திருப்பல்லாண்டு -10-எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோம்–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

அவதாரிகை –

கீழில் பாட்டில் புகுந்த அநந்ய பிரயோஜனர் தேக யாத்ரையிலும் தங்கள் பாரதந்த்ர்யமே
ஸ்வரூபமாய் இருக்கிற ஏற்றத்தை சொல் லிக் கொண்டு புகுந்தார்கள் –
இதில் -பிரயோஜநாந்த பரர் புகுருகிரார்கள் ஆகையாலே -தங்கள் பக்கல் அங்கன்
இருப்பதோர் ஏற்றம் காண விரகு இல்லாமையாலே -பகவத் பிரபாவத்தால்
தங்களுக்கு பிறந்த ஏற்றத்தை சொல்லிக் கொண்டு வந்து புகுருகிரார்கள் –
ஐஸ்வர்யார்த்தியும் சங்கதனாகிற போது -சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர்
ஆக்க வல்ல -என்று பகவத்ப்ரபாவத்தை சொல்லிக் கொண்டு வந்து இ றே புகுந்தது –
அவன் தான் நான் அபேஷித்த சூத்திர புருஷார்த்தத்தை தந்து வைத்து -என்னை சுத்த
ஸ்வபாவன் ஆக்கினான் -என்று ஆச்சர்யப் பட்டான் –
கைவல்யார்திகள் தங்கள் ஷூ த்ர புருஷார்த்த சம்பந்தம் யாவதாத்மபாவி விநாசகரம்
ஆகையாலே ஆஸ்ரயண வேளையில் மீட்ட ஆச்சர்யத்தைக் கொண்டாடுகிறார்கள் –

எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோம் என்று எழுத்து பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடு பெற்று உய்ந்தது காண்
செந்நாள்த்  தோற்றி திருமதுரையுள் சிலை குனித்து ஐந்தலைய
பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே வுன்னைப் பல்லாண்டு கூறுவனே –10-

அடியோங்கள் அடிக்குடில் -வீடு பெற்று -தாஸ பூதரான நாங்களும் –
எங்கள் க்ரஹங்களில் உள்ள புத்ர பௌத்ராதிகளும் -அஹங்காரமான ஐஸ்வர்ய
கைவல்யங்களையும் -விடப் பெற்று-

வியாக்யானம் –

எந்நாள்-
அந்நாள் -என்ன அமைந்து இருக்க –எந்நாள் -என்கிறது வகுத்த சேஷி பக்கலிலே ஷூத்ர-புருஷார்த்தத்தை அபேஷித்த காலமாய் இருக்கச் செய்தேயும் -ஸூப்ரபாதாச மேநிஸா –
என்கிறபடி மங்களா சாசனம் பண்ணுகைக்கு யோக்யமாம் படி புகுற நிறுத்தின
திவசம் -என்று அந்நாளைக் கொண்டாடுகிறார்கள் –
பகவத் பிரபாவம் தான் விஷயீ கரித்த திவசத்தையும் கொண்டாடும்படியாய் இருக்கும் இ றே
அவதாரத்தில் ஏற்றம் சொல்லுகிற அளவில் தஜ் ஜன்ம திவசம் என்று அந்நாளும்
கொண்டாடப் பட்டது இ றே
பிரயோஜனாந்தரத்தை அபேஷித்து வந்தவன் -அது ஒழிந்து -அநந்ய பிரயோஜனன்
ஆகைக்கு அடி என் என்னில்
எம்பெருமான் –
ஷூத்ர பிரயோஜநத்தை அபேஷித்து நிருபாதிக சேஷியான உன் பக்கலிலே
வருகையாலே ஸ்வரூப பராப்தமாய் வந்த சேஷத்வமே பலித்து விட்டது –
வகுத்த சேஷி யானாலும் -அபேஷிதங்களை ஒழிய புருஷார்த்தங்களைக்
கொடுக்கும் போது -அர்த்தி பக்கலிலே ஒரு கைம்முதல் வேண்டாவோ என்னில் –
உன் தனக்கு அடியோம் என்று எழுத்து பட்ட –
அடியோம் என்கிற அர்த்தத்துக்கு வாசகமான சப்தத்தில் எங்களுக்கு அந்வயம் உண்டு
நெஞ்சில் இன்றிக்கே இருக்கிலும் வாயில் உண்டான மாத்ரம் கொண்டு தர வல்ல சக்தி
உண்டு இ றே உனக்கு-

ஒமித்யே காஷரம் ப்ரஹ்ம வ்ராஹரன் மாம் அநுஸ்மரன் -என்னக் கடவது இ றே
அதவா
யாரேனும் பக்கலிலே ஏதேனும் ஒன்றை சொல்ல வேண்டி செல்லிலும் -நமஸ்
சப்த ப்ரயோகம் பண்ணக் கடவதாய் இ றே இருப்பது -அதுவும் ஆத்ம யாதாம்ய வாசகம்
இ றே -அதுவே எங்கள் பக்கல் கைம்முதல் என்கிறார்கள் –
எம்பெருமான் -என்கிற ப்ராப்தி யாலும் –
உன் தனக்கு -என்கிற சக்தியாலும் –
எழுத்துப் பட்ட -என்கிற சப்த மாத்ரத்தாலும்-பலிக்கக் கண்டோம் என்கிறார்கள் –
பட்ட -என்கிற இது –முத்துப்பட்ட -என்கிறாப் போலே
வாழாட் பட்டு -என்கிற -இடத்தில் அர்த்தத்தின் உடைய துர்லப்த்வம் சொல்லிற்று-வாசக சப்தத்தின் உடைய துர்லப்த்வம் சொல்லுகிறது இங்கு
அஹங்கார க்ரச்தமான சம்சாரத்துக்கு உள்ளே தாஸ்ய பிரகாசம் அலாப்யலாபம் ஆனால் போலே
பஹூ ஜல்பம் பண்ணிப் போகிற வாயிலே நமஸ் சப்தம் உண்டாக அல்பய லாபம் இ றே
அந்நாள் –
எம்பெருமான் உன் தனக்கு அடியோம் என்று எழுத்துப் பட்ட நாள் -எந்நாள் -அந்நாள்
என்று அந்வயம் –அந்நாளே -என்கிற அவதாரணத்தாலே -அது ஒழிய எங்கள் பக்கல்
ஆநுகூல்ய லேசமும் இல்லை என்று கருத்து
அத்தால் பெற்றது என் என்ன –
தாங்கள் பெற்ற பிரயோஜன பரம்பரைகளை சொல்லுகிறார்கள் –
அடியோங்கள் இத்யாதி –
அடியோங்களாக பெற்றோம் –
குடிலும் அடிக்குடிலாக பெற்றது –
வீட்டை லபிக்கப் பெற்றோம் –
உஜ்ஜீவிகப் பெற்றோம் –
அடியோங்கள் -என்கிறார்கள்
அஹங்கார க்ரச்தராய் -தத் அநுகூலமான ஷூத்ர புருஷார்த்தத்தை அபேஷித்து உன்
திருவடிகளில் வந்து ஒதுங்கின நாங்கள் -அது போய் -தாஸ்ய ஏக ரசராகப் பெற்றோம் –
அடிக்குடில் –
குடில் -என்று க்ரஹம் -அத்தாலே க்ரஹச்தரான புத்ர பௌத்ராதிகளும் அடியாராகப் பெற்றோம்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் -என்னக் கடவது இ றே
எழுத்துப் பட்டது தங்கள் அளவில் ஆகில் புத்ர பௌத்ராதிகள் அளவில் ஸ்வரூப ஞானம் பிறந்தபடி
என் என்னில் -முத்துப்பட்ட துறையை காவலிடுமவன் -அசல் துறையையும் காவல் இடுமா போலே
சம்பந்தி சம்பந்திகள் அளவும் அஹங்கார மமகாரங்கள் புகுராத படி விஷயீ கரித்தான் –என்கை
இவர்கள் சங்கதர் ஆகிற பாட்டிலும் –குடி குடி ஆட் செய்கின்றோம் -என்றார்கள் இ றே
சேஷி சந்நிதியிலே சேஷ பூதர் க்ரஹத்தை -குடில் வளைக்க -என்று சொல்லக் கடவது இ றே
வீடு பெற்று –
வீட்டை லபித்து -அதாகிறது
அஹங்கார மமகார கார்யமான ஐஸ்வர்ய கைவல்யங்கள் ஆகிற த்யாஜ்யங்களை
விடப் பெற்று -ப்ராப்ய சித்தியோபாதி த்யாக சித்தியும் ப்ராப்ய அந்தர்கதம் இ றே
உய்ந்தது காண்
தாஸ்யம் என்றும் – உஜ்ஜீவனம் -என்று பர்யாயம் போலே காணும்
உய்ந்தது காண் -என்று அறியாதரை அறிவிப்பாரைப்  போலே சொல்லுகிற இதுக்கு கருத்து என் என்னில் –
உபகரித்து விஸ்மரித்து போவது நீ –
நீ பண்ணின உபகாரம் நாங்கள் உபதேசிக்க கேளாய் என்கிறார்கள்

செந்நாள் -இத்யாதி
பிரயோஜனாந்தரங்களைக் கை விட்டு அநந்ய பிரயோஜனர் ஆனிகோள் ஆகில் இனி க்ர்த்த்யம் என் என்னில் –
உனக்கு மங்களா சாசனம் பண்ணுகையே க்ர்த்த்யம் என்கிறார்கள் -விஷயம் ஏது -என்ன –
செம் நாள்
அவதாரத்துக்கு ஏகாந்தமான நாள் ஆகையாலே அழகிய நாள் என்கிறார்கள்
தோற்றி –
அதீந்த்ரியமான விக்ரஹத்தை சகல மனுஜ நயன விஷய தாங்கத-என்கிறபடியே
உகவாதார் கண்ணுக்கும் விஷயமாம் படி தோற்றுவித்து
திரு மதுரையுள் –
அது தானும் நிர்ப்பயமான அயோத்யையில் இன்றிக்கே சத்ருவான கம்சன் வர்த்திக்கிற ஊரிலே –
சிலை குனித்து
அவ் ஊரில் தங்க ஒண்ணாமையாலே திருவாய்ப்பாடியிலே போய் மறைய வளருகிற நீ
மறித்தும் அவ் ஊரிலே புகுந்து கம்சனுடைய ஆயுத சாலையிலே புக்கு -வில்லை முறித்து
பூசலை விளைத்தாய் -அநுகூலர் அடைய -என் வருகிறதோ -என்று வயிறு பிடிக்கவேண்டும் படியான
தசையிலே கம்சனுக்கு மறம் பிறக்கும்படி சிலுகு படுத்துவதே

ஐந்தலை இத்யாதி –
அது கிடக்க -நிர்ப்பயமாய் வர்த்திக்கிற காலத்திலே பிறந்த ப்ரமாதமே போராதோ வயிறு-எரிகைக்கு என்கிறார்கள் –
ஐந்தலைய பைந்நாகத் தலை பாய்ந்தவனே –
கடிக்கைக்கு ஐஞ்சு வாயை உடைத்தாய் -க்ரோதத்தாலே விஸ்த்ர்தமான பணத்தை உடைத்தான
சர்ப்பாச்யத்திலே யன்றோ புக்கது -ஏக தாது விநா ராமம் க்ருஷ்ணோ ப்ருந்தாவனம் ய யௌ
என்று தலையன் ஒரு நாள் பேர நிற்க -பாம்பின் வாயிலே புகும் படி இ றே தீம்பு –
கிருஷ்ண அவதாரம் என்றால் ஆழ்வார்கள் எல்லாரும் ஒக்க பரிவராய் இருப்பர்கள்
இதுக்கு அடி என் -என்று ஜீயர் பட்டரை கேட்க –
ராமாவதாரத்தில் பிள்ளைகள் -தாங்கள் மிடுக்கராய் -குணாதிகருமாய் –
பிதா சம்ப ராந்தகனுமாய்
மந்த்ரிகள் வசிஷ்டாதிக்களுமாய்
ஊர் அயோதயையுமாய்
காலம் நல்ல காலமுமாய்
இருக்கையாலே அங்குத்தைக்கு ஒரு பயமும் இல்லை –
இங்கு
பிறந்தவிடம் சத்ரு  க்ர்ஹமாய்
கம்சன் இடம் பார்த்து நலியும் துஷ்ப்ரக்ர்திகளை வரக் காட்டும் கரூரனுமாய்
தமப்பன் இடையனுமாய்
ஊர் இடைச்சேரியுமாய்
பிள்ளைகள் தாங்கள் தீம்பருமாய்
காலம் கலி காலத்தோடு தோள் தீண்டியாய்
இருக்கையாலே என் வருகிறதோ என்று பரிகைக்கு ஆழ்வார்கள் அல்லது இல்லை காணும்
என்று அருளிச் செய்தார் –
உன்னைப் பல்லாண்டு கூறுதுமே –உன்னை கூறுதுமே -என்கிற ஸ்வரத்துக்கு கிருஷ்ண அவதாரம் பரிகை என்று காட்டி அருளுகிறார்
இப்படிப்பட்ட உன்னை அனுசந்தித்தால் மங்களா சாசனம் ஒழிய தரிக்க விரகு உண்டோ என்கிறார்கள்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading