பகவத் விஷயம் காலஷேபம் -151- திருவாய்மொழி – -7-5-1….7-5-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

மேல் திருவாய்மொழியிலே, எம்பெருமானுடைய வெற்றிச் செயல்களை அனுபவித்தார்;
அவை தாம் அடியார்களின் பொருட்டே அன்றோ இருப்பன? ‘அவன், தன்னை இவர்களுக்கு ஆக்கி வைக்கக,
இவர்கள் புறம்பு உண்டான விஷயங்களிலே வேறு நோக்குள்ளவர்களை ஆவதே!’ என்று ஆச்சரியப்படுகிறார்.
யஸ்ய அஸ்மி -எவனுக்கு அடியவனாகிறேன்?’ என்கிறபடியே,
யாவன் ஒருவனுடைய சத்தையே பிடித்து அவனுக்காய் இருக்கும்?
அப்படி இருக்கிறவன் தான் பிறந்தது தொடங்கி இவனுக்கு ஆக்கி வைக்கிறான் அன்றோ?

பாதுகாப்பதற்கே உரியனவான பிறவிகளிலே வந்து பிறந்த படியையும்,
தன் ஸ்வரூபம் ரூபம் குணம் முதலானவைகளையும் பிறர்க்கு ஆக்கி வைக்கிற படியையும்,
அதற்குக் காரணமான கிருபையைத் தனக்கு வடிவாகவுடைனாய் இருக்கிற படியையும்,
கிருபையின் காரியமான செயல்களையும் நினைத்து, முற்றத்திலே பொற் குவியல் புதைந்து கிடக்க,
அதனை அறியாதே மேலே சஞ்சரித்துப் புறங்கால் வீங்குவாரைப் போலே
இச் செல்வம் தங்களுக்காக இருக்கச் சம்சாரிகள் புறம்பே போது போக்குவதே!’ என்று ஆச்சரியப்படுகிறார்.

ஆழ்வான் ஒருகால், இத் திருவாய்மொழி பத்துப் பாசுரங்களையும் இராமாவதார விஷயமாக்கி நிர்வஹித்தாராம்.
அதற்குக் காரணம்: ஆயிரத்தில் ஒன்றும் கடலில் குளப்படியும் போலே, பெருமாளுடைய குணத்தில் ஒரு பகுதியே அன்றோ?
அல்லாத அவதாரங்கள் எல்லாவற்றிலும் உள்ளது ஆதலின்.
‘பேரெயில் சூழ்கடல் தென்னலங்கை செற்ற பிரான்’ என்றும்,
‘மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள்’ என்றும்,
மேலே சொல்லிப் போந்த இராமாவதாரத்தினுடைய செயலை அநுசந்தித்து,
அவ்வழியாலே அன்றோ அவதாரங்களை அநுசந்திக்கிறது?

மற்றைய அவதாரங்களிலே ஈடுபட்டவர்களும் இராமாவதாரம் பிராசங்கிகமாகச் சொல்ல வேண்டி வந்தால்,
‘மனத்துக்கு இனியானை’ என்றே அன்றோ சொல்லுவது?
‘பட்டர் இராமாவதாரத்தில் போரப் பக்ஷிபதித்து இருப்பர்’ என்று,
அவர் அருளிச் செய்யுமது கேட்கைக்காகச் சிறியாத்தான் ஒருநாள்
‘பெருமாளுக்கு எல்லா நன்மைகளும் உளவாகிலும், கழுத்திலே ஒலை கட்டித் ‘தூது போ’ என்ன,
தூது சென்ற கிருஷ்ணன் நீர்மை இல்லையே?’ என்ன,
‘அது அங்ஙன் அன்று காண்; கழுத்திலே ஒலை கட்டித் ‘தூது போ’ என்பார் இல்லாமையாலே
தவிர்ந்தார் அத்தனை காண்,’ என்று அருளிச் செய்தார்.
நாடுடை மன்னர் வேறே சிலர் இலரே.– முடி சூடிய க்ஷத்திரிய குலத்திலே பிறக்கையாலே போக விடுவாரைப் பெற்றது இல்லை.
முடியைத் தவிர்ந்து சடையைப் புனைந்து நாட்டினை விட்டுக் காடு ஏறப் போனவர், தூது போகாமை இல்லை அன்றோ?

‘காடு ஏறப் போகவுமாம்; துரியோதனன் கோட்டியிலே போகை அன்றோ அரிது?
‘மதுசூதனரே! எந்த இடத்திலே நல்ல வார்த்தையும் கெட்ட வார்த்தையும் வாசி இல்லாமல் ஆகின்றதோ,
அங்குத் தெரிந்தவன் ஒன்றும் பேசக்கூடாது,’ என்பதே அன்றோ பிரமாணம்?
‘யத்ர ஸூக்தம் துருக்தம் வாஸமம் ஸ்யாத் மதுசூதந
ந தத்ர ப்ரல்பேத் ப்ராஜ்ஞ: பதிரேஷ்விவ நாயக:’-என்பது, பாரதம், உத்யோகபர். 95.( விதுரர் வாக்கியம் )

‘பாண்டவர்கள் கிடக்கைக்கு ஐந்து ஊர் தர வேணும்’ என்று இவன் சொன்ன வார்த்தைக்கும்,
‘பந்துக்களுக்கும் ஒரு கோற் குத்தும் கொடேன்’ என்று அவன் சொன்ன வார்த்தைக்கும் வாசி அறியாத கோட்டியிலே அன்றோ போய்ப் புக்கது?
‘இராமாவதாரத்தில் தூது சென்ற திருவடியுடைய ஏற்றம் தன் திருவுள்ளத்திலே பட்டுக் கிடந்தே அன்றோ,
‘அவனே பின்னோர் தூது ஆதி மன்னர்க்கு ஆகிப் பெரு நிலத்தார் இன்னார் தூதன் என நின்றது?பெரிய திருமொழி, 2. 2 : 3.

மீனோடு –முன்னும் இராமனாய் தானாய் பின்னும் இராமனாய் –
மற்றவை தான் இல்லையோ -ஸ்ரீ ராமாவதார சிறப்பால் தானாய் என்கிறார்
ஆழ்வார் ஸ்ரீ கிருஷ்ணனுக்காக -குலசேகர பெருமாள் பெருமாளுக்காக -மனத்திற்கு இனியன் என்றாள் ஆண்டாள்
பாரார்த்தியம் ஸ்வம் பராஸ்மி காகுஸ்த –
கண்ணன் பக்தராக்கி தான் பிரிந்து சென்று திரும்பாமல் -வேறே வேறே இடங்களுக்கு தானே செல்வான்
ராமனோ அனைவரையும் கூட்டிச் சென்றான்
ஸ்ரீ ராம ராம ராமேதி -ஸஹஸ்ர நாம சாரமே இது ஒன்றே

———————————————————————————————–

கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.–7-5-1-

பெருமாள் உடைய-சக்கரவர்த்தி திருமகன் உடைய – புருஷார்த்தத்தை -பிரதத்வம் அனுசந்தித்து
கல்வியில் ஆசை உள்ளவர்க்கு இவரை விட வேறே விஷயம் இல்லை -பிரிய ஹித ரூபங்கள் -அதீவ பிரிய தர்சனன்
கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?-ராமோ விக்ரகவான் தர்மம் -சாதனமும் பிராப்பியமும் இவரே
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே-பா புல் –பரம்பிய புல் தொடக்கமாக அது ஷூத்ரமான புல்லிய எறும்பு
ஸ்தாவர ஜங்கமங்களில் சிறியது முதலாக
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்-குண அனுபவ ப்ரீதி உக்தராக வர்த்திக்கும் -ராம குணங்கள் நடையாடும் திரு அயோத்யையில்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே-ஸ்ரஷ்டமான பூமியில் -உபயாந்தரங்கள் சம்பந்தம் இல்லாமல் -புல்லும் எறும்புக்கு கூட
மோக்ஷம் -ஸாந்தானிக வைகுண்டம் கார்ய வைகுண்டம் -வால்மீகி ஸாந்தானிக லோகம் என்றே அருளிச் செய்கிறார்
ஜெய விஜயர் சாபமும் கார்ய வைகுண்டத்தில் தான் -அங்கே இல்லையே

‘நல்ல தேசமான அயோத்தியில் வாழ்கின்ற பரந்த புல் முதலாக, சிறிய எறும்பு முதலாக உள்ள சராசரங்கள் எல்லாவற்றையும் அவற்றின் பக்கல்
ஒரு சாதனமும் இல்லாமல் இருந்தும், பிரமனாலே படைக்கப்பட்ட இந்த உலகத்திலே அவை நல்ல தன்மையை யுடையனவாம்படி செய்தான்;
ஆதலால், கற்கின்றவர்கள் ஸ்ரீராமபிரானுடைய கீர்த்தியை அல்லாமல் வேறு சில கீர்த்திகளையும் கற்பார்களோ?’ என்றபடி.
‘பா புல் முதலாப் புல் எறும்பு ஆதியா நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் ஒன்று இன்றியே நற்பாலுக்கு உய்த்தனன்,’ என்று கூட்டுக.
‘ஒன்று’ என்றது, அவனை அடைவதற்கு உபாயமாகக் கூறப்பட்ட சாதனங்களில் ஒன்றும் என்றபடி.
இத்திருவாய்மொழி கலி நிலைத்துறை.

‘பிரியத்தையும் ஹிதத்தையும் நினைத்து ஒன்றைக் கற்பார், திருவயோத்தியில் உண்டான எல்லாப் பொருள்களையும்
காரணம் ஒன்றும் இல்லாமலே தன் சேர்க்கையே ஸூகமாகவும் தன் பிரிவே துக்கமாக வுமுடையராம்படி செய்தருளின
உபகார சீலனான சக்கரவர்த்தி திருமகனை அல்லது கற்பரோ?’ என்கிறார்.

கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ –
‘இவ் விஷயத்தை ஒழியப் புறம்பு கற்குமது கல்விக்கு உடல் அன்று,’என்று இருக்கிறார்.
‘அந்த ஞானந்தான் ஞானம் என்று சொல்லத் தக்கது; ஆகையால், மேற்கூறிய ஞானத்திற்கு வேறானது
அஞ்ஞானம் என்று சொல்லப்பட்டது’ என்றன் அன்றோ?

‘ஸம் ஜ்ஞாயதே யேந தத் அஸ்த தோஷம் ஸூத்தம் பரம் நிர்மலம் ஏக ரூபம்
ஸம் த்ருஷ்யதே வாப் யதிகம்யதே வா தத் ஜ்ஞாநம் அஜ்ஞாநம் அத: அந்யத் உக்தம்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 5 : 84

தது அந்த ப்ரஹ்மம் -அறியப் படுகிறதோ பார்க்கப் படுகிறதோ அடையப் படுகிறதோ ததேவ ஞானம் –
ஸ்ரவண நினைக்க கேட்க -சந்த்ருஷ்யதே கண்ணால் பார்ப்பது -ஸம் ஞாயதே -ஞான தரிசன பிராப்தி அவஸ்தைகள்

பகவானை அடைவதற்கு உடலான ஞானம் ஞானமாகிறது; அல்லாதது அஞ்ஞானம் என்னக் கடவது அன்றோ?

‘ப்ரியவாதீச பூதாநாம் ஸத்ய வாதீச ராகவ:
பஹூ ஸ்ருதாநாம் வ்ருத்தாநாம் ப்ராஹ்மணாநாம் உபாஹிதா;-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2. 32.

‘எதிர்வரு மவர்களை எமை யுடை இறைவன்
முதிர்தரு கருணையின் முகமலர் ஒளிரா,
‘எது வினை இடரிலை இளிது நும்மனையும்
மதிதரு குமரரும் வலியர்கொல்?’ எனவே’-என்பது,கம்பராமாயணம், பால.

கற்பார் –
ஒருவன் ஒன்றைக் கற்பது ‘அப்போதைக்கு இனியது’ என்றாதல்
‘பின்பு ஒரு நன்மையை விளைக்கும்’ என்றாதல் ஆயிற்று;
‘இராம பிரான்’ என்கையாலே
‘அவை இரண்டும் (பிரியமும் ஹிதமும் )இவ் விஷயத்தை ஒழிய இல்லை’ என்கிறது.

‘யாங்ஙனம்?’ எனின்,
‘இராமன்’ என்கிற இதனால்,
புறம்பு போகாமல் காற்கட்டும் படியான அழகைச் சொல்லுகிறது;
‘பிரான்’ என்கிற இதனால்,
அவ் வழகாலே சேதநரை அநந்யார்ஹமாக்கும்படியும்,
நிலாத் தென்றல் சந்தனம் தண்ணீர் போலே, தன்னுடைய ஆனந்திக்கச் செய்கிற தன்மையும்
பிறர்க்கே யாயிருக்கும் உபகாரமாம் தன்மையும் சொல்லுகிறது.

ப்ரிய வாதீச ராகவ – பெருமாள் ஒன்றை அருளிச் செய்தால் அது செவிப்படாது ஒழியில் செய்யலாவது இல்லை;
செவிப்படில் இனியதாய் அன்றி இராது. ‘யார்க்கு?’ என்றால்,
பூதா நாம் – சத்தை யுடையனவான எல்லாப் பொருள்களுக்கும்: அசத்துக்கு வேறுபட்ட தன்மை மாத்திரமே வேண்டுவது.
‘நன்று; அப்போது பிரியமாய்ப் பயன் கொடுக்குமிடத்தில் வேறு ஒரு பலனைக் கொடுக்குமோ?’ என்னில்,
ஸத்ய வாதீச ராகவ – அருளிச் செய்யுமது தான் ஆத்மாக்களுக்கு ஹிதமாய் அன்றி இராது என்கிறது. சத்யம் பூத ஹிதம் ப்ரோக்தம்
ஒரு வார்த்தையே இரண்டு ஆகா நின்றால் அல்லாதனவற்றிற்கு –
ஸ்வரூபம் ரூபம் குணம் இத்யாதிகள் சொல்ல வேண்டா அன்றோ?

‘ராமோ ராமோ ராம இதி’ என்னும்படியன்றோ நாட்டை அகப் படுத்தியிட்டு வைக்கும்படி?
(உபேயத்திலே கண் வைத்து இருக்கும் அயோத்யா பிரஜைகள் -ஸித்த உபாயம் கைப்பட்டு இருக்குமவர்கள் அன்றோ
ராம ராஜ்யம் -சரணாகதியை உபேயமே பிரதானம் – )

‘ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாம் அபவந் கதா;
ராம பூதம் ஜகத்அபூத் ராமே ராஜ்யம் ப்ரஸாஸதி’-என்பது, ஸ்ரீராமா. யுத். 131 : 97

அவன் ஸத்தை இவனுடைய ஸத்தைக்குக் காரணம்; பின்பு உண்டானவை இவனுடைய போகத்துக்குக் கண்டவை.
ஆக, ‘பிரியமும் ஹிதமும் ஆகிய இரண்டையும் வேண்டியிருப்பார் அவனை ஒழியக் கற்பரோ?’ என்றபடி.
‘நேரான ஐஸ்வரியத்தோடு கூட நேரான தர்மமும் ஸ்ரீராம பிரானிடத்தினின்றும் உண்டாயிற்று’ என்பது ஸ்ரீராமாயணம். என்றது,

‘ராம: ஸத் புருஷோ லோகே ஸத்ய தர்ம பராயண:
ஸாக்ஷாத் ராமாத் விநிர் வ்ருத்த: தர்மஸ்சாபி ஸ்ரியாஸஹ’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 29.

தர்மம் – உபாயம் / ஸ்ரியம் – செல்வம் பிராப்யம் –
அவ்யவதான இடையூறு வேறே அங்கங்கள் இல்லாமல் -‘நேரே சாதனம் சாத்தியம் ஆகிய இரண்டும் இந்த இராமனே என்கிறது அன்றோ?’ என்றபடி.

கற்பார் இராம பிரானை –
கற்பார் என்கை அன்று இவர்க்கு உத்தேசியம்;
‘மற்றையவற்றைக் கற்கலாகாது,’ என்று விலக்குதலேயாம்,
-ராக ப்ராப்தம் ஸ்வயம் ஏவ ப்ரவர்த்திக்குமே -ஆசையாலே செய்யப் படுவதாகில் தானாகவே செல்லும் அன்றோ’
ஆகையால், வேறு ஒன்றில் போகாமையே வேண்டுவது.

‘மற்றும்’ என்றதனால்,
வேறு தெய்வங்களை வணங்குதல் முதலானவற்றை வேறுபடுத்துகிறார் அல்லர்.
பஜனீய -வணங்கக் கூடிய பொருளிலே கூறு இடுகிறார்.
வேறு தெய்வங்களாகிற பதரைக் கூட்டிக் கழிக்குமவர் அல்லரே இவர்?
ஆதலால், பரத்துவத்தையும் மற்றை அவதாரங்களையும் கழிக்கிறார்.

‘என் எண்ணமானது வேறிடத்தில் போகிறது இல்லை’, என்றாற்போலே, ‘

‘ஸ்நேஹோ மே பரமோ ராஜந் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித:
பக்திஸ்ச நியதா வீர பாவோ ந அந்யத்ர கச்சதி’-என்பது, ஸ்ரீராமா. உத். 40 : 16. இது திருவடி கூற்று.

மற்றுங் கற்பரோ’ என்கிறார்.
ஸ்நேஹ: மே பரம:-
எழுந்தருளுகிற போது ‘என் வழியே போந்தாலோ?’ என்ன,
‘அவ்வளவு அன்று காணும் எனக்குச் சிநேகம்’, என்கிறான்.
‘என்றன் அளவு அன்றால் யானுடைய அன்பு’-(இரண்டாம் 100 )என்றும்,
‘உயிரின் பரமன்றிப் பெருகுமால் வேட்கையும்’–(9-6-1-) என்றும் சொல்லுமாறு போலே

ராஜந் த்வயி-
இது தானும் என்னால் வந்தது அன்று.-‘ரஞ்ஜயதீதி ராஜா’ ஆகையாலே.

நித்யம் ப்ரிதிஷ்டித; –
‘இப்போது ஒண்ணாதாகில், மற்றொரு போது கொள்ளுகிறோம்’, என்றால், அது செய்ய ஒண்ணாது,
தர்மியைப் பற்றிக் கிடப்பது ஒன்று ஆகையாலே .

பக்திஸ்ச நியதா –
பெருமாளை ஒழியச் செல்லாமை பிறந்து பிரிவில் முடிந்த சக்கரவர்த்தியின் நிலை சினேகம்;
பத்தியாவது, ‘நில்’ என்ன, ‘குருஷ்வ – கொள்க’ என்னும் படியாய், முறை அறிந்து பற்றின இளைய பெருமாள் நிலை.

வீர –
உம்முடைய வீரம் கொண்டு புறம்பே வென்றீர் என்னா, இங்கும் வெல்ல முடியாது.
தானும் அவன் ஆகையாலே ( நீயும் வீரன் நானும் வீரன் )தோற்பித்த துறையைப் பிடித்துச் சொல்லுகிறான்,

பாவோ ந அந்யத்ர கச்சதி –
என்னை மீட்டீராகிலும் என்னுடைய நெஞ்சினை மீட்கப் போகாது,
‘என்னுடை நல் நெஞ்சந்தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி’ திருவாய். 1. 7 : 8.என்னுமாறு போலே.
‘சர்வ சக்தியான அவனாலும் மீட்கப் போகாது,’ என்கை.

கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணோவே’ என்னுமாறு போலே, ‘அந்யத்ர ந கச்சதி’ என்கிறது.

‘அந்யத்ர’ என்கிறது,
போகிற இடத்தின் பேரும் சொல்லுகை பொறாதபடி;

‘மற்று ஆரானும் உண்டு என்பார்’( திரு மடல் ) என்னமாறு போலே,
இவரும், ‘மற்றுங் கற்பரோ?’ என்கிறார்.

கற்பரோ –
சேதநர் அல்லரோ? உலகம் அடங்கலும் தம்முடையபடி என்று இருக்கிறார்;
‘இவ்வூரிற்பிள்ளைகள் கண்ட சர்க்கரை ஒழிய உண்ணும்படி எங்ஙனே?’ என்பாரைப் போலே.
மற்றையவற்றை விட்டு இராம பிரானைக் கற்கைக்குக் காரணம் சொல்லுகிறார் மேல்:

(ராஜகுமாரன் ஒரு ஊரில் சென்று பிரசாதம் கேட்டு தொட்டுக்க -உப்பைக் கொடுக்க –
கண்ட சக்கரை இல்லையோ என்ன
இங்கு கண்ட சக்கரை இல்லாமல் எங்கனம் உண்கிறார்கள் என்றானாம் )

புல் பா முதலா –
பா என்பது, பொருள்; புல்லாகிற பொருள் என்னுதல்.
‘பா’ என்பது பரப்பு; ‘பரந்திருக்கிற புல்’ என்னுதல்; என்றது,
பசுவின் வாய்க்கு எட்டாதபடியாய் இருக்ககையைத் தெரிவித்தபடி.
பா பதார்த்த வாசகம் -படர்ந்த புல்
இதனால், ‘புல் முதலாகத் தாவரம் முடிவாக’ என்றபடி.

புல் எறும்பு –
ஆதி பிறிவிகளிற் கடையான எறும்பு தொடக்கமாக.
பிரமனை எண்ணினால் பின்பு முடிவில் நிற்கக் கடவது அன்றோ எறும்பு? (பிபீலிகை)
‘புற்பா முதலாப் புல் எறும்பு ஆதி’ என்று இவற்றுக்கு ஒரு முதன்மை சொல்லுகிறார் அல்லர்;
‘ஸ்ரீராமபிரானுடைய திருவுள்ளத்துக்கு முற்பட்டன இவை,’ என்கிறார்;

வெள்ளமானது தாழ்ந்த இடத்திலே ஓடுமாறு போலே.
தாவரங்களில் தாழ்ந்தது புல்; சங்கமங்களில் தண்ணியது எறும்பு;
இவை இரண்டனையும் ஒக்க எடுக்கையாலே. ஞான பலம் மோக்ஷம் என்றதனைத் தவிர்க்கிறது.
‘ஞானம் உண்டாகையும் இல்லையாகையும் காரணம் அன்று. பெருமாள் கிருபைக்கு,’ என்கிறது.
‘இவற்றின் கர்மங்களால் வரும் உயர்வு தாழ்வுகள் காரணம் அன்று.’ என்கிறது.
காரணம் இல்லாமலே சேஷியாக இருக்கிற சர்வேஸ்வரன் பக்கல் விலக்காமையே பேற்றுக்கு வேண்டுவது.

ஸ்ரீ பரதாழ்வானைக் கண்டு சேதநர் எல்லாரும் கண்ண நீர் விழ விட்டு நிற்கக்
கழுத்தளவு நீரிலே நிற்கிற மரங்கள் அன்றோ வாடி நின்றன,
‘மரங்களும் எல்லாம் வாடி நின்றன’ என்கிறபடியே?
‘விஷயே தே மஹாராஜ ராமவ்யஸந கர்ஸிதா;
அபிவ்ருக்ஷா; பரிம்லாநா; ஸபுஷ்பாங்குர கோரகா;-என்பது, ஸ்ரீராமா. அயோத். 59 : 4.

‘உபதப்த உதகாநத்ய; பல்பலாநி ஸராம்ஹிச
பரிஸூஷ்க பலாஸாதி வநாநி உபவநாநிச’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 59 : 5.

உப தப்தஉதகா நத்ய: – நீரோடு, அந்நீரில் விழுகிறாரோடு வாசி அற்றபடி.
உபதப்தமாகையாவது, கரையரும் கிட்ட ஒண்ணாதபடியாய் இருக்கை.
பல்வலாநி ஸராம்ஸிச – இதில், சிறுமை பெருமை என்று ஒரு வாசி இல்லை,
‘வனம் என்ன உபவனம் என்ன’ என்பது போலே.

ஒன்று இன்றியே –
எல்லாவற்றையும் என்கிறது அன்று;

மேலே ‘முற்றவும்’ என்று
முழுவதும் என்ற பொருளைக் காட்டுகிற சொல் உண்டாகையாலே.-ஸாகல்ய வசனம் உண்டாகையாலே
இனி, ‘ஒன்று இன்றியே’ என்கிறது,
‘பேற்றுக்குத் தகுந்ததாய் இருப்பது ஒரு சாதனம் இன்றிக்கே இருக்கச் செய்தே’ என்றபடி.

பெறுகிற தன் சிறுமையையும் பேற்றின் கனத்தையும் பார்த்தால். தன் பக்கல் ஒரு சாதனம் இன்றிக்கே இருக்கும் அன்றோ?
பரம பத்தியோடு அவனே உபாயமானதோடு வாசி இல்லை. பேற்றைப் பார்த்தால் இத் தலையில் ஒன்றும் சொல்ல ஒண்ணாமைக்கு.
இனி, அங்கீகாரத்துக்குக் காரணமாய் இருப்பது ஒரு சாதனம் இன்றிக்கே இருக்க. யாது ஒன்றாலே பலம் உண்டாயிற்று, அதுவன்றோ சாதனம்!
அதாவது, ‘திருவயோத்யையினின்றும் குடி வாங்க நினைவு இல்லை’ என்கிற இது வன்றோ?

நற்பால் அயோத்தியில் –
நல்ல இடத்தை யுடைத்தான திருவயோத்தியில். பால் – இடம்.

‘பவித்ரம் பரமம் புண்யம் தேஸோயம் ஸர்வ காமதுக்’ என்பது, கருடபுராணம், 11.

‘மானத்து வண்ட லுழவோர் எழுத்தின் வடிவுற்றசீர்
மானத் துவண்ட வினையான ராயினு மால்வளர்வி
மானத் துவண்டல மாமரங் கம்வழி யாவரினும்
மானத்து வண்டமர் தாரண்ட ராம்பதம் வாய்க்குமங்கே.’என்பது, திருவரங்கத்தந்தாதி.

இதனால், ‘நில மிதியே இராம பத்தியை விளைக்கும்’ என்கை.
‘இந்தத் தேசமானது விரும்பினவற்றை எல்லாம் தரக் கூடியது’ என்கிறபடியே அன்றோ?
கைகேசியின் உறவினர்களுக்கு வேலைக்காரியும் எங்கேயோ பிறந்தவளும்’ என்கிறது அன்றோ?

‘ஜ்ஞாதி தாஸீயதோ ஜாதா கைகேய்யாஸ்து ஸஹோஷிதா
ப்ரஸாதம் சுந்த்ர ஸங்நாஸம் ஆருரோஹ யத்ருச்சாயா’என்பது, ஸ்ரீராமா. அயோத். 7 : 1

‘இதற்குக் கருத்து என்?’ என்னில்,
‘இந்த அயோத்தியிலே பிறந்தாளாகில் பெருமாளுக்கு விரோதம் செய்யாள் ஆகையாலே,
எங்கேனும் ஓரிடத்தே பிறந்தாள்- ஒரு விழுந்தான் கிடக்கை’ என்றது.
‘யத: குதஸ்சித்ஜாதா – யாதாம் ஓரிடத்தில் பிறந்தாள்’ என்று வியாக்கியானம் செய்தான் உடாலி.
‘இந்த நிலத்திற்பிறவாமை இவளுக்குக் கொடுமை விளைந்தது,’ என்கிறான் அன்றோ?

தேசந்தானே எல்லா நன்மைகளையும் பிறப்பிக்கவற்றாய் இருக்குங்காணும்.
இவ்வூரிலவர்கள் (கோயிலில் வாழும் வைஷ்ணவர்களை சொன்னவாறு )
மற்றையோரைப் போலே உண்டு உடுத்துத் தடித்து வார்த்தை சொல்லித் திரிந்து.
பெருமாளுக்கு வருவது ஒரு பிரயோஜனத்தோடு மாறுபட்டவாறே, சத்துரு சரீரம் போலே இருக்க,
சரீரங்களைப் பொகட்டுக் கொடு நிற்பார்கள். சத்துரு சரீரம் பொகட வேண்டுவது ஒன்றோ அன்றோ?

‘ராகவார்த்தே பராக்ராந்தா ந ப்ராணே குருதே தயாம்’-என்பது, ஸ்ரீராமா. யுத்.

‘இராகவனுக்காகச் சூழ்ந்து கொண்டிருக்கிற சேனையானது பிராணனிடத்தில் அருள் வைப்பது இல்லை,’ என்கிறபடியே
பிராணன்கள் பழைமையாலே பல் காட்ட, உடையவரும்(ஸ்வாமியான ராமனும் ) நீங்களும் ஒரு தலையானால்
உங்களைக் கைக் கொள்ளப் போமோ என்றார்களே அன்றோ?’ என்றபடி,
பழைமை பார்ப்பரோ, அவன் தானும் இவனைப் பற்ற ‘பிரணான்களை விட்டு’ என்னா நிற்க?
ஆர்த்தோவா யதிவா த்ருப்த: பரேஷாம் ஸரணாகத;
ஹரி; ப்ரணாந் பரித்யஜ்ய ரக்ஷிதவ்ய: க்ருகாத்மநா’என்பது, ஸ்ரீராமா. உத். 18 : 18.

அயோத்தியில் வாழும்-
வசிக்கும் என்னாமல் ‘வாழும்’ என்கிறது,
அத் தேச வாசமும் வாழ்வும் என்று இரண்டு இல்லாமையாலே;
‘வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்!’ என்றும்,
‘நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம்’நாய்ச்சியார் தி. 8 : 9., 11 : 5.என்றும், சொல்லுகிறபடியே,
‘அயோத்தியில் வாழும்’ என்கிறார்,

பிராப்பிய தேசத்தில் வசிப்பது தான் வாழ்ச்சியாக இருக்குமன்றோ?
நித்தியப் பிராப்பியமான பொருள் அன்றோ இங்கு எப்பொழுதும் அண்மையில் எழுந்தருளி யிருக்கிறது?
நமக்கு அனுபவம் ஒரு காலத்தில் உண்டாகிறது சரீரத்தின் சேர்க்கையால் (அசித் சம்சர்க்கத்தாலே)அன்றோ?
தர்மியில் ஐக்கியத்தாலே அங்குத்தைக்கு ஒரு குறை இல்லை அன்றோ?

நற்பாலுக்கு உய்த்தனன் –
நல்ல ஸ்வபாவத்தை யுடைத்தாம்படி செலுத்தினான். என்றது,
தன் சேர்க்கையாலே சுகத்தை யுடையவர்களாகவும்
தன் பிரிவாலே துக்கத்தை யுடையவர்களாகவும் செய்கையைத் தெரிவித்தபடி.

இவற்றினுடைய கர்மங்களின் தார தம்யத்தால் -ஏற்றத் தாழ்வுகளால் வரில் அன்றோ அவற்றிற்குத் தக்க அளவுகளாய் இருப்பன?
அவனாலே வந்தன ஆகையாலே எல்லார்க்கும் ஒக்க நன்மை விளைந்தபடி.
‘என்னால் நியமிக்கப்பட்டவராய் நீர் அந்த உத்தம உலகத்தை அடைவீர்,’ என்கிறபடியே,
அபராவர்த்திநாம் யாச யாச பூமிப்ரதாயிநாம்
மயா த்வம் ஸமநுஜ்ஞாதோ கச்ச லோகந் அநுந்தமாந்’-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 68 : 80.
இது, ஜடாயுவைப் பார்த்து ஸ்ரீராமபிரன் கூறியது.

இங்கு உண்டான பற்று அறுத்து ஒரு தேச விசேடத்து ஏறச் சென்று அனுபவிக்கும் அனுபவத்தைக் கொடுக்க வல்லவனுக்கு
இங்குத் தன்னை ஒழியச் செல்லாமை விளைக்கை பணியுடைத்து அன்றோ?

நான்முகனார் பெற்ற நாட்டுளே நற்பாலுக்கு உய்த்தனன் –
அரசன் தன்னுடையான் ஒருவனுக்கு ஒரு நாட்டைக் கொடுத்தால் அவனுடைய ஆணையும் ஆஜ்ஞையுமாக
அவனுடைய ஸ்வாதந்திரியமே நடக்கும்படி செய்து கொடுக்குமாறு போலே,
சம்சாரி சேதநர்க்குத் தலையான பிரமனுக்குக் கை யடைப்பான நாட்டுக்குள்ளே,
அவன் ஸ்வாதந்திரியத்தையும் தவிர்த்து,
இவற்றின் கர்ம பாரதந்திரியத்தையும் தன் குணத்தாலே பதஞ்செய்து,
தன்னைப் பெற்ற போது ஜீவிக்கும்படியாய்ப்
பெறாத போது உறாவும்படியான தன்மையை உண்டாக்கினான்.
ஆன பின்பு அவனை ஒழிய வேறேயும் சிலவற்றைக் கற்பரோ?

(கோயில் கந்தாடை ஆயன் -முதலிகள் சம்வாதம்
மூவரும் திருவரங்கம் திருக்கோயிலில் ரெங்க விலாஸ மண்டபத்தில் சேர்ந்து எழுந்து அருளி இருக்க காரணம்
பாவோ நான்யத்ர கச்சதி -திருவடி
அச்சவை பெறினும் வேண்டேன் -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்
மற்று ஒன்றைக் காணாவே -திருப்பாண் ஆழ்வார் -என்றாராம் –
யத்ர நந்யத்ர பஸ்யதி –ஒன்றைக் கண்டால் வேறே ஒன்றைக் கானாவோ நினைக்காது பேசாதோ அதுவே -பூமா –
இவர்களுக்கு ராம அனுபவம் அரங்கன் அனுபவம் திருநாம சங்கீர்த்தனமே பூமா )

மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவிஎன்ன செவியே!
திருமால்சீர் கேளாத செவிஎன்ன செவியே!’-என்ற சிலப்பதிகாரம் (ஆய்ச்சியர் குரவை)

‘மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தாளை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றத்
தொடர்ந்த ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தாளை ஏத்தாத நாவென்ன நாவே!
நாராய ணாவென்னா நாவென்ன நாவே!’-என்பது, சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை.

——————————————————————————————–

நாட்டிற் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ?
நாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே.–7-5-2-

கீழ் சொன்னதுக்கு மேலே உத்தர யுத்தர பலிஷ்ட -அவதாரம் முடிந்த பின்பு செய்த செயலை விட -11000 ஆண்டு ரஷித்த ஸீலாதிசயம்-
ஸுசீல்யம் -திருவவதார குணம் பட்டர் -பரத்வாஜர் -சபரி வாசி இல்லாமல் கொடுத்ததை உண்டு –
நாட்டிற் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ?-அவர் வாசி அறியாத நாட்டில் -ஆஸ்ரிதர் -அர்த்தித்தார் ரக்ஷணார்த்தமாக-கர்ம வஸ்யர் பிறக்குமா போலே
நாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா-ராஜ்ய நஷ்ட -காட்டுக்கு சென்று -சீதை -இழந்து ஜடாயு இழந்து -மனுஷர்கள் படாதனவாம் தாம் பட்டு –
பின்பு பழி சொல்லும் நாட்டார்
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு-ராவணனாதிகளை முடித்து -தச வருஷ சகஸ்ராணி சதவருஷ 11000 வருஷங்கள்
நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே.-ரக்ஷித்து-அகால மரணம் நேராதபடி உஜ்ஜீவித்து -சம்பூகன் முடித்து
பிள்ளை -பிழைப்பித்த -மன்னன் குற்றம் -புஷ்பக விமானம் ஏறி நாட்டுக்குள் சென்று தப்பைக் கண்டு பிடிக்க கோதண்டம் கொண்டு தனித்து
தோலாத தனி வீரன் -தெற்குத் திக்கில் இரவில் வரண தர்மம் சேராத தபஸ் பண்ணி பகவத் அபசாரம் செய்து -இதனால் அகால மரணம்
அவன் தலை சீவ பிள்ளை உயிர் பெற்றான் செரித்தவ செம்புகன் தன்னை சென்று கொண்டு -உத்தர காண்டம் சரித்திரம் –
அப்ராக்ருத திவ்ய மேனி கொண்டு -பவான் நாராயணோ தேவதோ -பெருமாள் தானே நாராயணன் –
அடிமை ஆவது -சத்தா நிபந்தம் குண நிபந்தம் இரண்டாலும் சேஷ வ்ருத்தி பண்ண வேண்டுமே –
ரக்ஷணத்தையும் முதலில் சொல்லில் இப் பாட்டில் புருஷார்த்த பிரதத்வம் -கைங்கர்யம் தானே புருஷார்த்தம் –
நாரணற்கு ஆள் -அடிமைத் திறம் -அருளிச் செய்கிறார்

‘இந்த உலகத்திலே பிறந்து மக்கள் படாத துன்பத்தை எல்லாம் தான் பட்டு, மனிதர்களுக்காக, நாட்டினை வருத்துகின்ற அரக்கர்களைத் தேடிச் சென்று
கொன்றிட்டு நாட்டைப் பாதுகாத்து அகால மரணம் உண்டாகதபடி வாழச் செய்து தன்னுடைச் சோதிக்கு எழுந்தருளின பிரகாரத்தை ஸ்ரீராமாயண முகத்தாலே
கேட்டிருந்தும், இந்த உலகத்திலே பிறந்தவர்கள் ஸ்ரீஇராமபிரானுக்கு ஆள் ஆவரே அன்றி வேறு ஒருவர்க்கு அடிமை ஆவரோ?’ என்கிறார்.

‘மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தாளை நூற்றுவர் பால் நாற்றிசையும் போற்றத்
தொடர்ந்தரண முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தாளை ஏத்தாத நாவென்ன நாவே!
நாராயணா வென்னா நாவென்ன நாவே!’-என்பது, சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை.
‘பிறந்து பட்டு நாடித் தடிந்திட்டு அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டும் நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ?’ என்க.

‘மேல் பாசுரங்களில் சொல்லப் புகுகிற குணங்களை நோக்க, முதற்பாசுரத்திற் சொன்ன குணம் குண ஹாநி’ என்னும்படி
மேலே யுள்ள பாசுரங்கள் குணாதிக்கியம் சொல்லுகின்றன’, என்று அருளிச் செய்வர்.

நாட்டிற்பிறந்தவர் –
இப் பாசுரத்தில், ‘திருவயோத்தியிலுள்ளாரை இராம குணங்களையே தாரகராம்படி செய்த அளவையோ,
நாட்டிலுள்ளாருடைய விரோதிகளைப் போக்கிக் காப்பாற்றும் விதம் உயர்ந்தது இல்லையோ?’ என்கிறார்.

நாட்டிற்பிறந்தவர் –
‘நாட்டிற் பிறவாதார் இலரே அன்றோ? ஆயின், ‘நாட்டிற்பிறந்தவர்’ என்றதற்குப் பொருள் தான் யாதோ?’ எனின்,
இராம குணங்கள் நடையாடும் இடத்திலே பிறந்தவர்கள் என்கிறது.
பெருமாளுடைய எல்லை இல்லாத இடம் இல்லை அன்றோ?
‘மலைகளும் வனங்களும் காடுகளும் ஆகிய இவற்றோடு கூடிய இந்தப் பூமி இட்சுவாகு குலத்து அரசர்களைச் சேர்ந்தது.’ என்கிறபடியே.
இக்ஷ்வாகூணாம் இயம்பூமி; ஸஸைலவநநாநநா
ம்ருக பக்ஷி மநுஷ்யாணாம் நிக்ரஹ ப்ரக்ரஹாவபி’-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 18 : 6. இது வாலியைப் பார்த்து ஸ்ரீராமபிரான் கூறியது.

‘விதிக:ஸஹி தர்மஜ்ஞ:- ‘இராவணா!! பெருமாளுடைய குணங்கள் கேட்டு அறியாயோ?’ என்றாள் அன்றோ?
விகித: ஸஹி தர்மஜ்ஞ: ஸரணாகத வத்ஸல:’ என்பது, ஸ்ரீராமா. சுந். 21 : 20. இஃது இராவணனைப் பார்த்துப் பிராட்டி கூறியது.

அந்தக் குணங்கள் நடையாடாதது ஓரிடம் உண்டானால் அன்றோ, அவ்விடம் இவர் எல்லை அன்றிக்கே இருப்பது?
நாட்டில் பிறக்கையாவது, அவருடைய எல்லைக்குள்ளே பிறந்து, அவர் தோள் நிழலிலே வாழ்தல்.

நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ –
‘பெருமாளுக்கு ஆள் அன்றி ஆவரோ?’ என்றபடி.
பிரமன் முதலான தேவர்களும், ‘நீவிர் நாராயணரான தேவர் ஆவீர்’ என்றார்களே அன்றோ?
‘பவாந் நாராயணோ தேவ; ஸ்ரீமான் சக்ராயுதோ விபு:-என்பது, ஸ்ரீராமா. யுத். 120 : 13.

‘ஒருவன் சோற்றை உண்டவர்கள் அவனை ஒழிய வேறு ஒருவர்க்குக் காரியம் செய்வார்களோ?’ என்னுமாறு போலே.

நாரணற்கு –
வரையாதே எல்லாரோடும் பொருந்துகையும்,
அடியார்களுக்காகத் தன்னை ஆக்கி வைக்கயும்,
அவர்களுக்காத் தன் மார்பில் அம்பு ஏற்கையும்,
அவர்கள் விரோதிகளைப் போக்குவதையும்,
அடியார்கட்கு வத்சலனாய் இருக்கையும்,
அவர்கள் தோஷத்தைப் பார்த்து விட்டுப் போக மாட்டாமையும் ஆகிய இவை
எல்லாவற்றாலும் பெருமாளை‘நாராயணன்’ என்னத் தட்டு இல்லை அன்றோ?

ஆள் அன்றி ஆவரோ –
மேற்பாசுரத்திலே ‘கற்பரோ?’ என்றது;
இங்கே,‘ஆள் இன்றி அவரோ’ என்கிறது;
‘கல்வியினுடைய பலம் ஆள் ஆகை’ என்றபடி.

பிறந்தவர் ஆள் அன்றி ஆவரோ –
‘நீ காட்டில் வசிப்பதற்காகவே தோற்றுவிக்கப்பட்டாய்’ என்னுமாறு போலே
‘ஸ்ருஷ்ட ஸ்தவம் வநவாஸாய’
என்பது, ஸ்ரீராமா. அயோத். 40 : 5. இஃது இளைய பெருமாளைப் பார்த்துச் சுமத்திரா தேவி கூறியது.

பிறந்தவர் பிறவியின் பலத்தை இழப்பரோ?’ என்றபடி. -ஜெனித்தவர் ஜன்ப பலன் இன்றி இருப்பாரோ –
வகுத்த துறையிலே பாரதந்திரியமாகையாலே வாசி அறிந்த இவர்களுக்கு உத்தேசியமாகத் தோற்றுமன்றோ?
வகுத்தது அல்லாத துறைகளில் பண்ணின வாசனையாலே ‘இது புருஷார்த்தமோ?’ என்று தோற்றுகிறது.
சர்வம் பரவசம் துக்கம் -லௌகிக அபிராப்த விஷயத்தில் -வகுத்த துறையில் பாரதந்தர்யம் -பிராப்தன்-இயல்பே

நாட்டிற்பிறந்து –
சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாதவனாயிருக்கிறவன், கர்மங்கட்குக் கட்டுப்பட்டுவர்களுங்கூட அருவருக்கும் தேசத்திலே பிறந்து.
‘செருக்கனான இராவணனுடைய வதத்தைப் பிரார்த்திக்கிற தேவர்களால் பிரார்த்திக்கப்பட்டவரும்
நித்தியருமான விஷ்ணு மனித உலகத்திலே அவதரித்தார்; இது பிரசித்தம்’ என்கிறபடியே.

‘ஸஹிதேவை: உதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி;
அர்த்திதோ மாநுஷே லோகே ஜஜ்ஞே விஷ்ணு: ஸநாதந;’-என்பது, ஸ்ரீராமா அயோத். 1 : 7

ஸ:-ஜஞே ஹி –
‘கர்மங் காரணமான பிறவி இல்லை’ என்று பிரமாண பிரசித்தனானவன் கண்டீர்
கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்கட்கும் இவ்வருகாய் வந்து பிறந்தான்’ என்றபடி.

‘இப்படிப் பிறப்பதற்குக் காரணம் என்?’ என்னில்,
‘அர்த்தித:’ என்கிறது, அவர்கள் இரந்ததற்காக என்றபடி.
இரப்பு தான் இச்சையும் பிறப்பிக்குமே அன்றோ? ‘இச்சையாலே மேற்கொள்ளப்பட்டது’ அன்றோ?

‘இச்சா க்ருஹீத அபிமதோருதேஹ;
ஸம்ஸாதிக அஸேஷ ஜகத்தித: ய;’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 5 : 84.

தேவை:-
தங்கள் காரியத்துக்காக இரந்து பிறக்கச் செய்து காரியம் தலைக் காட்டினவாறே எதிரிட்டு
‘ஈஸ்வரோஹம்’ என்று இருப்பார்க்ககாக் கண்டீர்,
‘நீள் நகர் நீள் எரி வைத்தருளாய்’ திருவிருத். 92.என்பார்கள். என்றது,
‘இலங்கையை சுட்டுத் தர வேணும்,’ என்பர்கள் என்றபடி.

உதீர்ணஸ்ய ராவணஸ்ய –
அச்சத்தை உண்டாக்குகின்றவனான பையல், தானே வர பலத்தாலே அழியச் செய்யவேண்டும்படி விஞ்சினவாறு.

வத அர்த்திபி:-
தாங்கள் பட்ட நலிவாலே திருவுள்ளத்துக்குப் பொருந்தாதனவற்றையும் விண்ணப்பம் செய்தார்கள்.
‘ஒருவனை அழியச் செய்ய ஒரு நாடாகப் பிழைக்குமாதில் ஆகாதோ?’ என்று அழியச் செய்தானைத்தனை.
அர்த்தித:- தன்னுடையச் சோதிக்கு எழுந்தருளுந்தனையும் திருவுள்ளத்திற் பட்டுக் கிடந்து இதுவே
அர்த்தித:– உபாசித்தவர் அல்லர்.

மாநுஷே லோகே விஷ்ணு: ஸநாதந;-
‘உண்டு பண்ணப்பட்ட தேவர்கள், மனித வாசனைக்கு வாந்தி பண்ணிப் பூமியில் இழிய அருவருத்து,
ஒன்றரை யோசனைக்கு அவ்வருகே தின்று ஹவிஸ்ஸினைக் கொள்ளுவார்கள்;
அவர்கள் மனிதத் தானத்திலே யாம்படியான பொருள் கண்டீர் இங்கே வந்து பிறந்தது,’ என்கிறார்.
மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவன் அன்றோ?திருவாய். 8. 1 : 5.-

ஜஜ்ஞே–
தோன்றிய மாத்திரமன்று; நாட்டார் பத்து மாதங்கள் கர்ப்ப வாசம் அனுபவிக்கில் பன்னிரண்டு மாதங்கள்
அன்றோ இவன் அனுபவித்தது?’ பின்னர்ப் பன்னிரண்டாவது மாதமான சித்தரை மாதத்தில்’ என்பது ஸ்ரீராமாயணம்.
‘ததஸ்ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமிகே திதௌ’-என்பது, ஸ்ரீராமா. பால. 18 : 10.
பன்னிரு மாதம் மணி வயிறு வாய்த்தவனே
‘நான் உன்னுடைய உதரத்தினின்றும் உண்டானேன்’ என்பது ஸ்ரீவிஷ்ணு புராணம்.
‘ஜாதோஹம் யத்தவோதராத்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 3 : 14.

நாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா –
கர்மங்கட்குக் கட்டுப்படாத தான் கர்மங்கட்குக் கட்டப்பட்டவர்களோடே ஓரினனாய் நாட்டிலே வந்து பிறந்து,
அவர்கள் படும் துக்கத்துக்கு அளவன்றிக்கே,
கடலுக்கு அக்கரையிலே உயிரும் இக்கரையிலே உடலுமாம்படியான ஜானகியின் பிரிவு என்ன,
பெரிய வுடையார் சாக்காடு என்ன, இந்த விதமான துக்கங்களையும் பட்டு,
அதற்கு மேலே,
செய்ந்நன்றி அறியாத மனிதர்கட்காக.

நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு நாட்டை அளித்து உய்யச் செய்து –
யாதொரு குற்றமும் இல்லாத நாட்டினை நலிகிற இராவணன் முதலான கண்டகரை,
‘பொருந்தார் கை வேல் நுதி போல் பரல் பாய மெல்லடிகள் குருதி சோர விரும்பாத கான் விரும்பி,
‘எவ்வாறு நடந்தனை எம்மிராமாவோ!’ பெருமாள் திருமொழி, 9 : 5.- 2-என்கிறபடியே.
அவர்கள் இருந்த இடங்களிலே தேடிச் சென்று கொன்று,
இலங்கையின் வாசலிலே வீர லக்ஷ்மியோடு கூடினவராய்க்கொண்டு எழுந்தருளி நிற்க,

அவ்வளவிலே பிரமன் முதலான தேவர்கள் வந்து.
‘தருமத்தைத் தாங்குகிறவர்களுக்குள் சிறந்தவரே! எங்களுடைய இந்தக் காரியம் தேவரீரால் செய்யப்பட்டது;
இராமரே! இராவணன் கொல்லப்பட்டான்; மகிழ்ச்சியுடையவராய் வைகுண்டத்திற்குச் செல்லும்’ என்கிறபடியே,

‘ததிதம் ந: க்ருதம் கார்யம் த்வயா தர்மப்ருதாம்வர
நிஹதோ ராவணோ ராம ப்ரஹ்ருஷ்சடா திவமாக்ரம’-என்பது, ஸ்ரீராமா. யுத். 120 : 29.
‘நாங்கள் வேண்டியவை அடைய எங்கள் அளவு பாராதே தேவர் செய்தருளிற்று,
இனி, தன்னுடைச்சோதி ஏற எழுந்தருள அமையும்’ என்ன,

அவ்வளவிலே சிவன், ‘நாடு அடையத் தேவரீருடைய பிரிவினாலே அழிந்ததைப் போன்று கிடக்கின்றது;
திருத்தாய்மாரையும் திருத்தம்பிமாரையும் திருப்படை வீட்டிலுள்ள சனங்களையும், மீண்டு புக்குச் சில நாள்
எழுந்தருளியிருந்து ஈரக்கையாலே தடவிப் பாதுகாத்து எழுந்தருள வேணும்,’ என்ன,
‘கடல் ஞாலத்து அளி மிக்கான்’ திருவாய்.. 4. 8 : 5.என்னும்படியே, பதினோராயிரம் ஆண்டு எழுந்தருளியிருந்து
பாதுகாத்த படியைச் சொல்லுகிறது ‘நாட்டை அளித்து’ என்று.
இதற்காக அன்றோ முக் கண்ணனை, ‘ஷடர்த்தநயந: ஸ்ரீமாந் – முக்கண்ணனான ஸ்ரீமாந்’ என்றது?

‘ஷடர்த்த நயந: ஸ்ரீமந் மஹாதேவோ வ்ருஷத்வஜ;’-என்பது, ஸ்ரீராமா. யுத். 120 : 3.
இல்லையாகில், பிக்ஷூகனை ‘ஸ்ரீமாந்’ என்ன விரகு இல்லை அன்றோ?

உய்யச் செய்து
நெடுநாள் இருந்து தன்னால் அல்லது செல்லாதபடி செய்து, இட்டு வைத்துப் போகாதே கூடக் கொடு போய்
உஜ்ஜீவிப்பித்தபடியைச் சொல்லுகிறது‘உய்யச் செய்து’ என்று.

நடந்தமை கேட்டுமே –
‘விலங்கினங்கள் அனைத்தும் இராமனைப் பின் தொடர்ந்தன’ என்கிறபடியே,
‘திர்யக்யோகிநிகதாஸ்சாபி ஸர்வே ராமம் அநுவ்ரதா:’என்பது, ஸ்ரீராமா. உத்தர காண். 109 : 22.

தன்னுடனே கூடக் கொடுபோய் வைத்தான்’ என்று ஐயப்பட்ட வேண்டாதபடி அருளிச் செய்து வைத்தாரே அன்றோ ஆழ்வார்,
‘அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி, பெருமாள் திருமொழி. 10 : 10.- என்று பரமபதத்தே கொடு போனமையை?

நடந்தமை கேட்டும் –
கொடு சென்ற இந்தச் செயலைக் கேட்டும் என்றது, பசித்தார் இளைத்தாரைப் பார்த்துக் கொடு போகையைத் தெரிவித்தபடி.
தாமரைக் கண்ணனுடைய திருநாம சங்கீர்த்தன அமிருதமே அன்றோ பாதேயம்?
‘புண்டரீகாக்ஷனே! உனக்குத் தோற்றோம்’ என்றுகொடு போலே காணும் போவது.
‘இராமர் தாமரை மலர் போன்ற கண்களை யுடையவர்’ என்னப்படுவதன்றோ?
‘பாதேயம் புண்டரீகாக்ஷ நாம ஸங்கீர்த்தநாம்ருதம்’என்பது, ஜிதந்தா.
‘ராம: கமல பத்ராக்ஷ: ஸர்வ ஸத்வ மநோஹர: ரூப தாக்ஷிண்ய ஸம்பந்ந: ப்ரஸூதோ ஜநகாத்மஜே’–என்பது,
ஸ்ரீராமா. சுந். 35 : 8. இது பிராட்டியைப் பார்த்துத் திருவடி கூறியது.

‘அண்ணல்தன் திருமுகம் கமல மாமெனின்
கண்ணினுக் கவமைவேறு யாது காட்டுகேன்!
தண்மதி யாமென வுரைக்கத் தக்கதோ!
வெண்மதி பொலிந்தது மெலிந்து தேயுமால்.’-என்பது கம்பராமாயணம்.

‘மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவிஎன்ன செவியே!
திருமால்சீர் கேளாத செவிஎன்ன செவியே!’-என்பது, சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை.

சப்தம் போன்ற விஷயங்களில் பிரவணராய் சர்வேஸ்வரன் என்ற தத்வம் உண்டு என்று கேட்டார் வாய் கேட்டு இருந்து
தான் வந்து அவதரித்து
அழகு குணங்களால் வசீகரித்து
தன்னால் அல்லால் செல்லாமை -பிறப்பித்து பின்பு
பொகட்டுப் போவது படு கொலை போலே –
இதில் ஸ்ரீ வைகுந்தம் -தன்னுடன் கூட கொடு போய் ரஷித்த குணத்துக்கு ஆள் ஆகாமல் இருப்பாரோ –

—————————————————————————————————–

‘கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே .–7-5-3-

அநிஷ்ட நிரசித்து ரஷித்த அளவு அன்றிக்கே அநிஷ்டம் காரியான சிசுபாலனுக்கே மோக்ஷம் அளித்த குணாதிக்யம்
குண ஹானி கேட்க வேண்டும் என்பாருக்கும் -பகவான் நிந்தனத்துக்கு வைப்பு நிதி வைத்து சொல்லி –
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும்-அக்னி கல்பம் போலே -கீழ்மை கொடுக்கும் கடுமையான பாஷாணங்கள்
சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி-ஹிரண்ய ராவண சிசுபாலன் -மூன்றும் -ஜென்ம ஜென்ம பகைமை –
தூர கால பழைமை -நிருபாதிக ஸ்வாமி கண்ணன் திருவடி -நானும் உனக்கு பழ அடியேன் என்ற பேறு அன்றோ பெற்றான் –
தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே-சாயுஜ்யம் அடைந்து -அசாதாரண தன்மை அறிந்தும் -தன்மை அறிவாரை அறிந்தும்
‘கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?-
தங்களுக்கு ஜீவனமாக கேட்க வேண்டி இருப்பார்கள் –பிரதிபவ அபராத்தா வுக்கு- மோக்ஷ பிரதான-கீர்த்தி- இந்த விருத்தாந்தம் –
வேறு ஒன்றைக் கேட்பரோ -ஒரு படி இறக்கி -இங்கு -ஸ்ரவணம் பண்ணுவார் -இருந்தால் சொல்வார் வேண்டுமே –
தன்மை அறிவாரை -சப்தம் -ஆச்சார்ய சிஷ்ய முறைமை காட்டி அருளுகிறார் இதில்
மற்றும் -இங்கு பெருமாள் -கிருஷ்ண த்ருஷ்ணா -விலக்காத வர்களுக்கு மோக்ஷம் கொடுத்த வியக்த்யந்தரம் அன்றோ அவர்
விலக்காத புல்லுக்கும் எறும்புக்கு கொடுத்தார் ராமர்
விலக்கிய சிசுபாலனுக்கு அன்றோ கண்ணன் கொடுத்தான்

‘பகைவனைப் பற்றிய நிந்தை மொழிகளைக் கேட்க வேண்டும் என்னும் விருப்பமுள்ளவர்களுடைய செவிகளையும் சுடக்கூடிய தாழ்ந்த
வகைச் சொற்களையே பேசிய, பல காலமாக வருகின்ற பழம்பகைவனான சிசுபாலன், கண்ணபிரானுடைய திருவடிகளை அடைந்த
தன்மையை அறிவாரான ஞானிகளை அறிந்து வைத்திருந்தும் தாங்கள் உய்வதற்குரிய வழியைக் கேட்கவேண்டும் என்று இருப்பவர்கள்
கேசவனுடைய கீர்த்தியை அல்லாமல் வேறு சிலவற்றையும் கேட்பாரோ?’ என்கிறார்.
‘தன்மை அறிவாரை அறிந்தும், கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ?’ என்க.

‘சிசுபாலனையும் உட்படத் தன் திருவடிகளிலே சேர்த்துக் கொண்ட மேலான கிருபையை அறிந்தவர்கள்,
கேசியைக் கொன்ற கிருஷ்ணனுடைய கீர்த்தியை ஒழிய வேறு ஒன்றனைக் கேட்பாரோ?’ என்கிறார்.

கேட்பார்கள் –
மேலே ‘கற்பரோ’ என்றது; அதாவது,
முதல் நடு இறுதி தன் நெஞ்சிலே ஊற்றிருக்குபடி வாசனை பண்ணுகை யாயிற்று;
இனி கேட்கையாவது,
கற்றுக் கேட்டுத் தெளிந்திருப்பான் ஒருவன் ஒரு பொருளை விரித்துப் பேசினால்,
அதனைப் புத்தி பண்ணி நம்பி யிருத்தல்.
நடுவிருந்த நான்கு நாள்களும் தன் நெஞ்சு தெளிவு பிறந்தது இல்லையே யாகிலும்
விழுக் காட்டில் இருவர்க்கும் பலம் -ஒத்திருக்கக் கடவது.

கற்றிலனாயினும் கேட்க; அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை.’-என்பது, திருக்குறள்

கற்றிலன் ஆகிலும் கேட்க வேண்டுவது உண்டே அன்றோ?
கற்றுத் தெளியக் கண்ட பொருளைக் கேட்டு நம்பியிருத்தல்.
கல்லாதவனுக்கு ஸ்ரவண அதிகாரம் உண்டோ -கற்றுத் தெளிந்தவர் ஆழ்வார் -கேட்டு மதுர கவி ஆழ்வார் –
கற்றுத் தெளிந்து எம்பெருமானார் -கேட்டு நம் போல்வார்
திரிபுரா தேவியார் உடையவர் காட்டும் பர தேவதை நம்புவேன்
சந்தேகம் வரலாம் — நம்பிக்கை இல்லாமல் போக கூடாது –

கல்வியும் அதன் பலத்தின் உருவமான கைங்கரியமும் சேரப் பெற்றிலன் ஆகிலும், ஆசாரியன் பக்கலிலே
ஓர் அர்த்தத்தைக் கேட்ட மாத்திரமாய் இருந்தாலும் தனக்கு ஓர் ஆபத்திலே உதவுகைக்கு ஒரு குறை இல்லை.

இனி, தன்னிழவு,
பிறர்க்குச் சொல்லச் சத்தி இல்லாமையும்,
தன் நெஞ்சு தெளியாமையால் வருவதுவுமே அன்றோ உள்ளது?

கேட்பார்கள் – செவியில் தொளை யுடையவர்கள். பகவத் குணங்களைக் கேட்கை அன்றோ செவிக்குப் பிரயோஜனம்?
‘கேளாச் செவிகள் செவி அல்ல கேட்டாமே’ என்னா நின்றதே அன்றோ?

‘நீள் வான் குறளுருவாய் நின்றிரந்து மாவலி மண்
தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானைத்
தோளா மணியைத் தொண்டர்க் கினியானைத்
கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே.’-என்பது, பெரிய திருமொழி.

கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.’-என்பது, திருக்குறள்.

எறும்பு வளையைப் போன்றதே அன்றோ?

தவப்பொழி மாரி காப்பத் தடவரைக் கவிகை அன்று
கவித்தவன் கோயில் செல்லாக் கால்மரத் தியன்ற காலே;
உவப்பினின் அமுத மூறி ஒழுகுமால் சரிதங் கேளாச்
செவித்தொளை நச்சு நாகம் செறிவதோர் தொளைமற் றாமல்.’-என்பது, பாகவதம்,
சௌனகாதியர் அன்பினாலை உரைத்த அத்தியாயம்.

கேசவன் கீர்த்தி அல்லால் –
பகைவர்களை அழிக்குந் தன்மையனான ஸ்ரீ கிருஷ்ணன் கீர்த்தி அல்லது வேறே சிலவற்றைக் கேட்பரோ?
பருவம் நிரம்பிக் கற்ற பின்பு அன்று விரோதிகளைப் போக்கியது;
பூதனை தொடக்கமான விரோதிகளைத் தொட்டிற் பருவத்தே அன்றோ போக்கியது?
விரோதிகளை அழிப்பது தான் அறிந்ததனால் அன்று; பொருளின் உண்மையாலேயே பாதகமாய் இருக்கிறபடி.
நஞ்சு கொல்லுவது அறிவு உண்டாய் அன்றே?

‘நன்றாகத் திறந்து வாயை யுடைவனும் மஹா பயங்கரமானவனுமான அந்தக் கேசி என்னும் அசுரன்
இடியேறு உண்ட மரம் போன்று கிருஷ்ணனுடைய திருக் கரத்தால் இரண்டாகச் செய்யப்பட்டவனாய்க் கீழே விழுந்தான்,’ என்கிறபடியே
,‘வ்யாதிதாஸ்ய: மஹா ரௌத்ர: ஸ. அஸூர: க்ருஷ்ண பாஹூநா
நிபபாத த்விதாபூத: வைத்யுதேந யதா த்ரும:’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 16 : 14.

இந்த ஸ்லோகத்தில், பாஹூப்யாம் என்னாமல்
‘பாஹூநா’ என்றதற்கும்,
‘த்விதாபூத;’ என்றதற்கும் கருத்து அருளிச் செய்கிறார்,

கேசியானவன் வாயை அங்காந்து கொண்டு கண்டார் எல்லாரும் நடுங்கும்படி வந்து தோற்ற,
இளைஞராய் இருப்பார் துவாரம் கண்ட இடத்தே கை நீட்டக் கடவர்களாய் இருப்பார்கள் அன்றோ?
அந்த வாசனையாலே இவன் வாய்க்குள்ளே கையை நீட்ட, புதிதான அனுபவத்தால் கை விம்ம வளர்ந்து கொடுத்தது;
அப்போதோ இடியேறு உண்ட மரம் போலே இரு பிளவாய் விழுந்தான்.

மற்றுங்கேட்பரோ –
மேலே கூறிய இராமனுடைய சரிதையைத் தான் கேட்பரோ?
இவர் ஸ்வபாவம் இருந்தபடி என்? இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?’ என்றார் மேல்;
இங்கே, ‘கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ?’ என்னா நின்றார்;
‘இது தனக்கு அடி என்? என்னில்,

அந்த அவதாரத்தினை நினைத்த போது ‘தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாக’ திருவாய். 3. 6 : 8.-என்பர்;
இந்த அவதாரத்தை நினைத்த போது ‘நம் கண்ணன் கண் அல்லது இல்லை ஓர் கண்ணே’ திருவாய். 2. 2 : 1.-என்பர்;
இப்படி இழிந்த துறைகள் தோறும் அழுந்த வல்லார் ஒருவர் அன்றோ?
ஒவ்வொரு குணத்தை அனுபவிக்கப் புக்கால் வேறு குணங்களில் கால் வாங்க மாட்டாதவாறு போலே ஆயிற்று,
ஒவ்வோர் அவதாரத்தில் இழிந்தால் மற்றை அவதாரங்களில் போக மாட்டாமையும்.

கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளை வையும் –
இங்குக் ‘கேட்பார்’ என்றார், மேலே ‘கேட்பார்’ என்றது போன்று அன்று;
கீழ்மை வசவுகளையே கேட்பாரைக் குறித்தது இங்கு.
பகவானுடைய நிந்தைக்கு ஜீவனம் வைத்துக் கேட்கும் தண்ணியவர்களுங்கூடப் பொறுக்க மாட்டாமை செவி புதைத்து,
‘இத்தனை அதிரச் சொன்னாய், இப்படிச் சொல்லப் பெறாய் காண்’ என்று சொல்லும்படியான வசவுகளையே வைதல்.
‘அநுகூலராய் இருப்பார்க்கு உடலின் சேர்க்கையாலே தம்மை அறியாமலும் ஒரு தீச் செயல் விளையும் அன்றோ?
அப்படியே இவனுக்கும் தன்னை அறியாமலே ஒரு நல் வார்த்தையும் கலசுமோ?’ என்னில்,
‘அதுவும் இல்லை’ என்பார், ‘வசவுகளே வையும்’ என்கிறார்.
அதற்கு அடி சொல்லுகிறார் மேல்:

சேண் பால் பழம் பகைவன் –
‘மிகவும் ஜன்மப் பகைவன்’ என்றபடி;
இந்தப் பிறவியே அன்றிக்கே முற் பிறவிகளிலும் பகைவனாய்ப் போருகிறான் அன்றோ? என்றது,
‘இவன் ஒவ்வொரு பிறவியிலும் செய்த பகைச் செயல்களுக்கு ஓர் அளவு இல்லை அன்றோ?’ என்றபடி.
இப்படிப்பட்ட பிறவிகள் தாம் பல. அந்த அந்தப் பிறவிகளில் உண்டான காலத்தின் மிகுதியும், செய்த பகைச் செயலின் மிகுதியும்,
இவை எல்லாவற்றையும் நினைக்கிறது, பகையினுடைய பழமையாலே.
இதனால், ‘நினைவு இல்லாமலே சொல்லிலும் வாசனையாலே தப்பாது,’ என்கை.
அன்று ஈன்ற கன்று அப்போதே தாய் முலையிலே வாய் வைக்கும்: அது அந்தப் பிறவியின் வாசனை கொண்டு அன்றே?
இவனுக்கும் இப் பிறவியிலே பகவானை நிந்தை செய்வதற்குக் காரணம் முற்பிறவிகளின் வாசனை அன்றோ?

‘பவ்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலை;-தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தரோ தற்செய்
கிழவினை நாடிக் கொளற்கு.’-என்பது, நாலடியார்.

திருவடி தாள் பால் அடைந்த-
எல்லாப் பொருளுக்கும் ஸ்வாமி கிருஷ்ணனுடைய திருவடிகளின் பக்கத்தைக் கிட்டின.
சாயுஜ்ய வக்ஷண மோக்ஷமாகிறது தான் இன்னது என்கிறது. என்றது,
இடையீடு இன்றிக்கே கிட்டி நின்று நித்திய கைங்கரியம் செய்யப் பெறுதல் என்பதனைத் தெரிவித்தபடி.

‘பரம் பொருளை அறிந்தவன் பரம் பொருள் போன்று ஆகிறான்,’ என்றும், மேலான ஒப்புமையைப் பெறுகின்றான்’

‘பரமம் ஸாம்யம் உபைதி’ என்பது, முண்டகோபநிடதம், 3. 1 : 3.

‘பிரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி’ என்பது, முண்டகோபநிடதம், 3 : 2.

‘ப்ரஹ்மைவ’ என்றவிடத்தில் ஏவகாரம், ‘விஷ்ணுரேவ பூத்வா’ என்ற
இடத்திற்போன்று, ‘ஸாம்யம் உபைதி’ என்பது போன்ற வசனங்கட்குத் தகுதியாக,
‘இவ’ என்ற சொல்லின் பொருளைக் காட்டுகிறது.

‘தம்மையே ஒக்க அருள் செய்வர்’ பெரிய திருமொழி-என்றும்,

‘என்னுடைய ஒப்புமையை அடைந்தவர்’ மம ஸாதர்ம்யமாகதா;’ என்பது, ஸ்ரீ கீதை, 14:2.-என்றும்,

‘பரமாத்துவோடு ஒத்தவன்’ என்றும் சொல்லுகிறவற்றால், ஸமாநோ ஜ்யோதிஷா’ என்பது, போதாயன விருத்தி.
வஸ்து ஐக்யம் சொல்லுகிற அன்று;
பேற்றில் வந்தால் அவனோடு இவனுக்கு எல்லா வகையாலும் ஒப்புமை உண்டு என்றது.
‘உலகத்தைப் படைத்தல் முதலியன நீங்கலாக’ என்றும்,
அனுபவத்தில் பரமாத்துமாவோடு ஒப்புமை கூறுகிற காரணத்தாலும்’ என்றும் சொல்லுகையாலே.

‘ஜகத் வியாபார வர்ஜம்,’
‘போக மாத்ர ஸாம்ய லிங்காச் ச’-என்பன, பிரஹ்ம மீமாம்சை
சாயுஜ்யமாகிறது, ‘அவனோடு ஒன்றாம்’ என்கிறது அன்று; அவன் திருவடிகளிலே கைங்கரியம்-‘

ஆதிப் பரனோடு ஒன்றாம் என்று சொல்லும் அவ்வல்லவெல்லாம்
வாதில் வென்றான் எம்மிராமாநுசன் மெய்ம் மதிக் கடலே’-என்பது, இராமாநுச நூற்றந்தாதி, 58.

செய்யும் என்கிறது;
‘யாவர் மிக்க பத்தியை யுடையவர்களாய் உபாசனை செய்கிறவர்களாய்ச் சமானமான உயர்ந்த ஜீவனத்தை அடைந்தார்களோ,
அவர்கள் விரோதி கழிந்தவர்களாய் எப்பொழுதும் என்னுடைய தொண்டர்கள் ஆகிறார்கள்,’ என்றும் சொல்லுகையாலே
.ஸாயுஜ்யம் ப்ரதிபந்நா யே தீவ்ர பக்தா: தபஸ்விந:
கிங்கரா மம தே நித்யம் பவந்தி நிருபத்ரவா;’-என்பது, பரமஸம்.

தன்மை அறிவாரை அறிந்துமே –
கேட்பார்க்கு விஷயம் உண்டாக்குகிறார்,
இந்தக் குண ஞானமுடையாரை அறிந்து வைத்தும் கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றுக் கேட்பரோ?

‘இவன், திருவடிகளைக் கிட்டிற்று என் கொண்டு?’ என்னில்,
திரு நாமங்களைச் சொல்லித் துவங்கரிக்கையும்,
கையும் திருவாழியுமான அழகை மரண காலத்தில் நினைக்கவும் கூடும் அன்றோ?
மேலெழ ஆராய்ந்து பார்த்தால், சில காரணங்கள் சொல்லலாம்;
இதற்கு இனி ஒரு காரணம் தேடிச் சொல்லுகையாவது,
அவன் கிருபைக்கு ஒரு கொத்தை சொல்லுகை யன்றோ?

‘சர்வேஸ்வரன் கிருபையாலே சிசுபாலன் திருவடிகளைப் பெற்றான்’ என்று ஆழ்வார்களும் இருடிகளும்
எல்லாரும் சொல்லிக் கொண்டு போருவார்கள் அன்றோ?
இவன் பக்கலிலே பரம பத்தி அளவாக உண்டானாலும்,
‘அதற்கும் கரணங்கிளன் சேர்க்கையைக் கொடுத்தான் ஈஸ்வரன் அன்றோ?’ என்று
அதுவும் கழியா நிற்க, வருந்தி இல்லாதது ஒன்று உண்டாக்குகை பணி அன்று.

ஆளவந்தார், ‘சிசுபாலன் பெற்றிலன் காண்’ என்று அருளிச் செய்வர்; ‘அது என்?’ என்னில்,
‘இதற்கு அடியாகச் சொல்லலாவது ஒரு சாதனம் இவன் கையில் இல்லாமையாலே;
நாட்டை நலியாமைக்குக் கொற்றவன் வாசலுக்குள்ளே சுழற்றி எறிந்தான் அத்தனை காண்’ என்று அருளிச் செய்வர்.

காகம், திரு முன்பே எய்த்து விழுகையாலும், இவன் திருநாமத்தைச் சொல்லித் துவங்கரிக்கையாலும்,
அவன் குணங்கள் நினைத்தபடி விரிவாகப் பெறாதே குறைந்தவகள் ஆயிற்றன’ என்றே அன்றோ சொல்லுகிறது?
‘காகாசுரனிடத்திலும் சிசுபாலனிடத்திலும் சிறிது குணமாயினும் இருந்ததனால்
குறைவு பட்ட தான் தேவரீருடைய பொறுமை’ என்கையாலே.‘

பலிபுஜி சிசுபாலே தாத்ருக் ஆகஸ்கரே வா
குண லவ ஸஹவாஸாத் த்வத் க்ஷமோ ஸங்கு சந்தீ’-என்பது, ஸ்ரீரங்கராஜஸ்தவம், 3 : 97.

‘பல பல நாழம் சொல்லிப் பழித்த சிசுபாலன் தன்னை, அலை வலைமை தவிர்த்த
அழகன்’ பெரியாழ்வார் திருமொழி,4. 3 : 5. ‘-என்றார் அன்றோ பெரியாழ்வாரும்?

‘வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும்’ திருச்சந்த விருத்தம், 111.-என்றார் திருமழிசையாழ்வார்.

இப் பாசுரத்தில் ஏற்றமாகிறது,
‘தன்னால் அல்லது செல்லாமை விளைந்தாரைக் கூடக் கொடு போனான்’ என்றது ஓர் ஏற்றமோ,
தன் பக்கல் அபராதம் செய்த சிசுபாலனுக்கும் அவர்கள் பேற்றைக் கொடுத்ததற்கு?’ என்பதாம்.

சர்வாதிகன்-உன்னை சிசுபாலன் வாலி போல்வார் -தஸ்மிந் லயம் -பரமாம் கதி-அடைந்தார்கள் –
இவர்களும் வந்து உன்னை எய்தலாகும் என்பர் -ரிஷிகள்
பகவந்தம் -லயம்-என்றார் பராசரர் –
ராம பாணத்தால் -அடிபட்ட வாலி பரமாம் கதி அடைந்தான் வால்மீகி
நிர்ஹேதுக கிருபை என்றவாறு –

வைதாரையும் முன் மலைந்தாரையும் மலர்த் தாளில் வைத்தாய்
மொய்தாரை யத்தனைத் தீங்கிழைத்தேனையும் மூதுலகில்
பெய்தாரை வானிற் புரப்பான் இடபப் பெருங்கிரியாய்!
கொய்தாரை வேய்ந்த திருவடிக் கீழ்த் தொண்டு கொண்டருளே.’–என்பது, அழகரந்தாதி.

———————————————————————————-

தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆளன்றி ஆவரோ?
பன்மைப் படர் பொருள் ஆதுமில் பாழ் நெடுங் காலத்து
நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணித் தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே.–7-5-4-

இல்லாத ஜகத்தை உண்டாக்கிய அதிசயத்தை அனுசந்தித்து -பன்மைப் படர் பொருள் ஆதுமில் பாழ் நெடுங் காலத்து-
பலவகைப்பட்ட தேவாதி பேதங்கள் உடைத்தாய் -புண்ய பாப-அனுரூபமாக -தீவீத பதார்த்தே -பிரளயம் வந்து -சூன்யமான
திவீதிய பதார்த்த காலம் -ஏக மேவ –
நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணித் தன்னுள்ளே-கார்ய உத்பத்தி ஹேதுவான -நன்மை உடைத்தான் காரண ஜலம்
அபஞ்சீ கரணமான ஜலம் -உத்பன்னமான அண்டத்தில் -நான் முகனையும் ஸ்ருஷ்டித்து -அத்வாரக ஸ்ருஷ்ட்டி
தொன்மை -பூர்வ வாசனை -மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே-தன் ஸ்வரூப ஏக தேசத்தில் ஸமஸ்த பதார்த்தங்களையும் தோற்றிய
விபக்தமாக்கி நாம ரூப வியாகரணம் -ஈஷண சங்கல்ப்பித்து–சிருஷ்ட்டித்து -சத்தை கொடுக்க அனு பிரவேசித்து
வேதாந்த முகத்தால் இவற்றை அனுசந்தித்து தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆளன்றி ஆவரோ?-அசாதாரண லக்ஷணம்
காரணமான ஸ்வ பாவம் அறியுமவர்கள் -ஜகத் காரண பூதனான கிருஷ்ணனுக்கு அன்றி வேறு யாருக்கு ஆள் ஆவார்கள்

‘பல விதமாகப் படர்ந்திருக்கும் பொருள்களுள் ஒன்றும் இல்லாதபடி அழிவு அடைந்த காலத்து, நன்மையையுடைய தண்ணீரை
உண்டாக்கிப் பின்னர்ப் பிரமனை உண்டாக்கி. முன் வாசனை அழியும்படி தன்னுள்ளே கலந்திருந்த எல்லாப் பொருள்களையும்
தோற்றுவித்த விரகுகளைச் சிந்தித்து, உலக காரணனாய் இருக்கும் தன்மையை அறிகின்றவர்கள் தாம் காரணப் பொருளான
கண்ண பிரானுக்கு ஆள் ஆவரே அன்றி மற்று ஒருவர்க்கு ஆள் ஆவரோ?’ என்றபடி.
மயக்கிய – கலந்து கிடந்த பொருள்கள். சூழல் – விரகு. ‘சிந்தித்து அறிபவர் அவற்கு ஆள் அன்றி ஆவரோ?’ என்க.
அவற்கு-அவனுக்கு; அகார வாச்யனான கண்ண பிரானுக்கு.

‘சிசுபாலனுக்குத் தன்னைக் கொடுத்தது ஓர் ஏற்றமோ,
பிரளயத்திலே மங்கிக் கிடந்த உலகத்தை உண்டாக்கின இந்த மஹா குணத்துக்கு?’ என்கிறார்.
சிசுபாலனைக் காட்டிலும் குறைந்தார் இலர் அன்றோ சம்சாரிகளில்?

தன்மை அறிபவர் தாம் –
உண்மை நிலையினை அறியுமவர் தாம். என்றது,
‘இதனுடைய படைப்பு அவனுக்காகக் கண்டது என்று இருக்குமவர்கள்’ என்றபடி;
அவனுக்காகக் கண்டது’ என்றது,
‘அவனுடைய கைங்கரியத்துக்கு உடலாகப் படைக்கப்பட்டது’ என்றபடி.

‘கோளில் பொறியிற் குணமிலவே எண் குணத்தான் தாளை வணங்காத் தலை.’என்பது, திருக்குறள்.

‘திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே!’
‘நாராயணா வென்னா நா வென்ன நாவே!’
‘கண்ணனைக் காணாத கண்ணென்ன கண்ணே!’-என்பவை, சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை.

‘காட்டில் வசிக்கும் பொருட்டே படைக்கப் பட்டாய்’ என்பது போலே.
‘ஸ்ருஷ்டஸ்த்வம் வநவாஸாய’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 40 : 5.
இஃது இளைய பெருமாளைப் பார்த்துச் சுமித்திரா தேவி கூறியது.

அன்றிக்கே,
‘உலகத்திற்குக் காரணமாக வுள்ள பொருளே உபாசிக்கத் தக்கது என்று அறியுமவர்கள்’ என்னுதல்.
‘காரணப் பொருளே தியானம் செய்யத் தக்கது’ என்பது சுருதி. ‘
‘காரணம் து த்யேய:’ என்பது, சுருதி.
‘அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா, ஜந்மாத் யஸ்ய யத:’என்பவை, பிரஹ்ம சூத்திரம். 1. 1 : 1, 2.

வேதத்தின் பூர்வ பாகத்தின் பொருளை விசாரித்த பின் ஞானமுடையவனாய்ப் பிரஹ்மத்தை அறியக் கடவன்’ என்னா,
‘இந்த உலகத்திற்குப் படைப்பு அளிப்பு அழிப்பு என்னும் முத்தொழில்களும் எதனிடத்தினின்றும்
உண்டாகின்றனவோ, அது பிரஹ்மம்’ என்னாநின்றதே அன்றோ?

அவற்கு ஆள் அன்றி ஆவரோ –
கரண களேபரங்களைக் கொடுத்தது தனக்கு அடிமை செய்கைக்கு அன்றோ?

பன்மை படர் பொருள் ஆதும் இல் பாழ் நெடுங்காலத்து-
தேவர்கள் முதலான வேற்றுமையாலே பல வகைப் பட்டுக் கர்மங்களுக்குத் தகுதியாக
விரிந்த பொருள்களுள் ஒன்றும் இல்லாத காலத்து. என்றது,
‘தேவர் மனிதர் திரியக்குகள் முதலான உருவங்களான உண்டாக்கக் கூடிய பொருள்களுள் ஒன்றும் இல்லாதபடி
பாழ் கூவிக் கிடக்கிற நெடுங்காலத்து’ என்றபடி.

ஈஸ்வரன் உலகத்தை அழித்து நெடுங்காலம் பாழ் கூவிக் கிடக்கும்படி இட்டு வைப்பான்.
பயிர் செய்கிறவன் விளை நிலம் உவர் கழியும்படி நீரைத் தேக்கி வைக்குமாறு போலே,
இவற்றினுடைய துர் வாசனை போகைக்காகப் படைத்ததைப் போன்ற காலம் அழித்திட்டு வைப்பன்.
கண்ணுக்கு இட ஒரு துரும்பு இல்லாதபடி சத்து என்ற நிலையுடன் கூடிய காலத்து.

நன்மைப் புனல் பண்ணி –
அழிப்பதற்குப் பரப்பின நீர் போல அன்று. ‘தண்ணீரையே முதலில் படைத்தான்’ என்கிறபடியே,
‘அப ஏவ ஸஸர்ஜ ஆதௌ’ என்பது, மநு ஸ்மிருதி, 1 : 8.
முதன் முன்னம் தண்ணீரைப் படைத்து. நான்முகனைப் பண்ணி –
இவ்வளவும் வர அசித்தைக் கொண்டு காரியம் கொண்டு,
‘இவை இரண்டும் நம் புத்தி அதீனமான பின்பு
இனிச் சித்தையும் கொண்டு காரியம் கொள்ளுவோம்’ என்று பார்த்துப் பிரமனையும் படைத்து.
‘எவனுக்கு ஆத்துமாக்கள் எல்லாம் சரீரமோ,’ ‘எவனுக்கு மண் முதலியவை சரீரமோ’ என்கிறபடியே,
‘யஸ்ய ஆத்மா ஸரீரம்’ ‘யஸ்ய ப்ருதிவீ ஸரீரம்’என்பன, பிருஹதாரண்ய உபநிஷத்.

இரண்டும் இவனுக்கு உறுப்பாய்ப் பரதந்திரமாய் அன்றோ இருப்பன?
‘எவன் பிரமனை முன்பு படைத்தானோ’ என்பது சுருதி.
‘யோ ப்ரஹ்மாணப் விததாதி பூர்வம்’ என்பது, ஸ்வேதாஸ்வ. உப
ஒரு குழமணனைப் -மரப்பாச்சி பொம்மை -பண்ணி என்பாரைப் போலே
‘நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி’ என்கிறார்.

தன்னுள்ளே –
தன்னுடைய சங்கற்பத்தின் ஆயிரத்தில் ஒரு கூற்றிலே.

தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்து –
பழையதாக, ‘ஸதேவ – சத் ஒன்றே’ என்கிறபடியே,
‘தான்’ என்கிற சொல்லுக்குள்ளே யாம்படி பண்ணியிட்டு வைத்து,
பின்னர்,
‘பஹூஸ்யாம் – பல பொருளாக ஆகக் கடவேன்’ என்கிறபடியே,
இவற்றைத் தோற்றுவித்த விரகுகளைச் சிந்தித்து,
உண்மை நிலையை அறியுமவர்கள் அவனை ஒழிய வேறே சிலர்க்கு ஆள் ஆவரோ?

‘விரோதியான சிசுபாலனுக்குத் தன் திருவடிகளைக் கொடுத்தான்’ என்றது,
‘இது ஓர் ஏற்றமோ விரோதிகளை உண்டாக்கித் தன்னை வைவித்துக் கொண்ட நீர்மைக்கு?’ என்கிறார்.

‘பன்மைப் படர் பொருள், தன்னுள்ளே தொன்மை மயக்கிய, ஆதும் இல் பாழ் நெடுங்காலத்து
நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி, தோற்றிய சூழல்கள் சிந்தித்து,
தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆள் அன்றி ஆவரோ?’ என்று கூட்டுக.

———————————————————————————————

சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?
ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்
தாழப் படாமல் தன் பால் ஓரு கோட்டிடைத் தான் கொண்ட
கேழல் திரு வுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே.–7-5-5-

ஸ்ரீ வராஹ -நாயனார் -ஆபத்து -நிரசனம்– தன்னை அழித்தும்-ரஷித்த ஏற்றம் -அழிந்த ஜகத்தை உண்டாக்குவதைக்
காட்டிலும் மானமிலா பன்றி தன்னையே அழிய மாறி –
ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்-அபரியந்தமான பிரளய ஜலத்தில் அண்ட கபாலம் வரை ஆழ்ந்து
கால விளம்பத்தால் உரு மாய்ந்து போகாத படி -தன் திருமேனியில் ஏக தேசத்தில்
தாழப் படாமல் தன் பால் ஓரு கோட்டிடைத் தான் கொண்ட–ஏக தேசத்தில் அபேஷா நிரபேஷமாக ஸ்வ இச்சையால் கோல வராகம்
கேழல் திருவுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே-திரு மேனி ஆகாரம் தாழ விட்டுக் கொண்ட படி -திரு உரு -கேட்டும் உணர்ந்தும்
வேத இதிகாச முகமாக -கேட்டும் -உணர்ந்துமே-மனனம் பண்ணி வைத்தும்
சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?-உஜ்ஜீவன உபாயம் தேடினால் -நான் கண்ட நல்லதுவே -ஞானப் பிரானுக்கு திரு விருத்தம் –
ஆஸ்ரயிக்க- மாயன் திருவடிகளே -பிரளய ஆபத்துக்கு உதவி சம்சார ஆரணவ உத்தரண உபாய பூதன் -ஸ்ரீ வராஹ நாயனார் -மாயன் –
பராசர பட்டர் -மத்ஸ்யம் கரை ஏறாமல் கூர்மம் எழுந்து கழுத்துக்கு மேலே -வாமனன் காலைக் காட்டி
பலராமன் அஹங்காரம் -பரசுராமன் கோப ராமன் -கண்ணன் ஏலாப் பொய்கள் உரைப்பான்
ராமன் -ஒரு பெண்ணையே பிரிய விட்டானே
இப்படி வராஹ நாயனார் கைசிக புராணம் அவதாரம் சாதித்தார்

‘பிரளய வெள்ளத்திலே ஆழ அழுந்திய பூமியைக் காலம் நீட்டிக்காமல், தன் திருமேனியில் ஒரு கொம்பிலே தானே கொண்ட வராகத்தின்
அழகிய வடிவான இதனைக் கேட்டும்உணர்ந்தும், தான் உய்வதற்குரிய உபாயங்களைச் சிந்தித்தால், ஆச்சரியமான செயலைச் செய்த
எம்பெருமானுடைய திருவடிகளை அல்லாமல் வேறு ஒன்றனைப் பற்றுவரோ?’ என்கிறார்.
சூழல் – உபாயம். சூழ்தல் – பற்றுதல். ‘ஆழ அழுந்திய ஞாலம்’ என்க. ஆற்றொழுக்காகப் பொருள் கூறலுமாம்,
தாழப்படாமல் – காலம் நீட்டிக்காமல். கேழல் -பன்றி. ‘உணர்ந்தும் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?’ என்க.

‘உலகத்தைப் படைத்தது ஓர் ஏற்றமோ, படைக்கப்பட்ட உலகத்தைப் பிரளயம் கொள்ள
மஹா வராகமாய் எடுத்துக் காத்த குணத்துக்கு?’ என்கிறார்.

சூழல்கள் சிந்திக்கில் –
தான் தன்னோடு உறவு அற ஜீவிக்கைக்கு உறுப்பான விரகு பார்க்கில்.
தாங்கள் தாங்கள் விரும்பிய பொருள்கள் சித்திப்பதற்கு விரகுகள் பார்க்கில்.
(அசித் சம்சர்க்கம் விட்டு -வி ஸூத்தாத்-முக்தனாக –
ஸூத்த ஜீவாத்மா -தன்னுடன் கூடிய சரீரம் -பத்த ஜீவாத்மாவின் இருந்து மாற வேண்டுமே
அபிமதங்கள் பெற வேண்டி இருந்தீர்கள் ஆகில் அடுத்து
அநிஷ்டம் போனால் தான் இஷ்டம் சித்திக்கும் -)

மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ –
பாதுகாக்கப் படுகின்ற பொருள்களைப் பாதுகாத்தல் ஒரு தலையானால் தான் தன்னைப் பேணாத நோக்கும்
ஆச்சரியத்தை யுடைய இறைவனது திருவடிகளை அல்லது பற்றுவரோ?
(அடியாரானால் அடியைப் பற்ற வேண்டுமே )

ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தை –
‘ஆழத்தை யுடைத்தான மிக்க தண்ணீரிலே அழுந்தின பூமி’ என்னுதல்.
‘பெரும் புனல் தன்னுள் ஆழ அழுந்திய பூமி’ என்னுதல்.

அழுந்திய ஞாலம் –
அண்ட பித்தியில் சென்று ஒட்டின பூமி.

தாழப் படாமல் –
தரைப் படாமல்; மங்காமல். என்றது,
‘உள்ளது கரைந்து போன பின்பு இனிச் சத்தையுங்கூட அழிந்து போக ஒண்ணாது என்று பார்த்து’ என்றபடி.

தன் பால் ஒரு கோட்டிடைத் தான் கொண்ட –
பெரிய பூமியைத் தன் எயிற்றிலே நீல மணி போலே கொண்ட; -ஸ்வேத வராஹம் –
தன் திரு எயிற்றிலே ஒரு கூற்றிலே கொண்ட உதாரராய் இருப்பார் நாற்பது பேருக்குச் சோறு இட நினைத்து
நூறு பேருக்குச் சோறு சமைக்குமாறு போலே,
பாதுகாக்கப்படுகிற பொருள்களின் அளவு அன்று காணும் கொண்ட எயிற்றின் பெருமை;

தான் கொண்ட-
முகாந்தரத்தாலே -வேறு முகத்தாலே காத்தல் அன்றியே,
தன் முகத்தாலே எடுத்துக் காத்தபடி கரைந்து போன பூமி
வேண்டிக் கொள்ளச் செய்தது அன்று ஆதலின், ‘தான் கொண்ட’ என்கிறார்.

கேழல் திரு உரு ஆயிற்று –
அழிவுக்கு இட்ட வடிவிற்கே ஆலத்தி வழிக்க வேண்டி இருந்தபடி.
அடியார்களைப் பாதுகாக்க வந்து தன்னைப் பேணாதே ஒழிய ஒழிய
அதுதானே நிறம் பெறும்படியாய்க் காணும் இருப்பது;(விக்ரஹம் சீர்மையும் குணத்தின் சீர்மையும் )

‘மானம் இலாப் பன்றியாம் தேசு’நாச்சியார் திருமொழி, 11 : 8. என்னும்படியே.
‘மாசு உடம்பில் நீர் வாரா – எங்கேனும் உண்டான அழுக்கும் வந்து சேரும்படி இருப்பது ஒரு வடிவைக் கொண்டு.
மானம் இலாப் பன்றியாம் ஈஸ்வரனாந்தன்மை பின்னாட்டாதபடி இருக்கை.

தன் இனங்கள் மோந்து பார்த்துத் ‘தன்னினம்’ என்று நம்பும்படி அக வாயில் புரை அற்று இருக்கை.
மாரீசனாகிய மாயமானை மோந்து பார்த்து ‘இராக்கத வாசனை உண்டு’ என்று போயின அன்றோ மற்றைய மான்கள்?

பன்றியாம் தேசுடை தேவர் –
இவ் வடிவு கொண்டிலனாகில் அருமந்த ஒளியை எல்லாம் இழக்குமத்தனை யன்றோ.
நித்திய ஸூரிகளுக்கு ஓலக்கம் கொடுத்து அங்கே இருப்பதைக் காட்டிலும் தாழ விட்டதால் வந்த ஏற்றம்?’

கேட்டும் உணர்ந்துமே-
கேட்டும் மனனம் செய்தும்,
அதனாலே தம் முயற்சியை விட்டவர்கள் சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?

தான் உலகத்திற்குக் காரணனாய் இருத்தல் முதலிய குணங்களுள் ஒன்றும் குறையாதபடி சங்கற்பத்தாலே
உலகத்தைப் படைத்தான் என்னுமது ஓர் ஏற்றமோ,
பிரளயம் கொண்ட பூமியைத் தன்னுருக் கெடுத்து வேற்றுருக் கொண்டு எடுத்த இந்த உபகாரத்துக்கு?

———————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading