ஸ்ரீ பராத்பரன் -ஆதி பகவன் -பர ப்ரஹ்மம்-ஸ்ரீ மன் நாராயணனே -பிரமாணங்கள் —

அமலன் ஆதி -உபய லிங்கத்தவம்–மோக்ஷ பிரதத்வம் -ஜகத் காரணத்வம் -சத்ர சாமரம் ராஜாவுக்கு போலே –
வீறு கொண்டு -பக்த முக்த நித்ய -ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் –
ப்ரக்ருதி -அபுருஷ -புருஷ – உத் புருஷ உத்தர- புருஷ -உத்தம புருஷ -விலக்ஷணன் புருஷோத்தமன்-
சத்யம் -ஞானம் -அநந்தம்- ஆனந்தம் அமலத்வம் -பாஞ்சமும் உண்டே

சமாசம் -சேர்த்து -வியாசம் பிரித்து -அருளியதால் -வியாசர் —
பரமாத்மா -எவரைக் காட்டிலும் மேம்பட்ட வஸ்து இல்லாதவன் –
ப ரமா ஆத்மா -ரஷிக்கிறான் -ஸ்ரீ யபதி-/ பரா மா ஆத்மா -பெரிய பிராட்டியாருக்கு ஆத்மா –என்று மாதவ பாஷ்யம்

அழகிய காது அப்பன் ஆனான் புண்டரீ காஷன் -கண்ணன் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் கேட்டதும் -ரிஷிகள் நடுவில் இருந்து கேட்டான் –
தேவ ஸ்தானர் -ரிஷி பெயர் -பல ரிஷிகளும் கேட்க -/கோபிமார் கொய்சகத்தில் அலையும் தத்வம் -/
குசலவர்கள் சொல்ல ராமன் கேட்டருளி /

———————————————————-

அருளிச் செயல்களில் பரத்வ நிர்ணயம் –

தெய்வ நான்முகக் கொழு முளை ஈன்று முக்கண் ஈசனோடு தேவு பல நுதலி மூவுலகும் விளைத்த உந்தி -என்றும்
பூவில் நான்முகனைப் படைத்த தேவன் -என்றும்
நான்முகனை மூழ்த்த நீர் உலகு எல்லாம் படி என்று முதல் படைத்தாய் -என்றும்
நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -என்றும்
பிரமன் சிவன் இந்த்ரனாதிக்கு எல்லாம் நாபிக் கமல முதல் கிழங்கு -என்றும்
பிரமனைத் தன் உந்தியிலே தோற்றுவித்து -என்றும்
இரும் தண் கமலத்து இரு மலரினுள்ளே திருந்து திசை முகனைத் தந்தாய் -என்றும்
நின் உந்திவா அன்று நான்முகன் பயந்த ஆதி தேவன் -என்றும்
நான்முகனை நாராயணன் படைத்தான் என்றும்
உந்தியில் ஏற்றினாய் நான்முகனை -என்றும்
உந்தி எழுந்த உருவ மலர் தன்னில் சந்தச் சதுமுகன் தன்னைப் படைத்தவன் -என்றும்
உந்தி மேல் நான்முகனைப் படைத்தான் -என்றும்
இப்படி ஆழ்வார்கள் எல்லாரும் ப்ரஹ்ம ருத்ராதிகளை சர்வேஸ்வரன் தானே ஸ்ருஷ்ட்டித்தான் என்று அருளிச் செய்தும்

அங்கன் அன்றிக்கே
வலத்தனன் திரிபுரம் எரித்தவன் இடம் பெறத்துந்தித் தலத்து எழு திசை முகன் -என்றும்
ஏறனைப் பூவனைப் பூ மகள் தன்னை வேறின்றி விண் தொழ தன்னுள் வைத்து -என்றும்
திரு இடமே மார்வம் அயன் இடமே கொப்பூழ் ஒரு விடமும் பெருமாற்கு அரன் -என்றும்
எறாளும் இறையோனும் திசை முகனும் திரு மகளும் கூறாளும் தனி உடம்பன்-என்றும்
சிவனொடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திருவாகம் -என்றும்
மலர் மகள் நின்னாகத்தாள் செய்ய மறையான் நின் உந்தியான் மா மதிள் மூன்று எய்த இறையான நின் ஆகத்து இறை -என்றும்
பிறை தங்கு சடையானை வலத்தே வைத்துப் பிரமனை தன் உந்தியிலே தோற்றுவித்துக்
கறை தங்கு வேல் தடம் கண் திருவாய் மார்பில் கலந்தவன் -என்றும்
விஷ்ணோஸ் ஸ்ரீர் அநபாயிநீ-என்றும் சொல்லப்படுமவளாய்
இறையும் அகலகில்லாத நித்ய சித்த மங்களாவஹையாய்ப் பரம மஹிஷியான பெரிய பிராட்டியாருடனே
ரஜஸ் தாமஸ் குண மிஸ்ராரான ப்ரஹ்ம ருத்ரர்களுடன் வாசி அறத் தன் திரு மேனியில்
இடம் கொடுத்துக் கொண்டு இருக்கிறான் என்று அருளிச் செய்தும்

அங்கன் அன்றிக்கே
நிரை மலர்ப் பாதங்கள் சூடிக் கண்ணபிரானைத் தொழுவார் ஒற்றைப் பிறை அணிந்தானும் நான்முகனும்
இந்திரனும் மற்றை அமரர் எல்லாம் -என்றும்
கள்வா எம்மையும் எழு உலகையும் நின் உள்ளே தோற்றிய இறைவன் என்று வெள்ளேறன் நான்முகன்
இந்திரன் வானவர் புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவார் -என்றும்
நாடொறும் வானவர் தம்மை ஆளுமவனும் நான்முகனும் சடைமுடி அண்ணலும் செம்மையால்
அவன் பாத பங்கயம் சிந்தித்து ஏத்தித் திரிவர் என்றும்
நுண் உணர்வின் நீலார் கண்டத்து அம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும் சேலேய் கண்ணார் பலர் சூழ
விரும்பும் திருவேங்கடத்தானே -என்றும்
அரன் நான்முகன் ஏத்தும் செய்ய நின் திருப் பாதத்தை -என்றும்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்திரன் என்றும்
நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின் நாதனோடு போதின் மேல் நல் தவத்த நாதனோடு மற்றுமுள்ள
வானவர் கற்ற பெற்றியால் வணங்கு பாத -என்றும்
நீர் ஏறு செஞ்சடை நீல கண்டனும் நான்முகனும் முறையால் சீர் ஏறு வாசகம் செய்ய நின்ற திரு மால் -என்றும்
அவர் இவர் என்று இல்லை அரவணையான் பாதம் எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில் பவரும் செழும் கதிரோன்
ஒண் மலரோன் கண் நுதலோன் என்றே தொழும் தகையார் நாளும் தொடர்ந்து என்றும்
இப்படி ப்ரஹ்ம ருத்ராதி தேவதைகள் எம்பெருமானைக் கிட்டி ஸ்தோத்ரம் பண்ணித் திரிவார்கள் என்று அருளிச் செய்தும்

அங்கன் அன்றிக்கே
நளிர் மதிச் சடையன் என்கோ நான்முகக் கடவுள் என்கோ -என்றும்
சிவனாய் அயனானாய் -என்றும்
கடி கமழ் கொன்றைச் சடையனே என்னும் நான் மூகக் கடவுளே -என்றும்
பூத் தண் துழாய் முடியாய் புனை கொன்றை அம் சடையாய் வாய்த்த என் நான்முகன் -என்றும்
என் திரு மார்பன் தன்னை என் மலை மகள் கூறன் தன்னை என்றும் என் நா மகளை அகம் பால் கொண்ட நான் முகனை -என்றும்
முனியே நான்முகன் முக்கண் அப்பா -என்றும்
அவா வறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி அவா அற்று -என்றும்
இப்படி இத்திவ்ய பிரபந்தங்களிலே ஆதி மத்ய அவசானமாக ப்ரஹ்ம ருத்ராதிகளிலே சர்வேஸ்வரன் தானாக அருளிச் செய்தும்

ஆக இப்படி ஒரு கால் அருளிச் செய்தது ஒரு கால் அருளிச் செய்யாது இருக்கையாலே
இவற்றை முக்கிய தமமான பிரமாணம் என்று விஸ்வசிக்கலாய் இருந்தது இல்லையே என்னில்-விஸ்வசிக்கக் கூடும்
எங்கனே என்னில் –
இவ் வாழ்வார்கள் தாங்கள் தங்களுக்கு தேவதாந்த்ர விஷய வைராக்யம் உண்டு என்று தோற்ற
ஓ ஓ உலகினது இயல்வே -ஈன்றோள் இருக்க மணை நீராட்டிப் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து
தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும் கடவுள் நிற்பப் புடைப்பல தானறி தெய்வம் பேணுதல்
தான் புல்லறிவாண்மை பொருந்தக்காட்டி -என்றும்
எம்பெரு மா மாயனை அல்லது ஒரு மா தெய்வம் மற்று உடையோமே யாமே -என்றும்
பிதிரும் மனம் இலேன் பிஞ்சகன் தன்னோடு எதிர்வன் அவன் எனக்கு நேரான் -என்றும்
மற்றுமோர் தெய்வம் உண்டே மதியிலா மானிடங்காள்-என்றும்
மற்றுமோர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு உற்றிலேன் -என்றும்
எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் அல்லாதார் தாம் உளரே என்றும்
அவ்வளவும் அன்றிக்கே

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை படர் பொருள் முழுவதுமாய் அவையவை தோறும்
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்து உளன் சுடர் மிகு ஸ்ருதியும் இவை உண்ட சுரனே -என்றும்
போதின் மங்கை பூதலக் கிழத்தி தேவி அன்றியும் போது தங்கு நான் முகன் மகன் அவன் மகன் சொலின்
மாது தங்கு கூறன் ஏற தூர்தி என்று வேத நூல் ஓதுகின்றது உண்மை -என்றும்
தீர்த்தன் உலகு அளந்த சேவடி மேல் பூம் தாமம் சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயான் பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசிக் கிடந்ததே என்றும்
கபால நன் மோக்கத்துக்குக் கண்டு கொண்மின் -என்றும்
மார்க்கண்டேயனும் கரியே கறுத்த மனம் ஒன்றும் வேண்டா -என்றும்
கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை -என்றும்
சத்தியம் காண்மின் இனைய சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்
இப்படி பிரமாணத்தாலும் பிரத்யஷத்தாலும் சாக்ஷியாலும்

இவர்கள் சர்வேஸ்வரனுக்கு சரீரமான படியை
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசைமுகற்கும்-என்றும்
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே என்றும் அருளிச் செய்தார்கள்
இவர்கள் சர்வேஸ்வரனுக்கு சரீர பூதராக-அவன் தான் ஆத்மாவாக -இவர்களை அவன் தானாகச் சொல்லும்படி
எங்கனே என்னில்
சரீர வாச சப்தம் சரீர பர்யந்த ஸ்வார்த்த அபிதானம் பண்ணக் கடவது இறே
ஒரு சரீரீ யானவன் ஸ்தூலோஹம் க்ரூசோஹம் -என்று தானும் சொல்லி-
பிறரும் நீ தடித்தாய் இளைத்தாய் என்று சொல்லுமோபாதி இவர்களையும் சர்வேஸ்வரன் தானாகச் சொல்லக் குறையில்லை –
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான் -என்றும்
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழேயோ சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதியோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ -என்றும்
தேவராய் நிற்கும் அத்தேவு மத்தேவரின் மூவராய் நிற்கு முது புணர்ப்பும் யாவராய் நிற்கின்றது எல்லாம் நெடுமால் -என்றும்
முதலாவார் மூவரே யம்மூவர் உள்ளும் முதலாவான் முரி நீர் வண்ணன் –என்றும்
இத்யாதிகளாலே அவனை ஒழிந்த சகல சேதன அசேதனங்களும் அவன் தானாகவே அருளிச் செய்தார்கள்

இவன் திரு மேனியில் சர்வ காலமும் இருப்பர்களோ என்னில் –
ஆபத்காலத்தில் எம்பெருமான் திருமேனியில் ஒதுங்க அவர்களுக்கும் இடம் கொடுக்கும் அத்தனை அல்லது
எப்போதும் இரார்கள்-
இது தான் சர்வேஸ்வரனுக்கு மஹத்தான சீல குணமாகையாலே ஆழ்வார்கள் எப்போதும் அத்தையே
அருளிச் செய்து கொண்டு போருவர்கள்
தாள தாமரையான் உனது உந்தியான் வாள் கொள் ஈண் மழுவாளி உன்னாகத்தான்
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள் நாளும் என் புகழ் கோ யுன சீலமே-என்றும்
அக்கும் புலியின தளுமும் உடையாராவர் ஒருவர் பக்கம் நிற்க நின்ற பண்பர்-என்றும் சொல்லக் கடவது இறே
கலகங்களானால் அடைய வளைந்தானுக்கு உள்ளே இன்ன ஜாதி என்னாமல் எல்லாரும் கூடி இருந்து
கலஹம் தெளிந்தவாறே புறப்பட்டாலும் இவ்விடம் இன்னான் பற்று இவ்விடம் இன்னான் பற்று என்று சொல்லுமா போலே
என்று நஞ்சீயருக்குப் பட்டர் அருளிச் செய்தார் இறே

————————————

திரு வள்ளுவர் -வல்லபாச்சார்யர் -கருமாத்யக்ஷர் -வடமொழி நாமம் -என்பர்
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி பகவான் முதற்றே உலகு -1-
மடியிலா மன்னவன் எய்தும் அடி அளந்தான் தா அயதெல்லாம் ஒருங்கு -610-
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது கொல் தாமரைக் கண்ணான் உலகு -1103-

——————————-

சுத்தே மஹா விபூத்யாக்யே பரே ப்ரஹ்மணி சப்த்யதே மைத்ரேய பகவச் சப்தஸ் சர்வ காரண காரணே
சம்பர்த்தேதி ததா பர்த்தா பகா ரோர்த்தத் வ்யான்வித நேதா கமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் தத ஸ்ம்ருத
ஐஸ்வரஸ்ய சமக்ரஸ்ய வீர்யஸ்ய யஸ ஸ்ரீய ஞான வைராக்ய யோஸ்ஸைவ ஷண்ணாம் பக இதீரனா
வசந்தி தத்ர பூதாநி பூதாத்மன் யகிலாத்மநி ச ச பூதேஷ்வசே ஷேஷு வகாரத்தஸ் ததோவ்யய
ஞான சக்தி பலை ஐஸ்வர்ய வீர்ய தேஜாம் ஸ்ய சேஷத பகவச் சப்த வாஸ்யாநி விநா ஹேயைர் குணாதிபி
ஏவ மேஷ மஹா சப்தோ மைத்ரேய பகவாநிதி பரம ப்ரஹ்ம ரூபஸ்ய வாஸூ தேவஸ்ய நாக்யக
தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபாஷ சமன்வித சப்தோயம் நோப சாரேண அந் யத்ர ஹ்யுப சாரத–ஸ்ரீ விஷ்ணு புராணம்

ப காரம் -பிரகிருதி -கார்ய தசையை அடையச் செய்யும் ஸ்வாமி
க காரம் -ரக்ஷித்து சம்ஹரித்து ஸ்ருஷ்டித்து அருளுபவர்
வ காரம் -பூதங்களில் வசித்து -பூதங்களும் வாசிக்கப்படுபவன் -அந்தர் பஹு வியாப்தி
பக–சம்பூர்ணமான ஞான பல சக்தி தேஜஸ் ஐஸ்வர்யம் வீர்யம்

——————————

த்யாயீத புருஷம் விஷ்ணும் நிர்க்குணம் பஞ்ச விம்சகம் புரமாக்ரம்ய சகலம் சேதே யஸ்மான் மஹா பிரபு
தஸ்மாத் புருஷ இத்யேவ ப்ரோச்யதே தத்வ சிந்தகை –ஸ்ரீ விஷ்ணு ஸ்ம்ருதி

பூஸ் சம்ஜேஸ்மின் சரீரே வை சயநாத் புருஷோ ஹரி
சகாராஸ்ய ஷகாரோயம் வ்யத்யாசேந ப்ரயுஜ்யதே
யதி வா பூர்வ மேவா ஹமிஹேதி புருஷம் விது
யதி வா பஹு தாநாத் வை விஷ்ணு புருஷ உச்யதே
பூர்ணத்வாத் புருஷோ விஷ்ணு புராண த்வாச்ச சார்ங்கிண
பத்வா புருஷ சப்தோயம் ரூட்யா பக்தி ஜனார்த்தனம் –ஸ்ரீ பாத்ம புராணம்

புரு — சநோதீதி புருஷ -வ்யுத்பத்தி

பூதைர் மஹத்பிர் ய இமா புரோ விபு நிர்மாய சேதே யத மூஷு பூருஷ
ஸ்வாம் சேந விஷ்ட புருஷாபிதாநம் அபாவ நாராயண ஆதி தேவ
பூதைர் யதா பஞ்பி ராத்ம ஸ்ருஷ்டை புரம் விராஜம் விரசய்ய தஸ்மின்
ஸ்ருஷ்ட்வா ஸ்வ சக்த்யேத மனு ப்ரவிஷ்ட சதுர்விதம் பரமாத்மாம் சகேந அதோ விதுஸ் த்வாம் புருஷம் –ஸ்ரீ மத் பாகவதம்

ய ஏவ வாஸூ தேவோயம் புருஷ ப்ரோச்யதே புதை
ப்ரப்ருதி ஸ்பர்ச ராஹித்யாத் ஸ்வா தந்தர்யாத் வைபவாதபி
ச ஏவ வாஸூ தேவோயம் சாஷாத் புருஷ உச்யதே
ஸ்த்ரீ ப்ராயமிதரத் சர்வம் ஜகத் ப்ரஹ்ம புரஸ் சரம்
ப்ரஹ்மாத்யா தேவதாஸ் சர்வா யஷதும் புரு மானுஷா
தே சர்வே புருஷாம் சத்வாத் விச்ருதா புருஷா இதி –ஸ்ரீ நரஸிம்ஹ புராணம்

தஸ்யை கஸ்ய மஹத்த்வம் ஹி ச சைக புருஷ ஸ்ம்ருத மஹா புருஷ சப்தம் ஹி பிபர்த்யேக சனாதன
ச ஹி நாராயணா ஜ்ஜேய சர்வாத்மா புருஷோ ஹி ச –ஸ்ரீ மஹா பாரதம்

அந்யநாம் நாம் கதிர் விஷ்ணு ரேக ஏவ ப்ரகீர்த்தித ருதே நாராயணா தீநி நாமாநி புருஷோத்தம ப்ராதான் யத்ர பகவான் —
–ததேவ பகவத் வாஸ்யம் ஸ்வரூபம் பரமாத்மந வாசகோ பகவச் சப்தஸ் தஸ் யாத்யஸ்யா ஷயாத்மந –ஸ்ரீ விஷ்ணு புராணம்

பகவாநிதி சப்தோயம் ததா புருஷ இத்யபி நிரூபாதீ ச வரத்தேதே வாஸூ தேவே ஸநாதநே–ஸ்ரீ வராஹ புராணம்

ப்ருஹத்வம் ச ஸ்வ ரூபேண குணை ச யத்ர அநவதி காதி சயம்
ச அஸ்ய முக்ய அர்த்த சச சர்வேஸ்வர ஏவ
அதோ ப்ரஹ்ம சப்த தத்ரைவ முக்ய வ்ருத்த
தஸ்மாத் அந் யத்ர தத் குண லேச யோகாத் ஒவ்பசாரிக பகவச் சப்த வைத்த –ஸ்ரீ பாஷ்யம்

பகவான் -563-திரு நாமம் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம்
ஹரி வம்சத்தில் சொல்லியபடி பகம் எண்ணப்படும் பூரணமான ஐஸ்வர்யம் தர்மம் கீர்த்தி லஷ்மி வைராக்யம் மோக்ஷம் –
ஆகிய ஆறு குணங்களும் பொருந்தினவர்
ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் சொல்லியபடி பிராணிகள் உண்டாவதையும் அழிவதையும் வளர்வதையும் தெய்வத்தையும்
ஞானத்தையும் அஞ்ஞானத்தையும் அறிபவர் -ஸ்ரீ சங்கர பாஷ்யம்

குற்றங்கள் அனைத்தையும் ஒழித்துக் கல்யாண குணங்களே நிரம்பின ஸ்வரூபம் ஆதலால்
பூஜிக்கத் தக்கவர் -ஸ்ரீ பட்டர் பாஷ்யம்

————————————-

அந்தம் இலா ஆதி யம் பகவன் –திருவாய் மொழி -1-3-5–

தனக்கு அந்தம் இன்றி -எல்லார்க்கும் தான் ஆதியாய் ஸ்வா பாவிகமாய்
ஹேயபிரத்ய நீகமான ஞானாதி கல்யாண குண பரிபூர்ணன் — ஒன்பதினாயிரப்படி

அந்தமில் -முடிவில்லாத / ஆதி முதல் /ஆகையால் நித்யனாய் -/அம் ஹேயபிரதி படனாய் /
பகவன் -கல்யாண ரூபமான ஞான சக்த்யாதி குண விசிஷ்டனான பகவானுடைய –பன்னீராயிரப்படி

அந்தமிலாதி -ஆப்த தமன் -எல்லாருக்கும் உத்பத்தி விநாசங்களால் இறே ஞான சங்கோசம் பிறப்பது –
இவனுக்கு அவை இல்லாமையால் அகர்ம வஸ்யன் என்கிறது
அம் பகவன் -ஞானாதிகளால் ஆல்பம் உத்கர்ஷம் உடையவன் பக்கலிலே பகவச் சப்தம் வர்த்தியா நின்றது இறே
அந் யத்ர ஹ்யுபசாரத–பகவச் சப்தம் முக்கியமாக வசிப்பது இவன் பக்கலிலே
அல்லாதார் பக்கலிலே ஒவ்பசாரிகம் –ஈடு

அமலனாதிபிரான் -என்பதில் ஆதி -ஏஷ கர்த்தா நக்ரியதே -இத்யாதிகள் படியே சர்வ ஜகத் ஏக காரண பூதன்
இத்தால் காரணமே சரண்யம் என்கிறபடியே முமுஷுக்கு சரணமாகப் பற்றப்படுமவன் என்று பலிதம்
இக்காரணத்வமும் மோக்ஷப்ரதத்வமும் சத்ர சாமரங்கள் போலே
சர்வ லோக சரண்யனுக்கு விசேஷ சிஹ்னங்கள் –ஸ்ரீ தேசிகன் -முனி வாகன போகம்

——————————–

இப்படி ஸ்வ அதீன சர்வ சத்தாதிகளை உடையவன் -ஸ்வரூபம் –
ஸத்யமாய் -ஞானமாய் -அநந்தமாய்–ஆனந்தமாய் –அமலத்வமாய் -இருக்கும்
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய்
உணர் முழு நலம்
சூழ்ந்த அதனுள் பெரிய சுடர் ஞான இன்பம்
அமலன்

ஞானதிகள் ஸ்வரூப நிரூபண குணங்கள்–இவை பரத்வ உப யுக்தங்கள்
மற்றவை நிரூபித்த ஸ்வரூப விசேஷிதங்கள்
குணங்கள் எல்லாம் சர்வ காலத்திலும் ஸ்வரூப ஆஸ்ரிதங்களாக இருக்கும் –
உபநிஷத்தில் வித்யா விசேஷங்கள் தோறும் அனுசந்தேய குண விசேஷங்கள் நியதமாய் இருக்கும்
ஸாஸ்த்ர ஸித்தமான ரூப அனுசந்தானத்துக்கும் குண விசேஷங்கள் நியதமாய் இருக்கும் –
பர ரூபத்தில் ஞானத்து குணங்கள் ஆறும் வேத்யங்கள் –ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் -தத்வ த்ரய சிந்தனை அதிகாரம்

நாலு வ்யூஹம் உண்டாய் இருக்க வ்யூஹ வாஸூதேவன் பர வ்யூஹ வாஸூதேவன் –
குண பேதம் இல்லாமையால் நாலு வ்யூஹம் த்ரி வ்யூஹம் என்றும் சொல்லும்
குணைஸ் ஷட் ப்ஸ்த் வேதை பிரதம தர மூர்த்தி ஸ்தவ பபவ்
ததஸ் திஸ்ரஸ் தேஷாம் த்ரியுக யுகளைர் ஹி த்ரி பிரபு –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்

ஷாட் குண்யாத் வாஸூ தேவ பர இதி சபவான் முக்த போக்யோ
பலாட்யாத் போதாத் சங்கர்ஷண ஸ்த்வம் ஹரசி விதநுஷே
ஸாஸ்த்ரம் ஐஸ்வர்ய வீர்யாத் ப்ரத்யும்னஸ் சர்க்க தர்மவ்
நயஸிச பகவந் சக்தி தேஜோ நிருத்த பிப்ராண பாசி தத்வம்
கமயசி ச சதா வ்யூஹ்ய ரங்காதி ராக –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -உத்தர சதகம் –

ஜாக்ரத் ஸ்வப்நாத்ய லஸதுரீய ப்ரயாத் யாத்ரு க்ரமவ து பாஸ்ய ஸ்வாமிந் தத் தத் ஸஹ
பரி பர்ஹ சாதுர் வ்யூஹம் வஹஸி சதுர்த்தா –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -2-20–

———————————–

அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யு விசோகோ விஜிகத்ச அபிபாச ஸத்ய காமோ ஸத்ய சங்கல்பம் –
ஆகிய அஷ்ட குணங்கள்

கோளில் பொறியில் குணம் இலவே எண் குணத்தான்
தாளை வணங்காத் தலை –எண் குணத்தான்-அஷ்ட குணங்கள்

கற்றதனாலாய பயன் என் கொல் வால் அறிவன்
நல் தாள் தொழாராயின் –நல் தாள் -அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவன்

மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார் –மாண் அடி -அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவன்

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல–பாபம் இன்மை

இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு -ஸத்ய காமம் ஸத்ய சங்கல்பம் -மெய்மை சேர்ந்த இறைவன் புகழ்

பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார் –பசி தாகம்-சோகம் -மரணம் இன்மைகள்

தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லான்
மனக்கவலை மாற்றல் அரிது –இவ்வாறு ஆறு எட்டு குணங்கள் இருப்பதால் அத்விதீயன்

அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது -தர்மக்கடல் அன்றோ அவன்

பிறவிப் பெரும் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார் –

தயை- ஷாந்தி -அநஸூயை -சவ்சம் -அநாயாசம் -மங்களம் -அகார்ப்பண்யம் -அஸ்ப்ருஹை –
அஷ்ட ஆத்மகுணங்களுடன் சேதனன் அஷ்ட குணாத்மகனான பகவானை
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்வதே ஸ்வரூபம்
கண்ணன் கழலிணையே நமக்குத் தஞ்சம்

ஆதியாகி யாதி நீ ஓர் அண்ட மாதி யாதலால்
சோதியாத சோதி நீ அதுண்மையில் விளங்கினாய்
வேதமாகி வேள்வியாகி விண்ணினோடு மண்ணுமாய்
ஆதியாகி ஆயனாய மாயம் என்ன மாயமே–

——————————————————-

ஸ்ரீ பெரியாழ்வார் நிர்ஹேதுக பகவத் ப்ரஸாதத்தாலே சகல வேத சாரார்த்தங்களையும்
தத் உப ப்ரும்ஹணங்களான இதிஹாச புராணங்களையும் சாஷாத் கரித்து
ஸமஸ்த சப்த மூலத்வாத் அகாரஸ்ய ஸ்வபாவத -என்று சர்வ சப்த மூலமாய் இருந்துள்ள அகாரத்தை –
அக்ஷராணாம் அகாரோ அஸ்மி -என்று கீதா உபநிஷதச்சார்யன் தானே அருளிச் செய்கையாலே
அகாரோ விஷ்ணு வாசக -என்கிறபடியே அகார வாச்யனான ஸ்ரீ மன் நாராயணனே சர்வ ஸ்மாத் பரன் என்று கொண்டு
பரத்வ சிஹ்னங்களான ஜெகஜ் ஜென்ம ஸ்திதி லய வாசகங்களான

யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி யத் ப்ரயந்த்ய அபி சம் விசந்தி தத் விஜிஜ்ஞாஸஸ்வ தத் ப்ரஹ்மேதி-
இத்யாதி வாக்யங்களை
ஜகத் காரணத்வ -முமுஷு உபாஸ்யத்வ -மோக்ஷ பிரதத்வ -ப்ரதிபாதங்களான -நாராயண அனுவாத ஸ்ருதிகளாலும்
விஷ்ணோஸ் சகாஸா துத்பூதம் ஜகத் தத்ரைவ வச ஸ்திதம் –ஸ்திதி சம்யம கர்த்தா அசவ் ஜகதோ அஸ்யா ஜகச் சஸ-என்றும்
நாராயணாத் பாரோ தேவோ ந பூதோ ந பவிஷ்யதி -ஏதத் ரஹஸ்யம் வேதா நாம் புராணா நாஞ்ச சம்மதம் -என்றும்
சத்யம் சத்யம் புநஸ் சத்யம் உத்த்ருத்ய புஜமுச்யதே -வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தேவம் கேஸவாத் பரம் -என்றும்
இத்யாதிகளான ஸ்ம்ருதி இதிஹாச புராணாதி வசன சஹஸ்ரங்களாலும் பஹு முகமாக ப்ரசாதித்து அருளிச் செய்கையாலே
வித்யா ஸூல்கமாகத் தோரணத்தில் கிழியாகக் கட்டி வைத்த தனம் இவர் முன்னே தானே தாழ வளைய
ஆழ்வாரும் அதி ப்ரீதியுடன் விரைந்து கிழி யறுத்தான் -என்கிறபடியே அக் கிழியை அறுத்து அருளினார்

கமலா -ககாரம் -பரனுக்கும் -மகாரம் -ஜீவனுக்கும் லாகாரம் -பாலமாக பிராட்டி / உறையூர் -பிராட்டி மன்னி நித்ய வாசம்
திருப்பாண் ஆழ்வார் திரு அவதாரம்
ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் -ஸ்ரீ பொன்னாச்சியார்
கோழியும்-என்றே மங்களா சாசனம் –

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading