திருப்பல்லாண்டு -6–எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

அவதாரிகை

அநந்ய பிரயோஜனருக்கும் பிரயோஜநாந்த பரருக்கும் உண்டான நெடு வாசி அறிந்து
இருக்கச் செய்தேயும் அநந்ய பிரயோஜனரை அழைத்த சமனந்தரம் -இவர்களை
அழைக்கைக்கு அடி -உதாராஸ் சர்வ ஏவைத -என்னுமவன் சீலத்தாலும் –
அவனோடு இவர்களுக்கு உண்டான அவர்ஜநீய சம்பந்தத்தாலும் –
இவர்களுக்கும் அவற்றையே  நினைத்து தேங்காதே புகலாம் படியாய் இ றே இருப்பது –
ஆகையாலே -அநந்ய பிரயோஜனரை அழைத்தவோபாதி இவர்களையும் அழைத்தாராய்-நின்றார் கீழ் –

இதில் வாழாளில் அழைத்த அநந்ய பிரயோஜனர் -தங்கள் ஸ்வரூபத்தையும்
ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தியையும் சொல்லிக் கொண்டு வந்து புகுர -அவர்களைக்
கூட்டிக் கொள்ளுகிறார் –
ஏழாட் காலும் பழிப்பிலோம் -என்று பிரயோஜனந்த பரரைக் குறித்து தாம் அருளிச் செய்த-தம்முடைய திரளுக்கு உண்டான ஏற்றத்தை புகுருகிறவர்கள் -தங்களுக்கு உண்டானதாக-சொல்லிக் கொண்டு வந்து புகுருகிறார்கள் -தம் தாம் ஏற்றம் சொல்லிக் கொண்டு வந்து-புகுருகை சாத்விகருக்கு யுக்தமோ என்னில் –ஆழ்வார் உடைய திரு உள்ளம் பயம்-கெடுகைக்காக சொல்லுகிறார்கள் ஆகையாலே யுக்தம்

பன்னகாச நமாகாசே பதந்தம் பஷி சேவிதே-வைநதேய மஹம் சக்த பரிகந்தும் சஹச்ரச -என்று திருவடி ஸ்வ சக்தியை சொன்னான் இ றே-முதலிகள் உடைய பயம் சமிக்கைகாக –

எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ் படி கால் தொடங்கி
வந்து வழி வழி யாட் செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்
யந்தியம்போதில் யரி வுருவாகி யரியை யழித்தவனைப்
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே -6-

எந்தை -நானும் என் அப்பனும்
தந்தை -அவனுக்கு அப்பனும்
தந்தை -அவனுக்கு அப்பனும்
தந்தை -அவனுக்கு அப்பனும்
தம் மூத்தப்பன் -அவனுக்கு அப்பனும் பாட்டனுமாகிய
ஏழ் படி கால் தொடங்கி -ஏழு தலைமுறை முதல் கொண்டு
வந்து -மங்களா சாசனம் பண்ணுகைக்கு யோக்யமான சமயங்களிலே வந்து
வழி வழி -முறை முறையாக
யாட் செய்கின்றோம் -தப்பாமே அடிமை செய்கின்றோம்
திருவோணத் திருவிழவில் -திருவோணம் என்கிற திரு நாளிலே
யந்தியம்போதில் -அசுரருக்கு பலம் வர்த்திக்கிற அந்திப் பொழுதில்
யரி வுருவாகி -ந்ர்சிம்ஹ ரூபியாய் கொண்டு
யரியை -ஆஸ்ரிதனனான ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு சத்ருவான ஹிரண்யனை
யழித்தவனை-உரு அழித்து பொகட்டவனுக்கு உண்டான
பந்தனை தீர-அணுக்கம் தீரும் படி
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று
பாடுதும்  -பாடுவோம்-

 

வியாக்யானம் –

எந்தை -தானும் தகப்பனுமாக இருவர்
தந்தை தந்தை தந்தை -என்று ஒரு மூவர்
தம் -என்று முடிந்தவனை அனுபாஷிக்கிறது
மூத்தப்பன்-அப்பன் -என்று தமப்பனார் –மூத்தப்பன் -என்று பாட்டனார்
ஆகையாலே அங்கே இருவர் –
ஆக எழுவரையும் சொல்லுகிறது
ஆழ்வார் ஏழ் ஆட் காலும் பழிப்பிலோம் -என்று திரள அருளிச் செய்தார்
இவர்களும் ஏழ் படி கால் -என்று திரள சொல்லா நின்றார்கள்

பிரித்து சொல்லுகிற இதுக்கு பலம் என் என்னில் -ஸ்வ சந்தானத்தில் மங்களா சாசனம்
பண்ணிப் போந்தவர்கள் பக்கல் உண்டான ப்ரீதி அதிசயத்தாலே சொல்லுகிறார்கள்
சஹி வித்யா தஸ்தம் ஜனய திதச் ஸ்ரேஷ்டம் ஜன்ம கரியான் ப்ரம்ஹத பிதா -என்று
வித்யா சந்தானத்தை கொண்டாடுமா போலே -பிதரம் மாதரந்தாரான் -என்று த்யாஜ்யமான-
யோநி சந்தானத்தை கொண்டாடுகை யுக்தமோ என்னில் யுக்தம் –கொண்டாடுகைக்கு
பிரயோஜனம் பகவத் சம்பந்தம் ஆகையாலே -வித்யா சந்தானத்திலும் பகவத் விமுகன் த்யாஜ்யன் அல்லனோ –
ஏழ் படி கால் தொடங்கி –
அர்த்த க்ரமத்தாலே ஏழையும் சொல்லச் செய்தேயும் திரளச் சொல்லுகிறது -ஸ்வ சந்தானத்தில்
உண்டான ஆதர அதிசயத்தாலே
வந்து
மங்களா சாசனம் பண்ணுகைக்கு யோக்யமான தசைகளிலே வந்து
வழி வழி யாட் செய்கின்றோம் –
முறை முறையாக தப்பாமே அடிமை செய்கின்றோம்
இத்தால் -இஸ் சந்தானத்துக்கு மங்களா சாசன விச்சேதம் பிறந்தது இல்லை என்கை

யாஜ்ஞக  சந்தானத்துக்கு த்ரி புருஷ விச்சித்தியாலே அப்ராஹ்மண்யம் சொல்லுமா போலே
மங்களா சாசன விச்சித்தியால் வைஷ்ணத்வ ஹாநி சொல்லும் குறை எங்கள் சந்தானத்தில்-இல்லை என்கிறார்கள் -யஸ்ய வேதஸ் சவேதீச விச்சித்யே தேத்ரி பூருஷம்-சவை துர்ப்ராஹ்ம ணோஜெயஸ் சர்வகர்ம பஹிஷ்க்ர்த -என்னக் கடவது இ றே
வழி வழி -என்று
சாஸ்திர மார்க்கத்தாலும் சிஷ்ட ஆசாரத்தாலும் என்றுமாம்
சாந்திஸ் சாந்திஸ் சாந்தி -என்றும் -பச்யேம சரதஸ் சதம் -என்றும்
சர்வான் தேவான் நமஸ்யந்தி -என்றும் -மங்களா நிப்ர யுஞ்ஜானா -என்றும் சொல்லக் கடவது இ றே

ஆட் செய்கின்றோம் –ஆட் செய்கை யாவது திருப் பல்லாண்டு பாடுகை இ றே
மேலே பந்தனை தீரப் பல்லாண்டு -என்றதை வர்த்தியாக சொல்லுகையாலே
இதுக்கு கீழே தங்களுடைய சந்தானத்தில் ஏற்றம் சொன்னார்களாய் -மேலே –
தங்களுடைய வ்ர்த்தி விசேஷம் சொல்லுகிறார்கள்
திருவோணத் திருவிழவில் –
விசேஷித்து திரு நஷத்ரம் சொல்லாத இடத்துக்கு எல்லாம் இதுவே திரு நஷத்ரமாக கடவது –
திருவோணம் என்கிறது ஜன்ம நஷத்ரம் என்னில் -உகவாதார் அறிந்து அபிசரிப்பர்கள் என்று
அஞ்சி -திருவோணம் என்கிற திரு நாளிலே என்று மறைத்து சொல்லுகிறார்
அந்தியம் போதில் –
தேவர்களுக்கு பலம் ஷீணமாய் -அசுரருக்கு பலம் வர்த்திக்கும் சமயத்திலே
அரி உருவாகி –
ஒரு கால விசேஷம் வேண்டாதே சர்வ காலமும் மங்களா சாசனம் பண்ண வேண்டும் படியான-வடிவை உடையவனாய் நாரசிம்ஹ் வபுஸ் ஸ்ரீமான் -என்றும்
அழகியான் தானே அரி   உருவம் தானே -என்றும்
நரம் கலந்த சிங்கமாய் -என்றும் சொலக் கடவது இ றே
அரியை அழித்தவனை
அரி -என்று சத்ரு –
சஹஜ சத்ருவான ஹிரண்யனை குற்றுயிர் ஆக்கி விடாதே உரு அழித்தவனை
சுகிர்த்து எங்கும் சிந்தப் பிளந்த -என்னக் கடவது இ றே
அவனை அழியச் செய்தது பய ஸ்தானம் ஆகிறது பின்புள்ளார் பகை கொண்டாடுவார் என்னும் அத்தாலே

பந்தனை தீர
துஷ் ப்ரக்ருதியான ஹிரண்யன் உடலை கீண்டு பொகுடுகையால் வந்த அனுக்கம் தீர –
திரு வவதரித்த திவசத்தில் உண்டான அபதானம் ஆகையாலே அனுக்கம் என்றது இ றே
பல்லாண்டு
அனுகூலர் வாயாலே ஒருக்கால் மங்களா சாசனம் பண்ண -அவ் வஸ்துவினுடைய
அனுக்கம் போய் நித்தியமாய் செல்லும் என்று இ றே இவர்கள் நினைவு
பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே –
ஒருக்கால் பல்லாண்டு என்றத்தால் பர்யாப்தி பிறவாமையாலே கால தத்வம்
உள்ளதனையும் நித்யமாக செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணுகையே
எங்களுக்கு வ்ருத்தி என்கிறார்கள்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading