Archive for September, 2020

ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 58–தாவாக்னி மோக்ஷம்-ஸ்ரீ ப்ருந்தா வனத்தில் பருவங்கள் —

September 29, 2020

த்வயி விஹரண லோலே பால ஜாலை ப்ரலம்ப
ப்ரமத நஸ விலம்பே தே நவ ஸ்வைர சாரா
த்ருண குதுகநி விஷ்டா தூர தூரம் ஸரந்த்ய
கிமபி விபினமை ஷீ காக்ய மீஷாம் பபூவ –1

ப்ரலம்பனை வதம் செய்து ஆயர்களுடன் விளையாடிக் கொண்டு இருந்தீர்கள் –
அப்போது பசுக்கள் புல்லை மேய்ந்து கொண்டே ஐஷீகம் என்கிற காட்டை அடைந்தன —

———–

அ நதி கத நிதாக க்ரவ்ர்ய வ்ருந்தா வனாந்தாத்
பஹி ரித முப யாதா கானனம் தேன வஸ்தா
தவ விரஹ விஷண்ணா ஊஷ் மல க்ரீஷ்ம தாப
பிரசர விச ரதம்ப ஸ் யாகுலா ஸ்தம்ப மாபு –2-

வெப்பம் அற்ற ஸ்ரீ பிருந்தா வனத்தில் இருந்து ஐஷீகம் என்கிற காட்டுக்கு வந்தாலும்
தங்களது பிரிவால் துன்பம் அடைந்த பசுக்கள் கடுமையான வெய்யிலால் கானல் நீரை
நிஜ நீர் என்று நினைத்து தாகத்துடன் திகைத்து நின்றன –

தத நு ஸஹ சஹா யைர் தூரமந்விஷ்ய ஸுவ் ரே
கலித சரணி முஞ்ஜா ரண்ய ஸஞ்ஜாத கேதம்
பஸூ குல மபி வீஷ்ய க்ஷிப்ர மாநேது மாராத்
த்வயி கதவதி ஹீ ஹீ ஸர்வதோ அக்னிர் ஜஜ் ரும்பே –3-

சிறுவர்களுடன் பசுக்களைத் தேடிக் கொண்டு வந்த தாங்கள் வழி தப்பிய
பசுக்களைப் பார்த்து அவற்றை அழைத்துச் செல்ல
அவைகளின் அருகே சென்றீர்-அப்போது சுற்றிலும் தீப்பற்றி சூழ்ந்து கொண்டது –

சகல ஹரிதி தீப்தே கோர பாங்கார பீ மே
சிகி நி விஹித மார்கா அர்த தக்தா இவார் தா
அஹ ஹ புவன பந்தோ பாஹி பாஹீ தி சர்வே
சரண முபகதாஸ் த்வாம் தாப ஹர்தார மேகம் –4–

பயங்கரமான தீ எங்கும் சூழ்ந்ததால் சிறுவர்கள் வழி தடுமாறி அனலால் துன்பப் பட்டனர்
அப்போது அவர்கள் லோக ரக்ஷகரே அடியோங்களையும் ரக்ஷித்து அருள வேண்டும்
என்று தங்களை சரண் அடைந்தனர் –

அலமல மதி பீத்யா ஸர்வதோ மீல யத்வம்
த்ருஸ மிதி தவ வாசா மீலிதா ஷேஷு தேஷு
க்வ நு தவத ஹ நோ அசவ் குத்ர முஞ்ஜாட வீஸா
ஸபதி வவ்ருதி ரே தே ஹந்த பாண்டீர தேஸே –5-

பயப்படாதீர்கள் -எல்லோரும் கண்களை மூடிக் கொள்ளுங்கோள் என்று தங்கள் கூறியதும்
அவர்களும் கண்களை மூடிக் கொண்டனர் –
கண்ணைத் திறந்த போது பாண்டீரம் என்னும் ஆல மரத்தின் அடியில் இருந்தனர் –
தீ எங்குச் சென்றது என்று வியந்தனர் –

ஜய ஜய தவ மாயா கேய மீ சேதி தேஷாம்
நுதி பிருதி தஹாசோ பத்த நா நா விலாஸ
புனரபி விபி நாந்தே பிராசர பாடலாதி
ப்ரஸவ நிகர மாத்ர க்ராஹ்ய கர்ம அநு பாவே –6-

தாங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று தங்களை ஸ்துதித்தனர் –
தாங்கள் மந்தஹாசமாகப் புன்னகைத்தீர்
அங்கு பூத்து இருந்த பாதிரி முதலிய மலர்களால் மட்டுமே வெய்யில் காலம் என்பதை
அறிய முடிந்தது ஒழிய வெய்யில் தாபமே தெரிய வில்லை
பலவிதமான அதிசயங்களைச் செய்து கொண்டு சிறுவர்களுடன் அக்காட்டில் திரிந்து விளையாடினீர் –

த்வயி விமுக மிவோச்சைஸ் தாப பாரம் வஹந்தம்
தவ பஜன வதந்த பங்க முச்சோஷ யந்தம்
தவ புஜவது தஞ்சத் பூரி தேஜஸ் ப்ரவாஹம்
தபஸ மயமநை ஷீர் யாமுனே ஷு ஸ் தலேஷு –7-

தங்கள் இடத்தில் பக்தி இல்லாதவன் துன்பத்தை அனுபவிப்பது போலும் அன்பு கொண்டவர்
உள்ளத்தில் உள்ள பாவச் சேறுகள் காய்வது போலும் -தங்கள் திருக்கையில் உள்ள
திருச்சக்கரத்தின் ஒளியைப் போலவும் இந்தக் கோடைக் காலத்தை யமுனை ஆற்றங்கரையிலேயே கழித்தீர்கள் —

தத நு ஜலத ஜாலைஸ் த்வத் வபுஸ் துல்ய பாபிர்
விகஸத மல வித்யுத் பீத வாஸோ விலாஸை
ஸகல புவன பாஜாம் ஹர்ஷதாம் வர்ஷ வேலாம்
ஷிதி தர குஹரேஷு ஸ்வ ரை வாஸீ வ்யநை ஷீ –8-

தங்கள் நிறத்துக்கு ஒப்பான மேகங்கள் வானில் நிறைந்தன -தங்கள் திருப் பீதாம்பரைப் போலே
மின்னல்கள் பிரகாசித்தன –
எல்லா மக்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் மழைக் காலமும் வந்தது –
மழைக் காலத்தை மலைக் குகைகளிலேயே கழித்தீர்கள் –

குஹர தல நிவிஷ்டம் த்வாம் கரிஷ்டம் கிரீந்த்ர
சிகி குல நவகே காகா குபி ஸ்தோத்ர காரீ
ஸ்புட குட ஜக தம்ப ஸ்தோம புஷ்பாஞ்ஐலிம் ச
ப்ரவித தத நு பேஜே தேவ கோவர்த்தநோ அசவ்–9-

கோவர்த்தன மலை அரசன் குகையில் இருக்கும் தங்களை அழகிய மயில்களின்
அகவல் கொண்டு வரவேற்றான்
மர மல்லிகையும் நீப புஷ்பங்களும் பூச் சொரிய தங்களை வரவேற்றுத் தொழுதான் –

அத சரத முபேதாம் தாம் பகத் பக்த சேதோ
விமல சலில பூராம் மாநய ந் காநநே ஷு
த்ருண மமலவ நாந்தே சாறு சஞ்சாரயன் கா
பவன புரபதே த்வம் தேஹி மே தேஹ ஸுவ்க்யம்–10-

தங்கள் பக்தர்களின் உள்ளம் போல் தெளிந்த நீர் உள்ள ஓடைகள் சரத் காலத்தை அறிவித்தன –
பசுக்களை நல்ல புற்களை மேயச் செய்து மகிழ்ந்து திரிந்தீர்
ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை ரக்ஷித்து அருள வேணும் –

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 57–பிரலம்பாசுர வதம்-

September 29, 2020

ஆயர் சிறுவன் கோலத்தில் -வந்த அசுரன்-ப்ரலம்பன் என்ற அசுரன் இடையன்-11 ஸ்லோகங்களும் ஆர்யா மீட்டர்

ராம ஸஹ க்வாபி திநே காமத பகவன் கதோ பவான் விபிநம்
ஸூநுபி ரபி கோபாநாம் தேநுபி ரபி ஸம்வ்ருதோ லஸத் வேஷ —1-

வேண்டியவற்றை அளித்து அருளும் ஸ்ரீ குருவாயூரப்பா -ஒரு நாள் தாங்கள் அழகாக
அலங்கரித்துக் கொண்டு நம்பி மூத்த பிரான் உடனும் இடைச் சிறுவர்களோடும்
பசுக்களுடனும் விபிநம்-காட்டுக்குச் சென்றீர் –

———-

சந் தர்சயன் பலாய ஸ்வைரம் வ்ருந்தா வநஸ்ரியம் விமலாம்
காண்டீரை ஸஹ பாலைர் பாண்டீரகம் ஆகமோ வடம் க்ரீடன் -2-

காண்டீரை ஸஹ-சிறுவர்கள் கையில் கோலுடன் நடக்க -ஸ்ரீ ப்ருந்தா வனத்தின் அழகை ரசித்துக் கொண்டும்
ஸ்வைரம்-விளையாட்டாகப் பேசிக் கொண்டும் பாண்டீரகம் என்னும் ஆல மரத்தடிக்குச் சென்றீர் –

வேலிக் கோல் வெட்டி விளையாடு வில் ஏற்றி
தாலிக் கொழுந்தை தடம் கழுத்தில் பூண்டு
பீலித் தழையை பிணைத்து பிறகிட்டு
காலிப் பின் போவாற் கோர் கோல் கொண்டு வா
கடல் நிற வண்ணற் கோர் கோல் கொண்டு வா– 2-6-1-

—————-

தாவத் தாவக நிதந ஸ்ப்ருஹயாலுர் கோப மூர்திர் அதயாலு
தைத்ய ப்ரலம்ப நாமா ப்ரலம்ப பாஹும் பவந்தம்  ஆபேதே –3–

அப்போது தங்களைக் கொல்லும் நோக்கத்துடன் ப்ரலம்பன் என்ற அசுரன் இடையன்
வேஷத்தில் நீண்ட திருக் கைகளை யுடைய தங்களை அடைந்தான் –

——————

ஜா நந்தப் யவிஜா நந் நிவ தேந சமம் நிபத்த ஸுஹார்த்த
வட நிகடே படு பஸூப வ்யாபத்தம் த்வந்த்வ யுத்தம் ஆரப்தா –4–

அவன் எண்ணத்தை அறிந்த தாங்கள் அறியாதவர் போல் அவனுடன் நட்பு கொண்டீர் –
அம் மரத்து அடியில் இடையர்களுடன் விளையாட்டாக -த்வந்த்வ யுத்தம் –
ஒருவர் உடன் ஒருவர் யுத்தம் -செய்யத் தொடங்கினீர் –

——————

கோபான் விபஜ்ய தன்வந் சங்கம் பல பத்ரகம் பவத் கமபி
த்வத் பல பீரும் தைத்யம் த்வத் பல கதம் அன்வ மன்யதா பகவன் –5-

தங்கள் தலைமையிலும் நம்பி மூத்த பிரான் தலைமையிலும் இடையர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்தீர்
தங்கள் பலத்தால் பயந்த பிரலம்பாசுரனை தங்கள் குழுவிலேயே இருக்கச் செய்தீர் —

————–

கல்பித விஜேத்ரு வஹநே சமரே பர யூதகம் ஸ்வதயித தரம்
ஸ்ரீ தாமாநம் அதத்தா பராஜிதோ பக்தி தாஸ தாம் ப்ரதயன் –6–

விஜேத்ரு வஹநே-தோற்றவர்கள் வெற்றி பெற்றவர்களைத் தூக்க வேண்டும் என்ற விளையாட்டு நிபந்தனைப் படி
தங்கள் நண்பரான ஸ்ரீ தாமா என்பவரை -தாங்கள் பக்தருக்கு அடிமை என்பது போலத் தூக்கினீர்கள் —

தண் தாமரை சுமக்கும் -ஆஸன பத்மத்தில் அழுந்தி நிற்கும் திருவடி-

பக்தி தாஸ தாம் ப்ரதயன் -விஜிதாத்மா விதேயாத்மா அன்றோ –

———-

ஏவம் பஹுஷு விபூமன் பாலேஷு வஹத்ஸூ வாஹ்ய மாநேஷு
ராம விஜித ப்ரலம்போ ஜஹாரதம் தூரதோ பவத் பீத்யா –7–

இவ்வாறு எல்லா இடையர்களும் தோற்றவர்கள் வெற்றி பெற்றவர்களைத் தூக்கினார்கள்
அப்போது தோற்ற பிரலம்பாசுரன் ஜெயித்த நம்பி மூத்த பிரானைத் தூக்கிக் கொண்டு
தங்கள் இடம் உள்ள பலத்தால் வெகு தூரம் சென்றான் –

——————

த்வத் தூரம் கமயந்தம் தம் த்ருஷ்ட்வா ஹலினி விஹித கரிம பரே
தைத்ய ஸ்வரூபம் ஆகாத் யத் ரூபாத் ச ஹி பலோ அபி சகிதோ அபூத் –8-

வெகு தூரத்துக்கு அப்பால் செல்லும் போது நம்பி மூத்த பிரான் முழு பலத்தாலும் அவனை அழுத்தினார் –
உடனே அவன் பயங்கரமான அசுரர் உருவை எடுத்துக் கொண்டான் –
அதைக் கண்டு நம்பி மூத்த பிரானும் கொஞ்சம் பயந்தார் –

————–

உச்ச யா தைத்ய தநோஸ் த்வன் முகம் ஆலோக்ய தூரதோ ராம
விகத பயோ த்ருட முஷ்ட்யா ப்ருஸ துஷ்டம் சபதி பிஷ்ட வாந் ஏநம் –9-

வெகு தூரத்தில் தெரியும் தங்கள் திரு முகத்தைக் கண்டு பயத்தை விட்டார்
அசுரனை தன் முஷ்டியால் அடித்து நொறுக்கினார் –

————–

ஹத்வா தாநவ வீரம் பிராப்தம் பலம் ஆலிங்கித ப்ரேம்ணா
தாவன் மிலதோர் யுவயோ சிரஸி க்ருதா புஷ்ப வ்ருஷ்டிர் அமர கணை –10-

அசுரனைக் கொன்று விட்டு வரும் நம்பி மூத்த பிரானைத் தாங்கள் தழுவிக் கொண்டீர் –
இருவர்கள் மீதும் தேவர்கள் பூ மாரி பொழிந்தனர் –

—————

ஆலம்போ புவநாநாம் ப்ராலம்பம் நிதநம் ஏவம் ஆரசயந்
காலம் விஹாய சத்யோ லோலம் பருசே ஹரே ஹரே கிலேசான் —11-

வண்டைப் போல நிறம் உள்ள ஸ்ரீ குருவாயூரப்பா -உலகங்களுக்கு எல்லாம் பிடித்தமானவரும் ப்ரலம்பனை அழித்தவருமான தாங்கள் தாமதிக்காமல் அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –

ஹரே ஹரே கிலேசான்-ஹரியே பிரதிபந்தங்களை அபஹரித்து அருள வேணும்

போலி வேஷம் -பக்தி இல்லாமல்
கள்ளத்தே நானும் தொண்டாய் -வெள்கி -குற்றம் உள்ள நெஞ்சு -விலகிப்போவோம்
உண்மையான பக்தராக இருக்க வேண்டும்
பக்தர் -கடல் வண்ணன் பூதனால் -ஆதிசேஷன் போல்வார் உடன் கூடி அந்த நிஷ்டை வர வேண்டுமே

மெய் எல்லாம் போகவிட்டு விரி குழலாரில் பட்டு
பொய் எல்லாம் பொதிந்து கொண்ட போழ்கனேன் வந்து நின்றேன்
ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால்
பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்யனேனே –33-

உள்ளத்தே உறையும் மாலை யுள்ளுவார் உணர்வு ஓன்று இல்லாக்
கள்ளத்தேன் நான் உன் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்லிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி என்று
வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே–34-

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 56–காளியன் அனுக்ரஹம்-காளிங்க நர்த்தனம் —

September 29, 2020

காளிய மர்த்தனம் -மூன்று தசகங்கள் காளியனை அடங்கியவை
காளிய நர்த்தனம் -நடனம் ஒரே தசகம்

ஐந்து -இந்திரியங்கள் -உலகியல் விஷய விஷங்களைக் கக்கும்
மனஸ் காளியன் -நேர் வழியில் போகாமல்
அலை பாயுதே கண்ணா -அவன் நாட்டியம் ஆட –
இந்திரியங்கள் அவன் இடம் ஈடுபட மனஸ் அடங்கும்-

நாட்டியம் மனதில் தொடர அதில் இருந்தே இங்கும் தொடங்கும்-ருத விளம்பிதம் மீட்டர்

ருசிர கம்பித குண்டல மண்டல ஸூசிர மீசந நர்தித பன்நகே
அமர தாடித துந்துபி ஸூந்தரம் வியதி காயதி தைவத யவ்வதே–1-

குண்டலங்கள் ஆட –பன்நகே-காளியன் தலைகள் மேலே ஸூசிர-வெகு நேரம் நர்த்தனம் ஆடினீர் –
தைவத யவ்வதே-தேவப் பெண்கள் பாட தேவர்கள் துந்துபி வாசிக்க அழகாக ஆடினீர் –

மகரம் சேர் குழைகள் இரு பாலும் அசைந்து ஆட

———–

நமதி யத் யத் அமுஷ்ய சிரோ ஹரே பரி விஹாய தத் உந்நதம் உந்நதம்
பரி மதன் பத பங்க ருஹா சிரம் வ்யஹரதா கர தால மநோ ஹரம் -2-

காளியனுடைய எந்தத் தலை தொய்கிறதோ அதை விட்டு விட்டு உயரே கிளம்பிய தலை மீது
பத பங்க ருஹா-தாமரைத் திருவடிகளால் தாளம் இட்டுக் கொண்டு நர்த்தனம் ஆடினீர் –

நாராயணீயத்தில் காளியனுக்கு  101 தலைகள் –
திருவடி வைத்ததும் தலை கீழே இறங்கி வணங்க -அத்தை விட்டு மேல் உள்ள தலையில் திருவடி வைத்து ஆடினானாம்-வ்யஹரதா-இன்புறும் இவ்விளையாட்டு

வணங்கும் தலையை விட்டு
உயர்ந்த ஒன்றை தாவி மிதித்து
கையால் தாளம் போட்டு
திருவடியால் நாட்டியம்
சரணம் அடைந்தால் உடனே பலன் -அஹங்காரம் இருந்தால் மிதித்து குனிய வைப்பான்
இத்தை உணர்த்திக் கொண்டே நாட்டியம்
பட்டாபிஷேகம் நடக்கப் போவதால் கிரீடம் குதிக்க -பாதுகை கைங்கர்யம் பண்ணிக் கொண்டு இருப்பதையே மநோ ரதம்
துரியோதனன் தலை மாட்டில் -அர்ஜுனன் திருவடியில் -பார்த்த சாரதி ஆனான்

———

த்வத் அவ பக்ந விபுக்ந பணா கணா கலித ஸோணித ஸோணித பாதஸி
பணி பதவ் அவ் அஸீததி சந்நதாஸ் தத் அபலாஸ் தவ மாதவ பாதயோ -3-

முன்பு விஷம் கக்கி யமுனை நிலமானது
இப்போது ரத்தம் கக்கி சிவந்தது
தத் அபலாஸ் -அவன் மனைவிகள் மாதவா உனது திருப்பாதம் பணிந்தார்கள் –மாதவ பத பிரயோகம்

அவனுடைய படம் எடுத்த தலைகள் தொய்ந்து சரிந்து குளம் முழுவதும்
ரத்தம் கக்கி -தேவையில்லா விஷம் -அவன் சோர்ந்து விழுந்தான் –
அப்போது அவன் மனைவியர் தங்கள் திருவடித் தாமரைகளில் விழுந்து வணங்கினார்கள் –

———

அயி புரைவ சிராய பரி ஸ்ருத த்வத் அநுபாவ விலீந ஹ்ருதோ ஹிதா
முனி பிரப்ய நவாப்ய பதை ஸ்தவைர் நுநுவு ரீஸ பவந்த மயந்த்ரிதம் -4-

அவர்கள் முன்பே தங்கள் மஹிமையை அறிந்து இருந்ததால் தங்கள் இடம் மனசை செலுத்தி
முனிவர்களாலும் அறிய முடியாத
பொருள் கொண்ட ஸ்தோத்ரங்களால் தங்களை ஸ்துதித்தார்கள் –

பக்தி ஸ்ரத்தா இரண்டும் பெண் பால் -இயற்கையாகவே பெண்களுக்கு உண்டே-ஸ்ரீமத் பாகவத் விரிவாக இவர்கள் ஸ்தோத்ரம் சொல்லும்-திருவடி ஸ்பரிசத்தால் அனுக்ரஹம் பண்ணி அருளினாயே என்று ஸ்தோத்ரம் பண்ணினார்கள் -தபஸ் ஒன்றும் செய்யாமல் பிராட்டி கூசிப்பிடிக்கும் மெல்லடியால் தீண்டினாயே
கூரத்தாழ்வான் -எனது தலை காலியான தலை இல்லாமல் பாக்யம் இழந்ததே -என்பார்

யமுனை கரையில் பலர் ஸ்தோத்ரம் பண்ண அவற்றைக் கேட்டு இவன் பத்னிகள்
அந்த ஞானத்தால் ஸ்தோத்ரம் பண்ணினார்களாம்
செல்வத்து சிறந்தது செவிச் செல்வம்
ஸ்ருத்வா குணான் புவன ஸூந்தர -ருக்மிணி தேவி
என் செவியுள் புகுந்த -நீ உள்ளே இருக்க நானே பெரியவன் நம்மாழ்வார்

———

பணி வதூ கண பக்தி விலோகந ப்ரவிகஸத் கருணா குல சேதஸா
பணி பதிர் பவதா அச்யுத ஜீவிதஸ் த்வயி ஸமர்பித மூர்திர் அவாநமத்–5-

அவர்களுடைய பக்தியைக் கண்டு மிகுந்த கருணையுடன் காளியனை உயிர் பிழைக்க விட்டீர்
தங்கள் திருவடித் தாமரைகளில் சரண் அடைந்து தங்களை வணங்கினான் –

பக்தியைப் பார்த்தது உகந்து கருணா ஆகுலம் விகஸித்து -ஸ்தோத்ரம் -இளைய புன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே
அச் யுதன் -பக்தர்களை நழுவ விடாதவன் அன்றோ

த்வயி ஸமர்பித மூர்திர்-கீழே இவன் திருவடி பட்டு குனிந்த தலைகள் -இப்பொழுது தாமே பக்திப் பெருக்காலே வணங்கி குனிந்தனவே

————-

ரமணகம் வ்ரஜ வாரிதி மத்யகம் பணி ரிபுர்ந கரோதி விரோதி தாம்
இதி பவத் வஸனாத் யதி மாநயன் பணி பதிர் நிரகாத் உரகை சமம் –6-

அவனைக் கடலில் நடுவில் இருக்கும் ரமணகம் என்கிற இடத்துக்கு செல்ல ஆணை இட்டார் –
பெரிய திருவடி உன்னை அங்கே தாக்க மாட்டான் என்று தாங்கள் சொன்னதும்
காளியன் மற்ற பாம்புகளுடன் ரமணகத்துக்குப் புறப்பட்டான் –

தலையில் திருவடி பதித்து -தொண்டனான பின்பு பெரிய திருவடியால் பயம் இல்லையே
ஆதி சேஷன் பெரிய திருவடி கைங்கர்யங்கள் சேர்ந்து செய்கிறார்கள் அன்றோ

ரமணகம் வ்ரஜ வாரிதி மத்யகம்-இது பெருமாள் காளியனுக்கு அளிக்கும் அபய ப்ரதான ஸ்லோகம்-யதி மாநயன்-தலை மேல் கொண்டாடி புறப்பட்டான்

கருடன் இடம் முன்பு அபசாரம் -பிட்டு இங்கு வந்தான் அன்றோ -மீண்டும் ரமணகத்தீவுக்கு இப்பொழுது விரோதம் பார்க்க மாட்டான்
பக்தர்களுக்கும் விரோதம் வராதே -திருவடி பட்ட தழும்பு போல் சங்கு சக்கர லாஞ்சனை

————

பணி வதூ ஜன தத்த மணி வ்ரஜ ஜ்வலித ஹார துகூல விபூஷித
தட கதை ப்ரமத அஸ்ரு விமிஸ்ரிதை சம கதா ஸ்வ ஜனைர் திவஸர் வதவ் –7-

ப்ரமத அஸ்ரு-ஆனந்தக் கண்ணீர்

திவஸர் வதவ்-மாலை சந்தியில்

அவனுடைய மனைவியர் கொடுத்த ஒளி வீசும் ரத்னங்களாலும் முத்து மாலைகளாலும்
பட்டு வஸ்த்ரங்களாலும் தங்களை அலங்கரித்துக் கொண்டு ஆனந்தத்துடன் –தட கதை-நதிக் கரையில்-இருக்கும் தங்களது சுற்றத்தாரை அடைந்தீர்கள் –

—————

நிஸி புனஸ் தமஸா வ்ரஜ மந்திரம் வ்ரஜிதும் அஷம ஏவ ஜநோத் கரே
ஸ்வ பதி தத்ர பவஸ் சரணாஸ்ரயே தவ க்ருசா நுர் அருந்த சமந்தத –8-

தங்களையே நம்பி இருந்த இடையர்கள் இருட்டி விட்டதால் வீடு செல்ல முடியாமல்
கரையிலே தூங்கினார்கள் -அப்போது நாலு புறமும் காட்டுத் தீ சூழ்ந்தது-

——–

ப்ரபுதிதாந்  அத பாலய பாலயேத் யுதயதார் தரவான் பஸூ பாலகான்
அவிதும் ஆஸூ பபாத மஹாநலம் கிமஹ சித்ர மயம் கலுதே முகம் –9-

அதனால் விழித்து எழுந்த அவர்கள் காப்பாற்ற வேண்டும் என்று தீனமாய்க் கூக்குரல் இட்டனர்
அவர்களை ரஷித்து அருள அத் தீயை நீர் உண்டீர் இதில் என்ன ஆச்சர்யம் –
அக்னியே தங்கள் திரு முகம் அன்றோ –

——–

சிகிநி வர்ணத ஏவ ஹி பீததா பரில ஸத்யது நா க்ரியயா அப்யசவ்
இதி நுத பஸூ பைர் முதிதைர் விபோ ஹர ஹரே துரிதை ஸஹ மே கதாத் –-10-

அக்னியிடம் நிறுத்தினால் மட்டும் பீதத்வம் -மஞ்சள் -இருந்தது -இப்போது தாங்கள் உண்டதாலும் –
பீதத்வம் குடிக்கப் பட்ட தன்மை கொண்டது என்று கூறி கோபர்கள் ஆனந்தத்துடன் ஸ்துதித்தார்கள் –
ஸ்ரீ ஹரியே அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 55–காளிய நர்த்தனம் –

September 28, 2020

தோடகம் சந்தஸில்–நாட்டியத்துக்குத் தக்கபடி –

அத வாரிணி கோர தரம் பணிநம்
ப்ரதி வார யிதும் க்ருததீர் பகவன்
த்ருதம் ஆரித தீரக நீப தரும்
விஷ மாருத சோஷித பர்ண சயம் –1-

அத-பிறகு தாங்கள் யமுனை மடுவில் உள்ள கொடியோனான காளியன் என்கிற பாம்பை அங்கிருந்து
விரட்டி யடிக்கத் திருவுள்ளம் கொண்டு மடுவின் கரையில் விஷக் காற்றினால் வறண்டு வாடிய
இலைகளோடு கூடிய ஒரு கதம்ப மரத்தின் மேல் விரைவாக ஏறினீர்கள்.

————-

அதி ருஹ்ய பதாம் புரு ஹேண சதம்
நவ பல்லவ துல்ய மநோஜ்ஞ ருசா
ஹ்ரத வாரிணி தூர தரம் ந்யபத
பரி கூர்ணித கோர தரங்க கணே-2-

இளந் தளிர் போன்று மனதைக் கவரும் ஒளியுடன் கூடிய திருவடித் தாமரைகளால்
அம் மரத்தின் மேலேறி பயங்கரமான அலைகளும், நீர்ச் சுழல்களும் நிறைந்த
அம் மடுவின் தண்ணீரில் எட்டிக் குதித்தீர்கள்.

பூத்த நீள் கடம்பு ஏறி -நாச்சியார்-திருவடி ஸ்பர்சத்தால் பூக்குமே

———-

புவந த்ரய பார ப்ருதோ பவதோ
குரு பார விகம்பி விஜ்ரும்பி ஜலா
பரி மஜ் ஜயதி ஸ்ம தநுஸ் சதகம்
தடி நீ ஜடிதி ஸ்புட கோஷ வதீ –3-

மூவுலகத்தின் சுமையையும் தாங்கும் தங்களுடைய கனத்தால் அம் மடுவின் தண்ணீர் விகம்பி-கலங்கிப்
பேரிரைச்சலுடன் உயரக் கிளம்பி –தநுஸ் சதகம்-நூறு வில்லிடை யளவு கரையை நீரில் மூழ்கடித்தது.

வில் ஆறு அடி -600 அடி வரை தண்ணீர் வெளியில் -விஷ தண்ணீர் அன்றோ என்றால் -திருவடி பட்டால் பட்ட மரம் துளிர்க்க -இங்கும் விஷ தண்ணீர் அம்ருதமாகுமே-எல்லாம் செழிப்பு அடைய அவன் சம்பந்தம் பெற்ற நீர் அன்றோ

நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளாய் -நான் பெரியன் நீ பெரியை என்பதை யார் அறிவர்

——–

அத திஷு விதிஷு பரி ஷுபித
ப்ரமி தோதர வாரி நிநாத பரை
உதகாத் உதகாத்  உரகாதி பதி
ஸ்த்வத் உபாந்தம சாந்த ருஷா அந்த மநா –4-

ருஷா அந்த மநா-கோபம் உட் கண்ணையும் மறைத்து குருடனாக்குமே

அப்பொழுது திக்கு திசைகளிலெல்லாம் சுழல்கள் எழும்படி கலக்கப்பட்ட மடுவின் தண்ணீரில்
அதிகமான இரைச்சல் உண்டாயிற்று. அவ்வமயம் பாம்பரசனான காளியன் மிகுந்த சினத்தினால்
செய்வதறியாது திகைத்துத் தண்ணீரிலிருந்து வெளிக் கிளம்பித் தங்களை அணுகி வந்தான்.

உதகாத் -உதக ஆகாத் – உதகம் நீர்
உரகம் -மார்பைக் கொண்டு பயனிக்கும் பாம்பு
ஸ்த்வத் உபாந்தம–காளியின் உனது பக்கம் வந்தானே -அடியேன் இழந்தேன்

————

பண ஸ்ருங்க ஸஹஸ்ர விநிஸ் ஸ்ருமர
ஜ்வலத் அக்நி கன உக்ர விஷாம் புதரம்
புரத பணிநம் சமலோக யதா
பஹு ஸ்ருங்கிணம் அஞ்ஐன சைலமிவ –5-

ஆயிரம் பணா முடிகளிலிருந்தும் தீப் பிழம்பு போன்ற கொடிய விஷத்தை வெளியே கக்குகின்ற
காளியனைப் பல கொடுமுடிகளுடன் கூடிய ஒரு கரிய மை மலையோ? என்பது போல் எதிரில் கண்டீர்கள்.

ஐந்து தலைகள் என்பாரும் உண்டே-பைந்நாகத் தலை பாய்ந்தவனே -பெரியாழ்வார்
101 தலைகள் பாகவதம்
1000 தலைகள் பட்டாத்ரி

அஞ்ஐன சைலமிவ–அஞ்சனாத்ரி -திருமலை போல் எண்ணி நர்த்தனம்

————-

ஜ்வலதஷி பரி ஷர துக்ர விஷ
ஸ்வ ச நோஷ்ம பர ச மஹா புஜக
பரி தஸ்ய பவந்தம் அநந்த பலம்
சம வேஷ்டயத் அஸ்புட சேஷ்ட மஹோ –6-

ஜ்வலதஷி-தீப்பிழம் பொக்கும் கண்களும், கொடிய விஷத்தைப் பெருக்கும் மூச்சுக் காற்றின் வெம்மை யுமுடைய
அப் பெரிய பாம்பு, அளவற்ற பலம் படைத்தவரும் மனதிற் கெட்டாத செயல் புரிபவருமான தங்களை
இறுகச் சுற்றிக் கொண்டு கடித்தானே அதன்றோ வியப்பு?

———-

அவி லோக்ய பவந்த மதா குலிதே
தடகாமிநி பாலக தேநு கணே
வ்ரஜ கேஹ தலே அப் யநிமித்த சதம்
சமுதீஷ்ய கதா யமுநாம் பஸூபா –7-

யமுனைக் கரையில் நின்று கொண்டிருந்த பசுக்களும், இடைச் சிறுவர்களும் தங்களைக் காணாது
வருந்திக் கொண்டிருக்கையில் இடைச் சேரியில் உள்ள இடையர்கள் பற்பல விதமான தீய சகுனங்களைக்
கண்டு யமுனைக் கரைக்கு ஓடி வந்தார்கள்.

———–

அகிலேஷு விபோ பவதீய தஸாம்
அவ லோக்ய ஜிஹாஸூ ஷு ஜீவ பரம்
பணி பந்தநம் ஆஸூ விமுச்ய ஜவா
துத கம்யத ஹாஸ ஜூஷா பவதா –8-

தங்களுடைய நிலையைக் கண்ட எல்லோரும் துயரம் தாங்காது தத்தம் உயிரையே விடத் துணிந்த பொழுது
பாம்பின் பிடியிலிருந்து விரைவாகத் தன்னைத் தானே விடுவித்துக் கொண்டு
புன் சிரிப்போடு தாங்கள் வேகமாக வெளியே வந்தீர்கள்.

———-

அதி ருஹ்ய தத பணி ராஜ பணான்
நன்ரு தே பவதா ம்ருது பாத ருசா
கல சிஞ்ஜித நூபுர மஜ்ஜூ மிலத்
கர கங்கண சங்குல சங்க் வணிதம் –9-

பின்பு பாம்பரசனான காளியனின் படங்களின் மேல் ஏறி நின்று மிருதுவான அழகான பாதங்களின்
சலங்கைகள் இனிது ஒலிக்கக் கை வளைகள் கிங்கிணி என்று ஒலிக்கத் தாங்கள் நடனமாடினீர்கள்.

மலர் மகள் கை வருட மலர் போது வருந்தும்படி மிருதுவான திருவடிகள்

————

ஜஹ்ருஷு பஸூ பாஸ்து ஷுர் முநயோ
வவ்ருஷு குஸூ மாநி ஸூ ரேந்த்ர கணா
த்வயி ந்ருத்யதி மாருத கேஹ பதே
பரி பாஹி ச மாம் த்வமதான் கதாத் –10-

அவ்வாறு தாங்கள் நடனமாடுவதைக் கண்ட கோபர்கள் மிகவும் மகிழ்ந்தனர்.
முனிவர்கள் ஆனந்தமடைந்தார்கள். தேவர்கள் கூட்டங்கூட்டமாக வந்து தங்கள் மேல்
மலர் மாரி பொழிந்தார்கள்-
ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 54–காளிய மர்தனம்-

September 28, 2020

விஷ ஜலம் பருகின பசுக்களும் கோபர்களும் உஜ்ஜீவனம் -நர்த்தனம் நாட்டியம் -மர்த்தனம் -அடக்குவது
இத்தை மூன்று தசகங்களால் விளக்குகிறார்
இதில் 56- மட்டும் நர்த்தனம்
மேல் மனைவியர் ஸ்தோத்ரம் பண்ண அநுக்ரஹம் 56 தசகத்தில்

சாலிநீ பா வகை

த்வத்ஸே வோத்கஸ் சவ்பரிர் நாம பூர்வம்
காலிந்த் யந்தர்  த்வாதஸ சாப்தம் தபஸ்யந்
மீந வ்ராதே ஸ்நேஹவான் போக லோலே
தார்ஷ்யம் ஸாஷாத் ஐதஷா தாக்ரே கதாசித் –1-

ஸ்நேஹவான்-அன்பும் ஆர்வமும்
ஸ்தானீ பிரபாவம் -இவர் தபஸ்ஸூ செய்வதால் நமக்கு பாக்யம் என்ற எண்ணத்துடன் ஸம்மத மீன் சொல்ல

ப்ரதக்ஷிணம் -வலது பக்கம் -பெரியோருக்கு இடம் left கொடுக்காமல் –
வலது பக்கம் மங்களம் –
இடது பக்கம் போனாலே ப்ரதக்ஷிணம் ஆகும் keep left இதனாலே தான் இன்றும்

முன்பு ஒரு சமயம் ஸுவ் பரி முனிவர் தங்களை தர்சிக்க ஆசை கொண்டு பன்னிரண்டு வருஷம்
காளிந்தி நதியின் உள்ளே நீரில் தவம் செய்தார்
அப்பொழுது நீரில் இருந்த மீன் கூட்டங்கள் உடன் அன்பு கொண்டார் –
ஒரு நாள் எதிரே தார்ஷ்யம்-பெரிய திருவடி வருவதைக் கண்டார் –

————

த்வத் வாஹம் ஜ்ஜஷதம் லஷயன் சதம் ஸ ஷுதம் த்ருஷ ஸூனும்
மீனம் கஞ்சிஜ் ஐஷதம் லஷயன் ச 

தப்தஸ் சித்தே சப்த வான் அத்ர சேத்த்வம்
ஜந்தூன் போக்தா ஜீவிதம் சாபி மோக்தா –2-

அபஹத பாப்மத்வாதிகள் –பசி இருக்காதே விஜிகத்ச உண்டே –
சத்யகாம -தர்மத்துக்கு உட்பட்ட ஆசைகள் நிறைவேறும்
தத்வம் உணர்த்த இங்கு பசி எடுப்பவர் போல் வந்து ஒரு மீனை உண்டார்

உயிரைப் போக்தா செய்தால் மோக்தா ஆவாய் –சாபம்
நித்யர் –
ரிஷியின் சாபம் வாங்கிக் கொள்வார்
இதில் அடியார் அபிமானத்தில் ஒதுக்கினால் நித்யர்களாலும் தீங்கு கிட்டாது என்று உணர்த்தவே இந்த லீலை

பெரிய திருவடி ஷுதம்-பசியால் மீன்களைத் தின்பத்தைக் கண்டார் -துயரம் அடைந்த அவர் –
இங்கு உள்ள ஏதாவது ஒரு ஜீவனைத் தின்றால் உடனே உயிர் இழப்பாய் என்று சபித்தார் –

ராமானுஜர் உடைய ஆறு கட்டளை
பாஷ்யம் கற்று கற்பித்து –
திருவாய் மொழி இதே போல் –
திவ்ய தேச வாசமும் கைங்கர்யங்களும் செய்து
ரஹஸ்ய த்ரயம் அர்த்த சந்தனம்
மேல்கோட்டையில் குடில்
அடியார் திருவடியில் ஒதுங்கி வாழ்தல் போதும்

——–

தஸ்மிந் காலே காலிய ஷ்வேல தர்பாத்
ஸர்பா ராதே கல்பிதம் பாகம் அஸ்நந்
தேந க்ரோதாத் த்வத் பதாம் போஜ பாஜா
பக்ஷ ஷிப்தஸ் தத் துராபம் பயோ அகாத்--3-

ரமணக தீவில் நடந்த விருத்தாந்தம் -காளியன் என்ற பாம்பு பெரிய திருவடிக்கு வைக்கப்பட்ட பாகங்களைத் தின்று வந்தது –
கோபம் அடைந்த பெரிய திருவடி தனது இறக்கைகளால் காளியனை அடித்து விரட்டினான் –
காளியனும் பெரிய திருவடி வர முடியாத காளிந்தி மடுவுக்குச் சென்றது -சகோதரி தவம் புரிந்த இடம் காளியன் மடு ஆனது

மாந்தாதா இருந்த காலம் –சவ்பரி-வ்ருத்தாந்தம் 
பின்பு ராம அவதாரம்
மேல் கிருஷ்ண அவதாரம்
ஷ்வேல தர்பாத்-விஷம் இருப்பதால் கர்வம் -விஷப் பாம்பையும் கொல்ல வல்ல  சக்தி

பெரிய திருவடி -திருமேனியில் அஷ்ட பாம்புகள்-பையுடை நாகப்பகைக் கொடியான்
பூணூல் : வாசுகி
வலது கை கங்கணம்: குளிகன்
இடது கை கங்கணம் : ஆதி சேஷன்
அரையில் அணி: தட்சகன்-பரிஷத்தை கடித்தது
மாலை: கார்கோடகன்.
வலது காது குண்டலம்: பத்மன்
இடது காது குண்டலம் : மஹா பத்மன்
திருமுடியில் : சங்க பாலன்-சங்க சூடன் என்றும் சொல்வர்
ஒன்பது பாம்புகள் கல் கருடனின் மட்டும் உண்டாம் –அஸி வாசன்-என்ற பெயருடன் கத்தியில் -உடை வாளில்- வசிப்பவன்
விடமுடைய பாம்பின் உடம்பையும் உயிரையும் உண்ணும் பறவை கருடன். அக்கருடனுடைய அரைக்கசையாக, கைகளில் தோள் வளைகளாக, முடி மேல், காது குண்டலங்களாக விளங்கும் ஆபரணங்கள் எல்லாம் பாம்பு, குடையும் பாம்பு என்று பரிபாடல் கூறுகின்றது.
 விடமுடை அரவின் உடலுயிர் உருங்கு உவணம் அவன்
 மடிமேல் வலந்தது பாம்பு பாம்பு தொடி பாம்பு தலைமேலது பாம்பு
 இறை தலையன பாம்பு படிமதம் சாய்த்தோய் பசும் பூனலை
 கொடிமேலிருந்தவன் தாக்கு இரையது பாம்பு – பரிபாடல்
நாக பாசத்தால் இந்திரஜித் இளைய பெருமாளை கட்ட, அவர் மயங்கி விழுந்த போது அந்த கட்டிலிருந்து விடுவித்தவன் கருடன். அதற்காக இராம்பிரானின் தழுவுதல பெற்றவன் கருடன். “ககநகர கனககிரி கரிமதர நிகம்மய நிஜ கருட கருதநில லவகளித விஷவதநக்ர கதந” என்று ஸ்வாமி தேசிகன் இவ்வைபவத்தை பாடுகின்றார்.

———

கோரே தஸ்மிந் ஸூரஜா நீர வாஸே
தீரே வ்ருஷா விஷதா ஷ்வேல வேகாத்
பக்ஷி வ்ராதா பேதுர் அப்ரே பதந்த
காருண்யார்த்ரம் த்வன் மனஸ்தேந ஜாதம் –4-

ஸூரஜா–ஸூர்யன் மகளான யமுனை-water pollution நீர் மட்டும் அல்ல -soil -விஷ வாயுவால் -வானம் ஆகாசம் pollution

அந்த மடுவில் காளியன் புகுந்ததும் அவன் –ஷ்வேல வேகாத்-விஷமான மூச்சுக் காற்றால் மடுவின் கரையில்
உள்ள மரங்கள் விஷதா-கருகின
மடுவில் மேலே வானில் பறக்கும் பறவைகளும் இறந்து விழுந்தன –

காருண்யார்த்ரம் த்வன் மனஸ்தேந ஜாதம் -தயையால் திரு உள்ளம் தோய்ந்து மர்த்தனம்-காற்று விஷத்தில் தோய உள்ளம் கருணையால் தோய்ந்து

—————-

காலே தஸ்மிந் நேகதா சீர பாணிம்
முக்த்வா யாதே யாமுநம் கான நாந்தம்
த்வய் யுத் தாம க்ரீஷ்ம பீஷ்ம உஷ்ம தப்தா
கோ கோபாலா வ்யாபிபன் ஷ்வேல தோயம் –5-

சீர பாணிம்-கலப்பை கையனான நம்பி மூத்த பிரான்-சென்றால் குடையாம் –இத்யாதி புல்கும் அரவு -ஆதி சேஷன்

க்ரீஷ்ம -கோடைக் காலம்
பீஷ்ம உஷ்ம தப்தா-வெப்பத்தால் வாடி

ஷீரம் சக்கர ஏவ கண்ணன் பால் பலராமன் சக்கரை -தேசிகன் தசாவதார ஸ்லோகம்-அடியார் குழுவுடன் பகவத் அனுபவம் –

ஆயர்பாடியில் இந்த ஒரு தடவை தான் அவர் இல்லாமல் போனான்-

பாம்பு காளிய நிரஸனத்துக்கு ஆதிசேஷன் அம்சம் -நம்பி மூத்த பிரானை விட்டு
பொங்கும் பிரிவால் நர்த்தனம் காண முடியாமல் அவரே அடக்கி விட்டு இருப்பாரே
ஆகவே தனியே சென்றான்

கடம்ப கிரீடா -பூம் துணர் கொத்து பந்து -cricket -விளையாட்டு போல் -நீர்க்கரை
கந்தக ஸ்துதி மத்வாச்சார்யார் -பந்தைத் தட்டி -அதே ஸ்ருதியில் பாடி உள்ளார்

ஒரு முறை நம்பி மூத்த பிரானை விட்டுத் தனியே யமுனை நதியின் கரையில்
உள்ள காட்டுக்குச் சென்றீர்கள்-
கடுமையான வெய்யிலிலே துன்பம் அடைந்த இடையர்களும் பசுக்களும்
அந்த மடுவின் விஷ நீரைப் பருகினார்கள் –

——-

நஸ் யஜ் ஜீவாந் விஸ்யுதாந் ஷ்மாதலே தாந்
விஸ்வாந் பஸ்யன் அச்யுத த்வம் தயார்த்ர
ப்ரோப்யா பாந்தம் ஜீவயாம் ஆசித த்ராக்
பீயூஷாம் போ வர்ஷிபி ஸ்ரீ கடஷை–6-

உடனே உயிர் இழந்து கீழே விழுந்தார்கள் -தாங்கள் கருணையுடன் அவர்கள் அருகே வந்து
அமிர்தம் ஆகிற தங்கள் கடைக்கண் கடாக்ஷத்தாலே அவர்களைப் பிழைக்கச் செய்தீர்கள் –

அச்யுத பத பிரயோகம்
சாலினி மீட்டர் இந்த ஸ்லோகங்கள்
கேசவ சப்தம் இருந்தாலும் இந்த சந்தஸ்ஸுக்குச் சேரும் இது இல்லாமல்
அச்யுத-நழுவ விடாமல் -கைவிடாத கருணை ப்ரவாஹம் -symbathy மட்டும் இல்லாமல் embathy -தமக்கு வந்த கஷ்டம் போல் கருதுவான்-வ்யஸநேஷு மனுஷ்யாணாம் -சக்ரவர்த்தி திருமகன் போல்

அம்ருதம் -விஷத்துக்கு anti dose -கருணை கடாக்ஷம் -ஆராவமுதம் திருக்கண் பார்வை

அகல்யை திருவடியின் மண் துகள்
பரதன் -பாதுகை
மஹாபலி கர்வம் திருவடி
யாமலார்ஜுனன் மரங்கள் முழங்கால்
மதுகைபடர் தொடையால் தட்டி
ருத்ரன் சாபம் -திருமார்பில் வியர்வை
தேவர்களுக்கு லஷ்மீ கடாக்ஷம்
முதலை சக்கரம்
கஜேந்திரன் கையால்
இங்கு ஸ்ரீ கடாக்ஷம் -என்றும் திருவருள் பெற்று இன்புறலாம்
சீரிய அனுக்ரஹம் மிதுனம் -தனியாகப் பண்ணினால் சீறிய அனுக்ரஹம் –

ஸ்ரீ கடாக்ஷம் -கடாக்ஷமாகவே லஷ்மி -செந்தாமரைக் கண் வண்ணம் -அவளையே பார்த்து பார்த்து குடி வந்தாள்
மைத்தடம் கண் -மைய கண்ணாள் -அவளுக்கு இவனைப் பார்த்து பார்த்து

—————–

கிம் கிம் ஜாதோ ஹர்ஷ வர்ஷ அதி ரேக
ஸர்வாங்கேஷ் வித் யுத்திதா கோப சங்கா
த்ருஷ்ட்வா அக்ரே த்வாம் த்வத் க்ருதம் தத் விதந்த
ஸ்த்வாம் ஆலிங்கன் த்ருஷ்ட நாநா ப்ரபாவா –7-

உயிர் பிழைத்த அவர்கள் இந்த ஆனந்தம் எங்கு இருந்து உண்டாகிறது என்று கூறிக் கொண்டு
எதிரிலே தங்களைக் கண்டார்கள்
இவ் விதமாக தங்கள் மஹிமையை பல முறை முன்பே கண்டு இருந்ததால் இதற்கும்
தாங்களே காரணம் என்று உணர்ந்து தங்களை ஆரக் கட்டித் தழுவிக் கொண்டனர் –

————

காவஸ் சைவம் லப்த ஜீவா ஷணேந
ஸ்பீதா நந்தஸ் த்வாம் ச த்ருஷ்ட்வா புரஸ்தாத்
த்ராக ஆவவ்ரு ஸர்வதோ ஹர்ஷ பாஷ்பம்
வ்யாமுஞ் சந்த்யோ மந்த முத்யன் நிநாத –8-

நொடிப் பொழுதில் பிழைத்த பசுக்களும் ஆனந்தத்துடன் மெதுவாகக் குரல் கொடுத்துக்
கொண்டே தங்களைச் சுற்றி வந்தன –

கோபியர் வேறே என்றும் பார்த்த பின்பே உன்னைப் பார்த்தார்கள்
கோக்கள் க்ஷணப் பொழுதில் நேராக உன்னைப் பார்த்தன-ஹர்ஷ பாஷ்பம்–ஆனந்த கண்ணீர் பொழிந்து திரு மஞ்சனம் -மா மெல்லிய குரலில் ஸ்துதியும் செய்தன

———–

ரோமாஞ்சோ அயம் ஸர்வதோ ந சரீரே
பூயஸ் யந்த காசித் ஆந்த மூர்சா
ஆச்சர்யோ அயம் ஷ்வேல வேகோ முகுந்தே
த்யுக்தோ கோபைர் நந்தி தோ வந்தி தோ அபூ –9-

எங்கள் தேகத்தில் மயிர்க் கூச்சலுடன் சொல்ல முடியாத ஆனந்தம் உண்டாகிறது –
இந்த விஷ வேகம் ஆச்சர்யமாக உள்ளது என்று கூறி இடையர்கள் வணங்கினார்கள் –

விஷம் உண்டு எழுத எங்களுக்கு ஆனந்த கண்ணீர் மெய் சிலிர்த்து -என்ன ஆச்சார்யம் -ஸ்துதி கோபியர்

————

ஏவம் பக்தாந் முக்த ஜீவாந் அபி த்வம்
முக்தா பாங்கைர் அஸ்த ரோகாம் ஸ்த நோஷி
தாத்ருக் பூத ஸ்பீத காருண்ய பூமா
ரோகாத் பாயா வாத கேஹாதி வாஸ –10-

தங்களை அடைந்த பக்தர்களை மரணம் அடைந்தாலும் அழகான கடாக்ஷத்தால்
தாபத்தைப் போக்கிப் பிழைப்பிக்றீர்கள்
அளவற்ற கருணா சமுத்ரமான ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை ரக்ஷித்து அருள வேணும் –

வாத ரோகம் அவருக்கு-சம்சார ரோகம் நமக்கு –
வாத கேஹம் -இவன்-அனைத்தையும் போக்கி அருளுபவர்

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 53–தேனுக அசுர வதம்-

September 28, 2020

நம்பி மூத்த பிரான் மூலமாகச் செய்த லீலை
தேனுகா வனம் தானே சென்று அசுரனை அழித்தான்
கழுதை வடிவ அசுரன்
உப ஜாதி மீட்டர்

5 வயசு வரை பால்யம்
6-10-வயசு பவ்கண்டம்
11-16-சிசோர
16 மேல் யவ்வனம்

அதீத்ய பால்யம் ஜகதாம் பதே த்வம் உபேத்ய பவ்கண்ட வயோ மநோஜ்ஞம்
உபேஷ்ய வத்ஸா வனம் உத்ஸவேந ப்ராவர்த்ததா கோ கண பால நாயாம் –1

குழந்தைப் பருவத்தைத் தாண்டி பிள்ளைப் பருவத்தை அடைந்தீர்கள் –
கன்றுகளை மேய்ப்பதை விட்டு பசுக்களை மேய்த்து ரஷிக்கத் தொடங்கினீர்கள் –

—————–

உபக்ரமஸ்ய அநு குணைவ சேயம் மருத் புராதீச தவ ப்ரவ்ருத்தி
கோத்ரா பரித்ராண க்ருதே அவதீர்ணஸ் ததேவ தேவா ஆர பதாஸ் ததா யத் –2-

பூமியை ரக்ஷிக்க திரு அவதாரம் செய்து அருளிய தாங்கள் கோ -பசுக்
கணங்களையும் ரஷிக்கத் தொடங்கினீர்களே –

கோ பாலனம் –கோபாலன்

கோத்ரா பூமி பாலனம் – முன் கோ பாலநம்
கிருஷ்ணா பூமிக்கு ஆனந்தம் கொடுக்கவே அவதாரம் -வார்த்தை விளையாட்டு
மண்ணின் பாரம் நீக்கவே வந்து பிறந்தவன் அன்றோ

——–

கதாபி ராமேண சமம் வநாந்தே வனஸ்ரியம் வீஷ்ய சரந் ஸூகேந
ஸ்ரீ தாம நாம்ந ஸ்வ ஸகஸ்ய வாசா மோதா தகா தேநு ககா நநம் த்வம் –-3-

ஒரு முறை நம்பி மூத்த பிரான் உடன் காட்டின் அழகிய காட்சிகளில் மகிழ்ந்து செல்லும் போது
ஸ்ரீ தாமன் என்ற நண்பன் சொன்ன படி தேனுகன் என்ற அசுரனின் காட்டுக்குச் சென்றீர்கள்-

தேனுக தோட்டம் -பனை மரத்தோட்டம் சென்றாயே

———-

உத்தால தாலீ நிவஹே த்வத் உக்த்யா பலேந தூதே அத பலேந தோர்ப் யாம்
ம்ருது கரஸ் ச அப்ய பதத் புரஸ்தாத் பலோத் கரோ தேநுக தாநவோ அபி –4-

தாங்கள் கூறியதால் அங்கு உயர்ந்து இருந்த தாலீ-பனை மரங்களை பலேந-நம்பி மூத்த பிரான் வலுவாக அசைத்தார் –
பழுத்ததும் பழுக்காததுமான பழங்கள் கீழே விழுந்தன –
தேனுகன் என்ற அசுரனும் கீழே விழுந்தான் –

பலேந பலமான தோள்களால்

—————-

ஸமுத்யதோ தைநுக பாலநே அஹம் கதம் வதம் தைநுகம் அத்ய குர்வே
இதீவ மத்வா த்ருவம் அக்ரஜேந ஸூரவ்க யோத்தாரம் அஜீகநஸ் த்வம் –-5-

தேவனே பசுக்களை -தேனுக்களை -ரக்ஷிக்கத் தொடங்கிய தாங்கள் அந்தப் பெயர் கொண்ட
தேனுகன் என்ற அசுரனை வதம் செய்ய மனம் வராததால் நம்பி மூத்த பிரானைக்
கொண்டு வதம் செய்தீர்கள் –

ஹாஸ்ய ரசம் மிக்க தசகம்
காம தேனு சொல்கிறோம்

———

ததீய ப்ருத்யா நபி ஜம்பு கத்வேந  உபாகதாந் அக்ரஜ ஸம்யுதஸ் த்வம்
ஜம்பூ பலா நீவ ததா நிராஸ்தஸ் தாலேஷு கேலந் பகவன் நிராஸ்த –6-

அந்த அஸுரனுடைய பணி யாட்கள் ஜம்பு கத்வேந-நரி வேஷத்தில் தங்களைத் தாக்க வந்தனர் –
அவர்களை  நிராஸ்தஸ் –அநாயாசமாக ஜம்பூ பலா-நாகப் பழங்களைப் போல பனை மரங்களில் நிராஸ்த-எறிந்தீர்கள் –

———–

விநிக்நதி த்வய்யத ஜம்பு கௌகம் ச நாம கத்வாத் வருணஸ் ததாநீம்
பயாகுலோ ஜம்புக நாம தேயம் ஸ்ருதி ப்ரஸித்தம் வ்யதி தேதி மன்யே –7-

நரி வேஷத்தில் வந்த அனைவரையும் கொன்றீர்கள்-அதைக் கண்ட வருணன் தனக்கு
ஜம்புகன் என்ற பெயர் இருப்பதால் பயந்தான்
வேதத்தில் மட்டும் தனக்கு அந்தப் பெயர் இருந்தால் போதும் என்று நினைத்தான் –

வேதத்திலே மட்டும் இருக்கட்டும் லோகத்தில் பிரசித்தம் ஆகாதபடி இருக்கச் செய்தான்

————-

தவ அவதாரஸ்ய பலம் முராரே சஞ்ஜாத மத்யேதி ஸூரைர் நுதஸ் தவம்
ஸத்யம் பலம் ஜாத மிஹேதி ஹாஸீ பாலை சமம் தால பலான் யபுங்க்தா -8-

தாங்கள் திரு அவதரித்த பலன் கிடைத்து விட்டது என்று தேவர்கள் ஸ்துதித்தனர்
ஆம் பழம் கிடைத்து விட்டது என்று சிரித்துக் கொண்டே சிறுவர்கள் உடன்
பனம் பழங்களைச் சாப்பிட்டீர்கள் –

————–

மது த்ரவஸ் ருந்தி ப்ருஹந்தி தாநி பலாநி மேதோ பரப் ருந்தி புக்த்வா
த்ருப்தைஸ் ச த்ருப்தைர் பவனம் பலவ்கம் வஹத்பிர் ஆகாகலு பாலகைஸ் த்வம் -9-

பெரியதாகவும் நிறைய சாறுடன் இனிமையாக உள்ள அந்தப் பழங்களை உண்டு மகிழ்ச்சி அடைந்தீர்கள் –
நிறைய பழங்களை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினீர்கள் –

————

ஹதோ ஹதோ தேநுக இத் யுபேத்ய பலாந்ய தத்பிர் மதுராணி லோகை
ஜயதி ஜீவேதி நுதோ விபோ த்வம் மருத் புரா தீஸ்வர பாஹி ரோகாத் –10-

மக்கள் பழங்களைத் தின்று கொண்டு -தேனுகன் இறந்தான் -என்று கூறிக் கொண்டு –
தாங்கள் நன்றாக இருக்க வேண்டும் –
நீண்ட காலம் வாழ வேண்டும் என்று தங்களை வாழ்த்தினார்கள் –
இப்படிப்பட்ட ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை ரஷித்து அருள வேண்டும் -என்று வேண்ட
தலையை அசைத்து அங்கீ கரித்து அருளினீரே –

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 52–ப்ரம்ம கர்வ ஸமனம்-

September 28, 2020

ஸ்ரீ கோதா ஸ்துதி போல் வசந்த திலக மீட்டர் 10 ஸ்லோகங்களும்

அந்யாவதார நிகரேஷு வநிரீஷிதம் தே
பூமாதிரேகம் அபி வீஷ்ய ததா அகாமோஷே
ப்ரஹ்மா பரீஷிது மநா ச பரோக்ஷ பாவம்
நித்யே அத வத்ஸ கணான் ப்ரவிதத்ய மாயம் –-1-

தாங்கள் முன்பு செய்து அருளினை அவதாரங்களில் காணப்படாத சில அதிசயங்கள்
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் அகாசூர வதத்தில் காணப்பட்டது
தங்களைப் பரிஷிக்க விரும்பிய பிரம்மன் தன் சக்தியால் மாடு கன்றுகளை
மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று மறைத்து வைத்தான் –

————-

வத்ஸாந்  அவீஷ்ய விவேச பஸூ போத்கரே தாந் 
ஆநேது காம இவ தாத்ரு மந அநு வர்தீ
த்வம் சாமி புக்த கபலோ கதவாம்ஸ் ததாநீம்
புக்தாம் ஸ்திரோதித சரோஜ பவ குமாரான் –2-

தாத்ரு மந அநு வர்தீ-பிரமனின் உள்ளப்படி நடக்க

ஒவ்வொரு ஆயர் பிள்ளைக்கும் தான் அமுது செய்து பிரசாதம் அவர்கள் உண்ணும் படி இருப்பதை பார்த்து அஸூயை

யமுனா நதிக்கு மீன்களாக 33 கோடி தேவர்களும் வர
பெருமாள் பிரசாதம் அமுது செய்த பின்பு கையை அலம்பக்கூடாது -ஸாஸ்த்ர விதி செய்தானாம்
அவர்களுக்கு கிடைக்காமல் போக வருந்து நான்முகன் இடம் சொல்ல
இவர்களையும் ஒளித்து வைத்தான் என்றும் சொல்வர்

கோப குமாரர்கள் கன்றுகளைக் காணாமல் துயரம் அடைந்தனர் -உடனே தாங்கள் பிரமனின் செயலை
முடிவுக்குக் கொண்டு வர எண்ணம் கொண்டவர் போலே
பாதி உண்டு கொண்டு இருக்கும் போதே கையில் சாதத்துடன் கன்றுகளைத் தேடித் சென்றீர்-
அப்போது ப்ரம்மா உணவு உண்டு கொண்டு இருக்கும் இடையர்களையும் மறைத்து வைத்தார் –

———-

வத்ஸாயிதஸ் தத் அநு கோப கணாயிதஸ் த்வம்
சிக்யாதி பாண்ட முரலீ கவலாதி ரூப
ப்ராக்வத் விஹ்ருத்ய விபிநேஷு சிராய சாயம்
த்வம் மாயயா அத பஹுதா வ்ரஜம் ஆயயாத —3-

மாயையால் தாங்களே கன்றுகளாயும் இடைச் சிறுவர்களையும் உரு எடுத்துக் கொண்டு மேலும்
உறி -உறியில் உள்ள பாத்திரம் -புல்லாங்குழல்- கவலாதி கொம்புகளாகவும்  முதலியவைகளாயும் வேஷம் பூண்டு
காட்டில் வெகு நேரம் விளையாடிவிட்டு மாலையில் வீடு சென்றீர்கள்–

தானே பரத்வம் என்று காட்டாமல் -அவதார ரஹஸ்யம் வெளிக்காட்டாமல்- செய்த லீலைகள்-

———

த்வாமேவ சிக்ய கவலாதி மயம் ததாநோ
பூயஸ் த்வமேவ பஸூ வத்ஸக பால ரூப
கோ ரூபிணீ பிர் அபி கோப வதூ மயீபிர்
ஆஸாதி தோ அஸி ஜநநீபிர் அதி ப்ரஹர்ஷாத் –4-

கன்றுகளாயும் கோப குமாரர்களாகவும் உருவம் கொண்ட தங்களைப் பசுக்களும்
தாய்மார்களும் சந்தோஷத்துடன் வரவேற்றார்கள் –

தங்களையே அறியாமல் இவற்றின் மேல் ஈர்ப்பு கொள்ளும்படி செய்தாயே –

————-

ஜீவம் ஹி கஞ்சித் அபிமாந வஸாத் ஸ்வ கீயம்
மத்வா தநூஜ இதி ராக பரம் வஹந்த்ய
ஆத்மாநம் ஏவ து பவந்தம் அவாப்ய ஸூநும்
ப்ரீதும் யயுர்ந கீயதீம் வநிதாஸ் ச காவ –5-

உலகில் தங்களுக்கு குழந்தையாகப் பிறந்த ஒரு ஜீவனை அபிமானத்தால் தன் பிள்ளை
என்று கொண்டாடி மகிழ்ச்சி அடைகிறார்கள் –
அப்படி இருக்க பரமாத்மாவான தங்களையே குழந்தையாக அடைந்த பசுக்களும் தாய்மார்களும்
அடைந்த ஆனந்தத்துக்கு அளவும் உண்டோ –

————

ஏவம் பிரதி க்ஷண விஜ்ரும்பித ஹர்ஷ பார
நிஸ் சேஷ கோப கண லாலித பூரி மூர்திம்
த்வாம் அக்ரஜோ அபி புபுதே கில வத்சராந்தே
ப்ரஹ்மாத் மநோர் அபி மஹான் யுவயோர் விசேஷ –6-

ஒரு வருஷம் இவ்வாறு கழிந்த பின்னரே கன்றுகளும் சிறுவர்களும் தாங்களே என்று
நம்பி மூத்த பிரான் உணர்ந்தார் –
தாங்கள் இருவரும் ப்ரஹ்மத்தின் வடிவாக இருந்தாலும் இருவருக்கும் இடையே
நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன –

நம்பி மூத்தபிரான் பூர்ண அவதாரம் இல்லையே ஆவேச அவதாரம் தானே-

———–

வர்ஷா வதவ் நவ புராதன வத்ஸ பாலாந்
த்ருஷ்ட்வா விவேகம் அஸ்ருணே த்ருஹிணே விமூடே
ப்ராதீ த்ருஸ ப்ரதி நவாந் மகுட அங்காதாதி
பூஷாம்ஸ் சதுர் புஜ யுஐ ச ஜலாம்புதா பாந் –7-

வருஷத்தில் முடிவில் பிரம தேவன் கன்றுகளையும் சிறுவர்களையும் கண்டு அவை தன்னால்
மறைக்கப் பட்டவையா அல்லது புதியனவா என்று திகைத்தார் –
அப்போது தாங்கள் புதிதாக உள்ள எல்லாவற்றையும் கிரீடம் தோள் வளைகளுடனும்
நான்கு கரங்கள் கொண்டவைகளாயும் காண்பித்து அருளினீர்கள் –

————-

ப்ரத்யேக மேவ கமலா பதி லாலிதாங்காந்
போகீந்த்ர போக சயனாந் நயநாபி ராமாந்
லீலா நிமீலி தத்ருஸ ஸநகாதி யோகி
வ்யாஸேவிதாத் கமல பூர்வ வதோ ததர்ச -8-

ஒவ் வொருவரையும் ஸ்ரீ லஷ்மீ தேவியுடனும் ஸ்ரீ ஆதி சேஷன் மேல் பள்ளி கொண்டு இருப்பவர்களாயும்
அழகிய வடிவுடனும் கண்ணை மூடிக் கொண்டும் சனகாதிகளும் முனிவர்களும்
ஸேவித்துக் கொண்டு இருக்கக் கண்டார் –

தனக்கே உரிய அசாதாரண லிங்களைக் காட்டக் கண்டான்

——–

நாராயணா க்ருதம் அசம்க்யதமாம் நிரீஷ்ய
ஸர்வத்ர சேவகம் அபி ஸ்வமவேஷ்ய தாதா
மாயா நிமக்ந ஹ்ருதயோ விமுமோஹ யாவத்
ஏகோ பபூவித ததா கபால அர்த பாணீ -9-

கணக்கற்ற வடிவுகளைக் கண்டார் -எங்கும் தாம் சேவகனாய் இருப்பதையும் கண்டார் –
மிகுந்த குழப்பத்தை அடைந்தார் –
அப்போது தாங்கள் கையில் பாதி அன்னக் கவளத்துடன் காட்சி அளித்தீர்கள் –

————–

நஸ்யன் மதே ததநு விஸ்வ பதிம் முஹுஸ் த்வாம்
நத்வா ச நூதவதி தாதரி தாம யாதே
பாதை சமம் ப்ரமுதிதை பிரவிசன் நிகேதம்
வாதால யாதிப விபோ பரிபாஹி ரோகாத் –10-

பிரமன் கர்வம் நீங்கி தங்களை ஸ்துதி செய்து நமஸ்கரித்து ஸத்ய லோகம் சென்றார் –
மகிழ்ச்சியாக மற்ற சிறுவர்களுடன் வீடு திரும்பினீர்கள் –
ஸ்ரீ குருவாயூரப்பன் அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –

ஒரு வருஷம் நடந்தவற்றை அனைவரும் மறக்கும் படி சங்கல்பமும் செய்தாயே

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 51–வன போஜனம் -அகாசுர வதம்–

September 27, 2020

கதாசன வ்ரஜ ஸிஸூபி சமம் பவாந் வநாசநே விஹித மதி பிரகேதராம்
ஸமா வ்ருதோ பஹு தர வத்ஸ மண்டலை சதே மநைர் நிரகம தீச ஜேமநை –1-அதிருசிரா மீட்டர் பத்து ஸ்லோகங்களும்

சதே மநைர் -தின்பண்டங்கள் உடன்
ஜேமநை-அன்னம்-நந்தகிராமம் தங்கி பிருந்தாவனம் நோக்கி போகும் பொழுது

இறைவனே! தாங்கள் ஒரு சமயம் கோகுலச் சிறுவர்களுடன் (வநாசநே–வன அஸனம் -)வன போஜனம் செய்ய மனங்கொண்டு
அதி காலையில் கன்றுகள் சூழ கையில் கட்டுச் சாதமும், ஊறு காயும் எடுத்துக் கொண்டு வனம் சென்றீர்கள்.

————–

வி நிர்யதஸ் தவ சரணாம்புஜ த்வயா துதஞ்சிதம் த்ரி புவன பாவனம் ரஜஸ்
மஹர்ஷய புலக தரை கலே பரை ருதூஹிரே த்ருத பவ தீஷண உத்ஸவா -2-

அவனுக்கும் நமக்கும் உத்ஸாகம் கொடுப்பதே உத்சவம்

தாங்கள் வெளியே புறப்படுகையில் தங்களது திருவடித் தாமரைகளிலிருந்து மேலே கிளம்பிய,
உலகம் யாவையும் தூய்மையாக்கும் தூளிகளைத் தங்களைக் காண வந்த மஹரிஷிகள்
தங்கள் உடலில் புலக தரை-மெய் சிலிர்க்கத் தரித்துக் கொண்டனர்.

——-

ப்ரசாரயத் யவிரல ஸாத்வலே தலே பஸூந் விபோ பவதி சமம் குமாரகை
அகாஸூரோ ந்ய ருணத் அகாய வர்தநீ பயாநக சபதி சயாநக ஆக்ருதி -3-

தாங்கள் இடைச் சிறுவர்களுடன் பசும் புல் தரையில் கன்றுகளை மேய்த்துக் கொண்டிருக்கையில்
அகாஸுரன் என்பான் தங்களுக்குத் –அகாய வர்தநீ-தீங்கிழைப்பதற்காகவே மிக்க பயங்கரமான மலைப் பாம்பு
உருக் கொண்டு திடீரென வழியை மறைத்துக் கிடந்தான்.

பகவத் பிரசாதம் உண்ணும் நம்மைப்போல் பெற்றம் மேய்த்த பின்னும் உண்ணும் குலம் அன்றோ

——

மஹா சல ப்ரதிம தநோர் குஹா நிப பிரசாரித பிரதித முகஸ்ய காநநே
முகோ தரம் விஹரண கௌதுகாத் கதா குமாரகா கிமபி விதூரகே த்வயி –-4-

தாங்கள் சற்று தூரத்திலிருக்கையில் காட்டினில் விளையாடுகின்ற இடைச் சிறுவர்கள் அந்த மலைப் பாம்பை
ஒரு மலை என்றும், அதன் திறந்த வாயை குகை என்றும் எண்ணி அதன் வாயினுள் புகுந்தனர்.

———-

ப்ரமாதத ப்ரவிசதி பந்ந கோதரம் க்வதத் தனவ் பஸூ பகுலே ஸவாத் சகே
விதன் நிதம் த்வமபி விவேசித ப்ரபோ ஸூஹ்ருஜ் ஜநம் விசரணம் ஆஸூ ரஷிதும்–5-

பிரமாதம் -கவனக் குறைவு

பிரபுவே! கோபச் சிறுவர்கள் அறிவின்றி ஸவாத் சகே-கன்றுகளோடு பந்ந கோதரம்-அம் மலைப் பாம்பின் வாயினுள் புகும் பொழுதே
உடல்கள் வெந்து துன்பமடைந்தனர். இதைக் கண்ணுற்ற தாங்கள் வேறு புகலறியாத
தோழர்களைக் காக்க விரைந்து பாம்பின் வாயினுள் நுழைந்தீர்கள்.

————

கலோ தரே விபுலித வர்ஷ்மணா த்வயா மஹோரகே லுடதி நிருத்த மாருதே
த்ருதம் பவான் விதலித கண்ட மண்டலோ விமோசயன் பஸூப பஸூன் விநிர்யயவ் -6-

மஹோ ரகே–மஹா உரகே- மார்பால் பயணிக்கும்

அப்படிச் சென்ற தாங்கள் அதன் கழுத்தின் நடுவில் தங்களது உருவத்தைப் பெரிதாக்கிக் கொள்ளவே
மூச்சு விட முடியாமல் அப் பாம்பு திணறித் தரையில் விழுந்து புரண்டு இறந்தது.
உடனே தாங்கள் அதன் கழுத்தைக் கிழித்துக் கொண்டு இடைச் சிறுவர்களையும், கன்றுகளையும்
துன்பத்திலிருந்து விடுவித்து வெளியே அழைத்து வந்தீர்கள்.

——–

க்ஷணம் திவி த்வதுபக மார்த மாஸ்திதம் மஹா ஸூர ப்ரபவ மஹோ மஹோ மஹத்
விநிர்கதே த்வயி து நிலீந மஞ்ஜசா நப ஸ்தலே நன்ருது ரதோ ஜகு ஸூரா –-7-

இறந்த அக் கொடிய அஸுரனின் உடலிலிருந்து பெரியதொரு ஒளிப் பிழம்பு கிளம்பி தாங்கள்
வெளி வருவதற்காக வானில் சிறிது நேரம் காத்திருந்து தாங்கள் வெளியே வந்ததும்,
தங்களிடம் கலந்து மறைந்தது. அப்பொழுது விண்ணில் விண்ணவர்கள் ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.

———–

ச விஸ்மயை கமல பவாதிபி ஸூரைர் அநு த்ருதஸ் ததனுகத குமாரகை
திநே புனஸ் தருணதசாம் உபே யுஷி ஸ்வ கைர் பவாந் அத தனுத போஜன உத்சவம் -8-

பிறகு தாங்கள் தோழர்களான இடைச் சிறுவர்களுடன் தருணதசாம் –நடுப் பகலில் வன போஜனத்தைக் கொண்டாடினீர்கள்.
இதை கமல பவாதிபி ஸூரைர்-பிரம்மா முதலிய தேவர்கள் ஆகாயத்தில் மறைந்து நின்று கவனித்தார்கள்.

———-

விஷாணிகாம் அபி முரலீம் நிதம்பகே நிவேசயந் கபல தர கராம் புஜே
பிரஹாசயன் கல வசநை குமாரகான் புபோஜித த்ரித சகணைர் முதாநுதா –-9-

கொம்பையும், குழலையும் இடுப்பில் செருகிக் கொண்டு தாமரை போன்ற கைகளில் அன்னக் கவளத்தை
எடுத்துக் கொண்டு இடைச் சிறுவர்களைத் தங்களது வேடிக்கைப் பேச்சுக்களால் சிரிக்கச் செய்து கொண்டு
மகிழ்ச்சியோடு உண்டு களித்தீர்கள். இதைக் கண்ட த்ரித சகணைர்-தேவர்கள் மகிழ்ச்சி பொங்கத் தங்களைத் துதித்தனர்.

———-

ஸூகா ஸநம் த்விஹ தவ கோப மண்டல மகா சநாத் ப்ரியமிவ தேவ மண்டலே
இதி ஸ்துதஸ் த்ரிதச வரைர் ஜகத் பதே மருத் புரீ நிலய கதாத் ப்ரபாஹி மாம் –10-

இந் நிலவுலகில் இடையர் கூட்டத்தில் இன்பமாய் புசிப்பது, யாகத்தில் அளிக்கப்படும் அவி உணவைத்
தேவருலகில் புசிப்பதை விட மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது போலும்!’ என்று
வானவர்களனைவரும் தங்களைப் போற்றித் துதித்தனர்
அடியேனை ரஷித்து அருள வேணும் –

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 50–வத்ஸாசுர, பகாசுர வதம்–

September 27, 2020

தரல மது க்ருத வ்ருந்தே வ்ருந்தா வநே அத மநோ ஹரே
பஸூப ஸிஸூபி சாகம் வத்ஸா நுபாலந லோலுப
ஹல தர சகோ தேவ ஸ்ரீ மான் விசேரித தாராயந்
கவல முரலீ வேத்ரம் நேத்ராபி ராம தநுத் யுதி –1-ஹரிணீ மீட்டர் அனைத்து ஸ்லோகங்களும்

ஸ்ரீ லஷ்மீ பதியே வண்டுகள் ரீங்காரம் செய்யும் ஸ்ரீ பிருந்தா வனத்தில் கவல கொம்பு முரலீ புல்லாங்குழல் வேத்ரம் பிரம்பு
முதலியவற்றை எடுத்துக் கொண்டு
நம்பி மூத்த பிரானொடும் ஆயர் சிறுவர்களோடும் கன்றுகளையம் பசுக்களையும் மேய்த்துக் கொண்டு
தாங்கள் திரிந்து மகிழ்ந்தீர்கள் –

———–

விஹித ஜகதீ ரக்ஷம் லஷ்மீ கராம் புஜ லாலிதம்
தததி சரண த்வந்த்வம் வ்ருந்தா வனே த்வயி பாவநே
கிமவ நபபவ் ஸம்பத் சம் பூரிதம் தரு வல்லரீ
சலில தரணீ கோத்ர ஷேத்ரா திகம் கமலா பதே –-2-

ஸ்ரீ பெரிய பிராட்டியார் திருக் கைகளால் வருடப் படுவதும் சர்வ ரக்ஷகமான உமது
திருவடித் தாமரைகள் ஸ்பர்சம் பட்டு தரு-மரம் செடி வல்லரீ-கொடி சலில-நீர் தரணீ பூமி கோத்ர மலை ஷேத்ரா திகம் வயல்கள் யாவையும்
பெருமை உடைத்தாய் செழித்து விளங்கின –

பிராட்டியும் அவனும் விட்டாலும் விடாத திண் கழல் அன்றோ–நீர் வளம் நில வளம் பால் வளம் வரச் சொல்லவும் வேண்டுமோ

————-

விலசத் உலபே காந்தா ராந்தே ஸமீரண சீதலே
விபுல யமுநா தீரே கோவர்த்தநாசல மூர்த ஸூ
லலித முரலீ நாத ஸஞ்சாரயன் கலு வாத் சகம்
க்வசன திவஸே தைத்யம் வத்ஸா க்ருதிம் த்வ முதைஷதா –3–

பச்சைப் உலபே புல் வெளியிலும் கோவர்த்தன மலையிலும் குழலூதிக் கொண்டு கன்றுகளை மேய்த்துக்
கொண்டு இருந்த நீர் ஒரு நாள் கன்றின் வடிவில் இருந்த வத்ஸாசுரனைப் பார்த்தீர்கள் –

முரலீ-முகுந்த ரஸாநா லீலே -நேரடியாக புல்லாங்குழலைக் குறித்தாலும் முகுந்தனின் நாக்கின் விளையாட்டு

———–

ரபஸ விலஸத் புச்சம் விச்சா யதோ அஸ்ய விலோகயந்
கிமபி வலித ஸ்கந்தம் ரந்த்ர ப்ரதீஷம் உதீ ஷிதம்
தமத சரணே பிப்ரத் விப்ராமயந் முஹு ருச்சகை
குஹ சந மஹா வ்ருஷே சிஷே பிதே ஷத ஜீவிதம் -4-

அவன் வேகமாக வாலை அசைத்துக் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டு தங்களை நெருங்க
சரியான நேரத்தை எதிர் பார்த்துக் கொண்டு காத்து இருந்தான்
அவனைப் பார்த்து அவன் கால்களைப் பிடித்து வேகமாகச் சுற்றி அவனை ஒரு மரத்தின் மீது
எறிந்து அவனைக் கொன்றீர்கள் –

மஹா வ்ருஷே-ரூடி -கள்ளிச்செடி -விபரீத லக்ஷணம்

பாகவதம் வேறே மாதிரி சொல்லும்
ஒவ்வொருவருக்கும் வினோத லீலை அனுபவம் காட்டி அருளுவான்

————-

நிபததி மஹா தைத்யே ஜாத்யா துராத்மநி தத் க்ஷணம்
நிப தந ஜவ ஷுண்ண ஷோணீ ருஹக்ஷத காநநே
திவி பரிமிலத் வ்ருந்தா வ்ருந்தாரகா குஸூமோத் கரை
சிரஸி பவதோ ஹர்ஷாத் வர்ஷந்தி நாம ததா ஹரே –5-

அவன் இறந்து கீழே விழுந்தான் -அவன் விழுந்த வேகத்தில் பல மரங்கள் சாய்ந்து விழுந்தன –
தேவர்கள் பூ மாரி பொழிந்தனர் –

ஜாத்யா துராத்மநி–கருவிலே திருவில்லாதவன்

மரங்களும் சாய்ந்து பூ மழை -வானத்தில் இருந்து தேவர்கள் சாத்தும் பூ மழை இரண்டும் உனக்கு

—————-

ஸூரபில தமா மூர்தந் யூர்த்வம் குத குஸோ மாவலீ
நிபததி தவேத் யுக்தோ பாலை ச ஹேலம் உதைரய
ஜடிதி தநு ஜஷே பேணோர் த்வம் கதஸ் தரு மண்டலாத்
குஸூம நிகர ஸோ அயம் நூநம் சமேதி சனைரிதி –6-

இடைச் சிறுவர்கள் உமது தலையில் விழுந்த பூக்களைப் பார்த்து -மிகவும் மணம் நிரம்பிய
இந்தப் பூக்கள் எங்கு இருந்து விழுகின்றன என்று கேட்டனர் –
தாங்கள்-அசுரனை மரத்தில் எறிந்த போது அம் மரத்தில் இருந்து பூக்கள் உயரே கிளம்பி
மெதுவே கீழே விழுகிறது -என்று விளக்கம் அழித்தீர்கள்-(வேடிக்கையாக –ஹேலம்)

குஸோ மாவலீ-பூக்களின் வரிசை -தீபாவலீ -தீபங்களின் வரிசை -தீபங்களின் ஒளி தப்பாகச் சொல்கிறோம்

———-

க்வசன திவஸே பூயோ பூயஸ் தரே பருஷாதபே
தபந தநயா பத பாதும் கதா பவதா தயா
சலித கருதம் ப்ரேஷா மாஸூர் பகம் கலு விஸ்ம்ர்ருதம்
ஷிதிதர கருச்சேத  கைலாச சைலம் இவா பரம் –-7-

தபந தநயா-சூர்யன் மகளான யமுனை

ஒரு நாள் அதிக வெய்யிலால் தாபம் அடைந்த ஆயர் சிறுவர்களும் தாங்களும் யமுனை
நதிக்குத் தண்ணீர் குடிக்கச் சென்றீர்கள்-
அங்கே சலித கருதம்-இறக்கைகளை அசைத்துக் கொண்டு இருக்கும் ஒரு பெரிய கொக்கைக் கண்டீர்கள் –
முன்பு இந்திரன் மலைகளின் இறக்கைகளை வெட்டும் போது வெட்ட மறந்த இறக்கை உள்ள
பெரிய மலை -கைலாச மலை போலவே தோற்றம் அளித்தது –

—————

பிபதி சலிலம் கோப வ்ராதே பவந்த மபி த்ருத
சகில நிகிலந் நக்நி ப்ரக்யம் புநர் த்ருத மூத் வமந்
தலயிதும்  அகாத்த் ரோட்யா கோட்யா ததா  ஆஸூபவான் விபோ
கல ஜன பிதா சுஞ்சுஸ் சஞ்சூ ப்ரக்ருஹ்ய தரா ரதம் -8-

வமந்-உமிழ்ந்த -vaamit

இடைச் சிறுவர்கள் தண்ணீர் குடிக்கும் போது அந்த கொக்கு தங்களைக் கொத்தியது –
அப்போது தாங்கள் அதற்கு நெருப்பு போலே ஆனீர்கள் –
மறுபடியும் தங்களை விழுங்க வந்தது -தீயவர்களை அழிக்க விருப்பம் கொண்ட தாங்கள்
அதன் அலகினைப் பற்றி இரு கூறாகக் கிழித்துக் கொன்றீர்கள் –புள்ளின் வாய் கீண்ட சரித்திரம்

————-

சபதி ஸஹஜாம் சந் த்ரஷ்டும் வா ம்ருதாம் கலு பூதநாம்
அநுஐம் அகமப் யக்ரே கத்வா பிரதீ ஷிது மேவ வா
சமன நிலயம் யாதே தஸ்மிந் பகே ஸூமநோ கணே
கிரதி ஸூமநோ வ்ருந்தம் வ்ருந்தா வநாத் க்ருஹ மையதா –9-

பகாசுரன் என்ற கொக்கு வடிவில் வந்த அசுரன் தனது சகோதரியான பூதனையைக் காணவோ –
இனி மேல் இறக்கப் போகும் அகாசுரனை எதிர் கொள்ளவோ எம லோகம் சென்றான் –
தேவர்கள் பூ மழை பொழிந்தனர் -தாங்களும் பிருந்தாவனத்தில் இருந்து வீடு திரும்பினீர்கள் –

————

லலித முரலீ நாதம் தூராந் நிசம்ய வதூ ஜநைஸ்
த்வரிதம் உபகம் யாராத் ஆரூட மோதம் உதீஷித
ஜெனித ஜநநீ நந்தா நந்த ஸமீரண மந்திர
பிரதி தவ சதே ஸுவ்ரே தூரீ குருஷ்வ மமா மயான் –-10-

ஸமீரண —வாயு-மந்திர

ஸ்ரீ குருவாயூரப்பா -தங்கள் குழல் ஓசையைக் கேட்ட கோபியர்கள் சந்தோஷத்துடன்
தங்கள் அருகே ஓடி வந்தனர் –
தந்தை நந்த கோபனுக்கும் தாய் யசோதைக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும்
தாங்கள் அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 49–ஸ்ரீ பிருந்தாவன கமனம்

September 27, 2020

கோகுலம் இருந்து -பிருந்தாவனம் பயணித்தால் -இங்கு தான் கோவர்த்தனமும் உள்ளது
உபஜாதி மீட்டரில் சில ஸ்லோகங்களும் உபேந்த்ர வஜ்ரா மீட்டரில் சில ஸ்லோகங்களும் அமைத்துள்ள தசகம்

பவத் ப்ரபாவ அவிதுரா ஹி கோபாஸ் தரு ப்ரபாதாதிகம் அத்ர கோஷ்டே
அஹேதும்‌ உத்பாத கணம் விசங்க்ய ப்ரயாதும்‌ அந்யத்ர மநோ விதேநு -1-

ஹே குருவாயூரப்பா! தங்கள்‌ மகிமயை அறியாத கோபர்கள்‌, காரணமின்றி மரம்‌ முறிந்து விழுந்தது
முதலியவற்றைத்‌ தீய நிமித்தங்கள்‌ என்று ஐயம்‌ கொண்டு கோகுலத்திலிருந்து
வேறோரிடம் செல்ல நினைத்தார்கள்‌.

————-

தத்ர உபநந்தா பித கோப வர்யோ ஜகவ் பவத் ப்ரேரணயைவ நூநம்
இத ப்ரதீஸ்யாம் விபிநம் மநோஜ்ஞம் வ்ருந்தா வனம் நாம விராஜ தீதி -2-

நெருஞ்சி முள் காடு -துளசி வனம் என்றும் சொல்வார்கள்

அப்பொழுது கோபர்களில்‌ வயதான உபநந்தன்‌ என்பவன்‌, ‘இங்கிருந்து (ப்ரதீஸ்யாம்)மேற்கே பிருந்தாவனம்‌
என்ற அழகான ஒரு வனம்‌ உள்ளது’ என்று கூறியது தங்கள்‌ தூண்டுதலினாலன்றோ?

————-

ப்ருஹத் வனம் தத் கலு நந்த முக்யா விதாய கௌஷ்டீ நம்‌ அத ஷணேந
த்வத் அன்வித த்வஜ் ஜநநீ விஷ்ட கரிஷ்ட யாந அநு கதா விசேலு -3-

மாட்டுக்கொட்டகையை விரைவிலே முன்னே சென்று அமைத்தார்கள்

நந்தன்‌ முதலியவர்கள்‌ உடனே ‘பிருஹத்வனம்‌’ என்கின்ற பழைய கோகுலத்தைக்‌ காலி செய்து விட்டுப்‌
பிருந்தாவனத்தை நோக்கிச்‌ சென்றார்கள்‌. அப்பொழுது தாங்கள்‌, (தங்கள்‌ தமையனார்‌) பலராமன்‌,
தாய்‌ யசோதை, ரோஹிணி ஆகியவர்களோடு சிறந்த வண்டியில்‌ ஏறிக் கொள்ள,
அதைப்‌ பின்‌ தொடர்ந்து மற்ற எல்லோரும்‌ சென்றனர்‌.

——

அநோ மநோஜ்ஞ த்வநி தேநு பாலீ குர ப்ரணாந்தரவோ வதூபி
பவத் விநோத ஆலபித அக்ஷராணி ப்ரபீய ந அஜ் ஞாயதே மார்க தைர்க்யம் –4-

(அப்படி வண்டியின் பின்‌ தொடர்ந்த அவர்கள்‌) வண்டிகளினுடைய இனிமையான சத்தத்துடன்‌ -பசுக்‌ கூட்டங்களின்‌
குளம்பு சத்தத்தையும்‌ கேட்டு இடையில்‌ கோபிகைகளோடு தங்களது மழலைச்‌ சொற்களின்‌ இனிமையையும்‌
பருகிக்‌ கொண்டு வழி நடந்த களைப்பை அறியவில்லை.

பாதேயம் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தன அம்ருதம் அன்றோ

—–

நிரீஷ்ய வ்ருந்தா வன மீச நந்தத் ப்ரஸூந குந்த ப்ரமுகத்ரு மௌகம்
அமோ ததா ஸாத்வல ஸாந்த்ர லஷ்ம்யா ஹரீந் மணீ குட்டிம புஷ்டி சோபம் –5-

ஹரீந் மணீ-மரகத மணி

அடர்ந்த மலர்களுடன்‌ கூடிய குந்தம்‌ முதலிய மரங்கள்‌ செறிந்த தோப்புடனும்‌, மரகதப்‌ பச்சைக்‌ கற்கள்‌
பதித்தாற் போன்ற (ஸாந்த்ர)அடர்ந்த பசும் புல்‌ தரையுடனும்‌ கூடிய அழகு நிறைந்த பிருந்தாவனத்தைக்‌ கண்டு
தாங்கள்‌ மகிழ்ந்தீர்கள்‌.

———

நவாக நிர் வ்யூட நிவாஸ பேதேஷ் வசேஷ கோபேஷு ஸூகாஸி தேஷு
வனஸ் ரியம் கோப கிசோர பாலீ விமிஸ்ரித பர்யக் அலோகதாஸ் த்வம் -6-

கோபர்கள்‌ அனைவரும்‌ புதிதாகக்‌ கட்டப்பட்ட தனித்தனி வீடுகளில்‌ மகிழ்ச்சியோடு வசிக்கத்‌ தொடங்கினர்‌.
தாங்கள்‌ இடைச் சிறுவர்களை, அழைத்துக்‌ கொண்டு பிருந்தாவனத்தின்‌ அழகைச்‌ சுற்றிப்‌ பார்த்து
மகிழ்ச்சி யடைந்தீர்கள்‌.

பெற்றம் மேய்த்து உண்ணும் குலம் -மாடுகளுக்கு கொட்டகை அமைத்த பின்பே தங்களுக்கு குடில்
திருவாராதனம் பண்ணிய பின்பே நாம் அமுது செய்வது போல்

————–

அரால மார்கா கத நிர்மல அபாம் மரால கூஜாக்ருத நர்மல அபாம்
நிரந்தர ஸ்மேர சரோஜ வக்த்ராம் கலிந்த கந்யாம் சம லோக யஸ்த்வம் –7–

அன்னப் பேடுகளின்‌ இனிய கூவுதலையே சாதுர்யமான பேச்சாகவும்‌, மலர்ந்த தாமரைகளையே அழகான புன்னகை
பூத்த முகமாகவும்‌, (அரால மார்கா கத )வளைந்து வளைந்து வருகின்ற தெளிந்த நீரோடும்‌ கூடிய களிந்தனின்‌ பெண்ணான காளிந்தி
என்னும்‌ யமுனையைத்‌ தாங்கள்‌ கண்டு மகிழ்ந்தீர்கள்‌

————

மயூர கேகா சத லோப நீயம் மயூக மாலா ஸபலம் மணீ நாம்
விரிஞ்ச லோகஸ் ப்ருஸம் உச்ச ஸ்ருங்கைர் கிரிம் ச கோவர்தனம் ஐஷதாஸ் த்வம்–8-

மயில்களின்‌ அழகிய இனிமையான அகவுதலால்‌ மனத்தை ஈர்ப்பதும்‌, ரத்தினங்களுடைய ஒளிக்‌ கிரணங்களால்‌
பற் பல வர்ணங்களுடன்‌ விளங்குவதும்‌, பிரம்ம லோகத்தையே தொடுவன போன்று உயர்ந்த கொடு முடிகளுடன்‌
கூடியதுமான கோவர்த்தன கிரியைத்‌ தாங்கள்‌ கண்டு களித்தீர்கள்‌.

————

சமம் ததோ கோப குமாரகைஸ் த்வம் சமந்ததோ யத்ர வனாந்தம் ஆகா
ததஸ் ததஸ் தாம் குடிலாம் அபஸ்ய கலிந்த ஜாம் ராக வதீமிவை காம் –9

பிறகு தாங்கள்‌ இடைச் சிறுவர்களுடன்‌ பிருந்தாவனத்தைச்‌ சுற்றி எங்கெங்கு சென்றீர்களோ,
அங்கங்கெல்லாம்‌ தங்களிடம்‌ (ராக வதீமிவை)மிக்க ஆசை கொண்டவள்‌ போல தனித்துச்‌ சுற்றி வரும்‌
அந்த காளிந்தியாகிய யமுனை யாற்றைக்‌ கண்டீர்கள்‌.

காளீந்தீ திருமணம் பின்பு வருமே

———

ததோ விதே அஸ்மின் விபநே பசவ்யே ஸமுத் ஸூகோ வத்ஸ கண ப்ரஸாரே
சரந் ச ராமோ அத குமாரகைஸ் த்வம் ஸமீர கேஹாதிப பாஹி ரோகாத் —10-

இவ்வாறு பல பெருமைகள்‌ கொண்டதும்‌, பசுக்களுக்கு இன்பமளிப்பதுமான அந்தப்‌ பிருந்தாவனத்தில்‌
கன்றுகள்‌ மேய்ப்பதில்‌ ஆசை கொண்டு பலராமனுடனும்‌, மற்ற இடைச்சிறுவர்களுடனும்‌ சேர்ந்து கொண்டு,
ஆடிப் பாடி மகிழ்ந்தீர்கள்-
ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை ரக்ஷித்து அருள வேணும் –

திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் அன்றோ

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்