ஸ்ரீ நாச்சியார் திருமொழி ஈற்றுப் பதிகத்தில் ஈற்றுப் பாட்டு ஒழிந்த ஒன்பது பாட்டிலும்
முன்னடிகள் -கண்டீரே -என்ற முடிவினால் வந்த வினாவாகவும்
பின்னடிகள்
விருந்தாவனத்தே கண்டோமே -என்ற முடிவினால் வந்த விடையாகவும் நிகழும் –
ஒரு வ்யக்தியாகிய ஆண்டாள் தானே
அநேக வ்யக்திகளின் அவஸ்தையை ஏக காலத்திலே
அடையுமாறு பொருந்துமோ என்ன
எம்பெருமானது அருளின் மிகுதியாலே
ஞானத்தில் தடையற்றால் பொருந்தாதது ஒன்றும் இல்லை –
இவளுடைய திருத் தகப்பனார் பெரியாழ்வார் தமது திவ்ய பிரபந்தத்தில்
என்னாதான் தேவிக்கு -திருமொழியில்
இரண்டு ஆயர் மங்கையின் அவஸ்தையை அடைந்து
ஒருத்தி கிருஷ்ணாவதார வ்ருத்தாந்தத்தை பாடுவதாகவும்
ஒருத்தி ராமாவதார வ்ருத்தாந்தத்தை பாடுவதாகவும்
கொண்டு பரஸ்பரம் எதிரியாய் நின்று சொல்லி
உபய அவதார குண சேஷ்டிதங்களையும் பேசி அனுபவித்தால் போலேயும்
திரு மங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில்
மானமரும் மென்னோக்கி -இரண்டு பிராட்டிமார் தசையிலே
ஏக காலத்திலே பெற்று பேசினால் போலேயும்
இவளும் பேசுகிறாள் -என்கை
பரமபதத்தில் நித்ய முக்தர்கள் ஏக காலத்தில் பல சரீரங்களை
பர்ஹரிப்பதாக உபநிஷத்கள் கூறுமே
அது பொருந்துவது எம்பெருமான் அருளால் இறே
அப்படியே இங்கும் கொள்ளலாம் என்று பட்டர் அருளிச் செய்யும் படி –
————
ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-3-9–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-
அவதாரிகை –
ஸ்ரீ கிருஷ்ண அவதார ஏக ப்ரவணராய்
தத் குண சேஷ்டிதங்களையே அனுபவித்துக் கொண்டு போந்தார் -கீழே-
(கீழேயும் அவதாராந்தரங்களை அருளிச் செய்து இருந்தாலும்
ப்ராஸுர்யமாக கிருஷ்ண அனுபவமேயாய்ச் சென்றது
தர்மி ஐக்யத்தாலே என்றுமாம் )
இப்போது அந்த ஸ்ரீ கிருஷ்ண குண சேஷ்டிதங்கள் உடன் –
ஏதத் பூர்வ காலிகமான –
ஸ்ரீ ராமாவதார குண சேஷ்டிதங்களையும்
ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்னும் அபிநிவேசம் பிறந்து
அதுக்கு உடலாக
இரண்டு ஸ்ரீ கோபிமார் அவஸ்தையைப் ப்ராப்தராய்
(ஜுகல் பந்தி வாத்ய ஒலி ஏக காலத்தில் -ஜுகல் -இரட்டை -வடக்கே உண்டே )
அதிலே ஒருத்தி
ஸ்ரீ கிருஷ்ணாவதார சேஷ்டிதமும்
ஒருத்தி
ஸ்ரீ ராமாவதார சேஷ்டிதமுமாகக் கொண்டு
ஒருவருக்கு ஒருவர் எதிராய் கொண்டு சொல்லி
(யுந்தி பறந்த )யுக்தி பறந்த பாசுரத்தாலே
உபய அவதார குண சேஷ்டிதங்களையும் பேசி அனுபவிக்கிறார்
இத் திரு மொழியில்-
(பற பற -என்னும் இடங்களில் எல்லாம் -யுந்தி பறந்த -என்றே கொள்ள வேண்டும் )
இரண்டு கோபிமார் அவஸ்தையை ஏக காலத்தில் அடையக் கூடுமோ -என்னில்
ஸ்ரீ பகவத் பிரசாத விசேஷத்தாலே
ஞானத்தில் தடை அற்றால் எல்லாம் சொல்லலாம் இறே
மானமரு மென்னோக்கி-(11-5 சாழல் பதிகம் )-என்கிற திரு மொழியில் –
இரண்டு பிராட்டிமார் தசை ஏக காலத்தில் கூடும் படி என் -என்று ஸ்ரீ ஜீயர் ஸ்ரீ பட்டரை கேட்க
தேச விசேஷத்தில் அநேக சரீர பரிக்ரகம் ஏக காலத்தில் கூடுகிற படி எங்கனே
அப்படியே இவரையும் பார்த்து அருளினால் (எம்பெருமான் கடாஷித்து அருளினால் ) கூடும் –என்று அருளிச் செய்தார் –
என்று பிரசித்தம் இறே-
(பட்டி மேய்ந்தோர் கார் ஏறு -நாச்சியார் -14 -ப்ருந்தாவனந்தே கண்டோமோ -இங்கு போகக் கண்டீரே –
இதே போல் இருவராக பேசுவது உண்டே
பெரியாழ்வார் கதிர் ஆயிரம் பதிகமும்-கண்டார் உளாரோ -கேள்விக்கு உளார்- இதே போல் உண்டே
இப்படி நான்கு பதிகங்கள் இருவர் அவஸ்தைகளில் )
கீழில் திருமொழியில் (3-8 )
கிருஷ்ணாவதாரத்தைப் பல இடங்களிலும் ப்ரஸ்துதமாக்கி
ஆச்சார்ய பரதந்த்ரன் ஈஸ்வரனைப் பற்றிப் போன பிரகாரங்களை அனுசந்தித்தார் –
மேன்மையும் நீர்மையும் தோற்றின அவதார அபதான விசேஷ குணங்களையும்
நீர்மையே விஞ்சித் தோற்றின ராமாவதார விசேஷ குணங்களையும்
தன்னையும் இரண்டு வகையாக்கி அனுசந்தித்த பிரகாரத்தைத் திருவாய்ப் பாடியில் உள்ள பெண்கள்
இரண்டு வகையாய் இரண்டு அவதாரத்தையும் புகழ்ந்து உரைத்து
விளையாடி
உந்தி பரந்த பாசுரத்தாலே அனுசந்தித்து
மங்களா ஸாசனத்தோடே சேர்த்துப் ப்ரீதர் ஆகிறார் –
இரண்டு வகையான குணங்களும் மங்களா வஹம் இறே
சேதனனுக்கு ஏக காலத்தில் இரண்டு சரீரமாகை கூடுமோ என்னில்
தேச விசேஷத்தில் அநேகதா பவதி -என்று நடவா நின்றது இறே
விண்ணுளாரிலும் சீரியர் என்று இங்குள்ளாரையும் ஸ்லாகியா நின்றால் எது தான் கூடாது
திருச் சாழலிலே( 11-5 ) இரண்டு பிராட்டிமார் அவஸ்தை
ஏக காலத்தில் கூடுமோ என்று ஜீயர் பட்டரைக் கேட்க
தேச விசேஷத்திலே
அநேகதா பவதி கண்டீரே -என்று அருளிச் செய்தார் என்று
ஆச்சாம் பிள்ளை அருளிச் செய்வர் –
—————–——————————————
என் நாதன் தேவிக்கு அன்று இன்பப் பூ ஈயாதாள்
தன் நாதன் காணவே தண் பூ மரத்தினை
வன்னாத புள்ளால் வலியப் பறித்திட்ட
என் நாதன் வன்மையை பாடிப் பற
எம்பிரான் வன்மையை பாடிப் பற – 3-9-1-
—
என் வில் வலி கண்டு போ என்று எதிர் வந்தான்
தன் வில்லினோடும் தவத்தை எதிர் வாங்கி
முன் வில் வலித்து முது பெண் உயிர் உண்டான்
தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற
தாசரதி தன்மையைப் பாடிப் பற – 3-9-2- –
–
உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு
விருப்புற்று அங்கே ஏக விரைந்து எதிர் வந்து
செருக்குற்றான் வீரம் சிதைய தலையைச்
சிரைத்திட்டான் வன்மையை பாடிப் பற
தேவகி சிங்கத்தைப் பாடிப் பற – 3-9 -3- –
——
மாற்றுத் தாய் சென்று வனம் போகே என்றிட
ஈற்றுத் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழ
கூற்றுத் தாய் சொல்ல கொடிய வனம் போன
சீற்றம் இலாதானைப் பாடிப் பற
சீதை மணாளனைப் பாடிப் பற -3- 9-4 –
——
(கீழே தேவகி சிங்கம் என்றார்
இதில் யசோதை சிங்கம் என்கிறார்
ஒருத்தி மகனாய் பிறந்தபடியாலும்
அவனே ஒருத்தி மகனாய் வளர்ந்த படியால் )
பஞ்சவர் தூதனாய் பாரதம் கை செய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு
அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த
அஞ்சன வண்ணனைப் பாடிப் பற
வசோதை தன் சிங்கத்தைப் பாடிப் பற – 3-9- 5-
—
முடி ஒன்றி மூ உலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கு அருள் என்று அவன் பின் தொடர்ந்த
படியில் குணத்து பரத நம்பிக்கு அன்று
அடி நிலை ஈர்ந்தானைப் பாடிப் பற
அயோத்தியர் கோமானைப் பாடிப் பற -3- 9-6 –
——
காளியன் பொய்கை கலங்க பாய்ந்திட்டவன்
நீள் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து
மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்
தோள் வலி வீரமே பாடிப் பற
தூ மணி வண்ணனைப் பாடிப் பற – 3-9- 7-
—
தார்க்கு இள தம்பிக்கு அரசு ஈந்து தண்டக
நூற்றவள் சொல் கொண்டு போகி நுடங்கிடை
சூர்பணகாவை செவியோடு மூக்கவள்
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற
அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற -3 -9-8 –
—
மாயச் சகடம் உதைத்து மருது இறுத்து
ஆயர்களோடு போய் ஆ நிரை காத்து அணி
வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற
ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற
ஆ நிரை மேய்த்தானைப் பாடிப் பற – 3-9 -9-
——
காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன் முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ஆராவமுதனைப் பாடிப் பற
அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற – 3-9- 10-
—
நிகமத்தில் -இத் திரு மொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலைக் கட்டுகிறார்
நந்தன் மதலையை காகுத்தனை நவின்று
உந்தி பறந்த ஒளி இழையார்கள் சொல்
செந்தமிழ் தென் புதுவை விட்டு சித்தன் சொல்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு அல்லல் இல்லையே – 3-9- 11- –
—————-
ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-4-1–
அவதாரிகை
ஸ்ரீ கிருஷ்ண அவதார ப்ரவணராய்-
திரு அவதார சமயமே தொடங்கி அவ் வவதார ரசமே அனுபவித்து கொண்டு போந்தவர் (3-8 )
(கிருஷ்ண சேஷ்டிதங்கள் 3-6 வரையிலும்
அடுத்த இரண்டும் கிருஷ்ண அனுபவத்தில் ஆழங்கால் பட்ட கோபிகள் நிலையைப் பேசி அனுபவித்தார் )
ஸ்ரீ கிருஷ்ண அவதார சேஷ்டிதங்களையும் –
ஸ்ரீ ராம அவதார சேஷ்டிதங்களையும் ஏக காலத்தில்
அனுபவிக்க வேணும் என்னும்படியாய் இருப்பதொரு அபிநிவேசம் பிறந்து
அவை தன்னை ஏக ஆஸ்ரயத்தில் இட்டு அனுபவிக்கப் போகாமையாலே
இரண்டு வடிவு கொண்டு –
ஒன்றுக்கு ஓன்று எதிரியாய் பேசி அனுபவித்த( 3-9 )
அநந்தரம்
ஸ்ரீ ராமாவதார அனுகுணமாக வந்து அவதரித்து அருளின ஸ்ரீ பிராட்டி –
தன்னுடைய புருஷார்த்ததுக்கு பிரதான குணமான கிருபையை வெளி இடுகைக்காக –
ராவணன் பிரித்தான் -என்று
ஒரு வ்யாஜத்தாலே இலங்கையிலே எழுந்து அருள
அவ்வதாரத்தின் மெய்ப்பாட்டாலே ஸ்ரீ பெருமாள் அவள் போன இடம் இன்ன இடம் என்று
அறியாமல் தேடிக் கொண்டு திரியா நிற்க –
ஸ்ரீ மகா ராஜரோடு உறவு செய்த அநந்தரம்
அவருடைய சர்வ பரிகரத்தையும் திரட்டி
திக்குகள் தோறும் தேடும்படி வகை வகையாக போக விடுகிற அளவிலே
ஸ்ரீ பெருமாள் -ஸ்ரீ திருவடி யினுடைய புத்தி சக்தியாதிகளை கண்டு -இவனே
இக் கார்யம் செய்து முடிக்க வல்லான் -என்று திரு உள்ளம் பற்றி
ஸ்ரீ பிராட்டியைக் கண்டால் விண்ணப்பம் செய்யத் தக்க அடையாளங்களையும் அருளிச் செய்து
திரு ஆழி மோதிரத்தையும் கொடுத்துப் போக விட –
ஸ்ரீ திருவடியும் இலங்கையிலே சென்று பிராட்டியை கண்டு திருவடி தொழுது –
ராவணன் மாயையால் வரும் அதி சங்கை தீரும்படி பெருமாள் அருளிச் செய்த
அடையாளங்களை எல்லாம் விண்ணப்பம் செய்து –
திரு ஆழி மோதிரத்தையும் கொடுத்து –
ஸ்ரீ பிராட்டி திரு உள்ளத்தை மிகவும் உகப்பித்த பிரகாரத்தை அனுசந்தித்து
அந்தப்புர கைங்கர்ய ரசத்தில் உண்டான ஆசையாலே ஸ்ரீ பிராட்டிக்கு ஸ்ரீ திருவடி
விண்ணப்பம் செய்த அடையாளங்களையும்
திரு ஆழி மோதிரம் கொடுத்த படியையும்
அது கண்டு பிராட்டி திரு உள்ளம் உகந்த படியையும் எல்லாம் அடைவே பேசி
அனுபவித்து ப்ரீதர் ஆனார் கீழில் திரு மொழியிலே -( 3-10 )
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்களோடு-
அவதாராந்தரங்களோடு –
அபதானந்தரங்களோடு
வாசி அற -தர்ம ஐக்யத்தாலே எல்லாம் ஏக ஆஸ்ரயம் ஆகையாலே
இப்படி இருக்கிற விஷயத்தை கண்ணாலே கண்டு அனுபவிக்க வேண்டும் -என்று
தேடுகையாகிற இது -தமக்கு ஒரு புடை செல்லுகிறபடியும்
மானச அனுபவத்தின் உடைய கரை புரட்சியாலே அவ் விஷயம் தன்னை
ஸூ ஸ்பஷ்டமாக கண்டதாலே ஒரு புடை தோற்று இருக்கும் படியையும் அனுசந்தித்து –
அவை இரண்டையும்
அவதார விசிஷ்டனாக சர்வேஸ்வரனை கண்ணாலே காண வேண்டும் என்று
தேடித் திரிகிறார் சிலரும்
அப்படி தேடி கிறிகோள் ஆகில் அவனை உள்ளபடி கண்டார் உளர் -என்று
சொல்லுகிறார் சிலருமாக கொண்டு
தம்மை இரண்டு வகையாக வகுத்து நின்று பேசி
இனியர் ஆகிறார் -இத் திரு மொழியில் –
(3-9-இரண்டு அனுபவம் ஒருத்தி ராம அனுபவம் ஒருத்தி கிருஷ்ண அனுபவம்
இங்கு ஆழ்வார் தாமே இரண்டாக தம்மை வகுத்து
அவதாராந்தரங்கள் அபதாநாந்தரங்கள் -ஒரே தர்மி என்று காட்டி அருளுகிறார் )
நாடுதிரேல்-என்றும் –
கண்டார் உளர் -என்றும் பன்மையாக அருளிச் செய்தது
கட் கண்ணால் காண்கையில் அபேஷா ரூப ஞான வ்யக்திகளும்
உட் கண்ணால் கண்டு அதில் ஊற்றத்தாலே பாஹ்ய அனுபவமும்
சித்தித்தது என்று தோற்றும்படியான ஞான வ்யக்திகளும்
பல உண்டு ஆகையாலே
பிரவேசம்
ஆச்சார்யனானவன்
பகவத் வாக்யங்களாலும் (சரம ஸ்லோகம் )
மந்த்ர உபதேசத்தாலும் (ரஹஸ்ய த்ரயங்கள் )
ஸ்வரூப ஞான பர்யந்தமாக ருசி உத் பாதநம் செய்து
சேதனனை உகப்பித்து
(திருவடியும் இரண்டையும் செய்தார் அன்றோ –
பெருமாள் சொன்ன அடையாளங்களைச் சொல்லியும் கணை ஆழியும் கொடுத்து )
தத் த்வாரா ஈஸ்வரனையும் உகப்பித்த பிரகாரத்தை
திருவடி வ்யாஜத்தாலே
இரண்டு தலையையும் தனித்தனியே
பஸ்ய தேவி யங்குளீ யகம் -என்றும்
த்ருஷ்டா ஸீதா –என்றும்
உகப்பித்த பிரகாரத்தை அருளிச் செய்தாராய் நின்றார் கீழில் திரு மொழியில் (3-10 )
(திருமந்த்ரார்த்தம் மனசில் பட பட
த்வரை மிக்கு த்வயார்த்தம் அறிய அபி நிவேசம் ஏற்படுமே
இது தான் -தனித் தனியாக 3-10-
இதில் சேர்ந்த -4-1
பதிகம் ஆரம்பமே பட்டாபிஷேகம் இதில் )
இதில்
அங்கன் தனித் தனியே காணாமல்
இருவரையும் சேரக் காண வேணும் என்று தாம் விரும்பின பிரகாரத்தைத்
தமக்கு ஸ்நேஹிகளாய்
பகவத் வாக்யங்களாலும்
ஆச்சார்ய முகத்தாலும்
உபாய உபேயங்கள் அவனே என்று அறுதியிட்ட சேதனர்
(நாடுதிரேல் என்பாரும் கண்டார் உளர் என்பாரும் ஸ்நேஹிகள் தானே
தேடுதலும் ஸ்ரேஷ்டம்
கண்டவர் காட்டுவதும் அதே போல் தான் ஸ்ரேஷிடம் )
பிரதம பதத்தில் அர்த்த பலத்தாலே காண்கிற அளவே யன்றி
ஏகாயந அநீச தர்சனம் போல் அன்றிக்கே
ஸாப்தமாக மிதுன விஷயத்தைக் காணலாமோ என்று அபேக்ஷிக்க
(த்வயத்தில் )உத்தர பூர்வ வாக்யங்களை தர்சிப்பிக்க
தர்சித்துத் தெளிந்து இருக்கச் செய்தேயும்
அவ்வளவிலும் பர்யவசியாமல் அபி நிவேசம் மிக்கு
(பிரணவம் சம்பந்தம் நமஸ் உபாயம் நாராயணாயா உபேயம்
பிரதமம்- ஓம் -மிதுனம் காண ஆசை இருப்பவருக்கு அர்த்த பலத்தால் தான் தெரியும்
திரு மார்பில் விட்டு பிரிந்தால் தானே அக்ஷரம் விட்டு பிரிவது
சேனாபதி மிஸ்ரர் வாக்கியம்
ரஷிக்கும் பொழுது பிராட்டி வேணும் -எனவே சேர்த்தே என்று அர்த்தம் கொண்டே தர்சிக்கலாம் –
சப்தம் இல்லையே )
(பூர்வ உத்தர என்னாமல் உத்தர பூர்வ என்றது
உபேயம் தானே பிரதானம்
கருமுகை மாலையை சும்மாடு ஆக்குவது போல் உபேயமான அவனை உபாயமாக்கி
அவனை அடசிந்து நித்தியமாக அனுபவித்து
அனுபவ ஜனித்த ப்ரீதி கார்ய பகைங்கர்யம் செய்வோமே
ஆகவே முதலும் உத்தர வாக்கியம் காட்டி அருளுகிறார் )
மணக்கால் நம்பிகளை பெரிய முதலியார் இவ் விஷயத்தை ப்ரா மாணிகருக்கும்
ஸாஷாத் கரிக்கலாமோ -என்று கேட்டால் போலே
தர்சிப்பித்த ஆச்சார்யனைக் கேட்க
அவனும்
ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்பக் கண்ட சதிர் –பரத்வத்திலேயும் கண்டேன் -என்றும்
மலையால் அணை செய்து இலங்கை மலங்க ஓர் வாளி தொட்டானை நாங்கை நன்னடுவுள் செம் பொன் கோயிலினுள்ளே
அல்லி மா மலராள் தன்னொடும் அடியேன் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே -என்றும்
சந்தணி மென் முலை மலராள் தரணி மங்கை தாம் இருவர் அடி வருடும் தன்மையானை–
திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே –2-10-2- என்றும்
நீயும் திரு மகளும் நின்றாயால் (பொய்கையார் )-என்றும்
பரத்வ விபவங்களிலும் கட்கண்ணால் காண்கிற அளவு அன்றிக்கே
உட் கண் உணரும் அர்ச்சாவதாரங்களிலும்
மங்களா ஸாஸனமாக கண்டார் உளர் –
என்றதால் தாமும் அத்யந்த ப்ரீதராய் –
திருவாய்ப்பாடியிலே பெண்கள் நந்தன் மதலையைக் காகுத்தனை நவின்று உந்தி பறந்து
குண அனுபவம் பண்ணினவர்கள் (நாடுதிரேல் கோஷ்டி இவர்கள் )
மற்றும் ஜன்மாந்தர ஸம்ஸ்கார உபாசன சித்தரானவர்கள்
ஒருவருக்கு ஒருவர் அபேக்ஷை உண்டாகில் கண்டார் உளர் என்னும் அந்யாப தேசத்தாலே
மநோ ரதித்து அருளிச் செய்து இனியராகிறார் –
—————————————————-
கதிர் ஆயிரம் இரவி கலந்து எறித்தால் ஒத்த நீள் முடியன்
எதிரில் பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல்
அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய்
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவாறு கண்டார் உளர் – 4-1- 1-
உள்ளவா கண்டார் உளர் –
சம்சய விபர்யய ரஹிதமாக உள்ளபடி கண்டார் உளர் –
உள்ளவா காண்கை யாவது –
அவதார பிரயுக்தையான ஆகாரங்களை இட்டு
வேறு படக் காணாதே –
ஸ்ரீ ராமாவதாரமாய் ராவண வதம் பண்ணினவனும்
ஸ்ரீ நரசிம்ஹ அவதாரமாய் ஹிரண்ய வதம் பண்ணினவனும் ஒருவனே -என்று
வஸ்துவினுடைய படி அறிந்து காண்கை
முன்பு ஹிரண்யன் ஆனவன் தான் இறே பின்பு ராவணனாய் பிறந்தவன் –
(ஜெய விஜய சாபத்தால் பிறந்தவர்கள் தானே )
ப்ரஹ்மாதிகள் பக்கல்-ஹிரண்ய ராவணர்கள் இருவரும் கொண்ட வரங்களுக்கு விரோதம் வாராதபடி
நிரசிக்க வேண்டுகையிலே இறே -ரூப பேதம் கொள்ள வேண்டிற்று இறே
அதாவது –
தேவாதி சதுர்வித ஜாதியில் ஒன்றாலும் படக் கடவேன் அல்லேன் -என்று
வரம் கொள்ளுகையாலே
ஸ்ரீ நரசிம்ஹமாக வேண்டிற்று –அங்கு
தேவர்கள் அசுரர்கள் ராஷசர்கள் முதலானோர் ஒருவராலும் படக் கடவேன் அல்லேன் -என்று
வரம் கொள்ளுகையாலும்
மனுஷ்யரை ஒன்றாக கணியாமல் போருகையாலும்
மனுஷ்யனாய் நின்று கொல்ல வேண்டிற்று -இங்கு
ஆகையால் கார்ய அனுகுணமாக கொண்டு –
ரூப பேத மாத்ரமாய் –
பிரகாரி ஓன்று ஆகையாலே
இந்த ஐக்யம் அறிந்து காண்கை ஆயிற்று -உள்ளபடி காண்கை யாவது
—————————————————
அவதாரிகை-இரண்டாம் பாட்டு
கீழ் பாட்டில் ஈஸ்வரத்வம் தோற்றிற்று இறே
ஈஸ்வரன் என்று அறுதி இட்டால் பின்னை ஸ்ரீ பஞ்சாயுத தரத்வம் சொல்லலாம் இறே
ராவண வதத்து அளவும் இறே ஈஸ்வரத்வம் தான் மறைக்க வேண்டிற்று
ஆகையால் இறே -ராவண வத அநந்தரம் வந்த பிரம்மாதி தேவர்கள்
பவான் நாராயணோ தேவதா ஸ்ரீ மான் சக்ராயுதோ விபு -என்றது –
பின்னையும் –
ஆத்மாநாம் மானுஷம் மந்யே -என்று இவர் அருளி செய்தது
முன்பு நின்ற நிலையிலே புரை அறுதி தோற்றுக்கைக்காக இறே
நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலி சார்ங்கம் திருச் சக்கரம்
ஏந்து பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல்
காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக் கடும் சிலை சென்று இறுக்க
வேந்தர் தலைவன் ஜனக ராஜன் தன் வேள்வியில் கண்டார் உளர் -4- 1-2 –
இங்கு -இராமனை நாடுதிரேல் -வேள்வியில் கண்டார் உளர் என்கிறதில்
வேறு பாடு தோன்றால் போலே இறே –
இராமனை நாடுதிரேல் -உதிரம் அளைந்த கையோடு இருந்தானைக் கண்டார் உளர் -என்கிறதும் –
———————————————
கொலை யானை கொம்பு பறித்துக் கூடலர் சேனை பொருது அழியச்
சிலையால் மராமரம் எய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல்
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்டு அடைப்ப
அலையார் கடல் கரை வீற்று இருந்தானை அங்குத்தை கண்டார் உளர் -4- 1-3 –
—————————————————-
தோயம் பரந்த நடுவு சூழலில் தொல்லை வடிவு கொண்ட
மாயக் குழவி யதனை நாட உறில் வம்மின் சுவடு உரைக்கேன்
ஆயர் மடமகள் பின்னைக்காகி அடல் விடை ஏழினையும்
வீயப் பொருது வியர்த்து நின்றானை மெய்மையே கண்டார் உளர் – 4-1- 4-
இத்தால்-
ஸ்ரீ வடதள சயன அபதாநத்துக்கும் ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துக்கும் உண்டான
தர்ம ஐக்யம் சொல்லப்பட்டது ஆய்த்து
வையம் எழும் கண்டாள் பிள்ளை வாயுளே -(1-1)-என்றும்
ஆலின் இலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன்(1-4) -என்று
இவ் ஐக்யம் தான் கீழும் பல இடங்களிலும் சொல்லப் பட்டது இறே –
————————————-
நீர் ஏறு செஞ்சடை நீல கண்டனும் நான் முகனும் முறையால்
சீர் ஏறு வாசகம் செய்ய நின்ற திரு மாலை நாடுதிரேல்
வாரேறு கொங்கை உருப்பிணையை வலியப் பிடித்துக் கொண்டு
தேர் ஏற்றிச் சேனை நடுவே போர் செய்ய சிக்கனக் கண்டார் உளர் – 4-1 -5-
———————————————–
பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்ச புணர் முலை வாய் மடுக்க
வல்லானை மா மணி வண்ணனை மருவும் இடம் நாடுதிரேல்
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவளம் எறி துவரை
எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் – -4 -1-6 –
—————————————————
வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர் திருச் சக்கரம் ஏந்தும் கையன்
உள்ளவிடம் வினவில் உமக்கு இறை வம்மின் சுவடு உரைக்கேன்
வெள்ளைப் புரவி குரக்கு வெல் கொடிதேர் மிசை முன்பு நின்று
கள்ளப் படை துணையாகி பாரதம் கை செய்யக் கண்டார் உளர் – 4-1-7- –
—————————————-
நாழிகை கூறிட்டு காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே
நாழிகை போக படை பொருதவன் தேவகி தன் சிறுவனை நாடுதிரேல்
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப சயந்திரன் தலையை
பாழில் உருளப் படை பொருதவன் பக்கமே கண்டார் உளர் – 4-1- 8-
——————————————
மண்ணும் மலையும் மறி கடல்களும் மற்றும் யாவும் எல்லாம்
திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனை சிக்கென நாடுதிரேல்
எண்ணற்கு அரியதோர் ஏனமாகி இரு நிலம் புக்கு இடந்து
வண்ணக் கரும் குழல் மாதரோடு மணந்தானைக் கண்டார் உளர் -4 -1-9 –
———————————————-
நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலை கட்டுகிறார் –
கரிய முகல் புரை மேனி மாயனை கண்ட சுவடு உரைத்து
புரவி முகம் செய்து செந்நெல் ஓங்கி விளை கழனி புதுவை
திருவில் பொலி மறை வாணன் பட்டர் பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவு மனம் உடை பத்தர் உள்ளார் பரமன் அடி சேர்வார்களே -4- 1-10 –
———–——————————————————————–
ஸ்ரீ நாச்சியார் திரு மொழி – – பதினான்காவது திருமொழி —
அவதாரிகை –
பிராப்ய பிராபகங்களை நிஷ்கரித்து
நாராயணனே நமக்கே பறை தருவான் என்று அடியிலேயே -அருளி
நடுவிலே பாகவதர்களை சிறப்பாக அனுபவித்து
இறுதியில் –
கறைவைகளில் பிராபகத்தையும்
சிற்றம் சிறுகாலையில் -பிராப்யத்தையும் அறுதியிட்டு -என்றபடி –
அந்த பிராப்யத்தை அப்போதே லபிக்கப் பெறாமையாலே
1-கண்ணாஞ்சுழலையிட்டு காமன் காலிலே விழுந்து –
அநந்தரம்
2-சிற்றில் இழைத்து
3-பனி நீராடி
4-கூடல் இழைத்து
5-குயில் வார்த்தை கேட்டு
6-சாஷாத் கரிக்க வேணும் என்னும் ஆசை பிறந்து –அப்போதே கிடையாமையாலே – ஸ்வப்ன அனுபவத்தாலே தரித்து
7-அது தான் விசதமாய் இராமையாலே
அவ்வனுபவத்துக்கு தேசிகரான ஸ்ரீ பாஞ்சஜன்ய ஆழ்வானை வார்த்தை கேட்டு
8-மேக தர்சனத்தாலே நொந்து -அம் மேகங்களை வார்த்தை கேட்டு –
ராமாவதாரத்துக்கு அங்கு நின்றும் வந்த திருவடி தன்னையே
தூது விட்டால் போலே அம்மேகங்கள் தன்னையே தூது விட்டு
9-அவ்வர்ஷாவில் பதார்த்தங்கள் அவனுக்கு ஸ்மாரகமாய் பாதிக்க ஒருப்பட்டத்தைச் சொல்லி
அவை தான் முருக நின்று நலிந்தமை சொல்லி
10-பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பிலும்
அவன் ந த்யஜேயம் என்று அருளிச் செய்த வார்த்தையிலும் அதிசங்கை பண்ணி-
11-குமரனார் சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே –10-4-
அவன் வார்த்தை பொய்யானாலும் பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பு நமக்குத் தப்பாது பலிக்கும் என்று அத்யவசித்து -10-10-
அவன் படியாலும் இழக்க வேண்டாம் என்று தெளிந்து-
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை நல்ல பரிசு வருவிப்பரேல்
அது காண்டுமே 11-10- பின்னையும்
இழவோடே தலைக் கட்டி –
சாதிப்பார் யார் இனியே -11-10-
12-அதுவும் பலியாமையாலே தானே போக ஒருப்பட்டு
13-தனக்குக் கால் நடை தாராத படி பல ஹானி மிக்கு கால் நடை தருவாரை
என்னை அத்தேசத்திலே கொடு போய் பொகடுங்கோள்-என்றும்
அது மாட்டிகோள் ஆகில்
அவனோடு ஸ்பர்சம் உள்ள ஒரு பதார்த்தத்தைக் கொடு வந்து என்னை ஸ்பரசிப்பித்து ஆச்வசிப்பியுங்கோள்–
என்றும் நின்றது கீழ் –
முதல் தன்னிலே –
அவனே ரஷகன் என்று அத்யவசித்து இருக்கும் குடியிலே பிறக்கச் செய்தேயும்
தானே நோற்றுப் பெற வேண்டும் படி இறே இவளுக்கு பிறந்த விடாய்-
இப்படிப் பட்ட விடாயை உடையளாய்-
இவள் தான் பிராப்ய பிராபகங்கள் அவனே தான் என்னுமிடம் நிஷ்கர்ஷித்து
அநந்தரம்
பெற்று அல்லது நிற்க ஒண்ணாத படி யாய்த்து பிறந்த தசை –
இவ்வளவு ஆற்றாமை பிறக்கச் செய்தேயும் அவ்வருகில் பேறு சாத்மிக்கும் போது
இன்னம் இதுக்கு அவ்வருகே ஒரு பாகம் பிறக்க வேணுமே –
ஆமத்தில் சோறு போலே ஆக ஒண்ணாது –
பரமபக்தி பர்யந்தமாக பிறப்பித்து முகம் காட்ட வேணும் -என்று அவன் தாழ்க்க
அநந்தரம் ஆற்றாமை கரை புரண்டு -பெறில் ஜீவித்தும் பெறா விடில் முடியும் படியாய்
நிர்பந்தித்தாகிலும் பெற வேண்டும் படியாய் –
என் அவா அறச் சூழ்ந்தாயே -என்கிற படி
வந்து முகம் காட்டி விஷயீ கரிக்க
பிறந்த விடாயும் அதுக்கு அனுரூபமாக பெற்ற பேறும்
ஓர் ஆஸ்ரயத்தில் இட்டு பேச ஒண்ணாத படி அளவிறந்து இருக்கையாலே
கண்டீரே -என்று கேட்கிறவர்கள் பாசுரத்தாலும் –
கண்டோம் -என்று உத்தரம் சொல்லுகிறவர்கள் பாசுரத்தாலும்
தனக்குப் பிறந்த விடாயையும்
பெற்ற பேற்றையும்
அன்யாபதேசத்தாலே தலைக் கட்டுகிறாள் –
இங்குப் பிறந்த பக்தியில் சாதனா வ்யபதேசத்தைத் தவிர்த்த இத்தனை போக்கி
ஆசையையும் குறைக்க ஒண்ணாதே
ஆசை குறைந்ததாகில்
முதலிலே பிராபக ஸ்வீகாரம் தான் பிறவாதே
இனி இதினுடைய அருமையாலே செய்து தலைக்கட்ட அரிது என்னுமதைப் பற்றவும்
ஸ்வரூப ஜ்ஞானம் உடையவனுக்கு ஸ்வரூபத்துக்கு அநனரூபம் என்னுமதைப் பற்றவும் தவிர்த்தது
அத்தனை போக்கி
வஸ்துவினுடைய குணாதிக்தையும் தவிர்த்தது அன்றே –
சமஸ்த கல்யாண குணாத் மகமாய் இருந்துள்ள விஷயமே உபாயம் ஆகிறது
அக்குணங்கள் தான் பிராப்யம் ஆகையும் தவிராதே –
சோஸ்நுதே -என்கிறபடியே –
அவ்வருகு போனாலும் அனுபாவ்யம் ஆகிறது இக் குணங்களே இறே-
பிறந்த பக்தியும் –
அந்த பக்திக்கு அனுரூபமாகப் பெற்ற பேறும்
ஓர் ஆஸ்ரயத்தில் கிடக்கும் அளவு அல்லாமையாலே
கண்டீரே -என்று -பரம பக்தி தசையை -கேட்கிறவர்கள் பாசுரத்தாலும்
கண்டோம் -என்று-தான் பெற்ற பேற்றை – சொல்லுகிறவர்கள் பாசுரத்தாலும் –
ஆக தான் பெற்ற பேற்றைச் சொல்லித் தலைக் கட்டுகிறது
திருவாய்ப்பாடி விருத்தாந்தத்தைச் சொல்லுகையாலே –
அன்யாபதேசமாகையும் தவிராதே
ஆனாலும் விட்டு சித்தன் கோதை சொல் -என்கிறதும் தவிர்க்க ஒண்ணாதே
———————————————————–
விண்ணாட்டவர் மூதுவர்-திருவிருத்தம் -2-என்று சொல்லுகிறவர்கள் நியமிக்க
வானிளவரசு-பெரியாழ்வார் -3-6-3–அவர்களால் நியாம்யனாய் –
அவர் சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி -திரு விருத்தம் -21-
தங்கள் ஸ்வரூபத்துக்கு அனுரூபமாம் படி போது போக்கி இருக்கிற அளவிலே
திருவாய்ப்பாடியிலே வெண்ணெய் திரளா நின்றது -என்றும்
நப்பின்னை பிராட்டி பிராப்த யௌவனை யானாள் என்றும் -கேட்டு
அவ்விருப்பு உண்டது உருக்காட்டாதே –இங்கே வந்து திருவவதரித்து –
பிருந்தா வனத்திலே ஸ்வரை சஞ்சாரம் பண்ணி-
அத்தாலே தன்னிறம் பெற்றுத் திரிகிற படி –
பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –14-1-
—————————————————————————————
அனுங்க வென்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே
கணங்களோடு மின் மேகம் கலந்தால் போலே வனமாலை
மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே--14-2-
—————————————————————————
மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும்
மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே--14-3-
———————————————————————————
காரத் தண் கமலக் கண் என்னும் நெடுங்கயிறு படுத்து என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே
போர்த்த முத்தின் குப்பாயப் புகர் மால் யானைக் கன்றே போல்
வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –14-4-
————————————————————————————-
மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல்
ஏதுமொன்றும் கொளத்தாரா ஈசன் தன்னைக் கண்டீரே
பீதக வாடை யுடை தாழப் பெருங்கார் மேகக் கன்றே போல்
வீதியார வருவானை விருந்தா வனத்தே கண்டோமே —14-5-
————————————————————————————-
தருமம் அறியா குறும்பனைத் தன் கைச் சார்ங்கமதுவே போல்
புருவம் வட்ட மழகிய பொருத்த மிலியைக் கண்டீரே
வுருவு கரிதாய் முகம் செய்தாய் உதய பருப் பதத்தின் மேல்
விரியும் கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே –-14-6-
——————————————————————————-
பொருத்த முடைய நம்பியைப் புறம் போல் உள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்ற அக் கரு மா முகிலைக் கண்டீரே
அருத்தி தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம் போல்
விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே–14-7-
—————————————————————————–
வெளிய சங்கு ஓன்று உடையானைப் பீதக வாடை யுடையானை
அளி நன்குடை திருமாலை ஆழியானைக் கண்டீரே
களி வண்டும் கலந்தால் போல் கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல்
மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே —14-8-
——————————————————————————–
நாட்டைப் படை என்று அயன் முதலா தந்த நளிர் மா மலருந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய
வேட்டை யாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே ––14-9-
————————————————————————————–
பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப் பாரின் மேல்
விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே–14-10-
————-
ஸ்ரீ பெரிய திருமொழி-11-5–மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா–
(பரத்வம் -ஆஸ்ரித கார்யம் செய்ய வேண்டிய குணங்கள்
ஸுலப்யம் -ஆஸ்ரித ஆஸ்ரயண ஸுகர்ய ஆபாத குணங்கள் கொண்டவன்
இரண்டையும் கொண்டவன் அவன் ஒருவனே
ஒன்றைச் சொல்லி அடுத்தத்தைச் சொல்லும் பல பாசுரங்கள் -ஆழ்வார்கள் அருளிச் செயலில்
பெரியாழ்வார்
என்நாதன் -ராம கிருஷ்ண அனுபவம் -இரண்டு கோபிகள்
கதிர் ஆயிரம் -கண்டார் உளாரோ -கேள்விக்கு உளார்
ஆண்டாள்
ப்ருந்தாவனந்தே கண்டோமோ -இங்கு போகக் கண்டீரே போல் )
மானமரும் -பிரவேசம் –
கீழில் திரு மொழியில் ஆஸ்ரித அர்த்தமாக
அநேக அவதாரங்களைப் பண்ணினத்தை அனுசந்தித்து –
அவ் வாஸ்ரித பாரதந்த்ர்யத்திலே ஈடுபட்டு –
தாமான தன்மை அழிந்து –
வேறே இரண்டு பிராட்டிமார் பேச்சாலே –
ஒருத்தி மேன்மையை அனுசந்திக்க –
ஒருத்தி சௌலப்யத்தை அனுசந்தித்து –
இவனுடைய தாழ்வுகளைச் சொல்ல
அப்படி தாழ்வுகள் செய்தானே யாகிலும்
நித்ய ஸூரிகளுக்கு மேலானவன் கிடாய் இப்படிச் செய்கிறான் -என்று
இருவர் பேச்சாலுமாக-
அவனுடைய மேன்மையையும் சௌலப்யத்தையும்-பேசுகிறார் –
இரண்டு பிராட்டிமார் தசை ஏக காலத்தில் கூடும்படி என் –
என்று ஜீயர் பட்டரைக் கேட்க
தேச விசேஷத்திலே அநேக சரீர பரிக்ரஹம் ஏக காலத்தில் கூடும் படி எங்கனே
அப்படியே இவரையும் பார்த்து அருளினால் -எம்பெருமான் கடாஷித்து அருளினால் -கூடும்
(சர்வேஸ்வரன் ஸ்வரூப ரூப குணங்களை ஆஸ்ரிதர் இட்ட வழக்காக இருப்பதை –
செறிந்த ஆழமான அனுபவம் கொடுக்க
ஒருத்தியாக பாடிக் காட்ட முடியாதே
தன்னையே இரண்டு வடிவை எடுக்க வைத்து அவனே அருளிச் செய்கிறான் அத்தையும் -)
நதே ரூபம் நச ஆகாரோ ந ஆயுதானி ந சாஸ்பதம் ததாபி புருஷாகாரோ பக்தா நாம் த்வம் பிரகாசசே-(ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் )
உன் ஸ்வரூப ரூப குண விபூதிகள் அடைய உனக்கு இல்லையாய்த் தோற்றுவதி -என்ன –
இப்படி இதடையே தனக்கு இன்றிக்கே இருந்தால்
இத்தடைய ஆருக்கு என்னும் அபேஷையில்
பக்தா நாம் –
ஆஸ்ரித அர்த்தமாய் இருக்கும் –
இப்படி ஆஸ்ரித அர்த்தமாய் இருக்கும் என்னும் இடம் எங்கே கண்டோம் என்னில்
த்வம் பிரகாசசே –
தூத்ய சாரத்யாதிகளிலே நீயே காட்டுவுதி
இதடைய ஆஸ்ரித அர்த்தமாக பெறுகையாலே நீ உஜ்ஜ்வலனாகா நிற்புதி -என்னவுமாம் –
இப்படி
பரத்வத்தையும்
அவதாரங்களையும்
அவதரித்துப் பண்ணும் வியாபாரங்களையும்
இவ்விடத்தே உண்டான மனுஷ்யத்வே பரத்வத்தையும் –
அனுசந்தித்து
(அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே -என்றாரே
அர்ச்சையும்
அதுக்கு உறுப்பாகவே விபவமும்-
பரத்வமும் —
ஆஸ்ரித ரக்ஷணார்த்ததுக்காவே )
தனக்காக்கிக் கொண்டு இருக்கும் இவ்விருப்பையும் தனக்கு உதவுகைக்கும்
உறுப்பாக வந்து அவதரிக்கும் அவதாரத்தையும் அனுசந்தித்து
இப்படி அவதரித்து வ்யாபரிக்கிறதும்
ஆஸ்ரித ரஷண அர்த்தமாக –
அவன் பரா அவஸ்தனாய் இருக்கிறதும் ஆஸ்ரிதர் குறை தீர்க்கைக்காக –
இப்படி இது அடைய ஆஸ்ரித அர்த்தமான பின்பு
நமக்கு ஒரு குறை உண்டோ -என்று அனுசந்தித்த இத்தால்
பிறந்த ப்ரீதி பிரகர்ஷம்
ஓர் ஆஸ்ரயத்தில் அடங்காது இருக்கையாலே
அந்தபுர பரிகரமாய்
தங்களில் தோழமையாய் இருப்பார்
ஒருவருக்கு ஒருவர்
பரத்வ அவதாரங்களில் இரண்டிலும் (பரத்வ -அபரத்வ என்றும் கொள்ளலாம் )தனித் தனியே ஊன்றி
அவற்றை அனுசந்தித்து
களித்துப் பேசுகிற இவர்கள் பேச்சாலே
தாம் அவற்றையே பேசி
அனுபவிக்கிறார் –
(கீழ் இரண்டு திருமொழியில் உடன் சம்பந்தம் -இத்தால் அருளிச் செய்து
ஸ்வரூபம் ஸ்வா தந்தர்யம் இயற்கையான -நிவாரகர் இல்லாதது -குண ரத்ன கோசம் –என்று இருக்க
ஆஸ்ரித பாரதந்தர்ய அனுசந்தானம் ப்ரீதி ஏற்படுத்தக் கூடுமோ என்கிற சங்கைக்கு மேல்
நம்முடைய விஷயம் -தெரிந்த விஷயம் சொல்லி அத்தை விளக்குகிறார் –
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -உனக்கே நாம் ஆட் செய்வோம் –
மற்றை நம் காமங்கள் மாற்று போல்வன உண்டே
தனது ஸ்வா தந்தர்யம் அடியாக ஏறிட்டுக் கொண்ட ஆஸ்ரித பாரதந்தர்யம்
நம்மது விட த்ருடமானது ஆகுமே இது -)
இவ்வாத்மாவின் ஸ்வரூபத்தை அனுசந்தித்தால்
தனக்காய் இருக்கை -ஸ்வரூப விரோதியாய் –
அவனதாய் இருக்கும் இருப்பு -ஸ்வரூப அனுரூபமாய் –
இருக்குமா போலே
அவன் ஸ்வரூபத்தை அனுசந்திக்கப் புக்காலும்
அதடைய ஆஸ்ரித அர்த்தமாக இருக்கும் இருப்பை அனுசந்தித்தால்
ஆனந்த நிர்பரராய் களிக்கும் படியாய் இருக்கும் இறே-
இப்படி பரத்வ சௌலப்யங்கள் இரண்டையும்
மாறி மாறி அனுபவிக்கிறார் –
—————————————————-
மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான் காணேடீ
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த பொன்னடிகள்
வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே —-11-5-1-
————————————————-
(கீழ் சக்ரவர்த்தி திரு மகன் ஸுலப்யம் அனுபவம்
அதிலும் விஞ்சிய கண்ணன் ஸுலப்யம்
வேடர் கபி ராக்ஷஸ குல அரசர்கள் உடன் கை கோத்த பெருமாள்
இடது வலது கை அறியாத ஆயர் -பசுக்கள் கன்றுகள் உடன் கலந்த ஸுலப்யம்
திரு அவதாரம் தொடங்கி சேஷ்டிதங்களை அனுபவிக்கிறார்
எட்டாம் பாட்டு வரை இதுவே சங்கதி )
ஸ்ரீ ராமன் சௌலப்யம் அனுபவித்தார் முதல் பாசுரத்தில்
இது முதல் எட்டாம் பாசுரம் வரை ஸ்ரீ கிருஷ்ணன் சௌலப்யம் அனுபவிக்கிறார் –
தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காணேடீ
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் நான் முகற்கு
தந்தை காண் எந்தை பெருமான் காண் சாழலே —11-5-2-
—————————————————
(தயிர் கடைய வாசனையால் -தாழ் குழலார் வைத்த தயிர் உண்டான் காணேடீ-என்கிறது )
ஆழ் கடல் சூழ் வையகத்தார் ஏசப் போய் ஆய்ப்பாடித்
தாழ் குழலார் வைத்த தயிர் உண்டான் காணேடீ
தாழ் குழலார் வைத்த தயிர் உண்ட பொன் வயிற்று இவ்
வேழ் உலகும் உண்டு இடமுடைத்தால் சாழலே –11-5-3-
—————————————————————–
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் ப்ரவணர் ஆகையாலே
அது பின்னாட்டுகிறபடி –
அறியாதார்க்கு ஆனாயனாகிப் போய் ஆய்ப்பாடி
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தான் காணேடீ
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்த பொன் வயிற்றுக்கு
எறி நீர் உலகனைத்தும் எய்தாதால் சாழலே —11-5-4-
——————————————————-
(அங்கே இருந்து அவனை மொத்தி -கட்ட -இருக்கும் இவளை வர்ணிப்பான் என் என்னில்
இவனைப்பின் பெற்ற அத்விதீயம்
கண்ணி -முடிச்சு பர பக்தி பர ஞானம் பரம பக்தி அவஸ்தைகள்
நுண் -நுண்ணிய ப்ரஹ்ம ஞானம் –
சிறு -வைராக்யம்
கண்ணி நுண் சிறுத்தாம்பு -இத்தையே சொல்லும் –
யாரும் ஒரு நிலைமையன் என அறிவரிய எம்பெருமான் –
யாரும் ஒரு நிலைமையன் என அறிய எளிய எம்பெருமான் )
வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும்
எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே —11-5-5-
————————————————
(யுகாவாதார் நெஞ்சு உள்ளம் கன்றும் படி பறை –
மன்று அமர கூத்தாடி மகிழ்ந்தாய் )
கன்றப் பறை கறங்கக் கண்டவர் தம் கண் களிப்ப
மன்றில் மரக்கால் கூத்தாடினான் காணேடீ
மன்றில் மரக்கால் கூத்தாடினான் ஆகிலும்
என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே —11-5-6-
——————————————————
(வாசி அறியாத கோஷ்டியிலே தூது சென்ற-இன்னார் தூதன் -என நின்ற அவனது அனுபவம் )
கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான்
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் வாகிலும்
ஓத நீர் வையகம் முன் உண்டு உமிந்தான் சாழலே –11-5-7-
———————————————————
(இத்துடன் கிருஷ்ண அனுபவம் முற்றும்
மாம் அர்த்தம் இதில் -சொல்லி
அர்ஜுனன் மயங்கி -எளியவனைப் பற்றவோ –
அஹம் த்வா -பெருமை தொனிக்க சொல்லி மாஸூ ச
ராஜாதி ராஜ ஸர்வேஸ்வரத்வம் காட்டி சோகம் தீர்த்தான் –
போர்ப்பாகு –மாயப்போர் தேர்ப்பாகன் -தேரை நடத்தியே யுத்தம் முடித்தான் )
பார் மன்னர் மங்கப் படை தொட்டு வெஞ்சமத்துத்
தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் காணேடீ
தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் ஆகிலும்
தார் மன்னர் தங்கள் தலை மேலான் சாழலே —11-5-8-
——————————————————–
(தாழ விட்டு தேர் ஒட்டியது போல்
இரப்பாளன் ஆகி ஈடுபடுத்தி
ஊராக தொட்டது அது
உலகமாக தொட்டது இது
ஆகவே வாமன அனுபவம் இதில் -)
கண்டார் இரங்கக் கழியக் குறள் உருவாய்
வண்டாரான் வேள்வியில் மண்ணிரந்தான் காணேடீ
வண்டாரான் வேள்வியில் மண்ணிரந்தான் ஆகிலும்
விண்டு ஏழ் உலகுக்கும் மிக்கான் காண் சாழலே —–11-5-9-
(விண்டு-விரிந்து விபூவாய் -விஷ்ணு )
——————————————————-
(பலம் சொல்ல முடியாதே
ஹர்ஷத்தால் இருவரால் பேசும் படியான மிக்க ஹர்ஷம் இதில் உண்டே
பொருப்பு இடையே நின்றும் –புனல் குளித்தும்-நெருப்பிடையே -நின்றும் –
திருமலை கோயில் பெருமாள் கோயில் இருந்து நம்மைப் பிடிக்க தவம்
எதிர் சூழல் புக்கு )
கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ
வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும் கலி கன்றி
உள்ளத்தின் உள்ளே யுளன் கண்டாய் சாழலே—11-5-10-
———-
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
மான மேன்மை பேசி நீர்மை ஏசி இரண்டு சீரும்
ஆன தொண்டர்க்கு என்று அங்கு உகந்து எண்ணி ஊனமற
மால் உள்ளத்து உள்ளான் என்னும் கலியன் தாளிணை
பால் செய்யும் நீர் பத்திமை -105-
————————————————————————-
Leave a Reply