ஶ்ரீரங்கம் நம்பெருமாள் திருஅத்யயன உற்சவம்-

காவேரி விராஜா சேயம் வைகுண்டம் ரெங்க மந்திரம் 
ஸ வாஸூதேவோ ரங்கேஸே ப்ரத்யக்ஷம் பரமம் பதம்–

விமாநம் ப்ரணவாகாரம் வேத ஸ்ருங்கம் மஹாத்புவம்
ஸ்ரீரெங்கசாயீ பகவான் ப்ரணவார்த்த ப்ரகாஸஹா-—–

—————

ரிக்வேதம் போற்றும் திருவேங்கடம்

“அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே, சிரிம்பிடஸ்ய ஸத்த்வபி:
தேபிஷ்ட்வா சாதயாமஸி” என்ற ரிக் வேத மந்திரம்
திருமலையைப் புகழ்கிறது. ஏழைகள், எதிர்காலம் பற்றிய அறிவில்லாதவர்கள், துன்பப்படுபவர்கள்,
சுற்றதாரின் ஆதரவு அற்றவர்கள் ஆகிய அனைவரும் பக்தர்களோடு இணைந்து
ஸ்ரீநிவாசன் திகழும் திருமலைக்குச் சென்று, அப்பெருமாளின் திரு வடிகளில் அடைக்கலம் புகுந்தால்
அவன் காத்தருள்வான் என்பது இம்மந்திரத்தின் பொருள்.

————-

—————

ஶ்ரீரங்கம் நம்பெருமாள் திருஅத்யயன உற்சவம்-
இன்று (12.12.23)
திருநெடுந்தாண்டகம்!

ஶ்ரீரங்கம் நம்பெருமாள் திருஅத்யயன உற்சவத்திற்கு முதல்நாள் திருநெடுந்தாண்டகம் என்ற விழாவாக, இன்று இரவு திருமங்கை ஆழ்வாரின் முப்பது பாசுரங்கள் கொண்ட திருநெடுந்தாண்டகம் என்ற பிரபந்தம் சந்தனு மண்டபத்தில் அரையர் ஸ்வாமிகளால் தாளத்துடன் சேவிப்பர்!

தாண்டகம் என்பது மலை ஏறுவதற்கு உதவியாக இருக்கும் ஒரு ஊன்றுகோல். மனித ஆன்மாவின் கடைத்தேற்றலுக்கு பெரியபெருமாளே ஊன்றுகோல் என்பதை ஆழ்வார் இந்த பிரபந்தத்தில் அறுதியிடுகிறார்!

மேல்நாட்டு வேதாந்தியை (நஞ்சீயர்) வாதத்தில் வென்று, அவரை திருத்திப்பணி கொண்டு திரும்பிய தம் திவ்ய குமாரர் பராசர பட்டரிடம், வேதாந்தியை எப்படி வென்றீர் எனக்கேட்க, பட்டர் திருநெடுந்தாண்டகம் பாசுரங்களில் உள்ள ப்ரமாணங்களைக் கொண்டு வென்றதாக விண்ணப்பித்து தம்முடைய வாதங்களையும் சமர்ப்பித்தார் பெரியபெருமாளிடம்!

இந்த வைபவத்தையே நம்பெருமாள், மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவத்திற்கு முதல்நாள் திருநெடுந்தாண்டகம் திருநாளாக அன்வயிக்கிறார்!

மற்ற திவ்யதேசங்களில் திருஅத்யயன உற்சவம் அமாவாஸ்யைக்கு அடுத்த பிரதமையன்று திருப்பல்லாண்டுடன் தொடங்குவர்.

ஶ்ரீரங்கத்தில் மட்டும் ஒருநாள் முன்னரே, அமாவாஸ்யையன்று “திருநெடுந்தாண்டகத்துடன்” தொடங்குவர் – ஶ்ரீபராசர பட்டரின் பெருமையைக் கொண்டாடும் விதமாக!!

“மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்;
விளக்கொளியாய், முளைத்தெழுந்த திங்கள் தானாய்;
பின்னுருவாய், முன்னுருவிற் பிணி மூப்பில்லாப்,
பிறப்பிலியாய், இறப்பதற்கே எண்ணாது எண்ணும்;
பொன்னுருவாய், மணியுருவில் பூதமைந்தாய்ப்,
புனலுருவாய், அனலுருவில் திகழுஞ்சோதி;
தன்னுருவாய், என்னுருவில் நின்ற எந்தை,
தளிர்புரையும் திருவடி என் தலைமேலவே!”
-திருநெடுந்தாண்டகம் (முதல் பாசுரம்)

தேக ஆத்மா அபிமானத்தைப் போக்கி, நான்கு வேதங்களையும் தந்து, அஞ்ஞானத்தை அகற்றி, ஜ்ஞான விளக்கேற்றி, நீர்மை குணத்தோடு ஸர்வ சுலபனான எம்பெருமான் என்னுள்ளத்தில் எழுந்தருளி, தம் குளிர்ந்த திருவடிகளை என் சென்னியில் சாற்றினான்!
🙏🙏

இரண்டாம் நாள் ஶ்ரீரங்கம்
நம்பெருமாள் திருநாரணன் முடி, முத்தரசன் கொரடு அணிந்து
சிகப்பு கல் அபய ஹஸ்தம்,
மகர கர்ண பத்திரம்,
கண்டபேரண்ட பக்ஷி பதக்கம்,
வெள்ளைக்கல் அட்டிகை,
வில்வ பத்திரபதக்கம்,
நெல்லிக்காய் மாலை,
காசு மாலை
அடுக்கு பதக்கங்கள் அணிந்து ;
பின் சேவையாக
புஜ கீர்த்தியுடன்;
சிகப்புக்கல் தாமரை பதக்கம் அணிந்து;
வெண்பட்டு உடுத்தி அர்ஜுன மண்டபத்தில் நேரலையாக சேவை சாத்திக்கிறார் 🙏ரங்கா ரங்கரங்கா

———–

நம்பெருமாள் ரத்தின நீள் முடி,ரத்தின அபயஹஸ்தம் மற்றும் திருஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்

மூலஸ்தானத்தில் இருந்து, சிம்ஹ கதியில், புறப்பட்டு,ஸ்ரீரங்கராஜ ஸ்தவம் திருச்செவி சாத்தியருளி திருமாமணி மண்டபத்தில் எழுந்தருள் கிறார்.இராப்பத்து 2 ஆம் நாளிலிருந்து 6 ஆம் நாள் வரையும்,9 ஆம் நாளும் ஸ்ரீரங்கராஜ ஸ்தவம் சேவிக்கப்படும்.

உடையவர் காலத்தில், இந்த வீதியில் 700 அரையர்கள் வசித்து வந்ததாக, “ராமாநுஜார்ய திவ்யசரிதை”,என்னும் நூலில்,பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகுறிப்பிட்டுள்ளார். இப்போது 12 அரையர்களே (இரு குடும்பங்களாக நாதமுனி அரையர்கள், திருவரங்கப் பெருமாள் அரையர்கள் என்று) உள்ளனர்!!

சிறிய தாளமும்,பெரிய மணியும்
அரையர்களின் எண்ணிக்கை, குறைந்து வந்த காலகட்ட த்தில், அவர்கள் உபயோகித்து வந்த தாளங்கள் உருக்கப் பட்டு,ஒரு பெரிய திருமணியாக வார்க்கப்பட்டது.அந்தப் பெரியமணி அர்ச்சுன மண்டபத்துக்குச் செல்லும் வழியில் நின்று, ப்ரணவாகார (தங்க)விமானம் சேவிக்கும் இடத்தில் தொங்க விடப்பட்டுள்ளது.அந்தப் “பெரியமணியின்”ஓசையைக் கேட்டுக்கொண்டே, இரவில், கோயிலின் நடை சாற்றப்படுமுன், பெரிய பெருமாள் ‘அரவணைத் தளிகை’ கண்டருளுகிறார்.
( இரவு சுமார் 10 மணிக்கு இந்த மணி(அரவணை மணி) சேவிக்கப்படுகிறது.)

பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா .

இதையொட்டி, நம்பெருமாள் நீள்முடி கிரீடம், ரத்தின அபயஹஸ்தம், மார்பில் லட்சுமி பதக்கம், கர்ணபூசம், பவள மாலை, முத்துமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்து காலை 7 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து தனுர் லக்னத்தில் புறப்பட்டு மேலப்படி வழியாக வெளிவந்து இரண்டாம் பிரகாரம் ராஜமகேந்திரன் திருச்சுற்று வழியாக காலை 7.45 மணிக்கு அர்ஜூன மண்டபம் வந்தடைந்தார்.

காலை 8.15 மணி முதல் மதியம் 1 மணிவரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப் பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவர்.

மாலை 6.30 மணிக்கு அர்ஜூன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

பகல்பத்தின் முதல் நாளான இன்று மூலவர் ரங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும்.

இதேபோல், பகல்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாள்  நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு எழுந்தருள்வார்.

சொர்க்கவாசல்  பகல் 1 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும்.

சொர்க்கவாசல் திறப்பு தினமான முதல் ராப்பந்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

ராப்பத்து ஏழாம் திருநாளில்  நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளில் திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளில் தீர்த்தவாரியும்,  நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெறும்.

18 விதமான வாத்தியங்கள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தினந்தோறும் நடைபெறும் வைபவங்களில் 10 விதமான வாத்தியக் கருவிகள் வாசிக்கப்படும். வைகுண்ட ஏகாதசி விழாக் காலங்களில் மட்டும் 18 விதமான வாத்தியக் கருவிகள் வாசிக்கப்படும். இதில், பெரியமேளம், நாதஸ்வரம், சங்கு, மிருதங்கம், வெள்ளியெத்தாளம், செம்புயெத்தாளம், வீரவண்டி உள்பட 18 வாத்தியக் கருவிகள் வாசிக்கப்படும்.

ஒன்பதாம் நாளன்று காலையில் நம்பெருமாள் முத்துக்குறிக்காக, முத்து பாண்டியன் கொண்டை,முத்து அபயஹஸ்தம் காதுகாப்பு,முத்தங்கி, முத்து ஆபரணங்கள் சூடியவாறு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஆழ்வார்கள் பின் தொடர பிரகாரங்களில் வலம் வந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்

நாத முனிகள் ஆழ்வாரை சாஷாத் கரித்து பெற்று
மேலை அகத்து கீழ் அகத்து ஆழ்வார் கொண்டு-
அரையர் சந்ததி-ஸ்ரீ ரெங்கம் பிரதானம்
ஸ்ரீ வில்லி புத்தூர் ஆழ்வார் திரு நகரி-ஆரம்பம் மட்டும்
கைசிக -திரு குறுங்குடி அரையர் சேவை உண்டு
21 நாள் இயற்ப்பா
அப்புறம் திரு பல்லாண்டு
திரு நெடும் தாண்டகம் சேவை உடன் தொடக்கம் -இங்கு
ஐதீகம் முன்னிட்டு-
உடையவர்-திருத்தி பணி கொண்டார்
யாதவ பிரகாசர் /யக்ஜா மூர்த்தி-அருளாள பெருமாள் எம்பெருமானார்
வேதாந்தி-திருத்தி  பணி கொள்ள பட்டரை நியமிக்க -திரு நெடும் தாண்டக சாஸ்திரம் கொண்டு-
அனந்தாழ்வான்-திரு புத்தூர் -ஸ்ரீ ரெங்க பட்டணம் சமீபம் -பரிகரம் விட்டு -தேசாந்தி போல்
ததீயாரதனை-தீர்த்தம் சாதிக்கும் பொழுது பார்க்கலாம் அவரை நேராக -நின்றுகொண்டே இருக்க-
பிஷைக்காக வந்தேன்-தர்க்க பிஷை-ந அன்ன பிஷை-அவரோ நீர்-ஆம்-முன்பே கேள்வி பட்டதால்
அத்யயன உத்சவம் ஆரம்பம் என ஸ்ரீ ரெங்கம் வர- போனகார்யம் பற்றி-கேட்டு இதை கேட்க ஆசை கொண்டு
பட்டர் சந்ததிகள் அரையரிடம் -ஆரம்பம்-கொண்டாட்டம் ஆரம்பம்-அபிநயம்- வியாக்யானம்
மாலை 6 மணிக்கு ஆரம்பம் 2 மணி நேரம் ஆகும்
ஆழ்வார் திரு மங்கை ஆழ்வார் ஆகிறார்
விஷயந்தரங்களில் மண்டி- சாஸ்திரம் கொண்டு திருத்த ஒண்ணாது
அழகாய் காட்டி கொடுக்க
உன் சேவடி அன்று நயவேன்-
சம்பந்த ஞானம் பூர்வமாக -திரு மந்த்ரம்- அர்த்தம்-எல்லை நிலம் திரு பத்தி காட்டி
இவையே பிரப்யம் பிராபகம் போக்கியம்
அனுபவிக்க புகுந்து நான் கண்டு கொண்டேன் நாராயண எனும் நாமம் ஒன்பது கால் சொல்லி
தான் உகந்து அருளியநிலமே பிரப்யம் என்று மண்டி இருந்தார்
சாகரம் சோஷம் இஷ்யாமி-போல் மடல் எடுத்து
முகம் காட்டி இவரை தரிப்பிக்க
அவா அற்று வீடு பெற்ற வழியை தெரிவிக்கிறது திரு நெடும் தாண்டகம் பிர பந்தம்
மின்னுருவாய்-எந்தை தளிர் புரையும் திரு அடிகள் என் தலை மீதே
இதை பாட i மணி  ஆகும்-இசை கூட்டி –
மை வண்ண -அவரை தேவர் என்று அஞ்சினோம்
கடல் வண்ணர் இது செய்தார் காப்பார் யாரே
பரதன் சித்ர கூடம்–கண்டவாறே மயங்கி-வியாதி உண்டானது போல் பேசினது
அது போல் இங்கும் கட்டுவிச்சி-எங்கும் திரிந்து –யார் இங்கு அழைத்தது
குடந்தை -பேர் அன்பில்-கிடந்தது யெங்கும் திரிந்து யார் இங்கு அழைத்தது
நண்ணுவேன் நம் பெருமாளையே -பழையதோர் கலை கொண்டு வா –குறி பார்த்து
என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டே புனல் அரங்கம் ஊர் என்று போயினாரேவெண்ணெய் விழுங்கி – வெறும் கலத்தை அதன் ஓசை கேட்க்கும் –யசோதை நங்காய் உன் மகனை கூவாய்

வருக வருக நம்பி –காகுத்த நம்பி வருக இங்கே –பரிபவம் பேச தரிகி கில்லேன் பாவியேனுக்கு இங்கே போதராயே
வாழ ஒட்டான் மது சூதனனே
கோவிந்தன் தன அடியார்கள் ஆகி எண் திசையும் விளக்காக்கி இருப்பார்
கோவில் திரு மொழி என்பர் பெரி ஆழ்வார் திரு மொழி
ஆற்றில் இருந்து விளையாடு வோங்களை—இன்று முற்றும்
உச்சியுள் நின்றானே இன்று முற்றும்
ஆநிரை காத்தனாய் இன்று முற்றும்
அங்கு ஆப்பு உண்டனாய் -அழுது உண்டு அழுதானே இன்று முற்றும்
கானத்து மேய்ந்து களித்து விளையாடி—தரணி இடந்தானாய் இன்று முற்றும்
இங்கு இவை வல்லவர்க்கு ஏதம் ஓன்று இல்லையே
சிக்கன வந்து பிறந்து–திரு மால் இரும் சோலை எந்தாய்
இனி போகல் ஒட்டேன்-உன் திரு ஆணை கண்டாய் நீ ஒருவருக்கும் மெய்யன் அல்லை
உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன் –உன் பொன்னடி வாழ்க என்று இன குறவர்
உன் பாத நிழல் அல்லால்-வேறு ஒன்றும் காண கில்லேன்-..எந்தாய்
உடல் சோர்ந்து நடுங்கி-நீள் சுனை சூழ்
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா
அக்கரை என்னும் அனர்த்த கடலுள் அழுந்தி-இக்கரை-சக்கரமும் தடக் கைகளும் கண்களும் பீத உடையும் –எந்தாய்
இனி உன்னை போகல் ஒட்டேன்–திரு மால் இரும் சோலை எந்தாய்
இன்று வந்து இங்கு உன்னை கண்டு கொண்டேன்-
நின்ற பிரான் அடி மேல் அடி–விண்ணப்பம் செய்–புதுவையர் கோன் விட்டு சித்தன்-உலகம் அளந்தான் தமரே
ஆழ்வார் பக்தர் பரவும் பெருமாள்
தெய்வ சிகா மணி பெருமாள்
மூன்றாம் நாள்-
சென்னி யோங்கு –நின் அருளே புரிந்து இருந்தேன்
வியாக்யானம் சேவிப்பார்கள்
ஏழாவது பாட்டு வரை
திரு பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்
திரு பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்
திரு பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்
ஆழ்வார் பரவும் பெருமாள்
பதின்மர் பாடும் பெருமாள்
தெய்வ சிகா மணி பெருமாள்
மரியாதை
அரையர் ஆழ்வார் ஸ்தானம் -ஸ்ரீ சடகோபன் சாதிப்பார்
அடுத்து மருப்பு  ஒசித்தாய் –தொடர்ந்து ஆரம்பிப்பார்கள்
திரு பாவை அடுத்து
ஆழ்வார் ஆச்சர்யர் மரியாதை
அந்த ஆழ்வாருக்கு தனி பட்ட மரியாதை
ஆண்டாள் ஸ்ரீ பெரும் பூதூர் மட்டும் எழுந்து அருளி அலங்கரிப்பாள்
பெரி ஆழ்வாருக்கு -மரியாதையை
திரு பாவை ஜீயர்-எம்பெரும்மானருக்கு -உகந்து சாத்துவார்கள் ஸ்ரீ ரெங்கத்தில்
கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்டி -பாடி சேவிப்பார்கள்
வாட்டம் தணிய வீசீரே
பரமன் வலைப் பட்டு இருந்தேனை–கோலால் நிரை மேய்த்து —
கஞ்சை காய்ந்த  கரு வில்லி
கஞ்சை காய்ந்த  கரு வில்லி
கஞ்சை காய்ந்த  கரு வில்லி
கோவில் வாழும் நம் பெருமாள் தெய்வ சிகா மணி பெருமாள்
கஞ்சை காய்ந்த  கரு வில்லி
கஞ்சை காய்ந்த  கரு வில்லி
கஞ்சை காய்ந்த  கரு வில்லி ‘
நம் பெருமாள் கம்ச வதம் கதை சொல்வார்கள்
பூதனை -கூனி -மல்லர் வதம்
கஞ்சன் குஞ்சி பிடித்து
2 -4 வரை மாலைநடக்கும்
கஞ்சை காய்ந்த  கரு வில்லி ‘கடைக் கண் என்னும் சிறைக் கோலால்
நெஞ்சு ஊடுருவ வே யுண்டு  நிலையம் தளர்ந்து நைவேனை
அஞ்சேல் என்னாவான் ஒருவன் அவன் மார்பு அணிந்த வன மாலை
வஞ்சியாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே
நாட்டை படை என்று –வேட்டை ஆடி வருவானை விருந்தா வனத்தே கண்டோமே
பருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னை — பிரான் அடிக் கீழ் பிரியாது என்றும் இருப்பாரே
ஆழ்வார்கள் இறைஞ்சும் பெருமாள்
மகிழ்ந்து ஏத்தும் பெருமாள்
காரி மாறன் அனு தினம் ஏத்தும் பெருமாள்
பூ மாலை சூடியே பொங்கும் பெருமாள்
பூ  கொண்டு போற்றும் பெருமாள்
வாள் கலியன் வாய் கொண்டு வாழ்த்தும் பெருமாள்
ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி-
பெரிய திரு அத்யயன உத்சவம்
திரு வாய் மொழி இரவு ஒரு நூறு
ஸ்ரிய பதியாய் அவாப்த சமஸ்த காமனாய் ..தொடங்கி–
இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே-கரை மரம் சேரும் ஏதோ என்று சிந்தித்து
தான் திரு அவதாரம் செய்த இடத்திலும் –
மூட-ஜன்ம கர்மா -பெறற்கு அறிய
சஜாதீயர் கொண்டு திருத்த
ஆவாரார் என்று nal திசையும் திரு கண் விட
தெற்கு திசை ஆக்கையில் உழன்று
எங்கும் பக்க நோக்கு அறியா -நம் மேல் ஒருங்கே புரள வைத்தார்

நாயினேன்-தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலை சொல்லும் படி ஆ முதல்வன்
உலகம் உய்ய நான் உய்ய நீயும் உய்ய -நெருஞ்சி காட்டை பிருந்தாவனம் -ஆக்கிய கண்ண பிரான்- ஊரும் நாடும் உலகமும் தன்னை போல் ஆக்கி -பயன் நன்றாகிலும் திருத்தி பணி கொள்வான் ஆழ்வாரை நியமித்து
பத்து பத்திலும் பத்து குணம் காட்டி–காரணத்வம் தொடங்கி ஆர்த்தி ஹரத்வம் வரை -அருளி-
அவா அற்று வீடு பெற்றார்
உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன் –தொழுது எழு என் மனனே –
உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன் –தொழுது எழு என் மனனே –
வள எழ உலகம் –கள்வா என்பேன் -எந்தாய் என்பான் நினைந்து நைந்தே
செல்வா நாரணன் சொல் கேட்டலும்-
நம்பியை -அச் செம் போனே திகழும் திரு மூர்த்தியை –என் சொல்லி மறப்பனோ-
மறப்பனோ என் நன் என் மணியை
மணியை-தென் குரு கூர் சட கோபன் சொல்-கல்வி வாயுமே
ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் பரவும் தம்பிரான்
இரண்டாம் நாள்
வேதாந்தத்தில் -காரணம் -தேயதா-காரணமே தியானிக்க
ஜகத் காரண வஸ்து ஏது என்ன-
ஏதோ வயஸ்து-பிரம வாக்கியம்-சாமான்யம்- விசேஷம் அபெஷித்து
சதேவ -ஏக மேவ-சத் -சப்தமும் சாமான்ய வாசகம் விசேஷம்
மேலே சென்றவாறே எகோகை நாராயண ஆஸீத் ந பிரம்மா -நாராயணனே ஜகத் காரணன் தலை கட்ட
திரி வித உபபாதன   சக காரி நிமித்த காரணம் –
 தான் ஓர் வேர் முதல் தனி வித்தாய்
வித்தாய் -நிமித்த
தனி வித்தாய் -சக காரி
தான் ஓர் வேர் முதல் தனி வித்து-தானே
இரண்டாம் பத்தில் அதி முதல் அந்தம் அருளி
எப் பொருளுக்கும் ஆதியம் சோதிக்கே முதலில்
பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் புகழ் மேல்
காரணத்வம் உப க்ரமித்து உப சம்கரித்து
முதலிகள் நிர்வகிப்பது ‘
நீயும் திரு மாலால் நெஞ்சம் கொள் படையே
அந்தாமத்து  அன்பு —
கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வேதம் முன் விரித்தான் விரும்பிய கோவில்
பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் புகழ் மேல்-தாள் அணிவிக்கும் முடித்தே
ஆழ்வார்கள் பரவும் பெருமாள்
துதிக்கும் பெருமாள்
பதின்மர் பாடும் பெருமாள் நம் தெய்வ சிகா மணி பெருமாள்
மூன்றம் நாள்
மருளில் வன் குரு கோர் சடகோபன்
அனுதயம்/சம்சயம்/விபரீதம்
மருள் இல்லாமை-சங்கை
அனுதயம் -ஞானம் அடியோடு இன்றி
சங்கை- நிச்சயம் இன்றி -சம்சயம்
விபரியம்-விபரீதம் -வித்பத்தி- பிறவா இன்றி இருக்கை
-ஆத்மா உபாயம் உபயம் விஷயம் மறந்து -விஸ்மயம்
மயர்வற மதி நலம் அருளி- இந்த நான்கும் இன்றி-
பிரமாத -வாய் தவறி-பேசுவது கவனிப்பு இன்றி-
விப்ரவித்த-ஏமாற்றுவது-
இவை இன்றி அனுக்ரகம் அருளினார்
மருளில்-சங்கை உண்டானது ஆழ்வாருக்கு
முடி சோதியாய் -உனது முக சோதி மலர்ந்ததுவோ
–கட்டுரையே
ஆழ்வாருக்கு இதில் சங்கை-திரு மால் இரும் சோலை பெருமாளை கேட்கிறார்
கிரீடம்-அன்று- திரு முக மண்டல தேஜஸ் தான் -அது தானா -அனுபவ ரூபமான சங்கை -கர்மத்தால் இல்லை
கிரீட சூட  ரத்ன ராசி .ஆதி ராஜ்ய ஜல்பித-முகேந்த காந்தி -பட்டர்
மாயா எனக்கு உரை யாய் — மறை நான்கின் உளாயோ திரு புலியூர் உளாயோ —-மனதுளாயோ-போல்
ஆசன பத்மம்-இல்லை திரு அடி தேஜஸ் தான் கீழே பரவி-
திரு அரை -பீதாம்பரம் தேஜஸ் -பட்டர் இதையும்
திரு மாலே கட்டுரையே
மழுங்காத –தொழும் காதல் களிறு அளிப்பான் –உன் சுடர் சோதி மறையாதே –
ஒழிவில் காலம் –தந்தைக்கே
ஈசன் வானவர்க்கு என்பன்-என்றல் அது தேசமோ திரு வேம்கடத்தானுக்கு
 -கானமும் வேடும் உடை வேம்கடம்-
நீசனேன் நிறை ஒன்றும் இலேன்- என் கண் பாசம் வைத்த பரம் சுடர் சோதிக்கே –
கல்லும் கனை கடலும்  வைகுண்ட மா நாடும்
-புல் என்று ஒழிந்தன-கொல் ஏ பாவம்
நிறம் கரியான்
..உள் புகுந்து நீங்கான் அடியேன் உள்ளத்து அகம்
கேடில் விழுப் புகழ்–வீடும் பெறுத்தி தன் மூ வுலகுக்கும் தரும் ஒரு நாயகமே
நான்காம் நாள்
ஒன்றும் தேவும் அவதாரகை சேவிப்பார்கள்
கோவில் திருவாய் மொழி-வியாக்யானம் பரத்வம் நிர்ணயம்
உயர்வற திண்ணன் வீடு  அணைவது அரவு ஆணைமேல்
ஒன்றும் தேவு நான்கும்
உயர்வற-பரத்தே பரத்வம்-வேத பிரகிரீயை – உளன் சுடர் மிகு சுருதியுள்-
திண்ணன் வீடுதிரு அவதாரத்தில் பரத்வம்- விபவம்–இதி காச பிரக்ரீயை
அணைவது அரவு ஆணைமேல் –மோட்ஷ பிரத்வ ரூபமான பரத்வம்-
உபநிஷத் -சிருஷ்டி சதி சம்காரம் மூன்றையும் -சொல்லி தனி பட மோட்ஷ பிரதானம் நான்காவது கிரியை
வீடாம் தெளிவர நிலைமையன்
ஒன்றும் தேவும் –அர்ச்சை-பரத்வம்

ஐந்தாம் நாள் இரப் பத்து
கையார் சக்கரம்-பிறந்த வாரும் வரை
நாலாம் பத்தில்-வேரி மாறாத பூ  மேல் இருப்பாள் வினை தீர்க்குமே
நலம் அந்தம் இல்ல தோர் நாட்டில் புக- ஒண் தொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப -சேர்த்தியிலே ஈடு பட்டு சேர்த்தி அழகை சம்சாரிகளும் அனுபவிக்க -பரத்வம் அறியாமை -ஒன்றும் தேவும்-பரத்வம் மூதலித்தார்
திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்
பொலிக தேவர் குழம்களுக்கு காப்பு இடுகிறார் –எம்பெருமானார் நிர்வாகம்
திரு மாலை ஆண்டான் -ஸ்ரீ வைஷ்ணவர் காண வந்த  ஸ்ரீ வைகுண்ட வாசிகளை
ஸ்வேதா தேப வாசிகளையும்  பல்லாண்டு பாடுகிறார்
கருணை எல்லை நிலம் அர்ச்சை
கலி இன்றி-தர்மம் கழிந்து பெரிய கருத யுகம் வந்தது பேசி மகிழ்கிறார்
கடல் வண்ணன் பூதங்கள் மலிய புகுந்து இசை பாடி ஆடி
கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
மாதவன் பூதங்கள் பரந்து திரிகின்றனவே
கடல் வண்ணன் பூதங்கள்–எங்கும் இடம் கொண்டனவே
நாங்கள் கோல திரு குரும் குடி நம்பியை நம் கண்ட -சென்றது என் நெஞ்சமே
கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்-
கொள் என்று கிளர்ந்து எழுந்த செல்வம் நெருப்பாக -தனம் வெறுத்தார்
 உலகில் ஏந்து பலன்- பெரும் செல்வத்தராய் திரு மால் அடியார்களை பூசிக்க நோற்றர்களே –
இங்கு பலன் சொல்கிறார் தனம் உபாதேயம்-பகவத் பாகவத
நண்ணா அசுரர் நலிவு எய்த- அசுரர் தொலைய நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
நல்ல அமரர் பொலிவு எய்த-சமன்வயம்-
அவயபதேசனுக்கு  அனந்தரத்தில் அவன் பிள்ளை   வார்த்தை ஸ்மர்ப்பிதது
பெயர் இது சொல்ல தகாத கிருமி கண்ட சோழன் பிள்ளை-சொன்ன வார்த்தை-
ஸ்ரீ ராமாயணமும் திரு வாய் மொழியும் இருக்கும் வரை கோவில்களை இடித்து என் ஆகும்
எம்பெருமானை காப்பது இவைதான் கோவில்கள் இல்லை
-இதை தான் நண்ணா அசுரர் நலிவு செய்த -நல் முனிவர் இன்பம் தலை சிறப்ப என்கிறார்
தனம் உபாதேயம்-அறம் செய்ய பொருள்–கண்ணனுக்கே ஆம் அது காமம் -அமுதனார் –
மோஷத்துக்கு காமம் வேண்டும்-
தெப்ப உத்சவம் மாசி மதம்-கொள் என்று -நெருப்பாக -நீராக -போட்டீர் தண்ணீரில் போட்டாரம்
தனம் படைத்தாரும் அல்லேன்-தவத்துளார் தம்மில் அல்லேன்-தொண்டர் ஆடி பொடி-
திரு மங்கை ஆழ்வார் தனம் கொண்டு-மணி மண்டபம்-பிரகாரம் பரகால கவி-கோபுரம் அனைத்தும் கைங்கர்யம்-
பட்டார் ஸ்ரீ சுக்தி இன்றும் பறை சாற்றி கொண்டு இருக்கும் திரு மங்கை ஆழ்வாரின் கைங்கர்யத்தை

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading