ஸ்ரீ அருளிச் செயல்களில் –ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் அனுபவம்–

ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வமுடைய அனுபவம் –

1-மூவாறு மாதம் மோஹித்ததில்-முதலில் பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய வித்தகன் –
மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் உரலிடை ஆப்புண்டு எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே -1-3-1-

2–“வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
கள வேழ் வெண்ணெய் தோடு வுண்ட கள்வா என்பன் ” ( 1.5.1)-என்பர் அடுத்து

3.–உண்டாய் உலகேழ் முன்னமே உமிழ்ந்து மாயையால் புக்கு –
உண்டாய் வெண்ணெய் சிறு மனுஷர் அவளை யாக்கை நிலையெய்தி
மண் தான் சோர்ந்து உண்டெழும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே ?”-1-5-8-

4–“வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான்
பொய் கலவாது என் மெய் கலந்தானே -1-8-5-களவிலும் மறைக்காமல் -என் பொல்லா உடம்பிலும் கலந்தானே

5–உயிரினால் குறை இல்லா உலகேழ் தன்னுள் ஒடுக்கி தயிர் வெண்ணெய் யுண்டானை -4-8-11-
தனக்கு அபிமானமான வெண்ணெய் உண்பதுக்குத் தடை வரக்கூடாதே என்று உலகினை விழுங்கினானாம்

6–சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி விண்ணோர்கள் நன் நீராட்டி – தூபம் தரா நிற்கவே
அங்கு ஒரு மாயையினால் ஈட்டிய வெண்ணெய் தோடு வுண்ணப் போந்து இமிலேற்றுவன் கூன்
கோட்டிடை யாடின கூத்து அடலாயர் தம் கொம்பினுக்கே -(திருவிருத்தம் 21)–
திருட வந்தது நித்ய முக்தர்களுக்கும் அறியாமல் அன்றோ –

————————————————–

ஸ்ரீ பெரியாழ்வார் – -யசோதை பாவனையில் -அனுபவம் –

வைத்த நெய்யும் கைந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணையும்
இத்தனையும் பெற்றறியேன் எம்பிரான் ! நீ பிறந்த பின்னே
எத்தனையும் செய்யப் பெற்றாய் ஏதும் செய்யேன் கதம் படாதே
முத்து அனைய முறுவல் செய்து மூக்குறிஞ்சி முலை யுணாயே -2.2.2)

8–பூணித் தொழுவினில் புக்குப் புழுதி அளைந்த பொன் மேனி
காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாண் எத்தனையும் இலாதாய் நப்பின்னை காணில் சிரிக்கும்
மாணிக்கமே என் மணியே மஞ்சனமாட நீ வாராய் — 2.4.9-

அவனால் மறுக்க ஒண்ணாத இந்த அம்மான் பொடி கொண்டு அன்றோ அவனை நீராடப் பண்ணினாள் –

9–உருக வாய்த்த குடத்தோடு வெண்ணெய் உறிஞ்சி
உடைத்திட்டுப் போந்து நின்றான்—-
வருக என்று உன் மகன் தன்னைக் கூவாய்
வாழ வொட்டான் மது சூதனனே -( 2.9.3)-

—————————————–

ஸ்ரீ குலசேகர ஆழ்வார் அனுபவம்

10–முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும் ,
முகிழ் இளம் சிறுத் தாமரைக் கையும்
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும்
வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும் அழுகையும் அஞ்சி நோக்கும்
அணி கொள் செஞ்சிறு வாய் நெளிப்பதுவும்
தொழுகையும் இவை கண்டா யசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே–7-7-

—————————————-

ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அனுபவம் –

11–கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என் அப்பனில் —
நம்மாழ்வாரை கட்டுண்ணப் பண்ணிய விருத்தாந்தம் என்று அன்றோ இத்தை அனுபவிக்கிறார் –

—————————————-

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அனுபவம் –

12–காசையாடை மூடியோடிக் காதல் செய்தானவனூர்
நாசமாக நம்பவல்ல நம் பெருமான்
வேயின் அன்ன தோள் மடவார் “வெண்ணெய் உண்டான் இவன் ” என்று
ஏச நின்ற எம்பெருமான் எவ்வுள்
கிடந்தானே -(பெரிய திருமொழி 2.2.1)

13–“உரி யார் வெண்ணெய் உண்டு உரலோடும் கட்டுண்டு ” (பெரிய திருமொழி 6.5.4)

14-வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய் நாணாது உண்டான் (6.10.3)

15–பூண் கோதை ஆய்ச்சி கடை வெண்ணெய் புக்குண்ணா
அங்கு அவள் ஆர்த்துப் புடைக்கப் புதையுண்டு
ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும்
ஓங்கோத வண்ணனே ! சப்பாணி
ஒளி மணி வண்ணனே ! சப்பாணி (10.5.1)

16–உறிமேல் தடா நிறைந்த வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணையை
வாரி விழுங்கி விட்டு கள்வன் உறங்குகிறான் வந்து காண்மின்கள் ” (ib 10.7.3)

17–“சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேரார் நுதல் மடவாள் வேர் ஓர் கலத்திட்டு
நாரார் உறி ஏற்றி நன்கு அமைய வைத்தனை
போரார் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய் உறக்கம்
ஓராதவன் போல் உறங்கி அறிவுற்று
தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி
அருகில் இருந்த மோரார் குடம் உருட்டி முன் கிடந்த ஸ்தானத்தே
ஓராதவன் போல் கிடந்தானைக் கண்டு அவளும்
வாராத் தான் வைத்தது காணாள் – வயிறு அடித்து இங்கு
ஆரார் புகுதுவார் ஐயர் இவர் அல்லால் ?
“நீர் தாம் இது செய்தீர் என்று ” ஓர் நெடும் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே
தீரா வெகுளியாளாய்ச் சிக்கென வாரத்தடிப்ப …”-சிறிய திருமடல் -30-37-

18. “மின்னிடை ஆய்ச்சியர் தம் சேரிக் களவின் கண்
துன்னு பாடல் திறந்து புக்கு – தயிர் வெண்ணெய்
தன் வயிறார விழுங்க கொழும் கயல் கண்
மன்னு மடவோர்கள் பற்றியோர் வான் கயிற்றால்
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும் –பெரிய திருமடல் -137-139-

—————————————

ஸ்ரீ பொய்கை ஆழ்வார் அனுபவம்-

19-நான்ற முலைத் தலை நஞ்சுண்டு உறி வெண்ணெய் தோன்ற யுண்டான்
வென்றி சூழ் களிற்றை யூன்றி
பொருதுவுடைவு கண்டானும் புள்ளின் வாய் கீண்டானும்
மருதிடை போய் மண்ணளந்த மால் -18-

20-அறியும் உலகெல்லாம் யானையும் அல்லேன்
பொறி கொள் சிறை யவுணமூர்ந்தாய் -வெறி கமழும்
காம்பேய் மென் தோளி கடை வெண்ணெய்
யுண்டாயை தாமே கொண்டார்த்த தழும்பு -22-

21-விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி
உரலோடு பிணைத்த நான்று – குரல்
ஓவாது ஏங்கி நினைந்து அயலார் காண இருந்திலையே
ஓங்கோத வண்ணா ! உரை ” — 24

22-வானாகித் தீயாய் மறி கடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திருமாலே –ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள்
மண்ணை யுமிழ்ந்த வயிறு-92-

————————————————

ஸ்ரீ பேய் ஆழ்வார் அனுபவம் –

23-“மண்ணுண்டும் பேய்ச்சி முலை உண்டும் ஆற்றாதாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு , ஆய்ச்சி – கண்ணிக்
கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான்
வயிற்றினோடாற்றா மகன் ” (மூன்றாம் திருவந்தாதி 91)

—————————————————-

ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் அனுபவம் –

24-வெண்ணெய் உண்ட வாயனை , என் உள்ளம் கவர்ந்தானை —
என் முடினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே —
அரங்கனே வெண்ணெய் உண்ட வாயன் -ஆழ்வார் திரு உள்ளத்தையும் இத்தால் தானே கவர்ந்து உண்டு அருளினான் –

—————————————————

வெண்ணெய் -ஆத்ம வர்க்கம் –அத்வேஷம் ஒன்றே பற்றாசாக விழுங்கிக் கைக் கொண்டு அருளுகிறார் –
ஸ்ரீ ஜனக மஹாராஜர் கும்பன் போலே விவாக சுகம் ஒன்றும் இன்றியே
ஸ்ரீ பெரியாழ்வார் திருமகள் போலே வளர்க்க ஸ்ரீ செங்கண்மால் தான் கொண்டு போனான் அன்றோ

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading