செய்யப்படும்
பூஜையை ஏற்றுக்கொண்டு, அவர்களை அனுக்ரஹிக்கிறாய் ;
இப்படி அனுக்ரஹிக்கும் உன்னை, நீ, தேவகியின் கர்ப்பத்தில் இருந்தபோது,ருத்ரன், ரிஷிகள், தேவர்கள் இவர்கள் முன்பாக, ப்ரஹ்மா, உன்னை ஸ்தோத்ரம் செய்துஉன்னைச் சரணம் அடைந்ததைப் போல,
அடியேனும் அவற்றைச் சொல்லி, உன்னைச் சரணம் அடைகிறேன்.
ஹே, , ஜகத் காரணா ! ….சாஸ்த்ர க்ஜானத்தாலும், அனுமானத்தினாலும்,
உனது கிருபையால் ஏற்பட்ட இந்த்ரியங்களால், ஓரளவுதான் உன்னை அறிய முடிகிறது;
உனது நாமாக்கள் , உனது ரூபங்கள், உனது சேஷ்டிதங்கள் , அனந்தம், மிக மிக அனந்தம்;
அவை அற்புதம், மிக மிக அற்புதம்; நீ எல்லாவற்றையும் ஸ்ருஷ்டித்தாலும்,, எதிலும் உனக்குப் பற்று இல்லை; ஆனால், உனது க்ருபையால், உனது கதா உபன்யாசங்களைக் கேட்டும், குண சேஷ்டிதங்களை வாயாரச்சொல்லியும்,உனது திருவடிகளை வணங்கி சரணம் அடைந்தும், இந்தப் பூமியில் ஏற்பட்ட “பந்தம் ”
அறுபடுகிறது;

மறுபடியும், பிறவித் துயர் என்பது இல்லை; இந்த பூமி , உனது திருவடி;
இந்தப் பூமியின் தாங்கொணா பாரம், உனது அவதாரத்தால் குறைகிறது;
உன்னுடைய அவதாரம் சாதுக்களுக்கு அபயம்;
நீ, இப்போது அவதரித்து, பூமியின் பாரத்தை ஒழிக்க வேண்டும்;
அடியோங்களைக்காக்க வேண்டும்; இப்படியாகப் பலதடவை,அவதாரங்களை எடுத்திருக்கிறாய்; இதற்கு, உன் சங்கல்பமே காரணம்;
ஜீவனுக்கு, உன்னைப் பற்றிய சாஸ்த்ர க்ஜானம் இல்லாததால்,பிறப்பு, இறப்பு, சுழலில் சிக்கி, சம்ஸார பந்தத்தில் உழல்கிறது;
நீ, மத்ஸ்ய, கூர்ம, ஹயக்ரீவ, ஸுகர ( பன்றி ), ந்ருஸிம்ஹ , ஹம்ஸ ,வாமன,
பரஸுராம, ராம, இப்படிப் பல அவதாரங்களை எடுத்திருக்கிறாய்;

அப்போதெல்லாம், எல்லா உலகங்களுக்கும், நீதான் அதிபதி என்று காட்டி,
பூமியின் பாரத்தைப் போக்கி இருக்கிறாய்.;இதற்கு, உன் சங்கல்பமே காரணம்;
இப்போதும் அவ்வாறே அவதாரம் செய்யப் போகிறாய்; உனக்கு ஜயம் உண்டாகட்டும்;
இப்படிப் பராக்ரமம் உள்ள, உன்னை
நீ , தேவகியின் கர்ப்பத்தில் இருந்தபோது,
ருத்ரன், ரிஷிகள், தேவர்கள் முன்னிலையில், ப்ரஹ்மா ஸ்தோத்ரம் செய்துசரணமடைந்ததைப் போல பிரபன்னனாகிய அடியேனும், அவற்றைச் சொல்லி,
உன்னைச் சரணம் அடைகிறேன்.
ஹே, பரந்தாமா….ப்ரஹ்மா, ருத்ரன், ரிஷிகள் தேவர்கள்,
எந்த ஸ்துதி வசனங்களால் உன்னுடைய நிஜ ஸ்வரூபம் காணப்படுமோ ,அவற்றால் துதித்து, அடியேனுக்கும் காட்டிக் கொடுத்து,உபகாரம் செய்தமைக்காக , அவர்களையும் நமஸ்கரிக்கிறேன்

( 2 வது அத்யாயம் முடிகிறது. )

அத்யாயம்—3
————-
பகவான் ஸ்ரீ கிருஷ்ணனாக அவதாரம்
——————————————————

பரம பவித்ரமான காலம்; ஆவணி மாசம்; ஆகாயம் நிர்மலமாக இருந்தது;

தடாகங்களில் தாமரைப் புஷ்பங்கள் நிறைந்து இருந்தன; காடுகளில் மரங்கள் புஷ்பங்களை வர்ஷித்தன;

பக்ஷிகள் குதூகலம் அடைந்தன; எங்கும் சாந்தம்; சாதுக்களின் ஹ்ருதயம் குளிர்ந்து இருந்தது;

வாயு சுத்தமான காற்றை வீசிற்று. ஆகாயத்தில் , துந்துபி, பேரிகை முதலிய வாத்தியங்கள் முழங்கின;

வித்யாதரர், அப்சரஸ்கள் , கின்னரர், கந்தர்வர், சித்தர், சாரணர் மகிழ்ச்சியுடன் ஆடிப் பாடினர்;

தேவர்கள், ஆகாயத்திலிருந்து புஷ்பமாரி பொழிந்தனர்;

த்வாபர யுகம்; ஸ்ரீ முக வருஷம்; தக்ஷிணாயனம்; ஆவணி மாசம்;

கிருஷ்ண பக்ஷம்; அஷ்டமி திதியும் ரோஹிணி நக்ஷத்ரமும் கூடிய சுப வேளையில் ,

ப்ரஹ்மா அதி தேவதையாக உள்ள ரோஹிணி நக்ஷத்ரத்தில், சந்திரன் உச்சத்தில், சந்திரனுக்குப்
பிரியமானதும், பிரஜாபதியின் நக்ஷத்ரமுமான இந்த ரோஹிணி நக்ஷத்ரத்தில்,

நள்ளிரவு 11–30 முதல் 12-00 மணிக்குள்ளாக ,
நீ, தேவகிக்கு எட்டாவது பிள்ளையாக அவதாரம் செய்தாய்.

தேவகியின் ரூபம் தேவ ரூபத்தை மிஞ்சியது.

ஹே, ப்ரபோ, உன் அவதார காலத்தில் , அடியேன் எந்தப் பிறவியில்

எங்கு இருந்தேனோ தெரியாது; ஆனால், இப்போது , உன், அவதார வேளையைச்சொல்லி,

நீ அவதரித்ததை, உடலெல்லாம் புல்லரிக்க, மனஸ் எல்லாம் மகிழ்ச்சி ததும்ப ,
தேவகி , வசுதேவர் உள்ள காராக்ருஹத்தில் , உன்னைப் பிரதக்ஷணம் வந்து, வந்து,

உன் மெல்லிய, மிக மெல்லிய , பிஞ்சுத் திருவடிகளைத் தொட்டுத் தொட்டு ,

அடியேனின் கண்களில் ஒற்றிக்கொண்டு , உன்னையே சரணம் என்று அடைகிறேன்.

நளினம் அழகு, இப்படி எல்லாம் திருமேனியில் கலந்து,

உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகனே !
நீ, நீலரத்ன மணியைப் போல ஜொலிக்கிறாய்;

அலர்ந்த கேசபாசம்;

பவளத்தை மிஞ்சும் திரு உதடுகள்;

புண்டரீக நயனங்கள்; கள்ளச் சிரிப்பு ;
அதனால் கன்னத்தில் குழி;

சின்னஞ்சிறிய, மிகவும் சின்னஞ்சிறிய நான்கு திருக் கைகள்;

அவைகளில் திவ்ய ஆயுதங்கள் சக்ரம், சங்கு,
கதை, தாமரை; திருமார்பில் ஸ்ரீ வத்ஸ மரு;

திருக் கழுத்தையும் , திரு மார்பையும் அணைத்துச்

சேர்க்கும் முத்துச் சரங்கள்; கௌஸ்துபம்;
வனமாலை; இடையில் பீதாம்பரம்; வைடூர்யத்தால் இழைக்கப்பட்ட க்ரீடம்;

குண்டலங்கள்; தாமரை ஆயிரம் இதழ்களுடன் கொத்தாக இருப்பதைப் போல ,

இடையில் தங்க ஆபரணங்கள்; விரல்களில் மோதிரங்கள்;

தோள்பட்டையில் ஆபரணம்; இதுதான் சிவப்போ என்று ,
சிவந்து இருக்கும் திருவடிகள்,

சின்னஞ்சிறு, மிகச் சின்னஞ்சிறு திருவடிகள்;

அவைகளில் தண்டை, கொலுசு

ஹா, ஹா, அற்புதம் , மிக மிக அற்புதம்!

மறுபடியும் மறுபடியும் உன் பிஞ்சுத் திருவடிகளை ஸ்பர்சித்து,

உன்னையே சரணம் அடைகிறேன்.
ஹே, ப்ரபோ, நீதான் சாக்ஷாத் நாராயணன்;

நீயே விஷ்ணு; நீயே சர்வலோக சரண்யன்;

நீயே ப்ரகிருதி தத்வங்களுக்கு மேலான புருஷன்;
நீயே 26 வது தத்வம்;

நீயே , சர்வ புத்தியையும் தாங்கும் சமஷ்டி புத்தித்வம்;

முக்குணம் உள்ள ப்ரக்ருதியைப்படைத்து, செயல்படுத்தி,
ஆட்டுவிப்பது நீயே; இப்படியாக உன்னை ஸ்ரீ வசுதேவர் ,

உன் திரு அவதாரம் ஆனவுடன் , காரக்ருஹத்தில் ஸ்தோத்ரம் செய்ததைத்
திருப்பிச் சொல்லி ஸ்ரீ வசுதேவரை முன்னிட்டு , அடியேனும் ஸ்தோத்தரிக்கிறேன்.
நீயே, ஒவ்வொரு தத்வத்திலும் அநுப்ரவேஸம் செய்து,

அவைகளை வஸ்துவாக ஆக்கினாய்; அவை யாவும் உனக்குச் சரீரமே;

ஆனால், அதன் குண தோஷங்கள் உன்னைப் பாதிக்காது;

இருபத்தைந்து தத்வங்களான, மஹத், அஹங்காரம், புத்தி, மனஸ், ஐந்து பூதங்கள்,

ஐந்து தன் மாத்ரங்கள், ஐந்து கர்ம, க்ஜாநேந்த்ரியங்கள், , ப்ரகிருதி, ஜீவன், இவைகளைத்
தாமே செயல்படுவது போல,

நீ, தூர விலகி நிற்கிறாய்;

அதைப் போல, தேவகியின் வயிற்றில் கர்ப்ப வாஸம் செய்து,

பிறகு பிறந்து,

உனக்கும் ஒரு மாதா தேவை என்று, உலகத்துக்குக் காட்டினாயோ;

நீ. சிருஷ்டிக்கு முன்பு, மஹத், அஹங்கார தத்வங்கள் மாறுபாட்டை அடையாமல்,

பிறகு உன்னுடைய சங்கல்பத்தாலும், அநு ப்ரவேசத்தாலும், நியமனத்தாலும்,

பஞ்சீகரணம் செய்யப்பட்டு, பரிணமித்து, தாமே அவைகளை உண்டாக்குவது போல

ப்ரமை ஆயிற்று;

இந்த ஸ்ருஷ்டி என்பது, ஸத்கார்யவாதம்; உள்ளே இருக்கும் பொருள் ,

தானே உண்டாகும் —ஸ்ருஷ்டியாகும்;
நெல் விதைத்தால், நெல் தானே வளரும் உனக்கு எந்த மாறுதலும் இல்லை;

தேவகிக்குக் குழந்தையாக நீ பிறந்தது, ” அசந்தநீயம் ” !

( நீ, அதனுள் நுழைந்து பிறந்தாயா? அல்லது, உன் சங்கல்பத்தால் உள்நுழைந்து பிறந்தாயா ?

அவை தாமாகப் பிறந்தனவா ? எது சரி என்று தீர்மானிக்க முடியாதபடி ,

என் புத்தி கலங்குகிறது; உனக்கு, மனுஷ்யர்களைப் போல இந்த்ரியங்கள் இருந்தாலும்

அவை அப்ராக்ருதம்—–சுத்த ஸத்வத்தால் ஆனது ; சுபாஸ்ரயம்;

நீ, எல்லாப் பொருள்களுக்கும் ஆத்மா; அவை யாவும் உனக்குச் சரீரம்;

நீதான் அவைகளை உண்டாக்குகிறாய்;
இது, வித்வான்கள் அல்லாத அறிவிலிகளுக்குப் புரியாது;

உனது சக்தி , சங்கல்பம், வீர்யம், அளவிட இயலாதது;

இந்தப் பொருட்கள் உண்மையாகவே உள்ளனவா ?

பொய்த் தோற்றமா ? ஒன்றா, பலவா ? யாரால் எப்படிச் சொல்ல முடியும் ?

இவை உன்னிடமே லயித்து, உனது சங்கல்பத்தால் ஸ்ருஷ்டிக்கப்படுகிறது;

இது உனக்கு ஒரு லீலை ! இதனால் உனக்கு ஒரு தோஷமும் இல்லை;

நீதான் ஸத்யம்;

நீதான் ஈஸ்வரன், சர்வேஸ்வரன்;

நீதான் ப்ரஹ்மம்;

சத்வம், ரஜஸ் , தமஸ் இவைகளை நீதான் உண்டாக்குகிறாய்;

நீ அகில லோகாதிபதி; ஆனாலும்
உனக்கு கர்ப்ப வாஸம் ஏற்பட்டது ஆச்சர்யம் !

உலகங்களை எல்லாம் படைக்கும் நீ, எங்களுக்காக, அடங்கி, ஒடுங்கி,

வயிற்றில் பதுங்கி இருந்தது, ஆச்சர்யம் !

நானும் மனுஷ்யக் குழந்தைதான் என்கிற கபட வேஷமா இது ?

அநீதியைச் செய்யும் அசுரர்களை அழிக்க, எனது க்ருஹத்தில் பிறந்து
இருக்கிறாய்; தர்மத்தை ஸ்தாபனம் செய்ய, அவதாரம் செய்திருக்கிறாய்;

நீ பிறந்திருப்பதை அறிந்து, கம்ஸனும் அவனுடன் சேர்ந்த துஷ்டர்களும்
, உன் ப்ராதாக்களைக் கொன்றதைப் போல , உன்னையும் கொன்று விடுவார்களே,

, உன்னைக் கொல்ல ஆயுதமேந்தி வருவார்களே ”
இப்படியாக, ஸ்ரீ வசுதேவர் , உன்னை ஸ்தோத்ரம் செய்ததைத் திருப்பிச் சொல்லி,

ஸ்ரீ வசுதேவரை முன்னிட்டு, அடியேனும் அப்படியே
ஸ்தோத்தரிக்கிறேன்
உன் தாயாரான தேவகியும் , மஹா புருஷ லக்ஷணங்களைக் கொண்ட

உன்னைப் பார்த்து, கம்ஸனிடம் பயம் நீங்கியவளாக, உன்னைத் துதித்தாள்
நீயே, ப்ரஹ்மம், நீயே விஷ்ணு, நீயே அத்யாத்ம தீபம்,

அவ்யக்தமாக கண்களுக்குத் தெரியாது இருந்த நீ
இப்போது எங்களுக்குக் குழந்தையாகத் தோன்றி இருக்கிறாய்.

நீ நிர்குணன்;

நிர்விகாரன்;

ஒவ்வொரு வஸ்துவுக்கும் நீயே ஆதாரம்;

உனது வீர்யத்தால், வஸ்துக்களின் ஸ்திதி முதலான

எல்லாவற்றையும் நடத்துகிறாய்;

ஆனால், அதன் குண விசேஷங்கள் உன்னைப் பற்றுவதில்லை;

அப்படியான விஷ்ணுவான நீ, இப்போது என் குழந்தை என்று

சொல்லும்படி விளங்குகிறாய்; உன்னை அடிக்கடி நமஸ்கரிக்கிறேன்.
இப்படி உன்னை, உன் தாயான தேவகி ஸ்தோத்ரம் செய்ததை,

அடியேனும் திருப்பிச் சொல்லி, அந்த தேவகி மாதாவை முன்னிட்டு,

அடியேனும் உன்னை அடிக்கடி நமஸ்கரிக்கிறேன்.

மஹா பிரளய சமயத்தில், ( இரண்டு பரார்த்தம்—-ப்ரஹ்மாவின் ஆயுள் முடியும்போது )

எல்லாப் பொருள்களும் அழிந்து, சூக்ஷ்ம ஸ்திதியில் எல்லாப் பொருளும் ஒடுங்கி,

அவ்யக்தமாக ஆகி, நீ மட்டும் அழியாமல் இருக்கிறாய்.

நீயே கால மூர்த்தி;

என்னை ரக்ஷிப்பவனாகிய உன்னைச் சரணமடைகிறேன்.

கம்ஸனுக்குப் பயந்து வாழ்கிறோம்.

நீதான் அந்தப் பயத்தைப் போக்க வேண்டும்.

இந்த மிக அத்புதமான, அழகான, ஆச்சர்யமான ரூபத்தை மறைத்துக் கொள்.

சாதாரண மனுஷ்யக் குழந்தையாக மாறி விடு;

அந்தக் கம்ஸன் உன்னை, என்னுடைய குழந்தை என்று அறியாமல் இருக்கட்டும்.

நான்கு திருக்கரங்களுடன் கூடிய உன் திவ்ய ரூபத்தை மாற்றிக்கொள்

எல்லாருக்கும் மேலான நீ, என் வயிற்றில் வசித்து, பிறகு பிறந்தாய்.

இது, மனுஷ்ய லோகத்தில் உன்னுடைய லீலை. உன்னை நமஸ்கரிக்கிறேன் ”

இப்படியாகச் சொல்லி, உன் தாயான தேவகி உன்னை ஸ்தோத்ரம் செய்ததை,

அடியேனும் இப்போது சொல்லி, உன் தாயார் தேவகியின் முன்பாக

உன்னை அடியேனும் நமஸ்கரிக்கிறேன்.

இந்தச் சமயத்தில், நீ சொன்னதை உனக்கு நினைவு படுத்துகிறேன்.
“”ஹே, தேவகி, ஸ்வாயம்பூ மன்வந்தரத்தில் ,

உனக்கு ” ப்ருஸ்நீ ” என்று பெயர்; உன் கணவர் ” சுதபர் ” என்கிற ப்ரஜாபதி.

ப்ரஹ்மாவின் கட்டளையான சந்ததியை உண்டாக்குங்கள் என்கிற ஆணையை மீறி,

நீங்கள் இருவரும் இந்த்ரியங்களை அடக்கி, தபஸ் செய்து ,

அவ்வப்போது ஏற்பட்ட சீதோஷ்ண மாறுதல்களைப் பொறுத்துக் கொண்டு,

என்னை உபாஸித்தீர்கள் . 12000 தேவ வருஷங்கள் அவ்வாறு தபஸ் செய்தீர்கள்.

நான், அந்தத் தபஸ்ஸால் சந்தோஷமடைந்து, உங்கள் முன்பு தோன்றி

உங்களுக்கு வேண்டிய வரத்தைக் கேளுங்கள் என்றேன்.

உடனே, நீங்கள், உன்னைப் போல ஒரு புத்ரன் வேண்டும் என்று ப்ரார்த்தித்தீர்கள்.

நீங்கள் மோக்ஷத்தைக் கேட்கவில்லை.
என்னையே உங்கள் பிள்ளையாகக் கேட்டீர்கள்.

நானே உங்களுக்குப் பிள்ளையாகப் பிறக்கிறேன் என்று வரம் தந்தேன்.

நீங்கள் குடும்ப வாழ்க்கையை அனுபவித்தபோது, நான் ” ப்ருஸ்னி -கர்ப்ப ” என்கிற

பெயருடன் பிள்ளையாகப் பிறந்தேன்.

இரண்டாவது தடவையாக, நீங்கள், அதிதி—-கச்யபராக இருந்தபோது,

உபேந்த்ரனாக அவதரித்தேன். வாமனன் என்றும் பெயர்.

இப்போது உங்களின் இந்த மூன்றாவது பிறவியில்,
சதுர் புஜத்துடன் உங்களுடைய குழந்தையாகத் தோன்றி இருக்கிறேன்.

இப்போது, உங்களுக்கு என்னைப் பார்ப்பதால் ஏற்படும் அனுபவம்
ப்ரஹ்ம பாவத்தாலும், புத்ர பாவத்தாலும், மாறி மாறி ஏற்படும்.

இதே ப்ரேமையுடன் வாழ்ந்து, கடைசியில் பரமபதத்தை அடைவீர்கள்

வசுதேவ……. உடனே என்னை எடுத்துக் கொண்டு, கோகுலத்தில்

நந்தகோபன் க்ருஹத்தில் யசோதைக்கு அருகில் என்னை விட்டு விட்டு,
யசோதை அருகில் இப்போதுதான் பிறந்திருக்கும் குழந்தையை

எடுத்துக் கொண்டு, இங்கு வந்து விடு…..எல்லாம் ஸுபமாக நடக்கும் ”

ஹே … பகவன்…….தேவகி—வசுதேவர் தம்பதியரைப் போல

அடியோங்களால் தபஸ் செய்ய இயலாது.; இது ஸ்வாயம்பூ
மன்வந்தரம் அல்ல;.

கலியுகத்தில், வைவஸ்வத மன்வந்தரம்.;

. அடியோங்களுக்கு பலவீனமான புத்தி; பலவீனமான சரீரம்;

ஆனால், ஆசை மட்டும், ஏழு கடல்களுக்கும் அதிகம்;

அந்த ஆசையை , உன் திருவடியில் திருப்ப அனுக்ரஹிப்பாயாக

எட்டாவது குழந்தை தன்னுடைய சதுர் புஜத்தை மறைத்து,

சாமான்ய—-மானிடக் குழந்தையாக மாறிற்று.
வசுதேவர், தேவகி இருவரின் இரும்பு விலங்குகள் தாமாகவே

கழன்று விழுந்தன;

பகவானாகிய இக் குழந்தையின் கட்டளைப்படி, வசுதேவர்,
குழந்தையைக் கூடையில் வைத்து , தலையில் சுமந்து கொண்டார்;

கதவுகள் தானாகவே திறந்து வழி விட்டன

;காவலாளிகளுக்கு நன்கு உறக்கம்;

காரக்ருஹத்திலிருந்துவெளியே வந்தார்;

இருள் சூழ்ந்த ராத்ரி;

மழை பெய்து கொண்டிருந்தது;

மேகங்கள் மெதுவாகக் கர்ஜித்தன;
ஆதிசேஷன், கூடையில் உள்ள குழந்தையான பகவானுக்குத்

தன் முகங்களை விரித்துக் குடை போல ஆகி,

மழைத் தூறல் பகவானின் மேலே விழாத வண்ணம்செய்து ,

தொடர்ந்து வர, வசுதேவர் நடந்து, யமுனை நதியை அடைந்தார்

.யமுனையில் பெருவெள்ளம் சுழியிட்டு ஓடிக்கொண்டிருந்தது.

வசுதேவர் யமுனைக் கரைக்கு வந்ததும்,நதி, தன் வெள்ளப் பெருக்கை

நிறுத்தி, அவருக்கு வழி விட்டது.

வசுதேவர், யமுனை நதியைக் கடந்து, கோகுலத்தில் நந்தகோபன் க்ருஹத்துக்கு

வந்தார்.

இங்கு எல்லோரும் நல்ல தூக்கத்தில் இருந்தனர்.யசோதையின் அருகில் வந்தார்.

“அஜா ” என்று அழைக்கப்படும், யோகமாயை , யசோதைக்குப் பக்கத்தில்,

பெண் சிசுவாகப் பிறந்து இருந்தாள்.
பகவானை, யசோதை அருகில் படுக்கையில் விட்டு விட்டு,

யோகமாயையான பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு,

முன்பு போலவே யமுனை வழி விட, தன்னுடைய இடமான காராக்ருஹத்துக்கு

வந்து சேர்ந்தார்.

உள்ளே நுழைந்ததும், கதவுகள் தானாகவே மூடிக் கொண்டன.
விலங்குகள், தானாகவே, கால்களிலும், கைகளிலும் வந்து பூட்டிக் கொண்டது.

அங்கு , கோகுலத்தில், யோக மாயையினால் மூர்ச்சித்துக் கிடந்த

யசோதை கண் விழித்துப் பார்த்தபோது, தனக்கு ஒரு அழகான ஆண் குழந்தை

பிறந்து இருப்பதைப் பார்த்து, மிகவும் சந்தோஷம் அடைந்தாள்

ஹே….பிரபோ…..உன்னுடைய அகடிதகடினா சாமர்த்தியத்தால்,

ஒருத்தி மகனாய்ப்பிறந்தாய்;

ஓரிரவில் இன்னொருத்தியின் மகனாக நீயே ஆக்கிக் கொண்டாய்;

உன்னைச் சுமந்த கூடைக்கும், குடையாக வந்த ஆதிசேஷனுக்கும்,

வழிவிட்ட யமுனா நதிக்கும், யசோதையின் பெண்ணாக அவதரித்த

யோகமாயைக்கும், வசுதேவர்—தேவகி தம்பதியரை முன்னிட்டு,

அடியேனின் க்ருத்க்ஜயைத் தெரிவிக்கிறேன்.

இந்தப் பெரும் பாக்யசாலிகளாலன்றோ ,

உன்னுடைய லீலைகள் கோகுலத்தில் தொடங்கப் போகிறது

3 வது அத்யாயம் முடிவடைகிறது ஸுபம்

 

அத்யாயம் –4
—————-
யோக மாயையான பகவதி, கம்ஸனை எச்சரிப்பது
—————————————————————-
-(ஹே …பகவானே….வசுதேவர் சிறைக்குத் திரும்பியதும், வெளிக் கதவுகள், உள்கதவுகள் எல்லாம், தாழிட்டுக் கொண்டது உன் சங்கல்பத்தால் அல்லவா !
காவலர்கள் தூங்கியதும், பின்பு இப்போது கண் விழித்ததும் உன் சங்கல்பத்தால் தானே நடந்தது )

, — ஹே, பிரபோ… காராக்ருஹத்தில், , யோகமாயை வீரிட்டுக் கத்தியதும், எட்டாவது குழந்தை பிறந்ததைக் காவலர்கள் மூலம் கேள்விப்பட்ட கம்ஸன் ,
தலைவிரி கோலத்துடன் , தள்ளாடும் நடையுடன், கர்ரக்ருஹத்துக்கு வந்தான். தேவகி, அவனிடம் மன்றாடினாள்.” இந்தப் பெண் குழந்தையை,
உனக்கு மருமகள் போல இருப்பவளை, நீ கொல்லாதே. விட்டு விடு” என்று கதறினாள்.
மார்போடு குழந்தையை அனைத்துக் கொண்டிருந்த அவளைத் தள்ளி விட்டு,குழந்தையை அவள் கையிலிருந்து பிடுங்கி, யோகமாயையின் இரண்டு பிஞ்சுத் திருவடிகளையும் தன்னுடைய இரு கரங்களால் பிடித்து,ஆத்திரமும் கோபமும் இணைய , கல்லின் மீது வீசினான்.

ஆனால், ஹே பிரபோ, உன் கிருபையால் , யோகமாயை , கம்சனின் பிடியிலிருந்து விலகி,ஆகாசத்தில் கிளம்பினாள். என்ன ஆச்சர்யம் ! உன் தங்கை அல்லவா ?

( எட்டுத் திருக்கரங்களுடன் திவ்யமான வஸ்த்ரத்துடன் ,
தேவலோக மாலைகளுடன், ரத்ன ஆபரணங்கள் அணிந்து,எட்டுத் திருக்கரங்களிலும் தனுசு, சூலம், அம்பு, கேடயம், கத்தி, சங்கு, சக்ரம், கதை என்று
எட்டு ஆயுதங்கள் ஏந்தியவளாக , சித்த, சாரண, கந்தர்வ, கின்னர, அப்சரஸ்கள் சமர்ப்பித்த பூஜைகளை ஏற்று, பகவதி—துர்க்கை —என்று போற்றப்படும் உன் தங்கையை ,தேவியை, பலதடவை நமஸ்கரிக்கிறேன் )

அந்த யோகமாயை, கம்ஸனைக் கோபத்துடன் பார்த்து,
” ஹே, முட்டாளே……என்னைக் கொல்வதால் ஒரு பயனும் இல்லை; உன்னைக் கொல்வதற்கு உன் விரோதி பிறந்து விட்டான்; இனிமேலாவது, குழந்தைகளைக் கொள்வதை நிறுத்து; என்று கர்ஜித்தது .
(பூமியில் பல கோவில்களில் துர்க்கை என்றும் , பகவதி என்றும் , குடிகொண்டு இப்போதும் அநுக்ரஹம் செய்து கொண்டிருக்கும் , விஷ்ணுவாகிய உனக்குத் தங்கையாகிய , அந்தத் துர்க்கையை நமஸ்கரிக்கிறேன். )

யோகமாயையின் வார்த்தைகளைக் கேட்ட கம்ஸன் , அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தான்.
வசுதேவர், தேவகியை சிறையிலிருந்து விடுவித்தான்.
அவர்களை நோக்கி, ” என்னை மன்னியுங்கள்; குழந்தைகளைக் கொன்ற பாபி நான்;சிசுஹத்தி பாபத்தினால், எந்த நரகத்தை அடைவேனோ தெரியாது; தெய்வமே பொய் பேசுகிறது;
( எட்டாவது குழந்தையாக ஆணுக்குப்பதில் பெண் குழந்தை பிறந்து,, எட்டாவது குழந்தை ஆணாக எங்கு உள்ளதோ என்கிற சந்தேகத்தில் ) ;
குழந்தைகளை இழந்ததால் அழாதீர்கள்; பிறக்கும் யாவும் ஒரு நாள், இறக்க வேண்டியதே; இது விதியின் செயல்; தேகம்தான் நாசமடைகிறது; ஆத்மா நாசமடைவதில்லை
மரித்தபின் புதுப் புதுத் திரேகம் அதற்குக் கிடைக்கிறது; ” இப்படிப் பலவாறாகப் பேசி,அவர்களின் மன்னிப்பை வேண்டினான்.
வசுதேவர் ” நீ சொல்லியவை சத்யம்; ஜீவன்கள், அக்ஜானத்தாலே புத்தி பேதலித்து, ஒருத்தரை ஒருத்தர் கொன்றுகொண்டு அழிகிறார்கள்; ” என்றார்.
கம்ஸன் அரண்மனையை அடைந்தான்.. மறுநாள் காலை, மந்த்ரிகளை அழைத்து,யோகமாயை சொன்னதை அவர்களிடம் சொன்னான்.
அவர்கள் தேவ சத்ருக்கள். அசுரர்கள். கோபத்துடன் கம்ஸனிடம் பேசினார்கள்.
” எல்லா இடங்களிலும் பத்து நாட்களுக்குள், எந்தக் குழந்தை பிறந்திருந்தாலும்,அதைக் கொல்வோம்; விரோதிகளிடம் கருணை காட்டாதீர்கள்; ஹரியோ, சிவனோ, ப்ரும்மாவோ, நம்மை ஒன்றும் செய்ய முடியாது; ஆனாலும், விரோதிகளிடம்
அலக்ஷ்யமாக இருக்கக்கூடாது; அவர்களுக்கு விஷ்ணு தான் மூலபலம்; அவரை அழிக்க வேண்டும்; குழந்தையாக எங்காவது பிறந்திருக்க வேண்டும்;
கால தாமதம் கூடாது; எங்கே சனாதன தர்மம் தழைத்து இருக்கிறதோ,எங்கே பிராம்மணர்கள் பசுக்களுடன் தபஸ், யக்ஜம் என்று செய்துகொண்டு
இருக்கிறார்களோ , அவர்களைத் தேடித் தேடி அழிப்போம்; இவர்களை ஒழிப்பது, விஷ்ணுவை ஒழிக்கச் சிறந்த உபாயம் ” என்று கர்ஜித்தனர்.
கம்ஸன் காலபாசத்தினால் தூண்டப்பட்டு , “சரி ” என்று அனுமதி கொடுத்தான்
.
(ஹே, பிரபோ … கம்ஸனுடைய மந்த்ரிகள், உன்னைப் பற்றிய ஆழ்ந்த அறிவுடன் இருந்தும்,
அஹம்பாவம், அஹங்காரத்தால், அவர்களும் அழிந்து, அரசனையும் அழித்தார்கள்.
இது உன் லீலை; கிருஷ்ணாவதார லீலை; அந்த லீலைக்கு அடியேனின் நமஸ்காரங்கள் )

4 வது அத்யாயம் முற்றிற்று —ஸுபம்

குறிப்பு;—அடைப்புக் குறிக்குள் உள்ளவை அடியேன் சொல்பவை .
முதல் மூன்று அத்யாயங்களிலும் , அடியேன் சொல்லி இருக்கிறேன்;
ஆனால் , அடைப்புக்குறி போடவில்லை.
அடியேனின் வார்த்தைகள் மட்டில் இனி அடைப்புக் குறிக்குள் சொல்லப்படும்

தசமஸ்கந்தபாராயணம்–நவீனபாணியில்—5
——————————————————-
5வது அத்யாயம்
——————–
ஸ்ரீகிருஷ்ணஜனனகோலாஹலங்கள்–

-கோகுலம் உயர்ந்தது–

வசுதேவரும், நந்தகோபரும்மதுராவில்சந்திப்பு
————————————————————————————-
யசோதை, பிரசவ அறையில் கண்விழித்துப் பார்த்தாள்.
அருகே ஆண் குழந்தை. ஜகஜ்ஜோதியாகப் ப்ரகாசம் . நந்தகோபனுக்கு , இந்த ஸுபச்செய்தி
சொல்லப்பட்டது. மிகுந்த சந்தோஷத்துடன், குழந்தைக்கு மங்கள ஸ்நானம் செய்துவைத்து,
வேதவிற்பன்னர்கள் , பிராம்மணர்களை அழைத்து, புண் யாஹவாசனம், ஜாதகர்மா முதலிய
கர்மாக்களைச் செய்யும்படி சொல்லி, ஸ்வஸ்திவாசனம் சொல்லும்படி பிரார்த்தித்து,
பித்ருக்களையும் தேவர்களையும் பூஜை செய்தான்.
நாந்தி ஸ்ராத்தம் செய்து வைத்தான். எள்ளை மலைபோலக் குவித்து, அதில் ரத்னங்களைப் போட்டு,
அவற்றைத் தங்கத் துணியில் கட்டி, தானம் செய்தான்.

த்ரேகம், ஸ்நானம், சௌசம் முதலிய ம்ஸ்காரங்களாலும்,

தபஸ், இஜ்ஜை ஆராதனம் ,போன்றவைகளாலும் சுத்தி அடைகிறது.

ஆனால், ஆத்மா, ஆத்ம வித்யையினால் சுத்தி/ சுத்தம் அடைகிறது.

பிராம்மணர்கள், புராணக் கதைகள் சொல்லும் சூதர்கள், குலப்பெருமைகளை எடுத்துச் சொல்பவர்கள்,

இவர்களெல்லாம் கூட்டம் கூட்டமாக வந்து சம்பாவனை வாங்கிச் சென்றார்கள்.

துந்துபி வாசிப்பவர்கள், மேளம் வாசிப்பவர்கள் வந்து தக்ஷிணை பெற்றுச் சென்றார்கள்.
(ஹே, பிரபோ, கோகுலத்தில் உன் ஜனன உத்ஸவம் இப்படிக் கோலாஹலமாக நடந்தபோது,
அடியேனும் அருகில் இருந்து, அனுபவிப்பதாக எண்ணிப் ப்ரமிக்கிறேன்)
கோகுலத்தில் , பசுக்கள் வசிக்கும் தொழுவங்கள் (வ்ரஜபூமி ) மெழுகி சுத்தம் செய்யப்படுகிறது.

கோகுலம் முழுவதும் வீடுகள் எல்லாம், மெழுகிச் சுத்தம் செய்யப்படுகின்றன.

கொடிகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப் படுகின்றன.

பசுக்கள், காளைமாடுகள், கன்றுகள், நன்கு குளிப்பாட்டப்பட்டு,மஞ்சள், குங்குமம், அணிவிக்கப்பட்டு, மாலைகளாலும், வஸ்த்ரங்களாலும்,
அலங்கரிக்கப்படுகின்றன.

கோபர்கள் தங்களை நன்கு அலங்கரித்துக் கொள்கிறார்கள்.
வெகுமதிகளைச் சுமந்துகொண்டு, நந்தகோபன் மாளிகைக்குச் செல்கிறார்கள்.
கோபிகைகளைப்பற்றிச் சொல்லவே வேண்டாம். கண்களுக்கு மை தீட்டி,
பலவித நிறம் கொண்ட சேலைகளை உடுத்தி, நகைகளை அணிந்து,
குதி போட்டுக்கொண்டு, காதில் குண்டலங்கள் ஆட,
கழுத்தில் தங்க ஹாரங்கள் கைகளில் தங்க வளைகள்,
குதிக்கும்போது ஒன்றுடன் ஒன்று உரசி ,
தங்கள் மகிழ்சசியை வெளிப்படுத்துமாப்போலஸப்திக்க,
கால்களில் சலங்கைகள் ஜதி போட, புஷ்பங்கள், சந்தனம், மங்கள அக்ஷதைகளை
எடுத்துக் கொண்டு, நந்தகோபன் மாளிகைக்குச் செல்கிறார்கள்.

வயது முதிர்ந்த கோபிகைகள், குழந்தைக்கு, ஹரித்ரா சூர்ணதைலாத்பி தெளித்து, பகவான் , இந்தக் குழந்தையைப் பலகாலம் க்ஷேமமாக
ஜீவிக்கும்படி செய்யவேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள்.

கோகுலத்தில் , கிருஷ்ணன் மாத்ரமல்ல, ரோஹிணிக்குப்பிறந்த, பலராமனும் இருப்பதால்,
எங்கும் விசித்ரமான மங்கள வாத்தியங்கள் சப்திக்கின்றன.
கோபிகைகள் “கிருஷ்ண தர்சனம் ” முடித்து, பிரியமுடியாமல் அங்கிருந்து புறப்பட்டுத்
தத்தம் வீடுகளுக்கு வந்து, சந்தோஷத்தால், தயிர், வெண்ணெய், பால் இவைகளை
பரஸ்பரம் ஒருவர் மேல் ஒருவர் அப்பி, விளையாடுகிறார்கள் .

நந்தகோபன், தன் மாளிகைக்கு வந்தவர்களுக்கெல்லாம் உபசாரங்கள்செய்து
தானங்கள் கொடுக்கிறான். வெகுமதிகள் வழங்குகிறான்.
வழங்க, வழங்க, கொஞ்சமும் குறையாத செல்வச் செழிப்பு ஏற்படுகிறது.
வசுதேவரின் இன்னொரு மனைவி “ரோஹிணீ ”
—கோகுலத்தில் பலராமனைப் பெற்றவள்—நந்தகோபன் மாளிகைக்கு வருகிறாள்;
நன்கு உபசரிக்கப்பட்டு, அந்த மஹோத்சவத்தில் மகிழ்ச்சியுடன் சஞ்சரிக்கிறாள்.
எல்லா ஐஸ்வர்யங்களும் , க்ருஷ்ண க்ருஹத்துக்கு வருகின்றன
.
(ஹே, கிருஷ்ணா…..உன்னுடையதான, இந்த மஹோத்ஸவத்தில் அடியேனையும்
ஒரு கோபனாக —-இல்லை, இல்லை—-கோபிகையாக நினைத்து,இந்த மஹோத்ஸவ மகிழ்ச்சியில் திளைக்கிறேன் )

இப்படியாக, கோகுலத்தில் நடந்து வரும்போது, ஒருநாள் , நந்தகோபன் ,கம்சனுக்கு , கோகுலத்தில் வசிக்கும் கோபர்கள் சார்பாக, —-வருஷாந்திரக் கப்பம்
கட்டுவதற்கு, மதுராவுக்கு வந்தார். நந்தகோபன் வந்த செய்தி கேள்விப்பட்டு,
, வசுதேவரும், நந்தகோபன் தங்கி இருக்கும் இடத்துக்குச் சென்றார்.
ஹே,, சகோதரா…..உன்னைப் பாக்ய வசத்தால் பார்த்தேன். தகுந்த காலத்தில் உனக்கு,
யாத்ருச்சையாக, குழந்தை பிறந்துள்ளதைப்பற்றி ரொம்ப சந்தோஷம்;
நம் போன்ற பந்துக்கள், ஒரே இடத்தில் சேர்ந்து வசிக்க முடிவதில்லை;
காரணம், நமக்குள் உள்ள தொழில்களின் வித்யாசத்தாலே;
நீர், கோகுலத்தில், பந்து,மித்ரர்களுடன் பசுக்களுடன், வியாதி இல்லாதபடி வசிக்கிறீர்;
ரோஹிணியிடம் வளரும் என் பிள்ளை பலராமன் சௌக்யமா ” என்று பேசினார்.
உடனே, நந்தகோபர், “உமக்குக் கம்சனால் ஏற்பட்ட துன்பங்களும் குழந்தைகளின் இழப்பும்,
ஒரே ஒரு கன்யா ஆகாசத்தில் சென்றதும் கேள்விப்பட்டேன்;
விதி ஒவ்வொருவரையும் படாத பாடு படுத்துகிறது;

தெய்வத்தை நம்பி வாழ்பவன் பகவத் கிருபையால் அத்ருஷ்டத்தை அடைகிறான்;என்றார்.

வசுதேவர் , ” சரி… நீர் கம்சனுக்குக் கப்பம் கட்டியாகி விட்டது;
நாம் யதேச்சையாகச்சந்தித்துக்கொண்டோம்;
உத்பாதங்கள் ( கெட்ட சகுனங்கள் ) தோன்றுகின்றன;
சீக்ரமாக் கோகுலத்துக்குத்திரும்பங்கள் ” என்றார்.
வசுதேவரால், இப்படிச் சொல்லப்பட்டதும், நந்தகோபரும் உடனே புறப்பட்டார்.

(ஹே, பிரபோ…. வசுதேவரையும் , நந்தகோபரையும் சந்திக்கச் செய்து,
கெட்ட சகுனங்கள் தெரிகின்றன என்பதாக அவர்களை உடனே பிரித்து , நந்தகோபரை உடனே கோகுலத்துக்கு வரவழைத்ததன் ரஹஸ்யம் என்ன ?
அடியேனிடம் சொல்லமாட்டாயா )

5 வது அத்யாயம் முற்றிற்று.

அத்யாயம் 6.
————-
பூதனை மோக்ஷம்
————

நந்தகோபன் , கோகுலத்துக்குத்திரும்பும் வழியில்,

வசுதேவர் சொன்னதை நினைத்துக்கொண்டே வந்தான் .

எதுவாக இருந்தாலும், பகவான்தான் ரக்ஷணம் என்று மனத்தால்,

பகவானைச் சரணமடைந்தான்
வசுதேவர் சொன்னபடியே, கோகுலத்தில்

கெட்டவை நடப்பதற்கான, சூசகங்கள் தோன்ற ஆரம்பித்து விட்டன.

பூதனை என்கிற ராக்ஷஸி —-கோர ரூபமுள்ளவள்—கம்ஸனால் ஏவப்பட்டவள்—

கோகுலத்துக்குள் புகுந்து, வீடு வீடாகச் சென்றாள்.

உருவத்தை, அழகான, அதிரூபசுந்தரியாக மாற்றிக்கொண்டு, சென்றாள்.

கோபிகைகள், இவளைப் பார்த்ததும், மயங்கினார்கள்.

தேவலோகத்து சுந்தரியோ என்று அதிசயித்தார்கள்.

இந்த பூதனை,, யதேச்சையாக நந்தகோபன் மாளிகைக்குள் நுழைந்தாள்.

கிருஷ்ணன், படுக்கையில் தனியாக இருப்பதைப் பார்த்தாள்.
கிருஷ்ணன், தன் தேஜஸ்சை முற்றிலும் மறைத்துக் கொண்டு,

சாம்பலால் மூடியிருக்கும் அக்நியைப் போல இருந்தான்.

இந்தக் குழந்தையை, தன்னுடைய நிஜ ராக்ஷஸ ஸ்வரூபத்தை

முற்றிலும் மறைத்துக்கொண்டு, தேவலோகத்து சுந்தரியைப் போல

மிளிரும் பூதனை பார்த்தாள்
.
(ஹே, கிருஷ்ணா….நீ உன்நிஜமான தேஜஸ்சை மறைத்துக்கொண்டிருக்கிறாய்

ஆனால், பூதனையோ, தன் நிஜமான ராக்ஷஸ ஸ்வரூபத்தை முற்றிலும்

மறைத்துக் கொண்டிருக்கிறாள். இது என்ன, விளையாட்டு ! )
ஹே, பிரபோ…..நீ ஓரக்கண்ணால், அவளைப்பார்த்து, கண்களை மூடிக்கொண்டாய்.

தூங்கும் சர்ப்பத்தை, கயிறு என்று எண்ணி, மடியில் எடுத்துப் போட்டுக்கொள்ளும்

மனிதரைப் போல, வெளிப் பார்வைக்கு மிகவும் அன்புள்ளவளாக ,

யசோதை, ரோஹிணீ இருவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே,

அவர்கள், இவள் தளுக்கிலும் மினுக்கிலும் ப்ரமை பிடித்து ,

அவளைத் தடுக்காமல் இருக்க,

பூதனை, உன்னைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டாள்.

உனக்கு, ஸ்தன்ய பானம் கொடுக்கத் தொடங்கினாள்.

நீ, ஸ்தன்யத்துப்பாலை உறிஞ்ச ஆரம்பித்ததும், அவளுக்கு வலி பொறுக்கவில்லை.

“என்னை விட்டு விடு, என்னை விட்டு விடு ” என்று கதறினாள்.

ஆனால் அதற்குள் , எல்லா அங்கங்களும் உலர்ந்து,

ஜீவனும் வறண்டு, கண்கள் பிதுங்கி, கால் கைகளை உதறிக்கொண்டு,

உடலெல்லாம் வியர்க்க, பெரிதாக ஓலமிட்டாள்.

அந்த சப்தத்தால் பூமியும் மலைகளும் நடுங்கின,

பூதனை, தன் சுய ரூபமான ராக்ஷ்ஸியின் உருவத்துடன் ,

வாயைப் பிளந்துகொண்டு, கைகளும் கால்களும் பூமியில் நீட்டிக்கொள்ள ,
12 மைல் விஸ்தீரணத்துக்கு செடிகொடிகள் ஒடிந்து விழ, —–

-செம்பட்டைத் தலைமயிர் பறக்க——பூமியில் உயிரற்று விழுந்தாள்.

இதைப் பார்த்த, கோபர்களும், கோபியர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
சுகபிரம்ம ரிஷி, ராஜா பரீக்ஷித்துக்குக் கூறுகிறார்;-

பகவானான -நீ மட்டும் அவளுடைய மார்பில் பயமே இல்லாமல்

விளையாடிக்கொண்டிருந்தாய். பயந்த நிலையல் இருந்த கோபியர்கள்

உடனே ஓடிவந்து, உன்னைத் தாவி எடுத்து, அணைத்துக் கொண்டார்களாம்.
யசோதையும் ரோஹிணியும் அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு, உன்னை

அவர்கள் எடுத்துக் கொண்டு, உன்னைத் தடவித் தடவிப் பார்த்து,

பசுமாட்டின் வால்மயிரால் ரக்ஷை செய்து,

அத்தால் உன்னைப் பிரதக்ஷணமாகச் சுற்றி, கண் எச்சில் படாதவாறு

இருக்கவேண்டும், ஆபத்து விலகவேண்டும் என்று வேண்டிக்கொண்டு,

அதை எறிந்தார்களாம். கர்ப்பூர ஹாரத்தி எடுத்தார்களாம்.

கோமூத்ரத்தினால் உன்னை நீராட்டினார்களாம்.

பசுவின் சாணத்தினால் , உன் அங்கங்களில் தேய்த்து,

உன்னுடைய பன்னிரண்டு நாமாக்களை——–

இந்த நாமாக்கள் உன்னைத்தான் குறிக்கின்றன, என்று அறியாது,
உன்னையும் பகவான் விஷ்ணு என்று அறியாது——

அந்த த்வாதச நாமாக்களை பீஜாக்ஷரங்களினால்,

உன்னுடைய 12 அங்கங்களில் சுத்தி செய்தார்களாம்.

மேலும், பிரார்த்தித்தார்களாம்

“அஜர்” என்பவர், உன் பாதங்களைக் காப்பாராக;

கௌஸ்துபம் அணிந்த “மணிமான் ” உன் முழங்கால்களைக் காப்பாராக;

“யஜ்ஞர் ” உன் தொடைகளை ரக்ஷிப்பாராக;

“அச்யுதர் ” உன் கடிதடப் பிரதேசத்தை ரக்ஷிப்பாராக;

” ஸ்ரீ ஹயக்ரீவர்” உன் வயிற்றை ரக்ஷிப்பாராக;

” கேசவன் ” உன் ஹ்ருதயத்தைக் காப்பாற்றட்டும் ;

” ஈஸர் ” உன் உதரத்தையும்,

“இனர் ” கழுத்தையும்,

“விஷ்ணு ” புஜங்களையும்,

“ருக்ரமர்” முகத்தையும்,

” ஈஸ்வரர் ” தலையையும் ரக்ஷிக்கட்டும்.

சக்ரதாரி , உன்னை முன்புறமாகக் காப்பாற்றட்டும்;

ஹரி, கதையுடன், உன்னைப் பின்புறமாகக் காப்பாற்றட்டும்;

மதுசூதனன், அஜனர் இருவரும் சார்ங்கத்தையும், கத்தியையும் தரித்து,

உன் இரண்டு பக்கங்களிலிருந்து , உன்னைக் காப்பாற்றட்டும்;

வாமனர்,உச்சந்தலைப்பாகத்தையும்,

கருடவாஹனர் நீ இருக்கும் பூமியையும் ,

சங்கர்ஷணர் (கலப்பையை வைத்திருப்பவர் ) எல்லாப் பக்கங்களிலிருந்தும்

உன்னைக் காப்பாற்றட்டும்;

ஹ்ரூஷீகேசன் இந்த்ரியங்களையும்,

நாராயணன் பிராணன்களையும்,

வாசுதேவர், சித்தத்தையும் ( புத்தி ),

அநிருத்தர் மனசையும், ரக்ஷிக்கட்டும்;

கோவிந்தன் , உன் விளையாட்டு லீலைகளில் உன்னைக் காக்கட்டும்;

மாதவன், நீ படுத்திருக்கும்போதும்,

வைகுந்தர், நீ நடக்கும்போதும்,

ஸ்ரீயப்பதி , நீ ஆசனத்தில் அமர்ந்திருக்கும்போதும்,

யக்ஜபுக் , நீ சாப்பிடும்போதும், உன்னைக் காக்கட்டும்.;
டாகினிகள், யாதுதான்யர்கள், கூஷ்மாண்டர்கள்,

பூத,பிரேத, பிசாசர்கள், யக்ஷ, ராக்ஷசர்கள், கோடராக்கள்,

ரேவதி, ஜ்யேஷ்டா , பூதனா, பதினாறு மாத்ரிகா தெய்வங்கள்,

அபஸ்மாரங்கள், தேகம் இந்த்ரியம், பிராணன் இவைகளைப் பீடிக்கும்

துஷ்ட தேவதைகள், கெட்ட ஸ்வப்னங்களில் காணப்படும் தேவதைகள்——-

யாவரும் அழிந்து போகட்டும்.

ஸ்ரீ மகாவிஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களைச் சொல்வதால்

இவை அனைத்தும் அழிந்து போகும். என்று சொல்லி வேண்டினார்களாம்.
( ஹே, பிரபோ,,,பாசத்தின் மிகுதியால், கோபிகைகள், உனக்கு இவ்வாறு ரக்ஷை செய்தார்கள் என்று ஸ்ரீ சுகப்ரம்மம் கூறுகிறார்.அந்தக் கோபிகைகளை அடியேன் அடிக்கடி நமஸ்கரிக்கிறேன். )
யசோதை உனக்கு ஸ்தன்யபானம் கொடுத்துத் தூங்க வைத்தாள்.

நந்தகோபன் , திரும்பி வந்து நடந்ததைக் கேட்டும்,

பூதனையின் த்ரேகத்தைப்பார்த்தும் அதிர்ச்சி அடைந்தான்.

வசுதேவர் சொன்னதை நினைத்தான்.

அங்கிருந்தவர்கள், பூதனையின் உடலைக் கோடாலியால் வெட்டி,

ஓரிடத்தில் குவித்து எரியூட்டினர். அப்போது எழுந்த புகை,

சந்தனம்–அகில்கட்டைவாசனையைப் போல இருந்தது என்று

ஸ்ரீ சுக பிரம்மம் கூறுகிறார். உன்னால் அவளுடைய உயிர் மாத்ரம்

உறிஞ்சப்படவில்லை; அவளுடைய பாபங்களும் உறிஞ்சப்பட்டன;

அதனால், நற்கதி அடைந்தாள்.
இவளுக்கே இப்படி என்றால், உன்னிடம் பக்தி செய்து பூஜித்தால்,

பிரார்த்தித்தால், அந்த பக்தர்களுக்கு எல்லாவித நன்மைகளையும்

கொடுத்து ரக்ஷிப்பாயே !

உன்னிடத்தில் செய்யப்படும் புத்ர ஸ்நேஹம் யசோதை ரோஹிணீ

இருவருக்கும் பெருமை அல்லவா !சுகமஹரிஷி பரீக்ஷித்துக்குச்
சொன்னதைப்போல, நந்தகோபன் , உன்னை, கைகளில் எடுத்து,

உச்சிமுகர்ந்து மகிழ்ந்து பரவசப்பட்டான்
(ஹே….பிரபோ….இந்த பூதனையின் மோக்ஷத்தை, ச்ரத்தையுடன் சொல்பவர்கட்கும், கேட்பவர்கட்கும் உன்னிடம் பரமபக்தி ஏற்படுவது நிச்சயம்.)

6 வது அத்யாயம் முற்றிற்று.

அத்யாயம் —–7
—————————
சகடாசுரன் ,த்ருணாவர்த்தன் வதம்—-அதாவது மோக்ஷம்.மற்றும் யசோதை, கண்ணனின் திருவாயில் உலகங்கள் என்று யாவற்றையும் பார்ப்பது
————————————————————————————

ே, பிரபோ, உத்தரையின் புத்ரன் ராஜாவாகிய பரீக்ஷித்,

, சுக ப்ரஹ்மரிஷியைக் கேட்டதை இப்போது சொல்கிறேன்
ஹே, ப்ரஹ்மன், பகவானின் லீலைகளைக் கேட்கக் கேட்க,மனம் அதிலேயே லயிக்கிறது. விபரீதமான எண்ணங்கள் அழிகின்றன.
அவரிடம் பக்தி மேலும் மேலும் அதிகரிக்கிறது.
அவருடைய பால்ய லீலைகளைச் சொல்வீராக என்று
பரீக்ஷித் கேட்டவுடன், ஸ்ரீ சுகர் மேலும் சொல்ல ஆரம்பித்தார்.
அவர் சொன்னதை, அடியேனே , உனக்குச் சொல்வதுபோல் சொல்கிறேன்
நீ மூன்று மாதக் குழந்தை; உன்னுடைய மாச திருநக்ஷத்ரம்( ரோஹிணி )
மூன்றாவது தடவையாக வந்த தினம். . யசோதை, உன்னை நன்கு குளிப்பாட்டி,
வஸ்த்ரம் அணிவித்து, உன்னைத் தொட்டிலில் விட்டு,
வீட்டு வேலைகளைச் செய்யத் தொடங்கினாள். உனக்குப் பசி வந்து, பாலுக்காகக் கத்தினாய்; உன்னுடைய இந்தக் கத்தல் யசோதைக்கு கேட்கவில்லை;

நீ, பசியால், கையையும் காலையும் ஆட்டி, உதைத்துக் கொண்டு அழுதாய்; உன்னுடைய உதையால், பக்கத்திலிருந்த பால் பாத்ரம்,தயிர் பாத்ரம் எல்லாம் சப்தத்துடன் கீழே விழுந்தன;
பக்கத்தில் இருந்த ஒரு வண்டியின் சக்ரம் , நுகத்தடி, உன் திருவடிகளால் உதை பட்டு, நசுங்கின; ஒடிந்தன;விழுந்தன. அருகில் இருந்த ஆய்ச்சியர்கள்,
இதென்ன, ஆச்சர்யம் என அதிசயித்தனர். யசோதையும், நந்தகோபனும் சப்தம் கேட்டு,
ஓடிவந்து பார்த்து, குழந்தையின் காலுக்கு இவ்வளவு பலமா என்று ஆச்சர்யப் பட்டனர்.
இது கோகுலம் முழுவதும் பரவியது. சகடாசுரன் என்கிற அசுரன், வண்டி, சக்ரம் என்று ரூப மெடுத்து , உன்னை அழிக்க, உன் அருகில் ஒளிந்திருக்கும்
விஷயமானது உனக்குத் தெரிந்து, உன் சிறிய திருவடியால் உதைத்து,அதை உடைத்து, அவனையும் அழித்தாய்.
(ஹே….பிரபோ….அந்தச் சின்னஞ்சிறு திருவடிகளை , அடியேன் என் சிரஸ்ஸில் தாங்கி, உன்னை நமஸ்கரிக்கிறேன் )
யசோதை, கெட்ட பிசாசு செய்த வேலையே என்று பயந்து,உன்னைத் தூக்கி வைத்துக்கொண்டு , ஸ்தன்ய பானம் கொடுத்து,உன்னைத் தூங்க வைத்தாள்.
இப்போது, நீ, ஒரு வயது பாலகன்; இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டுகொஞ்சும் பருவம்; யசோதை, ஒருநாள், உன்னை இப்படியே இடுப்பில்
தூக்கி வைத்துக் கொஞ்சி , மடியில் அமர்த்திக்கொண்டாள்;

நீ, திடீரென்று அவளுக்குக் கனத்தாய்—-கனமாக ஆனாய்;
அவள் பயந்து , உன்னைத் தரையில் விட்டுவிட்டு ,
பகவானை வேண்டிக் கொண்டு, வீட்டு வேலைகளைச் செய்யத் தொடங்கினாள்;
இந்தச் சமயத்தில், “தைத்யன் ” என்கிற அசுரன்,
“த்ருணாவர்த்தன் ” என்கிற பெயருடன், கம்ஸனால் அனுப்பப்பட்டு ,வேகமாக வீசும் காற்று உருவத்தில் வந்தான்; எல்லாப் பொருள்களையும்,
தூசியினால் மறைத்து, உன்னையும் தூக்கிக் கொண்டான்;உஷ்ணக் காற்றாக வீசி, திக்குகளை மறைத்தான்;கோகுலத்தை மறைத்தான்; கோர சப்தத்துடன் , ஊழிக்காற்று போல வீசினான்;
யசோதை பயந்தாள்; உன்னைத் தரையில் விட்ட இடம் தெரியவில்லை;தேடினாள் ; அழுதாள் ; பகவானை ஸ்மரித்துக் கொண்டே மூர்ச்சையானாள்;
கோபியர்களும் அழுதார்கள்.

திருணாவர்த்தன் , உன்னைத் தூக்கிக் கொண்டு, ஆகாயத்தில் கிளம்ப முயற்சித்தான்.
ஆனால், உன்னுடைய பாரத்தை, அவனால் தாங்க முடியவில்லை.சுய உருவம் எடுத்துக்கொண்டான். கற்பாறையைப் போன்று , நீ, அவன் கழுத்தைப் பிடித்துக் கொண்டிருந்தாய். அதனால், அவன் தொண்டை ,
இறுக்கப்பட்டது. அவன் கண்கள் பிதுங்கின; ” ஹா ” என்கிற பெரிய சப்தத்துடன்,திருணாவர்த்தன், கீழே விழுந்து உயிரை விட்டான்.பயங்கரமான சப்தம் வந்த திசையை நோக்கி, கோபர்கள், கோபியர்கள் ஓடினார்கள்;
த்ருணாவர்த்தனின் உயிரற்ற சடலத்தில், ஒரு வயதுக் குழந்தையான நீ ,எவ்விதப் பயமும் இல்லாமல், விளையாடிக் கொண்டிருந்தாய்.
கோபிகைகள், உன்னை வாரி எடுத்து, யசோதையிடம் கொடுத்தனர்.
யசோதை, உன்னை, உச்சி முகர்ந்து, சந்தோஷப்பட்டாள்.
பெரிய காற்றின் பிடியிலிருந்து, குழந்தை காப்பாற்றப் பட்டிருக்கிறான்;
ராக்ஷசன் இறந்து கிடக்கிறான்; பெரிய ஆபத்திலிருந்து, காப்பாற்றப்பட்டது,புண்ய கர்மாவின் பலன் என்று, நந்தகோபனும், பந்துக்களும், நினைத்தார்கள்.

வேறொரு சமயம், யசோதை, உனக்கு ஸ்தன்யபானம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.பாலை சாப்பிட்டுக் கொண்டிருந்த நீ, தூங்குவதற்கு நினைத்தவன் போல, வாயைத் திறந்து கொட்டாவி விட்டாய்.
அப்போது, ஆகாயம், நக்ஷத்ரக் கூட்டங்கள், எல்லாத் திசைகள், சந்திரன், சூர்யன்,நெருப்பு, காற்று, சமுத்ரங்கள், ஏழு த்வீபங்கள், மலைகள், காடுகள்,
அவற்றில் ப்ரவஹிக்கும் ஆறுகள், நடமாடும் எல்லாப் பிராணிகள், —-
இப்படி விஸ்வம் முழுவதையும் , யசோதை, உன் வாயில் பார்த்தாள்.பயம் கலந்த ஆச்சர்யத்துடன், கண்களை மூடிக்கொண்டாள்.
அவளுக்கு, இது ஸ்வப்னமா, நிஜமா என்று சந்தேகம் வந்து விட்டது.
உன்னை “பரமாத்மா, இவன்; மானிடக் குழந்தை அல்ல ” என்று யசோதை எண்ணியதாக, ஸ்ரீ சுகர், பரீக்ஷித் ராஜாவிடம் சொன்னார்.
( ஹே, பிரபோ…..யசோதை என்ன பாக்யம் செய்தாளோ !
அந்தத் தாயைப் பலமுறை நமஸ்கரிக்கிறேன் )
7 வது அத்யாயம் முற்றிற்று

தசமஸ்கந்த பாராயணம்— அத்யாயம்– 8
——————————————-

—————-
பெயர் சூட்டுதல்—பால்ய லீலைகள் —மண்ணைத் தின்ற மாமாயன்
——————————————————-

ஸ்ரீ சுகப்ரம்மம் , பரீக்ஷித் ராஜனுக்குச் சொன்னார்.
மதுராவில் ஒருநாள், யதுக்கள் எனப்படும் இடையர்களுக்கு ( கோபர்கள், கோபிகைகள் )
ப்ரோஹிதரான “கர்க்கர் ” என்கிற ரிஷியை, வசுதேவன் ரஹஸ்யமாக அழைத்து,
” ஹே, முனிபுங்கவரே ! கோகுலத்துக்குச் சென்று, அடியேனுடைய குழந்தைக்குப் பெயர் சூட்டுங்கள் ”
என்று கேட்டுக்கொண்டார். கர்க்கரும் சம்மதித்து, கோகுலத்துக்கு வந்தார்.
நந்தகோபன் அவரை வரவேற்று , நமஸ்கரித்து, ஆசனம் கொடுத்து அவரிடம் பேசினான்.
“ஹே, ப்ரஹ்மந்….உங்கள் விஜயம் எங்களுக்குப் பாக்யத்தைக் கொடுக்கிறது
; நீர் ஜ்யோதிஷ சாஸ்த்ரத்துக்குப் பொக்கிஷம்; முக்காலமும் உணர்ந்தவர்;ஆத்ம வித்யைகளை அறிந்த ப்ரஹ்ம வித்து; எனக்குக் குழந்தை இருக்கிறான்;
வசுதேவருக்கு ரோஹிணி மூலம் குழந்தை இருக்கிறான்;
என்னென்ன ஸம்ஸ் காரங்கள் செய்ய வேண்டுமோ , அவற்றை, ப்ராம்மணராயும், . குருவாயும் இருந்து செய்யுமாறு பிரார்த்திக்கிறேன் ” என்றான்.
அதற்கு, கர்க்கர், ” நந்தகோபா, நான் யது குல மக்களுக்கு எல்லாம் ஆசார்யன்; அதனாலேயே, குழந்தைக்கு ஸம்ஸ் காரம் செய்துவைக்க வேண்டும்;
ஆனால், இந்தக் குழந்தை, வசுதேவர்—-தேவகியின் எட்டாவது குழந்தை;பாப எண்ணம் கொண்ட கம்ஸன், தேவகியின் எட்டாவது குழந்தை ஆண் குழந்தை என்று
உறுதியாக இருக்கிறான்; அதுவும், வசுதேவருக்கும், உனக்கும் உள்ள உறவை
நன்கு அறிவான்; ஆகவே, இந்தக் குழந்தைக்குச் செய்யும்
ஸம்ஸ் காரம் , அவனுக்குத் தெரிந்தால் உடனே இக்குழந்தையைக் கொல்லத் துணிவான்;
இதற்காகக் கலங்குகிறேன் ” என்றார்.
அதற்கு, நந்தகோபன், ” ஆசார்யரே, என் பந்துக்களுக்குக்கூடத் தெரிய வேண்டாம்;இந்தக் குழந்தைக்கு, ரஹஸ்யமாக, பசுத் தொழுவத்தில்
( மாட்டுக் கொட்டிலில் ) ஸம்ஸ் காரம் ,
ஸ்வஸ்திவாசனம், இவற்றைச் செய்யுங்கள் ” என்றான்.
ஸ்ரீ கர்க்காசார்யர், சரி என்று சம்மதித்து, “முதலில், ரோஹிணியின் பிள்ளைக்கு ஸம்ஸ்காரம் செய்கிறேன் ; இக்குழந்தை பலம் மிகுந்தவன்; உன்னையும் வசுதேவரையும் போல இரண்டு வம்சத்தைச் சேர்த்து வைப்பதால், “சங்கர்ஷணன் ” ஆகிறான்; ஆதலால்,
இவனுக்கு , ” ராம ” , “பல ” என்கிற இரண்டு வார்த்தைகளைச் சேர்த்து, “பலராமன் ”
என்கிற பெயரை , இக்குழந்தைக்குச் சூட்டுகிறேன். ” என்றார்.
பிறகு, ” நந்தகோபா …..உன்னுடைய குழந்தைக்குஸம்ஸ்காரம் செய்கிறேன்;
இந்தக் குழந்தை, இதற்கு முன்பு, மூன்று வர்ணங்களில் பிறந்திருக்கிறான்; வெள்ளை, சிகப்பு, மஞ்சள் அவை; இப்போது இவனுடைய நிறம் கறுப்பு ;
இவனுக்குப் பலப்பல ரூபங்கள், பலப்பலத் திருநாமங்கள், இவைகளை நான் அறிவேன்;
உனக்கும், உன் யது குலத்துக்கும், கோகுலத்துக்கும்புகழைத் தருபவன்; பெருமையைத் தருபவன்; சந்தோஷத்தைத் தருபவன்; எவன், இக்குழந்தையிடம் அன்புடன் இருக்கிறானோ
அவனுக்குப் பயமே இல்லை; இவன் நாராயணனுக்குச் சமம்; இவனே வாசுதேவன்,இவனே விஷ்ணு, இவனே நாராயணன் , இவனுக்குக் “க்ருஷ்ணன் ” என்று
திருநாமமிடுகிறேன் என்று சொல்லி, மேலும் சில திருநாமங்களை இட்டு,குழந்தையைக் கவனமாகப் பார்த்துக்கொள் , கவனமாக வளர்த்து வருவாயாக ” என்று சொல்லி,விடைபெற்றுக் கொண்டு மதுரா திரும்பினார்.

(ஹே, கிருஷ்ணா…. அந்த மாட்டுக் கொட்டில் என்ன பாக்யம் செய்ததோ !
வசுதேவரையும் , பலராமனையும் முன்னிட்டு, ஸ்ரீ கர்க்க மகரிஷியை பலமுறை நமஸ்கரிக்கிறேன்.
எண்ண இயலாத, திருநாமங்களை உடைய உனக்கு, சகல ஜீவராசிகளின் உள்ளங்களிலும்,முனிவர்களின் தபஸ்சிலும் ராதையின் ஹ்ருதயத்திலும், கோபிகைகளின் வாக்கிலும் மனசிலும் ,
ஆழ்வார்கள்,கோதை நாச்சியார், மஹாசார்யர்கள்,ஸ்வாமி தேசிகன் , கவிகள், வாக்கேயக்காரர்கள் வழக்கில் இருக்கும் எல்லா பாஷைகளிலும், என்று , கற்பனைக்கும் எட்டாத அளவில் உன் திருநாமமான ” கிருஷ்ண ” நாமம், “கிருஷ்ண” சங்கீதம் ,” கிருஷ்ண ” லீலாம்ருதம் பரவிப் பெருகி,அடியோங்கள் , இந்தப் பெயரைக் கேட்டதும் நெக்குருகி நிற்க , பெயர் சூட்டிய அந்த ஸ்ரீ கர்க்க ரிஷியை திரும்பத் திரும்ப நமஸ்கரிக்கிறேன். )

சிலகாலம் சென்றது. குழந்தைகள் வளர்ந்தார்கள்.பலராமன், கிருஷ்ணன் ஆகிய
நீங்கள் இருவரும் சேர்ந்தே அலைந்து, கோகுலம் முழுவதும் திருவடி சம்பந்தம் ஏற்படுத்தியதாக
ஸ்ரீ சுகர் சொல்கிறார். கோகுலம் முழுவதும் விழுந்து புரண்டு, தூசுகள், மண்துகள்கள் உடம்பு முழுவதும் பரவி இருக்க, ஓடிவரும்போது கொலுசும், சலங்கையும் சந்தோஷத்துடன் சப்திக்க, உங்கள் தாய்மார்களின் அங்கங்களில் படுத்து நீங்கள் புரளும்போது, தூசு, மண் இவைகளைப் பாராது உங்கள் தாய்மார்கள் உங்களை அணைத்துக் கொண்டு , உங்களின் இளம் புன்னகை, சின்னஞ்சிறிய பற்கள் ,நெற்றியின் சோபிதம், இவைகளைப் பார்த்துக் கொண்டே இருப்பார்களாமே !

உங்கள் இருவரின் குழந்தைப் பருவ விளையாட்டுக்கள் , பால லீலைகள், இப்படி நந்தகோபனுக்கும்,
யசோதைக்கும், ரோஹிணிக்கும், கோபர்களுக்கும், கோபியர்களுக்கும் அளவில்லாத சந்தோஷத்தைக் கொடுத்ததாமே !

இதற்குப் பிறகு, உங்களுக்கு இன்னும் கொஞ்சம் வயது ஆனவுடன்,உங்கள் வயதை ஒத்த ஆயர் சிறுவர்களுடன் சேர்ந்து, கன்றுக்குட்டிகளுடனும், பசுக்களுடனும், விளையாடியதாக , ஸ்ரீ சுக ப்ரஹ்ம ரிஷி, பரீக்ஷித் ராஜனுக்குச் சொன்னார்.

நீங்கள் எல்லோரும் , அவைகளின் வாலைப் பிடித்துக் கொண்டு, அவைகளின் பின்னாலே ஓடுவீர்களாம்;
துடுக்குத் தனம், அதிகமாகி விட்டதாம்.; மாடுகளின் கொம்புகளைப் பிடித்துக் கொண்டு விளையாடுதல் என்று இப்படி கோகுலத்தில் சஞ்சரித்துக் கொண்டு இருப்பீர்களாமே !
பிறகு, கோகுலத்தில் வீடுகளுக்குள் புகுந்து, மற்ற கோபர்களையும் சேர்த்துக் கொண்டு, அவர்கள் வீடுகளில் பாலைத் திருடி சாப்பிடுதல் போன்ற விஷமங்களைச் செயதீர்களாமே !
கோபிகைகள், யசோதையிடம் வந்து, உங்களைப்பற்றி, புகார் சொல்வார்களாமே !
யசோதைக்கு, ஒரே சமயத்தில் , அன்பும் கோபமும் வந்து ,அடிப்பதா, வைவதா என்று விழிப்பாளாமே !
கன்றுக் குட்டியை, வேண்டாத சமயத்தில் அவிழ்த்து விட்டு, தாய்ப் பசுவிடம் , பால் நிறைய சாப்பிடும்படி செய்வதால், ஆய்ச்சியர்கள் கறப்பதற்கு , பசுவிடம் பால் இருக்காதாமே !
அங்கு வீடுகளில் உள்ள, வெண்ணெய், தயிர் இவைகளைத் திருடி , மற்ற கோபர்களுடன் சேர்ந்து
சாப்பிடுவீர்களாமே ! பூனை, குரங்கு இவைகளுக்குக் கொடுத்து, காலிப் பானைகளைக் கீழே போட்டு உடைப்பீர்களாமே !
பாலோ, வெண்ணெயோ , கைக்கு எட்டாத உயரத்தில் உறியில், பாத்ரங்களில் வைத்து இருந்தால்,
ஏணி போட்டுக் கொண்டு ஏறி, மற்ற கோபர்களைக் குனியச் சொல்லி, அவர்கள் முதுகின் மேல் ஏறி ,
பால், வெண்ணெய் இவைகளைத் திருடி எல்லாரும் சாப்பிடுவீர் களாமே !
சில சமயம், பாத்ரங்களை, அடித்து , உடைத்து விடுவீர்களாமே !
இருட்டு அறைகளின் உள்ளே உள்ள, பாத்ரங்களில் இருக்கும் பால், வெண்ணெய் இவைகளை ,
நீங்கள் அணிந்திருக்கும் ரத்ன ஆபரணங்களின் பிரகாசத்தினால், இடம் அறிந்து, எடுத்து உண்பீர்களாமே !
கோபிகைகளின் ஜீவனத்துக்கு , பாலும் வெண்ணையும் இல்லாமல் செய்து விடுவீர்களாமே !
அவர்கள், கோபம் தாங்காது, யசோதையிடம் புகார் சொல்லும்போது,
ஹே, கிருஷ்ணா ……நீ ஒன்றும் தெரியாதவன் போல ,ரொம்ப அடங்கியவன் போல,ஒன்றுமே செய்யாதவன் போல , கால்களைக் கட்டிக் கொண்டு,
அப்பாவிப் பையன் போல உட்கார்ந்து இருப்பாயாமே ! அப்போது, உன்னைப் பார்க்க பரம சோபிதமாக ” இருக்கும் என்று, சுகப்ரம்மம் , பரீக்ஷித் ராஜனுக்குச் சொன்னார்.

இவ்விதமாக, விளையாடி, கோபஸ்த்ரீகளின் மனங்களை அன்பினால் திருடினாய்;
இந்த விஷமச் செய்கைகள் செய்யும் சமயத்தில், கோப ஸ்திரீகள் உன்னைப் பார்த்து விட்டால், நீ அவர்களை ஓரக் கண்ணால் பார்த்தும்,பயத்தால் அழுவதாகப் பாசாங்கு செய்தும், கண்ணீர் வழிந்து, உன் கண் மைகள்
கலைய விழிப்பதாலும், உன்னை அடிக்க இயலாமல் , பிரமையுடன் / பிரேமையுடன்
உன் முகத்தையே பார்த்துக்கொண்டு இருப்பார்களாமே !

( ஹே, கண்ணா …அந்த, பயம்கலந்த பசப்புப் பார்வையால், அடியேனை ஒரு க்ஷணம் கடாக்ஷிக்க மாட்டாயா )

ஒரு சமயம், கோபர்கள் பலராமனையும் அழைத்துக் கொண்டு, யசோதையிடம் ஓடி வந்தார்கள்.
” கிருஷ்ணன், மண்ணைத் தின்கிறான், வந்து பாருங்கள் ” என்று புகார் செய்தார்கள்.
யசோதை ஓடிப் போய், கிருஷ்ணனைப் பிடித்துக் கொண்டு, அடிப்பதற்காகக் கையை ஓங்கினாள்.
அப்போது, நீ, பயந்தமாதிரி அழுதுகொண்டு, கண்களிருந்து நீர் ,கங்கையெனப் பெருக ” நான் சாப்பிடவில்லை; இவர்கள் வீணாகப் புகார் சொல்கிறார்கள் ;பொய் சொல்கிறார்கள்; என் வாயைப் பார் ” என்று, வாயைத் திறந்து, யசோதை உன் வாயைப்
பார்க்கும்படி செய்தாயாமே !

ஸ்ரீ சுகர், பரீக்ஷித்துக்குச் சொன்னதை, கிருஷ்ணா, அப்படியே உன்னிடம் இப்போது சொல்கிறேன்.

யசோதை, கண்ணனின் வாய்க்குள் , எல்லா உலகங்களையும், ஆகாசம், மலைகள், திசைகள்,
வனங்கள், நக்ஷத்ரங்கள், சந்த்ரன் , காற்று, அக்நி, மின்னல், இந்த்ரியங்களின் அபிமான தேவதைகள்,
ஜ்யோதிஸ் சக்ரம், மனஸ், தன்மாத்ரைகள், சத்வ, ரஜஸ், தாமஸ குணங்கள் கொண்ட அஹங்காரம்,
மஹத், ப்ரகிருதி, இவற்றைஎல்லாம் பார்த்தாள்.
ஜீவன், அதன் அபிமான தேவதை, வ்ரஜ பூமியான கோகுலம், அதில் வசிக்கும் கோபாலகர்கள்
கோபியர்கள், பசுக்கள், அங்கு நந்தகோபன், யசோதையாகிய தான்
எல்லாவற்றையும் ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.
( பிற்பாடு ஏற்படப் போகும் கீதா உபதேசத்தில் அர்ஜுனன் உன்னை வணங்கியதைப் போல )யசோதை, தனக்குள்ளாகவேஉன்னை ஸ்தோத்தரித்தாள். அதை “கீதமாக” இசைத்தாள்
(ஹே, கிருஷ்ணா….. யசோதை செய்த பாக்யம் —-இந்த அரும் பெரும் பாக்யத்தை என்னவென்று சொல்ல ! அந்தப் பெருமை மிகுந்த உன் தாயாரைப் பலதடவை நமஸ்கரிக்கிறேன் )

யசோதை ஸ்துதி கீதத்தை, ஸ்ரீ சுகர் , பரீக்ஷுத்துக்குச் சொன்னதை , ஹே கிருஷ்ணா,
இப்போது சொல்லி உனக்கு நினைவு படுத்துகிறேன்.

” இதென்ன, ஸ்வப்னமா ? தேவ மாயையா ? என் புத்தி பேதலித்து விட்டதா ?
புத்தி, மோஹம் அடைந்து விட்டதா ? என் மடியில் விளையாடும் சிறு குழந்தை,ஆத்ம யோகம் செய்பவனா ? இவைகளை, அவன் எப்படி உற்பத்தி செய்ய முடியும் ?
இக்குழந்தை என் பிள்ளை அல்ல! சாக்ஷாத் நாராயணன் ! எந்தப் பகவானை, எல்லாக்காலங்களிலும் ,
எல்லா ஜீவன்களும் ஆச்ரயிக்கிரார்களோ, எவரால், எந்தக் காரணத்தால்,என் கண்முன்னே, வாய் புதைத்து, கைகளைக் கட்டிக் கொண்டு, மிகவும் அடக்கமான
பிள்ளையாகக் காக்ஷி தருகிறாரோ, அவரைப் பல தடவை நமஸ்கரிக்கிறேன்;நானும், என் பதியான நந்தகோபரும் அப்படியே நினைத்து, நமஸ்கரிக்கிறோம்;
இந்தப் பிள்ளை, உலகங்களின் பதி; கோகுலத்துக்கு
( வ்ரஜ பூமி ) ஈஸ்வரன்; எல்லா ஐஸ்வர்யங்களையும் உடையவர்; கோபாலகர்கள், கோபிகைகள், பசுக்கூட்டங்கள், கன்றுகள், —-இவைகளை என் அல்ப புத்தியால், எங்களுடைய சொத்து என்று நினைக்கிறேன்;
நான் யசோதை, நந்தகோபரின் மனைவி, இந்த ஐஸ்வர்யங்களுக்கு எஜமானி,இக்குழந்தை என் புத்ரன், இவையெல்லாம் எங்களுடையது என்று தவறாக நினைக்கிறோம் .
இது முட்டாள்தனம் அல்லவா ? எல்லாமே, பகவானாகிய அவனுடையது;
அவன் கொடுத்ததை, எங்களுடையது என்று நினைத்து, அவனுக்கும் கொடுக்கிறோம்;அந்தப் பிரபுவே தஞ்சம்; ”

பகவானைப் பற்றி, பரம க்ஜானிகளுக்கும் கிடைக்க அரியதான அறிவை,தாயான யசோதை அடைந்தாள்.

(ஹே, கிருஷ்ணா, உன் தாயான யசோதைப் பிராட்டி சொன்னதைத் திருப்பிக் சொல்லி,
உன்னைப் பலமுறை நமஸ்கரிக்கிறேன் ).

அடுத்த க்ஷணம், பகவான், தன்னுடைய பிரபலமான வைஷ்ணவ மாயையை ஏற்படுத்தி,
யசோதையின் நினைவுகளை ,அறிவு தீக்ஷண்யத்தை மாற்றிவிட்டான்.
” அம்மா……அம்மா …. ” என்று கூப்பிட்டு, புடவைத் தலைப்பைப் பிடித்து இழுக்க, யசோதை, பிள்ளைப் பாசம் பெருக, கண்ணனாகிய உன்னை ,
இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டாள்.
எந்தப் பிரபுவை, தேவகி, சதுர் புஜத்துடன் , மந்தஹாச வதனத்துடன், பீதாம்பரதாரியாக காராக்ருஹத்தில் சேவித்தாளோ , எந்த பிரபுவைவேதங்களும் உபநிஷத்துக்களும் சாங்க்யயோக சாஸ்திரங்களும் , பாஞ்சரார்த்ர சாத்வ தந்த்ர சாஸ்திரமும் தேடி களைத்துப் போயிற்றோ,அந்த பர ப்ரஹ்மத்தை, பாக்யசாலியான யசோதை , மீண்டும் தன் புத்ரன் என்கிற நினைவோடு பார்த்தாள்.

பரீக்ஷித், சுகப்ரம்ம ரிஷியைக் கேட்டான்
” ஹே, ப்ரஹ்மந் , நந்தகோபனும், யசோதையும், என்ன உத்தமமான கார்யத்தைச்செய்து, எல்லாப் பாபங்களையும் போக்கக் கூடியதான பால்ய லீலைகளைப் பார்த்துஅனுபவித்தார்கள் ? காரணமென்ன ? ”

ஸ்ரீ சுகப்ரம்மம் பதில் சொன்னார் ” ஹே ராஜன் ……கிருஷ்ணனின் இந்த மாதிரியான
பால்ய லீலைகளை உனக்குச் சொல்லும்போது, சந்தோஷத்தால்நான் , ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறேன்.
உன் கேள்விக்குப் பதில் சொல்கிறேன்.
அஷ்ட வசுக்களில் ஒருவன் த்ரோணன்; இவன் நந்தகோபனாகவும்,”தரா ” என்கிற அவனுடைய மனைவி யசோதையாகவும் பிறந்தார்கள்;
இது, அவர்களுக்கு ப்ரஹ்மாவின் கட்டளை; அப்போது, இவர்கள் இருவரும்ப்ரஹ்மாவிடம், “எங்களுக்குப் பகவானிடம் பக்தி தொடர்ந்து இருக்க வேண்டும்; ”
என்று பிரார்த்தித்து, அப்படியே அநுக்ரஹம் பெற்றவர்கள்;
அந்த அனுக்ரஹத்தாலே, நந்தகோபன்–யசோதைக்கு, பகவான் குமாரனாக—–
கிருஷ்ணனாக அவதரித்து, பலராமனுடன் பால்ய லீலைகளை,கோகுலத்தில் செய்து, சந்தோஷத்தைக் கொடுத்தார்;

( அந்த சுகப்ரம்ம ரிஷியையும், நந்தகோபன் யசோதை பாக்யசாலிகளையும் முன்னிட்டு, ஹே….கிருஷ்ணா…..உன்னையும் , பலராமனையும்
பலதடவை நமஸ்கரிக்கிறேன் )
8 வது அத்யாயம் முற்றிற்று.

 

தசமஸ்கந்தம் —-9 வது அத்யாயம்
————–
ஸ்ரீ கிருஷ்ணனின் பால்ய லீலை —–தொடருகிறது…….
———-
ஒரு சமயம், யசோதை, தயிர்ப் பானையின் எதிரே உட்கார்ந்து,
தயிரைக் கடைந்து கொண்டிருந்தாள். வெண்ணெய்க்காகக் கடைந்து கொண்டிருந்தாள்.
பகவானுடைய லீலைகளை, இந்தமாதிரி , வெண்ணெய்க்காகத் தயிர் கடையும்
சமயங்களில், ஆய்ச்சியர்கள் பாடிக்கொண்டே , தயிரைக் கடைவார்கள்.
யசோதையும் அப்படியே , பக்தி பரவசமாகப் பாடிக் கொண்டே ,
தயிரைக் கடைந்து கொண்டிருந்தாள்.

உத்தமமான பட்டு வஸ்த்ரம் அணிந்து இருந்தாள்.
இடுப்பில் ஒட்டியாணம்; கைகளில் வளை யல்கள்.மோர்த் திவலைகள் மேலே பட்டு
மேல்துணி நனைந்தது.காதுகளில் உள்ள குண்டலங்கள் ஆட,
கைவளையல்கள் யசோதையின் பக்தி ததும்பும் பாட்டுக்குக்குத்
தாளம் போடுவது போல சப்திக்க,
உடம்பு வியர்த்துக் களைத்துப் போனாள்.

அப்போது, நீ அம்மாவிடம் ஓடிவந்து, “பசிக்கிறது ” என்று சொல்லி,
யசோதை தயிர் கடைய முடியாதபடி, மடியில் உட்கார்ந்து, ஸ்தன்யபானம்செய்தாய்.
அப்போது, நீ, உன் தாயைப் பார்த்த அனுக்ரஹப் பார்வை, கருணைப் பார்வை ,
ஹே, கிருஷ்ணா, யசோதை என்ன பாக்யம் செய்தாளோ!

அந்தச் சமயம் ,
யசோதையான உன் அம்மா எழுந்திருந்தாள். உன்னை மடியிலிருந்து
இறக்கி விட்டு விட்டு , அடுப்புக்கு அருகில் ஓடினாள்.
அடுப்பில், பாத்ரத்தில் பால் பொங்கிக் கொண்டிருந்தது.
உடனே, உனக்குப் பொல்லாத கோபம் வந்து விட்டது.
கோப நடிப்பு; உன் இளஞ்சிவப்பு உதடுகள் துடிக்க, மத்தினால்,
தயிர்ப் பானையை உடைத்தாய்; உன் கண்களில் ஏமாற்றம்;
கோபம்; வீட்டின் உள்ளே, “அரங்கு ” என்று சொல்வார்களே,
அங்கே போய் , அங்கு ஒளித்து வைத்திருந்த வெண்ணெயை ,
பசிக்காக சாப்பிட்டாய்;
(ஹே, கிருஷ்ணா…….ஆழ்வார்கள், .கோதைப் பிராட்டி, சீர்தாஸ், மீராபாய்,
இவர்கள் வெண்ணெய் உண்ட வாயனான உன் அதரச் சிரிப்பில்
மனசைப் பறி கொடுத்ததைப் போல,
அடியேனும் பறி கொடுத்துவிட்டுத் தவிக்கிறேன் )

யசோதை , பால் பாத்ரத்தை அடுப்பிலிருந்து இறக்கி வைத்துவிட்டு,
தயிர் கடையும் இடத்துக்குப் பழையபடியும் வந்தாள்.
உன் விஷமத்தனம் தெரிந்தது. உன்னை அங்கு காணவில்லை.
நீ, ஒரு மரக்கட்டிலின்மேல் ஏறிக்கொண்டு, நீ சாப்பிட்ட வெண்ணையின் மீதியை,
அனுமனைப் போலுள்ள ஒரு குரங்குக்குக் கொடுத்துக் கொண்டிருந்தாய்
. உன்னை, யசோதா பார்த்து விட்டாள். கண்களுக்குப்
பூசப்பட்டிருந்த அஞ்சனம் ( கண்மை ) கலைந்து, உன் கன்னங்களில் வழிந்து இருந்தது.
கூடவே, நீ வெண்ணெய் சாப்பிட்ட அடையாளமாககன்னங்களில் வெண்ணையின்
சிதறல்கள். யசோதை, உன்னுடைய பின்புறமாக வந்து,
கைகளால் உன்னைப் பிடித்துக் கொண்டாள்.
(ஹே, கிருஷ்ணா……இது என்ன லீலை !யோகிகளின் கடுமையான தபஸ்சுக்குக் கூட
அகப்படாத, வேதங்களால் தேடப்படும் நீ, யசோதையிடம் ,
சிறைக்கைதியைப்போல அகப்பட்டு, அடங்கிப் போனாயே !இது என்ன லீலை ! )

யசோதை, ஒருகையால் உன்னைப் பிடித்து, இன்னொரு கையால் மாடுகளை மேய்க்கும்
கோலை எடுத்து, உன்னை அடிப்பது போல பாசாங்குடன் கையை ஒங்க ,
உடனே நீ, யசோதையைப் பார்த்து, கண்களைக் கசக்கிக்கொண்டு,
கைகளைக் கூப்பிக் கொண்டு, “அம்மா… இனி தவறு செய்யமாட்டேன் ”
என்று சொன்னாய்.
(ஹே, கிருஷ்ணா…. இது என்ன ஜாலம் ? )

யசோதை, உண்மையிலேயே , நீ பயப்படுவதாக நினைத்து , ஓங்கிய கையைத்
தாழ்த்தி , கோலைத்தூர எறிந்து, உன்னை வாரி அணைத்து,
உன் முகத்தில் முத்தமிட்டாள்.
தலைகேசம் அவிழ்ந்து புரளுவதைக் கூட லக்ஷ்யம்
செய்யவில்லை.
( ஹே, கிருஷ்ணா….யசோதையின் பாக்யத்தை,
ராதையும் ஆண்டாளும் கொண்டாடியதைப் போல
அடியேனும் கொண்டாடுகிறேன் )

யசோதைக்கு, நீ செய்த விஷமத்தனம் நினைவுக்கு வர,
உன்னைக் “கண்ணிநுண் சிறுத்தாம்பினால் ( கயிற்றால் ) கட்டி, “உன்னை வெளியே
ஓடாதபடி செய்கிறேன் பார் ” என்றாள்.
(கண்ணா….நீ சர்வ வியாபி; நீ இல்லாத இடமே இல்லை; எல்லாப் பிரபஞ்சங்களுக்குள்ளும் ,
எல்லா வஸ்துக்களுக்குள்ளும் இருக்கிறாய்;
கேவலம், ஒரு கயிற்றால் உன்னைக் கட்ட முடியுமா
ஆனால், தாயாரின் செய்கைக்கு உன்னைக்
கட்டுப்படுத்திக் கொண்டாய் )

உன்னைக் கயிற்றால் கட்டி, பக்கத்தில் இருந்த மரத்தால் ஆன உரலில் இணைக்க ,
யசோதை முயற்சித்தாள்.கயிற்றின் அளவு குறைந்தது;
இன்னொரு கயிற்றை எடுத்து , முடிச்சுப் போட்டு, மறுபடியும் கட்டினாள்;
மறுபடியும் இரண்டு அங்குல அளவு கயிறு குறைந்தது; கயிற்றை
எடுத்து முடிச்சுப் போட்டு, முடிச்சுப் போட்டு உன்னை கட்ட எத்தனித்தபோதெல்லாம்
கயிறு இரண்டு அங்குல அளவு குறைந்தது.
யசோதைக்கு ஆச்சர்யம் ! முகத்தில் , முத்துக்கள் போல வியர்வைத் துளிகள்;
யசோதை படுகின்ற கஷ்டத்தைப் பார்த்த நீ,
உன் லீலையைக் குறைத்துக் கொண்டு , கட்டுண்டாய்.
( கண்ணிநுண் சிறுத்தாம்பினால், கட்டுண்ணப் பண்ணிய பெருமாயனே !
என் அப்பனே ! ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரை, மனத்தால், பலமுறை நமஸ்கரிக்கிறேன்.
உன்னைக்கட்டிய கயிற்றுக்கு அடியேனின் நமஸ்காரம்.
அந்தக் கயிறு என்ன புண்யம் செய்ததோ !
உன் இடுப்பில், தழும்பு ஏறப் பண்ணிய , கயிறு அல்லவா !
அந்தக் கயிற்றுக்கும், இடுப்புத் தழும்புக்கும்,
நப்பின்னைப் பிராட்டிக்கும் நமஸ்காரங்களைச் செய்கிறேன் )

நீ சர்வ ஸ்வதந்த்ரன்; சர்வேஸ்வரன் ; எல்லோரும், ஈரேழு உலகங்களும்,
அவற்றில் உள்ள , சித், அசித் யாவும் உனக்குக் கட்டுப்பட்டது;
அப்படிப்பட்ட நீ, யசோதையின் தாய்ப் பாசத்துக்குக்
கயிற்றால் கட்டுண்டாய்; பிற்பாடு, சஹாதேவன் உன்னைக் கட்டப் போகிறான்;
ப்ரஹ்ம , ருத்ராதிகளுக்கு, ஏன், அகலகில்லேன் என்று உன் வக்ஷஸ்தலத்தில்
நித்ய வாஸம் செய்யும் பெரிய பிராட்டிக்குக் கூட,
இந்த பாக்யம் கிட்டவில்லை.
நீ, தாமத்தால் கட்டப்பட்டாய்; தாமோதரன் ஆனாய் ! )

யசோதை, வீட்டு வேலைகளில் ஈடுபட்டு இருக்கும்போது,
நீ, உரலையும் இழுத்துக் கொண்டு , முன்னாலே இருந்த இரண்டு மருத மரங்களை
நோக்கித் தவழ்ந்தாய். இரண்டு மருத மரங்களும் , முன் ஜன்மத்தில் ,
குபேரனுடைய பிள்ளைகள். நளகூபரன், மணிக்க்ரீவன் என்று பெயர்.
பிராம்மணரான ஸ்ரீ நாரதர் வரும்போது, காமத்தினால் இனிப்பான
கள்ளைச்சாப்பிட்டுக்கொண்டு, தேவஸ்த்ரீகளுடன் மயங்கி, நாரதர்
அந்த வழியாக வருவதைப் பார்த்தும், அவரை லக்ஷ்யம் செய்யாமல்,
நிர்வாணமாக இருந்தனர். அதனால், நாரதர் சாபமிட, மருத மரங்களாக,
இந்த வ்ரஜபூமியில் முளைத்து, வளர்ந்து, சாப விமோசனத்துக்கு,
ஸ்ரீ கிருஷ்ண ஸ்பர்சத்தை எதிர்பார்த்து இருப்பவர்கள். இந்த இரண்டு
மருத மரங்களுக்கு நடுவில் , உரலையும் இழுத்துக் கொண்டு, நீ தவழ்ந்து சென்றாய்

10 வது அத்யாயம் முற்றிற்று . ஸுபம் .
——————————————————————————–
பின் குறிப்பு :–கண்ணிநுண் சிறுத்தாம்பு, நினைத்த பயனை அளிக்கும் மந்த்ரம்.
ஸ்ரீ மதுரகவிகள் அருளியது. ஸ்ரீமன் நாதமுநிகள் , இந்தப் பிரபந்தத்தில் உள்ள
11 பாசுரங்களையும் பன்னீராயிரம் முறை ஆவ்ருத்தி செய்து,
ஸ்ரீ நம்மாழ்வாரை சாக்ஷாத்கரித்து, திவ்ய பிரபந்தங்களான
நாலாயிரத்தையும் உலகுக்குக் கொடுத்து ,
நாலாயிரமும் எங்கள் வாழ்வே என்று பெருமைப் படக் காரணமானவர்

கண்ணி = முப்பிரியாய், உறுத்துகைக்கு அழுத்தமாய்
நுண் = கட்டு அழுந்ததலுக்கு மெல்லிசாய்/ மெலியதாய்
சிறு= சரீரத்தை சுருக்கிக் கொண்டு, ( வயிற்றை எக்கி )
கயிற்றை நழுவும்படி செய்தலுக்கும், கயிற்றை நீக்கித் தளரும்படி செய்தலுக்கும்
யோக்யமில்லாத, —அருகதை இல்லாத
தாம்பினால்= கயிற்றினால்
கட்டுண்ணப் பண்ணிய = யசோதைப் பிராட்டியால் கட்டப்படுவதற்கு அனுசரணையாய்
பெருமாயன்= ஆச்சர்ய குண சேஷ்டிதன்;
உரலோடுகூடக் கட்டிவைத்தவுடன் விக்கி, விக்கி அழுதது;
அதற்கு , யசோதை “வாய், வாய் ” என்றவுடன்
அஞ்சுவதுபோல நடித்து, முகத்தில் பேதைத் தனத்தைத் தேக்கி,
அவளையே பார்த்தது; அந்தப் பார்வையில் அவளை கடாக்ஷித்து,
அவளைத் தொழுதது
பந்தத்துக்கும், மோக்ஷத்துக்கும் சர்வ சக்தி உடையவனான கண்ணன் ,
அவற்றை எல்லாம் மறைத்துக் கொண்டு, யசோதை கட்டிய
கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்டு ,
அந்தத் தழும்பு ( வடு ) இடுப்பில் ஏறியிருக்க,
கோபர்களையும், கோபியர்களையும், நப்பின்னையையும் ஆழ்வார்களையும்
ஆசார்யர்களையும் மோஹிக்கச் செய்யும் ” பெருமாயன் ”
அவனை, இந்த அத்யாய நிறைவில் நாமும் மோஹிப்போம்;
ஆழ்வாரைப்போல மோஹித்துக் கிடப்போம் . ஹே, தாமோதரா …. ஹே, பெருமாயா……..

—————————————————————————————————————

தசமஸ்கந்த பாராயணம்—- தொடர்ச்சி
————————————————
அத்யாயம் 9 —பின் குறிப்பு தொடர்கிறது
——————————————–

————————-
அடியேன், தசமஸ்கந்த விவரப்படி, நளகூபரன், மணிக்ரீவன் , இவர்களைப் பற்றிச்
சொல்லி விட்டாலும், மனஸ், ஒரே இடத்தில் சுற்றிச் சுழன்று
கொண்டிருக்கிறது. அதுதான், மாமாயன் , தாம்பால் கட்டுண்ட நிலை
இதை இன்னும் விவரிக்க , மனஸ் கட்டளை இடுகிறது;
புத்தியும் ஆமோதிக்கிறது.
ஸ்ரீ நம்மாழ்வார், இந்த மாயக் கண்ணன் , கயிற்றால் கட்டுண்டதை நினைத்து,
ஆறு மாச காலம் மோஹித்துக் கிடந்தார் என்பர்.
ஸ்ரீ குலசேகரர் , ஸ்ரீ முகுந்தமாலையில் தன்னை
“த்வத் ப்ருத்ய –ப்ருத்ய –பரிசாரிக –ப்ருத்ய–ப்ருத்ய –ப்ருத்யஸ்ய ப்ருத்ய
இதி “————– ஹே, லோகநாதா, ,அடியேனை—–அடியார்க்கு, அடியாரின்
அடியார்க்கு, அடியாரின் அடியார்க்கு, அடியாரின் அடியன் ——ஏழாவது அடியானாக ,
நினைத்துக் கொள்ளுமாறு பிரார்த்திக்கிறார்.
ஆழ்வாரே இப்படி என்றால், , இப்படி எத்தனை ஏழாவது அடியேன் என்று ,
அடியேன் சொல்லிக் கொள்வது?
ஏழேழு பிறவி எடுத்தாலும் , எந்த ஏழுக்குள்ளும் அடங்காதவன் அடியேன் !
எனினும், அந்தக் கண்ணனைத் தாம்பால் கட்டியதால்,
“ஹர்த்தும் கும்பே விநிஹித கர: ஸ்வாது ஹையங்க வீநம்
த்ருஷ்ட்வா தாம க்ரஹண சடுலாம் மாதரம் ஜாத ரோஷாம் |
பாயாதீஷத் ப்ரசலீத பதோ நாப கச்சந் ந திஷ்டந்
மித்யா கோப: ஸபதி நயநே மீலயந் விஸ்வ கோப்தா ||

ஸ்வாமி தேசிகன் ‘ஸ்ரீ கோபால விம்சதியில் ” சொல்லியதைப் போல,
” பாயா தீஷத் ப்ரசலீத பதோ நாப கச்சந் ந திஷ்டந் மித்யா கோப: ”
ஓடவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் , அடியேன் ஹ்ருதயத்தில் புகுந்து கட்டுண்ட ,
அந்த ஸ்ரீ கிருஷ்ணனின் சரணார விந்தங்களை, ஆயிரக் கணக்கான
முறை, தொட்டுத் தொட்டு, நமஸ்கரித்து, தாம்பால் கட்டுண்ட நிலையைச் சொல்கிறேன்.

யசோதை, இடைநோக, தயிரைக் கடைந்தாள்; வெண்ணெய் திரண்டது;
கீழே எங்கேனும் வைத்தால், கண்ணன் சாப்பிட்டு விடுவான் என்று நினைத்து,
உறியில் ஏற்றி வைத்தாள்; மறைத்து வைத்தாள்.
உறங்குவது போலப் பாசாங்கு செய்யும் கண்ணன்,
( இவன் திருப்பாற்கடலிலேயே உறங்குவதுபோல, உறங்காது இருப்பவ னாயிற்றே ).
யசோதை, அந்தண்டை போனதும், “சிவுக்” கென்று எழுந்தான்;
ஒரே இருட்டு; வெண்ணையைத் தேட வேண்டுமே ?
தன் திருமார்பில் அணிந்திருக்கும் “கௌஸ்துபம்” என்கிற ப்ரகாசமான ரத்னத்தின் ஒளியில் ,
அதைக் கண்டு பிடித்தான்; கண்ணன் கருநிறம்; இருட்டு கருநிறம்;
கௌஸ்துபம், இவனுக்கு , கருநிற இருட்டில், வெள்ளை நிற வெண்ணையைத்
தன் பிரகாசத்தால், காட்டிக் கொடுத்தது; வெண்ணையை எடுத்து, ஆசை யுடன் சாப்பிடுவான்;
யாராவது வருவதைப் போன்ற ஓசை கேட்டால், மேல் வஸ்த்ரத்தால், கௌஸ்துபத்தை
மறைத்து விடுவான்;
இப்படியே, வெண்ணெய் சாப்பிட்டு, சாப்பிட்டு, யார் கண்ணிலும் படாமல் தப்பித்து வந்தான்;

ஆனால், பிள்ளையின் சாமர்த்யம், தாயாருக்குத் தெரியாதா, என்ன !
யசோதை, ஒருநாள், இந்தத் திருட்டைக் கண்டு பிடித்து விட்டாள்.
கண்ணனை, உரலோடு சேர்த்துக் கட்டத் தொடங்கினாள்.
தாம்பை ( கயிறு ) எடுத்து, கண்ணனின் இடையையும், உரலின் இடையையும்
( நடுப்பாகம்–உடுக்கை இடைபோலச் சிறுத்து இருக்கும் ) சேர்த்து, சுற்றிக் கட்டப் பார்த்தாள்.
அவளுக்கு ஆச்சர்யம் ! கயிறு, இரண்டு அங்குலம் குறைவாக இருந்தது.
இன்னொரு கயிற்றை எடுத்து, இந்தக் கயிற்றுடன் சேர்த்து முடிச்சுப் போட்டு, இணைத்து,
மறுபடியும் கட்ட முயற்சித்தாள். மறுபடியும், கயிறு குறைந்தது.
இரண்டு அங்குலம் குறைந்தது.இவளுக்கு, நாம் ஏன் கட்டுப்பட வேண்டும் என்று வளர்ந்தானாம்.
யசோதையின் நெற்றியில் வியர்வைத் துளிகள்;
ஓய்ந்துபோன சிவந்த உள்ளங்கைகள்;

கண்ணன், கருணை கொண்டான். நம்மிடம் அன்பைப் பொழியும், யசோதையிடம் ,
நம் பலத்தைக் காட்டவேண்டாம் என்று நினைத்தான்.

இப்போது, யசோதை, கண்ணனையும் , உரலையும் , கயிற்றால் சேர்த்துக் கட்டிவிட்டாள்.
கருத்த திருமேனி; தயிரையும் , வெண்ணையையும் ( இரண்டும் வெண்மை நிறம் ) உண்ட திருமேனி;
கருத்த யானையைப் போலக் கண்ணன் இருந்தான்;
உருவத்தில் பெருத்த யானை, ஒரு சிறிய பாகனுக்கு; அவன் கையில் உள்ள குச்சிக்கு
அடங்குவது போல அடங்கிப் போனான்.
கட்டுண்ட யானை, கண்ணீர் சிந்தி அழுவதைப் போல அழுதான்.
யசோதை, கண்ணனின் கண்களுக்குத் தீட்டியிருந்த “மை “, கண்ணீரால் கரைந்தது.

உறியார்ந்த நறுவெண்ணெய் ஒளியால் சென்று
அங்குண்டானைக் கண்டாய்ச்சி உரலோடார்க்க
தறியார்ந்த கருங்களிரே போல நின்று
தடங் கண்கள் பனி மல்கும் தன்மையானை
……………………………… என்று திருமங்கை ஆழ்வார்,
திருக்கோவிலூர் ஆயனைப் பாடுகிறார்
ஹா… கரிய நிறக் கண்ணன்—-வாயில் ஒட்டிக் கொண்டிருக்கும் வெண்ணெய் சாக்ஷி சொல்ல,
உரலோடு கட்டுண்டு, கண்மை, கன்னங்களில் கரைய
நிற்கின்ற அற்புதக் காக்ஷி !அனைவரும் வசப்படும்போது, அடியேன் எம்மாத்திரம் !

பின் குறிப்பு தொடர்கிறது………..

தசமஸ்கந்த பாராயணம்—–அத்யாயம்—9
—————————————————
பின் குறிப்பு தொடர்ச்சி — 2
————————-
வெள்ளிமலை நிறத்தை ஒத்த வெண்ணையைத் திருடிச் சாப்பிட்டுவிட்டு ,
யசோதை ஆய்ச்சியின் கையால் , கண்ணிக் குருங்கயிறால்
கட்டுண்டு, பொத்த உரலிடை ஆப்புண்டு, அழுத கண்ணோடே,
அஞ்சின நோக்கோடே, தொழுத கையோடே, நிற்கிறான், கண்ணன்.
ஜீவன்களை, சம்ஸாரத்தில் கட்டி , அழுத்தி வைத்து, அழுத கண்ணோடே
அவனை ஸ்தோத்தரிக்க வைக்கும், கண்ணன்,
யசோதை முன்பு நிற்கும் காக்ஷி இது.
ஆய்ச்சி கையால் கட்டுண்ட காக்ஷி .
அவனைத் தாமத்தால் கட்ட இயலாது.
பிரேமத்தால் கட்ட இயலும்.
இங்கு, யசோதையின் பிள்ளைப் ப்ரேமம் முன் நிற்க,
கண்ணன் அதைத் தாமமாக (கயிறு ) ஏற்றுக் கட்டுண்டான்.
யானை, தன்னைக் கட்டுவதற்காக, கயிற்றைத்
தானே எடுத்துப் பாகனிடம் கொடுக்கும். கருநிறத்தான்,
யானையைப் போன்ற கருநிறத்தான்
கண்ணன், தன்னைக் கட்டுவதற்காக “பக்தி ” என்னும்
கயிற்றை எடுத்துக் கொடுப்பான்.
“பத்துடை அடியவர்க்கு , எளியவன் ” என்று ஸ்வாமி நம்மாழ்வார் கூறுகிறார்.
தாமோதரனாக, தாமோதர நாராயணனாக —–இந்தக் கண்ணன்,
திருக் கண்ணங்குடியில் , கையை , இருப்பில் வைத்துக் கொண்டு ,
கண்ணனாகவே ஸேவை சாதிக்கிறான்.

வசிஷ்ட ரிஷிக்காக, க்ருஷ்ண பக்தரான வசிஷ்ட ரிஷிக்காக,
அவன் வெண்ணெய்க் கிருஷ்ணனாக ஆனான்.
அவர் வெண்ணையாலேயே க்ருஷ்ண விக்ரஹம் செய்து,
பக்தியின் மஹிமையால்,அது உருகாமல் இருக்க,
விக்ரஹத்தை நிற்க வைத்துப் பூஜை செய்வார்.
கண்ணனுக்கு இங்கும் விளையாட்டு;
அவதார காலத்திலும் விளையாட்டு; அர்ச்சாவதாரத்திலும் விளையாட்டு.
வடக்கை, இடக்கை தெரியாத ஆய்ச்சியர் களுடனும் விளையாட்டு;
வேத வேதாங்கங்கள், அனுஷ்டானங்கள் தெரிந்த முநிபுங்கவரிடமும் விளையாட்டு.

ஒருநாள், வசிஷ்டர், வெண்ணெய்க் கிருஷ்ணனுக்கு , ஆராதனம் செய்யும்போது,
சிறுவன் உருவில் வந்து, வெண்ணெய்க் கிருஷ்ணனை எடுத்து,
வாயில் போட்டுக் கொண்டு, ஓடுகிறான்;
வசிஷ்டருக்குக் கோபம் ( இருக்காதே, பின்னே? நமக்கே கடும் கோபம் வருமே )
சிறுவனைத் துரத்துகிறார்;
சிறுவன் “கிருஷ்ணாரண்யம்”ஓடி வருகிறான்;
அங்கு, தபஸ் செய்து கொண்டிருந்த மகரிஷிகள், இச்சிறுவன் யாரென்று தெரிந்து,
“பக்தியால்” கட்டுகிறார்கள். அடியார்களுக்கு, அடங்கினான்,
இங்கு. அதாவது திருக்கண்ணங்குடியில்.
அவதார காலத்தில் அன்னைக்கு அடங்கி, கயிற்றால் உரலில் கட்டுண்டு,
அழுத கண்ணோடு, அஞ்சின நோக்கோடு, தொழுத கையேடு நின்றான்.

(ஹா…..திருக் கண்ணங்குடிக் கண்ணா….
தாமோதரா —-
தாமத்தால் உரலில் கட்டுண்டு, நீ நின்றாயே….
அந்த அழுத கண்களும், அஞ்சின நோக்கும், தொழுத கைகளும்
நினைக்கும் போதெல்லாம், அடியேனைப் பேதமை கொள்ளச் செய்கின்றன )

பின் குறிப்பு தொடர்கிறது————

krushnaஅத்யாயம்—9 பின் குறிப்பு—–3
———————– ———————–
வைகுண்டவாசி உபய வே. கே.ரங்கஸ்வாமி ஐயங்கார் ,
மிகச் சிறந்த ஆன்மீகத் தொண்டராகச் செய்திருக்கும் “பாசுரப்படி, பாகவதத்தில் ”
திருவாய்ப்பாடியைப் பற்றிச் சொல்லும்போது, இப்படி சொல்லியிருக்கிறார்.

” வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் ,
நீங்காத செல்வம் நிறைக்க,
வெள்ளிமலை இருந்தால் ஒத்த வெண்ணையைத் தாயர் மனங்கள் தடிப்ப
, உளம் குளிர அமுது செய்து ,
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ,
ஒளியா வெண்ணெய் உண்டான் என்று,
உரலோடு ஆய்ச்சி , ஒண்கயிற்றால் , விளியா ஆர்க்க
, ஆப்புண்டு, விம்மி அழுது, பொத்த உரலைக் கவிழ்ந்து,
அதன் மேலேறித் தித்தித்த பாலும்
தடாவினில் வெண்ணையும் ,
மெத்தத் திரு வயிறு ஆரவிழுங்கி,
சீரால் யசோதை அன்புற்று நோக்கி,
அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்ட,
ஊரார்கள் எல்லாரும் காணக்
கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்டு,
பெருமா உரலில் , பிணிப்புண்டு இருந்து,
விண் எல்லாம் கேட்க அழுது,
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கி …………………………….. ”

ஆயர்பாடிப் பசுக்கள், வள்ளல்கள்;
கறக்கக்கறக்க, குடம் குடமாகப் பால் சொரியும் பசுக்கள்;
இதனால், ஆய்ப்பாடியில் எல்லாச் செல்வமும் நீங்காது நிறைந்து இருக்க,
(கண்ணனே செல்வம் தானே! அவனிருக்குமிடத்தில் செல்வங்கள் யாவும்
நிறைந்து நீங்காது இருக்கக் கேட்பானேன் ? )

வெள்ளியைப் போல மினுமினுத்து ,
மலையை ஒத்த வெண்ணையை,
தாயான யசோதை யின் மனம் , மற்றும் தாயை ஒத்தவர்களின் மனங்கள் கனக்க,
( தாயான யசோதையின் அகமனம், புற மனம் ஆகிய மனங்கள் கனக்க ),
கண்ணன் தன்னுடைய உள்ளம் (மனஸ் ) குளிர,
வெண்ணையை அமுது செய்து , போக்யமாகச் சாப்பிட்டு,
அந்த வெண்ணெய் எப்படி காக்ஷி அளிக்கிறது தெரியுமா,
விரலோடு வாய் தோய்ந்து —கண்ணனின் கைவிரல்களிலும் வெண்ணெய் இருக்கிறது;
கண்ணனின் வாயிலும் வெண்ணெய் இருக்கிறது—-
அல்லது , விரல்களில் இருக்கும் வெண்ணெய் ,
கண்ணன், விரல்களைத்தன் வாயில் வைத்திருப்பதால் , விரலோடு வாய் தோய்ந்த
வெண்ணெய் —தோய்வது என்பது இடையர்கள் குலத்துக்கே உரித்தான சொல்—
-பாலைத் தோய்ப்பது—-பக்குவமான சூட்டில் உள்ள பாலை, கொஞ்சமாக மோர் சேர்த்து,
அது , தயிர் ஆவதற்காகச் செய்யும் செயல்;

ஆய்ச்சியர் செய்யும் செயல். இங்கு விரலோடு வாய் தோய்ந்தது
( இதை, ரஹஸ்யார்த்தமாக, காலக்ஷேபமாகச் சொல்வதுதான் நல்லது )
யசோதை இதைக் கண்டு, ஒளித்துவைத்திருக்கும் வெண்ணையை உண்டுவிட்டானே என்று,
அங்கிருந்த உரலுடன் , பொருத்தமான கயிற்றால் கட்டிவிடுவேன் என்று சினத்துடன் பேச,
அகப்பட்டுக்கொண்ட( பொது அர்த்தம் ), கண்ணன், விம்மி விம்மி
( வயிறு எக்கி, அடிக்கடி மூச்சை உள்ளே இழுத்து, வெளியே விட்டு , பாசாங்குடன் )
அழுது, கேவிக் கேவி அழுது, உரலின் பள்ளமான பாகத்தை கீழே கவிழ்த்து,
உரலின் மேல் ஏறி நின்று , தித்திப்பாக இருக்கிற ( சுவையுடன் கூடிய ) பாலையும்,
அண்டாவில் உள்ள வெண்ணையையும் , மென்மையான “திரு வயிறு ” அனுபவிக்க
நிறைய விழுங்கினான்;
அன்பும் , பாசமும் கொண்ட யசோதை, அவனைப் பார்த்தும், அடித்தும், அவனைப் பிடித்தும் ,
அங்கு திரண்டிருந்த அனைவர்க்கும், கண்ணனின் லீலையைக் காட்ட , ஊர் கோபர்கள்,
கோபிகைகள், ( ஊரார்கள் என்பது, பசுக்கூட்டம், கன்றுகள், மரங்கள் யாவும் )
எல்லாரும் பார்க்க, மெலிதான , சிறிய கயிற்றினால் கட்டப்பட்டு,
உரலில் பிணைக்கப்பட்டு இருந்து, ஆகாயத்தில் உள்ளவர்கள் கூட கேட்கும்படி ,
“ஓ” வென அழுது, பசுக்களைக் கட்டுவதற்காகவே உள்ள கயிற்றால்,
யசோதை , அடிப்பதுபோல் பாவனை செய்து, வீட்டுக்குள்ளே போக ….
( இது பொதுவான அர்த்தம் . பதம் பதமான விளக்கமோ, வ்யாக்யானமோ அல்ல )
பாசுரப்படி பாகவதம் , இப்படிப் போகிறது.

 

(பாலையும், தயிரையும், வெண்ணையையும் கொடுத்து,
குடும்பத்துக்கு வேண்டிய பொருட்களை வாங்கி,
இல்லறம் நடத்தும் கோகுலத்து மங்கையர்
அவைகளை, யாரும் காணா வண்ணம் எடுத்துச் சாப்பிட்டு
, ( கோபர்கள், குரங்கு, பூனை இவர்களுக்கும் கொடுத்து )
கோபியர்களின் கோபத்துக்கு ஆளாகும் கண்ணன்.
வீட்டில், யசோதை, ஒளித்து வைத்த வெண்ணையைச் சாப்பிடும் கண்ணன்
அதைக்கண்டு, பாசத்துக்கும், கோபத்துக்கும் நடுவில் திண்டாடும் யசோதை;
கண்ணனின் பொல்லாத்தனம் , விம்முதல், பொய் அழுகை, விண் எலாம் கேட்க அழுகை.
கண்ணிநுண் சிறுத்தாம்பினால் ,உரலோடு கட்டுண்ட எளிமை
அசோதையை அஞ்சி நோக்கல், அழுகை, தொழுகை
ஆரணமும் தேடும் காரணா ! பூரணா ! கண்ணா ! உன் லீலைகளைக் கேட்பதே அடியோங்கள் வாழ்வு
உன் திருவடிகளே , அடியோங்களுக்குப் புகல் )

———————-பின் குறிப்பு நிறைகிறது.

இனி அடுத்த அத்யாயம் .10 வது அத்யாயம்——தொடரும்

தசமஸ்கந்தம்——-நவீன பாணியில்———-அத்யாயம்—10
——————
நளகூபரன், மணிக்ரீவன் சாப விமோசனம்,, ஸ்துதி
——————————————————————
பரீக்ஷித் , ஸ்ரீ சுக பிரம்மத்திடம், ” ஹே, ரிஷியே……நளகூபரன், , மணிக்ரீவன் செய்த
நிந்திக்க வேண்டிய கார்யம் மற்றும் தேவரிஷி நாரதர், ஏன் சாபம் கொடுத்தார் என்பதை
விவரமாகச் சொல்லுங்கள் என்று கேட்க, ஸ்ரீ சுகர் சொன்னார்.
இந்த இருவரும், ருத்ர பகவானுடைய தாஸ்யர்கள்; குபேரனின் புத்ரர்கள்;
தனத்தினால் கர்வம் அடைந்தவர்கள்; மிகப் பெரிய பதவியில் இருப்பதாக
செருக்கு உடையவர்கள்; ஒரு சமயம் மந்தாகினி நதி ஓடும் பிரதேசத்தில்,
“வாருணீ ” என்கிற கள்ளைக் குடித்து, புஷ்பங்கள் பூத்திருந்த காட்டுக்குள் நுழைந்து,
தேவ ஸ்திரீகளுடன் ஜலக்ரீடையில் இருந்தனர்.
அப்போது, தேவரிஷி நாரதர், யதேச்சையாக அந்த வழியாக வந்தார்.

அவரைக் கண்டதும், தேவ ஸ்திரீகள், வஸ்த்ரமில்லாமல் இருந்ததால்,
நாரதரின் சாபத்துக்குப் பயந்து, அவசரம் அவசரமாக வஸ்த்ரங்களை எடுத்து
அணிந்து கொண்டனர். ஆனால், குபேரனுடைய பிள்ளைகளான இந்த இரண்டு பேரும்,
கள்மயக்கத்தில், கர்வத்துடன் வெட்கமின்றி, நிர்வாணமாக இருந்தனர்.

நாரதர், அவர்களைத் திருத்த எண்ணம் கொண்டார். இவர்கள், தனச் செருக்கினாலும்,
குபேரனுடைய பிள்ளைகள் என்கிற கர்வத்தினாலும், தாங்கள் சாஸ்வதம் என்று
எண்ணுகிறார்கள்; தேவர்களாக இருந்தாலும், இறந்துவிட்டால் அந்தத் த்ரேகம்
எரிக்கப்பட்டோ , கிருமிகள், பக்ஷி, மிருகங்களால் சாப்பிடப்பட்டோ அழிகிறது;
ஒன்றுக்கும் உதவாத இந்தத் த்ரேகத்தை சாஸ்வதம் என்றும்
தங்களைக் கிழத்தனம் அண்டாது என்றும், எண்ணுகிறார்கள்;

த்ரேகம், அநித்தியம் என்று அறியாத அஸத்துக்கள்;
தனமில்லாத வறியவனுக்குக்கர்வமில்லை; அஹங்காரமில்லை;
அவன் பகவத் சிந்தனையுடன் வாழ்கிறான்; தாரித்யனுக்குப் பசி இருப்பதால்,
இளைத்துப் போய், இந்த்ரியங்கள் அவன் சொல்படி கேட்கின்றன;

இப்படியெல்லாம் நினைத்த நாரதர், இவர்களின் கர்வத்தைப் போக்க வேண்டும்
என்கிற எண்ணமுடை யவராய், இவர்களுக்குத் தண்டனையும்
கொடுத்து திருந்தவும் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்று யோசித்து,
இவர்கள், நூறு தேவ வர்ஷங்கள் பூமியில் மரமாகப் பிறந்து, வாழ்ந்து,
பகவானின் திவ்ய சரணார விந்தங்களில் பக்தி ஏற்பட்டு, அந்த பக்தியினால்,
சாப நிவ்ருத்தி ஆகி, மறுபடியும் தேவப் பிறப்பை அடையட்டும் என்று சாபமிட்டார்.

இப்படிச் சபித்தவர், தான் சாபமிட்டதற்குப் பரிகாரம் தேட,
நாராயண ஆஸ்ரமமாகிற பத்ரிகாஸ்ரமத்திற்குச் சென்றுவிட்டார்.
அந்த சாபப்படி, நளகூபரனும், மணிக்ரீவனும் வ்ரஜபூமியில்
( கோகுலத்தில் ) மரங்களாக முளைத்து , வளர்ந்து இருந்தனர்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணனாகிய நீ, இதை நினைத்துப் பார்த்து,
ரிஷியின் சாபம் சத்தியமாக இருக்கவேண்டுமென்று எண்ணி அந்த மரங்கள்
இருந்த இடத்துக்கு உடலுடன் கட்டியிருந்த உரலையும் உருட்டிக் கொண்டு,
அந்த இரண்டு மரங்களின் அடித் தண்டின் இடைவெளி நடுவே தவழ்ந்து சென்று ,
உரலை, உன் பலத்தால் இழுத்தாய்.
அந்த வேகம் தாங்காமல்,கப்பும் கிளையுமாக நன்கு கொழுத்து வளர்ந்து இருந்த
இரண்டு மரங்களும் பெரும்சப்தத்துடன் கீழே விழுந்தன.
உடனே , இரண்டு தேவ குமாரர்கள், ஜ்வலித்து, நான்கு திக்குகளிலும்
ப்ரகாசத்தை ஏற்படுத்திக்கொண்டு, கர்வம் நீங்கியவர்களாக,
கிருஷ்ணனாகிய உன்னிடம் பக்தி மேலோங்க , உன்னை நமஸ்காரம் செய்து,
உன் திருவடிகளில் சிரஸ்ஸை வைத்து, உன்னை ஸ்துதித்தார்கள்.

நளகூபர—–மணிக்ரீவ ஸ்துதி
——————————
(ஹே……கிருஷ்ணா…..அந்த இரண்டு தேவர்களும்—-குபேரனின் குமாரர்களும் ,
உன்னைத் துதித்ததை , இப்போது அடியேன் சொல்லி, உனக்கு நினைவுபடுத்துகிறேன்
இதுவும் ஒருவித படுத்தல்தான் )

ஹே,,,,கிருஷ்ண…..கிருஷ்ண ….மஹாயோகி….. நீர் பரம புருஷன்;
அவ்யக்தமான ப்ரக்ருதியிலிருந்து, சிருஷ்டித்து, வ்யக்தமாக (வெளிப்படையாக)
விஸ்வம் இதம், ஜகத் இதம் என்று ரூபம் கொண்டதாக,
நீர் பிரபஞ்சமாக இருக்கிறீர்.
நீர், பார்ப்பதற்கு, அத்வீதீய ஏகர் —சமமோ, மேல்பட்டவரோ, குணத்திலோ,
சேஷ்டிதங்களிலோ, ஐஸ்வர்ய விபவங்களிலோ—எவரும் இல்லாதவர் .

நீர்தான், எல்லாருக்கும், எல்லாவற்றுக்கும் மேலானவர்;
நீர், அனைவர்க்கும் அந்தர்யாமி; உமது விருப்பப்படி நியமிக்கிறீர்;
உடல், ஆத்மா இவைகளை செயல்படுத்தும் பகவான் நீரே ;
அந்த ஜீவாத்மாவின் , ஸ்வரூபஸ்திதி, ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி —
எல்லாம் உமது அதீனம். சூக்ஷ்ம ஆத்மாவாக இருந்து,
ரஜஸ், தமோ, ஸத்வ பூதமாக இருக்கும் ப்ரக்ருதியை ,
நீர், சரீரமாகக் கொண்டுள்ளீர்.

நீரே, எல்லா ஜீவாத்மாக்களுக்கும் ஈஸ்வரன்;
பரமாத்மா; ஜீவன்களின் பாப, புண்யங்களுக்கு ஏற்ப, அவைகளுக்கு,
நாமம், ரூபம் இவைகளை உண்டாக்குபவர்; ஆனால், உம்மை,
இந்த மாம்ஸக்கண்களால் பார்க்க இயலாது;உமது மஹிமையை யாராலும்
முழுமையாக அறியமுடியாது; ஆகவே, உம்மைப் பக்தி செய்து நமஸ்கரிப்பதே சிறந்தது;

பகவதே…………வாஸுதேவாய……..நமஸ்காரங்கள் உமக்கே உரியது;
உமக்கு என்று ஒரு ரூபமில்லை; ஆனால், பலப் பல ரூபங்களில் ப்ரகாசிக்கிறீர்;
அவதாரம் ஏற்படும் போதெல்லாம், உமது ரூபம் வெளிப்படுகிறது;
நீர், சரீரங்கள் படைத்தவர்களில், அசரீரி; அவதார காலங்களில்,
அப்ராக்ருத சரீரம்; த்ரியக், ம்ருக, மனுஷ்ய அவதாரங்களில், அது அதற்குத் தக்கபடி
அதிசய வீர்யமுள்ள சரீரம்; அப்போதும், எவ்விதத் தோஷமும் உம்மிடம் இல்லை;
அப்பேர்ப்பட்ட, பற்பலப் பெருமைகளைப் பெற்ற நீர், எல்லா உலகங்களின்
க்ஷேமத்துக்காகவும், எங்களைப் போன்ற மந்த மதியர்களை உஜ்ஜீவிக்கவும்
உத்தேசித்து, அவதாரம் எடுக்கிறீர்; எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்

நீர், பரம கல்யாண மூர்த்தி; உமக்குப் பல நமஸ்காரங்கள்;
நீர் வாஸூ தேவர் (வஸூ தேவரின் திருக்குமாரர் );
பரம ஸாந்தர்; யதுக்களுக்குப் பதி;உமக்கு எங்கள் நமஸ்காரங்கள்;
ரிஷியினுடைய பரம அனுக்ர ஹத்தாலே, உம்முடைய தர்ஸனம் கிடைத்தது;
எங்கள் மனஸ், உமது திருவடிகளில் , பற்றுடன் இருக்கட்டும்;
நாங்கள், சிவபிரானின் கிங்கரர்கள் ; நாங்கள் போக உத்தரவு கொடுங்கள்
என்று ஸ்தோத்ரம் செய்தார்கள்.
( ஹே, கிருஷ்ணா……அந்த தேவ குமாரர்களான நளகூபர,மணிக்ரீவர்களை
நமஸ்கரிக்கிறேன்; அவர்களால், அடியோங்களுக்கு, உன்னை ஸ்தோத்தரிக்கும்
இந்த ஸ்துதி கிடைத்தது.)

ஸ்ரீ சுகர், மேலும் சொல்கிறார். நீ, உரலில் கட்டப்பட்ட தாமோதரனாகவே
இருந்துகொண்டு, அந்தத் தேவகுமாரர்களைப் பார்த்துச் சொன்னது இதுதான்.

பரம கருணை உள்ள நாரதராலே, என்னுடைய அநுக்ரஹம் உங்களுக்குக் கிடைத்தது;
என்னிடம் திட நம்பிக்கை வைத்து, மனஸ்ஸை அர்ப்பித்து, என்னைத் தரிசித்த நீங்கள்,
திருந்திய புருஷர்களாக ஆகி, பந்தங்களில் இருந்து விடுபட்டீர்கள்;
என்னையே உபாயமாக(ஸாதனம் ) வைத்து என்னிடம் வைத்த பக்தி ,ப்ரேமையாகி,
உங்கள் அபீஷ்டங்களை அடைந்து, அனுபவித்து, மீண்டும் பிறவி இல்லாமல்,
என்னை வந்து அடைவீர்களாக !

ஹே,கிருஷ்ணா, இவ்விதம் ஆக்ஜை பெற்ற இருவரும், உன்னைப் ப்ரதக்ஷிணம் செய்து,
அடிக்கடி நமஸ்காரம் செய்து, வடதிசை நோக்கிப் புறப்பட்டு, குபேரபட்டணமாகிய
அளகாபுரிக்குப் போய்ச் சேர்ந்தனர் . இழந்த சம்பத்தை, பகவானை பஜித்து,
மீண்டும் அடைந்த அர்த்தார்த்தி களான இவர்களுக்கு அடியேனின் நமஸ்காரங்கள்

10 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்

 

(அடியேன் மூன்றாவது பின்குறிப்பில் , வைகுண்டவாசி ஸ்ரீ ரங்கஸ்வாமி அய்யங்காரின்
“பாசுரப்படி பாகவதத்தில்” திருவாய்ப் பாடியைப் பற்றி ” உளம் குளிர அமுது செய்து,
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு , ஒளியா வெண்ணெய் உண்டான்
என்று உரலோடு , ஆய்ச்சி ஒண்கயிற்றால் , விளியா ஆர்க்க
ஆப்புண்டு, விம்மி அழுது, பொத்த உரலைக் கவிழ்ந்து, அதன்மேலேறி ….”
என்று தொகுத்துக் கொடுத்துஇருக்கிறார் என்று சொன்னேன்.
அதன் தொடர்ச்சியாக,

மருதமரம் பற்றிச் சொல்லும்போது , பாசுரப்படி பாகவதத்தில்
‘ மண மருவு தோள் ஆய்ச்சி ஆர்க்கப்போய் ,உரலோடும் ஒருங்கு ஒத்த இணைமருதம்
உன்னிய வந்தவரை,ஊரு கரத்தினோடும் உந்தி, எண்திசையோரும் வணங்க ,
இணை மருதூடு நடந்திட்டு…” என்று சொல்கிறார்.

ஸ்ரீமத் பாகவதம் சொல்வது என்னவென்றால், ஸ்ரீ கிருஷ்ணன் ,
உடலுடன் கட்டி இருந்த உரலையும் இழுத்துக் கொண்டு,
அந்த இரு மரங்களின் அடித்தண்டின் இடைவெளி
நடுவே பிரவேசித்து, உரலைத் தன் பலத்தால் இழுத்தார் .
இதன்படி, ஸ்ரீ கிருஷ்ணன் உரலையும் இழுத்துக் கொண்டு மரங்ககள் ஊடே தவழ்ந்து
சென்று தன் பலத்தால் இழுத்தார் என்று தெரிகிறது;
பாசுரப்படி பாகவதத்தில் “இணை மருதூடு நடந்திட்டு ” என்று உள்ளது.
இதற்குப் பொருள் என்ன? கேட்டால், மந்தபுத்திக்குத் தெரிந்தவரை சொல்கிறேன் )

அடுத்த அத்யாயம் தொடருகிறது

 

தசமஸ்கந்தம் நவீன பாணியில் அத்யாயம் – 11

பழக்கூடையில் ரத்னங்கள்—–கோகுலத்திலிருந்து, பிருந்தாவனம்—இங்கு வத்ஸாசுரன், பகாசுரன் வதம்

 

பெருத்த சப்தத்தைக் கேட்டு, நந்தகோபனும், மற்ற யாதவர்களும் ( கோபர்களும் ) ஓடி வந்தனர்.
பெரிய இரண்டு மரங்கள், கீழே விழுந்து கிடந்தன. எப்படி இவை இரண்டும் கீழே விழுந்தது என்று,
அவர்களுக்குத் தெரியவில்லை. அருகில் வந்து பார்த்தார்கள். உன்னைப் பார்த்தார்கள்.
கயிற்றால் கட்டப்பட்டு இருந்த உன்னை, கயிற்றை அவிழ்த்து, பயந்து கொண்டே ,
இது என்ன ஆச்சர்யம் என்று பேசினார்கள். அருகில் விளையாடிக்கொண்டிருந்த கோபர்கள்
ஆகிய கோபாலகர்கள், ( சிறுவர்கள் ) ” நாங்கள் பார்த்தோம்; இதற்குக் கிருஷ்ணன்தான் காரணம்;
இரண்டு மரங்களுக்கு நடுவே தவழ்ந்து சென்று, உரலை இழுத்தான்; மரங்கள் முறிந்து விழுந்தன;
இரண்டு புருஷர்கள் வெளியே வந்து, கிருஷ்ணனுடன் பேசினார்கள்;
நமஸ்காரம் செய்துவிட்டுச் சென்றுவிட்டார்கள் ” என்றார்கள்.
நந்தகோபர் உன் அருகே வந்து, உன்னை கயிற்றின் பிடியிலிருந்து வெளியே தூக்கினார்.

(கிருஷ்ணா….எல்லாரையும் சம்சாரக் கட்டிலிருந்து விடுவிக்கும் உன்னை,
நந்தகோபன் கயிற்றின் பிடியிலிருந்து விடுவித்தான் ….இது என்ன லீலை ! )

ஒரு சமயம், கோபிகைகள், உன்னைக் கொஞ்சி சீராட்டினார்கள்.
நீ, அவர்களுக்குக் ” குடக்கூத்து ” நடனம் ஆடிக் காண்பித்தாயாமே !
பாட்டுப் பாடினாயாமே !
அவர்கள், சந்தோஷப்பட்டு, மரப் பொம்மையுடன் விளையாடுவதைப் போல,
உன்னிடம் விளையாடினார்களாமே ! அவர்கள் இட்ட கட்டளையை
நிறைவேற்றி னாயாமே ?
அதாவது, முக்காலியைக்கொண்டுவந்து கொடுப்பது;
படியைக் கொண்டுவந்து கொடுப்பது என்று செய்தாயாமே ? இப்படிப் பல
சேஷ்டிதங்களால், கோபிகைகளுக்கு, ஆனந்தத்தை அளித்தாயாமே !
(அந்த பால சேஷ்டிதங்களுக்கு நமஸ்காரம் செய்கிறேன் )

ஒரு நாள் , நீ வாஸம் செய்யும் வீதியில், ஒரு கிழவி “பழம் வாங்கலையோ ….. பழம்….. ”
என்று கூவிக்கொண்டு வந்தபோது, நீ, அவளிடம் சென்று,
“எனக்குப் பழம் கொடு ” என்று, உன் சின்னஞ்சிறு கைகளை நீட்டி வேண்ட,
அதற்கு அந்தக் கிழவி, “அரிசியைக் கொடு ” என்று கேட்க,
நீ, வீட்டின் உள்ளே போய், இரண்டி உள்ளங்கைகளிலும் அரிசியை எடுத்துக் கொண்டு ,
அரிசி தரையில் சிந்தாமல் இருக்க, ஜாக்ரதையாக நடந்து வர ,
அப்படியும் பல அரிசிகள் கீழே சிந்த,
இது தெரியாதவனைப்போல நடித்த நீ,
கையில் உள்ள அரிசியைக் கிழவியிடம் கொடுக்க,
அந்தக் கிழவி உன்னைத் தடவிக்கொடுத்து,
உன் சின்னஞ்சிறு கைகள் நிறையப் பழங்களைக் கொடுக்க,
நீ, அவளை அனுக்ரஹித்த உடன் , பழக்கூடை முழுவதும் ரத்னங்களால் நிரம்ப,
அது கண்டு ஆச்சர்யப்பட்ட அந்தக் கிழவி,
கண்களில் நீர் வழிய, உன் திருக்கைகளைப் பிடித்து முத்தமிட்டாளாமே !

(ஹே…..கண்ணா… அந்தக் கிழவியைப்போல , உனக்கு சமர்ப்பிக்க, அடியேனிடம் ஏதுமில்லை
அடியேனுடைய அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன். ஸ்வாமி தேசிகன்
அருளியுள்ள அஞ்சலி வைபவத்தை , ஹ்ருதயத்தில் நிறுத்தி, உனக்கு அஞ்சலி செய்கிறேன் )

ஒருநாள், நீயும் பலராமனும் , தாய்மார்கள் பின்தொடர, யமுனா தீரத்துக்குச் சென்று,
கோபர்களுடன் விளையாடினீர்கள். நேரம் மிகவும் ஆகியது; ரோஹிணி
பலராமனை ” விளையாடியது போதும், வீட்டுக்குப் போகலாம் வா … ” என்று கூப்பிட்டாள்.
பலராமனும் வரவில்லை; நீயும் வரவில்லை. தொடர்ந்து விளையாடிக்கொன்டிருந்தீர்கள்.
யசோதை வந்து, உன்னைக் கூப்பிட்டாள். புத்திர வாத்சல்யத்துடன் கூப்பிட்டாள்.
“விடியற்காலம் சாப்பிட்டீர்கள்; வெகு நேரம் ஆகிவிட்டது; உங்களுக்குப் பசிக்கும்;
வ்ரஜபூமியின் அதிபரான நந்தகோபன், உங்களை எதிர் பார்த்துக் காத்திருப்பார்;
ஹே….கிருஷ்ணா… இன்று உன் பிறந்த நாள்; பிறந்த நக்ஷத்ரம் ரோஹிணீ ” என்று சொல்லி
உங்களைக் கூப்பிட்டாள். இருவரும் திரும்பி வர, உங்களை அழைத்துக் கொண்டு
வீட்டுக்கு வந்த யசோதை, உங்களை நன்கு ஸ்நானம் செய்துவைத்து,
புது வஸ்த்ரங்கள் அணிவித்து, நன்கு ஆகாரம் கொடுத்து, நீங்கள் க்ஷேமமாக இருக்க ,
மங்கள கார்யங்களைச் செய்தாள்.

ஒருசமயம், கோகுலத்தில் , உத்பாதங்கள் ஏற்பட்டன. விருத்தர்கள் மிகவும் பயந்து,
ஒன்று கூடி, என்ன செய்வது என்று ஆலோசித்தார்கள். அப்போது, மிகவும் வயதான
க்ஜான வ்ருத்தன் “உபநந்தன் ” பேசினான் .
” பெரிய உத்பாதங்கள் ஏற்படுகின்றன; குழந்தைகளுக்கு நாசம் ஏற்படும்படி நடக்கின்றன;
பூதனையிலி ருந்து விடுபட்டது, சகடாசுரன் அழிந்தது, தைத்யன் அழிந்தது,
மரங்கள் முறிந்து குழந்தையின் மேல் விழாமல் இருந்தது, என்று, இப்படிப்
பல கஷ்டங்கள் ஏற்பட்டு விட்டன; மேலும்,கஷ்டங்கள் ஏற்படுவதற்குள் ,
நாம் யாவரும் கோகுலத்தை விட்டு, பிருந்தாவனம் சென்று விடுவோம்;
அது, பசுமை நிறைந்த காடு; பசுக்களுக்கு நன்கு ஆகாரம் உள்ளது;
நாமும் அங்கே செல்லலாம் ; உங்களுக்குப் பிடித்திருந்தால் இதைச் செய்யுங்கள் ” என்றான்.

இதைக்கேட்ட கோபர்கள் யாவரும் , சரியான யோசனை என்று ஆமோதித்து,
கோக்களையும் கன்றுக் குட்டிகளையும் முன்பாகப் போக விட்டு, சாமான்கள்,
மூட்டை முடிச்சுகளை வண்டிகளில் ஏற்றி, வாத்தியங்களை வாசித்துக் கொண்டு
புரோஹிதர்கள் கூடவே வர, ப்ருந்தாவனம் புறப்பட்டனர்.
யசோதை, நீ, பலராமன், ரோஹிணி ஒரு வண்டியில் ஏறி அமர்ந்து, எல்லாருமாக
ப்ருந்தாவனம் வந்து சேர்ந்தீர்கள். இங்கு, வசிக்கும் இடங்களை
கோபர்கள் நன்கு ஏற்பாடு செய்தார்கள்.
அருகிலேயே யமுனை நதி; கோவர்த்தன கிரி ; பச்சைபசேல் என்று பூமி;
அடர்த்தியான காடு; உங்களுக்கு, சந்தோஷத்துக்குக் கேட்பானேன் !
இங்கு நீங்கள், மற்ற கோபர்களுடன் நன்கு வளர்ந்து, வனத்தில் பசு கன்றுகளுடன்
சுற்றித் திரிந்தீர்கள்; விளையாடினீர்கள். இந்த மாதிரியாக, நீங்கள் , யமுனா தீரத்தில்
கன்றுகளுடன் விளையாடும்போது, உங்களை அழிக்க, வத்ஸாசுரன் , கன்றுக்குட்டி
வேஷத்தில் வந்தான். அதை, பலராமன், உன்னிடம் கையைக் காட்டிச் சொல்ல,
நீ, அதன் பின்னாலே சப்தமில்லாமல் சென்று, பின்னங்கால்களைப் பிடித்து
மேலே தூக்கி சுழற்றி எறிய , அந்த அசுரன் எதிரே இருந்த விளாம்பழ மரத்தில் மோதி,
அழிந்தான். விளாம்பழங்கள் உதிர்ந்தன. அசுரனின் கோர ஸ்வரூப உடலும் கீழே விழுந்தது.
இதைப் பார்த்த கோபர்கள் ஆச்சர்யப்பட்டார்கள் .

( நீங்கள், கோக்களை ரக்ஷிக்கும் வத்ஸ பாலகர்கள்; கோபாலர்கள்; வத்ஸர்கள் )

சில காலம் கழிந்தது. ஒருநாள் நீர் நிரம்பிய தடாகத்தில், நீங்களும், கோபாலகர்களும்,
கோக்களும் தாகத்துக்கு நீர் அருந்தினீர்கள் . அச்சமயம், எதிரே ஒரு மலைச் சிகரத்தைக்
கோபாலகர்கள் கண்டனர். அந்தச் சிகரத்தில், கொக்கு உருவில் ஒரு அசுரன் , உன்னைக் கண்டான்.
உடனே, பறந்து வந்தான்; உன்னை வாயில் போட்டு விழுங்க முயற்சித்தான் ,
இதைப்பார்த்துக் கொண்டிருந்த பலராமனும் கோபாலகர்களும் என்ன செய்வது
என்று கலங்கினார்கள். அப்போது, அந்த கொக்கு வடிவில் வந்த அசுரன் உன்னை முழுங்க முடியாமல்,
அவஸ்தைப்பட்டான். நீ உலகத்துக்கு எல்லாம் காரணன்;
நீ, அவன் வாயிலிருந்து வெளியே வந்தாய்; ஆனால், அசுரன் உன்னை விடவில்லை;
உன்னைக் கொத்துவதற்காக உன்னை நெருங்கினான்;
நீ, அவன் இரண்டு அலகுகளையும் , வாயின் இரண்டு பக்கத்தையும்
இரண்டு கைகளால் பிடித்து, பிளந்து, அறுத்து எறிவதைப்போல த் தூர எறிந்தாய்.
கொக்கு உருவில் உன்னைக் கொல்ல வந்த அசுரனைக் கொன்றாய்.
இதைப் பார்த்த கோபர்கள், ஆச்சர்யமடைந்தனர்.
இப்படியாக, அந்த அசுரனை அழித்து, பலராமனும் கோபர்களும் இருந்த இடத்துக்குத்
திரும்பி வந்தாய் பிறகு, நீங்கள் எல்லாரும், கோக்களுடன் ப்ருந்தாவனம்
திரும்பினீர்கள். கோபர்களும், கோபியர்களும் இந்தச் செயல்களைக் கேட்டு,
அதிசயமும் ஆச்சரியமும் அடைந்தனர். கிருஷ்ணனுக்குப் பல எதிரிகள் இருக்கிறார்கள்;
அவர்கள், அவனைக் கொல்ல முயற்சிக்கிறார்கள்;ஆனால், அவர்களை, கிருஷ்ணன் அழிக்கிறான்;
கர்க்கர் மகரிஷி சொன்னது நடக்கிறதே என்று பரஸ்பரம் பேசிக் கொண்டார்கள்.
ஆனால், பலராமனுடன் சேர்ந்து நீ, பிருந்தாவனத்தில் திரிந்து, கோபர்களுடன் விளையாடி, எல்லாரையும் மகிழ்வித்தாய்.

(இப்படிப்பட்ட விளையாட்டுக்களை விளையாடிய, உனக்கும், பலராமனுக்கும் கோபாலகர்களுக்கும் அநேக நமஸ்காரங்கள் )

11 வது அத்யாயம் நிறைவடைந்தது

தசமஸ்கந்தம் —நவீன பாணியில்—–அத்யாயம் ——12
——————–
அகாசுரன் மோக்ஷம்
———

ஹே, கிருஷ்ணா….. இதற்குப்பின் நடந்ததை, ஸ்ரீ சுக ப்ரம்ம ரிஷி ,
பரீக்ஷித் ராஜனுக்குச் சொன்னதை , இப்போது உன்னிடம் சொல்கிறேன்.
பிறகு ஒரு நாள், நீ, மத்யான வேளையில் “வனபோஜனம் ” செய்யத் திட்டமிட்டாய்.
அதற்காகக் காலையிலேயே, கோபாலகர்கள், பசுக்கூட்டங்கள் இவற்றுடன்
யமுனா நதி தீரத்தில் உள்ள வனத்துக்குப் புறப்பட்டாய். கோபாலகர்கள்,
ஆயிரக்கணக்கான பசுக்கள், கன்றுகளுடன் , வாத்தியங்களை இசைத்துக் கொண்டு,
முன்னாலே சென்றார்கள். வனத்தை அடைந்து, உல்லாசமாக விளையாடினார்கள்.
அங்கு பூத்திருந்த புஷ்பங்களைப் பறித்து, தலையில் சூடிக் கொண்டார்கள்.
வனத்தின் வனப்பை ரசித்தபடி, கிருஷ்ணனாகிய உன்னை விட்டு,
வெகு தூரம் சென்று விட்டார்கள். அப்படிப் போகும்போது, விளையாடுதல்,
பந்து போன்ற பொருளைத் தூர எறிதல், வாத்தியங்களை முழக்குதல்,
நதியில் இறங்கி ஹம்சம் போல் நீந்துதல், தவளையைப்போலத் தத்தித்தத்தி ஓடுதல்,
குரங்குகளின் வாலைப் பிடித்து விளையாடுதல்,பட்சிகளைப் போலக் கூவுதல்,
இப்படிப் பலவிதமாக, விளைடிக் கொண்டே சென்றார்கள். முன் ஜென்மங்களின்
புண்ய பலத்தினாலே , இந்த ஜன்மத்திலே உன்னுடைய ஸ்நேஹம் —உன் அனுபவம் ,
அதன் சுகம்— இவைகள் ஏற்பட்டன. ஆனால், பார்ப்பதற்கு ,
நீ, மனுஷ்யக் குழந்தையைப் போல இருந்தாய். இந்த பாக்யம், –பெரும் பாக்யம் —
கோபாலகர்களுக்குக் கிடைத்தது.
இச்சமயத்தில், அங்கு, “அகன் ” என்கிற அசுரன் வந்தான்.
இவன் பகாசுரனின் ஒன்று விட்ட தம்பி. பூதனையின் சஹோதரன்.
இந்தக் கிருஷ்ணனை (உன்னை ) எப்படியும் கொல்ல வேண்டும் என்கிற
திட சித்தத்துடன் , தன்னுடைய உடம்பைப் பெரிதாக ஆக்கிக்கொண்டு,
மிகவும் நீளமான மலைப்பாம்பு உருவத்தை எடுத்துக்கொண்டு,
இந்தக் கோபாலகர்களும், நீயும் வரும் வழியில் , வாயை நன்கு பிளந்து கொண்டு,
மலையின் குகையைப் போலத் தோற்றம் அளிக்குமாறு செய்து ,
உங்கள் வருகையை எதிர்பார்த்து இருந்தான்.
கோபாலகர்கள் விளையாடிக்கொண்டே அங்கு வந்தனர்.
ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே , அதைப் போலிப் பாம்பாக நினைத்து,
கிருஷ்ணனை ஹ்ருதயத்தில் நிறுத்தி, அந்த அசுரனின் வாய்க்குள் புகுந்தனர்.
பசுக்கள் கூட்டம், கன்றுகள் கூட்டம் யாவும் உள்ளே சென்றன. அந்த அசுரன்,
கிருஷ்ணனும் உள்ளே வரட்டும் என்று, உனக்காக, வாயைத் திறந்தே இருந்தான்.
நீ, அவர்களைத் தடுக்க முயற்சிப்பதற்குள் , அவர்கள் யாவரும் மலைப் பாம்பாக
உள்ள அசுரனின் வாய்க்குள் சென்று விட்டனர். நீ, அவர்கள்அனைவரையும்
காப்பாற்ற சங்கல்பித்தாய். நீயும் மலைப் பாம்பின் வாய்க்குள் நுழைந்து,
அதன் வயிற்றை அடைந்து, உன் திருமேனியைப் பெரியதாகச் செய்தாய்.
நீ, அந்தப் பாம்பின் வயிற்றுக்குள் , பெரிய ரூபமாக வளர, வளர அந்த அசுரனின்
வயிறு பிளந்தது. கண்களின் விழிகள் பிதுங்க; வாய் ரத்தத்தைக் கக்க,
எல்லா இந்த்ரியங்களும் நாசமடைய, , நீ , உன் ஸ்பர்சத்தாலும், த்ருஷ்டியாலும்
கோபர்களையும் கோக்களையும் கன்றுகளையும் காப்பாற்றி அவர்களுடன்
வெளியே வந்தாய். நீ வெளியே வந்ததும், ஒரு ஜோதி பத்து திக்குகளிலும்
பிரகாசித்துக் கொண்டு, இறந்த பாம்பின் உடலிலிருந்து வெளியே வந்து,
உன் திருமேனியில் சேர்ந்தது. பாபிக்கு மோக்ஷம்; தேவர்களுக்கு
இது அற்புதக் காக்ஷி; ப்ரஹ்மா , சத்ய லோகத்திலிருந்து வந்து இந்த அற்புதத்தைப்
பார்த்து, ஆச்சர்யமடைந்தார்.
ஹே, கிருஷ்ணா ……பரீக்ஷித்துக்கு, சுக ப்ரஹ்மம்
என்ன சொன்னார் தெரியுமா ?அந்தப் பாம்பின் தோலை உலர்த்தி,
அதை விளையாடுவதற்காக கோபர்கள் எடுத்துச் சென்றார்களாம்.
இது, உன்னுடைய ஐந்தாவது வயதில் நடந்த லீலை என்றும் சொன்னார்.
பரீக்ஷித் மகாராஜன், முநிபுங்கவரை நோக்கி, பகவான் ஹரியின்
லீலா வினோத சரிதங்களைக் கேட்கக் கேட்க, மெய்மறந்து போகிறது;
மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.மேலும் சொல்வீராக …. என்றான்

(ஹே கிருஷ்ணா…. பசுக்களும் , கன்றுகளும் செய்த பாக்யம்தான் என்னே ! )

12 வது அத்யாயம் நிறைவடைந்தது.

ஹே ….. கிருஷ்ணா……உன்னுடைய கதாம்ருதத்தைப் பருகப்பருக, ஆனந்தம் மேலிடுகிறது.
ஸ்ரீ சுகர் பரீக்ஷித்துக்குச் சொன்னதைப் போல, சாதுக்களுக்கு ,
பகவத் கதாம்ருதம் மிகவும் பிடிக்கும். முனிபுங்குவர், ராஜனுக்கு,
மிக ரஹஸ்யமான சரிதம் ஒன்றைச் சொன்னார்.
உன்னுடைய சரிதம்தான்; உன்னுடைய லீலைதான்;
அதை இப்போது உன்னிடமே சொல்கிறேன்.
நீ, கோபாலகர்களை நோக்கி, யமுனாதீர உபவனம், மிகவும் நேர்த்தியானதென்றும்,
மணற்பாங்கான திடல் உள்ளதென்றும், விளையாடுவதற்குத் தகுதியான இடம்
என்றும் சொல்லி , யமுனா தீரத்துக்கு அழைத்து வந்தாய். பசுக்களும், கன்றுகளும்
நீர் அருந்திவிட்டு, புற்களை மேயச் சென்றன. மத்யான வேளை.
கோபாலகர்கள் , தாங்கள் கொண்டுவந்த பிரசாதங்களை, முதலில் உனக்கு சமர்ப்பித்துவிட்டு ,
சாப்பிடத் தொடங்கினார்கள். சிலர், அங்குள்ள இலைகளைப் பறித்து,
அதில் சாதத்தை வைத்துச் சாப்பிட்டனர். சிலர், பழங்களைப் பறித்து,
உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டனர். ஒருவருக்கொருவர் சிரித்துக் கொண்டும்,
கேலி செய்துகொண்டும் , பகவானாகிய உன்னுடன் அமர்ந்து சாப்பிட்டனர்.

உன்னைப்பற்றிச் சொல்ல வேணும் ! நீ எப்படி சாப்பிட்டாய் தெரியுமா !
அதை சுகப் பிரம்மம் கூறுகிறார்.
புல்லாங்குழலை இடுப்பில் செருகிக் கொண்டு,
கொம்பு வாத்தியத்தைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு,
இடது திருக்கையில் ஒரு கவளம் சோற்றை வைத்து,
வலது கையில் உள்ள ஊறுகாயைக் கடித்து,
கேலிப் பேச்சு பேசிக்கொண்டே, சாப்பிட்டுக்கொண்டிருந்தாயாம்.
இந்த பரம சௌலப்யம், தேவலோகவாசிகளை ஆச்சர்யப்பட வைத்ததாம்.
இப்படி நீங்கள் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது,
பசுக்களும், கன்றுகளும் புற்களை மேய்ந்துகொண்டே , வெகு தூரம் சென்று விட்டன.
கோபாலகர்களுக்குக் கவலை, பசுக்களையும் கன்றுகளையும் தேடிக்கொண்டு
எங்கே போவது என்று ?
நீ, அவர்களைப் பார்த்து, “கவலை வேண்டாம்; நான் போய் பசுக்களையும் கன்றுகளையும்
திரும்பவும் விரட்டிக் கொண்டு வருகிறேன் ; இங்கேயே இருங்கள் ” என்று சொல்லி,
ஊறுகாயும், சோறுமாகக் கிளம்பினாய்.
ப்ருஹ்மாவுக்கு, உன்னுடைய லீலைகளைப் பார்க்க ஆவல். என்ன செய்தார் தெரியுமா ?
பசுக்களையும் கன்றுகளையும் ஓட்டிச் சென்று ஒரு குகையில்
ஒளித்து வைத்தார். உனக்கு, இவைகள் எங்கே போயின என்று தெரியாததால்,
அலைந்து , திரிந்து, மறுபடியும் கோபாலகர்களை விட்டுப் போன இடத்துக்கு வந்தாய்.
அதற்குள், ப்ருஹ்மா , அவர்களையும் மறைத்து வைத்து விட்டார். நீ, உடனே புரிந்து கொண்டாய்,
இது ப்ருஹ்மாவின் கார்யம் என்று. உடனே சங்கல்பித்தாய்.
அதேமாதிரி பசுக்கள், அதேமாதிரி கன்றுகள், அதேமாதிரி அச்சாக கோபாலகர்கள்,
என்று நீயே இப்படி மாறினாய். “ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் ‘ என்று வேதம் சொல்கிறது.
வேதம் சொல்வது சத்ய வாக்கு அல்லவா ?

கோபாலகர்கள் அப்படி அப்படியே உருவம், உயரம், நடை உடை பாவனை , நிறம் ,
அதேமாதிரி பசுக்கள் அந்தந்த வர்ணங்கள், சுபாவங்கள் மிருதுவான கன்றுகள், , இப்படியே கோக்களாகவும் யும் கன்றுகளாகவும் கோபாலகர்களாகவும் மாறி, நீயும் அப்படியே இருக்க ,இவர்களுடன் எப்போதும் போல, விளையாடிக்கொண்டு,
பிருந்தாவனத்துக்கு வந்து, அவரவர் வீடுகளில் அவரவர்கள் ஸ்வபாவப்படி போக,
பசுக்கள், கன்றுகள் கொட்டில்களில் அடைய, நீயும் யசோதை மைந்தனாக விளங்கினாய்.
ஒவ்வொரு நாள் காலையிலும், கோபிகைகளுக்கு, தங்கள் புத்ரர்களை எழுப்பிப் பால் கொடுக்கும்போது,
அதீத வாத்ஸல்யம். பசுக்களும், கன்றுகளும் பரஸ்பரம் அதீத அன்பைச் செலுத்தின.
இப்படியே கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆயிற்று. ஒரு சமயம், பலராமன்,
உன்னுடனும் கோபாலகர்களுடனும் வனத்துக்கு வந்தார்.
அப்போது, பசுக்கள் தனியாக மேய்ந்து கொண்டிருந்தன.

கோவர்த்தன மலையின் உச்சியில் உள்ள புற்களைப் பார்த்து, அங்கு போய்ச் சேர்ந்தன.
கன்றுகள், வேறு இடத்தில் தனியே மேய்ந்து கொண்டிருந்தன. மலையின் உச்சியில் இருந்த பசுக்கள்,
கன்றுகளைப் பார்த்தன. மடியில் பால் கனக்க, கோபாலகர்களின் கட்டுக் காவலையும் மீறி,
கன்றுகளை நோக்கி மலையடி வாரத்துக்குப் பாய்ந்து வந்து, அவைகளுக்குப் பால் கொடுத்தன.
இதைப் பார்த்த கோபர்கள், பசுக்களிடம் கோபப்படவில்லை. கண்களில் அன்பு கனிய இதைப் பார்த்தனர்.
இந்தக் காக்ஷிகளை, பலராமர் பார்த்தார். இந்த அற்புத, அபூர்வ பிரேமபாசம் அடிக்கடி ஏற்படுகிறதே ,
காரணம் என்ன என்று யோசித்தார். இது பகவானுடைய மாயை; இந்த மாயை,
என்னையும் மோஹித்து விடுகிறது என்று எண்ணி, எல்லாப் பசுக்களும், கன்றுகளும், கோபாலகர்களும்
சாக்ஷாத் விஷ்ணுவே என்கிற முடிவுக்கு வந்து, அருகில் இருந்த உன்னைப் பார்த்து,
” கிருஷ்ணா… நீயே இவர்கள் எல்லாருக்குள்ளும் புகுந்து எல்லாவற்றையும் செயற்படுத்துகிறாய்,
இது உன் விளையாட்டு ” என்று சந்தோஷப் பட்டார்.

ப்ருஹ்மாவுக்கு, ஒருநாள் கழிந்தது. பூலோகத்துக்கு வந்தார். தான் ஒளித்து வைத்திருந்த பசுக்கள்
கன்றுகள் கோபாலகர்கள், ஒளித்து வைத்த இடத்தில் அப்படியே இருக்க,
கிருஷ்ணன் , வழக்கம்போல இவர்களுடன் வனத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறானே ?
இது எப்படி சாத்யம் ? நான் ஒளித்து வைத்துள்ள பசுக்கள், கன்றுகள், கோபாலகர்கள் நிஜமா ?
அல்லது, இதோ இங்கு கிருஷ்ணனுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார்களே , இவர்கள் நிஜமா ?
என்று குழம்பினார்.

ஸத்யனான உன்னை ஏமாற்ற , தனது மாயையைப் பிரயோகம் செய்த ப்ருஹ்மா,
தனது மாயையில் தானே சிக்கிக் கொண்டு, தன்னையே ஏமாற்றிக் கொண்டு,
உன்னுடைய விஷ்ணு மாயையால் தாக்கப்பட்டு, ஒன்றும் புரியாமல் கவலையுடன் விழித்து,
சோகத்தின் வசப்பட்டார். தனது லோகமான ப்ரும்ம லோகத்துக்கு வந்தார்.
அங்கே, இன்னொரு ப்ருஹ்மா இருப்பதைப் பார்த்தார். தனக்கே, தான் யார் என்று தெரியாமல்,
மயங்கினார்.

மின்மினிப் பூச்சியின் பிரகாசம், சூர்ய ஒளியில் ஒன்றும் இல்லாது ஆவது போல,
உன்னுடைய விஷ்ணு மாயையில், அவரது மாயை ஒன்றும் இல்லாமல் ஆகிவிட்டது.
ப்ருஹ்மாவின் மாயா சக்தி அடங்கி ஒடுங்கியது. அதே க்ஷணத்தில், ப்ருஹ்மா கண்ட காக்ஷி
அவரைத் திகைக்க வைத்தது. எல்லா கோபாலகர்களும் அவருக்கு சாக்ஷாத் விஷ்ணுவாகவே
காக்ஷி அளித்தனர். ஒவ்வொருவரும் ச்யாமள நிறம்; அரையில் ( இடுப்பில் ) மஞ்சள் பட்டு பீதாம்பரம்;
சதுர்ப்புஜம்;
திருவாழி
திருச்சங்கு
கதை
திருக்கரத்தில் தாமரை;
சிரஸ்ஸில் ஜ்வலிக்கும் கிரீடம்;
மகர குண்டலங்கள்;
வனமாலை;
ஸ்ரீ வத்ஸ மறு;
திருக்கைகளில் தங்கக் காப்புகள்;
அங்குலீயம்( மோதிரம் )
இடுப்பில் கடிசூத்ரம்;
மார்பில் துளசி மாலை;
மிருதுவான அங்கங்கள்;
திருவடிகளில் நூபுரம்;
உதட்டில் மந்தஹாசம்; ……இப்படிப் ப்ருஹ்மாவுக்கு, ஒவ்வொரு கோபாலகர்களும் விஷ்ணுவாகவே
காக்ஷி கொடுத்தனர். குளிர்ச்சி பொருந்திய கடைக்கண் பார்வை;
எல்லா ஜகத் கார்யங்களும் அணிமா முதலிய சித்திகளும் பிரக்ருதியின் மஹத்
என்பன போன்ற 24 தத்வங்களும் அந்தந்த தேவதா ரூபம் எடுத்துக் கொண்டு,
கோபாலகர்களை , சேவிப்பதைப் பார்த்தார். சேதனாசேதன வர்க்கங்கள்,
காலத்தின் ஸ்வபாவமும் ( அபிமான தேவதை ) , காமங்கள், கர்மாக்கள், அதற்குள்ள முக்குணங்கள் ——
எல்லாம் உருவம் எடுத்து, உனக்கு ஸேவை செய்வதைப் போல,
கோபாலகர்களுக்கும் ஸேவை செய்தன. பேரானந்த மூர்த்தியான உன்னை,
கோபாலகர்கள் உருவில் உபாசிப்பதை, ப்ருஹ்மா பார்த்தார்.
இப்படிப்பட்ட அனுபவத்தை, தத்வ க்ஜாநியான ப்ருஹ்மாவுக்கு, நீ, அளித்தாய்.
அவரது, ஏகாதச இந்த்ரியங்கள் தடைப்பட்டு, கயிற்றினால் கட்டப்பட்ட பொம்மையைப்
போல உணர்ந்தார். உன்னை, உபநிஷத்துக்களின் க்ஜானத்தாலேதான், ஒருவாறு அறிய முடியும்.
ப்ருஹ்மா தன்னுடைய நிலைக்கு வரமுடியாமல் திணறினார். தடுமாறினார்.
அப்போது, நீ , அவரை மாயையிலிருந்து விடுவித்தாய்.

இப்போது, பிருந்தாவனம், கோபாலகர்கள், பசுக்கள், கன்றுகள் யாவும் சஹஜமாக
விளையாடிப் பேசுவதைக் கண்டார். ஒளித்து வைப்பதற்கு முன்பு , என்ன சேஷ்டைகள்
செய்து விளையாடினார்களோ, அப்படியே இருந்ததைக் கண்டார்.
உடனே, ப்ருஹ்மாவுக்கு, ஞானோதயம் ஏற்பட்டது.
கிருஷ்ணா ! உன்னை நமஸ்கரித்தார்;
தரையில் விழுந்து சேவித்தார். நான்கு கிரீடங்களும் உன் திருவடியில் படுமாறு சேவித்தார்.
மீண்டும் மீண்டும் சேவித்தார்.
கண்களிலிருந்து ஆனந்த பாஷ்பம் பொங்க,
தன் திருஷ்டியை உன் திருவடிகளில் வைத்து,
மறுபடியும் மறுபடியும் சேவித்தார்.
எழுந்து, தலை குனிந்து, கைகளைக் கூப்பிக்கொண்டு,
உன்னை, ஸ்தோத்ரம் செய்ய ஆரம்பித்தார்.

( ஹே ….. கிருஷ்ணா..உனது மட்டற்ற கருணையால், உனது ரூபத்தை ,
ப்ருஹ்மாவுக்குக் காட்டினாய். அந்தக் கருணைக்கு நமஸ்காரங்கள்; அந்த நான்முகனுக்கு
நமஸ்காரங்கள் )

13 வது அத்யாயம் நிறைவு பெற்றது .

சதுர் முக ப்ருஹ்மா , தலைகளைக் குனிந்து கொண்டு, கூப்பிய கைகளுடன், உன்னை ஸ்தோத்தரிக்கத் தொடங்கினார்.
( ஹே….கிருஷ்ணா……அந்த ஸ்துதியை அடியேன் இப்போது உனக்கு நினைவுபடுத்துகிறேன் . இதை அளித்த சுகப்ரம்மத்துக்கும், பரீக்ஷித் ராஜனுக்கும் நமஸ்காரங்கள் )

ஹே…. பிரபோ……உம்மைப் பல தடவைகள் துதிக்கிறேன். உமது திருமேனி, ஆகாயத்தைப்போல நீல நிறத்தோடும் மின்னும் மேகத்தைப் போலும் ஜ்வலிக்கிறது.
காதுகளில் காட்டுப் புஷ்பங்களை அணிந்துகொண்டு, மயில் இறகுகளைத் தலையில் அணிந்து, கைகளில் ஒரு கவளம் சோற்றையும், ஊறுகாயையும்
வைத்துக் கொண்டு, இடுப்பில் புல்லாங்குழலைச் செருகிக் கொண்டு, பசுக்களை மேய்க்க கம்பை வைத்துக் கொண்டு, பசுக்களை அழைக்கக் கொம்பு வாத்தியத்தையும்
வைத்துக் கொண்டு, ஒரு கோபாலகன் எந்த அடையாளத்துடன் இருப்பானோ, அப்படி உம்மைக் காண்கிறேன். உமது கோமளமான திருவடிகளைக் காண்கிறேன்.
உமது மகிமைகள் அநந்தம். இந்த, அப்ராக்ருதமான உம்முடைய சரீரம், உமது சங்கல்பத்தால், நீரே படைத்துக் கொண்டது. உமக்கு சமமானவர், மேலானவர் ஒருவருமில்லை. மனத்தால் உம்மைப் பார்ப்பதற்கு, உம்முடைய அநுக்ரஹம் இருந்தால்தான் முடியும். அதுவும், ஆத்ம சுகம் விரும்புகிறவர்கள் , யோக முறையால்தான் பார்க்க முடியும். உமது ஸ்வரூபத்தை ஹ்ருதயத்தில் தரித்து, உமது கதா விசேஷங்களைக் கேட்டு, திருநாமங்களைச் சொல்லி, அதையே
வாழ்க்கையாகக் கொண்ட மகான்கள், பாகவத ஸ்ரேஷ்டர்கள் உமக்காகவே வாழ்கிறார்கள். உமது ஆத்ம ஸ்வரூபத்தை, உமது திருவருளால்தான் அறிகிறார்கள்.
பக்தி மார்க்கத்தால் உம்மை அறிபவர்கள், க்ஜான மார்க்கத்தாலோ, நிஷ்டையாலோ எவ்வளவு ஸ்ரமப் பட்டாலும் அந்த பாக்யத்தை அடைவதில்லை. அவர்கள், உமியைக் குத்துபவர்கள்.
பல யோகிகள் , தங்கள் கர்மாவை, உமது பாத சரோஜங்களில் ஸமர்ப்பித்து, அதிலேயே பற்று வைத்து, ஸதா ஸர்வ காலமும் உமது புண்ய சரிதங்களையே கேட்டு,
உமது வாஸமான ஸ்ரீ வைகுண்டத்தை அடைகிறார்கள். உமது குணமஹிமையைச் சொல்லிச் சொல்லி, உமது திவ்ய ஸ்வரூபத்தைத் த்யானித்து, நீர் ,
பல அவதாரம் எடுத்ததை நினைத்து, வாழ்கிற பக்தர்கள், காலக்ரமத்தில் , உமது கிருபையால் உம்மை வந்து அடைகிறார்கள். உலகில் உள்ள தூசுகள் அநந்தம்;
உமது குண சேஷ்டிதங்களும், மகிமைகளும் அநந்தம். இருந்தும் கோபாலகர்கள் , உமது கிருபையால் உம்மை அடைந்துள்ளார்கள். அதைப்போல, அடியேனுக்கும் கருணை காட்ட வேண்டும். உமது க்ருபை இருந்தால், உமது திருவடிகளை அடைந்து விடலாம்.

ஹே….பிரபோ……..உமது மஹிமையை அறியாமல், முட்டாள் தனத்துடன், உம்மோடு போட்டிபோட்டு, என் மாயையைத் துஷ் பிரயோகம் செய்தேன். நீர், பரமாத்மா. உமது, மஹாமாயையின் முன்பு நான் எம்மாத்ரம் ? ஹே….அச்யுதா……என்னை ரக்ஷிக்க வேண்டும். உமது ரஜோ குணத்தால் உண்டான நான், உமது மகிமையைப்
புரியாது, நானே ஸ்வதந்திர னாக நினைத்துக் கொண்டு, மனம் கலங்கி, அக்ஜானத்தால் குருடாகி, மோஹத்துக்கு வசப்பட்டு, உம்மை சாதாரணக் குழந்தையைப் போல எண்ணி, சோதித்து விட்டேன். என்மீது, கருணை காட்டுவீராக.

என் சரீரம் எட்டு சாண்; இந்த உலகம் அண்ட வடிவம் ; நான் அண்டத்துக்கு அதிபதியாகி , உமது அனுக்ரஹத்தால், சமஷ்டி புருஷனாக இருக்கிறேன். மஹத், அஹங்காரம், புத்தி, மனஸ், ஐந்து பூதங்கள்—–ஐந்து தன் மாத்ரைகள் —ஐந்து க்ஜான, ஐந்து கர்மேந்த்ர்யங்கள் இவை சேர்ந்து, 24 வது தத்வமாகிய பிரக்ருதியின்
பரிணாமங்கள் ஆனாலும், நீர், ஒவ்வொரு தத்வத்திலும் அந்தர்யாமியாக இருந்து, எல்லாவற்றையும் செயற்படுத்தி, அந்த ப்ரக்ருதிக்கு மேலே ஜீவாத்மா, அங்கும் அந்தர்யாமியாக இருந்து, அதற்கு மேலே 26 வது தத்வமாக, பரமாத்மாவாக விளங்குகிறீர். இந்த ப்ரும்மாண்டத்தைப் போலப் பல ப்ரும்மாண்டங்கள் உள்ளன.
அவைகளில் நானும் ஒருவன். ஒவ்வொரு பிரும்மாண்டமும் காரண ஜலத்தில் மிதந்து கொண்டு, ——அணு அளவாக இருப்பதால், —-உம்முடைய நிஜ ஸ்வரூபத்தை
அற்ப சக்தியுள்ள அடியேனால் அறிய இயலாது. என்னை மன்னியும். வயிற்றில் கர்ப்ப வாஸம் செய்யும் குழந்தை கால்களால், உதைத்தால், தாயார் கோபிப்பதில்லை.;
வருத்தமடைவதில்லை. அதைப் போல என் குற்றத்தையும் பொறுத்தருள்க

உமது வயிற்றிலே நாங்கள் , பிரளய காலத்தில் காப்பற்றப்பட்டு, ஸ்ருஷ்டி காலத்திலும் கருணையால் படைக்கப்பட்டு, லய காலத்திலே உம்மை வந்து அடைவதால்,
உமது வயிற்றைத் தவிர எங்களுக்கு வேறு வாசஸ்தானம் இல்லை. உலகங்கள் யாவும், பிரளய காலத்தில் உமது வயிற்றில் ஒடுங்குகிறது. ஸ்ருஷ்டி காலத்தில்,
நான், உமது நாபீ கமலத்திலிருந்து படைக்கப்பட்டேன். நான் தான் , உமது முதல் ஸ்ருஷ்டி. நீர் எனக்கு ஈஸ்வரன். ஆதியில் நான், உம்மைக் காணவில்லை.
எவ்வளவு காலம் நான் எங்கு இருந்தேன்; எங்கிருந்து வந்தேன் என்று அறியாமல் விழித்தேன். தாமரைத் தண்டின் வழியே உள் நுழைந்து, உம்மைக் காணமுடியாமல்
தவித்தேன்.பிற்பாடு , நீரே , என் ஹ்ருதயத்தில் தோன்றினீர். அது , ஏன் இப்போது தோன்றவில்லை ? உமது சங்கல்பத்தால்தான் உம்மை அறியமுடியும் என்பதைத்
தெரிந்துகொண்டேன். இந்த கிருஷ்ணாவதாரத்தில் , பிரபஞ்சம் அனைத்தும் உமது திருவயிற்றில் இருக்கிறது என்பதை, உமது வாயைத் திறந்து , நீரே
உமது தாயாரான யசோதைக்குக் காட்டினீர். கன்றுகள், பசுக்கள், கோபாலகர்கள், நீர், …………மற்றும் நீர் அவர்களுடன் பேசிக்கொண்டு விளையாடுவது எல்லாம்,
உமது லீலை. விஷ்ணு மாயை. கோபாலகர்கள், பசுக்கள் யாவும், விஷ்ணு ரூபமாகக் காக்ஷி அளித்தது, அபிமான தேவதைகள் ,உம்மையும் அவர்களையும் துதித்ததும்,
எனக்குப் புத்தி ஏற்படும்படி …..இரண்டு ப்ருஹ்மாக்கள் தோன்றியதும் உமது விளையாட்டாகும், லீலையாகும்.

உமது ஸ்வரூபத்தை அறியாதவர்கள், தேஹத்தையே ஆத்மாவாக நினைத்துத் தாங்கள் பிரகாசிப்ப தாகச் சொல்கிறார்கள். அதாவது, உமது உதவியின்றி, பிரகாசிப்ப தாகச் சொல்கிறார்கள். ஆனால் நீரே படைத்து, காப்பாற்றுவதில் விஷ்ணுவாகவும், அழியும் நேரத்தில் த்ரிநேத்ரனாகவும் இருக்கிறீர். ஒவ்வொருவருக்கும் நீர் அந்தர்யாமி. சாதுக்களை ரக்ஷிக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் அவதாரம் எடுக்கிறீர். ஹே….பரமாத்மன்……இது உம்முடைய மாயையின் விளையாட்டு. எப்போது அவதரிக்கிறீர் ? எப்போது மறைகிறீர் / யாருக்குத் தெரியும் ? ஆயினும் நீர் சத்யம். உமக்கு மேலானவர் யாருமில்லை. எல்லாப் பொருள்களுக்கும் நீரே ஆத்மா. அஹங்கார புத்தியை உண்டாக்கி, மாயையினால் மயங்கச் செய்கிறீர். குருவின் உபதேசத்தாலே ஒளியான க்ஜானத்தை அடைந்தவர்கள் , அந்த க்ஜானக் கண்ணாலே மாயையைத் தாண்டி , “ஸர்ப்ப க்ஜானம் ” ஏற்பட்டு, அதாவது இது பாம்பு இல்லை; கயிறுதான் என்று தெளிந்து, உமது ஸ்வரூபத்தையும், தாங்கள், உமக்கு
சேஷபூதர்கள் என்கிற சேஷத்வ க்ஜானத்தைப் பெற்று, ஸம்சாரத்தை ஜெயித்து உம்மையே வழிபடுகிறார்கள். அக்ஜானத்தால் பவபந்தமும், க்ஜானத்தால் பவமோக்ஷமும் ஏற்படுகிறது. நான், அக்ஜானத்தால், உமது ஸ்வரூபத்தை அறியாமல், இதைச் செய்துவிட்டேன்.ஸத்யம் எது என்று தெரியாத படியாலே ஏற்பட்டது.
உம்மை விட்டுத் தனியாக பந்தமோ, மோக்ஷமோ இருக்காது. எல்லாம் உம்மால்தான் இயங்குகிறது. மனிதர்கள், தேகாத்ம அபிமானத்தால் ஸ்வதந்திர ஆத்ம ப்ரமம்
கொள்கிறார்கள். தங்கள் ஆத்மாவை வெளியே தேடுகிறார்கள். உம்மைப் பரமாத்மா என்று கருதாமல், தங்களையே பெரிதாக எண்ணி ஏமாந்து போகிறார்கள்.
சாதுக்கள், உம்மையே பஜித்து உம்மையே வந்து அடைகிறார்கள்.

ஹே….பிரபோ…..உமது “பாதாம் புஜ த்வய ” ஸேவை எவனுக்கு, லவலேசமானும் கிடைக்கிறதோ , அவன் மஹா பாக்யவான். அதனால், அவர்கள் பலகாலம் உம்மையே த்யானிக்கிறார்கள். எனக்கு அந்த பாக்யம் கிடைக்கட்டும். உமது பக்தனாக, இப்போதே, இங்கேயே, ஆவேன். இந்த பிருந்தாவன வாசிகள் ரொம்ப பாக்யம் செய்தவர்கள். பசுக்களும் கன்றுகளும் பாக்யம் செய்தவை. அந்த பசுக்களின் பால், உமது அன்பின் ப்ரஸாதம். இந்த ப்ரசாதத்துக்குச் சமமாக, யாக, யக்ஜ பலன் கூட இருக்காது. நந்தகோபன், கோபாலகர்கள் அடையும் ஆனந்தத்துக்கு இணை இல்லை. நீரே அவர்களுக்கு ஆனந்தம்.

ஹே….அச்யுதா……இந்தக் கோபாலகர்களின் பதினோரு இந்த்ரியங்களும் , அவற்றின் அபிமான தேவதைகளும் பாக்யம் படைத்தவை. நாங்கள், அபிமான தேவதைகளாக இருந்தாலும், அந்தந்த அபிமான தேவதை மூலம் அடையப்படுவதால்—-பரிமிதம்—-அளவுக்கு உட்பட்டது. ஆனால், இந்தக் கோபாலகர்களே எல்லா இந்த்ரியங்களின் ஆனந்தத்தை , உன்னைப் பார்த்துக் கொண்டும் உன்னுடன் பேசிக்கொண்டும், உன்னோடு விளையாடிக் கொண்டும், எங்களை விட மிக அதிகமாக பேரானந் தத்தை அடைகிறார்கள். அதனால், பாக்யமற்ற எங்களுக்கு, ஒரே வழி, இந்த பிருந்தாவனக் காட்டில் ஏதாவது ஒரு ஜன்மம் எடுப்பதுதான். எந்தப் பிறவியானாலும் பரவாயில்லை. புல்லானாலும், மரம், கல், புழுவானாலும் பக்ஷியானாலும் , எதுவானாலும் பரவாயில்லை . உம்முடைய பாத ரஜஸ் ஸின் ஸ்பர்சம் கிடைத்தால் போதும். நீர் ச்யாமசுந்தரன்; பிருந்தாவனக் காட்டில், கரிய திருமேனி வாட, சஞ்சாரம் செய்ததாலே, உம்முடைய திருவடி ஸ்பர்சம் பட்ட புல் பூண்டு எல்லாமே பாக்யம் அடைந்தது. எந்த திவ்ய பாத ரஜஸ் களை . ஸ்ருதிகளோ, ரிஷிகளோ, மிகவும் முயற்சி செய்து , த்யானம் செய்து, அடைவார்களோ , அந்தப் பாத தூளியை இந்த வ்ரஜபூமியில் வசிப்பவர்கள் அடைந்து, ஸகல புருஷார்த்த சாரமாகிய உம்மையே அடைந்து, பெரும் பாக்யம் செய்திருக்கிறார்கள். பூதனை போன்ற ராக்ஷஸிகள்,கபட வேஷம் தரித்த தன் இனத்தாருடன், , உன்னால் அழிக்கப்பட்டு, எந்த வைகுண்ட பதத்தை அடைந்தார்களோ, அதற்கு மாறாக, வ்ரஜபூமி வாசிகளான இவர்கள், உமக்குப் பிடித்தமான சுஹ்ருத்துகள்—-ப்ராண சஹாக்கள் —-அவர்களுக்கு எதுதான் கிடைக்காது ! விரோதி களுக்கே, உன் பாத ஸ்பர்சம் பட்டு வைகுண்ட வாஸம் கிடைக்கும்போது, இந்த சுஹ்ருத்துக்களுக்கு இகசுகம், வைகுண்ட வாஸம் இவைகளெல்லாம் கிடைப்பதற்குக் கேட்பானேன் ! உம்மையே சரணமடைந்து வாழும் ,இந்த சாது ஜனங்களின் ஆனந்தத்தை நீர் வ்ருத்தி செய்கிறீர்.

அதிகமாகப் பேசுவதால் என்ன லாபம் ?ஹே….பிரபோ…..உனது பெருமைகள் மனசுக்கும், வாக்குக்கும், தேகத்தின் அவயவங்களுக்கும் அதீதம்.—-அவை அகோசரமானவை நீர் எல்லாவற்றையும் நன்கு அறிவீர். நீரே எல்லா ஜகத்துக்கும் நாதர். எனக்கும் நாதர்.

ஹே…க்ருஷ்ணகுல புஷ்கர ஜோஷதாயிந் ——–வ்ருஷ்ணீ குல தீபமே……உம்முடையப் பெருமைகள் அதீதப் பிரகாசம் உள்ளவை. அப்படிப்பட்ட உம்மை, ப்ரும்ம தேவனாகிய நான், கல்பம் முடியும் காலம் வரை நமஸ்கரித்துக் கொண்டிருக்கிறேன். —–ஸதா ப்ரணாமம் செய்கிறேன்.
( ஹே….கிருஷ்ணா…. ப்ருஹ்மா உன்னை ஸ்தோத்ரம் செய்ததை திரும்பச் திரும்பச் சொல்லி உன்னை நமஸ்கரிக்கிறேன்.பிருந்தாவனக் காட்டில், ஒரு புல்லாகவாவது, ஒரு புழுவாகவாவது,பிறந்து, உன் திருவடித்தூள் அடியேன் மேலே பட பாக்யம் செய்தேனா என்பது தெரியாது. . ஆனால், இந்த ஸ்தோத்ரத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லும் பாக்யம் கிடைத்ததற்காக , உன்னைப் பல்லாயிரம் தடவை நமஸ்கரிக்கிறேன் )

ஹே, கிருஷ்ணா, சுகப்ப்ரம்மம், பரீக்ஷித்துக்கு, மேலும் சொன்னார். ப்ருஹ்மா உன்னை மூன்று தரம் ப்ரதக்ஷிணம் வந்து, உன் திருவடியில் பணிந்து , நமஸ்கரித்து,
தன்னுடைய இருப்பிடத்துக்குப் போய்ச் சேர்ந்தார். ப்ருஹ்மாவை அனுப்பிய பிறகு, நீ, பசுக்களையும் கன்றுகளையும் மீட்டுக் கொண்டு, கோபாலகர்கள் முன்னே இருந்த இடத்துக்கு வந்தாய். கோபாலகர்கள், தங்களுடைய பிராணனும், அந்தராத்மாவுமான உன்னை, ஒரு வருஷ காலத்துக்கு மேலாகப் பிரிந்து இருந்தாலும்,
உன் மாயையால், அது, ஒரு க்ஷண கால நேரமாக அவர்களுக்குத் தெரிந்ததாம். அவர்கள், உன்னை ” இங்கே வா…..இந்தக் கவளச் சோற்றை சாப்பிடு…..நீ வரும்வரை நாங்கள் உன் நினைவாகவே ஒன்றும் சாப்பிடாமல் காத்துக் கிடக்கிறோம் ….” என்று சொல்லி அழைத்தார்களாம். சிரித்துக் கொண்டே, நீ, அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு, வனத்தைவிட்டுப் புறப்பட்டு, ஊருக்கு வந்தாயாம். எப்படி வந்தாய் தெரியுமா ?
உடலில் புஷ்பங்களைத் தரித்துக் கொண்டு, தலையின் உச்சியில் மயில் இறகுகளால் அலங்கரித்துக் கொண்டு, புல்லாங்குழலை வாசித்துக் கொண்டு, கன்றுகளை அன்புடன் தடவி விரட்டிக் கொண்டு, வந்து சேர்ந்தாயாம்.

பரீக்ஷித் , மெய்மறந்து , சரிதத்தைக் கேட்டான். அவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. முனிவரைக்கேட்டான். கிருஷ்ணனுடைய பெற்றோர் வசுதேவர், தேவகி ,
அப்படியிருக்க, நந்தகோபன், யசோதையிடம் இவ்வளவு பிரேமை ஏன் ஏற்பட்டது? அதைப்போல, கோபாலகர்களின் பெற்றோர்களுக்கு, தங்கள் குழந்தைகளிடம்
ஏன் ப்ரேமம் ஏற்பட்டது ? அதைவிட, கிருஷ்ணனிடம் அதீத ப்ரேமம் ஏற்பட்டது எதனால் ? என்று கேட்டான்.
ஸ்ரீ சுகர் பதில் சொன்னார். ஹே….ராஜன்…..ஒவ்வொருவருக்கும் ஆத்மா பிரியமானது குழந்தைகளும் ப்ரியமானவையே. அதைப்போல, செல்வம், வீடு இவைகளும்
மனத்துக்குப் பிடித்தமாக ஆகிறது. ஆனாலும், ஆத்மாவைப் போலப் ப்ரியமாவதில்லை. இந்தப் ப்ரியம் , தேகத்தையே ஆத்மாவாக எண்ணுபவர் களிடமும் காணப்படும்.
ஆனால், ஸ்ரீ கிருஷ்ணன் விஷயத்தில், அவனே அகில உலகங்களுக்கும் ஆத்மா——-அந்தராத்மா. மாயையினால், அதை மறைத்துக் கொண்டு, மனுஷ்யனைப் போல , இவர்களுடன் விளையாடுகிறான். அதனால், பிரேமை மிக அதிகமாகிறது. ஆனால், எவர்களுக்கு, ஸ்ரீ கிருஷ்ணனே ஜகத் காரணன், அண்டசராசரங்களுக்கும்
அவனே அந்தராத்மா என்கிற உறுதி இருக்கிறதோ, அவர்களுக்கு, எல்லாமே ஸ்ரீ கிருஷ்ணன்தான். அதனாலே, அவனை ஆச்ரயித்து, அவன் பாத பல்லவங்களைத்
தெப்பமாக வைத்து, வைகுண்ட பதத்தை அடைகிறார்கள். அவன் திருவடிகளை நம்பியவர்களுக்கு, இந்தஸம்சாரமாகிய ஸமுத்ரம், “வத்ஸ பதம் ” (மாட்டின் குளம்படியில் உள்ள தேங்கிய நீரைப் போல ). அதனால், இந்த சமுத்ரத்தை, சுலபமாகத் தாண்டி, வைகுண்டத்தை அடைகிறார்கள். ஹே….ராஜன்…….பகவான், தன்னுடைய பால்யத்தில், இளம் சகாக்களுடன் அத்புத விளையாட்டுகளைச் செய்தார். இவற்றை எவர்கள் கேட்கிறார்களோ, எவர்கள் படிக்கிறார்களோ, அவர்கள், எல்லா அபீஷ்டங்களும் நிறைவேறப் பெறுவார்கள். ப்ருஹ்மாவின் ஸ்துதியைக் கேட்பதாலும், படிப்பதாலும் , எல்லாப் பாபங்களும் விலகி, எல்லா அபீஷ்டங்களும் கைகூடும் என்று சொன்னார்.
( ஹே …..கிருஷ்ணா…..அடியேனை ஒரு கருவியாக வைத்து, .இந்த உன்னுடைய பால்ய லீலைகளைக் கேட்டும் , படித்தும், சொல்லியும், எழுதியும், அடியேனை ஆட்படுத்திய , அடியேனின் ஜென்மத்தை சாபல்யமாக்கிய, கோபாலகர்களுக்கும், பசுக்கள் கன்றுகளுக்கும், ப்ருஹ்மாவுக்கும், பலராமனுக்கும், முக்யமாக
உனக்கும் அனந்தகோடி நமஸ்காரங்கள் )

 

தேனுகாசுரன் வதம்
————
ஸ்ரீ சுகர், பரீக்ஷித் ராஜனுக்கு மேலும் விவரித்ததை, உனக்குச் சொல்கிறேன்.
உனக்கும், பலராமனுக்கும் குழந்தைப் பருவம் என்பது போய், இப்போது, பையன்களாக, யுவாவாகக் காக்ஷியளித்தீர்கள். அதாவது, பால பருவம் —–குமார தசை.நீங்களே , பசுக்களை மேய்க்கத் தொடங்கினீர்கள்.
பிருந்தாவனம் முழுவதும் உங்கள் திருவடிகளால் பாவனமாகியது. கோபர்கள் சூழ, நீ, புல்லாங்குழலை ஊதிக்கொண்டு, பசுக்களை மேய்ப்பதற்காக
ஓட்டிச் சென்றாய். அப்போது, பலராமனைப் பார்த்து, இந்தப் பழங்களால் குலுங்கும் மரங்கள்,
உன்னை வணங்குகின்றன; குயில்கள் கூவுகின்றன; புல், பூண்டுகள்உன்னுடைய பாத ஸ்பர்சத்தால் பாவனமாகியது; மரங்களும், கொடிகளும்,
நீ மரத்தில் ஏறிப் பழங்களைப் பறிக்கும்போது, உன் பாத ஸ்பர்சம் பட்டு பாபம் போய் , புனிதமாக ஆகிவிட்டன.
இப்படியெல்லாம், நீ, பலராமனிடம் பேசிக்கொண்டே பிருந்தாவனத்தில் நதி தீரத்திலும், உத்யான வனத்திலும் விளையாடினாய்.
நீ, சில சமயம் ,ஹம்ஸத்தைப் போலக் கத்துவாய்;
மேகத் த்வனியாக கர்ஜிப்பாய்;
சகோர பக்ஷியைப் போலவும்,
கிரௌஞ்ச பக்ஷியைப் போலவும்,
சக்ரவாகப் பக்ஷியைப் போலவும்
பாரத்வாஜ பக்ஷிகளைப் போலவும் கத்துவாய்;
சில சமயம் பலராமனை, ஒரு கோபன் மடியில் படுக்க வைத்து, பலராமனின் காலை வருடி விடுவாய்;
நீ, சில சமயம், கோபன் மடியில் தலையை வைத்து உறங்குவாய்;கோபச் சிறுவர்கள், ஒரு மஹாராஜாவைச் சேவகர்கள் சூழ்வதைப் போல,ஸ்நேஹத்துடன் உன்னைச் சூழ்ந்து, சைத்ய உபசாரங்களை உனக்குச் செய்வார்கள்.

இப்படி, நீயும் பலராமனும், பிருந்தாவனக் காட்டில், பசுக்களை மேய்த்து விளையாடி வரும்போது, ஒரு சமயம், ஸ்ரீ தாமன் என்கிற கோபச் சிறுவனும் ,
இன்னும் சில சிறுவர்களும் உன்னிடம் வந்து, அருகே ஒரு பெரிய காடு இருப்பதாகவும், அதில் பனைமரங்கள் நிறையப் பழுத்து, பழங்கள் கீழே விழுந்து கிடப்பதாகவும்,
ஆனால், அங்குள்ள தேனுகன் என்கிற அசுரன் கழுதை ரூபத்துடன் ,பந்துக்கள் நண்பர்கள் யாவரையும் அருகே அண்ட விடுவதில்லை என்றும் , அவனுக்குப் பயந்து, ஒருவரும் அங்கு போவதில்லை என்றும்,
பழுத்த பழங்களின் வாஸனை, வெகு தூரத்தில் தங்களுக்கு,பழங்களைச் சாப்பிடும் ஆசையை வளர்த்து உள்ளதாகவும், தங்களைஅந்த இடத்துக்கு அழைத்துச் செல்லுமாறும் கோரினார்கள்.

நீ, அவர்களின் வேண்டுகோளை ஏற்று, பலரானும், நீயும் , கோபர்களுமாகஅங்கு சென்றீர்கள்.
( ஹே, கிருஷ்ணா, இப்போது இந்த இடம், “தர்பாரே—-தால்கி ” என்று அழைக்கப்படுகிறது.)
பலராமன் முதலில் சென்று, ஒரு பெரிய மரத்தை ஆட்டி, பழங்களைக் கீழே விழச் செய்தார்
. பழங்கள் விழும் சப்தத்தைக் கேட்டு, தேனுகன் என்கிற அசுரன் கழுதை ரூபத்தில் ஓடிவந்தான்.
பலராமனை, முழுவேகத்துடன் தாக்கினான். பூமி அதிர்ந்தது. தன் கால்களால், பலராமனின் மார்பில் உதைத்தான். அங்குமிங்கும் ஓடினான்.
மறுபடியும் வந்து பின்னங்கால்களால் தாக்க,
பலராமன் கோபத்துடன் அவன் முன்னங்கால்களைப் பிடித்து, முழு வேகத்தில் சுழற்றி, பனைமரத்தின் மீது ஓங்கி அடித்தான். புல், பூண்டு அழிவதைப் போல,
பனைமரத்தின் வேர்பாகத்தில் தாக்கப்பட்டு , தேனுகன் மடிந்தான்.
பனை மரத்தின் அடிப்பாகம் பழங்களை உதிர்த்துக் கொண்டே, பக்கத்துப் பனைமரத்தின் மீது சாய, இப்படி நான்கு பனை மரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக
வேரோடு சாய்ந்தன. பெரிய சுழற்காற்று வீசினால், மரங்கள் எப்படி சாய்ந்து விழுமோ ,அப்படி விழுந்தன. இது, பலராமனுக்கு லீலையாக இருந்தது.
தேனுகாசுரனின் பந்துக்கள் வந்து தாக்க, அவர்களையும் நீங்கள் அழித்தீர்கள்.இந்த அதிசயத்தைப் பார்த்த , வானில் இருந்த வித்யாதரர்கள், உங்கள்மீது,
புஷ்பமாரி பொழிந்தார்கள். தேனுகாசுரன் அழிந்ததும், அந்த வனத்தில் ஜனங்கள் பயமின்றி நடமாடினார்கள். பசுக்களும் பயமின்றி சஞ்சரித்தன.
கோபர்கள் சந்தோஷத்துடன் உங்களைத் துதித்தனர்.

இப்படியாக, தேனுகாசுரனை வதம் செய்து , வீடுகளுக்குத் திரும்பும் உங்களை,
கோபிகைகள் ஆசை ததும்பப் பார்த்தனர். இதோ….கிருஷ்ணனைப்பார்…. கிருஷ்ணனைப்பார்…
. என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டனர்.
ஹா…. எப்படிப்பட்ட ரூபம்……புல்லாங்குழலைத் தரித்திருக்கிறார்;
தலையில் மயில் இறகு; காட்டுப் புஷ்பங்கள்;
கேசத்தில் பல வர்ண மணிகளின் முடிச்சுகள்;
அரவிந்த வதனம்;
புன்சிரிப்பு;
உன் முகம் கோதூளியால் சிவந்து இருக்க,
உன்னுடைய அந்த அரவிந்த முக சாரத்தைப் பருக
க்ஷண காலம் கூடப் பிரிவதால் ஏற்படும் விரக தாபத்தை விரட்ட,எவருடைய அபாங்க ( கடைக்கண் ) வீக்ஷண்யத்தாலே ,மோக்ஷம் கிடைக்கிறதோ அந்த முகுந்த முக சேவைக்காக, வ்ரஜசுந்தரிகளான இடைச்சிகளான வனிதைகள், இளம் கோபிகைகள், —-ஓடி வந்தார்கள்
. இது, ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் தொடர்ந்தது. நீயும் பலராமனும் பசுக்களை ஓட்டிக்கொண்டு, மேய்ச்சலுக்காகவனத்துக்குப் போகும்போதும் , சாயந்திரம் திரும்பி வரும் போதும்,
இது, தொடர்ந்தது.
யசோதையும் ரோஹிணியும் இந்த முக தர்ஸனம் செய்வதில் முக்யமானவர்கள்.
புத்திர வாத்சல்யத்தாலே, உங்களைக் குளிப்பாட்டி, நல்ல வஸ்த்ரம் அணிவித்து, ஆபரணங்கள் அணிவித்து, நன்கு ஆகாரம் கொடுத்து, வனத்துக்கு அனுப்புவதும்,
திரும்பி வருவதை எதிர்பார்த்து , வீட்டுக்கு வந்தவுடன் உங்களை உச்சி முகந்து ,மறுபடியும் குளிப்பாட்டி, வஸ்த்ரம் ஆகாரம் கொடுத்து, திவ்யமான மஞ்சத்தில் படுக்க வைத்து, கண்ணை இமை காப்பதுபோலக்
காப்பாற்றினார்கள். தினந்தோறும் இப்படியாக,
நீங்கள் ப்ருந்தாவனக்காடுகளில் சஞ்சரித்தீர்கள்.

ஒரு நாள், நீ மாத்ரம், பலராமன் இல்லாமல்,
காளிந்தீ நதியாகிற யமுனை நதிக்கரைக்கு, கோபர்கள் பசுக்கள் கன்றுகளுடன் வந்தாய்.
நல்ல வெய்யில் காலம்; சூர்ய வெப்பம் தாங்க முடியவில்லை; அவர்களுக்குத் தாகம்;
நதியின் மடுவில் இறங்கி , ஜலத்தை எடுத்துப் பருகினார்கள்.அந்த யமுனா ஜலத்தில் காளியன் என்கிற சர்ப்பத்தின் விஷம் கலந்து இருந்ததால்,
மனம் கலங்கி, பிரமித்து, கீழே விழுந்து உயிர் இழந்தார்கள்.
நீ, உடனே, அவர்களைக் கடாக்ஷித்தாய்.
அம்ருத கடாக்ஷ வீக்ஷிண்யம் எல்லோரும் மூர்ச்சை தெளிந்து எழுந்தாற்போல , எழுந்து உட்கார்ந்தார்கள். இறந்தவர்கள்—விஷ ஜலத்தைப்பருகி இறந்தவர்கள்,
உயிர் பெற்று எழுந்து பேசுவது…….கிருஷ்ணா இது உன் அனுக்ரஹத்தால்தான்
( உன் அநுக்ரஹம் பெற்ற கோபர்களையும், பசுக்களையும், கன்றுகளையும் அடிக்கடி நமஸ்கரிக்கிறேன் )

15 வது அத்யாயம் நிறைவடைந்தது

காளியன் விடுபட்டான்—நாக பத்நிகளின் ஸ்துதி
——————–
ஸ்ரீ சுகர், பரீக்ஷித் ராஜாவிடம் சொன்னார். ஹே. ராஜன்………..பசுக்களும், கன்றுகளும்,
கோபர்களும் கிருஷ்ணனின் அனுக்ரஹத்தால் உயிர் பிழைத்து, எழுந்து,
ஆச்சர்யத்துடன், இது கிருஷ்ணனின் அனுக்ரஹம்தான் என்று எண்ணி சந்தோஷப்பட்டார்கள்.
அப்போது, நீ யோசித்தாய். யமுனை நதி , காளிங்கனால், விஷமாக்கப் பட்டுள்ளது;
இதைச் சுத்தமாக்கி, யாவரும் இந்த ஜலத்தை அருந்தவும், தீர்த்தாமாடவும், —–
இந்த ஜலத்தை மாற்றவேண்டும் என்று எண்ணினாய்.

கிருஷ்ணா, காளிந்தீ என்கிற பெயர்கள், யமுனை நதிக்கு உண்டு.
இந்த நதியில், காளிங்கன் என்கிற கொடிய விஷமுள்ள ஸர்ப்பம் ,
தன் விஷத்தால், ஜலம் முழுவதையும் விஷமாக்கிக் கொண்டும்,
விஷ அக்னியால் யாவரையும் தஹித்துக்கொண்டும் இதில் வசித்துக் கொண்டு இருந்தான்.
பறவைகள், மேலே பறந்து சென்றால், விஷக்காற்று மேலே பட்டு, மடிந்து விழுவது
வழக்கமாக இருந்தது. இந்த விஷக் காற்று பட்ட மரங்கள், செடிகள் யாவும் கருகி,
பட்டுப் போய் மொட்டையாகக் காக்ஷி அளித்தன.
பசுக்களும், மனிதர்களும் யமுனை நதிக்கரைக்குப் போனாலே,
விஷக் காற்று பட்டு ,மடிந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
இதையெல்லாம் பார்த்த நீ, அந்த யமுனை மடுவின் ஒரு ஓரத்தில் இருந்த
கதம்ப மரத்தில் ஏறி , வேஷ்டியை இறுகக் கட்டிக் கொண்டு,
தோள் பட்டைகளைத் தட்டிக் கொண்டு, பெரிய சப்தத்துடன் ,
மடுவில் குதித்தாய். விஷம் முழுவதும் உள்ள ஜலம், உயர எழும்பியது.
நான்கு திக்குகளிலும் அலைகள் எழும்பின; பெரிதாகிச் சுழன்றன;
பெரும் சப்தம் உண்டாகியது.

இந்தப் பெரிய சப்தத்தைக் கேட்ட,அதாவது காதும் கண்ணும் ஒன்றாக இருக்கும் பாம்பு,
காளிங்கன் என்கிற அந்தக் கொடிய விஷஸர்ப்பம், கோபத்துடன் கிளர்ந்து
எழுந்தது. ஜலத்துக்கு வெளியே வந்தது.
உன்னைப் பார்த்தது. ஸ்ரீ வத்ஸ மருவினால் அலங்கரிக்கப்பட்ட,
உன் சுகுமார—-கோமள—-திவ்ய மேனியைக் கோபத்துடன்
தன் விஷப் பற்களால் கடித்தது ;
உன்னுடைய தாமரைத் தண்டுபோன்ற மெல்லிய கால்களைக் கடித்தது;
உன்னைத் தன்னுடைய வாலால் நன்கு சுற்றிக் கட்டியது;
நசுக்கியது
. உன்னைப் பார்த்த கோபாலகர்கள் கதறி அழுதனர்;
உன்னுடைய ப்ரிய மித்ரர்கள் —-உன்னையே நம்பி வாழும் ப்ரிய சகாக்கள்,
நாங்களும் யமுனையில் குதித்து விடுகிறோம் என்று கத்தினர்.
பசுக்களும், கன்றுகளும் பயத்தால் கத்தி , கண்களில் ஜலம் வழிய நின்றன.
பூமி, ஆகாயம், வ்ரஜவாசிகளின் உடல்கள் இங்கெல்லாம் தாபம் ஏற்பட்டது.

பலராமன் இல்லாமல் நீ தனியாக வந்துள்ளதை அறிந்த நந்தகோபரும் யசோதையும்
மனம் துடி துடித்து , உனக்கு ஏதோ ஆபத்து வந்து விட்டது என்று பயந்து,
வேதனையுடன், பாலர்கள், வ்ருத்தர்கள், ஸ்திரீகள் தொடர்ந்து வர,
எல்லா வேலைகளையும் அப்படி அப்படியே போட்டுவிட்டு,
உன்னைப் பார்க்க வேண்டும் என்று தீனக் குரலில் கதறி,
யமுனா நதி தீரத்துக்கு ஓடி வந்தனர்.

பலராமனுக்கு, உன்னைப் பற்றி நன்கு தெரியும்.
அதனால், அவன் ஒன்றும் சொல்லவில்லை.
பிருந்தாவனத்தில் உள்ள புழுதியில் , உன்னுடைய திருவடிகளின் அடையாளங்களான
தாமரைத் தண்டுடன் புஷ்பம், அங்குசம், வஜ்ரம், கொடி, சங்கு, சக்ரம் இவற்றால்
நீ சென்ற இடத்தை தெரிந்து கொண்டு ஓடோடி வந்தனர்.
நீ, காளிங்கனால் உடல் முழுவதும் சுற்றப்பட்டு, அசைவின்றி இருப்பதை,
வெகு தூரத்தில் வரும்போதே பார்த்தார்கள்.
ஸ்திரீகளும், வ்ருத்தர்களும் வழியிலேயே மூர்ச்சை அடைந்தார்கள்.
கோபிகைகள், கோபர்கள், ஸ்திரீகள், வ்ருத்தர்கள் —-எல்லாருக்கும்
உன்னுடைய நினைவுதான்; வேறு நினைவு இல்லை.
உன்னுடைய புன்னகையுடன் கூடிய திருமுகம்;
உன் ஒவ்வொரு பேச்சு , இவற்றைஎல்லாம் நினைத்தார்கள்.
நீ இல்லாத இந்த உலகம் எங்களுக்கு சூன்யம், என்று சொல்லி
உன்னுடைய கதாம்ருதங்களை ஓயாமல் புலம்பிக் கொண்டே இருந்தார்கள்.
தாங்களும் மடுவில் குதித்து, கிருஷ்ணனுடன் உயிரை விட்டு விடுவோம் என்று துடிக்க ,
பலராமன் அவர்களைத் தடுத்து, உன் மகிமைகளை எடுத்துச் சொன்னார்.

இவைகளை, இரு முஹூர்த்த நேரம், ( சுமார் ஒரு மணி நேரம் ) பார்த்துக் கொண்டு,
காளிங்கன் கட்டுதலில் இருந்த நீ, உடனே உன்னை மிகச் சிறிய உருவாகஆக்கிக்
கொண்டாய். காளிங்கனின் பந்தத்திலிருந்து விடுபட்டாய்.
உடனே, பெரிய உருவம் எடுத்தாய்.
ஸர்ப்பம், தன் மூச்சுக் காற்றால், விஷத்தைக் கக்கியது ;.
சீறியது;
வாயால் நெருப்புப் பொறிகளைக் கக்கியது.
உன்னை, மறுபடியும் தாக்க முயற்சித்தது.
நீ, விளையாட்டாக, அந்தஸர்ப்பத்தை ஒரு தடவை வலம் வந்து,
கருடன், பாம்பு மீது எப்படிப் பாயுமோ அப்படி ஒரு க்ஷணத்தில்,
அதன் தலைமீது பாய்ந்து, ஏறினாய்.
அதன் தலை மீது நடனம் புரிய ஆசைப் பட்டாய் .
அதன் முகங்களில் ஒளி விடும் ரத்னங்களால்
உன் திவ்ய திருவடிகள் ஜொலிக்க, காளிங்கன் தலைகள் மீது நர்த்தன மாடினாய்.

ஆகாயத்தில், கந்தர்வர்கள், சித்தர்கள், தேவர்கள், அப்சரஸ்கள், எல்லோரும் கூடி,
ஆனந்தத்துடன், உன்னை சேவித்து, ம்ருதங்கங்கள், பேரிகைகள் வாசித்தார்கள்,
என்று ஸ்ரீ சுகர் கூறினார்.
உன் புகழைப் பாடினார்களாம்.
புஷ்பங்களை வாரி, உன்மேல் இறைத்தார் களாம் .
நீ, காளிங்கனின் ஒவ்வொரு தலையிலும் உன் திருவடியை வைத்து,
எந்தத் தலை நிமிர்ந்ததோ, அந்தத் தலையில் உன் திருவடியை வைத்து,
அழுத்தி, நூறு தலைகளிலும் மாறி மாறி நர்த்தனம் செய்தாய்.
எந்தத்தலை வணங்கவில்லையோ, அந்தத் தலையின் மீது ,
உன் திருவடியை வைத்து, நசுக்கினாய்.
உன் திருவடிகளைத் தூக்கியும், மடித்தும் ஆடினாய்.
அதன் தலைகள் குடைபோல் விரிந்தபோது, அவற்றின்மீது ஏறி,
தாண்டவ ந்ருத்யம் செய்தாய். அதற்கு, சக்தி குறைய ஆரம்பித்து,
அதன் ரத்தம், உன் பாத துளிகளை ஸ்பர்சித்தது.
அதன் அங்கங்கள் ஒடிந்து, நசுங்கி,
இனிப் பிழைக்க மாட்டோம் என்கிற நிலையில்
, ஸ்ரீ மன் நாராயணனை மனத்தால் சரண் அடைந்தது.

இதைக்கண்ட காளிங்கனின் பத்னிகள்——நாக பத்னிகள்,
தங்கள் பதிக்கு ஆயுளை வேண்டி, கேசபாசங்களை விரித்துக் கொண்டு,
உன்னை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, கைகளைக் கூப்பி,
சாதுக்கள், பதிவ்ரதைகள் எப்படி வேண்டுவார்களோ ,
அவ்விதமாக உன்னிடம் ப்ரார்த்தித்துச் சரணமடைந்தார்கள்.
உன்னைத் துதித்தார்கள்.

( ஹே….பிரபோ….நீ, காளிங்க நர்த்தனம் செய்ததை,
ஆழ்வார்களும், ஆசார்யர்களும், வாக்கேயக்காரர்களும் ,
கபீர்தாஸ், சூர்தாஸ், மீரா போன்றவர்களும் ,
இப்படிப் பல்பல பக்தர்கள், அனுபவித்து இருப்பது கொஞ்ச நஞ்சமல்ல.
அவைகளை எல்லாம் மனஸ்ஸில் நிறுத்தி,
நீ, நர்த்தனம் செய்ததை எண்ணி,ஸதாஸர்வ காலமும்
அந்தத் திருவடிகளைத் துதிக்கிறேன் )

நாக பத்நிகளின் ஸ்துதி
————————————–
ஹே….பிரபோ…..உன் அவதாரம் துஷ்டர்களைத் தண்டிக்க ஏற்பட்டது.
ஆதலால், இந்தத் தண்டனை இவருக்குத் (காளிங்கனுக்குத் ) தகும்.
இந்தத் தண்டனை, அவருக்கு அனுக்ரஹமாகும் .
பாபத்தால், இவருக்கு, இந்த ஸர்ப்ப ஜன்மம் ஏற்பட்டது.
ஆனால், உமது க்ருபா கடாக்ஷத்தைப் பெற, மிகப் பெரிய தவம் செய்திருக்க வேண்டும்.
இவர் அவமானம் அடைந்து, சாகும் நிலையில் இருக்கிறார்.
ஆனால், உமது கிருபையால், புது கௌரவம் கிடைத்து இருக்கிறது.
இவர் செய்த எந்தப் புண்யத்தால், உமது திருவடி சம்பந்தம் இவருக்கு ஏற்பட்டது
என்பது எங்களுக்குத் தெரியாது. எந்தத் திருவடிகளை ஸ்ரீ மஹாலக்ஷ்மி ,
மிக்க ஆசையுடன் பிடித்து, லாலனம் செய்வாளோ,
ப்ருஹ்மா, சிவன் போன்ற மகாத்மாக்கள் கடும் தபஸ்ஸை விட்டுவிட்டு ,
எந்தத் திருவடித் தாமரைகளையே த்ருடமாக நினைத்து, ஸேவை செய்வார்களோ,
அந்தத் திருவடி ஸ்பர்சம் , உமது கிருபையால், இவருக்குக் கிடைத்திருக்கிறது.
எங்களுக்கு, உம்முடைய பாதபத்மங்கள் கிடைத்தபிறகு,
நாக ப்ருஷ்டமோ ( சர்ப்பங்களின் உச்ச, ஆதிபத்ய நிலை )
சார்வ பௌமத்வமோ ( சகல லோகங்களையும் ஆளும் அதிகாரம் )
பாரமேஷ்டியமோ ( ப்ருஹ்ம பதவியோ, பரமேஸ்வர பதவியோ )
வேண்டவே வேண்டாம்.

நாங்கள் ப்ரபன்னர்கள்.
உமது பாத பத்ம ரஜஸ்ஸை ( திருவடித் தாமரைத் துகள்களை )
அடைந்து விட்டோம்.
வேறு எதுவும் எங்களுக்குப் பெரிது இல்லை.
எவருக்கும் கிடைக்காத, உமது பாதத்துகள்களை ,
நீரே இவருக்குக் கொடுத்து இருக்கிறீர்.
இவர் புண்ய கதி அடைந்திருப்பது, எங்கள் பாக்யமாகும்.
உம்மை, நாங்கள், பல தடவை நமஸ்கரிக்கிறோம்.
நீர், மஹா புருஷர்.
மகாத்மா.
சர்வ பூதங்களிலும் அந்தர்யாமியாக இருக்கிறீர்.
நீர், சர்வ பூதங்களுக்கும் மேலான பரமாத்மா.
உம்மை, அநேக ஆயிரம் தடவை நமஸ்கரிக்கிறோம்

க்ஜானத்துக்கும், விக்ஜானதக்கும் விஷயமாக உள்ள,
பரப்ரஹ்மம் நீர்.
அனந்த சக்தியை உடையவர் நீர்.
அனந்த கல்யாண குணங்களை உடையவர் நீர்.
உமக்கு, இயற்கையாகவே, ஸ்வரூப, ஸ்வபாவ மாறுதல்கள் இல்லை.
நீர் பிரகிருதியை ஆள்பவர்.
ஷாட்குண்ய பரிபூர்ணர்.
நீர் கால ரூபி.
காலத்தை ஆள்பவர்.
காலத்தைத் தாங்குபவர் ( நிமிஷம், மணி, சம்வத்சரம் முதலியவை ).
நீர் சகலத்தையும் நடத்துபவர்.
நீர் சர்வத்துக்கும் சாக்ஷி.
நீர் , உபாதான நிமித்த காரணமாகவும், ஜகத் ஸ்வரூபமாகவும்,
எல்லாப் பொருட்களையும் உண்டாக்குகிற ஆதி பிதா.
ப்ரபிதா பிதாமஹர் .
உமக்குப் பலபல நமஸ்காரங்கள்.

நீரே ஐந்து பூதங்கள் ;
நீரே தன் மாத்ரைகள்;
நீரே ப்ராண, மனஸ், புத்தி, இவைகளின் வ்ருத்திக்குக் காரணம்;
அவற்றின் அபிமான தேவதைகளும் நீரே;
நீரே, அவற்றில் ஊடுருவி, அந்தர்யாமியாக இருக்கிறீர்;
நீர் முக்குணங்களாகவும், அவைகளால் கூட அறிய முடியாத
அதீத, ஆத்மானுபூதியாக இருக்கிறீர்.
நீர், அனந்த நாமம் உள்ளவர்;
சூக்ஷ்மமாகவும், கூடஸ்தராகவும் எல்லாவற்றுக்கும் காரணமாகி ,
ஆனால் நீர் மாறாதபடி இருக்கிறீர்;
விஹார ரஹிதர் நீர்;
ஸத்யஸ்ய ஸத்யர் நீர்;
எல்லாவற்றையும் அறியும் த்ரிகால க்ஜாநி நீர்;
நீர், எல்லாப் பொருள்களாகவும், சப்தங்களாகவும்,
அவற்றால் அறியப்படும் ரஹஸ்யமாகவும் இருக்கிறீர்;
பலவித நாம ரூபங்களாகவும் இருக்கிறீர்;
உமது க்ருபை இருந்தால்தான், உம்மை அறிய இயலும்;
பரமான அதீதர் ( சாஸ்த்ரங்களால் மட்டுமே அறியத்தக்கவராக இருக்கிறீர் )
நீர், ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி தர்மங்களுக்கும் நிகமங்களுக்கும்
ஸர்வ ஸுப ஆசரணைகளுக்கும் ஆதாரம்;
உமக்கு ஆயிரம் நமஸ்காரங்கள்.

ஹே…கிருஷ்ணரே……நீரே பலராமன்; நீரே வசுதேவரின் திருக்குமாரர்
; நீரே பிரத்யும்னர்; நீரே அநிருத்தர்; நீரே சாத்வதர்களுக்குப் பதி;
உமக்கு ஆயிரம் நமஸ்காரங்கள்;
நீர், உள்ளிருக்கும் குணங்களை வெளிப்படுத்தி, எல்லாவற்றையும் நடத்துபவர்;
நீரே, நான்கு வ்யூஹங்களான மனஸ், புத்தி, தர்க்கம், அஹங்காரம்;
நீர் குணங்களை அறியும்படி செய்கிறீர்;
குணங்களை வ்ருத்தி செய்கிறீர்;
நீரே, ஒன்றிலும் பற்று இல்லாதவர்
; நீரே, மூலப்ரக்ருதியையும் , மாறுதலையும் உண்டாக்குகிறீர்
; நீர், சர்வ வ்யாக்ருத மஹத் ஆதி தத்வத்துக்குக் காரணம்;
நீரே இந்த்ரியங்களை ஆளும் ஹ்ருஷீகேசன்;
உமக்குப் பல நமஸ்காரங்கள்;
நீர், பர, அவர தத்வங்களை அறிந்தவர்;
எல்லாவற்றையும் உள் இருந்து நடத்துபவர்;
நியமன அத்யக்ஷர்;
உமக்குப் பல நமஸ்காரங்கள்;
நீரே விஸ்வம்;
நீரே விஸ்வாதீதன்;
நீரே அவற்றை நடத்தும் திருஷ்டி; உமக்குப் பல நமஸ்காரங்கள்

உமக்கு சமமாகவும், மேலாகவும் எவரும் இல்லாதவர் நீர்;
சர்வ சர்வேஸ்வரன்; சர்வ ஸ்வதந்த்ரன் நீர்;
நீரே கால சக்தி;
நீரே காலத்தைத் தாங்குபவர்;
இருக்கிற, இல்லாத வஸ்துக்களின் ஸ்வபாவத்தைக் காண்பித்துக் கொண்டு,
ஜீவன்களின் நிலைமைகளில் விளையாடுபவர்;
எல்லா உலகங்களிலும் உள்ள, ஸத்வ, ரஜஸ், தாமஸ, குணங்களுக்கு ஏற்ப,
பலவித சிருஷ்டிகளைச் செய்பவர் நீரே ;
சாதுக்களிடம் பிரியமானவர்;
உமக்கும், உமது பக்தர்களுக்கும் அபராதம் செய்பவர், உமக்குப்
ப்ரியமில்லாதவர்; அவர்களைத் தண்டிக்க அவதாரம் செய்கிறீர்;
எல்லாருக்கும் மஹா அபராதம் செய்த காளிங்கனையும்,
எங்களையும் மன்னிக்கும்படி பிரார்த்திக்கிறோம்.
உமது, மகிமைகளை அறியாத எங்களை, க்ஷமிக்கும்படி
வேண்டுகிறோம்.

ஹே….பகவானே……எங்கள் குற்றங்களை மன்னிப்பீராக ;
இந்த ஸர்ப்பம், பிராணனைவிடும் நிலையில் இருக்கிறது;
இவர், எங்களுடைய ப்ராண நாதர்;
இவரிடம் கருணை செய்யுங்கள்;
உயிருடன் விட்டு விடுங்கள்;
நாங்கள், என்ன செய்ய வேண்டும் என்று ஆக்ஜை இடுங்கள் ;
உங்கள் கட்டளைப்படி நடப்பதால், எல்லாப் பாபங்களும் ,
எல்லா ஆபத்துக்களும் நீங்குகிறது
என்று துதித்துப் பிரார்த்தித்தார்கள்.

ஹே….கிருஷ்ணா…..ஸ்ரீ சுகர், பரீக்ஷித் ராஜனிடம், மேலும் சொன்னார்.
இப்படி மனஸ்ஸை உருக்கும் ஸ்துதிகளால்,
நாக பத்னிகள், உன்னைத் துதித்ததால்,
மூர்ச்சை அடைந்து, தலைகளைத் தொங்கவிட்டுக் கொண்டு,
உன் திருவடிகளால் மிதிக்கப்பட்ட வனான காளிங்கனை நீ,
உயிருடன் விடுவித்தாயாம்.
உன்னுடைய கடாக்ஷத்தால்,
, தன் இந்த்ரிய சுவாதீனத்தை அடைந்த காளிங்கன்,
கைகளைக் கூப்பி அஞ்சலி செய்து, உன்னிடம் ப்ரார்த்தித்தானாம்
அதை இப்போது சொல்கிறேன்.

ஹே….பகவானே….ஸ்வபாவமாகவே நாங்கள் துஷ்டர்கள்;
கோபக்குணம் உடையவர்கள்;
எங்களுடைய புத்தி , தேகத்தை ஆத்மாவாகக் காணும் ஸ்வபாவமுள்ளது;
கோபத்தையும், பொறாமையையும் இயற்கையாகக் கொண்டவர்கள்;
உமது மாயையை எங்களால் விலக்க இயலவில்லை;
அதில் மோஹப்பட்டு வீழ்ந்து நசித்து விட்டோம்;
நீர் சர்வக்ஜர்; ஜகத்துக்கு எல்லாம் ஈஸ்வரர்;
உமது அபிப்ராயத்தில் , எது அனுக்ரஹமோ அல்லது நிக்ரஹமோ ,
எதைச் செய்ய விரும்புகிறீரோ
அதைத் தெரியப் படுத்தப் பிரார்த்திக்கிறேன் என்று சொன்னானாம்.

இதற்கு, நீ சொன்ன பதில் என்ன தெரியுமா ?

ஸர்ப்பமே…..இந்த இடம் நீங்கள் வசிப்பதற்கு யோக்யதை இல்லை;
உன் பரிவாரத்துடன் புறப்பட்டு, காலதாமதம் செய்யாமல்
ஸமுத்ரத்துக்குப் போய்விடு;
மனைவி, புத்ர பந்துக்கள் சஹிதம் போய் விடு;
இந்த யமுனா நதி தீர்த்தம் பசுக்களுக்கும், மனுஷ்யர்களுக்கும்
உபயோகப்பட வேண்டும்

எவன், நான் சொன்னதை ஸ்மரிக்கிறானோ, எவன் இதை காலை, மாலை
இருவேளை யும் படித்துக் கீர்த்தனம் செய்கிறானோ,
அவனுக்கு எந்தஸர்ப்ப பயமும் இல்லை.
எவன், இந்த யமுனா நதி மடுவில் நான் ஜலக்ரீடை செய்த இடத்தில் தீர்த்தமாடி,
தேவரிஷி தர்ப்பணம், பித்ரு தர்ப்பணம் செய்கிறானோ
உபவாசம் இருந்து பூஜிக்கிறானோ, அவன் எல்லாப் பாவங்களிலிருந்தும்
விடுபடுகிறான். இது என் கட்டளை.
நீ, இங்கிருந்து, சமுத்ரத்தில் உள்ள, ரமணகம் என்கிற தீவை அடைவாயாக;
உன் ஹ்ருதயத்தில் என்னை பூஜிப்பாயாக; எந்தக் கருடனுடைய பயத்தால்,
தப்பிப்பதற்காக இந்த இடத்துக்கு வந்தாயோ,
அந்த பயம் இனி உனக்கு இல்லை;
இதன் காரணம், என் பாத ஸ்பரிசம் உன் தலைகளில் அடையாளமாக இருக்கின்றன;
ஆதலால், உனக்கு, கருடனிடமிருந்து பயமில்லை என்று அருள் புரிந்தாயாம்.

காளியன் உடனே உன்னைப் பூஜித்து, வணங்கினான்.
நாக பத்னிகள், சந்தோஷத்துடன் உன்னைப் பூஜித்தனர்.
காளியன், உனக்கு, திவ்ய வஸ்த்ரங்கள், ரத்னங்கள், உயர்ந்த தாமரை மாலை,
வாஸனை த்ரவ்யங்கள் இவைகளை சமர்ப்பித்து, உன்னைப் பல தடவை
பத்நிகளுடன் பரிக்ரமம் ( ப்ரதக்ஷிணம்) செய்து, புத்ர பந்துக்களுடன்
ரமணத் த்வீபத்துக்குச் சென்றான்.
அதே சமயத்தில் உன் கிருபையால், யமுனா ஜலத்தின் விஷம்
போக்கடிக்கப்பட்டு, அம்ருதத்துக்கு ஒப்பாக ஆயிற்று.

( ஹே….கிருஷ்ணா… இந்த சரிதத்தை, எத்தனை தடவை படித்தாலும்,
எத்தனை தடவை சொன்னாலும், எத்தனை தடவை கேட்டாலும்,
யார் படித்துக் கேட்டாலும், யார் சொல்லிக் கேட்டாலும்,
அலுப்பே ஏற்படுவதில்லை. அம்ருதத்தைப் பருகுவதைப் போல இருக்கிறது.
இதே நிலை அடியேனுக்கு நீடிக்குமாறு உன்னைப் பிரார்த்தித்து,
பல்லாயிரம் தடவை உன்னை நமஸ்கரிக்கிறேன் )

16 வது அத்யாயம் நிறைவு பெற்றது.

ஸ்ரீ கிருஷ்ணன் , ப்ருந்தாவனவாசிகளை , அக்நி விபத்திலிருந்து காத்தல்
———————————————————————————————————
பரீக்ஷித் ஸ்ரீ சுகப்ரம்மத்தைக் கேட்டார்
காளியனுக்கு, கருடனால் என்ன தீங்கு ஏற்பட்டது ?விரிவாகப் பதில் சொல்ல வேணும் ….
ஸ்ரீ சுகர் சொன்னார். கருடனுக்கும், சர்ப்பங்களுக்கும் விரோதம் ஏற்பட்டபோது, பிரும்மா தலையிட்டு அவர்களுக்குள் சமரசம் ஏற்படுத்தி, அதன்படி
ஒவ்வொரு அமாவாஸ்யை தினத்திலும், சர்ப்பங்கள் கருடனுக்கு உபசாரம் செய்து,அவன் பசியில்லாமல் இருக்க, ஆகாரம் கொடுத்து வந்தன.
இதன்படி,ஸர்ப்பங்கள், கருடனால் கொல்லாமல் காக்கப்பட்டன. இந்த உபசாரங்கள் செய்வதற்கு வேண்டியவைகளை, சர்ப்பங்கள், தங்களுடைய பக்தர்களிடமிருந்து பெற்று வந்தன.
இந்த ஏற்பாடு, பலகாலமாக நடந்து வந்தது.
கத்ருவின் பிள்ளையான காளிங்கன், திமிர் கொண்டு,
கருடனுக்கு ஆகாரம் கொடுக்கவேண்டிய சமரசத் திட்டத்தை மீறி,அதை நிறுத்தி, எல்லாவற்றையும் தானே சாப்பிட்டு வந்தான்.இதனால் கோபம் கொண்ட கருடன், காளிங்கனைத் தாக்கினான்.
கருடனால் தாக்கப்பட்ட காளிங்கன், உயிருக்குப் பயந்து,
யமுனா நதி தீரத்தில் உள்ள இந்த மடுவில் வந்து ஒளிந்து கொண்டான். ஏன் இங்கு கருடன் வர இயலாது என்றால், ஒரு சமயம், கருடன்,மீன்களைச் சாப்பிட இந்த மடுவுக்கு வந்தபோது,மீன்கள் இங்கு வசித்த சௌபரி ரிஷியைத் தஞ்சம் அடைந்தன. மீன்கள்மீது கருணைகொண்டு, கருடன் இந்த மடுவுக்கு வந்தால்
அவன் உயிர் உடனே போய்விடும் என்று சாபம் கொடுத்திருந்தார்.
இதை அறிந்து வைத்திருந்த காளிங்கன், கருடன் வர இயலாத இந்த மடுவுக்குள் வந்து மறைந்து வாழலானான். இப்போது ஸ்ரீ கிருஷ்ணனால் துரத்தப் பட்டு, குடும்ப சஹிதம்இந்த மடுவைவிட்டு வெளியே போய்விட்டான்.

(ஹே…..கிருஷ்ணா…..நீ மடுவிலிருந்து வெளியே வந்தாய். அற்புதமான மாலை; பதக்கம்; வஸ்த்ரம் இவைகளை அணிந்து இருந்தாய்.
யசோதை, ரோஹிணீ, நந்தகோபன் யாவரும்
போன உயிர் திரும்பி வந்ததைப் போல சந்தோஷம் அடைந்தனர். பசுக்களும், கன்றுகளும், கோபர்களும் கோப ஸ்திரீகளும் பரமானந்தம் அடைந்தனர். )
அன்று இரவு, யமுனைக் கரையிலேயே தங்கி, நன்கு தூங்கினர்.
அப்போது, பெரிய நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது.
களைப்பால் தூங்கிக் கொண்டு இருந்தவர்களை, நெருப்பு சூழ்ந்து கொண்டது.திடுக்கிட்டு எழுந்த யாவரும், செய்வது அறியாது திகைத்து, உன்னைச் சரணம் அடைந்தார்கள்.
நீ, அந்த அக்னியை வாயால் பருகி விட்டாய்.
எல்லாரும் அக்னியின் ஆபத்திலிருந்து உன்னால் காப்பற்றப் பட்டனர்.

17 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்

————————————————————
அத்யாயம் 18
—————-
ப்ரலம்பாசுரன் வதம்
——————

நீயும், பலராமனும் , கோபர்களுடன்சேர்ந்து, வ்ரஜபூமியைப் பாவனமாக்கினீர்கள் .
ஒரு சமயம் வனத்தில், பசுக்களை மேய்த்துக் கொண்டு இருக்கும்போது,ப்ரலம்பன் என்கிற அசுரன், கோபாலகர்களைப்போல வேஷம் தரித்து,
உங்கள் இருவரையும் அபஹரித்துப்போக எண்ணினான்.
அவன் யார் என்றும், அவன் கபட எண்ணத்தையும் தெரிந்துகொண்ட நீ, கோபாலகர்களிடம் நாம் யாவரும் இரண்டு கக்ஷிகளாகப்பிரிந்துவிளையாடுவோமென்றும், எந்தக் கக்ஷி ஜெயிக்கிறதோ அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களை, தோற்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் ,
முதுகில் ஏற்றிக்கொண்டு, மூட்டை சுமப்பதுபோலச் செய்யவேண்டுமென்றும்சொல்ல, அதன்படியே, உன் கக்ஷி , பலராமன் கக்ஷி என்று இரண்டாகப் பிரிந்து
விளையாடினீர்கள். பலராமன் கக்ஷி ஜெயித்தது.
ப்ரலம்பன் என்கிற அசுரன்—கோபனாக வேஷமிட்டு வந்தவன் —-பலராமனைத் தன் முதுகில் சுமந்து கொண்டு சென்றான். பலராமன், இவன் அசுரன்
என்பதை அறிந்து இருந்ததால், அவனுக்கு, மலையைத் தூக்குவது போன்ற கனத்தை ஏற்படுத்தினான். பாலராமனைச் சுமக்க முடியாமல்,அசுரனின்
வேகம் தடைப்பட்டது. அதனால் கோபமடைந்த அசுரன்,
சுய ரூபத்தை எடுத்துக் கொண்டான். பலராமனைத் தாக்கினான். பலராமன், தன்னுடைய முஷ்டியால் , அசுரனை ஓங்கி அடித்தான். உடனே, அசுரனின் தலை நொறுங்கியது. ரத்தத்தைக் கக்கிக்கொண்டு,
பெரிதாக ஓலமிட்டு ,பூமியில் விழுந்து அசுரன் மாண்டான்.
இதைப் பார்த்த கோபர்கள், பலராமனைப் பாராட்டிப் புகழ்ந்து , மகிழ்ந்தனர்.

18 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்

தசமஸ்கந்தம்——–நவீன பாணியில்—-19 வது அத்யாயம்
—————————
மீண்டும் நெருப்பு ஆபத்து
—————–
பின்னொரு சமயம் , நீயும் கோபாலகர்களும் விளையாடிக்கொண்டிருந்தபோது, பசுக்களும், கன்றுகளும் புற்களை மேய்ந்து கொண்டே வெகு தூரம் போய்விட்டன. கோபர்கள், பசுக்களைத் தேட ஆரம்பித்தனர். அந்தச் சமயத்தில், நீ,
மேகத் த்வனியைப்போலச் சப்தம் செய்தாய். அதைக்கேட்ட பசுக்களும் கன்றுகளும் சந்தோஷத்துடன் , நீங்கள் இருக்குமிடத்துக்குத் திரும்பி வந்தன.
அப்போது, ஒரு பெரிய தீ———புகையுடன் உண்டாகி , வனத்தில் மரங்களையும் ,செடிகளையும் நாசம் செய்தது;காற்று பலமாக வீசவும், உங்களை நோக்கி
நெருப்பு வேகமாகப் பரவியது. கோபாலகர்கள் மிகவும் பயந்து விட்டனர்.
“கிருஷ்ணா—-கிருஷ்ணா——எங்களைக் காப்பாற்று” என்று கத்தினார்கள்.
உடனே, நீ, ” பயப்படாதீர்கள்——–ஒரு க்ஷணம் எல்லாரும் கண்களை மூடிக் கொள்ளுங்கள் —-”
என்று சொன்னாய். கோபாலகர்கள்,
உடனே கண்களை மூடிக்கொண்டனர்.
அந்த க்ஷணத்தில் நீ, அக்னியை வாயால் பருகி விட்டாய்.
கோபாலகர்கள் கண்களைத் திறந்து பார்த்தபோது, நெருப்பைக் காணவில்லை.
பசுக்களும் பக்கத்தில் இருந்தன.
கோபாலகர்கள், உன்னைத் தெய்வம் என்று கருதினார்கள்.அவர்கள், பசுக்களுடனும், கன்று களுடனும் , நீயும் பலராமனும் பின்தொடர,
அவரவர் வீடுகளுக்கு வந்தனர்.
நீ, புல்லாங்குழலை இசைத்துக் கொண்டு, திரும்பி வரும்போது,கோபியர்கள், உன் தர்சனத்தால் பரமானந்தம் அடைந்தார்கள்.
( அந்த கோப ஸ்திரீகளை அடிக்கடி நமஸ்கரிக்கிறேன் )

19 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்

 

20 வது அத்யாயம்

மழையும், வேனிலும்

 

கோபாலகர்கள், தங்கள் பெற்றோர்களிடம், ப்ரலம்பாசுரன் வதம், நெருப்பிலிருந்து காப்பற்றப்பட்டது, என்று எல்லாவற்றையும் கூறி,
உன்னையும், பலராமனையும் புகழ்ந்தார்கள்.
கோபாலகர்களின் தாய்தந்தையர் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.
மழைக்காலம் வந்தது. கருமேகங்கள் சூழ்ந்து, மழையைப் பொழிந்தன
. நீயே சூர்யன்; நீ, எட்டு மாதங்களில் உன் தாபத்தால் ஜலத்தை உறிஞ்சி, மாரிக் காலத்தில் மழையைக் கொடுக்கிறாய்.
நீயே பர்ஜன்யன்; உன் கருணை வெள்ளமே மழை .
பசுக்கள் கொடுக்கும் பால், வழிந்து, நீ செல்லும் வழியெல்லாம், பாலாக இருந்தது பிருந்தாவனம் சுபிக்ஷமாக இருந்தது.
பிறகு, சரத் காலத்தில், குளங்களிலும், வாவிகளிலும் தாமரைப் புஷ்பங்கள் விகஸித்தன.
நாட்கள் செல்லச் செல்ல, சூர்யனின் தாபம் அதிகரித்தது.
நீர்நிலைகளில் தண்ணீர் மட்டம் குறைய ஆரம்பித்தது.
காற்று, வனத்திலிருந்து , பிருந்தாவனத்தை நோக்கி வீசி
தாபத்தை உண்டாக்கியது.
ஆனால், கோபர்களுக்கும், பசுக்களுக்கும், கன்றுகளுக்கும் எந்தத் தாபமும் தெரியவில்லை.
சதா, நீ, அவர்களுடன் கூடவே இருந்ததால்,
அவர்களுக்கு எந்தத் தாபமும் தெரியவில்லை
ஹே, கிருஷ்ணா, உன்னையும், பலராமனையும் ,
யசோதையும், நந்தகோபனும் ,ரோஹிணியும், அளவில்லாப் பாசத்துடன் கொஞ்சி மகிழ்ந்தனர்.
கோபஸ்த்ரீகள் அதீத வாத்சல்யத்துடன் இருந்தார்கள் கோபச் சிறுவர்கள்,உரிமையுடன் நட்பு பாராட்டி , உங்களுடன் எப்போதும் வனத்திலும், யமுனா நதி
தீரத்திலும் , விளையாடி மகிழ்ந்தார்கள். கோபிகைகள் ,
நீ, பசுக்களை ஓட்டிக் கொண்டு , காலையில் வனத்துக்குச் செல்லும்போதும், மாலையில் பசுக்கள், கன்றுகள், கோபாலகர்களுடன்திரும்பும் போதும், உன் ரூபசௌந்தர்யத்தைப் பார்த்துப் பரவசம் அடைய அவரவர்கள்வீட்டு வாயிலில் காத்துக் கிடந்தனர்

20 வது அத்யாயம் நிறைவு பெற்றது. ஸுபம்

பிருந்தாவனத்தை அடுத்துள்ள காடு , புஷ்பங்கள் நிறைந்து இருந்தது.
பூச் செடிகள் பூத்துக் குலுங்கின. தேனீக்கள், புஷ்பங்களிளிருந்து
தேனை உறிஞ்சி அருந்தின. பூமி முழுவதும் பச்சைக் கம்பளம் விரித்தாற்போல ,
பச்சைப்பசேல் என்று இருந்தது. மிகவும் ரம்யமான காக்ஷி.
இந்த வேளையில், நீ, பலராமனுடன் காட்டுக்குள் பிரவேசித்தாய்.
கிளிகள், மயில்கள், குயில்கள், குரங்குகள் என்று மரங்களில் கூட்டம்.
உனக்கு என்ன தோன்றிற்றோ , புல்லாங்குழலைக் கையில் எடுத்து,
கானம் இசைக்கத் தொடங்கினாய். இந்த வேணுகானம், காட்டில்
எங்கும் பரவியது; வ்ரஜபூமியில்—–பிருந்தாவனத்தில், வீடுகள்தோறும் பரவியது;
புஷ்பவதியாக இருந்த கோபிகைகளின் மனஸ்ஸை, வசப்படுத்தியது.
ஹே…..கிருஷ்ணா….நீ எப்படி அலங்கரித்துக் கொண்டிருந்தாய் என்பதை,
ஸ்ரீ சுகர், பரீக்ஷித் ராஜனுக்குச் சொல்கிறார் . கர்ணீகாரப் பூக்கள்; மயில் தோகை;
இவற்றைத் தலையிலும், காதுகளிலும் வைத்து, அலங்கரித்துக் கொண்டிருந்தாய்.
இடையில், தங்க நிறப் பட்டுப் பீதாம்பரம்; திருமார்பில் வைஜயந்தீ மாலை;
விரல்களால், புல்லாங்குழலின் த்வாரங்களை மூடியும், திறந்தும், உன் திருப்பவள உதடு—–
அம்ருதமயமான உதடு படும்படி, புல்லாங்குழலை வைத்துக் கானம் செய்தாய்.
இந்த வேணுகானம், சர்வபூத மனோஹரமாக இருந்ததாம்.

(ஹே….கிருஷ்ணா…. ஸ்ரீ சுகர், இவைகளைச் சொல்லும்போது,
பரீக்ஷித் ராஜன் பக்கத்தில் அடியேனும் உட்கார்ந்து, உன் வேணுகான
இசை வெள்ளத்தை, அவர் வருணித்தபடியே கேட்க முடியவில்லையே
என்று தாபம் மேலிடுகிறது )

இப்போது, கோபிகைகள் அடைந்த நிலையைச் சொல்கிறார்.அதை உனக்குச் சொல்கிறேன்
“நம் கண்கள், காதுகள், போன்ற இந்த்ரியங்களின் பலனை—-பாக்யத்தை——இன்று அடைந்தோம்…..
ஹே, தோழிகளே…..ஒரு தடவை, ஜகன்மோகன கிருஷ்ண ரூபத்தைப் பார்த்தாலே ,
,மறுபடியும் மறுபடியும் பார்க்கத்தூண்டும் ; புல்லாங்குழலை இசைத்துக் கொண்டு,
கள்ளப் பார்வையுடன்—கடாக்ஷ வீக்ஷண்யத்துடன் ,எங்களைப் பார்த்துக் கொண்டு,
பசுக்களை மேய்ப்பதற்காக அவைகளை ஓட்டிக்கொண்டு,
கோபாலகர்களுடன் செல்லும் அந்த சித்திரம் —
படம்போல மனஸ் ஸில் பதிந்து விட்டிருக்கிறது.
எங்கள் மனம், அவரிடம், பேதலித்திப்போய் நிற்கிறது.
ஹே….சகிகளே….கிருஷ்ணன், சில சமயம், மாமரத்தின் இலைகளைப்
பட்டுப் பீதாம்பரத்துடன் சேர்த்து இறுகக் கட்டிக் கொண்டு, தாமரை மலர்களை,
இரு கைகளிலும் பிடித்துக் கொண்டு, குமுத மலர்களைக் காதுகளின் ஓரங்களில்
வைத்துக் கொண்டு, கழுத்தில் வைஜயந்தீ மாலையை அணிந்துகொண்டு,
பசுக்களைப் பராமரிக்கும் என்பதான நாடக மேடையிலே,
இவரும், பலராமனும் இரண்டு உத்தம நடிகர்களைப் போலக்
காக்ஷியளிக்கிறார்கள்.

ஹே….சகிகளே……மேலும் கேளுங்கள்……இந்தப் புல்லாங்குழல்
என்ன பாக்யம் செய்திருக்க வேண்டும் !
கிருஷ்ணனின் அதரச் சுவையை சுவாதீனமாக அனுபவிக்கிறதே !
இந்த அதரம், அதரத்தின் அம்ருதம் கோபிகைகளின் சொத்துக்கள் அல்லவா !
புல்லாங்குழல் அனுபவித்தது போக,
மீதி ரஸத்தைதானே நமக்குக் கொடுக்கிறது.
இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ,இந்த மூங்கிலின் மாதா பிதாவான
மூங்கில் புதர்கள், யமுனைநதிக்கரையில் இருந்து,
அதன் மயிர்க்கால்கள் ஆனந்தத்தால் நிற்க,
அதன் வளைந்த கிளைகளின் முனைகளில் இருக்கும் தண்ணீரில்
வளரும் தாமரைப் புஷ்பங்களைச் சுமந்துகொண்டு,
இந்த மூங்கில் மரங்கள் ஹ்ருதயம் விகசித்து,
ஆனந்த பாஷ்பங்களை உதிர்க்க,
எப்படி ஒரு சத் புத்ரன், பகவானுடைய கிருபையைப்
பெறும்போது, அந்த சத் புத்ரனின் தாய் தந்தையர் ஆனந்தத்தை அடைவார்களோ ,
அந்த ஆனந்தத்தை, இந்த மூங்கில் மரங்கள் அடைந்திருக்கின்றன.

ஹே, சகிகளே……வேணு கானத்தை கேட்டு, மயில்கள் ஆடுவதைப் பாருங்கள்!
பக்ஷிகள், கோவர்த்தன மலையில் உள்ள பிராணிகள் யாவும்,
எவ்வித சப்தமும் இன்றி, தங்களை மறந்து, இந்தக் கானத்திலே
உன்மத்தமாகிஇருப்பதைப் பாருங்கள் !
இந்தப் பெண்மான்கள், கிருஷ்ணனுடைய விசித்திர வேஷத்தைப் பார்த்தும்,
விசித்திர வேனுகானத்தைக் கேட்டும், தங்கள் பதிகளான ஆண் மான்கள்
அருகில் இருக்கும்போதே, தங்களுடைய கடைக்கண் பார்வையை—
ப்ரணய நோக்கை,கிருஷ்ணனிடம் செலுத்திப் பூஜை செய்கின்றன !

ஹே….சகிகளே……..ஈதென்ன ஆச்சர்யம் !
ஆகாயத்தைப் பாருங்கள்; அப்சரஸ்கள், கந்தர்வ ஸ்திரீகள் கூட்டம்,
கூட்டமாக இருக்கிறார்கள் !கிருஷ்ணனுடைய ரூபத்தையும்,
சீலத்தையும் பார்த்தும் , வேணுவின் கானத்தையும் கேட்டும் ,
மோஹித்துப் போய் மதன வேகத்தால், மனம் பறி கொடுத்தவர்களாக,
புஷ்பங்கள் தலையிலிருந்து நழுவி விழ, வளைகள் கழல,
தலைமயிர் கேசங்கள் அங்குமிங்கும் அலைபாய,
புடவைகள் நழுவுவது கூடத் தெரியாமல், மோஹித்து இருப்பது,
வினோத காக்ஷியாக இருக்கிறதே !

இந்தப் பசுக்களைப் பாருங்கள் ! கன்றுகளுக்குப் பால் கொடுக்க மறந்து,
வாயில் உள்ள புல்லைக்கூடத் தின்னாமல், அப்படியே வழியவிட்டு
தங்கள் காதுகளை நீட்டி, வேணுகானத்தைக் காதுகளால் பருகுகிறதே !
சித்திரங்கள்போல , அப்படியே ஆடாமல், அசையாமல் நிற்கின்றனவே !

ஹே….சகிகளே…. மரங்களில் அமர்ந்து இருக்கும் பக்ஷிகளைப் பாருங்கள் !
மரங்களின் அழகான கிளைகளையும், கொடிகளையும் பாருங்கள்!
இந்தப் பக்ஷிகள், பூர்வ ஜன்மத்தில் ரிஷிகளாக இருந்தவர்களோ!
பழங்களைத் தின்னாமல், தூங்காமல், இயற்கையான ஸ்வபாவமான,
கூவுதலையும் மறந்து, இமைகொட்டாமல் கிருஷ்ணனையே பார்த்து,
வேணுகானத்தைக் கேட்கின்றனவே !
( மரக்கிளை—-வேத சாகை. பழங்களைத் தின்னாமல், கூவாமல் இருப்பது –
பகவானிடம் ஏகாக்ர சிந்தனை )
இந்த மரங்களின் இலைகளைப் பாருங்கள் !கிருஷ்ண தர்சநம் என்கிற
காந்தத்தால் இழுக்கப்பட்டு, கிருஷ்ணனை ஆசையுடன்
பார்ப்பதுபோல் உள்ளதே !

ஹே….சகிகளே….நதிகளைப் பார்த்தீர்களா !முகுந்த கீதம்—-அதன் ராகம்—-
மதுரமான ஆவர்த்தனம் –மனோபாவம், இவைகளால் ஈர்க்கப்பட்டு,
பிரவாகத்தின் வேகம் தடைப்பட்டு, அப்படியே அமைதியாக நிற்கிறதே !
கிருஷ்ணனுடைய திருவடிகளை ஸ்பர்சித்து, தன்னுடைய பிரவாகத்தில்
பூத்த தாமரைப் புஷ்பங்களை , அவனுடைய திருவடித் தாமரைகளில்
சமர்பித்து, அவனை அணைப்பதைப்போல, அலைகளையும்
ஜலத்தின் வலைகளையும் வாரி வாரி இறைக்கிறதே !

ஹே….சகிகளே….ஆகாயத்தில் இதோ மேகங்களைப் பாருங்கள் !
புஷ்பங்களை வர்ஷித்து, குடைபிடிப்பது போல, கிருஷ்ணனுக்கு
ஸேவை செய்கின்றனவே !

ஹே….சகிகளே….இந்த மலைஜாதிப் பெண்களைப் பாருங்கள் !
இவர்களிடம், கிருஷ்ணப் பிரேமை, பரிபூரணமாகத் தெரிகிறதே !
இவர்கள் முகங்களில் உள்ள குங்குமப்பூக்கள், கிருஷ்ண பக்தியின்
தகிப்பால் இளகி, அவர்கள் ஸ்தனங்களில் இந்தப் பூச்சுக்கள்
இறங்கி இருக்கின்றனவே !
கிருஷ்ண தர்சனத்துக்கு தாபப்படுகிறார்களே !
மதன வேகத்தால் துடிக்கிறார்களே !
பிருந்தாவன மேடுகளில் பதிந்துள்ள, ஸ்ரீ கிருஷ்ணனின் திருவடிகளையும்,
அதில் உள்ள சிகப்பு வர்ணத்தையும், நினைத்து, நினைத்துப்
புளகாங்கிதம் அடைகிறார்களே ! அவர்களின் மார்புப் பூச்சுகள்;
ஸ்ரீ கிருஷ்ணனின் திருவடிப் பூச்சுகள் ; இரண்டிலும் உள்ள சிகப்பு நிறம்
ஒத்து இருக்கிறதே !
இவர்கள் ஸ்ரீ கிருஷ்ணனின் திருவடிகளை மனஸ்ஸில்
தரித்து இருக்கிறார்கள், ஆச்சர்யம் !

ஹே, சகிகளே !இந்த மலையைப் பாருங்கள் !கிருஷ்ண ப்ரேமையால்,
புதிய ஆனந்தத்தை அடைந்து, புதிய தளிர்களையும்,
புற்களையும் மேனியில் உண்டாக்கி, வாருங்கள்….வாருங்கள்….
.பசுக்கூட்டங்களுடன் வாருங்கள் ! கோபாலகர்களே, இங்கு வந்து
விளையாடுங்கள் ! நிறையப் புல்மேடுகள், நிறையப் பழங்கள்,
நிறைய தீர்த்தம் உள்ளன என்று சொல்லாமல் சொல்லி,
அழைப்பது போல் தெரிகிறதே !

ஸ்ரீ சுகர், பரீக்ஷித் ராஜனிடம் மேலும் சொல்கிறார்;
இந்த கோபஸ்த்ரீகள், கிருஷ்ணனின் வேணுகானத்தைக் கேட்டு,
மாடுகளைக் கட்ட வேண்டிய கயிற்றை மறந்து, யாத்ரீகர்கள்மாதிரி,
உன்னுடைய பால்ய சேஷ்டிதங்களைத் தங்களுக்குள் மகிழ்ச்சியுடன்
பேசிக்கொண்டு, போகும் வழியில் , புளகாங்கிதம் அடைந்து நிற்கும்
மரங்களைப் பார்த்துக் கொண்டு, புல்லாங்குழல் இசையில் ,
சதா உன்னுடைய சிந்தனையில் ஒன்றிப்போனார்கள். அவர்கள் உடல்தான்
தனிப்பட்டு இருந்தது.

(ஹே….கிருஷ்ணா…. இப்படி எல்லாரையும் உன்மத்தமாக்கிய,
கிறங்கடித்த, தன்வயம் இழக்கச் செய்த, அந்த மனோஹர வேணுகானத்தை
எப்போது கேட்பேன் ?
அந்தக் க்ருஷ்ணப்ரேமிகள், மிகவும் பாக்யசாலிகள் !
அந்தப் பசுக்கள், கோபாலகர்கள், பக்ஷிகள், நதி, மலை யாவும்
பாக்யம் செய்தவை !
அவைகளுக்கு நமஸ்காரங்கள்.
எல்லாவற்றுக்கும் முக்யமாக, க்ருஷ்ணப்ரேமிகளுக்கு,
ஆயிரம் தடவை நமஸ்காரத்தை அர்ப்பணிக்கிறேன்.
அவர்களின் கிருபையால், அடியேனுக்கு உன்னிடம் பக்தி—-கிருஷ்ண பக்தி—
அனவரதமும் வளர்ந்து, அடியேனைக்
க்ருதார்த்தனாக ஆக்கவேண்டும் )

21 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸு ப ம்
——————————————————————————————————————————————–
.
தசமஸ்கந்தம்—நவீன பாணியில்—அத்யாயம் 22
———————-
கோபிகைகளின் காத்யாயினி வ்ரதம்——
ஸ்ரீ கிருஷ்ணன் அவர்கள் வஸ்த்ரங்களை அபகரித்தது—அனுக்ரஹித்தது.
——————————————————————————————————————————————

ஸ்ரீ சுகர் , பரீக்ஷித்துக்கு மேலும் சொல்கிறார்.
கிருஷ்ணா….கோபிகைகள் காத்யாயினி வ்ரதம் அனுஷ்டித்ததையும்,
யமுனையில் வஸ்த்ரமில்லாமல் குளித்ததால்,தேவதைகளுக்குச் செய்த அபசாரம் என்று,
நீ, அவர்களுக்கு உணர்த்தி, அந்தப் பாபம் போக, உன்னை வந்து வணங்கி
வஸ்த்ரங்களைப் பெற்றுக்கொள்ளச் சொன்னதையும் விவரிக்கிறார்.

ஹேமந்த ருதுவான மார்கழி மாதம் முதல்வாரத்தில்,
கோபிகைகளான கன்னிகைகள் —–உன்னைப் பதியாக அடைவதற்காக,
காத்யாயினி வ்ரதம் அநுஷ்டித்தார்கள்.
மார்கழி மாசத்தில், விடியற்காலையில் எழுந்து, யமுனையில் நீராடி,
அங்கு களிமண்ணால் காத்யாயினி உருவத்தைச் செய்து, சந்தன, குங்கும
த்ரவ்யங்களை இட்டு, ஆபரணங்களால் அலங்கரித்து,
கந்த புஷ்பங்களைச் சாற்றி, அக்ஷதை, தூப தீபங்களைச் சமர்ப்பித்து,
தேங்காய், பால் போன்றவைகளால் பிரசாதம் செய்து,
அதை -நைவேத்யம்செய்து, அர்ச்சித்து,
“ஹே….காத்யாயினி……மஹாமாயே….
ஈஸ்வரி….
நந்தகோப குமாரனான ஸ்ரீ கிருஷ்ணனை, எங்களுக்குப் பதியாக அளிப்பாய் ..
.உனக்குப் பல நமஸ்காரங்கள்…..” என்று சொல்லி,
பகல் ஒருவேளை மட்டில் ஸாத்விக ஆகாரமான
அக்னியில் சமர்ப்பிக்கப்படும் “சாரு ” போன்ற கஞ்சிப் பாயசத்தை அருந்தி,
இப்படியே பத்ரகாளியையும் பூஜித்து, தினந்தோறும் இப்படிப் பூஜை செய்து,
மாதக் கடைசியில், ——-மார்கழி நோன்பு எனச் சொல்லப்படும்
இதன் முடிவில், வ்ரதம் முடியும் நாளில், விடியற்காலையில்,
உன்னை ஸ்மரித்துக் கொண்டும், உன் கீதங்களைப் பாடிக் கொண்டும்,
தங்களுடைய வஸ்த்ரங்களை யெல்லாம் யமுனைக் கரையில் வைத்துவிட்டு,
யமுனை நதியில்இறங்கி ,கடுமையான குளிரில் தீர்த்தமாடினார்கள்.
இதை அறிந்த நீ, அவர்களுக்கு அநுக்ரஹம் செய்யத் தீர்மானித்தாய் .
அதே சமயம், வஸ்த்ரமில்லாமல் நீராடியது பாபமென்றும்,வ்ரதத்துக்குப்
பங்கமென்றும், அதைப்போக்கி அவர்களுக்கு வ்ரதபலனைக் கொடுக்கத் தீர்மானித்தாய்.
யமுனைக் கரைக்கு வந்து, அவர்களுடைய வஸ்த்ரங்களைஎல்லாம்
எடுத்துக் கொண்டு, கரையில் இருந்த கடம்ப மரத்தின் மேலேறி, அமர்ந்து,
“பெண்களே……நீங்கள் ஒருமாத காலம் வ்ரதம் அனுஷ்டித்துக் களைத்துப்
போய் இருக்கிறீர்கள்….ஒவ்வொருவராக இங்குவந்து, வஸ்த்ரங்களைப்
பெற்றுக் கொள்ளுங்கள்…..”என்றாய்.
கோபிகைகள், லஜ்ஜையினால், கழுத்தளவு ஜலத்தில் நின்றுகொண்டு ,
“ச்யாமசுந்தரா…..எங்களுக்குக் கெடுதல் செய்யாதே…
.நீ, நந்தகோபனின் ப்ரிய புத்ரன்….அவர் எங்கள் வணக்கத்துக்கு உரியவர்….
குளிரில் நடுங்கும் எங்களுக்கு வஸ்த்ரத்தைக்கொடு….
நாங்கள் உன் தாஸர்கள்…அடிமைகள்…
நீ சொல்லும் எல்லாக் கார்யங்களையும் செய்வோம் ..
.வஸ்த்ரங்களைக் கொடுத்துவிடு…..தராதுபோனால்,
நந்தகோபரிடம் சொல்வோம் ….’ என்றார்கள்.
அதற்கு, நீ, “எனக்குத் தாசர்கள்….சேவகர்கள் என்று சொல்லிவிட்டீர்கள்…
.இப்போது ஒவ்வொருவராக நதியிலிருந்து மேலே வந்து,
வஸ்த்ரங் களைப் பெற்றுக் கொள்ளுங்கள் ….” என்று சொன்னாய்.
கோபிகைகள், குளிரினால் நடுங்கிக்கொண்டு, யமுனை ஜலத்திலிருந்து
மேலே வந்து, வெட்கப் பட்டுக் கொண்டே, தலையைக் குனிந்து கொண்டு,
உன்னருகே வந்தார்கள்.
நீ, அவர்களிடம், “சுத்தமான வ்ரதம் இருந்தீர்கள்;
ஆனால், வஸ்த்ரமில்லாமல் தீர்த்தாமாடியது, தேவதைக்குச் செய்யும் அபசாரம்;
அந்தப் பாபம் போக, கைகளைக் கூப்பியபடி வந்து, வணங்கி,
வஸ்த்ரங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள் ; அதனால், உங்கள் பாபம் கழியும் …” என்றாய்.
இப்படி, நீ சொன்னதும், கோபிகைகள் வ்ரதத்துக்குப் பங்கம் வந்தது
என்பதை உணர்ந்து, யாருக்காக வ்ரதம் இருந்தார்களோ , அந்தக் கிருஷ்ணனாகிய நீயே
நேரில் வந்து, பாபத்துக்குப் பிராயச் சித்தம் செய்வதால்,
வ்ரதம் பூர்த்தி ஆகிறது என்று மனம் சமாதானம் அடைந்து, தலையைக் குனிந்து,
கைகளைக் கூப்பி, உன்னிடமிருந்து வஸ்த்ரங்களைப் பெற்றுக் கொண்டார்கள்.
வஸ்த்ரம் இல்லாததால் வெட்கம்; வஸ்த்ரம் கிடைத்ததால் சந்தோஷம் ;
கிருஷ்ணனே நேரில் வந்து அநுக்ரஹித்ததால் மனஸ் நிறைய கிருஷ்ணப் பிரேமை .
நீ , மேலும் கூறினாய். ” ஹே….சாத்விகளே…….உங்கள் சங்கல்பம், நிறைவேறும்….
.என்னிடம் உங்கள் மனஸ் அர்ப்பணிக்கப்பட்டதால், காமபோக ஆசைகள் விலகி,
என்னிடம் பக்தி செய்து, மீண்டும் மறுபிறவி இல்லாமல், என்னையே அடைவீர்கள் … ”
கோபிகைகள், லஜ்ஜையுடன், தங்கள் சங்கல்பம் நிறைவேறியது என்று பூரித்து,
உன்னுடைய திருவடிகளைத் த்யானம் செய்துகொண்டு,தங்கள் தங்கள் வீடுகளுக்குப்
போய்ச் சேர்ந்தார்கள்.
பிறகு, நீ, கோபர்கள் சூழ்ந்து வர, பிருந்தாவனத்திலிருந்து
பசுக்களை ஓட்டிக்கொண்டு, வெகு தூரம் சென்றாய். சூர்யனின் வெப்பம் கடுமையாக இருந்தது.
கோபர்கள் மரங்களின் நிழலில் ஒதுங்கிக் கொண்டே சென்றார்கள்.
மேலே, மரங்களின் கிளைகளும், இலைகளும் குடைகளைப் போலக் கவிந்து,
சூர்ய வெப்பம், உங்களை அதிகமாகத் தாக்காமல் தடுத்தது.

அப்போது, நீ, கோபர்களிடமும், பலராமனிடமும் பேசினாய்.
” இந்த மரங்கள் பிறருக்காக வாழ்கின்றன; காற்று,மழை, வெய்யில், பனி,
இவைகளைச் சகித்துக் கொண்டு, தங்களை அண்டியவர்களைக் காக்கின்றன ;
பசு,பக்ஷி, ராக்ஷசன், யக்ஷன், மிருகம் மனிதன் எல்லாரையும்
இந்த மரங்கள் காக்கின்றன; இலை, பழம், நிழல், அடிமரம்,
( சந்தனம், அகில் போன்றவை )வாஸனை, பால், பஸ்மம், இப்படிப் பலப்பலவாகக்
கொடுத்து, மனிதர்களின் ஆசையைப் பூர்த்தி செய்கிறது;
இதுதான் வாழ்க்கையின் ஸாரம்—-ஜன்ம சாபல்யம் —திரேகம் எடுத்தவை
பிறருக்காக வாழ்ந்து, தன்னை அழித்துக் கொண்டாவது,
பிறருக்கு உதவுவது உயர்ந்த சுப லக்ஷணம் .
தன்னுடைய ஆயுஸ், பணம், வாழ்க்கை ஜீவனம், புத்தி, வாக்கு, ப்ராணன்
இவைகள் பிறருக்கு உபயோகப்பட்டால், அதுவே ஸ்ரேயஸ்….”
இப்படிப் பேசிக்கொண்டே, நீ, பச்சைப் பசேலென்ற புல்வெளிப்
பிரதேசத்தை,அடைந்தாய். கோபர்கள் , யமுனையில்இறங்கி ஜலத்தை
அள்ளி அள்ளிக் குடித்தார்கள். அவர்களுக்குப் பசி. உன்னையும்,
பலராமனையும் அணுகி, பசிக்கிறது; ஆகாரம் வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள்.
22 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்.

—————————————————————————————————————————

— தசமஸ்கந்தம் நவீன பாணியில் —– 23 வது அத்யாயம்
—————————
யக்ஜ பத்நிகளுக்கு அருளியது
————————————-
கோபர்களால், பசி என்றும், ஆகாரம் வேண்டும் என்றும்
பிரார்த்திக்கப் பட்டதும், நீ, ஆதுரத்துடன்அவற்றைக் கேட்டு,
கோபர்களிடம் பேசினாய்.
ஹே….மித்ரர்களே…… ப்ரஹ்மவாதிகள்…….ப்ராம்மணர்கள்…..
.ஸ்வர்க்கம் செல்லவேண்டும் என்கிற எண்ணத்துடன், “அங்கிரஸம் ”
என்கிற “ஸத்ர ” யாகத்தை, அதோ தெரியும் பர்ணசாலையில்…….யக்ஜ பூமியில்,
செய்துகொண்டு இருக்கிறார்கள். நீங்கள், அவர்களிடம்போய்,
நானும், பலராமனும் அனுப்பியதாகச் சொல்லி, “அன்னம் கொடுங்கள் ”
என்று கேளுங்கள் என்று சொன்னாய்.
கோபர்கள், அவ்விதமே செய்கிறோம் என்று உன்னிடம் சொல்லி,
யக்ஜவாடிகைக்குச் சென்று, பிராம்மணர்களை அஞ்சலி செய்து,
பூமியில் விழுந்து எழுந்திருந்து, “ஹே……பூதேவர்களே…..நாங்கள் பசுமாடுகளை
மேய்த்துக் களைத்துப்போய் இருக்கிறோம் எங்களுக்குச் சரியான பசி.
பலராமனுக்கும் ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் சரியான பசி.
அவர்களுடைய கட்டளைப்படி, உங்களுக்கு அவர்கள்மீது விசுவாசமும்
ச்ரத்தையும் இருக்கிறதென்றால், சாப்பிடுவதற்கு அன்னம் தந்து உதவுங்கள்
நீங்கள் தர்மம் அறிந்தவர்கள். யாகதீக்ஷையுடன், க்ருஹஸ்தன் ஹோமம் செய்யும்
அன்னத்தைச் சாப்பிடுபவர்களைப் போல , நீங்கள் கொடுக்கும் அன்னம்
தோஷத்தை ஏற்படுத்தாது. இது பகவத் ஆக்ஜை…. என்றார்கள்.

ஆனால்…..ஹே…கிருஷ்ணா….அந்தப் ப்ராம்மணர்கள்,
தங்களைப் பெரும் பண்டிதர்கள் என்று நினைத்து, ஸ்வர்க்கம் செல்வதிலேயே
ஆசையாக, கோபர்களுக்கு அன்னத்தைக் கொடுக்கவில்லை.
அந்தப் பண்டிதப் ப்ராம்மணர்கள்—–மூடர்கள். உன் நிஜ ஸ்வரூபத்தை அறியவில்லை.
உன்னை, சாதாரண மனுஷ்யக் குழந்தையாக நினைத்தார்கள்.
க்ருஷ்ணனான , நீயே—-பகவான் விஷ்ணு.;
நீயே யக்ஜ வபு; நீயே தேசம்; நீயே காலம்;
நீயே பூஜா த்ரவ்யம்; நீயே மந்த்ரம்; நீயே தந்த்ரம்;
நீயே ருத்விக்குகள் உச்சரிக்கும் மந்த்ரம்;
நீயே, ஹவிஸ் செய்யும் பொருள்; எந்தத் தேவதையைக்
குறித்து யாகம் செய்யப்படுகிறதோ, அந்தத் தேவதையின் அந்தராத்மா நீதான்;
நீயே, அந்த யாகத்தை அங்கீகரிக்கிறாய்; நீயே, அதற்கு உரிய பலனைக்
கொடுக்கிறாய்; நீயே ருத்விக்குகள்; நீயே, யாக தீக்ஷத யஜமானன்;
நீயே தர்மம்; நீயே யக்ஜமயம் ; நீயே பரப்ரஹ்மம்; நீயே, பூமியில் ஸ்ரீ கிருஷ்ணனாக
அவதரித்து இருக்கிறாய்; இவையெல்லாம் தெரியாமல், உன்னை,
மனுஷ்ய சிசுவாக நினைத்து, தேக, ஆத்ம, விவேகமில்லாத அந்தப் பண்டிதர்கள்,
உன்னை உபேக்ஷித்தனர். அன்னம் தருகிறேன் என்றோ,
தரமுடியாது என்றோ எந்தப் பதிலையும் கூறாமல் உதாசீனப் படுத்தினர்.
கோபர்கள், நிராசையுடன், ஏமாற்றமடைந்து,
உங்களிடம் வந்து நடந்ததைச் சொன்னார்கள்.

நீ சிரித்துக்கொண்டாய். கோபர்களைப் பார்த்து, மறுபடியும் கூறினாய்.
கோபர்களே…..என்னிடம் அன்பைச் செலுத்தி, மனஸ்ஸை அர்பணித்துள்ள
யக்ஜபத்னி களிடம் போய், நானும், சங்கர்ஷணனும் வந்திருக்கிறோம் என்று
சொல்லி, அவர்களிடம் கேளுங்கள்……
கோபர்கள், திரும்பவும் யக்ஜசாலைக்கு வந்தார்கள்;
யக்ஜபத்நிகளைப் பார்த்தார்கள்
“யக்ஜம்செய்யும் ரிஷிகளின் பத்நிகளே…..உங்களுக்கு எங்கள் நமஸ்காரங்கள்….
.நாங்கள் பசுக்களை மேய்ப்பவர்கள்; பசுக்களை மேய்த்துக்கொண்டு,
நாங்களும், பலராமனும், ஸ்ரீ கிருஷ்ணனும் இவ்வளவு தூரம் வந்து விட்டோம்;
எங்களுக்குப் பசிக்கிறது; ஸ்ரீ கிருஷ்ணனாலும், பலராமனாலும் அனுப்பப்பட்டு,
உங்களிடம் அன்னத்தை யாசித்து வந்திருக்கிறோம் ……என்றார்கள்

இந்த வார்த்தைகளைக் கேட்டார்களோ இல்லையோ, அடுத்த க்ஷணம்,
ரிஷிபத்னிகள், உன்னுடைய கதாம்ருதத்தால் மோஹிக்கப்பட்ட
அந்த உத்தம ஸ்திரீகள்,
ருசியானவை,
சூடானவையான நான்கு விதமான அன்னங்கள்,
பக்ஷணங்கள், ஆகியவைகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்கள்.
யாகம் செய்யும் ரிஷிகள் அவர்களைத் தடுத்தார்கள். பந்துக்கள் தடுத்தார்கள்;
சஹோதரர்கள் தடுத்தார்கள் . இப்படிப் பலரும் தடுத்தும்,
ரிஷிபத்னிகள் அவர்களை லக்ஷ்யம் செய்யவில்லை.
உன் கதாம்ருதத்தைப் பருகி, மனசைப் பறி கொடுத்து இருந்த அவர்கள்,
கோபர்கள் பின்னாலேயே அன்னம், பக்ஷணங்களைச் சுமந்துகொண்டு,
ஓடோடி நீ இருக்குமிடம் வந்து சேர்ந்தார்கள். உன்னைப் பார்த்தார்கள்;
அப்போது, நீ, எப்படி இருந்தாய் தெரியுமா !

ச்யாமள நிறம்; தங்கத்தால் ஆன பீதாம்பரத்தை
உடுத்திக் கொண்டிருந்தாய்; மார்பில் வனமாலை; தலையில் மயில் தோகை;
மற்றும் பலப்பல புஷ்பங்கள்; இலைகள்; காது ஓரங்களில் உத்பல புஷ்பங்கள்;
தாமரை வதனம்; அதில் புன்சிரிப்பு; புன்சிரிப்புடன் அவர்களைக் கடாக்ஷித்தாய்.
ஹே….கிருஷ்ணா…
அந்தக் கடாக்ஷ வீக்ஷிண்யத்தாலே ,ரிஷிபத்நிகளின் நெஞ்சம் நிரம்பியது.

ஹே….கிருஷ்ணா… நீ சர்வக்ஜன்….கணவன்மார்கள் தடுத்தபோதும்,
உன்னிடம் உள்ள பக்தியால் உன்னைப் பார்க்கும் ஆசையில்
ஓடோடி வந்து இருக்கிறார்கள். அவர்களிடம் நீ சொன்னாய்.

உங்களுக்கு நல்வரவு; நீங்கள் என் ஆத்மப் பிரியர்கள்;
உங்களது பிராணன், மனஸ், புத்தி, பதி, தனம் எல்லாவற்றையும்
என்னிடம் அர்ப்பணித்தீர்கள்;
நான் மிகவும் திருப்தி அடைந்தேன்; யக்ஜசாலைக்குத்திரும்புங்கள்;
உங்கள் பதிகள் யக்ஜத்தை நிறைவேற்றட்டும் .

அதற்கு , ரிஷிபத்னிகள், ஹே….பரமாத்மா…..நாங்கள்,
வெகு ஸ்ரமத்துடன் துளசி தாசர்களாக ஆகி இருக்கிறோம்;
உமது பாத பத்மங்களை அடைந்து, அங்குள்ள துளசியை ,
எங்கள் சிரஸ்ஸில் சூட்டிக்கொண்டிருக்கிறோம்;
அதை, உமது கால்களால் உதைத்ததுபோல் இருக்கிறது, உமது பேச்சு;
பந்துக்கள், மித்ரர்கள், பதிகள் இவர்கள் எல்லாரையும் விட்டு விட்டு,
நீயே கதி என்று வந்து விட்டோம்; இப்போது திரும்பிப்போனால்,
பிதாக்களோ, மாதாக்களோ, பந்துக்களோ ஒருவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்;
உமது பாதங்களில் விழுந்து சரண் அடைந்த எங்களைக் காப்பாற்று;
உம்மைத்தவிர வேறு கதி இல்லை……..என்றார்கள்.

ஹே….ரிஷிபத்நிகளே…….உங்களுடைய கணவன்மார்களோ,
பந்துக்களோ, மேலே ஆகாசத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் தேவர்களோ,
எந்தக் குறையும் சொல்லமாட்டார்கள்;
என்னுடன் உங்கள் ஆத்மாவை ஐக்கியப் படுத்தினீர்கள்;
என் பாதஸ்பர்சம் பெற்றதால், உங்களுக்கு எந்தக் குறையும் இல்லை
என்று சொல்லி ஆசீர்வதித்தாய்.

ரிஷிபத்னிகள் ,திருப்தி அடைந்து, யாகசாலைக்குத் திரும்பினார்கள்.
ரிஷிகள் தங்கள் யாகத்தை நிறைவு செய்தார்கள். நீயும், பலராமனும், கோபர்களும் ,
ரிஷிபத்னிகள் கொண்டுவந்து கொடுத்த வைகளைச் சாப்பிட்டீர்கள்.
இப்போது, ரிஷிகளுக்கு, மனவருத்தம் ஏற்பட்டது.
பகவான் கட்டளையால், நம்மிடம் வந்த கோபர்களை உல்லங்கனம் செய்துவிட்டோமே….
ஆனால், இந்த ஸ்திரீகள் பக்தியினால், பகவானைத் தரிசித்து விட்டார்களே……
.நமது ஆத்மா நாசமடைந்து விட்டதே…..வேதங்களை ஓதி என்ன பயன்…
பிராம்மணப்பிறவி, யாகம் எல்லாம் வீணாகி விட்டதே…..
இது பகவான் செய்யும் மாயை என்று அறியாமல் இருந்து விட்டோமே…
.இந்த ஸ்த்ரீகளுக்கு,நம்மைப் போல எந்த சம்ஸ்காரமும் இல்லை;
வித்யை இல்லை; ஆனால், விலை மதிக்க முடியாத கிருஷ்ண பக்தி இருக்கிறது;
அது, நம்மிடம் இல்லாமல் போய் விட்டது…நாம், படித்தும் மூடர்கள்….
நல்லது,கெட்டது தெரியவில்லை…படிப்பு இருந்து என்ன பயன்..
நமது பக்தியினால், பகவானுக்கு என்ன லாபம் ? நமக்கல்லவா லாபம் !
அதை விட்டு விட்டோமே…பசிப்பதற்கு அன்னம் வேண்டுமென்று
பசிப்பவனைப்போல நடித்த , பகவானை
ஏமாற்றிவிட்டோமே….நமக்கு மோக்ஷம் கொடுக்கும் பிரபுவுக்கு,
அன்னம் கொடுக்காமல் இருந்து விட்டோமே…..
நமக்கு, ஹரி இல்லால், வேறு பகவான்இல்லை…
.குற்றங்களை மன்னிக்கும்படி பிரார்த்திப்போம்…..
ஸ்ரீ மஹா லக்ஷ்மி, பகவத் பக்தியைக் கொடுப்பவள்….புருஷகார பூதை….
அவளையும் பூஜிப்போம்…ஸ்ரீ கிருஷ்ணனே விஷ்ணு…..
அவரே, யோகிகளுக்கெல்லாம் மேலானவர்…
அவரே, ஸ்ரீ கிருஷ்ணனாக ,யது குலத்தில் அவதரித்து
இருக்கிறார் என்பதை அறியவில்லையே……
இந்தப் பேரறிவு, பத்நிகளால் அல்லவா வந்தது !
அவர்களைப் பத்நிகளாக அடைய நாம் பாக்யம் பெற்றவர்கள்…
அவர்களுடைய புத்தி, ஸ்ரீ கிருஷ்ணனிடம் பூரணமாக
அர்ப்பணிக்கப் பட்டதைப்போல நாமும் அர்ப்பணிப்போம்…..
எங்கள் குற்றங்களை மன்னியுங்கள் என்று பிரார்த்திப்போம்…
.ஸ்ரீ மஹா லக்ஷ்மியுடன் கூடிய ஸ்ரீ மஹா விஷ்ணுவை—–
ஸ்ரீ கிருஷ்ணனாக அவதரித்து இருப்பவனை நமஸ்கரிக்கிறோம்…
என்றார்கள்.

( ஹே….கிருஷ்ணா……அடியேனுக்குப் பண்டிதர்களான
பிராம்மணர்கள் வேண்டாம்…..வேதாந்திகள் வேண்டாம்…..யக்ஜ பத்நிகளை
குருவாக வரித்து, உன்னைச் சரண் அடைகிறேன்….
.இதற்கு, ஸ்ரீ சுகரும் பரீக்ஷித் ராஜனும் சாக்ஷி )

இப்படி, ஸ்ரீ கிருஷ்ணனை நமஸ்கரித்த பிராம்மணர்கள்,
உனக்குச் செய்த அவமானத்தாலும், கம்சனிடம் உள்ள பயத்தாலும்
, யாகசாலையை விட்டு வெளியே வரவில்லை.
அது அவர்கள் துர்பாக்கியம்

23 வது அத்யாயம் நிறை வடைந்தது. ஸு ப ம்
—————————————————————————————

தசமஸ்கந்தம் நவீன பாணியில்——அத்யாயம் 24
——————-
கோவர்த்தன கிரிக்கு பூஜை
—————————–
இப்படியாக, கோபாலகர்கள், கோபிகைகள், பசுக்கள் யாவரும்
நீயும், பலராமனும் செய்யும் லீலைகளை அனுபவித்துக்கொண்டு,சந்தோஷமாக
இருந்தார்கள். அப்போது ஒரு நாள்…….

இந்திரனைக் குறித்து யாகம் செய்வதற்காக, ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.
இதை, நீ பார்த்தாய். இந்த யாகம் , யாருக்காக, எதற்காக என்று தெரிந்திருந்தும்,
(நீ பரமாத்மா அல்லவா ) நீ, நந்தகோபனைக் கேட்டாய்; பெரியவர்களைக் கேட்டாய்.
“கோலாகலமாக ஏற்பாடுகள் செய்கிறீர்களே,
யாருக்காக, எந்த பலனை உத்தேசித்து இப்படி ஏற்பாடுகள் செய்கிறீர்கள்?
பண்டிதர்கள், தீர்க்கமாக ஆலோசனை செய்து, கர்மாவைத் தொடங்கி
அதைச் செய்து, ஸித்தியை அடைகிறார்கள்;
அவிவேகிகள், ஆலோசனை செய்யாமல் கர்மாக்களைச் செய்தால்,
அந்தப் பலனை அடைவதில்லை;
ஆதலால், இந்தக் கோலாகலம் எதற்காக ….? ” என்று கேட்டாய்.

இதற்கு, நந்தகோபன் பதில் சொன்னார். “குமாரா…..நானும் மற்றவர்களும்,
இந்திரனை…..மேகங்களுக்கு அதிபதியாக இருப்பவனை….
.பூஜை செய்யப் போகிறோம்; இந்திரன், மழைக்குத் தேவதை;
மேகங்கள் அவனிடமிருந்து உண்டாகின்றன;
அவன் அருளால், மழை வர்ஷிக்கிறது; அதனால், கோக்கள், என்று
எல்லாருக்கும் சுபிக்ஷம் ஏற்படுகிறது;
தொன்றுதொட்டு, இதை நடத்தி வருகிறோம் ” என்றார்.

அதற்கு, நீ, இந்திரனுடைய கர்வத்தை அடக்குவதற்காக
மனத்துக்குள் தீர்மானித்து, பதில் சொன்னாய்.
” பிதாவே….ஒரு ஜீவன் கர்மாவினால் பிறக்கிறான்;
சுகம், துக்கம், பயம் எல்லாம் கர்மாவினால் ஏற்படுகிறது;
கர்மாவினாலேயே முடிவை அடைகிறான்;
பகவான், அந்தந்தக் கர்மாக்களுக்கு , அதற்கு உரிய பலனை அளிக்கிறார்;
அதனால், அவர்தான் பூஜிக்கப்படவேண்டும்;
இந்திரன், பகவான் அல்ல; கர்மாதான் எல்லாவற்றுக்கும் காரணம்;
கர்மாவுக்குக் குரு பகவான்; இந்திரன் அல்ல;
பகவானை விட்டு விட்டு, அந்நிய தேவதையைப் பூஜிபபது சரி அல்ல;
சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய மூன்று குணங்களே
ஸ்திதி, உற்பத்தி, நாசம் ஆகிய மூன்றுக்கும் காரணம்;
ரஜோ குணத்தால், உலகம் பலவிதமாக விரிவடைகிறது;
உற்பத்திக்குக் காரணம், ரஜஸ்;
இதனால், மேகங்கள் வர்ஷிக்கின்றன; வர்ஷிக்கும் ஜலத்தால்
எல்லாப் பிராணிகளும் சந்தோஷம் அடைகின்றன;
இதில், இந்திரன் செய்வது என்ன இருக்கிறது ?
நாம், நித்யம் வனத்தில் சஞ்சரித்து, காடுகளிலும், மலையிலும்
பசுக்களை ஓட்டிக்கொண்டு திரிகிறோம்;
ஆகவே, ஆராதிக்கப்பட வேண்டியவை பசுக்கள், பிராம்மணர்கள்,
இதோ இந்தக் கோவர்த்தன மலை;
இப்போது சேகரித்து வைத்துள்ள த்ரவ்யங்களால், இந்த மூன்றையும் பூஜிப்போம்;
இந்திரனுக்கு வேண்டாம்; பிதாவே, நீங்கள் யாவரும் சம்மதித்தால்,
இப்படியே செய்வோம்; இதனால், பசுக்கள், பிராம்மணர்கள், கிரி மூவரும்
சந்தோஷித்து, நமது இஷ்டங்களைப் பூர்த்தி செய்வார்கள்;
இது என் அபிப்ராயம் ” என்று சொன்னாய்.

உன்னுடைய, இந்த யோசனையை, நந்தகோபரும், மற்ற கோபர்களும் கேட்டு,
“நல்லது, நல்லது….” என்று சொல்லி, பசுக்கள், பிராம்மணர்கள், கோவர்த்தனகிரி ……..
பூஜையை ஆரம்பித்தார்கள்.
இந்திரனுக்குச் செய்யவேண்டிய யாகத்துக்காக சேமிக்கப்பட்ட த்ரவ்யங்கள்
இவைகளுக்கு உபயோகப்பட்டன. பிராம்மணர்கள், சந்தோஷித்து, ஆசீர்வாதம் செய்தார்கள்.
நீ, பெரிய ரூபமாக எடுத்து, நானே கோவர்த்தன கிரி என்று சொல்லி,
எல்லாவற்றையும் சாப்பிட்டாய். கோபர்கள் நமஸ்கரித்தனர்.
அவர்களுடன் சேர்ந்து, நீயும் பூஜித்து, “பெரிய ரூபத்தைப் பாருங்கள்….நாம் கொடுக்கும்
பூஜை த்ரவ்யங்களை ஏற்று, நம்மை, இந்தக் கோவர்த்தன கிரி அனுக்ரஹிக்கிறது ;
எவர்கள் தன்னை மரியாதை செய்யவில்லையோ அவர்களைக் கொல்கிறது;
நம்முடைய நலன், பசுக்களுடைய நலம் இவற்றுக்காக கோவர்த்தன கிரியைப்
பூஜித்து வணங்குவோம் …..” என்றாய். எல்லோரும், அப்படியே கிரியைப் பூஜித்தனர்
. பிறகு, அவரவர் வீடு திரும்பினர்.

24 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸு ப ம்

கோவர்த்தனகிரிதாரி
——————————
இந்திரனுக்குப் பிரமாதமான கோபம்; தனக்குச் செய்ய வேண்டிய பூஜையை வழக்கம்போலச் ெய்யாமல்,மலைக்குச் செய்ததால் இந்தக் கோபம்.
ஸம்வர்த்தகம் என்கிற மேகக் கூட்டங்களைக் கூப்பிட்டான்;
“”கோபர்களுக்கு மிகவும் மதம் பிடித்து விட்டது;கர்வம் அவர்களுக்கு; கிருஷ்ணன் என்கிற ஒரு சாதாரண மனிதக் குழந்தையின் சொல்லைக் கேட்டு
என்னை அலட்சியம் செய்துவிட்டனர்;
கர்மவசப்பட்ட சாமான்ய மனுஷ்யர்கள்,தங்களைப் பண்டிதர்களாக நினைத்து, சம்சாரத்தைத் தாண்டும் செயல் போல இது இருக்கிறது;
செல்வச் செருக்காலே என்னை அவமதித்து,
அற்ப மானிடப் பையன் —-மூடன்——தன்னைப் பண்டிதன் என்று நினைத்து இறுமாப்புடன் உள்ள இந்தக் கிருஷ்ணனின் பேச்சை நம்பிஎனக்கு அநீதி செய்கிறார்கள்; நீங்கள் கூட்டமாகச் சென்று,பிரளய காலத்தில் எப்படி மழையாகப் பொழிவீர்களோ அப்படி மழையைப் பொழிந்து சர்வ நாசத்தை உண்டாக்குங்கள் “” என்று கட்டளை இட்டான்.

ஹே……கிருஷ்ணா….உன்னை , இன்னாரென்று இந்திரன் அறியவில்லை
. ஸம்வர்த்தகம் என்கிற அந்த மேகக் கூட்டங்கள், இந்திரனின் ஆணைப்படி, அசுர வேகத்துடன் இடியும் மின்னலுமாக தாரை தாரையாக பலத்த காற்றுடன்
ஆலங்கட்டியாக ,கற்களை வர்ஷிப்பதுபோல இடைவிடாமல் மழையைப் பொழிந்தன
. வ்ரஜபூமி முழுவதும் வெள்ளக்காடு ஆகக் காக்ஷி அளித்தது.
கோபர்களும்,கோபியர்களும் , பசுக்களும் நடுநடுங்கினர்;
ஹே கிருஷ்ணா—–ஹே கிருஷ்ணா —உன் பாதங்களைச் சரண் அடைந்தோம்; பக்தவத்சலா —-நீதான் துணை—நீதான் எங்களைக் காக்க வேண்டும் என்று உன்னை அடைக்கலமாக வந்து சரண் அடைந்தனர்;பலத்த காற்று, கல்மழை , வெள்ளப் பெருக்குஇவைகளை நீ பார்த்தாய்.
சரி, இது இந்திரனின் கோபத்தால் விளைந்த செயல் என்று அறிந்தாய். இதற்கு ஒரு மாற்று உபாயம் தேடி ,தங்களை சர்வ லோகங்களுக்கும் அதிபதி
என்று நினைத்து, மூடத்தனத்தினால் எதிர்ப்பவர்களை சிக்ஷிக்கிறேன் என்று சங்கல்பித்தாய்

. யோக சக்தியால் இவர்களை காப்பாற்ற வேண்டும் என்று தீர்மானித்தாய்.
சரணம் என்று சொன்னவர்களை—–சரணம் என்று வந்தவர்களை——
காப்பாற்றுவது உன் வ்ரதம் அல்லவா !
இப்படி உனக்குள் சங்கல்பித்து, மழையில் தோன்றி இருக்கும் காளானை எடுப்பது போல ஒரு கையால் கோவர்த்தன கிரியை ,அடித் தளத்தோடு பெயர்த்து எடுத்து,உன்னுடைய இடது கையின் சுண்டு விரலால் தாங்கி , உயரத் தூக்கி, உரக்கச் சொன்னாய்
ஹே–கோபர்களே,கோபியர்களே—-வயதானவர்கள், இளம் சிறார்கள் , பசுக்கள், கன்றுகள் எல்லாரும் உங்கள் உடைமைகளுடன் ,இந்தக் குடையின் கீழே வாருங்கள், உங்களுக்கு எந்தப் பயமும் வேண்டாம்,
மலை நழுவி விழுந்து விடுமோ பலத்த காற்று அடித்துக்கொண்டு போய்விடுமோ ,மழைவெள்ளம் உயிரைப் பறித்து விடுமோ என்கிற எந்தப் பயமும் வேண்டாம், சரணம் என்றவர்களைக் காப்பாற்றுவது
என் வ்ரதம், உங்கள் எல்லாருக்கும் அபயம் அளிக்கிறேன் —-“என்றாய்

உடனே, கோபர்கள், கோபியர்கள் வயதான ஸ்திரீ புருஷர்கள் , நந்தகோபன் யசோதை ரோஹிணீ பசுக்கூட்டங்கள் வண்டிகள் இவர்களின் உடைமைகள் என்று எல்லாமே கோவர்த்தன கிரியின்அடியிலே புகுந்தனர். உன்னுடைய தர்சனம், கடாக்ஷ வீக்ஷிண்யம்
இவற்றாலே அவர்களுக்கு இயற்கையாக ஏற்படும் பசி இல்லை;தாகம் இல்லை;. மிகவும் சௌகர்யமாக , ஒருநாள், அல்ல,
இருநாட்கள் அல்ல—–ஏழு நாட்கள், கோவர்த்தன மலையின் அடியில் –உன் திருவடி நிழலில் , எவ்வித பாதிப்பும் இன்றி இருந்தனர்.
( ஹே—கிருஷ்ணா—உன் கருணை வெள்ளத்தின் முன்னே ,இந்திரனின் மழை வெள்ளம் என்ன தீங்கு செய்ய இயலும் !
ஹே—கிரிதாரி—-கிரிதரகோபாலா—-உன்னை ஆயிரமாயிரம் தடவை நமஸ்கரிக்கிறேன்—இவை போன்ற ஆபத்துக்களில் இருந்து , நீதான் காப்பாற்ற வேண்டும் )

இந்திரன் கலங்கி விட்டான்; பயத்தால் நடுங்கி விட்டான்;
தன்னுடைய தவறுக்கு வருந்தினான்;
மேகங்களைத் திருப்பிப் போகும்படி உத்தரவிட்டான்.
மழை நின்றது ; காற்று அடங்கியது; சூர்யன் தோன்றினான்
நீ, கோபர்கள் எல்லாரிடமும் , இனிமேல் நீங்கள் வ்ரஜ பூமிக்கு—விருந்தாவனத்துக்குச் செல்லலாம் என்று சொன்னாய்.

யசோதையும் நந்தகோபனும் ரோஹிணியும் வ்ருத்தர்களானகோபர்களும் கோபிகைகளும் உனக்குத் திருஷ்டி கழித்து,அக்ஷதை புஷ்பங்கள் தூவி ஆசீர்வதித்தனர்.
பலராமனும் ஆலிங்கனம் செய்து ஆசீர்வதித்தான்.
இவற்றைக் கண்ட தேவ கணங்கள் ஆகாயத்திலே
வாத்தியங்களை வாசித்தார்கள். உன்மீது புஷ்பமாரி பொழிந்தார்கள். கோபர்கள் அவர்களும் வண்டிகள், உடைமைகள் பசுக்கள் இவைகளுடன் தத்தம் இருப்பிடத்துக்குத் திரும்பினார்கள்.
நீ, அந்த மலையை , பழைய இடத்திலேயே வைத்தாய்;
இந்த அதி மானுஷச் செயலை எல்லாரும் பார்த்தார்கள்;
அடியேனும் இப்போது மனக் கண்ணால் பார்த்தேன்
( குன்றம் ஏந்திக் குளிர் மழையிலிருந்து கோக்களையும்
கோபர்களையும் காத்த கிரிதாரி—–ஆண்டாள் பாசுரம் இயற்றி ஆநிரை காத்தவனே என்று புகழந்த உன்னை—-
மீரா பூஜித்த உன்னை —எத்தனை தடவை நமஸ்கரித்தாலும் —
அடியேனின் ஆத்மா திருப்தி அடையவில்லை )

நீயும் விருந்தாவனத்தை அடைந்தாய் ஆனந்த பரவசர்களான கோபிகைகள்,
உன்னுடைய பெருமைகளைப் பாடி, உன்னை எப்போதும் போல ஹ்ருதயத்தில் தரித்தார்கள்
25 வது அத்யாயம் நிறைவடைந்தது —–சுபம்

—————————————————————————

தசமஸ்கந்தம்——நவீன பாணியில்—-அத்யாயம்—-26
—————-

ஸ்ரீ கிருஷ்ணனின் பெருமைகள்—-நந்தகோபன் கொண்டாடுதல்
—————————————————————————————-
(முக்ய விஷயம் :—- சென்ற அத்யாயத்தில், ஸ்ரீ கிருஷ்ணனைச் சரணம் என்று அடையாத
பசுக்களும் கன்றுகளும் ,அசேதனப் பொருட்களும் ,ஸ்ரீ கிருஷ்ணனால் காப்பா ற்றப்பட்டன
என்று பார்த்தோம். இது எப்படி என்று கேட்கிறார்கள்.
காலக்ஷேபம் கேட்டவர்களுக்கு, இதற்கு பதில் தெரியும். )
—————————————————————————————————————————————-
கோபர்கள் ஆச்சர்யப்பட்டார்கள்; கோப ஸ்திரீகள் வியந்து போனார்கள்;
உன்னுடைய அமானுஷ்ய செயல்கள் அவர்களைப் பிரமிக்க வைத்தது
.நம்முடைய கண்ணனா இப்படி வியப்பான செயல்களைச் செய்வது ?
இவன் எல்லாக் குழந்தைகளைப்போல சாதாரண பாலகன் இல்லை ;
ஆனால், நினைப்பதற்கே வெட்கப்படும் ஏழைகளான நம்மிடையே இவன் இங்கு வந்து பிறந்து , வளர்வதற்குக் காரணம் என்ன ?
ஏழு வயதுகூட நிரம்பாத சின்னஞ்சிறு பாலகன், ஒரு பெரிய மலையைப் பெயர்த்து எடுத்து,
இடதுகை சுண்டுவிரலால் அனாயாசமாக ஏழுநாட்கள் தாங்கிக்கொண்டு ,நம்மையெல்லாம் பாதுகாத்தான்; ஆச்சர்யம்

சின்னஞ்சிறு சிசுவாக இருந்தபோது, மகாபலம் கொண்ட பூதனையை ஸ்தன்யபானம் செய்யும் பாவனையில், பாதிக் கண்களை மூடிக்கொண்டு ,
அவள் உயிரையே உறிஞ்சி அவளை முடித்தான்; ஆச்சர்யம்

மூன்றுமாதக் குழந்தையாக இருந்தபோது, தொட்டிலில் படுத்துக்கொண்டே ,தொட்டிலுக்கு அடியில் வண்டி—-சகடம் உருவில் ,தன்னைக் கொல்ல வந்திருந்த அசுரனை ,திருவடியால் உதைத்து ,
அவனை அழித்தான்;ஆச்சர்யம்

ஒருவயதுகூட நிரம்பாத சமயத்தில், தரையில் உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருந்த கிருஷ்ணனை, சுழற்காற்று ரூபத்தில் வந்து தூக்கிக் கொண்டுபோய்க் கொல்ல முயற்சித்த திருணாவர்த்தன் என்கிற அசுரனை ,
அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டே ,கழுத்தை நெறித்துக்கொன்றான்; ஆச்சர்யம்

யசோதை தாம்புக் கயிற்றால் கிருஷ்ணனை, உரலோடு கட்டியிருந்த சமயத்தில் ,உரலையும் சேர்த்து இழுத்துக் கொண்டுபோய் இரண்டு மரங்களுக்கு நடுவில் புகுந்து
உரலை அவற்றின் நடுவே இழுத்து, இரண்டு மரங்களையும் வேரோடு சாய்த்தான்;ஆச்சர்யம்

கோபாலகர்களும் ,பலராமனும் சூழ்ந்து இருக்க, ஒரு அசுரன் கொக்கு வடிவத்தில் வந்து இவனைமட்டில் கொத்தி எடுத்துச் செல்ல, கிருஷ்ணன் அந்தக் கொக்கின்
இரு அலகுகளையும் பிளந்து அந்த அசுரனை முடித்தான்; ஆச்சர்யம்

இன்னொரு சமயம் இதேபோல பசுக்களை மேய்க்கும்போது,கன்றுக்குட்டி உருவில் வந்து இவனைக் கொல்ல நெருங்கிய அசுரனின் இருகால்களைப் பிடித்து விளாமரத்தின்மீது வீசி அந்த அசுரனைக் கொன்றான்; ஆச்சர்யம்

பலராமனும் கிருஷ்ணனும் பனங்காட்டில் ஒருசமயம் விளையாடிக்கொண்டிருந்தபோது,கழுதை உருவில் வந்து கிருஷ்ணனைக் கொல்ல நெருங்கிய
தேனுகாசுரனைக் கொன்றான்; ஆச்சர்யம்

ஒரு சமயம்,பிரலம்பன் என்கிற அசுரன் பலராமனால் கொல்லப்பட்டான்;கோபாலகர்கள் காட்டுத் தீயால் சூழப்பட்டு நடுங்கிய வேளையில்
கிருஷ்ணன் இவர்களையும் பசுக்களையும் காட்டுத்தீயிலிருந்து காப்பாற்றினான்; ஆச்சர்யம்

பிறிதொரு சமயம், சர்ப்பராஜனான காளியனை அடக்கி ,
யமுனையிலிருந்து அவனையும் மற்ற சர்ப்பங்களையும் அகற்றி,யமுாதீர்த்தம் பசு பக்ஷி மரம் மனிதர்கள் யாவருக்கும்
உபயோகப்படும்படி செய்தான் ; ஆச்சர்யம்

இப்போது, ஒரு சுண்டு விரலால் மிகப் பெரிய மலையான கோவர்த்தன கிரியை எடுத்துத் தூக்கிப் பிடித்து ஏழுநாட்கள் அதை—அந்த மலையைக்
குடைபோலத் தாங்கி எங்கள் எல்லாரையும் காப்பாற்றினான்; அதி ஆச்சர்யம்

ஹே நந்தகோபா, ஹே யசோதா—–இந்தக் கிருஷ்ணன் ,உங்களுக்குமட்டில் புத்ரன் அல்ல
, எங்கள் புத்ரனைப்போல அன்புடன் அவனை நாங்கள் நேசிக்கிறோம்;
இவன் சாதாரண பாலகன் இல்லை; அதிமானுஷச் செயல்களைச் செய்கிறான்;
இவன் அந்த பகவான்தான் என்று கோபர்கள் கூறினார்கள்.

அதற்கு , நந்தகோபன்
கோபர்களே,கிருஷ்ணனின் சின்னஞ்சிறு வயதிலேயே , கர்க்கரிஷி இங்கு வந்திருந்து,இந்தக் குழந்தை, ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு வர்ணத்துடன்
பல ரூபங்களில் பிறந்து இருக்கிறான்; கருப்பு வர்ணத்துடன், இவன் வசுதேவருடைய க்ருஹத்தில் பிறந்தான்;இவனுக்குப் பல ரூபங்கள், பல நாமங்கள் உண்டு ;அவைகளை நான் அறிவேன்; மற்றவர்கள் அறியமாட்டார்கள்; இந்தக் குழந்தை உங்களுக்கு, கோகுல வாசிகளுக்கு நன்மை யை அளிப்பான்;
ஆனந்தத்தை அளிப்பான்; இவனால் உங்கள் அனைவர்க்கும் வரும் கஷ்டங்கள் விலகும்;
ஆபத்துக்கள் அகலும்; இவனிடம் அன்பு செலுத்துபவர்கள் பாக்யசாலிகள்;
அவர்களை எந்த எதிரியாலும் வெல்ல முடியாது;
எவனைக் கீர்த்தனம் செய்வதாலும், கதாம்ருதத்தைக் கேட்பதாலும் எல்லாப் பாபங்களும் தொலைந்து நற்கதி ஏற்படுமோ அவனே உனக்குக் குழந்தையாக வந்து இருக்கிறான்
இப்படியாக,ஸ்ரீ கர்க்காசார்யர் என்னிடம் சொன்ன நாளிலிருந்து,கிருஷ்ணனை என் பிள்ளையாகப் பார்ப்பதில்லை;
சாக்ஷாத் ஸ்ரீ நாராயணனின் அம்சமாகவே பார்க்கிறேன் ;
நம் துன்பங்களைப் போக்க வந்த பிரபுவாகக் கருதுகிறேன்என்று நாத்தழுதழுக்க, மெய்சிலிர்க்க விரித்து ரைத்தான் .

ஹே—-கிருஷ்ணா—-கோபர்கள்
மிக மிக ஆ ச்சர்யப்பட்டார்கள்.
நந்தகோப னையும் யசோதையையும் உன்னையும் மிகவும் கொண்டாடினார்கள்.
உன்னை வேண்டிக்கொண்டார்கள்
ஹே,பிரபோ,எப்போதும் எங்களுக்கு அநுக்ரஹ ம் செய்யவேண்டும்;
இந்திரன் கோபித்து ,இடி மின்னலுடன் பெரிய மழையை உண்டாக்கிஎங்களை அழிக்க முற்பட்டபோது, கோவர்த்தனகிரியை அனாயாசமாகப்
பெயர்த்து எடுத்து ,இடது சுண்டு விரலால் தூக்கி நிறுத்தி ஏழுநாட்கள் எங்களுக்கு எவ்வித ஸ்ரமமும் இன்றி எங்களையும் பசுக்களையும்கன்றுகளையும் ரக்ஷித்தீரே
உமக்கு ஆயிரமாயிரம் நமஸ்காரங்கள் என்று கண்ணீர் மல்கஉனக்கு நமஸ்காரங்களைச் செய்தார்கள்

( அந்தக் கோபர்களை அடியேன் நமஸ்கரிக்கிறேன்—–நந்தகோபரையும் யசோதையையும் நமஸ்கரிக்கிறேன்—-அவர்களை முன்னிட்டுஉன்னை ஆயிரமாயிர முறை நமஸ்கரிக்கிறேன் )

26 வது அத்யாயம் நிறைவடைந்தது. சுபம்

—————————————————————————-

தசமஸ்கந்தம்——-நவீன பாணியில்—-அத்யாயம் 27
——————

இந்திரனின் ஸ்துதி—–காமதேனுவின் ஸ்துதி–கோவிந்த பட்டாபிஷேகம்
————————————————————————
வ்ரஜபூமி வாசிகளையும்,பசுக்களையும் , கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்து
நீ காப்பாற்றியதைப் பார்த்த காமதேனு என்கிற பசு தேவலோகத்தில் இருந்துஇங்கு உன்னிடம் வந்தது.இந்திரன் யோசித்தான்; தன் செயலுக்கு
மிகவும் வெட்கப்பட்டான்; அவனும் ,நீ தனியாக இருக்கும் சமயத்தை எதிர்பார்த்துக் காத்து இருந்து ,தேவ லோகத்தில் இருந்து கீழிறங்கிஉன் இருப்பிடம் வந்தான்.

அவனுடைய தலைக் கிரீடம் பூமியில் படியும்படிகீழே விழுந்துஉன்னை நமஸ்கரித்தான். உன்னை அஞ்சலி செய்தான். ஸ்தோத்ரம் செய்யத் தொடங்கினான்

ஹே—பிரபோ—–உமது ஸ்வரூபம், விசுத்தஸத்வம்—-
-இந்த உலகம் உம்மிடமிருந்து தோன்றினாலும், அதன் தோஷங்கள் உம்மை அண்டாது;
மனுஷ்யர்களுக்கு ஏற்படும் மறுபிறப்பு, லோபம், தேகத்தையே ஆத்மாவாகக்கண்டு பிரமித்தல் இவை யாவும் சம்சாரிகளுக்கு அடையாளங்கள்;
நீர் பகவான்; உம்மிடம் இந்த தோஷங்கள் கிடையாது;
நீர் சர்வ நியந்தா; தவறு செய்பவர்களைத் தண்டிக்கும் சக்தி பெற்றவர்;
நீரே எங்களுக்குப் பிதா;
நீரே எங்களுக்குக் குரு;
நீர்,யாராலாலும் ஜெயிக்கப்பட முடியாதவர்;
உலக க்ஷேமத்துக்காக ,மனுஷ்ய தேகத்தை எடுத்துக் கொண்டு இருக்கிறீர்;
நிஜ ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு இருக்கிறீர்;
மதம்—கர்வம் கொண்ட என்னைப் போன்றவர்களின் கர்வத்தை அழிக்கிறீர்;
நாங்கள்,அற்ப புத்திசாலிகள்; உம்மை அலட்சியப்படுத்தி இருக்கிறோம்;
அதைப் பொருட்படுத்தாமல் ,பிரார்த்திக்கும்போது அபாயத்தை அளிக்கிறீர்;
அதனால்,உம்மிடம் பக்தி மேலோங்குகிறது;
நாங்கள் ஜகத்துக்கு ஈசர்கள் என்கிற அபிமானம் அழிகிறது;
உமது கட்டளையை சிரமேற் கொள்கிறோம்;
கர்வத்தில் மிதந்த எனக்கு, உமது பிரபாவம் எளிதில் புலப்படவில்லை;
அபராதம் செய்துவிட்டேன்;
ஹே—பிரபோ—எங்களை மன்னிப்பீர்களாக ;

மீண்டும் அதே குற்றத்தைச் செய்யாதபடி நல்ல புத்தியை அளிப்பீராக;
உம்மைப் பலதடவை நமஸ்கரிக்கிறேன்;
வாசுதேவருக்கு நமஸ்காரம்—கிருஷ்ணருக்கு நமஸ்காரம்;
உமது ரூபம் உமது சங்கல்பத்தால், பக்தர்களை அனுக்ரஹிக்க ஏற்பட்டது;
விசுத்த ஞான மூர்த்தியான உமக்குப் பல நமஸ்காரங்கள்
; உமது சர்வஸ்மைக்கு நமஸ்காரம்;
சர்வத்துக்கும் ஆதிபீஜமாக ,உபாதான காரணமாக உள்ள உமக்கு நமஸ்காரம்;
அனைத்து ஆத்மாக்களையும் சரீரமாகக் கொண்டு அவற்றுக்கு ஆத்மாவாக
விளங்கும் உமக்கு நமஸ்காரம்; என் அஹங்காரச் செயலாகிற
வ்ரஜா பூமியை நாசம் செய்கிறேன் என்கிறகெட்ட புத்தியைப் பொறுத்துக் கொண்டு,
எனக்கு அருள் புரிவீராக;

என் அஹங்காரம் அழிந்தது; கர்வம் தொலைந்தது; நீரே எனக்கு ஈஸ்வரர்;
நீரே எனக்குக் குரு; நீரே பரமாத்மா; உம்மை நான் சரணமடைகிறேன்;
ரக்ஷியுங்கள்; ரக்ஷியுங்கள்.
என்று பலவாறு துதித்து ,இந்திரன் பிரார்த்தித்தான்.

ஹே—கிருஷ்ணா—நீ,அதற்கு என்ன சொன்னாய் என்பதை ஸ்ரீ சுகர் அருளியதை
உனக்கு இப்போது நினைவுபடுத்துகிறேன்

ஹே,இந்திரா—உனக்கு நல்ல புத்தி ஏற்பட்டு, எப்போதும் என் சிந்தனையோடு நீ இருக்கவேண்டும் என்பதற்காக இந்த லீலை செய்யப்பட்டது;
எவர்கள் ஐஸ்வர்யத்தால் மதம் பிடித்து அலைகிறார்களோ,என்னைப் பக்தி செய்யாமல் இருக்கிறார்களோ
அவர்களின் பதவியைப் பறித்துக் கீழே தள்ளுகிறேன்;
ஐஸ்வர்யத்தை அழிக்கிறேன்;
இதுவும் என்னால் அவர்களுக்குக் காட்டப்படும் அநுக்ரஹம்;உனக்குக் க்ஷேமம் உண்டாகட்டும்; நீ போகலாம்என்று சொன்னாய்.

( ஹே—-கிருஷ்ணா —-அடியேனும் இந்திரனைப்போல கர்வம்கொண்டுஅலைபவன்தான்; அடியேனையும் சதா உன் சிந்தனையிலேயேஇருக்கும்படி அடியேனை ஆக்கி அருள் புரிய வேண்டுகிறேன் )

காமதேனு என்கிற தேவலோகத்துப் பசு இதைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
அவள், உன் அருகில் வந்து உன்னை நமஸ்கரித்தாள்.
தன் மனத்தால் எதையும் செய்யும் வல்லவளான கோமாதா, தன் சந்தானங்களுடன் வந்து உன்னை நமஸ்கரித்து, ஸ்துதி செய்தாள்.

காமதேனு ஸ்துதி
——————————–
கிருஷ்ண—-கிருஷ்ண—-மஹா யோகின்—-
விஸ்வாத்ம ன்—- விஸ்வ சம்பவ—
அனாதர்களாகிய நாங்கள் உம்மால் காப்பாற்றப்பட்டோம் ;
நீர் எங்களுக்கு நாதர்— சகல லோக நாதர்;
அச்யுதா —உம்மை அடிக்கடி நமஸ்கரிக்கிறோம்—-
சதா எங்களைக் காக்கும்படி வேண்டுகிறோம்;
உம்முடைய க்ருபை, தேவர்கள், சாதுக்கள் கோக்கள் எல்லோருக்கும் கிடைக்கிறது;
அவர்களுடைய க்ஷேமத்துக்காக எங்களுக்கும் க்ருபை செய்வீராக;
நீர்,எங்களுக்கு எப்போதும் பதி;
ப்ரும்மாவினால் கட்டளை இடப்பட்ட நாங்கள், உம்மை,
பசுக்களின் நாயகனாக—-இந்திரனாக வரிக்கிறோம் .
இந்தப்பூவுலகில், நீர் ,எங்களை அனுக்ரஹித்து கோவிந்தனாக இருக்கிறீர்,
பூபாரம் ஒழியப்போகிறது, இதனால், நாங்கள், உம்மை கோவிந்தராக
அபிஷேகம் செய்து வணங்குகிறோம்

இவ்வாறு காமதேனு சொல்லி, தன் பால் அம்ருதவர்ஷத்தால்
உன்னை நன்கு நனைத்தாள். இந்திரன்,ஆகாச கங்கையிலிருந்து,
ஐராவதத்தால் ,புண்ய ஜலத்தை எடுத்து வரச் செய்து,
உன்னை அபிஷேகம் செய்தான்.
தேவமாதாக்களானஅதிதி போன்றவர் உடன் இருக்க,
தேவர்கள் ரிஷிகள் அருகில் இருக்க,
இந்திரன் உனக்கு கோவிந்த பட்டாபிஷேகம் செய்தான்
.
தும்புரு, நாரதர், வித்யாதரர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள் ஆடிப் பாடினார்கள்.
கோவிந்தநாமாவைச்சொல்லி ,அடிக்கடிப் பலதடவை சங்கீர்த்தனம் செய்துபுஷ்பங்களால் அர்ச்சித்து அதி சந்தோஷத்துடன் உன் பாதங்களை நமஸ்கரித்தார்கள்.
இந்திரனும், காமதேனுவும் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக உன்னை அர்ச்சித்து நமஸ்கரித்தார்கள்.

இச்சமயத்தில், மரங்கள் தேனைச் சொரிந்தன; புஷ்பங்களை வர்ஷித்தன;
இவ்விதம் உனக்கு, கிருஷ்ணனாகிய உனக்கு கோவிந்த பட்டாபிஷேகம் நடந்தது.
உன்னால் அனுமதி கொடுக்கப்பட்டஇந்திரன் மிகுந்த சந்தோஷத்துடன் தேவர்கள் சூழ ,தேவலோகம் சென்றான்.

(ஹே, கிருஷ்ணா —கோவிந்தா—-உனக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்—-
கோவிந்தா என்று அழைத்த காமதேனுவுக்கு அநேக நமஸ்காரங்கள்—-
பட்டாபிஷேகம் செய்த இந்திரனுக்கு அநேக நமஸ்காரங்கள் )

27 வது அத்யாயம் நிறைவடைந்தது. சுபம்

————————————————————————————————-

தசமஸ்கந்தம் நவீன பாணியில்—-அத்யாயம் 28
—————————-
ஸ்ரீ கிருஷ்ணன், நந்தகோபரை வருண லோகத்திலிருந்து மீட்டது
—————————————————————————————————-
ஒரு சமயம், நந்தகோபர், வழக்கமான ஏகாதசி வ்ரதமிருந்து, பகவானைப் பூஜித்தார்.
த்வாதசி பாரணைக்காக யமுனா நதியில் தீர்த்தமாடச் சென்றார்.
அவர் ஜலத்தில் இறங்கியதும், வருணனுடைய ஏவலாள் ,நந்தகோபரைஅசுரன் என்று தவறாக நினைத்து, அவரை வருண லோகத்துக்குஇழுத்துச் சென்று விட்டான்,. அசுரர்களின் காலம் இரவு;
இவர் தீர்த்தமாடச் சென்றது பின்னிரவு நேரம்;
இதனை நந்தகோபரும் அறியவில்லை;
நந்தகோபரைக் காணாமல், வ்ரஜ பூமியில் எல்லாரும் கதறினார்கள்.
நீ அந்தக் கதறலைக் கேட்டாய். உடனே உனக்கு, உன் பிதாவருணலோகத்துக்குக்கொண்டுபோகப்பட்டது ,தெரிந்தது.
உடனே, நீ வருண லோகத்துக்குச் சென்றாய்.
உன் விஜயத்தை எதிர்பார்க்காத வருணன்,
உன்னை, மரியாதையுடன் மகத்தான பூஜை செய்து வரவேற்றான்.

“ஹே, பிரபோ—-இன்றுதான் அடியேனின் வாழ்வு சபலம் அடைந்தது; பெரிய பொக்கிஷம் கிடைத்து இருக்கிறது; உம்முடைய திருவடிகளைப் பூஜித்து,
சம்சாரக்கடலைத்தாண்டும் பாக்யம் பெற்றேன்;
ஓம் நமோ பகவதே , ப்ருஹ்ம ணே, பரமாத்மனே —–பரமாத்மாவாகிய
உமக்குப் பல நமஸ்காரங்கள்;
என்னுடைய சேவகன் ஒரு மூடன்; அகார்யத்தைச் செய்து இருக்கிறான்;
என்னை மன்னியுங்கள், ஹே, பிரபுவே என்னை
அனுக் ரஹியுங்கள் ;
எல்லாவற்றையும் அறிந்த பிரபுவே, கோவிந்த, பித்ரு வத்சல,
உமது பிதாவை அழைத்துச் செல்லலாம் “என்றான்,

ஹே, கிருஷ்ணா—-ஸ்ரீ சுகர் கூறுகிறார்.
நீ நந்தகோபருடன் திரும்பவும் நந்த க்ருஹம் வந்தாயாம்.
நந்தகோபன் மிக ஆச்சர்யப்பட்டானாம்.
உன்னை, வருண லோகத்தில் வரவேற்ற விவரம் எல்லாவற்றையும்
பந்துக்களிடம் சொல்லி நீ ஈஸ்வரன்தான் என்றானாம்.
அவர்கள் நந்தகோபனிடம் கேட்டார்களாம் இந்தப் பரமாத்மாவாகிய கிருஷ்ணன்,
நம் எல்லாருக்கும் தம்முடைய அழியாத வைகுண்ட ப்ராப்தியை அளிப்பானா ?
தன்னுடைய சங்கல்பத்தாலே நமக்கு நல்ல கதி கிடைக்க அருள்வானா
என்றெல்லாம் கேட்டார்களாம்.

நீ ,உனக்குள் எண்ணமிட்டாயாம்
அவித்யா,காமம், கர்மா இவைகளாலே மனிதன் பலப் பிறவிகள் எடுத்து சம்ஸாரத்தில் மூழ்கி கரையேற வழி இல்லாமல் திண்டாடுகிறான்;
தன்னுடைய சொந்த ஸ்வரூபத்தை உணர்வதில்லை;
இவர்கள் என்னையே நம்பி இருப்பவர்கள் என்று எண்ணி
மஹா கருணையுடன் தமஸ்ஸுக்கு அப்பாற்பட்ட,
உன்னுடைய வைகுண்ட லோகத்தைக் காண்பித்தாயாம்.
எந்த ப்ரஹ்மம் சத்தியமோ க்ஜானமோ, ஆனந்தமோ, அமலமோ,அந்த சனாதனமான பர ப்ரஹ்ம ஜ்யோதிஸ் ஆன நீ,எதனை மஹாயோகிகள் முக்குணங்களைத் தாண்டி —-ஸதா பஸ்யந்தி —-
-ஸதா -பார்த்துக் கொண்டு இருக்கிறார்களோ —-
அந்த மஹோன்னத ஸ்தானத்தை அவர்களுக்குக் காண்பித்தாய்.
இதனால், அவர்கள் உன்னுடைய பர ப்ருஹ்ம நினைவில் மூழ்கி விட்டார்கள்
.உன்னை நான்கு வேதங்களும் புகழ்ந்து பாடுவதையும்,
தேவர் தானவர்கள் அர்ச்சித்து நமஸ்கரிப்பதையும் பார்த்தார்கள்.
அவர்களை மீண்டும் ஸ்வய நிலையை அடையச் செய்தாய்.

28 வது அத்யாயம் நிறைவடைந்தது. சுபம்

சரத்காலம்—ஸ்ரீ கிருஷ்ணனின் வேணுகானம்—
கோபிகைகள் தங்களை மறந்து ,ஸ்ரீ க்ருஷ்ணனிடம் ஓடுதல்
——————————————————————————————————

இந்த அத்யாயத்தில் இருந்து 33 வது அத்யாயம் முடிய
மிக ஆச்சர்யமான”” ராஸ க்ரீடை”” என்கிற
ராதா பஞ்சாத்யாய விபவங்களைப்
பார்க்கப் போகிறோம்

கோபிகைகள் காத்யாயினி வ்ரதத்தை அனுஷ்டித்ததையும் ,
அப்போது நீ அவர்களுக்கு வாக்குக் கொடுத்ததையும்
இப்போது நீ நினைத்துப் பார்த்தாய். (22வது அத்யாயத்தைப் பார்க்க )
அந்த வாக்குறுதியை நிறைவேற்ற சரியான காலத்தை எதிர் பார்த்துக்
காத்து இருந்தாய். அப்படிப்பட்ட காலமான சரத் காலமும் இப்போது வந்தது.

ராத்திரி நேரம்; மல்லிகைப் புஷ்பங்கள் ,மணம் பரப்பிக் கொண்டு இருந்தன;
குமுதமலர்கள் பூத்துக் குலுங்கின; விருந்தாவனம் சந்திர கிரணங்களால் பிரகாசித்தது;
காடு முழுவதும் கோலாஹலம்; எங்கும் பார்க்கப் பார்க்க மனோஹரம்; அதிரஞ்சிதம்;

ஜகன் மோகனனான நீ, உன் புல்லாங்குழலை எடுத்தாய்;
வேணுகானம் செய்யத் தொடங்கினாய்;
வ்ரஜ சுந்தரிகளான கோபிகைகள், வேணுகானத்தைக் கேட்டார்கள்;
வேணுகானம் அவர்களை இழுத்தது;
உன்னால் ஆகர்ஷிக்கப்பட்டனர்;
மனத்தை உன்னிடம்அர்ப்பணித்தனர்;
நீ இருக்குமிடத்துக்கு ஓடி வந்தனர்;
எப்படி ஸதி ஸ்திரீகள் , தங்கள் காந்தர்களிடம் ஓடி வருவார்களோ ,
அப்படி ஓடி வந்தனர்; காதுகளில் அணிந்து இருந்த குண்டலங்கள் ,மகிழ்ச்சியால் ஆடின;
பிரகாசித்தன; அவர்களது ஆசையின் தீவிரம்அன்யோன்ய திருஷ்டிக்கு —–
பார்வைக்கு அப்பால் இருந்தது;

உலகத்தையே மயக்கும் உன் வேணு கானத்தைக் கேட்ட,கோபிகைகள்
நிலைமையை ,ஸ்ரீ சுகர் சொல்கிறார்; அதை இப்போது உனக்குச் சொல்கிறேன்

சிலர் பசுக்களைக் கறந்து கொண்டு இருந்தனர்;
பால் பாத்திரத்தை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்தனர்;
சிலர் , பாலை அடுப்பில் காய்ச்சிக் கொண்டு இருந்தனர்;
அதை அப்படியே விட்டு விட்டு ஓடி வந்தனர்;
சிலர் பாயசத்தை அடுப்பில் வைத்து, இருந்தனர்
.இந்த வேணுகானம் கேட்டதும் ,பாயசத்தை மறந்து ஓடி வந்தனர்;
சிலர், குழந்தைகளுக்கு வேலை செய்துகொண்டு இருந்தனர் ;
அவற்றை அப்ப டியே விட்டு விட்டு ஓடி வந்தனர்;
கணவர்களுக்கு, உணவு இவற்றைக் கொடுத்துக் கொண்டு இருந்தவர்கள்
அந்த சுஸ்ருக்ஷையை அப்படியே நிறுத்தி ,உன்னிடம் ஓடி வந்தனர்;
சிலர் வஸ்த்ரங்களைத்தவறுதலாக அணிந்துகொண்டு ஓடி வந்தனர்;
சிலர் ஆபரணங்களைத் தாறுமாறாக அணிந்துகொண்டு ஓடி வந்தனர்;
கண்களுக்கு அஞ்சனம் இட்டுக் கொண்டு இருந்தவர்கள்
அதை அப்படியே நிறுத்தி விட்டு ஓடி வந்தனர்;
இன்னும் சிலர், பந்துக்கள் தடுத்ததையும் மீறி ஓடி வந்தனர்;
கணவர் தடுத்தபோதும் ,உன்னிடம் மனத்தைப் பறி கொடுத்தவர்களாய்,
தடுத்ததையும் திரஸ்கரித்து விட்டு, உன்னிடம் ஓடி வந்தனர்;

வீட்டை விட்டு, வெளியே வருவதற்கு ,சந்தர்ப்பம் கிடைக்காத சிலர்,
கண்களை மூடிக் கொண்டு அங்கேயே உன் த்யானத்தில் ஈடுபட்டனர்;
இன்னும் சிலர், உன்னுடைய விரஹ தாபத்தால் கொளுத்தப்பட்டு,
அதனால் அவர்கள் பாபங்களும் கொளுத்தப்பட்டு,
த்யானத்தில் உன்னை அணுகி ஆனந்தம் அனுபவித்து,
கர்மபந்தங்களை அறுத்து எறிந்தார்கள்;
இன்னும் சிலர், தங்கள் புத்தியால் உன்னை ஜார புருஷனாகவே
வரித்து, குணமயமான தேகத்தை விட்டவர்களாக ஆகி,
கர்மபந்தங்கள் விலக, சிந்தனையால் உன்னுடன் ஒன்றினார்கள்;

இவைகளையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ராஜா பரீக்ஷித்,
ஸ்ரீ சுகரைக் கேட்டான்

கோபிகைகள், ஸ்ரீ கிருஷ்ணனைப் பரமாத்மா என்று தெரிந்துகொள்ளவில்லை,
அவர்கள் எப்படி சம்சாரகதியை ஒழித்தார்கள் ?
அவர்களுக்கு இத்தகைய கிருஷ்ண பக்தி எப்படி வந்தது ?

ஸ்ரீ சுகர் பதில் சொன்னார்.
எதற்கும் தீர்க்க சிந்தனை வேண்டும்; அளவிடமுடியாத மகிமைகளைப் பெற்ற
ஸ்ரீ கிருஷ்ணனை சதா சர்வகாலமும் சிந்தனை செய்தார்கள்;
பிரேமபாவம் ,இவர்களுக்குத் தலை தூக்கி இருந்தது;
எந்த பாவத்துடன் யார் அவரை பூஜிக்கிறார்களோ ,
அவர்கள் சம்சாரத்திலிருந்து விடுபடுகிறார்கள்;
ஸ்ரீ க்ருஷ்ணனை சினேகிதனாக சதா சர்வகாலமும் சிந்தனை செய்பவருக்கு
அவன் சிநேகிதன்;
தந்தையாகச் சிந்தித்தால் தந்தை;
இங்கு இவர்கள் ஆயர்குலப் பெண்கள்; பிரேமை முழுவதையும் பொழிந்து
புருஷனாக சிந்தித்தார்கள்;

சேதிநாட்டு அரசன் சிசுபாலன் ஸ்ரீ கிருஷ்ணனை எப்போதும் வெறுத்து,
த்வேஷ புத்தியுடன் வைதுகொண்டே இருந்தான் ;அப்படி வைதபோதிலும்,
அவருடன் மனத்தால் ஒன்றிப்போனான் இதிலிருந்தே உனக்கு உன் கேள்விக்கு
விடை கிடைக்கும் என்றார்

உன் முன்பாக வந்து நின்ற கோபிகைகளைப் பார்த்து ,
அவர்கள் இன்னும் மோஹித்துப் போகும்படி நீ அவர்களுடன் பேசினாய்.

ஹே பெண்களே, உங்களுக்கு ஸ்வாகதம்
இப்படி இரவு நேரத்தில் பயமின்றி இங்கு என் வந்தீர்கள் ?
வ்ருந்தாவனத்தில் ஏதாவது சங்கடமா ?
பயங்கரமான மிருகங்கள் உலாவும் இரவு வேளையில்
இப்படி இந்த இடத்துக்கு வரலாமா ? உங்கள் பெற்றோர், உறவினர்,
கணவர் ,பிள்ளைகள் உங்களைக்காணாமல் பரிதவிப்பார்கள்;
உங்களைத் தேடுவார்கள்; உடனே அவரவர் வீடுகளுக்குத் திரும்புங்கள்;
குழந்தைகளைப் போஷியுங்கள் ; மாதா பிதா பர்த்தா இவர்களுக்கு
சிசுருக்ஷை செய்யுங்கள்;
ஒரு வேளை என்மீதுள்ள ப்ரேமையால் இங்கு வந்து இருந்தால்,
அது சரி என்றாலும், பர்த்தாவுக்கு சிசுருக்ஷை செய்வது பரம தர்மம்;
ஸ்திரீகளுக்குப் பிற புருஷர்களுடன் சேர்வது மஹா பாவம்;
என்னிடம் பிரேமை செலுத்துவது என்பது, என் அருகில் இருந்துகொண்டு,
என் இஷ்டப்படி நடந்து கொள்வது என்பதல்ல ;
என் கதைகளைக் கேட்பது, என்னைத் தியானிப்பது,
என்னைக் கீர்த்தனம் செய்வது இவையே போதுமானவை;
உடல் சேர்க்கை தேவையே இல்லை;
அதனால், உடனே உங்கள் வீடுகளுக்குத் திரும்புங்கள்
என்று சொன்னாய்.

ஸ்ரீ சுகர் ,கோபிகைகளின் நிலைமையை கூறுகிறார்.

அப்ரியமான வார்த்தைகளை, கோபிகைகள் கேட்டார்கள்;
மனவியாஹூலம் அடைந்தார்கள்; முகம் தரையை நோக்க,
வாய் உலர, கால் நகங்களால் தரையைக் கீறினார்கள்;
மௌனமாக நின்றார்கள்; கண்களிலிருந்து ,கண்ணீர் தாரை தாரையாகப்
பெருக்கெடுத்து மார்பகங்களை நனைத்தது;
கண்மைகள் அழிந்தன;
மானம், ஐஸ்வர்யம், யௌவனம் ,அழகு, பதி, புத்திர ,பந்துக்கள் எல்லாரையும்
க்ருஷ்ணனுக்காகவே பறிகொடுத்தவர்கள் ,தீனமாக அழுதார்கள்;
உன்னை நிமிர்ந்து பார்த்தார்கள்; தொண்டை அடைக்க, தடுமாறும் பேச்சுக்களால்
,உன்னிடம் உள்ள அன்பு குறையாமல் சிறிது கோபத்துடன் உனக்குப் பதில் சொன்னார்கள்

ஹே—பிரபோ—-நாங்கள், சர்வ விஷய சுகங்களையும், மானம், ஐஸ்வர்யம்,
பதி புத்ரன்பந்துக்கள் , வீடு எல்லாவற்றையும் விட்டு விட்டு
உனது திருவடியையே நம்பி வந்திருக்கிறோம்;
நாங்கள் உனது பக்தர்கள்; உன்னால், கைவிடத்தக்கவரல்ல;
நீ, எங்களுக்கு பதி தர்மத்தைப்பர்றிச் சொன்னாய்;
புத்திர புத்ரிகளை போஷிப்பது என்று ஸ்திரீகளின் தர்மத்தைச் சொன்னாய்;
ரொம்ப சரி; இந்த சுஸ்ருக்ஷை யாவும் உமக்கே செய்ய வந்திருக்கிறோம்;
ஏன் என்றால், நீர் சர்வ ரக்ஷகர்; நீரே சர்வ பந்து; நீரே எங்களுக்கு எல்லாம் ஆத்மா—பரமாத்மா;
உம்மிடம் ப்ரியம் கொள்வது, உம்மைப் பூஜிப்பது,
இவைதான் எங்களுக்கு முக்கியம்;
ஹே, ஆத்மந்
உம்மிடம் நித்யமும் ப்ரியம் செலுத்துவது—–,
ஹே, அரவிந்த நேத்ர , —–மரத்தின் வேருக்குத் தண்ணீர் வார்ப்பது போல
பதி,பிள்ளைகள், பந்துக்கள் –இவர்களிடம் ப்ரியம் செலுத்துவதால் என்ன பலன் ?
உம்மிடமே, எங்களின் பக்தி வெகு காலமாக வேரூன்றி இருக்கிறது;
உம்மால், எங்களது ஹ்ருதயம் அபஹரிக்கப் பட்டு இருக்கிறது;
இவற்றைஎல்லாம் இல்லாதபடி செய்து விடாதீர்;
வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்த எங்களை,
உம்மிடமுள்ள அன்பே ,அவைகளைச் செய்ய விடாமல் தடுத்து விட்டது;
அப்படி இருக்க, எங்களை வீட்டுக்குத் திரும்பிப் போகுங்கள் என்று சொல்வதில்
நியாயமில்லை; உம்முடைய திருவடிகளையே அடைய வேண்டும் என்று
இருப்பவர்களைத் திரும்பவும் வீடுகளுக்குச் செல் என்று நீர் சொல்வது சரியல்ல;
உமது கடாக்ஷ அம்ருதப் பார்வையால் உமது அதரங்களாகிய பூரண குடங்களிளிருந்து,
ஆசையாகிற அம்ருதத்தை எங்கள்மீது தெளிப்பீராக;
உமது சிநேகப் பார்வைகள், உமது வேணுகான கீதங்கள் ,
எங்கள் ஹ்ருதய ஆசைகளைத் தூண்டிவிட்டு,அவை அக்னியைப்போல
உக்ரமாக எரிந்து கொண்டு இருக்கின்றன; உம்மை விட்டுப் பிரிந்தால்,
அந்தத் துக்கமாகிய அக்னியால் கொளுத்தப்பட்டு,
உமது பாதங்களையே நினைத்து, நினைத்து, த்யானயோகத்தால்,
ப்ரியசகிகளைப்போலவும், ப்ரிய தோழர்களைப் போலவும்
உம்மையே திரும்பவும் வந்து அடைவோம்.

ஹே—அம்புஜாக்ஷ—காத்யாயினி வ்ரத நாளிலிருந்து,
எந்த உமது பாத ஸ்பர்சம் ஏற்பட்டதோ, எந்தப் பாதங்களை
ரமாதேவி மிக்க ச்ரத்தையுடன் ஆச்ரயித்துப் பூஜை செய்கிறாளோ
அந்தப் பாத மூலங்களை —-நாங்கள் சதா பூஜிக்கிறோம்.
நாங்கள், உம்மையே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்;
உமது ஹ்ருதயத்திலும் இடம் பெற்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்;
எந்த உமது பாத ரேணுக்களை—-ஸ்ரீ தேவியாகிய மஹாலக்ஷ்மி —-
துளசி தேவியுடன் போட்டி போட்டுக்கொண்டு –அடைந்து இருக்கிறாளோ,
அந்த ஸ்ரீ மஹாலக்ஷ்மி உம்முடைய வக்ஷஸ் தலத்தில் அரைவினாடி கூட
விடாமல் வசித்துக் கொண்டு இருக்கிறாள்.
நாங்கள் உமது திருவடிகளையே பஜிக்கிறோம்; நாங்கள் ப்ரபன்னர்கள்,
உமது திருவடிகளையே ஆச்ரயிப்பவர்கள்.
எங்கள் துக்கங்களை அறவே அழிக்கும்
ஹே–பிரபோ—எங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்;
எங்கள் உபாசனையை ஏற்றுக் கொள்ள வேண்டும்;
உமது ஸுந்தர ரூபம்—-உமது ஸ்மிதம்—-கள்ளப்பார்வையின் கடாக்ஷம்—
-எங்களைப் பித்தாக்கி இருக்கின்றன;
ஹே,புருஷபூஷண ——உமக்குச் ஸேவை செய்யும் பாக்யத்தை அளிப்பீராக;
உமது திருமுக அழகு—-கம்பீரம்—-மகரகுண்டலங்கள்—-வனமாலை—-
-புஜதண்டயுகம்—–உமது வேணுகானம்—மதுரமான குரல்—-இவைகளால்
மோஹிக்கப்பட்டு விட்டோம் , நாங்கள் மாத்ரமல்ல,
மூன்று லோகங்களும் பசுக்களும்,பட்சிகளும்,மிருகங்களும்,தேவர்களும்,
தேவ ஸ்திரீகளும், யக்ஷ கந்தர்வ ஸ்திரீகளும், ஏன்—ஜடங்களான மரங்களும்
உம்மிடம் மோஹிக்கப்பட்டு இருக்கின்றனர்;
எங்கள் பயங்களைப் போக்கும் பிரபோ—-
ஆதி புருஷா—அமரர்தலைவா—உம்மைவிட்டு நாங்கள் எங்கே போவோம் ?
ஆர்த்தபந்தோ—உமது வேலைகளைச் செய்ய இஷ்டமுள்ள
தாஸ்யர்களான எங்களைஅநுக்ரஹிப்பீ ராகஹே,கிருஷ்ணா

இவ்வாறுப் பலவிதமாக கோபிகைகள் கண்ணீர்மல்கப் பேசியதும்,
நீ ,உன் ப்ரியமான பார்வையால், பற்கள் மல்லிகைப்பூக்களைப் போல மின்ன,
கலவெனச் சிரித்துக்கொண்டு, வைஜயந்தி மாலையை அணிந்தவனாக எல்லா
கோபஸ்த்ரீகளும் உன்னை சூழ்ந்து இருக்க ,காளிந்தி நதியின் கரையில் உள்ள
பச்சைப் பசேலேன்ற மரங்கள் படர்ந்து உள்ள சமவெளிப் பிரதேசத்தில் பிரவேசித்தாய்
. உன் கைகளை நீட்டிக்கொண்டு, அவர்களைப் பற்றி அணைத்துக்கொண்டு,
கேலிப் பேச்சுக்களைப் பேசிக்கொண்டு, உனது மோகனப் பார்வையை
அவர்கள் மீது வீசி ,அவர்களைப் பலவிதமாக ஆனந்தப்படுத்தினாய்.

அதனால், அவர்கள், நீ அவர்கள் வசம் ஆகிவிட்டாய் என்று கர்வம் கொண்டனர்;
பூமியில் வாழும் எல்லா ஸ்திரீகளையும் விட தாங்களே உயர்ந்தவர்கள்
என்று இறுமாப்பு கொண்டனர்; இதை அறிந்த நீ, அவர்கள் கர்வத்தை
அடக்கத் திருவுள்ளம் பற்றினாய்அந்த க்ஷணத்திலேயே,
அவ்விடத்தை விட்டு மறைந்தாய்; அந்தர்த்யானம் ஆனாய்.

29 வது அத்யாயம் நிறைவடைந்தது. சுபம்

—————————————————————————————————

தசமஸ்கந்தம்—நவீன பாணியில் —-அத்யாயம் 30
———————–
கோபிகைகளின் விரஹ தாபங்கள்—-பக்தியின் உச்சம்
—————————————————————————————-

மிகவும் சஹ ஜமாக கோபிகைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த நீ,
அவர்கள் கர்வத்தை அடக்க எண்ணித் திடீரென்று மறைந்து போனதும்,
அவர்கள் தவித்த தவிப்பு இருக்கிறதே, அப்பப்பா, அதை என்னவென்று சொல்ல !
ஆனால், ஸ்ரீ சுகர் இவற்றைக் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்துகிறார் .
ஸ்ரீ சுகர், பரீக்ஷித் ராஜனுக்குச் சொன்னதை இப்போது சுருக்கமாகச் சொல்கிறேன்.

ஆண் யானையைக் காணாமல், எப்படிப் பெண் யானைகள் விரஹத்தால் தவிக்குமோ,
அப்படி , கோப ஸ்திரீகள் தவித்தார்கள்;
உன்னுடைய ஸ்மித முகம் —மந்தஹாச வதனம்—கண்களின் இனியகடாக்ஷம்,
மனத்தை அள்ளும் பேச்சுக்கள், நடை அழகு, இவைகளை நினைத்து, நினைத்துக்
கதறினார்கள்; காட்டில் அங்குமிங்கும் அலைந்தார்கள்;
உன்மத்த நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

ஹே,அஸ்வத்த மரமே , நந்தகோபனின்செல்வனைக் கண்டீர்களா ?
எங்களைப் பிரேமைக் கடலில் மூழ்கடித்து, சிரித்துப் பேசி விளையாடிய
அந்தப் பிரபுவைப் பார்த்தீர்களா ?
ஹே,அசோக,புன்னாக, நாக , சண்பக மரங்களே, பலராமனுடைய தம்பியாகிய
கிருஷ்ணனைக் கண்டீர்களா ?
துளசி,கல்யாணி, கோவிந்த சரணப்ரியே—-உன்னை எப்போதும்
தன்னுடைய வக்ஷஸ் தலத்தில் தரித்துக் கொண்டு, வண்டுகள் மகரந்தத்துக்காக
அலைந்து உன்னைத் தேடி வருவதைப் போல,
ஸ்ரீ கிருஷ்ணனும் உன்னைத் தேடி வந்தாரா , அவரைப் பார்த்தீர்களா ?
ஜாதி யூதிகே (வாஸனை உள்ள ஒருவகைப் பூ ), மல்லிகைக் கொடியே
மாதவியாகிய மஹா லக்ஷ்மியின் மணாளனான மாதவனைப் பார்த்தீர்களா ?
ஹே, மரங்களே, கொடிகளே ! கிருஷ்ணன் இந்தப் பக்கம் வந்திருக்கும்போது
அவரின் கர ஸ்பர்சம் உங்கள்மீது பட்டிருக்குமே ,
அவர் இந்த வழியாகப் போனாரா ? அவரைக் கண்டீர்களா ?
ஹே, மாமரமே, ஹே பலா மரமே, ஹே ஜம்பூ மரமே, ஹே வில்வ மரமே,
ஹே கடம்பமரமே ஹே இங்கு இருக்கும் மரங்களே , கிருஷ்ணனைக் கண்டீர்களா ?
சீக்ரம் சொல்லுங்கள் .
எங்கள் மனம்,எங்களிடம் இல்லை, அவரிடம் பறி போய் விட்டது;
அவர் பாதங்களை அடையும் வழியைச் சொல்வீர்களா ?
ஹே, பூமியே, நீ செய்துள்ள தவத்தை என்னவென்று சொல்வது
!உன் தேகம் எப்படி உண்டாயிற்று ?
உன் உடலில் உள்ள புல், கொடிகள், முளைகள், எல்லாம்
ஸ்ரீ கேசவனுடைய அங்கங்களின் ஸ்பர்சம் பட்டு, அதனால் உன் தேகம் வந்ததா ?
அவர் வாமனாவதாரம் எடுத்து, திருவிக்ரமனாக வளர்ந்து
உன்னை ஆலிங்கனம் செய்ததால் ஏற்பட்டதா ? வராஹஅவதாரம் எடுத்த சமயத்தில்
உன்னைக் கட்டி ஆலிங்கனம் செய்துகொண்டாரே, அதனால் ஏற்பட்டதா ?
ஹே, பெண்மானே, உன் கண்களின் அழகைப் போல —மிருக நயனீயான
பெண் ஒருத்தியுடன் உங்களுக்கு ஆனந்தம் அளிப்பதற்காக இந்த வழியே சென்றாரா ?
ஹே,மல்லிகைக் கொடியே, அந்தப் பெண்ணை அவர் ஆலிங்கனம் செய்தபோது,
அவளுடைய ஸ்தனங்களில் தடவியுள்ள குங்குமப் பூச்சுக்கள் ,
அவருடைய வக்ஷஸ் தலத்தில் காணப்பட்டு இருக்குமே,
அந்த எங்கள் பிரபுவைப் பார்த்தீர்களா ?

ஒருகையில் தாமரைப் புஷ்பத்துடனும்,
மற்றொரு கையால் பிரியையான ராதையை அணைத்துக் கொண்டும் ,
அவர் அணிந்து இருக்கும் துளசி மாலையில் உள்ள மகரந்தத்தைப் பருக
தேனீக்கள் அவர் பின்னே ஓடிவர அவர் இங்கு சஞ்சரிக்கும் போது அவரைப் பார்த்தீர்களா ?
ஹே மரங்களைச் சுற்றி ஆலிங்கனம் செய்வது போல வளர்ந்து இருக்கும் கொடிகளே,
கிருஷ்ணனின் விரல்களின் ஸ்பர்சம் உங்கள் மீது பட்டிருக்க வேண்டும்
உங்கள் உடலிலே புளகானந்தம் ஓடி வழிகிறதே ,
அந்த சுக ஸ்பர்சம் கிடைத்ததா ? கிருஷ்ணனைப் பார்த்தீர்களா ?

ஸ்ரீ சுக பிரம்மம் , மேலும் பரீக்ஷித்துக்குச் சொல்கிறார்

இப்படி உன்மத்தம் பிடித்த ,விரஹ தாபத்தால் பைத்தியம் பிடித்தவர்களைப் போல,
உன்னையே நினைத்து உன் லீலைகளை அவர்கள் செய்தார்களாம்
ஒருத்தி தான் பூதனை என்று சொல்ல, இன்னொருத்தி தான் கிருஷ்ணன் என்று சொல்லி ,
பூதனை என்று சொன்னவளை ஸ்தன்ய பானம் செய்து அழிப்பதுபோல் பிதற்றினாளாம்

ஒருத்தி தான் ,குழந்தையாகிய கிருஷ்ணன் என்று சொல்லி, இன்னொருத்தியை சகடாசுரன்
என்று சொல்லி உதைத்தாளாம்
ஒரு கோபிகை , இன்னொருத்தியைத் திருணாவர்த்தன் என்கிற அசுரன் என்று சொல்லி
அவனைக் கொல்ல, ஸ்ரீ கிருஷ்ணன் அசுரன் கழுத்தை கட்டிக் கொண்டதுபோலக்
கட்டிக் கொண்டாளாம்
ஒருத்தி நான் பலராமன் என்று சொல்ல, இன்னொருத்தி நான் கிருஷ்ணன்
என்று சொல்லி அவர்கள் இருவரும் பேசிக் கொள்வது போலப் பேசினார்களாம்.
ஒருத்தி தான் கிருஷ்ணன் என்று சொல்லி, இன்னொருத்தியை வத்சாசுரன்
என்று சொல்லி அடித்தாளாம்
இன்னொருத்தி , தான் .பகாசுரன் என்று சொல்ல, இன்னொருத்தி
அவளை நான்தான் கிருஷ்ணன் என்று சொல்லி அடித்தாளாம்.
ஒருத்தி, வெகு தூரத்தில் பசுக்கூட்டம் போவதைப் பார்த்து,
அவற்றை கிருஷ்ணன் எப்படிக் கூப்பிடுவாரோ அப்படிக் அழைத்தாளாம்.
இன்னொருத்தி கிருஷ்ணனைப் போல வேணுகானம் செய்வதாக ,
புல்லாங்குழலை எடுத்து ஊதினாளாம்
ஒருத்தி தன் கையை இன்னொருத்தியின் தோள் மீது போட்டு ,
நடந்துகொண்டே , என் நடை அழகு கிருஷ்ணன் நடப்பதைப் போல
இருக்கிறதா என்று கேட்டாளாம்.
ஒரு கோபிகை, இன்னொருத்தியைப் பார்த்து,
பெண்ணே , இந்தப் பேய் மழைக்கும் பேய்க் காற்றுக்கும் பயப்படாதே
உன்னை ரக்ஷிக்கிறேன் என்று சொல்லி,அவளுக்கு மேலாக
தன்னுடைய மேல் வஸ்த்ரத்தைக் குடைபோலப் பிடித்து,
கோவர்த்தனகிரியைத்தூக்கிக் கொண்டு இருப்பதாக சொன்னாளாம்.

ஒருத்தி, இன்னொருத்தியின் சிரசின் மீது ஏறி, நான் பூலோகத்தில்
துஷ்டர்களை அடக்க வந்திருக்கிறேன்; துஷ்ட காளிங்கனே ,
இங்கிருந்து போய்விடு என்றாளாம்.
ஒரு கோபிகை ,மற்றவளிடம் ,
இதோபார் அக்நி, ஜ்வாலையுடன் தாவி வந்துகொண்டிருக்கிறது
கண்களை மூடிக்கொள் காப்பாற்றுகிறேன் என்றாளாம். .
ஒருத்தி ,மலர்மாலையை இடுப்பில் கட்டிக் கொண்டு,
,நான் தாமோதரன்; யசோதையாகிய என் அம்மா இடுப்பில் கட்டி இருக்கிறாள்;
இதோபார் ;இந்த இரண்டு மரங்களை வேரோடு சாய்க்கிறேன்
என்று இரண்டு மரங்களுக்கு நடுவில் சென்றாளாம்.
இன்னொருத்தி, தாயாகிய அம்மா அடிக்கிறாள் என்று சொல்லி ,
தான் பயப்படுவதைப் போல , இன்னொருத்தியிடம் புலம்பினாளாம்.

இப்படியாக,கோப ஸ்திரீகள் உன்மத்தம் பிடித்து அந்தக் காட்டில்
சஞ்சரிக்கும்போது, அத்ருஷ்டவசமாக , பூமியில்
இரண்டு பாதச் சுவடுகளைக் கண்டார்கள்.
ஆஹா என்று சொல்லி, ஒருத்தி பாதச் சுவடுகளில்
வஜ்ர ரேகை, த்வஜ ரேகை, அங்குச ரேகை இவைகளை அடையாளம் பார்த்து
இந்தப் பாதச் சுவடுகள் க்ருஷ்ணனுடையதுதான் ,
அவர் இந்த வழியேதான் போயிருக்கிறார் என்று சொல்லி,
பாதச் சுவடுகளைத் தொடர்ந்து சென்றார்களாம்.
ஹே—கிருஷ்ணா ! உடனே வருத்தப்பட்டார்களாம்
அந்தப் பாதச் சுவடுகளின் மத்தியிலே, இன்னொரு பெண்ணின் பாதச் சுவடுகளைக்
கண்டார்களாம். ஒரு கையை அவளுடைய தோளின் மீது வைத்துக்கொண்டு,
நீ அவளுடன் நடந்து சென்று இருக்கிறாய் என்று கண்டார்களாம்.

(ஹே–கிருஷ்ணா இந்தக் கோப ஸ்திரீகள் எவ்வளவு பாக்யசாலிகள் !
உன் திருவடிகள் பதிந்த பாதச் சுவடுகளை
அடியேன் கண்களில் ஒற்றிக்கொண்டு,
கோபிகை களுக்கு அனவரதம் நமஸ்காரம் செய்கிறேன் )

ஒரு கோபிகை, ஸ்ரீ கிருஷ்ணனுடன் சென்ற பெண் யாராக இருக்கும்;
அவள் மிகவும் புண்யம் செய்தவள் , அதனால்தான்
ஸ்ரீ கிருஷ்ணன் அவளால் நன்கு பூஜிக்கப்பட்டு, திருப்தி அடைந்து,
நம் எல்லோரையும் தவிக்க விட்டு, அவளுடன் சென்று இருக்கிறார்;
அந்த அடையாளங்கள்தான் இந்தப் பாதச் சுவடுகள் என்று தீர்மானித்து,
அந்தப் பாதரஜஸ்களை ,இக்கோபிகைத்தன் சிரஸ் ஸில் அணிந்துகொண்டாள்.

இந்தப் பாத ரஜஸ் ஸின் மகிமை அளவிட முடியாதது;
சொல்லில் அடங்காதது ; ப்ரும்மா, சிவன் இவர்களுக்குக்கூடக் கிடைக்காதது
ஸ்ரீ மஹாலக்ஷ்மி எந்தத் திருவடிகளை நித்யம் பூஜிக்கிறாளோ ,
அவைகளைத் தரித்துக் கொள்கிறாளோ, அந்தப் பாதச் சுவடுகள் ஆயிற்றே !
அவற்றுடன் கூடவே மஹா புண்யவதியின் பாதச் சுவடுகளும் தெரிகிறதே;
அவள் ஸ்ரீ கிருஷ்ணனை நன்கு பூஜித்து ஏகாந்தமாக பஜித்து இருக்க வேண்டும்;
அதனால்தான் ,அவர் ,நம்மையெல்லாம் தவிக்கவிட்டு அப்புண்யவதியுடன்
சென்று இருக்கிறார்;
அவள் ராதை;
அவள் அச்யுதரின் அதர பானம் செய்து இருக்க வேண்டும்;
அவரை ஏகாந்தமாக அனுபவித்து இருக்க வேண்டும்
இப்படியெல்லாம் புலம்பிக்கொண்டே ,பாதச் சுவடுகளைப் பார்த்துக் கொண்டே
செல்லும்போது, திடீரென்று அந்தப் பெண்ணின் பாத அடையாளங்களைக் காணவில்லை;
ஸ்ரீ கிருஷ்ணனின் பாதச் சுவடுகள் மட்டில் தொடர்ந்து பூமியில் அழுத்தமாகக் காணப்பட்டன;
சரி தான்; ராதையின் கோமள பாத சரணங்களில் முள்ளைப் போல
இந்தப் புல் பூண்டுகள் ஹிம்சித்து இருக்க வேண்டும்; அதனை சஹியாமல்,
ஸ்ரீ கிருஷ்ணன், அவளைத் தோளில் தூக்கிக் கொண்டு ,
தான்மட்டும் நடந்து சென்று இருக்க வேண்டும்;

ஹே–சஹிகளே இதோ பாருங்கள் பூமியை—-நன்கு கவனியுங்கள்—-
ஸ்ரீ கிருஷ்ணரின் பாதச் சுவடுகள் மட்டும்தான் தெரிகின்றன;

இப்போது பாருங்கள், பூமியில் புஷ்பங்கள் சிதறிக் கிடக்கின்றன;
பிரபு , அவள்—ராதையின் தலையை நன்கு வாரி புஷ்பத்தால்
அலங்கரித்து இருக்க வேண்டும் ;
இதோ பாருங்கள் இப்போது பிரபுவின் ஏக பாதம்தான் தெரிகிறது;
இப்போது பாதச் சுவடுகளே தெரியவில்லை
என்று, இப்படியெல்லாம்,
ஹே—கிருஷ்ணா!
கோப ஸ்திரீகள்–ஒருவருக்கு ஒருவர் தாங்கள் கண்டதை,
நினைத்ததைப் பரிமாறிக் கொண்டே காட்டில் சென்றனர்.
அங்கே ஒரு இடத்தில் ராதை மட்டும் அழுதுகொண்டே
இருப்பதைக் கண்டனர். கோப ஸ்திரீகள் அவளை நெருங்கி யதும்,
அவள் ஒ வென்று கதறி, உங்கள் எல்லாரையும் விட நான் மேலானவள்;
என்னிடம் அதிகப் பிரேமை செலுத்துகிறார் என்று கர்வமடைந்து
அவரிடம் என்னால் துளிக்கூட இனிமேல் நடக்க முடியாது;
உம்முடைய தோள்களில் தூக்கிக் கொண்டு செல்வீராக;
நீர் விரும்பிய இடத்துக்கு வருகிறேன் என்று நான் சொன்னதும்
அவர்—ஸ்ரீ கிருஷ்ணர்—சரி, தோளின் மீது ஏறிக்கொள் என்று சொல்ல,
நான் தோளில் ஏற முயற்சிக்கும்போது அந்தர் த்யானம் ஆகிவிட்டார்
என்று சொல்லி அழுதாள்.

அவரிடம் எப்படிப் பிரியத்தைச் சம்பாதித்தாள் என்பதையும்,
தன் அகம்பாவ நடத்தையால் அவரால் விடப்பட்டதையும் ராதை
சொல்லிக் கேட்ட கோபிகைகள், அவரை—-அதாவது உன்னை
அங்குத் தேடும் முயற்சியைக் கைவிட்டு
யமுனா நதி தீரத்துக்கே வந்து சேர்ந்தனர்.
உன்னுடைய நினைவால் உன்னைப் பற்றியே விரஹதாபத்தால்
பிதற்றிக் கொண்டு, பசி—தாகம்—-வீடு—பதி—க்ருஹம் —–புத்ரன்—
இத்யாதிகளை மறந்து, உன் மீது அளவில்லாப் பிரேமையுடன் ,
கோபிகைகள் எல்லாரும் சேர்ந்து கீதம் இசைத்தார்கள்—-
அதுவே கோபிகா கீதம் —அடுத்த அத்யாயத்தில் அனுபவிப்போம்

30 வது அத்யாயம் நிறைவடைந்தது. சுபம்
ஸ்ரீ கோபிகா கீதம்
——————————–
ஹே—-பிரபோ—–வ்ருந்தாவநம் உமது அவதார மகிமையால் செழிப்பை அடைகிறது;
நீர் எங்களுடன் கூடவே வாழ்வதால்
ஸ்ரீ லக்ஷ்மி இங்கு நித்ய வாஸம் செய்கிறாள்;
ஹேதயித—-உமது கருணா ஸ்வரூபத்தை எங்களுக்குக் காண்பியுங்கள்;
நாங்கள், உம்மையே நம்பி ,உமது நாமஸ்மரணம் செய்துகொண்டு,
உமது புண்யகதைகளைக்கீர்த்தனம் செய்துகொண்டு
உம்மையே ஒவ்வொரு திக்கிலும் தேடுகிறோம்.

சரத் காலத்தில், உமது பிரிவால் துக்கப்படுகிறோம்;
தடாகத்தில் உதித்த தாமரைப் புஷ்பத்தின் ஸ்ரீ முஷா— அழகு—–பொலிவைக் கவர்ந்து,
உமது பார்வையால் சந்தோஷமும், வருத்தமும் அடைகிறது;
அந்தத் தாமரைப் புஷ்பத்தைப் போல நாங்களும், உம்முடன் கூடுவதால்
சம்ஸ் லேஷமும் —–பிரிவினால் துக்கமும் அடைகிறோம்;

ஹே,சுரத நாத, ஹே,வரத —நாங்கள் உம்முடைய தாசிகள் —-
உம்முடைய இச்சையாலே தாசிகள்
. உமது பிரிவினாலே எங்களைத் துன்புறுத்தலாமா ?
உமது பிரிவு எங்களை வதம் செய்வது போல இருக்கிறது.
விஷ ஜலத்திலிருந்தும் காளியன் என்கிற கொடிய சர்ப்பத்தினின்றும் எங்களைக் காத்தீர்’;
அகாசுரன் போன்ற மழைப் பாம்பின் பிடியில் இருந்து காத்தீர்
பேய்க்காற்று, மேக கர்ஜனை, இடி மின்னல் பிரம்மாண்ட மழை இவைகளிருந்து ,
கோவர்த்தன கிரியைக் குடைபோலப் பிடித்து எங்களைக் காத்தீர்
கன்றைப் போன்று பொய்வேஷம் தரித்த அசுரனிடமிருந்து எங்களைக் காப்பாற்றினீர்
நீர் , யசோதை தேவகி இவர்களின் புத்ரன் மட்டுமல்ல;
சர்வத்துக்கும் ஆத்மா—-அந்தராத்மா
எல்லாவற்றையும் பார்க்கும் சாக்ஷி
எல்லா வஸ்துக்களையும் அனுபவிப்பவர்;
எல்லாவற்றையும் நியமித்து தரிப்பவர்;
ஹே,விஸ்வகுப்தா—ஸ்நேக உள்ளம் உள்ள பிரபோ—
பூமிப் பிராட்டி, பிரம்மா, தேவர்கள் பிரார்த்தனைக்கு இரங்கி உலகைக் காக்க
யது குலத்தில் அவதரித்து இருக்கிறீர் ;
வ்ருஷ்ணீ துர்ய—-எங்களுக்கு அபயம் அளித்த பிரபுவே–
உமது சரணங்களைப் பற்றினோம் ;
உமது கிருபையால் மறுபிறவி பயம் எங்களுக்கு இல்லை;
காந்த—-காமத்தின் பீடையை அடைந்துள்ளோம்;

எங்கள் சிரஸ் ஸில் உமது தாமரைக் கைகளை வைத்து,
நாங்கள் ஸ்ரீ யின்அனுக்ர ஹத்தை அடையும்படி செய்வீராக ;
வீர–வ்ரஜ ஜனார்த்திஹந்—-உமது ஸ்மிதம்—புன்சிரிப்பு—
எங்களுக்கு இயற்கையாக உள்ள அஹம்பாவத்தை அழிக்கிறது;
ஹே–ஸகே —-உம்மைப் பூஜிக்கும் எங்கள் அன்பை ஏற்றுக் கொள்வீராக ;

ஜலத்தில் அமிழ்ந்து பூர்ண பொலிவுடன் விகசித்து இருக்கும்
அழகான தாமரை போன்ற உமது திருமுக தர்சநம் தருவீராக
ப்ரணத தேஹினாம்—-உம்மை வணங்கிய எங்கள் பாபங்களைப் போக்குவீராக;
புல்லைத்தின்னும் பசுக்களை வளர்க்கும் எங்கள் இடங்களில்
ஸ்ரீ லக்ஷ்மீ வாஸம் செய்யும்படி அருளுவீராக;
பல தலைகளுடன் படம் விரித்து ஆடிய காளிங்க னுடைய தலைகளில்,
உமது பாத பத்மங்களை வைத்த மாதிரி ,எங்கள் ஹ்ருதயத்திலும்
உமது பாத பங்கஜங்களை வைத்து ,எங்கள் தாபத்தைப் போக்குவீராக;
புஷ்கரேக்ஷண—–தாமரை கண்ணா—உமது திருஷ்டி கடாக்ஷம்
எங்கள் மீது படும்படி செய்வீராக;
உமது மதுரமான பேச்சுக்களால் ,எங்களுக்கு சந்தோஷத்தை உண்டாக்குவீராக;
உமது பேச்சு, மேதாவிகளின் மனங்களையும் சந்தோஷப் படுத்தக்கூடியது;
வீர—-உமது ஆக்ஜையை சிரமேற் கொண்டிருக்கும் ,
அதைச் செய்யத் தயாராக இருக்கும் எங்களுக்கு
உமது அதர பானத்தைக் கொடுத்து நாங்கள் உயிர் பிழைக்கும்படி செய்வீராக;
உமது கதாம்ருதம், மங்களங்களை அளிப்பவை;
உமது கீர்த்தனம் ஐஸ்வர்யங்களை வ்ருத்தி செய்பவை;
இதனால், எல்லாம் நிரம்பிய குண பூர்த்தி உள்ள மகாத்மாக்கள்,
உமதுகீர்த்திகளை அடிக்கடி சொல்கிறார்கள்;
அடிக்கடி பாடிக் கேட்கிறார்கள்;
உமது இத்தகைய நாமஸ்மரணம், கீர்த்தனம் இவை,
எங்கள் பாபங்களை—கல்மிஷங்களை—அடியோடு அழிக்கின்றன;
ஹே—ப்ரிய—-புன்சிரிப்புள்ள, பிரேமை ததும்பும் உமது பார்வை —
-பால லீலைகள்—–கோபர்களுக்குச் செய்த அதிசயச் செயல்கள்—
லீலாவிநோதங்கள்—-எல்லாமே, எல்லோருடைய த்யானத்துக்கு உரியது;
மங்களங்களைக்கொடுப்பது;
உமது ரஹஸ்யமான பேச்சுக்கள், கண்ஜாடைகள், சிரிப்பு, பார்வை,
செய்கைகள் எல்லாமே எங்கள் ஹ்ருதயத்தைத் தொட்டு,
எங்களை உமக்கு ஆட்படுத்தி அடிமையாக்கி,
எங்களுடைய ஹ்ருதயத்தைப் பிளக்கின்றன
ஹே, நாத—- நீர் வ்ருந்தாவனத்தில் பசுக்களை மேய்த்து சஞ்சரிக்கும்போது
உமது பாதங்களை, சிலா,(கல்) , புல் ,முளை இவைகள் குத்தி புண்படுத்தியது,
எங்கள் மனத்தில் காயம் ஏற்பட்டது போல இருக்கிறது;
மனஸ் புண்பட்டு இருக்கிறது;
ஹே,வீர —ஒவ்வொரு நாள் சாயங்காலமும், நீர் பசுக்களுடன்
க்ருஹத்துக்குத் திரும்பும்போது, நீல மலர்களால் நிரம்பிய வனத்தைப் போல
உமது கேசபாசங்கள், உமது கரிய அழகிய திருமேனி,
பசுக்களின் சுவடுகளிலிருந்து கிளம்பிய புழுதி படிந்து வாடிய திருமுகம் ,
இவைகளைப் பார்க்கும்போது ,எங்களுக்கு என்ன தோன்றும் தெரியுமா !

தாமரைப் பூவில் தேனீக்களும் மகரந்தங்களும் உள்ளவை போலத் தோன்றும்;
கருத்தகேசங்கள் தேனீக்களைப் போலவும்
திருமுகம் மகரந்தம் போலவும் தோன்றும் ;
எங்கள் மனத்தில் மன்மத ரூபம் தோன்றும்;
நாங்கள், மன்மதனை மனஸ் ஸால் உபாசிப்பது போலத் தோன்றும்;

ஜனங்களின் இஷ்டத்தைப் பூர்த்தி செய்பவரே —-
ஸ்ரீ மகாலக்ஷ்மியாலும் ,ப்ரம்மாவாலும் அர்ச்சனை செய்யப்படும் உமது பாதங்கள்,
பூமி தேவிக்கு ஆபரணங்களைப் போல இருக்கின்றன;
சதா நாங்கள் த்யானம் செய்வதற்கு உரியதாக இருக்கின்றன;
வணங்குபவர்களுக்கு, காமதேனுவைப்போல ,
எதைக் கேட்டாலும் கொடுக்கச் சக்தி உள்ளவையாக இருக்கின்றன;

நித்தியமான சுகத்தை அளிப்பதாக இருக்கின்றன;
அப்பேற்பட்ட மகிமை உள்ள உமது சரண பத்மங்களை —
சுந்தரமான திருவடிகளை– எங்கள் ஹ்ருதயத்தில் இருத்தி
அநுக்ரஹம் செய்வீராக ‘
ஹே, வேணு கோபாலா—–உமது திவ்ய உதடுகளில் பெருகும் அதர அம்ருதம்
எங்கள் சோகங்களை நாசம் செய்பவை;
வேணுவின் நாதம் எழும்போது, அந்த அம்ருத தாரைகள் பொங்குகின்றன;
அதர முத்தத்தினால் எழும் நாதம் ,எங்கள் துக்கங்களை அழிக்கிறது;
ஆசாபாசங்களை நாசம் செய்கிறது;
உம்மிடத்தில் பக்தியை வளரச் செய்கிறது;
உமது அதர அம்ருதத்தை புல்லாங்குழலுக்குக் கொடுத்ததைப் போல ,
எங்களுக்கும் பகிர்ந்து அளிப்பீராக,
பகிர்ந்து எங்களுக்கும் அதரபானம் கொடுப்பீராக
ஹே–பிரபோ—நீர் காட்டில் பசுக்களுடன் சஞ்சரிக்கும் அந்த அரைநாள் பொழுது,
—அந்தப் பிரிவு—எங்களுக்கு –பல யுகங்களில் பிரிந்து இருப்பதைப் போல
துக்கத்தை ஏற்படுத்துகிறது;
உமது குடில குந்தலம் — மற்றும் நாங்கள் கண் இமைத்தல் இவை
உமது பூரண சௌந்தர்யமான திருமுகத்தைத் தர்சிக்கவிடாமல் தடுக்கிறதே ?
இவை எல்லாம் ஸ்ருஷ்டி கர்த்தாவான ப்ரம்மாவுக்குத் தெரியாமல்
அவர் ஜடமாக இருப்பாரோ !
எங்களுடைய மனஸ் ஸின் அனுபவங்களைப்பார்க்க முடியாதபடி
அவரின் ஸ்ருஷ்டி இருக்கிறதே, ஆச்சர்யம் !
ஹே,அச்யுதா—உமது புல்லாங்குழல் இசையைக் கேட்டதும்
எல்லாவற்றையும் விட்டு விட்டு உம்மிடம் ஓடோடி வந்து இருக்கிறோம்.
நீயே எங்களுக்குக் கதி—-அடைக்கலம் என்று வந்திருக்கிறோம்;
பதி ,பிள்ளைகள், பந்துக்கள், சஹோதரர்கள் எல்லாரையும் த்யாகம் செய்து
நீயே எல்லாம் என்று வந்து இருக்கிறோம்
ஹே,பிரபோ—-ரகஸ்யமாக எங்களிடம் விளையாடி, பேசி,
எங்களிடம் உமக்குள்ள அன்பை வெளிப்படுத்தி இருக்கிறீர்;
எங்கள் ஹ்ருதயங்களைப் பிளந்து அதில் ஆசையை உண்டாக்கி,
அவைகளை, நீர் பகிரங்கமாகச் சொல்லும்போது ,உமது முக விகாஸம்
பொலிவு அடையும்;
உமது அகன்ற மார்பு;
இதுவே ஸ்ரீ மஹாலக்ஷ்மி நித்ய வாஸம் செய்யும் வாசஸ் தலம் ;
உம்மைப் பிரியத்தால் அடைந்து உம்மையே காதலித்து அடி பணிந்து ,
நாமும் இப்படியே வாஸம் செய்யலாமே ,என்று மனம் மோஹம் அடைகிறது.
ஹே,விஸ்வ மங்களப்ரபு —–இந்த ஸ்தலத்தில் ஏற்பட்டுள்ள உமது அவதாரம்,
எங்களுக்கும் , எல்லாப் பிராணிகளுக்கும் துக்கங்களைப் போக்குகிறது;
சுந்தரவடிவம் மங்களத்தை ஏற்படுத்துகிறது;

நீரும், எங்களை, உம்முடைய பந்துக்கள் என்று ஸ்வீகரித்து,
கபட வேஷத்தை விடுவீராக;
உம்மிடம் அசாத்திய பக்தி செலுத்தும் எங்களிடம்
கபட வேஷத்தை விடுவீராக.
ஹே—-ப்ரிய— காட்டில் அலைந்து கல்லும் முள்ளும் குத்தும்போது ,
உமக்கு ஏற்படும் அந்த வலி ,எங்கள் ஹ்ருதய வலி ;
காரணம், உமது பாதாம்புஜங்கள்,எங்களது ஹ்ருதயத்தில் படிந்து இருக்கிறது;
உமக்கு வன சஞ்சார வலி
எங்களுக்கு ஹ்ருதய வலி;
இது பக்தியின் விஸ்லேஷ துக்கத்தின் உச்ச நிலை

( நாரதாதி மகரிஷிகள், விஸ்லேஷ துக்கத்தையே
பக்தியின் உச்ச நிலையாகக் கொண்டாடி இருக்கிறார்கள் )

கோபிகைகள், இவ்வாறு விரஹ தாபத்தைப் பொறுக்க இயலாத துக்கத்துடன்
கீதமாகப் பாடினார்கள்

( ஹே—-கிருஷ்ணா— உன்னிடம் அளவில்லாத பக்தி செலுத்திய கோபஸ்த்ரீகளை—
-கோபிகா கீதம் என்று எங்களுக்குக் கொடுத்த அந்த கோபிகைகளை
ஆயிரமாயிரம் தடவை அவர்கள் பாதங்களைத் தொட்டு நமஸ்கரிக்கிறேன் .
ஹே,முகுந்தா— அந்தக் கோபிகைகளில் ஒருத்தியாகப் பிறந்து இருந்தால்,
இவ்வளவு பிறவிகள் எனக்கு வந்திருக்காதே?
அளவிட இயலாத பாபம் செய்து அல்லாடுகிறேனே ?
இந்தப் பிறவியிலாவது ,அபயம் என்று சொல்லி,
அச்யுதா, அடியேனை உன் திருவடிகளில் சேர்த்துக் கொள் )

ஸ்ரீ கோபிகா கீதம் என்கிற 31 வது அத்யாயம் நிறைவடைந்தது.சுபம்

—————————————————————————————————————

தசமஸ்கந்தம்—நவீன பாணியில்—-அத்யாயம்–32
———————
ஸ்ரீ கிருஷ்ணனின் அநுக்ரஹம்——ராஸ லீலை—- தொடர்கிறது
——————————————————
கோபிகைகள் ,ஸ்ரீ கோபிகா கீதம் என்றே இசைத்து உன் புகழ் பாடி
உன் தர்சனத்துக்காகக் கதறினார்கள்.
விரஹ தாபத்தைப் பொறுக்க முடியாமல் துக்கத்துடன் கதறினார்கள்.
ஹே, கிருஷ்ணா , கருணையுடன் நீ அப்போது அவர்கள் மத்தியில் தோன்றினாய்

பட்டு பீதாம்பரத்துடன் மந்தஹாசத்துடன் மன்மதனுக்கும் மன்மதனாக ,
கோபியர்கள் மத்தியில் வந்தாய்.
கோபிகைகள் , இழந்த பிராணனை மீண்டும் பெற்றதைப் போல சந்தோஷப்பட்டனர்.

உன்னை வரவேற்றார்கள்;
எழுந்து வந்து உன் கரங்களைப் பிடித்துக் கொண்டாகள்;
சிலர் உனக்கு அஞ்சலி செய்தார்கள்;
சிலர் உன் கரங்களைப் பிடித்து அவர்கள் தோள்மீது வைத்துக் கொண்டார்கள்;
ஒருத்தி ,கண்களை இமைக்காமல் உன் முகத்தையே பார்த்தாள்;
ஒருத்தி இதிலும் திருப்தி அடையாமல், உன் திருவடிகளை நோக்கினாள்
; இன்னொருத்தி கைவிரல்களால் திறந்த கண்களைப் பொத்தி
விரல் இடுக்குகள் வழியாக உன்னைத் தர்சநம் செய்து ஆனந்தம் அடைந்தாள் ;

சாதாரண ஜனங்கள், எப்படி ஆத்ம யோகியைப் பார்த்ததும் துக்கம் விலகி
சந்தோஷம் அடைவார்களோ, அப்படி ஆனந்தம் அடைந்தார்கள்
நீ, பராசக்தி ரூபமான அவர்களுடன் காளிந்தீ நதியின் கரையில்
உள்ள மைதானத்தில் பிரவேசித்தாய். அந்த மைதானம் அல்லது வனம்—–
மல்லிகையும் மந்தாரமும் நிரம்பி தென்றலில் அவைகள் அசைந்து ஆட,
மதுரமாகக் காக்ஷி அளித்தது;

சரத் சந்திரனின் வெளிச்சம் மனத்துக்கு குதூகலத்தை ஏற்படுத்தியது;
உன்னுடைய தர்சநம் உன்னுடைய ஸ்பர்சம் இவற்றால்
தங்கள் மனோரதம் நிரம்பியவர்களாக கோபிகைகள் முகங்கள் விளங்கின;
வேதங்களை அத்யயனம் செய்து, அதன் நோக்கமாகிற
ஆத்ம தர்சநம்/ஆத்ம விசாரம் இவைகளை அடையும்
வேதாத்யாயியைப் போல விளங்கினார்கள்
;
அவர்கள், தங்கள் மேலாடையை /உத்தரீயத்தை உனக்கு ஆசனமாகத்
தயார் செய்தார்கள்; அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க
நீ அதன் மீது அமர்ந்தாய்;
எப்படி ஆத்ம தர்சன யோகிக்கு உனது ஸ்வரூபத்தைக் காண்பிப்பாயோ,
அப்படி அவர்களுக்குக் காக்ஷி அளித்தாய்;
உன்னுடைய பார்வை, கண்களின் சேஷ்டிதங்கள், பேச்சுக்கள்
இவைகளால் மயங்கிய கோபிகைகள், உன் கைகளைப் பிடித்துக் கொண்டனர்;
சிலர், உன் திருவடிகளை எடுத்து,அவர்கள் மடிகளில் வைத்துக்கொண்டனர்;
உன்னைச் சிலர் புகழ்ந்தனர்; சிலர் பொய்க்கோபத்துடன் உன்னிடம் பேசினர்
ஹே, ஸ்வாமி—-சிலர் அன்பு காட்டுவதால், அன்பை அளிக்கிறார்கள்;
இன்னும் சிலர், அன்பைக் காட்டியபோதிலும் , அந்த அன்பை மதிக்காமல்
வேறு விதமாக நடந்து கொள்கிறார்கள்; நீர் அன்பு செய்பவரா ?
அன்பு செய்தபோதும் வேறாக நடந்து கொள்பவரா ?
இல்லாவிடில் இந்த இரண்டு வழியும் இல்லாமல்,
உமது வழியே போகும் சர்வ ஸ்வதந்த்ரரா ?
நீர் எந்த ரகத்தைச் சேர்ந்தவர் ? என்று உன்னைக் கேட்டார்கள்.
அதற்கு நீ பதில் கூறினாய்;–
சகிகளே ………ஒரு நன்மையை விரும்பியோ,
பரஸ்பர நன்மையை விரும்பியோ என்னிடம் அன்பு செலுத்தினால்
அந்த அன்பு “ஸ்வார்த்தம் “ஒரு பலனுக்காகச் செய்யப்பட்டதாகும்
அதில் சந்தோஷமோ,ஸ்நேகத்தன்மையான தர்மமோ இருக்காது
(கலவிக்குக்கூலி கேட்பார்களா ! )
எவர்கள் அன்பைப் பெறாவிட்டாலும், பிறரை அன்புடன் நேசிக்கிறார்களோ,
அவர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள்;
தங்கள் பெற்றோரைப் போலக் களங்கமில்லா அன்பு;
சௌஹ்ருதம் —-அதாவது நேசிக்கும் தன்மை இருக்கிறது;
இதில் தோஷத்துக்கோ அபவாதத்துக்கோ இடமில்லை;
இன்னும் சிலர், பிறர் இவர்களை நேசித்தாலும், இவர்கள்,
அப்படி நேசிப்பவர்களிடம் அன்பு செலுத்துவதில்லை.
அன்புக்குப் பதில் அன்பு செய்வதில்லை.

தங்களையே தங்கள் சொந்த ஆத்மாவையே ரமித்து,
ஆப்தகாமர்களாக, பிறர் நன்மை செய்தாலும் அதை நினையாமல்
நன்றி கெட்டு, அக்ருதக்ஜனாக ,பிறருக்கு— சொந்த தகப்பன், குரு —-
இ வர்களுக்குத் தீமை செய்யும் ஸ்வபாவம்உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
சகிகளே…….நான் இந்த ரகங்கள் ஒன்றிலும் சேரவில்லை;
சேரமாட்டேன். யார் என்னைப் பஜித்தாலும் அவர்கள் கண்களுக்கு நான்
பொதுவாகத் தோன்றுவதில்லை; புலப்படுவதில்லை.
அது அவரவர்களின் பக்தியின் ஆழத்தைப் பொறுத்தது;
பற்றுக்களை அறுத்த பக்தி;
ஏனென்றால், நான் மறைந்து போனால், அவர்கள் என்னையே
நினைத்துக் கொண்டிருப்பார்கள்—-சதா என் த்யானத்திலேயே
மூழ்கி இருப்பார்கள் அன்றோ!

ஒரு தரித்ரனுக்கு, பொக்கிஷம் கிடைத்து, அது நஷ்டப்பட்டுப் போனால்,
எப்படி அதே சிந்தையில் இருப்பானோ, வேறு ஒன்றிலும்
பற்று இல்லாமல் இருப்பானோ —-அதைப் போல எப்போதும் என்னையே
சிந்தித்து இருப்பான்.

ஹே…அபலைகளே…..என்னைப்பற்றிய த்யானம்,
என்னைப் பற்றிய அனுவ்ருத்தி உங்களுக்கு ஏற்படுவதற்காக —-
-நான் உங்களிடமிருந்து பிரிந்து போகிறேன்.
உங்கள் கண்களுக்குப் புலப்படாமல் இருக்கிறேன்.
நீங்கள் என்னைப் பஜித்தபோதிலும் ,
உங்களிடமிருந்து என்னை மறைத்துக் கொள்கிறேன்.
உங்களை நான் நேசித்தாலும், மறைமுகமாக என் சேஷ்டிதங்களாலே
அவற்றின் ஸ்மரணம் இவற்றாலே என் அன்பைக் காட்டுகிறேன்.
நீங்கள் எனக்காக மிகவும் த்யாகம் செய்து இருக்கிறீர்கள்.

உங்கள் நடத்தை தோஷமில்லாதது. உங்கள் அன்பு புனிதமானது.
அது மற்றவர்களுக்குத் தோஷமாகத்தோன்றினாலும்,
குறையாகத் தெரிந்தாலும் , உங்கள் நடத்தை
என் விஷயத்தில் குற்றம் குறை இல்லாதது.
எத்தனை பிறவி எடுத்தாலும், எத்தனை தேவ வர்ஷங்கள் ஆனாலும்
உங்கள் கடனை என்னால் தீர்க்க முடியாது.
என் த்யானம்—-என்னைப் பற்றிய நினைவு, —-
வீடு, கணவன், புத்ரன், குழந்தைகள் இவற்றைப் பற்றிய
உங்கள் எண்ணங்களை அழித்துள்ளது;
சம்ஸார பந்தங்களை அறுத்துள்ளது .
வீட்டுப் பற்றை அழித்து, பகவத் த்யானத்தில் மூழ்கச் செய்வதே
இதற்கு உரிய மஹா பலன்; அதனை இப்போது
என்னிடமிருந்து அடையப் போகிறீர்கள்
((ஹே—-கிருஷ்ணா—-கோபிகைகள் பக்தியில் ,அவர்களுக்குக்
கடமைப் பட்டு உள்ளதாக —அவர்களின் கடனை
எத்தனை பிறவி எடுத்தாலும் எத்தனை தேவ வர்ஷம் ஆனாலும்
தீர்க்க முடியாது என்று உறுதியாகச் சொன்ன கிருஷ்ணா !
உன்னைப் பூஜிக்க நாங்கள் எவ்வளவு தேவ வர்ஷம்
தவம் செய்து இருக்கவேண்டும் ! ஸ்ரீ ஆண்டாள் அருளியதைப் போல
“பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்த நீ ,
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது !
எற்றைப் பறை கொள்வானன்றுகாண் கோவிந்தா !
எற்றைக்கும் ஏழேழு பிறவிக்கும்
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம்
உன்னை எத்தனை ஆயிரம் தடவை நமஸ்கரித்தாலும் போதாது—
போதாது—போதாது;

ஹே….ராதே ….உன்னையும் எவ்வளவு தடவை நமஸ்கரித்தாலும் போதாது;
இருந்தாலும் கோபஸ்த்ரீகளை—-உன் பக்தியில் முழுவதும் ஆழ்ந்த —
உன்னால் கொண்டாடப்படுகின்ற —அந்த மாதாக்களை
ஆயிரம் தடவை நமஸ்கரிக்கிறேன். —ராதை என்கிற
பக்தி மார்க்கத்துக் குருவாகிய மாதாவை ஆயிரம் தடவை நமஸ்கரிக்கிறேன் ,
இவர்களை முன்னிட்டு,
ஹே—கிருஷ்ணா–உன்னைப் பல்லாயிரம் தடவை நமஸ்கரிக்கிறேன் )
32 வது அத்யாயம் நிறைவடைந்தது. சுபம்
அடுத்த அத்யாயம் , பலஸ்ருதியுடன் கூடிய “ராஸக்ரீடை “”

——————————————————————————————————————————————

தசமஸ்கந்தம்–நவீன பாணியில்—-அத்யாயம் 33
————————————–
ராஸக்ரீடை
——————-
யமுனா நதிக்கரை—–மல்லிகைப்புஷ்பங்களின் வாஸனை —-
இதமான தென்றல் –இரவு நேரம் —சந்திரனின் கிரணங்கள்
அமுதைப் பொழிந்துகொண்டு இருக்கின்றன .
நீ, உனது அங்க, பிரதி அங்க ஸ்பர்சத்தால், கோபிகைகளின்
மனக் கலக்கத்தைப் போக்கி, தாபங்களைப் போக்கி
அவர்களுக்கு அநுக்ரஹம் செய்ய நினைத்தாய்.
ஸ்திரீ ரத்னங்களான அவர்களுடன்,
ப்ரீதி, அன்யோன்யம் இவைகளால் உண்டான ஸ்நேகஉள்ளத்துடன்,
ராஸக்ரீடை செய்யத் திருவுள்ளம் கொண்டாய்.
நீ, கோபிகைகளால் சூழப்பட்டு இருந்தாய்;
ஒரு சக்ர வளையத்தைப்போல மண்டலம் அமைத்தாய்;

நீ, அவர்கள் மத்தியில்;
அது மட்டுமா !
இரண்டு கோபிகைகளுக்கு நடுவே ஒரு கிருஷ்ணனாக —-
அவர்களது கைகளை உனது தோள்மீதும்—-
உனது தீர்க்கமான திருக்கரங்கள் அவர்களது கழுத்திலும் —
-இருக்க, யாவருக்கும் வித்தியாசமின்றி, எல்லா கோபிகைகளுக்கும் நீ,
அவர்கள் பக்கத்தில் இருக்கிறாய் என்கிற நினைவை—
உணர்ச்சியை—உண்டாக்கி, ராஸ லீலையைச் செய்ய ஆரம்பித்தாய்.
இதனைக் காண ஆகாயத்திலே எல்லா கந்தர்வ, தேவ அப்சரஸ்கள்
கூட்டம் கூட்டமாக வந்து விட்டார்கள்;
துந்துபி வாத்தியம் முழங்கியது;
ஆகாயத்திலிருந்து புஷ்பங்கள் உங்கள் யாவரின் மீதும் வர்ஷிக்கப்பட்டன;
கந்தர்வர்கள், தேவர்கள் உன் புகழைப் பாடினார்கள்;
ஒவ்வொரு கோப ஸ்திரீயும், கைகளில் வளைகள் குலுங்க,
கால்களில் சலங்கைகள் ஒலிக்க,
ராஸ மண்டலாகார வட்டமாக நின்றுகொண்டு,
நடனம் செய்யத் தொடங்கினார்கள்;

நீ, இரண்டு தங்க நிறமுள்ள கோபிகைகளின் நடுவே
ஒரு பெரிய மரகத மணியைப் போலப் பிரகாசித்தாய்;
அவர்கள் உன்னுடன் சேர்ந்து நடனமாடினார்கள்
பாதங்கள் , நியாஸங்கள் அசைந்தன
புஜங்கள் தாளத்துக்கு ஏற்ப ஆடின
முகங்கள் புன்சிரிப்பைச் சிந்தின
புருவங்கள் நெளிந்து அசைந்தன
ஸ்தனங்கள் குலுங்கின ;இருபுறமும், மேலும் கீழும் குலுங்கின
காதுக் குண்டலங்கள் நடனமாடின
கோபிகைகளின் கன்னங்கள் பளபளத்தன
மார்பின் ரத்ன ஹாரங்கள் ஒளி வீசின
ஒட்டியான சலங்கைகள் சப்தித்தன
கோபிகைகள் உன் ஸ்பர்சத்தால் மிக்க ஆனந்தம் அடைந்தார்கள்
உச்சஸ்தாயியில் பாடினார்கள்
பிருந்தாவனம் ,கோபிகைகளின் கீதத்தால் நிரம்பியது
(நாட்ய சாஸ்த்ரம் சொல்வதாவது ;—-பல ஸ்திரீகள் வட்டமாக இருப்பர்;
ஒவ்வொரு ஸ்திரீயின் அணைப்பிலும் ஒரு புருஷன்–
இரு ஸ்திரீகளின் நடுவே ஒரு புருஷன்—-
இரண்டு புருஷர்களுக்கு நடுவே ஒரு ஸ்திரீ—
இப்படி நின்றுகொண்டு, கைகளைத் தோளின்மீது கழுத்தைச் சுற்றிப்
போட்டுக்கொண்டு, சக்ர வளைவில் —-நர்த்தனம் செய்தல்—-
பாடுதல்—-தாளத்துக்கு ஏற்ப கரங்களைத் தட்டுதல்—-
சலங்கை ஒலிக்க பாதங்களை நெளிவு சுளுவுடன்
தரையில் வைத்து எடுத்தல்—-இப்படியாக மிக விரிவாகச் சொல்கிறது )
கோபிகைகள் ஆடிய விதத்தை ஸ்ரீ சுகர் சொல்வதை—
ஹே, கிருஷ்ணா, உனக்கு நினைவு படுத்துகிறேன்.
உன் கையால் கழுத்தை அணைக்கப்பட்டிருந்த ஒரு கோபிகை
உனக்குச் சமமாக உச்சஸ்வரத்தில் பாடினாள்;
இவள் ராதையின் தோழியான விசாகா ;
உன் பக்கலில் இருந்த மற்றொரு கோபிகை
பேஷ் பேஷ் என்று ஆனந்த மிகுதியால் கூவினாள்
அதே பாடலை 2 வது காலமாக, 3 வது காலமாக வேகமாக—துருவகாலத்தில் —
ராதையின் இன்னொரு தோழியான லலிதை பாடினாள்
அதனால் சந்தோஷம் அடைந்த நீ, அவளை மெச்சி அந்தப் பாடலுக்கு ஏற்ப
ஆடிக்காண்பித்தாய் ;
உன்னுடைய அந்தரங்கப் பிரியையான ராதா,
ராஸவிளையாட்டில் பரிசிரமம் அடைந்தாள்;
உன்னுடைய தோள்களின் மீது தாமரைத் தண்டுகளைப் போன்ற
தன்னுடைய கரங்களைப் போட்டு, உன்னுடன் சேர்ந்து நின்று இருந்தாள்;
அப்போது அவளுடைய கை வளைகள் நழுவின;
தலையில் அணிந்து இருந்த மல்லிகை ,கசங்கிக் கீழே உதிர்ந்தன;
உன்மீது அப்படியே சாய்ந்து கொண்டாள்;
( பக்திக்கு இலக்கணமாகிய ,உனக்குப் ப்ரியமான ,ஸ்திரீ ரத்னமான
,ஸ்ரீ ராதை மாதாவுக்கு ஆயிரம் தடவை நமஸ்காரங்கள் )
இவளைப் பார்த்த, இன்னொரு கோபிகை, சந்தனம் பூசப்பட்ட
உன் திருக்கரங்களைப் பிடித்து, தன் தோளின் மீது இருத்திக் கொண்டு,
மெய்மறந்தாள்;
சியாமளா என்கிற, ராதையின் தோழியான இன்னொருத்தி,
தன்னுடை கையை உன் அருகில் கொண்டு வர,
அந்தக் கையை நீ முத்தமிட, அவளும் மெய் மறந்தாள்;
ராதையின் இன்னொரு தோழியான சைப்யை ,
தன்னுடைய உதட்டின் ஸ்பர்சத்தினால், உன்னுடைய தாம்பூலத்தை
வாயினால் க்ரஹித்து, சுவைத்தாள்.
அதைப் பார்த்து நீ, ஆனந்தம் அடைந்தாய்;
இன்னொரு கோபிகை, ராஸ விளையாட்டால் களைத்துப் போனாள் ;
அவள் இடுப்பில் அணிந்து இருந்த ஒட்டியாணம் நழுவியது;
கால் சலங்கைகள் அவிழ்ந்தன;
இதைப் பார்த்த பத்ரை எனப்படும் ராதையின் இன்னொரு தோழி,
உன் அம்புஜ ஹஸ்தத்தை இழுத்துத் தன் ஹ்ருதயத்தில் வைத்துக் கொண்டாள்;

( அவள் பத்ரை, பெயருக்கு ஏற்ப மங்களமானவள்; தானும் மங்களமாகி
அவள் தோழியான ராதைக்கும் , ஸ்திரீ ரத்னம் ராதையின்
அடிமையான அடியேனுக்கும் மங்களத்தை ஏற்படுத்தினாள் )
ஒவ்வொரு கோபிகையின் காதின் ஓரத்தில் அல்லி புஷ்பம் அமர்ந்து இருக்க,
கேசபாசங்கள் கன்னத்தில் அவிழ்ந்து விழ,
முகத்தில் அரும்பிய வ்யர்வைத் துளிகள்
உன்னுடன் போட்டி போட்டுக் கொண்டு ஆட,
கால் சலங்கைகள், ஒட்டியாண சலங்கைகள்
கைவளைகள் எல்லாம் தளத்துக்கு ஏற்ப ஒலித்திட,
தாள வாத்தியங்கள் முழங்க,
ஸ்ரீ மகாலக்ஷ்மிக்கே ஏகபோகமாக இருக்கும் உன்னை அடைந்து,
உன் கைகளை அவர்கள் கழுத்தில் அணிந்துகொண்டு ,
ராஸ நடனம் செய்து, உன்னைப்பற்றிப் பாடி, உன்னை ரமித்தனர்;

அப்போது அவர்கள் மாலைகள் நழுவி விழுந்தன;
தேனீக்கள் ரீங்காரம் செய்ததால், காயகர்களாக (பாடுபவர்களாக ) இருந்தனர் ;
மயில்களும், குயில்களும், கிளிகளும், அன்னங்களும்,
மைனா சக்ரவாகப் பறவைகளும், வாய்ப்பாட்டு,
தாளவாத்தியங்கள் வாசிப்பவர்களாக இருந்தனர்;
எல்லோரும் களைத்துப் போனார்கள்;
நர்த்தனம் செய்த கோபிகைகளும் களைத்துப் போனார்கள்;

இப்படி, நீ, வ்ரஜ சுந்தரிகளுடன் ராஸ லீலை செய்தாய்;
ஹே,கிருஷ்ணா—-நீ செய்த ராஸ க்ரீடையை,
வானத்தில் கூடி இருந்த ஸ்திரீகளும் பார்த்து,
தங்கள் நிலையை மறந்து சந்தோஷம் அடைந்தனர்
; சந்திரனும், தன் நக்ஷத்திர பரிவாரங்களுடன் இதைப் பார்த்து ஸ்தம்பித்தான்;
இரவு அதனால் நீண்டது.
நீ, கோபிகைகள் பலருடன், அவர்களுக்குச் சமமாக பல கிருஷ்ண ரூபங்களை எடுத்து,
விளையாடி அவர்கள் களைப்புறும் போதெல்லாம் அவர்கள் முகத்தைத் தடவி
அவர்களுடைய களைப்பைப் போக்கி, அவர்களை ஆனந்தம் அடையச்செய்தாய்
பிறகு, அவர்களுடன் யமுனை நதியில் ஜல க்ரீடைக்கு இறங்கினாய்.

உனக்கு உள்ள உலக மரியாதைகள், வேத பூர்வ மரியாதைகள் எல்லாம் விலகி
வெகு தூரம் சென்றன;
ஜலத்தில் இறங்கிய நீ, அவர்கள் மீது ஜலத்தை வாரி இறைத்தாய்;
இதனால் சந்தோஷமடைந்த கோப ஸ்திரீகள் அவர்களும் உன் மீது
யமுனா ஜலத்தை வாரி வீசினார்கள்;
ஆகாயத்தில் குழுமி இருந்த கந்தர்வ ஸ்திரீகள், அப்சரஸ்கள் ,
மேலே இருந்து உங்கள் மீது புஷ்பமாரி பொழிந்தார்கள்;
ஒரு இரவு பல இரவுகளாக நீடித்தது;
ஆனால், கோபிகைகளுக்கு, இப்படி இரவு நீண்டதே தெரியவில்லை;
ஹே, கிருஷ்ணா—-பரீக்ஷித் ராஜன் ஸ்ரீ சுகரைக் கேட்ட கேள்விகளையும் ,
அதற்கு அவர் சொன்ன பதில்களையும் இப்போது சொல்கிறேன்
பரீக்ஷித்தின் கேள்வி ;—-பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் அவதாரம்,
தர்மத்தைத் திரும்பவும் நிலை நிறுத்த ஏற்பட்டது; அவர்
-பரர்களின் தாரங்களை எப்படி தன்னுடைய சொத்தாக ஆக்கிக் கொண்டார் ?
ஸ்ரீ ஆத்ம காமர்—சமஸ்த காமங்களையும் அடைந்தவர்;
அவர் எப்படி இப்படி நடந்து கொண்டார் ?
உமது அபிப்ராயத்தில் ,இந்த நடத்தை சரியா ?
ஸ்ரீ சுகரின் பதில்;—–நம் பார்வையில் படுகின்ற —தர்மத்துக்கு எதிர் என்று
நினைக்கிற செயல்கள்— பகனுக்குத் தோஷமாக ஆகாது;
அக்னியில் போடப்பட்டவை எப்படி பஸ்மாமாக ஆகுமோ,
அப்படி பகவானின் தேஜஸ்சில் இவை ஆகிவிடும்;
பகவான் ,பரப்ரம்மம், பரமாத்மா;
எல்லா ஆத்மாக்களும் அந்த பரமாத்மாவில் லயிப்பவை;
பாற்கடலில் தோன்றிய ஆலஹால விஷம், ருத்ரனால் விழுங்கப்பட்டது;
இதை—இது போன்ற சா ஹசச் செயல்களை ,இப்படிப் பேசும் மூடர்களால்
செய்ய முடியுமா ?

பகவான் சர்வ சக்தி உள்ளவர்; அவரை எந்த தோஷமும் நெருங்க முடியாது;
அவர் செய்தது தோஷம் என்பதோ, அதைப்போலச் செய்ய நினைப்பதோ—-
நினைப்பதே கூட, மற்றவர்கட்கு மஹா தோஷம்;
இந்த உலகு மட்டுமல்ல—எல்லா உலகங்களிலும் உள்ள ஜந்துக்கள்
பசு பக்ஷி மிருகம் மனுஷ்யன் தேவன் உட்பட—-அவனுக்கு அடங்கியவர்கள்;
இவை யாவும்–ஆமாம்—எல்லாமும் அவனுக்கு சரீரம் அதாவது–உடல்;
இவை எல்லாவற்றுக்கும் அவர் ஆத்மா. அவருக்கு எப்படி தோஷம் ஏற்படும் ?
அவரது திருவடிகளை அனவரதமும் தொழும் யோகிகள்,
தங்களுடைய யோக மகிமையால் கர்ம பந்தங்களை விலக்கியவர்கள்—
பகவத் சாம்யம் பெற்றவர்களுக்கு, எப்படி தோஷங்கள் ஒட்டாதோ
யாரால் இந்த நிலையை அடைந்தார்களோ,
அந்தப் பகவானுக்கு, அதைவிட பன்மடங்கு அதிகமாக,
எந்தத் தோஷமும் ஒட்டாது.
கோபிகைகளாக இருந்தாலும், அவர்கள் பதிகளாக இருந்தாலும்,
எல்லோரும் கர்ம சம்பந்தமான தேகத்தை உடையவர்கள்.
பஞ்ச இந்த்ரியங்களால் ஆக்கப்பட்ட தேகத்தை உடையவர்கள்
இவர்கள் யாவரும் பகவானுக்கு, சரீரம்,
இவர்களுக்குள்ளும் அந்தர்யாமியாக இருப்பவர் பகவானே—ஸ்ரீ கிருஷ்ணனே !
ஸ்வரூப —–ஸ்திதி—–ப்ரவ்ருத்தி—-யாவற்றிலும் அவரே செயல் படுகிறார்.
அவரே ஸ்ரீ கிருஷ்ணனாக —தேகத்தை—நம்மைப் போல எடுத்துக் கொண்டு
இப்படி லீலைகள் செய்கிறார்.

அவருடைய மாயையினால் மோஹிக்கப்பட்ட வ்ரஜையில் உள்ள யாரும் —
ஜனங்களோ–கோபர்களோ–கோபிகைகளோ–அவர்களுடைய பதிகளோ—
அவரின் பெற்றோர்களோ அவரிடம் எந்தத் தோஷத்தையும் காணவில்லை.
ஏனென்றால், ஒவ்வொருவரும் அவருக்குப் பத்னி—அவர் ஒருவரே புருஷர்.
புருஷர்களுக்கு எல்லாம் புருஷோத்தமர்.
ஸ்ரீ சுகர் இவ்வாறு பதிலளித்து விட்டு, மேலும் சொன்னார்.
ஹே—ராஜன்—-ராத்ரி வேளை முடியும் நேரம் நெருங்கியது;
ஸ்ரீ கிருஷ்ணரை விட்டுப் பிரிய மனமில்லாமல்,
பாக்யசாலிகளான அந்தக் கோபிகைகள்—அவருடைய அனுமதி பெற்றுத்
தங்கள், தங்கள் க்ருஹத்துக்குத் திரும்பினார்கள்.
(ஹே—-ராதாமாதவ—–கோபிகைகளைப்போல , எங்களைத் திருப்பி அனுப்பிவிடாதே.
உன்னைச் சரண் அடைந்து விட்டோம் எங்கும் போகமாட்டோம் )
பலஸ்ருதி ;—-
யார், யார், இந்த ராஸ க்ரீடைகளை ,ஸ்ரத்தையுடனும்,பக்தியுடனும் கேட்கிறார்களோ,
அவர்களுடைய காமங்கள், இச்சைகள் , மிருகத் தன்மைகள் என்று யாவும்—-
விரைவில் அழிகின்றன; அவர்கள், காமத்தை வென்று கிருஷ்ண பக்தனாகிறார்கள்

( ஹே, கிருஷ்ணா—-ஸ்ரீ சுகரை நமஸ்கரிக்கிறேன்; அர்ஜுனனுடைய பேரனான
பரீக்ஷித்தை நமஸ்கரிக்கிறேன்; நாரதரையும் ஸ்ரீ வியாசரையும் பல தடவை நமஸ்கரிக்கிறேன்;
கோபிகைகளின் தலைவி —-உனக்கு இனியவள் —அந்த ஸ்ரீ ரத்னமாகிற ராதை மாதாவை
அவருடைய தோழிகளுடன் சேர்த்துப் பலப் பல தடவை நமஸ்கரித்து,
அவர்களுடைய ஸ்ரீ கிருஷ்ண பக்தியில் கொஞ்சமாவது எங்களுக்கு அருளி,
உன்னிடம் நீங்காத பக்தியும், உன் திருவடிகளில் இடையறாத நினைவும் ,
இந்த பக்தியும் நினைவும் சேர்ந்து ,பிறவி என்பதை அறுத்து, பரமபதத்தில்
நித்ய கைங்கர்யம் செய்யும் பாக்யத்தை வேண்டி
உன்னைப் பல்லாயிரம் தடவை நமஸ்கரிக்கிறேன் )

இத்துடன், ராதா பஞ்சாத்யாயம்—–ராஸ க்ரீடை நிறைவு பெற்றது.
இதைப் படித்தவர்களுக்கு, பகவான் எல்லா ஆசிகளையும் வழங்குவாராக.
( தொடர்ந்து வரப் போகின்ற, உத்தவர் விஜயம், ப்ரமர கீதம், உத்தவரின் அதிசயமான
அனுபவங்கள்—இவற்றையும் சேர்த்து அனுபவிக்கத் தயாராகுங்கள் )
ராஸ க்ரீடை என்கிற 33 வது அத்யாயம் நிறைவடைந்தது. சுபம்.

இனி 34 வது அத்யாயம்…….சங்க சூடனின் வதம்
ஸ்ரீ சுக பிரம்ம ரிஷி, பரீக்ஷித் மகாராஜனுக்கு உன்னுடைய லீலைகளை,சுதர்சனன் என்கிற வித்யாதரனுக்கு சாப விமோசனம் அளித்ததையும்,
சங்கசூடன் என்கிற பேர் உள்ள , குபேரனின் தாசன் , கோபிகைகளிடம் அபசாரப்பட்டதால்,
அவனை அழித்ததையும் இப்போது சொல்கிறார்.

ஒரு சமயம், கோபர்கள், எல்லாத் தேவர்களையும் சந்தோஷமடையச் செய்ய, ஒரு நாள் பூராவும் தண்ணீர் மாத்ரம் அருந்தி, வேறு ஆகாரமின்றி உபவாசம் இருந்தனர். நந்தகோபனும் இதில் கலந்து கொண்டு, சரஸ்வதி நதி தீரத்தில், உபவாசம் இருந்தார்.
ராத்திரி நேரம்; ஒரு பெரிய சர்ப்பம், நந்தகோபன் படுத்துக்க் கொண்டு இருந்த பக்கமாக,
யதேச்சையாக வந்தது; சர்ப்பத்துக்கு சரியான பசி; நந்தகோபனை விழுங்க ,அவரைப் பிடித்துக் கொண்டது; திடீரன்று கண் விழித்துப் பார்த்தபோது பெரிய சர்ப்பம்;
நந்தகோபன் கதறினார்; உன்னைக் குறித்துக் கதறினார்;

கிருஷ்ணா, பெரிய சர்ப்பம் என்னை விழுங்கப் பார்க்கிறது,ஓடி வா என்னைக் காப்பாற்று என்று கதறினார்.கோபர்கள், சூலம் ஈட்டி, தீப்பந்தம் முதலியவைகளால் குத்தியும் பயமுறுத்தியும்
சர்ப்பம் அவரை விடவில்லை.
அந்தச் சமயத்தில் நீ அங்கு ஓடோடி வந்தாய்.
சர்ப்பத்தை உன் திருவடியால் எட்டி உதைத்தாய்.
உன் திருவடி ஸ்பர்சத்தால் , சர்ப்பம் , வித்யாதரனாக எழுந்தது.அந்த வித்யாதரன் உன்னை வணங்கினான். நீ, அவனை “வித்யாதரனாக விளங்கும் நீ,
சர்ப்ப உருவத்தில் இருந்ததற்குக் காரணம் என்ன” என்று கேட்டாய்
அதற்கு , வித்யாதரன் “நான், சுதர்சனன் என்ற பெயர் உள்ள வித்யாதரன்; சகல ஐஸ்வர்யமும், அழகும் பெற்று இருந்தேன்; ஒரு சமயம், அங்க ஹீனமான ரிஷியை—-அங்கிரஸ் கோத்ர ரிஷியை—–பரிஹாசம் செய்தேன்; அவர் கோபமடைந்து ,என்னை சர்ப்பமாகப் போகக்கடவது என்று சபித்தார். அதுமுதல், சர்ப்பமாக
அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தேன்; உங்களது திருவடி ஸ்பர்சத்தால்,சாப விமோசனம் கிடைத்தது; உங்களது தர்சனமும் கிடைத்தது;
உங்களது திருவடி சம்பந்தம் பாபத்தைப் போக்குகிறது;
அடியேனை ரக்ஷித்து பழைய உருவை அடையச் செய்தது, அடியேனின் பாக்கியம் ”
என்று சொல்லி, உன்னைப் பிரதக்ஷிணம் செய்து, தேவ லோகத்துக்குச் சென்றான்.
நந்தகோபன் ஆச்சர்யத்துடன் இவைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தான்;
கோபர்களும் அப்படியே; எல்லோரும் உன்னை ஸ்துதி செய்துகொண்டே,கிராமத்துக்குச் சென்றனர்.

பின்னொரு சமயம்; ராத்ரி வேளை; வ்ரஜவனம்;அல்லிமலர்கள் மலர்ந்து இருக்கின்றன; இளங்காற்று வீசுகிறது; எங்கும் மல்லிகைப் புஷ்ப மணம்; வ்ரஜ சுந்தரிகள்—கோபிகைகள் –உடல்பூராவும் சந்தனம் பூசி, வாசனைத் த்ரவ்யங்களையும் பூசி, மாலைகளாலும் புஷ்பங்களாலும் அலங்கரித்துக்கொண்டு,
நீயும் பலராமனும் அங்கு இருக்கும்போது, மிகவும் அன்புடன் மதுரமாகப் பாடுகிறார்கள்
. நீங்களும், ஸ்வர மூர்ச்சனைகளுடன், மேலும் கீழும் சஞ்சாரம் செய்யும் குரலில் சர்வ பூதங்களும் மயங்கும்படி பாடுகிறீர்கள்;கோபஸ்த்ரீகள் ஆனந்தித்து, மதி மயங்கி, கேசபாசங்கள் கலைய, மாலைகள் நழுவ,
உடைகள் நழுவுவதுகூடத் தெரியாத மயக்கத்தில் இருக்கிறார்கள்;
அப்போது, குபேரனின் தாசன்—சங்கசூடன் —என்பவன் அங்கு வந்து, மதி மயக்கத்தில் இருக்கும் வ்ரஜ சுந்தரிகளை, பசுக்களைத் திருடன் ஓட்டிச் செல்வதுபோல
, அவர்களை விரட்டி, அபஹரித்துச் செல்கிறான்;
அவர்கள், ஹே….ராமா….ஹே….கிருஷ்ணா எங்களைக் காப்பாற்று என்று கதறுகிறார்கள்;
பயப்படாதீர்கள் என்று சொல்லி, நீயும் பலராமனும் சங்க சூடனை விரட்டுகிறீர்கள்; அவன் தப்பித்தால் போதுமென்று ஓடுகிறான்; நீ, பலராமனை , கோபிகைகளுக்குத்துணையாக நிறுத்தி, சங்கசூடனை விரட்டி , அவன் அருகில் சென்று உன் முஷ்டியாலேயே
அவன் சிரஸ்ஸை அடித்துக் கீழே தள்ளி, அவன் தலையில் அணிந்து இருந்த ரத்ன ஆபரணத்தை
எடுத்துக் கொண்டு வந்து , பலராமனிடம் கொடுக்கிறாய். அவரைக் கௌரவித்தாய்.

34 வது அத்யாயம் நிறைவு அடைந்தது . ஸுபம்

வ்ரஜஸுந்தரிகளின் ,க்ருஷ்ணலீலா கீதம்–கோபிகா கீதம்

ஹே —கிருஷ்ணா—-நீ, பசுக்களை ஓட்டிக்கொண்டு வனத்துக்குச் செல்லும்போது,,
உன் பிரிவாற்றாமையால் ,கோபிகைகள் ,மனஸ்ஸை உன்னிடம் பறிகொடுத்து
உன் புகழை மெய்மறந்து பாடினார்கள்.
சுக மஹரிஷி ,பரீக்ஷித் ராஜனிடம் சொன்னதை, இப்போது உன்னிடம் சொல்கிறேன்

நீ, புல்லாங்குழலை இடது கையில் பிடித்துக்கொண்டு இடது பக்கமாகக் கொஞ்சம்
வளைந்து,நின்றுகொண்டு உன்னுடைய புருவங்கள் அசைய ,உன் கோமள விரல்கள்
புல்லாங்குழலின் நாதத் த்வாரங்களை மூடித் திறக்க , வேணுகானம் செய்யும்போது,
ஹே–கோபிகைகளே —-எங்கே—எந்த இடத்திலிருந்து கண்ணன் கானம் இசைக்கிறானோ,
அந்த இடத்துக்குஉங்கள் மனஸ் சென்று, லயித்துவிடுகிறது.

அப்போது ஆகாய மார்க்கமாக சென்றுகொண்டிருக்கும் சித்தர்களின் பத்னிகள் ,
கண்ணனுடைய நாதத்தைக் கேட்டு,ஆச்சர்யப்பட்டு, உங்களைப்போலவே மனசைப்
பறிகொடுத்து லஜ்ஜையும் பக்தியும் கலந்த மனத்தை உடையவர்களாய், தங்கள்
ஆபரணங்கள் மாலைகள், வஸ்த்ரங்கள் நழுவுவது கூடத் தெரியாமல், கணத்தில்
லயிக்கிறார்கள்.

ஹே—-சித்த பத்னிகளே—-நந்தகுமாரன் ,வேணுகானம் செய்யும்போது, அவருடைய
வக்ஷஸ்தலத்தில் நித்யவாஸம் செய்யும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி, மின்னலைப்போல ,
தேஜோமயமாக ஜ்வலிக்கிறாள்.அப்போது பெருமைக்குரிய கண்ணனின் கானம்
ஹே—-அபலா —உங்கள் மனஸ் துக்கத்தைப் போக்கி ,சந்தோஷமடையச் செய்கிறது.

அந்த கானம் ப்ருந்தாவனம் முழுவதும் பரவி நிரம்புகிறது.அங்கு சஞ்சரிக்கும் வ்ருஷபங்கள்
மான்கள், மயில்கள், குயில்கள், பக்ஷிகள், வேணுகானத்தில் மயங்கி , சாப்பிடுதல்,
நடத்தல், படுத்தல், தூங்குதல் போன்ற தத்தம் கார்யங்களை மறந்து, புற்களை மேய்பவை
கானம் வரும் திசையை நோக்கி ,அண்ணாந்து பார்த்து, இருகாதுகளும் விரைத்து மேல் எழும்ப ,
வாயில் புற்கள் அப்படியே இருக்க, கண்ணனின் வேணுகானத்தில் மோஹித்து ,நான்கு கால்களும்
தடுமாற,அசையாச் /அழியாச் சித்திரங்களைப் போல ,காட்சி அளிக்கின்றன.

பகவான் க்ருஷ்ணன் ,பலராமனுடன்கூட நன்கு அலங்கரித்துக்கொண்டு, காட்டுப்
புஷ்பங்களைச் சூட்டிக்கொண்டு, மயில் இறக்கையைத் தன்முடிமீது அலங்காரமாக
வைத்துக்கொண்டு,வாயால் பாடும்போதோ, வேணுகானம் இசைக்கும்போதோ,
பசுக்களை அழைக்கும்போதோ , நதிகள் தங்கள் ஓட்டத்தையும் வேகத்தையும் மறந்து,
க்ருஷ்ணனின் பாதாம்புஜங்களை நினைக்கும் கோபிகைகளைப் போல, பிரேமைகளைக்
காட்டும் அலைகளும் மயங்கி, படத்தில் வரையப்பட்ட சித்ரத்தைப்போலக் காட்சி தருகின்றன.

கண்ணன் தன சகாக்களுடன்கூடி,ஒவ்வொரு பசுவையும் பெயர்சொல்லி அழைக்கும்போது,
மலையின், உச்சிமலையின், அடிவாரம், புல்தரை என்று எங்கெல்லாமோ மேய்ந்து கொண்டிருக்கும்
பசுக்கள், நாலுகால் பாய்ச்சலில் க்ருஷ்ணனை வந்து அடைகின்றன.கானத்தைக் கேட்டும்,
க்ருஷ்ணனின் அருகில் ஓடோடி வருகின்றன.

வனத்தில் உள்ள செடிகளும், மரங்களும், கொடிகளும் தத்தம் இயல்புநிலை மறந்து,
கிளைகளையும், நுனி இலைகளையும், பழங்களுடனும்,புஷ்பங்களுடனும்,வளைந்து,
குனிந்து, கீழே தாழ்த்தி, தேனை வர்ஷித்து,புஷ்பங்களைத் தூவுமாப்போலே,தூவி,
நமஸ்கரிப்பதுபோல ஹ்ருதய சுத்தமாக ,அதிதியை வரவேற்பதுபோல,—-ஆஹா—ஆஹா—
கண்கொள்ளாக் காக்ஷி —-பார்ப்பதற்கு எவ்வளவு அழகு !

கண்ணன், சந்தன திலகத்தை நெற்றியில் இட்டுக்கொண்டு இருக்கிறான்.வனமாலை போன்ற திவ்யமான
மணம் வீசும் துளசி மாலையை அணிந்துகொண்டு இருக்கிறான்.அந்த வாசனையால்
தூண்டப்பட்ட வண்டுகள், தேனீக்கள், கண்ணனைச் சுற்றி ரீங்காரம் இடுகின்றன. வேணுகானத்தில்,
தேனீக்களும், வண்டுகளும் மயங்குகின்றன. ரீங்காரமிடுவதை மறக்கின்றன.வானத்தில் உள்ள
மேகக்கூட்டங்கள், தங்கள் கர்ஜனையை நிறுத்தி, மந்தமாக சப்திக்கின்றன.இது, வேணுகானத்துக்கு,
”ஸ்ருதி” சேர்ப்பதைப்போல் உள்ளது.

மேகங்கள், நீர்த்திவலைகளை வர்ஷிப்பதற்குப் பதிலாக,புஷ்பங்களை, க்ருஷ்ணனின்மேல்
வர்ஷிக்கின்றன.இந்தப் புஷ்ப வ்ருஷ்டிகள் ,பனையோலை குடையைப்போல க்ருஷ்ணனின்
சிரஸ்ஸுக்கு மேலே கவிந்து,கைங்கர்யம் செய்கின்றன.
( ஹே—ப்ரபோ—–பாக்யசாலிகளான
அந்த மேகக்கூட்டங்களை அடிக்கடி நமஸ்கரிக்கிறேன் )

ஹே—-யசோதா—உன் குமாரன் வேணுகானத்தைக் கேட்டாயா—–கோவைப்பழம்போலச்
சிவந்திருக்கும் உதடுகள்—-அவற்றில், புல்லாங்குழல் கானமிசைக்கும்போது, ஸ்வரங்கள்
ஜிவ்வென்று கிளம்பி மெய்மறக்கச் செய்கிறது.கூடவே, கோபர்களும் பாடுகிறார்கள்.
இந்த்ரன் , சிவன்,ப்ரும்மா , தேவர்கள் யாவரும் ”இது என்ன அற்புதம்” என்று, கானம்வரும்
திசையை நோக்கி, தங்கள் தத்வ அர்த்தங்களில் இழியாமல், புத்தியை இழந்து, தலையைச்
சாய்த்து, கண்ணனின் வேணுகானத்தைக் கேட்கிறார்கள்.

ஹே—யசோதா—-உன் புத்ரன் க்ருஷ்ணன் நடந்துகொண்டே, வேணுகானம் செய்கிறார்.
கம்பீரமான நடை.அந்தத் திவ்யமான திருவடிகளில், தாமரைப் புஷ்பம், கொடி,அங்குசம் ,
சக்ரம் ,போன்ற அடையாளங்கள் . அவை, வ்ரஜபூமியில் படியுமாப்போலே , எங்கள்
ஹ்ருதயத்திலும் படிந்து, எங்கள் சுய நினைவை இழக்கச் செய்து, எங்கள் உடைகள்,
மேலாடைகள் நழுவுவதுகூடாது தெரியாமல்,உன்மத்தமாக்குகின்றன.

க்ருஷ்ணன் , சிலசமயங்களில், மணிமாலைகளின் உதவியால், கோக்களை எண்ணுவார்.
உச்சஸ்தாயியில் பாடுவார்.வேணுகானம் இசைப்பார்.அப்போதெல்லாம் பெண்மான்கள்,
வேணுகானத்தில் மூழ்கி, க்ருஷ்ணன் அருகில் நெருங்கி வந்து, ஆசையுடன் க்ருஷ்ணனைப்
பார்ப்பார்கள். தங்கள் பதிகளை விட்டுவிட்டு, வேணுகானலோல க்ருஷ்ணனைத் தஞ்சம்
அடைவதைப்போல, நாங்களும், க்ருஹத்து ஆசையை ஒதுக்கி ,க்ருஷ்ணனால்
ஆகர்ஷிக்கப்பட்டவர்களாய், க்ருஷ்ணனுடனேயே இருக்கவேண்டும் என்கிற புத்தியுடன்
இருக்கிறோம்.

சிலசமயம், க்ருஷ்ணன் , யமுனைக் கரையில், விளையாடும்போது, மந்தமாருதம் வீசி,
சந்தனத்தைப்போலக் குளிர்ச்சியைத் தரும்.அப்போது, ஆகாயத்தில், உபதேவகணங்கள் ,
வாத்யங்களை இசைத்து, ,க்ருஷ்ணனைக் கொண்டாடுவார்கள்.

யசோதா—-தேவகியின் கர்ப்பத்திலிருந்து, அவதரித்த க்ருஷ்ணன் இன்னும் ஏதாவது
மலையைத் தூக்கவேண்டுமா ; மலையைத் தாங்கவேண்டுமா என்கிற எண்ணத்துடன்
வருகிறார். பசுக்களை ஓட்டிச் சென்று, மேய்த்து, வாத்யங்களை இசைத்துக்கொண்டு,
களைத்துப்போய், வீடு திரும்புகிறார்.
அப்போது, அவரது திருவடிகளை —-கோக்களின் குளம்புத் தூசி படிந்த திருமேனியை,
ப்ரம்மா முதலிய தேவர்கள் புகழ்கிறார்கள்., க்ருஷ்ணன் அந்த சாயரக்ஷ வேளையில்,
சந்த்ரனைப் போலப் ப்ரகாசிக்கிறார் .

அவருடைய கன்னங்கள் ம்ருதுவாகி, காதில் உள்ள கனக குண்டலங்களின் ஜாஜ்வல்யம்
அதில் ப்ரதிபலிக்க,எங்கள் யதுபதி யாமினி ( இரவு)பதியின் வேஷத்தைச் சந்த்ரன்
தரிப்பதைப்போல , க்ருஷ்ண சந்த்ரனாக ,ப்ருந்தாவனத்தில் ப்ரவேசிக்கிறார் .

அவரின் புன்னகை முகத்தைப் பார்க்க , அவரை சந்திக்க, அவருடன் பேச,
விரஹதாபத்துடன், வ்ரஜசுந்தரிகள் வெட்கத்தைவிட்டு, ஓடி வருகிறார்கள்.
க்ருஷ்ணன் ,மந்தஹாஸத்துடன் அவர்களின் தாபத்தைப் போக்குகிறார்.எப்போதும்
க்ருஷ்ணனையே நினைத்துக் காலங்கழிக்கும் கோபிகைகள் , இவ்விதமாக ,
க்ருஷ்ணனைப் பற்றிய கீதங்களை——புகழ்க்கீர்த்திகளைப் பாடி,பரமசுகத்தை
அடைந்தார்கள் என்று
சுகப்ரம்மம் ,பரீக்ஷித்துக்குச் சொன்னார்.

( ஹே—-க்ருஷ்ணா —-அந்தக் கோபிகைகளுக்கு அனந்தகோடி நமஸ்காரத்தைச்
செய்கிறேன்.பரம ப்ரேமை , பரம பக்தி, உன்னிடம் எப்படிச் செலுத்துவது என்பதைக்
காட்டிக்கொடுத்தவர்கள் அல்லவா ! )

35வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்

தசமஸ்கந்தம் —அத்யாயம் –36ம் 37ம்

அரிஷ்டன் என்கிற அசுர வதம்; கேசி என்கிற குதிரை வடிவ அசுரன் வதம்;
கம்ஸனால் , அக்ரூரர் வேண்டப்படுதல்

ஹே—–க்ருஷ்ணா —-உன் லீலா விநோதங்களை ,மேலும் மேலும்
ஸ்ரீ சுகர் ,பரீக்ஷித் மஹாராஜனுக்குச் சொல்கிறார்.

கிருஷ்ணன் தனது கிருஹத்தில் இருக்கும்போது, வ்ருஷப வேடம் அணிந்து,
அரிஷ்டன் என்கிற அசுரன் கோகுலத்துக்கு வந்தான்.திமிலும் சதையுமாக
மிகவும் கொழுத்து, பெரிய உருவத்துடன் ,பூமி நடுங்கும்படியாக நடந்து,
கொம்புகளால் மண்ணைக் கீறிக்கொண்டு பெருத்த தொனியுடன்,
ஹூங்காரமிட்டுக்கொண்டு ,பசுக்களும் கோபர்களும், கோபிகைகளும்
நடுங்க ,வாலை உயரத்தூக்கிக்கொண்டு, கண்களை உருட்டி விழித்துக்
கொண்டு, திமிருடன் வந்தான்.

கோபர்கள், மிகவும் பயந்து, ”க்ருஷ்ணா —-இந்த ஆபத்திலிருந்து எங்களைக்
காப்பாற்று—-” என்று கதறினார்கள்.
நீ, வீட்டிலிருந்து வெளியே வந்து ,கோபர்களை”பயப்படாமல் இருங்கள் ” என்று
சொல்லி அவர்களை ஆசுவாசப்படுத்தி,காளையாக வந்துள்ள அசுரனைப் பார்த்து,
”முட்டாளே—இவர்களைப் பயமுறுத்தாதே —என்னிடம் வந்து உன் பலத்தைக்காட்டு—”
என்று சொல்லி, பக்கத்தில் இருந்த கோபாலகனின் தோள்மீது கையை
வைத்துக்கொண்டு நின்றாய்.
அரிஷ்டன் என்கிற அந்த அசுரவ்ருஷபம் குளம்புகளால் பூமியைக்கீறிக்கொண்டே
ஆக்ரோஷத்துடன் உன்மீது பாய்ந்தது. தலையை வளைத்து ,கொம்புகளை
மிகவும் சாய்த்து வால் உயரக்கிளம்ப, கண்கள் ரத்தத்தைக் கக்க ,கோபத்துடன்,
உன்னைத் தாக்கியது.
நீ, அதன் கொம்புகளைப் பிடித்து, அதைத் தூரத் தள்ளினாய். அதைப்பொறுக்காத
அந்த அசுரக்காளை ,தரையில் இருந்து எழுந்திருந்து, மீண்டும் உன்மீது பாய்ந்தது.
நீ, அதன் ஒரு கொம்பைப் பிடித்து, உடைத்து,காலால் அதை உதைத்துக்
கீழே தள்ளி ,கொம்பால் அதன் உடலைக் குத்தினாய். அசுரன், ரத்தத்தைக் கக்கிக்கொண்டு
பூமியில் விழுந்தான். ஆனால், மறுபடியும் ,கால்களை உயரத் தூக்கிக்கொண்டு,
உன்மீது பாய்ந்தான். நீ, அவனைப்பிடித்து ,ஒரு சுழற்று சுற்றித் தூர எறிந்தாய்.
அசுரன், தரையில் மோதி செத்து விழுந்தான்.
இதனைப் பார்த்துக்கொண்டிருந்த தேவர்கள், ஆகாயத்திலிருந்து , உன்மீது ,
புஷ்பமாரி பொழிந்தார்கள். கம்ஸன் ,இதைக்கேட்டு, ஆத்திரம் அடைந்தான்.

அச்சமயம், நாரதர் அங்கு வந்தார்.
கம்ஸனைப்பார்த்து , ஹே—ராஜன்—-க்ருஷ்ணனும் ,பலராமனுமே உன் ம்ருத்யு
தேவகியின் எட்டாவது குழந்தையே க்ருஷ்ணன் —-தேவகியின் இன்னொரு
குழந்தைதான் ரோகிணியால் வளர்க்கப்படும் பலராமன்—என்றார்.

மிகவும் கோபம்கொண்ட கம்ஸன் , வஸுதேவரையும் தேவகியையும் கொல்ல
வாளை உருவினான்.ஆனால், நாரதர், இரண்டு குழந்தைகள்தான் உனக்குச் சத்ரு–
இவர்களைக் கொல்லாதே என்று சொல்லித் தடுத்தார். ஆனால், கம்ஸன் ,அவர்களை
மறுபடியும் சிறையில் தள்ளினான்.
நாரதர் சென்றுவிட்டார்.

கம்ஸன் , தன்னுடைய சஹாவான கேசியைக் கூப்பிட்டான். என்ன செய்யலாம் என்று
அவனுடன் ஆலோசனை நடத்தினான்.அவன் கூறியபடி, உன்னைக் கொல்வதற்காக,
அவனை அனுப்பினான்.
கேசி, குதிரை வடிவம் எடுத்து ,கோகுலத்தில் உன்னைத் தாக்கினான். நீ, அதன்
கால்களைப் பிடித்து, சுழற்றி வீசினாய். அரிஷ்டனைப்போல, அவனும் அழிந்தான்.
(கேசியின் ஸம்ஹாரம் ,அடுத்த அத்யாயத்தில் விவரிக்கப்படுகிறது )
கேசியும் அழிந்ததைக் கேட்ட கம்ஸன் ,மிகுந்த ஆத்திரம் அடைந்தான்.தன் தோழர்களான
முஷ்டிகன்,சாணூரன் சாலன்,தோசலகன் மற்றும் பல மல்யுத்த வீரர்களை அழைத்தான்.
மந்த்ரிகளை அழைத்தான்.பரமசிவனின் திருப்திக்காக, பெரிய யாகம் செய்யப்போகிறேன்
தனுர் யாகம் செய்யப்போகிறேன்.அதற்கு, எல்லாரையும் அழைக்கப்போகிறேன்.
க்ருஷ்ணனையும் ,பலராமனையும் அழைக்கப்போகிறேன்.
யானைப்பாகனிடம், ”குவலயாபீடம் என்கிற யானையை ஏவி, க்ருஷ்ண பலராமர்கள் மதுரா
நகரில் நுழைந்ததும், அவர்களைக் கொன்றுவிடவேண்டும்” என்று கட்டளை இட்டான்.
அதில் அவர்கள் தப்பித்தால், ”சாணூரன் முஷ்டிகன் வீரர்களே—-நீங்கள், அவர்கள் இருவரையும்
மல்யுத்தத்துக்கு அழைத்து, அவர்களை அழித்துவிட வேண்டும்” என்று கட்டளை இட்டான்.
இப்படியாகத் தன பரிவாரங்களுக்கு ஆணையிட்ட கம்ஸன் , அவர்களையெல்லாம்
திருப்பி அனுப்பினான்.

பிறகு, வஸுதேவரின் பந்துவான, அக்ரூரரை அழைத்தான்.
அவர் கையைப் பிடித்துக்கொண்டான்.
”என் சிநேகிதரே —-உம்மைவிட எனக்கு நன்மை செய்பவர் யாருமில்லை—உம்மிடம்
வேண்டிக்கொள்கிறேன்—எனக்கு , ஒரு உதவி செய்ய வேண்டும். இன்றே, நீர்,
கோகுலத்துக்குச் செல்லவேண்டும். நான், தனுர் யாகம் செய்யப்போவதாயும்,
அந்த உத்ஸவத்தைப் பார்க்கவும், மதுராபுரியின் அழகைக் கண்டு க்ளிக்கவும், நானே
அழைத்ததாக அவர்களை அழைத்து வரவேண்டும். நந்தகோபரை, கப்பம் முதலிய இதர
சம்மானங்களுடன் வரச் சொன்னதாக அழைக்கவேண்டும். உடனே, ரதத்தை
எடுத்துச் செல்லும்.எனக்கு, ம்ருத்யு க்ருஷ்ணன் ; அவனைக் குவலயாபீடம் என்கிற
யானையாலோ, அதில் பிழைத்தால் மல்யுத்த வீரர்களாலோ அழிப்பேன்.
பலராம, க்ருஷ்ணர்கள் அழிந்தவுடன், அதற்காகத் துக்கப்படும் வஸுதேவர்
முதலானவர்களைக் கொல்வேன் . என் பிதா உக்ரசேனர், திரும்பவும் ராஜ்யத்தை
ஆளும் ஆசையில் இருக்கிறார். அவரையும், மற்றும் என் எதிரிகளையும் அழிப்பேன்.
எனக்கு குருவும், என் மாமனாருமான ஜராஸந்தன் என் சிநேகிதன் சம்பராசுரன் ,
நரகன் (நரகாசுரன் ), பாணன் (க்ருஷ்ணனின் குமாரன் ப்ரத்யும்னனை மணக்கப்போகும்
உஷையின் தந்தை ) போன்ற என் ஆப்தர்கள் துணையுடன், உலகம் முழுவதையும்
ஜயித்து , எதிரிகளே இல்லாமல் அரசு செய்வேன். —–நீர், உடனே கோகுலம் சென்று,
க்ருஷ்ணன் ,பலராமன் இருவரையும் அழைத்து வருவீராக —–” என்று சொன்னான்.

ஹே—-க்ருஷ்ணா —-சுகப்பிரம்ம ரிஷி, மேலும் சொன்னார்—-
அக்ரூரர்,
”ஹே—-ராஜன்—-ஸித்தியிலோ , அஸித்தியிலோ , —-அதாவது, காரியத்தின்
வெற்றியிலோ, தோல்வியிலோ, , தெய்வமே பல சாதனைகளைச் செய்கிறது—
தெய்வம் தடை செய்தாலும், மனிதன், தன மனோரதங்களை அடைய முயற்சிக்காமல்
விடுவதில்லை” என்றார்.
கம்ஸன் ,அக்ரூரரை அனுப்பிவிட்டு,அந்தப்புரம் சென்றான் .

36 வைத்து அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம் .

——————————————————————————————————————————-

தசமஸ்கந்தம்—–அத்யாயம்–37

ஸ்ரீ நாரதரின் ஸ்துதி

ஹே க்ருஷ்ணா —-நீ, கேசி என்னும் அசுரனை அழித்ததை விவரமாகவே
,ஸ்ரீ சுகர், பரீக்ஷித்துக்குச் சொன்னார்.
கம்ஸனின் கட்டளையை நிறைவேற்ற, கம்ஸனைத் த்ருப்திப்படுத்த ,
பெரிய உடலுடனும், குகையைப் போலுள்ள ஆழமான வாயுடனும்
கால் குளம்புகளால் பூமியை உதைத்து, இடி இடிப்பதைப்போலக்
கர்ஜித்துக்கொண்டு, கேசி என்கிற அசுரன் குதிரை வடிவத்துடன்
கிராமத்துக்குள் நுழைந்தான்.
பக்ஷிகள் பயந்து ஓடின .கோகுலவாசிகள் கூக்குரலிட்டு, உன்னை
அழைத்தனர்.
உன்னைக்கண்ட அந்த அசுரக் குதிரை, வெகு கோபத்துடன் வாலை
சுழற்றிக்கொண்டு, உன்மீது பாய்ந்தது.உன்னை விழுங்கிவிட நினைத்தது.
உன்னைப் பின்னங்கால்களால் உதைத்தது.நீ, சாதுர்யமாக ,அதன்
பின்னங்கால்களைப் பிடித்து, சுழற்றி, சர்ப்பத்தை, கருடன் தூர எறியுமாப்போலே
எறிந்தாய்.
கீழே விழுந்த குதிரை, மயக்கம் தெளிந்து எழுந்து, வாயைப் பிளந்துகொண்டு,
ஓடி வந்தது.நீ, உன் கையை நீட்டினாய்.
உன் கை , அதன் வாயினுள் புகுந்து, பற்களைச் சிதறடித்தது.அதன் கண்கள்
சுழன்றன. பிதுங்கின.செத்து, பூமியில் விழுந்தது.நீ, கைகளை எடுத்துக்கொண்டாய் .

இந்த ஆச்சர்யத்தைக் கண்டா தேவர்கள், உன்னைப் புகழ்ந்து, புஷ்பமாரி பொழிந்தனர்.
ஸ்ரீ நாரதரும் இதைப் பார்த்தார்.
உன்னிடம் வந்து, உன்னை ஸ்தோத்ரம் செய்தார்.இதை, உனக்கு இப்போது சொல்லி,
நினைவுபடுத்துகிறேன்

க்ருஷ்ண —க்ருஷ்ண—-அப்ரமேய ஆத்மன் —-ஸர்வாந்தர்யாமி –யோகேஸ்வரா —
ஜெகதீஸ்வரா —-வாஸுதேவா —ப்ரபோ—-
நீர், எல்லோருக்கும் ஆத்மா
ஸர்வ பூதங்களையும் வகிக்கும் ஏகாத்மா ஜ்யோதிஷாம் ஜ்யோதிஷ்
ஹ்ருதய குகைக்குள் வசிக்கும் மஹா புருஷ
நீர், உம்மை மறைத்துக்கொண்டு மாயையை உண்டுபண்ணி ,முக்குணங்களை
ஸ்ருஷ்டித்து, அவற்றின் உதவியால், லோகங்களை ஸ்ருஷ்டித்து,ஜகத் ரக்ஷணம் ,
சம்ஹாரம் இவைகளைச் செய்கிறீர்.
உம்முடைய அவதாரம், சாதுக்களை ரக்ஷித்து,தர்மத்தை நிலைநிறுத்தி, ராக்ஷஸக்
கூட்டங்களை அழிப்பது—
குதிரை ரூபத்தில் வந்த அசுரனை விளையாட்டாகக் கொன்று முடித்தீர்.

ஹே —-ப்ரபோ——உமது மஹிமைகளை என்னவென்று சொல்ல !
சாணூரன், முஷ்டிகன் என்கிற இரண்டு மல்லர்கள் உம்மால் மரணம் எய்தக்
காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
குவலயாபீடம் என்கிற யானையும், கொல்லப்படப் போகிறது.
பல அசுரர்கள், மாளப்போகிறார்கள்.
தேவேந்த்ரனின் மதத்தை அழிக்கப்போகிறீர் .நரகன் என்கிற அசுரனின் அந்தப்புரத்தில்,
அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பல ராஜகுமாரிகளை விடுவிக்கப்போகிறீர்
ச்யமந்தக மணியை அடையப் போகிறீர்.
ருக்மிணி, சத்யபாமா, ஜாம்பவதி இவர்கள் ,உம்முடைய கைத்தலம் பற்றப்
போகிறார்கள்.
ப்ராம்மணக் குழந்தையைக் காலனிடமிருந்து ,மீட்கப்போகிறீர்.
பௌண்டரீக அரசனின் வதம், ராஜஸூய யாகத்திலே , சிசுபாலனின் வதம்,
காசிப்பட்டினம் எரிவது,தந்த்ரவக்ரன் வதம் , இவையும், இன்னும் பல வீரச் செயல்களும்
செய்யப்போகிறீர்.
இன்னும், த்வாரகாபுரி வாஸம் ,ராஜ்ய பாரம் உம்மால் நடக்கப்போகிறது.
பல லக்ஷம் அக்ஷ்வுஹிணி சேனைகள், யுத்தத்தில் அழியப்போகின்றன.
பார்த்தசாரதியாகப் புகழப்படப் போகிறீர்கள்.
ஹே—-விசுத்தவிஜ்ஞானகனஸ்வரூபியே —-
எல்லாம் உமது அவதார மஹிமை
அத்தகைய ஸ்ரீ க்ருஷ்ணராகிய உம்மை ஆயிரம் தடவை நமஸ்கரிக்கிறேன்

( ஹே—க்ருஷ்ண—ஸ்ரீ நாரதர் ஸ்தோத்தரித்ததை ,சுருக்கமாகச் சொல்லி, அடியேனும்
உன்னை, ஆயிரக்கணக்கான தடவை நமஸ்கரிக்கிறேன் )

ஹே—க்ருஷ்ணா –ஸ்ரீ சுகர் மேலும் சொல்கிறார்

ஹே—பரீக்ஷித்—- நாரதர், இவ்வாறு ஸ்தோத்தரித்து, க்ருஷ்ணனிடமிருந்து ,
விடைபெற்றுச் சென்றார்.
ஒரு சமயம், நீ, கோபர்களுடன் பசுக்களை மேய்த்துக்கொண்டு இருந்தபோது ,
மயனுடைய புத்ரன் வ்யோமன் என்கிற அசுரன், கோபாலகன் வேஷத்தில் வந்து,
ஓநாய் ,ஆடுகளைத் திருடுவதுபோல ,பல கோபாலகர்களைத் திருடி, அங்குள்ள
பெரிய மலையின் குகைக்குள் அடைத்து, குகையின் த்வாரத்தையும் ,பெரிய
கல்லை வைத்து மூடிவிட்டான் .
இதை அறிந்த நீ, அவனை பூமியில் தள்ளி, கழுத்தை நெரித்து, வதம் செய்து,
கோபாலகர்களை விடுவித்தாய் .

( ஹே—ப்ரபோ—–அடியேனையும், இந்த ஸம்ஸார பந்தம் என்கிற குகைக்குள்
இருந்து, விரைவில் விடுவிக்கவேண்டும்

37வது அத்யாயம் நிறைவடைந்தது–ஸுபம்

தசமஸ்கந்தம்———–அத்யாயம் ………38
——————————————————-

அக்ரூரர் கோகுலத்துக்கு வருதல்
———————————————————-
ஹே…..கிருஷ்ணா…. ஸ்ரீ சுகர் , பரீக்ஷித் ராஜனுக்கு
அக்ரூரரின் பக்தியைப் பற்றிச் சொல்கிறார்.
அக்ரூரர் அன்று ராத்திரி மதுராவில் இருந்துவிட்டு, மறுநாள்,
கம்ஸனின் கட்டளையை நிறைவேற்ற—-அதாவது உன்னையும் , பலராமனையும்
மதுராவுக்கு அழைத்துவர—கோகுலத்துக்குப் புறப்பட்டார்
ரதத்தில் ஏறி அமர்ந்தார் உன்நினைவுதான் அவருக்கு!
அவர் மனம் சொல்கிறது;–
யோகிகளும், ரிஷிகளும், தேவர்களும், இந்திரனும், பிரும்மனும், ருத்ரனும்
உன்னுடைய தர்சனத்துக்காக ஏங்கிக் காத்துக் கிடக்கிறார்கள்;
அந்த ஸ்ரீ கிருஷ்ண தர்சநம் இப்போது எனக்குக் கிடைக்கப் போகிறது
; ஸுகபோல நாசிகம்—-அழகான மூக்கு, புருவம்
கன்னம்—-மந்தஸ்மிதம்,
பீதாம்பரம்,
தலையில் மயில் பீலி,
கையில் புல்லாங்குழல் இப்படியாக அவரை தரிசிக்கப் போகிறேன்.
எவரைப் பார்த்தால் அக்ஜானம் அகலுமோ, அகன்று, பாபம் முழுவதும் அழியுமோ
,அழிந்து பக்திப் பரவசம் ஏற்படுமோ அவரை தரிசிக்கப் போகிறேன்.
அவரைத் தரிசிப்பதால், என் கண்கள் , பாக்யம் அடையப் போகின்றன.
ஹே…கிருஷ்ணா…உன்னைத் தோத்தரிக்க வார்த்தைகள் போதவில்லையே ,
உன்னை ஸ்மரிப்பதால் பாவங்கள் அகன்று பாவனமாக்கப்படுகிறேன்.
நீ, மஹதாம் கதிம்—– எல்லாராலும் அடையப்படவேண்டிய
உத்தமமாம் உத்தம கதி.நீயே
அனைவர்க்கும் ஆசார்யன்.
த்ரைலோக்ய காந்தன். ஸ்ரீ வத்ஸ சின்ன ஸ்ரீ.
கோகுலத்தை அடைந்ததும், தேரை நிறுத்தச் சொல்லி, கால்நடையாகச் செல்வேன்.
பலராமனையும், கிருஷ்ணனையும் பார்த்ததும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வேன்.
என் பிரபு என்னைத் தொட்டு, உயரத்தூக்கி, கைகளை என் தலையில் வைத்து
ஆசீர்வாதம் செய்வார். நிஜஹஸ்த பங்கஜம் . —அநுக்ரஹம் செய்வார்.
கால புஜங்களாகிற தீவினைகளிளிருந்து விடுவிப்பார்.
ஆனால், கம்ஸனின் தூதன் என்று உபேக்ஷை செய்வாரோ ?இருக்காது
என்னிடம் அனுதாபம் காட்டுவார். அக்ரூரரே, எப்படி இருக்கிறீர் என்று கேட்பார்
. ஒருவேளை, என்னைத் தொட்டு ஆசீர்வதிக்காவிட்டாலும், மந்த
ஸ்மித பார்வையால் என்னைப் பார்த்தாலே போதும்.
குளிர்ந்த பார்வை ,அதுவே போதும்.
என் பாபங்கள் உடனே நாசமாகி, பிறவிகள் ஒழிந்து,
புருஷார்த்தத்தை அடைந்து விடுவேன்.
பலராமன் யதுக்களுள் உத்தமர். என் கைகளைப் பிடித்துத்
தன் கிருஹத்துக்கு அழைத்துச் செல்வார். என்னைக் குசலப்ரச்னம் செய்வார்.
நானும் எல்லாவற்றையும் சொல்வேன். கம்ஸனின் செய்கைகளைச் சொல்வேன்

ஹே….கிருஷ்ணா…இப்படித் தன் அந்தரங்க எண்ண அலைகளில் ,
உன்னையும், பலராமனையும் வழி நெடுக ஸ்மரித்துக் கொண்டு ,
சாயந்தர வேளையில் கோகுலம் வந்து சேர்ந்தார். ரதத்திலிருந்து இறங்கினார்.
குனிந்தார். ஆச்சர்யப்பட்டார். உன்னுடைய தூய்மையான பாதரேணுக்களைத் தரிசித்தார்.
உன்னுடைய ஒவ்வொரு திருவடியும் பூமியில் பதிந்து,
சங்கு சக்ர ரேகைகள் பொதிந்து விளங்குவதைப் பார்த்தார்.
அகிலலோகத்திலும் உள்ள பக்தர்கள், பாகவதர்கள் எந்தப் பாத தூளியை
சிரஸ்ஸில் வஹிக்கவேண்டும் என்று ஏங்குகிறார்களோ
அந்தப் பாத துளிகளைப் பார்த்துப் பரவசப்பட்டார்.
என் உடல் அடையவேண்டிய பரம புருஷார்த்தம் இதுதான் என்று,
அந்தப்பாததூளிகளில் விழுந்து புரண்டார்.
மீண்டும், மீண்டும் புரண்டார்.

அப்போது, உன் அம்புஜ நேத்ரங்களைக் கண்டார்; உன் நீல நிற பீதாம்பரத்தைக் கண்டார்;
மஞ்சள், நீலப் பீதாம்பரம் அணிந்து இருந்த பலராமனைக் கண்டார்;
ச்யாமள நிறமுள்ள உன்னையும், ஸ்வேத நிறமுள்ள பலராமனையும் பார்த்தார்;
பார்க்கப் பார்க்கப் பரவசமூட்டும் உங்கள் ஸுந்தர வதனங்களைக்கண்டார்;
உடனே உங்களை நமஸ்கரித்தார்.
கண்களிளிருருந்து நீர் தாரை தாரையாகப் பெருக,
அதனால் கண்கள் மங்க, புளகாங்கிதம் அடைந்த சித்தத்தால், குரல் தடுமாற,
நான்தான் அக்ரூரர் என்று சொல்லக்கூட முடியாதபடி, தடுமாறினார்.

உடனே, நீ, சக்ர வளையம் பதிந்த திருக் கைகளால்,
அவரை உன்பக்கம் இழுத்து, தழுவிக் கொண்டாய்.
அப்படியே, பலராமனும் தழுவிக் கொண்டார்.
பலராமர், அக்ரூரரைத் தன்னுடைய கிருஹத்துக்கு அழைத்துச் சென்று,
அதிதியை எப்படி விதிப்படி கௌரவிப்பார்களோ , அப்படி அக்ரூரரை உபசரித்தார்.
அக்ரூரர் கவலைகள் எல்லாவற்றையும் மறந்து சந்துஷ்டராக விளங்கினார்

அப்போது, நந்தகோபரும் அங்கு வந்து சேர்ந்தார்.
ஹே…கிருஷ்ணா…
நந்தகோபர், அக்ரூரரைப் பார்த்து, ” உம்மைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறேன்.
கம்ஸன் ரொம்பவும் பொல்லாதவன்; க்ரூர மனம் உள்ளவன்; துஷ்டன்;
தேவகியின் குழந்தைகளைக் கொன்ற பாதகன்;
அவனிடம் எப்படி வாழ்கிறீர் ? ” என்று கேட்டார்

38 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுப ம்
———————————————————————————————————————————

தசமஸ் கந்தம் —- — அத்யாயம் ——-39
——————————————————————-
ஸ்ரீ கிருஷ்ண பலராமர்கள், அக்ரூரருடன் , மதுரா நகருக்குச் செல்லல் —–.
—————————————————————————————————————————–

ஹே…..கிருஷ்ணா….. ஸ்ரீ சுகப்ப்ரும்மம் , பரீக்ஷித் ராஜனுக்குச் சொன்னதை,
உனக்குச் சொல்லி நினைவுபடுத்துகிறேன்
அக்ரூரர் உன்னைத் தரிசித்ததால் எல்லா மனோரதங்களும் அடைந்தவராக,
மிகவும் ஆனந்தமாக உங்களிடம் சம்பாஷித்துக் கொண்டிருந்தார்.
இரவு வந்தது; போஜனம் முடிந்தது; நீ, அக்ரூரரைப் பார்த்து, கம்ஸனின் நடத்தைகள்,
உறவினர்களிடமும் ஸ்நேகிதர்களிடமும் எப்படி நடந்து கொள்கிறான், அவனது
எண்ணங்கள் எல்லாவற்றையும் சொல்லுமாறு, கேட்டாய்.

ஹே….தாத…..கம்ஸன் ,க்ஜாதிகளிடத்தில், சிநேகமாக இருக்கிறானா
அல்லது கொடுமை செய்கிறானா ? சொந்த மாமாவாக இருந்தாலும்,
பொல்லாதவன் என்பதைச் சொல்லியாக வேண்டும்.
என் தாயையும் , தந்தையையும் மிகவும் கொடுமைப் படுத்தியவன்
. அவர்களின் புத்ரர்களைக் கொன்றவன்.
என் பெற்றோர்களைக் காராக்ருஹத்தில் அடைத்தவன்.
எங்களால், இங்குள்ளவர்களுக்குத் தீமையைச் செய்பவன்.
அவைகள் இருக்கட்டும், இங்கு தாங்கள் வந்த காரணம் என்னவோ என்று கேட்டாய்.

அதற்கு அக்ரூரர், உன்னிடம் எல்லா விவரத்தையும் சொன்னார்.
தவிரவும், நாரதர், கம்ஸனை சந்தித்தது, அவனின்
பூர்வ ஜன்ம ரஹஸ்யங்களைச் சொன்னது,
இப்போது உன்னையும், பலராமனையும் , ஒரு சாக்கை வைத்து
மதுரைக்கு அழைத்து வரச் சொன்னது என்ற விஷயங்களையும்
உன்னிடமும் பலராமனிடமும், நந்தகோபனிடமும் சொன்னார்.

இவைகளைக் கேட்டு, நீயும் பலராமனும் உரக்கச் சிரித்தீர்கள்;
ராஜாவின் கட்டளை என்று நந்தகோபரிடம் சொன்னீர்கள்.
நாளை காலையே புறப்படுவோம் என்று சொன்னாய்.
நந்தகோபரும், பால், தயிர் வெண்ணெய் இவை வண்டி, வண்டியாக சித்தமாகட்டும்
யாதவர்களுடன் நானும் வருகிறேன் என்றார்.
இப்படி நடந்த சம்பாஷணைகள், கோபிகைகளுக்குத் தெரிந்தது.
கிருஷ்ணன் நம்மை விட்டு, மதுரைக்குப் போகிறான் என்று கேள்விப்பட்டதும்
பிராணனை இழந்தவர்களைப் போலத் தவித்தார்கள்.
சில கோபிகைகளுக்கு, கைவளைகள் நழுவி விழுந்தன;
சிலருக்கு மேகலைகள் கலைந்தன;
சிலருக்கு அழகு குன்றி உடல் வெளுத்துப் போயிற்று;
பேச வார்த்தைகள் வெளிவரவில்லை; கண்கள் செருகிக் கொண்டன;
உன்னுடைய பிரிவான விரஹதாபம், பிரிவதற்கு முன்பே,
அந்த எண்ணத்திலேயே அவர்களை வாட்டியது;
உன்னை நினைக்க, நினைக்க, அவர்களது கண்களிலிருந்து ஜலதாரை பொழிந்தது;
ஹே…கிருஷ்ணா ஹே கிருஷ்ணா என்று கதறினார்கள்

(கிருஷ்ணா , அடியேன் இந்தக் கோபிகைகளைப்பலதடவை சேவிக்கிறேன்;
பக்தியின் உச்சத்தை அடியேனுக்கு உணர்த்திய பரம ஆசார்யர்கள் அல்லவா,அவர்கள் ! )

ஹே… ப்ரும்மனே…எங்களுடன் பிரேமையையும் ஏன் சேர்த்துப் படைத்தாய் ?
நாங்கள் உன்னுடைய பொம்மைகளா ?
மல்லிகை மொக்கு குவிந்து மலராதபடி இருக்கும் —அதைப் போல,
அந்த முகுந்த வக்த்ரம்—அழகான கன்னங்கள்—-தீர்க்கமான நாசி—
சோகங்களைப் போக்கும் ஸ்மிதிலேத சுந்தரன்—
அந்த ஸுந்தர கிருஷ்ணனை எங்களிடம் காட்டி விட்டு
, இப்போது மறைக்கிறீரே, இது அநியாயம் அல்லவா ?
இது நீர் செய்யும் நல்ல செய்கையா ?

அவர், அந்தக் க்ரூரர், அக்ரூரர் என்கிற பெயருடன், அவரை இந்தக் குரூரமான
செயலைச் செய்ய அனுப்பி இருக்கிறீரே , இது உமக்கு நல்லதல்ல.
கண்களைக் கொடுத்து க்ருஷ்ணானுபவம் செய்யச் சொல்லி,
நாங்களும் கிருஷ்ணனை , கண்கள் பெற்ற பாக்யம் என்று கண்டு கண்டு
அனுபவித்துக் கொண்டு இருக்கும்போது இப்படிக் கண்களைப் பறிப்பது போல
நடந்து கொள்கிறீரே இது நியாயமா ?

நாங்கள், கிருஷ்ணனுக்காக, ஸ்வஜனங்களை விட்டோம்;
புத்ரர்களை விட்டோம்; வீடுகளை விட்டோம்
வேறு பலனில் ஆசையே இல்லாதபடி,
” அனந்யகதி, ஆனந்யார்ஹ சேஷத்வம் அனன்ய போக்யத்வம் —
இவைகளைச் செலுத்தியதற்குப் பலன் இது தானா ?

மதுராபுரி ஸ்திரீகள் கொடுத்து வைத்தவர்கள்;
கிருஷ்ணனின் அபாங்க, உத்கலித, ( கடாக்ஷ வீக்ஷண்யங்கள் ) பார்வைகள்,
அவர்கள்மீது படும்; மனோவச்யமான பேச்சுக்களைக் காது குளிரக் கேட்பார்கள் ;
மதுபஞ்சு பாஷிதம் —அவர்கள் மனோரதங்களை நிறைவேற்றும்;
கிருஷ்ணன், ஒரே வ்ரதமுள்ளவராகத் தன் மனத்தைக் கட்டுப்படுத்தி இருந்தாலும்,
மதுராபுரி ஸ்திரீகள் அவரை விடமாட்டார்கள்;
அவர்கள் கெட்டிக்காரர்கள்; அவரை வசப்படுத்தி விடுவார்கள்;
அந்த நிலையில், அவர் எங்கே திரும்பவும் இங்கு வரப் போகிறார்;
நாங்கள் அபலைகள்; க்ராம்யர்கள்; லஜ்ஜை, வெட்கம் உள்ளவர்கள்
ஆனால் அவைகளை இப்போது இழந்து, பிரமை பிடித்தவர்கள் போல ஆனோம்;
அவர் மதுராபுரி ஸ்திரீகளுக்கு வசியம் ஆவார்;
எங்கள் சொத்து, அவர்களிடம் பறிபோகிறது;
என்று பலபடியாகப் புலம்பி அழுதார்கள்

(ஹே….கிருஷ்ணா…..இந்தப் பக்திபெருக்கு அடியேனுக்கும் வரவேண்டுமென்று ,
ராதையை முன்னிட்டுக் கோபிகைகளைப்பலதடவை நமஸ்கரிக்கிறேன் )

இந்த அக்ரூரர் , துக்க சாகரத்தில் உள்ள எங்களிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல்,
எந்த ஆறுதலும் சொல்லாமல் எப்படி கிருஷ்ணனை அழைத்துக் கொண்டு போகலாம்?
நெஞ்சில் துளிக்கூட ஈரமில்லாத , அன்பில்லாத பிரபு கிருஷ்ணன் ,
நம்மைக் கொஞ்சம் கூட லக்ஷ்யம் செய்யாமல்
ரதத்தில் நன்கு உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். பலராமனும் இருக்கிறார்.
பல கோபர்கள் வண்டிகளைப் பூட்டிக் கூடவே பயணம் செய்யச் சித்தமாக இருக்கிறார்கள்.
நமது குல பந்துக்கள், வயோவ்ருத்தர்கள், கிருஷ்ணனிடம் ” நீ போகக்கூடாது ” என்று
ஏன் தடுக்காமல் இருக்கிறார்கள் ? நம்முடைய மனம் அவரிடம் பதிந்துபோய் விட்டதே !
அந்த அழகான முகம், புன்சிரிப்பு, பிறர் கேளாதபடி பேசுதல், கண்ஜாடைகள்,
எங்களைத் தழுவிக் கொண்டு ராச லீலை செய்தது,
எல்லாமே பேதைமை கொள்ளச் செய்கிறதே .
பெரிய நிதியை அல்லவா இழக்கப் போகிறோம். இந்தப் பிரிவை எப்படி சகிப்போம்
இந்த முகத்தையும் புன்சிரிப்பையும் எப்போது மீண்டும் காண்போம் என்று ப்ரலாபித்தார்கள்.

ஹே…கிருஷ்ணா… ஸ்ரீ சுகர் மேலும் கூறுகிறார்

கோபிகைகள், இப்படி விரஹதாபத்தில் மூழ்கி, லஜ்ஜையை விட்டு
அழுது புலம்பிக்கொண்டு இருக்கும்போது,
அக்ரூரர், காலை சந்த்யாவந்தனாதிகளை முடித்து ,
ரதத்தின் மீது ஏறி, ரதத்தை ஓட்டத் தொடங்கினார்.
நந்தகோபன் முன்னே செல்ல, கோபர்கள் தயிர் பால் வெண்ணெய் இவைகளைக்
குடம் குடமாக வண்டிகளில் ஏற்றிக்கொண்டு நந்தகோபனைத் தொடர்ந்தார்கள்.

அபலைகளான கோபிகைகள், கிருஷ்ணன் ஏதாவது சொல்லமாட்டான
என்று ஏக்கத்துடன் ரதத்தைப் பின் தொடர்ந்தார்கள்.
அப்போது, நீ, பிரேமையுடன் ” வருந்த வேண்டாம்,
நான் உங்களிடம் கூடிய சீக்ரம் வருவேன் ” என்று கைகளைக் காட்டிக் கூறினாய்.

கோபிகைகள், நின்றார்கள் ;
பேச்சு மூச்சின்றி நின்றார்கள்;
சித்திரப் படங்களைப் போல நின்றாகள்;
ரதம் வெகுதூரம் போய், கொடி அசைவது மறையும் வரை நின்றார்கள்;
சென்ற பாதையில் தூசிகள் அடங்கும் வரை நின்றார்கள்;
இனிமேல் நீ திரும்பவும் வரமாட்டாய் என்ற எண்ணம் கொண்டவர்களாக,
உன்னுடையநினைவையே எப்போதும் மனத்தில் இருத்தினார்கள்

(ஹே கிருஷ்ணா… உன்னை மனத்தில் இருத்திய அந்தக் கோபிகைகளை
அடியேன் எப்போதும் அடியேன் மனத்தில் இருத்திக் கொள்கிறேன் )

நீயும் , பலராமனும் , வாயு வேகமாய் அக்ரூரர் ரதத்தைச்செலுத்த,
மத்யான வேளையில், யமுனைக்கரைக்கு வந்து சேர்ந்தீர்கள்.
மரங்களின் நிழலில் , அக்ரூரர் ரதத்தை நிறுத்தினார்.
நீங்கள் இருவரும் காளிந்தீ நதியில் இறங்கி, முகம் கைகால் அலம்பித்
திரும்பவும் வந்து ரதத்தில் அமர்ந்தீர்கள்.

அக்ரூரர் மாத்யான்னிக ஸ்நானம் செய்ய , யமுனையில் விதிப்படி இறங்கி ,
ஸ்நானம் செய்தார்;
ஜலத்தில் மூழ்கி காயத்ரியாகிய பிரம்மத்தை ஜெபிக்கும்போது,
நதிக்குள், தீர்த்தத்தில் உன்னையும் பலராமனையும் தரிசித்தார்.
மூழ்கிய நிலையில் உங்களைக் கண்டவர், என்ன ஆச்சர்யம் என்று நினைத்து,
தலையை ஜலத்துக்கு வெளியே தூக்கிப் பார்த்தபோது
நீங்கள் இருவரும் ரதத்தில் இருக்கக் கண்டார்.
ரதத்தில் இருப்பவர் எப்படி ஜலத்துக்குள் இருக்கிறார்கள் என்று ஆச்சர்யப்பட்டு
மறுபடியும் ஜலத்துக்குள் மூழ்கினார். ஜலத்துக்குள் மறுபடியும் இருவரையும் தர்சித்தார்.
இன்னொரு தடவை, ஜலத்துக்கு வெளியே எட்டிப் பார்த்தார்;
ரதத்தில் இருவரும் இருக்கக் கண்டார். மறுபடியும் ஜலத்தில் மூழ்கினார்.
அவர் கண்ட காக்ஷி மிக அற்புதம்….
.தேவர்கள், ரிஷிகள், கந்தர்வர்கள், சித்தர்கள், சாரணர்கள், அசுரர்கள், இப்படி எல்லோரும்
உன்னை வணங்கி, அஞ்சலி செய்து ஸ்தோத்ரங்கள் சொல்வதைக் கண்டார்.
எப்படிப்பட்டவனாக உன்னைப் பார்த்தார், தெரியுமா !

ஒவ்வொரு நாக படத்திலும், முத்து வைரக் கற்கள் பளீரென பிரகாசிக்க,
ஆயிரம் தலைகள் உள்ள ஆதிசேஷன் வெள்ளை நிறத்துடன்
நீலப் பட்டாடை அணிந்தவராக,
அந்த ஆதி சேஷனின் சயனத்தில்,
பீத கௌசேய வாசத்துடன்,
நான்கு கைகளுடன்
அழகான திருமுகத்துடன்
அதில் புன் சிரிப்புடன்
தாமரை இதழ் போன்ற கொஞ்சம் சிவந்த கண் பார்வையுடன்
தீர்க்கமான நாசியுடன்
அழகான இரு காதுகளுடன்
சிவந்த உதடுகளுடன்
நீண்ட தடித்த புஜங்களுடன்,
சங்கு போன்ற க்ழுத்துடன்
அகன்ற மார்புடன்
அந்த வக்ஷஸ்தலத்தில் உறையும் ஸ்ரீதேவியுடன்
அத்திமர இலையைப்போன்ற மடிப்புடன் உள்ள திருவயிறுடன்,
பத்ம இதழ்களைப்போன்ற திருவடிகளுடன்
திருமுடியில் இலங்கும் வைரக் கிரீடத்துடன்,
ஜ்வலிக்கின்ற பற்பல திவ்ய ஆபரணங்களுடன்
இடுப்பில் கடிசூத்ரத்துடன்
திருமார்பில் பூணூலுடன் கௌஸ்துப மணியுடன்,
வனமாலையுடன்,
ஒரு பத்ம கரத்தில் உலகமாகிற காரணத் தாமரையுடன்,
மற்ற இரு கைகளில் சங்கு சக்ரத்துடன்
இன்னொரு கையில் கதாயுதத்துடன்
———அக்ரூரர் தரிசித்தார்

உன்னுடைய அனந்தமான பக்தகோடிகள், பிரகலாத, நாரத ,வசு, ப்ரும்ம, ருத்ர ,
மாக்கண்டேய, ரிஷிகணங்கள் உன்னை உத்தமமான கானத்தால் துதிக்க,
ஸ்ரீ மஹாலக்ஷ்மி உன் திருமார்பில் வாஸம் செய்ய,
புஷ்டி தேவதை, கீர்த்தி தேவதை, துஷ்டி தேவதை, இளாதேவதை ,
ஊர்ஜா, வித்யா, அவித்யா, யோகமாயா சக்தி, இவர்களும் உன்னைத் துதிக்க,
இத்தனைப் பேரழகு, பெரும் சம்பத்துக்கள் அடங்கிய மஹா உன்னத தர்சனத்தை ,
அக்ரூரர் அடைந்தார்.
( முன் ஜன்மத்தில் சுமந்திரராக இருந்து பகவானாகிய —
ஸ்ரீ ராமனாகிய பட்டாபிஷேக தர்சனத்தைப் பெற்றவர் அல்லவா ! )

பக்தியுடன், பரம ப்ரீதியுடன், உடல் புளகாங்கிதம் அடைய,
பாவனா பிரகர்ஷித்தினால் ஏற்பட்ட மனத்தையே கண்களாகக் கொண்டு,
உன்னுடைய அதி ஆச்சர்யமான வார்த்தைகளில்
அடங்காத மகோன்னத திவ்ய ரூபத்தைத் தரிசித்து,
சேவித்து சேவித்துப் பலமுறை சேவித்து,
நாத் தழு தழுக்க ஸ்தோத்ரம் செய்தார்.

ஹே கிருஷ்ணா… உன்னதமான பாக்யம்செய்த அக்ரூரரை,
கோபிகைகள், ஸ்ரீ பாஷ்யகாரர், ஆசார்யன் ஸ்வாமி தேசிகன் இவர்களை முன்னிட்டு
ஆயிரமாயிரம் தடவை நமஸ்கரிக்கிறேன் )

39 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்

அடுத்த அத்யாயம்—ஸ்ரீ அக்ரூரரின் ஸ்துதி

அக்ரூரரின் ஸ்துதி
————————————
ஸ்ரீ சுகப்ரம்மம், பரீக்ஷித் ராஜனுக்கு, ஸ்ரீ அக்ரூரர் உன்னை ஸ்தோத்ரம்
செய்ததைச் சொல்கிறார்.

( ஹே கிருஷ்ணா , அதை உனக்கு க்ஜாபகப்படுத்த ,
அடியேன் என்ன பாக்யம் செய்தேனோ !)

ஹே….பிரபோ….எல்லாவற்றுக்கும் நீரே காரணம்;
உம்மை, அடிக்கடி, அடிக்கடி, த்யானித்து, நமஸ்கரிக்கிறேன்;
நீரே சாஸ்வதம்;
நீரே நாராயணன்
;நீரே ஸ்ரீ புருஷசூக்த பிரதிபாத்ய தேவதை ;
நீர் புருஷோத்தமர்;
நீரே அநாதி;
உம்முடைய தொப்புள் கொடி மூலமாக பிரம்மனைப் படைத்தீர்;
அவர் மூலம் எல்லா உலகங்களையும், உயிர்களையும் படைத்தீர்;
நீரே ஜகத் காரணர்;
உம்மிடமிருந்து பஞ்சீகரணத்தால்,
இந்தப் பூமி, ஜலம், அக்நி, காற்று, ஆகாசம் உண்டாகி,
பஞ்ச மஹாபூதங்களை, நீரே சிருஷ்டித்தீர்.
நீரே, ப்ரக்ருதியின் உதவியுடன்,
மஹத், அஹங்காரம், புத்தி, மனஸ், பத்து இந்த்ரியங்கள்
இவைகளை ஸ்ருஷ்டி செய்தீர்.
ஆனாலும் ஒருவருக்கும் புலப்படாமல், அகோசரமாக இருக்கிறீர்.
ஆத்மாவால்தான் உம்மை அறியமுடியுமென்றாலும் ,
உம்மைப் பூரணமாக அறிய இயலாது.
உம்முடைய சங்கல்பத்தால் அவதரிக்கிறீர்.
கர்மவசமான பிறப்பு உமக்கு இல்லை.
உம்மால் சிருஷ்டிக்கப்பட்ட, பிரக்ருதியின் முக்குணங்கள்
உம்மை அண்டாது.
நீரே, ஆதிபூதமாகவும்,
ஆதிதைவிகமாகவும்,
ஆதி பௌதிகமாகவும் இருக்கிறீர்.
உம்மை, வைதீக கர்மாக்களால் பல பக்தர்களும்,
யாக யக்ஜங்களால் பல தேவதைகளின் ஸ்வரூபமாகப்
பலபக்தர்களும், அந்தர்யாமி த்யானத்தால்
பல பக்தர்களும் உம்மையே ஆராதிக்கிறார்கள்.
ஆராதனத்தின் பலனை , அந்தந்த தேவதைகளின் மூலமாக
நீரே அருளுகிறீர்.
பல பக்தர்கள், நித்ய நைமித்திக —-ஆஸ்ரம கர்மாக்களை அனுசரித்து,
உம்மையே ஆராதிக்கிறார்கள்.
பலர், மனதை ஒருமுகப்படுத்தி, கர்மயோகத்தால் உம்மை பூஜிக்கிறார்கள்.
க்ஜாநிகளோ, க்ஜான யோகத்தால், உம்மையே பூஜிக்கிறார்கள்
. ஆஸ்திகர்கள், பலமூர்த்தி ஸ்வரூபமாக—–பாஞ்சராத்ர ஆகமப்படி
சதுர் வ்யூஹங்களாகவும், —-த்வாதச நாமங்கள்—–தசாவதாரங்கள்—-
அர்ச்சா விக்ரஹமாகவும் உம்மை ஆராதிக்கிறார்கள்.
நீரே ஆதி மூர்த்தி.
நீரே ஏக மூர்த்தி.
ஆசார்ய உபதேசங்களால் உம்மை நன்கு அறிந்தவர்கள்,
இதர தேவதைகளைப் பூஜிககாமல், அல்ப பலன்களை வேண்டாமல்,
நீரே எல்லாத் தேவதைகளிலும் அந்தர்யாமியாக இருப்பதை உணர்ந்து,
உம்மையே பரமாத்மாவகப் பூஜிக்கிறார்கள்.
உமக்கு அநேக நமஸ்காரம்

ஹே….பிரபோ…..நீரே முக்குணப் பிரகிருதியை ஆள்பவர்.
எல்லா சேதன, அசேதன வஸ்துக்களும் உம்மிடமே லயிக்கின்றன.
அவைகள் எல்லாமே உமக்கு சரீரம்
ஆனால் அவற்றின் எந்தத் தோஷமும் உம்மிடம் ஒட்டுவதில்லை.
நீரே நியந்தா;
நீரே சாக்ஷி;
நீரே எல்லாருக்கும், உபாதான, நிமித்த , சஹகாரி காரணமாகிறீர்
உமக்கு அநேக நமஸ்காரம்.

முக்குணங்கள் அடங்கிய குண பிரவாஹம் அவித்யையால் ஏற்படுகிறது.
அதனால், பலப்பல தேகங்கள்;
இந்தத் தேகங்களை விட , ஆத்மா வேறு என்கிற க்ஜானம் ஏற்படாதவரை,
உம்மை அறிய இயலாது. புருஷ சூக்தத்திலே சொல்லியபடி,
உமது முகத்திலிருந்து அக்நி உண்டாயிற்று
உமது திருவடிகளே பூமி
உமது கண்ணே சூர்யன்
உமது நாபியே ஆகாசம்
உமது காதுகளே திக்குகள்
உமது தலைப்பாகம் சத்யலோகம்
உமது திருக்கரங்களே இந்த்ராதி தேவர்கள்
உமது திருவயிறே சமுத்ரம்
உமது மூச்சுக் காற்றே பிராணன்
உமது மயிர்க்கால்களே வ்ருக்ஷங்கள் –செடி கொடிகள்
உமது கேசபாசங்களே மேகக்கூட்டங்கள்
உமது எலும்புகளே–நகங்களின் பாகங்களே — மலைகள்
உமது கண் இமைகள் மூடித் திறத்தலே— இரவு, பகல்
உமது வீர்யமே மழை
இவைகளே உமது புருஷ ஸ்வரூபம்.

எப்படி ஜலத்தில், பற்பல ஜந்துக்கள் நீந்தி வாழ்கின்றனவோ,
எப்படி, அத்திப் பழத்தில் சிறுசிறு பூச்சிகள் வாழ்கின்றனவோ,
அதைப்போல, எல்லா ஜீவக் கூட்டங்களும் ,உம்மையே அண்டி, நம்பி வாழ்கின்றன.
நீர், உமது இச்சையால், சங்கல்ப மாத்ரத்தில் பற்பல அவதாரங்களை எடுக்கிறீர்.
அந்த அவதாரங்களின் சேஷ்டிதங்களில் ஈடுபட்டு,
சந்தோஷப்பட்டு,ஜனங்கள் , உம்மைப் புகழ்கிறார்கள்.

நீர் பிரளய காலத்தில் மத்ஸ்ய ரூபியாக அவதாரம் செய்து சஞ்சரித்தீர்;
அந்த ரூபத்துக்குப் பல நமஸ்காரங்கள்.
அப்போது, நீரே சர்வகாரணப் பொருளாக இருந்தீர்.
நீர், ஹயக்ரீவ அவதாரம் செய்து, மது கைடப அரக்கர்களை அழித்து,
வேதங்களை ரக்ஷித்தீர்; உமக்குப் பல நமஸ்காரங்கள்.
நீர், ஆமை வடிவாக அவதரித்து, —-மந்த்ர மலையைச் சுமந்து ,
சமுத்ரமதனத்தில் ,அம்ருதத்தை உண்டாக்கினீர் .
உமக்குப் பல நமஸ்காரங்கள்.
நீர் வராஹ அவதாரம் செய்து, சமுத்ரத்தில் ஒளித்துவைத்து இருந்த
பூமியை ( பூமா தேவியை ) , வெளியே கொணர்ந்து ரக்ஷித்தீர்
உமக்குப் பல நமஸ்காரங்கள்
நீர், அத்புத ந்ருசிம்ஹனாக அவதரித்து, பிரஹ்லாதன் போன்ற
சாதுக்களை ரக்ஷித்தீர் .
உமக்குப் பல நமஸ்காரங்கள்.
நீர், வாமனரூபியாக அவதரித்து, மூன்று உலகங்களையும் அளந்து ,
உமக்கே மறுபடியும் சொந்தமாக்கி இந்த்ரனுக்கு அளித்தீர்.
உமக்குப் பல நமஸ்காரங்கள்.
நீர், பரசுராமராக அவதரித்து, க்ஷத்ரிய அரசர்களின் கர்வத்தை
கோடரியால் சிதைத்தீர்.
உமக்குப் பல நமஸ்காரங்கள்
நீர், ரகு குலத்தில் அவதரித்து, சாதுக்களை ரக்ஷிக்க,
ராவணாதியரை அழித்து, தர்ம சம்ரக்ஷணம் செய்தீர்.
உமக்குப் பல நமஸ்காரங்கள்.
நீர், இப்போது, வாசுதேவ புத்ரராக, சங்கர்ஷண—வாசுதேவராக அவதரித்து,
ஸ்ரீ கிருஷ்ணராக விளங்குகிறீர் ;
உமக்குப் பல நமஸ்காரங்கள்.

நீர், ப்ரத்யும்னராகவும், அநிருத்தராகவும் —சாதுக்களின் பதியாக விளங்குகிறீர்
உம்முடைய வ்யூஹ அவதாரங்களுக்குப் பல நமஸ்காரங்கள்.
நீரே, இனி கல்கி அவதாரம் எடுத்து, ம்லேச்சர்களான க்ஷத்ரியர்களை
அழிக்கப் போகிறீர்
உமக்குப் பல நமஸ்காரங்கள்.

நீரே தசவித அவதார ஸ்வரூபி ;
நீரே ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ;
உமக்குப் பற்பல நமஸ்காரங்கள்.
ஹே பகவன்….லோகத்தில் ஜீவர்களை பிறப்பித்து,
உமது மாயையால், அவர்கள் மோஹத்தில் மூழ்கி
.உலக வ்யவஹாரங்களில் உழல,
அவர்களை, கைப்பொம்மைகளாக ஆட்டிவைக்கிறீர்
அடியேனும், அவ்விதமே, உழன்று கொண்டு இருக்கிறேன்.
பத்னி, பந்துக்கள், குழந்தைகள், செல்வம், வீடு, இந்தத் திரேகம் —
இத்யாதி பந்தத்தில் அகப்பட்டு, உழன்று கொண்டு இருக்கிறேன்.
இவை ஸ்வப்னக் காக்ஷி—பொய் என்று தெரிந்தும் .அவற்றிலேயே
ஆத்ம புத்தியைச் செலுத்தி, பலவிதத் துன்பங்களைப்
பட்டுக்கொண்டு இருக்கிறேன்

விபோ—-அடியேன் மூடன்,
சத்யமான உம்மை அறியவில்லை
அநித்தியமான உடலில் பாசம்–பற்று வைத்து,
இதன் உள்ளே இருக்கும் ஆத்மாவைத் தெரிந்து கொள்ளாமல்,
புத்தி கலங்கி இருக்கிறேன்.
கானல் நீரைப்போல, ஏமாற்றக்கூடிய வஸ்துக்களில்,
மோஹம் வைத்து, உம்மிடம் அலக்ஷ்ய புத்தியாக
பரம சம்சாரியாக இருக்கிறேன்
அடியேன், புத்தி ஹீனன்.
சுத்தமான ஜலத்தை ஒதுக்கி, கானல் நீரைத் தேடி அலைந்து,
உம்மிடம் பராமுகமாக இருக்கிறேன்.
அடியேன், என் மனத்தை அல்ப விஷயங்களிலிருந்து
திருப்ப முடியவில்லை.
உமது கருணைக்கு உரியவன்
எப்போதும் இந்த்ரிய வசப்பட்டு, அதன் இஷ்டங்களை நிறைவேற்ற,
பலவித ஹிம்சைகளை அடைந்து, இங்குமங்கும் உழல்கிறேன்.
அடியேனைப் போன்ற பாபாத்மாக்களுக்கு நின் திருவடிகளே புகல் என்று ,
உம்முடைய அநுக்ரஹத்தை வேண்டி, தஞ்சமென்று வந்திருக்கிறேன்.
சம்சாரத்தைத் துறந்து ,மோக்ஷத்தை
நாடி இருக்கிறேன்.

ஹே….அப்ஜநாப ….இது உமது கிருபையாலும், உமது அடியார்களைப்
பூஜிப்பதாலும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இதற்கும் உமது கிருபை வேண்டும்.
உம்மைப் பல தடவை நமஸ்கரிக்கிறேன்
. வாசுதேவராகிய உமக்குப் பல நமஸ்காரங்கள்.
ஹ்ருஷீகேசராகிய உமக்குப் பல நமஸ்காரங்கள்.
அடியேன், உம்மைச் சரணம் என்று அடைந்த ப்ரபன்னன்.
அடியேனை நீர்தான் காக்க வேண்டும்

(ஹே….கிருஷ்ணா….இது அக்ரூரர் ஸ்துதி என்று , ஆரம்பத்தில்
அடியேன் சொன்னாலும், இப்போது இது அடியேனின் ஸ்துதியே.
அடியேனை உன் திருவடிகளில் சேர்த்துக்கொள்ள வேண்டி,
உன்னைப் பல்லாயிரம் கோடி முறை தெண்டனிட்டுக் கதறுகிறேன்
ஆய்ச்சியர்களானகோபிகைகளையும், ஸ்ரீ பாஷ்யகாரரையும் ,
ஆசார்யன் ஸ்வாமி தேசிகனையும் முன்னிட்டு,
ஸ்ரீ அக்ரூரை ஆயிரமாயிரம் தடவை நமஸ்கரிக்கிறேன்.
அவரன்றோ, எப்படி உன்னைத் துதிக்கவேண்டும் என்று
மூடனான அடியேனுக்குச் சொல்லிக் கொடுத்தவர் )

– – 40 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்

—————————————————————————————————————–

தசமஸ்கந்தம்—- அத்யாயம் ….41
—————————————————————————

ஸ்ரீ கிருஷ்ணனும் , பலராமனும் மதுரா நகருக்குள் பிரவேசித்தல்
——————————————————-

ஸ்ரீ சுகர் மேலும் கூறுகிறார்;
ஹே, ராஜன்…..ஸ்ரீ கிருஷ்ணன் , இவ்விதமாக, அக்ரூரர்
ஸ்துதி செய்ததைக் கேட்டார்
உடனே தன்னுடைய ஆச்சர்யமான உருவங்களை மறைத்துக் கொண்டார்.
அந்தப் பெரிய உருவம் ஜலத்திலிருந்து மறைந்தது.
அக்ரூரர் ஜலத்திலிருந்து வெளியே வந்து, ரதத்தை அடைந்தார்.
ஸ்தம்பித்துப் போய் இருந்த அவரை,
“என்ன அத்புதமான , ஆச்சர்யமான விஷயத்தைக்கண்டீர் ? ”
என்று ஸ்ரீ கிருஷ்ணன் கேட்டார்.

அதற்கு, அக்ரூரர் சொன்ன பதிலை
ஹே கிருஷ்ணா, ஸ்ரீ சுகர், பரீக்ஷித் ராஜனுக்குச் சொன்னதைச்
சுருக்கமாகக் கூறுகிறேன்.

” ஆஹா….என்ன அத்புதங்கள்….உம்மிடமே எல்லா அற்புதக் காக்ஷிகளும்
அடங்கி இருக்கின்றன. நீரே விச்வாத்மா… உம்மை அடிக்கடி நமஸ்கரிக்கிறேன் ”
என்று சொல்லி, ரதத்தில் ஏறி, அதை ஓட்ட , சாயங்கால வேளையில் ,
மதுராபுரி எல்லைக்கு நீங்கள் மூவரும் வந்து சேர்ந்தீர்கள் .
வழியில் இருந்த கிராமங்களிலுள்ள ஜனங்கள் எல்லாம்,
உங்கள் இருவரையும் பார்த்து, உங்கள் அழகில் மனம் பறிகொடுத்து,
உங்களுக்கு ஆகாரம் முதலியன கொடுத்து உபசரித்து,
உங்கள் பேரழகில் மயங்கி இருந்தார்கள்.

மதுராபுரிக்கு, வெண்ணெய் , தயிர் இவைகளை
வண்டி வண்டியாக எடுத்துக் கொண்டு கோகுலத்திலிருந்து புறப்பட்ட யாதவர்கள்,
முன்னதாகவே மதுராபுரியை அடைந்து , ஒரு நந்தவனத்தில் தங்கி
உங்கள் வருகையை எதிர் பார்த்துக் காத்திருந்தார்கள்.
நீங்களும், அந்த நந்தவனத்தை அடைந்தவுடன்,
உன்னை வணங்கி நிற்கும் அக்ரூரரின் கையைப் பிடித்துக் கொண்டு,
” நீர் இப்போதே முன்பாக மதுராபுரி நகருக்குள் ரத்தத்துடன் செல்லுங்கள்;
நாங்கள் இந்த நந்தவனத்தில் சிறிது நேரம் இவர்களுடன் தங்கிவிட்டு
அப்புறமாக நகருக்குள் பிரவேசிக்கிறோம்”: என்று சொன்னாய்.

அதற்கு அக்ரூரர் ” பிரபோ….உம்மை விட்டு விட்டு,
நான்மட்டும் தனியாக நகருக்குள் போகமாட்டேன்;
நீரும் என்னுடன் , எல்லாருமாக நகருக்குள் என் வீட்டுக்கு வந்து,
நான் உம்மை என்வீட்டுக்குள் வரவேற்று, உமது திருவடிகளை
கங்கை ஜலத்தால் அலம்பி, அதை அருந்தி
தலையில் சேர்த்துக் கொள்ள வேணும்
ஹே, தேவதேவ…….ஜகன்னாத …..புண்ய ஸ்ரவண கீர்த்தன ….
.யதுவம்ச உத்தம ..நாராயண …உமக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள் ….”
என்று பிரார்த்தித்தார்.

அதற்கு, நீ, சரி பலராமனுடன் வருகிறேன்..
.ஆனால், கம்சனைக் கொன்று என் பந்துக்களுக்கு ஆனந்தத்தைச் செய்து ,
அதன் பிறகு, வருகிறேன்….
இப்போது நீர், நகருக்குள் ரதத்துடன் செல்வீராக….. என்றாய்.
அக்ரூரர் ,மனம் கலங்கியவராக, தான் தனியாக மதுராபுரி நகருக்குள் சென்று,
கம்சனிடம் ,ஸ்ரீ கிருஷ்ணரும், பலராமனும் மதுரை நகருக்கு வெளியே
நந்தவனத்திற்கு வந்து விட்டார்கள் என்கிற விஷயத்தைச் சொல்லிவிட்டுத்
தன்னுடைய க்ருஹத்துக்குப் போய்ச் சேர்ந்தார்.

நீயும் பலராமனும் மறுநாள் மத்யானவேளையில்,
உனது பரிவாரங்களுடன் மதுராபுரி நகருக்குள் நுழைந்தாய்
. நகரில் உள்ள மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், உத்தியான வனங்கள் ,
சபாமண்டபங்கள், இன்னும் பற்பல அற்புத பவனங்களைப் பார்த்துக்கொண்டே
வீதிகளில் சென்றாய். உன்னைப்பார்க்க மதுராபுரி ஸ்திரீகள்,
முண்டி அடித்துக் கொண்டு வந்தார்கள்;
ஆபரணங்களைத் தாறுமாறா அணிந்து கொண்டு தெருவுக்கு வந்தார்கள்;
சிலர் சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போதே பாதியில் ஓடிவந்தார்கள்;
உன்னுடைய மந்தஹாசச்சிரிப்பிலும், பார்வையிலும், ஜாடைகளிலும்
மனதைப் பறி கொடுத்தார்கள்.
உனக்கு பழங்கள், பக்ஷணங்கள் முதலியன கொடுத்துப் பூஜித்தார்கள்.
புருஷர்களும் இப்படியே உன்னைக் கண்டு மெய்மறந்தார்கள்.

நீயும், பலராமனும் இப்படித் தெருவிலே போய்க்கொண்டு
இருக்கும்போது, கம்சனுக்காகத் துணிகளைத் தயார் செய்து வைத்திருந்த
வண்ணானைப் பார்த்தீர்கள்.அந்தத் துணிகளைப் பார்த்த நீ,
வண்ணானிடம் உனக்கு அணிந்துகொள்ள சில துணிகளைக் கேட்டாய்.
வண்ணான், கோபத்துடன், அரசன் அணிந்துகொள்ளும் துணிகளை,
காடுமலைகளில் சஞ்சரிப்பவர்களுக்குக் கொடுப்பதற்கு இல்லை என்றான்.
உங்களை அதட்டினான்; விரட்டினான்; ராஜ த்ரவ்யங்களில்
ஆசை வைக்காதே என்று பயமுறுத்தினான்.
இதனைப் பொறுக்காத நீ, அவன் தலையைக் கொய்து எறிந்தாய்.
அருகில் இருந்த அவனது ஆட்கள், பயந்து ஓட, நீயும் பலராமனும்
அந்த வஸ்த்ரங்களில் சிறந்தவற்றை எடுத்து அணிந்து கொண்டீர்கள்.
இதனைப் பார்த்துக்கொண்டிருந்த துணி நெய்யும் நெசவாளி,
உங்களுக்கு, நேர்த்தியான உடைகளால் அலங்காரம் செய்தான்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த நீ , அவனுக்கு சாரூப்ய ஆனந்தம்,
நிறைந்த சுக வாழ்க்கை, இவைகளை அளித்தாய்.

பிறகு, நீங்கள் இருவரும், சீதாமா என்கிற
மாலாகாரருடைய வீட்டுக்குச் சென்றீர்கள்.
உங்களைக் கண்டதும் அவன் எழுந்து வணங்கி, வர வேற்று ,
உபசரித்து, சந்தனம் புஷ்பம் முதலியவைகளைக் கொடுத்து,
” நீரே சர்வ ஜகத்துக்கும் ஆதி காரணர்;
உங்களால் நான் மிகவும் அனுக்ரஹம் செய்யப் பட்டேன் என்று
சொல்லி மாலைகளைச் சூட்டி மகிழ்ந்தான் .
பரம ப்ரீதியுடன் நீ, அவன் வேண்டிய வரத்தைக் கொடுத்து,
மேலும் ஐஸ்வர்யம் , பலம் ஆயுஸ், இவற்றைக் கொடுத்து
அவனை அனுக்ரஹித்தாய்.

41 வது அத்யாயம் நிறைவடைந்தது., ஸுபம்
த்ரிவக்ரைக்கு அநுக்ரஹம்— தனுர் யக்ஜ சாலையில்
வில்லை முறித்தல்—– கம்ஸனின் கலக்கம் —
—————————————————————————————–

ஹே…கிருஷ்ணா….உன் சரிதத்தை ஸ்ரீ சுகர்,
பரீக்ஷித் மகாராஜனுக்குச் சொல்கிறார் …
இது அடியேன் செவிகளுக்கு அமுதமாக இருக்கிறது.
நீயும், பலராமனும் மதுராபுரி நகருக்குள் ராஜ பாட்டையில்
நடந்து சென்றீர்கள். பார்ப்பவர்கள் வைத்த கண் வாங்காமல்
உங்களைப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.
உங்களைப் பார்த்த பெண்கள் குதூகலம் அடைந்தார்கள்.

அப்போது , உங்கள் எதிரே த்ரிவக்ரை என்கிற கூனி வந்தாள்
வாசமிகு சந்தனமும்,சுத்தமான திலகமும் எடுத்து வந்தாள்.
அவள் கூனி ஆனாலும் யுவதி….அவளைப் பார்த்து
“பெண்ணே …நீ யார்….இந்த சந்தனம் முதலியவற்றை
யாருக்காக எடுத்துப் போகிறாய்…. .
எங்களுக்கு இவைகளைக் கொடுப்பாயா…உனக்கு நல்லவை நடக்கும்..
.இதுபோன்ற சோகம் இனி இல்லை…..” என்றாய்

அதற்கு , கூனியாகிய அந்த சைரந்தரி பதில் சொன்னாள்.
” நான் கம்ஸனின் சேவகி;
சந்தனம் மற்றும் வாசனைத் த்ரவ்யங்களைத் தயாரிக்கும்
கைலாவண்யத்தை மெச்சி கம்ஸன்
என்னை இந்த சேவகத்துக்கு நியமித்துள்ளார்.
ஆஹா அழகானவர்களே……உங்களைத் தவிர
இந்தச் சந்தனாதி த்ரவயங்களைப் பெறுவதற்கு
ஒருவருக்கும் அருகதை இல்லை; ….”.என்று சொல்லி

ஹே கிருஷ்ணா …
.உன்னுடைய மாதுர்யம், புன்சிரிப்பு, சௌஹார்த்தம்,
கடாக்ஷ வீக்ஷிண்யம் இவைகளில் மனதைப் பறிகொடுத்து,
எல்லா சந்தன வாசன தாம்பூலங்களையும் கொடுத்தாள்.
இவள் த்ரிபங்கீ —உடலானது மூன்று இடங்களில் வளைந்து இருக்கிறது
கழுத்து, மார்பு, மற்றும் இடுப்பு ஆகிய மூன்று இடங்களில் வளைவு .
நீயும், பலராமனும் சந்தனத்தைக் கழுத்து, மார்பு உடம்பு
என்று பூசிக் கொண்டீர்கள்.
தாம்பூலத்தையும் வாயில் போட்டு சுவைத்தீர்கள்.
இவையெல்லாம் பார்த்த த்ரிவக்ரை மிகுந்த சந்தோஷமடைந்தாள்.
அப்போது நீ அவளுக்கு அநுக்ரஹம் செய்ய நினைத்தாய்.
“ஹே…த்ரிவிக்ரை….நீ மிகுந்த அழகானவள்;
ஆனால் இந்த மூன்று வளைவுகளும் உன் அழகை மங்கச் செய்கின்றன ”
என்று சொல்லி, அவளுடைய கரத்தைப் பிடித்து,
அவளுடைய பாதங்களை உன் திருவடிகளால் அமுக்கி,
உன்னுடைய விரல்களால் அவளுடைய முகத்தை உயரத் தூக்கி,
அவளுடைய தாடையை உன் விரல்களால் தாங்கி,
ஒரு சொடுக்கு செய்தாய்.
என்ன ஆச்சர்யம் !
அந்த த்ரிவக்ரை அதிரூப சுந்தரியாக —-
முகம், உடல், கால்பாகம் இவை மூன்றும் ஒத்த அழகுடன்
அதிசோபிதமாகஆனாள்.
அவள், உன்னுடைய உத்தரீயத்தைப் பிடித்துக்கொண்டு,
மந்தஹாச வினயத்துடன்
” ஹே…..ரூபகுண ஔதார்ய சம்பண்ணா….
உம்மிடம் என் மனத்தை இழந்தேன்…..
உம்மை விட இயலாது, என்னுடன் வீட்டுக்கு வாரும் ….” என்று கெஞ்சினாள்
அதற்கு, நீ, நான் இங்கு வந்த வேலை முடிந்ததும் உன் வீட்டுக்கு வருவேன் …
என்று சொல்லி அவளை அனுப்பிவிட்டு ,
நீங்கள் இருவரும் தொடர்ந்து நடந்து சென்றீர்கள்.
கொஞ்ச தூரத்தில் , பூமாலை, தாம்பூலம் இவைகளை எடுத்துக்கொண்டு
ஒரு வியாபாரி எதிரே வந்தான். உங்களைப் பார்த்தவுடன்
உங்களுக்கு மாலைகளை அணிவித்து, சந்தனம் பூசி, தாம்பூலம் கொடுத்தான்.
இவைகளை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மதுராபுரி ஸ்திரீகள்,
சந்தோஷம் நிரம்பிய மனத்துடன் அடுத்து என்ன செய்வது என்று
ஒன்றும் புரியாதவர்களாக சித்திரப் பாவைகளைப் போல நின்றார்கள்.

(ஹே கிருஷ்ணா…..உன்னுடைய அப்ராக்ருத அழகு……உன்னுடைய தர்சநம்
அப்போது அடியேனுக்குக் காணக்கிடைக்க வில்லையே ..
.இப்போதாவது அந்தத் தர்சனத்தைத் தரலாகாதா )

பிறகு சிறிது தூரம் சென்றவுடன் ,எதிரே வருபவர்களைப் பார்த்து
” இங்கே ஏதோ ஒரு இடத்தில் தனுஸ் இருக்கிறதாமே …..எங்கே இருக்கிறது …..”
என்று கேட்டு ,அவர்களிடம் தெரிந்துகொண்டு, இந்திர சபையைப் போல இருக்கும்,
அற்புதமான அந்த சபைக்குள் சென்றீர்கள்.
அங்கு நடுநாயகமாக பற்பல வர்ணத்துடன் மின்னும்
பச்சை, வைடூர்ய மாணிக்கக் கற்களால் பதிக்கப்பட்டு
பார்ப்பதற்கு வெகு நேர்த்தியாக உள்ள அந்தவில்லைப் பார்த்தீர்கள்.
வில்லுக்கு முன்பாக , ஒரு பெரிய பையில் பணமுடிப்பு வைக்கப்பட்டிருந்தது
. பலவீரர்கள், மிக ரகசியமாகப் பாதுகாத்துக் கொண்டிருந்தார்கள்.
நீ, சிரித்துக் கொண்டே வில்லின் அருகில் சென்றாய்.
ஏராளமான வீரர்கள் ஓடிவந்து உன்னைத் தடுத்தனர்.
அவர்களையெல்லாம் ஒரு க்ஷணத்தில் ஒதுக்கித் தள்ளி,
வில்லைக் கையில் எடுத்து, விளையாட்டாக அதன் நாணைப் பூட்டி இழுத்தாய்.
வில், சடாரென்று இரண்டாகப் பெரும் ஓசையுடன் ஒடிந்து விழுந்தது.

இந்தத் த்வனியைக்கேட்ட கம்ஸன் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தான்.
வில்லுக்குக் காவலாக இருந்த வீரர்கள், உங்களை அழிக்க ,
ஆயுதங்களுடன் ஓடிவந்தார்கள்.
உடைந்த வில்லையே ஆளுக்கு ஒன்றாக எடுத்துக்கொண்டு நீங்கள் இருவரும்
அவர்களுடன் சண்டை செய்து விரட்டி அடித்தீர்கள்.

இதை அறிந்த கம்ஸன் இன்னும் பல வீரர்களை அனுப்ப அவர்களையும் வென்று,
நீங்கள் இருவரும் , அந்த சபையில் இருந்து வெளியே வந்து,
மறுபடியும் மதுராபுரி நகர வீதிகளில் சுற்றி னீர்கள்
மதுராபுரவாசிகள், உங்களை மிகவும் கொண்டாடி,
இவர்கள் உத்தமச் சிறுவர்கள், தேவர்கள் என்று புகழ்ந்தனர்.
இப்போது அஸ்தமன சமயம் ஆகிவிட்டது.
நீங்கள் இருவரும் உங்களுடன் வந்த கோபாலகர்கள் புடைசூழ
ரதத்தை நிறுத்திய இடத்துக்கு வந்து, ரதத்தில் ஏறி,
தங்கியிருந்த இடத்தை அடைந்தீர்கள்.
அங்கு, கைகால்களை அலம்பி உணவு அருந்தி ,
இரவை சுகமாகக் கழித்தீர்கள்.

ஆனால், கம்ஸனுக்குத் தூக்கம் வரவில்லை.
பற்பல துர்நிமித்தங்கள் ஏற்பட்டதைப் பார்த்தான்.
மிகுந்த பயத்துடன் இரவைக் கழித்தான். மறுநாள் காலை….
மல்யுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகளுக்குக் கட்டளை இட்டான்.
பிரும்மாண்டமான அரங்கம். மந்திரிகள், சேனாதிபதிகள், பிரமுகர்கள்,
நந்தகோபன் மற்றும் எல்லா கோபாலகர்கள்வந்து அமர்ந்தார்கள்.
கம்ஸன் தன் பரிவாரங்களால் சூழப்பட்டு அங்கு வந்து ,
தனது சிம்மாசனத்தில் அமர்ந்தான்
மனத்தில் ஏதோ ஒரு பீதி அவனுக்கு.
மல்யுத்த அரங்கில், கூடன்,சலன், தோசலன் மற்றும்
பல மல்யுத்த வீரர்கள் இருந்தனர்.
சாணூரன் , முஷ்டிகன் என்கிற மிகச் சிறந்த மல்யுத்த வீரர்களும் இருந்தனர்.

42 வது அத்யாயம் நிறைவடைந்தது . ஸுபம்

———————————————————————————————————-

— தசமஸ்கந்தம்—– அத்யாயம் ……….43
———————————————————————————

கம்ஸனின் பட்டத்து யானை—-குவலையா பீடம் —– சம்ஹாரம்
—————————————————–

ஸ்ரீ சுகர் , பரீக்ஷித் மகாராஜனுக்கு மேலும் உன் கதையைக் கூறுகிறார்
மறுநாள் காலை வேளை. நீயும், பலராமனும் நன்கு அலங்கரித்துக் கொண்டு,
துந்துபி வாத்தியம் முதலிய சப்தங்கள் வரும் திசையைநோக்கி
கோபாலகர்கள் கூடவே வர, நடந்து சென்றீர்கள்.
மிகப் பெரிய அரங்கம்; மந்திரிகளும், சேனாதிபதிகளும் முக்யஸ் தர்களும்
கூடியிருந்த அரங்கம்; கம்ஸன் தன்னுடைய சிம்ஹாசனத்தில்
நாடு நாயகமாக வீற்றிருந்தான்.

நீங்கள், அந்தப் பெரிய அரங்கத்தின் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டீர்கள்.
அங்கு, கம்ஸனின் பட்டத்து யானை —குவலையாபீடம் —என்கிற யானை இருந்தது.
மாவுத்தன் சொன்னபடியெல்லாம் செயல்பட்டது.
நீ, உன் கேசபாசங்களை நன்கு முடிந்துகொண்டு, வேஷ்டியை இறுகக்கட்டிக்கொண்டு,
மிகக் கம்பீரமாக, மாவுத்தனுக்குக் கட்டளை இட்டாய்.

” நாங்கள் உள்ளே போக வேண்டும்; இந்த யானையை விலக்கு; தாமதிக்காதே;
தவறினால், யானையையும் உன்னையும் சேர்த்துக் கொன்று விட்டு உள்ளே பிரவேசிப்போம் ”

மாவுத்தன், மிகக் கோபமாக, யானையை உங்கள் மேல் ஏவினான்.
அது பாய்ந்து வந்தது. உன்னைத் துதிக் கையால் வளைத்தது.
நீ, அதை மிக வேகமாகத் தடுத்து, உன் முஷ்டியால் குத்தி, அதன் துதிக்கையை,
அதன் பின்புறமாக இழுத்தாய். யானை உன் பிடியிலிருந்து தப்பித்து,
மிகவும் கோபத்துடன்,உன்னுடன் மோதியது.
இடப் புறமாகவும், வலப்புறமாகவும் சுழன்று உன்னைத் தாக்கியது.
நீயும், அதற்கு ஏற்றாற் போலச் சுழன்று, சற்று நேரம் அதனுடன் விளையாடினாய்.
அதற்கு இன்னும் கோபம் ஏற்படுமாறு செய்தாய்.
உன்னை முட்டுவதற்கு ஓடி வந்தது. நீ, லாவகமாக நகர்ந்து கொண்டாய்.
நீ தரையில் படுத்து இருப்பதாக நினைத்து, தரையில் மோதியது.
ஆனால் , நீ அங்கு இல்லை என்பதை உணர்ந்தது.

இப்போது மாவுத்தன், மறுபடியும் அதனைத் தூண்டி , உன்மீது ஏவினான்
. நீ, அந்த யானையை உன் பலத்தால் அடித்துத் கீழே தள்ளினாய்.
சமாளித்துக் கொண்டு அது எழுந்திருக்க முயல, நீ ,அதை மறுபடியும் கீழே தள்ளி,
அடித்து, அதன் தந்தங்களைப் பிடுங்கினாய்
. ஆயிரம் யானைகளின் பலம் கொண்ட அந்த குவலையாபீடம் என்கிற யானை ,
இப்படியாக அந்த “ரங்க” பூமியில் உன்னால் கொல்லப்பட்டது.
உன் திருமேனியில் ரத்தமும், வியர்வையும் நிறைந்து இருக்க,
நீயும் பலராமனும், ஆளுக்கு ஒரு தந்தத்தைப் பிடித்துக் கொண்டு
அந்த” ரங்க” மேடைக்கு வந்தீர்கள்.

(ஹே …க்ருஷ்ணா…..அன்று உன்னையே தஞ்சம் என்று “ஆதிமூலமே ” என்று கதறிய
யானையைக் காத்தாய். இப்போது, மாவுத்தனால் தூண்டிவிடப்பட்ட,
கம்ஸனால் ஏவப்பட்ட குவலையாபீடம் என்கிற யானையைக் கொன்றாய்.
பிற்பாடு, மகாபாரத யுத்தத்தில் , தர்மரை முன்னிட்டு “அஸ்வத்தாமன் ” என்கிற
யானை அழியப் போகிறது. மூன்று யானைகள் ,
உன் திருவிளையாடலில் முக்யத்வம் பெறுகின்றன. )

அப்போது, நீ, கோபர்களுக்கு சகாவாகவும், பிதாவான நந்தகோபருக்குக் குழந்தையாகவும்,
ஸ்திரீகளுக்கு மன்மதமூர்த்தியாகவும், கம்ஸனுக்கும் அவன் சகாக்களுக்கும்
அவர்களுடைய பலத்தை அடக்குபவனாகவும் காக்ஷி தந்தாய்
. கூடியிருந்த ஜனங்கள், எவராலும் அடக்கமுடியாத, குவலையாபீடம் என்கிற யானையையே
அழித்த உன் பராக்கிரம, வீரச் செயலைக் கொண்டாடினார்கள்.

இவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த கம்ஸன்
மனத்துக்குள் மிகவும் பயந்து போனான்
உன்னையும் பலராமனையும் பயத்துடன் பார்த்தான்.
ஆனால், கூடியிருந்த ஜனங்கள் , உங்களை .ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டே இருந்தார்கள்.
அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

இவர்தான் கிருஷ்ணன்;கோகுலத்திலிருந்து வந்திருக்கும் நந்தகோபரின் பிள்ளை.
இவர்தான், தேவகியின் பிள்ளையாகப் பிறந்து, கோகுலத்தில் கொண்டுபோய் விடப்பட்டு,
நந்தகோபர் வீட்டில் இதுவரை ரஹஸ்யமாக வளர்ந்து,
கம்ஸனால் இவரைக் கொல்வதற்கு என்றே அனுப்பப்பட்ட பூதனை,
திருணாவர்த்தன், நளகூபரன், கேசி தேனுகன், என்று பல அசுரர்களை மாய்த்தவர்.
காளியன் என்கிற கொடிய சர்ப்பம் இவரால் அடக்கப்பட்டது.
இந்திரனின் கோபத்தால் இடைவிடாது பெய்த மழையின் போது,
கோவர்த்தன கிரியைத் தூக்கிப் பிடித்து கோகுல வாசிகளைக் காத்தவர்.
முகத்தில் அந்த மந்தஹாசத்தைப் பாருங்கள்.
சொக்க வைக்கும் அழகைப் பாருங்கள் .
இவருடைய மூத்தவர் பலராமனைப் பாருங்கள்.
இவர் கமலலோசனன். ப்ரலம்பன், வத்சன்,பகன் என்கிற
பலம்வாய்ந்த அசுரர்களைக் கொன்றவர்.
கிருஷ்ணனையும் பலராமனையும் பார்க்கும் பாக்யம் பெற்றோம்.
இப்படி அடிக்கடி பேசி உங்களைப் பார்த்துப் பரவசம் அடைந்த ஜனங்கள் ,
திடீரென்று தூர்ய வாத்தியங்கள் முழங்குவதைக் கேட்டார்கள்.
நீங்கள் இருவரும் ரங்க மண்டபத்துக்குள் வந்ததும் , சாணூரன் என்கிற மல்லன்
சபையின் நடுவே உன்னைப் பார்த்துப் பேசினான்.
ஹே…வீர…நீங்கள் இருவரும் மிகுந்த வீரம் மிகுந்தவர்கள் என்று
ஜனங்களால் சொல்லப்படுகிறீர்கள்.
மல் யுத்தம் செய்வதில் வல்லவர்கள் என்று, கேள்விப்பட்டு
அரசர் உங்களை இங்கு அழைத்து இருக்கிறார்.
உங்கள் மல் யுத்தத்தைப் பார்க்க விரும்புகிறார்.
அரசனின் ஆசையை நிறைவேற்றுவது பிரஜைகளின் கடமை.
எங்களுடன் மல்யுத்தம் செய்யவேண்டும் என்றான்.
அதற்கு, நீ, ” நாங்கள் பாலர்கள், எங்களுக்குச் சரிசமமான வயது,
பலமுள்ள வீரர்களுடன் மல்யுத்தம் செய்கிறோம்
இப்படி இல்லாதவர்களுடன் செய்யும் யுத்தம் பாபத்தை ஏற்படுத்தும் ” என்றாய். .
அதற்கு , சாணூரன், ” நீங்கள் பாலர்கள் இல்லை; ஆயிரம் யானை பலம் கொண்ட
குவலையா பீடம் என்கிற யானையையே விளையாட்டாகக் கொன்று இருக்கிறீர்கள்;
நீங்கள் பலம் உள்ளவர்களுடந்தான் மல்யுத்தம் செய்யவேண்டும்;
ஆதலால், ஹே கிருஷ்ண…நீ என்னுடனும், பலராமன் முஷ்டிகனுடனும்
மல்யுத்தம் செய்யலாம் ” என்றான்.

43 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுப ம்.

கம்ஸ வதம்

ஹே கிருஷ்ணா…..ஸ்ரீ சுகப்ப்ரம்மம் , பரீக்ஷித் ராஜனுக்கு ,
உன்னால் கம்ஸன் வதம் செய்யப்பட்டதை யும், அதற்கு முன்பு, சாணூரன் முஷ்டிகன்
வதம் செய்யப்பட்டதையும் கூறியதை, இப்போது உனக்குச் சொல்கிறேன்.
நீ, சாணூரன் என்கிற மல்யுத்த வீரனுடனும், பலராமன், முஷ்டிகன் என்கிற
மல்யுத்த வீரனுடனும் மல்யுத்தம் செய்தீர்கள். ஒருவருக்கு ஒருவர்
மோதிக்கொண்டீர்கள்; கையும் கையும் மோதின; காலும் காலும் மோதின;
ஒருவர் பிடியில் இருந்து மற்ற ஒருவர் தப்பிப்பது, பிடிபடாமல் காத்துக் கொள்வது,
ஒருவரைப் பிடித்து இன்னொருவர் மேலே தூக்குவது, இப்படியாக மல்யுத்த விதிகளின்படி
யுத்தம் செய்தீர்கள்; இதைப் பார்த்துக்கொண்டிருந்த பெண்கள் , “இது என்ன
அநியாயம் ? சரிசமம்மான பலமுள்ளவர்கள் மல்யுத்தம் செய்வதைப் பார்த்திருக்கிறோம்;
இங்கு, இளம் பாலகர்களுடன் வஜ்ராத்தைப்போலத் தேக பலம் கொண்ட மலைகளைப்போல
இருக்கிற பெரிய பலவான்கள் மோதுகிறார்களே ?
இது அதர்மம்; இதை நாம் பார்க்கக் கூடாது;எழுந்து செல்வோம் என்று பேசிக்கொண்டார்கள்.
உன்னுடைய முகத்தில் வியர்வை அரும்பி இருப்பதைப் பார்த்து துக்கித்தார்கள்.
சாணூரன் பிடிக்கு அகப்படாமல் , சமாளித்து நீ, அவனைத்தாக்கும்போது
சந்தோஷித்தார்கள். ஆஹா….வ்ரஜாபூமிவாசிகள் புண்ய சாலிகள் …….
.கிருஷ்ணனின் அழகையும் லீலைகளையும் அனுபவித்தவர்கள் அல்லவா என்று
உன்னை ஸ்லாகித்தார்கள். ,
மதுராபுரி ஸ்திரீகள், உன்னையே பார்த்து, உன்னையே நினைத்து,
உனக்கு வெற்றி கிடைக்கட்டும் என்று பிரார்த் தித்தாகள் ஆனால், அவர்கள் மனசு
அடுத்து என்னநடக்குமோ என்று பயந்தது.
உன்னுடைய தாயாரான தேவகியும் ,தந்தையான வசுதேவரும் இந்த மல்யுத்தத்தைப் பார்த்து,
உன்னை சாதாரண பாலகனாக எண்ணி மிகவும் பயந்தனர்.
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நினைத்துக் கொண்டிருக்கும்போது,
நீ மிக வேகமாக, சாணூரனுடைய , கை கால்களைப் பிடித்து அவனை மேலேதூக்கி,
பலதடவைகள் சுழற்றி , ஓங்கி பூமியில் அடித்தாய். அந்தக்ஷணமே அவன் செத்து மடிந்து
,அவன் உயிர் பிரிந்தது. அதே சமயம், பலராமனின் தாக்குதலைத் தாங்கமுடியாமல்,
பலராம னின் முஷ்டியால் அடிபட்டு, முஷ்டிகனும் மடிந்தான்.
இவைகளைப் பொறுக்க முடியாமல் ,சாணூரன் முஷ்டிகனின் சகாக்கள்,
உங்களைத் தாக்க ஓடிவர, அவர்களும் உங்களால் மடிந்தார்கள்.
இவைகளைப் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த பிற மல்லர்கள் அந்த இடத்தைவிட்டு ஓடினர்.
ஜனங்கள் ஜெயகோஷம் செய்ய, நீங்கள் இருவரும் விஜய சீலர்களாக விளங்கினீர்கள்.

கம்ஸனுக்குக் கோபமான கோபம்;
“வாத்தியங்களை நிறுத்துங்கள்; இறந்துபோன மல்லர்களின் தேகங்களை அகற்றுங்கள்;
இந்த இரண்டு பாலகர்களையும் ஊரை விட்டு விரட்டுங்கள்;
நந்தகோபரைக் கைது செய்யுங்கள்; வசுதேவரைப் பிடித்துக் கொல்லுங்கள்
; உக்ரசேனரையும் கொல்லுங்கள்; கோபாலகர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யுங்கள் ……”
என்று அடுக்கடுக்காகக் கட்டளையிடத் தொடங்கினான்.

இந்தச் சமயம், நீ கொஞ்சமும் தாமதம் செய்யாமல், கம்ஸன் அமர்ந்து இருக்கும்
ஆசனத்தின் மீது பாய்ந்தாய். அவன் உடனே வாளை உருவிக்கொண்டு,
கேடயத்துடன் ஆசனத்தை விட்டு எழுந்திருந்து, கீழே இறங்கினான்.
நீ, அவனை, எப்படி கருடன் பெரிய சர்ப்பத்தைப் பிடித்துக் கொல்வாரோ
,அப்படி, அவனைப்பற்றி,அவன் அலற அலற அவனைக் கீழே தள்ளினாய்.
கேசங்கள் அவிழ்ந்தன;
ராஜ கிரீடம் கீழே விழுந்து உருண்டு ஓடியது
அவன்மீது ஏறி உட்கார்ந்தாய்
ஹே…விஸ்வாஸ்ரய
ஹே… ஆத்ம தந்தர
அவனைச் சரசர வென்று இழுத்தாய்
பூமியில் தேய்த்தாய்
ஹே…ஹரி…
எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவனைக் கொன்றாய்.
ஒரு யானையை சிம்ஹம் எவ்விதம் கொல்லுமோ அப்படி அவனைக் கொன்றாய்.
கம்ஸனின் சாகும் தருணம் , அந்த க்ஷணத்தில் உன்னைப் பார்த்தான்.
எப்போதும் பயத்தினால் நடுங்கி, பகலிலும், இரவிலும் , உட்காரும்போதும்
சாப்பிடும்போதும் உன்னை எதிரியாக நினைத்து உன் நினைவாகவே இருந்தானோ
அந்தக் கம்ஸன்
உன்னை இப்போது சங்கு சக்ர கதா தாரியாக ,
யாருக்கும் கிடைக்க அரியதான நான்கு திருக் கரங்களுடன் கூடிய
விஷ்ணு ரூபியாகப் பார்த்தான்.
என்ன ஆச்சர்யம்…..உன்னால் இப்போது அநுக்ரஹிக்கப்பட்டான்.

(ஹே கிருஷ்ணா….அந்த மஹா ஸ்வரூபத்தை இப்போது
அடியேனுக்குக் காட்டி , அடியேனை அநுக்ரஹம் செய்வீராக )

கம்ஸனுக்கு எட்டு சஹோதரர்கள்;
அவனைப் போலவே பலம் உள்ளவர்கள்; கம்ஸன் இறந்தவுடன் மிகவும் கோபத்துடன்
உன்னைக்கொல்ல ஓடி வந்தார்கள். அதைக் கண்ட பலராமன், சம்மட்டியை எடுத்து,
சிம்ஹம் , மாடுகளைக் கொல்வதைப்போல அவர்களை கொன்றான்.
ஆகாயத்திலிருந்து துந்துபி முதலிய வாத்தியங்கள் முழங்கின;
பிரம்மாவும் தேவர்களும் உங்கள்மீது புஷ்பமாரி பொழிந்தனர்.

கம்ஸன் மற்றும் அவனுடைய பந்துக்கள்
கதறி அழுதனர். கம்ஸ பத்னிகள், ஹே…நாத… பிராணிகளுக்கு எல்லாம்
ஹிம்சை செய்தீர்; பரமாத்மாவை விரோதித்தீர்; அதனால் இந்தத் துர்க் கதியை
அடைந்தீர் …என்று புலம்பினார்கள்.
சர்வலோக ரக்ஷ்கனான நீ,
அவர்களை ஆசவாசப் படுத்தினாய். மாதாவும் பிதாவுமான தேவகியையும் வசுதேவரையும்
பந்தனத்திலிருந்து விடுவித்து, அவர்கள் கால்களில் விழுந்து வணங்கினாய். , .
( ஹே…..கிருஷ்ணா… மாதா பிதாக்களைப் பயத்திலிருந்தும், பந்தனத்திலிருந்தும் விடுவித்த
நீ, அடியேனையும் அப்படியே ரக்ஷிப்பாயாக…
உன்னைப் பல்லாயிரம் தடவை நமஸ்கரிக்கிறேன் )

44 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்

—————————————————————————————————————————————

தசமஸ்கந்தம் —- அத்யாயம் 45
————————————————

ஆசார்ய புத்ரனை உயிருடன் மீண்டும் கொணர்தல்
————————————-

ஹே….கிருஷ்ணா…..உன்னுடைய பெற்றோர்களை , நீயும் பலராமனும் அணுகி, அவர்களிடம் பேசினாய். “பிள்ளையாகப் பெற்றதன் பலனை நீங்கள் அனுபவிக்க முடியாமல், நாங்களும் உங்களுக்குச் ஸேவை முடியாமல், நாங்கள் வேறு இடத்தில் வாழும்படி ஆகிவிட்டது. கம்ஸனால் துன்புறுத்தப்பட்டு காரக்ருஹத்தில் இருந்தீர்கள்.
உக்ரசேனரான எங்கள் பாட்டனாரே… நீர் இந்த க்ஷணம் முதல் இந்த மதுரா ராஜ்யத்துக்கு அரசர்; எங்களுக்கும்அரசர் ; …” என்று சொல்லி, அவர்களை சந்தோஷம் அடையச் செய்து, மதுரா ராஜ்ஜியம் எவ்வித சுபிக்ஷத்துக்கும் குறைவு இன்றி ,மேலும் வளர ஆவன செய்து ,அங்கேயே கொஞ்ச காலம் இருந்தீர்கள்.
பிறகு, யசோதை மற்றும் நந்தகோபரிடம் சென்று, ” நீங்கள் பரிவுடனும், வாத்சல்யத்துட னும் , உங்கள் சுகங்களை எல்லாம் துறந்து, எங்களை வளர்த்தீர்கள்; நீங்கள்தான் பிதாவும், அன்னையும்; நாங்கள் இங்கு கொஞ்ச நாட்கள் இவர்களுடன் வசித்து விட்டுத் திரும்பவும் கோகுலம் வருகிறோம்; இந்த ஆபரணங்கள், வஸ்த்ரங்கள் யாவும் உங்களுக்கே ;வ்ரஜை கிராம வாசிகளுக்கே; இவைகளுடன் கோகுலம் செல்லுங்கள் …” என்று சொன்னாய். அவர்கள் யாவரும் உன் பிரிவைத் தாங்க முடியாமல், கண்ணீர் விட்டார்கள்; பிறகு ஒருவாறு மனம் தேறி, கோகுலத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.
வசுதேவர் , உனக்கும், பலராமனுக்கும் உபநயன ஸம்ஸ்காரங்களைச் செய்து வைத்தார். பிறகு யதுகுல குருவாகிய கர்க்கரிடம் காயத்ரி வ்ரதம் இருக்க வும்,
பிறகு ஸாந்தீபினி என்கிற ஆசார்யரிடம் எல்லா சாஸ்திரங்களையும், வேதங்களையும் கற்றுக்கொள்ள அனுப்பி வைத்தார்.
ஹே கிருஷ்ணா….யாரிடமிருந்து எல்லா வேதங்களும், சாஸ்திரங்களும் பிரக டனம் ஆயிற்றோ, எவரை நினைத்தால் எல்லா வித்யைகளும் கைகூடுமோ
அந்தப் பரப் ப்ரும்மமான நீ, பலராமனுடன் சேர்ந்து, கர்க்கரை அணுகி ப்ராஜாபத்ய வ்ரதம் அனுஷ்டித்து, பிறகு அவர் அனுமதியுடன், உஜ்ஜயினி சென்று காஸ்யப கோத்ர ஆசார்யரான ஸாந்தீபினியிடம் , ஆன்விக்ஷிகி என்கிற சப்தம், சந்தஸ், வ்யாகர்ணம், ஜ்யோதிஷம், கல்பம், நிருக்தம் ஆகிய ஆறு அங்கங்களைக் கொண்ட வேதங்கள், தனுர் வேத ரகசியங்கள், தர்ம சாஸ்த்ரம், பூர்வ மீமாம்சம், உத்திர மீமாம்சம் , ராஜ நீதி, 64 கலைகளான
பாட்டு
வாத்திய சங்கீதம்,
நடனம்
நாடகக் கலை ,
சித்ரம் துணியில் வரைதல்
பலவித வண்ணப்படங்களை கஸ்துரி போன்ற வாசனைப் பொருள்களால் வரைதல்,
தெய்வ ஆராதனத்துக்குக் கோலம் இடுதல்,
பூக்களால் அலங்கரித்தல்,
புஷ்பப் படுக்கை
பற்கள், உடல் அங்கங்களுக்குப் பூச்சாயம் இடுதல்,
துணிகளுக்கும் அம்மாதிரியே செய்தல்,
தரையை ரத்னங்களால் அலங்கரித்தல்,
படுக்கை தயாரித்தல்
ஜலதரங்கம் போன்ற நீர் வாத்தியம் பயிலல்,
நீர்மேல் நடத்தல்,
படுத்தல்
மாயாஜால வித்யைகள்
புஷ்பங்கள் தொடுத்தல் ,
கொண்டைகள் செய்தல்
உடலைப் பூக்களால் அலங்கரித்தல்,
காதுகளின் ஓரத்தில் சித்திரம் வரைதல்,
வாசனைப் பொருட்கள் தயாரித்தல் ,
பலவித ஆபரணங்கள் தயாரித்தல்,
இந்திர ஜாலம்
பலவித வேஷமிடுதல்,
உள்ளங்கை கோலம்
சமையல் கலை
பானங்கள் தயாரித்தல்
நெசவு,
ஊசி வேலை,
பலவித சங்கீத வாத்யங்களைத்தயாரித்தல்,
புதிர் போடுதல்,
விடுகதை சொல்லல்,
கவிதை புனைதல்,
நாவினால் பலவித ஒலிகள்
மிக வேகமாகப் படித்தல்,
கவிதை நாடகம் எழுதுவது ,
கவிதைகளைப் பூர்த்தி செய்தல்,
நூல் நூற்றல்,
தச்சு வேலை,
கட்டிட வேலை,
இவைகட்கு வரைபடம் தயாரிப்பது
ரத்னப் பரீக்ஷை
உலோகத்தைத் தங்கமாக மாற்றல்,
பூமியில் உலோகங்களின் இருப்பிடத்தை அறிதல் ,
தாவரவியல்,
விலங்குகளின் இயல்
விரோதியை மந்த்ரத்தால் கட்டல்
பார்வையில் இல்லாக் கடிதங்களைப் படித்தல்,
உள்ளங்கை பொருளை அறிந்து சொல்லல்
மிலேச்ச பாஷை
சகுனம்
மந்த்ர,
தந்த்ரங்கள்
யந்த்ரம் செய்தல்,
வஜ்ரம் போன்ற பொருட்களைப் பிளத்தல்,
எண்ண ஓட்டங்களை அறிந்து சொல்லல்,
ஒரு பொருளைப் பலபொருட்களாகக் காட்டுதல்
ஆகர்ஷணம்
வசியம்
மிருக பாஷை,
பக்ஷி பாஷை கள்
பேய் பிசாசுகளை அடக்குதல்
இப்படியாக 64 கலைகளையும் 64நாட்களில் கற்றுத் தேர்ச்சி அடைந்தீர்கள்
எல்லா வித்யைகளையும் கற்றுத் தேர்ச்சி அடைந்தவுடன் , ஆசார்யரையும் அவர் பத்நியையும் நமஸ்கரித்து, குரு தக்ஷிணை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டினீர்கள்
அப்போது, உங்கள் மஹிமையை நன்கு அறிந்த சாந்தீபினி, “ப்ரபாஸ தீர்த்தத்திலே என்னுடைய குமாரன் ஒருநாள் மூழ்கி இறந்து போனான்; அவனை மீட்டுக் கொடுத்து குரு தக்ஷிணை கொடுத்த பலனை அடையுங்கள் ” என்றார்
“அப்படியே ” என்று சொல்லி, நீங்கள் இருவரும் ரதத்தில் ஏறி, பிரபாஸ தீர்த்த்தத்தை அடைந்தீர்கள். அப்போது, சமுத்ர ராஜன் அங்கு வந்து வெகுமதிகளைக் கொடுத்து, பணிந்து நின்றான். நீ, அவனிடம்,”தொலைந்துபோன குரு புத்ரனை உடனே கொணர்க “என்றாய்.
சமுத்ர ராஜன் ” ஹே…கிருஷ்ண…..பஞ்சஜனன் என்கிற தைத்யன் ஜலத்தின் அடியில் சங்கு ரூபமாக வசிப்பவன், ,குருபுத்ரனைக் கொண்டு போய் இருக்கிறான் “என்று சொல்ல, நீங்கள் ஜலத்திற்குள் புகுந்து , பஞ்சஜனனைப்பார்த்து அங்கு குரு குமாரன் இல்லாமையால் அவனைக் கொன்று, அவனுடைய உடலில் இருந்து பாஞ்ச ஜன்யம் என்கிற சங்கினை எடுத்துக் கொண்டு, “ஸம்யமனீ ” என்கிற யம பட்டணத்தை அடைந்து, சங்கை ஊதினீர்கள்
யமதர்மன், நீ வந்திருக்கிறாய் என்பதை அறிந்து, ஓடோடி வந்து, அதிதி உபசாரம் செய்தான்.
அவனிடம், “என்னுடைய கட்டளையை சிரசா வஹித்து, சாந்தீபினியின் குமாரனை என்னிடம் உயிருடன் ஒப்புவிப்பாய் …”.என்றாய்.” அப்படியே செய்கிறேன் ”
என்று சொல்லி, யமதர்மன், குரு புத்ரனை உங்களிடம் உயிருடன் கொண்டுவந்து கொடுத்தான். நீங்கள், யமதர்மனை ஆசீர்வதித்து விட்டு,திரும்பவும்
ஆசார்யரிடம் வந்து அவருடைய குமாரனை அவரிடம் ஒப்புவித்தீர்கள்.
வேறு ஏதாவது வேண்டுமானாலும் கட்டளை இடுங்கள் என்று வேண்டிக் கொண்டீர்கள்.
அதற்கு, ஆசார்யர், உங்களால் என் மனோர தம் நிறைவேறியது; மிகவும் சந்தோஷம் ;உங்கள் கீர்த்தி உலகெங்கும் பரவும்; நீங்கள் கற்றவை உங்களுக்கு மறவாமல் இருக்கும்; நீங்கள் குருகுல வாசத்தை முடித்தீர்கள் …என்று சொன்னார்.
குருவால் ஆசீர்வதிக்கப்பட்ட நீங்கள் இருவரும் அவரிடம் அனுமதி பெற்று, மதுராபுரிக்கு ரதத்தில் வேகமாக வந்து சேர்ந்தீர்கள். உங்கள் இருவரையும் பார்த்த
மதுராபுரி வாசிகள் பேரானந்தம் அடைந்தார்கள்.

45 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுப ம்

உத்தவர் , ஸ்ரீ க்ருஷ்ணன் கட்டளைப்படி கோகுலம்செல்லல்
—————————— ——————

ஸ்ரீ சுகப்ரம்மம், தொடர்ந்து பரீக்ஷித் மகராஜனிடம் சொல்கிறார்

ஹே….ராஜன்….ப்ருஹஸ்பதியின் சிஷ்யரும், சிறந்த கீர்த்தி உள்ளவரும், ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஆலோசனை சொல்பவருமான உத்தவர் அறிவாளிகளில் மிகச் சிறந்தவர். அவரை நீ ஏகாந்தமாக அழைத்து, அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு,
உத்தவ்ரே ….. நீர் இப்போது கோகுலம் செல்லவேண்டும். என் பிதா, என் மாதா இருவரிடமும், என்னைப் பிரிந்து தவிக்கும் கோபிகைகளிடமும், நான் சொல்லும் வார்த்தைளை சொல்வதற்காகச் செல்ல வேண்டும்.
என் மாதா பிதா இருவரும், என் சுகத்துக்காகவே வாழ்கிறார்கள்; தங்கள் சுகங்களைத் த்யாகம் செய்தவர்கள்; கோபிகைகள் , மனத்தளவில் என்னிடம் பூர்ண சரணாகதி செய்தவர்கள்; என்னையே பிரேமை மார்க்கத்தில் கதியாக அடைந்தவர்கள்; எனக்காக லோக தர்மங்களை விட்டவர்கள்;இந்த கோபஸ்த்ரீகள், என்னையே நினைத்துக் கொண்டு, கண்ணீர் பெருக, என் நினைவால் உயிர் தரித்து, என் வரவை அங்கு ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்; ஆதலால் உடனே கோகுலம் செல்லுங்கள் என்றார்
உடனே ,”அப்படியே ஆகட்டும் “என்று சொல்லி உத்தவர் ரதத்தில் ஏறி கோகுலத்துக்குப் புறப்பட்டார் . சாயந்திர வேளையில் கோகுலத்தை அடைந்தார். அப்போது, “”கோதூளிகா”” வேளையாக இருந்தது. மாடுகளின் இரைச்சல்; பசுக்கள் ,கன்றுகளைத் தேடி ஓடும் குளம்பு ஒலிகள்; சாயந்திர வேளையில் சில வீடுகளில் பால் கறக்கும் சப்தம்; அத்துடன் வேணுகான கீதங்கள் ; கோபிகா ஸ்திரீகள், தங்களை நன்கு அலங்கரித்துக்கொண்டு, உன்னுடைய புண்ய கீர்த்திகளைப் பாடிக் கொண்டிருந்தார்கள். கோபர்களும் நல்ல வஸ்த்ரங்களை உடுத்திக் கொண்டு இருந்தார்கள். விளக்குகள் ஏற்றப்பட்டு இருந்தன. தேவதா உபாசனம், பிராம்மணர்கள், பித்ருக்கள் உபாசனம் நடைபெற்றுக்கொண்டு இருந்தன. வண்டுகளின் ரீங்காரம், பக்ஷிகளின் சப்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இப்படியான உசந்த வேளையில், உத்தவர் வந்ததைப் பார்த்து, நந்த்கோபரும் யசோதையும் வசுதேவரே வந்ததைப் போன்று சந்தோஷித்து, அவரை வரவேற்று, உபசரித்து, ஆகாரம் கொடுத்து, பிரயாணக் களைப்பைப் போக்கி, பரம சுகத்தை அளித்தார்கள். பிறகு, நந்தகோபர், உத்தவரின் கால்களைப் பிடித்து விட்டுக்கொண்டே ,

” மஹா பாக…..என்சகா ,வசுதேவர் சௌக்யமாக இருக்கிறாரா ? தேவகி சௌக்யமா ?சிறையில் இருந்து விடுபட்டு பந்துக்களுடன் கூடி சந்தோஷமாக இருக்கிறார்களா?
கம்ஸனும் அவனுடைய சஹோதரர்களும் கொல்லப்பட்டனர். அவர்கள் செய்த மஹா பாவங்களுக்கு இதுவே தண்டனை. எங்கள் குழந்தை ஸ்ரீ கிருஷ்ணன், எங்களையும், சகாக்களையும், இங்கு உள்ள பசுக்கள், பக்ஷிகள், பிருந்தாவனம், கோவர்த்தனகிரி, எல்லாவற்றையும் நினைக்கிறானா? அவனுடைய சுந்தரமான முகம், தீர்க்கமான மூக்கு, புன்னகை பூக்கும் பார்வை, எங்களை இன்னும் மயக்குகிறது. எங்களைப் பல ஆபத்துகளில் இருந்து காப்பாற்றினான். காட்டுத்தீ;பலமான காற்று; அஹோராத்ரி ஏழு நாட்கள் மேக வர்ஷம்; அசுரர்கள் பற்பல வேஷங்களுடன் வந்து கொல்லுவதற்கு முயற்சி ; இவை எல்லாவற்றிலிருந்தும் கிருஷ்ணன் எங்களைக் காப்பாற்றினான்;அவனது ஒவ்வொரு லீலையும், வீரச் செயலும், கடைக்கண் பார்வையும், கள்ளச் சிரிப்பும் இப்போதும் எங்கள் நினைவில் இருந்து எங்களை மெய்சிலிர்க்க வைக்கின்றன. எங்களையே மறந்துபோகிறோம் . என்னை விட யசோதைக்கு இவை இன்னும் அதிகம்; அவளை விட , கோபர்களுக்கும், அவர்களைவிட கோபிகைகளுக்கும் ,கிருஷ்ணனின் நினைவு மிக மிக அதிகம். எங்களுடைய பாக்யத்தால் அவனைப் புத்ரனாகப் பெற்றோம். அஹோ பாக்யம்……நந்தகோபர், தேவகி, கோகுலவாசிகள், முக்யமாக கோபிகைகள் மிகவும் பாக்யம் செய்தவர்கள். கிருஷ்ணனைப் பற்றி, கர்க்கர் முன்னமேயே எங்களிடம் சொல்லி இருக்கிறார். கம்ஸனைக் கொன்றும், சாணூர முஷ்டிகனைக் கொன்றும் , குவலயாபீடம் என்கிற யானையைக் கொன்றும், பெரிய தனுஸ்ஸை வளைத்து ஒடித்தும், துஷ்டர்களை ஒழித்தும்
மஹா பாவனமான செயல்களைச் செய்து இருக்கிறான். அவனை நாங்கள் என்றும் மனத்தில் நினைத்து இருக்கிறோம். ……..”

இவ்விதமாகப் புலம்பி, உன்னிடம் பறிகொடுத்த மனம் புத்தி உடையவர்களாய், கண்ணீர் விட்டு இருவரும் அழுதார்கள். யசோதாவும் இதைப்போலவே பேசி, ப்ரேம சமுத்ரத்தில் மூழ்கிப் போனாள் .

இந்த அத்யற்புத பிரேமையில் , உத்தவர் , அவரும் மூழ்கிப் போனார். பிறகு , சுதாரித்துக் கொண்டு பேசினார்.

ஹே…நந்தகோப….ஹே யசோதா …..நீங்கள் மிகவும் பாக்யசாலிகள்…..கிருஷ்ணனும் பலராமனும் புராண புருஷர்கள்; எவரிடம் ஜீவன்கள் தங்கள் ப்ராண வியோக காலத்திலே ஒரு க்ஷணம் தங்கி, அவரால் அணைக்கப்பட்டு, விசுத்தமான க்ஜானத்தால் அவரையே நினைத்து, வழிபட்டு, மனம் அடக்கப்பட்டு, அவரால் ,எல்லா கர்ம பந்தங்களும் அழிக்கப்பட்டு, அவருடைய திருவடிகளை அடைகிறார்களோ, அப்பேர்ப்பட்ட ஸ்ரீ நாராயணனாகிய ஸ்ரீ கிருஷ்ணன் உங்கள் புத்ரராக அவதரித்து இருக்கிறார். நீங்கள் மகாத்மாக்கள்;புண்யசாலிகள். கூடிய சீக்ரத்தில் அவர் உங்களைக் காண இங்கு வருவார். ,அதை என்னிடம் சொல்லி அனுப்பி இருக்கிறார். அவரை உங்கள் புத்ரன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்; ஆனால் அவர் பகவான்; எல்லாருக்கும் அவர் ஆத்மா; எது உங்களால் பார்க்கப் படுகிறதோ, எது கேட்கப்படுகிறதோ, எது முந்தி இருந்ததோ, எது பிற்பாடு உண்டாகிறதோ, எது சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறதோ, எது மஹத்தாக இருக்கிறதோ, எல்லாம் அந்த ஸ்ரீ கிருஷ்ணனின் ஸ்வரூபம் ஆகும். அவர் பரமாத்மா; அவரை விட்டு யாரும் வாழமுடியாது. அவரை நீங்கள் பரப் ப்ரமமமாக அறிய வேண்டும் ….. இப்படிப்பேசிக்கொண்டே இரவைக் கழித்தனர்.

மறுநாள் விடியல் வேளைக்கு முன்பே கோபிகைகள் எழுந்து விளக்கேற்றி, தேவதைகளைப் பூஜித்துத் தயிர் கடைந்தனர். தீபத்தைப் போலப் பிரகாசிக்கும் முகத்தை உடையவர்கள்; காது, கை, கால், இடுப்பு, புஜம், இவைகளில் ஆபரணங்களைப் பூட்டி அதி ஸுந்தர தேவதைகளாய், தயிர்ப் பானையின் முன்பு உட்கார்ந்து , காது குண்டலங்கள் அசைய, இடுப்பு அசைந்து ஆட, ஹாரங்கள் அங்குமிங்கும் போய்வர, ஸ்ரீ கிருஷ்ணனைப் பற்றிய அற்புதமான பாடல் களைப் பாடிக்கொண்டு, தயிர் கடையும் சப்தமும் , இவர்களுடைய பாட்டின் சப்தமும் ஒன்று சேர்ந்து நான்கு திக்குகளிலும் பரவ , இவற்றை அந்த விடியற்கால வேளையில் உத்தவர் கேட்டார்.

பொழுது நன்கு விடிந்து,சூர்யன் உதயமானான். அப்போது நந்தகோபன் வீட்டு வாசலில் அற்புதமான ரதம் ஒன்று நிற்கக் கண்ட கோபிகைகள், …..” இந்த ரதம் யாருடையது…..அக்ரூரர் வந்திருக்கிறாரோ….கம்ஸனின் வேலைக்காரன் யாராவது வந்து இருக்கிறார்களா ….இந்த அக்ரூரர் இன்னும் என்ன செய்யப்போகிறாரோ?….நம்முடைய ஆவிகளை, அந்தக் கம்ஸனின் உயிர் இழந்த தேகத்துக்கு, பிரேதபலி கொடுக்க இங்கு வந்திருக்கிறாரா …?… என்று பலவாறு பேசிக்கொண்டு இருக்கும்போது, காலைக்கடன்களை யமுனை நதியில் முடித்துவிட்டு ,உத்தவர் , வசுதேவர் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். உத்தவர் கோபிகைகளைப் பார்த்தார். அவர்களும் இவரைப் பார்த்தனர்.

46 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்
.
தசமஸ்கந்தம் …. அத்யாயம் 47
—————————— ————

கோபிகைகள், உத்தவர் ஸம்வாதம்…….ப்ரமர கீதம்
—————————-
ஹே…கிருஷ்ணா ….உன் சரிதத்தைச் சொல்லச் சொல்ல அடியேன் கோகுலத்தில் இருப்பதாகவே நினைக்கிறேன்

ஸ்ரீ சுகர் , மேலும், பரீக்ஷித் ராஜனுக்குக் கூறுவதை இப்போது சொல்கிறேன்
கோபிகைகள், உத்தவரைப் பார்த்தார்கள்……பார்த்தவு டனே , இவர்உன்னுடைய வாத்சல்யத்தைப் பெற்றவர் என்று புரிந்துகொண்டார்கள். இவரைப் பார்த்துக் கொண்டே உன்னைத் (கிருஷ்ண) த்யானம் செய்தார்கள். பழைய சம்பவங்களும் , உன்னுடன் பேச்சுக்களும் நினைவில் அலை அலையாக அவர்கள் மனத்தில் எழுந்தன. அப்போதுதான் மலர்ந்ததைப் போன்ற முகவிலாசம்; பளபளப்பான கன்னங்கள்; காதுகளில் ஒளிவிடும் ஸ்வர்ண குண்டலங்கள் ; புன்னகை தவழும் அரவிந்த முகம்; இடையில் பட்டுப்பீதாம்பரம்;

“” இவர் யார் ? இவரைப் பார்த்தால், இவருடன் பேசவேண்டுமென்று தோன்றுகிறதே ! இதற்கு முன்பு இவரைப் பார்த்த்ததில்லையே யாருடைய குமாரர் இவர், எதற்காக இங்கு வந்திருக்கிறார் ? …….”” என்று மனத்தில் நினைத்துக் கொண்டே , அவரைச் சுற்றி நின்றுகொண்டனர். இவர் உனக்குப் பிரியமானவராக இருக்கக்கூடும்.
உன்னால் எங்களிடம் அனுப்பப்பட்டவராக இருக்கவேண்டும் என்று உத்சாகத்துடன் , வெட்கம் மரியாதை இரண்டும் கலந்து, புன்சிரிப்புடன்,ரஹஸ்யமாக உன்னுடைய வ்ருத்தாந்தங்களை அறிய விருப்பம் கொண்டவர்களாக, ” ரமாபதியிடமிருந்து என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறீர்கள்….” என்று கேட்டார்கள்.

கோபிகைகள் கூறுகிறார்கள்;–நீர், ஸ்ரீ கிருஷ்ணனுடைய பார்ஷதன் என்று நினைக்கிறோம்; அவர் இங்கு உம்மை அனுப்பி இருப்பதாக நினைக்கிறோம். மாதா பிதாக்களின் க்ஷேமத்தை அறிந்துகொள்ள அனுப்பி இருக்கிறாரா ?இந்த வ்ரஜ பூமியில் அவருக்கு ஆக வேண்டிய கார்யம் என்ன இருக்கிறது ?ஸ்நேஹம், பந்தம், பாசம், இவை
அபலைகளிடம் போலி அன்பு செலுத்தி, கார்யம் முடிந்ததும் நட்டாற்றில் விடுவார்களே இது எதைப்போல என்றால்——-தேனீக்கள் மலர்களைச் சுற்றி சுற்றி வந்து தேனைக் க்ரஹித்து விட்டு மலர்களைத் த்வம்சம் செய்வதைப்போல, கணிகா ( தாஸீ ) பணத்தைப் பிடுங்கி விட்டுக் கள்ள புருஷனை விடுவதைப் போல, படிக்கும் சிஷ்யர்கள், வித்யயைக் கற்ற பின்பு , ஆசார்யனைக் கைவிடுவதைப் போல, யாகம் முடிந்ததும், ருத் விக்குகளுக்கு தக்ஷிணை கொடுத்து அனுப்பிவிடுவதைப்போல,
நிறைய, பழங்கள் இவற்றை உண்டுவிட்டு, அவை இல்லாதபோது மரங்களைவிட்டு ஓடும் பக்ஷிகளைப் போல, வேற்று மனுஷன் தன் கார்யம் முடிந்ததும் க்ருஹத்தைக் காலி செய்யும்படி சொல்வதைப்போல, காட்டில் வசதியாக வசிக்கும் மிருகங்கள், காடு எரிந்து போனால், இனி இந்தக்காடு உதவாது என்று வேறு இடம் செல்வதைப்போல, கள்ள புருஷன் ஸ்திரீயிடம் சம்போகம் செய்துவிட்டு ஓடுகிறானே ,…இவற்றைப்போல எங்களிடம் ஸ்நேகமாக இருந்தவர்கள் போய்விட்டார்களா ?

இப்படியெல்லாம், கோபிகைகள் உன்னை மனத்தில் வைத்துக்கொண்டு, உத்தவரை, லஜ்ஜையை விட்டு, மனம்விட்டுக் கேட்டார்கள். இவர்கள் புண்யவதிகள்;
உன்னுடைய கிஷோர பால்ய அவஸ்தைகளில் நீ செய்த ஒவ்வொரு கார்யத்தையும், ஒவ்வொரு பேச்சையும், ,பிடித்த சம்பவங்களைச்சொல்லி மிக ஆனந்தத்தையும், பிடிக்காதவற்றைச் சொல்லி, மிகவும் அழுதும் உன்னுடைய ஒவ்வொரு செய்கையையும் அவேயடம் சொன்னார்கள்.

அந்த சமயத்தில், ஒரு தேன்வண்டு அவர்களிடையே பறந்து வந்தது. அந்த வண்டை, உன்னுடைய சங்கமமானதாக நினைத்து, அந்த வண்டுடன் பேசத் தொடங்கினார்கள்
( ஹே……கிருஷ்ணா…..கோபிகைகளி ன் ,அந்தப் பரிபூரண வேளையில் , அடியேன் அந்த வண்டாகவாவது இருந்திருக்கக் கூடாதா அது அசேதனம்தான் ; ஆனால், அந்த அசேதனம் அன்று செய்திருந்த பாக்யம், அடியேனுக்குக் கிடைக்க வில்லையே . உத்தவர் அளவுக்கு உயர முடியாதுதான் உன்னதமான வண்டாகவாவது இருந்திருக்கக்கூடாதா )-

கோபிகைகளின் ப்ரமர கீதம்
———————–

ஹே…தேன் வண்டே….உன் கார்யம் முடிந்துவிட்டதல்லவா….என்னி டம் வராதே…..என்னைத் தொடாதே….ஓடிப்போ….நீ ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மிக வேண்டியவன்…..எனக்குத் துரோகம் செய்பவன்… மீசை போன்ற உன் அவயவத்தாலே —-ஸ்ரீ கிருஷ்ண ஸ்நேஹம் என்கிறதேனைப் பருகி அதில் நனைந்து, சொட்டிக் கொண்டு இருக்கிற மீசை என்கிற அவயவம்—– எங்கள் பாதத்தையோ, குசகவசங்களையோ, அந்தரங்க அங்கங்களையோ தொடாதே…..ஓடிப்போ ….விரஹ தாபத்தால், கொதித்துப் போய், அதனாலுண்டான கண்ணீரே , எங்கள் ஸ்தனத்தின் மேலுள்ள குங்குமப் பூச்சுக்களை அழித்துள்ளது…..நீயும் சேர்ந்து அதனை மேலும் அழிக்காதே….இந்தப் பூச்சுக்கள் எதற்குத் தெரியுமா….ஸ்ரீ க்ருஷ்ணனுக்காகவே உள்ளவை…நாங்கள் மானஸ்தர்கள்….எங்களுக்கு அது ஸ்ரீ கிருஷ்ண பிரசாதம்….நீ, அவருடைய தூதனாக இருக்கலாம்….அதனால், அவரைப்போல, கார்யம் முடிகிறவரை அன்பு——-பிறகு உதாசீனம்—–என்று இருக்கக்கூடாது ……..எங்கள் காதுகளின் அருகில் பறந்து வந்து கிருஷ்ண கீதம் பாடுகிறாய்…..இதனால் என்ன நன்மை….நாங்கள் பேதைகள்…எங்களைவிட்டுப் போனவர், போனவர்தானே…. .ஸ்ரீ கிருஷ்ணன், எங்களை நன்கு அனுபவித்தார்;ஸுதா—-மதுர அதர பானம்—–எங்களிடமுள்ள அதி மோஹத்தால், அவருடைய அதர பானத்தை எங்களுக்கு அளித்தார்……நீ, எப்படி, புஷ்பங்களிளிருந்து தேனை உறிஞ்சி, நன்கு சாப்பிட்டு, பின்பு அவற்றை உதறித் தள்ளுவாயோ, —–அதைப்போல கிருஷ்ணன்—-எங்களை அனுபவித்து விட்டு , எங்களைத் திரஸ்கரித்து விட்டு, ஓடிவிட்டார்…..அப்படிப்பட்ட, பொய்யான புருஷனை —அவருடைய பாதபத்மங்களை—–பூஜை செய்கிறாளே –அவள் எந்தவிதமாக பூஜை செய்கிறாள் —சுஸ்ருக்ஷை செய்கிறாள்….நீயே சொல் ( இங்கு …இந்தச் சொல் ஸ்ரீ மஹாலக்ஷ்மி அல்லது ராதையைக் குறிக்கும் என்பர் வியாக்யானகர்த்தாக்கள் )
எதனால் அவரைவிட்டு, அரைக்ஷணமும் பிரியாமல், அவரைப்போல இல்லாமல், அவரையே எப்போதும் பஜித்துக்கொண்டு இருக்கிறாளே….என்ன காரணம்…..ஹே…வண்டே அந்த ஸ்திரீ ரத்னம் அவரால் மோஹிக்கப்பட்டு, அவருடைய தேன் பேச்சுக்களால் ஏமாந்துபோய், தன்னுடைய மனத்தை அவரிடம் சமர்ப்பித்து இருக்கிறாள்.
ஹே…வண்டே….. யதிக்களுக்கு அதிபதியாயும், புராண புருஷராகவும் உள்ள மகாப்ரபுவை, வனத்தில் வீடு இல்லாத இந்த அபலைகளிடம் என் புகழ்கிறாய்…..எங்களை விட்டு, எங்களைவிட சாமர்த்தியமுள்ள அதிர்ஷ்டமுள்ள, காமக்கலையில் தேர்ந்த , கிருஷ்ணனை விலைக்கு வாங்கி அடிமையைப் போல் வைத்து இருக்கிற பெண்களிடம் சென்று ,அவரைப் பற்றிய புகழைப் பாடு…..அதனால் அவர்கள் உனக்கு வெகுமதிகள் கொடுப்பார்கள்…….அவரை நேரில் அடைந்ததைப் போலச் சந்தோஷம் அடைவார்கள்……..

சரி…..இந்தப் பூமி இருக்கட்டும்……ரசதலாதி லோகங்கள் என்று சொல்லப்படுகிற , ஸ்வர்க்கம் பாதாளம் என்று லோகங்கள் சொல்லப்படுகிற இடங்களில் வசிக்கும் பெண்கள், திட சித்தமுள்ள பெண்கள், கபடதாரியான…..மதுரமாகப் பேசிப் புன்முறுவலுடன் ஏமாற்றுகிற அவரிடம் அடிமை ஆனார்கள்…..எங்களை, ஜடபொம்மைகளைப் போல் நினைத்து, அலக்ஷ்யம் செய்து எங்களிடம் வருவதில்லை……ஆனாலும், நாங்கள் உன் மூலமாகத் தூது அனுப்பியதாகச் சொல்வாய்…..உனது பாததூளிகளை எந்த ஸ்ரீ மஹாலக்ஷ்மி சதா வகிக்கிறாளோ, அந்த ரஜஸ் சை எங்கள் தலைமேல் வைத்து, அவரையே எப்போதும் நினைத்து இருக்கிறோம் என்று சொல்வாய்…..

ஹே….வண்டே…. எங்கள் பாதங்களை விட்டு அப்பால் செல்…..எங்கள் தலைமீது உட்காருகிறாயே….. அகன்று செல்…..இனிய மொழிகளாலும், அதற்கு ஏற்ற ஜாடைகளாலும் ஸ்திரீகளை வசீகரிப்பதில் வல்லவரான அவரிடமிருந்து, இவற்றைக் கற்றுக் கொண்டாயா…. அந்தப் பிரபு எங்களை இந்த இடத்தில் நட்டாற்றில் விட்டுவிட்டார்……அவருக்காக, எங்கள் குழந்தைகள், பதி, சுகம், நல்ல வாழ்க்கை, பரலோகம் எல்லாவற்றையும் தாகம் செய்தோம்……அவர், சபல சித்தம் உள்ளவர்……எங்களைச் சிறிதும் நினைப்பதில்லை…..இப்படி எங்களை மாத்திரம் ஏமாற்றினாரா…..இல்லை…. முந்தின அவதாரத்தில், மறைந்து நின்று, யுத்த தர்மங்களை மீறி பாணத்தால் வாலியை அடித்துக் கொன்றார்…..அவர் வறண்டு போன நெஞ்சம் உள்ளவர்……..இன்னும் சொல்கிறோம், கேள், ஒரு ஸ்திரீ அவரை விரும்பி அவரிடம் வந்தபோது , மூக்கு அறுபட்டுப் போனாள்….. இன்னும் கேள்….இன்னொரு அவதாரத்தில், குள்ளனாக வந்து, என் கால் அடியால் மூன்று அடி மண் தா என்று மகாபலிச் சக்ரவர்த்தியைக் கேட்டு, வரம் பெற்றுக் கொண்டதும், பெரிதாக வளர்ந்து, இரண்டு அடிகளால் மூன்று உலகங்களையும் அளந்து, மூன்றாவது அடிக்குப் பதிலாக,
ஒரு காக்கை, தனக்கு உதவிய பக்ஷியைக் கட்டி இழுப்பதைப் போல, ( இது ஒரு கதை——-ஒரு காக்கை, ஆந்தைகளைக் கொல்வதற்காக, அடிபட்டதுபோலக் கபடமாக நடித்து, ஆந்தைகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி, பகல் நேரத்தில் கண்தெரியாத ஆந்தைகளை, மற்ற காகங்களுடன் ஏமாற்றிக் கொன்றது ——அதைப் போல இல்லாவிடில் இன்னொரு கதை— கூட்டில் உள்ள ,தன் குஞ்சுகளைக் காப்பாற்ற, தனக்கு ஆகாரம் கொடுத்த மனுஷ்யனையே தன் இனத்தோடு சேர்ந்து தாக்கியது—-)
மகாபலிச் சக்ரவர்த்தியையே கட்டி இழுத்தார்

மனஸ் சிலும் வெளியேயும் கருப்பாக உள்ள மனிதர்களுடன் ஸ்நேஹம் வைத்துக் கொள்வது ஆபத்து…… இருந்தாலும், அவரையே நினைத்து, அவருடைய லீலைகளைக் கேட்டு, அம்ருதம் என்று அதைப் பருகினோம்…..அதனால் என்ன பலன்…..அவருக்கு ஒரு தர்மம், எங்களுக்கு ஒரு தர்மம்…..இதனால் நாங்கள் கெட்டோம்……அவருடைய கதைகளை எங்களிடம் சொல்லாதே….வண்டே …போய்விடு……

அப்படி என்ன த்யாகம் செய்துவிட்டோம் அவருக்காக என்கிறாயா…..அவரையே நம்பி, சஹ பரிவாரம், குடும்பம் குழந்தை வீடு எல்லாவற்றையும் விட்டோம்…..
சுகத்தை இழந்தோம்…..தீனர்கள் ஆகிவிட்டோம்….பிக்ஷுக்களைப் போலத் திரிகிறோம்…..அவருடைய கதாம்ருதத்தைக்கேட்டு, அவரிடம் பரம விசுவாசம் வைத்து,
ஏமாந்து போகிறோம்…..ஒரு பெண்மான், கருமை நிறமான தன் பதி ஆண் மானிடம் சேர விரும்பி ஓடிவரும்போது, ஒரு வேடன் சங்கீதத்தை இசைக்கிறான்; பெண்மான் அந்த கீதத்தைக் கேட்டு நிற்கிறது; ஆண்மானும் நிற்கிறது; அந்தச் சமயத்தில் அந்த வேடன், எப்படி மான்களைச் சிறைப்படுத்திவிடுவானோ —-அதைப் போல , அபலைகளான நாங்கள், அவருடைய ஸ்பர்ச சுகத்தால், கண்ஜாடைகள் மயக்குப் பேச்சுக்களால், அவை உண்மை—சாஸ்வதம் என்று நம்பி ஏமாந்து விட்டோம்…..
ஆகவே….ஹே….வண்டே….ஸ்ரீ கிருஷ்ண கதாம்ருதங்களைத் தவிர வேறு விஷயங்களைச் சொல்……
ஹே…. சஹா….. எங்கள் பிரியா சஹாவாகிய கிருஷ்ணன் , குருகுல வாஸம் முடிந்து வீட்டுக்கு வந்து விட்டாரா…..அவர், உன்னை, எங்களிடம் தூது செல்லும்படி
அனுப்பினாரா ……அப்படியானால், எங்களிடமிருந்து எந்த வரம் வேண்டினாலும் தருகிறோம் …பெற்றுக் கொள்…அவருடைய தூதுவராக வந்த படியால், உனக்கு மரியாதை செலுத்தப்பட வேண்டும்…..ஸ்ரீ மகாலக்ஷ்மியின் பதியான அவரிடம், அவளைப்போல ஆசை உள்ள எங்களை, அவரிடம் அழைத்துச் செல்வாயா…..

இப்போது , நீ, சொல்வாய்…..நாங்கள் அவருடைய அந்தரங்கப் பிரியர்கள்…..உண்மையைச் சொல்வாயாக…..அவர் மதுராபுரியில் தான் இருக்கிறாரா….வெளி ஊருக்குச் சென்று இருக்கிறாரா…சொந்தத் தாயார், தகப்பனார், மற்றும் கோபாலகர்களைப் பார்க்க இங்கு வருவாரா….. எப்போதாவது , வேலைக்காரர்களிடமாவது , எங்களைப் பற்றிப் பேசி இருக்கிறாரா….என்றைக்காவது இங்கே வந்து, அதி சுகந்தமான கரங்களை, எங்கள் தலை மீது வைத்து, ஆசீர்வதிப்பாரா….
என்றெல்லாம், பித்துப் பிடித்தவர்களைப் போலப் பிதற்றினார்கள்.
ஹே…..கிருஷ்ணா…..கோபிகைகள் எவ்வளவு சாமர்த்தியமாக உன்னிடம் உள்ள சர்வ பரித்யாகத்தை மறைத்துப் பேசினாலும், உன்னை வைவதைப்போலப் புகழ்ந்தார்கள். உன் பிரபாவங்களை நாவாரச் சொல்லி, பூரணப் பிர யோஜனத்தை அடைந்தார்கள். உன்னுடைய அந்தரங்கர்கள்—நாரதர், விதுரர் உத்தவர் —-மூவருமே மிகவும் ஆச்சர்யப் படும்படி உன்னிடமுள்ள, தங்கள்காதலை , லஜ்ஜையை விட்டு வெளிப்படுத்தினார்கள். அவர்களை எல்லாம் அடியேனுக்கும் அப்படிப்பட்ட அனுபவத்தை அளிக்கும்படிவேண்டி ஆயிரமாயிரம் அவர்களை நமஸ்கரிக்கிறேன் )

உத்தவர் , கோபிகைகளின் இடையறாத பக்தியை, ஆழமான காதலைப் பார்த்து , ஆச்சர்யத்தில் மெய்மறந்து போனார். அவர்களிடம், தான் எதற்காக உன்னால் இங்கு அனுப்பப்பட்டாரோ அந்த சங்கேத வார்த்தைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

அஹோ ஆச்சர்யம்….அன்பு, பக்தி என்பதற்குப் பூர்ண அர்த்தம் உங்களிடமிருந்து இன்று தெரிந்து கொண்டேன்….பகவான் கிருஷ்ணனிடத்தில், இத்தனை ஆழமானதும், இடைவெளி இல்லாததுமான அன்பை —-அவரைவிட்டுப் பிரிந்து இருக்கும்போதும், அவரையே சதா நினைத்து, நினைத்து பக்தி செலுத்துகிறீர்களே, அவரிடம் அவ்வளவு விரைவாகப் பக்தி செலுத்த முடியாது…..அதற்காகத் தானம், வ்ரதம், தபஸ், ஹோமம், ஜபம் ,ஸ்வாத்யாயம் இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும்.

( இச்சமயத்தில் ஸ்ரீ சுகப்ரம்மம் , மனத்தை அடக்கி, உன்னையே நினைத்து, நினைத்து, புளகாங்கிதம் அடைந்ததாக , உத்தவர் சொல்கிறார் )

நந்தன் யசோதை போன்றவர்கள், தங்களையே த்யாகம் செய்து , கிருஷ்ணனின் பரம சுகத்துக்காகவே பாடுபட்டிருக்கிறார்கள். எந்த பக்தியைப் போதிக்கிறார்களோ, அனுஷ்டிக்கிறார்களோ, அந்த முநிஸ்ரேஷ்டர்களுக்கும் கிருஷ்ண தர்சனம் துர்லபமாக ஆகி விடுகிறது. அவர்களாலும் சாதிக்க முடிகிறதில்லை. ஆனால், இந்த கிருஷ்ண பக்தியை அடைய….கிருஷ்ண தர்சனம் செய்ய, உங்களுடைய அசாதாரண லௌகிக புத்தியால், புத்ரர், பதி, ஸ்வஜனங்கள், பந்து மித்ரர்கள், வீடுகள் எல்லாவற்றையும் விட்டு, எல்லாவற்றையும் த்ருணமாக ஒதுக்கி, காட்டிலும், மலை அடிவாரத்திலும் , மகத்தான தாகத்தால் அடையப் பெற்றது ஆச்சர்யம்—-மஹா ஆச்சர்யம். சர்வாத்ம பாவத்தினால், உங்களால் கிருஷ்ண பக்தி அப்யசிக்கப்பட்டு, நாமம். ஸ்தோத்ரம், பிரிவால் அழுகை, சேர்ந்து இருக்கும் காலத்தில், பிரியப் போகிறாரே என்கிற பயம், நாம் கர்வம் கொண்டோம், அதனால் பிரிந்து விடுவாரோ என்கிற ஐயம் , முழ அளவில் மஹா அந்தரங்கப் ப்ரியம், பிரியும்போது விரஹ தாபம், அஹா….அஹா… கிருஷ்ண சம்பத் உள்ளவர்கள் நீங்களே……மகான்களின் கிருபையாலே கிருஷ்ண அனுக்ரஹத்தாலே , இந்த சந்திப்பு அடியேனுக்குக் கிடைத்து இருக்கிறது. உங்களுக்குக் கொடி நமஸ்காரங்கள். உங்களுக்காகத்தான் பகவானால் அனுப்பப்பட்டுள்ளேன். உங்களுக்கு என்று ,அவர்,என் மூலமாக அனுப்பி உள்ள, சங்கேதமான—ப்ரியமான வசனங்களை , இப்போது உங்களுக்குச் சொல்கிறேன் சர்வ மங்களங்களும், . அனைத்துக் கல்யாண குணங்களும் உள்ளவர்களே…..நான் ரஹஸ்யமாக , இதற்காகவே கிருஷ்ணனால் உங்களிடம் அனுப்பப்பட்டேன். அவரால் சொல்லப்பட்டு எதனைச் சுமந்து கொண்டு இங்கு உங்களைச் சந்திக்க வந்தேனோ, அந்த ஸ்ரீ கிருஷ்ண வசனங்களைக் கேளுங்கள்……கிருஷ்ண பக்தனை சமாதானம் செய்வது, கிருஷ்ணனின் வசனங்களே……மனித யத்னத்தால் முடியாத செயல். அந்த ஸ்ரீ க்ருஷ்ண வசனங்களைக் கேளுங்கள்.

உங்களுக்கும் எனக்கும் ஏற்ப்பட்டு இருக்கிற பந்தம்—-ச்நேஹம்—–எப்போது ம் அறுக்கவோ அழிக்கவோ இயலாதது—–அப்ராக்ருத மானது—-எப்படி ஐந்து பூதங்களும், எல்லாப் பிராணிகளிடமும் எப்போதும் இருக்கின்றனவோ, அப்படி , நானே எல்லாருடைய மனத்திலும், பிராணனிலும் ஊடுருவி இருக்கிறேன். உள் இருந்து நியமிக்கிறேன் என்னைவிட்டு, ச்வதந்த்ரமாக, எக்காலத்திலும், எந்த அவஸ்தையிலும், ஒரு வஸ்துவும் இருக்க முடியாது. அதனால், நீங்கள் எப்போதும் என்னைத் த்யானம் செய்யுங்கள்—-எல்லா சாஸ்திரங்களும், வேதங்களும், கடைசியாக என்னை அடைவதற்கே உபதேசிக்கின்றன….. உங்கள் மனத்தை அடக்கி, மனஸ், புத்தி இரண்டையும் என்னிடம் சமர்ப்பியுங்கள்..நாம் சதா சர்வகாலமும் உங்களையே நினைத்துக் கொண்டு இருக்கிறேன். ( நீ, அர்ஜுனனுக்கு, ரதம் ஓட்டும்போதும் கோபிகைகள் நினைவாகவே இருந்தாயாமே….என்ன ஆச்சர்யம்…..)உங்கள் மனமும் என் மனமும் சேர்ந்து இருப்பதால், ..உங்களை விட்டுப் பிரிந்து இருத்தல்…எங்கோ பிரிதல் என்கிற வ்ய்வச்தையோ, தூரமோ இல்லை….உங்கள் மனதை என்னிடம் அர்ப்பணியுங்கள்….இப்படி, என்னையே எப்போதும் ச்மரிப்பதால், முடிவில் என்னையே வந்து அடைவீர்கள்….ராசக் க்ரீடையில், வனத்துக்கு வரமுடியாமல் தங்கிவிட்ட கோபிகைகளும் என் நினைவாகவே இருந்ததால், என்னையே மானசீகமாக அடைந்தார்கள்….

ஹே…கிருஷ்ணா….இவ்வார்த்தை களைக் கேட்ட கோபிகைகள், மஹா திருப்தியையும் சந்தோஷத்தையும் அடைந்தார்கலாமே….ஸ்ரீ சுகர் பரீக்ஷித் ராஜனுக்கு இதைச் சொன்னார். கோபிகைகள் , சந்தோஷ மனத்துடன் , உத்தவரைப் பார்த்து , உன்னிடம் தெரிவிப்பதற்காக சில சங்கேத வார்த்தைகளைச் சொன்னார்கள்…அவற்றை இப்போது உனக்கு நினைவு படுத்துகிறேன்.

யதுவம்ச விரோதியான கம்சன் அழிந்ததும், யது வம்சம் சௌக்கியம் அடைந்ததும், உம்முடைய தாயாரும் தந்தையும் மீண்டும் ஐஸ்வர்யங்களைப்பெற்று சந்தோஷமாக இருப்பதையும் கேள்வியுற்று, நாங்கள் மகிழ்கிறோம். என்று சில கோபஸ்த்ரீகள் சொன்னார்கள்; சிலர், நாங்கள் பிரபுவிடம் ப்ரீதியும் பக்தியும் கொண்டு இருப்பதைப்போல, மதுராபுரி ஸ்திரீகளும் இருக்கிறார்களா என்று உத்தவரைக்கேட்டார்கள். சிலர், ஹே….உத்தவரே….எங்கள் பிரபு ,ஸ்திரீகள் மத்தியில் இருக்கும்போது எங்கள் நினைவு வந்து எங்களைப் பற்றி ப்ரஸ்தாவம் செய்கிறாரா என்று கேட்டார்கள். சிலர், உத்தவரைப் பார்த்து, எங்கள் பிரபு, ராசலீலையில் ,இரவு நேரத்தில், பிருந்தாவனத்திலே கொலாக்கலாமாகச் செய்த லீலைகளை நினைக்கிறாரா என்று கேட்டார்கள். இன்னும் சிலர், அவர் எங்களுக்கு மறுபடியும் உயிர் ஊட்ட இங்கு வருவாரா என்று கேட்டார்கள். இன்னும் சிலர், அவர் இங்கு எதற்காக வரவேண்டும்……அவருக்கு ராஜ்ஜியம் கிடைத்துவிட்டது; பல ராஜ கன்னிகைகள் அவருக்கு மாலையிடக் காத்து இருக்கிறார்கள்; நாங்கள் வனத்தில் வசிக்கும், அநாகரீகமுள்ளவர்கள்; ஆனால் ஒன்று….எங்களால் அவரை ஒருக்காலும் மறக்க முடியவில்லை;
அந்தக் கிருஷ்ண ஆசை எங்களை வாட்டுகிறது; அவர் ஆசை தேவை இல்லை என்று சொல்லா யாருக்குத்தான் மனம் வரும்…..அதனால்தான், ஸ்ரீ தேவி அவரைவிட்டுப் பிரியமாட்டேன் என்கிறாள்; என்று சொன்னார்கள். இன்னும் சிலர், அவருடைய பேச்சுக்கள், புன்சிரிப்பு வதனம், புல்லாங்குழல் நாதம், எங்களைப் படாதபாடு படுத்துகின்றன…..அவரை எங்களால் மறக்க இயலாது…..ஹே நாத …..ஹே…ரமாநாத……ஹே…வ் ரஜ நாத…..ஹே…ஆர்த்தி நாசன……உம்மைவிட்டுப் பிரிந்த துக்க சாகரத்தில் மூழ்கிப் போன இந்த கோகுலவாசிகளை , எப்படி கோவர்த்தன கிரியைத் தூக்கி பசுக்களையும் எங்களையும் காப்பாற்றினீ ரோ, அதுபோல,இப்போதும் காப்பற்ற வேண்டும் என்று சொன்னார்கள்.
( ஹே….கிருஷ்ணா… உன்னிடம் பிரேமையுடன் இருப்பது எப்படி என்பதை அடியேனுக்கு உணர்த்திய , உனக்கு எப்போதும் ப்ரியமான ,அந்த கோபிகைகளை ஆயிரம் தடவை நமஸ்கரிக்கிறேன் )
கோபிகைகளுக்கு, விரஹ தாபம் அடங்கி, அவர்கள் உத்தவரைக் கொண்டாடி, அவரைப் பூஜித்து, அவரையே ,நீ— என்று பாவித்து, அவரை கோகுலத்திலேயே, இருக்கும்படி வேண்டினார்கள். அவரும், அவர்கள் விருப்பப்படி, உன்னுடைய கதாம்ருதத்தைப் பாடிக்கொண்டு, அங்குள்ள ஓடைகள், வனப் பிரதேசங்கள், மரங்கள் அவற்றில் பூத்துக் குலுங்கும் மலர்கள், அவை ஒவ்வொன்றும் உன்னுடைய சம்பந்தம் உண்டு என்பதை அறிந்து, அவைகளைப் பார்த்துப் பார்த்து கோபிகைகளுடன் பல மாதங்கள் கோகுலத்தில் கழித்தார்.
இப்படி உன்மத்த நிலைக்கு வந்த உத்தவர், கோபிகைகளின் பக்தியைப் புகழ்ந்து பாடினார்.

கோபிகைகளே….நீங்கள் தன்யர்கள்…..ஜன்மம் எடுத்த பலனைப் பூரணமாக அடைந்தீர்கள்….நீங்கள் , கோவிந்தனின் ப்ரிய பந்துக்கள்; ஆத்மா ஸ்ரீ கிருஷ்ணன் என்று இருக்கிறீர்கள்; இந்த அனுபவம், முனி ஸ்ரேஷ்டர்களுக்கு கிடைக்கவில்லை; நாங்களும் அதையே அடைய விரும்புகிறோம்; ப்ராம்மணனாகப் பிறந்து, காயத்ரீ
உபாஸநம் செய்து, தீக்ஷதர் போன்ற யோக்யதையை ஸம்ஸ்காரங்களால பெற்று, எந்தப் பலனும் இல்லை; கிருஷ்ண பக்தியே சிறந்த புருஷார்த்தம்; கோபிகைகள் ஜாதியில் ஸ்திரீகள்; சபல சித்தம் உள்ளவர்கள்; வனத்தில் சாப்பாட்டுக்காகத் திரிபவர்கள்; உங்களுக்கு கிருஷ்ண பக்தி ஏற்பட்டு இருக்கிறது; இது மிக ஆச்சர்யம்……பரமாத்வே மோக்ஷம் தருகிறான் என்று அறியாதவர்கள்; ஆனால், இந்த பகவத் பிரசாதம் இவர்களுக்குக் கிடைத்து இருக்கிறது; ராசோத்சவத்திலே, பகவானுடைய திருக்கரங்கள், இந்த கோபிகைகளின் தோள்களில் ,கட்டி அணைப்பது போல் இருந்தன; இந்த சுகத்தை கோபிகைகள்தான் அடைந்தார்கள்; நான், சதா, பகவானுடன் பழகுகிறேன், எனக்கு அந்த பாக்யம் கிட்டவில்லை; எனக்கு ஒரே ஒரு ஆசைதான்; இந்த பிருந்தாவனத்தில் , ஒரு புல்லாகவோ, செடியாகவோ, ஜன்மம் எடுத்து, எந்த முகுந்தனுடைய திருவடிகளை வணங்கிய கோபிகைகள், கிருஷ்ண பக்தி கொண்டவர்களாக இந்தக் காடுகளில் நடமாடினார்களோ ,அந்த– அவர்களுடைய, பாத தூளிகளை புல்லாகவும் செடியாகவும் கொடியாகவும் நான் ஸ்வீகரிக்க வேண்டும். பரிபூர்ண கிருஷ்ண பக்தியை ,கோபிகைகளின் பாத தூளியால் அடைய வேண்டும்.
உபநிஷத்துக்கள் சொல்லும் அந்த பரிபூர்ண ஆனந்தம், அன்று நடந்த ராசக் க்ரீடையிலே, கோபிகைகளுக்குக் கிடைத்தது; ஸ்ரீ மஹாலக்ஷ்மி பூஜிக்கும் பகவானின் பாதார விந்தங்கள், கோபிகைகளின் ஹ்ருதயத்தில் வைக்கப்பட்டு இருந்தது; இந்தப் பேரின்பம், ஸ்ரீ தேவிக்கு இல்லை; ப்ருஹ்மாவுக்கு இல்லை; மஹா யோஹீச்வரர்களான
சனகாதிகளுக்கும் கிட்டவில்லை; பரமசிவனுக்கும் கிட்டவில்லை; நாரதருக்கும் கிட்டவில்லை; அப்பேற்பட்ட, உத்தம நந்த வ்ரஜகோபஸ்த்ரீகளை அடிக்கடி நமஸ்கரித்து, அவர்கள் பாத தூளி என் தலையில் விழ்வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.
(ஹே…. கிருஷ்ணா…உத்தவர் செய்த பாக்யம் , பெரிது, பெரிது . அந்த உத்தமரை அடிக்கடி நமஸ்கரிக்கிறேன் )
ஸ்ரீ சுகர் மேலும் சொல்கிறார்

பிறகு, ஒருநாள், உத்தவர், நந்தகோபன் யசோதை, கோபிகைகள் முதலானவர்களிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு, மதுராபுரிக்கு, ஸ்ரீ கிருஷ்ணனாகிய உன்னிடம் வரத் தயாரானார். அப்போது நந்தகோப தம்பதியர் வெகுமதிகளை உன்னிடமும் பலராமனிடமும் கொடுக்கச் சொல்லி, உத்தவரிடம் கொடுத்து மிகவும் கலங்கின மனத்துடன், கண்களில் நீர் வழிய , சில வார்த்தைகள் சொன்னார்கள்
நாங்கள் ஸ்திர புத்தி இல்லாதவர்கள்; ஜீவ யாத்ரைக்காக பல கர்மாக்களைச் செய்துகொண்டு இருப்பவர்கள்; இப்போது எங்களுக்குப் பற்றுக்கோடு ஸ்ரீ கிருஷ்ணனே; எல்லாம் அவனுடைய ப்ரீதிக்காகவே செய்கிறோம்; மனம் வாக்கு, காயம் இந்த மூன்றாலும் ஸ்ரீ கிருஷ்ணனை ஆச்ரயித்து இருக்கிறோம்;
இப்படியெல்லாம் சொல்லி , உத்தவரை வழி அனுப்பி வைத்தார்கள்.
உத்தவர் , ரதத்தில் ஏறி, மதுராபுரி வந்து சேர்ந்தார். மகாத்மாவான உன்னையும், பலராமனையும் அடிக்கடி நமஸ்கரித்து, பக்தி முழுதும் நிறைந்த வ்ரஜவாசிகளின் கிருஷ்ண பக்தியைக் கூறி, அவர்களால் கொடுக்கப்பட்ட வெகுமதிகளை சமர்ப்பித்தார்

47 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்

ஸ்ரீ கிருஷ்ணன், சைரந்த்ரி வீட்டுக்கும், அக்ரூரர் வீட்டுக்கும் செல்லல். +
—————————— —–

நீ, சைரந்தரிக்குக் கொடுத்த வாக்குறுதியை நினவு கூர்ந்தாய். குவலயாபீடம், மல்லர்கள் வதம், கம்ச வதம் முடிந்த பிறகு அவள் வீட்டுக்கு
வருவதாகச் சொல்லி இருந்தாய். உத்தவருடன் அவள் வீட்டுக்குச் சென்றாய்.அவள் த்ரிவக்க்ரையாக இருந்து உன்னால் அதிரூப சுந்தரியாக அநுக்ரஹிக்கப்பட்டவள்
உன்னையும் உத்தவரையும் பார்த்ததும் அவளுக்கு சொல்லொணாத சந்தோஷம். உனக்கு ஆசனம் சமர்ப்பித்து, பூஜித்தாள், உத்தவரையும் பூஜித்தாள். . .
நீ, அங்கு இருந்த பெரிய கட்டிலில் அமர்ந்தாய். அவளுடைய வீடு அதி ஆச்சர்யமாக இருந்தது. முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட கொடிகள், தோரணங்கள் பல விதானங்கள், விதம் விதமான புஷ்பங்கள் இன்னும் பலவற்றால் நன்கு அலங்கரிக்கப்பட்டு இருந்தது.அவள், உன்னை, ஸ்நான அறைக்கு அழைத்துச் சென்று, தானே ஸ்நானம் செய்வித்து, ஆடை ஆபரணங்களால் உன்னை அலங்காரம் செய்து வாசனைப் பூச்சுக்களைப் பூசி, விசேஷ அன்னம் முதலியன சமர்ப்பித்து, உன் சந்தோஷத்தை நன்கு பலமடங்கு பெருக்கித் தானும் மிகவும் சந்தோஷக் கடலில் மிதந்து அவள் வேண்டிய வரத்தை ( உன்னைக் கணவனாக அடைவதை )அன்று இரவு அடைந்தாள் . உன்னை, அங்கேயே அவளுடனேயே இருக்கும்படி வேண்டினாள். அவளுக்கு அவள் வேண்டிய வரத்தை, சில நாட்கள் அங்கு தங்கி அவளை சந்தோஷப்படுத்தி பிறகு தன்னுடைய சொந்த க்ருஹம் திரும்பினாய்

பிறகு, பலராமன், உத்தவர் கூடவே வர , அக்ரூரர் இல்லத்துக்குச் சென்றாய். அக்ரூரர், வெகு சந்தோஷத்துடன், வரவேற்று, உபசரித்து, பலதடவை நமஸ்காரமிட்டு, உன் திருவடிகளை அலம்பி அந்த ஜலத்தைத் தலையில் ப்ரோக்ஷித்துக் கொண்டு, பணிவுடன் பேசினார். நீர் ஜகத் காரண புருஷர்; சர்வத்துக்கும் நீரே காரணம்; எல்லா ப்ரகிருதி வஸ்துக்களும் உமக்குச் சரீரம்; நீர் அவற்றுக்கு எல்லாம் ஆத்மா; பரமாத்மா; உம்முடைய சங்கல்பத்தால் சாது சம்ரக்ஷனத்துக்காக இவ்வுலகில் அவதரிக்கிறீர் ; இப்போது அதைப்போல, வசுதேவர் க்ருஹத்தில் உமது அம்சமான பலராமனுடன் அவதரித்து இருக்கிறீர்; இதனால் பூமியின் பாரம் குறையப் போகிறது; நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்ததால் நாங்கள் மிக பாக்யசாலிகள் ஆனோம்; உங்கள் நிஜ ஸ்வரூபம், யோகீச்வரர்கள், சூரேசர்கள், ருத்ரன், ப்ருஹ்மா இவர்களாலும் அறிய முடியாதது;

எங்களுடைய பிரார்த்தனை இதுதான் ;—-உமது பொருளாக ஆகும்படி அநுக்ரஹிப்பீராக;எங்களுக்கு உம்மிடமுள்ள கிருஷ்ண பக்தியை வ்ருத்தி செய்வீராக; மாயையாகிய ஆசைகள்—பிள்ளை, மனைவி, பந்துக்கள், வீடுகள் தேஹத்தில் அபிமானம், இவைகளை எங்களிடமிருந்து அழித்து, உம்மை –உம்முடைய பரம கதியை -அடைய அருள் செய்வீராக.

இப்படியெல்லாம் வேண்டி உத்தவர் முன்னிலையில், உன்னைப் பலமுறை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார். நீ, புன்சிரிப்புடன், சில வார்த்தைகளை அவரிடம் சொன்னாய். அக்ரூரரே……நீர் எங்களுக்குக் குரு…. பித்ருவைப் போல பந்து…….உம்முடைய பக்தி, ச்லாகிக்கத்தகுந்தது என்றாலும், நீர் மஹா பாக்யமுள்ள சாது…..
உங்களுக்கு என்று எந்தப் பற்றும் இல்லை……பிறர் கஷ்டங்களைப் போக்குகிறவர்……எங்களுக்குப் பரம சுஹ்ருத் …உம்மைப் போலவே பாண்டவர்கள் எங்களுக்குப் பரம சுஹ்ருத்தாகவும், பரம பந்துக்களாகவும் இருக்கிறார்கள்…..நீர், எங்களுக்காக அவர்களிடம் ஹஸ்தினாபுரம் செல்லவேண்டும்…. .பாண்டவர்களின் பிதாவான பாண்டு இறந்துபோனதாகவும், எங்கள் தகப்பனாரான வசுதேவரின் ஒன்றுவிட்ட சஹோதரியும் ,பாண்டவர்களின் தாயுமான குந்தியும் , இப்போது அரசனாகிவிட்ட
த்ருதராஷ்ட்ரனிடம் கஷ்டப்படுவதாகவும், பிள்ளையான துர்யோதனனின் கெட்ட போதனை அவன் மதியைக் கெடுப்பதாகவும், கேள்விப்படுகிறோம்…..
நீர், அங்கு சென்று த்ருத ராஷ்ட்ரன் குணம் எப்படி, பாண்டவர்கள் அவர்கள் தாயார் குந்தி இவர்களின் நிலை…இவைகளை அறிந்து வருவீராக…..பிறகு அவர்களுக்கு என்ன உசிதமோ அதைச் செய்வோம்…..என்றாய். பிறகு, பலராமன், உத்தவருடன் உன்னுடைய பவனத்துக்கு எழுந்தருளினாய்

48 வது அத்யாயம் நிறைவடைந்தது. ஸுபம்

தசம ஸ்கந்தம் .. அத்யாயம் 49
—————————————-

ஸ்ரீ அக்ரூரர் ,ஹஸ்தினாபுரம் சென்று வருதல்
————————————————-

ஹே….கிருஷ்ணா….. அக்ரூரர் உன்னுடைய கட்டளைப்படி, ஹஸ்தினாபுரம் புறப்பட்டார். அங்கு போய்ச் சேர்ந்து, அம்பிகை என்பவளின் புத்ரனான
த்ருதராஷ்ட் ரன் , பிதாமஹர் பீஷ்மர், அவர் தம்பி விதுரர், துரோணர், கிருபாச்சாரியர் , கர்ணன், சுயோதனன் அஸ்வத்தாமா, பாண்டவ புத்ரர்களான யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன், நகுலன், சஹாதேவன் இன்னும் பல சுஹ்ருத்துகள், ச்நேஹிதர்கள், இவர்களையெல்லாம் பார்த்துப் பேசினார். அவர்களும் உன்னுடையவும் பாலராமனுடையவும் க்ஷேம சமாசாரங்களைக் கேட்டு அறிந்து கொண்டனர்.
பிறகு , அக்ரூரர் , குந்தியையும் நேரில் போய்ப் பார்த்து க்ஷேமங்களை விசாரித்தார். பல மாதங்கள் ஹஸ்தினாபுரத்தில் தங்கினார். அப்போது த்ருத ராஷ்ட்ரன் தமக்கு என்று ஸ்வய புத்தி இல்லாதவனாகவும் , கெட்ட வர்களின் பேச்சைக் கேட்பவனாகவும், துர்யோதனன் மீது அதிக ப்ரியம் உள்ளவனாகனவும் ,அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றுபவனாகவும் ,பாண்டவர்கள் மீது வெறுப்பு உள்ளவனாகவும் இருப்பதை அறிந்து கொண்டார்
.குந்தியும் ,விதுரரும் பாண்டவர்களின் பெருமையையும்,அவர்களுடைய பலம் , தேஜஸ் ,யுத்த சாமர்த்யம் ,தன்னடக்கம் ,ஹஸ்தினாபுரவாசிகள் பாண்டவர் களிடம் காட்டும் அன்பையும் ,த்ருதராஷ்டரனும் அவன் பிள்ளை துர்யோதனன் ,அவன் மாமன் சகுனி பாண்டவர் களிடம் வெளிப்படுத்தும் விரோதத்தையும் துர்யோதனன் விஷம் கொடுத்து பீமனைக் கொல்ல முயற்சித்தது ஆகிய பல விஷயங்களை —-பல விருத்தாந்தங்களை உன்னிடம் சொல்லுமாறு அக்ரூரரைக் கேட்டுக் கொண்டார்கள்.
குந்தி,தன் ப்ராதாவான அக்ரூரரிடம் தான் மதுராபுரியில் வசுதேவர் தேவகியுடன் வசித்தது….போன்ற பழைய விஷயங்களைக் கண்ணீர் மல்கச் சொன்னாள் .
“”என் மருமான்கள் ,என்னுடைய ப்ராதா வசுதேவர் அவர் மனைவி தேவகி என் பால்ய சஹிமார்கள் எல்லாரையும் நான் க்ஷேம லாபங்களை விசாரித்ததாகச் சொல்லுங்கள்;கிருஷ்ணன் எல்லாருக்கும் சரண்யன் ;பக்தவத்சலன்;அவனிடமும்,பலராமனிடமும் , நான் பந்துக்களான ஓநாய் களின் நடுவே பெண்மானாக , வசிக்கும் கஷ்டங்களைச் சொல்லுங்கள் தகப்பனாரை
இழந்த பாண்டவர்களின் துர்க் கதியையும், தீனஸ்திதியையும் எடுத்துச் சொல்லுங்கள்.

ஹே கிருஷ்ண கிருஷ்ணா ம ஹாயோகின் , விஸ்வாத்மன் , நாங்கள் உம்மைச் சரணம் அடைந்து இருக்கிறோம்.ஹே கோவிந்த எங்களுக்கு வேறு புகல் இல்லை.ஹே முராரே ஹே வாசுதேவா ….உன்னை, உன் பல நாமங்களைச் சொல்லி ,உன்னைப் பலதடவை நமஸ்கரிக்கிறேன் ……ஹே யோகஸ் வரூபரே …உம்மைச் சரணமடைகிறேன் நீர்தான் ரக்ஷிக்க வேண்டும்
என்று புலம்பி,குந்தி தேவி உன்னை, மானசீகமாகச் சரணம் அடைந்தாள்

ஹே….கிருஷ்ணா……ஸ்ரீ சுகர் மேலும் பரீக்ஷித்திடம் சொல்கிறார் . ஹே பரீக்ஷித்.. துக்கத்தின் எல்லையை அடைந்த குந்திதேவியின் புலம்பலைக் கேட்ட அக்ரூரரும் விதுரரும் ,
தாங்களும் .துக்கப்பட்டு,ஒருவாறு தேறி குந்திக்கு ஆறுதல் சொல்லி திருத ராஷ்ட்ரன் சபைக்குச் சென்றார்கள் அந்தச் சபையில் ,த்ருத ராஷ்ட்ரன் , தன புத்ரனாகிய துர் யோதனனுக்கு அதிக வாத்சல்யம் காட்டுவதால் அவன் துர்போதனைப்படி நடப்பதால், விளையும் பக்ஷபாதங்களை ….பந்துக்களின் ஸ்நேஹத்தை முன்னிட்டு, ஸ்ரீ கிருஷ்ண பலராம வசனங்களை எடுத்து உரைத்தார். இது சந்தேசம் எனப்படுகிறது.

அக்ரூரரின் ஸ்ரீ கிருஷ்ண சந்தேசம்
——————————————–

“ஹே…..விசித்திர வீர்யரின் புத்ரரே……குரு வம்சத்துக்கு கீர்த்தியை மேலும் சேர்ப்பவரே ……
.உமது தம்பியான பாண்டு ராஜனின் மரணத்துக்குப் பிறகு ,
நீர் இந்த ராஜ்யத்தின் அரசராக ஆகி இருக்கிறீர். நீர் தர்மப்படி பிரஜைகளை நடத்தியும்
உம்மை நம்பி வாழும் பந்துக்களிடம் சரி சமமாக நடந்தும் உம்முடைய புத்ரர்கள்,
தம்பியின் புத்ரர்கள் இவர்களை சமமாக எண்ணி, ராஜ்ய பரிபாலனம் செய்தால்
உமது கீர்த்தி வளரும்……அப்படி இல்லாதுபோனால், உமது காலத்திலேயே
ஜனங்களின் நிந்தனைக்கு ஆளாவீர் . ……..இந்த உலகில் எல்லாப் பொருளுக்கும்
முடிவு உண்டு…….யாரும் எந்த வழியாலும் எல்லோருடனும்
சாஸ்வதமாக வாழமுடியாது……..ஒவ்வொரு ஜீவனும் தன் கர்மாக்களின்
பலன்களைத் தன்னந்தனியாகவே —சுக துக்கங்களை அனுபவிக்கிறது……
என் புத்ரர்கள் ,என் ஆஸ்திகள் , என்கிற அஹங்கார மமகார புத்தி வளர்ந்தால்,
அவை, அவனை மிகவும் நஷ்டப்பட வைத்துவிடும் அவனுக்குப்
பாபமும், கெட்டபெயரும் ஏற்பட்டு, ஐஸ்வர்த்தை எல்லாம் இழந்து,
புத்ரர்கள் இல்லாமல், நரகத்தை அடைவான்

மகாராஜரே …. இவ்வுலகத்தில், மனைவி மக்கள் , வீடு இவைகளை ஸ்வப்னம்…..
.மாயை என்று நினைத்து , புத்தியை அடக்கி, எல்லாரையும் சமமாக நினைத்து,
உத்தம கதியை அடைவீராக ”

இதற்கு திருத ராஷ்ட்ரன் என்ன பதில் சொன்னார் தெரியுமா……
.ஸ்ரீ சுகர் , பரீக்ஷித்துக்குச் சொல்கிறார்

தானம் முதலிய சூக்ஷ்மத்தை அறிந்த மஹானே …..
உங்களால் எல்லாருக்கும் மங்களத்தைத் தரும் சுபமான வார்த்தைகள் சொல்லப்பட்டன…..
.ஆனால், இம்மாதிரி வார்த்தைகளால், எனக்குத் திருப்தி ஏற்படவில்லை…….
அடிக்கடி இப்படி ஹிதோபதேசம் கேட்ட போதிலும் என்மனம் அடங்க மறுக்கிறது……
.காரணம், என்புத்ரர்களிடம் அதிகப் பாசமாக இருப்பதால்…….!!.

மின்னல் மின்னி உடனே மறைவதைப்போல, நல்ல எண்ணங்கள் தோன்றி,
உடனே மறைந்து விடுகின்றன……பகவான் விதித்த விதியை மீறி என்ன செய்யமுடியும்….?.
அந்தப் பிரபு ஸ்ரீ கிருஷ்ணர் யாவராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியாதபடி,
அனந்தமான பெருமை பெற்றவர்……….அவருடைய சங்கல்பத்தால்,
உலகங்கள் ஸ்ருஷ்டிக்கப்படுகின்றன…..மாயையின் முக்குணங்களால்,
எல்லாவற்றையும் செயற்படுத்துகிறார்……எல்லா வஸ்துக்களிலும்
அந்தராத்மாவாக இருக்கிறார்…….கர்மாவினால் வரும் .புண்ய பாபங்களுக்கு ஏற்றபடி,
பலன்களைக் கொடுக்கிறார்……இவை, அவருக்கு லீலை…….

இவ்வாறு, த்ருத ராஷ்டரனின் அபிப்ராயத்தை அறிந்த , அக்ரூரர் ,
பந்துக்களால் விடை கொடுக்கப்பட்டு, மதுராபுரிக்கு வந்து சேர்ந்தார்.
உன்னையும் பலராமனையும் வந்து சேவித்து,
த்ருத ராஷ்ட்ரனின் நடத்தை, அந்தரங்க எண்ணங்கள்,
அபிப்ராயங்கள், குந்திதேவியின் பிரார்த்தனை எல்லாவற்றையும் சொல்லி,

ஹே…பகவன்…..எந்த கார்யத்துக்காக என்னை அனுப்பினீரோ ,
அதைச் செய்து முடித்துள்ளேன் என்று பவ்ய மாகச் சொல்லி நமஸ்கரித்தார்.

(ஹே கிருஷ்ணா …….அடியேன் ,அக்ரூரரின் பாத ரக்ஷை யாகவாவது
இருந்திருக்கக் கூடாதா…….அந்த மகானின் அந்தரங்க பக்திக்கு ஈடு இணை இல்லை…..
அவருடன்கூட அடியேனும் ஜன்ம சாபல்யம் அடைந்து இருப்பேனே …
அச்சுதா….அக்ரூரரின் திருவடிகளை ஆயிரமாயிரம் தடவை நமஸ் கரிக்கிறேன் )

இத்துடன் ஸ்ரீமத் பாகவதம் …. தசமஸ்கந்தம் ….பூர்வார்த்தமாகிய .முன்பாதி …
49 ……..வது அத்யாயத்துடன் நிறைவடைகிறது. ஸுபம்

ஸ்ரீ க்ருஷ்ணாய, கோவிந்தாய, கோபீ ஜன வல்லபாய,
நந்தகோப சுதாய ,, தேவகீ நந்தனாய நம :

க்ருஷ்ண நாமாம்ருதம் நாம பரமாநந்த காரகம் |
அத்யுபத்ரவ தோஷக்னம் பரமாயுஷ்ய வர்தனம் ||

—————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெருமாளின் கல்யாண குணங்கள் -ஸ்ரீ கூரத்தாழ்வான்–ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்ஜ்வல பாரிஜாதம்–ஸ்ரீ ஹரே ராம சீதா ராம ஜய ஜய ராம– —

February 24, 2023

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம யுக்தி மதீ மஹே
யத் யுக்தஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்

அர்வாஞ்சோ யத் பத ஸரஸி த்வந்தம் ஆஸ்ரித்வ பூர்வே
மூர்த்ரா யஸ்ய அந்வயம் உபகதா தேசிகா முக்திமாபு
சோயம் ராமானுஜ முனிர் அபி ஸ்வீய முக்திம் காரஸ்தம்
யத் சம்பந்தாத் அனுமத கதம் வர்ணயதே கூர நாத

————

ஸ்வஸ்தி ஹஸ்தி கிரி மஸ்த சேகர சந்த நோது மயி சந்ததம் ஹரி
நிஸ் சமாப்யதிக மப்ய தத்த யம் தேவம் ஓவ்பநிஷதீ ஸரஸ்வதீ–1-

ஓவ்பநிஷதீ ஸரஸ்வதீ–ஒவ்பநிஷத்துக்களின் வாக்கானது
யம் தேவம் -யாவன் ஒரு எம்பெருமானை
நிஸ் சம அப்யதிகம் அப்ய தத்த -ஓத்தாரும் மிக்காணும் இல்லாதவனாக ஓதிற்றோ
ஹஸ்தி கிரி மஸ்த சேகர-ஸ்ரீ ஹஸ்திகிரி சிகரத்தின் ஆபரணமாய் உள்ள
ஸ ஹரி -அந்த ப்ரணதார்த்தி ஹர ஸ்ரீ வரதன்
மயி-அடியேன் மீது
சந்ததம்-எப்போதும்
ஸ்வஸ்தி சந்த நோது -நன்மையை நிரம்பச் செய்ய வேணும்

உபய விபூதியிலும் அடியேனுக்கு நன்மை அருளிச் செய்ய வேணும் –
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் சர்வ வித கைங்கர்யங்களையும்
உடனாய் மன்னி வழு இல்லாமல் செய்யப் பெற வேணும் என்று தாத்பர்யம் –

திந் நாகைர் அர்ச்சிதஸ் தஸ்மிந் புரா விஷ்ணுஸ் சநாதந –
ததோ ஹஸ்தி கிரிர் நாம க்யாதி ராஸீத் மஹாகிரே –ஸ்ரீ ஹஸ்திகிரி மஹாத்ம்யம்
திக் கஜங்கள் ஆராதித்த படியால் ஸ்ரீ ஹஸ்தி கிரி திரு நாமம் –

சேகர -சிரஸ்ஸுக்கு அலங்காரம்-அலங்கார மாத்ரத்தை சொல்லா நிற்கும் –
மஸ்த சப்தம் தனியாக சிரஸ்ஸை சொல்வதால் –
சந்த நோது-சம்யக் விஸ்தாரயது -என்றபடி
நிஸ் சமாப்யதிகம் -ந தத் சமச் சாப்யதி கச்ச த்ருச்யதே -உபநிஷத்
ஓத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு இன்றி நின்றான்
ஓத்தார் மிக்காரை இலையாய மா மாயா
ககநம் ககநாகாரம் சரஸ் சாகர உபம –

——————-

ஸ்ரீ நிதிம் நிதிம் அபாரம் அர்த்திநாம் அர்த்திதார்த்த பரிதான தீஷிதம்
சர்வ பூத ஸூஹ்ருதம் தயா நிதிம் தேவ ராஜம் அதி ராஜம் ஆஸ்ரயே–2-

ஸ்ரீ நிதிம் -ஸ்ரீ யபதியாய்
அபாரம் நிதிம் -அளவற்ற நிதியாய் இருப்பவனாய்
அர்த்திதார்த்த பரிதான தீஷிதம் –வேண்டியவற்றை கொடுத்து அருளுவதையே விரதமாகக் கொண்டவனாய்
அர்த்திநாம்
சர்வ பூத ஸூஹ்ருதம் -ஸமஸ்த பிராணிகளுக்கும் அன்பனாய்
தயா நிதிம் அதி ராஜம் -கருணா நிதியாய் அனைவருக்கும் மேம்பட்ட தலைவனாய் இரா நின்ற
தேவ ராஜம் ஆஸ்ரயே–அயர்வரும் அமரர்கள் அதிபதியான பேர் அருளாளனை -தேவ பிராணனை திருவடி பணிகின்றேன்

————–

ஆதி ராஜ்யம் அதிகம் புவநா நாம் ஈஸ தே பிசு நயந் கில மௌலி
சூளிகா மணி சஹஸ்ர மரீஸே ஹஸ்தி பூஷண பவத்யுத யாத்ரி –25-

ஹஸ்தி பூஷண -ஸ்ரீ ஹஸ்தி கிரிக்கு அலங்காரமாயுள்ள
ஹே ஈஸ–ஸ்ரீ தேவாதி ராஜனே
புவநா நாம்-உலகங்கட்க்கு எல்லாம்
ஆதி ராஜ்யம் -நீ அதி ராஜனாய் இருக்கும் தன்மையை
அதிகம் -மிகவும்
பிசு நயந்-கோட் சொல்லா நின்ற
தே மௌலி -உன்னுடைய திரு அபிஷேகமானது
சூளிகா மணி சஹஸ்ர மரீஸே –தன் சிகரத்தில் உள்ள ரத்னமாகிற ஸூர்யனுக்கு
யுத யாத்ரி –உதய பர்வதமாக
பவதி கில –ஆகா நின்றது அன்றோ

திரு அபிஷேகத்தில் கண் வைத்தவர் பாசுரம் ஈஸ –ஈஸத்வம் தோற்ற இறே திரு முடி தரிப்பது –
கண்டவாற்றால் தனதே யுலகு என நின்றான் –
அனைத்துலகும் உடைய அரவிந்த லோசனன் தானே திரு அபிஷேகம் சூடி சேவை சாதிப்பான்
சூளிகா மணி-உபய விபூதி சாம்ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகத்தை பர்வதமாக உல்லேகிக்கிறார்
பொற் சுடர்க் குன்று அன்ன பூம் தண் முடியர் அன்றோ
நுனியில் அழுத்தின ரத்னம் -ஸூர்யன் போலே இரா நிற்க -அதற்கு உதய பர்வதமாயிற்று இத்திரு அபிஷேகம்
கதிர் ஆயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடியன் அன்றோ –
உதய பருப்பதத்தின் மேலே விரியும் கதிரே போலே விளங்கும் –

—————-

அக்ருத ஸூக்ருதகஸ் ஸூ துஷ் க்ருத்தரஸ் சுப குண லவலேச தேச அதிகஸ்
அஸூப குண பரஸ் சஹஸ்ர ஆவ்ருத்தஸ் வரதம் உருதயம் கதிம் த்வாம் வ்ருணே -83-

அக்ருத ஸூக்ருதகஸ் –அல்ப ஸூஹ்ரு தத்தையும் அனுஷ்டிக்காதவனாய்
அஞ்ஞாத ஸூஹ்ருதங்களை எம்பெருமான் ஆரோபித்து மடி மாங்காய் இடுவதற்கு ஏற்ற க்ருத்ய லேசமும் செய்திலேன்
ஸூ துஷ் க்ருத்தரஸ் –பாபிஷ்டர்களில் அக்ர கண்யனாய்
சுப குண லவலேச தேச அதிகஸ் –நல்ல குணத்தின் லவ லேசத்துக்கும் அதி தூரஸ்தனாய்
அஸூப குண பரஸ் சஹஸ்ர ஆவ்ருத்தஸ்– காம க்ரோதம் முதலிய பல்லாயிரம் தீய குணங்கள் சூழப்பட்டவனான அடியேன்
ஒரோ மயிர்க்குழிக்கும் ஓராயிரம் துர் குணங்கள் காணக் கிடைக்கும் என்கிறார் போலும்
உருதயம் வரதம்–பேர் அருளாளனாய் வரம் தரும் பெருமாளாக
த்வாம் கதிம் வ்ருணே —உன்னை சரணமாக அடைகிறேன் –

கீழே தம்முடைய தோஷ பூயஸ்த்தையை பரக்க வெளியிட்டு –பரியாப்தி பெறாமல் –
சரண வரண சம காலத்தில் தோஷ பிராசர்ய அனுசந்தானம் அவசியம் என்னும் இடத்தை
வெளி இடுகைக்காகவும்
ஸ்வ தோஷ பூயிஷ்டத்வ அனுசந்தான சகிதமாக பிரபத்தி பண்ணுகிறார்
ஸக்ருத் ஏவ ஹி சாஸ்த்ரார்த்த –என்னும் அளவில் இருப்பவர் அன்றே –
பிரபத்தி தேஹ யாத்ரா சேஷமாக அன்றோ நம்மவர்கள் கொண்டு இருப்பர்கள்

இப்படிப்பட்ட அடியேன் -பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் எம்பெருமானாய்
மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய் கச்சியிலே வரம் தரும் மா மணி வண்ணனாய் எழுந்து அருளி இரா நின்ற
தேவரீரை அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்டப் பிராப்தியைப் பண்ணித் தர வல்ல
உபாயமாகப் போற்றுகிறேன் என்கிறார் ஆயிற்று

—–

அயே தயாளோ வரத ஷமாநிதே விசேஷதோ விஸ்வ ஜநீந விஸ்வத
ஹிதஜ்ஜ சர்வஜ்ஞ சமக்ர சக்திக ப்ரஸஹ்ய மாம் ப்ராபய தாஸ்யமேவ தே –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -93-

தயாளோ -ஷமாநிதே-பேர் அருளாளனே பொறுமைக்கு நிதியே
சரீரத்துக்கு வரும் துக்கம் சரீரிக்கு -பர துக்க துக்கி அன்றோ தயாளு

விசேஷதோ விஸ்வ ஜநீந –மிகவும் சகல ஜனங்களுக்கும் ஹிதனே
இவற்றின் புறத்தாள்-விஸ்வத்தில் பஹிர் பூதனோ அடியேன் -ஸ்வ ஜனஸ்ய ச ரக்ஷிதா என்றது கழிந்தால்
ரக்ஷிதா ஜீவ லோகஸ்ய என்கிற ஊர் பொதுவும கழிய வேணுமோ
அநா லோசித விசேஷ அசேஷ லோக சரண்யன் அன்றோ நீர்

விஸ்வத–எல்லா வற்றையும் தந்து அருள்பவனே
எனக்கே தன்னைத் தந்த கற்பகம் அன்றோ

ஹிதஜ்ஜ -அடியோங்களுக்கு ஹிதமானவற்றை அறியுமவனே
உண்ணிலாய ஐவரால் குமை தீற்றி என்னை யுன் பாத பங்கயம் நண்ணிலா வகையே நலியப்
பார்த்து இருக்கையோ அடியேனுக்கு தேவரீர் அறிந்து வைத்த ஹிதம்

சர்வஜ்ஞ –எல்லாவற்றையும் அறிபவனே
உட் கிடந்த வண்ணமே புறம் பொசிந்து விளங்குகின்ற என் ஆர்த்தியை அறியீரோ
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிவீர் ஆயினும் பாசுரம் கேட்டவாறே
திரு உள்ளம் உகக்கும் என்று அன்றோ அடியேன் பிதற்றுவது

சமக்ர சக்திக –பரி பூர்ண சக்தி உடையவனே
இரும்பை பொன்னாக்க வல்லீரே -பொருள் இல்லாத என்னைப் பொருள் ஆக்கி -உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்

அயே வரத –வரம் தரும் பெருமாள் என்ற திரு நாமம் உடையவனே
அடியேனுக்கு இத்தனையும் செய்ய திரு உள்ளம் இல்லையாகில் தேவருடைய வரதத்வம் என்னாவது –

மாம்பழ உண்ணி போலவோ திரு நாமம் வஹிப்பது
மாம் தே தாஸ்யமேவ –அடியேனுக்கு உன் அடிமைத் திறத்தையே
ப்ரஸஹ்ய ப்ராபய–எப்படியாவது பிராப்தம் ஆக்கி அருள்

நிரீஷிதம் வ்ருணே –92-என்று கீழே சாஷாத்கார மாத்ரம் அபீஷ்டம் என்றார்
கண்டேன் கமல மலர்ப் பாதம் என்றால் அடுத்த படியாக
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக -என்பார் –
ஆகவே இவரும் கைங்கர்ய பிரார்த்தனை இதில்
ஷூத்ர பலாந்தரங்களிலே ருசியைத் தவிர்த்து தேவரீர் திறத்தில் கைங்கர்ய சாம்ராஜ்யத்தையே
பெறுவித்து அருள வேணும் என்கிறார் ஆயிற்று –

——————-

12 குணங்கள் ஒவ்வொருவருக்கும் காட்டி

1-தயா -தயா சதகம் -கல்கண்டு போல் திருமலை -ஞானாதிகள் அப்ரயோஜனம் தயை இல்லாமல் –
பிரதானம் இதுவே -ராமானுஜரை விந்தியா மலையில் இருந்து மிதுனமாக அழைத்துச் சென்றார்களே

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–

விந்தியக் காடு, இருள் சூழ, திகைத்திருந்து, ‘ஆவாரார் துணை?’ என்று கலங்கி நின்றபோது,
தேவாதி ராஜன் –காஞ்சி வரதராஜப் பெருமாளும் பெருந்தேவித் தாயாரும், வேடுவனும் வேடுவச்சியுமாக வந்து காத்து,
மறுநாள் விடியலில் காஞ்சிக்கருகில் கொண்டு வந்து சேர்த்தனர்.
தாயார், “நீர் வேண்டும்” என்று கூற, அருகில் உள்ள (சாலைக்) கிணற்றிலிருந்து நீர் கொண்டு வந்து தர, உடன் அவர்கள் மறைந்தனர்.
உடையவர் தம்மைக் காத்தவர் யார் என்ற உண்மை உணர்ந்து, தினமும்
அக் கிணற்றிலிருந்து நீர் எடுத்து வந்து திருமஞ்சனத்திற்கு கைங்கர்யம் செய்து வரலானார்.
கருமாமுகிலுருவா, கனலுருவா புனலுருவா
பெருமாள் வரையுருவா, பிறவுருவா, நினதுருவா
திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
அருமா கடலமுதே உனதடியே சரணாமே.
யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –1-
இவன் அருளால் பெற்ற ஸாம்யா பத்தி ஸ்வாமிக்கும் உண்டே

யாவர் ஒரு எம்பெருமானார் -எப்போதும் ஸ்ரீ எம்பெருமானுடைய திருவடித் தாமரை இணையாகிற ஸூவர்ணத்தில்
உள்ள வ்யாமோஹத்தால்
அந்த பாதாரவிந்தங்கள் தவிர மற்ற விஷயங்களை த்ருணமாக எண்ணி தம் திரு உள்ளத்தால் திரஸ்கரித்தாரோ –
இப்படிப்பட்டவரும் கிருபைக்கு முக்கியமான கடலாக உள்ளவரும் -கல்யாண குண சாலியும்-
அஸ்மத் ஆச்சார்யருமான எம்பெருமானார் திருவடிகளை சரணம் புகுகிறேன் -என்கிறார்

———-
2-ஷாந்தி ஸகல மனுஷ நயன விஷயதாங்கனாக -பொறுமை யுடன் நமக்காக
காஞ்சி பிரம்மாவால் தொழப்பட்டவர்
ஹஸ்திகிரி
ஹஸ்த திரு நக்ஷத்ரம்
சரஸ்வதி -வேகவதி -பல திவ்ய
திருவெஃகா வேகா சேது
ஒரு ஆஸ்ரிதனான ப்ரம்மனுக்காக
ஹஸ்திகிரி மத்த சேகரன்
அத்திகிரியான்-த்யாகேசன்

————-

3-ஓவ்தார்ய –
ஆர்த்திதார்த்த பரிபால தீக்ஷிதன்
வரம் ததாதி
வரதம் அளிப்பவர்களுக்குள் ஈஸ்வரன்
வரத ஹஸ்தம் இல்லாமல் அபய ஹஸ்தம்
வரதராஜனாகவே பிரசித்தமாக இருக்க ஹஸ்தமும் காட்ட வேண்டுமோ

கொள்ளும் பயனில்லை குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து நும் வாய்மை இழக்கும் புலவீர்காள் !
கொள்ள குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் என்
வள்ளல் மணி வண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ –3-9-5-
திருமங்கை ஆழ்வாருக்கு காட்டிக்கொடுத்த உதார வள்ளல்-மண்ணை அளந்து பொன்னாகி -இஹ லோக ஐஸ்வர்யம்
தன்னையே கொடுக்கும் கற்பகம்
ராமாநுஜரையே அரங்கனுக்கு கொடுத்த உதார குணம்
சேராது உளவோ பெரும் செல்வருக்கு—அரையர் ஸ்துதிக்க -ஸ்த்வயன் -ஸ்தவ ப்ரியன் – ஸ்துதி பிரியன்
ஞானம் வழங்கிய உதாரம் -யஜ்ஞ மூர்த்தி -அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
பிள்ளை லோகாச்சார்யாராக -இவரே
ஏடு படுத்தச் சொல்லி
——–
4-பிரதிம ஸ்வ பாவம் -மென்மையான -திருமேனியும் -திரு உள்ளவும் மார்த்தவம்
ஞானிகள் பிரிவை அஸஹம்
வளத்தின் களத்தே கூடு பூரிக்கும் -திரு மூழி க்களத்தில்
ஆலவட்டம் -கைங்கர்யம் -ஆறு வார்த்தை
——-
5-சமதா -பக்தனை எனது அளவாவது
வேறுபாடு மட்டும் அல்ல
தன்னையும் அவர்களுக்கு கீழ்
அஷ்ட வித பக்தி மிலேச்சசன் இடம் இருந்தாலும்
அருளாளப்பெருமாள் எம்பெருமானார் பெயரிலே சாம்யம்
———–
6-ஸுஹார்த்தம்
கிருபை இதன் அடிப்படையால்
ஸூஹ்ருதம் ஸர்வ பூதா நாம்
முனியே -மனன சீலன் –
உறங்குவான் போல் யோகு செய்து
நாலூரானுக்கும் முக்தி
——–
7-த்ருதி
ஊற்றம் உடையார்
ஆஸ்ரித ரக்ஷணம்
ராமானுஜர் அவதாரம் தொடங்கி உபகார பரம்பரைகள்
நம்மாழ்வார் திரு உள்ளத்திலும் பட அருளி
——
8-பிரசாதம்
பேர் அருளாளன் அருளாத நீர் அருளி வீதி வழியாக ஒரு நாள்
———-
9-ப்ரேம
சேர்த்தி புறப்பாடு பிரசித்தம்
கஜேந்திர ரஷணம் -அகில காரணமத்புத காரணம்
நடாதூர் அம்மாள்
அம்மாள் ஆச்சார்யன் எங்கள் ஆழ்வான்
————
10ஆஜ்ஞா
ஆறு வார்த்தைகள் பிரசித்தம்
ராமானுஜரை ஆக்கி அருளி
ஆளவந்தார் ஆ முதல்வன் கடாக்ஷிக்க சரண் அடையும் பொழுதும் அருளி
விந்திய மலையில் இருந்து காத்து அருளி
ஸந்யாஸ ஆஸ்ரமும் அநந்த ஸரஸ்ஸில் செய்து அருளி
அரங்கனுக்கு அரையர் மூலம் கொடுத்து அருளி
ஸ்ரீவசன பூஷணம் ஏடு படுத்த
ஈட்டை வெளியிட்டு அருளி
————
11-ஆஸ்ரித சுலப
தொட்டாச்சார்யார் ஸேவை பிரசித்தம்
——–
12 கல்யாண
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்ஜ்வல பாரிஜாதம்
ஸுந்தர்யம் லாவண்யம் மிக்கு
ஆதி ராஜ்யம்
திவ்ய மங்கள விக்ரஹம்
நாபி சுழி
வலித்ரயம் உதர பந்தம் பட்டம் கட்டி -தாமோதரன்
ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலம் எல்லாம் மனமே
ஈண்டு பல் யோநிகள் தோற் உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே
காண்டகு தோள் அண்ணல் தென்னத்தியூரர் கழல் இணைக் கீழ்
பூண்ட அன்பாளன் இராமானுசனைப் பொருந்தினமே – 31-
(கற்பக வருஷம் வாஹனம் சேவிக்கும் பொழுது நினைக்க வேண்டியது
என்னை ஆக்கி -எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -மூன்று ஏற்றம் கற்பக வ்ருக்ஷத்தை விட
முதலில் என்னையும் ஆக்கி -அர்த்திகளை உருவாக்கி -விரோதி நிரஸனமும் செய்து அருளி
தன்னையே தந்து –
பாரிஜாத மரம் வ்ருத்தாந்தம் அறிவோமே
மறப்பேன் என்று நேரில் புகுந்து -பேரேன் என்று நெஞ்சு நிறையப் புகுந்து
எனக்கே -அனைவருக்கும் தனக்கு மட்டுமே என்று சொல்லிக் கொள்ளும்படி பூர்ண அனுபவம் )
————-
காஷ்மீர் பக்தி மண்டபம் சாரதா பீடம் -வித்வான்கள் மலிந்த இடம்
காஷ்மீர அரச வம்சத்தின் வரலாற்றைக் கூறும் ‘ராஜ தரங்கணி’ என்ற வடமொழி நூல்

—————————————————————————————

ஸ்ரீ ரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம்,
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காள மேகம் |
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்ஜ்வல பாரிஜாதம்,
ஸ்ரீ சம் நமாமி சிரஸா யதுசைல தீபம் ||

இந்த நான்கு திவ்ய தேசங்களிலும் நடை வடை குடை முடி என்று விசேஷங்கள் உண்டு.
கோவிலில் நடை மிகவும் அழகு.
திருமலையில் வடையின் ப்ரபாவம் எல்லாருக்கும் தெரியும்.
பெருமாள் கோவிலில் குடை விசேஷம். -கொடையும் விசேஷம் பேர் அருளாளன் அன்றோ
திருநாராயண புரத்தில் வைர முடி விசேஷம்.

கோயில் (ஸ்ரீரங்கம்), திருமலை, பெருமாள்கோயில், திருநாராயணபுரம் என்ற
இந்த நான்கு திவ்யதேசங்ககளுக்குப் பிராதான்யம் கொடுத்திருக்கின்றனர்.

———————-

ஸ்ரீ ஹரே ராம சீதா ராம ஜய ஜய ராம

ஹரே அகில ஹேய ப்ரத்ய நீகன்
ராம -கல்யாண ஏக குண நிதி -ஏக ஸ்தானம்
சீதா ராம -மிதுனமே ப்ராப்யம்
ஜய ஜய ராம -பேற்றுக்கு உகப்பானும் அவனே
ஆஸ்ரித நிரஸனம் -ஸுலப்யம் -ஸுசீல்யம் -போக்யம் பசும் கூட்டம்

ஸத்ய வாக்யனாகி -சத்யம் நேர்மை உறுதி மூன்றும் சேர்ந்தவன் -நம்மையும் அப்படி ஆக்கி அருளுவான் அன்றோ

ஹரே ராம-நன்மை செய்யும் ஸுஹார்த்தம் -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி — தாரகம் –வாழ் முதல்
ஜய ராம்-போஷகம் -வளர் முதல்
சீதா ராம -ஸீயாராம் -அயோத்தியில் கோஷம் –பிராகிருத வீட்டுப்பேச்சு -போக்யம்-ஸ்ரீ யபதித்தவம் – -மகிழ் முதல்

ராதே கிருஷ்ணா ராதே ராதே பிருந்தாவனம் இதே போல்-

உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் மிதுனமே

திருவுக்கும் திருவாகிய செல்வன்

ஸுர்ய -வீர்ய -பராக்ரமம்
வெளியில் இருந்து தான் கலங்காமல் ஸுர்ய
புகுந்தும் கலங்காமல் பராக்ரமம் சின்னா பின்னம்
தனக்கு விகாரம் இல்லாமல் மற்றவை விகாரம் செய்வது வீரம்
ஜய ஜய மஹா வீரா

ஜய ஜய மஹா வீர
மஹா தீர தவ்ரேய
தேவாஸூர சமர சமய சமுதித
நிகில நிர்ஜர நிர்த்தாரித நிரவதிக மஹாத்ம்ய
தச வதன தமித தைவத பரிஷதப் யர்த்தித தாசரதி பாவ
தி நகர குல கமல திவாகர
திவிஷ ததிபதி ரண ஸஹ சரண சதுர தசரத சரமருண விமோசன
கோசல ஸூதா குமார பாவ கஞ்சுகித காரணாகார –7-

விகாரம் தனக்கு கொஞ்சமும் இல்லாமல் மற்றவர்க்கு -வீரம் சூரம் பராக்ரமம் -கலங்காமல் –
உள்ளே புகுந்து சின்னாபின்னம் ஆக்கி– தான் கிஞ்சித்தும் மாறாமல் -மூன்றும் உண்டே
மஹா வீரன் – பூஜிக்க தக்கவன் மஹான்-
ரகு -இஷுவாகு குலம் -சூர்ய குலம் மனுவின் பிள்ளை இஷுவாகு -ரகு குலம் என்பதால் ராகவன் –
குணம் ஒவ் ஒன்றுமே விகாரம் அடைவிக்குமே -வில் கொண்டு மட்டும் இல்லை -அது சாதாரணம்
அழகில் ஆழ்ந்து –நேர்மையில் ஆழ்ந்து –ஆர்ஜவத்தில் ஆழ்ந்து போவோமே
திருவடி கொண்டாடும் துறை -வீரம் -பக்திஸ்ஸ நியதா வீர–பாவோ நான்யத்ர கச்சதி —
வீரத்தை தவிர வேறு ஒன்றிலும் செல்லாதே –
கோன் வஸ்மி-குணவான் -கஸ்ய வீர -16-கல்யாண குணங்களில் -ஸுசீல்யத்துக்கு அடுத்து –
நேர்மையுடன் கூடிய வீரன் பெருமாள் -ஆயுதம் எடுக்காத வெறும் கை வீரன் கீதாச்சார்யன் –

ஸத்ய வாதி பிரிய வாதி த்ருட வாதி -மே விரதம் -அசைக்க முடியாத திடம்-சரணாகத வாத்சல்யம் -அபய பிரதான சாரம்

ஸத்ய வாதி -ஹரே ராம
பிரிய வாதி -சீதா ராம
த்ருட வாதி-ஜய ஜய ராம

ஸத்ய பாஷா ராகவா பிரிய பாஷா ராகவா மிருது பாஷா ராகவா பூர்வ பாஷா ராகவா மஞ்சு பாஷா ராகவா –
சொல்லின் செல்வன் இவனே கொண்டாடும்படி திருவடி

விதித சஹி தர்மஜ்ஞ சரணாகத வத்சல
தேன மைத்ரீபவது தே யதி ஜீவிதம் இச்சசி -சுந்தர -21-20-

மித்ர பாவேன சம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன
தோஷோய த்யபி தஸ்ய ஸ்யாத் சதாமேதத் அகர்ஹிதம் -யுத்தம் -18-3-

விபீஷணோ வா ஸுக்ரீவ யதி வா ராவணஸ்வயம்*

—————-

நாமீயை விட நாமத்துக்கே ப்ராபாவம் ஜாஸ்தி

காலையில் துயிலெழும் போது :-
“ஹரிர் ஹரி ஹரிர் ஹரி”என்று ஏழு தடவை சொல்ல வேண்டும்.

வெளியே புறப்பட்டுப் போகும் போது :-
“கேசவா”என்று சொல்ல வேண்டும். “கேசவா” என்று சொன்னால் இடர்கள் எல்லாம் கெடும்.

உணவு உட்கொள்ளும் போது :-
“கோவிந்தா”என்று சொல்லிவிட்டுச் சாப்பிட வேண்டும்.

இரவு படுக்கச் செல்லும் போது :-
“மாதவா”என்று கூற வேண்டும்.

கஜேந்திர மோக்ஷம் செய்து அருளினை அவதாரம்
துஸ் ஸ்வப்னம் போக்கும்
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் -361-656-ஹரி நாமம்

நாராயணா மணி வண்ணா -ஆர் இடரை நீக்காய்
கபிஸ்தலம்
சென்று நின்று ஆழி தொட்டானை
புண்யோ துஸ் ஸ்வப்ன நாசநா
அஜிதன் -அம்ருத மதனன் –கூர்மம் தங்கி -மோஹினி -அவதாரங்களும் உண்டே

பச்சை வர்ணத்தையும் ஹரி குறிக்கும்
பச்சை வண்ணன் பவள வண்ணன்
கரும் பச்சை
நீல மேக ஸ்யாமளன் -கறுத்தே -முகில் வண்ணன் -பச்சையும் மரகத பச்சை ஆழ்ந்து
ஸம்ஸ்திதா பூஜித -கோவர்த்தன மலையில் இன்றும் எழுந்து அருளி இருக்கிறவன் ஹரி திரு நாமம் -பட்டர்
கோவர்த்தன தாரியும் ஹரி -குன்று எடுத்து குளிர் மழை காத்தவன் –

ஓம் பிரணவத்தையே தாங்கும் ஹரி திரு நாமம்-திரு மணத் தூண்கள் ஹரி-த்வய அக்ஷரங்களே –

ரமயதீ ராம –கண்டவர் தம் மனம் வழங்கும் -திருஷ்ட்டி ஸித்த அபஹாரிணாம்
ஒரு நாள் முகத்தில் விளித்தாரை படுத்தும் பாடு அறிவோமே

ரூபம் குணம் இரண்டுமே வசீகரிக்கும்
நடத்தை -இன்றும் பாஷ்யகாரர் உத்சவம் நடை அழகை ராமர் பிரகாரத்தில் நடை பெறுமே
ரம்யதி-மகிழ்ச்சி கொடுப்பதில் ஸ்ரேஷ்டம் –
ராம நாமமே ஜென்ம ரஷக மந்த்ரம்

ரம்யதே அஸ்மின் –தோள் கண்டார் தோளே கண்டார் –
பூமா -ஒவ்வொன்றும் –
வேறே எங்கும் போகவோ கேட்கவோ அனுபவிக்கவோ போக முடியாதே
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே
அபி ராமம் -நீலோத் புஷ்பம் -ஸரத்கால முழு நிலா -பிருந்தாவனத்தில் பெரிய ஸமூஹம்
குணாபி ராமன் ராமஞ்ச –

ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் சர்வ சம்பதாம் -ஹரே ராம் அர்த்தம்

ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்
லோகாபி ராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம் யஹம்
ஆர்த்தானாம் ஆர்த்தி ஹந்தாரம் பீதானாம் பீதி நாசனம்
த்விஷதாம் கால தண்டம் தம் ராமசந்த்ரம் நமாம் யஹம்
ஸன்னத்த: கவசீ கட்கீ சாப பாண தரோ யுவா
கச்சன் மமாக்ரதோ நித்யம் ராம: பாது ஸ லக்ஷ்மண:
நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத சராய:
கண்டிதாகில தைத்யாய ராமாயா ஆபந் நிவாரிணே
ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:
அக்ரத: ப்ருஷ்டத ச்’சைவ பார்ச்வதஸ்ச மஹாபலௌ
ஆகர்ண பூர்ண தன்வானௌ ரக்ஷேதாம் ராம லக்ஷ்மணொ…
அச்யுதாநந்த கோவிந்த.நாமோச்சாரண பேஷஜாத்
நஸ்யந்தி ஸகலரோகா: ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்
ஸத்யம் ஸத்யம் புனஸ் ஸத்யம் உத்ருத்ய புஜமுச்யதே
வேதாச்சாஸ்த்ராத் பரம் நாஸ்தி ந்தைவம் கேசவாத்பரம் //
 
சரீரே ஜர்ஜரி பூதே வ்யாதிக்ரஸ்தே களேபரே
ஒளஷதம் ஜாஹ்நவி தோயம் வைத்யோ .நாரயணோ ஹரி:
ஆலோட்ய ஸர்வசாஸ்த்ராணி விசார்ய ச புந: புந:
இதமேகம் ஸுநிஷ்பநம் த்யேயோ .நாரயணோ ஹரி :
 
காயே.ந வாசா ம.நஸா இந்த்திரியைர் வா
புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
நாரயணாயேதி ஸமர்ப்பயாமி //
 
யதக்ஷர பதப்ரஷ்டம் மாத்ராஹீநந்து யத்பவேத்
தத்ஸர்வம் க்ஷ்ம்யதாம் தேவ.நாரயண .நமோஸ்துதே
விஸர்க்க பிந்து மாத்ராணி பதபாதாக்ஷராணி ச
ந்யூநாநி ச அதிரிக்தாநி க்ஷமஸ்வ புருஷோத்தம://
ராம நாமமே தாரக ம்ந்த்ரம். கஷ்டங்களை விலக்குபவர். பீடைகளை ஒழிப்பவர். பயங்களை போக்குபவர். ஸர்வ மங்களங்களையும் தருபவர். ஒரு நாள் ஒரு தரம் சொன்னால் போதும்.

ஹரே ராம
சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -ஹரி சொன்னாலே ராம புண்யம் கிட்டும்
ராம ஹரே
கிட்டி அனுபவிக்க போக -ஸம்ஸார உழன்று இருக்க -யருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே-அணைவிக்கும் முடித்தே
தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத் திருந்துலகுண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன் சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11-

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-

கஷ்டங்களை நீக்கி ஆனந்தம் தருவதே ஹரே ராம்

வேத ஸ்வரூபமே ஸ்ரீ ராமாயணம்-“வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே! வேத: ப்ராசேதஸாதாஸீத ஸாக்ஷாத் ராமாயணாத்மனா!!”

வேதங்கள் சொல்லுகின்ற பரமபுருஷன் ஸ்ரீராமனே ஆவான் என்பது ஆன்றோர் வாக்கு. அந்தப் பரம புருஷனே தசரத புத்திரன் ஆன ஸ்ரீராமனாக ஆவிர்ப்பவித்தான், அவதாரம் செய்தான். வேதத்தின் சரீரமே ஸ்ரீராமன். அந்த சரீரம் ஸ்ரீராமனாய் அவதாரம் செய்தபின்னர் வேதங்கள் அனைத்தும், வால்மீகிக்கு வசப்பட்டு அவர் திருவாக்கால் ராமாயணமாக மாறிவிட்டன என்பது பெரியோர் வாக்கு.

ராம நாமம் ஒரு வேதமே! ராம நாமம் ஒரு வேதமே ராக தாளமொடு கீதமே
மனம் எனும் வீணை மீட்டிடுவோம் இசை எனும் மாலை சூட்டிடுவோம்
அருள் மிகு ராம நாமம் ஒரு வேதமே ராக தாளமொடு கீதமே
அவன் தான் நாரணன் அவதாரம் அருள்சேர் ஜானகி அவன்தாரம்
கௌசிக மாமுனி யாகம் காத்தான் கௌதமர் நாயகி சாபம் தீர்த்தான் (ராம நாமம் ஒரு வேதமே)

யாவத் ஸ்தாஸ்யந்தி கிரய: ஸரிதஸ்ச மஹீதலே
தாவத் ராமாயண கதா லோகேஷு ப்ரசரிஷ்யதி–(வால்மீகி ராமாயணம் 1.2.36)

இப்புவியில் மலைகள் மண்ணில் நிற்கும் வரை, நதிகள் ஓடும்வரை, ராம காதை உலகில் நிற்கும்.

காலங்களைக் கடந்த பெருமை
லோகங்களைக் கடந்த -கோடி கோடி அண்டங்களிலும் பெருமை பெற்ற ஸ்ரீ ராமாயணம்
கால தேச பரிச்சேதய ரஹிதம்
இரண்டு அரண் ஸ்ரீ ராமாயணமும் திருவாய் மொழி

1. நால்வர் தவம்செய்து ஒரு பிள்ளையைப் பெற்றார்கள்

கிருஷ்ணாவதாரத்தில் நால்வர் தவம்செய்து ஒரு பிள்ளையைப் பெற்றார்கள். ராமாவதாரத்தில் ஒருவர் தவம் செய்து நான்கு பிள்ளைகளைப் பெற்றார் என்று சுவாரஸ்யமாகச்  சொல்லுவார்கள். யசோதை, நந்தகோபன், தேவகி, வசுதேவர் ஆகிய நால்வர் தவம்செய்து கண்ணன் அவதரித்தான். ஆனால் தசரதன் ஒரு பிள்ளையை வேண்டினார் .ஆனால் அவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன.

2. நான்கு வகை தர்மங்கள்

தர்மத்தை காப்பதற்காக பகவானே தசரதனுக்குப் பிள்ளைகளாக அவதரித்தான்.
தர்மம் நான்கு வகைப்படும்.

1.சாமானிய தர்மம், 2.சேஷ தர்மம் ,3.விசேஷ தர்மம், 4.விசேஷதர  தர்மம் . இதில் தாய் தந்தையிடமும் குருவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லுகின்ற தர்மம் “சாமான்ய தர்மம்”. இதை ராமன் அனுஷ்டித்துக் காட்டினான்.
இரண்டாவதாக, ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்கின்ற தொண்டுள்ளம் கொண்டவனாக, பதினான்கு ஆண்டுகள் தூங்காமல் (துஞ்சமில் நயனத்தான்) பகவானுக்குக் குற்றேவல் புரிந்தான் இலக்குவன். இது “சேஷ தர்மம்”.எப்பொழுதும் பகவானையே நினைத்துக் கொண்டு, பகவான் சொல்லியதை செய்தான் பரதன். இது  “விசேஷ தர்மம்”.
இறைவனுக்குத்  தொண்டு செய்வதை விட இறை அடியார்களுக்குத்  தொண்டு செய்வதே முதன்மையானது என்று  பாகவத சேஷத்வத்தைக்  காட்டினான் சத்ருக்கனன்.இது “விஷேதர” தர்மம்.

‘‘கூடும் அன்பினில் கும்பிட அன்றி வீடும் வேண்டா”என்று இருக்கும் நிலை அது. ‘‘உற்றதும் உன் அடியார்க்கு அடிமை” என்று இதை திருமங்கை ஆழ்வார் வலியுறுத்துவார்.

3. இராமாயணம் கதையா? தத்துவமா?

அறத்தின்  நாயகனான ராமன் குணங்கள்தான் ராமாயணம் முழுக்க இருக்கிறது .அந்தப் பரம்பொருளை உணர்வதுதான் ராமாயணம் தெரிந்து கொள்வதன் நோக்கம். எனவே ராமாயணத்தை ஒரு கதையாகப்  படிக்காமல்,  தத்துவத்தைப் படிப்பதன் மூலம்தான் முழுமையான பலன் பெற முடியும்.  அத னால் தான் நம்மாழ்வார், “கற்பார் ராமாயணத்தை அல்லால் மற்றும் கற்பரோ” என்று சொல்லாமல்,  “கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ” என்று பாடினார்.

4. 18 முறை நடந்து கேட்டார் ராமானுஜர்

ராமாயணம் வெறும் கதையாக இருந்தால், பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதிய ராமானுஜர் போன்ற மகான்கள் அதை எளிமையாக தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் ராமாயணம் என்பது வேத சாஸ்திரத்தின்  சாரமான தொகுப்பு என்பதால்தான், திருமலைக்கு பதினெட்டு முறை நடந்து, ஒரு வருட காலம், ராமாயண சாரத்தை, தன்னுடைய தாய் மாமனும் ,தன்னுடைய  ஐந்து ஆச்சாரியர்களில் ஒருவரும் ஆகிய பெரிய திருமலை நம்பிகளிடம்   பாடம் கேட்டார்.

5. காயத்ரி மந்திரமும்,  ஸ்ரீ ராமாயணமும்.

சகல வேதங்களின் சாரமான  காயத்ரி மந்திரத்திற்கும், ஸ்ரீ ராமாயணத் திற்கும் சில ஒற்றுமைகள் உண்டு. காயத்ரி மந்திரத்திற்கு 24 அட்சரங்கள். ராமாயணத்திற்கு 24,000 ஸ்லோகங்கள். ஒவ்வொரு  அட்சரத்துக்கு 1000 ஸ்லோகங்கள்  என்ற வகையில்   24 ஆயிரம் ஸ்லோகங்களை வால்மீகி செய்தார். இதைப்போலவே, நம்மாழ்வாரின் திருவாய்மொழியும், ராமாயண சாரத்தைச் சொல்வதால்,அதற்கு உரை எழுதிய பெரியவாச்சான் பிள்ளை ராமாயணத்திற்கு நிகராக 24000 படி உரை எழுதினார்.

6. ராமாயணமும் மகாபாரதமும்

ராமாயணம் மகாபாரதம் இரண்டும் ஒரே கருத்தைத்தான் சொல்லுகின்றன. உலக சகோதரத்துவத்தின் ஒற்றுமையைச்  சொல்வது ராமாயணம். ஒரு வருக்கு ஒருவர் ஒற்றுமையின்றி பகைத்துக்  கொண்டால்  என்ன மாதிரியான அழிவுகள் ஏற்படும் என்பதைச் சொல்வது மகாபாரதம். ராமாயணம் நேர்மறையாகச்  சொல்கிறது. அதே கருத்தை எதிர்மறையாகச்  சொல்லுகின்றது மகாபாரதம். அதனால் தான் “இதிகாசங்களில்  சிரேஷ்டமானது  ராமாயணம்” என்று பிள்ளை லோகாச்சாரியார் தம்முடைய ஸ்ரீ வசன பூஷணம் என்கின்ற நூலிலே சொல்லி வைத்தார்.

7. சீதையின் பெருமையா?ராமனின் பெருமையா?

ராமாயணம் என்பது ராமரின் பெருமையைக்  கூறுவதாகச் சொன் னாலும், அது சீதையின் பெருமையை  பிரதானமாகச் சொல்ல ஏற்பட்ட காவியம் என்று  மகரிஷிகள் கருதுகின்றார்கள். “ஸீதாயாம் சரிதம் மகத்” (சீதையின் பெருங்கதை,) என்றுதான்  ரிஷிகள் சொல்லுகின்றார்கள்.ஆழ்வாரும்  தேவ மாதர்கள் விடுதலை அடைய வேண்டும் என்பதற்காக சீதை பத்து மாதம் சிறையில் இருந்தாள். அந்த சிறையில் இருந் தவளின்  பெருமையைச்  சொல்றதுதான் ராமாயணம் என்று பாசுரம் பாடுகின்றார்.

தளிர்நிறத்தால் குறையில்லாத் “தனிச்சிறையில் விளப்புற்ற
கிளிமொழியாள்” காரணமாக் கிளர்அரக்கன் நகர்எரித்த
களிமலர்த் துழாய்அலங்கல் கமழ்முடியன் கடல் ஞாலத்து
அளிமிக்கான் கவராத அறிவினால் குறையிலமே-என்பது திருவாய்மொழி.

தெய்வப் பெண்கள் கால்களில் விலங்கை வெட்டி விடுகைக்காகத் தன்னைப் பேணாதே, அங்கே புக்குத் தன் காலிலே விலங்கைக் கோத்துக் கொண்டவள்,’ என்று நாட்டிலே பிரசித்தையானவள் என்னுதல் என்பது உரையாசிரியர்கள்  கருத்து.

8. முத்தி நகரங்களில் தலை அயோத்தி

ஸ்ரீராமர், முத்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான அயோத்தியில் அவதரித்தார்.எனவே அயோத்தியையும் ஸ்ரீராமரையும் நினைத்தாலே புண்ணியம்  வரும்.முக்தி தரும் 7 ஸ்தலங்களுள் முதல் க்ஷேத்திரம் இது.
முக்கியமான க்ஷேத்திரமும் கூட.‘அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா புரி த்வாரவ திஸ்சைவ சப்த ஏகா மோக்ஷ தாயகா’ என்ற வாக்கியத்தின் படி அயோத்யா, மதுரா, ஹரித்வார், காசி, காஞ்சி, உஜ்ஜயினி மற்றும் துவாரகா என்ற ஏழு க்ஷேத்திரங்களும் முக்தி தரும் ஸ்தலங்களாகும். இந்த ஏழும் நாராயணனுக்கு அவயங்கள் ஆகும். அயோத்தி சிரசு, காசி மூக்கு, மதுரா கழுத்து, மாயா மார்பு, துவாரகா கொப்பூழ், காஞ்சி இடுப்பு, அவந்திகா பாதம்.

9. அயோத்தி ஏன் புனிதத்தலம்?

பகவான் நித்ய வாசம் செய்யும்  வைகுண்டத்தின் ஒரு பகுதியே அயோத்தி.யுத்தங்களால்  வெல்லப்படாத பூமி. மனு, இந்த ஊரை சரையூ நதியின் தென் கரையில் நிறுவினார் என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்துகொள்ள முடிகிறது.அயோத்தியின் வாசலில் அனுமனும், அதற்கு தெற்கில் சுக்ரீவனும், அவனுக்கு அருகில் அங்கதனும், தெற்கு வாசலில் நளனும் நீலனும், மேற்கில் வக்த்ரனும், வடக்கில் விபீஷணனும் வாழ்ந்துகொண்டு இந்த நகரத்தை காப்பாற்றி வருகிறார்கள் என்பது ஐதீகம்.

ஸ்ரீராமபிரான்  வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களின்  அடிச்சுவடுகளை இன்றும் நாம் அயோத்தியில் தரிசிக்க முடியும். அதனால் அயோத்தியை புனிதத் தலமாக இந்திய மக்கள் கருதுகிறார்கள். அயோத்தியில் தரிசிக்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கிறது. அயோத்தியா ரயில்வே நிலையத் தினுள், சுவர்களில் ஸ்ரீ ராம்சரித் மானஸ் என்ற துளசிதாஸ் ராமாயணத்திலிருக்கும் வரிகள் எழுதப்பட்டுள்ளன.

10. சரயு நதி

குழந்தைக்கு அமுதம் தரும் தாயின் மார்பகம் போல,
உயிர்களுக்கு அமுதம் தரும் வற்றாத நதி  சரயு.
இரவி தன்குலத் தெண்ணிபல வேந்தர்தம்
புரவு நல்லொழுக் கின்படி பூண்டது
சரயு வென்பது தாய் முலையன்ன திவ்
வரவு நீர்நிலத்தோங்கு முயிர்க்கெல்லாம்.–(பால-ஆற்றுப்படலம் -24) என்று

நதியின் பெருமையை கம்பன் வர்ணிப்பான். சரயு நதி அயோத்தியில் அற்புதமாக ஓடிக் கொண்டிருக்கிறது.சரயு நதியின் மூலம் ஆப்கானிஸ்தானிலிருந்து வருகிறது. அதன் பெயர் ஹரிருத் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சரயு நதியுடன் இரண்டு நதிகள் கலக்கின்றன.கர்னால் மற்றும் மகாகாளி என்பவை அவை.-இராமரின் அவதாரதினமான இராம நவமி அன்று ஏராளமான பக்தர்கள் அயோத்தியின் சரயு நதியில் இறங்கி நீராடுகிறார்கள். ராம்காட் என்னு மிடத்தில் எண்ணற்ற பக்தர்கள் வந்து நீராடி சங்கல்பம் செய்வதை இன்றும் காணலாம்.இராமர் இந்த உலக வாழ்வை முடித்துத்  கொள்ளத் தீர்மானித்த போது, இந்த நதியில்தான் இறங்கினார் என நம்பப்படுகிறது. இந்த இடம் குப்த காட் என்று அழைக்கப்படுகிறது.

11. தங்கச் சிலைகள்

சீதா தேவி தினமும் துளசி பூஜை செய்த துளசி மாடம், ராமன் பட்டாபிஷேகம் செய்த இடம், அஸ்வமேத யாகம் நடத்தப் பட்ட இடம், சீதையைப் பிரிந்த பிறகு ராமர் ஜடாமுடி தரித்த இடம் இப்படி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த இடங்களை பற்பல படையெடுப்புகளுக்கு பிறகு இன்றும் காண்பது ஆச்சர்யமாக உள்ளது.

கனக பவன் என்னும் மண்டபத்தில் இராமாயணக் காட்சிகள் யாவும் வெகு நேர்த்தியாகவும். பேரழகு பொருந்திய ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இதன் முகப்பில் தங்கம் பதித்திருப்பதால் இதற்கு கனக பவன் என்னும் பெயருண்டாயிற்று. மூன்று தங்க சிலைகள், வெள்ளி மண்டபத்தில் இருப்பது இங்கு சிறப்பு. இது ராமர் சீதைக்கு, கைகேயி உகந்து அளித்த அரண்மனை என்றும் சொல்லப்படுகிறது.

12. பிரணவம் நடந்தது

ராமபிரான் லட்சுமணன் சீதை மூவரும் காட்டிற்குச் செல்லுகின்றார்கள். இதை விவரிக்க கூடிய பெரியவர்கள், அவர்கள் மூவரும்  பிரணவம் போல நடந்து சென்றார்கள் என்று உவமை கூறி விவரிக்கிறார்கள். வேதத்தின் சாரம் தான் பிரணவம். அதாவது ஓம்காரம்.ஓங்காரத்தில் மூன்று எழுத்துக்கள் இருக்கின்றன. ‘‘அ” எழுத்து இறைவனையும் அதாவது ராமரையும், உ  என்கின்ற எழுத்து பிராட்டியையும், ‘‘ம” என்ற எழுத்து ஜீவாத்மாவாகிய லட்சுமணனையும் குறிக்கும்.

இந்த மூன்று எழுத்தும் தனித்தனியாக பிரிக்க முடிந்தாலும்  எப்பொழுதும் பிரியாமலே இருக்கும். அப்படி மூவரும் ஒருவரைத்  தொடர்ந்து ஒரு வராக காட்டில் நடந்து சென்றார்கள் என்பதை, பிரணவம் சென்றது என்று சுவாரசியமாகக்  குறிப்பிடுகின்றார்கள். பிரணவத்தை ஒரே அட்சரமாக நினைப்பது போல நாம் சீதா ராம லஷ்மணர்களை இணைத்து தியானம் செய்ய வேண்டும்.

13. ஸ்ரீ ராமனும், ஸ்ரீ ராமானுஜரும்

ஸ்ரீ ராமபிரானுக்கும் ஸ்ரீ ராமானுஜருக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன “சைத்ர மாஸே  ஸிதே  பக்ஷே நவம் யாஞ்ச புனர்வஸு”  என்பது இராமர் அவதாரத்தைக் குறிக்கும் சுலோகம். அதாவது சித்திரை நவமியில் புனர் பூசத்தில் அவதரித்தார்   என்பதை இந்த ஸ்லோகம் சொல்லுகின்றது. “மேஷார் த்ராஸ ம்பவம் விஷ்ணோர் தர்ஸன ஸ்தாபனநோத் சுகம்” என்று மேஷ மாதமான சித்திரையில் ராமானுஜர் அவதாரம் நிகழ்ந்ததாக ஸ்லோகம் குறிக்கிறது.

1.இருவரும் உலகை ரமிக்கச் செய்தவர்கள்.
2.இருவர் பெயரி லும் “ராம” என்ற நாமம் உண்டு.
3.இருவருக்கும் பல ஆச்சாரியர்கள்.
4.இருவருமே சரணாகதி சாஸ்திரத்தின் மகிமையை சொல்வதற்காக அவதரித்தவர்கள்.
5.இருவருமே திருவரங்கநாதரிடத்தில் பெரும் அன்பு  கொண்டவர்கள்.

14. ஏன் ராம அவதாரம்?

ராமபிரான் தமது உலகமான வைகுண்டத்துக்குச் செல்லுகின்றபோது எல்லோரையும் அழைத்துச் சென்றார் என்று நம்மாழ்வார் பாடுகிறார். வைகுண்டம் என்பது மேலேறுவது.மேல் நிலைக்குச் செல்வது.இதை வள்ளுவரும் “வானோர்க்கும் உயர்ந்த உலகம்” என்று சொல் லுவார்.எல்லோரையும் உயரே ஏற்ற ,கீழே இறங்க வேண்டும்.கீழே இறங்குதல்தான் “அவதாரம்.” ராமபிரான் அவதரிக்கக் காரணம், மற்றவர்களை மேல்நிலைக்கு அழைத்துச்செல்வதுதான்.

மோட்சம் என்பது மறுஉலகம் என்று சொல்வதைப் போலவே விடுதலை பெறுதல் என்ற பொருளும் உண்டு.எதிலிருந்து விடுதலை பெறுதல் என்றால், துன் பங்களிருந்து விடுதலை பெறுதல்.அதனால் தானே  இராமன் கட்டிற்குச் செல்லும்போது அயோத்தி மக்கள்  அழுதார்கள்.

கிள்ளையொடு பூவை யழுத; கிளர்மாடத்
துள்ளுறையும் பூசை யழுத உருவறியாப்
பிள்ளை யழுத; பெரியோரை யென்சொல்ல
வள்ளல் வனம்புகுவான் என்றுரைத்த மாற்றத்தால்- (நகர் நீங்கு. 100)
என்று இந்தக் காட்சியின் மாட்சியை திரைப்படம் போல வர்ணிப்பான் கம்பன்.

15. ஏழு மராமரம்
இராமாயணத்தில் நம் கவனத்தை கவர்ந்தது மராமரம்.
“மரா” “மரா” என்ற உபதேசம் “ராம ராம” எனும் மந்திரம் ஆகி வான் மீகியைப்  பதப்படுத்தியது.  இராமாயணத்தை எழுத வைத்தது.
நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன் எனை
வைத வைவின் மராமரம் ஏழ் துளை
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை
செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே- என்பார் கம்பர்.

அது சரி மராமரம் என்பது என்ன? இங்கே மராம் என்பது யா மரம் (ஆச்சா/சாலம்). மரா என்ற தமிழ்ச் சொல், ராம என்ற தெய்வப்பெயரை வால்மீகிக்குத் தந்துள்ளது.
ஏழுமா மரம் உருவிக் கீழுலகம் என்று இசைக்கும்
ஏழும் ஊடுபுக்கு உருவிப்பின் உடனடுத்து இயன்ற
ஏழ் இலாமையால் மீண்டது அவ் இராகவன் பகழி
ஏழு கண்டபின் உருவுமால் ஒழிவது அன்று இன்னும்.

இராமனால் செலுத்தப்பட்ட அம்பு, தனக்கு இலக்காகக் கொடுக்கப்பட்ட ஏழு மராமரங்களையும் துளைத்து, ஏழு உலகங்களையும் துளைத்து, ஏழு என்ற எண்ணிக்கையில் இருந்த எல்லாப் பொருட்களையும் துளைத்தது, இனி துளைப்பதற்கு ஏழாக எதுவும் இல்லை என்ற நிலையில் இராமனிடம் திரும்பி வந்தது.

16. ஏழும் இராமனும் ராமபிரான் வாழ்வில் ஏழு என்கிற எண் மிகப் பொருந்தி வருவதைக் காணலாம்.

1. ஏழாவது அவதாரம் ராம அவதாரம்.
2.ஏழு மரா மரங்களைத் துளைத்தான்.
3.இராமன் எழுபது வெள்ளம் வாநர சேனைகளோடு இலங்கை மீது படை யெடுத்தான்.
4.ஏழு உலகங்களிலும் அவன் பெருமை பேசப்படுகிறது.
5.ஏழு  பிராகாரங்கள் உள்ள ஸ்ரீரங்கநாதரை அவன் குலதெய்வமாக அடைந்திருந்தான்.
6.ஆறு தம்பிகளோடு சேர்ந்து ஏழு பேராக இருந்தான். (நின்னோடும் எழுவரானோம்).
7.ஏழு காண்டங்களில் ராமகதை சொல்லப்பட்டிருக்கிறது. ஏழாவது காண்டம் உத்தர காண்டம்.
8.அனுமன் வீணையை வைத்து கொண்டு ஏழு ஸ்வரங்களால்  இராமா யணம்   பாடிக்கொண்டிருக்கிறார்.

17. தோல்வியே இல்லை

1.அவன் ஜெயராமன்.
2.ஸ்ரீ ராமாயணத்தில் தோல்வி என்பதே கிடையாது.
3.ராமன் அம்பு பழுதுபட்டு திரும்பியது இல்லை.
4.“ஒக பாணமு” என்று தியாகய்யர் ராம பாணத்தின் பெருமையைப் பாடுவார்.
5.‘‘தோலா வீரன்”  என்று வேதாந்த தேசிகர் ராமனின் வீரத்தைப் பாடுவார்.
6.எல்லா இடங்களிலும் வெற்றிதான். ஆகையினால்தான் ஸ்ரீராமஜெயம் எழுதுபவர்களுக்கும், ஸ்ரீ ராமஜெயம் சொல்பவர்களுக்கும் தோல்வி என்பது வருவது இல்லை.

18. ஏன் ராமன் பெயர் இல்லை ? ஒரு அருமையான பாட்டு.

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன்வெண் குடைக விக்க இருவரும் கவரி பற்ற
விரை செறி கமலத் தாள்சேர் வெண்ணெய்யூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மெளலி!
இந்த பாட்டிலே ராமர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி விளக்கப்படுகிறது. ராமருக்கு பட்டாபிஷேகம் செய்தார்கள்.சரி.

இதில் ராமர் பெயர் இல்லையே? என்ன காரணம்?

இதற்கு சுவையான விளக்கம் சொன்னார்கள் பெரியவர்கள்.பட்டாபிஷேகம் என்கின்ற அந்த  கிரீடம் ராமர் தலையில் வைக்கப்பட்டது  ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், வெகுஜனங்களின் அபிப்ராயம், மகிழ்ச்சி ஆகிய கிரீடத்தை, அதாவது மக்களின் அபிமானத்தை ராமபிரான் சூட்டிக் கொண்டான்.
ஒவ்வொருவர் இதயத்திலும் ஆட்சி செய்தான்,ராமர் சூடிய கிரீடம் தங்கள் தலைமேல் வைத்ததாகவே மக்கள் கருதினார்கள், எல்லா மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக ராமன் இருந்ததால், ராமன் பெயர் இதில் கம்பன் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்பது பெரியவர்கள் நிர்வாகம்.

19. வேதங்கள் ஏன் ராமனைத் தொடர்ந்தன?

வேதம்தான் ராமன். வேதம் காட்டும் மறைபொருள் தான் ராமாயணம்.
வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசராத்மஜே I
வேத: ப்ரசேதசாதாஸீத் சாக்ஷாத் ராமாயணாத்மனா II
இந்த ஸ்லோகத்தின் பொருள் இதுதான்.

“வேதங்களினால் அறியப்படும் இறைவன் தசரதனின் புதல்வனாகப் பிறந்தான்; வேதம் ப்ரசேதஸ் (வால்மீகி) முனிவரிடமிருந்து) ராமாயண மாகப் பிறந்தது” என்பது இதன் பொருள்.
அதாவது இராமாயணத்தில் தூல வடிவம் ராமன் என்கிற அவதாரம். தன் அவதார  காலம் நிறைவு பெற்றவுடன் ராமன் சரயு நதியில் இறங்கி உடனடியாக வைகுண்டத்திற்குச் செல்லத்  தொடங்க, வேதங்களும் அவனைத் தொடர்ந்து சென்றன. அதைத்தொடர்ந்து முனிவர்களும் மக்களும் ராமன் பின்னால் சென்றார்கள்.இதன் மூலம் பிரமாணமும் பிரமேயமும் (வேதமும் ,வேதப் பொருளும் ஒன்று என்பதை காட்டுகிறார்.

20. குலசேகர ஆழ்வார் வர்ணிக்கும் காட்சி இது

ஆழ்வார்களில் குலசேகர ஆழ்வார் இராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.அவர் ராமாயணம் பாடவும், அந்த காட்சிகளை அனுபவிக்கவும் விரும்புகிறார்.பகவான், “நீ திருச்சித்ர கூடம் வா, அங்கு இதை அநுபவிக் கலாம்” என, ஆழ்வார் தில்லை திருச்சித்ரகூடத்தில்  (வடக்கேயும் ஒரு சித்ரகூடமுண்டு) இக்காட்சிகளை கண்டு, ராமாயணத்தை பூரணமாக ஒரு பதிகத்தில் அருளிச் செய்கிறார். அதில் 10 வது பாசுரம் இது. தன்னுடன் சரா சரங்களை வைகுண்டம் ஏற்றினான் என்று பாடுகிறார்.

அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி
அடல் அரவப் பகையேறி அசுரர்தம்மை
வென்று இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற
விண் முழுதும் எதிர்வரத் தன் தாமம் மேவி

சென்று இனிது வீற்றிருந்த அம்மான்தன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
என்றும் நின்றான் அவன் இவனென்று ஏத்தி
நாளும் இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே.
இப்பொழுதும் இந்த காட்சியை, நாம் தில்லை திருச்சித்ரகூடத்தில் (சிதம்பரம்) காண முடியும்.

21. ஏன் சித்திரையில் ஸ்ரீராமநவமி?

ஸ்ரீராமநவமி யானது சித்திரை மாதத்தில் வருகின்றது. இராமபிரான் அவதாரம் செய்தது மட்டுமல்ல பட்டாபிஷேகம் செய்த மாதம் சித்திரை மாதம். சித்திரை மாதத்திற்கு அதிதேவதை விஷ்ணு. விஷ்ணு என்றால் கரந்து எங்கும் பரந்து உளன் என்பதுபோல் எல்லா இடத்திலும் வியாபித்து உள்ளவன் என்று பொருள். நிறைந்த ஒளியை உடையவன் என்று பொருள். தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை மாதம். எனவே, ராமபிரான், விஷ்ணு மாதத்தில், மேஷத்தில், நவகிரக தலைவன் சூரியன் அதி உச்சத்தில் இருந்த போது அவதரித்தான்.

22. வசந்த ருதுவும் ராம நவமியும்பகவான் கீதையில்,
ப்ருஹத்ஸாம ததா ஸாம்நாம் காயத்ரீ சந்தஸாமஹம்
மாஸாநாம் மார்கஸீர்ஷோஹம்ருதூநாம் குஸுமாகர: || 10- 35||

சாமங்களில் (வேதப் பகுதியில்) நான் ‘பிருகத்சாமம்’ என்ற பெரிய சாமமாகவும் ,  சந்தஸ்களில் நான் காயத்ரியாகவும் ,மாதங்களில் நான் மார்கழியாகவும் , பருவங்களில் நான் இளவேனில் எனப்படும் வசந்த காலமாகவும் இருக்கிறேன் என்கிறான். வசந்த ருது வருஷத்தில் முதல் ருது. அதில் முதல் மாதம் சித்திரை மாதம் என்பதால் இதற்குத்  தனிச்  சிறப்பு உண்டு.

23. ஏன் மறுபடி மறுபடி சீதையைப் பிரிந்தான் இராமபிரான் ?

இராமாயணத்தில் பலகாலம் சீதையை ராமன் பிரிந்து இருப்பதாகப் பார்க்கின்றோம். முதலில் காட்டில் சீதையைப் பிரிகின்றான். ராவணன் சீதையை அசோகவனத்தில் சென்று மறைத்து வைக்கிறான். அதற்குப் பிறகு சீதையை மீட்ட பிறகு மறுபடியும் பிரிவு ஏற்படுகிறது.
இதற்கு என்ன காரணம் என்றால், ஒருமுறை பிருகு மகரிஷியின் பத்தினியை மகாவிஷ்ணு தன்னுடைய சக்கரத்தால் தலையை துண்டித்து விட்டதாகவும், அதனால் பிருகு மகரிஷி, நீ உன் மனைவியை பிரிந்து துன்பப்படுவாய் என்று சாபம் விட்டதாகவும், முனிவரின் சாபத்தை மகாவிஷ்ணு ஏற்றுக்கொண்டு, உம்முடைய சாபத்தின் பலனை நாம் ராமா வதாரத்தில் நிறைவேற்றுவோம் என்று உறுதி கொடுத்ததாகவும் பெரியவர்கள் சொல்லுகின்றார்கள்.

முனிவரின் வாக்கு பொய்யாகி விடக்கூடாது என்பதற்காக சாட்சாத் பகவானே இந்தத் துன்பத்தை ஏற்றுக் கொண்டான். இந்த சாபத்தின் மூலம் தேவர்களின் துன்பங்களைத் தீர்த்து வைத்தான். இங்கே (முனிவரின் சாபம் (தேவர்களுக்கு) வரமாகியது.

24. ஸ்ரீராம நவமியில் ராம நாமம் சொல்லுங்கள்

சித்திரை மாதத்தில் ஸ்ரீராமநவமி உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது . ஸ்ரீராமநவமி வேறு. ஸ்ரீ ராமாயணம் வேறு அல்ல. ஸ்ரீ ராமாயணத்தில் ஒரு சில சுலோகங்களையாவது நாம் அன்றைய தினம் பாராயணம் செய்ய வேண்டும். ஸ்ரீராம ஜெயத்தை தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். ராமநாமத்தை கோடிமுறை எழுதுவதற்கு “ராம கோடி” என்று பெயர்.
தினமும் நீராடியவுடன் பக்தியுடன் ராமநாமத்தை எழுத வேண்டும். தினமும் ஆயிரம் முறை இதை எழுதினால், 30 ஆண்டுகளில் இந்த எண்ணம் பூர்த்தியாகிவிடும். இப்படி எழுதிய நோட்டுக்களை பூஜை அறையில் வைத்து பூஜிக்க வேண்டும். இப்படி ராமநாமம்  எழுதி  பூஜித்தால் அந்த குடும்பத்தின் இருபத்தி ஒரு தலை முறை புண்ணிய பலத்தோடு வாழும்.

25. மூன்று முறை சொன்னால் சகஸ்ர முறை சொன்ன பலனா?
அற்புத சக்தி பொருந்திய இந்த மந்திரத்தின் மேன்மையை பரமேஸ்வரனே பார்வதி தேவிக்குச்  சொல்வதாக விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் வருகிறது. “ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே” என்ற இந்த ஸ்லோகத்தை தினமும் குறைந்தது, 11 முறை சொல்லுங்கள், வீட்டில் சுபிட்சம் தேடி வரும். ராம ராம ராம என மூன்று முறை சொன்னால், எப்படி ஆயிரம் நாமத்துக்கு சமமாகும் என, சந்தேகம் வரும். அதற்கு கணித அடிப்படையில் பதில் உள்ளது.

எழுத்துக்களுக்கு இணையாக எண்கள் உள்ளன. “ர” என்ற எழுத்துக்கு எண் 2ம், “ம” என்ற எழுத்துக்கு எண் 5ம் ஆகும். மேலே ஸ்லோகத்தில் “ராம” என்ற நாமம் மூன்று முறை வருகின்றது. அதாவது 2X5 2×5 2×5. என்றால் 2X5 =10×2=20×5=100×2=200×5=1000 ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே. இதுதான் ராம நாமத்தின் அற்புதம். அதனால்தான், ராம ராம ராம என்று சொன்னால், விஷ்ணு சகஸ்ரநாம பலன் கிடைக்கும். இதை வேறு விதமாகச் சொல்லலாம்.

“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்” (கம்பராமாயணம்:  சிறப்புப் பாயிரம் 14)

26. யார் இவ்வுலகில் பாக்கியவான்?

ராமனின்  குணங்கள் பற்றி அழகான தமிழ் பாடல் ஒன்று உண்டு. இராமா யணத்தின் சாரமே இந்தப் பாடலில் கொடுக்கப்பட்டிருக்கும். யார் இவ்வுலகில் பாக்கியவான் என்ற கேள்விக்கு விடையாக இப்பாடல் உள்ளது.

1. ராம நாமத்தை சொல்பவன் எவனோ பூமியில் அவனே பாக்கியவான்.
2. காம க்ரோதத்தை கட்டுப்படுத்தியே பூமியில் வாழ்பவன் பாக்கியவான்.
3. பொய் உரைக்காமல் மெய் சிதைக்காமல் வையத்தில் வாழ்பவன் பாக்கி யவான்.
4. கள்ளம் கபடுகள் உள்ளத்தில் இல்லாமல் வெள்ளை மனத்தவன் பாக்கியவான்.
5. நண்பர்களுடைய நலத்தின் கோரும் பண்புடையவனே பாக்கியவான்.
6.துன்பம் வந்தாலும் துக்கமில்லாமல் இன்பமாக்குபவன் பாக்கியவான்.
7. யாதொரு ஸ்திரீயையும் மாதா என்று எண்ணிடும் நேர்மையானவனே பாக்கியவான்.
27. ராமநவமி எப்படிக் கொண்டாட வேண்டும்?
ராமநவமி எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதை காஞ்சிப் பெரியவர் இப்படி கூறுகிறார். இது ஒரு பத்ததி(முறை)
1. இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஸ்ரீ ராமநவமியன்று முழுவதும் பட்டினி (சித்த உபாவாஸ) விரதம் இருக்க வேண்டும்.

2. ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிச் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லோரும் ஏதாவது சிறிது கோயில் சந்நதியிலோ, அல்லது பஜனை மடத்தின் முன்போ கூடி ஸ்ரீராம நாம மந்திரத்தை ஐந்து நிமிஷம் ஜபம் செய்து, பிறகு, “ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்” என்னும் பதின்மூன்று அட்சரங்கள் கொண்ட மந்திரத்தை, ஒருவர் முதலில் சொல்ல, எல்லோரும் அதைப் பின்பற்றிச் சொல்லிக்கொண்டு, ஊரைச் சுற்றி வந்து, முதலில் ஆரம்பித்த இடத்தை அடைந்து, அங்கு பத்து நிமிடம் பஜனை செய்து, பூர்த்தி செய்ய வேண்டும்.

3. மறுநாள் காலை அதே இடத்தில் கூடி, ஸ்ரீ ராமாவதாரத்தில் (கம்ப ராமாய ணத்தில்) ஸ்ரீ ராம பட்டாபிஷேகத்தை வர்ணிப்பதாக பாக்களைப் பாராயணம் செய்து, அல்லது ஸம்ஸ்கிருதம் படித்தவர்கள் எவரேனும் இருந்தால், அவரைக் கொண்டு வால்மீகி ராமாயணத்தில் உள்ள ஸ்ரீராம பட்டாபிஷேக ஸர்க்கத்தைப் பாராயணம் பண்ணும்படி செய்து, பத்து நிமிடம் பஜனை செய்து, ஏழை மக்களுக்கு அன்னம் பாலிக்க வேண்டும்.

28. இதிகாசம் என்பதன் பொருள் இதுதான்இராமாயணம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் பரவி இருக்கக்கூடிய ஒரு உன்னதமான இதிகாசம். இதி என்றால் “இவ்வாறு, இப்படி, இப்படியிப்படி, இப்படியாக, இவ்வாறாக” என்றெல்லாம் இடம் சார்ந்து பொருள்படும். (ஹ) என்பது வலியுறுத்தும் ஓர் அசைச்சொல். தமிழில் இப்படித்தான், இவ்வாறாகத்தான் என்பதில் வரும் ‘தான்’ என்னும் சொல் போல.கடைசி பகுதியாகிய  (ஆஸ) என்பதன் பொருள் “இருந்தது”.

அஸ் என்றால் “இரு” (நிகழ்காலம்), இதன் இறந்தகால வடிவம் ஆஸ. இதிகாசம் என்றால் “இப்படி நடந்தது” என்று பொருள்.அந்த ஆசிரியரே அதிலே ஒரு கதாபாத்திரமாக வருவார். அப்படிப்பட்ட இதி காசங்கள் இரண்டு. ஒன்று. இராமாயணம். இன்னொன்று மகா பாரதம்.வேதத்தில் அர்த்தத்தை தெளிவாக கதை போல் விளக்குவது இந்த இதி காசங்கள். மகாபாரதத்தில் வேத வியாசர் கதைக்குள் வருவார். இராமாயணத்தில் வால்மீகி  முனிவரே வருகிறார். அவர் தான் சீதையை தன் ஆசிர மத்தில் வளர்க்கிறார்.

29. இராமாயணம் முதலில் அரங்கேறியது எப்போது?

இராமாயணதிற்கு இன்னொரு விசேஷமும் உண்டு. இது இராமர் காலத்திலேயே அரங்கேறியது. அதுவும் அவர் ராஜ மண்டபத்திலேயே அரங்கேறியது. அதை இராமன் மக்களோடு மக்களாக அனுபவித்தான். இதை குலசேகர ஆழ்வார் அற்புதமாகப் பாடுகிறார்.

அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி
அரசு எய்தி அகத்தியன்வாய்த் தான் முன் கொன்றான்
தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி
உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்

செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எம்பெருமான் தன்சரிதை செவியால் கண்ணால்
பருகுவோம் இன்னமுதம் மதியோம்
ஒன்றே மிதிலைச் செல்வி (சீதை) உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள் (லவ குசர்கள்) செம்பவளத் திரள்வாய்த் திறந்து இனிமையாகப் பாட இராமன் தன் சரிதை(கதையை) கேட்டான் என்பது பொருள். அடுத்த வரியில் இந்த கதையைக் கேட்கும்போது அமுதம் கூட சுவையாய்த் தெரியாது. இதன் மூலம் இராமாயணம் கேட்க இனிமையானது என்பதும் தெரிகிறது. அதனால் தானே யுகம் யுகமாக இந்தக் கதையை மக்கள் ஆர்வமுடன் கேட்கிறார்கள்.

30.வேதத்தின் சூட்சுமம் சொல்வதுதான் இராமாயணம்

வேதத்தில் உள்ள சாரமான செய்திகளை நேரடியாக வேதம் படித்துத் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால், வேதம் என்ன தான் சொல்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் படிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக இராமாயணத்தைப்  படிக்க வேண்டும் என்பதால்,
கற்பார் ராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஓன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே

என்று நம்மாழ்வார் பாடினார். வேதத்துக்கு உரை செய்தவருமான ஸ்ரீ பாஷ்யம் எழுதியவருமான ஸ்ரீ ராமானுஜர்  இராமாயணத்தில் மிகுந்த ஆற்றலும் ஆர்வமும் கொண்டு இருந்தார். இராமாயணத்தில் சொல்லப்பட்ட சூட்சும தத்துவங்களைக்  கொண்டுதான்  ஸ்ரீ பாஷ்யத்தை அவர் எழுதினார் என்பார்கள். அதனால்தான் அமுதனார்,” படி கொண்ட கீர்த்தி ராமாயணம் என்னும் பக்தி  வெள்ளம்  குடிகொண்ட கோயில் எம் ராமானுஜன்” என்று பாடியிருக்கிறார். அதாவது எப்போதும் இராமாயணம் இராமானுஜர் நெஞ்சத்தில் இருக்குமாம். அதுதான் அவரை வழி நடத்தியதாம்.

இப்படி நம்மையும் வழி நடத்தி நல்வழி காட்ட இந்த ராம நவமியில் ஸ்ரீ ராமாயணத்தை பாராயணம் செய்வோம். ஸ்ரீ ராமனின் குணங்களைக் கொண்டாடுவோம்.ஸ்ரீ ராம நாமம் ஜெபம் செய்வோம்.உலகம் சர்வ சகோதர ஒற்றுமையுடன் வாழ பிரார்த்தனை செய்வோம். செயலிலும் முனைவோம். அது தான் நிஜமான ஸ்ரீ ராமநவமி.

—————-

பாவயாமி ரகுராமம் பவ்ய சுகுணாராமம் |

ரகு குலத்து ராமனை த்யானிக்கிறேன், அவன் தெய்வீக நற்குணங்களின் உருவானவன்(தோட்டம்).

பாவுக விதரணபரா பாங்கலீலா லசிதம் ||

ஒளிரும் தன் கடைக் கண்களாலேயே மகிழ்ச்சியும், வளமும் எல்லாருக்கும் தருவதில் மேலானவன்

தினகரான்வயதிலகம், திவ்யகாதி சுதசவனா
வன, ரசித சுபாஹுமுக வத, மஹல்யா பாவனம்,
அனக மீச சாப பங்க, ஜனகசுதா ப்ரானேசம்,
கன குபித ப்ருகுராம கர்வஹர, மிதசாகேதம்

சூர்ய குலத்திலகம், காதியின் மகன் யக்ஞம் காக்க
சுபாஹுவின் தலைமையிலான அரக்கர்களை அழித்தவன், அஹல்யைக்கு விமோசனம் அளித்தவன்,
தெய்வீகமான ஈஶனின் வில்லை முறித்து ஜனக புத்ரியின் உயிர் நாதனானவன்,
பெருங்கோபத்தோடு வந்த ப்ருகுராமனின் செறுக்கை அடக்கி, அயோத்தி திரும்பியவன்

விஹிதாபிஷேகம் அத விபின கதம் ஆர்யவாசா
சஹித சீதா சௌமித்ரீம், ஶாந்ததம ஶீலம்,
குஹநிலையகதம், சித்ரகூடாகத, பரத தத்த
மஹித ரத்னமய பாதுகம், மதனசுந்தராங்கம்

பட்டாபிஷேகம் தடைபட்ட பின் தந்தை சொற்படி வனம் சென்று, ஸீதை, ஸௌமித்ரியுடன் வசித்தவன். அமைதியே உருவானவன்.
குஹன் இருக்குமிடம் சென்றவன், சித்ரகூட பர்வதத்தில் வந்து, பரதனுக்கு தன் மஹிமை பொருந்திய ரத்ன பாதுகைகளை தந்தவன், மன்மதனின் அழகிய அங்கங்கள் உடையவன்.

விதத தண்டகாரண்ய கத விராத தலனம்,
சுசரித கடஜ தத் தானுபம் இதவைஷ்ணவாஸ்த்ரம்,
பதக வர ஜடாயு நுதம், பஞ்சவடீ விஹிதவாசம்,
அதிகோர சூர்ப்பணகா வசனாகத கராதி ஹரம்

அடர்ந்து விரிந்த தண்டகாரண்யத்தில் செல்லும் போது விராதனை அழித்தவன்,
சிறந்த குடமுனி(அகஸ்த்யர்) தந்த ஒப்பற்ற வைஷ்ணவாஸ்த்ரத்தைக் கொண்டவன்,
பக்ஷி ராஜனான ஜடாயுவால் பூஜிக்கப்பட்டு, பஞ்சவடீயில் வாசம் கொண்டவன்,
அதி கோர சூர்ப்பணகையின் சொல் கேட்டு வந்த கரன் முதலானோரைக் கொன்றவன்.

கனக மிருக ரூபதர கல மாரீச ஹர, மிஹ
ஸுஜன விமத தஶாஸ்ய ஹ்ருத ஜனகஜா ன்வேஷணம்,
அனகம், பம்பாதீர சங்கதா ஞ்சனேய, நபோமணி
தனுஜ ஸக்யகரம், வாலீ தனு தலன, மீஶம்

பொன்மானின் ரூபம் தரித்த வஞ்சக மாரீசனை வதைத்தவன்,
இங்கு உத்தமர்களை மதிக்காத (உற்றவர் சொல்கேளாத) தசமுகன் திருடிய ஜனகன் மகளை தேடி அலைந்தவன்,
பரிசுத்தமானவன், பம்பா நதிக்கரையில் ஆஞ்சநேயருடன் சேர்ந்தவன், விண்ணில் ஒளிரும் சூர்யபுத்ரனுடன் ஸ்னேஹம் கொண்டவன்,
வாலீயின் உடலை சாய்த்தவன், உயர்ந்தவன்

வானரோத்தம ஸஹித வாயுஸூனு கரா ர்ப்பித
பானுஶத பாஸ்வர பவ்ய ரத்னாங்குலீயம்,
தேன புன ரானீதா ன்யூன சூடாமணி தர்சனம்,
ஸ்ரீநிதி முததி தீரே ஶ்ரித விபீஷணா மிலிதம்

ஸுக்ரீவனுடன் இருந்தபோது, வாயு புத்ரன் கரங்களில், நூறு ஸூர்ய ஒளி பொருந்திய, தெய்வீகமான தன் ரத்ன மோதிரத்தைத் தந்தவன்,
பின்னர் அவனால் கொண்டுவரப்பட்ட குறையற்ற சூடாமணியைப் பெற்றவன்,
பொக்கிஷங்கள் உறையும் கடற்கரையில் அண்டின விபீஷணனை நண்பனாக்கிக் கொண்டவன்

கலித வரசேது பந்தம், கல நிஸ்ஸீம பிஶிதாஶன
தலனம், உரூ தஶகண்ட விதாரணம், அதி தீரம்,
ஜ்வலன பூத ஜனக ஸுதா ஸஹிதம் யாத சாகேதம்
விலஸித பட்டாபிஷேகம், விஸ்வபாலம், பத்மநாபம்

சிறந்த கடல் பாலத்தைக் கட்டினவன், வஞ்சகர்களான எல்லையற்ற நரமாமிசம் உண்ணும் அரக்கர்களை அழித்தவன்,
பத்து கழுத்துக்களுடன் உருக்கொண்டவனை அழித்தவன்,  எதற்கும் அஞ்சாதவன்,
நெருப்பால் தூய்மையாக்கப்பட்ட ஜனகபுத்ரியுடன் சேர்ந்தவன், அயோத்தி திரும்பியவன்,
ஒளிரும் பட்டாபிஷேகம் கொண்டவன், உலகைக் காப்பவன், பத்மநாபன்.

——————

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே (ஜகம்)
இகபர சுகமெலாம் அடைந்திடலாமே
இந்தக் கதை கேட்கும் எல்லோருமே
இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே
இணையே இல்லாத காவியமாகும் (ஜகம்)
அயோத்தி மன்னன் தசரதனின் அருந்தவத்தால்
அவன் மனைவி கௌசல்யா கைகேயி சுமித்திரை
கருவினிலே உருவானார் இராம லக்ஷ்மணர்
கனிவுள்ள பரதன் சத்ருக்னர் நால்வர்

நாட்டினர் போற்றவே நால்வரும் பலகலை
ஆற்றலும் அடைய மன்னன் வளர்த்து வந்தானே
காட்டினில் கௌசிகன் யாகத்தைக் காக்கவே
கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே

தாடகை சுபாஹுவை தரையினில் வீழ்த்தியே
தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே
பாதையில் அகலிகை சாபத்தைத் தீர்த்தபின்
சீர்பெரும் மிதிலை நகர் நாடிச் சென்றனரே
வீதியில் சென்றிடும் போதிலே ராமன்
சீதையைக் கன்னிமாட மீதிலே கண்டான்
காதலினால் இருவர் கண்களும் கலந்தன
கன்னியை வில்லொடித்து சொந்தமும் கொண்டான்
ஆணவத்தால் அறிவிழந்த பரசுராமன்
அகந்தை தனை அடக்கி ராமன் வெற்றி கொண்டான்
அரும் புதல்வ வீரத்தைக் கண்ட மன்னன்
அளவில்லா ஆனந்த நிலையைக் கண்டான் (ஜகம்) 
மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு
மணிமுடி சூட்டவே நாள் குறித்தானே
மக்கள் யாவரும் மகிழ்வுடன் நகரையே
மகர தோரணத்தால் அலங்கரித்தாரே
மந்தரை போதனையால் மனம் மாறிக் கைகேயி
மணிமுடி பரதன் சூடி நாட்டை ஆளவும்
வனத்தில் ராமன் பதினான்காண்டுகள்
வாழவும் மன்னனிடம் வரமதைக் கேட்டாள் 
அந்த சொல்லைக் கேட்ட மன்னர்
மரண மூர்ச்சை அடைந்த பின்னர்
ராமனையும் அழைக்கச் செய்தாள்
தந்தை உனை வனம் போகச் சொல்லி
தம்பி பரதனுக்கு மகுடத்தைத் தந்தார் என்றாள்
சஞ்சலமில்லாமல் அஞ்சன வண்ணனும்
சம்மதம் தாயே என வணங்கிச் சென்றான்
விஞ்சிய கோபத்தால் வெகுண்டே வில்லெடுத்த
தம்பி இலக்குவனை சாந்தமாக்கினான் 
இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே
மரவுரி தரித்து ராமன் செல்வது கண்டு
கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே
உடனென போவதென தடுத்தனர் சென்று 
ஆறுதல் கூறியே கார்முகில் வண்ணன்
அன்புடன் அவர்களிடம் விடையும் கொண்டானே
அன்னையும் தந்தையும் சொன்ன சொல் காக்கவே
அண்ணலும் கானகத்தை நாடிச் சென்றானே (ஜகம்) 
கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்
அன்பால் ராமபிரான் நண்பனாகினான்
பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்
அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான் 
ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை
ராமபிரான் மீது மையல் கொண்டாள்
கோபம் கொண்ட இளையோன் கூரம்பால் அவளை
மானபங்கம் செய்து விரட்டி விட்டான் 
தங்கையின் போதையால் தசகண்ட ராவணன்
ஜானகி தேவியை சிறையெடுத்தான்
நெஞ்சம் கனலாகி கண்கள் குளமாகி
தம்பியுடன் தேவியைத் தேடிச்சென்றான்
ராமன் தேடிச் சென்றான் 
வழியிலே ஜாடாயுவால் விவரமெல்லாம் அறிந்தான்
வாயு மைந்தன் அனுமானின் நட்பைக் கொண்டான்
ஆழியைத் தாண்டியே இலங்கை சென்ற அனுமான்
அன்னையை அசோகவனத்தில் கண்டான் 
ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான் அனுமான்
லங்காபுரியைத் தீக்கிரையாக்கி கிஷ்கிந்தை சென்றான்
கண்டேன் அன்னையை என்றே ராமனை சேவித்தே நின்றான்
கடலைக் கடந்து ஐயன் வானர சேனையுடன் சென்றான்
விபீஷணனின் நட்பைக் கொண்டான் ராவணனை வென்றான்
வீரமாதா ஜானகி தேவியைத் தீக்குளிக்கச் செய்தான்
கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்
கலங்கிய மக்கள் களிப்புற ராமன் அரசுரிமை கொண்டான் 
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே 
ஸ்ரீ ராகவம் தசரதாத்மஜம் அப்ரமேயம்
சீதாபதிம் ரகு குலான்வய ரத்னதீபம்
ஆஜானுபாகும் அரவிந்த தளாயதாக்ஷம்
ராமம் நிசாசர விநாசகரம் நமாமி
————————————————————————————————————————–

அயர்வறும் அமரர்கள் அதிபதியான எம்பெருமானின் திவ்ய தேசங்கள் நூற்றெட்டு என்று நம் முன்னோர் கூறுவது வழக்கம்.
இவையெல்லாம் மயர்வறு மதிநலம் அருளப் பெற்ற திவ்ய ஸூரிகள் எனப்படும் ஆழ்வார்களால் மங்களாசாஸனம் பண்ணப் பெற்றவை.
இந்த எல்லாத் திவ்யதேசங்களிலும் எம்பெருமான் அர்ச்சாரூபியாய் ஸகல ஜனங்களுக்கும் ஸர்வ அபேக்ஷிதங்களையும் கொடுத்துக் கொண்டும்,
‘அர்ச்ய: ஸர்வ-ஸஹிஷ்ணு:’ என்ற ரீதியில் நம்முடைய எல்லா அபராதங்களையும் பொறுத்துக்கொண்டும் ஸேவை ஸாதிக்கிறான்.
இவை அனைத்துக்குமே ஒவ்வோர் அம்சத்தை முன்னிட்டு உத்கர்ஷம் உண்டு.

இப்படி இந்த நான்கு திவ்வ தேசங்களுக்கும் பெருமை உண்டு.
அதிலும் பெருமாள் கோவிலுக்கு மற்றும் பல விசேஷ பெருமைகள் உள்ளன.
இது காஞ்சி என்று பெயர் பெற்று விளங்குகிறது.
க என்று சொல்லப்படும் பிரம்மாவினால் பூஜிக்கப் பெற்ற பகவான் வசிக்கும் திவ்ய தேசமானபடியால் இதற்கு இந்த பெயர் வந்தது.
இதன் மகிமையை ஹம்ஸ ஸந்தேசத்தில் ஸ்ரீஸ்வாமி தேசிகன் பரக்ககக் கூறியிருக்கிறார்.

தாமாஸீதந் ப்ரணம நகரீம் பக்திநம்ரேண மூர்த்நா
ஜாதாமாதெள க்ருத யுக முகே தாதுரிச்சாவசேந |
யத்வீதீநாம் கரிகிரி பதேர் வாஹவேகாவதூதாந்
தந்யாந் ரேணூந் த்ரிதச பதயோ தாரயந்த்யுத்தமாங்கை: || என்று.

தேவப்பெருமாளின் உத்ஸவம் விமரிசையாக நடக்கிறது.
அப்பொழுது எம்பெருமான் கருடன், ஆனை, பரி முதலிய வாகனங்களில் எழுந்தருளுகிறார்.
வாகன ஆரூடனான எப்பெருமானை ஸ்ரீபாதம்தாங்கிகள் மிகவும் அழகாக எழுந்தருளப் பண்ணுகிறார்கள்.
ஒவ்வொரு வாகனத்திலும் தேவாதிராஜன் எழுந்தருளும்போது அதிக அதிகமான சோபையுடன்
கண்டவர் தம் மனம் கவரும்படி ஸேவைஸாதித்து அநுக்ரகிக்கிறான்.
அந்த திவ்யதேசத்தில் ஸ்ரீபாதம் தாங்கிகள் மிகக் கடும் விசையுடன் எழுந்தருளப் பண்ணுவது வழக்கம்.
அவர்களுடன் ஸேவார்த்திகள் கூட உடன் செல்வது முடியாது.
அந்தச் சமயத்தில் ஸ்ரீபாதம் தாங்கிகளின் திருவடிகளிலிருந்து பாததூள் வெளிக் கிளம்பி ஆகாயம் வரையில் பரவுமாம்.
வாகனாதிரூடனான தேவப்பெருமாளை ஸேவிப்பதற்காக ஸ்வர்க்க லோகத்திலிருந்து ஆகாயத்தில் வந்துள்ள
தேவர்கள் அந்தத் தூளைத் தங்கள் சிரத்தினாலே தாங்கிக் கொள்வார்கள்.
அப்படிப் பட்ட மகிமையைப் பெற்றது இந்தத் திவ்யதேசம்.

மேலும், இந்தத் திவ்யதேசத்தின் மகிமை வாசாமகோசரம் என்று எண்ணி ஸ்ரீஸ்வாமி தேசிகன்,
வந்தே ஹஸ்தி கிரீசஸ்ய வீதீ சோதக கிங்கராந்” என்று அருளிச்செய்தார்.
தேவப் பெருமாளின் வீதியைச் சுத்தம் செய்கிற வேலைக்காரர்களை வணங்குகிறேன் என்றால் இதன் மகிமையை அளக்க முடியாது.

‘தேவப் பெருமாளின் வீதியாவது வேதாந்தம்.
அந்த வேதாந்தத்தின் அர்த்தத்தை அபார்த்த நிரஸந பூர்வகமாக வெளிப்படுத்தினவர்கள்
நம் ஆசார்யர்கள். அவர்களை வணங்குகிறேன்” என்பது அதன் உட்கருத்து.

இந்தத் திவ்யதேசத்து எம்பெருமானான பேரருளாளனாலே அல்லவா நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயம் விளங்கிற்று?
ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்த வள்ளல் ராமாநுஜர் முதலில் யாதவப்பிரகாசனிடம் ஸாமானிய சாஸ்திரங்களையும் சில வேதாந்தபாகங்களையும் கற்று,
அவர் மூலமாகத் தமக்கு அவத்யம் வருவதை அறிந்து, கங்கா யாத்திரையிலிருந்து மீண்டு திரும்பி வந்து
திகைத்து நின்றபோது, தேவப் பொருமாள் வேடனாகவும் பிராட்டி வேட்டுவச்சியாகவும் வேடம் பூண்டு இவரைக் காத்தார்கள்.
மேலும், திருக்கச்சி நம்பி மூலமாக இந்த எம்பெருமான் ஆறு வார்த்தைகளை ராமாநுஜருக்குத் தெரிவித்தான்.
இதன் மூலமாக நம் ராமாநுஜர் ஸ்ரீபாஷ்யகாரரானார்.

வேதாந்த வீதியை முள், கல் முதலிய தோஷங்கள் இல்லாமல் சீர்ப்படுத்திச் சோதித்துக் கொடுத்து,
இதரர் சொல்லும் அபார்த்தங்களையும் கண்டித்து, ஸித்தாந்தத்தை ஸ்தாபித்தார்.
ஆக, காஞ்சீபுரம் இல்லாவிட்டால் அந்த எம்பெருமான் எங்கே! அந்த எம்பெருமான் இல்லாவிட்டால் ஸ்ரீபாஷ்யகாரரை உணர்த்துபவர் யார்?
நம் ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தமே விளங்குவது எப்படி?
ஆக ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்த ஸ்தாபனமே இந்த திவ்யதேசத்தின் பிரபாவத்தினால் ஏற்பட்டது என்பதை மறக்க முடியாது. மறைக்கவும் முடியாது.

மேலும் கருட உத்ஸவம் இந்த ஊரில்தான் விசேஷம்.
‘அத்தியூரான் புள்ளையூர்வான்’ என்று கருட உத்ஸவத்தை முன்னிட்டு ஆழ்வார்கள்
இந்த திவ்ய தேசத்தை மிகச் சிறப்பாக கூறியுள்ளார்கள் என்பதும் சர்வ விதிதம்.
இப்படி பல படியால் காஞ்சி என்ற திவ்ய தேசத்திற்கு மகிமை ஏற்பட்டுள்ளது.
அத்தி யூரான் பபுள்ளை யூர்வான் அணிமணியின்
துத்தீ சேர் நாகத்தின் மேல் துயில்வான். முத்தீ
மறையாவான், மா கடல் நஞ்சுண்டான். தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான், என்பது பூதத்தாழ்வார் பாசுரம்.
இப்படி மங்களாசாஸனாத் ஹிமயமலை முதல் கடல் வரையில் தேசவரை கருடோத்ஸவ விசேஷம்
தேவப்பெருமாளுக்கே.
இவர் இரவில் நாகத்தின் மேல் சயனித்துக் கொள்கிறார்.
காலையானதும் எழுந்து விடுகிறார்.
பணிபதிசயனீயாத உத்தித: த்வம் ப்ரபாதே என்பது தேசிக ஸ்ரீஸூக்தி.

இதற்கு மற்றொரு வகையிலும் பிரபாவம் உண்டே

இருபத்துநான்கு என்ற எண்ணிக்கை இவ்வூரில் பல விஷயங்களில் உள்ளது.
குடை இருபத்துநான்கு சாண் கொண்டது.
வாணவெடிகள் இருபத்துநான்கு வகைகள்.
த்வஜஸ்தம்பத்தில் இருபத்துநான்கு அடுக்கடுக்காக போடப்படும் கவசங்கள் உள்ளன.
அனந்த ஸரஸ்ஸில் இருபத்து நான்கு படிகள்.
கோவின் பிராகாரச் சுவர் இருபத்துநான்கு அடுக்குகள் கொண்டது.
கோவிலின் கீழிலிருந்து திருமலைக்குச் சென்று எம்பெருமானை ஸேவிப்பதற்கு படிகள் உள்ளன.
இவையும் இருபத்துநான்கே.
இப்படி இருபத்துநான்கு எண்ணிக்கை கொண்ட விசேஷம் இவ்வூரில்தான் உள்ளது.

ஸ்ரீமத் ராமாயணம் இருபத்துநான்காயிரம் கிரந்தங்கள் கொண்டது என்பது எல்லாருக்கும் தெரிந்ததே.
இதற்கு காரணம் இருபத்து நான்கு எழுத்துக்கள் கொண்ட காயத்ரியின் அர்த்தத்தை விவரிப்பதற்காக
அந்த மகா காவியம் அவதரித்தபடியால் இருபத்துநான்காயிரம் கிரந்தங்கள் கொண்டதாக வால்மீகி பகவான் அருளிச்செய்தார்.
அவ்வாறே அந்த மகா காவியத்தின் பிரதான அர்த்தமான பகவானை அறிந்துகொள்வதற்கு
இருபத்துநான்கு எண்ணிக்கை கொண்ட விசேஷங்கள் இந்த ஆலயத்தில் ஏற்பட்டிருக்கின்றன.
‘காயத்ரியில் ப்ரதான ப்ரதிபாத்யமான அர்த்தம்,
ஸ்ரீராமாயணத்தில் ப்ரதான ப்ரதிபாத்யமான அர்த்தம்
தேவப் பெருமாளே’ என்பதை அறிவிக்கவே இந்த ஆலயத்தில் இந்த விசேஷம் என்று எல்லாரும் சொல்லுவர்.

இப்படிச் சொல்வது ஒரு புறம் இருக்கட்டும்.

அப்பைய தீக்ஷிதர் என்ற மகான் இந்த விசேஷத்தின் பெருமையை ரஸகனமாக அருளிச் செய்திருக்கிறார்.
இவர் அத்வைத மதத்தைச் சேர்ந்தவர்;-ஆயினும் ஸ்ரீஸ்வாமி தேசிகனிடத்தில் மிக்க பக்தி பெற்றவர்.
ஸ்ரீதேசிகனின் பெருமையை நன்கறிந்து, அவர் இயற்றிய யாதவாப்யுதயம் என்ற மகா காவியத்திற்கு வியாக்கியானம் செய்தவர்.
‘ஸ்ரீமத்வேங்கட நாதஸ்ய காவ்யேஷு லலிதேஷ்வபி | பாவா: ஸந்தி பதேபதே’ என்று ஸ்வாமியின் காவியத்தைப் பலவாறு போற்றியவர்.
திருமலைக்குப் போகும்போது அமைந்துள்ள இருபத்துநான்கு படிகள் விஷயமாக
இந்த அப்பைய தீக்ஷிதர் இயற்றிய சுலோகத்தை இங்கே குறிப்போம் –

ஸம்ஸாரவாரி நிதிஸந்தரணைக போத –
ஸோ பாநமார்க சதுருத்தர விம்சதிர் யா |
தாமேவ தத்வ விதிதம் விபுதோதிலங்க்ய
பச்யந் பவந்த முபயாதி கரீச நூநம் ||

வேதாந்த சாஸ்திரத்தில் இருபத்துநான்கு தத்துவங்கள் கூறப்பட்டிருக்கின்றன.
ப்ரக்ருதி, மஹத், அஹங்காரம், ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், ப்ருத்வி, கர்மேந்திரியம் ஐந்து,
ஜ்ஞாநேந்திரியம் ஐந்து, பஞ்ச தந்மாத்ரைகள், மனம் ஆக இவையெல்லாம் அசேதனத்தின் பிரிவுகள்,
சேதனன் என்பவன் ஜீவன்,
இவை எல்லாவற்றிற்னும் மேற்பட்டவன் பரமசேதனன் பரமாத்மா.
தன்னையும் அசேதனமான இருபத்துநான்கு தத்துவங்களையும் நன்கு அறிந்தவன்தான் சுலபமாகப் பரமாத்மாவை உணரவும் அடையவும் முடியும்.
அசேதனமான இந்தப் பொருள்களை அறிந்து கொள்வது, ‘அவை தோஷத்தோடு கூடியவை’ என்று அறிந்து விடுவதற்காக.
இப்படி அறிந்தவன் தான் ஸம்ஸார ஸாகரத்திலிருந்து விடுபட்டுப் பரமாத்மாவை அடைவான்.
இந்த அசேதனம் இருபத்து நான்கு வகையாக இருக்கிறபடியால் இவை இருபத்துநான்கு படிகளாகின்றன.
‘ஸம்ஸார ஸாகரத்தை தாண்டுவதற்கு, சேதனனான இவன் தான் இருபத்து நான்கு படிகளை ஏறி
ஸ்ரீ வைகுண்ட லோகம் போல் உள்ள அத்திகிரியில் இருக்கும் தேவாதிராஜனான பேரருளாளனை ஸேவிப்பது
மோக்ஷத்தை அடைவது போல் ஆகிறது’ என்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து.
இப்படி வேதாந்தத்தில் சொல்லக் கூடிய விசேஷ அர்த்தத்தைக் காட்டுவதற்காகவே கீழிருந்து மேலுள்ள
பகவானை ஸேவிப்பதற்கு இருபத்துநான்கு படிகள் கட்டப்பட்டு அமைந்திருக்கின்றன போலும்.
இப்படிப பற்பல விசேஷங்களினால் காஞ்சி என்ற திவ்ய தேசத்திற்கு ஸர்வ திவ்யதேங்களைக் காட்டிலும்
வாசா மகோசரமான வைபவம் ஏற்பட்டுள்ளது.

நான்முகனே உத்தமமான இந்த திவ்ய தேசத்தில் அச்வமேத யாகம் செய்தான்.
அதில் இந்திரன் முதலான மந்திரங்களைச் சொல்லி யாகம் நடந்தது.
இந்திராதிகளைச் சொல்லியும் ஹவிர்பாகத்தைப் பெற வரவில்லை. ஏன் என்றால்
இந்திரனைக் குறித்தா இவர் யாகம் செய்தது. பகவானைக் குறித்து அல்லவா.
ஆனால் இந்த ஹவிர்பாக ரஸத்தை அவர்கள் நாக்கால் பருக வில்லை. பின் கண்ணால் பருகினார்கள்.

எம்பெருமான் பிரஹ்மாவினுடைய தவத்துக்கு வசப்பட்டு நேராக ஸேவை ஸாதித்தான்.
எல்லோரும் கண்டு ஆநந்தித்தனர் என்றார் ஸ்வாமி தேசிகன்.
இந்த வேள்வியை தடுக்க பிரமன் பத்நியான ஸர்ஸ்வதி வேகவதி நதியாக வந்தாள்.
அது ஸமயம் பகவான் யதோக்தகாரியாக அவளை வர வொட்டாமல் தடுத்தான்.
யாகம் நடந்தது பலமும் கிட்டியது. ஒரே பகவான் தன்னை இரண்டுப் பிரிவாகச் செய்து ஸேவை ஸாதித்தான்.
ஒன்று யதோக்தகாரி.
இரண்டாவது தேவப் பெருமான்.

ஆக இவரே உபாயம். ப்ராப்யம் என்பதை தெரியப் படுத்தினார்.
ஸ்வாமி தேசிகன் இதை
ஏகம் வேககதீ மத்யே ஹஸ்தி சைலே சத்குச்யதே.
உபாயப் பல பாவேன ஸ்வயம் வ்யக்தம் பரம்மஹ: என்றார்.

அப்பய தீக்ஷிதரின் வரதராஜ ஸ்தோத்திரத்தில் இன்னும் ஒரு ஸ்லோகத்தை பார்ப்போம்.
இவர் யாதவாப்யுதயம் என்னும் காப்பியத்துக்கு உரை எழுதினார் என்பது மாத்திரமில்லை.
வ்யாஸஸூத்ரத்துக்கும்
ராமாநுஜர் எழுதிய பாஷ்யத்தை அநுஸரித்து நயமயூகமாலிகா என்னும் நூல் எழுதியுள்ளார்.

அவரது மற்றொரு ஸ்லோகம் .
தேவாதிராஜனே நான் உன்னிடம் இரண்டு குற்றம் செய்துள்ளேன்.
அதைப் பொருத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.

அதற்கு தேவப் பெருமாள் பலகுற்றங்கள் உள்ளனவே
ஆக இரண்டே என்று எப்படி என்ன இது விசேஷ குற்றம் என்கிறார்.

முன் பிறவியில் நான் உன்னை வணங்காதது ஒன்று. அதெப்படி தெரியும் என்றார்.
இப்பொழுது அழுக்குடல் வந்ததைக் கொண்டே இதை அறியலாம் என்றார்.

மற்றொன்று இப்பொழுது உன்னை வணங்கியதால் அடுத்த பிறவி இல்லை.
ஆக அப்பொழுது வணங்க ப்ரஸக்தி இல்லையே.

ஆக இந்த இரண்டையும் பொருத்துக் கொள் என்று ரஸகனமான பத்யம் பாடினார்.
அந்த ஸ்லோகம் இதோ –

வபூ: ப்ராதுர் வாவாத் அநுமிதம் இதம் ஜன்மநீ புரா முராரே ந க்வாபி க்வசிதபி பவந்தம் ப்ரணதவான் |
நமன் முக்த: ஸ்ப்ரதி அதநு: அக்ரேபி அநதிமான் கரீச க்ஷந்தவ்யம் ததிதம் அபராத த்வயமபி ||

—————————

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குருவே நாம :
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரும் தேவித் தாயார் ஸமேத பேர் அருளாளன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ ப்ரஹ்லாத க்ருதம் ஸ்ரீ ஹரி அஷ்டகம்–ஶ்ரீ வேங்கடேஶ அஷ்டகம்–ஶ்ரீ ஶ்ரீனிவாஸ க³த்³யம் –ஸ்ரீ ஹநுமத் அஷ்டகம்–ஸ்ரீ ஹநுமத் அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்–

February 23, 2023

ஹரிர் ஹரதி பாபாநி துஷ்ட சித்தைர் அபி ஸ்ம்ருத
அநிச்சயா அபி ஸம் ஸ்ப்ருஷ்டோ தஹத்யேவ ஹி பாவக || 1 ||

ஹரி திருநாம உச்சாரணம் -தானே பாப மலையை பற்றி தூள் தூளாக்குமே
நாம் மன ஸஹாயம் இல்லாமலே -இச்சையும் இல்லாமலே-துஷ்டமான சிந்தனை இருந்து கொண்டே சொன்னாலும் பலன் கிட்டும் என்றால்
ஆசையுடன் ஆனந்தமாக சொல்லுவாருக்கு பலன் நிச்சயம் கைமுதிக நியாயம் அன்றோ

அழுக்கு உடன் கங்கையில் நீராடினாலும் பாபங்களை போக்கும் அன்றோ
விரும்பாமல் நெருப்பைத் தொட்டாலும் சுடுமே

பஸ்யதே ஹரத்வம் -ஆத்ம ஸ்வரூபம் திருடப்படுகிறது
இவனோ நமது பாபங்களை அபஹரிக்கிறான் –
இது ஒன்றே நாம் சேமித்து வைத்தது
தூங்கும் பொழுதும் ஸ்வப்னம் மூலம் பாபங்களை போக்கி அருளுகிறானே

———

ஸ கங்கா ஸ கயா சேது ஸ காசி ஸ ச புஷ்கரம்
ஜிஹ்வாக்ரே வர்த்ததே யஸ்ய ஹரிர் இத் யஷர த்வயம் || 2 ||

ஹரி த்வய அக்ஷரம் ஸக்ருத் உச்சாரணம்
கங்கையில் நீராடிய புண்யமும்-சேது நீராடிய புண்யமும்
கயாவில் செய்யும் ஸ்ரார்த்த புண்யமும்
காசி புஷ்காரம் போன்ற தீர்த்த யாத்திரைகள் புண்யமும்–கிட்டும்

கங்கா கயா சேது காசி -இவையும் த்வய அக்ஷரங்கள்-பாவானத்வம்

———-

வாரண ஸ்யாம் குரு க்ஷேத்ரே நைமி சாரண்ய ஏவ ச
யத் க்ருதம் தேந யத் ப்ரோக்தம் ஹரிர் இத் யஷர த்வயம் || 3 ||

ஸ்ரீ வாரணாசி ஸ்ரீ குறு க்ஷேத்ரம் ஸ்ரீ நைமிசாரண்யம்
இவற்றில் செய்யும் புண்ய காரியங்களின் பலன்கள் எல்லாமே
ஹரி நாம சங்கீர்த்தனம் நித்தியமாக செய்வதாலேயே கிட்டுமே
ஹரி நாம சங்கீர்த்தனம் தானே அனைத்து புண்ய ஸ்தலங்களில் செய்யும் புண்ய பலன்கள் அனைத்தையுமே அளித்து அருளுமே

————–

ப்ருதிவ்யாம் யாநி தீர்தாநி புண்யான் யாயதனாநி ச
தாநி ஸர்வாண்ய சேஷாணி ஹரிர் இத் யஷர த்வயம் || 4 ||

உலகில் உள்ள அனைத்து திவ்ய தேச தீர்த்தயாத்ரைகளால் பெறும் பலன்களையும்
ஹரி நாம சங்கீர்த்தனம் கொடுத்து அருளும் அன்றோ

————–

கவாம் கோடி ஸஹஸ்ராணி ஹேம கன்யா ஸஹஸ்ரகம்
தத்தம் ஸ்யாத்தேந யேந யுக்தம் ஹரிர் இத் யஷர த்வயம்|| 5 ||

ஆயிரம் ஆயிரம் கோ தான பலன்களும்
ஆயிரம் ஆயிரமான கன்யா தானம் செய்யும் பலன்களும்
ஹரி நாம சங்கீர்த்தனம் கொடுத்து அருளும் அன்றோ

————

ருக் வேதோ அத யஜுர் வேத ஸாம வேதோ யப் யதர்வண
அதீதஸ் தேந யேந யுக்தம் ஹரிர் இத் யஷர த்வயம் || 6 ||

ரிக் வேத யஜுர் வேத சாம வேத அதர்வண வேத
அனைத்து வேத பாராயண பலன்களும்
ஹரி நாம சங்கீர்த்தனம் கொடுத்து அருளும் அன்றோ

———–

அஸ்வ மேதைர் மஹா யஜ்ஜைர் னரமேதைஸ் தவைவ ச
இஷ்டம் ஸ்யாத்தேந யேந யுக்தம் ஹரிர் இத் யஷர த்வயம் || 7 ||

அஸ்வமேத யாகங்கள்
மற்றும் அனைத்து யாகங்கள் செய்தால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும்
ஹரி நாம சங்கீர்த்தனம் கொடுத்து அருளும் அன்றோ

———–

ப்ராண ப்ரயாண பாதேயம் ஸம்ஸார வ்யாதி நாஸனம்
துக்காத் யந்த பரித்ராணம் ஹரிர் இத் யஷர த்வயம் || 8 ||

ஸ்ரீ ஹரி நாம ஸங்கீர்த்தனமே
அர்ச்சிராதி கதிக்கும் பாதேயம் புண்டரீகாக்ஷ திருமணம் அன்றோ
இதுவே ஸம்ஸார மாயக்கூட்டை அறுத்து முடித்து
பேற்றையும் பெற்றுக் கொடுத்து
நித்ய பரம புருஷார்த்தமான ப்ரீதி காரித கைங்கர்யங்களையும் அளிக்குமே

————

பக்த பரிகரஸ் தேந மோஷாய கமனம் ப்ரதி
ஸக்ருத் உச்சாரிதம் யேந ஹரிர் இத் யஷர த்வயம் || 9 ||

ஸ்ரீ ஹரி நாம ஸக்ருத் ஸங்கீர்த்தனம் ஒன்றே
ஸம்ஸார தளைகளை போக்கி அளிக்கும்
இத்தைத் தவிர வேறே ஒன்றுமே வேண்டாமே

————–

ஹர் அஷ்டகம் இதம் புண்யம் ப்ராத ருத்தாய ய படேத்
ஆயுஷ்யம் பலம் ஆரோக்யம் யஸோ வ்ருத்திஸ் ஸ்ரயா வஹம் || 10 ||

இந்த ஸ்ரீ ஹரி அஷ்டக ஸ்தோத்ரம் நித்தியமாக அநுஸந்திக்க
ஆயுஸ்ஸு ஐஸ்வர்யம் ஆரோக்யம் செல்வம் கீர்த்தி
அனைத்தையும் பெற்று
பூ ஸூரர்களாக இருக்கப் பெறுவர் -என்று பலன் அருளிச் செய்கிறார் –

———————

ப்ரஹ்லாதேந க்ருதம் ஸ்தோத்ரம் துக்க சாகர சோஷணம்
ய படேத்ஸ நரோ யாதி தத் விஷ்ணோ பரமம் பதம் || 11 ||

அனந்த கிலேச பாஜனமான கொடிய வெந்நரகமான ஸம்ஸாரத்திலேயே
அனைத்தும் பெற்று நிலத்தேவர்களாக இருந்து
அந்தமில் பேர் இன்பம் பெற ஸ்ரீ வைகுண்டம் சென்று
நித்ய ஸூ ரிகள் உடன் ஒரே கோர்வையாக இருக்கப் பெறுவர்
என்று பலன் சொல்லித் தலைக் கட்டி அருளுகிறார் –

——–

இதி ப்ரஹ்லாத க்ருதம் ஸ்ரீ ஹரி அஷ்டகம் ஸம் பூர்ணம்

————————————————————————–

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டகம் 

வேங்கடேஶோ வாஸுதே³வ꞉ ப்ரத்³யும்நோ(அ)மிதவிக்ரம꞉ ।
ஸங்கர்ஷணோ(அ)நிருத்³த⁴ஶ்ச ஶேஷாத்³ரிபதிரேவ ச ॥ 1 ॥

ஜநார்த³ந꞉ பத்³மநாபோ⁴ வேங்கடாசல வாஸிந꞉ ।
ஸ்ருஷ்டி கர்தா ஜக³ந்நாதோ² மாத⁴வோ ப⁴க்த வத்ஸல꞉ ॥ 2 ॥

கோ³விந்தோ³ கோ³பதி꞉ க்ருஷ்ண꞉ கேஶவோ க³ருட³த்⁴வஜ꞉ ।
வராஹோ வாமநஶ்சைவ நாராயண அதோ⁴க்ஷஜ꞉ ॥ 3 ॥

ஶ்ரீத⁴ர꞉ புண்ட³ரீகாக்ஷ꞉ ஸர்வதே³வஸ்துதோ ஹரி꞉ ।
ஶ்ரீந்ருஸிம்ஹோ மஹா ஸிம்ஹ꞉ ஸூத்ராகார꞉ புராதந꞉ ॥ 4 ॥

ரமா நாதோ² மஹீ ப⁴ர்தா பூ⁴த⁴ர꞉ புருஷோத்தம꞉ ।
சோல புத்ர ப்ரிய꞉ ஶாந்தோ ப்³ரஹ்மாதீ³நாம் வரப்ரத³꞉ ॥ 5 ॥

ஶ்ரீநிதி⁴꞉ ஸர்வ பூ⁴தாநாம் ப⁴ய க்ருத்³ப⁴ய நாஶந꞉ ।
ஶ்ரீராமோ ராமப⁴த்³ரஶ்ச ப⁴வப³ந்தை⁴கமோசக꞉ ॥ 6 ॥

பூ⁴தா வாஸோ கி³ரி வாஸ꞉ ஶ்ரீநிவாஸ꞉ ஶ்ரிய꞉ பதி꞉ ।
அச்யுதாநந்த கோ³விந்தோ³ விஷ்ணுர் வேங்கட நாயக꞉ ॥ 7 ॥

ஸர்வ தே³வைகஶரணம் ஸர்வ தே³வைக தை³வதம் ।
ஸமஸ்ததே³வகவசம் ஸர்வ தே³வஶிகா²மணி꞉ ॥ 8 ॥

இதீத³ம் கீர்திதம் யஸ்ய விஷ்ணோரமிததேஜஸ꞉ ।
த்ரிகாலே ய꞉ படே²ந்நித்யம் பாபம் தஸ்ய ந வித்³யதே ॥ 9 ॥

ராஜத்³வாரே படே²த்³கோ⁴ரே ஸங்க்³ராமே ரிபுஸங்கடே ।
பூ⁴தஸர்பபிஶாசாதி³ப⁴யம் நாஸ்தி கதா³சந ॥ 10 ॥

அபுத்ரோ லப⁴தே புத்ராந் நிர்த⁴நோ த⁴நவாந் ப⁴வேத் ।
ரோகா³ர்தோ முச்யதே ரோகா³த்³ப³த்³தோ⁴ முச்யேத ப³ந்த⁴நாத் ॥ 11 ॥

யத்³யதி³ஷ்டதமம் லோகே தத்தத் ப்ராப்நோத்யஸம்ஶய꞉ ।
ஐஶ்வர்யம் ராஜ ஸம்மாநம் பு⁴க்தி முக்தி ப²ல ப்ரத³ம் ॥ 12 ॥

விஷ்ணோர் லோகைகஸோபாநம் ஸர்வ து³꞉கை²கநாஶநம் ।
ஸர்வைஶ்வர்ய ப்ரத³ம் ந்ரூணாம் ஸர்வ மங்க³ளகாரகம் ॥ 13 ॥

மாயாவீ பரமாநந்த³ம் த்யக்த்வா வைகுண்ட²முத்தமம் ।
ஸ்வாமி புஷ்கரிணீ தீரே ரமயா ஸஹ மோத³தே ॥ 14 ॥

கல்யாணாத்³பு⁴தகா³த்ராய காமிதார்த²ப்ரதா³யிநே ।
ஶ்ரீமத்³வேங்கடநாதா²ய ஶ்ரீநிவாஸாய தே நம꞉ ॥ 15 ॥

இதி ஶ்ரீ ப்³ரஹ்மாண்ட³புராணே ப்³ரஹ்மநாரத³ஸம்வாதே³ வேங்கடகி³ரிமாஹாத்ம்யே ஶ்ரீ வேங்கடேஶ அஷ்டகம் ।

——————–

ஶ்ரீ ஶ்ரீனிவாஸ க³த்³யம் 

ஶ்ரீமத³கி²லமஹீமண்ட³லமண்ட³னத⁴ரணீத⁴ர மண்ட³லாக²ண்ட³லஸ்ய,
நிகி²லஸுராஸுரவன்தி³த வராஹக்ஷேத்ர விபூ⁴ஷணஸ்ய,
ஶேஷாசல க³ருடா³சல ஸிம்ஹாசல வ்ருஷபா⁴சல நாராயணாசலாஞ்ஜனாசலாதி³ ஶிக²ரிமாலாகுலஸ்ய,
நாத²முக² போ³த⁴னிதி⁴வீதி²கு³ணஸாப⁴ரண ஸத்த்வனிதி⁴ தத்த்வனிதி⁴ ப⁴க்திகு³ணபூர்ண ஶ்ரீஶைலபூர்ண
கு³ணவஶம்வத³ பரமபுருஷக்ருபாபூர விப்⁴ரமத³துங்க³ஶ்ருங்க³
க³லத்³க³க³னக³ங்கா³ஸமாலிங்கி³தஸ்ய, ஸீமாதிக³ கு³ண ராமானுஜமுனி நாமாங்கித ப³ஹு பூ⁴மாஶ்ரய
ஸுரதா⁴மாலய வனராமாயத வனஸீமாபரிவ்ருத விஶங்கடதட நிரன்தர விஜ்ரும்பி⁴த ப⁴க்திரஸ
நிர்க⁴ரானந்தார்யாஹார்ய ப்ரஸ்ரவணதா⁴ராபூர விப்⁴ரமத³ ஸலிலப⁴ரப⁴ரித மஹாதடாக மண்டி³தஸ்ய, கலிகர்த³ம
மலமர்த³ன கலிதோத்³யம விலஸத்³யம நியமாதி³ம முனிக³ணனிஷேவ்யமாண ப்ரத்யக்ஷீப⁴வன்னிஜஸலில
ஸமஜ்ஜன நமஜ்ஜன நிகி²லபாபனாஶனா பாபனாஶன தீர்தா²த்⁴யாஸிதஸ்ய, முராரிஸேவக ஜராதி³பீடி³த
நிரார்திஜீவன நிராஶ பூ⁴ஸுர வராதிஸுன்த³ர ஸுராங்க³னாரதி கராங்க³ஸௌஷ்ட²வ குமாரதாக்ருதி
குமாரதாரக ஸமாபனோத³ய த³னூனபாதக மஹாபதா³மய விஹாபனோதி³த ஸகலபு⁴வன விதி³த
குமாரதா⁴ராபி⁴தா⁴ன தீர்தா²தி⁴ஷ்டி²தஸ்ய, த⁴ரணிதல க³தஸகல ஹதகலில ஶுப⁴ஸலில க³தப³ஹுல்த³
விவித⁴மல ஹதிசதுர ருசிரதர விலோகனமாத்ர வித³ல்தி³த விவித⁴ மஹாபாதக ஸ்வாமிபுஷ்கரிணீ ஸமேதஸ்ய,
ப³ஹுஸங்கட நரகாவட பதது³த்கட கலிகங்கட கலுஷோத்³ப⁴ட ஜனபாதக வினிபாதக ருசினாடக
கரஹாடக கலஶாஹ்ருத கமலாரத ஶுப⁴மஞ்ஜன ஜலஸஜ்ஜன ப⁴ரப⁴ரித நிஜது³ரித ஹதினிரத ஜனஸதத
நிரஸ்தனிரர்க³ல்த³ பேபீயமான ஸலில ஸம்ப்⁴ருத விஶங்கட கடாஹதீர்த² விபூ⁴ஷிதஸ்ய, ஏவமாதி³ம
பூ⁴ரிமஞ்ஜிம ஸர்வபாதக க³ர்வஹாபக ஸின்து⁴ட³ம்ப³ர ஹாரிஶம்ப³ர விவித⁴விபுல புண்யதீர்த²னிவஹ
நிவாஸஸ்ய, ஶ்ரீமதோ வேங்கடாசலஸ்ய ஶிக²ரஶேக²ரமஹாகல்பஶாகீ², க²ர்வீப⁴வத³தி க³ர்வீக்ருத
கு³ருமேர்வீஶகி³ரி முகோ²ர்வீத⁴ர குலத³ர்வீகர த³யிதோர்வீத⁴ர ஶிக²ரோர்வீ ஸதத ஸதூ³ர்வீக்ருதி
சரணக⁴ன க³ர்வசர்வணனிபுண தனுகிரணமஸ்ருணித கி³ரிஶிக²ர ஶேக²ரதருனிகர திமிர:, வாணீபதிஶர்வாணீ
த³யிதேன்த்³ராணிஶ்வர முக² நாணீயோரஸவேணீ நிப⁴ஶுப⁴வாணீ நுதமஹிமாணீ ய ஸ்தன கோணீ
ப⁴வத³கி²ல பு⁴வனப⁴வனோத³ர:, வைமானிககு³ரு பூ⁴மாதி⁴க கு³ண ராமானுஜ க்ருததா⁴மாகர கரதா⁴மாரி
த³ரலலாமாச்ச²கனக தா³மாயித நிஜராமாலய நவகிஸலயமய தோரணமாலாயித வனமாலாத⁴ர:,
காலாம்பு³த³ மாலானிப⁴ நீலாலக ஜாலாவ்ருத பா³லாப்³ஜ ஸலீலாமல பா²லாங்கஸமூலாம்ருத தா⁴ராத்³வயாவதீ⁴ரண
தீ⁴ரலலிததர விஶத³தர க⁴ன க⁴னஸார மயோர்த்⁴வபுண்ட்³ர ரேகா²த்³வயருசிர:, ஸுவிகஸ்வர த³ல்த³பா⁴ஸ்வர
கமலோத³ர க³தமேது³ர நவகேஸர ததிபா⁴ஸுர பரிபிஞ்ஜர கனகாம்ப³ர கலிதாத³ர லலிதோத³ர ததா³லம்ப³ ஜம்ப⁴ரிபு
மணிஸ்தம்ப⁴ க³ம்பீ⁴ரிமத³ம்ப⁴ஸ்தம்ப⁴ ஸமுஜ்ஜ்ரும்ப⁴மாண பீவரோருயுக³ல்த³ ததா³லம்ப³
ப்ருது²ல கத³லீ முகுல மத³ஹரணஜங்கா⁴ல ஜங்கா⁴யுக³ல்த:³, நவ்யத³ல ப⁴வ்யமல பீதமல
ஶோணிமலஸன்ம்ருது³ல ஸத்கிஸலயாஶ்ருஜலகாரி ப³ல ஶோணதல பத³கமல நிஜாஶ்ரய ப³லப³ன்தீ³க்ருத
ஶரதி³ன்து³மண்ட³லீ விப்⁴ரமதா³த³ப்⁴ர ஶுப்⁴ர புனர்ப⁴வாதி⁴ஷ்டி²தாங்கு³ல்தீ³கா³ட⁴ நிபீடி³த பத்³மாவன:,
ஜானுதலாவதி⁴ லம்ப³ விட³ம்பி³த வாரண ஶுண்டா³த³ண்ட³ விஜ்ரும்பி⁴த நீலமணிமய கல்பகஶாகா² விப்⁴ரமதா³யி ம்ருணால்த³லதாயித ஸமுஜ்ஜ்வலதர
கனகவலய வேல்லிதைகதர பா³ஹுத³ண்ட³யுக³ல்த:³, யுக³பது³தி³த கோடி க²ரகர ஹிமகர மண்ட³ல
ஜாஜ்வல்யமான ஸுத³ர்ஶன பாஞ்சஜன்ய ஸமுத்துங்கி³த ஶ்ருங்கா³பர பா³ஹுயுக³ல்த:³, அபி⁴னவஶாண
ஸமுத்தேஜித மஹாமஹா நீலக²ண்ட³ மத³க²ண்ட³ன நிபுண நவீன பரிதப்த கார்தஸ்வர கவசித மஹனீய
ப்ருது²ல ஸாலக்³ராம பரம்பரா கு³ம்பி⁴த நாபி⁴மண்ட³ல பர்யன்த லம்ப³மான ப்ராலம்ப³தீ³ப்தி ஸமாலம்பி³த விஶால
வக்ஷ:ஸ்த²ல:, க³ங்கா³ஜ²ர துங்கா³க்ருதி ப⁴ங்கா³வல்தி³ ப⁴ங்கா³வஹ ஸௌதா⁴வல்தி³ பா³தா⁴வஹ தா⁴ரானிப⁴
ஹாராவல்தி³ தூ³ராஹத கே³ஹான்தர மோஹாவஹ மஹிம மஸ்ருணித மஹாதிமிர:, பிங்கா³க்ருதி ப்⁴ருங்கா³ர
நிபா⁴ங்கா³ர த³ல்தா³ங்கா³மல நிஷ்காஸித து³ஷ்கார்யக⁴ நிஷ்காவல்தி³ தீ³பப்ரப⁴ நீபச்ச²வி தாபப்ரத³ கனகமாலிகா
பிஶங்கி³த ஸர்வாங்க:³, நவத³ல்தி³த த³ல்த³வலித ம்ருது³லலித கமலததி மத³விஹதி சதுரதர ப்ருது²லதர
ஸரஸதர கனகஸரமய ருசிரகண்டி²கா கமனீயகண்ட:², வாதாஶனாதி⁴பதி ஶயன கமன பரிசரண ரதிஸமேதாகி²ல
ப²ணத⁴ரததி மதிகரவர கனகமய நாகா³ப⁴ரண பரிவீதாகி²லாங்கா³ வக³மித ஶயன பூ⁴தாஹிராஜ
ஜாதாதிஶய:, ரவிகோடீ பரிபாடீ த⁴ரகோடீ ரவராடீ கிதவீடீ ரஸதா⁴டீ த⁴ரமணிக³ணகிரண விஸரண ஸததவிது⁴த
திமிரமோஹ கா³ர்ப⁴கே³ஹ:, அபரிமித விவித⁴பு⁴வன ப⁴ரிதாக²ண்ட³ ப்³ரஹ்மாண்ட³மண்ட³ல பிசண்டி³ல:,
ஆர்யது⁴ர்யானந்தார்ய பவித்ர க²னித்ரபாத பாத்ரீக்ருத நிஜசுபு³க க³தவ்ரணகிண விபூ⁴ஷண வஹனஸூசித
ஶ்ரிதஜன வத்ஸலதாதிஶய:, மட்³டு³டி³ண்டி³ம ட⁴மரு ஜர்க⁴ர காஹல்தீ³ படஹாவல்தீ³ ம்ருது³மத்³த³லாதி³ ம்ருத³ங்க³
து³ன்து³பி⁴ ட⁴க்கிகாமுக² ஹ்ருத்³ய வாத்³யக மது⁴ரமங்க³ல்த³ நாத³மேது³ர நாடாரபி⁴ பூ⁴பால்த³ பி³லஹரி மாயாமால்த³வ கௌ³ல்த³ அஸாவேரீ ஸாவேரீ
ஶுத்³த⁴ஸாவேரீ தே³வகா³ன்தா⁴ரீ த⁴ன்யாஸீ பே³க³ட³ ஹின்து³ஸ்தானீ காபீ தோடி³ நாடகுருஞ்ஜீ ஶ்ரீராக³ ஸஹன
அடா²ண ஸாரங்கீ³ த³ர்பா³ரு பன்துவரால்தீ³ வரால்தீ³ கல்த்³யாணீ பூ⁴ரிகல்த்³யாணீ யமுனாகல்த்³யாணீ
ஹுஶேனீ ஜஞ்ஜோ²டீ² கௌமாரீ கன்னட³ க²ரஹரப்ரியா கலஹம்ஸ நாத³னாமக்ரியா முகா²ரீ தோடீ³
புன்னாக³வரால்தீ³ காம்போ⁴ஜீ பை⁴ரவீ யது³குலகாம்போ⁴ஜீ ஆனந்த³பை⁴ரவீ ஶங்கராப⁴ரண
மோஹன ரேகு³ப்தீ ஸௌராஷ்ட்ரீ நீலாம்ப³ரீ கு³ணக்ரியா மேக⁴க³ர்ஜனீ ஹம்ஸத்⁴வனி ஶோகவரால்தீ³ மத்⁴யமாவதீ
ஜேஞ்ஜுருடீ ஸுரடீ த்³விஜாவன்தீ மலயாம்ப³ரீ காபீபரஶு த⁴னாஸிரீ தே³ஶிகதோடீ³ ஆஹிரீ வஸன்தகௌ³ல்தீ³
ஸன்து கேதா³ரகௌ³ல்த³ கனகாங்கீ³ ரத்னாங்கீ³ கா³னமூர்தீ வனஸ்பதீ வாசஸ்பதீ தா³னவதீ மானரூபீ
ஸேனாபதீ ஹனுமத்தோடீ³ தே⁴னுகா நாடகப்ரியா கோகிலப்ரியா ரூபவதீ கா³யகப்ரியா வகுல்தா³ப⁴ரண
சக்ரவாக ஸூர்யகான்த ஹாடகாம்ப³ரீ ஜ²ங்காரத்⁴வனீ நடபை⁴ரவீ கீரவாணீ ஹரிகாம்போ⁴தீ³ தீ⁴ரஶங்கராப⁴ரண
நாகா³னந்தி³னீ யாக³ப்ரியாதி³ விஸ்ருமர ஸரஸ கா³னருசிர ஸன்தத ஸன்தன்யமான நித்யோத்ஸவ
பக்ஷோத்ஸவ மாஸோத்ஸவ ஸம்வத்ஸரோத்ஸவாதி³ விவிதோ⁴த்ஸவ க்ருதானந்த:³ ஶ்ரீமதா³னந்த³னிலய
விமானவாஸ:, ஸதத பத்³மாலயா பத³பத்³மரேணு ஸஞ்சிதவக்ஷஸ்தல படவாஸ:, ஶ்ரீஶ்ரீனிவாஸ:
ஸுப்ரஸன்னோ விஜயதாம். ஶ்ரீ​அலர்மேல்மங்கா³ நாயிகாஸமேத: ஶ்ரீஶ்ரீனிவாஸ ஸ்வாமீ ஸுப்ரீத:
ஸுப்ரஸன்னோ வரதோ³ பூ⁴த்வா, பவன பாடலீ பாலாஶ பி³ல்வ புன்னாக³ சூத கத³ல்தீ³ சன்த³ன சம்பக மஞ்ஜுல்த³
மன்தா³ர ஹிஞ்ஜுலாதி³ திலக மாதுலுங்க³ நாரிகேல்த³ க்ரௌஞ்சாஶோக மாதூ⁴காமலக ஹின்து³க நாக³கேதக
பூர்ணகுன்த³ பூர்ணக³ன்த⁴ ரஸ கன்த³ வன வஞ்ஜுல்த³ க²ர்ஜூர ஸால கோவிதா³ர ஹின்தால பனஸ விகட
வைகஸவருண தருக⁴மரண விசுல்த³ங்காஶ்வத்த² யக்ஷ வஸுத⁴ வர்மாத⁴ மன்த்ரிணீ தின்த்ரிணீ போ³த⁴
ந்யக்³ரோத⁴ க⁴டவடல ஜம்பூ³மதல்லீ வீரதசுல்லீ வஸதி வாஸதீ ஜீவனீ போஷணீ ப்ரமுக² நிகி²ல ஸன்தோ³ஹ
தமால மாலா மஹித விராஜமான சஷக மயூர ஹம்ஸ பா⁴ரத்³வாஜ கோகில சக்ரவாக கபோத க³ருட³ நாராயண
நானாவித⁴ பக்ஷிஜாதி ஸமூஹ ப்³ரஹ்ம க்ஷத்ரிய வைஶ்ய ஶூத்³ர நானாஜாத்யுத்³ப⁴வ தே³வதா நிர்மாண மாணிக்ய
வஜ்ர வைடூ⁴ர்ய கோ³மேதி⁴க புஷ்யராக³ பத்³மராகே³ன்த்³ர நீல ப்ரவால்த³மௌக்திக ஸ்ப²டிக ஹேம ரத்னக²சித
த⁴க³த்³த⁴கா³யமான ரத² கஜ³ துரக³ பதா³தி ஸேனா ஸமூஹ பே⁴ரீ மத்³த³ல்த³ முரவக ஜ²ல்லரீ ஶங்க³ காஹல்த³
ந்ருத்யகீ³த தால்த³வாத்³ய கும்ப⁴வாத்³ய பஞ்சமுக²வாத்³ய அஹமீமார்க³ன்னடீவாத்³ய கிடிகுன்தலவாத்³ய
ஸுரடீசௌண்டோ³வாத்³ய திமிலகவிதால்த³வாத்³ய தக்கராக்³ரவாத்³ய க⁴ண்டாதாட³ன ப்³ரஹ்மதால்த³
ஸமதால்த³ கொட்டரீதால்த³ ட⁴க்கரீதால்த³ எக்கால்த³ தா⁴ராவாத்³ய படஹகாம்ஸ்யவாத்³ய ப⁴ரதனாட்யாலங்கார
கின்னெர கிம்புருஷ ருத்³ரவீணா முக²வீணா வாயுவீணா தும்பு³ருவீணா கா³ன்த⁴ர்வவீணா நாரத³வீணா ஸ்வரமண்ட³ல
ராவணஹஸ்தவீணாஸ்தக்ரியாலங்க்ரியாலங்க்ருதானேகவித⁴வாத்³ய வாபீகூபதடாகாதி³ க³ங்கா³யமுனா
ரேவாவருணா ஶோணனதீ³ஶோப⁴னதீ³ ஸுவர்ணமுகீ² வேக³வதீ வேத்ரவதீ க்ஷீரனதீ³ பா³ஹுனதீ³ க³ருட³னதீ³
காவேரீ தாம்ரபர்ணீ ப்ரமுகா²: மஹாபுண்யனத்³ய: ஸஜலதீர்தை²: ஸஹோப⁴யகூலங்க³த ஸதா³ப்ரவாஹ
ருக்³யஜுஸ்ஸாமாத²ர்வண வேத³ஶாஸ்த்ரேதிஹாஸ புராண ஸகலவித்³யாகோ⁴ஷ பா⁴னுகோடிப்ரகாஶ
சன்த்³ரகோடி ஸமான நித்யகல்த்³யாண பரம்பரோத்தரோத்தராபி⁴வ்ருத்³தி⁴ர்பூ⁴யாதி³தி ப⁴வன்தோ
மஹான்தோzனுக்³ருஹ்ணன்து, ப்³ரஹ்மண்யோ ராஜா தா⁴ர்மிகோzஸ்து, தே³ஶோயம் நிருபத்³ரவோzஸ்து, ஸர்வே
ஸாது⁴ஜனாஸ்ஸுகி²னோ விலஸன்து, ஸமஸ்தஸன்மங்க³ல்தா³னி ஸன்து,
உத்தரோத்தராபி⁴வ்ருத்³தி⁴ரஸ்து, ஸகலகல்த்³யாண ஸம்ருத்³தி⁴ரஸ்து ॥

 

ஸ்ரீ ஹரி: ஓம் ॥

————————————–

ஸ்ரீ ஹநுமத் அஷ்டகம்

வைகாஸ மாஸ க்ருஷ்ணாயாம் தஸமி மந்த மாஸேரே
பூர்வ பத்ராஸு ஜாதாய மங்களம் ஸ்ரீ ஹநுமதே

குரு கௌரவ பூர்ணாய பலாபூப ப்ரியாய
நாநா மாணிக்ய ஹஸ்தாய மங்களம் ஸ்ரீ ஹநுமதே

ஸுவர்சலா களத்ராய சதுர்புஜ தராய ச
உஷ்ட் ராருடாய வீராய மங்களம் ஸ்ரீ ஹநுமதே

திவ்ய மங்கள தேஹாய பீதாம்பர தராய
தப்த காஞ்சன வர்ணாய மங்களம் ஸ்ரீ ஹநுமதே

பக்த ரக்ஷண சீலாய ஜாநகீ சோகஹாரணே
ஜகத் பாவக நேத்ராய மங்களம் ஸ்ரீ ஹ்நுமதே

பம்பாதீர விஹாராய சௌமித்ரி ப்ராண தாயிணே
ஸ்ருஷ்டி காரண பூதாய மங்களம் ஸ்ரீ ஹநுமதே

ரம்பாவ.ந விஹாராய ஸுஹத்மாதட வாஸிநே
ஸர்வ லோகைக கண்ட்டாய மங்களம் ஸ்ரீ ஹநுமதே

பஞ்சாநநாய பீமாய கால/நேமி ஹராய ச
கௌண்டிந்ய கோத்ராய ஜாதாய மங்களம் ஸ்ரீ ஹநுமதே

———–

ஸ்ரீ ஹநுமத் அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்

1. ஆஞ்ஜநேயோ மஹாவீரோ ஹநூமாந் மாருதா மஜ:
தத்வ ஜ்ஞாத ப்ரத: ஸீதா தேவீ முத்ரா ப்ரதாயக:

2. அஸோக வநிகாச் சேத்தா ஸர்வ மாயா விபஞ்ஜந:
ஸர்வ பந்த விமோக்தாச ர÷க்ஷõ வித்வம்ஸ காரக:

3. பரவித்யா பரீஹார: பரஸெளர்ய விநாஸந:
பரமந்த்ர நிராகர்த்தா பரயந்த்ர ப்ரபேதந:

4. ஸர்வக்ரஹ விநாசீச பீமஸேந ஸஹாயக்ருத்:
ஸர்வது:க ஹர:ஸர்வ லோகசாரீ மநோஜவ:

5. பாரிஜாத த்ருமூலஸ்த: ஸர்வமந்த்ர ஸ்வரூபவாந்
ஸர்வதந்த்ர ஸ்வரூபிச ஸர்வ மந்த்ராத்மகஸ் ததா

6. கபீச்வரோ மஹாகாய: ஸர்வரோக ஸர:ப்ரபு
பலஸீத்தி கர: ஸர்வ வித்யா ஸம்பத் ப்ரதாயக:

7. கபிஸேநா நாயகச்ச பவிஷ்யச் சதுராநந
குமார ப்ரஹ்மசாரீச ரத் நகுண்டல தீபதிமாந்:

8. ஸஞ்சலத் வால ஸந்நத்த லம்பமாநஸிகோஜ் ஜ்வல:
கந்தர்வ வித்யா தத்வஜ்ஞோ மஹாபல பராக்ரம:

9. காராக்ருஹ விமோக்தாச ச்ருங்கலா யந்தமோசக:
ஸாகரோத்தாரக: ப்ராஜ்ஞோ ராமதூத: ப்ரதாபவாந்:

10. வாநர: கேஸரி ஸுத: ஸீதாஸோகா நிவாரண:
அஞ்ஜநாகர் பஸம்பூதோ பாலார்க்க ஸத்ருசாநந:

11. விபீஷண ப்ரிய கரோ தசக்ரீவ குலாந்தக:
லக்ஷ்மண ப்ராண தாதாச வஜ்ரகாயோ மஹாத்யுதி:

12. சிரஞ்சீவி ராம பக்தோ தைத்ய கார்ய விகாதக:
அக் ஷஹந்தா காஞ்சநாப: பஞ்ச வக்ரோ மஹாதபா:

13. லஞ்கிணீ பஞ்ஜந: ஸ்ரீமாந் ஸிமஹிகா ப்ராண பஞ்ஜந:
கந்தமாதந சைலஸதோ லங்காபுர விதாஹக:

14. ஸுக்ரீவ ஸசிவோ பீம: ஸுரோதைத்ய குலாந்தக:
ஸுரார்ச்சதோ மஹாதேஜா ராமசூடாமணி ப்ரத:

15. காமரூபி பிங்களா÷க்ஷõ வார்த்தி மைநாகபூஜீத:
கபலீக்ருத மார்த்தாண்ட மண்டலோவிஜிதேந்த்ரிய:

16. ராமஸுக்ரீவ ஸந்தாதா மஹாராவண மந்தந:
ஸ்படி காபோ வாகதீசோ நவவ்யாருதி பண்டித:

17. சதுர்பாஹுர் தீநபந்துர் மஹாத்மா பக்தவக்ஸல
ஸஞ்ஜீவந நகாஹர்தா ஸசீர் வாக்மீ த்ருடவ்ரத:

18. காலநேமி ப்ரமதநோ ஹரிமர்கட மர்கட:
தாந்த: சாந்த: ப்ரஸந்நாத்மா தஸகண்ட மதாபஹ்ருத்

19. யோகீராமகதாலோல: ஸீதாத்வேஷண பண்டித
வஜ்ரதஷ்ட்ரோ வஜ்ரநகோ ருத்ரவீர்ய ஸமுத்பவ:

20. இந்த்ரஜித் ப்ரஹிதாமோக ப்ரஹ்மாஸ்த்ர விநிவாரக:
பார்த்த த்வஜாக்ரே ஸம்வாஸீ ச்ரஞ்ஜர பேதக:

21. தசபாஹுர் லோகபூஜ்யோ ஜாம்பவத் ப்ரீதிவர்த்தந:
ஸீதாஸமேத ஸ்ரீராம பாதஸேவா துரந்தர:

22. இச்யேவம் ஸ்ரீஹநுமதோ நாம்நா மஷ்டோத்தரம் சதம்
ய: படேச் ச்ருண்யாநநித்யம் ஸர்வாந் காமா நவாப்நுயாத்

இதி காளிகாரஹஸ்யே ஹநுமதஷ்டோத்தர ஸதநாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

————-

ஸ்ரீ ஆஞ்ஜநேய த்யான ஸ்லோகங்கள்

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் ஆரோகதா |
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் ||

ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபத் கன மாருதம் |
அபார கருணாமூர்த்திம் ஆஞ்ஜநேயம் நமாம்யஹம் ||

அஞ்ஜநா நந்தனம் வீரம் ஜானகீ சோ’கநாசனம் |
கபீச’மக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம் ||

ஆஞ்சநேயமதி பாடலாநநம் காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம் |
பாரிஜாத தருமூலவாஸிநம் பாவயாமி பவமான நந்தனம் ||

யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம் |
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் ||

மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் |
வாதாத்மஜம் வானரயூத முக்யம் ஸ்ரீ ராமதூதம் சி’ரஸா நமாமி ||

அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் தவ கிம்வத |
ராம தூத க்ருபாஸிந்தோ மத் கார்யம் ஸாதயப்ரபோ ||

உத்ய தாதித்ய ஸங்காஸம் உதார புஜ விக்ரமம் |
கந்தர்ப்ப கோடிலாவண்யம் ஸர்வவித்யா விஸாரதம் ||

ஸ்ரீராம ஹ்ருதயா நந்தம் பக்தகல்ப மஹீருஹம் |
அபயம் வரதம் தோர்ப்யாம் கலயே மாருதாத்மஜம் ||

ராமதூத மஹாதீர ருத்ரவீர்ய ஸமுத்பவ |
அஞ்ஜநா கர்ப்ப ஸம்பூத வாயுபுத்ர நமோஸ்து தே ||

நாமாம் யஹம் மாருதஸுநு மாநிலம் ஸ்ரீஜானகி ஜீவத ஜீவத ப்ரியம் |
ஸௌமித்ரி மித்ரம் கபிராஜ வல்லபம் ஸ்ரீராமதூதம் ஸிரஸா நமாமி ||

———————-

அஞ்சிலே ஒன்று பெற்றான்,
அஞ்சிலே ஒன்றை தாவி,
அஞ்சிலே ஒன்றராகி , ஆர்யார்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவன் நன்மை அளித்து காப்பான்!!!

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செயல்கள் —ஸ்ரீ திவ்ய நாமங்கள்–

February 23, 2023

அம்மான் ..
அமுதம் உண்டாய் ….
அரி முகன் ..
அரும் கலம்
அநங்க தேவன் ..
அச்சுதன் ..
அழக பிரான் .

ஆலின் இலையாய் ..
ஆரா அமுதம் ..
ஆழி மழை கண்ணா .
ஆயர் கொழந்து ..
ஆயர்பாடி அணி விளக்கு
ஆயன்–
ஆழியம் செல்வன் ..
ஆற்றல் அனந்தல் உடையாய் ..

இறைவா ..
இருடிகேசன் .
இலங்கை அழித்தாய் .
இலங்கை அழ்த்த பிரான் .

ஈசன் .

எம்பெருமான் ..
எம் ஆதியாய் .
எங்கள் அமுது

உம்பர் கோமான் –
உலகம் அளந்தாய் –
உதரம் யுடையாய் –

ஊழி முதல்வன் –
ஊழியான்

ஓங்கி உலகளந்த உத்தமன் –

கா மகான் ..
காயா வண்ணன் ..
கடல் வண்ணன் ..
கடல் பள்ளியாய் ..
கள்ள மாதவன் — ..
கமல வாணன் ..
கண் அழகர் .
கன்று குணிலா எறிந்தாய் –.
கன்று மேய்த்து விளையாடும் கோவலன்
கப்பம் தவிர்க்கும் கலி ..
கரிய பிரான் .
கரு மாணிக்கம் ..
கரு மா முகில்
கருடக் கொடி உடையான் .
கேசவன் –.
கேசவ நம்பி –.
கொடிய கடிய திருமால்
கோ –மகான் ..
கோளரி மாதவன் — ..
கோலால் நிரை மேய்த்தவன் ..
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன் –
கூத்தனார் .
கொழந்து– .
குடமாடு கூத்தன் –..
குடந்தை கிடந்தான் –
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன் -..
குல விளக்கு –.
குன்று குடையாய் எடுத்தாய் –.
குறும்பன் ..
குழல் அழகர்
கோவிந்தா..
கோவர்தனன் .

சகடம் உதைத்தாய் –
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக் கையன் –
செங்கண் மால் –
செம்மை யுடைய திருமால் –
செப்பம் யுடையாய் –
ஸ்ரீ தரன் –
சுடர் –
சுந்தரன் –
சுந்தர தோளுடையான்

தாமோதரன்..
தேவாதி தேவன் ..
தேச முன் அளந்தவன் ..
தேசுடைய தேவர் ..
தேவனார் வள்ளல்
த்வராபதி எம்பெருமான் .
த்வாராபதி காவலன் .

தாமரைக் கண்ணன் –
தத்துவன்–
தென் இலங்கைக் கோமான் –
தென் இலங்கை செற்றாய் –
திறல் யுடையாய் –
திரு –
திரு மால் இரும் சோலை நம்பி –
திருவரங்கச் செல்வனார் –
திரி விக்ரமன் –
துழாய் முடி மால் –
துவரைப் பிரான்

பாம்பணையான் –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் –
பத்ம நாபன் –
பாலகன் –
பங்கயக் கண்ணன் –
பெரியாய் –
பக்த விலோசனன் –
பச்சை பசும் தேவர் –
பிள்ளாய் –
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான் –
பூ மகன் –
பூவைப் பூ வண்ணன் –
புள் அரையன் –
புள்ளின் வாய் கீண்டான் –
புள் வாய் பிளந்தான் –
புனிதன் –
புண்ணியன் –
புராணன்

மால் –
மாயன் –
மா மாயன் –
மா வாயைப் பிளந்தான் –
மா மஹன்-
மா மத யானை யுதைத்தவன் –
மாதவன் –
மதிள் அரங்கர்-
மது ஸூதனன் –
மலர் மார்பன் –
மணவாளர் –
மணி வண்ணன் –
மருதம் முறிய நடை கற்றவன் –
மருப்பினை ஒசித்தவன்–
மல்லரை மாட்டியவன்-
மால் இரும் சோலை மணாளனார் –
மனத்துக்கு இனியான் –
முகில் வண்ணன்

நாராயணன் –
நாராயணன் மூர்த்தி –
நாகணையான் –
நாரண நம்பி –
நந்த கோபன் குமரன் –
நந்த கோபன் மகன் –
நரேன் –
நெடுமால் –
நீர் வண்ணன் .

யமுனைத் துறைவன் –
யசோதை இளம் சிங்கம்

வாய் அழகர் –

வட மதுரை மைந்தன் –
வட மதுரையார் மன்னன் –
வாஸூ தேவன் –
வேங்கடவன் –
வேங்கட வாணன் –
வைகுந்தன் –
வல்லான் –
வாமனன் –
வேட்டை ஆடி வருவான் –
விமலன் –
வித்தகன்

—————————-

1. கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
2. ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
3.கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்போல் முகத்தான்
4.நாராயணன்
5.பாற்கடலுள் பையத் துயின்ற பரமன்
6.ஓங்கி உலகளந்த உத்தமன்
7.ஆழிமழைக்கண்ணன்
8.ஊழி முதல்வன்
9.பாழியந்தோளுடைப் பற்பநாபன்
10.மாயன்
11.வடமதுரை மைந்தன்
12.தூய பெருநீர் யமுனைத் துறைவன்
13.ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கு
14.தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன்
15.பேய்முலை நஞ்சுண்ட வித்து
16.கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சிய வித்து
17.வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்து
18 ஹரி
19.நாராயணன் மூர்த்தி கேசவன் (நாராயணனின் அவதாரமான கேசவன் )
20.மாவாய் பிளந்தான்
21.மல்லரை மாட்டிய தேவாதி தேவன்
22.மாமாயன்
23.மாதவன்
24.வைகுந்தன்
25.நாற்றத்துழாய் முடி நாராயணன்
26.நம்மால் (நமது திருமால் )
27.போற்றப் பறைதரும் புண்ணியன்
28.முகில்வண்ணன்
29.சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியான்
30.புள்ளின்வாய் கீண்டியவன்
31.பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தவன்
32.சங்கொடுசக்ரம் ஏந்தும் தடக் கையன்
33.பங்கயக் கண்ணன்
34.வல்லானைக் (வலிமை மிகுந்த யானையை ) கொன்றவன்
35.மாற்றாரை மாற்றழிக்க வல்லான்
36.மாயன்,(வல்லானை மாயனை )
37. மாயன் (மணிவண்ணன் மாயன் )
38.மணிவண்ணன்
39.அம்பரு மூடறுத்தோங்கி உலகளந்த உம்பர்கோமான்
40.பந்தார்விரலியின் மைத்துனன் (நப்பின்னையின் மைத்துனன்—-யசோதையின் உடன்பிறந்த கும்பனின் பெண் நப்பின்னை—நீளாதேவி அம்சம் )
41.மலர்மார்பன்
42.முப்பத்துமூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் (நடுக்கம் ) தவிர்க்கும் கலி (மிடுக்கு உடையவன் )
43.செப்பம் உடையவன்
44.திறல் உடையவன்
45.செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன்
46.ஆற்றப் படைத்தான் மகன்
47.ஊற்றம் உடையவன்
48.பெரியவன்
49.உலகினில் தோற்றமாய் நின்ற சுடர்
50.கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே செங்கண்
51.திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல் அங்கண்
52.பூவைப் பூவண்ணன்
53.அன்று இவ்வுலகம் அளந்தவன்
54.சென்று அங்குத் தென்னிலங்கைச் செற்றவன்
55.பொன்றச் சகடம் உதைத்தவன்
56.கன்று குணிலா எறிந்தவன்
57.குன்று குடையாய் எடுத்தவன்
58.வென்று பகை கெடுக்கும் வேலைப் பற்றியவன்
59.ஒருத்தி மகனாய்ப்பிறந்தவன்
60.ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தவன்
61.(தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்) நெருப்பென்ன நின்ற நெடுமால்
62.மால்
63.மணிவண்ணன்
64.ஆலின் இலையாய்
65.கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தன்
66.குறைவொன்றுமில்லாத கோவிந்தன்
67.இறைவன்
68.பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்தவன்
69.கோவிந்தன்
70.வங்கக் கடல் கடைந்த மாதவன்
71.வங்கக் கடல் கடைந்த கேசவன்
72. ஈரிரண்டு மால் வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமால்

இவை, நமது சங்கீதத்தில் —72—மேளகர்த்தாக்களை ——மிக நுட்பமாகச் சொல்வதாகக் கொள்ளலாம் ,

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பஞ்ச பாண்டவர் நினைவு சிஹ்ன கோயில்கள் —

February 23, 2023

பஞ்ச பாண்டவர் குகைக் கோயில்-(பஞ்ச பாண்டவர் கோயில்கள் மற்றும் ஐந்து பாண்டவர்களின் மண்டபங்கள்
எனவும் அழைக்கப்படுகிறது என்பது இந்தியாவில், தமிழ்நாட்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தில்,
வங்காள விரிகுடாவின் சோழ மண்டலக் கடற்கரையில், மாமல்லபுரத்தில் அமைந்துள்ள நினைவுச் சின்னமாகும். –
இதுவே மாமல்லபுரத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய குகைக்கோயில் ஆகும்.
கி.பி. 7 ஆம் நுாற்றாண்டில் இந்தியாவின் குடைவரைக் கட்டிடக் கலைக்கான உதாரணமாகத் திகழ்கிறது.
இந்தக் கோயிலானது, மாமல்லபுரத்தில் காணப்படும் பல குகைக் குடைவு மண்டபங்களுள்,
விசுவகர்ம இந்துக் கோயில் கட்டிடக்கலை சிற்பிகளின் குடவரைக் கோயில்கள் கட்டுமானத் திறமைக்கான
மிகச்சிறந்த நற்சான்றுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
மாமல்லபுர மரபுச்சின்னங்களின் பகுதியாக விளங்கும் இந்தக் கோயில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல்,
பண்பாட்டு நிறுவனத்தின் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக 1984 ஆம் ஆண்டில்
தெரிவிற்கான வரைமுறைகள் i, ii, iii மற்றும் iv இன் படி தெரிவு செய்யப்பட்டது.
பஞ்ச பாண்டவர் மண்டபம் அல்லது பஞ்ச பாண்டவர் குகைக்கோயிலானது, மாமல்லபுரம் நகரில் அர்ச்சுணன் தபசு
திறந்த வெளி பாறைச்சிற்பங்களின் அருகில் அமர்ந்துள்ளது.
இது தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வங்காள விரிகுடாவின் சோழமண்டலக் கடற்கரையில். மாமல்லபுரத்தில் இதர குகைக்கோயில்களுடன்
குன்றுகளின் தொடரின் உச்சியில் அமைந்துள்ளது.
இந்த இடம் சென்னையிலிருந்து தோராயமாக 58 கிலோமீட்டர் (36 மைல்கள்) தொலைவிலும்.
செங்கல்பட்டு நகரிலிருந்து 32 கிலோமீட்டர் (20 மைல்கள்) தொலைவிலும் அமைந்துள்ளது.
பல்லவ கட்டிடக் கலையின் ஒரு பொதுவான பாணியாக சிங்கத்தின் உருவத்தை அடித்தளமாகக் கொண்டுள்ள
தாழ்வாரத்தின் தூண்கள் அமைந்துள்ளன.
இந்தக் குகையின் கட்டிடக்கலை சிறப்பியல்புகளிலிருந்து, இது 7 ஆம் நூற்றாண்டின் மத்தியில் நரசிம்மர்வர்மன் I
(மாமல்ல காலம்) முதல் நரசிம்மவர்மன் II (ராஜசிம்மா) வரையிலான காலகட்டத்தில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்தக் குகைக் கோயிலானது முழுமை பெறாத நிலையில் உள்ளது.
நுழைவு வாயிலானது கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
இந்தக் கோயிலானது, 50 அடி அளவில், மாமல்லபுரம் குகைக்கோயில்களிலேயே அதிக நீளமான நிலக்குடைவினைக் கொண்டதாகும்.
குகையின் தொடக்கத்தின் நீளம் முதன்மை சன்னதிக்குச் செல்ல
குகைக்குள் ஒரு சுற்றுவட்டப் பாதை உருவாக்கப்படுவதைக் காட்டுகிறது.

நுழைவு வாயிலில் உள்ள இரு தூண்களும், பல்லவர் கால பாறை குடைவு வகை கட்டிடக் கலை பாணியிலான,
உட்கார்ந்த நிலையில் உள்ள இரு சிங்கங்கள் மீது நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த குகைக் கோயிலின் முகப்புத் தோற்றத்தில், இருபுறத்திலும் பாறையோடு முட்டிக்கொண்டுள்ள இரண்டு
செவ்வகத் தூண்களைத் தவிர்த்து, மொத்தம் ஆறு தூண்கள் சிங்கத் தோற்ற அடிப்பகுதியைக் கொண்டுள்ளன.
மற்ற குகைகளுடன் ஒப்பிடுகையில், குகைக்குள் செதுக்கப்பட்ட தளவமைப்பு மற்றும் கட்டடக்கலை
கூறுகளில் பின்வரும் மேம்பாடுகள் காணப்படுகின்றன.
முதலாவது, தென்னிந்தியாவின் வழக்கமான அமைப்புள்ள கோயில்களிலிருந்து மாறுபட்ட சுற்றுவட்டப்பாதை,
மற்றொன்று முகப்புத் தோற்றத்தை அமைக்கின்ற சிங்க சிலை வடிவத் தூண்கள் வளைவாக அமைக்கப்பட்ட விதம் ஆகியவையாகும்.
ஒவ்வொரு சிங்க வடிவத் தூண்களும் மூன்று சிங்கங்களைக் கொண்டதாக உள்ளது.
ஒன்று முகப்புப் புறத்திலும், மற்ற இரண்டு சிங்கங்களும் பக்கவாட்டிலும்,
ஒருபுறம் சிங்கமே இல்லாமல் வெறுமையாகவும் காட்சியளிக்கின்றன,

—————————-

கடைசி இரண்டு ஹிந்து இருந்தாலும்     அவர்கள் இரண்டு இதிஹாஸசங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள், அவை ஸ்ரீ ராமாயணம், மஹாபாரதம் என்றார் ஸ்வாமி விவேகானந்தர்.

பாரத தேசமெங்கும் ஸ்ரீ ராமாயணத்தையும் , மஹாபாரதத்தையும்  தெரியாத, போற்றாத மக்கள் எந்த மொழியிலும் இல்லை.

பாரத மொழிகள் அனைத்தும் இந்த இரு இதிகாசங்களைப் போற்றுகின்றன, என்று உறுதியாகச் சொல்லலாம்.

தமிழகமும் ஸ்ரீ ராமாயணத்துடனும், மஹாபாரதத்துடன் தொடர்புடையது. தமிழ் இலக்கியங்களில் ஸ்ரீ ராமாயண, மஹாபாரதக்  குறிப்புகள் உள்ளன.

தமிழகத்தில் ஸ்ரீ ராமனின் திருவடிகள் பட்டுள்ளன. இன்றும் அதற்கு ஆதாரமாய் உள்ளது ஸ்ரீ ராமர் பாலம்.

சங்க இலக்கியத்தில் புறநானூற்றில் 358வது பாடல் வான்மீகியார் என்பவர் பாடியது.

இது ஸ்ரீ வால்மீகி ரிஷி பாடியது அல்ல, என்றாலும் ஸ்ரீ ராமாயணத்தை  நமக்கு அளித்த ஸ்ரீ வால்மீகியின் பெயரை வைக்குமளவுக்கு  ஸ்ரீ வால்மீகியின் புகழ் தமிழகத்தில் பரவியிருந்ததைக் காட்டும் அகச்சான்றாகும்.

புறநானூறு 378வது பாடல் ஸ்ரீ ராமாயண ஸம்பவத்தைச் சுட்டிக் காட்டுகிறது.

மஹாபாரதத் தாக்கமும் தமிழ்ச் சங்க இலக்கியத்திலும் தமிழ் மக்களிடமும் காணலாம். தர்மன், ஸஹாதேவன்,  அர்ஜு(ன)ன்  போன்ற பெயர்கள் தமிழக மக்களிடம் பரவலாக உள்ளது இதற்குச் சான்று.

சங்க இலக்கிய நூலான புறநானூறு இரண்டாவது பாடல் பாண்டவர்கள், கௌரவர்கள் என்னும் இரு தரப்புக்கும் போர் மூண்டபோது இருதரப்புக்கும் உணவு வழங்கியவன் உதியன் சேரலாதன் என்ற தமிழக மன்னன் என்று முரஞ்சியூர் முடிநாகனார் என்னும்  புலவர் பாடுகிறார்.

 சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டம், புறநானூறு கூறிய தகவலை உறுதி செய்கிறது.

 பாண்டிய மன்னன்  ஒருவன் பாண்டவர்கள் தரப்பில் போரிட்ட தகவலும் அவனது வீரத்தை  அஸ்வத்தாமன் புகழ்வதும் வியாசரால் மஹாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படி ஸ்ரீ ராமாயணம், மஹாபாரதத்தூக்கும்  தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பு தொன்மையானது என்றால் மறுக்கமுடியாதது.

தமிழகத்தில் திரௌபதி கோயில்கள் இல்லாத கிராமங்கள் அரிது என்றே சொல்லலாம்.

திரௌபதி வரலாறு: திரௌபதி யார்? அவள் பிறப்பின் ரகசியம்!

குரு துரோணாச்சார்யாரின் அறிவுரை படி அர்சுனன் பாஞ்சால தேசத்து மன்னன் துருபதனை வீழ்த்தி பாதி ராஜ்யத்தை கைப்பற்றுகிறான்.

இதனால் மணமுடைந்த துருபதன் அவர்களை பழி தீர்க்க வாரிசு வேண்டி மிகப் பெரிய யாகத்தை நடத்துகிறான்.

அந்த அக்குரோசமான ஜுவாலையில் இருந்து கரிய நிறத்தில் அழகிய பெண் ஒருத்தி வெளியே வருகிறாள். தோன்றும் போதே வானில் பெரிய அசரீரி ஒலிக்கிறது.

“ குரு வம்சமானது இவளாளே அழியும்” என்று கூறியது. அப்படிப்பட்ட அந்த தீயில் தோன்றிய பெண்ணே “திரௌபதி” ஆவாள்.

இவளே பாஞ்சால நாட்டை சார்ந்ததால் பாஞ்சாலி என்றும், யாகத்தில் தோன்றியதால் யாகசேனி என்றும், கரிய நிறம் கொண்டதால் கிருஷ்ணை என்றும் பெயர்க் கொண்டாள்.

திரௌபதியின் சிறப்பு

அழகில் சிறந்தவள். எவரேனும் கண்டாலும் ஆசை கொள்ளும் அளவிற்கு பேரழிகி. அவளின் உடலில் இருந்து இயற்கையாகவே நீல தாமரையின் மணம் வீசுமாம்.

அழகிலும் அறிவிலும் சிறந்த பெண்ணாக விளங்குபவள். சர்வ லக்சணங்களும் பொருந்திய தேவலோக பெண்ணைப் போல் விளங்கினாள்.

திரௌபதியின் சுயம்வரம்

துருபதன் திரௌபதிக்கு திருமணம் நடத்த சுயம்வரம் அறிவித்தார். பல்வேறு தேச இளவரசர்களும், அரசர்களும் கலந்து கொண்டனர். துருபதன் தன் மகளை மணக்க போட்டி அறிவித்திருந்தார்.

இயந்திரத்தில் சுற்றும் குறியை யார் சரியாக வில்லால் அடிகிறாரோ அவருக்கே தனது மகளை திருமணம் செய்து தருவதாக கூறினார்.

அர்சுனனே போட்டியில் வென்றார் பாஞ்சாலியை மணக்க ஆயத்தமானார்.

வெற்றி கொண்ட திரௌபதியுடன் குந்தியை காணச் சென்று, வென்ற விஷயத்தை கூறினார் அந்நிலையில் குந்தி வென்றது ஒரு பெண் என்று அறியாது.

வென்ற பொருளை ஐவரும் சமமாகப் பிரித்து கொள்ளுமாறு கூறினார். அனைவரும் அதிர்ந்தனர்.

குந்தியும் உண்மை அறிந்து அதிர்ந்தார். இருப்பினும் அன்னையின் வாக்கின் படி அனைவரும் ஒப்பு கொண்டனர்.

ஐவருடன் திருமணம் நடக்க காரணம் என்ன?

பின்பு பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் திருமணம் ஏற்பாடனது. பாஞ்சாலியின் தந்தை துருபதனுக்கு மனம் ஒப்பவில்லை. இது குறித்து அவர் யுதிஷ்டிரனிடம் கேட்டார்.

தர்மம் தவறாத யுதிஷ்டிரனும் இந்த திருமணத்தில் எந்த தவறும் இருப்பதாக தோன்றவில்லை. மேலும் சில உயர்ந்த தர்மத்தை காக்க சட்டங்களை மீறலாம் என்று கூறினார்.

இந்த திருமணமானது நடமுறைக்கு மாறாது ஆனாலும் மிகப்பெரிய தர்மத்தை நிலைநாட்ட போகிறது. ஆனாலும் துருபதன் ஏற்க தயங்கினார்.

திரௌபதி பிறப்பு ரகசியம்

பாண்டவர்கள் அனைவரும் முற்பிறவியில் தேவர்கள். பாஞ்சாலி ஒருத்தி அல்ல நான்கு தேவர்களின் மனைவியின் சக்தியாவாள்.

எமனின் மனைவி சியாமளா, வாயுவின் மனைவி பாரதி, இந்திரனின் மனைவி சசி, இரண்டு அசுவினி குமாரர்களின் மனைவி உஷா ஆகியோரின் சக்தி ஆவாள்.

பஞ்ச பாண்டவர்கள்

1. தர்மன் – எமதர்மன்
2. பீமன் – வாயு
3. அர்சுனன் – இந்திரன்
4. நகுலன் & சகாதேவன் – அசுவினி குமார்கள்.

எனவே தான் அந்த தேவர்களின் அம்சமாக தோன்றிய பாண்டவர்கள் ஐவரும் இவளை மணக்க நேரிட்டது என்பதை வியாசர் ஞான திருஷ்டியின் மூலம் துருபதனிற்கு உணர்த்தினார்.

துருபதனும் திரௌபதியின் பிறப்பு ரகசியம் அறிந்து ஒப்புக் கொண்டு திருமணம் நடந்தேறியது.

திரௌபதியின் கற்பு நெறி

ஐவரின் மனைவியாயினும் திரௌபதி ஐந்து பத்தினி கன்னிகைகளில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.

சீதை, அகலிகை, தாரை, மண்டோதரி, திரௌபதி என்று கற்பு நெறி தவறாது வாழ்ந்த மாதர்களை போன்றுகின்றோம்.

திரௌபதி ஐந்து கணவர்களையும் சமமாக மதித்தாள். ஐவரை தவிற பிரிதொருவரை நினைக்கவில்லை.

மேலும் ஒருவரிடம் கூடிய பிறகு மற்றொருவரிடம் செல்லும் போது மீண்டும் கன்னித் தன்மையை அடையும் வரம் பெற்றிருந்தாள்.

எனவே கணவர் ஐவருடன் ஒழுக்கம் தவறாமல் வாழ்ந்தாள். வேறு எவர் மீதும் எந்த ஒரு இச்சையும் கொண்டதில்லை.

திரௌபதியின் சபதம்

கற்பு நெறி தவறாத திரௌபதியினை சூதில் வென்று துரியோதனன் சபையில் துச்சாதனன் அவளை நிர்வாணபடுத்த துகிள் உறித்தான்.

கிருஷ்ண பக்தியினால் அவள் காப்பாற்ற கிருஷ்ணனை அழைத்தாள். அவள் கற்பு தவறாத மங்கை. ஆதலால் அவள் துகில் நீண்டுக் கொண்டே சென்றது. மானம் காத்தருளினான் கிருஷ்ணன்.

தன் மானத்தை பங்க படுத்திய துச்சாதனனின் மார்பின் குருதியை தன் தலையில் பூசும் வரை கூந்தலை வாரி முடியேன் என சபதம் எடுத்தாள்.

தன் தொடையில் அமர சொன்ன துரியோதனின் தொடை நொருங்கும் வரை தன் சினம் தீராது என சபதம் மேற்கொண்டாள். அதன்படியே மகாபாரத யுத்தம் மூண்டு கௌரவர்கள் அனைவரும் மாய்ந்தனர்.

திரௌபதி என்கிற பத்தினி தெய்வம்

பல்வேறு இன்னல்கள் வந்த போதிலும் தன் கணவர்கள் ஐவருக்கும் உறுதுணையாய் நின்று கௌரவ வம்சத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டினார்.

அந்த பத்தினி தெய்வத்திற்கு இன்றளவும் பல்வேறு இடங்களில் கோயில்கள் அமைத்து வழிபாடுகள் நடைபெறுகின்றன.

பக்தி, கற்பு, பெண்ணியம் மற்றும் ஒழுக்கத்திற்கும் சான்றாக விளங்கிய அந்த மகாசக்தியே திரௌபதி அம்மன் ஆவாள்.

——————-

குமரி மாவட்டத்தில், கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மிகவும் புனிதம் மிக்கதாக போற்றப்படுகிறது.
அந்தப் பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த சுற்றுலாத் தலமாக விளங்கும் இடம் சொத்தவிளை கடற்கரை.
இந்தக் கடற்கரையை ஒட்டியவாறு பஞ்சபாண்டவர்களில் நான்குபேர் தண்ணீர் அருந்தி இறந்துபோன நஞ்சுப் பொய்கையும்
அதையொட்டி மஹாவிஷ்ணு ஆலயமும் அமைந்திருக்கிறதுபஞ்ச பாண்டவர்களில் தர்மனைத் தவிர மற்ற நால்வரும் தண்ணீர் குடித்து செத்துப்போனதால் இந்த பகுதிக்கு செத்தவிளை எனப் பெயர் இருந்திருக்கிறதகாலப்போக்கில் மருவி சொத்தவிளை என மாறியிருக்கிறது.
பாண்டவ சகோதரர்களில் நான்குபேர் தடாகத்தில் தண்ணீர் குடித்ததால் மாண்டுபோனது பற்றி மஹாபாரதத்தில் சொல்லப்படும் சம்பவத்தைப் பார்ப்போம்.

மஹாபாரதத்தில் சகுனியின் சூழ்ச்சியால் சூதாட்டத்தில் துரியோதனனிடம் நாட்டை இழந்தனர் பஞ்ச பாண்டவர்கள்.
சூதாட்டத்தில் தோற்றுப்போனதால் 12 வருடங்கள் வனவாசமும், ஓர் ஆண்டு அஞ்ஞாத வாசமும்
(தலைமறைவு வாழ்க்கை) செய்யும் நிலை பஞ்சபாண்டவர்களுக்கு ஏற்பட்டது.
பாண்டவர்களும் பாஞ்சாலியுடன் வனவாசத்தில் ஈடுபட்டனர்.
12 ஆண்டுகால வனவாசம் ஒருசில தினங்களில் முடிவுறும் தருவாயில் இருந்த சமயத்தில்தான் அந்தச் சம்பவம் நேர்ந்தது.
அந்தணர் ஒருவருடைய வேள்வி தீ மூட்டும் அரணிக்கட்டை ஒரு மானின் கொம்புகளில் மாட்டிக்கொண்டது.
மருண்டு போன மான் திக்குத் தெரியாமல் ஓட்டம் பிடித்தது. மானிடமிருந்து அரணிக்கட்டையை மீட்டுத் தரும்படி பாண்டவர்களிடம் அந்தணர் வேண்டினார்.
பாண்டவர்கள் மானைத் துரத்தியபடி ஓடினர்.
வனத்தில் வெகுதூரம் சென்றபிறகும் மானைப் பிடிக்கமுடியாமல் தளர்ந்துபோய் ஓர் ஆலமரத்தடியில் அமர்ந்தனர்.
அந்தணருக்கு உதவமுடியாமல் போய்விட்டதே என்று பாண்டவர்கள் மிகவும் வருந்தினர்.

அனைவருக்கும் தாகம் ஏற்பட்டதால் எங்கிருந்தாவது தண்ணீர் எடுத்துவரும்படி நகுலனிடம் தருமர் கூறினார்.
தண்ணீர் தேடிச்சென்ற நகுலன் வனத்தில் ஸ்படிகம் போன்று தூய்மையான தடாகத்தை கண்டான்.
முதலில் தனது தாகத்தை தணித்துக்கொண்டு அம்புகள் வைக்கும் தூணியில் சகோதரர்களுக்கு தண்ணீர் எடுத்துச்செல்ல திட்டமிட்டான்.
அவன் பொய்கையில் இறங்கி தண்ணீர் பருக யத்தனித்தபோது  அசரீர் ஒலித்தது.
“இந்தத் தடாகம் எனக்குச் சொந்தமானது. முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்.
அதன்பிறகு நீர் பருகலாம்” என்றது அசரீரி.
சுற்றும் முற்றும் பார்த்த நகுலன் யாரும் கண்ணுக்கு புலப்படாததால் அசரீரியை அலட்சியப்படுத்திவிட்டு தண்ணீர் குடித்தான்.
ஒரு மிடறு தண்ணீர் குடித்த மாத்திரத்திலேயே நகுலன் செத்தவன் போன்று கீழே விழுந்தான்.

வெகுநேரம் ஆகியும் தண்ணீர் எடுக்கச்சென்ற நகுலனைக் காணாததால் இரண்டாவதாக சகாதேவன்
அனுப்பப்பட்டான். அவனும் திரும்ப வரவில்லை.
மூன்றாவதாக அர்ஜூனன் சென்றான்.
உடலில் காயம் ஏதும் இல்லாமலே சகோதரர்கள் இருவரும் மரணித்து தரையில் கிடந்ததைப் பார்த்துத் திகைத்தான்.
கண்ணுக்குத் தெரியாத எதிரியை நோக்கி மந்திர அஸ்திரம் ஒன்றை எய்தான் அர்ஜூனன்.
அப்போதும் அதே குரல் ஒலித்தது “உன் பாணம் என்னை ஒன்றும் செய்யாது.
முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு விடை சொல். அதன்பிறகு நீர் எடுத்துச்செல்” என்றது.

”முதலில் தாகத்தைத் தீர்த்துக் கொண்டு உன் கேள்விகளுக்கு விடை சொல்லுகிறேன்
என்று கூறியபடி தண்ணீர் குடித்த அர்ஜூனனும் மாண்டு வீழ்ந்தான்.
மூன்று சகோதரர்களும் திரும்பி வராததால் தருமன் மனக்கவலை அடைந்தான்.
அவர்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என நினைத்தான்.
“தம்பிகளுக்கு என்னதான் ஆனது என்று பார். எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது
கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா” என்று பீமனிடம் தருமன் கூறினார்.
தண்ணீர் எடுக்கச்சென்ற பீமன் பொய்கை அருகே தனது மூன்று சகோதரர்களும் சடலமாகக் கிடப்பதைப் பார்த்து பொங்கி எழுந்தான்.
இது யக்ஷர்களின் வேலையாகத்தான் இருக்கும்.
முதலில் தாகத்தை தணித்துக் கொண்டு அவர்களை ஒழித்துக் கட்டுகிறேன் என சூளுரைத்தபடி பீமன் தடாகத்தில் இறங்கினான்.
மீண்டும் அதே அசரீரி ஒலித்தது. ‘எனக்கு நிபந்தனை விதிக்க இவன் யார்?’ என அலட்சியமாக
நினைத்தபடி தண்ணீரைக் குடித்த பீமன் முந்தைய மூவரைப் போன்றே மாண்டு விழுந்தான்.

தண்ணீர் எடுக்கப்போன தம்பிகள் நீண்டநேரம் ஆகியும் வராததால் வருந்தியபடி தண்ணீர் தேடி தானே நடக்கலானார் தருமன்.
தடாகம் அருகே வந்தவர் தனது நான்கு சகோதரர்களும் மாண்டுகிடப்பதைக் கண்டு மிகவும் வருந்தினார்.
இங்கு போர் நடந்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று நினைத்தவர்
உடல் தளர்ச்சியை நீக்கிக்கொள்ள முதலில் தாகம் தணிக்க முற்பட்டார்.
அப்போது மீண்டும் அசரீரி ஒலித்தது.
“என் பேச்சை பொருட்படுத்தாமல் தண்ணீர் குடித்ததால் உன் உடன்பிறந்தவர்கள் மாண்டுபோனார்கள்.
முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல். என்னை அலட்சியப்படுத்தினால்
உன் தம்பிகளின் கதிதான் உனக்கும் ஏற்படும்” என்று குரல் ஒலித்தது.
அசரீரிக்கு மதிப்பளித்து தண்ணீர் குடிக்காமல் கரையேறிய தர்மர் “இந்தப் பொய்கை உனக்குச் சொந்தம் எனக் கூறுகிறாய்.
உனது அனுமதி இல்லாமல் தண்ணீர் எடுக்க எனக்கு உரிமை இல்லை.
உன் கேள்விகளைக் கேள் முடிந்த அளவுக்கு பதில் சொல்லுகிறேன்” என்றார்.

எதை இழப்பதால் இன்பம் ஓங்குகிறது என்ற அசரீரியின் கேள்விக்கு
சினத்தை இழப்பதால் என பதில் சொன்னார் தருமன்.
இதுபோன்று பல கேள்விகளை அசரீரி கேட்டபோது அசராமல் பதில் சொன்னார் தருமன்.
தருமனின் பதில்களால் மகிழ்ந்துபோன அந்த குரல் இறுதியில்
“மடிந்து போன நால்வரில் யாராவது ஒருவருக்கு நான் உயிர் தருகிறேன்.
யாருக்கு உயிர் கொடுக்கவேண்டும்” எனக் கேட்டது.

”நகுலனை எனக்குத்  திருப்பிக்கொடுங்கள்” என தருமர் வேண்டினார்.
“யாராலும் வெல்ல முடியாத சிறந்த போர்வீரர்களான பீமன், அர்ஜூனன் ஆகியோரில்
ஒருவரைக் கேட்காமல் இரண்டாம்தர வீரனாக இருக்கிறவனை எதற்குத் தேர்ந்தெடுக்கிறாய்” என அசரீரி கேட்டது.

அதற்கு தருமன், “என் தந்தை பாண்டுவுக்கு குந்தி, மாத்ரி ஆகிய இரண்டு மனைவிகள்.
நான், பீமன், அர்ஜூனன் ஆகியோர் குந்திக்கு பிறந்தோம்.
மாத்ரிக்கு நகுலன், சகாதேவன் ஆகியோர் பிறந்தனர்.
என் தாய்க்கு பக்திப் பூர்வமாக சேவைசெய்ய நான் உயிரோடு இருக்கிறேன். மற்றொரு தாயான மாத்ரி இறந்துவிட்டாள்.
அவளுக்குச் செய்யவேண்டிய சிராத்தம் போன்ற கடமைகளைச் செய்ய ஒரு மகன் வேண்டும் என்பதால்
நகுலனை உயிர்ப்பிக்க வேண்டுகிறேன்.
போர்புரிந்து வெற்றிபெறுவது என் வாழ்கையின் குறிக்கோள் அல்ல” என்றான்.

தருமனின் இந்த பதிலைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்த தர்மதேவன் (யமதர்மன்) அங்கு பிரசன்னமானார்.
“தருமா நான் உனக்கு தெய்விகத் தந்தையாவேன். அந்தணரின் அரணிக்கட்டையை மான் வடிவில் எடுத்து வந்தது நான்தான்.
உனது தர்ம சிந்தனையால் நான் மகிழ்ச்சியடைந்தேன். உனது நான்கு சகோதரர்களும்
மீண்டும் உயிர் பெற்று எழுவார்கள்” என்று வரம் வழங்கிவிட்டு மறைந்தார்
தர்மதேவன். தருமனின் நான்கு சகோதரர்களும் தூங்கி எழுவது போன்று கண் விழித்தார்கள்.
அரணிக் கட்டையும் கிடைத்தது.

அந்தணருக்கு அரணிக்கட்டையை கொடுத்த பாண்டவர்கள் ஒரு வருடம் அஞ்ஞாத வாசத்துக்குத் தயாரானார்கள்.

மகாபாரத சம்பவத்தில் நகுலன் தொடங்கி பீமன் வரையில் நால்வரும் நீர் அருந்தி செத்துப்போன நஞ்சுப் பொய்கைதான்
சொத்தவிளை கடற்கரையை ஒட்டி மகா விஷ்ணு கோயிலுடன் இணைந்திருக்கிறது என்கிறார்கள் இப் பகுதி வாசிகள்.

சொத்தவிளை குறித்து ஆய்வு செய்து புத்தகம் வெளியிட்டிருக்கும் பேராசிரியர் ப.சர்வேஸ்வரன் கூறும்போது,
“சொத்தவிளை நஞ்சுப் பொய்கை மகாவிஷ்ணு ஆலயம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டது.
மண்ணுக்கு அடியில் கிடைக்கும் வெள்ளைக் கல் கொண்டு நேர்த்தியாக இக்கோயிலின் மூலஸ்தானம் அமைக்கப்பட்டுள்ளது.
மகாவிஷ்ணு, மகாலட்சுமி தேவியும் காட்சிதருகிறார்கள்.
ஆரம்பத்தில் மகாவிஷ்ணுவின் பஞ்சலோக ரூபம் இருந்திருக்கிறது.
பிற்காலத்தில் பஞ்சலோக ரூபம் காணாமல் போனது.
மஹா விஷ்ணு, லட்சுமி தேவியும் நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றனர்.
வலப்புறம் சந்நிதியில் சிவலிங்கமும், லிங்கத்தின் எதிரே நந்தியெம்பெருமானும் காட்சியளிக்கிறார்கள்.
இக் கோயிலின் புனிதத் தீர்த்தமான நஞ்சுப் பொய்கையில் கால்நடைகள் நீர் அருந்தாது.
நஞ்சுப் பொய்கை என்பதால் பொதுமக்களும் பயன்படுத்துவது இல்லை.
மதுரை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலர் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டு
நஞ்சுப் பொய்கையிலிருந்து தீர்த்தம் எடுத்துச் செல்கிறார்கள்.
இந்தத் தீர்த்ததால் உடலில் ஏற்படும் ஆறாத புண்ணும் ஆறிவிடுவதாக கூறுகிறார்கள்.
எவ்வளவு கோடையாக இருந்தாலும் இந்தப் பொய்கை வறண்டுபோகாது.

2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் இந்தக் கோயிலில் தண்ணீர் தேங்கினாலும் எந்தச்  சேதாரமும் ஏற்படவில்லை.
நஞ்சுப் பொய்கை பற்றி கேள்விப்பட்டு பக்தர்கள் வருகை இப்போது அதிகரித்துள்ளது” என்றார்.

பொய்கையைப் பார்த்தவண்ணம் வினை தீர்க்கும் விநாயகர் சந்நிதி அமைந்திருக்கிறது.
பொய்கைக் கரையில் யம தர்மனுக்கு வடக்குப் பார்த்து பீடம் அமைக்கப்பட்டிருக்கிறது.
நவகிரக சந்நிதி, மகா விஷ்ணுக் கோயிலைப் பார்த்தவாறு ஆஞ்சநேயர் சந்நிதியும் உள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக மஹா விஷ்ணு, சிவன் சந்நிதிக்கு மத்தியில் பஞ்சபாண்டவர் பீடம்
ஒன்று அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.
பஞ்சபாண்டவர் பீடத்தில் தனியாக படையல் இடப்படுகிறது.

“விநாயகர் சதூர்த்தி, வைகுண்ட ஏகாதசி தினங்களில் கோயில் விழாக்கள் நடக்கிறது.
பிரதோஷம், அனுமன் ஜயந்தியின்போதும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
ஞாயிற்றுக் கிழமை தோறும் மாலை 4.30 மணிமுதல் 6.30 மணி வரை சிறப்பு பூஜை நடக்கிறது.
இதில் ஏராளமான பக்கதர்கள் கலந்து கொள்வார்கள்” என்கிறார் கோயில் பூசாரி ராமன்.

எங்கிருக்கிறது எப்படிச் செல்வது?

நாகர்கோவிலிலிருந்து 12 கி.மீ. தொலைவில் சொத்த விளை நஞ்சுப் பொய்கை மஹா விஷ்ணு ஆலயம் அமைந்திருக்கிறது.
நாகர்கோவில் மீனாட்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து அம்பலப்பதி, மணக்குடி
செல்லும் அனைத்துப் பேருந்துகளிலும் செல்லலாம்.
சொத்த விளை நஞ்சுப் பொய்கை மஹா விஷ்ணு ஆலயம் வருபவர்கள் நடந்து செல்லும்
தூரத்தில் உள்ள சொத்தவிளை கடற்கரையின் அழகை ரசிக்கலாம்.
அய்யா வைகுண்டரின் ஐந்து பதிகளில் ஒன்றான அம்பலப்பதி கோயிலும் அருகில்தான் அமைந்துள்ளது.
சொத்த விளை வரும் பக்தர்கள் மனதுக்கு நிம்மதி நிச்சயம்.

————————–

மஹாபாரதத்துடன் தொடர்புள்ள ஒரு ஸ்தலம்தான் பாண்டூர். இத்திருத்தலம் மாயூரம் எனப்படும் மயிலாடுதுறைத் தாலுகாவில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து மாப்படுகை வழியாக 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

பாண்டூர் அக்ரஹாரத்தில் உள்ளது இந்த ஸன்னிதி

அக்ரஹாரம் என்பது மேற்குப் புறம் பெருமாள் ஸன்னிதியுடன் இருக்கும். கிழக்கு நோக்கி பெருமாள் ஸேவை ஸாதிப்பார். பழமையான எந்த ஒரு அக்ரஹாரத்து அமைப்பும் அப்படித்தான் இருக்கும்.

பாண்டவ நல்லூர் என்றழைக்கப்பட்ட இந்த ஊரின் பெயர் இப்போது “பாண்டூர்” என்பதாகும். பஞ்சபாண்டவர்களுக்கு எல்லா விதத்திலும் எப்போதும் துணை நின்றவர் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. மஹாபாரதமே “தூது சென்றவன் ஏற்றம் சொல்லும் நூல்” என்று சிறப்பிக்கப்படுகிறது.

பாண்டவர்களுக்கு ஸஹாயம் செய்ததால் பாண்டவ ஸஹாயப் பெருமாள் என்று பெயர். அதாவது இந்த ஸன்னதி பெருமாள் ஸ்ரீ கிருஷ்ணரைக் குறிக்கும் பெயர் கொண்டவர். ஸ்ரீ பூமி நீளா தேவி ஸமேத பாண்டவ ஸஹாய பெருமாள் ஸன்னிதி.

தென்னச்சார்ய ஸம்ப்ரதாயம் , வைகானஸ ஆகமம்.

ஸன்னிதி நுழைவாயில் மேல்புறம் ஸ்ரீமந் நாராயணன் இரு தேவிகளுடன் காட்சி தருகிறார். இடது மற்றும் வலது புறத்தில் ஸ்ரீ கருடன் கைகளைக் கூப்பியவண்ணம் காட்சி தருகிறார்.

உள்ளே ஸன்னதி முன் மண்டபத்தில் நுழைந்தவுடன் அங்கு பெருமாளை நோக்கி கைகளை கூப்பியபடி ஸ்ரீ கருடனின் காட்சி.

 அர்த்த மண்டப வெளிச் சுவற்றில் ஸ்ரீ கிருஷ்ணரின் ஓவியம்

அடுத்து அர்த்த மண்டபம் நாயக்கர் காலக் கட்டிடக் கலையைப் பறைசாற்றுகிறது அதில் இடது புறம் ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயார் கிழக்கு நோக்கியபடி (முன்பு தாயாருக்குத் தனி ஸன்னிதி இருந்திருக்கும்),  வலது புறம் வளைவுகளின் உள்புறம். கிழக்கு நோக்கியபடி, ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ நம்மாழ்வார், வடதிசையில் தெற்கு நோக்கியபடி விஷ்வக்ஸேசனர்.

 இரண்டாவது வளைவில் ஜெயகார்ய ஸித்தி ஆஞ்சநேயர் கைகளைக் கூப்பியபடி.. அருள் பாலிக்கிறார்.

 மஹாபாரதத்தின் குருக்ஷேத்திரப் போரில் ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்குத் தேரோட்ட அர்ஜுனனின் தேரில் ஸ்ரீ ஆஞ்சநேயர் கொடியில் இருந்தார். அர்ஜுனனுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் ஸஹாயமாக இருந்தது போல ஸ்ரீ ஆஞ்சநேயரும் இருந்ததை  நினைவுறுத்துகிறார் இந்த ஆஞ்சநேயர்.

 துவார பாலகர்களின் சித்திரம்………

அடுத்துச் சிறு மண்டபம் அதனைத் தாண்டி கர்பக்ரஹகம் அதில் ஸ்ரீ பூமி நீளா ஸமேத பாண்டவ ஸகாயப் பெருமாள் கருணை பொங்கும் முக அழகுடன் தேவிமார்களுடன் காட்சி தருகிறார்.

 பெருமாள் திருமேனி மட்டும் ஒரே வடிவில் இரண்டு திருமேனிகள் இந்த ஸன்னிதியில் உள்ளன. மாயன் என்பது ஸ்ரீ கிருஷ்ணனைக் குறிப்பது வழக்கம் அதனாலோ என்னவோ ஒரே வடிவில் இரண்டு மூர்த்தியாக முன் பின் என்று காட்சி தருகிறார்.

 வலது கை வரத ஹஸ்தம் இடது கை இடுப்பில், மற்ற இரு கைகளில்  இடது கையில் சங்கு, வலது கையில் சக்கரம் ஏந்தியபடி சதுர்புஜ ஸேவையில் தேவிமார்களுடன் காட்சிதருகிறார் பெருமாள்.

 ஸ்தல விருக்ஷசம் பாரி ஜாதம் (பவழமல்லி). பவழமல்லி மரத்தின் வேரில் ஸ்ரீ ஆஞ்சநேயர் இருப்பதாகவும் , பூவில் ஸ்ரீ கிருஷ்ணர் இருப்பதாகவும் ஐதீஹ்யம்.

இந்த ஸன்னிதி ஸ்ரீ கிருஷ்ணருடன் தொடர்புடையது என்பதால் இந்த ஸன்னிதி ஸ்தல விருக்ஷம் பவழமல்லியாக இருப்பதும் சிறப்பு.

ஹேவிளம்பி ஆவணி 11 இல் ஸம்ப்ரோஷணம் (27/8/17) நடைபெற்றுள்ளது.

பாண்டவர்களுக்குத் தூது சென்று அர்ஜுனனுக்குத் தேரோட்டித் தனது கருணையைக் காட்டிய ஸ்ரீ கிருஷ்ணனைப், பாண்டவர்களுக்கு ஸஹாயம் செய்த ஸ்ரீ கண்ணனை ஸேவிக்க நீங்களும் செல்லலாமே…

——————

துரோணாச்சாரியார் கோயில் (Dronacharya Temple) மகாபாரதத்தில் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் ஆசிரியரான துரோணாச்சாரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரே கோயிலாகும். இது இந்தியாவின் அரியானா மாநிலத்தில் இருக்கும் குருகிராமில் உள்ள பீம் நகர் கிராமத்தில் அமைந்துள்ளது.

காஞ்சிபுரம் பாண்டவேசுவரர் கோயில் (பாண்டவேசம்) என்று அறியப்படும் இது, காஞ்சியிலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும் .
மேலும், (இச்சிவலிங்கம் தற்போது இல்லை; கட்டிடங்கள் கட்டும்போது இது காணாது போய்விட்டது என்று சொல்லப்படுகிறது.)
இக்கோவில் குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப் படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது
தல வரலாறு
பாண்டவர்கள், திரௌபதி, உரோமேசர் முனிவர் முதலிய முனிவர்களும் அவர்களின் மனைவியர்களும்
தீர்த்த யாத்திரை மேற்கொண்டு ஆங்காங்குச் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தனர்.
காஞ்சிக்கு வந்த அவர்கள் தத்தம் பெயர்களில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.
பாண்டவர்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டது பாண்டவேசம் எனப்பட்டது.

பாண்டவேசம் எனப்படும் இச்சிவலிங்கத்திற்கு தென்திசையில் ஈசானன், கயிலாயநாதர் என்னும் பெயரில்
சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வடகிழக்கு திசைக்கு திசைப் பாலகனாகும் பேற்றை அடைந்தான் என்பது வரலாறு

அமைவிடம்
தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரம் வடகிழக்கு பகுதியில், (பெரிய காஞ்சிபுரம் (சிவகாஞ்சி)
ரயில்வே ரோடில் சென்று தோட்டப்பகுதியில், வெட்ட வெளியில் (தற்போது கட்டிடங்கள் நிறைந்துள்ளது) உள்ளது.
மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின்
வடகிழக்கே சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் (தற்போது இல்லை) அமைக்கப்பட்டுள்ளது.

—————–

கீழையில் – கீழையூர்

இறைவர் திருப்பெயர்: செம்மலைநாதர்

இறைவியார் திருப்பெயர்: வண்டமரும் பூங்குழலாள்

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:பஞ்ச பாண்டவர்கள்.

  • மக்கள் தற்போது கீழையூர் என்று வழங்குகின்றனர்.
  • வனவாசத்தின்போது பாண்டவர்கள் இங்கு வந்து ஐந்து சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறு சொல்லப்படுகிறது. மூலத்தானத்தில் விளங்கும் லிங்கம் அருச்சுனனின் பிரதிஷ்டையாகச் சொல்லப்படுகிறது
  • வைப்புத்தலப் பாடல்கள் : சுந்தரர் - ஈழ நாட்டுமா தோட்டந்தென் (7-12-7).
    • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள – வைப்புத் தலமாகும்.
    • கோயிலுள் இரு பலாமரங்கள் நன்கு காய்த்து வருமானத்திற்கு உதவுகின்றன.
    • இவ்வூரை’அருமொழி தேவ வளநாட்டு அளநாட்டுக் கீழையூர்’ என்று கல்வெட்டுக் குறிக்கின்றது.
    • அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு நாகப்பட்டினம் – திருத்துறைப்பூண்டி சாலையில் சென்று – ‘கருங்கண்ணி’யைத் கடந்தால் – கீழையூரை அடையலாம்.
  •  —————
  • உய்ய வந்த பெருமாள் கோயில் திருவித்துவக்கோடு

  • திருவித்துவக்கோடு என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். குலசேகராழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி என்னும் நகருக்கு அருகில் அமைந்துள்ளது. ‘திருமிற்றக்கோடு’, ‘திருவீக்கோடு’, ‘ஐந்து மூர்த்தி திருக்கோவில்’ என்றும் இதனை வழங்குவர்.தலவரலாறு

    இந்துத் தொன்மங்களின்படி துவாபர யுகத்தில் பஞ்ச பாண்டவர்கள் வனவாச காலத்தில் தென்னிந்தியாவில் பயணம் செய்கையில் இங்குள்ள நீளா நதிக்கரையோரம் ஒரு அழகான இடத்தைக் கண்டனர். அங்கு நிலவிய தெய்வீகம் கலந்த அமைதியைக் கண்டதும் சில காலம் அங்கேயே தங்கி இருக்க எண்ணினர். நாள் வழிபாட்டிற்காகச் சிலைகளையும், ஆலயத்தையும் நிர்மாணித்தனர்.

    முதலில் அர்ஜுனன் மஹாவிஷ்ணுவின் சிலையையும் அதற்கு வடக்கே தருமர் ஒரு சிலையையும் தென்புறத்தில் பீமன் ஒரு சிலையையும் அதற்குப் பின்புறம் (தென்புறத்திலே) நகுலனும் சகாதேவனும் ஒரு சிலையையும் நிர்மாணித்தனர். அவர்களது வெகு காலத்திற்குப் பின்னால் பாண்டிய மன்னன் ஒருவனால் மிகப்பெரிய சுற்றுமதில் கட்டப்பட்டது.

  • நெடுங்காலம் 4 மூர்த்திகளால் ஆனதாகவே இக்கோவில் இருந்தது. சுமார் 2000 (1800) ஆண்டுகட்கு முன்பு தென்னாட்டைச் சேர்ந்த முனிவர் ஒருவர் காசிக்குச் சென்றிருந்தார். அங்கேயே வெகு காலம் தங்கி வாழ்ந்திருந்தார். அவரது அன்னையார் மரணத் தறுவாயில் இருப்பதாகச் செய்தி வந்ததையடுத்து அவர் திரும்பிவரும்போது அவரது பக்தி ஈடுபாட்டினால் காசி விசுவநாதரும் அம்முனிவரது குடையில் மறைந்து வந்ததாகக் கூறுவர்.வரும் வழியில் இந்தச் சன்னதிக்கு வந்த முனிவர் நீளா நதியில் நீராடச் செல்லும்போது நான்கு மூர்த்திகட்கு முன்புறம் இருந்த ஒரு பலி பீடத்தில் தமது குடையை வைத்துவிட்டுச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அந்தப் பலி பீடம் நான்காக வெடித்து அவ்வெடிப்பிலிருந்து சுயம்புவாக சிவலிங்கம் ஒன்றும் தோன்றியிருந்ததாம். குடையும் மறைந்துவிட்டது. இவ்விதம் இது ஐந்து மூர்த்தி தலமாயிற்று. தற்போது இந்த சிவலிங்கத்தை சுற்றிலும் தனியே ஒரு கோவில் கட்டப்பட்டுவிட்டது.

    இறைவன், இறைவி

    இத்தலத்தின் இறைவன் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். உய்யவந்த பெருமாள், அபயப்ரதன் என அழைக்கப்படுகிறார். இறைவியின் பெயர் வித்துவக்கோட்டு வல்லி, பத்மாசனி நாச்சியார். என்பதாகும். இத் தலத்தீர்த்தம் சக்ர தீர்த்தம். விமானம் தத்துவ காஞ்சன விமானம் என்ற அமைப்பினை சேர்ந்தது.

    சிறப்புக்கள்

    கேரள நாட்டு ஆழ்வாரான குலசேகராழ்வாரால் மட்டும் 10 பாக்களில் பாடல் பெற்றது. திருமாலுக்கும் சிவனுக்கும் இங்கு ஒரே இடத்தில் சன்னதியிருப்பது சிறப்பானதாகும் திருமாலும் சிவனும் இணைந்திருக்கும் கோவில்கள் குறிப்பாக 108 வைணவத் திருத்தலங்களில்10க்கு மேற்பட்ட தலங்கள் உள்ளன. பாண்டவர்களின் வருகைக்கு முன்பே இத்தலம் இருந்ததென்பது ஆய்வாளர்களின் முடிவாகும்.

  • —————-
  • திருப்பார்த்தன் பள்ளி தாமரைக் கேள்வன் கோயில்

  • 108 வைணவ திவ்ய தேசங்களில், மயிலாடுதுறை மாவட்டம் திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோயில், 39-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. ராமபிரான் யாககுண்டத்தில் இருந்து காலைத் தூக்கி எழுந்து வருவது போல இரு தேவியருடன் அருள்பாலிப்பது தனிச்சிறப்பு.
  • திருமங்கையாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.கவள யானைக் கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமருசீர்க்

    குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்

  • தவள மாடம் நீடு நாங்கைத் தாமரையாள் கேள்வன் என்றும்பவள வாயாள் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே.
  • மூலவர்: தாமரையாள் கேள்வன்

    உற்சவர்: பார்த்தசாரதி

    தாயார்: தாமரை நாயகி

    தீர்த்தம்: கட்க புஷ்கரிணி

    விமானம்: நாராயண விமானம்

    தல வரலாறு

    கௌரவர்களிடம் நாட்டை இழந்த பாண்டவர்கள், வனவாசம் மேற்கொண்டனர். அப்போது அர்ஜுனனுக்கு தாகம் எடுத்ததால், தண்ணீர் தேடி அலைந்தான். சிறிது தூரம் நடந்ததும், அங்கு அகத்திய முனிவர் தனது ஆசிரமத்தில் தியானத்தில் ஆழ்ந்திருப்பதைக் காண்கிறான். அவர் அருகே கமண்டலம் இருப்பதைக் கண்டதும், அதில் தண்ணீர் இருக்கும் என்று எண்ணி மகிழ்ந்தான். முனிவர் தியானம் செய்து முடிக்கும்வரை தன்னால் பொறுத்திருக்க முடியாது என்பதால், அவர் தியானத்தை கலைத்து தனக்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்டான். அவரது அனுமதியுடன் கமண்டலத்தைத் திறந்து பார்த்தால் அதில் நீர் இல்லை.

    அகத்திய முனிவர், “நமக்கு எது வேண்டும் என்றாலும், கொடுக்கும் கடவுளான கிருஷ்ணரிடம் தானே கேட்டிருக்க வேண்டும்” என்று அர்ஜுனனிடம் கூறினார். உடனே அர்ஜுனன் கிருஷ்ணரை அழைத்தான். கூப்பிட்ட குரலுக்கு உடனே கிருஷ்ணர் அர்ஜுனன் முன் தோன்றினார். தன் கையில் இருந்த கத்தியை அர்ஜுனனிடம் கொடுத்த கிருஷ்ணர், அதைப் பயன்படுத்தி எந்த இடத்தில் தோண்டினாலும் தண்ணீர் கிடைக்கும் என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு மறைந்தார். கிருஷ்ணர் கூறியபடி, அர்ஜுனன், கத்தியால் தரையை கீறி, கங்கையை வரவழைத்து தன் தாகத்தைத் தீர்த்துக் கொண்டான். அகத்திய முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க, கிருஷ்ணர் (பார்த்தசாரதி) இங்கேயே கோயில் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சி நடைபெற்ற இடம் பார்த்தன்பள்ளி என்று தல வரலாறு தெரிவிக்கிறது.

    ராமபிரானின் அருட்காட்சி

    அயோத்தியை ஆளும் தசரத மன்னர், குழந்தை வரம் பெற, புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். அப்போது, ஸ்ரீமன் நாராயணனே தனக்கு மகனாக (ராமபிரானாக) அவதரிக்கப் போகிறார் என்பதை அறிந்தார் தசரதர். தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்காக திருமாலை அழைத்தார். அப்போது யாக குண்டத்தில் இருந்து நாராயணன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் தோன்றி, தான் எவ்வாறு இருப்பேன் (ராமபிரான்) என்பதை தசரதருக்கு உணர்த்தினார். ராமாவதாரத்தின்போது, ராமபிரானுடன் இருவரும் (ஸ்ரீதேவி, பூதேவி) வாழ முடியாது என்பதால், அப்போதே ராமபிரானை தரிசித்தனர். ராமபிரான் யாககுண்டத்தில் இருந்து காலைத் தூக்கி எழுந்து வருவது போல காட்சி தரும் நிகழ்ச்சி, சிலையாக வடிக்கப்பட்டு இத்தலத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவருடன் இரு தேவியரும் உள்ளனர் என்பது தனிச்சிறப்பு.

    கோயில் அமைப்பும், சிறப்பும்

    ராஜகோபுரம் 3 நிலை கொண்டதாக அமைந்துள்ளது. நாராயண விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் மூலவர் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். உற்சவர் பார்த்தசாரதி பெருமாள் கையில் கத்தியுடன் அருள்பாலிக்கிறார், அருகே கோலவல்லி ராமர் கையில் சங்கு, சக்கரம், கதை, வில், அம்புடன் உள்ளார். அர்ஜுனர், இந்திரன், பதினோரு ருத்திரர்கள் திருமால் தரிசனம் கண்டுள்ளனர்.

    பார்த்தனுக்காக உண்டான கோயில் என்பதால் பார்த்தன்பள்ளி ஆயிற்று. அர்ஜுனனுக்கும் இவ்விடத்தில் ஒரு கோயில் உண்டு. வருணன் இத்தல பெருமாளை நோக்கி கடும் தவம் புரிந்து, தனக்கு பார்த்தசாரதியாக காட்சி தருமாறு வேண்டியதால், பெருமாளும் அவ்வாறே அருள்பாலித்ததால், பார்த்தசாரதி பள்ளி என்று இவ்வூருக்கு பெயர் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    திருவிழாக்கள்

    வைகுண்ட ஏகாதசி விழா, ஸ்ரீராம நவமி உற்சவம், தைப்பூச தீர்த்தவாரி, தை அமாவாசைக்கு மறுநாள் நடைபெறும் கருடசேவை, ஆடி அமாவாசை தீர்த்தவாரி உற்சவ தினங்களில் சுவாமி, தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். குழந்தை வரம் வேண்டுபவர்கள் இத்தலத்தில் வந்து நேர்த்திக் கடன் செலுத்தி வழிபாடு செய்கின்றனர்.

    அமைவிடம்: சீர்காழியிலிருந்து 15 கிமீ தொலைவிலும் திருவெண்காட்டில் இருந்து 4 கிமீ தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.

    —————————-

    மத்தியப்பிரதேசத்தில் உள்ள ராய்சன் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பீமேட்கா குகைகள் 3 லட்சம் ஆண்டுகள் பழமையானது.

    இந்த குகைகள் வரலாற்றுக்கு முந்தைய (தற்போது இந்தியா என்றழைக்கப்படும் பழைய தேசங்கள்) மனித வாழ்க்கையை அறிய உதவும் தடயங்களாக திகழ்கின்றன.

    இங்கு காணப்படும் 30, 000 ஆண்டுகள் பழமையான ‘பாலியோலித்திக்’ வகை ஓவியங்கள் அக்கால மக்களின் வேட்டை, நடனம் மற்றும் அவர்களின் பல்வேறு வாழ்க்கை முறையை எடுத்துச்சொல்லும் விதமாக இன்றும் நம்மிடையே இருக்கன்றன.

    பீம்பேட்கா என்றால் பீமன் அமர்ந்த இடம் என்பது பொருளாகும். அதாவது மகாபாரத காலத்தில் பாண்டவர்களில் ஒருவனான பீமன் இங்கு அமர்ந்ததால் இந்த குகைகளுக்கு இப்பெயர் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது

    பல்லாயிரம் ஆண்டுகளாக காற்றிலும், மழையிலும் கிடந்து இயற்கையாக ஒரு ஆமையின் வடிவத்தில் காட்சி தரும் பாறை.

    ஸ்பெயினுடன் பாண்டவர்களுக்கு என்ன தொடர்பு? வி.எஸ். வாகன்கர் என்பவர் 1957-ஆம் ஆண்டு ரயிலில் போபால் செல்லும்போது பீம்பேட்கா பாறை வடிவங்களை கண்டு அவை ஸ்பெயின் மற்றும் ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள சில பாறை அமைப்புகளோடு ஒத்துப்போவதைப் பார்க்கிறோம்

    யுனெஸ்கோவின் பெருமிதம் பீம்பேட்கா குகைகள் யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    —————————————————

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகங்கள்

February 23, 2023

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே

“ஸ்ரீ ராம்” என்று ஒரு முறை சொல்லப்படும் நாமம் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் ஆயிரம் நாமங்களுக்கு நிகரானது.
எனவே ஒவ்வொரு நாளும் “ஸ்ரீ ராம்” என்று நாம் பாராயாணம் செய்யும் போது
அது முழு விஷ்ணு சஹஸ்ர நாமத்தையும் பாராயாணம் செய்வதற்கு நிகரானது.

————–

9 வரிகளை கொண்ட ஶ்ரீ ராமாயணம் ஸ்லோகம்

ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம்
சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம்
அங்குல்யா பரண சோபிதம்
சூடாமணி தர்சன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேஹி மனோ கரம்
வானர சைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சததம் ஸ்ரீ ராமச் சந்திர பாலயமாம்

———————

ஏக ஸ்லோக ஶ்ரீ ராமாயணம்

ஆதெள ராம தபோ வனாதிகமனம்
ஹத்வா ம்ருகம் காஞ்சனம்
வைதேஹி ஹரணம் ஜடாயு மரணம் சுக்ரீவ சம்பாஷனம்
வாலீநிர்தலனம் சமுத்ர தரணம் லங்காபுரீ தாஹனம்
பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம் ஏதத்தி ராமாயணம்

—————–

ஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகங்கள்

ஆதித்ய ஹ்ருதய சர்க்கத்தின் முதல் 2 ஸ்லோகங்கள் அகத்தியர் இராமபிரானை அணுகுதல்.
மூன்றாவது ஸ்லோகம் அகத்தியர் இராமபிரானை விளித்துக் கூறுவதாக அமைந்திருக்கிறது.
ஆதித்ய ஹ்ருதய மந்திரம் 4வது ஸ்லோகம் முதல் 26 வரை வெளிப்படுத்த பட்டுள்ளது.
ஸ்லோகங்கள் 4,5 ஆதித்யஹ்ருதயத்தின் பெருமைகள்.
ஸ்லோகங்கள் 6-15 சூரியனின் பெருமைகள், ஆத்ம போதம், உள்ளிருப்பதும் வெளியிலிருப்பதும் ஒன்றே என நிறுவுதல்
ஸ்லோகங்கள் 16-20 மந்திர ஜபம்
ஸ்லோகங்கள் 21-24 சூரிய போற்றிகள்
ஸ்லோகங்கள் 25, 26 பலன்கள், ஜபிக்கும் முறை
27-30 ஸ்லோகங்கள் ராமர் ஜபித்த முறையை கூறுகிறது.
முப்பத்தி ஒன்றாம் ஸ்லோகம் இந்தத் துதியால் மகிழ்ந்த சூரியன்
இராமனை வாழ்த்துவதைக் கூறுவதாக அமைந்திருக்கிறது.

———

ஓம் அஸ்யஸ்ரீ, ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய,
அகஸ்த்யோ பகவான் ரிஷிஹி, அனுஷ்டுப் சந்தஹ:
ஸ்ரீ ஆதி ஆத்மா சூர்ய நாராயணோ தேவதா, நிரஸ்தா சேஷ விக்நதயா
பிரம்ம வித்யாதி ஸித்யர்த்தே, ஸர்வத்ர ஜெய ஸித்யர்த்தே ஜபே விதியோகஹ

—————-

பூர்வாங்க ஸ்தோத்ரம் / தியானம்
ஜயது ஜயது ஸூர்யம் சப்த லோகைக தீபம் |
கிரண ஷமித (ம்ருதித )பாப ஸர்வ துக்கஸ்ய ஹர்தா (க்லேஷ துக்கஸ்ய நாஷம் )||
அருண கிரண கம்யம் ஆதிம் ஆதித்ய மூர்த்திம் |
பரம பரம திவ்யம் (சகல புவன வந்த்யம்) பாஸ்கரம் தம் நமாமி ||

சப்த லோகைக தீபம் |–ஏழு உலகங்களுக்கும் முக்ய தீபம் போன்றவரும்
கிரண (ம்ருதித )ஷமித பாப-கிரணங்களால் போக்கடிக்கப்பட்ட தாபத்தை யுடையவரும்
ஸர்வ துக்கஸ்ய ஹர்தா (க்லேஷ துக்கஸ்ய நாஷம்) ||-எல்லாவித துக்கத்தைப் போக்கடிப்பவரும்
அருண கிரண கம்யம் –அருணனுடைய கிரணங்களால் அறியப்படுபவரும்
ஆதிம் –முதன்மை யானவரும்
பரம பரம திவ்யம் (சகல புவன வந்த்யம்) -ரொம்ப மிகவும் பிரகாசிப்பவரும்
பாஸ்கரம் –ஒளியை பரவச் செய்பவருமான
ஸூர்யம் -யாதொரு ஸூர்யன்
ஆதித்ய மூர்த்திம் |–ஸூர்ய நாராயண மூர்த்தியாக
ஜயது ஜயது -விளங்குகிறாரோ
தம் நமாமி ||-அந்த பகவானை நமஸ்காரம் செய்கிறேன்

வெற்றி வெற்றி (தரும்) கர்ம வீரமே (ஸூர்யம்), ஏழு உலகங்களின் தீபமே
ஒளிக்கதிர்களால் பாபங்களையும், கவலைகளையும் (உடல்வலி பற்றிய எண்ணங்களையும்), துக்கங்களையும் போக்குபவனே.
கிரணங்களால் ஆட் கொள்பவனே. ஆதி முதல்வனே. பரமாத்மனே
ஸகல உலகங்களாலும் வணங்க படுபவனே. ஒளி வீசுபவனே உனக்கு நமஸ்காரம்.

ஏழு உலகங்கள்- பூலோகம், புவர், ஸ்வர், மஹர, ஜனர், தபோ, ஸத்ய லோகம்

———

ததோ (ரணம் )யுத்த பரிஷ்ராந்தம் ஸமரே சிந்தயா ஸ்திதம் |
ராவணம்ச-அக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம் || 1

தெய்வ-தைஷ்ச ஸமாகம்ய த்ருஷ்டுமப்யாக தோரணம் |
உபாகம்ய-அப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவான் ர்ஷி(ஹி): || 2

ததோ –பிறகு
(ரணம் )யுத்த –யுத்தத்தை
த்ருஷ்ட்வா–பார்ப்பதற்கு
தெய்வ-தைஷ்ச –தேவதைகளோடு
ஸமாகம்ய –சேர்ந்து
அப்யாகத –வந்த
பகவான்-ஷாட் குண்ய பரிபூர்ணனான
அகஸ்த்யோ ர்ஷி–அகஸ்திய ரிஷி
யுத்த பரிஷ்ராந்தம் –யுத்தத்தில் களைப்பு அடைந்தவனாயும்
யுத்தாய -யுத்தம் செய்வதற்காக
அக்ரதோ -முன்னே
ஸமுபஸ்திதம் |-சமீபத்தில் இருப்பவனுமான
ராவாணாஞ்ச –ராவணனையும்
ஸமரே -யுத்தத்தில்
சிந்தய – கவலையுடன்
ஸ்திதம் |–இருக்கிற
ராமம் த்ருஷ்ட்வா -ராமரையும் பார்த்து
உபாகம்ய-அப்ரவீத் (ஹி)-அடைந்து சொன்னார்

போர்க்களத்தில் போரினால் களைப்படைந்து,
போர் குறித்த ஆழ்ந்த சிந்தனைகளுடன் இராமன் நின்றார்
இராவணன் தயாராகி களத்தில் முன்னிலையில் நின்று பலமுடையவனாக தோன்றினான்.

தேவர்கள் அணைவரும் ஒன்று கூடி போரைப் பார்க்க இருந்தனர்
தேவர்களுடன் இருந்த அகஸ்த்ய பகவான்,
போருக்கு முயன்று நிற்கும் ராமரை அருகில் அணுகி சொன்னார்.

———

ராம ராம மஹா பாஹோ ஷ்ருணு குஹ்யம் ஸனாதனம் |
யேன-சர்வான்-நரீன், வத்ஸ, ஸமரே விஜயி-ஷ்யஸி || 3

மஹா பாஹோ–நீண்ட கைகளை யுடையவனே
வத்ஸ,-குழந்தாய்
ராம ராம -ஹே ராமா ராமா
யேன-எதனால்
சமரே -போரில்
சர்வான்-நரீன், -எல்லா சத்ருக்களையும்
விஜயி-ஷ்யஸி-ஜெயிப்பாயோ
ஸநா தனம் |-புராதனமான -அப்போருக்கு ஒத்த
குஹ்யம்-ரஹஸ்யத்தை
ஷ்ருணு -கேள்

இராமா, இராமா! பெரும் தோள் வலிமை கொண்டவனே! கேள் இரகசியத்தை,
(அது) காலம் காலமாக என்றுமுள்ளது
எல்லா மக்களும் விரும்பி பயன்படுத்துவது.
குழந்தாய், அது போரில் வெற்றி தருவது

————

ஆதித்ய ஹ்ருதய ஸ்லோஹ மஹிமையை இரண்டு ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறார்

ஆதித்ய ஹ்ருதயம்
ஸூ ர்யன் மனஸ்ஸை திருப்தி செய்யும் ஸ்தோத்ரம் என்றும்
ஸூர்ய மண்டல மத்ய வர்தியான ஸ்ரீ மன் நாராயணன் என்றும் கொள்ளலாம்

ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வசத்ரு விநாசனம் |
ஜயா-வஹம் ஜபே-ந்நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்|| 4

ஸர்வ மங்கல மாங்கல்யம், ஸர்வ-பாப-ப்ரணாசனம் |
சிந்தா-சோக-ப்ரசமனம் ஆயுsர்-வர்தனம் உத்தமம் || 5

ஆதித்யஹ்ருதயம் புண்யம்- ஆதி பரமனின் ஹிருதயம் – மந்திரம் நல் வினைகளைத் தருவது
ஸர்வசத்ரு விநாசனம் – உட்பகை, வெளிப்பகை என் அனைத்து எதிரிகளையும் நசிக்க-அழிக்க வல்லது
ஜயாவஹம்-வெற்றி தருவது
ஜபே ந்நித்யம் – எப்போதும் ஜபிக்க கூடியது
அக்ஷய்யம்- வேதம் போலவே -பொங்கி பெருகி கொண்டே இருப்பது (அழிவற்றது)
பரமம் – மிகப் பெருமை கொண்டது
சிவம் – மங்களம் தருவது. விடுதலையை தருவது
ஸர்வ மங்கள மாங்கல்யம் – அனைத்து நலன்களுகெல்லாம் நலன்களையும் தருவது. நிலையான பேரின்பம் தருவது
ஸர்வ பாப ப்ரணாஸனம் – அனைத்து பாவங்களையும் போக்குவது
சிந்தா சோக ப்ரஸமனம் – மனக் கவலைகளையும் குழப்பங்களையும் நீக்குவது
ஆயுர்வர்த்தனம் – நீண்ட ஆயுளைத் தர வல்லது
உத்தமம் – சிறந்தது

———–

ஆதித்யரின் தன்மைகள் – பெருமைகள்

ரஷ்மி-மந்தம் ஸமுத்யந்தம் தேவாசுர நமஸ்க்ருதம் |
பூஜையஸ்வ-விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம் || 6 ||

ரஷ்மி-மந்தம் -ஞான ரூபமும் (இதமான) பொன்னிறக் கதிர்களை பிரதிபலிப்பவர்.
ஸமுத்யந்தம் – பிரபஞசத்தின் எல்லையாக விளங்குபவர்-புது புதிதாய் உதிக்கின்றவர் -ஸ்ருஷ்டியாதிகளில் சங்கல்பித்து மீண்டும் மீண்டும் உபகரிப்பவர்
தேவாசுர நமஸ்க்ருதம்- தேவர்களாலும், அசுரர்களாலும், (நன்மை, தீமை செய்பவர்கள்) வணங்கப் படுபவர்.
பூஜயஸ்வ-வணங்கத் தகுந்தவர்.
விவஸ்வந்தம் – பரஞ்சோதி ரூபம் -காந்தியால் மற்றவரை மறுப்பவர்
பாஸ்கரம் – எல்லா ஞானத்தையும்- ஒளியையும் (மதி, அக்னி உள்பட) உருவாக்குவது.
புவனேஸ்வரம் – புவனத்தின் தலைமை.-பூஜ யஸ்வ -பூஜை செய்

இரகசியம்-3 ஒளி-சுயம்/ஆத்மன்/பிரமம், இருட்டு-மாயை/சுய அறிவின்மை.
கட உபநிசத் (II.ii.15) சூரியனோ சந்திரனோ, நட்சத்திரங்களோ ஒளிர்பவையல்ல.
பராமத்மனே அந்தர்யாமியாய் அணைத்திலும் ஒளிர்கிறான்.
எந்தவித வேறுபாடும் இல்லாமல் எல்லோருக்கும் சமமாக ஒளி தருபவர்.
(அதனால்) தேவர்களாலும் அசுரர்களாலும், எல்லோராலும் வணங்கப் படுபவர்.
பூஜயஸ்வ-கடமைக்கு நேரடி எடுத்துக்காட்டாக இருப்பதால் வணங்கத் தகுந்தவர்.

————–

ஸர்வ தேவாத் மகோஹி ஏஷ ஹ: தேஜஸ்வீ ரஸ்மி பாவனஹ: |
ஏஷ தேவாசுர கணான் லோகான் பாதி-கபஸ்திபி ஹி:|| 7

ஏஷ–இந்த ஸூர்ய பகவான் -ஸூர்ய மண்டல அந்தர் வர்த்தி யான ஸ்ரீ மன் நாராயணன்
ஸர்வ தேவாத் மக-ஸமஸ்த தேவர்களின் ஆத்மாவாக ஸ்வரூபம் உள்ளவர்
தேஜஸ்வீ–தேஜஸ்ஸு மிக்கவர்
ரஸ்மி பாவனஹ: |-கிரணங்களால் ஸ்லாகிக்கத் தக்கவர் -ஞான ரஸ்மியால் யோகிகளை ப்ரஹ்ம லோகம் அடையச் செய்பவர்
தேவாசுர கணான் –தேவ ஸூரக் கூட்டங்களையும்
லோகான் –எல்லா உலகங்களையும்
கபஸ்திபி -கிரணங்களால்
பாதி-ரக்ஷிக்கிறார்

எல்லா தேவர்களின் வடிவம்
ப்ரகாசங்க்களிலும் ப்ரகாசமானது. அதே நேரத்தில் இதமானப் பொன்னிறக் கதிர்களை வெளிப்படுத்துவது.
இவரே தேவர்களும் அசுரர்களும் எல்லா உலகங்களையும் கதிர் கரங்களால் காப்பாற்றுபவர்.

—————-

ஏஷ ப்ரஹ்மா ச விஷ்ணு ச சிவ-ஸ்கந்த: ப்ரஜாபதிஹி:|
மஹேந்த்ரோ-தனத: காலோ யம-ஸோமோஹ் அபாம்பதி ஹி:||8

ஏஷ-இவர் -ஸூர்ய பகவானே பிரும்மா(ஆக்குபவர்- ப்ரஹம என்றால் பெரிதிலும் பெரிதானவனும்),
விஷ்ணு(காப்பவர் விஷ்ணு என்றால் எங்கும் நிறைந்தது ),
சிவன் (அழிப்பவர் சிவ என்றால் மங்கலம்),
ஸ்கந்தன் (ஸ்கந்த என்றால் இணைப்பு & ஊற்று=, அன்பிற்கும் அறிவிற்கும் அணைத்திற்கும் ஊற்றாக இருப்பவனும்),
ப்ரஜாபதி-ஜீவ ராசிகளின் தலைவர்,-நவ ப்ரஜாபதியாகவும்
இந்திரன் (புலங்களின் அதிபதி),
தனத – குபேரன் (செல்வத்தின் அதிபதி),
காலோ – காலத்தை (நேரத்தை) உண்டாக்குவன்,
யமன்(இறப்பின் அதிபதி, தண்டிப்பவன், நல்வழிபடுத்துபவன்),
ஸோமோ -சந்திரன்(ஊட்டத்தின் அதிபதி),
அபாம் பதிஹி – தண்ணீருக்கு அதிபதி (வருணன்).

————-

பிதரோ வஸவ: ஸாத்யா ஹ அஷ்வினௌ மருதோ மனுஹு: |
வாயு அஹ்னி: ப்ரஜா ப்ராணஹ: ர்துகர்த்தா ப்ரபாகரஹ: || 9

பிதரோ -மூதாதை(முன்னோர்கள், வம்சம், குலம்),
வஸவ-எல்லா செல்வங்களும் ஆன அஷ்டவசுக்கள்,
சாத்யர்கள்-கரும வசப்படாத நித்யர்களும்,
அச்வினி தேவர்கள் (தேவ லோக வைத்தியர்கள்),
மருத்துக்கள் (காற்றின் துணைவர்களான மருத் தேவர்களும்- தென்றல், புயல்),
மனு (மனிதர்களின் தந்தை),
வாயு-காற்று, அக்னி-நெருப்பு,
ப்ரஜா ப்ராணன்-மக்களின் உயிர்க் காற்று,
ர்துகர்த்தா- பருவங்களை (மாற்றங்களை) உண்டாக்குபவர்.
ப்ரபாகர: – உதயத்தை ஏற்படுத்துகிரார்; புகழைத் தருபவர்

எட்டு வசுக்கள் – அபன், துருவன், சோமன், தரன், அனிலன், அனலன், ப்ரத்யுஷா, ப்ரபாசா
சாத்யா – அனந்தன், கருடன், விஸ்வக்சேனன், பாஞ்சஜன்யன், சுதர்சனன் போன்றவர்கள்
ஆறு பருவங்கள், கோடை, மழை, முன்பனி, கடும்பனி, இலையுதிர், வசந்தம்

—————-

ஆதித்ய ஸவிதா ஸூர்யஹ: கக: பூஷா கபஸ்திமான் |
ஸூ வர்ண ஸத்ர்சோ பானு: ஹிரண்யரெதா திவாகரஹ:|| 10

ஆதித்ய–, மூலப் பரம் பொருள்-அதிதியின் புத்ரன் –
ஸவிதா – உயிரை உருவாக்குபவர்
ஸூர்ய-செயல் வீரர் செயலாற்றத் தூண்டுபவனும்
கக-வானத்துப் பறவை வானவெளியில் நடமாடுபவனும்
பூஷா -வளர்ப்பவனும்-மழையால் வளர்ச்சி தருபவர் அனைவருக்கும் உணவளித்து வளர்ப்பவனும்
கபஸ்திமான் -ஒளிக் கதிரோன்
ஸூ வர்ண ஸத்ருசோ- பொன்னிறத்தோன்
பானு- ஒளிக் காந்தியுள்ளவன்
ஹிரண்யரேதோ – அனைத்தையும் படைக்கும் திறன் கொண்டவனும்
திவாகர – பிரகாசமான பகலொளியை தோற்றுவிப்பவர்-அறிவை உண்டு பண்ணுபவர்

————–

ஹரித்-அஸ்வ ஸஹஸ்ரார்சிஹி: ஸப்த ஸப்திர் மரீசிமான் |
திமிரோன்மதன: ஷம்பு த்வஷ்டா மார்தாண்ட அம்ஷுமான்|| 11-

ஹரித் அஸ்வ – வெற்றியை வாகனமாக உடையவர்–பச்சைக் குதிரையுடையவர் (பச்சை வெற்றியின் சின்னம்).-திக்குகளில் எங்கும் வியாபிப்பவர்
பச்சைப் பயிர்களை வளர்ப்பவன்
ஸஹ்ஸ்ரார்ச்சி – ஆயிரம் கரங்களால் எல்லா செயல்களையும் செய்பவர்-
ஆயிரம் கிரணங்களை (தீ நாக்குகள்) கொண்டு இந்த உலகத்தின் அனைத்துச் செயல்களையும் நடத்துகிறான்
ஸப்த ஸப்தி-ஏழு குதிரைகள் – உலகங்கள் – நிறங்கள் – நாட்கள் உடையவர்
மரீசிமான் -ஓளிக் கிரணங்கள் கொண்டவர்.உலக இயக்கங்களுக்கெல்லாம் மூலகாரணம் இவனது கதிர்கள் தானே.-சத்ருக்களை வெல்லும் சக்ராயுதத்தை யுடையவர்
திமிரோன் மதன – இருளை – அறியாமையையை போக்குவர்
ஷம்பு -மங்களம் அளிப்பவர்.அனைத்தையும் குறைப்பவன்.
ஸ்த்வஷ்ட துரத்ரிஷ்டத்தை விரட்டுகிறவர்–இறந்த உடல்களையும் தாவரங்களையும் மங்கச் செய்வதன் மூலம் அடுத்த சுழற்சிக்கு வழி வகுக்கிறான்.
மார்தாண்ட – மிகுந்த வலிமை உடையவன். உலகத்தில் எல்லா பொருட்களும் உயிர்களும் இவனிடமிருந்தே வலிமையைப் பெறுகின்றன.-உண்டு மீண்டும் உமிழ்ந்தவன்
அம்சுமான் -மேகம் மறைத்து நிற்கும் போதும் தன் உருவத்தை உயிர்கள் பார்க்க இயலாத போதும்
தன் கதிர்களால் எங்கும் பரவி உலக இயக்கத்தை நடத்துபவன்.-எங்கும் வியாபித்து இருக்கும் தேஜஸ்ஸு படைத்தவன்

———–

ஹிரண்யகர்ப்ப ஷிஷிர தபனோ, பாஸ்கரோ ரவி(ஹி): |
அக்னிகர்ப்பா அதிதிபுத்ர-(ஹ): ஷன்க ஷிஷிர நாஷன (ஹ): || 12

ஹிரண்ய கர்ப்ப-சூக்ஷ்ம ஸரீரமுள்ளவர் ஞானத்திற்கும், வளர்ச்சிக்கும் காரணமானவர்.
பொன்மயமான கருப்பையை உடையவன்.-ஸ்வர்ண மயமான ப்ரஹ்மாண்டத்தில் இருப்பவன்
உலகத் தோற்றம் ஹிரண்யகர்ப்பம் என்ற பொன்முட்டையிலிருந்து நிகழ்ந்ததாக சொல்வது மரபு.
ஷிஷிர- கடுங்குளிரை உருவாக்குபவர். கதிர்கள் குறைவாக இருக்கும் நிலையே குளிர் நிலை.
அதனால் இவனே குளிரைத் தருபவனாகவும் இருக்கிறான்.-ஸூக ஸ்வ பாவத்தை யுடையவர் –
ஸ்தாபனோ-சூடாகவும், நெருப்பாய் எரிபவர்.–ஸ்வயமாக ஐஸ்வர்யம் படைத்தவர் –
பாஸ்கரோ -ஒளியானவர்-ஞானமானவர். உலகத்தில் இருக்கும் எல்லா பொருட்களும் ஒளிர்வது இவனது கதிர்களால் தான்.
ரவி- எல்லாவற்றையும் உருவாக்குபவன். எல்லோராலும் புகழ்ப்படுபவர்.
அக்னி கர்ப்போ தீயை தன்னுடலாகக் கொண்டவன்.
அதிதே: புத்ர அதிதியின் புதல்வர்
ஷன்க- ஆனந்த மயமானவன் மறையும் போது குளிர்ச்சியாக தோற்றமளிப்பவர்-தானாகவே சமன் அடைபவர் -பரமானந்த ஸ்வரூபி -விபு –
ஷிஷிர நாஷன- குளிரை விலக்குபவர்

————–

வ்யோம நாதஸ் தமோ பேதீ, ருக் யஜு ஸ்ஸாம பாரக ஹ: |
கனவ்ரிஷ்டிர் அபாம் மித்ரோ: விந்த்யவீதீ ப்லவங்கமஹ: || 13-

வ்யோம நாதஸ் -ஆகாசத்தைப் படைப்பவர் -ஆகாசத்துக்கும் அரசன் ஸ்வாமி
தமோ பேதீ, -இருளை -அஞ்ஞானத்தைப் போக்கடிப்பவர்
ருக் யஜு ஸ்ஸாம பாரக ஹ: |-வேதங்களின் கரையை அடைந்தவர்
கனவ்ரிஷ்டிர் -அதிக மழையைப் பெய்யும்படி செய்பவர்
அபாம் மித்ரோ: -ஜனங்களுக்கு மித்ரர் –சமுத்திரத்தில் சயனிப்பவர்
விந்த்யவீதீ ப்லவங்கமஹ:-தஷிணா யானத்தில் விந்திய மலை வழியாகச் செல்பவர்

ஸூர்ய பகவான் ஸூர்ய பகவான் அண்ட வெளியின் தலைவன்.
அஞ்ஞான இருளை அகற்றி தீமைகளையும் மரண பயத்தையும் போக்குகிறார். வேதங்களை கரை கண்டவர்.
கதிர்கள் ஏற்படுத்தும் வெப்ப நிலை மாற்றங்களால் பெரும் மழையை பொழிவிக்கிறார்.
அபாம் மித்ர – நீர் நிலைகளை நேசிக்கிறார்.
விந்த்ய வீதி ப்லவங்கம- விந்த்ய மலைகளை தெய்வீகமாக – விரைவாக கடக்கிறார்.
(ருக், யஜுர், சாமம் எனப்படும் மூன்று வேதங்களையும் கண்டு உலகிற்குச் சொன்னவன்.
வேதங்கள் யாராலும் உருவாக்கப்படவில்லை; அதனால் அதனை அபௌருஷேயம் என்று சொல்வார்கள்.
அவை என்றும் இருப்பவை. ரிஷிகள் அவற்றைக் கண்டு சொன்னார்கள்.
அதனால் அவர்களுக்கு மந்த்ர த்ரஷ்டா (மந்திரத்தைக் கண்டவர்கள்) என்று பெயர்.)

—————

ஆதபீ மண்டலீ ம்ருத்யு ஹு: பிங்கல: ஸர்வ தாபன ஹ: |
கவிர் விஷ்வா மஹாதேஜா ஹ: ரக்த: ஸர்வ-பவோத்பவ ஹ: || 14

அவரே வெப்பத்தை கொடுக்கிறார். உயிர்களின் முதலும் முடிவும் அவரே. அவரே அகிலத்தை இயக்குகிறார்.
எங்கும் நிறைந்து இருக்கிறார். அவரது செங்கதிர்கள் உலகத்தை உயிரினங்களை வாழ வைக்கின்றன.

ஆதபீ -வெப்பத்தை உருவாக்குபவர் கொளுத்துபவன்
மண்டலீ – வட்ட வடிவானவர்
ம்ருத்யு- மரணவடிவானவன்-விரோதிகளை வெல்பவர்
பிங்கல-பொன் நிறத்தோன்
ஸர்வதாபன- எல்லாவற்றையும் எரிப்பவர்
கவி அனைத்தையும் அறிந்தவன்.-ஸாஸ்த்ர பிரதானம் செய்து அருளியவர்
விஷ்வோ- அண்ட வடிவானவன்.-தானே ஸ்ருஷ்டித்து அந்தர்பவித்து ஸமஸ்த நியந்தா
மஹா தேஜா- மிகப்பெரும் ஒளிவடிவானவன்.-சிவந்த வண்ணம் கொண்டவன்.
ரக்த-எல்லோரிடத்தும் அன்பானவர்
ஸர்வபவோத்பவ- எல்லா உயிர்களும் பொருட்களும் தோன்றுமிடமானவன்.

———

ஆதித்யருக்கு நமஸ்காரங்கள் — ஸுரிய துதி

நக்ஷத்ர-க்ரஹ தாராணாம் அதிபோ விஷ்வ பாவன ஹ: |
தேஜஸாம் அபிதேஜஸ்வீ த்வாதசாத்மன் நமோஸ்து தே || 15

நக்ஷத்ர-க்ரஹ தாராணாம் -அஸ்வினி போன்ற நக்ஷத்ரங்கள்-கிரஹங்கள் -சாதாரண நக்ஷத்திரங்கள்
அதிபோ -ஸ்வாமி
விஷ்வ பாவன -உலகத்தை ஸ்தாபித்து போஷிப்பவர்
தேஜஸாம் அபி-அக்னி போன்ற தேஜஸ்ஸு பதார்த்தங்களுக்குள்
தேஜஸ்வீ –மிக்க பரஞ்சோதி யானவனே
த்வாதசாத்மன் -பன்னிரண்டு மூர்த்தி யுடையவன்
நமோஸ்து தே-உமக்கு நமஸ்காரம்

வானில் ஒளிவீசும் பொருட்களுக்கெல்லாம் பால் வெளிக்கும் தலைவர். அவரே அண்டத்தின் வடிவம்.
ஒளி வீசுபவர்களுக்கெல்லாம் ஒளியானவன் பன்னிரெண்டு உருவில் ஒளி மயமானவரே நமஸ்காரம்.

பன்னிரண்டு மூர்த்திகளின் பெயர்கள்
இந்திரன், தாதா , பகன், பூஷா, மித்ரன், வருணண் அர்யமான், அர்சிஸ், விவஸ்வான், த்வஷ்டா, சவிதா – விஷ்ணு.

————–

நம: பூர்வாய கிரயே பச்சி-மா-த்ரயே நம ஹ: |
ஜ்யோதிர் கணாணாம் பதயே தினாதிபதயே நம ஹ: || 16-

பூர்வாய–கிழக்குத் திக்கில் உள்ள
நம: கிரயே -மலையில்-உதய கிரியில் = இருக்கும் உமக்கு நமஸ் காரம்
பச்சி-மா-த்ரயே நம ஹ: |-மேற்குத் திக்கில் உள்ள மலையில் -அஸ்தமந கிரியில் -இருக்கும் உமக்கு நமஸ் காரம்
ஜ்யோதிர் கணாணாம் பதயே -ஒளி களின் கூட்டங்களுக்குத் தலைவராயும்
தினாதிபதயே நம–பகலுக்கு அதிபதி யுமான உமக்கு நமஸ்காரம்

வணங்குகிறேன் உதிப்பவரே உதயத்தை தருபவரே மறைபவரே நிறைவை தருபவரே வணக்கம்.
ஓளிர் தன்மை படைத்தவர்களுக்கு அதிபதியே
ஒவ்வொரு நாளின் அதிபதியே வணக்கம்.
வணங்குகிறேன் கிழக்கு மலையில் உதிப்பவரே மேற்கு திசையில் மறைபவரே வணக்கம்.

———–

ஜயாய ஜய பத்ராய ஹர்யஷ்வாய நமோ நம ஹ: |
நமோ நம-ஸஹஸ்ராம்சோ ஆதித்யாய நமோ நம ஹ: || 17

ஜயாய -ஜய சீலரும்
ஜய பத்ராய -ஜயம் மங்களம் இவற்றை அளிப்பவராயும்
ஹர்யஷ்வாய -பச்சை குதிரை யுடைய வராயும்
நமோ நம ஹ: |-உமக்கு நமஸ்காரம்
நமோ நம-ஸஹஸ்ராம்சோ –ஆயிரம் கிரணங்களை யுடையவரான உமக்கு நமஸ்காரம்
ஆதித்யாய நமோ நம ஹ:-அதிதியின் புதல்வரான உமக்கு நமஸ்காரம்
மீ மிசை ஆதார அதி சயம்

வெற்றி வடிவானவருக்கு, வெற்றியின் மங்களங்களை தருபவருக்கு நமஸ்காரம்.
பச்சை குதிரையை -வெற்றியை – வளத்தை உடையவருக்கு மீண்டும் மீண்டும் வணக்கங்கள்
ஆயிரம் கதிர்களினால் அணைப்பவருக்கு எல்லை யில்லா அம்சமுள்ளவர் நமஸ்காரம் நமஸ்காரம்.
ஆதி முதல்வனுக்கு நமஸ்காரம் நமஸ்காரம்

————-

நம உக்ராய வீராய சாரங்காய நமோ நம ஹ: |
நம-பத்ம-ப்ரபோதாய மார்த்தண்டாய நமோ நம ஹ: || 18-

நம
உக்ராய -பயங்கரர்
வீராய -பராக்ரமம் யுடையவர்
சாரங்காய -வேகமாக செல்பவர் -அரை நிமிஷத்தில் -2000 யோஜனை தூரம் –வில்லாண டான் -கால சக்ரத்தாய்
நமோ நம ஹ: |
நம-
பத்ம-ப்ரபோதாய –தாமரையை மலரச் செய்கிற
மார்த்தண்டாய -எல்லா வற்றை யும் அழித்து மீண்டும் உண்டு பண்ணுகிற
நமோ நம ஹ

கடுமையானவருக்கு (உக்ரம்) வீரருக்கு வணக்கம். சீரானவர்க்கும் தடைகளற்றவனுக்கு நமஸ்காரம்
பல வண்ண கதிர்கள் ஏவும் வில்லை உடையவருக்கு வணக்கம்.
தாமரைகளை மலரச் செய்பவனுக்கு நமஸ்காரம்
மிக்க வலிமை பொருந்தியவருக்கு – அழிக்கவும் பின் அவற்றை உருவாக்கவும் வல்லமை கொண்ட ஸூர்யனுக்கு நமஸ்காரம்.

————

ப்ரஹ்ம்-ஈஷான்-அச்யுத்-ஈஷாய ஸூர்யாய ஆதித்ய வர்சஸே |
பாஸ்வதே ஸ்ர்வ பக்ஷாய ரௌத்ராய-வபுஷே நம ஹ: || 19 ||

ப்ரஹ்ம்-ஈஷான்-அச்யுத்-ஈஷாய -ப்ரஹ்மாதிகளுக்கும் விஷ்ணு வுக்கும் அதிபதி-அஸ வாதித்யோ ப்ரஹ்மம் -ஸ்ருதி
ஆதித்ய வர்சஸே |-ஆதித்ய ரூப தேஜஸ் உடையவர்
ஸூர்யாய -சர்வருக்கும் ப்ரவ்ருத்திக்கு ஹேது
பாஸ்வதே -பரஞ்சோதி
ஸ்ர்வ பக்ஷாய -ஸர்வ ஸம் ஹர்த்தா -ஆகவே
ரௌத்ராய-அப்பொழுது பயங்கர மான வர்
வபுஷே -திவ்ய ரூபம் உடையவர்
நம ஹ:

ப்ரம்மா, ஷிவன், விஷ்ணு மூவருக்கும் தலைவரே
செயல் வீரனே, ஆதி முதல்வனே எங்கும் வியாபித்து இருக்கும் பேரெழிலானவருக்கு நமஸ்காரம்.
மிகுந்த ஒளி – காந்தி படைத்தவனுக்கு,
எல்லாவாற்றையும் விழுங்குபவனுக்கு – கால உருவானவருக்கு,
ருத்ரனின் உருவங்கொண்டவனுக்கு நமஸ்காரம்.

—————

தமோக்னாய ஹிமக்னாய ஷத்ருக்னாய அமிதாத்மனே |
க்ருதக்னக்னாய தேவாய ஜ்யோதிஷாம்-பதயே நம ஹ: || 20-

தமோக்னாய -இருளை -அஞ்ஞானம் போக்கடிப்பவர்
ஹிமக்னாய -பனியை போக்கடிப்பவர்
ஷத்ருக்னாய –சத்ருக்களை வெல்பவர்
அமிதாத்மனே |-அளவிட முடியாத மஹிமை யுடையவர்
க்ருதக்னக்னாய -செய் நன்றி மறந்தாரைக் கொல்பவர்
தேவாய -ஸ்வயம் ப்ரகாஸம் உடையவர்
ஜ்யோதிஷாம்-பதயே -ஒளி தேஜோ பதார்த்தங்களுக்கு ஸ்வாமி
நம ஹ

இருளை (அறியாமை) அழிப்பவருக்கு
குளிரை அழிப்பவருக்கு, எதிரிகளை அழிப்பவருக்கு, எல்லா உயிர்களுக்கும் ஆத்மாவாய் இருப்பவருக்கு
செய்நன்றி மறந்தவர்களை அழிப்பவருக்கு
ஒளி வீசுபவரே
பிரபஞ்சத்தின் மூலம் – ஒளிகளுக்கெல்லாம் தலைவருக்கு நமஸ்காரம்

————-

தப்த சாமி கராபாய வஹ்னயே விஷ்வகர்மனே |
நம(ஸ்) தமோ-(அ)பினிக்னாய ருசயே லோக ஸாக்ஷினே || 21 ||

தப்த சாமி கராபாய -உருக்கப்பட்ட தங்கம் போல் ஒளிப்பிழம்பானவர்க்கு,
வஹ்னயே -அக்னி ஸ்வரூபம்-ஹவிஸை வஹிப்பவர்
விஷ்வகர்மனே |-உலகம் படைப்பவர்
நம(ஸ்)
தமோ-(அ)பினிக்னாய -இருள் அஞ்ஞானம் போக்கடிப்பவர்
ருசயே -பிரகாசிப்பவர்
லோக ஸாக்ஷினே-உலகோர் கர்மாக்களு க்கு ஸாஷி பூதர்

உருக்கப்பட்ட தங்கம் போல் ஒளிப்பிழம்பானவர்க்கு,
தீ வடிவானவருக்கு -அணைத்தையும் எரிப்பவர்,
உலகத்தை படைத்தவருக்கு- அதன் அணைத்து செயல்களுக்கும் காரகர்,
இருளை நீக்குபவருக்கு,
உலகத்தில் ஒளியை எல்லாம் உடையவருக்கு, உலக சாட்சியானவருக்கு நமஸ்காரம்.

————-

நாச-யத்யேஷ வை-பூதம் ததேவ-ஸ்ருஜதி ப்ரபு ஹு: |
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி ஹி: || 22

யேஷ வை–இவரே
பூதம் -உலகத்தை
நாச-யத்-அழிக்கிறார்
ப்ரபுர் ஏவ -ஸர்வ நியா மகர்
மீண்டும்
ததேவ-ஸ்ருஜதி -படைக்கிறார்
கபஸ்திபி-கிரணங்களால்
ஹு: |
பாயதி -யேஷ -இவரே உலர்த்து கிறார்
தபத்யேஷ -இவரே தபிக்கச் செய்கிறார்
வர்ஷத்யேஷ ஹி:-இவரே மழை பெய்யச் செய் கிறார்

உயிர்களை எல்லாம் அழிக்க வல்லவரும் அவரே. அவருக்கு நமஸ்காரம்.
அவரது அவற்றை இவனே பிறப்பிக்கிறான் இறைவன் இவனே
இவனே காக்கிறான்
தன்னுடைய ஒளி பொருந்திய கதிர்களால் இவனே வெயிலாக காய்கிறான். மழையாகப் பொழிகிறான்

————-

ஏஷ-ஸுப்தேஷு ஜாகர்த்தி பூதேஷு பரிநிஷ்தித ஹ: |
ஏஷ-ஷேவாக்னி-ஹோத்ரம் ச பலம் சைவாக்னி ஹோத்ரிணாம் || 23-

ஏஷ-
ஸர்வே ஷு
பூதேஷு-பிராணி கள்
ஸுப்தேஷு –தூங்கும் போதும்
ஜாகர்த்தி
பரிநிஷ்தித ஹ: |-எங்கும் வியாபித்து விழித்துக் கொண்டும்
ஏஷ-ஷேவாக்னி-ஹோத்ரம் -இவரே அக்னி ஹோத்ர ரூபி யாகவும்
ச பலம் சைவாக்னி ஹோத்ரிணாம்-அக்னி ஹோத்ரம் செய்பவர்களுக்கு பல மாகவும் -பலம் கொடுப்பவர் ஆகவும்

ஸூர்ய பகவான் உலகத்து எல்லா உயிர்களின் இருதயத்தில்-ஜீவனாக இருந்து விழிப்பாக நிலை நிற்கிறான்.
இவர் தான் வேள்வித் தீ. தீ வழிபாட்டின் வடிவம் – வேள்வியின் நிவேதனமும் பலனும் அவரே.

———-

வேதாஸ்-ச க்ரத-வஷ்சைவ க்ர்தூனாம் பலம்-ஏவ ச |
யானி-க்ருத்யானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு ஹு: || 24-

வேதாஸ்-ச -33 கோடி -யாக தேவதை களாகவும்
க்ரத-வஷ்சைவ -ஸோமம்-அஸ்வ மேதம் முதலிய யாகாதி களாகவும்
க்ர்தூனாம் பலம்-ஏவ ச |-யாகங்களின் பலம் ஆகவும்
லோகேஷு- எல்லா உலகங்களிலும்
யானி -எந்த எந்த
க்ருத்யானி –கார்ங்கள் இருக்கின்றன -ரித்விக் யஜமான் சமித்து ஆஜ்யம் பசு போன்ற -அவை களுக்கு
ஸர்வ ஏஷ ரவி: -ஸர்வ ஆத்மா வான இந்த
ரவி ப்ரபு ஹு–ஸூர்ய பகவானே நியாமகனாய் இருக்கிறார்

வேதங்களின் சாரத்தில் இருக்கிறார்.
தத்தம் கடமைகளாகவும் – சடங்குகளாகவும்
உண்மையுடன் செய்பவர்களுக்கு,சடங்குகளின் கடமையின் பலனாக இருக்கிறார்.
என்ன என்ன செயல்கள் செய்யப்படுகின்றனவோ இவ்வுலகத்தில்
அவை எல்லாமும் ஒளி படைத்தவன் அவரே இறைவன்-தலைவன்

——————-

ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரத்தின் பெருமைகள்: பலஸ்ருதி

ஏனம் ஆபத்ஸு க்ருச்ரேஷு காந்தாரேஷு பயேஷு ச |
கீர்த்தயன் புருஷ: கச்சிந்-நாவ-ஸீததி ராகவ || 25-

ராகவ
புருஷ: கச்சிந்-ஒரு புருஷன்
ஆபத்ஸு-ஆபத்து களிலும்
க்ருச்ரேஷு -கஷ்டங்களிலும்
காந்தாரேஷு –காடுகளிலும்
பயேஷு ச |-பயங்களிம்
ஏனம் -இந்த ஸ்தோத்ரத்தை
கீர்த்தயன் – கீர்த்தநம் பண்ணுவானோ -அவன்
நாவ-ஸீததி -வருத்தம் அடைய மாட்டான்

ராகவா ரவி, எல்லாவித ஆபத்து நேரங்களிலும்(உடல், மன, ஆன்மீக காரணிகளால்), அவமானத்திலோ,
பயமுறுத்தும் நேரங்களிலும், துன்பங்களிலும் வழிபடுவோரை எப்போதும் கைவிடமாட்டான்.
இந்த ஸ்தோத்திரத்தை ஜபித்தால், நிச்சயமாக அவற்றிலிருந்து மீண்டு வருவார்கள்.

————–

பூஜ-யஸ்-வைனம் ஏகாக்ரோ: தேவதேவம் ஜகத்பதிம் |
ஏதத் த்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயி ஷ்யஸி || 26-

ஏகாக்ரோ:ஒரே விஷயத்தில் மனப் பற்று உடையவனாய்
தேவதேவம் -தேவர் களுக்கு எல்லாம் தேவனான வனாய்
ஜகத்பதிம் |-எல்லா உலகங்களுக்கும் பிரபு ஸ்வாமி யானவனாய்
ஏனம் -இந்த பகவானை
பூஜ யஸ்ய -பூஜை செய் வாயாக
ஏதத் -இந்த ஸ்தோத்ரத்தை
த்ரிகுணிதம் –மூன்று தடவை
ஜப்த்வா -ஜபித்து
யுத்தேஷு -யுத்தங்களிலே
விஜயி ஷ்யஸி-ஜெயிக்கப் போகிறாய்

ஒருமிக்க மனதுடன் வணங்குவாய்
தேவர்களுக்கும் தெய்வமானவனை உலகத்தின் நாதரை
இந்த ஆதித்ய ஹ்ருதயத்தை மும் முறை ஜபித்து
போரில் கண்டிப்பாக வெற்றி அடைவாய்.

——————–

இராமர் மந்திரம் ஓதி மனத் தெளிவு பெறுதல்

அஸ்மின் க்ஷணே மஹா பாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி|
ஏவம் உக்த்வா ததா அகஸ்த்யோ ஜகாம-ச-யதா-கதம் || 27

மஹா பாஹோ-நீண்ட தடக்கையனே
த்வம் -நீர்
அஸ்மின் -இந்த
க்ஷணே -நேரத்திலேயே -நிமிஷத்திலேயே
ராவணம் வதிஷ்யஸி|–ராவணனைக் கொல்லுவாய்
ததா -அப்போது
அகஸ்த்யோ
ஏவம் உக்த்வா -சொல்லி
ஜகாம-ச-யதா-கதம்-வந்த வழியே போனார்

இந்த நொடியிலேயே, வலிமையான தோள்கள் உள்ளவனே,
இராவணனை நீ வதைப்பாய்
என்று கூறி அங்கிருந்த அக்ஸ்த்ய முனிவர்
எப்படி வந்தாரோ அப்படியே சென்றார்

————–

ஏதஸ் ஸ்ருத்வா மஹா தேஜா நஷ்ட சோகோ-பவத்-ததா |
தாரயாமாஸ- ஸுப்ரிதோ ராகவ: ப்ரய-தாத்மவான்(உ) || 28-

ததா |– அப் பொழுது
மஹா தேஜா-அதிக தேஜஸ் ஸூ யுடைய
ராகவ:
ஏதஸ் -இந்த வார்த்தையை
ஸ்ருத்வா –கேட்டு
நஷ்ட சோகோ-ஒழிந்த மனக் கவலையை யுடையராய்
அ பவத்-ஆனார்
ஸுப்ரிதோ-மிகவும் ஸந்தோஷம் கொண்டு
ப்ரய-தாத்மவான்(உ)-தெளிந்த மனம் உடையவராய்
தாரயாமாஸ- தரித்தார்

அருள் மொழிகளைக் கேட்ட, மிகுந்த தேஜஸ்வி ராகவன்
அப்போதே கவலைகள் எல்லாம் நீங்கியவன் ஆனான்
நோக்கத்தில் உறுதியுள்ளவனும், மிகவும் மகிழ்ந்தவனும் ஆனான் -முயற்சிகளில் சிறந்தவன் ஆன இராகவன்

—————

ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்ஷ-மவாப்தவான் (உ) |
த்ரிர்-ஆசம்ய ஷுசிர்பூத்வா தனுராதயாய வீர்யவான் (உ) || 29-

வீர்யவான் (உ)-வீர தீர பராக்ரமம் யுடைய ராமர்
த்ரிர்-ஆசம்ய–மூன்று தடவை ஆசமனம் செய்து
ஷுசிர்-பரிஸூத்தராக
பூத்வா-ஆதி
ஆதித்யம் ப்ரேக்ஷ்ய -ஸூர்யனைப் பார்த்து
த்ரி ஜப்த்வா –மூன்று தடவை ஜபித்து
தனுராதயாய-வில்லை எடுத்து
பரம் ஹர்ஷம் -அ வாப்தவான் (உ) |மிகவும் ஸந்தோஷம் அடைந்தார்

ஆதித்யனைப் பார்த்துக் கொண்டே (ஸ்தோத்ரத்தை) ஜபித்து
மிகவும் மேலான மகிழ்ச்சியை அடைந்தான்
மும்முறை ஆசமனீயம் செய்து உடலை பரிசுத்தம் செய்துகொண்டு, வில்லை ஏந்தினான் வீரத்தில் சிறந்தவன்

————-

ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபா-கமத் (உ) |
ஸர்வ யத்னேன-மஹதா வதே-தஸ்ய த்ருதோ-பவது || 30

ராவணம் ப்ரேக்ஷ்ய -ராவணனைப் பார்த்து
ஹ்ருஷ்டாத்மா -ஸந்தோஷம் கொண்ட திரு உள்ளம் யுடையவராய்
யுத்தாய ஸமுபா-கமத் (உ) |யுத்தத்தின் பொருட்டு கிட்டே நெருங்கினார்
மஹதா-மிகுந்த
ஸர்வ யத்னேன-எல்லாவித முயற்சியாலும்
தஸ்ய-அந்த ராவணனுடைய
வதே- ஸம்ஹாரத்தில்
த்ருதோ-பவது-நிச்சயம் கொண்டவராக ஆனார்

இராவணன் போர் செய்யும் நோக்கத்துடன் வருவதை பார்த்து
மேலான எல்லா முயற்சிகளுடனும்
அவனை (இராவணனை) வதைப்பதற்கான உறுதியைக் கொண்டான் (இராகவன்).

—————–

சூரியன் ஆசி வழங்குதல்

அத-ரவி: ரவதத் நிரீக்ஷ்ய ராமம் முதித மனா: பரமம் ப்ரஹ்ருஷ்யமான ஹ: |
நிசி-சரபதி ஸம்க்ஷயம் அன்கி-விதித்வா ஸுர கண மத்ய கதோ வசஸ்த்-வ்ரேதி || 31

அத-ரவி: –பிறகு ஸூர்யன்
நிரீக்ஷ்ய ராமம் –ராமரைப் பார்த்து
முதித மனா: -ஸந்தோஷம் கொண்ட மனமுடையவராய்
பரமம் ப்ரஹ்ருஷ்யமான : |மிகவும் களிப்புற்று
நிசி-சரபதி ஸம்க்ஷயம் -ராக்ஷஸ அதிபதியான ராவணனை ஸம்ஹரிப்பதை
அன்கி-விதித்வா -தெரிவித்து -அனுக்ரஹித்து
ஸுர கண மத்ய கதோ -தேவ கணங்களின் நடுவே இருந்து கொண்டு
த்வர -ராவண வதத்தைக் குறித்து துரிதப்படும்
இதி வசஸ் அப்ரவீத் -என்ற வார்த்தையைச் சொன்னார்

அப்போது ரவி ‘விரைவில் நடத்துவாய் இராமா’ என்று மிகவும் மகிழ்ந்த மனத்துடன்,
மிக உயர்ந்த திருப்தியை அடைந்தவனாக, இருட்டில் உழல்பவர்களின் முதல்வனின்
அழிவு நேரம் நெருங்கியதை அறிந்து, தேவர்களின் மையத்திலிருந்து அருளினார்.

———-

முடிவு துதி

பானோ பாஸ்கர மார்தாண்ட ச் சண்ட ரஸ்மை திவாகர
ஆயுர் ஆரோக்யம் ஐஸ்வர்யம் வித்யாம் தேஹி நமஸ்துதே

ராமாயணத்தில் சர்க்க முடிவு

இத்யார்ஷே ஸ்ரீமத் ராமாயணே வால்மீகீயே ஆதிகாவ்யே யுத்த காண்டே
ஆதித்ய ஹ்ருதயம் நாம சப்தோத்தரசததம: சர்க்க: ||

இவ்வாறு வால்மீகியின் ஆதிகாவியம் ஸ்ரீமத் ராமாயணத்தில் யுத்த காண்டத்தில்
ஆதித்ய ஹிருதயம் எனப்படும் நூற்றேழாவது சர்க்கம் நிறைவடைந்தது.

——————

ஸ்ரீ ராம மங்களம் -ஸ்ரீ மா முனிகள் —

ஸ்ரீ ராமர் மந்திரம்

ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்

ஆர்த்தா நாமார்த்தி ஹந்தாரம் பீதானாம் பீதநாசனம்
த்விஷதாம் காலதண்டம் தம் ராமச்சந்த்ரம் நமாம்யஹம்

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:

———

ஸ்ரீ ராம மங்கள ஸ்தோத்ரம்-ஸ்ரீ மா முனிகளே அருளிச் செய்த மங்கள ஸ்லோகங்கள் என்பர்

ஸ்ரீ ராம நாமமே தாரக மந்திரம் . ஸகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் மந்திரம்.
மோட்சத்திற்கு வழி காட்டி. இதை சொல்லும் போதெல்லாம் மங்களமே உண்டாகும்.

——-

மங்களம் கோசலேந்த்ராய மஹ.நீய குணாப்தயே
சக்ரவர்த்தி த.நுஜாய ஸார்வ பௌமாய ம்ங்களம் –1-

மங்களம்
கோசலேந்த்ராய -கோசல தேச அரசருக்கு
மஹ.நீய குணாப்தயே -கல்யாண குணக்கடலான பெருமாளுக்கு
சக்ரவர்த்தி த.நுஜாய -சக்ரவர்த்தி திருமகனுக்கு
ஸார்வ பௌமாய -ஸார்வ பவ்மனுக்கு
மங்களம்

வேத வேதாந்த வேத்யாய மேக ஸ்யாமல மூர்த்தயே
பும்ஸாம் மோஹந ரூபாய புண்ய ஸ்லோகாய மங்களம் -2-

வேத வேதாந்த வேத்யாய -வேதங்களாலும் உபநிஷத்துக்களாலும் அறியப்படத் தக்கவனாயும்
மேக ஸ்யாமல மூர்த்தயே -நீல மேக ஸ்யாமள திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனுக்கு
பும்ஸாம் மோஹந ரூபாய -கண்டவர் தம் மனம் வழங்கும் படி -ஸித்த அபஹாரியான வனுக்கு
புண்ய ஸ்லோகாய -புண்யம் அளிக்கும் ஸ்தோத்ர வாசயனுக்கு
மங்களம் –

———

விஸ்வாமித்ராங்காய மிதிலா நகரீபதே:
பாக்யாநாம் பரிபாகாய பவ்ய ரூபாய மங்களம் –3-

விஸ்வாமித்ராங்காய -விச்வாமித்ர மகரிஷிக்கு அந்தரங்க சிஷ்யனுக்கு
மிதிலா நகரீபதே: பாக்யாநாம் பரிபாகாய -மிதிலா தேச ஜனக மஹாராஜருக்கு பரிபாக பாக்யமானவருக்கு
பவ்ய ரூபாய -பவ்ய திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனுக்கு
மங்களம்

—————

பித்ரு பக்தாய ஸததம் ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா
நந்திதாகில லோகாய ராம பத்ராய மங்களம் –4-

பித்ரு பக்தாய ஸததம் -எப்பொழுதுமே சக்கரவர்த்திக்கு உகப்பாக நடப்பவனும்
ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா நந்திதாகில லோகாய -அகில உலகில் உள்ளோரையும் தனது
ஸஹோதர்களுடனும் பத்னியுடனும் ஆனந்திப்பவனுமான
ராம பத்ராய மங்களம் –

—————-

த்யக்த ஸாகேத வாஸாய சித்ர கூட விஹாரிணே
ஸேவ்யாய ஸர்வயமி நாம் தீரோதராய மங்களம் –5-

த்யக்த ஸாகேத வாஸாய -அயோத்யா வாஸத்தையே துறந்து
சித்ர கூட விஹாரிணே -மநோ ஹராமான சித்ரகூடத்திலே இஷ்டமாகத் திரிந்து
ஸேவ்யாய ஸர்வயமி நாம் -ஸர்வ ரிஷிகளுக்கும் ஸேவை புரிந்து மகிழ்பவனாயும்
தீரோதராய -உதார தீர ஸ்திரமாய் இருப்பவனுக்கு
மங்களம்

————

சௌமித்ரிணா ச ஜாநக்யா சாப பாணாஸி தாரிணே
ஸம் ஸேவ்யாய ஸதா பக்தாய ஸ்வாமிநே மம மங்களம் –6-

சௌமித்ரிணா ச ஜாநக்யா -இளைய பெருமாள் ஜானகிப்பிராட்டி யுடன்
சாப பாணாஸி தாரிணே -சார்ங்க பாணியாயும் -அஸி -என்னும் கட்கத்தையும் தரித்து உள்ளவனாயும்
ஸம் ஸேவ்யாய ஸதா பக்தாய -அகில ஜகத்தும் பக்தி செய்யும் ஸ்வாமியுமான
ஸ்வாமிநே மம -அஸ்மத் ஸ்வாமியுமான பெருமாளுக்கு
மங்களம்

———-

தண்ட காரண்ய வாஸாய கண்டிதாம் அமர சத்ரவே
க்ருத்ர ராஜாய பக்தாய முக்தி தாயாஸ்து மங்களம் –7-

தண்ட காரண்ய வாஸாய – தண்டகாரண்யத்தில் உகந்து வாஸம் செய்து அருளினவனாயும்
கண்டிதாமர சத்ரவே -தேவ சத்ருக்களை நிரஸித்து அருளினவனாயும்
க்ருத்ர ராஜாய பக்தாய முக்தி தாயாஸ்து -ஜடாயு பெரிய உடையோருக்கு கச்ச என்று மோக்ஷம் அருளினவனாயும்
மங்களம்

———–

ஸாதரம் சபரீ தத்த பல மூலாபிலாஷிணே
ஸௌலப்ய பரிபூர்ணாய ஸத்வோத்ரிக்தாய மங்களம் –8-

ஸாதரம் சபரீ தத்த பல மூலாபிலாஷிணே -சபரி தந்த கனிகளை ஆதாரம் அபிலாஷை யுடன்
அமுது செய்து அருளினவனாயும்
ஸௌலப்ய பரிபூர்ணாய -பரிபூர்ண சவ் சீலவானாயும்
ஸத்வோத்ரிக்தாய -உத்க்ருஷ்ட ஸூத்த ஸத்வ மயனானவனாயும்
மங்களம் –

—————-

ஹநுமத் ஸமவேதாய ஹரீசா பீஷ்டதாயிநே
வாலி ப்ரமதநாயாஸ்து மஹா தீராய மங்களம் –9-

ஹநுமத் ஸமவேதாய -திருவடியுடன் ஒன்றறக் கலந்து மகிழ்ந்தவனாயும்
ஹரீசா பீஷ்டதாயிநே-ஸூக்ரீவ மஹா ராஜருக்கு தயை அருளி அபீஷ்ட பல பிரதனானவனாயும்
வாலி ப்ரமதநாயாஸ்து -வாலிக்கு வீட்டு அரசு அருளியவனாயும்
மஹா தீராய -மஹா வீர தீர பலாக்ரமனாயும் உள்ள பெருமாளுக்கு
மங்களம் —

———-

ஸ்ரீமதே ரகுவீராய ஸேதுல்லங்கித ஸிந்தவே
ஜித ராக்ஷஸ ராஜாய ரண தீராய மங்களம் –10-

ஸ்ரீமதே ரகுவீராய -ரகுகுலச் செல்வனாயும்
ஸேதுல்லங்கித ஸிந்தவே -சேது கட்டச் செய்து அருளி கடலைக் கடந்தவனாயும்
ஜித ராக்ஷஸ ராஜாய -ராக்ஷஸ அரசனை வென்றவனாயும்
ரண தீராய-பாட் வீரனாயுமான பெருமாளுக்கு
மங்களம்

———–

ஆஸாத்ய நக்ரீம் திவ்யா மபிஷிக்தாய ஸீதயா
ராஜாதி ராஜ ராஜாய ராம பத்ராய மங்களம் –11-

ஆஸாத்ய நகரீம் திவ்யம் -திரு அயோத்யைக்கு மீண்டு எழுந்து அருளி
அபிஷிக்தாய ஸீதயா -பிராட்டி யுடன் திருமுடி சூடி
ராஜாதி ராஜ ராஜாய -ராஜாதி ராஜனான பெருமாளுக்கு
ராம பத்ராய
மங்களம்

————–

மங்களாசாஸந பரைர் மதாசார்ய புரோகமை:
ஸர்வைச்ச பூர்வைராசார்யை: ஸத்க்ருதாயாஸ்து மங்களம்–12-

மங்களாசாஸந பரைர் -மங்களா ஸாஸன பரர்களான பூர்வர்களாலும்
மதாசார்ய புரோகமை:-அஸ்மத் ஆச்சார்யர் தொடக்கமானவர்களாலும்
ஸர்வைச்ச பூர்வைராசார்யை: -ஸர்வ பூர்வர்களாலும்
ஸத்க்ருதாயாஸ்து மங்களம்-ஸர்வ ஸத் கிருத்துக்களாலும்
மங்களா சாஸனமே பரம புருஷார்த்தம் என்று கொள்ளப்பட்டு
அடியேனுக்கும் அவ்வாறே மங்களா சாசனம் செய்யப் பணித்தார்களே

————

ஸ்ரீ ராம மங்களம்

ஸகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் மந்திரம்.

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண பாராயணத்தின் மங்கள ஸ்லோகங்கள் —

ஸ்வஸ்தி ப்ரஜாப்⁴ய꞉ பரிபாலயந்தாம்ʼ ந்யாய்யேன மார்கே³ண மஹீம்ʼ மஹீஶா꞉ .
கோ³ப்³ராஹ்மணேப்⁴ய꞉ ஶுப⁴மஸ்து நித்யம்ʼ லோகா꞉ ஸமஸ்தா꞉ ஸுகி²னோ ப⁴வந்து .. 1 ..

காலே வர்ஷது பர்ஜன்ய꞉ ப்ருʼத்²வீ ஸஸ்யஶாலினீ .
தே³ஶோ(அ)யம்ʼ க்ஷோப⁴ரஹிதோ ப்³ராஹ்மணா꞉ ஸந்து நிர்ப⁴யா꞉ .. 2 ..

அபுத்ரா꞉ புத்ரிண꞉ ஸந்து புத்ரிண꞉ ஸந்து பௌத்ரிண꞉ .
அத⁴னா꞉ ஸத⁴னா꞉ ஸந்து ஜீவந்து ஶரதா³ம்ʼ ஶதம் .. 3 ..

சரிதம்ʼ ரகு⁴நாத²ஸ்ய ஶதகோடிப்ரவிஸ்தரம் .
ஏகைகமக்ஷரம்ʼ ப்ரோக்தம்ʼ மஹாபாதகனாஶனம் .. 4 ..

ஶ்ருʼண்வன் ராமாயணம்ʼ ப⁴க்த்யா ய꞉ பாத³ம்ʼ பத³மேவ வா .
ஸ யாதி ப்³ரஹ்மண꞉ ஸ்தா²னம்ʼ ப்³ரஹ்மணா பூஜ்யதே ஸதா³ .. 5 ..

ராமாய ராமப⁴த்³ராய ராமசந்த்³ராய வேத⁴ஸே .
ரகு⁴நாதா²ய நாதா²ய ஸீதாயா꞉ பதயே நம꞉ .. 6 ..

யன்மங்க³லம்ʼ ஸஹஸ்ராக்ஷே ஸர்வதே³வநமஸ்க்ருʼதே .
வ்ருʼத்ரநாஶே ஸமப⁴வத்தத்தே ப⁴வது மங்க³ளம் .. 7 ..

யன்மங்க³லம்ʼ ஸுபர்ணஸ்ய வினதா அகல்பயத் புரா .
அம்ருʼதம்ʼ ப்ரார்த²யானஸ்ய தத்தே ப⁴வது மங்க³ளம் .. 8 ..

மங்க³லம்ʼ கோஸலேந்த்³ராய மஹனீயகு³ணாப்³த⁴யே .
சக்ரவர்திதனூஜாய ஸார்வபௌ⁴மாய மங்க³ளம் .. 9 ..

அம்ருʼதோத்பாத³னே தை³த்யான் க்⁴னதோ வஜ்ரத⁴ரஸ்ய யத் .
அதி³திர்மங்க³லம்ʼ ப்ராதா³த்தத்தே ப⁴வது மங்க³ளம் .. 10 ..

த்ரீன் விக்ரமான் ப்ரக்ரமதோ விஷ்ணோரமிததேஜஸ꞉ .
யதா³ஸீன்மங்க³லம்ʼ ராம தத்தே ப⁴வது மங்க³ளம் .. 11 ..

ருʼதவ꞉ ஸாக³ரா த்³வீபா வேதா³ லோகா தி³ஶஶ்ச தே .
மங்க³லானி மஹாபா³ஹோ தி³ஶந்து ஶுப⁴மங்க³ளா: .. 12 ..

காயேன வாசா மனஸேந்த்³ரியைர்வா பு³த்³த்⁴யாத்மனா வா ப்ரக்ருʼதே꞉ ஸ்வபா⁴வாத் .
கரோமி யத்³யத் ஸகலம்ʼ பரஸ்மை நாராயணாயேதி ஸமர்பயாமி .. 13 ..

———————————-

மங்களம் கோஸலேந்த்ராய மஹநீய குணாப்தயே
சக்ரவர்த்தி தநூஜாய ஸார்வபௌமாய மங்களம்

வேதவேதாந்தவேத்யாய மேகஸ்யாமல மூர்த்தயே
பும்ஸாம் மோஹநரூபாய புண்யஸ்லோகாய மங்களம்

விஸ்வாமித்ராந்தரங்காய மிதிலா நகரீபதே:
பாக்யாநாம் பரிபாகாய பவ்யரூபாய மங்களம்

பித்ருபக்தாய ஸததம் ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா
நந்திதாகில லோகாய ராமபத்ராய மங்களம்

த்யக்த ஸாகேதவாஸாய சித்ரகூட விஹாரிணே
ஸேவ்யாய ஸர்வயமிநாம் தீரோதாராய மங்களம்

ஸௌமித்ரிணா ச ஜாநக்யா சாபபாணாஸி தாரிணே
ஸம்ஸேவ்யாய ஸதா பக்த்யா ஸ்வாமிநே மம மங்களம்

தண்டகாரண்ய வாஸாய கண்டிதாமர ஶத்ரவே
க்ருத்ரராஜாய பக்தாய முக்திதாயாஸ்(அ)ஸ்து மங்களம்

ஸாதரம் ஸபரீதத்த பலமூலாபிலாஷிணே
ஸௌலப்ய பரிபூர்ணாய ஸத்வோத்ரிக்தாய மங்களம்

ஹநூமத் ஸமவேதாய ஹரீஶாபீஷ்டதாயிநே
வாலிப்ரமதநாயா (அ)ஸ்து மஹாதீராய மங்களம்

ஸ்ரீமதே ரகுவீராய ஸேதூலங்கித ஸிந்தவே
ஜிதராக்ஷஸ ராஜாய ரணதீராய மங்களம்

ஆஸாத்ய நகரீம் திவ்யா மபிஷிக்தாய ஸீதயா
ராஜாதிராஜ ராஜாய ராமபத்ராய மங்களம்

மங்களாஶாஸந பரைர் மதாசார்ய புரோகமை:
ஸர்வைஸ்ச பூர்வைராசார்யை: ஸத்க்ருதாயாஸ்து மங்களம்

———–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அகஸ்திய மகரிஷி திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதாப் பிராட்டி லஷ்மண பரத சத்ருக்ந திருவடி சமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ சாரதா பீடம்–காஷ்மீர அரச வம்சத்தின் வரலாற்றைக் கூறும் ‘ராஜ தரங்கணி’ என்ற வடமொழி நூல்–

February 22, 2023

காஷ்மீர் பக்தி மண்டபம் சாரதா பீடம் -வித்வான்கள் மலிந்த இடம்
காஷ்மீர அரச வம்சத்தின் வரலாற்றைக் கூறும் ‘ராஜ தரங்கணி’ என்ற வடமொழி நூல்

தமிழ்’ என்ற சொல்லின் வேர்ச் சொல்  எது?
 தாய், தம்பி, தமக்கை, தங்கை , தந்தை போன்ற சொற்கள் எந்த வழிமுறையில் வந்ததோ, அதே வழியில் தான் ‘தமிழும்’ வந்தது.
‘தம்’ என்பது படர்க்கையை குறிக்கும் என்பது தொல்காப்பியன் கூறும் இலக்கணம்.
தம் + ஆய் = தாய்
தம் + ஐயன் = தமையன்
தம் + அக்கை = தமக்கை
தம் + கை = தங்கை
தம் + எந்தை = தந்தை
அதுபோல
தம் + மொழி = தமிழ்
————
சாரதா பீடம் (Sharada Peeth), இந்திய – பாகிஸ்தான் நாடுகளின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், நீலம் ஆற்றின் கரையில், இந்து சமயக் கடவுளான சாரதாவிற்கு அர்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். சாரதா பீடம் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

முதலாம் நூற்றாண்டை சேர்ந்த குஷாணப் பேரரசு காலத்தில் சாரதாபீடம் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு பெரிய பல்கலைக்கழகம் ஒன்றும் செயல்பட்டது. அந்தக் காலத்தில் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பண்டிதர்கள் சாரதா பீடத்துக்கு சென்று பல்வேறு பண்டிதர்களுடன் விவாதம் செய்வார்கள். அதில் வெற்றி பெறுபவர் சர்வக்ஞர் (எல்லா சாஸ்திரங்களிலும் வல்லவர்) என்று அழைக்கப்பட்டார்.

சர்வக்ஞர் பட்டம் பெற்றவர்களே சாரதா பீடத்தின் கருவறைக்கு சென்று தேவியை வழிபட முடியும். 7-ம் நூற்றாண்டை சேர்ந்த ஆதி சங்கரர், சாரதா பீடம் சென்று அனைவரையும் தனது வாதத் திறமையால் வென்று பீடத்தின் உள்ளே நுழைந்தார்.

அவர் உள்ளே சென்றபோது சரஸ்வதி தேவி அவரை சோதனை செய்தார். அந்த சோதனையிலும் ஆதி சங்கரர் வெற்றி பெற்றார். அவரது அறிவு, ஞானத்தை மெச்சி, தேவி அருளாசி வழங்கினார்.

ஸ்ரீ சாரதா பீடம்-அற்புதம் வாய்ந்த இந்துக்களின் ஆன்மிக பூமியான ஜம்மு காஷ்மீர்-

ஸ்ரீ சாரதா பீடம் (Sharada Peeth), இந்திய – பாகிஸ்தான் நாடுகளின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகில்,
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், நீலம் ஆற்றின் கரையில், இந்து சமயக் கடவுளான சாரதாவிற்கு அர்பணிக்கப்பட்ட கோயில் ஆகும்.
சாரதா பீடம் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
காஷ்மீர பண்டிதர்கள் அதிகம் வாழ்ந்த இப்பகுதியில் இந்து சமய வேதங்கள் பயிற்றுவிக்கப்படும் மையமாக விளங்கியது.

14ஆம் நூற்றாண்டில் சிதிலமடைந்த சாரதா பீடத்தை காஷ்மீர் மன்னர் குலாப் சிங் 19ஆம் நூற்றாண்டில் திருப்பணி செய்தார்
இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் சாராதா பீடம் அமைந்த பகுதியை பாகிஸ்தான் நாட்டு பஷ்தூன் பழங்குடி மக்கள் கைப்பற்றி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இணைத்தனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நீலம் பள்ளத்தாக்கில், பாரமுல்லாவிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும்,
முசாபராபாத் நகரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும்,
எல்லைக் எல்லை கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

இந்தியத் துணைக் கண்டத்தில் சாரதா பீடம், புகழ் பெற்ற வேத கல்வி மையமாக விளங்கியது.
அத்வைத தத்துவ நிறுவனர் ஆதிசங்கரர் மற்றும் விசிட்டாத்துவைத நிறுவனரும் வைணவ குருவுமான இராமானுசர்,
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்திரத்திற்கு விளக்க உரை எழுதுவதற்காக காஷ்மீரின் சாரதா பீடத்திற்கு வருகை புரிந்தனர்.

யுவான் சுவாங்
கி பி 632 இல் சீன பௌத்தப் பயணி யுவான் சுவாங் சாரதா பீடத்திற்கு வருகை புரிந்து,
இரண்டு ஆண்டுகள் தங்கி, பௌத்தம் தொடர்பான கல்வியைப் பயின்றார்.[6]

சாரதா கோயில் அமைப்பு
சாரதா பீடத்தின் சரசுவதி கோயிலின் நீளம் 142 அடியாகவும், அகலம் 94.6 அடியாகவுவும் இருந்தது.
மேலும் 88 அடி உயர தோரண வாயிலும் அமைந்திருந்தது.
கோயில் மூலவரான சாரதா தேவியின் உருவம் சந்தன மரத்தினால் செய்யப்பட்டது.

வரலாற்று குறிப்புகள்
காஷ்மீரப் பண்டிதரான மகாகவி கல்ஹானர், தான் எழுதிய இராஜதரங்கிணி எனும் சமஸ்கிருத நூலில்
சாரதா பீடத்தையும், அதன் நிலவியலையும் குறித்துள்ளார்.

இசுலாமிய வரலாற்று அறிஞரும், புவியியலாளருமான அல்-பிருனி (973 – 1048), சாரதா பீடத்தின் கருவறையில்
மரத்திலான சரசுவதியின் சிற்பம் காணப்பட்டதாக தமது குறிப்பில் குறித்துள்ளார்.
மேலும் பாகிஸ்தானில் உள்ள முல்தான் நகரத்தின் மூல ஸ்தானம் -மருவி இந்தப்பெயர் – சூரியன் கோயில் போன்று,
சாரதா பீடத்தின் கோயில் அமைப்பு இருந்ததாக குறிப்பிடுகிறார்.

பதினான்காம் நூற்றாண்டில் சாரதா பீடத்தின் கோயிலை இசுலாமியர்கள் சிதைத்ததாக கருதப்படுகிறது.

காஷ்மீரம் – ஒரு ஹிந்து பூமி! ஹிந்து மதத்தின் அடித்தளம்!காஷ்யபபுரி எனும் காஷ்மீர்! வேதம் விளைந்த பூமி!
தெய்வங்கள் தேடி வந்த பூமி! ரிஷிகள், முனிவர்களின் அருந்தவ பூமி! ஆசார்யர்களின் ஆன்மீக பூமி!

காஷ்மீர்=காஷ்யபர்+ மீரா. காஷ்யப ரிஷியின் பெரிய ஏரி. பெரிய ஏரிக்கு சம்ஸ்க்ருதத்தில் ‘மீரா’என்பர்.
காஷ்யப ரிஷி இப்போதைய வைவஷ்வத மந்வந்ரத்தின் சப்த ரிஷிகளில் ஒருவர். அதாவது ஏழு ரிஷிகளில் ஒருவர் காஷ்யபர்.
காஷ்யப கோத்ரத்தைச் சேர்ந்தவர்கள் இந்த ரிஷியின் மரபினர்.
ப்ரஜாபதி தக்ஷர் தம் 13 குமாரத்திகளை காஷ்யபருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.
தேவர்கள், கன்வர்கள், யக்ஷர்கள், நாகர்கள் எல்லாம் காஷ்யபரின் பிள்ளைகள்.

ஸ்ரீநகர்–குல்மார்க் பெரிதும் வற்றிப் போன ஏரியின் பெரும்பகுதியைச் சமப்படுத்தி ஊராக்கினார் அனந்த்நாக்.
அங்கு பல குருகுலங்கள், சர்வகலா சாலைகள் நிறுவி மிகப் பெரிய ஞான நகரம் ஆக்கினார்.
உலகின் பல்வேறு இடங்களிலிருந்தும் பல சமயங்களைச் சார்ந்த அறிஞர்களும் ஞானிகளும் வந்து கூடி சத் சங்கம் செய்யும் இடமாகத் திகழ்ந்தது.
ஞானம் என்னும் செல்வத்தை (ஸ்ரீ) உடைய நகர் என்பதால் ‘ஸ்ரீநகர்’ ஆயிற்று.
இவற்றை எல்லாம் நிர்வாகம் செய்ய நிர்மாணித்த இடமே இன்றைய ‘அனந்த்நாக்’.
ஸ்ரீநகரின் ஞானச் செல்வத்தை அனுபவிக்க கெளிரி தேவியும், விநாயகரும் கைலாயத்தி லிருந்து அங்கு வருவார்களாம்!
அவர்கள் வரும் வழிக்கு ‘கெளரிமார்க்’ என்று பெயர். அதுவே மருவி இன்றைய ‘குல்மார்க்’ ஆயிற்று.

ஞான பூமியை ஆளும் ஞான தேவி ஸ்ரீ சரஸ்வதி:
காஷ்மீரை ஆளும் காவல் தெய்வம் சரஸ்வதி தேவி. சரஸ்வதிக்குரிய ஸ்லோகத்தில் ‘காஷ்மீர பூர வாசினி’ என்று போற்றப்படுகிறார்.
‘நமஸ்தே சாரதா தேவி!
காஷ்மீர் பூர வாசினி!
த்வமஹே ப்ரார்த்யே நித்யம்,
வித்யா தான் இஞ்சா தேஹிமே!’

காஷ்மீர மொழியின் எழுத்து வடிவங்கள் ‘சாரதா’ என்று அழைக்கப்பட்டது. கலாசாலைகள் ‘சாரதாபீடங்கள்’ஆயின.
அந்த நாடே ‘சாரதா தேசம்’ என்றும் அழைக்கப்பட்டது.
(சரஸ்வதி கோவில், சாரதா பீடம் எல்லாம் இன்றைய பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் – POK – இடிந்த நிலையில் உள்ளன!
வழிபாடு இல்லாமல் பாழடைந்து கிடக்கின்றன!)

ஆதிசங்கரரின் ‘செளந்தர்ய லஹரி’
ஆதிசங்கராசார்யர் எட்டாம் நூற்றாண்டில் காஷ்மீர் வந்து, பல ஆண்டுகள் தங்கியிருந்தார்.
கோபாலாத்ரி மலைமேல் அமர்ந்து தான் சிறந்த ‘செளந்தர்ய லஹரி’பாடினார். இந்த மலை சங்கராசார்ய மலை என்றும் அழைக்கப்படுகிறது.
நீலம் நதி (கிருஷ்ண கங்கா)க் கரையில் இருந்த சாரதா கோவிலுக்குச் சென்ற ஆதிசங்கரர், அந்தக் கோவிலின் அமைப்பு,
சாந்நித்யம் ஆகியவற்றைக் கண்டு மிக உகந்து அதே போல சிருங்கேரியில் துங்கபத்ரா நதி தீரத்தில் கோவில் கட்டினாராம்.
சிருங்கேரியில் உள்ள சாரதாம்பாளின் சந்தன மரத்தாலான மூல விக்ரகம் காஷ்மீரத்திலிருந்து கொண்டு வரப்பட்டது.

ஸ்ரீ ராமானுஜரின் ‘ஸ்ரீபாஷ்யம்’
ஸ்வாமி ராமாநுஜர் 11 ஆம் நூற்றாண்டில் காஷ்மீர் வந்தார். வேத வியாசரின் பிரம்ம சூத்திரங்களுக்கு உரை எழுதுவதற்காக,
சாரதா பீடத்தில் இருந்த, வேத வியாசரின் சீடர் போதாயன மகரிஷி இயற்றிய ‘போதாயன விருத்தி கிரந்தம்’ என்னும் நூலைப் பார்க்க வந்தார்.
ஸ்ரீ ராமாநுஜர் இயற்றிய ஸ்ரீபாஷ்யத்தை ஸ்ரீ சரஸ்வதி தேவி தம் சிரசில் சூடிப் பெருமைப் படுத்தினார்.
சில சூத்திரங்களுக்கு ஸ்ரீ ராமானுஜரின் வ்யாக்யானங்களைக் கேட்டு, அவரை உச்சி முகர்ந்தார்.
ஸ்ரீ ராமாநுஜரை ‘ஸ்ரீபாஷ்யகாரர்’ என்று போற்றினார்.
ஸ்ரீ சரஸ்வதி தேவி தாம் வணங்கி வந்த ‘ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர்’ விக்ரகத்தை ஸ்ரீ ராமாநுஜருக்குத் தந்தருளினார்.

பிற மத அறிஞர்கள்:
பெளத்த, சமண மத அறிஞர்களும் இங்கு வந்து தத்துவ விசாரம் செய்தனர்.
பல பெளத்தத் துறவிகள் இங்கு பல ஆண்டு காலம் தங்கி இருந்து கற்றனர்.
யுவான் சுவாங்(சீனா) ஹேமசந்திரர்(சமண) ஆகியோர் இங்கிருந்தனர்.
இஸ்லாமிய மத அறிஞர்களும்- அல்பரூனி- இங்கு வந்து படித்துச் சென்றதாகக் குறிப்புகள் உள்ளன.
பெளத்தம் இங்கு வளர்ந்ததற்கு அடையாளமாக இன்றைய லடாக் பிரதேசம் விளங்குகிறது.

இஸ்லாமிய ஆக்கிரமிப்பைத் எதிர்த்து வென்ற இந்து மன்னர்கள்:
இஸ்லாமியர்கள் உலகின் பல நாடுகளிலும் தங்கள் ஆதிக்கத்தைக் காட்டிய போதும்,
பரத கண்டத்துக்குள் அவ்வளவு சுலபமாக நுழைய முடியவில்லை.
‘லோஹனா’ வம்சத்து மன்னர்கள் அவர்களை உள்ளே நுழைய விடாமல் நம் வட மேற்கு எல்லையைப் பாதுகாத்தனர்.
லோஹனா வம்சத்தின் முன்னோர் ‘லவ’ பேரரசரின் (ஆம்… ஸ்ரீராமரின் திருக்குமாரர் தான்) படையில் வாள் படைத் தளபதிகளாக இருந்தார்கள்!
ஸ்ரீராமாயண காலத்து லவ புரி தான் இன்றைய லாகூர் (பாகிஸ்தான்).

காஷ்மீரின் வரலாறு:
மகாகவி கல்ஹணர் காஷ்மீரின் வரலாற்றை ‘ராஜ தரங்கிணி’ என்னும் நூலாக எழுதியுள்ளார்.
எட்டு பகுதிகள்- தரங்கங்கள்-கொண்ட இந்நூலில் 7826 ஸ்லோகங்கள் உள்ளன.
இதையே காஷ்மீர் பற்றிய அடிப்படை ஆதார நூலாக மற்ற ஆராய்ச்சி யாளர்கள் / எழுத்தாளர்கள் கொண்டுள்ளனர்.
கல்ஹணர் காஷ்மீரை ஆண்ட பல மன்னர்களின் பெயரைப் பட்டியல் இட்டுள்ளார்.

அவர்களுள் சில பெயர்கள்:
கோநந்தா, தாமோதரா யஷோவதி, லவ, குசேஷயா, சுரேந்திரா, ஜனகா, அசோகா, ஜலோகா, அபிமன்யு… மற்றும் பலர்.
இந்த நூல் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

சுருக்கமாக M.A.Stein என்பவர் ஆங்கிலத்தில் Kalhana’s Rajatarangini-A Chronicle of the Kings of Kashmir என்று
மூன்று புத்தகங்களாக எழுதியுள்ளார்.

காஷ்மீரத்தில் (பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு -காஷ்மீரில்) முஸாபராபாத் நகரிலிருந்து சுமார் 207 கி.மீ தூரத்திலும்,
பாரத -பாக் எல்லைக் கோட்டில் உள்ள குப்வாராவில் இருந்து 30 கி.மீ தூரத்திலும் சாரதா கிராமம் அமைந்துள்ளது.
மேலும் ஒரு சிறப்பு என்ன வென்றால், இந்த கிராமம் கிஷன்கங்கா (இன்னொரு பெயர் நீலம்) மதுமதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில்
நீலம் பள்ளத்தாக்கில், அழகு கொஞ்சும் பிரதேசத்தில் உள்ளது.
இந்த பகுதி பனிபடர்ந்த நங்கபர்பத் மலைத் தொடரின் சாரதா – நாரத சிகரங்களுக்கு இடையில் உள்ளது.

வரலாறு – புராதனம்

சாம்ராட் அசோகரால் பொது ஆண்டு முன் 273ல் புத்தமத கலாசாலை நிறுவப்பட்டது.
மஹாராஜா கனிஷ்கரால் பொது ஆண்டு பின் 141ல் சாரதா பீடத்தில் 4வது புத்த அறிஞர்களின் அவை சந்திப்பு நடத்தப்பட்டது.
கவி கல்ஹணர் தன்னுடைய ராஜ தரங்கிணி என்ற 11வது நூற்றாண்டில் இயற்றப்பட்ட காவியத்தில் சாரதா ஆலயத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
அல் பெரூனி என்பவர் இன்றைய தஜிகிஸ்தான் – உஸ்பெஸ்கிஸ்தான் என்றறியப்படும் பகுதிகளைச் சேர்ந்தவர்.
அல் பெரூனி வெளிநாட்டிலிருந்து (மத்திய ஆசிய) வந்த சரித்திர ஆராய்ச்சியாளர்.
இவர் சமஸ்கிருதம், பாரசீகம் என்று எழெட்டு மொழிகள் அறிந்தவர்.
அவர் பாரதத்திற்கு பொது ஆண்டு முன் 1036ல் வந்த போது காஷ்மீரத்திற்கு பயணம் செய்திருக்கிறார்.
அங்கு சாரதையின் பெரிய விக்கிரகம் இருந்ததாகவும் பெரும் எண்ணிக்கையில் யாத்ரிகர் திரண்டிருந்திருந்ததாகவும்
தன்னுடைய பயணநூலில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் 500 வருடங் களுக்குப் பின்னர் அக்பர் காலத்தில் வாழ்ந்து அய்னி அக்பரி எழுதிய
அபுல் பஸலும் சாரதையின் கோயிலைப் பற்றி விவரித்துள்ளார்.

டோக்ரா என்ற ஜாம்வால் வம்சாவளி முதல் அரசர் மஹாராஜா குலாப்சிங். அவர் ஆட்சி புரியத் துவங்கிய ஆண்டு 1846.
அதுவரை முஸ்லிம் படையெடுப்புகளின் போது சிதைக்கப்பட்ட பல கோயில்களை புதுப்பித்துச் செப்பனிட்டார்.
அவற்றுள் முதன்மையானது சாரதா பீடம். இந்த வம்சத்தின் கடைசி அரசர் ஹரிசிங்.

ஊடாடும் ஆன்மீக இழை

ஆதிசங்கரர் பாரத நாடெங்கும் தன் சீடர்களுடன் திக்விஜயம் செய்த போது காஷ்மீரத்தில்
சைவமும் (சிவ வழிபாடு) சாக்தமும் (சக்தி வழிபாடு) புத்துயிர் பெற பெரும் முயற்சி மேற்கொண்டு வெற்றி பெற்றார்.
இடைப்பட்ட காலத்தில் காஷ்மீரத்தில் புத்த மதம் ஓங்கி இருந்திருக்கிறது. அவர்களை, ஆதிசங்கரர் சமய உரையாடல்கள்
வாத பிரதிவாதம் நிகழ்த்தி சனாதன தர்மத்தின் மேன்மையை அவர்களுக்கு உணர்த்தி,
அவர் தம் மனங்களை வென்று ஹிந்துமதத்தை ஏற்கச் செய்துள்னார்.
அவருடைய இலக்கிய நயம் மிக்க இறைவனின் தெய்வீக அழகைப் பாடும் செனந்தரிய லஹரி என்ற நூலை
காஷ்மீரில் எழுதியதாகத் தெரிகிறது. இயற்கையின் அழகு மிளிரும் காஷ்மீரையே சங்கரர் அன்னையின் வடிவமாய் கண்டிருப்பாரோ?

காஸ்யப ரிஷி ஏழு ரிஷிகளுள் ஒருவர். காஷ்மீரம் என்ற பெயர் கச்யயமிர் அதாவது,
காச்யப முனிவர் ஏற்படுத்திய ஏரி அல்லது காச்யப மேரு காச்யபமலை என்பதன் மருவிய வடிவமாக இருக்க வேண்டும்.
வரலாற்று அறிஞர்களின், புராணங்களை படித்தவர்களின் கருத்து அலெக்சாண்டரின் படைகளின் பயண வரலாற்றைக் குறிப்பிடும்
கிரேக்க புத்தகம் பண்டைய காஷ்மீரை காஸ்பேரியா என்று பதிவு செய்திருக்கிறது.
ஆயிரம் ஆண்டுகள் முன்னர் வாழ்ந்த ராமானுஜரும் சீடர்கள் உடன் வர யாத்திரை, மேற்கொண்டு அன்னை சாரதையைத் தரிசனம் செய்தார்.
வேதாந்தத்திற்கு அவர் எழுதிய விளக்கவுரை (பாஷ்யம்) அன்னையின் சன்னதியில் சமர்ப்பித்து, அதன் ஏற்று அங்கீகரிக்குமாறு வேண்டினார்.
அன்னை மிகவும் மகிழ்ந்து இது சாதாரண விளக்கவுரை அல்ல, பாஷ்யங்களுள் உயர்வானது என்று பொருள்பட, ராமானுஜரின் படைப்பு
ஸ்ரீபாஷ்யம் என்று அழைக்கப்படும் என்று அசரீரியாக ஒலித்து ஆசீர்வாதம் அளித்தாள்.

கர்நாடக சங்கீதத்தின் மூம்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் சரஸ்வதியைப் போற்றி எழுதிய பாடலில்
அன்னையை காஷ்மீரபுர வாஸினி (காஷ்மீரத்தில் வசிப்பவளே) என்று அழைக்கிறார்.

இன்றளவிலும், காஷ்மீரத்து மக்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும், தங்கள் காலை பிரார்த்தனையில்
“நமஸ்தே சாரதா தேவி காஷ்மீர புரவாஸினி த்வாம் வரம் பிரார்த்தயே நித்யம் வித்யாதனம் ச தேஹிமே” என்று வேண்டுகிறார்கள்.
(பொருள் : சாரதே, தேவியே, காஷ்மீரத்தில் வாசம் செய்பவளே, யான் உன்னை தினமும் துதிக்கிறேன்,
அடியேனுக்கு ஞானச் செல்வத்தினை அளிப்பாய்)

புனித யாத்திரை

சாரதாபீடம் என்னும் இந்த சரஸ்வதி கோயிலுக்கு பாரத நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பாமரர்கள் முதல் துறவிகள் வரை
பன்னெடுங்காலமாய் புனித யாத்திரை மேற்கொண்டு புண்ணியம் அடைந்துள்ளனர் என்று தெரிகிறது.
1947ல் ஆண்டு நாம் சுதந்திரம் அடைந்து 100 நாட்களுக்குள் பாகிஸ்தான் நயவஞ்சமாக போர்தொடுத்து
நம் ஜம்மு- காஷ்மீரின் பெரும் பகுதியை ஆக்ரமித்துக் கொண்டதால் சாரதா பீட யாத்திரை நின்று போயுள்ளது.
கோயிலும் பராமரிப்பின்றி பொலிவிழந்து உள்ளது. குறிப்பாக அக்டோபர் 2005ல் நிலநடுக்கத்தாலும் இந்த கோயில் சிதிலமடைந்தது.

சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக் பிறந்த தால் வாண்டிக்கு வருடம்தோறும் புனித யாத்திரை மேற்கொள்ள பாக் அரசும்நம் அரசும்
ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.அதைப்போல சாரதா பீடத்திற்கும் யாத்ரிகர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கடந்த
சில ஆண்டுகளாகவே பலரும் முயற்சி செய்து வருகின்றனர்.
அவர்களுள் ரவீந்திர பண்டிதர் என்பவரும் முக்கியமானவர் – அதுவும் சமீபத்தில் கர்தார்பூர் தடம் திறக்கப்பட்டு
சீக்கியர்கள் தால் வாண்டிக்கு சுலபமாக சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டவுடன் சாரதா யாத்திரை கோரிக்கை இன்னும் வலுவடைந்துள்ளது.

ராணுவ ரீதியிலும் நன்மை

சாரதா பீடம் அமைந்துள்ள பகுதி பாகிஸ்தானின் ஆக்ரமிப்பில் இருந்தாலும், ஏற்கனவே நம்முடைய பாரத நாட்டின்
ராணுவம் இந்த பகுதியில் கவனம் செலுத்தி எப்பொழுது தேவையென்றாலும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கத் தயார் நிலையில் உள்ளது.
நாம் மலையின் மேல் பகுதியில் கண்காணிப்பைப் பலப்படுத்தி உள்ளதால் எளிதில் எதிரியை சமாளிப்பது மட்டுமல்ல
வலு விழக்கச் செய்யக் கூடிய வசதியான நிலையில் இருப்பதாகவும் அந்த பகுதியில் பணிபுரிந்த அனுபவமுள்ள
லெட் ஜெனரல் சய்யத் அல்ஹஸ்னின் கூறுகிறார். பாக். ராணுவம் அவ்வளவு எளிதில் ஒப்புக் கொள்ளாது என்றாலும்
நாம் தொடர்ந்து யாத்திரைக்கு முயல வேண்டும் – பாக் அரசு மீது நிர்ப்பந்தங்கள் கொண்டு வர வேண்டும் என்கிறார் இவர்.

சாரதா என்றால் சரஸ்வதி என்ற பொருள் உண்டு. சரஸ்வதியின் சிலை இருந்ததால் மட்டுமே அது சிறப்பு பெற்றுவிடவில்லை.
அந்த இடமே வேத பல்கலைக் கழகம் போன்று செயல்பட்டிருக்கிறது. எண்ணற்ற அறிவாளிகள் அங்கே இருந்திருக்கிறார்கள்.
அரிய பல நூல்களை இயற்றியிருக்கிறார்கள் அதுகுறித்து விவாதம் செய்திருக்கிறார்கள்.
அதனால்தான் அது அறிவின் தலைநகரம் என்று போற்றப்படுகிறது.
முதலில் சிறிய வழிபாட்டுத் தலமாகவும் இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் பெரிய கோயிலாகவும் எழும்பியதாகச் சொல்லப்படும்
சாரதா பீடத்தில் வேதங்களும் 64 கலைகளும் குடிகொண்டு இருந்திருக்கிறது.

வேதமும் சங்கீதமும் கல்வியும் கற்றுத் தரப்பட்ட இந்த மையத்தில் சமஸ்கிருத மற்றும் காஷ்மீர சரஸ்வத் பண்டிதர்கள் தங்கியிருந்திருக்கிறார்கள்.
ஆறாம் நூற்றாண்டு வாக்கில் இந்தப் பகுதிக்கு வருகை தந்த சீன பௌத்த துறவியான யுவாங் சுவாங் இந்த வேத பாடசாலை பற்றி சிலாகித்து எழுதியுள்ளார்.

இந்த கோயிலுக்கு நான்கு திசைகளிலும் வாசல்கள் இருந்ததாகவும் வேதங்களை கற்று உணர்ந்தவர்கள் வந்தால் மட்டுமே
தெற்கு வாயிற் கதவுகள் திறக்கும் என்றும், ஜகத்குரு ஆதிசங்கரர் வருகை புரிந்த போது தானாக தெற்கு பக்கக் கதவு திறந்து
அவரை வரவேற்றது என்றும் சொல்லப்படுகிறது.

நமது எல்லைப் பகுதியில் இருந்ததாலோ என்னவோ ஒவ்வொரு முறையும் அன்னியர் படையெடுப்பின் போது இந்த ஸ்தலம் பாதிக்கப்பட்டது.
முதலில் 14ஆம் நூற்றாண்டில் அந்நிய அரசர்களால் இந்த கோயில் சிதைக்கப்பட்டது.

சுமார் 450 வருடங்களுக்கு பின் இந்த பகுதியின் முதல் இந்து மன்னரான டோக்ரா வம்சத்து குலாப் சிங் இந்தக் கோயிலின் பல பகுதிகளை சீர் செய்தார்.
ஷ்ரதா தேவியை முதன்மை தெய்வமாக வழிபடும் சரஸ்வத் பண்டிதர்களைக் கொண்டு வழிபாடுகள் நடந்தன.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்து இந்தியா பாகிஸ்தான் போர் ஏற்பட்டபோது போரில் மீண்டும் இந்த கோயில் சிதைக்கப்பட்டது.
பின்னர் 1948இல் போர் முடிவுக்கு வந்த பின் ஸ்தலம் இருந்தப் பகுதியானது ஆப்கன் பழங்குடியினரான பாஷ்யன்களிடம் சென்றது.
அதன்பின் ஆசாத் காஷ்மீர் பகுதிக்கு போய்விட்டது. 2005 ல் ஏற்பட்ட பூகம்பத்தில் மிச்சமிருந்த இந்த கோயிலின் பெரும்பகுதியும் சேதமடைந்து விட்டது

சாரதா எழுத்து வரி வடிவம் – கலாச்சாரம்

தேவநாகரி எழுத்து வடிவம் போல சாரதா எழுத்து வடிவம் பொது ஆண்டு முன் 8ல் இருந்து 12 நூற்றாண்டு வரை பிரபலமாக இருந்ததாய் தெரிகிறது.
பிராம்மி மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. அன்றைய பாரதத்தின் வடமேற்கு பகுதிகளில்
காஷ்மீர், பஞ்சாப், சிந்து, இன்றைய ஆப்கானிஸ்தான் வரை பரவியிருந்தாகத் தெரிகிறது.
சீக்கியர்கள் அதிகம் பயன்படுத்தும் குருமுகி சாரதா எழுத்திலிருந்ததாகத் தெரிகிறது.
சாரதா எழுத்து வடிவத்தை மீண்டும் உயிர்ப்பித்து பழைய நூல்கள் மொழி பெயர்த்து வெளி உலகிற்கு கொண்டு வந்தால்
புராதனமான சாரதா – காஷ்மீர் கலாச்சாரத்தை அதன் மாண்பை அனைவரும் போற்றுவர்.
சாரதா பீடத்தைக் காப்போம் (Save Saradha Committee) என்ற கோஷத்துடன் கர்நாடகாவில் ஒரு குழுவினர் பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்கள் 2018 செப்டம்பர் மாதம் இந்த கருத்தை வலியுறுத்தி இரண்டு நாட்கள் பெங்களூரில் மாநாடு நடத்தியுள்ளனர்.
அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குச் செல்ல காஷ்மீர் ஹிந்துவிற்கு விசா தேவையின்றி சுதந்திரமாக சென்று வர
பாக்.அரசை பாரத அரசு ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும்.
சாரதா பீட யாத்திரை ஆண்டிற்கு ஒரு முறையாவது நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாரதா பல்கலைக்கழகத்தை ஜம்மு-காஷ்மீரில் நிறுவுவோம்.
அன்னை சாரதையின் கலாச்சாரம் புத்துயிர் பெற்றுப் ஞானத்தின் ஒளி எங்கணும் பரவ வேண்டும் என்று நாமும் பிராத்திப்போம்.

——————————–

விந்திய மலைக்குத் தென்புறத்தில் உள்ள வட்டாரங்களை ”பஞ்ச திராவிட நாடுகள்” என்று அழைத்ததாக தகவல்கள் உள்ளன. விந்திய மலைக்கு வடக்கே உள்ள பிரதேசங்கள் ”பஞ்ச கௌட நாடுகள்” என்றும் அழைக்கப்பட்டுள்ளன.
கன்னடமும் கலிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன் உதிரத்தில் உயிர்த்தெழுந்து ஒன்று பலவாயிடினும்” என்று பழமையான இலக்கியத்தில் பாடப்பட்டிருக்கின்றதே..
பூவையும் நீரையும் பொருளாதாரமாகக்கொண்டு இயங்கும் ஒரே இந்திய ராஜ்யம் காஷ்மீரமாகத்தான் இருக்க முடியும். அடுக்கடுக்காக வானை மறைக்கும் தொழிற்கூடமோ, மூட்டை மூட்டையாக நிலத்தை மறைக்கும் விவசாயமோ ஏற்பட முடியாத அந்த இடத் தில், உல்லாசப் பயணிகளின் கையை எதிர்பார்த்தே மக்களின் வாழ்க்கை அமைந்திருக்கிறது.
காஷ்மீரி பிராஹ்மணன் கல்ஹணன் என்பவன் வரலாற்று உணர்வோடு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராஜ தரங்கணி (Raja Tarangini by Kalhana) நூலை எழுதினான்
தமயந்தி, திரவுபதி, இந்துமதி ஸ்வயம்வரம் நிகழ்ச்சிகளுக்கு 56 தேச மன்னர்கள் வந்தார்கள் என்று படிக்கிறோம். காளிதாசன் தனது ரகு வம்சத்தில் பாண்டிய மன்னரும் இந்துமதி  ஸ்வயம்வரம் நிகழ்ச்சிக்கு வந்தார் என்று 4, 5 பாடல்களில் வருணிக்கிறார். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே , தமிழனையும் ,அகஸ்தியனையும் தொடர்புபடுத்தும் பாடல்கள் அவை.!

நம்மாழ்வாரும் (800 CE) ஒரு பாசுரத்தில் பாரத நாட்டை ஆண்டு போன மன்னர்களின் எண்ணிக்கை கடல் மணல் துகள்களுக்குச் சமம் என்கிறார். பல ஆயிரம் , பல ஆயிரம் மன்னர்களைக் கண்டது பாரதம்!

நினைப்பான் புகின்கடல் எக்கலின் நுண்மணலில் பலர்

எனைத்தோர் உகன்களும் இவ் உலகு ஆண்டு கழிந்தவர்

மனைப்பால் மருங்குற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்

பனைத்தாள் மதகளிறு அட்டவன் பாதம் பணிமினோ

—————–

அமர்நாத் குகை–

இந்த புனித அமர்நாத் குகையும் அதன் பனிலிங்கமும் இந்தியர்களால் மிகப் பழங்காலம் முதல் அறியப்பட்டிருந்ததும், இந்தியா முழுவதிலிருந்து பல நூற்றாண்டுகளாக யாத்திரீகர்களை ஈர்த்து வந்ததும் பல வரலாற்று ஏடுகளில் பதியப்பட்டுள்ளன.

அமர்நாத் குகையைப் பற்றிய மிகப் பழமையான குறிப்பு 6ம் நூற்றாண்டின் ஸம்ஸ்கிருத மொழி நூல் நீலமத புராணத்தில் கிடைக்கிறது. இந்த நூல் காஷ்மீர் மக்களின் அக்கால சமுதாய மற்றும் மத வழிமுறைகளை விளக்குகிறது. மேலும், இந்தப் புனித தலத்தின் யாத்திரை வழிமுறைகளும், இந்த தலத்தின் அதிக விவரங்களும் பிருங்கி ஸம்ஹிதை, அமர்நாத மஹாத்மியம் போன்ற பிற ஸம்ஸ்கிருத நூல்களிலும் காணக்கிடைக்கின்றன. இந்நூல்கள் நீலமத புராணத்தை விட பழைமையானவை.

வரலாற்றுக் குறிப்புநூலான ராஜதரங்கிணி மற்றும் பல மேலைநாட்டு பிரயாணிகளின் குறிப்புகளில் அமர்நாத் பற்றிய குறிப்புகள் உள்ளன. இதனால் இந்தத் தலத்தை மக்கள் பல நூற்றாண்டுகளாக அறிந்திருந்தார்கள் என்பது விளங்குகிறது. இந்தத் தலத்தின் பழங்காலப் பெயர் அமரேஸ்வரா எனப்படும். அமர்நாத் என்று பிற்காலத்தில் வழங்கப்பட்டது.

ராஜதரங்கிணி பிரயாண வரலாற்றாளர் கல்ஹனா என்பவரால் 1148-49 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. ராஜதரங்கிணியில் ஸூஸ்ருவஸ் என்ற நாகத்தின் கதை சொல்லப்படுகிறது. அந்தண இளைஞர் ஒருவரை மணந்த தன் மகளை அபகரிக்க ராஜா முயல்கிறார். அந்த இளைஞர் ராஜாவையும் அவர் தேசத்தையும் சாம்பலாகச் சபிக்கிறார். அதிலிருந்து தப்புவதற்கு சேஷ்நாக் என்ற புனிதக் குளத்தில் (தற்போது காஷ்மீரில் சுஷ்ரம்நாக் என்று அறியப்படுகிறது) ஸூஸ்ருவஸ் அடைக்கலமானதாக அந்தக் கதை சொல்கிறது.

“பாற்கடலை ஒத்த, ஒளிரும் வெண்ணிற நீர்நிலை, நாகம் படைத்த மாயம், தூர மலையின் மட்டில் காண்போம் அமரேசர் யாத்திரையில்” – ராஜதரங்கிணி (அத். 1: பா. 267 – ஆங்கில மொழியாக்கம். M.A. Stein).

ராஜதரங்கிணியில் இன்னோர் இடத்தில் (அத். 2, பா. 138) அரசர் ஸம்திமத ஆர்யராஜா (காலம் கி.மு. 34–கி.பி. 17) “மிக இனிமையான காஷ்மீர கோடைநாட்களை” “காட்டிற்கு மேல் அமைந்த” பனிலிங்கத்தை வணங்குவதில் கழித்தார் என்று சொல்கிறது. இது அமர்நாத் கோவிலைப் பற்றிய குறிப்பே.

அந்த அரசரின் பட்டத்து ராணி, தன் கணவரின் பெயரால் அமரேஸ்வரர் கோயிலுக்கு அக்ரகாரங்களை அளித்ததும், திரிசூலம், பாணலிங்கங்கள் அளித்ததும் கலஹனரால் இந்நூலில் குறிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பிற்காலத்தில், ஜோனராசர் என்பவர் எழுதிய ஒரு வரலாற்றுக் குறிப்பில் சுல்தான் ஜைனுல்-அபிதீன் (1420-1470) லித்தர் நதியின் அருகே ஒரு கால்வாய் அமைத்தபோது அமர்நாத் கோவிலுக்கு விஜயம் செய்த நிகழ்வு விவரிக்கப்படுகிறது. இக்கால்வாய் இன்று ஷாஹ் கோல் என்று அழைக்கப்படுகிறது.

பிராக்ஞபட்டர் மற்றும் சுகர் என்பவர்களால் எழுதப்பட்ட ராஜவளிபதகா என்ற இன்னொரு வடமொழிக் குறிப்பில், இந்த யாத்திரைக்கான அதிக விவரங்கள் கிடைக்கின்றன. அக்பர் ஆட்சியில் காஷமீரத்தின் கவர்னராக இருந்த காஷ்மீர்யூசுப்கான் அக்பருக்கு யாத்திரையை விளக்கிய குறிப்பு எழுதப்பட்டுள்ளது. அந்த விவரங்களின்படி அக்பர் காலத்தில் இந்த யாத்திரை மிக பிரசித்தமாய் இருந்ததும், இந்தப் பனிலிங்கம் தேய்ந்து பின் வளரும் சிறப்பும் தெரிந்திருக்கின்றன என்பது விளங்குகிறது (அக்பர் காஷ்மீரைக் கைப்பற்றியது 1586ல்).

முகலாய மன்னர் ஷாஜகான் காலத்திலும் அமரேஸ்வரர் (அமர்நாத்) யாத்திரை மிகவும் புகழ்பெற்றிருந்தது. ஜகன்னாத பண்டிதராஜர் என்பவர் எழுதிய ஷாஜஹானின் மாமனார் அசிஃப் கான் புகழ்பாடும் ‘அசிஃப் விலாஸம்’ என்ற வடமொழி நூலில் அசிஃப் கான் நிர்மாணித்த நிஷத் என்கிற முகலாய தோட்டத்தின் வர்ணனையும் அமரேஸ்வரர் (அமர்நாத்) சிறப்பும் பேசப்படுகிறது. “தேவர்களின் தலைவன் இந்திரனே சிவபெருமானைத் தொழ அமரேஸ்வர் வருகிறான்” என்கிறது அசிஃப் விலாஸம்.

அமர்நாத் புனிதபூமி காஷ்மீர் மக்களின் உணர்வோடு இரண்டறக் கலந்துள்ளதை சோதா வோனி முதலான பல காஷ்மீர நாடோடிக் கதைகள் நிரூபிக்கின்றன.

ஆகவே காஷ்மீரத்து அமர்நாத் யாத்திரை பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் இந்துக்களின் ஆன்மீகப் பாரம்பரியம். இது வெறும் 150 வருட காலக் கதை அல்ல.

காஷ்யப முனிவரின் பெயரால் காஷ்மீரம் என்று அழைக்கப் படும் இப் புனித பூமி

இந்தியாவின் தெற்கு பாகத்தில் ரத்னாகர் தம்பதியினர் நீண்ட நாட்களுக்கு குழந்தை பேறு கிடைக்காமல் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு அன்னை வைஷ்ணவா தேவி பிறந்தார்.  இக்குழந்தை பிறக்கும் முன் நாள் இரவன்று, இறைவனிடம் ரத்னாகர் ‘குழந்தையின் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்யமாட்டேன்’ என்று வாக்களித்தார். குழந்தைப் பருவத்தில் அன்னை வைஷ்ணவா தேவி, ‘திரிகுட’ என அழைக்கப் பெற்றார்.

திரிகுடாவிற்கு 9 வயது நிரம்பியதும், அவர் கடற்கரை அருகே கடும் தவம் மேற்கொள்ள தந்தையிடம் அனுமதி கேட்டார். திரிகுடா இராமர் ரூபத்தில் விளங்கும் பெருமாளை மிகவும் தீவிரமாக வழிபட்டார். இராமர் தமது படைகளுடன் சீதையைத் தேடிக்கொண்டு கடற்கரை ஓரமாக வந்தார். அவரது கண்கள் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் தெய்வீக அம்சம் பொருந்திய திருகுடாவின் மேல் விழுந்தது.திரிகுடா ராமரிடம் அவரை தனது கணவராக ஏற்றுக்கொண்டதாகக் கூறினார்.

ராமர் அவரிடம் இந்த தெய்வீகப் பிறப்பில் அவர் தமது மனைவியான சீதைக்கு மட்டுமே நேர்மையான கணவனாக இருக்க உறுதி பூண்டிருப்பதாக அறிவித்தார். இருந்தாலும் கலியுகத்தில் அவர் மீண்டும் கல்கி அவதாரம் எடுக்கப் போவதாகவும், அப்போது அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் வரம் அளித்தார்.

அதேசமயத்தில் ராமர் திரிகுடாவிடம் வட இந்தியாவில் நிலை கொண்டுள்ள மாணிக்க மலையில் அமைந்துள்ள திரிகுடா மலைத்தொடரில் உள்ள குகையில் தவம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

திரிகுடா நவராத்திரியின் பொழுது இராமர் இராவணனை வெற்றி கொள்ள நோன்பு மேற்கொண்டார். இந்தத் தொடர்பை நினைவு கூறுவதற்காகவே நவராத்திரியின் ஒன்பது நாட்களில், மக்கள் இராமாயணத்தைப் படிக்கும் வழக்கத்தை மேற்கொண்டுள்ளனர். இதனால் மகிழ்ச்சியுற்ற இராமர், அனைத்து உலகமும் திரிகுடா புகழைப் பாடுவார்கள் என வரமளித்தார். பிறகு அவர் பெருமாளின் அவதாரமாகக் கருதப்பட்டதால் அவர் வைஷ்ணவி என அழைக்கப்பெற்றார்.

ஆண்டுதோறும் சுமார் 8,00,000 பக்தர்கள் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு அன்னையின் அருள் வேண்டி வந்து தமது காணிக்கைகளைச் செலுத்துகின்றனர். கோயில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அனுமதி சீட்டு இல்லாமல் கோயிலின் நுழைவு வாயிலை யாரும் கடந்து செல்ல முடியாது. கோயில் பாதையில் புகையிலையிலான பொருட்கள், தீப்பெட்டி, கத்தி, எளிதில் எரியும் வேதியியல் பொருட்கள் கொண்டு செல்வதை கோயில் நிர்வாகம் தடை செய்துள்ளது.

மேலும் இக்கோயிலுக்கு பாகிஸ்தானிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் மலைக்கோயில் முழுவதும் 24 மணிநேரமும் கோயில் பாதுகாப்பு படையினர், மாநில, மத்திய அரசுகளின் காவல் படையினரின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் பாதை முழுவதும் இருபுறங்களிலும் இரும்புவேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் பாதுகாப்பு உணர்வுடன் வைஷ்ணவ தேவி மலைக்கோயிலுக்கு பயணிக்கலாம்.

இந்த பாரத மண்ணில் தோன்றிய தத்துவங்களுக்கு ஒரு பெயர் உண்டு. சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், பௌத்தம், ஜைனம், சீக்கியம் என்று பல பெயர்களில் பரந்துவிரிந்து இருந்தது. தத்துவங்களில், வழிபடும் கடவுள்களின் உருவங்களில் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்தாலும், பெரிய அளவில் பிளவுபட்டிருந்தாலும் அதையெல்லாம் தனித்தனியாக கடைபிடித்துவந்த மக்கள் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். ஒரே பண்பாட்டைக் கொண்டவர்களாக இருந்தார்கள். சைவத்தை கடைபிடிக்கிற மக்கள் வேறு இனம், வைணவத்தை கடைபிடிக்கிற மக்கள் வேறு இனம் என்ற இனவேறுபாடில்லாத மக்களாகவே இருந்தனர்.

கிறிஸ்தவம், இஸ்லாம் காஷ்மீருக்குள் அடியெடுத்து வைப்பதற்கு முன் காஷ்மீரில் வாழ்ந்துவந்தவர்கள் இந்த தத்துவங்களை கடைபிடிக்கிறவர்கள்தான் வாழ்ந்து வந்தனர்.சிந்துசமவெளி நாகரிகத்தின் ஒரு அம்சமாக காஷ்மீரும் விளங்கி இருக்கிறது. அழகு தொட்டிலாக விளங்கும் காஷ்மீரின் இந்து வரலாறு மிகவும் பழமையானது. வேதங்களில் காஷ்மீரைப் பற்றி நிறையக் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. மத்ரம், டுக்ரம் என்றெல்லாம் வேதங்கள் குறிப்பிடுவது காஷ்மீரத்தை பற்றியே. புராணங்களில் ‘த்வி கர்த்தம்’ என்ற பெயர் காஷ்மீரத்துக்கு வழங்குகிறது. இந்தச் சோல்லுக்கு ‘இரண்டு ஏரிகள் உள்ள பிரதேசம்’ என்று பொருளாம். மானசரோவரம், சரூஈசர் என்னும் இரு பெரிய ஏரிகள் இந்தப் பகுதி எல்லைக்குள் இருப்பதே இந்த பெயருக்கு காரணமாகும்.

கி.மு.500 முதற் கொண்டே கிரேக்க வரலாற்று பேரறிஞர்கள் ஹெகடாயிஸ், ஹெரடோடஸ், ப்டாலமி(Ptolomy) போன்றவர்கள் காஷ்மீரை அவர்களது குறிப்புகளில் காஸ்பாபைரல், காஸ்பத்ராஸ், காஸ்பீரியா என்றெல்லாம் அழைத்திருக்கிறார்கள்.வியாச  முனிவரின் மகாபாரதத்திலும், காஷ்மீர் பற்றிய செய்தி வருகிறது. வடமொழிக்கு இலக்கணம் எழுதிய பாணினி காஷ்மீரைப் பற்றி குறிப்பிடுகிறார். பாணினியின் இலக்கணத்திற்கு உரை செய்த பதஞ்சலி முனிவர் (யோகசூத்திரம் எழுதியவர்) காஷ்மீர்க்காரர் . இவர் திருமூலர், வியாக்ரபாதர் இவர்களோடு தமிழ்நாட்டுக்கு வந்து தில்லையில் பல காலம் தங்கி இருந்து, தமிழ் நாட்டில் சமாதியானதாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.

பத்மமிஹிரர், ஹேலராஜா, சாவில்லகாரா, சங்குஹா, கே்ஷமேந்திரா, கல்ஹணர் போன்ற காஷ்மீரப் பண்டிதர்கள் காஷ்மீரின் வரலாற்றை எழுதி இருக்கிறார்கள். எனினும் கிறிஸ்தவம், இஸ்லாம் காஷ்மீருக்குள் நுழைவதற்கு முன் இங்கு வாழ்ந்தவர்களைப் பற்றித் தெள்ளத்தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் கி.பி.1180களில் வாழ்ந்த கல்ஹணர் என்ற காஷ்மீரத்து கவிஞர் எழுதிய ‘ராஜதரங்கிணி’ என்ற புத்தகம்தான். ராஜதரங்கிணி என்றால் அரசர்களின் ஆறு’ என்று பொருள். காஷ்மீரத்துத் தொன்மையான வரலாற்றை அறிய உதவும் பழமையான புத்தகம் இது. கி.பி.1148 முதல் 1150க்குள் எழுதப்பட்ட இந்தக் கவிதை வடிவிலான வரலாறு, காஷ்மீரைப் பற்றியும் இந்தியாவின் மற்ற பகுதிகளைப் பற்றியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல், சமூக, பிற செய்திகளைத் தெரிவிக்கிறது. ராஜதரங்கிணி புத்தகத்தைப் பற்றி எச்.ஜி,ராலின்ஸன், ‘வரலாற்றுத் துறைக்கு இந்து இந்தியா அளித்துள்ள ஒரே காணிக்கை’ என்று கூறுகிறார்.

இந்த நூல்களில் எல்லாம் காஷ்மீரத்தின் இந்து ஆன்மிகப் பண்பாட்டுத் தன்மையையும், ஆதிகாஷ்மீரில் ஆட்சி செய்த இந்து அரசர்களையும் குறிப்பிட்டுள்ளனர்.உண்மையில் காஷ்மீர் முழுவதும் பெரும்பான்மையாக நாகர்களே ஆட்சி செய்து வந்தனர். காரணம் காஷ்மீர தேசத்தின் ஆதிகுடிகள் நாகர்களே. இன்றளவிலும் எழுநூறுக்கும் மேற்பட்ட ”நாகம்” (Naag) என்ற சோல்லோடு முடியக் கூடிய சிறிய, பெரிய ஏரிகள் உள்ளன. உதாரணம்:அனந்தநாக், சேஷநாக், ருத்ரநாக் , கோகர் நாக்,  போன்றவை.

காஷ்மீரில் ஆதியில் குடியேறியவர்கள் நாகர்களே என்ற குறிப்பு ‘‘அயினி-அக்பரி’’ என்ற நூலில் காணப்படுகிறது. காஷ்யப மகரிஷி நாக வம்சத்தை சேர்ந்தவர். காஷியபரின் மகன் நீலநாகன் இந்த பகுதியை அரசாண்டு வந்ததாகவும் புராணம் பகர்கிறது. காஷ்யப முனிவரின் மகனான நீலநாகரே ‘நீலமதபுராணம்’ எழுதியவர். நாகவம்சத்தின் துவக்கம் நீலநாகரிடமிருந்து தான் ஆரம்பிக்கிறது.

நாக வணக்கம் மிகப் பழைமையான வழிபாடுகளின்
ஒன்று. நீலநாகன் நாகபூஜைக்கு முக்கியத்துவம் அளித்துவந்தார். நாகபூஜை காஷ்மீரக் கலாச்சாரத்தின் முக்கிய அம்சமாக இருந்து வந்தது. நாகர்கள் நாகபூஜை செய்துவந்தாலும் நாகத்தை சிவன்-பார்வதியின் அம்சமாகவே உருவகித்து வழிபட்டு வந்தனர். சைவத்தையே கடைபிடித்து வந்தனர். சமஸ்கிருதமே ஆட்சி மொழியாக இருந்து வந்தது.இந்தியாவில் வேறெந்தப் பகுதியிலும் இதுபோன்ற ஹிந்து அரசகுலங்களைக் குறித்து எழுதப்பட்ட முழுமையான வரலாறு எதுவுமில்லை.

இனி காஷ்மீரை அரசாண்டவர்கள் பற்றி ராஜதரங்கிணியில் சொல்லப்பட்ட வரலாற்றைப் பார்ப்போம்.

காஷ்மீரின் ஆதிவரலாறு (புராணக் கதை) கி.பி.1148 வரை கல்ஹணர் நிகழ்ச்சிகளை அழகாக தொகுத்திருக்கிறார். அதே ராஜதரங்கிணியை கி.பி.1148 முதல்  1420 வரையிலான வரலாற்றை ஜோனராஜா என்பவர் தொகுக்க 1420 முதல் 1486 வரையிலான வரலாற்று நிகழ்ச்சிகளை அவருடைய மாணவர் ஸ்ரீவரகவி என்பார் தொகுத்திருக்கிறார். அவருக்குப் பின்னர் ஆண்ட அக்பரின் வரலாற்றினை ராஜதரங்கிணியின் நீட்சியாக பிரஜா பட்டரும், சுகாவும் எழுதினார்கள்.

கல்ஹணர் எழுதிய ராஜதரங்கிணியில் குறிப்பிட்டுள்ளபடி, முதலாம் கோநந்தன் காஷ்மீர் மன்னராக இருந்து ஆட்சி புரிந்துவந்தார். மதுரா அருகே யமுனை ஆற்றங்கரைப் பகுதியில் கிருஷ்ணருக்கும் ஜராசந்தனுக்கும் இடையே கடும்போர் நடைபெற்றபோது, ஜராசந்தனுக்கு அனுசரணையாகச் செயல்பட்டவர். போரில் முதலாம் கோநந்தன் இறந்தார்.

முதலாம் கோநந்தன் இறந்தபிறகு அவர் மகன் தாமோதர் மன்னராக பொறுப்பேற்றார். தந்தையின் மரணத்திற்கு பழிவாங்க, கிருஷ்ணருக்கு எதிராக போர் தொடுத்தார். அவரும் கிருஷ்ணரால் இறந்தார்.போர்க்களத்தில் இறந்த தாமோதர் மன்னனுக்கு மகன் கிடையாது. ஆகவே, கிருஷ்ணரால் கர்ப்பிணியாய் இருந்த தாமோதர் மனைவி யசோவதி அரியணையில் அமர்த்தப் பட்டார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு கோநந்தன் என்று அவருடைய தாத்தா பெயர் சூட்டப்பட்டது.
பின்பு இரண்டாம் கோநந்தன் என்ற பெயருடன் இவர் ஆட்சிபுரிந்தார். கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் இரண்டாம் கோநந்தர் கலந்துகொள்ளவில்லை.

இரண்டாம் கோநந்தரின் ஆட்சிக்கும் அசோகரின் ஆட்சிக்கும் இடையே 35 வேந்தர்கள் காஷ்மீரை ஆண்டிருக்கின்றனர். அவர்களுள் 23 மன்னர்கள், பாண்டவர்களின் வழித்தோன்றல்கள்.அர்ஜூனனின் பேரனும், பரீட்சித்தின் மகனுமான ஹரன்தேவ், காஷ்மீருக்குச் சென்று இரண்டாம் கோநந்தன் படையில் சேர்ந்தார். அவர் தமது திறமையால் படிப்படியாய் முன்னேறி, இரண்டாம் கோநந்தனின் மரணத்திற்குப் பிறகு காஷ்மீர் மன்னரானார்.

மகத மாமன்னர் அசோகர், காஷ்மீரை 250ஆம் ஆண்டு கைப்பற்றினார். காஷ்மீரில் ‘ஸ்ரீநகரி’ என்ற நகரை அவர் நிர்மாணித்தார். இந்த ஸ்ரீநகரிதான் தற்போதைய ‘ஸ்ரீநகர்’ என்று அழைக்கப்படுகிறது. அசோகர் 40 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

அப்போது அவர் இசோகீஸ்வரலாயம்’ என்ற சிவன் கோயிலை கட்டுவித்தார் என்று சொல்லப்படுகிறது. (ஸ்ரீ என்றால் திரு (செல்வம்) என்று பொருள். ஸ்ரீநகர் சூரியநகர் என்றும் அழைக்கப்படுவதுண்டு. ஸ்ரீநகர் இரண்டாம் ப்ரவரசேனன் என்னும் மன்னனால் கி.மு.2000 வாக்கில் நிர்மாணிக்கப்பட்டது. பின்னர் வந்த மௌரியப் பேரரசர் அசோகர் (245 BC) ஸ்ரீநகரை மேலும் விரிவுபடுத்தினார் என்றும் சொல்லப்படுகிறது.)அசோகர் ஆட்சிக்காலத்தில் பௌத்தம் கோலோச்சியது. அவர் ஆட்சிக்காலத்தில் கிட்டத்தட்ட 5000 புத்தத் துறவிகள் காஷ்மீரில் குடியேறினார்கள்.

அசோகருக்குப் பிறகு அவருடைய மகன் ஜலோக் ஆட்சி செய்தார். இவர் சைவத்தை பரப்பும் மன்னராக இருந்துள்ளார்.

மூன்று நூற்றாண்டுகள் கழித்து துருக்கியைப் பூர்வீகமாகக் கொண்ட குஷான வம்ச மாமன்னர் கனிஷ்கர் காஷ்மீரை கைப்பற்றினார். அவர் புத்த சமயத்தின்மீது அளப்பரிய நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால் புத்த மத த்தைப் பரப்ப ஈடுபாடு காட்டினார். புத்தமதமே அரசின் மதம் என்று பறைசாற்றப்பட்டது

இவரது ஆட்சியில்தான்.ஹூண வம்சத்தினர் 515ல் காஷ்மீரைக் கைப்பற்றினர். ஹூண வம்சத்தைச் சேர்ந்த மெஹர்குல்லை, மகத மன்னர் பாலாதித்தர் போர்க்களத்தில் தோற்கடித்தார். ஆனாலும் அவரை மன்னித்து விடுதலை செய்தார். பின்னர் காஷ்மீரை மெஹர்குல் கைப்பற்றினார். கொடூர சிந்தனையுடைவராய் விளங்கிய மெஹர்குல்லை சைவ சமயம் வெற்றிகொண்டது. அதன்காரணமாக மெஹரேஸ்வராலயத்தை மெஹர்குல் நிர்மாணித்தார். பல்ஹாமிலுள்ள இக்கோயில், தற்போது மாமலேஸ்வராலயம் என்று அழைக்கப்படுகிறது.இவருக்குப்பிறகு காஷ்மீரின் ஆட்சி இந்துக்களின் வசமே இருந்துவந்தது.

தம் அமைச்சரான பிரதாப்தித்தரை, விக்கிரமாதித்தர் காஷ்மீருக்கு அனுப்பி வைத்தார். காஷ்மீரின் நிர்வாகத்தை பிரதாப்தித்தர் திறமையாக நிர்வகித்து வந்தார்.அவருக்குப் பிறகு மேகவாகனன் அரியணை ஏறினார். இவர் புத்த சமயம் பரப்புவதில் அதீத ஈடுபாடு காட்டினார். ஆனால் பிற மதத்தினரை வெறுக்கவில்லை. விலங்குகளைக் கொல்லக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார். ஜீவகாருண்யத்தின் சிறப்பை தம் ஆட்சியில் பரப்பினார்.

மேகவானனின் மனைவி அமிர்தப் பிரபா, அஸ்ஸாம் மன்னரின் மகள் ஆவார். அப்போது அஸ்ஸாமிலும் வங்காளத்திலும் வைணவம் பிரபலமாக இருந்து வந்தது. அமிர்தப்பிரபாவின் முயற்சியால் காஷ்மீரில் வைணவம் பரவ ஆரம்பித்தது. ஆனாலும் அவர் புத்த சமயத்திற்கு யுகாங்விஹார் ஒன்றைக் கட்டிக் கொடுத்தார். அதற்கான கொடிமரத்தை மேகவாகனிடம் இலங்கை மன்னர் நன்கொடையாய் அளித்தார்.

மேகவாகனின் காலத்திற்குப் பிறகு கார்கோட வம்சத்தினர் 254 ஆண்டுகள் காஷ்மீரை ஆட்சி செய்தனர். கார்கோட வம்சத்தை நிறுவியவர் துர்லபவர்த்தன் என்பவர். 631ல் காஷ்மீருக்கு வந்திருந்த யுவான்சுவாங்க காஷ்மீரில் தங்கியிருந்தபோது துர்லபவர்த்தனின் ஆட்சித்திறம்பற்றி குறிப்பிட்டுள்ளார். துர்லபவர்த்தன் மாமன்னர் ஹர்ஹரின் கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி செய்துவந்தார்.

கார்கோட வம்சத்தின் (கார்கோட வம்சம் நாகவம்சத்தின் ஒரு பிரிவுதான்) முக்கியமான, புகழ்பெற்ற மன்னர் சந்திரபீடர். இவர் சீனாவுடன் நட்பில் இருந்துவந்தார். அப்போது படையெடுத்துவந்த அரேபியர்களை சீனாவின் உதவியோடு விரட்டியடித்தார். சந்திரபீடரின் மனைவி பிரகாஷ்தேவி. எல்லா மதத்தின்மேலும் பற்று உள்ளவர்கள் இவர்கள். இவர்களுடைய ஆட்சி எப்படி ஜனநாயகமாக இருந்தது என்பதற்கு ஒரு நிகழ்ச்சியே உதாரணம்.

1003 முதல் 1028வரை காஷ்மீரை ஆண்டார் மன்னர் சங்கிரம் ராஜ். ஈரான், துருக்கி மீது படையெடுத்து வெற்றிவாகை சூடினார். இவருடைய ஆட்சிக்காலத்தில்தான் முதன்முதலில் முகமது கஜினி காஷ்மீர் மீது படையெடுத்தான். இருமுறை படையெடுத்தும் வெற்றிபெற முடியவில்லை.

சங்கிரம் ராஜுக்குப் பிறகு அவருடைய மகன் ஹர்ஷ் அரசரானார். இவர் ஒரு கவிஞர்.இவருக்குப் பிறகு 1128 முதல் 1140ஆம் ஆண்டுவரை காஷ்மீரை மன்னர் ஜெய்சிங் ஆண்டார். ஜெய்சிங்குக்குப் பிறகு ஒருவர் பின் ஒருவராகப் பலர் காஷ்மீரை ஆண்டபோதும் யாருடைய ஆட்சியும் நீடித்து நிலைக்கவில்லை. 1301ஆம் ஆண்டில் சக்தேவ் என்ற மன்னர் அரியணையில் ஏறினார். திபெத்திய அகதியான ரின்சானாவை ஆதரித்து முக்கியப் பதவி தந்தார். துல்சூ என்ற கொள்ளைக்காரன் காஷ்மீரைத் தாக்கியதும் சக்தேவ் தலைமறைவாகிவிட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றினார் ராமச்சந்திரா. இவர் சக்தேவ் மன்னரின் தளபதியாவார். விவேகம் இல்லாத இந்த அரசனை திபெத்திய அகதியான ரின்சானானின் ஆட்கள் சதிசெய்து கொன்றனர்.

ராமச்சந்திராவின் மகள் கோதராணியை ரின்சானா மணந்து கொண்டார். கோதராணியின் விருப்பப்படி ரின்சானா இந்து மதத்தை தழுவினார்.புத்த மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறிய ரின்சானாவை பிராமணர்கள் ஏற்க மறுத்தனர். அதனால் வெறுப்புற்ற ரின்சானா, திடீரென முஸ்லீமாக மாறிவிட்டார். தமது பெயரையும் மாலிக் சத்ருதீன் என்று அவர் மாற்றிக்கொண்டார். மாலிக் சத்ருதீன்தான் காஷ்மீரின் முதல் முஸ்லீம் மன்னர் என்று வரலாறு பதிவு செய்துள்ளது.

உதயண்தேவ் உடனான போரில் படுகாயமடைந்த ரின்சானா தம் மனைவி கோதராணியையும் மகன் ஹைதரையும் மந்திரி ஷாமீரிடம் ஒப்படைத்து பாதுகாக்குமாறு கேட்டுக் கொண்டார். அவர் 1320ல் மரணமடைந்தார்.படையெடுத்துவந்த உதயண்தேவை கோதராணி மணந்து கொண்டார். கோதராணியின் சொற்படியே அப்போது ஆட்சி நடைபெற்றது. இதற்கிடையில் பெர்ஷியாவைச் சேர்ந்த சர்தார் அச்லா காஷ்மீரை முற்றுகையிட்டார். உதயண்தேவ் திபெத்திற்கு ஓடிவிட்டார். இதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை கோதராணி. படைபலத்தில் குறைவாக இருந்தாலும் கோதராணியின் வியூகத்தால் அச்லா தோற்கடிக்கப்பட்டார். ஆனாலும் அச்லா விடுவதாயில்லை. அதனால் கோதராணி அவரை ஆசை வார்த்தை கூறி அழைத்து தலையை வெட்டி வீழ்த்தினார்.

திபெத்திற்கு ஓடிப்போன உதயண்தேவ் மறுபடியும் வந்து சேர்ந்து கொண்டார். அவரை ஓரம் கட்டியே வைத்திருந்தார் கோதராணி.ஆட்சிக்குள்ளேயே கோதராணிக்கு துரோகிகள் முளைத்து விட்டிருந்தார்கள். சில ராணுவ அதிகாரிகள் திடீரென தாக்குதல் நடத்தி கோதராணியை கைது செய்து சிறைபடுத்தினர். சிறையிலிருந்து அமைச்சர் குமார்பத் உதவியினால் தப்பினார். மீண்டும் அரியணையேறிய கோதராணி முக்கியப் பதவிகளை குமார்பத்திடம் ஒப்படைத்தார்.

கோதராணிக்கு விசுவாசமாக இருப்பதாக நடித்துக்கொண்டிருந்த ஷாமீர், ஆட்சியைக் கைப்பற்ற சமயம் எதிர்பார்த்திருந்தார்.1338ல் உதயண்தேவ் மரணமடைந்த காரணத்தால் மூத்த மந்திரியான பிக்ஷன்பத் பிரதமரானார். லாவண்யர் என்ற தம் ஆதரவாளரை அமைச்சராக்கினார் கோதராணி. காலம் செல்லச் செல்ல ஷாமீர் ஓரங்கட்டப்பட்டார். இதனால் பிக்ஷன்பத் மேல் கடுங்கோபம் கொண்ட ஷாமீர் அவரைத் தீர்த்துக்கட்ட திட்டம்போட்டு நயவஞ்சகமாக கொன்றான். ஷாமீரின் கை ஓங்கியது. கோதராணி அவனை கொல்ல முயற்சி செய்து முடியாதபோது தம் குறுவாளால் தம்மையே மாய்த்துக் கொண்டார் கோதராணி.

——————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாசுரப்படி ஸ்ரீ மத் பாகவதம் —ஸ்ரீ பாரதியின் கண்ணனின் அனுபவம் –ஸ்ரீ கிருஷ்ண மங்கள ஸ்லோகம்

February 21, 2023

ஸ்ரீ பாசுரப்படி ஸ்ரீ மத் பாகவதம் —

(ஸ்ரீ திருப்பாற் கடல் வர்ணனை )
பாலாலிலையில் துயில் கொண்ட பரமன்
மன்னிய நாகத்தணை மேல் ஓர் மா மலை போல்
சுடர் ஆழி சங்கு இரு பால் பொலிந்து தோன்றுத்
திரு மடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
ஆயிரம் தோள் பரப்பி முடி ஆயிரம் மின் இலகக்

கடலோதம் கால் அலைப்பக்
கடலோன் கை மிசைக் கண் வளர்வது போல்
உன்னிய யோகத்து உறக்கம் தலைக் கொண்டு
இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி
இன்பத் தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்தக்

கொத்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம்
தீபம் கொண்டு அமரர் தொழப்
பக்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் சித்தர்களும் தொழுது இறைஞ்ச
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்று இருந்து

(திரு அவதார காரணம் )
விண் கொள் அமரர்கள் வேதனை தீர
மண்ணுய்ய மண்ணுலகில் மனிசர் உய்யப்
பாரேறு பெரும் பாரம் தீரத்
துவரிக் கனி வாய் நில மங்கை துயர் தீர
மண்ணின் பாரம் நீக்குவதற்கே வேண்டித் தேவர் இரக்கச்

சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்
என்றும் வார்த்தை எய்துவிக்கத் தந்தை காலில் பெரு விலங்கு தாளவிழ
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்த தாயைக் குடல் விளக்கம் செய்யக்

(திரு அவதாரம் )
கதிராயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்து
மல்லை மூதூர் வட மதுரையில்
மந்தக் களிற்று வீசு தேவர் தம்முடைச்
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிக் கஞ்சன் வலை வைத்த அன்று கார் இருள் எல்லில் பிழைத்து

எடுத்த பேராளன் நந்த கோபன் தன் இன்னுயிர்ச் சிறுவன் எனக்
கூர் வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரனாய்த் தெய்வ நான்கை யசோதைக்குப்
போத்தந்த பேதைக் குழவியாய்ப்
பலதேவர்க்கு ஓர் கீழ்க் கன்றாய்

(ஆயர்கள் நாயகனாய் )
ஆயர் பாடிக்கு ஓர் அணி விளக்காய்க்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தாய்க்
காண்டல் இன்றிக் கொண்டு வளர்க்கக்
குழவியாய்த் தான் வளர்ந்து

(திரு ஆயர்பாடியில் மங்களம் )
எண்னம் சுண்ணம் எதிர் எதிர் தூவிடப்
பாடுவார்களும் பல் பறை கொட்ட
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாட அயலிடத்துப் பேர்ந்து
தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ
பேணிச் சீருடைப் பிள்ளை ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்

(பூதனை வதம்)
தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும்
பெண்மை மிகு வடிவு கொண்டு
வன் பேய்ச்சி தன் மகனாகத் தான் முலை யுண்ணக் கொடுக்க
முலை யுண்பான் போலே முனிந்து உண்டு
வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள் வாங்கி
சூர் உருவின் பேய் அளவு கண்டு

(சகட பங்கம் )
மாணிக்கம் சுட்டி வயிரம் இடை கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டிலில்
உறங்குவான் போல் கிடந்து
நாள்கள் ஓர் நால் ஐந்து திங்கள் அளவிலே
தாளை நிமிர்த்து உருளும் சகடம் உதைத்து

(திரு நாம கரணம் )
ஆய்ப்பாடி ஆயர் பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்
எத்திறமும் சய மரம் கோடித்துக்
கரு வடிவில் செங்கண்ண வண்ணன் தன்னை
வேதம் வல்லார்களைக் கொண்டு
கார் முகிலே என் கண்ணா
செங்கண் நெடுமால் சிரீ தரா என்று அழைத்து
நாவினால் நவிற்று இன்பம் எய்த

(பால லீலைகள் )
மாயக் கூத்தன்
தன் முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப்
பொன் முகக் கிண் கிணி ஆர்ப்பப் புழுதி அளைந்து
கோல நறும் பவளச் செந்துவர் வாயினிடைக் கோமள
வெள்ளி முளைப் போல் சிறு பல் இலகக்
கண கண சிரித்து வந்து முன் வந்து
நின்று முத்தம் தந்து

ஆயர்கள் போர் ஏறாய்ச் செங்கீரை யாடி
எண்ணெய்க் குடத்தை உருட்டி இளம் பிள்ளை கிள்ளி எழுப்பிக்
கண்ணைப் புரட்டி விழித்துக் கழ கண்டு செய்து
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிப்
பானையில் பாலைப் பருகிப் பற்றாதார் எல்லாம் சிரிப்ப

மடம் கொள் மதி முகத்தாரை மால் செய்து
அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுறா
மழலை முற்றா திளம் சொல்லால்
வனிலா அம்புலீ சந்திரா வா என்று அம்புலி விளித்து

(பிள்ளை வாயுள் ஏழு உலகம் )
மண்ணும் மலையும் கடலும் உலகு ஏழும் உண்ணும் திறத்து மகிழ்ந்து
கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர் பைய வாட்டிப் பசும் சிறு மஞ்சளால்
ஐய நா வழித்தாளுக்கு அங்கு ஆந்திட வாயுள் வையம் ஏழும் காண
ஆடி யாடி யசைந்து அசைந்திட்டு அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி

(உரலில் கட்டுப்படுதல் )
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைக்க
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயைத்
தாயர் மனங்கள் தடிப்ப உள்ளம் குளிர அமுது செய்து
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு

ஒளியா வெண்ணெய் உண்டான் என்றும் உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால்
விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுது
பொத்த விரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறித்
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திரு வயிறு ஆர விழுங்கி

சீரல் அசோதை அன்புற்று நோக்கி
அடித்தும் பிடித்தும் அனைவருக்கும் காட்ட
ஊரார்கள் எல்லாம் காணக்
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்டு
பெரு மா யுரலில் பணிப்புண்டு இருந்து
விண்ணெல்லாம் கேட்க அழுது
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கி

(மருத மரங்களை முறித்தது )
மணம் மருவு தோள் ஆய்ச்சி ஆர்க்கப் போய் உரலோடும்
ஒருங்கு ஒத்த இணை மருதம் உன்னிய வந்தவரை
ஊரு கரத்தினொடும் உந்தி
எண் திசையோரும் வணங்க
இணை மருதூடு நடந்து

(மாடு கன்றுகளை மேய்த்தல் )
அழகிய பைம்பொன்னின் கோல் அம்கையில் கொண்டு
கழல்கள் சதங்கை கலந்து எங்கும் ஆர்ப்ப
பழ கன்றினங்கள் மறித்துத் திரிந்து
புகழ்ப் பலதேவன் என்னும் நம்பியோடப் பின் கூடச் சென்று

தன்னே ராயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு
வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடை விட்டு அதன் ஓசை கேட்டு
அசல் அகத்தார் பரிபவம் பேச
இல்லம் புகுந்து அவர் மகளைக் கூவிக்
கையில் வளையைக் கழற்றிக் கொண்டு
கொள்ளையில் நின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்டு
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாடி
கணங்களோடு மின் மேகம் கலந்தால் போல்
வனமாலை மினுங்க நின்று விளையாடி

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதிக்
கோவிந்தன் வருகிற கூட்டம் கண்டு
மழை கொலோ வருகிறது என்று சொல்லி
மங்கைமார் சாலக வாசல் பற்றி நுழையக்
குழல்களும் கீதமுமாகி

முற்றத்தூடு புகுந்து தன் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து
பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகளுடன்
வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடிதயிறும் நறு வெண்ணெயும் இத்தனையும் பெற்று அறியாமே
ஆயிரம் தாழி வெண்ணெய் பாகந்தான் வையாதுண்டு

(வத்ஸாஸூர பகாஸூர வதம் )
கானக வல் விளவின் காய் உதிரக் கருதி கொன்றது கொண்டு எறிந்து
பள்ளத்தில் மேயும் பறவை உருக்கொண்டு
கள்ள அசுரன் வருவானைத் தான் கண்டு
புள்ளிது என்று பொதுக்கோ வாய்க்கீண்டிட்டு

(தேனுகாஸூர வதம் )
வாசியாகி நேசமின்றி வந்து எதிர்த்த தேனுகன்
நாசமாகி நாளுலப்ப நன்மை சேர் பனம் கனிக்கு
வீசி மெல் நிமிர்ந்த தோன் இல்லையாக்கி

(காளிய மர்த்தனம் )
ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிடப் பூத்த நீள் கடம்பேறித்
தடம் படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம் படு நாகத்தை வால் பற்றி ஈர்த்துப்
படும் படு பைந்தலை மேல் ஏழப் பாய்ந்திட்டு
உடம்பை அசைத்து
வெயின் குழலூதி வித்தகனாய் நின்று
நீண் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து

(பிலம்ப வதம் )
பாண்டி வடத்தில் பிளம்பர் தன்னைப்
பண்ணழியப் பலதேவன் வெல்ல

(காட்டுத்தீயை விழுங்கல் )
நின்ற செந்தீ மொண்டு குறை நீள் விசும்பூடு எரியக்
காண்கின்ற வெந்தீ எல்லாம் யானே என்று தான் விழுங்கி உய்யக் கண்டு

(வேணு கானம் செய்தல் )
வல்லி நுடங்கிடை மாதர் வந்து அலர் தூற்றிட
துள்ளி விளையாடித் தோளரோடு
கானம் பாடி உலாவி உலாவிச்
சிறு விரல்கள் தடவிப் பரிமாறிச்
செங்கண் கோடச் செவ்வாய் கொப்பளிப்பக்
குறு வியர்ப்புருவம் கூடலிப்பக்

கோவலர் சிறுமியர் இளங்கொங்கை குதுகலிப்ப
மேனகையோடு திலோத்தமை அரம்பை உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி
நன்னரம்புடைய தும்புருவோடு நாரதனும் தம் தம் வீணை மறுப்பப்
பறைவவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக் கவிழ்ந்து இறங்க

மருண்ட மான் கணங்கள் மேய்கை மறந்து
மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர
இரண்டு பாடும் துலங்காப் புடை பெயரா
எழுது சித்ரங்கள் போல் நிற்க
மரங்கள் நின்று மது தாரைகள் பாய

மலர்கள் வீழ வளர் கொம்புகள் தாழக்
கோவிந்தனுடைய கோமள வாயில்
குழல் முடிஞ்சு களினூடு குமிழ்த்துக் கொழித்து இழிந்த அமுதப் புனல் தன்னை
குழல் முழவம் விளம்பக் கோவலனாய்க் குழலூதி யூதி

(கோபியர் வஸ்திர அபஹரணம் )
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்
கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்த
பங்கய நீர் குடைந்து ஆடுகின்றார்கள்
ஆயர் மட மக்களைப் பின்னே சென்று ஒளித்து இருந்து
அங்கவர் பூந்துயில் வாரிக் கொண்டிட்டு
அச்சேரி இடையார் இரப்ப
மங்கை நல்லீர் வந்து கொண்மின் என்று மரம் ஏறி இருந்து
கன்னியரோடு எங்கள் நம்பி கரியபிரான் விளையாடி

(வேள்வி மங்கையர் வேண்டடிசில் அளித்தது )
பக்த விலோசனத்தில்
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வந்து அடிசில் உண்டு

(கோவர்த்தன கிரி பிடித்தது )
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த
எழில் விழவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது
இமயப் பெரு மலை போல்
அமைத்த சோறு அது எல்லாம்
போயிருந்து அங்கோர் பூத வடிவு கொண்டு
முற்ற வாரி வளைத்து உண்ண

மேலை அமரர் பதி மிக்க வெகுண்டு வரக்
காள நன் மேகவை கல்லொடு கால் பொழிய
வண்ண மால் வரையே குடையாகச்
செந்தாமரைக் கை விரல் ஐந்தினையும்
கப்பாக மடுத்து மணி நெடும் தோள் காம்பாகக் கொடுத்து
கல் எடுத்துக் கல் மாரி காத்து

(கண்ணன் கோபியரோடு விளையாடுதல் )
மங்கல நல் வனமாலை மார்பில் இலங்க
மயில் தழைப் பீலி சூடிப்
பொங்கிள ஆடை அரையில் சாத்திப்
பூங்கொத்துக் காதில் புணரப் பெய்து
கொங்கு நறும் குழலார்களோடு குழைந்து குழலூதிக்

கொல்லாமை செய்து குரவை பிணைந்து சுழலக்
குடங்கள் தலைமீது எடுத்துக் கொண்டாடி
மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்து
தேனும் பாலும் கன்னலும் அமுதமுமாகித் தித்தித்து
முற்றா இளையார் விளையாட்டொடு
காதல் வெள்ளம் விளைவித்து

(கேசி வதம் )
மா வாயின் அங்கம் மதியாது கீறி

(மதுராபுரிக்கு விஜயம் )
வில்லார் விழவில் வடமதுரை விரும்பி
கூனி கூன் நிமிர்ந்தது
நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்னத்
தேறி யவளும் திரு உடம்பில் பூச
ஊறிய கூனை உள்ளொடுக்க அன்று ஏற உருவி

(குவலயா பீட வதம் )
விற் பிடித்து இறுத்து
வளவெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ
வெண் மருப்பு ஓன்று பறித்து

(மல்லர் வதம் )
இரு மலை போல் எதிர்த்த இரு மல்லர்
வலிய முடி இடிய வாங்கி

(கம்ஸ வதம் )
செம் பொன் இலங்கு வலங்கை வாளி
திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள்
உம்பர் இரு சுடர் ஆழி யொடு
கேடயம் ஒண் மலர் பற்றித்
தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான்

கறுத்திட்டு எதிர் நின்ற
கஞ்சன் வயிற்றில் நெருப்பு என்ன நின்று
அரையனை எழப் பாய்ந்து உதைத்துக்
குஞ்சி பிடித்து அடித்து உண்டு
அவன் மாளக் கண்டு

(ஸ்ரீ சாந்தீபனியின் புத்ரனை மீண்டது )
மாதவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையாய் உருவுருவே கொடுத்து

(ஸ்ரீ ருக்மிணி பிராட்டி திருக் கல்யாணம் )
கண்ணாலம் கோடித்துக் கன்னி தன்னைக் கைப்பிடிப்பான்
திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்து
ருக்மிணி நங்கையைத் தேர் ஏற்றிக் கொண்டு

விருப்புற்று அங்கே ஏக விரைந்து எதிர் வந்து
செருக்குற்றான் வீரம் சிதையத் தலையைச் சிரைத்து
அன்று அங்கு அமர் வென்று நங்கை அணி நெடும் தோள் புணர்ந்து
ரடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்து அருளித்
திருவுக்கும் திருவாகிய செல்வனாய் பெண் அமுது உண்டு

(ஸ்ரீ நப்பின்னை திருக் கல்யாணம் )

துப்புடை ஆயர்கள் தம் சொல் வழுவாது ஒரு கால்
தூய கருங்குழல் நல் தோகை மயில் அனைய
நப்பின்னை தன் திறமாக நல் விடை ஏழு அவிய
வீயப் பொருது வியர்த்து நின்று

(நரகாஸூர வதம் )
மன்னு நரகன் தன்னை சூழ் போகி வளைத்து எறிந்து
கன்னி மகளிர் தம்மைக் கவர்ந்து

(துவாரகை அமைத்தல் )
பதினாறாம் ஆயிரவர பணி செய்யத்
துவரை என்னும் அதில் நாயகராய் வீற்று இருந்து

(பாரிஜாத அபஹரணம் )
என்னதன் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள்
தன்னாதன் காணவே தண் பூ மரத்தினை
வல் நாதப் புள்ளால் வலியப் பறித்துக்
கற்பக காவு கருதிய காதலிக்கு
இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில்
நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள் உய்த்து

(வாணாஸூர வதம் )
மாவலி தன்னுடைய மகன் வாணன் மகன் இருந்த
காவலைக் கட்டழித்துப் பிரிவின்றி
வாணனைக் காத்து என்று
அன்று படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் பெற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்

பொரு சிறைப் புள்ளைக் கடாவிப்
பொரு கடலை அரண் கடந்து புக்கு
மாயப் பொரு படை வாணனை
ஆயிரம் தோளும் பொழி குருதியாய ஆழி சுழற்றி

(பவ்ண்ட்ரக வாஸூ தேவன் பங்கம் )
புகரார் உருவாகி முனிந்தவனைப்
புகழ் வீட முனிந்து உயிருண்டு
அசுரன் நகராயின பாழ் பட நாமம் எறிந்து
காய் சின காசி மன்னன்
நாசமுற்று வீழ நாள் கவர்ந்து

(சிஸூபால வதம் )
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி
தாட்பால் அடைய பெரும் துன்பம் வேர் அற நீக்கித்
தன் தாளிணைக் கீழ் சேர்த்துப்

தந்தவக்கரனை முடித்தல்
(பொங்கரவ வக்கரணைக் கொன்று )

(திரௌபதி சரணாகதி )
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன்
அணியிழையைச் சென்று
எம் தமக்கு உரிமை செய் -எனத் தரியாது
எம்பெருமான் அருள் என்னப்

(கண்ணன் விஸ்வரூபம் காட்டியது )
பங்கயக் கண்ணன் ஒன்றே உரைப்பான்
ஒரு சொல்லே சொல்லுவான்
துன்னு முடியன் துரியோதனன் பக்கல் சென்று
கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான்
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டு

அரவு நீள் கொடியோன் அவையுள்
ஆசனத்தை அஞ்சிடாதே இட
அதற்குப் பெரிய மா மேனி அண்டம் ஊடுறவப்
பெரும் திசை அடங்கிட நிமிர்ந்து
ஊர் ஓன்று வேண்டிப் பெறாத உரோடத்தால்
மண் மிசைப் பெரும் பாரம் நீங்க ஓர் பாரத மாப் பெரும் போரில்

(தேரோட்டியாய்த் திகழ்ந்தது )
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு
பார்த்தன் தன் தேர் முன் நின்று
தீர்த்தான் உலகு அளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தி
அவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிய

(கீதோபதேசம் )
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய
நெறி எல்லாம் எடுத்து உரைத்து
நீர்மையில் நூற்றுவர் வீய
ஐவருக்கு அருள் செய்து நின்ற

(ஜயத்திரதனை முடித்தது )
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்பச்
சயத்திரதன் தலையைப் பாழில் உருளப் படை பொருது

(பரீக்ஷித்தை உயிர் மீட்டது )
மருமகன் தன் சந்ததியை உயிர் மீட்டு மைத்துனன் மார்
உருமகத்தே வீழாமே குரு முகமாய்க் காத்து
எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்து
சந்தம் அல் குழலாளை அலக் கண் நூற்றுவர் தம்
பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
மைத்துனன் மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி

( வைதிகன் மக்களை மீட்டது )
வேத வாய் மொழி அந்தணன் ஒருவன்
எந்தை நின் சரண் என்னுடை மனைவி
காதல் மக்களைப் பயத்தலும் காணாள்
கடிய தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப
இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழுதில் எல்லா உலகும் கழியப்
படர் புகழ்ப் பார்த்திபனும் வைதிகனும் உடன் ஏற திண் தேர் கடவிச்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்
வைதிகம் பிள்ளைகளை உடலோடும் கொண்டு கொடுத்து

(ஆதி யஞ்சோதி யுருச் சேர்தல்)
துயரில் சுடர் ஒளி தன்னுடைச் சோதி
நின்ற வண்ணம் நிற்கவே
துயரில் மலியும் மனிதப் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து துயரங்கள் செய்து
தன் தெய்வ நிலை யுலகில் புகை உய்த்துக்
கதையின் திரு மொழியாய் நின்று
நல் குரவும் செல்வமும் நரகமும் ஸ்வர்க்கமுமாய்ப்
பல்வகையும் பரந்து வைகுந்தம் புகுதலும்
எண்மர் பதினொருவர் ஈர் அறுவர் ஓர் இருவர்
வண்ண மலர் ஏந்தி வைகலும் நண்ணி
ஒரு மலையால் பரவி ஓவாது எப்போதும்
மால் வண்ணன் தாள் தாமரை அடைவோம் என்று
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்து
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி
ரதமில் தண்ணுமை எக்கம் மத்தளி
யாழ் குழல் முழவமொடு இசை திசை கெழுமிக்
கீதங்கள் பாடி மயங்கித் திருவடி தொழ
பாடு நல் வேதவொலி பரவைத் திரை போல் முழங்க
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச
உவந்த உள்ளத்தனாய்
அண்டமாய் எண் திசைக்கும் ஆதியாய்
நீதியான பண்டமாம் பரம சோதியாய்
ஆடரவு அமளியில் அறி துயில் அமர
இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடம் கடல் பள்ளிப்பெருமான் தன்னுடைய பூதங்களேயாய்க்
கிடந்தும் எழுந்தும் இருந்தும் கீதங்கள் பல பல பாடி
நடந்தும் பரந்தும் ஒளித்தும் நாடகம் செய்கின்றனவே
தோட்டலர் பைந்தார் சுடர் முடியானை
தொழுது நல் மொழியால் தொகுத்து உரைத்த
பாட்டிவை பாடப் பத்திமை பெருகிச் சித்தமும் திருவொடு மிகுமே

பொலிக பொலிக பொலிக

—————

ஸ்ரீ பாரதியின் கண்ணனின் அனுபவம்

ஒரே சரணம் கண்ணன் திருவடி என்கிறார் பாரதி. ஸ்தித ப்ரக்ஞ நிலையைப் பற்றி உரைத்த கண்ணன் அல்லால் ஏது புகல்?

கண்ணன் திருவடி
எண்ணுக மனமே
திண்ணம் அழியா
வண்ணம் தருமே.

நிதி பெருமை எல்லாம் அதை நன்கு அனைவருடைய நல் எழுச்சி, நலமிக்க வாழ்ச்சிக்காகப் பயன்படுத்தும் போது அதனால் வருவது புகழ். கண்ணன் திருவடிகளைச் சரணடைந்தால், கண்ணன் என்னும் பெரும் தத்துவத்தை நன்கு புரிந்துகொண்டால் நிதி பெருமை புகழ் என்று அனைத்தும் அவன் தானே தருகின்றான். அவை தன்னடையே வந்து சேருகின்றன என்கிறார் பாரதி.

தருமே நிதியும்
பெருமை புகழும்
கருமா மேனிப்
பெருமா னிங்கே.

‘நிச்ரேயஸம்~அப்யுதயம்’, ’ஆன்மிக நன்மை, அதற்குத் துணையாக புற வாழ்வின் செழிப்பு’ என்று இலட்சியப் பொருள்வரைவு செய்தன.

இங்கே அமரர்
சங்கம் தோன்றும்
மங்கும் தீமை
பொங்கும் நலமே.

புலவர்கள் என்போர் நலம் என்பதை மட்டுமே விரும்பிப் பாடும் சொல்லேர் உழவர்கள் என்கிறார் பாரதி.

நிலமாமகளின் தலைவனாகக் கண்ணனைப் பாடுங்கள். திருமகள், நிலமகள், ஆயர்குலமகள் என்று அறிவின் ஆக்கம், நிலத்தின் ஆக்கம், உயிர்க்குல ஆக்கம் என்று முவ்வித ஆக்கங்களுடன் திகழ்வதுதான் பேருயிர்த் தத்துவம். இதில் உங்கள் போதாமையால் குறைவுபடப் பாடி அதனால் குறைகள் நேராவண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்!

நலமே நாடில்
புலவீர் பாடீர்
நிலமா மகளின்
தலைவன் புகழே.

ண்ணன் திருவடி எண்ணி நீங்கள் தேவ வலிமைக்கு உங்களை ஆட்படுத்திக் கொள்ளும்போது ஒன்று நடக்கும். அது என்னவெனில் தீமைக் கூட்டங்கள் ஆகிய அசுரப் பகை ஒன்று அல்ல இரண்டு அல்ல தொகை தொகையாய் கண்ணன் தீர்க்கத் திரும்பிவராமல் தொலைந்து போகும். அதற்கு நீங்கள் தகைசேர் அமரராக ஆகவேண்டும். அந்தச் சிறப்பை நன்கு கவனித்துப் பாடுங்கள் –

புகழ்வீர் கண்ணன்
தகைசேர் அமரர்
தொகையோடு அசுரப்
பகைதீர்ப்பதையே.

ஒன்று நிச்சயம். கண்ணன் என்பவன் கலிதீர்ப்பவன். இருள் கடி ஞாயிறு. அக இருள் போக்கும் ஞான பாநு. அவன் கலி தீர்க்கும் விளைவாக அமரர்களின் ஆர்ப்பரிப்பு கேட்கும்.

நன்மைக்கான ஊக்கங்கள் பொங்குவதையே அமரர் ஆர்ப்பரிப்பு என்கிறார் பாரதி.

தீர்ப்பான் இருளைப்
பேர்ப்பான் கலியை
ஆர்ப்பார் அமரர்
பார்ப்பார் தவமே.

கண்ணன் – என் விளையாட்டுப் பிள்ளை 

கேதாரம் – கண்டஜாதி – ஏகதாளம்
ரசங்கள்; அற்புதம் , சிருங்காரம்
தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. … (தீராத)1. தின்னப் பழங்கொண்டு தருவான்; – பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால் – அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். … (தீராத)
 2. தேனொத்த பண்டங்கள் கொண்டு – என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான் – சற்று
மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான்; … (தீராத)
3. அழகுள்ள மலர்கொண்டு வந்தே – என்னை
அழஅழச் செய்துபின், ”கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்” – என்பான் – என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். … (தீராத)4. பின்னலைப் பின்னின் றிழுப்பான்; – தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
வன்னப் புதுச்சேலை தனிலே – புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். … (தீராத)5, புல்லாங் குழல்கொண்டு வருவான்; – அமுது
பொங்கித் ததும்புநற்

​கீதம் படிப்பான்; 

கள்ளால் மயங்குவது போலே – அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். … (தீராத)

6. அங்காந் திருக்கும்வாய் தனிலே – கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்த துண்டோ ? – கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? … (தீராத)

7. விளையாட வாவென் றழைப்பான்; – வீட்டில்
வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;
இளையாரொ டாடிக் குதிப்பான்; – எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். … (தீராத)

8. அம்மைக்கு நல்லவன் கண்டீர்! – மூளி
அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே,
எம்மைத் துயர்செய்யும் பெரியோர் – வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். … (தீராத)

9. கோளுக்கு மிகவும் சமர்த்தன்; – பொய்ம்மை
குத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்;
ஆளுக் கிசைந்தபடி பேசித் – தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். … (தீராத)
——-

கண்ணன் – என் காதலன் – 2

உறக்கமும் விழிப்பும்
நாதநாமக்கிரியை – ஆதி தாளம்
ரசங்கள்: பீபத்ஸம், சிருங்காரம்.

நோம் மிகுந்ததின்னும் நித்திரையின்றி – உங்கள்
நினைப்புத் தெரியவில்லை, கூத்தடிக்கிறீர்;
சோரன் உறங்கிவிழும் நள்ளிரவிலே – என்ன
தூளி படுகுதடி, இவ்விடத்திலே.
ஊரை யெழுப்பிவிட நிச்சயங் கொண்டீர்! – அன்னை
ஒருத்தியுண் டென்பதையும் மறந்து விட்டீர்;
சாரம் மிகுந்த தென்று வார்த்தை சொல்கிறீர், – மிகச்
சலிப்புத் தருகுதடி சகிப் பெண்களே! . … 1

நானும் பல தினங்கள் பொறுத்திருந்தேன் – இது
நாளுக்கு நாளதிக மாகி விட்டதே;
கூன னொருவன் வந்திந் நாணி பின்னலைக்
கொண்டை மலர்சிதற நின்றிழுத்ததும்,
ஆனைமதம் பிடித்திவ் வஞ்சி யம்மையின்;
அருகினி லோட இவள் மூர்ச்சை யுற்றதும்,
பானையில் வெண்ணெய் முற்றும் தின்றுவிட்டதால்
பாங்கி யுரோகிணிக்கு நோவு கண்டதும், … 2

பத்தினி யாளையொரு பண்ணை வெளியில்
பத்துச் சிறுவர் வந்து முத்தமிட்டதும்,
நத்தி மகளினுக்கோர் சோதிடன் வந்து
நாற்ப தரசர் தம்மை வாக்களித்ததும்,
கொத்துக் கனல் விழியக் கோவினிப் பெண்ணைக்
கொங்கத்து மூளிகண்டு கொக்கரித்தும்,
வித்தைப் பெயருடைய வீணியவளும்
மேற்குத் திசை மொழிகள் கற்று வந்ததும், … 3

எத்தனை பொய்களடி! என்ன கதைகள்!
என்னை உறக்கமின்றி இன்னல் செய்கிறீர்!
சத்தமிடுங் குழல்கள் வீணைக ளெல்லாம்
தாளங்க ளோடுகட்டி மூடிவைத் தங்கே,
மெத்த வெளிச்சமின்றி ஒற்றை விளக்கை
மேற்குச் சுவரருகில் வைத்ததன் பின்னர்
நித்திரை கொள்ளஎனைத் தனியில் விட்டே.
நீங்களெல் லோருமுங்கள் வீடு செல்வீர். … 4

(பாங்கியர் போன பின்பு தனியிருந்து சொல்லுதல்)

கண்கள் உறங்கவொரு காரண முண்டோ ,
கண்ணனை இன்றிரவு காண்பதன் முன்னே?
பெண்களெல் லோருமவர் வீடு சென்றிட்டார்
பிரிய மிகுந்த கண்ணன் காத்திருக்கின்றான்;
வெண்கல வாணிகரின் வீதி முனையில்
வேலிப் புறத்திலெனைக் காணமுடி யென்றான்;
கண்கள் உறங்கலெனுங் காரிய முண்டோ ,
கண்ணனைக் கையிரண்டுங் கட்ட லின்றியே? … 5 –

காக்கைச் சிறகினிலே
நந்தலாலா — நின்றன்
கரியநிறந் தோன்றுதையே
நந்தலாலா;1பார்க்கும் மரங்களெல்லாம்
நந்தலாலா — நின்றன்
பச்சைநிறந் தோன்றுதையே
நந்தலாலா;

​KE​

ட்கு மொலியிலெல்லாம்
நந்தலாலா — நின்றன்
கீத மிசைக்குதடா
நந்தலாலா;3

தீக்குள் விரலைவைத்தால்
நந்தலாலா — நின்னைத்
தீண்டுமின்பந் தோன்றுதடா
நந்தலாலா.

பாரதியின் கண்ணன்பாட்டை பொறுத்தவரை அதற்கு இரு முகங்கள் உண்டு. உணர்ச்சிகரமான காதல்பாடல்கள். அதேசமயம் பக்தி மற்றும் வேதாந்த பாடல்களும் கூட. அந்த இருமுகங்களும் பிரித்துப்பார்க்கக்கூடியவை அல்ல. ஒன்றை வைத்து ஒன்றை புரிந்துகொள்ளவேண்டியவை
——————————————————————————–

ஜீவாத்மாவாகிய உயிர் இறுதியில் பரமாத்மாவான இறைவனை அடைய முழு சரணாகதியே சிறந்த வழி என்று நம்பிய பாரதி,

கரணமும் தனுவும் நினக்கெனத் தந்தேன்-
கரணம் – மனம்,  தனு – உடல்)என்று முழுவதுமாகத் தம்மை அர்ப்பணிக்கிறார்.

தெய்வத்தின் உதவியின்றி மனித முயற்சியால் மட்டுமே எந்தச் செயலையும் செய்ய முடியாது என்பது பாரதியின் எண்ணம். ஆகவே
நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி
நலத்தை நமக்கிழைப் பாள் அல்லது நீங்கும் . . . . .(அல்லது – துன்பம்) என்று குறிப்பிடுகிறார்.

மகாபாரதத்தில் திரௌபதி கண்ணனிடம்,
வையகம் காத்திடு வாய் கண்ணா!
மணிவண்ணா என்றன் மனச்சுடரே!
ஐய, நின் பதமலரே – சரண்
ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி(பாஞ்.சப.299)
என்று முழு சரணாகதி அடைந்த பிறகே அவளுக்குக் கண்ணன் அருள் கிடைத்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

பூமணித் தாளினையே கண்ணிலொற்றிப்
புண்ணிய மெய்திடுவோம்(ஆறுதுணை – 4)
‘புண்ணியம்’ என்று அவர் நினைப்பது கல்வியை எனக் கொள்ளலாம்.

கவிதை இயற்றக் கல்வியறிவு தேவை, அந்த அறிவைப் பெற விரும்பும் பாரதி, ஒரு கணப் (விநாடி) பொழுதும் கலைமகளைப் பிரிய விரும்பவில்லை.
கலைமகளிடம் எங்ஙனம் சென்றிருந்தீர் – என
தின்னுயரே! யென்றன் இசையமுதே--என்று கேட்ட பாரதி,

பாதங்கள் போற்று கின்றேன் – என்றன்
பாவ மெலாங் கெட்டு ஞானகங்கை
நாதமொடு எப்பொழுதும் – என்றன்
நாவினி லேபொழிந் திடவேண்டும்-என்று வேண்டுகிறார். ஞானம் வந்து விட்டால் அகந்தை கெடும். எனவே ஞானம் வேண்டுகிறார்.

மந்திரம் சொல்லி புத்தகங்களை வரிசையாக அடுக்கி வைத்து வழிபடுவது கலைமகள் பூசை அல்ல என்று கண்டிக்கிற பாரதி,
அவளை முறையாக வழிபடுவது எங்ஙனம் என்று தெளிவுபடுத்துகிறார்.

அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் மக்கள் மனத்தில் அறிவுத் தீயை ஏற்றுகிறார். எனவே

மந்திரத்தை முணுமுணுத்து ஏட்டை
வரிசையாக அடுக்கி அதன்மேல்
சந்தனத்தை மலரை யிடுவோர்
சாத்தி ரமிவள் பூசனை யன்றாம்--என்று கலைமகளை வழிபடும் விதத்தைக் கண்டிக்கிறார்.
பின் எது தான் முறையான பூசை? இதோ அவரது விளக்கம்:

வீடு தோறும் கலையின் விளக்கம்
வீதி தோறும் இரண்டொரு பள்ளி
நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்
நகர்கள் எங்கும் பலபல பள்ளி
தேடு கல்வியி லாததொரு ஊரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல்(விளக்கம் – இருப்பிடம், மடுத்தல் – மூட்டுதல், அழித்தல்)

ஏடுகளை அடுக்கி வைத்து இன்னமுது படையலிட்டால் அறிவு வளராது, அறியாமை நீங்காது.
அறிவு வளர வீடுகளிலும் வீதிகளிலும் கல்வி முழக்கம் செழிக்க வேண்டும்.
கல்வியில்லாத ஊரைத் தீக்கிரையாக்க வேண்டுமென்று சினந்து கூறுகிறார் பாரதி.
ஊரையும் நாட்டையும் அழிக்கச் சொல்வது அவர் நோக்கமல்ல.

—————-

ஸ்ரீ கிருஷ்ண மங்கள ஸ்லோகம்–

மங்களம் யாதவேந்த்ராய மஹனீய குணாப்தயே
வசுதேவ தனூஜாய வாஸுதேவாய மங்களம்
கிரீடகுண்டல ப்ராஜ தனூ கைர்யன் முகஸ்ரியே
ஸ்ரீ வத்ஸ கௌஸ்துபோத்பாஸி வக்ஷஸே சாஸ்து மங்களம்

யாதவ குலத் தோன்றலே, கிருஷ்ணா உமக்கு நமஸ்காரம்.
நல்லறிவு வழங்கும் மகானே நமஸ்காரம்.
வசுதேவரின் மகனாக அவதரித்த வாசுதேவனே நமஸ்காரம்.
கிரீட, குண்டலங்களின் பேரொளியால் துலங்கும் பேரழகனே நமஸ்காரம்.
ஸ்ரீவத்ஸம், கௌஸ்துப மணி போன்ற மதிப்பு வாய்ந்த ஆபரணங்களை அணிந்திருக்கும் கிருஷ்ணா, நமஸ்காரம்.

———-

நீலாம்புத நிகாஸாய வித்யுத் ஸத்ரு ச வாஸஸே
தேவகீ வஸுதேவாப்யாம் ஸம்ஸ்துதாயாஸ்து மங்களம்
தாப்யாம் ஸம்ப்ரார்த்தி தாயாத ப்ராக்ருதார்பகரூபிணே
யஸோதாய க்ருஹம் பித்ரா ப்ரார்பிதாயாஸ்து மங்களம்

நீருண்ட மேகம் போன்ற நிறத்தையுடையவரே,
மின்னல் போன்று ஒளிவீசும் ஆடை தரித்தவரே,
தேவகி-வசுதேவரின் அருந்தவத்தால் அவதரித்து, அவர்களால் போற்றப்பட்ட பரந்தாமா, நமஸ்காரம்.
பிறகு அவர்களிடமிருந்து பிரிந்து, தந்தையார் வசுதேவரால் ஒப்படைக்கப்பட்டு,
யசோதையிடம் பாலகனாக வளர்ந்து வந்த பரம்பொருளே… கிருஷ்ணா, நமஸ்காரம்.

————–

பூதனாஸுபய: பானபேஸலாயா ஸுராரிணே
சகடாஸுர வித்வம்ஸி பாதபத்மாய மங்களம்
யசோதா லோகிதே ஸ்வாஸ்யே விஸ்வரூப ப்ரதர்ஸினே
மாயா மானுஷரூபாய மாதவாயாஸ்து மங்களம்

வஞ்சகமாக வந்த பூதனையின் பாலையும் அவள் உயிரையும் சேர்த்துக் குடித்தவரே,
யாவரையும் மயக்கும் பேரெழில் வாய்ந்தவரே கிருஷ்ணா, நமஸ்காரம்.
அசுரத் தனங்களை எதிர்ப்பவரே, சகடாசுரனை வதைத்தவரே, கிருஷ்ணா,
தங்கள் பாதத் தாமரைகளுக்கு நமஸ்காரம்.
சிறு வாய் திறந்து அதில் அண்ட சராசரங்களையும் தன் விஸ்வரூபத்தையும் காட்டி
யசோதையை பிரமிக்கவைத்தவரே, கிருஷ்ணா நமஸ்காரம்.
மனித உருக்கொண்டு மங்களம் அருளிய மாதவா… நமஸ்காரம்.

—————-

த்ருணாவர்த்த தனூஜாஸுஹாரிணே ஸுபகாரிணே
வத்ஸா ஸுரப்ரபேத்ரே ச வத்ஸபாலாய மங்களம்
தாமோதராய வீராய யமளார்ஜுன பாதினே
தாத்ராஹ்ருதானாம் வத்ஸானாம் ரூபதர்த்ரேஸ்து மங்களம்

த்ருணாவர்த்தன் என்ற அசுரனைக் கொன்றவரே,
அனைத்து பக்தர்களுக்கும் மங்களங்களை அருள்பவரே கிருஷ்ணா, நமஸ்காரம்.
இளம் கன்றுகளைக் காப்பதற்காக, அந்தக் கன்றுகளோடு தானும் ஒரு கன்றாக மாறிச் சென்று,
வத்ஸாஸுரனை வதைத்தவரே, மாயவா, நமஸ்காரம்.
தாமோதரனே, பரிசுத்த வீரனே, யமளார்ஜ்ஜுனம் எனும் மரத்தை (அசுரனை) வீழ்த்தியவரே… நமஸ்காரம்.

————

பிரம்மஸ்துதாய க்ருஷ்ணாய காளியபணந்ருத்யதே
தாவாக்னி ரக்ஷிதாஸேஷ கோ கோபாலாய மங்களம்
கோவர்த்தனேச லோத்தர்த்ரே கோபி கிரீடாபி லாஷிணே
அஞ்சல் யாஹ்ருத வஸ்த்ராணாம் ஸுப்ரீதாயாஸ்து மங்களம்

நான்முகனால் துதிக்கப்பட்டவரே, கிருஷ்ணா, காளியன் எனும் பாம்பின் தலைமீது நர்த்தனமாடியவரே, நமஸ்காரம்.
காட்டுத் தீயினின்று எல்லாப் பசுக்களையும் யாதவர்களையும் காப்பாற்றியவரே, கோபாலா, நமஸ்காரம்.
கோவர்த்தன கிரியை எளிதாகத் தூக்கி நின்றவரே, கோபியருடன் விளையாடி மகிழ்வித்தவரே,
அவர்களுக்கு இரு கரங்களாலும் ஆடைகளை அளித்து அவர்கள் பக்தியைப் பாராட்டியவரே, கிருஷ்ணா… நமஸ்காரம்.

————–

ஸுதர்ஸனாக்ய கந்தர்வ ஸாப மோக்ஷணகாரிணே
சங்கசூட சிரோஹர்த்ரே வ்ருஷபக்னாய மங்களம்
காந்தினீஸுத ஸந்த்ருஷ்ட திவ்யரூபாய ஸௌரிணே
த்ரிவக்ரயா ப்ரார்த்திதாய ஸுந்தராங்காய மங்களம்

சுதர்சனன் என்ற கந்தர்வனின் சாபத்தைப் போக்கியவரே,
சங்கசூடனின் தலையைக் கொய்து எறிந்து வீரத்தை நிரூபித்தவரே, கிருஷ்ணா, நமஸ்காரம்.
காளை வடிவமெடுத்து வந்த அசுரனை வதைத்தவரே, கிருஷ்ணா, நமஸ்காரம்.
காந்தினியின் மகனாகிய அக்ரூரரால் போற்றித் துதிக்கப்பட்ட சுந்தர சொரூபரே,
அழகிய நீண்ட கேசத்தைக் கொண்டவரே, த்ரிவக்ரையினால் பிரார்த்திக்கப்பட்டவரே, கிருஷ்ணா… நமஸ்காரம்.

————

கந்தமால்யாம் பராட்யாய கஜராஜ விமர்த்தினே
சாணூர முஷ்டிகப்ராண ஹாரிணே சாஸ்து மங்களம்
கம்ஸஹந்த்ரே ஜராஸந்த பலமர்த்தன காரிணே
மதுராபுர வாஸாய மஹாதீராய மங்களம்

சந்தனம், மாலை, பட்டுப் பீதாம்பரம் ஆகியவற்றைத் தரித்து அவற்றுக்குப் பெருமை சேர்த்தவரே,
எதிர்த்த குவலாபீடம் எனும் கஜராஜனைக் கொன்றவரே,
சாணூரன், முஷ்டிகன் முதலான துஷ்டர்களின் ஆயுளை முடித்தவரே, கிருஷ்ணா, நமஸ்காரம்.
கம்சனை வதைத்தவரே, ஜராசந்தனின் படையை அழித்தவரே,
மதுரா நகரில் வசித்த புண்ணிய புருஷரே, கிருஷ்ணா…நமஸ்காரம்.

————-

முசுகுந்த மஹானந்த தாயினே பரமாத்மனே
ருக்மிணி பரிணேத்ரே ச ஸபலாஸ்து மங்களம்
துவாரகாபுர வாஸாய ஹாரநூபுர தாரிணே
சத்யபாமா ஸமேதாய நரகக்னாய மங்களம்

முசுகுந்த சக்ரவர்த்திக்கு பெரு மகிழ்ச்சி அளித்தவரே, பரமாத்மா, ருக்மிணியைத் துணைவியாக அடைந்தவரே,
பலராமனின் பாசத்துக்கு உரியவரே, கிருஷ்ணா, நமஸ்காரம்.
துவாரகா பட்டணத்தில் வசிப்பவரே, ஒளிவீசும் மாலையும் இன்னிசை எழுப்பும் பாத கிண்கிணியும் அணிந்தவரே,
சத்யபாமாவுடன் கூடியவரே, நரகாசுரனை வதைத்தவரே, கிருஷ்ணா… நமஸ்காரம்.

————–

பாணாசுரகரச் சேத்ரே பூதநாதஸ்துதாயா ச
தர்மாஹுதாய யாகாரத்தம் சர்மதாயாஸ்து மங்களம்
காரயித்ரே ஜராசந்தவதம் பீமேன ராஜ பி:
முக்தைஸ் ஸ்துதாய தத்புத்ர ராஜ்ய தாயாஸ்து மங்களம்

பாணாசுரனின் கைகளை வெட்டி அவனை வீழ்த்தியவரே, பரமேஸ்வரனால் துதிக்கப்பட்டவரே,
யாகத்தில் கலந்து கொள்வதற்காக தர்மரால் அழைக்கப்பட்டவரே,
மங்களங்களைத் தரும் மாதவா, நமஸ்காரம்.
ஜராசந்தனை வதைக்க பீமனுக்கு அருளியவரே,
ஜராசந்தனின் சிறையிலிருந்து விடுதலை பெற்ற மன்னர்களால் வணங்கப்பட்டவரே,
அவனுடைய மகனுக்கே ராஜ்யத்தைத் தந்தவரே, கிருஷ்ணா… நமஸ்காரம்.

—————

சைத்யதேஜோ பஹர்த்ரேச பாண்டவப்ரிய காரிணே
குசேலாய மஹாபாக்ய தாயினே தேஸ்து மங்களம்
தேவ்யஷ்டக ஸமேதாயச புத்ர பௌத்ரயுதாயச:
ஷோடஸ ஸ்த்ரீ ஸஹஸ்ரைஸ்து ஸம்யுதாயாஸ்து மங்களம்

சிசுபாலனுடைய பராக்கிரமத்தைப் பறித்தவரே, பாண்டவர்களின் விருப்பங்களை நிறைவேற்றியவரே,
குசேலருக்கு மகா பாக்யங்களையும் அருளியவரே, கிருஷ்ணா, நமஸ்காரம்.
அஷ்டமகிஷிகளுடன் இருப்பவரே, பிள்ளை- பேரன் என்று சந்ததிகளைப் பெற்றவரே,
பதினாயிரம் மனைவியருடன் கூடியிருப்பவரே, கிருஷ்ணா…நமஸ்காரம்.

—————-

ஸ்ஸிஷ்டரக்ஷணபர: கருணாம்புராசி:
துஷ்டாஸுராம் ஸந்ருபதீன் விந்க்ருஹ்ய யஸுரான்
கஷ்டாம் தசாம் அபநுதந்தரஸா ப்ருத்வ்யா:
புஷ்டிம் ததாது ஸஹரி: குலதைவதம் ந:

எந்த பகவான் தன்னைச் சரணடைந்தவர்களைக் காக்கிறாரோ, கருணைக் கடல் எவரோ,
துஷ்டர்களை அழித்து பூமியைப் புனிதப்படுத்துபவர் எவரோ அந்த ஹரி என்ற கிருஷ்ணன்
எங்களுக்கு ஆற்றலைக் கொடுத்து, குலம் விளங்கச் செய்யும் குலதெய்வமாக அருளட்டும்!

————————————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவடியின் மஹிமை காட்டும் -ஸ்ரீ கம்பனின் கவி அமுதம் —

February 21, 2023

வையம் என்னை இகழவும் மாசு எனக்கு
எய்தவும் இஃது இயம்புவது யாது எனில்
பொய்யில் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வமாக் கவி மாட்சி தெரிவிக்கவே

——–

சூரியனை விழுங்கியவன்
வாயு புத்திரன், அஞ்சனை மைந்தன் என்று போற்றப் படுகின்ற அனுமன் தன் தாயிடம் இந்தக்
காட்டில் தான் எந்தப் பழத்தைச் சாப்பிட வேண்டும் என்று கேட்க,
அதற்கு அஞ்சனை இந்தக் காட்டில் உள்ள சிவந்த நிறப் பழங்களை நீ உணவாகச் சாப்பிடு என்று கூறினாள் .
இதனை
“கை அஞ்சு ஆயுதம் உடைய அக் கடவுளைக் கண்டும் மெய் அஞ்சாதவன்”  என்ற பாடல் வரிகளில் அறியலாம் .

அனுமன் பிறந்த பொழுதே இளஞ்சூரியனைக் கனிந்த பழம் என்று கருதி சிறிதும் அச்சம் கொள்ளாமல்,
அதனைப் பிடிக்கச் சென்றான் என்னும் போது அனுமானின் வீரத்தை அறிய முடிகிறது
கம்பர் சிறு வயதில் இருந்தே அனுமானை வீரம் கொண்ட வலிமையானவனாகவே படைத்துக் காட்டுகிறார் –

பல வரங்களைப் பெற்றவன்
பிரம்ம தேவன், தேவர்களிடம் அஞ்சனையின் மகன் அனுமனுக்கு, பற்பல வல்லமைகளையும் ,
அரிய வரங்களையும், அளிப்பதோடு,
அனுமன் நிறைத்த உருவத்தை எடுத்து நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்லும் திறமை ஏற்படவும்,
போரில் தோல்வி என்பதே கிடையாது என்றும்
இவனுடைய பாதையில் யாரும் குறுக்கிட்டு இவனைத் தடுக்க முடியாது என்றும்,
தன்னுடைய பிரம்ம தண்டத்தால் இவனுக்கு மரணம் ஏற்படாது என்றும்,
சிரஞ்சீவியாக வாழ்வான் என்று அருளி வரம் அளித்தான்.

இதனை
“ஒப்பு இறையும் பெறலரிய ஒருவன்”
“எவரினும் அதிகம் உயர்ந்தான்”
“ஊழி கடந்தீர்”
ஏழும் வீவுற்ற ஞான்றும் இன்று என் இருத்தி”
என்ற பாடல் வரியில் கம்பர் எடுத்துக் காட்டுகிறார்.

மேலும் அனுமனுக்கு தண்ணீர் தீ, ஆயுதம்,
அஸ்திரம், வியாதி போன்ற வற்றாலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதையும் கம்பர்,
வெப்புறு செந்தீ நீர் விளியாளும் விளியாதீர்
செப்புறு தெய்வப் பல் படையாலும் சிதையாதீர்”-என்ற பாடல் வரிகளின் மூலம் வெளிப் படுத்து கிறார்.

எந்த சூழலிலும் , யாராலும், அனுமனுக்கு அழிவில்லை என்பதை தனது படைப்புத் திறத்தின் மூலம் எடுத்துக் காட்டுகிறார்.

கல்வி கற்றல்
பல அரிய வரங்களைப் பெற்ற அனுமன், சூரிய பகவானிடம் இருந்து ரிக்வேதம், யஜூர் வேதம், சாமவேதம், அதர்வண வேதம் என்ற நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்கள், அறுபத்தி நான்கு கலைகள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தான்.

ஸூர்யனின் எதிரில் நின்று கொண்டே வேத சாஸ்திரங்களையும் அதன் ரஹஸ்யங்களையும்
உப ஸாஸ்த்ரங்களையும் அனுமன் கற்றுக் கொண்டான் இதனை
உலகு எங்கும் பேர் இருள் நீக்கும் பகலோன் முன் தேர் முன் நடந்தே
ஆரிய நூலும் தெரிவுற்றீர்  -என்ற வரிகளில் எடுத்து உரைக்கிறார் .

மதி நுட்பம் கொண்டவன் –
சீதையைத் தேடி இராமனும் இலக்குமனனும் சென்ற போது அனுமன் எதிர்படுகிறான்
அவர்களை பார்த்த கண நேரத்திலே அவர்களை நன்றாக எடை போடுகிறான்
அனுமன் அவர்களை பற்றி

தருமமும் தகவும் இவர் தனம் எனும் தகையர் இவர்
கருமமும் பிறிது ஓர் பொருள் சுருதி அன்று அது கருதின்
அரு மருந்து அனையது இடை அழிவு வந்துளது அதனை
இரு மருங்கினும் நெடிது துருவுகின்றனர் இவர்கள்--என தனது மதி நுட்பத்தால் உணர்ந்து விடுகிறான்

அனுமனின் ஆற்றல் மூலம் தான் சீதையைக் கண்டுபிடிக்க முடியும் என்பதையும்
அவனுக்கு நிகர் யாரும் இல்லை என்பதையும் கம்பர்
வன் திசைக்கு இனி மாருதி நீ அலால் என்று இசைக்கு உரியார் பிறர் வேண்டுமோ -என்கிறார் –

பிலத்தைப் பிளந்தவன்
அனுமன் வானர வீரர்களின் பயத்தை நீக்கி ஆண் சிங்கம் போல் கைகளைத் தூக்கி பேர் உருவம் எடுத்து நிமிர்ந்தான் என்பதை கம்பர் –
நடுங்கன் மின் எனும் சொலை நவின்று நகை நாற
மடங்கலின் எழுந்து மழை ஏற அரிய வானத்து
பெருங்கல் இல் பிலம் தலை திறந்து உலகொடு ஒன்ற
வெறும் கைகள் சுமந்து நெடு வான் உற நிமிர்ந்தான் –என்ற பாடலில் அனுமனின் ஆற்றலை வெளிப்படுத்துகிறார் –

தோள் கொடுத்தவன்
வேறு காட்டும் ஓர் வெறுமையை மெல்லிய எனினும்
ஏற நீ ஐய என்னுடைத் தோளின் மேல் என்றான்-என்றும்

ஏறினான் இளம் கோளரி இமையவனாகி
கூறினார் எடுத்து ஆர்த்தது வானவர் குழுவும்
நூறு பத்துடைப் பத்தியின் நொறில் பரி பூண்ட
ஆறு தேரினும் அகன்றது அவ்வனுமன் தன் தடம் தோள் -என்று அனுமானின் தோள் திறமும் வலிமையையும் எடுத்துக் காட்டுகிறான்

சொல்லின் செல்வன்
இம்மலை இருந்து வாழும் எரி கதிர்ப் பாதிச் செல்வன்
செம்மலுக்கு ஏவல் செய்வேன் தேவ நும் வரவு நோக்கி
விம்மல் உற்று அனையன் ஏவ வினவிய வந்தேன் என்றான் –
ஆற்றலும் நிறைவும் கல்வி அமைதியும் அறிவு என்றும்
வேற்றுமை இவனோடு இல்லையாம் என விளம்பலுற்றான்

சொல்லாலே தோன்றிற்று அன்றே யார் கொல் இச் சொல்லின் செல்வன்
வில் ஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ -என்று பெருமாள் பாராட்டினார் –

தெற்கு திசையில் இருந்து வரும் போதே ராமனை வணங்காமல் பிராட்டி இருக்கும் தென் திசையை வணங்கி
நிலத்தில் வீழ்ந்து சீதாப் பிராட்டியின் நிலைமையைக் -கற்புத் திண்மையை -குறிப்பால் உணர்த்தினார்
எய்தினன் அனுமனும் எய்தி ஏந்தல்
மொய் கழல் தொழுகிலன் முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன் கையினன்
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி வாழ்த்தினான் –

கண்டனன் கற்பினுக்கு அணியை கண்களால்
தென் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்
அண்டர் நாயக இனி துறத்தி ஐயரும்
பண்டு உள துயரும் என்று அனுமன் பன்னுவான்

———————
அசோக வனத்தில் இருக்கும் சீதாபிராட்டி அனுமனை இராமதூதன் எனத் தெளிந்த பின் அவனிடம்
~~ அய்ய! சொல்! அனையன் மேனி எப்படித்து அறிவி || என்று கேட்கிறாள்.
இதற்கு அனுமன் இராம அழகை ~~அடி முதல் முடி ஈறாக|| அறிவுறச் சொல்லத் தொடங்கினான்.
இராம அழகு
~~படியெடுத்து உரைத்துக் காட்டும் படித்து அன்று: படிவம்,பண்பின்
முடிவுள உவமைக்கு எல்லாம் இலக்கணம் உரைக்கின் முந்தா||
என்று படி எடுக்கமுடியாத அளவிற்குப் பெருமையும், உவகைளால் எட்டமுடியாத அழகும்
கொண்டு இருப்பதாக அனுமன் கருதுகின்றான்.
இராமபிரானின் உருவ நலனைப் பின்வரும் நிலையில் அனுமன் எடுத்துக்காட்டுகின்றான்.
திருவடிகள்
சேயிதழ் தாமரை போன்றன என்றால் தாமரை மலரும் குவியும். ஆனால் திருவடிகள் மலர்ந்தே இருக்கும்.
பவழத்தை உவமை காட்டினால் பவழம் இராமபிரானின் கால்களின் சிவப்பிற்குப் பொருந்தாமல் குவளை மலர்போல பொலிவழியும்.
திருவடி விரல்கள்
இராமபிரானின் கால் விரல்களுக்குக் கற்பக மரத்தின் மொட்டுகள் ஒக்கும் என்றாலும்,
பவழத்தின் இளங்கொடி ஒக்கும் என்றாலும் அவை ஒரு புறம் அழகற்றுக் கிடக்கும்;.
சூரியனின் இளங்கதிர்; போன்று இராம பிரானின் கால் விரல்கள் ஒளி பெற்றுத் திகழ்ந்தன என்றால் அது சரியாகும்.
திருவடி விரல்களின் நகங்களின் அழகு
திருவடியின் விரல்களில் உள்ள நகங்கள் பிறைச் சந்திரனைப் போன்றன என்றால் திங்கள் பத்து என்ற எண்ணிக்கையில் இல்லை.
விரல்;கள் வயிரம் போன்றன என்றால் அவற்றில் திரட்சி இல்லை. எனவே விரல் நகங்களுக்கு உவமை கூற இயலாது.
திருவடிகளின் செய்கை
நிலவுலகையே அளந்து, கடந்து நிற்கும் திருவடிகள் நிலத்;தில் வந்து பொருந்தின,
காட்டில் நடந்தன என்றால் அவற்றின் எளிமை பாராட்டத்தக்கது.
இராமன் உலகினைக் கடந்து நிற்பவன் என்று ஞான நூல்கள் உரைக்கின்றன.
அவன் நில உலகில நடந்தான் என்றால் அந்த நூல்கள் சொன்ன கருத்துகள் முரண்பாடுகள் உடையதாகும்.
ஞான நூல்களால் உணரப்படாத திருவடிகளின் பெருமையை உரைத்துவிட முடியுமா?
இறையடியார்கள் இறைவின் பாதங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பர்.
இறைவன் பாதங்களை அடையும் சரணாகதி நிலையே உயிரை உய்விக்க வல்லது என்ற நிலையில்;
இங்கு அனுமன் உயிர்களுக்கு இறைவனின் பாதச் சிறப்பினை எடுத்துரைப்பதாக சுந்தரகாண்டம் படைக்கப்பெற்றுள்ளது.
கணைக்கால்
கணைக்கால் அம்பறாத் தூணியை ஒத்திருந்தது என்று சொல்லாம் என்றால் தன்னை அடைந்தவரைக் காக்கும் சிறப்புடையது இறைவனின் கால்கள். அக் கால்களுக்கு அழிக்கத் துணைபுரியும் அம்புகள் வைக்கும் புட்டியை உவமை காட்டுவது பொருத்தமாக இருக்காது.
தொடைகள்
இராமபிரானின் தொடைகள் கருடனின் பிடரியை, மதயானையின் துதிக்கையை ஒத்திருந்தன என்று சொன்னால் அவை நாணம் அடையும்.
அந்த அளவிற்கு அழகு வாய்ந்தனவாக தொடைகள் அமைந்திருந்தன.
திரு வுந்தி
வலப்புறமாகச் சுழித்து ஓடும் கங்கையாற்றின் நீர்ச்சுழலை ஒத்து அமைவது திருவுந்தி என்று சொன்னால் அதுவும் பொருந்தாது.
மகிழம்பூவை ஒத்தது என்று சொன்னாலும் அது பொருந்தாது.
திரு மார்பு
மரகத மலை குறுகும்படியாக அகன்ற மார்பு இராமனுடையது.
அதில் நீங்காமல் உறையும் திருமகள் பெற்ற செல்வமே உயர்ந்த செல்வம்.
இதனில் சீதாபிராட்டி இராமனின் நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கிறாள் என்ற குறிப்பும் உள்ளது.
கைத் தலங்கள்
இராமனின் கரங்கள் தாமரை போன்று காணப்படுவதால் அக்கரங்களைச் சுற்றிலும் வண்டுகள் மொய்த்துக் கொண்டே இருக்கும் பெருமை மிக்கது. அக்கரங்களுக்கு ஐராவத யானையின் துதிக்கையை உவமை காட்டினால் ஓரளவிற்குப் பொருந்தும்.
கைத்தல நகங்கள்
இராமனின் கை சூரியனைக் கண்டால் மலரும் தாமரையை அழகில் ஒத்தன.
அவை வச்சிர யாக்கை உடைய இரணியனைப் பிளந்த செயல் உண்மையானதுதானா என்று அதன் மென்மைத்தன்மை குறித்து ஐயப்படுவார்கள்
ஆனால் அவர்கள் நகங்களைப் பார்த்தால் அச்செயல்; உண்மைதான் என்று காட்டும் அளவிற்கு வலிமையைக் காட்டி நிற்கும்.
திருப் புயங்கள்
புயங்களுக்கு மலையை உவமை காட்டலாம் என்றால் பொருந்தாது.
ஏனெனில் இராமனின் தோள்கள் போல் மலைகள் திரட்சியும் ஒளியும் உடையன அல்ல.
திருமகள் மலையில் சேர்ந்திருப்பதில்லை. மலையில் வில்லின் நாண் புரளாது.
இராமனின் தோள்கள் போல மலைகள் புகழ்பெற்றன அல்ல.
திரு மிடறு
இராமனின் கழுத்துக்கு பாக்கு மரத்தையும், உப்புக்கடலில் கிடக்கின்ற சங்கையும் உவமை காட்டலாம் என்றால் அது பொருந்தாது.
திருமாலின் இடது கரத்தில் உள்ள பாஞ்சசனியம் என்ற சங்கு ஒருவழியில் உவமையாகலாம்.
திரு முகம்
இராமபிரானின் திருமுகம் சந்திரன் போன்றது என்று சொன்னால் அது தேய்வும் வளர்வும் இல்லாத நிறைத்தன்மை உடையது.
எனவே அது பொருந்தாது.
அவரின் முகத்திற்கு தாமரையை உவமை காட்டினால் கண்களுக்கு எதனைக் காட்டுவது.
திருவாய்
தாமரை மலர்போன்றது திருவாய் என்றால் தாமரை அது கேட்டு நாணும்.
பவழம் திருவாய்க்கு உவமையாகும் என்றால் அது வெண்ணகை புரியாது.
இனிய சொற்களைப் பேசாது.
பற்கள்
இராமனின் பற்களுக்கு முத்து, நிலவு, அமுதம், முல்லை, மயிலிறகின் அடிக்குருத்து, புன்னைமொட்டு, அறம்
என்னும் வித்திலிருந்து கிளைத்த முளை ஆகிய யாவும் பொருந்துமா?
அறங்கள் முப்பத்திரண்டு. அதுபோன்று பற்களும் முப்பத்திரண்டு என்று குறித்திருப்பது இங்குக் கருதத்தக்கது.
திருமூக்கு
இந்திர நீலக்கல்லில் எழுந்த ஒளி, மரகதமணியின் ஒளித்திரட்சி ஆகியன இராமபிரானின் மூக்கிற்கு ஒப்புகையாகும் என்றால் அது பொருந்தாது. இந்திரகோபப்பச்சியைக் கவ்வ வரும் பச்சோந்தியும் மூக்கிற்கு உவமையாக அமையாது.
திருப்புருவங்கள்
இராமனின் புருவங்கள் கரன் முதலான அரக்கர்களைக் கண்டதும் வளைந்தன.
இதன் காரணமாக வில்லும் வளைந்தது. அரக்கர்கள் அழிந்தனர். இனி அரக்கர் குலம் அழந்தது என்ற வாழ்த்தொலி கேட்டது.
அந்த வளைந்த வில் போன்றது இராமபிரானின்; புருவங்கள்.
இங்கு இராமபிரான் அரக்கர்களை அழிக்க வருவார் என்ற செய்தியும் இணைத்துச் சீதாபிராட்டிக்கு உணர்த்தப்பட்டு
ஆறுதல் அளிப்பதாக இப்பகுதி அமைகிறது.
திருநெற்றி
எட்டாம் நாள் சந்திரன் வளர்தல், தேய்தல் இல்லாமல், நாள்தோறும் தோன்றல் மறைதல் இல்லாமல்,
இராகு என்ற கோளால் விழுங்கப்படாமல் இருந்தால், களங்கமே இல்லாமல் இருந்தால் இருளின் அழகான நிழலில்
பல காலம் இருந்தால் இராமபிரானின் நெற்றிக்கு உவமையாக அமையலாம்.
திருக்குழல்
நீண்டு, திரண்டு, பளபளப்புடன், கருத்து, நீலமணியின் நிறத்தைப்பெற்று, முறுக்குண்டு, பின்னே தாழ்ந்து,
நுனி சுருண்டு, தெய்வத்தன்மை பொருந்திய இயற்கைமனத்துடன் திகழ்ந்த இராமபிரானின் திருமுடி சடையாக மாறிவிட்டது.
இதனை மழை என்று உவகை காட்டுதல் பொருந்தாது.
நடை
அரசு ஏற்கத் துணிந்த நாளினும், ஆட்சிச் செல்வம் கிடைக்காமல் துன்பம் நிறைந்த காட்டில் வாழும் நாளிலும்
தன்தன்மை மாறாத நடையை உடையவர் இராமபிரான்.
இவரின் நடை காளையிடத்தில் உள்ளது என்று சொன்னால் மதயானை வருந்தும்.
இவ்வாறு இராமபிரானின் அழகை    அடிமுதல் முடிவரை சீதாபிராட்டியிடம் அனுமன் எடுத்துரைக்கிறான்.
மேற்கண்டவற்றில் இருந்து ஒட்டுமொத்தமாகப் பெறப்படும் செய்தி உவகைளுக்கு அப்பாற்பட்ட வடிவழகு உடையவன் இராமன்
அல்லது இறைவன் என்பதை உணரமுடிகின்றது.
மேலும் சங்கப்பாடல்களிலும், காப்பியங்களிலும் பெண்களின் அழகு கேசாதிபாதமாகச் சுட்டப்பெறும்.
பெண்களின் அழகை வருணிக்க உவமைகள் பலவற்றைப் புலவர்கள் புனைந்தேத்துவர்.
ஆனால் கம்பர் இராமன் என்ற ஆண்மகனை அழகின் உயர்நிலையில் படைக்கின்றார்.
இது மிகப்பெரிய வேறுபாடாக கருதத்தக்கது.
ஒரு ஆண்மகன் மற்றொரு ஆண்மகனின் உருவ அழகை வருணிக்கும் நிலைப்பாட்டில் கம்பரின் அழகியல் உணர்வு இங்குச் செயல்பட்டுள்ளது. அனுமனைச் சற்று மறந்து அந்த இடத்தில் கம்பனை அமரவைத்து இராம அழகைத் தரிசித்தால் அது வாசகனுக்கு இன்னும் அழகுணர்வினைக் கூட்டும். கம்பர் கொண்டுள்ள இராம பக்தியை விளக்கும். இராம அழகில் உவரு நலன் காட்டப்பெறுவதைவிட
இராமனின் வீரம், வலிமை, எளிமை, புகழ் ஆகியன எடுத்துரைக்கப்பெற்றுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
இதே கம்பர் அனுமன் சீதையின் அழகை இராமனிடம் கூறும்போது கையாளும் அழகுணர்வு முற்றிலும் வேறுபட்டு அமைகின்றது.
சீதையைக் கண்ட அனுமன்,  சீதாபிராட்டியின் நிலையையும் அவளின் இருப்பையும் காட்டுவதாக இருபது பாடல்களைப் படைத்துள்ளார் கம்பர். இப்பாடல்களில் சொல்லடுக்குகளையும், சொல் விளையாட்டுகளையும் கம்பர் உத்திகளாகப் பயன்படுத்தி அழகுணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இவ்வழகு வெளி;ப்பாட்டில் வருணனைகளோ, உவமைகளோ, கேசாதிபாதமோ, பாதாதி கேசமோ இடம்பெறவில்லை.
ஆனால் படிக்கும் வாசகன் இராமனின் அழகைக் கூறும் பாடல்களை விட சீதையின் அழகு கூறப்படும் பாடல்களை அதிகம் படித்து இன்புறுகின்றான். இதற்கு உரிய காரணங்கள் ஆராயப்படவேண்டியதாகும்.
சீதையின் அழகை குடும்பப் பெருமையில் இருந்து கூறத் தொடங்குகிறான் அனுமன்.
அதிலிருந்து தொடங்கி இராவணன் சிறையில் சீதாபிராட்டியைத் தான் கண்டதுவரை எடுத்துரைக்கின்றான்.
அனுமனின் இக்கருத்து வெளிப்பாட்டில் கதைக்கோப்பு இடையீடுயின்றி வளர்த்துச் செல்லப்பெற்றுள்ளது.
குடும்பப் பெருமை
சீதாபிராட்டி இராமபிரானுக்கு ஏற்ற மனைவியாகவும், தசரத மன்னனுக்கு ஏற்ற மருமகளாகவும்,
மதிலை ஜனக மன்னனின் புதல்வியாகவும் உரிமை, வாய்மை, தகைமை ஆகிய பண்புகளுக்கு இலக்கணமாக விளங்குகிறாள்.
பொறுமை
பொன் அலது இல்லை பொன்னை ஒப்ப எனப் பொறையில்; நின்றாள்
தன் அலது இல்லைத் தன்னை ஒப்பு எனத்தனக்கு வந்த
நின் அலது இல்லை நின்னை ஒப்பு என நினக்கு நேர்ந்தாள்
எனஅலது இல்லை என்னை ஒப்புஎன எனக்கும் ஈந்தாள் (1306)-என்ற இப் பாடலில்
சீதை பொன் போன்று பொறுமையுடன் இருந்தாள் என்ற பண்பு எடுத்துரைக்கப்படுகிறது.
இப் பாடலில் அலது, இல்லை, ஒப்பு, என ஆகிய சொற்கள் அடி தோறும் பயின்று வந்து சொல்லழகு செய்கின்றன.
குலப்பெருமை
சீதை இராமனின் குலப்பெருமைக் காத்து நிற்கிறாள். தன் குலத்தையும் சிறப்புறச் செய்தாள்.
இராவணனின் குலத்தைக் கூற்றுவனுக்குக் கொடுத்தாள். தேவர்கள் குலமும் இதனால் வாழ்ந்தது.
வானவர் குலத்தையும் வாழ வைத்தாள்.
இப்பாடலில் குலம் என்ற சொல் அடிதோறும் வந்து இனிமை கூட்டியுள்ளது.
இற்பிறப்பு, இரும்பொறை, கற்பு
வில்லை உடைய இராமபிரானே, இலங்கையில் சீதை என்ற பெண்ணைக் காணவில்லை. உயர்குடிபிறப்பு, பொறுமை, கற்பு என்ற மூன்றும் களிநடம் புரியக் கண்டேன் என்று அனுமன் கூறுவதாக கம்பர் படைக்கின்றார்.  அனுமன் பெண் என்னும் நோக்கில் சீதையைக் காணவில்லை என்பதற்கு இப்பாடல் மிக முக்கியமான சான்று. உயர்ந்த ஒழுக்க சீலர் ஒருவரைக் கண்ட காட்சியாக சீதாபிராட்டியைக் கண்டுள்ளான் அனுமன்.
கண்ணிலும் கருத்திலும் எண்ணத்திலும் இராமன்
சீதா பிராட்டியின் கண்ணிலும், கருத்திலும், சொல்லிலும், அவள் மார்பகத்திலும் இராமபிரான் இருப்பதைக் கண்டேன் என்று அனுமன் குறிக்கின்ற இப்பாடலில் உளை, நீ ஆகிய சொற்கள் திரும்பத் திரும்ப வந்துப் பாடலுக்கு அழகு சேர்க்கின்றன.
சீதையின் இருப்பிடம்
இலங்கையில் காலை, மாலை எனப் பகுத்தறிய முடியாத ஒளிமிக்கக் கற்பகச் சோலையில் தம்பி இலக்குவன் புல்கொண்டு அமைத்த பர்ணசாலையில் தவம் செய்த தவம் ஆம் தையலாக சீதை வீற்றிருந்தாள் என்று சீதை இருந்த இருப்பிடத்தை அனுமன் காட்டுகின்றான். இப்பாடலில் இடம் பெற்று தவம் செய்த தவமாம் தையல் என்ற சொல் சேர்க்கை அழகுமிக்கது.
இராவணன் பெற்ற சாபம்
சீதையை மண்ணொடும் கொண்டு போனான் இராவணன் என்று அனுமன் குறிப்பிடுகின்றான். இந்தப் பகுதி தமிழ் மரபினைப்பின்பற்றியதாகும். வடமொழியில் பற்றி இழுத்துச் செல்லப்பெற்றாள் சீதை. ஆனால் இங்கு இம்முறை மாற்றப்பெற்றுள்ளது. அதற்குத் துணையாக கம்பர் ஒரு நிகழ்வையும் இதனோடு இணைத்துச்சொல்லுகிறார். பிரம்மன் இராவணனுக்கு விரும்பாத ஒரு பெண்ணைத் தீண்டினால் எண்ணிலாத கூறுகளாய் உடல சிதறி இறப்பாய் என்று ஒரு சாபம் இட்டுள்ளார். அதனால் சீதையின் மேனியைத் தீண்டாமல் மண்ணோடும் பெயர்த்து எடுத்துக்கொண்டு இராவணன் சென்றதாக கம்பர் படைக்கின்றார். தமிழ்மரபினை காக்கும் அழகியல் இங்குச் செயல்பட்டுள்ளது.
சீதையை தீண்டாத இராவணன்
இராவணன் சீதையைத் தீண்டவில்லை என்பதற்கு பிரம்மன் படைத்த அண்டம் வெடிபடவில்லை என்பதாலும், ஆதிசேடனின் ஆயிரந் தலை பெற்ற படங்கள் கிழிந்து போகவில்லை என்பதாலும், கடல் கரையைக் கடக்கவில்லை என்பதாலும், சூரிய சந்திரர்கள் கீழேவிழவில்லை என்பதாலும் இராம பிரானே நீவீர் அறிந்து கொள்ளலாம் என்று அனுமன் இராமனிடம் கூறுகின்றான். இப்பாடலில் இலது, இல என்ற இன்மைக் குறிப்புகள் இடம்பெற்றுப் பாடலைச் சிறக்கச் செய்கின்றன.
தேவர் வியக்கும் கற்பு
சீதாபிராட்டியின் கற்பின் சிறப்பினால் தேவர்களின் தேவியரும் கற்பினால் பெருமை பெற்றனர். சிவபெருமான் இடப்பாகத்தில் இருந்த பார்வதி கற்பின் திண்மையால் சிவன் தலையில் இருக்கலானாள். திருமாலின் மார்பில் இருந்த திருமகளும் அவரின் தலைமீது இருக்கலானாள். சோகத்தாள், பாகத்தாள், மகுடத்தாள், பதுமத்தாள், ஆகத்தாள் என்ற சொற்கள் இங்கு ஒத்த ஒலிக்குறிப்பினைத் தருவதாக உள்ளது.
சீதையைத் தேடிக் கண்டறிந்த முறை
இலங்கை முழுவதும் தேடிப்பார்த்து, இராவணனின் இருக்கையிலும் தேடிப்பார்த்து,  அசோக வனத்தில் கண்ணின் நீர்க்கடலின் இடையே தேவமகள் போன்ற  சீதையைக் கண்டேன்; என்று அனுமன் சீதையைக் கண்டறிந்த செய்தியைக் குறிப்பிடுகிறான். கண்ணின் நீர்க்கடலில் கண்டேன் என்ற தொடர் அழகுமிக்கது.
அரக்கியர் நடுவே சீதாபிராட்டி
பேய் போன்ற அரக்கியர் பாதுகாவலுக்கு இடையில் இராமபிரானே உன் மேல் கொண்ட அன்பின் காரணமாக அச்சத்தைப் போக்;கி இரக்கம் என்ற பண்பு பெண் வடிவம் பெற்றால் எப்படி இருக்;குமோ அப்படி அந்தச் சிறையில்  சீதாபிராட்டி இருந்தாள். நின்பால் நேயமே அச்சம் நீக்க இரக்கம் என்ற ஒன்று தானே ஏந்திழை வடிவம் எய்தி தருக்கு உயர் சிறை உற்றன்ன தகையள் அத்தமியள்|| என்ற அடிகள் அழகியல் வயப்பட்டன.
இதன்பின் இராவணன் வந்து சீதாபிராட்டியைப் பணிந்தது, இரந்தது, அவள் கடுஞ்சொல் சொன்னது, பின் அரக்கியர்களைப் புத்தி கூறச் சொன்னது, அரக்கியர் உறங்கியது, பிராட்டி தற்கொலை புரிந்து கொள்ளச் சென்றது, தடுத்து அனுமன் இராம நாமம் சொன்னது போன்ற செய்திகள் விரிகின்றன.
இதன்பின் மோதிரத்தைச் சீதாபிராட்டியிடம் அனுமன் தருகின்றான். அப்போது அம்மோதிரத்தைச் சீதாபிராட்டி அணைக்க அது உருகியதாம்.  மோதிரம் பட்ட மகிழ்ச்சியால் ஏற்பட்ட குளிர்வால் அம்மோதிரம் உடன் குளிர்ந்து தன் நிலை பெற்றது என்று கம்பர் காட்டுகின்றார்.
அனுமன் சொல்லிய இப்பகுதிகளில்  சீதா பிராட்டியின் உருவ நலன் எடுத்துரைக்கப்படவில்லை. சீதாபிராட்டியின் புறஅழகினைக் கடந்து அக அழகினை அனுமன் கண்டு உரைப்பதாக இப்பாடல்கள் பாடப்பெற்றுள்ளன. மேலும் ~~கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்|| என்ற தொடர் அனுமனின் நிலைப்பாட்டை எடுத்துரைப்பதாக உள்ளது.
இராமனின் அழகை அடி முதல் முடி வரை உவமைகளால் அழகுபட புனைந்த கம்பரால் ஏன் சீதையின் அழகு அவ்வாறு சொல்லப்படவில்லை என்பது இங்கு எண்ணத்தக்கது. மேலும் தமிழ் இலக்கியங்களில் பெண் பாத்திரப்படைப்புகள் உருவ அழகிற்கு முக்கியத்துவம் தந்து அவற்றைப் பல பட விரித்துரைக்கும். இப்படி ஒரு வாய்ப்பு வந்தபோதும் அதனை மறுத்து சீதாபிராட்டியை ஒழுக்க சீலர் ஒருவரைப் பாராட்டும்படியாகக் காட்சிப்படுத்தியிருப்பதற்கான காரணம் என்ன என்று எண்ண வேண்டியுள்ளது.
அனுமன் என்ற ஆண்மகன், திருமணமாகாதவன், தொண்டன் தான் வணங்கும் தெய்வமாக விளங்கும் இராமனின் துணையைக் காணுகையில் அவன் உள்ளத்தில் ஏற்படும் மரியாதை உணர்ச்சி இங்குக் கம்பரால் வெளிப்படுத்தப்பெற்றுள்ளது. ஆண் மற்றொருவரின் மனைவியாக விளங்கும் பெண்ணைக் காட்சிப்படுத்துகையில் இத்தகைய மதிப்பு மிக்க தன்மை வரவேண்டும் என்று கற்போருக்குக் கம்பன் உணர்த்துகிறான். சாதாரண ஆண்மகன் பார்க்கும் சாதாரணப் பார்வையில் இருந்துக் காப்பிய மாந்தர்களை வேறுபடுத்திப் பண்பாடு மிக்க உயர் பாத்திரங்களாக படைக்கக் கம்பர் உறுதி கொண்டுள்ளார். இதைக் கற்கும் அனைவர் உள்ளத்திலும் மற்றவர் மனைவி என்றால் அவளின் அழகு தெரியாமல் அவளின் கற்புத் திறம் தெரியவேண்டும் என்று கம்பர் எண்ணியுள்ளார்.
உவமைகள் வாயிலாக இராம அழகை வெளிப்படுத்த விழைந்த கம்பன் சொல்லடுக்கு, சொல்லழகுகளைக் கொண்டு சீதையின் அழகினை விவரித்திருப்பதற்குக் கம்பருக்குள் உள்ள உயர்பண்பாடு காரணம் என்பதைச் சுந்தர காண்ட அழகுகள்; எடுத்துரைக்கின்றன. அழகு வெறும் உருவ அழகு மட்டும் சாரந்தது அல்ல என்பதை விளக்குவதாகவும் உள்ளது.
இராமன் கேட்கிறான், இராமனை வணங்குபவர்கள் கேட்கிறார்கள் என்ற எண்ணத்தில் சீதாபிராட்டியின் அழகு  மிகுந்த கவனத்துடன் கற்பினை முன்னிறுத்தி கம்பரால் எடுத்துரைக்கப்பெறுகிறது. ஆணை அழகுபட வருணித்தல், பெண்ணை அவளின் குணங்களின் வழியாக அடையாளம் காட்டுதல் என்ற நாகரீக மரபு இந்தச் சுந்தரகாண்டத்திற்குள் இடம்பெற்றுள்ளது, பிறன் மனை நயத்தல் தவறு என்ற அடிப்படை கோட்பாட்டில் சற்றும் விலாகமல் அனுமன் இங்குக் கம்பன் வாயிலாகச் செயல்பட்டுள்ளான்.
இராம அழகைக் கம்பன் பாட உவமைகள் கைகொடுத்தன. சீதை அழகைப் பாட சொற்சேர்க்கைகள் கைகொடுத்துள்ளன. கற்பவர்களுக்கு உவமை அழகைவிட சொல்லழகுகள் சுகம் தருகின்;றன என்பதை சீதாபிராட்டியின் நிலையைக் கூறும் பாடல்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதன் வாயிலாக உணரமுடிகின்றது.
கவிஞன் தன் ஒவ்வொரு பாடலையும் வாசகர் மனதில் இடம்பிடிக்க ஏற்றவகையில் அமைக்கவேண்டும் என்ற பேராவல் கொண்டுப் படைக்கின்றான். கவிச்சக்கரவர்த்தி தன் ஒவ்வொரு பாடலையும் மக்கள் மனதில் இருத்த பற்பல உத்திகளைக் கையாளுகின்றார். சீதையின் அழகினை, இராமனின் அழகினை வாசகர்கள் தமக்குள் ஏற்க இத்தகைய உத்திகளைக் கையாண்டுள்ளார்.
ஒட்டு மொத்தத்தில் அழகு என்பது மற்றவர் பார்வையில் உருவம் சார்ந்து அமைவதல்ல. மனநலன், குணநலன், ஒழுக்க நலன் சார்ந்து அமைவது. மதிப்புகளின் அடிப்படையில் அழகு வரையறுக்கத்தக்கது என்பதை சுந்தரகாண்டம் எடுத்துக் காட்டுகின்றது.
———————

“பஞ்சியொளிர் விஞ்சு  குளிர் பல்லவமனுங்கச்
செஞ்செவிய கஞ்ச நிமிர் சீரடி பெயர்ப்பான்
அஞ்சொலிள மஞ்ஞை யென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்ச மகள் வந்தாள்.’–என்ற சூர்ப்பணகையின் வருகையை வர்ணிக்கும் பாட்டு

  • வெயின் முறைக் குலத் திறையவன் முதலிய மேலோர்
    உயிர் முதற் பொருள் திறம்பினும் உரை திறம்பாதோர்
    மயில் முறைக் குலத் துரிமையை மனு முதன் மரபைச்
    செயிருறப் புலைச் சிந்தையால் என் சொனாய் தீயோய்–மந்தரை சூழ்ச்சி ‘ப் படலத்தில்–
  • இதில் ‘மயிலைப்போல முறை தவறாத குலம்’ என்று சொல்லப்படுகிறது. முறை தவறாத தன்மைக்கு மயிலை உபமானமாகச் சொன்னதின் மர்மம் என்ன? மற்ற பட்சிகளிடத்தில் இல்லாமல் மயிலுக்கு மட்டும் உள்ள எந்த சிறப்பு இதற்குப் பொருந்தும் என்பது ஒன்றும் எங்களுக்கு விளங்கவில்லை.
            • “பலாவம் பொழிலுறை ஒரு தாய் உயிர்த்த
              பலமயிற்குள் கலாபம் புனைந்த களிமயிலே மூத்ததெனக் கொள்க!’
            • அதன் பொருள் : ‘கானகத்திலே வசிக்கின்ற ஒரு தாய் வயிற்றில் பிறந்த பல மயில்களும் சேர்ந்திருக்கும்போது எந்தக் குஞ்சு முதலில் கலாபம் விரிக்கின்றதோ அது தான் மூத்த குஞ்சு என்று தீர்மானம் செய்துகொள்.’ என்பதுகாட்டிலே மயில் இயல்பாக வசிக்கும்போது ஒவ்வொரு தாய் மயிலும் அதன் குஞ்சுகளும், குஞ்சுகள் நன்றாக வளர்ந்த பிறகும் ஒரே குடும்பமாக எங்கே போனாலும் சேர்ந்தே போகும். இரை தேடுவதானாலும் அக்கம்பக்கமாகத்தான் இருக்கும். இப் படி ஒவ்வொரு மயில் குடும்பமும் தனித்தனிக் கூட்ட மாகத்தான் சஞ்சரிக்கும். அப்படி இருக்கும்போது அவைகளுக்குள் களிப்பு வந்து கலாபம் விரிக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் மூத்த ஆண் குஞ்சுதான் முதலில் தோகையை விரித்து ஆடும். அதன் பிறகு தான் இளைய ஆண் குஞ்சுகள் தோகையை விரிக்கும். இப்படி முதலில் கலாபம் விரிக்கிற உரிமை மூத்த ஆண் குஞ்சுக்குத்தான் உண்டு என்பதுதான் இந்த ‘மயில் முறைக் குலத்துரிமை ‘ என்பது” என்றார்.
        • ஒரு மயிலானது தன்னுடைய எல்லாக் குஞ்சுகளுடனும் குடும்ப சகிதமாகத்தான் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் போகும் என்றும் அப்படித் தாய்ப் பறவையோடு குஞ்சுகளெல்லாம் சேர்ந்திருக்கிற சமயத்தில் கலாபம் விரித்து ஆடவேண்டிய சந்தர்ப்பம் வரும்போ-தெல்லாம் அந்தக் குஞ்சுகளில் மூத்த குஞ்சுதான் முதலில் கலாபம் விரிக்கும் என்றும், அதற்குப் பிறகுதான் மற்றக் குஞ்சுகளெல்லாம் கலாபம் விரிக்கும் என்றும், கண்டறியப்பட்டதாக எழுதியிருந்தது. மூத்த குஞ்சு என்பதற்கு என்ன அடையாளம் என்றால் ஒவ்வொரு குஞ்சும் முட்டையிலிருந்து வெளிவந்த உடனே அங்குள்ள ஆராய்ச்சிக்காரன் ஒவ்வொரு குஞ்சின் காலிலும் ஒவ்வொரு நிறமான வளையத்தை – மாட்டிவிட்டுப் பதிவு செய்து கொண்டான் என்ற விளக்கமும் எழுதப்பட்டிருந்தது.
      • ———————–
      • விற்பெரும் தடந்தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பின்
        நற்பெரும் தவத்தளாய நங்கையைக் கண்டேனல்லேன்
        இற்பிறப்பு என்பது ஒன்றும் இரும் பொறை என்பது ஒன்றும்
        கற்பு எனும் பெயரது ஒன்றும் களிநடம் புரியக்கண்டேன்.’
      • “வில்லேந்திய விசாலமான தோள்களையுடைய ராமா! பரந்த கடல் சூழ்ந்த இலங்கையின் மலையில் உனக்காகத் தவம் செய்துகொண்டிருக்கும் சீதை என்ற – ஒரு பெண் உருவத்தை நான் பார்க்கவில்லை.-ஆனால் ‘குடிப் பிறப்பு’ என்று சொல்லப்படுகிற ஒன்றும், ‘பெரும் பொறுமை’ என்ற ஒன்றும், ‘கற்பு’ என்று கருதப்படுகிற ஒன்றும், ஆகிய இந்த மூன்றும் சேர்ந்து அங்கே ஆனந்தத் தாண்டவம் ஆடுவதைத்தான் கண்டேன்,” என்றான் அனுமான். அதைக் கேட்டு ராமனுடைய திகைப்புக் குறைந்தது. போன உயிர் வந்தது போலக் களிப்பினால் பூரிக்கலானான்.
          • பண்டார வளைக்குப் போகுமுன்னால் இலங்கையிலுள்ள மலைப்பிர தேசங்களின் சிகரமாகிய ‘நூவாரா எலியா ‘ என்னும் ஊரையும் அதிலுள்ள சிறப்புகளையும் காட்டினார். அந்த வழியில் பாதைக்குப் பக்கமாக ஒரு பள்ளத்தில் இருந்த சிறு தடாகத்தைச் சுட்டிக்காட்டி இது ’சீதைத் தடாகம்’ என்றார். அந்தத் தடாகத்திலிருந்து ஒரு சிறு ஓடை அந்த மலைச்சாரலில் சல சலத்துக் கீழே ஓடிக்கொண்டிருந்தது. அதை ‘சீதை ஓடை’ என்றார். மேற்படித் தடாகத்திற்கு எதிரில் பாதைக்கு அப் பால் இருந்த மலையைக் காட்டி அங்கே தான் அசோகவனம் இருந்தது என்றும், அந்தக் குன்றின் ஓரத்திலிருந்த ஒரு குகையைக் காட்டி அதிலேதான் சீதை சிறையிருந்தது என்றும் கூறினார்.
          அதன்பின் மோட்டாரை ஓட்டினார். அதே பாதையில் தடாகத்தைவிட்டு சுமார் இரண்டு பர்லாங்கு தூரம் இறங்கி வந்தபின் அங்கே ஒரு சிறு நீர்நிலை இருந்தது. அது தான் சீதை தினந்தோறும் நீராடின துறை என்றார். அந்த நீர் நிலைக்கு அடுத்தாற்போல் ஒரு சிறு கோயில் இருந்தது. அங்கேதான் சீதை ஒவ்வொரு நாளும் ராமனைப் பூசை செய்தது என்றார்.
      • ———————
    • மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகை முடியத் தாவிய
      சேவடி சேப்பத் தம்பியொடும் கான் போந்த’ அந்தப்
      பாதங்கள் விராதனைச் சாப வீடு செய்தன. விராதன் சொல்கிறான்:
    • வேதங்கள் அறைகின்ற உலகெங்கும் விரிந்தன உன்
      பாதங்கள் இவை என்னில் படிவங்கள் எப்படியோ‘உன் பாதங்கள் இப்படிப்பட்டவை என்றால், படிவங்கள் எப்படிப்பட்டவையோ’ என்று விராதன்
    • ————–
    • இராமனோ, தரையின் மேல் நிற்கிறான். அனுமனால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
    • நூறுபத்துடை நொறில் பரித்தேரின்மேல் நுன்முன்
      மாறில் பேரரக்கன் பொர நிலத்து நீ மலைதல்
      வேறுகாட்டும் ஓர் வெறுமையை; மெல்லிய எனினும்
      ஏறுநீ ஐய என்னுடைத் தோளின்மேல் –என்றான்.
    • ஆயிரம் குதிரைகளால் இழுக்கப்படும் தேரின்மேல் உன் முன்னால் அரக்கன் வந்து நிற்கவும், நிலத்தின் மேல் நின்றவண்ணம் நீ போர்புரிவதும் குறைவுடையதாகும். வெறுமை காட்டி நிற்பதற்கு நீ என்ன தனியனா? நாங்களில்லையா உனக்கு? என் தோள்கள் உன்னைத் தாங்கும் அளவுக்கு வலிமையோ தகுதியோ உடையன அல்லவை என்றாலும், மெல்லியவையே என்றாலும், என் தோளில் ஏறுவாய் ஐயனே!
    • —————–

மாணியாய் உலகளந்த நாள் அவனுடை வடிவை
ஆணியாய் உணர் மாருதி அதிசயம் உற்றான்
காணியாகப் பண்டு உடையனாம் ஒரு தனிக் கலுழன்
நாணினான்; மற்றை அனந்தனும் தலை நடுக்குற்றான்.

வாமனனாய் வந்து உலகத்தை எல்லாம் அளந்த நாளில் – இதே இராமன் – எடுத்த பேருருவத்தை அறிந்தவனான மாருதி வியப்புற்றான். திருமாலைச் சுமப்பதைத் தனக்கே தனக்கான தனி உரிமையாகக் கொண்டிருந்த கருடன் நாணம் அடைந்தான். ஆதிசேடனோ தலை நடுக்கம் கொண்டான்.

இராமனின் தெய்வத் தன்மையைக் கம்பன் தொட்டுக்காட்டும் சில இடங்களில் இது ஒன்று.

அவதாரந்தோறும் அவதாரந்தோறும் அவனை உணர்ந்தவன் அனுமன் என்றொரு குறிப்பு கிடைக்கிறது இந்தப் பாடலில்

——–

‘புராரி மற்றி யானும் காற்றின் சேய் எனப் புகன்றான் மற்றைத் திசையுளோர்க்கு அவதி உண்டோ.’

மாருதி வாயுவினுடைய அம்சம் மட்டுமன்று; என்னுடைய அம்சமும்தான்’ என்று புரங்களை அழித்த புராரியான சிவபெருமான் சொன்னான்.

——–

அவ்விடத்து அவர் மறுகி அஞ்சி நெஞ்சு அழி அமைதி
வெவ்விடத்தினை மறுகு தேவர் தானவர் வெருவல்
தவ்விட தனி அருளு தாழ்சடைக் கடவுள் என
இவ்விடத்து இனிது இருமின் அஞ்சல் என்று இடை உதவி….

சுக்ரீவனுடைய பதட்டத்திற்கும் அச்சத்திற்கும் அப்படியே எதிரானதொரு சித்திரம். பாற்கடலிலிருந்து ஆலகாலம் வெளிப்படவும், அதனைக் கண்டு அஞ்சி ஓடிய தேவர்களையும், அசுரர்களையும் ஒன்று போல ‘அஞ்சாதீர்’ என்று சொல்லி அதனைத் தானே உண்ட சிவபெருமானைப் போல் ‘எதற்கும் அஞ்ச வேண்டாம். நீங்கள் இங்கேயே இருங்கள். நான் போய்ப் பார்த்து வருகிறேன்’ என்று சொல்லி பிரமசரிய வேடம் புனைந்துகொண்டான்.

———–

என்பு எனக்கு உருகுகின்றது.’ என்னுள் ஊற்றெடுக்கும் அன்பு என்னை எப்படி நெகிழ்த்துகின்றது என்றால் வெறும் மனம் மட்டுமேயன்று; உடலும் நெகிழ்கின்றது. எலும்பு வரை நெகிழ்ச்சி அடைந்திருக்கிறது. ‘இவர்கின்றது அளவில் காதல்.’ அளவில்லாத நேயம் இவர்கள் மேல் எனக்குத்

தோன்றுகிறது. ‘அன்பினுக்கு அவதி இல்லை.’ என்னை ஆட்கொள்ளும் அன்பு கொஞ்ச நஞ்சமில்லை. ‘அடைவு என்கொல்?’ இதனால் என்ன நேரும்? ‘அறிதல் தேற்றேன்!’ எனக்கு விளங்கவில்லை.

———

மஞ்சு எனத் திரண்ட கோல மேனிய! மகளிர்க்கு எல்லாம்
நஞ்சு எனத் தகைய ஆகி நளிர் இரும் பனிக்குத் தேம்பா
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண! யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் அனுமன் என்றேன்.

என்ன சொல்கிறான்? ‘மேகத்தைப் போல வண்ணம் உடையவனே! உன்னைப் பார்க்கின்ற எந்தப் பெண்ணுக்கும் உடனடியாக மயக்கத்தை ஏற்படுத்தக் கூடிய தாமரையைப் போன்று மலர்ந்த கண்கைள உடையவனே!’ முதலில் தொலைவிலிருந்து பார்க்கும்போது அனுமனை அசைத்தது அவனுடைய மேனி வண்ணம். அப்படிப்பட்ட வண்ணம் உடையவனே என்று அழைத்தான். திருப்தியாகவில்லை. ‘இந்தக் கண்ணு என்னை என்னமோ செய்யுதய்யா! எனக்கே இப்படி இருந்தால், யாராவது பெண் உன்னைப் பார்த்தால் அவளுக்கு என்னதான் ஆகாது? தாமரைக் கண் ஐயா உன் கண்’ என்றான். அதுவும் போதவில்லை அனுமனுக்கு. தாமரை என்றால் என்ன ஆகும்? வெயில் இருந்தால் மலர்ந்திருக்கும்; பனி பெய்தால் வாடிப் போகும். அப்போதும் வாடாத கண்ணாம். ‘நளிர் இரும் பனிக்குத் தேம்பா கஞ்சம் ஒத்து’ இந்தக் கண் தாமரை இருக்கிறதே, எந்தக் கடுமையான பனிக்கும் வாடாத தாமரை ஐயா.’ அது சரி. ஆனால் மாலை ஆனதும் கூம்பிப் போகுமே! அதுவும் இல்லையாம். ‘அலர்ந்த கண்ண!’ ‘எப்போதும் மலர்ந்திருக்கும் கண்ணை உடையவனே!’

முதல் மூன்று அடிகள் முழுவதும் இராமனைப் பற்றிய வருணனை. மூன்றாவது அடியின் கடைசியில் இருந்து, நான்காவது அடியில் தன்னைப் பற்றிய விவரம். எங்க அப்பா வாயு; எங்க அம்மா பேரு அஞ்சனை. என் பெயர் அனுமன்.’

இம்மலை இருந்து வாழும் எரிகதிர்ப் பரிதிச் செல்வன்
செம்மலுக்கு ஏவல் செய்வேன்; தேவ! நும் வரவு நோக்கி
விம்மல் உற்று அனையன் ஏவ, வினவிய வந்தேன் என்றான்
எம் மலைக் குலமும் தாழ இசை சுமந்து எழுந்த தோளான்.

‘அப்பா பேரு வாயு. அம்மா பேரு அஞ்சனை. என் பேரு அனுமன். இந்த மலை இருக்கிறதே, இதற்கு
மேல் சூரியனுடைய பிள்ளை ஒருத்தன் இருக்கிறான். அவனுக்கு நான் ஏவல் செய்கிறேன். வேலைக்காரன். சாமி! நீங்கள் வருவதைப் பார்த்து அவன் பயந்து போய்விட்டான். அவன் சொன்னதன் பேரில் உங்களைப் பற்றி அறிந்துகொள்ள வந்திருக்கிறேன்.’

மிகவும் சுருக்கமாகத்தான் சொல்கிறான் அனுமன். அதிக விவரங்கள் ஒன்றும் இல்லை. ‘சூரியனுடைய பிள்ளை’ என்ற உடனேயே இராமனுக்குப் புரிந்துவிட்டது. ஏனென்றால், அவனைத்தான் தேடிக்கொண்டு வந்திருக்கிறான் இவன். இந்த வார்த்தையக் கேட்ட இராமன் சொல்வதைக் கேளுங்கள்:

‘மாற்றம் அ·து உரைத்தலோடும்’ அனுமன் அப்படிச் சொன்னவுடன், ‘வரிசிலைக் குரிசில் மைந்தன் தேற்றம் உற்று,’ பெரிய கட்டமைந்த விலலை ஏந்திய தலைவனான இராமன் தெளிவடைந்தான். ‘இவனின் ஊங்குச் செவ்வியோர் இன்மை தேறி,’ இவனை விடவும் மேலானவன் இன்னொருவன் இருக்க முடியாது என்பதை உறுதியாக உணர்ந்தான். ‘ஆற்றலும், நிறைவும், கல்வி அமைதியும், அறிவும் என்னும் வேற்றுமை இவனோடு இல்லையாம்’ இவனிடத்திலே எது அதிகம்? அறிவாற்றல் மற்றும் செயலாற்றலா? நிறைந்த குணங்களா? நிறைந்த கல்வியினாலே ஒருவனுக்கு இயல்பாகவே ஏற்படும் அடக்கமா? அல்லது அந்தக் கல்வியால் ஏற்படும் உள்ளளி நிறைந்த ஞானமா? எது அதிகம்? ஒன்றுக்கொன்று வேறுபாடு தெரியவில்லையே! எல்லாம் சம அளவில் இருக்கிறதே!

இராமன் அனுமனைப் பற்றிச் சொல்கிறானே, ஆற்றலும் நிறைவும் கல்வி அமையதியும் அறிவும் என்னும்
வேற்றுமை இவனோடு இல்லையாம்.

சொல்லிக்கொண்டே வருகிறான். பக்கத்தில் திரும்பிப் பார்த்தால் இலக்குவன் கவனம் இன்னும் இவன் மேல் விழுந்ததா இல்லையா என்பது தெரியவில்லை. அவனுடைய பார்வை எல்லாம் சீதை எங்காவது தட்டுப்படுகிறாளா என்பதிலேயே நிலைத்திருந்தது. அவனுடைய கவனைத்தை ஈர்க்கும் விதமாகச் சொல்கிறான் இராமன். ‘இவன் படிக்காத வேதம் இருக்காது; கற்காத கலை இருக்காது. இப்படி எல்லாம் எப்படிச் சொல்றேன் என்று நினைக்கிறாயா? இவன் பேசுகிற பேச்சே சொல்கிறது. ‘சொல்லாலே தோன்றிற்று அன்றே!’ இவன் சொல்லே இவனுடைய நிறைவை ஏந்தி வெளிவருகிறது. இவன் சொல்லே இவனுக்கு சாட்சி. ‘யார்கொல் இச் சொல்லின் செல்வன்?’ பட்டமே கொடுக்கிறான் இராமன், முதல் பார்வையிலேயே. ‘ஆர்ரா இந்தச் சொல்லின் செல்வன்?’ ‘வில் ஆர் தோள் இளைய!’ ஆ ஊ என்றால் உடனே வில்லைத் தூக்கி நாண் ஒலி செய்யத் தயாராக நிற்கிற தம்பிப் பையா! ‘வீர் விரிஞ்சனோ?’ இது யார்ரா? பிரமனாக இருக்குமோ? ‘விடை வலானோ?’ இல்லாட்டி சிவனாக இருக்குமோ? (பிரமனாக இருக்குமோ, சிவனாக இருக்குமோ என்று கேட்டாலும், ‘நாராயணனாக இருக்குமோ’ என்ற கேள்வியை இராமன் எழுப்ப வைக்கவில்லை கம்பன். அங்கே உண்மையான சொல்லின் செல்வன் யார் என்பதற்கான விடை கிடைக்கிறது. சொல்லாமல் விட்டது எதுவோ அதுதான் அதிகம் சொல்லுகிறது. )

உடனே இராமனுக்கு இன்னொன்று தோன்றுகிறது. இந்தத் தம்பி சும்மா நிற்கிறானே, இவனுக்கு இன்னும் ஐயம் போகவில்லையோ என்னவோ? ஒருவேளை, இந்த அண்ணனுக்கு வேற வேலையில்லை, அந்த மானைப் பார்த்தவுடன் அப்படித்தான் அதன் பின்னாலேயே ஓடினான்; இத்தனைத் துன்பங்களையும் வரவழைத்தான். இப்போது இந்தப் பையனைப் பார்த்தவுடன் கிடந்து குதிக்கிறான்’ என்று நினைக்கிறானோ என்னவோ என்று தோன்றியது போலிருக்கிறது. இலக்குவனிடம் சொல்கிறான். ‘மாணி ஆம் படிவமன்று.’ இந்தப் பையன் உண்மையில் பையன் இல்லை. இவனுடைய பிரமச்சரிய வடிவத்தைப் பார்த்து இவனை ஒன்றும் அறியாதவன் என்று நினைத்துவிடக் கூடாது. ‘மற்று இவன் வடிவம், மைந்த, ‘ வேற என்ன வடிவம் என்று கேட்பாய் நீ. சொல்றேன்
கேள். ‘ஆணி இவ் உலகுக்கு எல்லாம் என்னலாம்.’ இவன்தான் இந்த உலகத்துக்கு எல்லாம் அச்சாணி என்று சொல்லலாம்.’ ‘ஆற்றலுக்கு ஏற்ற சேணுயர் பெருமை எல்லாம் சிக்கறத் தெளிந்தேன்.’ கொஞ்சம் கூட சந்தேகத்துக்கு இடமில்லாமல் இவனுடைய ஆற்றலையும், அதற்கேற்ற மிகப் பெரிய பெருமைகளையும் எல்லாம் தெளிவாக உணர்ந்துகொண்டேன்.

இலக்குவன் இன்னும் மாற்றம் ஏதுமின்றி நிற்கிறான். இராமனுக்குப் புன்னகை தோன்றுகிறது. ‘டேய்! இது மான் சமாச்சாரமில்லைடா! அப்பதான் நான் கொஞ்சம் விட்டுவிட்டேன். நீயே சொல்லியும் கேட்கவில்லை. இது அப்படியில்லை. நான் சரியாகத்தான் புரிந்துகொண்டிருக்கிறேன். இவனைப் பற்றி நான் சொல்வது இப்போது உனக்கு முழுமையாகப் புரியாமல் இருக்கலாம். ‘பின்னர்க் காணுதி மெய்ம்மை’ நீயே பின்னால தெரிந்துகொள்வாய்.

மாணிஆம் படிவமன்று மற்றிவன் வடிவம் மைந்த
ஆணிஇவ் உலகுக் கெல்லாம் என்னலாம்; ஆற்றற் கேற்ற
சேண்உயர் பெருமைதன்னைச் சிக்கறத் தெளிந்தேன்; பின்னர்க்
காணுதி மெய்ம்மை என்று தம்பிக்குக் கழறி, கண்ணன்… … …

நாலு அடிக்குள் எத்தனைக் காட்சிகளைத் திணிக்க முடியும்? மிக அலட்சியமாக நுணுக்கி நுணுக்கி இழைக்கிறான் கவிஞன். அது இருக்கட்டும். அவன் என்னடா என்றால் இவனைப் பார்த்து, ‘நீல மேகம் போன்ற நிறத்தழகா, பெண்கள் மனத்துக்கெல்லாம் நேசத் துன்பத்தை உண்டாக்கக் கூடிய, பனியில் வாடாத, எப்போதும் மலர்ந்த தாமரைக் கண்ணா’ என்று கண்ணால் பார்க்கக் கூடியனவற்றைப் பார்த்து மனம் பறிகொடுத்துப் பேசுகிறான். இவன் என்னடா என்றால், கண்ணுக்குப் புலப்படாத அறிவையும், ஆற்றலையும், அகத்தையும், அகத்தின் தெளிவையும், உயர்வையும், அடக்கத்தையும் ஒரே நொடியில் அளந்து பார்த்தேன் என்கிறான். எப்படி அளந்தானாம்? ‘சொல்லினால் தோன்றிற்று அன்றே, யார்கொல் இச் சொல்லின் செல்வன்!’

அப்படி என்னதான்யா சொன்னான் அந்த அனுமன்? ‘எங்க அப்பா பேரு காத்து; எங்க அம்மா பேரு அஞ்சனை; என் பேரு அனுமன். இந்த மலை மேல சூரியனின் பிள்ளை(யான சுக்ரீவன்) இருக்கிறான். அவன் உங்களைப் பார்த்து பயந்து போய்விட்டான். நீங்க யாருன்னு கேட்டுட்டு வரச் சொன்னான். அதான் வந்திருக்கிறேன்.’ இதுல என்னய்யா அப்படி பெருசா தெரியுது அறிவு, ஆற்றல், அடக்கம் இன்ன பிற? எதுக்கு இப்படி ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறாரு இந்த இராமரு? எனக்கு ஒன்றே ஒன்றுதான் தட்டுப்படுகிறது. ‘கவ்வை இன்றாக நுங்கள் வரவு’ என்று அனுமன் சொன்னான் பாருங்கள், அதற்கான முழுப்பொருள் இப்போது விளங்கியிருக்க வேண்டும், இராமனுக்கு. ‘உங்களைப் பார்த்து பயந்துவிட்டான்’ என்று சொன்ன கணத்தில், ‘ஓகோ அதுக்குத்தான் அப்படிச் சொன்னாயா’ என்று அந்த வாக்கியத்தின் நயம் உணர்ந்திருக்கக் கூடும்.

இல்லை. இப்படி அளந்து பார்த்துவிட முடியாது இராமனை; அவன் இதயத்தை. ‘அடியனேன் உன் வேதநூல் எனத்தகைய திருவுளத்தின் குறிப்பு அறியேன்’ என்று அனுமனே, பலகாலம் பழகியபின், வீடணன் அடைக்கலப் படலத்தின் போது சொல்லப் போகிறான். அனுமனே அறிய ஒண்ணாத வேத நூல் அன்ன திருவுளத்தின் குறிப்பை நாமா கண்டுவிடப் போகிறோம்? ஒன்றே ஒன்று தெரிகிறது. இங்கே அனுமனுடைய நிலை இனம் புரியாத அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு, அறிவு அடங்கி நிற்கும், ஆனாலும் அடங்கிய நிலையிலும் தீவிரமாக வேலை செய்துகொண்டிருக்கும் நிலை. இராமனுடைய நிலையோ, அறிவின் செயல்பாட்டைக் குறித்தே சற்றும் கவலைப்படாமல், ஒற்றைச் சொல்லால் உள்ளம் அளந்து, ஒரே பார்வையில் அன்பினுக்கு ஆட்பட்டுத் தன்னுடைய முழு மனத்தையும் ஒரேயடியாக அப்படியே கொடுத்துவிட்ட நிலை. Abundant love and unconditional acceptance. இவர்கள் இப்படி இருந்தால், நம் நிலை? இவர்களை அறிவுகொண்டு அளக்க நினைத்து முற்றிலும தோற்றுப போன நிலை. வேறு என்ன சொல்வது!

அறிவு வேலை செய்துதான் ஆகவேண்டும் என்ற நிலையைத் தாண்டிய சில கணங்கள் உண்டு. ‘அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி’ என்ற இரண்டைக் காட்டிலும் ‘அகத்திலே அன்பின் ஓர் வெள்ளம்’ இன்னது என்று சொல்லத் தெரியாதபடி ஆட்கொள்ளும். அப்படிப்பட்ட அன்பிலே கட்டுண்டார்கள் ஆண்டவனும், அடியவனும். ஆனாலும், அடியவன் கொஞ்சம் அதிகம் சாமர்த்தியசாலிதான். ஆண்டவனுக்கு நடிக்க ஒரு பாத்திரம் இருந்ததென்றால், அடியவனுக்கு நடக்க ஒரு பாத்திரம் இருந்தது. அடியவன் மனத்தில் இப்போது ஓடுகிற எண்ணம் என்ன, அவன் இப்போது ஆண்டவன் முன்னால் பேசுகின்ற விதம் என்ன, அமைச்சனாக அவன் ஆற்றுகின்ற செயல் என்ன? செயலுக்குக் காரணம் இருந்ததா? அவன் உள்ளக் கிடக்கை இப்போது இராமனை நோக்கி
யதா அல்லது சுக்ரீவனை நோக்கியதா?

——————–

நஅன்-ரிக்வேத வினீதஸ்ய ந அ-யஜுர்வேத சாரிணா ந அ-சாம வேத விதூஷா ஷக்யமேவம் விபாஷிதம் (மேற்படி, சுலோகம் 28)

‘ரிக் வேதத்தைப் பொருள் உணர்ந்து ஓதினாலொழிய, யஜுர் வேதத்தை மனனம் செய்திருந்தாலொழிய, சாம வேதத்தை அறிந்திருந்தாலொழிய இப்படிப் பேசுவது இயலாத ஒன்று’

————-

எவ்வழி இருந்தான் சொன்ன கவிக்குலத்து அரசன் யாங்கள்
அவ்வழி அவனைக் காணும் அருத்தியால் அணுக வந்தோம்
இவ்வழி நின்னை உற்ற எமக்கு நீ இன்று சொன்ன
செவ்வழி உள்ளத்தோனைக் காட்டுதி தெரிய’ என்றான்.

ஆதரித்து அவனைக் காண்டற்கு அணுகினிர் என்னின்
தீது அவித்து அமையச் செய்த செய்தவச் செல்வம் நன்றே.

நீங்களே அவனைப் பார்க்க வந்திருக்கிறீர்களா! அப்படியானால், அவனுடைய துன்பம் கெடுமாறு அவன் செய்த தவம் மிகப் பெரியது

கொடுங்குலப் பகைஞன் ஆகிக் கொல்விய வந்த கூற்றை
நடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனினும் நல்லது உண்டோ?

‘தன் குலத்தையே வேரறக் களைவதற்கான செயலைத் தொடங்கி, தனக்குப் பகைவனாக வந்திருக்கும் எமனைக் கண்டு (தன்னை அழிக்க எண்ணியிருப்பவனைக் கண்டு) நடுநடுங்கிக் கிடப்பவர்களுக்கு அபயம் அளிப்பதை விடவும் பெரிய அறம் ஒன்று உண்டா?’ எங்களைக் காப்பது உங்களுக்கு எளிதான செயல் அல்லவா? ‘இமைப்பு இலாதோர் தம்மையே முதல் இட்டு ஆன்ற சராசரம் சமைந்த ஆற்றல் மும்மை ஏழ் உலகும் காக்கும் முதல்வர் நீர்.’ தேவர்கள் முதற்கொண்டு இந்த அண்ட கோளத்தில் அசைகின்ற, அசையாத (சர, அசர) எல்லாவற்றையும் காக்க வல்லவர் நீங்கள். எம்மைக் காத்தல் உங்களுக்கு மிகவும் எளிய ஒன்று.

இவர்களை உற்று நோக்கியபடி நடந்து வந்தானே அப்போது,

காய் எரி கனலும் கற்கள் கள்ளுடை மலர்கள் போல்
தூய செங்கமலப் பாதம் தோய்தொறும் குழைந்து தோன்றும்’

வெய்யிலில் கிடக்கின்ற காரணத்தால் நெருப்பைப் போல் சுடுகின்ற கற்கள், இவர்கள் பாதம் பட்டதும் (இவர்களுடைய பாதத்துக்கு) தேன் நிறைந்த மலர்களைப் போல் குழைந்து போகின்றனவே’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டானல்லவா, இந்த இரண்டு தருணங்களிலும் தாளையும், தோளையும் கவனித்தான். இப்படி கவனித்ததை இங்கே சொல்லவில்லை. அடுத்த காட்சியில் சுக்ரீவனிடம் சொல்லப் போகிறான்.

சங்கு சக்கரக் குறி உள தடக் கையில் தாளில்
எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை
செங்கண் விற்கரத்து இராமன், அத் திரு நெடுமாலே.
இங்கு உதித்தனன் ஈண்டு அறம் நிறுத்துதற்கு இன்னும்.

அவர்களுடைய கையிலும், பாதத்திலும் சங்கு, சக்கரக் குறிகள் உள்ளன. இப்படி ஒரு இலக்கணத்தோடு வேறு யாரும் இல்லை. இருக்கவும் முடியாது. சிவந்த (தாமரை போன்ற) கண்களை உடைய இராமன் வேறு யாரும் இல்லை. அந்த நெடுமாலேதான். அறத்தை நிலை நிறுத்துவதற்காகப் பிறந்திருக்கிறான்.

ததா ச சுமஹாப்ராஞ்ஞா ஹனுமான் மாருதாத்மஜா
ஜகாம ஆதாயதெள வீரெள ஹரி ராஜாய ராகவவ்

(வா. இரா. கிஷ்கிந்த காண்டம், சர்க்கம் 4, சுலோகம்)
அதன் பிறகு மிகுந்த புத்திமானும், வாயுவின் மகனுமான அனுமன் அந்த இரண்டு இராகவர்களையும் (இராம இலக்குவர் இருவருமே இரகு குலத்தவர், ஆகவே இருவருமே இராகவர்கள்) குரங்குகளுக்கு அரசனிடத்தில் அழைத்துச் சென்றான்.

எப்படி அழைத்துச் சென்றான்?

பிக்க்ஷ¤ ரூபம் பரித்யஜ்ய வானரம் ரூபம் அஸ்திதா
ப்ரிஷ்டம் ஆரோப்ய தெள வீரெள ஜகாம கபிகுஞ்சரா.

தான் மேற்கொண்டு வந்த பிரமசரிய உருவத்தை விட்டுவிட்டு, தன்னுடைய குரங்கு உருவத்தோடு, அந்த இரண்டு வீரர்களையும் தன் முதுகிற் சுமந்தவாறு சுக்ரீவனை நோக்கிச் சென்றான் குரங்குளில் யானை போன்ற (பேருருவம் கொண்ட) அனுமன்.

கிம் அர்த்தம் த்வம் வனம் கோரம் பம்ப்பா கானன மந்திதம்?
ஆகத ஸானுஜொ துர்கம் நானா வ்யால ம்ருகாயுதம்.
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 4, சுலோகம் 4)

என்ன காரணத்துக்காக பலவிதமான ஆபத்தான மிருகங்கள் உலவக் கூடியதும் பம்பைக் கரையில் இருப்பதுமான இப்படிப்பட்ட ஆபத்தான வனத்தில் உங்களுடைய தம்பியுடன் வந்திருக்கிறீர்கள்?
‘ஆபத்தான மிருகங்கள் நிறைந்ததும் பம்பைக் கரையில் உள்ளதுமான வனம். இந்த வனத்தில் உங்களுடைய தம்பியையும் கூட அழைத்துக்கொண்டு என்ன காரணத்துக்காக வந்திருக்கிறீர்கள்?

விதிதாநெள குணா வித்வான்! சுக்ரீவஸ்ய மஹாத்மனா
தமேவ சாவா மார்க்காவ சுக்ரீவம் ப்லவகேஷ்வரம்.
(மேற்படி, சர்க்கம் 3, சுலோகம் 37)

பண்டிதரே! சுக்ரீவன் என்ற அந்தப் பெருங்குணசாலியின் தன்மைகளை நாங்கள் அறிவோம். (விண்ணெங்கும்) தாவித் திரிவதான குரங்குகளின் அரசனான அவனைக் காணவே வந்திருக்கிறோம்.

யார் என விளம்புகேன் நான் எம் குலத் தலைவற்கு உம்மை,
வீர நீர் பணித்திர் என்றான் மெய்மையின் வேலி போல்வான்.

‘யார் வந்திருக்காங்கன்னு சொல்லட்டும் எங்க தலைவருக்கு? எனக்கு என்ன உத்தரவு?’ என்று கேட்டானாம், உலகத்தில் வாய்மையைக் காப்பதற்காக இட்ட வேலியைப் போன்றவனான அனுமன்.

தஸ்யஸ்ய வசதோ அரண்யே நியத்ஸ்ய மஹாத்மனா
ராவணேன ஹ்ரிதா பார்யா ஸ த்வம் ஷரணம் ஆகதா.
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 5, சுலோகம் 6)

காட்டிலே நெறியான வாழ்க்கை மேற்கொண்டிருந்த இந்த மகாத்மாவின் மனைவியை இராவணன் கவர்ந்து சென்ற காரணத்தால், உன்னைச் சரண்புகும் பொருட்டு இங்கே வந்திருக்கிறான்.

யானும் என் குலமும் இவ் உலகும் உய்ந்தனம் எனா, மானவன் குணம் எலாம் நினையும் மதியினான்.’ நான் உய்ந்தேன்; என் குலம் உய்ந்தது; நாங்கள் மட்டுமில்லை இந்த உலகமே உய்ந்தது என்றவாறு மனிதனாகத் தோன்றிய இராமனின் நல்ல குணங்களை எல்லாம் சிந்தித்தவாறு சுக்ரீவன் இருந்த இடத்திற்குச் சென்றான்.

மேலவன் திருமகற்கு உரைசெய்தான்.’ சூரியனின் மகனான சுக்ரீவனிடத்தில் சொன்னான். என்ன சொன்னான்? ‘விரைசெய் தார் வாலி என்ற அளவிலா வலியினான் உயிர்தெறக் காலன் வந்தனன்.’ மணமிகுந்த பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்த, அளவில்லாத வலிமை உடையவனான வாலியைக் கொல்வதற்கான எமன் வந்திருக்கிறான். ‘இடர்க் கடல் கடந்தனம்.’ நாம் நம்முடைய துன்பக் கடலைக் கடந்தாகிவிட்டது.

மேலவன் திருமகற்கு உரைசெய்தான் விரைசெய்தார்
வாலிஎன்ற அளவிலா வலியினான் உயிர்தெறக்
காலன் வந்தனன் இடர்க்கடல் கடந்தனம் எனா
ஆலம் உண்டவனின் நின்று அரு நடம் புரிகுவான்.

‘நான் வாழ்ந்தேன்; என் குலம் வாழ்ந்தது, இந்த உலகமே வாழ்ந்தது’ என்று எண்ணியவாறு வந்தவன் என்ன காரணத்துக்காக அவ்வாறு எண்ணினான் என்பது முதல் மூன்றடிகளில் வெளிப்பட்டது. ஏன்? வாலியின் உயிர் கவர்வதற்கு எமன் வந்துவிட்டான். ‘நான் வாழ்ந்தேன், என் குலம் வாழ்ந்தது’ என்பதோடு நிற்காமல் ‘இந்த உலகமும் வாழ்ந்தது’ என்று எண்ணிய காரணத்தால் வாலியின் தன்மை என்ன என்பதும், என்ன காரணத்துக்காக அவன் கொல்லப்படத் தகுந்தவனே என்பதும் கோடிகாட்டப்படுகின்றன.

மண்உளார் விண்உளார் மாறுளார் வேறுளார்
எண்உளார் இயல்உளார் இசைஉளார் திசைஉளார்
கண்உளார் ஆயினார்; பகைஉளார், கழிநெடும்
புண்உளார் ஆருயிர்க்கு அமுதமே போல் உளார்.

அப்பா சுக்ரீவா! பயந்து போனாயே. இவர்கள் வாலி அனுப்பியவர்களோ என்று நடுங்கினாயே. இவர்கள் நீ நினைத்ததைப் போல் இல்லை. இவர்கள் யார் தெரியுமா? இந்த மண்ணில் இருப்பவர்கள், அந்த விண்ணில் இருப்பவர்கள், இந்த இரண்டு உலகங்களுக்கும் மாறான பாதாள உலகத்தில் இருப்பவர்கள், இந்த மூன்றையும் தவிர்த்த உலகங்களில் உள்ளவர்கள், அத்தனை பேர்களின் எண்ணத்திலும், செயலிலும், கண்களிலும் உள்ளவர்கள். யாரெல்லாம் பகைவரை உடையவர்களாக இருக்கிறார்களோ, யாருக்கெல்லாம் பகைவரால் துன்பம் நேர்ந்திருக்கிறதோ, யாரெல்லாம் பகையாலே உடலும் உள்ளமும் புண்பட்டிருக்கிறார்களோ, அப்படிப்பட்டவர்களின் உயிர்களுக்குள் ஊற்றப்படும் அமுதம் போன்றவர்கள்.

சூழிமால் யானையார் தொழு கழல் தயரதன்
பாழியாலர் உலகெலாம் ஒருவழிப் படரவாழ்
ஆழியான் மைந்தர்; பேர் அறிவினார்; அழகினார்;
ஊழியார்; எளிதின் நிற்கு அரசு தந்து உதவுவார்.

அழுகின்ற குழந்தைக்கு மிட்டாய் தருவதைப் போல் செய்தியை ஒவ்வொன்றாக எடுத்து வைக்கிறான் அனுமன். அவர்கள் யார் தெரியுமா? பெரிய பெரிய யானைப் படையை உடைய அரசர்களெல்லாம் தொழுது வணங்கியவனான சக்ரவர்த்தி, தசரதன் தெரியுமில்லையா உனக்கு? இந்த உலகம் முழுவதையும் தன் வலிமையால், தன் குடைக் கீழ் வாழும்படிச் செய்த, ஆணைச் சக்கரத்தை உடையவன் இல்லையா அந்த தசரதன்? அவனுடைய மைந்தர்கள் இவர்கள். என்னா அறிவுள்ளவங்க தெரியுமா? எவ்ளோ அழகா இருக்காங்க தெரியுமா? சரி. அத விட்டுவிடுவோம். இவர்கள் நெறிப்படி நடப்பவர்கள். அறத்தைக் கைக்கொண்டவர்கள். மிக எளிதில் உனக்கு அரசைப் பெற்றுத் தருவார்கள்.

காதிசேய் தரு நெடுங் கடவுள் வெம் படையினார்.’ விஸ்வாமித்திரர் பல தெய்வப்படைகளை இவர்களுக்குத் தந்திருக்கிறான். தவறாத சக்தி உடைய அத்திரங்கள் இவர்களிடத்தில் உண்டு

மாயையால் மதிஇலா நிருதர்கோன் மனைவியைத்
தீயகான் நெறியின் உய்த்தனன்; அவள் தேடுவார்
நீஐயா தவம் இழைத்துடைமையால், நெடு மனம்
தூயையா உடையையால் உறவினைத் துணிகுவார்.

இவ்வளவு பேராற்றல் உடையவர்கள். சரிதான். அப்படியானால் எப்படி இந்த இராமன் தன் மனைவியைத் தொலைத்தான்? ‘மாயையால் மதிஇலா நிருதர்கோன் மனைவியைத் தீயகான் நெறியின் உய்த்தனன்.’ அது வந்து, இந்த இராவணன் இருக்கானே, புத்தி கெட்ட பய, அவன் மாயத்தோற்றம் ஒன்றை உண்டாக்கினான். மாரீசனை மாயமானாக அனுப்பினான். அவர்கள் இல்லாத சமயத்தில் சீதையைத் தன்னுடைய கொடிய வஞ்சனையால் இந்தக் காட்டு வழியில் தூக்கிச் சென்றுவிட்டான். அவளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

தனக்கு உவமை தானேயன்றி இன்னொருவன் இல்லாதவனின் சரணத்தை நாடி வந்து அடைந்தான். அப்படி நடந்து வரும்போது இவர்களைப் பார்த்தவாறே வந்தானில்லையா, அந்தத் தருணத்தில் உள்ளத்தின் அடி ஆழத்தில்
உணர்கிறான் சுக்ரீவன்:

தேறினன் அமரர்க்கு எல்லாம் தேவராம் தேவர் அன்றே
மாறி இப் பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி மன்னோ
ஆறுகொள் சடிலத்தானும் என்று இவர்கள் ஆதி
வேறுள குழுவை எல்லாம் மானுடம் வென்றதம்மா.

இவனே தேவர்களுக்கு எல்லாம் தேவன். மனிதனாக வந்து தோன்றியிருக்கிறான். சடாமுடியில் ஆற்றைத் தரித்த உருத்திரன் முதலான எல்லா தேவர்களையும், இதோ, இந்த மானுடம் வென்றுவிட்டது.

பவான் தர்ம வினீதா ச சுதபா சர்வ வத்சலா
ஆக்யாதா வாயுபுத்ரேண தத்வதோ மே பவத் குணா
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 5, சுலோகம் 9)

தாங்கள் தர்மங்களைப் பயின்றவர்; நற்செயல்களில் நாட்டம் உடையவர்; அனைவரையும் நேசிப்பவர். (அல்லது, ‘அனைவராலும் விரும்பப்படுபவர்’.) வாயு புத்திரனான அனுமன் எனக்கு உங்களுடைய குணநலன்களின் மெய்மையைச் சொல்லியிருக்கிறான்.

ரோசதே யதி மே சக்யம் பாஹ¤ ஏஸ ப்ரசாரிதா
க்ரிஹ்யதாம் பாணினா பாணி மர்யாதா பத்யதாம் த்ருவா
(மேற்படி, சுலோகம் 11)

என்னுடன் நட்பு கொள்வது உனக்குச் சம்மதமானால், இதோ உன் முன்னால் என் கரம் நீட்டப்பட்டிருக்கிறது. (நம்முடைய) இந்தத் தொடர்பு உறுதிப்படும் விதமாக உன் கரத்தால் இதைப் பற்று.

யாங்கள் உற்ற கை அறு துயரம் நின்னால் கடப்பது கருதி வந்தோம்
ஐய! நின் தீரும் என்ன … … … … … … … … … … … …

‘செயல்களற்று நாங்கள் நிற்கும் விதத்தில் எங்களைப் பீடித்துள்ள துயரத்தை உன்னால் (உன் துணையுடன்) கடப்பதற்காக வந்துள்ளோம். இந்தத் துயர் உன்னால் தீரும்’ என்று இராமன் சொன்னான்.

முரணுடைத் தடக்கை ஓச்சி முன்னவன் பின்வந்தேனை
இருள்நிலைப் புறத்தின்காறும் உலகெங்கும் தொடர இக்குன்று
அரண் உடைத்து ஆகி உய்ந்தேன்; ஆர்உயிர் துறக்கல் ஆற்றேன்;
சரண் உனைப் புகுந்தேன். என்னைத் தாங்குதல் தருமம் என்றான்.

தடித் தடியான கைகளை ஓங்கியபடி எங்க அண்ணன் தம்பியாகிய என்னை இருள் நிறைந்த இந்த உலகத்தின் எல்லா இடங்களிலும் துரத்தினான். என்னைப் போட்டு அடித்தான் ஐயா. என்னைக் கொல்லத் துடிக்கிறான். ஏதோ இந்த மலைப் பிரதேசத்தில் அவன் நுழைய முடியாதபடி ஒரு சாபம் இருக்கிற காரணத்தால் இங்கே ஓடிவந்து ஒளிந்துகொண்டு உயிர் வாழ்கிறேன். ‘ஆருயிர் துறக்கல் ஆற்றேன்’. ஐயா, இப்படிப்பட்ட அச்சத்தோடு வாழ்வதை விடவும் உயிரை விட்டுடலாம்னு பாத்தேன். என்னால முடியல. சாகலாம்னாலும் முடியல. நான் என்ன பண்ணுவேன்! ஐயா, உங்களை நான் சரண் புகுந்தேன். என்னைக் காப்பாற்றுவதே உங்கள் தருமம்.’

விருந்தும் ஆகி அம் மெய்ம்மை அன்பினோடு
இருந்து நோக்கி, நொந்து, இறைவன் சிந்தியா
பொருந்து நன் மனைக்கு உரிய பூவையைப்
பிரிந்துளாய் கொலோ நீயும் பின் என்றான்.

விருந்துண்டு அமர்ந்திருந்த போது, தன் மீது பொழியப்பட்ட அன்பில் மனம் குளிர்ந்து, சுற்றிலும் (மறுமுறை) நோக்கினான். சிந்தித்தான். மனம் நொந்து சிந்தித்தான். ஏன் மனம் நொந்தான்? இங்கே பரிமாறியது முழுக்க முழுக்க ஆண்கள். சுக்ரீவனுடைய மனைவி இங்கே இருந்திருக்க வேண்டுமே! அவள் ஏன் கண்களில் தட்டுப்படவில்லை? கேள்வி உறைக்கிறது. ‘என்னப்பா சுக்ரீவா, உன் மனைவியைக் காணோமே, எங்கே அவர்கள்? இங்கே இருக்கிறார்களா? இல்லாவிட்டால் என்னைப் போல நீயும் உன் மனைவியைப் பிரிந்திருக்கிறாயா?’ என்று கேட்டான்.

என்ற வேலையில் எழுந்து மாருதி
குன்றுபோல நின்று, இருகை கூப்பினான்.
‘நின்ற நீதியாய்! நெடிது கேட்டியால்.
ஒன்று யான் உனக்கு உரைப்பது உண்டு எனா.

இராமன் அப்படிக் கேட்ட உடனே குன்று எழுந்து நிற்பது போல் எழுந்தான் மாருதி. இரண்டு கைகளையும் கூப்பினான். வணக்கமாகச் சொன்னான். ‘நிலைத்த நீதியை உடையவனே! நான் உனக்குச் சொல்ல வேண்டியது ஒன்று உண்டு. கொஞ்சம் நீளமான செய்தி அது. கேட்டருள வேண்டும்.’

மற்று இனி உரைப்பது என்னே? வானிடை மண்ணில் நின்னைச்
செற்றவர் என்னைச் செற்றார்; தீயரே எனினும் உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார்; உன் கிளை எனது; என் காதல்
சுற்றம் உன் சுற்றம்; நீ என் இன்னுயிர்த் துணைவன் என்றான்

இன்னும் வேறு என்ன சொல்வது? என்ன சொல்லவேண்டி இருக்கிறது? ஆகாயத்தில் என்றாலும் சரி, பூமியில் என்றாலும் சரி; உன் மீது பகைகொண்டு உன்னை வருத்தியவர்கள் யாரோ, அவரெல்லாம் என்னை வருத்தியவர்கள். உனக்கு உற்றவர் – அது எப்படிப்பட்ட கெட்டவர்களாக இருந்தாலும் சரி – எனக்கும் உற்றவர். உனக்கு யாரெல்லாம் (நேசமுடைய) உறவினர்களோ, அவர்களெல்லாம் எனக்கும் உறவினர்கள்தாம். என் மீது நேசம் பாராட்டும், நான் நேசம் பாராட்டும் என் உறவெல்லாம் உன்னுடைய உறவினரே. நீ என் இன்னுயிர்த் துணைவன். என் சகோதரன்.

உருமை என்று இவற்கு உரிய தாரமாம்
அருமருந்தையும் அவன் விரும்பினான்
இருமையும் துறந்து இவன் இருந்தனன்.
கருமம் இங்கு இது, எம் கடவுள்! என்றனன்.

இதோ இந்தச் சுக்ரீவன் இருக்கிறானே, இவனுக்கு உருமை (ருமா) என்ற பெயருடைய மனைவி உண்டு. அந்தப் பெண்ணையும் வாலி அபகரித்துக்கொண்டான். அரசன் என்ற நிலையில் கொஞ்ச காலம் இருந்தவனேனும், அரசை அண்ணனிடம் திருப்பினாலும் இளவல், இளவரசன் என்ற நிலையில் இருக்கவேண்டியவன் இவன். அதையும் இழந்தான். தன் வாழ்வின் ஆதாரப் பற்றுக்கோடான தன் மனைவியையும் அண்ணனிடத்தில் பறிகொடுத்தான். இதோ, காட்டில் வசிக்கிறான். சாமி! இதுதான் நடந்தது.

ஈரம் நீங்கிய சிற்றவை சொற்றனள் என்ன
ஆரம் வீங்கு தோள் தம்பிக்குத் தன் அரசு உரிமைப்
பாரம் ஈந்தவன், பரிவிலன் ஒருவன் தன் இளையோன்
தாரம் வெளவினன் என்ற சொல் தரிக்குமாறு உள்ளதோ?

கதிரவன் சிறுவன்ஆய கனக வாள் நிறத்தினானை
எதிர்உறத் தழுவி, நட்பின் இனிது அமர்ந்து, அவனின், நீண்ட
வெதிர் பொரு தோளினாளை நாடுதல் விழுமிது என்றான்.
அதிர் கழல் வீரர் தாமும் அன்னதே அமையும் என்றார்.

ஒளிவிடும் பொன் போன்ற நிறத்தை உடையவனும் சூரியனின் புத்திரனுமான சுக்ரீவனுடைய நட்பைப் பெற்று, அவன் மூலமாகச் சீதையைத் தேடுவதே சிறந்தது என்று கபந்தன் என்ற பெயரில் சாபம் பெற்று வாழ்ந்தவனான தனு என்ற கந்தர்வன் சொன்னான். அப்படியே செய்கிறோம் என்று இருவரும் அவனுக்குச் சொன்னார்கள்.

வாலினோ மே மஹாபாக பய ஆர்தஸ்ய அபயம் குரு
கர்தும் அரஹசி காகுத்ஸ்தா பயம்மே ந பவேத் யதா
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 5, சுலோகம் 23 பின்பாதி, 24 முன்பாதி)

‘வாலியால் துன்புறுத்தப்பட்டு, அவனை அஞ்சி வாழும் என்னுடைய இந்த அச்சத்தை மாற்று. எனக்கு அபயம் நல்கு. அவ்வாறு செய்வதே உனக்குப் பொருத்தமானதாகும்’ என்ற சுக்ரீவன் வாய்மொழிக்கு விடையாக,

உபகார பலம் மித்ரம் விதிதம் மே மஹாகபி
வாலினாம் தம் வதிஷ்யாமி தவ பார்யா அபஹாரிணம்
(மேற்படி, சுலோகம் 25 பின்பாதி, 26 முன்பாதி)

‘நட்புக் கொள்வதன் பலன் என்னவென்றால், (ஒருவருக்கொருவர்) உதவியாயிருத்தலே. வலிய வானரனே! உன் மனைவியை அபகரித்தவனான வாலியை நான் கொல்கிறேன்..’

உலகம் ஏழினோடு ஏழும் வந்து அவன் உயிர்க்கு உதவி
விலகும் என்னினும் வில்லிடை வாளியின் வீட்டி
தலைமையோடு நின் தாரமும் உனக்கு இன்று தருவேன்
புலமையோய்! அவன் உறைவிடம் காட்டு என்று புகன்றான்.

பதினான்கு உலகங்களில் வாழ்பவர்களும் ஒன்று கூடி, அவனுக்கு உதவியாக நின்று என்னைத் தடுத்தாலும், என்னுடைய வில்லில் அம்பு தொடுத்து, அவனைக் கொன்று, அரசையும் உன் மனைவியையும் ஒரு சேர உனக்கு மீட்டளிப்பேன். இன்று. இப்போது. இதே நிமிடத்தில் உனக்கு உன் அரசும், உன் மனைவியும் கிடைத்தாகிவிட்டது என்று கொள். அவன் எங்கே இருக்கிறான், அதை எனக்குக் காட்டு. அவன் இருக்கும் இடத்துக்கு என்னை அழைத்துச் செல்.

எழுந்து பேர் உவகைக் கடற் பெருந் திரை இரைப்ப
அழுந்து துன்பினுக்கு அக்கரை கண்டனன் அனையான்
விழுந்ததே இனி வாலிதன் வலி என விரும்பா
மொழிந்த வீரற்கு, ‘யாம் எண்ணுவது உண்டு’ என மொழிந்தான்.

‘வாலியை இப்போதே அழிக்கிறேன். அவன் எங்கிருக்கிறான் காட்டு’ என்று இராமன் எழுந்த அளவில் மகிழ்ச்சியாகிய கடல் பெரிய அலைகளுடன் பொங்கி எழ, இது வரை வாடிக் கொண்டிருந்த துன்பக் கடலுக்கு அக்கரை கண்ணில் தென்பட்டவனாக, ‘வாலியின் வலிமை இத்தோடு தொலைந்தது’ என்றெண்ணி ஆர்ப்பரித்து, விரும்பி நிற்கும் அனுமன் முதலான வானர வீரருக்கும், இராமனுக்கும் ‘எனக்குக் கொஞ்சம் யோசனையாக இருக்கிறது’ என்று சொன்னான்.

மாயாவீ நாம தேஜஸ்வீ பூர்வஜோ துந்துபே சுதா
தேன தஸ்ய மஹத் வைரரம் வாலினா ஸ்த்ரீ க்ரிதம் புரா
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 9, சுலோகம் 4)

துந்துபிக்கு முன் தோன்றியவனான (அவனுடைய மூத்த சகோதரனான என்றும் பொருள் கொள்ளலாம்) மாயாவி என்றொரு அரக்கன் இருந்தான். அவனுக்கும் வாலிக்கும் ஒரு பெண் தொடர்பாகப் பகை இருந்தது.

கதம் ச தர்மம் ஜானீதே யேன ப்ராத்ரா துராத்மனா
யுத்தாய அபிநியுக்தேன பிலஸ்ய பிஹிதம் முகம்.
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 55, சுலோகம் 4)

தன்னுடைய சகோதரனால் குகையின் வாயிலைக் காவல் காக்குமாறு ஆணையிடப்பட்டிருந்த இவன், எந்த அடிப்படையில் தான் செய்வது சரி என்ற முடிவுக்கு வந்து, குகையின் வாயிலைப் பாறை கொண்டு அடைத்தான்? இவன் செய்தது எந்த தர்மத்தின்பாற் பட்டது? எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வந்தான்?

சத்யாத் பாணி க்ரிஹீதா ச க்ரிதா கர்மா மஹாயஷா
விஸ்மிரிதோ ராகவோ யேன ச கஸ்ய சுக்ரிதம் ஸ்மரெத்
(மேற்படி, சுலோகம் 5)

இப்படிப்பட்வனைத்தான் இராமன் கைப்பற்றி நட்புப் பிரதிக்ஞை செய்தான். அண்ணனுக்கு இப்படி ஒரு தீங்கிழைத்தவன் இவன் என்பதை இராமன் கூட கருத்தில் கொள்ளவில்லை அல்லவா? (சொல்லுக்குச் சொல் செய்யப்பட்ட மொழிபெயர்பன்று; கருத்து இதுதான்.)

ஏதத் அஸ்ய அசமம் வீர்யம் மயா ராம ப்ரகாஷிதம்
கதம் தம் வாலினாம் ஹன்தும் சமரே ஷக்ஸ்யசே ந்ருப
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 11, சுலோகம் 68)

என்று இராமனைக் கேட்கிறான் சுக்ரீவன். ‘வாலியின் இணையற்ற வலிமை இத்தகையது. இப்படி இருக்கும்போது, இராமா, நீ எவ்வாறு அவனைப் போரிட்டுக் கொல்வாய்?’ இந்தக் கேள்வி காதில் பட்டதுதான் தாமதம், இலக்குன் சிரித்தான். கோபச் சிரிப்பு என்று சொல்லவேண்டிய அவசியமே இல்லை. அவனுடைய சிரிப்பில் சினம் தெரிந்ததோ இல்லையோ, அவன் கேள்வியில் எரிச்சல் தெரிகிறது.

ததா ப்ருவாணம் சுக்ரீவம் ப்ரஹஸன் லக்ஷ்மணோ அப்ரவீத்.
கஸ்மின் கர்மணி நிர்வ்ரிதே ஷ்ரத்தத்ய வாலினம் வதம்?
(மேற்படி, சுலோகம் 69)

சுக்ரீவன் இவ்வாறு சொல்லவும் இலக்குவன் சிரித்தான். ‘என்ன காரியம் செய்து காட்டினால் (இராமனால்) வாலி வதம் சாத்தியம் என்று நம்புவாய்,’ என்று கேட்டான்.

என்று தானும் அவ்வழி இரும் பிலம்
சென்று முன்னவன் தேடுவேன்; அவற்
கொன்றுளான் தனைக் கொல ஒணாது எனின்
பொன்றுவேன் எனா புகுதல் மேயினான்.’

‘அண்ணன் இறந்திருக்கத்தான் முடியும். இல்லாவிட்டால் இத்தனை மாதங்கள் கழித்தும் வெளி வராமல் இருக்க மாட்டான். ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது. நானும் இந்தக் குகைக்குள்ளே போகின்றேன். என் அண்ணனுக்கு என்ன ஆயிற்று என்று பார்ப்பேன். அவனைக் கொன்றவனோடு நானும் போர் புரிவேன். என் அண்ணனையே வீழ்த்திய அவனை என்னால் வீழ்த்த முடியுமா என்பது எனக்குத் தெரியாது. நான் ஒரு வேளை வெல்லலாம். அப்படி இல்லாவிட்டால் நானும் எங்க அண்ணனோட சேந்து செத்துப் போறேன்’ என்றவாறு குகைக்கு உள்ளே செல்லத் தொடங்கினான்.

தடுத்து வல்லவர் தணிவு செய்து நோய்
கெடுத்து மேலையோர் கிளத்து நீதியால்
அடுத்த காவலும் அரிகள் ஆணையால்
கொடுத்தது உண்டு…….

அன்ன நாளில் மாயாவி அப்பிலத்து
இன்ன வாயிலூடு எய்தும் என்ன யாம்
பொன்னின் மால் வரைப் பொருப்பு ஒழித்து வேறு
உன்னு குன்றெலாம் உடன் அடுக்கினேம்

அப்போதையின் அயர்வாறிய அனுமன் அழல் விழியா
பொய்ப்போர் சில புரியேல் இனி எனவந்திடை புகுந்தான்
கைப்போதகம் என முந்தவன் கடுந்தேர் எதிர் நடந்தான்
‘இப்போர் ஒழி. இனிப்போர் உள. இவைகேள்’என இசைத்தான்.

தளர்ச்சி நீங்கப் பெற்ற அனுமன் சினத்தால் நெருப்பெரியும் விழிகளோடு, (தரைமேல் நின்றிருந்த) இலக்குவனுக்கும் (தேரேறி நின்றிருந்த) இராவணனுக்கும் இடையில் வந்து குதித்தான். யானையைப் போல இராவணன் தேருக்கு எதிரில் நடந்து வந்தபடி, ‘ஏய் எல்லாம் போதும்டா! சும்மா பொய்யாட்டம் ஆடாதே,’ என்றான். ‘போங்காட்டம் ஆடாதே’ என்று சின்னப் பசங்க சொல்ல மாட்டாங்களா, அந்த மாதிரி. ‘பொய்ப்போர் சில புரியேல்.’ ‘அது கிடக்கட்டும். இந்தப் போரை விடு; இன்னும் எத்தனையோ போர் இருக்கிறது. அப்ப காட்டு உன் வீரத்தை. இப்ப நான் சொல்வதைக் கேள்.’

என்றாலும் இன்று இழிவு உன்வயின் எய்தும் என இசையா
நின்றான் அவன் எதிரே உலகு அளந்தான் என நிமிர்ந்தான்.

‘ஆனாலும் கூட, கண்ணு, இன்னிக்கு உனக்கு ஊதிட்டாங்க.’ ‘இன்று உனக்கு எல்லா இழிவும் ஒன்றாக வந்து சேரப் போகிறது,’ என்று சொல்லிக்கொண்டே உலகளந்த திரிவிக்கிரமனைப் போல் தன் பேருருவை எடுத்தான்

பரக்கப் பல உரைத்தென் படர் கயிலைப் பெரு வரைக்கும்
அரக்குற்று எரி பொறிக்கண் திசைக் கரிக்கும் சிறிது அனுங்கா
உரக் குப்பையின் உயர்தோள் பல உடையாய் உரன் உடையாய்.

நீள நெடுக பலவாறாகச் சொல்லவே தேவையில்லை. வலிமை என்பதன் குவியல் என்று சொல்லக் கூடிய வரிசையான பல தோள்களை உடையவன் நீ!

என்தோள்வலி அதனால்எடுத்து யான்எற்றவும் இறவா
நின்றாய்எனின் நீபின்எனை நின்கைத்தல நிரையால்
குன்றேபுரை தோளாய்மிடல் கொடுகுத்துதி குத்தப்
பொன்றேன்எனின் நின்னோடெதிர் பொருகின்றிலென் என்றான்.

ராகவஸ்ய வசஹ ஷ்ருத்வா ஸம்பரிஷ்வஜ்ய பூஜ்ய ச அபிவாத்ய ச ராமாய யயெள ஸெளமித்ரி ராகவே 51

ஸ ராவணம் வராண ஹஸ்தபாஹ¤ம் ததர்ஷ பீமோத்யததீப்த சாபம் ப்ரசாதயந்தம் ஷரவ்ருஷ்டி ஜாலைஸ்தான் வானரான் பின்னவிகீர்ண தேஹான் 52

தமாலோக்ய மஹாதேஜா ஹனுமான் மாருதாத்மஜஹ நிவார்ய ஷரஜாலானி விதுத்ராவ ச ராவணம் 53
ரதம் தஸ்ய ஸமாஸாத்ய பாஹ¤முத்யம்ய தக்ஷ¢ணம் த்ராசயன் ராவணம் பீமான் ஹனுமான் வாக்யம் அப்ரவீத் 54

தேவ தானவ கந்தர்வைர்யஷைஸ்ச சஹ ராக்ஷஸைஹி அவத்யத்வம் த்வயா ப்ராப்தம் வானரேப்யஸ்த்து தே பயம் 55

ஏஷ மே தக்ஷ¢ணோ பாஹ¤ஹ¤ பஞ்சஷாகஹ சமுத்யதஹ விதமிஷ்யதி தே தேஹே பூதாத்மானம் சிரோஷிதம் 56
(வா. இரா. யுத்த காண்டம், சருக்கம் 59, சுலோகம் 51-56)

என்ன அறிவு! என்ன ஆற்றல்! என்ன கூர்த்த மதி! சுந்தர காண்டத்தில் சீதையை முதன் முதலாகப் பார்த்த போது, இவள்தான் தான் தேடி வந்திருக்கும் பெண்ணா என்று உறுதி செய்துகொள்வதற்காக எப்படியெல்லாம் கவனி க்கிறான் அனுமன்! தனிமை, அரக்கர் சூழ்ந்திருந்த தன்மை, கசங்கிய ஆடை, அழுக்கடைந்த மேனி, அழுத கண்கள் என்றிவற்றையெல்லாம் கவனித்த பின்னும் வேறு சில அடையாளங்களையும் கவனித்தான் என்று வால்மீகி சொல்கிறார்:

தாம் சமீக்ஷ்ய விசாலாக்ஷ¢ம் ராஜபுத்ரீம் அநிந்திதாம் தர்க்யாம் ஆச சீதா இதி காரணை உபபாதயன்

(வா. இரா. சுந்தர காண்டம், சருக்கம் 15, சுலோகம் 40)

தான் பார்க்கின்ற அந்தக் குற்றமற்ற (நிந்திக்கத் தக்க ஏதுமற்ற) அரச குமாரி, சீதையேதான் என்பதனை தர்க்க ரீதியாகச் சிந்தித்து, காரணங்களை ஆய்ந்துணர்ந்து அறிந்தான்.

உத்திஷ்ட நரஷார்த்தூல தீர்க்கபாஹோ! த்ருதவ்ரத கிமாத்மானம் மகாத்மானம் ஆத்மானம் நாவ புத்யதே

(வா. இரா. யுத்த காண்டம், சருக்கம் 82, சுலோகம் 43)

நீண்ட வலிய கரங்களையும், கூர்த்த மதியையும் உடைய மனித வேங்கையே! நீயே எல்லா ஆன்மாக்களுக்கும் மகான்மா என்பதை ஏன் உணர மறுக்கிறாய்?

சம்நிவார்ய பரானிகம் அப்ரவீத் தான் வநெள கசஹ

ஹனுமான் சம்நிவர்தத்வம் நஹ ஸாத்யம் இதம் பலம் த்யக்த்வா ப்ராணான் விசேஷ்டந்தோ ராமப்ரிய சிகீர்ஷவஹ

என்நிமிதம் ஹி யுத்யாமோ ஹதா சா ஜனகாத்மஜா இமம் அர்த்தம் ஹி விக்யாப்ய ராமம் சுக்ரீவமேவச

(வா. இரா. யுத்த காண்டம், சருக்கம் 82, சுலோகம் 20 (பின் அரையடி), 21, 22 )

எதிர்த்து ஆர்த்தெழுந்து கொண்டிருந்த வானரப் படையை அடக்கினான் அனுமன். ‘திரும்பிச் செல்லுங்கள். இந்த அரக்க சேனை இனிமேல் வெல்லப்பட வேண்டிய ஒன்றன்று. யாருக்காக நாம் உயிரைப் பணயம் வைத்து, பெரும் அபாயங்களை மேற்கொண்டு தீவிரமாகப் போராடினோமோ, எந்த இராமனுடைய உள்ளம் மகிழ்வதற்காக இவற்றைச் செய்தோமோ, அவனுடைய மனத்துக்கினிய ஜனகபுத்ரி கொல்லப்பட்டுவிட்டாள். இதனைப் போய் இராமனிடமும், சுக்ரீவனிடமும் தெரிவிப்போம்; அதன் பின்னர் அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி செய்வோம்.’

‘தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு முனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல், என்றும் அவண் உறைவிடம் ஆம்; ஆதலினால், அம் மலையை இறைஞ்சி ஏகி, பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திரு நதி பின்பு ஒழிய, நாகக் கன்று வளர் தடஞ் சாரல் மயேந்திர மா நெடு வரையும், கடலும், காண்டிர்.

அந்தப் பொதிய மலையில் அகத்திய முனிவன் தமிழ்ச் சங்கம் வைத்திருக்கிறான். அந்த மலை என்றும் அவன் வாழ்வதற்கு உரிய இடம். ஆகையால் அந்த மலையை (தொலைவில் நின்றபடி) வணங்கிவிட்டுத் தொடர்ந்து செல்லுங்கள். பொன் துகள் நிரம்பிய பொருநை நதி வரும். அதையும் தாண்டியனால் யானைக் கன்றுகள் நி றைந்த மயேந்திர மலையை அடைவீர்கள்.

இராமன் முடி சூடும் சமயத்தில் நிகழ்கிறது இது.

இராமன் சற்று நேரத்துக்கு முன்னால்தான் சானகிக்கு ஒரு முத்து மாலையை அணிவித்திருக்கிறான். அந்த மாலையைக் கைகளால் நெருடியவண்ணம் காட்சியளிக்கிறாள் வைதேகி.

அவேக்ஷமாணா வைதேஹீ ப்ரததெள வாயுஸ¥னவே அவமுச்யாத்மனஹ கண்டாத்தாரம் ஜனகநந்தினி

அவைக்ஷத ஹரீன் ஸர்வான் பர்த்தாரம் ச முஹ¤ர்முஹ¤ஹ¤ தாமிங்திதக்னஹ ஸம்ப்ரேக்ஷ்ய பபாஷே ஜனகாத்மஜாம்

ப்ரதேஹி ஸ¤பகே ஹாரம் யஸ்ய துஷ்டாஸி பாமினி அத ஸா வாயுபுத்ராய தம் ஹாரமஸிதேக்ஷணா

தேஜோ த்ருதிர்யஷோ தாக்ஷ்யம் ஸாமர்த்யம் விநயோ நயஹ பெளருஷம் விக்ரமோ புத்திர்ய யஸ்மின்னே தானி நித்யதா

(வா. இரா. யுத்த காண்டம், சர்க்கம் 128, சுலோகம் 79-82)

அனுமன் தங்களுக்கு ஆற்றிய விலை மதிப்பிட முடியாத சேவைகளை எண்ணிய ஜனக புத்ரி, தன் கணவன் தனக்கு அணிவித்த முத்துமாலையைக் கழற்றி(க் கையில் வைப்பதா)னாள். (அவ்வாறு அந்த மாலையைக் கையில் வைத்தபடி) மீண்டும் மீண்டும் கூடியிருக்கும் வானரர்களைப் பார்ப்பதும், இராமனைப் பார்ப்பதுமாக நின்றாள். இராமன் அவளைக் கூர்ந்து நோக்கினான். ஒருவரின் செயல்களைக் கொண்டு அவரின் உள்ளத்தை அளப்பதில் வல்லவனான அவன், ‘யாருக்கு இதனை அளிக்க வேண்டும் என்று உனக்குத் தோன்றுகிறதோ அவருக்கே சந்தோஷமாகக் கொடு,’ என்று அவளிடம் சொன்னான். கரிய விழிகளைக் கொண்ட அவள், சக்தியும், உறுதியும், புகழும், திறமையும், தகுதியும், அடக்கமும், முன்னறிவும், வீர்யமும், வீரமும், விவேகமும் யாரிடத்தில் எப்போதும் ஒன்றாக உறைந்துளவோ, அந்த வாயு புத்திரனுக்கே அந்த முத்து மாலையை அணிவித்தாள்.

கம்பன் இந்தக் காட்சியை அப்படியே சுருக்கமாகப் படம் பிடிக்கிறான், ஒரே ஒரு விருத்த அளவில்.

பூமலர்த் தவிசை நீத்து, பொன் மதில் மீதிலை பூத்த தேமொழித் திருவை ஐயன் திருவருள் முகத்து நோக்க, பா மறைக் கிழத்தி ஈந்த பரு முத்த மாலை கைக் கொண்டு ஏமுறக் கொடுத்தாள், அந்நாள், இடர் அறிந்து உதவினாற்கே.

தாமரைப் பூ ஆசனத்தை விட்டுவிட்டு, பொன்னால் பொதியப்பட்ட மதில்களை உடைய மிதிலை நகரத்தில் வந்து பூத்தவளான மைதிலியை இராமன் தன்னுடைய அருள் ததும்பும் முகத்தால் நோக்கினான். மறைகளுக்கு உரியவளான கலைமகள் தந்தான, பெரிய முத்துகள் கோக்கப்பட்ட மாலையைக் கையில் எடுத்து, அவள் மிக்க இன்பத்தை அடைந்தவளாகி, அந்தநாளில் தன் துன்பங்களை அறிந்து உதவிய அனுமனுக்கு அளித்தாள்.

விடை கொடுத்த படலத்தில், அனுமனுக்கு விடை கொடுக்கும் தருணத்தில் இராமனுடைய சொல்லையும் செயலையும் உத்தரகாண்டத்தில் வான்மீகி இவ்வாறு சொல்கிறார்:

ஏவம் ப்ருவாணம் ராமஸ்து ஹநூமந்தம் வராஸநாத் உத்தாய ஸஸ்வஜே ஸ்நேஹாத் வாக்யமேத துவாச ஹ

(வா. இரா. உத்தர காண்டம், சர்க்கம் 40, சுலோகம் 20 – 24)

(‘உன்பால் எனக்குள்ள பேரன்பு என்றென்றும் நிற்கட்டும். உன்பால் எனக்குள்ள விசுவாசம் எப்போதும் நிலைக்கட்டும்.

உன்மீது எனக்கள்ள பிரேமை வேறு எந்தப் பக்கத்திலும் சிதறாமல் இருக்கட்டும். தேவதைகள் எல்லாம் எனக்கு உன் காதையைச் சொல்லிக்கொண்டே இருக்கட்டும். நான் அதனைக் கேட்டபடியே, காற்றால் சிதறுண்ணும் மேகங்களைப் போல், (உன்னைப் பிரிந்திருக்கும்) என்னுடைய ஏக்கமெல்லாம் (உன் காதையால்) சிதறுண்டு போகட்டும்’ என்றெல்லாம் வேண்டிய அனுமனுடைய பேச்சைக் கேட்ட இராமன்,)

தன் சிறந்த ஆசனத்திலிருந்து எழுந்து வந்து, அன்புடன் அனுமனைத் தழுவினான். தழுவியவாறு இதனைச் சொன்னான் என்று (பெரியோர்) சொல்கின்றனர்.

யாரை யார் தழுவினார்கள்? இராமன், அனுமனைத் தழுவினான் என்கிறார் வால்மீகி. இந்த உத்தர காண்ட நிகழ்வை, மேற்படி ‘முத்து மாலையைத் தரும் சீதையின்’ காட்சிக்கு இரண்டு விருத்தங்களுக்கு முன்னால் அமைத்தான் கம்பன். Master stroke எந்த இடத்தில் விழுகிறது என்பதைக் கவனியுங்கள்.

மாருதி தன்னை ஐயன் மகிழ்ந்து, இனிது அருளின் நோக்கி, ‘ஆர் உதவிடுதற்கு ஒத்தார், நீ அலால்? அன்று செய்த பேர் உதவிக்கு யான் செய் செயல் பிறிது இல்லை; பைம் பூண் போர் உதவிய திண் தோளாய்! பொருந்துறப் புல்லுக!’ என்றான்.

இராமன், மாருதியை மகிழ்ச்சியோடும், அருள் நிறைந்த கண்களோடும் நோக்கினான். ‘நீ செய்திருக்கும் உதவிகளை வேறு யார் செய்திருக்க முடியும்? நீ செய்திருக்கும் உதவிகளுக்குப் பிரதியாக, ஈடாக, பதிலாக, நான் உனக்குச் செய்யக் கூடிய செயல் எதுவும் இல்லை. அழகிய ஆபரணங்களை அணிந்த, என் போரின்போது (கூட இருந்தும், என்னுடன் நின்று போரிட்டும், என்னைச் சுமந்தும்) உதவிய பெருந்தோள்களை உடையவனே, நீ என்னைத் தழுவிக்கொள்வாயாக.

இந்த, ‘நான் உனக்குச் செய்யக் கூடிய செயல் என்று எதுவுமே இல்லை,’ என்பதற்கான விளக்கத்துக்கு நாம் வான்மீகத்துக்குத்தான் போக வேண்டும். மேலே நாம் காட்டியுள்ள இருபதாம் சுலோகத்தை அடுத்து வரும் நான்கு சுலோகங்கள் இவை.

ஏவமேதத் கபிஸ்ரேஷ்ட பவிதா நாத்ர ஸம்ஷயஹ சரிஷ்யதி கதா யாவதேஷா லோகே ச மாமிகா

தாவத்தே பவிதா கீர்த்திஹி ஷரீரேங்ப்ய ஸவஸ்ததா லோகாஹி யாவத்ஸ்தாஸ்யந்தி தாவத் ஸ்தாஸ்யந்தி மே கதாஹ

ஏகைகஸ்யோபகாரஸ்ய ப்ராணான் தாஸ்யாமி தே கபே ஷேஷஸ்யேஹோபகாரணாம் பவாம் த்ரிணினோ வயம்

மதக்னே ஜீரணதாம் யாது யத் த்வயோபக்ருதம் கபே நரஹ ப்ரத்யுபகாராணாமாபத்ஸ்வாயதி பாத்ரதாம்

(வா. இரா. உத்தர காண்டம், சர்க்கம் 40, சுலோகம் 21 – 24)

வானரரில் சிறந்தவனே! நீ நினைத்தபடியே நடப்பதாக. அப்படியே நடக்கும். அதில் எந்த ஐயமும் இல்லை.

இந்த உலகில் என் காதை வழங்கிவருமளவும் உன் புகழ் நிலைத்து நிற்கும். என் காதை உலகுள்ள அளவும் இருக்கும்.

நீ எனக்குச் செய்திருக்கும் பேருதவிகளில் ஒன்றே ஒன்றுக்குப் பிரதியாக ஏதேனும் தரவேண்டுமாயின் என் உயிரைத்தான் தரவேண்டியதிருக்கும். அப்படியே தந்தாலும், நீ செய்திருக்கும் மற்ற உதவிகளுக்கு எதுவும் ஈடாகத் தரமுடியாத கடனாளியாகவே நான் இருப்பேன். எனவே, உனக்கு என் இதயம் என்றென்றும் கடனாளியாகவே இருக்கட்டும். உனக்கு நான் எதையும் திரும்பச் செய்யும் நிலை தோன்றாமலே போகட்டும். (ஏனெனில், என் உதவி யாருக்குத் தேவைப்படும்? துன்பத்தில் ஆழ்பவனுக்கு. நீயோ துன்பங்களே என்றென்றும் நெருங்க ஒண்ணாதவன். உனக்கு நான் எந்தக் காலத்தில், எப்போது, என்ன உதவியைச் செய்ய முடியும்? ஆகவே, நான் உனக்கு என்றென்றும் கடன்பட்டவனாகவே இருக்க விரும்புகிறேன்.)

இந்தப் பின்னணியில், கம்பனுடைய வாக்குக்குத் திரும்புவோம். இப்போது அனுமனை, இராமன் தழுவுகிறான் என்று வைத்துக்கொள்வோம். இப்போது அனுமனுடைய தராசு என்ன சொல்லும்? ‘உன் திருமேனியைத் தழுவுகின்ற பேறு ஒன்றே நான் செய்த(தாக நீ எண்ணும் – நான் அவ்வாறு எண்ணவில்லை) எல்லா உதவிகளுக்கும் ஈடாகிவிட்டதே! அதற்கும் மேலானது அல்லவா என்னை நீ பொருந்தத் தழுவியது!’ என்றல்லவா அனுமனுடைய பார்வை பேசும்? அதனால்தான், அந்தக் கடன் என்றென்றும் அப்படியே இருந்தாக வேண்டும் என்பதனால்தான், இராமன், ‘நீ என்னைத் தழுவிக்கொள்,’ என்றான். இப்போது இராமனுடைய கடன் சுமைதான் ஏறுகிறதே தவிர, அவன் எதையும் திரும்பச் செலுத்தவில்லை.

‘கொடுப்பதற்குப் பொருளும் இல்லை, செய்வதற்குச் செயலும் இல்லை,’ என்றான பிறகு, தன் மேனியைத் தீண்டுதல் அடியவனால் எப்படிக் கொள்ளப்படுமோ, அந்தக் கணக்கின்படி கூட, ‘கணக்கு நேராகிவிட்டது,’ என்று யாராலும், எப்போதும் சொல்ல முடியாத ஒரு சித்திரம். நேர்த்தி என்றால் அது கம்பன்.

‘பொன்உருக் கொண்ட மேரு புயத்திற்கும் உவமை போதாத் தன்உருக் கொண்டு நின்றான், தருமத்தின் தனிமை தீர்ப்பான்’

என்று இராம-அனும முதல் சந்திப்பின்போது, அனுமன் தன்னுடைய பேருருவை எடுத்து நிற்கும் காட்சியைப் பற்றிச் சொல்லும்போது குறிப்பான் கம்பன். ‘பொன் மலையாகிய மேரு மலை, தன்னுடைய தோளுக்குக் கூட உவமையாகச் சொல்லப்படப் போதுமாயிராத அளவுடைய தன் பேருருவை எடுத்து நின்றான், தருமத்தின் தனிமையைத் தீர்ப்பதற்காக வந்தவனான அனுமன்.’

‘தருமத்தின் தனிமை தீர்ப்பான்,’ என்ற தொடரைப் பாருங்கள். பின்பற்றுவதற்கு யாருமே இல்லாமல், தன்னந் தனியே, கேட்பாரின்றி, நாடுவாரின்றிக் கிடந்ததான தருமம் தனிமையில் வாட விடாமல், அதனைப் பின்பற்றுவார் பல்கிப் பெருகுவதற்காகத் தோன்றியவனான அனுமன். என்ன பொருத்தமான சொற்கள்!

அயோத்தியின் அரியணையைத் தாங்கியவன் அனுமன். ‘அரியணை அனுமன் தாங்க,’ என்றுதான் இராமன் திருமுடி சூடும் காட்சியைச் சொல்லும் விருத்தம் தொடங்குகிறது. இராமன் திருமஞ்சனமாட ‘நான்கு கடல்களிலிருந்தும், ஏழு வகையான நதிகளிலிருந்தும்’ நீர் கொண்டு வந்தவன் அனுமன். ‘என்னை நீ தழுவுக,’ என்று இராமன் சொன்னதும், தன் நாயகன் தனக்குச் செய்கின்ற சிறப்பின் பெருமையை நன்குணர்ந்தவனான அனுமன் என்ன செய்தான்?

என்றலும், வணங்கி நாணி, வாய் புதைத்து, இலங்கு தானை முன் தலை ஒதுக்கி நின்ற மொய்ம்பனை முழுதும் நோக்கி, பொன் திணி வயிரப் பைம் பூண் ஆரமும், புனை மென் தூசும், வன் திறல் கயமும், மாவும், வழங்கினன், வயங்கு சீரான்.

இராமன் அவ்வாறு சொன்னது, வணங்கினான். வெட்கப்பட்டான். கை கொண்டு வாயை மூடியபடி, அவ்வளவு பெரிய சேனைக்கு முன்னால், பணிவோடு, தலை கவிழந்து நின்ற ஆற்றல் மிக்கவனை தலையோடு கால் முற்றும் நோக்கி, அவனுக்கு அணிகலன்களையும், ஆடைகளையும், யானைகளையும், குதிரைகளையும் வழங்கினான். (பதில் உதவியாக அன்று. பரிவின் காரணமாக.)

தன்னைத் தழுவுமாறு இராமன், தன்னைச் சொன்னதே அனுமனுக்குப் பேருவகையைத் தந்தது. ஏனெனில்,

உதவி வரைத்தன்று உதவி. உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து.

ஒருவருக்குச் செய்யும் உதவியின் அளவு, மதிப்பு, செய்யப்பட்ட செயலின் அளவையோ, கொடுக்கப்பட்ட தொகையின் அளவையோ வைத்து நிர்ணயிக்கப்படுவதில்லை. யாருக்கு அது செய்யப்பட்டதோ, அவருடை மன நிறைவின் அளவுதான் அந்த உதவியின் அளவைத் தீர்மானிக்கிறது.

அனுமன் தோன்றுகிற முதற் காட்சியிலிருந்து, கடைசிக் காட்சி வரை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் தோன்றுவதையும், ஒவ்வொன்றும் தோன்றத் தோன்ற வெகு எளிதாக ஒவ்வொன்றையும் அனுமன் தீர்த்து வைப்பதையும் கண்டோம். தன்னுடைய ஆற்றல் தன் தலைவனால் போற்றப்பட்ட சமயம் ஒவ்வொன்றிலும் அவன் நாணம்கொண்டு நிற்பதையே காண்கிறோம்.

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.