இரந்து உரைப்பது உண்டு வாழி ஏமம் நீர் நிறத்தம்மா
வரம் தரும் திருக் குருப்பில் வைத்ததாகில் மன்னு சீர்ப்
பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம்
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே -101-
பதவுரை
| ஏமம் நீர் நிறத்து |
– |
மஹாஜலமான கடல்போன்ற நிறத்தையுடைய |
| அம்மா ! |
– |
ஸ்வாமி! |
| இரந்து உரைப்பது உண்டு |
– |
(தேவரீரை) யாசித்துச் சொல்லும் வார்த்தையொன்றுண்டு |
| வாழி |
– |
பல்லாண்டு பல்லாண்டு; |
| மன்னு சீர்வரம் தரும் திருக்குறிப்பில் |
– |
(சேதநர்க்குச் ) சிறந்த வரங்களையருள்வதே இயல்வான (தேவரீருடைய) திருவுள்ளத்தில் |
| வைத்தது ஆகில் |
– |
அடியேனுக்கு ஏதாவது வரங்கொடுக்க நினைவுண்டாகில் (இந்த வரம் கொடுக்க வேணும்.) |
| பரந்த |
– |
கண்ட விடங்களில் அலைந்து திரிகிற |
| சிந்தை |
– |
எனது நெஞ்சானது |
| ஒன்றி நின்று |
– |
(தேவர் விஷயத்திலேயே) ஸ்திரமாயிருந்துகொண்டு |
| நின்ன |
– |
தேவரீருடைய |
| பாதபங்கயம் |
– |
திருவடித்தாமரைகளை |
| நிரந்தரம் |
– |
இடைவிடாமல் |
| நினைப்பது ஆக |
– |
தியானித்திருக்கும்படியாக |
| நீ நினைக்க வேண்டும் |
– |
தேவரீர் திருவுள்ள மிரங்க வேணும். |
இரந்து உரைப்பது உண்டு
தேவரீரிடம் யாசித்து சொல்லும் வார்த்தை ஓன்று உண்டு
வாழி ஏமம் நீர் நிறத்தம்மா
கடல் போன்ற நிறத்தை உடைய ஸ்வாமியே
வரம் தரும் திருக் குருப்பில் வைத்ததாகில் மன்னு சீர்-
சேதனர்களுக்கு வரம் அருளுவதே இயல்பாக உன்னது திரு உள்ளத்தில் அடியேனுக்கு ஏதாவது வரம் தர வேண்டுமானால்
இத்தை தந்து அருள வேண்டும்
பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம் நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே
கண்ட இடங்களில் திரியும் எனது நெஞ்சை தேவரீர் விஷயத்திலே ஸ்திரமாக இருந்து நின்ன பாத பங்கயம் நிரந்தரம்
நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே-
வாழி-என்றதும் பரவசமாக நோக்கி அருளினான் —ஏமம் நீர் நிறத்தம்மா-என்கிறார்-
இரந்து உரைப்பது ஓன்று உண்டு -என்று பல காலும் விண்ணப்பம் செய்தாலும் முகம் காட்டாமல்
வாழி என்று ஒரு கால் மங்களா சாசனம் செய்ததும் பரவசனாய் திவ்ய மங்கள விக்ரஹத்தைக் காட்டி அருள
ஏம நிறத்து அம்மா என்று பெரு மிடறு செய்து கூப்பிடுகிறார்-
கீழ்ப்பாட்டில், பக்தியைத் தந்தருள வேணுமென்று பிரார்த்தித்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்,
‘உமக்கு நான் பக்தியைக் கொடுப்பதாவதென்ன?
விஷயாந்தரங்களில் நின்றும் மீட்கப்பட்ட இந்திரியங்களைக்கொண்டு நம்மை நிரந்தரமாக நினைத்தால்
அதுவே பரமபக்தியாகத் தலைக்கட்டுகிறது; காரியம் உம் கையிலே கிடக்க என்னை நிர்பந்திப்பானேன்?’ என்ன;
பிரானே! அப்படி நிரந்தர சிந்தனை பண்ணுவது என் முயற்சியினாலேயே தலைக்கட்டி விடுமோ?
தேவரீர் ஸங்கல்பியாதவளவில் அதுதானும் நடைபெறுமோ?
ஆகையாலே அடியேன் தேவரீரையே நிந்தரம் நினைப்பேனாம்படி திருவுள்ளம்பற்றி யருளவேணுமென்கிறார்.
முதலடியின் முடிவில், அமா என்றது அம்மா! என்றபடி: தொகுத்தல், ஸ்வாமிந்! என்கை.
‘இரந்துரைப்பதுண்டு” என்றவாறே எம்பெருமான் முகங்காட்டவில்லை; ‘
இவ்வாழ்வார்க்கு காரியமொன்றுமில்லை; திருப்பித்திரும்பி ‘அருளாய், இரங்கு’ என்று பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்;
இவர்க்கு நாம் முகங்கொடுக்கலாகாது’ என்று நினைத்து பாராமுகனாயிருந்தான்;
அங்ஙனிருந்ததுகண்டு, வாழி என்று கம்பீரமான மிடற்றோசையோடே பேசினார்;
அந்த மங்களசாஸன சப்தம் செவிப்பட்டவாறே எம்பெருமான் பரவசனாய் ஆழ்வாரை நோக்கினான்;
நோக்குதலும் அபரிச்சிந்நமான கடல்போலே ச்ரமஹரமான திவ்ய விக்ரஹத்தை ஸேவித்து
‘ஏமநீர் நிறத்து அம்மா!” என்று பெருமிடறு செய்து கூப்பிடுகிறார் என்று விவரித்துக் கொள்க.
——————
விள்விலாத காதலால் விளங்கு பாத போதில் வைத்து
உள்ளுவேனது ஊன நோய் ஒழிக்கும் ஆ தெழிக்கும் நீர்
பள்ளி மாய பன்றியாய வென்றி வீர குன்றினால்
துள்ளு நீர் வரம்பு செய்த தோன்றல் ஓன்று சொல்லிடே -102-
பதவுரை
| தெழிக்கும் நீர் |
– |
கொந்தளிக்கின்ற கடலிலே |
| பள்ளி |
– |
சயனங்கொண்டிருக்கிற |
| மாய |
– |
ஸர்வேச்வரனே! |
| பன்றி ஆய |
– |
மஹாவராஹமாகக் திருவவதரித்த |
| வென்றி வீர |
– |
ஜயசீலனான வீரனே! |
| துள்ளும் நீர் |
– |
துள்ளின கடலிலே |
| குன்றினால் |
– |
மலைகளைக் கொண்டு |
| உள்ளு வேனது |
– |
(அத்திருவடிகளையே தஞ்சமாக) அநுஸந்தித்திருக்கிற என்னுடைய |
| ஊனம் நோய் |
– |
சரீர சம்பந்தமான நோய்களை |
| வரம்பு செய்த |
– |
அணைகட்டின |
| தோன்றல் |
– |
ஸ்வாமியே! |
| யிலவு இலாத காதலால் |
– |
நீக்கமில்லாத அன்பினால் |
| விளங்கு பாத போதில் வைத்து |
– |
(உனது) விளங்குகின்ற பாதாரலிங்கத்திலே (நெஞ்சை) வைத்து |
| ஒழிக்கும் ஆ |
– |
ஒழிக்கும் வழிகளில் |
| ஒன்று |
– |
ஒருவழியை |
| சொல்லிவிடு |
– |
அருளிச் செய்க |
விள்விலாத காதலால்
நீக்கம் இல்லாத அன்பினால்-அநந்ய ப்ரயோஜனனாய்க் கொண்டு பண்ணும் ப்ரேமம் –
விளங்கு பாத போதில் வைத்து
உனது பாதாரவிந்தத்திலே நெஞ்சு செலுத்தி
உள்ளுவேனது ஊன நோய்
அந்த திருவடிகளையே தஞ்சமாக இருக்கும் எனது சரீர சம்பந்தமான நோய்களை
ஒழிக்கும் ஆ
ஒழிக்கும் வழிகள்
தெழிக்கும் நீர்
கொந்தளிக்கும் கடலிலே
பள்ளி மாய பன்றியாய வென்றி வீர துள்ளு நீர் குன்றினால் வரம்பு செய்த தோன்றல் ஓன்று சொல்லிடே
நிரந்தரம் கைங்கர்யம் பண்ண சரீரம் தொலைத்து அருள பிரார்த்திக்கிறார்-
ஓன்று சொல்லிடே-இன்ன காலத்தில் இதனைப் போக்குகிறேன் என்று அருளிச் செய்தாலும் போதும் என்கிறார் –
‘நின்னபாதபங்கயம் நிரந்தரம் நினைப்பாக நீ நினைக்க வேண்டுமே” என்று பிரார்த்தித்த ஆழ்வாரைநோக்கி
எம்பெருமான் “ஆழ்வீர்! இந்த சரீரம் உள்ளவரையில் அப்படிப்பட்ட நிரந்தரசிந்தனை கூடமாட்டாதுகாணும்;
சரீர சம்பந்தம் அற்றொழிந்த பின்புதான் அது வாய்க்கும்” என்ற, ‘
பிரானே! இந்த சரீரம் தொலைய வேணுமென்கிற ருசியோ எனக்குப் பூர்ணமாயிராநின்றது;
இதனைத் தொலைத்தருளத் தட்டுண்டோ; வாய் திறந்தொரு வார்த்தை அருளிச் செய்யவேணும்” என்கிறார்.
விள்விலாத காதல்= விள்வாவது பிரயோஜநந்தரங்களை நச்சி நெகிழ்ந்து போகை;
அஃது இல்லாத காதல்- அநந்யப்ரயோஜகனாய்க்கொண்டு பண்ணும் ப்ரேமம்.
அப்படிப்பட்ட ப்ரேமத்தாலே திருவடித் தாமரைகளிலே நெஞ்சை வைத்து அவற்றையே சரணமாக
அநவரதம் அநுஸந்தித்துக் கொண்டிருக்கிற அடியேனுக்கு ஊனத்தை விளைக்கும் சரீர ஸம்பந்தமாகிய
நோயைப் போக்கியருளும் வகையில் ஒருவகை அருளிச் செய்யவேணும்.
‘இன்ன காலத்திலே இதனைப் போக்குகிறேன்’ என்று சொன்னாலும் போருமென்று திருவுள்ளம்
——————————
திருக்கலந்து சேரு மார்ப தேவ தேவ தேவனே
இருக்கலந்த வேத நீதி யாகி நின்ற நின்மலா
கருக்கலந்த காள மேக மேனி யாய நின் பெயர்
உருக்கலந்து ஒழிவிலாது உரைக்குமாறு உரை செயே –103-
பதவுரை
| திரு கலந்து சேரும் |
– |
பெரிய பிராட்டியார் நித்யஸம்ச்லேஷம் பண்ணி வாழப்பெற்ற |
| மார்பு |
– |
திருமார்பையுடையனே! |
| தேவர் தேவர் தேவனே |
– |
ப்ரஹ்மாதிகளிற் காட்டிலும் மேற்பட்ட நித்யஸூரிகளுக்கும் தலைவனே! |
| இருக்கு கலந்த வேதம் நீதி ஆகி நின்ற |
– |
(பலவகைப்பட்ட) ருக்குக்கன் சேர்ந்திருக்கிற வேதங்களால் பிரதி பாதிக்கப்படுகையை ஸ்வபாவமாகவுடையனான |
| நின் மலா |
– |
பரிசுத்தனே |
| கரு கலந்த |
– |
பொன்னோடு சேர்ந்த |
| காளமேகம் மேனி |
– |
காளமேகம்போன்ற திருமேனியையுடைய |
| ஆய |
– |
கண்ணபிரானே! |
| நின் பெயர் |
– |
உன் திருநாமஙக்ளை |
| ஒழிவு இலாது |
– |
நிரந்தரமாக |
| உரு கலந்து உரைக்கும் ஆறு |
– |
திவ்யமங்களவிக்ரஹத்தோடு சேர்ந்து அநுஸந்திக்கும் வகையை |
| உரைசெய் |
– |
அருளிச் செய்யவேணும். |
திருக்கலந்து சேரு மார்ப தேவ தேவ தேவனே இருக்கலந்த வேத நீதி யாகி நின்ற நின்மலா
பலவகைப் பட்ட ருக்குகள் சேர்ந்து இருக்கும் வேதத்தில் பிரதிபாதிக்கப்படும் பரி சுத்தமானவனே
கருக்கலந்த காள மேக மேனி யாய நின் பெயர் உருக் கலந்து ஒழிவிலாது உரைக்குமாறு உரை செயே –
பொன்னோடு சேர்ந்த திவ்ய மங்கள விக்ரகத்தோடு சேர்ந்து உனது திரு நாமங்களை நிரந்தரமாக அனுசந்திக்கும்
வகையை அருளிச் செய்ய வேணும்
சரீர சம்பந்தம் தீரும் வரை திரு நாம சங்கீர்த்தனம் பண்ணும் படியை அருளிச் செய்யப் பிரார்த்திக்கிறார் –
வேர் சூடுவார் மண் பற்றை உகக்குமா போலே சரம விமல சரீரத்தை விரும்பி அனுபவிப்பான் அன்றோ
ஆக அந்திம சமயம் வரை உனது திவ்ய மங்கள விக்ரஹத்தை அனுபவித்துக் கொண்டே
திரு நாம சங்கீர்த்தனம் பண்ணிக் கொண்டே இருக்க அருளுவாய் என்கிறார்-
ஆழ்வார் தம்முடைய சரீரபந்தத்தை அறுத்து தந்தருள வேணுமென்று எம் பெருமானைப் பிரார்த்தித்தாலும்
அவன் இப்போதே அது செய்யமாட்டானே; இந்த சரீரத்தோடே இவரைச் சிறிது காலம் வைத்து
அநுபவிக்க விருப்பமுடையவனாதலால்
‘வேர்சூடுவார் மண்பற்றை உகுக்குமாபோலே’ இந்த ப்ராக்ருத சரீரத்தையே மிகவும் விரும்பியிருப்பவனிறே;
அதனால், ‘ஆழ்வீர்! நீர் பிரார்த்திக்கிறபடி சரீரபந்தத்தை இப்போதே அறுத்துத் தர முடியாது;
அதற்கு ஒரு காலவிசேஷம் உண்டு; பொறுத்திரும்’ என்ன;
அப்படியாகில் தேவரீருடைய மேன்மைக்கும் நீர்மைக்கும் வடிவழகுக்கும் வாசகமான திருநாமங்களையாவது
அடியேன் இடைவிடாது அநுஸந்தித்துக் கொண்டிருக்கும்படி அருள்புரிய வேணுமென்று பிரார்த்திக்கிறார்.
இருக்கு+கலந்த = இருக்கலந்த; “
சங்கு – கதை, சங்கதை” போல.
மூன்றாமடியில், ஆய! என்பது ‘ஆயன்’ என்பதன் விளி.
ஹிரண்யவர்ணையான பிராட்டி சேர்ந்த கரிய திருமேனிக்குக் கருக்கலந்த காளமேகத்தை ஒப்புச் சொல்லிற்று ஒக்கும்.
கரு- பொன்; மின்னலைச் சொல்லிற்றாகக் கொள்க.
கரு என்று சர்ப்பத்தைச் சொல்லிற்றாகவுமாய்;
நீர்நிறைந்த காளமேகமென்றபடி.
உருக்கலந்து = திருநாம ஸங்கீர்த்தகம் பண்ணும்போது திவ்யமங்கள விக்ரஹாநுபவம் நடைபெறவேண்டுமென்ற ஆசை விளங்கும்.
———————
கடுங் கவந்தன் வக்கரன் கரன் முரன் சிரமவை
இடந்து கூறு செய்த பல் படைத் தடக்கை மாயனே
கிடந்து இருந்து நின்றி யங்கு போது நின்ன பொற் கழல்
தொடர்ந்து வீள்விலாத தோர் தொடர்ச்சி நல்க வேண்டுமே -104-
பதவுரை
| கடு |
– |
க்ரூரனான |
| கவந்தன் |
– |
கபந்ததென்ன |
| வக்கரன் |
– |
தந்தவக்த்ரனென்ன |
| கரன் |
– |
கரனென்ன |
| முரன் சிறை அவை |
– |
முரனென்ன (இவர்களுடைய தலைகளை |
| இடந்து கூறு செய்த |
– |
சிந்நபிந்நமாக்கினவனும் |
| பல்படை தடகை |
– |
பலவகைப்பட்ட ஆயுதங்களைப் பெரிய திருக்கைகளிலே உடையனுமான |
| மாயனே |
– |
பெருமானே! |
| கிடந்து இருந்து நின்று இயங்குபோதும் |
– |
படுக்கை இருக்கை நிற்கை திரிகை முதலிய ஸர்வாவஸ்தைகளிலும் |
| நின்ன |
– |
தேவரீருடைய |
| பொன்கழல் |
– |
அழகிய திருவடிகளையே |
| தொடர்ந்து வீள்வு இலாதது ஓர் தொடர்ச்சி |
– |
இடைவிடாது அதுவர்த்தித் திருக்கையாகிற ஒரு தொடர்பை |
| நலக் வேண்டும் |
– |
தந்தருளவேணும். |
சர்வ அவஸ்தைகளிலும் அவனது சிந்தை தொடர பிரார்த்திக்கிறார் –
ஸர்வாவஸ்தைகளிலும் எம்பெருமானுடைய திருவடிகளிலேயே நிரந்தர சிந்தனை நடைபெறவேணுமென்று பிரார்த்திக்கிறார்.
(கிடந்திருந்து இத்யாதி.) ****** என்ற ச்லோகம் இங்கு அநுஸந்திக்கத்தக்கது.
படுத்துக்கொண்டிருக்கும் போதும் உட்கார்ந்திருக்கும்போதும் நிற்கும்போதும் திரியும் போதும்
ஆக எல்லா வவஸ்தைகளிலும் தேவரீருடைய பாதாரவிந்த சிந்தனையே மேன்மேலும் கடந்து வருமாறு
அருள் புரியவேணு மென்று பிரார்த்தித்தாராயிற்று.
—————–
மண்ணை உண்டு உமிழ்ந்து பின்னிரந்து கொண்டு அளந்த மண்
கண்ணுள் அல்லது இல்லை என்று வென்ற காலமாயினாய்
பண்ணை வென்ற வின் சொல் மங்கை கொங்கை தங்கு பங்கயக்
கண்ண ! நின்ன வண்ண மல்ல தில்லை எண்ணும் வண்ணமே -105-
பதவுரை
| மண்ணை உண்டு |
– |
பூமியைப் பிரளயகாலத்திலே திருவயிற்றில் வைத்து நோக்கியும் |
| பின் உமிழ்ந்து |
– |
பிரளயம் கழிந்த பிறகு வெளிப்படுத்தியும் |
| இரந்துகொண்டு |
– |
(மஹாபலியிடத்தில்) பிக்ஷையேற்றுப் பெற்று |
| அளந்து |
– |
அளந்துகொண்டும். |
| மண் கண்ணுள் அல்லது இல்லை என்று |
– |
‘இவ்வுலகமானது நமது கடாக்ஷத்தாலன்றி ஸத்தை பெற்றிருக்கமாட்டாது’ என்று திருவுள்ளம்பற்றி |
| வென்று |
– |
(அவ்வுலக முழுவதையும்) ஸ்வாதீகப்படுத்திக் கொண்டும் போந்த |
| காலம் ஆயினும் |
– |
ஸர்வகால நிர்வாஹகனே! |
| பண்ணை வென்ற இன்சொல் மங்கை |
– |
பண்களைத் திரஸ்கரித்த இனிமையான பேச்சையுடைய பிராட்டியினுடைய |
| கொங்கை |
– |
திருமுலைத்தடத்திலே |
| தங்கு |
– |
பிரியாது வாழ்கிற |
| பங்கயக்கண்ண |
– |
புண்டரீகாக்ஷனே! |
| நின்ன வண்ணம் அல்லது |
– |
உன் வடிவழகுதவிர |
| எண்ணும் வண்ணம் இல்லை |
– |
தியானிக்கக்கூடிய வடிவு மற்றொன்றுமில்லை. |
மண்ணை உண்டு உமிழ்ந்து பின்னிரந்து கொண்டு அளந்த மண் கண்ணுள் அல்லது இல்லை என்று
இந்த உலகம் நமது கடாஷத்தால் அன்றி சத்தை பெறாது என்று திரு உள்ளம் கொண்டு
வென்ற காலமாயினாய்
உலகம் எல்லாம் ஸ்வ அதீநம் பற்றிக் கொண்டு போந்த சர்வ கால நிர்வாஹகனாய்
பண்ணை வென்ற வின் சொல் மங்கை கொங்கை தங்கு பங்கயக் கண்ண ! நின்ன வண்ண மல்ல தில்லை எண்ணும் வண்ணமே
உனது திவ்ய மங்கள விக்ரஹ அனுபவம் மட்டுமே நெஞ்சால் த்யானித்து இருப்பேன் என்கிறார்-
அடியேன் பிரார்த்தித்தபடி நீ அருள்வாய், அருளாதொழிவாய்;
என்னுடைய அத்யவஸாயம் எப்படிப்பட்டது தெரியுமோ?
உன்னுடைய திவ்ய மங்கள விக்ரஹகத்தின் அநுபவமல்லது வேறென்றுமில்லை.
நெஞ்சில் நடவாதென்று தமது உறுதியை வெளியிடுகிறார்.
———————
கறுத்து எதிர்ந்த கால நேமி காலனோடு கூடவன்று
அறுத்த வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்
தொறுக்கலந்த ஊனம் அஃது ஒழிக்க வன்று குன்றம் முன்
பொறுத்த நின் புகழ்கு அலாலோர் நேசம் இல்லை நெஞ்சமே -106-
பதவுரை
| அன்று |
– |
முன்னொரு காலத்து |
| கறுத்து எதிர்ந்த காலநேமி |
– |
கோபித்து எதிரியிட்ட காலநேமியானவன் |
| காலனோடு கூட |
– |
யமலோகம் போய்ச்சேரும்படியாக |
| அறுந்த |
– |
அவன் தலையை அறுத்த |
| ஆழிசங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய் |
– |
பஞ்சாயுதாழ்வார்களை |
| ஏந்தினாய் |
– |
திருக்கையிலே அணிந்து கொண்டிருக்கும் பெருமானே! |
| தொறு கலந்த ஊனம் அஃது |
– |
பசுக்களுக்கு நேர்ந்த அப்படிப்பட்ட ஆபத்தை |
| அன்று ஒழிக்க |
– |
அப்போதே போக்குவதற்காக |
| முன் |
– |
எல்லாருடையவும் கண்முன்னே |
| குன்றம் பொருத்த நீ |
– |
கோவர்ததனமலையை (குடையாகத்) தூக்கினெயேடுத்த தேவரீருடைய |
| புகழ்க்கு அலால் |
– |
திருக்குணங்களுக்குத் தவிர (மற்றெவ்விஷயத்திலும்) |
| நெஞ்சம் |
– |
எனது நெஞ்சுக்கு |
| ஓர் கேசம் இல்லை |
– |
சிறிதும் ப்ரதியில்லை. |
கறுத்து எதிர்ந்த கால நேமி காலனோடு கூடவன்று அறுத்த வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்-
தொறுக்கலந்த ஊனம் அஃது ஒழிக்க வன்று
பசுக்களுக்கு நேர்ந்த அப்படிப்பட்ட ஆபத்தை அப்போதே போக்க
குன்றம் முன் பொறுத்த நின் புகழ்கு அலாலோர் நேசம் இல்லை நெஞ்சமே-
எல்லோருடைய கண் முன்னே குன்றம் எடுத்து அருளிய சேஷ்டிதங்களை பேசி அனுபவிக்கிறார்-
திவ்ய சேஷ்டிதங்களையே புகழ்ந்து பேசுவதிலேயே அடியேனுடைய அபிநிவேசம் பெருகுகிறது என்கிறார் –
தேவரீருடைய திவ்யசேஷ்டிதங்களைப் புகழ்ந்து பேசுவதிலேயே அடியேனுக்கு அபிநிவேசம் பெருகுகின்ற தென்கிறார்.
காலநேமியை முடித்தருளினபடியையும்
கோவர்த்தனமலையைக் குடையாக வெடுத்துக் கோநிரையைத் காத்தபடியையும்
கூறிப் புகழ்ந்தாராய்ந்து.
———————
காய் சினத்த காசி மன்னன் வக்கிரன் பவுண்டிரன்
மாசினத்த மாலிமான் சுமாலி கேசி தேனுகன்
நாசமுற்று வீழ நாள் கவர்ந்த நின் கழற்கலால்
நேச பாசம் எத் திறத்தும் வைத்திடேன் எம் ஈசனே -107-
பதவுரை
| எம் ஈசனே |
– |
எம்பெருமானே! |
| காய் சினந்த காசிமன்னன் |
|
மஹா கோபியான காசிராஜாவும் |
| வக்கரன் |
– |
(ருக்மினி விவாஹ காலத்தில் வந்து போர் செய்த) தந்தவக்த்ரனும் |
| பவுண்டிரன் |
– |
பௌண்ட்ரக வாஸுதேவனும் |
| மா சினந்த மாலி |
– |
அதிகோபிஷ்டனான மாலியும் |
| மா கமாலி |
– |
மஹானான ஸுலிமாலியும் |
| கேசி |
– |
(குதிரை வடிவங்கொண்டு கொல்ல வந்த) கேசியும் |
| தேனுகன் |
– |
தேநுகாஸுரனும் |
| நாசம் உற்று வீழ |
– |
துக்கத்தையநுபவித்து மாண்டு போம்படியாக |
| நாள் கவர்ந்த |
– |
(அவர்களுடைய) வாழ்நாளை முடித்த |
| நின் |
– |
தேவரீருடைய |
| கழற்கு அலால் |
– |
திருவடிகளுக்குத் தவிர |
| எத்திறந்தும் |
– |
வேறு எவ்விஷயத்திலும் |
| நேச பாசம் |
– |
ஆசாபாசத்தை |
| வைத்திடேன் |
– |
வைக்கமாட்டேன் |
நேச பாசம் -ஆசா பாசம்-
————-
கேடில் சீர் வரத்தனாய்க் கெடும் வரத்தயனரன்
நாடினோடு நாட்டம் ஆயிரத்தன் நாடு நண்ணினும்
வீடதான போகமெய்தி வீற்று இருந்த போதிலும்
கூடுமாசை யல்லதொன்று கொள்வனோ குறிப்பிலே -108-
பதவுரை
| கேடு இல் சீர் வரத்தன் ஆம் அயன் |
– |
அழிவில்லாத ஸம்பத்தை யுடையவனாம்படி வரம்பெற்றவான பிரமனென்ன |
| கெடும் வரத்து அரன் |
– |
எல்லாவற்றுக்கும் முடிவை உண்டு பணிணுவனாக வரம் பெற்ற சிவனென்ன (இவர்களுடைய) |
| நாடினோடு கூட |
– |
நாடுகளோடு கூட |
| கூடும் ஆசை அல்லது |
– |
எம்பெருமானோடு சேரவேணும் சேரவேணும் என்று மநோரதத்திருக்கை தவிர |
| நாட்டம் ஆயிரத்தன் நாடு |
– |
ஆயிரங்கண்ணுடைய இந்திரனுடைய நாட்டையும் |
| கண்ணீரும் |
– |
அடையப்பெறுவதாயிருந்தாலும் |
| வீடு ஆனஅது போகம் எய்தி வீற்றிருந்த போதிலும் |
– |
மோக்ஷமாகிய அவ்வநுபவத்தையே பெற்று (ஆநந்தமயமாய்) வீற்றிருக்க பெறுவதானாலும் |
| ஒன்று குறிப்பில் கொள்வனோ |
– |
மற்றொன்றை நெஞ்சினுள் நினைப்பேனோ. |
கேடில் சீர் வரத்தனாய்க் கெடும் வரத்தயனரன்
அழிவில்லாத சம்பத்தை உடையவனாம் படி வரம் பெற்ற பிரம்மனும் –
எல்லா வற்றுக்கும் முடிவு உண்டு பண்ணுவதாக வரம் பெற்ற சிவனும்
நாடினோடு நாட்டம் ஆயிரத்தன் நாடு நண்ணினும்
இவர்களின் நாடுகளின் கூட 1000 கண் கொண்ட இந்தரனின் நாட்டையும் நண்ணினும்
நாட்டம் என்று கண் -நாட்டம் ஆயிரத்தன் -ஆயிரம் கண்ணன் இந்திரன்
வீடதான போகமெய்தி வீற்று இருந்த போதிலும் கூடுமாசை யல்லதொன்று கொள்வனோ குறிப்பிலே
அவனை அனுபவிப்பதை விட அவனைப் பற்றும் மநோ ரதமே சிறந்தது என்கிறார் –
எம்பெருமானைக் கிட்ட அனுபவிப்பதிலுங்காட்டில் அவ்வநுபவத்தைப் பற்றின மநோரதமே நித்யமாய்ச் செல்லுமாகில்
அதுவே சிறக்குமென்பது ஆழ்ந்த பக்தியுடையவர்களுடைய ஸித்தாந்தம்;
அதனை யருளிச் செய்கிறார் இப்பாட்டில்.
நாட்டம் என்று கண்ணுக்குப் பெயர்;
நாட்டமாயிரததன் என்று ஸஹஸ்ராக்ஷனுடைய இந்திரனுக்கு காமதேயமாகிறது.
இதனையுணராது, “காடினோடு நாட்டமாய் இரத்தனோடு கண்ணிலும்” என்று
ஓதுமவர்களுடைய ஞானப்பெருக்கை என் சொல்வோம்.
———————
சுருக்குவாரை இன்றியே சுருக்கினாய் சுருங்கியும்
பெருக்குவாரை இன்றியே பெருக்கமெய்து பெற்றியோய்
செருக்குவார்கள் தீக் குணங்கள் தீர்த்த தேவ தேவன் என்று
இருக்கு வாய் முனிக் கணங்கள் ஏத்த யானும் ஏத்தினேன் -109-
பதவுரை
| சுருங்குவாரை இன்றியே |
– |
சுருங்கச்செய்வதற்கு ஹேதுவான கருமமம் முதலியவை ஒன்றுமில்லாமலே |
| சுருங்கினாய் |
– |
(ஸ்ரீவாமனாகச்) சுருங்கின பெருமானே! |
| சுருங்கியும் பெருக்கு வாரை இன்றியே |
– |
அப்படிக் குறுகினபின்னும் பெருகச் செய்வதற்கு ஹேதுவான கருமம் முதலியவை ஒன்றுமில்லாமல் |
| பெருக்கம் எய்து |
– |
(த்ரிவிக்ரமனாகத்) திருவளர்த்தி |
| பெற்றியோய் |
– |
பெற்ற பெருமானே |
| செருக்குவார்கள் |
– |
அஹங்காரிகளாய்த் திரிந்த மஹாபலி போல்வாருடைய |
| தீ குணங்கள் |
– |
அஹங்கார மமகாரங்களாகிற தீயகுணங்களை |
| தீர்த்த |
– |
தொலைத்தருளின |
|
தேவதேவன்! தேவாதிதேவனே! |
||
| என்று |
– |
இவ்வாறு பல ஸம்போதகங்களையிட்டு |
| இருக்குவாய் முனி கணங்கள் ஏந்த |
– |
வேதமோதும் வாயையுடையரான மஹரிஷிகளின் திரள் துதிக்க (அதைக்கண்டு) |
| யானும் ஏத்தினேன் |
– |
அடியேனும் துதித்தனித்தனை. |
சுருக்குவாரை இன்றியே
சுருங்க செய்ய ஸ்ரீ வாமனனாய் சுருங்கினாய்
சுருங்கியும் பெருக்குவாரை இன்றியே பெருக்கமெய்து பெற்றியோய்
திரிவிக்ரமனனாய் பெருக்கமும் எய்தினாய்
செருக்குவார்கள் தீக்குணங்கள் தீர்த்த தேவ தேவன் என்று
அஹங்காரம் கொண்டு இருந்த மகா பலி போல்வாரின் அஹங்காரம் மமகாரம் போன்ற தீய குணங்களைத் தீர்த்தாய்
இருக்கு வாய் முனிக் கணங்கள் ஏத்த யானும் ஏத்தினேன்
வேதம் ஓதும் வாய் உடைய முனிவர்கள் துதிக்க அத்தைக் கண்டு நானும் துதித்தேன் –
நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன்-
எப்படி ஊராம் இலைக்கக் குருட்டாம் இலைக்கும் என்னும் அப்படி யானும் சொன்னேன் அடியேன்
மற்றி யாது என்பேனே-திரு விருத்தம்
இரைத்து நல் மேல் மக்கள் ஏத்த நானும் ஏத்தினேன் –திருவாய் மொழி
எம்பெருமானே! உன்னுடைய வடிவழகு, திருக்கல்யாணகுணங்கள், திவ்ய சேஷ்டிதங்கள் முதலியவற்றைப்பற்றி
நான் பேசுவதெல்லாம் நானாகவே கண்டறிந்து பேசுவதல்ல, சிற்றறிவினனாகிய எனக்கு ஒன்றும் தெரியாது.
வைதீக புருஷர்கள் ஸ்தோத்ரம் பண்ண ககண்டு காணும், அநுவாதரூபமாக ஏதோ பேசினே னுத்தனை என்று
ஸநச்யானுஸந்தாநம் பணிக்கொள்ளுகிறார்.
“எப்படி ஊராமிலைக்கக் குருட்டாமிலைக்கு மென்னும் அப்படியானுஞ் சொன்னேன், அடியேன் மாற்றியாதென்பனே” (திருவிருத்தம்)
“இரைத்து நல்ல மேன்மக்களேத்த யானுமேத்தினேன்” (திருவாய்மொழி.) என்ற நம்மாழ்வாரருளிச் செயல்களுங் காண்க.
———————————
தூயனாயும் அன்றியும் சுரும்பு உலாவு தண் துழாய்
மாய நின்னை நாயினேன் வணங்கி வாழ்த்துமீதெலாம்
நீயு நின் குறிப்பினில் பொறுத்து நல்கு வேலை நீர்ப்
பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை வண்ணனே -110-
பதவுரை
| கரும்பு உலாவு |
– |
வண்டுகள் உலாவப்பெற்ற |
| தண் துழாய் |
– |
குளிர்ந்த திருத்துழாய் மாலையையுடைய |
| மாய! |
– |
ஆச்சர்ய சந்தியுக்தனான பெருமானே! |
| நாயினேன் |
– |
நீசனான அடியேன் |
| தூயனாயும் |
– |
பரிசுத்தனாகவோ |
| அன்றியும் |
– |
பரிசுத்தனல்லாதவனாகவோ |
| நின்னை |
– |
தேவரீரை |
| வணங்கி |
– |
ஸேவித்து |
| வேலை நீர் பாயலோடு |
– |
திருப்பாற்கடலாகிற படுக்கை யோடுங்கூட |
| பக்தர் சித்தர் |
– |
பக்தர்களுடைய ஹ்ருதயத்திலே |
| மேய |
– |
குடியிருக்கின்ற |
| வேலைவண்ணனே! |
– |
கடல்வண்ணனே! |
| வாழ்த்தும் இது எலாம் |
– |
துதிப்பதாகிற இதனையெல்லாம் |
| நீயும் |
– |
(ஸர்வஸஹிஷ்ணுவான) தேவரீரும் |
| நின் குறிப்பினில் பொறுத்து |
– |
திருவுள்ளத்திலே க்ஷமித்திருள் |
| நல்கு |
|
அநுக்ரஹம் செய்ய வேணும். |
தூயனாயும் அன்றியும்
பரிசுத்தனாகவோ அல்லாதானாகவோ
சுரும்பு உலாவு தண் துழாய் மாய –
வண்டுகள் உலாவப் பெற்ற குளிர்ந்த திரு துழாய் மாலையை உடைய பெருமானே
நின்னை நாயினேன் வணங்கி வாழ்த்துமீதெலாம் நீயு நின் குறிப்பினில் பொறுத்து நல்கு
திரு உள்ளத்தில் ஷமித்து அருளி அனுக்ரஹம் செய்ய வேணும்
வேலை நீர்ப் பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை வண்ணனே
திருப் பாற் கடல் படுக்கை உடன் கூட பக்தரின் நெஞ்சில் குடி கொண்டு இருக்கும் கடல் நிற வண்ணன்
தூயனாயும் அன்றியும் -அஹங்காரம் மமகாரம் நிறைந்து அசுத்தனாகவும்
தேவரை பரம பரிசுத்தராக அனுசந்திப்பதால் சுத்தனாகவும் இருக்கிறேன்
தூயனாயும் அன்றியும் = என்னை ஒருவிதத்திலே பார்த்தால் பரிசுத்ததென்னலாம்;
மற்றொருவிதத்திலே பார்த்தால் அபரிசுத்தனென்றும் சொல்லலாம்;-
தேவரீரைப் பரமனை பரிசுத்தாக அநுஸந்திப்பதே எனக்கு சுத்தியாதலால் அந்த விதத்தாலே அடியேன் சுத்தனாகவுமாம்;
அஹங்கார மமகாரங்களால் நிறைந்திருக்றேனாதலால் அந்த விதத்தாலே அபரிசுத்தனாகவுமாம்;
சுத்தனாயோ அசுத்தனாயோ தேவரீரை வணங்கித் துதித்துவிட்டேன்; இனி க்ஷமிப்பதே நலம்.
————————————————
வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறில் போர்
செய்து நின்ன செற்றத் தீயின் வெந்தவர்க்கும் வந்து உனை
எய்தலாகும் என்பர் ஆதலால் எம்மாய நாயினேன்
செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே -111-
பதவுரை
| நின்னை வைது |
– |
தேவரீரை நிந்தித்து |
| வல்லஆ பழித்தவர்க்கும் |
– |
சக்தியுள்ளவரைக்கும் அபவாதங்களை சொன்ன சிசுபாலாதிகளுக்கும் |
| மாறு இல்போர் செய்து |
– |
ஒப்பில்லாத யுத்தம்பண்ணி |
| நின்ன செற்றும் |
– |
தேவரீருடைய |
| தீயில் |
– |
கோபாக்நியில் |
| வெந்தவர்க்கும் |
– |
வெந்துபோன வாலி முதலானோர்க்கும் |
| உனைவந்து எய்தல் ஆகும் என்பர் |
– |
தேவரீரைக் கிட்ட உஜ்ஜீவிக்கப்பெறலாகுமென்று (மஹரிஷிகள்) சொல்லாநின்றனர்; |
| ஆதலால் |
– |
ஆகையாலே |
| எம் மாய! |
– |
எம்பெருமானை! |
| ஞானம் நாதனை |
– |
ஸர்வலோக ஸம்ரக்ஷகனே! |
| நாயினேன் |
– |
அடியேன் பண்ணின |
| செய்த குற்றம் |
– |
குற்றங்களை |
| நற்றம் ஆகவே கொள் |
– |
குணமாகவே கொள்ளல் வேண்டும். |
வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும்
தேவரீரை நிந்தித்து சக்தி உள்ளவரையில் அபவாதங்கள் சொன்ன சிசுபாலர் போல்வாருக்கும்
மாறில் போர் செய்து
ஒப்பில்லா யுத்தம் பண்ணி
நின்ன செற்றத் தீயின்
உனது கோப அக்னியில்
வெந்தவர்க்கும்
வாலி போல்வார்
வந்து உனை எய்தலாகும் என்பர்
உன்னைக் கிட்டி உஜ்ஜீவிக்கலாம் என்று மக ரிஷிகள் சொல்லுவார்கள்
ஆதலால் எம்மாய நாயினேன் செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றே செய்தார் போலே
அவனது வாத்சல்யத்தால் பொறுத்து நல்கு -என்று பிரார்த்திப்பது அபசாரம் என்று
நாயினேன் செய்த குற்றம் நற்றமாகவே கொள்-என்கிறார்
கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான்
காடுகள் சாதியாயும் ஆகப் பெற்றான் பற்றி உரல் இடை ஆப்பும் உண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சு கொலோ
என்று ஆண்டாள் வயிறு எரிந்து பேசும் படி தூஷித்தவர்களும் ப்ராப்தரானார்கள்
அதே போலே பிரதிகூலனான அடியேன் செய்யும் குற்றங்களை போக்யமாக கொண்டு அருள வேணும் என்கிறார்
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளையே வையும் சேட்பால் பலம் பகைவன் சிசுபாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை அறிவாரே அறிந்துமே
வைதல் -இல்லாததை சொல்லி தூஷிப்பது
பழித்தல் -உள்ளதை இழிவாக சொல்லி தூஷிப்பது-
தம்முடைய அபசாரத்தைப் பொறுத்தருளும்படி பிரார்த்தித்தார் கீழ்பாட்டில்;
எம்பெருமானுடைய வாத்ஸல்யமென்னும் குணவிசேஷத்தை ஆராய்ந்து பார்த்தார்;
என்னடியாரது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்று குற்றத்தையும் குணமாகக் கொள்ளுகிற
எம்பெருமானுடைய திருவுள்ளம் புண்படும்படி “பொறுத்துநல்கு” என்று பிரார்த்திப்பது மஹாசாரமென்று அநுதபித்து,
அவ்வெம்பெருமானுடைய வாத்ஸல்ய குணத்துக்குத் தகுதியாயப் பேசுகிறார். –
“காயினேன் செய்த குற்றம் கற்றமாகவே கொள்” என்கிறார்.
“கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான் காடுவாழ் சாதியுமாகப் பெற்றான்.
பற்றியுரவிடையாப்பு முண்டான் பாவிகாள் உங்களுக்கேச்சுக்கொலோ?” என்று ஆண்டாள் வயிறெரிந்து பேசும்படியாக
தேவரீரை விசேஷமாகத் தூஷித்து தேவரீரோடே எதிரம்புகோத்தும் போர்புரிந்து
கடைசியாக தேவரீருடைய கோபத்துக்கு இலக்காகி நீறாயொழிந்த சிசுபால வாலிப்ரப்ருதிகளும்
தேவரீருடைய பரதத்தைப் பராப்தரானார்களென்று மஹர்ஷிகள் சொல்லிவைத்திருக்கிறார்கள்:
மஹா த்ரோஹிகளான அவர்களுடைய அபராதங்களைப் பொறுத்தருளின தேவரீர்.
அவர்களைப்போலே ப்ரதிகூலனல்லாத அடியேனுடைய குற்றங்களையும் பொறுத்தல் விசேஷமென்!
ஆச்ரிதருடைய குற்றங்களை சுற்றமாகக் கொள்வதன்றோ சிறப்பு என்கிறார்.
வைதுவல்லவா பர்த்தவனான சிசுபாலனுக்கு மோக்ஷம் கிடைத்ததென்பதைப் பராசரர் சொல்லிவைத்தார், “
***“ என்பது ஸ்ரீவிஷ்ணுபுராணம்.
“கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும் சேட்பால் பழம்பகைவன் சிசுபாலன்,
திருவடி தாட்பாலடைந்த தன்மையறிவாரையறிந்துமே“ என்றார் நம்மாழ்வாரும்.
மாறில் போர் செய்து செற்றத்தீயில் வெந்தவனான வாலிக்கு மோக்ஷ ப்ராப்தியை வால்மீகிமுனிவர் கூறினர், “***“ என்பது ஸ்ரீராமாயணம்.
வைதலாவது என்ன? பழித்தலாவது என்ன? எனில்,
இல்லாத செய்திகளைச் சொல்லி தூஷிப்பது வைதல்,
உள்ள செய்திகளையே இழிவாகச் சொல்லி தூஷிப்பது பழித்தல் என்று கொள்க.
—————————————
வாள்களாக நாள்கள் செல்ல நோய்மை குன்றி மூப்பெய்தி
மாளு நாளதாதலால் வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே
ஆளதாகும் நன்மை என்று நன்கு உணர்ந்த தன்றியும்
மீள்விலாத போகம் நல்க வேண்டும் மால பாதமே –112-
பதவுரை
| நாள்கள் |
– |
தினங்களானவை |
| வாள்கள் ஆகி செல்ல |
– |
(நமது ஆயுளை அறுக்கும்) வாள்கள்போன்று கழிய |
| நோய்மை |
– |
பலவகை வியாதிகளாலே |
| குன்றி |
– |
உடல் பலக்குறைபட்டு |
| மூப்பு எய்தி |
– |
கிழத்தனமும் வந்து சேர்ந்து |
| மாளும் நாள் அது |
– |
மரணமடைவதோர் நாள் நெருங்கிவிட்டது; |
| ஆதலால் |
– |
ம்ருத்யுகாலம் குறுகிவிட்டபடியால் |
| என் நெஞ்சமே |
– |
எனது மனமே! |
| ஆனது நன்மை ஆகும் என்று |
– |
எம்பெருமானுக்கு ஆட்பட்டிருப்பதே நன்மையென்று |
| நன்கு உணர்ந்து |
– |
த்ருடமான அத்யவஸாயங்கொண்டு |
| வணங்கி வாழ்த்து |
– |
(அவ்வெம்பெருமானைத்) தொழுது ஏத்துவாயாகா; |
| அது அன்றியும் |
– |
அதற்கு மேலே |
| மால பாதமே |
– |
அப்பெருமானுடைய திருவடிகளே |
| மீள்வு இலாத போகம் |
– |
மறுபடி திரும்பி வருதலில்லாத நித்யபோகத்தை |
| நல்க வேண்டும் |
– |
அளிக்கக்கடவது |
வாள்களாக நாள்கள் செல்ல
நமது ஆயுளை அறுக்கும் வாள்கள் போலே திங்கள் கழிய
நோய்மை குன்றி மூப்பெய்தி மாளு நாளதாதலால் வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே-ஆளதாகும் நன்மை
எம்பெருமானுக்கு ஆட்பட்டு இருப்பது நன்மை என்று
என்று நன்கு உணர்ந்த தன்றியும் மீள்விலாத போகம் நல்க வேண்டும்
மால பாதமே மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
நாளைக்கு தொழுவோம் என்று இராமல் இப்பொழுதே வணங்கி வாழ்த்த வேண்டும் –
அடிமை செய்வது தானே புருஷார்த்தம் என்ற நினைவுடன்-
“மின்னின்னிலையில மன்னுயிராக்கைகள்”என்றபடி
நமது வாழ்நாள் இன்ன போது முடியுமென்று தெரியாததாகையால் வாழ்நாளுள்ள வரையில்
எம்பெருமானை வணங்கி வாழ்த்தவேணுமென்று தமது திருவுள்ளத்தைக் குறித்து உபதேசிக்கிறார்.
நாள்களோ கடுங்குதிரைபோல் விரைந்தோடிக்கொண்டேயிருக்கின்றன; ‘
ஆயுஸ்ஸை அறுக்கிற வாள்களோ இவை என்னும்படியாக நாள்கள் பழுதே கழியாநிற்க,
யௌவநப் பருவத்திலுண்டாகக் கூடிய ரோகங்களாலே உடல் குன்றிப்போய் இடிவிழுந்தாற்போல்
திடீரென்று கிழத்தனமும் வந்து சேர்ந்து செத்துப்போகும் நாள் அணுகிவிட்டது;
ஆயுஸ்ஸு அஸ்திரமாகையாலும், உள்ள ஆயுஸ்ஸில் விக்கங்கள் பலவு முண்டாகையாலும்,
‘நாளைக்குத் தொழுவோம்’ என்றிராமல் இப்போதே திருவடிகளிலே வணங்கி வாழ்த்தப்பாராய் நெஞ்சே!;
ஆனது நன்மையாகும் என்று நன்கு உணர்ந்து வணங்கி வாழ்த்து என்று அந்வயம்.
போதைப் போக்குவதற்காகவன்றியே ‘அடிமைசெய்வதுதான். புருஷார்த்தம் என்கிற
அத்யாவசாய த்வரையுடனே வணங்கி வாழ்த்து’ என்கிறார்.
——————
சலம் கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன் வெண்டலைப்
புலன் கலங்க வுண்ட பாதகத்தன் வன் துயர் கெட
அலங்கல் மார்பில் வாச நீர் கொடுத்தவன் அடுத்த சீர்
நலம் கொள் மாலை நண்ணும் வண்ணம் எண்ணு வாழி நெஞ்சமே -113-
பதவுரை
| நெஞ்சமே! |
|
என்மனமே |
| வாழி |
– |
உனக்குப் பல்லாண்டு, (நான் சொல்வதைக் குறிக்கோள் |
| சலம் கலந்த செம்சடை |
– |
கங்கை நீரோடு வடின சிவந்த ஜடையையுடைவனும் |
| கறுத்த கண்டன் |
– |
(விஷத்தினால்) கறுத்த கழுத்தையுடையனும் |
| புலன் கலங்க |
– |
ஸர்வ இந்திரியங்களும் கலங்குமாறு |
| வெண்தலை |
– |
வெளுத்துப்போன கபாலத்திலே |
| உண்ட |
– |
பிச்சைவாங்கியுண்டு ஜீவித்த |
| பாதகத்தான் |
– |
கோரமாதகியுள்ள சிவபிரானுடைய |
| வன்துயர்கெட் |
– |
வலிதான துக்கம் தீரும்படி |
| அலங்கல் |
– |
திருத்துழாய் மாலையையணிந்த |
| மார்வில் |
– |
திருமார்பினின்றும் |
| வாசம் நீர் |
– |
திவ்யபரிமளமான தீர்த்தத்தை |
| கொடுத்தவன் |
– |
அவனுக்கு ப்ரஸாதித்தருளி |
| அடுத்த சீர் |
– |
என்றும்விட்டு நீங்காத திருக்கல்யாண குணங்களையுடைய |
| நலம்கொள் மாலை |
– |
ஆநந்தமயனான எம்பெருமானை |
| கண்ணும் வண்ணம் |
– |
அணுகும் வழியாகிற அவனது திருவருளையே |
| எண்ணு |
– |
அநுஸந்தித்து |
சலம் கலந்த செஞ்சடை
கங்கை நீரோடு கூடின சிவந்த தலையுடன்
கறுத்த கண்டன் வெண்டலை
வெளுத்த கபாலத்திலே
புலன் கலங்க
சர்வ இந்த்ரியங்களும் கலங்குமாறு
வுண்ட பாதகத்தன்
பிச்சை எடுத்த ஜீவித கோர பாதகத்தன் -சிவன்
வன் துயர் கெட-அலங்கல் மார்பில்
திருத் துழாய் அணிந்த மார்பிலே
வாச நீர் கொடுத்தவன்
திவ்ய பரிமளமான தீர்த்தத்தை கொடுத்தவன்
அடுத்த சீர்
என்றும் விட்டு நீங்காத கல்யாண குணங்கள் உடைய
நலம் கொள் மாலை நண்ணும் வண்ணம் எண்ணு வாழி நெஞ்சமே
ஆனந்த மயமான மாலை அணுகும் வழியாகிற அவனது திருவடிகளை அனுசந்தித்து வாழி நெஞ்சமே –
————————
ஈனமாய எட்டும் நீக்கி ஏதமின்றி மீது போய்
வானமாள வல்லையேல் வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே
ஞானமாகி ஞாயிறாகி ஞாலம் முற்றும் ஓர் எயிற்றில்
ஏனமாய் இடந்த மூர்த்தி யெந்தை பாதம் எண்ணியே -114-
பதவுரை
| என் நெஞ்சமே |
– |
எனது மனமே |
| ஈனம் ஆய |
– |
(அறிவுக்குக்) குறைவை விளைக்கவல்ல |
| எட்டும் |
– |
அவித்யை. கருமம், வாஸகா, ருசி, பிரகிருதி ஸம்பந்தம், தாப த்ரயம் ஆகிய எட்டையும் |
| நீக்கி |
– |
போக்கி |
| ஏதம் இன்றி |
– |
ஸம்ஸார துக்கங்களெல்லாம் போய் |
| மீது போய் |
– |
(அர்சிராதி மார்க்கத்தாலே லீலா விபூதிக்கு) மேலே சென்று |
| வானம் |
– |
பரமபதத்தை |
| ஆளவில்லை நூல் |
– |
அநுபவிக்க வேண்டியிருந்தாயாகில் |
| ஞானம் ஆகி |
– |
ஆத்மஞானத்தை யளிப்பவனாயும் |
| ஞாயிறு ஆகி |
– |
ஸூரியனைப்போலே இந்திய ஞானத்தை அளிப்பவனாயும் |
| ஏனம் மூர்த்திஆய் |
– |
மஹா வராஹமூர்த்தியாய் |
| ஞாலம் முற்றும் |
– |
பூமி முழுவதையும் |
| ஓர் எயிறு |
– |
ஒரு கோட்டினாலே |
| இடந்த |
– |
அண்டபித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்தெடுத்து ரக்ஷித்த |
| எந்தை |
– |
எம்பெருமானது |
| பாதம் |
– |
திருவடிகளை |
| எண்ணி |
– |
சிந்தித்து |
| வணங்கி |
– |
நமஸ்கரித்து |
| வாழ்த்து |
– |
துதிக்கக்கடவை |
ஈனமாய எட்டும் நீக்கி
அறிவுக்கு பாதகம் விளைக்க வல்ல
அவித்யா கர்மம் வாசனை ருசி பிரகிருதி சம்பந்தம் தாப த்ரயம் ஆகிய எட்டையும் போக்கி
ஏதமின்றி மீது போய்
சம்சாரிக்க துக்கங்கள் எல்லாம் போக்கி -அர்ச்சிராதி கதியிலே சென்று
வானமாள வல்லையேல்
பரமபதத்தை அனுபவிக்க ஆசை கொண்டு இருந்தால்
வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே
நமஸ்கரித்து துதித்து
ஞானமாகி
ஆத்ம ஞானம் அளிப்பவனாயும்
ஞாயிறாகி
சூர்யன் போலே
ஞாலம் முற்றும் –எண்டறிய ஞானம் அளிப்பவனாயும்
ஆக அக இருளையும் புற இருளையும் போக்குபவனாயும்
ஓர் எயிற்றில் ஏனமாய் இடந்த மூர்த்தி யெந்தை பாதம் எண்ணியே
ஸ்ரீ வராஹ மூர்த்தியாய் பூமி முழுவதையும் ஒரு கோட்டினிலே பிரளய கடலில் இருந்த ஸ்ரீ பிராட்டியை
உத்தரித்து அருளினது போலே
நம்மையும் சம்சார கடலில் இருந்தும் உத்தரித்து அருள வேணும் என்கிறார் –
ஞானமாகி ஞாயிறாகி–ஸ்ரீ வராஹ மூர்த்தி தானே ஸ்ரீ ஞானப்பிரான் -சம்சாரக்கடலில் இருந்து
நம்மை உத்தரித்து அருளுவான்-
ஈனமாயவெட்டும் என்று- ஆத்மாவுக்குப் பொல்லாங்கைப் பண்ணுவதான
காமம், க்ரோதம்,கோபம், மோஹர், மதம்,மாத்ஸர்யம், அஜ்ஞானம்,அஸூயை என்ற எட்டும் சொல்லிற்றாகவுமாம்.
(இந்த நிர்வாகஹம் ஆசார்ய ஹ்ருதய வியாக்கியானத்திலுள்ள.)
காமமாவது- விரும்பின பதார்த்தத்தை அநுபவித்தே தீரவேண்டும்படியான அவஸ்தை
க்ரோதமாவது- அப்படி விரும்பின பதார்த்தம் கிடையாதொழியில் அணுகினவர்கள் மேல் பிறக்கும் சீற்றம்.
லோபமாவது- கண்ட பதார்த்தங்களிலும் அளவற்ற அபேக்ஷை.
மோஹமாவது- கார்யமின்னது அகார்யமின்னது என்று ஆராயமாட்டாமை.
மதமாவது- பொருள் முதலியவை கிடைப்பதனால் உண்டாகும் களிப்பு.
மாத்ஸர்யமாவது- பிறர்மினுக்கம் பொறாமையை அநுஷ்டாநபர்யந்தமாக நடத்துகை.
அஜ்ஞாகமாவது- இவற்றால் மேல்வருங்கெடுதியை நிரூபிக்கமாட்டாமை.
அஸூயையாவது- குணங்களிலே தோஷத்தை ஆவிஷ்கரிக்கை.
இவை யெட்டும் நீங்கினால் ஏதம் கழியுமாதலால் ஏதுமின்றி எனப்பட்டது.
ஞானமாகி ஞாயிறாகி = ஞானத்தையளித்து உள்ளிருளை நீக்குவானும் எம்பெருமானே;
ஸூர்யனை யுண்டாக்கி அவன் மூலமாக புறயிருளை யொழிப்பானும் எம்பெருமானே என்ற கருத்து உணரத்தக்கது.
ஆத்ம ஜ்ஞாநத்துக்கும் இந்த்ரிய ஜ்ஞாநத்துக்கும் நிர்வாஹகனென்றவாறு
ஸ்ரீ வாரஹமூர்த்திக்கு ஞானப்பிரான் என்ற திருநாமம் ப்ரஸித்தமாதலால்
அதனைத் திருவுள்ளம் பற்றியே ஞானமாகி ஞாயிறாகி என்கிறார்போலும்.
பிரளயக் கடலில் அழுந்திக் கிடந்த பூமிப்பிராட்டியை உத்தரித்தருளினதுபோலவே
ஸம்ஸாரக் கடலில் அழுந்திக்கிடக்கிற நம்மையும் உத்தரித்தள்வான் என்று அநுஸந்திக்க வேணுமென்பது தோன்ற “ஞாலமுற்றோமோரெயிற்றேனமாயிடந்தமூர்த்தி என்கிறார்.
———————
அத்தனாகி அன்னையாகி யாளும் எம்பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-
பதவுரை
| முத்தனார் |
– |
ஸம்ஸார ஸம்பந்தமில்லாதவரும் |
| முகுந்தனார் |
– |
மோக்ஷபூமியை அளிப்பவருமான பெருயாமன்; |
| ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து |
– |
ஞானமுடைமையால் ஒத்தும் யோநிபேதத்தால் ஒவ்வாமலுமிருக்கிற பலவகைப்பட்ட பிறவிகளைப்போக்கி |
| நம்மை ஆட்கொள்வாள் |
– |
நம்மை அடிமை கொள்வதற்காக |
| அத்தன் ஆகி |
– |
பிதாவாயும் |
| அன்னை ஆகி |
– |
மாதாவயும் |
| ஆளும் எம்பிரானும் ஆய் |
– |
அடிமைகொள்ளும் ஸ்வாமியாயும் |
| நம்முன் |
– |
நம்மிடத்திலே |
| புகுந்து மேவினார் |
– |
புகுந்து ஒரு நீராகப் பொருந்தினார்; (ஆனபின்பு) |
| ஏழை நெஞ்சமே |
– |
மதிகெட்ட மனமே |
| எத்தினால் |
– |
எதுக்காக |
| இடர் கடல் |
– |
துக்கஸாகரத்திலே |
| கிடத்தி |
– |
அழுந்திக் கிடக்கிறாய். |
ஸ்ரீ சரம ச்லோகார்த்தம் சொல்லும் பாசுரம்
இத்தையும் வார்த்தை அறிபவர் -பாசுரத்தையும் முமுஷுப்படி முடிவில் எடுத்துக் காட்டி அருளுகிறார்
நம்முள் ஒரு நீராகப் பொருந்தி இருக்கிறார் மட நெஞ்சமே சோகப் படாதே என்கிறார்-
அகில ஹேய ப்ரத்யநீகராகையாலே சம்சார நாற்றமே கண்டு அறியாதவராய் மோக்ஷ பூமியைத் தந்து அருளுமவன்
நமது பலவகைப்பட்ட பிறவிகளைப் போக்கி நித்ய சம்சாரிகளான நம்மை நித்ய ஸூரிகளைப் போலவே
அடிமை கொண்டு அருள திரு உள்ளம் பற்றி
பிதாவையும் மாதாவாயும் கைங்களர்யம் கொண்டு அருள பிரதி சம்பந்தியான ஸ்வாமியாயும்
இப்படி சர்வ வித பந்துவாயும் -நம்முடைய சிறுமையையும் அவனுடைய பெருமையையும் பாராதே
நம்முடைய சகலவிதமான பாரங்களையும் தம் மேல் ஏறிட்டுக் கொண்டு செய்து முடிப்பதாக
நம்முள்ளே ஒள்று நீராகப் பொருந்தின பின்பு
அறிவு கெட்ட நெஞ்சே -சர்வஞ்ஞனாயும் சர்வசக்தனாயும் ப்ராப்தனாயும் இருந்து தன் மேன்மை பாராதே
தாழ நின்று உபகரிக்குமவனாயும் இருந்த பின்பு எத்தாலே துக்கக் கடலில் கிடக்கிறது -துக்கப் படாதே கொள்
முத்தனார் -சம்சார பந்தம் இருந்து கழிந்தவர்-என்று கொள்ளாமல் ஹேய ப்ரத்யநீகர்-என்றே கொள்ள வேண்டும்
முகுந்தன்–மு-முக்தியாகிய கு பூமியைக் கொடுப்பவர் என்றபடி-
அன்று திருத்தேர்த்தட்டிலே நின்று கண்ணபிரான் அர்ஜுனனை னோக்கி ‘மாசுச:- துக்கப்படாதே” என்று
சரமச்லோக மருளிச் செய்தாப்போல,
இவ்வாழ்வார் தமது திருவுள்ளத்தைநோக்கி “மாசுச.” என்கிறார். இப்பாட்டில்.
முமுக்ஷுப்படியின் முடிவிலே “வார்த்தையறிபவர் என்கிற பாட்டும்!
* அத்தனாகி என்கிற பாட்டும் இதுக்கு அர்த்தமாக அநுஸந்தேயம்.” என்று
பிள்ளையுலகாசிரியர் அருளிச்செய்தமை நோக்கத்தக்கது.
“முத்தனார் முகுந்தனார் – ஒத்தொவ்வாத பல்பிறப்பொழித்து நம்மை யாட்கொள்வான்.
அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய்ப் புகுந்து நம்முன் மேவினார்.
ஏழை நெஞ்சமே! எத்தினால் இடர்க் கடல் கிடத்தி?” என்று அந்வயிப்பது,
அகிலஹேய ப்ரத்யநீகராகையாலே ஸம்ஸார நாற்றமே கண்டறியாதவராய் மோக்ஷபூமியைத் தந்தருள்பவரான பெருமான்
பல வகைப்பட்ட பிறவிகளைப் போக்கி நித்ய ஸம்ஸாரிகளான நம்மை நித்யஸூரிகளைப்போல
அடிமைக்கொள்ளத் திருவுள்ளம்பற்றி, பிதாவாயும் மாதாவயும் நம்முடைய கைங்கர்ய ப்ரதிஸம் பக்தியான ஸ்வாமியாயும்
இப்படி ஸர்வவித பந்துவாயும் நம்முடைய சிறுமையையும் தம்முடைய பெருமையையும் பாராதே
நம்முடைய ஸகலமான பாரங்களையும் தாமே ஏறிட்டுக் கொண்டு செய்து முடிப்பதாக நம்முன்னே புகுந்து ஒருநீராகப் பொருந்தினார்.
அறிவுகெட்ட நெஞ்சே! ஸ்வஜ்ஞனாயும் ஸ்ர்வசந்தநனாயும் ப்ராப்தனாயும்
தன் மேன்மை பாராதே தாழநின்று உபகரிக்குமவனாயும் அவன் நமக்கு வாய்திருக்க,
எத்தாலே நீ துக்கக்கடலில் கிடக்கிறது? இனி துக்கப்படாதே கொள் என்கிறார்.
“ஒத்தொவ்வாத பல்பிறப்பு” என்பதற்கு மற்றொரு வகையாகவும் பொருள் கூறுவர்;
எல்லாப் பிறவிகளும் ஹேயமாயிருக்கச் செய்தேயும் ஒருவனுக்கு ப்ரியமானது ஜன்மம் மற்றொருவனுக்கு அப்ரியமாகிறது;
ஒருவனுக்கு அப்ரியமான ஜன்மம் வேறொருவனுக்கு ப்ரியமாகிறது.
ஓராத்மாவுக்கு மநுஷ்யஜ்ம்மன் ப்ரியமாயிருந்தால், இன்னுமோராத்மாவுக்கு வராஹஜன்மம் ப்ரியமாகிறது.
இப்படி ஆத்மபேதேந மனஸ்ஸுக்கு ஒத்தும் ஓவ்வாமலுமிருக்கிற பல்வகைப் பிறப்புக்களென்றவாரும்.
முத்தனார் = முக்த.” என்ற வடசொல்லுக்கு “விடுபட்டவன்” என்று பொருள்; அதாவது ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டவன் என்கை;
ஸம்ஸாரியாயிருந்த ஜீவாத்மா ஒரு காலத்தில் வீடுபெற்றால் அவன் முத்தனெனப்படுவான்;
அதுபோல எம் பெருமானை முத்தனார் என்னலாமோ எனின்;
ஸம்ஸார ஸம்பந்தம் இருந்து கழிந்தவர் என்று இவ்விடத்தில் பொருள் கொள்ளாது
ஸம்ஸாரப்ரதியார் என்று மாத்திரமே பொருள்கொள்ள வேணும்.
வேத புருஷன் எம்பெருமானை “*** என்று சொன்னவிடத்திற்குச் சொல்லிக் கொள்ள வேண்டிய உபபத்திகள் இங்கே அநுஸந்தேயம்;
விரிப்பிற்பெருகும்
முகுந்தனார் = மு. முக்தியாகிய கு.- பூமியை உ- கொடுப்பவர்.
——————
மாறு செய்த வாளரக்கர் நாள் உலப்ப அன்று இலங்கை
நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார்
வேறு செய்து தம்முள் என்னை வைதிடாமையால் நமன்
கூறு செய்து கொண்டு இறந்த குற்றம் எண்ண வல்லனே -116-
பதவுரை
| மாறு செய்த |
– |
எதிரிட்ட |
| வாள் அரசர்கள் |
– |
ஆயுதபாணியான இராவணனுடைய |
| நாள் உவப்ப |
– |
வாழ்நாள் முடியும்படியாக |
| அன்று |
– |
முற்காலத்து |
| இலங்கை |
– |
லங்காபுரியை |
| சென்று |
– |
அடைந்து |
| நீறு செய்து |
– |
நீறாக்கி |
| கொன்று |
– |
அவனைக் கொன்று |
| வெற்றி கெணண்ட |
– |
ஜயம்பெற்ற |
| வீரனார் |
– |
மஹாவீரரான பெருமாள் |
| என்னை |
– |
அடியேனை |
| தம்முள் வேறு செய்து வைத்திடாமையால் |
– |
தம்மில் வேறுபடுத்தி வைக்காமையினால் (என்னை அந்தரங்க பூதனாகக் கொண்டருளினபடியால் ) (இனி) |
| நமன் |
– |
யமனானவன் |
| கூறுசெய்து கொண்டு |
– |
(என்னை அம்பெருமானிடத்தினின்றும்) பிரித்து |
| இறந்த குற்றம் |
– |
நான் செய்து கழித்த பாவங்களை |
| என்ன வல்லனே |
– |
நெஞ்சாலும் நினைக்கக் கடவனோ. |
மாறு செய்த வாளரக்கர் நாள் உலப்ப
எதிரிட்ட ஆயுத பாணியான ராவணின் வாழ் நாள் முடியும் படி
அன்று இலங்கை நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார் வேறு செய்து தம்முள் என்னை வைதிடாமையால்
என்னை அந்தரங்க பூதனாய்-வேறு படுத்தி வைக்காமல் -கைக் கொண்டு அருளினதனால்
நமன் கூறு செய்து கொண்டு
யமனானவன் அவனிடம் இருந்து பிரித்து
இறந்த குற்றம் எண்ண வல்லனே
நான் செய்து கழித்த பாபங்கள் -நெஞ்சாலும் -தனது இடத்தில் இருந்தே நினைக்க சக்தி அற்றவன் என்கிறார்-
மேல்வரும் பிறவிகட்கு அடியான கருமங்களைக் கழித்துத் தம்மை அடிமைகொள்ள
எம்பெருமான் முற்பட்டமையைக் கீழ்ப்பாட்டில் அருளிச் செய்தார்;
“நாம் நரகவேதனைகளை அநுபவிப்பதற்கு ஹேவாதன பாவங்களைப் பண்ணி கிடக்கிறோமாகையாலே
யமனுக்கு வசப்பட்டுத் துன்பப்படாதொழிய முடியுமோ” என்று கவலையற்ற திருவுள்ளத்தைக் குறித்து
நமக்கு தஞ்சமான சக்ரவர்த்தி திருமகனார் தம்மோடே நம்மைக் கூட்டிக்கொண்ட பின்பு
நாம் செய்த குற்றம் யமனால் ஆராய முடியுமோ என்கிறார்.
“எண்ணவல்லனே என்றது- பாபம் பண்ணிணானென்று தன் க்ருஹத்திலே யிருந்து நினைக்கவும் சக்தனல்லனென்றபடி” என்று
வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்க.
——————
அச்சம் நோயோடு அல்லல் பல் பிறப்பவாய மூப்பிவை
வைத்த சிந்தை வைத்த வாக்கை மாற்றி வானில் ஏற்றுவான்
அச்சுதன் அனந்த கீர்த்தி யாதி யந்தம் இல்லவன்
நச்சு நாகணைக் கிடந்த நாதன் வேத கீதனே -117-
பதவுரை
| அச்சம் |
– |
பயமென்ன |
| நோயோடு அல்லலி |
– |
வியாதியோடு கூடின மகோ வியாதியென்ன |
| அவாயம் மூப்பு |
– |
அபாயங்களுக்கு இடமான கிழத்தனமென்ன |
| பல் பிறப்பு |
– |
பலவகைப் பிறப்புகளென்ன |
| இவை |
– |
ஆகிய இவற்றையும் |
| வைத்த சிந்தை |
– |
இவற்றை யனுபவிப்பதற்காகக் கண்ட நெஞ்சையும் |
| வைத்த ஆக்கை |
– |
கீழ்சொன்னவற்றுக்கு ஆச்ரமாகக் கண்ட சரீரத்தையும் |
| மாற்றி |
– |
போக்கடித்து |
| வானில் |
– |
(நம்மைப் ஸ்ரீபரமபதத்திலே கொண்டு சேர்ப்பவன் (ஆரென்னில்) |
| அச்சுதன் |
– |
அடியாரை ஒருநாளும் கைவிடாதவனும் |
| அனந்த கீர்த்தி |
– |
எல்லையில்லா கீர்த்திகளையுடையவனும் |
| ஆதி அந்தம் இல்லவன் |
– |
முதலும் முடிவும் மில்லாதவனும் |
| நஞ்சு நாக அணை கிடந்த நாதனை |
– |
(விரோதிகள்மீது) விஷத்தை உமிழ்கின்ற ஆசிதேஷனாகிற சயனத்திலே கிடந்தருளும் ஸ்வாமியும் |
| வேத கீதம் |
– |
வேதங்களினால் பிரதிபாதிக்கப்பட்டதுமான பெருமானாம் |
அச்சம் நோயோடு அல்லல் பல் பிறப்பவாய மூப்பிவை
அல்லல் -மநோ வ்யாப்தி
வைத்த சிந்தை வைத்த வாக்கை
இவற்றை அனுபவிக்க நெஞ்சையும் உடலையும்
மாற்றி வானில் ஏற்றுவான்
போக்கடித்து பரம பதம் சேர்ப்பவன்-
மேன்மேலும் தேஹ சம்பந்தத்தைக் கொடுக்கும் பிராரப்த கர்மங்களையும் அவற்றுக்கு ஆஸ்ரயமான தேகத்தையும்
போக்கி பரமபதத்தில் தனது தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானாக இருக்க நமது பேற்றுக்கு என்ன குறை
யமனுக்கு வசப்பட்டு வருந்துகைக்கு ஹேதுவான பாபங்கள் போனாலும்
மேன்மேலும் தேஹஸம்பந்தத்தைக் கொடுக்கவல்ல ப்ராப்தகருமம் கிடக்கவில்லையோவென்ன;
அந்த ப்ராப்த கருமத்தையும் அதற்கு ஆச்ரயமான தேஹத்தையும் போக்கிப் பரமபதத்திலே
நம்மை எம்பெருமான் கொண்டு போவானான பின்பு நம் பேற்றுக்கு ஒரு குறையில்லை என்கிறார்.
——————
சொல்லினும் தொழிற் கணும் தொடக்கு அறாத அன்பினும்
அல்லு நன் பகலினோடு ஆன மாலை காலையும்
அல்லி நாண் மலர்க் கிழத்தி நாத பாத போதினைப்
புல்லி யுள்ளம் வீள்விலாது பூண்டு மீண்டதில்லையே -118-
பதவுரை
| வல்லி நாள் மலர் கிழத்திநாத! |
– |
படர்ந்த செவ்வித் தாமரைப்பூவிலே பிறந்த பிராட்டிக்கு நாதனே! |
| உள்ளம் |
– |
எனது நெஞ்சானது |
| சொல்லினும் |
– |
வாக்கிலும் |
| தொழில் கணும் |
– |
காயிகவ்யபாரங்களிலும் |
| தொடக்கு அறாத அன்பினும் |
– |
பிச்சேதமற்ற அன்பிலும் (ஒருபடிப்பட்டு) |
| அல்லினோடு ஆன மாலையும் |
– |
ராத்ரியோடு கூடின ஸாயம்ஸக் த்யையிலும் |
| நல் பகவினோடு ஆன காலையும் |
– |
நல்ல அஹஸ்ஸோடு கூடிய ப்ராதஸ் ஸந்த்யையிலும் (ஆக ஸர்வகாலங்களிலும்) |
| பாதம் பொதினை |
– |
உன்னுடைய திருவடித் தாமரையை |
| புல்லி |
– |
அனைத்து |
| விளைவு இலாது |
– |
(ஒரு நொடிப்பொழுதும்) விச்சேதமில்லாமல் |
| பூண்டு |
– |
அத்திருவடிகளையே மேற்கொண்டு |
| மீண்டதில்லை |
– |
நிலைத்து நிற்கின்றது. |
சொல்லினும் தொழிற் கணும் தொடக்கு அறாத அன்பினும்
வாக்கிலும் -காயிக வியாபாரங்களிலும் விச்சேதம் அற்ற அன்பிலும்
அல்லு நன் பகலினோடு ஆன மாலை காலையும்
சர்வ காலங்களிலும்
அல்லி நாண் மலர்க் கிழத்தி நாத பாத போதினைப்
படர்ந்த செந்தாமரை பூவில் பிறந்த பிராட்டிக்கு நாதனாய்
புல்லி யுள்ளம் வீள்விலாது பூண்டு மீண்டதில்லையே
அணைத்து நெஞ்சை ஒரு நொடி பொழுதும் விச்சேதம் இல்லாமல்
அல்லி நாண் மலர்க் கிழத்தி நாத–அல்லி மலருக்கும் -மலர்க்கிழத்திக்கும் விசேஷணம்
படர்ந்த செவ்வித் தாமரை என்றும்
கொடி போலே இரா நின்ற மலர்க்கிலத்தில் பெரிய பிராட்டியார் என்றும் –
பூண்டு –அந்த திருவடிகளையே மேல் கொண்டு நிலைத்து இருக்கும்
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் சர்வ காலமும் அவனுடனே லயித்து இருக்க வேண்டும்
திருவுள்ளத்தை நோக்கி அருளிச்செய்து கொண்டுவந்த ஆழ்வார் இப்பாட்டில்
எம்பெருமானையோ நோக்கித் தம் திருவுள்ளத்துக்குண்டான ப்ராப்யருசியை வெளியிடுகிறார்.
பூவார் திருமாமகள் புல்கிய மார்பனான பெருமானே!
என்னுடைய ஹ்ருதயமானது உன்னுடைய திருவடித்தாமரையை ஸர்வகாலங்களிலும் பரிபூர்ணமாக அணைந்து
மறுபடி போக்கும் பகவத் விஷயமொன்றே விஷயமாகப் பெற்றமையைக் கூறுவது முதலடி.
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும் அலகாஹிக்கப் பெற்றமையைக் கூறியவாறு.
வல்லிநாண்மலர்கிழத்திநாத! – வல்லியென்பதை மவர்க்கு விசேஷண மாக்குதலும்
மலர்க்கிழத்திக்கு விசேஷண மாக்குதலும் ஓங்கும்.
முதற்பக்ஷத்தில், படர்ந்த செவ்வித்தாமரைப்பூ என்றாகிறது.
இரண்டாம்பக்ஷத்தில் வல்லிபோல- கொடிபோலே யிராநின்ற நாண்மலர்க்கிழத்தியுண்டு- பெரியபிராட்டியார்;
அவட்குநாதனே! என்றாகிறது
———————
பொன்னி சூழ் அரங்கமேய பூவை வண்ண மாய கேள்
என்னதாவி என்னும் வல் வினையினுள் கொழுந்து எழுந்து
உன்ன பாதம் என்ன நின்ற ஒண் சுடர்க் கொழு மலர்
மன்ன வந்து பூண்டு வாட்டமின்றி எங்கும் நின்றதே -119–
பதவுரை
| அரங்கம் |
– |
திருவரங்கத்திலே |
| பொன்னிசூழ் |
|
காவிரிசூழ்ந்த |
| மேய |
– |
நித்யவாஸம் செய்தருள்கிற |
| பூவை வண்ண |
– |
காயம்பூப்போன்ற திருமேனியையுடைய |
| மாய! |
– |
ஆச்சர்யபூதரான பெரிய பெருமானே! |
| கேள் |
– |
(இவ்விண்ணப்பத்தைக்) கேட்டருள வேணும்; |
| என்னது |
– |
என்னுடையது |
| ஆவி என்னும் |
– |
ஆத்மா என்கிற |
| வல்வினையினுள் |
– |
வலிய பாபராசியிலே |
| கொழுந்து எழுந்து உள்ள |
– |
(தேவரீர் விஷயமான அநுராகமாகிற) கொழுந்து கிளர்ந்து உள்ள தேவரீருடைய |
| பாதழ் என்ன நின்று |
– |
திருவடியென்கிற |
| ஒண்சுடர் கொழுமலர் |
– |
அழகிய சுடர்மிக்க புஷ்பத்திலே |
| மன்னவந்து பூண்டு |
– |
ஸ்திரமாக வந்து படிந்து |
| எங்கும் |
– |
தேவரீருடைய விபூதிகள் எல்லாவற்றிலும் |
| வாட்டம் இன்றி நின்றது. |
|
குறையாமல் வியாபியா நின்றது |
பொன்னி சூழ் அரங்கமேய பூவை வண்ண மாய கேள்
இந்த விண்ணப்பத்தை கேட்டு அருள வேணும்
என்னதாவி என்னும் வல் வினையினுள்
என்னுடைய ஆத்மா என்னும் வலிய பாப ராசியிலே
கொழுந்து எழுந்து உன்ன பாதம் என்ன நின்ற -ஒண் சுடர்க் கொழு மலர் மன்ன வந்து பூண்டு வாட்டமின்றி எங்கும் நின்றதே
தேவரீர் விஷயமாக அனுராகம் அழகிய சுடர் மிக்க புஷ்பத்திலே ஸ்திரமாக வந்து படிந்து-குறையாமல் தேவரீரின் விபூதிகள்
எல்லாவற்றிலும் வியாபித்து இருந்தது
வடிவு அழகாலும் சீலத்தாலும் ருசி பிறந்து படர்ந்தது நெருப்பிலே தாமரை பூத்தாப் போலே-
என்னது வல் வினை என்னும் ஆவியில் கொழுந்து போலே பகவத் விஷயம் படர்ந்தது-
வடிவு அழகையும் சீல குணத்தையும் காட்டி அருளி செய்த கிருஷி பலித்தது
ஞானானந்த மையமாக ஆத்மாவை வேதம் சொல்லா நிற்க இவரோ பாபராசிக் கூட்டம் வல்வினை என்று
நைச்யம் பாவிக்கிறார் -நைச்ய அனுசந்தான பரம காஷ்டை
பகவத் விஷய அநுராகத்தை கொழுந்து என்கிறார்
வல்வினையிலே கொழுந்து -நெருப்பிலே தாமரை பூத்தது போலே அன்றோ இது-
‘ஆழ்வீர்! பரமவிவக்ஷணமான இப்படிப்பட்ட அபிநிவேசம் உமக்கு நம்பக்கலில் உண்டானமை
ஆச்சரியமாயிராநின்றதே! இதற்கு அடி என்?’ என்று எம்பெருமான் கேட்டருள;
வடிவழகையும் சீலத்தையும் காட்டி தேவரீர் பண்ணின க்ருஷபலித்த பலமன்றேவிது என்கிறார்போலும்.
காவிரிசூழ்ந்த திருவரங்கம் பெரியகோயிலிலே நித்யவாஸம் செய்தருள்கிற விலக்ஷணமான திருமேனி படைத்த மாயோனே!
உன்னுடைய அழகாலும் சீலத்தாலும் எனக்குப் பிறந்த ருசிவிசேஷத்தைக் கேட்டருளவேணும்;
உபகாரம் செய்தவளின் தேவரீர் மறந்தொழிந்தாலும் நன்றியறிவுடைய நான் சொல்லக் கேட்க வேணும்;
சொல்லுகிறது தான் என்னன்னச் சொல்லுகிறார்- என்னதாவி யித்யாதியால்.
*** என்று ஜ்ஞாஸ்வரூபாகயும் ஆநநிதஸ்ரூபியாயும் சாஸ்த்ரங்களுள் சொல்லப்பட்டிராநின்ற ஆத்மா
என்னளவில் அப்படிப்பட்டதன்று; கொடிய பாபராசிகளின் பிண்டமே ஆத்ம வஸ்துவாக நிற்கிறதெனலாம்
அப்படிப்படட் என் ஆத்மவஸ்துவில் தேவரீரைப்பற்றிய அநுராகம் கிளர்ந்து
அவ்வஅநுராக மானது தேவரீருடைய பாதாரவிதத்திலே பரிபூர்ணமாக அவகாஹித்து
தேவரீருடைய ஸ்வரூபரூபகுண விபூதிகளையெல்லாம் கபளீகரித்து விளங்காநின்றது என்கிறார்
இவ்வாழ்வார்க்கு ஆவியென்றும் வல்லினையென்றும் பர்யாயம் போலும். நைச்யாநுஸக்காக பரமகாஷ்யை யிருக்கிறபடி
“*** என்ற அநுஸந்தாகம் முதிர்ந்தபடி’
தம்முடைய ஆவிக்கு வல்வினை என்று பெயரிட்டாற்போல பகவத் விஷயாநுரகத்திற்குக் கொழுந்து என்று திருநாமம் சாற்றினர்
என்ன தாவியென்னும் வல்வினையிலே கொழுந்து எழுந்ததானது நெருப்பிலே தாமரை பூத்ததுபோலும் என்ற
திருவுள்ளந்தோற்ற அருளிச் சொல்கிறபடி பாரீர்.
——————
இயக்கறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து
துயக் கொண் மேக வண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே
மயக்கினான் தன் மன்னு சோதி யாதலால் என்னாவி தான்
இயக்கொலா மறுத்தறாத வின்ப வீடு பெற்றதே -120-
பதவுரை
| உயக்கொள் |
– |
(நம்போல்வாரை) உஜ்ஜீவிக்கச் செய்பவனான |
| மேகவண்ணன் |
– |
காளமேக நிபச்யாமனான பெருமான் |
| இன்று |
– |
இன்றைக்கு (நிர்ஹேதகமாக) |
| இயக்கு அறாத பல் பிறப்பில் |
– |
தொடர்ச்சிமாறாமல் நெடுகச் செல்லும்படியான பலவகைப் பிறப்புகளினின்றும் |
| என்னை |
– |
அடியேனை |
| மாற்றி |
– |
மாற்றுகைக்குத் திருவுள்ளம் பற்றி |
| வந்து நண்ணி |
– |
இங்கேயெழுந்தருளி நெருங்கி |
| தன்னில் ஆய என்னுள் |
– |
தன்னோடு அவிகாபூதமான என்னுள்ளே |
| தன் |
– |
தன்னுடைய |
| மன்னுசோதி |
– |
நித்ய ஜ்யோதிர்மயமான திவ்ய மங்கள விக்ரஹத்தை |
| மயக்கினான் |
– |
ஸம்ச்லேஷிப்பித்தான்! |
| ஆதலால் |
– |
இப்படி புரையாறக் கலந்தருளுகையாலே |
| என் ஆவி தான் |
– |
எனது ஆத்ம வஸ்துவானது |
| இயக்கு எல்லாம் அறுத்து |
– |
ஒன்றோடொன்று இணைந்து கிடந்த அவித்யாதிகளை வேரறுத்து |
| அறாத இன்பம் வீடு: |
– |
ஒருநாளும் முடியாத இன்பமாகிய மோக்ஷஸுகத்தை |
| பெற்றது |
– |
பெற்றாதயிற்று |
இயக்கறாத பல் பிறப்பில்
தொடர்ந்து வரும் பல பிறவிகளிலும்
என்னை மாற்றி இன்று வந்து
அடியேனை மாற்ற திரு உள்ளம் கொண்டு இங்கேயே எழுந்து அருளி
துயக் கொண் மேக வண்ணன் நண்ணி
உஜ்ஜீவித்து அருளிச் செய்வானாக காள மேக பெருமாள் நெருங்கி
என்னிலாய தன்னுளே
தன்னுள்ளே அவின்னாபூதமான என்னுள்ளே
மயக்கினான் தன் மன்னு சோதி
தனது நித்ய ஜோதிமயமான திவ்ய மங்கள விக்ரகத்தை சம்ஸ்லேஷிப்பித்தான்
யாதலால்-
இப்படி புரை யறக் கலந்தது அருளியதால்
என்னாவி தான் இயக்கொலா மறுத்த
எனது ஆத்ம வஸ்து ஒன்றோடு ஒன்றாக இணைந்து கிடைந்த அவித்யாதிகளை வேறு அறுத்து-
ஆராத வின்ப வீடு பெற்றதே
ஒரு நாளும் முடியாத இன்பமாகிய மோஷ சுகத்தை பெற்றது-
அந்தமில் பேரின்ப மான கைங்கர்ய சாம்ராஜ்யத்தை பெற்றத்தை அருளிச் செய்கிறார் –
பரகத ஸ்வீகாரம் பரிமளிக்க அருளுகிறார்
கீழே ஸ்வ கத ஸ்வீ காரம் -இதில் பர கத ஸ்வீ காரம் –
நித்ய ஜ்யோதிர் மயமான திவ்ய மங்கள விக்ரஹத்தை என்னுள்ளே வைத்து புரையறக் கலந்து
அவித்யாதிகளை வேர் அறுத்து-பிரதிபந்தகங்களை நிஸ் சேஷமாகப் போக்கி அருளி
அந்தமில் பேர் இன்பமான அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யம் கொண்டு அருளுகிறானே –
என்று உபகார ஸ்ம்ருதியுடன் தலைக் கட்டி அருளுகிறார்
ஸ்வகதஸ்வீகாரம்போல் தோற்றும்படியன்றோ கீழ்ப்பாட்டில் அருளிச் செய்தார்;
அங்ஙனன்றிக்கே, பரகதஸ்வீகாரம் பரிமளிக்கப்பேசுகிறார்.
இதில் நிர்ஹேதுகமாகப் பெரிய பெருமாள் தம்முடைய திவ்யமங்கள விக்ரஹத்தை
என்னுள்ளே பிரியாதபடி வைத்தருளினபடியாலே ப்ரதிபந்தக ஸமூஹங்களை யெல்லாம் நிச்சேஷமாகப் போக்கி
அந்தமில் பேரின்பமான ஸகங்கர்ய ஸாம்ராஜ்யத்தைப் பெற்றோனென்று உபாகர ஸ்மருதியோடே தலைக்கட்டுகிறார்.
எனக்கு அந்தாதியாக நிகழ்ந்துவங்க பலவகைப் பிறவிகளைத் தவிர்த்தருள திருவுள்ளம்பற்றி
இன்று நிர்ஹேதுக க்ருபையினாலே நாளிருந்தவிடத்தே வந்து கிட்டித் தனக்கு ப்ரகாரபூசமான
என்னுடைய ஹ்ருதயத்திலே தனது ஐ“யோதிர்யமான திவ்யமங்கள விக்ரஹத்தைப் பிரிக்கவொண்ணாதபடி
எனக்கு ஒருக்ஷணகாலமும் செல்லாதபடி பண்ணியருளினபடியாலே
இவ்வாத்ம வஸ்துவானது ஒன்றோடொன்று பிணைந்துகிடந்த அவித்யாகர்மவாஸாநாருகி ப்ரக்ருதி
ஸ்ர்பந்தங்களையெல்லாம் முக்தியைப் பெற்றொழிந்ததென்றாயிற்று.
(மயக்கினான்) மயக்குத்ல் – அறிவுகெடுத்தலும் கலத்தலும்,
இங்கே, கலத்தல்
தன்மன்னுசோதி – “***“ (ஸுந்தரபாஹுதவம்) என்னும்படி விலக்ஷணமான திவ்யமங்கள விக்ரஹத்தை
ஜோதி என்றும் சோதி என்றும் சொல்லக்கடவது
“ஆதியஞ்சோதியுரு“ என்றாரே நம்மாழ்வாரும்.
——————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply