பகவத் விஷயம் காலஷேபம் -190- திருவாய்மொழி – -10-10-6….10-10-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய் உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6- பிராட்டி பக்கல் பிரணயி போலே நிரதிசய பிரணயித்தவம் போக்யத்தை காட்டி அருளினாய் -மேலும் -முழுக்க நிர்வகிக்க வேணும் புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்-காயாம்பூ தன்னிலம் -புண்டரீகம் போலே திருக்கண்கள் உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் -தாமரை மலரால் -பத்மாலயா பத்மாசனம் -நிரதிசய போக்யதை பூதை மணம் பரிமளம் உருவெடுத்தால் போலே -ஆத்மகுணம் கொண்ட அன்பேயோ-அன்பே யாகவே தர்மமாகவே -அன்பே வடிவமாகக் கொண்ட -எனக்கு எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை -நிரதிசய போக்யத்தை ஹேயமான எனது பிரக்ருதியை -விலக்ஷண ஆத்மாவையும் -ஆவி சரீரம் மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் திருப்தி பெறாத படி விரும்பி அனுபவித்து -இனி குறையும் புஜிப்பித்தே விட வேண்டும் -அவன் புஜித்து-அவன் ஆனந்தம் கண்டு நாம் மகிழும் படி -உனது அவனுக்கு நிருபாதிக போக்த்ருத்வம் சேதனனுக்கு போக்யமும் -அனுபவ ஜெனித ப்ரீதி கண்டு ஜீவன் ஆனந்தம் -அஹம் அன்னம் ஸ்வரூபம் -ஞானத்துக்கு வடிகால் வேண்டுமே -கைங்கர்யம் பண்ணி அவன் அனுபவிக்க – அவன் ஆனந்தம் கொண்டு நாம் ஆனந்தம் -அப்ரதானம் என்றபடி – பெரிய பிராட்டியார் பக்கல் போலே-என் பக்கல் மிக்க காதலை உடையவனாய் என் சரீரத்திலும் ஆத்மாவிலும் மிக்க விருப்பத்தைச் செய்து-அனுபவித்த நீ என்னைக் கைவிடாமல் ஈண்டென-அங்கீ கரித்து அருளாய் –என்கிறார்- எனக்கு ஆரா அமுதமாய் – தேவசாதியினுடைய உப்புச் சாறு போலே அன்றியே- எப்பொழுதும் அனுபவிக்கத் தகுந்ததாய்-நித்ய சூரிகள் கூட அனுபவிக்கும் உன்னை- பிறவியிலே உழந்து திறக்கிற எனக்கு தந்தாய் – எனது ஆவியை – என்னுடையது என்னுமதுவே காரணமாக- காதலியின் அழுக்கு உகக்கும் காமுகனைப் போலே-என் உடம்பை விரும்பினாய் – இன்னுயிரை – பகவான் உடைய அபிப்ராயத்தாலே- தவதவ நாறுகிற படி – தவ -பாரதந்த்ர்யம் மற்றொரு தவ -உரிச் சொல் அன்றிக்கே செவ்வாய் கிழமை மங்கள வாரம் என்னுமா போலே – சரீரத்தோடு சேர்ந்து இருக்கையாலே தண்ணிது -என்று சொல்கிறார் -என்னவுமாம்- மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் – மனத்துக்கு அமையாமையாலே-எக்காலத்தும் அனுபவித்தாய் – இனி உண்டு ஒழியாய்- நீ தொடங்கின கார்யத்தையும்-நடுவே குறை கிடக்க விடாதே-அங்கீ கரித்து அருளாய் -என்றது நீ இவ்வளவு புகுர நிறுத்துகைக்கு நான் துணை செய்தது உண்டோ –திருவிருத்தம் தொடங்கி அனுபவித்தாயே – உன் கார்யத்துக்கு உன்னை வேண்டிக் கொள்ள வேண்டுமோ- இவருடைய அமுதத்துக்கு அனுபவிக்கும் தன்மை உண்டு காணும் –போக்த்ருத்வம் உண்டே – இவ்வாத்மாவையும்-இதனுடைய சரீரத்தையும் விரும்புகை உனக்குச் சேருமோ- நீ உகந்தாருக்குச் சேருமோ – புனக்காயா நிறத்த- தன்னிலத்தில் அலர்ந்த-காயம் பூ போலே ஆயிற்று -வடிவு இருப்பது – புண்டரீகக் கண் – வாத்சல்யம் ஆகிற அமுத மழையைப் பொழியும்படி-ஆயிற்று கண்கள் இருப்பன – செங்கனி வாய் – சிவந்து கனிந்து ஆயிற்று-முறுவல் இருப்பது-பிராட்டி விரும்பும் துறைகள் அல்லவோ இவை- அக்காயா தாமரை பூத்துக் கனியப் பழுத்தால் போலே ஆயிற்று- திரு மேனியும் திருக் கண்களும் திருப் பவளமும் -இருப்பது- உனக்கு ஏற்கும் கோலம் – இவனைப் போன்று வார்த்தையால்- கசக்குதற்கும் பொறாத மிருதுத் தன்மை உடையவள்- இப்படிப் பட்ட உனக்கு ஒத்த அழகினை உடையளாய்- மலர்ப் பாவைக்கு அன்பா – மலரில் மணத்தை வடித்து வகுத்தால் போலே -வடிவை ஆக்கினால் போலே –இருக்கிற பிராட்டிக்கு அன்பனே உனக்கு ஏற்கும் கோலம் -என்று-அவ் அழகினை இங்கே ஏறிடுகிறார் -நியாயாதிதேசம் – அதிதேசம் = ஏறிடுதல் ஸ்வரூப அதிதேசம் இல்லை இங்கு -முற்றுவமை இல்லை- நியாய அதிதேசம் -அது போன்று இது -சிறப்புடைத்து – காயம் பூ பொருந்தாதே ஹிரண்ய வர்ணை அன்றோ -அதனால் பெருமை பொருந்தும் -அவனைப் போன்ற அழகு உடையவள் என்றபடி — கோலம் மலர்ப் பாவைக்கு அன்பா -என் அன்பேயோ- அவள் பக்கல் அன்புடையவன் -என்று தோற்றி இரா நின்றது- தம் பக்கல் -அன்பு என்றும் -அது உடையவன் என்றும்-தெரிக்க போகிறது இல்லை – ஞானத்தை உடையவனை ஞானம் என்ற சொல்லால் கூறுவது போன்று- தத் குண சாரத்வாத் து தத் வ்யபதேச ப்ராஜ்ஞவத் -சாரீரக மீமாம்சை-2-2-20- ஞானத்தை முக்கிய குணத்தை உடையவன் ஆகையாலே ஜீவன் ஞானம் என்று இறைவனைப் போன்று கூறப்படுகிறான் – ——————————————————————————————————————- கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக் கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7- ஆச்ரித ரக்ஷகனான உன்னை பெற்று வைத்து இனி விடுவேனோ -வராஹ நாயனாரை பெற்றதும் – கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ-வடிவு அழகு -போக்யத்தை-உடைய பிராட்டிக்கு உகப்பான வைத்தாலே ஏன் பாக்கள் அதி பிறாவண்யம் -அந்தப்புர பரிகாரம் என்பதால் நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்-கடலில் -நீல ரத்ன கிரி -சந்திரர்கள் ஒட்டி -கோரைப் பற்கள் சந்திரர்கள் -அழுக்கு போலே பூமா தேவி ஒட்டிக் கொண்டு கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் வி லக்ஷணமான வடிவை -ஸ்ரீ பூ வராகன் ஸ்ரீ மூக்ஷணம் -அத்விதீயமான -மஹா வராஹா பெரும் கேழலார் -புண்டரீகம் நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார் -விஷயீ கரிக்க தேடி ஆழ்வாரை பிடித்து -எங்கும் பக்க நோக்கு அறியான் பைம் தாமரைக்கு கண்ணன் நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ–இறுதி இனி -வராஹ அவதாரம் சொல்லி நியமிக்கிறார் -ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே திரு விருத்தத்திலும் -நிகமித்தார் பூமியை பிரளயத்தில் புக்கு முழுகி எடுத்து திருமுடியில் வைத்து -இத்தால் சம்சாரத்தில் இருந்து என்னை எடுத்துக் கொண்ட சம்சார ஆர்ணவம் -ஸூ சிப்பிக்கவே இந்த திருவவதாரம் – உன் வடிவில் நிழலீட்டாலே -நீலக் கடல் -பாற் கடல் -ஸ்ரீ தேவிக்காக -நீல ரத்னங்கள் உள்ள கடல் -நீல மூலிகைகள் இருந்து நீலம் என்றுமாம் மூன்றாவது இத்திரு -அருமை தொழில் செய்து ஆஸ்ரிதரை ரஷித்தவனே -புருஷகார பூர்வகமாக எனக்கு நல்லையாய் -உன்ன பெற்று லபித்து க்கை புகுந்த பின்பு நழுவ விடுவேனோ நான் பெரிய பிராட்டியாரை சார்ந்தவன் ஆகையால்-பிரளயத்தில் மூழ்கின ஸ்ரீ பூமிப் பிராட்டியாரை எடுத்து அவளோடு கலந்தால் போலேயும்- கடலைக் கடைந்து பெரிய பிராட்டியாரோடு கலந்தால் போலேயும்-பிறவிக் கடலில் மூழ்கின என்னை எடுத்து என்னோடு கலந்தருளி- என் பக்கல் மிக்க காதலைச் செய்த-உன்னைப் பெற்று வைத்து இனி தப்ப விடுவேனோ-என்கிறார்- கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ – பிராட்டி பக்கல் உள்ள அன்பின் மிகுதியாலே-அந்த அன்பே காரணமாக அவளால் அங்கீ கரிக்கப் பட்ட- என் பக்கலிலே மிக்க அன்புள்ளவன் ஆனவனே- ரிஷிகளை ரக்ஷித்து அன்றோ பிராட்டியால் ஆலிங்கனம் பெற்றார் பெருமாள் பட்டர் தம்முடைய அந்திம தசையில் அருளிச் செய்த வார்த்தை- பெரிய பிராட்டியார்க்கு அன்பன் ஆகையாலே-அவளால் அங்கீ கரிக்கப் பட்ட நமக்கும் அன்பனாம் என்று இப்பாட்டினை-நம்முடையார் த்வயத்தின் அர்த்தத்தோடு அனுசந்திப்பார்கள் -என்பது -என்று ஜீயருக்கு அருளிச் செய்தார் – திரு மால் என்னை ஆளும் மால் -10-7-5-என்னும்படியே- தம்முடைய அன்புக்கு அடி சொல்லுகிறார் –அந்தப்புரத்தைச் சார்ந்தவன் அன்றோ –என் அன்புக்கு அடி இல்லையோ – திருவுக்கு பரிகரமான என்னிடமும் மால் -மால் நடுவில் -திரு என்னை இரண்டு பக்கமும் – திரு மால் இடம் பேசி இருவருமாக என்னை ஆள்வார்கள் -கைங்கர்யம் கொள்ளுவார்கள் -என்றபடி – நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக் – ஒரு நீல மலை-இரண்டு பிறையைக் கவ்வி-நிமிர்ந்தால் போலே- பிறையில் மறுவைப் போன்றதாயிற்று -திரு எயிற்றில் கிடந்த பூமி – கோல வராகம் – மாசு உடம்பில் நீர் வாரா நின்ற நிலை அன்றோ-இவருக்கு ஆலத்தி வழிக்க விஷயம் ஆயிற்று- அன்றிக்கே- பாசி தூரத்து கிடந்த பார் மகள் -என்கிறபடியே- காதலி அழுக்கோடு இருக்க-தாமான படியே வருவார் ஆகில்-காதலுக்கு குறைவாம் இத்தனை அன்றோ –என்னுதல்- அவன் அழிவுக்கு இட்ட வடிவிற்கே அன்றோ இவர் ஆலத்தி வழிக்கிறது- மாசுடம்பின் நீர் வாரா மானமிலா பன்றி இவர் கண்ணுக்கு கோலா வராஹம் -ஆலத்தி எடுக்கும் படி – பிரணயித்துவுக்கு நமஸ்காரமாகுமே அலங்கரித்து வந்தால் -தாம் தாமான படியில் வரக் கூடாதே -ராஸிக்யம் பூர்த்தி – ஒன்றாய் – வராகத்த்தின் இனத்தோடு சேர்ந்ததாய் -என்னுதல்- மூன்று உலகங்களையும் கண் செறி இட்டால் போலே -மறைத்தால் போலே-விம்ம வளர்ந்த படியாலே ஒப்பு அற்றதாய் -என்னுதல்- நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் – பிரளயம் கொண்ட பூமியை அண்டத்தின் உடைய சுவரிலே புக்கு-திரு எயிற்றிலே கொண்டு எடுத்தால் போலே- பிறவிக் கடலிலே மூழ்கின என்னை எடுத்தவனே – நீலக் கடல் கடைந்தாய் – பிராட்டியைப் பெறுகைக்காக-கடலைக் கடைந்தவனே-கடைகிறவனுடைய நிழலீட்டாலே-நீலக் கடல் -என்கிறார் – அன்றிக்கே – எல்லா மருந்துகளையும் போகடுகையாலே வந்த-நிற வேறுபாட்டாலே சொல்லுகிறார் -என்னவுமாம்- அன்றிக்கே- நீலம் -எனபது நீல இரத்தினத்தைச் சொல்லிற்றாய்-அவை மிக்கு இருந்த காரணத்தால்- இரத்தினாகரம் -என்ற பெயரை நோக்கி கூறுகின்றார் என்னவுமாம் – உன்னைப் பெற்று இனி போக்குவனோ – ஸ்ரீ பூமிப் பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்- பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்-என்னை பெறுகைக்கு செய்து- என்னைக் கிட்டப் பெற்ற பின்பு-உன்னைப் போக விடுவேனோ- நீ செய்த செயலின் பலத்தால் சேர்ந்த நான்-கைப்பட்ட செல்வத்தை விடத் தக்கவனோ- ————————————————————————————————- பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய் முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8- துர் அவகமானான் அறிய அறிய ஸர்வதாத்மா மறைந்து இருந்து தாரகனாக உன்னைப் பெட்ரா பின்பு க்கை விடுவேனோ பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்-புண்ய பாபங்களை நிர்வாகன்-கர்மாவைஷ்யனான ஆத்மாவுக்கு நியாந்தா -கர்மங்களால் உண்டான சுக துக்கம் பிரதனானாக முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு-அடக்கி உள்ள மூல பிரக்ருதியை பிரகாரமாக கொண்டு -கர்மா நிபந்தமாக புகுந்த முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-வித்து தனி வித்து முதல் வித்து -ஸூ சங்கல்பத்தால் ஸ்வ தந்த்ரனாக சங்கல்ப ஆதீனத்தால் பிரவேசித்து -அறிய ஒண்ணாதபடி அதி சூஷ்மமாக எனக்கு அடைய பிரதம ஸூ ஹ்ருத் நீயே தானே -அத்விதீய காரணம் -வித்து -காரணம் -தனி அத்விதீயம் – எனக்கு நிரூபணம் அபரிச்சின்ன பிராண பூதன்-மூன்றையும் சேர்த்து -தனி -பேர் உயிர் -மூன்றையும் உவமானம் இல்லாமல் – -அபரிச்சின்ன -பிராணன் -உன்னை விடில் முடியும் அவஸ்தை பிறந்த பின்பு விட முடியுமோ – ஓ பயத்தால் -துக்கம் -விட்டால் என்ன செய்வேன் – சிறிதும் அறிய முடியாதவனான உன்னை-பெற்று வைத்து-இனி விட உபாயம் -இல்லை-என்கிறார்- பெற்று இனிப் போக்குவேனோ உன்னை – ஓர் அச்சு இல்லாக் காசாய் போகிற்றாகில் போகிறது-என்று இருக்கிறேனோ- அன்றிக்கே-உன்னை நீ அறியாயோ -என்னுதல் மிக மிகத் தாழ்ந்தவனாய் இருந்த எனக்கு-மிகவும் தாரகனான உன்னைப் பெற்று வைத்து- இனி நான் உன்னை விடுவேனோ – என் தனிப் பேர் உயிரை – வரில் போகடேன் -கெடில் தேடேன் -என்று-இருக்கிற ஆத்மாவின் அளவேயோ- இயம் சீதா -ப்ரதீச்ச -பத்ரம் -மேல் விழுந்து அங்கீ கரிக்க வேணும் -என்றார் ஸ்ரீ ஜனக மகாராஜர் – உன்னை -என்றதனை விவரிக்கிறார் -மேல் உலகங்கட்க்கு எல்லாம் ஓர் உயிரேயோ -8-1-5-என்கிறபடியே- எல்லா ஆத்மாக்களுக்கும் ஆத்மாவான உன்னை – பெற்று இனிப் போக்குவேனோ -என்றது -மற்றைய இலாபங்களில் வேறு பாடு-இஹ பார லோக ஐஸ்வர்யம் போலே இல்லையே – என் தனிப் பேர் உயிரை -என்றது தம்மில் வேறுபாடு –கைவல்யத்தில் இருந்து மாறுபாடு – உற்ற இரு வினையாய்- ஆத்மாவைப் பற்றிக் கிடக்கிற நல்வினை தீவினை கட்கு நிர்வாஹகன் ஆனவனே- உன்னை ஒழிய வேறு சில கர்மங்களை-தனித்து இயலும் தன்மையை உடையவனாய்- நினைத்து இருந்தேன் ஆகில் அன்றோ உன்னை விடல் ஆவது – உயிராயப்- நல்வினை தீ வினைகளைச் செய்கிற ஆத்மாவுக்கு-நிர்வாஹகனாய்- அந்த இரு வினைகளைச் செய்கிறவன் தான் உனக்கு உரியவன் அன்றாகில் அன்றோ உன்னை விடலாவது –அனுஷ்டாதாவும் உன் ஆதீனம் — பயன் ஆயவையாய் – அக் கர்மங்களின் உடைய பலத்துக்கு நிர்வாஹகனாய்-நல்வினை தீ வினைகளின் பலன் உன்னை ஒழிய- வேறு சிலரால் கிடைக்கின்றது என்று-இருந்தேன் ஆகில் அன்றோ விடலாவது- முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு- இவை எல்லாம் ஆகிய த்ரை லோக்யம் ஆகிய தூற்றை -அனுஷ்டாதா கர்மம் கர்ம பலன்கள் -பிரகிருதி த்யாஜ்யம் ஆகிய சம்சாரம் உன்னை ஒழிய வேறு இல்லையே – பெரும் தூறு சம்சாரம் புக்க இடமும் போந்த இடமும் தெரியாத படி அன்றோ சம்சாரம் -அறிய முடியாதபடி என்றவாறு – புக்கு -அநாயாசேன தேவரீர் புக்கு – தூறாய் -உபாதான காரணமாக இருந்து உண்டாக்கி -கடல் ஞாலம் செயதேனும் யானே என்னும் – முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ- நீ வியாபியாது இடம் உண்டாகில் அன்றோ விடுவது -வியாப்பியங்கள் அறியாத படி அன்றோ நின்றாய் கண்ணுக்கு விஷயம் ஆனாய் ஆகில் பிழையேனோ -மறைந்து அன்றோ உள்ளாய் அல்லாதாருக்கு வெளியிடாமல் இருந்து என் முதல் தனி வித்து – அறிவித்து அருளி -பிரதம ஸூ ஹ்ருத் நீ அன்றோ – நான் ஓர் அடி விட நின்றேன் ஆகில் ஆறி இருப்பேன் – —————————————————————————————- முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம் முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான் முதல் தனி எங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய் முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–10-10-9- ருசி வளர்ந்ததை யம் – -பிரகார பிரகாரி பாவம் /சரீர சரீரி பாவம் /காரண கார்ய பாவம் நினைவு படுத்தி யும் – ஆர்த்தி துடிப்பையும் – அறிவிக்கிறார் – காரண கார்ய அவஸ்தை -சூஷ்ம ஸ்தூல -உபய அவஸ்தையிலும் -சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம் -பின்ன பிரவ்ருத்தி நிமித்தானாம் -ஒரே இடத்தில் பர்யவசாயம் ப்ரஹ்மம் -ஒன்றே -உன்னை -விசேஷயம்- பிரகாரி பிரதானம் -தத் தத் வியா வ்ருத்தமான-விலக்ஷண ஸ்வரூபம் குணாதிகளை -தனிச் சிறப்பு -உன்னை என்று வந்து கிட்டுவின் முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்-உபாதானம் நிமித்த காரணம் -முதல் நிமித்த -தனி -உபாதான -அபின்ன நிமித்த காரணம் – வியஷ்ட்டி சிருஷ்டியை சொல்லி ஸமஸ்த வஸ்துக்களுக்கு எல்லாம் -பிரதான நிமித்த காரணம் -சஹகாரி நிரபேஷமான உபாதான காரணம் முதல் தனி எங்கும் இங்கும் முழு முற்று உறு-கரந்து வியாபித்து -மஹான் அஹங்காரம் விகாரம் அடைந்து – அண்டத்துக்கு உள்ளும் வெளியிலும் அத்விதீய காரணம் அண்டத்துக்கு அந்தர்கதமாயும் -பூர்ண ஸமஸ்த பதார்த்தங்களில் வியாபித்து -நியாந்தா தாராகம் -அத்விதீய காரணம் வாழ் பாழாய்-பிரகிருதி -/போக மோக்ஷம் இரண்டுக்கும் /வாழ்வதற்கு இடம் கொடுக்கும் பாழ் /விளை நிலம் -மூலப் பிரகிருதி மண்டலம் பிராகிருத பூமிக்கு நியாமகன் முதல் தனி -நியந்த்ருத்வம் -பிரதானம் –போகத்துக்கும் மோக்ஷத்துக்கும் -அபேஷா நிரபேஷமாக தன் பேறாக கொடுப்பவன் – அசித் ஸ்வ பாவ வியாவருத்தியால் -ஸ்வரூப விகாரம் இல்லை -உவமானம் இல்லாமல் சித்தை போலே ஸ்வ பாவக விகாரம் இல்லை – சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ-அவி நாசி ஆத்ம சமஷடிக்கு நிர்வாஹன் -ஆத்மதத்வம் -ஒவ் ஒன்றாய் ஒன்றுக்குள் வியாபிக்கும் அணு தானே ஆத்மா -கோடானு கோடி ஆத்மா -தர்ம பூத ஞானத்தால் பரவி – ஆத்ம வர்க்கத்துக்கு நியாந்தா -பத்து திக்கிலும் ஞானம் -இப்படிப்பட்ட தேவரீரை முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்-ஜெகதாகாரம் அன்றியே -அத்யந்த விலக்ஷணன் -உன்னை உன்னை -நீ யாகிய உன்னை -சேதன அசேதன விசிஷ்டம் நீ குற்றம் தட்டாத உன்னை – ஸ்வரூப ரூப குணங்கள் -பெரும் விடாய் பட்ட நான் என்று வந்து கூடக் கட வேன் – தானி சர்வாணி தத் வபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-86-அவை யாவும் அவனுடைய சரீரம் என்றும் யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய ப்ரதிவி சரீரம் -அந்தர்யாமி ப்ரஹ்மணம்-எவனுக்கு ஆத்மாக்கள் சரீரமோ எவனுக்கு மண் சரீரமோ -என்றும் தத் சர்வம் வை ஹரே தாணு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-38-அது முழுதும் அவனுடைய சரீரம்-என்றும்-சொல்லுகிறபடியே எங்கும் வந்து முகம் காட்டலாம்படி- உலகத்தை உருவமாகக் கொண்டு இருக்கும்-இருப்பைக் காட்டித் தந்தோம் அன்றோ -என்ன- அது உகந்தார்க்கும் உகவாதார்க்கும் பொதுவாய் இருந்தது- வேறு உருவம் இல்லையாகில் அன்றோ-அதுவே அமையும்-என்று ஆறி இருக்கலாவது- பரம பதத்தில் வேறுபாட்டோடு கூடியதாய்-எல்லாம் நிறைந்ததாய் இருக்கும் இருப்பை-காண வேண்டும் –என்கிறார் – முழு மூ உலகு ஆதிக்கு எல்லாம் முதல் தனி வித்தேயோ – மூன்று உலகங்கள் தொடக்கமான-எல்லாவற்றுக்கும்-மூன்று விதக் காரணங்களும் ஆனவனே- இதனால் -காப்பாற்ற என்று புக்கால்-காப்பாட்ட படுகின்ற பொருள்களின்-துணை வேண்டாதவனே -என்பதனைத் தெரிவித்த படி – முதல் -நிமித்த காரணம்- தனி -துணைக் காரணம்- வித்து -முதல் காரணம்- முதல் தனி உன்னை – முதன்மை பெற்றவனாய்-ஒப்பற்றவனாய்-குணம் விபூதி முதலியவற்றால் நிறைந்து இருக்கின்ற நீயான உன்னை- தனி -சஹகாரி வேண்டாதவன் – ஸூய ரக்ஷணம் – அவனது உணவை பறித்தால் போலே – எனை நாள் வந்து கூடுவன் நான் – என்று வந்து கூடுவேன்- அவன் கொடுத்த ஞானத்தாலே ஸ்வரூபத்தை-உணர்ந்தாருக்கு- தன்னை பிராட்டிமாரோடே சேர்ந்து பேசலாம் படியாய் இருக்கையால் -வந்து கூடுவேன் – -என்கிறார்- நான் -பரம பதத்தில் சுவடு அறிந்த நான் -என்றது- உனக்கு உரியதான விக்ரகத்தை காண ஆசைப் பட்ட நான் -என்றபடி- முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உரு வாழ் பாழ் ஆய் – முதன்மை பெற்றதாய்-உபமானம் இல்லாததாய்-அங்கும் இங்குமான மகத்து முதலான தத்வங்கள்-முழுவதிலும் எங்கும் ஒக்கப் பரந்து- ஆத்மாக்களுக்கு போகங்களையும் மோஷத்தையும்-விளைக்கும் விலை நிலமாக-இருக்கிற மூலப் பகுத்க்கு ஆத்மா ஆனவனே- உன்னை உன்னை -சேதன அசேதன விசிஷ்டனான உன்னை – உபய விபூதி நாதத்வம் -உபய லிங்க வைசிஷ்ட்யம் -அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை ஏக நாதன் – நடுவில் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் எழுந்து அருள-மீண்டும் அவதாரிகையும்-வியாக்யானமும் அருளுகிறார் – மூன்று ஸ்ரீ யபதி படி -ஆரம்பத்திலும் இங்கே போலே பலர் வர மீண்டும் அருளிச் செய்தால் போலே -இங்கும் வந்தார்கள் சாத்துமுறை அன்று — முதல் தனி வித்தேயோ – முதல் -நிமித்த காரணம்- தனி -துணைக் காரணம்- வித்து -முதல் காரணம்- முழு மூ உலகு ஆதிக்கு எல்லாம் – மூ உலகு என்கையாலே- கிருதகம்- அக்ருதகம்-கிருதகாகிருதகம் – என்று-மூன்று வகைப்பட்ட அண்டத்தைச் சொல்லுகிறது- கல்பாந்தக காலத்தில் அழிவதும் அழியாததும் -அழிந்தும் அழியாமலும் இருப்பதும் –மகர் லோகம் -நெருப்பால் கதுவப் படும் -மேலே போவார்களாம் – அண்டாநாம் து சஹாஸ்ரானாம் சஹாஸ்ராணி அயுதாநிச-ஈத்ருசாநாம் ததா தத்ர கோடி கோடி சதானி ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-7-27 அந்த மூலப் பகுதியில் ஆயிரம் அண்டங்கள் உடைய ஆயிரமும்-பதினாயிரமும்- இப்படிப் பட்ட அண்டங்கள் பல கொடிகள் இருக்கின்றன -என்று சொல்லப் பட்ட- எல்லை இல்லாத அண்டங்களைச் சொல்லுகிறது -ஆதி -என்கையாலே- இவ் வண்டங்கட்கு காரணமான ஆவரணங்களை-மதிள்களைச் சொல்லுகிறது- ஆக மூன்று உலகங்கள் தொடக்கமான ஓன்று ஒழியாமல் எல்லாவற்றுக்கும்-மூன்று வித காரணங்களும் -ஆனவனே என்றபடி- முதல் தனி உன்னை – மேலே நீயான உன்னை -உலக உருவான உன்னை–இனி உன்னை உன்னை -பரம பதத்தில் உள்ள-முதல்வனாய்- ஒப்பு இன்றிக்கே-குணம் விபூதி முதலியவற்றால் நிறைந்த வனாய்-உலகத்தை உருவகமாக கொண்டு இருக்கிற உன்னை- ஜெகதாகாரமாக இருப்பைச் சொல்லி மேலே அசாதாரண விக்ரக விசிஷ்டனை அருளிச் செய்கிறார் – ஆக- இத்துணையும் லீலா விபூதியோடு கூடி இருக்கிற இருப்பை சொல்லிற்று – நித்ய சூரிகளுக்கு இனியனாய் இருக்கும் வடிவு அழகினை-கண்டு அனுபவிக்க வேண்டும் என்கிறார் மேல்- உன்னை- பரமபதத்தில் எழுந்து அருளி இருக்கும் நிலையைச் சொல்லுகிறது- உன்னை என்ற அளவில் பரமபதத்தில் எழுந்து அருளி இருக்கும் நிலையைக் காட்டுமோ என்னில் –காட்டும்- ஒண் தொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்க கண்ட சதிர் -4-9-10-என்கிறபடியே- அவனையும் அவளையும் சொல்லவே பரமபதமும் அடங்கிற்றே அன்றோ– ஸ்ரீ தேவி பூமா தேவி நடுவில் நின்ற நிலையை அன்றோ இந்த பதிகத்தில் சொல்லிக் கொண்டே வருகிறார் – உன்னை முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ –8-1-1-என்று ஐயுறும்படி இருக்கும் திரு முடியும்- மாயன் குழல் –7-7-9-என்னும்படியான திருக் குழலும்- கோளிளைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்- கோளிளைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்- கோளிளை யாவுடைய கொழும் சோதி வட்டம் கொல் -7-7-8-என்னும்படியான-அழகிய திருமுகமும்- நாய்ச்சிமார் உடைய திருக் கரங்களின் ஆபரணங்களால் அடையாளம் செய்யப் பட்டதாய்-கனக வளையா முத்ரா – கமுகினுடைய இளம் கழுத்தையும் சங்கையும் ஒத்ததாய் இருந்துள்ள திருக் கழுத்தும்- கற்பகம் கா அன்ன நற் பல தோள்களும் -6-5-8- பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமாக -என்றும் அனுபவித்துக் கொண்டு- இருக்கச் செய்தேயும் அகலகில்லேன் -என்று அவள் பிச்சேற்றும் படி -லஷ்மீ லலித க்ருஹம் -கௌஸ்துப ஸ்வஸ்தி தீபம் — குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்பும் -1-8-10- உள்ளத்துள் நின்று நிலாவுகின்றதே -அமலனாதி பிரான் -4–என்கிறபடியே நித்யர் முக்தர் இவர்கள் உடைய உள்ளங்களிலே அழகு செண்டு ஏறுகிற -வையாளி கண்டு அருளும் -திரு உதர பந்தமும்- வனப்பாகிற வாரிதி இத்தலப் பட்டு சுளித்தால் போல் இருக்கிற திரு உந்தியும்-தாமோதரத்வம் பிரதம தர விபூஷணம் — ஒரு அடை மொழி இட வேண்டாதே -அல்குலும் -5-5-8- என்னும்படி இருக்கிற அல்குலும் -சிற்றிடையும்- மாலைக் காலத்தில் தோன்றுகிற செந் நிறத்தாலே அழகு பெற்ற ஆகாசம் போலே இருக்க- திரு அரை பூத்தால் போல் இருக்கிற -அந்தி போல் நிறத்தாடையும் – வாழை மரம் முதலானவற்றைப் போன்ற கம்பீரமான திருத் தொடைகளும்- தாமரை நாளம் போலே -பிராட்டி மார் தீண்டுவதால் மயிர் செறித்து-முட்களோடு கூடிய திருக் கணைக் கால்களும்- சங்கு-சக்கரம் கற்பகம் கொடிதாமரை அங்குஜம் வஜ்ரம் ஆகிய-அடையாளம் பண்ணப் பட்டதாய் – நாய்ச்சிமாரும் கூட கூசித் தொட வேண்டும்படி மெல்லடியாக – தேனே மலரும் -என்கிறபடி எல்லை இல்லாத இனியவான திருவடிகளையும் உடையையாய்- ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல வீற்று இருந்து அருளுகிற உன்னை – எனை நாள் வந்து கூடுவன்- என்று வந்து கிட்டக் கடவேன்- மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே பிராட்டிமாரைப் போன்று பேசலாய் இருக்கிறபடி- நான்- அவ் வடிவு அழகினைக் காண ஆசைப் பட்ட நான்- முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ பாழ் ஆய் – முதன்மை பெற்றதாய்-உபமானம் இல்லாததாய்- அங்கும் இங்குமான மகத் தத்துவங்கள் முழுவதிலும் பரந்து- மக்களுக்கு போகங்களையும் மோஷத்தையும் விளைத்துக் கொள்ளுகைக்கு ஈடான-கருநிலமாய் உள்ள மூலப் பகுதிக்கு ஆத்மாவாய்- ஆய் -சரீர ஆத்மா காரண கார்ய நிபந்தமான சாமா நாதி கரண்யம் – முதல்- மூலப் பகுதியை நோக்க -தான் முதன்மை பெற்றதாய்-நியமிக்க கூடியதாய்- தனி- உபமானம் இல்லாததாய்- சூழ்ந்து- மூலப் பகுதியிலும் மூலப் பகுதியால் ஆன பொருள்களிலும் பரந்து – அகன்று ஆழ்ந்து உயர்ந்த – பரந்து இருக்கும் இடத்தில்-ஞானத்தாலே பத்து திக்குகளிலும் பரந்த- முடுவிலீயோ – அளவிட்டு அறிய முடியாததான-ஆத்மா தத்வத்துக்கு நிர்வாஹகன் ஆனவனே- முடிவு -எனபது அழிவினைக் குறிப்பதாகக் கொண்டு- சரீரத்தை போன்று அழிந்து போவது அன்றிக்கே-என்றும் உள்ளதான ஆத்ம தத்துவம் -என்னவுமாம் – முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்-முழு உலகு ஆதிக்கு எல்லாம் முதல் தனி வித்தாய்- முதல் தனிச் சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவிலியாய்-இருக்கிற முதல் தனி உன்னைக் கண்டேன்- பரம பதத்தில் நித்ய சூரிகளுக்கு இனியனாய் இருக்கிற-உன்னை எனை நாள் வந்து கூடுவேன் நான்- காரண கார்யங்கள் ஆன இரண்டு நிலைகளை உடைய-சித்துக்கும் அசித்துக்கும் நிர்வாஹகனாய்- இருக்கிற இருப்பைக் காட்டி அனுபவிப்பித்த இவ்வளவும் போராது- உனக்கே உரிய விக்ரகத்தை உடையவனாய்-பரம பதத்தில் இருக்கும் இருப்பைக் கண்டு-அனுபவிக்க வேண்டும் -என்றதாயிற்று- ——————————————————————————————— சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10- தத்வ த்ரயத்துக்கும் அவ்வருகான-கபளீ கரம் பண்ணும் படி -அபி நிவேசம் -அவா -காதல் பக்தி -சர்வ பிரகார பரி பூர்ணனாக கொண்டு ஸம்ஸலேஷித்து சாயுஜ்யம் – சோஸ்ச்னுதே ஸர்வான் காமான் – சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ-பிரகிருதி -அகன்று -ஆழ்ந்து உயர்ந்து ஆகையால் சூழ்ந்து -விஸ்தீர்ணமாய் வியாபித்து -பத்து திக்கிலும் சந்நிஹிதமாய்-பிரக்ருதிக்கு கீழ் எல்லை இல்லை உத்பத்தி விநாச ரஹிதம் நித்யம் -தத்வ த்ரயமும் நித்யம் -நிலை மாறும் அவஸ்தா பேதம் -ஸமஸ்த காரியங்களுக்கும் அவ்வருகு பெரும் -இவற்றை பிறப்பிக்கும் – அபரிச்சின்னமாய் போக மோக்ஷங்கள் விளை நிலம் – சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ-தத் ஞானத்தால் வியாபித்து மேலாய் ஸ்வயம் பிரகாசத்தால் – அணு -சூஷ்மம் -ஞானத்தால் பெருத்ததால் -சூழ்ந்து -நல்ல ஞானம் உடைய மலர் விகாசம் அடைந்த சோதி ஞான வடிவம் -ஏக ரூபாத்வாதிகளால் மேலால் -ஞான பிரபையை உடைய -ஆத்மதத்வம் பிரகாரமாக கொண்டு சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ-கல்யாண குணங்களால் உஜ்வலமான-சுடர் ஞான இன்பம் – ஞானம் ஆனந்தம் கட்டடங்க உணர் முழு நலம் முழு உணர்வு முழு நலம் -முன்பே பார்த்தோம் -அத்தையே ஞானம் இன்பம் இங்கும் -சுடர் வளர்ந்து கொண்டே -லக்ஷணம் ஸ்வரூபம் – ஆத்மா ஞானத்தால் -ப்ரஹ்மம் ஞானம் ஆனந்தங்களாலே ஆக்கப் பட்டது – சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே-தத்வ த்ரயங்களையும் வளைத்துக் கொண்டு அதுக்கு அவ்வருகு -சமிக்கும் படி அவன் -தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்கள் திருமேனி விபூஷணம் மஹிஷீ பரிஜன ஸ்தான விசிஷ்டானாய் கொண்டு பரி பூர்ணனாய் -சூழ்ந்து – பரஞ்சோதி -வடிவுடன் -ஆழ்வார் காதல் தனக்கு உள்ளே ஆகும் படி சாயுஜ்யம் அளித்து – சேர்ந்து இருந்து குணானுபவம் பண்ணும் பேறு– ஓ அதிசயம் ஒவ் ஒரு இடத்திலும் அடி தோறும் ஹ்ருஷ்டர் ஆகிறார் -பேர் ஆனந்தம் பெற்றார் – எம்பெருமானுக்கு இவர் விரும்பிய கார்யத்தை செய்து அல்லது நிற்க ஒண்ணாத படி- பெரிய பிராட்டியார் ஆணை இட்டுத் தடுத்து-மிகப் பெரிய துன்பத்தோடு கூப்பிட்டு-இவர் வேண்டிக் கொண்ட படியே- எல்லா வற்றாலும் நிறைந்தவனாய் கொண்டு வந்து கலந்து அருளக் கண்டு- அளவிட முடியாததான மூலப் பகுதி தத்வத்தாலும்-ஆத்ம தத்வத்தாலும்- உன்னுடைய நினைவின் உருவமான ஞானத்திலும்-பெரியதான என் விடாய் எல்லாம் தீர-வந்து -என்னோடு -கலந்தாய்- என்னுடைய விருப்பமும் ஒருபடி முடியப் பெற்றது-என்கிறார் – இனி இல்லை -என்னும்படி என்னை விடாய்ப்பித்து-அதற்கு அவ்வருகான விடாயை உடையனாய்க் கொண்டு-என்னோடு வந்து கலந்து- உன்னுடைய விடாயும் ஒரு படி நீங்கியதே -என்கிறார்-என்னவுமாம் – அங்கே பாரதம் ஆரோப்ய முனின பரிஷச்வஜே -யுத்தம் -180-39-பரதனை மடியிலே வைத்து சந்தோஷத்துடன் தழுவினார் -என்னும்படியே- க்ருதக்ருத்ய ததா ராமா விஜுரஹ பிரதமோதக — துயர் ஆறு சுடர் அடி -அறுக்கும் அறும் சுடர் அடி -இரண்டு நிர்வாகம் போலே – ஆழ்வார் விடாயைத் தீர்த்து அவன் விடாயும் தீர பெற்றான் என்று நிகமிக்கிறார் – தம்முடைய அபி நிவேசம் பெருத்த படியை இவற்றின் பெருமையை சொல்லி –ஈஸ்வரனை ஒழிய ப்ருதக் ஸ்திதி இல்லையே அப்ரஹமாதமக தத்வம் இல்லையே -அதனால் இவற்றை சொல்கிறார் அவனையே சொல்லலாம் படி – சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ- தன்னிடத்தில் உண்டான மகத்து முதலான தத்துவங்களை-பத்து திக்கிலும் புக்கு-எங்கும் ஒக்கப் பரந்து- என்றும் உள்ளதாய் -அளவிட முடியாததாய்- மக்களுக்கு புருஷார்த்தத்தை விளைத்துக் கொள்ளலாம் நிலமான-மூலப் பகுதிக்கு ஆத்மா ஆனவனே – சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ- அதற்குள்ளும் பரந்து-அதனைக் காட்டிலும் பெரியதாய்-அதனை ஏவுகின்றது ஆகையாலே மேலாய்- விகாரம் முதலானவைகள் இல்லாமையாலே சிறந்ததாய்- மலர்ந்த ஒளி உருவமான ஆத்மா வஸ்துவுக்கும்-ஆத்மா ஆனவனே – பேறு பெறுகிற இப்பொழுது-மூலப் பிரக்ருதியையும் ஆத்மாவையும் சொல்லுகிறது- கீதையில் ஆத்மாவை -சர்வ கதம் -வெல்வேறு ஜீவாத்மாக்கள் -மூலம் வியாப்தி -என்றபடி – தம்முடைய காதல் பெரியவற்றிலும் பெரியது என்கைக்காக – அவற்றுக்கும் ஈஸ்வரனை ஒழிய-தோன்றுதல் நிலைத்தல் இல்லாமையாலே அவ்வளவும் சொல்லுகிறது – சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ – சுடர் இன்ப ஞானமேயோ -ஞானத்துக்கு இருப்பிடம் ஆனவனே- சுடர் -சங்கல்ப ரூபமான -தடை இல்லாததால் சுடர் என்கிறார்- அவை இரண்டினையும் தன்னுள் அடக்கிக் கொண்டு-அவற்றுக்கு நிர்வாஹகனான-நினைவின் உருவகமாய்- சுகத்தின் உருவமான ஞானத்தை உடையவனே என்று-நினைவின் உருவமான ஞானத்தினைச் சொல்லுதல்- அன்றிக்கே சுடர் ஞான இன்பமேயோ என்று-ஒளி உருவனும் -இன்பத்தின் உருவனும் ஆனவனே -என்று எம்பெருமானைச் சொல்லுதல் – அனுகூல ஞானமே ஆனந்தம் – சூழ்ந்து – மேலே கூறிய மூன்று தத்துவங்களையும்-விளாக்குலை கொண்டு – அதனில் பெரிய – அவை குளப்படியாம் படி பெரிதான – என் அவா – என்னுடைய காதலை அறச் சூழ்ந்தாயே- அதனிலும் பெரிய உன் காதலைக் காட்டி வந்து கலந்தாயே –என்னுடைய கூப்பீடும் ஒருபடி ஒவும்படி பண்ணிற்றே- பரதனை மடியில் ஏற்றுக் கொண்டு மகிச்சி உற்றவராய் தழுவினார் -என்கிறபடியே-மீண்டு புகுந்து- ஸ்ரீ பரத ஆழ்வானை மடியிலே வைத்து-உச்சியை மோந்து உகந்து-அணைத்தால் போலே -ஆயிற்று- இவருடைய விடாய் கெடும்படி கலந்தது – அற -வஸ்து அல்பம் -என்கிறார் அபாவம் என்கிறார் இல்லை -சங்கல்பம் தடுக்க முடியாத ஞானம் – -அனுகூலமானதால் ஆனந்தம் -ஆஸ்ரயம் ஞானமேயோ-ஞானத்துக்கு ஆஸ்ரயம் ஞாதா என்றவாறு – மேரு மலை மேல் கீழே உள்ள கடுகு பார்த்து அல்பம் என்னுமா போலே -அல்பத்தவம் என்றவாறு – ——————————————————————————————————- அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல் அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11- பல அவாப்த்தி பிரகாரம் பிரதிபாதித்துக் கொண்டு -வீடு பெட்ரா -பலமாக ஞானம் உடையவர் ஜென்ம உதகர்ஷம் அருளிச் செய்கிறார் உயர்ந்தே பிறந்தார் என்றவாறு -உயர்ந்தவர்களாகவே பிறப்பார்கள் அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி-ஆச்ரித அபி நிவேசம் -தீரும் படி நிரவதிக சம்ச்லேஷ அனுபவம் விஸ்லேஷ துக்கம் தீரும் படி – கார்யந்து ஜைமினி -காரணம் தியானிக்க -ஹிரண்ய கர்ப்பம் பூர்வ பஷிதயா சங்கீதா நான்முகன் -ந பிரம்மா ந – இத்யாதி இவர்களும் ஸ்ருஷ்ட்யர் -ஏகோகை நாராயண ஆஸீத் – சைவர் காபாலிகர் பாசுபதர் -அந்தராத்மா பரம ப்ராப்யம் இவனே -கார்ய காரண நிபந்தனை சாமா நாதி கரண்யம் த்வரையாலே கூப்பிட்டு அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்-பிராப்தி சித்தி பெற்று அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த-அதி பரம பக்தி ரூபமான சரம பக்தி பரம பக்தி முடிந்த அவா – அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே-இந்த பத்தும் அனுசந்தித்து -உயர்ந்தே பிறந்தார் அவா அற -மூன்று தத்துவங்களையும் கபளீ கரித்து வஸ்ய புத்தி பண்ணும் படி அவா அறும் படி குணங்களால் அபஹரித்துக் கொண்டு – அர்த்த பஞ்சகம் – ஸ்ரீ யபதி நாராயணன் -சர்வ பிரகார சேஷ பூதனுடைய -உபாயத்வேந பிரவ்ருத்தனாய் -அநிஷ்ட நிவ்ருத்தி -இஷ்ட பிராப்தி மஹா வாக்கியம் -அவாந்தர -ப்ராப்ய பிரம்மா ஸ்வரூபம் -ஆதிகளாய் அர்த்த பஞ்சகம் – முதல் இரண்டு பத்தால் ரக்ஷகத்வம் -போக்யத்வ விசிஷ்டமான சேஷித்வம் -அகாரார்த்தம் அநந்யார்ஹ சேஷ பூதன் -மூன்றாம் நான்காம் பத்தில் ததேக அனுபவம் ததேக பிரிய -மகார்த்தம் இந்த நாலும் -பிரதம அக்ஷரத்தில் சேஷித்வம் சேஷத்வ ஆஸ்ரயம் சொல்லி- அவதாரண உகாரத்தால் சம்பந்தம் அநந்யார்ஹத்வம் -பிரணவ அர்த்தம் சொல்லி – உபாய ஸ்வரூபம் ஐந்தாம் பத்தால் உபாய வரணம் ஆறாம் பத்தால் ஏழாம் பத்தில் விரோதி ஸ்வரூபம் எட்டாம் பத்தில் தத் நிவ்ருத்தி சாப்தமாகவும் ஆர்த்தமாகவும் -நமஸ் அர்த்தம் அருளிச் செய்து –அகங்கார மமகார நிவ்ருத்தி சர்வ வித பந்துத்வ பிரதி சம்பந்தத்வம் ஒன்பதாம் பத்தாம் பத்தில் அருளிச் செய்து -நாராயணாய அர்த்தம் -கைங்கர்ய பிரதிசம்பந்தி -விசிஷ்டமான பல அவாப்த்தி -சரம பதார்த்தம் முதல் பாட்டில் உயர்வற -உயர்நலம் -சங்க்ரஹமான – உத்கீத ப்ரணவம் மாறாடி -பத்து பத்திலும் விரித்து – மீண்டும் சங்க க்ரஹமாக சொல்லி பிரதமத்வத்தில் ஸ்ரீ யபதித்தவ நாராயண -கோலத் திரு மகள் உடன் – -சீல ஸுலப் யாதிகளை சொல்லி கிரியா பாதத்தால் பிரபத்யே -பகவத் கைங்கர்யம் சொல்லி வாக்ய த்வயம் -பின் மூன்று பூர்வ -முதல் மூன்று உத்தர வாக்கியம் –சரணாகத ஸ்வரூபம் விகசித்து அருளினார் தத் இதர தர்மங்களை விட -பரித்யஜ்ய மாம் -உபாய வரணம் – உபாய பூதன் அத்விதீயம் மாம் ஏக்கம் -பிரதிபாதித்து ஸமஸ்த விரோதிகள் நிவ்ருத்தி பல சித்தி நினைப்பித்தன தாதார்த்யம் சரம ஸ்லோகார்த்தம் வீசாதீ கரித்து சர்வ பிரகார சேஷ பூதன் அநந்ய பிரயோஜனம் அநந்ய யாரஹருக்கு -ரகஸ்ய த்ரயமும் நித்ய அனுசந்தேயம் சாத்விக அக்ரேஸருக்கு – நிகமத்தில் அகில ஹேய பிரத்யநீகனாய்-கல்யாண குண ஏக நாதனாய்- ஞான ஆனந்தஙகளே வடிவு உடையவனாய்-உயர்வற உயர்நலம் உடையவனாய்- வனப்பு முதலாயின வற்றுடன் திவ்ய மங்கள விக்ரகத்தை உடையவனாய்- அளவிறந்த திவ்ய ஆபரணங்களை உடையவனாய்- திருமகள் மணமகள் ஆய்மகள் மூவருக்கும் நாயகனாய்- அஸ்தானே பயசங்கை செய்யும் நித்யசூரிகள் -திரு வநந்த ஆழ்வான் -பெரிய திருவடி எப்பொழுதும் அடிமை செய்யும் திருவடித் தாமரைகளை உடையவனாய்- ஸ்ரீ வைகுண்டத்தில் எழுந்து அருளி இருப்பவனாய்-சர்வேஸ்வரனாய்- தன்னாலே ஏவப்படும் பரமன் முதலாயினவர்கட்கும் அந்தராத்மாவாய்- தன்னைக் காண வேண்டும் என்று விடாய் கொண்டு அடைகின்ற அடியவர்கள் விடாய்-தீரக் கலக்கும் தன்மையான எம்பெருமானைக் காண வேண்டும் என்று கூப்பிட்டு- அவனைப் பெற்று துக்கம் அற்றவராய்-எல்லா தடைகளும் நீங்கினவராய்- ஆழ்வாரின் பக்தியின் தூண்டுதலால் பிறந்த-ஆயிரம் திருவாய் மொழியும்-அவற்றில் வைத்துக் கொண்டு- மேலே கூறிய படி அன்றிக்கே பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படி- பரமபக்தியால் பிறந்த அந்தாதியான-இத் திருவாய்மொழி வல்லார்- சம்சாரத்தில் பிறந்து வைத்தே-அயர்வறும் அமரர்களோடு ஒப்பர்-என்கிறார்- அவா அறச் சூழ் அரியை – விரும்பியவற்றை எல்லாம் அருளும் சர்வேஸ்வரனை –தம்முடைய காதல் கெட வந்து கலந்த படியாலே- ஒரு அடைவு கொடாதே அது தன்னையே சொல்கிறார் – அவா அறச் சூழுகையாவது- தன்னைக் காண வேண்டும் என்னும் விடாய் உள்ள-அடியவர்களின் விடாயை தீர கலக்கை – அயனை அரனை அலற்றி- தன்னுடைய ஏவல் ஆள்களான பிரமன் சிவனுக்கும் அந்தராத்மாவானவனை- அயனை அரனை -என்கிற சாமாநாதி கரண்யத்தால்- பிரமன் சிவன் போல்வார் ஈஸ்வரர் ஆவார்களோ என்னும் மக்கள் கொள்ளும் ஐயத்தை அறுக்கிறார்- அவர்களுடைய ஸ்வரூபம் ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி எல்லாம் சர்வேஸ்வரன் அதீனமாய்- இருப்பதாலே அவர்களுக்கு பாரதந்த்ர்யமே ஸ்வரூபம் –தலைவர்களாய் இருக்கும் தன்மை அவர்கள் செயல்கள் காரணமாக வந்த இத்தனை – இச் சாமாநாதி கரண்யத்தை அறியும் தன்மை இன்றியே எளியராய் இருப்பார்-அறியத் தகும் முறையிலே கூறப்படும் வகைகளும் உண்டு- அவை அயனை அரனை அவா அற்று-அரியை அலற்றி-வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் -ஒரு வகை – அயனை அரனை அவா அறச்-சூழ் அரியை அலற்றி-வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் –மற்று ஒரு வகை- அலற்றி அவா அற்று வீடு பெற்று – கூப்பிட்டு அவனைப் பெற்று எல்லா தடைகளும் நீங்கியவர்-ஆகையாலே துக்கம் இல்லாத ஆழ்வார் அருளிச் செய்த- அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரம் – பக்தியின் தூண்டுதலாலே பிறந்த ஆயிரம்- இவருடைய அவா -மைத்ரேய பகவான் ஸ்தானத்திலே நிற்கிறது ஆயிற்று – ஸ்ரீ பராசர பகவான் ஸ்ரீ விஷ்ணு புராணம் அருளியது மைத்ரேய பகவான் தூண்டுதல் போலே – அன்றிக்கே- அவா உபாத்தியாராக நடத்த -நடந்த ஆயிரம் -என்னுதல்- ஆழ்வாருக்கு பிறகு நூறாயிரம் கவிகள் பேரும் உண்டானார்கள்- அவர்கள் கவிகளோடு கடல் ஓசையோடு வாசி அற்று-அவற்றை விட்டு இவற்றைப் பற்றுகைக்கு அடி- இவருடைய காதல் பெருக்கு வழிந்து புறப்பட்ட சொல் ஆகை அன்றோ – -பக்தர்களுக்கு ஹிதமாக-பராங்குசர் அருளிச் செய்தவை – நாவலம் தீவில் கவிகள் எல்லாம் சில நாள் கழியப் பூவலம் தீவது போலவ வல்லார் குருகூர்ப் புலவன் கேவலம் தீம் கரும்பாம் கவி போல் எங்கும் கூவலம் தீம் புனலும் கொள்ளுமே வெள்ளம் கோள் இழைத்தே-சடகோபர் அந்தாதி -58 உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என ஒன்றும் இன்றி விரிக்கும் தொறும் வெறும் பாழாய் விடும் பிறர் புன் கவி மெய் தெரிக்கின்ற கோச் சடகோபன் தன் தெய்வக் கவி புவியில் சுரிக்கின்ற நுண்மணல் ஊற்று ஒக்கும் தொண்டர் சுரத்தலினே -சடகோபர் அந்தாதி -68 முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து தரிக்க ஒண்ணாத படியான-பரம பக்தியால் பிறந்த தாயிற்று-இத் திருவாய்மொழி இந்த அவாவிற்கு உதவிற்றிலன் ஆகில்-ஈஸ்வரனுக்கு சைதன்யம் இன்றிக்கே ஒழியும் – சூழ் விசும்பு அணி முகில் -என்ற திருவாய் மொழிக்கு முன்பு-பர பக்தியாலே சென்றது – சூழ் விசும்பு அணி முகில் -என்ற திருவாய் மொழி -பர ஞானத்தால் சென்றது இத் திருவாய்மொழி -பரம பக்தியாலே – பகவானுடைய திருவருள் பாதியும்-தாங்கள் பாதியுமாக சொல்லுமவர்களுக்கு- சரீரத்தின் முடிவிலே இப் பரபத்தி முதலானவைகள் உண்டாகும்- இவர் அடியிலே மயர்வற மதி நலம் அருளப் பெறுகையாலே-எழுந்து அருளி இருக்கும் போதே உண்டாயின – கர்மத்தாலும் ஞானத்தாலும் உண்டாகின்ற பக்தியினுடைய இடத்திலே- சர்வேஸ்வரனுடைய திருவருள் நிற்க – அது அடியாக பிறந்த-பரபக்தி பர ஞான பரம பக்திகள் அன்றோ இவரது – அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே – இதனை அறிந்தவர்கள்-இவ் உலகத்தில் பிறந்து வைத்தே-நித்ய சூரிகளோடு ஒப்பர் – பிறந்தே உயர்ந்தார் – சர்வேஸ்வரனுடைய அவதாரம் போன்றதாம்-இவர்களுடைய பிறப்பும் – பிறக்க பிறக்க அவனுக்கு உதகர்ஷம் உண்டானாப் போலே -அனுக்ரஹ நிபந்தனம் சர்வேஸ்வரன் அவதாரம் — அவா -சாமான்யம் -தத் தத் அதிகாரி அனுகுணமாக -உண்டே – மோக்ஷம் பெற அவா -என்னால் முமுஷுவாக ஆழ்வாருக்கு அயன் அரன் போல்வாருக்கு மோக்ஷம் அபேக்ஷை இல்லையே வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதி ஆபத் விமோசனம் அவா அவர்களுக்கு போக்கி அருளினான் – ஸூ விபூதி பூதர்-அவர்களுக்கு பார தந்தர்யம் சொல்வது -சரீரமாக இருந்து -பிரகாரத்தால் – சகல அபேக்ஷித பிரதன்-ஸம்ஸலேஷிக்கும் ஹரி – விஸ்லேஷ துக்கம் அபகரிக்கும் ஹரி அவா அறச் சூழ் அரி -நாராயணன் என்னால் -இதுவே நிரூபணம் – அரன் அயன் இவர்கள் இடம் அவா இல்லாமல் அரியை அலற்றி -என்றுமாம் ஸ்ரீ மைத்ரேயர் கேட்க கேட்க சொன்னது போலே ஆழ்வாருக்கு பக்தி உந்த அருளிச் செய்கிறார் என்றவாறு – பக்தி பூர்வகமாக பிறந்த பிரபந்தம் -பரமபக்தி அளவும் -வேதத்துக்கும் பரிக்ரகம் கிடைத்ததே ஆழ்வார் வாயனவாய் ஆனதால் பொற்குடம் ஆனதே சர்வரும் அனுபவிக்கும் படி – ————————————————————————————————————- திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தத் தர்ச நஞ்ச மனசையைவ ஸஷுஸா தைவ இதி பக்த்யாதயா பரமயா ஸூ அபீஷ்டம் அச்யுதபாதம்- நச புன பார்த்ததே மாந்த்யம் பத்தமாஞ்ஞாஜாய பகவதா பரிக்ருதயா மாந்த்யம் மாந்தத்தன்மை போக்க திரு ஆணை

ஆச்சாரயோதயா பந்தாதி த்ராவிட ஆநாயாயம் சங்கதி அப்யதா து ஆச்சார்யா து அபிராம வராமர் வராஹயத்

—————————————————————————————— திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் – ப்ரஹ்மே ச அந்தர் பிரவேசத் வாத் ஜல நிதி சுதயா ஸந்நிரோதபவ்ய பாவாத் திவ்ய ஸ்ரீ விக்ரஹத்வாத் அகில தனு தயா அத்ருப்த்ய பீயூஷா பாவாத் பத்மா பந்துத்வாத் பூம் உத்தரணாத் புண்ய பாப ஈஸி தத்வாத் முக்தேகே தாதா அனுபாவாத்யாத் சடஜித் முக்திமான – 1–ப்ரஹ்மே ச அந்தர் பிரவேசத் வாத்–முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா 2–ஜல நிதி சுதயா -ஸந்நிரோதபவ்ய பாவாத் –மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய் 3–திவ்ய ஸ்ரீ விக்ரஹத்வாத்–என் பொல்லாக் கருமாணிக்கமே ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் 4–அகில தனு தயா–உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ 5–அத்ருப்த்ய பீயூஷா பாவாத்–தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே 6–பத்மா பந்துத்வாத்–உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ 7–பூம் உத்தரணாத்–கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ 8–புண்ய பாப ஈஸி தத்வாத்–உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய் 9-முக்தேகே தாதா அனுபாவாத்யாத்–முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம் முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான் 10-சடஜித் முக்திமான – சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே– அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் ——- ஏவம் ஸ்வாநாம் கதிம் வியத்வஜ துரித ஹராஸ்தான சங்கார்ஹ ராகம் சுப்ராபம் பக்தி பாஜாம் பஹுவித போஜன ப்ரக்ரியாம் ஸ்ரீ சடாரி தீவ்ரோ த்யோகம் ஸ்வ தானே ஸ்வ ஜன தனு க்ருதார்த்யாதரம் பிராஹ காந்தே ஸ்வேச்சா துஷ்டாம் சுக அர்ச்சீர் முகாஸ் சரணி முக்தாம் மோஷாதம் முக்த போக்யம் –ரத்னாவளி –124- அவனே அர்ச்சிராதி வழித் துணை ஆப்தன் ———— இத்தம் சேவ்யம் ஸூ போக்யம் ஸூபாஸ் உபகதனும் சர்வ போக்ய ப்ரக்ருஷ்தே ஸ்ரேயஸ் தத ஹேது பூதம் பிரபதன சுலபம் ஸ்வ ஆஸ்ரித அநிஷ்ட ஜிஷ்ணும் பக்த சந்த அநு க்ருதம் நிருபாதிக ஸூ ஹ்ருதம் சத் பத அவ்யய ஸஹாயம் ஸ்ரீ சம் பிராஹ ஸ்வ சித்தே ஸ்வயம் இஹ கரணாம் ஸ்வ பிரபந்தே சடாரி –ரத்னாவளி -125- ஆத்யே ஸ்வ பிரபந்தே சதஜித பிதாதே ஸம்ஸரதேர் துஸ் சஹத்வம் த்வைதிகே ஸ்வரூபாத்ய அகில மத ஹரேர் அனுவபூத் ஸ்பஷ்ட த்ரஷ்டாம் தார்த்திகே ஸு க்யம் பகவத் அநுபவே ஸ்போரயாம்ஸ தீவ்ரம் அசாம் துர்யே யதேஷ்டம் பகவத் அனுபவா தாப முக்திக்கு சடாரி –ரத்னாவளி –126- திரு விருத்தத்தில் சம்சார சுழல்களால் வரும் துரிதங்களையும் -அதில் இருக்க மாட்டாமையையும் -அருளிச் செய்து திருவாசிரியத்தில் ஜீவ பர ஸ்வரூப குணாதி களை அருளிச் செய்து பெரிய திருவந்தாதியில் -தனது மானஸ அனுபவத்தையும் -பாஹ்ய சம்ச்லேஷத்தில் ஆர்த்தியையும் வெளியிட்டு அருளி திருவாய் மொழியிலே அவா அற்று வீடு பெற்றதை அருளிச் செய்கிறார் – ஸ்ரீ மான் சீமாதி லங்கிஸ்திரதர கருணா சர்வவித் சர்வ சக்திர் ஸ்வாமி ஸர்வஸ்ய ஐந்தோ ஸ்வ சரண யுகள ஸ்வீ க்ருதாஸ்மாக பர கிம் ந க்ருத்யம் ஸ்வ ஹேதவ் கிமிக ந சுலபம் க விபதிர் பவித்ரி கஸ்யான் யஸ்யா தர்மனா வயமிதி விதிஷாமாக துங்கத்வ மந்தே–ரத்னாவளி -127- ஸ்ரீ மான் சீமாதி லங்கிஸ்திரதர கருணா சர்வவித் சர்வ சக்திர் ஸ்வாமி ஸர்வஸ்ய ஐந்தோ ஸ்வ சரண யுகள ஸ்வீ க்ருதாஸ்மாக பர – கல்யாண குணக்கடல் –கருணா சாகரம் — உலோகரை எல்லாம் திருவடியால் தீண்டி அணைக்கும் தாய் — இப்படி உணர்ந்தோர் மார்பில் கை வைத்து-உபாயமாக ஒன்றுமே செய்யாமல் கைங்கர்யமாக அவன் ஆனந்தத்துக்கு மட்டுமே செய்வது தானே அடுத்து — கிம் ந க்ருத்யம் ஸ்வ ஹேதவ் – இவ்வாறு உள்ளோரால் செய்ய முடியாதது தான் எது – துக்க கேசமும் இவர்களை அணுகாவே -வேறே எவருக்கும் பணியா அமரர்கள் ஆவார்கள் ——– இத்தம் சத் சம்பிரதாய க்ரம சமதிகதா சேஷ வர்ணார்ஹ வேத ஸ்ரத்தாஸ் சுத்த சயானா மகதயாதநகம் கௌதுகம் வேங்கடேச சம்யக்த்வே தஸ்ய சாஷாத் சடாரி புரத்வா சர்வ சாக்ஷி ச சாக்ஷி சாவத்யத்வேபி சோதும் பிரபவதி பஜதாம ப்ரகாம்ப யனுகம்பா –ரத்னாவளி –129- ——— சோகா ஸ்லோகாத்வமப் யாகத இதை வதத சுத்த போதார்ண போத்யன் நாநாக லோலா நாதானுபவ ரஸ பரிவாஹத ஸ்ராவ்ய வேதாத் வேதாந்த சார்யக ஸ்ரீ பஹுமத பஹுவித் வேங்கடேசா ஸ்தோத்ரேயம் ரம்யா தாத்பர்ய ரத்னாவளிர் அநக குண ரஞ்சினி ரங்க பர்த்ரு–130- ——- ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் – உதந்தை இத்யேவம் நிருபாதிக ஸு ஹார்த்தபி சுனை உதந்தயாம் உத்வேலாம் உபஜனித்தவந்தம் நிஜபதே த்ரை வர்க்காதி க்ராந்த ஸ்திர நகரி கந்தா பத கதே சஹாயி குர்வாணா சரம சதகே விந்தத்தி முநி –21- ———————————– கதிம் வ்யாத்வக்லே சச்சிதாம் பத ஸங்காஸ் பத ரசம் பஜத்பி சுப்ராபம் விதித்த பஜன ப்ரக்ரியமிக பலே தீவ்ரத் யோகம் ஸ்வ விஷய க்ருதாத்யா தரமகாத் யதர்ச்சா துஷ்டம் சத்சரநிமா புனர் ஜன்ம சாயுஜ்யம் –22- ———- பரம் ப்ராப்யம் பஸ்யன் பரிசரணா ஹேதும் விஞ்ஞாயன் பரிஷுக்குருவன் அஞ்ஞானம் அனிதர சரண்ய சரண்யன் அநிஷ்ட ப்ரத்வம்ச ப்ரப்ரிஷு நிதானம் ச கதயன் முகுர்த்தேவம் லஷ்ம்யா ஸஹிதமிக பேஜே முனிவரா -23- பரம் ப்ராப்யம் பஸ்யன் பரம புருஷார்த்தம் இவனே — பரிசரணா ஹேதும் விஞ்ஞாயன் – கைங்கர்யம் கொண்டு அருள உபாயமும் அவனே — பரிஷுக்குருவன் அஞ்ஞானம்-சர்ம ஸ்லோகப்படி சர்வ தர்மான் பரித்யஜ்ய– செய்தால் — சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -செய்பவனும் அவனே அனிதர சரண்ய சரண்யன் -புகல் ஒன்றும் இல்லாத அனன்யா கதிகளுக்கு அவனே சரண்யன் அநிஷ்ட ப்ரத்வம்ச ப்ரப்ரிஷு நிதானம் ச கதயன் முகுர்த்தேவம் லஷ்ம்யா ஸஹிதமிக– அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் மிதுனமே ஒரே நிருபாதிக ரக்ஷை – ——- புரா சோகா ஸ்லோகா பவதிதி நயாதிதி உபநிஷத் முநே புண்யா ஸ்லோகாத ஜநி பர பக்தே பரிணாதி வ்யாபோக்ய ஸ்வாம் பாவம் ஹரி சரணா சந்தான லிகாம் அவிக்ஷத் யோகி யஸ்தனுமதனு காருண்ய விவசா –24- வால்மீகி சோகத்தால் பிறந்த ஸ்ரீ இராமாயண ஸ்லோகங்கள் — சடகோப முனி ஆழ்ந்த பக்தியால் பிறந்த தமிழ் உபநிஷத்தான திருவாய் மொழி கருணைக் கடலுள் ஆழ்ந்து -அவனையே நினைந்து அவன் அருளாலே அவனை அடைந்தார் சோகா ஸ்லோகாத்வமப் யாகத இதை வதத சுத்த போதார்ண போத்யன் நாநாக லோலா நாதானுபவ ரஸ பரிவாஹத ஸ்ராவ்ய வேதாத் வேதாந்த சார்யக ஸ்ரீ பஹுமத பஹுவித் வேங்கடேசா ஸ்தோத்ரேயம் ரம்யா தாத்பர்ய ரத்னாவளிர் அநக குண ரஞ்சினி ரங்க பர்த்ரு–130- ——- சதாம் இத்தம் சாரம் த்ராமிட நிகமஸ் யான்வகதயத் பஹு நாம் வித்யா நாம் பஹு மதி பதம் வேங்கடபதி திசா சவ்தா ஸ்ரேநீ த்ர்தா கதிதா ஜைத்ர த்வஜ பதி பராமர் ஸப்ரஸ்யாத் ப்ரதிமத நிராபாத நிகம–25- இத்தம் சத் சம்பிரதாய க்ரம சமதிகதா சேஷ வர்ணார்ஹ வேத ஸ்ரத்தாஸ் சுத்த சயானா மகதயாதநகம் கௌதுகம் வேங்கடேச சம்யக்த்வே தஸ்ய சாஷாத் சடாரி புரத்வா சர்வ சாக்ஷி ச சாக்ஷி சாவத்யத்வேபி சோதும் பிரபவதி பஜதாம ப்ரகாம்ப யனுகம்பா –ரத்னாவளி –129- ——- மனு வியாச ப்ராசேதச பரிஷ்தர்ஹா க்வசிதியம் ஸூதாஷிக்த ஸூக்தீ ஸ்வயம் உதயமனவிச்சதி ஜநே ந்ருந்த்யுஹ்கே விந்த்யாசல விகத ஸந்த்யா ந தஜ தாபரிப்ராந்தா பங்கோ உபரி யதி கங்கா நிபததி –26- இந்த பிரபந்தம் மஹா முனிகளான மனு பகவான் வியாச பகவான் வால்மீகி ரிஷி போன்றார் கூட்டங்களாலே கேட்கத் தக்கது- அவனது நிருபாதிக ஸூ ஹ்ருதம் அடியாகவே பிறந்தது – விந்தியமலை சாரல் -கங்கா நதி -திருச்சித்ர கூடம் -உண்டாக்கி அருளினால் போலே அடியேனையும் ஆக்கி இப் பிரபந்தம் அருளப் பண்ணினான் ————————————————————————————- திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 100-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்- அவதாரிகை – இதில் – ஸ்ரீ பரம பத்தியாலே-பர ப்ராப்தியான படியை பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் கீழ் சூழ் விசும்பு அணி முகிலிலே ஸ்ரீ பரம பதத்திலே புக்கு நிரதிசய ஆனந்த உக்தராய் நித்ய சூரிகள் திரளிலே இருக்கிறாராக-தம்மை அனுசந்தித்த இது ஜ்ஞான அனுசந்தானம் மாத்ரமாய் பாஹ்ய சம்ச்லேஷ யோக்கியம் அல்லாமையாலே மேரு சிகரத்திலே ஸூ கோத்ரமாக இருந்தவன் பேர் ஆழமான பள்ளத்திலே தலை கீழாக தள்ளுண்டு-விழுந்து நோவு படுமா போலே அனந்த கிலேச பாஜனமான சம்சாரத்தில்-தாம் இருக்கிற படியைக் கண்டு ஸ்ரீ ஈஸ்வரனுக்கு பண்டு போலே ஒரு குணாவிஷ்காராதிகளால் பரிஹரிக்க ஒண்ணாத படி ஆற்றாமை தலை எடுத்து ஒரு தூத ப்ரேஷாணாதிகளால் இட்டு நீட்டுகையும் இன்றிக்கே தாமே அவன் முகத்தைப் பார்த்து தம்மால் இது பரிஹரித்துக் கொள்ளப் போகாது இருக்கிறபடியும் சாதநாந்தரங்களை அனுஷ்டித்தாலும் அவன் கை பார்த்து இருக்க வேண்டி இருக்கும் படியையும் சொல்லிக் கொண்டு ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆணை இட்டு-தடுத்தும்-வளைத்தும் அவனைப் பெற வேண்டும்படியான பரம பக்தி தலை எடுத்து நிர்க்குணர் உடைய ஹிருதயங்களும் கூட இரங்கும் படியாகவும் அவனுக்கும் தம் கார்யம் செய்து அல்லது ஸ்ரீ திரு நாட்டிலே குடி இருப்பு அரிதாம்படியாகவும் பெரும் மிடறு செய்து கூப்பிட்டு பெரிய ஆர்த்தியோடே திருவடிகளிலே சரணம் புக ஸ்ரீ பெரிய திருவடி திருத் தோளிலே ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடு கூட இவர் அபேஷித்த படியே ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து தோற்றி கால் கட்டான பிரகிருதி சம்பந்தத்தையும் அறுத்து ஸ்ரீ பரம பதத்திலே கொடு போய் நித்ய சூரிகளோடே ஒரு கோவை யாக்கி-நித்ய கைங்கர்யம் கொண்டருள- அத்தாலே-தாம் நிரஸ்த பிரதிபந்தகராய் பிராப்த சமஸ்த மநோ ரதரான படியை-சொல்லித் தலைக் கட்டுகிற முனிய நான் முகனே யில் அர்த்தத்தை முனி மாறன் இத்யாதியாலே அருளிச் செய்து தலைக் கட்டுகிறார் -என்கை – ————————————————- முனி மாறன் முன்புரை செய் முற்றின்பம் நீங்கி தனியாகி நின்று தளர்ந்து -நனியாம் பரம பத்தியால் நைந்து பங்கயத்தாள் கோனை ஒருமை யுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து –100- ————————————————- வியாக்யானம்– முனி மாறன் ஸ்ரீ சர்வேஸ்வரன் -முனியே -என்னும்படி சதவஸ்தமான சம்ஹ்ருதி சமயத்தில் சர்வ சேதன ரஷணத்திலே த்யாநாந்தஸ்தனாய் இருக்குமா போலே இவரும் நித்ய சம்சாரிகளாய் சம்சாரித்து அசித் ப்ராயரான ஆத்மாக்கள் விஷயத்திலும் ரஷண சிந்தை பண்ணிப் போருகையாலே முனி -என்கிறது – அன்றிக்கே – பகவத் விஷயத்தில்-எண்ணா தனகள் எண்ணும் நல் முனிவர்-என்னுதல் – அன்றிக்கே பிரக்ருததுக்குச் சேர-ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்தில்-பரம பக்தி பர்யந்தமாக நிரந்த சிந்தா உக்தராய் இருக்குமவர் -என்னுதல் – இப்படி மனன சீலராய் இருக்கிற ஸ்ரீ ஆழ்வார் — முன்புரை செய் முற்றின்பம் நீங்கி – அதாவது களிதாகி சிந்தையனாய் களிக்கின்றேன் -என்றும் விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே -என்றும் உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை-மேலைத் தொண்டு களித்து அந்தி தொழும் சொல்லும் பெற்றேன் -என்றும் கண்ணுள் நின்று அகலான் -என்றும் உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன் -என்றும் வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து அந்தமில்-பேரின்பத்து அடியரோடு இருந்தமை -என்றும் இப்படி முன்பு பேற்றை பெற்றதாக அருளிச் செய்த சமஸ்த ஆனந்தமும் நிரஸ்தமாய்ப் போய் அது எல்லாம் மானச அனுபவ மாத்ரமாய்-பிரத்யஷ சாஷாத் காரத்திலே அபேஷை யுடையவராய் அத்தை அப்போதே பெறாமல் மீளவும் அஜஞாநாவஹமான சம்சாரத்த்லே இருக்கக் கண்டு பூர்வத்தில் ஆனந்தமும் அபூர்வமாம்படி கழிந்தது -என்கை – தனியாகி நின்று தளர்ந்து – அந்தமில் பேர் இன்பத்து அடியாரான-ஸூரி சங்கங்கள் உடனே இருந்தும் ஸ்வப்ன கல்பமாய் பழைய சம்சாரத்தில் தனிமையே சேஷித்து ஸ்ரீ பிராட்டி ஸ்ரீ திரு அயோத்யையிலே ராவாணந்தகரான ஸ்ரீ பெருமாளை பரமனும் தம்பி சத்ருக்னனும் இலக்குமனோடு மைதிலியும் -என்னும்படி சேர்த்தியாய் இருந்து அனுபவித்து பின்பு பிரிந்து காந்தார மத்யே விஜகே விஸ்ருஷ்டா பாலேவ கன்யா விலலாப சீதா -என்னும்படி தனியே நின்று கூப்பிட்டாப் போலே தனியேன் ஆர் உயிரே -என்று தனியாகா நின்று தளர்ந்து மிகவும் அவசாதத்தை உடையவராய் தரைப்பட்டு- அதாவது – கனிவாய்த் தாமரை கட்கரு மாணிக்கமே –மாயம் செய்யேல் என்னை -என்றும் மாயம் செய்யேல் என்று தொடக்கி –திரு வாணை நின் ஆணை-கண்டாய் –கூ விக் கொள்ளை வந்து அந்தோ -என்றும் ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின் அல்லால் அறிகின்றிலேன் நான் -என்றும் உம்பர் பரம் தண் பாழேயோ–என்னைப் போற விட்டிட்டாயே -என்றும் எனக்கு ஆரா வமுதானாயே -என்றும் எனக்கு ஆரா அமுதாய் எனது ஆவியை இன்னுயிரை மனக்காராமை மன்னி யுன்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய் -என்றும் கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ-உன்னைப் பெற்று இனி போக்குவேனோ -என்றும் முதல் தனி உன்னை எனை நாள் வந்து கூடுவன் நான் -என்றும் இப்படி ஆற்றாமையாலே-அவசன்னராய்க் கூப்பிட்டு -என்கை – நனியாம் பரம பக்தியால் நைந்து — அதனில் பெரிய அவா -என்னும்படி தத்வ த்ரயங்களிலும் பெரியதாய்-முடிந்த அவாவான பரம பக்தியாலே-பரிபக்வராய் – நனி -பெருமை அன்றிக்கே பரம பக்தியால் அலைந்து -என்ற பாடமான போது அவா வாகிற அமுத வெள்ளமான-ஆனந்த சாகரத்திலே மக்னராய் -அலைந்து -என்றுமாம் – பங்கயத்தாள் கோனை – அந்த பரம பக்திக்கு விஷயமான-ஸ்ரீயபதியை – கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ – உன்னைப் பற்றி இனி போக்குவேனோ -என்று அருளிச் செய்தவனை உத்தர வாக்யத்தில் கைங்கர்ய பிரதி சம்பந்தியான ஸ்ரீயபதியை – ஒருமையுற்று வீடு திருத்தி -என்றும் விண்ணுலகம் தருவானே விரைகின்றான் -என்றும் வானே தருவான் எனக்காய் என்னுள்ளே ஒட்டி -என்றும் த்வரிக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் திரு உள்ளத்தோடு சேரும்படி இவர் திரு உள்ளமும் த்வரித்து -ஒரு தளைத்து -என்னுதல்- அன்றிக்கே பர பக்தி பர ஞான பரம பக்தி உக்தராய்-பேற்றுக்குத் த்வரித்து அவாவாலே கூப்பிட்டுப் போந்த இவர் திரு உள்ளமும் – முதித பரிஷச்வஜே -என்னும்படி என் அவா அறச் சூழ்ந்தாயே -என்று இவர் அபி நிவேசம் தீரும்படி சம்ஸ்லேஷிக்கையாலே அவா அற்று வீடு பெற்ற பிரகாரத்தை-ஆகவுமாம்- பங்கயத்தாள் கோனை –ஒருமை யுற்று –உயர்ந்து -சேர்ந்தான் – அதாவது கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ -என்கிற-இழவு தீர ஸ்ரீ யபதியான ஸ்ரீ சர்வேஸ்வரனை-ஒரு தலைத்த பரமபக்தி உக்தராய் அத்தால் நித்ய சூரிகள் ஆச்சார்யத்தை-இங்கே யுடையராய் பிரத்யஷ சாஷாத்காரமாம் படி கிட்டி-இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்வார் திரு மாலுக்கே -என்னும்படி – அடிமை செய்யப் பெற்றார் – அங்கே பரதமாரோப்ய முதித பரிஷச்வஜே -என்று-இவரைப் பெற்று ஹ்ருஷ்டனாக இவரும் அத்தலையில்-முகோல்லாசத்தைப் பெற்று -அனுபவித்து-ஹ்ருஷ்டரானார் – அத்தை யாயிற்று-ஒருமை யுற்றுச் சேர்ந்தான் -என்கிறது – இத்தால் அவா அற்று வீடு பெற்ற குருகூர் சடகபன் – என்றத்தை நினைக்கிறது- சாஷாத் கரித்த பரம பிராப்திக்கு தலை மிசையாய் வந்து-தாள்களைப் பூண்டு-போகாமல் தடுத்து திரு வாணை இட்டு-கூசம் செய்யாதே-செய்திப் பிழை யற்று கொம்பற்ற கதி கேடு போர விட்ட பெரும் பழி-புறம்பு போனால் வரும் இழவு உண்டிட்ட முற்றீம்பு அன்பு வளர்ந்த அடி யுரம்-உயிர் உறவு முதல் அளவு துரக் கைகளாலே பெறா வாணை அல்லவாக்கின-பேரவா-குளப்படியாம்படி-கடல் போன்ற ஆதாரத்தோடு சூழ்ந்து தாபங்களை ஹரித்தமையை-வெளியிடுகிறார் பத்தாம் பத்தில் -என்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிச் செய்தார் – கண்டு களிப்பளவும் -பரஞ்ஞான கர்ப்ப பரபக்தி இருந்தமை -என்றது பூர்ண பரஞ்ஞானம் முடிந்த அவா என்றது பரமபக்தி இவை ஞான தர்சன பிராப்தி அவஸ்தைகள் -என்று இந்த பரபக்தியாதி பேதத்தையும் அருளிச் செய்தார் — ஏவம்விதமான பரமபக்தியாலே-பரிபக்வராய்-பலத்தோடு சேர்ந்தார் -என்கிற ஸ்ரீ திருவாய்மொழியில் அர்த்தத்தை-இப்பிரபந்தத்தில்-இப்பாட்டாலே சேகரித்து அருளினார் ஆயிற்று — ———————————————————————————— உயர்வே பரன்படியை யுள்ளதேல்லாம் தான் கண்டு உயர் வேத நேர் கொண்டு உரைத்து -மயர்வேதும் வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல் வேராகவே விளையும் வீடு —————————————————————————– மாறன் -1/2/3/4/5/6/7/8/9/10/11/12/13/14/ சடகோபன் –15 மாறன் –16/17/18/19/20/21/ குருகையர் கோன் -22 மாறன் –23/24/25/26/27/28 குருகூர் மன்-29 மாறன் -30/31- குருகூரில் வந்து உதித்த கோ -32 மாறன் -33/34/35/36 குருகூர் ஏறு -37 மாறன் -38/39 மொய்ம் மகிழோன் -40 மாறன் -41/42/43/44/45/46/47/48/49/50 காரிமாறன் -51 குருகையர் கோன் -52 மாறன் -53 பராங்குசன் -54 மாறன் -55/56/57/58 காரிமாறன்-59 மாறன் -60/61/62 சடகோபர் -63 மாறன் -64/65 அண்ணல் -66 மாறன் -67/68/69/70/71/72/73/74 சடகோபன் -75 மாறன் -76 சடகோபர் -77 காரிமாறன் -78 மாறன் -79/80/81/82/83/84/85/ மாறன் -86/87/88/89/90/91/92/93/94/95/96/97/98 ஞான முனி -99 முநி மாறன் -100- மாறன் -1/2/3/4/5/6/7/8/9/10/11/12/13/14/-16/17/18/19/20/21/—-23/24/25/26/27/28–30/31—33/34/35/36– -38/39—41/42/43/44/45/46/47/48/49/50–53–55/56/57/58—60/61/62–64/65–67/68/69/70/71/72/73/74–76- –79/80/81/82/83/84/85/ -86/87/88/89/90/91/92/93/94/95/96/97/98 சடகோபன் –15–75 குருகையர் கோன் -22–52 குருகூர் மன்-29 குருகூரில் வந்து உதித்த கோ -32 குருகூர் ஏறு -37 மொய்ம் மகிழோன் -40 காரிமாறன் -51–59-78 பராங்குசன் -54 சடகோபர் -63–77 அண்ணல் -66 ஞான முனி -99 முநி மாறன் -100 ————————————————————————————— ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் . ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம் ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் – ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் – ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம் ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம் ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம் ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் – ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading