இவனோடு கூட ஒரு படுக்கையிலே இருக்கச் செய்தே பிரிந்தான் என்று நினைத்து
பிரிந்தால் பிறக்கும் காரியமும் பிறந்து – செல்லுகிறது –
அரியன யாமின்று காண்கின்றன கண்ணன் விண்ணனையாய்
பெரியன காதம் பொருட்கோ பிரிவென ஞாலம் எய்தற்
குரியன வொண் முத்தும் பைம் பொன்னுமேந்தி ஒரோ குடங்கைப்
பெரியன கெண்டைக் குலம் இவையோ வந்து பேர்கின்றவே —11–மாலுக்கு வையம் -6-6-
ஆகாரத்தே பட்ட முத்தும் –பசும் பொன்னாய் இருந்த படி-இவை உண்டாய் இருக்கப் போகையாவது என்
இக் கண்களைக் கண்டார் படும்பாட்டை -கண் தான் பட்ட படி
ஸ்வா பதேசம் –
இத்தால் ஆழ்வாருக்கு வைஷ்ணவர்களோடே கூடி இருக்கச் செய்தே பிரிவை அதிசங்கை பண்ணி
நோவு படும்படி பிரிவு பொறாமை -இருந்தபடி –
————-
கீழ் எல்லாம் வைஷ்ணவர்களை தலைமகனாகப் பேசிற்று -இதில் எம்பெருமானைத் தலை மகனாகப் பேசுகிறது –
பகவத் சம்ஸ்லேஷம் பாகவத சம்ஸ்லேஷ பர்யந்தமாய் நிற்கக் கடவதாகையாலும்
இவர்க்குக் கீழ் உண்டான பாகவத சம்ஸ்லேஷம் பகவத் சம்ஸ்லேஷம் பர்யந்தம் ஆக்கின படி –
பேர்கின்றது மணியாமை பிறங்கி யள்ளல் பயலை
ஊர்கின்றது கங்குலூழிகளே இதெல்லா மினவே
ஈர்க்கின்ற சக்கரத் தெம்பெருமான் கண்ணன் தண்ணம் துழாய்
சார்கின்ற நன்னெஞ்சினார் தந்து போன தனி வளமே—12-
தலைவன் பிரியப் பெற்ற தலைவி தன் ஆற்றாமை கூறி நெஞ்சொடு கலாய்த்தல்-
மணி மாமை என்று தன் நிறத்தைத் தானே கொண்டாடுவான் என் என்னில்
ஒரு நிறமே ஒரு எழிலே என்று அவன் கொண்டாடும் படிகளை கேட்டிருந்த படியாலே
தனக்குத் தான் அன்றியிலே அவனுக்குக்காகத் தான் இருக்கையாலும் –
சார்வ பௌமரான ராஜாக்கள் போகப் பள்ளிகள் வந்து புகுருமா போலேயும்
ஸ்ரீ பர்ண சாலையில் நின்றும் இளைய பெருமாள் போக ராவணன் புகுந்தால் போலேயும் –பயலை பரக்கிற படி-
கலப்பதற்கு முன்பு முப்பது நாழிகையாய் இரா நின்றால்-கலந்தவாறே ஒரு ஷணமாய் இரா நின்றது
பிரிந்தவாறே கல்பங்களாய் இரா நின்றது –
ஈர்க்கின்ற சக்கரம் –பிரதிகூல ரைப் போய் ஈரும்-அனுகூலரை கையில் சேர்த்தியாலே ஈரும்
பிரதிகூலரை ஆண்மையாலே கொல்லும்-அனுகூலரை அழகாலே கொல்லும் –
தம்முடைய நெஞ்சை நல் நெஞ்சினார் என்பான் என் என்னில்
பிரஜைகளே யாகிலும் பகவத் விஷயத்தில் முற்பாடானார் ஆனாரை இங்கன் அல்லது சொல்லல் ஆகாது –
ஸ்வா பதேசம் –
மன ஏவ மனுஷ்யாணாம் -என்னும்படியாலே–இவர் நெஞ்சம் அங்கே பிரவணம் ஆனபடி –
————-
ஆசுவாச கரமான காலம் போகையும் ,பிரதி கூலமான காலம் வருகையும் ,அதற்கு சக காரிகள் குவாலாகையும்
ரஷகன் வாராது ஒழிகையும் முடிந்தோம் இறே என்கிறாள்
தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய
பனிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
துனி வளர் காதல் துளாயை துழாவு தண் வாடை தடிந்து
தினி வளை காப்பவர் ஆர் எனை வூழிகள் ஈர்வனனே-13—மல்லிகை கமழ தென்றல் -9-9-
ஆழ்வாருக்கு சம்சாரத்தோடு பொருந்தாமை இருந்த படி சொல்கிறது-
மறந்தும் புறம் தொழா அடிமைத் தனத்தை பாதுகாப்பார் யார் –வளை-அநந்யார்ஹ சேஷத்வம்-
————–
ஈர்வன வேலும் அஞ்சேலும் உயிர் மேல் மிளிர்ந்து இவையோ
பேர்வனவோ அல்ல தைவ நல்ல வேள் கணை பேரொளியே
சோர்வன நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர்
தேர்வன தைவம் அந் நீர கண்ணோ இச் செழும் கயலே -14-நலம் பாராட்டு துறை–துவளில் மா மணி மாடம் -6-5-
தோல் புரை போகிறதில்லை-அச்சேத்யோயம்-என்று அழிக்காததை அழித்தபடி-
அயர்வறும் அமரர்களுக்கு தாரக போஷகமாம் படி விட்டு இருக்கும் திருமேனி
அம்மான்-அவ் வடிவுக்கு தோற்று ஜிதம் என்று இருக்கும்-
அப்படி விலஷணமான விஷயத்தை காற் கடை கொண்டு ,அதிலும் விலஷணமான இக் கண்களை தேடி வருகிற படி–
அப்பிராக்ருதமாய் இருக்கிற படி –கண் என்று சம்சயித்து ,கயல் என்று நிர்ணயித்த படி-
பரமபதத்தினால் தேடப்படுகின்றன -நித்ய முக்தரும் ஆசைப்படும் கண்கள்-
————–
பிடியை இழந்த தொரு களிறு,தன் ஆற்றாமையாலே,அமாணனை பட்டு திரியுமா போலே ,இவர்களை இழந்து ,
தன் ஆற்றாமை யோடு திரிகிற படியை அன்யாபதேசத்தாலே ,ஆவிஷ்கரிகிறான்-
கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த
புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடதெம்மாடும்
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே–15—கண்ணன் கழலினை -10-5-
முக்தர் சம்சார யாத்திரையை நினையாதார் போல ,இவனும் இவர்கள் கண்களை கண்ட பின் ,
வேறு ஒன்றை நினைக்க அறியாது இருந்த படி-
அவனுக்கு தன் ஓர் ஆயிரம் பிள்ளைகளோ பாதி , இவளுக்கும் அநேகர் உண்டாய் இருக்கையாலே ,அவனோடு கிட்டினார்க்கு ,
நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி-என்னுமா போல இறே இவர்களோடு கூடினாரும் இவளை போலே இறே இருப்பது-
இத்தனை காலம் வழி பார்த்துக் கண் மறைந்தோம்-இப்போது வந்தீரோ உம்முடைய ஆற்றாமை காட்ட –
நாங்கள் இருந்த காலம் எல்லாம் பொகட்டு இன்றோ உமக்கு போது விடிந்தது என்கிறான் –
இத்தால் ஆழ்வாருடைய வை லக்ஷண்யத்தைக் கண்டும் இப்படிப் பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டும் தாம் ஈடுபடுகிறபடி –
——————
சில காலம் சம்ச்லேஷித்த தலை மகன் பிரிந்தான் ..பிரிந்து முற்றினது என்னவாம் -பிரிந்து பிரதம தசை என்னவுமாம்
தோழி வார்த்தை என்னவுமாம் -தலை மகள் வார்த்தை என்னவுமாம்– அநேக காலம் கலந்து அல்ப காலம் பிரிந்தால்
அல்ப காலமும் அநேக காலம் ஆகிற படி
பல பல ஊழி கள் ஆயிடும் அன்றியோர் நாழிகையை
பல பல கூறு இட்ட கூறாயிடும் கண்ணன் விண் அனையாய்
பல பல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்
பல பல சூழல் உடைத்து அம்ம வாழி இப்பாய் இருளே–16—பயிலும் சுடர் ஒளி -3-7-
பிரியில் தாங்கள் உளார் ஆகை என்று ஓன்று உண்டோ ?-
இத்தால் ஆழ்வாருக்கு சம்சாரத்தில் இருப்பு பொருந்தாது இருக்கிற படி-
——————–
சம்ஸ்லேஷித்து செல்லா நிற்க செய்தே முகம் தெரியாமே போக என்று நினைத்து ,இருளிலே நாயகன் தேரிலே ஏறி போக
தன் ஆற்றாமையாலே சக்கரவர்த்தி திரு மகனைப் போலே தேர் காலை மறைத்து போகாதே தெரியும் படி போன தேர் காலைப்
பார்த்து தரித்து இருக்க ,சமுத்ரமானது ,தன் திரையாலே வந்தது இத்தை அழிக்க புக ,கடலை நோக்கி சரணம் புகுகிறாள்
பெருமாள் போலே இவரும் கடலை சரண் அடைகிறார்
இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு வாழியரோ
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூறல் ,அரவணை மேல்
இருள் விரி நீல கரு நாயிறு சுடர் கால்வது போல்
இருள் விரி சோதி பெருமாள் உறையும் ஏறி கடலே–17—அணைவது அரவணை மேல் -2-8-
கடலுக்கு நெஞ்சில் சீற்றத்தாலே கருத்து இருந்தது -உள்ளது எல்லா வற்றையும் கொடுத்து உஞ்ச விருத்தி பண்ணி
ஜீவிப்பாரை போலே ,அவரை போக விட்டு வழி பார்த்து கிடந்தோம் –இத்தை அழியாதே கொள் என்கிறாள்-
சம்ச்லேஷம் அறிந்தாய் அத்தனை போக்கி –விச்லேஷம் புதியது உண்டிலை காண் –
அவனைக் கிட்டினார் பர சம்ருத்யைக பிரயோஜனராய் அன்றோ இருப்பது –உன்னைக் குற்றம் கொள்ளுகிறது என் ?
உனக்கும் குருகுல வாஸம் அங்கே அன்றோ ? தம்மையே ஒக்க அருள் செய்வாரே
————
ஏழாம் பாசுரம் போல் கால மயக்கு துறையாகும் இதுவும் ..அது மழை காலம் தொடக்கம் இது முடிவு –
இவன் இவள் ஆகியும் ,அவன் அவனாகையும் ,தசை இதுவாகையும்,இது அல்லது இல்லையே இருந்த படி –
கீழ் காண்கிற பதார்த்தங்களை அபலபித்து கால மயக்கு ஏற்பட -இங்கு பதார்த்தங்களை அபலப்பதும் செய்து
சாஸ்திர சித்த மானவற்றை முன்னிடுவதும் செய்தது -மேகத்துக்கும் கடலுக்கும் அன்யோன்யம் விரோதமாய் பிணங்குகிறது காண்-
கடல் கொண்டு எழுந்தது வானம் அவ் வானத்தை அன்றி சென்று
கடல் கொண்டு ஒழிந்த அதனால் இது கண்ணன் மண்ணும் விண்ணும்
கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ புயல் காலம் கொலோ
கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும் காரிகையே –18—சூழ் விசும்பணி முகில் -10-9—
இப் பிரளயத்துக்கு அடி கடல் உடைந்தால் போல் இக் கண்ணில் வெள்ளம் காண்
காரிகையே–இவை எல்லாம் பொறுக்க மாட்டாத அபலை கிடீர்-
இவளை ஜீவிப்பைக்காக காலத்தை மயக்கி ஆசிவசிப்பிக்கிறாள் -நம்பிள்ளை
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -இது காலம் தெளிந்த பாங்கி இரங்கி உரைத்த பாசுரம் என்பர்-
——————–
ஆணை அணி வகுத்தால் போல-மேகம் நாலு மூலையும் கையும் அணியும் வகுத்து வர்ஷிகிற படியை கண்டு இவள் மோஹிக்க-
“எம்மின் முன்னவருக்கு மாய்வர் “-திருவாய் மொழி -1-1-5-என்னும் படி இவள் உடைய மோகத்தை கண்டு தோழியும் மோகிக்க
இவ் அளவிலே உணர்ந்து இருந்த தாயார் இவ் அவசாதம் நீங்கிடுக என்று ரஷா விதாநம் பண்ணுகிறாள்-
காரிகையார் நிறை காப்பவர் யார் என்று கார் கொண்டு இன்னே
மாரிகை ஏறி அறை இடும் காலத்தும் வாழியரோ
சாரிகை புள் ஆர்ந்து அம் தண் துழாய் இறை கூய் அருளார்
சேரிகை ஏறும் பழியாய் விளைந்தது என் சின் மொழிக்கே –19—பாலனாய் ஏழு உலகு -4-2-
அம் தண் துழாய் -போன உயிரை மீட்க வற்றாய் இருக்கை –சாந்தா கரணி -விசல்யா கரணி-என்னுமா போலே —
இறை கூய் அருளார்–பிரணயித்வம் தவிர்ந்தால் ச்வாமித்வமும் தவிர வேணுமோ ?
தாம் வந்து அணைத்து தம் தோளில் மாலை என் மார்பில் கிடக்க பேரா விட்டால் சத்தா தாரமாக அது தனையும் தந்தால் ஆகாதோ ?
தாமே வரவுமாம் -அழைக்க்கவுமாம்–பேறு அத் தலையாகவே என்று இருந்த படி-
இப்போது இவர் பழி என்கிறது–பகவத் பிராவண்யத்தை இ றே-அத்தை பழி என்பான் என் என்னில்-
அத் தலையால் வரக் கண்டு இருக்கும் அத்தனை ஒழிய இத் தலையால் பெற ப்ரவர்த்திக்குமது பழியாய் இருக்கும் இறே –
ஆன பின்பு பழி என்னத் தட்டில் இறே -நம்பிள்ளை ஸ்ரீ ஸூக்திகள்
இத்தால் ஆழ்வாருக்கு பக்தி வியதிரேகத்தில் அங்கே சம்பந்தம் உள்ளதால் ஒன்றாலே ஆகிலும்
தரிக்க வேண்டும் படி ஆற்றாமை மிக்க படி சொல்லிற்று-
——————-
மேஹ சந்தர்சனத்திலே தோழியும் தானும் மோஹித்துக் கிடக்க-இத்தசையைக் கண்டு சோகித்து இருக்கிற
திருத் தாயார் முன்னே தேவதாந்த்ர ஸ்பர்ச முடையார் புகுந்து பரிஹாரத்திலே பிரவ்ருத்தராக-அபிஜாதையுமாய்
இவள் பிரபாவத்தையும் அறிந்து இருப்பாள் ஒரு தோழி கருமுக மாலையை -நீர் கொடுக்க -என்று நெருப்பிலே இடுவாரைப் போலே –
இவளுக்கு பரிஹாரம் என்று தொடங்கி விநாசத்தையே உத்பத்தியா நின்றி கோள்-என்று அத்தை நிஷேதித்திக் கொண்டு –
இவளுடைய நோயையும் இந்நோய்க்கு நிதானத்தையும் இதுக்கு பரிகாரத்தையும் சொல்லுகிறாள் –
சின் மொழி நோயோ கழி பெரும் தெய்வம் ,இந நோய் இனது என்று
இன் மொழி கேட்க்கும் இளம் தெய்வம் அன்று இது வேலன் நில் நீ
என் மொழி கேண்மின் என் அம்மானை ஈர் உலகு ஏழும் உண்டான்
சொன் மொழி மாலை அம் தன் துழாய் கொண்டு சூடுமினே –20–வெறி விலக்கு துறை –தீர்ப்பாரை யாமினி -4-6-
சத்தா மாத்திரம் என்னும் படியான இவளை உண்டாக்கும் போது ஒரு சர்வ சக்தி வேண்டாவோ
இந்நோய் கைக்கூலி கொடுத்துக் கொள்ள வேண்டும் நோய் –பகவத் விஸ்லேஷத்திலே தரியாமை ஸ்வரூபமாய் இருந்த படி –
சொல் மொழி என்று உப ஜீவிக்கும் மருந்தும் -தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே -என்று மேல் பூசும் மருந்தும் –
தேவதாந்த்ர ஸ்பர்சமும் தத் சம்பந்தி ஸ்பர்சமும் இவருக்கு சத்தயா பாதகமாய் இருந்த படியும்–
பகவத் ஸ்பர்சமும் பாகவத ஸ்பர்சமும் சத்தயா தாரகமாய் இருந்த படியும் சொல்லுகிறது
——————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply