புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை விருப்புடை இன் தமிழ் மாலை–1-10-
விருப்பம் அடியாகப் பிறந்த -பிராப்ய த்வரை விஞ்சி -அருளிச் செய்த இனிய தமிழ் தொடை
சாத்விக அக்ரேசரான பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து வைத்து பகவல் லாபத்துக்காக மடல் எடுப்பரோபாதி-
காமன் காலில் விழ வேண்டும் படியான இப்பிரபந்தம்
வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டு சித்தன் தன் கோதை வாய்த் தமிழ் வல்லவர்–2-10-
வாயால் உச்சரிப்பது அடங்கலும் வேத சப்தம் ஆகையாலே செய்வது அடங்கலும் வைதிக கிரியையாய் இருக்கிற
பிராமணர் வர்த்திக்கிற ஸ்ரீ வில்லி புத்தூருக்கு பிரதானரான பெரியாழ்வார் –திரு மகளுடைய -பகவத் அனுபவம் –
வாச க்ரம வர்த்தித்வாத் -வழிந்து புறப்பட்ட சொல்
புதுவையர் கோன் பட்டன் கோதை இன்னிசை யால் சொன்ன மாலை–3-10-
இவ்விஷயத்தில் இவ்வளவான அவகாஹாநத்துக்கு அடி பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பு யாய்த்து –
நிறை புகழ் ஆய்ச்சியர் கூடலைக் குழல் கோதை முன் கூறிய பாடல் –4-10-
இவர்களுக்கு நிறை புகழாவது –கிருஷ்ணனை இன்னாள் நாலு பட்டினி கொண்டாள்-இன்னாள் பத்து பட்டினி கொண்டாள்
என்னும் புகழ் காண்-என்று அருளிச் செய்வர் –
இவள் மயிர் முடியாலே அவனை கூடல் இழைப்பிக்க வல்லவள் –
பண்ணு நான் மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை சொன்ன நண்ணுற வாசக மாலை–5-11-
ஸ்வர பிரதானமான நாலு வேதங்களும் வைத்து இருப்பவர்கள் -ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிர்வாஹகரான பெரியாழ்வார் திருமகள் சொன்ன –
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீண்ட வேதம் போல் அன்றிக்கே விஷயத்தை மாறுபாடுருவும் படி அருளிச் செய்த இவை-
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல் தூய தமிழ் மாலை–6-11-
ஆப்திக்கு ப்ராஹ்மணராலே ஸ்துதிக்கப் பட்டு இருக்கிற ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாஹகரான பெரியாழ்வார் திருமகள் ஸ்ரீ ஸூக்தி
அனுபவத்துக்கு பாசுரமிட்ட அத்தனை அல்லது நெஞ்சோடு கூட கவி பாடிற்று அல்லவாய்த்து –
ஒண் புதுவை ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ்–7-10-
ஒண் புதுவை ஏய்ந்த புகழ் -விசேஷணங்கள் பட்டர் பிரானுக்கும் கோதைக்கும் சேரும் –
பெரியாழ்வார் பெண் பிள்ளை அன்றோ-என்னும் புகழ்
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ் –8-10-
பகவத் போகத்தில் ஒன்றும் தப்பாத படி எல்லா வகையாலும் அனுபவித்த பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பாய்த்து இவ்வாசைக்கு ஊற்று
விபவம் உண்டான வன்று தொடங்கி போகத்தில் அன்வயித்தவர் இறே பெரியாழ்வார்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் – என்று தொடங்கி அனுபவித்தவர் இறே
குழல் கோதை தொகுத்து உரைத்த செந்தமிழ்–9-10-
தன்னுடைய ஏகாங்க சௌந்தர்யத்தாலே -இவை அடையக் குமிழ் நீர் உண்ணும் படி பண்ண வல்லவள் யாய்த்து இப்பாடு பட்டாள்
ரத்னங்களைச் சேரத் திரட்டினால் போலே கல்யாண குணங்களை சேர்த்துச் சொன்ன செவ்வியதமிழ் –
பாவ பந்தம் வழிந்து சொல்லாய்ப் புறப்பட்ட இத்தனை –
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே–10-10-
சர்வ சாதாரணமாக இருக்கும் வஸ்து என்று பற்றக் கடவது அன்று
ஆச்சார்யனுக்கு விதயம் அவ்வஸ்து –விஷ்ணு சித்தே யஸ்ய -அனந்தன் பாலும் -5-4-8–
அவன் வழியாலே நமக்குக் கிடைக்கும் என்று இருக்க அடுக்கும்
சம்பந்தம் நமக்கும் அவனுக்கும் ஒக்கும் என்று நினைக்கலாகாது
சம்பந்தம் நித்தியமாய் இருக்கச் செய்தே இ றே இந்நாள் வரை கிடந்தது
தங்கள் தேவரை -என்று தன்னோடு உறவு அறுத்து பெரியாழ்வார் உடன் சேர்த்து சொல்லுகிறாள்
பெரியாழ்வார் உகந்தது என்றாய்த்து உகந்தது-திரிபுரா தேவியார் வார்த்தையை நினைப்பது –
பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரசீத -ஸ்தோத்ர ரத்னம் -65-என்னுமா போலே
த்வத் பாதமூலம் சரணம் ப்ரபத்யே -ஸ்தோத்ர ரத்னம் -22-என்று சரணம் புக்குவைத்து பிரபத்தி பண்ணினோம் நாம் ஆகையாலே
அதுவும் போட்கனாகக் கூடும் என்று அக்குறை தீர நாத முனிகளை முன்னிட்டால் போலே பெரியாழ்வாரை முன்னிடுகிறாள் –
பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டுச்சித் தன் கோதை இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை-12-10-
ஸ்ரீ மத் த்வாரகையிலே மாளிகையோடு ஒக்குமாய்த்து இவ் ஊரும்
இனி தான் பண் மிக்கு -பாவ பந்தம் வழிந்து புறப்பட்ட சொல்
வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிக விரும்பும் சொல்–13-10-
இவளுடைய விருப்பத்தில் ஊற்றமாய்த்துச் சொல்லித் தலைக் கட்டப் பார்க்கிறது
இவ்வளவான பிராவண்ய அதிசயத்துக்கு எல்லாம் வாய்த்தலை பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பாய்த்து-
வில்லைத் தொலைத்த புருவத்தாள்
தன்னோடு சாம்யம் கொண்டாடி இருக்குமவை எல்லாம் அழிக்கும் படி யாய்த்து அவயவ சோபை இருக்கும் படி
வில் தான் ஒப்பாக போராத படியான புருவத்தை உடையவள்
வேட்கை யுற்று மிக விரும்பும் சொல்லைத்-
அபி நிவேசமானது விஞ்சி அது தான் –என்னளவன்றால் யானுடைய அன்பு –இரண்டாம் திரு -100-என்கிறபடியே
ஆஸ்ரயத்தின் அளவில்லாத படி அபி நிவேசத்தை உடைய வாளாய்ச் சொன்ன அவளுடைய பாசுரம்
பகவத் அனுபவம் வழிந்து புறப்பட்ட சொல்
பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப் பாரின் மேல் விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல் மருந்தாம் -14-10-
பிறந்த பக்தியும் -அந்த பக்திக்கு அனுரூபமாகப் பெற்ற பேறும் ஓர் ஆஸ்ரயத்தில் கிடக்கும் அளவு அல்லாமையாலே
கண்டீரே -என்று -பரம பக்தி தசையை -கேட்கிறவர்கள் பாசுரத்தாலும்
கண்டோம் -என்று-தான் பெற்ற பேற்றை – சொல்லுகிறவர்கள் பாசுரத்தாலும் –
ஆக தான் பெற்ற பேற்றைச் சொல்லித் தலைக் கட்டுகிறது
திருவாய்ப்பாடி விருத்தாந்தத்தைச் சொல்லுகையாலே -அன்யாபதேசமாகையும் தவிராதே
ஆனாலும் விட்டு சித்தன் கோதை சொல் -என்கிறதும் தவிர்க்க ஒண்ணாதே
ஸ்ரீ வைகுண்டத்தில் அன்றிக்கே பூமியிலேயாய் அது தன்னிலும் திருவாய்ப்பாடியில் அன்றிக்கே
ஸ்ரீ பிருந்தா வனத்தே கண்டமை -(இவளுக்கும் சூடிக் கொடுத்த மாலையை மாலுக்கு சூடும் படி அருள் புரிந்தான் )
விட்டு சித்தன் கோதை சொல்-காட்சிக்கு கைம்முதல் இருந்தபடி –
விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே -10-10- என்று முன்னனே அருளிச் செய்தாள் அன்றோ –
மருந்தாம் என்று இது தான் சம்சார பேஷஜம்
—————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply