ஸ்ரீரங்கம்
மூலவர் ஸ்ரீ ரங்கநாதன், ஸ்ரீ பெரிய பெருமாள், ஸ்ரீ அழகிய மணவாளன்
கோலம் சயனம்
திருமுக மண்டலம் தெற்கு
உற்சவர் ஸ்ரீ நம் பெருமாள்
தாயார் ஸ்ரீ ரங்கநாயகி-ஸ்ரீ பெரிய பிராட்டியார் =
தீர்த்தம் ஸ்ரீ சந்திரபுஷ்கரணி
விமானம் ஸ்ரீ ப்ராணாவாக்ருதி விமானம்
நாமாவளி ஸ்ரீ ரங்க நாயகீ-ஸ்ரீ பெரிய பிராட்டியார் – ஸமேத ஸ்ரீ ரங்க நாதாய நமஹ
காவேரி விராஜா சேயம் வைகுண்டம் ரெங்க மந்திரம்
ஸ வாஸூதேவோ ரங்கேஸே ப்ரத்யக்ஷம் பரமம் பதம்–
விமாநம் ப்ரணவாகாரம் வேத ஸ்ருங்கம் மஹாத்புவம்
ஸ்ரீரெங்கசாயீ பகவான் ப்ரணவார்த்த ப்ரகாஸஹா-—–
அம்பச்யாபரே புவனச்ய மத்யே நாகச்ய ப்ருஷ்டே மஹதோ மஹீயான் சுக்ரேண ஜ்யோதீம்ஷி
ஸ மனுப்ரவிஷ்ட பிரஜாபதி சரதி கர்பே அந்த ….வேத வாக்யம்..
விண் மீது இருப்பாய் மலை மேல் நிற்ப்பாய் கடல் சேர்ப்பாய் மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் ….பிரபந்தம்..–ஏவம் பஞ்ச பிரகாரோகம்..அவன் வாக்கியம் .
பகல் ஓலக்கம் இருந்து கருப்பு உடுத்து சோதித்து காரியம் மந்திரித்து வேட்டை ஆடி ஆராமங்களிலே விளையாடும் ராஜ நீதி ..ஆசார்ய ஹ்ருதயம்..
பரம் வ்யூகம் விபவம் ஹார்த்தம் அர்ச்சை ..இவை ஐந்தையும் இப்படி சொல்லும் ..
நீர்மைக்கு எல்லை அர்ச்சை ….
இதம் பூர்ணம் அத பூர்ணம் பூர்ணாத் பூர்ணம் உத்ரிச்யதே பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய பூர்ணமேவ அவசிஷ்யதே சர்வம் பூர்ணம் சகோம்….
ஆஸ்ரித காரிய ஆபாத குணங்கள் — ஞான சக்தி பிராப்த்தி பூர்த்திகளும், ஆச்ரயண சௌகர்ய ஆபாதாக குணங்கள்–
வாத்சல்ய ஸ்வாமித்வ சௌசீல்ய சௌலபாதிகளும்.. புஷ்கலங்கள் ..
ஆராமம் சூழ்ந்த அரங்கம் வேர்பற்றான திவ்ய தேசம் ..
அதனால் ஸ்ரீமந் ஸ்ரீ ரெங்க ச்ரியம் அனுபத்ரவாம் அனுதினம் சம்வர்தய என்று நித்யம் பிரார்த்திக்கிறோம்
வேரில் நீரிட்டால் செடி வாழுமா போல..
வள்ளல் மால் இரும் சோலை மணாளனார் பள்ளி கொள்ளும் இடம் ஸ்ரீ ரெங்கம் என்று
சகல திவ்ய தேச பெருமாளும் பள்ளி கொள்ளும் இடம் இதுவே
பதின்மர் பாடும் பெருமாளும் இவனே
திரு வேம்கடமுடையான் இரு மருங்கிலும் பால் கொடுத்து இரட்டை குழந்தைகளை ரஷிக்கும் மாத்ரு போல்வான் .
கோயில் திரு மலை பெருமாள் கோயில் –மூன்றையுமே திரு விருத்தத்தில் நம் ஆழ்வார் மங்களா சாசனம் செய்வதால் –
திருக்கமலபாதம்’ என்பதை மூன்றாகப் பிரிக்கின்றார்.
1. திருப் பாதம்: ‘துயரறு சுடரடி” இது துயர் போக்கும் பேரருளாளன் காஞ்சி வரதனைக் குறிக்கும்.
2. கமலப் பாதம்: ”பூவார் கழல்கள்” – புஷ்பம் போல் தரிசித்த மாத்திரத்தில் மனதிற்கு ஹிதத்தைத் தரக்கூடிய
திருவேங்கடமுடையானுடைய கமலப்பாதம்.
3. திருக்கமலப்பாதம்: ”பொது நின்ன பொன்னங்கழல்’
சமஸ்த லோகத்திற்கும், அனைவரையும் உஜ்ஜீவிக்கச் செய்யக் கூடியதான, எல்லாருக்கும் பொதுவான பாதங்கள்.
இது ஸ்ரீரெங்கநாதனுடையது!
காமகோஷ்ணீம் புரீம் காஞ்சீம் காவேரீம் ச ஸரித்வராம்
ஸ்ரீரங்காக்யம் மஹாபுண்யம் யத்ர ஸந்நிஹிகோ ஹரி:–ஸ்ரீமத் பாகவதம் (ஸ்கந்தம் 10: அத்யாயம் 79: ச்லோகம் 14)
(பலராமன்) காமகோடி எனப்படும் புண்ணிய நகரான காஞ்சீபுரத்தையும், நதிகளில் சிறந்த காவேரியையும்,
எங்கு ஸ்ரீஹரி மிகவும் ஸாந்நித்யமாக உள்ளானோ அந்த மஹாபுண்ய க்ஷேத்ரமான ஸ்ரீரங்கத்தையும் அடைந்தார்.
ஸ்ரீ ரெங்க மந்த்ரம்–
ஸப்த ப்ராகார மத்யே ஸரஸிஜ முகுளோத்பா ஸமானே விமானே
காவேரீ மத்ய தேசே ம்ருது தர பணீராட் போக பர்யங்க பாகே |
நித்ரா முத்ராபி ராமம் கடி நிகட சிரஸ்:பார்ஸ்வ விந்யஸ்த ஹஸ்தம்
பத்மாதாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கராஜம் பஜேஹம் ||-ஸ்ரீரங்கநாத ஸ்தோத்ரம்–01
ஏழு ப்ராகாரங்களின் (மதிள்கள்) நடுவில் தாமரை மொட்டுப் போல-விளங்குகின்ற விமானத்தில், திருக் காவிரியின் நடுவில், மிக மென்மை படைத்த திருவநந்தாழ்வானாகிற கட்டிலிலே (அரவணையில்) உறங்குவது போன்ற குறிப்பினால் அழகானவரும் இடுப்பிலும் சிரஸ்ஸின் அருகிலும் கைகளை வைத்திருப்பவரும் மலர் மகளாலும், நிலமகளாலும் கைகளால் அடி வருடப் படுகின்றவருமான ஸ்ரீரங்கநானைத் தியானிப்போம்..!
திருவரங்கனும் மா முனிகளும் —
திருவரங்க சோலை –
வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீதணவும் சோலை குயிலினம் கூவும் சோலை -திரு மாலை -14
வண்டு -மயில் -மேகம் குயில் பதங்கள் மா முனியையும் -அரங்கனையும்
குறிப்பனவாக அமைந்து உள்ளன –
வண்டினம் முரலும் சோலை-
1-நம் ஆழ்வார் எம்பெருமானை -வண்டாக –தூயிவம் புள்ளுடைத் தெய்வ வண்டு -என்று அருளுகிறார் –
2-மலர்கள் வண்டுகளின் வரவை எதிர்பார்த்து வாசனையை தினம் தோறும் வீசி நிற்கும்
அது போலே ஆழ்வாரும் ஆர்வுற்று இருக்க -அவரினும் முன்னம் பாரித்து தான் அவரை முற்றப் பருகினான் –
3-ஆறு கால்கள் கொண்ட வண்டு -ஷட் பதம் –பகவான் இடத்தில் பக -சப்தம் ஆறு கல்யாண குணங்களைக் குறிக்கும்
ஞானம் -பலம் -ஐஸ்வர்யம் -வீர்யம் -சக்தி -தேஜஸ்
4- லஷ்மீ கல்பல தோத்துங்க ஸ்தனச்தப கசஞ்சல
ஸ்ரீ ரெங்கராஜ ப்ருங்கோ மே ரமதாம் மாந சாம்புஜே — ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம் 1-10-
திருமகளாம் கற்பகக் கொடியின் வாராளும் இளம் கொங்கையாம் பூம் கொத்தில்
சுழன்று வரும் அணி அரங்கன் என்னும் மணி வண்டு அடியேன் உள்ளக் கமலத்து
அமர்ந்து களித்திடுக
மா முனிகள் -வண்டு –
வண்டுகளை வட மொழியில் –த்விரேப -அதாவது இரண்டு ர எழுத்துக்களை தன பெயரில்
கொண்டுள்ளது -ப்ரமர -என்பது -இது போல் வர வர முனி என்ற பெயரிலும் இரண்டு ரே பம் உள்ளது –
பிரதிவாதி பயங்கரம் அண்ணாவின் வர வர முனி சதகம் –
ராமாநுஜார்ய சரணாம் புஜ சஞ்சரீகம்
ரம்யோ பயந்த்ருயமிநம் சரணம் ப்ரபத்யே — 1- எம்பெருமானார் திருவடித் தாமரைகளில் வண்டு -என்றும் –
மஹ தாஹ்வய பாத பத்மயோ
மஹது த்தம் சித யோர் மது வரதம் — 43- -பேயாழ்வார் திருவடித் தாமரைகளில் வண்டு -என்றும் சடா ராதி ஸ்ரீ மத் வத ந சரஸீ ஜாதமிஹரே
ததீய ஸ்ரீ பாதாம்புஜ மதுகர தஸ்ய வசஸாம் – 53- நம் ஆழ்வார் திருவடித் தாமரைகளில் படிந்த வண்டு என்றும் –
தமநுதி நம் யதீந்த்ர பத பங்கஜப் ருங்க வரம்
வர முனி மாஸ்ரயாஸய விஹாய தத் அந்ய ருசிம் -85 -எம்பெருமானார் திருவடித் தாமரைகளில்
படிந்த வண்டாகிய மா முனிகளை -நெஞ்சே ஆஸ்ரயி -என்று அருளிச் செய்து இருப்பது
நோக்கத் தக்கது
ஆச்சார்ய ஹிருதயம் -சூரணை -152-
என் பெறுதி என்ன ப்ரமியாதி உள்ளத்து ஊறிய மது வ்ரதமாய் தூமது வாய்கள் கொண்டு
குழல்வாய் வகுளத்தின் ஸாரம் கிரஹித்து –
வண்டுகள் வகுளம் முதலிய சாரமாம் தேனைப் பருகுதல் இயல்பே –
மா முனிகளும் வகுளாபரணர் சொல் மாலைகள் சாரம் கிரஹித்து -திருவாய் மொழி நூற்றந்தாதி -அருளி –
மன்னிய சீர் மாறன் கலை உணவாகப் பெற்றோம் -என்று தாமே அருளி செய்துள்ளாரே -மயிலினம் ஆலும் சோலை –
ப்ரலய சமய ஸூ ப்தம் ஸ்வம் சரீரை கதேசம்
வரத சித சிதாக்யம் ச்வேச்சயா விச்த் ரு ணா ந
கசிதமிவ கலாபம் சித்ர மாதத்ய தூந்வன்
அநு சிகிநி ஸி கீவ க்ரீடசி ஸ்ரீ ஸ மஷம் –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் – 2-44-
பேரருளா -தோகை விரிக்கின்ற பொறியார் மஞ்சை பேடை மயில் முன் -அணி மா நடம் பயின்று
ஆடுவது போலே -ஊழி காலத்து உறக்கம் கொண்டவை போல் நின் திரு உடம்பில் ஒரு கூறாய்
ஒன்றி நின்ற -அனைத்தையும் மழுங்காத ஞானத்தினால் -பல்வகை பெரு விறல் உலகமாய்ப் பரப்பி
திருமடந்தை முன்பே நீ விளையாடுதீ –
மயில் தன் உடலில் அடங்கிய கலாபத்தை விரிப்பது போன்று –மா முனிகளும் தமது திரு உள்ளத்தில்
கிடந்த கலைகளை வியாக்யானம் அருளும் பொழுது விரித்து சிறந்தனர் –
மயில்கள் ஆலித்தல் அழைத்தல் போன்று மா முனிகளும் முகில் வண்ணனைக் கண்ணாரக் கண்டு
கொண்டு ஆட்டமேவி அலந்து அழைத்து அயர்வெய்திய மெய்யடியார் யாவார் –
கொண்டல் மீதணவும் சோலை –
சிஞ்சேதி மஞ்ச ஜனம் இந்தி ரயா தடித்வான்
பூஷா மணித் யுதிபி ரிந்த்ரத நுர்த தா ந
ஸ்ரீ ரெங்க தாமனி தயாரதச நிர்பரத்வாத்
அத்ரவ் சயாலுரிவ ஸீ தல காள மேக –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் – 1-82-
பூ மன்னு மாது என்னும் மின்னில் பொலிவதாய் –
இழை பலவற்றில் பதித்த பன் மணிகளின் ஒளி யாகிற ககன வில் ஓன்று ஏந்தியதாய் –
நல்லருள் என்னும் நீர் நிரம்ப பெற்றமையால் –
திருவரங்க பெரு நகருள் வரை மேல் –
அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை யணையை மேவி –
பள்ளி கொள்ளுவதான குளிர்ந்து உறைகின்ற
கார்முகில் அடியேனை யும் நனைத்து அருளுக –
இதனை அடி யொற்றி திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
காவிரிவாய்ப் பாம்பணை மேல் கரு முகில் போல் கண் வளரும் கருணை வள்ளல்
பூ விரியும் துழாய் யரங்கர் பொன்னடியே தஞ்சமென பொருந்தி வாழ்வார்
யாவரினும் இழி குலத்தோர் ஆனாலும் அவர் கண்டீர் இமையா நாட்டத்
தேவரினும் முனிவரினும் சிவன் அயன் என்ற இருவரினும் சீரியரே -திருவரங்க கலம்பகம் – 100-
குயிலினம் கூவும் சோலை –
கயல் துளு காவிரி சூழ் அரங்கனை குயில் என்றது நிற ஒற்றுமை ஒன்றினால் அன்று –
குயிலுக்கு வட மொழியில் –வநபிரிய -என்று பெயர் உண்டு –
சோலையில் விருப்புடையது -என்று இதற்குப் பொருள் –
அரங்கனும் வனப் பிரியனே -ஆராமம் சூழ்ந்த அரங்கத்தில் இருப்பதால் –
குயில் மா மரம் ஏறி மிழற்றும் இயல்பு உடைத்தாதலின் -மா -வின் இடத்தில் இதற்கு பெரிய
விருப்பு உணரப்படும்-அரங்கனோ எனில் –அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும்
நிற்கும் அம்மான் -என்றபடியே -மா -திரு மா மகள் இடம் பேரன்பு உடையவன்
குயில் பஞ்சம ஸ்வரத்தில் இனிமையாக பாட வல்லது
பாரத பஞ்சமோ வேத-என்று மகா பாரதம் புகழ் பெற்றது போலே
ஐந்தாம் மறை என்னும்படியான ஸ்ரீ ஸூத்திகளை அருளிச் செய்த மா முனிகள் குயிலினை ஒப்பார் –
மேலும் -ஸ்வை ராலாபை ஸூ லபயசி தத் பஞ்சமோபாய தத்தவம் -வரவர முனி சதகம் – 11
எறும்பி அப்பா அருளியது போல் -பஞ்சமோபாயத்தை உணர்த்தி அருளியவர் –
குயில் பரப்ருதம் -மா முனிகளும் பராபிமானத்தில் -எம்பெருமானார் அபிமானத்தில் ஒதுங்கியவர்
இதம் ஹி ரெங்கம் -ஆதி சங்கரர் -இங்கே பிறந்தால் வேறு பிறவி இல்லை
ராஜ தானி -எல்லா ஆச்சார்யர்களும் வாழ்ந்து கைங்கர்யம் செய்த திய்வய தேசம்
54 சந்நிதிகள் -நடை அழகு –கஜ சிம்ம புலி ஏறு சர்ப்பம் -1323 -1378 -வெளியே சென்று -திருமலையிலே ஸ்ரீ ரெங்க மண்டபம் –
பங்குனி உத்தரம் சேர்த்தி -சேர குல வாலி சேர்த்தி -ஸ்ரீ ராம நவமி -உறையூர் சேர்த்தி -மூன்றும் உண்டே –
ரங்கவிமான ரகஸியம்
ரங்க விமானம்-மூலஸ்தானம், ரங்க விமானம் எல்லாம் தர்மவர்மா என்ற கிளிச்சோழன் கட்டியதே!-திருமங்கை மன்னன் நாகப்பட்டிணம் தங்க புத்த விக்ரஹத்தை உருக்கி வேய்ந்த பொன் விமானமே
இன்றும் காணப்படும் பொன் ரங்க விமானம்.
நான்கு வேதங்கள் நான்கு கலசங்கள் – தெற்கு – வடக்கில்
ஐந்து கலசங்கள் – ஐம்பூதங்கள் – கிழக்கு – மேற்காக
ஆய கலைகள் 64கும் தாமரை இதழ்களாகக் காட்டப்படுகின்றன.
மூலஸ்தானத்தின் வெளியே காயத்ரி மந்த்ரத்தை உணர்த்தும் வகையில் அதன் 24 சப்தங்களைக் கொண்ட 24 கற்றூண்கள் உள.
இதன் ஏழு மதில் சுற்றுக்களையும் ஏழு உலகங்கள் என்று கூறுவர்.
• மதில் சுற்றுகள் (ஏழு உலகங்கள்)
1.மாடங்கள் சூழ்ந்துள்ள திருச்சுற்று( பூலோகம்)
2.திரிவிக்ரம சோழன் திருச்சுற்று (புவர்லோகம்)
3.அகளங்கனென்னும் கிளிச்சோழன் திருச்சுற்று (ஸுவர்லோகம்)
4.திருமங்கை மன்னன் திருச்சுற்று (மஹர்லோகம்)
5.குலசேகரன் திருச்சுற்று (ஜநோலோகம்)
6.ராஜமகேந்திர சோழன் திருச்சுற்று (தபோலோகம்)
7.தர்ம வர்ம சோழன் திருச்சுற்று (ஸத்யலோகம்)
ஏழு திருமதில்களை அடைவதற்கு முன்னால் 8வது திருச்சுற்று ஒன்று
தற்போது ஏழு மதில்களை உள்ளடக்கியதாய் அடைய வளையப்பட்டுள்ளது.
ஸ்ரீ நம்பெருமாள் -பன்னிரு நாச்சிமார் பரவும் பெருமாள் –
1- ஸ்ரீ வக்ஷஸ்தல மஹா லஷ்மி
வெள்ளிக்கிழமை தோறும் ஏகாந்த பட்டர் திருமஞ்சனம் செய்ய கோயில் ஜீயர் பட்டருக்கு சாமரம் வீசுவார்
2-3- உபய நாச்சிமார்கள் -ஸ்ரீ தேவி பூ தேவி
ஸ்ரீ ரெங்கத்திலே மட்டும் உபய நாச்சியாரும் ஆண்டாளும் பன்னிரண்டு தாயார்களும் அமர்ந்த திருக்கோலம்
நின்று அனுபவிக்க முடியாத எழில் அழகர் அன்றோ நம்பெருமாள்-
4- கருவூல நாச்சியார்
பிரகாரத்தில் கோயில் கருவூலத்தை ஒட்டி இருக்கும் சந்நிதி கருவூலம்
ஆபரணங்கள் பாத்திரங்கள் கணக்கு வழக்குகளை ரக்ஷித்து அருளும் தாயார்
திருக்கார்த்திகை அன்று பக்கத்து வீடு உத்தம நம்பி பெரிய சந்நிதியில் இருந்து விளக்கு எடுத்துப் போய் இங்கும் ஏற்றப்படுகிறது
5-ஸ்ரீ சேர குல வல்லித்தாயார்
அர்ஜுனன் மண்டபத்தில் -பகல் பத்து உத்சவ மண்டபத்தில் துலுக்க நாச்சியாருக்கு வலப்பக்கம் இருக்கும் சந்நிதி
ஸ்ரீ ராம நவமி அன்று திருக்கல்யாண உத்சவம் நடக்கும்
6- ஸ்ரீ துலுக்க நாச்சியார்
பின் சென்ற வல்லி நாட்டிய பெண்ணுடன் இசை நாட்டிய குழுவாக 60 பேர் சுல்தான் இடம் சென்று மீட்டுப் போக
இளவரசி ஸ்ரீ ரெங்கம் சென்று நம்பெருமாளைக் காணாமல்
கோயில் மூடி இருப்பதைக் கண்டு
மயக்கம் அடைந்த இறக்க ஒளி மட்டும் கோயிலுக்கு உள்ளே சென்றதை பார்த்தார்கள்
முகமதியருக்கு உருவ வழிபாடு இல்லை என்பதால் சித்திரமாக மட்டும் வரைந்து துலுக்க நாச்சியாராக இன்றும் சேவிக்கலாம்
காலையில் லுங்கி போன்ற வஸ்திரமும் அணிவித்து வெள்ளம் கலந்த இனிப்பான ரொட்டி வெண்ணெய் அமுது செய்து அருளுகிறார்
திருமஞ்சனம் வெந்நீரிலே நம்பெருமாள் கண்டு அருள்கிறான்
இடையில் 4 அல்லாது 5 தடவை கைலி மாற்றமும் உண்டு
பகல் பத்து உத்ஸவ படி ஏற்ற சேவை இந்த துலுக்க நாச்சியார் சந்நிதி முன்பே நடக்கும் –
இந்த படி ஏற்ற சேவையைக் காண கண் கோடி வேண்டும்
7- ஸ்ரீ செங்கமல வல்லித் தாயார் -ஸ்ரீ தான்ய லஷ்மி –
தான்யம் கோயில் மாடு
8- ஸ்ரீ பெரிய பிராட்டியார்
பங்குனி உத்தர சேர்த்தி உத்சவம்
9- ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி
பெரியாழ்வார் நாச்சியாரை கூட்டிக் கொண்டு வந்து தங்கிய இடம்
காவேரிக் கரையாகவே அப்போது இருந்தது
வெளி ஆண்டாள் சந்நிதி
திருட்டு பயம் காரணமாக உத்சவர் மட்டும் உள்ளே இருக்கும் ராமர் சந்நிதிக்கு மாற்ற அதுவே உள் ஆண்டாள் சந்நிதி
10- ஸ்ரீ உறையூர் கமலவல்லி நாச்சியார்
வாசவல்லித் தாயார் -செங்கமல வல்லித்தாயார் -நந்த சோழன் திருமகள் –
பங்குனி உத்சவம் ஆறாம் நாள் சேர்த்தி உத்சவம் பிரசித்தம்
தீ வட்டிகள் தலை கீழாக வைத்து தொலைத்த ஒன்றை தேடுவதாக நடக்கும்
திரும்பும் பொழுது மாலை மாற்றல் வெளி ஆண்டாள் சந்நிதியில் நடக்கும்
11- ஸ்ரீ திருக் கவேரித் தாயார்
ஆடிப்பெருக்கு உத்சவம்
அம்மா மண்டபத்துக்கு எழுந்து அருளி சேவை
12- ஸ்ரீ பராங்குச நாயகித் தாயார்
மார்கழி ஏழாம் நாள் கங்குலும் பகலும்
கைத்தல சேவை ப்ரஸித்தம்
————
திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களும், வைத்த அஞ்சல் என்ற கையும், கவித்த முடியும்,-முகமும் முறுவலும், ஆஸநபத்மத்திலே யழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலையே நமக்கு தஞ்சம்” –(முமுஷுப்படி-142).
“ஆராத அருளமுதம் பொதிந்த கோவில்!
அம்புயத்தோன் அயோத்தி மன்னர்க்கு அளித்த கோவில்!
தோலாத தனிவீரன் தொழுத கோவில்!
துணையான வீடணற்குத் துணையாம் கோவில்!
சேராத பயனெல்லாம் சேர்க்கும் கோவில்!
செழுமறையின் முதலெழுத்துச் சேர்ந்த கோவில்!
தீராத வினை அனைத்தும் தீர்க்கும் கோவில்!
திருவரங்கம் எனத்திகழும் கோவில் தானே!
வன் பெரு வானகம் முதல் உய்ய இனிதாகத் திருக் கண்கள் வளர்கின்ற
திருவாளன் திருப்பதி
வடிவுடை கடலிடம் கட்கிலீ (காகுத்தா) என்னும் அவற்றில் இவள் திறத்து என் கொலோ என்பிக்கிற வியூஹ சௌஹார்தம் பிரதானம் —சூரணை-159-
(அவற்றில் -நான்கிலும் உள்ள நான்கு குணங்களுக்குள் -பல குணங்களுக்குள் ஸுவ்ஹார்த்தம் பிரதானம் என்றபடி
நாம் விழித்து இருக்கும் போதும் அவனை மறந்து உள்ளோம் -அவன் உறங்குவான் போலே யோகு செய்து
நம்மை உஜ்ஜீவிக்க விரகு காணும் ஸுவ் ஹார்த்தம் கொண்டவன் அன்றோ )
காவேரீ வர்த்ததாம் காலே காலே வர்ஷது வாஸவ:
ஸ்ரீரங்கநாதோ ஜயது ஸ்ரீரங்க ஸ்ரீஸ்ச வர்த்ததாம் -ஸ்ரீராமாயண பாராயணக்ரமம்-
திருக்காவேரியானது (பயிர்களுக்கு) வேண்டிய காலங்களில் பெருகட்டும். வேண்டிய காலங்களில்
இந்திரன் மழை பொழியட்டும். ஸ்ரீரங்கநாதன் வெற்றிபெற்று வாழட்டும். திருவரங்கச் செல்வம் வளரட்டும்!
———————————–
ஸ்ரீ பெரியாழ்வார் -35-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ ஆண்டாள் -10-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திரு மழிசைப் பிரான் -14-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -31-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -55-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் 10-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -73-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ நம்மாழ்வார் -12-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் 1-பாசுரம் மங்களாசாசனம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் 4-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பேயாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்
மொத்தம் –247–பாசுரங்கள் மங்களாசாசனம்
——————-
ஸ்ரீ பெரியாழ்வார் -35-பாசுரங்கள் மங்களாசாசனம்
கரு உடை மேகங்கள் கண்டால்* உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்*
சிரம்பற்றி முடியிடியக் கண் பிதுங்க* வாயலறத் தெழித்தான்கோயில்*
உரம்பெற்ற மலர்க்கமலம்* உலகளந்த சேவடிபோல் உயர்ந்துகாட்ட*
வரம்புற்ற கதிர்ச்செந்நெல்* தாள்சாய்த்துத் தலைவணக்கும் தண்ணரங்கமே–4-9-8-
உய்ய உலகு படைக்க வேண்டி யுந்தியில் தோற்றினாய் நான்முகனை
வைய மனிசரை பொய் என்று எண்ணி காலனையும் உடனே படைத்தாய்
ஐய இனி என்னைக் காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10-5-
ஸ்ரீ ஆண்டாள் -10-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -31-பாசுரங்கள் மங்களாசாசனம்
மாலை யுற்ற வரை பெரும் திரு மார்வனை மலர் கண்ணனை
மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே– 2-8-
எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தானாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன்
சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே 2-10–
ஸ்ரீ திரு மழிசைப் பிரான் -14-பாசுரங்கள் மங்களாசாசனம்
அரங்கனே! .தரங்கநீர்* கலங்க அன்று குன்றுசூழ்,*
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் -ஞாலத்
தொரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில்
அரு பொருளை யான் அறிந்தவாறு –3-
அவன் என்னை எய்தாமல் காப்பான் -அவன் என்ன
துள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே
வெள்ளத்து அரவணையின் மேல்—30-
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–36-
தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை -கேட்பார்க்கு
அரும் பொருளாய் நின்ற வரங்கனே உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்–60-
மற்றுமோர் தெய்வம் உண்டே* மதியிலா மானி டங்காள்,*
உற்றபோது அன்றி நீங்கள்* ஒருவன் என்று உணர மாட்டீர் ,*
அற்றம்மேல் ஒன்று அறியீர் * அவனல்லால் தெய்வ மில்லை,*
கற்றினம் மேய்த்த எந்தை* கழலிணை பணிமின் நீரே.--9-
பொய்யர்க்கே பொய்யனாகும், புட்கொடி உடைய கோமான்,
உய்யப்போம் உணர்வினார்கட்கு ஓருவன் என்று உணர்ந்த பின்னை,
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகனூர் அரங்கமன்றே. திருமாலை 15
கங்கையிற் புனித மாய* காவிரி நடுவு பாட்டு,*
பொங்குநீர் பரந்து பாயும்* பூம்பொழி லரங்கந் தன்னுள்,*
எங்கள்மா லிறைவ னீசன்* கிடந்ததோர் கிடக்கை கண்டும்,*
எங்ஙனம் மறந்து வாழ்கேன்* ஏழையே னேழை யேனே!–23-
வெள்ளநீர் பரந்து பாயும்* விரிபொழி லரங்கந் தன்னுள்,*
கள்ளனார் கிடந்த வாறும்* கமலநன் முகமும் கண்டு*
உள்ளமே! வலியைப் போலும்* ஒருவனென் றுணர மாட்டாய்,*
கள்ளமே காதல் செய்துன்* கள்ளத்தே கழிக்கின் றாயே!–24-
குளித்துமூன் றனலை யோம்பும்* குறிகொளந் தணமை தன்னை,*
ஒளித்திட்டே னென்க ணில்லை* நின்கணும் பத்த னல்லேன்,*
களிப்பதென் கொண்டு நம்பீ!* கடல்வண்ணா! கதறு கின்றேன்,*
அளித்தெனக் கருள்செய் கண்டாய்* அரங்கமா நகரு ளானே!–25-
போதெல்லாம் போது கொண்டுன்* பொன்னடி புனைய மாட்டேன்,*
தீதிலா மொழிகள் கொண்டுன்* திருக்குணம் செப்ப மாட்டேன்,*
காதலால் நெஞ்ச மன்பு* கலந்திலே னதுதன் னாலே,*
ஏதிலே னரங்கர்க்கு எல்லே!* எஞ்செய்வான் தோன்றி னேனே!–26-
குரங்குகள் மலையை தூக்கக்* குளித்துத்தாம் புரண்டிட் டோடி,*
தரங்கநீ ரடைக்க லுற்ற* சலமிலா அணிலம் போலேன்,*
மரங்கள்போல் வலிய நெஞ்சம்* வஞ்சனேன் நெஞ்சு தன்னால்,*
அரங்கனார்க் காட்செய் யாதே அளியத்தே* னயர்க்கின் றேனே!–27-
உம்பரா லறிய லாகா* ஒளியுளார் ஆனைக் காகி,*
செம்புலா லுண்டு வாழும்* முதலைமேல் சீறி வந்தார்,*
நம்பர மாய துண்டே?* நாய்களோம் சிறுமை யோரா,*
எம்பிராற் காட்செய் யாதே* எஞ்செய்வான் தோன்றி னேனே!–28-
ஊரிலேன் காணி யில்லை * உறவுமற் றொருவ ரில்லை,*
பாரில்நின் பாத மூலம்* பற்றிலேன் பரம மூர்த்தி,*
காரொளி வண்ண னே!(என்)* கண்ணனே! கதறு கின்றேன்,*
ஆருளர்க் களைக ணம்மா!* அரங்கமா நகரு ளானே!–29-
மனத்திலோர் தூய்மை யில்லை* வாயிலோ ரிஞ்சொ லில்லை,*
சினத்தினால் செற்றம் நோக்கித்* தீவிளி விளிவன் வாளா,*
புனத்துழாய் மாலை யானே!* பொன்னிசூழ் திருவ ரங்கா,*
எனக்கினிக் கதியென் சொல்லாய்* என்னையா ளுடைய கோவே!–30-
தவத்துளார் தம்மி லல்லேன்* தனம்படத் தாரி லல்லேன்,*
உவர்த்தநீர் போல* வென்றன் உற்றவர்க் கொன்று மல்லேன்,*
துவர்த்தசெவ் வாயி னார்க்கே* துவக்கறத் துரிச னானேன்,*
அவத்தமே பிறவி தந்தாய்* அரங்கமா நகரு ளானே!–31-
ஆர்த்துவண் டலம்பும் சோலை* அணிதிரு வரங்கந் தன்னுள்,*
கார்த்திர ளனைய மேனிக்* கண்ணனே! உன்னைக் காணும்,*
மார்க்கமொன் றறிய மாட்டா* மனிசரில் துரிச னாய,*
மூர்க்கனேன் வந்து நின்றேன்,* மூர்க்கனேன் மூர்க்க னேனே.–32-
மெய்யெலாம் போக விட்டு* விரிகுழ லாரில் பட்டு,*
பொய்யெலாம் பொதிந்து கொண்ட* போட்கனேன் வந்து நின்றேன்,*
ஐயனே!அரங்க னே!உன் அருளென்னு மாசை தன்னால்,*
பொய்யனேன் வந்து நின்றேன்* பொய்யனேன் பொய்ய னேனே.–33-
உள்ளத்தே யுறையும் மாலை* உள்ளுவா னுணர்வொன் றில்லா,*
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த்* தொண்டுக்கே கோலம் பூண்டேன்*<
உள்ளுவா ருள்ளிற் றெல்லாம்* உடனிருந் தறிதி யென்று,*
வெள்கிப்போ யென்னுள் ளேநான்* விலவறச் சிரித்திட் டேனே!–34-
தாவியன் றுலக மெல்லாம்* தலைவிளாக் கொண்ட எந்தாய்,*
சேவியே னுன்னை யல்லால்* சிக்கெனச் செங்கண் மாலே,*
ஆவியே! அமுதே!* என்றன் ஆருயி ரனைய எந்தாய்,*
பாவியே னுன்னை யல்லால்* பாவியேன் பாவி யேனே.–35-
மழைக்கன்று வரைமு னேந்தும்* மைந்தனே மதுர வாறே,*
உழைக்கன்றே போல நோக்கம்* உடையவர் வலையுள் பட்டு,*
உழைக்கின்றேற் கென்னை நோக்கா* தொழிவதே,உன்னை யன்றே*
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி!* அரங்கமா நகரு ளானே!–36-
தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ்* திருவரங்கங் கத்துள் ளோங்கும்,*
ஒளியுளார் தாமே யன்றே* தந்தையும் தாயு மாவார்,*
எளியதோ ரருளு மன்றே* எந்திறத் தெம்பி ரானார்,*
அளியன்நம் பையல் என்னார்* அம்மவோ கொடிய வாறே!–37-
மேம்பொருள் போக விட்டு* மெய்ம்மையை மிகவு ணர்ந்து,*
ஆம்பரி சறிந்து கொண்டு* ஐம்புல னகத்த டக்கி,*
காம்பறத் தலைசி ரைத்துன்* கடைத்தலை யிருந்துவாழும்*
சோம்பரை உகத்தி போலும்* சூழ்புனல் அரங்கத் தானே!–38-
அடிமையில் குடிமை யில்லா* அயல்சதுப் பேதி மாரில்,*
குடிமையில் கடைமை பட்ட* குக்கரில் பிறப்ப ரேலும்,*
முடியினில் துளபம் வைத்தாய்!* மொய்கழற் கன்பு செய்யும்,*
அடியரை யுகத்தி போலும்* அரங்கமா நகரு ளானே!–39-
திருமறு மார்வ! நின்னைச்* சிந்தையுள் திகழ வைத்து,*
மருவிய மனத்த ராகில்* மாநிலத் துயிர்க ளெல்லாம்,*
வெருவரக் கொன்று சுட்டிட்* டீட்டிய வினைய ரேலும்,*
அருவினைப் பயன துய்யார்* அரங்கமா நகரு ளானே!–40-
வானுளா ரறிய லாகா* வானவா! என்ப ராகில்,*
தேனுலாந் துளப மாலைச்* சென்னியாய்! என்ப ராகில்,*
ஊனமா யினகள் செய்யும்* ஊனகா ரகர்க ளேலும்,*
போனகம் செய்த சேடம்* தருவரேல் புனித மன்றே?–42-
பழுதிலா வொழுக லாற்றுப்* பலசதுப் பேதி மார்கள்,*
இழிகுலத் தவர்க ளேலும்* எம்மடி யார்க ளாகில்,*
தொழுமினீர் கொடுமின் கொள்மின்!* என்றுநின் னோடு மொக்க,*
வழிபட வருளி னாய்போன்ம்* மதிள்திரு வரங்கத் தானே!–42-
அமரவோ ரங்க மாறும்* வேதமோர் நான்கு மோதி,*
தமர்களில் தலைவ ராய* சாதியந் தணர்க ளேலும்,*
நுமர்களைப் பழிப்ப ராகில்* நொடிப்பதோ ரளவில்,* ஆங்கே-
அவர்கள்தாம் புலையர் போலும்* அரங்கமா நகரு ளானே!–43-
பெண்ணுலாம் சடையி னானும்* பிரமனு முன்னைக் காண்பான்,*
எண்ணிலா வூழி யூழி* தவஞ்செய்தார் வெள்கி நிற்ப,*
விண்ணுளார் வியப்ப வந்து* ஆனைக்கன் றருளை யீந்த-
கண்ணறா,* உன்னை யென்னோ* களைகணாக் கருது மாறே!(2)–44-
வளவெழும் தவள மாட* மதுரைமா நகரந் தன்னுள்,*
கவளமால் யானை கொன்ற* கண்ணனை அரங்க மாலை,*
துவளத்தொண் டாய தொல்சீர்த்* தொண்டர டிப்பொ டிசொல்,*
இளையபுன் கவிதை யேலும்* எம்பிறார் கினிய வாறே!(2)–45-
ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் 10-பாசுரங்கள் மங்களாசாசனம்
அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ——1-
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -73-பாசுரங்கள் மங்களாசாசனம்
பள்ளியாவது பாற் கடல் அரங்கம் இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிர் உண்ட வெந்தை பிரானவன் பெருகுமிடம்
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள் தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே –1-8-2-
என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள்
தன் துணையாய் என் தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள்
வன் துணை வானவர்க்காய் வரம் செற்று அரங்கத்து உறையும்
இன் துணைவனோடும் போய் எழில் ஆலி புகுவர் கொலோ ?–3-7-6-
மைம்மான மரகதத்தை மறை யுரைத்த திரு மாலை
எம்மானை எனக்கு என்றும் இனியானைப் பனி காத்த
வம்மானை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே -5-6-1-
ஊரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு
காரார் திண் கடல் ஏழும் மலை யெழ் இவ்வுலகு யெழ் உண்டு
ஆராது என்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-2-
முனைவனை மூவுலகும் படைத்த முதல் மூர்த்திதன்னைச்
சினை வளர் பூம் பொழில் சூழ் திருமால் இருஞ்சோலை நின்றான்
கனை கழல் காணும் கொலோ கயற்கண்ணி எம் காரிகையே -9-9-2-
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே –19-
எள்துணைப்போது என்குடங்கால் இருக்க கில்லாள்* எம்பெருமான் திருவரங்கம் எங்கே?’ என்னும்*
மட்டுவிக்கி மணிவண்டு முரலும் கூந்தல்* மடமானை இதுசெய்தார் தம்மை,* மெய்யே-
கட்டுவிச்சி சொல்’, என்னச் சொன்னாள் ‘நங்காய்!- கடல்வண்ணர் இதுசெய்தார் காப்பார் ஆரே?’–திருநெடுந்தாண்டகம் – 11
மூவா மூ வுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆராமுதை யரங்கமேய யந்தணனை
யந்தணர் தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தைத் திருத் தண் காவில்
வெக்காவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று
மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே –14-
மொய்யகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள் தன் நிறைவு இழந்தாள் ஆவிக்கின்றாள்
அணி யரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும்
பெற்றேன் வாய் சொல் இறையும் பேசக் கேளாள்
பேர்பாடித் தண் குடந்தை நகரும் பாடிப்
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்
பொருவற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே –19-
பேராலி தண் கால் நறையூர் திருப் புலியூர் ஆராமம் சூழ்ந்த அரங்கம் – கணமங்கை –சிறிய திருமடல் – 71
மன்னு மரங்கத்து எம் மா மணியை – வல்லவாழ் பின்னை மணாளனைப் பேரில் பிறப்பிலியை –பெரிய திருமடல் – 118
———————
ஸ்ரீ நம்மாழ்வார் -12-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் 1-பாசுரம் மங்களாசாசனம்
ஒன்றும் மறந்தறியேன்* ஓதநீர் வண்ணனைநான்,*
ஸ்ரீ பூதத்தாழ்வார் 4-பாசுரங்கள் மங்களாசாசனம்
மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் ————-28-
பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் -பயின்ற
தணி திகழும் சோலை யணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால் —46-
தமருள்ளும் தஞ்சை தலை யரங்கம் தண் கால்
தமருள்ளும் தண் பொருப்பு வேலை -தமருள்ளும்
மா மல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏவல்ல வெந்தைக்கு இடம் –70-
பின்னின்று தாய் இரப்பக் கேளான் பெரும் பணைத் தோள்
முன்னின்று தான் இரப்பாள் மொய்ம்மலராள் -சொல் நின்ற
தோள் நலந்தான் நேரில்லாத் தோன்றல் அவன் அளந்த
நீள் நிலம் தான் அனைத்துக்கும் நேர்-79–
————–
ஸ்ரீ பேயாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்
பண்டெல்லாம் வேங்கடம் பாற் கடல் வைகுந்தம்
கொண் டங்குறைவார்க்குக் கோயில் போல் – வண்டு
வளங்கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர். –மூன்றாம் திருவந்தாதி – 61
விண்ணகரம் வெஃகா விரி திரை நீர் வேங்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு.–மூன்றாம் திருவந்தாதி – 62
——————-
நான்முகன் திருவந்தாதி
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் -ஞாலத்
தொரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில்
அரு பொருளை யான் அறிந்தவாறு –3-
அவன் என்னை எய்தாமல் காப்பான் -அவன் என்ன
துள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே
வெள்ளத்து அரவணையின் மேல்—30-
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–36-
தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை -கேட்பார்க்கு
அரும் பொருளாய் நின்ற வரங்கனே உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்–60-
சீர் வந்த உந்தித் திசை முகனால் அல்லாது என்
சோர்வந்த சொல்லில் சுருங்குமோ ஆர்வம்
ஒருவர் அங்கு அங்கு ஒயில் உகந்து அவரை ஆள்வான்
திரு அரங்கம் கோயில் சிறப்பு -1-ஸ்ரீ திரு நின்றவூர் திருமலை அத்தங்கி தாதாச்சார்யர் தொண்டன் அருளிச் செய்த நூற்று எட்டுத் திருப்பதி அந்தாதி —
ஆர்வம் ஒருவர் அங்கு அங்கு ஒயில் -ஒருவர் அந்த அந்த விஷயங்களில் பலவகையான உலகப் பற்றுக்களில் ஆசை ஒழிந்தால் –
உகந்து அவரை ஆள்வான் -அவ்வாறு பற்று அற்ற அன்பரை விரும்பி அடிமை கொள்ளும் எம்பிரான் உடைய
திரு அரங்கம் கோயில் சிறப்பு -பெருமையை
சீர் வந்த உந்தித் திசை முகனால் அல்லாது என் சோர்வந்த சொல்லில் -குற்றம் பொருந்திய சொற்களில் -சுருங்குமோ
நான்முகன்-முதலில் வழிபட்ட திருவரங்கம் என்பதாலும் எம்பெருமான புதல்வன் என்பதாலும் -சீர் வந்த உந்தித் திசை மகன் என்கிறார் –
சீதரனே யயன் விபீடணன் தர்மன் சிவன் பரவித்
தீதல புன்னைச் சசி வாவி வேத ஸ்ருங்கம் திகழ்
ஒதரு மானத்து அரங்க மின்னூடு தெற்கு ஓர்ந்து துயில்
மாதவன் அரங்கத்து அரங்கர் சொல் வரன் அருளே –
தர்மன் -தர்ம வர்மன்
புன்னை தலவிருஷம்
சசி வாவி -சந்த்ர புஷ்கரணி
வேத ஸ்ருங்கம் திகழ் ஒதரு மானம் -வேத ஸ்ருங்கம் எனும் ப்ரணவாக்ருதி விமானம்
அரங்கமின் -ஸ்ரீ ரெங்க நாச்சியார் -ஸ்ரீ பெரிய பிராட்டியார்
சேவை சாதிக்கும் திக்கு -தெற்கு
சயனத் திருக்கோலம்
எட்டு ஸ்வயம்வ்யக்த க்ஷேத்திரங்களில் முதன்மையானது ஸ்ரீமந் நாரயணன், அரங்கனாய் அருளும் திருவரங்கம்.
(மற்றவை – ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி எனும் திருவேங்கடம், முக்திநாத், திருநைமிசாரண்யம்,
தோதாத்திரி எனும் வானமாமலை, புஷ்கரம் மற்றும் பத்ரிநாத்).
எம்பெருமான் பள்ளி கொண்ட திருக்கோலத்தினையே தனது பெயராகக் தாங்கி, ” திருச் சீரங்கன் பள்ளி ” என அழைக்கப்பட்டது.
பின்னர் அதுவே நாளடைவில் மருவி “திருச்சிராப்பள்ளி” என்றானது
ஏழு மதில்களும் ஏழு உலகங்களின் பெயர்களையே தாங்கி நிற்கின்றன.
இவற்றை தன்னுள் அடக்கி காட்சி தருகின்றது 8 – வது திருச்சுற்று.
இச் சுற்றில்தான் ஆசியாவின் மிக உயர்ந்த கோபுரமான ராயர் கோபுரம் எனும் தெற்கு கோபுரம் பிரதான நுழைவு வாயிலாக நம்மை வரவேற்கின்றது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் ரங்கா ரங்கா கோபுரம் -13 நிலைகள், 13 கலசங்கள் கொண்ட, 236 அடி உயர மிகப் பிரம்மாண்டமான இக் கோபுரம்,
மன்னர் கிருஷ்ண தேவ ராயரால் ஆரம்பிக்கப்பட்டது. எனவே இது “ராயர் கோபுரம்” என்றும் அழைக்கப்படுகின்றது.
ஆசியாவிலேயெ மிக உயரமான கோவில் கோபுரம் என்ற பெருமையுடைய இக் கோபுரம் பல இன்னல்களை தாண்டி,
ஆந்திர அஹோபில மடத்தின் 41 வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஜீயர் ஸ்வாமிகளின் பெரும் முயற்சியால் 1987 – ல் நிறைவடைந்தது.
ஸ்ரீரங்கத்தின் ஏழு திருமதில்களும் – 7 வது திருமதிலின் பெயர் பூலோகமாகும்.
இதற்கு ராஜ வீதி, சித்திர வீதி, மாட வீதி எனப் பல பெயர்கள் உண்டு.
இங்கு ் கண்ணன் சந்நதயும், ஆஞ்சனேயர் திருக்கோவிலும், வானமாலை மண்டபமும் காணப்படுகின்றன.
7 மதிகளை உள்ளடக்கிய 8 வது சுற்றுக்கு “அடயவளைத்தான் சுற்று” என்று பெயர்.
2 வது திருமதிலின் பெயர் “புவர்லோகம்”. இச் சுற்று திருவிக்கிரமன் திருவீதி என்றும் அழைக்கப்படுகின்றது.
பெருமாள் திருவாகனங்கள் உலாப் போகும் இதற்கு உத்திர வீதி என்ற பெயரும் உண்டு.
ஸ்ரீமான் இராமானுஜர் தங்கியிருந்து ஸ்ரீரங்கத்தை நிர்வகித்ததும், மணவாள மாமுனிகள் தன் அவதார ரகசியத்தை
உத்தம நம்பி எனும் தன் சீடருக்கு காட்டியருளியதும் இங்குதான்.
அஹோபில மடமும், யானை கட்டும் மண்டபமும் இங்கேயே உள்ளன.
ஸூவர்லோகம் என்பது 3 வது திருமதில். நான்முகன் கோட்டை வாசல், அகளங்க சோழன் கட்டியதால்
அகளங்கன் சுற்று என்றும் அழைக்கப்படகிறது. தாயார் சந்நதியும்,, ஆண்டாள் சந்நதியும்,
அழகிய மேட்டு சிங்கர் எனும் நரசிங்கப் பெருமாள் சந்நதியும், எட்டு கரங்களுடன் வரப்பிரசாதியாய் காட்சி தரும் சக்கரத்தாழ்வார் சந்நதியும்,
பேரழகு வாய்ந்த வேணு கோபால கிருஷ்ணர் சந்நதியும், வசந்த மண்டபமும் இத் திருச்சுற்றிலேயே அமைந்துள்ளன.
கம்பர் பெருமான் தன் இராமாயணத்தை அரங்கேற்றிய கம்பர் மண்டபம் தாயார் சந்நதியின் எதிரே அமைந்துள்ளது.
இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில்தான் வைகுண்ட ஏகாதசியன்று துவங்கும் திருவாய்மொழித் திருநாள் உற்சவம் நடைபெறும்.
அரையர் சேவையும் இங்கிருந்தே துவங்கும். இராமானுஜரின் “தானான திருமேனி” உள்ளதும் இங்குதான்.
அரங்கனுக்கு மலர் கைங்கர்யம் செய்திட்ட தொண்டரடிப்பொடியார், பிள்ளை லோகாச்சார்யார், திருப்பாணார்,
கூரத்தாழ்வார் போன்றோரது சந்நதிகளும் இத் திருச்சுற்றிலேயே அமைந்துள்ளன.
“திரு அந்திக் காப்பு” நடைபெறுவதும் இவ்விடமே. பெருமாள் வீதி் உளா முடித்து வந்ததும்,
சிறு குடத்தின் மீது கிண்னம் ஒனறு வைத்து, அச் சிறியதொரு கீன்ணத்தில் நெய்யிட்டு திருவிளக்கேற்றி
அரங்கனுக்கு திருஷ்டி கழிக்கும் நிகழ்வே திரு அந்திக் காப்பு எனும் விஷேஷ நிகழ்வு.
ஸ்ரீரங்க விலாச மண்டபம் அமைந்துள்ளது் இத் திருசுற்றிலேயே.
நடுநாயகமாய் விளங்கும் மஹர்லோகம் எனும் 4 வது சுற்று. இதனை கட்டுவித்த திருமங்கையாரின் பெயர் தாங்கி
“திருமங்கை மன்னன் சுற்று” என்று அழைக்கப்படுகின்றது. ஆலிநாடன் வீதி என்ற பெயரும் உண்டு.
இதன் நுழை வாயிலுக்கு கார்த்திகை கோபுர வாசல் என்று பெயர். அரங்கனை தன் இருகைகள் கூப்பித் தொழுதவாறு,
மிகப் பிரம்மாண்டமாகக் காட்சி அருளும் 20 அடி உயர கருடாழ்வாரின் சந்நதி இத் திருச்சுற்றிலேயே அமைந்திருக்கின்றது.
கருட சந்நிதியின் எதிரில் அமைந்துள்ள பரமன் மண்டபச் சிற்பங்கள் கலை நுணுக்கம் வாய்ந்தவை.
முதலாழ்வார்கள் மூவர், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார் மற்றும் திருக்கச்சி நம்பிகள் சந்நதிகளும்,
வேறெங்கும் காண இயலாத தன்வந்திரி ப்கவான் சந்நதியும், சந்திர புஷ்கரணியும் அமைந்துள்ளது
இத் திருச்சுற்றின் தனிப் பெரும் சிறப்புகள். சொர்க்க வாசல் திறக்கப்டுவதும் இவ்விடமே.
திருக்கோவில் பிரசாத விற்பனையும் இங்குதான் நடைபெறுகிறது.
ஜநோலோகம் என்பது 5 வது திருச்சுற்றின் பெயர். முன்னொரு சமயம் ஆரியர்கள் எனும் வட நாட்டு அந்தணர்கள்
இத் திரு வாயிலை காவல் புரிந்து வந்ததால் இதற்கு ஆர்யபடவாசல், குலசேகரன் திருச்சுற்று எனறும் அழைக்கப்படுகின்றது.
விஜய நகர மன்னர்களால் உருவாக்கப்பட்ட, 108 தங்கத் தகடுகள் பதித்த கொடிமரமும், உள் கோடை மண்டபமும்,
பரமபத வாசலும் இங்கேயே அமைந்துள்ளன. ஊஞ்சள் உற்சவம் நடைபேறுவதும் இவ்விடமே.
தபோலோகம் என்பது 6 வது திருச்சுற்றின் பெயர். மன்னன் ராஜ மகேந்திர சோழனால் கட்டப்பட்டதால்
இதற்கு ராஜ மகேந்திரன் திருச்சுற்று என்ற பெயரும் உண்டு. இதன் நுழைவாயிலுக்கு “நாழிகேட்டான் வாசல்” என்ரு பெயர்.
இங்கு துலுக்க நாச்சியார் சந்நதி, சேனை முதலியார் சந்நதி, கண்ணாடி அறை, திருப்பரிவட்டாரங்கள் வைக்கும் அறை,
யாக சாலைகள் போன்றவை அமைந்துள்ளன. இங்குள்ள கிளி மண்டபம் திருமங்கையாரால் கட்டப்பட்டது.
கற்பூர படியேத்தம் எனும் ஒரு விசேஷ நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசியன்று
இச் சுற்றிலேயே நடைபெறும். ஒரு சமயம் இந் நிகழ்ச்சியை காண வேண்டி விஜய ரங்க சொக்கநாதர் தன் குடும்பத்துடன் வர,
அதற்குள் வைபவம் நிறைவுற்றது. தவறாது இதனை காண வேண்டும் என்ற பேராவலில் விஜயரங்க நாயக்கர்
இங்கேயே ஓராண்டு காலம் தங்கியிருந்து அடுத்த ஆண்டு இந் நிகழ்ச்சியை கண்டுகளிததே தன் நாடு திரும்பினார்..
சத்தியலோகம் எனும் முதலாம் திருச்சுற்றை உண்டாக்கியது சோழ மன்னன் தர்ம வர்மன்.
இதன் நுழை வாயிலுக்கு திரு அணுக்கன் திருவாசல் என்று பெயர். கருவறை எனும் மூலவர் சந்நதியில்,
பேரழகுடன் சத்தியலோக பெருமாள் ஆதிஷேஷ அனந்தனின் மீது சயனித்திருப்பது இங்குதான்.
கருவறைக்கு முன் உள்ள மண்டபத்திற்கு ரங்க மண்டபம் என்று் பெயர்.
இங்குள்ள 24 தூண்களும் காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களாய் கொண்டு வணங்கப்படுகின்றது.
ஸ்ரீராமர், சக்கரத்தாழ்வார், தன்வந்திரி, வேறெங்கும் காண இயலாத வண்னம் தன் இரு புறமும் சுக்கிரீவனையும்,
அங்கதனையும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் 20 அடி உயர கருடாழ்வார்,
உடையவர் ஸ்ரீமான் ராமானுஜர் சந்நதிகள் இச் சுற்றல் உள்ளன. மூலவரை தரிசித்த பின்னர் தரிசிக்க வேண்டிய
“ப்ரணவாக்ருதி விமானம்”, அதில் தெற்கில் அமைந்துள்ள “பரவாஸுதேவர் தங்க விக்ரஹம்” போன்றவை ஸ்ரீரங்கத்தின் சிறப்புகள்.
அழகிய சிங்க பெருமாள் அங்கீகரித்த கம்ப ராமாயணம் – கம்பர் பெருமான் தனது கம்ப ராமாயணத்தை இவ்விடமே இயற்றினார்.
கம்பர் மணடபம் தாயார் சந்நதிக்கருகே அமைந்துள்ளது.
கம்பர் தனது ராமாயணத்தில் ஹிரண்யணை வதம் செய்த வரலாற்றை விளக்குகின்றார்.
அது சமயம் இங்கிருந்த பல சமய வல்லுனர்கள் ராமாயணத்தில் ஹிரண்ய சம்ஹாரம் வருவதால்,
இவ்விடம் ராமாயண அரங்கேற்றத்தினை ஏற்கமாட்டோம் என மறுதலித்தனர்.
அவ்வாறயின் எம்பெருமான் முன்பு இக் காவியத்தை அரங்கேற்றுவோம்.
எம்பெருமான் ஏற்றுக்கொண்டால் நாம் அனைவரும் இதனை ஏற்போம்” எனக் கூறி கம்பர் பெருமான்
தனது ராமாயணத்தினை இத் திருக்கோவிலில் அரங்கேற்ற, அது சமயம் சந்நதியின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள
அழகிய சிங்க பெருமாள் ” கம்பரின் ராமாயண காவியத்தினை யாம் அங்கீகரித்தோம் ” என
சிம்ம கர்ஜனையுடம் பெரு முழக்கம் செய்து ஏற்றுக் கொண்டார்..
ஆழ்வார்களும், ஸ்ரீரங்கமும் – ஆழ்வார்களுக்கும் , ஸ்ரீரங்கத்திற்குமான பிணைப்பு மிக தாத்பரியமானது.
பங்குனி மாத திருவிழாக்களின் பொழுது, அரங்கன் உறையூர் சென்று கமலவல்லியை மணம் புரிந்ததை அறிந்த
ஸ்ரீரங்கத்து பிராட்டியார் அவனுடன் பிணக்கு கொண்டு தவடைப்பார். அது சமயம் நம்மாழ்வார் இருவரையும் சமாதானம் செய்திடுவார்.
இந் நிகழ்ச்சி ப்ரணய கலஹம் என திருவரங்க பங்குனி மாத உற்சவங்களில் கொண்டாடப்படுகிறது.
திருமங்கையாழ்வார் திருவரங்கத்திற்கு திருமதில் எழுப்பினார். திருநறையூர் சாரநாதன் மீது திருமடல் பாடினார்.
தமக்கு மதில் எழுப்பியதால் மகிழ்ந்த அரங்கன், திருமங்கையாரை அழைத்து தீர்த்தம், சடாரி, மாலை, பரிவட்டம் போன்றன தந்து
“எமக்கும் மடல் உரைக்கலாகாதோ ” என்று கேட்டார். அதற்கு திருமங்கையாரோ “மதில் இங்கே மடல் அங்கே ” என்றாராம்.
தொண்டரடிப்பொடியாழ்வார் திருவரங்கத்தில் அரங்கனுக்காக சிறு நந்தவனம் ஒன்றமைத்து அனுதினமும் அரங்கனுக்கு பூமாலை சாற்றி வந்தார்.
திருமங்கையார் கோவிலுக்கு திரு மதில் எழுப்பிக் கொண்டிருந்த சமயம் அது. இடையில் நந்தவனம் குறுக்கிட,,
அதனை ஒதுக்கி விட்டு மதில் எழுப்பலானார். மகிழ்ந்த தொண்டரடியார் தனது மலர் கொய்யும் ஆயுதத்திற்கு,
திருமங்கையின் பெயர்களில் ஒன்றான “அருள்மாரி” எனப் பெயரிட்டு நன்றி கூர்ந்தார்
பெரியாழ்வார் அரங்கனுக்கு தன் பெண்ணையே கொடுத்தார். திருமங்கையார் திருமதில் கொடுத்தார்.
தொண்டரடிப்பொடியாரோ தினம் தினம் மலர் கொடுத்தார். திருப்பாணர் அவன்தன் திருவடி கலந்தார்.
மதுரகவியார், அரங்கனுக்காக அவன் விரும்பியவாறு நம்மாழ்வாரை இவ்விடம் கொணர்ந்தார்.
நம்மாழ்வார் பெருமானுக்கும், பிராட்டிக்கும் ஆண்டுதோறும் சமாதானம் செய்கின்றார்.
என்னே அரங்கனின் மாண்பும், ஆழ்வார்களின் பிணைப்பும்.
திருவரங்கத்தில் அனைத்தும் பெரியவைகளே – திருக்கோவில் மிகப் பெரிது.
அதனாலேயே பெரியகோவில் ஆயிற்று. 20 அடி உயர கருடாழ்வார் மிகப் பிரம்மாண்டம். 7 மதில்களும் சுற்றி அமைந்துள்ள தூண்களும் பெரியன.
அரங்கன் பெரிய பெருமாள். தாயார் பெரிய பிராட்டி. இங்கிருந்த நம்பிகள் பெரிய நம்பி.
இங்கு சமர்ப்பிக்கும் தளிகை பெரிய தளிகை. வாத்யம் பெரிய மேளம். பக்ஷசணங்கள் பெரிய திருப்பணியாரங்கள்.
பெண் கொடுத்தவர் பெரியாழ்வார்.
இரு புறம் ஓடும் நதிகளான காவிரியும், கொள்ளிடமும் பெரிய நதிகள்.
ஆழ்வார்களின் மங்களாசாசனங்கள் பெரிய மங்களாசாசனங்கள். 11 ஆழ்வார்களாலும் பாடப்பெற்ற பாசுரங்கள் 247.
ராயர் கோபுரம் எனும் தெற்கு கோபுரம் 13 நிலைகள், 13 கலசங்கள் கொண்ட 236 அடி உயர ஆசியாவின் மிக உயரமான கோபுரம்.
மூலவரை தரிசித்து வெளி வந்த பின்னர் தரிசிக்க வேண்டிய “ப்ரணவாக்ருதி விமானமும்”
அதில் தெற்கில் அமைந்துள்ள “பரவாஸுதேவர் விக்ரஹமும்” ஸ்ரீரங்கத்தின் தனிப் பெறும் சிறப்புகள்
கோயிலின் நாழிக்கேட்டான் வாயிலில் வெளிப்புற முகப்பின் இருபக்கங்களிலும் உள்ள மாடங்களில் பத்திரர், சுபத்திரர் ஆகிய துவார பாலகர்கள் உள்ளனர். உள்புற முகப்பில் பெரியபெருமாள் மூலஸ்தானத்தை நோக்கி மகாவிஷ்ணுவுக்கு உரியவனாய் முறையே சங்கு, தாமரை வடிவங்களில் சங்கநிதி, பதுமநிதி உருவங்கள் இருபக்கங்களிலும் உள்ளன. மூலஸ்தானம் மேற்கே உள்ள மேடையில் விஜயரங்கசொக்கநாத நாயக்கர், அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோரின் உருவங்கள் தந்தத்தால் இயற்கை அளவில் செய்து, வண்ணம்தீட்டி வைக்கப்பட்டுள்ளது.
மூலவர், உற்சவர், தாயாருக்கு அணிவிக்கப்படும் மாலைகள் அனைத்தும் அம்மாமண்டபம் ரோட்டில் உள்ள மதுரகவி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு மாலை கட்டப்பட்டு சமர்ப்பிக்கப்படுகிறது. பெருமாளுக்கு நைவேத்தியம் செய்ய சமைப்பதற்கு மடப்பள்ளியில் மண்பாத்திரங்களே தற்போதும் பயன்படுத்தப்படுகிறது.
மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்வதில்லை. அதற்கு பதில் கோயில் பணியாளரை கொண்டு ஆண்டுக்கு இருமுறை கோயில் ஊழியர்களால் இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட தைலம் பூசப்பட்டு(தைலக்காப்பு) உலர்ந்தபின் நீக்கப்பட்டு மெருகூட்டப்படுகிறது. இத்தலத்தில் ஆண்டாள், திருப்பாணாழ்வார், துலுக்கநாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்து உள்ளனர்.
கோயில் கருவறை மேலே தங்கத்தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தில் மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன. ஆண்டுதோறும் துலா மாதத்தில் (ஐப்பசி) பெருமாளுக்கு திருமஞ்சனம் மற்றும் பூஜைக்கு தங்கத்தில் செய்யப்பட்ட பொருட்களையே பயன்படுத்தப்படுகிறது. துலாமாதம் 30 நாட்களும் மூலவருக்கும், உற்சவருக்கும் சாளக்கிராம மாலை அணிவிக்கப்படும். கோயில் தல விருட்சம் புன்னை மரம், மூலவர் ஸ்ரீரங்கநாதர், உற்சவர் நம்பெருமாள், தாயார் ஸ்ரீரங்கநாச்சியார்.
கோயில் தீர்த்தங்கள்:
சந்திர புஷ்கரணி, சூர்ய புஷ்கரணி, வகுள தீர்த்தம், சம்பு தீர்த்தம், அசுவத்த தீர்த்தம், பலாச தீர்த்தம், புன்னாக தீர்த்தம், பில்வ தீர்த்தம், கதம்ப தீர்த்தம், ஆம்பர தீர்த்தம், தென்திருக்காவிரி, வட திருக்காவிரி கோயிலில் நிர்வாக முறையை ஏற்படுத்திய இராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார். அவரது திருமேனி 5வது திருச்சுற்று எனப்படும் அகளங்கன் திருச்சுற்றில் வசந்தமண்டபத்தில் புதைக்கப்பட்டது. பிறகு தானாகவே அவரது திருமேனி பூமிக்கு வெளியே தோன்றியது. அதுவே தற்போது ராமானுஜர் சன்னதி மூலஸ்தானமாக உள்ளது. தான் ஏற்படுத்திய நிர்வாகங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதை கண்காணித்து வருகிறார் ராமானுஜர் என்பது ஐதீகம்.
ஆசியாவிலேயே மிக உயரமான கோபுரம் என்ற பெருமை பெற்றது ஸ்ரீரங்கம் ராஜகோபுரம். உயரம் 236 அடி. 13 நிலைகளுடன், 13 கலசங்களுடன் கம்பீரமாய் காட்சி அளிக்கிறது. 1987ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தெற்கு ராய கோபுரமே பிரதான நுழைவாயில். கிருஷ்ணதேவராயர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறாதிருந்த தெற்குராயகோபுரம் முன்பு மொட்டை கோபுரமாக இருந்தது. ராயர் கோபுரத்தில் திருஷ்டிபரிகாரத்திற்காக முனிக்கு அப்பனான ஸ்ரீனிவாசனை எழுந்தருள செய்தனர். நித்ய வழிபாடுகள் இன்று நடந்து வருகிறது. இந்த ராஜகோபுர வாசலை முனியப்பன் கோட்டை வாசல் எனவும் அழைக்கின்றனர்.
ஆண்டுக்கு ஒருமுறை தான் பெருமாளும், தாயாரும் பங்குனி உத்திரதினத்தன்று தாயார் சன்னதியில் உள்ள சேர்த்தி சேவை மண்டபத்தில் சேர்ந்து எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். 2ம் பிரகாரத்தின் நடுவில் பரமபதவாசல் கோபுரம் உள்ளது. இக்கோபுர வாயில்கள் ஆண்டு முழுவதும் மூடப்பெற்றே இருக்கின்றன. வைகுந்த ஏகாதசி விழாவின்போது மட்டும் இதன் கதவு திறக்கப்படுகின்றது. ஸ்ரீரங்கத்தில் எல்லாமே பெரியவை தான். ராமரால் தொழப்பட்ட ஸ்ரீரங்கநாதர் பெரிய பெருமாள். கோயில் பெரிதென்பதால் பெரிய கோயில் ஆயிற்று. 7மதில்களும், எண்ணற்ற மண்டபங்களும் பெரிது.
கோபுரம் ஆசியாவிலேயே பெரிது. இங்கிருந்த ஜீயரும் பெரிய ஜீயர். திருமதில்கள் பெரிது. தாயாருக்கு பெரிய பிராட்டி என்பது பெயர். இங்கு செய்யப்படும் தளிகைக்கு பெரிய அவசரம், வாத்தியத்திற்கு பெரிய மேளம், பட்சணங்களுக்கு பெரிய திருப்பணியாரங்கள் என்று பெயர். ஆண்டாளை வளர்த்தெடுத்து அரங்கனுக்கு மணமுடித்துக் கொடுத்து மாமனார் ஸ்தானம் வகிக்கும் ஆழ்வாரோ பெரிய ஆழ்வார். ஆழ்வார்களின் மங்களாசாசனங்களோ பெரிய மங்களாசாசனங்கள். 108 திவ்யதேசங்களில் 11 ஆழ்வார்களால் 247 பாக்களால் பெரிய மங்களாசாசனம் பெற்றவர் இப்பெருமாள்.
ஸ்ரீரங்கம் கோயில் நகைகளின் மதிப்பு பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். திருமங்கையாழ்வாரால் கட்டப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஆயிரம் தூண்கள் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் 951 தூண்கள் மட்டுமே கட்டப்பட்டு இருக்கும். மீதமுள்ள 49 தூண்கள் வைகுண்ட ஏகாதசி விழா காலங்களில் மணல்வெளியில் 49 மரத்தூண்கள் நடப்பட்டு ஆயிரம் தூண்களாக கணக்கிடப்பட்டு விழா நடைபெற்று வருகிறது.
———————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply