Archive for March, 2021

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி 1 : ந்யாய சாஸ்த்ரம்– பாடங்கள் -13-22—

March 24, 2021

கீழே உத்தேச கிரந்தம் பார்த்தோம் -விபாகம் உட் பிரிவுகளையும் பார்த்தோம் –
இனி லக்ஷணம் பரீஷை பார்ப்போம் –

பாடம் -13-

த்ரவ்யங்கள் –

த்ரவ்யம் –
குணாஸ்ரயம்-குணத்தை இருப்பிடமாகக் கொண்டதாகவே இருக்கும் -குணாஸ்ரயத்வம் –
இதுவே லக்ஷணம்

ப்ருத்வீ –
நிலம் மட்டும் இல்லை -செடி கொடிகள் துணி சரீரம் அனைத்துமே குறிக்கும் –
கந்தவதி கந்தத்துக்கு உடையவள் -ப்ருத்வீ பெண் பால் சமஸ்க்ருதம் -சொல்லுக்குத் தான் பால் -விஷயத்துக்கு இல்லை

லக்ஷணம் -மணம் என்றால்
அசம்பவ தோஷம் உள்ளதா -இல்லை
மண் மரம் துணி போன்றவற்றில் மணம் இருக்கிறது

அவ்யாப்தி தோஷம் உள்ளதா -இல்லை –
பாஷாணம் -கல்லில் தெரியா விட்டாலும்-பஸ்மம் – உடைத்த துகள்களில் மணம் இருக்கிறதே
கல்லில் மணம் நமக்கு புலப்பட வில்லை -ப்ரத்யக்ஷம் இல்லா விட்டாலும் அனுமானம் கொண்டு
யத் த்ரவ்யம் த்வம்ச ஜன்யம் தத் தது உபாதானம் உபாதேயம் நியாயம் –பரமாணுக்கள் சேர்ந்த கல் -அதே சேர்ந்த துகள்
இதில் கந்தம் இருப்பதால் அதிலும் உண்டு அனுமானிக்கலாம் -உத்பூதம் இல்லை -அநுத்பூதமாக-விளங்காமல் உள்ளது

அதி வியாப்தி தோஷம் உள்ளதா -இல்லை –
நீரிலும் காற்றிலும் திண்ணிய ப்ருத்வீ பொருள்கள் கலந்து இருப்பதாலேயே மணம் தோற்றுகிறது
ஸூத்த ஜலத்துக்கும் காற்றுக்கும் மணம் இல்லை
ஏலக்காய் தீர்த்தம் மணம் போலே –
பூவில் இருந்து மணத்தை பிரிக்க முடியாதே -சிறு அவயவங்கள் நுண்ணியதாக உள்ளவற்றைக் கவர்ந்து
வாயு மணம் வீசுகிறது

ஆக லக்ஷணம் பரீஷை பார்த்தோம்
இனி விபாகம் பார்ப்போம்

ப்ருத்வீயின் வகைகள் இரண்டு-
நித்யமான ப்ருத்வீ –
அநித்யமான ப்ருத்வீ –

நித்யமான ப்ருத்வீ பரமாணு வடிவத்தில் இருக்கும் -உத்பத்தியோ அழிவோ இல்லையே
அநித்யமான ப்ருத்வீ கார்யங்கள் அனைத்தும் -பரமாணுக்கள் சேர்ந்து கல் மண் மரம் துணி போன்ற அனைத்தும்

எந்தப்பொருளின் அபாவம் சொல்லப்படுகிறதா அது பிரதியோகி
எந்த இடத்தில் அந்த அபாவம் இருப்பதாகச் சொல்லுகிறமோ அது அநு யோகி
பூமியில் குடமில்லை என்று சொன்னால்
குடம் பிரதியோகி
பூமி அநு யோகி
இல்லை -அத்யந்த பாவம் -குடம் பிரதியோகி -எங்கு இருக்கு பூமி -அநு யோகி -இத்தை முன்னமே பார்த்தோம்
த்வம்சம் -துணி கிழிந்து விட்டது -ப்ரத்வம்சா பாவம் -துணியின் துவம்சம் நூலில் உள்ளது நூல் தானே அதிகரணம்
இங்கு -துணி பிரதியோகி -இத்தை நூல்களை பார்த்து அறிந்தோம் –

அநித்யமாக இருத்தல் ஆவது
ஒரு நாள் அழிவுக்கு உட்படுதல் -அதாவது அந்தப் பொருளுக்கு ஒரு நாள் அழிவு உண்டு
அழிவு என்றால் ப்ரத்வம்ச அபாவம்
ஆகையால் இந்தப் பொருளை பிரதியோகியாகக் கொண்ட துவம்சம் ஒரு நாள் ஏற்படும் என்றதாயிற்று
அழிவு என்று அழைக்கப்படும் த்வம்சத்துக்கு ப்ரதியோகியாக அந்தப் பொருள் இருக்கும்
த்வம்சத்துக்கு ப்ரதியோகியாய் இருத்தல் தான் அநித்யத்வம் -அநித்யமாக இருத்தல்
அநித்யத்வம் என்றால் த்வம்சத்துக்கு பிரதி யோகியாய் இருக்கும் தன்மை-

நித்யமாக இருத்தல்-ஒரு நாளும் அழியாமல் இருத்தல் –
அதாவது எந்த த்வம்சத்துக்கும் பிரதி யோகியாய் ஆகாமை –

ப்ருத்வீ -பரமாணுக்கள்–இவை சேர்ந்து உண்டான பொருள்கள் -இரண்டாக பிரித்து
பரமாணு -காரணம் என்றும் -நித்யம்
கார்யம்-உண்டாகும் பொருள் -அநித்யம் என்று இரண்டு வகை என்றபடி
நித்யா பரமாணு ரூபம் அநித்யா கார்ய ரூபம் -என்றவாறு

தர்க்க ஸங்க்ரஹம் இன்னும் ஒரு வகையாகவும் பிரித்து அருளுகிறார்
அறிவு -ஞானம் ஆத்மாவுக்கே -இதுக்கு ப்ருத்வீ எப்படி உபயோகம்
புந த்ரிவித -சரீர இந்திரிய விஷய பேதாத்

ஆத்மாவுக்கு ஞானம் ஏற்பட ப்ருத்வீ எப்படி உதவுகிறது என்ற கண் நோட்டத்தில் பார்த்தால்
ப்ருத்வீயை மூன்றாகப் பிரிக்கலாம்
1-சரீரம்
2-இந்திரியம்
3-விஷயம்

சரீரத்துக்கு இரண்டு வகையில் லக்ஷணம் சொல்லலாம் –
1-அதன் கார்யத்தைக் கொண்டும் –
2-அதன் தன்மையைக் கொண்டும்
ஜன்மாத்யத்ய அஸ்ய யத -ப்ரஹ்ம லக்ஷணம் -கார்யம் கொண்டு தனித்து அறிகிறோம்

கார்யத்தைக் கொண்டு லக்ஷணம்
போகம் -ஸூக துக்கங்கள் -இவற்றை வரையறைப் படுத்துவது
ஆத்மா விபுவாய் இருக்கும்
குறிப்பிடட இடத்தில் தான் ஸூ கத்தையும் துக்கத்தையும் அனுபவிக்க முடியும் என்று வரையறைப் படுத்துவது சரீரம்
ஆத்மா எங்கும் பரவி இருந்தாலும் இந்த உடல் இருக்கும் இடத்தில் தான் இன்ப துன்பங்களை அனுபவிக்க முடியும் –

போக ஆயதனம் சரீரம்–ஸூக துக்க
சந்தனம் பற்றிய ஞானம்- அறிந்து–இச்சை ஆசை -பிரயத்தனம் -முயற்சி -ஸூகம் -சுகமாக இருக்கிறேன் ஞானம் -அனுபவம்
இதே போலே முள்ளில் கால் வைத்து அஹம் துக்கி
இதுவே போகம்
சோக துக்க சாஷாத்காரம் போகம்
போக ஆயதனம் -சரீரம்
இவர் தர்சனம் ஆத்மா விபு -நம் தர்சனம் அணு

தன்மையைக் கொண்டு
சேஷ்டைக்கு இருப்பிடமானது சரீரம்
கை கால்களைத் தனித்தனியே சரீரம் என்று குறிப்பிடக் கூடாது
சேஷ்டையை உடைய இறுதியான -அந்த்ய -அவயவி தான் சரீரம்
இறுதியான அவயவி என்றால் மற்ற ஒரு அவயவியைத் தோற்றுவிக்காது என்று பொருள்
கை கால்கள் இறுதியான அவயவி ஆகாது -உடல் என்னும் அவயவியைத் தோற்றுவிக்கும் படியால்

சேஷ்டாஸ்ரயத்யம் -முயற்சி வேறே –ஆத்மாவின் குணம் -செயல் வேறே -கர்மம் -சரீரம் செய்வது -ஐந்து வகை பார்த்தோம் –
கீழே மேலே செல்ல கையயை நகர்த்த ஆத்மா முயர்சசி
மரம் கூட சரீரம் தான் -வெட்டினால் வளரும் -பிராண சஞ்சாரம் உண்டே –

போக ஆயதனம் சரீரம்-சேஷ்ட ஆஸ்ரயமாகவும் –அந்த்ய அவயவியாகவும் இருக்க வேண்டும் -இதுவே சரீர லக்ஷணம் –

இந்திரியம் மற்றும் விஷயம்
ப்ரத்யக்ஷம் என்று அழைக்கப்படும் ஏற்படக் கருவியாக இருக்கும் நம் புலன்கள் தான் இந்திரியங்கள்

ஞானத்தால் அறியப்படும் பொருள்கள் அனைத்துமே விஷயங்கள் என்று அழைக்கப் படுகின்றன –

ப்ருத்வியாலான சரீரம்
இவ்வுலகில் வாழும் மனிதர்கள் விலங்குகள் செடிகள் முதலானவற்றின் சரீரம்
நம் சரீரம்-பாஞ்ச பவ்திகம் – ஐந்து பூதங்களாலும் ஆக்கப்பட்டது என்று சொல்லப்பட்டாலும்
முக்கியமாக ப்ருத்வியால் தான் ஆக்கப் பட்டுள்ளது –
நீர் நெருப்பு முதலியவை உதவுகின்றன

ப்ருத்வியாலான இந்திரியம் -கிராணம் -என்ற பெயர் பெற்ற முகர் புலன்
அது மணத்தைக் காட்டிக் கொடுக்கும் -மூக்கின் நுனியில் இருக்கும்
பார்த்திவ இந்திரியம் -கிராண இந்திரியம் -நாச அக்ர வர்த்தி

ப்ருத்வியாலான விஷயங்கள் மண் கல் மரம் போன்றவை -ம்ருத் பாஷாணாதிகள் –

இந்த விபாகத்தில்
பரமாணுக்களை -எங்கே -என்றால்
சரீரம் இந்திரியம் -இவற்றுள் இல்லை
விஷயத்துக்குள்ளே உண்டு

——————

பாடம்-14-ஜலம் -தேஜஸ் -வாயு –

அன் வீஷா-அனுமானம் -ஆன்வீஷீகா -அனுமானம் கொண்டு நியாய சாஸ்திரம் –
தர்க்க ஸங்க்ரஹம் அன்னம் பட்டர் எழுதியவற்றைக் கொண்டு பார்க்கிறோம்

ப்ருத்வியினால் ஆன சரீரம்
1-யோனிஜம் -கருவில் இருந்து உண்டானது
2-அயோனிஜம் -கருவில் இருந்து உண்டாகாதது

யோனிஜம்
1-ஜராயுஜம் -கர்ப்பையில் இருந்து தோன்றியவை -மனிதர்கள் விலங்குகள் போலே -ஜராயு -கர்ப்பப்பை –
2-அண்டஜம் -முட்டையில் இருந்து தோன்றியவை -பறவைகள் பாம்புகள் போலே

அயோனிஜம்
1-ஸ்வேதஜம் -வியர்வையில் இருந்து தோன்றியவை -கிருமிகள் போல்வன -கிருமி கீடாதிகள்-
2-உத்பிஜ்ஜம் -முளையில் இருந்து தோன்றுபவை -மரம் செடி கொடி போல்வன
3-ஸ்வர்க்கத்திலும் நரகத்திலும் எடுத்துக் கொள்ளும் சரீரங்கள்

க்ராணம் என்று அழைக்கப்படும் முகர் புலன் பிருத்வியால் ஆனது என்று எப்படி அறிவது
அனுமானத்தால் தான்
குங்குமத்தில் நிறம் ரூபம் மணம் சுவை போன்ற பல பண்புகள் இருந்தாலும் அவற்றுள் மணத்தை மட்டும்
அபி வியஞ்சனம் – வெளிப்படுத்தும் பசும் நெய்-அது பிருத்வி
அதே போலே ஒரு பொருளில் எத்தனை பண்புகள் இருந்தாலும் அதில் இருக்கும் மணத்தை மட்டும்
வெளிப்படுத்துகிறது முகர் புலன்
ஆகையால் இதுவும் பிருத்வியாகத் தான் இருக்க வேண்டும்

——–

ஜலம்
குளிர்ந்த ஸ்பர்சத்தை உடையது நீர்
குளிர்ந்த ஸ்பர்சம் தான் அதனுடைய லக்ஷணம்
அப்பு -சீதா ஸ்பர்சவத் யா ஆப -பன்மையில் பிரயோகம் எப்பொழுதும் –

தண்ணீர் -அசம்பவ தோஷம் இல்லை
வெந்நீர்-தண்ணீர் ஸ்வ பாவம் இல்லை அக்னி -தேஜஸ் அவயவங்கள் சேர்ந்து வெந்நீர் -அவ்யாப்தி தோஷம் இல்லை
அதி வியாப்தி தோஷமும் இல்லை –காலையில் தரை குளிர்ந்து உள்ளதே -பனி நீர் அவயவங்கள் இருப்பதால் தான் –
பனிக் கட்டிகள்-பிருத்வி என்று சொல்லலாமோ என்னில் எது த்ரவ்யம் த்வம்ஸ உபாதான உபாதேய -உருக்கினால் த்ரவ்யம் வருமே –

விபாகம் முன்பு போலவே பார்ப்போம்
நீர் இரண்டு வகை
பரமாணு வடிவில் இருக்கும் நீர் -நித்யமானது
பரமாணுவில் இருந்து உருவாகும் நீர் -அநித்யமானது

மற்ற ஒரு விபாகம்
சரீரம் -வருண லோகத்தில் இருப்பவர்களுடையது -அங்கும் பிருத்வி உண்டு -பிரதானம் ஜலம்
இந்திரியம் -சுவை -ரஸம் -என்னும் பண்பைக் க்ரஹிக்கும் ரஸந இந்திரியம் -நாக்கின் நுனியில் இருப்பது –
ஜிஹ்வா அக்ர வர்த்தி -சுவையைப் பற்றின ஞானத்தை ஆத்மாவுக்கு காட்டும் ரசந இந்திரியம் –

ரஸந இந்திரியம் நீராலே ஆனது என்பதற்கு அனுமானம்
மாவு பொடியில் இருக்கும் சுவையை மட்டும் வெளிப்படுத்தும் நீர் -அது ஜலம் தான்
அதே போல் பொருள்களில் இருக்கும் சுவையை மட்டும் -அபி வியஞ்சனம் -வெளிப்படுத்துவது ரஸந இந்திரியம்
ஆகையால் இதுவும் ஜலத்தாலே ஆக்கப் பட்டதாகவே இருக்க வேண்டும்

விஷயம் -நதி கடல் முதலியவை

——–

தேஜஸ்
உஷ்ணமான ஸ்பர்சத்தை உடையது தேஜஸ்
உஷ்ணமான ஸ்பர்சம் தான் தேஜஸ்ஸின் லக்ஷணம்
உஷ்ண ஸ்பர்சவத் தேஜஸ்ஸூ -ந பும்ஸ லிங்கம் இது

அசம்பவத் தோஷம் இல்லை
சந்த்ர கிரணங்கள் ஆஹ்லாதமாக இருக்க -உள்ளே நீர் அவயவங்கள் இருப்பதால் -அவ்யாப்தி தோஷம் இல்லை
ரத்னம் தேஜஸ்ஸூ -கூட பிருத்வி இருப்பதால் தேஜஸ் வெப்பம் அடி பட்டுப் போகுமே –
அபிபவம் ஆகுமே-அமுக்கி விடும் -அவ்யாப்தி இல்லை
வெந்நீர் -வெப்பம் -அதி வியாப்தி இல்லை நீர் தேஜஸ் சேர்ந்ததால் தானே

நித்யமான தேஜஸ்ஸூ -பரமாணு வடிவில் இருப்பது
அநித்யமான தேஜஸ்ஸூ -பரமாணுவில் இருந்து உருவான கார்யங்கள்

வேறு ஒரு வகை விபாகம்
சரீரம் –ஆதித்ய லோகத்தில் இருப்பவர்களுடையவை -பிரசித்தம் -தேஜஸ் பிரதானம் என்றவாறு-

இந்த்ரியம் -நிறம் -ரூபம் -என்னும் பண்பைக் க்ரஹிக்கும் சஷுஸ்ஸூ இந்த்ரியம் -கரு விழியின் நுனியில் இருப்பது
கிருஷ்ண தாரா அக்ர வர்த்தி

சஷுஸ்ஸூ என்னும் இந்திரியம் தேஜஸ்ஸாலே ஆனது என்பதற்கு அனுமானம்
ஒரு விளக்கு தன் முன் இருக்கும் பொருளின் ஸ்பர்சம் முதலியவற்றை வெளிப்படுத்தாமல்
நிறத்தை மட்டும் வெளிப்படுத்துகிறது –
அது தேஜஸ்ஸால் ஆனது –
அதே போல் சஷுஸ்ஸூம் தன் முன் இருக்கும் மற்ற பண்புகளை விட்டு நிறத்தை மட்டும் வெளிப்படுத்துகிறது
ஆகையால் இதுவும் தேஜஸ்ஸூ தான்

விஷயம் –
1-பவ்மம்-பொதுவான நெருப்பு முதலியவை -பவ்மம்-பூமி உடன் தொடர்பு –
இந்தநம் -எரி பொருள் பூமி உடன் சம்பந்தம் –
2-திவ்யம்-வானத்தில் இருக்கும் மின்னல் போன்றவை –
த்யு லோகம் -வானம்- அபிந்தனம் வித்யுதாதிகள் -மேகத்தில் உள்ள ஆப அப்பு இந்தனமாகக் கொண்டது
3-உதர்யம்-வயிற்றில் இருந்து ஜெரிமானம் செய்யும் அக்னி -ஜாடராக்னி-
4-ஆகரஜம்–சுரங்கங்களில் கிடைக்கும் தங்கம் முதலியவை -தேஜஸ் மழுங்க அடிப்பட்டு -பிருத்வியால்

———–

வாயு
நிறம் இல்லாமலும் ஸ்பர்சம் உடையதாயும் இருப்பது வாயு
நிறத்தின் இன்மையோடு -அபாவத்தோடு -கூடிய ஸ்பர்சம் தான் வாயுவின் லக்ஷணம்
ரூப ரஹித சூன்ய ஸ்பர்சவான் –ரூப அபாவ ஸ்பர்சவான் –

பிருத்வி அப்பு தேஜஸ் மூன்றுக்கும் ரூபம் -இவற்றைக் கழிக்க ரூப ரஹிதம்
மீதி ஆறு -இவற்றில் ஐந்தும்
ஆகாசம் காலம் திக்கு மனஸ் ஆத்மா இவற்றுக்கு ஸ்பர்சம் இல்லையே
அசம்பவ -அவ்யாப்தி அதி வியாப்தி தோஷங்கள் இல்லாத லக்ஷணம் இதுவே –

நித்யமானது –பரமாணு வடிவில் இருக்கும் வாயு
அநித்யம் -பரமாணுவில் இருந்து உருவாகும் கார்யங்கள்

வேறே விபாகம்
சரீரம் -வாயு லோகத்தில் இருப்பவர்களுடையவை

இந்த்ரியம் -ஸ்பர்சம் என்னும் பண்பைக் க்ரஹிக்கும் த்வக் இந்த்ரியம் -உடல் முழுவதும் பரவி தோலில் இருக்கும்
த்வக் -சர்வ சரீர வர்த்தி –
நாக்கு இனிமையும் ரஸத்தையும் உஷ்ணத்வமும் காட்டும்–நாக்கின் நுனியில் ரஸந இந்த்ரியமும் த்வக் இந்த்ரியமும் உள்ளதே –

த்வக் இந்திரியம் வாயுவினால் ஆனது என்பதற்கு அனுமானம்
விசிறியில் இருந்து வரும் காற்று நம் உடலில் இருக்கும் நீரில் இருக்கும் குளிர்ச்சியை மட்டும்
வெளிப்படுத்துகிறது அது வாயுவினால் ஆக்கப் பட்டது
அதே போல் த்வக் இந்த்ரியமும் ஒரு பொருளின் ஸ்பர்சத்தை மட்டும் வெளிப்படுத்துகிற படியால்
அதுவும் வாயுவால் ஆனது தான் –

விஷயம் -மரம் முதலியவற்றை அசைக்கும் காற்று

பிருத்வி அப்பு தேஜஸ் கண்ணால் பார்க்கலாம்
மத பேதம் ப்ராசீன வாயுவை -ஸ்பர்சம் -குணம் -மட்டும் கிரஹிக்கிறது -பொருள் இருக்க வேண்டும்
வாயுவை அனுமானம் செய்கிறார்
நவீனம் -காற்றும் அறியப்படுகிறது என்பர் –காற்றைத் தொடுகிறேன் பிரத்யக்ஷம் என்பர்

—————

பாடம் –15-அவயவம் -அவயவி –

வேதங்களுக்கு விருத்தமான தர்க்கம் ஒத்துக் கொள்ள ஒண்ணாது -மனு பகவான் –

ரூப ரஹித ஸ்பர்ஸவான் வாயு லக்ஷணம் பார்த்தோம்
ப்ராண வாயு
வாயுவை சரீரம் -இந்திரியம் -விஷயம் -என்று பிரித்தோம்
அதில் விஷயம் என்பதற்குள் ப்ராண வாயுவும் அடங்கும்
நம் உடலுக்குள் சஞ்சரிக்கும் வாயு ப்ராண வாயு
இது நம் உடலில் வெல்வேறு பகுதிகளில் இருந்து வெவ்வேறு செயல்களைச் செய்வதால்
ப்ராணம் -அபானம் -வ்யானம்-உதானம் -சமானம் -என்று ஐந்து வாயுக்களாகப் பிரித்து அழைக்கப்படுகிறது

ப்ராண வாயு ஹ்ருதயத்திலும்-மேல் நோக்கி சஞ்சரிக்கும் –
அபான வாயு குடலிலும்
சமான வாயு நாபியிலும்
உதான வாயு தொண்டையிலும்
வ்யான வாயு சரீரம் முழுவதிலும் இருக்கும்
காரியம் வேறே இருக்கும் இடங்கள் வேறே என்பதால் ஐந்தாக பிரித்து சொல்வர்

——–

பிருத்வி அப்பு தேஜஸ் வாயு நான்குக்கும் பரமாணுக்கள் உண்டு என்று பார்த்தோம் –
பரமாணுக்கள் என்றால் என்ன -அத்தை எதற்கு ஒத்துக் கொள்ள வேண்டும் –
இவை சேர்ந்து -சேர்க்கை -பொருள்கள் வேறே வேறே என்பதைப் பார்ப்போம் –

உலகில் உண்டாக்க கூடிய பொருள்கள் எல்லாம் வெவ்வேறு அளவுகளில் உள்ளன
ஒரு பொருள் பகுதிகளால் -அவயவங்களால் -ஆக்கப் பட்டு இருந்தால் தான் அளவு மாறுபட முடியும்
ஆக ஒரு பொருளை உடைத்தால் அதன் அவயவங்கள் கிடைக்கும்
எவ்வளவு தூரம் உடைக்க முடியும் -எவ்வளவு அவயவங்கள் இருக்க முடியும்
முடிவில்லாமல் உடைக்கலாம் -அநந்தமான அவயவங்கள் உண்டு என்றால் -மலைக்கும் கடுகுக்கும் வேறுபாடு இருக்க முடியாது –
இரண்டுக்கும் எண்ணற்ற அவயவங்கள் உண்டு என்கிற பக்ஷத்தில்
ஆகையால் அவயவங்களுக்கு முடிவு உண்டு-அதாவது கடைசி அவயவம் ஓன்று இருந்தே ஆக வேண்டும்
அந்த கடைசி அவயவத்திற்கு அவயவங்கள் இருக்க முடியாது
அவயவங்கள் அற்ற ஒரு பொருள் உண்டாகவோ அழியவோ முடியாது
ஆகவே அது நித்யமாக இருக்கும்
அப்படிப்பட்ட அவயவங்கள் குறைவாக சேர்ந்தால் கடுகு பிறக்கும் -அதிகமான எண்ணிக்கையில் சேர்ந்தால் மலை பிறக்கும்

நியாய மாதத்தில் கடைசி அவயவத்தை இப்படி அறிகிறார்கள்
உலகில் நுண்ணிய பொருள்களை எடுத்துக் கொள்வோம் -ஜன்னல் வழியே வரும் ஸூர்ய ஒளி கற்றை –
அதில் கண்ணுக்குத் தெரியும் பொருள் -த்ரி யணுகம் என்று பெயர் வைத்தார்கள்
கண்ணுக்குத் தெரியும் எந்தப் பொருள்களும் பகுதிகளாக ஆக்கப்பட்டுள்ளது என்று முன்பே பார்த்துள்ளோம் –
குடம் துணி போன்றவை
மிக நுண்ணிய த்ரி யணுகம் நம் கன்னுக்குத் தெரிவதால் அதுக்கும் கூட அவயவங்கள் இருக்க வேண்டும் –
அவை நம் கண்ணுக்குத் தெரிய மாட்டா
அவற்றுக்குத் த்வி யணுகம் என்று பெயர்
உலகில் கண்ணுக்குத் தெரியும் ஒரு பொருளை உருவாக்கக் கூடிய எந்த அவயவத்துக்கும் தனக்கே
அவயவங்கள் உண்டு என்று பார்த்து இருக்கிறோம்
துணியை உருவாக்கும் நூல் பஞ்சின் அவயவங்களால் ஆக்கப்பட்டுள்ளது போல்
அதே போலே கண்ணுக்குத் தெரியும் இந்த த்ரி யணுகத்தை உருவாக்கும் இந்த த்வி யணுகமும்
அவயவங்களைக் கொண்டதாகவே தான் இருக்க வேண்டும்
அவற்றுக்கு பரமாணுக்கள் என்று பெயர் -அவையே கடைசி அவயவம்
இதே போல் பரமாணுவையும் பிரித்தால் முடிவு இல்லாமல் பிரிக்க வேண்டி வரும்
அதாவது அநவஸ்தா தோஷம் வரும்–infinite regression -ஆகையால் பரமாணுவோடே நிறுத்திக் கொள்கிறார்கள்

பரிமாணம் ஏற்றத் தாழ்வு -தார தம்யம்-இருந்தாலே ஏதோ ஒரு இடத்தில் முடிய வேண்டும்
மேல் எல்லை பரம மஹத்வம் -விபு பதார்த்தங்கள் ஆகாசம் காலம், திக்கு ஆத்மா -எங்கும் பரவி உள்ளவை
பரம பதம் என்கிறோமே
அதே போல் கீழ் எல்லை -அணுக்களிலும் இதுக்கு கீழ் எல்லையும் இருக்க வேண்டுமே –
இதுவே பரமாணு -இது இரண்டாவது காரணம் -பரம அணுத்வம் உள்ளது பரமாணு –

ப்ராசீன நியாயம் இப்படி நிர்வாகம்
த்ரி அணுகம் அளவிலே நின்று இருக்கலாமே
எதுக்கு த்வி அணுகம் -பரமாணு -கல்பிக்க வேண்டும் –
நவீன நையாயிகம்-

பொருள்கள் உருவாக்குவதில் இரண்டு கண்ணோட்டங்கள் உண்டு –
ஸத் கார்ய வாதம் –இருக்கும் ஒரு பொருள் மற்ற ஒரு பொருள் ஆகும்
அ ஸத் கார்ய வாதம் –புதிதாக பொருள்கள் உண்டாகும்

ஸத் கார்ய வாதமே வேதாந்திகள் ஒப்புக் கொள்வது
இதில் ஒரு பொருள் வெவ்வேறே நிலைகளை அடைந்தால் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப் படுகின்றன
ஆனால் பொருள் ஓன்று தான்
பிருத்வியால் ஆக்கப்பட்ட பஞ்சு–,முதலில் பந்துக்களாக இருக்கும் -பின்பு நூல் ஆகும் -பின் துணி ஆகும் –
கிழிந்து நூல் ஆகும் -கொளுத்தி விட்டால் சாம்பல் ஆகும்
ஆக அந்த அந்த நிலை உண்டாகி அழிந்தது என்று தானே சொல்ல வேண்டுமது ஒழிய
பொருள் உண்டாயிற்று அழிந்தது என்று சொல்ல ஒண்ணாது
ஆகவே அவயவியும் அவயவமும் வெவ்வேறு பொருள் அல்ல
பிருத்வி பரமாணுவே -பஞ்சாகவும் -நூலாகவும் -துணி யாகவும் -சாம்பலாகவும் ஆகிறது –

நியாய மதம் சொல்லும் அ ஸத் கார்ய வாதம்
இந்த வாதத்தில்
அவயவங்கள் சேரும் பொழுது அவயவி என்ற புதிய த்ரவ்யம் உண்டாகும் –
அந்தப் பொருள் இதற்கு முன்னால் இல்லவே இல்லை -அதனால் தான் ப்ராகபாவம் என்பதைச் சொல்கிறார்கள் –
ஒரு பொருள் அழியும் பொழுது அது மற்ற ஒரு பொருளாகாது -முழுவதாகவே அழிந்து விடும் –
அதன் அவயவங்கள் மட்டும் தான் மீதம் இருக்கும்-அதனால் தான் ப்ரத்வம்சாபாவம் என்று ஓன்று உள்ளது –
ஆக ஒவ் ஒரு அவயவியும் அதன் அவயவங்களைக் காட்டிலும் வேறு பட்ட ஒரு த்ரவ்யமான படியால்
ஒரே கோட்டில் அவற்றைக் காட்ட முடியாது
ஒவ் ஒரு பொருள்களுக்கும் தனித் தனி கோடுகள் வேண்டும்
நூலில் இருந்து துணி என்ற புதிய பொருள் உண்டாகும்
அப்போது நூலும் அப்படியே இருக்கும்
துணி அழிந்த பின்பு துணி என்பது இருக்கவே இருக்காது –
நூல் என்ற பழைய பொருள் மட்டுமே இருக்கும் –
இப்படி இரண்டு வெவ்வேறு பொருள்களான அவயவத்துக்கும் அவயவிக்கும் இடையில்
சமவாயம் என்னும் சம்பந்தம் இருக்கும்
துணி -சமவாயம் –நூல்
நூல் -சமவாயம் -பஞ்சு பந்துக்கள்
பஞ்சு பந்துக்கள் -சமவாயம் -பிருத்வீ பரமாணு

அவயவி -அவயவங்கள் -இவற்றுக்கும் சமவாயம் சம்பந்தம் –
குணம் ஆஸ்ரயத்தில்
கிரியை ஆச்ரயத்தில்
சாமான்யம் ஆஸ்ரயத்தில்
நித்ய -பரமாணு -இவற்றில் உள்ள விசேஷம் ஆஸ்ரயம் போலே இங்கும்
அவயவி அவயவங்களில் உள்ளவையும் சமவாயம் சம்பந்தம் –

மேஜைக்கும் குடத்துக்கும் -சம்யோக சம்பந்தம் -ஆதாரமாக கொண்டதால்
கபாலங்கள் -கடம் -இதுவும் ஆதாரம் -சம்பந்தம் வேறே
அது சம்யோகம் -இது சமவாயம்
கபாலம் அண்டியே குடம் இருக்கும் -பிரிக்க முடியாத சம்பந்தம்
குடத்தை மேஜையில் இருந்து பிரிக்கலாம் -எடுத்து தரையில் வைக்கலாம் –
ப்ராக் அபாவம் சொல்வதால் த்ரவ்யங்கள் வேறே வேறே -தொடர்பு சமவாயம் –
ப்ராக் அபாவம் த்வம்ச அபாவம் சொல்வதால் அஸத் கார்ய வாதிகள்

சிலர் செய்யும் ஆஷேபம்
அவயவி என்று தனியே ஓன்று தேவை இல்லை
பரமாணுக்களின் கூட்டங்களே தான் குடம் என்றும் துணி என்றும் அழைக்கப் படுகின்றன –
நம் கேள்வி –
பரமாணுவை நாம் கண்ணால் காண முடியாத படியால் அதன் கூட்டமான குடத்தையும் நம்மால் காண முடியாமல் போகுமே
இதுக்கு அவர்கள் பதில்
ஒரு மயிரைப் பார்க்க முடியா விடிலும் மயிர்க் கற்றையைப் பார்க்கிறோமே
ஒரு பெரிய குடம் -குடம்–என்று எல்லாம் சொல்கிறோமே -குடம் பல பரமாணுக்களின் கூட்டம் என்றால்
ஓன்று என்றோ பெரியது என்றோ எப்படி அழைக்கலாம்
ஒருமை -சங்க்யை -சிறிய பெரிய -பரிமாணம்

பல சிறிய நெல் குவியலைப் பார்த்து ஒரு பெரிய நெல் குவியல் என்று சொல்வதைப் போல் சொல்லலாமே
இதுக்கு -அவர்கள் பதில் –
ஒரு தலை முடி கண்ணுக்குத் தெரியும் பொருள் தான் அருகில் இருந்தால் தெரியும்-தொலைவில் இருந்தால் தெரியாது –
ஆகவே தலை முடிக் கற்றை கண்ணுக்குத் தெரிவதில் தப்பில்லை
பரமாணு கண்ணுக்குத் தெரியாத பொருள் -அதன் கூட்டமும் கண்ணுக்குப் புலப்பட முடியாதே –
எங்கள் மதத்தில் பரமாணுக்கள் சேர்ந்து த்வி அணுகம் -த்ரி அணுகம் -குடம் -என்று வெவ்வேறு பொருள்கள் உண்டாகின்றன –
அவற்றில் ஒவ் ஒன்றும் முன்புள்ள பொருள்களைக் காட்டிலும் பெரியது -ஆகவே கண்ணுக்குத் தெரிவதில் தவறு இல்லை –

பரமாணு த்வி அணுகம் -கண்ணுக்குத் தெரியாதவை
த்ரி அணுகம் கண்ணுக்குத் தெரியும் –
இவைகள் சேர்ந்து அவயவி-

————

காரிகா வளி -ஒன்பது த்ரவ்யங்கள் தேஹி ஆத்மா குணி குணம் உடையவன் போல் –

பாடம் -16-ஆகாசம் –காலம் –திக்கு –

ஆகாசம்
சப்தத்தைக் குணமாகக் கொண்டது -ஆகாசம் -லக்ஷணம்
சப்தம் குணத்தைக் காதாலே க்ரஹிக்கிறோம்
குணம் த்ரவ்யத்தை ஆஸ்ரயித்துத் தான் இருக்க முடியும் -சமவாய சம்பந்தம்-
ஆகவே சப்தத்துக்கு ஆஸ்ரயமாக ஆகாசம் இருப்பதை அனுமானிக்கிறோம் –
சப்த குணகம் ஆகாசம் –சப்தம் என்னும் ஒரே குணத்தைக் கொண்டது ஆகாசம் -பஹு வ்ரீஹி சமாசம் –
உலகில் பல ஆகாசங்கள் இருந்தாலும் லகுவாக ஆகாசம் ஒன்றே என்பதே எளிதாகும் –
குடம் வகை பல குடங்கள் போல் இல்லாமல் ஒரே ஆகாசம் -ஏகம் –
உலகம் முழுவதும் சப்தம் கேட்பதால் ஆகாசம் விபு -உலகம் எங்கும் பரந்துள்ளது என்று அறியலாம் –
ஆகாசத்துக்கு அவயவங்கள் என்று கொண்டால் -அவை சேர்ந்து பெரிய ஆகாசம் என்று கடினமாக கொள்ள வேண்டி வரும்
ஆகவே ஆகாசம் பகுதிகள் இல்லாமல் நித்யம் என்றும் அறிகிறோம்

விபாகம்
முன்பு ஒவ் ஒரு த்ரவ்யத்தையும் சரீரம் இந்திரியம் விஷயம் என்று மூன்றாகப் பிரித்துப் பார்த்தோம்
ஆகாசத்தாலான சரீரம் கிடையாது –
ஆகாசத்தாலான இந்திரியம் உண்டு -சப்தத்தைக் கிரஹிக்கும் ஸ்ரோத்ரம் -ஸ்ரோத்ர இந்திரியம்
ஆனால் ஆகாசம் ஓன்று என்று பார்த்தோம் –
ஸ்ரோத்ர இந்திரியம் ஒவ் ஒருவருக்கும் தனித்தனியாக உள்ளதே
எப்படி ஆகாசமே ஸ்ரோத்ரம் ஆகும்
பகுதிகள் இல்லாத ஆகாசத்தைக் கூட பொருள்களின் சேர்த்தியைக் கொண்டு உலகில் பிரித்துப் பார்க்கிறோம்
இந்திய வான் வெளி -அமெரிக்க வான் வெளி-air space-flying space -குட ஆகாசம் -என்று பிரித்துப் பார்ப்பது போல்
ஒவ் ஒருவரின் காதால் வரையறுக்கப் பட்ட ஆகாசம் வெவ்வேறு தானே –
அதுவே ஸ்ரோத்ரம் எனப்படுகிறது –
ஆகாசத்தால் ஆக்கப் பட்டது என்று சொல்லாமல் ஆகாசமே ஸ்ரோத்ரம் இந்திரியம்
கரண சஸ்குளிக்கு உள்ளே-வரையறுக்கப் பட்ட ஆகாசம் -அவச்சின்னம் –

——–

காலத்தை நிலை நாட்டுதல்
இப்பொழுது குடம் உள்ளது என்று சொல்லும் பொழுது -இப்பொழுது என்ற சொல்லில் இருந்து
ஸூர்யனின் கிரியைக்கும் குடத்துக்கும் உள்ள சம்பந்தம் தோற்றுவதால்
இந்த ஸூர்ய கிரியை உடன் கூடிய குடம் என்றே இதற்குப் பொருள் என்பர் நியாய தரிசனத்தில்
இதில் ஒரு கேள்வி வரும் -ஸூர்யன் கிரியை பூமியில் உள்ள குடத்துடன் எப்படி சம்பந்தம் உண்டாகும் என்றால்
அந்த கிரியை உடைய ஸூர்யன் ஒரு த்ரவ்யத்தைத் தொட்டுக் கொண்டு உள்ளது -சமயோக சம்பந்தம் கொண்டுள்ளது
அதே த்ரவ்யத்தை இந்தக் குடம் தொட்டுக் கொண்டு உள்ளது
கிரியைக்கு இருப்பிடமான ஸூர்யன் தொட்டுக் கொண்டு இருக்கும் த்ரவ்யத்தைத் தொட்டுக் கொண்டு இருக்கும் குடம்
பரம்பரா சம்பந்தத்தால் அந்தக் கிரியை உடன் கூடிய குடம்
அந்த இடையில் உள்ள த்ரவ்யத்தை காலம் என்று அனுமானிக்கிறார்கள்
கிரியை கிரியாவான் -இரண்டுக்கும் சமவாய சம்பந்தம் -விட்டுப் பிரிக்க முடியாத -சமவாய சம்யோக சம்பந்தம் இல்லாமல்
பரம்பரயா சம்பந்தம் -இப்பொழுது -இதானி -ஞானம் -ஸூர்யன் -கிரியைக்கும் பொருளுக்கும் சம்பந்தம் -காலம்

காலத்தை நிரூபிக்க மற்ற ஒரு வழி
குணங்களின் வகைகள் –24-இவற்றில்
பரத்வம் அபரத்வம் பார்த்தோம்
தேசத்தாலும் காலத்தாலும் பரத்வம் அபரத்வம் பார்த்தோம் முன்பு
பழையவை பரத்வம் புதிதானவை அபரத்வம் –
இவை தானாக உண்டாக மாட்டாதே -ஏதோ காரணம் இருக்க வேண்டும் –
அதுவே காலம் என்னும் த்ரவ்யத்துடன் சம்யோக சம்பந்தம்
சம்யோகத்துக்கு இருப்பிடமான த்ரவ்யம் காலம் என்றவாறு
பல காலங்களுடன் தொடர்பு உள்ள பொருள் முதிர்ந்து பரத்வம் என்ற குணம் உள்ளது என்றும்
குறைவான காலங்கள் உடன் தொடர்பு -சம்யோகம் -உள்ள பொருள் இளையது -அபரத்வம் என்ற குணம் உள்ளது என்கிறோம்

காலத்தின் தன்மைகள்
இப்படி அனுமானிக்கும் காலமும் ஆகாசம் போல் லகுவாக உலகம் முழுவதும் ஒன்றாகவே கொள்ள வேண்டும் –
ஒவ் ஒரு இடத்தில் ஒவ் ஒரு காலம் என்பது இல்லை
காலம் ஓன்று -எங்கும் காணப்படுகிறது என்பதால் விபு
லாகவத்தைப் பற்றி ஆகாசம் போலவே இதுக்கும் அவயவங்கள் இல்லை இதுவும் நித்யம் என்றே கொள்ள வேண்டும்
காலம் ஏகம் -விபு -நித்யம் -அதீத வியவகார ஹேது காலம் –

காலம் என்பது மாம்பழம் பழுக்கவும் பூக்கள் பூக்கவும் போன்ற செயல்களுக்கு காரணமாக இருப்பதை பார்க்கிறோம்
உலகில் உண்டாகும் அனைத்துப் பொருள்களுக்கும் காலமும் ஒரு காரணம் என்பது நியாய மதக் கொள்கை —
பூமியில் குடம் உள்ளது போல் காலையில் குடம் உள்ளது என்று சொல்வதால் பூமி போலே
காலமும் உலகில் உள்ள அனைத்துப் பொருள்களுக்கும் இருப்பிடம்- ஆஸ்ரயம் ஆகிறது

காலம் ஒன்றே என்றால் வினாடி நிமிஷம் முஹூர்த்தம் பகல் பக்ஷம் மாதம் வருஷம் யுகம் போன்ற பிரிவுகள் எப்படி
மஹா காலம் நித்தியமாக இருந்தாலும் ஒவ் ஒரு பொருளுடன் தொடர்பு பட்ட -சம்யோகம் பட்ட -காலம்
அளவுபட்டதாகவே இருக்கும் –அந்தப் பொருள் அளவு பட்டதாக இருப்பதால்
நான் 30 வயசுடன் இருந்தாலும் காதில் கடுக்கனுடன் ஐந்து வருஷம் இருந்தேன் என்பது போல்
அதே போல் காலம் நித்யமாக இருந்தாலும் குடத்தால் வரையறுக்கப்பட்ட காலம் -இமைத்தல் என்கிற செயலால்
வரையறுக்கப் பட்ட காலம் அளவுபட்டதாகவே இருக்குமே

ஒரு க்ஷணம் -வினாடி -என்பதை எவ்வாறு வரையறுப்பது
இதை அறிய -கர்மம் -கிரியை -செயல் -என்பதைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும் –

எந்த ஒரு செயலை எடுத்துக் கொண்டாலும் அதில் என்ன நடக்கும்?
ஒரு பொருள் ஓர் இடத்திலிருந்து மற்ற ஓர் இடத்திற்குச் செல்லும்.
அந்தப் பொருள், செயலுக்கு முன்னால் எந்த இடத்தில் இருந்ததோ அதற்கு“முன் இடம் (பூர்வ தேசம்) என்று பெயர்.
அந்தப் பொருளுக்கும் பூர்வ தேசம் என்று சொல்லப்படும் மு்ன்னிடத்துக்கும் ஸம்யோகம் இருந்தது.
அந்தப் பொருளில் க்ரியை ஏற்பட்டால், அது முதலில் மு்ன்னிடத்திலிருந்து பிரிந்து விடும்,
அதாவது, அந்தப் பொருளுக்கும் பூர்வ தேசத்துக்கும் இருந்த ஸம்யோகம் அழிந்து விடும்.

க்ரியையானது நேரடியாக சம்யோகத்தை அழிக்காது.
இடையில் அந்தப் பொருளில் விபாகம் (பிரிவு) என்ற குணம் உண்டாகும்,
அதற்குப் பி்ன் தான் முன் தேசத்தோடு இருந்த சம் யோகம் அழியும் –.
அடுத்து, அந்தப் பொருள், க்ரியையி்ன் காரணமாக எந்த இடத்தை அடைகிறதோ,
அதற்கு “அடுத்த இடம் (உத்தர தேசம்) என்று பெயர்.
ஆக, அந்த உத்தர தேசத்துக்கும் இந்தப் பொருளுக்கும் இடையே ஸம்யோகம் ஏற்படுகிறது என்று பொருள்.

உத்தர தேசத்தோடே சம்யோகம் ஏற்பட்ட பிறகு அந்தச் செயல் முடிந்துவிடும்.
ஆக, கீழுள்ள க்ரமத்தில் தான் இது நடக்கிறது
1-க்ரியை உண்டாகும்-
2-விபாகம் உண்டாகும்
3-பூர்வ தேச சம்யோகம் அழியும்
4-உத்தர தேச சம்யோகம் ஏற்படும்
5-க்ரியை அழிந்து விடும்

இப்படி ஒரு செயலிலிருந்து அடுத்தடுத்து ஏற்படும் மாற்றங்களைப்
பயன் படுத்தித் தான் நாம் ’ஒரு வினாடி’ என்பதை வரையறுக்கப் போகிறோம்
மனதில் கொள்க
ஒரு பொருள் உண்டாவதற்கு முன் வினாடி வரை தொடக்கமே இல்லாததான அதன் ப்ராக அபாவம் இருக்கும்.
ஒரு பொருள் அழியும் வினாடி தொடங்கி , முடிவில்லாத காலம் வரை அதன் ப்ரத்வம்ச அபாவம் இருக்கும்

ஆக, கீழே உள்ளவை ஒவ் ஒன்றும் ஒவ் ஒரு வினாடி மட்டுமே இருக்கக் கூடியவை
விபாகத்தின் ப்ராக் அபாவத்தினுடன் கூடிய கிரியை
பூர்வ தேச சம்யோகத்துடன் கூடிய விபாகம்
உத்தர தேச சம்யோகத்தின் ப்ராக் அபாவத்துடன் கூடிய பூர்வ தேச சம்யோக நாசம்
உத்தர தேச சம்யோகத்துடன் கூடிய கிரியை

கால உபாதிகள் இவை – இப்படி ஒவ் ஒரு கிரியைக்கும் நான்கு க்ஷணங்கள் இருக்குமே
ஆக -ஒரு விநாடி என்றால்
கிரியை ஏற்பட்டு ஆனால் அதில் இருந்து விபாகம் ஏற்படாத காலம்
விபாகமும் பூர்வ தேச சம்யோகமும் சேர்ந்து இருக்கும் காலம்
பூர்வ தேச சம்யோகத்தின் அழிவும் உத்தர தேச சம்யோகத்தின் ப்ராக் அபாவமும் சேர்ந்து இருக்கும் காலம்
கிரியை இடம் உத்தர தேச சம்யோகமும் சேர்ந்து இருக்கும் காலம்

———-

24 குணங்களுக்குள் பரத்வம் அபரத்வம் என்று இரண்டு குணங்களைப் பார்த்தோம்.
தொலைவில் இருக்கும் பொருளிடம் பரத்வமும், அருகிலிருக்கும் பொருளிடம் அபரத்வமும் இருக்கும் என்றும் பார்த்தோம்.
இந்த குணங்கள் தானாக உண்டாக முடியாது, ஏதோ ஒரு காரணம் வேண்டும். அது என்ன என்றால் –
“திக் என்ற த்ரவ்யத்தோடு இருக்கும் தொடர்பு (சம்யோகம்)” என்கிறது ந்யாய மதம்.
ஆகையால், “இருக்குமிடத்தை வைத்து வரக் கூடிய பரத்வம் மற்றும் அபரத்வத்துக்குக் காரணமான சம்யோகத்துக்கு
இருப்பிடமான த்ரவ்யம்” என்கிற முறையில் திக் என்று ஒரு த்ரவ்யம் உள்ளது என்று நாம் நிரூபிக்கலாம்

ஆகாசத்துக்கும் காலத்துக்கும் சொன்னது போல் லாவகம் என்கிற கொள்கையைப் பின் பற்றிப் பார்த்தால்
திக் என்பதும் ஒன்று தான், விபு (எங்கும் பரந்து இருப்பது), அவயவங்கள் அற்றது, நித்யமானது
காலத்தைப் போலவே திசையும் உலகில் உண்டாகும் அனைத்துப் பொருட்களுக்கும் காரணமானது,
அனைத்துப் பொருட்களையும் தாங்கக் கூடியது

திசை என்னும் த்ரவ்யம் ஒன்றாக இருந்தாலும் அந்த அந்த இடத்தில் இருக்கும் பொருள்களைக் கொண்டு
அதை வரையறுத்துப் பார்க்க முடியும்
அப்படிச் செய்யும் போது தான் கிழக்கு மேற்கு போன்ற பிரிவுகள் ஏற்படுகின்றன
அஸ்தாசலம்–மாடு -மேரு மலை -ஆடு -உதயாசலம்
ஆடு மாட்டுடன் ஒப்பிட்டால் கிழக்கு
அஸ்தாசல மலைக்கு அருகில் மேற்கு
மேரு மலையில் அருகில் வடக்கு
தொலைவில் தெற்கு என்று பிரித்துச் சொல்கிறோம்

உதயாசலம் அஸ்தாசலம் மேரு பர்வம் மூன்றையும் வைத்து நான்கு திக்குகள்

காலம் திக்கு இவை சர்வ ஆதாரம் -அனைத்தையும் தாங்கிக் கொண்டு இருக்கும் -அனைத்துக்கும் காரணம்
பூதலே – பூமியில் ஏழாம் வேற்றுமை -காலையில் பூமியில் குடம் உள்ளது இங்கும் ஏழாம் வேற்றுமை
அதிகரணம் -தாங்கும்

ஆத்மா மனஸ் இவற்றைப் பற்றி மேல் பார்ப்போம்

——————-

பாடம் –17-ஆத்மா

ஆச்சர்யம் உடைய ஜீவாத்மா–ஆயிரக்கணக்கான மக்களில் யாரோ ஒருவன் காண்கிறான் –
அதில் சொல்லி புரிய வைப்பவர் மிக சிலர் -கேட்பதற்கும் சுலபத்தில் ஆள் இல்லை -உள்ளபடி அறிபவர் துர்லபம் கீதை
குணத்துக்கு ஆஸ்ரயம் த்ரவ்யம் -ஆகவே ஆத்மா த்ரவ்யம்
சிகப்பு நிறத்துக்கு மணம் இல்லை –
அறிவு உடையவன் புத்திக்கு இருப்பிடம் தான் ஆத்மா சைதன்யன் ஞானம் உடையவன் –
ஞானாதிகரணம் ஞானத்துக்கு இருப்பிடம் ஆத்மா -குணம் த்ரவ்யம் சமவாயம் சம்பந்தம் –
த்ரவ்யங்களுக்குள் தானே சம்யோக சம்பந்தம் இருக்கும்

ஞானத்தின் இருப்பிடம் ஆத்மா -அதாவது ஞானம் தான் ஆத்மாவின் லக்ஷணம் –
அதுவே மற்ற பொருள்களின் இடத்தும் ஆத்மாவை வேறு படுத்துகிறது –
ஞானம் -என்பது ஒரு குணம் –
அதன் இருப்பிடம் ஆத்மா என்று அழைக்கப்படும் த்ரவ்யம்
தொடர்பு -சமவாயம் -சம்பந்தம் –
சமவாய சம்பந்தத்தால் ஞானத்தைக் கொண்டு இருக்கும் த்ரவ்யம் ஆத்மா -இதுவே லக்ஷணம்

ஆத்மா இரண்டு வகைப்படும்
ஜீவாத்மா
பரமாத்மா
ஆத்மா என்னும் சொல் வேதாந்தத்தில் “ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய: ஸ்ரோதவ்ய: மந்தவ்ய: நிதித்யாஸி தவ்ய:” போன்ற
இடங்களில் பரமாத்மாவைக் குறிப்பதாகவும் காணப்படுகிறது.
ஜ்ஞாநத்தை உடையவன் ஆத்மா என்னும் லக்ஷணம் பரமாத்மாவுக்கும் பொருந்துவது தான் -ஆகையால் குறையில்ஸல.

பரமாத்மா –ஈஸ்வரன்
தத்ர ஈஸ்வர –சர்வஞ்ஞன்– ஏக ஏவ -உலகை ஆள்பவன் –
பரமாத்மா என்பவர் “ஈஸ்வரர் ” என்று அழைக்கப்படுகிறார்.
இதற்கு “உலகத்தைப் படைத்து ஆள்பவர்” என்று பொருள்.
ஈஸ்வரனாக இருப்பதால் சர்வஞ்ஞனாகவே இருக்க வேண்டும் –
ஈர் அரசு கூடாதே –
ஒரு குடம் மண்ணைக் கொண்டு குயவனாலே செய்யப்படுகிறது. குடத்துக்குக் கார்யம் என்று பெயர்.
மண்ணுக்கு உபாதாந காரணம் என்று பெயர்.
குயவனுக்கு நிமித்த காரணம் என்று பெயர். அந்தக் குயவனுக்கே “கர்த்தா”-செய்பவன் – என்று மற்ற ஓரு பெயரும் உண்டு.
கர்த்தா என்றால், ஒரு பொருளை உருவாக்கத் தேவைப்படும் உபாதாந காரணத்ஸத முதலில் அறிந்து கொண்டு,
பி்ன் அந்தக் கார்யத்ஸத உண்டாக்க ஆசைப்பட்டு, அதற்கான முயற்சியை எடுப்பவர்.

கர்த்தா -உபாதான கோசர -அபரோக்ஷ ஞானம்–ஆசை -இச்சை – அடைய பிரயத்தனம் -மூன்று படிகள்
கார்த்தாவுக்கு இச்சா ஸூகீரிஷா-கிருதி -புத்தி-ஞானம் ஆசை கிரியை மூன்றையும் ஆத்மா குணமாகவே முன்பே பார்த்தோம்

ஒரு குயவன் , குடத்தை உருவாக்கத் தேவையான மண்ணை முதலில் காண்கிறார்,
அடுத்து இந்த மண்ணிலிருந்து குடத்தை உருவாக்க ஆசைப்படுகிறார்,
பி்ன் குடத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்.
ஆகையால் தான் அவர் குடத்தி்ன் கர்த்தா என்று அழைக்கப்படுகிறார்.

அதே போல் பரமாத்மா இந்த உலகத்தை உண்டாக்கத் தேவையான பரமாணுக்களை முதலில் அறிகிறார்,
பி்ன் உலகை உருவாக்க ஆசைப்படுகிறார்,
பி்ன் அதற்கான முயற்சியை எடுக்கிறார்.
ஆகையால் பரமாத்மா இந்த உலகத்தி்ன் கர்த்தா ஆகிறார்.

பரமாத்மா சர்வஞ்ஞன் -ஒருவன்
ஆக, நம் புலன்களுக்கு எட்டாதவையான நுண்ணிய பரமாணுக்கள் அனைத்தையும் பரமாத்மா காண்கிறார்,
நுண்ணிய பரமாணுக்களையே பார்க்க முடிந்தவரால் நிச்சயமாக குடம், துணி, வளையல் போன்ற பெரிய
பொருட்களையும் பார்க்க முடியும். ஆகையால், உலகிலிருக்கும் அனைத்துப் பொருள்களையும் அவர்
காண்கிறபடியால், அவர் ஸர்வஜ்ஞன் (அனைத்னையும் அறிந்தவர்) என்று கொண்டாடப்படுகிறார்.

நாம் ஒரு சமயத்தில் ஒன்றை அறிகிறோம், பிறகு மறந்து விடுகிறோம்.
ஈஸ்வரனுக்கு அப்படி எந்த குறைபாடுகளும் கிடையாது. ஆகையால், ஈஸ்வரர் எப்படி நித்யமோ , அதே போல்
அவரிடத்திலிருக்கும் ’அனைத்துப் பொருள்களைப் பற்றின ஜ்ஞாநமும்’ நித்யமானது என்று சொன்னால் ஒரு தவறும் இல்லை .
ஆகவே, “நித்யமான அறிவைக் கொண்டிருப்பவர் பரமாத்மா” என்று பரமாத்மாவுக்கு லக்ஷணம் சொல்லலாம்.
நித்தியமான ஞானம் உடையவர் சர்வேஸ்வரன் —
ஜீவாத்மாவுக்கு ஜ்ஞாநம் இருந்தாலும், நித்யமான ஜ்ஞாநம் கிடையாது. நம் ஜ்ஞானம் உருவாகும் அழியும்.
உலகுக்கு இரண்டு ஆள்பவர்கள் இருந்தால் குழப்பம் தான் ஏற்படும். ஆகையால், ஈஸ்வரராக இருக்கும் பரமாத்மா
ஒருவர் தான் உள்ளார். இரண்டாவது ஈஸ்வரர் தேவை இல்லை

ஜீவாத்மா
ஜீவாத்மாவின் லக்ஷணம்
ஸூகம், துக்கம், த்வேஷம், தர்மம், அதர்மம் என்ற குணங்களி்ன் இருப்பிடமாயிருத்தல்.
பரமாத்மாவுக்கு ஜ்ஞாநம், இச்சை , ப்ரயத்நம் இருந்தாலும்,ஸூகம் துக்கம் முதலாைனவை கிடையாது.
ஆகவே இது ஜீவனுக்கு மட்டுமிருக்கும் தனித்தன்மை யாகும் –

ஸூகாதிகள் ஆஸ்ரயத்வம் ஜீவாத்மா –பரமாத்மாவுக்கு இல்லை -இதுவே லஷ்ணம்
ஆசை உண்டு ஞானம் உண்டு ப்ரயத்தனம் உண்டு பரமாத்மாவுக்கு
ராக த்வேஷம் ஸூகம் துக்கம் பாபம் புண்ணியம் இல்லையே –பரமாத்மாவுக்கு -ஜீவாத்மாவுக்கே உண்டு

இந்த ஜீவாத்மா ஒவ் ஓரு உடலிலும் வேறாக உள்ளார்.
ஒரு உடலில் இருப்பவர் ஸூகப்படும் போதே மற்றொரு உடலில் இருப்பவர் துக்கப்படு வதைக் காண்கிறோம்.
ஆகையால், அந்த இரண்டு சரீரங்கிளிலும் ஒரே ஆத்மா இருக்க முடியாது, ஒவ் ஓரு சரீரத்தில் ஒவ் ஓரு ஆத்மா
தான் இருக்கவேண்டும்.
பிரதி சரீரம் பின்னமாகவே ஆத்மா இருக்க வேண்டும்
சரீரங்கள் எண்ணிலடங்காதபடியால் ஆத்மாக்களும் எண்ணிலடங்காதவையே –

கேள்வி – ந்யாய மதத்தி்ன்படி நம் சரீரம் ஒவ் ஓரு நொடியும் மாறுகிறதே . அப்பொழுது ஆத்மா மாறி விடுமா?
பதில் – இல்லை -. ஒரே காலத்தில் இரண்டு சரீரங்களில் ஒரு ஆத்மா இருக்க முடியாதே
தவிர வேவ்வேறு காலங்களில் இருக்கலாம்.

கேள்வி – ரிஷிகள் ஒரே காலத்தில் பல உடல்களை எடுத்துக் கொள்கிறார்களே ? அவர்கள் ஆத்மா மாறுமா?
பதில் – இல்லை . யோகத்தி்ன் பலத்தால் ஒரே காலத்தில் பல சரீரங்கள் எடுக்கலாம். மற்றவரால் முடியாது-

ஆத்மாவின் அளவு என்ன
பொருட்களை அவற்றி்ன் அளவை வைத்து அணு (நுண்ணியது),
மத்யம பரிமாணம் (நடுத்தர அளவு),
விபு (எங்கும் பரந்திருப்பது) என்று மூன்றாகப் பிரிக்கலாம். -ஆகாசம் போல் –
அவற்றில் ஆத்மா எந்தப் பிரிவில் அடங்கும் என்று பார்ப்போம் .

ஆத்மா அணுவாக இருக்க முடியாது. ஏன் என்றால் –
இரண்டு காரணங்கள் சொல்கிறார்கள்
ஓன்று
அணுவான பொருள்களையும், அவற்றிலிருக்கும் குணங்களையும் நம் புலன்களால் அறிய முடியாது.
பரமாணுவாக உள்ளவற்றையும் அவற்றின் குணங்களையும் இந்த்ரியங்களால் அறிய முடியாதே –
ஆனால் நான் என்று ஆத்மாவையையும் அதிலிருக்கும் ஜ்ஞாநம் ஸூகம் முதலான குணங்களையும் நாம் அறிகிறோம் –
இரண்டு
“நான் குடத்தை அறிகிறேன் , “நான் ஸூகமாக உள்ளேன் ” என்று ஒரே சமயத்தில் உடலில் இரு பகுதிகளில் ஸூகத்தையும்
துக்கத்தையும் நாம் அநுபவிக்கிறோம் – “காலுக்கு ஸூகமாக உள்ளது ஆனால் தலை வலிக்கிறது” என்று.
ஆத்மா அணுவாக இருந்தால் அவர் ஒரு காலத்தில் காலிலும் தலையிலும் இருக்க முடியாது.

ஆத்மா நடுத்தர அளவை உடையது என்றும் சொல்ல முடியாது,
ஏன் என்றால் உலகில் “எந்தப் பொருள் நடுத்தர அளவில் உடையதோ அது நிச்சயமாக ஒருநாள் அழியும்” என்ற நியமம் உள்ளது.
ஆத்மாவுக்கு அழிவை ஒப்புக் கொள்ள முடியாது என்று அடுத்து பார்க்கப் போகிறோம்.

ஆகையால் ஆத்மா விபுவாகத் தான் (உலகு எங்கும் பரந்து விரிந்து இருக்கும் பொருளாகத்) தான் இருக்க வேண்டும்.
பல ஆத்மாக்கள் உண்டே அவை எல்லாம் விபுவாக இருக்க முடியுமா
ஸூஷ்ம வஸ்து ஆகாசம் ஆத்மா திக்குக்கள் விபுவாக இருந்தாலும் ஒன்றுடன் ஓன்று முட்டிக் கொள்ளாதே
ஒளி எவ்வளவும் நுழையலாம்

ஆகையால் ஆத்மா விபு என்பர் நியாய வாதிகள்
வேதாந்த சித்தம் ஆத்மா அணு

ஆத்மா நித்யமானதா அல்லவா ?
ஆத்மா அநித்யமானது, அதாவது ஒரு நாள் உண்டாகி ஒரு நாள் அழியக்கூடியது என்று ஒப்புக் கொண்டால் பல சிக்கல்கள் ஏற்படும்

அக்ருத அப்யாகமம் –
நாம் இந்தப் பிறவியை எடுப்பதற்கும், இந்தப் பிறவியில் அநுபவிக்கும் ஸூக துக்கங்களுக்கு ஏதோ
ஒரு காரணம் இருக்க வேண்டும். காரணமில்லாமல் எதுவும் நடக்காது.
ஆனால் இந்த ஆத்மா இப் பொழுது தான் உண்டான படியால் இவன் இதற்கு முன்னால் எந்தச் செயலும் செய்திருக்க முடியாது.
ஆகவே, செய்யாத செயல்களுக்கான பலனை நாம் அநுபவிக்கிறோம் என்பதாகும்.
இது ஒப்புக் கொள்ள முடியாத ஒரு கண்ணோட்டம்

க்ருத ஹாநம் –க்ருத நாசம்
நாம் அடுத்தடுத்த பிறவிகளில் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்தப் பிறவியில் செய்யும் செயல்கள் எல்லாம் வீணாகப் போகும்,
ஆத்மா இந்த பிறவியி்ன் முடிவில் அழிந்து விடுவார் என்றால். அந்தச் செயல்களை போதித்த வேதங்களும் தவறானவை ஆகி விடும்

ஐஹிக பலன்கள் இங்கேயே இந்தப்பிறவியில் அடையும் பலன்கள்–ஸ்வர்க்காதி பலன்கள் கிடைக்க
வேதங்கள் சொல்லுவது செய்து நாசம் ஆகுமே கர்மங்களும் சாஸ்திரங்களும் வியர்த்தமாகும்

மேலும் மூன்றாவது காரணம் -ஸ்தன்ய பாந ப்ரவ்ருத்தி –
ஆத்மா இந்த உடலோடு பிறக்கும் போது தான் உருவாகிறது என்றால்,
முதன் முதலில் பசியைப் போக்கிக் கொள்ளப் பால் குடிக்க வேண்டும்,
அதையும் இப்படித் தான் குடிக்க வேண்டும் என்று எப்படி ஒரு குழந்தை அறிகிறது?
பிறந்தவுடன் இதை அறிந்து கொள்ளும் ஆற்றல் இல்லா விட்டாலும் பால் குடிக்க அதற்குத் தெரிந்துள்ளது.
ஆகவே முன் பிறவிகளி்ன் பழக்கதால்-பதிவினால் -ஸம்ஸ்காரங்களால் – மட்டும் தான் இதை ந்யாயப்படுத்த முடியும்.

ஆகையால் ஆத்மா நித்யமானது என்று ஒப்புக் கொள்ள வேண்டும்

1-பிரதி சரீர பின்னம்
2-விபு
3-நித்யஸ் ச ஆத்மா என்றபடி –

———

பாடம் –18-த்ரவ்யங்கள் –ஆத்மா மனஸ் —

மனா ஏக மனுஷ்யானாம் காரணம் பந்த மோஷாயா
பந்தாயா விஷயா சங்கீ
மனசும் ஆந்திர புலன் -ப்ரத்யக்ஷம் -இந்த்ரியங்களால் அறிய படும் -என்னும் பொழுது மனசும் சேரும் –

ஆத்மாவை ஏன் ஏற்க வேண்டும் -இதற்கு பிரமாணம் -சான்று -என்பதைப் பார்ப்போம் –
முதலில் நம் அனுபவத்தில் இருந்தே ஆத்மாவை அறிய முடியும்
நான் அறிகிறேன் -நான் பார்க்கிறேன் -போன்ற அனுபவங்களில் அறிவை உடையவனாக நான் என்னும் ஆத்மா அறியப்படுகிறது அன்றோ –
மேலும் இது என் உடல் என்று நாம் சொல்லுகிறபடியால் நான் என்பவன் உடலைக் காட்டிலும் வேறுபட்டவன் என்றும் அறிந்து விடலாம்
ஆகவே ப்ரத்யக்ஷம் -புலன்களால் ஏற்படும் அறிவு தான் ஆத்மாவை அறிய முதல் பிரமாணம்

ஆத்மா இந்த்ரியானாம் -மனஸ் புத்தி பிராண இவற்றைத் தாண்டி ஞான ஆச்ரயமான ஓன்று
இந்திரியங்கள் கருவி -பயன் படுத்தி -அறிகிறோம்
நான் கண்ணாலே பார்க்கிறேன் என்பது கோடாலியால் வெட்டுகிறேன் போல் கருவி வேறே கர்த்தா வேறே
ஆத்மாவை அனுமானம் செய்தும் அறியலாம் -நான் கத்தியால் வெட்டுகிறேன் என்று சொல்லும் பொழுது
அறிவற்ற அசேதனப் பொருளான கத்தி தானாகவே எதையும் வெட்டாது
அத்தை இயக்க அறிவுள்ள ஒருவர் வேண்டும்
அதே போலே கண்ணால் பார்க்கிறேன் நாக்கால் சுவைக்கிறேன் என்னும் பொழுது இந்திரியங்களும்
அறிவற்ற பொருள்களான படியால் அவற்றை இயக்க அறிவுள்ள ஒருவர் தேவை -அவர் தான் ஆத்மா

இந்த உடலே தான் ஆத்மாவா
சாருவாக மதத்தில் சரீரமே தான் ஆத்மா என்று சொல்கிறார்கள்
நான் மனுஷ்யன் நான் உயரமானவன் என்று எல்லாம் நமக்கு அறிவு ஏற்படுகிற படியால்
மனிதத்தன்மை உயரம் இவை எல்லாம் சரீரத்தின் தன்மைகள் ஆகிறபடியால்
நான் என்பது சரீரமாகத் தான் இருக்க வேண்டும் என்பது அவர்கள் வாதம்
மனுஷ்ய சரீரத்தை உடைய நான் என்று சொல்லாமல் நான் மனுஷ்யன் என்பதால் உடலே ஞானம் உடைய
ஆத்மா என்பர் லோகாயுத சாருவாகர்

ஆனால், அப்படி ஒப்புக் கொண்டால் பல.தோஷங்கள் ஏற்படுகி்றன
1-சரீரம் என்பது கை கால் முதலான பல அயவங்களி்ன் சேர்க்கையால் உருவான ஒரு அவயவி –
ந்யாய மதத்தி்ன் படி, ஒரு அவயவம் குஸறந்தாலும், அதிலிருந்து உருவான அவயவி மாறி விடும்.
ஆகவே ஒரு கையோ காலோ குறைந்தாலும் இந்த சரீரம் மாறி விடுகிறது.
சரீரமே ஆத்மா என்று ஒப்புக் கொண்டால், கை வெட்டுப் பட்டால் ஆத்மாவே அழிந்து விடும் என்று ஒரு தோஷம் –
2-ந்யாய மதத்தி்ன்படி நமது சரீரம் ஒவ் ஓரு விநாடியும் மாறிக் கொண்டே இருக்கிறது,
பல அவயவங்கள் சேருகிறபடியாலும் பிரிந்து போகிறபடியாலும்.
ஆகவே சிறு வயதில் நமக்கு இருந்த சரீரமும் இப்போது இருக்கும் சரீரமும் வேவ்வேறு.
சரீரமே தான் ஆத்மா என்றால் வயதாகும் போது ஆத்மாவே மாறி விடுகிறது என்பதாகும்.
ஆகவே சிறு வயதில் பார்த்த ஒரு பொருளை இப் பொழுது நினைத்துப் பார்க்க முடியாமல் போகும்,
அன்று பார்த்த ஆத்மா இ்ன்று இல்லாதபடியால்.
3-பார்த்தவர் வேறே நினைப்பவர் என்றாலும் பதிவு சம்ஸ்காரம் -அனுபவித்ததால் வந்த பதிவு என்று கொண்டு சாமதானம் செய்பவர் –
இதை விட லாகவமாக ஆத்மா வேறே தேகம் சரீரம் வேறே என்று கொள்ளலாமே –
4-ஸ்தன்ய பாநம் – சரீரமே ஆத்மா என்றால், சரீரம் இப் பொழுது தான் உண்டானபடியால் அதற்குப் பால் குடிக்கும் முறை
தெரிந்திருக்க வாய்ப்பில்லை-

இந்த்ரியங்களே ஆத்மா என்று சொல்லலாமா
கண் பார்க்கிறது”, “காது கேட்கிறது”போன்ற வ்யவஹாரங்கஸளக் கொண்டு கண், காது முதலான
இந்த்ரியங்களே தா்ன் ஆத்மா என்று சொல்லலாம் என்று சிலர் கூறுகி்றனர். ஆனால், இந்த மதமும் ஒவ்வாது.
i. கண் என்ற இந்த்ரியம் தான் ஆத்மா என்று கொண்டால், ஒருவருக்கு கண் மட்டும் அழிந்தால் ஆத்மாவே
அழிந்து விட்டது என்று ஆகும். ஆனால் உலகில் அப்படி நாம் காண்பதில்ஸல.
கண் இழந்தவர்களும் மற்றப் புலன்களைக் கொண்டு வாழ்கின்றனர்
ii. ஒருவர் கண்ணிருக்கும் போது ஒரு பூவைப் பார்த்திருந்தால், ஏதோ காரணத்தால் அவர் கண்ணை இழந்தாலும்,
பிற் காலத்தில் அந்தப் பூவை நினைத்துப் பார்க்க முடிகிறது உலகில்.
ஆனால், கண் தான் ஆத்மா என்று கொண்டால், கண் அழிந்து விட்டால், அந்தப் பூவை அறிந்த ஆத்மாவே
அழிந்து விட்டபடியால் பிற்காலத்தில் எப்படி நினைவு வரும்?
iii. இந்த்ரியமே தான் ஆத்மா என்றால், கண் என்பது ஒரு ஆத்மா, தோல் என்பது வேறே ஓரு ஆத்மா என்பதாகும்.
அப்படி இருந்தால், நேற்று இந்தக் குடத்தைப் பார்த்த நானே இ்ன்று கண்ணை மூடி அதைத் தொடுகிறவன் என்கிற ஜ்ஞாநம் ஏற்படவே முடியாது.
ஏன் என்றால், குடத்தைப் பார்த்த கண் வேறே ஓரு ஆத்மா, இப்பொழுது தொடும் தோல் வேறே ஒரு ஆத்மா.

மனது தான் ஆத்மா என்றும் கொள்ளலாமா
சரீரமோ இந்த்ரியமோ அழியக் கூடிய பொருள்கள் -ஆகையால் அவை தான் ஆத்மா என்று கொண்டால்
முன்னால் சொன்ன தோஷங்கள் வரும்
மனதோ நித்தியமானது -அதையே ஆத்மா என்று கொண்டால் என்ன என்று சிலர் ஆக்ஷேபிக்கின்றனர்
ஆனால் அதுவும் சரியில்லை
நியாய மதத்தின் படி அணுவாக நுண்ணியதாக இருக்கும் பொருள்களையும் அவற்றில் இருக்கும் குணங்களையும்
இந்த்ரியங்களைக் கொண்டு அறிய முடியாது
மனது என்பதோ நுண்ணிய பொருள் -அதனால் தான் மனதை நம்மால் காண முடிவது இல்லை
மனது தான் ஆத்மா என்று கொண்டால் ஆத்மாவையும் ஆத்மாவின் இடத்தில் இருக்கும் ஞானம் ஸூகம் துக்கம்
முதலான குணங்களையும் நம்மால் அறிய முடியாமல் போகும்
இது உலகிற்குப் புறம்பானது -நமக்கு நான் அறிகிறேன் நான் ஸூகமாக உள்ளேன் நான் துக்கமாக உள்ளேன் என்று
ஆத்மாவையும் ஆத்மாவின் குணங்களையும் பற்றின அறிவு கண்டிப்பாக ஏற்படுகிறது
இது ஏற்பட முடியாது மனது தான் ஆத்மா என்று கொண்டால்-

தேகாத்ம பிரமம் தவிர்த்தால் தானே வேறே லோகம் என்று கைங்கர்யம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் வரும்
இனி ஆத்மாவின் குணங்கள் பார்ப்போம்

ஜீவாத்மாவின் குணங்கள்
ஞானம் -அறிவு
சம்ஸ்காரம் -பதிவு
ஞானம் -இச்சை -ஆசை என்றும் த்வேஷம் வெறுப்பு -என்றும் தூண்டி
பிரயத்தனம் -முயற்சி மூலம்
தர்மம் -புண்யம் / அதர்மம் -பாபம் -செய்து
ஸூகம் -துக்கம் ஏற்பட்டு
ஞானம் சம்ஸ்காரம்
இப்படி சுழன்று சுழன்று இருக்குமே

1-ஞானம் -புத்தி
2-ஆசை -இச்சா
3-த்வேஷம்
4-பிரயத்தனம் –க்ருதி
5-சுகம்
6-துக்கம்
ஏற்பட்டு சுகம் உடையவன் என்ற ஞானம் ஏற்படும்
7-தர்மம் -புண்யம்
8-அதர்மம் -பாபம் –
9-சம்ஸ்காரம் -ஞானம் முதலில் பின்பும் வந்து இது சம்ஸ்காரம் -பதிவு

இனி மனஸ்-ஒன்பதாவது த்ரவ்யம் பார்ப்போம்
சுகாதி உபலப்தி சாதனம்-இந்திரியம் -வழியாகவும் -கருவியாகவும் இருப்பது லக்ஷணம்
காரணமாக சாதனம் மட்டும் என்றால் ஆத்மாவும் காலமும் திக்குக்கும் சேரும் -அதி வியாப்தி தோஷம் வரும்

ஸூகம் -துக்கம் முதலான ஆத்மாவின் குணங்களை நாம் அறிவதற்கு காரணமாக இருக்கும் இந்திரியம் மனது
என்று மனதின் லக்ஷணம் சொல்லப்படுகிறது

மற்ற ஒரு லக்ஷணம் –
ஸ்பர்சம் அற்றதாகாவும் -செயல் உடையதாகவும் இருப்பது மனஸ்ஸூ –
ஸ்பர்சம் ரஹித -ஆகாசம் திக்கு காலம் ஆத்மா மனஸ் ஐந்துக்கும் உண்டு –
முதல் நான்கும் விபு -பரவி இருப்பதால் நகர முடியாதே -செயல் இருக்காதே –
செயல் உடையதாகவும் -கிரியாவத்வம்-மனசுக்கே
கண்ணால் பார்க்கிறோம் -ஒரு ஞானத்துக்கு ஒரு கருவி
நினைவு -ஸ்ம்ருதிக்கு கருவி மனசு –

நாம் பார்ப்பதுக்குக் கண் கருவியாக இருப்பது போல் நாம் சிந்திப்பதற்கு கருவியாக மனஸ்ஸூ உள்ளது
இரண்டு ஆத்மாக்களுக்குப் பொதுவாக ஒரே மனஸ்ஸூ இருந்தால் ஒருவர் நினைப்பதுவே மற்ற ஒருவரும்
நினைக்க வேண்டும் -அப்படி உலகில் காண்பது இல்லை
ஆகையால் ஒவ் ஒரு ஆத்மாவுக்கும் தனித்தனியாக ஒரு மனது உள்ளது
ஆத்மாக்கள் அனந்தமாக எண்ணில் அடங்காததாக இருக்கிறபடியால் மனசுக்களும் உலகில் அனந்தங்கள்
ப்ரத்யாத்ம நியதத்வாத் அனந்தம் –

மனத்தின் அளவு என்ன
இந்த்ரியத்தில் இருந்து ஒரு ஞானம் உண்டாவதற்கு
ஆத்மா –மனஸ் – இந்திரியம் -விஷயம் -என்கிற வரிசையில் சம்யோகம் ஏற்பட வேண்டும்
மனது விபுவாக இருந்தால் விபுவான மனதுக்கும் விபுவான ஆத்மாவுக்கும் சம்யோகம் ஏற்படவே முடியாது –
இரண்டு இடத்திலும் கிரியை ஏற்பட முடியாதபடியால் –
சம்யோகம் உண்டாகத் தானே கிரியை வேண்டும் நித்தியமான சம்யோகமாய் இருக்கட்டுமே என்றால் அதுவும் ஒவ்வாது

ஆத்மா மனசா சம்யுக்த-மனசா இந்திரியம் -அது விஷயம் இப்படி சங்கிலி தொடர்பால் ஞானம் –
இது இல்லாமல் தூங்கும் பொழுது விஷயமோ இந்த்ரியங்களோ இல்லாமல் -மனசு நினைத்தே சம்யோகம்
ஆழ்ந்த உறக்கத்தில் ஸூஷுப்தி -நிலையில் இந்த சம்யோகம் போகும்
ஆத்மாவுக்கும் மனசுக்கும் சம்யோகம் இல்லா விட்டால் தான் ஆத்மா ஆழ்ந்த தூக்கத்தை அடைய முடியும்
ஆத்மாவுக்கும் மனசுக்கும் நித்தியமான சம்யோகம் இருந்தால் சம்யோகம் இல்லாத காலமே இல்லாமல் போகும் —
ஆத்மாவுக்கு தூக்கமே ஏற்படாமல் போய் விடும் –
ஆகையால் மனஸ்ஸூ விபுவாக இருக்க முடியாது –

மனது நடுத்தர அளவை -மத்யம -பரிணாமத்தை -உடையதாக இருந்தால் அதுக்கு அழிவு நிச்சயம் ஏற்பட வேண்டும்
அதுவும் ஒப்புக் கொள்ள முடியாது
ஆகையால் மனஸ்ஸூ அணுவான நுண்ணியதாக த்ரவ்யமாகவே தான் இருக்க வேண்டும்
ஆத்மாவும் மனசும் அணு என்றால் மனஸ் ஸ்பிருதத் நாடிக்குள் போகும் -ஸ்ப்ருதத் குகைக்குள் மனசு இருந்தால் ஞானம் ஏற்படாது

மனசுக்கு மூன்று நிலை
இந்திரியங்கள் தொடர்பால் -ஞானம் –
ஸ்வப்னம் நிலையில் நினைவால் ஞானம் –
ஸ்ப்ருத்தத் உள்ளே போய் ஞானம் வராதே

அணுவாக இருப்பதால் அதை அழிப்பதற்கு வேறு ஒரு பொருள் உலகில் இல்லை
ஆகையால் மனஸ்ஸூ நித்யமாகத் தான் இருக்க வேண்டும் –
மோக்ஷம் -எப்படி நித்யம் என்றால் –
நியாய படி முக்தி -ஆத்மாவும் மனசும் தொட்டுண்டே இருந்தாலும் இயக்க மாட்டார் -சிந்திக்க மாட்டார்
நான் புஸ்தகத்தை தொட்டுக் கொண்டு இருக்கிறேன் போல் முக்தியிலும் அழியாமல் நினைக்க கருவியாக இல்லாமல்
மனசால் பாதிக்கப் பட மாட்டார்

இதுவரை ஒன்பது த்ரவ்யங்களைப் பார்த்தோம்
இனி -24-குணங்களைப் பார்த்து எந்த குணங்கள் எந்த த்ரவ்யங்களில் உள்ளன என்பதைப் பார்ப்போம்

————–

பாடம் –19-குணங்கள் -ரூபம் முதல் –சங்க்யா வரை –

ரூபம்
வடிவம் அல்ல நிறம் என்பதையே இங்கு ரூபம் என்கிறது
சஷூர் மாத்ர க்ராஹ்யம் குண -என்பது லக்ஷணம் -மூன்று தன்மைகள் -தலங்கள் –
சஷுர் இந்த்ரியத்தால் மட்டும் கிரஹிக்கப்படும் குணம் ரூபம் என்று அழைக்கப் படுகிறது
சஷுர் இந்த்ரியத்தால் கிரஹிக்கப்படுதல்
மற்ற இந்த்ரியங்களால் கிரஹிக்கப்படாமல் இருத்தல்
குணமாய் இருத்தல்
ஆகிய மூன்று பண்புகளின் சேர்க்கை தான் ரூபத்தின் லக்ஷணம் ஆகும்

இதில் முதலாவதான தலத்தை விட்டால் -எந்த இந்த்ரியத்தாலும் கிரஹிக்கப் படாத குருத்வம் -அதி வியாப்தி ஏற்படும் –
(பாரம் -எடை -புலன்களுக்கு எட்டாதது அனுமானித்துத் தான் அறியலாம் நியாய மதம் )
ஆகவே தலம் தேவை
இரண்டாவது தலத்தை விட்டால் -சம்யோகம் சங்க்யா முதலிய குணங்களில் அதி வியாப்தி உண்டாகும் –
அவையும் சஷுர் இந்த்ரியத்தால் கிரஹிக்கப்படும் குணங்கள் தான்
ஆகவே இரண்டாவது தலமும் தேவை
சம்யோகம் சங்க்யா முதலிய குணங்கள் த்வக் இந்த்ரியத்தாலும் கிரஹிக்கப்படுபவை
ஆகையால் மற்ற இந்த்ரியத்தால் கிரஹிக்கப்படாமல் இருக்கும் பண்பு அவற்றுக்கு இல்லை
(இது குடம் ஒரு குடம் என்பதை கண்ணை மூடி தொட்டு அறியலாமே )
மூன்றாவது தலத்தை விட்டால் ரூபத்வம் என்ற சாமான்யத்தில் அதி வியாப்தி வரும்
ஒரு குணம் எந்த இந்த்ரியத்தால் கிரஹிக்கப் படுகிறதோ அதே இந்திரியம் தான் அந்த குணத்தில் இருக்கும்
சாமான்யத்தையும் அந்த குணத்தின் அபாவத்தையும் கிரகிக்கும் என்ற நியமம் உள்ளது
ஆகையால் சஷுஸ்ஸால் கிரஹிக்கப் படுதல் -மற்ற இந்த்ரியங்களால் கிரஹிக்கப்படாமை என்ற இரண்டும்
ரூபத்வம் -நிறத்தன்மை –என்கிற சாமான்யத்துக்கும் உண்டு -ஆகையால் அதி வியாப்தி –
(ரூபத்வத்தின் அபாத்வமும்-இல்லாமையும் கண்ணாலே கிரஹிக்கிறோம்
ரூபத்வம் சாமான்யமாகத் தானே இருக்கும் குணம் ஆகாதே )
அத்தைப் போக்க மூன்றாவது தலத்தைச் சேர்க்க வேண்டும் ரூபத்வம் சாமான்யமே ஒழிய குணம் ஆகாது

இப்படி லக்ஷணம் பரீஷை பண்ணி அறிந்தால் மற்ற வித்யைகளுக்கு பழக்கம்- கை விளக்காக இருக்கும்

ரூபத்தின் வகைகள்
வெளுப்பு கருப்பு மஞ்சள் பச்சை சிவப்பு பழுப்பு சித்ரம்-கலவை இப்படி ஏழு வகை
White, Black, Yellow, Green, Red, Brown and Mixed.

ரூபம் என்கிற குணம் பிருத்வீ ஜலம் தேஜஸ்-ஆகிய மூன்று த்ரவ்யங்களில் உண்டு
பிருத்வியில் ஏழு வகை ரூபங்களும் உண்டு
ஜலத்தில் அபாஸ்வர சுக்லம் ஒளி விடாத வெண்மை -transparent என்ற நிறம் உள்ளது –
ஒரு பொருளில் நிறம் இருந்தால் தான் அது கண்ணுக்குப் புலப்படும் என்கிற நியமம் உண்டே –
(ஆகாசம் இதனால் தான் கண்ணுக்குத் தெரிய வில்லை என்கிறார் )
ஆகையால் ஜலத்திலும் ரூபம் உண்டு
தேஜஸ்ஸிலே பாஸ்வர சுக்லம்-ஒளி விடும் வெள்ளை -என்ற நிறம் உள்ளது
நெருப்பில் மஞ்சள் போன்ற நிறங்கள் அதில் சேர்க்கப்பட்ட பிருத்வியாலான எரி பொருள்களின் நிறங்கள்

வெவ்வேறு நிறங்களைக் கொண்ட அவயவங்களில் இருந்து -நூல்களில் இருந்து -ஒரு அவயவி -துணி -உண்டானால்
அது கண்ணுக்குப் புலப்படுகிற படியால் அதில் ரூபம் இல்லை என்று சொல்ல முடியாது —
(துணி ரூபம் தெரிகிறது அவயவங்கள் நிறம் தான் என்று சொல்ல முடியாதே –
ரூபம் வியாப்த்த விருத்தி ஒன்றாகவே இருக்கும் என்பர் )
ஒரு பொருளில் எங்கும் ஓக்க ஒரு நிறம் தான் இருக்க முடியும் என்கிறபடியால்
ஒவ் ஒரு பகுதியில் ஒவ் ஒரு நிறம் உள்ளது என்று சொல்ல முடியாது
ஆகையால் புதிதான சித்ர -ரூபம் -கலவை -கலந்த ரூபம் என்ற ஓன்று அந்த துணியில் இருப்பதாக
ஒப்புக் கொள்ளப் படுகிறது

————–

ரஸம் -சுவை
ரசன இந்த்ரியத்தால் கிரஹிக்கப்படும் குணம் -என்று ரஸத்தின் லக்ஷணம்
இங்கு மாத்ர விசேஷணம் இல்லை -இரண்டு தலங்கள் தான் –
ரஸத்வம் -சாமான்யம் -சாமான்யத்துக்கும் உண்டே அதி வியாப்தி -வரும் ஆகவே குணம் விசேஷணம் –

அது ஆறு வகைப்படும்
மதுரம் -இனிமை -அம்லம் புளிப்பு -ஆசிட் -லவணம்-உவர்ப்பு -கடு-கார்ப்பு -கஷாயம் -துவர்ப்பு -மற்றும் திக்தம் -கசப்பு
ரஸம் என்பது பிருத்வீ ஜலம்-இரண்டு த்ரவ்யங்களிலும் இருக்கும்
பிருத்வீயில் ஆறு வகைகளான சுவைகளும் இருக்க முடியும்
ஜலத்தில் மதுர ரசம் இனிப்பு மட்டும் தான் உண்டு -பொதுவாக இது நமக்குத் தெரியா விட்டாலும்
கசப்பான நெல்லிக்காயை உண்ட பின்பு ஜலத்தைப் பருகினால் அதில் இருக்கும் இனிப்பு நமக்குத் தெரிய வரும்

—————-

கந்தம்–மணம்
க்ராண இந்த்ரியத்தால் கிரஹிக்கப்படும் குணம் -கந்தத்தின் லக்ஷணம்
அது ஸூரபி -நறு மணம் என்றும்
அஸூரபி-துர் நாற்றம் என்று இருவகைப்படும்
கந்தம் என்பது பிருத்வியில் மட்டும் தான் உண்டு –
பிருத்வியில் இரண்டு வகையான கந்தங்களும் இருக்க முடியும்

சித்ர ரூபத்தை ஒப்புக் கொண்டதைப் போல்
சித்ர ரஸம் சித்ர கந்தம் என்பதை ஒப்புக் கொள்வது இல்லை
வெவ்வேறு நிறங்களைக் கொண்ட நூல்களில் இருந்து உண்டான துணியில் சித்ர ரூபம் என்ற ஓன்று இல்லாவிடில்
அந்தத் துணி கண்ணுக்குத் தெரியாமல் போய் விடும் -ஆகையால் அத்தை ஒப்புக் கொண்டோம்
இங்கு வெவ்வேறு ரசங்களைக் கொண்ட பகுதிகளில் இருந்து ஒரு த்ரவ்யம் உண்டானால்
அதில் ரஸம் இல்லாவிட்டாலும் குறை இல்லை
கண்ணும் தோலும் தான் த்ரவ்யத்தை அறியும்
க்ராண இந்திரியம் மணம் மட்டுமே கிரகிக்கும்
பச்சிடியில் சித்ர ரசம் இருக்கு என்று கொள்ள வேண்டாம் அதில் உள்ள அவயவங்கள் சுவைகள் ரசம் அறிகிறோம்

————–

ஸ்பர்சம் –தொடு உணர்ச்சி
த்வக் இந்த்ரியத்தால் மட்டும் கிரஹிக்கப்படும் குணம் என்று ஸ்பர்சத்தின் லக்ஷணம்
இங்கும் மாத்ர விசேஷணம் உண்டு –
அது மூன்று வகைப்படும் -சீதம் -குளிர்ச்சி -உஷ்ணம் -வெப்பம் -அனுஷ்ணா சீதம்-
ஸ்பர்சம் என்பது – பிருத்வீ ஜலம் தேஜஸ் வாயு -என்ற நான்கு த்ரவ்யங்களிலும் இருக்கும்
குளிர்ந்த ஸ்பர்சம் ஜலத்தில் இருக்கும்
வெப்பமான ஸ்பர்சம் தேஜஸ்ஸிலே இருக்கும்
பிருத்வியிலும் வாயுவிலும் மிதமான ஸ்பர்சம் இருக்கும்

வாயுவில் ஸ்பர்சம் மட்டும்
தேஜஸ்ஸில் ரூபமும் ஸ்பர்சமும் இரண்டும்
ஜலத்தில் ரூபம் ரஸம் ஸ்பர்சம் மூன்றும்
பிருத்வியில் ரூபம் ரஸம் கந்தம் ஸ்பர்சம் நான்கும் உண்டு

ரூபம் ரஸம் கந்தம் ஸ்பர்சம் -இவற்றின் நித்யத்வமும் அநித்யத்வமும்
பிருத்வீ ஜலம் தேஜஸ் மற்றும் வாயுவின் கார்யங்கள் அநித்யமான படியால்
அவற்றில் இருக்கும் ரூபங்கள் முதலானவை அநித்யங்கள்

ஜலம் தேஜஸ் மற்றும் வாயுவின் பரமாணுக்கள் நித்தியமான படியால்
அவற்றில் இருக்கும் ரூபம் முதலானவைகளை நித்யங்கள்

பிருத்வீ பரமாணுக்கள் நித்தியமாய் இருந்தாலும் அவற்றில் இருக்கும் ரூபம் முதலானவை நித்யங்கள் அல்ல
ஏன் என்றால் பிருத்வியில் பாகம் -ஒருவகை சமையல் -ஒரு விதமான வெப்பத்தின் சேர்க்கை ஏற்பட்டால்
மாங்காய் மாம்பழம் ஆகுதல் பால் தயிர் ஆகுதல் போன்ற இடத்தில் பரமாணு முதல் மாங்காய் பால் வரை உள்ள
அனைத்து த்ரவ்யங்களிலும் நிறம் சுவை மணம் இவை மாறுகின்றன
ஆகையால் பிருத்வீ பரமாணுக்களில் இருக்கும் ரூபம் முதலியவை நித்தியமாக இருக்க முடியாது

——————-

சங்க்யா–எண்ணிக்கை
ஏகாத்வாத் வியவஹார ஹேது சங்க்யா –
ஓன்று இரண்டு போன்ற சொல்லாடலுக்குக் காரணமாக இருப்பது சங்க்யா–என்று சொல்லப்படும் -எண்ணிக்கை
ஒரு பொருளில் இருக்கும் ஒருமை இருமை முதலியவையை இட்டுத்தான்
இது ஓன்று இவை இரண்டு போன்ற வார்த்தைப்பாடுகள் வருகின்றன

எண்ணிக்கை என்பது ஒன்பது த்ரவ்யங்களுக்கும் உண்டு
ஆகாசம் காலம் திக்கு ஒன்றே ஆகவே சங்க்யா இவற்றுக்கும் உண்டே –
ஓன்று இரண்டு மூன்று நான்கு –பத்து நூறு ஆயிரம் பதினாயிரம்–என்று தொடங்கி பரார்த்தம் வரை எண்ணிக்கை உள்ளது

ஒவ் ஒரு த்ரவ்யத்திலும் இயற்கையாக ஒருமை மட்டும் இருக்கும்
எண்ணிக்கை த்ரவ்யங்களை ஆஸ்ரயித்தே இருக்கும்
ஏகத்துவம்-பரமாணு நித்யம் -அதில் உள்ள ஏகத்துவம் நித்யம்
குடமே உண்டாகும் பொழுது அதில் உள்ள ஏகத்வமும் உண்டாகும்
அது நித்தியமான வஸ்துவாக இருந்தால் அதில் இருக்கும் ஒருமையும் நித்யமாகவே இருக்கும்
அது அநித்யமாக இருந்தால் அதில் இருக்கும் ஒருமையும் அநித்யம்

இருமை மும்மை முதலானவை அனைத்துப் பொருள்களிலும் அநித்யமானது தான்
அபேஷா புத்தி -தெரிந்து கொள்ளும் புத்தி வந்தால் தானே இருமை போன்றவை ஆகியவை தோன்றும் –
எப்பொழுது ஒருவனுக்கு இவை இரண்டு இவை மூன்று என்ற ஞானம் ஏற்படுகிறதோ
அப்பொழுது மட்டும் இருமை மும்மை ஆகியவை தோன்றும் –
அந்த ஞானம் அழிந்த உடன் அந்த எண்ணிக்கையும் அழிந்து விடும்

——————

பாடம் –20-
குணங்கள் –பரிமாணம் முதல் சப்தம் வரை –

6-வது குணம் -பரிமாணம் -அளவு
ஒரு பொருளைப் பற்றி ’இது சிறியது’, ’இது பெரியது’ போன்ற சப்த ப்ரயோகங்களுக்கு
(சொல்லாடல்களுக்குக்) காரணமாக இருப்பது பரிமாணம் என்று அழைக்கப்படுகிறது.
’சிறியது’ என்று ஒரு பொருளைச் சொல்ல, அதைப் பற்றிச் ’சிறியது’ என்ற ஜ்ஞாநம் இருக்க வேண்டும்.
’சிறியது’ என்ற ஜ்ஞாநம் ஏற்படுவதற்கு அந்தப் பொருளில் சிறுமை என்ற ஒரு அளவு (பரிமாணம்) இருக்க வேண்டும்,
சிறுமை இல்லாமல் சிறியது என்ற ஜ்ஞாநம் ஏற்பட முடியாது என்பது ந்யாய மதம்.

• பரிமாணம் -அளவு -என்பது ஒன்பது த்ரவ்யங்களிலும் உண்டு
நவ த்ரவ்ய வ்ருத்தி -ஸங்க்யை போல்

• அளவு -பரிமாணம்) நான்கு வகைப்படும் –
அணு (நுண்ணியதாயிருக்கும் தன்மை —
மஹத் (பெரியதாயிருக்கும் தன்மை )
தீர்க்கம் (நீண்டதாயிருக்கும் தன்மை ) மற்றும்
ஹ்ரஸ்சம் (குள்ளமாயிருக்கும் தன்மை ).

• ப்ருத்வி ஜலம் தேஜஸ் வாயு ஆகிய நான்கு பூதங்களின் பரமாணுக்களும் த்வ்யணுகங்களும்,
(இதுவும் கண்ணுக்குத் தெரியாது முன்பே பார்த்தோம் )
மனது (மனஸ்) என்ற த்ரவ்யமும் நுண்ணியவை — நம் கண்களுக்குப் புலப்பட மாட்டா.
ஆகையால் அவற்றுக்கு அணு பரிமாணம் உள்ளது.

ப்ருத்வீ ஜலம் தேஜஸ் வாயு ஆகியவற்றில் த்ர்யணுகம் தொடங்கி
நாம் பார்க்கும் குடம், மரம், துணி, புத்தகம், நம் உடல், யானையின்
உடல், கடல், மஸல, சூறாவளி ஆகியவை அனைத்துமே மஹத்
(பெரியதாயிருக்கும் தன்மையை உடையவை )

• ஆகாசம் காலம் திக் ஆத்மா ஆகிய நான்கும் விபு (எங்கும் பரந்து
இருப்பவை ). இவற்றின் பரிமாணம் பரம மஹத்வம் (பெரியதாய்
இருப்பதன் மேல் எல்லை ) என்று சொல்லப்படுகிறது.

———

7-வது குணம் -ப்ருதக்த்வம்–வேறுபாடு –

இதி அஸ்மாத் ப்ருதக்

• “இந்தப் பொருள் அந்தப் பொருளிடம் இருந்து தனிப்பட்டது / வேறுபட்டது” என்ற வ்யவஹாரத்திற்கு
(சப்த ப்ரயோகத்திற்கு / வார்த்தைப் பாட்டிற்குக்) காரணம் ப்ருதக்த்வம் என்று சொல்லப்படுகிறது.
• இது ஒன்பது த்ரவ்யங்களிலும் இருக்கும்.
ஒரு ப்ருத்வீ பரமாணு மற்ற ஒரு ப்ருத்வீ பரமாணுவைக் காட்டிலும் தனியானது,
ஜல பரமாணுவைக் காட்டிலும் கூடத் தனியானது,
ஆகாசம் காலம் ஆத்மா முதலியவற்றைக் காட்டிலும் கூடத் தனியானது.
அதே போல் , ஆகாசம் என்பது காலம், திக், ஆத்மா, மனது, ப்ருத்வீ ஜலம் முதலானவற்றைக் காட்டிலும் தனியானது.
ஆகையால், ப்ருதக்த்வம் என்பது அனைத்து த்ரவ்யங்களிலும் உண்டு

———

8-வது குணம் -சம்யோகம் –சேர்க்கை –

அவயவி அவயவங்கள் சம்பந்தம் நூல்கள் துணி சமவாயம் முன்பு பார்த்தோம்
அவயவி இரண்டும் தொட்டுக் கொண்டு இருக்கும் -மேஜை கை -வெறுமனே தொட்டுக் கொண்டே இருக்கும் -சம்யோகம்

• “இந்தப் பொருட்கள் சேர்ந்துள்ளன / தொட்டுக் கொண்டுள்ளன” என்ற வ்யவஹாரத்திற்குக்
காரணம் சம்யோகம் என்று சொல்லப்படுகிறது. இருபொருள்களுக்கிடையே சம்யோகம் -சேர்க்கை –
இருப்பதால் தான் அவற்றை நாம் சம்யுக்தங்கள்-சேர்ந்தவை – என்று சொல்கிறோம்.
• இது ஒன்பது த்ரவ்யங்களிலும் இருக்கும்
• குடம் பூமியைத் தொட்டுக் கொண்டிருக்கும், துணி நம் உடலைத் தொட்டுக் கொண்டிருக்கும்,
ஆகாசம் உலகிலிருக்கும் அனைத்தையும் தொட்டுக் கொண்டிருக்கும்.
இதே போல் எந்த த்ரவ்யத்தை எடுத்துக் கொண்டாலும் அது எதாவது ஒரு த்ரவ்யத்தைத் தொட்டுக் கொண்டு தான் இருக்கும்

கபாலம் குடம் பூமியில் இருக்கும் பொழுது
கபாலத்துக்கும் குடத்துக்கும் சமவாயம் குடத்துக்கும் பூமிக்கும் சம்யோக சம்பந்தம்
சம்யுக்த வ்யவகார ஹேது சம்யோகம்

———-

9-வது குணம் -விபாகம் –பிரிவு

• சம்யோகத்தை அழிக்கும் குணத்திற்கு விபாகம் என்று பெயர்.
• விபாகம் ஒன்பது த்ரவ்யங்களிலும் ஏற்பட முடியும்.
• இரண்டு பொருட்கள் தொட்டுக் கொண்டிருக்கும் போது, ஏதாேது ஒரு பொருளிலோ இரண்டு பொருள்களிலுமோ
க்ரியை ஏற்பட்டால், முதலில் விபாகம் என்ற குணம் இரண்டு பொருள்களிலும் ஏற்படும்.
அந்த விபாகம், அந்தப் பொருட்களுக்கு இடையில் இருக்கும் சம்யோகத்தை அழிக்கும் .
சம்யோகம் அழிந்த பிறகு தான் அந்தப் பொருட்கள் விலகிச் செல்கி்ன்றன

தேர் நகர -க்ஷணம் தோறும் -சம்யோகம் அழிந்து பூர்வ தேசம் சம்யோக நாசம் -உத்தர தேசம் –
கிரியை -விபாகம் -காலம் முன்பே பார்த்தோம்
கிரியை விபாகம் நாசம் சம்யோகம் இப்படி நான்கும் முன்பே பார்த்தோம்

———–

10/11-வது குணம் -பரத்வம் -அபரத்வம் —

• ’பரம்’, ’அபரம்’ போன்ற வ்யவஹாரங்களுக்குக் காரணமாக இருக்கும் குணங்கள் பரத்வமும் அபரத்வமும்.
• இவை ப்ருத்வீ ஜலம் தேஜஸ் வாயு மற்றும் மனஸ் என்ற ஐந்து த்ரவ்யங்களில் இருக்கும்,
ஏன் என்றால் இவை தான் தேசத்தாலோ காலத்தாலோ அளவு பட்டவையாக இருக்க முடியும்.
எங்கும் பரந்து இருக்கும் ஆகாசத்ஸதப் பார்த்து, ஆகாசம் குடத்தைக் காட்டிலும் அருகில் உள்ளது என்று சொல்ல முடியாது
• பரத்வமும் அபரத்வமும் இரண்டிரண்டு வகைப்படும் –
திசையால் ஏற்பட்ட பரத்வம் அபரத்வம், காலத்தால் ஏற்பட்ட பரத்வம் அபரத்வம் என்று.
• தொலைவில் இருக்கும் பொருளில் திசையால் ஏற்பட்ட பரத்வம்
• அருகிலிருக்கும் பொருளில் திசையால் ஏற்பட்ட அபரத்வம்
• பழையதான பொருளில் காலத்தால் ஏற்பட்ட பரத்வம்
• புதியதான பொருளில் காலத்தால் ஏற்பட்ட அபரத்வம்-

ப்ராசீன நியாய மதஸ்தர் இந்த நான்கையும்-ப்ருதக்த்வம் -விபாகம்-பரத்வம் -அபரத்வம் –ஒத்துக் கொள்கிறார்கள்
நவீனர் ஒத்துக் கொள்வது இல்லை -சம்யோகங்கள் மூலமே இவற்றைச் சொல்லலாமே -என்பர் –

———————–

12-வது குணம் -குருத்வம் –எடை —

ஆத்ய பதன முதலில் விழுவதற்கு -அசமவாய காரணம்-குருத்வம்
• ஒரு பொருள் முதன் முதலில் விழுவதற்குக் காரணமான குணம் குருத்வம் என்று அழைக்கப் படுகிறது.
• நாம் கையில் ஒரு பந்தைப் பிடித்துக் கொண்டிருந்து, அதை விடுவித்தால், அந்தப் பந்து விழுகிறது.
விழுதல் என்பது அபேக்ஷணம் –பதநம் என்ற ஒரு வகையான செயல் (கர்ம / க்ரியை ).
10 அடி உயரத்திலிருந்து பூமிக்கு அந்தப் பந்து விழுவதற்குள் அந்தப் பந்தில் எத்தனையோ க்ரியைகள் அடுத்தடுத்து ஏற்படுகி்றன.
• அதில் முதல் விழுதல் மட்டும் குருத்வம் என்று அழைக்கப் படும் -பொருளின் எடை காரணமாக ஏற்படுகிறது,
•விழத் தொடங்கியதும், அந்தப் பந்தில் ’வேகம்’ என்று ஒரு வகையான சம்ஸ்காரம் ஏற்படும்.
சம்ஸ்காரம் கடைசி குணம் -அதன் உள் பிரிவு தான் வேகம் —
ஆகையால், இரண்டாவது விழுதல் தொடங்கி அனைத்து க்ரியைகளும் வேகத்தி்ன் காரணமாகத் தான் உண்டாகி்றன,
குருத்வம் என்ற எடையால் அல்ல.
• ஆகவே, குருத்வத்துக்கு லக்ஷணம் சொல்லும் போது ’முதல் விழுதலுக்குக் காரணமானது’ என்று தான் சொல்ல வேண்டும்

• குருத்வம் (எடை ) என்னும் குணம் ப்ருத்வீ ஜலம் என்ற இரண்டு த்ரவ்யங்களில் மட்டும் தான் உண்டு

——————-

13-வது குணம் -த்ரவத்வம் –நீர்மை

ஆத்ய ஸ்யந்தன அசமவாய காரணம் இது

• ஒரு பொருள் முதன் முதலில் ஓடுவதற்குக் (ப்ரவஹிப்பதற்குக்) காரணமான குணம்
த்ரவத்வம் என்று அழைக்கப் படுகிறது.
• ஓர் அணையில் நீரைத் தேக்கி வைத்து, அணையின் மதகைத் திறந்தால், நீர் ஓடுகிறது.
விழுதல் என்பது ஸ்யந்தனம் என்ற ஒரு வகையான செயல் (கர்ம / க்ரியை ).
நீர் ஒரு அடி தூரம் ஓடுவதற்குள் அந்த நீரில் எத்தனையோ க்ரியைகள் அடுத்தடுத்து ஏற்படுகி்றன.
• அதில் முதல் ஓடுதல் மட்டும் த்ரவத்வம் என்று அழைக்கப்படும்–
பொருளின் நீர்மை காரணமாக ஏற்படுகிறது,
• ஓடத் தொடங்கியதும், அந்த நீரில் ’வேகம்’ என்று ஒரு வகையான சம்ஸ்காரம் ஏற்படும்.
ஆகையால், இரண்டாவது ஓடுதல் தொடங்கி அனைத்து க்ரியைகளும் வேகத்தி்ன் காரணமாகத் தான் உண்டாகி்றன,
த்ரவத்வம் என்ற நீர்மையால் அல்ல.
• ஆகவே, த்ரவத்வத்துக்கு லக்ஷணம் சொல்லும் போது
’முதல் ஓடுதலுக்குக் காரணமானது’ என்று தான் சொல்ல வேண்டும்

• த்ரவத்வம் (நீர்மை) என்னும் குணம் ப்ருத்வீ ஜலம் தேஜஸ் ஆகிய மூன்று த்ரவ்யங்களில் மட்டும் தான் உண்டு

த்ரவத்வதின் வகைகள்

• த்ரவத்வம் இரண்டு வகைப்படும்–
சாம் சித்திக (இயற்கையான) த்ரவத்வம்,
ஸந மித்திக (செயற்கையான ) த்ரவத்வம் என்று.
• இயற்கையான த்ரவத்வம் ஜலத்திற்கு மட்டும் தான் உண்டு.
• செயற்கையான த்ரவத்வம் ப்ருத்வீயிலும் தேஜஸ்ஸிலும் ஏற்படும்.
• ப்ருத்வீ யாலான அனைத்து த்ரவ்யங்களிலும் த்ரவத்வம் செயற்கையாகக் கூட ஏற்படுவதில்லை . உதாஹரணத்திற்கு,
ஒரு குடமோ துணியோ எப்போதும் த்ரவமாக ஆகாது.
ஆனால், நெய் மெழுகு , அரக்கு போன்ற ப்ருத்வீ பொருட்கள், நெருப்பி்ன் வெப்பம் பட்டால், தனது கெட்டிப்பட்ட நிலையை
விட்டு, த்ரவமாக ஆவதைக் காண்கிறோம். ஆகையால், ப்ருத்வீயாலான சில பொருட்களில் த்ரவத்வம் உண்டு.
• அதே போல், தங்கம்,வெள்ளி இரும்பு போன்ற தேஜஸ்ஸாலான பொருட்களுக்கும் நெருப்பி்ன் தொடர்பால்
த்ரவத்வம் ஏற்படுவதைக் காண்கிறோம்.
• ஆகையால், ப்ருத்வீ யாலான சில பொருட்களுக்கும் தேஜஸ்ஸாலான சில பொருட்களுக்கும் த்ரவத்வம் செயற்கையாக ஏற்படுவதுண்டு.

—————-

14-வது குணம் -ஸ்நேஹம்–பசை

• சூர்ணம் (பொடி) முதலியவை பிண்டமாக (கட்டியாக) ஆகுவதற்குக் காரணமான குணம் தான் –
ஸ்நேஹம்–பசை- என்று அழைக்கப்படுகிறது.
• ஸ்நேஹம்– என்பது ஜலத்தில் மட்டும் தான் உண்டு.
• நெய் எண்ணெய் , முதலியவற்றில் நாம் காணும் ஸ்நேஹம்–பசை கூட, அதிலிருக்கும் ஜலத்தினுடையது தான்

————

15-வது குணம் -சப்தம் –ஒலி

ஸ்ரோத்ர இந்த்ரியத்தால் க்ரஹிப்படும் குணம் தான் சப்தம் என்று அழைக்கப் படுகிறது.
• ஆக, (i) ஸ்ரோத்ர இந்த்ரியத்தால் க்ரகிக்கப்படுதல்
(ii) குணமாக இருத்தல் ஆகிய இரண்டு பண்புகளும் சேர்ந்து தா்ன் சப்தத்தி்ன் லக்ஷணம் ஆகி்றன.
• இதி முதல் தலத்தை விட்டு விட்டால்
குணமாய் இருப்பது சப்தத்தி்ன் லக்ஷணம் என்று ஆகும்.
இந்த லக்ஷணத்திற்கு மற்ற அனைத்து குணங்களிலும் அதி வ்யாப்தி சேரும்.
அதைப் போக்குவதற்குத் தான் முதல் பண்பு சேர்க்கப்படுகிறது
• இரண்டாவது தலத்தைச் சேர்க்காமல் போனால், ஸ்ரோத்ர இந்த்ரியத்தால் க்ரஹிக்கப்படுதல் என்ற பண்பு
சப்தத்தில் இருப்பது போல் , சப்தத்வம் என்ற சாமாந்யத்திலும் இருக்கும்படியால் அதி வ்யாப்தி ஏற்படும்.
அதைப் போக்கத் தான் இரண்டாேது தலம் சேர்க்கப்படுகிறது.

• சப்தம் என்னும் குணம் ஆகாசத்தில் மட்டும் தான் இருக்கும்
வாயு இவற்றை எடுத்து வரும் –

• சப்தம் இரண்டு வகைப்படும் – (i) த்வநி (ii) வர்ணம்
• த்வநி என்பது ம்ருதங்கம், பேரீ முதலானவற்றிலிருந்து வருவது
• வர்ணம் (எழுத்து) என்பது தமிழ், சம்ஸ்க்ருதம் முதலான மொழிகளின் வடிவமாக இருக்கும் ஒலிகள்

சப்தம் உண்டாகும் முறைகள்

• சப்தம் மூன்று வழிகளில் உண்டாகிறது
• (i) சம்யோகத்திலிருந்து – நம் கையால் ஒரு ம்ருதங்கத்தை அடிக்கும் போது ஏற்படும் சப்தம்,
நம் கைக்கும் அந்த வாத்தியத்துக்கும் ஏற்பட்ட சம்யோகத்தால் ஏற்படுகிறது
• (ii)விபாகத்திலிருந்து – ஒரு மூங்கிலை எடுத்து, கையால் இரண்டாக முறித்தால், ஒரு ஒலி ஏற்படும்.
அந்த ஒலி, மூங்கிலி்ன் இரு பகுதிகளுக்குள் ஏற்படும் விபாகம் என்ற குணத்திலிருந்து உண்டாகிறது
• (iii) சப்தத்திலிருந்து – ம்ருதங்கத்தை அடிப்பதால்,
வாத்தியம் இருக்கும் இடத்தில் உள்ள ஆகாசப் பகுதியில் சப்தம் உண்டாகும்.
அந்த சப்தம் தனக்கு அருகிலிருக்கும் தேசத்திலுள்ள ஆகாசப் பகுதியில் தன்னைப் போன்ற வேறு ஒரு சப்தத்தை உண்டாக்கும்.
இதே போல் தொடர்ந்து அடுத் தடுத்த ஆகாசப் பகுதியில் ஒரு சப்தம் அடுத்த சப்தத்தை உண்டு செய்வதால் தான்
சப்தம் நம் காது வரையில் வந்து அடைகிறது-
தண்ணீரில் ஒரு கல்லை போட்டால் எப்படி சிறு சிறு அலைகள் நடுவில் தொடங்கி கரை வரை வந்து சேருமோ
அதே போல் தான் -வீஸீ தரங்க நியாயம்

மேலே புத்தி தொடங்கி மீதம் உள்ள ஒன்பது ஆத்ம குணங்களைப் பார்ப்போம்

———————-

பாடம் –21-குணங்கள் –புத்தி -அறிவு –

16th குணம் -சர்வ வியவஹார ஹேது ஞானம் புத்தி –

தத்வ ஞானத்தால் மோக்ஷம் -அஞ்ஞானத்தால் சம்சார சூழலில் அழுந்துகிறோம் -எல்லா தர்சனங்களிலும் இது உண்டே –

புத்தி என்கிற சொல்லுக்கு சில இடங்களில் அந்த:கரணம் (உள்-இந்த்ரியம் / உட் புலன் ) அதாவது
மனது என்ற பொருள் உண்டு.
அதே போல் புத்தி என்றால் ’உறுதி’ என்ற அர்த்தமும் உண்டு.
ஆனால் இங்கு இவை குறிக்கப் படுவது இல்லை —
புத்தி என்ற சொல் ஜ்ஞாநம் (அறிவு) என்பதைத்தான் இங்கு சொல்லுகிறது.
’புத்தி’, ’ஜ்ஞாநம்’, ’உபலப்தி’ என்ற சொற்கள் எல்லாம் ஒரே அர்த்தத்தைத் உடையவையே
-அநர்த்தாந்தரம்-என்று கௌதமர் அவரது ஸூத்ரத்தில் கூறுகிறார்.

• கீழே ப்ருதக்த்வம், சம்யோகம், பரிமாணம் ஆகியவற்றுக்கு இலக்கணம் சொல்லும் போது
(i) “இவை தொட்டுக் கொண்டுள்ளன என்கிற வ்யவஹாரத்திற்குக் (சொல்லாடலுக்குக்) காரணமானது ஸம்யோகம்
(ii) ’இது தனி யாயது” என்கிற வ்யவஹாரத்துக்குக் காரணமானது ப்ருதக்த்வம்
(iii) ’இது சிறிது”, ’இது பெரிது” என்கி்ற வ்யவஹாரங்களுக்குக் காரணமானது பரிமாணம் (அளவு)
என்று எல்லாம் இலக்கணம் சொன்னோம் —
ஆக, ஒரு பொருளைப் பற்றின ஒவ் ஒரு குறிப்பிட்ட வ்யவஹாரத்திற்கு,
அந்தப் பொருளிலிருக்கும் ஒவ் ஓரு குணம் அறியப் பட்டிருக்க வேண்டும்.

• இப்பொழுது புத்தியி்ன் இலக்கணம் யாது எனில் –
“அனைத்து வ்யவஹாரங்களுக்கும் ( சப்த ப்ரயோகங்களுக்கும்) காரணமானது புத்தி” என்பது தான் .
சர்வ வியவஹார ஹேதுவே புத்தி
• ’அர்த்தம் புத்த்வா சப்த ரசநா (ஒரு பொருளை அறிந்து கொண்ட பிறகு தான் அதைப் பற்றிப் பேச முடியும்’ என்கிற
ந்யாயத்தி்ன் படி எந்த ஒரு வ்யவஹாரத்திற்கும் முன்னால் பேசப்படும் பொருளைப் பற்றின ஜ்ஞாநம் இன்றியமையாதது —
ஆகையால் அனைத்து வ்யவஹாரங்களுக்கும் காரணமானது புத்தி என்கிற அறிவு தான் –

ஞானத்தின் வகைகள் –
• அந்த புத்தி (அறிவு) இரண்டு வகைப்படும்
(i) ஸ்ம்ருதி – நினைவு
(ii) அநுபவம்

• ஸ்ம்ருதியி்ன் இலக்கணம் – “ஸம்ஸ்காரத்திலிருந்து மட்டுமே உண்டாகக் கூடிய ஜ்ஞாநம் தான் ஸ்ம்ருதி” என்று சொல்லப் படுகிறது.
• நாம் ஒரு பொருளை பார்க்கும் பொழுதோ கேட்க்கும் பொழுதோ அந்த அறிவு சில விநாடிகள் தான் இருக்கும்.
ஆனால், அது ஆத்மாவில் ஒரு பதிவை (ஸம்ஸ்காரத்தை ) ஏற்படுத்தி விட்டுச் செல்கிறது.
பிற்காலத்தில், இந்தப் பொருளோடு தொடர்பு பட்ட வேறு ஒரு பொருளை நாம் கண்டால், இந்த சம்ஸ்காரம் தூண்டப்பட்டு இந்தப்
பொருளைப் பற்றின நினைவு நமக்கு ஏற்படுகிறது.
ஸம்ஸ்கார ஜன்ய ஞானம் -உத்போதகம் -சம்ஸ்காரம் தானே எழுப்பும் –
யானைப் பாகனைப் பார்த்து யானை உடன் சேர்ந்து பார்த்த அனுபவத்தின் பதிவு -தொடர்பு பட்ட சம்ஸ்காரம்
ஆக, ஸ்ம்ருதி என்பது சம்ஸ்காரத்திலிருந்து மட்டும் தான் தோன்றுகிறது ,
அதற்கு புலன்கள் (இந்த்ரியங்கள்) தேவையில்லை . அதனால், நாம் சொன்ன இலக்கணம் பொருந்தும்.

• ’சம்ஸ்காரத்திலிருந்து மட்டுமே ’ என்று சொல்லாமல் போனால் , ப்ரத்ய பிஜ்ஞா என்ற ஒரு வகையான அநுபவத்தில் அதி வ்யாப்தி ஏற்படும்.
ப்ரத்யபிஜ்ஞா என்பது,recognition-அவனே தேவதத்தன் – முன்னால் பார்த்த ஒருவரை இன்று மறுபடியும் காணும் போது
“அன்று நான் பார்த்தவரே தான் இவர் என்று நமக்கு ஏற்படும் அறிவு. கண் முன் இருப்பவரைக் காண்பதற்கு இந்த்ரியங்கள் தேவை ,
கடந்த காலத்தில் இவரைத் தான் பார்த்தேன் என்று அறிய சம்ஸ்காரம் தேவை –
ஆக இந்த்ரியமும் ஸ்ம்ஸ்காரமும் சேர்ந்து இந்த ஜ்ஞாநத்தை உண்டு செய்கி்ன்றன.
ஆகவே, “மட்டும்” என்று சொல்லாமல், ’சம்ஸ்காரத்திலிருந்து ஏற்படுவது ஸ்ம்ருதி’என்று சொன்னால் , ப்ரத்யபிஜ்ஜையில் அதிவ்யாப்தி ஏற்படும்

• “ஸ்ம்ருதியைத் தவிர்ந்த ஜ்ஞாநம் அனைத்துமே அனுபவம் தான் என்று அநுபவத்திற்கு இலக்கணம்

யதார்த்த அனுபவம்
• அநுபவம் என்பதும் இரண்டு வகைப்படும் – (i) யதார்த்தம் – சரியான அறிவு (ii) அ யதார்த்தம் – தவறான அறிவு.
• யதார்த்த அநுபவம் என்றால் –
“ஒரு தன்மையை உண்மையாக உடைய ஒரு பொருளை அந்தத் தன்மையை உடையதாக அறியும் அநுபவம்”.
நான் ஒரு குடத்தைப் பார்த்து ’இது குடம்’ என்று அறிகிறேன் , அதாவது
“(இது) என் கண் முன் இருக்கும் பொருள் (குடம்) குடத் தன்மை என்னும் சாமாந்யத்தைக் கொண்டது’ என்று அறிகிறவன்
என் கண் முன் இருக்கும் அந்தப் பொருள் உண்மையாகவே குடமானபடியால், அதில் உண்மையாகவே
குடத்தன்மை இருக்கிறது. -ஆகவே என்னுடைய அறிவு யதார்த்தம் (சரியான அறிவு) ஆகிறது.

• அறியப்படும் பொருளுக்கு ’விசேஷ்யம் / தர்மி’ என்று பெயர்.
அந்தப் பொருளில் இருப்பதாக அறியப்படும் தன்மைக்குப் ’ப்ரகாரம் / தர்மம்’ என்று பெயர்.
• ஒரு அறிவில் ப்ரகாரமாக (தர்மமாக) எந்த ஒரு தன்மை ஆகிறதோ அந்தத் தன்மை , அந்த அறிவுக்கு விசேஷ்யமாய் இருக்கும்
பொருளில் உண்மையாகவே இருந்தால், அந்த ஜ்ஞாநம் யதார்த்த ஜ்ஞாநம் என்று சொல்லப்படுகிறது.
• ’இது குடம்’ = “என் கண் முன் இருக்கும் பொருள் குடத் தன்மையை உடையது’ என்ற அறிவில்,
கண் முன் இருக்கும் பொருள் விசேஷ்யம், குடத் தன்மை ப்ரகாரம் ஆகிறது.
நீலமான குடம் -விசேஷணம் -தன்மை தர்மம் நீலம் பண்பு -விசேஷ்யம் த்ரவ்யம் தர்மி -குடம் -பண்பை உடையது –
இவற்றையே பிரகாரம் பிரகாரி என்பர் -குடத்தன்மை கடத்தவம் potness சாமான்யம் உடையது –
அறிவுக்கு விசேஷ்யமான கண் மு்ன் இருக்கும் பொருளில், அறிவுக்கு ப்ரகாரமான குடத்தன்மை
உண்மை யாகவே உள்ளபடியால், இது சரியான ஜ்ஞாநம்.

அயதார்த்த அநுபவம்-
அயதார்த்த அநுபவம் என்றால் –
“ஒரு தன்மை இல்லாத ஒரு பொருளை அந்தத் தன்மையை உடையதாக அறியும் அநுபவம்”.
நான் ஒரு கயிற்றைப் பார்த்து ’இது பாம்பு’ என்று அறிகிறேன்
அதாவது “(இது) என் கண்முன் இருக்கும் பொருள் (பாம்பு)
பாம்புத் தன்மை என்னும் சாமான்யத்தைக் கொண்டது’ என்று அறிகிறேன் —
என் கண் முன் இருக்கும் அந்தப் பொருள் உண்மையாகவே பாம்பு அல்ல, கயிறு தான் , அதில்
உண்மையாகவே பாம்புத் தன்மை இல்லை , கயிற்றுத் தன்மை தான் உள்ளது.
ஆகவே என்னுடைய அறிவு அயதார்த்தம் (தவறான அறிவு) ஆகிறது.

• அறியப்படும் பொருளுக்கு ’விசேஷ்யம் / தர்மி’ என்று பெயர். அந்தப்
பொருளில் இருப்பதாக அறியப்படும் தன்மைக்குப் ’ப்ரகாரம் / தர்மம்’என்று பெயர்.
• ஒரு அறிவில் ப்ரகாரமாக (தர்மமாக) எந்த ஒரு தன்மை ஆகிறதோ அந்தத் தன்மை , அந்த அறிவுக்கு விசேஷ்யமாய் இருக்கும்
பொருளில் உண்மையில் இல்லை என்றால், அந்த ஜ்ஞாநம் அயதார்த்த ஜ்ஞாநம் என்று சொல்லப்படுகிறது.
• ’இது பாம்பு’ = “என் கண் முன் இருக்கும் பொருள் பாம்புத் தன்மையை உடையது’ என்ற அறிவில்,
கண் முன் இருக்கும் பொருள் விசேஷ்யம்,
பாம்புத் தன்மை தான் ப்ரகாரம் ஆகிறது.
அறிவுக்கு விசேஷ்யமான கண் மு்ன் இருக்கும் பொருளில் (கயிற்றில்), அறிவுக்கு ப்ரகாரமான பாம்புத் தன்மை உண்மையில்
இல்லாதபடியால், இது தவறான ஜ்ஞாநம்.

யதார்த்த அனுபவத்தின் வகைகள்
யதார்த்த அனுபவம் நான்கு வகைப்படும்
1-ப்ரத்யக்ஷம் –
நம் புலன்களால் ஏற்படும் அறிவு -கண்ணால் காண்கிறோம் -காட்சி ஒருவகை ப்ரத்யக்ஷம்
மூக்கால் மணத்தை முகர்கிறோம் -அந்த மணத்தைப் பற்றின ஞானம் ஒரு வகை ப்ரத்யக்ஷம்
2- அநு மிதி –
சமையல் அறையில் புகையையும் நெருப்பையும் சேர்த்தே பார்த்து இருக்கிற படியால்
நெருப்பை விட்டுப் பிரிந்து புகை இருக்காது என்று அறிந்து கொண்டு
பிரயாணம் பொழுது ஒரு மலையின் மேல் புகையைப் பார்த்த உடன் அங்கு நெருப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம்
அந்த ஊகத்தால் ஏற்பட்ட ஞானத்துக்குத் தான் அநுமிதி என்று பெயர்
3-உபமிதி –
இந்தச் சொல் இந்தப் பொருளைக் குறிக்கும் என்று சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பை க்ரஹிக்கும் ஞானம் உபமிதி ஆகும்
4–சாப்த போதம்
ஒரு சொல் தொடரைக் கேட்டவுடன் அதன் பொருளைப் பற்றின அறிவு நமக்கு ஏற்படுகிறது -அதுவே சாப்த போதம் -என்று சொல்லப்படுகிறது

இவற்றின் விளக்கம் மேலே பார்ப்போம்

அயதார்த்த அனுபவம் மூன்று வகைப்படும்
1-சம்சயம்
சந்தேகம் -ஒரு பொருளைப் பார்த்து இது கயிறா அல்லது பாம்பா -இது கிளிஞ்சலோ அல்லது வெள்ளியோ என்று
ஏற்படும் சந்தேகத்துக்கு சம்சயம் என்று பெயர்
2-விபர்யயம்
தவறான நிச்சயம் -வெள்ளையான சங்கைப் பார்த்து -எனக்கு மஞ்சக் காமாலை நோய் இருக்கிறபடியால் –
இது மஞ்சளான சங்கு என்ற அறிவு எனக்குப் பிறக்கிறது
வெள்ளையா மஞ்சுளா என்று சந்தேகப்பட வில்லை -மஞ்சள் தான் என்று தவறாக முடிவு செய்து விட்டேன் -இதுவே விபர்யயம்
3–தர்க்கம்
ஒரு பொருளின் தன்மைகளை பார்த்து இப்பொருள் இப்படிப்பட்டதாக இருந்தால் கண்டிப்பாக அதற்கு அந்தத் தன்மையும்
இருக்க வேண்டும் என்று வாதம் செய்வதே தர்க்கம் என்கிறோம்

இவற்றின் விளக்கம் மேலே பார்ப்போம் –

ஞானம் -புத்தி என்பதை இரண்டாக –
அதாவது -ஸ்ம்ருதி நினைவு -அனுபவம்
இந்த ஸ்ம்ருதி அனுபவம் இவற்றை யதார்த்தம் அயதார்த்தம் என்று இரண்டு வகை
யதார்த்தம் ப்ரத்யக்ஷம் அநு மிதி உபமிதி சாப்த போகம் என்று நான்கு வகை என்றும்
அயதார்த்தம் -சம்சயம் விபர்யயம் தர்க்கம் என்று மூன்று வகை என்று பார்த்தோம்

———-

பாடம் -22-ஸூகம் –முதல் அபாவம் வரை-

ஏழு த்ரவ்யங்கள் –24-குணங்கள் -7 பதார்த்தங்கள்

17th குணம்-ஸூகம் –

ஸர்வேஷா அனுகூல தயா வேதநீயம் ஸூகம்
ஸர்வேஷா பிரதிகூல தயா வேத நீயம் துக்கம்

அனைவராலும் -அனுகூலமாக -அறியப்படும் பொருள் தான் ஸூகம் என்று சொல்லப்படுகிறது
ஸூகம் ஏற்படுத்தும் கருவிகளில் ஒவ் ஒருவருக்கு ஓன்று ஓன்று பிடித்து இருக்கலாம் -பிடிக்காமலும் இருக்கலாம்
ஒருவருக்கு குளிர் பிடித்து இருக்கலாம் மற்று ஒருவருக்கு பிடிக்காமலும் இருக்கலாம்
ஒருவருக்கு இனிப்பு பிடித்து இருக்கலாம் -மற்ற ஒருவருக்கு அது பிடிக்காமல் கசப்பான ஓன்று பிடித்து இருக்கலாம்
ஆனால் அந்த கருவியின் மூலம் இறுதியில் ஒரு ஆனந்தம் ஏற்படுகிறதே -அது அனைவருக்கும் பிடித்தே இருக்கும்
அந்த ஸூகத்தை அடையும் வழிகளில் தான் மனிதருக்குள் விருப்பு வெறுப்புக்கள் மாறுபட்டு இருக்கும்
ஆகையால் அனைவராலும் விரும்பத்தக்க அறியப்படும் பொருள் என்ன என்றால்-ஸூகம் ஓன்று தான் –
ஆக அதுவே ஸூகத்தின் லக்ஷணம் ஆகும்

18th குணம்–துக்கம்

ஸர்வேஷா அனுகூல தயா வேதநீயம் ஸூகம்
ஸர்வேஷா பிரதிகூல தயா வேத நீயம் துக்கம்

அனைவராலும் பிரதிகூலமாக அறியப்படும் பொருள் தான் துக்கம் என்று சொல்லப்படுகிறது
ஒருவருக்குத் துக்கத்தை ஏற்படும் பொருள் தானே மற்ற ஒருவருக்கு துக்கத்தைக் கொடுக்காமல் இருக்கலாம்
ஆகையால் அவர் அத்தை வெறுக்க வேமாட்டார்
ஆனால் அவருக்கு துக்கம் தரும் பொருள் வேறு சில இருக்கலாம்
ஆகையால் துக்கம் ஏற்படுத்தும் பொருள்கள் தான் மனிதனுக்கு மனிதன் வேறுபட்டு இருக்கலாமே ஒழிய
துக்கம் என்பது அனைவருக்குமே வெறுக்கத் தக்கதாய் இருக்கும் ஒரு பொருளாகத் தான் உள்ளது
ஆகையால் அனைவருக்கும் வெறுக்கத் தக்கதாக அறியப்படும் பொருள் என்ன என்றால் துக்கம் தானே –
ஆக அதுவே துக்கத்தின் லட்ஷணம் ஆகும்

ஆத்மாவின் மற்ற குணங்கள்
19th குணம்–இச்சை –ஆசை
20th குணம்-த்வேஷம் – வெறுப்பு -கோபம்
21st குணம்-பிரயத்தனம் -முயற்சி -உடலில் செயலை உண்டு செய்வது
22nd குணம்–தர்மம் -புண்யம் -வேத விஹித கர்ம க்ருத்யத்தால் வருமவை -விஹித கர்ம ஜெனிதம் தர்மம் –
நித்ய கர்ம -நைமித்திக கர்ம -காம்ய கர்ம —
23rd குணம்–அதர்மம் -பாபம் -வேத நிஷேதித்த கர்ம க்ருத்யத்தால் வருமவை -நிஷித்த கர்ம ஜெனிதம் அதர்மம் –
24th குணம்–ஸம்ஸ்காரம் -பதிவு –

சம்ஸ்காரம் -மூன்று வகைப்படும்
1-வேகம் -ஒரு பொருளில் ஏற்படும் செயலால் -கர்மத்தால் -அதில் வேகம் என்ற குணம் ஏற்படுகிறது –
மேற்கொண்டு அந்தப்பொருள் நகருவதற்காக காரணம் இந்த வேகம் உள்ளது –
இது செயலினுடைய அனைத்துப் பதார்த்தங்களிலும் இருக்கும்
ஆகையால் இது பிருத்வீ ஜலம் தேஜஸ் வாயு மற்றும் மனம் ஆகிய ஐந்து த்ரவ்யங்களிலும் உண்டு
2- பாவனா -பதிவு
ஒரு அனுபவித்தில் இருந்து உண்டாகி பின்பு நினைவு ஏற்படக் காரணமாக இருப்பதுவே இந்த சம்ஸ்காரம்
இது ஆத்மாவில் மட்டுமே இருக்கும்
அனுபவ ஜனித ஸ்ம்ருதி ஹேது பாவனா -ஆத்மாவுக்கு மட்டும் ஏற்படும் சம்ஸ்காரம்
ஒரு விஷயத்தைப் பற்றி ஒரு சம்ஸ்காரம்
நினைவும் ஒரு வகையான ஞானம் -பலமான சம்ஸ்காரம் பலம் இழந்த சம்ஸ்காரம் -இரண்டு வகை –
திரும்பி திரும்பி நினைக்க பதிவு அழுத்தமாக -உரு சொல்லச் சொல்ல திடமான சம்ஸ்காரம் –
ஒரே விஷயத்தைப் பற்றி பலவித சம்ஸ்காரம் இப்படி இரண்டு விதம் என்பர்
3-ஸ்த்தி ஸ்தாபக
ஒரு பொருளின் வடிவை மாற்றினால் அது மீண்டும் பழைய வடிவைக் கொள்வது –(Elasticity) –
சுத்தி வைத்துள்ள பாயை விரித்தால் மீண்டும் அது தானே சுருண்டு கொள்வது போல்
சில வகை பிருத்வியில் தான் இது இருக்கும்

த்ரவ்யங்களும் அவற்றின் குணங்களும்-
சங்க்ய -பரிமாண -பிருதக்த்வ -சம்யோக -விபாக=எல்லா த்ரவ்யங்களிலும் உண்டு

1-பிருத்வீயில் உள்ள குணங்கள்
ரூப -ரஸ -கந்த -ஸ்பர்ச -சங்க்ய -பரிமாண -பிருதக்த்வ -சம்யோக -விபாக -பரத்வ -அபரத்வ -குருத்வ -த்ரவத்வ –
ஸம்ஸ்காரத்தில் வேகமும் ஸ்த்திஸ்தாபகமும் –ஆகிய -14-குணங்கள்

2-ஜலத்தில் உள்ள குணங்கள்
ரூப -ரஸ –ஸ்பர்ச -சங்க்ய -பரிமாண -பிருதக்த்வ -சம்யோக -விபாக -பரத்வ -அபரத்வ -குருத்வ -த்ரவத்வ -ஸ்நேகம்
ஸம்ஸ்காரத்தில் வேகம் –ஆகிய -14-குணங்கள்

3-தேஜஸ்ஸில் உள்ள குணங்கள்
ரூப-ஸ்பர்ச -சங்க்ய -பரிமாண -பிருதக்த்வ -சம்யோக -விபாக -பரத்வ -அபரத்வ –த்ரவத்வ –
ஸம்ஸ்காரத்தில் வேகம் –ஆகிய -11-குணங்கள்

4-வாயுவில் உள்ள குணங்கள்
ஸ்பர்ச -சங்க்ய -பரிமாண -பிருதக்த்வ -சம்யோக -விபாக -பரத்வ -அபரத்வ -ஸம்ஸ்காரத்தில் வேகம் –ஆகிய -9-குணங்கள்

5-ஆகாசத்தில் உள்ள குணங்கள்
சங்க்ய -பரிமாண -பிருதக்த்வ -சம்யோக -விபாக –சப்த –ஆகிய -6-குணங்கள்

6-காலத்தில் உள்ள குணங்கள்
சங்க்ய -பரிமாண -பிருதக்த்வ -சம்யோக -விபாக -ஆகிய -5-குணங்கள்

7-திசையில் உள்ள குணங்கள்
சங்க்ய -பரிமாண -பிருதக்த்வ -சம்யோக -விபாக –ஆகிய -5-குணங்கள்

8-ஜீவாத்மாவின் உள்ள குணங்கள்
சங்க்ய -பரிமாண -பிருதக்த்வ -சம்யோக -விபாக –புத்தி -ஸூகம் –துக்கம் -இச்சை -த்வேஷம் -ப்ரயத்ன –
தர்மம் -அதர்மம் -ஸம்ஸ்காரத்தில் -பாவனா -ஆகிய -14-குணங்கள்

9-பரமாத்மாவின் உள்ள குணங்கள்
சங்க்ய -பரிமாண -பிருதக்த்வ -சம்யோக -விபாக -புத்தி–இச்சை -ப்ரயத்ன–ஆகிய -8-குணங்கள்

10-மனசில் உள்ள குணங்கள்
சங்க்ய -பரிமாண -பிருதக்த்வ -சம்யோக -விபாக -பரத்வ-அபரத்வ -ஸம்ஸ்காரத்தில் -வேகம் -ஆகிய -8-குணங்கள்

————

கர்ம –செயல்
எந்த ஒரு அசைவும் கிரியை -கர்ம -என்று சொல்லப் படுகிறது

இது ஐந்து வகைப்படும்
1-உத்க்ஷேபணம் -(Upward Motion)-இப்பொழுது உள்ள இடத்தில் இருந்தும் மேல் உள்ள இடத்துக்கு தொடர்பு ஏற்படக் காரணம்
ஊர்த்வ தேச சம்யோக ஹேது-
2- அபஷேபணம் -(Downward Motion)இப்பொழுது உள்ள இடத்தில் இருந்தும் கீழ் உள்ள இடத்துக்கு தொடர்பு ஏற்படக் காரணம்
3- ஆகுஞ்சனம் (Folding) –உடலுக்கு அருகில் உள்ள பொருளோடு தொடர்பு ஏற்படக் காரணமான செயல் -மடித்தல்
சரீர சன்னிகிருஷ்ட சம்யோக ஹேது
4-ப்ரசாரணம் -(Stretching)-உடலில் இருந்து தள்ளி இருக்கும் பொருளோடு தொடர்பு ஏற்படக் காரணமான செயல் -விரித்தல்
சரீர விப்ரக்ருஷ்ட சம்யோக ஹேது
5–கமனம் -மற்ற அனைத்து செயல்களும் இதில் அடங்கும் like linear motion, circular motion, rotation, etc

———–

சாமான்யம் –பொதுத் தன்மை
நித்யமாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களில் சமவாயம் என்கிற சம்பந்தத்தால் இருப்பதாகவும் உள்ள
பொருள் சாமான்யம் எனப்படுகிறது

ஆகவே
1-நித்தியமாக இருப்பதாயும்
2-ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களில் இருப்பதாயும்
3-அதுவும் சமவாயம் என்ற சம்பந்தத்தால் இருப்பதாயும்
ஆகிய மூன்று தன்மைகளையும் கூட்டி தான் சாமான்யத்தின் லக்ஷணம் ஆகும்

நித்யம் -அநேகம்-அநேக பொருள்களில் சமவாய சம்பந்தத்தால் இருப்பதே லக்ஷணம் -மாட்டுத் தன்மை போல்

இதில் முதல் தலத்தை விட்டால் -சம்யோகம் -என்ற குணத்தில் அதி வியாப்தி வரும்
சம்யோகம் என்பதும் தொடர்வு ஏற்படும் பொருள்களில் சமவாய சம்பந்தத்தால் இருப்பது தான் –
ஆனால் நித்தியமாக இருக்காது
இரண்டாவது தலத்தை விட்டால் -நித்தியமாக இருத்தலும் சமவாய சம்பந்தத்தால் இருத்தலும்
ஜலம் தேஜஸ்ஸூ ஆகியவற்றின் பரமாணுக்களில் இருக்கும் ரூபம் ரசம் முதலானவற்றிலும் இருக்கிற படியாலும்
அதி வியாப்தி உண்டாகும்
மூன்றாவது தலத்தை விட்டால் அபாவத்தில் அதி வியாப்தி வரும் -மாட்டைக் காட்டிலும் வேறுபாடு என்கிற
அந்யோன்ய அபாவம் சிங்கத்தின் இடமும் குதிரையின் இடமும் உள்ளபடியால்
ஆனால் அபாவம் அதின் இருப்பிடத்தில் சமவாய சம்பந்தத்தால் இருக்காது

சாமான்யம் த்ரவ்யம் குணம் செயல் மூன்றிலும் இருக்கும்

————-

விசேஷமும் சமவாயமும்
நித்தியமான த்ரவ்யங்களில் -பிருத்வீ -ஜலம் -தேஜஸ்ஸூ -வாயு -என்கிற நான்கின் பரமாணுக்கள் –
ஆகாசம் காலம் திக்கு ஆத்மாக்கள் மனஸ்ஸூக்கள்-இவற்றில் இருந்து கொண்டு –
அவற்றை மற்ற அனைத்துப் பொருள்களில் இருந்தும் வேறுபடுத்திக் காட்டுபவை தான் விசேஷங்கள்

சமவாயம் -என்பது ஒரு நித்தியமான தொடர்பு–
இந்தத் தொடர்பு -அயுத சித்தங்களான -பிரிக்க முடியாதவையாக –பொருள்களின் இடையில் இருக்கும்
எந்த இரண்டு பொருள்களுக்குள் ஓன்று தான் இருக்கும் வரை மற்ற ஒன்றை ஆஸ்ரயித்து -அண்டி தான் இருக்குமோ
அந்த இரண்டு பொருள்களும்-அயுத சித்தங்கள் -பிரிக்க முடியாதவை -என்று கூறப்படுகின்றன

அவையாவன
அவயவியும் அவயவங்களும் -நூல் துணி –
ஒரு குணமும் அதன் இருப்பிடமும் -குடமும் சிகப்பு நிறமும்
ஒரு செயலும் அதன் இருப்பிடமும் -ராமர் நடக்கிறார் -நடத்தல் செயல் அண்டியே இருக்கும்
ஒரு சாமான்யமும் அதன் இருப்பிடம்
ஒரு விசேஷமும் அதன் இருப்பிடமான நித்ய த்ரவ்யமும்

———————

அபாவம் -இன்மை -a (Non-Existence)
1-ப்ராக் அபாவம்
ஒரு பொருள் உண்டாவதற்கு முன் க்ஷணம் வரை அந்தப் பொருளின் ப்ராக் அபாவம் இருக்கும்
ஆகவே -ப்ராக் அபாவம் -என்பது -தொடக்கம் அற்றது -முடிவு உடையது -அநாதி -ச அந்த-
2-ப்ரத்வம்ச அபாவம்
ஒரு பொருள் அழிந்த பிறகு அந்தப் பொருளின் -ப்ரத்வம்ச அபாவம் -அழிவு -இருக்கும்
ஆகவே -ப்ரத்வம்ச அபாவம் -என்பது தொடக்கம் உடையது முடிவு அற்றது -ச ஆதி -அநந்தம் –
3- அத்யந்த அபாவம்
முக்காலத்திலும் இருக்கும் அபாவம் இது
வாயுவில் நிறம் இல்லை -வெல்லத்தில் கசப்பு இல்லை என்பது போன்ற அபாவங்கள்
4- அந்யோன்ய அபாவம்
ஒரு பொருளில் மற்ற பொருள்களில் காட்டிலும் வேறு பாடு இருக்கும்
இந்த வேறுபாடு தான் அந்யோன்ய அபாவம் -என்று சொல்லப்படுகிறது
குடம் புடவை இல்லை மாடு ஆடு அல்ல போல்வன

———–

ஒன்பது த்ரவ்யங்கள்
24 குணம்
சப்த பதார்த்தங்கள்
லக்ஷணம் பரீஷை பார்த்தோம்
ப்ரமேயம்
பிரமாணம்
ஞானம் எப்படி ஏற்படும் -வகைகள் என்ன -ப்ரத்யக்ஷம் இத்யாதி -இவற்றின் தன்மைகள்-சரியான அறிவு என்ன
ப்ராசீன நவீன நியாயம் -இவற்றைப் பார்ப்போம்
கேள்வி பதில்கள் -self exams paarppom –

———-

பாடம் –23-கேள்வி பதில்கள் –

பிருத்வீ -பூவின் மணம் நுகரும் பொழுது -பூவின் துகள் -அணுக்கள் -பகுதிகள் பிருத்வீயாகவே இருக்க வேண்டும்
ரூபம் உண்டே -கண்ணுக்கு தெரியாமல் இருப்பது எதனால்
அணு பரிமாணம் -தெரியாதே -மிக சிறிய த்வி யணுகங்கள்-வரை தெரியாதே
பூக்கள் துகள்கள் அணு என்று சொல்ல முடியாது
அணுவாக இருந்து இருந்தால் அதில் உள்ள மணத்தை கிரகிக்க முடியாமல் இருக்குமே
த்ரி அணுகமோ பெரியதாகவோ தான் இருக்க வேண்டும்
ரூபம் எதனால் தெரியவில்லை
உத்பூதம்-நன்றாக விளங்கும் /manifest ஆகாமல் அநு பூதமாய் இருக்கும் -வெளிப்படாமல் அடங்கி இருக்கும்
தங்கக்கட்டி -தேஜஸ் உடன் -பாஸ்வர ஸூக்லம் -உடன் பிருத்வீ பகுதியும் சேர்ந்த கூட்டு போல்
தேஜஸ் உஷ்ண -இருந்தாலும் தொட்டால் சுடாமல் இருப்பது பிருத்வி பகுதி கலசி இருப்பதால் அநுபூதமாய் இருப்பது போல்
இப்படி இரண்டு விதமாக அநுபூதமாய் இருக்கும்
ஆகவே அணு அல்ல மஹத் தான் ரூபம் அனுபூதம்

சரீரம் இந்திரியம் விஷயம் மூன்றாக பிரித்து பார்த்தோம்
விஷயத்துக்குள் இந்திரியங்களும் சரீரமும் அடங்கும்
ஞானத்தால் அறியப்படும் தன்மை பொது தான்
அனைத்துமே விஷயம் என்றாலும் நமக்குத் பிரித்து அறிவதற்காக
இந்திரியங்கள் ஞானத்தை உண்டு பண்ணுதல் என்ற கோணத்தில் தனி ஸ்தானம்
அதே போல் சரீரமும் தனி ஸ்தானம்
எனவே பிரித்துப் பார்க்கிறோம்

காலம்
லக்ஷணம் அதீதாதி வியவகார ஹேது -கடந்த காலப் பொருள் போன்ற சப்த பிரயோகம் –
அநாகதம் -இன்னும் வராதது
வர்த்தமானம் -நிகழ் காலம் -verbal expression

திக்கு
லக்ஷணம் -இது கிழக்கில் இருக்கும் பொருள்-வடக்கத்திக்காரன் – போன்ற வார்த்தைப் பாடுகளுக்கு காரணம்
திக்கு என்ற ஓன்று இருப்பதால் தானே

ஆத்மா
விபு -பலர் -என்றால் எப்படி பொருந்தும்
ஓன்று விபுவாக இருக்க மற்ற ஓன்று எப்படி
tangible -ஸ்பர்சம் இல்லாமல் இருந்தால் இருக்கலாம்
ஆகாசமும் பிருத்வியும் -குடம் இருக்கும் இடத்தில் ஆகாசமும் உண்டே
space எங்கும் -உண்டே தனக்குள் இடம் அளிக்கும் ஸூஷ்மம் பெரியதாக இருந்தாலும்
ஒரு இடத்தில் பல வெளிச்சம் வருமா போல்
subtle ஆக இருப்பதால் பொருந்தும்

ஒரு ஆத்மாவுக்கு ஒரு சரீரம் ஒரு மனஸ்ஸூ -ஆத்மாவுக்கும் சரீரத்துக்கு சம்யோகம்
விபுவாக இருக்க நான் ஆத்மா அனைவரையும் தொட்டுக் கொண்டு இருக்க வேண்டுமே
அனைத்து சரீரங்களையும் மனசுக்களையும் சம்யோகம்
அதிஷ்டானம் -என்று -என்னுடைய உடலை சம்யோகமும் தரித்தும் கொண்டு இருப்பதால்
மற்றவற்றை அதிஷ்டானம் பண்ணாதே

ஆத்மாக்களை எப்படி பிரித்து அறிவது
ஒருவருக்கு சுகம் மற்ற ஒருவருக்கு துக்கம்
இத்தை வைத்து அறியலாம்
ஸூஷ்ப்தி தசையில் மனஸ் வேறுபாடு
முக்தி -வேறுபாடு -விசேஷம் என்ற பதார்த்தம் ஒன்றால் வேறுபாடு காணலாம்

மூளை -வைதிக தரிசனத்தில் தனியாக இல்லை -ஒரு மாமிச பிண்டம் தான்
புத்தி ஞானம் -மனஸ் கருவி -ஆத்மா தான் சிந்திக்கும்

மனஸ் அணு -பார்த்தோம் -சம்யோகம் வைத்தே ஞானம் –
மத்யம பரிமாணம் -நடுத்தர அளவாக இருந்தால் அழியும்
அணுவான படியால் நித்யம்

ஆத்மா மனஸ் தொட்டு -மனஸ் இந்திரியம் தொட்டு -இந்திரியம் விஷயம் தொட்டு -ஞானம் என்றால்
ஒரே காலத்தில் பல புலன்கள் வேலை செய்வதைக் காண்கிறோம்
மனஸுக்கு மிக வேகமாக நகரும் சக்தி உண்டே
அடுத்து அடுத்த ஞானம் வந்தாலும் இடைவெளி தெரியாமல் ஒரே சமயத்தில் அறிகிறோம்
ஒரே காலத்தில் ருசித்துக் கொண்டே காண்கிறோம் என்று அறியும் படி –

கனவு -என்ன
ஸ்ம்ருதி -அனுபவம் -யதார்த்தம் -அயதார்த்தம்
கனவு –ஸ்மரணம் தான் -பார்த்த விஷயங்களை சேர்த்து -ஆட்டின் தலை வெட்டப்பட்டது என்னுடைய தலை -அயதார்த்தம்

இந்திரியங்கள் அணுவா மஹத்தா –
அணுவாக இருந்தால் அதன் குணங்களை அறிய முடியாது
அவயவங்களைக் கொண்டே இருக்கும் -ஆகாசம் ஸ்ரோத்ரம் இந்திரியம் மட்டும் இதுக்கு விதி விலக்கு
அணுவாக இருந்தால் அவயவங்கள் இருக்காதே
ஆனால் இந்திரியங்கள் கண்ணுக்கு எதனால் புலப்பட வில்லை –
அநுத் பூதம் -வெளிப்படாமல் இருப்பதால் புலப்பட வில்லை -manifest ஆகாமல் இருப்பதால்

இச்சா த்வேஷா -நடுவில் உதாசீனம் –indifferent தனி குணமா
இரண்டின் அபாவமே

சம்ஸ்காரம் -பதிவு -முன் பிறவிகள் பதிவு எதனால் ஸ்மரிக்க முடியவில்லை
பதிவு -இந்தப்பிறவியிலே கீழ் உள்ளதை மறக்கிறோம்
வியாதி -காலம் ஆனால் அழியலாம்
பெரிய துக்கம் மரணம் வந்தால் பதிவுகளை அழிக்கலாம்
சில ரிஷிகள் தான் அறிவார்கள்

திடமான சம்ஸ்காரம் ஆக்க அத்தை மீண்டும் மீண்டும் நினைக்க வேண்டும் அப்பியாசம் வேண்டும்

சத்தா –சாமான்யம்
மாடு -மாட்டுத்தன்மை -பொதுத்தன்மை
பரம் அபரம்-இரண்டு வகை -அதிகமான இடங்களில் உள்ள சாமான்யம்
குடத்தன்மை -பிருத்வித்வம் இதற்குள் குடத்தன்மை ஒரு வகை தானே
குடத்தன்மை அபரம்–பிருத்வித்வம் பரம்
த்ரவ்யத்வம் -ஒன்பது வகை த்ரவ்யங்களிலும் உண்டு -பிருத்வித்வம் இதற்குள் ஓன்று தானே
சத்தா -exisடீence -இருத்தல் -அஸ்தி -அனைத்துக்கும் மேலே -சாமான்யம் -த்ரவ்யங்களிலும் குணங்களுலும் கிரியைகளில் இருக்கும்
இதற்குள் ஓன்று ஓன்று
இதுவே பரத்வம்

சாமான்யம் விசேஷயம் சமவாயம் உள்ளது என்று சொல்லாமல் இந்த மூன்றில் மட்டும் சத்தா என்பது ஏன்
ஜாதி -சாமான்யம் -இந்த மூன்றில் தான் இருக்க முடியும்
அங்கு எல்லாம் சாமான்யம் இல்லையே
சாமான்யத்வம் விசேஷத்வம் சமவாயத்வம் போன்றவை இல்லையே

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி 1 –ந்யாய சாஸ்த்ரம்–முதல் பத்து பாடங்கள் —

March 24, 2021

பகுதி 1 : ந்யாய சாஸ்த்ரம்

——————

பாடம் 1 : வேதமும் அதன் அங்கங்களும்-

ஸ்ரீ ஹயக்ரீவர் -ஸ்ரீ ஞானப்பிரான் -ஸ்ரீ நம்மாழ்வார் -நம் பூர்வாச்சார்யர்கள் -நம் ஆச்சார்யர் –
கிருபையால் இந்த விஷயங்கள் நம் நெஞ்சில் படியட்டும்

ஆசீர்வாதம் -நமஸ்காரம் -வஸ்து நிர்த்தேசம் –மூன்று வகை மங்களா சாசனம்

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் |
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே ||–ஆசீர்வாதம்

வ்யாசம் வசிஷ்ட நப்தாரம் சக்தே பௌத்ரம் அகல்மஷம் |
பராசராத்மஜம் வந்தே சுக தாதம் தபோ நிதிம் ||–நமஸ்காரம்

முன் சொன்ன இரண்டு ஸ்லோகங்களிலும் பல மங்களமான பெருமைகள் பொருந்திய
விஷ்ணுவையும் வ்யாஸரையும் உரைத்ததே வஸ்து நிர்தேசமும் ஆகும்

1131-சாகைகள் -21-ரிக் -101-யஜுர் -1000-சாமம் -9-அதர்வணம் -அநந்தாவை வேதா

வேதங்களைக் கண்டவர்கள் ரிஷிகள் -சிலருக்கு உபதேசம் -கேட்டு அறியும் சக்தர்கள் –
அங்கங்கள் கொண்டு ரக்ஷணம் -பலருக்கும் உபயோகப்பட –
சொற்களை -பொருளை -அனுஷ்டானம் -மூன்றையும் ரக்ஷிக்க வேண்டும் –
ஸ்வரூப ரக்ஷணம் சொற்கள் ரக்ஷணம் இரண்டு -அர்த்தம் ரக்ஷணம் இரண்டு -அனுஷ்டானம் பிரயோகம் ரக்ஷணம் இரண்டு
சிஷா -சந்தஸ் –சொற்கள் ரக்ஷணம்
வியாகரணம் நிருத்தம் -பொருள் ரக்ஷணம்
கல்பங்கள் ஜ்யோதிஷம் -அனுஷ்டானம் ரக்ஷணம்

சிஷா எழுத்துக்கள் பற்றிய -வர்ணங்கள் -உச்சரிப்பு
சந்தஸ் -விருத்தம் -அக்ஷரங்கள் சேர்க்கை -அனுஷ்டுப் -32-அக்ஷரங்கள் -குறில் நெடில் வரிசைகள் –
வியாகரணம் -பிரித்து பிரித்து -பகுதி விகுதிகள் -ஒருமை பன்மை -இறந்த நிகழ் எதிர் காலம் -ஆண் பால் பெண் பால் –
ந்ருத்தம்-நிஹி நிச்சயமாக -ப்ரஹ்மம் -ப்ருஹத்வாத் –இத்யாதி -தான் பெரியதாகி தன்னை ஆஸ்ரயித்தவர்களை பெரியவர்களாக்கும்
கல்பம் -பிரயோகம் செய்யும் பொழுது இதுக்கு அடுத்து அடுத்து –
மந்த்ரங்கள் ஒரு இடத்தில் கட்டளைகள் வேறே இடத்தில் இருப்பதை-க்ருத்ய ஸூத்ரங்கள்-
ஜ்யோதிஷம் -astronamy–astrology –நித்ய நைமித்திக கர்மங்களை செய்யும் காலம் –

1. சிஷா – எழுத்துக்களின் உருவாக்கம் மற்றும் உச்சரிப்பைக் கற்க
2. சந்தஸ் -செய்யுள்களி்ல் எழுத்துக்களின் அளவு மற்றும் தன்ஸமகளைப் பயில
3. வ்யாகரணம்- ஒரு சொல்லின் பகுதிகளையும் அவற்றின் பொருள்களையும் அறிய
4. நிருக்தம் -வேதத்திலிருக்கும் கடினமான பதங்களுக்குப் பொருள்கள் தெரிய
5. கல்பம்–வைதிக வேதிக கர்மங்களைச் செய்யும் முறை புரிய
6. ஜ்யோதிஷம்–வைதிக கர்மங்கஸளச் செய்ய வேண்டிய காலத்தை நிர்ணயிக்க

பாடம் -2-வித்யா ஸ்தானங்கள்-

வேத அந்தம் -உபநிஷத் -அர்த்தம் முடிவு -செய்யும் ஞான காண்டம் ப்ரஹ்ம காண்டம்
பார்த்து கேட்டு சிந்தனை மனனம்-த்யானம் -நான்கு நிலைகள் -சாஷாத்காரம் பார்ப்பது கடைசி நிலை
கேட்டு –ஸ்ரவணம் அத்தை மனனம் சிந்தனை–ஆலோசனை பண்ணுதல் – -நிதித்யாஸம் -த்யானம் –
அப்புறம் பார்ப்பது -நான்கும் அனைத்துக்கும் இவை உண்டே –

வேதமும் அங்கங்களும் -ஸ்ரவணத்துக்கு உபயோகம் -ஆச்சார்யர் உபதேசிக்க கேட்டு –
மந்தவ்ய -அடுத்து –தூணை அசைத்து பார்க்கும் நியாயம் -விஷயம் உண்மை விசுவாசம் நம்பி -யுக்திகளைக் கொண்டு பரீஷை
நான் -ஆத்மா -தான் உடல் இல்லை -என்னுடைய கண் சொல்கிறோம் -நான் மனுஷ்யன் சொல்கிறோம் -இதை ஆலோசனை பண்ணி –
இதுக்கு பல சாஸ்திரங்கள் உண்டே -உப அங்கங்கள் இவற்றுக்கு
புராணம் நியாயம் மீமாம்சை தர்ம சாஸ்திரம் ஆயுர் வேதம் தனுர் வேதம்
காந்தர்வ வேதம் அர்த்த சாஸ்திரம் -இவை எட்டும் உப அங்கங்கள்

வேதங்களுக்கு எட்டு உபாங்கங்கள் உள்ளன
1. புராணங்கள் – நற்பண்புகளை வளர்க்க
2. ந்யாயம் – பொருள்களின் தன்மைகளை அறிய
3. மீமாம்ஸை – வேதங்கஸை ஆராய
4. தர்ம சாஸ்த்ரம் –ஆசாரம் கடைப்பிடிக்க
5. ஆயுர்வேதம் – உடலைப் பராமரிக்க
6. தநுர்வேதம் – அரசர்கள் நாட்டைக் காக்க
7. காந்தர்வ வேதம் – மனசை சாந்தமாக்க
8. அர்த்த சாஸ்த்ரம் – அரசர்கள் ராஜ்யம் செய்ய

புராணம் -புரா-அபி -நவம் -சர்க்கம் இத்யாதி – -பஞ்ச லக்ஷணம் -ஸ்ருஷ்டி -வம்சம் -பிரளயம் -மன்வந்தரம் -14-மனுக்கள் நான்முகனுக்கு உதவ –
நியாயம் -யுக்தி சாஸ்திரம் -logic-தீபம் -திரி எண்ணெய் குறைய -ஜ்வாலை ப்ரவாஹ நித்யம் -அனுமானம் கொண்டு பிரத்யக்ஷம் சரியாக புரிகிறோம்
மீமாம்சை -உயர்ந்த விஷய விசாரம் -பூர்வ உத்தர மீமாம்சை -கர்ம ப்ரஹ்ம மீமாம்சை இவை இரண்டும் உண்டு
தர்ம சாஸ்திரம் -கர்மம் -ஆசாரம் -யாகாதிகளை வேதம் சொல்லும் -நித்ய வாழ்க்கை தர்மம் இவை சொல்லும்
ஆயுர் வேதம்
தனுர் வேதம்
அர்த்த சாஸ்திரம்
காந்தர்வ சாஸ்திரம் -சங்கீதம் -மனசை சாந்தமாக வைத்துக் கொள்ள

ந வேதாந்தாத் சாஸ்திரம் ந மது மத நாத் சாத்விக பதம் ந சத்வாத் ஆரோக்யம் ந புத பஜனாத் போத ஜனகம்
ந முக்தே ஸுக்யம் ந த்வய வஸனாத் ஷேம கரணம் -என்றார் இறே ஸ்ரீ மன் நிகமாந்த மஹா தேசிகன் –

வேத -வேதவித் -அவ்யங்க- வேதாங்க -வேத வித்–ஐந்து திரு நாமங்கள்
வேதத்தை கொடுப்பவன் -கம்பனை படித்தாயா -வேதம் கொடுத்தவனை வேத
வேத வித் -முழுவதுமாக அறிந்தவன்
அவ்யங்க –அங்கங்கள் கீழே பார்த்தோம் -அவற்றுடன் கூடியவன் -வி அங்க–அங்கங்களில் நின்றும் நழுவி -அ வி அங்க-நழுவாமல் –
வ்யாசயா விஷ்ணு ரூபாயா -பல ரிஷிகளுக்குள் அந்தர்யாமியாக வெளிப்படுத்தினவன் என்றவாறு –
யுகம் -த்யானம் -யாகம் -அர்ச்சனை -நாம சங்கீர்த்தனம் -கலி யுகம்
வேதாங்க -வேதத்தை சரீரமாக கொண்டவன் – இவனைக் காட்டிக் கொடுக்கும் வேதம்
வேத வித் -மறுபடியும் -அர்த்த மான தர்மம் -அறிந்து-நம்மையும் மூட்டி அருளுபவர்

அங்காநி வேதா: சத்வார: மீமாம்ஸா ந்யாய விஸ் தர: |
புராணம் தர்ம சாஸ் த்ரம் ச வித்யா ஹ் ஏதா : சதுர்தச ||(ஸ்ரீ விஷ் ணு புராணம் 3-6-27)

ஆயுர்வேத: தநுர்வேத: காந்தர்வஸ் சைவ தே த்ரய: |
அர்தசாஸ் த்ரம் சதுர்தம் து வித்யா ஹ்யஷ்டாத சைவ தா: || (விஷ் ணு புராணம் 3-6-28)

கற்குங் கல்விக்கும் எல்லை இலனே என்னும்
கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்
கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்
கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்
கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்
கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ?
கற்கும் கல்வி யீர்க்கு இவை என் சொல்லுகேன்?–5-6-2-

நம்மாழ்வார் அநு கரித்து -கற்கும் கல்வி –வேதங்கள் அங்கங்கள் உப அங்கங்கள் எல்லாம் நாதன் வந்து ஏறக் கொலோ
எல்லை இல்லாதவன் –வித்யைகள் -கற்கும் கல்வி -ஆவேனும் யானே என்னும் – –
செய்வேனும் யானே -உபதேசம்-அந்தர்யாமியாய் இருந்து –
தீர்ப்பேனும் நானே -பிரளயம் -அழிந்து -ஸ்ருஷ்ட்டி -வரை காத்து -சங்கைகளை போக்கி சித்தாந்தம் ஸ்தாபனம்
சாரமும் நானே -பயன் நானே -ப்ரஹ்மம் அடைவதே லஷ்யம்

பண்டை நான் மடையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும் *
பிண்டமாய் விரிந்த பிறங்கு ஓளி அலனும் பெருகிய புலனொடு நிலனும்
கொண்டல் மருதமும் குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும் *
அண்டமும் தானாய் நின்ற எம் பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே -5-7-2-

வேள்வி -கேள்விப் பதங்கள்-வியாகரண சாஸ்திரம் -பதங்களின் பொருள்களும் –
பஞ்ச பூதங்களும் இவனே -சப்த மலைகள் அண்டமும் தானேயாய் நிற்கிறான் –

சாமான்ய சாஸ்திரங்கள் நியாயம் மீமாம்சை வியாகரணம் மூன்றும்-

—————-

பாடம் -3-நியாயத்தின் முக்யத்வம்-

த்யாஜ்ய உபாதேயங்களை சாஸ்திரம் சொல்லும் -பிரவ்ருத்தி செயலையும் நிவ்ருத்தி செய்யக் கூடாதவை
நித்ய நூல் -வேதம் -சுருதி -க்ருத்ய நூல் -இன்னாரால் செய்யப்பட்டவை -ஸ்ம்ருதிகள்
வேதங்களை நினைத்து மனு போல்வரால்-செய்யப்பட்டவை
செய்யும் கிரிசைகளில் -செய்யாதன செய்யோமும் உண்டே -ஆண்டாள் –

ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்
ஹர்த்தும் தமஸ் சத் அஸதீ விவேக்தும்
ஈச மாநம் ப்ரதீபம் இவ காருணிகா ததாதி
தேந அவ லோக்ய க்ருதிநஸ் பரி புஞ்ஜதே
தம் தத்ர ஏவ கேபி சபலா ஸலபீ பவந்தி–-உத்தர சதகம்-1-

காருணிகா ஈச-பேர் அருளாளனான எம் பெருமான் -கிருபா விஸிஷ்ட ஸ்வ தந்த்ரன் –
கிருபாவாளனாகிலும் ஸ்வ தந்த்ரன் இல்லாத அன்று நினைத்தபடி கார்யம் செய்யப் போகாது –
கேவலம் ஸ்வ தந்த்ரனாக இருந்தாலும்-சம்சார மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாக இருப்பதால்
சேதன உஜ்ஜீவன அர்த்தமான கிருஷிக்கு உறுப்பாக்காதே –
ஆன பின்பு கிருபையும் ஸ்வ தந்த்ரமுமான வேஷமே கிருஷிக்கு ஹேதுவாகும் –
அன்றிக்கே
ஈசன் -என்று ஸ்வாமியைச் சொல்லி பிராப்தம் -நம்முடையவன் என்று அபிமானதுடன் கூடி
பர துக்க அஸஹிஷ்ணுத்வ கிருபையும் சேர்ந்தே கிருஷிக்கு ஹேதுவாகும் –
ஹர்த்தும் தமஸ் -அஞ்ஞானம் ஆகிற இருளை நீக்கிக் கொள்ளவும்
சத் அஸதீ விவேக்தும் ச -உள்ளது இல்லது என்னும்படியான நன்மை தீமைகளை ஆராய்ந்து உணர்வதற்கும்
மாநம் ப்ரதீபம் இவ ததாதி-திரு விளக்கு போன்ற ஸாஸ்த்ர பிரமாணத்தை கொடுத்து அருளுகின்றார் –
மாநம் -பிரமாணம் -வேதம் என்றபடி –
மறையாய் விரிந்த விளக்கு -துளக்கமில் விளக்கு -அகாரம் வாசக வாஸ்ய சம்பந்தத்தால் எம்பெருமானைச் சொல்லும்
கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பகமும் சொல் பொருள் தானும் மற்றை நிலைகளும் வானவருக்கும்
பிறருக்கும் நீர்மையினால் அருள் செய்து அருளினான்
தேந அவ லோக்ய க்ருதிநஸ் -பாக்கியசாலிகள் அந்த திரு விளக்கைக் கொண்டு அந்த எம்பெருமானை கண்டு அறிந்து
நாத யமுனா யதிவராதிகள்
பரி புஞ்ஜதே -அனுபவிக்கப் பெறுகிறார்கள்
தம் தத்ர ஏவ கேபி சபலா ஸலபீ பவந்தி–கருவிலே திருவில்லாத சில அவிவிகேகிகளோ என்றால்
அந்தத் திரு விளக்கில் வீட்டில் பூச்சிகள் போலே விழுந்து சாகிறார்கள் –

காருணிகா-தயாளுவான
ஈச மாநம்-சர்வ ஸ்வாமியான ஸ்ரீ பெரிய பெருமாள்
ஹர்த்தும் தமஸ்-அஞ்ஞான அந்தகாரத்தை போக்குவதற்கும்
சத் அஸதீ விவேக்தும்-நல்லதும் தீயதும் அறிகைக்கும்
ப்ரதீபம் இவ ததாதி-பெரு விளக்குப் போலே இருக்கிற பிரமாணத்தை பிரகாசிக்கிறார் –
தேந அவ லோக்ய க்ருதிநஸ் பரி புஞ்ஜதே–பாக்யாதிகர் அந்த ஈசனை அந்த பிரமாணத்தாலே நன்றாக அறிந்து
ததீய பர்யந்தமாக அனுபவிக்கின்றார்கள்
தம் தத்ர ஏவ கேபி சபலா ஸலபீ பவந்தி-சஞ்சல ஹ்ருதயராவார் அந்த பிராமண விஷயத்தில்
வீட்டில் பூச்சிகள் போலே விழுந்து நசிக்கிறார்கள் –

வேதம் -மறை -விசுவாசம் ஸ்ரத்தை இல்லாதாருக்கு மறைக்கும்
அங்கங்கள் உப அங்கங்கள் கொண்டு ரக்ஷணம்
சப்த -அர்த்த -அனுஷ்டானம் ரக்ஷணங்கள்
முன்பே பார்த்தோம்

சிஷா சந்தஸ்ஸூ -சொற்களைக் காக்கவும்
வியாகரணம் நிருக்தம் -பொருளைக் காக்கவும்
கல்பம் ஜ்யோதிஷம் -வைதிக கர்மங்களின் பிரயோகம் காக்கவும்

உப அங்கங்கள்
புராணங்கள்
ந்யாயம்
மீமாம்ஸை
தர்மசாஸ்த்ரம்
ஆயுர்வேதம்
தநுர்வேதம்
காந்தர்வ வேதம்
அர்த்த சாஸ்த்ரம்

—————–

சீஷாயாம் வர்ண சிஷா பதசமதிகம வியாக்ரியா நிர்வசோப்யாம்
சந்தஸ் சந்தஸ்திதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யவ்திஷம் ரங்க நாத
கல்பே அனுஷ்டானம் யுக்தம் ஹி உசிதகமிதயோ நியாய மீமாம்சயோ ஸ்யாத்
அர்த்த வ்யக்தி புராண ஸ்ம்ருதி ஷு தத் அனுகா த்வாம் விசின் வந்தி வேதா –18-

ஹே ரங்க நாத
சீஷாயாம் –சீஷாய் என்கிற வேத அங்கத்தில்
வர்ண சிஷா –அக்ஷரங்கள் உச்சாரண க்ரமாதிகள் சிஷை செய்யப்பட்டுள்ளது –
பதசமதிகம வியாக்ரியா நிர்வசோப்யாம்–வியாகரணம் நிருத்தி என்கிற வேதங்களில் பாதங்களின்
ப்ரக்ருதி ப்ரத்யய விபாகம் அர்த்த சிஷை முதலானது செய்யப்படுகிறது –
சந்தஸ் சந்தஸ்திதவ் –சந்தஸ் ஸ்யாத்–சாஸ்திரத்தில் காயத்ரி உஷ்ணிக் அனுஷ்டுப் த்ருஷ்டுப் பிருஹதி பங்க்தி ஜெகதீ
முதலான சப்த சந்தஸ் ஸூக்கள் சொல்லப்பட்டதாய் இருக்கும்
கமயதி சமயம் ஜ்யவ்திஷம் -ஜ்யோதிஷ சாஸ்திரமானது வைதிக கர்மங்களின் அனுஷ்டானத்துக்கு உரிய காலத்தை தெரிவிக்கின்றது –
கல்பே அனுஷ்டானம் யுக்தம் –கல்ப ஸூத்ரத்திலே வைதிக கர்மங்களை அனுஷ்ட்டிக்க வேண்டிய முறைமை சொல்லப் பட்டது
ஹி உசிதகமிதயோ –வைதிக சித்தாந்தத்துக்கு அநு குணமாக நயிப்பிக்கப் பட்ட
நியாய மீமாம்சயோ ஸ்யாத்-நியாய மீமாம்சைகளிலும்
அர்த்த வ்யக்தி புராண ஸ்ம்ருதி ஷு –புராண ஸ்ம்ருதிகளிலும் அர்த்த விவேசனம் உண்டாகும்
புராண சப்தம் இதிஹாசங்களுக்கும் உப லக்ஷணம்
தர்ம சாஸ்திரம் பூர்வ கர்ம பாக உப ப்ரும்ஹமணமாயும் இதிஹாச புராணங்கள் உத்தர ப்ரஹ்ம பாக உப ப்ரும்ஹணமாயும் இருக்குமே
தத் அனுகா த்வாம் விசின் வந்தி வேதா-கீழ் சொன்னவற்றால் அநு சரிக்கப் பட்ட வேதங்கள் தேவரீரை தேடுகின்றன –
விசாரிக்கின்றன -என்றவாறு
பேச முயலுமே ஒழிய பேசி முடிக்க வல்லவை அன்றே
நான்மறைகள் தேடி ஓடும் செல்வன் அன்றோ -பெரிய திருமொழி —-

ஸீஷா–அக்ஷரங்கள் உச்சரிப்பு போன்றவை /வ்யாக்ரணம் -இலக்கணம் /ந்ருக்தி -அர்த்த பிரயோகம்
சந்தஸ் -காயத்ரீ உஷ்ணிக் அனுஷ்டுப் த்ரிஷ்டுப் ப்ருஹதீ பங்க்தி ஜெகதீ -சப்தம்
ஜ்யோதிஷம் -அனுஷ்டான கால நிர்ணயம் / கல்பம் -அனுஷ்டான விதி முறைகள்
நியாயம் மீமாம்சை புராணங்கள் ஸ்ம்ருதி –இவை போன்ற அங்கங்கள் கூடிய அங்கி யான வேதம்
உன்னையே தேடியபடி இருக்கும்
வேதங்கள் உப ப்ரும்ஹணங்களான இதிஹாச புராணங்கள் -நியாய மீமாம்சைகளை அனைத்தும்
தேவரீரையே விசாரித்து நிஷ்கர்ஷிக்கிறது

—————-

இனி நியாய சாஸ்திரம் பார்ப்போம்

காணாதம் பாணிநீயம் ச ஸர்வ சாஸ்த்ர உபகாரகம் – ந்யாயமும் வ்யாகரணமும் அனைத்து
சாஸ்த்ரங்களுக்கும் உதவுகின்றன

காணாதம் -காணாதர் கௌதமர் ரிஷிகள்
பாணினி -வ்யாக்ரணம்
சர்வ ஸாஸ்த்ர உபகாரம் பண்ணும் இவை இரண்டும்

ஸ்ருஷ்ட்டி சாந்தோக்யம் ஆறாவது பிரகடனம் ஸத்வித்யை – உத்காலகர் ஸ்வேதகேதுவுக்கு உபதேசம்
அநேந ஜீவநே ஆத்மந அநு ப்ரவேஸ்ய நாம ரூபே வ்யாகரிக்க -ப்ரஹ்மம் சங்கல்பம்
ஸ்ருஷ்ட்டி அறிய இந்த இரண்டு சாஸ்திரங்களும் வேண்டும்
பெயர்களை அறிய வியாகரண சாஸ்திரம்
பதார்த்த விஸ்லேஷ அப்பியாசம் நியாய சாஸ்திரம் பிரயோஜனம்
பிரித்து அறியும் அப்பியாசம் ப்ரஹ்மம் பற்றி கற்க உபயோகம் ஆகுமே

இலக்கண சாஸ்திரங்கள் இவை –
பத சாஸ்திரம் -சொற்களை -வியாகரணம்
வாக்ய சாஸ்திரம் -சொல் தொடர் மீமாம்சம்
பிராமண சாஸ்திரம் -நியாயம்

ப்ரதீப: சர்வ வித்யாநாம் உபாய: சர்வ கர்மணாம் | ஆச்ரய:சர்வ தர்மாணாம் சச்வத்
ஆந்வீஷிகோ மதா || (அர்த்தசாஸ்த்ரத்தில் -கௌடில்யர்)

நியாயம் என்றால்; பிரமாணம் -கருவிகளைக் கொண்டு பரீஷை நியாயம்
ஈஷணம்-பார்ப்பது
அநு ஈஷணம் -பின் தொடர்ந்து -யுக்திகளை கொண்டு புலன்களாலோ சாஸ்திரதத்தாலோ அறிந்தவற்றை ஆலோசனம்

இந்த ந்யாயம் தான் என்ன ?
ப்ரமாணங்களைக் கொண்டு பொருள்களைச் சோதித்தல் ந்யாயம். ப்ரத்யஷத்தையும் புலன்களையும் ஆகமத்தையும்
(வேதத்தையும்) தழுவியது அநுமானம், அதுதான் அந்வீஷா என்று சொல்லப்படுகிறது.
புலன்களாலும் வேதத்தாலும் முதலில் பார்க்கப்பட்ட–ஈஷிதம் – பொருள்களைத் திரும்பவும் (அநு) சோதித்தல் (ஈஷணம் ) அந்வீஷா
அதைக் கொண்டு சொல்லும் படியால் ஆந்வீஷீகீ என்பது ந்யாய வித்யா எனப்படும் ந்யாய சாஸ்த்ரம் .
எந்த அநுமானம் புலன்களாலோ வேதத்தாலோ ஏற்பட்ட அறிவுக்கு புறம்பாக உள்ளதோ அது ந்யாயம் போல்
தோற்றம் அளித்தாலும் சரியான நியாயம் அல்ல- வாத்ஸ்யாயனனர் ந்யாய பாஷ்யத்தில

அனுமானம் ப்ரத்யக்ஷ வேத விரோதம் -யுக்தி நியாய ஆபாசம் -தோற்றம் அளிக்கும்

ஆர்ஷம் தர்மோபதேசம் ச வேத ஸாஸ்த்ர விரோதிநா |
யஸ் தர்கேண அநு சந்தத்தே ச தர்மம் வேத நேதர: ||(மநுஸ்ம்ருதி: 2-106)

ஆர்ஷம் என்னும் வேதத்ஸதயும், தர்ம உபதேசம் என்னும் ஸ்ம்ருதிகஸையும்
வேதத்தோடு முரண்படாத தர்கத்தைக் கொண்டு எவன் ஆராய்கிறானோ அவன் தான்
தர்மத்தை அறிகிறான், மற்றவன் அறிவ தில்லை .

மனு -தர்க்க ஸாஸ்த்ர பெருமை
ஆர்ஷம் ரிஷிகளால் பார்க்கப்பட்ட
தர்ம உபதேசம்
இரண்டையும் யுக்தி கொண்டு பரீஷை -தர்க்கம் கொண்டு
வேத சாஸ்திரம் அவிரோதமாக இருக்க வேண்டும் –

அங்கம் வேதத்துக்கு விருத்தமாக கூடுமோ என்னில் -நியாய மீமாம்ச வியாகரணம் இவையே தர்சனமும் ஆகுமே
பரதத்வம் அறிய தர்சனம் –
எதுக்கு பிறந்தோம் -எது மோக்ஷம் -போன்றவற்றையும் காட்டும்
உப அங்கங்களுமாக மட்டும் இல்லாமல் இருக்கும்

கண்ணால் பார்க்க ஒரே தீபம் -திரி எண்ணெய் குறைந்து வருமே –
புதிதாக ஜ்வாலை -அனுமானம் கொண்டு -inference-புகை நெருப்பு -உதாரணம்

கண்ணால் வித்யாசம் கிரகிக்க முடியாமல் இருக்க -பிரமாணங்களை பரீஷை பண்ண இது உதாரணம் –
அர்த்த பரீஷை -இது நல்லதுக்கு உதாரணம்
வேதத்துக்கு முரண் -2-4-1-களி மண்-குடம் -ஒரு பகுதி -ப்ரஹ்மம் -உலகமாக மாறி –
பகுதிகள் இல்லாத படியால் -ஜகத்
சுருதி சப்த மூலத்வாத்-விகாரம் இல்லா ப்ரஹ்மம்
உலக விஷயம் கொண்டு ப்ரஹ்மம் அறிய முடியாது
உண்மை பொருள்களை அறிய ஆஸ்திக தர்சனம் -நாஸ்திக தர்சனம்

அஸ்தி மதி உள்ளவன் ஆஸ்திகன்
நாஸ்தி புத்தி உள்ளவன் -நாஸ்திகன்
திஷ்டம் முன்னால் முடிவு செய்யப்பட்டது -தைஷ்டிகன்

வேறு உலகம் உண்டு -இல்லை
ஈஸ்வரன் ஒருவன் உண்டு இல்லை உண்டு
வேதம் பிரமாணம் என்பவன் ஆஸ்திகன்

ஆஸ்திக தரிசனங்கள் ஆறு
1-சாங்க்யம்
2-யோகம்
3-4-வைசேஷிகம்-கணாதர் -நியாயம் -கௌதமர் அஷ பாதர்-இரண்டும் தர்க்க சாஸ்திரம்
5-மீமாம்சம் -பூர்வ பாக
6-வேதாந்த தர்சனம் –

நாஸ்திக தரிசனங்கள்
புத்த ஜைன சாருவாக மதங்கள் மூன்றும் பிரபலம்

காணாதம் ஆஷபாதம் வா காபிலம் தந்த்ரமேவ வா | தந்த்ராண் ஏதாதாநி சர்வாணி ந தந்த்ராணி ஆத்மநிர்ணவய ||
(கணாத ரிஷியின் வைசேஷிகமோ அஷபாதரின் ந்யாயமோ , கபிலரின் சாங்க்யமோ தர்சநங்களாகுமே தவிர ஆத்மாவை
உள்ளபடி அறிய அவை வழிகள் ஆகமாட்டா

காணாதம் அஷ பாதம் தந்திரங்கள் ஆத்மாவின் உண்மையான தன்மை அறிய இவை கூடாதே

நைஷா தர்கேண மதி: ஆபநேய ப்ரோக்தா அந்யே நைவ ஸூஜ்ஞாநாய ப்ரேஷ்ட (கட உபநிஷத் 2-9)
ஆத்மாவைப் பற்றிய அறிவு தர்கத்தால் மட்டும் அடையப்படக் கூடாது.
ஆச்சார்யராலே உபதேசிக்கப் பட்டது தான் மோக்ஷத்துக்கு வழி வகுக்கும்

கட உபநிக்ஷத் நசிகேத -நைஷா தர்க்கம் யமன் உபதேசம் -ஆச்சார்யர் மூலமே அறிய வேண்டும்

———-

பாடம் -4-

ஆதவ் வேதா பிரமாணம் ஸ்ம்ருதி உப குருதே ச இதிஹாஸை புராணை
ந்யாயை சார்த்தம் த்வத் அர்ச்சா விதம் உபரி பரி ஷீயதே பூர்வ பாக
ஊர்த்வ பாக த்வத் ஈஹா குண விபவ பரிஞாபநை த்வத் பத ஆப்தவ்
வேத்ய வேதை ச சர்வை அஹம் இதி பகவந் ஸ்வேந ச வ்யாஸ கர்த்த –19-

ஹே பகவந்
ஆதவ் வேதா-வேதங்கள் முதலிலே வேறு ஒரு பிரமாணத்தை அபேஷியாமல் ஸ்வயமாகவே
பிரமாணம்-பிரமாணம் ஆகின்றதே
ஸ்ம்ருதி –மந் வாதி ஸ்ம்ருதி யானது –
மனு அத்ரி விஷ்ணு ஹாரீதர் யாஜ்ஜ்வல்க்யர் போன்ற மஹரிஷிகளால் இயற்றப்பட்ட தர்ம சாஸ்திரங்கள் –
ச இதிஹாஸை புராணை-இதிஹாசங்களோடு புராணங்களோடும்
ந்யாயை சார்த்தம் -பூர்வ உத்தர மீமாம்சைகளோடே
உப குருதேத்வத்-அந்த வேதங்களுக்கு அர்த்த விவரணம் பண்ணுகை யாகிற உபகாரத்தை
பண்ணுகை யாகிற உபகாரத்தை செய்கின்றன
அந்த வேதத்தில்
பூர்வ பாக-பூர்வ பாகமான கர்ம காண்டம்
அர்ச்சா விதம் உபரி -தேவரீருடைய திருவாராதனம் பண்ணும் முறையைச் சொல்லும் வகையாலே
வாயு இந்திரன் வருணன் அக்னி இவர்கள் யாவரும் ப்ரஹ்ம சரீர பூதர்களே
பரி ஷீயதே -தலைக் கட்டுகின்றது
ஊர்த்வ பாக –ப்ரஹ்ம காண்டம் ஆகிற உபநிஷத் பாகமோ என்னில்
த்வத் ஈஹா குண விபவ பரிஞாபநை–தேவரீருடைய ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்கள் ஆகியவற்றைத்
தெளிய விளங்க தெரிவிப்பதனால்
த்வத் பத ஆப்தவ்-தேவரீருடைய திருவடிகளைச் சேர்வதில்
பரி ஷீயதே -தலைக் கட்டுகின்றது
வேதை ச சர்வை-கர்ம ப்ரஹ்ம காண்ட ரூபமான சகல வேதங்களும்
வேத்ய அஹம் இதி–நானே அறியக் கூடுவேன் என்று
ஸ்வேந ச வ்யாஸ கர்த்த–தேவரீர் தாமே சோதி வாய் திறந்து அருளிச் செய்ததும் உண்டு அன்றோ –

வேதங்கள் மூல பிரமாணம்–வேறு ஒன்றை அபேஷியாமல் ஸ்வத பிரமாணம் —
அதுகளுக்கு இதிஹாச புராண நியாய மீமாம்சைகளோடு கூடி ஸ்ம்ருதி உபகாரிகை ஆகிறது –
கர்ம ப்ரதிபாதிதமான பூர்வ பாகம்- ஸ்ம்ருதி விசேஷ பூர்வ மீமாம்சைகளோடே ஆராதன விதியில் பர்யவசிக்கும்
உத்தர பாகமான உபநிஷத் இதிஹாச புராண ப்ரஹ்ம மீமாம்சைகளோடே கூடி ஸ்வரூப ரூப குண சேஷ்டிதைகளைத்
தெரியப்படுத்தி தேவரீர் திருவடிகளில் சேர்க்கையில் பக்தியில் பர்யவசிக்கிறது-
இவ்வர்த்தத்தை தேவரீரே ஸ்ரீ கீதையில் வெளியிட்டு அருளினீர்-

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ–மத்த ஸ்ம்ருதிர் ஜ்ஞாந மபோஹநம் ச–
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ-வேதாந்த க்ருத் வேத விதேவ சாஹம்–৷৷15.15৷৷

ஸர்வஸ்ய = அனைத்திலும்
ச = மேலும்
அஹம் = நான்
ஹ்ருதி = இதயமாக
ஸந்நிவிஷ்டோ = அமர்ந்து இருக்கிறேன்
மத்த: = என்னில் இருந்து
ஸ்ம்ருதிர் = வேதங்கள்
ஜ்ஞாநம் = ஞானம்
அபோஹநம் = எடுத்துச் செல்வது, மறப்பது
ச = மேலும்
வேதை³ஸ் = வேதங்களும்
ச = மேலும்
ஸர்வை = அனைத்திலும்
அஹம் = நான்
ஏவ = நிச்சயமாக
வேத்யோ = அறிந்து கொள்ள , புரிந்து கொள்ள
வேதாந்த க்ருத் = வேதாந்தங்களை செய்பவன்
வேத விதே = வேதாந்தங்களை அறிந்து கொள்பவன்
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
அஹம் = நான்

நான் எல்லா ஜீவர்களுடையவும் ஹ்ருதயத்தில் ஆத்மாவாக நுழைந்து இருக்கிறேன்
அனைவருடைய நினைவும் வஸ்து நிர்ணயமும் மறதியும் என்னிடமிருந்தே உண்டாகின்றன
எல்லா வேதங்களாலும் நானே அறியப் படுகிறேன் –
வேத விதிகளின் பலனை அளிப்பவனும் வேதத்தை அறிந்தவனுக்கு நானே
ஆச்சர்யமான ஸ்லோகம் -நிறைய இடங்களில் காட்டி வியாக்யானம் உண்டே —
கீழே சாமானாதிகரண்யம்-அனைத்தும் இவனே
அந்தராத்மாவாக இருந்து -சரீராத்மா நிபந்தனம்-பின்ன பிரவ்ருத்தி நிவ்ருத்தி ஏகஸ்மின் -விசேஷணங்கள் ஒன்றுக்கே –
விலை பெற்ற நீல வாயும் வயிறுமான மண் குடம் போலே -வேறு வேறு பிரயோஜனத்துக்காக
வேறே வேறே விசேஷணங்கள் -பிரதம விபக்தி -முதல் வேற்றுமையில் படிக்கலாம் –
ஹிருதயத்தில் ஆத்மாவாக நுழைந்து இருக்கிறேன் அனைத்துக்குள்ளும் -அந்த ப்ரவிஷ்டா சாஸ்தா நியாந்தா
ஸ்ம்ருதியும் – ஞானம் மறதி எல்லாம் என் ஆதீனம் –
வேதங்கள் -சொல்லப் படுகிறேன் -நானே -ஏவ காரம் மூன்று இடங்களிலும் -வேதங்களினால் நானே -அறியப் படுகிறேன்
வேதங்களினாலே சொல்லப் படுகிறேன் -வேறே ஒன்றும் சொல்லாதே -வேதம் என்னை சொல்லி அல்லால் நில்லாது
வேதம் எத்தை சொல்லப் போனாலும் -இவனது சரீரமே
வேதங்களின் படி செய்யும் கர்மங்களுக்கும் பலம் கொடுப்பவனும் நானே

ஸ்வத பிரமாணம் -நிரபேஷ பிரமாணம் வேதம்

——————-

பாடம் 4 : ந்யாயத்தின் வரலாறு

வைசேஷிக தர்சனம்
கணாத மகரிஷி -வைசேஷிக ஸூத்ரங்கள்–
பிரசஸ்த பாதர் -பதார்த்த தர்ம ஸங்க்ரஹம் –
ஸ்ரீ தரர்-நியாய கந்தலி
வ்யோமசிவர்-வ்யோமவதீ
உதயனர்-கிரணாவலீ
ஜெகதீசர் -ஸூக்தி
வல்லபாச்சார்யர் -நியாய லீலாவதி
உதயனர் -லக்ஷணா வலீ
சிவாதித்யர் -சப்த பதார்த்தீ
விஸ்வநாதர் -பாஷா பரிச்சேதம்
லௌகாஷி பாஸ்கரர் -தர்க கௌமுதீ

மஹர்ஷி கணாதர் – உலூகர்
த்வாந்தஸ்ய வா மோரு விசாரணாயாம் வைசேஷிகம் சாரு மதம் மதம் மே |
ஔலூகமாஹு: கலு தர்சநம் தத் க்ஷமம் தமஸ் தத்த்வ நிரூபணாய ||–(ஶ்ரீஹர்ஷர் – ஸநஷத சரிதம் 22.35)

கணங்கள் தான்ய மணிகளை புஜிப்பவர் -காணாதர் -வைராக்ய பூதர்
கணங்கள் அணுக்கள் சேர்ந்து வஸ்து இவர் மதம் என்றுமாம்
த்வாந்தஸ்ய வா மோரு விசாரணாயாம் வைசேஷிகம் சாரு மதம் மதம் மே |
ஔலூகமாஹு: கலு தர்சநம் தத் க்ஷமம் தமஸ் தத்த்வ நிரூபணாய |
தமஸ்ஸைப் பற்றி நிரூபணம் -இதுக்கு சிறந்த மதம் வைசேஷிகம் -அழகான பொருந்திய –
ஔலூக-ஆந்தைக்கு இருட்டைப் பார்க்கும் சக்தி போலே இதுக்கும்

சூத்ரம் -பாஷ்யம் -விருத்தி -பலவும் உண்டே தரிசனத்துக்கு-
பத்து அத்தியாயங்கள் இதுக்கு -ஒவ் ஒன்றுக்கும் இரண்டு பாகங்கள்
இதுக்கு வியாக்யானம் -பதார்த்த தர்ம ஸங்க்ரஹம்-பிரசஸ்த பாதர்-
அதுக்கு மேலே வியாக்கியானங்கள்-

ப்ராசீன நியாய தர்சனம்
கௌதம மகரிஷி நியாய ஸூத்ரங்கள்
ஜயந்த பட்டர் -நியாய மஞ்சரி
வாத்ஸ்யாயனர் –நியாய பாஷ்யம்
உத்யோதகரர் -நியாய வார்த்திகம் –
வாசஸ்பதி மிஸ்ரரின் நூல்கள் -நியாய வார்திக தாத்பர்ய டீகா –
உதயநாச்சார்யரின் நூல்கள்–லக்ஷணா வலீ -கிரணா வலீ -வைசேஷிக-பரமான நூல்கள்
லக்ஷண மாலா நியாய வார்திக தாத்பர்ய டீகா பரிசுத்தி -நையாயிக நிரசன பரமான நூல்கள்
ஆத்ம தத்வ விவேகம் -நியாய குஸூ மாஞ்ஜலி-நியாய பரிசிஷ்டம்

கௌதமர் – அக்ஷபாதர் – மேதாதிதி
அக்ஷபாதோ மஹாயோகீ கௌதமாக்ய: அபவந் முநி: |
கோதாவரீ சமாநேதா அஹல்யாயா: பதி: ப்ரபு: || (ஸ்கந்தபுராணம் 55.5)–அகலிகையின் பதியே இவர்-
காலிலே கண்ணை உடையவர் -ஆஷ பாதம் -இந்த தரிசனத்துக்கும் பெயர் உண்டே –

மேதாதிதி: மஹாப்ராஜ்ஞ: கௌதம: தமஸி ஸ்தித: |
விம்ருச்ய தேந காலேந பத்ந்யா:ஸம்ஸ்தா வ்யதிக்ரமம் ||-(மஹாபாரதம் சாந்தி பர்வம் 265.45)–
மேதாதிதி-பெயர் இவருக்கும் உண்டே –
ஐந்து அத்தியாயங்கள் இதற்கு உண்டு-
நியாய -புத்த வாதங்கள் பல -இதனால் பல கிரந்தங்கள் வளர்ந்தன –
வாசஸ்பதி மிஸ்ரரின் நூல்கள்-பல தர்சனத்துக்கும் உண்டே –

உதயநாச்சார்யரின் நூல்கள்-புத்தர்கள் உடன் வாதம் -ஆஸ்திகன் நாஸ்திகன் மலை மேல் தள்ளி –
பூரி ஜகந்நாதர் பக்தர் -ஐஸ்வர்யம் மதம் -மாம் ந ஜானாதி கேசவ -உன்னை புத்தர்கள் அவமானம் பண்ண பார்த்தால் –
நானே ரக்ஷிக்க வேண்டும்
உன் இருப்பே எனது அதீனம் -என்று ஸ்லோகம் -காட்சி கொடுத்த கதை உண்டே -11-நூற்றாண்டு

நவீன நியாய தர்சனம் 12-நூற்றாண்டு-
கண்டனங்கள் ப்ராசீனத்தில் -புத்தர்களை நோக்கி –
பின்பு உட் கட்சி பூசல் -சாங்க்ய-வைசேஷிக -மீமாம்ச -ஆஸ்திக தர்சனங்களில் போட்டி
அறியப்படும் வஸ்து ப்ரமேயம் -அறிய பிரமாணங்கள் -கருவிகள்
ப்ராசீனத்தில் பிரமேயம் பற்றி அநேகமாக விசாரங்கள்
நவீன நியாயம் பிரமாணம் பற்றி அநேகமாக விசாரங்கள் –

நவீன நியாய தர்சனம்
கங்கேச உபாத்யாயர்–தத்வ சிந்தாமணி
பக்ஷதர மிஸ்ரர்–ஆலோகம்
ருசிதத்த மிஸ்ரர் –பிரகாசம்
வாஸூ தேவர் –தத்வ சிந்தாமணி வியாக்யானம்
ரகுநாத சிரோமணி -தத்வ சிந்தாமணி தீதிதி
ஜெகதீச தர்கா லங்காரர் -ஜாகதீசீ
கதாதர பட்டாச்சார்யர்–தீதிதி பிரகாசிகை

பிரகரண கிரந்தங்கள் –
அன்னம் பட்டர் -தர்க ஸங்க்ரஹம்-தர்க ஸங்க்ரஹ தீபிகை
விஸ்வநாதர் -பாஷா பரிச்சேதம்–நியாய முக்தா வலீ

கங்கேச உபாத்யாயர்–தத்வ சிந்தாமணி

அந்வீக்ஷாநயம் ஆகலய்ய குருபி: ஜ்ஞாத்வா குரூணாம் மதம்
சிந்தா திவ்ய வி லோசநேந ச தயா: சாரம் விலோக்ய அகிலம் |
தந்த்ரே தோஷ கணேந துர்கமதரே ஸித்தாந்த தீக்ஷாகுரு:
கங்கேச : தநுதே மதேந வசசா ஶ்ரீதத்வ சிந்தாமணிம் || (தத்வ சிந்தாமணி ப்ரத்யக்ஷகண்டம் மங்கள ஸ்லோகம்)

அந்வீக்ஷாநயம் ஆகலய்ய குருபி–நியாய சாஸ்திரம் குருவின் இடம் கற்று :
ஜ்ஞாத்வா குரூணாம் மதம்-ப்ராபகர் மதம் அறிந்து -மீமாம்சகர்
சிந்தா திவ்ய வி லோசநேந ச தயா: சாரம் விலோக்ய அகிலம் |-சிந்தனை -என்னும் உள் கண் கொண்டு சாரம் அறிந்து
தந்த்ரே தோஷ கணேந துர்கமதரே ஸித்தாந்த தீக்ஷாகுரு:-நியாய சாஸ்திரம் அறிய கடினம் -சுருக்கமாக இருக்கும்
சித்தாந்தம் உபதேசிக்க குரு நானே
கங்கேச : தநுதே மதேந வசசா ஶ்ரீ தத்வ சிந்தாமணிம் ||-மிதமான வாக்கால் இந்த கிரந்தம் என்கிறார்-

ரகுநாத சிரோமணி –15-நூற்றாண்டு – தத்வ சிந்தாமணி தீதிதி
(சந்த்ர கிரணங்கள் போலே தீதிதி -சிறு வயசில் தந்தையை இழந்தவர் –
வாஸூ தேவர் இடம் படித்தார் மிதிலையில் சென்றும் கற்றார்

ந்யாயம் அதீதே சர்வ தநுதே குதுகாத் நிபந்தமப்யத்ர |
அஸ்ய து கிமபி ரஹஸ்யம் கேசந விஜ்ஞாதும் ஈசதே ஸூதிய: ||
(தத்வ சிந்தாமணி-தீதிதி ப்ரத்யக்ஷகண்டம் மங்கள ஸ்லோகம்)

ந்யாயம் அதீதே சர்வ தநுதே குதுகாத் நிபந்தமப்யத்ர |-நியாய சாஸ்திரம் பலரும் படிக்கிறார்கள் -கிரந்தங்களை உண்டு
அஸ்ய து கிமபி ரஹஸ்யம் கேசந விஜ்ஞாதும் ஈசதே ஸூதிய:-ரஹஸ்யம் சிலருக்கே –

கதாதர பட்டாசார்யர் –17-நூற்றாண்டு-– தீதிதி ப்ரகாசிகை
தரித்ரராக இருந்தார் -;படகு சென்று -ராஜா -நீர் கதாதரா என்று கேட்ட விருத்தாந்தம் -நியாய சாஸ்திரம் பிரசித்தம்

நத்வா நந்த் தநூஜ ஸூந்தரபதத் வந்த்வம் குரோராதராத்
உர்வீ மண்டல மண்ட நாயிதய சோராசே : அவசேஷா கிர: |
ஸங்க்ஷிப் தோக்த்யதி தஷ தீதிதி க்ருத: ப்ரத்யக்ஷ சிந்தாமணே :
வ்யாக்யாம் வ்யாகுருதே கதாதரபுத: மோதாய வித்யா வதாம் ||
(தத்வ சிந்தாமணி-தீதிதி-ப்ரகாச: ப்ரத்யக்ஷகண்டம் மங்கள ஸ்லோகம்)

நத்வா நந்த் தநூஜ ஸூந்தரபதத் வந்த்வம் குரோராதராத்-நந்தகோபாலன் குமரன் திருவடி வணங்கி
உர்வீ மண்டல மண்ட நாயிதய சோராசே : அவசேஷா கிர: |-பூமிக்கு ஆபரணமாக தனக்கு குரு -ஆதாரத்துடன் ஸ்மரித்து
ஸங்க்ஷிப் தோக்த்யதி தஷ தீதிதி க்ருத: ப்ரத்யக்ஷ சிந்தாமணே :-சுருக்கமாக சொல்வதில் சாதுர்யம் -உள்ளவர்
ரகுநாத சிரோமணி -அதுக்கு நான் வியாக்யானம்
வ்யாக்யாம் வ்யாகுருதே கதாதரபுத: மோதாய வித்யா வதாம் |-கதாதரனான நான் சாஸ்திரம் அறிந்தவர் இது கண்டு மகிழ்வர்

உபகார ஸ்ம்ருதிக்காக நாம் இவற்றை அறிய வேண்டும் –

—————-

பாடம் 5 : ந்யாயத்தின் செயல் முறை –

ப்ரணம்ய ஹேதும் ஈஸ்வரம் முநிம் கணாதம் அந்வத: |
பதார்த்த தர்ம சங்க்ரஹ: ப்ரவக்ஷ்யதே மவோதய: || (ப்ரசஸ்தபாத பாஷ்யம் – மங்கள ஸ்லோகம்)
காணாதர் ஸூத்ரங்களுக்கு பாஷ்யம் செய்தவர்-ப்ரசஸ்தபாதர்

பொருள் – உலகிற்குக் காரணமான பகவானை வணங்கி, அதற்குப் பின் கணாத முநிவரை வணங்கி, மிகுந்த
ஜ்ஞாத்தை உண்டாக்கக் கூடிய, உலகப் பொருட்களின் தன்மைகளைச் சுருக்கமாகச் சோல்லும்
பதார்த்த-தர்ம-சங்க்ரஹம் என்னும் நூல் மேலே சொல்லப்படப் போகிறது–

ந்யாய சாஸ்த்ரத்தின் நோக்கம்
பதார்த்தாநாம் சா தர்ம்ய வை தர்ம்யாப்யாம் தத்வ ஜ்ஞாநாத் நிஸ் ஸ்ரேயஸம் (மஹரிஷி கணாதர் –வைசேஷிக ஸூத்ரம் 1-1-3)
பொருள் –பொதுத் தன்மைகளாலும் தனித் தன்மைகளாலும் பொருட்களின் உண்மையான அறிவிலிருந்து முக்தி உண்டாகிறது–

ந்யாய சாஸ்த்ரத்தின் செயல் முறை –
அதன் படிகள்

1—உத்தேச்யம் –பெயராலே பொருள்களைக் கூப்பிடுதலின் -பட்டியல் இடுதல்
2–பொருள்களின் இலக்கணத்தை -தனித்தன்மையை – அசாதாரண தர்மத்தை-உரைத்தல்
3—பரீஷா–பொருளையும் அதன் தனித் தன்மையையும் சோதித்து நிலை நாட்டுதல்

உதாரணம் –

1—உத்தேச்யம் –பெயராலே பொருள்களைக் கூப்பிடுதலின் -பட்டியல் இடுதல்
உலகத்தைப் படைத்தவர் ஸ்ரீ நாராயணன்
2–பொருள்களின் இலக்கணத்தை -தனித் தன்மையை -உரைத்தல் -definition –
ஸ்ரீ நாராயணன் ஸ்ரீ மஹா லஷ்மீ தாயாரின் கணவர் –
திரு மகள் கேள்வன் -கருடா ருடன்–அரவணைப் பள்ளியான் –
3—பரீஷா–பொருளையும் அதன் தனித் தன்மையையும் சோதித்து நிலை நாட்டுதல் –
ஸ்ரீ நாராயணன் என்று ஒருவர் உள்ளாரா
ஆம். “ஏகோ ஹ வை நாராயண ஆஸீத்” என்று வேதம் சொல்லுகிறது
• ஸ்ரீ நாராயணன் தனிப் பொருள் தானா? ஆம். நாராயணன்
மற்றப் பொருள்களைக் காட்டிலும் வேறுபட்டவன் என்று
வேதம் சொல்லுகிறது.
• ஸ்ரீ நாராயணன் ஸ்ரீ மஹா லக்ஷ்மியின் கணவர் தானா? ஆம்.
“ஹ்ரீஶ்ச தே லக்ஷ்மீஶ்ச பத்ந்யௌ” என்று வேதம் சொல்லுகிறது
• இந்தத் தன்மை மற்றேர்களுக்கும் உண்டா? இல்லை
ஸ்ரீ நாராயணன் ஒருவருக்கே உள்ளது இது

இந்த மூன்றுக்கும் மேலே நான்காவதாக -விபாகம் -classification
நியாய சாஸ்திரத்தில் பொருட்களின் பொதுத் தன்மைகளையும் தனித் தன்மைகளையும் கொண்டு
அவற்றை வர்க்கங்களாக வகுத்தலும் செய்யப்படுகிறது
விபாகம் என்றால்
ஒரு பொருளின் அனைத்து முரண்பட்ட உட்ப் பொருள்களையும் பட்டியல் இடுவது

ஸ்ரீ மந் நாராயணனுக்கு ஐந்து நிலைகள் உண்டே
பர ரூபம் -வ்யூஹ ரூபம் -விபவங்கள்-அந்தர்யாமி -அந்தப்ரவிஷ்டா சாஸ்தா -ஹார்த்த ரூபம் -அர்ச்சா ரூபம் –
இப்படி பிரித்து அறிதல்
இந்த ஐந்துக்கும் லக்ஷணம் பரீஷை செய்து விபாகம் பண்ண வேண்டும் –

வஸ்திரம்
பல நூல்கள் சேர்ந்து உருவானது
துணிகள் பருத்தி பட்டு கதர் போன்ற விபாகங்கள்
அனைத்து விபாகங்களையும் சொல்ல வேண்டும் –
உள் பிரிவுகள் ஒன்றுக்கு ஓன்று முரண் பட்டு இருக்க வேண்டும்
பட்டு -வேஷ்ட்டி புடவை போன்ற விபாகங்கள் உண்டே
பிருத்வி குடம் என்று வகைகள் சொல்லாமல் பிருத்வி நீர் இத்யாதி சொல்ல வேண்டும்

லக்ஷணம் -அசாதாரண தர்மம்-
ஒரு பொருளின் தனித் தன்மையே அதன் லக்ஷணம் -அடையாளம் -ஆகிறது
லக்ஷணத்துக்கு இரண்டு பயன்கள்
1–வ்யாவ்ருத்தி–மற்ற பொருள்களைக் காட்டிலும் வேறு பட்டதாக அறிதல்
2–வ்யவஹாரம் -ஒரு சொல்லால் அந்தப் பொருளைக் குறிப்பிடுதல் -designation

வ்யூஹம் -லீலா விபூதியில் உள்ள தன்மை சொல்லாமல் பாற் கடல் சயனம் என்பதே அசாதாரணம்-

லக்ஷணம் மூன்று தோஷங்கள் இல்லாமல் இருக்க வேண்டும்
1–அ சம்பவம்
2–அ வியாப்தி
3–அதி வியாப்தி

1–அ சம்பவம் -applicability
ஒரு பொருளின் லக்ஷணமாக நாம் சொல்லும் பண்பானது அந்தப் பொருளிலேயே இல்லா விட்டால்
அது லக்ஷணமாக முடியாது. இந்த தோஷத்திற்கு அ சம்பவம் என்று பெயர்
மாட்டுக்கு ஒரு குளம்பைக் கொண்டு இருத்தல் லக்ஷணம் என்றால் அ சம்பவம் தோஷம் வரும்
குதிரைக்கு தான் ஒரு குளம்பு-மாட்டுக்கு இரண்டு குளம்புகள் உண்டே

2–அ வியாப்தி -partial applicability
ஒரு பொருளின் லக்ஷணமாக நாம் சொல்லும் பண்பானது -அந்தப் பொருளின் சில எடுத்துக் காட்டுகளில் இருந்து
சிலவற்றில் இல்லாமல் போனால் அந்த தோஷத்துக்கு அ வியாப்தி என்று பெயர்
மாட்டுக்கு கருமை நிறம் லக்ஷணம் என்றால் அ வ்யாப்தி தோஷம் வருமே
வெள்ளையான பழுப்பான பசுக்களும் இருப்பதால் இது பொதுவான லக்ஷணம் ஆக முடியாதே

3–அதி வியாப்தி -over applicability
ஒரு பொருளின் லக்ஷணமாக நாம் சொல்லும் பண்பானது அந்த பொருளில் மட்டும் இல்லாமல்
வேறு பொருள்களிலும் இருந்தால் அது எப்படி இந்த பொருளின் தனித் தன்மையாகும்
இந்த தோஷத்துக்கு அதி வியாப்தி என்று பெயர்
மாட்டுக்கு கொம்பு தான் லக்ஷணம் என்று சொன்னால் அதி வியாப்தி தோஷம் வரும்
கொம்பு மாட்டுக்கு இருப்பது போலே ஆட்டுக்கும் மானுக்கும் கூட இருக்கிறதே
ஆகவே இது மாட்டின் தனித்தன்மை அல்ல -ஆகவே இது மாட்டின் லக்ஷணம் ஆக முடியாதே

தோஷ த்ரய ரஹிதமாய் லக்ஷணம் இருக்க வேண்டும்
நாம் நாம் பதார்த்த ஸங்க்ரஹம் -உத்தேச்யம்
அனைத்தையும் குறிப்பிடும் சொல் தானே பதார்த்தம்
பதஸ்ய அர்த்தம் -சொல்லாலே குறிக்கப்படும் பொருள் என்றவாறு
சொல்லால் குறிக்கப்படாத வஸ்துவே இல்லையே உலகில் –
பொருள்கள் எல்லாம் ஞானத்துக்கு விஷயமாகவே இருக்கும்-

உலகில் இருக்கும் அனைத்தும் –
நியாய சாஸ்திரத்தில் உலகில் இருக்கும் அனைத்துக்கும் லக்ஷணம் சொல்லி –
அதை பரீஷை செய்து -பின் அதன் உள் பொருள்களைக் காட்ட வேண்டும்
அதற்கு முதலிலே உலகில் உள்ள அனைத்தையும் உத்தேச்யம் -பெயராலே குறிப்பிடுதல் -செய்ய வேண்டுமே
எந்தச் சொல்லாலே அத்தைச் செய்வது –
பதார்த்தம் என்ற சொல் உலகில் உள்ள அனைத்தையும் கூறும்
சரி -அனைத்துக்கும் பொதுவான லக்ஷணம் என்ன
அதையும் அந்த சொல்லே காட்டிக் கொடுக்கிறது
ஒரு சொல்லின் பொருளாக இருத்தல் -ஒரு சொல்லாலே குறிப்பிடுதல் -தான் உலகில் உள்ள
அனைத்து பொருள்களுக்கும் லக்ஷணம்
பதார்த்தம் சொல்லே லக்ஷணம்
நாற்காலி -அதே சொல் லக்ஷணம் நான்கு கால்கள் உள்ளது என்பது போலே –
சொல்லால் குறிக்கப்படும் பொருள் பதார்த்தம் என்பதில் மூன்று தோஷங்களும் இல்லையே –

—————–

பாடம் -6-
பதார்த்தங்கள் ஏழு வகைகள் –
1-த்ரவ்யம் -வஸ்து
2-குணம் -பண்பு
3-கர்மம் -செயல்
4-சாமான்யம் -பொதுத் தன்மை
5-விசேஷம் -தனித் தன்மை
அநு கதமான ப்ரதீதி -தொடர்ந்து வரும் ஞானம் -6-சமவாயம் -Inherence
7-அபாவம்-இன்மை -Non-Existence

சாமான்யம் -பொதுத் தன்மை
கருப்பு மாடு -கருப்பு ஆடு -மாடு வேறு ஆடு வேறு ஆனாலும் நிறம் கருமை என்பதால் ஒரே மாதிரி புத்தி ஏற்படுமே
கருப்பு மாடு -வெள்ளை மாடு -மாட்டுத் தன்மை சாமான்யம் -கோத்வம்-பொதுத் தன்மை
நிறம் சுவை அளவு இவற்றாலும் வேறு பட்டாலும்
இது மாடு -அதுவும் மாடு
இது குடம் –அது மற்றொரு குடம்
இப்படி ஒரே மாதிரியான புத்தி ஏற்படுவது சாமான்யம் –

அநு கதமான ப்ரதீதி -தொடர்ந்து வரும் ஞானம் –
மனுஷ்யத்வம் -ஸிம்ஹத்வம்-கடத்வம்-கோத்வம்-கோ வாக இருக்கும் தன்மை
ஆகிருதி -வடிவு பார்த்து -கடத்வம்-ஜாதி -க்ரஹிக்கிறோம் -உயரமனான வெள்ளையான குடம் -என்றால்
உயரத்தையும் -வெண்மையையும் -கடத்துவத்தையும் க்ரஹிக்கிறோம்
ஜங்கத்வம்-எல்லா விலங்குகளுக்கும்
ஸ்தாவரத்வம்-
அநு கதமான ப்ரதீதி நியாமகம் -ஒருங்கு இணைத்து பேசுவது

விசேஷம் -தனித் தன்மை
விசேஷம் -பரமாணுக்கள் -ஒவ் ஒன்றுக்கும் வேறுபடும்

விசேஷம் -அறிந்து -வை சேஷிக மதம் -தனித்தன்மை அறிந்து பிரித்து அறிவது
சர்வ ஈஸ்வரன் -தனித்தன்மை அவனுக்கு -நியமிக்கிற படியால் வேறுபட்டவன்
குடம் வேறே புஸ்தகம் வேற ஜாதி பேதம் -குடத்வம் -புஸ்தகத்தவம் கொண்டு அறிகிறோம்
சின்ன குடம் பெரிய குடம் -அளவு கொண்டு வேறுபாடு அறிகிறோம்
நிறம் -அளவு -எல்லா பண்புகளிலும் ஒன்றாக இருக்க -வேறு படுத்த –
உருவாக்கப்பட்ட அவயவங்கள் பகுதிகள் வேறே
நூல் வாசி கொண்டு வஸ்திரம் வேறே
காரணம் வேறாக- என்றால் காரியமும் வேறாகவே இருக்கும்
அனுமானித்து -கண்ணால் தெரியாமல் இருக்க –
அவயவங்கள் வேறு பட்டன என்று எப்படி அறிவது -அதனுடைய அவயவங்கள் வாசி கொண்டு அறிய வேண்டும்

பரமாணு கார்ய வாதிகள் இவர்கள் மதம்-
பரமாணுக்கு அவயவங்கள் கிடையாது
அணுக்கள் நித்யம் இவர்கள் சித்தாந்தம்
பிரளய காலத்திலும் இவை இருக்கும்
இவற்றை வேறு படுத்த -விசேஷம் -சிறப்பு -தன்மை ஒப்புக் கொள்கிறார்கள்
தேவைப்பட்ட இடங்களில் மட்டும் விசேஷம் கல்பித்து -லாகவம்- – அவயவம் இல்லாத பரமாணு –
நித்ய த்ரவ்யங்களில் அனைத்திலும் விசேஷம் என்ற தன்மை உள்ளது கல்பிக்கப் பட்டது

சமவாயம்
த்ரவ்யம் -குணம் -கர்மம் -சாமான்யம் -விசேஷம் -ஐந்துக்கும்
தன் தன் ஆச்ரயத்தோடே இருக்கும் தொடர்பே -சமவாயம் எனப்படும்

விசேஷம் சமவாயம் -இரண்டையும் சாஸ்திரம் கொண்டே அறிய வேண்டும்
காற்றில் மணம் -பூக்களில் இருந்து நுகர்ந்து -குணம் த்ரவ்யத்தை அண்டியே இருக்கும்
செயலும் த்ரவ்யத்தையே அண்டியே இருக்கும்
இப்படி சாமான்யமும் விசேஷமும் த்ரவ்யத்தில் இருக்கும்
துணி நூல் வேறே ஆகவே த்ரவ்யத்திலும் த்ரவ்யத்திலும் இருக்கும்
அசத் கார்ய வாதிகள் இவர்கள்
அவயவி -அவயவங்களை அண்டியே இருக்கும்
இந்த சம்பந்தத்துக்கு -சமவாயம் -என்கிறார்கள்-

அ பாவம் -ஏழாவது –
இங்கு இல்லை -இப்பொழுது இல்லை -இவ்விடத்தில் இல்லை-இல்லவே இல்லை -போல்வன

—————–

லஷ்யம் -இலக்கு –goal-அறிய வேண்டிய பொருள்
லக்ஷணம் -அடையாளம் -தனித்தன்மை -அசாதாரண தன்மை -definition –specific-attribute-
அ சம்பவம்-அ வ்யாப்தி -அதி வ்யாப்தி -மூன்று தோஷங்கள் இல்லாமல் இருக்க வேண்டும்
லஷ்யத்தை -வஸ்துவை -பெயரை இட்டுக் குறிப்பது -உத்தேச்யம்
பரிஷா –investigation-
விபாகம் -உள் பிரிவுகள்
பதார்த்தங்கள் -அனைத்தையும் சொல்லும் -அவற்றில் -ஏழு வகைகள் முன்பு பார்த்தோம
த்ரவ்யம் -குணம் -கர்ம -சாமான்யம் -விசேஷம் -சமவாயம் -அ பாவம்
இதுக்கு லக்ஷணமும் பதார்த்தம் -ஒரு சொல்லாலே குறிப்பிடப் படும் பொருள் –
பரமாணுக்கள் -அவயவம் இல்லாதவை -ஒவ் ஒன்றுக்கும் -விசேஷம் என்று கல்பித்தார்கள் – வேறு படுத்திக் காட்ட
இதனாலே வை சேஷிக தர்சனம்-சமவாயம் -என்பதும் இவர்கள் சொல்வதே –
நையாயிகர் -நியாய ஸாஸ்த்ர காரர்-
முன்பு இவற்றைப் பார்த்தோம்-

பாடம் 7 : பதார்த்தங்களின் உட்பிரிவுகள் – பகுதி 1–த்ரவ்யம், குணம் மற்றும் கர்ம-

த்ரவ்யங்களின் வகைகள் -9-
1-ப்ருத்வீ
2-அப்பு
3-தேஜஸ்ஸூ
4-ஆகாசம்
5-வாயு
6-காலம்
7-திக்கு
8-ஆத்மா
9-மனஸ்ஸூ

ஜாதி மாறாது -குணம்-மாறும்
குணம் பல ஜாதிகளில் இருக்குமே –

குணங்களின் வகைகள் -24-
1-ரூபம் -நிறம்
2-ரசம் -சுவை
3-கந்தம் -மணம்
4-ஸ்பர்சம் -தொடு உணர்வு
5-சமக்யா-எண்ணிக்கை

6-பரிமாணம் -அளவு
7-ப்ருதக்த்வம்-வேறுபாடு
8-சம்யோகம் -சேர்க்கை
9-விபாகம் -பிரிவு
10-பரத்வம் -தொலைவு

11-அ பரத்வம் -அருகாமை

இங்கு பரத்வம்–அ பரத்வம்-உயர்வை தாழ்வை சொல்லாமல் -தொலைவையும் அருகாமையும் சொல்கிறது

12-குருத்வம் -எடை
13-த்ரவத்வம்-த்ரவத்தன்மை
14-ஸ்நேஹம்-பசை
15-சப்தம் -ஒலி

இனி மேல் உள்ள எட்டு குணங்களும் ஆத்மாவுக்கே உள்ளவை-

16-புத்தி -அறிவு
17-ஸூகம் -இன்பம்
18-துக்கம் -துன்பம்
19-இச்சா -ஆசை
20-த்வேஷம் -வெறுப்பு

21-பிரயத்தனம் -முயற்சி
22-தர்மம் -நல் வினை
23-அதர்மம் -தீ வினை
23-சம்ஸ்காரம் -பதிவு

கர்மங்களின் வகைகள் -காயிக வியாபாரங்கள் –சேஷ்டைகள் -ஐந்து
1-உத் ஷேபணம்–மேலே செல்லுதல்
2-அப ஷேபணம் -கீழே செல்லுதல்
3-ஆ குஞ்சனம் -மடித்தல்-contraction
4-ப்ரசாரணம் -விரித்தல் -expansion
5-கமனம்–பக்கவாட்டில் செல்லுதல் -கீழே சொல்லாதவை அனைத்துக்கும்-

———–

பாடம் -8-சாமான்யம் –பொதுத் தன்மை
கருப்பான ஆடு -கருப்பான மாடு -கருமை-பொதுவான தன்மை இல்லா விட்டால் ஏற்படாதே –
இங்கு குணம் -பண்பை வைத்து –
இதே போலே கருப்பான ஆடு கருப்பான மாடு -இங்கு ஜாதியை வைத்து
வெண்மை நூல் -வெண்மை வஸ்திரம் -வெண்மையான புத்தகம் -வெண்மையான பால் –
இப்படி பல விதமாக வெண்மை த்ரவ்யங்களில் இருக்கும்

நிறம் மணம் சுவை மாறினாலும் ஜாதி -பொதுத் தன்மை -கோத்வம்-மாட்டுத் தன்மை -சாமான்யம்

இப்படிக் கல்பிக்கப்படும் சாமான்யம்
ஒரே மாதிரியான அனைத்து மாடுகளிலும் உள்ள மாட்டுத் தன்மையாகிற சாமான்யம்
வஸ்து உருவாகும் பொழுது உருவாகி அழியும் பொழுது அழியும் என்று கொண்டால்
கடினமாக -கௌரவமாக -கல்பிக்க வேண்டும்

எளிமையாக -லாகவமாக -மாட்டுத்தன்மை -நித்யம் -மாடு அழியும் பொழுதும் அழியாமல் நித்யம் என்று கல்பிக்கலாம்
ஆகவே சாமான்யம்
ஒன்றே என்றும்
நித்யம் என்றும் கொள்ள-கல்பிக்க – வேண்டும்

சாமான்யம் இருக்கும் இடங்கள்
த்ரவ்யங்களிலும்
குணங்களிலும்
செயல்களிலும் -இருக்கும்
வெள்ளை மாடு ஓடுகிறது -வெள்ளை மாடு நடக்கிறது -வெள்ளை ஆடு நடக்கிறது

த்ரவ்யத்வம் -த்ரவ்யத் தன்மை -அதிக இடங்களிலும்
ப்ருத்வீத்வம் -நிலத்தன்மை–மரம் -மணல் -துணி -குடம் -இப்படி குறைந்த இடங்களிலும் இருப்பதால்
த்ரவ்யத்வம் -பர சாமான்யம் என்றும்
பிருத்வீத்வம்-அ பர சாமான்யம் -என்றும் சொல்லப்படும் -இப்படி இரு வகை சாமான்யம்

ஆனால் அதே ப்ருத்வீத்வம் கடத்துவத்தைக் காட்டிலும் அதிக இடங்களில் இருப்பதால்
அது பர சாமான்யம் என்றும் கடத்வம் அபர சாமான்யம் ஆகும்

இப்படி ஒன்றை ஒன்றை ஒப்பிட்டு பர அபர சாமான்யங்களை அறிய வேண்டும்

பண்புகள் வேறே வேறே வஸ்துக்களில் ஒன்றாக –same -வேறே -similar-வேறே
வெள்ளை நிறம் கருப்பு நிறம் -நிறத்தன்மை சாமான்யம்
குணம் ரூபம் செயல் இவை ஆஸ்ரயமாக த்ரவ்யம் கொண்டே இருக்கும் -தனியாக இருக்க முடியாதே
கர்ம -செயல்தனம் -கர்மத்வம் -activitiness- ஆடு மாடு பொதுவான சாமான்யத்வம் விலங்கத்வம்
வெள்ளை கருப்பு -நிறத்தனம் பொதுவான தன்மை ரூபத்வம் இதுவே
பதார்த்தம் -த்ரவ்யங்களுக்கும் சாமான்யம்
குடத்வம் -பிருத்வீத்வம்–ஒப்பீடு
பொதுவான சாமான்யம் -சத்தா -த்ரவ்யத்வம் -குணத்வம் -கர்மத்வம் -இவை மூன்றுக்கும்
இது எப்பொழுதுமே பர சாமான்யமாகவே இருக்கும் –

ஆத்மாவும் த்ரவ்யம் -நாமும் உலகில் ஒரு சிறு பகுதி -என்று அறிந்து இயற்கையுடன் நாமும் ஒன்றி இருக்க வேண்டும்
ஞானம் இருப்பதால் மற்ற எட்டு த்ரவ்யங்களையும் சரியாகப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு வேண்டும்

——-

பாடம் -9–

கணாத -கௌதம -நியாய மதம் -சிறுவர்களுக்கும் -அன்னம் பட்டர் -தர்ம ஸங்க்ரஹம் -நூலை இயற்றி அருளுகிறார்

ஒரே பதார்த்தத்தில் பல சாமான்யங்கள் இருக்கலாமே –சிகப்புத்தன்மை -குணத்தன்மை,-ரூபத்தன்மை
மாட்டுத்தனம் -விலங்குத்தனம்-த்ரவ்யத்வம்
கடத்தவம் -ப்ருத்விதனம் -த்ரவ்யத்வம்
நிறம் -சிவப்புத் தனம் -redness-ரூபம் -வர்ணங்கள் வகைகளில் ஒரு வகை -பலவகை சாமான்யங்கள்

இனி விசேஷம்
பரமாணு போன்று எந்த த்ரவ்யத்துக்கு -அவயவங்கள் பகுதிகள் இல்லையோ -அதை மற்ற த்ரவ்யங்களில் இருந்து
வேறுபடுத்த வேறே வழி இல்லாததால் விசேஷம் என்று ஒரு பதார்த்தம் கல்பிக்கப் படுகிறது
அவ்வாறு அவயவங்கள் இல்லாத த்ரவ்யங்கள் -நித்யம் -என்றும் இருப்பது -உண்டாக்குவதும் அழிவும் இல்லாமல் இருப்பவை
அவயவங்கள் உள்ள த்ரவ்யம் அவற்றின் சேர்க்கையால் உண்டாகி அவற்றின் பிரிவால் அழியும்
எனவே விசேஷம் நித்ய த்ரவ்யங்களில் தானே இருக்க வேண்டும் என்று அறியலாம்

நிலம் -நீர் -நெருப்பு -காற்று -இவை போன்ற பெரிய பொருள்களுக்கு அவயவங்கள் உண்டு -நித்யம் அல்ல
இவற்றின் பரமாணுக்களுக்கு அவயவம் அல்ல -அவை நித்யம்

ஆகாயம் -காலம் -திசை -இவை உலகில் ஓன்று தானே -அவயவங்கள் இல்லாதவை -இவை நித்யம்

ஆத்மா -மனஸ்ஸூ-இவை கணக்கற்றவை -அவயவங்கள் இல்லாதவை -இவையும் நித்யம்

ஒவ் ஒரு நித்ய த்ரவ்யத்திலும் ஒரு விசேஷம் உண்டு

குடம் -நதி -நெருப்பு -காற்று -இவை போன்ற பெரிய பொருள்களில் விசேஷம் இல்லை
நித்ய த்ரவ்ய வ்ருத்தமே விசேஷம்-குடத்திலில்லை -ஆனால் பரமாணுவில் உண்டு -இது நித்யம் இவர்கள் பக்ஷத்தில்-
நித்ய த்ரவ்யங்களில் இருப்பதே விசேஷம்
ஐந்தில் முழுவதிலும் உண்டு
நான்கில் பரமாணுவுக்கு மட்டும்
இவை அநந்தம்
நித்ய வஸ்துக்களில்/பதார்த்தங்களில் இருப்பது விசேஷம் என்று சொல்லாமல்
நித்ய த்ரவ்யங்களில் -என்பதால் குணம்-கிரியைகள்- போன்றவற்றில் இல்லை என்றபடி-

விசேஷம் த்ரவ்யங்களில் மட்டும் தான் இருக்க வேண்டுமா -குணங்களில் இருக்க வேண்டாமா என்னில்
ஒரு பரமாணுவில் உள்ள ஒரு குணத்தை மற்ற குணங்களில் இருந்து வேறுபடுத்த விசேஷம் கல்பிக்க வேண்டாமோ என்னில்
பரமாணுவில் இருக்கும் விசேஷத்தைக் கொண்டு பரமாணுக்களில் உள்ள வேறுபாட்டை அறிந்து விட்டால்
ஆஸ்ரயம்-இருப்பிடம் வேறுபட்ட படியால் அவற்றில் உள்ள குணங்களையும் நாம் வேறுபடுத்தி விடலாமே
இரண்டு வெவ்வேறு பொருள்களின் இருக்கும் குணம் ஒன்றாக இருக்க மூடியாத படியால்
ஆகையால் குணங்களுக்கு தனியாக ஒரு விசேஷம் தேவை இல்லை

விசேஷங்களைக் கொண்டு இரண்டு பரமாணுக்களின் வேறுபாட்டை அறிந்தோம் –
விசேஷங்களை எப்படி வேறுபடுத்துவது-அதற்கு இன்னும் ஒரு விசேஷம் வேண்டுமா
இப்படி விசேஷத்தில் ஒரு விசேஷத்தை கலப்பித்தோம் ஆகில் –
அதற்கும் இன்னும் ஒரு விசேஷம் கல்பிக்க வேண்டி வரும்
எனவே இப்படி முடிவு இல்லாத படி கல்பித்தால் அநவஸ்தை தோஷம்-infinte regress- வரும் –
இங்கு ஆஸ்ரயம் இருப்பிடம் வேறு பாட்டால் விசேஷங்களில் வேறுபாடு அறியலாம் என்றால்
அந்யோந்ய ஆஸ்ரய தோஷம் உண்டாகும்
ஆகவே விசேஷங்கள் ஸ்வத வ்யாவருத்தமாக-இயற்கையாகவே வேறாக- தான் அறியப் படுகின்றன
அவற்றின் வேறுபாட்டை அறிய வேறே ஒன்றின் தேவை இல்லை என்பதே நியாய மதம் –

———–

பாடம் -10-
சமவாயம் -அபாவம் விளக்கம்

சமவாயம் – விளக்கம்
பதார்த்தங்களின் சேர்க்கை -சம்பந்தம்
தண்டீ புருஷா -தண்டம் வைத்துள்ளவன்
கை என்ற த்ரவ்யத்துக்கும் தடி என்ற த்ரவ்யத்துக்கும் சம்பந்தம் –
சம்யோகம் -24 -குணங்களின் பட்டியலில் -8-வதாக முன்பே சம்யோகம் பார்த்தோம்

சம்யோகம் வேறே சமவாயம் வேறே
அது காண்கிறோம் -இது கல்பிக்கப்படுகிறது
ஒளி உடைய ரத்னம் -மணம் உடைய பூ –சமவாயம் –
புடவை கையில் வைத்த -இது சம்யோகம் -கண்ணால் பார்க்கிறோம்

பரமாணுக்கள் சேர்ந்து த்வி–த்ரி -என்பதால் சமவாயம் த்ரவ்யங்களுக்குள் இருக்கும் என்பர் இவர்கள்
நூல்களை ஆஸ்ரயித்தே துணி -அதுவே சமவாயம்
அவயவங்கள் இருந்தால் தானே அவயவி இருக்க முடியும் –

த்ரவ்யங்கள் குணங்கள் செயல்கள் சாமான்யங்கள் விசேஷங்கள் -இவற்றுடன் சேர்ந்ததாக பல த்ரவ்யங்களைப் பார்க்கிறோம்
கருப்பான மாடு நடக்கிறது -கருமைத்தனம்-மாட்டுத்தனம் -நடத்தல்
துணி த்ரவ்யம் நூல்களான த்ரவ்யங்களுடன் சேர்ந்து பார்க்கிறோம்
பரமாணுக்களில் விசேஷங்கள் சேர்க்கை பார்க்கிறோம்
த்ரவ்யத்துக்கும் -அதில் இருக்கும் த்ரவ்யம் குணம் செயல் சாமான்யம் விசேஷம் இவற்றுடன் உள்ள சம்பந்தம்
சம்யோகமாக இருக்க முடியாது ஏன் எனில் த்ரவ்யங்களுக்கு இடையில் மட்டுமே சம்யோகம் இருக்கிற படியால்

மேலும் சம்யோகத்தால் சேர்ந்த இரு பொருள்களை நம்மால் பிரிக்க முடியும்
ஆனால் குணமோ செயலோ சாமான்யமோ விசேஷமோ அதன் ஆஸ்ரயமான -இருப்பிடமான -த்ரவ்யத்தை விட்டுப் பிரிவதே இல்லை
ஆகவே சாமான்யம்-சமவாயம் – என்கிற புதிய தொடர்பை கல்பிக்கிறோம்

சமவாயம் என்னும் சம்பந்தம் அயுத சித்தர்கள் என்னும் பொருள்களுக்கு இடையே இருக்கும் –
அயுத சித்தம் -பிரிக்க முடியாதவை –
தான் இருக்கும் வரை மற்ற ஒன்றை அண்டியே தான் இருக்குமோ -இவ்விரண்டு பதார்த்தங்களும்
அயுத சித்தர்கள் என்று அழைக்கப் படுகின்றன
1-குணம் -குணத்தை உடைய த்ரவ்யம்
2-க்ரியா -செயல் -செயலை உடைய த்ரவ்யம்
3-சாமான்யம் -அது இருக்கும் இடம் குணமோ செயலோ த்ரவ்யமோ
4-விசேஷம் -அது இருக்கும் நித்ய த்ரவ்யம்
5-அவயவி -த்ரவ்யங்களும் -அதில் இருக்கும் அங்கங்களும் (நூல்கள் துணி போலே பிரிக்க முடியாத த்ரவ்யங்கள்)
ஆகிய ஐந்து இரட்டைகள்
(மேசை மேலே குடம் -சமவாயம் இல்லையே -தொட்டுக் கொண்டு உள்ளது -காரண கார்ய பாவம் இல்லையே
பிரிந்தும் ஸ்திதி உண்டே–பிரிக்க முடியாத சம்பந்தம் -விசிஷ்டம் -சமவாயம் -என்று கல்பிக்கிறார்கள்-)

அபாவம்
1-இங்கு குடம் இல்லை -த்ரவ்யத்தின் இன்மை
2-இது சிவப்பாக இல்லை -குணத்தின் இன்மை
3-இது நகரவில்லை -செயலின் இன்மை
4-இது மாட்டுத்தன்மை இல்லை -சாமான்யத்தின் இன்மை
5-குடத்தில் விசேஷம் இல்லை -விசேஷம் இன்மை
6-இரு த்ரவ்யங்களுக்கும் சமவாயம் இல்லை -சமவாயத்தின் இன்மை
ஆகவே அபாவம் என்னும் ஏழாவது பதார்த்தமும் கண்டிப்பாக ஏற்கப் பட வேண்டியதே

அபாவத்தின் வகைகள்
1-ப்ராக் அபாவம்
2-ப்ரத்வம்ச அபாவம்
3-அத்யந்த அபாவம்
4-அந்யோந்ய அபாவம்

1-ப்ராக் அபாவம்
ஒரு பொருள் உண்டாவதற்கு முன்னால் காணப்படும் அதன் இன்மை தான் ப்ராக் அபாவம்
ப்ராக் -முன்னால்
நூல்களைப் பார்த்து -இங்கு துணி உண்டாகப் போகிறது -என்று நினைக்கிறோம்
இதனால் இப்பொழுது இல்லை என்று தெரிகிறது

2-ப்ரத்வம்ச அபாவம்
ஒரு பொருளின் அழிவால் -அழிவால் ஏற்படும் இன்மை -த்வம்ச -அழிவு
குடம் அழிந்து விட்டது என்று நமக்குப் புத்தி ஏற்படுகிறது
இது ப்ரத்வம்ச அபாவத்தைக் காட்டுகிறது
குடம் உத்பத்திக்கு முன்புள்ள அனைத்து காலங்களிலும் ப்ராக் அபாவம் உண்டே
குடம் உத்பத்தி
குடம் அழிவுக்குப் பின்புள்ள அனைத்து காலங்களிலும் ப்ரத்வம்ச அபாவம் உண்டே

3-அத்யந்த அபாவம்
முக்காலத்திலும் இருக்கும் அபாவம்
எல்லை அற்ற அபாவம்
எந்த இடத்தில் ஒரு பொருள் எக்காலத்திலும் இருக்கவே முடியாதோ அங்கு அதன் அத்யந்த அபாவம் இருக்கிறது
காற்றில் நிறம் இல்லை (பூக்களின் மணத்தை தானே கொண்டு வரும் )
வெல்லக்கட்டியில் கசப்பு இல்லை போல்வன

4-அந்யோந்ய அபாவம்
பொருள்களுக்கு இடையே பரஸ்பர வேறுபாடு
இது குடம் துணி இல்லை -அல்ல-
இது மாடு குதிரை இல்லை-அல்ல- போன்றவை
அந்யோந்யம் -ஒன்றுக்கு ஓன்று

இல்லை -என்னும் சொல் எப்போதும் அத்யந்த அபாவத்தைத் தான் குறிக்கும்
என்னிடத்தில் இல்லை
அல்ல -என்னும் சொல் எப்போதும் அந்யோந்ய அபாவத்தைத் தான் குறிக்கும்
பேதம் -மாடு ஆடு அல்ல-

——-

பாடம்–11-கேள்வி பதில்கள் சுருக்கம்

ஸ்ருதி ஸ்ம்ருதி -ஸ்வத பிரமாணம் –
வித்யா ஸ்தானங்கள் -18-பார்த்தோம் –
இதிகாசங்கள் -ஸ்ம்ருதிகள் -ஆகமங்கள் -புராணங்களில் சேரும் -உப லக்ஷணம் முறையில் –
அங்கங்கள் உப அங்கங்கள் கொண்டு வேத அர்த்தங்கள்
மென்மை -கடினம் -இப்படியும் சம்யோகம் காட்டும்
அறிகிறோம்
தரிசனங்கள் -உப அங்கங்கள் ஆகும் பொழுது வேத முரண்பாடு இருந்தால் -கொள்ளக் கூடாதே
நியாய சாஸ்திரம் ஆலோசனை பண்ண உதவும்

உத்தேசம் -லக்ஷணம் -பரிக்ஷை -வியாவ்ருத்தம் -வியவஹாரம் -பெயரால் குறிப்பிடுவது –
அறிந்த பொருள்களை குறிப்பிடுவது உத்தேசம் -லக்ஷணம் சொல்வதற்கு முன்னால் –

பதார்த்தத்வம் -பதஸ்ய அர்த்தம் -சொல்லின் பொருள் –
ஆகாச தாமரை -சொல் இருக்கு -பொருள் இல்லையே -பொதுவான லக்ஷணம் -என்று சொல்ல முடியாதே
ஆகாச தாமரை என்று ஓன்று இல்லை என்று தானே சொல்வோம்
ஆகாசத்தில் தாமரை இல்லை என்றே சொன்ன படி –முயல் கொம்பு -இப்படியே –

அதி வியாப்தி அவ் வியாப்தி -தோஷம் வருமே
நக்ஷத்ரம் பின்பு கண்டு அறிந்து -பெயரால் பின்பு -அவ் வியாப்தி -இன்றும் உள்ளது –
ரூபம் -நிறம் -வடிவம் இரண்டையும் சொல்லும்
நியாய சாஸ்திரம் -வடிவம் தனியாக இல்லை –
அவயவங்கள் சேர்க்கை -வடிவம் -சம்யோகம் -தனியாக குணம் சொல்லிய பின்பு –

பர அபர -சமவாயம் -சொல்லும் பொழுது அதிகம் குறைய என்றும்
குணம் சொல்லும் பொழுது தூரம் அருகில் என்றும் பொருள்களில் வரும்

அபாவம் -அந்யோகி -இடம் -பிரதியோகி –எதன் அபாவம் -எங்கு உள்ளது -இரண்டும் வரும் –
இந்த குடம் -ப்ராக் அபாவம் -த்வம்ச அபாவம் -தனித்தன்மை -பொதுத்தன்மை இல்லை
அத்யந்த அபாவம் -பொதுத்தன்மை —
அந்யோன்ய அபாவம் -பொதுத்தன்மை-

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மா முனிகள் வைபவம் –

March 24, 2021

நிதி அரங்கன்
மங்கள நிதி மா முனிகள் திவ்ய மங்கள விக்ரஹம்
கருணா நிவாஸம் -இரண்டும்
மேகம் -திருவேங்கடத்தான்
காள மேகம் -அவனுக்கே உபதேசித்து -கால ஷேபம்
பாரிஜாதம் -பேர் அருளாளன் -ஜ்வலித்து அவதாரம்
ஜ்வல பாரிஜாதம் -பிள்ளை லோகாச்சார்யார்
மா முனிகள் உஜ்ஜ்வல பாரிஜாதம் -தமிழ் அருளிச் செயல்கள்
யது சைல தீபமும் ஸ்ரீ யபதி –
தீபம் -விளக்கும் பிரகிரியை -சதுஷ்ட்யம் -ரஹஸ்ய த்ரயம் -ஆகவே ஸ்ரீ சப்தம் இங்கு

————-

அரங்கனும் மா முனிகளும்

சரம ஆச்சார்யர் -மேலும் ஆச்சார்யர்கள் இருந்தாலும் உயர்ந்த என்ற அர்த்தத்தில் –
கடைசி அர்த்தமாக இல்லை -சரம ஸ்லோகம்
ஸாஸ்த்ர பாணி -திருவடி நிலைகளே ஆச்சார்யர்கள் –

அவதாரம் –
ஸ்ரீ ரெங்க நாயகி புண்ய புஞ்சாய க்ருதம் -கூட்டமே இவர் -மா முனிகள் கண்ணி –
தான் அவதாரம் செய்யாது இருந்தால் கடலோசை போல் –
உஜ்ஜீவனம்
அநாமிகா-பெயர் சொல்ல முடியாத விறல் -தயாளு பொறுமை இரண்டுக்கும் எண்ண இவர் ஒருவரே
பூ மகள் மண் மகள் புண்யமாம் இவர் -கிருபைக்கும் பொறுமைக்கும் -சாஷாத் ஷமா கருணையும் கமலா இவ –
சத்தை –
சீதா ருக்மிணி ஆண்டாள் -திருத்த முடியாதவர்களை திருத்தவே ஸ்வாமி
கிருபை உந்த -அவதாரம்

ஆச்சார்யர் ஆஜ்ஜைப்படியே திருவரங்கம் வந்தார் -அழகிய மணவாளன் திரு நாமம் பொருத்தம்
உடையவர் போல் பேர் அருளானனை ஏமாற்றி இல்லையே
த்வய அனுசந்தானம் அத்ர
ரஹஸ்ய த்ரய தேறின பொருள்
ஸ்ரீ ரெங்க நிலையாய் நம -திரு நாமம் -சத்தை இத்தால்

ஸ்ரீ மத் ரங்கம் -எறும்பி அப்பா–அத்தர் பத்தர் சுற்றி வாழும் அம் தண் அரங்கம்
பூமா -நான்யத்ர பஸ்யதி -இவரே –

ஸ்ரீமத் ரங்கம் ஜயது பரமம் தாம தேஜோ நிதாநம் |
பூமா தஸ்மிந் பவது குசலீ கோபி பூமா ஸஹாய: ||
திவ்யம் தஸ்மை திசது பகவந் தேசிகோ தேசிகாநாம் |
காலே காலே வரவரமுநி: கல்பயந் மங்கலானி || 8-

மங்களா ஸாஸன ஸ்லோகம் இது
பூமா – உபநிஷத் சொல்லும் – அதிசய ஆனந்த குணக்கடல்
பூமா ஸஹாயா -ஸ்ரீ தேவி ஸ்ரீ பூமா தேவிமார்கள் உடன் –
அடியார்கள் வாழ அருளிச் செயல் வாழ குரவர் வாழ
வியாக்யானம் வாழ -அரங்க நகர் வாழ -மணவாள மா முனியே -நீர் நூற்று ஆண்டு இரும்

ஒளிக்கு நிதி போன்ற சிறந்த தலமான செல்வமுள்ள ஸ்ரீரங்க நகரம் விளங்க வேண்டும்.
அதில் ஒளிகளுக்கெல்லாம் ஒளி(யான எம்பெருமான்) க்ஷேமமாக வாழ வேண்டும்.
ஆசார்யர்களுக்கு ஆசார்யரான மணவாள மாமுனிகள் காலந்தோறும் மங்களங்களைச் செய்து கொண்டு
அவருக்கு ஓர் ஒளியை அளிக்க வேண்டும்.

மங்களா சாசனம் இவருக்கு சத்தை என்றவாறு –

தனி வைபவம்
ஸ்ரீ ரெங்க நாயக ஆச்சார்யா நம -அவனுக்கும் ஆச்சார்யர்
பாம்பணையான் அடியார் பலர் இருக்க
முதலில் ஆச்சார்யராக இருந்து பின்பு சிஷ்யர் ஆனான் அரங்கன் –
உபதேசம் அனுஷ்டித்துக் காட்டி –
ஆ கோபாலம் -அறியும் படி அத்வதீயம் த்வதீய வைபவம்
ஸ்ரீ ரெங்க நாயகன் சிறுவனாக வந்து

லஷ்மீ பர்த்து பரம குருதாம் லக்ஷ யந்தீ குருணாம்
பாரம்பர்ய க்ரம விவரணீ யா ஹி வாணீ புராணீ
அர்த்தம் தஸ்யா ப்ரதயசி சிரா தந்யதோ யத் துராபம்
திவ்யம் தன்மே வர வர முநே வைபவம் தர்சயித்வா –65-

வரவரமுநியே! எந்தப் புராதன வாக்கான வேதம் குரு பரம்பரையை விவரிப்பதாகப் பிராட்டியின் கணவனுக்குப்
பரம குருவாக இருக்கும் தன்மையைக் குறிக்கிறதோ அதை வேறு ஒருவருக்கும் கிடைக்காத பொருளாக
அந்தத் திவ்யமான வைபவத்தைக் காட்டிக்கொண்டு பொருளை விளக்குகிறீர்.

லஷ்மீ பர்த்து பரம குருதாம் லக்ஷ யந்தீ குருணாம் -ரஹஸ்ய த்ரய ஞானத்தால் அறிந்து –
இது அன்றோ சரம ப்ரஹ்ம ஞானம்
பாரம்பர்ய க்ரம விவரணீ யா ஹி வாணீ புராணீ -அவிச்சின்னமான குரு பரம்பரை மூலம்
வந்த அஷ்டாதச ரஹஸ்ய அர்த்தங்கள்
அர்த்தம் தஸ்யா ப்ரதயசி சிரா தந்யதோ யத் துராபம் -இவற்றை அருளிச் செய்து அருளவே -ஸ்வாமி –
வேறே யாராலும் அருளிச் செய்ய முடியாதே
திவ்யம் தன்மே வர வர முநே வைபவம் தர்சயித்வா–வைபவம் எடுத்துச் சொல்லி
பக்குவம் படுத்தி பின்பு அன்றோ உபதேசம்
சித்த உபாயம் ஆச்சார்ய அபிமானமே என்று காட்டி அருளினார் –

தத்வம் ஏகோ – அப்ருதக் சித்தம் -பெரிய பெருமாளை விட பெரிய ஜீயர் –
ஸ்ரீ ரெங்க –நித்ய மங்களம்

———

மா முனிகளும் திரு வேங்கடத்தானும்
சார தமம்–திருவேங்கட பதிகம் -திருவாய் மொழி நூற்று அந்தாதி
நோற்ற நோன்பு
புகழும் ஒருவன் -என்கோ -வாசிக்கமாய் அங்கு அடிமை செய்தான்

சரீர கைங்கர்யம் –
கோயில் கேள்வி அப்பன் –11 பட்டம் -இருக்க -உடன் இருந்து
அவர் பரம பதிக்க இவரே பட்டம் அலங்கரித்து -முதல் பட்டம் எம்பெருமானார் -இவர் 12 பட்டம் –
மூன்று வருஷ –1427-1431-வரை -சுமந்து மா மலர் தீபம் சமர்ப்பித்து -சாதாரண வருஷம் வரை –
சஷ்டி அப்த பூர்த்தி -கைங்கர்யம் செய்தே கால ஷேபம்
சின்ன ஜீயர் திரு மடம் நிர்மாணம் –

மானஸ கைங்கர்யம் –11-5-சாழலே -தோழி உடன் பரஸ்பர -கண்டீரே கண்டோமே -ஆண்டாள் -போல் –
சர்வ லோக நிவாஸாய -ஸ்ரீ மத் ஸூந்தர ஜாமாத்ரு முனி மானஸ வாஸம் –
அனைத்து உலகும் நிற்க -ஆதார ஆதேய பாவம் -சரீராத்ம பாவம் –

————

மா முனிகளும் பேர் அருளாளனும்
செங்கோல் உடைய செல்வனார்
ஏகாந்த -காடும் வேடவரும் -செல்வம் -அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகம்
ஸ்ரீ நிதிம் -அர்த்திதாதி பரிதார்த்த தீஷிதம் -வேலை செய்து உழைத்து
தர்மி ஐக்யம் –
ஆழ்வார்கள் -கச்சி நகர் வந்து உதித்த பொய்கைப் பிரான்-தொண்டை மண்டலம் பெற்றுக் கொடுக்க அருளினான்
பிள்ளை லோகாச்சார்யார் தேவப்பெருமாள் –
ஈட்டுப் பெருக்கர் -ஆனதே பேர் அருளாளன் கிருபையால் தானே-
காஞ்சி சேவித்து -அநேக சந்நிதிகள் -மங்களா சாசனம் –
ஸ்ரீ தேவ ராஜ மங்களம் -திருப்பல்லாண்டு போல் -எம்பெருமானார் திரு ஆராதனை பெருமாள் என்பதாலேயே –

கிடாம்பி நாயனாருக்கு தமது ஸூய ஸ்வரூபம் காட்டி அருளி –

————

தோழப்பர் -திரு நாராயண புரம் -நித்ய வாசம் -அனந்தாழ்வான் திருமலையில் -ராமானுஜர் கைங்கர்யம் போல் மா முனிகள் கைங்கர்யம் செய்தார்
செல்வப்பிள்ளை ஈடு உத்சவம் -ஈடு பாராயணம் ஆனி விசாகம் தொடங்கி மூலம் வரை இன்றும் நடக்கும் –
செல்வப்பிள்ளையும் உபய நாச்சியாரும் -ராமானுஜரும் எழுந்து அருளி
நான்கு நாள்கள் உத்சவம்
முதல் நாள் ஸ்ரீ யப்படி
இறுதி நாள் ஒன்பது பத்து திருவாய்மொழி
11 நாள் திரு மூல உத்சவம் -முதல் நாளும் ஏழாம் நாளும் செல்வப்பிள்ளை
எட்டாம் நாள் நான்காம் பத்து ஒரு நாயக-முதலியாண்டான் மரியாதை -யதிராஜ விம்சதி சேவை
பத்தாம் நாள் திருவீதிப்புறப்பாடு -மா முனிகள் எதிர் சேவை
வீதிப்புறப்பாடு மா முனிகளுக்கு விசேஷம்
இயல் சாத்து ஆய் ஸ்வாமிகள் திரு அவதாரம்
மாத மூலத்துக்கும் செல்வப்பிள்ளை எழுந்து அருளி சேவை
பரகத ஸ்வீ காரம் -செல்லப்பிள்ளை தானே எழுந்து அருளி
அத்யயன உத்சவத்துக்கும் மா முனிகள் அங்கு எழுந்து அருள மாட்டார்

என்றும் இறவாத எந்தை சிஷ்யன் என்பதால் மா முனிகள் தீர்த்த உத்சவம் நித்யம்
அடைக்காய் அமுது செய்யாமல் -கர்த்தா –

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அமுதனார் அருளிச் செய்த ஸ்ரீ ராமானுஜ நாம அமுதம் –ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் —

March 23, 2021

ஸ்ரீ அமுதனார் அருளிச் செய்த ராமானுஜ நாம அமுதம்
ஒன்பது கோணங்கள்
1-கற்பகமாய்
2-கார் முகிலாய்
3-காவலாய்
4-சேம வாய்ப்பு
5-அற்புதமாய் ஆரமுது
6-ஆளுமை
7-உறு துணை
8-ஒப்பு இல்லா மா நிதி -அக்ஷயம் -விருத்தியாகிக் கொண்டே இருக்குமே
9-பரம கதி -உபாய உபேயம்

நவ தானியங்கள் நவ நிதி நவ கிரந்தங்கள் நவ ரத்தினங்கள் -நவ துவாரம் போக்கி

108-1-2-3-ஓன்று மடங்கு ஓன்று பெருக்கி இரண்டு மடங்கு இரண்டு பெருக்கி மூன்று மடங்கு மூன்று

——–

1-கற்பகமாய் –53- அத்புதம் -என்னை ஆளவந்த கற்பகம்

அற்புதன் செம்மை இராமானுசன் என்னை யாளவந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய
பற் பல்லுயிர்களும் பல்லுலகி யாவும் பரன தென்னும்
நற் பொருள் தன்னை இந்நானிலத்தே வந்து நாட்டினனே – -53 –

சகல அபேக்ஷிதங்களையும் அபேஷா நிரபேஷமாக
ராமானுசா சொல்லிக் கொண்டே இருந்தாலே தானே அளிக்கும்
வந்த கற்பகம் -நித்ய விபூதியில் இருந்து லீலா விபூதிக்கு எழுந்து அருளி தேடி வந்த கற்பகம்
மோஷ பிரதம் -உபய விபதி உடையவர்

பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த
அரும் தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே – 32—பட்டியல் –

பொருந்திய தேஜஸ் -ஸ்வரூப அனுரூப பராபிபவன தேஜஸ்ஸூ
பொறை -ஷமா
திறல் -சாமர்த்தியம் -பகவத் பாகவத ஆச்சார்யர் விஷய அஹம் சர்வம் கரிஷ்யாமி செய்ய மனா வலிமை
புலன் அடக்கம்
நல்ல திருந்திய ஞானம் –
செல்வமும் சேரும் -வேத வேதாந்த பாண்டித்யம் கைங்கர்ய ஸ்ரீ –

சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாயமுதம்
பரக்கும் இருவினை பற்றவோடும் படியிலுள்ளீர்
உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறு கலியைத்
துரக்கும் பெருமை இராமானுசன் என்று சொல்லுமினே – 43—இன்னும் பல

சுரக்கும் திருவும் உணர்வும் –
சொலப் புகில் வாய் அமுதம் பரக்கும்
அமுதினிலும் ஆற்ற இனியன்
அண்ணிக்கும் அமுதூறும் நன் நாவுக்கே -பக்தாம்ருதம்
இருவினை பற்று அற ஓடம்
ராம -ரா இரண்டாவது -ம ஐந்தாவது -ராம பத்து -மூன்று தடவை 1000
ஆறு எழுத்துக்கள் வேண்டாம் ராமானுஜ சதுர அக்ஷரீ

தவந்தரும் செல்வம் தகவும் தரும் சரியா பிறவிப்
பவந்தரும் தீவினை பாற்றித் தரும் பரந்தாம மென்னும்
திவந்தரும் தீதிலிராமானுசன் தன்னைச் சார்ந்தவர் கட்கு
உவந்தருந்தேன் அவன் சீரன்றி யான் ஒன்றும் உள் கலந்தே – – – 94- –

தவம் தரும் -ஸத்யமே -அதுக்கும் மேல் தபஸ் தமம் சமம் தானம் வர்ணாஸ்ரம அனுஷ்டானம்-
மக்கள் பேறு -அதிகம் கூடாதே -அக்னி ஹோத்ரம் -திருவாராதனம் -மானஸ ஆராதனம் -மாதவன் தெய்வம் நாட்டி –
தஸ்மாத் நியசம் அதிரிக்த -சமர்ப்பித்தல் – இத்யாதி -ஆருணர்
ப்ரபன்னன் கரைந்து அஞ்சினால் நாஸ்திகனாம் அத்தனை
ப்ரபந்ந காயத்ரி -மனப்பக்குவம் வளர்க்கும்
செல்வம் -கைங்கர்ய ஸ்ரீ
தாகவும் த்வரையும் தரும்
பாற்றி தரும் -கர்மாக்களை பொடி பொடி ஆக்கும்
பரம் தாமம் பரம ஆகாசமும் தரும் –

————–

2-கார் முகிலாய்
வசிஷ்டர் சண்டாள விபாகம் அல்லாமல்
கற்பகம் தேவர்களுக்கு மட்டும் என்று இல்லையே
25- காரேய் கருணை ராமானுசா
26-விளங்கிய மேகம்
82-ராமானுஜன் என்னும் சீர் முகிலே

காரேய் கருணை இராமானுசா இக்கடல் இடத்தில்
ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான் வந்து நீ என்னை யுய்த்த பின் உன்
சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே -25 – –

திக்குற்ற கீர்த்தி இராமானுசனை என் செய்வினையாம்
மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர்
எக்குற்றவாளர் எது பிறப்பே எது இயல்வாக நின்றோர்
அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல்வே நம்மை ஆள் கொள்ளுமே –26- –

தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது வெந்தீ வினையால்
உருவற்ற ஞானத் துழல்கின்ற வென்னை ஒரு பொழுதில்
பொருவற்ற கேள்வியனாக்கி நின்றான் என்ன புண்ணியனோ !
தெரிவுற்ற கீர்த்தி இராமானுசன் என்னும் சீர் முகிலே – – 82- –

அருள் மழை
வேதக்கடல் அருளிச் செயல்கள் கடல்
மும்மாரி
ரஹஸ்ய தத்வ த்ரயம்
கைம்மாறு கருதாமல் -ஆசை உடையாருக்கு வரம்பு அறுத்தார்
முக்தி -தமிழ் நாடு தவம் ஈன்றதே பாரதி தாசன்
பல்கலையோர் தாம் மன்னா -முத்துக்கள் பூஷணம்
மேகம் பயிர் விளைய வானம் பார்த்த பூமி -நான் வானம் நீ பூமி தாரணி தேவி ஆகாச ராஜன் -கல்யாண மந்த்ரம்
கணவன் அன்பு மனைவிக்கு பெரியது –
சரணாகதி பயிர் முளைக்க
பக்தி உழவன் -கார்யகரம் ஆக இந்த மேகம்

ஞானம் கனிந்த நலம் கொண்டு நாடொறும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில்
ஈனம் கடிந்த விராமானுசன் தன்னை எய்தினர்க்கத்
தானம் கொடுப்பது தன் தகவென்னும் சரண் கொடுத்தே -66 –

அத் தானம் கொடுப்பது -சரண் கொடுத்தே –
ஞானம் கனிந்த நலம் -பக்தி முத்த அவன் –
இவரோ தகவு என்னும் சரண் -கருணையே ஒரே புகல்
கஷ்டம் வேண்டாம் இஷ்டம் பட்டாலே போதும்
வண்ணான் -இவனுக்காக அவனைப் பொறுத்து அருள வேணும் –

கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டலே – – -104 –

—————–

3-காவலாய்
வந்தாய் போல் வாராதாய் ஆகுமே
வெள்ளக்கேடும் உண்டாக்கும்
காவலான மேகம் –
21-முகில் என்று -ராமானுஜன் என்னைக் காத்தனனே

நிதியைப் பொழியும் முகில் என்ன நீசர் தம் வாசல் பற்றித்
துதி கற்று உலகில் துவள் கின்றிலேன் இனித் தூய் நெறி சேர்
எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை அடியாம்
கதி பெற்றுடைய இராமானுசன் என்னைக் காத்தனனே – 21- –

அஸ்மத் சரீர -மட்டம் -அந்த ஸ்ரீ வைகுண்டம் -நீசனான அடியேனையும் -என்று கூட சொல்லத்தெரியாத
அதிகாரம் இல்லாதாருக்கு அன்றோ எதிராசா நீ இரங்க வேண்டும் –

நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தை
புயலே எனக் கவி போற்றி செய்யேன் பொன்னரங்கம் என்னில்
மயலே பெருகும் இராமானுசன் மன்னு மா மலர்த் தாள்
அயரேன் அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே -35 –

நயவேன் –மயலே பெருகும் ராமானுசன் –
அருவினை எவ்வ்வாறு என்னை அடர்க்கும்-சிம்மம் கண்ட ஸூத்ர மிருகம் போல் ஓடுமே -ராமானுச நாம மஹிமை

சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன்னாள்
அந்தமுற்றாழ்ந்தது கண்டு அவையென் தனக்கு அன்றருளால்
தந்த வரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து
எந்தை இராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே – 69-

அரங்கனும் தன் சரண் தந்திலன் -தான் அது தந்து -வந்து எடுத்தனன் அன்றோ
ந கர்மணா ந ப்ரஜயா தனேந த்யாகேன –அம்ருதத்வம் -ஸ்ருதி -ஸந்யாஸத்தால் -மட்டுமே
அந்தணர் ஆண் மட்டுமே சந்நியாச அதிகாரி –
ஸூய ரக்ஷணம் பொறுப்பு துறப்பதே சிறந்த துறப்பு – சம்யக் நியாசம் -நன்றாக விடுவதே சன்யாசம் -சர்வாதிகாரம் –
அனைத்து உலகும் வாழப்பிறந்த ராமானுசா -ஜெகதாசார்யர் –

———–

4-சேம வாய்ப்பு
ஆபத்தனம் -சரியான காலத்தில் ரக்ஷணம் -fixed deposit

கார்த்திகையானும் கரி முகத்தானும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதிகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –

ராமானுஜன் என் தன் சேம வைப்பே
பாணன் த்ருஷ்டாந்தம் –
மனம் வங்கி நாக்கு நாமம் சொல்லி slip -deposit வைக்க

———

5-அற்புதமாய் ஆரமுது
ஆபத்து வந்தால் சொல்லுகிறோம் -யாதானும் சொல்லி நீங்கும் விரதம்
ஆரா அமுது அன்றோ

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆரமுதே – – 19-எனக்கு ஆரமுதே

கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டலே – – -104 –

————-

6-ஆளுமை
சுவை -இன்பம் -வழி நடத்துமா
ஆளுமையாகவும்

நையும் மனமுன் குணங்களை வுன்னி என் நா விருந்தெம்
ஐயன் இராமானுசன் என்று அழைக்கும் அருவினையேன்
கையும் தொழும் கண் கருதிடும் காணக் கடல் புடை சூழ்
வையமிதனில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே – – 102- –

உன் வண்மை -முக்கரணங்களையும் ஈடுபத்தி அருளி –
நா இருந்து எம் ஐயன் ராமானுசா என்று அழைக்கும் -சத்தைக்காக –
கையும் தொழும் -கண் கருதிடும் –
அழகைக் காட்டி –

இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் எண்ணிறந்த
துன்பம் தரு நிரயம் பல சூழில் என் தொல் உலகில்
மன் பல் உயிர் கட்கு இறையவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் இராமானுசன் என்னை ஆண்டனனே – -30 –

——–

7-உறு துணை
எங்கோ இருந்து ஆளாமல்

எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தை யுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறு துணையே – 18- –

வேதம் பாற்கடல் -திருவாய் மொழி பக்தாம்ருதம் -பெரியவர் மதுர கவி சீரை

புவியும் இருவிசும்பும் நின்னகத்த நீ என்
செவியின் வழி புகுந்து என்னுள்ளே -அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு––பெரிய திருவந்தாதி-75

ஆச்சார்ய நிஷ்டை யையே -உயிர்கள் எல்லாம் உய்வதற்கு கொடுத்து அருளிய -ருசி உடையோருக்கு எல்லாம் -உபதேசித்து அருளி –
இதுவே உற்ற துணை -கைப்பிடித்து அழைத்து செல்வார்
விபீஷண -அது ராமர் கோஷ்ட்டி இது ராமானுஜர் கோஷ்ட்டி என்றாரே பிள்ளை உறங்கா வல்லி தாஸர் –
திடமான ஸஹாய புத்தர் -ஸ்ரீ வைகுண்டம் அருளும் வரை பர்யந்தம்

——————-

8-ஒப்பு இல்லா மா நிதி -அக்ஷயம் -விருத்தியாகிக் கொண்டே இருக்குமே
எக்காலத்திலும் வழித் துணை

ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திருவாய்
ஈரத் தமிழ் இன் இசை யுணர்ந்தோர்கட்கு இனியவர் தம்
சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால்
வாரிப் பருகும் இராமானுசன் என்தன் மா நிதியே – -20 –

மா நிதி
பிரளயத்தில் அழியாத நிதி -வி லக்ஷணம் -அப்ராக்ருதம் -அத்ர பரத்ர சா அபி

————

9-பரம கதி -உபாய உபேயம்
ஒன்றை அறிந்தால் ஒன்பதையும் அறியலாம்

பேறு ஓன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அப் பேறு அளித்ததற்கு
ஆறு ஒன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி என்று இப்பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லாற்
கூறும் பரம் அன்று இராமானுச மெய்ம்மை கூறிடிலே – 45- –

நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே
முதலிலும் முடிவிலும் –

அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாக மன்னும்
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமானுசனடிப் பூ மன்னவே – – 108-

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறனடி பணிந்து உய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த விராமானுசன் சரணார விந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -1 –

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஶ்ரீ உத்தவ கீதை – அத்தியாயம் – 4

March 23, 2021

இவ்வுலக, மேலுலக இன்ப அனுபவ பயனின்மையை நிரூபித்தல்

ஶ்ரீ பகவான் உவாச

மயோதி3தேஷ்வவஹித: ஸ்வர்மேஷூ மதா4ஸ்ரிய |
வர்ணாசிரம குலாசாரமகாமாத்மா ஸமாசரேத் || 1

ஶ்ரீபகவான் கூறினார்

என்னால் உபதேசிக்கப்பட்டக் கருத்துக்களில் கவனத்தை செலுத்து.
வேதம், ஸ்ம்ருதி, ஆகம, புராணங்களில் என்னால் கூறப்பட்ட தர்மங்களை, உபதேசங்களை கவனத்துடனும் அனுசரிக்க வேண்டும்.
உன்னுடைய கடமைகளை என்னையே சரணடைந்தவனாக அனுசரிக்க வேண்டும்.
இறைவனிடத்தில் சரணாகதி என்பது அவரிடத்தில் வைக்க வேண்டிய முழு நம்பிக்கையை குறிக்கின்றது
ஸமாசரேத் – நன்கு செய்வாயாக
அகாமாத்மா – நிஷ்காமபாவம்
வர்ணாசிரம குல ஒழுக்கங்களை நிஷ்காம பாவத்துடனும், பலனில் பற்றுதலின்றி கவனத்துடனும் செய்ய வேண்டும்.

————

அன்வீக்ஷேத விஶுத்3தா4த்மா தே3ஹினாம் விஷயாத்ம்னாம் |
கு3ணேஷு தத்த்வத்யானேன ஸர்வாரம்ப4விபர்ய்யம் || 2

அன்விக்ஷேத – கவனமாக சிந்தித்துப் பார்
விஶுத்3தா4த்மா – மனத்தூய்மை அடைந்தவனாக
உலக சுகங்களில் ஈடுபாடுள்ள மனிதர்களின் செயல்களே இறுதி லட்சியம் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள்
வெளிப் பார்வைக்கு சுகத்தை அடைந்திருந்தாலும், மனதளவில் விபரீதமான பலன்களையே அடைந்திருப்பார்கள்
என்று கூர்ந்து கவனித்து புரிந்து கொண்டு அனாத்மா விஷய, சுகங்களில் வைராக்கியத்தை அடைய வேண்டும்.

———–

ஸுப்தஸ்ய விஷயாலோகோ த்4யாயதோ வா மனோரத2: |
நானாத்மகத்வாத்3 விப2லஸ்ததா2 பே4தா3த்மதீ4ர்கு3ணை || 3

மனோரத2 – பகற்கனவு
உலக விஷயங்களில் கிடைக்கும் இன்ப, துன்பங்களை தூங்கும்போது காணும் கனவில் அடையும்
இன்ப, துன்பங்ளுக்கு பகவான் ஒப்பிடுகிறார். விழித்துக் கொண்டிருக்கும் போது காண்கின்ற கற்பனைகளில்
கிடைக்கின்ற சுகங்களை வெறும் எண்ணங்கள் தான் கொடுக்கின்றது. எனவே எண்ணங்கள் தான் சுக-துக்கத்தைக் கொடுக்கின்றது,
பொருட்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஸுப்தஸ்ய விஷயாலோகஹ – தூங்கிக் கொண்டிருக்கும்போது கனவில் காணும் பொருட்களும்
த்4யாயதோ வா மனோரதஹ விழித்துக் கொண்டிருப்பவனின் கற்பனை உலகத்தில்
நானாத்மகத்வாத்3 மனதில் பலவிதமான காண்கின்ற பொருட்களும்;
விபலஹ பொய்யானவை
ததா3 அவ்விதம்
கு3ணைஹி‘ இந்திரியங்களால்
பேதாத்மதீஹி பார்த்து அனுபவித்துக் கொண்டிருக்கும் உலகமும் நிலையானதல்ல, உண்மையானதல்ல

————–

நிவிருத்தம் கர்ம ஸேவேத ப்ரவ்ருத்தம் மத்பரஸ் த்யஜேத் |
ஜிக்ஞாஸாயாம் ஸம்ப்ரவ்ருத்தோ நாத்ரியேத் கர்மசோத3னாம் || 4

ஒருவனுக்கு மேலான அறிவை அடைய வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிட்டால் அதற்கேற்ற மனநிலையை அடைய வேண்டும்.
உலகத்தில் போகம் தரும் விஷயங்களிலோ, பொருட்களிலோ வைராக்கியம் வந்திருக்க வேண்டும். ’
ஜிக்ஞாஸாயாம் ஸம்ப்ரவ்ருத்தஹ – பரம்பொருளை புரிந்து கொள்ளும் ஆர்வம் உடையவன் அதையடைய தன்னை ஈடுபடுத்திக் கொண்டால்
ப்ரவ்ருத்தம் கர்ம நம்மை கர்த்தாவாக வைத்திருக்கும் உலக சம்பந்தபட்ட செயல்களையெல்லாம்
த்யஜேத் விட்டுவிடு, துறந்துவிட்டு
நிவிருத்தம் கர்ம ஸேவேத ஆன்மீக மேன்மைக்கான செயல்களையே செய்ய வேண்டும். உபாஸனை, ஜபம், தியானம் போன்ற செயல்களை செய்வாயாக.
சமுதாயத்திலிருந்து விலகியிருக்கும்போது சிறிது பயம் ஏற்படலாம். இந்த நேரத்தில் பகவானை முழுமையாக நம்பி அவரிடத்தில் நிலைபெற்றிட வேண்டும்.
மத்பரஹ அவர் என்னைப் பாதுகாப்பார் என்று நம்பிக்கையுடன் அவரை சரணடைந்திட வேண்டும்.
ந ஆத்3ரியேத் கர்மசோத3னாம் வேதத்தில், கர்ம காண்டத்தில் சொல்லப்பட்டுள்ள கர்மங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதே.

——————

யமானபீக்ஷணம் ஸேவேத நியமான்மாத்பர: க்வசித் |
மத3பி4க்ஞம் கு3ரும் ஶாந்தமுபாஸீத மதா3த்மகம் || 5

யமஹ – விலக்குதல்
நியமஹ – பின்பற்றுதல்
நியமம் – தூய்மை, சந்தோஷம், தவம், ஸ்வாத்யாயம், ஈஸ்வர ப்ரணிதானம்
க்ரியாயோகம் – தவம், ஸ்வாத்யாயம், ஈஸ்வரப்ரணிதானம்
யமம் – அஹிம்ஸா, சத்யம், அஸ்தேயம், பிரம்மச்சர்யம், அபரி3ரஹம்

யமத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், நியமங்களை முடிந்தவரையில் கடைப்பிடிக்க வேண்டும்.

ஶாந்தம் – மனவமைதி அடைந்தவரும்,
மத்3 அபி4க்3ஞம் – என்னைப்பற்றிய அறிவை அடைந்தவரும்
மத்3 ஆத்மகம் – என்னைப்பற்றிய அறிவில் நிலைத்தவரான குருவை நாடி
உபாஸீத் – சேவை செய்து அறிவை பெற்றுக் கொள்ள வேண்டும்.

————

அமான்யமத்ஸரோ த்3வேஷ நிர்மோ த்3ருட4ஸௌஹ்ருத3: |
அஸத்வரோsர்த2ஜிக்3ஞாஸுரநஸூயுரமோக4வாக் || 6 ||

வேதாந்த மாணவர்களிடத்து இருக்க வேண்டிய ஒன்பது பண்புகளைக் பகவான் கூறுகிறார்.

1. அமானி கர்வமற்றவன், பணிவுடன் இருப்பவன் (உடல், மனம், வாக்கு)

2. அமத்ஸரஹ பொறாமையற்றவன். பொறாமையானது மற்றவர்களின் நிலையோடு ஒப்பிட்டூ பார்ப்பதால் வருவது பொறாமை.
தாழ்வு மனப்பான்மையினாலும் பொறாமை வருகின்றது.

3. த3தஹ திற்மையுடன் செயல்படுபவன் – தமோகுணத்திலிருந்து விடுபட்டவனாக இருப்பவன்.
எதையும் சரியாக புரிந்து கொண்டு செயல்படும் திறமையுடையவன்

4. நிர்மமஹ மமகாரம் இல்லாதிருப்பவன்

5. த்3ருட4ஸௌஹ்ருத3: – எல்லோரிடமும் உறுதியான, மென்மையான உறவு வைத்திருப்பவன் (ஸௌஹிருத)

6. அஸத்வரஹ நிதானமாக செயல்படுபவன்; அவசரஅவசரமாக எதையும் செய்யாதவன்

7. அர்த2ஜிக்3ஞாஸு வேதாந்தத்தையும், பிரம்மத்தையும் அறிந்து கொள்ள விரும்புவன்

8. அனஸூயு: எதிலும் குறைகாணாதவன்; சாஸ்திரத்தில் குறை காணாதவன்

9. அமோக4வாக் பயனற்ற சொற்களை பேசாதவன், வீண்பேச்சு பேசாதவன்,

————-

ஜாயாபத்ய க்3ருஹக்ஷேத்ர ஸ்வஜன த்3ரவிணாதி3ஷு |
உதா3ஸீன: ஸம்ம் பஶ்யன் ஸர்வேஷ்வர்த2மிவாத்மன: || 7 ||

மனைவி, மகன், மகள், வீடு, நிலம், சொத்து, உறவினர்கள், நண்பர்கள் போன்றவற்றில் அதிக பற்றுடன் இருக்கக்கூடாது.
இவைகள் இல்லாமலும் வாழமுடிய வேண்டும். எல்லோரையும் சமநோக்குடன் பார்க்க வேண்டும்.
தன் நலனைப் போலவே எல்லோருடைய நலனிலும் சமநோக்குடன் இருக்க வேண்டும்.

————-

விலக்ஷண ஸ்தூலஸூக்ஷ்மாத்3 தே3ஹாதா3த்மேக்ஷிதா ஸ்வத்3ருக் |
யதா2க்3நிர்தா3ருணோ தா3ஹ்யாத்3 தா3ஹகோsன்ய: ப்ரகாஶக: || 8 ||

இதில் ஆத்ம-அனாத்ம விவேகத்தை கூறுகின்றார். நான் என்ற சொல்லினுடைய உண்மையான அர்த்தம் என்ன,
அது எதைக் குறிக்கின்றது என்று விசாரம் செய்ய வேண்டும். பொதுவாக நாம் இந்த சொல்லுக்கு உண்மைப் பொருளையும்,
உண்மையற்ற பொருளையும் சேர்த்துப் புரிந்து கொண்டிருக்கின்றோம். இதை நாம் பிரித்து உண்மையற்ற பொருளை நீக்க வேண்டும்.
அவைகள் ஸ்தூல, சூட்சும, காரண சரீரங்களே. இது எப்பொழுதும் நம் அனுபவத்திற்கு கொண்டு வரவேண்டும்.
ஆனால் நம் அனுபவமும், அபிமானமும் உண்மையற்ற விஷயத்தில்தான் இருக்கின்றது.
இந்த உடலுக்கு வருகின்ற அனுபவங்கள் நம்மை பாதிப்பால்தான் இதில் நாம் அபிமானித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை அறியலாம்.

பகவான் த்3ருக்-த்3ருஷ்யம் (அறிபவன்-அறியப்படும் பொருள்) என்ற முறையை பயன்படுத்தி ஆத்ம-அனாத்மாவை விளக்குகின்றார்.
அறிபவனும், அறியப்படும் பொருளும் வேறாகத்தான் இருக்க வேண்டும். இதை நம் உடலிலிருந்து ஆரம்பித்து விசாரம் செய்ய வேண்டும்.
ஸ்தூல, சூட்சும சரீரங்களிலிருந்து ஆத்மா வேறாக இருக்கின்றது. நாம் இந்த ஸ்தூல உடலையும் அனுபவிக்கின்றோம்.
கனவுலகில் நம்மை நாமே அனுபவிக்கின்றோம். இவையிரண்டையும் நினைத்துப் பார்த்து புரிந்து கொள்ளலாம்.

விலக்ஷணஹ வேறுபடுகின்றது.
ஈக்ஷிதா பார்ப்பவனாக இருக்கும் போது, வெறும் பார்வையாளனாக இருக்கும்போது
ஸ்வத்3ருக் தன்னுடைய இருப்புக்கு தானே சாட்சி. உதாரணமாக சூரியனை பார்ப்பதற்கு வேறு வெளிச்சம் தேவையில்லை,
அது தானாகவே தெரிந்து கொண்டிருப்பது போல ஆத்மாவை புரிந்துகொள்ள வேண்டும்.

இதை சரியாக புரிந்துகொண்டால் உடலுக்கும், மனதுக்கும் வருகின்ற கஷ்ட, நஷ்டங்கள், சுக-துக்கங்கள் நம்மை பாதிக்காது.

நெருப்புக்கு இரண்டு தன்மைகள் உண்டு. ஒன்று வெளிச்சம் மற்றொன்று உஷ்ணமாகும்.
மரக்கட்டையை எரிக்கும் நெருப்பு அதற்கும் வேறானது.
வெளிச்சத்தினால் காட்டிக் கொடுக்கப்படும் பொருட்களிலிருந்து வேறானதாக இருக்கின்றது.
எரிந்து கொண்டிருக்கும் அக்னியிலிருந்து வேறானது. அதேபோல இந்த சரீரத்தை விளக்கும் ஆத்மாவானது
அதற்கும் வேறானது என்பதை அக்னி உதாரணத்தோடு ஒப்பிட்டு புரிந்து கொள்ள வேண்டும்.

—————

நிரோதோ4த்பத்த்யணு ப்3ருஹன் நானாத்வம் தத்க்ருதான் கு3ணான் |
அந்த:பிரவிஷ்ட ஆத4த்த ஏவம் தே3ஹகு3ணான் பர: || 9 ||

உபாதி – எது தன்னுடைய குணத்தை வேறொன்றிற்கு பொய்யாக கொடுக்கிறதோ அதற்கு உபாதி என்று பெயர்.
இதன் அடிப்படையில் பார்த்தால் நம் உடலும், மனமும் அதனுடைய தர்மத்தை பொய்யாக ஆத்மாவில் ஏற்றி வைத்திருப்பதால்
இவைகள் ஆத்மாவின் உபாதிகள் என்று அறிந்து கொள்ளலாம்;.

நிரோத4ம் – அணைந்து விடுதல்
உத்பத்தி – தோன்றுகின்றது, உற்பத்தியாகின்றது.
அணு – சிறியதாக ,இருக்கின்றது
ப்4ருஹ – மிகப்பெரியதாக இருக்கின்றது
நானாத்வம் – விதவிதமான நெருப்புக்கள்
தத்க்ருதான் கு4ணான் – இந்த குணங்களெல்லாம் நெருப்பு எதை எரிக்கின்றதோ அதன் அடிப்படையில் கூறப்படுகின்றது.
ஆத4த்த – எடுத்து கொள்கிறது
அந்த:பிரவிஷ்ட – எதை எரிக்கின்றதோ அதன் வடிவத்தை ஏற்றுக் கொள்கிறது.
தே2ஹ கு3ணான் பரஹ ஆத4த்த – அனைத்து தேகத்தின் குணங்கள் மேலாத ஆத்மாவில் பொய்யாக ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது.
எந்தெந்த சரீரத்திற்கு ஆதாரமாக இருக்கின்றதோ அந்தந்த சரீரத்தின் குணங்களை பொய்யாக ஏற்றுக் கொண்டிருக்கின்றது.

——————-

யோsஸௌ கு3ணைர்விரசிதோ+ தே3ஹோsயம் புருஷஸ்ய ஹி |
ஸம்ஸாரஸ் தன்னிப3ந்தோ4யம் பும்ஸோ வித்3யாச்சி2தா3த்மன: || 10 ||

பும்ஸஹ தே3ஹ – இந்த ஜீவனுடைய உடலானது
புருஷஸ்ய குணைஹி விரசிதஹ – பகவானுடைய மாயையினுடைய முக்குணங்களின் துணைக் கொண்டு உருவாக்கப்பட்டது.
ச ஸம்ஸாரஹ தன்னிபந்தஹ – சம்சாரம் என்பது மூன்று உடலை நான் என்று அத்யாஸம் செய்யும்போது தோன்றுவது
யஹ அஸௌ – யாரொருவன் இதை புரிந்து கொள்கிறானோ அவனது
ஆத்மனஹ சி2த் வித்3யா – ஆத்மஞானமானது இந்த சம்சாரத்தை நீக்க உதவுகின்றது.

—————–

தஸ்மாஜ்ஜிக்3ஞாஸயாத்மானமாத்மஸ்த2ம் கேவலம் பரம் |
ஸங்க3ம்ய நிரஸேதே3தத்3வஸ்துபு3த்3தி4ம் யதா2க்ரமம் || 11 ||

தஸ்மாத் – ஆகவே ஆத்மஞானம் சம்சாரத்தை நீக்குகின்றது
ஜிக்ஞாஸயா – விசாரம்; விசாரத்தின் மூலமாக (சரியான பிரமாணத்தை பயன்படுத்த வேண்டும்)
ஆத்மஸ்தம் – இந்த உடலுக்குள் இருக்கின்ற
கேவலம் – இரண்டற்றதான
ஆத்மானம் – ஆத்மஸ்வரூபத்தை
ஸங்க3ம ய – புரிந்துகொண்டு, உணர்ந்துகொண்டு
பரம் – அழியாத, மேலான
ஏதத்3 வஸ்து பு3த்3தி4ம் – இந்த உடலே நானென்று நினைக்கின்ற எண்ணத்தை
நிரஸேத்3 – நீக்கிவிட வேண்டும்.
யதா2க்ரமம் – இந்த நிலையை படிபடியாக அடைய வேண்டும்

இதை பஞ்சகோச முறையில் செய்யும்போது முதலில் அன்னமயத்திலிருந்து ஆரம்பித்து
ஆனந்தமய கோசத்திற்கு படிப்படியாக செல்ல வேண்டும்.

————–

ஆசார்யோsரணிராத்3ய: ஸ்யாத3ந்தேவாஸ்யுத்தராரணி: |
தத்ஸந்தா4னம் ப்ரவசனம் வித்3யாஸந்தி4: ஸுகா2வஹ: || 12 ||

ஆசார்யஹ – குருவானவர்
அரணி ஆத்3யஹ ஸ்யாத் – அக்னி உண்டாக்க பயன்படும் நிலையாக இருக்கும் அடிமரக்கட்டையாக இருக்கிறார்.
அந்தேவாஸ்யஹ குருவிற்கு அருகே வாழ்பவர், குருவை அடைந்து ஆத்மஞானத்தை அடைய விரும்பும் சிஷ்யன்
உத்தர அரணி – மேலேயுள்ள அரணி கட்டையாக ,இருக்கிறான்
தத்ஸந்தானம் அரணிக்கட்டையை உரசுவதைப் போல இருப்பது
ப்ரவசனம் குரு உபதேசம் செய்தல்
வித்3யாஸந்தி4ஹி – ஞானம் பலனாக கிடைக்கின்றது, அக்னி உண்டாவதைப் போல
ஸுகா2வஹ இந்த ஞானத்தின் பலன் நிலையான மனநிறைவை, மோட்சத்தைக் கொடுக்கின்றது

—————-

வைஶாரதீ3 ஸாதிவிஶுத்3த4பு4த்3தி4ர்து4னோதி மாயாம் கு3ணஸம்ப்ரஸூதாம் |
கு3ணாம்ஶ்ச ஸந்த3ஹ்ய யதா3த்மமேதத் ஸ்வயம் ச ஶாம்யத்யஸமித்3 யதா2க்3னி: || 13 ||

இதில் ஆத்மஞான்த்தின் பலன் கூறப்படுகின்றது

வைஶாரதீ – திறமைமிக்க குரு-சிஷ்யன் இவர்களுடைய சேர்க்கையால் அடையப்படுகின்ற
அதி விஶுத்3த4 பு3த்3தி4ஹி – மிகமிக தூய்மையான இந்த ஆத்மஞானம்
மாயாம் கு3ணஸம்ப்ரஸூதாம் து4னோதி – நம்மிடத்தில் இருக்கும் முக்குணங்களினால் தோன்றும் மோகத்தையும், தவறாத அறிவையும் அழித்துவிட்டு.
அஸமித்3 யதா2க்3னி: – எப்படி அக்னி
யதா3த்மம் – அனைத்தையும் எரித்துவிட்டு
ஸ்வயம் ச ஶாம்யத் – எரிப்பதற்கு விறகில்லாமல் தானும் அடங்கிவிடுகின்றதோ
ஏதத் – அதுபோல ஆத்மஞானமும்
கு3ணாம்ஶ்ச ஸந்த3ஹ்ய – முக்குணங்களையும் எரித்துவிட்டு அதன் பலனை கொடுத்துவிட்டு சென்று விடுகிறது.

—————

அதை2ஷாம் கர்மகர்த்ரூணாம் போ3க்த்ரூணாம் ஸுக2து3:க2யோ: |
நானாத்வமத2 நித்யத்வம் லோககாலாக3மாத்மனாம் || 14 ||

அத2 ஏஷாம் – இப்போது பூர்வமீமாம்ஸ மதத்தின் கருத்துக்களைப் பார்ப்போமாக
கர்மகர்த்ரூணாம் – கர்மத்தை செய்பவர்கள் எல்லோரும்
போ3க்த்ரூணாம் ஸுக2து3:க2யோ: – இன்ப-துன்பங்களை அனுபவிக்கின்ற ஜீவர்களும்
நானாத்வமத2 – பலவிதமாகவும், வேற்றுமையுடையவராகவும்
நித்யத்வம் – தனித்தனியாக நிலையான கர்த்தாவாக இருக்கிறார்கள்
லோக – – இந்த உலகம்
கால – காலம் என்கின்ற தத்துவம்
ஆக3ம – கர்மத்தை போதிக்கின்ற சாஸ்திரம்
ஆத்மனாம் – இவை மூன்றும் நிலையானவைகள் என்பது அவர்களது கருத்து.

——————-

மன்யஸே ஸர்வபா3வானாம் ஸம்ஸ்தா2 ஹ்யௌத்பத்திகீ யதா2 |
தத்ததா2க்ருதிபே4தே3ன ஜாயதே பி4த்3யதே ச தீ4: || 15 ||

மன்யஸே – இவ்வாறு நீ கருதினால்
ஸர்வபா3வானாம் – நாம் அனுபவிக்கக்கூடிய அனைத்து பொருட்களும்
யதா2 ஔத்பத்தி ஸம்ஸ்தா2 – பிரவாக நித்யத்வமாக இருக்கின்றது
(ஓடும் நதி பிரவாக சத்யத்வத்திற்கு உதாரணமாகும். மாறீக்கொண்டே தொடர்ந்து இருப்பது பிரவாக நித்யம்.
இதை கிரகிக்கின்ற நம் மனதில் தோன்றுகின்ற எண்ணங்களும் பிரவாக சத்யம்.

தத் தத்2 ஆக்ருதி பே4த3ம் – நாம் பார்க்கும் பொருட்களின் உருவத்தின் அடிப்படையில்
ஜாயதே தீ4: – எண்ணங்கள் தோன்றுகிறது
பி4த்3யதே – இந்த எண்ணங்களும் வேறுபடுகின்றன

————-

ஏவமப்யங்க3 ஸர்வேஷாம் தே3ஹினாம் தே3ஹயோக3த: |
காலாவயவத: ஸந்தி பா4வா ஜன்மாத3யோsஸக்ருத் || 16 ||

அங்க3 இவ்வாறு கருதுபவர்களே!
ஏவம் அபி இப்படியொரு கருத்தை வைத்திருந்தால் அவையெல்லாம் தவறாகும்
ஸர்வேஷாம் எல்லா ஜீவர்களுக்கும்
தே3ஹினாம் தே3ஹயோக3த: உடலினுடைய சேர்க்கை தவிர்க்க முடியாததாக ,இருப்பதனால்
கால அவயவதஹ காலம் ஒரு உறுப்பாக ,இருப்பதனாலும்
ஜன்மாத3யஹ பா4வா ஸந்தி – பிறப்பு-இறப்பு போன்ற மாற்றங்கள் கண்டிப்பாக இருக்கும்.
அஸக்ருத் – எனவே மீண்டும் மீண்டும் ஏற்படும். சம்சார சுழலில்தான் இருப்பாய்.

————

அத்ராபி கர்மணாம் கர்துரஸ்தாதந்த்ர்யம் ச ல்க்ஷயதே |
போ4க்துஶ்ச து3: க2ஸுக2யோ: கோ ந்வர்தோ2 விவஶம் ப4ஜேத் || 17 ||

மீமாம்ஸகர்களுடைய கருத்துப்படி கர்மங்களை செய்து கொண்டிருக்கும் கர்த்தாவானவர்கள் சுதந்திரமற்றவனாக இருக்கிறார்கள்.
அடிமையாகவே இருக்கிறாற்கள். செயலின் பலனை சுக துக்கங்களை அனுபவிக்கும் போக்தாவும் சுதந்திரமற்றவனாக இருக்கிறார்கள்.
துயரத்தில்தான் அகங்காரத்தின் சக்தியின் எல்லையை அறிகின்றோம்.
எனவே இதிலிருந்து மேலானதாக இருக்கின்ற ஒரு சக்தியை நாடமுயற்சி செய்வோம்.
இவ்வாறு அடிமைப்பட்டிருக்கும் ஒருவனுக்கு எந்தப் பொருள்தான் மகிழ்ச்சியைத் தரும்.

———-

ந தே3ஹினாம் ஸுக2ம் கிஞ்சித் வித்3யதே விது3ஷாமபி |
ததா2 ச து3க2ம் மூடா4னாம் வ்ருதா2ஹங்கரணம் பரம் || 18 ||

இந்த உலகத்தில் அடைய வேண்டிய லட்சியமாக எதுவும் கிடையாது என்ற கருத்தானது இதில் சுட்டிக் காட்டப்படுகிறது.
அறிவுடன் செயல்பட்டு உலகத்தில் உள்ள செல்வங்களை அடைந்தவனாலும் சுகம் என்பது சிறீதளவு கூட காணப்படவில்லை.
அதுபோல அறிவில்லாதவர்கள் எப்பொழுதுமே துக்க;ப்படுகிறார்கள் என்பதும் இல்லை.
அதிக அறிவு, புகழ், செல்வம், சுகம் தரும் சூழ்நிலை இவைகளை அடைவதால் சுகமடையலாம் என்ற
இந்த அகங்காரம் கொள்வதால் பயனெதுவும் இல்லை.

————

யதி3 ப்ராப்திம் விகா4தம் ச ஜானந்தி ஸுக2து3:க2யோ: | S
தேSப்யத்3தா4 ந விது3ர்யோக3ம் ம்ருத்யுர்ன ப்ரப4வேத்3 யதா2 || 19

ஒருவேளை இன்பங்களை மட்டும் அனுபவிக்கும் நிலையை அடைந்தாலும் துக்கத்தை தவிர்க்கின்ற நிலையை
அடைந்தாலும் அவர்களும் கண்டிப்பாக எப்படி மரணத்தை நீக்குகின்ற உபாயத்தை அறியமாட்டார்கள்

————–

கோ ந்வர்த2: ஸுக2யத்யேனம் காமோ வா ம்ருத்யுரந்திதே |
ஆகா4தம் நீயமானஸ்ய வத்4யஸ்யேவ ந துஷ்டித3: || 20 ||

மரண தண்டனை நிறைவேற்ற அழைத்துச் செல்லப்படும் குற்றவாளிக்கு எந்தப் பொருள்தான் சுகத்தைக் கொடுக்கும்.
எந்த ஆசை நிறைவேறினாலும் முழுமனநிறைவைக் கொடுக்கமுடியும். அதேபோல மரணம் தன் பின்னாலேயே
தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில் எந்தப் பொருள்தான் சுகத்தை கொடுக்கமுடியும்.

—————

ஶ்ருதம் ச த்3ருஷ்டவத்3 து3ஷ்டம் ஸ்பர்தா4ஸூயாத்யாவ்யயை: |
ப3ஹ்வந்தராயகாமத்வாத் க்ருஷிவச்சாபி நிஷ்ப2லம் || 21 ||

ஶ்ருதம் ச சாஸ்திரங்கள் மூலம் அறியப்பட்ட சொர்க்கம் போன்ற பரலோகத்திலும்
த்3ருஷ்டவத்3 நாம் பார்த்து அனுபவிக்கின்ற இந்த மனிதலோகத்தைப் போல
ஸ்பர்த்4 போட்டி
அஸூய பொறாமை
அத்ய அழிவுக்குட்பட்டது
அவ்யயை: தேய்ந்துகொண்டே போகுதல்
து3ஷ்டம் போன்ற குறையுடன் கூடியதாகத்தான் இருக்கிறது
ப3ஹ்வந்தராய காமத்வாத் பல தடைகளுக்கு அப்பால்தான் இன்பங்களை அடைய முடியும்.
நம் அறியாமையினால் இழப்புத்தான் அதிகம், கிடைக்கிறது.
சுகம் கொஞ்சம்தான் அடைகிறோம் என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.
க்ருஷிவச்சாபி நிஷ்ப2லம் விவசாயி எவ்வளவு உழைத்தாலும் நல்ல பலன் கிடைக்கும் என்று உறுதியாக கூறமுடியாது.
அப்படி பலன் கிடைக்காமல் போய்விட்டால் உழைப்பு வீணாகி போய்விடுகிறது

———

இனி(22-26) பரலோக பலன்கள் அனைத்தும் நிலையற்றது என்று விளக்கப்படுகிறது.

அந்தராயைரவிஹதோ யதி3 த4ர்ம: ஸ்வனுஷ்டி2த: |
தேனாபி நிர்ஜிதம் ஸ்தா3னம் யதா2 க3ச்ச2தி தச்ச்2ருணு || 22 ||

அந்தராயை – தடைகள்
ஒருவேளை எந்த இடையூறுமில்லாமல் தர்மமானது நன்கு அனுஷ்டானம் செய்யப்பட்டு சுகம் தருகின்ற
மேலுகங்களை அடைந்தாலும், அந்த லோகத்தை அவன் எவ்விதம் அடைகிறான், எவ்வாறு இருக்கிறான் என்பதை சொல்கிறேன் கேள்.

———–

இஷ்டவேஹ தே3வதா யக்2ஞை: ஸ்வர்லோகம் யாதி யாக்3ஞிக: |
பு4ஞ்ஜீத தே3வ்வத்தத்ர போ4கா3ன் தி3வ்யான் நிஜார்ஜிதாத் || 23 ||

விதவிதமான வேள்விளைச் செய்து அதற்குரிய தேவதைகளை பூஜித்து இன்பம் கொடுக்கும் லோகங்களுக்கு செல்கிறான்.
அந்த தேவதை அடைந்ததைப் போல போகங்களை அனுபவிக்கின்றான்.

————–

ஸ்வபுண்யோபசிதே ஶுப்ரே விமான உபகீ3யதே |
க3ந்த4ர்வைர்விஹரன் மத்4யே தே3வீனாம் ஹ்ருத்3யவேஷத்3ருக் || 24 ||

ஹ்ருத்3யவேஷத்3ருக் மனதை கவர்கின்ற ஆடை அணிகலன்களுடன் கூடியவனாக இருக்கும் இவன்
ஸ்வபுண்ய உபசிதே அவனுடைய புண்ணியத்திற்கேற்ப
ஶுப்ரே விமான அழகிய விமானத்தில்
தே3வீனாம் மத்4யே விஹரன் தேவலோக பெண்களுடன் கூடிக் குலாவுகின்றான்
க3ந்த4ர்வ உபகீ3யதே கந்தர்வர்களால் புகழப்படுகிறான், புகழ்ந்துப் பாடப்படுகிறான்

———–

ஸ்த்ரீபி4: காமக3யானேன கிங்கினீஜாலமாலினா |
க்ரீட3ன் ந வேதா3த்மபாதம் ஸுராக்ரீடேஷு நிர்வ்ருத: || 25 ||

தேவலோக பெண்களுடன், விரும்பிய இடத்திற்கு அழைத்துச் செல்லக்கூடியதும், விதவிதமான மணிமாலைகளால்
அலங்கரிக்கப்பட்டிருக்கும் வாகனத்தில் அமர்ந்துகொண்டு இன்பமாக காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் போது
தேவலோக இன்பங்களில் மூழ்கியிருக்கின்ற அவன் தன்னுடைய வீழ்ச்சியை அறியமாட்டான்.
அவனிடம் இருக்கின்ற புண்ணியம் அழிந்து கொண்டிருப்பதை அறியமாட்டான்.

———-

தாவத் ப்ரமோத3தே ஸ்வர்கே3 யாவத் புண்யம் ஸமாப்யதே |
க்ஷீணபுண்ய: பதத்யர்வாக3நிச்ச2ன் காலசாலித: || 26 ||

எதுவரை புண்ணியம் இருக்கின்றதோ அதுவரை சொர்க்கத்தின் இன்பங்களை அனுபவிக்கின்றான்.
புண்ணியம் தீர்ந்தபின்னே அவன் விரும்பாவிட்டாலும்கூட காலம் அவனைக் கீழேத் தள்ளிவிடும்.

————-

யத்3யத4ர்மரத: ஸங்கா3த3ஸதாம் வாஜிதேந்த்3ரிய: |
காமாத்மா க்ருபணோ லுப்3த4: ஸ்த்ரைணோ பூதவிஹிம்ஸக: || 27 ||

பஶூனவிதி3னாSSலப்4ய ப்ரேதபூ4தக3ணான் யஜன் |
நரகாநவஸோ ஜ்ந்துர் க3த்வா யாத்யுல்ப3ணம் தம: || 28 ||

ஒருவேளை அதர்மத்தையே செய்து கொண்டிருப்பவன், அதர்மத்தை செய்துகொண்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்களின்
நட்பினால் தன்னுடைய புலன்களை வசப்படுத்தாதவனாக இருப்பவன், ஆசைவயப்பட்டவன்,

க்ருபணஹ தானம் செய்யாதவன் (லோபி, கஞ்சன்)
லுப்3த4ஹ பேராசைக்காரன், மற்றவர்களுடைய செல்வத்தை அபகரிக்கும் எண்ணமுடையவன்
ஸ்த்ரைணஹ உடலின்பத்திலே ஆசையுள்ளவன்
பூதவிஹிம்ஸக:ஹ எல்லா உயிரினங்களையும் வேண்டுமென்றே இம்சிப்பவன்

உயிரினங்களை பலியிட்டு செய்கின்ற யாகங்களை செய்பவன், துஷ்ட தேவதைகளை வழிபடுபவன்,
இப்படிப்பட்ட குணங்களுடன் அதர்மத்தையே செய்து கொண்டிருப்பவன் தன் வசமின்றி நரகத்தை,
அடர்ந்த இருளால் சூழப்பட்ட லோகங்களை அடைகிறான்.

————

லோகானாம் லோகபாலானாம் மத்3ப4யம் கல்பஜீவினாம் |
ப்3ரஹ்மணோSபி ப4யம் மத்தோ த்3விபரார்த4பராயுஷ: || 29 ||

பிறகு துயரத்தை பலனாக உடைய கர்மங்களை செய்து உடலின் துணைக்கொண்டு அதன் பலனாக
மீண்டும் உடலை அடைகின்றார்கள். அழிந்து போகும் இயல்புடைய உடலினால் என்ன சுகத்தை கொடுக்கமுடியும்!

—————-

கர்மாணி து3:கோ2த2ர்காணி குர்வன் தே3ஹேன தை: புன: |
தே3ஹமாப4ஜதே தத்ர கிம் ஸுக2ம் மர்த்யத4ர்மிண: || 30 ||

பூர்வமீமாம்சகர்களால் குறிக்கப்படும் மோட்சம் சம்சாரம்தான். எல்லா ஜீவராசிகளும், எல்லா தேவதைகளும்
உலகத்தை பரிபாலிக்கின்ற தேவதைகளும் ஒரு கல்பகாலம்தான் வாழ்வார்கள்.
அவர்களும் என்னிடத்தில்(பகவான் கிருஷ்ணனிடத்தில்) பயந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
பிரம்மதேவனும் என்னிடத்தில் பயம் கொண்டுதான் இருக்கிறார். இவரது ஆயுட்காலம் 100 ஆண்டுகள்.

————

கு3ணா ஸ்ருஜந்தி கர்மாணி கு3ணோSனுஸ்ருஜதே கு3ணான் |
ஜீவஸ்து கு3ணஸம்யுக்தோ பு4ங்க்தே கர்மப2லாந்யஸௌ || 31 ||

கு3ணாஹா – உடலும், மனமும் (ஸ்தூல, சூட்சும சரீரங்கள்)
ஸ்ருஜந்தி கர்மாணி – செயல்களை செய்து கொண்டிருக்கிறது.
கு3ணோ அனுஸ்ருஜதே கு3ணான் – சத்துவ, ரஜஸ், தமஸ் என்கின்ற மூன்று குணங்கள்தான் உடலையும், மனதையும் செயலில் ஈடுபட தூண்டுகின்றது.
ஜீவஸ்து கு3ணஸம்யுக்தஹ – இந்த ஜீவன் முக்குணங்களோடு கூடியிருக்கின்றன
அஸௌ கர்மப2லான் பு4ங்க்தே – அதனால் ஜீவன் கர்ம பலன்களை அனுபவிக்கின்றான்.

மோட்சம் என்பது நிலையான சுகத்தைத் தரும் ஒரு வஸ்துவாக நினைத்தால் அது தவறு.
மோட்சம் என்பது விசேஷ அனுபவத்திற்குட்பட்டதல்ல. அனுபவிப்பது எல்லாம் சம்சாரம்.
மோட்சம் என்பது சாமான்ய அனுபவம் எப்பொழுதும் மனநிறைவுடன் இருக்கின்றேன் என்ற உணர்வுடன் இருப்பதுதான் மோட்சம்.
நான் ஆத்மா, சாட்சி என்ற நினைப்புடன் இருப்பது. கர்த்தாவும் அல்ல, போக்தாவும் அல்ல.

————–

யாவத் ஸ்யாத்3 கு3ணவைஷம்யம் தாவன்நானாத்வமாத்மன: |
நானாத்வமாத்மனோ யாவத் பாரத்ந்த்ர்யம் ததை3வ ஹி || 32 ||

எப்பொழுது குணங்களின் வேற்றுமைகள் இருக்கின்றதோ அப்பொழுது விதவிதமான ஜீவர்கள் தோன்றுகிறார்கள்.
பலவிதமான ஸூட்சும சரீரங்கள் தோன்றுகின்றன. எப்பொழுது பலவிதமான ஜீவர்கள் தோன்றுகிறார்களோ
அப்போது பிறர் வசத்திற்கு அடிமையாகவே சென்று விடூகிறார்கள்.

————–

யாவத்3ஸ்யாஸ்வதந்த்ரத்வம் தாவதீ3ஶ்வரதோ ப4யம் |
ய ஏதத் ஸமுபாஸீரம்ஸ் தே முஹ்யந்தி ஶுசார்பிதா: || 33 ||

ஜீவனுக்கு எதுவரை ஒன்றை சார்ந்திருத்தல் என்ற நிலை இருக்கின்றதோ, அதாவது சுதந்திரம் இல்லாமல்
குணங்களுக்கு வசப்பட்ட நிலையில் இருக்கின்றானோ, அதுவரை இறைவனிடத்தில் பயம் இருக்கவே செய்யும்.
பகவானிடம் பயம் நீங்க பிரார்த்திப்போம். ஆனால் இந்த நிலையில் அவரிடத்திலே பயம் ஏற்படும்.
எவனொருவன் பூர்வமீமாம்ஸ மதக்கொள்கையை பின்பற்றுகிறார்களோ, குணங்களின் பிடியில் சிக்கியிருக்கிறார்களோ
அவர்கள் மோகத்தில் வீழ்ந்து விடுவார்கள். சோகத்திலும் மூழ்கடிக்கப்பட்டு விடுவார்கள்.

————-

கால ஆத்மாSSக3மோ லோக: ஸ்வபா4வோ த4ர்ம ஏவ ச |
இதி மாம் ப3ஹுதா4 ப்ராஹுர் கு3ணவ்யதிகரே ஸதி || 34 ||

குண மாற்றத்தினால் இந்த ஸ்ருஷ்டியானது இயங்கிக் கொண்டிருக்கும் போது இறைவனான என்னையே பலவாக பார்க்கின்றார்கள்.
காலமாகவும், அனைத்து ஜீவாத்மாகவும், வேத சாஸ்திரங்களாகவும், அனைத்து உலகமாகவும், ஒவ்வொரு பொருளிலிருக்கும்
பொதுவான தன்மையாகவும், சக்தியாகவும், மேலும் பாவ-புண்ணியங்களாகவும் நானே இருக்கின்றேன் என்றும் ஞானிகள் கூறுகிறார்கள்.

————-

உத்3த4வ உவாச:
கு3ணேஷு வர்தமானோSபி தே3ஹஜேஷ்வனபாவ்ருத: |
கு3ணைர்ன ப3த்3த்4யதே தே3ஹீ ப3த்3த்4யதே வா கத2ம் விபோ4 || 35 ||

உத்தவர் கேட்கிறார்:
விபோ4 பலவாக காட்சியளிக்கும் இறைவா!
கு3ணேஷு வர்தமான அபி உடலிலிருந்து கொண்டிருக்கும்போது அதிலிருந்து செயல் செய்து கொண்டிருந்த போதிலும்
அதனால் கட்டுப்படாமல், தாக்கப்படாமல், உடல்களாலும், செயல்களாலும் ஞானி எப்படி பந்தப்படாமல் இருக்கின்றான்?
மற்றவர்கள் எப்படி பந்தப்படுகிறார்கள்?

————–

கத2ம் வர்தேத விஹரேத் கைர்வா ஞாயேத லக்ஷணை: |
கிம் பு4ஞ்ஜீதோத விஸ்ருஜேச்ச2யீதஸீத யாதி || 36 ||

முக்தியடைந்தவன் நடத்தை எப்படியிருக்கும்?
ஞானி எவ்விதம் இருப்பான்? எப்படி நடந்து கொள்வான்? எந்தெந்த அடையாளங்களால் அவனை அறிந்து கொள்ள முடியும்?
எதை உட்கொள்வான்? போக்தாவாக இருக்கும்போது என்ன மனநிலையில் இருப்பான்?
கர்த்தாவாக இருக்கும்போது எவ்விதம் செயல்படுவான்? எப்படி உறங்குவான்? எப்படி அமர்ந்திருப்பான்? எப்படி, எவ்விதம் செல்வான்?

————-

ஏதத்3ச்யுத மே ப்3ரூஹி ப்ரஶ்னம் ப்ரஶ்தவிதா3ம் வா |
நித்யமுக்தோ நித்யப3த்3த4 ஏக ஏவேதி மே ப்4ரம: || 37 ||

அச்சுதா! இந்த கேள்விக்கு எனக்கு பதில் சொல்லுங்கள்.
கேட்கப்படுகின்ற கேள்விகளை சரியாக புரிந்து கொள்வதில் சிறந்தவரே!
ஒரே ஜீவன் எப்படி முக்தனாகவும், சம்சாரியாகவும் இருக்க முடியும்? இதுவே எனக்கு குழப்பமாக இருக்கிறது.

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உத்தவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கீதாச்சார்யன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ப்ருஹதாரண்ய உபநிஷத்- அத்யாயம்-5–/ அத்யாயம்-6–

March 23, 2021

முகவுரை (சங்கரரின் விசாரம்)
இதில் 15 பகுதிகள் உள்ளது. அவற்றில் 11 பகுதிகள் உபாஸனைகளைப் பற்றி விளக்கப்படுகின்றது.
முதல் பகுதி ஓம்கார உபாஸனை, பிறகு 10 பகுதிகள் ஹிரண்யகர்ப்பனைக் குறித்த உபாஸனைகள்.
ஒரு பகுதி நற்பண்புகள், தவம் இவற்றைப்பற்றி விளக்குகிறது மற்றவைகள் பிரார்த்தனைப்பற்றி பேசுகின்றது.

விசாரம்:
அத பூர்ணம், இத பூர்ணம் என்று சொல்வதனால் பிரம்மமானது இரண்டு விதமான இருக்கின்றது.
ஒன்று காரிய பூரணம் மற்றொன்று காரண பூரணம்.
எனவே த்வைத, அத்வைத ரூபமாக இருக்கின்றது எப்படி கடலில் அலைகளும் இருக்கின்றதோ அது மாதிரி.

கேள்வி: ஒரே பொருள் எப்படி இருவேறு நிலைகளாக இருக்க முடியும். அவஸ்தாத் பேதாத் என்ற காரணமாக,
எப்படி பாம்பு ஒரு நிலையில் நீண்டிருக்கும் வேறொரு நிலையில் சுருண்டு வட்டமாக காட்சியளிக்கின்றதோ
அது போலவா அல்லது திருஷ்டி பேதாத்: எந்த நோக்கிலே பார்க்கிறாயோ அந்த நிலையில் தென்படும் காட்சிப் போலவா?.
உதாரணமாக மரம் ஒன்று அதிலுள்ள கிளைகள் பலவாக இருப்பது போல பிரம்ம மானது இரண்டு ரூபமாகவும் தெரிகின்றது.

பதில்: அவஸ்தாத் பேதாத் அடிப்படையில் பார்த்தால், எந்த அவஸ்தையிலும் விகாரத்துடன் கூடியது என்ற நிலை ஏற்படும்.
எது விகாரத்திற்கு உட்பட்டதோ அது அநித்யம். எது அநித்யமோ அது பிரம்ம மல்ல, அது நமது புருஷார்த்தமல்ல.
த்ருஷ்டி பேதாத் இந்தநிலையில் அவயவத்துடன் கூடியதாகி விடும். ஆனால் பிரம்மம் அவயவங்களற்றது.

ஸ்ருதி விரோதாத் – உபநிஷத் தெளிவாக நிஷ்கலம், நிர்விகாரம், அஜஹ அத்வைதம் என்ற லட்சணங்களை
கூறியிருப்பதற்கு விரோதமாக இருக்கின்றது.
தியானத்தில் விகல்பம் உண்டு. திருஷ்டியில் விகல்பம் உண்டு. அறிவில் விகல்பம் இருக்க முடியாது.
பிரம்ம ஞான விஷயத்தில் விகல்பம் கிடையாது. பிரம்மத்தை எப்படி இருக்கிறதோ அப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
த்வைதமானது ஸ்ருதியினால் நிந்திக்கப்பட்டுள்ளது, நிஷேதம் செய்யப்பட்டுள்ளது, ஆனால் அத்வைதம் எங்கும் நிஷேதம் செய்யப்படவில்லை
த்வைதத்தை சுபாவமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், வேதத்தின் கர்ம காண்டம் த்வைதத்தை உபதேசிக்கவில்லை.
அதை லட்சியமாக கொண்டு சில சாதனங்களை கூறியிருக்கிறது. இந்த இடத்தில் சத்யமா, மித்யாவா என்று பேசவில்லை.
த்வைத த்தை நீக்க முடியாதவர்களுக்கு கர்ம காண்டம் சொல்லப்பட்டுள்ளவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் ஞானத்திற்கு
தகுதியடைந்து பிறகு ஞானகாண்டம் மூலமாக சென்று அதை அடையலாம்.

——–

பகுதி-1 : ஆகாச, ஓம்கார தியானம்
ஸ்லோகம்-1
கம் – ஆகாசம்; சிதாகாசம் (என்றும் இருப்பது), பூதாகாசம் (பஞசபூதங்களில் உள்ள ஒரு பூதம்)
வாயுரம்: எதில் வாயு சஞ்சரிக்கின்றதோ அது சிதாகாசத்தை குறிக்கின்றது.
அது நானாக இருக்கின்றேன் என்று நிதித்யாஸனம் செய்ய வேண்டும்.
இது முடியாவிட்டால் விரிந்து பரந்து இருக்கும் ஆகாசத்தையே தியானித்து சகுண உபாஸனை செய்யலாம்.

வேதஹ அயம் பிராமனஹ விதுஹு: இந்த ஒம்காரமே வேதமாக இருக்கின்றது என்று ரிஷிகள் அறிந்திருக்கின்றார்கள்.
வேத ஏனேன யத் வேதித்வயம்: இதன் துணைக் கொண்டும் எதை அறிந்து கொள்ள வேண்டுமோ அதை அறிந்துக் கொள்ளலாம்.
ஒம் என்ற சப்தத்தை நிர்குண ஆகாசத்தை அல்லது வாயு சஞ்சரிக்கின்ற ஆகாசத்தை தியானிக்கலாம்.

———
.
பகுதி-2 : மூன்று பண்புகள்
இதில் மூன்று பண்புகள் சொல்லப்பட்டிருக்கின்றது.
தமஹ; தானம்; தயா. பிரஜாபதியின் மகன்கள் தந்தையிடமே குருகுலவாசம் செய்தார்கள்.
அவர்கள் தேவர், மனிதட், அசுரர் என்ற மூன்று குணங்களை கொண்டவர்களாக எடுத்துக் கொள்ளலாம்.
குருகுல வாசம் முடிந்ததும் எங்களுக்கு ஏதாவது உபதேசம் செய்யுங்கள் என்று வேண்டினர்.
அவர்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக உபதேசம் செய்ய ஆரம்பித்தார்.
முதலில் தேவ குணமுடையவனுக்கு ” द “ என்று உபதேசித்துவிட்டு புரிந்ததா என்று கேட்க, அவர்களும் எங்களுக்கு புரிந்தது என்று கூறினர்.
என்ன புரிந்து கொண்டீர்கள் என்று கேட்ட போது தமத்தை பின்பற்ற வேண்டும் என்று உபதேசித்தீர்கள் என்று பதில் கூறினார்கள்.
குருவும் ஆமோதித்தார், இவர்கள் சத்துவ குணம் பிரதானமுடையவர்கள் ஆதலால் இந்த உபதேசம் இவர்களுக்கு பொருத்தமானது.

அடுத்ததாக மனித குணமுடையவர்களுக்கும் அதே அக்‌ஷரத்தை (” द “) உபதேசித்துவிட்டு, புரிந்ததா என்று வினவ,
அவர்களும் புரிந்தது என்று பதிலளித்து, எங்களை தானம் செய்யுங்கள் என்று அறிவுறுத்தினீர்கள் என்று கூற,
நீங்கள் சரியாக புரிந்து கொண்டீர்கள் என்று குருவும் ஆமோதித்தார்.

அடுத்ததாக அசுர குணமுடையவர்களுக்கும் அதே அக்‌ஷரத்தை (” द “) உபதேசித்துவிட்டு, புரிந்ததா என்று வினவ,
அவர்களும் புரிந்தது என்று பதிலளித்து, எங்களை தயாவுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினீர்கள் என்று கூற,
நீங்கள் சரியாக புரிந்து கொண்டீர்கள் என்று குருவும் ஆமோதித்தார்.

இந்த உபதேசத்தைத்தான் இடியானது (தெய்வீக வாக்கு) द-द-द என்று சத்தத்துடன் இடித்துக் காட்டுகின்றது
இதிலிருந்து நாம் தமத்துடன், தானத்தையும், தயவையும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
தமம் என்பது இந்திரியகட்டுபாட்டையும், தானம் என்பது பகிர்ந்துண்டு வாழும் பண்பையும்,
தயை என்பது கருணை காட்டும் குணத்துடனும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.
இந்த மூன்றையும் மனிதன்தான் உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும்,
ஏனென்றால் மனிதன்தான் இந்த மூன்று குணங்களும் மாறிமாறி இருந்து கொண்டிருக்கும்.
.
பகுதி-3 : ஹிரண்யகர்ப்ப உபாஸனை-1
ஹ்ருதயத்தை ஆலம்பனமாக வைத்துகொண்டு ஹிரண்யகர்ப்பனை தியானம் செய்ய வேண்டும்.
நமது மனமானது மூன்று விதமான செயல்படுகிறது. இந்திரியங்கள் மூலமாக வெளி விஷயங்களை கிரகிக்கிறது,
அதன் மூலம் ஜீவனுக்கு அனுபவத்தை தருகிறது, வேறு உலகத்திற்கு செல்வதற்கும் உதவுகிறது.
அப்படிப்பட்ட ஹிரண்யகர்ப்பனை தியானம் செய்ய வேண்டும்.

பகுதி-4 : ஹிரண்யகர்ப்ப உபாஸனை-2
ஹிரண்யகர்ப்பனுக்கு மூன்று குணங்கள் கொடுத்து உபாஸனம் செய்தல். அவைகள்
1. சத்தியம் – மூர்த்த-அமூர்த்தமாக தியானித்தல்
2. மஹத் – மிகப்பெரியது என்று தியானித்தல்
3. யக்‌ஷம் – பூஜிக்கத்தகுந்தவன் என்று தியானித்தல்.

பகுதி-5 : ஹிரண்யகர்ப்ப உபாஸனை-3
ஹிரண்யகர்ப்பனை சூரியனிலும், நமது வலது கண்ணிலும் வைத்து உபாஸனை செய்ய வேண்டும்.

பகுதி-6 : ஹிரண்யகர்ப்ப உபாஸனை-4
ஹிரண்யகர்ப்பனுக்கு ஐந்து குணங்கள் கொடுத்து உபாஸனம் செய்தல். அவைகள்
1. மனோமய
2. பாஸதீய – பிரகாச ரூபமாக
3. ஸம்வஸ்ய ஈசானஹ
4. ஸர்வஸ்ய அதிபதி
5. ஸர்வஸ்ய பிராதாஸ்ய – எல்லாவற்றையும் ஆள்பவர்.

பகுதி-7 : ஹிரண்யகர்ப்ப உபாஸனை-5
ஹிரண்யகர்ப்பனை மின்னலாக தியானித்தல். இப்படி தியானம் செய்வதால் நம்முடைய அறிவு பிரகாசமடையும்.

பகுதி-8 : ஹிரண்யகர்ப்ப உபாஸனை-6
ஹிரண்யகர்ப்பனை வேதரூபமாகவே தியானித்தல்

பகுதி-9 : ஹிரண்யகர்ப்ப உபாஸனை-7
ஹிரண்யகர்ப்பனை நம் வயிற்றிலிருக்கின்ற வைஸ்வாநரன் என்று அழைக்கப்படுகின்ற அக்னியாக தியானித்தல்.
இதனால் உடல் வலிமை, உணவு ஜீரணிக்கும் சக்தி பெருகும்.

பகுதி-10 : உபாஸகர்களின் கதி
இப்படி ஹிரண்யகர்ப்பனை உபாஸனை செய்பவர்களின் கதியானது விவரிக்கப்படுகின்றது.
இவர்கள் பிரம்மலோகத்திற்கு செல்யவார்கள். சில தேவதைகளை கடந்து செல்ல வேண்டும்,
அந்தந்த தேவதைகள் நமக்கு வழிகாட்டுவார்கள். அவர்கள் துணைக் கொண்டு பிரம்மலோகம் அடையலாம்.

பகுதி-11 : தவமாக பாவிக்க வேண்டியவை
நமக்கு வருகின்ற நோய்களை தவமாக பாவிப்பதே மிகப்பெரிய தவமாகும். இது வினைப்பயனை அனுபவிப்பதை உணர்த்துகிறது.
இந்த நோய் வேண்டாம் என்று நினைப்பது இறைவனின் நியதியை அவமதிப்பது போன்றதாகும்.
எனவே அந்த நோயை இறைவனின் பிரசாதமாக நினைத்து தவமாக அனுபவிக்க வேண்டும்.
தவம் என்பது கஷ்டத்தை எடுத்துக் கொள்வது என்று பொருள் கொண்டால், இது இறைவனால் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும்
ஒரு வாய்ப்பு என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாம் இறந்த பின் நமது உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்வது போல தியானிக்க வேண்டும், இது மிக மேலான தவமாகும்.
இறந்த பிறகு நம்முடலை, தகனம் செய்வது போலவும் நாம் தியானிக்க வேண்டும்.
அது சாம்பலாகும் வரை தியானத்தை தொடர வேண்டும். இவ்வாறு தியானிப்பவர்கள் மேலான உலகத்தை அடைகிறார்கள்.
இதனால் இந்த தேகத்தை இன்பத்தைக் கொடுக்கும் விஷயங்களிலிருந்து விடுவிக்க வேண்டும்.

பகுதி-12 : ஹிரண்யகர்ப்ப உபாஸனை-8
ஹிரண்யகர்ப்பனை அன்னரூபமாகவே தியானித்தல், பிராணரூபமாகவும் தியானித்தல்.
இப்படி தியானம் செய்வதால் நல்ல உணவு கிடைக்கும், பிராணன் நன்கு வேலை செய்யும்.

பகுதி-13 : ஹிரண்யகர்ப்ப உபாஸனை-9
ஹிரண்யகர்ப்பனை பிராணரூபமாக நான்கு விதமாக தியானித்தல். அவைகள்
உக்தம் – நம்மை தாங்கி பிடித்துக் கொண்டிருப்பவராக
யஜு – இந்த பிராணன் இருப்பதால்தான் மற்றவர்களுடன் விவகாரம் செய்ய முடிகிறது
சாம – சமத்துவ குணத்துடன் இருக்கிறது
க்‌ஷத்ரம் – நம்மை காப்பாற்றி கொண்டிருக்கிறது

பகுதி-14 : ஹிரண்யகர்ப்ப உபாஸனை-10
ஹிரண்யகர்ப்பனை காயத்திரி மந்திரத்திலுள்ள பதங்களை வைத்துக்கொண்டு தியானித்தல்.

பகுதி-15 : பிரார்த்தனை
ஈஸாவாஸ்ய உபநிஷத்திலுள்ள கடைசி நான்கு மந்திரங்களின் விளக்கத்தை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
சத்யத்தின் முகமானது தங்கமயமான பாத்திரத்தில் மூடப்பட்டுள்ளது.
இந்த உலகம் கொடுக்கும் இன்பங்களில் மூழ்கி இறைவனை மறந்து விடுகிறார்கள்

5வது அத்யாயம் முடிவுற்றது

—————

அத்யாயம்-6
விளக்கவுரை
பகுதி-1 இதில் பதினாறு மந்திரங்கள் உள்ளது.
இதில் ஹிரண்யகர்ப்பனை பிராண ரூபமாகவே தியானிக்க வேண்டும் என்று மீண்டும் கூறப்பட்டுள்ளது.
இதனுடைய விளக்கம் சாந்தோக்ய உபநிஷத் – அத்யாயம்-5, பகுதி-1 உள்ளது.
பகுதி-2 இதிலும் பதினாறு மந்திரங்கள் உள்ளது.
இதனுடைய விளக்கங்கள் சாந்தோக்ய உபநிஷத் – அத்யாயம்-5, பகுதி-3 உள்ளது.
பகுதி-3 ஹோமங்கள், யக்ஞங்கள் இவைகளைப் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.
பகுதி-4 கிரகஸ்த ஆசிரமத்திலுள்ள ஸம்ஸ்காரங்கள் விளக்கப்பட்டுள்ளது.
பிறந்ததிலிருந்து இறக்கும் வரை உள்ள ஸம்ஸ்காரங்கள் விளக்கப்பட்டுள்ளது.

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ப்ருஹதாரண்ய உபநிஷத்- அத்தியாயம்-4-பகுதி -2-ஸ்வயம் ஜோதி பிரமாணம்-பகுதி -2 /சப்தான்ன பிராமணம்/உக்தம் பிரமாணம்/சாரீரக பிரமாணம்/வம்ச பிரமாணம்–

March 23, 2021

ஸ்லோகம்-21
ஆழ்நிலை உறக்கம் என்பது ஒரு காலவரையறைக்குட்பட்டது. மோக்‌ஷம் என்பது ஞான நிஷ்டைக்கு பிறகு
காலவரையறைக்குட்பட்டு அனுபவிக்கும் விஷயம் இல்லை. இந்நிலையில் அக்ஞானம் உண்டு.
மோக்‌ஷ ஜாக்ரத் நிலையில் அனுபவிப்பது, அக்ஞான நீங்கி ஞானத்துடன் இருக்கும் நிலை.
உறக்கம் என்பது ஞானிக்கும் அக்ஞானிக்கும் ஒரே மாதிரிதான் இருக்கும். ஆழ்நிலை உறக்கத்தில் சம்சார விதை இருக்கும்.
மோக்‌ஷத்தில் சம்சாரமும் இல்லை அதன் விதையும் இல்லை.

இந்த மந்திரம் மோக்‌ஷ லக்ஷணத்திற்கு பொருந்தும். ஆழ்நிலை உறக்கத்தை மோக்ஷத்திற்கு உதாரணமாக கொடுக்கலாம்
ஆனால் அதுவே மோக்ஷமாகாது. ஒன்பது லக்ஷணைகள் இந்த மந்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
மோக்ஷத்தை அடைந்த பிறகு எப்படி இருப்போம் என்பதையும் விளக்குகிறது.

तद्वा अस्य – இந்த ஞான நிலையில் ஞானிக்கும், சுஷுப்தி நிலையில் பிராக்ஞனுக்கும் கீழே குறிப்பிட்ட லக்ஷணைகளுடன் இருப்பான்.

अतिच्छन्दः – காமத்தை கடந்தவன்; ஆசையிலிருந்து விடுபட்டவன். ஞானிக்கும் ஆசை வரும் ஆனால் அது ஒரு விளைவையும் ஏற்படுத்தாது.
அதனால் இவன் பாதிக்கப்படுவதில்லை, துயரமோ, மகிழ்ச்சியோ ஏற்படுத்தாது.
இதை எப்படி நிதித்யாஸனம் செய்வது என்றால், நான் இப்போது இந்த லக்ஷணத்தில் இருக்கிறேன் என்று தியானிக்க வேண்டும்.
தியானத்தில் ஒவ்வொரு லக்ஷணமாக நான் இருக்கிறேன் என்று தியானிக்க வேண்டும்,
अपहतपाप्मा – பாவத்திலிருந்து விடுதலையடைந்தவன். பாவத்தின் விளைவு துயரம். ஆழ்நிலை உறக்கத்தில் ஒருவனுக்கு துயரம் இல்லை.
எனவே பாவ-புண்ணியம் என்ற கர்ம பலனை அனுபவிக்காமல் இருக்கிறான்.
முக்தனும் என்றென்றும் மனநிறைவுடன் துயரம் எதுவும் இல்லாமல் இருக்கிறான். பாவ-புண்ணியங்கள் மொத்தமாக இவனை விட்டு சென்று விட்டது

தியானமுறை: நான் எல்லா பாவங்களிலிருந்து விடுபட்டவன் என்று தியானிக்க வேண்டும்
अभयँ रूपम् : நான் பயமற்ற ஸ்வரூபமாக இருக்கிறேன். நமக்கு வேறாக உள்ள ஒன்றூ என்னை தாக்கி விடும், அழித்து விடும்
என்ற பயம் எல்லோருக்கும் இருக்கும். ஞானி அனைத்துமே நானாக இருக்கிறேன் என்ற அறிவால் பயம் முற்றிலுமாக நீங்கியவனாக இருக்கிறான்,
அந்த உணர்வேயில்லாதவனாக இருக்கிறான்.

விசேஷ ஞான அபாவாத் – தனிப்பட்ட ஞானம் இல்லை, விதவிதமான ஞானங்களும் இல்லை.
விழிப்பு நிலையில் ஒவ்வொரு க்ஷணம் விதவிதமான ஞானத்தை அடைந்து கொண்டிருக்கிறோம், கனவு நிலையிலும் இதே மாதிரிதான்.
ஆழ்நிலை உறக்கத்தில் எல்லா நேரமும் ஒரே மாதிரியான அனுபவம்.
ஒரே ஞானமான அவித்யாவின் ஒரே மாதிரியான விருத்தியைத்தான் அனுபவிக்கிறோம். விசேஷ ஞானம் இந்த நிலையில் இல்லை.
ஜாக்ரத் நிலையில் ஒருவன் இன்பத்தை அனுபவிக்கும்போது, அந்தக் காலத்தில் அதைத்தவிர வேறெதையும் நினைப்பதில்லை.
உள்ளேயும், வெளியேயும் உள்ள எல்லாவற்றையும் மறந்த நிலையில் அனுபவிப்பான்.

மோட்சம்: ஞானி எல்லா வேற்றுமைகளுக்கும் ஒரு பரமாத்வை ஆதாரமாக பார்க்கிறான்.
எல்லா பானைகளை பார்க்கும் போது ஆதாரமாக உள்ள களிமண்ணை மட்டும் பார்ப்பது போல
எல்லா வேற்றுமைகளிலும் நாம ரூபங்களினால் பாதிக்கப்படாமல் அவைகளை நீக்கி விட்டு
அவைகளுக்கு ஆதரமாக உள்ள பிரம்மத்தின் மீது இருக்கிறது.
சமதிருஷ்டி, சர்வாத்மபாவம். ஞானிக்கு சுபாவமாக இருக்கிறது. விசேஷங்கள் எல்லாம் நிர்விஷயம்.

சைதன்ய ஸ்வரூபம்: ஞானி சைதன்ய ஸ்வரூபமாக இருக்கின்றான் ஜீவன் ஆழ்நிலை உறக்கத்திலும் சேதனமாக இருக்கின்றான்,
ஞானத்துடன் இருக்கின்றான் சைதன்யம் அவித்யை பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. சாமான்ய ஞானத்துடன் இருக்கின்றான்.
ஞானிக்கு அனைத்துமே பிரம்ம ஸ்வரூபம் என்றா சாமான்ய ஞானமாக இருக்கின்றது.
சைதன்யம் அனைத்துமே மித்யா என்று விளக்கிக் கொண்டிருக்கின்றது.

आप्त कामँ – அனைத்து ஆசைகளும் அடையப்பட்டு விட்டது. ஆழ்நிலை உறக்கத்தில் உள்ளவர்களுக்கும் அனைத்து ஆசைகளும்
அடையப்பட்டது போன்ற நிலை. ஞானிகளுக்கு எல்லா விஷயங்களும் நீக்கப்பட்டு விட்ட நிலையில் இருப்பான்.
आत्म कामँ – எல்லா பொருட்களும் ஆத்மாவாகி விட்டது, நானேயாகி விட்டது. எப்பொழுது அடைய நினைக்கிற பொருட்களெல்லாம்
வேறாக இருக்கிறதோ அது வரையில் ஆசை இருந்து கொண்டுதான் இருக்கும்.
ஆனால் அவைகள் எல்லாம் நானேதான் என்று நினைக்கும் போது ஆசைகளே வராது.
अकामँ रूपँ – காமத்துக்கு ஆதாரமாக இல்லாதது, ஆசைக்கு இருப்பிடமாக இல்லாதது. ஆசை எப்போதும் மனதைத்தான் சார்ந்திருக்கிறது.
शोकान्तरँ – சோகம் முற்றிலும் இல்லாதது, மனதில் காரணமில்லாமல் ஏற்படும் துன்பம், துயரம், வெற்றிடம் ஆகியவைகளால் பாதிக்கப்படாமல் இருத்தல்

ஸ்லோகம்-22
अत्रः पिता अपिता भवति माता अमाता भवति– ஆழ்நிலை உறக்கத்தில் / முக்தி நிலையில் தந்தையாக இருந்தும் அப்படி இருப்பதில்லை,
தாயாக இருந்தும் அப்படி இருப்பதில்லை. எந்த உறவுமற்று இருத்தல், நான் தனியானவன் என்ற மனப்பான்மை ஒழிந்து
எல்லாமே நான் என்ற பாவம். வியக்தி அபிமானம், ஜீவ-ஜீவ சம்பந்த நிமித்தமாக சம்சாரத்தை அனுபவிக்கிறோம்.
ஞானிக்கு தன் தாய், தந்தையாக இருந்து செய்யும் கடமைகளை செய்தாலும் செய்யாவிட்டாலும் அதனால் வரும் பாவ-புண்ணியங்கள் வந்து சேராது.
ஆழ்நிலை உறக்கத்தில் இருப்பவனுக்கு எந்த உறவுகளும் அவனுக்கில்லை.

लोकाः अलोकाः – கர்மபல பூதம் – கர்மத்தின் பலனாக் கிடைத்த லோகத்திலுள்ள வாழ்க்கை சூழ்நிலையில் வாழ்கிறார்கள்.
பெரிய செல்வந்தனும், ஏழையும் தூங்கியவுடன் ஒரே அனுபவம்தான் இருக்கும். ஞானி எல்லா சூழ்நிலைகளிலும் ஒரே மாதிரியாகத்தான் இருப்பான்.
எந்த சூழ்நிலையும் அவனுக்கு எந்தப் பாதிப்பும் கொடுக்க முடியாது. நாம் உருவாக்கியிருக்கும் பிராரப்த கர்மத்தினால்
அடைந்த சூழ்நிலைகளால் பாதிக்கப்படுகிறோம்.
देवाः अदेवाः – தேவர்கள் நமக்கு அனுக்கிரகம் செய்பவர்கள் அவர்களும் நமக்கு உறக்கத்தில் அனுகிரகம் செய்வதில்லை.
ஞானிக்கு எந்த தேவதைகளுடைய அனுக்கிரகமும் தேவையில்லை. எந்தவித பிரார்த்தனையும் செய்வதில்லை,
எந்த கர்மமும் செய்வதில்லை, தேவதைகளுக்கு ஆஹுதிகளும் கொடுப்பதில்லை. தேவதைகளின் உதவியையும் எதிர்ப்பார்க்க மாட்டான்.
वेदाः अवेदाः – உறக்கத்தில் வேதமானது அப்பிரமாதாவாக மாறிவிடுகிறான். ஞானி எப்பொழுதும் அப்பிரமாதாவாக இருக்கிறான்.
கர்ம காண்டமும், ஞான காண்டமும் வெறும் ஆத்மாவாகத்தான் இருக்கிறான்.

ஆழ்நிலை உறக்கமானது மோட்ச நிலைக்கு ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
ஞானிக்கும், ஆழ்நிலை உறக்கத்தில் இருப்பவர்களும் தந்தை என்ற உறவின் மீதுள்ள அபிமானம் துறக்கப்படுகிறது.
பிதா என்ற அபிமானம் இல்லாததால், குற்ற உணர்வும், கர்த்ருத்வம் கிடையாது. பித்ரு சம்பந்த சம்சாரங்கள் கிடையாது.
ஒவ்வொரு உறவுமுறைக்கு சில கடமைகள் அதனால் அடையும் சுக-துக்கங்கள் இருக்கிறது.
இவைகளின் மீதுள்ள அபிமானமற்றவன் ஞானி, ஆழ்நிலை உறக்கத்தில் இருப்பவன் அறியாமையால் அவ்யக்தத்தில் இருப்பான்.

லோகஹ: கர்மபலன், சூழ்நிலையில் இருத்தல்
தேவாஹ: சக்தியை கொடுக்கும் தேவர்களின் சக்தி இழக்கப்படுகிறது
வேதா: வேதங்களின் சப்த பிரமானத்திற்கு பிரமாதாவாக இல்லாத நிலை

अत्रः மேலும் ; स्तेनः अस्तेनः भवति – ; திருடன் திருடனாக இருப்பதில்லை
भ्रूणह अभ्रूणह भवति: கொலைகாரன் கொலையாளியாக இருப்பதில்லை
चाण्डाल अचाण्डालः भवति: சண்டாளன் சண்டாளனாக இருப்பதில்லை
पौल्कस अपौल्कसः भवति பண்பாடற்றவன், கொடூரமானவன் அது மாதிரி இருப்பதில்லை
श्रुमणः अश्रुमणः भवति சந்நியாசி சந்நியாசியாக இருப்பதில்லை
तापसः अतापसः भवति தவம் செய்து கொண்டிருப்பவன் அதை செய்யாமல் இருத்தல்

இவைகளெல்லாம் செய்யும் கர்மத்தை பொறுத்து அமைந்துள்ள குணங்கள். கர்ம நிமித்தமான அபிமானங்கள் எல்லாம் சென்று விடுகின்றன.
ஞானி தவம் செய்யும் போது நான் தபஸ்வி என்ற அபிமானமற்று இருப்பான். சந்நியாசியாக கர்மம் செய்து கொண்டிருக்கும் போது
சந்நியாசி என்ற அபிமானமற்றிருப்பான். ஞானி என்பவந்தான் ஞானி என்று தெரியாத நிலையில் இருப்பான்.
(குழந்தைகளின் செய்கைகள் மகிழ்ச்சி தருவதற்கு காரணம், தான் செய்வது மகிழ்ச்சியை தருகிறது என்று அபிமானம் கொள்ளாமல் இருப்பதனால்தான்.

अनन्वागतँ – ஒட்டிக்கொள்ளாது ; अन्वागतँ – ஒட்டிக்கொள்ளுதல்
अनन्वागतँ पुण्येन; अनन्वागतँ पापेन: பாவ புண்ணியத்தினால் தீண்டப்படாதவனாகிறான்.
புண்ணியத்திலிருந்து விடுதலையடைதல் – புருஷார்த்தம்
புண்ணியம் சித்தஸுத்தி; சுகமும், மனநிறைவும் அடைந்த ஞானிக்கு புண்ணியம் தேவையில்ல்லை, அதன் பலனையும் அனுபவிப்பதில்லை.
அவன் ஞானத்தாலே என்றும் மனநிறைவுடனும், சுகமாகவும் இருக்கின்றான். இவனுக்கு சஞ்சித கர்மத்திலுள்ள பாவங்களும்,
ஆகாம கர்மத்தில் உள்ள பாவங்களும் அழிந்து விடுகின்றன. பிராரப்தத்தில் அனுபவிக்கும் பாவங்களாலும் தீண்டப்படாதவனாக இருக்கிறான்.
பிராரப்தம் பலனை கொடுக்கும் சக்தியை இழந்துவிடுகிறது. இவன் உடலுக்கு வரும் இன்ப-துன்பங்களால் பாதிக்கப்படாதவனாக இருப்பான்.
ஆழ்நிலை உறக்கத்திலிருப்பவனுக்கும் இந்த இரண்டும் தொடுவதில்லை

तीर्णो तदा सर्वान शोकान ह्रुदयस्य भवति – இந்த நிலையில், ஆசையின் விளைவாக வரும் எல்லா துன்பங்களிலிருந்தும் கடந்தவனாக இருக்கிறான்.

நிதித்யாஸனம் செய்ய வேண்டிய கருத்துக்கள்:
· நமக்கு எந்த உறவிலிருந்து துன்பம் வருகின்றதோ அதிலிருந்து அபிமானத்தை நீக்கி விட வேண்டும்
· நம்மிடையே இருக்கும் தீய குணங்களையும் உதாசீனப்படுத்த வேண்டும்
· பாவ-புண்ணியங்களால் பாதிக்கப்படாதவனாக இருக்க வேண்டும்
· இதயத்திலுள்ள ஆசைகளையும், இன்ப-துன்பங்களையும் கடந்தவன் என்ற மனப்பாங்கோடு இருக்க வேண்டும்.

விசாரம்:
கேள்வி ஆசைகளும், துயரங்களும் ஆத்மாவை சார்ந்திருக்கின்றன?
திரவ்ய ஆஸ்ரயஹ குணஹ – எல்லா உணர்வுகளும் குணத்தை சார்ந்து இருக்கிறது.
மனமானது அவைகளை வெளிப்படுத்துவதற்கு கரணமாக, உதவியாக இருக்கிறது.
ஆஸ்ரயம் – ஆத்மா; கரணம் – மனம்,சூட்சுமசரீரம்.
இதயத்தை சார்ந்திருக்கும் ஆசைகளெல்லம் போய் விடுகிறது? வலது கண்ணால் பார்த்தேன் என்று சொன்னாலும்
இடது கண்ணும் சேர்ந்துதான் பார்க்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.
பதில் இங்கு ஹ்ருதஸ்ய சொல்வதற்கு காரணம்; ஆத்மாவை பற்றி தெரியாதவர்களுக்காக இங்கு இந்த ஸ்ருதஸ்ய என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது
ஆஸ்ரயமும், கரணமும் – அந்தக்கரணம் (மனம், சித்தம், புத்தி)
சித்தம்: எண்ணங்களின் நினைவகம். கர்மபலன்கள் பதிவாகி இருக்கும் இடம்
மனம்: சித்தத்திலிருந்து எண்ணத்தையோ, கர்மபலனையோ எடுத்துக் கொண்டு ஸ்தூல உடம்பை அனுபவிக்க வைக்கிறது.
ஆத்ம த்ருக் ஸ்வரூபம்; த்ருஷ்ய ஸ்வரூபம் அல்ல.
எல்லா சுக-துக்கங்களும், ஸம்ஸ்காரங்களும், காம-க்ரோதாதிகள் சூட்சும சரீரத்தை சாரிந்திருக்கின்றன.
எனவே சூட்சும சரீரம் உறங்கும்போது சம்சாரம் இல்லாத நிலை, அதுவும் உறங்குகின்றது.
இது விழிக்கும்போது அக்ஞானி சம்சாரத்தை அனுபவிக்கின்றான். ஞானி விழிப்பு நிலையிலே சம்சாரத்தை நீக்குகிறான்.
இது அடைந்த ஞானத்தின் பலனாக விளைகின்றது.

ஸ்லோகம்-23-30
மந்திரம் 23லிருந்து 30வரை ஒரே மாதிரியாகத்தான் இருப்பதால் ஒரு மந்திரம்-23 மட்டும் விளக்கப்படுகிறது.
மற்றதெல்லாம் இதை வைத்து புரிந்து கொள்ள வேண்டும்.

சாராம்சம்: ஏற்கனவே அறிந்த கருத்துக்கள் வேறுவிதமாக உபதேசிக்கப்படுகிறது.
சுஷுப்தி அவஸ்தா விசாரம்: இந்த நிலையில் உபதேசிக்கப்படும் கருத்துக்கள்
· ஆத்மா சைதன்ய ஸ்வரூபம்: இந்த நிலையில் நாம் ஜடமாக இருக்கின்றன.
· ஆத்மா நித்ய ஸ்வரூபம்: ஆத்மா வந்து போகின்ற மாதிரியாக எண்ணம் தோன்றலாம்
· நிர்விகார ஸ்வரூபம்: நித்யமான பொருள் மாற்றமடையாததாகத்தான் இருக்கும்
· ஏகம்: இது ஒன்றுதான்
· அத்வைதம்: இரண்டற்றது. இது ஒன்றுதான், தனக்கு நிகராக வேறொன்றில்லாமலும் இருக்கின்றது
· பாவ-அபாவ சாக்ஷி – இருக்கும் பொருளையும், இல்லாமையையும் காட்டுகிறது. கண் எப்படி வெளிச்சத்தையும் இருட்டையும் காண்பிப்பது போல

ஆத்மா சைதன்ய ஸ்வரூபம்
यद्वै – நினப்பது தவறு ; तत्रः – அங்கு (சுஷுப்தி அவஸ்தையில்) ;
न पश्यति – ஆத்மா எதையும் பார்ப்பதில்லை, உணர்வற்று ஜடமாக இருக்கிறது என்று
पश्यन्वे – அங்கு பார்த்துக் கொண்டுதான், அறிவு ஸ்வரூபமாக இருந்து கொண்டு, விழித்து கொண்டு;
ब पश्यति – பார்க்காமலும் இருக்கிரது.
சுஷுப்தியில் அது பார்த்துக் கொண்டுமிருக்கிறது, பார்க்காமலும் இருக்கிறது.
ते पश्यन – பார்த்துக் கொண்டிருப்பது எப்படி? (உறக்கத்தில்) அதனுடைய ஸ்வரூபத்தின் திருஷ்டிப்படி

द्रुष्टिः ஸ்வரூப சைதன்யத்திற்கு
द्रष्टः பார்ப்பவனுடைய, அனுபவிப்பனுடைய
नहि विपरिलोपः – தன்மை மாறுதலடைவதில்லை. அறிபவனுடைய அறிவுக்கும் எந்த மாற்றமும் இல்லை, ஜடமாவதில்லை, அழிந்து விடுவதுமில்லை.

ஆகவே ஆத்மா பார்த்துக் கொண்டிருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். காரணம்
अविनाशित्वात् – தனுடைய ஸ்வரூபமே அழியாத தாக இருப்பதால் அது நாசத்தை அடையாத ஸ்வரூபமாக இருக்கிறது.

கேள்வி எப்படி பார்க்காமலும் இருக்கிறது?
பதில் சாமான்ய சைதன்யம் இருக்கிறது; விசேஷ சைதன்யமாக இல்லை. அது விதவிதமான் பொருட்களை பார்க்காமல் இருக்கிறது.
விழிப்பு நிலையில் கண் மூடிக் கொண்டால், ஒன்றுமே தெரியவில்லை என்பது விசேஷமானவற்றை பார்க்கவில்லை, சாமான்ய இருப்பத்தான் பார்க்கிறோம்.

விசேஷ தரிசனம் பெற மூன்று விஷயங்கள் தேவை. அவைகள்,
1. த்வீதயம்: பிரமாதா என்ற ஒருவன், சிதாபாஸன் இரண்டாவது சைதன்யம் ஒடுங்கிய நிலையில் இருக்கிறது
2. அனயது: கண், காது போன்ற இந்திரியங்களும் கிடையாது. இது பிரமானம்
3. விபக்தம்: பிரமேயம். அறியப்படுகின்ற பொருட்களும் கிடையாது
இவைகள் இருந்தால்தான் அவன் பார்க்க முடியும், இல்லாமல் எப்படி பார்க்க முடியும்

இதேப் போன்று கேட்டல் (24), தொட்டுணர்தல் (25), நுகர்தல் (26), பேசுதல் (27), அறிதல்(28), சுவைத்தல்(29),சிந்தித்தல்(30),
ஆகிய செயல்களை மேலே கூறிய கருத்துக்களோடு சேர்த்து பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்.

ஸ்லோகம்-31
இதில் ஜாக்ரத-ஸ்வப்ன அவஸ்தை விசாரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. சம்சாரத்தை விளக்க உதாரணமும்,
உதாரிக்கப்படுவதும் ஜாக்ரத் அவஸ்தை எடுத்துக் கொள்ளப்படுகிறது. த்வைதத்தினுடைய மித்யாத்வம் நிரூபிக்கப்படுகிறது.
சுஷுப்தியில் த்வதம் வெளிப்படாமல் இருக்கிறது ஆகவே அது வெளிப்படும் ஜாக்ரத், கனவு நிலயை எடுத்துக் கொள்ளப்படுகிறது.
एव என்ற சொல் கொடுக்கும் ”போல” என்ற அர்த்தம் மித்யாவை குறிக்கிறது. “போல” என்ற அனுபவத்தில் இருப்பது ஆனால் அறிவுக்கு இல்லாதது

கேள்வி ஆத்மா என்ற சைதன்ய ஸ்வரூபம் விசேஷமானதா அல்லது சாமான்யமானதா?
விசேஷமானதென்றால் சுஷுப்தி அவஸ்தையே வராது. சாமான்யமென்றால் ஜாக்ரத், கனவு நிலையில் விளக்க முடியாது.
எனவே ஆத்மா விசேஷ, சவிசேஷ சைதன்யமாக இருக்கலாமல்லவா? ஆத்மா நிர்விசேஷமாக இருப்பதால் ஜாக்ரட், ஸ்வப்ன அவஸ்தை எப்படி தோன்றுகிறது?
பதில் இரண்டு ஸ்வரூபம் ஒரு பொருளுக்கு இருக்கலாம் அவையிரண்டும் ஒத்துப்போனால்.
இங்கு உன்னால் இரண்டு விருத்தமான தன்மையை ஸ்வரூபமாக கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது இது நடக்காது, கற்பிக்க முடியாது.
கேள்வி ஆனால் அனுபவத்தில் அப்படி இருப்பதாக தெரிகிறது?
பதில் இரண்டு விருத்தமான தர்மங்கள் ஒரெ பொருளில் காணலாம். அவைகள் ஒன்று சத்யமாகவும் மற்றொன்று மித்யாகவும் இருக்குமேயானால்.
இங்கே த்வைதம் இருக்கின்ற இடத்தில்தான் மித்யா என்ற குறிக்கும் சொல் एव (போல) என்று பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
சாமான்ய சைதன்யத்தை சத்யமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

एत्र – ஜாக்ரத், ஸ்வப்ன அவஸ்தையில்
अन्यत इव स्यात् – ஆத்மாவுக்கு வேறாக ஒன்று (பிரமாத, பிரமானம், பிரமேயம் (அறியப்படும் பொருள்)
இப்படி ஒரு கற்பணையாக தோன்றுகிறதோ, பொய்யான விஷயங்கள் தோன்றுகிறதோ
तत्र – அந்த வேளையில்
अन्यः – பிரமாதா என்ற ஒருவன் ஆத்மாவுக்கு வேறாக
अनयति – தனக்கு வேறாக
கண்கள் என்ற பிரமானத்தால் அறியப்படும் பொருள் தோன்றிவிட்டால் அவன் அனுபவிக்கின்றான்.
இதேமாதிரி கேட்டல், சுவைத்தல், சிந்தித்தல் போன்ற செயல்களை அனுபவிக்கின்றான். ஆத்மா உண்மையில் நிர்விசேஷம் மற்றதெல்லாம் மித்யா.

ஸ்லோகம்-32
இந்த மந்திரத்தில் ஆத்மாவின் ஸ்வரூபம், மோக்‌ஷத்தின் ஸ்வரூபம் கூறப்படுகிறது. ஆனந்த்த்தின் ஸ்வரூபம் அறிமுகப்படுத்தபடுகிறது. ஆத்மாவானது அனைத்து விதமான வேற்றுமைகளும் அற்றதாக இருக்கிறது. இதை அறிந்தவன் அனைத்து செல்வங்களையும் அடைந்தவனாகிறான்.

सलिलः – (நீர்) – நீரைப்போல தூய்மையானது. ஒரு பொருள் அசுத்தத்தை அடைவதற்கு காரணம் தனக்கு வேறாக ஒன்று
வந்து அதனிடல் சேரும்போதுதான். ஆத்மாவுக்கு (விஜாதீய பேதம்) முரணான, வேறாக ஒன்றும் இல்லை.
எனவே அது என்றும் தூய்மையானது. பொதுவாக அந்தக்கரணத்தோடு சம்பந்தம் ஏற்பட்டு அதனால்தான் அசுத்தம் வரும்.
அந்தக்கரணத்திற்கு ஆத்மாவுக்கு நிகராக இல்லாததால் அதனால் அசுத்தபடுத்த முடியாது.
एकः – ஒவ்வொரு ஜீவனிடத்திலும் ஒவ்வொரு ஆத்மா இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.
எவ்வளவு அந்தகரணங்கள் இருந்தாலும் ஆத்மா ஒன்றுதான். ஆகாசம் பலவாக அறியப்பட்டாலும்
(குட ஆகாசம், ஜலாகாசம், மஹா ஆகாசம்) ஆகாசம் என்பது ஒன்றுதான் அதுபோலதான் ஆத்மாவும் இருக்கிறது.
द्रष्टाः – அந்தக்கரணத்தில் மூலம் இந்த பார்ப்பவன்
अद्रष्टाः – தன்னுடைய ஸ்வரூபத்தில் எந்த மாற்றமும் அடைவதில்லை, எதையும் பார்ப்பதில்லை
अद्वैतः – இந்த ஆத்மா இரண்டற்றதாக இருக்கிறது. தான் ஒன்றாக இருக்கிறது அதே சமயத்தில் தனக்குள்ளே எந்த வேற்றுமைகளும் இல்லாமல் இருக்கிறது.
இதுவரை சொல்லப்பட்டது ஆத்மாவின் ஸ்வரூபம்.

एषः ब्रह्म लोकः – ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்றாக இருத்தலே மோக்ஷமாகும், பிரம்மனாக இருத்தலே மோக்ஷம்
யாக்ஞவல்கியர் இவ்விதம் ஜனகருக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார்.
अनुशशानँ – உபதேசம் செய்தல்

एषः अस्य परमागतिः –. ஒருவனுடைய இறுதி லட்சியமானது என்னவென்றால் மோக்ஷத்தை அடைவதுதான்.
एषः अस्य परमासँपतः – இதுதான் ஒருவன் அடையக்கூடிய இறுதியான மிகமேலான செல்வம், மற்ற செல்வங்களெல்லாம்
காலவரையறைக்குட்பட்டது, அழியக்கூடியது. இதுதான் அழிவில்லாத சுகத்தை கொடுக்க முடியும்.
एषः अस्य परमालोकः – இதுதான் ஒருவன் அடையக்கூடிய மிக மேலான இடம்
एषः अस्य परमानन्दः .இதுதான் ஒருவன் அடையக்கூடிய பரமானந்தம். இதற்கு மேலானது வேறெதுவும் கிடையாது.
வேறொருவன் சுகமாக இருக்கிறான் என்று பார்க்கும்போதுதான் பொறாமை என்பதே வருகிறது.
இந்த பரமானந்தத்தை அடைந்தவனுக்கு வேறெந்த ஆனந்தமும் ஒரு துளிதான் அதனால் இவனுக்கு பொறாமை என்பது வரவே வராது.
एतस्य एव आनन्द्स्य – மோக்‌ஷத்திலிருக்கின்றா ஆனந்தமானது
अन्यानि भुतानि – ஞானியை தவிர்த்து மற்ற ஜீவராசிகள்
मात्राम उपजीवन्ति – அதில் ஒரு சிறு துளியைத்தான் அனுபவிக்கிறார்கள்.

ஸ்லோகம்-33 – ஆனந்தத்தைப் பற்றிய விசாரம்
பூர்வமீமாஸிகளின் சித்தாந்தம்:
1. பிரம்மானந்தத்தின் பிரதிபிம்பம்: நாம் ஒரு விஷயத்தினால் இந்திரியங்கள் மூலமாக அனுபவிக்கும் ஆனந்தம் விஷயானந்தம்.
விஷயானந்தம் பிரம்மானந்தத்திற்கு வேறானதும் அல்ல. ஏனென்றால் அது பிரம்மானந்தத்தின் பிரதிபிம்பம்.
2. இந்த விஷயானந்தம் வேற்றுமைகளுடன் (தாரதம்யத்துடன்) கூடியது. ஏற்றத்தாழ்வுகளை உடையது. ஆனந்தத்தின் அளவு வேறுபாடுடையது.
3. இது எதன் நிமித்தமாக வருகின்றது. மேலோட்டமாக பார்க்கும்போது விஷயமே நிமித்தமாக இருக்கிறது
ஆனால் விஷயம் சூட்சுமமாக ஆக சுகமும் அதிகமாகிறது. நம்முடைய உபாதிகள் (இந்திரியங்கள்) உண்மையான காரணமாக இருக்கிறது.
ஒரே விஷயம் ஒருவனுக்கு இன்பத்தை கொடுக்கும் மற்றொருவனுக்கு துன்பத்தை கொடுக்கும்.
இதற்கு நம்முடைய இந்திரியங்களிடத்திலிருக்கும் ஏற்றத்தாழ்வுதான் உண்மையான காரணம்.
இசையை மனிதன் ரசிக்கின்றான், நாய்கள் அனுபவிப்பதில்லை. விருத்தியானது சூட்சுமாகும் போது ஆனந்தமும் அதிகமாகின்றது.
அவரவர்களிடையே ஏற்படும் விருத்தியைப் பொறுத்துத்தான் ஆனந்தத்தின் அளவும் இருக்கின்றது.

எண்ணங்களுக்கு தடை வரும்போது ஆனந்த த்தின் அளவு குறைகின்றது. எப்படி விருத்தியை சூட்சுமபடுத்தி ஆனந்தத்தை அதிகரிக்க செய்வது?
எந்த விஷயத்தில் ஆனந்தத்தை அடைகிறாயோ அந்த விஷயத்தில் வைராக்யம் வந்து விட்டால் அதைவிட நூறு மடங்கு ஆனந்தத்தை அடையலாம்.
காரணம் அந்தப் பொருள் நிமித்தமாக ஆசை வந்து அடையும்போது சுகத்தை அனுபவிக்கிறோம்.
அந்தப் பொருள் மீது வைராக்யம் வந்து விட்டால் அதைவிட நூறு மடங்கு சுகத்தை அனுபவிப்போம்.
ஒரு விஷயத்தில் உள்ள ஆனந்தமானது எதையாவது இழக்க வைத்து விடும். போகத்தை விக்ஷேபத்துடன் (எதிர்ப்பார்ப்புடன்) அனுபவிப்போம்.
இங்கு விருத்தியானது அதி சூட்சுமமாகி விடுகிறது எனவே ஆனந்தமும் அதிகரிக்கிறது.
வைராக்யம் விவேகம் மூலமாக வந்தால்தான் வைராக்யம் நிரந்தரமாக இருக்கும்.
अकाम हतः – ஆசையினால் தாக்கப்படாமல்;
श्रोत्रियँ: சாஸ்திரத்தின் மூலம் விவேகத்தை அடைந்தவன், சாஸ்திர விசாரம் செய்து அதன் மூலம் விவேகத்தை அடைந்தவன்.
अव्रुजिनः – பாவமற்றவன், பாவத்தை போக்கியவன்.
இந்த மூன்றும் உடையவன் அதிக அளவு ஆனந்தத்தை அடைகிறான்.

· பிரதிபிம்ப ஆனந்தத்தை பயன்படுத்தி அதற்கு பிரதிபிம்பமாக இருப்பது பிரம்மானந்த ஸ்வரூபம்.
· வைராக்யத்தால் பிரதிபிம்ப ஆனந்தத்தை அதிகரிக்கச் செய்யும்.

பாவத்தை தவத்தினால் நீக்க முடியும், விவேகமும் தவமும், சேர்ந்திருந்தால்தான் வைராக்யத்தை அடைய முடியும்.

மந்திர விளக்கம்:
सः यः मनुष्याणाँ राद्धः सम्रुद्धोः எந்த மனிதன் போகத்திற்கு தேவையான எல்லா அவயவங்களும் உடையவனாகவும்,
அனைவருக்கும் அதிபதியாகவும் இருப்பான், மனிதனால் அனுபவிக்கப்-படுகின்ற அனைத்து இன்பங்களை
கொடுக்கக்கூடிய பொருட்களை உடையவன் உடையவன். இதுதான் மனிதன் அனுபவிக்கும் அதிகபட்ச இன்பம்.
பித்ருலோகத்தில் இருப்பவர்கள் மனிதலோக அதிகபட்ச இன்பத்தை விட நூறு மடங்கு இன்பத்தை அனுபவிக்கிறார்கள்.
கந்தர்வ லோகத்தில் இருப்பவர்கள் பித்ருலோக அதிகபட்ச இன்பத்தை விட நூறு மடங்கு இன்பத்தை அனுபவிக்கிறார்கள்.
கர்மத்தினால் தேவலோகத்தை அடைந்தவர்கள் கந்தர்வலோக அதிகபட்ச இன்பத்தை விட நூறு மடங்கு இன்பத்தை அனுபவிக்கிறார்கள்.
பிறப்பால் தேவலோகத்தை அடைந்தவர்கள் கர்மதேவலோக அதிகபட்ச இன்பத்தை விட நூறு மடங்கு இன்பத்தை அனுபவிக்கிறார்கள்.
யாரொருவன் श्रोत्रियँ (சாஸ்திரங்களை கற்றவன்), अकामहत (ஆசைகளற்றவன்), अव्रुजिनः (பாவமற்றவன்) இவைகளையுடையவன்
பிரஜாபதி லோகத்தை அடைவான். இது விராட் இருக்கின்ற லோகம். இங்கிருப்பவர்கள் தேவலோக அதிகபட்ச இன்பத்தை விட
நூறு மடங்கு இன்பத்தை அனுபவிக்கிறார்கள். யாரொருவன் श्रोत्रियँ (சாஸ்திரங்களை கற்றவன்),
अकामहत (ஆசைகளற்றவன்), अव्रुजिनः (பாவமற்றவன்) இவைகளையுடையவன் பிரம்ம லோகத்தை அடைவான்.
இது ஹிரண்யகர்ப்பன் இருக்கின்ற லோகம். இங்கிருப்பவர்கள் தேவலோக அதிகபட்ச இன்பத்தை விட நூறு மடங்கு இன்பத்தை அனுபவிக்கிறார்கள்.

பிரதிபிம்ப ஆனந்தத்தை வைத்து பிம்ப ஆனந்த ஸ்வரூபத்தை அறிந்துக்கொள்ள வேண்டும். ஆனந்தத்தை நாடுதல் சம்சாரம்,
அதன் ஸ்வரூபமே நாந்தான் என்று அறிந்து கொள்வது மோட்சம். சாஸ்திர ஞானத்தின் மூலம் வைராக்யத்தை அடைய வேண்டும்.
வைராக்யத்தின் மூலம் பிரதிபிம்பானந்தத்தின் அளவு அதிகமாகி தவத்தின் மூலம் பாவத்தையெல்லாம் நீக்கி பிம்பானந்தத்தை அடைய வேண்டும்.
ஆத்ம ஞானத்தை அடைய வேண்டும்.

ஆத்மஞானத்தை அடைவதனால் என்ன பலன்?
एषः एव परम आनन्दः – பிரம்மன் என்கிற பிரம்ம ஸ்வரூபம் மிகவும் மேலான, உயர்வான, முழுமையான ஆனந்தமுடையது.
இது ஏற்றத்தாழ்வு அற்ற ஆனந்தம். இவ்விதம் யாக்ஞவல்கியர் ஜனக மன்னருக்கு விளக்கினார்.
மேலும் எனக்கு விளக்குங்கள் என்று ஜனகர் கேட்டுக்கொண்டார். அவருக்கு ஜனகரின் வேண்டுகோள் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது.
அறிவாளியான ஜனகர் என்னிட்த்திலிருந்து எல்லாம் அறிவை முழுமையாக அறிந்துக் கொள்ள விரும்புகிறார்.

ஸ்லோகம்-34
வைராக்யத்திற்காக மரண வர்ணனை, சம்சார வர்ணனை
சுஷுப்தி அவஸ்தை மோக்ஷத்திற்கு உதாரணமாக கூறப்படுகிறது. ஜாக்ரத்-கனவு சம்சாரத்திற்கு உதாரணமாக கூறப்படுகிறது.
எந்த ஒரு அவஸ்தையிலும் நிலையாக இருப்பதில்லை. அதில் அவனுக்கு சோர்வு, சலிப்பு ஏற்படுகிறது.
ஏனென்றால் கனவுகள் முழுமையாக, நிபந்தனையற்ற இருப்பதில்லை. உண்மையான ஸ்வரூபமல்ல.
ஒரே அவஸ்தையில் தொடர்ந்து இருக்க முடியவில்லை. எனவே அது சம்சாரத்தை குறிக்கிறது.

ஸ்லோகம்-35
கிராமங்களில் இரட்டை மாட்டு வண்டியின் சக்கரத்தை வெளி சுற்றில், பட்டையான இரும்பு அடிக்கப்பட்டிருக்கும்.
இதனால் இந்த வண்டி மிகவும் சப்தம் போட்டுக்கொண்டு செல்கிறதோ.

असमाहिदम्: வண்டி நிறைய பொருட்கள்
उत्सर्जद्यायात्: ஒலியை எழுப்பிக் கொண்டு செல்லும்

அதே போல இந்த ஜீவன் இறக்கும்போது புலம்பிக்கொண்டே, சத்தம் போட்டுக்கொண்டே செல்கின்றான்.
மிகவும் வேதனையோடு துடிக்கின்றான அதன்பிறகு இறக்கின்றான்.
अयँ शरीरः आत्मा à இந்த சரீரத்தில் இருக்கின்ற ஜீவாத்மா
பிராக்ஞேன ஆத்மனா – ஈஸ்வரனால் (கர்மபல தாதா) ஸ்வயம் ஜோதியாக இருக்கின்ற முக்கிய ஆத்மாவை அதிஷ்டானமாக கொண்ட இந்த ஜீவாத்மா.
अन्वारूढः – அழைத்துச் செல்கிறார்
उत्सर्जनः – வித விதமாக புலம்பிக்கொண்டே
ऊर्ध्वाच्छासि: – எப்பொழுது உதானன் தயாராகிறதோ
उदाणन् – உதாணன் உயிரோடிருக்கும்போது உதவி செய்து கொண்டிருப்பது, இறக்கும்போது
எல்லா இந்திரியங்களையும் எடுத்துக் கொண்டு வெளியேற உதவி செய்யும்

ஸ்லோகம்-36
· எப்பொழுது உதானன் தயாராகிறது?
· எதனால் தயாராகிறது?
· எப்படி ஒருவன் இறக்கின்றான்? ஏன் உதானன் வெளியே செல்கிறது?
· எதற்காக ஜீவன் இறக்கின்றான்?

எப்பொழுது இந்த ஸ்தூல சரீரம் எல்லா சக்திகளையும் இழந்து பலவீனமாகிறதோ ( अणिमानँ ),
வயோதிகத்தினாலும், நோயினாலும் உடல் இளைத்து, சக்தியற்றதாகி விடும்போது
நம்முடைய சூட்சும சரீரமானது ஸ்தூல சரீரத்தை விட்டு நீங்குகிறது அதுவே மரணம். எப்படி பழுத்த பழமோ, காய்ந்த இலைகளோ
மரத்தை விட்டு தானே விழுந்து விடுவது போல ஜீவாத்மா இந்த ஸ்தூல உடலை விட்டு வெளியே செல்கிறது.
பிறகு மீண்டும் வேறொரு சரீரத்தை எடுக்கிறது.

ஸ்லோகம்-37
ஒருவன் பிறக்கும்போது எப்படி வரவேற்கப்படுகிறான்?
எவ்விதம் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு ராஜா பயணம் செய்யும் போது, அங்கே இருப்பவர்கள் அவருக்காக எல்லா வசதிகளையும்
செய்து விட்டு அவர் நன்கு வறவேற்பதற்காக காத்துக் கொண்டிருப்பார்களோ அது மாதிரி மற்ற ஜீவராசிகள்
புதிய ஜீவாத்மாவின் வரவுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். பாவ புண்ணியங்களின்படி பிறக்கப்போகும் இடம்,
சூழ்நிலைகளை தயாரானவுடன் அவன் வரவை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஸ்லோகம்-38
ராஜா தாம் தங்கியிருந்த இட்த்திலிருந்து அரண்மனைக்கு செல்லும்போது அவர் வரும்போது வரவேற்று
எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தவர்கள், அவரை மகிழ்ச்சியாக வழியனுப்ப எல்லா ஏற்பாடுகளையும் செய்து அனுப்புகிறார்கள்.
அதுபோல இறக்கப்போகும் உடலிலுள்ள பிராணன்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து உதாணனுடன் வெளியே செல்ல தயாராக உள்ளது.

பகுதி தொகுப்பு
இந்த உடலுக்கு ஜோதியாக இருப்பது எது? இந்த ஜீவனுடைய விவகாரத்திற்கு காரணம் எது? இந்த ஜீவன் ஜடமாக இருப்பதால்,
அதனால் சுயமாக எதுவும் செய்ய முடியாது. ஜடமான பொருட்கள் வேறொன்றை சார்ந்துதான் விவகாரம் செய்ய முடியும்.
பானை நகர்கிறது என்றால் அதை நகர்த்துவதற்கு ஏதோ ஒன்று காரணாமாக இருக்க வேண்டும்.
அது போல இந்த உடலுக்கு ஜோதியாக சூரியன் என்று ஆரம்பித்து பின் சந்திரன், அக்னி, சப்தம் இறுதியில் ஆத்மாதான் என்று பதிலளிக்கிறார்.

ஆத்மா உடலுக்கப்பாலும் இருந்து கொண்டு பிரகாசிக்கிறது. உள்ளேயும் இருந்து கொண்டும் பிரகாசிக்கிறது.
இதன் ஸ்வரூபம் ஸ்வயம் ஜோதி – தானாக பிரகாசித்துக் கொண்டும் மற்றவற்றால் விளக்க முடியாததாகவும் இருக்கிறது.
இது அப்பிரமேயம். எந்தப் பிரமானத்தினாலும் நேரிடையாக விளக்க முடியாது. இது அபௌதிகம் – பூதங்களால் உருவானதில்லை.

ஆத்மாவின் ஸ்வரூபம் என்ன?
அது சைதன்ய ஸ்வரூபம், சேதனமாக இருப்பது ஆத்மா. இந்த ஆத்மா எப்படி தன்னை வெளிப்படுகிறது,
இவ்வாறு வெளிப்படுத்துகின்ற ஆத்மா தன்னை புத்தியில் பிரதிபலிக்க செய்து சிதாபாஸனாக செயல்படுகிறது.

தியாயதி இவ, லேலாயதி இவ
ஞான விவகாரம் – சூட்சும சரீரம்; கர்ம விவகாரம்- இந்திரியங்களின் உதவியோடு செய்வது
இவைகளை ஆத்மா செய்வதில்லை. பொதுவாக நாம் ‘நான்’ என்று சூட்சும சரீரத்தையும், ஸ்தூல சரீரத்தையும் நினைப்பதால்,
இந்த கர்ம, ஞான விவகாரங்களை நான் செய்கிறேன் என்று நினைக்கிறோம் அஹ்டனால் சஞ்சலம், துக்கம் அடைகிறோம்.

சரீரத்தில் அபிமானம் வைக்கும்போது இவன் பிறக்கின்றான். பிறகு இந்திரியங்களின் சம்பந்தத்தால் பாவ-புண்ணியங்களை சம்பாதிக்கின்றான்.
ஒரு பொருளை தியாகம் செய்யும் போது அந்தப்பொருள் இறந்ததற்கு சமமாகிறது. அதேமாதிரி ஒரு பொருளின்மீது
ஆசை வைக்கும்போது அந்த பொருள் பிறப்பதற்கு சமமாகிறது.

தர்ம-அதர்மங்களின் இருப்பிடமாக இருப்பது சரீரம். கனவு பிறவிகளை உறுதிப்படுத்துகிறது.
அத்ர அயம் புருஷஹ ஸ்வயம் ஜோதி. கனவு நிலையில் இந்த புருஷன் ஸ்வயம் ஜோதியாக இருப்பதை உணரலாம்.
ஜாக்ரத் அவஸ்தையில் ஆத்மாவும், மனமும் அறியும் ஜோதியாக இருக்கிறது.
ஆழ்நிலை உறக்கத்தில் எதுவும் நடக்காததால் அங்கே ஆத்மா உணரமுடியாமல் இருக்கிறது.
கனவுகள் மனதினுடைய விகாரங்கள், மனம் பார்க்கப்படும் பொருளாக இருக்கிறது.
இதைப்பார்ப்பவனாக ஆத்மா இருக்கிறது என்பதை அறியலாம்.

கனவு வாஸனாமயம், ஜாக்ரத் நிலையின் தொடர்ச்சியல்ல, உருவாக்குவதும் உபாதான காரணமாகவும் இருப்பது வாஸனைகள்,
நிமித்த காரணம் கர்மபலன்.

ஹிரண்மயஹ புருஷஹ (கரணங்களை வியாபித்துள்ளவன்) ஏக அம்ஸஹ சிதாபாஸ ரூபமாக இருக்கின்ற ஒருவன் சைதன்ய ஸ்வரூபம்.
எல்லோரும் பொய்யைதான் நாடுகிறார்கள். அவஸ்தாதிரய விவேகம், ஆத்மா அஸங்கஹ என்று கூறுதல்-
அஸங்கோஹ அயம் புருஷஹ- எந்த அவஸ்தையோடும் சம்பந்தம் வைக்காதவன்.
மீன் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு சென்று வருவது போன்ற சம்பந்தத்தை உடையது ஆத்மா ஒரு அவஸ்தையிலிருந்து
மறு அவஸ்தைக்கு சென்று வருவது. சுஷுப்தி அவஸ்தையில் அனுபவிப்பது மோக்ஷ நிலைக்கு ஒரு உதாரணமாக கருதலாம்.

அத்ர பிதா-அபிதா, மாதா-அமாதா ஒருவன் தந்தையாகவும் இருக்கின்றான், ஆனால் தந்தையாக இல்லாமலும் இருக்கின்றான்,
தாயாகவும் இருக்கின்றாள், இல்லாமலும் இருக்கின்றாள். பாவத்தாலும் புண்ணியத்தாலும் பாதிக்கப்படாதவனாக இருக்கிறான்.
ஜாக்ரத் அவஸ்தையில் பார்க்கும் பொருட்களெல்லாம் மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்.
வேற்றுமை பார்க்கும்போதுதான் த்வைதம் வந்து விடுகிறது. பிரதிபிம்ப ஆனந்தத்தை கொண்டு பிம்ப ஆனந்தத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

அத்யாய தொகுப்புரை
குணவாதம்: பிரத்யக்ஷ பிரமாணத்தில் வராதது. அனுபவத்திற்கு எதிரானது
பூதார்த்தவாதம்: இந்திரன் கையில் வஜ்ராயுதம் என்ற வாக்கியத்தில் வஜ்ராயுதம் இருந்ததா இல்லையா என்று முடிவு செய்ய முடியாதது,
நிரூபிக்க முடியாது ஆனால் ஏற்றுக் கொள்கிறோம்.

புருஷவித பிரமாணம்: ஒருவன் அடையும் மேலான பதவி ஹிரண்யகர்ப்பன் என்ற பதவிதான்.
பயம் நீங்காத, தன்னிறைவு இல்லாமல் இருத்தல், உலகத்தில் உள்ள எந்தப்பொருளும் பயத்தைப் போக்காது.
எதை அடைந்தாலும் தன்னிறைவுடன் இருக்க முடியாது. மந்திரங்கள் 7லிருந்து 10வரை வேதாந்தத்தை விளக்குகிறது.
சம்சாரம் வரையறுக்கப்பட்டது, வித்யா சூத்திரம், பிரம்மத்தை ஆத்மா என்று விளக்கப்பட்டிருக்கிறது.
ப்ரவேஸ ஸ்ருதி விசாரம். சரீரத்திற்குள் சென்றவர் யார்? பரமாத்வாவா அல்லது ஜீவாத்மாவா என்று விசாரம் செய்தல்.
இறுதியில் பரமாத்மாதான் என்று நிரூபிக்கப்படுகிறது. பிரவேசம் என்பதற்கு இருக்கிறது என்பதுதான் தாத்பர்யம்.
ஆத்மா இத்யேவ உபாஸீத – யார் சொல்லியும் நாம் எந்தக் காரியமும் செய்வதில்லை.
நாம் எதை செய்ய வேண்டுமென்று நினக்கிறோமோ அதைத்தான் செய்கிறோம்.
நாம் ஆத்மாவைத்தான் உண்மையாக நேசிப்பதால் அதை அடைவதைத்தான் லக்ஷியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிரம்மன் அனைத்துமாக இருக்கிறது. அது தன்னையே தெரிந்து கொண்ட அதிகாரித்வம் பேசப்பட்டது.
விக்ன அபாவம் விசாரம். யாரும் நாம் ஞானத்தை அடைவதற்கு தடையாக இருக்க முடியாது.
ஆனால் நம் கர்மபலன்கள்தான் தடைகளைக் கொடுக்க முடியும். அவித்யா சூத்திரம் பற்றிய விளக்கம்.

————–

பகுதி-5- சப்தான்ன பிராமணம்:
இதில் ஜீவன் கர்த்தவாகவும், போக்தாவாகவும் இருக்கின்றான் என்று விளக்கப்பட்டது. சாதன-சாத்திய விளக்கயிருக்கிறது.
புத்திரனால் பித்ருலோகமும், கர்மத்தால் பிரம்மலோகமும், ஞானத்தால் மோக்ஷமும் அடையலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.
ஜீவனுடைய போக்த்ருத்வம்- ஜீவன் அனுபவிப்பவன், செயலின் விளைவை அனுபவிப்பவன்.
ஸ்ருஷ்டியை நாம-ரூப-கர்ம என்று மூன்று விதமாக ஏற்றுக் கொள்ளுதல்.
சம்சாரத்தில் ஜீவன் போக்தாவாகவும், போக்யமாகவும் இருக்கின்றான். நாம் இந்த உலகத்தை அனுபவிக்கும்போது போக்தா,
இந்த உலகம் நம்மை அனுபவிக்கும்போது போக்யமாகவும் இருக்கிறோம்.

சம்பந்தபாஷ்ய விசாரம்: கர்ம காண்டமும், ஞானகாண்டமும் பிரமானமே. கர்மகாண்டம்-சாதனம்,
ஞான காண்டம் – சாத்தியம்; கர்மமே மோக்ஷத்தை கொடுக்காது.

பகுதி-1 அஸ்வ ப்ராமனம்: சத்திரியன் அஸ்வமேத யாகத்தின் மூலம் சொர்க்கத்தை அடையலாம்.
பிராமணன் இந்த யாகத்தை தியானம் செய்து அதே சொர்க்கத்தை அடையலாம்.
குதிரையை ஆலம்பனமாக வைத்து இந்த பிரபஞ்சத்தை பார்த்து தியானித்தல்.
இதன் மூலம் சித்தஸுத்தி அடையலாம். உபாஸனை-அத்யாரோபம்; சாதனம்-பிரபஞ்சம்

பகுதி-2 அக்னி பிராமனம்: அக்னியை ஆலம்பனமாக வைத்து, விராட் தத்துவத்தை உபாஸனை செய்தல்.
ஸ்ருஷ்டிக்கு முன்பு காரணம் இருந்ததா, காரியம் இருந்ததா என்ற கேள்விக்கு காரணமும் இருந்தது, காரியமும் இருந்தது என்று நிரூபித்தல்

பகுதி-3 உத்கீத பிராமனம்: பிராண உபாஸனை விளக்கப்பட்டது. இதனுடைய சுத்தஸ்வரூபம் விளக்கப்பட்டது.
இந்திரியங்கள் நல்லது, கெட்டதை இரண்டையும் அனுபவிக்கும். பிராணன் எப்பொழுதுமே தூய்மையாக இருக்கிறது.

பாஷ்ய விசாரம்: விதி வாக்கியமும், நிஷேத வாக்கியமும், வேத வாக்கியமும் பிரமானம்.
வேதத்தில் உள்ள சில வாக்கியங்கள் அர்த்தவதமாக எடுத்துக் கொள்ளலாம். அனுவாதம்: தெரிந்ததை சொல்லுதல்.

—————

பகுதி-6 உக்தம் பிரமாணம் —
அனைத்து நாமங்களுக்கும் சாமான்யமான சப்தமாக எடுத்துக் கொண்டு வாக் என்று அழைக்கப்படுகிறது.
அதுதான் உபாதான கரணமாக இருக்கிறது. அதில் விதவிதமான சப்தங்கள் ஏற்றி வைக்கப்படுகிறது.
இவையனைத்தும் நாமத்தில் ஒடுக்கப்படுகிறது. சாமான்யமான ரூபம் சத்யம், விதவிதமான ரூபங்கள் மித்யா.
சரீரம் சாமான்யம். இதிலிருந்து தோன்றும் கர்மங்கள் அனைத்துக்கும் ஆதாரம் சரீரம்.
இந்த மூன்றையும் சரீரத்தில் ஒடுக்கி, சரீரத்தை நீக்கிவிட்டால் உலகத்தையும் நீக்குவது போல் ஆகும்.
நாம-ரூபம் ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது -இதரேத்ர ஆஸ்ரயம்.
ஒன்று அழிந்தால் மற்றொன்றும் அழிந்துவிடும் — இதரேத்ர பிரளயம்
அதனால் இவைகளும் மித்யா.

அத்யாரோபம்-ஏற்றி வைத்தல்; அபவாதம்-நீக்குதல்
அத்யாரோபம் – அனாத்மாவை ஏற்றுக்கொள்ளுதல்; திருஷ்ய பிரபஞ்சம் நாம் பார்த்து அனுபவிக்கும் அனாத்மா அஸத்.
அபவாதம் – ஏற்றுக்கொண்ட அனாத்மாவை நீக்குதல். எனவே இதை ஸத் என்றும் கூற முடியாது.
அனாத்மா ஸத்தும் அல்ல; அஸத்தும் அல்ல; எனவே மித்யா என்று உணரலாம்.
எட்டு விதமாக உலகத்தின் மீது அத்யாரோபம் செய்யப்பட்டிருக்கிறது.
1. சாதன பிரபஞ்சம்: சிலவற்றை சாதனமாக பயன்படுத்தி வேறொன்றை அடைகின்றோம்.
விதவிதமான கர்மங்கள், உபாஸனைகள் சாதனமாக, கர்மரூபமாக கூறப்பட்டுள்ளது.
சப்தான்னத்தில் இருக்கும் முதல் நான்கும் சாதனங்களாக இருக்கின்றன.
2. சாத்தியபரபஞ்சம்: ஒவ்வொரு உபாஸனைக்கும் சொல்லப்பட்ட பலன்கள் எல்லாமே சாத்திய பிரபஞ்சம்.
மனிதலோகம், பித்ருலோகம், தேவலோகம், சாத்தியமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
3. அவ்யாக்ருத பிரபஞ்சம் (மாயா)- மேலே சொன்ன இரண்டு அத்யாரோபங்களுக்கு காரணமாக இருப்பது.
4. ஜீவனுடைய கர்த்ருத்வம் – ஜீவன் கர்த்தா என்று ஏற்றுக்கொள்ளுதல்.. இப்படி ஏற்றுக் கொண்டால்தான் கர்ம காண்டமே பயன்படும்.
ஜீவ ஸ்ருஷ்டியும் இருக்கிறது

—————

பகுதி-4 : சாரீரக பிரமாணம்
ஜீவாத்மாவினுடைய தன்மையை விளக்கும் பிரமாணம் – ஜீவன் மேற்கொள்ள வேண்டிய சாதனங்களைக் கூறி
ஜீவ-ஈஸ்வர ஐக்கியமும் விளக்கப்படுகிறது. ஜீவன் எந்தவிதத்தில் சம்சாரியாக இருக்கிறான்,
பிரம்ம ஸ்வரூபமாக இருக்கும் நிலை இவைகளையும் விளக்குகிறது

ஸ்லோகம்-1 (மரண அவஸ்தையில் உள்ளவனின் நிலை)
सः – ஜீவாத்மா ; यत्र् – மரணத்தறுவாயில்; अबल्यँ न्येत्य – அனைத்து பலத்தையும் இழந்து ;
सँमोहँ इव न्येति – புத்தியில் எதுவும் செயல்படாத நிலை
अथ एनँ एते प्राणाः – இந்நிலையில் இந்திரியங்கள் காரண சரீரத்தை நோக்கி செல்கின்றன.
सः एताः तेजो मात्रा –
समभ्याददानः அந்தந்த இந்திரியங்கள் தத்தம் ஸ்தானத்திலிருந்து விலகி
ह्रुदयम एव अन्व – காரண சரீரத்தில் ஒடுங்குகிறது.
स यत्र् – एष चाक्षुः पुरुष – இந்த உலகத்தை பார்த்துக் கொண்டிருக்கின்ற தேவதையானது
पराङ पर्यावर्तते – வந்த வழியே திரும்பி சென்று விடுகின்றது.
अथ रूपाञाने – பார்க்கும் சக்தியை இழந்து விடுகிறது.

ஸ்லோகம்-2
ஜீவாத்மாவில் உள்ள இந்திரியங்கள் காரண சரீரத்தில் ஒடுங்கி அந்தந்த தேவதைகளுடன் ஐக்கியமாகின்றது.
பார்க்கும் சக்தியானது காரண சரீரத்தில் ஒடுங்குவடால் மற்றவர்கள் இவனால் பார்க்க முடியவில்லை, வாசனைகளை நுகர முடியவில்லை.
சுவைப்பதில்லை, பேச முடியவில்லை, கேட்கும் சக்தியை இழந்து விட்டான், வலியை உணரும் சக்தியையும்,
தொட்டுணரும் சக்தியையும், சிந்திக்கும் திறனும் இழந்து விட்டான்.

அக்ஞானியுடைய ஜீவன் ஸ்தூல சரீரத்திலிருந்து எப்படி வெளியேறுகிறது?
ஜீவன் வெளியேறுகின்ற அந்த நாடி மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். அதன் வழியே சென்று பிறகு உடலிலிருந்து வெளியேறுகிறது.
கண் வழியாகவோ, தலை உச்சியின் வழியாகவோ, சரீரத்திலிருக்கும் ஒன்பது துவாரங்களிலிருந்து
ஏதாவது ஒரு துவாரத்தின் வழியாகவோ வெளியேறுகின்றது. இப்படி வெளியேறும்போது பிராணனனுடன்
எல்லா இந்திரியங்களும் தொடர்ந்து செல்கின்றன. இந்த ஜீவன் வெளியே செல்லும்போது வேறெந்த ஞானமும் இல்லை.
உடலிலிருந்து வெளியே செல்லும் நிலை மட்டும்தான் தெரிகின்றது.
இந்த ஜீவனத் தொடர்ந்து செல்பவைகள் அவன் செய்த பாவ-புண்ணியங்கள், ஸம்ஸ்காரங்கள் (வாஸனைகள்) ஆகியவைகளாகும்.

ஸ்லோகம்-3
ஜீவன் சரீரத்தை விடும் போது, வேறொரு சரீரத்தைப் பிடித்துக் கொண்டுதான் இந்த சரீரத்தை விடுகின்றான்.
எப்படி ஒரு புழுவானது ஒரு இலையிலிருந்து மற்றொரு இலைக்கு போகும் போது அந்த இலையை பிடித்த பிறகுதான்
முந்தைய இலையிலிருந்து தன் கால்களை எடுக்கும். இந்த ஸ்தூல சரீரத்தை விடுவதற்கு முன்
வாஸனாமய சரீரத்தை பற்றிக் கொண்டுதான் இதை விட்டு விடுகின்றான்.

ஸ்லோகம்-4
ஜீவனுக்கு இந்த சரீரம் பழையதாகி விட்டதால் புதிய சரீரம் எடுக்கும் அவசியம் ஏற்படுகிறது.
எப்படி தங்கநகை விற்கும் வியாபாரி பழைய நகைகளை எடுத்துக் கொண்டு புதிய நகைகளை கொடுக்கிறானோ
அது போல ஜீவன் எந்த உலகத்திற்கு செல்கின்றானோ அதற்கேற்ற ஒரு சரீரத்தை அடைகிறான்.
இந்த சரீரத்தை ஜடமாக்கி விட்டு, பித்ரு லோம, கந்தர்வ லோகம், தேவலோகம், பிரஜாபதிலோகம், பிரம்மலோகம்
இதைப்போன்ற எந்த லோகத்திற்கு செல்கின்றானோ அந்த லோகத்திற்கேற்ற சரீரத்தை அடைகிறான்.

ஸ்லோகம்-5
இந்த ஜீவாத்மா ஸ்வயம் பிரகாசமாகவும், நமக்கு மிக அருகில் இருக்கின்ற தத்துவாமாகவும் இருக்கின்றது
அதுவே பிரம்மம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சமஷ்டிக்கு ஆதாரமாக இருக்கின்ற தத்துவம்.
இந்த ஜீவாத்மா அவித்யாவால் சம்சாரத்தை அனுபவிக்கின்றான். இந்த சம்சார அவஸ்தைதான் இதில் விளக்கப்படுகிறது.
அந்தந்த உபாதியில் அபிமானம் வைக்கும் போது அதற்குதகுந்த சம்சாரத்தை அனுபவிக்கிறான்.
புத்தியில் அபிமானிக்கும்போது விக்ஞானமய சம்சாரத்தையும், மனோமய கோசத்தில் அபிமானிக்கும்போது சுக-துக்கங்களை,
பிராணனில் அபிமானிக்கும்போது அதுவாகவே மாறி உணவின் மீது பற்று போன்றவைகளை,
கண்ணில் அபிமானிக்கும்போது அதனையொட்டி வரும் சம்சாரத்தையும், கேட்கும் திறனில் அபிமானிக்கும்போது
அதனையொட்டி வரும் சம்சாரத்தையும், ஸ்தூல சரீரத்தில் அபிமானிக்கும் போது அதனையொட்டி வரும் சம்சாரத்தையும் அனுபவிக்கின்றான்.

நீர் பிரதான, வாயு பிரதான,அ ஆகாசப்பிரதான, தேஜோ பிரதான, அதேஜோமய (பிசாசாக இருத்தல்),
காம-மய, அகாம-மய, க்ரோதமய-அக்ரோதமய, தர்மமய-அதர்மமய இப்படி எல்லாமுமாம இருந்து சம்சாரத்தையும் அனுபவிக்கின்றான்.
இவன் எப்படிபட்ட செயலை செய்கின்றானோ, எப்படிபட்ட நடத்தையுடையவனாக இருக்கின்றானோ அப்படிபட்டவனாக இருக்கின்றான்.
நல்லதை செய்பவன் நல்லவனாக இருக்கின்றான், அதர்மமான செயல்களை செய்பவன் கெட்டவனாகின்றான்.
புண்ணியத்தை தரக்கூடிய செயல்களை செய்பவன் அதை அடைகின்றான். பாவத்தை தரக்கூடிய செயல்களை செய்பவன் அதையே அடைகின்றான்.
எப்படிபட்ட ஆசையுடையவனாக இருக்கிறானோ அப்படிப்பட்டவனாகவே இருக்கின்றான்.
நமக்குள்ளே இருக்கிற ஆசைகளின் அடிப்படையில்தான் நம்முடைய செயல்கள் வெளிப்படுகின்றன.
ஒருவனுக்கு எப்படிப்பட்ட ஆசையானது ஆழ்மனதில் இருக்கின்றதோ அதை அடைய வேண்டும் என்ற எண்ணம் ஆழ்மனதில் உறுதியடையும்,
அதற்கேற்ற சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்வான். அந்த ஆசையை அடையக் கூடிய செயலை செய்கின்றான்.
இவன் எந்தக் கர்மத்தை செய்கின்றானோ அதன் பலனை அனுபவிக்கின்றான். எனவே தர்மப்படி வாழ்ந்தால்
புண்ணியத்தை அடைந்து அதன்மூலம் சித்தஸுத்தி அடைந்து அதைத் தொடர்ந்து மோக்ஷத்தையடைவான்.
அதர்மப்படி வாழ்ந்தால் சம்சாரத்தில்தான் இருந்து துன்பத்தை அனுபவிப்போம்.

ஸ்லோகம்-6
எந்தப்பொருள் மீது அளவற்ற ஆசையுடன் இந்த சூட்சுமசரீரம் இருக்கிறதோ அதே பொருட்கள் உள்ள சுழ்நிலையில்தான்
அடுத்த பிறவியில் பிறக்கின்றான். இந்த ஜீவன் செய்கின்ற அனைத்து செயலகளினுடைய பலனை அன்பவித்து
அந்த லோகத்திலிருந்து மீண்டும் திரும்புகின்றான். இதே லோகத்திற்கு வந்து கர்மத்தை தொடர்கின்றான்.
இவையெல்லாம் யார் ஆசையுடன் இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் இந்த கதி.

இனி முக்திக்கு வருபவனைப்பற்றிய விளக்கம்:
अकामन மனதிலிருக்கும் ஆசைகளால் செயலில் ஈடுபடாது இருத்தல்
निष्कामन மனதிலிருக்கின்ற வாஸனையான ஆசைகளை நீங்கிவிட்டவன்
आप्तकामन நிறைவேறிய ஆசையை உடையவன்
இப்படிபட்ட ஜீவனுடைய சூட்சும சரீரம் எந்தப்பயணத்தையும் மேற்கொள்வதில்லை.
பிரம்மனாக வாழ்ந்து (ब्रह्म एवसन्) கொண்டு ப்ராரப்தம் முடிந்தவுடன் பிரம்மத்தை அடைகிறான் (ब्रह्म अप्येति)
अत्म कामह – ஆத்மாவை அடைய வேண்டும் என்ற ஆசையுடையவன் முதலில் ஆத்ம காமனாக இருக்க வேண்டும்.
அனாத்மா கானமாக இருக்கின்ற நிலையிலிருந்து நீங்கி ஆத்மாவைத்தான் அடைய வேண்டும் என்ற லட்சியமாக கொள்ள வேண்டும்.
இதைத்தான் முமுக்ஷுத்வம், ஜிக்னாஸு என்று கூறுவர். அநித்ய வஸ்து மீது இருக்கின்ற காமம் அனாத்மா காமம்.
அனாத்மாவான பொருளை ஆசைப்பட்டு அடைந்தாலும் அது அடையாதது போல்தான் ஏனென்றால் அது அழியும் தன்மையுடையது.
நித்தியமான பொருளை அடைந்தால்தான் அவன் ஆத்மகாமனாக இருப்பவன்தான் ஆப்தகாமனாக மாறுகின்றான்.
இவன் ஆசைப்பட்ட்த்தை அடைந்தவந்தான் ஆப்தகாமன் என்றழைக்கப்படுகின்றான். இவன் ஆத்மாவை அடைந்துவிட்டான்.
தன்னையடைந்து விட்டான். மனதிலிருக்கின்ற வாஸனையாக இருக்கின்ற ஆசைகள் நீங்கிய நிலையை உடையவன்தான் நிஷ்காமன்.
எந்த ஸம்ஸ்காரத்திற்கும் சம்சாரத்தை கொடுக்கும் அளவுக்கு சக்தியற்ற நிலையில் உள்ளவன்தான் நிஷ்காமன்.
அனாத்மா ஆசைகளெல்லாம் வறுக்கப்பட்ட விதைப்போன்று எரிக்கப்பட்டுவிட்டது. நமக்குள் இருக்கும் பல ஆசைகளால்
நம்மை செயல்படுத்தும் அளவுக்கு சக்தி இருக்காது. இவன் எந்தச் செயல் செய்தாலும் அதனால் பாதிக்கப்படாமல் இருக்கின்றான்,
பாவ –புண்ணியங்களும் வந்து சேராது. ஆசைகள் எல்லாம் பொய்யாகிவிட்டிருக்கும். ஆசை நிறைவேறினாலும், நிறைவேறாவிட்டாலும்
அதனால் பதிக்கப்படாமல் இருப்பான். நிதித்யாஸனத்தால் உள்ளிருக்கும் வாஸனைகளெல்லாம் சக்தியற்றதாகி விடும்.
எனவே அனாத்மாவிலிருக்கும் ஆசைகளை நீக்கிவிட்டு ஆத்மாவை அடைய வேண்டும் என்ற ஆசையை அடையவேண்டும்,
ஆத்ம ஞானத்தை அடைந்தவனுக்கு எதையும் செய்ய வேண்டியதில்லை என்று சாஸ்திரமும் அங்கீகாரம் கொடுத்து விடுகிறது.

சங்கரர் விசாரம்:
கேள்வி: கர்ம காண்ட்த்தை இவன் விடமுடியாது, நித்திய கர்மத்தை செய்ய வேண்டாம், இல்லையென்றால் பிரத்யஹாரம் பாவம் வந்து விடும்.
பதில் யாருக்கு பிராப்தி-பரிகாரம்-இதை அடைய வேண்டும், இதை விட வேண்டும் என்ற இந்த இரண்டு ஆசைகளும்
இல்லையென்றல் அவன் எந்த கர்மமும் செய்ய வேண்டியதில்லை. ஞானிக்கு இந்த இரண்டு ஆசைகளும் இல்லை.
மேலும் அவன் பிரம்மத்தை அடைந்துவிட்ட்தால்ய்ம் அவன் எந்தக் கர்மமும் செய்ய தேவை இல்லை. ( अप्येति – அடைகின்றான்)
கேள்வி देशान्द्रः अप्येति मोक्षः – ஒரு தேசத்திலிருந்து வேறொரு தேசத்திற்கு செல்வது போல இந்த லோகத்தில் இருக்க்ன் வரை மோக்ஷம் இல்லை,
வேறு உலகத்துக்கு செல்வதுதான் மோக்ஷம். வேதத்தில் க்ருஷ்ணகதி, சுக்லகதி என்ற விதவிதமான கதிகள் விளக்கப்பட்டிருக்கின்றது.
பிரம்மத்தை அடைகின்றான் என்ற வாக்கியம் வேறொரு இடத்தை அடைதல் என்றுதான் பொருள் கொடுக்கிறது.
பதில் இது ஸ்ருதி விரோதாத் – ஸ்ருதியின் கருத்துக்கு எதிரானது. அப்யேதி என்ற சொல்லின் முன்னால்
சொல்லப்பட்ட வாக்கியத்தில் ஞானிகளுக்கு இந்த கதிகள் கிடையாது என்று வேதமே சொல்லியிருக்கிறது.
ஆகவே மோக்ஷத்தை எங்கு வேண்டுமானாலும் அடையலாம்.
கேள்வி बावन्त्रा अप्येति मोक्षः – ஜீவன் பாவத்திலிருந்து பிரம்ம பாவத்திற்கு மாறுவதே மோட்சம்.
உதாரணமாக புழுவானது பட்டாம்பூச்சியாக மாறுவது போல. விசேஷமான சர்மத்தாலும், உபாஸனையாலும் பிரம்ம நிலைக்கு மாறுவது.
பதில் இதனால் மோட்சமானது கர்மத்தின் பலனாகி மாறிவிடும். ஞானத்தால் மட்டும்தான் மோக்ஷத்தை அடையும் நிலை ஏற்படாது.
எது கர்மத்தால் அடையப்படுகிறதோ அது அழிந்துவிடும் எனவே மோக்ஷமானது அநித்தியமானது என்றாகிவிடும்.
இல்லாத ஒன்றை அடைவதற்கு கர்மம் தேவை ஆனால் என்றும் நித்தியமாக இருக்கின்ற பிரம்மத்தை ஞானத்தினால் மட்டும்தான் அடைய முடியும்.
இந்த உபாஸனைகள் கர்மங்கள் எல்லாம் சித்தத்தின் தூய்மைகளாக பயன்படும். பாவந்திரபத்தி மனதுக்குத்தான் பொருந்தும் ஆத்மாவுக்கல்ல.
கேள்வி செயலினால் ஒன்று உருவாகி அது நித்யமாக இருக்கும் தன்மை உடையதானால்,
உதாரணமாக பானையை உடைத்து விட்டால் அது அழிந்து விடும். இந்த கர்மத்தால் அடைந்த அழிவு நித்யமானது அல்லவாம்
பதில் இந்த உதாரணம் வெறும் கற்பணையில்தான் இருக்கிறது. அது விவகாரத்தில் உபயோகப்படுத்த முடியாது.
அந்த இடத்தில்தான் உன்னுடைய தர்க்கம் ஒத்து வரும்
கேள்வி பிரம்மம் என்பது எப்பொழுதும் இருக்கிறதென்றால் கர்மத்தால், தியானத்தினாலும் ஏன் வெளிப்படக்கூடாது.
நெருப்பை ஏதாவது ஒரு செயலால் வெளிக்கொண்டு வருவதுபோல்
பதில் கர்மத்தினால் நெருப்பை தோற்றுவிக்கவில்லை. அது இருப்பதை வெளிக்காட்டுகிறது.
சரியான உதாரணம் எப்படி வெளிச்சம் இருட்டில் இருக்கும் பொருளை காட்டிக் கொடுக்கிறதோ அது போல
கேள்வி பந்தநிவிருத்தி மோட்சம் என்றால், மோட்சம் என்பது அபாவ ரூபம் அதாவது துயரம், பந்தம் இல்லாமை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்,
பதில் பிரம்மனாக இருத்தல் என்றுதான் உபநிஷத் கூறுகின்றது. மோக்ஷம் என்பது பாவரூபம், அதாவது பிரம்ம ஸ்வரூபமாக ஆனந்த ஸ்வரூபமாக இருத்தல்
கேள்வி நாம் விஷயானந்தத்தை அனுபவிக்கிறோம் இதற்கு வேறான ஒரு புதிய ஆனந்த அனுபவம் மோக்ஷம்.
பதில் புதிய ஆனந்தம் தோன்றுகிறதா அல்லது ஏற்கனவே இருக்கிறதா? தோன்றுவது எல்லாம் அழியக்கூடியது/
கேள்வி ஆனந்த ஸ்வருபமாயுள்ள பிரம்மானந்தம் அதர்மவினால் மறைக்கப்பட்டிருக்கிறது. இதை நீக்கினால் பிரம்மானந்தத்தை அடையலாம்.
பதில் நீ சொல்வது பிரதிபிம்ப ஆனந்த த்திற்கு சரியாக இருக்கும் ஆனால் பிம்பானந்தம் என்று நம்மிடத்திலிருப்பது
எனவே அது புதிய அனுபவம் இல்லை. இது நமது சுபாவமாக இருப்பதால் உன்னுடைய கருத்து சரியில்லை.
அவித்யையினுடைய காம-க்ரோதிகள் நீங்கி இவன் பிரம்மனாகி இருப்பது, பிராரப்தம் கர்ம நீங்கியவுடன் பிரம்மமாகவே மாறி விடுகின்றான், கலந்து விடுகின்றான்.

ஸ்லோகம்-7
காம நிவிருத்தி (ஆசைகளை விடுதல்), அம்ருதத்வ பாவம் (மரணமற்ற நிலை) பிரம்ம பிராப்தி (பிரம்மத்தை அடைதல்).
சரீரத்தில் நான் என்கின்ற ஆத்ம புத்தியை விடுதல்.
यदा – அறிவானது எப்பொழுது பழுத்து விட்டதோ, முதிர்ந்த நிலையில்
सर्वे कामाः – எல்லா ஆசைகளும்
प्रमुच्यन्ते – தன்னிடத்திலிருந்து நீங்கி விடுகிறதோ, ஆசைக்கு காரணமாக உள்ளதும் நீங்கி இருத்தல்.
ये अस्य ह्रुदि श्रिताः – மனதைச் சார்ந்திருக்கும் ஆசைகள் (இகலோக, பரலோக ஆசைகள், பார்க்கும் பொருட்களின் மீதுள்ள ஆசை,
காதில் கேட்ட பொருட்களின் மீதுள்ள ஆசை, நம்மை கர்மத்தில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஆசைகள்
வாஸனை ஸ்வரூபமாக இருப்பவைகள் புத்திரன், வித்தம், லோகம் இவைகளிலுள்ள ஆசைகள் எல்லா அனாத்மாக்களும் ஆசைகள்தான்.
இவைகளெல்லாம் நம்மை விட்டு சென்று விட்டால்.
अथ मर्त्यः பிறகு மரணத்திற்குட்பட்டவன்
अम्रुतः भवति – மரணமற்றவனாகிறான், அழிவற்றவனாக இருக்கிறேன் என்று
अत यत्र् ब्रह्म समश्नुतः इति – இங்கேயே, இப்பொழுதே பிரம்மத்தை அடைகின்றான்.
तद्यथा अहिनिल्वयनि – எவ்விதம் பாம்பின் தோல் சட்டை
वल्मीक – எறும்பு புற்றின் மீது; म्रुता – உணர்வற்ற ஜடமான பாம்புசட்டை
प्रतियस्ता सयीत इथि – பாம்பால் உரித்துபோடப்பட்டு இருக்கின்றதோ
एवम एतम इदम शरीरँ – அதுபோல ஞானிக்கு இந்த சரீரம் இருக்கின்றது.
நகமும் தலைமுடியும் இருக்குமிடத்தில் இருந்தால்தான் மதிப்பு அது கீழே விழுந்து விட்டால் அருவெறுப்பை தருபவைகளாக இருக்கும்.
अथ अयम असरीरः अम्रुतः प्राणः ஆகவே ஞானி சரீரமிருந்தும் சரீரமற்றவனாகவும், மரணமற்றவனாகவும், சாக்ஷி ஸ்வரூபமாகவாகவும் இருக்கின்றான்.
ब्रह्म एव तेजः एव : அதுவே பிரம்மனாகவும், சைதன்ய ஸ்வரூபமாகவும் இருக்கின்றது
वैदेह – தேகத்தின் மீது அபிமானமற்றவன்.

நம் மனதிலிருக்கும் ஆசைகளனைத்தும் நீங்கி விட்டால் மரணமற்ற நிலையை அடைந்து விடலாம் அதனால் பிரம்மத்தை அடைந்து விடலாம்.
இந்த நிலையில் உடம்பானது, உதிர்ந்து விட்ட பாம்பு சட்டையை போல போன்று ஜடமாக தோன்றும்,
ஆகவே ஞானி சரீரமிருந்தும் சரீரமற்றவனாகவும், மரணமற்றவனாகவும், சாக்ஷி ஸ்வரூபமாகவாகவும் இருக்கின்றான்.
அதுவே பிரம்மனாகவும், சைதன்ய ஸ்வரூபமாகவும் இருக்கின்றது.

ஸ்லோகம்-8 – ஞானமார்க ஸ்துதி – மோக்ஷத்திற்கான வழியின் பெருமை
வித்வத் அனுபவ பிரமானம்- ஞானியடைந்த அனுபவமே பிரமானம்
ஞானியின் கூற்று – எனக்கு யாருக்கும் கிடைக்காத பாதையில் பயணம் செய்வது.
अणुः पन्था माँ स्प्रुष्टो – சூக்ஷும மான ( இதுதான் சரியான பாதையென்று புரிந்து கொள்வதே கடினமானதாக இருப்பது ) மோட்சப் பாதை என்னை வந்தடைந்தது.
विततः पन्थाः – இந்த பாதை வெகுதூரம் செல்லும், நீண்ட நேரம் பயணம் செய்ய வேண்டிய பாதை அதிகமான காலம், பொறுமை, முயற்சி தேவைப்படுகின்ற பாதை
पुराणः – குரு-சிஷ்ய பரம்பரையாக வந்த ஞானம்.
अनुवित्तः मया – இந்தப்பாதையில் பயணம் செய்தால் அடையும் பலனானது என்னால் அடையப்பட்டுவிட்டது
तेन धीराः अपियन्ति ब्रह्मविदः – இந்த பாதையில் யாரெல்லாம் பயணம் செய்கின்றார்களோ அவர்கள் பிரம்மத்தை அறிந்தவர்களாக ஆகிறார்கள்.
स्वर्ग लॊकम अपियन्ति – சுவர்க்க லோகத்தை அடைகிறார்கள்.
इतः ऊर्ध्वँ विमुक्ताः भवन्ति – அவர்கள் சரீரத்தை விட்டபிறகு விதேக முக்தனாகிறார்கள்.

ஸ்லோகம்-9 – ஞானமார்க ஸ்துதி – மோக்ஷத்திற்கான வழியின் பெருமை
இந்த மோட்ச மார்க்கத்தில் நிறைய குழப்பங்கள் இருக்கின்றது.
तस्मिन – இந்த மோட்ச மார்க்கத்தில் இப்படிபட்ட
छुक्लँ – வெண்மையான நாடியின் வழியாக பயணம் செய்து
पिङ्गलम – சாம்பல் வர்ண நாடியின் வழியாக பயணம் செய்து
नील – நீல வர்ண நாடியின் வழியாக பயணம் செய்து
हरितँ – பச்சை வர்ண நாடியின் வழியாக பயணம் செய்து
लोहितँ – சிவப்பு வர்ண நாடியின் வழியாக பயணம் செய்து
அந்தந்த தேவதையை அடைந்து பிறகு மோக்ஷத்தை அடைகிறார்கள் என்று பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
एषः पन्था இந்தப்பாதையானது
ब्रह्मणा हानुवित्तः தகுதியுடையவர்களுக்குத்தான் (சித்தஸுத்தி உடையவர்களுக்குத்தான்) இந்த பாதை புலப்படும்
तेन ऐति पुण्यक्रुत இந்த மார்க்கத்தில் வருபவர்கள் முதலில் கர்மயோகத்தினால் புண்ணியத்தை அடைகிறார்கள்,
தர்மத்தை கடைப்பிடித்து உயர்வடைகிறார்கள். இதுதான் முதல்படி
तैजसन ஒருமுகப்படுத்தப்பட்ட தூய்மையான, ஒளி பொருந்திய மனதை அடைகிறார்கள். இது இரண்டாவது படி.
ब्रह्मवित ஞானயோகத்தின் மூலமாக மூன்றாவதுப்படியான ஞானத்தை அடைகிறான்.
ऐति இறுதியாக பிரம்மத்தை அடைகிறான். பாதையின் முடிவை அடைகின்றான்.

ஸ்லோகம்-10
மோக்ஷத்தை அடைய வேண்டும் என்று நினைத்து தவறான பாதையில் செல்வோரிகளின் நிலைய விவரிக்கிறது.
யாரெல்லாம் அவித்யை வழியாக (அவித்ய உபாஸதே) செல்கின்றார்களோ அவர்கள் அடர்ந்த இருளைத்தான் அடைகிறார்கள்.
மோக்ஷம் அடையும் என்று நினைத்து தவறான அறிவை அடைந்தவர்கள் இதைவிட மோசமான இருளை அடைகிறார்கள்.
யாரெல்லாம் காம்ய கர்மத்தில் ஈடுபட்டு எந்த லோகத்தை அடைந்தாலும் அங்கே குறைவான சுகத்தைத்தான் அடைவார்கள்.
அதனால் வைராக்யம் அடையும் வாய்ப்பு அதிகம். உபாஸனையில் கிடைக்கும் பலனில் அதிக சுகம் கிடைக்கும்
ஆனால் வைராக்யத்தை அடையும் வாய்ப்பு குறைவு.

இந்த மந்திரத்தில் உள்ள அவித்யா என்ற சொல் காம்ய கர்மம், தியானம் செய்தல் போன்றவற்றை குறிக்கிறது.
வித்யா என்ற சொல் அபரா வித்யா அதாவது மோட்சத்தை அடையும் அறிவைத் தவிர மற்ற அறிவை அடைவது என்று பொருள் கொள்ள வேண்டும்.
அடர்ந்த இருள் என்பது கீழ்மையான பிறவியை அடைந்து துன்பத்தை அடைதல், ஆத்ம ஞானத்தை அடைய முடியாத நிலையை அடைதல்.

ஸ்லோகம்-11
अनन्दा नाम ते लोका – மகிழ்ச்சியற்ற உலகத்தையோ, சரீரத்தையோ அடைகின்றான் ( புழு, பூச்சி மற்றும் விலங்குகளாக பிறத்தல்)
तमस आव्रुतः – அறியாமையால் மூடப்பட்டவனாக , ஆத்மஞானம் அடையும் வாய்ப்பே இல்லாமல் இருத்தல்
अविद्वाँसः अबुधो – ஆத்மாவை அறியாதவர்கள், ஆத்மாவை அடையும் பாதையை அறியாதவர்கள், கீழான லோகத்தை அடைகிறார்கள்.

ஸ்லோகம்-12
இந்த மந்திரத்தின் விளக்கத்தை வித்யாரண்யர் அவர்கள் தனது பஞ்சதசி என்னும் நூலில்
திருப்தி தீபம் என்னும் அத்யாயத்தில் 290 ஸ்லோகங்களில் எழுதியிருக்கிறார்..
पुरुषः – சாதகன்; अयँ – அந்த பரமாத்மா; अस्मि इति – நானாக இருக்கிறேன்
आत्मानँ विजानीयात चेदि – தன்னை அறிவானே என்றால்
किमिच्छन् कस्य कामाय – எதை விரும்புவான், யாருடைய விருப்பத்திற்காக
शरीरम् अनुसँज्वरेत् – தன் சரீரத்தை துயரப்படுத்தி கொள்வான்?

ஒருவன் தன்னை பரமாத்மாவாக என்று அறிந்துகொண்டால் அவன் எதை விரும்புவான்,
யாருடைய விருப்பத்திற்காக தன் சரீரத்தை துயரப்படுத்தி கொள்வான்?
சொல் விளக்கம்
1. புருஷஹ – ஜீவாத்மா / மனிதன் / சாதகன்
ஜீவன் என்ற சொல்லில் மூன்று தத்துவங்கள் உள்ளது. அவைகள் 1.கூடஸ்தன் – மாறாத சைதன்யம்,
2. சிதாபாஸன் – பிரதிபிம்ப சைதன்யம் (மாற்றத்திற்குட்பட்ட பொய்யான சைதன்யம்), 3. சூட்சும சரீரம் – அந்தக்கரணம்.

கூடஸ்தனை ஏன் ஜீவனுடன் சேர்க்க வேண்டுமென்றால் சிதாபாஸன் இருக்கும்போது அதற்கு ஆதாரமான கூடஸ்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கூடஸ்தனை சேர்க்கவில்லை என்றால் மோட்சம் என்பது தன்னையே அழித்துக் கொள்கின்றா மாதிரி இருக்கும்.
இப்போது நம் கண்ணுக்கு தெரியாமல் இருந்தாலும் அதை சேர்த்துக் கொண்டால்தான்
இரண்டும் அழிந்தாலும் கூடஸ்தன் இருந்து கொண்டிருக்கும். ஜீவன் முக்தி நிலைவரை ஜீவாத்மாவை புருஷன் என்று எடுத்துக் கொள்ளலாம்.

2. சேத்: இங்கு இந்த சொல் ஆத்மாவை அதிக அறியும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பதைக் குறிக்கிறது
3. ஆத்மானம்: தன்னை என்று பொருள். நான் என்ற சொல்லுக்கு மூன்று விதமான பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
a. வாச்யார்த்தம்: முக்கிய அர்த்தம், எல்லோராலும் பயன்படுத்தப்படுகின்ற அர்த்தம் அகங்காரம் அதாவது சரீரத்தில் நான் என்ற எண்ணம்.
b. ஞானியின் அகங்காரம்: ஞானத்தை அடைந்தவனுக்கு நன்றாக தெரியும் நான என்பது கூடஸ்தனை குறிக்கின்றது.
ஆனால் விவகாரம் செய்யும் போது அகங்காரத்தைத்தான் பயன்படுத்துவான். இவனது அகங்காரம் பொய்யாக கோபப்படுவது போன்றதுதான்.
சாதாரண மனிதர்களிடத்தில் இது காண்பது மிகவும் துர்லபம் (அரிது)
c. ஞானி பயன்படுத்துவது: மஹாவாக்கிய உபதேசம் செய்து கொண்டிருக்கும்போது நான் என்ற சொல்லுக்கு கூடஸ்தனைத்தான் எடுத்துக் கொள்வார்.
பிறகு தன்னுடைய நிதித்யாஸனத்தின் போதும் நான் என்பதை தன் ஆத்மாவாகத்தான் எடுத்துக் கொள்வார்.
4. விஜானீயத்: நான் பிரம்மன் என்று அறிபவன் யார்? கூடஸ்தனா, சிதாபாஸனா, சூட்சும சரீரமா. பிரம்மன் நான் என்று
அறிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. சூட்சும சரீரமோ ஜடம் அதனால் அறிய முடியாது.
எனவே சிதாபாஸனோ அல்லது ஜீவனோதான் அறிபவன் என்று சொல்லலாம். அஹம் பிரம்மாஸ்மி என்று அறிபவன் சிதாபாஸன்.
பிரதிபிம்பமானது நிஜமான பொருளை விட வேறொன்றா அல்லது இரண்டுமே ஒன்றுதானா? என்று ஆராயும்போது எப்படி
பிரதிபிம்ப சூரியன் முழுமையாக வேறும் அல்ல முழுமையாக ஒன்றும் அல்ல அதேபோல புத்தியில் பிரதிபிம்பிக்கும் சைதன்யமான சிதாபாஸன்.
இவன் தன் மூலமான பிரம்மத்தில் அபிமானிக்கும் போது அறிபவனாகிறான்.
5. அயம்: பிரம்மன் என்னிடத்தில் நன்றாக பிரகாசிக்கின்றது, பிரம்மமே என்னுடைய ஆத்மாதான்.
இந்த மாதிரி புரிந்து கொள்கிறான் இதுவே அபரோக்ஷ ஞானம் (அயம்) இது அபரோக்ஷ வஸ்து – அருகில் இருக்கின்ற ஒரு பொருள்.
6. கிமிச்சன்: அனுபவிக்கப்படும் பொருள் இல்லை அதனால் ஆசை இல்லை. இவன் எதை அடைய ஆசைப்படுவான்?
இவனுக்கு ஆசைப்படும் விஷயங்கள், பொருட்கள் எதுவுமே இல்லை ஏனென்றால் எல்லாமும் மித்யாவாக தெரிவதால்,
அனுபவிக்க வேண்டிய பொருளோ, விஷயமோ இல்லை. ஜகத் மித்யா என்ற ஞானத்தினால் இவன் இவ்வாறு நினைக்கின்றான்.
7. கஸ்ய காமாய: யாருடைய பயனுக்காக இவன் துயரப்படுவான்? போக்த்ரு நிஷேதம் – அனுபவிப்பவன் இல்லை என்று தீர்மானித்தல்.
இந்த அறிவு ஆத்மாவினுடைய அஸங்கத்தை அறிந்து கொள்வதனால் வருகிறது. நான் யாருடனும் சங்கம் வைத்து கொள்ள மாட்டேன்
அனுபவிக்கப்படும் பொருளோடு உள்ள இந்திரியங்களின் சங்கத்தை விட்டு விடுவதால். நான் அஸங்கம், ஆத்மா அஸங்கம் என்ற
அறிவால் அனுபவிப்பவன் இல்லாமல் போய் விடுகிறான். தன்னுடைய இன்பம் அனுபவிப்பதற்குத்தான் உலகம் படைக்கப்பட்டிருக்கிறது
என்று அத்யாரோபம் செய்து பிறகு அதை நீக்கி விடுகிறது.
8. சரீரம் அனுசம்ஜ்வரேத்: ஸ்தூல சரீரத்தில் எண்ணற்ற நோய்களால் தாக்கப்படுகிறது.
சூட்சும சரீரத்தில் காம-க்ரோதங்களினால் அனுபவிக்கும் சம்சாரம், சம-தமாதிகளை அடையாத நிலையில் ஏற்படும் சம்சாரம்.
காரண சரீரம்- துக்கத்டிற்கு விதையாக இருக்கிறது. நோயை நீக்க வேண்டுமென்றால் சரீரத்தைத்தான் நீக்க வேண்டும்.
சம்சாரம் போக வேண்டுமானால் மூன்று சரீரத்தையும் நீக்க வேண்டும். அதில் உள்ள அபிமானத்தை நீக்க வேண்டும்.
இப்படிபட்ட நிலையில் துயரம் நீங்கி மனநிறைவு வந்தடையும்.

வித்யாரண்யரின் விளக்கம்:
சம்சாரத்திலிருந்து மோக்ஷம வரை ஏழு படிகள் உள்ளதாக விளக்கியுள்ளார். அவைகள்
1. அக்ஞானம் – அறியாமை
2. ஆவரணம் – அக்ஞானத்தை வெளிப்படுத்துதல், இது எனது அறியாமை என்று தெரிந்து கொள்ளுதல்
3. விக்க்ஷேபம் – சோகரூபம் – துயரப்படுதல்
4. பரோக்ஷ ஞானம்
5. அபரோக்ஷ ஞானம்
6. சோகநிவிருத்தி
7. திருப்தி – மனநிறைவு
பத்தாவது மனிதன் கதையில் இந்த ஏழு சொற்களின் விளக்கத்தைப் பொருத்தி காட்டுகிறார்.
1. அக்ஞானம் – பத்தாவது மனிதன் காணவில்லை
2. ஆவரணம் – எண்ணியவுடன் பத்தாவது மனிதன் இல்லையென்று அறிதல்
3. விக்க்ஷேபம் – பத்தாவது மனிதன் தொலைந்து விட்டான் என்ற துயரம்
4. பரோக்ஷ ஞானம் – வேறொருவன் பத்தாவது மனிதன் இருக்கின்றான் என்று சொல்லும்போது அறிந்து கொள்வது
5. அபரோக்ஷ ஞானம்- அவனை வரிசையில் நிற்க வைத்து எண்ணியவுடன், தான்தான் பத்தாவது மனிதன் என்று அறிந்து கொள்கின்றான்.
6. சோகநிவிருத்தி – மனதிலடைந்த சோகம் நீங்குதல்
7. திருப்தி – அதனால் மனநிறைவு அடைதல்
இதேபோல எல்லோருக்கும் ஆத்மாவை அறியாமல் இருக்கின்றார்கள். இதே ஜீவன் நான் யார் என்று தெரியவில்லை என்று குழம்புகின்றான்.
இதுவே விக்ஷேபம். சம்சாரம் என்பது விக்ஷேபம், பரோக்ஷ ஞானத்தினால் நித்தியமான பிரம்ம இருக்கின்றது என்று அறிகின்றான்.
பிரம்மனாக நான் இருக்கின்றேன் என்ற ஞானம் அபரோக்ஷ ஞானம் அதனால் துயரங்கள் நீங்கி மனநிறைவை அடைகின்றான்.
இதில் முதல் மூன்று நிலைகள் சம்சாரத்தை விளக்குகின்றது. 4 & 5 நிலைகள் மோக்ஷ சாதனமாகவும், 6 & 7 மோக்ஷ பலனையும் விளக்குகிறது.

பரோக்ஷ ஞானம் – உபநிஷத்தினுடைய உபதேசத்திலிருந்து கிடைக்கின்றது. பிரம்மத்தைப் பற்றி இருப்பை சொல்கின்ற வாக்கியத்திலிருந்து கிடைக்கிறது.
அபரோக்ஷ ஞானம் – மஹா வாக்கியத்திலிருந்து இந்த அறிவை அடைகிறோம். பதார்த்த ஞானம் : தத்வமஸி என்ற வாக்கியத்தில்
உள்ள பதங்களின் உண்மையான பொருளை தெரிந்து கொள்ளுதல்.
லட்சியார்த்தம் – த்வம் – இரண்டு அர்த்தம் – அனாத்மாவை நீக்கி புரிந்து கொள்வது.
தத் பதத்தில் உலகத்தை நீக்கி அதற்கு ஆதாரமான பிரம்மத்தை எடுத்துக் கொள்ளுதல். அஸி – இரண்டையும் ஐக்கியப்படுத்தி ஞானம் பெறுவது.

ஸ்லோகம்-13
अस्मिन सँदॆह्यॆ – இந்த உலகமானது அக்னியால், வாயுவால், நீரால், ப்ருதிவியால் துயரப்படுத்தப்படுகிறது.
गहनँ – அனர்தத்தை கொடுக்கின்ற, விவேகத்திற்கு எதிராக இருக்கின்ற, துயரத்தை அடையும் நிலையிலுள்ள சரீரம்
आत्मा प्रविष्टः – ஆத்மா இந்த சரீரத்தில் நுழைந்து தங்கியுள்ளது.
यस्य – இந்த அதிகாரி
अनुवित्तः – கஷ்டமான இந்த உடலில் நுழைந்த ஆத்மாவுக்குள் இவன் நுழைந்து விட்டான். அதை அடைந்தும் விட்டான். ஞானத்தால் ஆத்மாவை அடைந்து விட்டான்.
प्रतिबुद्धः – மனதில் எழும் எண்ணங்களுக்கு எல்லாம் ஆத்மாவே சாட்சியாக இருப்பதை அறிந்துள்ளான்.
இப்படிபட்ட சரீரத்திற்குள் இருக்கும் ஆத்மாவை இப்படியாக அறிந்து கொண்டவன்.
सः विश्वक्रुत् – அவன் அனைத்தும் செய்து முடித்தவனாகிறான்
सः सर्वस्य कर्ता – இந்த ஞானியே பரமாத்வாகின்றான். அனைத்துக்கும் கர்த்தாவாகிய ஈஸ்வரனேதான் நான் என்ற நிலையை அடைகிறான்.
तस्य लोकः – அவனுடைய உலகம் பிரம்மமேதான். இந்த பொய்யான உலகம் அவனுடைய-தாக இருக்காது. அவன் தன்னை பிரம்மாகவே நினக்கின்றான்
स उ लॊक एव – அவனே உலகம், அவனே அனைத்துமாக இருக்கின்றான்.

ஸ்லோகம்-14
மனித ஜென்மத்தின் உயர்வை இந்த மந்திரம் உரைக்கிறது. ஞானி நான் அடைய வேண்டியதை அடைந்து விட்டேன் என்ற மனநிறைவுடன் இருக்கின்றான்.
इह एव सन्तः – இந்த பிறவியில் இந்த சரீரத்தில் இருந்துக் கொண்டு
अथ विद्मः – எப்படியோ அறிந்துகொண்டும்
तद वयँ – அந்த பிரம்மத்தை நாங்கள்
न चेद् अवेदिः – ஒருவேளை நாங்கள் அறியாமல் இருந்திருந்தால்
महति विनष्टि – அதனால் அடையும் இழப்பு மிகப்பெரியது.
ये तद् विदुः – யாரெல்லாம் இந்த ஆத்மாவை அறிகிறார்களோ
ते अम्रुतस्य भवन्ति – அவர்கள் மரணமற்ற நிலையை அடைவார்கள்
अत तत्रे दुःखमेव अपियन्ति – அதை அறியாதவர்கள் துயரத்தைத்தான் அடைகின்றார்கள், சம்சார வலைக்குள் இருப்பவர்கள் பிறவி சக்கரத்தில் உழன்று கொண்டிருப்பார்கள்.

ஸ்லோகம்-15
यदा एतम आत्मानँ – எப்பொழுது இந்த ஆத்மாவை
देवँ अनुपश्यति – ஈஸ்வரனாக அறிகின்றார்களோ குருவினுடைய துணைக்கொண்டும், பிரமானத்தின் மூலமாக வந்த ஞானம்
अञ्जसा – அபரோக்ஷமாக, நேரிடையாக சந்தேகமில்லாமல் அறிந்து
ईशानँ – ஈஸ்வரனாக இருக்கின்ற தேவன்
भुतभव्यस्य – மூன்று காலத்திலும் அனுபவிக்கும் விஷயங்களை தருகின்ற ஈஸ்வரன்
न ततो विजुगुप्सते – இப்படிபட்ட ஈஸ்வரனிடமிருந்து தன்னை காத்துக் கொள்ள விரும்பமாட்டான்.
அவரிடம் பயம் கொள்ள மாட்டான். காரணம் அவர் தன்னிடமிருந்து வேறுபட்டவர் என்று நினைக்காததினால் இவனுக்கு இந்த நிலை.
न ततो विजुगुप्सते – யாரையும், தன்னையும் சேர்த்து நிந்திக்க மாட்டான். யாரையும் குறைக்கூற மாட்டான். யார் மீதும் வெறுப்புக் கொள்ள மாட்டான்.

ஸ்லோகம்-16
இதில் ஈஸ்வர ஸ்வரூபம் விளக்கப்படுகிறது. காலத்தை வென்றவர். காலமே அவரின் ஆணைக்கு கட்டுபட்டு இருக்கிறது. அவருக்கு கட்டுபட்டு செயல்படுகிறது.
यस्माद् – எந்த ஈஸ்வரனுக்கு; अर्वाक् – கீழே பணிந்து, கட்டுபட்டு
सँवस्तरः परिवर्तते – கால தத்துவம் செயல்பட்டு வருகின்றது
ज्योतिषाँ ज्योतिः – ஒளிகளுக்கெல்லாம் ஒளியாக இருக்கின்றார்
अम्रुत्वँ – நித்தியமானவராக இருப்பவர்
तद दॆवाः – இப்படிபட்ட ஈஸ்வரனை தேவர்கள்
आयुहो उपासते – ஆயுள் என்று உபாஸிக்கிறார்கள்.
ஈஸ்வரனை ஆயுள் கொடுப்பவர் என்று உபாஸனை செய்தால் நீண்டநாள் வாழலாம்.

ஸ்லோகம்-17

அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது ஆத்மா, நான் அதுவாக இருக்கிறேன்.
யஸ்மின் – எந்த பிரம்மனிடத்தில்;
பிரதிஷ்டிதா – தாங்கியிருப்பது; சார்ந்திருப்பது;
ஆகாஷஹ – அந்த மாயா, அவ்யாக்ருதம். வெளித்தோற்றத்டிற்கு வராத பிரபஞ்சம்.
பஞ்ச, பஞ்ச ஜனாஹ – வெளித்தோற்றதிற்கு வந்தவைகள், இது ஐந்து வகையாக பிரிக்கப்படுகிறது. அவைகள்,
1. ஆதித்ய முதலிய ஜோதிகள்.
2. பிராண தத்துவம்
3. கண்
4. ஸ்ரோத்ரம்
5. மனம்
வித்துவான் – இப்படி என்னை நான் அறிந்து காரணத்டினால்
அம்ருதஹ _ நான் மரணமற்றவனாக இருக்கிறேன், நித்தியமான பிரம்மனாக இருக்கின்றேன்.

ஸ்லோகம்-18
தே – யார், நிசித்யுஹ – நிச்சயம் செய்கிறார்களோ, புராணம் – அனந்தம், நித்தியம், ஸனாதனம்;
அக்ரியம் – அநாதி, ஆதி-அந்தம் இல்லாத பிர்ம்மத்தை பிராணனுக்கு பிராணனாக, கண்ணுக்கு கண்ணாக, காதுக்கு காதாக,
மனதுக்கு மனதாக யார் அறிகிறார்களோ அவர்கள் பிரம்மத்தை நிச்சயமாக உறுதியாக அடைந்தவகளாகிறார்கள்.
இந்திரியங்கள், மனம் சுபாவமாக ஜடம், ஆனால் இவைகளிட்த்தில் சேதனதன்மை இருப்படை பார்க்கிறோம்.
எனவே இவைகள் செயலுக்கு இவைகளுக்கும் வேறாக ஒன்று இருப்பதை அறிய முடிகிறது அதுவே ஆத்மா என்று அறிந்து கொள்ளலாம்,
இதுவே இவைகளுக்கு ஆதாரமாகவும் இருக்கிறது.

ஸ்லோகம்-19
ஆத்மஞானத்துக்கு பொதுவாக இருக்கின்ற கரணம் எது? \
ஜகத் மித்யா, இந்த மித்யாத்வ ஞானம் இல்லையென்றால் சம்சாரத்தைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும்.
மனஸா ஏவ அனுத்ரஷ்டவ்யம் – இந்த ஆத்மாவானது மனதால்தான் அறிய முடியும். எனவே இதுதான் பொதுவாக கரணமாக இருக்கிறது.
ஆத்மா ஞானமும், அனாத்மா ஞானமும் மனதினாலேதான் அடைவதால் இது பொதுவாக இருக்கிறது.
இந்த மனதை தூய்மையாக்க வேண்டும். அதற்கு சாதன சதுஷ்டய சம்பத்தியை அடைந்திருக்க வேண்டும்.
சாஸ்திரம், குரு பிரமானம் மூலம் ஆத்மாவை மனதினால்தான் அடைய முடியும்.
நேஹ நாநா அஸ்தி கிஞ்சன – த்வைத (வேற்றுமைகள்) கொஞ்சமும் இல்லாமலிருக்கின்ற
இஹ – இந்த பிரம்மனிடத்தில்

பிரத்யக்‌ஷ பிரமானம் ஒரு பொருளினுடைய தோற்றத்தை மட்டும்தான் காட்டுகிறது. மனதுதான் இது சத்யமா இல்லையா என்று தீர்மானிக்கும்.
பிரத்யக்‌ஷ பிரமானம் இருப்பைக் காட்டுகிறது. சாஸ்திரம் அந்தப்பொருளின் சத்யத்வத்தை உபதேசிக்கிறது.

யார் இந்த பிரம்மனிடத்தில் விதவிதமான வேற்றுமைகளை பார்க்கிறார்களோ அவர்கள் மரணத்திலிருந்து விடுதலையடைவதில்லை,
பிறப்பு-இறப்பு சுழலில் சிக்கிக் கொண்டு சம்சாரத்தை அனுபவிப்பார்கள்.

ஸ்லோகம்-20
ஏகதா – அத்வைத (இரண்டற்ற) தன்மையுடையதாக ஆத்மாவை அறிய வேண்டும்.
ஏவ அனுதிரஷ்டவ்யம் – இதற்குள்ளும் வேற்றுமையில்லை.
ஏதத் அப்ரமேயம் – இதை அளவிடமுடியாது. குணங்களைத்தான் அளக்க முடியும். ஆத்மா குணங்களற்றது. எந்தப்பிரமானத்தினாலும் அறிய முடியாது.
த்ருவம் – என்றும் இருப்பது; நித்தியமானது
விரஜஹ – தூய்மையானது (ரஜஹ – அசுத்தமானது) தர்மமும்-அதர்மமும் அற்றது.
பரஹ-ஆகாஸாத் – வெளித்தோற்றதிற்கு வராத மாயைக்கு அப்பாற்பட்டது.
அஜஹ – பிறப்பற்றது; மாற்றங்களற்றது.
மஹான் – பரிணாம வளர்ச்சியற்றது.
த்ருவஹ – மரணமற்றது.
இப்படிப்பட்ட லட்சணங்களையுடையது என்று ஆத்மாவை அறிய வேண்டும்.

ஸ்லோகம்-21
தீரஹ – சத்துவகுண பிரதானமாக கொண்ட சாதகன்’
தம் ஏவ – முன்னால் சொல்லப்பட்ட அந்த ஆத்மாவை
விக்ஞாய – சந்தேகமில்லாமல், தெளிவாக அறிந்து (சிரவணம், மனனம்)
ப்ரக்ஞாம் குர்வீத – நிதித்யாஸனத்தில் ஈடுபட்டு உறுதியான ஞானத்தை அடைய வேண்டும்,
ப்ராஹமணன் – பிரம்மத்தை அறிந்தவன்
ஜிக்ஞாஸா – ஞானத்தை அடைய வேண்டும் என்ற வேட்கை
பரிஸமாப்தி – அந்த ஆசையை நிறைவேற்றி விட வேண்டும்,
குர்வீத – ஈடுபட வேண்டும்,
நிதித்தியாஸத்தினால் பிரம்மத்தை அடைய வேண்டும் என்ற ஆசையும் நீங்கி விட வேண்டும். ஆத்மா வெளிப்பட்டுள்ள நிலையை அடைய வேண்டும்.
ந அனுத்யாயாதி பஹூஞ்சப்தான் – மற்ற சாஸ்திரங்களை, த்வைதத்தை பற்றி பேசுகின்ற சாஸ்திரங்களை தியானித்துக்கொண்டோ,
ஆழ்ந்து படித்துக்கொண்டோ இருக்க கூடாது. அப்படி செய்து கொண்டிருந்தால் ஜகத் மித்யா என்ற அறிவு ஏற்படாது.
மற்ற சாஸ்திரங்களை அளவாக படிக்கலாம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். மற்ற சப்தங்களை கேட்பதை நிறுத்தி விட வேண்டும்,
வாச்ஷ் விக்லாபனம்(சிரமம்) – அப்படி செய்யாவிட்டால், உன்னுடைய வாக்கு இந்திரியத்திற்கு
கஷ்டத்தைத்தான் கொடுத்து சோர்வை ஏற்படுத்தி விடும், காலமும் வீணாகி விடும்.

ஸ்லோகம்-22
இந்த மந்திரத்தில் 5 வகையான கருத்துக்கள் அடங்கியுள்ளது.
1. ஜீவ-பிரம்ம ஐக்கியம்.
2. ஈஸ்வரனுடைய, ஞானியுடைய பெருமை,
3. சாதனங்கள்
4. நிஷேதத்தின் மூலமாக பிரம்ம ஸ்வரூப விளக்கம்
5. ஜீவன் முக்தி
சங்கரரின் அறிமுகம்
பந்தமும், மோக்‌ஷமும் ஹேதுவுடன் விளக்கப்படுகிறது. பந்தமும் அதற்குக் காரணமும்,
மோக்‌ஷமும் அதற்கு காரணமும் விளக்கப்பட்டுள்ளது.
பந்த த்திற்கு காரணம் அவித்யா இதுவே ஆசையை தூண்டிவிட்டு அதை அடையும் செயலிலும் ஈடுபடுத்துவதால்
அதனால் விளையும் சுக-துக்கங்களை அனுபவிப்பதுதான் சம்சாரம் எனப்படும்.
மோக்‌ஷத்திற்கு காரணமாக இருப்பது ஜீவ-பிரம்ம ஐக்கிய அறிவும், ஜகத் மித்யா என்ற அறிவும்தான்.

விசாரம்:
முழு வேதமே ஜீவ-பிரம்ம ஐக்கியம் என்ற ஞானத்தை (மோக்‌ஷம்) அடைவதற்கு உருவாக்கப்பட்டது. விஜியுக்தஹ – உருவாக்கப்பட்டது.

பூ.ப – உபநிஷத் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். ஆனால் கர்ம காண்டம் அப்படி இல்லை.
பதில் கர்ம காண்டத்தைப்பற்றி விளக்கும்போது அதன் உள்நோக்கத்தை பார்த்தால் மோட்சத்தை உபதேசிக்க வேண்டும் என்பதில்லை.
கர்ம காண்டம் ஒரு சாதனமாக பாதையாக சொல்லப்பட்டுள்ளது. மோட்சம் என்ற ஒன்றுதான் புருஷார்த்தம், மற்றதெல்லாம் இதை அடைவதற்கான படிகள்

மந்திர விளக்கம்:
ஸ்ஹவா – அவனே; ஏஷ – இவன், பிரம்மமே இந்த ஜீவன்.
மஹான், அஜஹ – பூர்ணமானவன், பரிச்சேதமற்றவன் (தேச காலத்தால் வரையறுக்கப்-படாதவன்), பிறப்பு-இறப்பற்ற, எந்தவிதமாற்றமுமடையாதவன்
ஆத்மா – நித்தியமான, சத்ய வஸ்து
யோ அயம் விக்ஞானமய – இது சைதன்ய மயம் – சைதன்ய ஸ்வரூபம்.
பிரானேஷு- இந்திரியங்களுக்கு அருகிலிருந்துக் கொண்டு பிரகாசித்துக்கொண்டிருப்பது.
யஹ ஏஷஹ அந்தக் ஹ்ருதய – நம்முடைய சூட்சும சரீரத்திற்குள் எந்த ஆகாசம் (எல்லா இடத்திலும் வியாபித்து,
ஒளிந்து கொண்டிருப்பவன்) இருக்கிறதோ அதனுள்ளே ஒடுங்கி உறங்குகின்றான்.

ஸர்வஸ்ய வஷி – எல்லாவற்றையும் தன் வசத்தில் வைத்திருப்பவன்.
ஸர்வஸ்ய ஈஷனா – எல்லாவற்றையும் இவனே ஆள்பவன்.
ஸர்வஸ்ய அதிபதி – எல்லோரையும் விட சக்திமானாக, பலசாலியாக இருக்கிறான்.
ஸஹ ந ஸாதுநா கர்மனா – இப்படிபட்ட ஞானியானவன் புண்ணிய கர்மத்தினால் புதியதாக வேறெந்த பலனும் தேவையில்லை.
இப்போது இவன் உயர்ந்த நிலையில் இருப்பதால்.
அஸாதுனா- பாவ கர்மத்தினர்; கன்னியான – கீழான நிலைக்கும் வருவதில்லை
மேலே கூறிய குணங்களனைத்தும் ஈஸ்வரனுக்கும், ஞானிக்கும் பொருந்தும்.
ஏஷஹ சர்வேஸ்வரன் – ஞானியும், ஈஸ்வரனும் ஸர்வம் சக்தியுடையவர்கள்
ஏஷஹ பூதாதிபதி – அனைத்து பூதங்களுக்கும் தலைவனாக இருக்கின்றான், எல்லோருக்கும் இருப்பக் கொடுத்தவராகிறார் ஈஸ்வரன்.
பூதபாலஹ – அனைத்து ஜீவராசிகளையும் பாதுகாப்பவனாக இருக்கிறான். இவன் தன்னையும் துயரப்படுத்தப்படுத்தமாட்டான்;
மற்றவர்களுக்கும் துயரத்தைக் கொடுக்கமாட்டான். ஈஸ்வரன் எல்லா ஜீவர்களுக்கும் சைதன்யத்தைக் கொடுப்பவர்.
ஏஷ ஸேது (பாலம், அணைக்கட்டு, வரப்பு ) – விதரனஹ – பாதுகாத்தல்
லோகானாம் அஸம்பேதாய – இந்த உலகத்தில் எந்த குழப்பமும் இல்லாமல் தத்தம் நியதிகளை பின்பற்றி வாழச்செய்வது,
உலகம் சீராக இயங்குவதற்கு பாலமாக இருப்பவர்.

சாதன சதுஷ்ட சம்பத்தியை உபதேசிக்கும் மந்திரப்பகுதி.
ஸ்வதர்ம அனுஷ்டானம் (கர்மயோகம்) – கர்ம அனுஷ்டானம், கர்மத்தை சரியான பாவனையுடன் அனுஷ்டிக்க வேண்டும்.
பிராமணாஹா – பிராமணர்கள், சான்றோர்கள், மனத்தூய்மையுடையவர்கள், தர்மப்படி வாழ்பவர்கள்.
விவிதி3ஷந்தி – அறிய ஆசைப்படுக்கின்றார்கள்.
தம் ஏதம் – அந்த இந்த – பரமாத்வான ஜீவாத்மாவை
ஆத்மாவை அறிய வேண்டும் என்ற ஆசை திடமாகும் போது நம்மை செயலுக்கு தூண்டி விடும்.
சாமான்யமக இருக்கின்ற ஆசைய விசேஷமானதாக உறுதிப்ப்டுத்த வேண்டும். இதற்கு எது சாதனம்?
வேதிதம் – அறிய வேண்டும்; இச்சா – ஆசை
அறிவதற்கு எது சாதனம்? ஆசைக்கு எது சாதனம்?
இந்த ஆசையே அறிவதற்கு முக்கிய சாதனமாக இருக்கிறது. குருவும் சாதனமாகின்றார். சாஸ்திரமும் சாதனமாகிறது.
சூழ்நிலைகளும் சாதனமாகின்றது. ஆத்ம தத்துவத்தை அறிய வேண்டும் என்ற ஆசைய வளர்த்துக் கொள்ள உதவும் சாதனங்கள்
வேத அனுவசனம், யக்ஞம், தானம், தபஹ.
வேத அனுவசனம் : பிரம்மாச்சர்ய ஆசிரமத்தில் உள்ளவர்களின்
ஸ்வதர்மம் : வேத சாஸ்திரத்தை படிக்க வேண்டும் (ஸ்வாத்யாயம்)
படிப்பது மாணவனது ஸ்வதர்மம். வேத சாஸ்திரத்தை குருவின் உபதேசம் மூலம் அறிந்து கொண்டு அந்த ஆசையை வளர்த்துக் கொள்ளுதல்,
தர்ம மீமாம்சம் என்று அறிந்து கொள்ளுதல். வேதத்தை படித்தல், ஓதுதல் வேதம் உரைக்கும் தர்மத்தை விசாரம் செய்தல்.
யக்ஞம், தானம் – இல்லறத்தில் இருப்பவர்களுக்கு பிரம்மத்தை பூரணமாக அறிய வேண்டும் என்ற ஆசையா நிலைநிறுத்த வேண்டுமானால்
யக்ஞம், தானம் செய்ய வேண்டும்.
வானபிரஸ்தாசிரமம் – அவர்கள் தவத்தினால் அதை அடைய முயற்சி செய்ய வேண்டும்.
கிரகஸ்த ஆசிரமத்தில் இருப்பவர்களுக்கு யக்ஞம், தானம் இவைகள் முக்கிய சாதனங்களாக இருக்கின்றது.
யக்ஞம் – இஷ்டா, பூர்த்தம், தத்தம்.
இஷ்டா – வைதிக கர்மங்கள் – யாகம், ஸ்மார்த்தம் (ஸ்மிருதியில் கூறப்பட்ட கர்மங்கள்), ஸ்ரௌத்தம் (ஸ்ருதியில் கூறப்பட்ட கர்மங்கள்).
பூர்த்தம் – சமுதாய சேவை
தத்தம் – மற்றவர்களுக்கு உதவி செய்தல் (அபயம் கொடுத்தல்)
யக்ஞமானது தேவயக்ஞம், ரிஷியக்ஞம், பித்ருயக்ஞம், மனிதயக்ஞம், விலங்குகளுக்கு செய்யும் யக்ஞம் என்று ஐந்து வகையாக உள்ளது.
தானம் – தன்னிடம் இருக்கும் பொருளை பகிர்ந்து கொடுத்தல் (லோபம் நீங்கிவிடும்)
கர்மயோகப்படி வாழ்வது
இவைகள் யாவும் கிரகஸ்த ஆசிரமத்தினருடைய கடமைகள்.

வானபிரஸ்த ஆசிரமத்தில் உள்ளவர்களின் பிரதான கடமை தவம் செய்து கொண்டிருப்பது-தான்.
அநாஸ கேன – நம்மை அழிக்காது செய்யும் தவம். தவத்தின் முடிவில் சக்தி அதிகமாக வேண்டுமேயொழிய குறையக்கூடாது.
எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும் அதிக காலம் தவத்தில் ஈடுபட வேண்டும்.
இந்த கடமைகள் மூலம் மோட்சத்தை அடைய என்ற ஆசையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
யக்ஞ, தானம், தவம் நிதித்தியாஸனம் வரை நம்மை கொண்டு செல்லும்.
ஏதம் ஏவ விதி3த்வா – இந்த ஆத்ம தத்துவ ஞானத்தை அறிந்தவன்
முனிஹி பவதி – முனிவனாக உயர்வடைகிறான்.
ந கர்மி – செயலில் செய்வதிலிருந்து அமைதியடைகின்றான்.
ஏதம் ஏவ – இதை அறிய விரும்புபவர்கள்; ப்ரவ்ரஜினஹ – தியாகத்திற்கு தயாரானவர்கள்
லோகம் – ஆத்ம தத்துவத்தை; இச்சந்தி – அதையே லட்சியமாக கொண்டவர்களாக,
ப்ரவ்ராஜினஹ – தியாகத்திற்கு தயாராக இருப்பவர்கள்,
ப்ரவிரஜந்தி – சந்நியாஸ ஆசிரமத்திற்கு சென்று விடுவார்கள்.
சந்நியாஸத்தை இரண்டு வகையாக அடைகின்றனர்.
1. கிரம சந்நியாஸம் – பிரம்மச்சர்யம் à இல்லறம் à வானபிரஸ்தம் à சந்நியாஸம் என்ற படிகளின் வழியே அடைவது.
2. அகிரம சந்நியாஸம் – பிரம்மச்சர்யம் à இல்லறம் à சந்நியாஸம் அல்லது பிரம்மச்சர்யம் சந்நியாஸம் என்று
இருவகையாக சந்நியாஸத்தை அடைவார்கள்

சந்நியாஸம் இரண்டு வகையாக இருக்கிறது. அவைகள் 1. விவிதிஷா சந்நியாஸம், 2. வித்வத் சந்நியாஸம்.
விவிதிஷா சந்நியாஸம் – விவேகம், வைராக்கியம் போன்ற ஞானத்திற்கான தகுதியை வளர்த்துக் கொள்வதற்காக எடுத்துக்கொள்வது.
வித்வத் சந்நியாஸம் – சிரவண, மனனத்தை முடித்தப்பிறகு எடுத்துக்கொள்வது/ இவர்கள் பிரதான கடமை நிதித்தியாஸனம் செய்வதுதான்.
நிதித்தியாஸனத்தை முடிந்து ஞானத்தை அடைந்தாலும் பிராரப்த கர்மத்தை கழிப்பதற்காக எடுத்துக் கொள்வது.

ஏதத்தஸ்ம வை பூர்வே விதிவாம்ஸ – இதற்கு முன் வாழ்ந்த ஞானத்தில் ஆசை கொண்டவர்கள், உலகத்தின் நிலையற்ற
தன்மை தெரிந்து கொண்டவர்கள், உணர்ந்தவர்கள்.
பிரஜாம் எ காமயந்தே – இல்லறத்தை விரும்புவதில்லை,
கிம் ப்ரஜயா கரிஷ்யாமே – இவர்கள் ஆசையற்றவர்கள், இந்த பிரஜைகள் என்ன செய்யப் போகிறார்கள் என்று நினைக்கிறார்கள்.
யேஷாம் நோ அயம் ஆத்மானாம் லோக இதி – நமக்கு இந்த ஆத்மாதான் லட்சியம், அதை அடைவதுதான் பரம் லட்சியம்
என்று நினைத்து சந்நியாஸ ஆசிரமத்திற்கு செல்கிறார்கள். அனாத்மா ஆசைகளான புத்திரன், சொத்து, உலகம்
போன்றவைகளிலிருந்து விட்டு விலகி சந்நியாஸ வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள். புத்திரன் மீதுள்ள ஆசையானது
சொத்தை அடைய வேண்டும் என்ற ஆசையை தூண்டிவிடுகிறது, பிறது உலகத்திலிருகின்ற இன்பத்தை தருகின்ற பொருட்களை
அடைய வேண்டும் என்று செல்கிறது, இவ்வாறு சாத்தியத்தின் மீதுள்ள ஆசை, சாதனத்தின் மீதுள்ள ஆசை என்று இரண்டாக பிரிக்கப்படுகிறது.

ஸஹ ஏவ ஆத்மா நேதி நேதி – அனைத்து அனாத்மாக்களும் நீக்கப்பட்டு, நீக்கமுடியாமல் மீதி இருப்பதுதான் ஆத்மா.
இந்திரியங்களால் கிரகிக்கமுடியாதது, எதனோடும் ஒட்டாது, அழிக்க முடியாததாக இருப்பது.

ஞானியானவன் ப்ராரப்தம் இருக்கின்றவரை இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருப்பான்.
இரண்டுவிதமான எண்ணங்கள் அவனை பாதிப்பதில்லை. இதனால் தூண்டப்பட்டு தேகத்தின் அபிமானத்தால்
நான் பாவத்தை செய்தேன் என்கின்ற எண்ணமே வருவதில்லை. நான் புண்ணியத்தை செய்தேன் என்றும் நினைப்பதில்லை.
இவன் புண்ணிய-பாவங்களிலிருந்து விடுபட்டு இருக்கின்றான். இவனால் செய்யப்பட்டதும், செய்யப்படாததும் அவனை பாதிக்காது.
சாஸ்திரம் விதித் த நித்ய கர்மங்களை செய்யாமல், செய்து கொண்டிருப்பதாலும் அவனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது.
பிரம்மவிதி அகர்ம சம்பந்தி – பிரம்மத்தை அடைந்தவனுக்கு எந்த கர்மத்தில்லும் சம்பந்தமில்லை.
கர்மபலனிலும் சம்பந்தமில்லை. எந்தவித குற்ற உணர்வும் இல்லாதிருப்பான். ந தபத் – வாட்டுவதில்லை.

ஸ்லோகம்-23
ஏஷஹ மஹிமா – இந்த பெருமையானது அவன் முக்தியுடன் இருப்பதே. இது ஆசையற்றது, அழிவில்லாதது, என்றும் நிலையாக இருப்பதுதான்.
ந வர்ததே கர்மனா – இந்த பெருமையானது செயலினால் மேலும் பெருகுவதில்லை, ஏனெனில் அவன் அடைந்திருப்பது
மிகவும் உயர்ந்த நிலை அதற்கு மேலே ஒன்றும் இல்லை.
நே கனியான் – அது செயல் செய்வதினாலும் குறைவதில்லை. அவன் அடைந்திருக்கின்ற நிலை ஜீவன் முக்தநிலை,
அதுவே அவனது சுபாவமாகவே மாறியிருக்கிறது. இதுவே ஒருவன் அடைய வேண்டிய செல்வம், தனது ஸ்வரூபத்திலிருப்பதுதான், அதுதான் நிலையானது.
தஸ்ய ஏவ – மேற்கூறிய பெருமையுடைய முமுக்‌
நமக்கு லட்சியத்தில் பெருமை தெரிந்தால்தான் அதை அடைய வேண்டுமென்ற ஆசை, உற்சாகம் உண்டாகும்.
தம் விதித்வா – இந்தப்பெருமையை உணர்ந்த நிலையானது நம்மை அந்த லட்சியத்தை அடையும் முயற்சியில் ஈடுபடுத்தும்.
எஸிப்யதே கர்மணா பாபகேன – அவனும் பாவ-புண்ணியங்களை கொடுக்க கூடிய கர்மங்களிலிருந்து விடுபடுவான்.

சாதனப்பகுதி:
தஸ்மாத் ஏதம் விது3: எந்தக்காரணத்தால் இங்கு சொல்லப்பட்ட பெருமையை அடைய வேண்டுமோ அதை உணர்ந்து
முமுக்‌ஷுயுடையவன் விவேகம், வையாக்கியம், முமுக்‌ஷுத்வத்தை அடைவான்.
சாந்தஹ – மனக்கட்டுப்பாடு, அந்தக்கரண கட்டுப்பாடு. அந்தக்கரணத்தை அமைதிபடுத்த வேண்டும். சஞ்சலங்களை நீக்கி அமைதியுடன் வைத்திருக்க வேண்டும்.
தாந்தஹ பத்து இந்திரியங்களையும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டும்.
உபரதஹ தேவையற்ற செயல்களிலிருந்து விலகுதல், பொறுப்புக்களிலிருந்து விலகுதல், முறைப்படி
சந்நியாஸம் எடுத்துக்கொள்ளுதல், ஸ்வதர்ம அனுஷ்டானம்.
திதிக்‌ஷா இருமையை சகித்துக்கொள்ளுதல், இருமையினால் நாம் தாக்கப்படாதவனாக் இருத்தல், அதை ஒரே மனநிலையோடு ஏற்றுக்கொள்ளுதல்.
சமாஹித: எடுத்துக் கொண்ட லட்சியத்தில் நிலையாக நிற்றல், அதில் பொருந்தி செயல் படுதல்,
இதற்கு தடையாக இருப்பவைகள் சோம்பல், உறக்கம், செய்வதறியாது இருத்தம் (மனோரதம்)
பூத்வா இவ்விதமான இருப்பவனாக செயல்பட்டு
ஸ்ரத்தா வித்தா – சிரத்தையுடைய்வனாக இருக்க வேண்டும்,. குரு, வேதாந்த வாக்கியங்களில் உள்ள நம்பிக்கை.
ஆத்மனி ஏவ ஆத்மானாம் பஷ்யதி: தன்னுடைய ஸ்தூல சூட்சும சரீரத்திற்குள்ளேதான் சைதன்ய ஸ்வரூபத்தை ஞானி பார்க்கின்றான்.
ஸர்வம் ஆத்மானம் பஷ்யதி: தன்னையே அனைத்துமாக பார்க்கின்றான். தன்னிலே அனைத்து ஜீவராசிகளையும் பார்க்கின்றான்
நைனம் பாப்மா ந தரதி ஆப்னோதி:. இந்த ஞானியை பாவ-புண்ணியங்கள் வந்தடையாது. இந்த ஞானியை பிராரப்தம், சஞ்சிதம்
ஆகியவற்றில் உள்ள கர்மபலன்களான பாவ-புண்ணியங்கள் ஒன்றும் செய்யாத நிலையை அடைந்து விடும்.
இவன் அடைந்த ஞானத்தால் பாவ-புண்ணியத்தினால் விளையும் இன்ப-துன்பங்களை எரித்து விடுகின்றான்.
விபாபஹ: அனைத்து பாவங்களும் புண்ணியங்களும் சென்று விடுகின்றன.’
ஸர்வம் பாப்மான தரதி: அனைத்து பாவ-புண்ணியங்களையும் கடந்து விடுகின்றான். இங்கே பாப்மானம் என்ற சொல் பாவத்தையும், புண்ணியத்தையும் சேர்த்து கூறப்படுகின்றது.
விரஜஹ: அசுத்தத்திலிருந்து வெளி வந்தவன்; அறியாமையிலிருந்து வெளியே வந்தவனாக இருக்கின்றான்.
அவிசிகித்ஸஹ: அனத்து விதமான சந்தேகங்களும் நீங்கியவனாக இருக்கின்றான்.

இப்படிபட்ட லட்சணங்களை உடையவனாக இருப்பவன் பிரஹ்மனாக, முக்தனாக இருக்கின்றான். இதுதான் பிரஹ்மத்தின் ஸ்வரூபம்.

ஏனம் பிராபிதஹ அஸீத் என் உபதேசங்களின் பலனை நீ அடைந்து விட்டாய். அந்த பிரஹ்மத்தை அடைந்து விட்டாய்
என்று ஜனகரை பார்த்து, யாக்ஞவல்கியர் கூறினார்.

ஜனகர், “பகவானே! சம்சாரியாக இருந்த நான் முக்தனாகி விட்டேன். இதற்கு கைம்மாறாக இந்த விதேஹ நாட்டையே
தங்களுக்கு காணிக்கையாகி கொடுக்கிறேன். என்னையும் இந்த நாட்டுடன் தங்களுக்கு சேவை புரியும் சேவகனாக கொடுக்கிறேன்.
இவ்வாறு கூறியதின் மூலமாக அவர் ஞானத்தை அடைந்து விட்டார் என்று குறிப்பால் உணர்ந்து கொள்ளலாம்.

ஸ்லோகம்-24
ஸஹ வை ஏஷஹ : அந்த நிர்குண பிரம்மமே இந்த ஜீவாத்மா
மஹான் அஜஹ : பூரணமானது, பிறப்பற்றது
நானே பிரம்மன் என்பதை கிரகிக்க முடியவில்லையென்றால் சகுண பிரம்மத்தை தியானத்தை பரிந்துரை செய்யப்படுகிறது.
அனாதஹ: அந்த பரமாத்மாவே எல்லா ஜீவராசிகளுக்குள் இருந்து கொண்டு உணவை உட்கொண்டு இருக்கிறது.
நானே அனத்து ஜீவராசிகளுக்குளிருந்து கொண்டு உணவை உண்ணுகிறேன்.
வஸ்தானஹ: கர்ம பலனை தருபவர் ஈஸ்வரந்தான் என்று தியானிக்க வேண்டும்.
ய ஏவம் வேத: யார் இவ்வாறு ஈஸ்வரனை உபாஸனை செய்கிறார்களோ
விந்ததே வஸீ : அவர்கள் செல்வம், பொருள், ஐஸ்வர்யம் அனைத்தும் கிடைக்கப்பெறுவார்கள்.
வஸ யோக்யதா – அருட்செல்வம், மனத்தூய்மையடைவார்கள்..
மோக்‌ஷத்தை லட்சியமாக கொண்டவர்கள் ஞானத்திற்கு தகுதியடைகிறார்கள்.

ஸ்லோகம்-25
இந்த மந்திரத்தில் பிரம்ம ஸ்வரூத்தைக் கூறி பிரம்மத்தை அடைதல், மோட்சத்தை அடைதல் என்ற இரண்டுமே ஒன்றுதான் என்று கூறப்படுகிறது.
ஸஹ வை ஏஷஹ: அந்த பரமாத்மாவே இந்த ஜீவாத்மா
அஜரஹ: மாற்றமில்லாதது;
அமரஹ: மரணமற்றது,
அம்ருதஹ: என்றும் உள்ளது;
அபயஹ: பயமற்றது
வர்ஜிதஹ: இப்படிபட்ட ஆத்ம ஸ்வரூபம்தான் பிரம்மம்.
அபயம் வை பிரஹ்மா: சம்சாரமற்றது பிரம்மம், பயம்தான் தலையாய சம்சாரம்; பயமற்ற நிலையான ஸ்வரூபம்.
பகவான் எப்பொழுதும் ஐஸ்வர்யத்துடன் பயத்தையும் சேர்த்துக் கொடுப்பார். இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது
எந்த வகையான ஐஸ்வர்யத்தையும் அடைந்தாலும் அதனுடன் பயத்தையும் சேர்த்துதான் அடைகிறோம்.
ய ஏவன் வேத: யார் இந்த ஞானத்தை அடைகிறார்களோ
அபயம் வை பிரம்ம பவதி: அவர்கள் அபயமான பிரம்மத்தையே அடைகிறார்கள்.

பகுதி-5 :மைத்ரேயி பிராமனம்
இந்தப்பகுதியானது மிகமுக்கியமானது எனவே ஏற்கனவே இது விளக்கப்பட்டாலும் மீண்டும் இந்தப் பகுதியில் விவரிக்கப்படுகிறது.
இதில் கூறப்படுகின்ற கருத்துக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. நமக்கு சாத்தியம் போல் தெரிவதெல்லாம் பொய் என்று விளக்கப்படுகின்றது.
2. சாத்திய தரிசனம் – ஆத்மாதான் நாம், எனவே நம்மைத்தான் அடைய வேண்டும்.
3. சாதனம்: ஆத்மாவை அறிவதற்கு உதவும் வழிகளான, சிரவணம், மனனம், நிதித்யாஸனம் இவைகளைக் கொண்டு ஆத்மாவை அடையலாம்.
4. மோட்ச ஸ்வரூப விளக்கம்
5. ஈஸ்வரன் ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் இவைகளுக்கு காரணமாக இருப்பவர்
6. ஆத்மாவே அனைத்துமாக இருக்கிறது
7. சிதாபாஸத்தினுடைய ஸ்வரூப விளக்கம்
8. சித் நித்யம், சிதாபாஸன் வெறும் தோற்றம் (பிரதிபிம்பம்) என்று விளக்கப்பட்டு இருமை நீக்கப்படுகிறது

சந்நியாஸ விசாரத்தின் சாரம்.
* சந்நியாசத்தை அந்தரங்க சாதனமாக கூறப்படுகிறது. ஆத்மாவிற்கு மிக அருகில் இருக்கின்ற சாதனம்.
இதன் மூலம் ஞான நிஷ்டை அடைவதற்கும், ஞானத்தை அடைவதற்கும் உதவியாக இருப்பது.
* கர்மயோக பகிரங்க சாதனம் – மனதை தூய்மையாக்கி ஞானத்தை அடைவதற்கு தகுதிப்படுத்துகிறது
* மோட்சத்திற்கு ஞானமானது சாக்‌ஷாத் சாதனம். நேரிடையான சாதனம்
* வேதங்கள் சில கர்மங்கள் விதித்துள்ளது. சந்நியாஸத்தில் இவைகளை விடவேண்டிய நிலை வரும்போது
குற்ற உணர்வு வரும் போது வேதமே இவ்வாறு சொல்லி இருப்பதால் நாம் அந்த உணர்வு அடைய தேவையில்லை என்று சமாதானம் சொல்லிக் கொள்ளலாம்.

விசாரம்:
கேள்வி: உயிரோடு இருக்கும்வரை அக்னிஹோத்ர யாகம் செய்து கொண்டிருக்க வேண்டும். இவன் இறந்து புதைக்கும்போது
அவன் பயன்படுத்திய யாக பாத்திரங்கள் அந்த உடலோடு சேர்த்து புதைக்க வேண்டும்.
எனவே ஒரேயொரு ஆஸ்ரமம்தான் இருப்பதுபோல் தோன்றுகிறது. சந்நியாஸ ஆஸிரமத்தை விட்டுவிடலாம்.
பதில்: அவ்வாறு செய்ய முடியாது. சந்நியாஸ ஆசிரமத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதால் இரண்டும் சமமாக இருக்கட்டும்
கேள்வி: யாருக்கு கர்ம்ம் செய்ய தகுதியில்லையோ அவர்கள் சந்நியாஸத்திற்கு செல்லலாம்.
பதில்: யார் மோட்சம் என்ற லட்சியத்தை அடைய உறுதி உடையவர்களாக இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் இந்த ஆசிரமம்.
கர்மத்தை விட்டுவிடுபவர்களுக்கு அல்ல, அதிக சாதனையை செய்ய வேண்டிய ஆசிரமம் இது.
கர்மத்தை செய்ய தகுதியுடையவர்கள்தான் சந்நியாசி ஆகின்றான். கர்மகாண்டம் அவித்யாவில் ஆசை உடையவர்களுக்காக விதிக்கப்பட்டிருக்கிறது.
வைராக்யம் வந்தவுடன் சந்நியாசத்தை எடுத்துக் கொள்ளலாம். சந்நியாசத்தையும், இல்லறத்தையும் ஒன்றாக சேர்க்க முடியாது.
இரண்டும் வெவ்வேறு தர்மத்தை பிரதானமாக உடையது. சந்நியாஸம் யம பிரதானமானது, இல்லறம் நியம பிரதானமானது.

இரண்டு வகையான சந்நியாசம் இருக்கின்றது. அவைகள் வித்வத் சந்நியாசம், விவிதிஷா சந்நியாசம்.
முதல் வகையானது அபரோக்‌ஷ ஞானமுடையவர்களுக்கு, அடுத்த வகையானது பரோக்‌ஷ ஞானமுடையவர்களுக்கு என்று கூறப்பட்டிருக்கிறது.

————

பகுதி-6 : வம்ச பிரமாணம்
இதில் மூன்று மந்திரங்கள் இருக்கிறது. இவைகள் குரு-சிஷ்ய பரம்பரையில் வந்தவர்களின் பெயர்களை கூறுகிறது.
இந்த பெயர்களை உச்சரிப்பதாலே நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ப்ருஹதாரண்ய உபநிஷத்- அத்தியாயம்-4-பகுதி -1—ஷடாச்சார்ய பிரமாணம் /கூர்ச பிரமாணம் /ஸ்வயம் ஜோதி பிரமாணம்-பகுதி -1 /

March 23, 2021

அத்யாயம்-4
இந்த அத்யாயம் ஆறு பகுதிகளைக் கொண்டது.
முதல் பகுதியில் உபாஸனையைப் பற்றியும், சில பண்புகளையும் விளக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த ஐந்து பகுதிகளும் பிரம்ம வித்யாவை போதிக்கிறது.

இதில் ஜனகர் என்கின்ற பேரரசர் ஞானத்தை பெறுவதற்கு தகுதியை அடைந்துள்ளவர்,
யாக்ஞவல்கியரிடமிருந்து பிரம்ம ஞானத்தை பெறுவதாக அமைந்துள்ளது.

பகுதி-1 : ஷடாச்சார்ய பிரமாணம்
ஸ்லோகம்-1
விதேஹ நாட்டு அரசரும், தேக அபிமானவற்றவருமான ஜனகர் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார்.
அப்போது யாக்ஞவல்கியர் அந்த அரசவைக்கு வந்தார். ஜனகர் அவரை வரவேற்று எது உங்களை இங்கே அழைத்து வந்திருக்கிறது?
பசுக்களை தானம் பெற வந்தீர்களா அல்லது சூட்சுமமான விஷயங்களை விசாரம் செய்வதற்கா!! என்று கேட்டார்.
அவர் அதற்கு இரண்டுக்குமேதான் என்று பதிலளித்தார்.

ஸ்லோகம்-2
எதை மற்ற ஆசிரியர்களிடமிருந்து எதை உபதேசமாக பெற்றீர்களோ அதை எனக்கு கூறுவாயாக என்று யாக்ஞவல்கியர் கேட்டார்.
ஜனகர் கூறலானார். ஜித்வான் என்ற ஆசிரியரிடமிருந்து கற்றவை, எப்படி வாக் (அக்னி) தேவதையை உபாஸனை செய்ய வேண்டும்.
இதைக் கேட்ட யாக்ஞவல்கியர், “யார் நம்மை சுத்தப்படுத்தும் மூன்று விதமான ஆதாரங்களான தாய், தந்தை, குரு உடையவர்களோ
அவர்களிடமிருந்து வரும் உபதேசங்கள் பிரமானத்திற்கு முரணாக இருக்காது, உண்மையானதாக இருக்கும்.

மாத்ருமான் (தாய்) – இவரிடமிருந்து பெற வேண்டிய அன்பை முழுமையாக பெற்றவர்கள்.
தாயிடத்தில் அடையும் தூய்மை – அபிநிவேஷம் – பிறந்த குழந்தைக்கு அன்பும், ஆதரவையும் கொடுத்து அரவணைத்து வளர்க்க வேண்டும்.
இதன் மூலம் உடல்பலத்தையும் மன பலத்தையும் பெறுவோம். இவ்வாறு வளர்ந்த குழந்தைகளால் தான்
அதை மற்றவர்களுக்கு கொடுக்க முடியும். குழந்தைகள் தாயை தெய்வமாக பாவிக்கும், அவள்தான் எல்லாமே என்று நினைக்கும்.

பித்ருமான் (தந்தை) – இவரிடமிருந்து பெற வேண்டிய பலனை அடைந்தவர்கள், இவர் குழந்தையை கல்வி கற்க ஆசிரியரிடம் அறிமுகப்படுத்துகிறார்.
நல்லொழுக்கமும், பண்பும் வளர்வதற்கு உதவி புரிபவர்.

ஆசார்யவான் (குரு) – ஆசாரியடமிருந்து பெற வேண்டிய அறிவையும், பண்பையும் முழுமையாக பெற்றவர்கள்.
இவர் விதவிதாமன சாஸ்திரங்களை அறிந்தவர், நம்மை ஆசாரத்தில்(ஒழுக்கத்தில்) நிலை நிறுத்துபவர் தானும் அதுபோல் வாழ்ந்து வருபவர்.

இவ்வாறு இந்த மூன்று பேர்களிடமிருந்து அடைய வேண்டியதை முழுமையாக அடைய பெற்றவர்களின் உபதேசங்கள்தான் முழு பலனை தரும்.

* நாம் எதை அனுபவித்திருக்கிறோமோ அதைத்தான் மற்றவர்களுக்கு கொடுக்க முடியும்.
* நமக்கு நல்ல ஆசிரியரை தேர்ந்தெடுக்கும் உரிமையிருக்கிறது
* ஈஸ்வரனிடமிருந்து இதுவரை நமக்கு கிடைக்காததையெல்லாம் பெறலாம்
ஜனகர் மேலும் அவர் பெற்ற வாக் உபதேசத்தை விவரித்தார். வாக் என்ற தத்துவத்தை பிரம்மமாக உபாஸிக்க வேண்டும்.
அக்னியை பிரம்மமாக தியானிக்க வேண்டும் என்று அந்த குருவிடம் உபதேசம் பெற்றேன். யாக்ஞவல்கியர் இதை அங்கீகரித்தார்.
வாக்கைப் பற்றி இவ்வளவுதான் கூறினாரா? வாக் எங்கே தங்கியிருக்கிறது (ஆயதனம்), இதற்கு ஆதாரமாக இருப்பது எது?
இவைகளையெல்லாம் பற்றி கூறினாரா? என்று கேட்க, ஜனகர் இல்லை என்று பதிலளித்தார்.
அப்படியென்றால் நீ வாக்கைப்பற்றி நாலில் ஒரு பங்குதான் அறிந்திருக்கிறாய் இப்படி உபாஸிப்பதனால் ஒரு பயனும் கிடைக்காது.
எனவே நீ நான்கையும் சேர்த்து தியானிக்க வேண்டும் என்று யாக்ஞவல்கியர் கூறினார். ஜனகர் மீதி மூன்றையும் தனக்கு உபதேசிக்குமாறு வேண்டினார்.

வாக்கின் இருப்பிடம் வாக் என்ற இந்திரியம்தான், அதற்கு ஆதாரமாக இருப்பது ஆகாசம்
இதை பிரக்ஞா (ஞானம், அறிவு) என்ற பெயரால் உபாஸிக்க வேண்டும்.
இந்த பெயர் வரக்காரணம் ஞானமானது வாக் இந்திரியத்தின் அடிப்படையில்தான் கிடைக்கிறது.
நாம் யார், எவ்வளவு திறமையுடையவன் என்பது நம் பேச்சிலிருந்துதான் மற்றவர்கள் தெரிந்து கொள்வார்கள். வாக்கினால் அடையும் பலன்கள்:
1. எல்லா உறவுகளையும் அடைதல்
2. அனைத்து வேதங்களையும் அறிதல்
3. சாஸ்திர ஞானத்தை அடைதல்
4. இதிகாச, புராணங்களைப் பற்றிய அறிவை அடைதல்
இந்த வாக்கை பிரக்ஞா என்று தியானித்தால் நம்முடைய பேச்சுத் திறமை வளரும். எப்படி பேசுவது, எந்த நேரத்தில் எதை பேசுவது
போன்ற நுணுக்கங்களையெல்லாம் அடையப் பெறலாம். இதனால் வாக்கானது நம்மை மீறி போகாது, நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
துயரத்தை கொண்டு வராது, பகைமையையும் ஏற்படுத்தாது. இகலோக, பரலோக பலன்களையும் அடையலாம், வாழும் போது தேவனாகவும்,
இறந்த பிறகு அந்த தேவதையுடன் ஒன்றாக கலந்து விடுவோம். எனவே இவன் எது சொன்னாலும் அது பலிக்கும்.
இதை கேட்ட ஜனகர் மகிழ்ந்து இந்த உபதேசத்தை பெற்றதற்காக உங்களுக்கு ஆயிரம் பசுக்களையும், காளைகளையும் உங்களுக்கு வழங்குகிறேன் என்று கூறினார். யாக்ஞவல்கியர் அதை வாங்க மறுத்து, “உபதேசத்தை முழுமையாக முடிக்காமல் எதையும் வாங்காதே என்று
என் தந்தை கூறியிருக்கிறார், நானும் அதை பின்பற்றி வருகிறேன்” என்று கூறினார்.

ஸ்லோகம்-3 லிருந்து 12 வரை
ஆசிரியர்
இருப்பிடம்
தேவதை
பெயர்
பிரதிஷ்டா
குறிப்பு
உதங்கா
பிராணன்
வாயு
பிரியம்
ஆகாசம்
பிரியமாக தியானிக்க வேண்டும்
பர்கு
கண்கள்
சூரியன்
சத்யம்
ஆகாசம்
இப்படி தியானிக்க வேண்டும்
பரத்வாஜ
காது
திசைகள்
அனந்தம்
ஆகாசம்
இப்படி தியானிக்க வேண்டும்
சத்யகாம
மனம்
சந்திரன்
ஆனந்தம்
ஆகாசம்
மனதை சந்திரனாக தியானித்தல்
ஸாகல்ய
இதயம்
பிரஜாபதி
ஸ்திதி
ஆகாசம்
இதயத்தை தியானித்தல்

———————

பகுதி-2 : கூர்ச பிரமாணம்
ஸ்லோகம்-1
ஜனகர் தன் இருக்கையிலிருந்து எழுந்து சென்று குருவை அணுகினார் பிறகு அவரை வணங்கி எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்று வேண்டினார்.
குருவானவர் “ஞானத்தையும், ஞான சாதனத்தையும் கொடுக்க வேண்டும்” என்ற சங்கரர் கூற்றுபடி யாக்ஞவல்கியர்
தன்னை குருவாக அணுகிய ஜனகருக்கு உபதேசத்தை ஆரம்பித்தார்.

நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டுமென்றால் அதற்கு தேவையான வாகனத்தை எடுத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும்.
அதே போல மோக்‌ஷத்தை அடைய வேண்டுமானால் சில சாதனங்களை எடுத்துக் கொண்டு பயன்படுத்த வேண்டும்.
ஜனகரை உத்தம சிஷ்யனாக, ஞான சாதனத்தைக் கடைபிடிக்கிறாந் என்று அங்கீகரித்ததுடன்,
அவர் ஞான உபதேசத்திற்கு தகுதியானவர் என்றும் சொல்கிறார். நீ உபாஸனைகளை மேற்கொண்டவனாகவும்,
அதன் பலனாய் மனம் ஒருமுகப்படுத்தப்பட்டு அமைதியாந் இருக்கிறாய். நல்லொழுக்கத்துடனும், சித்தஸுத்தியுடையவனாகவும் இருக்கிறாய்,
செல்வந்தனாக இருந்தபோதிலும் இவ்வாறாக இருக்கிறாய். வேத சாஸ்திரத்தை படித்தவனாகவும் தேவதைகளை சரியானபடி
உபாஸனை செய்கின்றவனாக இருக்கிறாய். இவ்வாறாக ஜனகருடைய தகுதியை அங்கீகரித்தார்.
இப்படிபட்ட குணங்களை உடைய நீ மரணத்திற்குப்பிறகு எங்கு செல்வாய் என்று தெரியுமா?” என்று யாக்ஞவல்கியர் கேட்டார்.
ஜனகர் தனக்கு தெரியாது என்றும், தான் எப்படிபட்டவனாக மாறுவேன் என்றும் தெரியவில்லை என்று பதில் கூறினார்.
அதற்கு குருவானவர் “நான் அதைக் குறித்து உனக்கு உபதேசம் செய்யப்போகிறேன், நீ எங்கு செல்வாய் என்று கூறுகிறேன்.
நான் கொடுக்கும் ஞானத்தால் நீ எப்படிப்பட்ட நிலையை அடைவாய் என்றும் உபதேசிக்கிறேன் என்று மேலும் கூறினார்.
ஜனகரும் அதைச் உபதேசியுங்கள் பகவானே என்று பணிவுடன் வேண்டினார்.

ஸ்லோகம்-2
இந்த மந்திரத்தில் விஸ்வன் அறிமுகப்படுத்தப்படுகிறான். சமஷ்டி, வியஷ்டி ஐக்கியமும் விளக்கப்படுகிறது.
விராட் என்றழைக்கப்படுகின்ற வைஷ்வானரனிடமிருந்து பிரியாத விஸ்வனுக்கு இந்தஹ என்று பெயர்.
இந்த சொல்லுக்கு எல்லாவற்றையும் பிரகாசப்-படுத்துபவன் என்றும் பொருள் கொள்ளலாம்.
எந்தவொரு அறிவு தத்துவம் விராட் ஸ்தூல உலகங்களனைத்தும் பிரகாசப்படுத்திக் கொண்டிருக்கிறதோ
அவனேதான் நம் வலது கண்ணில் அமர்ந்திருக்கின்றான். தேவர்களெல்லாம் தன்னைக் காட்டிக் கொள்ள விரும்புவதில்லை.
இந்த உலகத்திலுள்ள சில நியதிகளையும் மறைத்து வைத்திருப்பார்கள். வைஸ்வானரன் தன்னை மறைத்து வைத்துக் கொண்டிருக்கின்றான்.
இந்திரன் என்று பெயரை மாற்றி வெளிப்படுத்தி கொண்டு பிரகாசித்துக் கொண்டு இருக்கிறார்.
தேவர்களெல்லாம் தன்னை பரோக்ஷமாக இருப்பதையே விரும்புகிறார்கள். தன்னை நேரிடையாக பார்ப்பதை விரும்ப மாட்டார்கள்.

ஸ்லோகம்-3
விஸ்வன் விராட்டை அனுபவிக்கின்றான், ஜீவன் இந்த உலகத்தை அனுபவிக்கிறான் என்றால் ஈஸ்வரனையே அனுபவிக்கிறான்
என்று எடுத்துக் கொள்ளலாம். தைஜஸனும் ஹிரண்யகர்ப்பனும் ஒன்றாக எடுத்துக் கொண்டு சில கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கிறது.
1. தைஜஸனுடைய இருப்பிடம் – இதயத்தினுள் இருக்கின்ற ஆகாசம்
2. தைஜஸனுடைய உணவு – நாம் உட்கொள்ளும் உணவினுடைய அதி சூட்சுமமான பகுதி
3. தைஜஸனை மூடியிருப்பது – நமது இதயம்
4. தைஜஸன் சஞசரிக்கின்ற இடம் – ஹிதா என்று அழைக்கப்படுகின்ற நாடி,

இந்த நாடியானது இதயத்தின் மேல் பகுதியிலிருந்து உடம்பின் பல பகுதிகளுக்கு செல்கிறது. இதன் விட்டம் நம் தலைமுடியின்
விட்டத்தின் ஆயிரத்தில் ஒரு பங்காகும். ஜீவனை சுகமாக வைத்திருப்பதால் இதற்கு இந்த பெயர் வந்திருக்கிறது.
அவன் நாடிக்குள் செல்லும் போது அனுபவிக்கும் உலகம் ஸம்ஸ்காரங்களை பொறுத்து அமைகிறது.
ஸ்தூல சரீரத்திற்கு வேறான ஒன்றை அனுபவிக்கின்றான், அதாவது தைஜஸன் ஹிரண்யகர்ப்பனை அனுபவிக்கின்றான்.

ஸ்லோகம்-4- பிராஞ்ச விசாரம் – பிராஞ்ச – காரண ஸ்வரூபம்
ஹிரண்யகர்ப்பனின் எல்லா அங்கங்களும் காரணத்தில் லயம் அடைந்துள்ளது. சூட்சும சரீர அங்கங்கள் காரணத்தில் ஒடுங்கி விடுகின்றது.
ஒவ்வொரு அங்கங்களும் அந்தந்த இடங்களில் ஒடுங்கி விடுகின்றது. ஒவ்வொரு திசையிலும் உள்ள பிராணனனாது
தன்னுடைய காரண ஸ்வரூபத்தில் ஒடுங்கி விடுகின்றது. கிழக்கிலுள்ள பிராணனனாது கிழக்கிலுள்ள காரண ஸ்வரூபத்தில் ஒடுங்கி விடுகின்றது.
இவ்வாறு எல்லா திசைகளிலும் உள்ள பிராணனன்களானது அந்தந்த திசைகளின் காரண ஸ்வரூபத்தில் ஒடுங்கி விடுகின்றது.
நாம் ஆத்மாவாக எதை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த மூன்று உபாதிகளும் நீக்கப்பட்டு ஸ்ருஷ்டிக்கு ஆதாரமாக இருப்பதைத்தான்.
யாருமேயில்லாத நிலையில் நான் மட்டும் எஞ்சியிருப்பதுதான் ஆத்மா. இது எந்தப் பிரமானத்தின் மூலமாகவும் கிரகிக்க முடியாது.
யாராலும் அழிக்க முடியாதது, என்றும் அழியாதது எதனோடும் சேர்வதுமில்லை அதேபோல எதுவும் இதனோடு சேர முடியாதது.
இது எந்தவிதமான மாற்றமுமடையாதது. இவ்வாறாக உபதேசித்த பின்னர் ஜனகரை பார்த்து,
அரசே நீங்கள் இப்போது பயமற்றவராக உயர்ந்து விட்டீர்கள், என்னுடைய உபதேசத்தை நன்கு புரிந்து கொண்டீர்கள்,
அப்படி புரிந்து கொள்ளும் போதே அபயத்தை அடைந்து விட்டீர்கள். பிரம்மத்திற்கு இன்னொரு பெயர் அபயம்.
நம் மனதினுடைய தர்மம் பயந்து கொண்டிருத்தல், இந்த தர்மமுமற்ற பிரம்மத்தை அடைந்து விட்டாய்.
பிரம்ம ஞானத்தின் பலனாக மோக்‌ஷத்தையும் அடைந்துள்ளாய். பயம் என்பது சம்சாரத்தின் பெரிய விஷயம்.
ஜனகர் குருவை பார்த்து குருவான் அபயத்தை அடைந்தேன். பகவானே உங்கள் உபதேசம் என்னை அபயத்தை அடையச் செய்துவிட்டது.
உங்களுக்கு என்னுடைய நமஸ்காரம், இதற்கு பரிசாக இந்த நாட்டையும், என்னையும் உங்களுக்கு தருகிறேன். என்று கூறினார்.
நாம் எதை அதிகமாக விரும்புகிறோமோ, எதை அதிகமாக மதிக்கிறோமோ அதைத்தான் பிறருக்கு பரிசாக கொடுக்க வேண்டும்.
குருவிடம் பெற்ற உபதேசத்தின் பலனாக இதைக் கூறலாம். நமக்கு பயன்படாத பொருளை பரிசாக கொடுக்க நினைப்பது
நாம் பெற்ற உபதேசத்தின் பலனை அடையவில்லை என்பதை குறிக்கும்.

குறிப்புக்கள்:
· பிரம்மத்தை உபதேசிப்பது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கருணையின் காரணமாக செய்ய வேண்டும்.
· ஞானத்தை அடைந்த பலனால் வரும் தியாகம், எந்தப் பொருள் மீதும் பற்றில்லாமல் இருப்பார்கள்.
· ஜனகர் தம் நாட்டை தானமாக்க் கொடுப்பது அவரடைந்த ஞானப்பலனை நாட்டுகிறது.
· தன்னையே கொடுத்தல் என்பது, தன் அகங்காரத்தை ஒழித்த நிலை.

—————–

பகுதி-3 : ஸ்வயம் ஜோதி பிரமாணம்
முகவுரை
ஆத்மா ஸ்வயம் ஜோதி என்பதுதான் மையக் கருத்து. ஜோதி என்பது சுய பிரகாசம் சைதன்யம்.
எங்கிருந்து ஆத்மாவுக்கு சைதன்யம் வந்தது என்றால், தானே அறிவு ஸ்வருபமாக இருக்கிறது, எதனிடமிருந்தும் எங்கிருந்தும் வரவில்லை.

அவஸ்தா த்ரய விசாரத்தின் மூலம் தர்க்க ரீதியாக ஆத்மாவை விளக்கப்படுகிறது. எட்டுவித ஸ்வரூபங்கள் மூலம் இது விளக்கப்படுகிறது.
1. சரீர வியதிரிகம் – ஸ்தூல, சூட்சும சரீரத்திற்கு வேறானது
2. சுத்தத்வம் – தூய்மையானது, உடலானது அசுத்தமடைவதற்கு வாய்ப்பிருக்கிறது
3. ஸ்வயம்ஜோதி ஸ்வரூபம் – தானே ஒளிர்வது
4. அலுப்தசக்திமத்வம் – நிலையான சக்தி ஸ்வரூபம், வந்துபோகும் சக்தி, நிலையற்ற சக்தி
5. அஸங்கத்வம் – எதனோடும் சம்பந்தப்படாதது
6. நிரஸிதய ஆனந்த ஸ்வரூபம் – அளவிட முடியாத ஆனந்த ஸ்வரூபம்
7. அத்வைத்வம் – இரண்டற்றது
8. த்ருஷ்டி அலோபம் – சைதன்யம் என்றும் தொடர்ந்து விழித்துக் கொண்டிருக்கும்

முதல் ஐந்து தத்துவங்களையும் கனவு நிலையில் நிரூபிக்கப்படுகிறது,
கடைசி மூன்று தத்துவங்கள் ஆழ்ந்த உறக்கத்தை கொண்டு நிரூபிக்கப்படுகிறது.

ஸ்லோகம்-1
ஜனகரை யாக்ஞவல்கியர் மீண்டும் பார்க்க சென்றார் அப்போது நான் இன்றைக்கு ஒன்றும் பேசப்போவதில்லை என்று கூறினார்.
ஒரு சமயம் அவர் ஜனகரின் அக்னிஹோத்ர அறிவை வியந்து பாராட்டி ஒரு வரத்தை கொடுத்தார் அதை நினைவுப்படுத்திய ஜனகர்
நான் சில கேள்விகளை கேட்க போகிறேன் அதை வரமாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னார்.
அவரும் அதை ஏற்றுக் கொண்டு அனுமதித்தார். ஜனகர் கேள்வி கேட்க ஆரம்பித்தார்.

ஸ்லோகம்-2
இந்த ஜீவாத்மா எந்த ஜோதியினால் செயல்படுகிறான்? ஜீவாத்மா செயல்படுவதற்கு ஜோதியாக இருப்பது எது?
என்ற கேள்வியை ஜனகர் கேட்டார். அதற்கு சூரியனுடைய ஜோதியினால்தான் நாம் செயல்படுகிறோம்.

இந்த ஸரீரம் விவகாரத்திற்கு யோக்யதை அல்ல, ஆனால் தேகத்தின் விவகாரம் நடப்பதை பார்க்கிறோம்.
இதற்கு ஜோதியாக இருப்பது எது? இந்த கேள்வியானது மூன்று வகையில் விசாரம் செய்யப்படுகிறது. அவைகள்:
1. எது நம்முடைய செயல்பாடுகளுக்கு காரணமாக இருப்பது அதே சமயம் சரீரத்திற்கு வேறுபட்டும் இருக்கிறது
2. சரீரத்திற்குள்ளே அந்த ஜோதி இருக்கின்றது
3. சில சமயம் இந்த உடல் ஜோதியை பயன்படுத்துகிறது, அது சில சமயம் இல்லாமலும் செயல்படுகிறது.
மூன்றாவது விகல்பம் சரியாக இருக்காது ஏனென்றால் ஜோதி இப்படி இருந்தால் எந்த விவகாரமும் நிச்சயமாக நடக்கும் என்று சொல்ல முடியாது.
ஜோதி இருக்கும்போதும், இல்லாத போதும் விவகாரம் நடக்கலாம்.

இரண்டாவது விகல்பமும் சரியாக இருக்காது ஏனென்றால் சரீரத்தின் ஒரு அங்கமாக இருந்தால்
சரீரமே ஆத்மாவாக இருக்கும் அதனால் அழிவிருக்காது. ஆனால் இயற்கையில் இந்த சரீரம் அழியும் தன்மையுடையது

முதல் விகல்பம்தான் சரியானது. சரீரத்திலிருந்து வேறுபட்ட ஒன்றினால்தான் இது செயல்படுவதற்கு உதவியாக இருக்க வேண்டும்.

ஜனகரே இதை தர்க்க ரீதியாக சிந்தித்து அறியக்கூடிய தகுதியுடையவராக இருந்தாலும் ஏன் இந்த கேள்வியை கேட்கிறார்
என்றால் இந்த தர்க்கம் வெகு சூட்சுமமாக இருக்கிறது இதை குருவின் துணைக் கொண்டுதான் அறிய முடியும் என்று தெரிந்து வைத்திருக்கிறார்.

எந்தவொரு உடலிலிருந்து விவகாரம் நடக்கிறதோ அந்த விவகாரமானது அதனிடமிருந்து வேறுபட்ட ஜோதியினால் சாத்தியமாகிறது.
ஒரு ஜட வஸ்து நகர்வதற்கு காரணமாக இருப்பது அதற்கும் வேறான ஒன்றின் உதவியால்தான் முடியும்.
யாக்ஞவல்கியர் சூரியன்தான் ஜோதியாக இருக்கிறது என்று பதில் கூறினார்.
சூரியன் என்கின்ற ஜோதியினால் இந்த மனிதன் அமர்கின்றான், நடக்கின்றான், போகிறான் ஏதாவது செயல் செய்கின்றான்
பின்பு திரும்பி வருகின்றான் என்று விவரித்தார். ஜனகர் தனக்கு புரிந்து விட்டது என்று அவரது உபதேசத்தை ஏற்றுக் கொண்டார்.

ஸ்லோகம்-3
சூரியன் மறைந்த பிறகு எது ஜோதியாக இருக்கும்? என்று ஜனகர் திரும்பவும் கேட்டார்.
அதற்கு யாக்ஞவல்கியர் சந்திரன் ஜோதியாக இருக்கும். சந்திரன் என்கின்ற ஜோதியினால் இந்த மனிதன் அமர்கின்றான்,
நடக்கின்றான், போகிறான் ஏதாவது செயல் செய்கின்றான் பின்பு திரும்பி வருகின்றான் என்று விவரித்தார்.
ஜனகர் தனக்கு புரிந்து விட்டது என்று அவரது உபதேசத்தை ஏற்றுக் கொண்டார்.

ஸ்லோகம்-4
சூரியனும், சந்திரனும் மறைந்த பிறகு எது ஜோதியாக இருக்கும்? என்று ஜனகர் திரும்பவும் கேட்டார்.
அதற்கு யாக்ஞவல்கியர் அக்னிதான் ஜோதியாக இருக்கும் என்று பதிலளித்தார்,

ஸ்லோகம்-5
சூரியனும், சந்திரனும், அக்னியும் இல்லாத போது எது ஜோதியாக இருக்கும்? என்று ஜனகர் கேட்டார்.
அதற்கு யாக்ஞவல்கியர் வாக்கானது (சப்தம்) ஜோதியாக இருக்கும் என்று பதிலளித்தார்,
இதன் உதவியால்தான் ஜீவன் செயல்பட முடிகிறது. வாக் என்ற சொல்லுக்கு எல்லா இந்திரிய விஷயங்களையும் சேர்த்துகொள்ள வேண்டும்.
இந்த விஷயங்கள்தான் இந்திரியங்களை செயல்பட வைக்கிறது. ஒருவன் தன் கையையே பார்க்க முடியாத இருட்டாக இருந்தாலும்
சப்தம் வரும் திசை நோக்கி போகிறோம், தடைகளை அறிந்து விலகி செல்கிறோம்.

ஸ்லோகம்-6
சூரியனும், சந்திரனும், அக்னியும், வாக்கும், இந்திரிய விஷயங்களும் இல்லாத போது எது ஜோதியாக இருக்கும்? என்று ஜனகர் கேட்டார்.
அதற்கு யாக்ஞவல்கியர் ஆத்மாதான் ஜோதியாக இருக்கும் என்று சொன்னார். .
ஆத்மா என்கின்ற ஜோதியினால் இந்த மனிதன் அமர்கின்றான், நடக்கின்றான், போகிறான் ஏதாவது செயல் செய்கின்றான்
பின்பு திரும்பி வருகின்றான் என்று விவரித்தார்.

விசாரம்:
இந்த நான்கும் இல்லாத போது எந்த விவகாரம் நடக்கிறது என்று கேள்வி எழுகிறது. இந்த விவகாரம் கனவில்தான் நடக்க முடியும்.
கனவில் இந்த நான்கும் இல்லை ஆனால் விவகாரம் நடந்து கொண்டிருக்கும். விழிப்பு நிலையில் யாருமே இல்லாத இட்த்தில்
இந்த நான்கும் இல்லாத நிலையில் கற்பணையான நிலையில் நடக்கும் விவகாரங்களுக்கு உதவும் ஜோதி எது?
சமாதி, தியானத்தில் இருக்கும்போதும் விவகாரங்கள் நடப்பதற்கு ஜோதியாக இருப்பது எது?

சங்கரரின் விளக்கம்:
எந்தவொரு விவகாரமும் செய்வதற்கு உதவியாக இருப்பது இந்த உடல், இந்திரியங்களை தவிர்த்து வேறொன்றாக இருக்கிறது.
கனவிலும் வேறொன்றினால்தான் விவகாரம் செய்ய முடியும். இங்கு ஐந்து விதமான ஸ்வரூபங்களை கூறுகின்றார்.
1. காரிய-காரண வியதிரிக்தம் – காரிய காரண அவபாஸகம். காரியமானது இந்த ஸ்தூல உடல்,
காரணமாக இருப்பது சூட்சும உலகமும், மனமும் தான். அவபாஸகம் – ஒளிர்விப்பது; வியதிரிக்தம் – வேறானது.
உடலுக்கும் மனதுக்கும் வேறானதாக இருந்து கொண்டு ஆனால் அவைகளை பிரகாசப்படுத்திக் கொண்டிருக்கிறது.
2. ஸ்வயம் ஜோதி – இந்த ஆத்மா வேறெதைக்கொண்டும் விளக்க முடியாது, தானே விளங்கிக் கொண்டிருப்பது
3. அந்தஸ்தம் – உடலுக்கும் மனதிற்கும் வேறுபட்ட்தாக இருந்தாலும் அதற்குள்ளே இருப்பது.
நமக்குள்ளே இருந்து கொண்டு உடலையும் மனதையும் பிரகாசப்படுத்தின் கொண்டிருப்பது.
4. அப்பிரமேயம் – எந்தக் கரணங்களாலும் கிரகிக்க முடியாதது
5. அபௌதிகம் – எந்தப் பூதங்களினாலும் உருவாக்கப்பட்டதில்லை.

விசாரம்-2
கேள்வி: ஆத்மாவுக்கு சொன்ன ஸ்வரூபங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த ஜடமான ஸ்தூல சரீரத்தை இயக்குவதற்கு
அறிவுள்ள ஏதோ ஒன்று இருக்க வேண்டும் இந்த அனுமானத்தை பயன்படுத்தி அறிவை அடைகிறோம்.
இந்த சரீரமே சேதனமாக இருக்கிறது என்று அனுபவம் சொல்கிறது. அதாவது என் பிரதியக்‌ஷ பிரமானத்தை வைத்து பார்த்தால்
உங்களுடைய அனுமானங்களை வைத்து சொல்கின்ற உடலுக்கு வேறான ஒரு அறிவு ஸ்வரூபம் கிடையாது.
உடலானது உணர்வு மயமாக இருப்பதால் வேறொன்று தேவையில்லை.

இரண்டாவது உதவி பெறுவது, உதவி செய்வது இந்த இரண்டும் ஒரே நிலையில்தான் இருக்க முடியும்.
எனவே சமான ஸத்தால்தான் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள முடியும்.
அப்படியிருக்கும் போது எப்படு இந்த உடலுக்கு வேறான ஆத்மா உதவி செய்ய முடியும்?

பதில் உன்னுடைய கருத்துப்படி ஸ்தூல உடம்புதான் ஆத்மா என்று வைத்துக்கொண்டால் மரணம் என்பது சம்பவிக்காது.
இந்த உடலே சேதனம் என்றால் அதற்கு அழிவே கிடையாது. இது பிரதியக்‌ஷ பிரமாணம் தான்.
ஏதோ ஒன்று உடலில் இருந்தால்தான் அது உயிர் வாழும், அது சென்றுவிட்டால் இந்த உடல் ஜடமாகி பின்பு அழிந்து விடும்.
மரணமடைந்தவுடன் அவன் உணர்வுடன் இருப்பான். இதிலிருந்து தெரிவது இயற்கையாகவே உணர்வு என்பதே கிடையாது.
உடலே உணர்வு ரூபமாக இருந்தால் கனவு என்ற அனுபவமே இருக்காது. உண்மையில் கனவு நிலையில் உணர்வுடன் இருக்கிறான்.
ஸ்தூல உடம்பு ஜடமாக படுத்துக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து உடலுக்கு வேறாக உள்ள ஒன்றுதான் விவகாரத்திற்கு உதவ முடியும்

இரண்டாவது காரணமான சமான ஸத்தில்தான் விவகாரம் நடக்க முடியும். இந்த ஹேது சில சமயங்களில் அது மாதிரி இருக்காது.
உதாரணமாக தீயை வளர்ப்பதற்கு அதற்கு வேறான நெய், பெட்ரோல் போன்றவைகள்தான்.
மனிதனுக்கு குதிரைகள், மாடுகள் உதவுவது போல். கண்ணாடியில் தெரியும் நம் முகம் பொய்யானது,
ஆனால் நம் முகத்திலுள்ள குறைகளிருந்தால் அந்த உண்மையை காட்டும். இவைகள் வெவ்வேறு ஸத்தாவான இரண்டு வஸ்துக்கள்.
இதிலிருந்து நாம் நிரூபிப்பது இந்த உடல் சேதனமல்ல, உணர்வு ஸ்வரூபமுடையது அல்ல என்பதைத்தான்.

கேள்வி இந்தியங்களை ஆத்மா என்று எடுத்துக் கொள்ளலாமே?
பதில் கனவில் எந்த இந்திரியமும் பயன்படவில்லை ஆனாலும் கனவில் பார்க்கிறோம், கேட்கிறோம், உணர்வுடன் இருக்கிறோம்.
கேள்வி ஜனகர் கேட்டா கேள்விக்கு நேரிடையாக ஆத்மா என்று சொல்லியிருக்கலாமே?
பதில் இந்தௌடல் செயல்பட ஒரு ஜோதி தேவை அது உடலுக்கு வேறான ஒன்று என்பதை சிஷ்யன் புரிந்து கொள்ள வேண்டும்
என்று நினைத்து முதலில் சூரியனிலிருந்து ஆரம்பித்து பிறகு கடைசியில் ஆத்மாதான் என்று முடித்தார்.
எந்தவொரு தேக விவகாரமும் அதற்கு வேறான ஒன்றால் நடக்க முடியும். இந்த விஷயத்தை சிஷ்யன் முதலில் உணரவேண்டும்.
சரீர வியதிரிக்த அனுமானம் சூரியனிடமிருந்து ஆரம்பித்து ஆத்மாவில் வந்து முடிவடைகிறது.

ஸ்லோகம்-7
ஆத்மாவினுடைய ஸ்வரூபம் என்ன? அதன் தன்மை என்ன? என்பதை விளக்குகிறது. அது புருஷனாக இருக்கிறது.
पुरुषः எந்த ஒன்று பூரணமாக இருந்து கொண்டு எதனாலும் விளக்கப்படாமல் தானே பிரகாசித்துக் கொண்டிருக்கிறதோ அதுதான் ஆத்மா.
மனதை ஜடமாக யூகத்தால்தான் அறிந்து கொள்ள முடியும்.
यॊSयँ ज्योति पुरुषः இந்த ஜோதி புருஷன்.
விக்ஞானமய: இருக்கின்ற எண்ணங்களைக் கொண்டு தீர்மானிக்கும் கரணம் புத்தி.
எதனால் அறிவை அடைய முடியும் என்றால் அது புத்தியினால்தான். எதனால் இந்த புத்திக்கு அறிவைக் கொடுக்கும்
சக்தியை அடைந்திருக்கிறது என்றால் அதில் பிரதிபலிக்கும் ஆத்மாவினால்தான் அதுவே சிதாபாஸன் என்று அழைக்கப்படுகிறது.
சிதாபாஸனை லிங்கமாக கொண்டு அறியப்படுவது ஆத்மா. இது ஆத்மாவை புரிந்து கொள்ள உதவுகிறது.
இந்த உபாதியை எடுத்துக் கொண்டு விசாரம் செய்து இதை உறுதி செய்ய வேண்டும்.
புத்தியாகவும் அதில் பிரதிபலித்து கொண்டிருக்கின்ற சிதாபாஸனாகவும் ஆத்மா வெளிப்பட்டு கொண்டிருக்கிறது.

प्रानेष आत्मा स्थितः பிராணன்களுக்குள் ஆத்மா இருக்கின்றது. இங்கே பிராணன்கள் என்று குறிப்பிடுவது
ஐந்து பிராணன்கள், ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள்.

மரங்களுக்கிடையே உள்ள பாறை என்பது அவைகளுக்கு அருகில் உள்ள பாறை என்று எடுத்துக் கொள்ள வேண்டும்,
ஆத்மா பிராணன்களுக்குள் இந்திரியங்களுக்கு அருகில் இருக்கின்றது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதிலிருந்து ஆத்மா இவைகளுக்கு வேறானதாக இருப்பதை அறியலாம்.
அது தான் இவைகள் செயல்படுவதற்கு ஆதாரமாக (ஜோதியாக) இருந்து கொண்டிருக்கிறது.

ह्रूद्यन्तः புத்தியில் இருக்கின்ற எண்ணங்களுக்கு அப்பாற்பட்டுள்ளது.
सः समानः सनुभौ लोकावनुसँचरति: இதே ஆத்மாதான் சம்சாரியாக செயல்படுகிறது. இது அன்யோன்ய அத்யாஸத்தினால் நமக்கு இவ்வாறாக நினைக்கத்தோன்றுகிறது.
सः – அந்த ஆத்மா
समानसन् – புத்தியுடன் அத்யாஸத்தால் ஒன்றாகியதற்குப்பிறகு
उभौ लोकाव – இரண்டு லோகங்களுக்கிடையே (இகலோகம், பரலோகம்)
अनुसँचरति: – புண்ணிய, பாவ பலன்களினால் சென்று வந்து கொண்டிருக்கின்றது.
ध्यायति इव – தியானிக்கின்றான்; மனனம், நிதித்யாஸனம் செய்கின்றான்.
लेलायति इव – அங்கும் இங்கும் அலைபவன்
இந்த இரண்டு சொற்களால் (த்யாயதி இவ, லேலாயதி இவ) ஆத்மாவின் ஸ்வரூபம் விளக்கப்படுகிறது.
” इव ” என்ற சொல் பயன்படுத்த வேண்டுமென்றால், அனுபவத்தில் இருக்க வேண்டும். ஆனால் ஆராயும் போது அது இருக்கக்கூடாது.
“மித்யா” என்ற சொல் அனுபவத்தில் இருக்கிறது ஆனால் ஆராய்ந்து பார்க்கும் போது அதன் இல்லாமை தெரிய வரும்.
ஜீவனாகிய நாம் செய்யும் விவகாரங்களை இரண்டாக பிரிக்கிறோம் அவைகள் ஞான விவகாரம், கர்ம விவகாரம்.
ஞான விவகாரத்திற்கு காரணமாக இருப்பது மூன்று விஷயங்கள் அவைகள் பிரமாதா(அறிபவன்), பிரமாணம் (அறிய உதவும் கருவி),
பிரமேயம் (அறியப்படும் பொருள்) இந்த மூன்றும் இருந்தால்தான் ஞான விவகார நடைபெறும்.
இதை திரிபுடீ என்றும் அழைப்பர். த்ரிபுடீ என்பது மூன்று விஷயங்கள் ஒன்றையொன்று பிரிக்க முடியாததாக இருப்பது.

सः ध्यायति – ஞான விவகாரத்துடன் கூடியவன், எல்லாவித அறிவு சம்பந்தமான விவகாரத்தில் ஈடுபட்டு கொண்டிருப்பவன்.
सः लेलायति – எல்லாவிதமான கர்ம விவகாரம்; கர்மேந்திரியங்கள் கரணம், இந்திரியங்களை கர்த்தா, கர்மம்-எதைச் செய்ய வேண்டும் என்ற குறிக்கோள்.
ஜகத்தானது அதற்கேற்ற சூழ்நிலைகளை கொடுக்கிறது.

நான் ஞான விவகாரம் செய்வது போல் இருக்கிறது, கர்ம விவகாரம் செய்வது போல் இருக்கிறது
ஆனால் உண்மையில் நான் ஒரு விவகாரமும் செய்வதில்லை சரீரம்தான் இதை செய்கிறது.

ஒருவன் ஸ்தூல சரீரத்திலிருந்து அபிமானத்தை விட்டுவிட்டு சூட்சும சரீரத்தில் அபிமானம் வைக்கும்போது கனவில் சஞ்சரிக்கின்றான்.
எனவே சரீரங்கள்தான் விவகாரஙளை செய்கிறது. ஆத்மா அறிவு ஸ்வரூபமாக இருக்கின்றது.

म्रुत्यो रूपाणि – ம்ருத்யோ என்பது அக்ஞானத்தை குறிக்கிறது, ரூபாணி என்பது சுட்டிக்காட்டுதல் என்று பொருள் கொள்ள வேண்டும்.
நம்முடைய ஸ்தூல சரீரம் அக்ஞானத்தை காட்டிக் கொடுக்கிறது.. ஒருவருடைய பேச்சு, செயல்கள் அவருடைய அக்ஞானத்தைக் காட்டிக் கொடுத்து விடும்.

சங்கரரின் விளக்கம்:
புத்தமதக் கொள்கை: நாம் பார்க்கும் உலகம் சத்யம், இதை பிரத்யக்‌ஷ பிரமாணம் மூலம் அறியலாம்.
அனுமானத்தின் மூலமும் அறியலாம். ஷணிகவாதிகல் சூன்யவாத கொ:ள்கையுடையவர்கள்,
இவர்களது கொள்கை இந்த உலகம் அஸத், உண்மையல்ல என்பதுதான். இதில் மூன்று பிரிவுகள்.
நம்முடைய அறிவில் ஒவ்வொரு க்ஷணமும் எண்ணங்கள் தோன்றி மறையும் அதுவே ஆத்மா அதுவே சத்யம்.
ஒவ்வொரு எண்ணமும் நான் என்று நினைப்பதால்தான் நாம் அது கொடுக்கும் இன்பதுன்பத்தை அனுபவிக்க நேரிடுகிறது.
அந்த எண்ணங்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று நினைத்தால் அதன் விளைவிலிருந்து பாதிக்காமல் இருக்கலாம்.

கேள்வி: புத்தமத கொள்கை: ஷணிக விக்ஞானம்தான் ஆத்மா, அதற்கு மேல் ஒன்றும் கிடைப்பது.
அனுமானம் நம்முடைய புத்தி என்பது தன்னையும் மற்ற பொருட்களையும் விளக்குகின்றது.
ஏனென்றால் அது என்றுமே பிரகாசமாக இருப்பதால்தான் உணர்வுடன் இருப்பதால்தான்.
புத்தி தீபத்தைப்போல. புத்தி பானைப் போல் ஜடம் என்றால் அதை எனக்கு காட்டு என்று கேட்கிறான்.
பதில் தீபம் தன்னையே விளக்கவில்லை. அதற்கு கர்ம-கர்த்ரு விரோதம் என்ற தோஷத்தின்படி அது அதையையே விளக்க முடியாது.
Subject, Object இரண்டுமே ஒன்றாக இருக்க முடியாது.

எப்பொழுது ஒன்று செய்கிறது என்று சொல்ல முடியும் என்றால், அது எப்போதாவது அந்த செயலை செய்யாமல் இருந்திருக்க வேண்டும்.
எனவே தீபம் தன்னைத்தானே விளக்குகிறது என்று சொல்ல வேண்டுமானால் முன்பு அது தன்னையே
விளக்கிக் கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும். எனவே புத்தி தன்னைத்தானே விளக்கிக் கொள்ள முடியாது.

இந்த தீபம் கண்ணை சார்ந்திருக்கிறது. எனவே உன்னுடைய உதாரணம் தவறு.
புத்தியை பிரகாசபடுத்துவது ஆத்மா, அதுதான் நித்ய ஜோதி. நாம் ஆத்மாவை விளக்க வேறொன்றும் தேவையில்லை.
அது தன்னையே விளக்கவில்லை என்று சொல்லவில்லை.

கேள்வி நாங்கல் இதை எற்றுக்கொள்ளமாட்டோம். ஷணிக விக்ஞானம்தான் சரியானது.
தோன்றி மறைந்து கொண்டிருக்கும் பிரவாகம்தான் பரம்பொருள், அறிவுதான் பிரவாக ஸ்வரூபம்.
பதில் இப்படி இருந்தால் सर्व विवकारम लोपः எந்த விவகாரமும் ஒழுங்காக நடக்காது. சாதனம், சாத்தியம் என்பதே இருக்காது.
காரண-காரியமே இருக்காது. உதாரணமாக கனவில் நடக்கும் விவகாரங்கள் எதுவுமே ஒழுங்காக இருக்காது, தொடர்ச்சியாக இருக்காது.
எது எப்படி வேண்டுமானாலும் திடீரென்று மறையும், தோன்றும்,உருமாறும். ப்ரத்யபிக்ஞா அஸம்பவாத் – பிரத்யபிக்ஞாவே நடக்காது.
பிரத்யக்‌ஷம் – முதன் முறையாக பார்க்கும்போது கிடைக்கும் அனுபவம்
ஸ்மிருதி – வீட்டிற்கு சென்று நினைப்பது
பிரத்யபிக்ஞா – மீண்டும் பார்க்கும் அந்த அனுபவம், இவரை ஏற்கனவே எனக்கு தெரியும் என்று
அடையாளம் கண்டு கொள்ளுதல் இவைகள் ஒரு பொருளினுடைய தொடர்ச்சியை உறுதி செய்கிறது.
விருத்தி ஞானம் ஸத்யமென்றால், வஸ்துவிடமும் ஸத்யமாக, தொடர்ந்து இருக்கின்றது.
ஆகவே உன்னுடைய க்ஷணிக விக்ஞானப்படி மனதில் தோன்றும் எண்ணங்களும் மித்யாதான்.

கேள்வி பிரத்யபிக்ஞா என்பதே கிடையாது. ஏற்கனவே பார்த்தப் பொருளையே பார்க்கும் போது உனக்கு அப்படி தோன்றுகிறது.
உண்மையில் நீ பார்க்கும் ஒவ்வொரு பொருளும் நீ பார்க்கும் போது நேரத்தில் தோன்றும் தோற்றம்.
ஒரே மாதிரியாக இருப்பதால் உனக்கு தொடர்ச்சியாக இருப்பதுபோல் தோன்றுகிறது.
பதில் सा द्रुष्टँ உன்னுடைய இந்த கருத்து உன்னுடைய கொள்கைக்கே விரோதமாக இருப்பதால் இது நிராகரிக்கப்படுகிறது.
உன்னுடைய கையில் வைத்திருக்கும் பொருள் யாருடையது? என்று ஒருவன் கேட்க அதற்கு அவன் என்னுடையது என்று சொல்கிறான்.
என்னுடையது என்கின்ற விவகாரம் நடக்காது. ஏனென்றால் உன்னுடைய கொள்கைப்படி ஒவ்வொரு க்ஷணத்தில் விஷயம் தோன்றி மறைகிறது.
என்னுடையது என்பதில் உன்னுடைய விருத்தி வேறாக இருக்கிறது, பொருள் வேறாக இருக்கிறது. எனவே இதுவும் உன்னுடைய கொள்கைக்கு வேறாகிறது.

நீ எந்தப் பொருளுக்கும் பெயர் வைக்க முடியாது. க்ஷணத்தில் தோன்றி மறைவதால், பெயர் கொடுத்தாலும் அது மறைந்து விடுகிறது.
க்ருத நாசம் தோஷம்: கர்ம செய்தவன் அழிந்து விடுகிறான் அதன் பலனை வேறொருவன் அனுபவிக்கின்ற நிலை ஏற்படும்.
விக்ஞானம் சத்யமென்றால், விதவிதமான விஷயங்கள் இருக்கிறதே? அவன் சொல்கிறான்,
விஷயங்கள் எல்லாம் விக்ஞானத்திற்கு அடைமொழியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் விருத்த அம்ச தோஷம் வந்துவிடும்.
இரண்டு விருத்தமான குணங்கள் ஒரே விஷயத்தில் இருக்க முடியாது. மென்மையான, கடினமான பாறை என்று சொல்ல முடியாது.

இந்த அடைமொழிகள் எல்லாம், விக்ஞானத்திற்கு அசுத்தியாக உள்ளது. க்ஷணிக விக்ஞானம் சத்யம்.
இப்படி சொல்வதால் உன்னை அறியாமல் அசுத்தி என்ற வேறொன்றை ஒத்துக் கொள்வது போல இருக்கிறது.
இந்த அசுத்திதான் அதன் தன்மையாக இருக்கிறது என்று சொன்னால் மோக்‌ஷம் என்பதே அடையவே முடியாது.
அசுத்தியை நீக்க முடியாது. எனவே உன்னுடைய கருத்துப்படி மோக்‌ஷம் என்பதை அடையவே முடியாது

ஸ்லோகம்-8
ஆத்மா வருகிறது, போகிறது என்பதெல்லாம் உண்மையில் கிடையாது. ஜென்ம லக்‌ஷணம், மரண லக்‌ஷணம், சரீரத்தின் ஸ்வரூபம் என்ன?

1. காரிய-காரணாத்மகம் – சரீரம் காரிய ஸ்வரூபமாகவும், காரண ஸ்வரூபமாகவும் இருக்கிறது.
ஒரிடத்தில் இருந்து செயல்படுவதற்கு சரீரம் உதவுகிறது. செயல்படுவதற்கு உதவியாக இருப்பதும்,
செயல்படுவதற்கு உதவியாக இருக்கும் கருவிகள் இருக்கும் இடமாகவும் சரீரம் இருக்கிறது.
2. தர்ம-அதர்ம ஆஸ்ரயம் – பாவ-புண்ணியங்களுக்கு உறைவிடமாக இருக்கிறது
3. தர்ம-அதர்ம ஜனகம் – பாவ-புண்ணியத்தை தோற்றுவிக்கிறது, உற்பத்தி செய்கிறது
4. சரீரம்தான் இகலோக, பரலோகத்திற்கு சென்று வருகிறது
5. எப்பொழுது ஒரு பொருள் மீது நாம் அபிமானம் வைக்கிறோமோ அப்பொழுதே அது பிறந்து விடுகிறது
6. எந்த நேரத்தில் ஒரு பொருளின் மீது பற்றுவிட்டு போகிறதோ அது அப்போதே மரணத்தை அடைந்து விடுகிறது.

மந்திரவிளக்கம்:
सः वै – அந்த अयँ पुरुषः – இந்த புருஷன் செயலற்றவன், எதனோடும் ஒட்டாதவன்,
जायमानः பிறக்கின்றான், शरीरम अभिसँपद्यमानः சரீரத்தில் அபிமானம் வைக்கிறான்
पाप्मभिः பாவ-புண்ணியங்களுடன், தர்ம-அதர்மங்களுடன்; பாவ-புண்ணியங்களை தாங்கிக் கொண்டிருக்கின்ற
மனம், புத்தி, இந்திரியங்களுடன் சம்பந்தம் ஏற்பட்டிருக்கிறது
सँस्रुज्यते சம்பந்தம் ஏற்பட்டு விடுகிறது.
सः उत्क्रामन – சரீரத்திலிருந்து அபிமானத்தை விடுதல்
म्रियमान – மரணமடைதல்
पाप्मनः विजहाति – பாவ-புண்ணியங்கள் விட்டு விலகுகிறது.
தேகம் முதலியவைகள் ஆத்மாவின் சுபாவமல்ல. காரணம் சம்யோக, வியோக என்பதாக இருக்கிறது அதாவது பிறத்தல், இறத்தல் என்ற நிலை இருப்பதால்.

ஸ்லோகம்-9
இதில் ஸ்வப்ன அவஸ்தையை விளக்கப்படுகிறது
· ஆத்மா ஸ்வயம் ஜோதி
· பரலோக அஸ்தித்வம் – நமக்கு மறுபிறவி இருப்பதை உறுதி செய்கிறது
· ஆத்மாவுக்கு சரீரத்தோடு சம்பந்தம் வைக்கும்போதுதான் சம்சாரம். ஆனால் உண்மையில் அதற்கு சம்சாரமில்லை.
· நாம் அனுபவிக்கக்கூடிய அவஸ்தைகளுடைய இருப்பிடம் மனதுதான். அவஸ்தைகளுடைய சாட்சியாக இருப்பது ஆத்மா.
மறுஜென்மம் உண்டு என்பதை கனவு நிலையை வைத்து உறுதி செய்யப்படுகிரது.

கனவு நிலை-1: நான் ஸ்தூல சரீரத்திலிருந்து வேறுபட்டவன்
கனவு நிலை-2: கனவில் காண்பதெல்லாம் மித்யா என்ற அறிதல், உறுதி செய்தல்

இங்கு ஜீவனுக்கு இரண்டு உலகங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
ஒரு லோகம் இந்த ஜென்மத்தில் அனுபவிக்கும் இந்த லோகம் இரண்டாவது பரலோகம்,
இது முற்பிறவியில் இருந்த லோகம் அல்லது மறு பிறவியில் இருக்கப்போகும் லோகம்.
நாம் குழந்தையாக இருக்கும்போது முதல் மூன்று கண்ணுக்கு பார்க்கும் சக்தி கிடையாது.
குழந்தை திடீரென்று அழும், சிரிக்கும், இதற்கெல்லாம் காரணம் பூர்வ ஜென்மத்தின் அனுபவங்கள், வாஸனைகள்,
விஷயங்கள் கனவில் வருவதால். குழந்தைக்கு இகலோக அனுபவம் கிடையாது.
பிறகு மரணமடைவதற்கு முன் இந்த ஜென்மத்தில் தோன்றிய ஸம்ஸ்காரங்களைத்தான் கனவில் அனுபவிப்பான்.
மரண படுக்கையில் இருக்கும்போது இகலோக எல்லா இந்திரியங்களும் சக்திகளை இழந்து விட்டிருக்கும்,
இகலோக ஸம்ஸ்காரங்கள் செயல்படாது. அடுத்த ஜென்மம் பற்றிய விஷயம் ஆரம்பமாகி விடும்.
அவர்களுடைய கனவில் வரப்போகும் ஜென்மத்தின் ஸம்ஸ்காரங்களை அனுபவிக்க ஆரம்பித்து விடுவான்.
ஸம்ஸ்காரங்கள் இல்லாமல் கனவு வராது குழந்தை பூர்வ ஜென்ம ஸம்ஸ்காரங்களையும், மரண நிலையில் வரப்போகும்
ஜென்மத்தில் ஸம்ஸ்காரங்களையும் அனுபவிக்கிறோம். எனவே கனவு நிலை என்பது நம்முடைய மறு ஜென்மம் இருப்பதை நிரூபிக்கிறது.

மந்திரவிளக்கம்:
ஜீவனுக்கு இரண்டு இடங்கள் அனுபவிப்பதற்கு இருக்கிறது. அவைகள் இகலோகம்-இப்பொழுது அனுபவித்து கொண்டிருக்கும் உலகம்,
பரலோகம்-முற்பிறவியிலும், அடுத்த பிறவியிலும் அனுபவிக்கப்போகும் உலகம்.
சந்த்யம் த்ருதீயம் ஸ்வப்ன ஸ்தானம் – இந்த கனவு நிலையில் இருந்து கொண்டு இரண்டு உலகங்களை அனுபவிக்கின்றான்.
குழந்தையாக இருக்கும்போது முற்பிறவி லோகத்தையும், மரணதறுவாயிலிருக்கும்போது பரலோகத்தையும் அனுபவிக்கின்றான்.
தஸ்மின் ஸந்த்யே ஸ்தானே- இந்த இடைவெளியில் கனவு நிலையில்
திஷ்டன் ஏதே உபே ஸ்தானே பஷ்யதி: இந்த இடைவெளியில் ( முற்பிறவி உலக விஷயங்கள் அனுபவிக்கும் உலகம்,
அடுத்த பிறவி உலகத்தை அனுபவிக்கும்) இப்போது இருந்து கொண்டே இந்த் இரண்டு உலகங்களையும் அனுபவிக்கின்றான்.

எதன் அடிப்படையில் இந்த ஜீவனுக்கு அடுத்த ஜென்மம்.
அத4 யதா4 ஆக்3ரம அயம்- நம்மிட்த்தே வெளிப்படுகின்ற பாவ-புண்ணியங்களை பொறுத்து அடுத்த பிறவி நிர்ணயிக்கப்படுகிறது.
இது சஞ்சித கர்மத்திலிருந்து வெளிப்படுகிறது. அங்கிருந்து ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு அந்த பிராரப்த்தை அனுபவிகின்றான்.
ஆக்கிரமஹ à தர்ம-அதர்ம அல்லது பாவ-புண்ணியங்கள்
இவன் எப்படிப்பட்ட பாவ-புண்ணியத்தை சஞ்சிதகர்மத்திலிருந்து எடுக்கிறானோ அதன் அடிப்படையில் சுக-துக்கங்களை
அடுத்த பிறவியில் அனுபவிக்கிறான். இதிலிருந்து மறுபிறவி உறுதி செய்யப்படுகிறது.

ஆத்மா ஸ்வயம் ஜோதி விசாரம்:
விழிப்பு நிலையில் சாக்ஷி சைதன்யம் மனதை பிரகாசிக்கிறது. மனம் பிரகாசப்படுத்தப்பட்ட உடன் அது இந்திரியங்கள்,
உலகம் இவைகளை பிரகாசிக்கிறது. இந்த நிலையில் சைதன்யம், மனம் என்ற இரண்டு ஜோதிகள் இருக்கின்றன.
நம்முடைய அனுபவத்தில் மதால்தான் எல்லாவற்றையும் அறிகிறோம். மனம் உறங்கியதும் உலகம் கிடையாது.
இந்த நிலையில் சைதன்யம் என்பது ஒன்று இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இதை புரிந்து கொள்ள மனமே தடையாக இருக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தில் ஒன்றுமே இல்லை.
அந்த நிலையில் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றும் நமக்கு தெரியவில்லை, கனவு நிலையில் சாக்ஷி சைதன்யம் மனதை பிரகாசிக்கிறது.
ஆனால் மனம் அது பார்க்கப்படும் பொருளாக இருக்கிறது. விழிப்பு நிலையில் உடலையும், உலகையும் விளக்கிக்கொண்டிருக்கின்ற
மனம் கனவு நிலையில் வெறும் அனுபவிக்கப்படும் பொருளாக மட்டும் இருக்கின்றது.
இந்த நிலையில் வாஸனா மயமாக மனமானது பரிணாமத்தை அடைந்து, அதுவே கரணமாக மாறியிருக்கிறது.
பார்ப்பவனாகவும் பார்க்கப்படும் பொருளாகவும் மாறியிருக்கிறது. இதைப்பார்க்கும் பொருள் எது? அதை யார் விளக்குகிறது?
மனதிற்கும் வேறாக அதை பிரகாசிக்கக்கூடிய ஒன்று இருக்க வேண்டும்.
எனவே கனவில் ஆத்மா தானாக ஒளிர்ந்து கொண்டு மனதையும் விளக்குகின்றது.
இவ்விதம் ஆத்மா ஸ்வயம் ஜோதி என்று சந்தேகமில்லாமல் விளங்குகின்ரது. கனவு நிலை இதை உறுதிப்படுத்துவதற்கு உதவியாக இருக்கிறது.

கேள்வி மனமே ஸ்வயம் ஜோதியாக எண் இருக்கக்கூடாது?
பதில் இதை ஏற்றுக் கொண்டால் ஐந்து வகையான குறைகள் தெரிய வரும். மனதை ஜடமாக பார்க்கும் வாய்ப்பே
நமக்கு கிடைக்கவில்லை அதனால்தான் மனதை ஜடமாக எற்றுக் கொள்ள முடியவில்லை.
1. அநித்யத்துவ பிரசங்கம்: மனம் விகாரமடையும் (மாற்றம்) என்ற தன்மையுடன் இருக்கிறது. எது விகாரத்துடன் கூடியுள்ளதோ
அதற்கு அழிவும் இருக்கிறது. இப்படி மனமானது அநித்யமாக இருப்பதால் சைதன்யமே இல்லாததாகி விடும்
எனவே மனதை ஸ்வயம் ஜோதி என்று சொல்ல முடியாது. .
2. மனஸஹ அஸம்பவாதி: மனதிற்கு லய அவஸ்தையே சம்பவிக்கிறது
3. மனம் என்ற சூட்சும ஸரீரம் எந்தவொரு அறிவை அடைய வேண்டுமென்றாலும் மனதில் எண்ணங்கள் வரவேண்டும்.
அந்த எண்ணங்களாக மனமே மாறி, அறிவை அடைகின்றோம் அப்படி எண்ணங்கள் வரவில்லையென்றால் அறிவு கிடைக்காது.
மனதால் இதை அறிகிறேன் என்பதை அறிய செய்ய முடியாது வேறொன்றுதான் அதை செய்ய முடியும்.
ஒரே க்ஷணத்தில் மனம் உலகத்தை விளக்கும்போது அதை வேறொன்று விளக்கிக் கொண்டிருக்கிறது என்பது தெரிய வருகிறது
அதுதான் என்றும் சாக்ஷியாக இருக்கும் ஆத்மாவாகத்தான் இருக்க வேண்டும்.
4. ஸ்ருதி விரோதாத்: ஸ்ருதி மனம் ஜடம் என்று கூறியிருக்கிறது. பஞ்ச சூட்சும பூதங்களிலிருந்து உருவாகியதுதான்
மனம் என்பதால் அது ஜடம் என்று அறிந்து கொள்ள முடிகிறது.
5. அநிர்மோக்ஷம் பிரசங்கஹ: மோக்‌ஷம் என்ற ஒன்றே இருக்க முடியாது. சம்சாரியாக விகாரத்துடனிருக்கும்
மனதை ஏற்கனவே அடைந்து விட்டோம். எனவே மோக்ஷம் என்பது சம்பவிக்காது
மேற்கூறிய கருத்துக்களிலிருந்து மனமானது ஸ்வயம் ஜோதியாக இருக்க முடியாது என்று நிரூபணமாகிறது.

மனமே சாக்ஷி சைதன்யத்துக்கு பார்க்கப்படும் விஷயமாகவும், கரணமாகவும், பார்ப்பவன் என்ற மூன்று நிலைகளாக மாறி
நமக்கு கனவு அனுபவம் ஏற்படுகிறது.
ஸஹ யத்ர ப்ரச்வமிதி – ஜீவன் எப்பொழுது கனவை அனுபவிக்கின்றானோ;
அஸ்ய லோகஸ்ய ஸர்வாவதஹ – ஸ்தூல சரீர அபிமானியாக இருக்கிற விஸ்வனே அனைத்தும் உடையவனாக (ஸர்வாவதஹ) இருக்கிறான். ஐந்து தத்துவங்களை உடையவனாக இருக்கிறான். இந்த ஐந்தும் இருந்தால்தான் ஜாக்ரத் அவஸ்தையில் உலகத்தை அனுபவிக்க முடியும். அவைகள் ஸ்தூல சரீரம், கரணம், கரண தேவதா, விஷயம், வாஸனா (பார்த்த, செய்தது பதிவாகியிருக்கும் நினைவகம்)
மாத்ராம் அபாதாய – வாசனையை மட்டும் எடுத்துக் கொண்டு, தைஜஸன் விஸ்வனிட-மிருந்து வாஸனையை மட்டும் எடுத்துக் கொண்டு
ஸ்வயம் விஹிதிய – ஸ்தூல சரீரத்தை தியாகம் செய்து விட்டு
ஸ்வயம் நிர்மாய – தானே ஒரு உலகத்தை உருவாக்கி
ஸ்வேன பாஸா – விருத்தி ரூபமாக அனத்தும் உருவாகி
ஸ்வேன ஜோதிஷா– சாக்ஷி சைதன்யத்தின் ஜோதியினால்
ப்ரஸ்வமிதி – அவன் தூங்குகிறான், கனவை காண்கின்றான்.
அத்ர அயம் புருஷ இந்த ஸ்வப்ன அவஸ்தையில், இந்த சாக்ஷியானவன்
ஸ்வயம் ஜோதி பவதி – சுய ஜோதியாக விளங்கிக்கொண்டிருக்கிறது.

ஸ்லோகம்-10
ஸ்வப்ன பிரபஞ்சம் மித்யா என்று விளக்குதல்.
கயிற்றில் தோன்றும் பாம்பும் வாஸனையிலிருந்து வந்த விருத்தி கனவில் பிரபஞ்சமாக உருவாகிறது

கேள்வி: கனவு பிரபஞ்சம், விழிப்பு நிலையின் தொடர்ச்சிதான். எனவே ஜாக்ரத் அவஸ்தை எவ்வளவு சத்தியமோ
அதே அளவு சத்தியம்தான் கனவும். காரணம் விழிப்பு நிலையில் எப்படி அனுபவிக்கிறோமோ அதே மாதிரிதான் கனவு நிலையிலும் கர்த்தா, கரணம், விஷயம் என்று இருக்கிறது. எனவே கனவு மித்யா என்று எப்படி சொல்வாய்?
பதில் கனவில் பார்ப்பதெல்லாம் வாஸனையிலிருந்து உருவாக்கப்பட்டவை, பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டதில்லை.

மந்திரவிளக்கம்:
தத்ர: அங்கு (கனவு நிலையில்) ந ரதஹ – ரதங்கள் கிடையாது.
ந ரதயோஹ – ரத்த்தை ஒட்டும் குதிரைகள் கிடையாது; ந பந்தானஹ – பாதைகள் கிடையாது
நாம் பார்க்கும் இவைகள் உண்மையில் இல்லை எனவே மித்யா என்பது நிரூபணமாகிறது.
ஆனால் இவைகளெல்லாம் வாஸனையிலிருந்து தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.
ந தத்ர ஆனந்தாஹா, முதஹ, பிரமுதஹ – பிரியம், மோதம், பிரமோதம் என்ற மூன்று நிலைகளும் கனவில் இல்லை.
இது விஷயத்தின் காரியமான ஆனந்தம் கிடையாது. விஷய நிமித்த சுகமும் கிடையாது.
இவையும் வாஸனையிலிருந்துதான் உருவாக்கப்படுகிறது. கனவில் பார்க்கும் பொருட்களும் பொய்யானது
அதிலிருந்து அனுபவிக்கும் சுகமும்-துக்கமும் பொய்யானது. இவைகள் வாஸனையிலிருந்துதான் தோன்றியுள்ளது.
அதுபோல கனவில் பார்க்கும் குளம், குட்டை, ஆறு, ஏரி இவைகளெல்லாம் உண்மையில் தோற்றுவிக்கப்பட-வில்லை.
இவைகளையெல்லாம் உருவாக்குபவன் கனவு காண்பவந்தான். இந்த ஜீவாத்மாதான் கர்த்தாவாக இருக்கின்றான்.
விழிப்பு நிலையிலுள்ள வஸ்துவிற்கு கர்த்தா ஈஸ்வரன்.

ஸ்லோகம்-11
இந்த விஷயத்தை விளக்கும் ஸ்லோகங்கள் எடுத்துக்காட்டாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஹிரண்யமயஹ; புருஷஹ; ஏக ஹம்ஸஹ – இவைகள் ஆத்மாவின் ஸ்வரூபங்கள்
ஹிரண்யமயஹ – சைதன்ய ஜோதி ஸ்வபாவஹ – சைதன்யத்தை ஜோதியாக, ஸ்வரூபமாக கொண்டது.
புருஷஹ: காரியம்-கரணாதி ஸர்வம் பூரயதி இதி புருஷஹ: ஆத்மா என்ற தத்துவம் நம்முடைய சரீரத்தை முழுவதுமாக வியாபித்திருக்கிறது.
ஏகஹம்ஷஹ: உண்மையில் நிலையாக இருந்து கொண்டு, சிதாபாஸ ரூபமாக தன்னை மாற்றிக் கொண்டு
ஒரு லோகத்திலிருந்து இன்னொரு லோகத்திற்கும், சரீரத்திற்குள்ளே ஒரு அவஸ்தையிலிருந்து வேறொரு அவஸ்தைக்கு சென்று வந்து கொண்டிருக்கிறது
ஸ்வப்னே வாஸனா மாத்ர லோகேன பாவனயா – கனவு மயமான உலகத்தை உருவாக்கி அதில் அபிமானிக்கும் போது
ஸாரீரம் அபிப்ரஹதியா – ஸ்தூல சரீரத்தை, செயலற்றதாக, ஜடமாக மாற்றி
அஸுப்தஹ – நிர்குண ஆத்மா, சாக்ஷி சைதன்யம், எப்பொழுதும் உறங்காதவன்
அலுப்த த்ருக் – இடைவிடாமல் பார்த்துக் கொண்டிருப்பவன்.
ஸுப்தான் – வாஸனா பிரபஞ்சத்தை
அபிசாகஸீதி – சாக்ஷியாக பார்த்துக் கொண்டிருப்பது; எந்தவித செயலும் செய்யாமல் பார்த்துக் கொண்டிருப்பவன்.
தைஜஸன் உருவான பின் விஸ்வன் உறங்கி விட்டான் அவனையும், அவன் உருவாக்கிய கனவு உலகத்தையும் சாக்ஷியாக பார்த்துக் கொண்டிருக்கும்
புனஹ: விழிப்பு நிலை வாசனை செயல்பட ஆரம்பிக்கும்போது சரீரம் தன்னுடைய இந்திரியங்களை எடுத்துக் கொண்டு மீண்டும் விழிப்பு நிலைக்கு வருகின்றான்.

ஸ்லோகம்-12
பிராணேன ரக்‌ஷன் அஹம் குலாயம் – ஐந்து பிராணன் மூலமாக இந்த ஸ்தூல சரீரமானது பாதுகாக்கப்படுகிறது.
இந்த ஸ்தூல சரீரமானது பூமியோடு கலந்து உறங்கப்போகிறது.
பஹவுகுலாயாத்- இந்த சரீரத்திலிருந்து அபிமானத்தை விட்டு வெளியே சென்று
சரித்வா – கனவுலகை அனுபவித்துக் கொண்டு
சஹ ஈயதே யத்ர காம்ம் – எப்படிப்பட்ட ஆசையானது மனதிற்குள் திடமாக இருந்து எண்ணங்களாக வெளிபட்டு அதை கனவில் அடைகிறான்.

ஸ்லோகம்-13
இந்த மந்திரத்தில் கனவுக்கு வாசனையிலிருந்துதான் வெளிப்படுகிறது. எந்த வாசனை வெளிப்படும் என்றால்
நமது கர்மவினை, திடமான ஆசை இவைகளின் அடிப்படையில்தான் கனவு நிலையிலும் நாm பிராரப்த கர்மத்தை அனுபவித்து கழிக்கிறோம்.
ஸ்வனாந்த – கனவு அவஸ்தையில்; உச்சா அவச்சாம் – மேலான, கீழான,
ஈயமான – அடைந்து, தேஹ பஹுனி ரூபானி – நமக்குள் இருக்கும் சைதன்ய ஸ்வரூபம் பலவிதமான தோற்றங்களை,
வாஸனைகளின் அடிப்படையில் உருவாக்குகிறது.
கனவுக்கு உபாதானகாரணம் கர்மவினை, நிமித்தக் காரணம் வாஸனை அதிஷ்டான காரணமாக
இருந்து கொண்டிருப்பது சைதன்ய ஸ்வரூபம். கனவை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நமக்கு கிடையாது.
உத ஏவ – இவையெல்லாம் மித்யாவான பொருட்களை
சஹ மோதமானே- இவைகளையெல்லாம் அனுபவித்து இன்புறுகிறான்’
ஜக்வித் உதே ஏவ – மகிழ்ந்து கொண்டு
பயானி பஷ்யன் – பயத்தைக் கொடுக்கின்ற, துயரத்தைக் கொடுக்கின்ற காட்சிகளை உருவாக்குகிறான்

ஸ்லோகம்-14
அஸ்ய-இந்த ஜீவன்கள்;
ஆராமம் – கனவில் உருவாக்கிய பொய்யான உலகத்தை
பஷ்யந்தி – அதுதான் உண்மையென்று மனிதர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள்
தம் ந பஷ்யதி கஷ்சன – யாரும் உண்மையை பார்ப்பதில்லை
தம் ஆயதம் ந போத்யேத் – ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கின்றவர்களை அவசரமாக எழுப்பிடக் கூடாது.
இதி ஆஹுஹு – மருத்துவர்கள் இவ்வாறு எச்சரிப்பார்கள்
துர் விஷ்ஜம் – இவ்வாறு எழுப்பியவர்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பதற்கு மிகவும் கடினம்.
யம் ஏஷ ந பிரதிபத்யதே – இந்திரியங்கள் தத்தம் நிலையிலிருந்து கனவுலகிற்கு சென்றிருக்கும். ஒடுங்கிய நிலக்கு சென்றிருக்கும்,
ஸம்ஸ்காரங்களும் செயல்பட்டு கொண்டிருக்கும். திடீரென்று எழுப்பினால் இந்திரியங்கள் அதனது கோளகத்திற்கு வந்து சேர வேண்டும்,
ஸம்ஸ்காரங்களும் ஒடுங்கிய நிலைக்கு செல்ல வேண்டும். இது நடைபெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.
அதோகலு அஹுஹு – அய்யய்யோ இப்படி கூறுகிறார்கள் அக்ஞானிகள்
ஜாகரிட்தேஷ ஏவ அஸ்ய ஏஷ இதி – கனவும், ஜாக்ரத் அவஸ்தையின் ஒரு அங்கமாக இருக்கிறது.
யானி ஹ்யேவ ஜாக்ரத் பஷ்யதி – அதை இவன் விழிப்பு நிலையில் எதை பார்க்கிறானோ
தானி சுப்த இதி – அதைத் தான் கனவிலும் காண்கிறான். அதனால் கனவு விழிப்பு நிலையின் ஒரு அங்கமாக இருக்கிறது
அத்ர அயம் புருஷஹ ஸ்வயம் ஜ்யோதிர் பவதி – கனவு நிலையில் அந்த புருஷன் ஸ்வயம் ஜோதியாக இருக்கின்றான்.
ஜனகர் இதுவரை பெற்ற உபதேசத்திற்காக மேலும் ஆயிரம் பசுக்களை குரு காணிக்கையாக தருகிறேன் என்று கூறி
மோக்‌ஷத்தை பற்றி மேலும் விளக்குங்கள் என்று வேண்டினார்.
மீண்டும் அதையே உபதேசம் செய்ய சொல்வதற்கு காரணம் ஜனகருக்கு இன்னும் முழுமையாக நிர்குண பிரம்மத்தை புரிந்து கொள்ளாததால்தான்.

ஸ்லோகம்-15
ஆத்மா அஸங்கம்தான் என்று நிலை நாட்டப்படுகிறது. கர்மத்திலிருந்தும் அஸங்கம், அனாத்மாவிலுருந்தும் சம்பந்தமற்றவன்.
· கரணங்கள் இல்லையென்றால் கர்மம் பண்ண முடியாது
· கர்மம் செய்து விட்டால் பலனை அனுபவித்துத்தான் தீர வேண்டும்.
கனவில் ஒருவன் ஏதோ ஒரு பாவ காரியம் பண்ணியிருக்கின்றான். அதன் பலனை அனுபவிக்க வேண்டும்
ஆனால் விழித்தவுடன் அவன் அதற்கான பலனை அனுபவிக்க மாட்டான். கர்மம் பண்ணியது தைஜஸன் அவன் மறைந்த பிறகு
விஸ்வன் அனுபவிக்க வேண்டியத்தில்லை. எனவே ஆத்மா மூன்று நிலையிலும் இருக்கிறான்
ஆனால் எந்த கர்மத்திற்கும் சம்பந்தம் இல்லை. இதனால் ம்ருத்யூ ரூபங்களில் மட்டும் தாண்டி செல்லவில்லை,ம்ருத்யூவையும் கடந்து செல்கின்றான்.

மந்திரவிளக்கம்:
सः वै ऎशः அவனே ஆத்மா. அவன் என்பது விஸ்வனாகவோ, தைஜஸனாகவோ, பிராக்ஞனாகவோ இருக்கலாம்
एतस्मिन सँप्रसादः – இந்த சூழ்நிலை உறக்கத்தில் தற்காலிகமாக சம்சாரத்தை கடந்து விடுகிறான்.
ப்ரஸாதம் : அமைதியாக இருத்தல்;
ஸ்ம்ப்ரஸாதம்: முழுமையாக மகிழ்ச்சியாக அமைதியாக இருத்தல்.
रत्वा चरित्वा, द्रुष्टवा एव पुण्यँ च पापँ च : கனவு நிலையில் மகிழ்ச்சியாக அங்குமிங்குமாக அலைகிறான்,
புண்ணியத்தையும் பாவத்தையும் அனுபவிக்கின்றான். அதாவது சுக-துக்கத்தை அனுபவிக்கின்றான்.
पुनः மீண்டும், प्रतिन्यायँ – போன வழியில் கனவு-ஆழ்நிலை உறக்கத்திருந்து திரும்பி வருகின்றான்; प्रतियोनि आद्रवति – கனவு நிலைக்கு வந்து விடுகின்றான்
स्वप्नाय एव – கனவை அனுபவிப்பதற்கு
सः तत्र – எது இவ்வாறு இங்கும் அங்கும் சென்று வரும்போது
यत किँचित पष्यति – எதையெல்லாம் பார்க்கின்றானே, அனுபவிக்கின்றானோ
अनन्वा कतस्तेन भवति – அவன் பார்க்கப்படும் பொருட்களால் தாக்கப்படாதவன், பாதிக்கப்படாதவன்
असङ्ग ह अयम पुरुष इति – அவனுடைய ஸ்வப்னமே அஸங்கமாக இருக்கிறது
எனக்கு யாரோடும் சம்பந்தமற்றவன் என்ற நிலையில் வந்து விட்டால், நாம் யாராலும் தாக்கப்படாமல் இருப்போம்.
एवँ एव एतद – இப்படியே எற்றுக்கொள்கிறேன்
என்று கூறிய ஜனகர் அதற்கு காணிக்கையாக மேலும் ஆயிரம் பசுக்காள் குருதட்சிணையாக தருகிறேன் என்றும் கூறினார்.
மேலும் எனக்கு மோக்‌ஷத்தைப் பற்றி உபதேசியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

ஸ்லோகம்-16
சுக-துக்கங்களை ஸ்வப்னத்தில் அனுபவித்து விட்டு மீண்டும் விழிப்பு நிலைக்கு வந்து விடுகின்றான்.
இந்த விஸ்வன் விழிப்பு நிலையில் எதையெல்லாம் பார்க்கின்றானோ அதனால் தாக்கப்படவில்லை ஏனென்றால் அவன் அஸங்கமாக இருக்கின்றான்.
एवँ एव एतद – இப்படியே எற்றுக்கொள்கிறேன்
என்று கூறிய ஜனகர் அதற்கு காணிக்கையாக மேலும் ஆயிரம் பசுக்காள் குருதட்சிணையாக தருகிறேன் என்றும் கூறினார்.
மேலும் எனக்கு மோக்‌ஷத்தைப் பற்றி உபதேசியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்

ஸ்லோகம்-17
இவன் விழிப்பு நிலையில் எல்லாவற்றையும் அனுபவித்து விட்டு மீண்டும் கனவு நிலக்கு சென்று விடுகிறான்.
இதனால் அஸங்கத்வம் நிரூபிக்கப்படுகிறது. விழிப்பு நிலையில் அனுபவிக்கப்படும் எந்தப்பொருளும் எனக்கும் சம்பந்தமில்லை
என்று புரிந்து கொண்டோமே-யானால் இதனால் பாதிக்கப்படாமலிருப்போம். கனவு நிலைக்கு செல்லும்போது
நாம் விழிப்பு நிலையில் அனுபவித்ததையெல்லாம் விட்டுவிட்டு செல்கின்றான்.
எனவே நாம் எந்தப் பொருளின் காரணமாக பாதிக்கப்பட்டோமானால் அதனோடு சம்பந்தம் வைத்திருக்கிறோம் என்று புரிந்து கொள்ள வேண்டும்,

ஸ்லோகம்-18
எப்படி பெரிய மீனானது நதியின் இரண்டு கரைகளுக்கும் சென்று வந்து கொண்டிருக்கிறதோ அதே போல
இந்த ஜீவன் இந்த இரண்டு அவஸ்தைகளுகும் சென்று வந்து கொண்டிருக்கின்றான்.
अनुसँचरति – சென்று வந்து கொண்டிருக்கின்றான் ; अयँ पुरुषः – இந்த புருஷன்; स्वप्नः अन्तँ – கனவு நிலை ; बुभान्तँ – விழிப்பு நிலை
இந்த இரு அவஸ்தைகளிலும் சம்சாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றான்

ஸ்லோகம்-19 – 30 முகவுரை
1. சம்சார உபாதி நிமித்தஹ – உபாதியின் மூலம்தான் சம்சாரம். நீரானது உஷ்ணமாக அனுபவிக்கும்போது
நெருப்பினால்தான் அது சூடாக இருக்கிறது. ஜாக்ரத், ஸ்வப்ன நிலையில் ஸ்தூல, சூட்சும சரீரம் என்ற உபாதி இருப்பதனால்தான்
நாம் சம்சாரத்தை அனுபவிக்கிறோம். ஆழ்நிலை உறக்கத்தில் உபாதிகள் இல்லாததால் சம்சாரத்தை அனுபவிப்பதில்லை.
2. சம்சாரம் சம்பந்தம் நிமித்தம்: சம்சாரம் என்பது வேறொன்றினிடத்தில் சம்பந்தம் வைக்கும் பொழுது ஏற்படுவது.
சம்சாரம் அகங்கார நிமித்தத்தினால் வருவது. ஆழ்நிலை உறக்கத்தில் எந்த சம்பந்தமும் இல்லாததால் சம்சாரம் இல்லை
3. ஆத்மனஹ அஹங்கத்வம்: ஆத்மா அஸங்க ஸ்வரூபம் என்பது இந்த ஆழ்நிலை உறக்கத்தில் அறிந்து கொள்ளலாம்.
பொருட்களின் மீது வைக்கும் சம்பந்தம் நமது சுபாவமல்ல.
4. அனாத்மாவான ஸ்தூல, சூட்சும சரீரமும் ஆத்மாவின் ஸ்வரூபமல்ல. நான் என்ற ஸ்வரூபமல்ல.
நம்முடைய அனுபவம் ஸ்தூல, சூட்சும சரீரங்களில் இருக்கிறது. இந்தக் கருத்து ஆழ்நிலை உறக்கத்தில் சரியாக இருக்கும்.
இவையிரண்டும் நமது சுபாவமாக இருந்தால் நமக்கு களைப்போ, சலிப்போ வரக்கூடாது.
ஆனால் நாம் இந்த சரீரங்களால் களைப்பு, சலிப்பு ஏற்படுகிறது. சைதன்ய ஸ்வரூபமான நான் இவையிரண்டு சரீரங்கள்
ஸ்வரூபமாக இருப்பதால் நமக்கு களைப்போ சலிப்போ இருக்கக்கூடாது. ஆனால் உண்மையில் அப்படியில்லை.
அதனால் நாம் அடிக்கடி உறங்கச் செல்கின்றோம்.
5. ஆழ்நிலை உறக்கத்தை மோக்‌ஷத்திற்கு உதாரணமாக சொல்லப்படுகிறது.

ஸ்லோகம்-19
तद्यथा अस्मिन आकाशे – எவ்விதம் இந்த ஆகாயத்தில்
श्येनः பெரிய உடல் கொண்ட கழுகு, மெதுவாக பறக்கக்கூடிய பறவை
सुपर्णो சிறிய உடல், வேகமாக பறக்கக்கூடிய கழுகு
विपरिपत्य – விதவிதமான திசைகளில் பறந்து கொண்டு
श्रान्तः களைப்பு ஏற்படுகிறது
सँहत्यः पक्षो – இறகுகளை சுருக்கிக் கொண்டு
सँलयाय ध्रियते கூட்டை நோக்கி ஓய்வெடுக்க சென்றது
एवँ एव- அது போல; अयँ पुरुषः – ஜீவனாகிய நாம்
एतस्मा अन्ताय धावति – ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்கின்றான்.
நாம் ஜாக்ரத், ஸ்வப்ன அவஸ்தகளில் ஏற்பட்ட கஷ்ட-நஷ்டங்களால் அடைந்த களைப்பினால்
நம்முடைய கூடாக வர்ணிக்கப்படும் ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்கிறோம்.
यत्रः स्प्तो – எந்த நிலையில் ஆழ்நிலை உறக்கத்தில்
न कँचन कामँ कामयते – எந்தப் பொருளுக்கும் ஆசைப்படாத நிலை
न स्वप्नँ पश्यति – எந்தக் கனவும் காண்பதில்லை.
ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும் கழுகுக்கு களைப்பு ஏற்பட்டால் அது ஓய்வெடுக்க தன் கூட்டிற்கு செல்வது போல,
ஜீவனாகிய நாம் விழிப்பு நிலையிலும், கனவிலும் உடலாலும், மனதாலும், இந்திரியங்களாலும் செய்த செயல்களினால்
ஏற்படுக் களைப்பை போக்க நமது கூடாகிய ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்கிறோம்.

ஸ்லோகம்-20
ஆழ்நிலை உறக்கத்தில் இருக்கும் நமக்கு அவித்யா நமது சுபாவமா, இல்லையா? எந்தவிதமான சம்பந்தம்? என்று விளக்கப்படுகிறது.

அவித்யா எதிராக வித்யா இருப்பதால், அது வந்தவுடன் அவித்யா சென்று விடும். எனவே அதை நம்மிடமிருந்து
நீக்க முடியுமோ அது நம்முடைய சுபாவமல்ல. ஸ்தூல, சூட்சும சரீரத்தை நீக்கி ஆழ்நிலை
உறக்கத்திற்கு போக முடிவது போல, அவித்யாவை நீக்க்கி ஆத்ம ஞானம் அடையலாம்.

ஒவ்வொரு ஜீவர்களிடம் ஹிதா என்ற பெயருடைய நாடி இருக்கிறது. இது தலைமுடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு விட்டமுடையது
அதன் வழியாகத்தான் ஜீவன் ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்கிறான். இதனால் களைப்பு நீங்கி இதமாக இருக்கிறான்.
அந்த நாடிக்குள் விதவிதமான ரஸங்கள் இருக்கின்றது. நம்முடைய வாஸனைகள் அந்த நாடிக்குள்தான் இருக்கின்றது.
அப்படி போகும்போது நாடிக்குள் இருக்கும் வாஸனைகளிலிருந்து பிராரப்த கர்ம பலன்படி சிலவற்றை எடுத்துக் கொண்டு கனவுக்கு செல்கின்றான்.
இவன் பார்ப்பவை-களெல்லாம் வெறும் தோற்றமே அது இவனிடத்தில் இருக்கும் அவித்யாவினால்தான் இந்த கனவு தோற்றங்கள் உருவாகின்றன.
இவனுக்கு எப்பொழுது அனைத்தும் நான் என்று உணரும் ஞானம் வரும்போது அவனிடத்திலிருந்து அவித்யா நீங்கி
ஆனந்தமயமான மோக்‌ஷத்தை அடைகிறான். ஆகவே ஆத்மாவுக்கு அவித்யாவும் எப்போதும் சம்பந்தம் இல்லை.

மந்திரவிளக்கம்:
ஸ்தூல உடம்பில் ஹிதா என்ற நாடி செல்கிறது. வெண்மையான, நீலமான, சிவப்பான, பச்சையான
இப்படிப்பட்ட வர்ணங்களையுடைய ரஸங்கள் நாடியில் இருக்கின்றது.
अथ यत्रः ऎनँ घ्नन्ति एव – யாரோ கொல்ல வருகிறார்கள்
जिनन्ति एव, हस्ति एव, विच्छायय एव गर्तम एव पतति – அடிமையாக இருப்பது போல, யானை துரத்துவது போல, குழியில் விழுவது போல பாவ-கர்ம வசத்தினால் கனவில் அனுபவிக்கிறோம்.
यदेव जाग्रद भयम पश्यति – ஜாக்ரத் அவஸ்தையில் எப்படி பயந்து கொண்டு சில விஷயங்களை அனுபவிக்கிறோமோ அதே போல கனவிலும் பயந்து கொண்டு சிலவற்றை அனுபவிக்கிறான்.
கனவில் தேவர்களைப் போலவும், ராஜாவை போலவும், கடவுளாகவும் நினத்துக் கொண்டு இதுதான் என் உலகம் என்று மகிழ்ந்து கொண்டிருக்கின்றான்.

இவ்விதமான ஞானத்தினால் அவித்யாவானது நீக்கப்படுகிறது.
அஹம் அஸ்மி இதம் ஸர்வஹ – நானே பார்க்கப்படும் அனைத்துமாக இருக்கிறேன் என்று ஒருவன் எப்பொழுது அறிகின்றானோ
அவன் அவித்யா நீங்கப்பெற்று முக்தனாகிறான்.
ஸஹ அஸ்ய பரமோ லோகஹ – இந்த ஞானிக்கு அவன் அடைந்த இந்த நிலையானது மிகவும் மேலானது

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ப்ருஹதாரண்ய உபநிஷத்- அத்தியாயம்-3–பகுதி -2-அக்‌ஷரம் பிரமாணம் /ஹிரண்யகர்ப்ப உபாஸனைகள்–

March 23, 2021

பகுதி-8-
அக்‌ஷரம் பிரமாணம்
ஸ்லோகம்-1
வணக்கத்துக்குரிய பிரமாணர்களே யாக்ஞவல்கியரிடம் நான் இரண்டு கேள்வியை கேட்கப்-போகிறேன்.
அவர் பதில் சொல்லிவிட்டால், யாராலும் அவரை வெல்ல முடியாது. அந்த பிராமணர்கள் அனுமதி அளித்தார்கள்.

ஸ்லோகம்-2
கார்கி, யாக்ஞவல்கியரை பார்த்து, “நான் உங்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கப் போகிறேன்.
காசி, விதேஹ நாட்டை சேர்ந்த வீர்ர்கள் வில்லில் எடுத்து அதில் இரண்டு சக்தி வாய்ந்த இரண்டு வில்லை வைத்து
பகைவர்களை பயந்தோட செய்வார்கள். அதேபோல இரண்டு கேள்விகளை உன்னிடம் கேட்கப் போகிறேன்” என்று கூறினாள்.
அவரும் நீ கேள் என்று கூறினார்.

ஸ்லோகம்-3
சுவர்க்கத்திற்கும் மேலாகவும், பூமிக்கும் கீழேயும் எது வியாபித்துள்ளதோ, இந்த இரண்டிற்கும் இடையேயும் வியாபித்துள்ளது
(எல்லா உலகத்திலேயும் வியாபித்துள்ளதோ) முன்பும் இருந்து, இப்பொழுதும் இருந்து கொண்டு,
என்றும் இருக்கப் போவதும் ரிஷிகள் அந்த சூத்ரத்தை இவ்வாறு சொல்கிறார்கள். இப்படிபட்ட தத்துவத்தை எது வியாபித்திருக்கிறது.

ஸ்லோகம்-4,5
ஆகாசம் (ஈஸ்வரன், அந்தர்யாமி) இந்த தத்துவத்தை வியாபித்திருக்கிறது. யாக்ஞவல்கியரின் சரியான பதிலுக்கு
கார்கி நமஸ்கரித்து விட்டு என்னுடைய இரண்டாவது கேள்விக்கு தயாராக இருங்கள் என்று கூறினாள். அவரும் ”கேள்” என்று அனுமத்தித்தார்.

ஸ்லோகம்-6, 7
எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும் இருக்கும் த த்துவம் ஆகாசம் என்று கூறினீர்கள் இந்த ஆகாசத்தை எது வியாபித்திருக்கிறது?

ஸ்லோகம்-8
ஹே கார்கி, “அக்ஷரம்தான் (நிர்குண பிரம்மந்தான்) என்று பிரம்மத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
பிறகு இந்த அக்‌ஷரத்தின் லக்‌ஷணத்தை நிஷேத முகமாக விளக்க ஆரம்பித்தார்.

ஞானத்தையடைந்த ரிஷிகள் அக்‌ஷரம் தான் ஆகாசத்தையும் வியாபித்திருக்கிறது என்று கூறுகிறார்கள்.
அஸ்தூலம்- மிகப்பெரியதுமில்லை;
அநஹ – மிகச்சிறியதுமில்லை;
அக்ரஸ்வம் – குட்டையுமல்ல;
அதீர்கம் – உயரமானதுமில்லை.
மேலும் இது ஒரு பொருளுமில்லை, இதற்கு அவயவங்களுமில்லை (நிர் அவயவம்), வர்ணமற்றது;
எதனோடும் ஒட்டுவதுமில்லை (அஸ்தேகம்), குணமற்றது. இது நிழலுமல்ல, இருளுமல்ல, வாயு ஸ்வரூபமல்ல,
பஞ்சபூதங்களின் ஸ்வரூபமுமல்ல, ஆகாச ஸ்வரூபமுமல்ல (அனாகாசம்),
அஸங்கம் (எதனோடும் சம்பந்தமற்றது), இந்திரியங்களற்றது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அரஸம் – சுவையற்றது, சுவைக்கும் இந்திரியங்களற்றது;
அகந்தம் – வாசணையற்றது, வாசணையை அறியும் இந்திரியங்களற்றது.
அசக்‌ஷும் – கண்களால் எதையும் கிரகிக்க முடியாது, கண்கள் இல்லாதது
கர்மேந்திரியங்களும், ஞானேந்திரியங்களும் இல்லாதது இவ்வாறாக இதை புரிந்து கொள்ள வேண்டும்.
அதேஸம் – விருத்தி ரூப ஞான ரஹிதம் – எண்ண விருத்திக்கள் இல்லை
அவாத் அமனஹ – அந்தக்கரணமற்றது
அபிராணன் – பிராணன் இல்லாதது, சூட்சும சரீரமற்றது.
அமுகம் – நுழைவாயில் கிடையாது.
அமாத்திரம் – எதைக் கொண்டும் அளக்க முடியாது, எடையற்றது
அனந்தரம் – முடிவற்றது.
அபாக்யம் – உள்ளே, வெளியே என்பதெல்லாம் கிடையாது
இவ்வாறு எல்லவற்றையும் நீக்கியப்பிறகு எது எஞ்சியிருக்கிறதுதான் பிரம்மம்.

தத்- அந்த பிரம்மன், கிஞ்சன – எதையுமே, ந அஸ்னாதே – சாப்பிடாது, கஷ்சன – எதுவும்
தத் – அந்த பிரம்மத்தை ந அஸ்னாதே – சாப்பிடாது.

இது அகர்த்தாவாக இருக்கிறது, அபோக்தாவாகவும் இருக்கிறது. அது எந்த செயலையும் செய்யாது,
அதனால் எந்த பலனையும் அனுபவிக்காத்து. இது போக்யாவும் அல்ல. அனுபவிக்கப்படும் பொருளாகவும் இல்லை,
அனுபவிப்பனாகவும் இல்லை. போக்தாவாக இருக்கும்வரை சம்சாரமும் இருக்கும்

அது கர்ம பலனை அனுபவிப்பதுமில்லை, கொடுப்பதுமில்லை. ஜீவன் கர்த்தாவாக இருக்கும் போது எந்தச் செயலையும்
செய்யும் சுதந்திரம் இருப்பதனால், பாவ புண்ணியத்தை உற்பத்தி செய்து, குழப்பத்துடன் இருக்கின்றான்.
சுக-துக்கங்களில் சிக்கிக் கொண்டு துயரமடைகிறான்.

ஸ்லோகம்-9
ஈஸ்வர ஸ்வரூபத்தை விளக்குகிறது இந்த மந்திரம்; பிரம்ம மானது ஜகத்துக்கு உபாதன காரணமாகவும்,
நிமித்த காரணமாகவும் இருக்கிறது. நிமித்தக் காரணம் சைதன்யமுடையது, உபாதான காரணம் ஜடமாக இருப்பது.
இந்த உலகத்திலுள்ள அனைத்தும் ஈஸ்வரனால் சீராக இயங்குகிறது.
அக்‌ஷரம் என்ற தத்துவத்திடம் காரணம் என்ற தன்மையை ஏற்றி வைத்ததால் அது ஈஸ்வரனாகிறது.

இந்த ஈஸ்வரனுடைய ஆணையினால் (प्रशासने) சூரியனும், சந்திரனும் தத்தம் நிலையில் சீராக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
இந்த பூமியும், அந்த சுவர்க்க லோகமும் தத்தம் நிலையில் சீராக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
கிழக்கிலிருந்து பாயும் நதிகள், மலையிலிருந்து உற்பத்தியாகும் நதிகள் அனைத்தும் இறைவன் அருளால் ஒழுங்காக ஓடிக் கொண்டிருக்கின்றன.
எல்லா திசைகளிலிருந்து பாயும் நதிகள் அனைத்தும் அவனது ஆணையால் ஒடுகின்றன.
யார் தானம் செய்கிறார்களோ அவர்களை மற்றவர்கள் புகழ்வார்கள். தானத்திற்கு இரண்டு பலன் அவைகள் கொடுக்கும்போது
கிடைக்கும் மகிழ்ச்சி, பிறகு அதனால் அடையும் புண்ணியப்பலன். இதையெல்லாம் ஈஸ்வரனால் கிடைக்கிறது.
தேவர்களும் கூட யாகம் செய்கின்ற மனிதர்களைச் சார்ந்து வாழ்கிறார்கள். பித்ருக்களும் நாம் செய்யும் சிரார்தத்தைச் சார்ந்திருக்கிறார்கள்.

ஸ்லோகம்-10
இதில் பிரம்ம ஞானத்தின் பெருமை, மனித ஜென்மத்தின் பெருமையும், காலத்தின் பெருமையும் விளக்கப்பட்டிருக்கிறது.
பிரம்ம ஞானத்தை விட்டு விட்டு வேறெதுவும் செய்தாலும் அது வீணாக போய்விடும்.
“ஹே கார்கி, யாரொருவன் இங்கு விளக்கப்பட்ட ஆத்மாவாக இருக்கின்ற அக்‌ஷரத்தை அறிந்து கொள்ளாமல்
இந்த உலகத்தின் யாகங்கள் செய்கின்றனர், தவத்தை செய்கின்றனர் அதுவும் பல்லாயிரம் வருடங்களாக செய்கின்றார்கள்
இதற்கு கிடைக்கின்ற ப்லன் ஒரு எல்லைக்குள்தான் இருக்கும். இது மோக்‌ஷ பலனைக் கொடுக்காது. தவத்தினால் பாவங்களை நீங்கும்,
புண்ணியம் அதிகமாகலாம் அதனால் அதிக சுகத்தை அடையலாம் ஆனால் செய்த தவத்தின் பலன் முடிந்ததும்
மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வந்து விட வேண்டியதுதான். ஆத்மஞானம் அகங்காரத்தை நீக்கி விடுவதால்
மனதால் ஏற்படும் தடைகளை நீக்கும், அடைந்த ஞானத்தை நிலைநிறுத்துவதற்கு உதவியாக இருக்கும்,
அதாவது ஞான நிஷ்டைக்கு உதவி புரியும். எல்லா செல்வங்களும் ஞானம் இல்லையென்றால் அகங்காரத்தைத்தான் அதிகரிக்கும்,
[ யாரொருவன் இந்த அக்‌ஷரத்தை அறிந்து கொள்ளாமல், இந்த உலகத்திலிருந்து, சரீரத்திலிருந்து வெளியேறினால்,
அவன் பரிதாபத்துக்குரியவன், தோல்வியடைந்தவன் (க்ருபணன்) என்றும், அதை அறிந்து வெளியேறுபவன் பிராமணன் என்றும் அழைக்கப்படுவான்.
இவன் பிரம்மனாகவே மாறியவன், முக்தியை அடைந்தவன், தன்னை அடைந்தவன்.
இந்த மனித சரீரத்தால் அடைய வேண்டியது பிரம்ம ஞானம் இதைத்தான் லக்ஷியமாக கொள்ள வேண்டும்.
இந்த ஞானத்தை அடைவதும் மனிதனாக பிறந்ததின் சரியான பலனை அடைந்தது போன்றது.

ஸ்லோகம்-11 – அக்‌ஷரத்தின் லக்ஷணம்
இந்த அக்ஷரமானது கண்ணால் பார்க்க முடியாது அதனால்தான் கண்ணால் பார்க்க முடிகிறது. இதை கேட்க முடியாது,
அதனால்தான் கேட்க முடிகிறது. இதை சிந்திக்க முடியாது ஆனால் அதனால்தான் சிந்திக்க முடிகிறது;
இதை அறிய முடியாது ஆனால் அதனால்தான் எல்லாவற்றையும் அறிய முடிகிறது, இதற்கு வேறாக ஒன்றை பார்க்க முடியாது. இந்த அக்ஷரத்தில் ஆகாசமானது சேர்க்கப்படுகிறது, இந்த ஆகாசத்தையும் வியாபித்திருக்கிறது அக்‌ஷரம்.

ஸ்லோகம்-12
கார்கி பிராமணர்களை பார்த்து, “மதிப்பிற்குரிய பிராமணர்களே யாக்ஞவல்கியர் சரியாக பதிலளித்து விட்டார்,
எனவே நமக்கு உகந்தது எதுவென்றால் அவர்க்கு நமஸ்காரம் செய்து விட்டு விலகிவிட வேண்டும்.
உங்களில் யாரும் இவரை வெற்றி கொள்ள முடியாது”, என்று கூறிவிட்டு அமைதியானாள்.

—————

பகுதி-9: அக்‌ஷரம் பிரமாணம்
ஸ்லோகம்-1 லிருந்து 9 வரை சாரம் மட்டும்
ஹிரண்யகர்ப்பனுடைய பெருமை:
இவரே விதவிதமான தேவதைகளாக வெளிப்பட்டிருப்பதுதான் இவருடைய தன்மை.
நிவித் – வேதம் பேசுகின்ற தேவதைகள் எண்ணிக்கையை பற்றி பேசுவது
சத்ரம் – ரிக் வேதத்தில் ஸ்தோத்ரங்கள் உள்ள பகுதிக்கு இந்த பெயர்.

ஸ்லோகம்-10 லிருந்து 17 வரை சாரம் மட்டும்
ஹிரண்யகர்ப்ப உபாஸனைகள்:
இரண்டு விதமான உபாஸனைகள் சொல்லப்பட்டிருக்கிறது. அஷ்டவித ஹிரண்யகர்ப்பனை உபாஸனை செய்தல்.
நாமே பார்க்கும் காட்சிகள், நம் மனதை பாதிக்கின்ற, உணர்வுகளை பாதிக்கிறது. நமக்கு எது உண்மையென்றால் பார்த்து
சம்பவம் இல்லை அதனால் அடைந்த மன பாதிப்புதான். இதே மாதிரி உபாஸனையின் மூலம், நம் மனதை தூய்மைபடுத்தலாம்,
அமைதியடையலாம், விசாலமடையலாம். உபாஸனை கற்பணைதான் ஆனால் அடையும் பலன் நிச்சயம்.
1. ஸாரீர புருஷ – ஹிரண்யகர்ப்பன் நம் சரீரத்தில் வெளிப்படுதல், நான்கு த்த்துவங்களை சேர்த்து பார்த்தல்
a. ஆயுதனம் – வெளிப்படுகின்ற இடம் – பிருத்வி
b. லோகஹ – அவருடைய லோகம்; அதன் மூலம் பார்க்கிறார் – அக்னி
c. ஜோதிஹி – எந்தக்கருவியின் மூலமாக சிந்திக்கின்றான் – மனம்
d. தேவதா – வெளிப்படக் காரணம் – அன்னம்

ஸ்லோகம்-18 லிருந்து 24 வரை சாரம் மட்டும்
பஞ்சவித ஹிரண்யகர்ப்ப உபாஸனம்: நான்கு திசைகளிலும், மேலேயும் அவர் இருக்கின்றார் என்று உபாஸிக்க வேண்டும்.

ஸ்லோகம்-25
மனதிற்கு ஆதாரம் என்ன? அது இருக்கும் இடம் ஸ்தூல சரீரம். மனம், சரீரம், பிராணன் ஒன்றையொன்றை சார்ந்திருக்கிறது.
மனம் உடலில் இல்லையென்றால் சரீரம் ஜடமாகி விடும், நாய்களுக்கும், பறவைகளுக்கும் உணவாகிவிடும்.
மனதை இந்த உலகை அனுபவிக்க வேண்டுமானால், இந்தௌடல் தேவைப்படுகிறது. பிராணன் செயல்பட உடலிருக்க வேண்டும்.

ஸ்லோகம்-26
1. இந்த உடல் எதனால் தாக்கப்படுகிறது? ஐந்து பிராணன்கள்தான் இந்த உடலை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.
2. நேதி, நேதி என்று ஆத்ம தத்துவத்தை விளக்கப்பட்டிருக்கிறது
3. இந்த ஆத்மா அழிக்கப்படுவத்தில்ல, எதையும் அழிக்காது
க்ருஹ்யம் – கிரகிக்கப்படுவது; அக்ருஹ்யதே – கிரகிக்கபடாதது, அப்பிரமேயம்-எந்தப்பிரமானங்களாலும் விளக்க முடியாது.
அஷீர்ய-அழுகாமல் இருப்பது, ஆத்மா அழுகிப்போகும் தன்மையில்லாததால் அது அழுகிப் போவதில்லை, நிர்குண, நிர் அவயவமாக இருப்பதால்;
அஸங்கஹ- எத்னோடும் சம்பந்தம் இல்லாத சுபாவம் உடையது, அதனால்
नहि सज्यते – எதனோடும் ஒட்டுவதில்லை. எதுவும் அதை தாக்க முடியாததினால், அதை அழிக்க முடியாது.

பிரம்மனுடைய இருப்பை அறிவது எவ்வாறு?
இதை உபநிஷத் என்ற பிரமானத்தின் மூலமாக அடையக்கூடியது. இது அறிவின் மூலமாகத்தான் அடைய முடியும்.
பிரம்மத்தை அறிதல் என்பது அடைதல் என்பதாகும். நம்முடைய அறியாமையால் நாம் பிரம்மத்திலிருந்து விலகி இருக்கிறோம்.

ஸ்லோகம்-27
யாக்ஞவல்கியர் அங்குள்ள பிராமணர்களை பார்த்து, “உங்களில் யாராவது கேள்வி கேட்க வேண்டுமென்றால் கேட்கலாம்” என்று அழைத்தார்.
யாரும் முன்வராததால், தானே ஒரு கேள்வியைக் கேட்கிறார்.

ஸ்லோகம்-28
மரத்தையும், ஜீவனையும் ஒப்பிட்டு விவரிக்கிறார்.
மரத்தை வேரோடு பிடுங்கி எறிந்து விட்டால் அது மீண்டும் முளைக்காது. மரணத்திற்கு பிறகு இந்த ஜீவன் மீண்டும்
பிறப்பதற்கு எது காரணமாக இருக்கிறது. அவன் பிறந்து பிறந்து இறக்கிறான் என்றால் அது தவறு.
அவன் மீண்டும் பிறப்பதில்லை. இந்த சரீரம்தான் பிறக்கிறது பின் இறக்கிறது. பிரம்மத்தை யாரும் பிறப்பிக்கவில்லை
அது எப்பொழுதும் ஞான ஸ்வரூபமாக இருக்கின்றது. இதுதான் ஜீவனின் மூலம்.
இது ஆனந்த ஸ்வரூபம், சாந்தம், சிவம், எதைக் கொண்டும் அளக்க முடியாது.
இந்த நிர்குண பிரம்மமே சகுண பிரம்மமாகவும் தோன்றுகிறது. அனைத்துக்கும் இதுவே ஆதாரமாக இருக்கிறது.

மனிதர்கள் அக்ஞானிகள், ஞானிகள் என்று இருவகையாக பிரித்தால் செல்வத்தை தானம் போன்ற கர்மத்தை
செய்கின்றவர்களுக்கு பிரம்மன் பலன் தரும் இருப்பிடமாக இருக்கிறது. நாம் செய்யும் செயல்களுக்கேற்ற பலன்களை இது வழங்குகிறது.
செல்வத்தை தியாகம் செய்பவர்களுக்கு நிர்குண பிரம்மன் ஆதாரமாக இருக்கும். ஆசையை விடுபவர்களுக்கு இதுவ கதியாக, ஆதாரமாக இருக்கிறது.

சங்கரரின் விசாரம்: ஆனந்தம் (Bliss) என்ற சொல்லப்படுகிற பிரம்மத்தைப் பற்றி
ஆனந்தம் என்ற வார்த்தை இன்பத்தை அனுபவிக்கும் விஷயத்தைக் குறிப்பிடுகிறது. உபநிஷத்தில் பிரம்மத்தை ஆனந்த ஸ்வரூபமாக கூறப்படுகிறது.
பிரம்மத்தின் லக்ஷணமாக இந்த ஆனந்தம் சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இந்த பிரம்மானந்தமானது:
ஸம்வேத்ய சுகம் – அனுபவிக்கப்படும் இன்பமா?
அஸம்வேத்ய சுகம் – அனுபவிக்க முடியாத இன்பமா?
என்ற சந்தேகத்தை சங்கர்ரே எழுப்புகிறார்.

இங்கு எதனால் அனுபவிக்க முடியாத இன்பம் என்று சந்தேகம் வருகிறது என்றால் வேதத்தில் கூறப்பட்டுள்ள வார்த்தைகளை
வைத்தே இந்த சந்தேகம் எழுகிறது. பிரம்மத்தை யாரும் அனுபவிக்க முடியாததாக இருக்கிறது என்றூ வேதம் உரைக்கிறது

கேள்வி பிரம்மனிடம் இருக்கும் ஆனந்தம் அனுபவிக்க முடியும். ஞானி எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறான்.
பதில் பிரம்மத்தை அனுபவிக்க முடியும் என்று சொன்னால் அத்வைத ஸ்ருதி விரோதம், பிரம்மம் அறியப்படுவதில்லை
என்ற ஸ்ருதியின் வாக்கியத்திற்கு முரண்பாடாக இருக்கும். பிரம்மானந்தத்தை அனுபவிக்கும்போதே அது முடிந்து விடும்
என்ற வருத்தத்துடன் இருப்பார்கள். பிரம்மம், ஞானி, அக்ஞானி இவர்களில் யார் இந்த ஆனந்தத்தை அனுபவிக்கிறார்கள்?

1. கர்ம, கர்த்திரு விரோதம் – அனுபவிப்பவனும், அனுபவிக்கப்படும் பொருளும் ஒன்றாக இருக்க முடியாது.
எனவே பிரம்மம் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது.
2. அக்ஞானியும் பிரம்மானந்தத்தை அனுபவிக்க முடியாது ஏனென்றால் அவன் பிரம்மத்தையே அறியவில்லை, அடையவில்லை
3. ஞானி பிரம்மானந்தத்தை அனுபவிக்கிறான். முக்தன் பிரம்மத்திற்கு வேறுபடாதவன் என்றால்
அவனால் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது எனெனில் இவனே பிரம்மனாக இருத்தலால்.
அவன் வேறுபட்டவன் என்றால் பிரம்மத்தை அடையவில்லை, அறியவில்லை என்றாகி விடும்.
ஜீவன் முக்தனாக இருக்கும்போது வேண்டுமானல் பிரம்மானந்தத்தை அனுபவிக்கலாம்,
ஏனெனில் இந்த சரீரத்தை வைத்துக் கொண்டு வேண்டுமானாலும் அனுபவிக்கலாம்.
இறந்த பிறகு விதேஹ முக்தியில் எந்த உபாதியும் இல்லாததால் இவனால் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது.
பிரம்மானந்தத்தை அனுபவிப்பது தான் மோக்ஷம் என்றால். விதேஹ முக்தியில் அவனால் அனுபவிக்கவே முடியாது.

பிரம்மத்தைப் பற்றிய ஞானத்தை நாம் அடைகின்றோம். பிரம்மம் நம்மிடத்திலே இருக்கிறது. பிரம்ம ஞானம் நமக்கில்லை.
எனவே இதை அடைந்தால் பிரம்ம-மாகவே ஆகிவிடுவோம். பிரம்மத்தை அறிவதால் நமக்கு மனநிறைவும், சுகமும், இன்பமும் கொடுக்கிறது.
அது அனுபவத்திற்கு வருகிறது.
பிரம்ம ஸ்வரூவ சுகம் – அது அனுபவத்திற்கு உட்படாதது
பிரம்ம ஞான சுகம் – இது அனுபவத்திற்குட்பட்டது
ஞான நிஷ்டையின் போது இன்பமும், சுகமும், மனநிறைவும் இயல்பான விஷயமாகிவிடுகிறது.
விஷய சுக-துக்கத்தை அனுபவிப்பவன் அக்ஞானி, பிரம்ம ஞான ஆனந்தத்தை அனுபவிப்பவன் ஜீவன் முக்தன்.

—————–

தொகுப்புரை:
முதல் மூன்று பகுதிகள் உபாஸனையாகளையும், சில பண்புகளையும் விளக்குகிறது.
கடைசி ஆறு பகுதிகள் – வேதாந்த விசாரமும், பிரம்ம வித்யாவையும் விளக்குகிறது.

பகுதி-1
சில உபாஸனைகள், சில பண்புகள். ஜீவன் மரணத்தின் பிடியில் இருக்கிறான். இதிலிருந்து விடுபடுவதற்கான உபாயம்.
ஸ்பாவிக உபாஸனை, நம் விருப்பப்படி செய்யும் செயல்கள். நம்முடைய கரணங்களை அந்தந்த தேவதைகளோடு ஒப்பிட்டு
தியானம் செய்வதால் அவைகள் தூய்மையடைகிறது அதன் மூலம் சித்தஸுத்தியை அடைகிறோம்.
சம்பத் உபாஸனை – சிறிய தியானத்தின் ஒன்றில் பெரிய தியானத்தின் பலனை அடையலாம்.

பகுதி-2
இரண்டு விதமான ம்ருத்யு அறிமுகப்படுத்தப்பட்டது. அவைகள் கிரகம், அதிகிரகம். கிரகம் என்பதற்கு நம்மை
பிடித்துக் கொள்ளுதல் என்று பொருள், அதிகிரகம் என்பதற்கு கிரகத்தை தன் வசத்தின் வைத்துக் கொள்வது என்று பொருள்.
ஜீவன் இந்த இரண்டின் வசத்தில் இருக்கின்றான். நாம் இந்திரியத்தின் வசத்தில் இருக்கின்றோம்.
விஷயங்கள் இந்திரி-யங்களை தன் வசத்தில் வைத்திருக்கிறது

மிருத்யுவுக்கு ம்ருத்யு இருக்கிறதா என்றால் இருக்கிறது அதுதான் ஆத்மஞானம். நெருப்பு மிருத்யு என்றால்
அதை அணைக்கும் நீர் அதனுடைய ம்ருத்யு. ஞானியின் இறப்பிற்கு பின் என்ன நிலையை அடைகின்றான்.
ஸ்தூல, சூட்சும சரீரங்கள் அந்தந்த ஸ்தூல,சூட்சும சரீரங்களுடன் கலந்து விடுகிறது.
ஆனால் அவரது பெயர் மட்டும் பலகாலம் நிலைத்து இருக்கும். அக்ஞானி இறந்த பின் தேவதைகளுடன் ஒடுங்கி மீண்டும் பிறப்பெடுக்கிறான்.
அவன் பிறப்பு அவன் செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்படையில் நிச்சயிக்கப்படுகிறது.

பகுதி-3
ஹிரண்யகர்ப்பலோகம் வரை அனாத்மாதான், சம்சாரம்தான். கர்மபல விசாரம் செய்யப்பட்டது.
புண்ணியத்தினால் மோக்‌ஷத்தை அடையமுடியாது. எனவே பாவத்தையும் விட்டுவிட வேண்டும், புண்ணியத்தையும் விட்டுவிட வேண்டும்.
அறியாமையால் அனுபவிக்கும் துயரங்களை போக்க அறிவைத்தான் அடைய வேண்டும். கர்மங்கள் சாதனமாக இருக்க முடியாது.

பகுதி-4
எது சாக்ஷாத் அபரோக்ஷாத் பிரம்மமோ அதை உபதேசம் செய்யுங்கள் என்ற கேள்விக்கு அது உன்னுடைய ஆத்மாதன்.
அது எந்தவித பிரமானமில்லாமல் தானே பிரகாசித்துக்கொண்டு இருக்கிறது. நான் இருக்கிறேன் இன்பதற்கு எந்த பிரமானமும் தேவையில்லை.
அதுபோல ஆத்மாவும் விளங்கிக்கொண்டிருக்கிறது. திருஷ்டி, திரஷ்டா என்ற சொற்களின் பொருள் விளக்கம் சொல்லப்பட்டது.
திரஷ்டா – சவிகார உலகம், நிர்விகார ஆத்மா. மனம் இந்த உலகத்தை அனுபவிக்கிறது;
ஆத்மாவுக்கு இது திரஷ்டாவாக இருக்கிறது ஆனால் இதை பார்க்க முடியாது

பகுதி-5
பாண்டித்யம்-பாலயம், மௌனம்-அமௌனம், ஆத்மஸ்வரூபம்-ஆத்மா என்பது துயரமற்ற ஸ்வரூபம்.
பசி,தாகம், சோகம், மோகம், ஜரா, ம்ருத்யு, இப்படிபட்ட துயரங்களற்றது ஆத்மா. இரண்டு சாதனங்கள் கூறப்பட்டது
அவைகள் ஞானம், சந்நியாஸம். ஞானம் அடைவதுதான் உண்மையான லட்சியம். இந்த ஞானத்தை அடைய உதவி செய்வது சந்நியாஸம்.
ஞான நிஷ்டைக்கு சந்நியாஸம் உதவி செய்யும். சாதனங்களான சிரவணம், மனனம், நிதித்யாஸனம் இவைகளை பயன்படுத்தி
ஞான நிஷ்டையடைய சந்நியாஸம் உபயோகப்படுகிறது. அனாத்மா இச்சா, ஆத்மா இச்சா. புத்திரன், செல்வம், உலகம்
இவைகளின் மீதுள்ள ஆசையை விட்டொழிய வேண்டும், சாத்திய இச்சையை விட வேண்டும், பிறகுதான் சாதன இச்சையை விட வேண்டும்.

பாண்டித்யம் – சிரவணத்தை முழுமையாக முடித்து விட்டு ஞான பலத்துடன் இருக்க வேண்டும். குழந்தையைப் போல் இருக்க வேண்டும்.
தன்னைப்பற்றிய தம்பட்டம் அடித்துக் கொள்ளாதிருக்க வேண்டும். ஆத்ம ஞானத்தை மனனம் என்ற சாதனத்தின் துணைக் கொண்டு
அடைந்த ஞானத்தை நிலை நிறுத்த வேண்டும். பிறகு நிதித்யாஸத்தின் மூலம் ஞான நிஷ்டை அடைய வேண்டும்,
அப்போதுதான் பிரம்மனாகிறான். ஜீவன் முக்தன் எப்படி இருப்பான் என்று சொல்ல முடியாது,
அவன் எப்படியிருக்கிறானோ அதுதன் அவனுடைய லட்சணம். இது நிதித்யாஸனத்திற்கு உதவியாக இருக்கும்

பகுதி-6 :. அனைத்துக்கும் சத்யமாக இருப்பது, அதி சூட்சுமமாக இருப்பது
பகுதி-7 : அந்தர்யாமி பிரமாணத்தில் விராட் ஆந்தரமாக இருப்பது, ஹிரண்யகர்ப்ப தத்துவம்
இது எல்லா தேவதைகளும், பூதங்களும் நம் உடலில் உள்ள சூட்சும சரீரத்தை குறிக்கிறது
பகுதி-8 அக்ஷர பிரமாணம் : அந்தர்யாமிக்கும் ஆதாரமாக இருப்பது ஆகாசம்-ஈஸ்வரன்.
அக்ஷர ஸ்வரூபத்தை, அனாத்மாக்கள் அனைத்தையும் நீக்கி விளக்கப்படுகிறது
பகுதி-9 ஹிரண்யகர்ப்ப உபாஸனைகள், மகிமைகளை விளக்கப்பட்டது. மரத்தையும், மனிதனையும் ஒப்பிட்டு சில கருத்துக்கள் சொல்லப்பட்டது.
பிரம்மானந்தத்தின் பலனை அனுபவிக்கிறோம்; ஸ்வரூபானந்தம் அனுபவிக்க முடியாது காரணம் அதுவாக அவன் இருப்பதால்.

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ப்ருஹதாரண்ய உபநிஷத்- அத்தியாயம்-3–பகுதி -1- அஸ்வல பிரமாணம்/ஆர்த்தபாக பிரமாணம்/புஜ்ய பிரமாணம்/உஷஸ்த பிரமாணம்/கஹோல பிரமாணம் /கார்கி பிரமாணம் /அந்தர்யாமி பிரமாணம் —

March 23, 2021

இந்த அத்யாயம் ஒன்பது பகுதிகளைக் கொண்டது. முதல் மூன்று பகுதிகள் உபாஸனையைப்பற்றி விவரிப்பதால்
அதாவது கர்மகாண்ட்த்தில் உள்ள ஞானத்தை சோதிக்கின்ற மாதிரி இருக்கும்.
எனவே அதன் சாராம்சத்தை மட்டும் தெரிந்து கொண்டால் போதும். இதனால் அடையும் பலன்களாவது:
தானம் என்ற குணத்தில்தான் சித்தஸுத்தியை அடைய முடியும்
வித்யா ப்ராப்தி சாதனம்தான் தானம். எதையுமே இலவசமாக பெறக் கூடாது. அறிவை தானம்மூலம்தான் பெற வேண்டும்.
வித்வத் சம்யோகஹ பிரக்ஞா விருத்தி – கற்றறிந்தவர்கள், ஞானிகள் இவர்களுடன் சேர்ந்திருப்பது அறிவு வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும்.
நம்மையே நாம் அங்கீகரித்தல் – நம் அறிவை நாமே அங்கீகரித்தல்

———-
பகுதி-1 : அஸ்வல பிரமாணம்
ஸ்லோகம்-1
விதேஹ நாட்டு அரசரும், தேக அபிமானவற்றவருமான ஜனகர் மிகப் பெரிய யாகத்தை மேற்கொண்டார்.
இந்த யாகத்தில் குரு, பஞ்சால தேசத்தைச் சேர்ந்த பிராமணர்கள் அழைக்கப்பட்டு வந்திருந்தார்கள்.
இவர்கள் அனைவரும் சாஸ்திரங்களை கற்று அறிந்த வேத விற்பன்னர்கள். ஜனகருடைய மனதில் ஒரு ஆசை எழுந்தது.
இங்கு கூடியுள்ள இந்த பிராமணர்களுக்குள் யார் வேதாந்தத்தை நன்குணர்ந்தவர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை எழுந்தது.
இந்த யாகத்திற்கு ஆயிரம் பசுக்களை கொண்டு வரச் செய்தார், ஒவ்வொரு பசுவின் கொம்பில் ஐந்து தங்க நாணயங்களை கட்டி வைத்திருந்தார்

ஸ்லோகம்-2
பிராமணர்களே உங்களுக்குள் யார் சாஸ்திரங்களை அதிகம் கற்றிருக்கிறீர்களோ, பிரம்ம ஞானத்தில் நிஷ்டையடைந்தவர்களோ
அவர்கள் இந்த பசுக்களை அழைத்து செல்லலாம். யாரும் முன்வரவில்லை.
பிறகு யாக்ஞவல்கியர் என்பவர் தன் சிஷ்யர்களைப் பார்த்து, “இந்த பசுக்களை ஓட்டிச் செல்லுங்கள்” என்று சத்தமாக கூறினார்.
அவர்கள் பசுக்களை அழைத்து செல்ல முற்பட்ட போது அங்குள்ள பிராமணர்களுக்கு கோபம் வந்து விட்டது.
அவர்கள் யாக்ஞவல்கியரை பார்த்து, நாங்கள் இருக்கும்போது எப்படி நீங்கள்தான் பிரம்மஞான நிஷ்டையை அடைந்தவர்(பிரம்மிஷ்டன்)
என்று நினைக்கிறீர்கள் என்று வினவினர். அப்பொழுது ஜனகரின் அரசவையில் அமர்ந்திருந்த அரசவை புரோகிதர் யாக்ஞவல்கியரிடம் வந்து,
“நீதான் எங்களுக்குள் பிரமிஷ்டனாக இருக்கிறாயா?” என்று கேட்டார். அவர் அங்கு கூடியிருந்த பிராமணர்களை பார்த்து,
“இங்கு அமர்ந்திருக்கும் எல்லா பிரமிஷ்டர்களுக்கு என் நமஸ்காரங்கள்,
எனக்கு பசுக்கள் தேவை அதனால்தான் நான் எடுத்துச் செல்கிறேன்.” என்று தெரிவித்தார்.
அப்பொழுது அஸ்வலர் என்பவர் யாக்ஞவல்கியரிடம் கேள்வியைக் கேட்க துணிந்தார்.

ஸ்லோகம் 3 லிருந்து 6 வரை நான்கு கேள்விகள் கேட்கப்படுகிறது.
கேள்வி: 1
யாகத்தை மேற்கொள்ளும் சாதாரண மனிதர்கள் மரணத்தின் பிடியிலிருந்து எப்படி தப்பித்துக் கொள்வது?
ஸ்வாபாவிக கர்மம் – ராக-துவேஷத்தினால் தூண்டப்பட்டு செய்யப்படும் செயல்கள். நம்மிடமிருந்து வெளிப்படும் செயல்கள் இரண்டு விதமாக இருக்கும்.
1. சாஸ்திரம் அனுமதிக்கும் கர்மங்கள் (சாஸ்திரீய கர்மம்)
2. ஸ்வாபாவிக கர்மம் – நம் விருப்பு-வெறுப்புக்களின் தூண்டுதலால் செய்யப்படுவது
ஒவ்வொருவரும் ராக-துவேஷத்தின் தூண்டுதலால் செய்கின்ற கர்மத்தின் பிடியில்தான் இருக்கிறோம்.

பதில்: நம் அபிமானம் சமஷ்டியோடு கலந்து விட்டால் இதிலிருந்து விடுபடுவோம்.
எல்லோருடைய நலமும் என் நலம் என்று நினைப்பதுதான். வியஷ்டியை சமஷ்டியோடு ஐக்கியப்படுத்துதல்.
யாகத்தின்போது ரிக் வேதத்தை சொல்வோம், ஓதுவோர் ஹோதா என்று அழைக்கப்படுவார்.
அதியக்ஞம் – யாகத்தில் உள்ள வியஷ்டி தத்துவம்
அதியாத்மம்- நம்மிடத்தில் உள்ள (எஜமானனிடத்தில் உள்ள ) வியஷ்டி வாக்கு.
அதிதெய்வம் – அக்னி தேவதை – சமஷ்டி
இந்த வியஷ்டிகளை அதி தெய்வமன அக்னி தேவதையான சமஷ்டியுடன் ஐக்கியப்படுத்தி தியானம் செய்ய வேண்டும்.
இப்படிச் செய்யும்போது நம்முடைய வாக் என்னும் வியஷ்டியை அக்னி சமஷ்டியுடன் ஒன்று சேர்ந்து நம்மை ம்ருத்யுவின் பிடியிலிருந்து விடுவித்து விடும்.

ஸ்லோகம்-3
கேள்வி-2
கால பரிசேதம் ( காலத்தினால் கட்டுண்டு இருக்கிறோம்) இதிலிருந்து எப்படி விடுபடுவது?
· சூரியனால் உருவாக்கப்படுகின்ற கால பரிசேதம்
· சந்திரனால் உருவாக்கப்படுகின்ற கால பரிசேதம்
காலத்தினால் நமக்கு ஏற்படுகின்ற விளைவு கண்டு மனம் பாதிக்கப்படுகின்றது. காலத்தினால் வரும் பாதிப்பிலிருந்து எப்படி விடுபடுவது?

ஸ்லோகம்-4
அதியக்ஞம் – யஜுர் வேதத்தை உச்சரிக்கின்றவர், ஓதுபவர்
அதியாத்மம் – கண்
அதிதெய்வம் – சூரியன் – ஆதித்ய தேவனிடத்தில் ஐக்கியபடுத்துதல்

ஸ்லோகம்-5
அதியக்ஞம் – உத்கர்த்த, சாம வேதத்தை உச்சரிக்கின்றவர்
அதியாத்மம் – பிராணன்
அதிதெய்வம் – வாயு தேவனிடத்தில் ஐக்கியபடுத்துதல்

ஸ்லோகம்-6
சுவர்க்க லோகத்திற்கு செல்வதற்கு உபாஸனை ஏதாவது உண்டா?
அதியக்ஞம் – அதர்வன வேதத்தை உச்சரிக்கின்றவர், பிரம்மா
அதியாத்மம் – மனம்
இதையிரண்டையும் சந்திரன் தேவதையிடம் ஐக்கியப்படுத்துதல்

ஸ்லோகம்-7
சம்பத் உபாஸனை என்று ஒரு உபாஸனை இருக்கிறது அதை தியானிப்பதால் நிகிருஷ்ட கர்மணி உக்ருஷ்ட கர்ம தரிசனம்
அதாவது எளிமையான சிறிய கர்மத்தில் பெரிய கர்மத்தின் பலனை அடைதல்.
உதாரணமாக சாதரண நீரை கங்கை நீராக நினைத்து குளிப்பது, சாதாரண கல்லில் மேலான தெய்வத்தை பார்த்தல்.
அதுபோல சாதாரண கர்மத்தை செய்து பெரிய கர்மத்தால் அடையும் பலனை அடைதல்.

யாகங்கள் செய்யும் போது மூன்று இடங்களில் ரிக் வேதம் ஓதப்படும்.
1. ஆஹுதிகளை போடுவதற்கு முன் – புரோனுவாக்யா
2. ஆஹுதிகளை போடும்போது யாஜ்யா
3. ஆஹுதிகளை போட்ட பிறட்கு சஷ்யா
இந்த மூன்று கர்மத்தில் மூன்று விதமான உலகத்தை (பூர், புவ, ஸ்வ) தியானித்தல்.

மூன்று விதமான ஆஹுதிகள் (oblations) போடும்போது, மூன்று நிலைகளாக நெருப்பானது தோன்றும்
1. சுடர்விட்டு எரிவது 2. சப்தத்தை எழுப்புவது 3. கீழே சென்று விடும். இந்த மூன்று உலகத்தை தியானிக்க வேண்டும்.

சாம வேதத்தை ஓதுபவர் – மேலே கூறியபடி தியானிக்க வேண்டும்.
பிரம்மா என்கின்ற ரித்விக் – யாகம் சரியாக நடக்கின்றதா என்று மேற்பார்வையிடுபவர்.
இவர் மனதை அனந்தமான உலகமாக தியானித்தல். நம் மனதில் வரும் எண்ணங்களெல்லாம் ஒரு உலகமாக தியானித்தல்.

—————

பகுதி-2 : ஆர்த்தபாக பிரமாணம்
கேள்வி-1
மனிதனை பிடித்து வைத்திருப்பது எது?
இந்த பிரபஞ்சத்தில் எட்டு கிரகங்கள் (நம்மை பிடித்து வைத்திருப்பது), எட்டு அதிகிரகங்கள் (கிரகத்தையே பிடித்து வைத்திருப்பது) உள்ளன.
இங்கு கிரகங்கள் என்று கூறுவது நம்முடைய இந்திரியங்களை குறிக்கிறது. அதிகிரகங்கள் என்பது இந்திரியங்களின் விஷயங்களை குறிக்கிறது.
நாம் இந்திரியங்களின் வசத்தில் இருக்கிறோம். எனவே இவைகளை கிரகங்கள் என்று கூறுகிறோம்.
இந்திரியங்கள் அதனுடைய விஷயங்களின் வசத்தில் இருக்கின்றது எனவே இதை அதிகிரகம் என்று கூறுகிறோம்.
உதாரணமாக சுவையுணரும் நாக்குக்கு நாம் அடிமையாக இருக்கிறோம். ஆனால் நாக்கோ சுவைதரும் பொருட்களின் வசத்தில் இருக்கிறது.
எனவேதான் நாம் இந்த அதிகிரகத்தால் சுவையான உணவு பண்டத்தை அதிகமாக உட்கொள்கிறோம்.
வெளி சூழ்நிலைகள்தான் இந்திரியங்களை தம் வசப்படுத்துகிறது. எனவே நாம் இந்த சூழ்நிலைகளை விட்டுவிலகி ஓடி விட வேண்டும்.
வெளிசூழ்நிலைகளை இந்திரியங்களை பாதிக்காமல் இருக்க நல்ல சூழ்நிலைகளை நோக்கு சென்றுவிட வேண்டும்.

கிரகம் அதிகிரகம்
பிராணன்(சுவாசிக்கின்ற பிராணன்) வாசனை
வாக் (பேசுகின்ற சக்தி) நாமம், சொற்கள், விஷயங்கள், செய்திகள்
நாக்கு (சுவையுணரும் சக்தி) ரஸஹ – சுவை
கண்கள் (பார்க்கும் சக்தி) ரூபம், உருவம்
காது (கேட்கும் சக்தி) சப்தம் (இனிமையான் சப்தங்கள்)
மனது ஆசை, எண்ணங்கள், சங்கல்பத்தின் வசத்தி இருத்தல்
கைகள் கர்ம, செயல்
தோல் தொட்டு உணரும், இன்பத்தை கொடுக்கும் விஷயங்கள்

கேள்வி-2
ம்ருத்யுவின் சுபாவம் அனைத்தையும் சாப்பிடுவது, அழிப்பது ஆனால் அந்த ம்ருத்யுவை சாப்பிடும் ம்ருத்யு எது? ம்ருத்யுவுடைய ம்ருத்யு எது?
அக்னி என்ற ம்ருத்யுவிற்கு தண்ணீர்தான் ம்ருத்யு அதுபோல ஆத்ம ஞானம்தான் ம்ருத்யுவிற்கு ம்ருத்யுவாக இருக்கிறது.
மரணம் என்பது ஸ்தூல சரீரத்தை அழித்து விடுகிறது. சூட்சும சரீரத்தை பாதிக்கிறது.
நான் என்ற அபிமானம் ஆத்மாவின் வைக்கும்போது மரணம் நம்மை நெருங்குவதில்லை. மரண பயம் ஏற்படுவதில்லை.
ஆத்மஞானம் என்ற நீரைக் கொண்டு சம்சாரம் என்ற தீயை அணைத்து விடலாம்.

கேள்வி-3
ஞானி மரணமடைந்தால் அவனது சூட்சும சரீரங்களின் நிலை என்ன?
ஞானி மரணத்திற்கு பிறட்கு அவனது இந்திரிய சக்திகளெல்லாம் அந்தந்த தேவதைகளோடு கலந்து விடுகின்றது.
சூட்சும சரீரமாக எங்கும் செல்வதில்லை அது அந்தந்த சமஷ்டியுடன் ஐக்கியமாகி விடுகிறது எந்த பயணமும் மேற்கொள்வதில்லை.
அவரது ஸ்தூல உடம்பு உப்பி அழிந்து விடும். அக்ஞானிகளின் ஸ்தூல உடம்பு இவ்வாறுதான் அழியும்.

கேள்வி-4
ஞானி இறந்ததற்கு பிறகு ஏதாவது மீதி இருக்கிறதா?
அவரது பெயர்தான் விட்டுவிட்டு போகமுடியும்.

கேள்வி-5
அக்ஞானிகளுடைய மரணத்திற்கு பிறகு நிலை என்ன?
இந்திரியங்கள் எல்லாம் சூட்சும சரீரத்தில் ஒடுங்கி பயணம் மேற்கொள்கிறது.
அவரவர்களுடைய கர்ம வினைப்படி அடுத்த பிறவி நிர்ணயிக்கப்படுகிறது.

————–

பகுதி-3: புஜ்ய பிரமாணம்
பாரிக்‌ஷதர்கள் (நல்ல கர்மத்தை செய்தவர்கள்) இறந்த பிறகு எங்கு செல்கிறார்கள். இவர்கள் பிரம்ம லோகத்திற்குத்தான் செல்வார்கள்,
ஹிரண்ய கர்ப்ப லோகத்திற்கு செல்வார்கள்.

சங்கரர் பாஷ்ய விசாரம் (கர்மபல விசாரம்)
சம்சாரத்தில் அடையும் அதிகபட்ச பலன் பிரம்மலோகத்தை அடைவதுதான். ஞானிகளுக்கு கர்மம் எதுவும் இல்லாததால்
அவர்கள் மீண்டும் பிறப்பதில்லை. ஆனால் அக்ஞானிகள் பாவகர்மங்களை செய்திருந்தால் கீழான பிறவியைதான் அடைவார்கள்,
அதிலிருந்துகொண்டு துயரத்தைத் தான் அனுபவிப்பார்கள். புண்ணிய கர்மங்களான தமம், யாகம், தவம் போன்ற
நற்காரியங்களைச் செய்வதனால் வைராக்யத்தை அடையலாம்.

தர்மத்தால் சுகமும், ஞானமும் கிடைக்கின்றன. புண்ணியத்தின் வழியேதான் மோக்‌ஷத்தை அடைய முடியும்.
புண்ணியத்தால் மட்டும் மோக்‌ஷத்தை அடைய முடியாது அதிக பட்சமாக ஹிரண்யகர்ப்பலோகத்தைத்தான் அடைய முடியும்.

பிரம்மலக்‌ஷணம் – அவ்யாக்ருதம் (வெளித்தோற்றத்திற்கு வராத), அகாரிய, நித்தியமான பிரம்மத்தை கர்மத்தின் மூலமாக அடைய முடியாது.
வெளித்தோற்றதிற்கு வந்த ஒன்றில் கர்ம்ம் என்பதை செய்ய முடியும். விதைக்குள் உள்ள மரத்தை ஒன்றும் செய்ய முடியாது.
விதையிலிருந்து வெளியே வந்த பிறகுதான் அதனுடல் விவகாரம் செய்ய முடியும்.
கர்மமானது ஆத்ம விசாரத்திற்கு தகுதிபடுத்தும், தகுதியடைந்தவுடன் கர்மத்தை விட்டுவிட வேண்டும்.
பிறகு அறிவையடைந்து ஞானமடைய வேண்டும் அதற்குப்பிறகு அதில் நிலை பெற்று நிற்க வேண்டும்.

கேள்வி: புண்ணிய கர்மத்தின் மூலமாக மோட்சத்தையடையலாம்.
பதில்: பந்தம் என்றால் என்ன? அதற்குக் காரணம் என்ன?
பந்தத்திற்கு காரணம் அறியாமைதான். ஒருவேளை அறியாமையில்லையென்றால் என்னவாகும்.
பூரணமான பிரம்மத்தை உருவாக்க வேண்டிய நிலை ஏற்படும் பிறகு அதை அடைய வேண்டும்.
இது சாத்தியமில்லை எனவே அவித்யா ஒன்றுதான் காரணமாக இருக்க முடியும் இதை நீக்க வித்யாவை தவிர வேறெந்த சாதனமும் இல்லை.
உண்மையில் புருஷார்த்தம் என்பது அவித்யா நீங்கினால் மோட்சம். கயிற்றில் தோன்றிய பாம்பு அவித்யா நீங்கி விட்டால் மறைந்து விடும்,
அதனால் ஏற்பட்ட பயமும் போய் விடும். கர்ம்ம அறியாமையை நீக்கும் சாதனம் கிடையாது.

கர்மத்தால் அடையும் பலன்களில் மோட்சம் என்பது கிடையாது.
1. கர்மத்தால் உற்பத்தி – ஒரு பொருளை உருவாக்கல்லம், பிரம்மன் உருவாக்க-படுவதில்லை எனவே இந்த முறையில் பிரம்மத்தை அடைய முடியாது.
2. ஆப்தி – அடைதல், ஒரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வது (காலமும், தேசமும் ).
காலத்தால் ஒன்றை அடைவது, இப்படி பிரம்மத்தை அடைய வேண்டிய விஷயமல்ல. இந்த பிரம்மன் ஆத்மாவாக இருப்பதால்
அதை அடைய வேண்டிய அவசியமில்லை. எனவே இந்த முறையிலும் ஆத்மாவை அடைய முடியாது.
3. விகாரியம் – மாற்றம் – கர்மத்தால் சில மாற்றங்களை கொண்டு வருதல்; பிரம்மத்தை ஒரு மாற்றத்தின் மூலம் அடையலாம்
என்ற வழியிலும் அதை அடைய முடியாது. பிரம்மத்திற்கு அவயவங்கள் கிடையாது, அதனால என்றும் மாறாதது(நிர்விகாரம்).
எனவே இந்தப் பாதையிலும் பிரம்மத்தை அடைய முடியாது
4. தூய்மைபடுத்துதல் (ஸம்ஸ்காரியம்) – ஒரு பொருளை தூய்மைப்படுத்துதல் என்பது தீயகுணங்களை நீக்கி
நற்குணங்களை வளர்த்துக் கொள்ளுதல். பிரம்மன் என்றும் சுத்தமாக இருப்பதால், எந்த குணங்களும் இல்லாத்தால் அஸங்கம்.
இந்த வகையினாலும் பிரம்மத்தை அடைய முடியாது.
இதனால் அறிவது கர்மத்தின் மூலம் மோட்சத்தை அடைய முடியாது. அறியாமையை நீக்குவதன் மூலம்தான் அதை அடைய முடியும்.

கேள்வி : கர்மத்தினுடன் உபாஸனையை சேர்த்துக்கொண்டு நிஷ்காம்யமாக செய்தால் இந்த நான்கு பலன்களை தவிர்த்து
வேறு பலன் வரலாம் அல்லவா, அது ஏன் மோட்சமாக இருக்கக் கூடாது
பதில்: உன்னுடைய இந்த கருத்துக்கு எந்தவிதமான பிரமானமும் இல்லை. இது உன் சொந்த கற்பனை.
இது பிரமான அபாவாத். இதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை.

பிரத்யக்‌ஷ பிரமாணம்: கர்மம் செய்தால் அதனுடைய பலன் சாஸ்திரத்தின் மூலம்தான் நாம் அறிகிறோம். நம் அனுபவத்தின் மூலம் இதை நிரூபிக்க முடியாது.
அனுமானம் பிரத்யக்‌ஷத்தால் நிரூபிக்க முடியாததை அனுமானத்தின் மூலமும் நிரூபிக்க முடியாது.
உன்னுடைய உதாரணத்தின் மூலம் தெரிவது என்னவென்றால் எதை செய்கிறாயோ அதற்குள்ளேயேதான் பலன் வரமுடியும்,
அதை விட்டு விட்டு வேறொன்று பலனாக வர முடியாது.

கேள்வி : நித்திய கர்மத்திற்கும், நிஷ்காம கர்மத்திற்கும் பலனாக மோட்சத்தைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அர்த்தாபத்தி பிரமாணத்தை உபயோகிக்கலாம். விஷ்வஜித் நியாயமான பலன் சொல்லப்படாத கர்மத்திற்கு
சுவர்க்க லோகம் பிராப்தி என்று எடுத்துக் கொள்வதை போல!!
அர்த்தாபத்தி பிரமாணம் – நித்திய கர்மங்களை பலன் சொல்லி யிருந்தாலும், சொல்லவில்லை யென்றாலும் காம்யமாக
செய்யக்கூடாது என்று நிபந்தனை இருக்கிறது. இதை உயிரோடு இருக்கும் வரை எல்லோராலும் செய்ய வேண்டும்.
எனவே மோட்சம் என்பதை பலனாக இதற்கு சொல்லலாம்
பதில் இப்படி பலனை கற்பனை செய்வதால் விஷ்வஜித் நியாயத்தை உன்னை அறியாமல் நீ பயன்படுத்தி இருக்கிறாய்
கேள்வி மோட்சத்தை பலனாக சொல்லவில்லை, மோட்சம் தன்னிடத்திலே இருப்பதுதானே
பதில் முதலில் கர்மத்தின் பலன் என்று சொன்னாய், இப்பொழுது பலன் இல்லை என்று முரண்பட்டு பேசுகிறாய்.
கேள்வி மோட்சத்தை ஞானத்தின் பலன் என்று சொல்வது போல நானும் அதேமாதி சொல்கிறேன்.
பதில் ஞானத்தின் பலன் அறியாமை நீங்குதல் என்றுதான் பொருள். வெளிச்சம் இருளை நீக்கி பொருட்களை
காட்டிக் கொடுப்பதை போல அறியாமை நீங்கி விட்டால் அதனால் அடைந்த விளைவுகளும் நீங்கி விடும்.
இதைத்தான் ஞானத்தின் பலன் மோட்சம் ஆனால் கர்மத்தின் பலன் அக்ஞான நிவிருத்தி அல்ல, அறியாமையை நீக்க முடியாது.
கேள்வி கர்மத்திற்கு இரண்டு பலன்கள் உண்டு அவைகள் திருஷ்ட பலன், அதிருஷ்ட பலன்.
இதில் அதிருஷ்ட பலன் ஏன் அறியாமையை நீக்கி மோட்சத்தை கொடுக்க முடியாது?
பதில் கர்மங்களில் நிலவற்றிற்கு திருஷ்ட பலனோடு முடிந்து விடுகிறது. சில இடங்களில் அதிருஷ்ட பலனை
கற்பனை செய்தாக வேண்டும், அந்த இடங்களில் திருஷ்ட பலனை சொல்ல முடியாததாக இருக்கும்.
மோட்சம் என்பது திருஷ்ட பலன், ஜீவன் முக்தி. எனவே அதிருஷ்ட ப்லன் என்று கற்பனை செய்தது தவறு.
நித்திய கர்மங்கள், நிஷ்காம கர்மங்கள் சித்தஸுத்தியைத்தான் தரும்.
இது நம்மை ஆத்ம விசாரத்திற்கு தகுதிப்படுத்துகிறது அதன் மூலம் ஞானத்தை அடைந்து மோட்சத்தை அடையலாம்.

———–

பகுதி-4: உஷஸ்த பிரமாணம்
உஷஸ்தர் என்பவர் யாக்ஞவல்கியரிடம் கேளியை கேட்க ஆரம்பித்தார்.
கேள்வி: அனைத்துக்குள்ளும் இருக்கின்ற ஆத்மா அபரோக்‌ஷமாகவும், நேரிடையாகவும், சாக்ஷாத்காரமாகவும்,
மிகத் தெளிவாகவும் உள்ள ஸ்வரூபத்தை விளக்குங்கள்
பொருட்கள் விஷயத்தில்:
பரோக்ஷ ஞானம் தூரத்தில் இருக்கின்ற பொருளை குறிப்பது
அபரோக்ஷ ஞானம் அருகில் இருக்கின்ற பொருளை குறிப்பது
பிரம்மன் விஷயத்தில்:
பரோக்ஷ ஞானம் பிரம்மன் ஒன்று இருக்கிறது என்ற அறிவு
அபரோக்ஷ ஞானம் பிரம்மன் நம்மிட்த்திலே இருக்கிறது என்ற அறிவு அது ஸ்வயம் பிரகாசமாகவும், தானாக விளங்கி கொண்டிருப்பதாகவும் இருக்கிறது
எனவே ஒரு பொருள் தன் இருத்தலையும், பிரகாசிப்பதையும் பிரமாணத்தை சார்ந்திருக்கிறது.
பிரம்மன் மட்டும்தான் பிரமாணம் இல்லாமல் விளங்கிக் கொண்டிருக்கின்றது (ஸ்வயம் பிரகாசம்) நான் அறிவு ஸ்வரூபமாக இருக்கிறேன்
என்பதற்கு எந்த பிரமாணமும் வேண்டாம்.
சாக்ஷாத் அபரோக்‌ஷம்: இது இந்திரியத்திற்கு விஷயமாக வராத ஒரு வஸ்து அன்பதை உறுதியிட்டு கூற இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பிரத்யக்‌ஷ பிரமாணத்தால் தெரிந்துக் கொண்டிருக்கும் பொருளை அபரோக்‌ஷம் என்றும் கூறுவர்.
இந்த அர்த்தத்தில் பிரம்மத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் சாக்ஷாத் அபரோக்‌ஷம் என்ற சொல் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதில் एषः आत्मा सर्वन्त्रः இந்த ஆத்மாதான் எல்லா உயிர்களிடத்திலும் உள்ளது, உன்னிடத்திலும் உள்ளது
கேள்வி ஸர்வாந்தர ஆத்மாவை மேலும் விளக்குங்கள்?
பதில் ஆத்மாவின் துணைக் கொண்டு ஜடமான இந்திரியங்கள் அறிவு பெற்று செயல்படுகின்றது.
ஆத்மா செயல்படாதது, அறிவு பூர்வமானது ஜடமான ஒன்று எதனால் சேதனத்தைப் போல செயல்படுகிறதோ
அதுதான் ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும்.
எந்த ஒன்றினால் ஜடமான பிராணன் சேதனமாக செயல்படுகிறதோ அந்த ஒன்றுதான் ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும்.
ஆத்மாவின் இருப்பால் அனாத்மாக்கள் அறிவை அடைந்து செயல்படுகிறது.
यः प्राणेन प्राणितः – எந்த ஒரு ஆத்மா இருப்பதனால் சூட்சும சரீரத்தின் துணைக் கொண்டு பிராணன் செயல்படுகிறதோ
அந்த ஒன்று தான் எல்லோருடைய சரீரத்திற்குள்ளும் இருக்கிறது.
இதேமாதிர் அபானன், வியான்ன், உதானன் இவைகளின் செயல் புரியம் தன்மையை புரிந்து கொள்ள வேண்டும்.
உன்னிட்த்தில் இருக்கும் இப்படிபட்ட ஆத்மாதான் எல்லோரிடத்தின்னுள்ளும் இருக்கிறது

ஸ்லோகம்-2
கேள்வி இது பசு, இது குதிரை என்று எப்படி நேரிடையாக குறிப்பிடுகிறோமோ அப்படி ஆத்மாவைப் பற்றி தெளிவாக சொல்ல வேண்டும்.
பதில் द्रुष्दे द्र्ष्टारम – த்ருஷ்டா – மனதில் தோன்றும் எண்ணங்கள், மனோவிருத்தி
த்ருஷ்டே – மனதில் தோன்றும் எண்ணத்தை
த்ரஷ்டா – சாட்சி, த்ரஷ்டாரம் – சாட்சியை
மனதில் எழும் எண்ணத்தைப் பார்க்கும் சாட்சியை பார்க்க முடியாது. உலகை பார்க்கும் எண்ணத்தைப் பார்க்கும் சாட்சியை பார்க்க முடியாது.
சப்தத்தை கேட்கும் எண்ணத்தை கேட்கும் சாட்சியை பார்க்க முடியாது. சுவைக்கின்ற சுவையை உணரும் சாட்சியை பார்க்க முடியாது.

விசாரம் (த்ருஷ்டி, த்ரஷ்டா)
த்ருஷ்டி
1. கரணம்: மனதிலுள்ள எண்ணம். ஒரு அறிவை அடைய வேண்டுமென்றால் அதை கொடுப்பதற்கு கரணம்(கருவி) தேவை,
அதன் உதவியால்தான் நாம் அறிவை அடைய முடியும். இது மாற்றத்திற்குட்பட்டது.
சவிகார விருத்தி: மனதில் தோன்றும் மாற்றத்தை உடைய எண்ணங்கள்
2. சைதன்யம்(அறிவு): இது மனதில் எழும் எண்ணங்களை விளக்குகிறது. மாற்றம் எண்ணத்தில்தான் இருக்கும் அறிவில் அல்ல.
இது நிர்விகார சைதன்யம்- மாற்றமடையாத அறிவு ஸ்வரூபம்.

த்ரஷ்டா
1. பார்ப்பவன்: கர்த்தா, பிரமாதா, போக்தா (பார்த்து, கேட்டு, சுவைத்து) அறிபவன்.
இந்த நிலையில் சவிகார த்ரஷ்டா, சவிகார பிரமாதா – மாற்றத்தை அடைகின்ற போக்தா
2. நிர்விகார சாக்‌ஷி – எந்த மாற்றத்தையும் அடையாத சாட்சி.

சாதாரணமாக நாம் மனதைத்தான் அறிபவன், அனுபவிக்கின்றவன் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
இதை அறிவதற்கு எண்ணங்கள்தான் கருவியாக பயன்படுத்துகிறோம். எண்ணங்கள் என்றும் மனதில் தோன்றி மறைவதாக இருக்கின்றது.
மனதை எண்ணங்கள் சார்ந்திருக்கிறது. எண்ணங்களை பதிவு செய்தல், உணர்வுகளை வெளிப்படுத்துதல், எண்ணங்களை எடுத்து
ஆராய்ச்சி செய்வது போன்ற எல்லாமே மனதை ஆதாரமாக வைத்துத்தான் நடக்கிறது. த்ருஷ்யம் – உலகம், த்ருஷ்டி – எண்ணங்கள், த்ரஷ்டா-மனம்.
சாக்‌ஷி – எந்த மாற்றத்தையும் அடையாமல், மாற்றங்களை அடைந்து கொண்டிருக்கும் விஷயங்களை பார்த்துக் கொண்டிருப்பவன்.
சாக்‌ஷியாக இருப்பவனுக்கும் ஒரு த்ருஷ்டி தேவை. இதற்கு கரணமாக இருப்பது நிர்விகார சைதன்யம்,
இது அறிவது எதை என்று நினைத்தோமானால் அது மனதையும், மனதில் தோன்றும் எண்ணங்களை அனுபவித்துக் கொண்டு இருக்கிறது.
த்ருஷ்டி
த்ரஷ்டா
த்ருஷ்யம்
அனாத்மா
எண்ணம்
மனம்
ஜகத்
சாட்சி
மனம்
சைதன்யம்
மனம்
ஜகத்தை மனம் அறிகிறது, மனதை சாட்சி அறிகிறது. சாட்சி உறங்குவதே கிடையாது. மனதை ஜடமாக அறியாததற்கு காரணம்,
சாட்சி எப்பொழுதும் மனதை விளக்கிக் கொண்டிருப்பதனால். ஆழ்ந்த உறக்கத்தில் அனுபவிப்பதை சாட்சி அறிந்து
கொண்டிருப்பதால் நம்மால் விழித்தப்பின் அதை நினைவு கூர்ந்து சொல்ல முடிகிறது.

சாஸ்திரம் இங்கே இந்த உபதேசத்தின் மூலம் சொல்வது நான் அன்பதை சட்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மனதை விட்டுவிட வேண்டும்.
இந்த உலகம் நமக்கு விஷயமாக இருக்காது. அதனால் உலக விஷயங்களில் வரும் துயரங்கள் எதுவும், அனைத்து மாற்றங்களும் நம்மை பாதிக்காது.
இதன் மூலம் மனதை பார்க்கப்படும் பொருளாக மாறி விட்டால் துயரமே வராது. எப்படி சம்சார காலத்தில் துயரம் தானாக வருவது போல
மோட்ச காலத்தின் மனநிறைவு தானாக வரும் என்றாகி விடும்.

உபதேசம் சாட்சியை யாராலும் விளக்க முடியாது
த்ருஷ்டி மனதில் உள்ள எண்ணங்கள்
த்ரஷ்டா சாட்சி
த்ருஷ்டே உலகத்தை பார்க்கும் எண்ணங்கள்
த்ரஷ்டா இதை பார்க்கும் சாட்சியை யாரும் பார்க்க முடியாது, விளக்க முடியாது

சப்தத்தை கேட்கும் எண்ணத்தை அறியும் சாட்சியை அறிய முடியாது
சிந்திக்கின்றதால் வரும் எண்ணத்தை அறியும் சாட்சியை அறிய முடியாது
ஆராய்ந்தறியும் எண்ணத்தை அறியும் சாட்சியை அறிய முடியாது
அதுதான் உன்னுடைய ஆத்மா. அதைத்தான் ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும். எல்லா ஜீவராசிகளிலும் இதுவேதான் இருக்கிறது.

अतः अन्यत आर्तम – சாட்சியிடமிருந்து, ஆத்மாவிடமிருந்து வேறாக இருக்கின்ற அனைத்தும் (அனாத்மக்களும்) மித்யா, துயரத்தைக் கொடுப்பவைகள்
आर्तँ துயர ஸ்வரூபம், அழிவுக்குட்பட்டது, மித்யா
अन्यत ஜகத், ஜகத்தை கிரகிக்கும் எண்ணங்கள், மனது
மனமும் அதில் எழும் எண்ணங்களும், எண்ணங்களுக்கு விஷயமாக இருக்கும் இந்த ஜகத் அனைத்தும் மித்யா.

सत – அந்தகரணத்வம், असत – மித்யாத்வம்
அதிகரணம் X அந்தகரணம் (ஆதாரம் – அதிஷ்டானம்) அற்றது.
“புத்தகம் மேசை மேல் இருக்கிறது”
இதில் புத்தகம் இருத்தலுக்கு ஆதாரமாக இருக்கிறது. நாம் பார்த்து அனுபவிக்கும் பொருட்கள் இருத்தலுக்கு ஆதாரமாக இருக்கிறது.
ஸத் அதிகரணம். சில பொருட்கள் இல்லாமைக்கும் ஆதாரமாக இருக்கிறது. மேசை மீது மலர் இல்லை.
அதில் மேசையானது மலரின் இல்லாமைக்கு ஆதாரமாக இருக்கிறது.
எந்த ஒன்று ஸத்திற்கும் ( இருத்தலுக்கும்), அஸத்திற்கும் (இல்லாமைக்கும்) ஆதாரமாக இருக்கிறதோ அதுதான் மித்யா.
”கயிற்றில் தோன்றும் பாம்பு”
இதில் பாம்பு ஸத்தின் ஆதாரமில்லை, ஏனெனில் அறிவு வந்தவுடன் பாம்பு மறைந்து விடுகிறது. இல்லாமைக்கும் அதிகரணம் என்று சொல்ல முடியாது.
ஏனென்றால் அது அனுபவித்திற்கு வருகிறது. இதில் பாம்பானது இருத்தலுக்கு அந்திகரணம் இல்லாமைகும் அந்திகரணம். இதுவேதான் மித்யா.

————-

பகுதி-5: கஹோல பிரமாணம்
இந்தப் பகுதியில் கீழ்கண்ட கருத்துக்கள் விளக்கப்படுகிறது.
1. ஆத்மா ஸ்வரூபம் – சம்சாரமற்றது
2. இரண்டு சாதனைகள் – ஞானம், சந்நியாஸம் (தியாகம்)
3. அனாத்மாக்களில் இருக்கின்ற ஆசைகளின் வேற்றுமைகள்
4. சிரவணம், மனனம், நிதித்யாஸனம் இவைகளின் விளக்கம்
5. ஞானியின் லட்சணம்
6. மித்யாத்வம்

சங்கரரின் முகவுரை:
கேள்வி: சென்ற பிராமனத்தில் பேசப்பட்ட ஆத்மா வேறு, இந்த பிராமனத்தில் பேசுகின்ற ஆத்மா
வேறு போல என்பது போல தோன்றுகிறதே. இரண்டும் ஒன்று என்றால் மீண்டும் சொல்கிறாய் என்ற தோஷம் இருக்கிறதே.
அதனால் இந்த பிராமனத்தில் வேறொன்றுத்தான் விளக்கப்படுகிறது.
பதில்: சென்ற பிராமனத்தில் விளக்கப்பட்ட ஆத்மாவைத்தான் இந்த பிராமனத்தில் விளக்கப்படுகிறது.
ஆத்மாவின் வேறு சில விசேஷங்கள் இங்கு பேசப்படுகின்றது. ஆத்மா சம்சாரமற்றது என்ற புதிய கருத்து சொல்லப்பட்டிருக்கிறது.
அதேபோல சில சாதனைகள் விளக்கப்பட்டிருக்கிறது.
கேள்வி நான் என்ற சொல்தான் சம்சாரியாக இருக்கிறது. ஆனால் இங்கு எப்படி ஒரு வஸ்து சம்சாரியாகவும், அசம்சாரியாகவும் இருக்கும்?
பதில் பிராந்தி மாத்திரம். வெறும் குழப்பத்தால் வந்தது. சம்சாரமே மித்யாதான். எங்கே மித்யா வருகிறதோ
அங்கே இரண்டு விஷயங்கள் சம்பவிக்கும். எனவே நான் என்பதில் மித்யாவான சம்சாரமும், சத்யமான ஆத்மாவும் இருக்கலாம்.

மந்திர விளக்கம்: (ஆத்ம ஸ்வரூபம்)
கேள்வி எந்த ஒன்று சாக்‌ஷாத் அபரோக்‌ஷமாக இருக்கின்றதோ, எந்த ஒன்று அனைவருக்குள்ளும் இருக்கின்றதோ அதை விளக்கி சொல்லுங்கள்.
பதில் உன்னுடைய ஆத்ம ஸ்வரூபம்தான் அனைவரிடத்திலும் இருக்கின்றது.
கேள்வி இதை மீண்டும் விளக்கி சொல்லுங்கள்.
பதில் எந்த ஒன்று ஆறு தத்துவங்களான அஸனாய, பிபாஸே, சோகம், மோஹம், ஜராம், ம்ருத்யு என்கின்ற
சம்சாரத்தை கடந்து இருக்கின்றதோ, அதுவே ஆத்மாவாக இருக்கின்றது.
அஸனாய – பசி; பிபாஸே-தாகம்; சோகம் – துயரம்; மோஹம் – ஆசை;
ஜரா – வயோதிகம்; ம்ருத்யு – மரணம்.
அஸனாய, பிபாஸ – பிராணமய கோசம் – இதில் உள்ள அபிமானத்தால்தான் துயரத்தை அனுபவிக்கின்றோம்.
சோகம் – மனோமய கோசம்
மோகம் – விக்ஞானமய கோசம்
ஜரா, ம்ருத்யு – அன்னமய கோசம்
ஆனந்தமய கோசமே சம்சாரத்தை மறந்த நிலை. ஆனால் துயரத்தினுடைய விதை இருந்து கொண்டிருக்கும்.
இவ்வாறு அடைந்த இன்பத்தை திரும்ப திரும்ப எடுக்கும் முயற்சியில் சம்சாரத்தை வீழ்த்தி விடும்.
இதனால் கோபம், மோகம், என்பதை அன்பவிக்க நேரிடும்.

அஸனாய (பசி), பிபாஸ (தாகம்)
எதுவரை பிராணமய கோசத்தில் அபிமானம் இருக்கிறோமோ அதுவரை பசி தாகம் என்ற துன்பத்தை அனுபவித்துக் கொண்டுதான் இருப்போம்.
சோகம்: மனதில் இருக்கும் விகாரம். துயத்தைக் கொடுக்கக்கூடிய அனைத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆசைப்பட்ட பொருளை அடையாவிட்டால் சோகத்தை அடைவோம். சங்கரர் சோகத்தின் விளைவே ஆசை என்று கூறுகிறார்.
ஸித்த அநவஸ்திதி (அரதி) மன சஞ்சலத்தில் இருத்தல், சித்தம் நிறைவில்லாமல் இருத்தல், இதனுடைய விளைவுதான் ஆசை.
இங்கு சோகம் என்பதற்கு மன நிறைவின்மையால் வரும் ஆசை என்ற பொருள் கொள்கிறார்.
மனநிறைவுடன் இருக்கும்போது மனமானது எதற்கும் ஆசைப்படாது.
மோகம்(விபரீதம்): விக்ஞானமய கோசத்தின் மீது உள்ள அபிமானத்தால் வருவது அநித்ய, தூய்மையற்ற,
துயரத்தைக் கொடுக்கின்ற விஷயங்களில் அனாத்மாவில் நித்ய, தூய்மையான, சுகமானது என்கின்ற புத்தி மோகம்.
இது துக்கத்திற்கு காரணமாக இருப்பது.
ஜரா, ம்ருத்யு: ஸ்தூல சரீரத்திற்கு வருகின்ற மாற்றம். இதிலிருந்து விடுதலை முடியாது.
இதிலிருந்து அபிமானத்தை எடுத்து விட்டால் இதனால் பாதிக்கப்பட மாட்டோம்.

ஐந்து கோசத்தையும் தாண்டியது, மூன்று உடலினையும் தாண்டியது ஆத்மா. சம்சாரமானது ஆத்மாவையும் சார்ந்திருக்காது,
ஜடமாக இருப்பதால் அனாத்மாவையும் சார்ந்திருக்காது. எனவே இது மித்யா.
இப்படிபட்ட மித்யாவான சம்சாரத்தை கடந்து இருப்பது, ஆதாரமாக இருப்பது ஆத்மா என்று அறிந்து கொள்ள வேண்டும்.

பிரஸகதி – செய்யும் வாய்ப்பு உள்ள இடத்தில்தான்
பிரதிசேதம் – செய்யாதே என்று சொல்ல முடியும்.

அத்யாஸத்தினால் அனாத்மாவானது ஆத்மாவில் ஏற்றி வைத்து பார்க்கிறோம். எனவே ஆத்மா இவைகளை கடந்து நிற்கிறது என்று சொல்லப்படுகிறது.

ஸ்லோகம்-2 சாதனைகள் (ஞானம், சந்நியாஸம்)
एतम तँ आत्मानम विदित्वा ब्राह्मणा – இந்த ஆத்மாவை அறிந்த சாதகர்கள்
पुत्र एषनायाः புத்திரன் மீதுள்ள ஆசையிலிருந்தும்;
विथैषयात्: – சொத்தின் மீதுள்ள ஆசையிலிருந்தும்;
लॊकेषयात् உலகத்தின் மீது இருக்கும் ஆசையிலிருந்தும்
वियुत्ताय – விடுபட்டு, भिक्शाचर्यम् – சந்நியாஸம் सरन्ति – எடுத்துக் கொள்கிறார்கள்.

ஆத்மவிசாரம்-1
ஆத்மாவை அடைதல் என்பது என்னையே அடைதலாகும். சம்சாரியான அஹம் அசம்சாரி அஹத்தை அடைய வேண்டும்.
இந்த நிலையை ஞானத்தினால்தான் அடையமுடியும். அடையும் வஸ்து ஏற்கனவே நம்மிட்த்தேதான் இருக்கிறது.
அக்ஞானமும் அதைத் தொடர்ந்து வருகின்ற அத்யாஸத்தினால், சம்சாரத்தை ஆத்மாவில் ஏற்றி வைத்திருக்கிறோம்
இந்த நிலையை நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

· ஆத்மாவை அறிந்த பிறகு சந்நியாஸத்தை எடுத்துக் கொள்வது
· சந்நியாஸத்தை எடுத்துக் கொண்ட பிறகு ஆத்மாவை அறிந்து கொள்வது
· ஆத்மாவை அறிந்து கொள்ள விரும்பி எடுத்துக் கொண்ட சந்நியாஸம்.

விவிதிக்ஷா சந்நியாஸம் – புத்ர, வித்தம், லோகம் ஆகியவற்றை விட்டுவிட்டு வைராக்யம் அடைந்து,
ஆத்ம ஞானம் அடைய உதவும் சாதனைகளை செய்து அடைதல்
வித்வத் சந்நியாஸம் வைரக்யமும், ஆத்ம ஞானம் அடைந்தவர்கள் எடுத்துகொள்ளும் சந்நியாஸம்.
இவர்களது லட்சியம் அடைந்த ஞானத்தில் நிலைபெறுவது.

இந்த இரண்டு சந்நியாஸமும் சாதனை ரூபமாக இருக்கின்றது. எனவே இவையிரண்டும் சாதனை ரூப சந்நியாஸம் என்று கூறுவர்.
இந்த சந்நியாஸத்தில் இருக்கும் சாதனைகளை சந்நியாஸ வாழ்க்கையில் இல்லாமல் இருப்பவர்களும் கடைப்பிடித்தால்
அவர்களும் ஞானமும் ஞான நிஷ்டையும் அடையலாம். ஸம்யக் ஞானம் ( ஞான நிஷ்டை) உள்ளவர்களுக்கு
சந்நியாஸம் என்பது லட்சணையாக இருக்கிறது.

ஆத்மவிசாரம்-2
கேள்வி: व्युत्थाय भिक्शचर्यँ चरन्ति – இதை அர்த்தவாதமாக எடுத்துக் கொள்ளலாம். பூதார்த்த வாக்கியம் என்று எடுத்துக் கொள்ளலாம்.
1. பூதார்த்த வாக்கியம் என்பது இந்திரன் கையில் வஜ்ராயுதம் இருக்கிறது என்ற வாக்கியமானது நம்மால்
ஒத்துக் கொள்ளவும் முடியாது மறுக்கவும் முடியாது. எனவே இதை அப்படியே எடுத்துக் கொள்ளலாம்.
இந்திரன் சக்தி வாய்ந்தவன் என்று சொல்வதற்காக இந்த வாக்கியம் பயன்படுத்தப்பட்டுள்ளது போல் இருக்கிறது.
இந்த வாக்கியத்தை அர்த்தவாதமாக எடுத்துக் கொள்ளலாம்.
2. வேதம் சொல்வது போல் வாழாதவன் கீழான நிலைக்கு சென்று விடுவார்கள். சந்நியாஸத்தில் எந்த விதிமுறையும் கிடையாது.
3. சந்நியாஸம் எடுத்துக் கொண்டால் வேதத்தை படிக்கக்கூடாது.
4. இங்கு மூன்று மட்டும் துறக்கப்படும், எல்லாவற்றையும் துறக்க தேவையில்லை.
பதில் வேதாந்தத்தில் உள்ள கர்மகாண்டம் முழுவதையும் சந்நியாஸம் எடுத்துக் கொண்டவர்கள் துறந்து விட வேண்டும்
என்று ஸ்ருதியே விதித்துள்ளது. எந்த அதிகாரிக்கு வேத வாக்கியம் கூறப்படுகிறது என்று பார்த்து பொருள் கொள்ள வேண்டும்.
இங்கே ஆசையுடையவனுக்கு சந்நியாஸம் தேவையில்லை, அனாத்ம விஷயங்களில் பற்றில்லாதவன் சந்நியாஸம் எடுத்துக் கொள்ளலாம்.
ஆசைகளை இரண்டு விதமாக நீக்கலாம். 1. தர்மப்படி அனுபவித்து நீக்கலாம், 2. ஞானத்தாலே நீக்க முடிவது.
எல்லா உபநிஷத்தின் குறிக்கோள் ஆத்மஞானம்தான் அதை அடையும் நேரடி சாதனங்கள் சிரவணம், மனனம், நிதித்யாஸனம்.
இதில் வெற்றி அடைய சந்நியாஸம் உதவி புரிகிறது.

ஆத்மவிசாரம்-3
அனாத்மாவில் இருக்கும் ஆசைகளை ப்ரித்தறிதல். அனைவரும் மூன்று பெரிய ஆசைகளில் விழுந்திருக்கிறார்கள்.
அந்த ஆசைகளின் பிடியில் சிக்காமலிருக்க வேண்டும்.
புத்ர ஏஷணா- இது சாதனை இச்சாவாக கருதப்படுகிறது. தன் மகன மீதுள்ள ஆசை. இங்கு புத்திரன் ஒரு சாதனமாகவும்
அதைக் கொண்டு அடையும் சாத்தியமாக இகலோக, பரலோக சுக ப்ராப்தி. இங்கு புத்திரன் என்பதை உபலக்ஷணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
எனவே புத்திரன் மட்டுமல்ல மற்றவர்களின் உதவிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அனைத்து உறவுகளிடமிருந்து விடுபட வேண்டும்.
இந்த உறவுகளால் நமக்கு பாதுகாப்பை பெறுவோம். ஆனால் பாதுகாப்பை கடைசி வரையில் வைத்திருக்க கூடாது.
அதை விட்டுவிட்டு வருவதற்கு நம் மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இறந்ததற்கு பிறகு புத்திரன் செய்யும் சிரார்தத்தால் நற்பலன் கிடைக்க உதவும். சாத்தியத்தின் மீதுள்ள பற்றை தியாகம் செய்ய வேண்டும்.
பிறகுதான் சாதனையை விடவேண்டும், முதலில் நம்மிடத்திலுள்ள பாதுகாப்பற்ற நினைப்பை அகற்ற வேண்டும்,
தனிமையில் பயமின்றி இருந்து பழக வேண்டும். அப்புறம்தான் சாதனையை விடவேண்டும்.,

வித்த ஏஷணா- இதுவும் சாதனை இச்சாவாக கருதப்படுகிறது.
· அசையா சொத்து: இதன் மீதுள்ள ஆசையை துறக்க வேண்டும். இதுவும் சாத்தியத்தை துறந்த பிறகுதான், சாதனையை துறக்க வேண்டும்.
· வித்தத்தை பயன்படுத்துதல்: சொத்து இருந்தால் மட்டும் போதாது, அதை பயன்படுத்தி சுகத்தை அடைந்தால்தான் அதனால் பிரயோஜனம் உண்டு.
· உபாஸனம் (அ) வித்யா: நாம் அடையும் வித்யாவுக்கு பொருள் தேவைப்படுகிறது.
நாம் அடையும் வித்யாதான் அதிக சுகத்தை அனுபவிக்கவும், மேலும் சொத்தை பெருக்கவும் உதவி செய்கிறது.
உபாஸனமும் ஒருவிதமான வித்தம்தான் எனவே இதன் மூலம் அடையும் செல்வங்களையும், அஷ்டமா சித்திகளையும் துறக்க வேண்டும்.

லோக ஏஷணா- இது சாத்திய இச்சாவாக கருதப்படுகிறது.
லோகம் என்பது இன்பத்தை நேரிடையாக கொடுக்க கூடிய உலகங்கள். இன்பத்தை தரக்கூடிய சூழ்நிலையில் இருத்தல்.
இந்த சூழ்நிலையை உருவாகும் முயற்சியை துறக்க வேண்டும்.

இதைப்போன்ற இச்சாக்கள் அனைத்தையும் அனாத்மா இச்சா என்று கூறலாம்.
இந்த அனாத்மா இச்சா சாதன இச்சா, சாத்திய இச்சா என இருவகையாக பிரிக்கலாம்.
சாதன இச்சாவானது புத்ர இச்சா, வித்த இச்சா என இருவகையாக பிரிக்கலாம்.
சாத்திய இச்சாவானது இகலோக, பரலோக இன்பங்கள்.

மந்திர விளக்கம்: புத்திரன் மீதுள்ள ஆசையானது வித்தத்தின் மீதிருக்கும் ஆசை, வித்தத்தின் மீதுள்ள ஆசையானது
லோகத்தின் மீதிருக்கும் ஆசை. ஆகவே ஆசை என்பது ஒன்றுதான். இந்த ஆசையை இரண்டாக பிரிக்கலாம், அவைகள் சாதன ஆசை, சாத்ய ஆசை.

சிரவணம், மனனம், நிதித்யாஸனம் ஸ்வரூப விளக்கம்:
तस्मात ब्राह्मणः पाण्डित्यम निर्विद्या –
ब्राह्मणः – சித்தஸுத்தி அடைந்தவர்கள், ஆசையிலிருந்து விடுதலையடைந்தவர்கள், வைராக்யத்தை அடைந்தவர்கள்,
சம, தமாதிகள் மூலம் வைராக்கியத்தில் நிலை பெற்றவர்கள்.
पाण्डित्यम निर्विद्या – பாண்டித்யத்தை முழுமையாக செய்து முடித்து
पाल्यॆन दिस्टासेत – பாலயத்துடன் இருக்க ஆசைப்பட வேண்டும்.
பால்யம், பாண்டித்யம் இவையிரண்டையும் செய்து முடித்த பிறகு मुनिः भभेत முனிவராக இருக்க வேண்டும்.
இவை மூன்றும் செய்து முடித்திருந்தால் அவன் பிராமணனாகி விடுகிறான், முக்தனாகி விடுகிறான், மோட்சத்தை அடைகிறான்.

சொல் விளக்கம்:
பாண்டித்யம்: ஆத்ம ஞானம்; உபநிஷத் சாஸ்திரத்திலிருந்து தோன்றியது பண்டா (पण्डा). இந்த பண்டாவை அடைந்தவன் பண்டிதன்.
பண்டாரம் என்ற சொல் ஆத்மஞானியை குறிக்கிறது. அந்த பண்டிதனாவதற்கு மேற்கொண்ட செயல்களை பாண்டித்யம் என்று கூறுவர்.
அந்த செயல்கள் வேதந்த வாக்ய விசாரம், குருவின் துணைக் கொண்டு செய்வதே சிரவணம்.
பாண்டித்ய நிர்வித்யா என்பது சிரவணத்தை பூர்த்தி செய்தல், முழுமையாக செய்தல் என்று பொருள்.
சிரவணம் எப்பொழுது முடிவடைகிறது என்று எப்படி அறிய முடியும் என்றால், உணவு உட்கொள்ளும்போது
எப்படி வயிறு நிறைந்து விட்டது என்று உணர்கிறோமோ அதேமாதிரி எப்பொழுது சந்தேகமில்லாமல் நான் தெரிந்து கொண்டேன்
என்ற உணர்வு வருகின்றதோ அப்போதுதான் சிரவணம் முடிவடைந்து விட்டது என்று உணரலாம். இந்த கேள்வியே நம் மனதில் எழும்பாது.

சுரேஷ்வராச்சாரியார் நான்கு நிலைகளில் (தத்வமஸி) என்ற ஞானத்தை அடைகிறோம் (சதுர்வித ஞானம்) என்று விவரிக்கிறார். (தத்+த்வம்+அஸி)
1. பதார்த்த அவகதி பூர்வம்: மகாவாக்கியத்திலுள்ள ஒவ்வொரு சொல்லின் அர்த்தத்தை முதலில் புரிந்து கொள்ளுதல்
2. ததஸ்ததி அவி சங்கதிஹி – இரண்டு சொற்களின் பொருள்களுக்கிடையே உள்ள சம்பந்தம்
(தத் என்ற சொல்லுக்கும், த்வம் என்ற சொல்லுக்கும் இடையே உள்ள சம்பந்தத்தை அறிந்து கொள்ளுதல்)
3. விருத்தார்த்த துதி பஷ்சாத் – இந்த சம்பந்த த்தை கேட்ட உடனேயே வேறு விதமான எண்ணங்கள்தான் முதலில் தோன்றும்,.
இப்படி தோன்றும் விருத்தமான அர்த்தத்தை விட்டுவிட வேண்டும்.
4. த்தோ வாக்யார்த்த போதனம் – இறுதியில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது இரண்டு சொற்களுக்குமிடையே உள்ள ஐக்கியத்தைத்தான்.

पाल्यॆन दिस्टासेत – பால்யத்துடன் இருக்க முயற்சி செய்.
ஞானத்தையே பலமாக கொண்டிரு. அடைந்த ஞானத்தில் உறுதியாக இருக்க வேண்டும். பணமிருந்தால் நமக்கு மனபலம் கிடைக்கும்.
உறவுகள் நிறைய இருப்பதாலும் நமக்கு பலம் கிடைக்கும். இவ்வாறு அனாத்மா விஷயங்கள் நமக்கு பலத்தை கொடுப்பதாக உணர்கிறோம்.
இந்த பலத்தை நாம் தியாகம் செய்து விட வேண்டும். சிரவணத்தை முடித்தவுடன் அடைந்த ஞானமே எனக்கு பலம் என்று உறுதியாக இருக்க வேண்டும்.
அனாத்மாவிலிருக்கிற பலத்தை துறந்து விட்டு, ஞானத்திலிருந்து பலத்தை அடைய உறுதி கொள்ள வேண்டும்.
அப்போதுதான் ஆத்ம ஞானத்தை அடைய முடியும். பணம், புகழ், பதவி, சொத்து இவைகளை வேண்டாம் என்று சொல்கின்ற மன உறுதியே பலம்.

पाल्यॆन भावः- குழந்தையைப் போல் இருக்க வேண்டும்,
1. விருப்பு-வெறுப்புக்களை, மற்ற தீய எண்ணங்களை துறந்த நிலை
2. குழந்தைகளிடத்தில் அகங்காரம் இல்லாத காரணத்தால் தன்னை மற்றவர்கள் முன் பெருமைபடுத்திக் கொள்ளாமல் இருப்பது போன்ற நிலை
3. நான் ஞானத்தை அடைந்தவன் என்று மற்றவர்களிடம் வெளிப்படுத்திக் கொள்ளாதிருத்தல், அதை நிரூபிக்க முயற்சி செய்யாதிருக்கும் நிலை
4. ஞானத்தை அடைந்த்து விட்டேன் என்ற கர்வம் கொள்ளாதிருத்தல், எளிமையாக வாழ்தல்

அடைந்த ஞானத்தை உறுதிப்படுத்த வேண்டும். மனனம் என்ற சாதனை மூலம் இந்த பலத்தை அடைய வேண்டும்.
சந்தேகத்தை நீக்குவதன் மூலம் இந்த பலம் வந்து விடும். ஞானம் உறுதியாக வேண்டுமென்றால் அடைந்த ஞானத்தின் சந்தேகமற்று இருக்க வேண்டும்.
பாண்டித்யம், பால்யம் இவை இரண்டையும் முழுமையாக கடைப்பிடித்து ஒரு முனிவராக இருக்க வேண்டும்.
மௌனமாக இருக்க விரும்ப வேண்டும். அடைந்த ஞானத்துடன் மௌனமாக இருப்பவர்கள், அதைக் கடைபிடிப்பவர்கள் முனிவர் என்று அழைக்கப்படுவர்.

அமௌனம் – சிரவணம், மனனம் இவற்றைக் குறிப்பது
மௌனம் – நிதித்யாஸனத்தைக் குறிக்கிறது, இந்த நேரத்தில் மௌனமாக இருக்க வேண்டும்.

மௌனம்: வாய் திறந்து பேசாதிருத்தல், ஞானத்தை அடையாமல் உபாஸனை காலத்தில் இருக்கும் மௌனம், ஞானத்தை அடைந்த பின் இருக்கும் மௌனம் என்று இருவகையாக இருக்கிறது. உபாஸகர்களின் மௌனம் இரண்டாக உள்ளது. அவைகள்,
1. காஷ்ட மௌனம்: வாய் மட்டும் பேசாதிருத்த;
2. ஆகாஷ்ட மௌனம்: கை, கால் இவைகளினால் எந்த செய்கைகளினாலும் பேசாதிருத்தல்.
இதனால் அடையும் பலன்களாவது, மனதில் இருக்கின்ற சஞ்சலங்கள் நீங்கும், மனமானது ஒரு இடத்தில் குவியும், ஜபம் நன்றாக சித்திக்கும்.
ஸ்வதோஷம் – நம்மிடம் உள்ள குறைகள் எல்லாம் நமக்கே தெரிய வரும். சில பதிவுகள் எல்லாம் ஞானம் வந்தவுடன் சென்று விடாது.
இந்த ஞானத்தின் உதவிக் கொண்டு எல்லாவிதமான விபரீதபாவனைகளான இருமை, நான் கர்த்தா நிதித்யாஸனம் என்ற சாதனையின் மூலம் நீக்குதல்.

நிதித்யாஸனம்: நாம் அடைந்த ஞானத்தில் நின்று பழகுதல். இந்த நேரத்தில் மௌனத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
அனாத்மா விஷயமான பேச்சை மட்டும் விட்டுவிட வேண்டும். அனாத்ம விஷயத்தைப் பற்றி பேச பேச த்வைத புத்தி மேலும் பெருகும்.
நமக்கு தேவையில்லாத சங்கங்களை ஏற்படுத்தி விடும். இவ்வாறு செய்வதன் மூலம் நமக்கு தனிமை கிடைத்து விடும். மனமானது ஒருமுகப்பட்டு விடும்.

अथ मुनिः மௌனத்தில் ஈடுபட்டு நிதித்யாஸனத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
வாக் என்கின்ற இந்திரியத்தின் துணைக் கொண்டு தான் சிரவணத்தை மேற்கொள்ள வேண்டும்.
அமௌனம் – சிரவணம், மனனம்; மௌனம்: நிதித்யாஸனம்.
அமௌனத்தையும், மௌனத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு சொல்லப்பட்ட அனைத்தையும் முழுமையாக
பூர்த்தி செய்தவன் பிரம்மத்தை அடைகின்றான், அவனே ஜீவன் முக்தனாகின்றான்.

सः ब्राह्मः केन सयात्? இப்படிபட்ட ஜீவன் முக்தனை எப்படி அறியலாம்? எந்த நடவடிக்கையின் மூலமாக அவனை கண்டு கொள்வது?
येन स्यात्तेन அவன் எப்படி வேண்டுமானலும் இருப்பான். வெளித்தோற்றத்தைக் கொண்டும்,
அவன் செய்யும் செயல்களை வைத்தும் கண்டுபிடிக்க முடியாது. எனவே அவன் இப்படி இருப்பான் என்று சொல்ல முடியாது.

தொகுப்பு:
ஆத்மாவுக்கு சம்சாரம் இல்லை. இதை அடைதல் என்பது அறிவது என்பதாகும். புத்ரன், வித்தம், லோகம்
இந்த மூன்று பேராசைகளிலிருந்து விடுபட வேண்டும். பாண்டித்யம், பால்யம், முனி என்ற சாதனங்களை கூறி
இதன் மூலம்தான் ஞான பலத்தை அடைய வேண்டும். இப்படி சொல்லியபடி சாதனைகளை கடைபிடித்து
ஞானத்தை அடைந்து அதில் நிலைபெற்றவன் பிரம்மத்தை அடைந்தவனாகிறான். அவனையே ஜீவன்முக்தன் என்று கூறுவர்.
இவனுக்கென்று தனி லக்‌ஷணம் என்று ஒன்றும் கிடையாது. அவன் எப்படி வேண்டுமானாலும் இருப்பான்
அவன் செய்யும் செயல்களிலிருந்து நாம் அவனை அறிய முடியாது.

————

பகுதி-6: கார்கி பிரமாணம்
ஸ்லோகம்-1
இந்தப் பகுதியில் ஸ்தூலமான பிருத்வியிலிருந்து மிக மிக சூட்சுமமான ஹிரண்யகர்ப்பன் வரையில் விசாரம் செய்யப்படுகிறது.
आन्तरः மூலக்காரணமாக இருப்பது:
ஸர்வாந்தரஹ : எல்லாவற்றிற்கும் மூலகாரணமாக இருக்கின்றது, ஆதாரமாக இருக்கின்றது.
ஆந்தர தத்துவ விளக்கம்:
ஆந்தரம்: காரணம்; அபரிச்சின்னம் (வரையறுக்கப்படாதது); சூட்சுமம், சத்யம்.
· எது காரியமாக இருக்கிறதோ அது காரணத்தால் வியாபித்திருப்பதாக இருக்க வேண்டும்.
· எது வரையறுக்கப்பட்டதோ அது வரையறுக்கப்படாத தத்துவத்தினால் வியாபித்திருப்பதாக இருக்க வேண்டும்.
· எது ஸ்தூலமாக இருக்கிறதோ அது சூட்சுமத்தினால் வியாபித்திருப்பதாக இருக்க வேண்டும்
· எது மித்யாவாக இருக்கிறதோ அது சத்யத்தினால் வியாபித்திருப்பதாக இருக்க வேண்டும்
எல்லாவற்றிலும் ஆந்தரமாக இருப்பது எது?

மந்திர விளக்கம்:
பிருத்வியானது நீரினால் வியாபிக்கபட்டிருக்கிறது, நீரானது வாயுவினால் வியாபிக்கப்-பட்டிருக்கிறது.
வாயுவானது ஆகாசத்தினால் வியாபிக்கபட்டிருக்கிறது, ஆகாசமானது கந்தர்வலோகத்தால் வியாபிக்கபட்டிருக்கிறது,
கந்தர்வலோகமானது பிரஜாபதி லோகத்தால் வியாபிக்கபட்டிருக்கிறது, பிரஜாபதிலோகமானது பிரம்மலோகத்தினால் வியாபிக்கப்-பட்டிருக்கிறது,
பிரம்மலோகமானது எதனால் வியாபிக்கபட்டிருக்கிறது என்ற கேள்விக்கு யாக்ஞவல்கியர் பதில் சொல்லவில்லை
ஆனால் எச்சரிக்கை செய்கிறார் இதற்கு மேல் போனால் உன் தலை வெடித்து விடும்.
ஹிரண்யகர்ப்ப தத்துவத்தை அனுமானம் மூலம் விளக்க முடியாது. தர்க்க பிரமானத்திற்கப்பால் உள்ள விளக்கத்தை
தர்க்கத்தில் பெற முயற்சி செய்யாதே என்று எச்சரிக்கிறார் யாக்ஞவல்கியர்.
अनतिप्रश्न्याँ – அனுமான பிரமானத்திற்குப்பாற்பட்ட விஷயத்தை, தர்க்க பிரமானத்திற்குள் வராததை
अतिप्रुच्छसि – தர்க்கத்தால் தெரிந்து கொள்ள விரும்புகிறாய்;
मातिप्राक्षीरिति- அந்த மாதிரி முயற்சிக்காதே.
பிரத்யக்‌ஷம் இல்லாமல் அனுமானம் பண்ண முடியாது. ஹிரண்யகர்ப்ப தத்துவத்தை ஆகாம பிரமானத்தால்தான் அடைய முடியும்.

——–

பகுதி-7: அந்தர்யாமி பிரமாணம்
ஸ்லோகம்-1
உத்தலகா என்பவர் யாக்ஞவல்கியரிடம் கேள்வி கேட்பதற்கு முன் ஒரு கதை சொன்னார்.
மத்ரா என்ற ஊரில் பதஞசலகாப்யம் என்பவர் வீட்டில் யக்ஞங்களை தெரிந்து கொள்ள படித்துக் கொண்டிருந்தோம்.
பதஞ்சலகாப்யாவின் மனைவிக்குள் ஒரு கந்தர்வன் புகுந்து கொண்டான்/ அந்த கந்தர்வனிடம் “”நீ யார்?” என்று கேட்டோம்.
அந்த கந்தர்வன், ‘என் பெயர் கபந்தன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
பிறகு அவன் எங்களை பார்த்து, “எந்தவொரு சூத்ர தத்துவம் இந்த உலகத்திலும், பரலோகத்திலும் உள்ள எல்லா ஜீவராசிகளையும்
சீராக இயங்க வைத்துக் கொண்டிருக்கிறதோ அந்த சூத்ர தத்துவத்தை, ஹிரண்யகர்ப்ப தத்துவத்தை அறிவீர்களா? என்று கேட்டான்.
பதஞ்சலகாப்யர், ‘ஏ பகவான் எனக்கு அந்த தத்துவம் தெரியாது” என்று பதிலளித்தார்.
”அந்தர்யாமி தத்துவத்தைப்பற்றி தெரியுமா? இகலோக, பரலோக ஜீவராசிகளுக்குள்ளும் உள்ளே இருந்து கொண்டு
அவைகளை தன் வசம் வைத்திருக்கும் ஈஸ்வர தத்துவத்தை அறிவீர்களா” என்று மேலும் கந்தர்வன் கேட்டான்.
அதுவும் எங்களுக்கு தெரியாது என்று பதிலளித்தார்.
யார் இந்த சூத்ரத்தையும் அந்தர்யாமி தத்துவத்தயும் அறிந்தவர்களோ அவர்களே பிரம்மத்தை அறிந்தவர்களாவர்கள்.
அவர்கள் அனைத்தையும் அறிந்தவர்களாகிறார்கள்.” என்று கந்தர்வன் கூறினான். பிறகு அங்கிருந்தவர்களுக்கு அந்த தத்துவங்களை உபதேசித்தான்.

எனக்கு இப்போது அந்த தத்துவங்கள் தெரியும், அந்த தத்துவங்களை நீ அறியாமல்
இந்த பசுக்களை எடுத்துச் சென்றால் உன்னுடைய தலை வெடித்து விடும்.

யாக்ஞவல்கியர், “எனக்கு அந்த இரண்டு தத்துவங்களும் தெரியும்” என்று பதிலளித்தார்.
உத்தலகா, ‘எல்லோரும் இப்படிதான் சொல்வார்கள், முதலில் உனக்கு எப்படி தெரியுமோ அப்படியே கூறுவாயாக” என்று கேட்டார்.

ஸ்லோகம்-2
யாக்ஞவல்கியர் பதிலளிக்க ஆரம்பித்தார். ”அந்த சூத்ரமானது வாயுவாகும். ஹிரண்யகர்ப்ப தத்துவமாக இருக்கின்ற
இந்த சூத்ரத்தினால் நாம் அனுபவிக்கும் உடல், இந்த உலகத்திலும், பரலோகத்திலும் உள்ள ஜீவராசிகளும் சீராக செயல்பட்டு கொண்டிருக்கின்றன.
இங்கே வாயு என்பது உடலுக்கு வெளியே இருப்பது, உடலுக்கும் உள்ளெ பிராணனாக இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இறந்த பின் இந்த பிராணனானது வெளியே சென்று விடுகிறது, இதுவே சூட்சும சரீரம் என்றும் கூறுவர்.
இவைகளெல்லாம் சீராக இயங்குவதற்கு ஹிரண்யகர்ப்ப தத்துவம் காரணமாகின்றது. சமஷ்டி, வியஷ்டி இரு அங்கங்களும்
ஒன்று சேர்ந்தால்தான் ஒரு ஜீவன் தோன்றும், மாலையில் பூக்களை ஒன்றாக சேர்த்து கொண்டிருக்கும் நூல் போல அனைத்து
ஜீவராசிகளையும் நன்றாக ஒழுங்காக இயங்கிக் கொண்டிருப்பதற்கு ஹிரண்யகர்ப்ப தத்துவம் காரணமாகிறது.
ஸ்தூல உடலை விட்டு ஹிரண்யகர்ப்ப தத்துவம் சென்று விட்டால் அந்த உடலை பிரேதம் என்று கூறுவர்.
அந்த உடலிலுள்ள எல்லா உறுப்புகளும் அழுகி விடும். இந்த சூத்ர வாயு, ஹிரண்யகர்ப்பமானது அனைத்தும்
சீராக இயங்குவதற்கு காரணமாக இருக்கிறது”. என்று முடித்தார்.
இந்த பதில் சரியென்று ஒத்துக் கொண்ட உத்தாலகா பின்பு அந்தர்யாமியை பற்றி இப்போது சொல்லுங்கள் என்று வினவினார்.

ஸ்லோகம்-3
ஹிரண்யகர்ப்பனுக்கு ஆதாரமாக இருப்பது எல்லா காரண ஸரீரத்தையும் அபிமானிக்கின்ற சேதனமான பிரம்மம் அந்தர்யாமி.
மாயையில் பிரதிபிம்பிக்கின்ற ஆத்மா. சூட்சும சரீரத்திற்கு காரணமாக இருப்பது காரண சரீரம். இதுதான் இங்கே விளக்கப்படுகிறது.
இதுவே ஈஸ்வரன், அந்தர்யாமி என்று அழைக்கப்படுகிறது.

இங்கே அந்தர்யாமி தத்துவத்தை எப்படி விளக்குகிறார் என்றால், இந்தப் படைப்பை மூன்றாக முதலில் பிரிக்கிறார்.
அவைகள்
அதிதெய்வம் – தேவர்கள் போன்ற மேலான பிறவிகள்,
அதிபூதம் – இந்த உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும்,
அத்யாத்மா – மனிதனிடத்தில் உள்ள இந்திரியங்கள்.
இந்த மூன்று விதமான ஸ்ருஷ்டிகளுக்குள்ளும் அந்தர்யாமி ஊடுருவி இருக்கிறார்.
மாயையுடன் கூடிய பிரம்மத்தையே அந்தர்யாமி அல்லது ஈஸ்வரன் என்று அறிய வேண்டும்.

· அந்தர்யாமி எங்கு குடியிருக்கிறார் என்றால் ஹிரண்யகர்ப்பனுடைய வீடுதான் இவர் குடி இருக்குமிடம்
· வெளித்தோற்றத்திற்கு வராமல் உள்ளேயிருப்பது
· அவிஷயஹ- விஷயமாக யாராலும் கிரகிக்க முடியாத ஒன்று.
· ஹிரண்யகர்ப்பனுடைய சரீரம்தான் இவருடைய சரீரமாக இருக்கிறது
· ஹிரண்யகர்ப்பனையும் தன் கட்டுக்கும் வைத்திருப்பவர்
· அந்தர்யாமியின் ஸ்வரூபமும் ஜீவனுடைய ஸ்வரூபமும் ஒன்றேதான்.
· அந்தர்யாமி சம்சாரமற்றது

यः प्रुतिव्याम तिष्ट्न – அந்தர்யாகி ப்ருதிவியில் இருந்து கொண்டு
प्रुतिव्या अन्तरः – ப்ருதிவிக்குள்ளே இருக்கிறார்
प्रुथिवि न वेद – ப்ருதிவியே அறியாதவாறு
यस्य प्रुत्वि सरीरँ – ப்ருதிவியானது சரீரமாக இருக்கிறது.
यः प्रुतिवि अन्तरः यमयति – ப்ருதிவிக்குள்ளே இருந்து கொண்டே அதை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது
एष त आत्मा – இப்படிபட்ட ஸ்வரூபம்தான் அந்தர்யாமி, இதுவே ஜீவனின் ஸ்வரூம்
अम्रुतः – இவர் சம்சாரமற்றவர், நித்தியாமானவராக இருக்கிறார்.

ஸ்லோகம்-4 லிருந்து – ஸ்லோகம்-23 வரை கீழே விளக்கப்பட்டிருக்கிறது

நீர், நெருப்பு, ஆகாயம், வாயு, சுவர்க்கலோகம், சூரியன், திசைகள், சந்திரன், நட்சத்திரங்கள், ஆகாசம், இருள், வெளிச்சம்,
எல்லாவற்றிலும், மூக்கு, வாக் இந்திரியம், கண், காது, மனது, தோல், புத்தி, பிறப்புறுப்புக்கள் போன்ற இவைகளில் முழுவதும் வியாபித்தும்,
உள்ளேயும் இருந்து கொண்டு அதேசமயம் அவைகள் அறியாதவாறும் இருந்து கொண்டு அவைகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது.
இப்படிப்பட்ட ஸ்வருபமாக என்றும் அழியாததாக சம்சாரமற்று இருப்பது அந்தர்யாமி.

அதிருஷ்ட – பார்க்கப்படாதது; திருஷ்ட – பார்க்கின்றவன்
எவையெல்லாம் பார்க்கப்படுகிறதோ அவையெல்லாம் வரையறுக்கப்பட்டது. இது அறியப்படாதது ஆனால் அறிபவனாக இருக்கின்றது.
சிதாபாஸனை ஆதாரமாக கொண்ட மனம்தான் பார்க்கிறது, கேட்கிறது. அதே சமயம் பார்க்கபடுவதாகவும், கேட்கப்படுவதாகவும் இருக்கிறது.
இந்த அறியப்படாதவந்தான் நிர்விகார த்ருஷ்டா. न अन्यः अथः अस्ति द्रुष्ट – அந்தர்யாமியை தவிர வேறொரு அறிபவன் கிடையாது.

சைதன்யமான அந்தர்யாமி ஒன்றுதான் இருக்கிறது; அதைத் தவிர வேறொன்றும் இல்லை
மனதிற்கு அறியும் தன்மை கிடையாது ஏனென்றால் அது ஜடமான வஸ்து.
ஆனால் அதில் பிரதிபலிக்கும் சைதன்யத்தின் (சிதாபாஸத்தின்) துணைக் கொண்டு எல்லாவற்றையும் அறிகிறது.
ஆனால் இதை பிரகாசித்துக் கொண்டிருக்கும் சிதாபாஸனும் மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே ஜீவனும் மித்யா என்று அறிந்து கொள்ளலாம்.
இப்படி கட்டுபடுத்துபவர் என்று புரிந்து கொண்டால், கட்டுபடுத்துபவர் என்ற வேறொன்று இருக்கிறது என்ற த்வைதம் வந்து விடுகிறது.
ஆனால் இங்கு இரண்டுமே ஒன்றுதான் என்று நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். மாயையினால்தான் த்வைதம் தெரிந்து கொண்டிருக்கிறது.
ஜீவ சைதன்யம், ஈஸ்வர சைதன்யம், ஸ்வரூப சைதன்யம் இந்த மூன்றில் உள்ள ஸ்வரூப சைதன்யம் ஒன்றுதான்.
அதுவே மாயை, வியஷ்டி என்ற இரண்டு பெயர்களை கொண்டதாக இருக்கிறது
இப்படிபட்ட அந்தர்யாமிதான் ஆத்மா, அதுவே உன் ஸ்வரூபம், நித்தியமானது.

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –