ஸ்ரீ யபதியே பரத்வம் -அர்ச்சையே / ஆழ்வார்கள் / ஆச்சார்யர்கள் /
குருபரம்பரை -விசிஷ்டாத்வைத சித்தாந்தம் -ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி –
ஸ்ரீ ராமானுஜர் தர்சனம் ஏழு முக்கிய தாத்பர்யங்கள்
1-சரீராத்மா பாவம்
2-ஸ்ரீ மன் நாராயணன் பாராம்யம்
3-ஸமஸ்த வாஸ்ய -சர்வாத்ம பாவம் -சர்வ காரணத்வம்-
4-சர்வ கர்ம சமாராதத்வம்
5-பக்தி பிரபத்தி வசீகரத்வம்-இதயம் நல்ல எண்ணம் இதய எண்ணெய் ஒழுக்கு போலே இடைவிடாமல் தியானமே பக்தி
6-சரணாகதி எளிமை கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து கொக்கு பிடிக்கும் கதை
7-போக சாம்யம் –நான் உன்னை அன்றி இலேன் –
அவள் இல்லாமல் நான் இல்லை சினிமா பாடல் இதைப் பின்பற்றியே என்று வாலியே சொல்லிக் கொண்டார்
திரு மழிசை ஆழ்வார் பாடலை பின் பற்றி எழுதினேன் /நித்ய விபூதி அனைவருக்கும் -கிட்டும் /
நரை கமழ் பால் குடிக்கும் கலவுக்கு பிள்ளைப் பெருமாள் –ஏலக்காய் பால் கறக்கும் பசு —
———————————
1–ஸ்ரீ யபதித்தவம்
பூ மன்னு மாது பொருந்திய மார்பன் -1-
கோவிலுள் மா மலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த்தலைவன் -10-
அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல் -16-
வெறி தரு பூ மகள் நாதனும் விளங்கிய சீர் நெறி தரும் செந்தமிழ் ஆரணமே-19-
நாங்கள் பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா வஞ்சர்க்கு அரிய இராமானுசன் -28-
அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் -33-
மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவன் கண்ணுற நிற்கிலும் காண கில்லா உலகோர்கள்-41-
மா மலராள் நாயகன் எல்லா யுயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் தூயவன் -42-
மா மலராள் புணர்ந்த பொன் மார்வன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும் குணம் திகழ் கொண்டல் இராமானுசன் -60-
ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள் தொறும் நைபவர்க்கு வானம் கொடுப்பது மாதவன் -66-
மிக வஞ்சித்து நீ இந்த மண்ணகத்தே திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் -78-
அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாகம் மன்னும் பங்கய மா மலர்ப்பாவையைப் போற்றுதும் -108-
————————————
2–சரீராத்மா பாவம் —
வந்து நீ என்னை யுற்ற பின் உன் சீரே யுயிர்க்கு யுயிராய் அடியேற்கு இன்று தித்திக்கும் -25-
கொழுந்து விட்டு ஓங்கிய யுன் வள்ளல் தனத்தினால் வல்வினையேன் மனம் நீ புகுந்தாய் -27-
மா மலராள் நாயகன் எல்லா யுயிர்கட்கும் நாதன் அரங்கன் -42-
பற்பல் உயிர்களும் பல்லுலகு யாவும் பரனது என்னும் நற்பொருள் தன்னை இந் நாநிலத்தே வந்து நாட்டினனே -53-
உயிர்கள் மெய்விட்டு ஆதிப்பரனோடு ஒன்றாம் என்று சொல்லும் அவ் வல்லல் எல்லாம்
வாதில் வென்றான் எம்மிராமாநுசன் மெய்ம் மதிக்கடலே -58-
உயிரை யுடையவன் நாரணன் -59-
எல்லா உயிர்கட்க்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்தான் எம்மிராமாநுசன் மிக்க புண்ணியனே -91-
உள் நின்று உயிர்களுக்கு உற்றனவே செய்து அவர்க்கு உயவே பண்ணும் பரனும் -95-
அவை தன்னோடும் வந்து இருப்பிடம் மாயன் இராமானுசன் -106-
————————————————————————————–
3–ஸமஸ்த வாஸ்ய -சர்வாத்ம பாவம் -சர்வ காரணத்வம்-
ஊழி முதல்வனையே பன்னப் பணித்த இராமானுசன் -4 –
மூவுலகும் பூத்தவனே என்று போற்றிட -22-
மன் பல்லுயிர்கட்க்கு இறைவன் மாயன் என மொழிந்த அன்பன் அனகன் இராமானுசன் -30-
இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத்து அறம் செப்பும் அண்ணல் இராமானுசன் -47-
பற் பல்லுயிர்களும் பல்லுளுக்கு யாவும் பரனது என்னும் நற் பொருள் -53-
யாவும் சிதைந்து முன்னாள் அந்தமுற்று ஆழ்ந்தது கண்டு அவை என் தனக்கு அன்று அருளால் தந்த வரங்கன் -69-
எல்லா யுயிர்கட்க்கும் நாதன் அரங்கன் -91-
—————————-
4-சர்வ கர்ம சமாராதத்வம்
சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற் காமமும் என்று இவை நான்கு என்பர்
நான்கினும் கண்ணனுக்கே ஆமது காமம் அறம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான் -40-
உன் தன் குணங்களுக்கே தீர்ந்தது என் செய்கை-71-
———————————————-
5-பக்தி பிரபத்தி வசீகரத்வம்-
தமிழ்த்தலைவன் பொன்னடி போற்றும் இராமாநுசற்கு அன்பு பூண்டவர் தாள் சென்னியில் சூடும் திருவுடையார் என்றும் சீரியரே -10-
தென் குருகைப்பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும் வீட்டின் கண் வைத்த இராமானுசன் -29-
தென் அத்தியூரர் கழல் இணைக் கீழ்ப் பூண்ட அன்பாளன் இராமானுசனைப் பொருந்தினமே -31-
படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன் -37-
மற்று ஒரு பேறு மதியாது அரங்கன் மலர் அடிக்கு ஆள் உற்றவர் தனக்கு உற்றவராகக் கொள்ளும் உத்தமன் -57-
ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள் தோறும் நாய்பாவர்க்கு வானம் கொடுப்பது மாதவன்
வல்வினையேன் மனத்தில் ஈனம் கடிந்த இராமானுசன் தன்னை எய்தினர்க்கு அத்தானம் கொடுப்பது தன் தகவு என்னும் சரண் கொடுத்தே -66-
———————
6-சரணாகதி எளிமை –
வல்வினையேன் மனத்தில் ஈனம் கடிந்த இராமானுசன் தன்னை எய்தினர்க்கு அத்தானம் கொடுப்பது தன் தகவு என்னும் சரண் கொடுத்தே -66-
அரங்கனுக்கு தன் சரண் தந்திலன் தான் அது தந்து எந்தை இராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே -69-
உன் பத யுகமாம் ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய கார் கொண்ட வன்மை இராமானுச இது கண்டு கொள்ளே -83-
பத்தி எல்லாம் தங்கியது என்னத்த தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே பொங்கிய கீர்த்தி இராமானுசன் அடிப் பூ மன்னவே -108-
————————
7-போக சாம்யம் —
வந்து நீ என்னை உற்ற பின் உன் சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே-25-
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரும் ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினரே -41-
இரவும் பகலும் விடாது என் தன் சிந்தையுள்ளே நிறைந்து ஒப்பற இருந்தான் எனக்காரும் நிகர் இல்லையே -47-
இரு வினை தீர்த்து அரங்கன் செய்ய தாளிணையோடு ஆர்த்தான் இவை எம் இராமானுசன் செய்யும் அற்புதமே -52-
அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்து இன்று உண்டு கொண்டேன் இன்னம் உற்றன ஓதில் உலப்பில்லையே -84-
தவம் தரும் செல்வம் தகவும் தரும் சலியாப்பிறவிப் பவம் தரும் தீ வினை பாற்றித் தரும்
பரந்தாபம் என்னும் திவம் தரும் தீதில் இராமானுசன் தன்னைச் சார்ந்தவர்கட்க்கு -94-
——————————-
ஸ்ரீ இராமானுச திருநாமம் விளக்கம்
மாறன் அடி பணிந்து உய்ந்தவன்
குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன்
பொருவரும் சீர் ஆரியன்
திரு விளக்கைத் தன் திரு உள்ளத்தே இருத்தும் பரமன்
பூதத்திருவடி தாள்கள் நெஞ்சத்துறைய வைத்து ஆளும் இராமானுசன்
தமிழ்த்தலைவன் பொன்னடி போற்றும் இராமானுசன்
பாண் பெருமாள் சரணாம் பதுமத்தாரியல் சென்னி இராமானுசன்
மழிசைக்கு இறைவன் இணை அடிப்போது அடங்கும் இதயத்து இராமானுசன்
சீர் அரங்கத்து ஐயன் கழற்கு அணியும் பரன்
கொல்லி காவலன் சொல் பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே துதிக்கும் பரமன்
பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையான் தாள் பேராத உள்ளத்து இராமானுசன்
சூடிக் கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல்
நீலன் தனக்கு உலகில் இனியான்
சடகோபனை சிந்தையுள்ளே பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம் உய்வதற்கு உதவும் இராமானுசன்
மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செந்தமிழ் ஆரணமே இராமானுசன் எனக்கு ஆரமுதே
நாதமுனியை நெஞ்சால் வாரிப் பருகும் இராமானுசன் என் தன் மா நிதியே
யமுனைத் துறைவன் இணையடியாம் கதி பெற்றுடைய இராமானுசன்
வாணன் பிழை பொறுத்த தீர்த்தனை ஏத்தும் இராமானுசன்
நல்லன்பர் மனத்தகத்தே எப்போதும் வைக்கும் இராமானுசன்
புறச்சமயங்கள் நிலத்து அவியக் கைத்த மெய்ஞ் ஞானத்து இராமாநுசன் என்னும் கார்
தென் குருகைப்பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும் வீட்டின் கண் வைத்த இராமானுசன்
பல்லுயிர்கட்க்கு இறைவன் மாயன் என மொழிந்த அன்பன் அநகன்
தென் அத்தி யூரர் கழலிணைக் கீழ்ப் பூண்ட அன்பாளன்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த அரும் தவன்
பொன்னரங்கம் என்னில் மயிலே பெருகும் இராமானுசன்
இராமாயணம் என்னும் பத்தி வெள்ளம் குடி கொண்ட கோயில்
புண்ணியர் தம் வாக்கில் பிரியா இராமானுசன்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே
அண்ணல் இராமானுசன்
தீதில் இராமானுசன்
நல்லார் பரவும் இராமானுசன்
தென்னரங்கன் கழல் சென்னி வைத்துத் தான் அதில் மன்னும் இராமானுசன்
தொல் சீர் எதித் தலை நாதன்
தேர் விடும் கோனை முழுது உணர்ந்த அடியவர்க்கு அமுதம்
அற்புதன் செம்மை இராமானுசன் என்னை ஆளவந்த கற்பகம்
தென்னரங்கன் தொண்டர் குலாவும் இராமானுசன்
பண் தரு வேதங்கள் பார் மேல் நிலவிடப்பார்த்து அருளும் கொண்டல்
கோக்குல மன்னரை மூ வெழு கால் ஓர் கூர் மழுவால் போக்கிய தேவனைப் போற்றும் புனிதன்
மற்று ஒரு பேறு மதியாது அரங்கன் மலர் அடிக்கு ஆள் உற்றவரே தனக்கு உற்றவராகக் கொள்ளும் உத்தமன்
எம் இராமானுசன் மெய்ம்மதிக் கடலே–சத்யம் ஞானம் அநந்தம் -நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய்
அரு முனிவர் தொழும் தவத்தோன்
இராமானுசன் மிக்க பண்டிதனே
பண் தரும் மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்
இராமானுச எம் பெரும் தகையே
இராமானுசன் என்னும் சீர் முகிலே
கலைப் பெருமாள் ஒலி மிக்க பாடலை யுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலி மிக்க சீயம் இராமானுசன்
போற்ற அரும் சீலத்து இராமானுச
இந் நீணிலத்தே என்னை ஆள வந்த இராமானுசன்
எம் இராமானுசன் மிக்க புண்ணியனே
இராமானுசன் என்னும் மெய்த் தவனே
இந் நீணிலத்தே பொற் கற்பகம் எம் இராமானுசன்
இராமானுச என் செழும் கொண்டலே
நல் வேதியர்கள் தொழும் திருப் பாதன்
————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply