Archive for the ‘திரு பல்லாண்டு’ Category

பகவத் விஷயம் காலஷேபம் -5-திருப்பல்லாண்டு —-பல்லாண்டு பல்லாண்டு/-அடியோமோடும் நின்னோடும்-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் – -ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

April 16, 2016

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு பல கோடி நூறு ஆயிரம்
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா!  உன் சேவடி செவ்வி திரு காப்பு –

மல் -ஒருவராலும் அடங்காத சாணூர முஷ்டிகர் என்கிற மல்ல வர்க்கத்தை
ஆண்ட -நிரசித்த
திண் -திண்ணிய
தோள் -திருத் தோள்களை உடையனாய்
மணி -நீல ரத்னம் போன்ற
வண்ணா -வடிவு அழகை உடையவனே-ஸ்வபாவம் -வர்ணம் -இரண்டையும் குறிக்கும் –
பல்லாண்டு பல்லாண்டு –மனுஷ்ய தேவ -பல வர்ஷங்களிலும்
பல்லாயிரத் தண்டு -அநேக பிரம கல்பங்களிலும்
பல் கோடி நூறாயிரம் -இப்படி உண்டான காலம் எல்லாம்-காலதத்வம் உள்ளவரை என்றபடி –
உன் -உன்னுடைய
செவ் -சிவந்த
வடி -திருவடிகளின்
செவ்வி -அழகுக்கு
திருக்காப்பு -குறைவற்ற ரஷை உண்டாக வேண்டும் என்று மங்களா சாசனம் பண்ணுகிறார்-

பர்வத பரம அணு வாசிகள் -இளைய பெருமாள் -ஸ்ரீ பரத ஆழ்வான் -ஸ்ரீ சத்ருகன ஆழ்வான் போலே
ரிஷிகள் -ஆழ்வார் -பெரியாழ்வார் -ஆண்டாள்

அவதாரிகை
சௌந்த்ர்யாதி கல்யாண குணோபேதமான விக்ரஹத்தோடே வகுத்த சேஷி யானவனை
கால அதீநமான தேசத்திலே காண்கையாலே -இத்தால் இவனுக்கு என்ன தீங்கு வருகிறதோ
என்று அதி சங்கை பண்ணி
அநாதிர் பகவான் காலோ ந அந்தோஸ் யத்விஜ வித்யதே –ஸ்ரீ விஷ்ணு புராணம்-என்கிறபடியே
கால தத்வம் உள்ளதனையும் இச் செவ்வி மாறாதே நித்யமாய்ச் செல்ல வேணும்
என்று மங்களா சாசனம் பண்ணுகிறார் –

வியாக்யானம்
பல்லாண்டு –
அல்லாத அவச்சேதகங்களை ஒழிய -ஆயுஸ் ஸு க்கு பர்யாயமான ஆண்டைக் கொண்டு
காலத்தை பெருக்குகிறார் -ஆயுஸை பிரார்திக்கிறவர் ஆகையாலே -யாமோஷதி மிசாயுஷ்மன் –
என்று ஆயுஸை பிரார்த்தித்தார் இ றே பெரிய வுடையார்
வேத நூற் ப்ராயம் நூறு -என்று ஆயுஸ் பர்யாயமாக சொல்லிற்று இ றே வத்ஸரத்தை
இந்த பஹூ வசனத்துக்கு அசங்க்யாதத்வமே -எண்ணில் அடங்காத -முக்யார்த்தம் ஆகையாலே அசங்க்யாதமான
வர்ஷங்கள் இவ்வழகோடே நித்தியமாய் செல்ல வேணும் என்கிறார் –
பல்லாண்டு -என்கிற சப்தம் ஸ்வரூப வாசியுமாய் இருக்கிறது -சேஷ பூதன் -சேஷத்வம் பிரகாசிக்குமே –
உத்க்ருஷ்டனாய் இருப்பான் ஒருவனை அபக்ருஷ்டனாய் இருப்பான் ஒருவன் கண்டால்
அவனுடைய உத்கர்ஷ அநுரூபமாய் சொல்லும் பாசுரம் ஆகையாலே
சர்வேஸ்வரனுடைய உத்கர்ஷத்துக்கு அவதி இல்லாமையாலும்
அவனைக் குறித்து தம்முடைய நிகர்ஷத்துக்கு அவதி இல்லாமையாலும் –
இந்த உத்கர்ஷ அபகர்ஷ ரூப வைஷம்யம் ஸ்வரூப ப்ரயுக்தம் ஆகையாலே-அவன் மேன்மையும் தாழ்ச்சியும் -எல்லை இல்லாமையாலும் –
பல்லாண்டு என்கிற சப்தம் ஸ்வரூப வாசி யாகிறது -மேல் பண்ணுகிற மங்களா சாசனம்
ஸ்வரூப ப்ரயுக்தம் என்கைக்காக சொல்லிற்று –
ஜிதம் -என்றும் -நம -என்றும் -தோற்றோம் -என்றும் -போற்றி என்றும் -பல்லாண்டு -என்றும் –
இவை பர்யாயம்
இச் சப்தங்களுக்கு அர்த்த பேதம் இல்லையோ என்னில் -ப்ரவர்த்தி நிமித்த பேதத்தால் வரும்
விசேஷம் உண்டானாலும் -விழுக்காட்டில் ஆத்ம ஸ்பர்சியாய் தலைகட்டுகையாலே
பர்யாயம் ஆகிறது -ஆந்தர அர்த்தம் -உள்ளுறைப் பொருள் –
ஜிதம் -என்று அவனாலே  தன் அபிமானம் போனபடியை இசைந்து அத்தலையில்  வெற்றிக்கு மேல்
எழுத்து இடுபவன் வ்யவஹாரம் –ஜிதந்தே புண்டரீகாஷம் -நான் அடிமை புரிந்து ஜெயிக்கப்பட்டேன் –
இத்தால் ஸ்வரூப பிரகாசதத்தால் அல்லாது அபிமானம்
போகாமையாலே இச் சப்தமும் விழுக்காட்டால் ஸ்வரூப வாசி யாகிறது
நம -என்று எனக்கு உரியன் அல்லேன் என்கிறபடி -இது நிவர்த்த ஸ்வ தந்த்ரனுடைய வியவஹாரம்
இதுவும் ஸ்வரூப பிரகாசத்தால் அல்லது கூடாமையாலே ஸ்வரூப ஸ்பர்சியாகிறது
தொலை வில்லி மங்கலம் தொழும் -ஸ்வரூபம் சொல்லிற்று -நம -ஸ்வரூப வாசகம்
தோற்றோம் -என்கிறது அத தலையில் வெற்றியே தனக்கு பிரயோஜனம் என்று இருக்குமவனுடைய வ்யவஹாரம்
அதுவும் அஹங்கார நிவ்ருத்தியிலே அல்லது சம்பவியாமையாலே ஸ்வரூபஸ்பர்சி  யாகிறது
தோற்றோம் மட நெஞ்சம் -இருளுக்கு தான் யார் என்கிறார் ஆழ்வார் -இங்கும் ஸ்வரூபம் சொன்னார்
போற்றி -என்று தன்னை பேணாதே அத தலையில் சம்ர்த்தியே பேணுமவன்  வ்யவஹாரம்
போற்றி -கைகளால் ஆரத் தொழுது -சொல் மாலைகள் சொன்னேன் -இது ஸ்வரூப அனுரூபம் இ றே
பல்லாண்டு -என்று தன்னைப் பாராதே அத தலையில் ச்ம்ரத்தியே நித்யமாக செல்ல வேணும்
என்று இருக்குமவன் வ்யவஹாரம்
ஸ்வ பிரயோஜன நிவ்ருத்தி சேஷத்வ பலன் ஸ்வ பிரவ்ருத்தி நிவ்ருத்தி பாரதந்த்ர்ய பலன் –
ஆக இச் சப்தங்கள் ஸ்வரூபத்தையும் -ஸ்வரூப அனுரூபமான வ்ர்த்தியையும்
பிரகாசிப்பிக்கையாலே ஸ்வரூப அனுபந்தி யாகிறது

பல்லாண்டு –
மறித்து -பல்லாண்டு என்கிறது என் என்னில் -அகவாய்  அறியாதவனுக்கு தெரியாமையாலே
பல கால் சொல்ல வேண்டி இருக்கும் -ஸ்வதஸ் சர்வஞ்ஞனாய் -எதிர் சூழல் புக்கு திரிகிறவனுக்கு
இரு கால் சொல்ல வேண்டா -இப் புநர் உக்திக்கு பொருள் என் என்னில் -அவனுடைய
சர்வஞ்ஞத்வத்தில் குறையால் அல்ல -ஒரு கால் சொன்னோம் -என்று ஆறி இருக்க மாட்டாத
தம்முடைய ஆதார அதிசயத்தாலும் -பலகால் சொல்லும் அத்தாலும் பர்யாப்தி பிறவாத
விஷய வைலஷண்யத்தாலும் அருளிச் செய்கிறார்
த்ர்ஷார்த்தனானவன் தண்ணீர் பெருமளவும் தண்ணீர் தண்ணீர் என்னுமா போலே தம்முடைய
பயம் ஷமிக்கும் அளவும் பல்லாண்டு பல்லாண்டு -என்ன ப்ராப்தம் இ றே

பல்லாயிரத்தாண்டு
கீழில் பஹூ வசனத்தாலே வர்ஷங்களினுடைய அசங்க்யாத்வம் சொல்லி இருக்க இதுக்கு உதயம் இல்லையே என்னில் –
அவச் சேதகங்களுக்கு சங்க்யை இல்லாமையாலே காலாவச் சேதத்துக்கு தொகை இல்லை
ஆகையாலே அருளிச் செய்கிறார் -அவச் சேதகங்கள் ஆவன -சூர்யா பரிஸ் பந்தாதிகள்
அவச் சேத்யங்கள் ஆவன -ஷண  லவாதிகள் -வர்ஷத்துக்கு அவச் சேதகர் -தேவர்கள்
அத்தைப் பற்றிச் சொன்னார் கீழ்
தேவ ஆண்டு -360 மனுஷ்ய ஆண்டு –4320000-மனுஷ்ய வருஷம் -12000 தேவ வருஷம் சதுர் யுகம் -ஒரு பகல் பிரம்மாவுக்கு –
-பல வர்ஷத்துக்கு அவச்சேதகன் -ப்ரஹ்மா -அத்தை பற்ற
அருளிச் செய்கிறார் பல்லாயிரத்தாண்டு என்று-
யஸ் சர்வஞ சர்வவித் -அனைத்தையும் அறிந்தவர் -சர்வ விசேஷ ஞான சர்வ பிரகார ஞான ரூபமான -போலே
-பொன் மணி முத்து மாணிக்கம் -விசேஷணங்கள் -கடிகாரத் தன்மை -விசேஷ்யங்கள்

பல கோடி நூறாயிரம் என்று -ப்ரஹ்மாக்களுக்கு தொகை இல்லாமையாலே அருளிச் செய்கிறார் –
கால க்ர்த பரிணாமம் இல்லாத தேசத்தில் உள்ளாருக்கும் ஸ்வ சத்தை உள்ளளவும்
விஷய வைஷண்யத்தை பற்ற -அதி சங்கையும் மங்களா சாசனமும் நித்யமாக செல்லா நின்றது –
காலம் எல்லாம் -எப்போதும் -நித்ய ஸூ ரிகள் சொல்வது இல்லையே -லீலா விபூதியில் தான் ஆண்டு பஷம்-கால வித்யாசம் உள்ள இடம் என்று காட்ட –
அங்கே உள்ளாரே அதிசங்கை பண்ண நான் பண்ண வேண்டாமோ -பெருமாள் வைபவம் இங்கும் அங்கும் ஒன்றே -ஆங்கு ஆராவாரம் அது கேட்டு அழல் உமிழும்
அவன் பெருமையை பார்த்து பல்லாண்டு பாடுவதில் வாசி இல்லையே –
கால க்ர்த பரிணாமம் உள்ள தேசத்தில் இருக்கிறவருக்கு அதி சங்கையும் -அத்தாலே வந்த பயமும்
பய நிவர்த்திக்காக காலத்தை பெருக்கி இக்காலம் உள்ளதனையும் இப்படி மங்களா சாசனம்
பண்ணச் சொல்ல வேணுமோ –
இப்படி மாறி மாறி பயத்தை விளைத்து -காலத்தை பெருக்கி -இதுவே தமக்கு யாத்ரையாக
செல்லப் புக்கவாறே -அவன் -இவருடைய பயத்தை பரிஹரிக்க வேணும் -என்று பார்த்து –

புலி கிடந்த தூற்றுக்கு அஞ்சிக் காவல் தேடுவாரைப் போலே நீர் நமக்கு அஞ்சக் கடவீரோ –
மல்ல வர்க்கத்தை நிரசித்த தோள் இருக்கிறபடி பாரீர் -என்று தோள் வலியைக் காட்டினான்
மகாத்மாக்கள் பயம் கெட்டு இருக்க சௌர்யாதிகள் -திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறில் –காட்டி அருளுகிறான் –
ராவணா நுஜனைக் குறித்து மஹாராஜருக்கு பிறந்த பயத்தை போக்குகைகாக தன் மிடுக்கைக் காட்ட
அவர் பயம் சமிக்கக் காண்கையாலே -இவ் விஷயத்திலும் பலிக்கும் -என்று மிடுக்கைக் காட்ட
இவர்க்கு இது தானே பய ஹேது வாய்த்து -மஹாராஜர் பயத்தை தீர்த்த படி என் என்னில் –
பிசாஸான் தாநவான் யஷான் -கள்ளர் பள்ளிகள் வலையர் -என்னுமா போலே
ஹிம்சிகருடைய அவாந்தாபிதை இருக்கிறபடி -ப்ருதிவ் யாஞ சைவ ராஷசான் -இலங்கையில்
உள்ள ராஷசர் அளவு அன்றிக்கே பஞ்சாசத்கோடி விச்தீர்னையான பூமியில் உள்ள
ராஷசர் எல்லாம் எதிரிகள் ஆனாலும் -அங்குல்ய கரேண தாந ஹன்யாம் -ஆக
சத்ரு வர்க்கங்கள் எல்லாம் ஒரு கலத்திலே உண்டு எதிரிட்டாலும் இவற்றின் உடைய
நிரசனத்துக்கு அஸ்த்ர சஸ்த்ரங்கள் வேணுமோ -ஷூத்ர கிருமிகளை நிரசிக்குமோ பாதி
அங்குல்யக்ரத்தாலே நிரசிக்க வல்லோம் காணும் என்கிறார்-கிள்ளிக் களைந்தானே-
ஆனால் நம்மை நலிந்த பிரதிபஷம் நசியாதே கிடக்கிறது என் என்னில் -அழிப்போம் -என்னும்
இச்சை இல்லாமை -இச்சை உண்டானால் அழிக்கையில் அருமை இல்லை -அது தனக்கு அடி என் என்னில்
உயிரோடே தலை சாய்க்குமாகில் அழிக்கிறது என் -என்னும் இரக்கத்தாலே -கரி கணேஸ்வர -இச்சித்து வாலியை அளித்த இடம் உண்டே என்கிறார் –
இவ்வார்த்தை ராம பாக்யத்தாலே -விபீஷண ரஷண ஹேது என்பதால் ராம பாக்கியம் என்கிறார் -மஹாராஜர் நெஞ்சிலே பட்டு பய நிவ்ருத்திக்கு உடலாய்த்து –
இவர்க்கு இது தானே பய ஹேதுவாய்த்தது

மல்லாண்ட திண் தோள் –
மல்ல வர்க்கத்தை ஸ்வாதீனமாக பண்ணின திண்ணிய தோள் -பிற்பாடரான
கம்சாதிகளை அனாயாசேன கொல்லுகையாலே திண்ணிய தோள் என்கிறது –
மல் -என்று மிடுக்காய் -அத்தை அடிமை கொண்ட திண்ணிய தோள் என்கிறது ஆகவுமாம்
இம்மிடுக்கு இவர்க்கு பய ஹேது வாவான் என் என்னில் –
சூரனான புத்ரனைக் கண்டால் பெற்ற தாய் -இவன் மதியாதே யுத்தத்தில் புகும் –
என் வருகிறதோ என்று பயப்படுமா போலே பயப்படுவது யுக்தம்
மல்லரை அழியச் செய்த தோள் -என்று இவர் அறிந்தபடி என் என்னில் -காதில் தோடு வாங்கினாலும் –
தோடிட்ட காது -என்று அறியுமா போலே
ஒ மண் அளந்த தாளாளா–வரை எடுத்த தோளாளா–திருவடி திருத் தோள்களைக் கட்டு என்கிறார் அங்கே -பார்த்தாலே தெரியுமே

மணி வண்ணா
நீல மணி போலே இருக்கிற திரு நிறத்தை உடையவனே
அதி ரமணீயமாய் -அத்யுஜ்வலமாய் -அதி ஸூகுமாரமாய் -அதி ஸூலபமாய்
இருந்துள்ள வடிவைக் கொண்டு முரட்டு அசுரர்கள் உடைய சகாசத்திலே செல்லுவதே –
க்வ யௌவ நோன் முகீ பூத ஸூகுமார தநுர் ஹரி
க்வ வஜ்ர கடி நா போக சரீரோ யம்ம ஹாஸூர -என்று -வெண்ணெய் அமுது செய்து வளர்த்த
சிறு பிள்ளையை முரட்டு வடிவை உடைய மல்லரோடே ஒக்கப் போர விடுவதே –
ந ஸமம் யுத்தம் இத்யாஹூ -என்று கூப்பிட்டார்கள் இ றே ஸ்ரீ மதுரையில் பெண்கள்
சௌகுமார்யம் பய ஹேதுவாகிறது -சௌலப்யம் பய ஹேதுவோ -என்னில் –
அஸூர நிரசன அர்த்தமாக தேவதைகள் சரணாகதி பண்ணின மாதரத்தில்
ஸூலபனாய் அஸுரர்கள் அஸ்யத்திலே புகும் -என்று அத்தாலே பயப்படுகிறார்
ஆஸ்ரிதருக்கு தஞ்சமான சௌலப்யத்தையும் மிடுக்கையும் கண்டால் நீர் இங்கனே  அஞ்சக்
கடவரோ என்ன –

உன் செவ்வடி –
அது என்னால் வருகிறது அன்று -உன் வடிவின் வை லஷ்ண்யத்தாலே வருகிறது
நீ தான் உன்னைக் கண்ணாடிப் புறத்திலே கண்டால் ஸ்வதஸ் சர்வஞ்ஞானான நீயும்
கலங்கிப் பரிய வேண்டும்படி யன்றோ உன் வடிவு இருப்பது
செவ்வடி
செவ்விய அடி என்னுதல்-நேர்மை மிக்க அடி –
சிவந்த அடி என்னுதல்
குடில ஹ்ருதர்யர்க்கும் செவ்விதாகையும் -திருமேனிக்கு பரபாகமாகையும் இரண்டும்
இவர்க்கு பய ஸ்தானம் ஆகிறது இ றே -சேஷ பூதன் சேஷி வடிவைக் கண்டால்
திருவடிகள் -என்று இ றே வ்யவஹரிப்பது-திருவடி தன் நாமம்-
ஆஸ்ரயண வேளையோடு-போக வேளையோடு -மங்களா சாசன வேளையோடு –
வாசி யற ஆஸ்ரியர் இழியும் துறை திருவடிகள் இ றே

செவ்வி
அரும்பினை அலரை -என்னுமா போலே நித்ய யௌவனமாய்-புதுமை மாறாமல் – இருக்கை

திருக்காப்பு
குறைவற்ற ரஷை
உண்டான அமங்களங்கள் போகைக்கும் -இல்லாத மங்களங்கள் உண்டாகைக்கும்
பண்ணின ரஷை என்கை
ஒரு கிரியை இன்றிக்கே குறைந்து இருப்பான் என் என்னில் –
தாழ்ந்தாரைக் குறித்து ரஷை உண்டாயிடுக என்றும்
சமரைக் குறித்தும் பரிச் சின்னமான உத்கர்ஷம் உடையாரைக் குறித்தும்
ரஷை உண்டாக வேணும் என்று சொல்லக் கடவது
தமக்கும் ஈஸ்வரனுக்கும் உண்டான நிரவதிகமான உத்க்ர்ஷ அபக்ர்ஷத்தாலே
பாசுரம் இல்லாமையாலே குறைந்து கிடக்கிறது –
வேதாந்தத்தாலே நாட்டை அடைய வென்று இருக்கிற இவர் லஷணத்தில் விழ
கவி பாட மாட்டாமை யன்று இ றே
இன்னமும் இவ் விஷயத்தில் மங்களா சாசனம் பண்ணினோம் என்று கை வாங்க ஒண்ணாத
அபர்யாப்திக்கு ஸூசகமாய் இருக்கிறது
ஸ்ரீமதே நாராயண நம அஸ்தி சொல்லாமல் போல் இங்கும்
எல்லாப் பாட்டுக்கும் இது தான் முக உரை போல் இருக்கிறது
வேத ஆதி அந்தந்களில் பிரணவம் போலே முக உரை முடி உரை இதுவே
முக வரை பாட -நாயகக் கல் போல் -மேல் உள்ள பாசுரங்களில் உள்ள வினைச் சொல்லை அன்வயத்து கொள்ளலாம் என்றுமாம் –

மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா -பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம் -உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு -என்று அந்வயம்

தொலை வில்லி மங்கலம் தொழும் -தோற்றோம் மட நெஞ்சமே -போற்றி என்றே
கைகள் ஆரத் தொழுது சொன் மாலைகள் -இத்யாதியால் ஸ்வரூபம் சொல்லிற்று
அந்தி தொழும் சொல் -என்று பலம் சொல்லிற்று –
அடிக்கீழ் -பாத பற்பு தலை சேர்த்து -அடி போற்றி -அடி விடாத சம்ப்ரதாயம்
ஸ்ரீ
ஸ்ரீ ராமானுஜாய நம
போன்று மங்களாரத்தமாக அருளிய பாசுரம் -கிரியை இன்றி –
பாட்டுக்கள் எல்லாவற்றுக்கும் பிரகாசமாய் நாயக பாசுரம் போலே இது என்னவுமாம்-

——————————————————————————————–

அடியோமோடும் நின்னோடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் உன் வல மார்பினில் வாழும் மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலது உறையும் ஆழியும் பல்லாண்டு
படை போர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு –2–

அடியோமோடும்-சேஷ பூதரான எங்களோடும்
நின்னோடும் -சேஷியான உன்னோடும்
பிரிவு இன்றி -பிரிவு இல்லாமல்
ஆயிரம் பல்லாண்டு-இந்த சம்பந்தம் நித்யமாக செல்ல வேணும்
வடிவாய் -அழகே உருவாய் -ஆபரண பூஷிதையாய்
நின்-சர்வ சேஷியான உன்னுடைய
வல மார்பினில் – வல திரு மார்பிலே
வாழும் -பொருந்தி வர்த்திக்கிற-உறைகின்ற இல்லை -இருக்கும் முறை படி மகிழ்ந்து வாழும்
மங்கையும் -நித்ய யௌவன ஸ்வபாவையான பெரிய பிராட்டியார் தொடக்கமான நாய்ச்சிமார்களும்-
குண பூர்த்தி –உம்மைத்தொகையால் -பூமி நீளா தேவிகளும் -சாயா இவ -இவர்கள் -எடுத்துக் கை நீட்டுபவர்கள் –
பல்லாண்டு-நித்யமாக செல்ல வேணும்
வடிவார்-வடிவை உடையவனாய்
சோதி -தேஜோ ராசியாய் இருக்கிற
வலத்து -உனது வலத் திருக்கையிலே
உறையும் -நித்ய வாஸம் பண்ணுபவனாய்
ஆழியும் -திரு வாழி ஆழ்வானும்–உம்மைத் தொகை -திவ்யாயுதம் திவ்யாபரணம் -இரண்டு ஆகாரம் உண்டே
பல்லாண்டு-நித்தியமாய் செல்ல வேணும்-
கருதும் இடம் பொருது -பிரியமே -எனவே பிரியாமல் இல்ல திருச் சங்கு ஆழ்வானைக் காட்ட -சங்கரய்யா உன் செல்வம் சால அழகியதே
படை -ஆயுதமாய்
போர் -யுத்தத்திலே
புக்கு -புகுந்து
முழங்கும் -கோஷியா நின்றுள்ள
அப் பாஞ்ச சந்யமும் -அந்த பாஞ்ச ஜன்ய ஆழ்வானும்
பல்லாண்டு –நித்தியமாய் செல்ல வேணும்
என்கிறார்-
சங்க தொனி இங்கே உள்ளான் என்று காட்டிக் கொடுக்குமே -அது கண்டு அதிசங்கை பண்ணி அஸ்தானே பய சங்கை பண்ணுகிறார் –

————————————————————————————————————–

அவதாரிகை-

கீழ் விக்ரஹ யோகத்தையும் குண யோகத்தையும் குறித்து மங்களா சாசனம் பண்ணினார்
இதில் உபய விபூதி யோகத்தை குறித்து மங்களா சாசனம் பண்ணுகிறார்-

கீழ்-7-1—6-10-7-2- நேராக தொடர்பு
4-10-5-2- சங்கதி -5-1- கையார் சக்கரம் -அசங்கரேவ சங்கதி -மகா உபாகாரம் சொல்லிக் கொள்கிறார் -விதி வாய்க்கிறது காப்பார் யார் -5-1-

———————————————————–
வியாக்யானம்
அடியோமோடும் நின்னோடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு

அடியோமோடும்
தம்மைப் பேணாதே மங்களா சாசனம் பண்ணுகிற இவர் தம்முடைய நித்யததையை பிரார்த்திப்பான்
என் என்னில் -ஒரு சாத்தியத்தைக் குறித்து சாதன அனுஷ்டானம் பண்ணுமவர்கள்
ஆயுராசாச்தே -என்று ஆயுஸை தத் அங்கமாக ப்ரார்த்தியா நின்றார்கள் இ றே -அவாந்தர பலன் –
அது போலே மங்களா சாசனத்துக்கு தாம் வேணும் -என்று தம்மையும் கூட்டிக் கொள்கிறார்
அத்தலைக்கு பரிகைக்கு  தாம் அல்லது இல்லாமையாலே -தாம் இல்லாத போது
அத்தலைக்கு அபாயம் சித்தம் என்று இருக்கிறார் இ றே
ஆனால் என்னோடும் என்னாதே
அடியோமோடும் -என்பான் என் என்னில் –
தேக ஆத்மா அபிமானி -தேகத்திலே ஆத்ம புத்தி பண்ணும் –
மாயாவாதி அஹங்காரத்தில் ஆத்மபுத்தி பண்ணும் அந்தக் கரணத்தில் ஆத்மபுத்தி பண்ணும்
சாங்க்யன் -அஹமர்த்தம் ப்ரக்ருதேஸ் பரம் ஸ்வயம் ப்ரகாசம் ஸ்வ தந்த்ரம் -என்று இருக்கும்
கபிலர் -பிரகிருதி புருஷ விவேக ஞானம் ஏற்பட்டால் மோஷம் என்பர் -நிரீஸ்வர வாதம்
அங்கன் கலங்கினவர் அன்று இறே  இவர்
முறை அறியுமவர் ஆகையாலே -அடியோம் -என்றார்
கர்மோபாதிகமாக வந்த வவஸ்தைகள்  எல்லாம் மறைந்தாலும் மறையாத ஸ்வாபம் தாஸ்யம்
என்று இருக்குமவர் இ றே இவர் -கர்மம் காரணமாக ஒட்டி இருப்பவை சரீரம் சம்சாரம் அஹங்காரம் மமகாரம் –
-தாஸ்யம் இயற்க்கை -தொலையாதது

ஆனால் அடியோமோடும் -என்கிற பஹூ வசனத்துக்கு கருத்து என் என்னில் –
தான் தனியராய் நின்று மங்களா சாசனம் பண்ணுமத்தால் பர்யாப்தி பிறவாமையாலும்
அனைத்து ஆத்மாக்களுக்கும் சேஷத்வம் அவிசிஷ்டம் ஆகையாலும்
இப்பிரபத்தி அவர்களுக்கு இன்றிக்கே இருக்கச் செய்தேயும் ஸ்வ அபிப்ராயத்தாலே
அருளிச் செய்கிறார்

நின்னோடும்
வ்யாவ்ர்த்தமான சேஷித்வம் மங்களாவஹம் ஆகையாலே -சர்வரும் கூடிப் பரிந்தாலும்
போராத படியாய் இ றே இருபது
இத்தால் திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை பற்றி மங்களா சாசனம் பண்ணுகிறார்-சேஷத்வ பிரதிசம்பந்தி -சேஷித்வம் –
சேவடிக்கு செவ்வி திருக்காப்பு -திருமேனிக்கு -ரூபத்துக்கு பல்லாண்டு
இங்கே திருவடி பிரஸ்தாபம் இல்லை திவ்ய ஆத்மா ஸ்வரூபத்துக்கு பல்லாண்டு –

பிரிவு இன்றி
இரண்டு தலையும் நித்யமானவோபாதி -சம்பந்தமும் நித்தியமாய் இ றே இருப்பது
அதுவும் தம்முடைய மங்களா சாசனத்தாலே உண்டாவதாக நினைத்து இருக்கிறார்
சாஸ்திர சித்தம் இருந்தாலும் தம்மால் என்று -திருப்பாலாண்டு பலத்தால் என்று நினைத்து இருக்கிறார்

ஆயிரம் பல்லாண்டு
கால தத்வம் உள்ள தனையும் இஸ் சம்பந்தம் நித்யமாய்ச் செல்ல வேணும் என்கிறார்
ஆக்கையுள்ளும் ஆவி உள்ளும் அல்ல புறத்தின் உள்ளும் நீக்கம் இன்றி எங்கும் நின்றாய் -பிரியாமல் இருப்பவன்
-அஸ்தானே பய சங்கை பண்ணி மங்களா சாசனம் பண்ணுகிறார்
புத்தி பேதலிக்கும் நமக்கு -அது கூடாதே –
ஒத்துக்காமல் ராவணன் -ஒத்துக் கொண்டு விபீஷணன் -இசைவித்து என்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான்

வடிவாய் இத்யாதி
உண்டான அமங்களங்கள் போகைக்கும் -இல்லாத மங்களங்கள் உண்டாகைக்கும்
தன் கடாஷமே அமைந்து இருக்கும் இவள் -அகலகில்லேன் இறையும் -என்று நம்மை
பிரிய மாட்டாதே இருக்க -நமக்கு வருவதொரு அமங்களங்கள் உண்டோ -என் பயப் படுகிறீர் என்ன –
தேவரீரும் பிராட்டியுமான சேர்த்தி நித்யமாக செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணுகிறார்-

வடிவாய் -மங்கை மார்பு இரண்டுக்கும் விசேஷணம்

வடிவாய்-
வடிவு -என்று நிறமாய் -இவளோடே சேர்த்தியாலே திரு மேனிக்கு உண்டான புகரைச் சொல்கிறது
மையார் கரும் கண்ணி -செய்யாள் -திரு இருந்த திருமார்பன் -பரபாகம் வர்ணச் சேர்க்கை -திருமார்புக்கு வடிவு –
அப்ரமேயம் ஹிதத்தேஜோ ய்ஸ்யஸா ஜனகாத்மஜா -என்று ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளை
எனக்கு என்று இட்டுப் பிறந்த தத்வத்தோடு எதிரிட்டு வெல்ல நினைக்கிறாயோ என்றான் இ றே மாரீசன்
ஸ்ரத்தயாதே வோதேவத் வமஸ் நுதே -என்னக் கடவது இ றே–ஸ்ரத்தையா அதேவா -பிராட்டி உடன் சேராமல் தெய்வமாக இல்லையே -திருவில்லா தேவர் –
ஆனால் இவளாலே இவனுக்கு உத்கர்ஷம் ஆகில் அவனுடைய சேஷித்வம் குலையாதோ
என்னில் -மாணிக்கம் ஒளியாலே பெரு விலையனாம் காட்டில் மாணிகத்தின் உடைய ப்ரதான்யம்
அழியுமோ -பூ மணத்தால் பெரு விலையனாம் காட்டில் பூவுக்கு ப்ரதான்யம் அழியுமோ
விசேஷணம் -பிராட்டி அவனுக்கு சொத்து -மாணிக்கத்துக்கு ஒளி போலே பூவுக்கு மணம் போலே –

வடிவாய்
வடிவாய் -மங்கை -ஸ்ரீ கௌஸ்து பாதிகள் போலே ஆபரண பூதையாய் -அத்தால் வந்த அழகைச் சொல்லவுமாம்

நின் வல மார்பினில்
சர்வாதிகனான உன்னுடைய வல மார்பினில் -சர்வ யஞ்ஞமயமாய் -யோகீ சிந்த்யமாய் இ றே
வடிவு இருப்பது
வேத வேதாந்தம் இரண்டாலும் ஏற்றம் திரு மார்புக்கு உண்டே
யஜ்ஞ வராஹ பெருமாள் -அவனே சர்வ யஜ்ஞம் –பூர்வ பாகம் -சர்வ யஜ்ஞமயம்
உத்தர பாகம் ப்ரஹ்மம் -யோகி ஹ்ருதய த்யானம் கம்யம் –
கர்மத்துக்கும் உபாசனத்துக்கும் விஷயம் லஷ்யம் என்பதால் வந்த ஏற்றம் –

வல மார்பினில்
அணைக்கைக்கு அணித்தாய் இருக்கை

வாழ்கின்ற
மார்பில் இருப்பு தான் நித்தியமாய் போக ரூபமாய் இருக்கை
அம் மார்விலே இருக்கச் செய்தேயும் -இறையும் அகலகில்லேன்-என்று அதி சங்கை பண்ணும்படி
இ றே போக்யதை இருப்பது

மங்கையும்
யுவதிஸ்ஸ குமாரிணி -என்கிற பருவத்தை சொல்கிறது
யுவா குமாரா -என்று இவ் விரண்டு அவஸ்தையும் உண்டு அவனுக்கு
இவளுக்கு கௌமார அவஸ்தையால் வந்த மௌக்த்யமே உள்ளது –
யுவதியும் ஆகக் கடவள் -எங்கனே என்னில் -போக ஸ்ரோதச்சில் வந்தால் இவள்
தளர்த்திக்கு அவன் கை கொடுக்க வேண்டும்படி யான மௌக்த்யத்தை சொல்லுகிறது

மங்கையும் –
ச சப்தத்தாலே மகிஷ்யந்தரத்தை சொல்லுதல்
மங்கள ஆவஹையான இவளும் ஆசார்ஸ்யை என்னுதல்-உனக்கும் மட்டும் இல்லை இவளுக்கும் பல்லாண்டு என்றுமாம்-

பல்லாண்டு
கால தத்வம் உள்ள தனையும் இச் சேர்த்தி நித்யமாய்ச் செல்ல வேணும்

வடிவார் சோதி இத்யாதி –
இச் சேர்த்திக்கு ஒரு தீங்கு வராதபடி கல் மதிள் இட்டால் போலே இருக்கிற ஆழ்வார்களைப்
பாரீர் என்ன -அவர்களோட்டை சேர்த்திக்கு என்ன தீங்கு வருகிறதோ என்று மங்களா சாசனம்
பண்ணுகிறார் –

வடிவார் சோதி –
காளமேக நிபச்யாமமான திருமேனி ஸ்வ தேஜஸ் ஸாலே வ்யாப்தமாம் படியாய் இருக்கை –
புருஷம் க்ருஷ்ண பிங்களம் -என்னும் படியாய் இ றே இருப்பது
தேஜோ ராசியாய் இருக்கும் வடிவை உடையவன் என்னவுமாம்
சோதி ஆர் வடிவு -என்றும்
வடிவு ஆர் சோதி -திருமேனியை மூழ்கும் படியான தேஜஸ் என்றுமாம்

வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு –
வலம் அருகே நித்யவாசம் பண்ணுமவனாய் -பிறருக்கு அநபி பவநீயனாய் இருக்கிற
ஆழ்வானோட்டை சேர்த்தி நித்தியமாய் செல்ல வேணும் என்கிறார் –
ஆழியும் -என்கிற சப்தத்தாலே -ஆயுதாகாரத்தாலே ரஷகமாகக் காட்ட -ஆபரண
புத்தியாலே அவனையும் குறித்து மங்களா சாசனம் பண்ணுகிறார் என்கை –

படை போர் இத்யாதி –
நம் கையை விடாதே- த்வநியாலே எதிரிகளை யழிக்கும் இவனைப் பாரீர் என்ன –
படை -சேனை -ஆயுதம் இரண்டு அர்த்தம் –
படை போர் முழங்கும் –
சேனையை உடைய யுத்தத்திலே புக்கு முழங்கும் என்னுதல்
யுத்தத்திலே ஆயுதமாக புக்கு முழங்கும் என்னுதல்

முழங்கும் –
சகோஷொ தார்த்தராஷ்டாராணாம் ஹ்ருதயா நிவ்யதாரயத் -என்றும் –
யஸ்ய நாதேன தைத்யானாம் பலஹா நிரஜாயத-என்றும் பிரதிகூலர் மண் உண்ணும்படியும்
அனுகூலர் வாழும்படியாய் இ றே த்வனி இருப்பது -இத் த்வனி இவருக்கு பய ஸ்தானமான படி
என் என்னில் -த்வனி வழியே நின்று இடம் காட்டிக்  என்று பயப்படுகிறார்
ஆலிலை அன்னவசம் செய்யும் பெருமான் -ஆழ்வார் பயப்பட -திருக் கோளூர் -கண் வளரும் படியை காட்டிக் கொடுக்க -கொடியார் மாடம் –
த்வஜ ஸ்தம்பம் நீ உள்ளே இருப்பதைக் காட்டிக் கொடுக்குமே -அதனாலே பய ஸ்தானம் –

அப் பாஞ்ச சன்னியமும் –
முன்னிலையாய்  இருக்க பரோஷ நிர்த்தேசம் பண்ணுவான் என் என்னில் –
புத்ரனை அலங்கரித்த தாய் -தன் கண் படிலும் கண் எச்சிலாம் -என்று பார்க்கக் கூசுமா போலே
மங்களா சாசனம் பண்ணுகிற தம்முடைய கண்ணையும் செறித்து முகத்தை மாற வைத்து
சொல்கிறார் –
காட்டேன்முன் உன் உரு என் உயிர்க்கு அது காலனே முதல் திருப்பி –
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே எனக்கே கண்ணனை யான் கொள்ளும் சிறப்பே –
அன்று யுத்தத்தில் பிறந்த ப்ரமாததுக்கு இன்று மங்களா சாசனம் பண்ணுகிறார்–என்றுமாம்
——————————————————————————

இவ்விரண்டு பாட்டும் -திருமந்த்ரார்தமாய் இருக்கிறது
அடியோமோடும் -என்கிற இடத்தில் ப்ரணவார்த்தத்தை சொல்லிற்று
முதல் பாட்டில் பல்லாண்டு -என்ற பிரதம பதத்தால் நமஸ் சப்தார்தம் சொல்லிற்று
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா -என்று அப்பாட்டில் விக்ரஹ யோகத்தையும் –
சௌர்ய வீர்யாதி குண யோகத்தையும் -இரண்டாம் பாட்டில் விபூதி யோகத்தையும்
சொல்லுகையால் நாராயண பதார்த்தம் சொல்லிற்று –
உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு -என்கையாலே சதுர்த்தியில் பிரார்த்திகிற அர்த்தத்தை
சொல்லிற்று ஆய்த்து-

———————————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -4-திருப்பல்லாண்டு தனியன்-ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் /அவதாரிகை -ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

April 16, 2016

ஸ்ரீ நாத முனிகள் அருளிச் செய்த -முதல் தனியன்

குருமுகம் அநதீத்ய ப்ராஹ வேதான் அசேஷான்
நர பதி பரிக்லிப்தம் சுல்கம் ஆதாதுகாம
ஸ்வசுரம் அமர வந்த்யம் ரங்க நாதஸ்ய ஸாஷாத்
த்விஜகுல திலகம் தம் விஷ்ணு சித்தம் நமாமி –

——————————————————————————————————–
குருமுகம் -ஆசார்ய முகத்தாலே
அநதீத்ய-அப்யசிக்காமலே
ப்ராஹ -உபன்யசித்தாரோ
வேதான் -வேதங்களை
அசேஷான் -சமஸ்தமாகிய
நர பதி -ஸ்ரீ வல்லப தேவன் என்கிற ராஜாவினால்
பரிக்லிப்தம் -ஏற்படுத்தப்பட்ட
சுல்கம்-வித்யா சுல்கத்தை
ஆதாதுகாம -க்ரஹிப்பதற்கு ஆசை உள்ளவராய்
ஸ்வசுரம் -மாமனாரும்
அமர -தேவதைகளால்
வந்த்யம் -ஸ்தோத்ரம் செய்வதற்கு தக்கவரும்
ரங்க நாதஸ்ய -ஸ்ரீ ரெங்க அதிபனுக்கு
ஸாஷாத் -பிரத்யஷமாய்
த்விஜகுல -ப்ராஹ்மண வம்சத்துக்கு
திலகம் -அலங்கார பூதருமாகிய
தம் விஷ்ணு சித்தம் -அந்த பெரியாழ்வாரை
நமாமி -சேவிக்கிறேன்-

——————————————————————————————————————————

அவதாரிகை –
இந்த தனியன் திருப்பல்லாண்டு பாடுகைக்கு அடியான பெரியாழ்வார் வைபவத்தை
பெருக்க பேசி அவரை ப்ரணிபாத நமஸ்காரம் பண்ணும்படி சொல்லுகிறது –

——————————————————————————————————————————
வியாக்யானம் –
குருமுகம் அநதீத்ய –

ஸ்வதஸ் சர்வஞ்ஞனான சர்வேஸ்வரனும் -சாந்தீபனேஸ் சக்ருத்
ப்ரோக்தம் ப்ரஹ்ம வித்யா சவிஸ்தரம் -என்னும்படி -சாந்தீபநிடத்திலே ஆய்த்து-அவந்திகா உஜ்ஜைன்-
சகல வேதங்களையும் அதிகரித்தது –
இவர் அங்கன் குருகுல வாஸம் பண்ணி -தந் முகேன -நலங்களாய நற் கலைகள் நாலையும் –
அதிகரியாதே -புண்டரீகரைப் போலே துளபத் தொண்டிலே மண்டி –
ஸ்ரீ மாலா காரரைப் போலே சூட்டு நன் மாலைகள் தொடுத்து -தூயன ஏந்தி பிரத்யுபகாரம் எதிர்பார்க்காத தூய்மை
வட பெரும் கோயில் உடையானுக்கு சூட்டி அடிமை செய்து போந்தார் –
ஏவம் வித தாஸ்ய ரஸஞ்ஞரான இவர்-

———————————————————————————–

நர பதி பரிக்லிப்தம் சுல்கம் ஆதாதுகாம-

என்று ஸ்ரீ வல்லப தேவன் என்கிற ராஜாவாலே பரதத்வ நிர்ணய பூர்வகமாக
புருஷார்த்த லாபத்தை லபிக்கைக்காக அநேகமான அர்த்தத்தை வித்யா சுல்கத்தை -பொற் கிளியாக -கல்பித்து கல் தோரணத்திலே கட்டிவைக்க
மழைக்காலத்துக்கு வெய்யில் காலம் உழைத்து -வயசான காலத்தில் –இளமையில் –அங்கே செல்ல என்ன செய்கிறோம்
தத்வம் அறிந்து தானே புருஷார்த்தம் நிர்ணயம் -செல்வ நம்பி ஏற்பாடு செய்து
இப்படி நிர்மிதமான அந்த தநத்தை வட பெரும் கோயில் உடையானுடைய ஆக்ஜையாலே
ஆஹரித்துக் கொண்டு வர வேணும் என்கிற அபேஷை உடையராய் -வித்வித் கோஷ்டியிலே சென்று –

——————————————————————————————–
அசேஷான் -வேதான் -ப்ராஹ –
வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிழி யறுத்தான் என்றதைச் சொல்லுகிறது –
இவருக்கு அப்போது -வேதப் பிரானாரான -பீதகவாடைப் பிரானார் தாமே -பிரம குருவாய் –
போதில் கமல வன்னெஞ்சம் புகுந்து -நாவினுளானாய் -நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளை
இவர் முகேன பேசுவித்தான் இ றே

எயிற்றிடை மண் கொண்ட எந்தையான -ஞானப் பிரான் ஆய்த்து இவரை ஞானக் கலைகளை
ஒதுவித்தது -ஆகையாலே நாட்டாருக்கு ஓதின இடம் ஒழிந்து ஓதாத விடம் தெரியாததாய்
இருக்கும் -இவருக்கு மயர்வற மதி நலம் அருளுகையாலே அசேஷ வேதங்களையும்
அருளிச் செய்யும்படி விசதமாய்த்து -அத்தாலே -வேதாந்த விழுப் பொருளின் மேல் இருந்த
விளக்கை விட்டு சித்தன் விரித்தன் -என்னும்படி -பரதத்வ ஸ்தாபனம் பண்ணி அந்த
வேத தாத்பர்யமான திருப்பல்லாண்டை -அங்கு ஆனை மேல் மங்கல வீதி வருகையாலே –
மங்களா சாசனமாக அருளிச் செய்தார் -வேதான் அசேஷான் -என்கிறதுக்கு உள்ளே இதுவும் அந்தர்ப்பூதம்
வேதைஸ் ச ஸர்வை ரஹ மேவ வேதய -15-15–என்னக் கடவது இ றே-

———————————————————————————————————————-
ஸ்வ ஸூரம் –
அநந்தரம் வித்வான்களை வென்று கிழி யறுத்து -அந்த தநத்தை ஸ்வாமி சன்னதியிலே
சமர்ப்பித்து -மீளவும் தம் துறையான துளவத் தொண்டிலே மூண்டு நடத்திக் கொண்டு போர –
அக்காலத்திலே ஆண்டாள் இவர்க்கு திருமகளாய் திருத்துழாய் அடியிலே அவதரிக்க இவரும்
திருமகள் போலே வளர்த்துப் போர

அஞ்சு பிராயத்திலே திருவாய்ப்பாடியில் பஞ்ச லஷம் குடியில் பெண்களை அநுகரித்து
திருப்பாவை பாடி -அதுக்கு மேலே அவர் தொடுத்த துழாய் மலரை –
வியன் துழாய் கற்பென்று சூடும் கரும் குழல் மேல் -என்கிறபடியே
சூடிக் கொடுத்தவராய் -பின்பு ப்ராப்த யௌவனையாய் –
மானிடவர்க்கு என்று பேச்சு படில் வாழாத தன்மையளாய் –
தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர் -என்றும் –
பண வாள் அரவணை பற்பல காலமும் பள்ளி கொள் மணவாளர் -என்றும் -சொல்லப்படுகிற
அழகிய மணவாள பெருமாளை பிரார்த்தித்து திருமணம் புணருகையாலே அவர்
அவர் மணவாள பிள்ளை யானார் –
மறை நான்கு முன்னோதிய பட்டனுக்கு இ றே -பட்டர் பிரான் கோதையைக் கொடுத்தது –
ஆகையால் ஔபசாரிகமாக-பேச்சுக்கு இல்லாமல் — அன்றிக்கே -சாஷாத் -யதாவாக ரெங்கநாதனுக்கு பட்டநாதர் மாமனார் ஆனார்
-பெரியாழ்வாரை தேவர்கள் வாழ்த்த என்றுமாம் -அத்தாலே அமர வந்த்யம் என்கிறது

——————————————————————————————————————————————
அத்தாலே அமர வந்த்யம் என்கிறது –

அதாவது –
வடிவுடை வானோர் தலைவனான தம்மை அவர்கள் அடி வணங்கி ஏத்துமா போலே –
இவர் தம்மையும் அமரர் வந்திக்கும்படியான வரிசை கொடுத்தபடி –
தம்மையே ஒக்க அருள் செய்வர் இ றே-வாரணம் ஆயிரம் -போலே
பட்டநாதரான மாதரம் அன்றிக்கே தேவர்களாலும் ஸ்துதித்யராய் இருக்குமவர் என்கிறது
விரும்புவர் அமரர் மொய்த்து -என்னக் கடவது இ றே
அஸ்தானே பய சங்கிகள் ஆனவர்களையும் இவர் மங்களா சாசனம் பண்ணுமவர் ஆகையாலே
அவர்களும் இவர்க்கு ஸ்துதிய அபிவாதனந்களை -ஸ்தோத்ரம் நமஸ்காரங்கள் -பண்ணுவர்கள் –
பரஸ்பர நீச பாவை -என்னக் கடவது இ றே

—————————————————————————————————————————————-
இனி ரெங்கநாதனோடே சம்பந்திகைக்கு ஈடான பட்ட நாத குலத்தை சொல்லுகிறது-
த்விஜ குல திலகம் என்று –

வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தர் ஆகையாலே –
அந்தணனை யான் கண்டது அணி நீர் தென்னரங்கத்தே -என்னும்படி கண்டு கொடுத்தார் –
த்விஜ குல திலகர் ஆகையாவது –
ப்ராஹ்மண குலத்துக்கு எல்லாம் முக்யராய் -சிரஸா வாஹ்யராய் -ஸ்ரேஷ்டராய் இருக்கை என்றபடி –

———————————————————————————————————————–
தம் விஷ்ணு சித்தம் –
அப்படி ஸ்ரேஷ்டராய் -விஷ்ணுவை எப்போதும் சித்தத்திலே உடையவர் ஆனவரை என்கிறது –
வில்லாண்டான் தன்னை வில்லி புத்தூர் விட்டு சித்தன் விரும்பிய சொல் -என்று
அடியிலே தமக்கு நிரூபகமாக ஆழ்வார் தாமே அருளிச் செய்தார் இ றே –
விட்டு சித்தர் -என்கையாலே –
மின்னு நூல் விட்டுசித்தன் விரித்த -என்று பெரியாழ்வார் திருமொழி அடியிலும்
விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலனை -என்று முடிவிலும் அருளிச் செய்கையாலே
இந்த திரு நாமத்தாலே அந்த பிரபந்த ப்ரவக்தா என்னுமதுவும் ஸூசிதம் –
அதுக்கும் தனியன் இதுவே இ றே –
அநந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து -ஓர் அளவு ஆசை வைத்து -என் மனம் தன்னுள்ளே வந்து
வைகி வாழச் செய்தாய் எம்பிரான் -என்னும்படி
இவர் திரு உள்ளத்திலே அத்ய அபிநிவிஷ்டனாய் இருக்கும் ஆய்த்து –
விஷ்ணு சித்தம் -விஷ்ணு நாவ்ய பதேஷ்டவ்யராய் -இருக்கிற படி -ஏகாங்கி -எல்லாம் விஷ்ணுவை வைத்தே க்ராமம் குலம் எல்லாம் –
நின் கோயிலில் வாழும் வைட்டணவன் -என்றார் இ றே
அவனும் வைஷ்ணவ சம்பந்தத்தை அபேஷித்து கைப் பற்றினான் –

————————————————————————————————————————–
தம் விஷ்ணு சித்தம் நமாமி –
அந்த விஷ்ணு சித்தரை -கிழி யறுத்தான் பாதங்கள் யாமுடைய பற்று -என்னும்படி
சேவிக்கிறேன் என்கிறது -நமஸ்காரமும் சேவையும் பர்யாயம் –
ஓம் நமோ விஷ்ணவே -என்னுமது விஷ்ணு சித்த விஷயத்திலே யாய்த்து –
விசேஷஞ்ஞர்க்கு பகவத் விஷயத்திலே அரை வயிறாய் -இங்கே இ றே எல்லாம்
பூரணமாவது -நம்பி விட்டு சித்தர் இ றே-ததீய விஷயத்திலே தான் பூர்ணம்

——————————————————————————————————————————–
இத்தால்
பிரதம பிரபந்த அனுசந்தான தசையில்
தத் வக்தாவான ஆழ்வாரை -தம் பூர்வம் அபிவாதயேத் -என்று பிரதமம் திருவடி
தொழும் படியை சொல்லிற்று ஆய்த்து

————————————————————————————–

இரண்டாம் தனியன் -மின்னார் தட மதிள் இத்யாதி –
அவதாரிகை –
இதில் ஸ்ரீ வில்லி புத்தூர் பட்டர்பிரானான பெரியாழ்வார் அவதரண ஸ்தலத்தை அனுசந்திப்பார்
திருவடிகளைத் தொழுகையால் உண்டான ப்ரீதியையும்
அவர் செயலைச் சொல்லுகையால் உண்டான விரோதி நிவர்த்தியாதிகளில் த்ருப்தியையும்
மனசோடே சொல்லி உலாவுகிறதாய் இருக்கிறது –
——————————————————————————————————-
ஸ்ரீ பாண்டிய பட்டர் அருளிச் செய்த தனியன்

மின்னார் தட மதிள் சூழ் வில்லிபுத்தூர் என்று ஒரு கால்
சொன்னார் கழல் கமலம் சூடினோம் -முன்னாள்
கிழி யறுத்தான் என்று உரைத்தோம் கீழ்மையினில் சேரும்
வழி யறுத்தோம் நெஞ்சமே வந்து-

மின் -மின்னுதல் -மணிகளால் ஒளி விடுதல்
ஆர் -நிறைந்த அதிகமான
தடம் -அகலப்பரப்பும் உயர்ந்து ஓங்குகையும் உள்ள
மதிள் -திரு மதிளாலே
சூழ் -வளைக்கப்பட்ட
வில்லி புத்தூர் என்று -ஸ்ரீ வில்லி புத்தூர் என்று
ஒரு கால் சொன்னார் -ஒரு தரம் உச்சரிதவருடைய
கழல் கமலம் -திருவடித் தாமரைகளை
சூடினோம் -விசேஷ புஷ்பமாக முடித்தோம்
முன்னாள் -புருஷார்த்தம் வெளியாக காலத்தில்
கிழி -பொருள் முடிப்பை
அறுத்தான் என்று -அறுத்து வெளி இட்டவர் என்று
உரைத்தோம் -சொல்லப் பெற்றோம்
ஆகையால்
கீழ்மை -நரகத்தில்
இனி -இனிமேல்
சேரும் -முன் போல் செல்லுகிற
வழி -மார்க்கத்தை
அறுத்தோம் -அறப் பண்ணினோம்
நெஞ்சே -மனசே
வந்து -சம்ஸார ரஹீதராய் வந்து
——————————————————————————————————-
வியாக்யானம்

மின்னார் தட மதிள் சூழ் –
தேஜ ப்ரசுரமான பெரிய மதிள்களால் சூழப் பட்ட வில்லி புத்தூர் -இத்தால்
செம்பொன் ஏய்ந்த மதிளாய் இருக்கை –
பிரதி கூலருக்கு கிட்ட ஒண்ணாத படியாய் -அனுகூலருக்கு கண்டு வாழும் படியாய் இருக்கை
கல் மதிள் போல் அத்தலைக்கு அரணாய் -மங்களா சாசன பரரான பெரியாழ்வார் இருக்குமூரில் மதிள் இ றே –
ஏவம்விதமான மதிளாலே சூழப்பட்ட-காவலிட்ட பாசுரங்கள் அருளிய இவர் வாழும் தேசம் அன்றோ
—————————————————————————————————–
வில்லிபுத்தூர் என்று ஒருகால் சொன்னார் கழல் கமலம் சூடினோம் –
ஒருகால் ஆகிலும் ஸ்ரீ வில்லிபுத்தூரை உச்சரித்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய ஸ்ரீ பாத கமலங்களை
பைம் கமலத் தண் தெரியலாக -தலையிலே சூடினோம் –
வார்த்தா மாலை -சம்சாரிகள் குற்றம் பார்க்கக் கூடாது -நம்மால் மாற்ற முடியாதே
முமுஷுக்கள் குற்றம் பார்க்கக் கூடாது -செல்வாக்கு உள்ளவர் –
அருளிச் செயல்களை சொல்வதே கடமை –
வேஷத்தில் ஸ்ரீ வைஷ்ணவர் ஆக இருந்தாலும் -மதிக்க வேண்டும் -நாளாக நாளாக நல்ல பாகவதனாக மாறலாம்
-அபசாரம் பண்ணக் கூடாது -தோஷம் பார்க்கக் கூடாது -என்றவாறு
கோவிந்தன் தன் அடியார்களாகி எண் திசைக்கும் விளக்காகி நிற்பார் இணை யடி என் தலை மேலவே –
என்று இ றே ஆழ்வாரும் அருளிச் செய்தது –
ஸ்ரீ வில்லிபுத்தூர் தான் வட பெரும் கோயில் உடையானுக்கும் ஆழ்வாருக்கும் ஆண்டாளுக்கும் நிரூபகமான தேசமாய்த்து –
வில்லிபுத்தூர் உறைவான் –
வில்லிபுத்தூர் பட்டர் பிரான் –
அன்ன வயல் புதுவை ஆண்டாள் –
கோதை பிறந்தவூர் -வில்லிபுத்தூர் -என்னக் கடவது இ றே
பிரணவம் போலே மூவரும் கூடலாய் இருக்கை
பெருமாள் ஆண்டாள் பெரிய திருவடி -அணி புதுவை பிரணவமே சேவை அங்கு –
இப்படி உத்தேச்யமான ஊரை ஒருகால் அனுசந்திப்பார் எப்போதும் உத்தேச்யர் ஆகையாலே
அவர்கள் ஸ்ரீ பாதங்கள் சிரோ பூஷணமாக தார்யம் என்கிறது –
ஊரைச் சொன்னாய் -அவன் கொண்டாடுவான் பிடித்தாரை நாமும் பிடிக்க வேண்டுமே –
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசு -என்னுமா போலே –
————————————————————————————————-

புருஷார்த்தம் சொல்லி மேலே தடங்கல் விரோதிகள் போனவற்றை அருளுகிறார் -கிடைத்த ஆசையை முதலில் சொல்லி மகிழ்வோமே –
பின்னை விரோதிகள் செய்தது என் என்னில் –
முன்னாள் கிழி யறுத்தான் என்று உரைத்தோம் கீழ்மையினில் சேரும் வழி யறுத்தோம் –
முன்னாள் கிழி யறுக்கை யாவது –
முற்காலத்திலே பாண்டியன் வித்யா சுல்கமாக கட்டின த்ரவ்ய கிழியை அங்கே  சென்று
வேதாந்தார்த்த முகேன -விஷ்ணுவே பரதத்வம் என்று விஷ்ணு சித்தரான தாம் வித்வஜ்
ஜனங்களை வென்று த்ரவ்யக் கிழியை யறுத்த ஆழ்வார் உடைய இந்த அத்யத்புத கர்மத்தை அனுசந்தித்தோம்
அத்தாலே
கீழ்மையினில் சேரும் வழி யறுத்தோம் -சிறந்த சேஷ்டிதங்களை அனுசந்திக்க நமது வினைகள் போம் –

ஜந்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி -த்யக்த்வா தேஹம் -புநர்ஜன்ம நேதி
மாமேதி சோர்ஜுந -என்று-
நம்முடன் பரிமாற நம்மைப் போலே இருக்க -பெரியவன் கருணையால் வந்தவன் என்று நினைக்காமல் –
யோ வேத்தி தத்வதாக -உண்மையாக -அறிந்து -அவதார ரகசியம் வந்தால் அதுவே கடைசி ஜன்மம் என்றவாறு –
புருஷோத்தமன் வித்யையாலும் -அவன் புருஷோத்தமன் என்கிற ஞானம் -இது போலே -கிட்டும்-
இது இது உது –உன் செய்கை நைவிக்கும் –
பக்தி பிரபத்தி -சக்தி இருந்தாலும் விளம்பம் பொறுக்காமல் பிரபத்தி என்றால் –
அவதார ரகசியம் புருஷோத்தமன் ஞானம் அங்கமாக கொண்டு பக்தி பண்ணினால் மோஷம் அந்த ஜன்மம் –
பக்தியில் பிராப்தி இல்லையே -ஸ்வா தந்த்ர்யம் வரும்
ஸ்வரூப விரோதம் அபிராப்தம் என்பதால் பக்தியை விட்டார்கள் பூர்வர்கள் –
கிருஷ்ண விஷயத்தில் ஜன்ம கர்மங்கள் ஜன்ம சம்சார பந்தத்தை அறுக்குமா போலே
யாய்த்து விஷ்ணு சித்தர் ஜன்ம கர்மங்களும் –
இங்கும் ஸ்ரீ வில்லி புத்தூர் ஜன்மமும் கிழி யறுக்கை கர்மமுமாய் இருக்கும் –
கீழ்மையினில் சேரும் வழி யறுக்கை யாவது -பகாசுரன் வாயைக் கிளித்த சேஷ்டிதம் அவனது

நிஹீன க்ர்த்யத்தாலே ப்ராபிக்கும் ப்ரதிபந்தகமான மார்க்கத்தை சேதித்தோம் –
புற நெறி களை கட்டு -அவைதிக மார்க்கத்தை அடைகை பாப பலம் இ றே –
மெய்ம்மை பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டு இருப்பர் -என்று இவர் தாம் சந் மார்க்க வர்த்திகள் இ றே
சமரச சன்மார்க்க வாதி -வேத மார்க்கம் -சத் மார்க்கம் -பரம வைதிகர்
அன்றிக்கே
கீழ்மையினில் சேரும் வழி -என்று
அத பதநத்திலே ப்ராப்தமான மார்க்கம் என்று அர்ச்சிராதி மார்க்கத்துக்கு கீழாய்
புநராவர்த்தி லஷண ஹேதுவான தூமாதி மார்க்க த்ரயத்தையும் நிரோதித்தோம் -தூமாதி மார்க்கம் -சந்திர கதி -நரக பித்ரு லோக மார்க்க்கம் வேற –
——————————————————————————
நெஞ்சமே வந்து
நெறி நின்ற நெஞ்சாய் -நீ அநுகூலிக்கை யாலே இந்த லாபத்தை லபித்தோம்
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழலாமல் மனஸ் ஆத்மாவழி போக வேண்டுமே —
வந்து –
இவ்வளவும் வந்து –
ஆழ்வார் அளவும் வந்து -வில்லி புத்தூர் என்று ஒரு கால் சொன்னார் கழல் கமலம் சூடினோம்
வெகுதூரம் பாகவத பிரபாவம் சொல்லிய நெஞ்சு என்றவாறு –

———————————————————————————————–

கீழ்மையினில் சேரும் வழி யறுத்தோம்

இதுவன்றோ நீ அநுகூலித்ததால் பெற்ற  பேறு -நீ என் வழி வருகையாலே
இவை எல்லாம் பெற்றோம் -இஷ்ட ப்ராப்தியோபாதி அநிஷ்ட நிவாரணமும் பலம் இறே
நெஞ்சமே வந்து
நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால் என் செய்யோம் இனி என்ன குறைவினம் –
என்றால் போலே பெற்ற பேற்றைப் பேசி நெஞ்சோடு ஹர்ஷிக்கும் படியைச் சொல்கிறது
வில்லி புத்தூர் என்று ஒரு கால் சொன்னார் என்றது –
வண்டு இன்னிசைக்கும் வில்லி புத்தூர் -என்றும் –
மென்னடை யன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் -என்றும் –
பகவத் விஷயத்திலே தகப்பனாரும் மகளாரும் ஒரு கால் சொன்னால் போலே
பாகவத விஷயமாக ஒரு கால் சொன்னார் -என்றபடி-பாகவத பிரபாவம் பகவத் பிரபாவம் விட பெரிதானதே –
சம்பந்த அநுசந்தானம் ஸக்ர்த் என்றபடி –
முதல் தடவை -சொல்வது சம்பந்தம் வெளிப்படுத்த
மீண்டும் சொல்வது ஆனந்தத்துக்கு போக்குவீடாக –

————————————

ஸ்ரீ பாண்டிய பட்டர் அருளிச் செய்த தனியன்

பாண்டியன் கொண்டாட -அவதாரிகை –
இதில் பிரபந்த வக்தவான பெரியாழ்வார் திருவடிகளில் உபாய ச்வீகாரத்தை சொல்கிறது

பாண்டியன் கொண்டாட பட்டர்பிரான் வந்தான் என்று
ஈண்டிய சங்கம் எடுத்தூத -வேண்டிய
வேதங்களோதி விரைந்து கிழி யறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று –

பாண்டியன் -ஸ்ரீ வல்லப தேவன் என்கிற பாண்டிய ராஜன்
கொண்டாட -மேன்மேல் ஏத்த
பட்டர்பிரான் -ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு தலைவன்
வந்தான் என்று -எழுந்து அருளினான் என்று
ஈண்டிய -கூடின அநேகமான
சங்கம் எடுத்து -சங்குகளைக் கொண்டு
ஊத -அநேகர் சப்திக்க
வேண்டிய -அக்காலத்துக்கு ஆவஸ்யகமாகிய
வேதங்கள் -வேதார்தங்களை
ஓதி -தெரியச் சொல்லி
விரைந்து-தாமசியாமல்
கிழி -வித்யா சுல்கமாகிய பொருள் முடிப்பை
யறுத்தான் -அறுத்தவனுடைய
பாதங்கள் -திருவடிகளே
யாமுடைய -நாங்கள் ஆஸ்ரயமாக உடைய
பற்று -ஆதாரம் –
————————————————————-
வியாக்யானம் –
பாண்டியன் கொண்டாட –
தென்னன் கொண்டாடும் போலே -நமக்கு பரதத்வ நிர்ணயம் பண்ணித் தரும்படி
பட்டர்பிரான் வந்தான் என்று பாண்டியனான ஸ்ரீ வல்லப தேவன் சொல்லிக் கொண்டாட -அத்தசையிலே –
—————————————————————–
ஈண்டிய சங்கம் எடுத்து ஓத –
திரண்டு இருக்கிற வித்வத் சங்கமானது ஓரோர் பிரதேசங்களிலே ஓதிக் கிடக்கிற
ப்ரசம்சா பர வாக்யங்களை எடுத்து -புகழ்ச்சி தோன்ற மேல் எழுந்த வாறு –ப்ரஹ்ம ருத்ராதிகளை போரப் பொலிய சொல்லி
உபன்யசிக்க என்னுதல்
அன்றிக்கே
ஈண்டிய சங்க மடுத்து ஓத என்று-
ஜய சங்கங்கள் பலவற்றையும் வாயிலே மடுத்தூத என்னுதல் –
பூம் கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலி -என்னக் கடவது இ றே
எடுத்தூத -என்ற போது
சங்கத்தை எடுத்து வாயிலே ஊதி என்றபடி –
அடுத்தூத -என்ற போது
கிட்டி ஊத என்றபடி –
அதிஷேபித்த வித்வான்கள் வாய் அடைக்கும்படி –
———————————————————-
வேண்டிய வேதங்கள் ஓதி –
சர்வே வேதா யத் பதமாம நந்தி –
வேதைஸ் ச சர்வை ரஹ மேவ வேத்ய -என்கிறபடி-அந்தர்யாமி -அனைவரும் சரீரம் தானே –
சாஸ்திரம் தானே பிரமாணம் -பர ப்ரஹ்மம் ஒன்றே பெயர் -என்ன -சரீர ஆத்ம பாவத்தாலே ஓன்று
அங்கி அங்கம் -பிரகாரி பிரகார பாவம் –
வேதங்கள் எல்லாவற்றாலும் ஆராதன பிரகாரத்தையும் ஆராய்த வஸ்துவையும்
சொல்லுகிறது என்று அறுதி இட்டு -பகவத் பரத்வத்தை சாதித்து -இனி தாழுகைக்கு
ஹேது என்று திருவடிகளில் தாழ்ந்த கிழியை
தானே தாழ்ந்ததே
விரைந்து -கைங்கர்யம் செய்ய ஆர்த்தி மிக்கு
த்வரித்து அறுத்தவருடைய –
த்ரவ்ய க்ரந்தியை யறுத்தவருடைய
—————————————————————
பாதங்கள்
கிழி யறுத்த பட்டர்பிரான் பாதங்கள்
—————————————————————
யாமுடைய பற்று –
பட்டர்பிரான் அடியேன் -என்னும்படி அவருக்கு சேஷ பூதராய் இருக்கிற நம்முடைய ரஷை
தகையான் சரணம் தமர்கட்கோர் பற்று -என்கிற பொதுவானவன் உடைய திருவடிகள் அன்று
அவனைப் பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள்யாமுடைய பற்று
நம்முடைய அரண் -புகல் -உபாயம் -சரண்யம் -என்றபடி
யாமுடைய பற்று –
பற்றற்ற நம்முடைய பற்று -மற்றவற்றில் பற்றை விட்டு பெரியாழ்வாரை பற்ற என்றபடி –
பற்றிலார் பற்ற நின்றான் -என்னக் கடவது இ றே

—————————————————————————-

அவதாரிகை –

நம்பிள்ளை நியமனப்படி முதலில் 24000 வியாக்யானம் செய்து அருளி –
வேதத்துக்கு ஓம் -போலே திருப்பல்லாண்டுக்கு செய்து அருளினார் —

வக்த்ரு வைலஷண்யம் /பிரபந்தவைலஷண்யம் /பிரதிபாத்ய வைலஷண்யம்
பதிம் விஸ்வஸ் யாத்மேஸ்வரம் -என்றும்– -சர்வ பதி–என்னாமல் சர்வ ஸ்வாமி -பதிம் விச்வச்ய -பதித்வம் வேற ஸ்வாமித்வம் வேற –
தமீஸ் வராணாம் பரமம் மகேஸ்வரம் -என்றும்
சர்வ ஸ்வாமியாகவும் -சர்வ நியந்தாவாகவும் -சர்வேஸ்வரன் ஸ்வரூபத்தை நிர்ணயித்து
-சேதன ஸ்வரூபத்தை
யஸ்ய அஸ்மி ந தம் அந்தரேமி-தாண்டி போக மாட்டேன்
பரனுக்கே உரியவனாய் -பாரார்த்த்யம்
பரவா நஸ்மி என்றும் –
தாஸ பூதாஸ் ஸ்வதஸ் சர்வே -என்றும் நிரூபித்து
இந்த ஸ்வரூப அநுரூபமான ஜ்ஞானமும்
ஜ்ஞான அநுரூபமான வ்ருத்தியும் -ப்ராப்தமாய் இருக்க-
கற்க கசடற -நிற்க அதற்குத் தக -ஞானம் வந்து அதற்குத் தக்க கைங்கர்யம் பிரார்த்தித்து செய்ய வேண்டுமே

அய பிண்டதுக்கு -பழுக்க காய்ச்சின இரும்புக்கு -அக்நி சம்சர்க்கத்தால் வந்த தாதாம்யம் போலே சேதனர்
அசித் ப்ரத்யா சத்தியாலே -தேவோஹம் மனுஷ்யோஹம் -என்று அஹங்கரித்து
புத்ர மித்ராதிகள் பக்கலிலே மமதா புத்தியைப் பண்ணி`
இப்படி ப்ரவாஹ ரூபேண அஹங்கார மமகாரங்களாலே சர்வேஸ்வர கதமான
ச்வாமித்வ நியந்த்ருத்வங்களை தங்கள் பக்கலிலே அத்யவசித்து
ச்வத ப்ராப்தமான பாரதந்த்ர்யத்தில் விமுகராய் -அத ஏவ சப்தாதி விஷயங்களில் ப்ரவணராய்
அத்தாலே வந்த ராக த்வேஷாதிகளாலே அபிபூதராய் படுகிற துக்க பரம்பரைகளை அனுசந்தித்து
எல்லா ஜன்மங்களுக்கும் பொது சேஷத்வம் ஞாத்ருத்வம் -என்பதை மறந்து -யானும் தானாய் ஒழிந்தான் -அன்றோ
கர்மாதீனமாய் கிடைத்த சரீரம் நான் என்று நினைத்து இயற்கையான பாரதந்த்ர்யம் மறந்து –
ஆத்மாவுக்கு பிடித்தது செய்யப் போனால் விருப்பு வெறுப்பு வாராதே -சரீரத்துக்கு தானே ராக த்வேஷங்கள் வருமே –
நம்மை திருத்துவதற்காக நிருபாதிக சேஷியான சர்வேஸ்வரன் சாசநாஸ் சாஸ்திரம் -என்கிறபடியே
தத்வ ஹிதங்களை அறிந்து நல்வழி போகைக்கு உடலாக சாஸ்த்ரத்தை
ப்ரகாசிப்பித்து அருளினான்-

ஹர்த்துந்தமஸ் சதஸதீச விவேக்தும் ஈசோ மானம் ப்ரதீப மிவ காருணி கோ ததாதி –
என்னக் கடவது இ றே–நீர்மையினால் அருளிச் செய்தான்-
இந்த சாஸ்திர ப்ரதானமும் வாஸனா தூஷிதம் ஆகையாலே அகிஞ்சித்கரமாக
ஓலைப் புறத்தில் செல்ல– தேசத்திலே எடுத்து விடும்-கப்பம் வசூலிக்க – ராஜாக்களைப் போலே
ஜன்மாந்தரம் -யா புத்தி -தாமேவ பஜதே ஜந்து -உபதேசம் பண்ணுவது வீண் -இயற்க்கை மாறாதவன் –
மண் மிசை யோனிகள் தோறும் பிறந்தான் -மானிடர் காண வில்லை
ராம கிருஷ்ண ரூபேண வந்து அவதரித்து -சாசநாச பிதுர் வசன நிர்தேசாத் பரத்வாஜசஸ்ய சாசநாத் என்று
பித்ரு வசன பரிபாலனாதிகளை ஆசரித்து அருளியும்
இளையபெருமாளை யிடுவித்து -வகுத்த விஷயத்தில் சேஷத்வ வ்ருத்தியே இவ்வாத்மாவுக்கு ஸ்வரூபம்
என்னும் இடத்தை பிரகாசிபித்து அருளியும்
ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய -என்று கொண்டு இவ்வ்ருத்திக்கு அடியான-பெருமான் பிரதானம் —
பாரதந்த்ர்யத்தை ஸ்ரீ பரத ஆழ்வானை இட்டு பிரகாசிப்பித்தது அருளியும்
இப்பாரதந்த்ர்ய காஷ்டையை -கச்சதா மாதுல  குலம் -பரதேன —நீதா -என்று கொண்டு
ஸ்ரீ சத்ருகன ஆழ்வானைக் கொண்டு பிரகாசிபித்து அருளியும்
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து அருளி தூத்ய சாரத்யங்களை ஆசரித்து அருளியும்
யத்ய தாசரதி ஸ்ரேஷ்ட -என்று ஸ்ரேஷ்ட சமாசாரம் கர்த்தவ்யம் என்று உபதேசித்து அருளியும்
இப்படி பஹூ பிரகாரத்தாலே ஆத்மாக்களுடைய பாரதந்த்ர்யத்தை பிரகாசிப்பித்தது
அருளின இடத்திலும் –
பெரியவன் தாழ நின்று ஆசரித்த இம் மஹா குணத்திலே அவஜா நந்தி மாம் மூடா –
என்கிறபடியே அநீச்வரத்வம் ஆகிற தோஷத்தை ஆவிஷ்கரித்து கால் கடை கொள்ளுகையாலே
அவையும் கார்யகரம் ஆய்த்து இல்லை –

இனி நாம் பார்வை வைத்து ம்ர்கம் பிடிப்பாரைப் போலே சஜாதீய முகத்தாலே சேதனரை
வசீகரிக்க வேண்டும்
என்று பார்த்தருளி பெரியாழ்வாரை அவதரிப்பித்து அருளினான்
இவ்வாழ்வார் சஹஜ தாஸ்யத்தை உடையவர் ஆகையாலே-ஏழாட்காலும் பழிப்பிலோம் – பகவத் விஷயத்திலே
கிஞ்சித் கரித்து
கால ஷேபம் பண்ண வேண்டும் என்று பார்த்தருளி -அதுசெய்யும் இடத்தில்
அவன் உகந்தவை யே கர்த்தவ்யம் -என்று அனுசந்தித்து அவதாரங்களை ஆராய்ந்த இடத்தில்
கம்சனுக்கு பணி செய்து போந்த மாலாகாரர் க்ரஹத்திலே எழுந்தருளி பூவை இரந்து
அவன் தான்
ப்ரசாத பரமௌநாதௌ மம கேஹ முபாகதௌ
தன்யோஹம் அரச்ச யிஷ்யாம் ஈத்யாஹ மால்யோப ஜீவன -என்று
உகந்து சூட்டச் சூடின படியை அனுசந்திகையாலே -இவ்விஷயத்துக்கு பூ இடுகை ஒழிய
வேறு கர்த்தவ்யம் இல்லை நமக்கு என்று திருநந்தவனம் செய்கையிலே உத்யோகித்தார் ஒருவர் இ றே
ராமாவதாரம் -சுக்ரீவாதிகள் கிஞ்சித்கரித்து ஸ்வார்த்தம்
இளைய பெருமாள் வராதே தடுக்கும் பொழுது தாமே பின் தொடருகையாலும்
வாமன -இரந்த பொழுது கொடுத்தான் -ஔதார்யம் பெற்று போகையாலும் அங்கும் ச்வார்த்ததா
இங்கு அவன் இரக்க தான் உகந்து பூ இட்டான் பரார்த்த கைங்கர்யம் ஏற்றம் இது இ றே

இன்னமும் மற்றைய ஆழ்வார்களைக் காட்டில் இவருக்கு நெடு வாசி உண்டு
அவர்கள் தம் தாமுடைய சமர்த்திகளை எம்பெருமானாலே பெற நினைத்து இருப்பார்கள்
இவர் தம்மை அழிய மாறி வரும் பகவத் ச்மர்த்தியையே தமக்கு புருஷார்த்தமாக
நினைத்து இருப்பர் –
போகத்தில் தட்டு மாறும் சீலம் காட்கரையில் கரை புரளும் -ஸ்வரூபம் அழிந்தாலும் அவன் திரு உள்ளப்படி –
அவர்கள் ஈஸ்வரனை கடகாக பற்றி தம் தாமுடைய பய நிவ்ர்த்தியை பண்ணா நிற்பர்கள்
இவர் தாம் கடகராய்  நின்று -அவனுக்கு என் வருகிறதோ -என்று பயப்பட்டு அந்த
பய நிவ்ர்த்தியில் யத்னம் பண்ணா நிற்பர்-
பல்லாண்டு பாடுதல் காதா சித்தம் மற்றவர்களுக்கு மங்களா சாசன உத்சவங்கள் சில நாள் உண்டு
இவருக்கு இது நித்யம் -அரையர் திருக்கைத்தல சேவை யில் எழுந்து அருளி திருப்பல்லாண்டு அருளுவார் –
மற்ற ஆழ்வார்கள் -கலக்கம் ஆழம் இவருக்கு மேடு போலே -அதுக்கும் கீழே பொங்கும் பரிவு இவருக்கு –

இப்படி மற்றை ஆழ்வார்களைக் காட்டில் இவருக்கு உண்டான நெடு வாசி போலே
மற்றப் பிரபந்தங்களில் காட்டில் திருப் பல்லாண்டுக்கு நெடு வாசி உண்டு –
வேதம் என்ன -தத் உப ப்ரஹ்மணம் என்ன -இதிஹாச புராணங்கள் என்ன –
இவை போலே அதிக்ர்த அதிகாரமாய் இராது-இது பொது மறை –
சர்வ அதிகாரமான திருவாய்மொழியில் உண்டான அருமையும் இதுக்கு இல்லை–குழப்பம் இல்லை என்றவாறு –
அரி அயன் அரன் என்னும் இவரை ஒன்ற நும் மனத்து வைத்து -என்றும்
முனியே நான்முகனே முக்கண் அப்பா -என்றும் உபக்ரமம் -1-3-7-தொடங்கி உப சம்ஹாரத் தளவும்-10-10-1-
செல்ல த்ரிமூர்த்தி சாம்யத்தை அருளிச் செய்கையாலே-உள் அர்த்தம் அறிய அருமை உண்டே இதில் –
ஜகதாதிஜா –அணைவது அரவணை மேல் — இணைவனாம் —
மத்யே விரிஞ்சி கிரீசம் ப்ரதம அவதாரம் -என்று ரகு குல சஜாதீயனாகவும் யது குல
சஜாதீயனாகவும் அவதரித்தாப் போலே ப்ரஹ்ம ருத்ரர்கள் நடுவில் வந்து அவதரிக்கையாலே
வந்த சாம்யம் என்று நிர்வஹிக்க வேண்டும் என்ற அருமை யாதல் –
ஐ ஆல் க்கு -பெருமானை –பெருமானால் -பெருமானுக்கு -சொல்லி பெருமானாய்-நீராய் பிரதம விபக்தி
சரீராத்மா பாவம் உண்டே -பிரிந்து ஸ்திதி இல்லை –ப்ருதக் ஸ்திதி உபலப்தி இல்லையே –
மட்குடம் -தங்கச் சங்கிலி போலே -காரண கார்ய பாவம் முதல் வேற்றுமையில் படிக்கலாம் -அதுவாகவே நிரந்தி இருப்பதால் –
வஸ்து வேற தானே -ஒரே வேற்றுமையிலே படித்தாலும் –
வேத நான்காய் –பிரதிபாத்ய பிரதிபாதிக சம்பந்தம் -வேத நான்கால் சொல்லப் பட்டவன் -என்றபடி –
வேத நான்கையும் கொடுத்த படியாலும் –
சமான அதிகரணம் -ஆஸ்ரயம் -இரண்டும் ஒன்றில் இருப்பதால்
பின்ன பிரவ்ருத்தி நிவ்ருத்தி -ஒரே பொருளில் –
ப்ரஹ்மத்துக்கும் அடியேனுக்கும் ஆஸ்ரயம் ப்ரஹ்மமே -சமான அதிகரணம் –
ஒரே பவனத்தில் உள்ளவர் போலே -தத்வங்கள் வேற –
வையதிகரண்யம் -இதற்கு எதிர்
நீராய் –அயனாய் -அனைத்துக்கும் ஆதாரமாய் ப்ரஹ்மம் என்றவாறு -சமான அதிகரணம் -இவை ஒரே தத்வம் இல்லையே –
நீராய் நிலனாய் -என்று தொடங்கி -சிவனாய் அயனாய் -என்று சேதன அசேதன வாசி
சப்தங்களோடு சமாநாதி கரிக்கையாலே சாமாநாதி கரண்யத்துக்கு நிபந்தனம் ஈச்வரனோடு
சேதன அசேதனங்களுக்கு உண்டான -விட்டுப் பிரிந்து ஸ்வ தந்தரமாக தனித்து இருப்பு இல்லையே –
ப்ரதக் ஸ்திதி யுபலப்த்தி இல்லாத சம்பந்தம் என்றே
நிர்வஹிக்க வேண்டும் என்னும் அருமை யாதல் இல்லை -இப்பிரபந்தத்துக்கு

இன்னமும் மகாபாரதம் போலே பெரும் பரப்பாய் -இன்னது சொல்லிற்று -என்று நிர்ணயிக்க
ஒண்ணாது இருக்கும் குறையும் இன்றிக்கே-கங்கா காங்கேயன் அசத் கீர்த்தனம் செய்த எச்சில் வாய்-போல் இல்லாமல்
அரையர் -வாயில் சாளக்ராமம் ஐதிகம் –ஈரச் சொல்லில் அவனுக்கு ஊற்றம் –
பிரணவம் போலே சப்தம் அத்யல்பமாய் -சகல வேதார்தமும் அதுக்கு உள்ளே காண வேண்டி
அது தெரியாதே தேட வேண்டி வரும் -அநதிவிச்தரம்-அத்யல்பம் -என்றவாறு -அந்த குறையும் இன்றிக்கே
பன்னிரண்டு பாட்டாய் -ஐஸ்வர்ய கைவல்யங்களை நீக்கி உத்தம புருஷார்த்தமான
பகவத் கைங்கர்யத்தை ஸூக்ரஹமாக பிரதிபாதிக்கையாலே இதுக்கு நெடு வாசி உண்டு –
இன்னமும் இப்பிரபந்தம் தன்னை அதிகரித்தவன் கையில் பரத்வத்தை கைப்படுத்த
வல்ல சக்தியை உடைத்தாகையாலே வந்த ஏற்றமும் உண்டு-நிரதிசய பலபிரதான சாமர்த்தியம் உண்டே –
பரமாத்மனை சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டு -என்று இ றே இதுக்கு பலம்
இப்பிரபந்தம் அவதரித்தபடி என் என்னில் –

ஸ்ரீ வல்லப தேவன் என்கிற ராஜா தார்மிகன் ஆகையாலே -தர்மோ ரஷத ரஷகம் -வைதிக சிந்தை கொண்டவன் –புரோகிதரான
செல்வநம்பியை -புருஷார்த்த நிர்ணய பூர்வகமாக அத்ர்ஷ்ட ஸித்திக்கு விரகு என் -என்ன
தரமஜ்ஞ்சமய பிரமாணம் என்கிறபடியே -சொல்லும் அவிடு சுருதியும் -சாஸ்திரம் வைதிகர் பின் செல்லுமே –
-வித்வான்களை திரட்டி வேதார்த்த நிர்ணயத்தை பண்ணி
அவ்வழியாலே புருஷார்த்தத்தை பெற வேணும் -என்று சொல்ல -அவனும் அப்படியே
பஹூ த்ரவ்யத்தை வித்யா சுல்கமாக கட்டி வித்வாக்களை ஆஹ்வானம் பண்ணி செல்லுகிற அளவிலே
வட பெரும் கோயில் உடையான் ஆழ்வாரை விடுவித்து லோகத்திலே வேத தாத்பர்யத்தை
பிரகாசிப்பிக்கைகாக -நீர் போய் கிழியை அறுத்து கொண்டு வாரும் -என்று அருளிச் செய்ய –
அது வித்யா சுல்கமாக நிர்மித்தது ஓன்று அன்றோ
கையிலே கொட்டுத் தழும்பைக் காட்டி கிழியை அறுக்கலாமோ -என்ன
அது உமக்கு பரமோ -நாம் அன்றோ வேதார்த்த பிரதிபாதனத்துக்கு கடவோம் -என்று ஆழ்வாரை
நிர்பந்தித்து அருள -ஆழ்வரும் பாண்டிய வித்வத்  கோஷ்டியிலே எழுந்து அருளின அளவிலே

செல்வ நம்பியும் ராஜாவும் அப்யுத்தாந  ப்ரணாம பூர்வகமாக பஹூமானம் பண்ண –
அத்தைக் கண்ட வித்வான்கள் ராஜாவை அதிஷேபிக்க -அவ்வளவிலே செல்வ நம்பி
ஆழ்வாரை தெண்டன் இட்டு
வேதாதந்த தாத்பர்யமான புருஷார்த்தத்தை அருளிச் செய்யலாகாதோ என்ன -ஆழ்வாரும்
தத் சர்வம் தர்ம வீர்யேண யதாவத் சம்ப்ரபச்யதி -என்று ஸ்ரீ வால்மீகி பகவான் சர்வ அர்த்தங்களையும்
சாஷாத் கரித்தால் போலேயும் -ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஸ்பர்ச்தத்தாலே த்ருவன்
சர்வஞ்ஞனாப் போலேயும் -பகவத் ப்ரசாதத்தாலே சகல வேதார்த்த அர்த்தங்களையும்
சாஷாத் கரித்து வேதாந்த தாத்பர்யமான அர்த்தத்தை பிரதிபாதித்து அருள
சமஸ்த சப்த மூலமான அகாரத்துக்கு சர்வ ஸ்மாத் பரன் சர்வ காரணன் சர்வாதிகன் மோஷ ப்ரதன்-என்பதே வேதாந்த்தார்த்த தாத்பர்யம்
மாதவன் பேர் சொல்வதே ஒத்தின் சுருக்கு -தேறிய பொருள் –
அதிஷேபித்தவித்வான்களோடு அனுவர்த்தித்த ராஜாவோடு வாசி யற சர்வரும் விஸ்மிதராய் -அநந்தரம்
இவரை யானையிலே ஏற்றி -ராஜா சபரிகரனாய் சேவித்துக் கொண்டு -நகரி வலம் வருகிற மகா
உத்சவத்தை காண்கைக்காக -புத்ரர்களை ப்ரஹ்மரதம் -தோளுக்கு இனியானில் -பண்ணும் சமயத்தில் மாதா பிதாக்கள்
காண ஆதரித்து வருமா போலே -பிராட்டியோடே கூட சபரிகரனாய் கொண்டு -ஈஸ்வரன்
சந்நிஹிதனாக -தத்பரிகர பூதரான ப்ரஹ்மாதி தேவதைகளும் ஆகாசத்திலே
நெருங்கி நிற்கிற வித்தை சாஷாத் கரித்த ஆழ்வார் ஸ்வ ஸ்மர்த்தியைக் கண்டு
இறுமாவாதே -பகவத் ப்ரசாதத்தாலே நிரவதிக பக்தியை பெற்று -அவனுடைய
சர்வஞ்ஞத்வ -சர்வ சக்தித்வ -சர்வ ரஷகத்வாதிகளை -அனுசந்திப்பதற்கு முன்னே
முகப்பில் உண்டான -சௌந்தர்ய சௌகுமார்யங்களைக் கண்டு

கால அதீதமான தேசத்திலே இருக்கிற வஸ்து காலம் சாம்ராஜ்யம் பண்ணுகிற
தேசத்திலே சஷூர் விஷயமாவதே -இவ் வஸ்துவுக்கு என்ன தீங்கு வருகிறதோ
என்னும் அதி சங்கையாலே -ஆனை மேல் கிடந்த மணிகளைத் தாளமாகக் கொண்டு
இந்த சௌந்தர்ய சௌகுமார்யங்களுக்கு தீங்கு வாராதே நித்யமாக செல்ல வேணும்
என்று திருப்பல்லாண்டு பாடுகிறார் –
சதுர் மாசம் சங்கல்பம் -8 மாசம் உழைத்து மழைக் காலம்
இரவுக்கு பகலில் உழைத்து –
வயசான காலத்துக்கு இளமையில் உழைத்து
அந்த லோகத்துக்கு இங்கே உழைக்க வேண்டாமோ -அத்தை தேடு ராஜன் -ஆரம்பித்து வைத்து -திருப் பல்லாண்டு பிறந்தது
அவாப்த சமஸ்த காமன் ஆகையாலே ஒன்றால் ஒரு குறை இன்றிக்கே சர்வ நியந்தாவுமான
ஈஸ்வரனைக் கண்டால் தம்முடைய மங்களங்களை ஆஸாசிக்கை அசந்கதம் அன்றோ என்னில் –
முகப்பிலே சஷூர் விஷயமான சௌந்தர்யாதிகளிலே -பகவத் பிரசாத லப்தமான
பக்தி பரவசராய் கொண்டு அழுந்தி -அவனுடைய சர்வ ரஷகத்வ சர்வ சக்தித்வத்தையும் –
ஸ்வ ஸ்ம்ர்தியையும் மறைக்கையாலே -பகவத் ஸ்ம்ர்தியே தமக்கு ஸ்ம்ர்தியாகக் கொண்டு
மங்களா சாசனம் பண்ணுகை ஸங்கதம் –
பகவத் ப்ரேமம் தான் தத் ப்ராப்திக்கு ஹேதுவாதல் தத் அனுபவத்துக்கு பரிகரம் ஆதல்
ஆகை  ஒழிய அறிவுகேட்டை பண்ணும் என்னும் இடத்தில் ப்ரமாணம் என் என்னில் –

அது சிஷ்டாசார சித்தம் –
ஸ்த்ரியோ வ்ருத்தாஸ் தருண்யஸ் ச ஸாயம் ப்ராதஸ் சமாஹிதா
சர்வான் தேவான் நமஸ்யந்தி ராமச்யார்த்தே யசச்விந -என்று
திவாராத்ரி விபாகம் அற -தேவதைகளை ரஷித்து புகழ் படைத்தது போந்த சக்கரவர்த்தி திருமகனுடைய
சௌந்தர்யாதி குணங்களுக்கு ரஷகமாக அயோத்யாவாசி ஜனங்கள் பெருமாளால்
தங்களுக்கு வரும் ச்ம்ர்தியை மறந்து தேவதைகளின் காலில் விழுந்தார்கள் இ றே
பிராட்டியை திருமணம் புரிந்து மீண்டு எழுந்து அருளா நிற்க ஸ்ரீ பரசுராம ஆழ்வான்
வந்து தோன்றின அளவிலே -தாடக தாடகேயருடைய நிரசனங்களைக் கேட்டு இருக்கச்
செய்தேயும் அஞ்சி -ஷத்ர ரோஷாத் ப்ரசாந்தஸ் தம் ப்ராஹ்மணஸ் ச மஹா யசா –
பாலானாம் மம புத்ராணாம் அபயம் தாது மர்ஹசி -என்று சரணம் புக்கு -அவன் தோற்று மீண்டு போனான்
என்று கேட்ட பின்பு -புநர் ஜாதம் ததாமேந ஸூ தாநாத்மா நமேவச -என்கிறபடியே
தானும் பிள்ளைகளும் மறு பிறவி பிறந்ததாக நினைத்து இருந்தான் இ றே சக்கரவர்த்தியும் –

ஸ்ரீ கௌசல்யை யாரும் -யன் மங்களம் ஸூபர்ணச்ய விநதா கல்பயத் புரா –
அம்ர்த்தம் ப்ரார்த்தயா நஸ்ய தத்தே பவது மங்களம் -என்று
விஸ்வாமித்ர த்வத்ராணா திகளால் வந்த ஆண் பிள்ளைத் தனத்தை விஸ்மரித்து
மங்களா சாசனம் பண்ணினாள் இ றே
ஸ்ரீ தண்ட காரண்ய வாஸி ஜனங்களும் -தேதம் ஸோமமி வோத்யந்தம த்ருஷ்ட்வா வைதர்ம சாரிணா
மங்களா நிப்ர யுஜ்ஞ்ஞானா ப்ரத்யக் ருஹ்ணந த்ருட வ்ரதா -என்று தங்கள் ஆபன நிவ்ருத்திக்கும்
அபிமத ஸித்திக்கும் இவரை ரஷகர் என்றே சாதன அனுஷ்டானம் பண்ணுகிறவர்கள்
இவர் சந்நிஹிதர் ஆனவாறே அவற்றை மறந்து -இவர் வடிவு அழகிலே துவக்குண்டு
மங்களா சாசனம் பண்ணினார்கள் இ றே
கர்ம ஸ்பர்சம் இன்றிக்கே தலை நீர்ப்பாட்டிலே இவர் ஏற்றம் எல்லாம் அறியும் பிராட்டி
இவர் அழகிலே தோற்று –
பதி சம மாநிதா ஸீதா பர்த்தாரம் அஸி தேஷணா ஆத்வாரம் அனுவராஜ மங்களா நய பிதத் யுஷி
என்று தொடங்கி -பூர்வாம் திசம் வஜ்ரதர -என்று திக்பாலர்களை இவருக்கு ரஷகராக அபேஷித்தாள் இ றே
இன்னமும் -ஜாதோசி தேவதே வேச சங்கு சக்ர கதாதர -திவ்யம் ரூபமிதம் தேவப்ரசாதே
நோப சம்ஹர -என்று -அயர்வறும் அமரர்கள் அதிபதி அவ்வடிவோடே வந்து -அவதரித்தான்
என்று இவனுடைய பெருமையை அறிந்து இருந்த தசையிலும் -கம்ஸ பயத்தாலே –
இவ்வடிவை உப சம்ஹரிக்க வேண்டும் -என்றார் இ றே ஸ்ரீ வசுதேவர்
உப சம்ஹர சர்வாத்மான் ரூபமே தச் சதுர்புஜம்
ஜாநாதுமா வதாரனதே கம்சோயம் திதி ஜந்ம -என்று சர்வாத்மா -என்று சர்வ அந்தர்யாமி -என்றும்
ஏதச் சதுர்புஜம் -என்று அவனுடைய அசாதார விக்ரஹம் என்று அறிந்து இருக்கச் செய்தேயும்
கம்ஸ பயத்தாலே -இவ்வடிவை உப சம்ஹரிக்க  வேணும் -என்றாள் இ றே தேவகிப் பிராட்டியும்

இவ்வர்த்தம் லோக பிரசித்தமும் -அநேக காலம் தபஸ் பண்ணி பெற்று ப்ரதமஜனாய்
அதி சுந்தரனான புத்திரன் அளவிலே ஒரு விரோதம் இன்றிகே இருக்கச் செய்தேயும்
செல்ல நின்றதும் வர நின்றதும் ப்ரேம அந்த்யத்தாலே பய ஹேதுவாக கடவது இ றே
மாதாவுக்கு –
தன கைக்கு அடங்காத விற்பிடி மாணிக்கத்தை பெற்றவன் அது ஷூர ஷிதமாய்
இருக்கச் செய்தேயும் -அதுக்கு என்ன விரோதம் வருகிறதோ என்று காற்று அசங்கிலும்
பயப்படா நிற்கும் இ றே
-அல்ப தேஜஸ் ஸு க்களான சந்திர ஆதித்யர்கள் உடைய சன்னதியிலே
அச்சித்தான பாஷாணங்கள் உருகா நின்றன
பரஞ்யோதி ரூபசம்பத்ய -என்றும் பரம் ஜோதி நீ பரமாய் -என்றும் சொல்லுகிறபடியே
நிரதிசய சௌந்தர்ய யுக்தனாய் நிரவதிக தேஜோ ரூபமான எம்பெருமானைக் கண்டால்
பரம சேதனரான ஆழ்வார் கலங்க சொல்ல வேணுமோ -ஆகையாலே
ராவணாதி ராஷச துர் வர்க்க மயமாய் -காலம் சாம்ராஜ்யம் பண்ணுகிற தேசத்திலே –
இவ் விலஷண விஷயத்தை கண்டு அருளி -இவ் விஷயத்துக்கு எவ் வழியில்
தீங்கு வருகிறதோ -என்று பயப்பட்டு தத் பரிஹார அர்த்தமாக திருப் பல்லாண்டு பாடுகிறார்

ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூபங்களை உள்ளபடி அறிந்து இருக்கிற இவர் -ரஷ்ய ரஷக
பாவத்தை மாறாடி பிரதிபத்தி பண்ணுகை விபரீத ஞானம் அன்றோ என்னில்
கர்ம நிபந்தனமான விபரீத ஞானம் ஆய்த்து த்யாஜ்யம் -விஷய வை லஷண்யம் அடியாக
வந்தது ஆகையாலே அவ வைலஷண்யம் உள்ள அளவும் அனுவர்த்திகையாலே
ஸ்வரூப ப்ராப்தமாக கடவது –
உற்ற நல் நோய் இது தெரினோம் என்பரே -இந்த கலக்கம் விரும்புவது தானே -ஏற்றுக் கொள்ளும் அஜ்ஞ்ஞானம் அபிமானம் இவை –
இன்னமும் சேஷ சேஷி பாவ ஜ்ஞான சமனந்தரம் சேஷிக்கு அதிசயத்தை விளைக்கை
சேஷ பூதனுக்கு ஸ்வரூபம் ஆகையாலே தத் விஷயமாக மங்களா சாசனம் பண்ணுகை
சைதன்ய க்ர்த்யம் –
மங்களா சாசனம் பண்ணுவதே ஸ்வரூபம் சேஷ பூதனுக்கு -பரகத அதிசய -அவன் மேன்மைக்கு என்றே ஆனந்தம் கொடுக்கவே
-சேஷ பூதனுக்கு கர்த்தவ்யம் அந்த சேஷத்வ காஷ்டை யாவது தன்னை அழிய மாறியே யாகிலும்-ஸ்வரூபம் அழித்துக் கொண்டாலும் –
ஸ்வாமிக்கு ச்ம்ர்த்தியை ஆசாசிக்கை இ றே
வேதாந்த தாத்பர்யம் இ றே இத் திருப் பல்லாண்டில் பிரதிபாதிகப் படுகிறது-நீளா– ஸ்ருதி சத சிரஸ் சித்தம் -சம் பாரார்த்தம் –

———————————————-

பேட்டிகா விவரணம் –

இப்பிரபந்தத்திலே முன்னிரண்டு பாட்டாலே -தாம் மங்களா சாசனம் பண்ணுகிறார் –
அத்தாலே தமக்கு பர்யாப்தி பிறவாமையாலே –
கதி த்ரயம் -ஐஸ்வர் யாதிகள் /கைவல்யர் /பகவல் லாபார்த்திகள் -மூன்றுக்கும் இவனே
-நப்பாசை யுடன் ஓன்று பெற்று மேலே மேலே தம்மிடம் வருவானே
மேல் மூன்று பாட்டாலே -3/4/5-மங்களா சாசனம் பண்ணுகைக்கு
பகவத் சரணார்த்தி களையும் -3
கேவலரையும் -4
ஐஸ்வர்யார்த்திகளையும் -அழைக்கிறார்-5-
அதுக்கு மேலே மூன்று பாட்டாலே –6/7/8-ஆஹூதர் ஆனவர்கள் -அழைக்கப் பட்டவர்கள் -இவரோடே சங்கதர் ஆகிறார்கள்
அதுக்கு மேலே மூன்று பாட்டாலே-9/10/11–அவர்களோடே திருப் பல்லாண்டு பாடி அருளுகிறார்
மேலிற் பாட்டு-12-பல ச்ருதி

—————————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருப் பல்லாண்டு –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -அருளிச் செயலில் அமுத விருந்து –

July 9, 2015

குருமுகம் அநதீத்ய ப்ராஹ வேதான் அசேஷான்
நர பதி பரிக்லிப்தம் சுல்கம் ஆதாதுகாம
ஸ்வசுரம் அமர வந்த்யம் ரங்க நாதஸ்ய ஸாஷாத்
த்விஜகுல திலகம் தம் விஷ்ணு சித்தம் நமாமி –ஸ்ரீ நாத முனிகள் அருளிச் செய்த -முதல் தனியன்

அசேஷான் -வேதான் -ப்ராஹ –
வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிழி யறுத்தான் என்றதைச் சொல்லுகிறது –
இவருக்கு அப்போது -வேதப் பிரானாரான -பீதகவாடைப் பிரானார் தாமே -பிரம குருவாய் –
போதில் கமல வன்னெஞ்சம் புகுந்து
-நாவினுளானாய் -நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளை-இவர் முகேன பேசுவித்தான் இறே-
எயிற்றிடை மண் கொண்ட எந்தையான -ஞானப் பிரான் ஆய்த்து இவரை ஞானக் கலைகளை-ஒதுவித்தது-

அமர வந்த்யம் என்கிறது
வடிவுடை வானோர் தலைவனான தம்மை அவர்கள் அடி வணங்கி ஏத்துமா போலே –
இவர் தம்மையும் அமரர் வந்திக்கும்படியான வரிசை கொடுத்தபடி -தம்மையே ஒக்க அருள் செய்வர் இறே

தம் விஷ்ணு சித்தம் நமாமி –
ஓம் நமோ விஷ்ணவே -என்னுமது விஷ்ணு சித்த விஷயத்திலே யாய்த்து –
விசேஷஞ்ஞர்க்கு பகவத் விஷயத்திலே அரை வயிறாய் -இங்கே இறே எல்லாம் பூரணமாவது -நம்பி விட்டு சித்தர் இறே

————–

மின்னார் தட மதிள் சூழ் வில்லிபுத்தூர் என்று ஒரு கால்
சொன்னார் கழல் கமலம் சூடினோம் -முன்னாள்
கிழி யறுத்தான் என்று உரைத்தோம் கீழ்மையினில் சேரும்
வழி யறுத்தோம் நெஞ்சமே வந்து-ஸ்ரீ பாண்டிய பட்டர் அருளிச் செய்த தனியன்

ஸ்ரீ வில்லிபுத்தூர் தான் வட பெரும் கோயில் உடையானுக்கும் ஆழ்வாருக்கும் ஆண்டாளுக்கும் நிரூபகமான தேசமாய்த்து –
இப்படி உத்தேச்யமான ஊரை ஒருகால் அனுசந்திப்பார் எப்போதும் உத்தேச்யர் ஆகையாலே-அ
வர்கள் ஸ்ரீ பாதங்கள் சிரோ பூஷணமாக தார்யம் என்கிறது –
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசு -என்னுமா போலே –

ஜந்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி -த்யக்த்வா தேஹம் -புநர் ஜன்ம நேதி மாமேதி சோர்ஜுந -என்று
கிருஷ்ண விஷயத்தில் ஜன்ம கர்மங்கள் ஜன்ம சம்சார பந்தத்தை அறுக்குமா போலே யாய்த்து விஷ்ணு சித்தர் ஜன்ம கர்மங்களும் –
இங்கும் ஸ்ரீ வில்லி புத்தூர் ஜன்மமும் கிழி யறுக்கை கர்மமுமாய் இருக்கும் –

வண்டு இன்னிசைக்கும் வில்லி புத்தூர் -என்றும் –
மென்னடை யன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் -என்றும் –
பகவத் விஷயத்திலே தகப்பனாரும் மகளாரும் ஒரு கால் சொன்னால் போலே
பாகவத விஷயமாக ஒரு கால் சொன்னார் -என்றபடி-
சம்பந்த அநுசந்தானம் ஸக்ருத் தானே

—————

பாண்டியன் கொண்டாட பட்டர்பிரான் வந்தான் என்று
ஈண்டிய சங்கம் எடுத்தூத -வேண்டிய
வேதங்களோதி விரைந்து கிழி யறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று –ஸ்ரீ பாண்டிய பட்டர் அருளிச் செய்த தனியன்

பற்றற்ற நம்முடைய பற்று –பற்றிலார் பற்ற நின்றான் -என்னக் கடவது இறே-

———–

மற்றை ஆழ்வார்களைக் காட்டில் இவருக்கு உண்டான நெடு வாசி போலே
மற்றப் பிரபந்தங்களில் காட்டில் திருப் பல்லாண்டுக்கு நெடு வாசி உண்டு –
பன்னிரண்டு பாட்டாய் -ஐஸ்வர்ய கைவல்யங்களை நீக்கி உத்தம புருஷார்த்தமான
பகவத் கைங்கர்யத்தை ஸூக்ரஹமாக பிரதிபாதிக்கையாலே இதுக்கு நெடு வாசி உண்டு –

சேஷ சேஷி பாவ ஜ்ஞான சமனந்தரம் சேஷிக்கு அதிசயத்தை விளைக்கை சேஷ பூதனுக்கு ஸ்வரூபம் ஆகையாலே
தத் விஷயமாக மங்களா சாசனம் பண்ணுகை சைதன்ய க்ருத்யம் –
அந்த சேஷத்வ காஷ்டை யாவது தன்னை அழிய மாறியே யாகிலும் ஸ்வாமிக்கு சம்ருத்தியை ஆசாசிக்கை இறே

ஆழ்வார்கள் எல்லோரையும் போல் அல்லர் பெரிய ஆழ்வார்-ஸ்ரீ வசன பூஷணம் -சூரணை-250-
அவர்களுக்கு இது காதா சித்தம் –இவர்க்கு இது நித்யம் –சூரணை-251-
அவர்களுடைய ஆழம்கால் தானே இவருக்கு மேடாய் இருக்கும் –சூரணை-252-
அவர்களுக்கு உபய சேஷத்வத்தையும் அழித்து ஸ்வரூபத்தை குமிழ் நீருண்ணப் பண்ணும் அது
விருத்திக்கும் ஹேதுவாய்-ஸ்வரூபத்தை கரை ஏற்றும் –
1-பய நிவர்தகங்களுக்கு பயப்படுவது –
2-பிரதி கூலரையும் அநு கூலர் ஆக்கிக் கொள்ளுவது –
3-அதீத காலங்களில் அபதானங்களுக்கு உத்தர காலத்திலேயே வயிறு எரிவது
4-பிராப்தி பலமும் இதுவே எனபது –
5-அநிமிஷரை பார்த்து -உறகல் உறகல் – என்பதாய் கொண்டு -இது தானே -யாத்ரையாய் நடக்கும் —
அல்லாதவர்களைப் போல் கேட்கிறவர்களுடையவும் சொல்லுகிறவர்களுடையவும் தனிமையை தவிர்க்கை அன்றிகே –
ஆளும் ஆளார்-என்கிறவனுடைய தனிமையைத் தவிர்க்கைகாக வாயிற்று-பாஷ்யகாரரும் இவரும் உபதேசிப்பது –
அல்லாதார்க்கு சத்தா சம்ருத்திகள்–பகவத் தர்சன அனுபவ கைங்கர்யங்களாலே
இவர்க்கு மங்களா சாசனத்தாலே –

இப் பிரபந்தத்திலே முன்னிரண்டு பாட்டாலே -தாம் மங்களா சாசனம் பண்ணுகிறார் –
அத்தாலே தமக்கு பர்யாப்தி பிறவாமையாலே -மேல் மூன்று பாட்டுக்களாலே -மங்களா சாசனம்-பண்ணுகைக்கு
பகவத் சரணார்த்தி களையும் -மூன்றாவது பட்டாலும்
கேவலரையும்-நான்காவது பட்டாலும்
ஐஸ்வர்யார்த்திகளையும் –ஐந்தாவது பட்டாலும் அழைக்கிறார்-

அதுக்கு மேலே மூன்று பாட்டுக்களாலே –ஆறு -ஏழு -எட்டாவது பாட்டுக்களாலே
ஆஹூதர் ஆனவர்கள் -அழைக்கப் பட்டவர்கள் -இவரோடே சங்கதர் ஆகிறார்கள்

அதுக்கு மேலே மூன்று பாட்டுக்களாலே -ஒன்பது பத்து பதினொன்றாம் பாட்டாகளாலே –
அவர்களோடே திருப் பல்லாண்டு பாடி அருளுகிறார்-

மேலில் நிகமன பன்னிரண்டாம் பாட்டு பாட்டு-பல ச்ருதி

—————–

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு பல கோடி நூறு ஆயிரம்
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா! உன் சேவடி செவ்வி திரு காப்பு –1-

பல்லாண்டு என்கிற சப்தம் ஸ்வரூப வாசி யாகிறது -மேல் பண்ணுகிற மங்களா சாசனம்-ஸ்வரூப ப்ரயுக்தம் என்கைக்காகா சொல்லிற்று –
ஜிதம் -என்றும் -நம -என்றும் -தோற்றோம் -என்றும் -போற்றி என்றும் -பல்லாண்டு -என்றும் -இவை பர்யாயம்

ஜிதம் -என்று அவனாலே  தன் அபிமானம் போனபடியை இசைந்து அத் தலையில்  வெற்றிக்கு மேல்-எழுத்து இடுபவன் வ்யவஹாரம்

நம –என்று எனக்கு உரியன் அல்லேன் என்கிறபடி -இது நிவர்த்த ஸ்வ தந்த்ரனுடைய வியவஹாரம்

தோற்றோம் -என்கிறது  அத்  தலையில் வெற்றியே தனக்கு பிரயோஜனம் என்று இருக்குமவனுடைய வ்யவஹாரம்

பல்லாண்டு -என்று தன்னைப் பாராதே  அத் தலையில் சம்ருத்தியே நித்யமாகச் செல்ல வேணும்-என்று இருக்குமவன் வ்யவஹாரம்

ஒரு கால் சொன்னோம் -என்று ஆறி இருக்க மாட்டாத
தம்முடைய ஆதார அதிசயத்தாலும் -பலகால் சொல்லும் அத்தாலும் பர்யாப்தி பிறவாத
விஷய வைலஷண்யத்தாலும் அருளிச் செய்கிறார்
த்ர்ஷார்த்தனானவன் தண்ணீர் பெருமளவும் தண்ணீர் தண்ணீர் என்னுமா போலத்
தம்முடைய பயம் சமிக்கும் அளவும் பல்லாண்டு பல்லாண்டு -என்ன ப்ராப்தம் இறே

அதி சங்கையும் -அத்தாலே வந்த பயமும்
பய நிவர்த்திக்காக காலத்தை பெருக்கி இக் காலம் உள்ளதனையும் இப்படி மங்களா சாசனம்

ராம பாக்யத்தாலே மஹாராஜர் நெஞ்சிலே பட்டு பய நிவ்ருத்திக்கு உடலாய்த்து –
இவர்க்கு இது தானே பய ஹேதுவாய்த்து-

சௌகுமார்யமும் -சௌலப்யமும் பய ஹேதுக்கள் ஆகுமே-

நீ தான் உன்னைக் கண்ணாடிப் புறத்திலே கண்டால் ஸ்வதஸ் சர்வஞ்ஞனான நீயும்
கலங்கிப் பரிய வேண்டும்படி யன்றோ உன் வடிவு இருப்பது

சேஷ பூதன் சேஷி வடிவைக் கண்டால் திருவடிகள் -என்று இறே வ்யவஹரிப்பது
ஆஸ்ரயண வேளையோடு-போக வேளையோடு -மங்களா சாசன வேளையோடு -வாசி யற ஆஸ்ரியர் இழியும் துறை திருவடிகள் இறே

திருக் காப்பு குறைவற்ற ரஷை
உண்டான அமங்களங்கள் போகைக்கும் -இல்லாத மங்களங்கள் உண்டாகைக்கும் பண்ணின ரஷை என்கை

ஒரு கிரியை இன்றிக்கே குறைந்து இருப்பான் என் என்னில் —
தமக்கும் ஈஸ்வரனுக்கும் உண்டான நிரவதிகமான உத்க்ர்ஷ அபக்ர்ஷத்தாலே-பாசுரம் இல்லாமையாலே குறைந்து கிடக்கிறது –
இன்னமும் இவ் விஷயத்தில் மங்களா சாசனம் பண்ணினோம் என்று கை வாங்க ஒண்ணாத-அபர்யாப்திக்கு ஸூசகமாய் இருக்கிறது
ஸ்ரீமதே நாராயண நம அஸ்தி சொல்லாமல் போல் இங்கும் எல்லாப் பாட்டுக்கும் இது தான் முக உரை போல் இருக்கிறது

இந்தப் பாசுரம் பல்லவிபோல ஒவ்வொரு பாசுரத்தோடும் சேர்த்துச் சொல்லத் தகுந்தது.
இதையும் மேல் பாசுரத்தையும் சேர்த்து ஒரு பாட்டாக அநுஸந்திப்பது ஸம்ப்ரதாயம்.

————————————————————————–

அடியோமோடும் நின்னோடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் உன் வல மார்பினில் வாழும் மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலது உறையும் ஆழியும் பல்லாண்டு
படை போர் புக்குமுழங்கும் அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு–2-

கீழ் விக்ரஹ யோகத்தையும் குண யோகத்தையும் குறித்து மங்களா சாசனம் பண்ணினார்-
இதில் உபய விபூதி யோகத்தை குறித்து மங்களா சாசனம் பண்ணுகிறார்

அது போலே மங்களா சாசனத்துக்கு தாம் வேணும் -என்று தம்மையும் கூட்டிக் கொள்கிறார்-
அத் தலைக்கு பரிகைக்கு  தாம் அல்லது இல்லாமையாலே -தாம் இல்லாத போது
அத் தலைக்கு அபாயம் சித்தம் என்று இருக்கிறார் இறே

ஆனால் என்னோடும் என்னாதே அடியோமோடும் -என்பான் என் என்னில் –
முறை அறியுமவர் ஆகையாலே -அடியோம் -என்றார்
கர்மோபாதிகமாக வந்த வவஸ்தைகள்  எல்லாம் மறைந்தாலும்-மறையாத ஸ்வாபம் தாஸ்யம்
என்று இருக்குமவர் இறே இவர் –

தான் தனியராய் நின்று மங்களா சாசனம் பண்ணுமத்தால் பர்யாப்தி பிறவாமையாலும்
சேஷத்வம் அவிசிஷ்டம் ஆகையாலும் பஹூ வசனத்துக்கு கருத்து

வடிவாய்
வடிவு -என்று நிறமாய் -இவளோடே சேர்த்தியாலே திரு மேனிக்கு உண்டான புகரைச் சொல்கிறது

வடிவாய்
ஸ்ரீ கௌஸ்து பாதிகள் போலே ஆபரண பூதையாய் -அத்தால் வந்த அழகைச் சொல்லவுமாம்

பல்லாண்டு
கால தத்வம் உள்ள தனையும் இச் சேர்த்தி நித்யமாய்ச் செல்ல வேணும்

ஆழியும் -என்கிற சப்தத்தாலே -ஆயுதாகாரத்தாலே ரஷகமாகக் காட்ட -ஆபரண
புத்தியாலே அவனையும் குறித்து மங்களா சாசனம் பண்ணுகிறார்

பிரதிகூலர் மண் உண்ணும்படியும்
அனுகூலர் வாழும்படியாய் இறே த்வனி இருப்பது -இத் த்வனி இவருக்கு பய ஸ்தானமான படி
என் என்னில் -த்வனி வழியே நின்று இடம் காட்டிக்  என்று பயப்படுகிறார்

அப் பாஞ்ச சன்னியமும் –
முன்னிலையாய்  இருக்க பரோஷ நிர்த்தேசம் பண்ணுவான் என் என்னில் –
புத்ரனை அலங்கரித்த தாய் -தன் கண் படிலும் கண் எச்சிலாம் -என்று பார்க்கக் கூசுமா போலே
மங்களா சாசனம் பண்ணுகிற தம்முடைய கண்ணையும் செறித்து முகத்தை மாற வைத்து
சொல்கிறார் -அன்று யுத்தத்தில் பிறந்த ப்ரமாததுக்கு இன்று மங்களா சாசனம் பண்ணுகிறார்

இவ் விரண்டு பாட்டும் -திருமந்த்ரார்தமாய் இருக்கிறது
அடியோமோடும் -என்கிற இடத்தில் ப்ரணவார்த்தத்தை சொல்லிற்று
முதல் பாட்டில் பல்லாண்டு -என்ற பிரதம பதத்தால் நமஸ் சப்தார்தம் சொல்லிற்று
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா -என்று அப் பாட்டில் விக்ரஹ யோகத்தையும் –
சௌர்ய வீர்யாதி குண யோகத்தையும் -இரண்டாம் பாட்டில் விபூதி யோகத்தையும்
சொல்லுகையால நாராயண பதார்த்தம் சொல்லிற்று –
உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு -என்கையாலே சதுர்த்தியில் பிரார்த்திகிற அர்த்தத்தை-சொல்லிற்று –

அன்று யுத்தத்தில் வந்த பிரபாததுக்கு இன்று அப் பாஞ்ச சந்யதுக்கு
கதே ஜலே சேது பந்தம் -போன அவதாரம் பல்லாண்டு பாடுவது இவருக்கும் இவர் மகளுக்கும்

ஸ்வரூபமும் ஸ்வரூப அனுரூபமான பிராப்யமும் -சேஷத்வம் பார தந்த்ர்யம் கைங்கர்யம்
பிரணவம் சேஷத்வம்
நம பாரதந்த்ர்யம்
நாராயண கைங்கர்யம்
————————————————————————–

வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட் பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஓட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை
பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே -3-

சதுர்விதா பஜந்தே மாம் -என்கிறபடியே -ஐஸ்வர்ய கைவல்ய பகவத் சரணார்திகள் மூவரையும் கூட்டிக் கொள்வாராக நினைத்து –
அதில் மங்களா சாசனத்துக்கு பகவத் ப்ராப்தி காமர்-ப்ரத்யாசன்னர் ஆகையாலே அவர்களை அழைக்கிறார் –
ஏகஸ் சாது ந புஞ்ஜீத -என்கிற-ந்யாயத்தாலே -இம் மங்களா சாசன ரசம் எல்லாரும் புஜிக்க வேணும் என்கிற நினைவாலே-அழைக்கிறார் என்றுமாம்
அவர்களோடே கூட மங்களா சாசனம் பண்ணுகை தமக்கு தாரகம் ஆகையாலும் என்றுமாம் –
அடியார்கள் தங்கள் இன்பமிகு பெரும் குழுவு கண்டு -என்றும் –
அடியார்களை உடன் கூடுவது என்று கொலோ -என்றும்
கண்ணாலே காண்கையும் -அத் திரளிலே புகுருகையும் -இவை எல்லாம் உத்தேச்யமாய் இறே இருப்பது-

ப்ராப்த விஷயத்தில் தன்னைப் பேணாதே பர சம்ருத்தியை ஆஸாசிக்க
சர்வ நிரபேஷனான ஈஸ்வரன் இத்தைக் கண்டு -இதொரு ப்ரேம ஸ்வபாவ ம் இருந்தபடி என் -என்று ப்ரீதனாக –
இவனுக்கு அந்தப் ப்ரிதியே புருஷார்த்தமாய் இறே இருப்பது –

பட்டு -என்பது
உவரிக் கடலில் முத்துப் பட்டது என்னுமா போலே -நான் -எனக்கு -என்று இருக்கிற
சம்சாரத்திலே பகவத் சம்ருத்தியை ஆசாசிக்கும்படி கை ஒழிந்து இருப்பார் சிலரை
பெறுகையாவது அலாப்ய லாபம் என்னும் இடம் தோற்ற அருளிச் செய்கிறார்

நின்றீர்
வாயு பரவசமாய் திரிகிற த்ர்ணம் போலே கர்ம பரதந்த்ரனாய் திரிகிற சம்சார சேதனனுக்கு
பகவத் ஜ்ஞான பூர்வகமாக தத் சம்ருத்தியை ஆசாசிக்கப் பெற்றால் இறே ஸ்திதி உண்டாவது –

நாக பாசத்தில் அன்று அடைய மோஹித்துக் கிடக்க திருவடியும் ஸ்ரீ விபீஷண ஆழ்வானும்-
பிராணன் உடையார் உண்டோ -என்று தேடினால் போலே
சம்சாரத்தில் ஸ்வரூப ஞானம் உடையார்-தேட்டமாய் இறே இருப்பது

நின்றீர்களை -பஹூ வசனத்தாலே -உள்ளீரேல் -என்று தேட வேண்டாதே
பார்த்த பார்த்த இடம் எங்கும் பிரயோஜனாந்த பரராய் இருக்கை

ஏழ் ஆள் -என்று தமக்கு கீழே ஒரு மூன்றும் -மேலே ஒரு மூன்றும் -தாமுமாக ஏழு படியைச் சொல்லுகிறது
இஸ் சமுதாயத்தை பற்றி சாஸ்திரங்கள் சப்த சப்த ச சப்த -என்று இந்த ஏழையும்
இதுக்கு கீழே ஓர் ஏழையும் -இதுக்கு மேலே ஓர் ஏழையும் -ஆக இருப்பதொரு படியைச்  சொல்லுகிறது

தச பூர்வாந்த சாபரா நாத்மா நஞ்சைக விம்சதிம் பங்க்திஞ்ச புநாதி -என்று முக பேதேன
சாஸ்திரம் சொல்லிற்று –
ஏழாட் காலும் -என்கிற சப்தம் இவ் வளவை நினைக்கிறது -இத்தால் ஒரு சந்தாநத்திலே
ஒருவன் அநந்ய பிரயோஜனன் ஆனால் அவனைப் பற்ற பகவத் பிரபாவம் சம்பந்தி
சம்பந்திகள் அளவும் செல்ல கீழும் மேலும் வெள்ளம் இடுகிறது

அக் காலத்தில் மங்களா சாசானம் பண்ணப் பெறாத குறை தீர இன்று இருந்து
மங்களா சாசனம் பண்ணுவோம் சிலர் காண்  நாங்கள் -என்கிறார் –
————————————————————————–

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து
கூடும் மனம் உடையீர்கள் வரம்பு ஒழி வந்து ஒல்லைக் கூடுமினோ
நாடு நகரமும் நன்கு அறிய நமோ நாராயணா என்று
பாடு மனமுடைப் பத்தர் உள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே -4-

ஐஸ்வர்ய காமனுக்கு காலாந்தரத்திலே யாகிலும்
பகவத் சம்பந்தம் பண்ண யோக்யதை உண்டாகையாலும் -இவனுக்கு அந்த யோக்யதையும்
அழிகையாகையாலும் துர்கதியைக் கண்டு முற்பட அழைக்கிறார்

பிரயோஜனாந்தர பரர் -மங்களா சாசனம் பண்ண வாரும் கோள் -என்றால் வருவார்களோ வென்னில்
பகவத் ப்ராப்தியில் உத்க்ர்ஷத்தையும் -அத்தைப் பற்ற கைவல்யத்தினுடைய நிகர்ஷத்தையும்-அறிவித்தால் –
விட்டுப் பற்ற வேணும் -என்னும் ஆத்ம குணாபேதரை இறே இவர் அழைக்கிறது –

கூடும் மனம் உடையீர்கள் –
புகுருவோம் என்ற நினைவே வேண்டுவது
கூட நினைப்பார்களுக்கு செய்ய வேண்டுவது முன்பு நின்ற சிறுமையை குலைத்து வர வேணும்

நாமோ நாராயணா என்று –
தன் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்து ஸ்வரூப அனுரூபமான
கைங்கர்யத்தை பெற வேணும் -என்று வைஷ்ணவனாய் வர வேண்டும் என்று –
அஹமபிநமம -பகவத ஏவாஹமஸ்மி -என்று இறே  நமஸ் சப்தத்துக்கு அர்த்தம் இருப்பது
ஸ்வாமி பக்கல் பண்ணும் அநுகூல வ்ருத்தி இறே புருஷார்த்தம் ஆவது –

பாடு மனமுடைப் பத்தருள்ளீர்
நினைத்து இருக்கும் அவ்வளவு போராது
ப்ரீதிக்கு போக்கு விட்டுப் பாடுவோம் என்னும் நெஞ்சு உண்டாம் படியான பிரேமத்தை
உடையீர் ஆகில்-வந்து பல்லாண்டு கூருமினோ
வந்து திருப்பல்லாண்டு பாடும் கோள்
இத் திரளிலே புக வேணும் என்று இருப்பீர் -அத்தை செய்யும் கோள்
அவ்வளவு போராது -உங்களுடைய வ்ருத்தி விசேஷமும் பெற வேணும் என்று இருப்பீர்
திருப் பல்லாண்டு பாடும் கோள் -என்று க்ரியையை இரண்டாக்கி நிர்வஹிக்கவுமாம்

பாடும் மனம் உடையீர் -நினைத்த அளவு மட்டும் இன்று அன்புடன் பாடி
ஈடு பாடு உடன்-ப்ரீதிக்கு போக்கு வீடாக பத்தர் உள்ளீர் -பிரேமை உடன் பாட
வந்து -திரு பல்லாண்டு பாட

கூடு மனம் உடையீர் முதலில் சொல்லி பாடும் மனம் உடையீர்
விருத்தி விசேஷம் கூட -கைங்கர்யம் செய்ய -கிரியை இரண்டாக்கி கூடியும் பாடியும்
கூட்டத்தோடு சேர்ந்து பாடி
————————————————————————–

அண்டக் குலத்துக்கு அதிபதி யாகி அசுரர் ராக்கதரை
யிண்டைக் குலத்தை யெடுத்துக் களைந்த விருடிகேசன் தனக்குத்
தொண்டைக் குலத்தில் உள்ளீர் வந்து அடி தொழுது ஆயிரம் நாமம் சொல்லிப்
பண்டைக் குலத்தை தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே -5-

அறவனை ஆழிப்படை அந்தணனை என்று ஸுத்தி குண யோகத்தை சொல்லுவாரைப் போலே-
அண்டக் குலத்துக்கு அதிபதியான ஆகாரமே யன்றோ இச் சப்தத்தில் உள்ளது –
அண்டாதிபத்யத்தில் அபேஷை உண்டு என்று தங்கள் அபேஷையை ஆவிஷ்கரிக்கிறார்கள் –
இத்தால் பிரயோஜனாந்த பரரைக் குறித்து –உதாரா -என்னுமவனுடைய ஔ தார்யம் பிரகாசிக்கிறது

இருடிகேசன் –
பிரயோஜனாந்த பரருக்கு ஐஸ்வர்யாதிகளில் கர்ம அனுகூலமாக ருசியைப் பிறப்பிக்கும் –
தன் பக்கலிலே ந்யஸ்த பரராய் இருப்பவருக்கு ஸ்வரூப அநுரூபமாக ருசியைப் பிறப்பிக்கும் –
ஐஸ்வர்யார்த்தமாக அவன் பக்கலிலே கண் வைக்கும் போதே அவன் வடிவு அழகிலே உறைக்க வையும் கோள்
அவன் -மமேதம் -என்கிற அபிசந்தியைக் குலைத்து தன் பக்கலிலே ருசியைப் பிறப்பிக்கும்
அத்தாலே அபேஷித்த ஐஸ்வர்யத்தை விஸ்மரித்து அவன் தன்னையே பற்றலாம்
பிரயோஜனாந்த பரனாய் போந்தவன் நமக்கு ஆஸாசிக்கும் இத்தனை பரிவனாகப் பெற்றோமே-என்று அவன் குளிர நோக்கும் –

ஆயிர நாமம் சொல்லி –
இரண்டு திருநாமத்தையே நிர்பந்திக்க வேண்டுவது -மமேதம் -என்று இருக்கும் அன்று இறே
ததேவம் -என்கிற புத்தி பிறந்தால் பகவத் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திருநாமங்கள் எல்லாம் போக்யமாய் இறே இருப்பது –
அவற்றை வாயாராச் சொல்லி –

பல்லாயிரத்தாண்டு என்மினே
பின்னை பல்லாயிரத்தாண்டு என்னும் கோள் –
அந் நோக்கு அழகு நித்திய ஸ்ரீ யாய் செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணும் கோள்

உங்களுக்கு இம் மாத்ரத்தாலே ஸ்வரூபமும் -அத்தாலே ஈஸ்வரனுக்கு சம்ருத்தியும்
உண்டாகப் பெற்றால் ஆறி இருக்கிறது என் -சடக்கென மங்களா சாசனம் பண்ணும் கோள் என்கிறார் –

————————————————————————–

எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ் படி கால் தொடங்கி
வந்து வழி வழி யாட் செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்
யந்தியம்போதில் யரி வுருவாகி யரியை யழித்தவனைப்
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே -6-

ஏழாட் காலும் பழிப்பிலோம் -என்று பிரயோஜனந்த பரரைக் குறித்து தாம் அருளிச் செய்த
தம்முடைய திரளுக்கு உண்டான ஏற்றத்தை புகுருகிறவர்கள் -தங்களுக்கு உண்டாக
சொல்லிக் கொண்டு வந்து புகுருகிறார்கள் -தம் தாம் ஏற்றம் சொல்லிக் கொண்டு வந்து
புகுருகை சாத்விகருக்கு யுக்தமோ என்னில் -ஆழ்வார் உடைய திரு உள்ளம் பயம்
கெடுகைக்காக சொல்லுகிறார்கள் ஆகையாலே யுக்தம்

ஆழ்வார் ஏழ் ஆட் காலும் பழிப்பிலோம் -என்று திரள அருளிச் செய்தார்
இவர்களும் ஏழ் படி கால் -என்று திரள சொல்லா நின்றார்கள்
இத்தால் -இஸ் சந்தானத்துக்கு மங்களா சாசன விச்சேதம் பிறந்தது இல்லை என்கை
வழி வழி -என்று-சாஸ்திர மார்க்கத்தாலும் சிஷ்ட ஆசாரத்தாலும் என்றுமாம்

பந்தனை தீர
துஷ் ப்ரக்ருதியான ஹிரண்யன் உடலை கீண்டு பொகுடுகையால் வந்த அனுக்கம் தீர –
திரு வவதரித்த திவசத்தில் உண்டான அபதானம் ஆகையாலே அனுக்கம் என்றது இறே
பல்லாண்டு
அனுகூலர் வாயாலே ஒருக்கால் மங்களா சாசனம் பண்ண –
அவ் வஸ்துவினுடைய அனுக்கம் போய் நித்தியமாய் செல்லும் என்று இறே இவர்கள் நினைவு

———-

தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச் சக்கரத்தின்
கோயில் பொறியாலே ஒற்று உண்டு நின்று குடி குடி ஆட் செய்கின்றோம்
மாயப் பொரு படை வாணனை யாயிரம் தோளும் பொழி குருதி
பாயச் சுழற்றிய வாழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே –7-

வைஷ்ணவ சிஹ்னமான திரு விலச்சினையைத் தரிக்கவே –
த்யாஜ்ய உபாதேயங்கள்-இரண்டும் ஸித்திக்கும் என்று பார்த்து –
அத்தைத் தரித்துக் கொண்டு வந்தோம் என்றார்கள் –

ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்டியிலே புகுரப் பண்ணின-உபகார சம்ருத்தியாலே ஆழ்வானைக் கொண்டாடுகிறார்கள்

எங்களை புகுர நிறுத்தின ஆழ்வான் உடைய வீரப் ப்ரகாசமான துறையிலே திருப்பல்லாண்டு-பாடக் கடவோம் என்கிறார்கள்

ஆழி வல்லானுக்கு –
வில் வல்லான் -வாள் வல்லான் -தோள் வல்லான் -என்னுமா போலே
யஸ்ய ஸா ஜனகாத்மஜா -என்கிறபடியே பிராட்டியை எனக்கு என்ன இட்டுப் பிறத்தல்
திருவடி தோளிலே நல் தரிக்க விருத்தல் -கை பேராமல் திரு வாழியைப் பிடித்தல் –
செய்யுமது ஆய்த்து சர்வாதிகத்துவதுக்கு லஷணம்

பல்லாண்டு கூறுதுமே –
அத் தலையில் அடிமை செய்த ஆழ்வான் உடைய வீர ஸ்ரீக்கும்
அடிமை கொண்ட கிருஷ்ணனுடைய வீர ஸ்ரீக்கும் –
மங்களா சாசனம் பண்ணுவார் பெற்றது இல்லை –
அவ் விழவு தீர இன்று இருந்து திருப் பல்லாண்டு பாடுகிறோம் என்கிறார்கள்-
————————————————————-

நெய்யிடை நல்லதோர் சோறு நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக்காயும் கழுத்துக்கு பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல
பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே –9-

நெய்யிடை நல்லதோர் சோறு -இத்தால் போஷக ப்ரசுரமான தாரக த்ரவ்யத்தை தரும் என்கை
கையடைக் காயும்–
தாரக போஷகங்கள் கீழே சொல்லிற்றாய் -மேல் -போக்ய பதார்த்தங்களை தந்தபடி சொல்லுகிறது
திருக் கையாலே இட்ட வெற்றிலை பாக்கு என்று இவர்கள் பக்கல் கௌரவத்தாலே
இட்ட சீர்மையை சொல்லுகிறது -சேஷ பூதன் சேஷியை குறித்து இடும் பிரகாரத்தாலே இறே
சேஷி யானவன் சேஷ பூதனுக்கு இடுவது

கழுத்துக்கு பூணொடு காதுக்குக் குண்டலமும் –
தேகத்தை உத்தேச்யம் என்று இருக்குமவன் ஆகையாலே -தன் உடம்பை அலங்கரித்து
அத்தை அனுபவித்து இருக்குமவன் இறே ஐஸ்வர்யார்த்தி
பகவத் பரனாய் ஈஸ்வரனை அலங்கரித்து சதா தர்சனம் பண்ணி இருக்கிறான் அல்லனே
ஸ்வரூபத்தை உணர்ந்து -ஜ்ஞான வைராக்ய பக்திகளை ஸ்வரூபத்துக்கு ஆபரணமாக
நினைத்து இருக்கிறான் அல்லனே
கழுத்துக்கு பூணொடு காதுக்கு குண்டலமும் -என்று விசேஷிப்பான் என் என்னில் –
தன் கண்ணுக்கு அவிஷயமாய் -நாட்டார் கொண்டாடும் அதுவே தனக்கு பிரயோஜனமாய்
இருக்கையாலே
அவயவாந்தரந்களிலே -அங்குலீய காத்யாபரணங்கள் தன் கண்ணுக்கு விஷயமாய் இருக்கும் இறே
பெருமாள் மீண்டு எழுந்து அருளின அளவிலே இந்த்ரன் வரக் காட்டின ஹாரத்தை
பிராட்டியும் தாமும் இருந்து திருவடிக்கு பூட்டினால் போலே -ஈஸ்வரன் பரிந்து
இது கழுத்துக்காம் -இது காதுக்காம் -என்று திருக்கையாலே பூட்டின ஆபரணமும்

என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல –
சோரேணாத்மாபஹாரிணா -என்கிறபடியே ஆத்ம அபஹாரம் பண்ணி -அதனாலே
ஷூத்ர பிரயோஜன காமனாய் -சம்சாரியாய் போந்த என்னை –

மங்களா சாசனத்துக்கு விஷயம் ஏது என்ன -அவ் விஷயத்தை சொல்லுகிறார்
தன்னோட்டை ஸ்பர்ச சுகத்தாலே விகஸித பணமான நாகத்தினுடைய பகை உண்டு
பெரிய திருவடி -அவனை கொடியாக உடையவனுக்கு-அநந்த சாயியாய் கருடத்வஜனானவனுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறேன் என்கை

தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே திரு வநந்த வாழ்வானோட்டை சேர்த்தியால்
வரும் அழகு நித்ய ஸ்ரீ யாக வேணும் என்றும்
ஏதேனும் ஒன்றை அபேஷித்து வந்தவர்களையும் எனக்காக்கிக் கொள்ள வல்லேன்
என்று கொடி கட்டி இருக்கிற சக்தி நித்ய ஸ்ரீ யாக செல்ல வேண்டும் என்றும்
திருப்பல்லாண்டு பாடுகிறேன் என்கிறார்

அநந்ய  பிரயோஜனரும் -கைவல்யார்த்திகளும் -சங்கதராகிற  இடத்தில் சமூஹமாக பேசினார் -பாடுதும் -கூறுதும் -என்றும்
இதில் ஐஸ்வர்யார்த்தியை ஏக வசனத்தாலே பேசுவன் என் என்னில் -கூறுவன் -என்று
அவர்கள் திரள் பரிச்சின்னமாய் -ஐஸ்வர்த்யார்திகள் திரள் அபரிச்சின்னம் ஆகையாலே
ஒரூருக்கு ஒருத்தன் வார்த்தை சொல்லுமா போலே சொல்லுகிறார்
————————————————————————–

உடுத்துக் களைந்த நின் பீதகவாடை உடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய் முடி சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திரு விழவில்
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்கு பல்லாண்டு கூறுதுமே –9

உடுத்த நின் பீதக வாடை-களைந்த நின் பீதகவாடை-என்னாமல் – உடுத்துக் களைந்த நின் பீதகவாடை
மஞ்சளும் செங்கழுநீரும் கலந்த -இது இறே அநந்ய பிரயோஜனருக்கு ஆபரணம்

திருத் துழாய் பறிக்கும் போதும் -தொடுக்கும் போதும் -அவன் சாத்தி அருளப் புகுகிறான் –
என்னும் ஆதரத்தாலே சம்ச்க்ர்தமாய் சாத்திக் கழித்தால் சூடுமது எங்களுக்கு உத்தேச்யம் –
சுவடர் பூ சூடும் போது புழுகிலே தோய்த்து சூடுமா போலே -தத் ஸ்பர்சத்தாலே விலஷணமாய் இருக்கும் என்கை –
அவன் தானும் சிலர் -சூடிக் கொடுத்த மாலையின் சுவடு அறியுமவன்-ஆகையாலே சூடிக் கொடுக்கிறான் இறே

விடுத்த திசைக் கருமம் திருத்தி –
க்ரியதாம் -என்கிற சந்தேசமே தாரகமாக ஏவின கார்யத்தை செய்து தலைக் கட்டுகை –
ஸ்வாமி ஏவின கார்யத்தை குறையச் செய்யுமவன் அதமன் –
அத்தை குறையாமல் செய்து தலைக் கட்டுமவன் மத்யமன் –
அதுக்கு மேலே அதுக்கு அவிருத்தமான கார்யங்களையும் விசாரித்து செய்து தலைக் கட்டுமவன் உத்தமன் –திருவடி-போல் –

இத் தொண்டர்களோம்
இப்படிப் பட்ட அடியார்கள் இறே நாங்கள் –
எமக்கு என்று உடுத்தல் ஜீவித்தல் சூடுதல் செய்யுமவர்கள் அன்றிக்கே -அவன் கழித்தவை
கொண்டு தேக யாத்ரையாம் படி யிருக்குமவர்கள் இறே  நாங்கள்

அதிலும் பர்யாப்தி பிறவாமையாலே
திரு வநந்தாழ்வான் மேலே சாய்ந்த போதை அழகுக்கு கண் எச்சில் வாராமைக்கு
மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –
இவனுடைய வடிவும் -அவனுடைய வடிவும் -கிடந்ததோர் கிடக்கை -என்கிறபடியே
பரிச்சேதிக்க ஒண்ணாத அழகு இறே கண் வளர்ந்து அருளுகிற போதை அழகு –
ஒரு வெள்ளி மலையிலே காள மேகம் சாய்ந்தால் போலே கண் வளர்ந்து அருளுகிற போதை
பரபாக ரசத்தை அனுசந்தித்தால் மங்களா சாசனம் ஒழியச் செல்லுமோ என்கிறார்கள்
தேக யாத்ரையிலும் தங்கள் பாரதந்த்ர்யம் காட்டி புகுந்தார்கள்

————————————————————————–

எந்நாள் எம்பெருமான் உன் தனக்கு அடியோம் என்று எழுத்து பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக் குடில் வீடு பெற்று உய்ந்தது காண்
செந்நாள்த் தோற்றி திருமதுரையுள் சிலை குனித்து ஐந்தலைய
பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே வுன்னைப் பல்லாண்டு கூறுவனே –10-

பகவத் ப்ரபாவத்தாலே தங்களுக்கு பிறந்த ஏற்றத்தை சொல்லிக் கொண்டு ப்ரயோஜனாந்தர பரர்கள் வந்து புகுகிறார்கள் –

எந்நாள்-பகவத் பிரபாவம் தான் விஷயீ கரித்த திவசத்தையும் கொண்டாடும்படியாய் இருக்கும் இறே

எம்பெருமான் -என்கிற ப்ராப்தி யாலும் –
உன் தனக்கு -என்கிற சக்தியாலும் –
எழுத்துப் பட்ட -என்கிற சப்த மாத்ரத்தாலும்
பலிக்கக் கண்டோம் என்கிறார்கள் –

பட்ட -என்கிற இது –முத்துப்பட்ட -என்கிறாப் போலே–

வாழாட் பட்டு -என்கிற -இடத்தில் அர்த்தத்தின் உடைய துர்லப்த்வம் சொல்லிற்று-
வாசக சப்தத்தின் உடைய துர்லப்த்வம் சொல்லுகிறது இங்கு

அன் நாள் அமைந்து இருக்க என் நாள் சொல்வது வகுத்து சேஷி பக்கலில்
மங்களாசாசனம் பண்ண அனுக்ரகம் செய்த நாளே நல்ல நாள்
மார்கழி திங்கள் மதி நிறைந்த நல்  நாள்
அக்ரூரர் கண்ணனை கூப்பிட அனுப்பிய நாளே நல்ல நாள்- கம்சன் சோறு உண்டு வளர்ந்த
எனக்கு வாய்த்த நாள் –

தாஸ்யம் என்றும் – உஜ்ஜீவனம் -என்று பர்யாயம் போலே காணும்

ஐந்தலை இத்யாதி –
அது கிடக்க -நிர்ப்பயமாய் வர்த்திக்கிற காலத்திலே பிறந்த ப்ரமாதமே போராதோ வயிறு
எரிகைக்கு என்கிறார்கள் –
ஐந்தலைய பைந்நாகத் தலை பாய்ந்தவனே –
கடிக்கைக்கு ஐஞ்சு வாயை உடைத்தாய் -க்ரோதத்தாலே விஸ்த்ர்தமான பணத்தை உடைத்தான
சர்ப்பாச்யத்திலே யன்றோ புக்கது -ஏக தாது விநா ராமம் க்ருஷ்ணோ ப்ருந்தாவனம் ய யௌ
என்று தலையன் ஒரு நாள் பேர நிற்க -பாம்பின் வாயிலே புகும் படி இறே தீம்பு –

கிருஷ்ண அவதாரம் என்றால் ஆழ்வார்கள் எல்லாரும் ஒக்க பரிவராய் இருப்பர்கள்
இதுக்கு அடி என் -என்று ஜீயர் பட்டரை கேட்க –
ராமாவதாரத்தில் பிள்ளைகள் -தாங்கள் மிடுக்கராய் -குணாதிகருமாய் –
பிதா சம்ப ராந்தகனுமாய்
மந்த்ரிகள் வசிஷ்டாதிக்களுமாய்
ஊர் அயோதயையுமாய்
காலம் நல்ல காலமுமாய்
இருக்கையாலே அங்குத்தைக்கு ஒரு பயமும் இல்லை –

இங்கு
பிறந்தவிடம் சத்ரு க்ர்ஹமாய்
கம்சன் இடம் பார்த்து நலியும் துஷ்ப்ரக்ர்திகளை வரக் காட்டும் கரூரனுமாய்
தமப்பன் இடையனுமாய்
ஊர் இடைச்சேரியுமாய்
பிள்ளைகள் தாங்கள் தீம்பருமாய்
காலம் கலி காலத்தோடு தோள் தீண்டியாய்
இருக்கையாலே என் வருகிறதோ என்று பரிகைக்கு ஆழ்வார்கள் அல்லது இல்லை காணும்
என்று அருளிச் செய்தார் –

உன்னைப் பல்லாண்டு கூறுதுமே –உன்னை கூறுதுமே -என்கிற ஸ்வரத்துக்கு கிருஷ்ண அவதாரம் பரிகை என்று காட்டி அருளுகிறார்

இப்படிப்பட்ட உன்னை அனுசந்தித்தால் மங்களா சாசனம் ஒழிய தரிக்க விரகு உண்டோ என்கிறார்கள்

————————————————————————–

அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன் அபிமான துங்கன்
செல்வனைப் போலே திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்
நல் வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவிப்
பல் வகையாலும் பவித்ரனே உனக்குப் பல்லாண்டு கூறுவனே –11-

அல் வழக்கு ஒன்றும் இல்லா
வழக்கு அல்லாதவை அநேகம் இறே
1-தேகத்தில் ஆத்ம புத்தி பண்ணுகை வழக்கு அல்ல
2-ப்ரக்ருதே பரமான ஆத்மவஸ்துவை ஸ்வ தந்த்ரன் என்று அனுசந்திகை வழக்கு அல்ல –
3-தேவதாந்த்ரங்களில் பரத்வ புத்தி பண்ணுகை வழக்கு அல்ல –
4-பகவத் பஜனத்துக்கு பலம் பிரயோஜனான்தரம் என்று இருக்கை வழக்கு அல்ல –
5-அநந்ய பிரயோஜனம் ஆனாலும் உபாயாந்தர சாதனம் என்று இருக்கை வழக்கு அல்ல –
6-பகவத் அனுபவத்தை -மமேதம் -என்று இருக்கை வழக்கு அல்ல –

இனி –வழக்கு -ஆவது –
சேஷிக்கு மங்களா சாசனம் பண்ணுகை என்று இறே இவர் இருப்பது

இவை -ஒன்றும் இன்றிக்கே -அத் தலைக்கு மங்களா சாசனம் பண்ணும் அது ஒன்றே வழக்கு –

திருமாலே
இவ் வாத்ம வஸ்து ஒரு மிதுன சேஷம் -என்று சேஷத்வ பிரதி சம்பந்தியை சொல்லுகிறார்கள்

இத்தால்
மாதா பித்ர் சேஷத்வமும் -தேவதாந்தர சேஷத்வமும் கர்ம உபாதிகம் என்கை
அதவா
தேவரீருக்கு பிராட்டி நிரூபக பூதையாய் இருக்கிறாப் போலே எங்களுக்கும் தாஸ்யம்
நிரூபகம் என்கிறார்கள் -என்றுமாம்

இந்த ஸ்வரூப ஞானம் எவ் வழியாலே பிறந்தது என்னில்
சகல வேதாந்த தாத்பர்யமான மந்திர ரஹச்யத்தாலெ பிறந்தது என்கிறார் மேல்
நல் வகையால் நமோ நாராயணா -என்று
நாராயணனுக்கே உரியேன் -எனக்கு உரியேன் அல்லேன் -என்கை
நல் வகையால்

முன்பு அர்த்த விதுரமாக -ஜப ஹோமாதி முகத்தாலே பிறந்த அந்வயம் அடையத்
தீ வகை என்று இருக்கிறார்கள் -இது தான் சர்வார்த்த சாதகம் இறே –
நமோ நாராயணா யேதி மந்த்ரஸ் சர்வார்த்த சாதகா -என்னக் கடவது இறே

நாமம் பல பரவி –
இவர் இவர்களை அழைக்கிற போது -அடி தொழுது ஆயிரம் நாமம் சொல்லி -என்றார் இறே -அத்தை இறே இவர்களும் சொல்லுகிறது

பரவி –
அக்ரமமாகச் சொல்லி –
சாதனமான போது இறே க்ரம அபேஷை உள்ளது –
முன்பு -மமேதம் -என்று இருந்தவர்களுக்கு -மங்களா சாசன யோக்யராம் படி
புகுர நிற்கைக்கு இசைவே வேண்டுவது –

பல் வகையாலும் பவித்ரனே –
பிரயோஜனாந்தர பரரான அசுத்தியைப் போக்கி –
அதுக்கடியான அஹங்கார மமகாரங்கள் ஆகிற அசுத்தியைப் போக்கி –
சேஷத்வம் தன்னிலும் -மாதா பித்ர் சேஷத்வம் என்ன இவ்வோ அசுத்தியைப் போக்கிப்
புகுர நிறுத்தினவனே –

உன்னைப் பல்லாண்டு கூறுவனே –
சௌந்தர்யாதி குண யுக்தனான உன்னை மங்களா சாசனம் பண்ணுகிறேன்

ஏக வசனத்தாலே
கீழ் சொன்ன புருஷார்த்திகள் மூவர் முகத்தாலும் தாமே திருப்பல்லாண்டு பாடுகிறார்
என்னும் இடம் தோற்றுகிறது

ஐஸ்வர்யார்த்தி சங்கதன் ஆகிற அளவிலும் ஏக வசனம் ஆகையாலே இங்கும்
அதுவே யாகிறது என்னவுமாம் –

எங்கனே சொல்லினும் இன்பம் பயக்குமே
முன்பு மமேதம் என்று இருந்தவர் மங்கள சாசனாம் பண்ண யோக்யதை கிட்ட இது ஒன்றே போதும்
இசைவு ஒன்றே வேண்டும் -போதுமினே போதுவீர் இச்சையே போதும்
பல் வகையாலும் பவித்ரனே -பல விதத்திலும் சுத்தன்
பிரயோஜனான்தரம் -அதுக்கு அடிக்கடி நீர் நுமது வேர் முதல் மாய்த்து
சேஷத்வம் -தேவாந்தர பஜனம் போக்கி வெள்ளுயிர் ஆக்க வல்ல அர்த்தம்
அன்றிக்கே
ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி -பார்த்தாலும் நினைத்தாலும் -பவித்ரம் கிட்டுமே
இதுவும் பல் வகையாலும் பவித்ரன்
ரூப ஸ்ரீயை பார்த்த வாறே -போக்குமே
உன்னை -சர்வேஸ்வரன்
கூறுவனே -ஆழ்வாரே மூன்று வகையால்- பாடினார் என்ற அர்த்தம் -மூவர் முகத்தாலும் தானே அருளுகிறார்
ஏக வசனம்-முன்பு ஊருக்கு ஒருவன் போலவும் கொள்ளலாம் -கோஷ்டிக்கு ஒருவர் போலவும் கொள்ளலாம்
அல் வழக்கு ஒன்றும் இல்லா –
நானும் உனக்கு பழ அடியேன்-சொல்லும் படி மாற்றினார்
எங்கேயோ திரிந்த கஷ்டம் மனசில் படாமல் வைப்பான்-அன்று ஈந்த கன்று -மேல் வைக்கும்
அக் குற்றம் -அவ்வியல்பே ஆள் கொள்ளும்-

————

பல்லாண்டு என்று பவித்ரனைப் பரமேட்டியைச் சார்ங்கம் என்னும்
வில்லாண்டான் தன்னை வில்லி புத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்
நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் நமோ நாராயணா என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே –12

நிகமத்தில் –
இப் பிரபந்தத்தை அதிகரித்தாருக்கு பலம் சொல்லுகிறதாய் –
பிரேம பரவசராய்க் கொண்டு மங்களா சாசனம் பண்ணுகிறார் –
அநந்ய பிரயோஜனருக்கும் தம்மோ பாதி பகவத் ப்ரத்யாசத்தி உண்டாகையாலே அவர்களை அழைத்தார் –

ஐஸ்வர்ய கைவல்யங்களைப் பற்றி ஆஸ்ரயித்தவர்களும் -பகவத் பிரபவத்தாலே
மங்களா சாசனத்துக்கு ஆளாவார்கள் என்று அவர்களையும் அழைத்தார் –

அவ்வளவும் இல்லாத சம்சாரிகளும் தம்முடைய பாசுரத்தில் இழியவே
யாவதாத்மபாவி மங்களா சாசன அர்ஹர் ஆவார்கள் என்று இப்பிரபந்தத்தின்
வைபவத்தை அருளிச் செய்கிறார் -பகவத் பிரசாதத்தால் வருவர் என்று நம்பி அழைத்தார்

அவ்வளவும் இல்லாத சம்சாரிகளும் இந்த பிர பந்தம் சொல்லி மங்களா சாசானம் செய்ய பலன் அருளுகிறார் இதில்

உலகு அளந்து பொழுது திரு அடி ஆண்டு- குசை தாங்கி பிடித்து ஆண்டான் -அது போல் வில்லாண்டான்
சார்ங்கம் உதைத்த சர மழை-மதம் பிடித்த யானை ஆளுவது போல் சார்ங்கம் என்பதே பிரசித்தி
வான் உயரம் வரை இருக்கும் -வில்லை பிடித்து –

இத்தால் -உப்கிரம உபசமகாரம் -ஆரம்பம் முடிவு இரண்டிலும் காட்டும்
மல்லாண்ட திண தோள் மணி வண்ணா -முதல் பாசுரம்-கொன்றவன் எம்பெருமான்-
இங்கு விரோதி போக்கி பரமேட்டி பவித்ரன்-மாவாய் பிளந்து விரோதி நிரசன சீலன்
ஐஸ் வர்யார்த்தி விரோதி போக்கி அதே குணம்
மணி வண்ணா -கருட பச்சைக்கும் உப லஷணம்
பர மேட்டி -இரண்டாம் பாசுரத்தில் உபய விபூதி சொன்னது போல்
வில்லிபுத்தூர் விட்டு சித்தன் –
அவ் ஊரில் பிறப்பாலே  ஆய்த்து பகவத் ப்ரயாசத்தி –
பகவத் ப்ரயாசத்தியிலே ஆய்த்து மங்களா சாசன யோக்யமான பிரேம அதிசயம் –
விட்டு சித்தன் -என்கிற திருநாமம் உண்டாய்த்து
ஆழ்வார் விடிலும் தாம் விட மாட்டாத தன் பேறாக இவர் திரு உள்ளத்தே
நித்யவாசம் பண்ணின படியாலே
விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலன் -என்னக் கடவது இறே

கால் வாங்க ஒண்ணாத அழகில் தோற்று – சூழ்ந்து சூழ்ந்து
சுழி ஆறு பட -மங்களா சாசனத்தில் மூட்டும்
பவித்ரனை -பர மேட்டியை –உரைப்பார் நமோ நமோ -பல்லாண்டு ஏத்துவர் என்று அன்வயம்

சூழ்ந்து இருந்து பாடுவது
பவித்ரன் அவன்
பரமேட்டி வைகுண்ட நாதன்
நீண்ட சார்ங்கம் பற்றி- விரும்பி பாடிய சொல்
இன்று கிடைத்த நாள் நல்லது
நமோ நாராயணா சொல்லி அங்கும் சூழ்ந்து இருந்து ஏத்த பெறுவார்
இங்கு நித்யம் இல்லை
அங்கு நித்யம்
சூழ்ந்து இருந்து ஏத்தி கைங்கர்யம் பண்ணப் பெறுவோம்-

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

திருப்பல்லாண்டு -12-பல்லாண்டு என்று பவித்ரனைப் பரமேட்டியை–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

April 6, 2013

அவதாரிகை –

நிகமத்தில் –
இப்பிரபந்தத்தை அதிகரித்தாருக்கு பலம் சொல்லுகிறதாய் –
பிரேம பரவசராய்க் கொண்டு மங்களா சாசனம் பண்ணுகிறார் –
அநந்ய பிரயோஜனருக்கும் தம்மோ பாதி பகவத் ப்ரத்யாசத்தி உண்டாகையாலே அவர்களை அழைத்தார் –
ஐஸ்வர்ய கைவல்யங்களைப் பற்றி ஆச்ரயித்தவர்களும் -பகவத் பிரபவத்தாலே
மங்களா சாசனத்துக்கு ஆளாவார்கள் என்று அவர்களையும் அழைத்தார் –
அவ்வளவும் இல்லாத சம்சாரிகளும் தம்முடைய பாசுரத்தில் இழியவே
யாவதாத்மபாவி மங்களா சாசன அர்ஹர் ஆவார்கள் என்று இப்பிரபந்தத்தின்
வைபவத்தை அருளிச் செய்கிறார் –

பல்லாண்டு என்று பவித்ரனைப் பரமேட்டியைச் சார்ங்கம் என்னும்
வில்லாண்டான் தன்னை வில்லி புத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்
நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் நமோ நாராயணா என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே –12

பரமேட்டியை -பரம பதத்தை கலவி இருக்கையாக உடையனாய்
நல்லாண்டு -சொல்லுகைக்கு ஏகாந்த காலம் என்று நினைத்து
பரமத்மானை -சேதன அசேதனங்களை சரீரமாக உடையவனை-

வியாக்யானம்

பவித்ரனை –
ஒரு உபாதியால் அன்றிக்கே -ஸ்வ ஸூத்தனானவனை –
சாஸ்வதம் ஸிவம் -என்னக் கடவது இ றே -இத்தால் அசுத்தி பதார்த்த
சம்யோகத்தாலே தத்கத தோஷ ரசம் ஸ்பர்ஷ்டனாகையும் –
ஸ்வ சம்பந்தத்தாலே அசுத்தன் சுத்தன் ஆகையும் ஆகிற -பரம பாவநத்வம் சொல்லுகிறது
அதாகிறது
சேதன அசேதனங்களில் வ்யாபித்தாலும் தத்கத தோஷம் ஸ்பர்சியாது ஒழிகையும்
நிர்ஹேதுகமாக நித்ய சம்சாரியை நித்ய சூரிகளோடே ஒரு கோவை ஆக்குகையும்
பரமேட்டியை –
பரமே ஸ்தானேஸ்தனன் ஆனவனை –

சார்ங்கம் என்னும் இத்யாதி –
இது மகிஷீ பூஷண ஆயுத பரி ஜனங்களுக்கும் உப லஷணம் –
அங்குள்ளாரை இட்டு தன்னை நிரூபிக்க வேண்டும்படி இ றே அவர்களுக்கு தன்னோடு உண்டான ப்ரத்யாசக்தி
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை –
சார்ங்கம் என்னும் வில் ஒன்றே ஆய்த்து அதுக்கு ப்ரசித்தி –
மத்த கஜத்தை யாளுமவன் என்னுமா போலே அத்தை ஆளுமவன் என்றது ஆய்த்து –
ஆலிகந்தமிவா காண மவஷ்டப்ய மஹத்தநு -என்னக் கடவது இ றே
இத்தால் -மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா -என்கிற இடத்தில் பவித்ரதையை நினைத்து-பரமேட்டியை இத்யாதியாலே இரண்டாம் பாட்டில் சொன்ன நித்ய விபூதி யோகத்தை சொல்லுகிறது

வில்லிபுத்தூர் விட்டு சித்தன் – பல்லாண்டு -என்று விரும்பிய சொல் –
இப்போது பகவத் ப்ராப்தி காமர் -பிரயோஜனாந்த பரர் -என்று அடைவடைவே வந்து
நின்றார் இல்லை இ றே -அவ்வவருடைய பாசுரங்களாலே தாமே அருளிச் செய்தார் என்னும் இடம் தோற்றுகிறது இ றே-தம்முடைய வார்த்தையாக தாமே தலைக் கட்டுகையாலே -அவர்கள் பாசுரமாக அங்குச் சொல்லிற்று –
பிரயோஜனாந்த பரர்க்கும் பகவத் ப்ரசாதத்தாலே மங்களா சாசனம் பண்ணுகைக்கு
யோக்யதை உண்டு என்னும் இவ் வர்த்தத்தின் உடைய ஸ்தைர்யத்துக்காகவும்
மங்களா சாசனத்தில் தமக்கு உண்டான ஆதர அதிசயம் தோற்றுகைகாகவும்
வில்லிபுத்தூர் விட்டு சித்தன் –
அவ் ஊரில் பிறப்பாலே  ஆய்த்து பகவத் ப்ரயாசத்தி –
பகவத் ப்ரயாசத்தியிலே ஆய்த்து மங்களா சாசன யோக்யமான பிரேம அதிசயம் –
விட்டு சித்தன் -என்கிற திருநாமம் உண்டாய்த்து
ஆழ்வார் விடிலும் தாம் விட மாட்டாத தன் பேறாக இவர் திரு உள்ளத்தே
நித்யவாசம் பண்ணின படியாலே
விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலன் -என்னக் கடவது இ றே

நல்லாண்டு என்று
இப்பாசுரம் சொல்லுகைக்கு ஏகாந்தமான காலத்தை கொண்டாடி –
அத்யமே சபலம் ஜன்ம -என்னக் கடவது இ றே
கண்டதடைய மமேதம் என்று போந்த அநாதி காலம் போல் அன்றிக்கே
பகவத் ச்ம்ர்த்திக்கு மங்களா சாசனம் பண்ணக் கடதாம் படி வந்ததொரு காலம்
சேதனனுக்கு ஸூ துர்லபம் இ றே
நவின்று உரைப்பார்
நவிலுகை -பயிலுகை -இடைவிடாதே உரைக்கை
நமோ நாராயணா என்று
அநாதி காலம் மமேதம் என்றதை தவிருகையும்
ததேவம் -யென்கையும்
இத்தால் மங்களா சாசனத்துக்கு யோக்யதை சொல்லுகிறது
பல்லாண்டும் –
காலம் எல்லாம்
யாவதாத்மபாவி -என்கிறது –
கால க்ர்த பரிணாமம் இல்லாத தேசத்திலே ஆண்டை இட்டுச் சொல்லுகிறது –
அந்த பரிணாமம் உள்ள தேசத்திலே வர்த்திகிறவர் ஆகையாலே
பரமாத்மனை –
தனக்கு மேல் இன்றிக்கே –
தன்னை ஒழிந்தார் அடங்க ஸ்வ ஆதீநமாம் படி இருக்கிறவனை
இத்தால்-அமங்களங்களுக்கு -அவகாசம் இன்றிக்கே இருக்கையாலே ஒருவனுடைய மங்களா சாசனத்தால்-ஓர் ஏற்றம் உண்டாக வேண்டாதே இருக்குமவனை –
சூழ்ந்து இருந்து ஏத்துவர்-நம புரஸ்தாத தப்ருஷ்ட தஸ்தேத மோஸ் தூதே -என்கிற படியே முன்பே நில்லா-முறுவலை அனுபவித்து அதிலே ஈடுபடும் -பின்பே நில்லா பின்பும்-பிறகு வாளி யாவது -தண்டிகை கொம்பு போலே வளைந்து திரு பிடரியிலே
தொங்குகிற அசாதாராண ஆபரண விசேஷம் -பிறகு வாளி யுமான
அழகை அனுபவித்து அதிலே ஈடுபடும் -இப்படி சுழி யாறு படா நிற்கச் செய்தே கால்
வாங்க ஒண்ணாத வடிவு அழகு -அதி சங்கையை விளைத்து மங்களா சாசனத்தில் மூட்டும் என்கை-
பவித்ரனை -பரமேட்டியை -சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை -வில்லிபுத்தூர் விட்டு சித்தன் -பல்லாண்டு என்று விரும்பிய சொல் -நல்லாண்டு என்று
நவின்று உரைப்பார் -நமோ நாராயணா என்று பரமாத்மனைச் சூழ்ந்து
இருந்து பல்லாண்டும் பல்லாண்டு -ஏத்துவர் –என்று அந்வயம்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருப்பல்லாண்டு -11-அல் வழக்கு ஒன்றும் இல்லா –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

April 6, 2013

அவதாரிகை –அண்டக்குலத்தில் ஆஹூதராய் -நெய்யிடை -என்கிற பாட்டில் சங்கதரான-ஐஸ்வர்யார்த்திகள் பாசுரத்தாலே திருப்பல்லாண்டு பாடுகிறார் –

அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன் அபிமான துங்கன்
செல்வனைப் போலே திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்
நல் வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவிப்
பல் வகையாலும் பவித்ரனே உனக்குப் பல்லாண்டு கூறுவனே –11-

வியாக்யானம்-

அல் வழக்கு ஒன்றும் இல்லா
வழக்கு அல்லாதவை அநேகம் இ றே
1-தேகத்தில் ஆத்மபுத்தி பண்ணுகை வழக்கு அல்ல
2-ப்ரக்ருதே பரமான ஆத்மவஸ்துவை ஸ்வ தந்த்ரன் என்று அனுசந்திகை வழக்கு அல்ல -3தேவதாந்த்ரங்களில் பரத்வ புத்தி பண்ணுகை வழக்கு அல்ல –
4-பகவத் பஜனத்துக்கு பலம் பிரயோஜனான்தரம் என்று இருக்கை வழக்கு அல்ல –
5-அநந்ய பிரயோஜனம் ஆனாலும் உபாயாந்தர சாதனம் என்று இருக்கை வழக்கு அல்ல -6-பகவத் அனுபவத்தை -மமேதம் -என்று இருக்ககை வழக்கு அல்ல –
இனி –வழக்கு -ஆவது –
சேஷிக்கு மங்களா சாசனம் பண்ணுகை என்று இ றே இவர் இருப்பது
அணி கோட்டியூர் கோன்
இவை -ஒன்றும் இன்றிக்கே -அத்தலைக்கு மங்களா சாசனம் பண்ணும் அது ஒன்றே வழக்கு -என்று ஆய்த்து அவ் ஊரில் உள்ளார் இருப்பது –
இதுக்கடி இவர் என்று தங்களுக்கு நிர்வாஹராக வாய்த்து நினைத்து இருப்பது
அணி -என்று ஆபரணமாய் -சம்சாரத்துக்கு ஆபரணமான ஊர் என்கை

அபிமான துங்கன்
அபிமானம் சேஷத்வ விரோதியாய் இருக்க அத்தால் மிக்கு இருப்பார் என் என்னில் –
கர்மத்தால் வந்த துர்மானம் ஆய்த்து த்யாஜ்யம் -தாசோஹம் -என்கிற வைஷ்ணவ அபிமானம் உபாதேயம்
ஆகையாலே அத்தாலே பூரணராய் இருப்பர் என்கிறது -அதாவது
உகந்து அருளின நிலங்களில் உண்டான குறைவு நிறைவுகளும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய தேக யாத்ரையில் குறைவு நிறைவுகளும்
தம்மதமாய இருக்கை
செல்வன் -என்று
ஸ்வரூப ப்ராப்தமான ஐஸ்வர்யத்தாலே குறைவற்றவர் என்கை -அதாவது
ஞான பக்தி வைராக்யங்களால் குறை வற்றவர் யென்கையும்
லஷ்மணோ லஷ்மி சம்பன்ந -என்கிறபடி அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருக்கையும்
உபமான சேஷாணாம் ஸாதூநாம் -என்கிறபடியே சாத்விகருக்கு உபமான பூமியாய் இருக்குமவர்
இவரை திருஷ்டாந்தம் ஆக்கிக் கொண்டு -பழ வடியேன் -என்று முன்பு ஐஸ்வர்யார்த்தியாய்
இன்று ஸ்வரூப ஞானம் பிறந்தவன் சொல்லுகை அநுப பன்னம் அன்றோ  என்னில்
கர்மத்தால் வந்த அஹங்காரம் போனால் தாஸ்யம் சர்வ ஆத்மாக்களுக்கும் சத்தா
ப்ரயுக்தம் ஆகையாலே சொல்லுகிறார்கள்
அதவா –
நை சர்க்கிகமான ஞானம் உடையாருக்கும் இன்று ஆஸ்ரயிக்கும் இவனுக்கும் வாசி வையாதே
விஷயீ கரிக்கும் ஈஸ்வர அபிப்ராயத்தாலே சொல்லவுமாம்

திருமாலே –
இவ்வாத்ம வஸ்து ஒரு மிதுன சேஷம் -என்று சேஷத்வ பிரதி சம்பந்தியை சொல்லுகிறார்கள்
இத்தால்
மாதா பித்ர் சேஷத்வமும் -தேவதாந்தர சேஷத்வமும் கர்ம உபாதிகம் என்கை
அதவா
தேவரீருக்கு பிராட்டி நிரூபக பூதையாய் இருக்கிறாப் போலே எங்களுக்கும் தாஸ்யம்
நிரூபகம் என்கிறார்கள் -என்றுமாம்
நானும் –
பிரயோஜனாந்தர பரதையாலே அநாதி காலம் அன்யார்ஹனாய் போந்த நானும் –
சேஷி பக்கல் பிரயோஜனாந்தரத்தை அபேஷிக்கை யாவது -பதிவ்ரதை பர்த்தாவின் பக்கலிலே
வ்யபிசாரத்தை அபேஷித்தவோபாதி இ றே
உனக்குப் பழ வடியேன் –
உனக்கு சேஷித்வம் அநாதி யானவோபாதி எனக்கும் சேஷத்வம் அநாதி என்கை
உனக்கு –
பிரயோஜனாந்தரத்தை அபேஷித்து திருவடிகளில் கிட்டினதுவே ஹேதுவாக அநந்ய
பிரயோஜநன் ஆக்க வல்ல உனக்கு

இந்த ஸ்வரூப ஞானம் எவ் வழியாலே பிறந்தது என்னில்
சகல வேதாந்த தாத்பர்யமான மந்திர ரஹச்யத்தாலே பிறந்தது என்கிறார் மேல்
நல் வகையால் நமோ நாராயணா -என்று
நாராயணனுக்கே உரியேன் -எனக்கு உரியேன் அல்லேன் -என்கை
நல் வகையால்-முன்பு அர்த்த விதுரமாக -ஜப ஹோமாதி முகத்தாலே பிறந்த அந்வயம் அடையத்-தீ வகை என்று இருக்கிறார்கள் -இது தான் சர்வார்த்த சாத்தலாம் இ றே –
நமோ நாராயணா யேதி மந்த்ரஸ் சர்வார்த்த சாதகா -என்னக் கடவது இ றே
நாமம் பல பரவி –
இவர் இவர்களை அழைக்கிற போது -அடி தொழுது ஆயிரம் நாமம் சொல்லி -என்றார் இ றே -அத்தை இ றே இவர்களும் சொல்லுகிறது
பரவி –
அக்ரமமாகச் சொல்லி –
சாதனமான போது இ றே க்ரம அபேஷை உள்ளது –
முன்பு -மமேதம் -என்று இருந்தவர்களுக்கு -மங்களா சாசன யோக்யராம் படி
புகுர நிற்கைக்கு இசைவே வேண்டுவது –
பல் வகையாலும் பவித்ரனே –
பிரயோஜனாந்தர பரரான அசுத்தியைப் போக்கி –
அதுக்கடியான அஹங்கார மமகாரங்கள் ஆகிற அசுத்தியைப் போக்கி –
சேஷத்வம் தன்னிலும் -மாதா பித்ர் சேஷத்வம் என்ன இவ்வோ அசுத்தியைப் போக்கிப்
புகுர நிறுத்தினவனே –
உன்னைப் பல்லாண்டு கூறுவனே –
சௌந்தர்யாதி குண யுக்தனான உன்னை மங்களா சாசனம் பண்ணுகிறேன்
ஏக வசனத்தாலே
கீழ் சொன்ன புருஷார்த்திகள் மூவர் முகத்தாலும் தாமே திருப்பல்லாண்டு பாடுகிறார்
என்னும் இடம் தோற்றுகிறது
ஐஸ்வர்யார்த்தி சங்கதன் ஆகிற அளவிலும் ஏக வசனம் ஆகையாலே இங்கும்
அதுவே யாகிறது என்னவுமாம் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருப்பல்லாண்டு -10-எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோம்–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

April 5, 2013

அவதாரிகை –

கீழில் பாட்டில் புகுந்த அநந்ய பிரயோஜனர் தேக யாத்ரையிலும் தங்கள் பாரதந்த்ர்யமே
ஸ்வரூபமாய் இருக்கிற ஏற்றத்தை சொல் லிக் கொண்டு புகுந்தார்கள் –
இதில் -பிரயோஜநாந்த பரர் புகுருகிரார்கள் ஆகையாலே -தங்கள் பக்கல் அங்கன்
இருப்பதோர் ஏற்றம் காண விரகு இல்லாமையாலே -பகவத் பிரபாவத்தால்
தங்களுக்கு பிறந்த ஏற்றத்தை சொல்லிக் கொண்டு வந்து புகுருகிரார்கள் –
ஐஸ்வர்யார்த்தியும் சங்கதனாகிற போது -சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர்
ஆக்க வல்ல -என்று பகவத்ப்ரபாவத்தை சொல்லிக் கொண்டு வந்து இ றே புகுந்தது –
அவன் தான் நான் அபேஷித்த சூத்திர புருஷார்த்தத்தை தந்து வைத்து -என்னை சுத்த
ஸ்வபாவன் ஆக்கினான் -என்று ஆச்சர்யப் பட்டான் –
கைவல்யார்திகள் தங்கள் ஷூ த்ர புருஷார்த்த சம்பந்தம் யாவதாத்மபாவி விநாசகரம்
ஆகையாலே ஆஸ்ரயண வேளையில் மீட்ட ஆச்சர்யத்தைக் கொண்டாடுகிறார்கள் –

எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோம் என்று எழுத்து பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடு பெற்று உய்ந்தது காண்
செந்நாள்த்  தோற்றி திருமதுரையுள் சிலை குனித்து ஐந்தலைய
பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே வுன்னைப் பல்லாண்டு கூறுவனே –10-

அடியோங்கள் அடிக்குடில் -வீடு பெற்று -தாஸ பூதரான நாங்களும் –
எங்கள் க்ரஹங்களில் உள்ள புத்ர பௌத்ராதிகளும் -அஹங்காரமான ஐஸ்வர்ய
கைவல்யங்களையும் -விடப் பெற்று-

வியாக்யானம் –

எந்நாள்-
அந்நாள் -என்ன அமைந்து இருக்க –எந்நாள் -என்கிறது வகுத்த சேஷி பக்கலிலே ஷூத்ர-புருஷார்த்தத்தை அபேஷித்த காலமாய் இருக்கச் செய்தேயும் -ஸூப்ரபாதாச மேநிஸா –
என்கிறபடி மங்களா சாசனம் பண்ணுகைக்கு யோக்யமாம் படி புகுற நிறுத்தின
திவசம் -என்று அந்நாளைக் கொண்டாடுகிறார்கள் –
பகவத் பிரபாவம் தான் விஷயீ கரித்த திவசத்தையும் கொண்டாடும்படியாய் இருக்கும் இ றே
அவதாரத்தில் ஏற்றம் சொல்லுகிற அளவில் தஜ் ஜன்ம திவசம் என்று அந்நாளும்
கொண்டாடப் பட்டது இ றே
பிரயோஜனாந்தரத்தை அபேஷித்து வந்தவன் -அது ஒழிந்து -அநந்ய பிரயோஜனன்
ஆகைக்கு அடி என் என்னில்
எம்பெருமான் –
ஷூத்ர பிரயோஜநத்தை அபேஷித்து நிருபாதிக சேஷியான உன் பக்கலிலே
வருகையாலே ஸ்வரூப பராப்தமாய் வந்த சேஷத்வமே பலித்து விட்டது –
வகுத்த சேஷி யானாலும் -அபேஷிதங்களை ஒழிய புருஷார்த்தங்களைக்
கொடுக்கும் போது -அர்த்தி பக்கலிலே ஒரு கைம்முதல் வேண்டாவோ என்னில் –
உன் தனக்கு அடியோம் என்று எழுத்து பட்ட –
அடியோம் என்கிற அர்த்தத்துக்கு வாசகமான சப்தத்தில் எங்களுக்கு அந்வயம் உண்டு
நெஞ்சில் இன்றிக்கே இருக்கிலும் வாயில் உண்டான மாத்ரம் கொண்டு தர வல்ல சக்தி
உண்டு இ றே உனக்கு-

ஒமித்யே காஷரம் ப்ரஹ்ம வ்ராஹரன் மாம் அநுஸ்மரன் -என்னக் கடவது இ றே
அதவா
யாரேனும் பக்கலிலே ஏதேனும் ஒன்றை சொல்ல வேண்டி செல்லிலும் -நமஸ்
சப்த ப்ரயோகம் பண்ணக் கடவதாய் இ றே இருப்பது -அதுவும் ஆத்ம யாதாம்ய வாசகம்
இ றே -அதுவே எங்கள் பக்கல் கைம்முதல் என்கிறார்கள் –
எம்பெருமான் -என்கிற ப்ராப்தி யாலும் –
உன் தனக்கு -என்கிற சக்தியாலும் –
எழுத்துப் பட்ட -என்கிற சப்த மாத்ரத்தாலும்-பலிக்கக் கண்டோம் என்கிறார்கள் –
பட்ட -என்கிற இது –முத்துப்பட்ட -என்கிறாப் போலே
வாழாட் பட்டு -என்கிற -இடத்தில் அர்த்தத்தின் உடைய துர்லப்த்வம் சொல்லிற்று-வாசக சப்தத்தின் உடைய துர்லப்த்வம் சொல்லுகிறது இங்கு
அஹங்கார க்ரச்தமான சம்சாரத்துக்கு உள்ளே தாஸ்ய பிரகாசம் அலாப்யலாபம் ஆனால் போலே
பஹூ ஜல்பம் பண்ணிப் போகிற வாயிலே நமஸ் சப்தம் உண்டாக அல்பய லாபம் இ றே
அந்நாள் –
எம்பெருமான் உன் தனக்கு அடியோம் என்று எழுத்துப் பட்ட நாள் -எந்நாள் -அந்நாள்
என்று அந்வயம் –அந்நாளே -என்கிற அவதாரணத்தாலே -அது ஒழிய எங்கள் பக்கல்
ஆநுகூல்ய லேசமும் இல்லை என்று கருத்து
அத்தால் பெற்றது என் என்ன –
தாங்கள் பெற்ற பிரயோஜன பரம்பரைகளை சொல்லுகிறார்கள் –
அடியோங்கள் இத்யாதி –
அடியோங்களாக பெற்றோம் –
குடிலும் அடிக்குடிலாக பெற்றது –
வீட்டை லபிக்கப் பெற்றோம் –
உஜ்ஜீவிகப் பெற்றோம் –
அடியோங்கள் -என்கிறார்கள்
அஹங்கார க்ரச்தராய் -தத் அநுகூலமான ஷூத்ர புருஷார்த்தத்தை அபேஷித்து உன்
திருவடிகளில் வந்து ஒதுங்கின நாங்கள் -அது போய் -தாஸ்ய ஏக ரசராகப் பெற்றோம் –
அடிக்குடில் –
குடில் -என்று க்ரஹம் -அத்தாலே க்ரஹச்தரான புத்ர பௌத்ராதிகளும் அடியாராகப் பெற்றோம்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் -என்னக் கடவது இ றே
எழுத்துப் பட்டது தங்கள் அளவில் ஆகில் புத்ர பௌத்ராதிகள் அளவில் ஸ்வரூப ஞானம் பிறந்தபடி
என் என்னில் -முத்துப்பட்ட துறையை காவலிடுமவன் -அசல் துறையையும் காவல் இடுமா போலே
சம்பந்தி சம்பந்திகள் அளவும் அஹங்கார மமகாரங்கள் புகுராத படி விஷயீ கரித்தான் –என்கை
இவர்கள் சங்கதர் ஆகிற பாட்டிலும் –குடி குடி ஆட் செய்கின்றோம் -என்றார்கள் இ றே
சேஷி சந்நிதியிலே சேஷ பூதர் க்ரஹத்தை -குடில் வளைக்க -என்று சொல்லக் கடவது இ றே
வீடு பெற்று –
வீட்டை லபித்து -அதாகிறது
அஹங்கார மமகார கார்யமான ஐஸ்வர்ய கைவல்யங்கள் ஆகிற த்யாஜ்யங்களை
விடப் பெற்று -ப்ராப்ய சித்தியோபாதி த்யாக சித்தியும் ப்ராப்ய அந்தர்கதம் இ றே
உய்ந்தது காண்
தாஸ்யம் என்றும் – உஜ்ஜீவனம் -என்று பர்யாயம் போலே காணும்
உய்ந்தது காண் -என்று அறியாதரை அறிவிப்பாரைப்  போலே சொல்லுகிற இதுக்கு கருத்து என் என்னில் –
உபகரித்து விஸ்மரித்து போவது நீ –
நீ பண்ணின உபகாரம் நாங்கள் உபதேசிக்க கேளாய் என்கிறார்கள்

செந்நாள் -இத்யாதி
பிரயோஜனாந்தரங்களைக் கை விட்டு அநந்ய பிரயோஜனர் ஆனிகோள் ஆகில் இனி க்ர்த்த்யம் என் என்னில் –
உனக்கு மங்களா சாசனம் பண்ணுகையே க்ர்த்த்யம் என்கிறார்கள் -விஷயம் ஏது -என்ன –
செம் நாள்
அவதாரத்துக்கு ஏகாந்தமான நாள் ஆகையாலே அழகிய நாள் என்கிறார்கள்
தோற்றி –
அதீந்த்ரியமான விக்ரஹத்தை சகல மனுஜ நயன விஷய தாங்கத-என்கிறபடியே
உகவாதார் கண்ணுக்கும் விஷயமாம் படி தோற்றுவித்து
திரு மதுரையுள் –
அது தானும் நிர்ப்பயமான அயோத்யையில் இன்றிக்கே சத்ருவான கம்சன் வர்த்திக்கிற ஊரிலே –
சிலை குனித்து
அவ் ஊரில் தங்க ஒண்ணாமையாலே திருவாய்ப்பாடியிலே போய் மறைய வளருகிற நீ
மறித்தும் அவ் ஊரிலே புகுந்து கம்சனுடைய ஆயுத சாலையிலே புக்கு -வில்லை முறித்து
பூசலை விளைத்தாய் -அநுகூலர் அடைய -என் வருகிறதோ -என்று வயிறு பிடிக்கவேண்டும் படியான
தசையிலே கம்சனுக்கு மறம் பிறக்கும்படி சிலுகு படுத்துவதே

ஐந்தலை இத்யாதி –
அது கிடக்க -நிர்ப்பயமாய் வர்த்திக்கிற காலத்திலே பிறந்த ப்ரமாதமே போராதோ வயிறு-எரிகைக்கு என்கிறார்கள் –
ஐந்தலைய பைந்நாகத் தலை பாய்ந்தவனே –
கடிக்கைக்கு ஐஞ்சு வாயை உடைத்தாய் -க்ரோதத்தாலே விஸ்த்ர்தமான பணத்தை உடைத்தான
சர்ப்பாச்யத்திலே யன்றோ புக்கது -ஏக தாது விநா ராமம் க்ருஷ்ணோ ப்ருந்தாவனம் ய யௌ
என்று தலையன் ஒரு நாள் பேர நிற்க -பாம்பின் வாயிலே புகும் படி இ றே தீம்பு –
கிருஷ்ண அவதாரம் என்றால் ஆழ்வார்கள் எல்லாரும் ஒக்க பரிவராய் இருப்பர்கள்
இதுக்கு அடி என் -என்று ஜீயர் பட்டரை கேட்க –
ராமாவதாரத்தில் பிள்ளைகள் -தாங்கள் மிடுக்கராய் -குணாதிகருமாய் –
பிதா சம்ப ராந்தகனுமாய்
மந்த்ரிகள் வசிஷ்டாதிக்களுமாய்
ஊர் அயோதயையுமாய்
காலம் நல்ல காலமுமாய்
இருக்கையாலே அங்குத்தைக்கு ஒரு பயமும் இல்லை –
இங்கு
பிறந்தவிடம் சத்ரு  க்ர்ஹமாய்
கம்சன் இடம் பார்த்து நலியும் துஷ்ப்ரக்ர்திகளை வரக் காட்டும் கரூரனுமாய்
தமப்பன் இடையனுமாய்
ஊர் இடைச்சேரியுமாய்
பிள்ளைகள் தாங்கள் தீம்பருமாய்
காலம் கலி காலத்தோடு தோள் தீண்டியாய்
இருக்கையாலே என் வருகிறதோ என்று பரிகைக்கு ஆழ்வார்கள் அல்லது இல்லை காணும்
என்று அருளிச் செய்தார் –
உன்னைப் பல்லாண்டு கூறுதுமே –உன்னை கூறுதுமே -என்கிற ஸ்வரத்துக்கு கிருஷ்ண அவதாரம் பரிகை என்று காட்டி அருளுகிறார்
இப்படிப்பட்ட உன்னை அனுசந்தித்தால் மங்களா சாசனம் ஒழிய தரிக்க விரகு உண்டோ என்கிறார்கள்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருப்பல்லாண்டு -9-உடுத்துக் களைந்த நின் பீதகவாடை–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

April 5, 2013

அவதாரிகை

வாழாளிலே அழைத்து –எந்தை தந்தை யிலே -கூடின -அநந்ய பிரயோஜனர்
பாசுரத்தாலே -அவர்களோடே கூடி -திருப்பல்லாண்டு பாடுகிறார் -இதில் –

உடுத்துக் களைந்த நின் பீதகவாடை உடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய் முடி சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திரு விழவில்
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்கு பல்லாண்டு கூறுதுமே –9

 

வியாக்யானம் –

உடுத்து
திருவரையில் ஸூ சங்கதமாக சாத்துகையாலும் -திருவரையிலே முசுகையாலும் –
தத் சம்பந்தம் தோற்றும்படி ஒற்று மஞ்சளாலும் மாளிகை சாந்தாலும் சிஹ்நிததாம்படி உடுத்து –
இவை இத்தனையும் ப்ரார்த்தநீயமாம்படி இருப்பார் சிலர் நாங்கள் –
சேஷிக்கு மங்களாவஹம ஆகையும் -தத் சம்பந்தங்கள் தோற்றின சிஹ்னங்களை
உடைத்தாகையும் -சேஷ பூதனுக்கு ஸ்ம்ர்தி விஷயமாக கொண்டு சர்வ காலமும்
ப்ரிய கரமாய் இ றே இருப்பது
களைந்த
ஆசன பேதத்திலே கழித்தால் பொகடும் ஸ்தலம் தங்கள் தலையாம்படி இருக்கை –
இதுவும் சேஷ பூதனுக்கு ப்ரார்தநீயம் இ றே

உடுத்த நின் பீதக வாடை-களைந்த நின் பீதகவாடை-என்னாமல் – உடுத்துக் களைந்த நின் பீதகவாடை -மஞ்சளும் செங்கழுநீரும் கலந்த –இங்கன் ப்ரார்த்த நீயமாக வேண்டுகிறதுக்கு ஹேது சொல்லுகிறது மேல்
நின் பீதக வாடை –
வகுத்த சேஷியது யாகையாலே -சாத்தும் திருப் பரிவட்டம் அடைய திரு பீதாம்பரத்தின் உடைய-ஆவேச அவதாரம் ஆகை –நின் பீதக வாடை –
ஸ்ரக் வஸ்த்ராபரணைர் யுக்தம் ஸ்வ அநுரூபைரநூபமை -என்று சேதன கோடியிலே இ றே-திருப் பீதாம்பரத்தை சொல்லுகிறது
உடுத்து
இது இ றே அநந்ய பிரயோஜனருக்கு ஆபரணம்
அங்கன் அன்றியே -பக்தாநாம்-என்று இருக்குமவன் ஆகையாலே இது தான் சேஷி
அளவிலே வந்தவாறே பிரதிபத்தி வேறு பட்டு இருக்கும் -ராஜாக்களுக்கு இரட்டை பிடித்து-கொடுக்குமவர்கள் -வாக்காக பிடித்து -தங்கள் அரையிலே உடுத்திருந்து யோக்யமாம்படி-பண்ணிக் கொடுப்பார்கள் -அதுவாய்த்து இவனுக்கு நினைவு

கலத்ததுண்டு –
அமுது செய்து கை வாங்கின தளிகை மாற்றினால் பிரசாதம் போஜ்யம்
த்வதீயபுக் தோஜ்ஜித சேஷ போஜிநா -என்னக் கடவது இ றே -ப்ரசாதமே தாரகமாய் இருப்பார் சிலர் நாங்கள் –
குரோர் உச்சிஷ்டம் புஞ்ஜீத -என்று விதி ப்ரேரிரதராய் கொண்டு பிரதிபத்தி பண்ணுவர்கள்
ஸ்வரூப ஜ்ஞானம் இல்லாதவர் -ஸ்வரூப ஜ்ஞானம் உடையார் தத்  ஸித்தி யர்தமாக
பிரதிபத்தி பண்ணுவர்கள் -பகவத் ப்ரேம யுகதர் ஸ்வயம் பிரயோஜனம் என்று இருப்பர்கள் –
இச் சேஷத்வ காஷ்டையான ததீயர் உடைய பிரசாதம் -தருவரேல் -என்கிறபடியே
அதி க்ர்தாதிகாரமாய் இருக்கும் -சர்வ சாதாரணனது ஆகையாலே பிரயோஜனாந்த பரனுக்கும்-போக்யமாய் இ றே பகவத் பிரசாதம் இருப்பது

தொடுத்த இத்யாதி –
திருத் துழாய் பறிக்கும் போதும் -தொடுக்கும் போதும் -அவன் சாத்தி அருளப் புகுகிறான் –
என்னும் ஆதரத்தாலே சம்ச்க்ர்தமாய் சாத்திக் கழித்தால் சூடுமது எங்களுக்கு உத்தேச்யம் –
சுவடர் பூ சூடும் போது புழுகிலே தோய்த்து சூடுமா போலே -தத் ஸ்பர்சத்தாலே விலஷணமாய்
இருக்கும் என்கை -அவன் தானும் சிலர் -சூடிக் கொடுத்த மாலையின் சுவடு அறியுமவன்
ஆகையாலே சூடிக் கொடுக்கிறான் இ றே
இத் தொண்டர்களோம்
இப்படிப்பட்ட அடியார்கள் இ றே நாங்கள் –
எமக்கு என்று உடுத்தல் ஜீவித்தல் சூடுதல் செய்யுமவர்கள் அன்றிக்கே -அவன் கழித்தவை
கொண்டு தேக யாத்ரையாம் படி யிருக்குமவர்கள் இ றே  நாங்கள் –

ஸ்வரூப சித்யர்த்தமாக அத்தலையில் உச்சிஷ்டங்களை ஆகாங்ஷித்து போகையில்
உண்பன் என்று இருக்கும் அத்தனையோ -என்னில் –
விடுத்த இத்யாதி –ஸ்வாமி சந்தேச காரிகளாய் கொண்டு -இப்படி தேக யாத்ரை நடத்துமவர்கள் இ றே நாங்கள்-
விடுத்த திசைக் கருமம் திருத்தி –
க்ரியதாம் -என்கிற சந்தேசமே தாரகமாக ஏவின கார்யத்தை செய்து தலைக் கட்டுகை –
ஸ்வாமி ஏவின கார்யத்தை குறையச் செய்யுமவன் அதமன் –
அத்தை குறையாமல் செய்து தலைக் கட்டுமவன் மத்யமன் –
அதுக்கு மேலே அதுக்கு அவிருத்தமான கார்யங்களையும் விசாரித்து செய்து தலைக் கட்டுமவன் உத்தமன் –
கார்யே கர்மணி நிர்த்ஷ்டேயோப ஹூந்ய பிசாதயேத்
பூர்வ கார்யா விரோதே ந ஸ கார்யம் கர்த்துமர்ஹதி -என்கிற திருவடி இ றே அவன் ஆகிறான்
பிராட்டி இருந்த இடம் அறிந்து வா -என்று விட –
இருந்த இடமும் அறிந்து -அவன் பலம் இருந்தபடி என் -என்று பெருமாள் கேட்டருளினால்
அறிந்திலேன் என்ன ஒண்ணாது -என்று அத்தலையிலே பல பரிஷையும் பண்ணி
ஊரில் அரணையும் தலை அழித்து -மூலையடியே போம் படி பண்ணி வந்தான் இ றே

திருவோணத் திரு விழவில் –
ஏவின கார்யத்தை குறை யறச் செய்த அளவிலும் பர்யாப்தி பிறவாமையாலே
திருவவதரித்து அருளின திருவோணம் ஆகிற மங்கள திவசத்திலே என்ன தீங்கு
வருகிறதோ என்று மங்களா சாசனம் பண்ணி வர்த்திக்குமவர்கள்
படுத்த இத்யாதி –
அதிலும் பர்யாப்தி பிறவாமையாலே
திரு வநந்தாழ்வான் மேலே சாய்ந்த போதை அழகுக்கு கண் எச்சில் வாராமைக்கு
மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் -படுக்கப்பட்டு ஸ்வ சம்ச்லேஷத்தாலே விகசிதமாக
நின்றுள்ள பணைத்தை உடையனாய் -மென்மை -குளிர்த்தி -நாற்றம் என்கிறவற்றை
பிரக்ர்தியாக உடைய திரு வநந்தாழ்வான் ஆகிற படுக்கையிலே கண் வளர்ந்து அருளுகிற
அழகுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் -ஸ்வதஸ் சர்வஞ்ஞனையும் மயங்கப்
பண்ணும் படுக்கை -அவன் ஸ்வ ஸ்பர்சத்தாலே விக்ர்தனாகப் பண்ணும்
இவனுடைய வடிவும் -அவனுடைய வடிவும் -கிடந்ததோர் கிடக்கை -என்கிறபடியே
பரிச்சேதிக்க ஒண்ணாத அழகு இ றே கண் வளர்ந்து அருளுகிற போதை அழகு –
ஒரு வெள்ளி மலையிலே காள மேகம் சாய்ந்தால் போலே கண் வளர்ந்து அருளுகிற போதை-பரபாக ரசத்தை அனுசந்தித்தால் மங்களா சாசனம் ஒழியச் செல்லுமோ என்கிறார்கள்

————————————————————————–

ஸ்ரீ  கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருப்பல்லாண்டு -8–நெய்யிடை நல்லதோர் சோறு நியதமும் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

April 5, 2013

அவதாரிகை –

அண்டக் குலத்தில் அழைத்த ஐஸ்வர்யார்த்திகள் இசைந்து வர -அவர்களைக் கூட்டிக் கொள்ளுகிறார் –
வாழாளில் அழைத்த -அநந்ய பிரயோஜனர் தங்கள் ஏற்றத்தை சொல்லிக் கொண்டு புகுந்தார்கள் -எந்தை தந்தை தந்தை-யிலே
ஏடு நிலத்தில் -அழைத்த கைவல்யார்த்திகள் -தாங்கள் திருந்திப் புகுந்தமை சொன்னார்கள் -தீயில் பொலிகின்ற -விலே
இவர்கள் தாங்கள் ஷூத்ர புருஷார்த்தத்தை அபேஷிக்க -அநந்ய பிரயோஜனருக்கு முகம் கொடுத்தால் போலே
முகம் தந்து -அந்த ஐஸ்வர்யத்தை தந்த ஔதார்யத்துக்கு தோற்று -ஐஸ்வர்யத்தை விட்டு
சுத்த ஸ்வபவாராய் -இவ்வுதாரனை மங்களா சாசனம் பண்ணுவோம் என்று புகுருகிறார்கள்
அண்டக் குலத்திலே அண்டாத்யஷத்வம் ஐஸ்வர்யத்துக்கு மேல் எல்லையாய் பேசிற்று –
அவ் ஐஸ்வர்யார்த்திகள் பேச்சான இந்த பாட்டிலே -சரீரத்துக்கு தாரக போஷக போக்யங்களை
இரந்தார்களாய் -அத்தை அவன் தந்தானாகப் பேசிற்று -இதுக்கு நிபந்தனம் இன்று
ஸ்வரூப ஞானம் பிறந்து புகுருகிறவர்கள் ஆகையாலே அதினுடைய ஷூத்ரதை
தோற்றப் பேசுகிறார்கள் –
அண்டாத்யஷனான ப்ரஹ்மாவுக்கும் -தாரக போஷக போக்யங்களே  இ றே பிரயோஜனம்
அதற்க்கு மேற்பட்ட பகவத்விபூதியை எனக்கு என்கிற அபிமானத்தால் வந்த ஸ்வரூப ஹாநியே இ றே பலம்

நெய்யிடை நல்லதோர் சோறு நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக்காயும் கழுத்துக்கு பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல
பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே –9-

 

வியாக்யானம் –

நெய்யிடை
இடை என்று நிறையாய் -நெய்யோடு ஒத்த சோறு என்னுதல்
இடை -என்று நடுவாய் -நெய்யின் இடையிலே சில சோறும் உண்டு என்னுதல்
இத்தால் போஷக ப்ரசுரமான தாரக த்ரவ்யத்தை தரும் என்கை
நல்லதோர் சோறும் –
சோற்றுக்கு நன்மையாவது –
இட்டவன் இட்டோம் என்று இருத்தல் -உண்டவன் இதுக்கு என் செய்வோம் என்று இருத்தல் -செய்யாத சோறு –
அதாவது
தாய் இட புத்ரன் உண்ணும் சோற்றுக்கு இவ்விரண்டும் இல்லை இ றே
ஓர் சோறு –
இப்பாவ சுத்தியே  அன்றிக்கே விலஷண ரசோபேதமாய் இருக்கை
அங்கன் இன்றிக்கே -சேஷ பூதன் சேஷிக்கு இடும் சோறு போலே இருக்கை

அதாகிறது –
அஹங்காரோபேதம் இன்றிக்கே பக்த்யு பர்ஹ்ர்த்யமாய் இருக்கை –
ஈஸ்வரனும் -பக்தாநாம் -என்கிற நினைவாலேயும் வத்சலனாயும் இ றே இடுவது –
அநந்ய பிரயோஜன் ஸ்வாமி விஷயத்தில் இடும் சோறு எங்கனே இருக்கும் என்னில் –
விதுராந நானி புபுஜே ஸூ சீ நி குண வந்திச -என்னும்படி பாவந முமாய் -போக்யமுமாய்
இருக்கை -சு சீ நி -என்றது சுத்தங்களாய் இருக்கை -சோற்றுக்கு சுத்தி யாவது
துர்யோதனன் தன் ஐஸ்வர்யத்தைப் பற்ற அபிமாநித்தான் –
பீஷ்மன் ஞாநாதிகன் என்று அபிமாநித்தான்
த்ரோணன் வர்ணத்தாலிகன் என்று அபிமாநித்தான்
இவை ஒன்றும் இன்றிக்கே -பக்த் வுப ஹ்ர்தமாய் இருக்கை
நியதமும் –
அதாகிறது -ஐஸ்வர்யம் ஈச்வரனே கொடுக்கிலும் அஸ்திரமாய் இருக்கக் கடவது –
அது அழிந்தவன்றும் அந்த ஐஸ்வர்யத்தை சமாதானம் பண்ணிக் கொடுக்குமவன் ஆகையாலே
நியதமும் -என்கிறது -இத்தாலே இ றே –அர்த்தார்த்தி -என்றும் –ஆர்த்தன் -என்றும்
ஐஸ்வர்யத்துக்கு இரண்டு வகை சொல்லிற்று -அங்கன் அன்றிக்கே
தேவதாந்தரங்களைப் பற்றி ஈஸ்வரனை இல்லை செய்யுமன்றும் தந் முகேன
சோறிடுமவன் என்கை -சர்வேஸ்வரன் இட்ட சோற்றை தின்று அவனை இல்லை செய்யும்
க்ர்தக்நர் இ றே சம்சாரிகள் -தன்னை இல்லை செய்யுமன்றும் ரஷிக்கும் உதாரன் இ றே சர்வேஸ்வரன்
அத்தாணிச் சேவகமும் –
அத்தாணி -என்று பிரியாமை –சேவகம் -என்று சேவை
ஐஸ்வர்யார்த்திக்கும் அநவரத பாவநையும் -அந்திம ச்ம்ர்த்தியும் அநந்ய பிரயோஜநோபாதி
கர்த்தவ்யம் இ றே
ஆனால் ஐஸ்வர்ய சாதனத்தையும் –தந்து -என்று பிரயோஜத்தோடு ஒக்க சொல்வான்
என் என்னில்
வெள்ளுயிர் ஆன பின்பு சொல்லுகிறார்கள் ஆகையாலே அந்த சாதனமும் ஸ்வயம்
பிரயோஜனமாய் இ றே இருப்பது -அநந்ய பிரயோஜனனுக்கு ஸ்வயம் பிரயோசனமான
சேவை சாதனமாக்கி கிடீர் ஷூத்தரமான ஐஸ்வர்யத்தை தந்தது என்கை

கையடைக்காயும்
தாரக போஷகங்கள் கீழே சொல்லிற்றாய் -மேல் -போகய பதார்த்தங்களை தந்தபடி சொல்லுகிறது
திருக்கையாலே இட்ட வெற்றிலை பாக்கு என்று இவர்கள் பக்கல் கௌரவத்தாலே
இட்ட சீர்மையை சொல்லுகிறது -சேஷ பூதன் சேஷியை குறித்து இடும் பிரகாரத்தாலே இ றே
சேஷி யானவன் சேஷ பூதனுக்கு இடுவது
கழுத்துக்கு பூணொடு காதுக்குக் குண்டலமும் –
தேகத்தை உத்தேச்யம் என்று இருக்குமவன் ஆகையாலே -தன் உடம்பை அலங்கரித்து
அத்தை அனுபவித்து இருக்குமவன் இ றே ஐஸ்வர்யார்த்தி
பகவத் பரனாய் ஈஸ்வரனை அலங்கரித்து சதா தர்சனம் பண்ணி இருக்கிறான் அல்லனே
ஸ்வரூபத்தை உணர்ந்து -ஜ்ஞான வைராக்ய பக்திகளை ஸ்வரூபத்துக்கு ஆபரணமாக
நினைத்து இருக்கிறான் அல்லனே
கழுத்துக்கு பூணோடு காதுக்கு குண்டலமும் -என்று விசேஷிப்பான் என் என்னில் –
தன் கண்ணுக்கு அவிஷயமாய் -நாட்டார் கொண்டாடும் அதுவே தனக்கு பிரயோஜனமாய்
இருக்கையாலே
அவயவாந்தரந்களிலே -அங்குலீய காத்யாபரணங்கள் தன் கண்ணுக்கு விஷயமாய் இருக்கும் இ றே
பெருமாள் மீண்டு எழுந்து அருளின அளவிலே இந்த்ரன் வரக் காட்டின ஹாரத்தை
பிராட்டியும் தாமும் இருந்து திருவடிக்கு பூட்டினால் போலே -ஈஸ்வரன் பரிந்து
இது கழுத்துக்காம் -இது காதுக்காம் -என்று திருக்கையாலே பூட்டின ஆபரணமும்

ப்ரதேஹி ஸூ ப கே ஹாரம் யஸ்ய துஷ்டாஸி பாமிநீ -என்கிறபடியே இந்த்ரன்
வரக் காட்டின ஹாரத்தை பெருமாள் வாங்கி பார்த்தருளி -பிராட்டிக்கு கொடுக்கிற போது
அத்தை வாங்குகிறவள் -பெருமாளை ஒரு திருக் கண்ணாலும் திருவடியை ஒரு திருக் கண்ணாலும் பார்த்து வாங்கினாள்
ப்ரேஷி தஜ்ஞா ஸ் து கோசலா -என்று பார்வையில் கருத்து அறியுமவர் ஆகையாலே
அவனுக்கு கொடுக்கலாகாதோ -என்று அருளினார் -ஸூ ப கே -அடியார் ஏற்றம் அறிந்து
கொண்டாடுகைக்கு ஈடான சௌபாக்கியம் உள்ளது உனக்கே யன்றோ என்ன –
உம்முடைய திரு உள்ளத்தால் அன்றோ நான் கொடுக்கிறது என்று பிராட்டி விண்ணப்பம்
செய்ய -நான் முற்பாடனாகப் பெறாமையாலே உன்னுடைய உகப்பின் கார்யத்தைக் கொடுக்கல் ஆகாதோ
என்றார் -இப்படி அநந்ய பிரயோஜனனுக்கு ஆதரித்து பூட்டினால் போலே ஆய்த்து
ஷூத்ரனான என்னை ஆதரித்து பூட்டிற்றும்

மெய்யிட
திருவடிகளில் ருசி பிறந்த பின்பு ஆகையாலே -உடம்பு த்யாஜ்யம் என்கிற நினைவு
தோன்ற குத்சித்து சொல்லுகிறபடி
நல்லதோர் சாந்தமும் –
சசாதான் இதுக்கு தரமாகப் பெற்றதோ -சர்வ கந்த -என்கிற வடிவுக்கு ஸ தர்சமாக குப்ஜை
ஆதரித்து சாத்தின சாந்து போலே இருக்கும் சாந்தை அன்றோ எனக்கு இட்டது –
ஸூ கந்த மேதத் -குப்ஜை கம்சனுக்கு பரணியோடே சாந்து கொண்டு போகா நிற்க –
வாரீர் பெண் பிள்ளாய் நமக்கும் நம் அண்ணர்க்கும் சாந்திட வல்லீரோ -என்ன
அவ்வடிவையும் இருப்பையும் கண்டு ஸ்த்ரீத்வ ப்ரயுக்தமான சாபல்யத்தாலே மறுக்க மாட்டிற்று இலள் –
இவர்கள் இடைப்பிள்ளைகள் -சாந்தின் வாசி அறிய மாட்டார்கள் -என்று ஆக்கனாய் இருப்பதொன்றை இட்டாள்
அத்தை பார்த்து -நாற்றம் கொளுத்தின படி அழகியது தளம் அழகிதன்று -என்ன
அதுக்கு மேலே யொரு சாந்தை இட -ராஜார்ஹம் -இது கம்சனுக்குசெருக்கிலே
பூசலாம் இத்தனை வாசி அறிந்து பூசுவருக்கு ஸ்தர்சம் அல்ல -அன்றியே
வழக்கனான சாந்து என்னவுமாம்
ருசிரம் -சௌகந்த்யம் கிடக்க நிறம் அழகியதாய் இருந்தது என்ன
இவர்கள் இடைப் பிள்ளைகள் என்று இருந்தோம் -சாந்தின் வாசி அறிந்தபடி என்
என்று ஆதரித்து பார்க்க -ருசிராந நே -உன் முகத்தில் ஆதரத்துக்கு சதர்சமாய் இருக்க
வேண்டாவோ நீ இடும் சாந்து -என்ன -அவளும் தலையான சாந்தை இட –
ஆவ யோர்க்காத்ர சத்ருசம் -எங்கள் உடம்புக்கு ஸதர்சமான மேதக வஸ்துவை இட்டு
மர்த்தித்து தா என்றான் -அதாவது -பூசும் சாந்து -என்கிற படியே உன்னுடைய ஆதரத்தாலே
ச்மச்க்ர்த்தமாக்கி தா என்றபடி -இப்படி இவள் ஆதரித்து சாத்தின மாளிகைச் சாந்தை
கிடீர் தம் திருக் கையால் என் உடம்பில் பூசிற்று-தந்த போதை திருமுகத்தில் கௌரவத்திலும் ஔதார்யத்திலும் தோற்று ஐஸ்வர்யத்தை
விட்டு அவன் தானே யமையும் யென்னும்படியாய் தந்தது
என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல –
சோரேணாத்மாபஹாரிணா -என்கிறபடியே ஆத்ம அபஹாரம் பண்ணி -அதனாலே
ஷூத்ர பிரயோஜன காமனாய் -சம்சாரியாய் போந்த என்னை –
வெள்ளுயிர் ஆக்க வல்ல –
முன்பு ஷூத்ரனாய் போந்தான் ஒருவன் சுத்த ஸ்வபாவன் ஆனான் என்று தெரியாதபடி
அச்ப்ருஷ்ட சம்சார கந்தரிலே ஒருவன் -என்னலாம் படி யாய்த்து விஷயீ கரித்தது
வல்ல-தன்னதொரு ஸ்வபாவ விசேஷத்தாலே வஸ்துவை வஸ்வந்தரம் ஆக்க வல்ல சக்தன் என்கை-பையுடை இத்யாதி-மங்களா சாசனத்துக்கு விஷயம் ஏது என்ன -அவ் விஷயத்தை சொல்லுகிறார்
தன்னோட்டை  ஸ்பர்ச சுகத்தாலே விகஸித பணமான நாகத்தினுடைய பகை உண்டு
பெரிய திருவடி -அவனை கொடியாக உடையவனுக்கு
அநந்த சாயியாய் கருடத்வஜனானவனுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறேன் என்கை
தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே திரு வநந்த வாழ்வானோட்டை சேர்த்தியால்
வரும் அழகு நித்ய ஸ்ரீ யாக வேணும் என்றும்
ஏதேனும் ஒன்றை அபேஷித்து வந்தவர்களையும் எனக்காக்கிக் கொள்ள வல்லேன்
என்று கொடி கட்டி இருக்கிற சக்தி நித்ய ஸ்ரீ யாக செல்ல வேண்டும் என்றும்
திருப்பல்லாண்டு பாடுகிறேன் என்கிறார்

அநந்ய  பிரயோஜனரும் -கைவல்யார்த்திகளும் -சங்கதராகிற  இடத்தில் சமூஹமாக பேசினார் –பாடுதும் -கூறுதும் -என்றும்
இதில் ஐஸ்வர்யார்த்தியை ஏக வசனத்தாலே பேசுவன் என் என்னில் –கூறுவன் –என்று
அவர்கள் திரள் பரிச்சின்னமாய் -ஐஸ்வர்த்யார்திகள் திரள் அபரிச்சின்னம் ஆகையாலே
ஒரூருக்கு ஒருத்தன் வார்த்தை சொல்லுமா போலே சொல்லுகிறார்

————————————————————————–

ஸ்ரீ  கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருப்பல்லாண்டு -7-தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

April 4, 2013

அவதாரிகை-

ஏடு நிலத்திலே இவராலே ஆஹூதரான கைவல்யார்த்திகள் தங்கள் ஸ்வபாவத்தை
சொல்லிக் கொண்டு வர -அவர்களோடே சங்கதர் ஆகிறார் -இவர்களை அழைத்த
போது -வரம்பொழி வந்து ஒல்லைக் கூடுமினோ -என்று நீங்கள் பற்றின புருஷார்த்தத்தை விட்டு
வாரும் கோள் என்றும் -நமோ நாராயணாய -என்று -அநந்ய ப்ரயோஜனராய் வாரும் கோள் என்றும் –
நாடும் நகரும் நன்கறிய -என்று விசேஷஜ்ஞர் பரிகிரஹிக்கும் படியாகவும் -அவிசேஷஜ்ஞர்
உபேஷிக்கும் படியாகவும் வாரும் கோள் என்று இ றே அவர்களை அழைத்தது –
அதில் -ஷூத்ர புருஷார்த்தத்தை விடுகையும் -அநந்ய பிரயோஜனர் ஆகையும் -நம்முடைய க்ர்த்யம்
அனுகூலர் பரிகிரஹிக்கையும் ப்ரதிகூலர் கை விடுகையும் செய்ய வடுப்பது என் என்று பார்த்து
வைஷ்ணவ சிஹ்னமான திரு விலச்சினையைத் தரிக்கவே -த்யாஜ்ய உபாதேயங்கள்
இரண்டும் ஸித்திக்கும் என்று பார்த்து -அத்தைத் தரித்துக் கொண்டு வந்தோம் என்றார்கள் –

தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச் சக்கரத்தின்
கோயில் பொறியாலே ஒற்று உண்டு நின்று குடி குடி ஆட் செய்கின்றோம்
மாயப் பொரு படை வாணனை யாயிரம் தோளும் பொழி குருதி
பாயச் சுழற்றிய வாழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே –7-
தீயில் -சந்திர ஆதித்தியர்களில் காட்டிலும்
பொலிகின்ற -மிக விளங்கா நின்ற
செஞ்சுடர் -சிவந்த தேஜஸை உடைத்தாய்
ஆழி -மண்டல ஆகாரமான
திகழ் -ப்ரகாசியா நின்றுள்ள
திருச் சக்கரத்தின் கோயில் -திரு ஆழி ஆழ்வான் எழுந்து அருளி இருக்கிற கோயிலாய்
பொறியாலே -சிஹ்னத்தாலே
ஒற்று உண்டு நின்று -சிஹ்நிதராய் நின்று
குடி குடி -எங்கள் சந்தானம் எல்லாம்
ஆட் செய்கின்றோம் -அடிமை செய்வதாய் வந்தோம்
மாயப் -க்ரித்ரிமாக
பொரு -போர் செய்யா நின்றுள்ள
படை -சேனையை உடையவனாய்
வாணனை -பாணாசுரனுடைய
யாயிரம் தோளும் -ஆயிரம் தோள்களின் நின்றும்
பொழி குருதி பாயச் -ரக்தமானது மதகு திறந்தால்  போலே புறப்பட்டு ஓடும்படி
சுழற்றிய -சுழற்றின
வாழி -திரு ஆழி ஆழ்வானை நியமிப்பதில்
வல்லானுக்குப் -சமர்த்தன் ஆனவனுக்கு
பல்லாண்டு கூறுதுமே-திருப்பல்லாண்டு பாடுவோம்

வியாக்யானம் –

தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி என்று –
வைஷ்ணவ கோஷ்டியிலே புகுரப் பண்ணின-உபகார ச்ம்ர்த்தியாலே ஆழ்வானைக்
கொண்டாடுகிறார்கள் –
தீயில் பொலிகின்ற -தீ என்கிற சப்தம் சந்திர ஆதித்யாதி தேஜோ பதார்த்தங்கள்
எல்லா வற்றுக்கும் உப லஷணம் -அதில் காட்டில் தேஜஸு வர்த்திகை யாகிறது –
அத்யர்க்கா நலதீப்தம் தத் ஸ்தானம் -என்கிற பரமபதத்தில் தேஜஸு மிக்கு இருக்கக் கடவது –
அதில் காட்டில் அவனுடைய திவ்ய மங்கள விக்ரஹ தேஜஸு மிக்கு இருக்கக் கடவது –
அதுக்கு பிரகாசாமாய் இ றே திரு வாழி ஆழ்வானுடைய தேஜஸு இருப்பது –
வடிவார் சோதி வலத் துறையும் சுடர் ஆழி -என்னக் கடவது இ றே
தஸ்ய பாஸா சர்வ மிதம் விபாதி -என்கிற படியே அவனுடைய தேஜசாலே சர்வமும்
விளங்கா நின்றது என்னா நிற்க -திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு இவன் பிரகாசகனாம்படி என் என்னில் –
செஞ்சுடர் –
காளமேக நிபாச்யாமமான வடிவுக்கு இருட்டு அறையிலே விளக்கு ஏற்றினால் போலே
பரபாக ரூபத்தால் வந்த ப்ரகாசத்வத்தை சொல்லுகிறது
ஆழி திகழ் திருச் சக்கரம் –
இட்டளத்தில் பெரு வெள்ளம் போலே புறம்பு போக்கற்று -தன்னிலே -மண்டல ஆகாரமாய்
கொண்டு விளங்கா நின்றுள்ள திருவாழி ஆழ்வான் -என்கை

சக்கரத்தின் கோயில் –
ஆழ்வான் எழுந்து அருளி இருக்கிற மண்டல ஆகாரமான வாஸஸ்தானம்
பொறியாலே ஒற்று உண்டு நின்று -அதாகிறது
சிஹ்னத்தால் சிஹ்நிதராய் நின்று –
திரு இலச்சினை தரித்த பின் இ றே -இவன் ஜன்மாந்தரத்தில் போகாதே -மோஷாந்தரத்தில்-போகாதே -ஸூஸ் திரனாகப் பெற்றது -பகவத் அங்கீகாரமும் இது உண்டானால் இ றே அதிசயிப்பது –
ஸ்ரீ மத் த்வாரகையில் நின்றும் ஆஸ்ரித விரோதி நிரசனமாக எழுந்து அருளுகிற போது
திருவாசல் காக்கின்ற முதலிகள் -மீள எழுந்து அருளும் அளவும் இங்குப் புகுரக் கடவார் யார்-அல்லாதார் யார் -என்று விண்ணப்பம் செய்ய

சக்ரா கிங்தாஸ் பிரவேஷ்டவ்யா யாவதா கமநம் மம
நா முத்ரிதாஸ் வேஷ்டவ்யா யாவதா கமநம் மம-என்று இந்த லஷணம் உடையார் யாவர் சிலர்
அவர்கள் நிச்சங்கமாக புகுரக் கடவர்கள் -அல்லாதாரை -பாவ பரிஷை பண்ணி புகுர விடக்
கடவது என்றான் இ றே கிருஷ்ணன் -இது தான் ஈஸ்வரன் அங்கீகாரத்துக்கும் உடலாய் –
தானும் -நாம் அவன் உடைமை -என்று நிர்ப்பரனாய் இருக்கைக்கும் உடலாய் –
தான் பண்ணின பாபத்தை அனுசந்தித்து க்ரூரமாக பார்க்கக் கடவ யமாதிகளும்
அஞ்சும்படியாய் இருப்பது ஓன்று இ றே –
சக்ராதி தாரணம் பும்ஸாம் பர சம்பந்த வேதனம்
பதி வ்ரதா நிமித்தம் ஹி வலயாதி விபூஷணம் -என்று பகவத் சம்பந்தத்துக்கு ஜ்ஞாபகமாய் இ றே இருப்பது
குடி குடி ஆட் செய்கின்றோம் –
ஸ புத்ர பௌத்ரஸ் ஸ கண -என்கிறபடியே சந்தானமாக அடிமை செய்யக் கடவோமாய் வந்தோம்-இப்படி அநன்யார்ஹராய் இருப்பார் செய்யும் அடிமை யாவது -திருப்பல்லாண்டு பாடுகை இ றே
எந்த அபதாநத்துக்கு நீங்கள் மங்களா சாசனம் பண்ணுகிறது என்னில்
மாயப் பொரு படை இத்யாதி –
எங்களை புகுர நிறுத்தின ஆழ்வான் உடைய வீரப் ப்ரகாசமான துறையிலே திருப்பல்லாண்டு-பாடக் கடவோம் என்கிறார்கள்
மாயப் பொரு படை வாணனை –
ஆச்சர்யமாக பொரும் சேனையை உடைய வாணன் என்னுதல்
ஆச்சர்யமாக பொரும் ஆயுதத்தை உடைய வாணன் என்னுதல்
மாயம் -என்று க்ர்த்ரிமமாய் க்ர்த்ரிமமான யுத்தத்தை உடையவன் என்னவுமாம்
ஆயிரம் தோளும் பொழி குருதி பாய –
ஆயிரம் தோள்களாலும் மதகு திறந்தால்  போலே ரக்த வெள்ளம் குதி கொண்டு பூமிப்
பரப்படைய பரம்பும்படி –பொழிதல் -சொரிதல்
இதுக்கு இவன் பண்ணின வியாபாரத்து அளவு எது என்னில்
சுழற்றிய –
திரு வாழியை விட வேண்டி இற்றில்லை -சுழற்றின இத்தனை –
அவன் ஒருக்கால் திரு ஆழியைச் சுழற்ற வாணனுடைய தோள்கள் ஆயிரமும் ஒருக்காலே
மலைக் கொடுமுடிகள் போலே முறிந்து விழுந்தன –

வாணனுடைய தலையை அறாது ஒழிந்தது குற்றம் போறாமை யன்று
உஷை பித்ர் ஹீநை யாகாமைக்காகவும் –
தேவதாந்தர பஜனம் பண்ணுவாருக்கு பலம் இது என்னும் இடத்துக்கு மச்சமாகவும் –
அதாவது –
பரிவின்றி வாணனைக் காத்தும் என்று பிரதிக்ஜை பண்ணி
யுத்தத்திலே இவனைக் காட்டிக் கொடுத்து -ஸ பரிகரனாய் கொண்டு முதுகு
காட்டிப் போனான் ரஷகன் -ரஷ்ய பூதன் தோள் துணி உண்டான் -உன்னை ரஷிக்கப்
புக்கு நான் பட்டதோ -என்றும் -உன்னை ஆஸ்ரயித்து நான் பட்டதோ -என்றும்
இருவரும் கூடக் கட்டிக் கொண்டு கதறுகை இறே பலமாய் விட்டது –

ஆழி வல்லானுக்கு –
வில் வல்லான் -வாள் வல்லான் -தோள் வல்லான் -என்னுமா போலே
யஸ்ய ஸா ஜனகாத்மஜா -என்கிறபடியே பிராட்டியை எனக்கு என்ன இட்டுப் பிறத்தல்
திருவடி தோளிலே நல் தரிக்க விருத்தல் -கை பேராமல் திரு வாழியைப் பிடித்தல் –
செய்யுமது ஆய்த்து சர்வாதிகத்துவதுக்கு லஷணம்-

பல்லாண்டு கூறுதுமே –
அத்தலையில் அடிமை செய்த ஆழ்வான் உடைய வீர ஸ்ரீக்கும்
அடிமை கொண்ட கிருஷ்ணனுடைய வீர ஸ்ரீக்கும் –
மங்களா சாசனம் பண்ணுவார் பெற்றது இல்லை –
அவ் விழவு தீர இன்று இருந்து திருப் பல்லாண்டு பாடுகிறோம் என்கிறார்கள்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருப்பல்லாண்டு -6–எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

April 4, 2013

அவதாரிகை

அநந்ய பிரயோஜனருக்கும் பிரயோஜநாந்த பரருக்கும் உண்டான நெடு வாசி அறிந்து
இருக்கச் செய்தேயும் அநந்ய பிரயோஜனரை அழைத்த சமனந்தரம் -இவர்களை
அழைக்கைக்கு அடி -உதாராஸ் சர்வ ஏவைத -என்னுமவன் சீலத்தாலும் –
அவனோடு இவர்களுக்கு உண்டான அவர்ஜநீய சம்பந்தத்தாலும் –
இவர்களுக்கும் அவற்றையே  நினைத்து தேங்காதே புகலாம் படியாய் இ றே இருப்பது –
ஆகையாலே -அநந்ய பிரயோஜனரை அழைத்தவோபாதி இவர்களையும் அழைத்தாராய்-நின்றார் கீழ் –

இதில் வாழாளில் அழைத்த அநந்ய பிரயோஜனர் -தங்கள் ஸ்வரூபத்தையும்
ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தியையும் சொல்லிக் கொண்டு வந்து புகுர -அவர்களைக்
கூட்டிக் கொள்ளுகிறார் –
ஏழாட் காலும் பழிப்பிலோம் -என்று பிரயோஜனந்த பரரைக் குறித்து தாம் அருளிச் செய்த-தம்முடைய திரளுக்கு உண்டான ஏற்றத்தை புகுருகிறவர்கள் -தங்களுக்கு உண்டானதாக-சொல்லிக் கொண்டு வந்து புகுருகிறார்கள் -தம் தாம் ஏற்றம் சொல்லிக் கொண்டு வந்து-புகுருகை சாத்விகருக்கு யுக்தமோ என்னில் –ஆழ்வார் உடைய திரு உள்ளம் பயம்-கெடுகைக்காக சொல்லுகிறார்கள் ஆகையாலே யுக்தம்

பன்னகாச நமாகாசே பதந்தம் பஷி சேவிதே-வைநதேய மஹம் சக்த பரிகந்தும் சஹச்ரச -என்று திருவடி ஸ்வ சக்தியை சொன்னான் இ றே-முதலிகள் உடைய பயம் சமிக்கைகாக –

எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ் படி கால் தொடங்கி
வந்து வழி வழி யாட் செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்
யந்தியம்போதில் யரி வுருவாகி யரியை யழித்தவனைப்
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே -6-

எந்தை -நானும் என் அப்பனும்
தந்தை -அவனுக்கு அப்பனும்
தந்தை -அவனுக்கு அப்பனும்
தந்தை -அவனுக்கு அப்பனும்
தம் மூத்தப்பன் -அவனுக்கு அப்பனும் பாட்டனுமாகிய
ஏழ் படி கால் தொடங்கி -ஏழு தலைமுறை முதல் கொண்டு
வந்து -மங்களா சாசனம் பண்ணுகைக்கு யோக்யமான சமயங்களிலே வந்து
வழி வழி -முறை முறையாக
யாட் செய்கின்றோம் -தப்பாமே அடிமை செய்கின்றோம்
திருவோணத் திருவிழவில் -திருவோணம் என்கிற திரு நாளிலே
யந்தியம்போதில் -அசுரருக்கு பலம் வர்த்திக்கிற அந்திப் பொழுதில்
யரி வுருவாகி -ந்ர்சிம்ஹ ரூபியாய் கொண்டு
யரியை -ஆஸ்ரிதனனான ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு சத்ருவான ஹிரண்யனை
யழித்தவனை-உரு அழித்து பொகட்டவனுக்கு உண்டான
பந்தனை தீர-அணுக்கம் தீரும் படி
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று
பாடுதும்  -பாடுவோம்-

 

வியாக்யானம் –

எந்தை -தானும் தகப்பனுமாக இருவர்
தந்தை தந்தை தந்தை -என்று ஒரு மூவர்
தம் -என்று முடிந்தவனை அனுபாஷிக்கிறது
மூத்தப்பன்-அப்பன் -என்று தமப்பனார் –மூத்தப்பன் -என்று பாட்டனார்
ஆகையாலே அங்கே இருவர் –
ஆக எழுவரையும் சொல்லுகிறது
ஆழ்வார் ஏழ் ஆட் காலும் பழிப்பிலோம் -என்று திரள அருளிச் செய்தார்
இவர்களும் ஏழ் படி கால் -என்று திரள சொல்லா நின்றார்கள்

பிரித்து சொல்லுகிற இதுக்கு பலம் என் என்னில் -ஸ்வ சந்தானத்தில் மங்களா சாசனம்
பண்ணிப் போந்தவர்கள் பக்கல் உண்டான ப்ரீதி அதிசயத்தாலே சொல்லுகிறார்கள்
சஹி வித்யா தஸ்தம் ஜனய திதச் ஸ்ரேஷ்டம் ஜன்ம கரியான் ப்ரம்ஹத பிதா -என்று
வித்யா சந்தானத்தை கொண்டாடுமா போலே -பிதரம் மாதரந்தாரான் -என்று த்யாஜ்யமான-
யோநி சந்தானத்தை கொண்டாடுகை யுக்தமோ என்னில் யுக்தம் –கொண்டாடுகைக்கு
பிரயோஜனம் பகவத் சம்பந்தம் ஆகையாலே -வித்யா சந்தானத்திலும் பகவத் விமுகன் த்யாஜ்யன் அல்லனோ –
ஏழ் படி கால் தொடங்கி –
அர்த்த க்ரமத்தாலே ஏழையும் சொல்லச் செய்தேயும் திரளச் சொல்லுகிறது -ஸ்வ சந்தானத்தில்
உண்டான ஆதர அதிசயத்தாலே
வந்து
மங்களா சாசனம் பண்ணுகைக்கு யோக்யமான தசைகளிலே வந்து
வழி வழி யாட் செய்கின்றோம் –
முறை முறையாக தப்பாமே அடிமை செய்கின்றோம்
இத்தால் -இஸ் சந்தானத்துக்கு மங்களா சாசன விச்சேதம் பிறந்தது இல்லை என்கை

யாஜ்ஞக  சந்தானத்துக்கு த்ரி புருஷ விச்சித்தியாலே அப்ராஹ்மண்யம் சொல்லுமா போலே
மங்களா சாசன விச்சித்தியால் வைஷ்ணத்வ ஹாநி சொல்லும் குறை எங்கள் சந்தானத்தில்-இல்லை என்கிறார்கள் -யஸ்ய வேதஸ் சவேதீச விச்சித்யே தேத்ரி பூருஷம்-சவை துர்ப்ராஹ்ம ணோஜெயஸ் சர்வகர்ம பஹிஷ்க்ர்த -என்னக் கடவது இ றே
வழி வழி -என்று
சாஸ்திர மார்க்கத்தாலும் சிஷ்ட ஆசாரத்தாலும் என்றுமாம்
சாந்திஸ் சாந்திஸ் சாந்தி -என்றும் -பச்யேம சரதஸ் சதம் -என்றும்
சர்வான் தேவான் நமஸ்யந்தி -என்றும் -மங்களா நிப்ர யுஞ்ஜானா -என்றும் சொல்லக் கடவது இ றே

ஆட் செய்கின்றோம் –ஆட் செய்கை யாவது திருப் பல்லாண்டு பாடுகை இ றே
மேலே பந்தனை தீரப் பல்லாண்டு -என்றதை வர்த்தியாக சொல்லுகையாலே
இதுக்கு கீழே தங்களுடைய சந்தானத்தில் ஏற்றம் சொன்னார்களாய் -மேலே –
தங்களுடைய வ்ர்த்தி விசேஷம் சொல்லுகிறார்கள்
திருவோணத் திருவிழவில் –
விசேஷித்து திரு நஷத்ரம் சொல்லாத இடத்துக்கு எல்லாம் இதுவே திரு நஷத்ரமாக கடவது –
திருவோணம் என்கிறது ஜன்ம நஷத்ரம் என்னில் -உகவாதார் அறிந்து அபிசரிப்பர்கள் என்று
அஞ்சி -திருவோணம் என்கிற திரு நாளிலே என்று மறைத்து சொல்லுகிறார்
அந்தியம் போதில் –
தேவர்களுக்கு பலம் ஷீணமாய் -அசுரருக்கு பலம் வர்த்திக்கும் சமயத்திலே
அரி உருவாகி –
ஒரு கால விசேஷம் வேண்டாதே சர்வ காலமும் மங்களா சாசனம் பண்ண வேண்டும் படியான-வடிவை உடையவனாய் நாரசிம்ஹ் வபுஸ் ஸ்ரீமான் -என்றும்
அழகியான் தானே அரி   உருவம் தானே -என்றும்
நரம் கலந்த சிங்கமாய் -என்றும் சொலக் கடவது இ றே
அரியை அழித்தவனை
அரி -என்று சத்ரு –
சஹஜ சத்ருவான ஹிரண்யனை குற்றுயிர் ஆக்கி விடாதே உரு அழித்தவனை
சுகிர்த்து எங்கும் சிந்தப் பிளந்த -என்னக் கடவது இ றே
அவனை அழியச் செய்தது பய ஸ்தானம் ஆகிறது பின்புள்ளார் பகை கொண்டாடுவார் என்னும் அத்தாலே

பந்தனை தீர
துஷ் ப்ரக்ருதியான ஹிரண்யன் உடலை கீண்டு பொகுடுகையால் வந்த அனுக்கம் தீர –
திரு வவதரித்த திவசத்தில் உண்டான அபதானம் ஆகையாலே அனுக்கம் என்றது இ றே
பல்லாண்டு
அனுகூலர் வாயாலே ஒருக்கால் மங்களா சாசனம் பண்ண -அவ் வஸ்துவினுடைய
அனுக்கம் போய் நித்தியமாய் செல்லும் என்று இ றே இவர்கள் நினைவு
பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே –
ஒருக்கால் பல்லாண்டு என்றத்தால் பர்யாப்தி பிறவாமையாலே கால தத்வம்
உள்ளதனையும் நித்யமாக செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணுகையே
எங்களுக்கு வ்ருத்தி என்கிறார்கள்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்