நீலம் உண்ட மின் அன்ன மேனி பெருமான் உலகு—திரு விருத்தம்-29–என்று பரம பதத்தே தூது விட்டாள்-
அது பர பக்தி பர ஞானம் பரம பக்தி யுகதர் ஆனார்க்கு அல்லது புக ஒண்ணாத தேசம் ஆகையாலே-
அவதாரங்களிலே தூது விட பார்த்தாள்–கண்ணன் வைகுந்தன் திரு விருத்தம்-30—
அதுவும் சம காலத்தில் உள்ளார்க்காய் பின்னை இல்லை ஆகையாலே-பிறபாடர்க்கும் அனுபவிக்கலாம் படி
சுலபமான திரு மலையிலே திரு வேம்கடம் உடையான் திரு அடிகளிலே மேகத்தை தூது விடுகிறாள் —
இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல்
அசைமின்கள் என்றால் அசையும் கொலாம் அம் பொன் மா மணிகள்
திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து வன் தாட்சி மயம்
மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே – –31- -எம் கானல் அகம் கழிவாய் -9-7-
திரு மலைக்கு போகிற பராக்கிலே பேசாதே போகிற்றவற்றை கண்டு சொல்ல மாட்டிகோள் ஆகில்
உங்கள் திரு அடிகளை என் தலையில் வையும் கோள் என்றால் வைப்புதிகளோ
தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின்கள் காண்மின் என் தலை மேலாரே -என்னுமா போலே –பெரிய திருமொழி -7-4-1-
இவர்க்கும் பகவத் விஷயத்திலார் யேனுமாக ஓர் அடி முற்பாடாய் இருப்பவர் திரு அடிகள் உத்தேசம் என்கிறார்-
—————-
கீழில் பாட்டில் -மேகங்களே என்னுடைய தூது வாக்கியத்தை கேட்டுப் போய்ச் சொல்லு கிறிகோள்-உங்கள் திருவடிகளை
என் தலையிலே வைக்கிறிலிகோள் -என்று சொன்ன படியே இவை செய்ய மாட்டி கோளாகில்-இங்கே வந்து ஒரு வார்த்தை
சொல்லிப் போங்கோள் என்ன -எங்களுக்குப் பெருங்கூட்டம் போகா நின்றது -துணை தப்பும் -என்றனவாகக் கொண்டு
அங்கே நின்றாகிலும் ஒரு வார்த்தை சொல்லிப் போங்கோள் -என்கிறாள் –
மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி யொக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருந்துத்தவ மா மருள் பெற்றதே –32—வைகல் பூம் கழிவாய் -6-1-
அவை ஒரு வார்த்தை சொல்லுமாகில் சத்தை தரிக்கும் என்று இருக்கிறாள் –
வாய் பேச மாட்டாத அசேதனமும் கூட வாய் பேச வேண்டும்படியான தசையைச் சொல்லுகிறாள் –
நாமும் பிரணயித்தவத்தாலே பெற விராதே சாதன அனுஷ்டானம் பண்ண அமையும் அமையும் அத்தனை இனி -என்கிறாள் –
உங்கள் உடம்பு நோவ வருந்திப் பண்ணினான் தபஸின் பலமோ-இவ்வடிவு எங்கனே யாகப் பெற்றது –
————-
நாலு மூலையும் மேகங்கள் வந்து பரந்து மேக தர்சனத்தாலே பெண் பிள்ளை மோகித்து கிடக்க ,இவள் மோகத்தை கண்ட
திருத் தாயார் -மேகோ தயாஸ் சாகர சந்நிவ்ருத்தி -என்றும் -–பீஷாஸ் மாத்வாத பவதி பீஷோதேதி சூர்யா -என்றும்
என்னும் படியாக பதார்த்தங்கள் தன் கார்யத்துக்கு அவ் அருகு போகாத படி நிர்வகிக்கிறது-தன் ஆஞ்ஜையால் அன்றோ –
இவ் அளவில் இவளை பரிகரிக்கை அரிதோ என்று கூப்பிடுகிறாள்-
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண் பால்
பொருளோ எனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
தெருளோம் அரவணையீர் ! இவள் மாமை சிதைக்கின்றதே –33–ஏறாளும் இறையோனும் -4-8-
பிராட்டி அருள் மறுத்தாலும் ,மாறாதே இறே இருப்பது ஆழ்வான் அருள்-மடு அருகில் ஊற்று போலே-
அம்பரீஷ சக்கரவர்த்திக்கு துர்வாசர் வந்த போது ஜெயித்து கொடுத்ததை நினைத்து இருப்பது-
நீர் பிரபு ஆவைகையும் உம்மை பற்றினவள் பரிபவதுக்கும் ஒரு சேர்த்தி கண்டிலோமீ-
உகப்பார்க்கு உடம்பு கொடோம் என்று பிரதிக்ஜை கண்டிலோம் இறே
இவள் தரை கிடை கிடக்க உமக்கு படுக்கை பொருத்துவதே-படுக்கைக்கு மேல் விரி வேண்டாவோ
படுக்கையில் கிடப்பார்க்கு தனி கிடை அமையுமோ-
இவன் தானே கை தொட்டு அழிக்கிறான் என்னும் படி இவனோட்டை சம்பந்தம் -பிராப்தியை திரு தாயார் அறிந்து-
உணர்ந்து இருந்த படி பிரஜை கினற்றினில் விழுந்தால் வாங்காத தாய் தள்ளினாள் என்னுமோ பாதி
ரஷகன் ஆனவன் ரஷியாது ஒழிந்தால் அவ்வளவும் சொல்லலாம் இறே –
—————
அவதாரிகை-அவன் வரும் அளவும் ஆறி இருக்க ஒண்ணாமை யாலே கூடல் இழைக்க தொடங்கினாள்–
அது தப்பின படியை கண்டு ,நாயகன் தன்னைக் கண்டால் கோபிக்குமோ பாதி கூடலோடே கோபிக்கிறாள்-
சிதைக்கின்ற தாழி என்று ஆழியை சீறி தன் சீர் அடியால்
உதைக்கின்ற நாயகம் தன்னொடு மாலே உனது தண்டார்
ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்
பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற் பால் அதுவே -34—மின்னிடை மடவார்கள் -6-2-
முன்புள்ளார் கூடல் இழைக்க புக்கவாறே-அது சிதறி வருகிற படியை கண்டு-அத்தோடு சீறி அருளா நின்றாள் என்பார்கள்
பட்டர்–இது கூடுகைக்கு ஏகாந்தம் இன்றியே-பிரிகைக்கும் ஒரு புடை உண்டாய் இருக்கையாலே சீறி உதையா நின்றாள் -என்று
கூடல் இழைக்க புக்கவாறே கடல் ஆனது திரை ஆகிய கையால் அழிக்க புக்க வாறே அத்தோடு சீறா நின்றாள்-
நாயகனும் வரவு தாழ்ந்தவாறே ,கடலோடு சீரும் அத்தனை இறே–
பெறுதற்கு அரிதான திரு அடிகளாலே ,கிடீர் அசேதனமான கூடலை உதைகின்றது
அவன் சர்வேஸ்வரன் ஆவது இவள் காலுக்கு இலக்கான வாறே
இவளை இப்படி பிச்சேற்றி இவள் பிச்சை கண்டு பிச்சேறி இருகிறவன்-
க்ரம பிராப்தியும் இவள் உடைய த்வரையும் சாதனம் இல்லை-அப்ரயோகம் -பலம் அவன் தன்னாலே இருந்த படி-
—————–
கீழ் வந்த வியசன தசைகள் எல்லாம் பிரகிருதி என்னும் படிக்கு ஈடாக மேல் வருகின்ற தசை-இருக்கிற படியை கண்டு –
இது என்னவாய் தலை கட்ட கடவது–என்று திரு தாயார் பயப் படுகிறாள்
இவளுக்கு முன்பு சம்ஸ்லேஷ தசையில் ,அனுபவித்ததை எல்லாம் பாதகமாய் தான் ஈடு பட்ட பின்பு-தன் இழவை பாராதே –
இத் தலைக்கு நலிவாயிரா நின்றது -என்று அவற்றையும் கொண்டு நோவு படுகிறாள்
வாயும் திரை யுகளில் பிராட்டியை போலே வழிப் பகையாய் இருக்கிறது
தன் மகள் துன்பத்தில் ஈடு பட்டு மேற்கு திசை பெண் தன் கணவன் பகல் போனதை கண்டு வருந்துவதை கண்டு வருந்துகிறாள் –
இத் தலை-மேற்கு திசை பெண் –வழிப் பகை -காணும் இடம் எங்கும் பகையாக இருக்கிறதே –
பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த
மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை உலகு அளந்த
மால் பால் துழாய் க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம்
சோல்வான் புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே –35–வாயும் திரையுகளும் -2-1-
சர்வேஸ்வரன் பக்கல் உண்டான திரு துழாய் மாலையிலே பிரவணமான மனசை உடைய இவளுக்கு-
நஞ்சூட்டின வாடை -பிராண அவஸ்தமாய் இருக்கையாலே -பிராணன் நின்ற நிலை எல்லாம் அறிந்து துழாவா நின்றது
ஸ்வா பதேசம் –
பகவத் விஸ்லேஷத்திலும் ,அனுகூல பதார்த்தங்களும் , பாதகம் ஆகிற படியை கண்ட
ஸ்ரீ வைஷ்ணவர்கள்-இவருடைய சத்தை எங்கனே தரிக்க கடவதோ -என்று அஞ்சுகிற படி-
—————
நன்மைகள் உள்ள தத் தலையாலே என்று இருக்கையும் -தீமைகள் உள்ளது நம் தலையாலே என்று இருக்கையும்-
ஸ்ரீ ஜனகராஜன் திரு மகளுக்கும் நம்மாழ்வாருக்கு ஸ்வரூபம் –
இப்படி அத்தலை அல்லது அறியா இருக்கச் செய்தேயும் இவனுடைய ரக்ஷகத்வத்திலே அதி சங்கை பண்ணும் படிக்கு
ஈடாகப் பிறந்த தசா விபாகத்தைச் சொல்லுகிறது –
ஏஷை வாசம் சதே லங்காம் ஸ்வே நாநீகே நமர்திதும் -என்று முதலிகள் -நான் அழிக்க நான் அழிக்க-என்று
சொல்லுமா போலே -வாடையும் ராத்ரியும்-நான் நான் என்று நலிகிற படி –
துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தராது பெயரா
எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் ஈங்கு இவளோ
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கைக்
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –36––ஆடி ஆடி அகம் கரைந்து -2-4-
இருள் என்று -வருகிற போது -சன்யாசியாய் கிட்டினவாறே ராவணன் ஆனால் போலே-
சர்வேஸ்வரன் தயை பண்ணின வாறே -அந்த பிரளயத்துக்கு முடிவு உண்டு
அவன் பக்கல் கிருபை இல்லாமையால் இப்பிரளயத்துக்கு முடிவு இல்லை-
அவர்கள் அங்கு கரண களேபர விதுரராய் இ றே இருப்பது -இங்கு இவள் சத்தையைப் பற்றி நலிகிற படி –
அங்கு பிரகிருதி அளவிலே -இங்கு ஆத்மா அளவிலே -அங்கு நீர் பிரளயம் -இங்கு ராத்திரி பிரளயம்
மூர்த்தமான ஜலம் மூர்த்தமான உடம்பை அழிக்கிறது அங்கு -இங்கு அமூர்த்தமான ராத்திரி அமூர்த்தமான ஆத்மாவை அழியா நின்றது
அங்கு அவற்றினுடைய ஆபத்து தான் அறிந்ததுவே -இங்கு ஆபத்தையும் அறிந்து ரக்ஷக அபேக்ஷையும் உண்டாய் இரா நின்றது-
கர்மம் அனுபவ விநாஸ்யமாய் இருக்கும் -இது அனுபவிக்க அனுபவிக்க வர்த்தியா நிற்கும்-
ஹேய ப்ரத்ய நீகரான தமக்கு தம்மை உகந்தாருடைய ஹே யத்தையும் போக்கிக் கொண்டு அருள வேண்டாவோ
பிரணயித்வம் வேண்டாவாகில் ஸ்வரூபமும் வேண்டாவோ -ஆபத்து நிமித்தமாக தாம் இரங்காது ஒழி கைக்கு பரதந்த்ரரோ
எங்களுக்குப் புறப்படில் குற்றம் -தங்களுக்கு புறப்படாது ஒழி யில் குற்றம் -வரில் எங்கள் சேஷத்வம் அழியும்
வராது ஒழியில் தம்முடைய சேஷித்வம் அழியும் -சேஷியைக் குறித்து சேஷ பூதன் அதிசயத்தை விளைக்கக் கடவன் இறே-
பூர்ண விஷயத்துக்கு அதிசயத்தை நினைக்கையாவது -ஸ்வ ரக்ஷணத்துக்கு புறப்படாது ஒழியுமது
இவளுக்குப் பிறந்த ஸ்வரூப அந்யதா பாவம்-ஆனந்தோ ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதத்ஸ்ஸன-என்று
புத்தி பூர்வம் பண்ணின பாபத்துக்கு அஞ்ச வேண்டாத படி இருக்க -ப்ரஹ்மத்தினுடைய ஆனந்தத்தை அறிந்தவனுக்கு
ப்ரஹ்மம் தன்னையே அறியச் செய்தேயும்-அஞ்ச வேண்டும்படி இறே இவள் தசை
ஒருத்திக்காக கடலை யடைத்து-இலங்கையை ராமன் என்றும் லஷ்மணன் என்றும்
எழுத்து வெட்டின அம்புகளை புக விட்டுகே குட்டிச் சுவரும் மட்டைத் தெங்குமாக்கி மூலையடி போகப் பண்ணின இந்த உபகாரகனுடைய
இந்த நீர்மை எல்லாம் எங்கே குடி போயிற்றோ -என்று எம்பார் அருளிச் செய்தார் –
இதுவும் அழகியது ஒன்றாய் உண்டாய் இருக்கலாகாது என்று அஸூயையாலே அழித்தான் அத்தனை காண் –
ஒருத்திக்காக உதவினன் அல்லன் காண் -என்பர் திருமலை நம்பி –
—————
கலந்து பிரிந்தாள் ஒரு தலைமகள் பிரிவாற்றாமையால் புறப்பட்டு க்ரூரமான காட்டிலே துஷ்ட மிருகங்களும் -மனுஷ்யரும்-
துர்த்துவநிகளும் துர் கதிகளுமான தேசத்திலே போக –திரு தாயார் இவளை படுக்கையில் காணாமையாலே –
எல்லா படிகளாலும் பொல்லாதாய் இருக்கிற தேசத்திலே – புறப்பட்டு போன இவள் -என் செய்கிறாளோ என்று –
இவள் போன வழியை பார்த்து மோஹிக்கிறாள்–
திரு கோளூரில் புகுகிற பெண் பிள்ளை உடைய திருத் தாயாரைப் போலே -ஓர் இடத்தை நிச்சயிக்க ஒண்ணாமையாலே –
எல்லா படிகளாலும் சோகிக்கிறாள்-
கொடும் காற் சிலையர் நிரை கோள் உழவர் கொலையில் வெய்ய
கடுங்கா விளைஞர் துடி படுங்கவ் வைத்து அருவினையேன்
நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கால் ஓசியும் இடை இள மான் சென்ற சூழ் கடமே –37-மண்ணை யிருந்து துழாவி -4-4-
அவனுக்கு கையும் திரு ஆழியும் நிரூபகமாய் இறே இருப்பது –
அது பிறர்க்கு தாரகமாய் இறே இருப்பது –இது பிறர்க்கு அனர்த்தமாய் இருக்கும் இறே –
————-
யோகிகள் யோக அப்யாசம் பண்ணும் போது யோகம் சாத்மிக்கைக்காக லோக யாத்ரையிலே ஒன்றுவார்கள்—
அது போல் இவரும் பகவத் அனுபவம் சாத்மிக்கைக்காக லோகங்களில் பதார்த்தங்களின் மேல் கண் வைததார் –
அவையும் பகவத் விஷயத்துக்கு ஸ்மாரகமாய் நலிகிறபடி –
மயர்வற மதி நலம் அருள பெற்றவர் ஆகையாலே –நம்மை லோக யாத்ரையின் நின்றும் வேத யாத்ரையில் மூட்டும் தனை
அருமை போரும் ஆழ்வார்களை -வேத யாத்ரையில் நின்றும் லோக யாத்ரையிலே மூட்டுகை –
நம்மை சம்சாரத்தில் உண்டான ருசி வாசனையை தவிர்த்து பகவத் விஷயத்தில் உண்டாக்குக்கைக்கு உள்ள அருமை போரும்
ஆழ்வார்கள் – பகவத் விஷயத்தில் ருசி வாசனையை தவிர்த்து -சம்சாரத்தில் உண்டாக்குக்கைக்கு –
இரண்டும் எம்பார் அருளி செய்தார் –
கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்
குடமாடி யிம் மண்ணும் விண்ணும் குலுங்க வுலகளந்த
நடமாடிய பிரான் உரு ஒத்தன நீலங்களே -38–சொன்னால் விரோதம் இது -3-9-
இந்திரன் தான் இழந்த பூமியை கொண்டு போக – மகா பலி தன்னது அல்லாததை தன்னது என்று பிரமித்து –
அத்தை கொடுத்தோம் -என்று ஒவ்தார்யத்தை நினைத்து போக – இவர் திரு உலகு அளந்து அருளின போதை
தம் பேறாக அனுபவித்தார்-
இவருக்கு பகவத் விஷயத்தில் லோக யாத்ரை அனுசந்திக்க புக்கால் அதுவும் பகவத் விஷயத்துக்கு ஸ்மாரகமாய்
நலியும் படி இறே பிறந்து ஞான வைசத்யம் —அத்தை சொல்லுகிறது .
——
கீழ் பாட்டில் அனுசந்தித்த நீலங்கள் தனக்கு போலியான திரு மேனியிலே கொண்டு போய் முட்டிற்று –
திரு மேனி தனக்கு பகை தொடையான திரு கண்களிலே போய் முட்டிற்று
திருக் கண்கள் தனக்கு அவ்வருகுபோக ஒட்டாதே நலிகிறபடி சொல்லுகிறது
க்ருஹீத் வாப் ரேஷ மாணா -இத்யாதி சுந்தர காண்டம் -36-4
கணை ஆழி பார்த்த உடன் பெருமாளையே கண்ட படி பிராட்டி மகிழ்ந்தாள்-
நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள்
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம்கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே -39–ஏழை யாராவி -7-7–
கந்தவ்ய பூமியில் இல்லாத படிக்கு ஈடாக திருக் கண்கள் தொடர்ந்த படி –
கண்ணை செம்பளித்தவாறே கண்ணுக்குள்ளே தோற்றின படி –
புறம்பு எங்கும் தோற்ப்பித்து என்னை தோற்ப்பிக்க வந்தபடி —
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் -திருவாய்மொழி -7-7-1
————–
சர்வாதிகனை கவி பாடின இவளுக்கு ஒரு பகலை கவி பாடும்படி பிறந்த தசையை சொல்லுகிறது-
கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய குழாம் விரிந்த
நீல கங்குல் களிறு எல்லாம் நிரைந்தன நேரிழையீர்
ஞால பொன் மாதின் மணாளன் றுழாய் நாங்கள் குழல் சூழற்க்கே
ஏலப் புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்று கொலோ -40–மானேய் நோக்கு -5-9-
நிதி உடையார்
எல்லா விநியோகமும் கொள்ளுகிறோம் என்று அஞ்சாது இருக்குமா போலே இவளுக்கும்-இவள் உண்டு
என்று சொல்லி அஞ்சாது இருக்கலாய் இறே இருப்பது மாதின் மணாளன் –
இவளுடைய போக்யதையாலே பிச்சேறி இறே இருப்பது -இவள் பக்கலில்
இவனுக்கு உண்டான வியாமோகம் இத்தனையும் தனக்கு உறுப்பு என்று இருக்கிறாள் –
அவனும் அவளுமாக துகைத்த மாலையை ஆசை படுகிறாள் -ராஜ குமரன் புழுகு நெய்யிலே பூவை தோய்த்து சூடுமா போலே-
இவன் தான் -சர்வ கந்த சர்வ ரச தத்வம் இறே –
வாசம் செய் பூம் குழலாள் -திருவாய்மொழி -10-10-2-என்று அங்குத்தைக்கும் வாசம் கொடுக்கும் படி இறே இவள் இருப்பது –
அப்படி பட்ட மிதுனமாய் இருக்கும் இருப்பிலே சூடி துகைத்தைதை இறே இவள் ஆசை படுகிறது –
————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .