ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே
“ஸ்ரீ ராம்” என்று ஒரு முறை சொல்லப்படும் நாமம் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் ஆயிரம் நாமங்களுக்கு நிகரானது.
எனவே ஒவ்வொரு நாளும் “ஸ்ரீ ராம்” என்று நாம் பாராயாணம் செய்யும் போது
அது முழு விஷ்ணு சஹஸ்ர நாமத்தையும் பாராயாணம் செய்வதற்கு நிகரானது.
————–
9 வரிகளை கொண்ட ஶ்ரீ ராமாயணம் ஸ்லோகம்
ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம்
சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம்
அங்குல்யா பரண சோபிதம்
சூடாமணி தர்சன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேஹி மனோ கரம்
வானர சைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சததம் ஸ்ரீ ராமச் சந்திர பாலயமாம்
———————
ஏக ஸ்லோக ஶ்ரீ ராமாயணம்
ஆதெள ராம தபோ வனாதிகமனம்
ஹத்வா ம்ருகம் காஞ்சனம்
வைதேஹி ஹரணம் ஜடாயு மரணம் சுக்ரீவ சம்பாஷனம்
வாலீநிர்தலனம் சமுத்ர தரணம் லங்காபுரீ தாஹனம்
பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம் ஏதத்தி ராமாயணம்
—————–
ஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகங்கள்
ஆதித்ய ஹ்ருதய சர்க்கத்தின் முதல் 2 ஸ்லோகங்கள் அகத்தியர் இராமபிரானை அணுகுதல்.
மூன்றாவது ஸ்லோகம் அகத்தியர் இராமபிரானை விளித்துக் கூறுவதாக அமைந்திருக்கிறது.
ஆதித்ய ஹ்ருதய மந்திரம் 4வது ஸ்லோகம் முதல் 26 வரை வெளிப்படுத்த பட்டுள்ளது.
ஸ்லோகங்கள் 4,5 ஆதித்யஹ்ருதயத்தின் பெருமைகள்.
ஸ்லோகங்கள் 6-15 சூரியனின் பெருமைகள், ஆத்ம போதம், உள்ளிருப்பதும் வெளியிலிருப்பதும் ஒன்றே என நிறுவுதல்
ஸ்லோகங்கள் 16-20 மந்திர ஜபம்
ஸ்லோகங்கள் 21-24 சூரிய போற்றிகள்
ஸ்லோகங்கள் 25, 26 பலன்கள், ஜபிக்கும் முறை
27-30 ஸ்லோகங்கள் ராமர் ஜபித்த முறையை கூறுகிறது.
முப்பத்தி ஒன்றாம் ஸ்லோகம் இந்தத் துதியால் மகிழ்ந்த சூரியன்
இராமனை வாழ்த்துவதைக் கூறுவதாக அமைந்திருக்கிறது.
———
ஓம் அஸ்யஸ்ரீ, ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய,
அகஸ்த்யோ பகவான் ரிஷிஹி, அனுஷ்டுப் சந்தஹ:
ஸ்ரீ ஆதி ஆத்மா சூர்ய நாராயணோ தேவதா, நிரஸ்தா சேஷ விக்நதயா
பிரம்ம வித்யாதி ஸித்யர்த்தே, ஸர்வத்ர ஜெய ஸித்யர்த்தே ஜபே விதியோகஹ
—————-
பூர்வாங்க ஸ்தோத்ரம் / தியானம்
ஜயது ஜயது ஸூர்யம் சப்த லோகைக தீபம் |
கிரண ஷமித (ம்ருதித )பாப ஸர்வ துக்கஸ்ய ஹர்தா (க்லேஷ துக்கஸ்ய நாஷம் )||
அருண கிரண கம்யம் ஆதிம் ஆதித்ய மூர்த்திம் |
பரம பரம திவ்யம் (சகல புவன வந்த்யம்) பாஸ்கரம் தம் நமாமி ||
சப்த லோகைக தீபம் |–ஏழு உலகங்களுக்கும் முக்ய தீபம் போன்றவரும்
கிரண (ம்ருதித )ஷமித பாப-கிரணங்களால் போக்கடிக்கப்பட்ட தாபத்தை யுடையவரும்
ஸர்வ துக்கஸ்ய ஹர்தா (க்லேஷ துக்கஸ்ய நாஷம்) ||-எல்லாவித துக்கத்தைப் போக்கடிப்பவரும்
அருண கிரண கம்யம் –அருணனுடைய கிரணங்களால் அறியப்படுபவரும்
ஆதிம் –முதன்மை யானவரும்
பரம பரம திவ்யம் (சகல புவன வந்த்யம்) -ரொம்ப மிகவும் பிரகாசிப்பவரும்
பாஸ்கரம் –ஒளியை பரவச் செய்பவருமான
ஸூர்யம் -யாதொரு ஸூர்யன்
ஆதித்ய மூர்த்திம் |–ஸூர்ய நாராயண மூர்த்தியாக
ஜயது ஜயது -விளங்குகிறாரோ
தம் நமாமி ||-அந்த பகவானை நமஸ்காரம் செய்கிறேன்
வெற்றி வெற்றி (தரும்) கர்ம வீரமே (ஸூர்யம்), ஏழு உலகங்களின் தீபமே
ஒளிக்கதிர்களால் பாபங்களையும், கவலைகளையும் (உடல்வலி பற்றிய எண்ணங்களையும்), துக்கங்களையும் போக்குபவனே.
கிரணங்களால் ஆட் கொள்பவனே. ஆதி முதல்வனே. பரமாத்மனே
ஸகல உலகங்களாலும் வணங்க படுபவனே. ஒளி வீசுபவனே உனக்கு நமஸ்காரம்.
ஏழு உலகங்கள்- பூலோகம், புவர், ஸ்வர், மஹர, ஜனர், தபோ, ஸத்ய லோகம்
———
ததோ (ரணம் )யுத்த பரிஷ்ராந்தம் ஸமரே சிந்தயா ஸ்திதம் |
ராவணம்ச-அக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம் || 1
தெய்வ-தைஷ்ச ஸமாகம்ய த்ருஷ்டுமப்யாக தோரணம் |
உபாகம்ய-அப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவான் ர்ஷி(ஹி): || 2
ததோ –பிறகு
(ரணம் )யுத்த –யுத்தத்தை
த்ருஷ்ட்வா–பார்ப்பதற்கு
தெய்வ-தைஷ்ச –தேவதைகளோடு
ஸமாகம்ய –சேர்ந்து
அப்யாகத –வந்த
பகவான்-ஷாட் குண்ய பரிபூர்ணனான
அகஸ்த்யோ ர்ஷி–அகஸ்திய ரிஷி
யுத்த பரிஷ்ராந்தம் –யுத்தத்தில் களைப்பு அடைந்தவனாயும்
யுத்தாய -யுத்தம் செய்வதற்காக
அக்ரதோ -முன்னே
ஸமுபஸ்திதம் |-சமீபத்தில் இருப்பவனுமான
ராவாணாஞ்ச –ராவணனையும்
ஸமரே -யுத்தத்தில்
சிந்தய – கவலையுடன்
ஸ்திதம் |–இருக்கிற
ராமம் த்ருஷ்ட்வா -ராமரையும் பார்த்து
உபாகம்ய-அப்ரவீத் (ஹி)-அடைந்து சொன்னார்
போர்க்களத்தில் போரினால் களைப்படைந்து,
போர் குறித்த ஆழ்ந்த சிந்தனைகளுடன் இராமன் நின்றார்
இராவணன் தயாராகி களத்தில் முன்னிலையில் நின்று பலமுடையவனாக தோன்றினான்.
தேவர்கள் அணைவரும் ஒன்று கூடி போரைப் பார்க்க இருந்தனர்
தேவர்களுடன் இருந்த அகஸ்த்ய பகவான்,
போருக்கு முயன்று நிற்கும் ராமரை அருகில் அணுகி சொன்னார்.
———
ராம ராம மஹா பாஹோ ஷ்ருணு குஹ்யம் ஸனாதனம் |
யேன-சர்வான்-நரீன், வத்ஸ, ஸமரே விஜயி-ஷ்யஸி || 3
மஹா பாஹோ–நீண்ட கைகளை யுடையவனே
வத்ஸ,-குழந்தாய்
ராம ராம -ஹே ராமா ராமா
யேன-எதனால்
சமரே -போரில்
சர்வான்-நரீன், -எல்லா சத்ருக்களையும்
விஜயி-ஷ்யஸி-ஜெயிப்பாயோ
ஸநா தனம் |-புராதனமான -அப்போருக்கு ஒத்த
குஹ்யம்-ரஹஸ்யத்தை
ஷ்ருணு -கேள்
இராமா, இராமா! பெரும் தோள் வலிமை கொண்டவனே! கேள் இரகசியத்தை,
(அது) காலம் காலமாக என்றுமுள்ளது
எல்லா மக்களும் விரும்பி பயன்படுத்துவது.
குழந்தாய், அது போரில் வெற்றி தருவது
————
ஆதித்ய ஹ்ருதய ஸ்லோஹ மஹிமையை இரண்டு ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறார்
ஆதித்ய ஹ்ருதயம்
ஸூ ர்யன் மனஸ்ஸை திருப்தி செய்யும் ஸ்தோத்ரம் என்றும்
ஸூர்ய மண்டல மத்ய வர்தியான ஸ்ரீ மன் நாராயணன் என்றும் கொள்ளலாம்
ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வசத்ரு விநாசனம் |
ஜயா-வஹம் ஜபே-ந்நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்|| 4
ஸர்வ மங்கல மாங்கல்யம், ஸர்வ-பாப-ப்ரணாசனம் |
சிந்தா-சோக-ப்ரசமனம் ஆயுsர்-வர்தனம் உத்தமம் || 5
ஆதித்யஹ்ருதயம் புண்யம்- ஆதி பரமனின் ஹிருதயம் – மந்திரம் நல் வினைகளைத் தருவது
ஸர்வசத்ரு விநாசனம் – உட்பகை, வெளிப்பகை என் அனைத்து எதிரிகளையும் நசிக்க-அழிக்க வல்லது
ஜயாவஹம்-வெற்றி தருவது
ஜபே ந்நித்யம் – எப்போதும் ஜபிக்க கூடியது
அக்ஷய்யம்- வேதம் போலவே -பொங்கி பெருகி கொண்டே இருப்பது (அழிவற்றது)
பரமம் – மிகப் பெருமை கொண்டது
சிவம் – மங்களம் தருவது. விடுதலையை தருவது
ஸர்வ மங்கள மாங்கல்யம் – அனைத்து நலன்களுகெல்லாம் நலன்களையும் தருவது. நிலையான பேரின்பம் தருவது
ஸர்வ பாப ப்ரணாஸனம் – அனைத்து பாவங்களையும் போக்குவது
சிந்தா சோக ப்ரஸமனம் – மனக் கவலைகளையும் குழப்பங்களையும் நீக்குவது
ஆயுர்வர்த்தனம் – நீண்ட ஆயுளைத் தர வல்லது
உத்தமம் – சிறந்தது
———–
ஆதித்யரின் தன்மைகள் – பெருமைகள்
ரஷ்மி-மந்தம் ஸமுத்யந்தம் தேவாசுர நமஸ்க்ருதம் |
பூஜையஸ்வ-விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம் || 6 ||
ரஷ்மி-மந்தம் -ஞான ரூபமும் (இதமான) பொன்னிறக் கதிர்களை பிரதிபலிப்பவர்.
ஸமுத்யந்தம் – பிரபஞசத்தின் எல்லையாக விளங்குபவர்-புது புதிதாய் உதிக்கின்றவர் -ஸ்ருஷ்டியாதிகளில் சங்கல்பித்து மீண்டும் மீண்டும் உபகரிப்பவர்
தேவாசுர நமஸ்க்ருதம்- தேவர்களாலும், அசுரர்களாலும், (நன்மை, தீமை செய்பவர்கள்) வணங்கப் படுபவர்.
பூஜயஸ்வ-வணங்கத் தகுந்தவர்.
விவஸ்வந்தம் – பரஞ்சோதி ரூபம் -காந்தியால் மற்றவரை மறுப்பவர்
பாஸ்கரம் – எல்லா ஞானத்தையும்- ஒளியையும் (மதி, அக்னி உள்பட) உருவாக்குவது.
புவனேஸ்வரம் – புவனத்தின் தலைமை.-பூஜ யஸ்வ -பூஜை செய்
இரகசியம்-3 ஒளி-சுயம்/ஆத்மன்/பிரமம், இருட்டு-மாயை/சுய அறிவின்மை.
கட உபநிசத் (II.ii.15) சூரியனோ சந்திரனோ, நட்சத்திரங்களோ ஒளிர்பவையல்ல.
பராமத்மனே அந்தர்யாமியாய் அணைத்திலும் ஒளிர்கிறான்.
எந்தவித வேறுபாடும் இல்லாமல் எல்லோருக்கும் சமமாக ஒளி தருபவர்.
(அதனால்) தேவர்களாலும் அசுரர்களாலும், எல்லோராலும் வணங்கப் படுபவர்.
பூஜயஸ்வ-கடமைக்கு நேரடி எடுத்துக்காட்டாக இருப்பதால் வணங்கத் தகுந்தவர்.
————–
ஸர்வ தேவாத் மகோஹி ஏஷ ஹ: தேஜஸ்வீ ரஸ்மி பாவனஹ: |
ஏஷ தேவாசுர கணான் லோகான் பாதி-கபஸ்திபி ஹி:|| 7
ஏஷ–இந்த ஸூர்ய பகவான் -ஸூர்ய மண்டல அந்தர் வர்த்தி யான ஸ்ரீ மன் நாராயணன்
ஸர்வ தேவாத் மக-ஸமஸ்த தேவர்களின் ஆத்மாவாக ஸ்வரூபம் உள்ளவர்
தேஜஸ்வீ–தேஜஸ்ஸு மிக்கவர்
ரஸ்மி பாவனஹ: |-கிரணங்களால் ஸ்லாகிக்கத் தக்கவர் -ஞான ரஸ்மியால் யோகிகளை ப்ரஹ்ம லோகம் அடையச் செய்பவர்
தேவாசுர கணான் –தேவ ஸூரக் கூட்டங்களையும்
லோகான் –எல்லா உலகங்களையும்
கபஸ்திபி -கிரணங்களால்
பாதி-ரக்ஷிக்கிறார்
எல்லா தேவர்களின் வடிவம்
ப்ரகாசங்க்களிலும் ப்ரகாசமானது. அதே நேரத்தில் இதமானப் பொன்னிறக் கதிர்களை வெளிப்படுத்துவது.
இவரே தேவர்களும் அசுரர்களும் எல்லா உலகங்களையும் கதிர் கரங்களால் காப்பாற்றுபவர்.
—————-
ஏஷ ப்ரஹ்மா ச விஷ்ணு ச சிவ-ஸ்கந்த: ப்ரஜாபதிஹி:|
மஹேந்த்ரோ-தனத: காலோ யம-ஸோமோஹ் அபாம்பதி ஹி:||8
ஏஷ-இவர் -ஸூர்ய பகவானே பிரும்மா(ஆக்குபவர்- ப்ரஹம என்றால் பெரிதிலும் பெரிதானவனும்),
விஷ்ணு(காப்பவர் விஷ்ணு என்றால் எங்கும் நிறைந்தது ),
சிவன் (அழிப்பவர் சிவ என்றால் மங்கலம்),
ஸ்கந்தன் (ஸ்கந்த என்றால் இணைப்பு & ஊற்று=, அன்பிற்கும் அறிவிற்கும் அணைத்திற்கும் ஊற்றாக இருப்பவனும்),
ப்ரஜாபதி-ஜீவ ராசிகளின் தலைவர்,-நவ ப்ரஜாபதியாகவும்
இந்திரன் (புலங்களின் அதிபதி),
தனத – குபேரன் (செல்வத்தின் அதிபதி),
காலோ – காலத்தை (நேரத்தை) உண்டாக்குவன்,
யமன்(இறப்பின் அதிபதி, தண்டிப்பவன், நல்வழிபடுத்துபவன்),
ஸோமோ -சந்திரன்(ஊட்டத்தின் அதிபதி),
அபாம் பதிஹி – தண்ணீருக்கு அதிபதி (வருணன்).
————-
பிதரோ வஸவ: ஸாத்யா ஹ அஷ்வினௌ மருதோ மனுஹு: |
வாயு அஹ்னி: ப்ரஜா ப்ராணஹ: ர்துகர்த்தா ப்ரபாகரஹ: || 9
பிதரோ -மூதாதை(முன்னோர்கள், வம்சம், குலம்),
வஸவ-எல்லா செல்வங்களும் ஆன அஷ்டவசுக்கள்,
சாத்யர்கள்-கரும வசப்படாத நித்யர்களும்,
அச்வினி தேவர்கள் (தேவ லோக வைத்தியர்கள்),
மருத்துக்கள் (காற்றின் துணைவர்களான மருத் தேவர்களும்- தென்றல், புயல்),
மனு (மனிதர்களின் தந்தை),
வாயு-காற்று, அக்னி-நெருப்பு,
ப்ரஜா ப்ராணன்-மக்களின் உயிர்க் காற்று,
ர்துகர்த்தா- பருவங்களை (மாற்றங்களை) உண்டாக்குபவர்.
ப்ரபாகர: – உதயத்தை ஏற்படுத்துகிரார்; புகழைத் தருபவர்
எட்டு வசுக்கள் – அபன், துருவன், சோமன், தரன், அனிலன், அனலன், ப்ரத்யுஷா, ப்ரபாசா
சாத்யா – அனந்தன், கருடன், விஸ்வக்சேனன், பாஞ்சஜன்யன், சுதர்சனன் போன்றவர்கள்
ஆறு பருவங்கள், கோடை, மழை, முன்பனி, கடும்பனி, இலையுதிர், வசந்தம்
—————-
ஆதித்ய ஸவிதா ஸூர்யஹ: கக: பூஷா கபஸ்திமான் |
ஸூ வர்ண ஸத்ர்சோ பானு: ஹிரண்யரெதா திவாகரஹ:|| 10
ஆதித்ய–, மூலப் பரம் பொருள்-அதிதியின் புத்ரன் –
ஸவிதா – உயிரை உருவாக்குபவர்
ஸூர்ய-செயல் வீரர் செயலாற்றத் தூண்டுபவனும்
கக-வானத்துப் பறவை வானவெளியில் நடமாடுபவனும்
பூஷா -வளர்ப்பவனும்-மழையால் வளர்ச்சி தருபவர் அனைவருக்கும் உணவளித்து வளர்ப்பவனும்
கபஸ்திமான் -ஒளிக் கதிரோன்
ஸூ வர்ண ஸத்ருசோ- பொன்னிறத்தோன்
பானு- ஒளிக் காந்தியுள்ளவன்
ஹிரண்யரேதோ – அனைத்தையும் படைக்கும் திறன் கொண்டவனும்
திவாகர – பிரகாசமான பகலொளியை தோற்றுவிப்பவர்-அறிவை உண்டு பண்ணுபவர்
————–
ஹரித்-அஸ்வ ஸஹஸ்ரார்சிஹி: ஸப்த ஸப்திர் மரீசிமான் |
திமிரோன்மதன: ஷம்பு த்வஷ்டா மார்தாண்ட அம்ஷுமான்|| 11-
ஹரித் அஸ்வ – வெற்றியை வாகனமாக உடையவர்–பச்சைக் குதிரையுடையவர் (பச்சை வெற்றியின் சின்னம்).-திக்குகளில் எங்கும் வியாபிப்பவர்
பச்சைப் பயிர்களை வளர்ப்பவன்
ஸஹ்ஸ்ரார்ச்சி – ஆயிரம் கரங்களால் எல்லா செயல்களையும் செய்பவர்-
ஆயிரம் கிரணங்களை (தீ நாக்குகள்) கொண்டு இந்த உலகத்தின் அனைத்துச் செயல்களையும் நடத்துகிறான்
ஸப்த ஸப்தி-ஏழு குதிரைகள் – உலகங்கள் – நிறங்கள் – நாட்கள் உடையவர்
மரீசிமான் -ஓளிக் கிரணங்கள் கொண்டவர்.உலக இயக்கங்களுக்கெல்லாம் மூலகாரணம் இவனது கதிர்கள் தானே.-சத்ருக்களை வெல்லும் சக்ராயுதத்தை யுடையவர்
திமிரோன் மதன – இருளை – அறியாமையையை போக்குவர்
ஷம்பு -மங்களம் அளிப்பவர்.அனைத்தையும் குறைப்பவன்.
ஸ்த்வஷ்ட துரத்ரிஷ்டத்தை விரட்டுகிறவர்–இறந்த உடல்களையும் தாவரங்களையும் மங்கச் செய்வதன் மூலம் அடுத்த சுழற்சிக்கு வழி வகுக்கிறான்.
மார்தாண்ட – மிகுந்த வலிமை உடையவன். உலகத்தில் எல்லா பொருட்களும் உயிர்களும் இவனிடமிருந்தே வலிமையைப் பெறுகின்றன.-உண்டு மீண்டும் உமிழ்ந்தவன்
அம்சுமான் -மேகம் மறைத்து நிற்கும் போதும் தன் உருவத்தை உயிர்கள் பார்க்க இயலாத போதும்
தன் கதிர்களால் எங்கும் பரவி உலக இயக்கத்தை நடத்துபவன்.-எங்கும் வியாபித்து இருக்கும் தேஜஸ்ஸு படைத்தவன்
———–
ஹிரண்யகர்ப்ப ஷிஷிர தபனோ, பாஸ்கரோ ரவி(ஹி): |
அக்னிகர்ப்பா அதிதிபுத்ர-(ஹ): ஷன்க ஷிஷிர நாஷன (ஹ): || 12
ஹிரண்ய கர்ப்ப-சூக்ஷ்ம ஸரீரமுள்ளவர் ஞானத்திற்கும், வளர்ச்சிக்கும் காரணமானவர்.
பொன்மயமான கருப்பையை உடையவன்.-ஸ்வர்ண மயமான ப்ரஹ்மாண்டத்தில் இருப்பவன்
உலகத் தோற்றம் ஹிரண்யகர்ப்பம் என்ற பொன்முட்டையிலிருந்து நிகழ்ந்ததாக சொல்வது மரபு.
ஷிஷிர- கடுங்குளிரை உருவாக்குபவர். கதிர்கள் குறைவாக இருக்கும் நிலையே குளிர் நிலை.
அதனால் இவனே குளிரைத் தருபவனாகவும் இருக்கிறான்.-ஸூக ஸ்வ பாவத்தை யுடையவர் –
ஸ்தாபனோ-சூடாகவும், நெருப்பாய் எரிபவர்.–ஸ்வயமாக ஐஸ்வர்யம் படைத்தவர் –
பாஸ்கரோ -ஒளியானவர்-ஞானமானவர். உலகத்தில் இருக்கும் எல்லா பொருட்களும் ஒளிர்வது இவனது கதிர்களால் தான்.
ரவி- எல்லாவற்றையும் உருவாக்குபவன். எல்லோராலும் புகழ்ப்படுபவர்.
அக்னி கர்ப்போ தீயை தன்னுடலாகக் கொண்டவன்.
அதிதே: புத்ர அதிதியின் புதல்வர்
ஷன்க- ஆனந்த மயமானவன் மறையும் போது குளிர்ச்சியாக தோற்றமளிப்பவர்-தானாகவே சமன் அடைபவர் -பரமானந்த ஸ்வரூபி -விபு –
ஷிஷிர நாஷன- குளிரை விலக்குபவர்
————–
வ்யோம நாதஸ் தமோ பேதீ, ருக் யஜு ஸ்ஸாம பாரக ஹ: |
கனவ்ரிஷ்டிர் அபாம் மித்ரோ: விந்த்யவீதீ ப்லவங்கமஹ: || 13-
வ்யோம நாதஸ் -ஆகாசத்தைப் படைப்பவர் -ஆகாசத்துக்கும் அரசன் ஸ்வாமி
தமோ பேதீ, -இருளை -அஞ்ஞானத்தைப் போக்கடிப்பவர்
ருக் யஜு ஸ்ஸாம பாரக ஹ: |-வேதங்களின் கரையை அடைந்தவர்
கனவ்ரிஷ்டிர் -அதிக மழையைப் பெய்யும்படி செய்பவர்
அபாம் மித்ரோ: -ஜனங்களுக்கு மித்ரர் –சமுத்திரத்தில் சயனிப்பவர்
விந்த்யவீதீ ப்லவங்கமஹ:-தஷிணா யானத்தில் விந்திய மலை வழியாகச் செல்பவர்
ஸூர்ய பகவான் ஸூர்ய பகவான் அண்ட வெளியின் தலைவன்.
அஞ்ஞான இருளை அகற்றி தீமைகளையும் மரண பயத்தையும் போக்குகிறார். வேதங்களை கரை கண்டவர்.
கதிர்கள் ஏற்படுத்தும் வெப்ப நிலை மாற்றங்களால் பெரும் மழையை பொழிவிக்கிறார்.
அபாம் மித்ர – நீர் நிலைகளை நேசிக்கிறார்.
விந்த்ய வீதி ப்லவங்கம- விந்த்ய மலைகளை தெய்வீகமாக – விரைவாக கடக்கிறார்.
(ருக், யஜுர், சாமம் எனப்படும் மூன்று வேதங்களையும் கண்டு உலகிற்குச் சொன்னவன்.
வேதங்கள் யாராலும் உருவாக்கப்படவில்லை; அதனால் அதனை அபௌருஷேயம் என்று சொல்வார்கள்.
அவை என்றும் இருப்பவை. ரிஷிகள் அவற்றைக் கண்டு சொன்னார்கள்.
அதனால் அவர்களுக்கு மந்த்ர த்ரஷ்டா (மந்திரத்தைக் கண்டவர்கள்) என்று பெயர்.)
—————
ஆதபீ மண்டலீ ம்ருத்யு ஹு: பிங்கல: ஸர்வ தாபன ஹ: |
கவிர் விஷ்வா மஹாதேஜா ஹ: ரக்த: ஸர்வ-பவோத்பவ ஹ: || 14
அவரே வெப்பத்தை கொடுக்கிறார். உயிர்களின் முதலும் முடிவும் அவரே. அவரே அகிலத்தை இயக்குகிறார்.
எங்கும் நிறைந்து இருக்கிறார். அவரது செங்கதிர்கள் உலகத்தை உயிரினங்களை வாழ வைக்கின்றன.
ஆதபீ -வெப்பத்தை உருவாக்குபவர் கொளுத்துபவன்
மண்டலீ – வட்ட வடிவானவர்
ம்ருத்யு- மரணவடிவானவன்-விரோதிகளை வெல்பவர்
பிங்கல-பொன் நிறத்தோன்
ஸர்வதாபன- எல்லாவற்றையும் எரிப்பவர்
கவி அனைத்தையும் அறிந்தவன்.-ஸாஸ்த்ர பிரதானம் செய்து அருளியவர்
விஷ்வோ- அண்ட வடிவானவன்.-தானே ஸ்ருஷ்டித்து அந்தர்பவித்து ஸமஸ்த நியந்தா
மஹா தேஜா- மிகப்பெரும் ஒளிவடிவானவன்.-சிவந்த வண்ணம் கொண்டவன்.
ரக்த-எல்லோரிடத்தும் அன்பானவர்
ஸர்வபவோத்பவ- எல்லா உயிர்களும் பொருட்களும் தோன்றுமிடமானவன்.
———
ஆதித்யருக்கு நமஸ்காரங்கள் — ஸுரிய துதி
நக்ஷத்ர-க்ரஹ தாராணாம் அதிபோ விஷ்வ பாவன ஹ: |
தேஜஸாம் அபிதேஜஸ்வீ த்வாதசாத்மன் நமோஸ்து தே || 15
நக்ஷத்ர-க்ரஹ தாராணாம் -அஸ்வினி போன்ற நக்ஷத்ரங்கள்-கிரஹங்கள் -சாதாரண நக்ஷத்திரங்கள்
அதிபோ -ஸ்வாமி
விஷ்வ பாவன -உலகத்தை ஸ்தாபித்து போஷிப்பவர்
தேஜஸாம் அபி-அக்னி போன்ற தேஜஸ்ஸு பதார்த்தங்களுக்குள்
தேஜஸ்வீ –மிக்க பரஞ்சோதி யானவனே
த்வாதசாத்மன் -பன்னிரண்டு மூர்த்தி யுடையவன்
நமோஸ்து தே-உமக்கு நமஸ்காரம்
வானில் ஒளிவீசும் பொருட்களுக்கெல்லாம் பால் வெளிக்கும் தலைவர். அவரே அண்டத்தின் வடிவம்.
ஒளி வீசுபவர்களுக்கெல்லாம் ஒளியானவன் பன்னிரெண்டு உருவில் ஒளி மயமானவரே நமஸ்காரம்.
பன்னிரண்டு மூர்த்திகளின் பெயர்கள்
இந்திரன், தாதா , பகன், பூஷா, மித்ரன், வருணண் அர்யமான், அர்சிஸ், விவஸ்வான், த்வஷ்டா, சவிதா – விஷ்ணு.
————–
நம: பூர்வாய கிரயே பச்சி-மா-த்ரயே நம ஹ: |
ஜ்யோதிர் கணாணாம் பதயே தினாதிபதயே நம ஹ: || 16-
பூர்வாய–கிழக்குத் திக்கில் உள்ள
நம: கிரயே -மலையில்-உதய கிரியில் = இருக்கும் உமக்கு நமஸ் காரம்
பச்சி-மா-த்ரயே நம ஹ: |-மேற்குத் திக்கில் உள்ள மலையில் -அஸ்தமந கிரியில் -இருக்கும் உமக்கு நமஸ் காரம்
ஜ்யோதிர் கணாணாம் பதயே -ஒளி களின் கூட்டங்களுக்குத் தலைவராயும்
தினாதிபதயே நம–பகலுக்கு அதிபதி யுமான உமக்கு நமஸ்காரம்
வணங்குகிறேன் உதிப்பவரே உதயத்தை தருபவரே மறைபவரே நிறைவை தருபவரே வணக்கம்.
ஓளிர் தன்மை படைத்தவர்களுக்கு அதிபதியே
ஒவ்வொரு நாளின் அதிபதியே வணக்கம்.
வணங்குகிறேன் கிழக்கு மலையில் உதிப்பவரே மேற்கு திசையில் மறைபவரே வணக்கம்.
———–
ஜயாய ஜய பத்ராய ஹர்யஷ்வாய நமோ நம ஹ: |
நமோ நம-ஸஹஸ்ராம்சோ ஆதித்யாய நமோ நம ஹ: || 17
ஜயாய -ஜய சீலரும்
ஜய பத்ராய -ஜயம் மங்களம் இவற்றை அளிப்பவராயும்
ஹர்யஷ்வாய -பச்சை குதிரை யுடைய வராயும்
நமோ நம ஹ: |-உமக்கு நமஸ்காரம்
நமோ நம-ஸஹஸ்ராம்சோ –ஆயிரம் கிரணங்களை யுடையவரான உமக்கு நமஸ்காரம்
ஆதித்யாய நமோ நம ஹ:-அதிதியின் புதல்வரான உமக்கு நமஸ்காரம்
மீ மிசை ஆதார அதி சயம்
வெற்றி வடிவானவருக்கு, வெற்றியின் மங்களங்களை தருபவருக்கு நமஸ்காரம்.
பச்சை குதிரையை -வெற்றியை – வளத்தை உடையவருக்கு மீண்டும் மீண்டும் வணக்கங்கள்
ஆயிரம் கதிர்களினால் அணைப்பவருக்கு எல்லை யில்லா அம்சமுள்ளவர் நமஸ்காரம் நமஸ்காரம்.
ஆதி முதல்வனுக்கு நமஸ்காரம் நமஸ்காரம்
————-
நம உக்ராய வீராய சாரங்காய நமோ நம ஹ: |
நம-பத்ம-ப்ரபோதாய மார்த்தண்டாய நமோ நம ஹ: || 18-
நம
உக்ராய -பயங்கரர்
வீராய -பராக்ரமம் யுடையவர்
சாரங்காய -வேகமாக செல்பவர் -அரை நிமிஷத்தில் -2000 யோஜனை தூரம் –வில்லாண டான் -கால சக்ரத்தாய்
நமோ நம ஹ: |
நம-
பத்ம-ப்ரபோதாய –தாமரையை மலரச் செய்கிற
மார்த்தண்டாய -எல்லா வற்றை யும் அழித்து மீண்டும் உண்டு பண்ணுகிற
நமோ நம ஹ
கடுமையானவருக்கு (உக்ரம்) வீரருக்கு வணக்கம். சீரானவர்க்கும் தடைகளற்றவனுக்கு நமஸ்காரம்
பல வண்ண கதிர்கள் ஏவும் வில்லை உடையவருக்கு வணக்கம்.
தாமரைகளை மலரச் செய்பவனுக்கு நமஸ்காரம்
மிக்க வலிமை பொருந்தியவருக்கு – அழிக்கவும் பின் அவற்றை உருவாக்கவும் வல்லமை கொண்ட ஸூர்யனுக்கு நமஸ்காரம்.
————
ப்ரஹ்ம்-ஈஷான்-அச்யுத்-ஈஷாய ஸூர்யாய ஆதித்ய வர்சஸே |
பாஸ்வதே ஸ்ர்வ பக்ஷாய ரௌத்ராய-வபுஷே நம ஹ: || 19 ||
ப்ரஹ்ம்-ஈஷான்-அச்யுத்-ஈஷாய -ப்ரஹ்மாதிகளுக்கும் விஷ்ணு வுக்கும் அதிபதி-அஸ வாதித்யோ ப்ரஹ்மம் -ஸ்ருதி
ஆதித்ய வர்சஸே |-ஆதித்ய ரூப தேஜஸ் உடையவர்
ஸூர்யாய -சர்வருக்கும் ப்ரவ்ருத்திக்கு ஹேது
பாஸ்வதே -பரஞ்சோதி
ஸ்ர்வ பக்ஷாய -ஸர்வ ஸம் ஹர்த்தா -ஆகவே
ரௌத்ராய-அப்பொழுது பயங்கர மான வர்
வபுஷே -திவ்ய ரூபம் உடையவர்
நம ஹ:
ப்ரம்மா, ஷிவன், விஷ்ணு மூவருக்கும் தலைவரே
செயல் வீரனே, ஆதி முதல்வனே எங்கும் வியாபித்து இருக்கும் பேரெழிலானவருக்கு நமஸ்காரம்.
மிகுந்த ஒளி – காந்தி படைத்தவனுக்கு,
எல்லாவாற்றையும் விழுங்குபவனுக்கு – கால உருவானவருக்கு,
ருத்ரனின் உருவங்கொண்டவனுக்கு நமஸ்காரம்.
—————
தமோக்னாய ஹிமக்னாய ஷத்ருக்னாய அமிதாத்மனே |
க்ருதக்னக்னாய தேவாய ஜ்யோதிஷாம்-பதயே நம ஹ: || 20-
தமோக்னாய -இருளை -அஞ்ஞானம் போக்கடிப்பவர்
ஹிமக்னாய -பனியை போக்கடிப்பவர்
ஷத்ருக்னாய –சத்ருக்களை வெல்பவர்
அமிதாத்மனே |-அளவிட முடியாத மஹிமை யுடையவர்
க்ருதக்னக்னாய -செய் நன்றி மறந்தாரைக் கொல்பவர்
தேவாய -ஸ்வயம் ப்ரகாஸம் உடையவர்
ஜ்யோதிஷாம்-பதயே -ஒளி தேஜோ பதார்த்தங்களுக்கு ஸ்வாமி
நம ஹ
இருளை (அறியாமை) அழிப்பவருக்கு
குளிரை அழிப்பவருக்கு, எதிரிகளை அழிப்பவருக்கு, எல்லா உயிர்களுக்கும் ஆத்மாவாய் இருப்பவருக்கு
செய்நன்றி மறந்தவர்களை அழிப்பவருக்கு
ஒளி வீசுபவரே
பிரபஞ்சத்தின் மூலம் – ஒளிகளுக்கெல்லாம் தலைவருக்கு நமஸ்காரம்
————-
தப்த சாமி கராபாய வஹ்னயே விஷ்வகர்மனே |
நம(ஸ்) தமோ-(அ)பினிக்னாய ருசயே லோக ஸாக்ஷினே || 21 ||
தப்த சாமி கராபாய -உருக்கப்பட்ட தங்கம் போல் ஒளிப்பிழம்பானவர்க்கு,
வஹ்னயே -அக்னி ஸ்வரூபம்-ஹவிஸை வஹிப்பவர்
விஷ்வகர்மனே |-உலகம் படைப்பவர்
நம(ஸ்)
தமோ-(அ)பினிக்னாய -இருள் அஞ்ஞானம் போக்கடிப்பவர்
ருசயே -பிரகாசிப்பவர்
லோக ஸாக்ஷினே-உலகோர் கர்மாக்களு க்கு ஸாஷி பூதர்
உருக்கப்பட்ட தங்கம் போல் ஒளிப்பிழம்பானவர்க்கு,
தீ வடிவானவருக்கு -அணைத்தையும் எரிப்பவர்,
உலகத்தை படைத்தவருக்கு- அதன் அணைத்து செயல்களுக்கும் காரகர்,
இருளை நீக்குபவருக்கு,
உலகத்தில் ஒளியை எல்லாம் உடையவருக்கு, உலக சாட்சியானவருக்கு நமஸ்காரம்.
————-
நாச-யத்யேஷ வை-பூதம் ததேவ-ஸ்ருஜதி ப்ரபு ஹு: |
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி ஹி: || 22
யேஷ வை–இவரே
பூதம் -உலகத்தை
நாச-யத்-அழிக்கிறார்
ப்ரபுர் ஏவ -ஸர்வ நியா மகர்
மீண்டும்
ததேவ-ஸ்ருஜதி -படைக்கிறார்
கபஸ்திபி-கிரணங்களால்
ஹு: |
பாயதி -யேஷ -இவரே உலர்த்து கிறார்
தபத்யேஷ -இவரே தபிக்கச் செய்கிறார்
வர்ஷத்யேஷ ஹி:-இவரே மழை பெய்யச் செய் கிறார்
உயிர்களை எல்லாம் அழிக்க வல்லவரும் அவரே. அவருக்கு நமஸ்காரம்.
அவரது அவற்றை இவனே பிறப்பிக்கிறான் இறைவன் இவனே
இவனே காக்கிறான்
தன்னுடைய ஒளி பொருந்திய கதிர்களால் இவனே வெயிலாக காய்கிறான். மழையாகப் பொழிகிறான்
————-
ஏஷ-ஸுப்தேஷு ஜாகர்த்தி பூதேஷு பரிநிஷ்தித ஹ: |
ஏஷ-ஷேவாக்னி-ஹோத்ரம் ச பலம் சைவாக்னி ஹோத்ரிணாம் || 23-
ஏஷ-
ஸர்வே ஷு
பூதேஷு-பிராணி கள்
ஸுப்தேஷு –தூங்கும் போதும்
ஜாகர்த்தி
பரிநிஷ்தித ஹ: |-எங்கும் வியாபித்து விழித்துக் கொண்டும்
ஏஷ-ஷேவாக்னி-ஹோத்ரம் -இவரே அக்னி ஹோத்ர ரூபி யாகவும்
ச பலம் சைவாக்னி ஹோத்ரிணாம்-அக்னி ஹோத்ரம் செய்பவர்களுக்கு பல மாகவும் -பலம் கொடுப்பவர் ஆகவும்
ஸூர்ய பகவான் உலகத்து எல்லா உயிர்களின் இருதயத்தில்-ஜீவனாக இருந்து விழிப்பாக நிலை நிற்கிறான்.
இவர் தான் வேள்வித் தீ. தீ வழிபாட்டின் வடிவம் – வேள்வியின் நிவேதனமும் பலனும் அவரே.
———-
வேதாஸ்-ச க்ரத-வஷ்சைவ க்ர்தூனாம் பலம்-ஏவ ச |
யானி-க்ருத்யானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு ஹு: || 24-
வேதாஸ்-ச -33 கோடி -யாக தேவதை களாகவும்
க்ரத-வஷ்சைவ -ஸோமம்-அஸ்வ மேதம் முதலிய யாகாதி களாகவும்
க்ர்தூனாம் பலம்-ஏவ ச |-யாகங்களின் பலம் ஆகவும்
லோகேஷு- எல்லா உலகங்களிலும்
யானி -எந்த எந்த
க்ருத்யானி –கார்ங்கள் இருக்கின்றன -ரித்விக் யஜமான் சமித்து ஆஜ்யம் பசு போன்ற -அவை களுக்கு
ஸர்வ ஏஷ ரவி: -ஸர்வ ஆத்மா வான இந்த
ரவி ப்ரபு ஹு–ஸூர்ய பகவானே நியாமகனாய் இருக்கிறார்
வேதங்களின் சாரத்தில் இருக்கிறார்.
தத்தம் கடமைகளாகவும் – சடங்குகளாகவும்
உண்மையுடன் செய்பவர்களுக்கு,சடங்குகளின் கடமையின் பலனாக இருக்கிறார்.
என்ன என்ன செயல்கள் செய்யப்படுகின்றனவோ இவ்வுலகத்தில்
அவை எல்லாமும் ஒளி படைத்தவன் அவரே இறைவன்-தலைவன்
——————-
ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரத்தின் பெருமைகள்: பலஸ்ருதி
ஏனம் ஆபத்ஸு க்ருச்ரேஷு காந்தாரேஷு பயேஷு ச |
கீர்த்தயன் புருஷ: கச்சிந்-நாவ-ஸீததி ராகவ || 25-
ராகவ
புருஷ: கச்சிந்-ஒரு புருஷன்
ஆபத்ஸு-ஆபத்து களிலும்
க்ருச்ரேஷு -கஷ்டங்களிலும்
காந்தாரேஷு –காடுகளிலும்
பயேஷு ச |-பயங்களிம்
ஏனம் -இந்த ஸ்தோத்ரத்தை
கீர்த்தயன் – கீர்த்தநம் பண்ணுவானோ -அவன்
நாவ-ஸீததி -வருத்தம் அடைய மாட்டான்
ராகவா ரவி, எல்லாவித ஆபத்து நேரங்களிலும்(உடல், மன, ஆன்மீக காரணிகளால்), அவமானத்திலோ,
பயமுறுத்தும் நேரங்களிலும், துன்பங்களிலும் வழிபடுவோரை எப்போதும் கைவிடமாட்டான்.
இந்த ஸ்தோத்திரத்தை ஜபித்தால், நிச்சயமாக அவற்றிலிருந்து மீண்டு வருவார்கள்.
————–
பூஜ-யஸ்-வைனம் ஏகாக்ரோ: தேவதேவம் ஜகத்பதிம் |
ஏதத் த்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயி ஷ்யஸி || 26-
ஏகாக்ரோ:ஒரே விஷயத்தில் மனப் பற்று உடையவனாய்
தேவதேவம் -தேவர் களுக்கு எல்லாம் தேவனான வனாய்
ஜகத்பதிம் |-எல்லா உலகங்களுக்கும் பிரபு ஸ்வாமி யானவனாய்
ஏனம் -இந்த பகவானை
பூஜ யஸ்ய -பூஜை செய் வாயாக
ஏதத் -இந்த ஸ்தோத்ரத்தை
த்ரிகுணிதம் –மூன்று தடவை
ஜப்த்வா -ஜபித்து
யுத்தேஷு -யுத்தங்களிலே
விஜயி ஷ்யஸி-ஜெயிக்கப் போகிறாய்
ஒருமிக்க மனதுடன் வணங்குவாய்
தேவர்களுக்கும் தெய்வமானவனை உலகத்தின் நாதரை
இந்த ஆதித்ய ஹ்ருதயத்தை மும் முறை ஜபித்து
போரில் கண்டிப்பாக வெற்றி அடைவாய்.
——————–
இராமர் மந்திரம் ஓதி மனத் தெளிவு பெறுதல்
அஸ்மின் க்ஷணே மஹா பாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி|
ஏவம் உக்த்வா ததா அகஸ்த்யோ ஜகாம-ச-யதா-கதம் || 27
மஹா பாஹோ-நீண்ட தடக்கையனே
த்வம் -நீர்
அஸ்மின் -இந்த
க்ஷணே -நேரத்திலேயே -நிமிஷத்திலேயே
ராவணம் வதிஷ்யஸி|–ராவணனைக் கொல்லுவாய்
ததா -அப்போது
அகஸ்த்யோ
ஏவம் உக்த்வா -சொல்லி
ஜகாம-ச-யதா-கதம்-வந்த வழியே போனார்
இந்த நொடியிலேயே, வலிமையான தோள்கள் உள்ளவனே,
இராவணனை நீ வதைப்பாய்
என்று கூறி அங்கிருந்த அக்ஸ்த்ய முனிவர்
எப்படி வந்தாரோ அப்படியே சென்றார்
————–
ஏதஸ் ஸ்ருத்வா மஹா தேஜா நஷ்ட சோகோ-பவத்-ததா |
தாரயாமாஸ- ஸுப்ரிதோ ராகவ: ப்ரய-தாத்மவான்(உ) || 28-
ததா |– அப் பொழுது
மஹா தேஜா-அதிக தேஜஸ் ஸூ யுடைய
ராகவ:
ஏதஸ் -இந்த வார்த்தையை
ஸ்ருத்வா –கேட்டு
நஷ்ட சோகோ-ஒழிந்த மனக் கவலையை யுடையராய்
அ பவத்-ஆனார்
ஸுப்ரிதோ-மிகவும் ஸந்தோஷம் கொண்டு
ப்ரய-தாத்மவான்(உ)-தெளிந்த மனம் உடையவராய்
தாரயாமாஸ- தரித்தார்
அருள் மொழிகளைக் கேட்ட, மிகுந்த தேஜஸ்வி ராகவன்
அப்போதே கவலைகள் எல்லாம் நீங்கியவன் ஆனான்
நோக்கத்தில் உறுதியுள்ளவனும், மிகவும் மகிழ்ந்தவனும் ஆனான் -முயற்சிகளில் சிறந்தவன் ஆன இராகவன்
—————
ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்ஷ-மவாப்தவான் (உ) |
த்ரிர்-ஆசம்ய ஷுசிர்பூத்வா தனுராதயாய வீர்யவான் (உ) || 29-
வீர்யவான் (உ)-வீர தீர பராக்ரமம் யுடைய ராமர்
த்ரிர்-ஆசம்ய–மூன்று தடவை ஆசமனம் செய்து
ஷுசிர்-பரிஸூத்தராக
பூத்வா-ஆதி
ஆதித்யம் ப்ரேக்ஷ்ய -ஸூர்யனைப் பார்த்து
த்ரி ஜப்த்வா –மூன்று தடவை ஜபித்து
தனுராதயாய-வில்லை எடுத்து
பரம் ஹர்ஷம் -அ வாப்தவான் (உ) |மிகவும் ஸந்தோஷம் அடைந்தார்
ஆதித்யனைப் பார்த்துக் கொண்டே (ஸ்தோத்ரத்தை) ஜபித்து
மிகவும் மேலான மகிழ்ச்சியை அடைந்தான்
மும்முறை ஆசமனீயம் செய்து உடலை பரிசுத்தம் செய்துகொண்டு, வில்லை ஏந்தினான் வீரத்தில் சிறந்தவன்
————-
ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபா-கமத் (உ) |
ஸர்வ யத்னேன-மஹதா வதே-தஸ்ய த்ருதோ-பவது || 30
ராவணம் ப்ரேக்ஷ்ய -ராவணனைப் பார்த்து
ஹ்ருஷ்டாத்மா -ஸந்தோஷம் கொண்ட திரு உள்ளம் யுடையவராய்
யுத்தாய ஸமுபா-கமத் (உ) |யுத்தத்தின் பொருட்டு கிட்டே நெருங்கினார்
மஹதா-மிகுந்த
ஸர்வ யத்னேன-எல்லாவித முயற்சியாலும்
தஸ்ய-அந்த ராவணனுடைய
வதே- ஸம்ஹாரத்தில்
த்ருதோ-பவது-நிச்சயம் கொண்டவராக ஆனார்
இராவணன் போர் செய்யும் நோக்கத்துடன் வருவதை பார்த்து
மேலான எல்லா முயற்சிகளுடனும்
அவனை (இராவணனை) வதைப்பதற்கான உறுதியைக் கொண்டான் (இராகவன்).
—————–
சூரியன் ஆசி வழங்குதல்
அத-ரவி: ரவதத் நிரீக்ஷ்ய ராமம் முதித மனா: பரமம் ப்ரஹ்ருஷ்யமான ஹ: |
நிசி-சரபதி ஸம்க்ஷயம் அன்கி-விதித்வா ஸுர கண மத்ய கதோ வசஸ்த்-வ்ரேதி || 31
அத-ரவி: –பிறகு ஸூர்யன்
நிரீக்ஷ்ய ராமம் –ராமரைப் பார்த்து
முதித மனா: -ஸந்தோஷம் கொண்ட மனமுடையவராய்
பரமம் ப்ரஹ்ருஷ்யமான : |மிகவும் களிப்புற்று
நிசி-சரபதி ஸம்க்ஷயம் -ராக்ஷஸ அதிபதியான ராவணனை ஸம்ஹரிப்பதை
அன்கி-விதித்வா -தெரிவித்து -அனுக்ரஹித்து
ஸுர கண மத்ய கதோ -தேவ கணங்களின் நடுவே இருந்து கொண்டு
த்வர -ராவண வதத்தைக் குறித்து துரிதப்படும்
இதி வசஸ் அப்ரவீத் -என்ற வார்த்தையைச் சொன்னார்
அப்போது ரவி ‘விரைவில் நடத்துவாய் இராமா’ என்று மிகவும் மகிழ்ந்த மனத்துடன்,
மிக உயர்ந்த திருப்தியை அடைந்தவனாக, இருட்டில் உழல்பவர்களின் முதல்வனின்
அழிவு நேரம் நெருங்கியதை அறிந்து, தேவர்களின் மையத்திலிருந்து அருளினார்.
———-
முடிவு துதி
பானோ பாஸ்கர மார்தாண்ட ச் சண்ட ரஸ்மை திவாகர
ஆயுர் ஆரோக்யம் ஐஸ்வர்யம் வித்யாம் தேஹி நமஸ்துதே
ராமாயணத்தில் சர்க்க முடிவு
இத்யார்ஷே ஸ்ரீமத் ராமாயணே வால்மீகீயே ஆதிகாவ்யே யுத்த காண்டே
ஆதித்ய ஹ்ருதயம் நாம சப்தோத்தரசததம: சர்க்க: ||
இவ்வாறு வால்மீகியின் ஆதிகாவியம் ஸ்ரீமத் ராமாயணத்தில் யுத்த காண்டத்தில்
ஆதித்ய ஹிருதயம் எனப்படும் நூற்றேழாவது சர்க்கம் நிறைவடைந்தது.
——————
ஸ்ரீ ராம மங்களம் -ஸ்ரீ மா முனிகள் —
ஸ்ரீ ராமர் மந்திரம்
ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்
ஆர்த்தா நாமார்த்தி ஹந்தாரம் பீதானாம் பீதநாசனம்
த்விஷதாம் காலதண்டம் தம் ராமச்சந்த்ரம் நமாம்யஹம்
ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:
———
ஸ்ரீ ராம மங்கள ஸ்தோத்ரம்-ஸ்ரீ மா முனிகளே அருளிச் செய்த மங்கள ஸ்லோகங்கள் என்பர்
ஸ்ரீ ராம நாமமே தாரக மந்திரம் . ஸகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் மந்திரம்.
மோட்சத்திற்கு வழி காட்டி. இதை சொல்லும் போதெல்லாம் மங்களமே உண்டாகும்.
——-
மங்களம் கோசலேந்த்ராய மஹ.நீய குணாப்தயே
சக்ரவர்த்தி த.நுஜாய ஸார்வ பௌமாய ம்ங்களம் –1-
மங்களம்
கோசலேந்த்ராய -கோசல தேச அரசருக்கு
மஹ.நீய குணாப்தயே -கல்யாண குணக்கடலான பெருமாளுக்கு
சக்ரவர்த்தி த.நுஜாய -சக்ரவர்த்தி திருமகனுக்கு
ஸார்வ பௌமாய -ஸார்வ பவ்மனுக்கு
மங்களம்
—
வேத வேதாந்த வேத்யாய மேக ஸ்யாமல மூர்த்தயே
பும்ஸாம் மோஹந ரூபாய புண்ய ஸ்லோகாய மங்களம் -2-
வேத வேதாந்த வேத்யாய -வேதங்களாலும் உபநிஷத்துக்களாலும் அறியப்படத் தக்கவனாயும்
மேக ஸ்யாமல மூர்த்தயே -நீல மேக ஸ்யாமள திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனுக்கு
பும்ஸாம் மோஹந ரூபாய -கண்டவர் தம் மனம் வழங்கும் படி -ஸித்த அபஹாரியான வனுக்கு
புண்ய ஸ்லோகாய -புண்யம் அளிக்கும் ஸ்தோத்ர வாசயனுக்கு
மங்களம் –
———
விஸ்வாமித்ராங்காய மிதிலா நகரீபதே:
பாக்யாநாம் பரிபாகாய பவ்ய ரூபாய மங்களம் –3-
விஸ்வாமித்ராங்காய -விச்வாமித்ர மகரிஷிக்கு அந்தரங்க சிஷ்யனுக்கு
மிதிலா நகரீபதே: பாக்யாநாம் பரிபாகாய -மிதிலா தேச ஜனக மஹாராஜருக்கு பரிபாக பாக்யமானவருக்கு
பவ்ய ரூபாய -பவ்ய திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனுக்கு
மங்களம்
—————
பித்ரு பக்தாய ஸததம் ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா
நந்திதாகில லோகாய ராம பத்ராய மங்களம் –4-
பித்ரு பக்தாய ஸததம் -எப்பொழுதுமே சக்கரவர்த்திக்கு உகப்பாக நடப்பவனும்
ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா நந்திதாகில லோகாய -அகில உலகில் உள்ளோரையும் தனது
ஸஹோதர்களுடனும் பத்னியுடனும் ஆனந்திப்பவனுமான
ராம பத்ராய மங்களம் –
—————-
த்யக்த ஸாகேத வாஸாய சித்ர கூட விஹாரிணே
ஸேவ்யாய ஸர்வயமி நாம் தீரோதராய மங்களம் –5-
த்யக்த ஸாகேத வாஸாய -அயோத்யா வாஸத்தையே துறந்து
சித்ர கூட விஹாரிணே -மநோ ஹராமான சித்ரகூடத்திலே இஷ்டமாகத் திரிந்து
ஸேவ்யாய ஸர்வயமி நாம் -ஸர்வ ரிஷிகளுக்கும் ஸேவை புரிந்து மகிழ்பவனாயும்
தீரோதராய -உதார தீர ஸ்திரமாய் இருப்பவனுக்கு
மங்களம்
————
சௌமித்ரிணா ச ஜாநக்யா சாப பாணாஸி தாரிணே
ஸம் ஸேவ்யாய ஸதா பக்தாய ஸ்வாமிநே மம மங்களம் –6-
சௌமித்ரிணா ச ஜாநக்யா -இளைய பெருமாள் ஜானகிப்பிராட்டி யுடன்
சாப பாணாஸி தாரிணே -சார்ங்க பாணியாயும் -அஸி -என்னும் கட்கத்தையும் தரித்து உள்ளவனாயும்
ஸம் ஸேவ்யாய ஸதா பக்தாய -அகில ஜகத்தும் பக்தி செய்யும் ஸ்வாமியுமான
ஸ்வாமிநே மம -அஸ்மத் ஸ்வாமியுமான பெருமாளுக்கு
மங்களம்
———-
தண்ட காரண்ய வாஸாய கண்டிதாம் அமர சத்ரவே
க்ருத்ர ராஜாய பக்தாய முக்தி தாயாஸ்து மங்களம் –7-
தண்ட காரண்ய வாஸாய – தண்டகாரண்யத்தில் உகந்து வாஸம் செய்து அருளினவனாயும்
கண்டிதாமர சத்ரவே -தேவ சத்ருக்களை நிரஸித்து அருளினவனாயும்
க்ருத்ர ராஜாய பக்தாய முக்தி தாயாஸ்து -ஜடாயு பெரிய உடையோருக்கு கச்ச என்று மோக்ஷம் அருளினவனாயும்
மங்களம்
———–
ஸாதரம் சபரீ தத்த பல மூலாபிலாஷிணே
ஸௌலப்ய பரிபூர்ணாய ஸத்வோத்ரிக்தாய மங்களம் –8-
ஸாதரம் சபரீ தத்த பல மூலாபிலாஷிணே -சபரி தந்த கனிகளை ஆதாரம் அபிலாஷை யுடன்
அமுது செய்து அருளினவனாயும்
ஸௌலப்ய பரிபூர்ணாய -பரிபூர்ண சவ் சீலவானாயும்
ஸத்வோத்ரிக்தாய -உத்க்ருஷ்ட ஸூத்த ஸத்வ மயனானவனாயும்
மங்களம் –
—————-
ஹநுமத் ஸமவேதாய ஹரீசா பீஷ்டதாயிநே
வாலி ப்ரமதநாயாஸ்து மஹா தீராய மங்களம் –9-
ஹநுமத் ஸமவேதாய -திருவடியுடன் ஒன்றறக் கலந்து மகிழ்ந்தவனாயும்
ஹரீசா பீஷ்டதாயிநே-ஸூக்ரீவ மஹா ராஜருக்கு தயை அருளி அபீஷ்ட பல பிரதனானவனாயும்
வாலி ப்ரமதநாயாஸ்து -வாலிக்கு வீட்டு அரசு அருளியவனாயும்
மஹா தீராய -மஹா வீர தீர பலாக்ரமனாயும் உள்ள பெருமாளுக்கு
மங்களம் —
———-
ஸ்ரீமதே ரகுவீராய ஸேதுல்லங்கித ஸிந்தவே
ஜித ராக்ஷஸ ராஜாய ரண தீராய மங்களம் –10-
ஸ்ரீமதே ரகுவீராய -ரகுகுலச் செல்வனாயும்
ஸேதுல்லங்கித ஸிந்தவே -சேது கட்டச் செய்து அருளி கடலைக் கடந்தவனாயும்
ஜித ராக்ஷஸ ராஜாய -ராக்ஷஸ அரசனை வென்றவனாயும்
ரண தீராய-பாட் வீரனாயுமான பெருமாளுக்கு
மங்களம்
———–
ஆஸாத்ய நக்ரீம் திவ்யா மபிஷிக்தாய ஸீதயா
ராஜாதி ராஜ ராஜாய ராம பத்ராய மங்களம் –11-
ஆஸாத்ய நகரீம் திவ்யம் -திரு அயோத்யைக்கு மீண்டு எழுந்து அருளி
அபிஷிக்தாய ஸீதயா -பிராட்டி யுடன் திருமுடி சூடி
ராஜாதி ராஜ ராஜாய -ராஜாதி ராஜனான பெருமாளுக்கு
ராம பத்ராய
மங்களம்
————–
மங்களாசாஸந பரைர் மதாசார்ய புரோகமை:
ஸர்வைச்ச பூர்வைராசார்யை: ஸத்க்ருதாயாஸ்து மங்களம்–12-
மங்களாசாஸந பரைர் -மங்களா ஸாஸன பரர்களான பூர்வர்களாலும்
மதாசார்ய புரோகமை:-அஸ்மத் ஆச்சார்யர் தொடக்கமானவர்களாலும்
ஸர்வைச்ச பூர்வைராசார்யை: -ஸர்வ பூர்வர்களாலும்
ஸத்க்ருதாயாஸ்து மங்களம்-ஸர்வ ஸத் கிருத்துக்களாலும்
மங்களா சாஸனமே பரம புருஷார்த்தம் என்று கொள்ளப்பட்டு
அடியேனுக்கும் அவ்வாறே மங்களா சாசனம் செய்யப் பணித்தார்களே
————
ஸ்ரீ ராம மங்களம்
ஸகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் மந்திரம்.
ஸ்ரீமத் வால்மீகி ராமாயண பாராயணத்தின் மங்கள ஸ்லோகங்கள் —
ஸ்வஸ்தி ப்ரஜாப்⁴ய꞉ பரிபாலயந்தாம்ʼ ந்யாய்யேன மார்கே³ண மஹீம்ʼ மஹீஶா꞉ .
கோ³ப்³ராஹ்மணேப்⁴ய꞉ ஶுப⁴மஸ்து நித்யம்ʼ லோகா꞉ ஸமஸ்தா꞉ ஸுகி²னோ ப⁴வந்து .. 1 ..
காலே வர்ஷது பர்ஜன்ய꞉ ப்ருʼத்²வீ ஸஸ்யஶாலினீ .
தே³ஶோ(அ)யம்ʼ க்ஷோப⁴ரஹிதோ ப்³ராஹ்மணா꞉ ஸந்து நிர்ப⁴யா꞉ .. 2 ..
அபுத்ரா꞉ புத்ரிண꞉ ஸந்து புத்ரிண꞉ ஸந்து பௌத்ரிண꞉ .
அத⁴னா꞉ ஸத⁴னா꞉ ஸந்து ஜீவந்து ஶரதா³ம்ʼ ஶதம் .. 3 ..
சரிதம்ʼ ரகு⁴நாத²ஸ்ய ஶதகோடிப்ரவிஸ்தரம் .
ஏகைகமக்ஷரம்ʼ ப்ரோக்தம்ʼ மஹாபாதகனாஶனம் .. 4 ..
ஶ்ருʼண்வன் ராமாயணம்ʼ ப⁴க்த்யா ய꞉ பாத³ம்ʼ பத³மேவ வா .
ஸ யாதி ப்³ரஹ்மண꞉ ஸ்தா²னம்ʼ ப்³ரஹ்மணா பூஜ்யதே ஸதா³ .. 5 ..
ராமாய ராமப⁴த்³ராய ராமசந்த்³ராய வேத⁴ஸே .
ரகு⁴நாதா²ய நாதா²ய ஸீதாயா꞉ பதயே நம꞉ .. 6 ..
யன்மங்க³லம்ʼ ஸஹஸ்ராக்ஷே ஸர்வதே³வநமஸ்க்ருʼதே .
வ்ருʼத்ரநாஶே ஸமப⁴வத்தத்தே ப⁴வது மங்க³ளம் .. 7 ..
யன்மங்க³லம்ʼ ஸுபர்ணஸ்ய வினதா அகல்பயத் புரா .
அம்ருʼதம்ʼ ப்ரார்த²யானஸ்ய தத்தே ப⁴வது மங்க³ளம் .. 8 ..
மங்க³லம்ʼ கோஸலேந்த்³ராய மஹனீயகு³ணாப்³த⁴யே .
சக்ரவர்திதனூஜாய ஸார்வபௌ⁴மாய மங்க³ளம் .. 9 ..
அம்ருʼதோத்பாத³னே தை³த்யான் க்⁴னதோ வஜ்ரத⁴ரஸ்ய யத் .
அதி³திர்மங்க³லம்ʼ ப்ராதா³த்தத்தே ப⁴வது மங்க³ளம் .. 10 ..
த்ரீன் விக்ரமான் ப்ரக்ரமதோ விஷ்ணோரமிததேஜஸ꞉ .
யதா³ஸீன்மங்க³லம்ʼ ராம தத்தே ப⁴வது மங்க³ளம் .. 11 ..
ருʼதவ꞉ ஸாக³ரா த்³வீபா வேதா³ லோகா தி³ஶஶ்ச தே .
மங்க³லானி மஹாபா³ஹோ தி³ஶந்து ஶுப⁴மங்க³ளா: .. 12 ..
காயேன வாசா மனஸேந்த்³ரியைர்வா பு³த்³த்⁴யாத்மனா வா ப்ரக்ருʼதே꞉ ஸ்வபா⁴வாத் .
கரோமி யத்³யத் ஸகலம்ʼ பரஸ்மை நாராயணாயேதி ஸமர்பயாமி .. 13 ..
———————————-
மங்களம் கோஸலேந்த்ராய மஹநீய குணாப்தயே
சக்ரவர்த்தி தநூஜாய ஸார்வபௌமாய மங்களம்
வேதவேதாந்தவேத்யாய மேகஸ்யாமல மூர்த்தயே
பும்ஸாம் மோஹநரூபாய புண்யஸ்லோகாய மங்களம்
விஸ்வாமித்ராந்தரங்காய மிதிலா நகரீபதே:
பாக்யாநாம் பரிபாகாய பவ்யரூபாய மங்களம்
பித்ருபக்தாய ஸததம் ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா
நந்திதாகில லோகாய ராமபத்ராய மங்களம்
த்யக்த ஸாகேதவாஸாய சித்ரகூட விஹாரிணே
ஸேவ்யாய ஸர்வயமிநாம் தீரோதாராய மங்களம்
ஸௌமித்ரிணா ச ஜாநக்யா சாபபாணாஸி தாரிணே
ஸம்ஸேவ்யாய ஸதா பக்த்யா ஸ்வாமிநே மம மங்களம்
தண்டகாரண்ய வாஸாய கண்டிதாமர ஶத்ரவே
க்ருத்ரராஜாய பக்தாய முக்திதாயாஸ்(அ)ஸ்து மங்களம்
ஸாதரம் ஸபரீதத்த பலமூலாபிலாஷிணே
ஸௌலப்ய பரிபூர்ணாய ஸத்வோத்ரிக்தாய மங்களம்
ஹநூமத் ஸமவேதாய ஹரீஶாபீஷ்டதாயிநே
வாலிப்ரமதநாயா (அ)ஸ்து மஹாதீராய மங்களம்
ஸ்ரீமதே ரகுவீராய ஸேதூலங்கித ஸிந்தவே
ஜிதராக்ஷஸ ராஜாய ரணதீராய மங்களம்
ஆஸாத்ய நகரீம் திவ்யா மபிஷிக்தாய ஸீதயா
ராஜாதிராஜ ராஜாய ராமபத்ராய மங்களம்
மங்களாஶாஸந பரைர் மதாசார்ய புரோகமை:
ஸர்வைஸ்ச பூர்வைராசார்யை: ஸத்க்ருதாயாஸ்து மங்களம்
———–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அகஸ்திய மகரிஷி திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதாப் பிராட்டி லஷ்மண பரத சத்ருக்ந திருவடி சமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply