திருப்பல்லாண்டு -8–நெய்யிடை நல்லதோர் சோறு நியதமும் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

அவதாரிகை –

அண்டக் குலத்தில் அழைத்த ஐஸ்வர்யார்த்திகள் இசைந்து வர -அவர்களைக் கூட்டிக் கொள்ளுகிறார் –
வாழாளில் அழைத்த -அநந்ய பிரயோஜனர் தங்கள் ஏற்றத்தை சொல்லிக் கொண்டு புகுந்தார்கள் -எந்தை தந்தை தந்தை-யிலே
ஏடு நிலத்தில் -அழைத்த கைவல்யார்த்திகள் -தாங்கள் திருந்திப் புகுந்தமை சொன்னார்கள் -தீயில் பொலிகின்ற -விலே
இவர்கள் தாங்கள் ஷூத்ர புருஷார்த்தத்தை அபேஷிக்க -அநந்ய பிரயோஜனருக்கு முகம் கொடுத்தால் போலே
முகம் தந்து -அந்த ஐஸ்வர்யத்தை தந்த ஔதார்யத்துக்கு தோற்று -ஐஸ்வர்யத்தை விட்டு
சுத்த ஸ்வபவாராய் -இவ்வுதாரனை மங்களா சாசனம் பண்ணுவோம் என்று புகுருகிறார்கள்
அண்டக் குலத்திலே அண்டாத்யஷத்வம் ஐஸ்வர்யத்துக்கு மேல் எல்லையாய் பேசிற்று –
அவ் ஐஸ்வர்யார்த்திகள் பேச்சான இந்த பாட்டிலே -சரீரத்துக்கு தாரக போஷக போக்யங்களை
இரந்தார்களாய் -அத்தை அவன் தந்தானாகப் பேசிற்று -இதுக்கு நிபந்தனம் இன்று
ஸ்வரூப ஞானம் பிறந்து புகுருகிறவர்கள் ஆகையாலே அதினுடைய ஷூத்ரதை
தோற்றப் பேசுகிறார்கள் –
அண்டாத்யஷனான ப்ரஹ்மாவுக்கும் -தாரக போஷக போக்யங்களே  இ றே பிரயோஜனம்
அதற்க்கு மேற்பட்ட பகவத்விபூதியை எனக்கு என்கிற அபிமானத்தால் வந்த ஸ்வரூப ஹாநியே இ றே பலம்

நெய்யிடை நல்லதோர் சோறு நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக்காயும் கழுத்துக்கு பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல
பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே –9-

 

வியாக்யானம் –

நெய்யிடை
இடை என்று நிறையாய் -நெய்யோடு ஒத்த சோறு என்னுதல்
இடை -என்று நடுவாய் -நெய்யின் இடையிலே சில சோறும் உண்டு என்னுதல்
இத்தால் போஷக ப்ரசுரமான தாரக த்ரவ்யத்தை தரும் என்கை
நல்லதோர் சோறும் –
சோற்றுக்கு நன்மையாவது –
இட்டவன் இட்டோம் என்று இருத்தல் -உண்டவன் இதுக்கு என் செய்வோம் என்று இருத்தல் -செய்யாத சோறு –
அதாவது
தாய் இட புத்ரன் உண்ணும் சோற்றுக்கு இவ்விரண்டும் இல்லை இ றே
ஓர் சோறு –
இப்பாவ சுத்தியே  அன்றிக்கே விலஷண ரசோபேதமாய் இருக்கை
அங்கன் இன்றிக்கே -சேஷ பூதன் சேஷிக்கு இடும் சோறு போலே இருக்கை

அதாகிறது –
அஹங்காரோபேதம் இன்றிக்கே பக்த்யு பர்ஹ்ர்த்யமாய் இருக்கை –
ஈஸ்வரனும் -பக்தாநாம் -என்கிற நினைவாலேயும் வத்சலனாயும் இ றே இடுவது –
அநந்ய பிரயோஜன் ஸ்வாமி விஷயத்தில் இடும் சோறு எங்கனே இருக்கும் என்னில் –
விதுராந நானி புபுஜே ஸூ சீ நி குண வந்திச -என்னும்படி பாவந முமாய் -போக்யமுமாய்
இருக்கை -சு சீ நி -என்றது சுத்தங்களாய் இருக்கை -சோற்றுக்கு சுத்தி யாவது
துர்யோதனன் தன் ஐஸ்வர்யத்தைப் பற்ற அபிமாநித்தான் –
பீஷ்மன் ஞாநாதிகன் என்று அபிமாநித்தான்
த்ரோணன் வர்ணத்தாலிகன் என்று அபிமாநித்தான்
இவை ஒன்றும் இன்றிக்கே -பக்த் வுப ஹ்ர்தமாய் இருக்கை
நியதமும் –
அதாகிறது -ஐஸ்வர்யம் ஈச்வரனே கொடுக்கிலும் அஸ்திரமாய் இருக்கக் கடவது –
அது அழிந்தவன்றும் அந்த ஐஸ்வர்யத்தை சமாதானம் பண்ணிக் கொடுக்குமவன் ஆகையாலே
நியதமும் -என்கிறது -இத்தாலே இ றே –அர்த்தார்த்தி -என்றும் –ஆர்த்தன் -என்றும்
ஐஸ்வர்யத்துக்கு இரண்டு வகை சொல்லிற்று -அங்கன் அன்றிக்கே
தேவதாந்தரங்களைப் பற்றி ஈஸ்வரனை இல்லை செய்யுமன்றும் தந் முகேன
சோறிடுமவன் என்கை -சர்வேஸ்வரன் இட்ட சோற்றை தின்று அவனை இல்லை செய்யும்
க்ர்தக்நர் இ றே சம்சாரிகள் -தன்னை இல்லை செய்யுமன்றும் ரஷிக்கும் உதாரன் இ றே சர்வேஸ்வரன்
அத்தாணிச் சேவகமும் –
அத்தாணி -என்று பிரியாமை –சேவகம் -என்று சேவை
ஐஸ்வர்யார்த்திக்கும் அநவரத பாவநையும் -அந்திம ச்ம்ர்த்தியும் அநந்ய பிரயோஜநோபாதி
கர்த்தவ்யம் இ றே
ஆனால் ஐஸ்வர்ய சாதனத்தையும் –தந்து -என்று பிரயோஜத்தோடு ஒக்க சொல்வான்
என் என்னில்
வெள்ளுயிர் ஆன பின்பு சொல்லுகிறார்கள் ஆகையாலே அந்த சாதனமும் ஸ்வயம்
பிரயோஜனமாய் இ றே இருப்பது -அநந்ய பிரயோஜனனுக்கு ஸ்வயம் பிரயோசனமான
சேவை சாதனமாக்கி கிடீர் ஷூத்தரமான ஐஸ்வர்யத்தை தந்தது என்கை

கையடைக்காயும்
தாரக போஷகங்கள் கீழே சொல்லிற்றாய் -மேல் -போகய பதார்த்தங்களை தந்தபடி சொல்லுகிறது
திருக்கையாலே இட்ட வெற்றிலை பாக்கு என்று இவர்கள் பக்கல் கௌரவத்தாலே
இட்ட சீர்மையை சொல்லுகிறது -சேஷ பூதன் சேஷியை குறித்து இடும் பிரகாரத்தாலே இ றே
சேஷி யானவன் சேஷ பூதனுக்கு இடுவது
கழுத்துக்கு பூணொடு காதுக்குக் குண்டலமும் –
தேகத்தை உத்தேச்யம் என்று இருக்குமவன் ஆகையாலே -தன் உடம்பை அலங்கரித்து
அத்தை அனுபவித்து இருக்குமவன் இ றே ஐஸ்வர்யார்த்தி
பகவத் பரனாய் ஈஸ்வரனை அலங்கரித்து சதா தர்சனம் பண்ணி இருக்கிறான் அல்லனே
ஸ்வரூபத்தை உணர்ந்து -ஜ்ஞான வைராக்ய பக்திகளை ஸ்வரூபத்துக்கு ஆபரணமாக
நினைத்து இருக்கிறான் அல்லனே
கழுத்துக்கு பூணோடு காதுக்கு குண்டலமும் -என்று விசேஷிப்பான் என் என்னில் –
தன் கண்ணுக்கு அவிஷயமாய் -நாட்டார் கொண்டாடும் அதுவே தனக்கு பிரயோஜனமாய்
இருக்கையாலே
அவயவாந்தரந்களிலே -அங்குலீய காத்யாபரணங்கள் தன் கண்ணுக்கு விஷயமாய் இருக்கும் இ றே
பெருமாள் மீண்டு எழுந்து அருளின அளவிலே இந்த்ரன் வரக் காட்டின ஹாரத்தை
பிராட்டியும் தாமும் இருந்து திருவடிக்கு பூட்டினால் போலே -ஈஸ்வரன் பரிந்து
இது கழுத்துக்காம் -இது காதுக்காம் -என்று திருக்கையாலே பூட்டின ஆபரணமும்

ப்ரதேஹி ஸூ ப கே ஹாரம் யஸ்ய துஷ்டாஸி பாமிநீ -என்கிறபடியே இந்த்ரன்
வரக் காட்டின ஹாரத்தை பெருமாள் வாங்கி பார்த்தருளி -பிராட்டிக்கு கொடுக்கிற போது
அத்தை வாங்குகிறவள் -பெருமாளை ஒரு திருக் கண்ணாலும் திருவடியை ஒரு திருக் கண்ணாலும் பார்த்து வாங்கினாள்
ப்ரேஷி தஜ்ஞா ஸ் து கோசலா -என்று பார்வையில் கருத்து அறியுமவர் ஆகையாலே
அவனுக்கு கொடுக்கலாகாதோ -என்று அருளினார் -ஸூ ப கே -அடியார் ஏற்றம் அறிந்து
கொண்டாடுகைக்கு ஈடான சௌபாக்கியம் உள்ளது உனக்கே யன்றோ என்ன –
உம்முடைய திரு உள்ளத்தால் அன்றோ நான் கொடுக்கிறது என்று பிராட்டி விண்ணப்பம்
செய்ய -நான் முற்பாடனாகப் பெறாமையாலே உன்னுடைய உகப்பின் கார்யத்தைக் கொடுக்கல் ஆகாதோ
என்றார் -இப்படி அநந்ய பிரயோஜனனுக்கு ஆதரித்து பூட்டினால் போலே ஆய்த்து
ஷூத்ரனான என்னை ஆதரித்து பூட்டிற்றும்

மெய்யிட
திருவடிகளில் ருசி பிறந்த பின்பு ஆகையாலே -உடம்பு த்யாஜ்யம் என்கிற நினைவு
தோன்ற குத்சித்து சொல்லுகிறபடி
நல்லதோர் சாந்தமும் –
சசாதான் இதுக்கு தரமாகப் பெற்றதோ -சர்வ கந்த -என்கிற வடிவுக்கு ஸ தர்சமாக குப்ஜை
ஆதரித்து சாத்தின சாந்து போலே இருக்கும் சாந்தை அன்றோ எனக்கு இட்டது –
ஸூ கந்த மேதத் -குப்ஜை கம்சனுக்கு பரணியோடே சாந்து கொண்டு போகா நிற்க –
வாரீர் பெண் பிள்ளாய் நமக்கும் நம் அண்ணர்க்கும் சாந்திட வல்லீரோ -என்ன
அவ்வடிவையும் இருப்பையும் கண்டு ஸ்த்ரீத்வ ப்ரயுக்தமான சாபல்யத்தாலே மறுக்க மாட்டிற்று இலள் –
இவர்கள் இடைப்பிள்ளைகள் -சாந்தின் வாசி அறிய மாட்டார்கள் -என்று ஆக்கனாய் இருப்பதொன்றை இட்டாள்
அத்தை பார்த்து -நாற்றம் கொளுத்தின படி அழகியது தளம் அழகிதன்று -என்ன
அதுக்கு மேலே யொரு சாந்தை இட -ராஜார்ஹம் -இது கம்சனுக்குசெருக்கிலே
பூசலாம் இத்தனை வாசி அறிந்து பூசுவருக்கு ஸ்தர்சம் அல்ல -அன்றியே
வழக்கனான சாந்து என்னவுமாம்
ருசிரம் -சௌகந்த்யம் கிடக்க நிறம் அழகியதாய் இருந்தது என்ன
இவர்கள் இடைப் பிள்ளைகள் என்று இருந்தோம் -சாந்தின் வாசி அறிந்தபடி என்
என்று ஆதரித்து பார்க்க -ருசிராந நே -உன் முகத்தில் ஆதரத்துக்கு சதர்சமாய் இருக்க
வேண்டாவோ நீ இடும் சாந்து -என்ன -அவளும் தலையான சாந்தை இட –
ஆவ யோர்க்காத்ர சத்ருசம் -எங்கள் உடம்புக்கு ஸதர்சமான மேதக வஸ்துவை இட்டு
மர்த்தித்து தா என்றான் -அதாவது -பூசும் சாந்து -என்கிற படியே உன்னுடைய ஆதரத்தாலே
ச்மச்க்ர்த்தமாக்கி தா என்றபடி -இப்படி இவள் ஆதரித்து சாத்தின மாளிகைச் சாந்தை
கிடீர் தம் திருக் கையால் என் உடம்பில் பூசிற்று-தந்த போதை திருமுகத்தில் கௌரவத்திலும் ஔதார்யத்திலும் தோற்று ஐஸ்வர்யத்தை
விட்டு அவன் தானே யமையும் யென்னும்படியாய் தந்தது
என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல –
சோரேணாத்மாபஹாரிணா -என்கிறபடியே ஆத்ம அபஹாரம் பண்ணி -அதனாலே
ஷூத்ர பிரயோஜன காமனாய் -சம்சாரியாய் போந்த என்னை –
வெள்ளுயிர் ஆக்க வல்ல –
முன்பு ஷூத்ரனாய் போந்தான் ஒருவன் சுத்த ஸ்வபாவன் ஆனான் என்று தெரியாதபடி
அச்ப்ருஷ்ட சம்சார கந்தரிலே ஒருவன் -என்னலாம் படி யாய்த்து விஷயீ கரித்தது
வல்ல-தன்னதொரு ஸ்வபாவ விசேஷத்தாலே வஸ்துவை வஸ்வந்தரம் ஆக்க வல்ல சக்தன் என்கை-பையுடை இத்யாதி-மங்களா சாசனத்துக்கு விஷயம் ஏது என்ன -அவ் விஷயத்தை சொல்லுகிறார்
தன்னோட்டை  ஸ்பர்ச சுகத்தாலே விகஸித பணமான நாகத்தினுடைய பகை உண்டு
பெரிய திருவடி -அவனை கொடியாக உடையவனுக்கு
அநந்த சாயியாய் கருடத்வஜனானவனுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறேன் என்கை
தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே திரு வநந்த வாழ்வானோட்டை சேர்த்தியால்
வரும் அழகு நித்ய ஸ்ரீ யாக வேணும் என்றும்
ஏதேனும் ஒன்றை அபேஷித்து வந்தவர்களையும் எனக்காக்கிக் கொள்ள வல்லேன்
என்று கொடி கட்டி இருக்கிற சக்தி நித்ய ஸ்ரீ யாக செல்ல வேண்டும் என்றும்
திருப்பல்லாண்டு பாடுகிறேன் என்கிறார்

அநந்ய  பிரயோஜனரும் -கைவல்யார்த்திகளும் -சங்கதராகிற  இடத்தில் சமூஹமாக பேசினார் –பாடுதும் -கூறுதும் -என்றும்
இதில் ஐஸ்வர்யார்த்தியை ஏக வசனத்தாலே பேசுவன் என் என்னில் –கூறுவன் –என்று
அவர்கள் திரள் பரிச்சின்னமாய் -ஐஸ்வர்த்யார்திகள் திரள் அபரிச்சின்னம் ஆகையாலே
ஒரூருக்கு ஒருத்தன் வார்த்தை சொல்லுமா போலே சொல்லுகிறார்

————————————————————————–

ஸ்ரீ  கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading