ஸ்ரீ அபிநவ கோதா ஸ்துதி –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

மார்க்க சிர ஆஹ்வய ஸூநா ஸதிவஸா நாம்
புண்ய தம தாம் ஜகதி ஸம்யகவ போத்ய
வேத ஸமதி வ்யக்ருதி தாந குசலே
ஸ்ரீ பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –1-

மார்க்க சீர்ஷ்சம் என்கிற மாசத்தின் முப்பது நாளும் மிகப் புனிதமானது என்னும் இடத்தை
உலோகோர்க்கு நன்கு உரைத்த
வேதத்தோடு ஒத்த திவ்ய பிரபந்தத்தை அருளிச் செய்த நாச்சியார்
பெரியாழ்வார் திருமகளான ஆண்டாள் நிச்சலும் இங்கே வாழ்க –

மாசாநாம் மார்கழி அஹம் கிருஷ்ணா என்று சொன்னவனை மறக்கப் பண்ணி
அவனையும் மார்கழி ஏற்றமும் காட்டிக் கொடுத்த
ஆண்டாளுக்கு பல்லாண்டு

மார்கழி பீடுடை மாதம் பீடை மாதம் மாறி

——–

கோகுல வதூ ஜந வி போதம மிஷேண
ஸ்ரீ பதி பதாப்ஜநத பக்த மஹிமா நாம்
ஸ்பஷ்ட மவபோதி தவதி ப்ரணய பூர்ணே
ஸ்ரீ பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –2-

புள்ளும் சிலம்பின் காண் -தொடங்கி
எல்லே இளம் கிளி வரை
கோபியை எழுப்பும் வியாஜத்தினாலே
திருமால் அடியார்களின் பெருமைகளை நன்கு விளக்கிக் காட்டி அருளினவளே –
பக்தி நிறைந்தவளே -வாழி வாழி வாழி

திருப்பாவை நறுமணம் வியாக்யானங்களிலே பரவும் அன்றோ

———

த்வார பதி போதந புரஸ் சரம் உதாரம்
நந்தமத தத் பிரணயிநீம் அபி யசோதாம்
க்ருஷ்ண ஹலிநா வயி ச போதித வதி ஸ்ரீ
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –3-

நந்தகோபனுடைய கோயில் காப்பானை எழுப்பி
வள்ளலான நந்தகோபனையும்
அவன் தன் தேவியான யசோதை பிராட்டியையும்
கண்ணபிரானையும்
நம்பி மூத்தபிரானையும்
எழுப்பிய நாச்சியார் வாழ்க வாழ்க வாழ்க –

———-

ஸப்த விருக்ஷ தர்ப்ப தலநேந ஹ்ருத நீ லாம்
தத் குச க்ரீந்த்ர தட ஸூப்தமபி கிருஷ்ணம்
போதி தவதி ப்ரணய சார பரிபூர்ணே ஸ்ரீ
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –4-

எருது ஏழு அடர்த்து மணந்த திரு நப்பின்னைப் பிராட்டியையும்
அவளுடைய திருமுலைத் தடத்திலே வைத்துக் கிடந்த மலர் மார்பனான கண்ணபிரானையும் உணர்த்தினவளே
அன்பு மிக்க நாச்சியார் வாழியே –

————-

கோபால லநார சித ஸூ வ்ரத விசேஷ்ய
அநு கரணேந பகவந்த முபஸ் ருப்ய
ப்ரார்த்தித நிரந்தர மஹிஷ்ட வரி வஸ்யே
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –5-

ஆய்ச்சிகள் அனுஷ்டித்த ஒரு நோன்பை அநு கரித்துக்
கண்ணபிரானை அணுகி
உன் தன்னோடு உற்றோமே ஆவோம் -உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்று
நித்ய கைங்கர்ய பிரார்த்தனை பண்ணித் தலைக்கட்டின நாச்சியார் வாழ்க வாழ்க வாழ்க –

————

ஸ்ரீ திருப்பாவை அனுபவம் முற்றிற்று
இனி நாச்சியார் திருமொழி அனுபவம்

———-

கோபாலலநார சிதக்ருத்ய மனுக்ருத்யாப்
யச்யுத சமா தம ஸூபாக்ய விரஹேண
பூய இஹ பூரி குண போக ருசி பூர்ணே
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –6-

ஆய்ச்சிகள் அனுஷ்டித்த க்ருத்ய விசேஷத்தை அனுகரித்தும் கண்ணபிரானோடு
சேர்ந்து அனுபவிக்கும் பாக்யம் கிடைக்காமையினாலே
மேலும் பல குண விசேஷங்களை அனுபவிக்க ருசி பிறந்து
திருமொழி அருளிச் செய்த நாச்சியாரே வாழ்க –

—–

கேசவ பதாம் புருஹ யுக்ம பரிசர்யா
கௌதுக பரேண க்ருத பஞ்ச சர ஸேவே
ஷாந்தி கருணாதி குண பூரி தம நஸ்தே
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –7-

தையொரு திங்களும் -என்கிற முதல் திரு மொழியிலே
காமதேவா கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப்பேறு எனக்கு அருள் கண்டாய்
என்று கண்ணபிரான் திருவடி வருடும் பேறு ஸித்திக்க வேணும் என்று
மன்மதனை வணங்கிய நாச்சியாரே வாழ்க –

———

காம பஜநம் பரம பக்தி பரிதா நாம்
நோசிதமிதி ஸ்திதம் அதாபி பல த்ருஷ்ட்யா
நாநு சிதமித் யமல நிர்ணயத ஸூக்தே
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –8-

காம தேவன் தேவாந்தரம் ஆகையால் பரமை காந்திகளுக்கு தேவதாந்த்ர பஜநம் கூடாதாகையாலே
பெரியாழ்வார் திருமகளாரான ஆண்டாள் காம சமாஸ்ரயணம் பண்ணுவது தகுதி அன்று என்ன வேண்டி இருக்கும் –
ஆனாலும் ஆண்டாள் பரம புருஷார்த்தமான பகவத் கைங்கர்யமாகிற பலனை உத்தேசித்துச் செய்கையாலே
கூடாமை இல்லை என்கிற நிரவத்யமான ஸித்தாந்தத்தைத் தரும் ஸ்ரீ ஸூக்தியை யுடைய நாச்சியார் வாழ்க

ஸ்ரீ ராமாயணத்தில் -ஸர்வான் தேவான் நமஸ்யந்தி ராமாஸ்யார்த்தே யஸஸ் விந

ஸ்ரீ வசன பூஷணத்தில் -ஞான விபாக கார்யமான அஞ்ஞானத்தாலே வருமவை எல்லாம் அடிக்கழஞ்சு பெறும் –இத்யாதிகளை
மா முனிகள் வியாக்கியானங்கள் அனுசந்தேயம் –

———–

ஹேதி பதி சங்க தர பூருஷ வரார்ஹம்
மாம கபயோ தரயுகம் ந பர யோக்யம்
இத்த மவதாரி தவதி ப்ரணய ஸிந்தோ
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –9-

ஆழி யம் கையனான புருஷோத்தமனுக்கே உரிய என் தட முலைகள் கா புருஷர் களுக்கு உரியனயாக மாட்டா
என்று ஆண்டாள் தனது உறுதியைச் சொல்லிக் கொண்டாள் ஆயிற்று –

ஊனிடை யாழி சங்கு உத்தமர்க்கு என்று
உன்னித் தெழுந்த என் தட முலைகள்
மானிடர்வர்க்கு என்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே –1-5–

அங்கைத் தலத்திடை யாழி கொண்டானவன் முகத்தன்றி விழியேன் என்று
செங்கச்சுக் கொண்டு கண்ணாடை யார்த்துச் சிறு மானிடவரைக் காணில் நாணும்
கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா
இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் யமுனைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின்–12-4-

———-

ஸைகத க்ருஹ ப்ரணய ந ப்ரவண கோபீ
சித்த பரிதாப கர க்ருத்ய நிரதஸ்ய
நந்த தந யஸ்ய லகு சேஷ்டித ரஸஞ்ஜே
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே -10-நாமம் ஆயிரம் ஏத்த நின்ற

ஸைகத க்ருஹ ப்ரணய நம் ஆவது சிற்றில் இழைத்தல் -சிறுவர் விளையாட்டுக்களில் இது ஓன்று
நம்மை விட்டு அந்நிய பரைகளாய் இருப்பதே என்று ரோஷத்தாலே அந்தச் சிற்றிலை அழிக்கப் புக
அப்படி அழிக்கக் கூடாது என்று வேண்டின ஆய்ச்சியர் பாசுரமாக
பாடி அருளிய நாச்சியார் வாழ்க –

————-

குக்குட ருதாத் புரத உத்திதவ தூ நாம்
யமுனா ஜலாசய விகாஹ நரதாநாம்
வஸ்திர ஹரண ப்ரவண மாதவ ரஸஞ்ஜே
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –11-கோழி அழைப்பதன் முன்னம்

கோழி அழைப்பதன் முன்னமே எழுந்து யமுனை ஆற்றிலே ஒரு பொய்கையிலே கிருஷ்ண விரஹ தாபம் தீர
நீராடப் போன ஆய்ப் பெண்களைப் பின் சென்று இருளிலே மறைந்து இருந்து
அப் பெண்களின் ஆடை ஆபரணங்களை கவர்ந்த கண்ணன் குருந்த மரத்தின் மீது வீற்று இருக்கக் கண்ட ஆய்ச்சிகள்
அவனைத் தொழுவதும் அழுவதுமாய் இரந்த செய்தியைப் பேசின நாச்சியார் வாழ்க –

———

நந்த ஸூத சங்க மந பாக்யமிஹ சேந்மே
சங்க மந தைவத கட ஸ்வ க்ருபயேதி
கேல நரத வ்ரஜ வதூ ஜன ஸத்ருஷே
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே -12-தெள்ளியார் பலர்

கூடல் இழைத்தல் -கூடல் தெய்வத்தைப் பிரார்த்தித்து -கண்ணை மூடி பல கோடுகளைக் கீறி
இரட்டையாக முடிந்தால் சேருவோம் -ஒற்றைக் கோடாக மிச்சப்பட்டால் தனித்து நின்று துவள்வோம் -என்று
வருந்தும் ஆய்ச்சிகளை அநு கரித்த நாச்சியாரே வாழ்க –

———-

ப்ரேம பரி போஷி தவந ப்ரியம வேஷ்ய
த்வம் ஸபதி வேங்கட மஹீத்ர பதி மத்ர
ஆகமய ஸங்கமய சேதி க்ருத வாக்ய
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –13-மன்னு பெரும்

ஆண்டாள் தனது தோட்டத்தில் வளர்க்கும் குயிலைப் பார்த்து
நீ ஏதோ கூவிக் கொண்டு இருக்கிறாய் –
திருவேங்கடமுடையான் இங்கு வந்து என்னோடு கூடும்படி கூவுவாய்
என்று அருளிச் செய்த நாச்சியார் வாழ்க –

———

வாரண ஸஹஸ்ர வ்ருத மச்யுத மநந்தம்
ஸ்வப்ன முகதஸ் பதிமவாப்ய பரி துஷ்டே
மத்த கஜ மஸ்தக நிஷண்ண பதி யுக்தே
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –14-வாரணம் ஆயிரம்

கண்ண பிரான் தன்னே ராயிரம் பிள்ளைகள் சூழ ஆயிரம் யானைகளில் வந்து
தன்னை மணம் புணர்ந்ததாகவும்
அவனோடே கூட யானையின் மீது வீற்று இருந்து ஊர்வலம் வந்ததாகவும்
கனாக் கண்டு அருளிச் செய்த நாச்சியாரே வாழ்க –

—————-

நந்த ஸூத வக்த்ர ரஸ ஸுவ்ரப விசேஷம்
ப்ரூஹி ந னு பஞ்ச ஜன ஜாத மம த்ருப்த்யை
இத்த மபிதாய பரி ஹ்ருஷ்ட ஹ்ருதயே
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –15-கர்ப்பூரம் நாறுமோ

கீழே கண்ணபிரான் உடன் விளைந்த போகம் நனவு இன்றிக்கே கனவாகவே முடிந்ததற்கு வருந்தி
மெய்யாகவே கண்ணனை அனுபவிக்கும் பாக்யமுடையார் உளரோ என்று ஆலோசிக்கையில்
திருச்சங்கு ஆழ்வான் அந்த பாக்யம் பெற்றவன் என்று உணர்ந்து
அவனோடே உசாவின நாச்சியாரே வாழி –

————

வ்யோமதத மேசக விதாந சம மேகம்
பாஷ்ப பரி பூர்ண நயநேந ஸஹ வீஷ்ய
சேஷ கிரி நாத வசனாய க்ருதயாஸ்ஜே
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –16-விண்ணீல மேலாப்பு

விண் உலகில் நீல மேலாப்பு விரித்தாள் போன்று காட்சி தந்த கரு முகிலைக்
கண்ணீர்கள் துளி சோரக் கண்டு
திருவேங்கட முடையான் பக்கலிலே தூது செல்லுமாறு
வேண்டின நாச்சியாரே வாழ்க –

———-

ஸூந்தர புஜாய சத பாண்ட நவ நீதம்
ஸ்வாது மதுராந்நபி சார்ப்பயிதும் ஆசாம்
ப்ரோக்த வதி பூத புரி யோகி ஸஹ ஜாதே
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –17-சிந்தூரச் செம்பொடி

திருமாலிருஞ்சோலை நின்ற ஸூந்தரத் தோளுடையானுக்கு
நூறு தடா நிறைந்த வெண்ணெயும் நூறு தடா நிறைந்த அக்கார அடிசிலும்
வாய் நேர்ந்து பராவி வைத்துப்
பெரும் பூதூர் மா முனிக்குப் பின்னானாள் என்று பெயர் பெற்ற நாச்சியாரே வாழி

ஸ்வாது கலச அன்னம் -என்னவுமாம் –
கலசம் என்று ஷீரத்துக்குப் பெயர் உண்டே -கலச ஜலதி கன்யா -இத்யாதி

————

வ்ருஷ்டி பல புல்ல வந புஷ்பததி த்ருஷ்ட்யா
கேத மதி மாத்ர மதி கத்ய ருதிதைர் ஸ்வைஸ்
வ்ருஷ விததே ரேபி ச சஞ்சு நித கேதே
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –18-கார்க் கோடல் பூக்காள்

விண்ணீல மேலாப்புப் பதிகத்தில் திருமலை அப்பன் பக்கலிலே தூது செல்ல வேணும் என்று இரந்தாள் அன்றோ
அந்த மேகங்கள் தூது செல்லாமல் நன்றாக வர்ஷிக்க -அதனால் காட்டுப் பூக்கள் எல்லாம் நன்றாக மலர்ந்தனவாக
அவை கண்ண பிரானுடைய திவ்ய அவயவங்களுக்கு ஸ்மாரகங்களாய் நலிய
மிக வருந்திக் கதறி மரங்களும் இரங்குமாறு செய்து அருளிய நாச்சியாரே வாழ்க –

————

பூமி தநயா தரணி ருக்மி ஸஹ ஜாஸூ
ஸ்ரீ ரமண ஸாதித பரி ஸ்ரம கதாபி
ஸ்வ ப்ரணய ரோஷ முபதர்சித வதி ஸ்ரீ
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –19-தாம் உகக்கும் தம் கையில்

தாம் உகக்கும் தம் கையில் -திரு மொழியில்

உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து
பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்றபேதெல்லாம்
திண்ணார் மதிள் சூழ் திருவரங்கச் செல்வனார்
எண்ணாதே நம்முடைய நன்மைகளே எண்ணுவரே–11-7-என்று ஸ்ரீ சீதாப் பிராட்டிக்காக அவன் பட்ட பரி ஸ்ரமங்களையும்

பாசி தூரத்துக் கிடந்த பார் மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராதே–11-8–என்று-ஸ்ரீ பூமிப்பிராட்டிக்காக அவன் பட்ட பரி ஸ்ரமங்களையும்

கண்ணாலம் கோடித்து கன்னி தன்னைக் கைபிடிப்பான்
திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கை பிடித்து
பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கமே–11-9-என்று-ஸ்ரீ ருக்மிணிப் பிராட்டிக்காக அவன் பட்ட பரி ஸ்ரமங்களையும்

அருளிச் செய்து ப்ரணய ரோஷத்தைக் காட்டி அருளினை நாச்சியார் வாழியே

மூன்றாம் பாதம் -வியஞ்ஜித நிஜ ப்ரணய ரோஷ பஹு மாநே -என்பதாகவும் கொள்ளலாம்
ப்ரணய ரோஷம் மட்டும் அன்றிக்கே
பன்றியாம் தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் பேசியிருப்பனகள்–என்று
பெரு மதிப்பையும் காட்டி அருளுகிறாள் அன்றோ –

——–

ஸிந்து வ்ருத பூமி தலம் அம்பர தலம்
தத் ஸூஷ்டு பரி பாலயதி ரங்க புர நாதே
அப்ரதிம பக்தி பர பூஷிதம நஸ்கே
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –20-

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதும் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்
எங்கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே –11-3-என்று
திருவரங்கச் செல்வனார் பக்கல் சிறந்த பரம பக்தி கொண்ட நாச்சியாரே வாழியே

———-

திவ்ய மதுரா நகர முக்க்ய நவ தேசாந்
பிரோஸ்ய நநு மாம் நயத தத்ர ஸஹ சேதி
ப்ரார்த்தி தவதி ப்ரசுர பக்தி ரஸ ஸித்தே
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –21-மற்று இருந்தீர்கட்க்கு திருமொழியிலே

வட மதுரை -திருவாய்ப்பாடி -நந்த கோபர் திரு மாளிகை -யமுனைக் கரை -காளியன் பொய்கை-பக்த விலோசனம் –
பாண்டி வடம் -கோவர்த்தனம் -துவாராபதி – ஆகிய ஒன்பது இடங்களையும் எடுத்துக் கூறி
அங்கு எல்லாம் தன்னைக் கொண்டு போய் விடும்படி உற்றார் உறவினரை வேண்டிய நாச்சியாரே
காதல் களஞ்சியமே வாழியே –

————

கிருஷ்ண கடி வஸ்த்ரம் அத தத் பதப ராகம்
வேணு ஸூஷி ரோத்த ஜல பிந்து மபி தூர்ணம்
ஆ நயத ஹர்ஷயத சேத க்ருத வாக்யே
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –22-கண்ணன் எனும் கரும் தெய்வம்

கண்ணன் எனும் கரும் தெய்வத்தின் அரையில் பீதக வண்ண வாடையும்
திருவடிப்பாட்டில் பொடியையும் –
அவன் ஊதி வருகின்ற குழலின் துளை வாய் நீரையும் கொணர்ந்து
விரைவில் என்னைத் தேற்றுங்கோள் என்று அருளிச் செய்த
நாச்சியாரே வாழி வாழி –

———-

அக்ரஜ ஹலாயுத ஸஹாய இஹ
ப்ருந்தாரண்ய புவி வீக்ஷித இதீரித வ ஸோபி
அப்ரதிம ஹர்ஷ விவ சீக்ருத மநஸ்கே
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –23-பட்டி மேய்ந்து

நம்பி மூத்த பிரானுடன் செல்பவனான கண்ண பிரானை விருந்தா வனத்தே கண்டோம் என்று
பல கால் சொன்ன பேச்சுக்களாலே நிகரற்ற மகிழ்ச்சி கொண்ட நாச்சியாரே வாழி வாழி –

———-

துர்க்கடம்ருஷா வசன பாஷண படீ யாந்
கிம் நநு முகுந்த இஹ த்ருஷ்ட இதி ப்ருஷ்ட்வா
ஐஷி யமுனா தட இதீரிதவ ஸோபி
ஹ்ருஷ்ட ஹ்ருதயா ஜயது நித்யமிஹ கோதா –24-

ஏலாப் பொய்கள் உரைக்க வல்ல கண்ண பிரானை இங்கே கண்டார் உண்டோ என்று வினவி
யமுனை ஆற்றங்கரையில் விருந்தா வனத்தில் கண்டோம் என்று சொன்ன சொற்களாலே
திரு உள்ளம் உகந்த நாச்சியாரே நீடூழி வாழி வாழி –

———-

மாதவ மலிம்லுச முராரி ரிஹ ப்ருந்தாரண்ய
புவி த்ருஷ்ட இதி பாஷண மிஷேண
வ்யஞ்ஜித முகுந்த பரி ரம்ப ரஸ போகே
பட்ட முனி புத்ரி ஜய நித்யம் இஹ கோதே –25-

ஜார சோர சிரோமணியான கண்ணனை விருந்தாவனத்தே கண்டோமே கண்டோமே
என்ற பாசுரம் இட்டததால்
கண்ண பிரானோடே கூடி அனுபவித்து மையல் தீர்த்த படியை அருளிச் செய்த
நாச்சியாரே நீடூழி வாழ்க

————-

தன் வினவ பத்த ஜன பட்ட முனி புத்ரீ
கீத க்ருதி ரத்ந யுகலார்த்த மவ போத்ய
காஞ்ச் யுதிதவாதி பய க்ருத் குரு குலீநோ
தாஸ இமமாஹ மதுரம் ஸ்துதி நிபந்தம் –26-

ஸ்ரீ அணி புதுவை விட்டு சித்தர் திரு மகளார் அருளிச் செய்த
இரண்டு திவ்ய பிரபந்தங்களின் மஹார்த்த சாரங்களை அருளிச் செய்த
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கர ஸ்ரீ வைஷ்ணவ தாஸன்
இந்த ஸ்துதி நூலை பக்தி போக்யமாக இயற்றினான் –

அபி நவ கோதா ஸ்துதி முற்றிற்று –

————————————————–————————————————–————————————————–————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading