ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –
———————————-
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் வைபவம்
சோள ஷிதவ் தநுஷி மாசி மஹேந்திர தாரே
ய ப்ராதுரா ச முரஜித் வநமாலிக அம்ச
ரங்கேச கேளி ஸஹ மூர்த்வசி கந்த் விஜேந்த்ரம்
பக்தாங்க்ரிரேணு மநகாத்ம குணம் ப்ரபத்யே
ரெங்கேச கேளி ரதம் /ப்ராதுர் பபூவ / பாட பேதங்கள்
கோதண்டே ஜ்யேஷ்ட நக்ஷத்ரே மண்டங்குடி புரோத்பவம் சோளோர்வ்யாம் வனமால அம்சம் பக்த பத்ரேணும் ஆஸ்ரயே கோதண்டே சாப மாசம் மார்கழி வனமால அம்சம் -வைஜயந்தி அம்சம் (தேஹ ஸ்ரீ)கலி பிறந்து 288- ப்ரபவ-கிருஷ்ண பக்ஷம் சதுர்த்தசி -(பூமி ஸூநு திவசே)செவ்வாய் கிழமை
தேஹ ஸ்ரீ சர துத்தரே ப்ரபவ நாம்ந்யப் தேகலவ் பாஸ்கர
சாபக்ராஹிணி பூமி ஸூநு திவசே ஜ்யேஷ்டா பிதே ஸ்ரீ மதி
ருஷே க்ருஷ்ண சதுர்த்தஸீ திதி யுதே பக்தாங்க்ரிரேணுஸ் ஸூதீ
ரங்கே சாங்க்ரீ சரோருஹைக ஹ்ருதய பிரபாவதாரம் புவி
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திரு மண்டங்குடி என்னும் கிராமத்திலே -மாஸானாம் மார்க்க சீர்ஷோ அஹம் -என்று
எம்பெருமான் தானாகச் சொல்லப்பட்ட மார்கழி மாசத்தில் கேட்டை நக்ஷத்திரத்தில் ஸ்ரீ வைஜயந்தி வனமாலிகா அம்சராய்
ப்ராஹ்மண வர்ணத்தில் திரு அவதரித்து அருளினார் –
தத் ரோத பூத் பாகவதராத் த்விஜேந்த்ராத் மாஹேந்த்ரபே மாஸிச மார்க்க சீர்ஷே ஸ்ரீ விப்ர நாராயண நாமதேய முராரி வஷோ
வனமாலிக அம்ச –என்று திவ்ய ஸூரி சரித்ரத்திலே சொல்லிற்று இறே
பாகவதோத்வி ஜேந்த்ர என்பதும் ஸ்ரீ ரெங்க பக்தோ என்பதும் பாடாந்தரங்கள்
நம்பெருமாள் அவரை ஜாயமான காலத்திலே -அமலங்களாக விழித்துக் கடாக்ஷித்து அருள –
அத்தாலே சுத்த சத்வ நிஷ்டரான இவருக்கு விப்ர நாராயணர் என்று திரு நாமம் சாத்திக் காலம் தப்பாமல்
சவ்ள உபநய நாதிகளையும் பண்ணுவித்து நால் வேதம் ஆறு அங்கம் முதலான அகில வித்யைகளையும் அதிகரிப்பிக்க
அகில வித்யா பாரங்கதராய் -அதி விரக்தராய் அக்ருத உத்வாஹருமான இவர் (கல்யாணமாகாத இவரை )
மருத் வ்ருதாயா மத்யஸ்தம் சந்த்ர புஷ்கரணீ தடே ஸ்ரீ ரெங்க மதுலம் க்ஷேத்ரம் ஸ்ரீ யா ஜுஷ்டம் ஸூபாஸ்தம்-என்கிறபடியே
சமாப்யதிக ரஹிதமாய் ஸ்லாகிக்கப் படுகிற ஸ்ரீ ரெங்க ஷேத்ரத்திலே புகுந்து
விமாநப்யேத்ய சது ப்ரதக்ஷிணஞ் சதுர்த்தி சம் தஸ்ய க்ருத பிராணாம ததந்தரா விஸ்ய விதிர் ததர்ச தமிந்த்ர
நீலாசல சன்னிகாசம் பிரசன்ன வக்த்ரம் நளிநாய தேக்ஷணம் க்ருபா மயம் காந்தி நிகேத ரூபம் -என்கிற விக்ரஹத்தை
சதுராநநன் (விதிர் ததர்ச)சேவித்தால் போலே சதுரரில் அக்ர கண்யரான இவரும் –
அரவரச பெரும் ஜோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையின் மேலே பள்ளி கொண்டு அருளும்
பர வாஸூ தேவரான அழகிய மணவாளரை சேவிக்க
இவர் விஷய வாசி அறிந்து பற்றுகிறதே பற்றாசாகப் பெரிய பெருமாளும் தம்முடைய கிருபையாலே –
குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் என்று சொல்லப்பட்டு இருப்பதாய் பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம்-என்கிற
தம்முடைய வடிவு அழகைக் காட்டி இவரைத் தம் பக்கலிலே நிரதிசய பக்தி உக்தராம்படி கடாக்ஷித்து அருள
ஸ்ரீ விப்ர நாராயணரும் அபார காருணிகரான-அரங்கனார்க்கு ஆட்ச் செய்ய வேணும் என்று துளபத் தொண்டிலே தத் பரராய் –
புண்டரீகஸ் ச புண்ய க்ருத் -என்று புண்ய க்ருத்தாகச் சொல்லப் பட்ட ஸ்ரீ புண்டரீகரைப் போலேயும் –
தன்யோஹம் என்று -நன்மாலைகள் சாத்தி ஸந்துஷ்டரான ஸ்ரீ மாலா காரரைப் போலேயும்
சது நாகவரஸ் ஸ்ரீ மான் நாராயண பராயண-என்கிற கைங்கர்ய ஸ்ரீ யை யுடையராகையாலே ஸ்ரீ மான் என்று
சொல்லப்பட்ட ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானைப் போலேயும்
எண் பகர் பூவும் கொணர்ந்தேன் -என்று அஷ்ட வித புஷ்ப மயமான -அலம் கலன் தொடையல் கொண்டு
அடியிணை பணிந்த பெரியாழ்வாரைப் போலேயும்
இவரும் தம்மை ஏமாற்றம் தவிர்த்துத் திரு வரங்கத்தே கிடந்த திரு உடையாள் மணவாளர்க்குத் திரு நந்தவனம் செய்து
நித்யம் திருமாலை கட்டி சமர்ப்பித்து போருகிற காலத்திலே
திருக் கரம்பனூரிலே திவ்ய அங்கந அம்சையாய் அதி ஸூந்தரியையாய் வர்த்திக்கிற தேவ தேவி என்கிற வேஸ்யை
ஒரு கால் நிசுளா புரீசனான சோழனை சேவித்து மீண்டு வருகிற போது ஸ்வ சகிகளோடே கூட
மார்க்க கேத வ்யபநோதன அர்த்தமாக ஸ்ரீ விப்ர நாராயணர் செய்கிற திரு நந்தவனத்தில் திருச் சோலை நிழலிலே
ஒரு மரத் தடியில் இருந்து அத் திருச் சோலையின் ஸ்ரீ யைச் சுற்றிச் சுழன்று பார்த்துப் பரவசையாய்
பநச ஆம்ர பாடல நாளிகேர நாரங்க ஜம்பீர லிகுச கதளீ குரவக வகுள அசோக புந்நாக பூகீ ப்ரப்ருதி வ்ருஷ ஷண்ட(மரங்களை விவரித்து )
விடபாரூட சுக பிக சாரிகாதி சகுநைர் மதுர கூஜிதமாய் (பறவைகளை விவரித்து )-நிரந்தர வசந்தமாய் மதுஸ்ரவ குஸூ மாந்த ராளத்திலே
மஜ்ஜூ கூஜந் மது வ்ரத யுக்தமாய்
கேதகீ மாலதீ ஜாதி மல்லிகா அரவிந்த கல்ஹார இந்தீவர சம்பகா மோத பந்துர கந்த வந ஹோப சேவிதமாய் இருக்கக் கண்டு
ஸ்வ அக்ரஜையைக் குறித்து -இப் பொழிலின் நிழல் ஸ்ரமஹரமாய் நந்தவனத்தையும் சைத்ர ரதத்தையும்
பரிஹஸியா நின்றதீ -என்ன -அவளும் ஸ்மேராந நாப்ஜையான தேவ தேவியைக் குறித்து -ஸ்வ ப்ரஸூந ப்ரகர்ஷத்தாலே
நம்பெருமாள் திரு முடியைப் பூஷித்து வருமதாய் அவர் ம்ருகயா விஹார ஸ்ராந்தி பிரசமனம் பண்ணுமது
அஸ்மதாதிகளுக்கு அத்வ கேத ஹரணம் பண்ணாது ஒழியுமோ என்று ப்ரியா லாபம் பண்ணிக் கொண்டு
ஆராம லஷ்மீ நிஷீதேஷணர் ஆனவர்கள் அங்கே ஸ்ரீ விப்ர நாராயணரைக் கண்டார்கள்
இவரும் வளர்ந்த கேசஸ் மஸ்ருக்களைக் யுடையராய் ப்ரவ்ருத்த ரோம பிரகாசி தாங்கராய் பரிதவ்த தந்த வஸ்த்ர ஊர்த்வ
புண்டரங்களையும் உடையராய் -தரிக்கப்பட்ட துளஸீ பத்மாஷ மாலையையும் த்வாதச ஊர்த்வ புண்டரங்களையும் உடையராய்-
திவ்ய உத்யானஸ்த தருகுல் மலதாதிகளுக்கு ஆலவால கரண ஜலசேச நாதி கைங்கர்ய நிரதராய் நிற்க –
அத்தை அவர்கள் இருவரும் விஸ்மயத்துடனே ஆலோகித்துக் கொண்டு இருக்க
இவரும் தன் கைங்கர்யா சாக்த சித்தரராய் அவர்களைக் கண் எடுத்துக் பாராமல் திரஸ்கரித்து இருக்கிற அவ்வளவில்
தேவ தேவியும் தன் தமக்கையுடனே இவன் க்லீபனோ உன்மத்தனோ -நாம் வந்து முன்னே நிற்க நிரீஷியாது இருக்கிறானே என்ன
ததக்ரஜையும் அவளைக் குறித்து -இவர் க்லீபரும் அன்று -உன்மத்தரும் அன்று -ரெங்கேச கைங்கர்யாசக்த சித்தராய்
மஹா விரக்தரான இவர் த்வத் ரூப சம்பத்தியைக் காறி உமிழ்ந்திருப்பர் –
இவரை உன் விப்ரம விலாச ஹாசேஷணாதிகளாலே மோஹிப்பித்தாயாகில் நீயே வார ஸ்த்ரீ ஜன முக்யை –
உனக்கு நான் ஆறு மாசம் தாசியாய் இருப்பேன் என்ன –
தேவ தேவியும் அத்தைக் கேட்டு -இவரை நான் வஸீ கரியா விட்டால் உனக்கு ஆறு மாசம் வெள்ளாட்டி யாவேன் என்று ப்ரதிஜ்ஜை பண்ணி
ஸ்வ அலங்காரத்தையும் கழற்றிக் கொடுத்து ஸ்வ சகிகளோடே கூட ஸ்வ அக்ரஜையையும் அனுப்பி சாத்விக வேஷ யுக்தையாய்
இவர் திருவடிகளிலே விழுந்து சேவிக்க
இவரும் இது என் பெண்ணே -என்று கேட்டு அருள –
அவளும் ஸ்வாமின் அடியேன் வார ஸ்த்ரீ வம்சத்தில் பாப வசாத் பிறந்தேன் –
என்னை என் தாயானவள் -சர்வரையும் பஜித்து அர்த்தார்ஜனம் பண்ணு-என்ன –
அடியேன் பூர்வம் பாபங்களைப் பண்ணி இஜ் ஜென்மத்தில் பிறந்ததும் அன்றியே இன்னம் பாபார்ஜனம் பண்ணிப் படு குழியில்
விழ வேணுமோ என்று சொல்லி அர்த்த லுப்தையான இவளைப் பரித்யஜித்துப் பெருமாளுக்கு அந்தரங்க கைங்கர்ய நிரதரான தேவரீர்
திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்க வேணும் என்று வந்தேன் –
ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வமுடைய அடியேனை இரங்கி அருளி ஆராம ரக்ஷண க்ருத்யே நியோகித்தால்
தேவரீர் பெருமாளுக்குத் திருமாலை சமர்ப்பித்து மாதுகரம் பண்ணி எழுந்து அருளும் தனையும் காத்து இருக்கிறேன் என்ன
இவரும் இரங்கி அருளித் தம்முடைய திருவாராதனமான எம்பெருமானுக்குப் பைஷத்தை அமுது செய்யப் பண்ணித்
தாமும் அமுது செய்து நிஜ புக்த சேஷத்தையும் இரங்கி அருளினார்
பின்பு அவளும் திரு நந்தவனத்தில் திருத் துழாய் முதலான பூம் செடிகளுக்குக் குழி கட்டிச் சோதித்துக் கொத்தித்
திரு மஞ்சனம் பரிமாறிக் கொண்டு இப்படியே ஆறு மாசம் அனுவர்த்தித்து இருந்தாள்-
பின்னையும் குழி கட்டிச் சோதித்துத் திருமஞ்சனம் பரிமாறிக் கொண்டு இருக்கச் செய்தே வர்ஷா காலமானவாறே
ஒரு நாள் பெரு வர்ஷம் வர்ஷிக்க ஸ்ரீ விப்ர நாராயணரும் பர்ணசாலையிலே பிரவேசித்து இருக்க அவளும் அப்பாலே இருந்து
நனையா நிற்கக் கண்டு உள்ளே வா என்று அழைக்க -அவளும் உள்ளே புகுந்த அளவில் ஈரப் புடைவையுடன் இருப்பதைக் கண்டு
தம்முடைய உத்தரீயத்தைப் பிரசாதிக்க -அவளும் தரித்துக் கொண்டு அவரைப் பார்த்து திருவடிகளை பிடிக்கிறேன் என்ன
இவரும் அனுகூலிக்க அவளும் திருவடிகளைப் பிடியா நிற்கச் செய்தே
அங்கார சத்ருசீ நாரீ க்ருத கும்ப சம புமான்-என்கிறபடியே நெருப்பைச் சேர்ந்த நெய்யைப் போலே இவர் மனம் உருகச் செய்தே
அவளும் ஸ்வாமி அடியேனுக்கு ஹிதமாய் இருபத்தொரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் என்று மந்த ஸ்மிதம் செய்து
அபாங்க வீக்ஷணம் பண்ண -இவரும் விகரித்து அவள் கையைப் பிடிக்க அவளும் தந்யை யானேன் என்று
இவரைக் காடா லிங்கனம் பண்ணிக் கொண்டு ரமித்து
ஒருகாலும் காந்தா விஷயா நபிஜ்ஞரான இவரை மநோ பவாயோதந வைபவத்தால் ஸ்வ விஷயே மக்ந மநா வாக்கினாள்-
அதன் மற்றை நாள் ஸ்வ க்ருஹத்தின் நின்றும் ஸ்வ ஆபரணத்தை அழைப்பித்துக் கொண்டு சர்வ ஆபரண பூஷிதையாய்
இவரைத் தன் ஆபி ரூப்யத்தாலே மயக்கி அவயவ ஏக தேசத்திலே ஆழங்கால் படுத்தி திரு நந்தவனத்தில்
மல்லிகா லதா க்ருஹத்தையும் மாதவீ குஸூமோத்கர குஞ்சத்தையும் விசித்ர நிர்ப்பர மன்மத உத்சவ ரசத்தையும் அனுபவிப்பித்து
த்ருட அநுகாரத்தாலே ஒருவரை ஒருவர் ஒரு க்ஷணமும் பிரிய ஷமர் இன்றிக்கே இருந்து இவரை
ஸ்வ வச வர்த்தியாம் படி பண்ணி ஸ்வ சம்பந்தத்தை சஹிப்பிக்க தன் சகிகளும் தமக்கையும் கண்டு ஸ்லாகிக்க
தீர்ண ப்ரதிஜ்ஜையாய் ஸ்வ க்ருஹமே வந்து இவருடைய வர்ணாஸ்ரம தர்மங்களையும் குலைத்துக்
காமுக வேஷ யுக்தராம் படி பண்ணி பிரகிருதி பரவசராக்கி அதி ஸ்நிக்தை போலே சில காலம் ரமியா நிற்க
இவரும் சிலம்படி உருவில் கரு நெடும் கண்ணார் திறத்தனால் அறத்தையே மறந்து -என்கிறபடியே விஷய ப்ரவணராய்
ஸ்வ தர்ம அனுஷ்டான சந்த்யா சாவித்ர்யாதிகளையும் மறந்து ஸ்த்ரீ போகமே கால ஷேபமாக வர்த்திக்க
இவரை சர்வ ஸ்வ அபஹாரம் பண்ணி ஸூந்ய தநர் ஆனவாறே தானும் அநுராக ஸூந்யையாய்த் தள்ளி விட
இவரும் அவள் க்ருஹ த்வாரத்திலே கின்னராய் முசித்துக் கொண்டு கிடக்க
அவ்வளவில் பெருமாளும் பிராட்டியும் அவ்வீதியிலே ச விலாச சஞ்சாரம் பண்ணிக் கொண்டு எழுந்து அருளா நிற்க
அவ்வளவில் பிராட்டி இவரைக் கண்டு மந்தஹாசம் பண்ணி -வேஸியா க்ருஹ த்வாரத்திலே முசித்துக் கொண்டு கிடக்கிறார்
யார் என்று கேட்க -பெருமாளும் -நமக்குப் பூ மாலை தரும் விப்ர நாராயணன் வேஸியா சக்தனாய்
அவளாலே அர்த்த லோபத்தாலே நிராக்ருதனாய் துக்கிதனாய் தத்வாரி முசித்துக் கொண்டு கிடக்கிறான் என்று அருளிச் செய்ய
பிராட்டியும் பெருமாளுடனே-நமக்கு அந்தரங்கரானவர் இங்கனே விஷயா சக்தரானாலும் விஸ்வ மோஹன ஹேதுவான தேவரீர்
மாயைக்கு விஷயம் ஆக்கலாமோ -இவரை விஷயாசக்தியால் உண்டான பாபத்தை நிஸ் சேஷமாக நிவர்த்திப்பித்துத்
தேவரீர் திருவடிகளுக்கு அந்தரங்கராம் படி கடாக்ஷித்து அருள வேணும் என்ன
பெருமாளும் பிராட்டி வார்த்தைக்கு இசைந்து தம் பஞ்ச பாத்ரத்திலே ஒரு தபநீயமான ஸூத்த உதக பாத்திரத்தை எடுத்துக் கொண்டு
வந்து வேஸியா க்ருஹ த்வாரி நின்று -தேவ தேவீ கவாட உத்காடநம் பண்ணு என்ன –
அவளும் நீர் யார் என்று கேட்க -நான் அழகிய மணவாளன் என்பவன் -விப்ர நாராயணருடைய தூதன் -அவர் அனுப்ப வந்தேன் என்ன –
அவளும் சடக்கென கதவைத் திறந்து என் என்று வினவ
பெருமாளும் ஸ்ரீ விப்ர நாராயணன் உனக்கு இந்த ஸ்வர்ண பாத்ரத்தைத் தந்தான் என்ன
அவளும் ப்ரஹ்ருஷ்டையாய்த் தய நீய பாத்ரத்தை வாங்கிக் கொண்டு -அவரை உள்ளே வரச் சொல்லும் என்ன –
அழகிய மணவாளனும் விப்ர நாராயணர் அண்டையிலே சென்று -தேவதேவி உம்மை உள்ளே வரச் சொன்னாள்-என்ன
இவரும் கர்ணாம்ருதமான வார்த்தையைக் கேட்டு ஸந்துஷ்டராய் உள்ளே புகுந்து அவளுடனே க்ரீடா பரராக –
அவ்வளவில் பெருமாளும் உரக மெல்லணையிலே சாய்ந்து அருளினார்
அநந்தரம் பொழுது விடிந்தவாறே திருக் காப்பை நீக்கின அளவிலே சந்நதியில் இருந்த தபநீய சுத்த உதக பாத்ரத்தைக் காணாமல்
கோயில் பரிகரத்தார் அடையப் பயப்பட்டு ராஜ கர்த்தருக்கு அறிவிக்க- நிசுளா புரீந்த்ரனான ராஜாவும் கேட்டு
நம்பியார் பரிசாரகர் முதலானோரைப் பிடித்துத் தண்டிக்க -அவ்வளவில் ஜாலஹரண அர்த்தமாக வந்த தேவ தேவி அகத்துக் கட சேடி
தன்னோடு சம்பந்தம் உடையான் ஒருவனைப் பாதிக்கக் கண்டு இது என் என்று கேட்க
அந்தப் பாதைப் படா நிற்கிறவர்கள் தபநீயா பாத்ரம் காணாமல் போனதை அவளுக்குச் சொல்ல அவளும் கேட்டு
ஸ்ரீ விப்ர நாராயணன் எங்கள் தேவ தேவிக்கு ஒரு ஸ்வர்ண பாத்ரம் கொடுத்து இருக்கிறான் –
அவள் மெத்தை தலையணை கீழே வைத்து இருக்கிறது என்ன அவர்களும் கர்ணாம்ருதமான இவ் வார்த்தையைக் கேட்டு
ராஜ கர்த்தருக்குச் சொல்ல அவர்களும் வந்து இவர்களைப் பிடித்துக் கொண்டு அவள் க்ருஹத்தைச் சோதித்து
அந்த வட்டிலையும் எடுத்துக் கொண்டு தேவ தேவியையும் விப்ர நாராயணரையும் பிடித்துக் கொண்டு வந்து
ராஜா முன் விட அரசனும் வேசியைக் குறித்து -இப்படி பெருமாளுடைய பாத்ரத்தை நீ வாங்கலாமா என்ன –
நாயந்தே நான் பெருமாளது என்று அறியேன் -இவன் தன் வட்டில் என்று தன் தூதன் அழகிய மணவாளன் என்பான் ஒருவன்
கையிலே வர விட்டான் -அறியாமல் வாங்கினேன் என்ன
இவரும் நமக்கு ஒரு தூதனும் இல்லை நான் வட்டிலையும் அறியேன் என்ன -அவளும் உண்டு என்ன இவரும் இல்லை என்ன
இப்படி உபயருடைய விவாதமும் கேட்டு அரசனும் அந்த வேசியை அபராத தண்டம் வாங்கி
வட்டியையும் பெருமாளுக்கு சமர்ப்பித்து இவரையும் ஸ்வர்ணஸ் தேயயுக்த தண்டம் பரீக்ஷித்துப் பண்ணக் கடவோம் என்று
காவலில் வைத்து ஸ்வ க்ருஹமே போந்தான் –
அவ்வளவில் பிராட்டியும் பெருமாளுடனே ஸ்ரீ விப்ர நாராயணரை இனி லீலைக்கு விஷயம் ஆக்காதே
இரக்கத்துக்கு விஷயம் ஆக்கிக் கொள்ள வேணும் என்ன (நம் இழவுக்கு கர்மம் காரணம் -பேற்றுக்கு கிருபை காரணம் – )பெருமாளும் ராஜாவின் ஸ்வப்னத்திலே எழுந்து அருளி
ஸ்ரீ விப்ர நாராயணர்க்கு பிராரப்த கர்மத்தை இங்கே கழிக்கைக்காக நாமே தபநீய பாத்ரத்தைக் கொடுத்துத் தண்டிப்போம்
அத்தனை அல்லது அவர் தண்டயர் அன்று நிர்த் தோஷர்-அந்த வேஸ்யா தனமும் நமக்கு வேண்டா –
அவரை விட்டுப் பூர்வம் போலே திருமாலை கைங்கர்யத்தில் நிறுத்த வேணும் என்று நியமித்து அருள
சோழ பூ பதியும் விடியற் காலத்திலே எழுந்து இருந்து நம் பெருமாள் தனக்கு ஸ்வப்னத்திலே நியமித்து அருளின படியைச் சொல்லி
விஸ்மயப்பட்டு ஸ்ரீ விப்ர நாராயணரை அழைப்பித்து அநேகமாக சத்கரித்துத் தண்டன் இட்டு விட
இவரும் தம் நிஹீன க்ருத்யத்தை நினைத்து நினைத்து அனுதபித்து –
அன்ன மென்னடையார் கலவியை அருவருத்து அஞ்சினாயேல் என்கிறபடியே விஷயாசத்தி ருசியை காறி உமிழ்ந்து
அகம்யா கமந பிராயச்சித்த அர்த்தமாக –
ஏதத் ஸமஸ்த பாபா நாம் ப்ராயஸ் சித்தம் மநீஷிபி நீர்ணீதம் பகவத் பக்த பாதோதக நிஷேவணம் -என்று சொல்லுகிறபடியே
சர்வ பாப ப்ராயச்சித்தமான பகவத் பக்த பாதோதக நிஷேவணம் பண்ணிப் பூதராய் அருளினார்
அநந்தரம் இவருக்கு க்ராம குலாதிகளால் வரும் அனர்த்தப் பேர் அன்றிக்கே நிலை நின்ற திரு நாமம் ஆவது –
யஸ்ய மூர்திந ஸ்திதம் யாவத் வைஷ்ண வாங்க்ரி ரஜஸ் ஸூபம் -கங்காதி சர்வ தீர்த்தாநி தாவத் திஷ்டந்த்ய ஸம்சயம் -என்றும்
நிரபேஷம் முனிம் சாந்தம் நிர்வைரம் சம தர்சினம் அநு வ்ரஜாம் யஹன் நித்யம் பூயேத் யங்க்ரி ரேணுபி -என்றும்
மாறன் தமர் அடி நீர் கொண்டு அணிய முயலில் மற்று இல்லை கண்டீர் இவ் வணங்குக்கே -என்றும்
பாத தூளி படுதலால் இவ் வுலகம் பாக்யம் செய்ததே -என்றும்
தொண்டர் அடிப் பொடி யாட நாம் பெறில் கங்கை நீர் குடைந்தாடும் வேட்கை என்னாவுதே -என்றும்
இவ் வர்த்த விஷயம் தத்வ வித்துக்கள் பலராலும் உத்தேச்ய தமமாக ஆதரிக்கப் பட்டு இருக்கையாலே
துளவத் தொண்டிலே நிஷ்டராய்ப் போரும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய ஸ்ரீ பாத தூளி ஓன்றே தமக்கு உஜ்ஜீவந கரமான
நிலை நின்ற திரு நாமத்தை உடையராய்
பாவோ நான்யத்ர கச்சதி -என்ற திருவடியைப் போலேயும்
ஐஸ்வர்யம் வாபி லோகா நாம் காமயே ந த்வயா விநா-என்ற இளைய பெருமாளை போலேயும்
மாயாப் பெரு விறல் உலகம் மூன்றினொடு நல் வீடு பெறினும் கொள்ளுவது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பு –
என்ற நம்மாழ்வாரைப் போலேயும்
இவரும் இந்திர லோகம் ஆழும் அச் சுவை பெறினும் வேண்டேன் என்றும் தத் வ்யதிரிக்தமான
இதர புருஷார்த்தங்களில் செல்லாத திரு உள்ளத்தை யுடையராய் -என்னைத் தீ மனம் கெடுத்தாய் –
மருவித் தொழும் மனமே தந்தாய் -என்கிறபடியே இவரும்
மாதரார் கயல் கண் என்னும் வலையில் பட்டு அழுந்துவேனைப் போதரே என்று சொல்லுப் புந்தியில் புகுந்து
தன் பால் ஆதரம் பெருக வைத்த அழகன் என்று அனுசந்தித்து க்ருதஞ்ஞராய் -அதுவும் அன்றிக்கே
நாகத் தணை குடந்தை வெக்காத் திரு எவ்வுள் நாகத் தணை அரங்கம் பேர் அன்பில் -என்றும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை -என்றும் இப்படி பல இடங்களிலும் மண்டித் திரிகிற
மற்றைய ஆழ்வார்களைப் போலே அன்றிக்கே
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்ற அழகிய மணவாளர் அல்லது அறியாத பாதி வ்ரத்யத்தை யுடையராக
அவ் வளவில் நம்பெருமாளும் இவருக்கு மயர்வற மதி நலம் அருளித் தம்முடைய பரத்வாதி பஞ்ச பிரகார ஸ்வரூப ரூப குண விபூதி
சேஷ்டிதங்களை எல்லாம் நிஸ் சந்தேகமாகக் கரதல அமலகமாக்கித் தெளியக் காட்டிக் கொடுக்க இவரும்
தெளிவுற்ற சிந்தையராய் நிரவதிக பக்தியைப் பெற்று வர்த்திக்கும் படியைத்
தேவ தேவியும் கண்டு இவரைப் போலே உஜ்ஜீவிக்க வேணும் என்று நினைத்துத் தன் சர்வத்தையும் நம்பெருமாளுக்கும்
சமர்ப்பித்துப் பரம சாத்விகையாய் சத் சங்கதி சதா பஸ்யந்தியிலே வைக்கும் என்னுமா போலே நம்பெருமாள் கோயிலிலே
சம்மார்ஜனாதி கைங்கர்ய நிரதையாய் உஜ்ஜீவித்தாள்
இவ் வாழ்வாருக்குப் பரபக்தி பரஞான பரமபக்திகள் தலை மண்டி இட்டு -பிதா புத்ரஸ் ச நாராயண -என்றும்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் முற்றுமாய் மற்றுமாய்-என்றும் சொல்லுகிறபடியே
சர்வ வித உத்தாரக பந்துவாய்ப் பெரிய பெருமாளைத் திரு மந்த்ர அனுசந்தானத்தாலே அனுபவித்து அருளி
அத் திரு நாம உச்சாரணத்தாலே தமக்கு உண்டான ராஜ குல மஹாத்ம்யத்தாலே –
திருவடி தன் நாமம் மறந்தும் புறம் தொழா மாந்தரை திறம்பேன்மின் கண்டீர் -என்று
யமன் பாச ஹஸ்தரான ஸ்வ புருஷரைப் பார்த்து கர்ண மூலத்திலே உபதேசிக்கத் தக்கதாக
நமன் தமர் தலைகள் மீதே நாவலிட்டு உழி தருகின்றோம் -என்று அம் மந்த்ர வைபவத்தைச் சொல்லுகிற இவர்
ஸ்ரீ ஸுவ்ன பகவான் வக்தாவாக ஸ்ரீ சதா நந்தர் ஸ்ரோதாவாகத் திரு நாமங்களைக் கேட்டால் போலே
பெரிய பெருமாள் ஸ்ரோதாவாகத் தாம் வக்தாவாய்க் கொண்டு பிரகாசிப்பித்து அருளி
பூதா நிச கவர்க்கேண சவர்க்கேண இந்திரியாணி ச டவர்க்கேண தவர்க்கேண ஞான கந்தா தயஸ் ததா
மன பகாரனை வோக்தம் சகா ரேணத்வ ஹங்க்ருதி வகாரேண பகாரேண மஹான் ப்ரக்ருதி ருச்யதே -என்றும்
பொங்கைம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்திரியம் ஐம்பூதம் இங்கு இவ் உயிர் யேய் ப்ரக்ருதி மானாங்கார மனங்கள் -என்றும்
சொல்லப்படுகிற சதுர் விம்சதி தத்வாத்மகமான இஸ் சரீரத்தில் ஆத்ம புத்தியை புறம் சுவர் ஓட்டை மாடம் -என்று நிவர்த்திப்பித்தும்
ஆத்மாது ச மகாரேண பஞ்ச விம்ச ப்ரகீர்த்தித-என்று சொல்லப்படுகிற இருபத்தஞ்சாம் அக்ஷரமான மகார வாச்யனாகையாலே
ப்ரக்ருதே பரனான ஆத்ம ஸ்வரூபத்தை -அடியயோர்க்கு என்று ஸ்வரூப நிர்த்தேசம் பண்ணியும்
திருமந்திர நிஷ்டராய் மெய்ம்மையை மிக உணர்ந்து உன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பர் பெரிய பெருமாளுக்கு
அபிமதர் என்று அவர்கள் தமக்கு உத்தேசியர் ஆகையால் உன் அடியார்க்கு ஆட்படுத்தாய் என்று
தமக்குப் பெருமாள் உண்டாக்கின ததீய சேஷத்வத்தைப் பேசியும்
இப்படி இவ் வர்த்த விசேஷங்களை அகிலரும் அறிந்து உஜ்ஜீவிக்கும்படி திருமாலை -திருப்பள்ளி எழுச்சி என்கிற
திவ்ய பிரபந்தங்களிலே விசத தமமாக அருளிச் செய்து லோகத்தை வாழ்வித்து அருளினார்
———————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply