Archive for the ‘மூன்றாம் திருவந்தாதி’ Category

ஸ்ரீ அருளிச் செயல்களில்-ஸ்ரீ முதல் நான்கு திருவந்தாதிகள் -ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி- -இனி பதப் பிரயோகங்கள் –

November 27, 2025

இடைகழியே பற்றி இனி – நாலாயி:2167/4
இனி யார் புகுவார் எழு நரக வாசல் – நாலாயி:2168/1
என் பாக்கியத்தால் இனி – நாலாயி:2215/4
திறம்பிற்று இனி அறிந்தேன் தென் அரங்கத்து எந்தை – நாலாயி:2269/1
எங்கு அணைந்து காண்டும் இனி – நாலாயி:2363/4
இனி அவன் மாயன் என உரைப்பரேலும் – நாலாயி:2364/1
இனி அவன் காண்பு அரியனேலும் இனியவன் – நாலாயி:2364/2
இன்று ஆக நாளையே ஆக இனி சிறிது – நாலாயி:2388/1
இடம் நாடு காண இனி – நாலாயி:2476/4
இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் – நாலாயி:2477/1
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை இனி அறிந்தேன் – நாலாயி:2477/2

நீயும் திருமகளும் நின்றாயால் குன்றேடுத்துப்
பாயும் பனி மறுத்த பண்பாளா வாசல்
கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல்
இடை கழியே பற்றி இனி —86
-இவர் இருந்த இடத்திலேயே பிராட்டியும் தானுமாக வந்து நெருக்க -அத்தைக் கண்டு அனுபவிக்கிறார் -இடை கழிக்கு உள்ளும் புறமும் காட்டுத் தீ போலே இரா நின்றது -(சேஷத்வம் அறியாத சம்சாரிகள் வெளியில் இருக்க -உபாயாந்தர ரிஷிகள் -அசித்வத் பாரதந்தர்யம் அறியாதவர்கள் உள்ளே இருக்க -) காமுகரானவர்கள் உகந்த விஷயத்தின் யுடைய கண் வட்டம் விட்டுப் போக மாட்டாதாப் போலே(காமுகரானவர்கள்-இங்கு லோக விலக்ஷணமாக மிதுனம் )-இனி -இப்போது -இனி திருக் கோவலூரிலே நிற்கிறது கர்ம பல அனுபவத்துக்கு அன்று இறே – சம்சாரிகளை நரகத்தில் புகாமல் காக்க விறே-திரு வாசலுக்கு புறம்பு போக மாட்டாதே உள்ளுப் புக மாட்டாதே ஸ்ப்ருஹணீயமாய் அழகியதாய்-திருக் கோவலூர் இடை கழியைப் பற்றி ஆஸ்ரித ரக்ஷணத்தில் முற்பாடனான நீயும் -உன்னிலும் முற்பட்ட திரு மகளாருமாக எங்களோடு கலக்கப் பெற்ற உகப்பின் கனத்தாலே பரந்த கால் பாவி இப்போது தரித்து நின்றாயே–என்று அனுபவிக்கிறார் –கீழே இருவரையும் கூறி–நின்றாய் -ஆள -என்று  சொல்லுகிறது
சாயையைத் தனித்து பேச வேண்டாமை  –ஸ்ப்ருஹணீயமாய் அழகியதாய் திருக் கோவல் இடை கழியே பற்றி இப்போது இப்படி நின்றான் -என்னுதல்இனிமேல் எல்லாம் இப்படி நிற்கும் -என்னுதல்-இனி -என்கையாலே-அநாதி காலம் இழந்தது பெற்றமை யடையத் தோற்றி இருக்கிறது –-இனி இப்பால் பட்டது யாதவங்களும் சேர் கொடேன் -திருவாய் மொழி -2-7-3-என்னக் கடவது இறே-ஆழ்வார்கள் எல்லாரையும் அவதரிப்பிக்கைக்காகப்
பொற் கால் பொலிய விட்ட தேசம் இறே

இனியார் புகுவார் எழு  நரக வாசல்
முனியாது மூரித்தாள் கோமின் கனி சாயக்
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
நன்கறிந்த நா வலஞ்சூழ்  நாடு —87-எழு வகைப் பட்டு இருந்த நரக வாசல் இனி யார் போய்ப் புகுவார்-இனி நரக விசேஷங்களும் பாப விசேஷங்களும் கொண்டு கார்யம் உண்டோ
ஒருவன் –சர்வ பாபேப்யோ மொஷயிஷ்யாமி –என்று நிற்கச் செய்தே –அன்றிக்கே
எழுகிற நரக வாசல் உண்டு -எல்லாரும் போய்ப் புகுகிற நரக வாசல் -என்னுதல்
ஆழ்வார்கள் திருவவதாரம் பண்ணின பின்பு பழைய சம்சாரம் அற்று -என்கை  –முனியாது –யம படருடைய கோபத்துக்கு இனி பலம் இல்லை என்கிறது – எங்கள் பதத்துக்கு அழிவு  சொல்லுவதே என்று பொடியாதே முனிந்தார்கள் ஆகில் யமபடர் கன்றும் விளவும் பட்டது படும் இத்தனை –மூரித்தாள் கோமின் – பெரும் தாளைப் பூட்டுங்கோள்- -இனிப் புகுவார் இல்லை -மிடுக்குடைய தாளைக் கோவுங்கோள்-அதுக்கடி இன்னம் ஒரு கால் திறக்கும் என்னும்படி இருக்கில் இறே எளிதாகக் கோர்க்க வேண்டுவது –இவ் வாழ்வாருடைய பொலிக பொலிக பொலிக -திருவாய் -5-2- இருக்கிற படி இப்பாசுரம்-

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்
புகையால் நறு மலரால் முன்னே -மிக வாய்ந்த
அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு
என் பாக்கியத்தால் இனி—34-புஷ்பாத் யுபகரணங்களைக் கொண்டு -மிகவும் செறிந்த ஸ்நேஹத்தை யுடையேனாய்க் கொண்டு சௌந்தர்யத்துக்கும் நீர்மைக்கும் தோற்று ஸ்துதித்து தேவர் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –என் பாக்கியத்தால் இனி–—
தேவருடைய கடாஷத்தாலே -என்னுதல் —என்னுடைய விலக்காமை யாகிய பாக்கியத்தாலே -என்னுதல் –

திறம்பிற்று இனி அறிந்தேன் தென்னரங்கத்து எந்தை
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் -திறம்பாச்
செடி நரகை நீக்கித் தான் செல்வதன் முன் வானோர்
கடி நகர வாசற் கதவு–88-ஸ்வ யத்னத்தால் பெறுவோம் என்றவர்களுக்குத் தப்பிற்று –இப்போது அறிந்தேன் –அர்ஜூனனுக்கு மாமேகம் என்று உன்னால் சாதிக்கப்படும் அசேதனமான க்ரியா கலாபங்களை விட்டு பரம சேதனனாய் -உன்னைப் பெறுகைக்கு  யத்னம் பண்ணுகிற சித்த ஸ்வரூபனான என்னையே பற்று -என்றான் – அது ஒருவனுக்கு ஒரு காலத்திலே என்னாத படி சர்வர்க்கும் சர்வ காலத்திலும் – மாமேகம் -என்று இருக்கிறவர் -பெரிய பெருமாள் –மாம் -என்ற சௌலப்யத்திலும்-இங்கு சௌலப்ய காஷ்டையைச் சொல்லுகிறது –மாம் -என்ற சௌலப்யத்தை -வென்று ஓட வைத்த -புடம் போட்ட -மாம் –அவ்விடம் பெறுவார்க்கும் இவர் நினைப்பிட வேணும்  –பர வியூஹ  விபவங்களுக்கு நித்ய முக்தர் முக்த ப்ராயர் பாக்யவான்கள் பக்கலிலே  கண்ணழிவு  சொல்லி ஆஸ்ரயணம் தவிரலாம் – அர்ச்சாவதாரத்திலே ஆஸ்ரயணத்துக்கு அங்கனே கண் அழிவு இல்லை-அப்ரதிஷேதம் கொண்டு பெற பெற மாட்டாதே ஸ்வரூபத்தை அழித்துக் கொண்டு பேற்றை இழப்பதே –

உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பரியன் உண்மை -இணரணையக்
கொங்கணைந்து வண்டறையும் தண்  துழாய்க் கோமானை
எங்கணைந்து காண்டும் இனி ——–82-
முதல் தன்னிலே இதில் இழியாதாது நன்று –
அதாகிறது அறிவதாக இழிந்து அறியாது ஒழிவதில் காட்டில் முதல் தன்னிலே அறிவதாக இழியாதது நன்று இறே -அறிய அரியனாய் இருப்பான் ஒருவன் –தன்னாலும் அறியப் போகாது –இவனாலும் அறியப் போகாது-தனக்கும் தன் தன்மை அறிவரியான் -திருவாய்மொழி -8-4-6-அவ்வருமை தீர அவன் தான் ஹ்ருதயத்திலே சந்நிதி
பண்ணி கலக்கும் அன்று ஒரு குறை இல்லையே என்னில் – அப்போதும் அவனை உள்ளபடி யறிந்து பரிச்சேதிக்கப் போகாது – அவனுடைய உண்மை யறியப் போகாது –வைலஷண்யத்தை பரிச்சேதிக்கப் போகாது-இவன் தான் காணும் அன்று காண வரிதாய்
அவன் தானே காட்டும் அன்றும் காண வரிதானாலும் இழந்து ஆறி இருக்க ஒண்ணாது
போக்யதையும் ஸ்வாமித்வமும் –லௌகிகர் படியிலும் காண விரகற்று-அவன் தானே காட்டும் வைதிகர் படியாலும் காண விரகற்ற பின்பு இனி நான் காண்கை என்று ஒரு பொருள் உண்டோ-கிட்டாது ஒழிய மாட்டேன் கிட்ட மாட்டேன் –

இனியவன் மாயன் என வுரைப்பரேலும்
இனியவன் காண்பரியனேலும் -இனியவன்
கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங்கழலான்
உள்ளத்தின் உள்ளே உளன்
———83–இனியவன் மாயன் என வுரைப்பரேலும்-பிரமாணங்கள் ஸூ லபன் என்று சொல்லுகிற அவனை
நாட்டார் அரியன் என்று சொன்னார்களே யாகிலும் –இப்போது அவன் ஆச்சர்ய பூதன் என்று சொல்லுவார்களே யாகிலும் – வர்த்தமான தசையில் பிரகிருதி சம்பந்தித்து மம மாயா துரத்யயா-கீதை -7-13-என்னும்படி காண வரியன் ஆகிலும்  –இனியவன் காண்பரியனேலும்-நிரதிசய போக்யனாய் யுள்ளவன் தான் கிட்டிக் காண அரியனாய் இருந்தானே யாகிலும்
இப்போது அவன் காண முடியாதான் ஒருவன் ஆகிலும்-அன்றிக்கே-சரீர சம நந்தரத்திலும் காண வரியன் யாகலும்-இனியவன் கள்ளத்தால் மண் கொண்டு–சர்வேஸ்வரனான தான் செய்தான் என்று தோன்றாதபடி பூமியை அபஹரித்து நெஞ்சுக்கு இனியனாய் தன்னுடைமையை மகா பலி பக்கலிலே அளந்து கொண்டவன் –விண் கடந்த பைங்கழலான் –ஆகாசத்துக்கு அவ்வருகாம்படி வளர்ந்து-சகல லோகங்களையும் தன் கீழே இட்டுக் கொண்ட பரந்த திருவடிகளை யுடையவன் – அன்றிக்கே-அழகிய திருவடிகளை யுடையவன் -என்னவுமாம் –இனி உள்ளத்தின் உள்ளே உளன் –இப்போது என் ஹ்ருதயத்தின் உள்ளே சந்நிஹிதன் ஆனான்-புக்க ஆயுச்சுக்கு மரணம் இல்லை இறே-மேல் செய்த படி செய்கிறான்
பெற்ற வம்சத்தை ஒருவரால் இல்லை செய்ய ஒண்ணாது இறே-இப்படி சந்நிஹிதன் என்றதே யாகிலும் கீழ்ச்   சொன்ன  அபரிச்சேத்யதையே பலித்து விடுகிறது –இனி -என்று -இப்போது -என்றபடி –அன்றிக்கே-இனியவன் என்று ஒரே சொல்லாய் அனுசந்திப்பார்க்கு நிரதிசய போக்யனாய் இருக்குமவன் என்று மூன்று இடத்துக்கும் பொருளாகவுமாம் –

இன்றாக நாளையேயாக இனிச் சிறிதும்
நின்றாக நின்னருள் என்பாலதே -நன்றாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -நாரணனே
நீ என்னை அன்றி இலை -7-இன்றாதல் நாளையாதல் சில காலம் கழிந்தாதல் உன்னுடைய கிருபை என் பக்கலிலே –அகதியான எனக்கு நீ போக்கி கதி இல்லை-அப்படியே சர்வ பிரகார பரி பூர்ணனான உன்னுடைய க்ருபைக்கு வேறு சிலரை விஷயமாக உடையை எல்லை –என்றும் ஒக்க இவ்வாத்மா உன் அருளுக்கே விஷயமாய் உன் கடாஷம் ஒழியில் என் சத்தை இல்லையானபடி-மெய்யாய் இருக்கிறபடி கண்டாயே-அப்படியே நீயும் என்னாலே உளையாய் என்னை ஒழிய இல்லை யாகிறாய்-இப்படி இருப்பது ஓன்று உண்டோ என்று வேணுமாகில் பார்த்துக் கொள்ளாய் என்று நடுவே பிரமாணத்தைப்-நாரணனே -என்று  பேர்த்திடுகிறார்-இங்கனே இருக்கை எனக்கு ஸ்வரூபம் -என்றுமாம் – –

ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை
ஆன்றேன் அமரர்க்கு அமராமை –ஆன்றேன்
கடனாடும் மண்ணாடும் கை விட்டு மேலை
இடநாடு காண வினி–95-புண்ய பலங்களை பூசிக்கும் ஸ்வர்க்காதி லோகங்களையும்
புண்யார் ஜனம்   பண்ணும் விபூதியையும் உபேஷித்து-விஸ்வதே ப்ருஷ்டேஷூ சர்வத ப்ருஷ்டேஷூ என்னும்படி இடமுடைத்தான ஸ்ரீ வைகுண்டம் காணலாம்படி இப்போது பரபக்தி யுக்தன் ஆனேன்-இத்தால் –
1-ப்ராப்யமான  கைங்கர்யத்தில் தமக்கு அளவிறந்த  சாரஸ்யம் விளைந்த படியையும்
2-அதுக்கு  விரோதியான  அஹங்கார மமகார ரூப துக்க சம்பந்தம் விட்டு நீங்கின படியையும்
3-அடிமைக்கு அடைவில்லாத சம்சாரத்தில் தமக்கு யுண்டான விரக்தியையும்
4-அடிமைக்கு ஏகாந்தமான பரமபதத்தில் புக்கு அல்லது தரிப்பது அரிதாம்படிபரமபக்தி பிறந்தபடியையும்
5-இப்படி இருக்கிற நம் அதிகார பரிதியைக் கண்டு ப்ரஹ்மாதிகள் தொடை   நடுங்கித்
தம்  கண் வட்டத்தில் வந்து கிட்ட மாட்டாமல் கிடக்கப் போம்படியான தம்முடைய வேண்டற்பாட்டையும்-அருளிச் செய்தார் ஆய்த்து-

இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-ப்ரஹ்ம ருத்ராதிகளுக்குத் தெய்வம் நீயே என்னும் இடம் இப்போது அறிந்தேன்-என்னுடைய நாதனான யுன்னை – அவர்களுக்கு நிர்வாஹகனான மாத்ரம் அன்றிக்கே உன்னுடைய அளவெல்லாம் இப்போது அறிந்தேன்-இப்போது அறிந்தேன்-சர்வ காரணமும் நீயே-பிறர் வாழ்வும்-வாழ்வாகிற நல்ல கிரியையும் உடையையாய் சகல பதார்த்தங்களை யுடையையாய் -இருக்கிறாயும் நீயே –மஹா உபநிஷத் பிரக்ரியையாலே-ப்ரஹ்ம ருத்ராதிகள் தொடக்கமான சகல பிரபஞ்சத்துக்கும் காரண பூதனான நாராயணனே  சர்வ ஸ்மாத் பரன் என்று
பிரதமத்தில் பிரதிஜ்ஞை பண்ணி ஸ்ருதி ஸ்ம்ருதி யுப ப்ரஹ்மணங்களாலும்
அனந்யதா சித்தமான ஸ்ரீ யபதித்வாதி சின்னங்களாலும் நெடுக உபபாதித்துக் கொண்டு போந்து- அடியில் பண்ணின பிரதிஜ்ஞ அநு குணமாக அவனுடைய பரத்வத்தை தலைக் கட்டுகிறார் –

நிதியைப் பொழியும் முகில் என்ன நீசர் தம் வாசல் பற்றித்
துதி கற்று உலகில் துவள் கின்றிலேன் இனித் தூய் நெறி சேர்
எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை அடியாம்

கதி பெற்றுடைய இராமானுசன் என்னைக் காத்தனனே – 21- ஆசார்ய அபிமானத்திலே ஒதுங்கி வர்த்திக்கிற -தூய்மை -பரி சுத்தி –நெறி –உபாயம் -இது -ஆளவந்தாருக்கு விசேஷணம் ஆகவுமாம்-நெறி-ஒழுக்கல்-கதி–அதாவது ப்ராப்யம்–இராமானுசன்
-எம்பெருமானார் –என்னைக் காத்தனனே -லோகத்தில் ஞாநாதிகரை ரஷித்தது ஆச்சர்யமாய் இராது -பிரதி கூலனாய் இருக்கிற என்னை -அநு கூலனாக்கி ரஷித்தான் -இது என்ன அகடிதகடநா சாமர்த்தம் என்று வித்தராகிறார் –தூய் நெறி சேர் யதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம் -கதி பெற்று உடைய -என்கிற இது -எம்பெருமானாருக்கு விசேஷணம் ஆகவுமாம் –இனி-அவர்க்கு அடியேன் ரஷ்ய பூதனாய் விட்ட பின்பு இனி -மேல் உள்ள காலம் எல்லாம்-யமுனைத் துறைவர் இணை யடி -என்பது ஆளவந்தார் திருவடியான பெரிய நம்பியை குறிப்பால் உணர்த்துகிறது என்றும் கூறுவர்-

நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றிப்
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அக்தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச இனி நாம் பழுதே
யகலும் பொருள் என் பயன் இருவோருக்கும் ஆன பின்னே – -48
-எனக்கு-ஸ்வரூப லாபமாய் -தேவரீருக்கு குண லாபமாய் -இப்படி நமக்கு இருவருக்கும் பிரயோசனமான பின்பு-இது அறிந்து இருக்கிற நாம் மேலுள்ள காலம் வ்யர்த்தமே அகலுகைக்கு காரணம் என் –அகலுகைக்கு ஹேது இல்லை என்று கருத்து –இருவர் இடமும் இருவர் தேட்டங்களும் இருக்க இழப்பேனோ-உன் அருள் -ராமன் சீதா அருள்களில் வாசி -அநாதி காலம் ராஷஷிகளாக திரிந்து உள்ளோம் -சம்சார ஆர்ணவத்தில் மக்நராக மூழ்கி உள்ளோம் -புன்மை இலோர் -நித்யர்களை சொல்லிற்று –நாம் பழுதே-யகலும் பொருள் என் -அமுதனார் தம்மையும் நம்மையும் –சேர்த்து அருளிச் செய்கிறார் – தம்மையும் உடையவரையும் என்றுமாம்-நாம் க்ர்த்ஜ்ஜராய் போம் அது ஒழிய நமக்கு-அகலுகை என்று ஒரு பிரயோஜனம் உண்டோ -கைவிடுகை அவருக்கு அவத்யமாக-தலைக்கட்ட கடவதாகையாலும் -பெறாப் பேறாக அடியோங்களை தேவரீர் விஷயீ கரித்துக்- கொள்ளுகையாலும்  -நிழலும் அடி தாறும் போலே அடியோங்களை அனந்யார்ஹராம் படி-அங்கீகரிக்கை ஒழிய தேவரீருக்கு அகலுகை என்ற ஒரு பிரயோஜனம் உண்டோ என்றது ஆய்த்து –எல்லா நீசதைக்கும் உறைவிடமாய் இருப்பவன் இந்த நான் ஒருவனேஉலகத்தில் இத்தகைய ஒருவனைக் காண முடியாது .ஆகையால் எம்பெருமானரேதேவரீர் உடைய வீறு பெற்ற கருணையே எனக்கு கதி –

இருந்தேன் இருவினை பாசம் கழற்றி இன்றி யானிறையும்
வருந்தேன் இனி எம் இராமானுசன் மன்னு மா மலர்த்தாள்
பொருந்தா நிலைவுடைப் புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மை செய்யாப்
பெரும் தேவரைப் பரவும் பெரியோர் தம் கழல் பிடித்தே – -62-அவர்கள் ஸ்வபாவத்துக்கு தோற்று ஸ்தோத்ரம் பண்ணா நின்று உள்ளமகா பிரபாவரானவர்களுடைய திருவடிகளைப் பற்றி-இன்று புண்ய பாப ரூபத்தாலே உபய விதமாய் இருந்துள்ள கர்ம பாச விநிர்முக்தனாய் -க்ருதக்ருத்யனாய் -நிர்ப்பரனாய் இருந்தேன் .–இப்படி இருந்த நான் இனி அத்யல்பமும் துக்கத்தில் அன்வயியேன்.கர்மம் கிடக்கில் இறே துக்கம் வருவது என்று கருத்து-கூரத் ஆழ்வான் திருவடிகளைப் பற்றி – இன்று இருவினைப் பாசம் கழற்றி -இருந்தேன்-இன்று யான் இறையும் வருந்தேன் இனி -இப்போது நான் ஷண மாத்ரமானாலும் சம்சார துக்கத்தால் கிலேசப்பட கடவேன் அல்லேன் –அத்ரைவ ஸ்ரீ ரெங்கே சுகமாஸ்வ –என்றபடி-சம்சார வெக்காயம் ஒரு ஷண மாத்ரமும் தட்டாதே சர்வதா ஆனந்த ரச அனுபவத்தோடு-இருக்கக் கடவேன் என்றது ஆய்த்து –யான் இன்று பாசம் கழற்றி இருந்தேன் -இனி இறையும் வருந்தேன் -என்று இயைக்க-யான் என்பதை முன்னும் பின்னும் கூட்டுக .

சோர்வின்றி வுன்தன் துணை அடிக்கீழ் தொண்டு பட்டவர் பால்
சார்வின்றி நின்ற வெனக்கு அரங்கன் செய்ய தாளிணைகள்
பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமானுச இனி யுன்
சீரொன்றிய கருணைக்கு இல்லைமாறு தெரிவுறிலே – –
81-பாகவத சேஷத்வ நிஷ்டர்க்கு ஒழிய தம் திருவடிகளை விட்டுப் பேராத நிலை இல்லையாம்படி -இருக்கும் -பெரிய பெருமாளுடைய திரு மேனி நிறத்துக்கு -பரபாகமான சிவப்பையும்-சேர்த்தி அழகையும் உடைய திருவடிகளை ஒரு காலமும் விட்டு நீங்காத படியாக இன்று பெறுவித்து அருளினவரே ! இப்படியான பின்பு தேவரீர் உடைய கௌரவ யுக்தையாய் இருந்துள்ள க்ருபைக்கு ஆராயும் அளவில் ஓர் ஒப்பு இல்லை .-பெரிய பெருமாள் உடைய திருவடிகளில் சக்தனாய் -அந்த கர்வத்தாலே ததீயர் உடைய ப்ரபாபவத்தை அறியப் பெறாதே  -தேவரீர் திருவடிகளுக்கு சேஷமாய் இருப்பவர் பக்கல் சேராது ஒழிந்த எனக்கு அத்தை இன்று லபித்தது அருளின தேவரீர் உடைய அப்ரதிம பிரபாவதியான கிருபைக்கு –ஆராய்ந்து பார்க்கில் – ஒருவரும் சத்ர்சர் இல்லை-பாகவத சேஷத்வத்தின் பயனாக அரங்கன் செய்ய தாளிணைகள் பெறுவித்ததாக கூறாமல் நேரே பாகவத சேஷத்வத்தையே பெறுவித்ததாக உரை கூறலுமாம் 

பற்றா மனிசரைப் பற்றி அப் பற்று விடாதவரே
உற்றார் என உழன்றோடி நையேன் இனி ஒள்ளியநூல்
கற்றார் பரவும் இராமானுசனைக் கருதும் உள்ளம்
பெற்றார் யவர் அவர் எம்மை நின்றாளும் பெரியவரே – – 86-ஒன்றுக்கும் பற்றாத சூத்திர மனுஷ்யரை ஆஸ்ரயித்து அந்த ஆஸ்ரயணம்  விடாதேநிற்கிறவர்களையே பந்துக்கள் என்று -அனுசந்தித்து -அவர்கள் பின்னே திரிந்து -உழன்று –அவர்கள் விஷயமான ப்ராவண்யத்தாலே -அவர்கள் முகத்திலே விழிக்க பெறுவது -எப்போது-என்று ஓடி -அவர்கள் உடைய சம்ச்லேஷ விச்லேஷங்களில் உண்டான ஹர்ஷ  சோகங்களாலே -இனி சிதிலன் ஆகேன் –தத்வ ஹித புருஷார்த்தங்களை சூவ்யக்தமாக பிரகாசிக்கும் சாஸ்த்ரங்களைஅதிகரித்து இருக்குமவர்கள் -தங்கள் கல்விக்கு பிரயோஜனம் இது என்று –பிரேமத்தாலே அடைவு கெட ஸ்தோத்ரம் பண்ணா நின்றுள்ளஎம்பெருமானாரை அனுசந்திக்கையே யாத்ரையாய் இருக்கும் மனசை நிதி பெற்றால் போலே-லபித்தது இருக்குமவர்கள் -யாவர் சிலர் –அவர்கள் குல சரண கோத்ரங்கள்  ஏதேனுமாக வமையும் –அவர்கள் நம்மை இவ்வாத்மா உள்ளளவும் ஒருபடிப்பட அடிமை கொள்ளும் மகானுபாவர் –ஓடினேன் ஓடி –வாடினேன் வாடி -முன்னம் -நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -கலியன்-நான் கண்டு கொண்டேன் ராமானுசா என்னும் நாமம் -என்கிறார்-நையேன் இனி -எம்பெருமானார் விஷயீ-காரத்தை பெற்ற பின் இப்படி செய்து சிதிலன் ஆகேன் -இது காறும் நைந்தது போதும் .இனி மேல் உழன்று ஓடி நிலை குலையும் நிலையே எனக்கு ஏற்படாது -அற்ப மனிசரைப் பற்றி அவரை உற்றாரஎன உழன்று ஓடி நைந்தேன் –-இது நானாக தேடிக் கொண்ட கேடு-இன்று பெரியவர் என்னை அபிமானித்து அங்கன் நைய விடாது ஆள்கின்றனர் .இது ஹேது எதுவும் இன்றி எனக்கு கிடைத்த பேரும் பேறு -என்ற  வியந்து பேசுகிறார் .

இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னும் நரகிலிட்டுச்
சுடுமே யவற்றைத் தொடர்தரு தொல்லைச் சுழல் பிறப்பில்
நடுமே யினி நம் இராமானுசன் நம்மை நம் வசத்தே

விடுமே சரணமென்றால் மனமே நையல் மேவுதற்கே –-98 –தம்மை உத்தரிப்பிக்கைக்காக வந்து அவதரித்த எம்பெருமானார் –தேவரே சரணம் -என்று ஓர் உக்தி மாதரம் பண்ணினால் -பிரகிருதி வச்யருக்கு சப்தாதி போக விஷயங்களாலே இனிதாக தோற்றி இருக்கும் ஸ்வர்க்கத்திலே இட்டு வைப்பாரோ –தம் திருவடிகளைப் பற்றின பின்பும் நரகத்திலே இட்டு வைத்து தபிப்பிப்பரோ – அந்த ஸ்வர்க்க நரக அனுபவத்துக்கு ஈடான கர்மம் ஜென்மத்துக்கு உருப்பாகையாலே – அவற்றை அநுசரித்து கொண்டு இருப்பதாய் -அநாதியாய் -வளைய வளைய வரா நின்றுள்ள-ஜன்மத்திலே நிறுத்துவரோ –மேலுள்ள காலம் நம்மை நம்முடைய ருசி அநு குணமாக விடுவரோ –ஆன பின்பு ப்ராப்தி நிமித்தமாக-நெஞ்சே சிதிலமாகாதே கொள் –யுக்தி மாத்திரமே அமையும்-அவன் ஈஸ்வரன் ஸ்வ தந்த்ரன் ஸ்வதந்த்ரம் கொடுப்பான் –இவர் பாரதந்த்ரர் -நமக்கு பாரதந்தர்யம் கொடுத்து நம்மை தன் வசத்தே சேர்த்து கொள்கிறார் –அவன் நம்  கர்மம் பார்ப்பான் இவர் தம் கிருபை ஒன்றையே பார்ப்பார்-எம்பெருமானார் திருவடிகளை ஆஸ்ரயித்து- தனக்கே யாக எனைக் கொள்ளும் ஏதே -என்னும்படியான நிஷ்கர்ஷத்தைப் பெற்ற   அடியோங்களை –அப்ராப்தமானவை ஒன்றும் தட்டாதபடி பண்ணி அருளுவார்எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பும் -பிரபன்னராய் -சரம பர்வ நிஷ்டராய் இருக்கும்-நம்மை உபாசகரைப் போலே ப்ராப்ய அவசான பர்யந்தம் சம்சார வெக்காயம் தட்டும்படி காட்டிக் கொடார்எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே – என்று-இவ்வர்த்தத்தை பிரதம பர்வத்தில் திரு மழிசைப் பிரானும் அருளிச் செய்தார் இறேஸ்வ தந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே பிரசங்கம்  –பயம் அபயம் -இரண்டும்-மாறி மாறி நடப்பது -தான் உள்ளது -என்னும் ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்தி

போந்ததென் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனதடிப் போதில்  ஒண் சீ
ராம்  தெளி தேனுண்டமர்ந்திட வேண்டி நின் பாலதுவே
ஈந்திட வேண்டும் இராமானுச இதுவன்றி யொன்றும்
மாந்தகில்லாது இனிமற்றொன்று காட்டி மயக்கிடலே – – 100-
மற்றொன்றை கொடுத்தருளிற்றாகிலும் -அம்ருதாசிக்குப் புல்லை இட்டால் மிடற்றுக்கு-கீழே இழியாதாப் போலே ஈது ஒழிய வேறு ஒன்றையும் புஜிக்க  மாட்டாது –-தேவரீர் நினைத்தால் அதுவும் செய்விக்கலாம் – இனி வேறொன்றைக் காட்டி மயங்கப் பண்ணாது ஒழிய வேணும் -வேறே காட்டி மயக்கிடாமல் இதிலே ஸ்திரமாக  நிற்கும் படி -பண்ணி அருள வேணும்--பல நீ காட்டிப் படுப்பாயோ இன்னம் கெடுப்பாயோ -நெறி காட்டி  நீக்குதியோ-என்று நம் ஆழ்வாரும் இவ்வர்த்தத்தை பிரதம பர்வத்தில் அனுசந்தித்து அருளினார் இறே-தெளி தேனுக்கு மாற்றாக காட்டும்மற்று ஓன்று மது சூதநனின் தேனே மலரும் திருப்பாதம் -என்பது அமுதனார் உட் கருத்து .  –இனி மற்று ஓன்று காட்டி மயக்கிடிலே -இப்படியான பின்பு வேறு ஒரு விஷயத்தை காட்டி-மோகிப்பிக்க வேண்டா –மயக்கம் -மோகம் –பகவத் விஷயத்தை என்று சொல்ல அருவருத்து மற்று ஓன்று காட்டி – என்று சொல்லுகிறார் காணும் –உனது அடிப் போதில் என்னவே அமைந்து இருக்க -நின் பால் -என்று மிகை படக் கூறியது-மற்றவர் பால் போதராது -நின்பாலே போந்து அமர்ந்திடலை வலி வுறுத்துவதால்-மற்றவருக்கு உரியர் ஆகாமை காட்டிற்றுஅதுவே ஈந்திட வேண்டும் என்பதனால் எம்பெருமானாரே இன்பம் தரும் உபாயம் என்பது பெற்றோம்-உண்டு அமர்ந்திடப் போனது தானாகவோ அன்றிப் பிறர் மூலமாகவோ அல்லாமல்-எம்பெருமானாராலேயே அதனைப் பெற வேண்டி இருத்தலின் அவரன்றி வேறு உபாயம் இன்மை-தோற்றுகிறது .இதுவன்றி ஒன்றும் மாந்த கில்லாது -என்று வெளிப்படையாகவே எம்பெருமானார் அன்றி வேறு போக்கியம்-இல்லாமை சொல்லப் படுகிறது ..இப்படி ஆகார த்ரயமும் -சொல்லிற்று ஆயிற்று –

——————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஆங்கு மலரும் குவியும்-

September 18, 2025

அங்குக் கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திரு நாபீ கமலமானது திருக் கையும் திரு ஆழ்வார்களுமான சேர்த்தியைக் கண்டு அலருவது மொட்டிப்பது ஆகிற படியை அனுபவிக்கிறார் -ஹிரண்யனும் மது கைடபர்களும் முடிந்த பின்பு கண் வளரும் போதை அழகை அனுபவிக்கிறார் -(கீழ் இரண்டு பாசுரங்களுக்கும் இதுக்கும் சங்கதி )

(கவி -நிகழ்வுகளை ஏற்றிச் சொல்வது போல் இங்கும்-தற் குறிப்பு ஏற்று அணி —
பெருமாள் -மிதிலா தேசம் நுழையும் போது ஒல்லை வா என அழைத்தனவே
கோவலன் நுழைய வராதே கொடிகள் அங்கு -இளங்கோ அடிகள் )

(உந்தித்  தாமாரை பரத்வம் ஜகத் காரணத்வம் பொதுவாக சொல்வர்-இங்கு அழகு சவுந்தர்யம்)

ஆங்கு மலரும் குவியும் மாலுந்தி வாய்
ஓங்கு கமலத்தின் ஓண் போது -ஆங்கைத்
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்
பகருமதி என்றும் பார்த்து  —மூன்றாம் திருவந்தாதி–67-

பதவுரை

மால்–ஸர்வேச்வரனுடைய
உந்தி வாய்–திரு நாபியிலே
ஓங்கு–உயர வளர்ந்த
ஒண் கமலத்தின் போது–அழகிய தாமரைப் பூவானது
கை–அவனுடைய வலத் திருக் கையில்
ஆம்–உண்டான
திகிரி–திருவாழியை
சுடர் என்றும்–ஸூர்யனென்றும்
(ஆங்கை-கை ஆம்)
இடத் திருக் கையிலுள்ள
வெண் சங்கம்–வெளுத்த சங்கை
வானில் பகரும் மதி என்றும்–ஆகாசத்தில் விளங்குகிற சந்திரனென்றும்
பார்த்து–நினைத்துக் கொண்டு
ஆங்கு–எக் காலத்திலே
மலரும் குவியும்–மலர்வதும் மூடிக் கொள்வதுமா யிரா நின்றது.-குவியும் ஆல் -ஆச்சர்யம் என்றுமாம்

(சம்பு காவியம் -வெங்கடாத்ரி கவி
ரமா ஹஸ்த–இத்யாதி
திரிசானு -தப்பு கண்ணில் படும்
விஷ்வாயுசு நல்லதே கண்ணில் படும்
நாபியில் கமலம் -பிராட்டியார் திருக்கையில் லீலா பத்மம்
தேன் சொட்டும் பிள்ளைக்கு-த்யுக முக சிசு -இரண்டு இரட்டை நான் முகன்)

மாலுந்தி வாய்-ஓங்கு கமலத்தின் ஓண் போது —திரு நாபீ கமலத்தில் ஓங்கி இருந்துள்ள அழகியதான தாமரைப் பூ
ஆங்கைத்-திகிரி சுடர் என்றும் –கையில் திரு வாழியை ஆதித்யன் என்றும்

வெண் சங்கம் வானில்-பகருமதி என்றும் பார்த்து–ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை ஆகாசத்தில் விளங்கா நின்றுள்ள சந்திரன் என்றும் பார்த்து-அனுசந்தித்து –

ஆங்கு மலரும் குவியும்-ஆல்-
இரண்டு காலத்திலே பிறக்கக் கடவ அவ்விரண்டு அவஸ்தையானது யுகபத் உண்டாகா நின்றது -ஓர் அவஸ்தையிலே அலருவது குவிவதாக நிற்கும் –

திரு நாபியிலே ஓங்கின தாமரையிலே உண்டான செவ்வி குன்றாத வழகிய பூவானது –அவன் கையில் உண்டான திரு ஆழியை -ஆதித்யன் -என்றும் –மற்றைத் திருக்கையில் உண்டான வெளுத்த நிறத்தை யுடைத்தான சந்தரன் என்று பார்த்து – இப்படி
உத்ப்ரேஷித்துக் கொண்டு –சந்த்ராதித்யர்கள் இருவர் உடைய அவஸ்தையிலும் செய்யக் கடவத்தை இருவரும் கூட ஏக காலத்திலே தோற்றினாப் போலே  இருக்கையாலே
இதுவும் இரண்டு அவஸ்தையிலும்  செய்யக் கடவ கார்யத்தை ஓர் அவஸ்தையிலே செய்யா நிற்கும் –திகிரி மொட்டிக்க ஒட்டாது-வெண் சங்கு மலர ஒட்டாது-நடுவே நிற்கும்-அரும்பினை அலரை-பெரிய திருமொழி -7-10-1–என்னுமா போலே –

——————————————————————

அங்குக் கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திரு நாபீ கமலமானது திருக் கையும் திரு ஆழ்வார்களுமான சேர்த்தியைக் கண்டு அலருவது மொட்டிப்பது ஆகிற படியை அனுபவிக்கிறார் –

திரு நாபீ கமலத்தில் உண்டாய் -உயர வளர்ந்த தாமரையினுடைய செவ்வி குன்றாத அழகிய பூவானது அவனுடைய வலத் திருக் கையிலே உண்டான திரு வாழியை ஆதித்யன் என்றும் –
மற்றைத் திருக் கையிலே ஏந்தின வெளுத்த நிறத்தை யுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை
ஆகாசத்தில் வர்த்திக்கிற ஒளியையுடைய சந்திரன் என்றும் உத் ப்ரேஷித்துக் கொண்டு -அக்காலத்திலே அலர்வது மொட்டிப்பதாக நிற்கும் – இது ஓர் ஆச்சர்யம் இருக்கிற படியே என்று அனுபவிக்கிறார்

மாலுந்தி வாய் -என்ற போது-சர்வேஸ்வரனுடைய திரு நாபியில் என்றாகக் கடவது –

அங்கு -அந்தப் பொழுதில் -ஏக காலத்திலே என்றபடி -வானிலே வர்த்திக்கிற ப்ரசித்தனான சந்திரன் -என்னவுமாம் –

(பகரும் மதி -ஒளி விடுபவன் என்றும் ப்ரஸித்தமாகப் பேசப்படும் என்றும்)

(பன்னக ஸார்வ பவ்மன் ந அஹம் -எனக்கும் தெரியாது-ரிஷிகளுக்கும் தெரியாது -குழந்தை ஜன்னி போல் உழன்று-ஸ்ரீ பத்ம நாபன் ஆனந்தமாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறான் -தேசிகன்-இங்கு நாபி கமலம் மட்டுமே -இன்னும் பிரமன் உத்பத்தி இல்லை-திருவட்டாறு போல்)

ஆங்கு மலரும் குவியும்-ஆல்–
இரண்டு காலத்திலே பிறக்கக் கடவ அவ்விரண்டு அவஸ்தையானது யுகபத் உண்டாகா நின்றது –

—————-

(வெள்ளை சரி சங்கோடு –சங்கோடு சக்கரம் பங்கயக் கண் -கண் தாமரை மலர்வதும் குவிவதும் சொல்வர்)

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்! என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும் அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே- .–7-3-1-

திருக் கண்களோடே திவ்விய ஆயுதங்களையும் திவ்விய ஆயுதங்களோடே திருக் கண்களையும் சேர்த்து அனுபவிப்பர்கள்.-தாமரை சூரிய சந்திரன் பார்த்து -சேர்ந்தே அருளிச் செய்வார் -நாடு பிடிக்க பார்க்க ஆழ்வார்கள் தடை -என்றுமாம் –
ஆயுதங்களோடே திருக் கண்களைக் கூட்டுகிறது, தோற்பித்தபடிக்கு;
‘உனக்குத் தோற்றோம்’ என்னப் பண்ணுமன்றோ? கண்களோடு திவ்விய ஆயுதங்களைக் கூட்டுகிறது அழகுக்கு.-ஜிதந்தே புண்டரீகாஷா –-செய்ய கண்ணா செஞ்சுடர் ஆழி-திருக் கண்களை சொல்லியும் ஆழ்வார்களை சொல்லுவதும் உண்டே

————–

என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்! யானினச் செய்வதென்? என்நெஞ் சென்னை,
நின்னிடை யேனல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கும் இருகைக் கொண்டு,
பன்னெடுஞ் சூழ்சுடர் ஞாயிற் றோடு பான்மதி ஏந்தியொர் கோல நீல,
நன்னெடுங் குன்றம் வருவ தொப்பான் நாண்ம லர்ப்பா தமடைந் ததுவே.

எம்பெருமான் ஒரு குன்றமாக வருணிக்கிறாள். அது தன்னிலும் இல்பொருளுவமை (அபூதோபமை) உள்ளது.-ஒரு திருக்கையில், திருவாழியாழ்வானையும், மற்றொரு திருக்கையில் திருச்சங்காழ்வானையும்  எந்தி யிராநின்ற
பச்சை மா மலை போல் மேனியனான எம்பெருமானுக்கு – ஏககாலத்திலே ஸூர்ய சந்திரர்களைத் தன்னிடத்திலே கொண்டதொரு பெரிய மலை ஏற்ற உவமையாம்.
திருவாழியாழ்வானுக்கு ஸூர்யனோடு ஸாம்யமும் திருச்சங்காழ்வானுக்குச் சந்திரனோடு ஸாம்யமும் ப்ரஸித்தம்.

ஆங்கு மலரும் குவியும் மாலுந்திவாய்,
ஒங்கு கமலத்தினொண்போது, ஆங்கைத்
திகிரிசுடரென்றும் வெண்சங்கம், வானிற்
பகருமதியென்றும் பார்த்து. * (மூன்றாந்திருவந்தாதி) என்ற பேயார் பாசுரம் இங்கு நினைக்கத்தக்கது.

———–

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்
தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் ஏந்தி அந்த ஸ்பர்ச்யத்தாலே வளர்ந்த
திருக் கைகளை உடையவனாய் -ஆழ்வார்களிலே வந்து அலை எறிகிற கண்களை உடையவனை-

இளவாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான் -என்று
இவர்களைத் தோற்பித்துக் கொள்ளும் கண் இறே
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -என்று
அனுபவிப்பாரை பிச்சேற்ற வல்லக் கடவ
திரு ஆழியையும்
திருமேனிக்கு பரபாகமான திரு பாஞ்ச ஜன்யத்தையும்
முற்பட தன்னை எழுதிக் கொடுத்து பின்னை எழுதிக் கொள்கிற திருக் கண்களையும் உடையவனை

பாட
உன் ப்ரீதிக்கு போக்கு விட்டு எங்களையும் உஜ்ஜீவிப்பிக்க

கிருஷ்ணன் கையில் இப்பொழுது ஆழ்வார்கள் உண்டோ -என்னில்-எப்போதும் உண்டு
அது பெண்களுக்கு தோற்றும்-அல்லாதார்க்கு தோற்றாது-இவர்களுக்கு தோற்றத் தட்டில்லை இறே

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்-பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்
கிருஷ்ணன் திரு நாமங்களை பாட –
திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச சன்னியத்தையும் ஏந்தி அந்த ஸ்பர்சத்தால் வந்த
வளர்த்தியை யுடைய திருக் கைகளை யுடையனாய்-ஆழ்வார்களில் வந்து அலை ஏறி கிற திருக் கண்களையும் யுடையனான கிருஷ்ணனை

தாமரைக்கண்ணன் -சுரி சங்கு ஆழி ஏந்தி –(வெள்ளைச் சுரி சங்கோடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் காடாகின்ற -திருவாய் 7-3-1 )

தாமரை மலரவும் மொட்டிக்கவும் இவை இரண்டும் -அங்கு மலரும் குவியும்-கண் நாடு பிடிக்க வளர ஆழ்வார்கள் அளவும் நீண்டு இருக்குமே-ஆராவமுத ஆழ்வான் உத்சவர் இன்றும் சேவித்தால் சங்கு சக்கரம் காதுகளுக்கு அருகிலே இருக்குமே )

கூராழி வெண் சங்கு ஏந்தி
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் யுடைய அடிகளை
ஆசைப்படப் பண்ணுமதுவும்-அறிவு கெடப் பண்ணுமதுவும் திவ்ய ஆயுதங்கள் யுடைய சேர்த்தியே இறே

பங்கயக் கண்ணானை
முற்பட பெண்களுக்கு தன்னை எழுதிக் கொடுத்து எழுத்து வாங்கப் பண்ணும் கண்கள் –
தூது செய் கண்கள் –
விடவே செய்து விழிக்கும் -(1-7)
கண்களுக்கு அற்றுத் தீர்ந்து –
ஜிதந்தே –
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகன் (2-6)-என்று
உபய விபூதியையும் தோற்பிக்கும் கண் அழகு யுடையவனை –

சந்த்ர ஆதித்யர்கள் சேர உதித்தால் போல் இருக்கிற இரண்டு திவ்ய ஆயுதங்களையும் கண்டு –ஆங்கு மலரும் குவியும் என்கிற-திரு நாபீ கமலம் போலே திருக் கண்களும் அலருவதும் மொட்டிப்பதாகவுமாகா நிற்கும்

கிருஷ்ணன் கையில் ஆழ்வார்கள் யுண்டோ என்னில் – எப்போதும் உண்டு – அது பெண்களுக்குத் தோற்றும் – ஆண்களுக்குத் தோற்றாது

உப ஸம்ஹர-என்றது உகாதார்க்கு கூசி இறே –
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய (1-2-)-என்று
யசோதை பிராட்டி தாலாட்டுகையாலே இவர்களுக்குத் தோற்றத் தட்டில்லை

(பெண்களுக்குத் தோற்றியதுக்கு பிரமாணம்-கம்சனை வதம் செய்யும் வரை மறைக்கச் சொன்னார்களே – இயற்கையாகவே உண்டே )

பாட
உன் ப்ரீதிக்கு போக்கு விட்டுப் பாட –
ஒரு நீர்ச்சாவி போலே கிடக்கிற இத் திரள் உஜ்ஜீவிக்கும் படி வர்ஷியாய்

பங்கயக் கண்ணானைப் பாட
உத்காயாதீநாம் அரவிந்த லோசனம் –
(இந்த பாகவத ஸ்லோகத்திலும் பங்கயக் கண் உண்டே )

நான் உங்களுக்குச் செய்ய வேண்டுவது என் என்ன
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்-பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்-
இவர்கள் இது எல்லாம் சொல்லுகிறது தாங்கள் ஆர்த்தி இறே என்று பார்த்து –
இவர்கள் தரிப்பிக்கைக்காக நாவால் உள்ள கார்யம் கொள்ளுங்கோள் என்ன –
அவன் திரு நாமங்களை பாடு என்கிறார்கள்(வாஸா தர்மம் அவாப்நோதி -திருவடி இடம் பிராட்டி -)

ஏந்தும் தடக் கையன்
பூ ஏந்தினால் போலே திரு வாழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் ஏந்தி
அந்த ஸ்பர்சத்தாலே வளர்ந்த திருக் கை மலர்களை யுடையவனாய் இருக்கை-
(பொன்னார் சார்ங்கம் யுடைய அடிகளை )இன்னார் என்று அறியேன் -இத்யாதி -என்று மதி கெடுக்கும் கையில் திருவாழியையும் சொல்லுகிறது

இன்னார் என்று அறியேன்
அன்னே ஆழியொடும்
பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை
இன்னார் என்று அறியேன் –10-10-9-

பங்கயக் கண்ணானை
ஜிதம் தே புண்டரீ காஷ-
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை என்னப் பண்ணும் கண்ணை யுடையவனை –
ஆங்கு மலரும் -இத்யாதி —
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைச் சந்திரன் என்றும் திரு ஆழி ஆழ்வானை ஆதித்யன் என்றும்
திரு நாபீ கமலம் மொட்டிப்பது அலருவது ஆமா போலே கண்ணாகிய தாமரையும் மொட்டிப்பது அலருவதாம்-என்கை –
சந்த்ர ஸூர்யர்களையும் தாமரைப் பூவையும் ஒரு கலம்பக மாலையாகத் தொடுத்தால் போலே இருக்கும்படியைச் சொல்லுகை –

(பத்ம நாபன் கையில் ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து கீழே பார்த்தோம்)

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனைத் துழாய் விரைப்
பூமருவு கண்ணி எம்பிரானைப் பொன்மலையை
நாம் மருவி நன்கு ஏத்தி உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட நா அலர்
பா மருவி நிற்கத் தந்த பான்மையே! வள்ளலே!–2-6-3-

ஆங்கு மலரும் குவியும் மாலுந்தி வாய்
ஓங்கு கமலத்தின் ஓண் போது -ஆங்கைத்
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்
பகருமதி என்றும் பார்த்து  —மூன்றாம் திருவந்தாதி —67-

பங்கயக் கண்ணானை
கண்ணாலே நமனக்கு எழுத்து வாங்கி நம்மை எழுத்து வாங்குவித்துக் கொள்ளுமவன்
தூது செய் கண்கள் இறே-9-9-9-
இள வாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான்-1-7-5-

(ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித்
தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து
பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம
மாலையும் வந்தது மாயன் வாரான்–9-9-9–மாலைப்பூசல் )

(விடுவேனோ என் விளக்கை என்னாவியை
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்
விடவே செய்து விழிக்கும் பிரானையே –1-7-5–விடவே செய்து-தூத்வ கிருத்யம் )

பாட
உன்னுடைய ப்ரீதிக்குப் போக்கு விட்டு எங்கள் வறட்சி கேட்டைத் தீராய் –

ஞானம் உண்டானால் செய்வது என் என்ன –
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணனையே பாடேலோ –
திருவாய்மொழி பாடுகையே பிரயோஜனம்
எழுந்திராய் -என்கிறார்கள் –

கண்ணபிரான் திருவவதரிக்கும் போது திருவாழியுந் திருச்சங்குமாகத் தோன்ற, தேவகியார் அதுகண்டு அஞ்சி,-‘அப்பனே! இவ்வாயுதங்களை மறைத்துக்கொள், மறைத்துக்கொள்; எழும் பூண்டெல்லாம் அஸுரமயமாயிருக்கப் பெற்ற
இந்நிலத்தில் இவை விளங்குவதற்குரியனவல்ல’ என வேண்ட; அவன் அங்ஙனமே அவ்வாயுதங்களை உடனே உபஸம்ஹரித்திட்டானென்று இதிஹாஸபுராணங்கள் இயம்பா நிற்க, இவ்வாய்ச்சிகள் அக்கண்ணபிரானைச் சங்கொடு சக்கரமேந்தும் தடக்கையனாகக் கூறுதல் பொருந்துமாறென்? எனில்;

கண்ணபிரான் அவ்வாயுதங்களை மறைத்திட்டது உகவாத பகைவர்கட்காகவே யாதலால்
அவர்களை யொழிந்த மற்றை அன்பர்கட்குத் தோற்றத்தட்டில்லை யெனக்கொள்க;

“நெய்த்தலை நேமியுஞ் சங்கும் நிலாவிய, கைத்தலங்கள் வந்து காணீரே” என்று யசோதைப் பிராட்டி ஆய்ப்பாடியிற் பெண்டுகளை அழைத்துக் காட்டின பாசுரமுங் காண்க.

—————–

அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே –
ஆதித்யனைக் கண்டால் அலரக் கடவ தாமரைப் பூ போலே-எங்கள் ஆற்றாமைக்கு
அலருமவை இறே இவை –அர்த்திகளைக் கண்டால் அலருமவை இறே இந்தத் தாமரைப் பூ –

கிங்கிணி வாய்ச் செய்த-அலரவும் மாட்டாதே மொட்டிக்கவும் மாட்டாதே திருக் கண்கள் இருந்த படிக்கு த்ருஷ்டாந்தம் சொல்லுகிறார்கள் –

கிண்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே-ஸ்வாதந்தர்யம் செம்பிளிப்பியா நின்றது –
நப்பின்னை பிராட்டையோட்டை ஸ்பர்சம் அலரப் பண்ணா நின்றது –

இத் தலையில் அபராதம் மொட்டிக்கப் பண்ணும்-அவனுடைய அபராத சஹத்வம் அலரப் பண்ணும் –

கர்ம பாரதந்தர்யம் மொட்டிக்க பண்ணும் ஆஸ்ரித பாரதந்தர்யம் அலரப் பண்ணும்-

காலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணா நின்றது ஆர்த்த த்வனி விகசிக்கப் பண்ணா நின்றது –

ஆதித்யனைக் கண்டால் அலரக் கடவ தாமரைப் பூ போலே இவர்கள் ஆற்றாமை கண்டால் அலருமவை யாயிற்று

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே-
இழவு பேறுகள்-அத்தலையிலேயாய் இருக்கிற படி-காலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணி பெண்கள் ஆற்றாமை அலரப் பண்ணுகிற படி-பெண்காள் நம்மைக் கிட்டுகையாலே எல்லாம் சபலமாயிற்றோ என்ன – விசேஷ கடாக்ஷம் பண்ணி அருளீர்

தத்ர கோவிந்த ஆஸீனம் பிரசன்ன ஆதித்ய வர்ச்சசம் -உத்யோக பர்வதம் –90
(ஆற்றாமை வெப்பம் போக்க ஆஹ்லாத கரம் -சந்திரன் –
சேஷத்வம் அறிந்து முமுஷுவான பின்பும் அந்தகாரம் போக்க ஆதித்யன் குளிர்ந்த வெப்பம் உடைய கிருஷ்ணனை குரு வம்சம் -அனுகூலர்களுக்கு பிரசன்னம் -பிரதிகூலர்களுக்கு வெப்பம் )

————-

செங்கண் –வாத்சல்யத்தாலே சிவந்து இருக்கை – உபமானம் நேர் இல்லாமையாலே உபமேயம் தன்னையே -சொல்லுகிறது ஆகவுமாம் –

செங்கண்-உபமானம் நேர் இல்லாமையால் உபமேயம் தன்னை விசேஷிக்கிறது
பட்டுரையாய் புற்கென்றே காட்டுமால் – உபமானத்தோடே சொல்ல நினைக்கை யாவது அழுக்கு ஆக்குகை இறே-தாமரைக்கு இவன் கொடுத்த நிறம் சிவப்புக்கு ஒப்பாம் அத்தனை அல்லது

செங்கண்
உவமானம் நேரே நில்லாமை உபமேயம் தன்னையே சொல்லப் பெறும்படி

அதீர்க்கம் அப்ரேமதுகம் க்ஷண உஜ்ஜ்வலம்
ந சோரம் அந்தக்கரணஸ்ய பச்யதாம்
அநுப்ஜமப்ஜம் நு கதம் நிதர்சனம்
வநாத்ரி நாதஸ்ய விசாலயோர் த்ருசோ-ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் –43-

அதீர்க்கம் –நீண்ட அப்பெரியவாய கண்கள் -என்றும்
இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானை -என்று பேசும்படி யாகத் திருக்கண்கள்
நீண்டு இருப்பது போலே தாமரை நீண்டு இருக்க வில்லையே -நீட்சிக்குத் தாமரை ஒப்பாக மாட்டாதே

அப்ரேமதுகம் –நீண்ட அப்பெரியவாய கண்கள் பேதைமை செய்தனவே –என்னும் படி பிச்சேற்றும் திறம்
திருக்கண்களுக்கு அல்லது தாமரைக்கு இல்லையே -பிரேம பிரகர்ஷத்தை விலைப்பதில் தாமரை ஒப்பாக மாட்டாதே

க்ஷண உஜ்ஜ்வலம் –எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தோறும் அப்பொழுதைக்கு அப் பொழுது
என் ஆராவமுதமே –என்னும் படி நவம் நவமாய் விளங்கா நின்ற திருக்கண்களுக்கு அதி ஸ்வல்ப காலமே
விகாசத்தோடே கூடி விளங்கக் கடவதான தாமரை போய் ஒப்பாக மாட்டாதே

பச்யதாம்-அந்தக்கரணஸ்ய -ந சோரம்–கண்டவர் தம் மனம் வழங்கும் —
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம் –
என்னும்படியான கண்டாருடைய மனத்தைக் கொள்ளை கொள்ளும் திருக்கண்களுக்கு தாமரை ஒப்பாக மாட்டாதே

அநுப்ஜம்–உப்ஜ -ஆர்ஜவே -என்ற தாது பாடம்–ஆர்ஜவம் அற்றது என்றபடி –குடிலமாய் இறே தாமரை மலர் இருப்பது –
ஆக ஆர்ஜவமே வடிவெடுத்த திருக்கண்களுக்கு ஒப்பாக மாட்டாதே

அப்ஜம் –ஆக அதீர்க்கத்வாதி விசிஷ்டமான அப்ஜமானது
வநாத்ரி நாதஸ்ய விசாலயோர் த்ருசோ – கதம் –நு-நிதர்சனம் –அழகருடைய கரியவாகிச் செவ்வரி ஓடி புடை பரந்து
நீண்ட அப்பெரியவாய திருக்கண்களுக்கு எங்கனே த்ருஷ்டாந்தம் ஆகவற்று–ஒரு போதும் ஆக மாட்டாதே
இங்கனம் அருளிச் செய்தவர் கீழே அப்ஜ பாதம் அரவிந்த லோசனம் பத்ம பாணி தலம்–என்றது
ஏதேனும் ஒன்றை த்ருஷ்டாந்தீ கரித்து போது போக்கவே

ஆழ்வாரும் -ஒட்டு உரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வு எல்லாம் பெறும் பாலும் பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி –என்னா நிற்கச் செய்தேயும் ஒட்டு உரைத்து புகழாது ஒழியார் இறே –)

சிறுச் சிறிதே-
ஓர் நீர்ச் சாவியிலே வெள்ளம் ஆகாமே
சாத்மிக்க சாத்மிக்க -என்கை
பிரதம பரிஸ்பந்தமே பிடித்து காண வேணும் -என்றுமாம் –

சிறுச் சிறிதே
குளப் படியில் கடலை மடுக்க ஒண்ணாது இறே –
பொறுக்க பொறுக்க கடாக்ஷிக்க வேணும் –
(அருகில் ஓக்கலையில் –உச்சியில் வந்தானே –
சாத் மிக்க சாத் மிக்க –
பொலிந்து நின்ற பிரான் திரு முடி சேவை பிரசித்தம் )

சிறுச் சிறிதே
பிரதம பரிஸ்பந்தமே பிடித்து அலரும் போதை அளவுகள் எல்லாம்
காண ஆசைப் படுகிறார்கள் ஆகவுமாம்

சிறுச் சிறிதே
ஒரு நீர்ச் சாவியிலே வெள்ளமாகாமை பொறுக்கப் பொறுக்க பிரதம பரிஷ்பந்தமே
பிடித்துக் காண வேணும் என்கை

———–

எம்மேல் விழியாவோ –
கோடை யோடின பயிரிலே ஒரு பாட்டம் -என்னுமா போலே –
சாதகம் வர்ஷ தாரையை ஆசைப் படுமா போலே –
விழியாவோ -என்று தங்கள் மநோரதம் –

எம் மேல் விழியாவோ
கோடையோடின பயிரிலே ஒரு பாட்டம் மழை வர்ஷியாதோ என்னுமா போலே

எம் மேல்
சாதகம் மேக ஜலம் பார்த்து இருக்குமா போலே
கடாக்ஷமே தாரகமான எங்கள் மேலே
இள வாய்ச்சியர் கண்ணினுள் என்று விழிப்பது அங்கே அன்றோ –

அதுக்கு வந்தது என் என்ன

எம் மேல் விழியாவோ
கோடையோடின பயிரில் ஒரு பாட்டம் வர்ஷியாதோ என்னுமா போலே
சாதகம் வர்ஷ தாரையை ஆசைப்படுமா போலே -விழியாவோ -என்று மநோ ரதம்

———–

திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல் –
ப்ரதிகூலர்க்கு அணுக ஒண்ணாமையும்
அனுகூலர்க்கு தண்ணளி மிக்கு இருக்கையும்
அஞ்ஞான அந்தகாரம் போகைக்கும்
உன்னைப் பெறாத விடாய் ஆறுகைக்கும்
என்றுமாம் –
தண்ணளியும் பிரதாபமும் கூடி இறே இருப்பது –

திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போலே
கதிர் மதியம் போல் முகத்தான் என்று ஆசைப்பட்ட படி பேறாக வேணும் என்கிறார்கள்

திங்களும் ஆதித்யனும்
சந்த்ர ஸூர்யர்களுடைய தண்ணளியையும் பிரதாபத்தையும் யுடைய திருக் கண்கள் –
பிரதி கூலர்க்கு அணுக ஒண்ணாது இருக்கையும்
அநு கூலர்க்கு அணுகி அனுபவிக்கலாய் இருக்கையும் –
தத்ர கோவிந்த ஆஸீனம் பிரசன்ன ஆதித்ய வர்ச்சசம் –

திங்களும் ஆதித்யனும்
1-விரஹ தாபம் போக்குகைக்கும்
2-கிடையாது ஒழி கிறதோ என்னும் பயத்தாலே வந்த
அஞ்ஞான அந்தகாரம் போகைக்கும்

அங்கண்
திருக் கண்களுக்கு அவர்களும் உபமானம் ஆகப் போராது இருந்த படி –
சந்த்ரமா மனசோ ஜாத சஷோ ஸூர்ய அஜாயத -என்று
சந்த்ர ஸூர்யர்களுக்கு பிரசாத உஷ்ணங்கள் இவனுடைய சம்பந்தத்தால் இறே –
பல காலும் ராஹு கேதுக்களாலே அபிபூதராய்
க்ஷய வ்ருத்திகளையும் களங்கத்தையும் யுடையரான
அவ்யய சந்திரனும் கார் கால ஆதித்யனும் அன்றே
அதீவ ப்ரிய தர்சனம் என்கிறவனுடைய பார்வைக்கு ஒப்பு –

(ஆகவே அம் கண் என்று விசேஷணம் இட்டு அவற்றையே சொல்கிறார் )

திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்
பெறாதார் விடாய் ஆற்றுகைக்கும்
கிடையாதோ என்கிற அஞ்ஞான அந்தகாரம் போகைக்கும்
பித்தம் கழன்று தங்களுக்குத் தண்ணளி மிக்கு இருக்கையும் என்றுமாம் –
பிரதாபமும் தண்ணளியும்
பிரசன்ன ஆதித்ய வர்ச்சசம்(குளிர்ந்த ஆதித்யன் ஒளி மஹாபாரதம் )

—–

அங்கண் இரண்டும் கொண்டு –
சந்திர சூர்யர்கள் கோப பிரசாதங்களுக்கு ஒப்பர் அல்லர் என்கை –
இரண்டும் கொண்டு
முழு நோக்கு பொறுக்கும் அளவானவாறே -இரண்டும் -என்று சொல்கிறார்கள் –

அங்கண் இரண்டும் கொண்டு
கார்கால ஆதித்யனும் நகட்டுச் சந்திரனும் போல் அல்ல
சந்த்ர காந்தாநநம் ராமம் அதீவ ப்ரிய தர்சனம் -(சந்திரன் போல் என்று தப்பச் சொன்னோம் -அதீவ பிரிய தர்சனம் அதுக்காக )
முழு நோக்குப் பொறுக்கும் படியால் உன் அழகிய இரண்டு கண்களையும்
இட்டுப் பார்க்க வேணும் நாங்கள் பிழைக்க -என்கை –

அம் கண்
தாமரைப் பூ என்ற போது விகஸிக்கைக்கு தாமரை ஒப்பு இல்லாதாப் போலே –
கோப பிரசாதங்களை சந்த்ர ஸூர்யர்கள் ஒப்பல்ல-

———–

எங்கள் மேல் –
உன் நோக்குப் பெறாதே உறாவின எங்கள் பக்கல் –

நோக்குதியேல் –
தங்கள் தலையால் கிட்டுவது ஓன்று அன்றே –

இரண்டும் கொண்டு
முழு நோக்கு பொறுக்கும் அளவானவாறே –
இரண்டும் -என்று சொல்கிறார்கள்

எங்கண் மேல் நோக்குதியேல்
உன் நோக்குப் பெறாதே ஒரு நீர்ச் சாவியாய் உறாவின எங்கள் பக்கலிலே

எங்கள் மேல்
அவை இரண்டு கண்ணுக்கும் தங்கள் பக்கலிலே விஷயம் உண்டு –
1-சேர ஒட்டாதார் பக்கலிலே பிரதாபமும்
2-தங்கள் பக்கலிலே தண்ணளியும்

சீற்றத்தோடு அருள் பெற்றவன்(3-6)
ஹிரண்யன் பக்கல் சீற்றம் செல்லா நிற்க
பிரகலாதனுக்கு அனுகூலமாய் இருந்தது இறே கண்ணில் வாத்சல்யம் இருந்த படி

தோற்றக் கேடு அவை இல்ல வன்உடை யான்அ வன் ஒரு மூர்த்தியாய்ச்
சீற்றத் தோடு அருள் பெற்ற வன் அடிக் கீழ்ப் புக நின்ற செங்கண்மால்
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல் ஆகி நின்ற எம் வானவர்
ஏற்றையே அன்றி மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.(திருவாய்மொழி 3-6-6 )

ஸிம்ஹம் ஆனையோடே பொரா நின்றாலும் குட்டிக்கு முலை கொடுக்குமா போலே -என்று பட்டர் குழவி இடை கால் இட்டு எதிர்ந்து பொரும் -(பெரியாழ்வார்-3-5 )

வழு ஒன்றும் இல்லா செய்கை வானவர் கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட
மழை வந்து ஏழு நாள் பெய்து மாத்தடைப்ப மது சூதன் எடுத்து மறித்த மலை
இழவு தரியாதது ஓர் ஈற்றுப்பிடி இளம் சீயம் தொடர்ந்து முடுகுதலும்
குழவி இடைக் கால் இட்டு எதிர்ந்து பொரும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -(திருவாய்மொழி-3 -5 -2-)

விழியாவோ -என்று தங்கள் மநோ ரதம் –
நோக்குதியேல் -என்ற இடம் முன்னிலை

நோக்குதியேல்
தங்கள் தலையால் கிட்டுமது அன்றே நோக்குத் தான்

எங்கள் மேல் சாபம் இழிந்து
தங்கள் யாதனா சரீரம் போலேயும்
சாபோபஹதரைப் போலேயும்
விஸ்லேஷ வ்யசனமே படுகிற
எங்கள் துக்கம் –
அனுபவித்தே விட வேண்டுகையாலே -சாபம் -என்கிறது –

அன்றியே
விஷஹாரி ஆனவன் பார்க்க விஷம் தீருமா போலே
அவன் நோக்காலே சம்சாரம் ஆகிய விஷம் தீரும்

ஆகையால்
அங்கண் இரண்டும் கொண்டு
எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழியும்
என்று அந்வயம் –

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலேசெங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ-
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்-
அறைவடத்தில் கிண்கிணி போலே
அர்த்த விகசிகதமான தாமரைப் புஷ்பம் போலே இருக்கிற-சிவந்த திருக் கண் மலர்களை பொறுக்கப் பொறுக்க
உன் கடாஷம் உறாவிக் கிடக்கிற நம் மேல் விழியாவோ –

அதாவது
1-தேகாத்ம அபிமானத்தை நீக்கி -அதுக்கு இசைந்தவாறே
2-ஸ்வ ஸ்வா தந்த்ரிய அபிமானத்தை நீக்கி -அதுக்கு இசைந்தவாறே
3-சேஷத்வத்தை அறிவித்து -அதுக்கு இசைந்தவாறே –
4-அந்ய சேஷத்வ நிவ்ருதியை உண்டாம்படி பண்ணி -அதுக்கு இசைந்தவாறே
5-ஜ்ஞாத்ருத்வ பிரயுக்தமான ஸ்வ ஸ்மிநிஸ்வ சேஷத்வ நிவ்ருத்தியை உண்டாக்கி -அதுக்கு இசைந்தவாறே
6-ஸ்வ ரஷண ச்வான்வயத்தை நிவர்த்திப்பித்து – அதுக்கு இசைந்தவாறே –
7-உபாயாந்தரங்களை விடுவித்து -அதுக்கு இசைந்தவாறே
8-தத் ஏக உபாயனாம்படி பண்ணி -அதுக்கு இசைந்தவாறே –
9-ஸ்வ வியாபாரத்தில் ஸ்வாதீன கர்த்ருத்வ நிவ்ருத்தியைப் பண்ணுவித்து -அதுக்கு இசைந்தவாறே
10-பாரதந்த்ரிய பிரதிபத்தியைப் பிறப்பித்து அதுக்கு இசைந்தவாறே
11-சமஸ்த கல்யாண குண பரிபூர்ணனான தன்னை அனுபவிப்பித்து –
12-அனுபவ ஜனித ப்ரீதிகாரித கைங்கர்யத்தை உண்டாக்கி
13-அக்கைங்கர்யத்தில் ஸ்வ போக்த்ருத்வ புத்தியை தவிர்ப்பிக்கை –

முழு நோக்கு பெறும் அளவானவாறே -என்றது-
இவ்வளவான பாகம் பிறந்தவாறே -என்றபடி –
இப்படி அல்லது
தேகாத்ம அபிமானத்துக்கு-பரம பக்தி உண்டாக்கிலும் உண்டாகாது இறே

அங்கண்-இத்யாதி –
சந்திர சூர்யர்கள் இருவரும் உச்சிப் பட்டால் போலே இருக்கிற
அழகிய திருக் கண்கள் இரண்டையும் கொண்டு –
இவ்வளவான பாகம் பிறந்த எங்களை கடாஷித்தாய் ஆகில் –
அதாவது
பரம பக்தியை உண்டாக்குகை-
அத்தால்
எங்கள் மேல் சாபம் இழிந்து –
மேல்
அவசியம் அனுபாவ்யமாய் இருக்கிற
விஸ்லேஷ வியசனம் தீரும் –
ஆகையால்-உக்த ரீத்யா கடாஷிக்க வேணும் என்று கருத்து –

திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போலே -என்றது அவன் கடாஷம்
சுக ரூபமாயும்
அஞ்ஞான நிவர்தகமாயும்
இருக்கையாலே –

எம் மேல் -செங்கண்
எங்கள் மேல் –
எங்கள் மேல் சாபம்
மூன்று தடவை சொல்கிறார்கள்
ஸ்வரூப விரோதி -கழிந்தவர்கள் -யானே என் தனதே இல்லாமல் யானே நீ என் உடைமையும் நீயே
பிராப்ய விரோதி -கழிந்தவர்கள் -மற்றை நம் காமங்கள் மாற்று
உபாய விரோதி கழிந்தவர்கள் -களைவாய் துன்பம் களையாது ஒளியாய் களை கண் மற்று இலேன் –

செங்கண் :

கழிவிரக்கம் காட்டி கழித்தன போக்கி
அழல விழித்து அகல்விப்பான் — பாழே
பலபல செய்து புகல்அயல் இல்லா
புலையனேர்க்கு அங்கண் அருள்.

அ-கார வாச்ய சமாகமத்துக்கு ஆறு படிக்கட்டு :
ஈஸ்வரஸ்ய ஸௌஹார்த்தம்
எதுர்ச்சா ஸுக்ருதம்
விஷ்ணோர் கடாக்ஷம்
அத்வேஷம்
ஆபிமுக்யம்
சாது சமாகமம்
அதில் நடுவாக உள்ளது விஷ்ணோர் கடாக்ஷம்.
கதிர் மதியம் போல் முகத்தான் என்று தொடங்கி செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாயாவோ என்று
கடாக்ஷ வீக்ஷண்யத்தை பிரார்த்திக்கிற படி இது.
தேய்தல், வளர்தல், ராகு-கேதுவால் பீடித்தல் இவை உள்ள சூரிய-சந்திரர்கள் அவனுடைய திருக் கண்களுக்கு
நேர்கொடு நேர் ஒவ்வார் என்று தெளிந்து, ’செங்கண்’ என்றே சொல்லி
”தத்-தஸ்ய சதுர்சம்” ஆக்குகிறாள். அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்து
என்று பிராப்பிய விரோதி கழிக்கையும்
இனி மேலில் பாட்டுகளில் வெப்பம் கழிந்து கூடி இருந்து குளிர்தலும் சொல்லுகிற படி.
போற்றியாம் வந்தோம் புகழ்ந்து என்று இருப்பதால் இது ஒரு புகழ் மாலை.

கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ – என்பதாக
எம்பெருமான் செங்கண்ணுக்கு உபமானமாக தாமரையை சொல்லுகிறது சாந்தோக்யம் ;
அவனுடைய கண்ணுக்கு உபமானம் இட்டுச் சொல்லுகை என்பது அதனை அழகாக்குமத்தனை.
உபமானம் நேர் நில்லாமையாலே உபமேயம் தன்னை விசேஷிக்கிறது.
தன்னுடை பூர்வபக்ஷ கிரந்த வாசிப்பின் போது இந்த வாக்யத்திற்கு யாதவ பிரகாசர் சொன்ன அபார்தத்தைக்க கேட்டு கலங்கி , பகவத் ராமானுஜர் காட்டுகிற விசேஷார்த்தம் இங்கு நோக்கத்தக்கது :

கப்யாஸம் = கபி + ஆஸம் = சூரிய மண்டலத்தை இருப்பிடமாக உள்ள பிரஹ்மத்தை உபாஸ்யமாக சொல்வது போல,
புண்டரீகம் போலேயான அக்ஷிணியை இருப்பிடமாக உள்ள பிரஹ்மம் உபாஸ்யம் என்கிறது .
கப்யாஸம் என்பதற்கு உபாசன ஸ்தானம் அர்த்தம் என்கிற முதல் யோஜனை இங்கு சேராது.
கபி + ஆஸம் – கபி = குரங்கு பிருஷ்டம் , புண்டரீகம் என்று உபமான துவயமும்;
உயர்ந்த பிரஹ்மத்துடைய திருக்கண்களுக்கு தீன உபமானமும் கூடாது ஆகையால் இந்த இரண்டாவது யோசனையும் தள்ளுபடி.
ஈஷத் விகசித = சிறிதளவு மலர்ந்த என்று பொருளும் சரிப்படாது. அவன் மலங்க விழித்தால் நம்மால் தரிக்கப் போகாது.
அத்தாலேயே ஆண்டாள் செங்கண் சிறுச்சிறிதே சாத்மிக்க சாத்மிக்க எம்மேல் விழியாவோ என்கிறாள்.

ஸ்வாமி எம்பெருமானார் காட்டுகிற அர்த்தமோ ஆழ்வார்கள் திருவாக்கை அடி யொற்றித் தந்த விளக்கமாகும்.-கம்பீரம்பு சமத்பூத (1) ஸுவிருஷ்ட நாள அஸ (2) ரவி கர விகசித (3) புண்டரீக தள அமலஆயத ஈக்ஷணம்-என்பதாக சொல்லுகிற அழகு – ஈதோர் அற்புதம் கேளீர் என்று வாய் வெறுவத் தகும்.

———–—————————

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;
இரு நிலம் கை துழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-

‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;–சங்கு சக்கரங்கள் என்று அவற்றைச் சொல்லி -வந்தால் பண்ணும் அஞ்சலியைப் பண்ணா நிற்கும் –
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;–வந்தால் குளிர நோக்கும் திருக் கண்களை நினைத்து
தாமரை போன்ற திருக் கண் என்றே சொல்லி -அது பெறாமையாலே தளரா நிற்கும் –
இரண்டு ஆழ்வார்கள் அளவும் வந்து அலை ஏறி கிற கண்களின் அழகை இடைவிடாதே சொல்ல நினைத்து தளரா நின்றாள் 

------------
செங்கனி வாயின் திறத்ததாயும்
செஞ்சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும்
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா வறாத
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ!
நாணும் நிறையும் இழந்ததுவே.–7-3-3-

சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் –பிரிந்தால் விரோதியைப் போக்குகைக்குக் கருவியாய்,-வைத்த கண் மாற ஒண்ணாத அழகை யுடைய ஆழ்வார்களைக் கண்டு உகந்தது.

தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும் –தவாஸ்மி–‘உனக்கு ஆகிறேன்’ என்று சொல்லப் புக்கு மாட்டாது ஒழிந்தால், குறையும் தலைக் கட்டின திருக் கண்களுக்கு ஆயிற்று
அநந்யார்ஹமாக எழுதிக் கொடுத்தது. என்றது,-‘பிரிகிற போது நோக்கின நோக்கிலே பிறர்க்கு ஆகாதபடி உஜ்ஜீவிக்கச் செய்தான்’ என்றபடி.

————–

மின்னும் ஆழி அம் கையவன் செய்யவள் உறை தரு திரு மார்பன்
பன்னு நான்மறைப் பல் பொருளாகிய பரனிடம் வரைச் சாரல்
பின்னும் மாதவிப் பந்தலில் பேடை வரப்பிணியவிழ் கமலத்து
தென்ன வென்று வண்டு இன்னிசை முரல் தரு திருவயிந்தபுரமே–3-1-2-

மின்னும் ஆழி இத்யாதி –சர்வேஸ்வர லஷணம் ஆகிறது –திரு ஆழியைக் கையிலே சலியாதே பிடித்தல்-ஸ்ரீ லஷ்மீ பதியாதல்-வேதைக சமைதிகன் ஆதல்-இவை ஆயிற்று இவை மூன்றும் இங்கே உண்டு-மின்னும் ஆழி அம் கையவன்- மேகத்திலே மின்னினால் போலே இருக்கிற திரு ஆழியைக் கையிலே உடையவன் –செய்யவள் உறை தரு திரு மார்பன் –அந்த மின் கொடி தான் பிரதேசாந்தரத்திலே தழுவினால் போலே ஆயிற்று

———–

‘நயனும், வாய்மையும், நன்னர் நடுவும்,
இவனின் தோன்றிய, இவை’ என இரங்க,
புரை தவ நாடி, பொய் தபுத்து, இனிது ஆண்ட
அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழிச் செல்வம் போல்,
நிரை கதிர்க் கனலி பாடொடு பகல் செல,
கல்லாது முதிர்ந்தவன் கண் இல்லா நெஞ்சம் போல்,
பல் இருள் பரத்தரூஉம் புலம்பு கொள் மருள் மாலை–கலித்தொகை 130

நயம், வாய்மை, நடுவுநிலைமை ஆகியவை இவை என நாடி நன்கு ஆராய்ந்து பொய்யை விலக்கி நாட்டை இனிது ஆண்ட அரசனோடு நல்லூழிச் செல்வம் மாண்டுபோனது போல, ஒளிச் செல்வன் கதிரவன் மறையப் பகலும் மறைந்தது. கல்லாது முதிர்ந்தவனின் இரக்கமற்ற நெஞ்சம் போல இருள் பரவிக்கொண்டிருக்கும் மாலைக்காலம்.

—————–

என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள் யானினிச் செய்வதென் என்னெஞ்சென்னை
நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கு மிரு கைக்கொண்டு
பன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு பால் மதி ஏந்தி யோர் கோல நீல
நன்னெடும் குன்றம் வருவதொப்பான் நாண் மலர்ப்பாத மடைந்ததுவே-8-2-10-

வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்கும் படி இருக்கிற இரண்டு கையிலும் ஆழ்வார்களைத் தரித்து -பலவாய் தூரப் போய் எங்கும் வ்யாபிப்பனவான ஒளிகளை யுடைய ஆதித்யனோடே கூட அவனோடே ஒத்த தேஜஸ் ஸை யும் வெண்மையையும் உடைய சந்திரனை ஏந்தி அத் தேஜஸ் ஸூ க்களுக்கு பரபகமாய் இதர விஸஜாதீயமாய்-தர்ச நீயமாய் -கண்டார் கண் குளிரும்படி நீலமாய் மற்றும் அனுக்தமான அழகுகளை யுடைத்தாய் -அபரிச்சேதயமாய் இருபத்தொரு மலை நடந்து வருமா போலே யாயிற்று ஆழ்வார்களைக் கொண்டு உலாவும் படி-

———-

அர்ச்சிராதி–த்ருதீய பிரகரணம் –
உபய விபூதியும் தொழிலாக வகுப்புண்டு -சர்வ ஆஸ்ரய மயமான கோப்புடைய சீரிய சிங்கா சணத்திலே பன்னிரண்டு இதழாய்-நாநா சக்தி மயமான திவ்ய கமலமாய் -அதில் திவ்ய கர்ணிகையிலே புஷ்ப சஞ்சய விசித்ரமான திவ்ய யோக பர்யங்கமாய் –அதின் மேலே அநேகமாயிரம் சந்த்ரர்களை உருக்கி வார்த்தால் போலே குளிர்ந்த புகரை யுடைத்தான திருமேனியை யுடையனாய் –கல்யாண குணங்களுக்கு அந்தம் இல்லாமையாலும் -சர்வ வித கைங்கர்ய பரற்கு எல்லாம் படிமாவாய் இருக்கையாலும் அனந்தன் என்றும் சேஷன் என்றும் திரு நாமத்தை யுடையனாய் -பகவத் அனுபவத்துக்குப் போக்குவீடாகப் பல வாய்த்தலைகளையும் யுடையனாய் – விஜ்ஞான பலங்களுக்கும் சைத்ய மார்த்த்வ சௌரப்யாதி குணங்களுக்கும் கொள்கலமான திருவனந்த வாழ்வான் ஆகிற படுக்கையிலே ராஜதகிரி சிகரத்திலே அநேகமாயிரம் ஆதித்யர்கள் சேர உதித்தால் போலே இருக்கிற பணா மண்டலங்களில் ஜ்யோதிர் மண்டலத்தின் நடுவே –

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருமயிலை ஸ்ரீ பேயாழ்வார் திருமஞ்சனக் கட்டியம்

March 23, 2024

ஸ்ரீ தேவ விஜயீ பவ
உத்யத்ப அநு ஸஹஸ்ர பாஸ்வர தநும் ஸூப்ர ஊர்த்வ புண்ட்ர உஜ்ஜ்வலம்
கௌஸேய அம்பர ஸோபிநம் ஸூரு சிரஸ் வச்சோபவீத அந்விதம்
முக்தஸ்மேரமுகம் தயாஞ்சி தத்ருசம் பத்தாஞ்சலிம் பாஸ்வரம்
ஸ்ரீ மந்தம் மஹாதாக்க்ய ஸூரி மநகம் ஸம்ஸேவி ஷீயா நிசம்

1- நல்லார் நவில்கின்ற நன் மயிலை மா நகரில் நலமாக நாமுய்ய வந்த பெருமாள்
2- நன்னாரணன் நீங்க மற்றாரும் உற்ற துணை அன்றே நமக்கு என்று உரைத்த பெருமாள்
3-கல்லாத வாதிகளும் அல்லாத மாயிகளும் நில்லாது நீக்கி யருள் நல்ல பெருமாள்
4-கலை வலவர் பலர் வாழும் மயிலை எனும் மா நகரம் தழைத்து ஒங்கக் காதலித்து வந்து உதித்த நற் பெருமாள்

5-எல்லாரும் உய்ய என நல்லான நான் மறையை சொல்லால் தொகுத்து அருள வல்ல பெருமாள்
6-ஏரார்ந்த மணி முடி மேல் சீரார்ந்த துளவணியும் கேசவனார் புகழ் மாலை ஏத்தி யுகந்தருள் பெருமாள்
7-மல்லாண்ட திண் தோளன் மஹிமை சொல்லும் மழிசையர் கோன் மதி பெற்று வாழ்ந்திடவே அருள் செய்த மாண் பெருமாள்
8-மதி பெற்ற ஞானியர்கள் துதி சொல்லி யனு தினமும் தொழுது ஏத்தி உய்ந்திடவே மயிலை நகர் வந்து உதித்தோய்

9-என்னாழி வண்ணன் பால் திருக்கண்டேன் திரு மேனி நிறம் கண்டேன் ஆழி கண்டேன் என்று உரைத்த நா வலவா
10- எம்பிரான் தன் கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்
வரு நரகம் தீர் மருந்து கண்டேன் என்று உரைத்த பிரான்
11-மா கடலின் நீருள்ளான் மனத்துள்ளான் மா மலராள் தனத்துள்ளான் என்று உரைத்த தனி ஞானப் பெருங்கடலே
12-மூ உலகும் உண்டு உமிழ்ந்து நீரேற்று மூ வடியால் தாவடி யிட்டு யளந்த பிரான் தாளிணையே யடைந்து உயந்தோய்

13-திருந்திய சீர்ச் செங்கண்மால் திருக்குணமே தாரகமாய் மருந்துமது பொருளுமது அமுதுமதும் என்று உரைத்தாய்
14-அலர் மேலோன் கால் கழுவக் கங்கை நீர் கான்ற கழல் தொழு நெஞ்சே வா வென்று துணை தேடி நின்ற பிரான்
15- மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டுறையும் தண் துளபக் கண்ணனையே காண எண்ணிக் காதலித்த கற்பகமே
16-கரு மா முகில் வண்ணன் கார்க்கடல் நீர் வண்ணன் திரு மா மணி வண்ணன் தேசுரைத்த தேசுடையோய்

17-நால் வேதத்துள்ளானே பாற் கடல் நீருள்ளானே பாம்பணையான் மேலானே என்று என்று போற்றிடுவோய்
18-ஆகாயமூடறுத்து அண்டம் போய் நீண்ட வொரு மா காயப்பெருமானை மதித்து இறைஞ்சும் மாண்புடையோய்
19-வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும் பாதத்தான் பாதமே பணிந்து உய்ந்த பரஞ்சோதி
20-அநந்தன் அணைக் கிடக்கும் அம்மான் அடியேன் மனம் தனை அணைக் கிடக்குமிது காணீர் என்று உகந்து உரைத்த உத்தமனே

21- ஒரு வல்லித் தாமாரையாள் ஒன்றிய சீர் மார்பனுறை திருவல்லிக்கேணி சென்று தொழுதுகந்த தூ மனத்தோய்
22- எந்தை பெருமான் தன் இணை அடிக்கே யாளாகி மறவாது வாழ்த்தியிடும் மாண்புடைய பெருமானே
23-வாமனனாய் மா வலி பால் மூவடி மண் இரந்து அளந்த நெடுமால் தன் இணை அடிக்கே ஏழ் பிறப்பும் ஆளானோய்
24-தெருளாய பிள்ளையாய் யாலிலை மேல் சேர் குழவி யருளாலே யிருளற்ற நெஞ்சுடைய நின்மலனே

25-என் தன் திருமாலே செங்கண் நெடியானே எங்கள் பெருமானே என்று உருகும் எழில் மனத்தோய்
26-தேசுடைய சக்கரத்தாய் சங்கினாய் சார்ங்கத்தாய் வாச மலர்த் துழாய் மாலை முடியான் என்று உகந்து உரைத்தோய்
27-சுடர் ஆழி ஒன்றுடையான் சூழ் கழலே நாளும் தொடராழி நெஞ்சே என்று உகந்து உரைத்த தூய் மதியோய்
28-விழுதுண்ட வாயானை மால் விடை ஏழ் செற்றானை
வானவர்க்கும் சேயானை வணங்கி உய்ந்த பெருமானே

29- வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே
உகந்து உறையும் எந்தை கழல் அடைந்து உய்ந்த வேதியனே
30-மறை முடியும் பாற் கடலும் பாடகமும் என் மனமும் குடந்தையுமே குடி கொண்டாய் என்று உரைத்த குணக்கடலே
31-மந்த்ரத்தால் மா கடலைக் கடைந்து அமுதம் அந்தரத்தார்க்கு ஈந்த பிரான் அருளாய் என்று இரந்து ஏத்தும் எழில் மதியோய்
32-கனலாழி வெண் சங்கம் கதை சார்ங்கம் வெஞ்சுடர் வாள் இவை ஏந்தும் பெருமானை இறைஞ்சி உய்ந்த பெருமானே

33- எரி சுடரும் மால் வரையும் எண்டிசையும் அண்டத்து இரு சுடரும் இறையே என்று உகந்து ஏத்தும் உயர் மதியோய்
34-விண் ஒடுங்கக் கோடுயரும் வீங்கருவி வேங்கடத்தான் உள்ளுவார் உள்ளத்தே யுளன் கண்டாய் என்று உரைத்தோய்
35-குன்றம் குடையாக ஆ காத்த கோவலனே குழலூது மணி வண்ணா என்று உரைத்த குணக்கடலே
36-மத களிற்றின் மருப்பு ஓசித்து மேதினியை இடந்து எடுத்த பேரகலப் பேரார மார்வனையே உகந்து உரைப்போய்

37-பல கதிர்கள் பாரித்த பொன் முடியான் அடி இணைக்கே பூரித்துத் துதி மாலை இட்டு அருளும் பூரணனே
38-துரக வாய் கீண்ட துழாய் முடியாய் நங்கள் நரக வாயது கீண்ட நாரணனே என்று அழைப்போய்
39-மா வா யுரம் பிளந்து மா மருதினூடு போய்த் தேவாசுரம் பொருத தேவனையே ஸ்துதி செய்வோய்
40-மணி நீர்ச் சுனை வளர்ந்த மா முதலை கோள் விடுத்த அணி நீல வண்ணத்தன் அடி பணிந்த அற்புதனே

41- வெக்காவே சேர்ந்தானை மெய் மலர்த் தூய்க் கை தொழுதால் அக்காவே தீவினை என்று ஆய்ந்து உரைத்த அருள் முகிலே
42-விரையார் நறும் துழாய் வீங்கோத மேனி நிரையார மார்வனையே நினைந்து உருகி நின்றானே
43- கொங்கு அணைந்து வண்டறையும் தண் துழாய்க் கோமானை எங்கு அணைந்து காண்டும் இனி என்று நைந்து பெருமானே
44-சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழல் இணையே நிறை செய்து நெஞ்சார நினைந்து உகந்த நின்மலனே

45-உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கு ஏற்றி வைத்தவனை நாடி வலைப்படுத்த வள்ளலே
46-நரகத்தை நம்மை நணுகாமல் காப்பவனாம் நாராயணன் கழலே நாடி நின்ற நா வலவா
47-தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான் அட்ட புய கரத்தனை யடைந்து உய்ந்த ஆரமுதே
48-கோள் முதலை துஞ்சக் குறித்து எறிந்த சக்கரத்தான் தாள் முதலே சார் வென்று சதிர் கண்ட கற்பகமே

சீராரும் மாடத் திருக்கோவலூர் அதனுள் காரார் கரு முகிலைக் கண்டு உகந்த கலை வலவா
அல்லன்ன குழலும் அகன்ற முகமும் வில்லன்ன புருவமும் விசால நயனமும்
எள்ளுப் பூ நாசியும் இணை வள்ளக் காதும் சொற் ப்ரணவ மொழியும் சிவந்த அதரமும்
வெள்ளென்ன வேட்டியும் விளங்கு மணி அஞ்சலியும் நேரான புண்டரமும் நிறைந்த மணி வடமும்
கதித்த துடையும் கணை முழந்தாளும் பல்லவப் பவழத்தைப் பழித்த விரலடியுமாய்

தேவரீர் திருமஞ்சனம் கண்டருள வீற்று இருக்கும் இவ்வழகு
ஏதேனும் ஜகன் மோஹனமோ -ஸ்ரீ வைஷ்ணவ ஸர்வ ஸ்வமோ
வேள்வியின் பயனோ வேதாந்த விழுப்பொருளோ
நாங்கள் ஈதென்று அறியா இவ்வழகுடன்
ஊழி தொறும் ஊழி தொறும் வாழ்ந்திடுக வாழ்ந்திடுகவே
முனி ஸார்வ பவ்மனே

1- கலங்காப் பெரு நகரம் காட்டுவான் கழல் இணையே
நாள் தோறும் துதித்து இறைஞ்சி நின்ற களை தானோ
2-சென்று குறளுருவாய் முன்னிலம் கைக்கொண்ட முதல்வனையே முப்போதும் மொழிந்து நின்ற களை தானோ
3-திரு மா மணி வண்ணன் செங்கண் மால் எங்கள் பெருமான் அடி இணையே துதித்து நின்ற களை தானோ
4-கற்றுக் குணிலை விளங்கனிக்கு கொண்டு எறிந்தான் வெற்றிப் புகழ்களையே மொழிந்து நின்ற களை தானோ

தேவரீர் திருமஞ்சனம் ஆடி அருள்வதே

ஸ்நாநீயம் கந சார குங்கும லவங்கை லாதிபிர் வாஸிதம்
ஸுவர்ணேஷு கடேஷு ஸுத்த சலிலம் பூர்ணம் புரஸ் திஷ்டதி
கௌஸே யஞ்ச

ஸரஸ் ச ஸாங்க தவளம் சித்தாவயம் கிங்கராஸ்
காருண்யம் கருணா நிதிர் விதநுதாம் ஸ்ரீ மாந் மஹா யோகிராட்

அருளப்பாடு சங்க தாரை பத்ம தாரை ஸஹஸ்ர தாரை உபய வேத கீத மங்கள வாத்யம்

————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்


பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள் -நான்முகன் மடியில் குழவியாய் ராவணன் தலைகளை எண்ணிக் காட்டிய வ்ருத்தாந்தம் —

April 7, 2023

பூமேய மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை பாதமத்தால் எண்ணினான் பண்பு-
நான்முகத்தோன் நன் குறங்கில் வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான்-
கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய் தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி-

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு —முதல்  திருவந்தாதி–45-

(ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் —மூன்றாம் திருவந்தாதி –77-

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து–நான்முகன் திருவந்தாதி -44-

——————————

அவதாரிகை –

இப்படி இருக்கிறவனுடைய நீர்மை
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும்
நிலம் அன்று கிடீர்
என்கிறார் –

—————————-

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு —45-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
பூ மேய மாதவத் தோன் தாள் பணிந்த–திருநாபிக் கமலத்திற் பொருந்திய
மஹா தபஸ்வியான பிரமனுடைய பாதத்திலே வந்து ஆஸ்ரயித்த
வாள் அரக்கன்–கொடிய இராவணனுடைய
நீள் முடியை–நீண்ட பத்துத் தலைகளையும்
பாதம் அத்தால் எண்ணினான் பண்பு– அந்தத் திருவடிகளாலே கீறி எண்ணிக் காட்டின எம்பெருமானுடைய குணம்.
அமரர்க்கு அறிய ஆமே–பிரமன் முதலிய தேவர்கட்கு அறியக் கூடியதோ?
அது நிற்க–அவர்கள் அறிய வல்லரல்லர் என்பது கிடக்கட்டும்;
நாமே அறிகிற்போம்–(எம்பெருமானுடைய நீர்ஹேதுக க்ருபா கடாக்ஷத்திற்குப் பாத்திரமாகிய) நாம் அறியக் கடவோம்.

————————————————————————

வியாக்யானம் –

ஆமே யமரர்க்கு அறிய –
ப்ரஹ்ம ருத்ராதிகள் இவனை அறிந்ததாகப் போமோ
இவர்களால் அறியப் போகாமைக்கு
மேன்மையோடு நீர்மையோடு வாசி இல்லை –

வது நிற்க –
அதுக்கு மேலே –

நாமே யறிகிற்போம் –
அதிசய ஜ்ஞானரான ப்ரஹ்மாதிகளும் மதி கெட்டுக் கிடக்க
நாமே அவனை அறியப் புகுகிறோம்

அங்கன் அன்றிக்கே
அது கிடக்க
நாம் ஆகில் அவனை அறிவுதோம் -என்றுமாம் –
அவன் தானே காட்டக் கண்ட நமக்குக் காண வரிதோ –

நன்னெஞ்சே –
அவர்களுக்குக் காண ஒண்ணாமைக்கு அடி-தம் தம் நெஞ்சு தம்தாமுக்கு விதேயம் அல்லாமை –
விதேயமாகப் பெற்ற எனக்கு ஒரு குறைவுண்டோ –

பூ மேய மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை   –
அவர்கள் அறியாமைக்கு அடி சொல்லுகிறது

சர்வேஸ்வரன் உடைய திரு நாபீ கமலத்தை தனக்கு வாசஸ் ஸ்தானமாக உடையனாய்த்
தபஸ் ஸாலே பெரியனாய் உள்ள ப்ரஹ்மாவின் காலில்
விழுந்த ராவணானவன்
இவன் பக்கலிலே தனக்கு வேண்டின வரம் எல்லாம் கொள்ளா நிற்க
அவ்வளவிலே ஒரு பாலகனாய் கொண்டு
அந்த ப்ரஹ்மாவின் மடியிலே இருந்து
கெடுவாய் உனக்கு இது கார்யம் அன்று கிடாய் -என்னும் இடத்தைத்
தன் திருவடிகளாலே கீறிக் காட்டி
அந்தர்த்தானம் பண்ணினான் ஆய்த்து-

இவன் அறுப்புண்ணப் புகுகிற தலைகள்
இவற்றைப் பூண் கட்டிக்  கொடுப்புதியாகில் உனக்கு
குடி இருப்பும் இழவு கிடாய் -என்னும்
இவற்றை தெரிவித்தான் ஆய்த்து –

பாதமத்தால் எண்ணினான் பண்பு –
எனக்கு போக்யமான திருவடிகளைக் கொண்டு கிடீர் கீறிக் காட்டிற்று

தனக்கும் கூட ஹிதம் அறியாதே
சூழ்த்துக் கொள்ளப் புக்கவனோ
சர்வேஸ்வரன் உடைய குணங்களை அறியப் புகுகிறான் –

————————————————————

(சாகா வரம் கொடுக்கும் சமயத்தில் இவன் குழந்தை ரூபத்தால் தலைகளைத் தொட்டுக் காட்டி அருளி
மூன்றாம் திருவந்தாதி -நான்முகன் திருவந்தாதி பாசுரங்கள் இதே போல் உண்டே)

இது அவன் காட்டக் கண்ட வருக்கு ஒழிய அல்லாதாருக்கு அறியப் போகாது -என்கிறார் –

இப்படி இருக்கிற அவன் நீர்மை ப்ரஹ்மாதிகளுக்கும் நிலம் அல்ல கிடீர் -என்கிறார் –

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு –45-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
பூ மேய மாதவத் தோன் தாள் பணிந்த–திருநாபிக் கமலத்திற் பொருந்திய மஹா தபஸ்வியான பிரமனுடைய பாதத்திலே வந்து ஆஸ்ரயித்த(தப ஆலோசனை-ஸ்ருஷ்டிக்குத் தக்க ஞானம் கொண்டவன் )
வாள் அரக்கன்–கொடிய இராவணனுடைய
நீள் முடியை–நீண்ட பத்துத் தலைகளையும்
பாதம் அத்தால் எண்ணினான் பண்பு– அந்தத் திருவடிகளாலே கீறி எண்ணிக் காட்டின எம்பெருமானுடைய குணம்.
அமரர்க்கு அறிய ஆமே–பிரமன் முதலிய தேவர்கட்கு அறியக் கூடியதோ?
அது நிற்க–அவர்கள் அறிய வல்லரல்லர் என்பது கிடக்கட்டும்;(நாய மாத்ம ஸ்ருதி )
நாமே அறிகிற்போம்–(எம்பெருமானுடைய நிர்ஹேதுக க்ருபா கடாக்ஷத்திற்குப் பாத்திரமாகிய) நாம் அறியக் கடவோம்.

ஆமே யமரர்க்கு அறிய –எத்தனையேனும் அதிசயித ஞானரான தேவர்களுக்கும் அறியப் போகாது என்கிறார்
வது நிற்க-நாமே யறிகிற்போம் –அவ் விடையாட்டம் நிற்க -நமக்கு அறிய தட்டு என் –
நன்னெஞ்சே -அவன் காட்டக் கண்ட நெஞ்சே (இதனாலே நல் விசேஷணம் )

பூமேய-மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை-பாதமத்தால் எண்ணினான் பண்பு –
ப்ரஹ்மாவின் மடியில் ஒரு சிறு பிள்ளையாய் கண் வளருவாரைப் போலே கிடந்தது -இவனுக்கு வரம் கொடுக்க வேண்டா
இது அநர்த்தமாம் -என்று ராவணன் தலைகளை தன் திருவடிகளாலே எண்ணினவனுடைய நீர்மையை அமரர்க்கு அறியவாமே -என்கிறது –

(அடிச்சியாம் –உன் கோலப்பாதம் தலை மிசை அணியாய் -10-3–என்றும் கதா புன என்றும் பிரார்த்திக்க பெறாமல் இவன் பெற்றானே)

இத்தால் ப்ரஹ்மாவினுடைய அறிவு கேடு சொல்லுகிறது -ஆமே -அபிமானிகளான ப்ரஹ்மாதிகளுக்கும் எளியனாம் –
தாள் பணிந்த வாளரக்கன்-புதுத் தண்டன் கண்டு இறுமாந்து விளைவது அறியாதே வரம் கொடுத்த படி —

(ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் —மூன்றாம் திருவந்தாதி –77-

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து–நான்முகன் திருவந்தாதி -44-

தப ஆலோசநே
யஸ்ய ஞான மயம் தபஸ் -தபஸ் என்று அறிவையே சொன்னபடி

அடிச்சியாம் தலை மிசை நீ அணியாய் ஆழி யம் கண்ணா நின் கோலப்பாதம் -10-3-6- என்று நாங்கள் ஆசைப்பட்டுப் பிரார்த்திப்பதை
ஓர் அரக்கன் தலையிலே வைப்பதே -)

——————————————————–

இப்படி இருக்கிற அவன் நீர்மை ப்ரஹ்மாதிகளுக்கும் நிலம் அல்ல கிடீர் -என்கிறார் –

என் நினைவிலே நடக்கும் நல்ல நெஞ்சே -திரு நாபீ கமலத்தை தனக்கு வாசஸ் ஸ்தானமாக யுடையனாய் ஜகத் ஸ்ருஷ்டிக்கு
உபகரணமான தபஸ் சப்த வாசியான ஞானத்தை யுடையனான ப்ரஹ்மாவினுடைய கால் கீழே தலை மடுத்து
எனக்கு வரம் வேணும் என்று ஆஸ்ரயித்த சாயுதனான (ஆயுதம் கொண்ட )ராவணனுடைய ஒக்கத்தை யுடைத்தான தலைகளை
புதுக் கும்பீடு கண்டு இறுமாந்து -மேல் விளைவது அறியாமல் அந்த ப்ரஹ்மா அவனுக்கு வேண்டிய வரங்களை கொடுப்பதாக ஒருப்படுகிற அளவிலே

ஒரு பாலகனாய்க் கொண்டு அவன் மடியிலே வந்து ஆவிர்பவித்து அவைகள் அறுப்புண்ணப் போகும் தலைகள் என்னும் இடத்தை
எனக்கு நிரதிசய போக்யமான அந்த திருவடிகளாலே கீறி எண்ணிக் காட்டி அந்த ப்ரஹ்மாவின் அனர்த்தத்தை பரிஹரித்த
சர்வேஸ்வரனுடைய குணங்களை -தங்கள் ஹிதம் அறியாமல் அனர்த்தத்தை சூழ்த்துக் கொள்ளக் கடவ
ப்ரஹ்மாதி தேவர்களுக்கு அறியப் போமோ –

அது கிடக் கிடாய் -அவன் அருளாலே தெளியக் காண வல்ல நாமே அறிக்கைக்கு சக்தர் ஆகா நின்றோம் –
பேர் அளவுடைய ப்ரஹ்மாதிகள் மதி கெட்டு நிலம் துழவா நிற்க நாமே அவனை அறிய புகா நின்றோம் -என்றுமாம் -(நைச்ய அனுசந்தானம் -அவனுக்கே தெரியாத பொழுது நாம் எங்கனம் அறிவோம் என்றவாறு )

—————————————————–

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண்  —–77-

பதவுரை

ஆய்ந்த–ஆராய்ந்து அதிகரிக்கப்பட்ட
அரு மறையான்–அருமையான வேதங்களை யுடையனான
நான் முகத்தோன்–சதுர்முக ப்ரஹ்மாவினுடைய
நன் குறங்கில்–அழகிய மடியிலே
வாய்ந்த–நேர் பட்ட
குழவி ஆய்–இளங்குழந்தை யாயிருந்து கொண்டு
வாள் அரக்கன்–இராவணனுடைய
போது ஏய்ந்த–புஷ்ப மாலை பொருந்தின
முடி–தலைகளை
மூன்று ஏழ் என்று எண்ணினான்–பத்து என்று (தனது திருவடியாலே) எண்ணிக் காட்டினவனுடைய
அடி போது–திருவடித்தாமரைகள்
நங்கட்கு–நமக்கு
ஆர்ந்த அரண்–குறையற்ற சரணம்.

—————————————————————————————-

வியாக்யானம் –

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன்-
சர்வேஸ்வரனாலே ஒதுவிக்கப் பட்டு
அழகிதாக ஆராய்ந்து
தரித்து
வேத வேதாந்த நிரூபணம் பண்ண வல்ல
சதுர்முகனுடைய –

நன் குறங்கில்-
நன்றான மடியிலே –
வாய்ந்த குழவியாய் –
நேர்பட்ட முக்த சிசூவானவனாய்
அழகிய பிள்ளையாய் –
ராவணன் தன வரம் பெறுகைக்காக
ப்ரஹ்மாவின் பக்கலிலே வந்து தண்டன் இட்டுக் கிடக்க
அவனும் தனக்கு
ஸ்வாபாவிகமான சேஷித்வம் இல்லாமையாலே
புதுக் கும்பீட்டைக் கண்டு இறுமாந்து
தங்கள் அநர்த்தம் அறியாதே
சொன்னது எல்லாம் கொடுக்கப் போக –
ப்ரஹ்மாவின் பக்கலிலே வந்து இவனாலே நோவு பட்டாலும்
நம்முடைய பாடே  இறே இவர்கள் வந்து விழுவது என்று பார்த்து
அப்போது
சர்வேஸ்வரன் இவன் மடியிலே ஒரு பிள்ளையாய் வந்திருந்து
இவனுக்கு வரங்களை கனக்கக் கொடுப்புதியாகில்
நாடு குடி கிடவாது
உனக்கும் குடி இருப்பு அரிதாம்
ஆனபின்பு அவன் வத்யன் கிடாய் -என்னும் இடம் தோற்ற
அவனுடைய தலைகளைத் தன் திருவடிகளாலே கீறி
எண்ணிக் காட்டித் தான் அந்தர்த்தானம் பண்ணினான் –

வாளரக்கன் –
சாயுதனான ராஷசனுடைய –

ஏய்ந்த  முடிப்போது-
அறுக்கைக்குத் தகுதியான தலைகளிலே
மாலைகள் இட்டு வா வென்று –

மூன்று ஏழு என்று எண்ணினான் –
தன் மௌக்த்யம் தோற்ற எண்ணின படி யாய்த்து –

மூன்று ஏழு –
ஏழும் மூன்றும் என்னாதே  –

ஆர்ந்த அடிப்போது நங்கட்கு அரண்  –
அவனுடைய நிரதிசய போக்யமான திருவடிகள் ஆகிற
செவ்விப் பூ நமக்கு ரஷை-
அவனுடைய அபேஷிதம் செய்ய வற்றான திருவடிப்பூ
ஆகிஞ்சன்யராய்
அநந்ய பிரயோஜனரான
நமக்கும் அரண் –

ஆர்ந்த அடிப் பூ –
போக்யதையால் பரிபூரணமான
திருவடிகள் ஆகிற பூ –

———–

கீழ் சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்கவே உங்கள் பாபங்கள் எல்லாம் போம் என்றது-
இதில் அளவுடையரான ப்ரஹ்மாதிகளுக்கு வழி கேடாகப் புக்கால் பரிஹரிப்பான் அவனே என்கிறது –

பேர் அளவுடையரான ப்ரஹ்மாதிகளும் விளைவது அறியாமல்
தங்களுக்கு ஆபத்தை விளைத்துக் கொள்ள தேடினால்
ஏற்கவே அவ் வாபத்தைப் போக்கி அவர்களை ரஷிக்கக் கடவ
சர்வேஸ்வரன் திருவடிகளே நமக்கு ரக்ஷகம் என்கிறார் –

(காமம் ஆஸ்ரய துஷ்பூரம் நடைவேற முடியாத தப்பான காரியத்துக்காக தவம் செய்வார் ராவண ஹிரண்யாதிகள்
விளையப் போகும் அநர்த்தம் அறியாமல் வரங்களை தேவர்கள் அளிப்பார்கள்-இன்புறும் இவ் விளையாட்டுடையவன் -)

(சமுத்திர ராஜன் -மீறக்கூடாது என்று நீரே ஸ்ருஷ்ட்டி செய்தபின் எவ்வாறு வழி விடுவேன்
நளன் தபஸ் பண்ணி வரம் நொண்டி சாக்கு வைத்து அணை கட்டி
அனைத்துக்கும் ஸம் ஐயம் செய்து அன்றோ நீர் நிர்வஹிக்கிறீர்)

(கோலம் போல் ராமாயணம் பாரதம் -புள்ளி வைத்து கோலம் -கோலம் முடிந்ததும் புள்ளிகள் தெரியாதே
அனைத்துக்கும் தாத்பர்யங்கள் ஆச்சார்யர்கள் காட்டி அருளுகிறார்
உன்னுடைய விக்ரமம் ஒழியாமல் எல்லாம் நீயே காட்டிக் கொடுக்கிறாய் ஆழ்வாராதிகளுக்கு)

(ஆளவந்தார் ப்ரஹ்மா, ருத்ரன் ஆகியோரின் க்ஷேத்ரஜ்ஞத்வத்தையும் (ஜீவாத்மாவாக இருக்கும் தன்மையையும்)
பகவானின் பரத்வத்தையும், இதிஹாஸ மற்றும் புராணங்களில் உள்ள சரித்ரங்களைக் கொண்டு அருளிச் செய்கிறார்..

வேதாபஹார குருபாதக தைத்யபீடாதி
ஆபத் விமோசந மஹிஷ்ட பல ப்ரதாநை: |
கோ’ந்ய: ப்ரஜா பஶு பதீ பரிபாதி கஸ்ய
பாதோதகேந ஸ ஶிவஸ் ஸ்வ ஶிரோத்ருதேந ||–ஶ்லோகம் 13 –

ப்ரஜாபதி என்று சொல்லப்படும் பிரமனையும், பசுபதி என்று சொல்லப்படும் ருத்ரனையும் மற்றும் இந்திரனையும்
முறையே அவர்களுக்கு வந்த ஆபத்தான வேதம் திருடப்பட்டு அதை இழந்ததையும்,
தன்னுடைய தந்தையின் தலையைக் கிள்ளிய பாபத்தையும், அஸுரர்களால் ஏற்பட்ட துன்பத்தையும் போக்கியவன் யார்?
யாருடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தலையில் தாங்கி, ருத்ரன் புனிதத் தன்மையை அடைந்தான்?)

(ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு -ஸ்ரீ முதல் திருவந்தாதி- –45-)

(கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து–நான்முகன் அந்தாதி -44-)

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண்  —–77-

பதவுரை

ஆய்ந்த–ஆராய்ந்து அதிகரிக்கப்பட்ட
அரு மறையான்–அருமையான வேதங்களை யுடையனான
நான் முகத்தோன்–சதுர்முக ப்ரஹ்மாவினுடைய
நன் குறங்கில்–அழகிய மடியிலே
வாய்ந்த–நேர் பட்ட
குழவி ஆய்–இளங்குழந்தை யாயிருந்து கொண்டு
வாள் அரக்கன்–இராவணனுடைய
போது ஏய்ந்த–புஷ்ப மாலை பொருந்தின
முடி–தலைகளை
மூன்று ஏழ் என்று எண்ணினான்–பத்து என்று (தனது திருவடியாலே) எண்ணிக் காட்டினவனுடைய
அடி போது–திருவடித் தாமரைகள்
நங்கட்கு–நமக்கு
ஆர்ந்த அரண்–குறையற்ற சரணம்.

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில் வாய்ந்த குழவியாய் வாளரக்கன் —
சர்வேஸ்வரனாலே ஓதுவிக்கப் பட்டு வேதார்த்த நிரூபணம் பண்ண வல்ல ப்ரஹ்மாவினுடைய குறங்கிலே–

(யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் –யோ வை வேதாம்ச்ச ப்ராஹினோதி தஸ்மை )

ஸ்வாபாவிகமான சேஷித்வம் இல்லாமை யாலே புதுக் கும்பிடைக் கண்டு இறுமாந்து
தாங்கள் அநர்த்தம் அறியாதே ராவணனுக்குத் தேடிற்று எல்லாம் கொடுக்கப் புக –

இவனால் நோவு பட்டாலும் நம்முடைய பாடே இறே இவர்கள் வந்து விழுவது என்று பார்த்து –

வாய்ந்த குழவியாய்–
அழகிய பிள்ளையாய்

வாளரக்கன்-
சாயுதனான ராக்ஷஸன் யுடைய

ஏய்ந்த-முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த-அடிப்போது நங்கட்கு அரண்  —
ராக்ஷஸனுடைய தலைகளை முஃயத்தாலே-மூன்று ஏழு என்று எண்ணினவனுடைய
அபேக்ஷித்தத்தைச் செய்யவற்றாய் போக்யமான திருவடிகள் நமக்கு ரக்ஷை –

(ஆச்சார்யர்கள் திருவடி ஸ்தானம் -உபதேஸிக்கப் பண்ணுகிறான் நம்மையும் திருத்திப் பணி கொள்ளவே
அவர்கள் ஆதி பணிந்து உஜ்ஜீவனம் அடையலாம்-திருவடிகளே அவனுக்கும் ரக்ஷகம் )

——————————————————————-

பேர் அளவுடையரான ப்ரஹ்மாதிகளும் விளைவது அறியாமல்
தங்களுக்கு ஆபத்தை விளைத்துக் கொள்ள தேடினால்
ஏற்கவே அவ் வாபத்தைப் போக்கி அவர்களை ரஷிக்கக் கடவ
சர்வேஸ்வரன் திருவடிகளே நமக்கு ரக்ஷகம் என்கிறார் –

அர்த்த ஸஹிதமாக ஆராய்ந்து அதிகரிக்கப் பட்ட பெறுதற்கு அரிய வேதத்தைத் தனக்கு நிரூபகமாக யுடையனான
சதுர்முகனுடைய அழகிய மடியிலே நேர் பட்ட முக்த சிஸூவாய்க் கொண்டு சாயுதனான ராவணனுடைய
அறுப்புண்கைக்குத் தகுதியான மாலை கட்டின தலைகளைத் தன் முஃத்யம் தோற்ற மூன்றும் ஏழும் என்று
அறுப்புண்கைக்கு யோக்யம் என்னும் இடம் தோற்றத் திருவடிகளால் எண்ணிக் காட்டி ப்ரஹ்மாவை ரஷித்தவனுடைய
போக்யத்தையால் பரி பூர்ணமான திருவடிகள் ஆகிற செவ்விப் பூக்கள் –அகிஞ்சனராய் அநந்ய பிரயோஜனரான நமக்கு ரக்ஷை –

(மாறுசெய்த வாள்அரக்கன்*  நாள்உலப்ப அன்றுஇலங்கை* 
நீறுசெய்து சென்று கொன்று*  வென்றி கொண்ட வீரனார்,*
வேறுசெய்து தம்முள் என்னை*  வைத்திடாமையால்,*  நமன்- 
கூறுசெய்து கொண்டுஇறந்த*  குற்றம் எண்ண வல்லனே.  -வாள் அரக்கன் -சந்த்ரஹாசம் வாள் சிவன் கொடுக்க -பிரமன் கொடுக்கும் நாள் )

—————————————————————————————————

ப்ரஹ்மாதிகள் தங்களுக்கு ஹிதம் அறியாத போது அறிவித்து-
பிரதிகூல நிரசன சீலனானவன் நிற்கிற
திருமலையிலே கரண பாடவம் யுள்ள போதே
எல்லாரும் போங்கள் என்கிறார் –

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து-44-

பதவுரை

குமரர் உள்ளீர்–கிளரொளியிளமை கெடாமலிருப்பவர்களே!
பண்டு–முன்பொருகால்
குடங்கால் மேல்–மடியிலே
கொண்டு வைத்த குழவி ஆய்–எடுத்து வைக்கும் சிறு குழந்தையாய்க் கொண்டு
போம்–அந்தர்த்தான மடைந்தவனான
குமரன்–நித்ய யுவாவான எம்பெருமான்
நிற்கும்–நிற்குமிடமான
தண்டம் அரக்கன்–தண்டிக்கத் தகுந்தவனான இராவணனுடைய
தலை–பத்துத் தலைகளையும்
தாளால்–திருவடியாலே
எண்ணி–கீறி எண்ணிக் காட்டி விட்டு
பொழில் வேங்கடம் மலைக்கே–சோலைகள் சூழ்ந்த திருமலைக்கே
புரிந்துபோம்–ஆசை கொண்டு செல்லுங்கோள்

கொண்டு -இத்யாதி –
ப்ரஹ்மா தன்னை ஆஸ்ரயித்த ராவணனுக்கு வரம் கொடுக்க புக்கவாறே-
எடுத்து மடியிலே வைத்த பிள்ளை வடிவாய்-
இவன் -வத்யன்-வரம் கொடுக்கலாகாது என்று தோன்றும்படி
அவன் தலைகளைத் திருவடிகளாலே அவனுக்குத் தெரியாதபடி
விளையாடுவாரைப் போலே வத்யமாய்ப் போம் என்று பண்டே எண்ணிப் பின்பு
போன ஆஸ்ரிதருக்கு ஹித காமனான குமரன் நிற்கிற திருச் சோலைகளை யுடைத்தான திரு மலையிலே
கால் கடியார் எல்லாரும் விரைந்து போங்கோள்  என்கிறார் –

————————————————————————–

(குமரருள்ளீர்-பாலர் ஆகையாலே கால் நடை தருமே –
கால் நடை ஆடும் போதே ஆஸ்ரயித்து போருங்கோள்-)

அறிவுடையாரும் அறிவு கெடும் தசையில்-
ஹிதைஷியாய் ரஷிக்குமவன் நிற்கிற திருமலையிலே-
படு கரணரான போதே சென்று ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

(குமரர் உள்ளீர் பாசுரம் -அப்பொழுது தான் கரணங்கள் நன்றாக இருக்கும்
சீமாலிகன் -மல்லிகை மா மலர் கொண்டு ஆர்த்ததும் -இதுவும் –
போகத்தில் வழுவாத ஆழ்வார்கள் மட்டும் கண்டு அருளிச் செய்தவை
புராணங்களில் இல்லை )

அப்பிள்ளை உரை அவதாரிகை
அறிவுடையாரும் மேல் வரும் அநர்த்தம் அறிந்து பரிகரிக்க மாட்டாமல் கலங்கி
(தபஸ்ஸூ பண்ணினான் என்று வரம் கொடுத்து )
அநர்த்தம் வந்து கலங்கிய அப்படிப்பட்ட தசையிலும் ஹிதைஷியாய் ரஷிக்கும் சர்வேஸ்வரன் –
திரு வேங்கடத்தானை -கரணங்கள் நல்ல தசையில் இருக்கும் போதே
சென்று ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து-44-

பதவுரை

குமரர் உள்ளீர்–கிளரொளியிளமை கெடாமலிருப்பவர்களே!
பண்டு–முன்பொருகால்
குடங்கால் மேல்–மடியிலே
கொண்டு வைத்த குழவி ஆய்–எடுத்து வைக்கும் சிறு குழந்தையாய்க் கொண்டு
போம்–அந்தர்த்தான மடைந்தவனான
குமரன்–நித்ய யுவாவான எம்பெருமான்
நிற்கும்–நிற்குமிடமான
தண்டம் அரக்கன்–தண்டிக்கத் தகுந்தவனான இராவணனுடைய
தலை–பத்துத் தலைகளையும்
தாளால்–திருவடியாலே
எண்ணி–கீறி எண்ணிக் காட்டி விட்டு
பொழில் வேங்கடம் மலைக்கே–சோலைகள் சூழ்ந்த திருமலைக்கே
புரிந்து போம்–ஆசை கொண்டு செல்லுங்கோள்-
புரிந்து — ஆஸ்ரயித்து
(விஷய ஞானம் உள்ளாரை வரச் சொல்வார் )

ப்ரஹ்மாவினால் எடுத்துக் கொண்டு மடியில் வைத்துக் கொள்ளப் பட்ட சிறு பிள்ளையாய்
தண்ட்யனான ராவணாசூரனுடைய தலைகளை முன்பு
திருவடிகளால் எண்ணி
அந்தர் தானமான நித்ய யுவாவான ஸர்வேஸ்வரன் எழுந்து அருளி இருக்கிற
தோப்புக்களை யுடைய திருமலையை நல்ல வயஸ்ஸை யுடையவர்களே ஆஸ்ரயித்துப் போருங்கோள் –

எடுத்து மடியில் வைக்கும் பிள்ளையாய்-
தண்ட்யனான ராஷசன் தலை பத்தும் அறுக்கப்படும் என்று-
திருவடிகளாலே கீறிக் காட்டி
அந்தர்த் தானம் பண்ணின முக்தன் நிற்கும்-திருமலைக்கே
கால்நடை யாடும் போதே
ஆஸ்ரயித்துப் போருங்கோள்-

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு -ஸ்ரீ முதல் திருவந்தாதி- –45-

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் —–ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி –77-

(குமரர் உள்ளீர்
பால்யேந திஷ்டா சேத் -ப்ரஹ்ம ஞானி குழந்தையைப் போல் இருக்கக் கடவன்
பரமாத்ம ஞானி குழந்தை யுள்ளம் படைத்தராய் இருப்பார் )

அப்பிள்ளை உரை
ப்ரஹ்மா தன்னை ஆஸ்ரயித்த ராவணனுக்கு வரம் கொடுக்கும் தசையில்
(மா மதலைப்பெருமாள் திருச்சேறை )
எடுத்து மடியில் வைத்துக் கொள்ளும்படி முக்த சிசுவாக வடிவைக் கொண்டு
அநீதியை செய்து போகும்-கை வளருகையாலே –
சித்ரவதம் பண்ணி தண்டிக்க யோக்யனான ராவணன்
இவை அறுபடப் போகும் தலைகளை ஒரு நாளிலே
அவனுக்கும் தெரியாதபடி திருவடிகளால் கீறி எண்ணிக் காட்டி
ஆஸ்ரித விஷயத்தில் ஹித காமனான முக்தன்
(திருமலை அப்பனுக்கு பிள்ளைத்தனம்
குழந்தையாக சேவித்துக் காட்டி அருளி-தப்பே தெரியாத படி அனுக்ரஹம் –
ஸர்வஞ்ஞனுக்கு ஒன்றும் தெரியாமல் இருக்க குழந்தை தானே )
அவன் வர்த்திக்கும் திருச் சோலைகள் நிறைந்த திருமலைக்கே
படு கரணராய் -மனமும் ஒன்றி- இளமை குன்றாத நிலையிலேயே
அபிமுகராய்க் கொண்டு சடக்கென வந்து ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் –

——————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ இயற்பா அருளிச் செயல்களில் ததீய சேஷத்வம் —

September 18, 2021

எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை –26-

இம் மூன்றையும் மூன்று அதிகாரிகள் பக்கலிலே ஆக்கி ஆழ்வான் ஒருருவிலே பணித்தானாய்ப்
பின்பு அத்தையே சொல்லிப் போருவதோம் என்று அருளிச் செய்வர் –
அவர்கள் ஆகிறார் -ஆர்த்தோ ஜிஞாஸூ-கீதை -7-16-இத்யாதிப் படியே
ஐஸ்வர் யார்த்திகள்
ஆத்ம ப்ராப்தி காமர்
பகவத் பிராப்தி காமர் -என்கிற இவர்கள் –

சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோऽர்ஜுந
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப–கீதை -7-16-

பரதர்ஷப அர்ஜுந:-பரதரேறே அர்ஜுனா!
அர்தார்தீ-பயனை வேண்டுவோர்,
ஆர்த:-துன்புற்றார்,
ஜிஜ்ஞாஸு:-அறிவை விரும்புவோர்,
ஜ்ஞாநீ-ஞானிகள் என,
சதுர்விதா ஸுக்ருதிந: ஜநா:-நான்கு வகையான நற்செய்கையுடைய மக்கள்,
மாம் பஜந்தே-என்னை வழிபடுகின்றனர்.

நற் செய்கையுடைய மக்களில் நான்கு வகையார் என்னை வழிபடுகின்றனர். பரதரேறே,
துன்புற்றார், அறிவை விரும்புவோர், பயனை வேண்டுவோர், ஞானிகள் என. நான்கு வகையார்–

எழுவார் –
தம் தாமுடைய த்ருஷ்ட பலங்களுக்கு ஈடாக மேலே சென்று ஆஸ்ரயிப்பார்-
பிரயோஜனம் கை புகுந்தவாறே போவார் ஐஸ்வர் யார்த்திகள் இறே
பொருள் கை உண்டாய் செல்லக் காணில் போற்றி என்று ஏற்று எழுவர் -திருவாய்மொழி -9-1-3-என்கிறபடியே –

விடை கொள்வார் –
உன்னை அனுபவித்து இருக்கப் பண்ணுமதும் வேண்டா –
எங்களை நாங்களே அனுபவித்து இருக்க அமையும் என்று ஆத்ம அனுபவத்தைக் கொண்டு போவார்
தலை யரிந்து கொள்ளுகைக்கு வெற்றிலை இடுவித்துக் கொள்ளுவாரைப் போலே
பலம் நித்யம் ஆகையாலே மீட்சி இல்லை இறே கைவல்யத்துக்கு –

ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் –
நித்ய யோக காங்ஷ மாணராய் உள்ளார் –
ஐஸ்வர்ய ஸூசகமான திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனான
சர்வேஸ்வரனை ஒரு காலும் பிரியக் கடவர் அன்றிக்கே எப்போதும் அனுபவிக்கக் கடவர்களாய் இருக்குமவர்கள்

யேன யேன தாத்தா கச்சதி -என்கிறபடியே
இளைய பெருமாளைப் போலே சர்வ அவஸ்தைகளிலும் கிட்டி நின்று அனுபவிக்கப் பெறுவார்கள் ஆய்த்து

எல்லார்க்கும் நினைவும் சொலவும் ஒக்கப் பரிமாறலாவது
பரம பதத்திலே அன்றோ என்னில்
நித்ய ஸூரிகளும் கூட அவனுடைய சௌலப்யம் காண வருகிறதும் திரு மலையில் அன்றோ -என்கிறார் –

வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே –
இவர்கள் மூவருடைய வினைச் சுடர் உண்டு
பாபம் ஆகிற தேஜஸ் தத்வம்
அத்தை அவிக்குமாய்த்து திருமலையானது

ஐஸ்வர்ய விரோதி
ஆத்ம பிராப்தி விரோதி
பகவத் ப்ராப்தி விரோதி
இவை யாகிற வினைச் சுடரை நெருப்பை அவித்தால் போலே சமிப்பிக்கும்

மூவர்க்கும் உத்தேஸ்ய விரோதிகளைப் போக்கும் -என்றபடி –
சிலருக்கு சத்ரு பீடாதிகள்
சிலருக்கு இந்த்ரிய ஜெயம்
சிலருக்கு விஸ்லேஷம் –

வானோர் மனச் சுடரைத் தூண்டும் மலை –
விரோதி உள்ளார்க்கு அத்தைப் போக்கக் கடவதாய்
அது இல்லாத நித்ய ஸூரிகள் உடைய ஹ்ருதயத்தை
அவனுடைய சீலாதி குண அனுபவம் பண்ணுகையாலே
போக வேணும் என்னும் படி கிளைப்பிக் கொடா நிற்கம் திருமலையானது –
இங்கே வர வேணும் -என்னும் ஆசையை வர்த்திப்பியா நிற்கும்

வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே–
பகவத் பிராப்தி விரோதி –ஆத்மபிராப்தி விரோதி -ஐஸ்வர்ய பிராப்தி விரோதி
ஆன பாபங்களை எரிகிற நெருப்பை அவித்தால் போலே நசிப்பிக்கும் வேங்கடமே –

இங்கு உள்ளார் ஒழிவில் காலம் எல்லாம் -என்ன
அங்கு உள்ளார் -அகலகில்லேன் -என்னச் சொல்லும் –

———-

அவன் தமர் எவ்வினையராகிலும் எங்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயற்கு ஆட்பட்டார் பேர் ——-55-

அவன் தமர் எவ்வினையராகிலும் –
அவன் தமர் எவ்வினையர் ஆகில் என்
இதுக்கு என்ன ஆராய விட்டவர்கள் அகப்பட ஆராயப் பெறாத பின்பு
வேறே சிலரோ ஆராய்வார்
இது தான் யமபடர் வார்த்தை

இத் தலையிலும் குண தோஷங்கள் ஆராயக் கடவோம் அல்லோமோ என்னில்
அவனுடையார் என்ன செயல்களை உடைத்தார் ஆகிலும்
அவனுக்கு அநு கூலர் ஆனவர்கள் விதித்த வற்றைத் தவிரில் என்
நிஷேதித்த வற்றைச் செய்யில் என் –

எங்கோன் அவன் தமரே என்று ஒழிவது அல்லால் –
எங்களுக்கு ஸ்வாமி யானவனுடையார் இவர்கள் என்று கடக்கப் போம் அல்லது –
ப்ரபவதி சம்யமனே மமாபி விஷ்ணு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-
பரிஹர மது ஸூ தன பிரபன்னான் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-
த்யஜ பட தூ ரதரேண தான பாபான்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-33-

நமன் தமரால் ஆராயப் பட்டு அறியார் கண்டீர் –
இத்தை எல்லாம் ஆராய்வதாகச் சமைந்து இருக்கிற அவனுக்கு
அந்தரங்கர் ஆனாலும் ஆராய ஒண்ணாது கிடீர்
இப்படி ஆராய ஒண்ணாத படி இருக்கிறார் தான் ஆர் –
அரவணை மேல் பேராயர்க்கு ஆட்பட்டார்களோ என்னில்
அங்கன் அன்று
பேர் ஆராயப் பட்டு அறியார் கிடீர்
ஒரு பாகவதன் பேரை ஒரு அபாகவதன் தரிப்பது
அவனுடைய பேரும் கூட யமன் சதச்ஸில் பட்டோலை வாசித்துக் கிழிக்கப் பெறாது –

ஒரு பாகவதனுடைய பேரை
ஒரு அபாகவதன் தரித்தால் அவனுடைய பெரும் எம சதசிலே வாசிக்கப் பெறாது என்கிறது –

அரவணை மேல் பேராயற்கு ஆட்பட்டார் பேர் –
அவன் படுக்கையை ஆராயில் இறே இவர்களை ஆராய்வது
அத்துறை நாம் ஆராயும் துறை அல்ல என்று கை விடும் அத்தனை –

செய்தாரேல் நன்று செய்தார் -என்று பிராட்டிக்கும் நிலம் அல்லாத விடத்தை
யமனோ ஆராயப் புகுகிறான் –

நாரணன் தம்மன்னை நரகம் புகாள்-பெரியாழ்வார் திரு மொழி -4-6-1-என்று ஒரு
மாம்ச பிண்டத்தை நாராயணன் என்று பேரிட்டால்
பின்னை அவனைப் பெற்ற தாயார் சர்வேஸ்வரனுக்குத் தாயாய்ப்
பின்னை நரக பிரவேசம் பண்ணக் கடவள் அல்லள் –

கிருஷ்ணனுக்கு அடிமை புக்கிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை –
தங்கள் அளவன்றிக்கே
தங்கள் பேரும் கூட
நாட்டார் கார்யம் ஆராய்கைக்கு ஆளாய் இருக்கிற யமனுக்கு
அந்தரங்க படராய் இருக்கிறவர்களால் ஆராயப்பட்டு அறியார் கிடீர் –

————-

தோளைத் தொழ அறியோம்–அத் தோளை தொழுவர் தாளைத் தொழும்
இத்தனை என்கிறார் –

தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி–43–

சக்ரவர்த்தி திருமகன் தாள் இரண்டும் -சரண்ய லஷணம் தான் இருக்கும் படி இதுவாகாதே –
அவன் திருவடிகள் இரண்டையும் –
ஆர் தொழுவார்-
ஏதேனும் ஜன்ம வ்ருத்தங்கள் ஆகவுமாம் –
ஏதேனும் ஞானம் ஆகவுமாம் –
இந்தத் தொழுகை யாகிற ஸ்வ பாவம் உண்டாம் அத்தனையே வேண்டுவது
ஒருவனுக்கு உத்கர்ஷ அபகர்ஷங்கள் ஆகிறன இது யுண்டாகையும்இல்லை யாகுமையும் இறே –

ஆரேனுமாக வமையும் -தொழுகையே பிரயோஜனம் –
பாற் கடல் சேர்ந்த பரமனைப் பயிலும் திரு வுடையார் யாவரேலும் அவர் கண்டீர் -திருவாய் -3-7-1-

ஆர் –
ராஷசனாக அமையும் –
குரங்குகளாக அமையும் –
ஷத்ரியனாக -அர்ஜுனன் -அமையும் –
பிசாசாக -கண்டகர்ணன் -அமையும் –

பாதம் அவை தொழுவது அன்றே –
தொழும் அவர்கள் ஆரேனுமாமாப் போலே அவர்கள் பக்கலிலும் திருவடிகள் உத்தேச்யம் -என்கிறார் –

அவன் தன்னை ஆஸ்ரயிக்கை ஆகிறது –
ஒருவன் கையைப் பிடித்துக் கார்யம் கொண்டவோபாதி –

வைஷ்ணவர்கள் முன்னாகப் பற்றுகை யாகிறது
மறுக்க ஒண்ணாத படி ஒருவன் காலைப் பிடித்துக் கார்யம் கொண்ட மாத்ரம் –

பாதமவை தொழு தென்றே –
அவர்களோடு ஒப்பூண் உண்ண வல்ல –

என் சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —
புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம் –
அழகு சேர்ந்த தோளானது எனக்குப் பண்ணும் தரமாகிறது –

சீர் கெழு தோள் –
அவர்களில் தமக்கு உள்ள வாசி –
இத் தோளைத் தொழ வமையும் இனி -புருஷார்த்த உபாயமாகத் தோற்றின சரீரம் இறே –

பாதமவை தொழுவதன்றே –
ததீயர் அளவும் வந்து நிற்கப் பெற்ற லாபத்தாலே
சீர் கெழு தோள் -என்கிறார் –

எட்டும் இரண்டும் ஏழும் மூன்றுமாக இருபது தோள்களையும்-முடி அனைத்தையும்
தாள் இரண்டும்-மற்றும் விழும்படிக்கு ஈடாக சரத்தை துரந்தவன்-ஆஸ்ரித விரோதி யாகையாலே-
நம்மாலே ஸ்ருஷ்டன் என்றும் பாராதே-முடியச் செய்தவனுடைய திருவடிகள் இரண்டையும்-
யாவர் சிலர் தொழுதார்கள்-ஏதேனும் ஜன்மம் ஆகிலும்
அவர்கள் உடைய தாளைத் தொழுகை அன்றோ-புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம்-

சக்கரவர்த்தி திருமகனுடைய திருவடிகள் இரண்டையும் தொழுமவர்களாய்
அபிமான ஹேது அல்லாத ஏதேனும் ஜென்ம வ்ருத்தாதிகளை உடையராய் இருக்கும் மஹா புருஷர்களுடைய
பரம உத்தேச்யமாக பிராமண பிரசித்தமான அந்தத் திருவடிகளைத் தொழுமதன்றோ –
அவர்களில் வியாவிருத்தனான என்னுடைய ததீயரைத் தொழ என்றால்
பல்கிப் பணைக்கும் அழகு சேர்ந்த தோள்களானவை-எனக்குச் செய்யும் உபகாரம் –

————

பகவத் சமாஸ்ரயணத்திலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார்-

குறி கொண்டு பகவானையே பஜிக்கும் அதிலும்-ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு
பற்றுகை சீரீயது என்கிறார் –

(இப்பாட்டின் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான அவதாரிகையில்
“பகவனையே பஜிக்குமதிலும் ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு பற்றுகை சீரியதென்கிறார்“ என்ற
(அச்சுப்பிரதி களிற் காணும்) வாக்கியம் பிழையுடையது,
“புருஷகாரமாகக் கொண்டு“ என்கிற வாக்கியம் ஏட்டுப் பிரதிகளில் காண்பரிது, சேரவும் மாட்டாது.
“பகவானையே பூஜிக்குமதிலும் ததீயரைப் பற்றுகை சீரியதென்கிறார்“ என்னுமளவே உள்ளது.
“ததீயரைப் புருஷகாரமாகப் பற்றுதல் சிறந்தது“ என்கிற அர்த்தமன்று இப்பாட்டுக்கு விஷயம்,
“ததீயரை உத்தேச்யராகப் பற்றுதல் சிறந்தது“ என்னுமர்த்தமே இப்பாட்டுக்குச் சீவன்.)–காஞ்சி ஸ்வாமிகள்

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–18-

எதிரியான ஹிரன்யனைச் செறிந்த யுகிராலே யவனுடைய மார்வை இரண்டு கூறாக
அநாயாசேன பிளந்த-நரசிம்ஹத்தை அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு
ஆஸ்ரயித்தவர்களை வெல்லும்
அவர்கள் தங்களை ஆஸ்ரயித்தவர்கள் யுடைய தபஸ்ஸூ –

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு கூறாகக் கீறிய கோளரியை –
ஈஸ்வரன் என்று பாராதே-தனக்கு எதிரியான ஹிரண்யனை-
கூரிய உகிராலே மார்விரண்டு பிளவாகக் கீண்ட-நரசிம்ஹத்தை
வேறாக ஏத்தி இருப்பாரை –
வேறாக ஏத்தி இருப்பார் ஆகிறார் –
அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனைப்
பல்லாண்டு -என்று-ரஷகனுக்கு தீங்கு வருகிறது என்று திருப் பல்லாண்டு
பாடும் பெரியாழ்வார் போல்வார்
வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் தவம் –
சாத்தி இருப்பார் ஆகிறார் –
வல்ல பரிசு வரிவிப்பரேல் -என்று-பெரியாழ்வார் பக்கலிலே நயச்த்த பரராய்
இருக்கும் ஆண்டாள் போல்வார் –
தவம் -ஸூ க்ருதம்-

———-

எல்லாப் புருஷார்த்தங்களிலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார் –
இப்படி கர்மாத் யுபாயங்கள் போலே பழுதாகை அன்றிக்கே பழுதற்ற உபாயம் தான் ஏது என்ன
பகவத் சமாஸ்ரயணமும் பாகவத சமாஸ்ரயணமும் பழுதற்ற வுபாயங்கள் –
இவை இரண்டு வுபாயங்களிலும் உத்க்ருஷ்டமான வுபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்கிறார் ஆகவுமாம் –

எம்பெருமானை ஆச்ரயிப்பதுபோல் காட்டிலும் பாகவதர்கள் பாதம் பணிதல் பாங்கு என்னும் பரம ரகஸ்யார்த்தை
வெளியிட்டு அருளுகிறார் -கீழே மாறாய தானவனை 18-பாசுரத்தில் மேலும் இத்தையே அருளிச் செய்கிறார்-
சித்திர்ப் பவதி வா நேதி சம்சய வுச்யுதஸேவி நாம் ந சம்சயோஸ்தி தத் பக்த பரிசர்ய ஆரதாத்மநாம் -மோக்ஷ ஏக ஹேது அன்றோ
-மார்பிலே கை வைத்து உறங்கலாம் -அதனால் -பழுதாகது ஓன்று அறிந்தேன்-என்று கம்பீரமாக அருளிச் செய்கிறார் –

பழுதாகது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –89-

பழுது இத்யாதி -பழுது அன்றியே இருப்பது ஓன்று அறிந்தேன்
பழுத் போகாத உபாயங்களிலே அத்விதீயமானதொரு உபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்று அறிந்தேன் –
அது எங்கனே என்னில்
போக பூமியான பரமபதத்தை விட்டு-ஆஸ்ரயிப்பாருக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவனுடைய
திருவடிகளைத் தப்பாத பிரகாரத்தை நினைத்து நாள் தோறும் தொழுமவர்களைக் கண்டு ஆஸ்ரயித்து
வாழுமவர்கள் தம்தாமுடைய சஹஜமான கர்மங்களைக் கெடுத்து
பரமபதத்திலே விச்மிதராய்க் கொண்டு ஞானப் பிரேமங்களாலே பரி பூரணராய் ததீய கைங்கர்ய லாபத்தால் வந்த
தங்கள் வேறுபாடு தோற்ற இருப்பார்கள் –
விண்டிறந்து
பரமபதத்தில் திரு வாசல் திறந்து -என்றுமாம் –

கலந்த வினை கெடுத்து–ஆத்மாவுடன் சேர்ந்த தீ வினைகளைத் தீர்த்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –பரமபத வாசலைத் திறந்து சிறப்புடனே எழுந்து அருளி இருக்கப் பெறுவர்
பாற்கடலான் பாதத்தை கண்டு இறைஞ்சுக்கை அன்றிக்கே -பாற் கடலான பாதம் தொழுவாரை
கண்டு இறைஞ்சுமவர் நல் வாழ்வு பெறுவார் என்றதாயிற்று –
ஸ்ரீ வசன பூஷணம் -பழுதாகாது ஓன்று அறிந்தே –என்பதை பூர்வ உபாயத்துக்கு பிரமாணம் என்றும்
நல்ல வென் தோழி/ மாறாய தானவனை -பாட்டுக்களை
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்பதற்கு பிரமாணம் –என்று அருளிச் செய்வது அறிக

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசைப்பிரான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -91-100–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 23, 2020

எம்பெருமானுடைய ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அருளிச் செய்கிறார்
அவனுடைய அபரிச்சேத்யதைக்கு ஓர் அவதி காண ஒண்ணாதா போலே கிடீர்
அவன் சரித்ரம் தானும் ஒருவரால் ஓர் அவதி காண ஒண்ணாத படி என்கிறார் –

மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டும் ஆற்றாதாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி -கண்ணிக்
கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான்
வயிற்றினோடுஆற்றா மகன் ———91-

சாமான்யேன ஜகத்தையும் பிரதிகூலருடைய பிராணங்களையும் உண்டும் – அனுகூலர் ஸ்பரசித்த த்ரவ்யத்தை
யுண்டு அல்லது பர்யாப்தம் ஆய்த்து இல்லை –மண் உண்டது முதல்வன – இவற்றின் ஆற்றாமை பரிஹரித்த படி –
இங்கு தன் ஆற்றாமை பரிஹரித்த படி –ஜகத்துக்கு தன வயிறு போலே தனக்கு வெண்ணெய் –
சர்வ நியந்தா வானவன் – சம்சார சம்பந்த ஸ்திதி மோஷ ஹேது வானவன் ஒரு அபலை கையாலே கட்டுண்டு
போக மாட்டாதே இருந்தான் –இவ்விடத்தை இயலைக் கேட்டு ஹர்ஷத்தாலே
பிள்ளை உறங்கா வில்லி தாசர் வயிற்றை அறுத்து வண்ணானுக்கு இட மாட்டானோ – என்று பணித்தார் –

———–

ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனான எம்பெருமானை நெஞ்சே பூரணமாக நினை -என்கிறார் –
அவன் சிறைப் பட்டான் ஒருவன் என்று இராதே நம் சிறையை வெட்டி விட வல்லான் ஒருவன் என்று
புத்தி பண்ணு -என்கிறார் –

மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்
மகனாம் அவன் மகன் தன் காதல் -மகனைச்
சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே
நிறை செய்தேன் நெஞ்சே நினை——-92-

சர்வர்க்கும் பிதாவானவன் தான் புத்ரனாய் அவதரிக்கும் –சர்வேஸ்வரனுக்கு அலாப்ய லாபம் இறே –
தனக்கு இல்லாத ஒன்றிலே இறே ஸ்நேஹாம் ஜனிப்பது-தன்னாலே ஸ்ருஜ்யமான பதார்த்தங்களின் உடைய
ரஷண ஹேதுவாகத் தான் புத்ரத்வத்தை ஏற்றுக் கொண்டு பித்ருமானாம் –

———-

இப்படி இருக்கிற எம்பெருமான் உடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை லோகத்திலே ஒருவரும் அறிந்து
ஆஸ்ரயிக்க வல்லார் இல்லை – ஆனாலும் நெஞ்சேநீ யவனை உன்னுடைய ஹ்ருதயத்திலே கொடு
புகுந்து வை கிடாய் என்கிறார் –

நினைத்து உலகிலார் தெளிவார் நீண்ட திருமால்
அனைத்துலகும் உள்ளொடுக்கி யால் மேல் -கனைத்துலவு
வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை
உள்ளத்தே வை நெஞ்சே யுய்த்து —–93-

கோஷித்துக் கொண்டு கண்ட இடம் எங்கும் தடையற சஞ்சரிக்கிற பிரளயத்திலே அத்விதீயமான முக்த சிசு
விக்ரஹத்தை யுடையனாய்க் கொண்டு வயிற்றில் புக்க பதார்த்தத்துக்கு ஓர் அலைச்சல் வாராத படி
மெல்லக் கண் வளர்ந்து அருளினவனை –கொடு வந்து வை –
கொடு வருகை யாவது அவன் புகப் புக்கால் விலக்காது ஒழிகை –
நமக்கு இவன் அல்லது தஞ்சம் இல்லை என்று அனுசந்தித்து லோகத்தில் கலங்காமல் அறிய வல்லார் ஒருவரும் இல்லை –
ஆனாலும் நெஞ்சே இப்படி இருக்கிறவனைக் கொடு வந்து உன் ஹிருதயத்திலே வை –
அவன் புகுரப் புக்கால் விலக்காதே கிட்டி அநுஸந்தி

————

இப்படி -வையம் தகளி-தொடங்கி இவ்வளவும் வரத் தாம் பெற்ற பேற்றைச் சொல்லுகிறார் –
கீழில் பாட்டில் நெஞ்சே உள்ளத்தே வை -என்றார் –
இப்பாட்டில் – தாம் அவனை அனுசந்தி என்ற அளவிலே அத்யாபி நிவேசத்தோடே கூட எம்பெருமான் உள்ளே புகுந்து
தம் பக்கல் வ்யாமுக்தன் ஆனபடியை அருளிச் செய்கிறார் –

உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி
வைத்தவனை நாடி வலைப் படுத்தேன் -மெத்தனவே
நின்றான் இருந்தான் கிடந்தான் யென்னெஞ்சத்துப்
பொன்றாமல் மாயன் புகுந்து ———-94–

இவனுடைய க்ருஷியே அவனுக்கு வலை –அவனும் இவ்வலையிலே அகப்பட்டு என்னுடைய நெஞ்சிலே வந்து புகுந்து –
மெல்லக் கொள்ளக் கொண்டு கால் பாவி தரித்து –நிற்பது-இருப்பது- கிடப்பதானான் –
நான் நசியாமல் -ஹிருதயத்தில் ஸ்திதி யாதிகளுக்கு விச்சேதம் இன்றிக்கே -இடைவிடாதே புறம்பு போக்கு இல்லை என்று
தோற்ற வாசனை பற்றுண்டாய் இருந்தான்

—————–

தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச்
சொல்லுகிறார் – நெஞ்சே இப்படி உபகாரகனான எம்பெருமான் திருவடிகளிலே வணங்கி அவனை வாழ்த்து
என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

புகுந்திலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய்
இகழ்ந்த இரணியனதாகம் -சுகிர்ந்தெங்கும்
சிந்தப் பிளந்த திருமால் திருவடியே
வந்தித்தென் நெஞ்சமே வாழ்த்து ——95-

ஆஸ்ரிதன் பக்கல் ஓரத்துக்கு அடி பிராட்டி அருகே இருக்கை -என்கிறது –
அவனை பஜிக்கும் போது அவளுக்கும் பிரியம் செய்து பஜிக்க வேண்டுகையைச் சுட்டி –
வந்திக்கைக்கும் வாழ்த்துக்கைக்கும் விஷயம் அவளோடு கூடினவன் போலே –
ஆசைப் பட்டாருடைய விரோதிகள் ஹிரண்யன் பட்டது படும் அத்தனை

—————

நித்ய ஸூரிகள் உடைய பரிமாற்றமும் பொறாதே சுகுமார்யத்தை உடையவன் -என்கிறது –அன்றிக்கே –
அளவுடையாரான ப்ரஹ்மாதிகளும் அவன் திருவடிகளிலே வணங்கித் தங்கள் அபேஷிதம் பெறுவது -என்கிறார்
மா மலரான் வார் சடையான் வல்லரே அல்லரே வாழ்த்து -நான் முகன் திருவந்தாதி -11 -என்னக் கடவது இறே –

வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே -கேழ்ந்த
அடித்தாமரை மலர்மேல் மங்கை மணாளன்
அடித்தாமரை யாமலர் ———-96-

இத்தால்-நித்ய ஸூரிகளுக்கும் ப்ரஹ்மாதிகளுக்கும் உபாஸ்யம் ஒரு மிதுனம் -என்றபடி –

———-

கீழில் படியாய் ஸ்ரீ யபதியாய் அயர்வறும் அமரரர்கள் அதிபதி யாகையாலே அவனை ஆஸ்ரயித்துப் பெறில்
பெரும் அத்தனை -அல்லது ஸ்வ யத்னத்தாலே ப்ரஹ்மாதிகளுக்கும் அறிய முடியாது -என்கிறார் –
அயர்வறும் அமரரர்கள் பரிமாறும் நிலம் ப்ரஹ்மாதிகளுக்கு நிலம் அன்று என்கிறார் –

அலரெடுத்த வுந்தியான் ஆங்கு எழிலாய
மலரெடுத்த மா மேனி மாயன் –அலரெடுத்த
வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு
எண்ணத்தான் ஆமோ இமை ——-97-

இவர்களுக்கு சிந்திக்கத் தான் போமோ – இவ்வர்த்த ஸ்திதியை இவர்களால் மநோ ரதிக்கவும் முடியாது –

——–

தன்னை ஆச்ரயித்தவர்கள் உடைய விரோதிகளைப் போக்குமவன் என்கிறார் –
நம்முடைய பிரதிபந்தகங்களைப் போக்கி சம்சார நிவ்ருத்தியைப் பண்ணித் தருவான் எம்பெருமான் என்றபடி –

இமம் சூழ் மலையும் இரு விசும்பும் காற்றும்
அமஞ்சூழ்ந்தற விளங்கித் தோன்றும் -நமஞ்சூழ்
நரகத்து நம்மை நணுகாமல் காப்பான்
துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு —–98-

ஜகதாகாரதையைச் சொல்லுகிறது–ஆஸ்ரித விரோதி என்று கை தொட்டுப் பிளந்து பொகட்டான்
பத்தும் பத்தாக நம்மாலே சூழ்த்துக் கொள்ளப் பட்ட சம்சாரம் ஆகிற நரகம்-துரகம் பட்டது படும் இத்தனை

————-

ஆஸ்ரித விரோதிகளைப் போக்கும் ஸ்வ பாவனான எம்பெருமான் திருவடிகளே நமக்கு பரம பிராப்யம்
என்கிறார் –

தொட்ட படை யெட்டும் தோலாத வென்றியான்
அட்ட புயகரத்தான் அந்நான்று-குட்டத்துக்
கோள் முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்
தாள் முதலே நங்கட்குச் சார்வு ——99-

சர்வ சக்தியைப் பற்ற வேண்டாவோ -பயம் கெடும் போது –பிரதானமான திருவடிகளே நமக்குப் புகலிடம் –
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே –ஸ்தோத்ர ரத்னம் -22-என்னும்படியே
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு -உதவினவன் திருவடிகளே நமக்கு ஸூ பாஸ்ரயம்-
நம்முடைய சஹாயம் வேண்டா-உண்டானவன்று -பலியாமையே யன்று விரோதியேயாம் அத்தனை –
ஒன்றினுடைய விநாசம் ஒன்றுக்கு உத்பத்தி-ஸ்வாதந்த்ர்ய பார தந்த்ர்யங்களுக்கு சஹாவ ஸ்தானம் இல்லை இறே –
ஈரரசு உண்டோ

——–

எம்பெருமான் புகலிடமாவது பெரிய பிராட்டியார் திருவடிகளை என்றும் புகலிடமாகப் பற்றினாருக்கு
என்கிறார் –

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்
தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்
தேனமரும் பூ மேல் திரு ——100-

ஆபத்து உள்ள போதும் அல்லாத போதும் என்றைக்கும் நமக்கு அபாஸ்ரயம் பெரிய பிராட்டியார் –
நமக்கும் அவனுக்கும் உள்ள வாசி போரும் அவனுக்கும் பிராட்டிக்கும்
ரஷணத்துக்கு பரிகரமான திரு ஆழியைக் கையிலே யுடையவன்-
சர்வ ஐஸ்வர்ய ஸூசகமான திருத்துழாய் மாலையை யுடைத்தாய் மலை போலே இருக்கிற திரு மார்வை யுடையவன்-
அவளை -அகலகில்லேன் -என்னப் பண்ணும் தான் –அவளை -அகலகில்லேன் -என்னும் –
ஆஸ்ரிதரை சஹ்ருதயமாகக் குளிர நோக்கா நின்ற உதாரமான தாமரை போலே இருக்கிற
ஒழுகு நீண்ட கண்ணை யுடைய நிரதிசய போக்யையான பெரிய பிராட்டியார் –
நமக்கு எல்லாக் காலத்துக்கும் அபாஸ்ரயம் –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -81-90–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 23, 2020

கீழே சம்சாரிகளுக்கு இல்லாதது தமக்கு உண்டானவாறே நெஞ்சு பகவத் விஷயத்திலே ப்ரவணமாய்த்து
என்று கொண்டாடினார் –விஷயத்தைப் பார்த்தவாறே முதலடி இட்டிலராய் இருந்தார் –
அவன் துர்ஜ்ஞேயன் ஆகிலும் அவனை அனுசந்தி என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்து
இவனை இம்மமனஸ் அனுசந்தியா இருக்கைக்கு ஹேது என்னோ -என்கிறார்
இத்தால் தம் நெஞ்சு முயலுகிற முயற்சி போராதது என்னும்படி தமக்கு அவ் விஷயத்தில் உண்டான
ப்ராவண்யம் இருந்தபடி சொல்லுகிறார் –
அவன் பெருமை பார்த்த போது அறிவொன்றும் இல்லையாத் தோன்றும்
புறம்பே பார்த்த போது குவாலாய் இருக்கும் –

நெஞ்சால் நினைப்பரியனேலும் நிலைப் பெற்றேன்
நெஞ்சமே பேசாய் நினைக்கும் கால் -நெஞ்சத்துப்
பேராது நிற்கும் பெருமானை என் கொலோ
ஓராது நிற்பது உணர்வு ——81-

ஓர் உழக்கைக் கொண்டு கடலை யளக்கப் போகாது இறே –அப்படியே
ஷூத்ரமான மனசைக் கொண்டு அபரிச்சேத்யனானவனை பரிச்சேதிக்க ஒண்ணாது இறே
நாம் ஒருக்கால் நினைத்தால் ருணம் ப்ரவ்ருத்தம் -என்று ஒருக்காலும் மறவான் –
நிரந்தரம் நினைத்தாலும் நினையாதாரையோ நினைப்பது –
அவனை நினையாதே மண்ணை முக்கப் பார்க்கிறதோ

———

இது தன்னை நாம் இன்னாதாகிறது என் – அவன் தான் சிலரால் அறிய ஒண்ணாத படியாய் இருப்பான் ஒருவனுமாய்
நிரதிசய போக்யனுமான பின்பு இனியவனை நாம் கிட்டிக் கண்டோமாய்த் தலை கட்ட விரகு உண்டோ என்கிறார் –

உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பரியன் உண்மை -இணரணையக்
கொங்கணைந்து வண்டறையும் தண் துழாய்க் கோமானை
எங்கணைந்து காண்டும் இனி ——–82-

இணர் -பூங்கொத்து-

இவன் தான் காணும் அன்று காண வரிதாய் அவன் தானே காட்டும் அன்றும் காண வரிதானாலும்
இழந்து ஆறி இருக்க ஒண்ணாது போக்யதையும் ஸ்வாமித்வமும் –
லௌகிகர் படியிலும் காண விரகற்று அவன் தானே காட்டும் வைதிகர் படியாலும் காண விரகற்ற பின்பு
இனி நான் காண்கை என்று ஒரு பொருள் உண்டோ-கிட்டாது ஒழிய மாட்டேன்-கிட்ட மாட்டேன் –

————

அவன் ஒருக்காலும் காணவும் நினைக்கவும் ஒண்ணாதான் ஒருவனே ஆகிலும் அவன் இருந்தபடி இருக்க –
இப்போது முந்துற முன்னம் ஹ்ருதயத்திலே புகுந்து சந்நிதி பண்ணா நின்றான் என்கிறார் –

இனியவன் மாயன் என வுரைப்பரேலும்
இனியவன் காண்பரியனேலும் -இனியவன்
கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங்கழலான்
உள்ளத்தின் உள்ளே உளன் ———83-

புக்க ஆயுச்சுக்கு மரணம் இல்லை இறே-மேல் செய்த படி செய்கிறான்
பெற்ற வம்சத்தை ஒருவரால் இல்லை செய்ய ஒண்ணாது இறே
இப்படி சந்நிஹிதன் என்றதே யாகிலும் கீழ்ச் சொன்ன அபரிச்சேத்யதையே பலித்து விடுகிறது –

———–

வேதைக சமதி கம்யனாய் உள்ளவனை ஒருவரால் கண்டதாய்த் தலைக் கட்ட ஒண்ணாது –
கண்டாராகச் சொல்லுகிறவர்கள் அடைய கவிகளைக் கொண்டாடினார்கள் அத்தனை அல்லது
ஒருவரும் கண்டார் இல்லை என்கிறார் –

உளனாய நான் மறையினுள் பொருளை உள்ளத்து
உளனாகத் தேர்ந்து உணர்வரேலும் உளனாய
வண்டாமரை நெடுங்கண் மாயவனை யாவரே
கண்டாருகப்பர் கவி ———–84-

ஆஸ்ரிதர்க்கு அனுபவ யோக்யமான விக்ரஹத்தை யுடைய ஆச்சர்ய சக்தி யுக்தனை
யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ-என்று சுருதி பிரசித்தமான கண் அழகை யுடையவனை
தமக்குக் காட்டின வடிவு ஆர் தான் காணப் பெற்றார்களோ –

———

ஒருத்தரால் அறியப் போகாதாகில் வாழ்த்துவார் பலராக –திருவாய் மொழி -3-1-7-என்னும்படியே
பூமியில் உள்ளார் எல்லாரும் கூடினால் அறியப் போமோ-என்னில்
எல்லாரும் அடையத் திரண்டு தந்தாமுடைய கரண சக்திகளைக் கொண்டு அவனை ஸ்தோத்ரம் பண்ண வென்று
புக்கால் பின்னையும் அவர்கள் நின்ற நிலைக்கு இவ்வருகாய் அன்றோ அவ்விஷயம் இருப்பது என்கிறார் –

கவியினார் கை புனைந்து கண்ணார் கழல் போய்ச்
செவியினர் கேள்வியராய்ச் சேர்ந்தார் புவியினார்
போற்றி யுரைக்கப் பொலியுமே பின்னைக்காக
ஏற்று யிரை யட்டான் எழில் —–85-

அவனுடைய மணக் கோலத்தையும் ருஷபங்களை யடர்த்த ஒரு செயலையும் வடிவு அழகையும்
சொல்லப் போமோ –அவனுடைய ஒரு அபதானம் எல்லை காணப் போகாது –
இவர்கள் சொன்னார்கள் என்று அங்குத்தைக்கு முன்பு இல்லாதொரு நன்மை யுண்டாமோ-

————-

ஸ்வரூப ரூப குணங்களைப் பரிச்சேதிக்கப் போகாது – உபமானத்தில் சிறிது சொல்லலாம் இத்தனை என்கிறது –
எம்பெருமான் உடைய அழகை அனுபவிக்க முடியாது என்னிலும் விட ஒண்ணாத படி ஸ்ப்ருஹநீயமாய் இருக்கும்
அது காண வேணும் என்று இருப்பாருக்கு மேகங்களே அவன் வடிவைக் காட்டும் -என்கிறார் –
சம்சாரத்தில் இருப்புக்கு ஒரு பிரயோஜனம் உண்டு – அதாகிறது அவன் வடிவுக்கு போலியான
பதார்த்தம் கண்டு அனுபவிக்கலாம் என்கிறார் –

எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து வேகத்
தொழில் கொண்டு தான் முழங்கித் தோன்றும் -எழில் கொண்ட
நீர் மேகமன்ன நெடுமால் நிறம் போலக்
கார்வானம் காட்டும் கலந்து ——-86-

கலந்து காட்டும் –சேர்ந்து காட்டும் –கேவலம் மேகம் காட்டுகிறதும் அன்று -கேவலம் ஆகாசம் காட்டுகிறதும் அன்று
இப்படி மின்னி முழங்கி வில்லிட்டுக் கொண்டு தோற்றுவது-சஜாதீயமாய் இருப்பதொரு மேகம் யுண்டானால்
அப்போது அத்தை யுடைத்தான ஆகாசம் சர்வேஸ்வரன் உடைய திருமேனிக்குத் தகுதியாய்க் கொண்டு தோற்றுவது

———–

பின்னையும் வடிவு அழகு தன்னை உபமான முகத்தாலே இழிந்து அனுபவிக்கிறார் –
எம்பெருமானுடைய ஸ்வா பாவிகமான வடிவு அழகை மரகத மணி காட்டும் –
ஒப்பனையால் வந்த வடிவு அழகை சந்த்யா காலத்திலேயே மேகம் காட்டும் என்கிறார் –

கலந்து மணியிமைக்கும் கண்ணா நின்
மேனிமலர்ந்து மரகதமே காட்டும் -நலந்திகழும்
கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க் கோமானை
அந்தி வான் காட்டுமது ————-87-

ஸ்ரீ கௌஸ்துபத்தின் உடைய சிவந்த தேஜஸ்ஸூம் ஸ்ரீ வத்ஸத்தின் உடைய கருத்த தேஜஸ்ஸூம்
ஸ்யாமமான திரு நிறத்திலே விரவினவாறே – ஸ்யாமமான திரு நிறத்தைக் கொண்டு பிரகாசிக்கிற
உன்னுடைய திரு மேனியை ஸ்ரமஹரமான மரகதத்தின் உடைய பிரபை விஸ்த்ருதமாய்க் கொண்டு
ஸ்பஷ்டமாகக் காட்டா நின்றது –
திருத் துழாயின் பசுமையும் திவ்ய அவயவங்கள் சிவப்பும் கூடின திருமேனியை அந்தி வான் காட்டும் –
இவை போலி காட்டும்

———–

இப்படி இருக்கிற சர்வேஸ்வரனை விட்டு இதர விஷயங்களில் உண்டான உள்மானம் புறமானத்தை ஆராய்ந்து
சம்சயியாதே சர்வ சமாஸ்ரயநீயனான சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் –
உங்களுடைய சமஸ்த துக்கங்களும் போம் என்கிறார் –

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண் துழாய் மார்வன் -பொது நின்ற
பொன்னங்கழலே தொழுமின் முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து ——–88-

சம்சயம் இல்லாத விஷயம்-மது மாறாதே இருப்பதுமாய் ஆதி ராஜ்ய ஸூ சகமான திருத் துழாய் மாலையை
யுடைத்தான மார்வை யுடையவன் –சர்வாத்மாக்களுக்கும் சம்பந்தம் ஒத்து இருப்பதாய் ஸ்ப்ருஹநீயமாய்
அழகிதான திருவடிகளை தொழப் பாருங்கோள் –தொழுகைக்கு விரோதியான அநாதி கால சஞ்சிதமான பாபங்கள்
நீங்கள் தொழுவதாக் ஸ்மரிப்பதற்கு முன்பே நசிந்து ஓடிப் போம் –

———-

அனுபவிக்கலாவது திருமலையிலே கிடீர் -என்கிறார் –திருமலையில்
குறவரோடு மூங்கிலோடு திருவேங்கடமுடையானோடு வாசியற எல்லாம் உத்தேச்யமாய் இருக்கிறபடி –

முடிந்த பொழுதில் குறவாணர் ஏனம்
படிந்துழு சால் பைந்தினைகள் வித்த -தடிந்து எழுந்த
வேய்ங்கழை போய் விண் திறக்கும் வேங்கடமே மேலோருநாள்
தீங்குழல் வாய் வைத்தான் சிலம்பு ———-89-

பண்டு ஒரு நாள் திருவாய்ப்பாடியிலே இடைச்சிகள் முதலானோரை பிச்சேற்றும்படி அழகிய திருக் குழலை திருப்பவளத்திலே
வைத்து ஊதினவன் -பின்புள்ள சம்சாரிகளையும் வசீகரிக்கைக்காக விரும்பி வர்த்திக்கிற திரு மலை

————-

திருமலையில் மூங்கில்கள் அகப்பட உத்தேச்யமான விடத்தில் அதிலே நின்றவன் உத்தேச்யனாகச் சொல்ல வேண்டா விறே –
திருமலையிலே நின்று அருளினவன் ஆஸ்ரித ரஷணம் பண்ணும் படியை அருளிச் செய்கிறார் –
இவன் பண்ணினானான அதுக்கோர் அவகாசம் காண்கிறிலீ கோளீ என்கிறார் –

சிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணார்
அலம்பிய சேவடி போய் அண்டம் -புலம்பிய தோள்
எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ
வண்டுழாய் மாலளந்த மண் ————90-

அளக்கைக்கு இடம் போராத படியாய் இருக்க இவன் அளந்து கொண்டானபடி எங்கனயோ என்று
ஆச்சர்யப் படுகிறார் –நின்று அளக்கைக்கு இடம் போராது-என்ன ஆச்சர்யமோ –
அளக்குமவன் அளக்கப்படுமத்தை உண்டாக்கிக் கொண்டு அன்றோ அளப்பது –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -71-80–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 23, 2020

இப்படித் திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி ஸூ லபமான திருவேங்கடமுடையான் வர்த்திக்கிற
திருமலை வ்ருத்தாந்தாத்தை அனுசந்தித்து இனியர் ஆகிறார் –

களிறு முகில் குத்தக் கையெடுத்தோடி
ஒளிறு மருப்பொசிகை யாளி -பிளிறி
விழக் கொன்று நின்றதிரும் வேங்கடமே மேனாள்
குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று ——–71-

சஹஜ சத்ருக்களை முடித்து விரோதி போகப் பெற்றோம் என்று உகந்து நிற்கிறவன் வந்து வர்த்திக்கிற தேசம் –
அந்த ஆனையினுடைய மௌக்த்யம் போலே இருப்பது ஓன்று ஆய்த்து இவனுடைய மௌக்த்யமும்-
திருமலையில் பின்னை ஒன்றுக்கு ஓன்று பாதகமாமோ என்னில் அக்னீஷோமீய ஹிம்சை போலே இருப்பது
ஓன்று இறே அவற்றிற்கு –

———–

அயர்வறும் அமரர்கள் அதிபதியான சர்வேஸ்வரனை கண்டு அனுபவிக்கலாவது திருமலையிலே கிடீர் -என்கிறார் –

குன்று ஒன்றினாய குற மகளிர் கோல் வளைக்கை
சென்று விளையாடும் திங்கழை போய் -வென்று
விளங்குமதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை
இளங்குமரர் கோமான் இடம் —–72-

ராம பக்தியாலே திருவடி பரம பதத்தை விட்டு சம்சாரத்தைப் பற்றினான் –
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தராகையாலே நித்ய ஸூரிகள் சம்சாரத்தை விட்டு பரம பதத்தைப் பற்றினார்கள்
குற மகளிர் அவ்விரண்டையும் விட்டுத் திருமலையைப் பற்றி இருப்பார்கள் –
திருப்பதியினின்று இழிகை குடிப் பழி என்று நினைத்துத் திருமலை ஒன்றையுமே உடையராய்க் கொண்டு
வேங்கடத்தைப் பதியாக வாழக் கடவராய் இருப்பார்கள் –
பரம பதத்தில் தன்னோடு ஒக்க எல்லோரும் பஞ்ச விம்சதி வார்ஷ்கராய் இறே இருப்பது
அவர்களுக்கு சேஷியானவன் வர்த்திக்கிற தேசம் –

————-

இவனுடைய திருவடிகளை ஏத்தும் இதுவே கிடீர் வாக் இந்த்ரியத்தால் கொள்ளும் பிரயோஜனம்
என்கிறார் –

இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேரோட்டி
வடமுக வேங்கடத்து மன்னும் -குட நயந்த
கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே
நாத் தன்னால் உள்ள நலம் ——73-

அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு குடக் கூத்தாடின இளைப்பாலே திருமலையிலே வந்து நின்றான்
குடமாடி நின்றவனுடைய ஆபரண ஒலியை யுடைத்தான திருவடிகளைக் கூறுகை நாவால் படைக்கும் சம்பத்து
நாவால் கொள்ளும் பிரயோஜனம் –

——————-

அவன் பக்கல் ஸ்நேஹம் உடையாரில் யசோதைப் பிராட்டிதனைப் பரிவர் இல்லை கிடீர் என்கிறார் –
நமக்கு எம்பெருமான் பக்கலிலே வலியமூட்ட வேண்டி இருக்கும் –
இவருக்கு வெளிச் சிறப்பு கார்யகரமாகாதே கலக்கமே கார்யகரமாய்த்து என்கிறார் –

நலமே வலிது கொல் நஞ்சூட்டுவன் பேய்
நிலமே புரண்டு போய் வீழ -சலமே தான்
வெங்கொங்கை யுண்டான் மீட்டாய்ச்சி யூட்டுவான்
தங்கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து ——–74-

அறிவில் காட்டிலும் பிரேமமானது சால வலிதாய் இருக்கும் ஆகாதே –
ஸ்த்ரீத்வ பிரயிக்தமான அச்சத்தில் காட்டில் ஸ்நேஹமே வலிதாகாதே –
தன்னைப் பேணாதே அவனைப் பேணுகைக்கு உறுப்பான பிரேமமே வலிதாகாதே –
ஒருத்தி யுடைய ஸ்நேஹம் இருக்கும் படியே -என்று வித்தாராகிறார்-

————–

இப்படி விரோதி நிரசன சீலனான கிருஷ்ணன் தனக்கு வாசஸ் ஸ்தானமாக விரும்பி இருக்கும் திருமலை
விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –

சார்ந்தகடு தேய்ப்பப்த் தடாவிய கோட்டுச்சிவாய்
ஊர்ந்தியங்கும் வெண் மதியின் ஒண் முயலை -சேர்ந்து
சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன்
புன வேங்கை நாறும் பொருப்பு —–75-

கிருஷ்ணன் என்னது என்று அபிமானிக்கும் நிலமாய் ஜாதி உசிதமான வேங்கையின் பரிமளத்தை யுடைத்தான திருமலை –
காட்டு வேங்கையின் பரிமளமே யான திரு மலை –ஸ்ரீ கிருஷ்ணன் என்னது என்று அபிமானித்த ஸ்தலமாய்
ஆயன் – காடும் மலையும் உகக்குமவன் – காட்டிலே வர்த்திக்கும் இடையருக்குக் காட்டில்
மரங்களுடைய நாற்றம் சாலப் ப்ரியம் இறே-

———–

உகந்து அருளின நிலங்களில் இங்கே சந்நிஹிதன் ஆனபின்பு இனி -அவ்வோ விடங்களில் முகம் காட்டிப்
பிழைத்துப் போம் இத்தனை -போக்கி தம் தம் உடம்புகளை நோவ வருத்தி துக்கப் பட வேண்டா கிடீர் –
புருஷார்த்த லாபம் வேண்டி இருப்பார்க்கு என்கிறார் –
சர்வேஸ்வரன் சம்சாரத்தில் புகுந்து தன்னுடம்பைப் பேணாதே நம் கார்யம் செய்யா நிற்க
நீங்கள் உடம்பை ஒறுக்க வேண்டா என்கிறார் –

பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்
ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா -விருப்புடைய
வெக்காவே சேர்ந்தானை மெய்ம்மலர் தூயக் கை தொழுதால்
அக்காவே தீ வினைகள் ஆய்ந்து ——-76-

வெக்காவே சேர்ந்தானை –இருவர் சாதன அனுஷ்டானம் பண்ண வேணுமோ –
பாபங்கள் ஆனவை நமக்கு இவ்விடம் ஆஸ்ரயம் அன்று என்று அறிந்து தப்பாவே பின்பு அவை நிற்கை
என்று ஓன்று உண்டோ –தானே ஆராய்ந்து நமக்கு இவ்விடம் அன்று என்று ஓடிப் போம் –

————–

கீழே சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்கவே உங்கள் உடைய பாபங்கள் எல்லாம் போம் என்றார் –
இதில் அளவில்லாதார்க்கே யன்று – பேரளுவு உடையரானவர்களுக்கும் விழுக்காடு அறியாதே தங்களை முடியச்
சூழ்த்துக் கொள்ளும் அன்று அவர்களுக்கும் எல்லாம் ஹித காமனாய்க் கொண்டு நோக்குவான் அவனே -என்கிறார் –
அவன் அல்லது நாம் ஹிதம் அறியோம் என்றார் கீழ் –
இதில் நாமே யல்ல ப்ரஹ்மாதிகளும் ஹிதம் அறியார்கள் – அவர்களுக்கும் ஹிதம் பார்ப்பான் அவனே -என்கிறார் –

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் —–77-

அவனுடைய அபேஷிதம் செய்ய வற்றான திருவடிப்பூ ஆகிஞ்சன்யராய் அநந்ய பிரயோஜனரான நமக்கும் அரண் –
முஃயத்தாலே-மூன்று ஏழு என்று அறுப்புண்கைக்கு யோக்யம் என்னும் இடம் தோற்றத் திருவடிகளால் எண்ணிக் காட்டி
ப்ரஹ்மாவை ரஷித்தவனுடைய போக்யத்தையால் பரி பூர்ணமான திருவடிகள் அபேக்ஷித்தத்தைச் செய்யவற்றாய் நமக்கு ரக்ஷை –

———–

நெஞ்சே விரோதி நிரசன ஸ்வபாவனானவன் நமக்கு ரஷகனாம் –ஆன பின்பு அவனையே புகலாக அனுசந்திக்கப் பார் என்கிறார் –
அவன் சர்வ ரஷகன் ஆகிலும் நம்முடைய ஜ்ஞான வ்ருத்த ஜன்மங்களில் கொத்தை பார்க்க வேண்டாவோ -என்ன
வேண்டா -என்கிறார் –

அரணாம் நமக்கு என்றும் ஆழி வலவன்
முரணாள் வலம் சுழிந்த மொய்ம்பன் -சரணாமேல்
ஏது கதி ஏது நிலை ஏது பிறப்பு என்னாதே
ஒது கதி மாயனையே ஓர்த்து———-78-

இவனுடைய அஹம் புத்தி சோக நிமித்தம்–அவனுடைய அஹம் புத்தி சோக நிவர்த்தகம் –
எது ஞானம் எது வ்ருத்தம் எது ஜன்மம் என்று இவை ஒன்றும் பாராதே ரஷகனாம் –
கதியாக ஸ்ரீ யபதியான அவன் திருவடிகளை அனுசந்தித்துச் சொல்லு –

————

அநாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது அநந்த காலம் வேண்டாவோ என்னில் –
அவனை அனுசந்தித்து – சப்தாதி விஷயங்களிலே அநாதரம் பிறக்கச் சடக்கென்னப் போக்கலாம் -என்கிறார் –
நாட்டார் நான் சொல்லப் போகிற படிகளைச் செய்தார்கள் ஆகில் ஜென்மங்களைப் போக்கலாம் கிடீர் என்கிறார் –

ஒர்த்த மனத்தராய் ஐந்தடக்கி ஆராய்ந்து
பேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம் -கார்த்த
விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி
நிரையார மார்வனையே நின்று ——79-

இது கிடீர் நான் குடிக்கச் சொல்லுகிற வேப்பங்குடி நீர்
பச்சை நிறத்தையும் மிக்க பரிமளத்தையும் யுடைத்தான திருத் துழாய் மாலையையும்
தேங்கின கடல் போலே தர்ச நீயமான வடிவு அழகையும் யுடையவன் –
அவனுடைய ஸ்வாபாவிகமான வடிவு அழகையும் ஒப்பனை அழகையும் அனுசந்தித்தால்
சப்தாதி விஷயங்களை நாக்கு வளைத்து உபேக்ஷிக்கலாம்

———–

இவ்விஷயத்தில் தமக்கு முன்னே தம் திரு உள்ளமானது பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –
உபதேச நிரபேஷமாக என்னுடைய நெஞ்சானது அவனுடைய விரோதி நிரசன ஸ்வ பாவத்தை அனுசந்தித்து
இந்த்ரிய ஜெயம் பண்ணி சம்சாரத்தைப் போக்கி அனுசந்திக்க முயலா நின்றது –என்கிறார் –

நின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள்
ஒன்றிய ஈரைஞ்ஞூறுடன் துணிய -வென்றிலங்கும்
ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே
நேர்படுவான் தான் முயலும் நெஞ்சு —80-

இவனே சரண்யன் என்னும் இடமும் அல்லாதார் வ்யர்த்தர் என்னும் இடமும் சொல்லுகிறது –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -61-70–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 23, 2020

பிரதி பந்தகங்கள் போக்கும் அளவேயோ –பரம பதத்தை கலவிருக்கையாக உடையவன் சம்சாரத்திலே
உகந்து அருளின திருப்பதிகளைத் தனக்கு இருப்பிடமாக கொள்ளுகிறது –
இப்படிப் பட்ட சர்வேஸ்வரன் உகந்து அருளின நிலங்களிலும் காட்டில் தம்முடைய திரு உள்ளத்தை மிகவும்
ஆதரியா நின்றான் என்னும் தாத்பர்யம் தோற்ற அருளிச் செய்கிறார் –

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவாற்குக் கோயில் போல் -வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர் —–61-

ஸ்ரீ வைகுண்டத்தை விட்டு திருப்பாற்கடலையும் விட்டு திருப்பதிகளைப் பற்றி இவை இத்தனையோடும்
தம்முடைய திரு உளத்திலே வந்து புகுந்தான் – இன்று என் துரிதத்தைப் போக்கி-என்னை அல்லது அறிகிறிலன்

————

ஆஸ்ரித ரஷணத்துக்கு ஏகாந்த ஸ்தலங்கள் என்று உகந்து அருளின நிலங்களைச் சால விரும்பி இருக்கும் என்கிறார் –
கேவலம் சம்சாரத்தில் வந்து நின்ற மாத்ரமோ –பரமபதத்திருப்பும் மனிச்சுக்கவாய் அத்தாட்சியோடே கூடி இருப்பது
உகந்து அருளின தேசத்திலே அன்றோ என்கிறார் –

விண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி
தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு ——62-

தன் உடைமையை மீட்டுக் கொள்ளுகைக்கு அர்த்தி யானவன் தன்னது மீட்டுக் கொள்ளுகைக்கு அர்த்தியாய் இருக்கிறபடி –
மகா பலி பக்கலிலே தன்னுடைமை பெறுகைக்கு அர்த்தி யானால் போலே உகந்து அருளின தேசங்களிலே
அர்த்தித்வம் தொடரும்படி நின்றான் –
அபேஷித்த சமயத்திலே ஒருக்கால் உதவிப் போகை அன்றிக்கே எப்போதும் உதவும்படி வந்து நிற்கப் பெற்றோமே என்று
திரு உள்ளம் மண்டி இருக்கிற இடங்கள் –
ஆஸ்ரிதர் அபேஷித்த போதாக வந்து அவதரிக்க வேண்டாதபடி கால் தாழ்ந்து வர்த்திக்கிற தேசங்களாய் இருக்கும் –

———————

இந்த தேசங்களிலே வந்து சந்நிஹிதனான அவன் தான் சால சீலவானாய் இருப்பான் ஒருவன் கிடீர் என்கிறார் –
தாழ்வுக்கு எல்லையான சௌசீல்யம் –சாதக வேஷத்தையும் சித்தமான வேஷத்தையும் ஒக்க தரிப்பதே என்கிறார் –

தாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் சூழும்
திரண்டருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து —-63-

சிக்குத் தலை என்று அறுவராது ஒழிவதே-ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு வபிஷேக பாதியாக நினைத்து
இருப்பதே தாழ் சடையும் –இவை ஒக்க தோன்றா நின்றது –அவனும் சரீர பூதன் இறே-
விசஜாதீயமான வடிவுகளாய் இருக்கச் செய்தேயும் அசாதாராண விக்ரஹம் போலே இரா நின்றதீ –
கெட்டேன் -இது ஒரு சீலாதிசயம் இருக்கிற படியே-என்று ஆச்சர்யப் படுகிறார் –

———-

இவன் தான் –பிரயோஜனாந்தர பரராய் தேவதாந்தரரான தேவர்களுக்கும் கூடத் தன்னை அழித்துத்
கார்யம் செய்து கொடுப்பான் -என்று அவன் ஸ்வ பாவத்தை அனுசந்தித்து அவனுக்குப் பரிகிறார்-

இசைந்த வரவும் வெற்பும் கடலும்
பசைந்தங்கு அமுது படுப்ப -அசைந்து
கடைந்த வருத்தமோ கச்சி வெக்காவில்
கிடந்தது இருந்து நின்றதுவும் அங்கு – —–64-

கடைந்த வருத்தமோ-உலாவிக் கடைந்த வருத்தமோ–திருக் கச்சியிலும் திரு வெஃகாவிலும்
கிடப்பது இருப்பது நிற்பது ஆகிறது தனியே கடலைக் கடைந்ததாலே திரு மேனியில் பிறந்த ஆயாசமோ –
இங்கனே நோவு படுகிறான் ஆகாதே -என்று வயிறு எறிகிறார் –

————

அம்ருத மதனம் பண்ணின ஆயாசமே யன்றிக்கே மற்றுள்ள அவதாரங்களிலும் ஆயாச ஹேதுவான
வியாபாரங்களை யருளிச் செய்கிறார் –

அங்கற்கு இடரின்றி அந்திப் பொழுதத்து
மங்க விரணியன தாகத்தை -பொங்கி
அரியுருவமாய்ப் பிளந்த அம்மானவனே
கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து ——65-

பொங்கி –மகா விஷ்ணும் -என்கிறபடியே -கிளர்ந்து கொண்டு புறப்பட்டு
அரி யுருவமாய்ப் – ஜ்வலந்தம் -என்கிறபடியே நரசிம்ஹ வேஷத்தை உடையனாய் –

————

தானொரு வடிவு கொண்டு வந்து விரோதியைப் போக்கினான் என்னுமது ஓர் ஏற்றமோ –
கண் வளர்ந்து அருளுகிற இடத்திலே வந்து கிட்டின விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு என்கிறார் –
உணர்த்தி உண்டான போது விரோதி நிரசனம் பண்ணுகை ஓர் ஏற்றமோ
அவதானம் இன்றிக்கே இருக்கச் செய்தே விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு என்கிறார் –

காய்ந்திருளை மாற்றிக் கதிரிலகு மா மணிகள்
ஏய்ந்த பணக் கதிர் மேல் வெவ்வுயிர்ப்ப-வாய்ந்த
மதுகைடபரும் வயிறுருகி மாண்டார்
அதுகேடவர்கு இறுதி யாங்கு ——-66-

அப்படுக்கையிலே கிட்டினவர்கள்-ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே -என்கிறபடியே
ஸ்வரூப ப்ராப்தி பெற்றுப் போகா நிற்க
இவர்களுக்கு பிரகிருதி தோஷத்தாலே விநாசமே சித்தித்து விட்டதாய்த்து –
சத்தையோடு ஜீவிக்கைக்கு ப்ரதிகோடியுமான விநாசமுமாய் விட்டது –
அதுகேடவர்கு இறுதி யாங்கு —-என்றும் என் பிள்ளைக்குத் தீமை செய்வார்கள் அங்கனம்
ஆவர்களே-பெரியாழ்வார் திரு மொழி -3-3-7-

——————

அங்கு கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திரு நாபி கமலமானது -ஆழ்வார்கள் -இருவர் உடைய
சேர்த்தியையும் கண்டு அலருவது மொட்டிப்பது ஆகிற படியை அனுபவிக்கிறார் –
ஹிரண்யனும் பட்டு மதுகைடபர்களும் முடிந்த பின்பு கண் வளர்ந்து அருளுகிற போதை
அழகை அனுபவிக்கிறார் –

ஆங்கு மலரும் குவியும் மாலுந்தி வாய்
ஓங்கு கமலத்தின் ஓண் போது -ஆங்கைத்
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்
பகருமதி என்றும் பார்த்து ——67-

சந்த்ராதித்யர்கள் இருவர் உடைய அவஸ்தையிலும் செய்யக் கடவத்தை
இருவரும் கூட ஏக காலத்திலே தோற்றினாப் போலே இருக்கையாலே
இதுவும் இரண்டு அவஸ்தையிலும் செய்யக் கடவ கார்யத்தை ஓர் அவஸ்தையிலே செய்யா நிற்கும் –
திகிரி மொட்டிக்க ஒட்டாது-வெண் சங்கு மலர ஒட்டாது-நடுவே நிற்கும்
அரும்பினை அலரை-பெரிய திருமொழி -7-10-1–என்னுமா போலே –

————–

இப்படிப் பட்டவனுடைய அழகை அனுபவிக்கும் போது திருப்பாற் கடல் ஏறப் போக வேண்டா
திருமலையிலே அனுபவிக்கலாம் கிடீர் என்கிறார் –

பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு
பேர்த்தோர் கடுவன் எனப் பேர்ந்து -கார்த்த
கள்ங்கனிக்கிக் கை நீட்டும் வேங்கடமே மேனாள்
விளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு —-68-

இவற்றின் உடைய மௌக்த்யம் போலே யாய்த்து-அவனுடைய மௌக்த்யம் -இருக்கும்படி –
அசூரா வேசத்தாலே வந்தது என்று அறியாதே அவனும் ஏதேனும் ஒன்றைக் கொண்டு பழம் பெறப் பார்க்கிறான் இறே-
இருவர் செயலும் ஓன்று போலே இருக்கை

—————–

இத் திருவந்தாதிகள் எல்லா வற்றுக்குமாக இப்பாட்டை அன்யாப தேசமாக நிர்வஹித்துப் போருவது ஓன்று உண்டு –
அதாகிறது ஆழ்வாரான அவஸ்தை போய் பகவத் விஷயத்திலே அபி நிவிஷ்டை யானாள் ஒரு பிராட்டி
அவஸ்தையைப் பஜித்து அவளுடைய பாசுரத்தையும் செயல்களையும் திருத் தாயார் சொல்லுகிறாள் –
அன்றிக்கே –
பிரகரணத்தில் கீழும் மேலும் அந்யாப தேசம் இன்றிக்கே இருக்க இப்பாட்டு ஒன்றும் இப்படி கொள்ளுகிறது என் -என்று
பரோபதேசமாக நிர்வஹிப்பார்கள் –

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69-

பாடுகை சூடுகை குளிக்கை முதலான லோக யாத்ரையும் இவளுக்கு பகவத் விஷயத்திலேயாய் இருக்கும் –
ஏதேனும் ஒரு மலையைச் சொல்லப் புக்கால் ஆகிலும் திருமலையைப் பாடா நிற்கும்
திருமலையை ஒழிய வேறு ஒரு மலை அறியாள் –இக் குடிக்கும் மர்யாதையாய்ப் போருவது ஒன்று என்று –
பாதி வ்ரத்ய தர்மம்
பரோபதேசமாக-திருமலையைப் பாடும் கோள்-அவன் உகக்கும் திருத் துழாயைச் சூடும் கோள் –
அவன் சாய்ந்த கடலிலே நாடோறும் அவகாஹிக்கப் பாரும் கோள் –
அவனோடு ஸ்பர்சம் உள்ள தீர்த்தங்கள் எல்லா வற்றுக்கும் உபலஷணம்-

——————

ஆகில் இப்படி ஆஸ்ரயிக்கும் போது சிறிது யோக்யதை யுண்டாக்கிக் கொள்ள வேண்டாவோ -என்னில்
அது வேண்டா-திர்யக்குகளுக்கும் புக்கு ஆஸ்ரயிக்கலாம் படி இருப்பான் ஒருவன் -என்கிறார் –
இனி ஆஸ்ரயணம் தன்னிலும் ஒரு நியதி இல்லை – செய்தது எல்லாம் நியதியாம் அத்தனை – என்கிறது –
அனுகூலர் உடைய தேக யாத்ரை எல்லாம் தன் சமாஸ்ரயணத்துக்கு உறுப்பாகக் கொள்ளும் -என்கிறது –

புகு மதத்தால் வாய் பூசிக் கீழ்த் தாழ்ந்து அருவி
உகு மதத்தால் கால் கழுவிக் கையால் -மிகு மதத்தேன்
விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே
கண்டு வணங்கும் களிறு —–70-

திருமலையில் திரியக்குகளும் தன்னை வணங்கும் ஞானத்தைக் கொடுக்க வல்ல சக்தியை யுடையவன் என்கிறது
ஞான கார்யமான சமாஸ்ரயணத்தை தேச வாசத்தாலே பண்ண விருக்கும்
ஓர் ஆனைசென்று ஆஸ்ரயித்தால் போலே யாய்த்து திரு வேங்கடமுடையானை ஆஸ்ரயிக்கலாம் படி –
களிறு –ஆஸ்ரயிப்பாருக்கு ஜன்ம வ்ருத்த ஸ்வ பாவங்கள் அப்ரயோஜகம் –

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -51-60–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 22, 2020

இப்படி ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ஆபன் நிவாரணம் பண்ணினவன் கிடீர்
நமக்கும் எல்லாம் உபாய பூதனாவான் என்கிறார் –
ஓர் ஆபத்து நீக்கி விட்ட அளவோ0ஆபத்துக்கள் ஒன்றும் தட்டாதபடி பண்ணி
பரமபதத்திலே செல்ல நடத்துவான் அவனே என்கிறார் –
சங்கல்ப்பத்தாலே ஆஸ்ரித பஷபாதம் தோற்றாது என்று இறே மா முதலை கொன்றது முதலாக விச் செயல்கள் –

அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்
அவனே அணி மருதம் சாய்த்தான் -அவனே
கலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர்
இலங்கா புரம் எரித்தான் எய்து ——51-

மலைக் கீழ் ஒதுங்கோம் என்னாத மாத்ரமே –இவற்றுக்குச் செய்யல் யாவது இல்லை-
எல்லா ரஷைக்கும் தானே கடவனாய் இருக்க அவளுடைய சகாயம் ஒழியவே
தன்னுடைய ரஷையை நடத்தினான் –அவனே -என்று சஹகாரி நைரபேஷ்யத்தைச் சொல்லுகிறது
கலங்கா பெரு நகரம் –ஒருவர் கூறை எழுவர் உடாத தேசம் –
அறிவில்லாத பசுக்களோடு அறிவுடைய பிராட்டியோடு வாசி இல்லை –
அறிவுக்குப் பிரயோஜனம் தத் தஸ்ய சத்ருசம் பவேத் -சுந்தர -39-40-என்கைக்கு உடலாயிற்று
அறியாமைக்கு பிரயோஜனம் -பண்ணுகிற ரக்ஷணத்தை விலக்காமை –

———–

கீழே ப்ரஸ்துதமான ராம வ்ருத்தாந்தம் தன்னிலே திரியவும் ஆழங்கால் பட்டுப் பேசுகிறார் –
கீழே கலங்கா பெரு நகரம் காட்டுவான் -என்றாரே -ருசி உடையாருக்குப் பரமபதம் கொடுக்கும் அத்தனையோ
என்னில் –ருசி பிறப்பிப்பானும் அவனே என்கிறது –

எய்தான் மரா மரம் ஏழும் இராமனாய்
எய்தான் அம்மான் மறிய ஏந்திழைக்காய் -எய்ததுவும்
தென்னிலங்கைக் கோன் வீழச் சென்று குறளுருவாய்
முன்னிலம் கைக் கொண்டான் முயன்று ——-52-

ருசி இல்லாதாருக்கு ருசியைப் பிறப்பிக்கும் போதும் ருசி யுடையாருக்குச் செய்யுமா போலே செய்யும் –
பிராட்டி சொல்லு மறுக்க மாட்டாமையாலே அந்த மான் புரண்டு விழும்படியாக எய்தான் –
இத்தாலும் அவளுடைய ருசியை வர்த்திப்பித்த படி –
அழகுக்கு இலக்காகாதாரையும் புக்கு இலக்காக்கின படி –
மஹா பலி பக்கலிலே சென்று வடிவு அழகைக் காட்டுவது–முக்த ஜலப்பிதங்களைப் பண்ணுவதாய்க் கொண்டு
மிகவும் உத்தியோகித்து லோகத்தை யடங்கக் கைக் கொண்டான் –

———–

ப்ரஸ்துதமான ஸ்ரீ வாமனனோடு போலியான வடதள சாயியை அனுபவிக்கிறார் –
எம்பெருமான் படி இதுவான பின்பு மேல் வீழ்ந்து அனுபவி -என்கிறார் –
துர்க்கடங்களை கடிப்பிக்க வல்லவன் என்கிறார் –

முயன்று தொழு நெஞ்சே மூரி நீர் வேலை
இயன்ற மரத்தாலிலையின் மேலால் -பயின்று அங்கோர்
மண்ணலம் கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்த்
தண் அலங்கல் மாலையான் தாள் —–53-

ஆலிலையின் மேல் கண் வளர்ந்து அருளுகிற போது இட்ட தோள் மாலையும் தானுமாய்க் கிடந்த படி –
யசோதைப் பிராட்டி உண்டோ ஒப்பிக்க – எல்லாம் ஆச்சர்யமாய் இருப்பதே –
நெஞ்சே -வரில் பொ கடேன்-கெடில் தேடேன் -என்று இருக்கை அன்றிக்கே
உத்ஸாஹித்துக் கொண்டு ஆஸ்ரயிக்கப் பார்

—————

வடதள சாயி வ்ருத்தாந்தத் தோடு சேரச் சொல்லலாம் படியான கிருஷ்ண வ்ருத்தாந்தத்தை
அனுபவிக்கிறார் –

தாளால் சகட்முதைத்துப் பகடுந்தி
கீளா மருதிடை போய்க் கேழலாய் -மீளாது
மண்ணகலம் கீண்டு அங்கோர் மாதுகந்த மார்வற்குப்
பெண்ணகலம் காதல் பெரிது —–54-

பெண்ணகலம் காதல் பெரிது –நாரீணாம் உத்தமையான பெரிய பிராட்டியார் இறையும் அகலகில்லேன் என்று
விரும்பும் படியான திரு மார்வை யுடையவனுடையவனுக்கு ஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல் உண்டான சங்கம்
சாலக் கரை புரண்டு இருந்தது –பெண்ணகலம்-என்கிறது -ஸ்ரீ பூமிப் பிராட்டி உடைய திரு மேனியை –
காரார் வரைக் கொங்கை கண்ணார் கடலுடுக்கை-

———–

ஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல் இப்படி வத்சலனாய் -பெரும் பிச்சானாவன் -உடைய அழகை -அனுபவிக்கிறார் –

பெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு
கரிய முகிலிடை மின் போல் -திரியுங்கால்
பாண் ஒடுங்க வண்டறையும் பங்கயமே மற்றவன் தன்
நீண் நெடுங்கண் காட்டும் நிறம் ———-55-

திரியுங்கால்–தெரியுங்கால் -பாட பேதம் -அநுஸந்திக்கும் போது -சஞ்சரிக்கும் காலத்தில்-

அவனுடைய மற்றை நீண் நெடும் கண்ணில் உண்டான நிறத்தை –
அவனுடைய பரிச்சேதிக்கப் போகாத கண்ணின் உடைய நிறத்தைக் காட்டா நின்றது –
பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் -திரு விருத்தம்-45-

———

இப்படிப் பட்டவனுடைய அழகை அனுபவித்துப் போமித்தனை போக்கி இன்ன படிப் பட்டு இருக்கும் என்று
கொண்டு நம்மால் பரிச்சேதிக்கப் போகாது கிடீர் என்கிறார் – பிரயோஜனத்திலே சொல்லில் சொல்லும் அத்தனை –

நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று
இறையுருவம் யாம் அறியோம் எண்ணில் -நிறைவுடைய
நா மங்கை தானும் நலம் புகழ் வல்லளே
பூ மங்கை கேள்வன் பொலிவு ——-56-

ஸ்ரீ யபதியினுடைய ஸ்வரூப ரூப குணாதிகளால் யுண்டான ஸம்ருத்தியை சிலராலே பேசப் போமோ-
அவனும் அவளுமாய் நிற்கிற இடத்திலே சொல்லலாமோ
அப்ரமேயம் ஹித்த்தேஜ யஸ்ய சா ஜநகத்மஜா -ஆரண்ய -37-18-உயர்வற உயர்நலம் உடையவன் –
இறையுருவம் யாம் அறியோம் எண்ணில் –அவன் கொண்ட வடிவு ஒன்றுக்கும் இத்தனை –
அவன் கல்யாண குணங்களைப் பேச முடியுமோ

—————

இப்படிப் பட்ட பெருமையை யுடையவனை அனுசந்திக்கும் இதுவே கிடாய் நமக்கு உத்க்ருஷ்டமாகை ஆகிறது
என்கிறார் – கருடத்வஜனுமாய் ஸ்ரீ யபதியும் ஆனவன் திருவடிகளை ஆஸ்ரயி -என்கிறார் –
முடியாது என்று பேசாது இராதே அவனை ஆஸ்ரயிக்கில் எல்லாரும் மேலாவது என்கிறார் –

பொலிந்து இருண்ட கார் வானில் மின்னே போல் தோன்றி
மலிந்து திருவிருந்த மார்வன் -பொலிந்த
கருடன் மேல் கண்ட கரியான் கழலே
தெருடன் மேல் கண்டாய் தெளி ——–57-

அவளும் தண்ணீர் தண்ணீர் என்று ஆசைப் படா நிற்கும்
மகா மேருவிலே ஓர் அஞ்சன கிரி இருந்தாப் போலே இருக்கை –
திருவடி மேரு போலே – எம்பெருமான் அஞ்சன கிரி போலே-
மேல் கண்டாய் – இது எல்லாவற்றுக்கும் மேலாக அனுசந்தி – இத்தை ஒழிந்தவை அடங்கலும் கீழ் –
இது ஒன்றுமே கிடாய் மேல் – சேஷ பூதன் ஸ்வ ரூபத்துக்கு ஈடான உத்க்ருஷ்டம் இது கிடாய் –
தெருள் -என்று ஞானமாய் -ஞானத்தில் மேலாய் இருக்கிற பக்தியைச் சொல்லுகிறதாய் -ஞான விபாக ரூபையான
பக்தியால் கரியான் கழலைக் கண்டு அனுபவிக்கப் பெற்றாயே-

—————

இப்படிப் பட்ட ஐஸ்வர்யத்தை உடையவனை ஆஸ்ரயிக்கும் போது கண்ணாலே காண வேணுமே -என்ன
காணலாம் படி திரு மலையிலே நின்றான் என்கிறார் –

தெளிந்த சிலா தலத்தின் மேலிருந்த மந்தி
அளிந்த கடுவனையே நோக்கி -விளங்கிய
வெண் மதியம் தா வென்னும் வேங்கடமே மேலோருநாள்
மண் மதியில் கொண்டுகந்தான் வாழ்வு ——-58-

ஸ்படிக மயமான சிலா தளத்திலே பெண் குரங்கு திருச் சித்ர கூட பரிசரத்தில் சிலா தலத்திலே
பிராட்டியும் பெருமாளும் இருந்தாப் போலே இருக்கிறது –
கடுவனையே நோக்கி –ஊடினால் ஒரு கடகர் பொருந்த விட வேண்டாதே தானே பார்த்து வரத்தை சொன்னபடி
இங்கு இளையபெருமாள் இல்லையே –நோக்கி –சர்வ ஸ்வதானம் பண்ணி-
சர்வேஸ்வரன் தனக்கு சர்வ சம்பத்துமாக நினைத்து இருக்கும் தேசம் –

————

கீழ் கரியான் கழலே தெருள் என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்தார் –
அப்படிப் பட்ட திருவடிகளைத் தாம் கிட்டி அனுபவிக்கிறார் –

வாழும் வகை யறிந்தேன் மை போல் நெடு வரை வாய்த்
தாழும் அருவி போல் தார் கிடப்ப -சூழும்
திரு மா மணி வண்ணன் செங்கண் மால் எங்கள்
பெருமான் அடி சேரப் பெற்று ——59-

பகவத் விஷயத்திலே இவனுடைய இச்சையும் அநிச்சையும் இறே உஜ்ஜீவனத்துக்கும் விநாசத்துக்கும் ஹேது-
எங்கள் பெருமான் –ஒரு மிதுனம் இவருக்கு போக்கியம்-அஸ்மத் ஸ்வாமியாய் உள்ளான் –
போக்ய பூதனாய் மேன்மையை உடையனாய் வகுத்தவனுடைய திருவடிகளைப் பெற்று
ஸ்வரூப அனுரூபமாக வாழும் பிரகாரத்தை அறிந்தேன் –

———–

உமக்கு வாழ்விலே அந்யமாகில் பிரதி பந்தகம் போனால் அன்றோ வாழலாவது –
விரோதி செய்த படி என் என்ன – அது போக்குகை அவனுக்கு பாரமாய் விட்டது என்கிறார் –

பெற்றம் பிணை மருதம் பேய் முலை மாச் சகடம்
முற்றக் காத்தூடு போய் உண்டுதைத்து -கற்றுக் குணிலை
விளங்கனிக்குக் கொண்டு எறிந்தான் வெற்றிப்
பணிலம் வாய் வைத்துகந்தான் பண்டு —–60-இந்த பாசுரம் நிரல் நிறை அணி பாசுரம் –

பருவம் நிரம்புவதற்கு முன்னே ஆசூர வர்க்கத்தை கை தொடானாய் முடித்தான்
பின்பு ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தின் உடைய த்வநியாலே முடித்தான் –

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.