ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–39-48–

மறு மாற்றம் காணாமையாலே-அத்தை விட்டு -அவர் செய்த உபகாரங்களை -அனுசந்தித்து -ப்ரீதியாலே –
தம் திரு உள்ளத்தைப் பார்த்து –எம்பெருமானார் செய்யும் ரஷைகள் வேறு சிலர் செய்யும் அளவோ -என்கிறார்-39-

தமக்கு செய்த உபகாரங்களை அருளிச் செய்தார் கீழ் –உலகிற்க்குச் செய்த உபகாரத்தை அனுசந்தித்து ஈடுபடுகிறார் –40-

மண்ணகத்தில்-கோயில் கொண்ட-ஆதாரம் பெருக வைத்த- அர்ச்சாவதார எம்பெருமானுக்கே ஆமது காமம் என்று உபதேசித்து அருளியதையும் -41-

திருமகள் கேள்வன்-பல அவதாரங்கள் புரிந்து அவனே அர்ச்சையாக கண்ணிற்கு இலக்காகி நிற்பினும் கண் எடுத்துப் பார்க்க மாட்டாத
உலகத்தவர் அனைவரும் –எம்பெருமானார் காலத்தில் மெய்யறிவு பிறந்து அவ்விறைவனை சார்ந்தவர்கள் ஆனார்கள் என்கிறார் – 42-

விஷய ப்ரவணனாய் நசித்துப் போகிற என்னைத் தமது பரம கிருபையால் எம்பெருமானார் வந்து எடுத்து அருளினார் என்று
தமது பண்டைய இழி நிலையையும் இன்று எய்திய பேற்றின் சீர்மையையும் பார்த்துப் பெருமைப்பட்டுப் பேசுகிறார் –
இதனாலே மாதவனே கண்ணுற நிற்கிலும் காண கில்லார் நாரணற்கு ஆனதற்கு தாமே சாஷி என்றார் ஆயிற்று –43-

சம்சார மக்னரான உங்களுக்கு-கரை கண்ட நான் -உபதேசிக்கிறேன் – ராமானுஜ என்கிற சதுரஷரி மந்த்ரத்தைச் சொன்னாலே
உங்களுக்கு சகல சுபங்களும் தன்னடையே-வந்து சேரும் என்கிறார் –44-

இப்படி இவர் உபதேசித்தும் படியில் உள்ளோரில் ஒருவரும் இவர் வார்த்தையின்படி –
இராமானுச நாமத்தை சொல்ல முற்படாமையாலே -அவர்கள் தன்மையை நினைந்து வருந்திப் பேசுகிறார் –45-

தம் திருவடிகளையே உபாயமும் உபேயமுமாக நம்பும்படி செய்த எம்பெருமானார் உடைய உபகாரத்தை அனுசந்தித்து
அவரை நோக்கித் தேவரீர் செய்து அருளின உபகாரம் பேசும் திறத்தது அன்று -என்கிறார் 46-

உலகத்தாருக்கு தத்வ உபதேசம் செய்து பகவத் சமாஸ்ரயண-ருசியை ஜநிப்பிக்குமவர்
தம்மளவிலே விசேஷமாக விஷயீகரித்ததை அனுசந்தித்து-இப்படிப் பட்ட எனக்கு நிகர் யாரும் இல்லை -என்கிறார் –47-

நீசனாம் தன்மைக்குத் தேவரீர் அருள் அன்றி வேறு புகல் இல்லை –
அவ்வருளுக்கும் இந்நீசத் தண்மை யன்றி வேறு புகல் இல்லை-
ஆக இனி நாம் வீணாக என் அகலப் போகிறோம் -என்கிறார் –48-

————————

பொருளும் புதல்வரும் பூமியும் பூம் குழலாரும் என்றே
மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே மற்றுளார் தரமோ
இருள் கொண்ட வெந்துயர் மாற்றித் தன்னீறிலபெரும் புகழே
தெருளும் தெருள் தந்து இராமானுசன் செய்யும் சேமங்களே -39 –

தென்னரங்கர் தமக்காமோ தேவியர் கட்காமோ
சேனையர் கோன் முதலான ஸூரியர் கட்காமோ
மன்னிய சீர் மாறன் அருள் மாறி தமக்காமோ
மற்றுள்ள தேசிகர்கள் தங்களுக்குமாமோ
என்னுடைய பிழை பொறுக்க யாவருக்கு முடியும்
எதிராசா உனக்கன்றி யான் ஒருவர்க்கு ஆகேன்
உன்னருளால் எனக்கு ருசி தன்னையும் உண்டாக்கி
ஒளி வீசும்பில் அடியேனை ஒருப்படுத்து விரைந்தே -ஆர்த்தி பிரபந்தம் – 26-

தன் ஈறில் பெரும் புகழே தெருளும் தெருள் தந்து
புகழ்-புகழப் படும் குணம் -அது ஈறில்லாதது-அழிவின்றி நித்தியமாய் உள்ளது -எண்ணற்றதுமாம்
தன் புகழ்-
எம்பெருமானாருக்கு அசாதாரணம் ஆனது-இறைவனது குணம் அருள் போலே மறு பாடு அற்றது
பெரும் புகழ்-
புகழுக்கு பெருமை யாவது அனுபவிக்கும் குணத்தை விட்டு வேறு ஒரு குணத்தையோ
அன்றி வேறு ஒருவனாம் இறைவன் இடத்தில் உள்ள குணத்தையோ அனுபவிக்கப் போக ஒட்டாமை –

புகழே -ஏ பிரிநிலைக் கண் வந்தது
துயர் மாற்றிய புகழ் அன்றி வேறு ஒரு புகழ் தெரியாத வண்ணம் அப் புகழையே என் அறிவுக்கு புலன் ஆக்கினர் என்றதாயிற்று –
நம் ஆழ்வார் சர்வேஸ்வரன் என்னுள்ளே புகுந்து பெறாப் பேறு பெற்றானாய்-கால் வாங்க மாட்டாதே ரத்ன பர்வதம் போலே நின்ற
இம் மகா குணத்தை யல்லது மற்றுள்ள புகழை ஒரு புகழாக மதியேன் என்னும் கருத்துடன் –
என்னுள் திகழும் மணிக்குன்ற மொன்றே ஒத்து நின்றான்
புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே -திருவாய் மொழி -8 7-5

————–

சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
யாமது காமம் அறம் பொருள் வீடி தற்கென்று உரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே -40 – –

சேம நல் வீடு
சேமமான வீடு -என்கிறார் .-யோக நல் வீடு என்றால் கிடைக்காதது பெற்றதாகும் –சேம நல் வீடு என்பதால் ஆத்மாவுக்கு எடுத்தது இது தான் –
அக்கரையில் அழுந்தி இக்கரை என்பர்களே-ஆஜகாம -ஸ்ரீ விபீஷணன் தன்னிடம் பெருமாள் இடம் வந்தான் என்றாரே வால்மீகியும் –
கைவல்யத்தின் நின்றும் வேறுபாடு தோற்ற நல் வீடு என்றார்-

மண் மிசையே-கண்ணனுக்கே யாமது காமம்
அவன் இன்புறக் காண்பது அன்றி தனக்கு வேறு புருஷார்த்தம் இல்லை என்று கருதி செலுத்தும் காமமே புருஷார்த்தம் என்றது ஆயிற்று –
இங்கு காமம் என்பது கண்ணைக் கலந்து களிப்புறுத்தும் நிலைமையேயாம்
அதாவது சம்ச்லேஷ சுகமே -கூடலின்பமே-என்றபடி –
மண்ணகத்தில்-கோயில் கொண்ட அர்ச்சாவதார எம்பெருமானுக்கே ஆமது காமம்
ஆதாரம் பெருக வைத்த -அர்ச்சை வடிவனான கண்ணனதே

1-வேண்டுதலை எதிர்பாராது தானே வலியக் கொடுக்கையும் –
2-சீரியதைக் கொடுக்கையும் –
3-வரையாதே கொடுக்கையும் –
4-தன் பேறாக உவந்து கொடுக்கையும் -வாமனனுக்கும் எம்பெருமானாருக்கும் ஒத்த ஸ்வபாவன்களாம் –

குறிப்பாக மாவலி யிடமிருந்து-விரகினால்-சாமர்த்தியத்தால்- வாமனன் தன் விபூதியை -உலகினை-வாங்கியது போலே –
எம்பெருமானாரும் என்னிடம் இருந்து – விரகினால் தன் விபூதிமான் ஆகிய அரங்கனை வாங்கிக் கொண்ட ஒப்புமை இங்குக் கருதத் தக்கது –
வாங்கின விபூதியை உரியது இந்திரற்கு இது என்று -இந்திரனிடம் ஒப்படைத்தான் -வாமனன் .-
வாங்கின விபூதிமானை உரியன் ஸ்ரீ வைஷ்ணவர்க்கு என்று ஸ்ரீ வைஷ்ணவர் இடம் ஒப்படைத்தார்
எம்பெருமானார் -ஒப்டைத்ததும் அந்த ஸ்ரீ வைஷ்ணவர்களை நோக்கி -இக் கண்ணனுக்கே ஆமது காமம்
அனைவரும் –நம்பெருமாள்-நம் பெருமாள்-என்று காமுரும்படி உபதேசித்து அருளினார் எம்பெருமானார்
வாமனன் சீலன் -கூரத் தாழ்வான் என்றபடி –
இவ்வின்ப வெள்ளத்தை விட்டு-நல் வீடு பெறினும் தெள்ளியோர் குறிப்பு கொள்வது எண்ணுமோ-என்கிறார் பராங்குசர்

———–

மண் மிசை யோநிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய வப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினரே – 41-

மண் மிசை நெடும் காலம் கண்ணுற நிற்றலின் மாதவனது எல்லை இல்லாத சௌசீல்ய குணம்-புலன் ஆகின்றது –
இங்கு ஆழ்வான் அருளிச் செய்த –
சீல க ஏஷ தவ ஹந்த தயைகசிந்தோ ஷூத்ரே ப்ருதக் ஜநபதே ஜகதண்ட மத்யே
ஷோதீய சோபிஹி ஜனச்ய க்ருதே க்ருதீத்வ மத்ராவதீர்யா நனு லோசன கொசரோ பூ –அதி மானுஷ ஸ்தவம் -10 – என்று
அருளே நிறைந்த கடலே -நீ செய்ய வேண்டியவை அனைத்தும் செய்து முடித்து இருந்தும் –
உலக அண்டத்திற்கு இடையே சிறிதான பாமர மக்கள் குடி இருக்கும் இடத்தில்
மிகவும் அற்பர்களாகிய மக்களுக்காக இங்கே அவதரித்து கண்களுக்கு புலன் ஆயினை அன்றோ-
உனது சௌசீல்யம் குணத்தை என் என்பது -என்ற ஸ்லோகம் அனுசந்திக்க தக்கது-

இறைவன் பிராட்டி யோடே அவதரிக்கிறான் -என்பது தோன்ற –மாதவன் பிறந்து -என்றார்.
ராகவத்வே பவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி
அன்யேஷ சாவதாறேஷூ விஷ்ணு ரெஸா நபாயிநீ -விஷ்ணு புராண ஸ்லோகம்-என்று
இறைவன் ராமனான போது -சீதை யானாள்-கிருஷ்ணனாய் பிறந்த போது ருக்மிணி யானாள் –
மற்றைய அவதாரங்களிலும் விஷ்ணுவை விடு கிலள்-

மண் மிசை பிறந்து -என்றமையால் வாத்சல்யம் தோன்றுகிறது-வாத்சல்யமாவது குற்றத்தையும் நற்றமாகக் கொள்ளுதல்
எங்கள் மாதவன்-என்றமையால் ஸ்வாமித்வம் தோற்றுகிறது-ஸ்வாமித்வமாவது உடைமைக்கு உரியனாய் இருத்தல்
நிற்கிலும் -என்பதால் சௌசீல்யம் தோற்றுகிறது –0சௌசீல்யம் ஆவது மிகத் தாழ்வு உடையரோடு வேறுபாடு இன்றி பழகுதல்
கண்ணுற -என்றமையால் சௌலப்யம் தோற்றுகிறது-சௌலப்யம் ஆவது கண்ணுக்கு புலனாய் தோற்றுதல்-

மாதவன் அவதாரத்தை –பிறந்து -என்றார்-சம்சாரிகள் போலப் பயன் பெறாமையின் –
அண்ணல் அவதாரத்தை தோன்றி என்றார் பயன் பெற்றமை பற்றி –
நாரணற்கு ஆயினர் –
பொருள் அனைத்தையும் உட் புக்கு நியமிப்பது பற்றி-நாராயணன் -என்று திரு நாமம் அமைந்தது –
நாராயணன் என்பது நாரணன் என்று மருவி நின்றது .
உட் புக்கு நியமிப்பது ஆத்மா ..அங்கன் நியமிக்கப் படுவது உடல் –
உடல் ஆத்மாவுக்கு போல -பரமாத்மாவுக்குப் பொருள் அனைத்தும் உபயோகப்பட்டு சிறப்பு உறுதல் இயல்பு.
வ்யாபகத்வத்தை உணர்த்தும் சொல். வியாபக மந்திரங்களிலே ப்ரதானம் இந்த நாராயன மந்திரம்

பிராட்டியும் பெருமாளும் சேர்ந்து இருவரும் பல கால் பிறந்தும் பயனில்லை
எம்பெருமானார் தனியே ஒரு கால் தோன்றிய அப்பொழுதே பயன் மிக்கது .
மாதவனால் கையால் ஆகாது விடப் பட்டவர்களை எல்லாம் எம்பெருமானார் கை கொடுத்து-எடுத்துக் காத்து விட்டார் -என்றது ஆயிற்று .

————

ஆயிழையார் கொங்கை தங்கு மக்காத லளற்ற ழுந்தி
மாயும் என்னாவியை வந்து எடுத்தான் இன்று மா மலராள்
நாயகன் எல்லா வுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
தூயவன் தீதில் இராமானுசன் தொல்லருள் சுரந்தே -42 – –

மாயும் என் ஆவியை வந்து எடுத்தான் இன்று
மாயும் ஆவி என்கையாலே -சாகும் தருவாயிலே வந்து எடுத்தமை தோற்றுகிறது —
என் ஆவியை இராமானுசன் வந்து எடுத்தான் என்று கூறுதலின் தனது செயல் அறுதியைக் காட்டுகிறார் –
சற்று முன்பு வந்து எடுப்பினும் இவர் தடுப்பார் போலும் –
காமாதி தோஷ மாத்ம பதாச் ரிதா நாம் -யதிராஜ விம்சதி

கூபத்தில் வீழும் குழலி யுடன் குதித்தல்
வாபத்தை நீக்கும் அந்த அன்னை போல் -பாபத்தால்
யான் பிறப்பே னேலும் இனி எந்தை எதிராசன்
தான் பிறக்கும் என்னை உய்ப்பதா -என்று-மணவாள மா முனியும் ஆர்த்தி பிரபந்தத்திலே- அருளி இருப்பது அனுசந்திதற்கு உரியது
இதனாலே மாதவனே கண்ணுற நிற்கிலும் காண கில்லார் நாரணற்கு ஆனதற்கு தாமே சாஷி என்றார் ஆயிற்று –

எல்லா உயிர் கட்கும் நாதன் மா மலராள் நாயகன் – -நாதனாய்-சேஷியாய்-இருக்கும் தன்மை ஸ்ரீ யபதிக்கே
ஸ்ரீயபதியாய் -சேஷியாய் இருப்பானை நம்மால் காண இயலுமோ -என்னும் ஐயம் அறுப்பது –அரங்கனை-
என்று மேலும் செய்யும் உபதேசம்

தீதில் இராமானுசன் தொல் அருள் சுரந்தே –
தீது உபதேசத்துக்கு அனுவர்த்தனத்தை எதிர்பார்த்தல்-
எனது அனுவர்த்தனத்தை எதிர் பாராமல் தாம் பரம கிருபா மாத்ர பிரசன்னாசார்யராய் -உபதேசித்து-அருளினார் -என்றபடி –
இனி க்யாதி லாப பூஜைகளை எதிர்பாராமை யால் தீதிலர் என்னவுமாம் .
தொல் அருள் –
இயல்பான அருள்-நிர்ஹேதுதுக கிருபை என்றபடி-
தொல் அருள் சுரந்து வந்து இன்று எடுத்தான் -என்று கூட்டி முடிக்க –

————-

சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாயமுதம்
பரக்கும் இருவினை பற்றவோடும் படியிலுள்ளீர்
உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறு கலியைத்
துரக்கும் பெருமை இராமானுசன் என்று சொல்லுமினே – 43-

உணர்வு -ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்றபடி
பரம் பொருளை அதன் எல்லை நிலமான அடியார் அளவும் உள்ளவாறு அறிதல் –

சொலப் புகில் வாயமுதம் பரக்கும்
எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாகிய திரு மால் திரு நாமம் –பெரிய திரு மொழி – 6-10 6- –
என்று நாராயணா நாமம் தனக்கு அமுதமுமாய் இருப்பதாகத் திரு மங்கை ஆழ்வார் அருளிச் செய்தார் –
நாராயணா நாமம் சொல்ல சொல்ல அமுதமாக இருக்கிறது .
முக்தியை மாத்ரம் அன்றி சம்சாரத்தையும் பெருக்குவதாயும் உள்ளது

தென் குருகூர் நம்பி என்னக்கால் அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -என்று நம் ஆழ்வார் திரு நாமம்
சொன்னால் அமுது தன் நாவில் ஊருவதாக மதுர கவி ஆழ்வார் அருளிச் செய்தார் .
மதுர கவிகளுக்கு அமுதூரும்படி அமைந்த சடகோப நாமமோ -அவர் நாவுக்கே -சொன்ன பிறகே –
அமுதூருவதாய் அமைந்தது
நம் ஆழ்வார் திரு நாமம் ஒரு கால் சொன்னால் போதும் நாவிலே அமுதம் ஊறிக் கொண்டே இருக்கிறது .

ராமானுச நாமமோ சொல்லத் தொடங்கின உடனேயே அமுதனாருக்கு வாயிலே அமுதம் பரக்கிறது –
உய்வித்தலானும் இனிமையானும் திரு நாமம் அமுதமாக சொல்லப்படுகிறது-
ராமானுஜ நாமமோ சம்சாரத்துக்கு துணை புரியாது –முக்தியே தர வல்லதாய் –
படியில் உள்ளோர் அனைவருக்கும் சொல்லப் புக்கவாறே அமுதம்
பரக்கும்படி செய்ய வல்லதாய் வீறு பெற்று விளங்குகிறது

நாராயண நாமம் ஆயின் வினைகள் மீண்டும் தலை காட்டவும் கூடும் –
மாடே வரப்பெறுவராம் என்றே வல் வினையார்
காடானு மாதானும் கைக்கொள்ளார் -ஊடே போய்ப்
பேரோதும் சிந்து திரைக் கண் வளரும் பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து -பெரிய திருவந்தாதி – 59– – என்று நம் ஆழ்வார் வல்வினையார் பேர்ந்து போகாது
பக்கத்தில் இருப்பதாக அருளிச் செய்வது காண்க

இராமானுச நாமம் சொல்லப் புக்கவாறே அஞ்சி பற்றற ஓடுகின்றன
இரு வினைகள் பற்று அற-வாசனையும் இல்லாது முழுதும் ஒழிந்து விட்ட படியால் இனி மீளாவே

மூன்று திரு நாமங்களும் சதுரஷரி –நான்கு எழுத்துக்கள்-கொண்டவையே –
நாராயண -சடகோப ராமானுஜ -என்பவை அத்திரு நாமங்கள்
இங்கனம் வீறு பெற்று விளங்குவது பற்றியே
ஆழ்வான் -ந சேத் ராமானுஜ அத்யஷர சதுரா சதுரஷரீ காம வஸ்த்தாம் ப்ரபத்யன்னே ஜந்தவோ ஹந்த மாத்ருசா
என்று சாதுர்யம் வாய்ந்த இந்த ராமானுஜ சதுரஷரீ இல்லை எனின் –
என் போன்ற பிராணிகள் என்ன நிலையை அடைவர் -என்றார்.

படியில் உள்ளீர் –
திரு நாமத்தைச் சொல்ல எல்லாரும் அதிகாரிகள் என்பது இவ்விளியினால் விளங்குகிறது –
இருள் தரும் மா ஞாலத்தில் -உள்ளவர்களுக்கு தெள்ளியோர் கைக் கொள்ளும் விஷயத்தை
உபதேசிக்கிறேன் -என்றபடி –

———-

சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை
யில்லா வற நெறி யாவும் தெரிந்தவன் எண்ணரும் சீர்
நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்பிக்
கல்லார் அகலிடத்தோர் எது பேறென்று காமிப்பரே – -44 –

தாய் மொழி யாதலானும் ஆழ்வார்கள் ஈரத் தமிழ் ஆதலானும் -நான்கு ஸ்ருதிகளுக்கு முன்னர் மூன்று தமிழ்கள் கூறப்பட்டன –
செந்திறத்த தமிழோசை வட சொல்லாகி -என்று வட சொல்லுக்குமுத்திச் செந்திறத்த தமிழைத்
திரு மங்கை ஆழ்வார் அமைத்து அருளி இருப்பது இங்கு அறியற்பாலது –
தம் பாழி யாகையாலே தமிழை முதலில் கூறினார் என்பது அவ்விடத்திய வியாக்யானம்-

இயல் தமிழ் -இயல்பாய் அமைந்த தமிழ்
இசைத் தமிழ் -குறிஞ்சி காந்தாரம் முதலிய பண் அமைந்த தமிழ் .
இயலும் இசையும் விரவிய தமிழ் -நாடகத் தமிழ் –
இசைத் தமிழ் -பண்ணார் பாடல் எனப்பட்ட திருவாய் மொழி -பெரிய திருமொழி முதலியன
இயல் தமிழ் -பொய்கையார் அந்தாதி முதலியன
நாடகத் தமிழ் -உரையாடல் வடிவமாய் அமைந்த திருப்பாவை முதலியன –

சொல்லார் ஒரு தமிழ் என்று கூட்டித் -திருவாய் மொழியும்
ஒரு மூன்று -என்று மற்றை மூவாயிரமும் சொல்லப்படுகின்றன –

இனி நம் ஆழ்வார் அருளிச் செய்த திரு விருத்தம் திரு வாசிரியம் பெரிய திருவந்தாதி என்னும்
திவ்ய பிரபந்தங்கள் சொல்லப் படுகின்றன என்னலுமாம்-என்று பிள்ளை லோகம் ஜீயர் உரைப்பர் –

மேலே ஸ்ருதிகள் நான்கும் என்று வட மொழி வேதம் நான்கும் கூறப் படுவதற்கு ஏற்ப
தென் மொழி வேதம் நான்கும் கூறப் படுவது பொருந்தி உள்ளது என்பது அவர் கருத்து போலும் .

சொல்லார் தமிழ் -என்பது –சொல் சீர்த் தொடை யாயிரம் -திரு வாய் மொழி – 1-2 11- –
சடகோப வாங்மயம் -என்னும் திருவாய் மொழியை நினைவுறுத்துகிறது .
இரும் தமிழ் நூலிவை மொழிந்து -திருவாய் மொழி -10 -6 4- – என்றபடி
இரும் தமிழ் நூல் ஆதலின் -திருவாய் மொழி -தமிழ் -என்றே வழங்கப் பட்டது .

எது பேறு என்று காமிப்பரே
நம்பித் திரு நாமம் கற்றலாம் புருஷார்த்தத்தை விட்டு –புருஷார்த்தம் எது என்று
தேடி அலையா நிற்கிறார்களே -இவர்கள் அறிவீனம் இருந்த படி என்

—————

பேறு ஓன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அப் பேறு அளித்ததற்கு
ஆறு ஒன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி என்று இப்பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லாற்
கூறும் பரம் அன்று இராமானுச மெய்ம்மை கூறிடிலே – 45- –

தேறும் அவர்க்கும் எனக்கும் –எனவே-தேறாத எனக்கும் என்பது பெற்றோம்
உனைத் தந்த செம்மை சொல்லால் கூறும் பரம் அன்று
தேறினவர்க்கும்-தேறாதவர்க்கும் ஒருபடிப் பட -தன்னையே கொடுக்கும் நேர்மை-செம்மை –
தன்னையே சேர்ந்தது ஒன்றைக் கொடுத்து விடுகை அன்றிக்கே
எனக்கே தன்னைத் தந்த கற்பகம் என்றபடி தேவரீர் தம்மையே கொடுத்து அருளினீர் – –
எம்பெருமான் போலே ஆத்ம சமர்ப்பணத்தை எதிர்பாராது தேவரீர் தம்மையே அடியோங்களுக்கு ஆக்கி யருளுவதே-
உபகாரம் செய்த திருவடிக்கு பெருமாள் தன்னையே கொடுத்து அருளினார் –
தரம் பாராதே உபகாரம் செய்யாதவர்களுக்கும் தம்மைக் கொடுத்த-இச் செயலை என் என்று சொல்லுவது -என்கிறார்.

நெஞ்சால் நினைந்து குமிழ் நீர் உண்ணலாமே யன்றிச் சொல்லால் கூறும் பரமன்று என்கிறார் .
நம் ஆழ்வார் பிரதம பர்வதத்தையே உபாயமும் உபேயமுமாக தெளிந்து தன் நெஞ்சை நோக்கி
நான் கூறும் கூற்றாவ தித் தன்னையே நாணாளும்
தேங்காத நீருருவன் செங்கண்மால் -நீங்காத
மா கதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
நீ கதியா நெஞ்சே நினை – -என்கிறார்
அத்தகைய தெளிவு வாய்ந்த தனக்கு உபாயமாகத் தெய்வ நாயகன் தன் பாதத்தை தந்த
உபகாரத்தைக் கூறி அதற்குக் கைம்மாறு காணாது தடுமாறுகிறார் .

ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் உனக்கோர் கைம்
மாறு நான் ஓன்று இலேன் எனதாவியும் உனதே -திருவாய்மொழி – 5-7 10- – என்பது காண்க –.

அமுதனாரோ அங்கனம் கூறவும் மாட்டாது தடுமாறுகிறார் .

————

கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே
மாறன் பணித்த மறை யுணர்ந்தோனை மதியிலியேன்
தேறும்படி என் மனம் புகுந்தானைத் திசை யனைத்தும்
ஏறும் குணனை இராமானுசனை இறைஞ்சினமே -46- –

ஆறு சமயமும் = சாக்ய, உலுர்க்ய, அக்ஷபாத, க்ஷபண. கபில, பதஞ்சலி மதங்கள் எனப்படுகிற ஆறும் பாஹ்யஸமயங்களாம்;
சாக்யர்-பௌத்தர்; உலுர்க்யர்-சார்வாகர்; அக்ஷபாதரென்று கௌதமரைச் சொல்லி நையாயிக வைசேகூஷிகர்களை நினைக்கிறது.
க்ஷபணர்-ஜைநர். ஆறுசமயங்களுக்கு விளம்பும் என்று அடைமொழி கொடுத்தது-
அர்த்தமில்லாத வெறும். சொற்களையே பிதற்றுகிறவர்களென்று காட்டினபடி.

குவலயத்தே பணித்த -எனக் கூட்டினால் இருள் தரும் மா ஞாலத்திலே
வெளிச் சிறப்பு தோற்ற அருளிச் செய்த -என்றபடி –
இனி குவலயத்தே உணர்ந்தோனை-எனக் கூட்டினால் இந்த லோகத்திலே உணர்ந்தவர்
இவர் ஒருவரே என அருமைப்பாடு தோன்றுகிறது-
திசை யனைத்தும் ஏறும் குணனை இராமானுசனை இறைஞ்சினமே-
இங்கனம் சமயங்கள் ஆறும் குலைய மாறன் உணர்ந்தமை -தேறும்படி என் மனம்-புகுந்தமை என்னும்
குணங்கள் திக்குகள் அனைத்திலும் பரவின –
அத்தகைய நற்குணம்-வாய்ந்த எம்பெருமானாரை இவ் உபகாரத்துக்கு தோற்று வணங்கினோம்

————-

இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத்
தரம் செப்பும் அண்ணல் இராமானுசன் என் அருவினையின்
திறம் செற்று இரவும் பகலும் விடாது என் தன் சிந்தை உள்ளே
நிறைந்து ஒப்பற விருந்தான் எனக்காரும் நிகர் இல்லையே – 47- –

இரவும் பகலும் விடாது
அல்லு நன்பகலும் இடைவீடு இன்றி நல்கி என்னை விடான் நம்பி நம்பியே -திருவாய்மொழி 1-10 8- – –
என்கிற படியே இடைவிடாதபடி எழுந்து அருளி இருந்தார் .என் சிந்தை உள்ளே நிறைந்து ஒப்பற இருந்தான் –
ஆசாபாசங்களுக்கு உறைவிடமான என் சிந்தைக்கு உள்ளே இருந்தார் –

அமுதனாரை வசப்படுத்துவது தவிர எம்பெருமானார் திரு வவதாரதிற்குப் பேறு வேறில்லை என்பது கருத்து .
நிறைந்து இருந்தான்–
பகவத் விஷயத்துக்கும் இடம் இன்றித் தானே சிந்தையுள் நிறைந்து இருந்தான் -என்னலுமாம்
விஷயாந்தரங்களுக்கு அவகாசம் இல்லாதபடி
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் –திருவாய் மொழி – 10-8 1- – என்று
நம் ஆழ்வார் கூறியது போலே அமுதனாரும் கூறினார் .
நம் ஆழ்வார் நெஞ்சில் விஷயாந்தரங்களுக்கு இடம் இல்லை .
அமுதனார் நெஞ்சில் பகவத் விஷயத்துக்கும் இடம் இல்லை –

———–

நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றிப்
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அக்தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச இனி நாம் பழுதே
யகலும் பொருள் என் பயன் இருவோருக்கும் ஆன பின்னே – -48 —

நிகரின்றி நின்றது என் நீசதை என்கிறார் –
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் 3-3 4- – என்றார் நம் ஆழ்வார்
நீசதை நீங்கி சிலர் நல்லவர் ஆதலும் உண்டு -என் நீசதை அங்கனம் நீங்காது நிலை நிற்பது
தோன்ற -நின்ற என் நீசதை-என்றார் –
நிகர் அற்றமையில் -என் நீசதைக்கும் தேவரீர் அருளுக்கும் ஒற்றுமை உண்டு .
ஆகவே அவை நிலைத்து ஏன் இணைந்து இருக்க மாட்டா -என்கிறார் –

ததஹம் த்வத்ருதே ந நாதவான் மத்ருதே த்வம் தய நீய வாந்தச-விதி நிர்மித மேத்தா தான்யம்
பகவன் பாலய மாஸம ஜீஹப -என்று-பகவானே உம்மைத் தவிர நான் வேறு நாதன் அற்றவனாய் இருக்கிறேன்-
நீரும் என்னைத்தவிர இரக்கப்படத் தகுந்தவன் இல்லாதவனாய் இருக்கிறீர்-
தற்செயலாக அமைந்த இந்த தொடர்பினை காத்து அருள வேண்டும்விட்டு விடாதீர் -என்று ஆள வந்தாரும் காட்டி யருளினார்

யதிராஜ விம்சதியில் -வாசா மகோசர மகா குண தேசகாக்ர்யா கூராதி நாத கதிதாகில நைச்ய பாத்ரம்
ஏஷோ ஹமேவ ந புனர் ஜகதீச்ருசஸ் தத் ராமாநுஜார்ய கருணை வது மத் கதிச்தே -என்று-
மொழியைக் கடக்கும் பெரும்புகளை உடையரான ஆசார்யர்களில் சிறந்த கூரத் ஆழ்வான்-கூறிய
எல்லா நீசதைக்கும் உறைவிடமாய் இருப்பவன் இந்த நான் ஒருவனே
உலகத்தில் இத்தகைய ஒருவனைக் காண முடியாது
ஆகையால் எம்பெருமானரே தேவரீர் உடைய வீறு பெற்ற கருணையே எனக்கு கதி -என்று
அருளிச் செய்து இருப்பது இங்கு அனுசந்திக்கதக்கதாகும்-

வேதாந்த தேசிகன்
மயி திஷ்ட்டதி துஷ்க்ருதாம் பிரதானே மித தோஷா நிதரான் விசின்வதீத்வம்
அபராத கணைர பூர்ண குஷி கமலா காந்த தயே கதம் பவித்ரீ –என்று
பாபம் செய்தவர்களுக்குள் எண்ணற்ற பாபங்கள் செய்ததனா பிரதானனாகிய நன் இருக்க –
என்னைப் புறக்கணித்து -அளவுக்கு உட்பட்ட பாபம் செய்தவர்களை தேடிக் கொண்டு இருக்கும் நீ
பாபத் திரள்களினால் வயிறு நிரம்பாமல் கமலியின் காதலனுடைய அருள் அணங்கே –
எப்படி யாகப் போகிறாயோ -என்றும் –
அஹம் அஸ்ம்ய அபராத சக்ரவர்த்தீ கருணே த்வம்ச குனேஷூ சார்வ பௌமீ
விதுஷீ ஸ்த்திதி மீத்ருசீம் ஸ்வயம்மாம் வருஷ சைலேஸ்வர பாத சாத்குரு-என்று
நான் பாபம் செய்தவர்களுள் சக்கரவர்த்தியாய் மேம்பட்டவன்
கருணையே -நீயும் குணங்களுள் தலை சிறந்தவள் .
இத்தகைய நம் நிலையை உணர்ந்து தானாகவே என்னை திரு வேம்கடமுடையான்
திருவடிக்கு உரியனாக்குவாயாக -என்று தயா சதகத்திலே -29 30- – இக்கருத்தினையே தழுவி அருளி இருப்பது

பயனிருவோக்கும் ஆன பின்னே –
தேவரீருக்கு பயன் குண லாபம்-அடியேனுக்கு பயன் ஸ்வரூப லாபம்

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading